அவதாரிகை –
இப்படித் திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி
ஸூலபமான
திருவேங்கடமுடையான் வர்த்திக்கிற
திருமலை
வ்ருத்தாந்தாத்தை அனுசந்தித்து
இனியர் ஆகிறார் –
————————————————————————————
களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-
பதவுரை
களிறு–யானையானது
கை எடுத்து ஓடி–தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி
முகில்–(மத யானை போலெழுந்து) மேகங்களை
குத்த–(எதிரியானை யென்று நினைத்துக்) குத்த
யாளி–(இதைக் கண்ட) யாளியானது
ஒளிறு மருப்பு–(அந்த யானை யினுடைய) விளங்குகின்ற கொம்பை
ஓசி–முறிக்கிற
கை–கையை யுடைத்தாய்க் கொண்டு
பிளிறி விழ கொன்று–(அந்த யானை) வாய் விட்டலறிக் கொண்டு விழும்படி (அதனைக்) கொன்று
நின்று அதிரும்–அங்கேயே நின்று கொண்டு பெரு முழக்கம் செய்யப் பெற்ற
வேங்கடமே–திருவேங்கடமே
மேல் நாள்–முன்பொரு காலத்தில்
குழ கன்று கொண்டு–இளங்கன்றை (எறி குணிலாகக்) கொண்டு
எறிந்தான்–(விளங்கனிமீது) எறிந்த பிரானுடைய
குன்று–திருமலையாம்.
—————————————————————————————
வியாக்யானம் –
களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி –
முகில் குத்த -தனது துதிக்கையை
எடுத்துக் கொண்டு
பெரிய வேகத்தோடு சென்று
ஆனையானது மேகத்தைக் கண்டு
பிரதிகஜம் என்று கொண்டு புத்தி பண்ணிக் குத்த –
ஒளிறு மருப்பொசிகை யாளி –
இது இங்கனே செய்யா நிற்கச் செய்தே –
நடுவே நின்ற யாளியானது –
இந்த யானையினுடைய வெளுத்த நிறத்தை உடைத்தான
கொம்பை முறியா நின்ற கையை உடைத்தாய்க் கொண்டு
கை எடுத்தோடி –
ஒளிறு மருப்பொசிகை யாளி -என்று
யாளிக்கு விசேஷணம் ஆகவுமாம்-
மருப்பொசிகை யாளி –
மருப்பை ஒசிக்கை
ஸ்வ பாவமான யாளி –
பிளிறி விழக் கொன்று நின்றதிரும் –
ஆனையானது சப்தித்துக் கொண்டு
விழும்படிக்கு ஈடாகக் கொன்று –
பின்னையும்
தன் சீற்றம் மாறாமையாலே-அவ்விடம் தன்னிலே சென்று
ஷூத்ர மிருகங்கள் மண்ணுன்னும் படி
கர்ஜியா நிற்கும் –
விழக் கொன்று பிளிறி நின்ற -என்றாக்கிச்
சினத்தாலே நின்று
முழங்கா நின்றது ஆய்த்து-
கொன்ற விஜயத்தாலே சப்தித்திக்கும் -என்றபடி –
வேங்கடமே –
இப்படிப் பட்ட திருமலை -கிடீர் –
மேனாள் குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று –
பண்டு குழக் கன்றைக் கொண்டு விளங்கனிக்கு
எறிந்தவனுடைய திருமலை –
சஹஜ சத்ருக்களை முடித்து
விரோதி போகப் பெற்றோம் என்று
உகந்து நிற்கிறவன் வந்து
வர்த்திக்கிற தேசம் –
அந்த ஆனையினுடைய மௌக்த்யம் போலே
இருப்பது ஓன்று ஆய்த்து
இவனுடைய மௌக்த்யமும்-
திருமலையில் பின்னை ஒன்றுக்கு ஓன்று
பாதகமாமோ என்னில்
அக்னீஷோமீய ஹிம்சை போலே இருப்பது
ஓன்று இறே அவற்றிற்கு –
—————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply