Archive for the ‘மூன்றாம் திரு அந்தாதி’ Category

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -64-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 12, 2014

அவதாரிகை –

இவன் தான் –
பிரயோஜனாந்தர பரராய்
தேவதாந்தரரான தேவர்களுக்கும் கூடத்
தன்னை அழித்துத்
கார்யம் செய்து கொடுப்பான் -என்று
அவன் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து
அவனுக்குப் பரிகிறார்-

——————————————————————————–

இசைந்த வரவும் வெற்பும் கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப -அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–64-

பதவுரை

இசைந்த–கடை கயிறாகக் கொள்வதற்குத் தகுதியான
அரவமும்–வாஸுகி நாகமும்
(இசைந்த)
மத்தாக நாட்டுவதற்குத் தகுதியான
வெற்பும்–மந்தரபர்வதமும்
(இசைந்த)
தாழியாக்குவதற்குத் தகுதியான
கடலும்–கடலும்
(ஆகிய இம்மூன்றையும்)
பசைந்து–ஒன்றோடொன்று ஸம்பந்தப் படுத்தி
அங்கு–அந்தக் கடலிலே
அமுது–அம்ருதமானது
படுப்ப–உண்டாம்படி
அசைந்து–அலைச்சல் பட்டு
கடைந்த வருத்தமோ–கடைந்த்தனாலுண்டான ஆயாஸத்தினாலோ
கச்சி–காஞ்சீபுரத்திலுள்ள
வெஃகாவில்–திருவெஃகாவில்
கிடந்து–சயனித்துக் கொண்டும்
அங்கு–அக் காஞ்சீபுரத்தில் (திருப் பாடகத்தில்)
இருந்து–வீற்றிருந்தும் (கிருவூரகத்தில்)
நின்றதுவும்–நின்று கொண்டும் இருப்பது?

———————————————————————————–

வியாக்யானம் –

இசைந்த வரவும் வெற்பும் கடலும் –
கடலிலே ஒரு மலையை நட்டு
ஒரு பாம்பைச் சுற்றிக்
கடையா நின்றால்
சேராச் சேர்த்தி யாய்   இருக்குமோ என்னில்
தன்னிலே பொருந்தி இருக்கும் –

கயிறாகச் சுற்றிக் கடைகைக்குத் தகுதியான
வாஸூகியும் மத்தாக நட்டுக்
கடைகைக்குத் தகுதியான மந்தரமும்
தாழியாகப் போரும்படியான கடலும் —

பசைந்தங்கு அமுது படுப்ப –
இம் மூன்றையும் கொண்டு
கடலிலே நீர் கோதாகக் கொண்டு
அம்ருதத்தை உத்பதிக்கும் படி
அமுதம் படும்படிக்கு  ஈடாக
பசை கொடுத்துக்
கடைந்தான் ஆயத்து –

அசைந்து கடைந்த வருத்தமோ –
திருமேனி நோவும் படி
ஆயாசித்துக்
கடைந்த வருத்தமோ –
சஞ்சரித்து வ்யாபரிக்கை –

கச்சி வெக்காவில்கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு –
திருக் கச்சியிலே
திரு வெக்காவிலே
கண் வளர்ந்து –
அவ்விடம் தன்னிலே
திருப்பாடகத்திலே -இருந்து –
திரு ஊரகத்திலே-நின்றதுவும் –

இப்படி –
நிற்பது
இருப்பது
சாய்வதான
இச் செயல்களை அனுசந்தித்து –
தனித் தனியே கடல் கடைந்து
அத்தால் திரு மேனியில் பிறந்த ஆயாசமோ
இது எல்லாவற்றுக்கும் என்று கொண்டு
அஞ்சுகிறார் –

—————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -63-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 12, 2014

அவதாரிகை –

இந்த தேசங்களிலே வந்து சந்நிஹிதனான அவன் தான்
சால சீலவானாய் இருப்பான் ஒருவன் கிடீர்
என்கிறார் –

தாழ்வுக்கு எல்லையான சௌசீல்யம் –
சாதக வேஷத்தையும்
சித்தமான வேஷத்தையும்
ஒக்க தரிப்பதே –
என்கிறார் –

——————————————————————————-

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-

பதவுரை

தாழ் சடையும்–தாழக் கட்டின ஜடையும்
நீள் முடியும்–நீண்ட திருவபிஷேகமும்
ஒண் மழுவும்–அழகிய மழுவென்னுமாயுதமும்
சக்கரமும்–திருவாழியாழ்வானும்
சூழ் அரவும்–சுற்றிலும் அணிந்துள்ள நாகாபரணமும்
பொன் நாணும்–பொன் னரைநாணுமாய்க்கொண்டு
இரண்டு உருவும்–ஒன்றுக்கொன்று சேராச் சேர்த்தியாயிருக்கிற இரண்டு வடிவும்
சூழும் திரண்டு அருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு–நாற்புறமும் திரள் திரளாக அருவிகள்
பெருகப் பெற்ற திருமலைமேலுள்ள அப்பனுக்கு
ஒன்று ஆய் இசைந்து தோன்றும்–ஒரு வடிவமாய் அமைந்துவிளங்கா நின்றது
ஆல்–ஆச்சரியம்!

———————————————————————————

வியாக்யானம் –

தாழ் சடையும் –
சாதக வேஷமானது தோற்றும் படிக்கு ஈடாக
தாழ்ந்த ஜடையும் –
சிக்குத் தலை என்று அருவராது ஒழிவதே
என்கிறார் –

நீண் முடியும் –
ஆதி ராஜ்ய ஸூசகமான திரு வபிஷேகமும் –
நீண் முடியோ பாதியாக
நினைத்து இருப்பதே தாழ் சடையும் –

ஒண் மழுவும்-
ஹிம்சைக்கு பரிகரமான
மழுவும் –

சக்கரமும் –
அருளார் திருச் சக்கரம் -திரு விருத்தம் -33-என்கிறபடியே
ரஷைக்கு பரிகரமான
திரு வாழியும்-

சூழரவும் –
பயாவஹமாம் படி
இடையிலே சூழப் பட்ட சர்ப்பமும் –

பொன்னாணும் –
ஐஸ்வர்ய பிரகாசகமாம் படி
திருவரையிலே சாத்தின
பொன்னரை நாணும்-

தோன்றுமால் –
இவை ஒக்க தோன்றா நின்றது –
அவனும் சரீர பூதன் இறே-

சூழும் திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு –
எங்கும் ஒக்க சூழ்ந்த அருவிகள்
திரண்டு பாயா நின்றுள்ள
திருமலையிலே நின்றுள்ள
என் நாயனானவனுக்கு -என் அப்பனுக்கு –

இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து –
அவ் விரண்டு உருவும் இசைந்து ஒன்றாய் இருந்ததீ-
விசஜாதீயமான வடிவுகளாய் இருக்கச் செய்தேயும்
அசாதாராண  விக்ரஹம் போலே இரா நின்றதீ –

இசைந்து –
இசையாது என்று காணும் -இருந்தார் –

ஓன்று சாதக வேஷமாய்
ஓன்று ஒப்பனைக்குக் கண்ட வடிவாய்
இருக்கை அன்றிக்கே
இரண்டும் ஓன்று என்று சொல்லலாம் படி
தகுதியாய் இருந்ததீ –
இது ஒரு சௌசீல்யம் இருந்தபடியே -என்கிறார் –

கண்ணுதல் கூடிய அருத்தனை –பெரிய திருமொழி -7-10-7-
என்னக் கடவது இறே –

——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -62-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 12, 2014

அவதாரிகை –

ஆஸ்ரித ரஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று
உகந்து அருளின நிலங்களைச்
சால விரும்பி இருக்கும்
என்கிறார் –

கேவலம் சம்சாரத்தில் வந்து நின்ற மாத்ரமோ –
பரமபதத்திருப்பும் மனிச்சுக்கவாய்
அத்தாட்சியோடே கூடி இருப்பது
உகந்து அருளின தேசத்திலே அன்றோ
என்கிறார் –

————————————————————————————-

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்  கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு  ——62-

பதவுரை

விண்ணகரம்–திருவிண்ணகரமும்
வெஃகா–திருவெஃகாவும்
விரி திரை நீர் வேங்கடம்–விரிந்து துலையெறிகிற நீர்வம் பொருந்திய திருமலையும்
மண் நகரம்–பூமிலுண்டான வைகுந்தமாநகர்போன்ற
மா மாடம் வேளுக்கை–பெரிய மாடங்களை யுடைத்தான திருவேளுக்கையும்
மண் அகத்த தென் குடந்தை–பூமியிலுண்டான அழகிய திருக்குடந்தையும்
தேன் ஆர் திரு அரங்கம்–தேன் (வெள்ளமிடுகிற சோலைகள்) பொருந்திய திருவரங்கமாநகரும்
தென் கோட்டி–தென் திருக்கோட்டியூரும்
(ஆகிய இத்திருப்பதிகள்)
தன் குடங்கை–தனது உள்ளங்கையாலே
நீர் எற்றான்–(மாவலி பக்கல்) உதக தானம் பெற்ற பெருமான்
தாழ்வு–தங்குமிடங்களாம்.

—————————————————————————————-

வியாக்யானம் –

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம் –
திரு விண்ணகர்
திரு வெக்கா
ஜல சம்ருத்தியை யுதைத்தான திருமலை
குளிர்  அருவி வேங்கடம் -நாச்சியார் திருமொழி -8-3-என்னுமா போலே
மிக்க அருவிகளை உடைய திருமலை –
திருமலை என்றால்
ஒரு விசேஷண ரஹிதமாக்ச் சொல்ல மாட்டார் –

மண்ணகரம் மா மாட வேளுக்கை –
சம்சாரத்திலேயாய் இருக்கச் செய்தே
பரம பதத்தோடு ஒக்க எண்ணலாம்
நகரமான –
பெரிய மாடங்களை உடைத்தான
திரு வேளுக்கை –

மா மாட –
ஸ்லாக்கியமான மாடங்கள் -என்றுமாம் –

மண்ணகத்த தென் குடந்தை –
பூமியிலே உண்டான திருக் குடந்தை –
திரு நாட்டிலே ஒரு கண்டம் –

தேனார் திருவரங்கம் –
நிரதிசய போக்யமான
சோலையை யுடைய
பெரிய கோயில் –

தென்  கோட்டி –
தெற்குத் திக்கிலே யுண்டான
திருக் கோட்டியூர் –

தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு  –
தன்னுடைய சிறாங்கித்த கையிலே நீரை ஏற்றவன்
திரு உள்ளம் தாழ்ந்து கிடக்கும் இடங்கள்
தன் உடைமையை மீட்டுக் கொள்ளுகைக்கு அர்த்தி யானவன்
தன்னது மீட்டுக் கொள்ளுகைக்கு அர்த்தியாய் இருக்கிறபடி –
மகா பலி பக்கலிலே தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தி யானால் போலே
உகந்து அருளின தேசங்களிலே
அர்த்தித்வம் தொடரும்படி நின்றான் –

தாழ்வு –
அபேஷித்த சமயத்திலே ஒருக்கால் உதவிப் போகை அன்றிக்கே
எப்போதும் உதவும்படி வந்து
நிற்கப் பெற்றோமே என்று
திரு உள்ளம் மண்டி இருக்கிற இடங்கள் –
ஆஸ்ரிதர்  அபேஷித்த போதாக வந்து அவதரிக்க
வேண்டாதபடி
தாழ்ந்து வர்த்திக்கிற தேசம் –

———————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -61-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 12, 2014

அவதாரிகை –

பிரதி பந்தகங்கள் போக்கும் அளவேயோ –
பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன்
சம்சாரத்திலே
உகந்து அருளின திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாக கொள்ளுகிறது –

இப்படிப் பட்ட சர்வேஸ்வரன் உகந்து அருளின நிலங்களிலும் காட்டில்
தம்முடைய திரு உள்ளத்தை மிகவும் ஆதரியா நின்றான்
என்னும் தாத்பர்யம் தோற்ற
அருளிச் செய்கிறார் –

—————————————————————————————-

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

பதவுரை

வைகுந்தம்–பரமபதத்தை
கொண்டு–இருப்பிடமாகக் கொண்டு
அங்கு–அவ்விடத்திலே
உறைவாற்கு–வாஸம் பண்ணு மெம்பெருமானுக்கு
பால் கடல்–திருப்பாற்கடலும்
வேங்கடம்–திருமலையும்
வண்டு வளம் கிளரும் நீள் சோலை–வண்டுகளின் திரள் மிக்கிருக்கிற பரந்த சோலைகளை யுடைத்தாய்
வண்–அழகியதாய்
பூ–போக்யமான
கடிகை–திருக் கடிகைக் குன்றும்
இள குமரன் தன் விண்ணகர்–நித்ய யுவாவான அவனுடைய தன்னதான திருவிண்ணகரும்
(ஆகிய இத்திருப்பதிகளெல்லாம்)
பண்டு எல்லாம்–என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பெல்லாம்
கோயில் போல்–கோயில்களாக இருந்தன போலும்.
(இப்போதோவென்னில், என்னெஞ்ச மொன்றே அவனுக்குக் கோயிலாயிருக்கிறது என்பது உள்ளுறை).

—————————————————————————————–

வியாக்யானம் –

வைகுந்தம் கொண்டு அங்கு உறைவாற்குக் –
ஸ்ரீ வைகுண்டத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக
மிகவும் ஆதரித்துக் கொண்டு
அங்கே
நித்ய வாசம் பண்ணுகிறவற்கு –

பாற்கடல் வேங்கடம் –
திருப்பாற்கடல் திருமலை –

வண்டு வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை –
வண்டுகளின் உடைய திரள் மிக்கு வாரா நின்றுள்ள
பரப்பை உடைத்தான சோலையை உடைய
அழகியதாய்
போக பூதமான
திருக் கடிகை –

இளங்குமரன் தன் விண்ணகர் –
பாற்கடல் வேங்கடம்–
நித்ய யுவாவானவன் வர்த்தியா நின்றுள்ள
திரு விண்ணகர் –

இவை இவனுக்கு –
பண்டெல்லாம்-கோயில் போல் –
என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பு கோயில் போலே

இத்தால்
இப்போது வாசஸ் ஸ்தானம்
தம்முடைய ஹிருதயம் -என்று கருத்து –

பண்டெல்லாம்-கோயில் போல் –
இன்று என் துரிதத்தைப் போக்கி
என்னை அல்லது அறிகிறிலன்
என்றபடி –

இத்தால்
ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு
திருப்பாற்கடலையும் விட்டு
திருப்பதிகளைப் பற்றி
இவை இத்தனையோடும்
தம்முடைய திரு உளத்திலே வந்து புகுந்தான் –
என்றபடி –

அங்கன் அன்றிக்கே
வேங்கடம்
பாற்கடல்
வைகுந்தம் பண்டெல்லாம் கொண்டு அங்கு உறைவாற்கு
என்றாக்கி
இவற்றை பண்டு எல்லாம் வாசஸ் ஸ்தானமாக உடையவன் –

இத்தால்  –
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே -திருவாய் மொழி -5-7-8–என்று
பரமபதத்தோபாதி
திருப்பாற்கடலோ பாதி யாக
திருமலையைச் சொல்லுகிறது –

வண்  பூங்கடிகை விண்ணகர் கொண்டு அங்கு உறைவாற்கு
வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
பண்டெல்லாம்
கோயில் போலே
என்றுமாம் –

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -60-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 12, 2014

அவதாரிகை –

உமக்கு வாழ்விலே அந்யமாகில்
பிரதி பந்தகம் போனால் அன்றோ வாழலாவது –
விரோதி செய்த படி என் என்ன

அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது
என்கிறார் –

————————————————————————————

பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து -கற்றுக் குணிலை
விளங்கனிக்குக்  கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —–60-

பதவுரை

பெற்றம்–பசுக்களை
முற்ற காத்து–ஒன்று தப்பாமல் ரக்ஷித்தவனாயும்
பிணை மருதம் ஊடு போய்–இரட்டை மருத மாங்களிடையே சென்றவனாயும்
பேய் முலை உண்டு–பூதனையின் முலையை உண்டவனாயும்
மா சகடம் உதைத்து–பெரிய சகடத்தை உதைத் தொழித்தவனாயும்
கன்று குணிலை கொண்டு- கன்றாகிய எறிதடியைக் கொண்டு
விளங்கனிக்கு எறிந்தான்–விளாம்பழத்தின் மீது எறிந்தவனாயுமுள்ள எம்பெருமான்
பண்டு–முன்பொரு காலத்தில்
வெற்றி பணிலம்–ஜயசீலமான சங்கை
வாய் வைத்து–வாயிலே வைத்து ஊதி
உகந்தான்–மகிழ்ந்தான்

————————————————————————————-

வியாக்யானம் –

இந்த பாசுரம் நிரல் நிறை அணி பாசுரம் –

பெற்றம் –
பசுக்கள் –

பிணை மருதம் –
நிர்விவரமான மருத்துகள் –

பேய் முலை –
பேயினுடைய   முலை –

மாச் சகடம் –
பயாவஹமான சகடம்

முற்றக் காத்து –
இவற்றில் –
பசுக்களை ஓன்று ஒழியாமல் நோக்கி –

ஊடு போய் –
யமளார்ஜூனங்களின் நடுவே
அவை சாயும்படி வழி போய் –

உண்டு-
பூதனை முடியும் படி உண்டு –

உதைத்து –
சகடத்தை உதைத்து

அநந்தரம் –
கற்றுக் குணிலை-
கன்றாகிற எறி கருவியைக் கொண்டு –

விளங்கனிக்குக்  கொண்டு எறிந்தான் –
விளாவினுடைய கனிக்கு எறிந்தான்
தன்னைக் கொண்டு தன்னை மாய்த்தபடி –

வெற்றிப் பணிலம் வாய் வைத்துகந்தான் –
அவன் தான் ஆர் என்னில் –
வெற்றியைப் பண்ணக் கடவதான
ஸ்ரீ பாஞ்ச  ஜன்யத்தைத் திருப்பவளத்திலே வைத்தூதி
ஆசூர வர்க்கத்தை முடித்து –
ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் என்று உகந்தவன் –
ஆயுதம் எடேன் என்று ஓர் ஆயுதம் எடுத்தவன் –
அர்ஜுனன் அம்பால் தனித் தனியே கொல்லாமே
திரளக் கொல்லவும் பெற்று
ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன மிடவும் பெற்றான் –

பண்டு-
பருவம் நிரம்புவதற்கு முன்னே
ஆசூர வர்க்கத்தை கை தொடானாய் முடித்தான்
பின்பு
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தின் உடைய த்வநியாலே முடித்தான் –

————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -59-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 11, 2014

அவதாரிகை –

கீழ்
கரியான் கழலே தெருள் என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்தார் –

அப்படிப் பட்ட திருவடிகளைத்
தாம் கிட்டி அனுபவிக்கிறார் –

———————————————————————–

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று ——59-

பதவுரை

மை போல் நெடு வரை வாய்–மை போன் றிருண்டு பெரிதான மலையிடத்திலே
தாழும்–இருபக்கமும் தாழ விழிந்து பாய்கின்ற
அருவி போல்–அருவிபோலே
தார் கிடப்ப–மாலை சாத்தப்பட்டிருக்க, (அதிலே யீடுபட்டு)
சூழும்–ஒருக்ஷணமும் விட்டுப்பிரியாமல் வளைத்துக் கொண்டிருக்கிற
திரு–பிராட்டியை யுடையவனும்
மா மணி வண்ணன்–நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும்
செம் கண்மால்–செந்தாமரை போன்ற திருக்கண்களையுடைய பெரியோனுமான
எங்கள் பெருமான்–எம்பெருமானுடைய
அடி–திருவடிகளை
சேர பெற்று–அருகப் பெற்றதனால்
வாழும் வகை அறிந்தேன்–உஜ்ஜீவிக்கும் வழி தெரிந்தவனானேன்.

—————————————————————————

வியாக்யானம் –

வாழும் வகை யறிந்தேன் –
வாழும் பிரகாரம் அறிந்து கொண்டேன் –

சர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு
வகுத்த சம்பத்து இது வென்று
வ்யுத்பத்தி பண்ணினேன் –
புத்தி நாசாத் ப்ரணச்யதி -கீதை -2-62/63-என்னும் படியே –
சப்தாதி விஷயங்களை
விநாச்யத்துக்கு உபாயம் அறிந்த இத்தனை இறே முன்பு
பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் மொழி -6-9-9-என்னும் படியே –
பகவத் விஷயத்திலே இவனுடைய
இச்சையும் அநிச்சையும் இறே
உஜ்ஜீவனத்துக்கும் விநாசத்துக்கும் ஹேது-
யதி ஜீவிது மிச்சசி -சுந்தர -21-20-
மை போல் நெடு வரை வாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப –
விநாசத்தை பண்ணினாலும் விட ஒண்ணாது –

மை போல் நெடு வரை வாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப –
அஞ்சன கிரியிலே பாய நின்ற அருவி  போலே
திரு மார்விலே இட்ட தோள் மாலை கிடப்ப –
ஒரு மேருவிலே நின்றும்
பூமி அளவும் வர இரண்டருகும்
அருவிகள் வந்து விழுந்தால் போலே யாய்த்து

திருத் தோளில் இட்ட  மாலையானது சூழப் போந்து
திருவடிகள் அளவும் கிடக்கும் படி –
மை போல் என்கிறது திருமேனிக்கும் போரும்படி
உபமானம் தன்னையே சிஷிக்கிறது

சூழ்ந்திரு என்று மேலோடு கூட்டி இவ் ஒப்பனை அழகைக் கண்டு
இறையும் அகலகில்லேன் -என்று சூழ்ந்து போந்து
பெரிய பிராட்டியார் விட மாட்டாதே
திரு மேனியிலே உடையவன் -என்றுமாம்

பெரிய பிராட்டியார் நித்ய வாசம் பண்ணும் படியை சொல்லிற்று ஆகவுமாம் –

திரு மா மணி வண்ணன் –
காந்தி மிக்குப் பெரு விலையனான ரத்னத்தோடே ஒத்த
நிறத்தை யுடையவன்

அன்றிக்கே
திருவையும்
மா மணியையும்
திரு மார்விலே யுடையவன் -என்றுமாம்

பெரிய பிராட்டியாரை யுடையனாய்
ஸ்ரமஹரமான வடிவையும் உடையவன் –

செங்கண் மால் –
புண்டரீகாஷனான சர்வேஸ்வரன்
ஈஸ்வரன் என்று ஸூ சிப்பியா நின்ற
கண்களை யுடையவன்
ஸ்ரீ யபதித்வத்தால் வந்த சிவப்பாக்கவுமாம்

இத்தால்
உகந்த விஷயமே
வகுத்த விஷயம் ஆய்த்து -என்றபடி –

எங்கள் பெருமான் –
ஒரு மிதுனம்  இவருக்கு போக்கியம்
அஸ்மத் ஸ்வாமியாய்  உள்ளான் –

அடி சேரப் பெற்று –
இப்படிப் பட்டு உள்ளவன் யுடைய
திருவடிகளைச் சேரப் பெற்று

வாழும் வகை அறிந்தேன் –
போகய பூதனாய்
மேன்மையை உடையனாய் வகுத்தவனுடைய
திருவடிகளைப் பெற்று –

——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -58-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 11, 2014

அவதாரிகை –

இப்படிப் பட்ட ஐஸ்வர்யத்தை உடையவனை
ஆஸ்ரயிக்கும் போது
கண்ணாலே காண வேணுமே -என்ன
காணலாம் படி திரு மலையிலே நின்றான்
என்கிறார் –

—————————————————————————————

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோரு நாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-

பதவுரை

தெளிந்த–ஸ்வச்சமாயிருக்கிற
சிலாதலத்தின் மேல் இருந்த மந்தி–கற்பாறையின் மீது இருக்கும் பெண் குரங்கானது.
அளித்த கடுவனை நோக்கி–ஸ்நேஹமுள்ள ஆண் குரங்கை நோக்கி
விளங்கிய வெண் மதியம் தான் என்றும் வேங்கடம்–‘விளங்குகின்ற வெளுத்த சந்திரன் (ப்பிடித்துக்) கொடு‘
என்ற சொல்லும்படிரு யிருக்கிற திருவேங்கடம்
மேல் ஒருநாள்–பண்டொரு காலத்தில்
மண்–பூமியை
மதியின்–தனது புத்தி சாதுரியத்தினால்
கொண்டு–(மாவலியிடத்தில் பெற்றுக்கொண்டு)
உகந்தான்–திருவுள்ள முவந்த ஸர்வேச்வான்
வாழ்வு–வாழுமிடம்

———————————————————————————————

வியாக்யானம் –

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி –
ஸ்படிக மயமான சிலா தளத்திலே பெண் குரங்கு
திருச் சித்ர கூட பரிசரத்தில்
சிலா தலத்திலே
பிராட்டியும் பெருமாளும் இருந்தாப் போலே இருக்கிறது –

சிலா தலத்தின் மேல் இருந்த
சிலா தலத்திலே
முற்கோலி   இருந்தபடி –

இருந்த –
வேண்டற்பாடு தோன்ற இருந்தபடி

கோதாவரி தீரத்திலே
சிலா தலத்திலே
முற்கோலிக் கொண்டு இருந்த பிராட்டியை போலே யாய்த்து
இந்தப் பெண் குரங்கும் –

அஸ்மின் மயா சார்த்தம் -ஆரண்ய -63-12-என்று பிராட்டி செய்த செயலை
திருமலையிலே திர்யக்குகள் அனுவர்த்தியா நின்றன –

அளிந்த கடுவனையே நோக்கி –
தன் பக்கலிலே மிக்க ஸ்நேஹத்தை யுடைத்தாய்
இது எப்போதோ நம்மை கைக் கொள்ளுவது என்று
காலம் பார்த்து நிற்கிற ஆண் குரங்கைப் பார்த்து

அளிந்த –
ப்ருகுடி படரைப் போலே
ஏவுவது காண் -என்று இருக்கை –

அளிந்த கடுவன் –
ஸ்நேஹத்தின் மிகுதி இறே ஊடல் –

கடுவனையே நோக்கி –
ஊடினால் ஒரு கடகர் பொருந்த விட வேண்டாதே
தானே பார்த்து வரத்தை சொன்னபடி
இங்கு இளையபெருமாள் இல்லையே –

நோக்கி –
சர்வ ஸ்வதானம் பண்ணி-

விளங்கிய வெண் மதியம் தா வென்னும் –
உஜ்ஜ்வலமான சந்திர மண்டலத்தை தா -என்னா நின்றது
எனக்கு பார்க்கைக்கு கண்ணாடி கொடு வந்து தா -என்பாரைப் போலே

திருமலையினுடைய அந்தம்
சந்திர பதத்துக்கு அவ்வருகேயாய்
அதிலே இருக்கிற மந்தி யாகையாலே
அப்புறம் இறே அதுக்குத் தோற்றுவது –

அவ்விடத்தில் களங்கம் இல்லையே
விளங்கிய வெண் மதியம் தா என்னும் ஆய்த்து –

தா என்னும் –
கடுவன் கீழே இருக்கையாலே அது மேலே நின்றும்
கீழ் நோக்கிக் கையை நீட்டுகிறபடி –

வேங்கடமே-
இப்படிப்பட்ட திருமலையே –

மேலோரு நாள் மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு –
பண்டொரு காலத்திலே
பூமியை புத்தி யோகத்தாலே அவன் இருப்புக்குச் சேரும்படி
தன்னைத் தாழ விட்டுக் கொண்டு
இரந்து
பெற்றதுக்கு உகந்தவன் தனக்கு
சம்பத்தாக் நினைக்கும் தேசம் –

மண் மதியில் கொண்டுகந்தான் –
கொள்ளும் விரகு அறிந்து
இரக்கக் கொடுக்கும் என்று
இரந்து
கொண்டான் –

வாழ்வு –
வர்த்திக்கும் தேசம்
அவனுடைய ஐஸ்வர்யம் -என்றுமாம் –

மண் மதியில் கொண்டு –
இந்த மௌக்த்யம்- அத்தை-பெண் குரங்கு சந்த்ரனை தா -என்றத்தை -ஸ்மரித்த   படி –

—————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -57-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 11, 2014

அவதாரிகை –

இப்படிப் பட்ட பெருமையை யுடையவனை
அனுசந்திக்கும் இதுவே கிடாய்
நமக்கு உத்க்ருஷ்டமாகை ஆகிறது
என்கிறார் –

கருடத்வஜனுமாய்
ஸ்ரீ யபதியும் ஆனவன்
திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் –

முடியாது என்று பேசாது இராதே அவனை
ஆஸ்ரயிக்கில் எல்லாரும் மேலாவது
என்கிறார் –

—————————————————————————————-

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் -பொலிந்த
கருடன் மேல் கண்ட கரியான் கழலே
தெருடன் மேல் கண்டாய் தெளி ——–57-

பதவுரை

திரு–பிராட்டியானவள்,
பொலிந்து இருண்ட கார்–செறிந்து இருளை யுடைத்தான கார் காலத்திலுண்டான
வானில்–மேகத்தில்
மின்னே போல் தோன்றி–மின்னல் போல் பிரகாசித்து
மலிந்து இருந்த மார்வன்–பொருந்தி யிருக்கப் பெற்ற திரு மார்பை யுடையனாய்
பொலிந்த கருடன் மேல் கொண்ட–விளங்குகின்ற கருடனால் மேற்றகொள்ளப்பட்டவனான
கரியான்–கருநிறப் பெருமானுடைய
கழலே–திருவடிகளே
தெருள்தன் மேல்-ஜ்ஞாநத்திற்கு மேற்பட்டதான பக்திக்கு விஷயமென்று
தெளி கண்டாய்–(நெஞ்சே!) தெளிந்திரு

———————————————————————————————
வியாக்யானம் –

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி –
இருளை யுடைத்தான
கார் காலத்தில் கருத்த மேகத்திலே மின்னினாப் போலே யாய்த்து
பிராட்டி அவன் மார்வில் இருந்தால் இருக்கும் படி –

மலிந்து திருவிருந்த மார்வன் –
பெரிய பிராட்டியார் தன் வேண்டப்பாடு தோன்ற
எழுந்து அருளி இருக்கும் படியான
மார்வை யுடையவன் –

அன்றிக்கே
மலிந்து திரு விருந்த என்று
அவளும் தண்ணீர் தண்ணீர் என்று
ஆசைப் படா நிற்கும் -என்றுமாம் –

பொலிந்த கருடன் மேல் கண்ட கரியான் கழலே –
பெரிய பிராட்டியாரை உடையவன்
என்னும் இடத்துக்கு மேலே
வேறே யொரு வேண்டற்பாடு காணும்
திருவடி மேல் இருக்கும் அத்தால் –
அவ் வழகுக்கு  மேலே ஆரழகு -என்றுமாம்

பெரிய திருவடியை நடத்தா நின்றுள்ள
கருத்த நிறத்தை யுடைய சர்வேஸ்வரன்
திருவடிகளே –

பொலிந்த கருடன் –
சம்ருத்த்னான திருவடி என்றுமாம் –
மகா மேருவிலே ஓர் அஞ்சன கிரி இருந்தாப் போலே இருக்கை –

திருவடி மேரு போலே –
எம்பெருமான் அஞ்சன கிரி போலே-

கரியான் –
ஒன்றுக்கு ஓன்று பரபாகமாய் இருக்கிறபடி –

தெருடன் மேல் கண்டாய் தெளி –
தெருள் தன் –
தெருளுதல்
தெருளப் படுமது -அனுசந்திக்கப் படுமது –
ஞான விபாகமான பக்தி யாகவுமாம் –

மேல் கண்டாய் –
இது எல்லாவற்றுக்கும் மேலாக அனுசந்தி –
இத்தை ஒழிந்தவை அடங்கலும் கீழ் –
இது ஒன்றுமே கிடாய் மேல் –
சேஷ பூதன் ஸ்வ ரூபத்துக்கு ஈடான உதகர்ஷம் இது கிடாய் –

தெளி –
இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே
அழகிதாக புத்தி பண்ணு

கருடன் மேல் கொண்ட கரியான் –
இரண்டையும் விளக்கும் மின் போலே பிராட்டி –

———————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -56-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 11, 2014

அவதாரிகை –

இப்படிப் பட்டவனுடைய அழகை
அனுபவித்துப் போமித்தனை போக்கி
இன்ன படிப் பட்டு இருக்கும் என்று கொண்டு
நம்மால் பரிச்சேதிக்கப் போகாது கிடீர்
என்கிறார் –

பிரயோஜனத்திலே சொல்லில்
சொல்லும் அத்தனை –

———————————————————————————-

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறையுருவம் யாம் அறியோம் எண்ணில் -நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-

பதவுரை

இறை–ஸர்வேச்வரனுடைய
உருவம்–திவ்ய மங்கள விக்ரஹமானது
நிறம்–நிறத்தால் வெளுத்திருக்குமோ (அல்லது)
செய்து–சிவந்திருக்குமோ, (அல்லது)
பசிது–பச்சென்றிருக்குமோ, (அல்லது)
கரிது–கறுத்திருக்குமோ,
என்று–எவ்வண்ணமா யிருக்குமென்று
எண்ணில்–ஆராயுமிடத்தில்
யாம் அறியோம்–நாம் அறியமாட்டோம் (இது நிற்க)
நிறைவு உடைய–ஜ்ஞான சக்திகளில் பூர்த்தியை உடையவளான
நா மங்கை தானும்–ஸரஸ்வதீ தேவியும்
பூ மங்கை கேள்வன்–பூவிற்பிறந்த பெரிய பிராட்டிக்குக் கணவனான எம்பெருமானுடைய
பொலிவு–பூர்த்தியை
நலம் புகழ வல்லளே–நன்றாகப் புகழ சக்தி யுடையவளோ
(அல்லள்)

————————————————————————————-

வியாக்யானம் –

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று இறையுருவம் யாம் அறியோம் எண்ணில் –
இறையினுடைய திரு நிறமானது
வெளுத்து இருக்கும்
சிவந்து இருக்கும்
கருத்து இருக்கும்
பச்சென்று இருக்கும்
என்று கொண்டு ஆராயும் இடத்தில்
நம்மால் ஏக தேசமும் அறியப் போகாது –

யாம் அறியோம் எண்ணில் –
எண்ணாதே
பக்தியால் பேசிக் கொண்டு நிற்கில்
நிற்கும் இத்தனை –

இது தான் நம்முடைய ஞான வைகல்யத்தாலே
வந்தது ஓன்று அன்று –

நிறைவுடைய நா மங்கை தானும் –
நாட்டில் அவனைப் பேசப் புகுவார்
தன்னை யாஸ்ரயிக்க இருப்பாளுமாய்
தான் அவனைப் பேசுகையிலே ஒருப்பட்டு
அதுக்கு ஈடான பெருமையையும் உடையளான
சரஸ்வதி யானவளும்-
கலங்காதே பேசுகைக்கு மத்யச்தையாய்ப் பிறந்த
தெளிவை உடையவளும் –

நலம் புகழ் வல்லளே –
அவனுடைய கல்யாண குணங்களைப் பேசி முடிக்க வல்லளோ-
அங்குத்தைக்குத் தகுதியாகப் புகழ  வல்லளே-என்றுமாம் –

என் தான் அவள் மாட்டாமைக்கு அடி -என் என்னில்
பூ மங்கை கேள்வன் பொலிவு –
இவள் யாவள் ஒருத்திக்கு சேஷ பூதையாய் இருக்கிறாள் –
அப்படிப் பட்டவள் தானும் கூட சேஷ பூதையாக யுடையவனுடைய சம்ருத்தியை
இவளாலே புகழ்ந்து தலைக் கட்டலாமோ –

ஸ்ரீ யபதியினுடைய சம்ருத்தியைச் சிலராலே பேசப்போமோ-
அவனும் அவளுமாய் நிற்கிற இடத்திலே சொல்லலாமோ
அப்ரமேயம் ஹித்த்தேஜ யஸ்ய சா ஜநகத்மஜா -ஆரண்ய  -37-18
உயர்வற உயர்நலம் உடையவன் –

இறையுருவம் யாம் அறியோம் எண்ணில் –
அவன் கொண்ட வடிவு ஒன்றுக்கும் இத்தனை –
அவன் கல்யாண குணங்களைப் பேச முடியுமோ என்றபடி –

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -55-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 11, 2014

அவதாரிகை –

ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல்
இப்படி வத்சலனாய்
உள்ளவன் உடைய
அழகை -அனுபவிக்கிறார் –

———————————————————————————

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-

பதவுரை

பெரியவரை மார்வில்–பெரிய மலைபோன்ற திருமார்பிலே
பேர் ஆரம்பூண்டு–பெரிய ஹாரத்தை அணிந்துகொண்டு
திரியுங்கால்–உலாவினால்
கரிய முகிலிடை மின் போல–காளமேகத்திலே மின்னல் மின்னினாற் போன்றிருக்கும்!
மற்று–அன்றியும்,
அவன் தன்–அப்பெருமானுடைய
நீள் நெடு கண்–நீண்டு பரந்த திருக்கண்களினுடைய
நிறம்–நிறத்தை
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே காட்டும்–பாட்டென்று பேர் பெற்றவையெல்லாம் ஒடுங்கும் படியாக
(அதிமதுரமாக) வண்டுகள் இருந்து பாடப்பெற்ற தாமரைப்பூவே காட்டித்தரும்.

————————————————————————————-

வியாக்யானம் –

பெரிய வரை மார்வில் –
ஒரு மேரு போலே யாய்த்து
தன் திருமேனி இருக்கிற படி –

இத்தால்
ஆரத்தால் பரிச்சேதிக்கப் போகாத படி
பெரிய மலை போலே பரந்து இருக்கிற
திரு மார்வில் -என்கிறபடி –

பேராரம் பூண்டு  –
அம் மார்வு தனக்கு இருமடி இட்டுச்
சாத்த வேண்டும்படி யாய்த்து
ஆரத்தின் பெருமை
இருக்கிறபடி –

கரிய முகிலிடை மின் போல் –
அப்போது இருக்கும் படி என் என்னில் –
மார்வுக்கும்
ஆரத்துக்கும்
திருஷ்டாந்தம்

கருத்த நிறத்தை   உடைத்தாய் இருப்பதொரு
மேகத்தில் மின்னினாப் போலே
யாய்த்து ஸ்யாமளமான திரு மேனியிலே
ஆரம் கிடந்தால் இருக்கும் படி  –

திரியுங்கால் –
பெரிய வடிவிலே ஆரத்தைச் சாத்தி
சஞ்சரிக்கும் போது

அங்கன் அன்றிக்கே
திரியுங்கால் –
இவ்வழகை அனுசந்திக்கும் போது -என்றுமாம் –

பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே-
பாண ஜாதியாக
லஜ்ஜித்து ஒடுங்கும் படிக்கு ஈடாக
வண்டுகள் ஆனவை சப்தியா நின்றுள்ள
பங்கயமே காட்டும் –

எத்தை என்னில் –
மற்றவன் தன் நீண் நெடுங்கண் காட்டும் நிறம் –
அவனுடைய மற்றை நீண் நெடும் கண்ணில் உண்டான நிறத்தை –
அவனுடைய பரிச்சேதிக்கப் போகாத கண்ணின் உடைய நிறத்தைக் காட்டா நின்றது –
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் -திரு விருத்தம்-45-

——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –