அவதாரிகை-
ஆகில் இப்படி ஆஸ்ரயிக்கும் போது
சிறிது யோக்யதை யுண்டாக்கிக் கொள்ள வேண்டாவோ -என்னில்
அது வேண்டா
திர்யக்குகளுக்கும் புக்கு ஆஸ்ரயிக்கலாம் படி
இருப்பான் ஒருவன் -என்கிறார் –
இனி
ஆஸ்ரயணம் தன்னிலும் ஒரு நியதி இல்லை –
செய்தது எல்லாம் நியதியாம் அத்தனை –
என்கிறது –
அனுகூலர் உடைய தேக யாத்ரை எல்லாம்
தன் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாகக்
கொள்ளும் -என்கிறது –
—————————————————————————-
புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-
பதவுரை
களிறு–(திருமலையிலுள்ள) யானையானது
புகு மதத்தால் வாய் பூசி–மண்டையில் நின்றும் கபோலங்களில் நின்றும் வாயிலே புகுகின்ற
மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து ஆகமனம் பண்ணி
கீழ் தாழ்ந்து அருவி உகு மதத்தால்–மேலிருந்து கீழ்வரையில் அருவி போலே வந்து பெருகுகிற மத ஜலத்தாலே
கால் கழுவி–கால்களை சுத்தி செய்து கொண்டு
கையால்–துதிக்கையால்
மிகு மதம் தேன்–மிகுந்த மதத்தை யுண்டு பண்ணக் கூடிய தேனை யுடையதும்
விண்ட–மலர்ந்ததுமான
மலர் கொண்டு–புஷ்பத்தைக் கொண்டு
விறல் வேங்கடவனையே–பெரு மிடுக்கனான திருமலை யப்பனையே
கண்டு வணங்கும்–ஸேவித்து வணங்குகின்றது.
——————————————————————————
வியாக்யானம் –
புகு மதத்தால் –
மஸ்தகஸ்தலம் கண்ட ஸ்தலம் இவற்றில் நின்றும்
பாய்த்து வாயிலே
புகுகிற மத ஜலத்தாலே –
வாய் பூசிக் –
மதம் மிகைத்துக் கொண்டு
வாயிலே புகுவதொரு அவஸ்தை யுண்டாய் இருக்கும் இறே –
அப்போதை ஆசனம் ஆக்கவுமாம் –
கீழ்த் தாழ்ந்து அருவி உகு மதத்தால் கால் கழுவிக் –
கீழே தாழ்ந்த அருவிகள் போலே வந்து விழுகிற
மத ஜலத்தைக் கொண்டு
கால் கழுவி
கையால் -மிகு மதத்தேன் விண்ட மலர் கொண்டு –
தன் செருக்காலே பொய்கைகளிலே புக்குப்
பூக்களை பறிக்கக் கடவதாய் இருக்கும் இறே –
அதாய்த்து சமாராதன உபகரணம்
மிக்க மதத்தை உண்டாக்கக் கடவதான தேனை உடைத்தான
அலர்ந்த பூக்களைக் கொண்டு –
மதம் என்று கந்தமாய்
மிக்க கந்தத்தையும் தேனையும் யுடைய செவ்விப் பூக்களைக் கொண்டு -என்னவுமாம் –
விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் –
திருமலையில்
திரியக்குகளும்
தன்னை வணங்கும் ஞானத்தைக் கொடுக்க வல்ல
சக்தியை யுடையவன் என்கிறது
ஞான கார்யமான சமாஸ்ரயணத்தை
தேச வாசத்தாலே பண்ண விருக்கும்
வேங்கடவனையே –
ஸ்ரீ வைகுண்ட நாதனையோ
வேங்கடவனை அன்றோ –
கண்டு வணங்கும் களிறு –
ஓர் ஆனை சென்று ஆஸ்ரயித்தால் போலே யாய்த்து
திரு வேங்கடமுடையானை
ஆஸ்ரயிக்கலாம் படி –
களிறு –
ஆஸ்ரயிப்பாருக்கு ஜன்ம வ்ருத்த ஸ்வ பாவங்கள்
அப்ரயோஜகம் –
—————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply