மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -66-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

தானொரு வடிவு கொண்டு வந்து
விரோதியைப் போக்கினான் என்னுமது
ஓர் ஏற்றமோ –
கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே வந்து கிட்டின
விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு
என்கிறார் –

உணர்த்தி உண்டான போது
விரோதி நிரசனம் பண்ணுகை ஓர் ஏற்றமோ
அவதானம் இன்றிக்கே இருக்கச் செய்தே
விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு
என்கிறார் –

————————————————————————————

காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த
மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்
அதுகேடவர்கு இறுதி யாங்கு   ——-66-

பதவுரை

காய்ந்து–சீறி
இருளை மாற்றி–இருளைப் போக்கி
கதிர் இலகு–ஒளிவிடா நின்றுள்ள
மா மணிகள்–சிறந்த ரத்னங்கள்
ஏய்ந்த–பொருத்தி யிருக்கிற
பணம்–(தன்னுடைய) படங்களினுடைய
கதிர் மேல்–ஒளிக்கு மேலே (திருவனந்தாழ்வான்)
வெவ் வுயிர்ப்ப–பெரு மூச்சு விட,
வாய்ந்த–கிட்டின
மது கைடபரும்–மதுகைடபர்கள்
வயிறு உருகி மாண்டார்–குடலழுகி முடிந்து போனார்கள்
அவர்க்கு–அந்த மதுகைடபர்களைப் போலே பிரதிகூலராய் வருமவர்களுக்கு
ஆங்கு–அவ் வண்ணாமாகவே
அது இறுதி கேடு–அப்படிப்பட்ட ப்ராண விநாசமான கேடே (பலிக்கும்)

————————————————————————————–

வியாக்யானம்

காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள் –
திரு வநந்த வாழ்வான் உடைய
பணங்களில் உண்டான ரத்னங்களின் உடைய
ஒளிகளானவை
இருளைப் போக்கும் போது
காய்ந்து போக்கா நிற்கும் ஆயத்து —

தன் சினம் கொண்டு போக்கா நிற்கும் ஆயத்து –
சஹாவ ஸ்தானம் இல்லாத மாத்திரமே அன்றிக்கே
வேணும் என்று போக்குகிறாப் போலே இருக்கை

ஏய்ந்த பணக் கதிர் –
தனக்குத் தகுதியான பணங்களில் உண்டான
ரத்னங்களின் உடைய
விளங்கா நின்றுள்ள ஒளியானது
காய்ந்து கொண்டு இருளை மாற்ற –

கதிர் மேல்-
அவ் ஒளிக்கு மேலே –

வெவ்வுயிர்ப்ப-
நெடு மூச்சு விட –
காய்ந்து இருளை மாற்றுகிற
கதிரோடு கூட –

வெவ்வுயிர்ப்ப-
பகவத் அனுபவத்தாலே வந்த ஹர்ஷத்துக்குப் போக்கு வீடாக
உஸ்வாச நிச்வாசங்களைப் பண்ண –

வாய்ந்த மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்-
இவ்வளவிலே வந்து
விரோதிகளாய்க் கிட்டின
மதுகைடபரும் குடல் அழுகி முடிந்தார்கள் –

அதுகேடவர்கு இறுதி யாங்கு-
அதுவே அவர்களுக்குக் கேடுமாய்-விநாசமுமாய்-ஆயத்து –
அச்சோ -அத்தனையும் வேணும் -என்கிறார் –
என்றும் என் பிள்ளைகளுக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவர்களே -பெரியாழ்வார் திரு மொழி -3-3-7-

ஆங்கு –
தாம் வாழவும் ஜீவிக்கவும் பெற்ற இடமே
அவர்களுக்கு
அபிசந்தி பேதத்தாலே மற்றைப்படி யாய்த்து –

அங்கே கிடக்குமது நாட்டாருக்கு ஸ்வரூப சித்திக்கு உடலாய் இருக்க
இவர்களுக்கு -அது தானே
விநாச்யமாய் விட்டது –

அப்படுக்கையிலே கிட்டினவர்கள்
ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்கிறபடியே
ஸ்வரூப ப்ராப்தி பெற்றுப் போகா நிற்க
இவர்களுக்கு பிரகிருதி தோஷத்தாலே விநாசமே சித்தித்து விட்டதாய்த்து –

————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading