அவதாரிகை –
அங்கு கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திரு நாபி கமலமானது -ஆழ்வார்கள் -இருவர் உடைய
சேர்த்தியையும் கண்டு
அலருவது
மொட்டிப்பது
ஆகிற படியை அனுபவிக்கிறார் –
ஹிரண்யனும் பட்டு
மதுகைடபர்களும் முடிந்த பின்பு
கண் வளர்ந்து அருளுகிற போதை
அழகை அனுபவிக்கிறார் –
————————————————————————————
ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து ——67-
பதவுரை
மால்–ஸர்வேச்வரனுடைய
உந்தி வாய்–திரு நாபியிலே
ஓங்கு–உயர வளர்ந்த
ஒண் கமலத்தின் போது–அழகிய தாமரைப் பூவானது
கை–அவனுடைய வலத் திருக் கையில்
ஆம்–உண்டான
திகிரி–திருவாழியை
சுடர் என்றும்–ஸூர்யனென்றும்
(கை ஆம்)
இடத் திருக்கையிலுள்ள
வெண் சங்கம்–வெளுத்த சங்கை
வானில் பகரும் மதி என்றும்–ஆகாசத்தில் விளங்குகிற சந்திரனென்றும்
பார்த்து–நினைத்துக் கொண்டு
ஆங்கு–எக் காலத்திலே
மலரும் குவியும்–மலர்வதும் மூடிக் கொள்வதுமா யிரா நின்றது.
————————————————————————————–
வியாக்யானம் —
ஆங்கு மலரும் குவியும் மால் –
ஓர் அவஸ்தையிலே
அலருவது குவிவதாக நிற்கும் –
ஆங்கு –
அப்பொழுது அதாவது
ஏக காலத்திலே –
உந்தி வாய் ஓங்கு கமலத்தின் ஒண் போது –
திரு நாபியிலே ஓங்கின
தாமரையிலே உண்டான
செவ்வி குன்றாத வழகிய பூவானது –
ஆங்கைத் திகிரி சுடர் என்றும்-
அவன் கையில் உண்டான
திரு ஆழியை -ஆதித்யன் -என்றும் –
வெண் சங்கம் வானில் பகருமதி என்றும் –
மற்றைத் திருக்கையில் உண்டான
வெளுத்த நிறத்தை யுடைத்தான
சந்தரன் என்று பார்த்து –
இப்படி
உத்ப்ரேஷித்துக் கொண்டு –
ஓங்கு கமலத்தின் ஒண் போது -ஆங்கு மலரும் குவியுமால் –
சந்த்ராதித்யர்கள் இருவர் உடைய அவஸ்தையிலும் செய்யக் கடவத்தை
இருவரும் கூட ஏக காலத்திலே தோற்றினாப் போலே இருக்கையாலே
இதுவும் இரண்டு அவஸ்தையிலும் செய்யக் கடவ கார்யத்தை
ஓர் அவஸ்தையிலே செய்யா நிற்கும் –
திகிரி மொட்டிக்க ஒட்டாது
வெண் சங்கு மலர ஒட்டாது
நடுவே நிற்கும்
அரும்பினை அலரை-பெரிய திருமொழி -7-10-1–என்னுமா போலே –
————————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply