Archive for the ‘மூன்றாம் திரு அந்தாதி’ Category

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -84-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

வேதைக சமதி கம்யனாய்
உள்ளவனை ஒருவரால் கண்டதாய்த்
தலை கட்ட ஒண்ணாது  –
கண்டாராகச் சொல்லுகிறவர்கள் அடைய
கவிகளைக் கொண்டாடினார்கள் அத்தனை
அல்லது
ஒருவரும் கண்டார் இல்லை
என்கிறார் –

———————————————————————-

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண்  மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி ———–84-

பதவுரை

நால் மறையின்–நான்கு வேதங்களினுடைய
உள் பொருள்–உள்ளுறை பொருளாக
உளனாயவனை–இருக்கின்ற எம்பெருமானை
தேர்ந்து–(ஜ்ஞாந யோகத்தாலே) ஆராய்ந்து
உள்ளத்து உளன் ஆக–நெஞ்சிலே பொருந்தி யிருப்பவனாக
உணர்வர் ஏலும்–(சில ஞானிகள்) அறிய வல்லாரென்றாலும்,
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப்போன்ற
நெடு கண்–நீண்ட தீருக் கண்களை யுடைய
மாயவன்–ஆச்சர்யபூதனாக
உளனாபவனை–இருக்கின்ற அப்பெருமானை
கண்டார் யாவரே–கண்டு அநுபவிக்கப்பெற்றார் யாவர்? (ஒருவருமில்லை)
கவி உகப்பர்–தோத்திரக் கவிகளை உகந்து வாயாற் சொல்லிக் கொண்டு போது போக்குவர்களத்தனை.

————————————————————————–

வியாக்யானம் –

உளனாய நான் மறையினுள் பொருளை –
வேதாந்த ரஹச்யமாய்க் கொண்டு
என்றும் ஒக்க உளனானவனை-
நான் மறையின் உட்பொருளாய்க் கொண்டாய்த்து   இவன் உளனாவது –
நிர்தோஷ பிரமாண சித்தன் ஆகையாலே
தான் உளனாய்
வேதத்தாலே பிரதி பாதிக்கப் பட்டவனை –

உள்ளத்து உளனாகத் தேர்ந்து உணர்வரேலும்-
இப்படி பிரமாணங்களிலே என்றும் ஒக்க
கேட்டுப் போகக் கடவ
அவனை ஹிருதயத்திலே சந்நிஹிதனாக அனுசந்தித்து
பரிச்சேதித்தார்களே யாகிலும்
கர்ம யோகத்தாலே ஞான யோகம் கை வந்து
ஞான யோகத்தாலே கண்டார்களே யாகிலும் –

உளனாய வண்டாமரை நெடுங்கண்  மாயவனை-
ஆஸ்ரிதர்க்கு அனுபவ யோக்யமான
விக்ரஹத்தை யுடைய
ஆச்சர்ய சக்தி யுக்தனை
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று
சுருதி பிரசித்தமான கண் அழகை யுடையவனை
தமக்குக் காட்டின  வடிவு –

யாவரே கண்டார்-
ஆர் தான் காணப் பெற்றார்களோ  –

கண்டாராகச் சொல்லுகிறவர்கள் ஒன்றும் அன்றோ என்னில் –
உகப்பர் கவி –
அவர்களும் கவியை உகந்தார் இத்தனை போக்கி
காணப் பெற்றார்களோ
அவனுடைய ஸ்தோத்ரத்தை உகந்த அத்தனை -என்றுமாம் –

பகவத் விஷயத்திலே
கிஞ்சித் கரித்தோம் ஆக வேணும் என்று
தங்கள் ஆசையை கவி என்று ஒரு முகத்தாலே
வெளி இட்டார்கள் அன்றோ –

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -83-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

அவன்  ஒருக்காலும்
காணவும்
நினைக்கவும்
ஒண்ணாதான் ஒருவனே ஆகிலும்
அவன் இருந்தபடி இருக்க –
இப்போது முந்துற முன்னம் ஹ்ருதயத்திலே புகுந்து
சந்நிதி பண்ணா நின்றான்
என்கிறார் –

——————————————————————————

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

பதவுரை

இனி–இப்போது
அவன்–‘அந்தஸர்வேச்வரன்
மாயன்–மாயக்காரன்‘
என–என்று
உரைப்பர் ஏலும்–சொல்லுவார்களே யாகிலும்,
இனி–இப்போது
அவன்–அப்பெருமான்
காண்பு அரியன் ஏலும்–கண்டு அநுபவிக்கக் கூடாதவனே யாகிலும்
கள்ளத்தால்–க்ருத்ரிம வேஷத்தினால் (மாவலி பக்கலிலே சென்று)
மண் கொண்டு–பூமிதானம் வாங்கி
விண் கடந்த பை கழலான் அவன்–ஆகாசம் முதலிய மேலுலகங்களையும் ஆக்ரமித்துக் கொண்ட
பரந்த திருவடிகளை யுடையனான அப்பெருமான்
இனி–இப்போது
உள்ளத்தின் உள்ளே உள்ள–எனது ஹ்ருதயித்தினுள்ளே (வேறிடமறியாமே) நிலைத்து நிற்கின்றான்
(இந்த பரமலாபமே போது மென்கை)

———————————————————————————

வியாக்யானம் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்-
பிரமாணங்கள் ஸூ லபன் என்று
சொல்லுகிற அவனை
நாட்டார் அரியன் என்று சொன்னார்களே யாகிலும் –
இப்போது அவன் ஆச்சர்ய பூதன் என்று சொல்லுவார்களே யாகிலும் –
வர்த்தமான தசையில் பிரகிருதி சம்பந்தித்து
மம மாயா துரத்யயா-கீதை -7-13-என்னும்படி
காண வரியன் ஆகிலும்  –

இனியவன் காண்பரியனேலும் –
நிரதிசய போக்யனாய் யுள்ளவன்
தான் கிட்டிக் காண அரியனாய் இருந்தானே யாகிலும்
இப்போது அவன் காண முடியாதான் ஒருவன் ஆகிலும்
அன்றிக்கே
சரீர சம நந்தரத்திலும் காண வரியன் யாகலும்-

இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு-
சர்வேஸ்வரனான தான் செய்தான் என்று
தோன்றாதபடி
பூமியை அபஹரித்து
நெஞ்சுக்கு இனியனாய்
தன்னுடைமையை மகா பலி பக்கலிலே அளந்து கொண்டவன் –

விண் கடந்த பைங்கழலான் –
ஆகாசத்துக்கு அவ்வருகாம்படி வளர்ந்து
சகல லோகங்களையும்
தன் கீழே இட்டுக் கொண்ட
பரந்த திருவடிகளை யுடையவன் –
அன்றிக்கே
அழகிய திருவடிகளை யுடையவன் -என்னவுமாம் –

இனி உள்ளத்தின் உள்ளே உளன் –
இப்போது என் ஹ்ருதயத்தின் உள்ளே சந்நிஹிதன் ஆனான்
புக்க ஆயுச்சுக்கு மரணம் இல்லை இ றே
மேல் செய்த படி செய்கிறான்
பெற்ற வம்சத்தை ஒருவரால் இல்லை செய்ய ஒண்ணாது இ றே
இப்படி
சந்நிஹிதன் என்றதே யாகிலும்
கீழ்ச்   சொன்ன  அபரிச்சேத்யதையே பலித்து விடுகிறது –

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -82-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

இது தன்னை நாம் இன்னாதாகிறது என் –
அவன் தான் சிலரால் அறிய ஒண்ணாத படியாய் இருப்பான் ஒருவனுமாய்
நிரதிசய போக்யனுமான பின்பு
இனியவனை நாம் கிட்டிக் கண்டோமாய்த்
தலை கட்ட விரகு உண்டோ
என்கிறார் –

————————————————————————————

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-

பதவுரை

உணரில்–(அப்பெருமானை நாமாக) அறியப் பார்த்தாலும்
உணர்வு அரியன்–(அவன்) அறியக் கூடாதவன் (அவன்தானே)
உள்ளம் புகுந்து புணரிலும்–நெஞ்சிலே வந்து புகுந்து சேர்ந்தாலும்
உண்மை காண்பு அரியன்–உள்ளபடி அறியக் கூடாதவன்
இனி–இப்படியான பின்பு
இணர் அணைய–பூங்கொத்துகள் தாழும்படியாக
கொங்கு–தேனிலே
வண்டு–வண்டுகள்
அணைந்து–வந்துகிட்டி (மதுவைப்பருகி)
அறையும்–ரீங்காரம் செய்யப்பெற்ற
தண்–குளிர்ந்த
துழாய்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனான
கோமானை–அப்பெருமானை
எங்கு–எவ்விடத்தில்
அணைந்து–கிட்டி
காண்டும்–காணக் கடவோம்.

————————————————————————————–

வியாக்யானம் –

உணரில் உணர்வரியன் –
முதல் தன்னிலே இதில் இழியாதாது நன்று –
அதாகிறது
அறிவதாக இழிந்து
அறியாது ஒழிவதில் காட்டில் முதல் தன்னிலே
அறிவதாக இழியாதது நன்று இறே –

ஆரேனும் ஒருத்தருக்கும் ஸ்வ யத்னத்தாலே அறிவோம் என்னும் அன்று
அறிய அரியனாய் இருப்பான் ஒருவன் –
தன்னாலும் அறியப் போகாது –
இவனாலும் அறியப் போகாது
தனக்கும் தன் தன்மை அறிவரியான் -திருவாய்மொழி -8-4-6-

உள்ளம் புகுந்து புணரிலும் காண்பரியன் உண்மை –
அவ்வருமை தீர அவன் தான் ஹ்ருதயத்திலே சந்நிதி
பண்ணி கலக்கும் அன்று
ஒரு குறை இல்லையே என்னில் –
அப்போதும் அவனை உள்ளபடி யறிந்து பரிச்சேதிக்கப் போகாது –
அவனுடைய உண்மை யறியப் போகாது –

காண்பரியன் உண்மை –
என் எனபது –
வை லஷண்யத்தை பரிச்சேதிக்கப் போகாது
என்கிறது –

இணரணையக் கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை –
ஏதேனும் அறிய ஒண்ணாத விஷயம் என்று
கை வாங்கப் போகாது -என்கிறது
இவன் தான் காணும் அன்று காண வரிதாய்
அவன் தானே காட்டும் அன்றும் காண வரிதானாலும்
இழந்து ஆறி இருக்க ஒண்ணாது
போக்யதையும் ஸ்வாமித்வமும் –

இணரணையக் கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை –
பூங்கொத்துக்கள் ஆனவை தாழும்படிக்கு ஈடாகத்
தேனிலே வண்டுகள் வந்து கிட்டி
அத்தை புஜித்து மது பானத்தாலே வந்த ஹர்ஷத்தாலே
சப்தியா நின்றுள்ள குளிர்ந்த
திருத் துழாயை உடைய சர்வேஸ்வரனை –

எங்கணைந்து காண்டும் இனி –
இனி நான் எங்கே கிட்டிக் காணக் கடவேனோ
லௌகிகர் படியிலும் காண விரகற்று
அவன் தானே காட்டும் வைதிகர் படியாலும்
காண விரகற்ற பின்பு
இனி நான் காண்கை என்று ஒரு பொருள் உண்டோ
கிட்டாது ஒழிய மாட்டேன்
கிட்ட மாட்டேன் –

———————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -81-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

கீழே
சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே
நெஞ்சு
பகவத் விஷயத்திலே ப்ரவணமாய்த்து என்று கொண்டாடினார் –
விஷயத்தைப் பார்த்தவாறே
முதலடி இட்டிலராய் இருந்தார் –

அவன்  துர்ஜ்ஞேயன் ஆகிலும் அவனை அனுசந்தி என்று
திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்து
இவனை இம்மமனஸ் அனுசந்தியா இருக்கைக்கு
ஹேது என்னோ -என்கிறார்

இத்தால்
தம் நெஞ்சு முயலுகிற முயற்சி போராதது என்னும்படி
தமக்கு அவ் விஷயத்தில் உண்டான
ப்ராவண்யம் இருந்தபடி சொல்லுகிறார் –

அவன் பெருமை பார்த்த போது
அறிவொன்றும் இல்லையாத் தோன்றும்
புறம்பே பார்த்த போது குவாலாய் இருக்கும் –

————————————————————————————–

நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு ——81-

பதவுரை

என் நெஞ்சமே–எனது மனமே!,
நெஞ்சால் நினைப்பு அரியன் எலும்–(எம்பெருமான்) நெஞ்சாலும் நினைக்க முடியாத பெருமை
வாய்ந்தவனே யாயினும் (அவனுடைய பெருமையை நினையாமல் ஸௌலப்யத்தையே நினைத்து)
நிலைப்பெற்று–காலூன்றி நின்று
பேசாய்–அவனைப் பேசப்பார்
நினைக்குங் கால்–நாம் ஒருகால் நினைத்தாலும்
நெஞ்சத்து–நெஞ்சு தன்னிலே
பேராது நிற்கும்-விட்டு நீங்காமல் நிலைத்து நிற்கின்ற
பெருமானை–எம்பெருமானை
உணர்வு–நமது நெஞ்சானது
ஓராது நிற்பது என்கொலோ–அநுஸந்தியாமல் வாளா விருப்பது ஏனோ?

————————————————————————————–

வியாக்யானம் –

நெஞ்சால் நினைப்பரியனேலும் –
நெஞ்சமே
உன்னாலே நினைக்கப் போகாதாகிலும் –
ஓர் உழக்கைக் கொண்டு கடலை யளக்கப் போகாது இறே –
அப்படியே
ஷூத்ரமான மனசைக் கொண்டு அபரிச்சேத்யனானவனை
பரிச்சேதிக்க ஒண்ணாது இறே  –
அப்படியே அரியனாய் இருந்தானே யாகிலும் –

நிலைப் பெற்றேன் நெஞ்சமே பேசாய் –
ஐஸ்வர்யம் கண்டு பிற்காலியாதே-அனுபவிப்பாய் –
கிண்ணகம் என்று கால் வாங்காதே
ஊன்றி யடி இட்டுத் தரித்து    நின்று
அவனைப் பேசப் பாராய்-

இவர் இங்கனே சொல்லச் செய்தேயும் சற்று மெத்தென்று இருந்தது –
என் தான் –
நீ அவனை மேல் விழுந்து ஆஸ்ரயியாதே
கை வாங்கி இருக்கைக்கு அடி ஏதோ வென்று
ஸ்வ கதமாக வருளிச் செய்கிறார் மேல் –

நினைக்கும் கால் -நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை –
இவன் ஒருக்கால் நினைத்துக் கை வாங்கினால்
பின்னை
அவன் நெஞ்சத்து பேராது நிற்குமவன் யாய்த்து
அஹம் ஸ்மராமி -என்கிறபடியே எப்போதும்
தான் நினைத்து நம் ஹிருதயத்தை
விடாதே இருக்கிற சர்வேஸ்வரனை
ஒருக்கால் நினைக்கில் –
நாக்குண்டா நா வெழா  வென்ற நெஞ்சை விட்டுப் போக வறியாதவன்-
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் -திருவாய்மொழி -1-10-2-என்னும்படியே
நாம் ஒருக்கால் நினைத்தால்
ருணம் ப்ரவ்ருத்தம் -என்று ஒருக்காலும் மறவான் –

என் கொலோ ஓராது நிற்பது உணர்வு –
நிரந்தரம் நினைத்தாலும்
நினையாதாரையோ நினைப்பது –

உணர்வு  ஓராது இருப்பது என் கொலோ –
அறிவு நடையாடா நிற்கச் செய்தே
இவனை அனுசந்தியாது இருக்கைக்கு ஹேது ஏதோ –
இவனை இட்டு வேறே சில துரராத தேவதைகளை ஆஸ்ரயிக்க இருக்கிறதோ
அவனை நினையாதே மண்ணை முக்கப் பார்க்கிறதோ
அவனை நினையாதே தாம் உண்டாம் படி எங்கனே –
ஒண் டாமரையாள்  கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67-
அவனை விட்டுத் த்யாஜ்யமான சப்தாதி விஷயங்களில் போகவோ –

————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -80-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

இவ்விஷயத்தில் தமக்கு முன்னே
தம் திரு உள்ளமானது
பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –

உபதேச நிரபேஷமாக என்னுடைய நெஞ்சானது
அவனுடைய விரோதி நிரசன ஸ்வ பாவத்தை
அனுசந்தித்து
இந்த்ரிய ஜெயம் பண்ணி
சம்சாரத்தைப் போக்கி
அனுசந்திக்க முயலா நின்றது –
என்கிறார் –

——————————————————————————-

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன்  துணிய -வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —80-

பதவுரை

நின்று–(கூசாமல்) முன்னே வந்து நின்று
எதிர் ஆய–எதிரியாய்ப் போர் செய்ய வந்தவனும்
நிரைமணி தேர்–ஒழுங்காக அழுத்தின மணிகளை யுடைய தேரின் மேலேறி யுள்ளவனுமான
வாணன்–பாணாஸுரனுடைய
ஒன்றிய ஈர் ஐந்நூறு தோள்–அடியுரமுள்ள ஆயிரந்தோள்களும்
உடன் – ஏக காலத்தில்–
துணிய–அறுப்புண்டு விழும்படியாகக் காரியஞ் செய்து
வென்று–வெற்றி பெற்று
இலங்கும்–விளங்குகின்ற
ஆர்படு–கூர்மையை யுடைய
வான்–திவ்யமான
நேமி–திருவாழியாழ்வானை யுடையவனாய்
அரவு அணையான்–சேஷசாயியான எம்பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளிலே
நெஞ்சு தான்–(எனது) நெஞ்சு தானே
முயலும்–உத்ஸாஹப் படுகின்றது.

———————————————————————————

வியாக்யானம் –

நின்று எதிராய-
எதிராய நின்ற
தாமச தேவதையாகை யாலே
அவனை ஆஸ்ரயிக்கையாலே –
சர்வேஸ்வரன் என்று அறியாதே
எதிரிட்டு நின்ற –

நிரை மணித் தேர் வாணன் –
நிரைகளை யுடைத்தான
மணிகளை யுடைய
தேரின் மேலே வந்து தோற்றின வாணனுடைய-

தோள் ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன்  துணிய –
ஓர் இடத்தே வந்து சேர்ந்த ஈரைஞ்ஞூறான ஆயிரம் தோளும் –
ஒரு தோள் அளவில்லாத ஆயிரம் தோளும் -என்றுமாம் –
அடி யொன்றாய்ப்
பணை பலவானாப் போலே –

உடன் துணிய –
ஏக காலத்திலே துணியும் படிக்கு ஈடாக

இத்தால்
இவனே சரண்யன் என்னும் இடமும்
அல்லாதார் வ்யர்த்தர் என்னும் இடமும்
சொல்லுகிறது –

வென்றிலங்கும் ஆர்படுவான் நேமி –
வென்றியையும்
அத்தால் வந்த ஔஜ்வல்யத்தையும் யுடைத்தாய்
கூர்மையையும் யுடைத்தான
திரு வா ழியை யுடைய –
ஆர்படுகை கூர்மையை  யுடைத்தாகை –
அன்றிக்கே
ஆரங்களை யுடைத்தாகை -என்றுமாம் –

அரவணையான் சேவடிக்கே –
அநந்த சாயியான சர்வேஸ்வரன்
திருவடிகளிலே –

நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு –
நெஞ்சானது கிட்டுவதாக
உத்சாஹியா நின்றது –
தானே ப்ரவர்த்தியா நின்றது –

————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -79-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது
அநந்த காலம் வேண்டாவோ
என்னில் –
அவனை அனுசந்தித்து –
சப்தாதி விஷயங்களிலே அநாதரம் பிறக்கச் சடக்கென்னப்
போக்கலாம் -என்கிறார் –

நாட்டார் நான் சொல்லப் போகிற படிகளைச்
செய்தார்கள் ஆகில்
ஜென்மங்களைப் போக்கலாம் கிடீர்
என்கிறார் –

—————————————————————————————–

ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் -கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று ——79-

பதவுரை

கார்த்த–பசுமையான நிறமுள்ளதாய்
விரை ஆர்–பரிமளம் நிரம்பியதான
நறு துழாய்–செவ்வித் திருத்துழாய் மாலையையுடையவனும்
வீங்கு ஓதம் மேனி-பொங்குங்கடல் போன்ற திருமேனியை யுடையவனும்
நிரை ஆரம் மார்வனையே–ஒழுங்கான ஹாரங்களணிந்த திரு மார்பை யுடையவனுமான பெருமானையே
நின்று–நெஞ்சு நிலைத்து நின்று
ஓர்த்த மனத்தர் ஆய்–அநுஸந்திக்கின்ற மனமுடையாய்
ஐந்து அடக்கி–பஞ்சேந்திரியங்களையும் வென்று
ஆராய்ந்து–ஸம்ஸாரத்தின் கெடுதல்களை ஆராய்ந்து
பேர்த்தால்–ஸம்ஸாரத்தில் நின்றும் நெஞ்சைத் திருப்பிக் கொண்டால்
பிறப்பு ஏழும்–ஒன்றின்பின் ஒன்றாக நேரக்கூடிய ஜன்ம பரம்பரைகளை
போக்கலாம்–தொலைத்து விடலாம்.

——————————————————————————————-

வியாக்யானம் –

ஒர்த்த மனத்தராய் –
அவனுடைய கல்யாண குணங்களை
உச்சி வீடு விடாதே
அனுசந்தியா நிற்கிற மனசை யுடையராய் –

ஐந்தடக்கி –
இந்த்ரியங்களை
விஷயங்களில் போகாத படி நியமித்து –

ஆராய்ந்து –
அநந்தரம்-
சம்சாரத்தின் உடைய தோஷ அனுசந்தானத்தைப் பண்ணி –

பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் –
அதின் நின்றும் ஹிருதயத்தை மீட்டால்
பின்பு
ஜென்மங்களைத் தப்பலாம் –
இப்படி சம்சாரத்தைப் பேர்த்தால்
பிறப்பு ஏழும் அநாயாசேன மறுவல் இடாத படி  பேர்க்கலாம் –
ஏழு பிறப்பும் என்றது உப லஷணம்-
ஜன்மம் அடங்கலும் அறுக்கலாம் -என்றபடி –
ஜன்ம சந்ததியைப் போக்கலாம் –

கார்த்த விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி –
இது கிடீர்
நான் குடிக்கச் சொல்லுகிற
வேப்பங்குடி நீர்

பச்சை நிறத்தையும்
மிக்க பரிமளத்தையும்
யுடைத்தான திருத் துழாய் மாலையையும்
தேங்கின கடல் போலே தர்ச நீயமான
வடிவு அழகையும் யுடையவன் –

நிரையார மார்வனையே நின்று –
சேர்ந்த ஆரத்தை யுடைத்தான
மார்பை யுடையவனையே
நின்று ஒர்த்த மனத்தராய் –
ஸ்வா பாவிகமான வடிவு அழகும்
ஒப்பனையால் வந்த அழகும்
இருக்கிறபடி –

இத்தால் –
சப்தாதி விஷயங்களை வளைக்கலாம் படியான
அழகைச் சொல்லுகிறது –

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -78-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

நெஞ்சே
விரோதி நிரசன ஸ்வபாவனானவன்
நமக்கு ரஷகனாம் –
ஆன பின்பு அவனையே புகலாக அனுசந்திக்கப் பார்
என்கிறார் –

அவன் சர்வ ரஷகன் ஆகிலும்
நம்முடைய ஜ்ஞான வ்ருத்த ஜன்மங்களில்
கொத்தை பார்க்க வேண்டாவோ -என்ன
வேண்டா -என்கிறார் –

——————————————————————————————

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே ஓர்த்து———-78-

பதவுரை

ஆழி–திருவாழி யாழ்வானை
வலவன்–வலத் திருக் கையிலுடையவனும்
முரன்–முராஸுரனுடைய
நாள்–ஆயுளையும்
வலம்–வலிமையையும்
சுழித்த–போக்கின
மொய்ம்பன்–மிடுக்கை யுடையவனுமான பெருமான்
சரண் ஆம் ஏல்–ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில்
கதி ஏது நிலை எது பிறப்பு எது என்னாதே–(நம்முடைய) ஞானமென்ன!, ஆசார மென்ன! ஜன்ம மென்ன! என்று
(இவற்றின் தாழ்வுகளைப் பார்த்து உபேக்ஷியாமல்
நமக்கு என்றும் அரண் ஆம்–நமக்கு எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே யிருப்பன், (ஓநெஞ்சமே)
ஓர்த்து–இதை நன்றாக அறிந்து கொண்டு
மாயனையே–ஆச்சரியமான குண சேஷ்டிதங்களை யுடையனான அப்பெருமானையே
கதி–உபாயமாக
ஓது–அநுஸந்தித்துக் கொண்டிரு.

———————————————————————————————

வியாக்யானம் –

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன் –
திரு வாழியை வலவருகே தரித்து உள்ளவன் –
ரஷக அபேஷை உடையரான நாம் -ஆபன்னரான வன்று
சேவை காலத்திலும்
நம் ஆபத்தைப் போக்கும் ரஷகனாம் –
சர்வ சக்தியானவன் நமக்கு ரஷகனாம்

வலவருகே திரு வாழியைப் பிடிக்குமவன் போலே காணும் ரஷகன் ஆனவன் –
தன்னை புரஸ்கரித்து   இறே-சுட்டிக் காட்டி – இறே
மாஸூச -என்றது
இவனுடைய அஹம் புத்தி சோக நிமித்தம்
அவனுடைய அஹம் புத்தி சோக நிவர்த்தகம் –

முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் –
விரோதியைப் போக்க வல்லவன் -என்னும் இடத்தை
உபபாதிக்கிறது –
முராசூரனுடைய ஆயுஸ்சால் வந்த பலத்தை
போக்கின மிடுக்கை யுடையவன் –

சரணாமேல்-
அவன் ரஷகன் ஆம் இடத்தில் –

ஆழி வலவன் –
எப்போதும் கை கழலா நேமியான் -பெரிய திருவந்தாதி -87-

ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே -அரணாம் –
எது ஞானம்
எது வ்ருத்தம்
எது ஜன்மம்
என்று இவை ஒன்றும் பாராதே ரஷகனாம் –
நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -திருவாய்மொழி -1-3-3-என்னக் கடவது இறே –

அன்றிக்கே
அவன் விரோதி போக்குவானான பின்பு
இனி நீ உன்னுடைய
ஜன்ம வ்ருத்த ஜ்ஞான ஸ்வ பாவங்கள் ஒன்றும் பாராதே
அவனை அனுசந்திக்கப் பார் –
இவை ஒன்றும் பாராதே ஆஸ்ரயநீயனாம்
சமோஹம் வரவா பூதேஷு -கீதை -9-29-
யேபி ஸ்யு பாபயோ நய  –
எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் -திருவாய்மொழி -3-7-9-

ஒது கதி மாயனையே ஓர்த்து –
சரண்யனாய்
ஆச்சர்யமான குண  சேஷ்டிதங்களை
யுடையனாய் யுள்ளவனை
யாராய்ந்து புகலாக ஒது –
கதியாக அவன் திருவடிகளை அனுசந்தித்துச் சொல்லு –

ஒது கதி மாதவனை ஒத்து –
என்ற பாடமாகில்
ஸ்ரீ யபதியையே உபாயமாக புத்தி பண்ணி
அவன் திரு நாமங்களை ஏத்து -என்று
பொருளாகக் கடவது –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -77-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

கீழே
சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் உடைய
பாபங்கள் எல்லாம் போம்
என்றார் –

இதில்
அளவில்லாதார்க்கே யன்று –
பேரளுவு உடையரானவர்களுக்கும்  விழுக்காடு அறியாதே
தங்களை முடியச் சூழ்த்துக் கொள்ளும் அன்று
அவர்களுக்கும் எல்லாம் ஹித காமனாய்க் கொண்டு
நோக்குவான் அவனே -என்கிறார் –

அவன் அல்லது நாம் ஹிதம் அறியோம் என்றார் கீழ் –
இதில்
நாமே யல்ல
ப்ரஹ்மாதிகளும் ஹிதம் அறியார்கள் –
அவர்களுக்கும் ஹிதம் பார்ப்பான் அவனே -என்கிறார் –

———————————————————————————–

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித்தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

—————————————————————————————-

வியாக்யானம் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன்-
சர்வேஸ்வரனாலே ஒதுவிக்கப் பட்டு
அழகிதாக ஆராய்ந்து
தரித்து
வேத வேதாந்த நிரூபணம் பண்ண வல்ல
சதுர்முகனுடைய –

நன் குறங்கில்-
நன்றான மடியிலே –
வாய்ந்த குழவியாய் –
நேர்பட்ட முக்த சிசூவானவனாய்
அழகிய பிள்ளையாய் –
ராவணன் தன வரம் பெறுகைக்காக
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து தண்டன் இட்டுக் கிடக்க
அவனும் தனக்கு
ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமையாலே
புதுக் கும்பீட்டைக் கண்டு இறுமாந்து
தங்கள் அநர்த்தம் அறியாதே
சொன்னது எல்லாம் கொடுக்கப் போக –
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து இவனாலே நோவு பட்டாலும்
நம்முடைய பாடே  இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து
அப்போது
சர்வேஸ்வரன் இவன் மடியிலே ஒரு பிள்ளையாய் வந்திருந்து
இவனுக்கு வரங்களை கனக்கக் கொடுப்புதியாகில்
நாடு குடி கிடவாது
உனக்கும் குடி இருப்பு அரிதாம்
ஆனபின்பு அவன் வத்யன் கிடாய் -என்னும் இடம் தோற்ற
அவனுடைய தலைகளைத் தன் திருவடிகளாலே கீறி
எண்ணிக் காட்டித் தான் அந்தர்த்தானம் பண்ணினான் –

வாளரக்கன் –
சாயுதனான ராஷசனுடைய –

ஏய்ந்த  முடிப்போது-
அறுக்கைக்குத் தகுதியான தலைகளிலே
மாலைகள் இட்டு வா வென்று –

மூன்று ஏழு என்று எண்ணினான் –
தன் மௌக்த்யம் தோற்ற எண்ணின படி யாய்த்து –

மூன்று ஏழு –
ஏழும் மூன்றும் என்னாதே  –

ஆர்ந்த அடிப்போது நங்கட்கு அரண்  –
அவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகள் ஆகிற
செவ்விப் பூ நமக்கு ரஷை-
அவனுடைய அபேஷிதம் செய்ய வற்றான திருவடிப்பூ
ஆகிஞ்சன்யராய்
அநந்ய பிரயோஜனரான
நமக்கும் அரண் –

ஆர்ந்த அடிப் பூ –
போக்யதையால் பரிபூரணமான
திருவடிகள் ஆகிற பூ –

———————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -76-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

உகந்து அருளின நிலங்களில்
இங்கே சந்நிஹிதன் ஆன பின்பு
இனி -அவ்வோ விடங்களில் முகம் காட்டிப் பிழைத்துப் போம் இத்தனை -போக்கி
தம் தம் உடம்புகளை நோவ வருத்தி
துக்கப் பட வேண்டா கிடீர் –
புருஷார்த்த லாபம் வேண்டி இருப்பார்க்கு –
என்கிறார் –

சர்வேஸ்வரன் சம்சாரத்தில் புகுந்து
தன்னுடம்பைப் பேணாதே
நம் கார்யம் செய்யா நிற்க
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா –
என்கிறார் –

————————————————————————————

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76-

பதவுரை

(ஒ உலகத்தவர்களே)
நீர்–நீங்கள்
பொருப்பு இடையே–மலைகளின் நடுவே
நின்றும்–நின்று கொண்டும்
புனல்–நீர் நிலைகளிலே
குளித்தும்–முழுகிக் கொண்டும்
ஐந்து நெருப்பு இடையே–பஞ்ச அக்நி மத்யத்திலே
நிற்கவும்–நின்று கொண்டும் தவஞ்செய்ய
வேண்டா–வேண்டியதில்லை,
விருப்பு உடைய–(எல்லாராலும்) விரும்பத் தக்கதா யிருக்கின்ற
வெஃகா–திரு வெஃகாவில்
சேர்ந்தானை–வந்து கண் வளர்த்தருளும் பெருமானை
மெய்–மெய்யாக (அநந்நய ப்ரயோஜநமாக)
மலர் தூய் கை தொழுதால்–புஷ்பங்களைப் பணிமாறி வணங்கப் பெற்றால்
தீ வினைகள்–துஷ் கருமங்களெல்லாம்
ஆய்ந்து–(நமக்கு இவ்விடம் வாஸயோக்யமன்று என்று) நிரூபித்தறிந்து
அஃகாவே–சுருங்கிப் போக மாட்டாவோ? (அகன்றோடிப் போய்விடுமென்கை)

————————————————————————————–

வியாக்யானம் –

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் –
பனிக்காலத்திலே மலைகளின் நடுவே நின்றும்
குளிர் நாளில் பொய்கைகளில் புகுந்து
நீரிலே முழுகிக் கிடந்தும் –

ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா –
கோடை நாளில்
மாத்யந்தினத்திலே
பஞ்சாக்னியின் நடுவே நின்றும்
நீங்கள் துக்கப் பட வேண்டா –
துக்கப் பட்டு பாவத்தைப் போக்க வேணுமோ —

இனி இவ் வழியால் போக்குங்கள்  என்கிறார்
விருப்புடைய வெக்காவே சேர்ந்தானை –
அவனோடு அல்லாதாரோடு
வாசி யற
சர்வருக்கும் ஸ்ப்ருஹநீயமாய்
விரும்பப் படுவதான திரு வெக்காவிலே
சாய்ந்து அருளினவன் பக்கலிலே –

மெய்ம்மலர் தூயக் கை தொழுதால் –
பிரயோஜனாந்தர பரதை யாகிற பொய் கலவாதே
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு
பூக்களை அக்ரமாகப் பணிமாறி
கையாலே அஞ்சலி பந்தத்தைப் பண்ணி
ஆஸ்ரயித்தால்-

அக்காவே தீ வினைகள் ஆய்ந்து –
தீ வினைகள் ஆய்ந்து அக்காவே –
பாபங்கள் ஆனவை நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம்அன்று என்று அறிந்து தப்பாவே
பின்பு அவை நிற்கை என்று ஓன்று உண்டோ –
தானே ஆராய்ந்து நமக்கு இவ்விடம் அன்று என்று ஓடிப் போம் –
வ்ருஷ்டி ப்ரதீஷாஸ் சாலய-பயிர் நெல் மழையை எதிர்பார்த்து -பயிரை உயிர் உடையது போலே சொன்னது போலே –
சும்மனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே    -பெரியாழ்வார்-5-4-3-

வெக்காவே சேர்ந்தானை –
இருவர் சாதன அனுஷ்டானம் பண்ண வேணுமோ –

அன்றிக்கே –
மெய்ம்மலர் தூவி ஆய்ந்து –
அவன் குணங்களை ஆய்ந்து
அனுசந்தித்துக்
கை தொழுதால்
தீ வினைகள் அக்காவே -என்னவுமாம்

மென்மலர் -என்றதாகில் -மிருதுவான மலரை -என்கிறது –

———————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -75-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

இப்படி
விரோதி நிரசன சீலனான
கிருஷ்ணன்  தனக்கு வாசஸ் ஸ்தானமாக
விரும்பி இருக்கும் திருமலை
விருத்தாந்தத்தை
அனுபவிக்கிறார் –

——————————————————————————–

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-

பதவுரை

தடாவிய–பரப்பை யுடைத்தான
கோடு-சிகரங்களினுடைய
உச்சி வாய்–உச்சயிலே
அகடு தேய்ப்ப–கீழ் வயிறு உராயும்படியாக
சார்ந்து–கிட்டி
ஊர்ந்து இயங்கும்–மெல்ல ஸஞ்சரிக்கின்ற
வண் மதியின்–அழகிய சந்திரனிடத்துள்ள
ஒண் முயலை–அழகிய முயலை,
சினம் வேங்கை–கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது
சேர்ந்து–கிட்டி
பார்க்கும்–(அதைப் பிடித்துக் கொள்ளவும்விட்டுப் போகவும் மாட்டாமல்) எப்போதும் பார்த்தபடியே நிற்கப் பெற்ற
ஆயன்–கண்ணபிரானுடையதாய்
புனம் வேங்கை நாறும்–தன்னிலத்தில் வளர்ந்து செழிப்புற்ற வேங்கை மரங்கள் கமழப் பெற்றதான
பொருப்பு–மலை

———————————————————————————

வியாக்யானம் –

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய் –
பரப்பை யுடைத்தான
சிகரத்தின் உடைய
உச்சியிலே கிட்டிக் கீழ் வயிறு தேயும்படிக்கீடாக –

ஊர்ந்தியங்கும் வெண் மதியின்-
தன் போக்யதையாலே மெல்ல சஞ்சரியா நின்றுள்ள
சிகரத்திலே தேய்கையாலே
சாணையில் இட்டாப் போலே
ஒளியை யுடைத்தான சந்தரன் பக்கல் யுண்டான –

ஊர்ந்தியங்கும்-வெண் மதியின்-
தன்னிளைப்பார லாம் என்று சஞ்சரிக்கிற
வெளுத்த நிறத்தை யுடைத்தான சந்தரன் –

ஒண் முயலை –
அவன் பக்கல் யுண்டான
அழகிய முயலை
அதுக்கு பரபாகமாய் இருக்கிறபடி –

சேர்ந்து சின வேங்கை பார்க்கும் திருமலையே –
கோபத்தை யுடைத்தான
வேங்கைப் புலி வந்து கிட்டி
தனக்கு ஆமிஷமான முயல் என்று
புத்திபண்ணி கண் வைக்கும் திருமலையே –
சஹஜ சாத்ரவத்தாலே பார்க்கும் –
ஒருவனைப் பற்றி அத்தாலே விசஜாதியமாய் இருக்கையாலே கிட்டாது
பார்த்த படியே இருக்கும் –

ஆயன் புன வேங்கை நாறும் பொருப்பு –
கிருஷ்ணன் என்னது என்று அபிமானிக்கும் நிலமாய்
ஜாதி உசிதமான வேங்கையின் பரிமளத்தை யுடைத்தான திருமலை –
காட்டு வேங்கையின் பரிமளமே யான திரு மலை –

ஆயன் –
காடும் மலையும் உகக்குமவன் –
காட்டிலே வர்த்திக்கும் இடையருக்குக்காட்டில்
மரங்களுடைய நாற்றம் சாலப் ப்ரியம் இறே-

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –