மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -73-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவனுடைய திருவடிகளை
ஏத்தும் இதுவே கிடீர்
வாக் இந்த்ரியத்தால் கொள்ளும் பிரயோஜனம்
என்கிறார் –

———————————————————————————-

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள  நலம் ——73-

பதவுரை

ஏழ் பூண்ட–ஏழு குதிரைகளைப் பூண்ட
இரவி தேர்–ஸூர்யனுடைய தேரை
இடம் வலம்–(மேருவுக்கு) இடப் பக்கமாகவும் வலப் பக்கமாகவும்
ஒட்டி–(அந்தர்யாமியா யிருந்து கொண்டு) நடத்துகிறவனும்
வட முகம் வேங்கடத்து மன்னும்–வடதிசையின் கண்ணுள்ள திருவேங்கடத்தில் நித்ய வாஸம் பண்ணுமவனும்
குடம் நயந்த கூத்தன் ஆய் நின்றான்–ஆசையோடு குடக் கூத்தாடின கண்ணபிரான் போன்று நிற்பவனுமான பெருமானுடைய
குரை கழல் கூறுவதே–ஆபரண வொலி பொருந்திய திருவடிகளே ஏத்துவதே
நா தன்னால் உள்ள நலம்–நாவினால் கொள்ளக் கூடிய பிரயோஜனம்.

————————————————————————————-
வியாக்யானம் –

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி –
மேருவுக்கு இடமாயும்
வளமையும்
சஞ்சரிப்பதாய்
ஏழு நாமத்தை யுடைத்தாய் இருப்பதுமான
ஏழு குதிரைகள் பூண்ட ஆதித்ய ரதத்தை நடத்தி –

அன்றிக்கே
இடத்திலும் வளத்திலும் ஏழாகப் பூண்ட
ஆதித்ய ரதத்தை நடத்து -என்றுமாம் –

இவற்றால்
பீஷோதேதி சூரிய -என்கிறபடியே
ஆதித்ய அந்தர்யாமியாய்க் கொண்டு இருந்து
அத்தை நடத்தின படி

அன்றிக்கே
பாரத சமரத்திலே
ஆதித்ய ரதம் என்ற ரதத்தை
இடமாகவும் வலமாகவும் ஒட்டி
பிரதிபஷத்தை முடித்த படியாகவுமாம் –
ஆதித்ய பிரகாசமான தேரை -என்றுமாம் –

முதல் சொன்ன பொருள்
ஜகன் நிர்வஹணத்துக்கு உபலஷணம் –

வடமுக வேங்கடத்து மன்னும் –
வடக்கில் திக்குக்குப் பிரதானமாய் யுள்ள
திருமலையிலே நித்ய வாசம் பண்ணா நிற்பானுமாய்-

குட நயந்த கூத்தனாய் நின்றான் –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து  குடக்கூத்தை
விரும்பி யாடின முக்தன் ஆனவனுடைய –
தன் அழகை
மன்றிலே பிறர்க்கு இடுமவன் –

குரை கழலே கூறுவதே நாத் தன்னால் உள்ள  நலம் –
ஆபரண ஒலியை உடைத்தான திருவடியை ஏத்தும் அதுவே
நாவால் உள்ள பிரயோஜனம்
என்கிறார் –

நாத் தன்னால் உள்ள  நலம் –
நாவால் படைக்கும் சம்பத்து –
குடக் கூத்தாடின
இளைப்பாலே
திருமலையிலே வந்து நின்றான் போலே –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading