ஸ்ரீ நடாதூர் அம்மாள்-ஶ்ரீவத்ஸ குல திலகை꞉ஶ்ரீமத்₃வரதா ₃சார்ய மஹா கு₃ருபி₄꞉ அநுக்₃ருஹீத꞉பிரபந்த பாரிஜாதம் –

ஊர்த்₄வவ் ஹஸ்தவ் யதீயவ் பிரதிபட த₃லநே பி₃ப்₄ரத ꞉ ஶங்க₂ சக்ரே
ஸேவ்ய அங்க்₄ரீ ஸ்கீயாவபி த த த தரோ தக்ஷிணோ யஸ்ய பாணி ꞉ ।
தாவந் மாத்ரம் ப₄வாப்₃தி₄ம் க₃மயதி ப₄ஜதா மூருகோ ₃ வாமபாணி :
ஶ்ரீவத் ஸாங்கஶ்ச லக்ஷ்மீர் யது₃ரஸி லஸதோ வேங்கடேசஸஸ் ஜீயாத் ॥

சக்ரம் ஶாஸ்தி ஸூகர்ம யோக₃கலநம், ஜ்ஞாநம் ச ஶங்க₂ஸ் ததா ₂
பாணிஶ் சாரு கடி ப்ரஸஞ்ஜி ததல꞉ஶ்ரோ ப₄க்தி யோக₃ம் ததா ₂ ।
ஶ்ரீமத் பாத₃ஸரோஜ தர்ஶ ககரோ யோக₃ம் ப்ரபத்திம் பரம்
யஸ்யாந் வர்த ₂சதுர் பு₄ஜஸ் ஸ ப₄க₃வான் ஜேஜே து லக்ஷ்மீ ஸக₂
꞉ ||

ஶ்ரீ வேங்கடாத்₃ரி நிலய꞉ கமலாகாமுக꞉ புமான் ।
அபா₄ங்கு₃ர விபூ₄திர் ꞉ ந தரங்க₃யது மங்க₃லம்

வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம்
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி
–நடாதூரம்மாளின் தனியன்:

ஸம்ஸார தாபத்ரயத்தினால் எரிக்கப்பட்டு தவிக்கும் என்னை ஸ்ரீ பாஷ்யார்த்த அம்ருதத்தை அருளி பிழைக்கச் செய்தவரும் -ஸ்ரீ வத்ஸ குலத்துக்கே அலங்காரமாகவும் -வரதாச்சார்யர் என்னும் பிரசித்தி பெற்ற இவற்றை வணங்குகிறேன்

சித்திரை நக்ஷத்ரம் –நடுவில் -நடுப்பதம் விளக்கம் வல்ல -ததீய சேஷத்வம் -ஸ்ரீ வத்ஸ குலம் அவதாரம் -தாசாரதி போல்-நடாதூர் ஆழ்வான் -வரத விஷ்ணு-திருக் குமாரர் -தேவராஜன் -திருக் குமாரர்-நடாதூர் அம்மாள்

திருநக்ஷத்ரம்: சித்திரை, சித்திரை.
அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம்.
ஆசார்யன்: எங்களாழ்வான்.
சிஷ்யர்கள்: ஸ்ருத ப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன சூரி), கிடாம்பி அப்பிள்ளார் மற்றும் பலர்.
பரமபதித்த இடம்: காஞ்சிபுரம்.
அருளிச்செய்தவை: தத்வ ஸாரம், பரத்வாதி பஞ்சகம் , கஜேந்திர மோக்ஷ ச்லோக த்வயம், பரமார்த்த ச்லோக த்வயம், ப்ரபன்ன பாரிஜாதம், சரமோபாய ஸங்கிரஹம், ஸ்ரீபாஷ்ய உபன்யாசம், ப்ரமேய மாலை, எதிராஜ விஜயாபநம் மற்றும் பல.
காஞ்சிபுரத்தில் அவதரித்த இவருக்கு, பெற்றோர்களால் வரதராஜன் என்ற திருநாமம் இடப்பட்டது. இவர் எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்ய சிம்ஹாசனாதிபதிகளில் (தலைவர்) ஒருவரான நடாதூராழ்வானின் திருப்பேரனாவார்.

1165-1275

கிடாம்பி அப்பிள்ளார் மருமகன் -தேசிகர்

விஷ்ணு சித்தர் -அம்மாள் ஆச்சார்யன் -எங்கள் ஆழ்வான் எம்பெருமானார் சாதித்த திருநாமம் -மிக்க மூன்றில் ஒரு பங்கு ஸ்ரீ பாஷ்யம் இவரைக்கொண்டே நிகமனம் -விஷ்ணு சித்தீயம் வியாக்யானம் சாதித்தவர்–ஞானம், பக்தி, ஆசார்ய நிஷ்டை முதலியவை கூரத்தாழ்வானைப் போலவே  இவரிடம் குடிகொண்டிருந்ததால் எம்பெருமானார் இவருக்கு “எங்களாழ்வான்” என்று திருநாமம் சூட்டியதாகச் சொல்லப்படுகிறது.-சித்திரை – ரோஹிணி-எங்கள் ஆழ்வான் திருநட்சத்திரம்
ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண
நோசேந் மமாபி யதிசேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய:–
நடாதூர் அம்மாள் இவருக்கு சாத்தி அருளிய தனியன் –

ஸ்ருத்யந்த த்வயம் -உபய வேதாந்தம் -நடாதூர் ஆழ்வான் -வரத விஷ்ணு -நல்லான் அவர்களின் திருக் குமாரர்
இவர் திருக்குமாரர் -தேவராஜன் -இவருக்கு திருக்குமாரர் -நடாதூர் அம்மாள் –

எம்பெருமானார் 1017-1137
பிள்ளான் 1067 அவதாரமே
1097-எங்கள் ஆழ்வான் அவதாரம்
1113 நஞ்சீயர் -ஆயர் தேவு -எங்கள் ஆழ்வான் கேட்டதாக ஐதீகம்
நடதூர் அம்மாள் (கி.பி. 1165 – 1275)

இவருக்கு தேவப்பெருமாள் பிள்ளை -நான்முகன் -பேரன் -பெரும் தேவித் தாயார் -மாட்டுப்பெண்-

பிள்ளான் -குருகேஸ்வரர் -திருமலை நம்பியின் திருக்குமாரர் -எம்பெருமானார் அபிமானம் புத்திரர் –

கடாம்பு -கடத்தில் நீர் வைத்து பாகவத கைங்கர்யம் செய்த குலம் -மருவி கிடாம்பி -மடப்பிள்ளை மணம் கமழும் வம்சம்

பக்தி பிரபத்தி செய்ய அதிகாரம் இல்லாவிடில் ராமானுஜ சொன்னாலே போதும் -இவர் சாதித்து அருளினவர்

ஸத்ய விரத க்ஷேத்ரம் -புண்ய கோடி விமானம் -பேர் அருளாளன் -வரதராஜன் -ஆச்சார்யராக பிறப்பித்து வளர்த்துக் கொடுத்த அருள் -சம்ப்ரதாயம் பரிபாலனம் -ஓம் நமோ நாராயணாய என்ற 3 பதத்தின் சாராம்சமாய் முறையே அநந்யார்ஹ சேஷத்வம், அனன்யார்ஹ சரணத்துவம், அனன்யார்ஹ போக்யத்துவம் என்ற மூன்று பண்புகளை கொண்ட தாயார். இந்த ஆச்சார்யர்கள் எல்லாம் அவள் கொடுத்து அருளியவள் –
என் தன் அளவல்ல யான் கொண்ட அன்பு –பக்தி வளர்த்து-பரிவாஹ ரூபமான ஸ்லோகங்கள் –

பிரபந்ந என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை, இதற்கு முழுமையான ‘சரணடைதல்’, ‘அர்ப்பணிப்பு’ என்று பொருள்

சமஸ்கிருதத்தில் பாரிஜாதா என்பது ‘வம்சாவளி’, ‘பிறந்தவர்’ அல்லது ‘முழு வளர்ச்சியடைந்தது’ போன்ற அர்த்தங்களை வழங்கலாம். ஆசிரியரே பின்னர் உரையில் இதை இவ்வாறு வரையறுக்கிறார்:

பிரபத்தி பற்றிய அசேஷ விஷயங்களையும் முழுமையாக சேகரித்து வைத்துக் அருளிய கிரந்தம் என்றவாறு-

400 ஸ்லோகங்கள் கொண்ட பிரபந்தம்
சரணாகதி -சரணம் -ஆகதி -உபாயத்தை வரவைப்பது

அஹம் மத் ரக்ஷண பரோ மஹா ரக்ஷண பலம் ததா
ந மம ஸ்ரீ பதிரேவ இதி ஆத்மாநம் நிஷிபேத் புத்திர்
-1- -ந்யாஸ தஸகம்

—————-

ஸ்ரீயப்பதியாய் பரம காருணிகனாய் ஸகல கல்யாண பரிபூர்ணனான ஸ்ரீ மன் நாராயணன் -தர்மங்களுக்குக் குறைவும் அதர்மங்களுக்கு விருத்தியும் உண்டாயிருக்கும் ப்ரதிஸமயங்களிலும் மத்ஸ்ய கூர்மாதி ரூபங்களாக அநேக அவதாரங்களை எடுத்து-துஷ்ட நிக்ரஹ -இஷ்ட பரிபாலாநாதிகளைச் செய்து தர்மங்களைக் நிலை நிறுத்தியது போலவே த்வாபர யுகத்திலும் கண்ணனாக அவதரித்து கம்சாதி துஷ்டர்களை நிரசித்தும் பாண்டவர்கள் போல்வாரை ரக்ஷித்தும் தர்மங்களைக் நிலைநாட்ட அர்ஜுனனை வ்யாஜமாக்கி கீதா சாஸ்திரத்தை வெளியிட்டு அருளி
அதில் சாரதமமான சரம ஸ்லோகத்தினால்

அதில் சாரதமமான சரம ஸ்லோகத்தினால் அல்ப ஞானம் உள்ள அஸ்மாதிகளும் உஜ்ஜீவனம் அடையும் பொருட்டு பிரபத்தி சாஸ்திரத்தை வெளியிட்டு அருளினான்
இது ஸர்வாதிகாரம்
ஒருக்கால் -ஸக்ருத் -பல பிரதம் -க்ஷண கால சாத்யம் -ஆகவே உயர்ந்த தவம் -கொண்டாடத்தக்கது
இருந்தாலும் மூடர்கள் அஞ்ஞானிகள் இழந்து சம்சாரத்திலேயே மக்நராகிறார்கள்
பின்பு ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ரூபேண தானே அவதரித்து உபகரித்து அருளினான்

முதல் நான்கு ஸ்லோகங்கள் -நிர்விக்னமாக பிரபந்தம் அமைய ஆச்சார்ய பகவத் வந்தந ரூப மங்களா ஸாஸனம்-முதல் ஸ்லோகத்தால் தேஜஸ்விகளான ஆச்சார்யர்களை நம் மானஸ பத்மம் விகசிக்க திருவடிகளைப் பற்றுகிறார்

——————

1-பிரமாண பத்ததி (அவதரணிகா )

ஆச்சார்ய ஆரியமா பாதேப்யோ நமஸ்யா ததே
யதாஸங்க வஸாத் பும்ஸாம் மந பத்மம் ப்ரபுத்யதே
-1-

ஆச்சார்யர் திருவடிகளே அநேக ஸூர்ய துல்யம்
தேஜோ நிதி -பாவனத்வம் -பரப்ரகாஸத்வம் -வேதமயம் -பகவத் அதிஷ்டிதம் –

இத்தால் தமது குரு பரம்பரை
எங்கள் ஆழ்வான்
திருக்குருகைப் பிரான் பிள்ளான்
எம்பெருமானார்
பெரிய நம்பி
ஆளவந்தார்
மணக்கால் நம்பி
உய்யக்கொண்டார்
நாதமுனிகள்
நம்மாழ்வார்
விஷ்வக்சேனர்
பெரிய பிராட்டிமார்
பெரிய பெருமாள் –
இவர்கள் திருவடித் தாமரைகளைப் பற்றுகிறார்

தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –மிதுனமே உத்தேச்யம்

——————

அபங்குர கலா தான ஸ்தூல லஷ்யாத் வமீயுஷே
துங்காய மஹதே தஸ்மை துரங்காய முகே நம
-2—-ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவரைப் பற்றுகிறார்

கீழே சஹஸ்ர ஸூர்ய துல்யம் -இங்கு பூர்ண சந்திர துல்யம் -உபாசகர்களுக்கு அழியாத நித்ய ப்ரஹ்ம வித்யையை அளிப்பவர் –

———–

லஷ்மீ சஷு அநு த்யாநாத் தத் ஸாரூப்யம் உபேயுஷே
நமோஸ்து மீந வபுஷே வேதவேதி விபன்முஷே —
3-ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி வந்தனம்

மத்ஸ்ய ஹம்ஸ ஹயக்ரீவ திரு வவதாரங்கள் -வேத உபதேசம்
ஏக சேஷித்வம் -ஸ்ரீயபதி –

மையார் கருங்கண்ணி –செய்யாள் -இடைவிடாமல் பார்த்துத் தியானித்து சாரூப்பியம் பெற்ற திருமேனி

மிகவும் அழகுள்ள -அஸி தீக்ஷணை -காருண்ய ஏக ப்ரத-திருக்கண்கள் போல் மத்ஸ்ய மூர்த்தி திவ்ய மங்கள விக்ரஹம் –கடாக்ஷத்தாலே போஷித்து அருளுபவர் -பிரமனுடைய ஆபத்தைப் போக்கி அருளியதற்கு மங்களா ஸாஸனம்

———–

ரஜோ ரஜஸ் பிரசமனம் –ப்ரபந்ந பாரிஜாதாக்ய ப்ரபந்தய யதாமஹே –4-

தொண்டர் அடிப் பொடிகளே ரஜஸ் குணங்களை ஒழித்து விபரீத அஞ்ஞானங்களைப் போக்கி அருளும் என்கிறார்-இதற்காகவே இந்தப் பிரபந்தம்

ப்ரபத்யே சதா பத யோகோ

ப்ரபன்னர்களுக்கு வேண்டிய அர்த்தங்களைத் தெளிவாக வழங்குவதால் இந்தத் திரு நாம

——————

பிரபத்தே மானஸ ஸுபாஹ்யம் ஸ்வரூபம் அதிகார் யபி |
ப்ரபந்நானாம் குரவ் வ்ருத்தி ஸ்ரீம்ஸே ஸூரிஷு சத்சு ச–5

விஹிதேஷு வ்யவஸ்தாநம் வர்ஜநீயம் பலம் ததா |
ஏதே தசார்த்தே கத்யந்தே த்ரயந்தாத்ய அர்த்த ஸங்க்ரஹாத் ||
–6-

இதில் வேதாந்த சாரமாக பத்து விஷயங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளன –
1-திடமான வேத பிரமாணம் உள்ள பிரபத்தி -பிரமாண பத்ததி -ஸ்ருதி ஸ்ம்ருதி ஆகமம் இதிகாசங்கள் புராணங்கள் இவற்றில் உள்ள பிரமாணங்கள்
2-ப்ரபத்தியின் ஸ்வரூபம் –ஆர்த்த -திருப்த ப்ரபத்திகள் -அங்கங்கள்
3-அதிகாரி ஸ்வரூபம்
4-ப்ரபந்ந அதிகாரியின் ஆச்சார்யருக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்
5- ப்ரபந்ந அதிகாரியின் ஸ்ரீயப்பதிக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்-ஸ்ரீ வைஷ்ணவ சின்னங்கள் -திருவாராதனம் –
6-ப்ரபந்ந அதிகாரியின் நித்ய முக்தர்களுக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்
7-ப்ரபந்ந அதிகாரியின் பாகவதர்களுக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்-என்னைப் போலாவாது நினைக்க வேண்டும் என்று அன்றோ அவன் வார்த்தை
8-ஸாஸ்த்ர விஹித ப்ரபந்ந அதிகாரியின் கர்தவ்ய விசேஷங்கள்
9-ஸாஸ்த்ர நிஹித ப்ரபந்ந அதிகாரியின் கர்தவ்ய விசேஷங்கள்
10-பல ஸ்வரூபம்

—————-

ஸ்ருத்தார்த்த மனனஸ் தேம்நே மம நேதரதா ஸ்ரம |
ஸோதவ்யம் அத்ர ஸ்கலிதம் ஸத்பிர் விஷய கௌரவாத்
||–7-

க்யாதி லாப பூஜார்த்தமாகச் செய்யப்பட வில்லை
தாம் பெற்ற உயர்ந்த ஆச்சார்ய உபதேசங்களின் சாரமே இப்பிரபந்தம்
குற்றம் குறைகளை பெரியோர் க்ஷமிக்கப் பிரார்த்திக்கிறார் இதில்

——————

ப்ரபத்தி தைத்திரீ யாணம் வேத தாவத் விதீயதே ।
ந்யாஸ அப்₄யாஸ ப்ரயோகோ ஹி வஸூரண்யே -தி மந்த்ரத
꞉ ॥ 8 ॥

தைத்ரிய உபநிஷத்தில் இந்தப் பிரபத்தி ந்யாஸம் என்ற பெயரையே யுடைத்ததாக வஸூ ரண்ய -என்று தொடங்கி ஓதப்படும் மந்திரத்தால் பிரயோகிக்கத் தக்கதாக விதிக்கப் படுகிறது –

தஸ்மாத் நியாஸம் ஏஷம் தபஸம் அதிரிக்தம் ஆஹுஹ்” – நியாஸம்
மற்ற வகை தவங்களை விட மேலானது – தைத்திரீய உபநிஷத்
ந்யாஸம் -ஒப்படைத்தல் -வைத்தல் -சரணமடைத்தல் -ஆத்மாவை பரமாத்வாவிடம் சமர்ப்பித்தல்அப்பியாசம் -திரும்ப திரும்ப சொல்வதல்

————

தத்ரோ பாஸ்யம் யதா ₂ ப்₃ரஹ்ம ஸர்வ காரண முச்யதே ।
ப்ரபத் தவ்யம் ததை வேதி விபு விஸ்வஶ்ருக்– இத்யபி
॥ 9 ॥

——————–

ஸூர்யாதிநாம் யதா பூர்வம் தேஜஸ்꞉ கல்பயிதா (அ) ஸி வசி ச ।வஸூவத்
ரமணீயோ (அ)ஸீத்யேவம் ப்₃ரஹ்ம கு₃ணை ஸ்துதிம்
॥ 10 ॥

இந்த இரண்டு ஸ்லோகங்களுக்குத் தாத்பர்யம் -அவ்வுபநிஷத்தில் ஸர்வ காரணமான பர ப்ரஹ்மம் உபாஸிக்கத் தக்கதாகச் சொல்லப்படுகிறது –
அப்படியே அப்ரஹமம் விபு என்றும் நீர் ப்ரபஞ்சங்களைப் படைக்கிறவர் என்றும் -ஸூர்யன் முதலிய தேஜஸ் பதார்த்தங்களை ஸ்ருஷ்டிக்கும் போதும் உன்போலவே தேஜஸ் கொடுப்பவர் நீர் என்றும் -பொன் போல் அழகிய திருமேனியைக் யுடையவர் நீர் என்றும் -ஸ்துதிக்கப்பட்டதாய் அதுவே சரணம் அடையத்தக்கது என்றும் சொல்லப்படுகிறது –

———-

ஜீவாத்மாநம் ஹவிஸ் ꞉ க்ருத்வா தச் ச₂ரீரம் மஹீயஸி ।
“ப்₃ரஹ்மாக்₃நவ் ஜுஹுயாத்” ஓமித்யநேந ஆம்நாய ரூபிணம்
॥11॥

இஜ் ஜீவனை ஒரு ஹவிஸ்ஸாகப் பாவித்து இஜ் ஜீவர்களை சரீரமாக யுடைய பர ப்ரஹ்மமாகிற அக்னியில் வேத ரூபமான ஓம் என்னும் ப்ரணவத்தால் ஹோமம் செய்ய வேண்டும் –

த்வய ரூபிணம் –பாடபேதம்-இந்த ஸ்லோகம் இந்தப் பாட பேதத்துடன் பிரமாணமாக முமுஷுப்படி வியாக்யானத்திலும் உள்ளது

—————

இதி ப்ரபத்தே ராம்நாத ꞉ ப்ரயோக₃꞉ ப்ரணவாத்மநா ।
தஸ்யைவம் விது₃ஷோ யஜ்ஞ ஶரீரே தத்ர கல்பித
꞉ || 12 ||

இப்படி பிரணவ ரூப மந்திரத்தால் பிரபத்தி பிரயோகிக்கத் தக்கதாக வேதத்தில் ஓதப்படுகின்றது -இப்படி பிரபத்தி செய்தவருடைய பிரபத்தியை ஓர் யாகமாகவும் அவர் சரீரத்தை அதற்கு சாதனமாகவும் அவ் வேதத்தில் காட்டப்பட்டு இருக்கின்றது –

மஹா நாராயண உபநிஷத்தில் உள்ள மந்த்ரம்
தஸ்யைவம் விது₃ஷோ யஜ்ஞ ஶரீரே தத்ர கல்பித -இப்படி ந்யாஸம் – பிரபத்தியை அறிந்தவன் -யஜமானனும் இவன் சரீரத்துடன் கூடியவன் -நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் -நெஞ்சு ஹோம குண்டம் -சாந்தி அடைவதே தக்ஷிணை -மனதே ப்ரமன்

உத்தேச் யத்வம் ஜநநி பஜதோ உஜ்ஜிதோபாதி கந்தம்
ப்ரத்யக் ரூபே ஹவிஷி யுவயோ ஏக சேஷித்வ யோகாத்
பத்மே பத்யுஸ் தவ ச நிகமை: நித்யமந் விஷ்யமாணோ
நாவச்சேதம் பஜதி மஹிமா நர்த்தயந் மாநஸம் ந:–6-

அன்னையே அரியும் நீயும் மருவியே யுரிமை கொள்ளும்
தன்மை சாலாவி யென்னும் அவி தரும் வேள்வி தன்னில்
பின்னையும் மறைகளோரும் மகிமையின் மிகைமை தேறும்
நன்மையே கொள்ளுமுள்ளக் களி நடம் புரிவர் நாமே. — (6)

[ஜநநி! அன்னையே! ;
பத்மே! – இலக்குமியே!;
ப்ரத்யக் ரூப – ஜீவாத்மாவாகிற;
ஹவிஷி – ஹோமம் செய்யப் பெறும் த்ரவ்யத்தில், ஆத்ம ஸமர்ப்பண யக்ஞத்தில்;
உஜ்ஜிதோபாதிகந்தம் – மற்றொரு வஸ்துவை இடையிடாமல் , நேராகவே;
உத்தேச் யத்வம் – ஹவிஸ்ஸை வாங்கிக் கொள்ளுகிறபடியை;
பஜதோ – அடையா நின்ற;
யுவயோ – தேவரீர்கள் இருவருடைய;
ஏக சேஷித்வ யோகாத் – ஒரே சேஷியாயிருக்குந் தன்மை கொண்டு;
பத்யு: — தேவரீருடைய பர்த்தாவினுடையவும், பகவானுடையவும்;
தவச: — தேவரீருடையவும்;
நித்யம் – எப்பொழுதும்;
நிகமை –வேதங்களால்;
அந்விஷ்யமாண — தேடும்படிக்குள்ள;
மஹிமா – பெருமையானது;
ந: அடியோங்களுடைய;
மாநஸம் – மநத்தை;
நர்த்தயந் – ஆச்சர்யத்தால் ஆடச் செய்து கொண்டு;
அவச்சேதம் – இவ்வளவு என்று அளவிடப்படும் தன்மையை, பிரிவை, எல்லையை;
ந பஜதி – அடைகிறதில்லை.

தாயே! லக்ஷ்மியே! தேவரீரும் பகவானும் ஜீவாத்மாவாகிற ஹவிஸ்ஸைக் குறித்து ஒரே சேஷியாதலால் காரண சேஷமேயில்லாமல் நேராக உத்தேச்யம் ஆகிறீர்கள்.
வேதாந்தங்களும் இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றதும், எங்கள் மனத்தைக் கொந்தளிக்கச் செய்கின்றதுமான தேவரீருடைய பெருமைக்கு எல்லையே இல்லை.]

————

ப்ரபத்திம் தபஸாம் ஏஷாம் ந்யாசாக்யா மாஹுருதமா꞉ ।
ஆம்நாதம் கட₂ வல்லீஷு ப்ரபத்தேர் வசகம் த்₃வயம்
॥ 13-

அவ்வுபநிஷத்தில் ஸத்ய வாக்கை முதலாகத் தொடங்கிச் சொல்லப்பட்டு இருக்கும் பதினோரு தவங்களிலும் இது மேலான உயர்ந்த தவமாக ஓதப் பட்டு இருக்கிறது -கடவல்லி என்னும் உபநிஷத்தில் த்வயம் என்னும் மஹா மந்த்ரம் இப்பிரபத்தியின் ஸ்வரூபத்தைச் சொல்வதாகவும் ஓதப்படுகின்றது –

சேஷத்வ பலம் சரணாகதி -பரதந்த்ர்ய பலம் கைங்கர்யம்

————-

ப்ரமாணம் ஸூப₄க₃ம் ப்ராஹ ஶ்வேதாஶ்வர ஸம்ஹிதா ।
ப்ராஹ ச உப நிஷந் ந்யாஸே யதா ₂(அ)நுஷ்டா₂ந த₃ர்ஶிநீ ||
14-

இப்பிரபத்திக்கு ஸ்வேதர உபநிஷத்தை சிறந்த ப்ரமாணமாகச் சொல்லுகிறார்கள் -இப்பிரபத்தியின் அனுஷ்டான க்ர மத்தைக் காட்டும் இவ்வுபநிஷத் கீழ் சொல்லியபடி ஓதுகிறது

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச் ச ப்ரஹிணோதி தஸ்மை
தம் ஹி தேவம் ஆத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே –ஸ்வேதாஸ் -6-18-

எவன் பிரமனை முன் படைத்தானோ -எவன் பேதங்களையும் அவனுக்கு உபதேசித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தமது விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரம புருஷனை மோக்ஷம் அடைய விரும்பும் அடியேன் சரணம் அடைகிறேன்

—————-

ப்₃ரஹ்மாணம் விததா₄த் யக்₃ரே ” “யஸ் தஸ்மை தி₃ஶதி ” ஶ்ருதி ꞉ ।
ஆத்ம ஜ்ஞாந ப்ரஸா தார்தம் முமுக்ஷு꞉ஶரணம் வ்ரஜேத் ॥ 15 ॥

யாதொரு பகவான் ஆதி காலத்தில் பிரமனைப் படைத்து அவருக்கு வேதங்களைக் கொடுக்கிறாரோ அந்தப்
பகவானை ப்ரஹ்ம ஞானம் பெறுவதற்காக சரணம் அடைய வேண்டும் –

———————-

அபி வத்₄யம் ப்ரபந்நம் ந ப்ரயச்ச₂ந்தி ” ஏவ மாதி₃கா꞉ ।
ப₃ஹவ ꞉ஶ்ருதயோ மாநம், ஶ்ரீ ஶாஸ்த்ரே ப₄க₃வாநபி || 16 |

—————–

ஶ்ரீமந் நாராயணாய ” இதி ப்₃ரஹ்மணே த்₃வய முக்தவான் ।
லக்ஷ்மீ தந்த்நர கமலயா ஶக்ராயைவ ப்ரபஞ்சிதம் ॥
17 ॥

கீழ் இரண்டு ஸ்லோகங்களின் தாத்பர்யம் –
சரணம் அடைந்தவன் ஒருவன் மரண தண்டனை கொடுக்கத் தக்கவனாக இருந்த போதிலும் அவனைக் கைவிடக்கூடாது என்றும் இவை முதலாக அநேக ஸ்ருதிகள் இப்பிரபத்திக்கு பிரமாணங்களாக இருக்கின்றன –
ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரத்திலும் பகவான் இந்தப் பிரபத்தி மந்திரமான ஸ்ரீமன் நாராயண என்றும் தொடங்கிய த்வயம் என்னும் மந்த்ரத்தை ப்ரம தேவனுக்கு உபதேசிக்கிறார்
லஷ்மி தந்த்ரத்திலும் பெரிய பிராட்டியார் தேவேந்திரனுக்கு இவ்வாறு வெளியிட்டு அருளி உள்ளார் –

கிருஷ்ண யஜுர் வதம் 6-5-6-பிரமாணம் -ருத்ரன் ஆதித்யன் -ஜ்யோதிர் தேவதா மன்னித்து விட்ட விருத்தாந்தம்
நத்யஜேயம் கதஞ்சன போல் இங்கும்

————

ததா₂ஸநத் குமாரஸ்ய ஸம்ஹிதா வக்தி ஸாத₃ரம் |
ப்ரபத்திம் ஸர்வ ப₂லதா₃ம் ஸர்வ உபாய அநபேக்ஷணீம் ॥
18 ॥

அப்படியே ஸநத்குமார ஸம்ஹிதையும் இப்பிரபத்தி ஸர்வ பலன்களையும் கொடுக்கத் தக்கது என்றும் மற்ற ஸாதனங்களில் எதையும் இப்பிரபத்தி துணையாக வேண்டுவது இல்லை என்றும் சொல்கின்றது –

அடுத்த 5 ஸ்லோகங்கள் லஷ்மீ தந்திரத்தில் பிராட்டி அருளிச் செய்தவை
உபாயம் தன்னைப் பொறுக்கும்
உபாயாந்தரம் அவனை பொறுக்கும்
இது மற்ற ஒன்றையும் பொறுக்காது

—————

ப்ரபத்தே ꞉ க்வசித் ₃அப்யேவம் பரா பேக்ஷா ந வித்₃யதே ।
ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வ காம ப₂ல ப்ரதா₃ ॥
19 ॥

இப்பிரபத்திக்கு ஒருக்காலும் வேறொரு துணை வேண்டியது இல்லை -எவர் எவர்கள் எந்த எந்த சமயங்களில் எந்த எந்த பலன்களைக் கோறு கின்றனரோ அவர் அவர்களுக்கு அந்த அந்தப் பயன்களைக் கொடுக்கும்

——–

ஸக்ருத் உ₃ச்சாரிதா ஹ்யேவ தஸ்ய ஸம்ஸார நாஸிநீ ।
ராக்ஷஸா நாம விஸ்த்ரம்பா₄த் ஆஞ்ஜநேயஸ்ய ப₃ந்த₄நே
॥ 20 ॥

————-

யதா ₂ விக₃லிதா ஸத்₃ய: அமோகா₄(அ)ப்யஸ்த்ர ப₃ந்த₄நா ।
ததா ₂ பும்ஸாம விஶ்வாஸாத் ப்ரபத்தி ꞉ ப்ரச்யுதா ப
₄வேத் ॥ 21 ॥

இப்பிரபத்தி ஒருக்கால் அனுஷ்டித்த அளவிலே அவர்களின் பாபங்களைப் போக்கி விடும் -ஆஞ்சநேயரை ராக்ஷஸ குமாரன் ப்ரஹ்மாஸ்திரத்தால் கட்டின போது அங்குள்ள ராக்ஷஸர்கள் அவ்வஸ்திரத்தை நம்பாமல் கயிறுகளினால் கட்ட அப்ரஹ்மாஸ்திரம் நழுவினது போல் இப்பிரபத்தியை அனுஷ்டிக்குமவர்களும் இதை நம்பார்களாகில் இப்பிரபத்தி நிஷ்பலமாய் விடும் –ஆகையால் இதை நம்புவர்களுக்கே இது மோக்ஷத்தைக் கொடுக்கும் –

———

தஸ்மாத்₃ விஸ்ரம்ப₄ யுக்தாநாம் முக்திம் தா₃ஸ்யதி ஸா (அ)சிராத் ।
ஸாதநாந்தர யுக்தாநாம் ப்ரபத்தி ꞉ஸ்வயமேவ வா ॥
22 ॥

இப்பிரபத்தி மோக்ஷத்தை விரும்புபவர்களுக்கு உபாயாந்தரமான பக்தி யோகத்துடன் சேர்ந்தும் தனித்தும் அனுஷ்டிப்பதனால் மோக்ஷத்தைக் கொடுக்கும் –
அதாவது பிரணவம் வேறொரு மந்திரத்துடன் சேர்ந்தும் தனித்தும் செய்கிறவர்களுக்கு அதன் பலத்தைக் கொடுப்பது போலாகும் -கீதையில் அங்க பிரபத்தி -பக்திக்கு அங்கம்
ரஹஸ்ய த்ரயத்தில் -தனித்தே உபாயம்-

————-

ஸாதயேத் முக்தி காமாநாம் விமுக்திம் ப்ரணவோ யதா ₂ ।
யதா ₂(ஆ)ஹ ப₄க₃வான் வ்யக்தம் விஷ்வக்ஸேநாய ஶ்ருண்வதே
॥ 23 ॥

————-

இதர உபாயதவ் ₃ஷ்கர்யாத் அதி ₄காராத் இஹாந்த ꞉|
உபாயமிஹ வக்ஷ்யாமி ப்ரபத்திம் ஸார்வ லௌகிகம் ॥ 24

கர்மயோகம் முதலிய மோக்ஷ உபாயங்களை அனுஷ்டிப்பவருக்கு சக்தி இல்லாமையாலும் அதிகாரம் இல்லாமையாலும்
சர்வருக்கும் ஸூலபமுமாய் அனுஷ்ட்டிக்கத் தக்க மோக்ஷ உபாயமாகவும் ப்ரபத்தியைச் சொல்லுகிறோம் என்று பகவத் ஸாஸ்திரத்தில் பகவான் விஷ்வக்சேனருக்கு எவ்வாறு உபதேசித்தாரோ அவற்றைச் சொல்லுகிறோம் –

———–

கால தோஷாந் மநுஷ்யாணாம் மநஶ் சாஞ்சல்ய யோக₃த் ꞉ ।
விஷயேந்த்₃ரிய ஸம் யோகா₃த் நிஷித்₃த ₄கரணாத ₃பி ॥ 25

————

விஹிதா (அ)கரணாந் நாபி ஜேதும் ஶக்யா க₃ணாதி ₄ப ! |
இந்த்₃ரியாண் இந்த்₃ரியார்தே ₂ப்₄ய꞉ ந்ருணாம் கால ஸ்வ பாவத₄ ꞉ || 26

இக்காலத்தில் கலி தோஷத்தினாலும் -மனஸ் ஓர் இடத்தில் நிலை பெறாமையாலும் -விஷய அனுபவம் செய்வதாலும் –சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்யாமையாலும் -கால ஸ்வபாவத்தினாலும் மனிதர்களுக்கு விஷயங்களும் இந்திரியங்களும் ஜெயிக்க முடியாதவையாயே இருக்கின்றன –

———–

தஸ்மாத் து கர்ம யோகே ₃(அ)ஸ்மின் ந அதிகாரோ ஹி வித்₃யதே ।
விஹிதேஷு ச ஸர்வேஷு தத் அபா₄வாந் மஹா முநே ! ॥ 27 ॥

ஆகையால் சிலர்கள் இந்திரியங்களை ஜெயிக்க அசக்தர்களாய் இருப்பதாலும் -சிலர்கள் வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க ஸாஸ்திரங்களில் அதிகாரம் இல்லாதவர்களாக இருப்பதாலும் -எல்லோரும் கர்ம யோகத்தில் அதிகாரம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்

—————

ஜ்ஞாந யோகே₃ஷ்வ பி₄ரதி ꞉ கஸ்யசித்₃ வித்₃யதே ந ச |
தத் அ₃பா₄வாந் மயி ப்ரீதி ꞉ ந ச ப₄க்திஶ்ச ஜாயதே ॥ 28 ॥

அப்படியே ஞான யோகத்திலும் எவர்களுக்கும் ஆசை உண்டாகிறது இல்லை -ஞானம் இல்லாமையால் என்னிடத்தில் -ஸ்நேஹமாவது -பக்தியாவது -உண்டாகிறது இல்லை -ஆகையால் பக்தி யோகத்திலாவது ஞானம் யோகத்திலாவது எவருக்கும் அதிகாரம் இல்லை –

லஷ்மணன் பெருமாள் இடம் பக்தன்
சக்ரவர்த்தி பெருமாள் இடம் ஸ்நேஹம்

————-

தஸ்மாந் ந கர்ம யோகே ₃(அ)ஸ்மின் நாதி ₄காரோ ந ஸாந்யதா ₂
। தஸ்மாந் மத் பாத ₃யுக₃லம் ஐகாந்த் யாச் ச₂ரணம் வ்ரஜேத்
॥29॥

—————

ஆத்மநோ து₃ர்த₃ஶா பத்திம் விம்ருஶ்ய ச கு₃ணாந்மம ।
மத் ₃ஏக உபாய ஸம் ஸித்தி : மாம் ப்ரபந்நோ விமுச்யதே ॥ 30 ॥

ஆகையால் தனக்கு இவ்வாறு நேர்ந்திருக்கும் துர்த்தசைகளையும் இவ்வாறு அகதிகளாய் இருக்கும் அவர்களை ரக்ஷிப்பதற்கு எதிர்பார்த்து இருக்கும் என்னுடைய தயை முதலிய ஸத் குணங்களையும் நன்றாக யோஜித்து என் திருவடிகளையே ஒரே நிச்சயம் யுடையவனாய் சரணம் அடைய வேண்டும் –என்னை ஒருவனையே சரணம் அடைந்தவர் இந்த ஸம்ஸாரக் கிலேசங்களில் நின்றும் விடுவிக்கப் படுவார்கள்

புகல் ஒன்றுமே இல்லாத துர்த்தசை
ஆறு எனக்கு பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்

——————

ஆநு கூல்யஸ்ய ஸங்கல்ப꞉ ப்ராதி கூல்யஸ்ய வர்ஜநம் ।
ரக்ஷிஷ்ய தீதி விஶ்வாஸோ கோ₃ப்த்ருத்வ வரணம் ததா ₂ ॥ 31 ॥

—————-

ஆத்ம நிஷேப கார்பண்யே ஷட்₃ விதா ₄ஶரணாக₃தி ꞉ ।
அந்யா ச ப்ரபத்த்யா மாம் ஆகிஞ்சந்ய ஏக பூர்வகம்
॥ 32॥

பகவானுக்கு அனுகூலனாய் வர்த்திப்பதும் -பகவானுக்கு பிரதிகூலமான செயல்களை விடுவதும் -பகவான் நம்மைக் கண்டிப்பாக ரக்ஷிப்பார் என்று நம்புவதும் -அவனையே தன்னை ரக்ஷகனாக கோறுவதும் -தன் ஆத்மாவை அவனிடம் சமர்ப்பணம் செய்தும் -தான் போக்கற்ற நிலையில் இருப்பதை நினைத்து இருப்பதுமாகிய -இவ்வாறும் சரணாகதி என்று சொல்லப்படும் –
இங்கு சொல்லப்பட்ட ஆனுகூல்ய சங்கல்பம் முதலிய ஐந்து அங்கங்களோடு கூடிய ஆத்ம நிஷேபமே ப்ரபத்தியாக கீழே சொல்லப்படுவது இவ்வங்கங்கள் பிரதானங்கள் என்று தோற்றுகைக்காக –

———–

மாம் மாதவ இதி ஜ்ஞாத்வா மாம் க₃ச்சே₂ச் ச₂ரணம் நர꞉ ।
ஏவம் மாம் ஶரணம் க₃ச்ச₂ன் க்ருத க்ருத்யோ ப₄விஷ்யதி ॥ 33 ॥

பிரபத்தி செய்யும் ஒருவர் என்னை ஸ்ரீ யப்பத்தி என்றும் அறிந்து நாம் வேறொரு கதி இல்லாமல் இருக்கிறோம் என்றும் எண்ணத்தை முன்னிட்டு மேல் சொல்லிய ப்ரபத்தியினால் என்னை சரணம் அடைய வேண்டும் என்று பகவான் அருளிச் செய்தார் –

23 ஸ்லோகம் தொடங்கி இது வரை விஷ்வக் சேனருக்கு பகவான் பஞ்ச ராத்ர சாஸ்திரத்தில் உபதேசம்

—————

ராமாயணே ச ப₄க₃வான் பா₄ரதே ச யது₃க்தவான் ।
“ஸக்ரு தேவ ப்ரபந்நாய தபா₃ஸ்மீதி ச யாசதே ॥
அப₄யம் ஸர்வ பூ₄தேப்₄யோ ததாம் ஏதத் விரதம் மம
॥34-

இவ்வாறு என்னை சரணம் அடைந்தவர் க்ருதக்ருத்யராய் விடுவர் -இதை ஸ்ரீ ராமாயணத்திலும் ஸ்ரீ மஹா பாரதத்திலும் பகவானே அருளிச் செய்துள்ளார் –

என்னிடத்தில் ஒருக்கால் பிரபத்தி செய்தவருக்கு ஸர்வ பூதங்களில் இருந்தும் பயம் இல்லாமையைக் கொடுக்கிறேன் -இப்படி ப்ரபன்னர்களுக்கு அபய ப்ரதானம் அளிப்பது என்னுடைய விக்ரஹம்

———-

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஶரணம் வ்ரஜ ।
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி மா ஶுச꞉ ” ॥ 35 ॥

மோக்ஷ சாதனங்களாக சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் கர்மயோகம் முதலிய ப்ரவ்ருத்தி தர்மங்களையும் -பலசாதனங்களாக சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் ஸர்வ கர்மங்களையும் விட்டு என்னையே ஒருவனையே ரக்ஷகனாக சரணம் அடைய வேண்டும் -மோக்ஷ சாதனமாக அனுஷ்ட்டிக்க வேண்டிய துராசையை விடுவதே வேண்டும் -பிரபதிக்கு சஹகாரியாக நினைத்து மற்ற கர்மங்களையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்-இப்படிச் செய்த ப்ரபன்னனுக்கு அனைத்தும் பாபங்களையும் பிரதிபந்தகங்களையும் நானே போக்கி அருளுகிறேன் -இவற்றைப் பற்றித் துக்கம் பட வேண்டாமே

———-

வரதா₃நாத் வசிஷ்ட₂ஸ்ய தேவதா பாரமார்த்₂ய வித் ।
பராஶர꞉ ப்ரணி ஜகௌ₃ புராணே வைஷ்ணவே ததா ₂ || 36 |
|

வசிஷ்ட மஹரிஷியின் அருளாலே -வரபலத்தினால் -பரதத்வம் பற்றி அனைத்தையுமே உள்ளபடி அறிந்த பராசர முனிவரும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பிரபத்தியின் மஹாத்ம்யத்தை அருளிச் செய்துள்ளார்

வசிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் சுகர் -பரம்பரை

————

தாவ தார்த்திஸ் ததா ₃ வாஞ்சா₂ தாவந் மோஹ꞉ ததா ₃(அ)ஸூக₂ம் ।
யாவந்ந யாதி சரணம் த்வாம் அசேஷாக₄நாஸநம் ॥ 37 ॥

யாவன் ஒருவன் ஸர்வ பாபங்களையும் நாசம் செய்து அருளும் உம்மை சரணம் அடையவில்லையோ அப்பொழுது அவனுக்குப் பீடைகளும் வீணாசையும் கொடு மோஹமும் கஷ்டமும் உண்டாகும் என்கிறார் பராசரர் –

ஆர்த்தி -வாஞ்சை -மோஹம் -ஸூகம் -நான்கும் இருக்கும்
அதுவரை துடிப்பு -இழந்த ஐஸ்வர்யம் கிடைக்க -சரணாகதி பண்ணினதும் போகும்
வாஞ்சை -விருப்பம் -புதிய சொத்து -அர்த்தார்த்தி -கீதை -இவன் இரண்டாம் அதிகாரி
மோஹம் -ஜிஜ்ஜாசூ -கைவல்யார்த்தி -மயக்கம்
சுகம் -ஐஸ்வர்ய கைவல்ய அனுபவம் சுகம் -தன்மையும் போகும் அன்றோ

——–

கமல நயந வாஸூ தேவ விஷ்ணோ தரணிதர அச்யுத ஶங்க₂சக்ரபாணே ।
ப₄வ ஶரணமி தீரயந்தி யே வை த்யஜ ப₄ட தூ₃ர தரேண ॥ 38 ॥

தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையவரே -வாஸூ தேவரே –விஷ்ணுவே-பூமியைத் தரிப்பவரே -ஆஸ்ரிதரை நழுவ விடாத அச்யுதனே –திருக்கைகளில் திரு வாழி திருச் சங்குகளை யுடையவரே -உம்மையே ரக்ஷகராக கைவிட எவர் சரணம் அடைகிறார்களோ -அவர்களை பாபங்கள் தீண்டாமல் செய்து அருளி யமபடர்களை அவர்களை வெகு தூரத்திலே இருந்து விட்டுவிட வேண்டும் என்றும் ஆணையும் செய்து அருளுகிறாயே

அஜாமிளா உபாக்யானம் -ஸ்ரீ மத் பாகவதம் -நாராயணா கூப்பிட்டதும் -யமபடர் -தூரம் போன வ்ருத்தாந்தம் -என் பேரைச் சொன்னாய்-அடையாளம் -சங்கேதம் -பரிஹாஸம் -எதற்காக சொன்னாலும் அசேஷ குற்றங்கள் இல்லாமல் போக்கும் அன்றோ -பரிகார மது ஸூதன ப்ரபந்நான் -செவிக்கு இறைஞ்சி சாதுவராய் போம் என்றான் -நமன் தமரால் ஆராயப்படார் அன்றோ

———-

மநுரப்யாஹ ப₄க₃வான் கூ₃ட₄ம் ஸந்யாஸ வைபவம் ।
அர்சா நாராயணஸ்யேதி ப்₃ருவன் வர்ணாஶ்ரம க்ரியா꞉
॥ 39 ॥

அர்சா நாராயணஸ்-என்று பகவானுடைய ஆராதனத்தைச் சொல்லத் தொடங்கிய மனுவும் இப்பிரபத்தியின் வைபவத்தை சமத்காரமாக அருளிச் செய்துள்ளார்

ஸந்யாஸம் -சரணாகதி -பிரபத்தி -பர்யாயம்

—————

யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்த வைஷ ஹ்ருதி ₃ஸ்தித₂ ꞉ ।
தேந சேத விவாத ₃ஸ்தேமா க₃ங்கா₃ம் மா குரூன் க₃ம꞉ ॥ 40 ॥

ஸர்வ பிராணிகளுக்கும் அந்தர்யாமியாகவும் -ஸூர்ய மண்டலத்தில் மத்யவர்த்தியாயும் சர்வாதிகாராயும் இருக்கும் பகவான் உன்னுடைய ஹ்ருதயத்தில் வஸிக்கிறார் -அவருடன் உனக்கு-வழக்கு இல்லாமல் -அத்வேஷம் மாத்திரமே -விலக்காமை ஒன்றே -இருந்தால் -நீ நற்கதிகளைப் பெறுவதற்கு கங்கா தீர்த்த யாத்ரைக்கோ குருஷேத்ர திவ்ய தேச யாத்ரைக்கோ போக வேண்டாமே என்று உபதேசிக்கிறார் –

கங்கை கங்கை வாசகத்தால் கடுவினை களையலாமே
யம -நியமிப்பவர்உள்ளும் புறமும் நியமிப்பவர் -ஸூர்ய மண்டத்தில் இருப்பவர் அவரே அரசன் -ஒத்துண்டாலும் ஒத்துக் கொள்ளா விட்டாலும் கங்கா ஸ்நானம் வேண்டாம்கங்கை நீர் குடைந்தாடும் வேட்க்கை என்னாவதே -திருமாலை -இதன் தமிழ் ஆக்கம்நமன் வேறு கொண்டு தம்முள் வைத்திடாமையால் -விலக்காமல் -என்னுடையவன் என்று கொண்டால் யமபடர் தீண்டார்கள் அன்றோ

———–

த₃க்ஷிணா ஶாபதே ரத்ர ந முக்₂யாஹ்ரு ₃யஸ்தி ₂ திஸ் ꞉ ।
அந்த ꞉ ப்ர விஷ்ட꞉ஶாஸ்தா யோ ஜநாநாம் யமயத்யபி ॥
41 ॥

யம –தெற்கு திக்கு அதிபதி நமனை இங்கு சொல்ல வில்லை
வியாபித்து உள்ளும் புகுந்து நியமிக்கும் ப்ரஹ்மத்தை சொன்னவாறு -எங்கும் உளன் கண்ணன்

————-

ஆத்மாந மந்தரஸ் தஸ்ய ம்ருத்யுர் ம்ருத்யோ ꞉ஹ்ருதி ₃ஸ்தி₂த ꞉ ।
தேந ஸர்வாதி ₄ராஜேந விவஸ்வத்₃பி₃ம்ப₃ வர்தி நா ॥ 4
2 ॥

ஸர்வ பிராணிகளின் உள்ளே புகுந்து நியமிப்பவன் –ஆத்மாவைப் அறிய ஒண்ணாதவன் -மிருத்யுவுக்கும் மிருத்யுவானவன் -அவனுடன் வழக்கு இல்லாமல் இருப்பதாவது அவனிடம் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுவதே

———–

அவி வாத₃ஸ்து தஸ்யைவ பாத ₃யோராத்மநோ(அ)ர்பணம்।
யோந்யதா ₂ஸந்த மாத்மாநம் அந்யதா ₂ ப்ரதி பத்₃யதே ।
கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேணாத்மாப ஹாரிணா ॥43||

ஆத்மா ஸ்வ தந்த்ரன் என்றும் நினைத்து செயல்படுபவன் -பிறர் நன் பொருளை அபஹரிப்பவன் -ஸர்வ பாபங்களையும் செய்தவன் ஆகிறான்

———-

தஸ்மாத் ஸர்வ நியந்தாரம் ஸர்வேஷாம் ச ஹ்ருதி ₃ஸ்தி₂ தடம் ।
ப₄க₃வந்தம் ப்ரபந்நா யே தீர்தா₂தி ₃: தை : விஶுத்₃ த₄யதி ॥ 44 ॥

ஆகையால் ஸர்வ நியாமகனாய் ஸர்வ அந்தர்யாமியாக இருக்கும் பகவானை எவர்கள் சரணம் அடைகிறார்களோ அவர்கள் புண்ய தீர்த்தங்களையும் மிக்க பாவநமாக ஆக்கி விடுகிறார்கள்

பாத தூளி பெறுவதால் பாவனம் பெறுகிறோம் அன்றோ

————-

அர்தோ ₂(அ)யம் ப₃ஹுஶ꞉ ப்ரோக்தோ சவ்நகாத்₃யைர் மஹர் ஷிபி₄꞉ ।
“தாவத்₃க₃ச்சே₂த் து தீர்தா₂ நி ஸரிதஶ்ச சராம்ஸி ச ।
யாவந்நா பூ₄ச்ச பூ₄பால ! விஷ்ணு ப₄க்தி பரம் மந
꞉ ॥ 45 ॥

————-

ப₄வத்₃ விதா₄ பா₄க₃வதா ꞉ தீர்த ₂பூ₄தா ꞉ஸ்வயம் ப்ரபோ ₄ ! |
தீர்தி ₂குர் வந்தி தீர்தா ₂ நி ஸ்வாந்த ꞉ஸ்தேந க₃தா ₃ப்₄ருதா ॥ 46 ||

கதாதரன் -கயாவில் உள்ள பெருமாள் -இவரிடம் சரணாகதி அடைந்தவர்கள் தீர்த்த நதிகளையும் பாவனமாக்கும்-துலா மாச – -கங்கையில் புனிதமாகிய காவேரியில் வந்து-புனிதத்தன்மை பெருகும் தீர்த்த நதிகள் –

———-

ப்ரமாணமியதே ₃ வாலம் ப்ரபத்தே ꞉ வ்யாஸ சவ்நகவ் ।
பரோக்த வந்தவ் யதா ₂ஶ்ரீமத்₃ விஷ்ணு த₄ர்மே ச பா₄ரதே ॥ 47 ॥

இவ்வர்த்தம் சவுனாக மஹரிஷிகளாலும் சொல்லப்படுகின்றது -இதுவரையில் உமது மனம் விஷ்ணு பக்தியைப் பெற வில்லையோ அதுவரை புண்ய தீர்த்தங்களில் நீராட வேண்டும் -பக்திமான் களாகில் வேண்டாம் என்றும் கருத்து –

பாகவதர்கள் புண்ய தீர்த்தங்களாகிறார்கள்-அவர்கள் திரு உள்ளத்தில் தியானித்து இருக்கும் பகவானாலேயே தீர்த்தங்களையே பாவனமாக்கி அருள்கிறார்கள் –

மேலும் விஷ்ணு தர்மத்திலும் மஹா பாரதத்திலும் பல பிரமாணங்கள் உள்ளன

————–

வ்ருதை ₂ வப₄ வதோ யாதா பூ₄யஸீ ஜந்ம ஸந்ததி ꞉ ।
தஸ்யாமந்ய தமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய ஶரணம் வ்ரஜ ॥ 48 ॥

உனக்கு வீணாக அநேக ஜென்மங்கள் கழிந்தன -அவற்றுள் இதுவும் ஒரு ஜென்மமாகி விடும் என்றும் அறிந்து நீ பகவானை சரணம் அடையக் கடவாய்-

———–

அத ₂ பாதக பீ₄தஸ் த்வம் ஸர்வ பா₄வேந பா₄ரத |
விமுக்தாந்ய ஸமாரம் போ ₄ நாராயண பரோ ப₄ வ ॥ 49 ॥

தர்ம ராஜனே நீர் பாதகங்களில் நின்றும் பயந்தீராகில் எல்லாமே பிரயத்தனங்களையும் விட்டு ஸ்ரீ மன் நாராயணனையே பராயணமாகப் பற்றிப் போர வேண்டும் –

——

ப்ரத₂ம- ப்ரமாண பத்₃ததி ஸம்பூர்ணம்

————–

அத -த்வதீய -ஸ்வரூப பத்ததி

பு₃த்₃திர் ₄அத்₄யவஸா யாத்மா யாச்நா பர்யவஸாயிநீ ।
ப்ராப்யேச்சோ ₂ரநுபாயஸ்ய ப்ரபத்தே ரூபமுச்யதே ॥ 1 ॥

ஒரு பேற்றைப் பெறுவதற்கு வேறொரு கதி இல்லாமல் இருக்கும் ஒருவர் தம் இஷ்ட தேவதையை உத்தேசித்து திருட அத்யவசாயத்துடன் அப்பேற்றைப் பெறுவதற்கு அவர் செய்யும் பிரார்த்தனா ரூபமான தியானமே ப்ரபத்தியின் ஸ்வரூபம் –

பிரபத்தி -சரணாகதி இரண்டும் ஸ்த்ரீ லிங்கம்–யாசகம் -பிச்சை -இங்கு ஸ்த்ரீ லிங்கம் யாச்-ஞா -பிரபத்தி பிச்சை போல் தானே -நீதான் கொடுக்க வேண்டும் இவரே உபாயமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் -இதுவே பிரபத்திபிரபத்தி -சாமான்ய சப்தம் -சரணாகதி -விசேஷ சப்தம் -பிரபத்தி முத்தி சரணாகதி ஆகும் -பால் பால்கோவா ஆவது போல்பகவத் விஷய த்யானம் -அன்புடன் கூடிய ஞானம் பக்தி யாவது போல்

———————

அநந்ய ஸாத்யே ₄ஸ்வ அபீ₄ஷ்டே மஹா விஶ்வாஸ பூர்வகம் ।
தத் ஏக உபாய தாயாச் நா ப்ரபத்தி ꞉ஶரணாகதி ꞉
” ॥ 2 ॥

வேறொரு உபாயங்களால் பெறுவதற்கு அஸக்யமாய் இருப்பது ஒரு -தான் கோறிய பயனைப் பெறுவதற்கு மஹா விவாசத்தை முன்னிட்டு பகவான் ஒருவனையே உபாயமாகக் கோலி பிரார்த்திப்பது பிரபத்தி யாகும் -அதுவே சரணாகதி எனப்படுகிறது –

இங்கும் யாச்நா -யாசகம் –

விஸ்வ சேந சம்ஹிதை பிரமாணம் இது

————-

ஶரணாக₃தி ஶப்₃தேந ₃ப்ரபத்திஸ் து விஸேஷிதா ।
ப்ரபத்திம் ஸம் ஶ்ரயேத்₃ப₄க்த்யா ஶரணாக₃தி லக்ஷணம் ॥ 3 ॥

இங்கு பிரபத்தி சரணாகதியால் விசேஷிக்கப்பட்டு இருப்பதால் ப்ரபத்தியை சரணாகதியுடன் கூடிய பக்தியுடன் அனுஷ்ட்டிக்க வேண்டும் -தான் கோறிய பலனைக் கொடுக்கும் சுமையை பகவானிடம் சுமத்தும் பர சமர்ப்பணமே சரணாகதி யாகம் –

————-

இதி ஹ்யுக்தம் ப₄க₃வதா விஷ்வக்ஸேநாயா ஸாத₃ரம்।
ஆர்த்த ப்ரபத்திரித்யுக்தா ஸைஷா பஞ்சாங்க₃ ஸம்யுதா ॥ 4

இந்தப்பிரபத்தியை பகவான் விஷ்வக்சேனருக்கு ஆதரத்துடன் உபதேசித்து அருளி உள்ளார் -ஐந்து அங்கங்களோடு கூடிய இப்பிரபத்தி ஆர்த்த பிரபத்தி ஆகும்

———–

அஹம் அஸ்ம்யபராதாநாம் ஆலயோ (அ)கிஞ்சநோ (அ)க₃தி ꞉ ।
த்வமேவ உபாய பூ₄தோ மே பவதி ₄ ப்ரார்த₂நாமதி ꞉ ॥ 5 ॥

நான் அபராதங்களுக்கு எல்லாமே இருப்பிடம் -சக்தி இல்லாதவன் -அகதியாகவும் இருக்கிறேன் -ஆகையால் எனக்கு நீரே உபாயமாக வேண்டும் என்றும் பகவானைப் பிரார்த்திப்பதே சரணாகதி என்று சொல்லப்படும் -இச்சரணாகதி பகவான் இடத்தில் மட்டுமே செய்யத்தக்கது –

அஹிர் புத்த்ய சம்ஹிதை

உபாயமாக ஆனவனாக இரு என்று பிரார்த்திக்க வேண்டும் -அவர் எப்பொழுதும் உபாயம் உயயம் -தத்தம் ஸ்வரூபமே இது -நாம் இசைவதே வேண்டுவது -ப்ராப்யமாக இயற்க்கை -நமது மாட்டாமையால் பாயமாக்குகிறோம் கருமுகை மாலையை சும்மாட்டு ஆக்குகிறோம்
சேஷ புதன் -சேஷத்வம் இசைந்து -கைங்கர்யம் செய்ய வேண்டுமே

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

——–

ஶரணா₃தி ரித்யுக்தா ஸா தேவே (அ)ஸ்மின் ப்ரயுஜ்யதாம் ।
ஆத்மநோ து₃ர்த₃ஶாபத்திம் விம்ருஶ்ய ச ஹரேர் கு₃ணான்॥ 6 ॥

பிரபத்தி செய்ய வேண்டும் ஒருவன் தான் அகதியாய் இருப்பதால் உண்டான துர்தசையையும் -அகதிகளை ரக்ஷிப்பதற்குப் போந்தவைகளான பகவானுடைய கல்யாண குணங்களையும் நன்றாக யோசித்து பகவான் ஒருவனையே உபாயமாக அறிந்து அவனையே சரணம் அடைகிறவன் சம்சார பந்தத்தில் இருந்து விடுபடுகிறான் –

மநோ பாவம் வேறே -புத்தி உறுதி வேறே-

———-

தத் ஏக உபாய ஸம் ஸித்தி ꞉ தம் ப்ரபந்நோ விமுச்யதே ।
வாக்யேஷ் வேதேஷு பஞ்சாங்கா₃ ப்ரபத்திர் லக்ஷ்யதே யதா ₂ ॥ 7 ॥

—————

நிஷேபா பரபர்யாயோ ந்யாஸ ꞉ பஞ்சாங்க₃ லக்ஷண : ।
ஸந்யாயஸஸ் த்யாக₃ இத் யுக்தா ꞉ஶரணா க₃தி ரித்யபி ॥ 8 ॥

மேல் சொல்லிய வாக்யங்களினால் ஐந்து அங்கங்களோடு கூடிய பிரபத்தி காட்டப்படுகின்றது -இப்பிரபத்தியே நிஷேபம் என்றும் ந்யாஸம் என்றும் பஞ்சாங்க லக்ஷணம் என்றும் சன்யாசம் என்றும் த்யாஜ்யம் என்றும் சரணாகதி என்றும் சொல்லப்படுகின்றது –

ப்ராப்யத்தில் இச்சை முதலில் வேண்டும்
உபாயம் தேடி-மற்றவற்றை எல்லாம் சவாசனமாக விட்டு – அவனே உபாயம் என்ற மஹா விசுவாசமும் வேண்டுமே-அவனையும் பிரார்த்திக்கவும் வேண்டுமே

நிஷேபம் -ந்யாஸம் -ஸந்யாஸம் -தியாகம் -சரணாகதி -பிரபத்தி பர்யாயம்
நிஷேபம்-சமர்ப்பித்தல் -ந்யாஸம்-வைத்தல்-ஸந்யாஸம்-நன்கு விட்டு விடுத்த, தியாகம்-தொலைத்தல் -சரணம் ஆகதி

பிரபத்தி -உபாய வர்ணம் -ப்ரபன்னனுக்கு விசேஷணம் இது -தாண்ட ஆசை உள்ளதால் ஓடம் ஏறுவது போல் அதிகாரி விசேஷணம் இது -ஸ்ரீ யபதியே உபாயம் என்று -வரித்து -பற்றும் பற்றும் உபாயம் அல்லவே –

————

ஆநுகூல்யஸ்ய ஸங்கல்பாத் ப்ராதி கூல்யஸ்ய வர்ஜநாத் ।
அங்கா₃நாம் லக்ஷ்யதே ரூபம் லக்ஷ்மீ தந்த்ர ப்ரகாரத ꞉ ॥ 9 ॥

லஷ்மி தந்திரத்தில் ஆனுகூல்ய சங்கல்பம் பிரதிகூல்ய வர்ஜனம் இவ்விரண்டு அங்கங்களினாலேயே மற்றைய மூன்று அங்கங்களின் ரூபமும் ஒரு விதமாக கட்டப்படுகின்றன -இவற்றுள் அங்கிக்குச் சொல்லப்பட்ட பலனும் இவ்வங்களுக்கும் பயன் என்று பிரிவாக இவைகளின் ரூபங்களும் காட்டப்படுகின்றன –

————–

தேஷாம் அங்க₃ப₂லத்வம் ச தத்₃ரூபம் ச விபா₄க₃ஶ꞉ ।
ஆநுகூல்யமி த₃ம் ப்ரோக்தம் ஸர்வ பூ₄த அநுகூலதா ॥ 10 ॥

பகவான் சொல்வதை அருளிச் செய்கிறார் -நான் ஸர்வ பூதங்களின் உடையவும் உட் புகுந்து இருக்கிறேன் என்ற நிச்சயித்தினால் ஸர்வ பூதங்களிடமும் அனுகூல்யமாக இருப்பதே ஆனுகூல்ய சங்கல்பம் எனப்படுகிறது –

அங்கி யான பிரதானத்துக்கு பலமே அங்கங்களும் பலம் – அங்கங்களுக்குத் தனிப்பலன் இல்லை –

———–

அந்த꞉ஸ்தி ₂தோ (அ)ஹம் ஸர்வேஷாம் பா₄வாநாமிதி நிஶ்சயாத் ।
ஏதேந வியாப்தி விஜ்ஞாநாத் ப்ரபத்தவ் யஸ்ய ஸர்வஶ꞉ ॥ 11 ॥

———–

ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப꞉ ப்ராதி கூல்யஸ்ய வர்ஜநம் ।
ஹிம்ஸாத்₃யபாய விரதி ꞉ உக்தா ஸர்வேஷு ஜந்துஷு ॥ 12

மேல் சொன்னபடி பகவான் ஸர்வ வ்யாபி என்றும் அறிந்து இருப்பதால் அவருக்கு நான் அனுகூலமாக வர்த்திக்க வேண்டி இருப்பதால் ஸர்வ ஜந்துக்களிடமும் ஹிம்ஸை முதலிய அபாயங்களைச் செய்வதில் நின்றும் ஒழிவது பிரதிகூல்ய வ்ரஜனம் என்ற சொல்லப்படும்

உளன் சுடர் மிகு சுருதியுள் கரந்து எங்கும் பரந்துளன்-ஆத்ம தர்சனம் —சம தர்சனம் -யோக உச்யதே -பண்டிதன் சம தரிசனமாக இருக்க வேண்டுமே -தேஹ வியுக்த ஆத்ம ஸ்வரூபம் பார்த்தாலும் -அவனே உள்ளே இருந்து நியமிக்கிறான் என்ற புத்தி வந்தாலே இதுவும் வருமே –

——–

அங்க₃ ஸாமக்₃ர்ய ஸம்பத்தே ꞉ அஶக்தேஶ்சாபி கர்மணாம் ।
அதி ₄காரஸ்ய சா(அ) ஸித்₃தே ₄꞉தே₃ஶ கால கு₃ண க்ஷயாத் ॥ 1
3 ॥

—————–

உபாயா நைவ ஸித்₃த்₄யந்தி ஹ்யபாப ஹுலாஸ் ததா ₂ ।
இதி யா க₃ர்வஹா நிஸ்து தை₃ந்யம் கார்பண்ய முச்யதே
॥ 14 ॥

பக்தி யோகம் முதலிய உபாயங்களை அனுஷ்டிப்பதற்கு அவைகளின் அங்க பூர்த்தி இல்லாமையாலும் -அவற்றை அனுஷ்ட்டிக்க சிலருக்கு அதிகாரம் இல்லாமையாலும் -தேச காலங்களின் குணங்கள் குறைவு படுவதாலும் பக்தி யோகம் முதலிய மோக்ஷ உபாயங்களை தலைக்கட்டாதுகள் என்றும் அவைகளுக்கு அபாயங்கள் மேலிட்டு இருக்கின்றன என்றும் கர்வம் அழிந்து மனம் இரங்குவது கார்ப்பண்யம் என்று சொல்லப்படும் –

கிருபணன் சாதனம் இல்லாதவன்-அசக்தன் -அதிகாரம் இல்லாதவன் -தேச காலம் சாதகம் இல்லாதவன்

————–

உபாயாந்தர தவ்ஷ்கர்யாத் தந் நிவ்ருத்திர் ஹி ஸூசிதா ।
அகிஞ்சநாதி ₄காரத்வம் ப்ரபத்தேரபி ஸூசிதம் ॥ 15 ॥

பக்தி முதலிய உபாயாந்தரங்களில் சக்தி இல்லாமையைச் சொல்லுகையாலே ப்ரபன்னர்களுக்கு உபாயாந்தரங்களில் நின்றும் ஓழிகையும் போக்கற்று நிற்கிறவர்கள் ப்ரபத்திக்கு அதிகாரிகள் என்பதும் காட்டப்படுகின்றது –

————

ஶக்தேஸ் ஸூப ஸத₃த்வாச்ச க்ருபா யோகா₃ச்ச ஶாஶ்வதாத் ।
ஈஸே ஶிதவ்ய ஸம்ப₃ந்தா₄த் அநித₃ம் ப்ரத₂மாத₃பி ॥16॥

ஸ்ரீ லஷ்மி தந்த்ர வசனம் மேற்கோள் காட்டுகிறார்

————-

ரக்ஷிஷ்யத் யநுகூலாந்ந ꞉ இதி யா ஸூத்₃ருடா₄ மதி ꞉ ।
ஸ விஶ்வாஸோ ப₄வேச்ச₂க்ர ஸர்வ து₃ஷ் க்ருத நாஸந ꞉ ॥ 17 ॥

பகவான் ப்ரபன்னர்களை ரக்ஷிப்பதற்கு சக்தனாய் இருப்பதாலும் -எல்லாருக்கும் கிட்டும்படி ஸூலபனாய் இருப்பதாலும் -எப்பொழுதும் அருள் பொருந்தியனாய் இருப்பதாலும் -பகவானுக்கும் இவ்வாத்மாவுக்கும் உண்டான அநாதி கால சேஷி சேஷ பாவ சம்பந்தத்தாலும் அனுகூலராய் இருக்கும் நன்மை பகவான் ரஷித்தே தீருவான் என்கிற உறுதியான நம்பிக்கையே மஹா விஸ்வாஸம் எனப்படுகிறது -அது ஸர்வ பாபங்களையும் போக்கி அருளும் என்று ஸ்ரீ லஷ்மீ தேவி தேவேந்திரனுக்கு உபதேசம் செய்து அருளுகிறார்

கோலத்திரு மா மகளோடு கூடி சாலப்பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பான் -காக்கும் இயல்பினன் கண்ணபிரான்

——–

ஸ்வ ரக்ஷ அயோக்₃யதாம் ஜ்ஞாத்வா ப்ரபத்தவ்யஸ்ய யுக்தித꞉ ।
ரக்ஷிஷ்ய தீதி விஶ்வாஸாத் அபீ₄ஷ்ட உபாய கல்பநம் ॥ 18 ॥

தன்னால் சரணம் அடையத்தக்கவரான பகவான் தன்னை ரக்ஷிக்கத் திறமை யுடையவர் என்றும் அறிந்து தன்னை அவன் ரஷித்தே தீருவான் என்ற நம்பிக்கையுடன் கூடியவனாய் தான் கோறிய பயனுக்கு அவனை உபாயமாகக் கோல வேண்டும் –

————–

கருணா வாநபி வ்யக்தம் ஶக்த ஸ்வாம்யபி தே ₃ஹிநாம் ।
அப்ரார்தி ₂ தோ ந கோ₃பாயேத் இதி தத் ப்ரார்த₂நா மதி ꞉ ॥ 19 ॥

பகவான் தயை யுள்ளவராக இருந்தும் -ரக்ஷிப்பதற்கு சக்தராய் இருந்தும் -இப் பிராணிகளுக்கு ஸ்வாமியாய் இருந்தும் -நாம் பிரார்த்தனை செய்யாமல் அவர் நன்மை ரக்ஷிக்கக் கடவரலாராகையால் இங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் –

——

கோ₃பாயிதாப₄வேத்யேவம் கோ₃ப்த்ருத்வ வரணம் ஸ்ம்ருதம் ।
யாச்நா பர்யவஸாயித்வம் ப்ரபத்தேரத ₂ உச்யதே ॥ 20 ॥

ஆகையால் ரக்ஷகராக வேண்டும் என்று பகவானைப் பிரார்த்திப்பது கோப்த்ருத்வ வர்ணம் என்று சொல்லப்படுமாகையாலே தான் இப்பிரபத்தி ஒரு பிரார்த்தனையில் சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது –

யாசிப்பதில் முடிய வேண்டுமே

———-

ப்ரபத்தேஸ்து ப்ரபத்தவ்ய ப்ரஸாத ₃த்₃வாரதா ததா ₂ ।
தேந ஸம் ரக்ஷ்ய மாணஸ்ய ப₂லே ஸ்வாம்ய வியுக்ததா ॥ 2
1 ॥

பலமும் அவனதே-பேற்றுக்கு உகப்பானும் அவனே-ஷேம கிருஷி பலன் -பக்தி உழவன்-ப்ராப்தாவும் பிராப்திக்கு உகப்பானும் ப்ராபகனும் அவனே –பற்றுவதும் சாதனம் அல்ல பலம் அனுபவத்துக்கு யோக்யதையே இவனுக்கு -எனது ஆவி தந்து ஒழிந்தேன் -எனது ஆவி யார் யான் யார் தந்த கொண்டாக்கினாயே-அசித்வத் பாரதந்தர்யம் வேண்டுமே-

———–

கேஶவார்பண பர்யந்தா ஹ்யாத்ம நிஷேப உச்யதே ।
உபாயே ச ப₂லே சைவ ஸ்வ ப்ரயத்தந நிவர்த்தநம் ॥ 22 ॥

இப்பிரபத்தி பகவானுக்கு அனுக்ரஹத்தை உண்டாக்குவது ஒழிய மோக்ஷத்துக்கு நேராக சாதனம் அன்று ஆகையாலும் இவ்வாறு ப்ரஸன்னரான பாவானால் ரக்ஷிக்கப்படும் சேதனருக்குக் கிடைக்கும் மோக்ஷ ரூபமான பயனில் இவனுடையவன் அல்லாமையாலும் மோக்ஷ சாதனமாகுகையும் மோக்ஷ ரூப பலன்கள் உடையவனாகைக்கும் பகவானிடத்தில் சுமத்துவது ஆத்ம நிஷேபம் என்று சொல்லப்படும் –

———-

ஸ்வாம்யாயத்த மிதி வ்யக்தம் நிஷேபஸ் யாங்கி₃ தா ததா ₂ ।
ஆர்த ப்ரபத்தா வித்யேஷாம் அங்கா₃நாம் சந்நிதி ₄꞉ ததா ₂ ॥ 23 ॥

உபாயத்தை அனுஷ்டிப்பதிலும் அதன் பயனை பெறுவதிலும் தனது ப்ரயத்னத்தைக் கழித்துக் கொள்வதும் பகவானுடைய அதீனம் என்பது வெளிப்படுகின்றது -ஆகையால் ஆத்ம நிஷேபம் என்பதும் அவனது அருளாலே தான் நடக்கும் என்பதும் வெளிப்படுகின்றது –

—————

த்₃ருப்த ப்ரபத்தவ் ஏதாநி ப₄விஷ்யந்த் யுத்தரோத்தரம் ।
ஆர்த த்₃ருப்த விபா₄க₃ஸ்து ஶ்ரீமத்₃ ராமாயணோதி₃ ꞉ || 24 ||

ஆர்த்த ப்ரபத்தியில் மேல் சொல்லிய ஐந்து அங்கங்களும் சேர அனுஷ்ட்டிக்கத் தக்கவைகள் -திருப்த ப்ரபத்தியில் இவ்வங்கங்கள் பின்பும் அனுஷ்ட்டிக்கத் தக்கவைகளாகும் –

தேஹ அவசான முக்தி நாம் அறிந்தது
லௌகிக சுக போகங்களை அனுபவிக்க ஆசை கொண்டு ஒவ்வொன்றும் வர வர அடுத்த அங்கம் வரும்

———-

” ஆர்தோ வா யதி வா த்₃ருப்த ꞉ பரேஷாம் ஶரணாக₃ த꞉ ।
அரி꞉ ப்ராணான் பரித்யஜ்ய ரக்ஷி தவ்ய꞉ க்ருதாத்மநா ” ॥ 25

மேல் சொல்லியபடி ஆர்த்த ப்ரபன்னர் என்றும் திருப்த ப்ரபன்னர் என்றும் பிரிவினை ஸ்ரீ மத் ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது -அது எங்கனே என்னில் பிறர்களில் எவனாவது ஒருவன் ஆர்த்தனாகவாவது திருப்தனாகவாவது சரணம் அடைவானாகில் ஸாஸ்த்ர நிச்சயமுடைய ஒருவர் அப்படி தன்னைச் சரணம் அடைந்தவன் சத்ருவாக இருந்த போதிலும் தம்முடைய ப்ராணன்களையாவது கொடுத்து அவனை ரக்ஷிக்க வேண்டும் என்று ஸ்ரீ ராமன் அருளிச் செய்துள்ளார் –

பரேஷாம் –சொல்லி மீண்டும் அரி ரஜஸ் குணம் தொடர்ந்து இருந்தாலும் –
கொன்றேன் பல்லுயிரை குறிக்கோள் இன்றி அன்றே வந்தடைந்தேன் போல்
பிராணனை விட்டே ரக்ஷிக்க வேண்டும் -ரக்ஷணம் உயர்ந்தது -பெறாப்பேறு போன்றது –

————

யஸ்ய தே₃ஹாந்தர க்ருதே ஸோகோ த்₃ருப்தஸ் ஸ உச்யதே ।
யஶ்ச ப்ராரப்₃ ததே ₃ஹே (அ)பி ஸோசத்யார்தஸ் ஸ உச்யதே ॥ 26 ॥

எவர் ஒருவர் தமக்கு மறுபடியும் ஜென்மம் உண்டாவதில்லை சோகம் உடையவராய் பிரபத்தி செய்கிறாரோ அவர் திருப்த ப்ரபன்னர் என்று சொல்லப்படுகிறார் -எவர் ஒருவர் தனக்கு இப்பொழுது உண்டாய் இருக்கும் தேஹத்திலேயே சோகமுடையவராய் பிரபத்தி செய்கிறாரோ அவர் ஆர்த்த ப்ரபன்னர் என்று சொல்லப்படுகிறார்

————

ஆர்த த்₃ருப்த விபா₄கேந₃ே ப்ரபத்திரிய முச்யதே ।
ஸாதநம் ₄ ப₄க₃வத் ப்ராப்தவ் ஸ ஏவேதி ஸ்தி₂ரா த்₃ருடா₄ || 27 ॥

மேல் சொன்னபடி பிரபன்னர்களின் பிரிவால் இப்பிரபத்தியும் ஆர்த்த பிரபத்தி என்றும் திருப்த பிரபத்தி என்றும் பிரிவுள்ளதாய் சொல்லப்படுகிறது -ஆகிலும் பகவானைப் பெறுவதில் அவரே சாதனம் என்று உறுதியான கருத்து இருக்க வேண்டும்

————-

ஸாத்₄ய ப₄க்தி : ஸ்ம்ருதா சைவ ப்ரபத்தரிதி கீ₃யதே ।
இமம் சார்த ₂மபி₄ப்ரேத்ய வாசோ பா₄க₃வதே யதா ₂ ॥ 28 ॥

இப்பிரபத்தியே -ஸாத்ய பத்தி என்றும் பிரபத்தி என்றும் சொல்லப்படுகிறது -இப்பிரபத்தியை பக்தி பாவமாக சொல்லும் உக்தியிலும் கீழ் சொல்லியபடி இரண்டு த்ருஷ்டாந்தங்கள் காட்டப்படுகின்றன –

பக்தி சாதனமாகக் கொள்ளாமல் பலமாகக் கொள்ள வேண்டும் -சாதன பக்தி உபாயாந்தர கோஷ்ட்டி -ஸ்வரூபத்துக்குச் சேராதே
ஸ்வயம் பிரயோஜனமாக ஸாத்ய பக்தி -இதுவே பலம் -அனுபவமே பிரயோஜனம் -ஆகவே பிரபத்தி போலவே இதுவும்

——————

“ப்ரபந்நஶ் சாதகோ யத்₃ வத் ப்ரபத் தவ்ய꞉ கபோதவத் ।
ரக்ஷ்ய ரக்ஷக யோரே தத் லக்ஷணம் லக்ஷ்ய மேதயோ ꞉” ॥ 29 ॥

ப்ரபன்னர் சாதக பக்ஷி போலவும் -பிரபத்தி செய்யத் தக்கவர் மாடப்புறா போன்றவும் இருக்கிறார்கள் -இவ்விரண்டு பக்ஷிகளுடைய நடவடிக்கைகளே ரக்ஷிக்கத்தக்க வரான ப்ரபன்னருக்கும் ரக்ஷகரான பிரபத்தி செய்யத்தக்கவருக்கும் லக்ஷணங்களாகக் காணத் தக்கவைகள் –
சாதக பக்ஷி தண்ணீர் குடிக்க மேகத்தையே எதிர்பார்ப்பது போல பிரபன்னர் மோக்ஷம் பெற பகவானையே எதிர்பார்த்து இருக்க வேண்டும் என்று கருத்து -காட்டில் வேட்டையாடிய ஒரு வேடன் காற்று மழைகளால் அலைந்து அங்கு இருக்கும் ஓர் மரத்தை இருந்த பிராணியை உத்தேசித்து சரணம் அடைய அதில் இருந்த மாடப்புறா அவ்வேடனைக் கண்டு அக்குளிரை யாத்தி தன் சரீரத்தின் மாமிசத்தை இட்டு அவன் பசியையும் தீர்த்த வ்ருத்தாந்தம் –சரணம் அடையப்பட்டவர் சரணம் அடைந்தவரின் வ்யஸனத்தை தீர்க்க வேண்டும் என்று கருத்து –

ப்ரபந்ந ஜன சாதகாம்புஜம் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கபோத வியாக்யானம் சரணாகத க்ருத்யம் சொல்லுமே
பிரம்மகிரி என்ற மலையில் ஒரு கொடிய வேடன் இருந்தான். அவன் பறவைகள், மிருகங்களை மட்டுமின்றி பிராமணர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒருநாள் வேட்டை ஆடிக்கொண்டே காட்டில் வெகுதூரம் சென்றுவிட்டான் வேடன். அவனிடம் பிடிபட்ட சில புறாக்களும், பறவைகளும் இருந்தன. இருள் சூழ்ந்தது. மழையும் பெய்ய ஆரம்பித்தது. வேடனுக்குப் பசியும், தாகமும் அதிகரித்தது. அவன் ஒரு மரத்தை அடைந்து ஒரு கிளையில் அமர்ந்து இரவைக் கழிக்க முடிவு செய்தான். ஆனால், அவன் மனமோ மனைவி, மக்களை எண்ணி வருத்தமுற்றது.
அந்த மரத்தில் பல நாட்களாக ஒரு பெண்புறாவும், ஆண் புறாவும் வாழ்ந்து வந்தன. அவற்றில் பெண் புறா வேடனால் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைப்பட்டு வேடனிடம் இருந்தது. இதனை அறியாத ஆண்புறா தன் மனைவியை எண்ணி வருந்தியது. வேடன் நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனிடமிருந்த பெண் புறா, ஆண் புறாவின் செவிகளில் விழும்படியும், ஆண் புறா பெண் புறாவின் காதுகளில் விழும்படியும் பேசத் தொடங்கின. வேடன் உறங்குவதால் பெண் புறாவை விடுவிப்பதாக ஆண் புறா கூற பெண் புறா அதை மறுத்தது. மேலும், ஒன்று ஒன்றை அழித்து உயிர் வாழ்வது உலக இயற்கை. எனவே அந்த எண்ணத்தை விடுத்து விருந்தினனான வேடனை எண்ணி அவனுக்கு உதவுவது தமது கடன் என்று கூறிற்று.
உடனே, ஆண் புறா வேடனின் குளிரை நீக்கச் சுள்ளிகளையும், சருகுகளையும் கொண்டு தீ மூட்டியது. பின்னர் அது தீயில் விழுந்து இறந்தது. பெண் புறாவும் தானும் தீயில் விழுந்து உணவாக விரும்புவதாக கூறி தீயில் குதித்தது. இவற்றை உணர்ந்த அந்த வேடன் மனம் மாறினான். அவன் அன்று முதல் வேட்டையாடுவதை நிறுத்தியதுடன் ‘இதுவரையில் செய்த கொலைகளுக்காக வருந்தி, தான் இனி செய்ய வேண்டுவது யாது?’ எனச் சிந்தித்தான். புறாக்களின் தியாகத்தைக் கண்டு விண்ணிலிருந்து வந்த விமானத்தில் புறாக்கள் ஏறி நல்லுலகை அடைந்தன. அப்போது அப்புறாக்கள் கவுதம கங்கையில் பதினைந்து நாட்கள் நீராடினால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று வேடனிடம் கூறின. இவ்வாறு புறாக்கள் தியாகம் செய்ய தீயில் விழுந்த இடம் கபோத தீர்த்தம் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது.

————-

ப்ரபத்திரபி ஸாமாந்ய ஶாஸ்த்ரே (அ)ந்யத்ர ப்ரபஞ்சிதா ।
யத்₃யேந காம காமேந ந ஸாத்₄யம் ஸாதநாந்தரை ꞉ || 30 ॥

————–

முமுக்ஷுணா ந ஸாங்க்₂யேந யோகே₃ ந ந ச ப₄க்தி ꞉ ।
ப்ராப்யதே பரமம் தா₄ம யதோ நாவர்த்ததே புந ꞉ ॥ 31 ॥

——

தேந தேநாப்யதே தத் தந் ந்யாஸே நைவ மஹாமுநே ! ।
பரமாத்மா ச தேநைவ ஸாத்₄யதே புருஷோத்தம꞉ ॥
32 ॥

எந்த எந்த பயன்களை விரும்பும் எவர் எவர்களால் அப்பயன்களுக்கு சாதனங்களாக ஸாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் கர்மங்களை அனுஷ்ட்டிக்க சக்தி இல்லாமையால் பெறக்கூடாதவைகளாக இருக்கின்றனவோ அவைகளும் சாங்க்ய யோகத்தைச் செய்ய சக்தி இல்லாமையால் அதனால் பெறக் கூடாததான கைவல்யமும் பக்தி யோகத்தை அனுஷ்ட்டிக்க சக்தி இல்லாமையால் அதனால் பெறக்கூடாதவைகளான புனராவ்ருத்தி இல்லாத மோக்ஷமும் பரமாத்மாவும் அவைகளைப் பெற சாதனங்களாக அனுஷ்ட்டிக்கப்படும் இப்பிரபத்தியினாலேயே சாதிக்கப்படுகின்றன என்று சாமான்ய சாஸ்திரங்களிலும் இப்பிரபத்தியின் மஹிமை விவரிக்கப்படுகின்றது –

————-

ஸாத நாந்தர து₃ஸ் ஸாத₄ம் ப்ராப்யம் யல் லோக வேதயோ ꞉ ।
ஸூகேந₂ ப்ராப்யதே யேந ஸா ப்ரபத்திரிதி ஸ்தி₂தி ꞉ ॥ 33 ॥

லோகங்களிலாவது சாஸ்த்ரங்களிலாவது சொல்லப்பட்டு இருக்கும் வேறு ஓர் உபாயங்களினால் பெறுவதற்கு அஸாத்யமாய் இருக்கும் -பயன்கள் யாவுமே இப்பிரபத்தியினால் சுகமாக ஸாதிக்கப்படும் என்பதே ஸித்தாந்தம்

————

த்விதீய -ஸ்வரூப பத்₃த₄தி ஸம் பூர்ணம்-

———

த்ருதீய -அதிகாரி பத்ததி

அநந்ய உபாய ஶக்தஸ்ய ப்ராப்யேச்சோ₂ரதி ₄காரிதா ।
ப்ரபத்தவ் ஸர்வ வர்ணஸ்ய ஸாத்த் விகத்வாதி ₃யோக₃த ꞉ ॥ 2 ॥

வேறொர் உபாயங்களைச் செய்ய சக்தி இல்லாதவர்களாய் ஓர் பேற்றைப் பெற விரும்புபவர்கள் அது விஷயத்தில் இப்பிரபத்தியை அனுஷ்ட்டிக்க அதிகாரிகள் ஆகிறார்கள் -அவ்வதிகாரம் ஸர்வ வர்ணத்தவர்களுக்கும் கூடும் -ஆனால் அவர்கள் சாத்விக குணம் முதலிய ஸத் குணங்களை மாத்ரம் உடையவர்களாக இருக்க வேண்டும் –

விஷய நியமமே உள்ளது-தேச கால அதிகாரி நியமங்கள் இல்லையே
இச்சை வேண்டும் -சாத்விகராக இருக்க வேண்டும் -சோகமுடையவன் அதிகாரி சோக நிவ்ருத்தியே பலம்
பசிக்கிறவன் உண்டு பசி தீருவது போல்-சோகமுடையவன் பிரபத்தி செய்து சோக நிவ்ருத்தி அடைகிறான்
ஆத்ம ஞானமும் அப்ரதி ஷேதமும் வேண்டும்
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் வேண்டும் –

————-

ஸா ஹி ஸர்வத்ர ஸர் வேஷாம் ஸர்வ காம ப₂ல ப்ரதா ₃।
இதி ஸர்வ ப₂ல ப்ராப்தவ் ஸர் வேஷாம் விஹிதா யத ꞉ ॥ 2 ॥

இப் பிரபத்தி ஸர்வ வர்ணத்தார்களுக்கும் ஸர்வ பயன்களையும் கொடுக்கும் என்று விதிக்கப்பட்டு இருப்பதால் சர்வாதிகாரம் ஆயிற்று –

——————

ப்ரபத்தேர் வாசகோ மந்த்ர꞉ கட₂ வல்யாதி ஷு ₃ஸ்ம்ருத ꞉ ।
அயம் புராணே பாத்₃மே ச பராஶர வஸிஷ்ட₂யோ ꞉ ॥ 3 ॥

———

ஸம் வாதே ₃ ப்ரண வைகார்த ₂꞉ பஞ்சவிம்ஶதி வர்ணக꞉ ।
ருஷ்யாதி ₃ஸஹித ꞉ஸாங்க₃꞉ பூ₄யோ பூ₄ய꞉ ப்ரபஞ்ச்யதே
॥ 4 ॥

இப்பிரபத்தியின் ஸ்வரூபத்தைச் சொல்லும் த்வயம் என்னும் மந்த்ரம் கடவல்லி-என்னும் உபநிஷத்தில் ஓதப்படுகின்றது -பாத்ம புராணத்தில் பராசர வஸிஷ்ட முனிவர்களின் ஸம்வாதத்தில் இம்மந்திரம் பிரணவத்தோடு சமான அர்த்தத்தை யுடையத்தாயும் 25 அக்ஷரங்களுடன் கூடியதாகவும் சொல்லப்படுகிறது -ரிஷி சந்தஸ் முதலிய அங்கங்களோடு கூடியதாகவும் சொல்லப்படுகிறது –

—————-

தத்ர ஸர்வாதி ₄காரத்வம் ஸக்ருத் உ₃ச்சார்யதா ததா ₂ ।
விதீயதே ததா ₂(அ)ந்யத்ர ஶாஸ்த்ரே ப₄க₃ வதா (அ)பி ச ॥ 5 ॥

அந்தப் புராணத்தில் இம்மந்திரம் சர்வாதிகாரம் என்றும் ஒருக்கால் உச்சாரண மாத்திரத்தில் ஸர்வ பல ப்ரதத்வம் எனதும் விதிக்கப் படுகின்றது -அப்படியே பகவத் சாஸ்திரத்திலும் விதிக்கப் படுகின்றது –

—————–

த்ரை வர்ணி கேதரஸ்யாபி த்₃ வயே தஸ்மாத் ₃ தி₄க்ரியா ।
த₄ர்மி க்₃ராஹ கமாநேந யத் ஸித்₃ த₄ம் லோக வே ₃தயோ ꞉ ॥ 6 ॥

ஆகையால் இத்த்வத்தில் த்ரை வர்ணிகர்களாய் ஒழிந்தவர்களுக்கும் ஜபம் செய்ய அதிகாரம் உண்டு என்கிறது -மேலும் லோகத்திலும் வேதத்திலும் சாமான்ய விதியில் விசேஷத்தை அறிவிக்கும் பிரமாணங்களினால் கிடைத்திருக்கும் விசேஷ விசேஷங்களையும் சொல்லுகிறோம்

பிரபத்திக்கு தேச நியமமும் கால நியமமும் பிரகார நியமமும் அதிகாரி நியமமும் பல நியமும் -இல்லை-சூரணை -23-
ந ஜாதி பேதம் ந குலம் ந லிங்கம் ந குண க்ரியா
ந தேச காலவ் ந வஸ்தாம் யோகோ ஹயய மபேஷதே
பிரம்மா ஷத்ரே விச்ஸ் சூத்ரா ஸ்த்ரியச்சாந்தர ஜாதய
சர்வ ஏவ ப்ரபத்யேரன் சர்வ தாதர மச்யுதம் -என்று
பிரபத்திக்கு-தேச கால பிரகார அதிகாரி நியம அபாவம் பாரத்வாஜ சம்ஹிதையிலும் –
பிரபத்தே க்வசித ப்யேவம் பராபேஷா ந வித்யதே
சாஹி சர்வத்ர சர்வேஷாம் சர்வகாம பலப்ரதா -என்று பல நியம அபாவம் சனத் குமார சம்ஹிதையிலும் சொல்லப் பட்டது இறே

விஷய நியமமே உள்ளது –சூரணை -24-

திரௌபதி ஸ்நாதையாய் அன்றே பிரபத்தி பண்ணிற்று –
அர்ஜுனன் நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது –சூரணை-29-

ஆகையால் சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா –
இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை –சூரணை -30-

அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை –சூரணை -32-

பல நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என்-என்னில்
தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம் –
திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் –
காகத்துக்கும் காளியனுக்கும் பலம் பிராணன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு பலம் கைங்கர்யம் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பலம் ராம பிராப்தி –
பெருமாளுக்கு பலம் சமுத்திர தரணம் –
இளைய பெருமாளுக்கு பலம் ராம அநு வ்ருத்தி–சூரணை-33-

விஷய நியமம் ஆவது-
குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-
பூர்த்தி உள்ளதும் அர்ச்சாவதாரத்திலே –சூரணை -34-

ஆழ்வார்கள் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே –சூரணை -35-

————-

யதா ₂ஹி’ரத ₂காராதே ₃꞉ அக்₃ந்யாதா ₄நாதி ₃வைதிகே ।
ஆஜ்யா வேக்ஷணாதவ் ₃ து மந்த்ரே பத்ந்யா꞉ ப்ரமாணதா ꞉ ॥ 7 ॥

தச்சர் முதலிய சிலருக்கு வைதிகமான அக்னி யாதானம் முதலிய வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்கும் அதிகாரமும் -யஜமான பத்னிக்கு ஆஜ்யா வேஷண வைதிக மந்த்ரத்தை உச்சரிக்கும் அதிகாரமும் உண்டானது போல் வைதிகமான த்வயம் என்னும் மஹா மந்த்ரத்தை உச்சரிக்க த்ரை வர்ணிகர் ஒழிந்தவர்களுக்கும் ப்ரமாணத்தால் அதிகாரம் உண்டு என்கிறது –

——————-

யத்₃வா (ஆ)தி₄ தக்ரமாபாயாத் ஸ்வராதே₃ர்வா விலோபத ꞉ ।
த்₃வயஸ்ய ஸர்வாதி ₄க்ருதி ꞉ஸர்வேஷாம் தாந்த்ரிகம் து வா ॥ 8 ॥

இல்லாவிடில் வேதத்தில் ஓதப்படும் இம்மந்திரத்தின் கிரமத்தை குறைவு படுத்துவதனாலாவது இதன் ஸ்வரங்களை விட்டு விடுவதினாலாவது இம்மந்த்ரம் வைதிகம் ஆகாமல் த்ரை வர்ணிகர் ஒழிந்த மற்றவர்களாலும் உச்சரிக்கும் படியான தாந்த்ரிகமாகத் தக்கது அல்லது ஸர்வ வர்ணத்தவர்களுக்கும் தாந்த்ரிகமாகவே இருக்கத் தக்கது –

—————-

அஜ்ஞ ஸர்வஜ்ஞ-ப₄க்தாநாம் ப்ரபத்தாவதி ₄காரிதா ।
உபாயாந்தர விஜ்ஞாநா ஶக்தே ரஜ்ஞஸ்ய யுஜ்யதே
॥ 9 ॥

கர்ம யோகம் முதலிய உபாயங்களைச் செய்ய சக்தி இல்லாதவர்களுக்கும் ஞானம் யோகம் பக்தி யோகம் இவற்றில் சக்தி உள்ளவர்களாய் இருப்பவர்களுக்கும் இப்பிரபத்தியில் அதிகாரம் உண்டாகின்றது -அவற்றில் அசக்தர்களுக்கு இதர உபாயங்களை அறிய சக்தி இல்லாமையால் ப்ரபத்தியில் அதிகாரம் உண்டாகின்றது –

இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் –சூரணை -41-
அஞ்ஞரும் ஞானாதிகரும் பக்தி பரவசரும் —சூரணை -42-
அஞ்ஞானத்தாலே பிரபன்னர் அஸ்மதாதிகள்-
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாசார்யர்கள் –
பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –சூரணை -43-
இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற -சூரணை -44-
இம் மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் –சூரணை -45-
என்னான் செய்கேன் -என்கிற இடத்தில் இம் மூன்றும் உண்டு –சூரணை -46-

——————-

ஸத்₃ருஸோபாய வை து₄ர்யம் ஸாக்ஷாத்₃ ப₄க₃வதோ வித₃ன்।
ஸர்வஜ்ஞ꞉ ஶரணம் யாதி யோக₃மார்க₃பராங்முக₂꞉ ॥ 10 ॥

ஞான யோகமும் ஸித்த உபாயமான பகவானைப் போல் மோக்ஷத்துக்கு நேரான உபாயமாகாமையாலும் சுலப உபாயமாகவும் கர்ம ஞான யோகங்களை விட்டு அவ்வதிகாரியும் பகவானைச் சரணம் அடைகிறார்

——————–

ஸர்வ காலம் ப்ரேம வஶாத் ப₄ஜன் ப₄க்தோ (அ)ப்ய நந்யதீ ₄꞉ ।
உபாயம் வா (அ)ப்யுபேயம் வா க்ஷமோ (அ)ந்யம் நா வலம்பி₃தும் ॥ 11 ॥

பக்தி யோகம் செய்கிறவர் வேறொரு இடத்தில் புத்தியைச் செலுத்தாமல் மிகவும் பக்தியுடன் ஸர்வகாலமும் பகவானை உபாஸனம் செய்பவராக இருந்தும் கால விளம்பம் முதலிய தோஷங்களோடு கூடியதால் வேறொரு உபாயங்களையாவது பலன்களையாவது பெற விரும்புகிறவராய் பகவானை சரணம் அடைகின்றனர்

—————

ஜிதந்தா மந்த்ர விவ்ருதவ் சவ்நகேந யதீ ₃ரிதிம் ।
அஜ்ஞ ஸர்வஜ்ஞ ப₄க்தாநாம் க₃திர் க₃ம்யோ ப₄வேத்₃ ₄தரி꞉ ॥ 12 ॥

சவுனாக முனிவரும் ஜிதந்தா என்னும் மந்த்ர விவரண கிரந்தத்தில் கர்மயோகாதிகளில் சக்தர்களுக்கும் அசக்தர்களுக்கும் பகவான் உபாயமாகவும் உபேயமாகவும் ஆகிவிடுகிறார் என்று அருளிச் செய்கிறார் –

————–

இத₃ம் ஶரணம் அஜ்ஞாநம் இத ₃மேவ விஜாநதாம் ।
இ த₃ம் திதீர் ஷதாம் பாரம் இத ₃மாநந்த்யமிச்ச₂ தாம் ॥ 13 ॥

ஜிதந்தையில் அருளிச் செய்தவற்றை எடுத்துக் காட்டுகிறார் -கர்மயோகத்தை அறியாதவர்களுக்கும் அதை அறிந்தோர்களுக்கும் –ஸம்ஸாரத்தை கடக்க மட்டுமே விரும்பும் கைவல்யார்த்திகளுக்கும் என்றும் அழிவில்லாத பரம புருஷார்த்தமான பகவத் ப்ராப்திக்கும் இப்பிரபத்தியே உபாயமாகும் –

அவித்யாத -என்கிற ஸ்லோகத்தில் இம் மூன்றும் சொல்லிற்று –சூரணை -49-
இம் மூன்றும் -என்றது மூன்று அதிகாரிகளையும் சொன்னவாறு –
யுக்த அர்த்தத்துக்கு பிராமண உபாதானம் பண்ணுகிறார்
அஞ்ஞான ஹேதுகத்தவ ப்ரபத்தியையும் – ஞானாதிக்க -ஹேதுக பிரபத்தி –
பக்திர் பூம்யா -பக்தி பாரவஸ்யத்துக்கு -பக்தியின் எல்லை நிலம் ஹேதுக்கவாக
அவித்யாதோ தேவே பரிப்ருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்-பூம்நாவா ஜகதி கதி மன்யாம் அவிதுஷாம் கதிர் கம்யச்சாஸௌ ஹரிரித ஜினந்தாஹ்வைய மனோரஹச்யம் வ்யாஜஹ்ரே சகலு பகவான் ஸௌ நகமுனி –

————

இதி லக்ஷ்ம்யா ச தந்த்ரே (அ)பி ப்ரபத்தா வநு வர்ணிதம் ।
ஆஸ்திக்யாதி ₃குணோ பேதம் ஶாஸ்த்ரம் வக்த்யதி ₄காரிணம் ॥ 14 ॥

பெரிய பிராட்டியாரால் லஷ்மீதந்த்ரத்தில் ஆஸ்திக்யாதி லக்ஷணங்களோடு கூடியவர் இப்பிரபத்திக்கு அதிகாரியாக ஸாஸ்த்ரம் சொல்லுவதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது –

————–

யதா ₂(ஆ)ஹ ப₄க₃வான் ஶாஸ்த்ரே விஷ் வக் ஸேநாய ஶ்ருண் வதே ।
ய ஏவம் ஶரணம் க₃ச்சே₂த் க்ருதக்ருத்யோ ப₄விஷ்யதி ॥ 15॥

யாவன் ஒருவன் இவ்வாறு என்னை சரணம் அடைகிறானோ அவன் செய்ய வேண்டிய க்ருத்யங்கள் யாவையும் செய்தவனாவான் என்று பகவத் ஸாஸ்த்ரத்தில் பகவானே விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து அருளுகிறார் –

————

ஏதத்₃ரஹஸ்யம் வேதா ₃நாம் புராணாநாம் ச ஸம்மதம் ।
கு₃ஹ்யாத்₃கு₃ஹ்ய தமம் ப்ரோக்தம் நிக₃மாந்தேஷு கீர்திதம் ॥ 16 ॥

இப்பிரபத்தி வேதங்களின் ரஹஸ்யார்த்தகம் புராணங்களிலும் ஒப்புக் கொள்ளப் பட்டது -வேதாந்த ஸாஸ்திரங்களிலும் இப்பிரபத்தி ரஹஸ்யங்களிலும் ரஹஸ்யங்களாக ஓதப்பட்டு கொண்டாடப்படுகிறது –

———

நாதீ ₃க்ஷிதாய வக் தவ்யம் நா ப₄க்தாய கதா ₃சந ।
ந சா ஶுஶ்ரூஷவே வாச்யம் நாஸ்திகாய கதா ₃சந ।
கு₃ருப₄க்திர் ந யஸ்யாஸ்தி பீ₃ஜபிண்ட₃பதா₃தி ₃ஷு ॥ 17 ॥

இப்பிரபத்தி வித்யையை சக்ர அங்கநாதி நியமம் இல்லாதவருக்கும் -நாஸ்திகனுக்கும் -எவனுக்கு குருவிடத்திலாவது அவரது சந்நிதி வசனம் முதலியவற்றில் பக்தி இல்லையே அவர்களுக்கு உபதேஸிக்கக் கூடாது –

—————

நோப தே ₃ஶஸ்து யஸ்யாஸ்தி ந வக்தவ்யம் ஹிதார்தி ₂நா ।
இத்யுக்த வான் ஜக₃ந் நாதோ ₂ த்₃விரதா ந ந மாம் ப்ரதி ।
மயா(அ)பி தவ ப₄க்தஸ்ய கதி ₂ தம் யச்ச்₂ருதம் புரா ॥ 18 ॥

எவருக்கு இப்பிரபத்தி மந்த்ரம் உபதேசம் இல்லையோ அவருக்கும் சொல்லத்தக்க தல்ல என்றும் ஸ்ரீ ஜெகந் நாதனான பகவான் எங்களுக்கு உபதேஸித்தார்-நான் கேட்டபடி பக்தரான உமக்கும் இவ்வர்த்தகத்தை உபதேஸித்தேன் என்றும் விஷ்வக்ஸேனர் கஜானனுக்கு உபதேஸித்தார் –

————

த்ருதீயா -அதிகாரி பத்ததி ஸம் பூர்ணம்

———–

சதுர்தீ –குரு உபாஸந பத்ததி

ஸம்ஸாரோத்₃ விக்₃ந மநஸா தாபத்ரிதய பீ₄ருணா ।
விரக்தே நேஹ சா(அ)முத்ர ப₂லே க₃ம்யோ கு₃ருர் மஹான் ॥ 1 ॥

ஸம்ஸாரத்தில் நின்றும் பயந்த மனசை உடையவராய் -தாபத்ரயத்தால் பயந்தவராயும் -இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கும் பயன்களை வைராக்யம் யுடையவராயும் இருப்பவரால் மஹாத்மாவாய் இருக்கும் குரு ஒருவரை அடையத்தக்கவர்

ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குழைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் ஒழிய உய்ய விரகில்லையே-முனிவரை இடுக்கியும் முந்நீர் வண்ணனாயும் உபதேஸங்கள்-மந்த்ர உபதேஸம் பண்ண ஆச்சார்யர் வேண்டுமே-ஒழிக்க ஒழியாத ஒன்பது வித ஸம்பந்த ஞானம் கொடுப்பவர் ஆச்சார்யர் தானே- அதிகாரி ஸ்வரூபத்துக்கு பின் ஆச்சார்ய -பகவத் பரிசார -பகவத் பத்ததிகள் -மேல்அவ்வானவருக்கு மவ்வானவர் அடிமை உபதேஸம் -நானும் உனக்கு பழ வடிமை -உணராமல் இழந்து -இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்க -நடுவே வந்து உய்யக்கொண்ட நாதனே ஆச்சார்யர்-ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே உடைய குருவை அடைந்தக்கால்- -தானே வைகுந்தம் தரும் -சேர்ப்பார்களைப் பஷிகளாக்கி -கடகர்

————

பரீக்ஷ்ய லோகான் கர்மசிதான் விப்ரோ நிர் விண்ண மாநஸா ꞉ ।
க்ருதேந மோஷோ நாஸ்தீதி தஜ் ஜ்ஞாநார்த₂ம் கு₃ரும் வ்ரஜேத்
॥ 2 ॥

ப்ராஹ்மணராக இருக்கும் ஒருவர் ஸ்வர்க்க லோகம் முதலிய போக ஸ்தானங்களை புண்ய கர்மங்களால் அடையப்படுபவை என்றும் அறிந்து மனம் இறக்கமுடையவராய் கர்மத்தினால் மோக்ஷம் கிடைப்பதில்லை என்றும் அறிந்து தெளிந்து அந்தப் மோக்ஷ ஞானத்தைப் பெறுவதற்கு ஓர் ஆச்சார்யரைக் கிட்ட வேண்டும் –

ஞானிகள் -தத்வ தர்சனிகள் -தத் வித்தி –பிரணி பாதேனா பரி பிரஸ்தேன -ஸேவையா –பீதக வாடைப்பிரானார் பரம குருவாக வந்து மயர்வற மதிநலம் ஆழ்வார்களுக்கு அருள -அவர்கள் ஆச்சார்யர்கள் மூலம் நமக்கு அருளுகிறார்கள் –

————

ஶ்ரோத்ரியம் ப்₃ரஹ்ம நிஷ்ணாதம் ப்ரீணயேத்₃ வஸ்துபி₄꞉ ப்ரியை ꞉ ।
தஸ்மை ப்ரஶாந்த சித்தாய ஶிஷ்யாய ப்ரணதாய ச ॥ 3॥

——–

த₃த்₃யாத் அஷ்டாக்ஷரம் ஸத்யம் ப்₃ரஹ்ம நாராயணம் பரம் ।
தாம் ப்₃ரஹ்ம வித்₃யாம் ப்ரவதே ₃ தி₃த்யர ₂ம் ஶ்ருதி ராஹ ஹி
|| 4 ||

ஸ்ரோத்ரியராயும் ப்ரஹ்ம ஞானம் யுடையவராய் இருக்கும் ஆச்சார்யர் ஒருவருக்கு அவர் கோறிய வஸ்துக்களைக் கொடுத்து அவரை சிஷ்யன் தன்னிடத்தில் ப்ரீதி யுள்ளவராய்ச் செய்ய வேண்டும் -அவ்வாச்சார்யரும் அவ்வாறு தமக்கு ப்ரீதியை யுண்டாக்கியவனாயும் -வணக்கம் யுடையவனாயும் -சாந்தமான மனமுடையவனுமாக இருக்கும் சிஷ்யனுக்கு என்றும் அழிவில்லாத ஸத்ய ப்ரஹ்ம ரூபியான ஸ்ரீ மந் நாராயணனை அறியத்தக்க ப்ரஹ்ம வித்யயை உபதேசிக்க வேண்டும் என்றும் இவ்வர்த்தத்தை வேதம் சொல்கிறது –

ஆத்ம குணங்கள் கை புகுந்தால் ஆச்சார்யன் கை புகுரும் -மந்த்ரம் கை புகுந்தால் மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்து கை புகுரும்-இதனால் வைகுந்தமும் கை புகுரும்

———–

குரோஶ் ஶிஷ்யஸ்ய வித்₃யாயா லக்ஷணம் காலமேவ ச ।
ஸாமாந்யதோ விசேஷாச்ச ப₄க₃வான் ஶாஸ்த்ர உக்தவான் ॥ 5 ॥

குருவினுடையவும் சிஷ்யனுடையவும் ப்ரஹ்ம வித்யையினுடையவும் லக்ஷணத்தையும் அவைகளுக்குத் தக்க காலத்தையும் சாமான்யமாகவும் சேஷித்தும் பகவஸ் ஸாஸ்த்ரத்தில் பகவான் அருளிச் செய்துள்ளார் –

—————–

த்ரிஷு வர்கேஷு ஸம்பூ₄தோ மாமேவ ஶரணம் க₃த ꞉ ।
நித்ய நைமித்திக பரோ மதீ ₃யா(ஆ)ராத₄நே ரத ꞉ || 6
|

பகவஸ் ஸாஸ்த்ரத்தில் அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார் -ப்ராமண ஷத்ரிய வைஸ்யராகிய மூன்று வர்ணங்களில் பிறந்தவராயும் -என்னையே சரணம் அடைந்தவராயும் -தம்முடையவர்களிடமும் பிறர்களிடமும் சமமான மனஸை யுடையவராயும் -நித்ய நைமித்திக கர்மங்களை மட்டுமே அனுஷ்டிப்பவராயும் -என்னுடைய ஆராதனத்தில் ஆசை யுடையவராயும் இருக்கும் ஒருவர் ஆச்சார்யர் எனச் சொல்லப்படுவார் –

—————-

ஆத்மீய பரகீயேஷு ஸமோ தே ₃ஶிக உச்யதே ।
ஆஸ்திகோ த₄ர்மஶஸீலஶ்ச ஸீலவான் வைஷ்ணவ
꞉ ஶுசி꞉ ॥ 7 ॥

————-

க₃ம்பீ₄ரஶ் சதுரோ தீ₄ர꞉ ஶிஷ்ய இத்யபி₄ தீ₄யதே ।
நாநுகூல்யம் ந ந க்ஷத்ரம் ந தீர்தா ₂ தி ₃நிஷேவணம் ॥ 8 ॥

ஆஸ்திகராயும் எப்போதும் தர்மங்களைச் செய்பவராயும் நன்னடத்தை யுள்ளவராயும் வைஷ்ணவராயும் பரிசுத்தராயும் கம்பீர ஸ்வபாவமுடையவராயும் -வல்லமை யுள்ளவராயும் –ஸாஸ்த்ரங்களில் நிலை யுள்ளவராயும் -இருக்கும் ஒருவர் சிஷ்யராகச் சொல்லப்படுவார்

இத் த்வயத்தினால் அனுஷ்ட்டிக்கும் பிரபத்தியாவது தேசம் காலம் முதலியவற்றின் நன்மைகளாவது- புண்ய தீர்த்தம் முதலியவைகளை அடைவதை யாவது -அடிக்கடி அனுஷ்ட்டிக்க வேண்டும் என்கையாவது -ஸர்வ காலமும் ஜெபம் செய்ய வேண்டும் என்கையாவது – அபேக்ஷிக்கிறது இல்லை -எவ்விடத்தாலாவது -எப்படிக்காவது -ஒருக்கால் அனுஷ்டித்த மாத்திரத்திலேயே ஸ பலமாகும் என்றும் கருத்து –

————–

ந புநஶ் சரணம் நித்யம் ஜபம் வா (அ)பேக்ஷதே ஹ்யயம் ।
நமஸ் க்ருத்ய கு₃ரூன் தீ₃ர்க₄ப்ரணாமைஸ் த்ரிபி₄ராத்₃ருத꞉ ॥ 9 ॥

மூன்று முதலாக உள்ள அநேக அஷ்டாங்க ப்ரணாமங்களினால் ஆச்சார்யரைத் தண்டம் சமர்ப்பித்து -நிதியைப் பெறும் தரித்ரனைப் போல் மிகவும் ஆசை யுடையவனாய் சிஷ்யன் இந்த மந்த்ர ராஜத்தைப் பெற வேண்டும் –

————–

க்₃ருஹ்ணீயான் மந்த்ர ராஜாநாம் நிதி ₄காங்க்ஷீவ நிர்த₄ந ꞉ ।
பரம்பராமுபதி ₃ஸேத் கு₃ரூணாம் ப்ரத₂மம் கு₃ரு꞉ ॥ 10 ॥

ஆச்சார்ய பரம்பரையை முன்பு உபதேசித்து -பின்பு த்வயத்தை உபதேசிக்க வேண்டும்-பின்பு மனஸ்ஸால் த்யானிக்கத் தக்கதான இத் த்வயத்தின் அர்த்தமான ப்ரபத்தியை உபதேசிக்க வேண்டும் –

———————-

வாசயித்வா த்₃வயம் ஸாங்க₃ம் ப்ரபதிம் மாநஸீம் தி₃ஸேத் ।
அநுகாங்க்ஷன் ஸதா ₃ ஶிஷ்யம் கு₃ருரௌரஸ புத்ரவத் ॥ 11 ॥

ஆச்சார்யரும் தன் வயிற்றில் பிறந்த பிள்ளை யினதிடத்தில் போல் சிஷ்யனிடத்தில் மிகவும் அநுக்ரஹமுடையவராய் -அம்மந்திர அர்த்தங்களைத் தெளிய அறிந்து மனஸ் சமாதானமுடையவராய் அச்சீஷ்யனுக்கு கபடமின்றி உபதேசிக்க வேண்டும் –

———————-

“வித்₃வான் ஸமாஹிதோ பூ₄த்வா க்₃ராஹயேது₃பதி₄ம் விநா ।
ததவ் பநிஷதீ₃ம் வித்₃யாம் விஶ்வாஸ ஜ்ஞாந வர்தி ₄நீம் ॥ 12 ॥

—————

அந்யாமாத்₄யாத்மிகீம் வித்₃யாம் ஶிஷ்யா வஸ்தா ₂நுரூப்யத ꞉।
தஸ்மை ப்ரஶாந்த சித்தாய க்ருபயா நிஸ்ப்ருஹோ வதே ₃த் ॥ 13 ॥

அப்படியே பக்தி ஞானங்களை அபிவிருத்தி செய்யத்தக்க த்ரவிட உபநிஷத் முதலிய வித்யைகளையும் இன்னும் வேதாந்த ஸாஸ்த்ரங்களையும் சிஷ்யனுடைய யோக்யதைக்குத் தக்கபடி அதனால் தனக்கும் ஒரு பிரயோஜனம் உண்டாக வேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவனாய் சாந்த சித்தனான அச் சிஷ்யனுக்கு மிகவும் தயையுடன் குரு உபதேசிக்க வேண்டும் –

ஞானம் வந்து விசுவாசம் பிறந்து அதனால் மேலும் ஞானம் வளர்ந்து அதனால் மேலும் விசுவாசம் இப்படி சங்கிலித்தொடராக வளரும் -நித்ய அனுசந்தானம் நித்ய அனுஷ்டானம் நித்ய ஆராதனம் இதற்காகவே-

ஞான முத்ரை புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் -சாத்மிக்க -சாத்மிக்க உபதேசம்-

—————

த₃த்த்வா து த₃க்ஷிணாம் தஸ்மை யதா ₂ஶக்தி யதா ₂ விதி₄ ।
தமர்சயேத்₃யதா ₂காலம் ஹிதம் சாஸ்ய ஸமாசரேத் ॥ 14

சிஷ்யனும் அவ்வாச்சார்யருக்குத் தன் சக்திக்குத் தக்கபடிக்கும் ஸாஸ்த்ர விதிப்படிக்கும் ஸம்பாவனை ஸமர்ப்பித்து தகுந்த காலங்களில் அவரை ஆராதிக்க வேண்டும் -அவருக்கு ஹிதமான க்ருத்யங்களையும் செய்ய வேண்டும் –

——————

கு₃ரோர் வைப₄வ மாக்₂யாதி ஜயாக்₂யா (அ)பி ச ஸம்ஹிதா |
கு₃ருரேவ பரம் ப்₃ரஹ்ம கு₃ருரேவ பரம் த₄நம் ॥ 15 ॥

ஆகையால் அவ்வாச்சார்யருக்கு சிஷ்யன் ஒருக்காலும் த்ரோஹம் செய்யக்கூடாது –

——————

கு₃ருரேவ பரா வித்₃யா கு₃ருரேவ பராயணம் ।
கு₃ருரேவ பர꞉ காமோ கு₃ருரேவ பரா க₃தி ꞉ ॥ 16 ॥

குரு ரேவ பராகதி -என்றபடி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யம் என்கிறார் .
மேவினேன் அவன் பொன்னடி -என்று ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரும்
அதர பரத்ரசாபி -இங்கும் அங்கும் -என்று ஸ்ரீ ஆள வந்தாரும்
ஸ்ரீ ஆசார்யன் திருவடியையே ப்ராப்யமாக அறுதி இட்டார்கள் –
பாத மூலம் கமிஷ்யாமி யானஹம் பர்யசாரிஷம் -என்று ஸ்ரீ ஆசார்யருக்கு நான் ஸூஸ்ருஷை பண்ணினேனோ-
அவர்களை அடையப் போகிறேன் -என்று ஸ்ரீ சபரியும் அவ்வாறே கூறினாள்-

————-

யஸ்மாத் தது₃பதே ₃ஷ்டா(அ)சவ் தஸ்மாத்₃கு₃ருதரோ கு₃ரு꞉ ।
அர்ச நீயஶ்ச வந்த ₃யஶ்ச கீர்த நீயஶ்ச ஸர்வதா ₃ ॥ 17 ॥

எண் திசையும் அறிய இயம்புவேன்-

————

த்₄யாயேஜ் ஜபேந் நமேத்₃ப₄க்த்யா ப₄ஜேத₃ப்₄யர்சயேந் முதா ₃ ।
உபாயோ பேயபா₄ வேந தமேவ ஶரணம் வ்ரஜேத் ॥ 18 ॥

பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—————–66-

——————-

இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வ ஶாஸ்த்ரேஷு ஸம்மதம் ।
ஏவம் த்₃ வயோபதே ₃ஷ்டாரம் பா₄வயேத் பு₃த்₃தி₄மான்
தி₄யா ॥ 19 ॥

இரும்பு போல் வலிய நெஞ்சம் பண்பட உபதேசம் -உள்ளம் உகந்து -உபகார ஸ்ம்ருதி வேண்டும் அன்றோ

—————–

ஶரீரம் வஸூ விஜ்ஞாநம் வாஸ ꞉ கர்ம கு₃ணாந ஸூன் ।
கு₃ர் வர்த ₂ம் தா₄ரயேத்₃ யஸ்து ஸ ஶிஷ்யோ
நேதரஸ் ஸ்ம்ருத ꞉ ॥ 20 ॥

சத்ருச ப்ரத்யுபகலாம் செய்ய இரண்டு ப்ரஹ்மமும் நான்கு விபூதிகளும் வேண்டுமே
முயல்கிறேன் அவன் மொய் கழலுக்கு என்று சொல்லிப்போம் அத்தனை

————–

நாராயணோ (அ)பி விக்ருதிம் யாதி கு₃ரோ ꞉ ப்ரச்யுதஸ்ய து₃ர்பு₃த்₃தே ₄꞉ ।
கமலம் ஜலாத ₃பேதம் ஶாேஷயதி ரவிர் ந தோஷயதி ॥21॥

தண்ணீரில் உள்ள தாமரையே உலர்த்தும் -இல்லாவிடில் உலர்த்தி விடுமே

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —————60-

——————

யோ விஷ்ணோ ꞉ ப்ரதி மாகாரே லோஹ பா₄ வம் கரோதி ச ।
யோ கு₃ரௌ மாநுஷம் பா₄வம் உபௌ₄ நரக பாதி நவ் ॥ 22 ॥

அர்ச்சாவதார லோக பாவம் -குருவை மானுஷ்ய பாவம் -நரக ஹேதுவாகுமே

—————-

ஸாமாந்யதோ விஸேஷாச்ச யஸ்மாத்₃ த₄ர்மான் ஸநாதநான் ।
ஆசிநோதி ஸ ஆசார்ய꞉ தஸ்மை த்₃ருஹ்யேத் ந கிஞ்சந ॥2
3॥

——————

கு₃’ ஶப்₃ த₃ஸ்த்வந்த₄காராக்₂யோ ‘ ‘ரு’ ஶப்₃ த₃ஸ்தந் நிரோத₄க꞉ ।
அந்த₄கார நிரோதி₄த்வாத் கு₃ருரித்யபி₄ தீ₄யதே ॥24 ॥

குரு என்னும் பதத்தில் கு என்னும் பதம் இருளையும் ரு என்னும் பதம் போக்குவதையும் சொல்லுகின்றது-அஞ்ஞானத்தைப் போக்குவதால் ஆச்சார்யர் குரு என்றும் சொல்லப்படுகிறார் –

————

மநுரப்யாஹ ப₄க₃வான் “வந்த்₃யோ பா₃லோ (அ)பி மந்த்ரத₃꞉ ।
ஜ்யைஷ்டயம் வேதா₃ந்த விஜ்ஞாநாத் விப்ராணாமிதி சோதித₃ ம் ॥25॥

பிராமணர்களுக்கு வேதாந்த ஞானத்தினால் பெரிய தனம் விதிக்கப்பட்டு இருப்பதால் பிராமணர் ஒருவரே சிறுவராக இருந்த போதிலும் மந்த்ரத்தை உபதேசித்தாராகில் அவர் வந்தனம் செய்யத்தக்கவர் என்று மனுவும் தர்ம ஸாஸ்த்ரத்தில் அருளிச் செய்துள்ளார் –

—————–

அத்₄யா பயாமாஸ பித்ரூன் ஶிஶுராங்கீ₃ரஸ ꞉ கவி ꞉ ।
புத்ரகா இதி ஹோவாச ஜ்ஞாநேந பரி க்₃ருஹ்ய தான் ॥ 26

அங்கீரஸ் என்னும் ரிஷியின் புத்திரரான சுக்ராச்சார்யாரும் தன் தகப்பன்மார்களுக்கு வேதங்களை ஓதி வைத்தார் -தம்முடைய ஞானத்தைக் கொண்டு அவர்களை புத்ரர்களாகப் பாவித்து வாரீர் பிள்ளைகளே என்று அழைத்தார் –

————–

தே தமர்த₂மப்ருச்ச₂ந்த தே ₃ வாநாக ₃ தமந்யவ ꞉ ।
தே ₃ வாஶ் சைதான் ஸமத்யோசு꞉ ந்யாய்யம் வஶ்ஶிஶு ருக்தவான் ॥ 27 ॥

சுக்கிரனுடைய பிதாக்களான இவ்விரண்டு ரிஷிகளும் கோபமுடையவர்களாய் புத்ரன் சொல்லியவற்றைப் பற்றி தேவர்களிடம் கேட்டார்கள் -அத்தேவர்களும் ஒன்றாகச் சேர்ந்து வாரீர் ரிஷிகளே உங்களுடைய புத்திரன் நியாயமான வார்த்தைகளைத் தான் சொல்லி இருக்கிறான் என்றார்கள்

கணபுரம் கை தொழும் பிள்ளையை-
காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்

—————

பா₃லோ (அ)பி விப்ரோ வ்ருத்₃ த₄꞉ஸ்யாத் பிதா ப₄வதி மந்த்ரத₃꞉|
அஜ்ஞம்ஹி பா₃ல மித்யாஹ பிதேத்யேவ ச மந்த்ர த₃ம் ॥ 28 ॥

ப்ராஹ்மணன் பாலனாக இருந்த போதிலும் ஞானத்தினால் பெரியவரால் மந்த்ர உபதேசம் செய்தவரானால் அவர் பெரியவராகிறார் -பெரியவராக இருந்தும் ஞானம் இல்லாதவரக இருப்பாராகில் அவரை பாலர் என்றும் சிறுவராய் இருந்தபோதிலும் மந்த்ர உபதேசம் செய்தவரை பிதா என்றும் பெரியோர்கள் சொல்லுகிறார்கள் –

—————–

ந ஹாயநைர் ந பலிதை ꞉ ந ச வித்தைர்ந ப₃ந்து₄பி₄꞉ ।
ருஷ்யஶ் சக்ரிரே த₄ர்மான் யோ (அ)நூசாந ஸ நோ மஹான் ॥ 29 ॥

ரிஷிகள் வயது சென்றதனாலாவது -தலை நரைத்தானாலாவது -விசேஷித்த தனங்களினாலாவது -பந்துக்களினாலாவது -தர்மங்களைச் செய்தார்கள் இல்லை -ஸாஸ்திரங்களை அறிந்ததனால் மட்டுமே தர்மங்களைச் செய்தார்களாதல் -எவர் குருவினிடத்தில் இருந்து சாஸ்திரங்களை ஓதியவரோ அவரே நமக்குக் குருவாகத் தக்கவர்

————-

விப்ராணாம் ஜ்ஞாநதோ ஜ்யைஷ்ட்யம் க்ஷத்ரியாணாம் து வீர்யத ꞉ ।
வைஶ்யாநாம் த₄நதோ ஜ்யைஷ்ட்யம் ஶூத்₃ராணாமேவ ஜந்மத ꞉ ॥ 30 ॥

ஆகையால் ப்ராஹ்மணர்களுக்கு ஞானத்தினாலும் ஷத்ரியர்களுக்கு பலத்தாலும் வைஸ்யர்களுக்கு தனத்தாலும் ஸூத்ரர்களுக்கு வயதானாலும் மேன்மை சொல்ல வேண்டும் –

——————

கு₃ரோஶ்ச கு₃ரவஸ் ஸர்வே பூஜநீயா விஶேஷத ꞉ ।
கு₃ருதா₃ரஸூததவ் ₃ து கு₃ருவத்₃வ்ருத்தி மாசரேத் ॥ 31 ॥

ஆச்சார்யர்களின் ஆச்சார்யர்களும் விசேஷித்து பூஜிக்கத் தக்கவர்கள் -ஆச்சார்ய பத்னியிடத்திலும் புத்திரர்கள் இடத்திலும் ஆச்சார்யர் இடத்தில் போலவே வர்த்திக்க வேண்டும் –

—————-

த₄ர்ம வ்யதிக்ரமஸ் ஸ்யாச்சேத் கு₃ருர்போ₃த்₄யோ ரஹஸ்யபி ।
பதநீயம் கு₃ரோ ꞉ கர்ம யத்₃யஶக்யம போஹிதும் ॥ 32 ॥

———————

போத₃ ₄நாத்₃தை ₃ வப₄ஜநா ஸத் ஸங்க₃பரிவேஷணாத்
।ஸத்₃கு₃ரூநுபஸேவேத ஹித்வா தத ₃நுவர்தநம் ॥ 33 ॥

ஆச்சார்யரும் ஸாஸ்த்ர யுக்த தர்மங்களைக் கடந்து நடப்பாராகில் அவருக்கு ரஹஸ்யத்தில் போதிக்க வேண்டும் -அப்படிக்கு போதித்தும் அவருக்கு நல்ல ஞானம் உண்டாகும்படியாய் பகவானிடத்தில் பிரார்த்தனைகள் செய்தும் சத்துக்களைக் கொண்டு உபதேசம் செய்வித்தும் அவர் இடத்தில் உள்ள துர்நடத்தை போகாமல் இருந்தால் அவர் சேவையை விட்டு வேறு சத்ருக்களை சேவிக்க வேண்டும் – அப்பொழுது முன் ஆச்சார்யருக்கும் ஹிதத்தைக் கோறுவாராகில் ஸர்வ பாதங்களில் நின்றும் நீங்குவர் –

———-

தஸ்யாபி ஹிதாமாகாங்க்ஷன் முச்யதே நாத்ர ஸம்ஶய꞉ ।
யதி ₃ ஶிஷ்ய꞉ பதேந் மார்கா₃த் தம் ப்ரயத்நேந வாரயேத் || 34 ॥

சிஷ்யனும் ஸாஸ்த்ர யுக்த சன்மார்க்கங்களைக் கடந்து நடப்பானாகில் ஆச்சார்யர் அவனைக் கெட்ட மார்க்கத்தில் செல்லாமல் இருக்கு படியாகத் தடுக்க வேண்டும் – பகவானுடைய திருவடிகளில் அவனுக்கு ஹிதத்தைப் பிரார்த்திக்க வேண்டும் –

————–

ஶ்ரிய꞉ பத்யு꞉ பதா₃ம் போ ₄ஜே கு₃ருர்யாசேத தத்₃ தி₄ தம் ।
ப்ரஸாத ₃யேத்₃ப₄க₃வதா ஆத்மநா (அ)பித முத்₃ த₄ரேத்
॥ 35 ॥

——————–

தேந ஸம்பா₄ஷணாதீ ₃நி வர்ஜயேத ₃நிவர்தநே ।
̈ந நிஶ்வாஸமபி ₄வ்யக்தம் விஸ்ருஜேத்₃கு₃ரு ஸந்நிதவ் ₄ ॥ 36 ॥

அவனுக்கு ஞானத்தை உண்டாக்கும்படியாக பாகவதர்களைப் பிரார்த்திக்க வேண்டும் -தன்னால் கூடிய வரை அவனை படு குழியில் இருந்து வெளியில் எடுக்க வேண்டும் -அப்படிச் செய்தும் அவன் துர்நடத்தையில் இருந்து திரும்பானாகில் அவனுடன் சம்பாஷணை முதலியவை செய்யாமல் விட்டு விட வேண்டும் –

—————–

கு₃ரோர் யத்ர பரீ வாதோ ₃ நிந்தா ₃ வா (அ)பி ப்ரவர்ததே ।
கர்ணவ் தத்ர பிதா ₄ தவ்யௌ க₃ந்தவ்யம் வா ததோ (அ)ந்யத ꞉ ॥ 37 ॥

ஆச்சார்யருடைய சமீபத்தில் தமக்கு உண்டாயிருக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்தக் கூடாது-ஆச்சார்யருக்கு எவ்விடத்தில் அபவாதமோ நிந்தையோ சொல்லப்படுகிறதோ அவ்விடத்தில் காதுகளையாவது மூடிக்கொள்ள வேண்டும் -அவ்விடத்தை விட்டு அப்புறம் போகவும் வேண்டும் –

——————-

ஆசார்யஸ்ய ப்ரஸாதே ₃ந மம ஸர்வமபீ₄ப்ஸிதம் ।
ப்ராப்நுயாமிதி விஶ்வாஸோ யஸ் யாஸ்தே
ஸ ஸூகீ₂ ப₄வேத் ॥ 38 ॥

ஆச்சார்யருடைய அனுக்ரஹத்தினால் யான் ஸர்வ இஷ்டங்களையும் பெறுவேன் என்ற நம்பிக்கை எவருக்கு வருகிறதோ அவர் சுகத்தை அடைவர் –

—————

யேநைவ கு₃ருணா யஸ்ய ந்யாஸ வித்₃யா ப்ரதீ ₃யதே ।
தஸ்ய வைகுண்ட₂து₃க்₃தா₄ப்₃தி ₄த்₃வாரகா꞉ஸர்வ ஏவ ஸ ꞉ ॥
39 ॥

எந்த ஆச்சார்யரால் எவருக்கு பிரபத்தி வித்யை உபதேசிக்கப் படுகிறதோ அவருக்கு இவ்வாச்சார்யாரே ஸ்ரீ வைகுண்டம் திருப்பாற் கடல் திருத்துவாரகை முதலிய அனைத்து திவ்ய தேசங்களுமாகும்

பாட்டுக்கேட்க்கும் இடம் –எல்லாம் வகுத்த இடமே

——————

ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் கு₃ருரஷ்டாக்ஷர ப்ரத ₃꞉ ।
இத்யேவம் யே ந மந்யந்தா த்யக்த வ்யாஸ்தே மநீஷிபி₄꞉ || 40 ॥

நமக்கு ஐஹிக ஆமுஷ்மிகங்களான அனைத்து நன்மைகளும் திரு அஷ்டாக்ஷரத்தை உபதேசித்த ஆச்சார்யர் தான் என்றும் எவர்கள் எண்ண வில்லையோ அவர்கள் சத்துக்கள் விடத்தக்கவர் –

———–

ஏகாக்ஷர ப்ரதா ₃ தாரமாசார்யம் யோ (அ) மந்யதே ।
ஶ்யாந யோநி ஶதம் ப்ராப்ய சண்டா₃லேஷ்வபி₄ஜாயதே ॥ 41 ॥

பிரணவத்தை யாவது ஓர் அக்ஷரத்தை யாவது உபதேசிக்கும் ஆச்சார்யர் ஒருவரை எவர் அவமானப்படுத்துகிறாரோ அவர் துர்ஜன்ம-நாய்கள் -போல் பிறந்து பிறக்கும் சண்டாளர் களில் பிறந்து உழல்வார் –

—————–

மஹா வராஹோ ப₄க₃ வாநாஹ ஜந்மாப்₃ தி₄தாரணே ।
நாவம் ந்ருதநும் ஆத்மாநம் அநுகூலா(அ)நிலம் கு₃ரும் ॥ 42 ॥

மஹா வராஹ அவதாரம் செய்த பகவானும் சம்சாரமாகிற கடலைக் கடைக்கு விஷயத்தில் மனுஷ்ய ரூபமான தன் சரீரத்தை ஓடமாகவும் ஆச்சார்யானை இவ்வோடத்தை கரை சேர்க்கும் காற்றாகவும் இவ்வாத்மாவை ஓடக்காரனாகவும் சொல்லி இவ்வாச்சார்யனால் இவ்வாத்மா சம்சாரக்கடலை தாண்ட வேண்டும் என்று அருளிச் செய்துள்ளார் –

—————-

கர்ணதா ₄ரமதோ தே ₃ஹீ கு₃ருணா ஸம்ஸ்க்ருதிம் தரேத் ।
ந்ருதே ₃ஹமாத்₃யம் ப்ரதி லப்₄ய து₃ர்லப₄ம் ப்லவம் ஸூகல்யம் கு₃ரு கர்ணதா ₄ரம் ।
மயா(அ)நுகூலேந நப₄ஸ்வதேரிதம் புமான் ப₄வாப்₃தி₄ம் ந தரேத்ஸ ஹாத்மஹா ||

முன் ஸ்லோக அர்த்தத்தையே ஈண்டும் வேறு விதமாக அருளிச் செய்து இப்பத்ததியை நிகமிக்கிறார் -சம்சாரக்கடலைக் கடத்தும் ஓர் ஓடம் போன்றதாயும் ஆச்சார்யரை ஓடக்காரனை உடையவராகவும் கிடைப்பதற்கு அரியதான இந்த மனுஷ்ய தேகத்தை காற்று ஆனால் போல் என்னாலே ஏவப்படுகின்றன -இத்தேகத்தைப் பெற்றும் எவர் ஒருவர் சம்சாரக் கடலைத் தாண்ட வில்லையோ அவர் ஆத்ம த்ரோஹி யாவார் என்றும் பகவான் அருளிச் செய்கிறார் –

சிஷ்யன் என்பது-சாத்யாந்தர நிவ்ருத்தியும்
பல சாதனா ஸூஸ் ரூஷையும் ஆர்த்தியும்
ஆதரமும் அநசூயையும் உடையவனை –சூரணை -321-
மந்த்ரமும் -தேவதையும்- பலமும் – பல அநு பந்திகளும் -பல சாதனமும் – ஐஹிக போகமும் -எல்லாம் ஆசார்யனே என்று நினைக்க கடவன் –சூரணை -322-
மாதா பிதா யுவதய -என்கிற ஸ்லோகத்திலே இவ் அர்த்தத்தை பரமாச்சார்யரும் அருளிச் செய்தார் –சூரணை -323-
இதுக்கடி உபகார ஸம்ருதி-சூரணை -324-
உபகார ஸ்ம்ருத்திக்கு முதலடி
ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஞதை – முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஞதை –சூரணை -325-
சிஷ்யனும் ஆசார்யனும் அந்யோந்யம் பிரிய ஹிதங்களை நடத்தக் கடவர்கள் –சூரணை -326-
சிஷ்யன் தான் பிரியத்தை நடத்தக் கடவன் – ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் – ஆசார்யன் மாறாடி நடத்தக் கடவன் –சூரணை -327-
சிஷ்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் –-ஆசார்யன் உஜ்ஜீவனத்திலே ஊன்றிப் போரும் –சூரணை -328-
ஆகையால் சிஷ்யன் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கு இலக்காகை ஒழிய – ரோஷத்துக்கு இலக்காக்கைக்கு அவகாசம் இல்லை ––சூரணை -329-
நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் போது-அது ஹித ரூபம் ஆகையாலே – இருவருக்கும் உபாதேயம் –சூரணை -330-
சிஷ்யனுக்கு நிக்ரஹா காரணம்-த்யாஜ்யம்-சூரணை -331-
நிக்ரஹம் தான் பகவந் நிக்ரஹம் போலே ப்ராப்ய அந்தர்கதம் –சூரணை -332-
ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —சூரணை -333-
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் -பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் –சூரணை -334-
ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –சூரணை -335–
ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –சூரணை -336-
ஆசார்யன் தன்னுடைய தேக ரஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –
சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –சூரணை -337-
ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் –
சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் –சூரணை -338-
கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –சூரணை -339-
கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –சூரணை -340-
இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –சூரணை -341-
அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –சூரணை -342-
ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –சூரணை -343-
ஆசார்யன் நினைவாலே உண்டு –சூரணை -344-

4-சதுர்தீ –குரு உபாஸந பத்ததி –ஸம் பூர்ணம்

  1. அத₂ ப₄க₃வத் பரிசர்யா பத்₃த₄தி꞉ பஞ்சமீ

ஏவம் கு₃ரு ப்ரஸாதே₃ந தேஷித்வ ஜ்ஞாந பூர்வகம் ।
தே₃வோந்தர வந்நித்யம் ஸப்₃தா₃தீ₃நபி குத்ஸயன் ॥
1॥

விஷ்ணு ப்ராப்தி ப₂லாகாங்க்ஷீ விஷ்ணூபாயோ ஹி வைஷ்ணவ꞉ ।
ஏகாந்தீ து விநிஶ் வித்ய தே₃வதா விஷயாந்தரை
꞉ ॥2॥

கீழ் பத்ததியில் சொல்லிய படி ஆச்சார்ய அனுக்ரஹத்தினாலே தனக்குக் கிடைத்திருக்கும் சேஷத்வ ஞானத்தை முன்னிட்டு பகவானை ஒழிந்த வேறு தெய்வங்களைப் போலே ஸப்தாதி விஷயங்களையும் பிழை உள்ளவைகளாக அறிந்து பகவானைப் பெறும் விஷயத்தில் பக்தி யோகத்தையும் உபாயமாக யுடைய ப்ரபன்னர் வைஷ்ணவர் என்று சொல்லப்படுவார்

———

ப₄க்த் யுபாயம் ஸமம் க்ருஷ்ண ப்ராப்தவ் க்ருஷ்ண ஏக ஸாத₄ந꞉ ।
தே₃வோந்தர ஸப்₃தா₃தி₃ப₄க்தி க்ருஷ்ணாக்₂ய ஹேதுஷு
॥3॥

பக்தி யோகம் என்றும் மோக்ஷ உபாயத்தை தேவதாந்தர விஷயாந்தர ங்களோடு சமமாக நினைத்து பகவானைப் பெரும் விஷயத்தில் பகவான் ஒருவனையே உபாயமாக யுடைய ப்ரபன்னர் ஏகாந்தி எனப்படுவர் –

————

ஸாம்ய க்ருத் பரமை காந்தீ ஹரௌ ஸ்வாமீதி பு₃த்₃தி₄மான் ।
கிங்குர்வாண꞉ ஸதா ₃காலம் ப₄க₃வத் பாத₃பத்₃மயோ ꞉ ॥4॥

தேவதாந்தரங்கள் ஸப்தாதி விஷயம் பக்தி பிரபத்தி என்னும் மோக்ஷ உபாயங்கள் இவைகளை சமமாக நினைத்து பகவானிடத்தில் ஸ்வாமி என்னும் புத்தியையுடைய ப்ரபன்னர் பரமை காந்தி -உயர்ந்ததான ஒரே நிச்சயம் உடையவர் -எனப்படுவர்
இங்கு ப்ரபத்தியையும் தேவதாந்தரங்களோடு சமமாக நினைப்பதாவது அவைகளைப் போல் இப்பிரபத்தி யையும் விட வேண்டும் என்னும் அர்த்தகமாகும் -மேற்கொண்ட ஸ்வரூபத்தில் சொல்லியபடி ப்ரபத்தியை அனுஷ்டித்த ப்ரபந்நரைப் பற்றி இங்கு இவ்வர்த்தம் விதிக்கப் படுவதால் இப்பிரபன்னர் இதை விடுவதாவது -இப்பிரபத்தியில் உபாய புத்தியை விடவேண்டும் என்பதாவது -அல்லது பக்தியோகத்தைப் போல் இப்பிரபத்தியும் ஆவர்த்தி செய்யதகும் என்று நினைத்தால் அதை விட வேண்டும் என்பதாவது கருதத் தகும் –

தமக்கு உண்டாயிருக்கும் சேஷத்வத்தை அறிந்து ஸர்வ காலமும் பகவானுடைய திருவடித் தாமரைகளில் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு காலத்தை சார்த்தமாகப் போக்க வேண்டும்

————

ஸேஷத்வ மாத்மநோ ஜாநன் ஸார்த₂யன் காலமாக்ஷிபேத் ।
விஜ்ஞாய மூல மந்த்ரார்த₂ம் த்₃வயைகார்த₂தயா கு₃ரோ
꞉ ॥5॥

இம்மூல மந்த்ரார்த்தத்தை த்வயார்த்தத்தோடு ஸமான அர்த்தமாக ஆச்சார்யரால் அறிந்து பகவான் ஒருவனையே சரணமாக யுடையவராய் அம்மூல மந்த்ரத்தால் பகவானை ஆராதிக்க வேண்டும் –

———–

ததே₃க ஸரணோ பூ₄த்வா ஹரிம் தேந ஸமர்சயேத் ।
த்ரை கால்ய மர்சநம் குர்யாத் மூல மந்த்ரேண ஸக்தித꞉
॥6॥

ஸர்வ வேதா₃ந்த ஸாரார்த₂꞉ ஸம் ஸாரார்ணவ தாரண꞉ ।
மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ கு₃ஹ்யாநாம் கு₃ஹ்யமுத்தமம் ॥7

மூன்று காலங்களிலும் பகவானுக்கு மூல மந்திரத்தால் ஆராதனம் செய்ய வேண்டும்-இம்மூல மந்த்ரம் ஸர்வ வேதங்களினுடையவும் சாரமான அர்த்தத்தை யுடையது -ஸம்ஸாரமாகிய கடலைத் தாண்டி வைக்கத்தக்கது -மந்திரங்களில் உயர்ந்த மந்த்ரமும் ரஹஸ்யங்களுள் பரமமான ரஹஸ்யமாகவும் பரிசுத்தமான வஸ்துக்களுக்கும் பரிசுத்தியை உண்டாக்கத் தக்கது -இது அநாதியான மஹா மந்த்ரம்

நான் கண்டு கொண்டேன் நாராயணாயா என்னும் நாமம் -மந்த்ரம் அல்ல -ஸர்வாதிகாரம் இது

————-

பவித்ராணாம் பவித்ரம் ச மூல மந்த்ர꞉ ஸநாதந꞉ ।
முமுக்ஷூணாம் ஸதா ₃ ஜப்யம் பு₄க்தி முக்தி ப₂ல ப்ரத₃ம் ॥8॥

வைஷ்ணவாநாம் ஸதா ₃ ஜப்யம் ப₄க்தி ஜ்ஞாநவிவர்த₄நம் ।
மந்த்ராணாமாஶ்ரயம் தி₃வ்யம் ஸர்வ பாப ப்ரணாஸநம் ॥9॥

இம்மந்திரம் போக மோஷங்களைக் கொடுக்கத் தக்கதாக இருப்பதால் மோஷத்தை விரும்புபவர்களுக்கு சர்வகாலமும் ஜபம் செய்யத்தக்கது -பக்தி ஞானங்களை விருத்தி செய்யத்தக்கதாய் இருப்பதால் வைஷ்ணவர்களுக்கும் சர்வகாலமும் ஜபம் செய்யத்தக்கது-

————

ஸமாஹித மநா பூ₄த்வா ஜபம் குர்யாத₃ தந்த்₃ரித꞉ |
இத்த₂ம் க₃ஜாந நாதீ₃நாம் ஶ்ரீமத் ஸேநேஸ ஸாஸநாத் ॥10॥

இத்திவ்ய மந்த்ரம் ஸர்வ மந்திரங்களுக்கும் ஆஸ்ரீ யமாக இருக்கின்றது – ஸர்வ பாபங்களையும் நாசம் செய்வதாய் இருக்கின்றது -இம்மந்தத்தை சாவதான மனத்தை யுடையவராகவும் சோம்பல் இல்லாதவராகவும் ஜபம் செய்ய வேண்டும்

படு துயர் ஆயின எல்லாம் நிரந்தரம் செய்யும்

———–

[அநேந வைஷ்ணவ꞉ குர்யாத் ஹரேரர்சாதி₃கம் ஸதா ₃ ।
த்₃வயேந வார்சநம் குர்யாத் கு₃ருவந்த₃ந பூர்வகம் ॥11

மேற் சொல்லியபடி ஸ்ரீ விஷ்வக் சேனர் தன் பரிவாரங்களான கஜநநாதிகளுக்கு நியமித்து இருப்பதால் வைஷ்ணவர்கள் இம்மூல மந்ரத்தால் பகவானுக்குத் திருவாராதானாதிகள் செய்ய வேண்டும் -அல்லது த்வயத்தினாலாவது ஆராதனம் செய்ய வேண்டும் -அப்படிக்கு ஆராதனம் செய்யும் போது குரு வந்தனத்தை முன்னிட்டு வந்தனம் செய்த பின்பு ஆராதனம் செய்ய வேண்டும் –

குரு பரம்பரா பூர்வகமாக இல்லாத த்வயமும் மற்ற மந்த்ரங்களோடு ஒக்கும்

————-

க்ருத லக்ஷண ஏவாயம் அர்சயேத்₃ வைஷ்ணவோ ஹரிம் ।
] வ்யாஸஸ்து ப₄க₃வாநாஹ வர்ணைஸ்து க்ருத லக்ஷணை ꞉ ॥12॥

அர்சநீயஶ்ச ஸேவ்யஶ்ச பூஜநீயஶ்ச மாத₄வ꞉ ।
லக்ஷணம் த்₃விவித₄ம் ப்ரோக்தம் பா₃ஹ்யமாப்₄ யந்தரம் ததா ₂ ॥ 13॥

கீழ்ச் சொன்ன வைஷ்ணவ சின்னங்களோடு கூடியவராய் வைஷ்ணவர் பகவானை ஆராதிக்க வேண்டும் -வியாஸ முனிவரும் வைஷ்ணவ சின்னங்களோடு கூடிய நான்கு வர்ணத்தார்களாலும் பகவான் அர்ச்சனை செய்யத்தக்கவர் என்றும் சேவிக்கத் தக்கவர் என்றும் ஆராதனம் செய்யத்தக்கவர் என்றும் சொல்லுகிறார் –

—————-

ஸங்க₂சக்ராதி₃கம் பா₃ஹ்யம் அந்யத்₃ராகா₃த்₃யத பேததா ।
ததா ₂ச ஸர்வோபநிஷத் ஸித்₃த₄ம் சக்ராதி₃ தா₄ரணம் ॥14॥

பாஹ்யம் -வெளிப்பட்டவை -என்றும் ஆப்யந்தரம் -உள்ளிட்டவை என்றும் சின்னங்கள் இருவகைப்படும் -அவற்றுள் சங்கு சக்ராதி தாரணம் பாஹ்ய லக்ஷணங்களாகும் -வைராக்யம் சமதமாதி ஆத்ம குணங்கள் ஆப்யந்தர லக்ஷணங்களாகும் –

————–

அத₂ர்தவ உபநிஷத்₃ வ்யக்தம் வித₃தா₄தி விபஶ்சிதாம் ।
த₃க்ஷிணே து பு₄ஜே விப்ரோ பி₃ப்₄ருயாத்₃வை ஸுத₃ர்ஸநம் ॥15॥

அப்படியே ஸர்வ உபநிஷத்துக்களிலும் சித்தித்து இருக்கும் சங்கு சக்ராதி தாரணத்தை அதர்வ உபநிஷத்து ஞானிகளான வைஷ்ணவர்களுக்கு விதிக்கின்றது –

—————-

ஸவ்யே து ஸங்க₂ம் பி₃ப்₄ருயாத் இதி ப்₃ரஹ்ம விதோ₃ விது₃꞉ ।
தத்ர ஶ்ருதி த்வஸந்தே₃ ஹே கி₂ல மந்த்ரோ (அ)பி தத்ஸம꞉ ॥16॥

வலது தோளில் திருவாழியையும் இடது தோளில் திருச்சங்கையும் ப்ராஹ்மணர் தரிக்க வேண்டும் என்று ப்ரஹ்ம ஞானிகள் சொல்லுகிறார்கள் –

————–

மஹத் பரிக்₃ரஹாந் நாஸ்தி ஸந்தே₃ஹஸ் தத்ர சேத்₃ப்₄ரம꞉ ।
பாத்₃மம் புராணமாக்₃நேயம் க்ராேஸத் யுத்₃பா₃ஹு ரப்யுத ॥17॥

இப்படிக்கு சக்ராங்கனத்தை விதிக்கும் பிரமாணங்கள் வைதிகங்கள் அல்ல என்று ஸந்தேஹம் உண்டாகுமாகில் -இவ்வாறு ப்ரஸித்த வேதங்களில் காணாமல் இப்பொழுது அனுஷ்டானங்களில் உபயோகித்தது வரும் -கில மந்திரங்களும் இவ்வாறு சந்தேகிக்கத் தக்கவைகளாகும் -ஆகையால் மேற் சொல்லியவைகளை பெரியோர்கள் வைதிகங்களாக பரிக்ரஹித்து வருவதால் ஸந்தேஹிக்க வேண்டியதில்லை -இப்படிக்கு பெரியோர்கள் பரிக்ரஹிக்க இல்லை என்று பிரமம் உண்டாகில் பாத்மம் ஆக்னேயம் இவ்விரண்டு புராணங்களும் சக்ராங்கநாதிகளை வைதிகங்கள் என்றும் பெரியோர்கள் இவைகளை பரிக்ரஹித்து இருக்கிறார்கள் என்றும் கையெடுத்துக் கூவுவதால் இப்பிரமம் நீங்கி விடலாம் –

————–

பஞ்சாயுதா₄ நிதா₄ர்யாணி ப₄க்தி ஶ்ரத்₃தோ₄ப ப்₃ரும்ஹித ꞉ ।
லலாடே மூர்த்₄நி ஹ்ருத்₃வாஹ்வோ : ஏகத்ரைகம் ப்ருத₂க் ப்ருத₂க் ॥18॥

பாத்ம புராணத்தில் அருளிச் செய்தவற்றை எடுத்துக் காட்டுகிறார் -நெற்றியிலும் சிரஸ்ஸிலும் மார்பிலும் தோள்களிலும் கதை முதலிய பஞ்ச ஆயுதங்களையும் பக்தி ஸ்ரத்தையுடன் கூடியவர்களாய் தரிக்க வேண்டும் –

த்வைத மதஸ்தர் இப்பொழுதும் பஞ்சாயுத தாரணம் கொண்டுள்ளார்கள்

———

லலாடே து க₃தா ₃ தா₄ர்யா மூர்த்₄நி சாபம் ததா ₂ பரம் ।
நந்த₃கம் சைவ ஹ்ருந் மத்₄யே ஸங்க₂ சக்ரே பு₄ஜ த்₃வயே ॥19॥

நெற்றியில் கதாயுதத்தையும் சிரஸ்ஸிலே சார்ங்கம் என்னும் வில்லையும் மார்பில் நந்தகம் என்னும் கத்தியையும் இரண்டு தோள்களிலும் திரு வாழி திருச் சங்குகளையும் தரிக்க வேண்டும்

—————-

லோஹை ரநல ஸந்தப்தை ꞉தத் தந் மந்த்ராதி₄ வாஸிதை ꞉ ।
அங்கயேத், வ்ருத்₃த₄ மநுரப்யே₃ததா ஹா (ஆ)த₃ராத்₃யதா
₂ ॥20॥

லோஹங்களினால் செய்யப்பட்டு இருக்கும் பஞ்சாயுதங்களை அக்னியில் தப்தம் செய்து அவற்றுக்கு உள்ள மந்த்ரங்களை ஜபித்து மேல் கண்ட இடங்களிலே லாஞ்சனை செய்து கொள்ள வேண்டும் -இவ்வாறே விருத்த மனுவும் சொல்லி இருக்கிறார் –

—————

ஊர்த்₄வ புண்ட்₃ரம் ததா ₂ சக்ரம் நித்யம் தா₄ரயதே நர꞉ ।
ஸூபா₄நி தஸ்ய வர்த₄ந்தே த்வஸூப₄ந்து ப்ரணஶ்யதி ॥21॥

விருத்த மனு அருளிச் செய்தவற்றை எடுத்துக் காட்டுகிறார் -எவர் ஒருவர் ஊர்த்த புண்ட்ரம் திரு வாழி திருச்சங்கு இவைகளை நித்யம் தரிக்கிறாரோ அவருக்கு சுபங்கள் வளரும் -அசுபங்கள் நாசமடையும் –

———————–

கால உக்தோ ப₄க₃வதா ஸாஸ்த்ரே சக்ராதி₃தா₄ரணே ।
உத்தம꞉ ஷாேட ₃ஸாத₃ர்வாக் ஆபஞ்சா ஸஸ்து மத்₄யம꞉ ॥22॥

பதினாறு வயதிற்கு உட்பட்ட காலம் உத்தமம் என்றும் -அதற்கு மேல் ஐம்பது வரையில் மத்யம காலம் என்றும் பகவானால் ஸாஸ்த்ரத்தில் சக்ராதி தாரணத்திற்கு காலம் சொல்லப்பட்டு இருக்கின்றது –

———————

அத꞉ பரம் வை ஹ்யத₄ம இதி கால வ்யவஸ்தி₂தி꞉ ।
விநா து வார்ஷிகான் மாஸான் ஸர்வே மாஸாஶ் ஸூபா₄வஹா ꞉ ॥23॥

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட காலம் சக்ராங்கனம் செய்து கொள்வதற்கு அதமகாலம் என்றும் ஸாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றது -மேலும் வர்ஷா காலங்கள் ஒழிய மற்ற காலங்கள் சக்ராங்கனத்திற்கு நன்மை யுண்டாக்கத் தக்கவைகள்

———

ஸ்தா₂நம் ப்ரமாணம் த்₃ரவ்யம் ச பாஞ்சராத்ரே விஸேஷத꞉ ।
விஹிதம் தத் ப்ரகாரேண தா₄ரயே தூ₃ர்த்₄வ புண்ட்₃ரகம் ॥24॥

ஊர்த்வ புண்ட்ரம் தரிப்பதற்கு ஸ்தானமும்-அதற்குப் பிரமாணமும் – அதற்குத் த்ரவ்யமும் -ஸ்ரீ பாஞ்சராத்ர ஸாஸ்த்ரத்தில் விசேஷமாக விதிக்கப்பட்டு இருக்கின்றது -அதன் படி ஊர்த்வ புண்ட்ரம் தரிக்க வேண்டும் –

————

ப்ரஸஸ்தே பர்வதாக்₃ராதவ் ₃ ஜாதயாஶ் வேத ம்ருத்ஸ்நயா ।
ஊர்த்₄வ புண்ட்₃ரம் தத ꞉ கார்யம் வைஷ்ணவவஸ்து விஸேஷத꞉ ॥25॥

ஸாஸ்திரங்களில் கொண்டாடப்பட்டு இருக்கும் பர்வதங்களில் மேல்பாகம் முதலிய இடங்களில் உண்டாய் இருக்கும் ஸ்வேத ம்ருத்திகையினால் ஊர்த்வ புண்ட்ரம் தரிக்க வேண்டும் -வைஷ்ணவர்கள் விசேஷித்து ஸ்வேத ம்ருத்திகையினாலேயே ஊர்த்வ புண்ட்ரம் தரிக்க வேண்டும் –

—————–

விமலாந் யூர்த்₄வ புண்ட்₃ராணி ஸாந்தராளாநி யோ நர꞉ ।
கரோதி விமலம் தேந மந்தி₃ரம் மே கரோதி ஸ꞉ ॥26॥

ஊர்த்வ புண்டரங்களை நடுவில் வந்துள்ளவைகளாகவும் அழுக்கு இல்லாத திருமண்களினால் எவர்கள் இடுகிறார்களோ அவர்கள் அதனால் எனக்கோர் கோயில் கட்டுகிறார்கள் -என்று பகவான் அருளிச் செய்கிறார் –

———–

ராகா₃த்₃ய பேதம் ஹ்ருத₃யம் வாக₃து₃ஷ்டா (அ)ந்ருதாதி₃நா ।
ஹிம்ஸாதி₃ரஹித꞉ காய꞉ கேஸவ ஆராத₄நம் த்ரயம் ॥27॥

ஆசை முதலிய துர்குணங்களோடு கூடாத மனமும் -பொய் முதலிய தோஷங்கள் இல்லாத வாக்கும் -கொலை முதலிய பாதகங்களை செய்யாத காயமும் பகவானை ஆராதிப்பதற்குத் தகுந்த ஸாதனங்களாகும்-

நாவகாரியம் இல்லாத -நாவுக்கு அவகார்யம் கூடாதே

———-

அஹிம்ஸா ப்ரத₂மம் புஷ்பம் புஷ்ப மிந்த்₃ரிய நிக்₃ரே꞉ ।
ஸர்வபூ₄த த₃யா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விஸேஷத꞉ ॥28॥

ஜ்ஞாநம் புஷ்பம் தப꞉ புஷ்பம் த்₄யாநம் புஷ்பம் து ஸப்தமம் ।
ஸத்யமஷ்ட வித₄ம் புஷ்பம் விஷ்ணோ ꞉ ப்ரீதி கரம் ப₄வேத் ॥29॥

கொலை செய்யாமல் இருப்பது -ஐம் புலன்களையும் அடக்குவது -ஸர்வ பிராணிகளிடமும் தயையோடே கூடி இருப்பது -அபகாரம் செய்தவர்களிடங்களிலும் பொறுமையோடு கூடி இருப்பது -தத்வ ஞானம் உள்ளவனாக இருப்பது -விருத காலங்களில் காய சோஷணம் செய்வது -பகவானைத் த்யானம் செய்வது -எப்பொழுதும் ஸத்ய வாக்காய் இருப்பது -ஆகிய இந்த எட்டு குணங்களும் பகவானை ஆராதிக்கும் விஷயத்தில் எட்டு புஷ்ப்பங்களாகச் சொல்லப்பட்டு இருக்கின்றனவாகையால் இக்குணங்கள் பகவான் திரு உள்ளத்தை மிகவும் உகக்கச் செய்கின்றனவாம் –

————-

ஏவமாப்₄யந்தரைர் பா₃ஹ்யை ꞉ சிஹ்நை : பூ₄ஷித விக்₃ரஹ꞉ ।
(ஸ்நாதஸ் தீர்தே₂ஷு விதி₄வத் க்ருத தே₃வாதி₃தர்பண꞉ ॥30॥

அஷ்டோத்தர ஸதம் ஜப்த்வா மூலமந்த்ரம தந்த்₃ரித꞉ ।
ஸாம் ஸ்பர்ஶிகம் த்₃ரவ்ய ஜாதம் ததை ₂வா(ஆ)ப்₄யவ ஹாரிகம் ॥31॥

அப்யௌப சாரிகம் க்ருத்வா யாக₃பூ₄மேரளங்க்ருதிம் ।
யதீந்த்₃தரோதி₃தநித் யோக்தக்ர மேணைவ யஜேத்₃த₄ரிம் ॥32॥

இவ்வாறு மானஸீகங்களாயும் காயிகங்களாயும் பாகவத சிஹ்னங்களால் அலங்கரிக்கப் பட்டு இருக்கும் தேஹத்தை யுடையவராய் -புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து -தேவரிஷி தர்ப்பணம் முதலான ஸந்த்யாவந்தனாதிகளை அனுஷ்ட்டித்து -சோம்பல் இல்லாதவராய் -மூல மந்த்ரத்தை நூற்று எட்டு ஆவர்த்தி ஜபம் செய்து -பகவான் திருமேனிக்கு சுகத்தை உண்டாக்கத்தக்க சந்தன குஸூ மாதி வஸ்துக்களையும் அமுது செய்யத்தக்க பல பக்ஷ்யாதி ஹவிஸ்ஸுக்களையும் வைத்துக் கொண்டு திருவாராதனம் செய்யும் இடத்தில் கோலமிடுவது முதலியவைகளினால் அலங்காரம் செய்து ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்து இருக்கும் நித்ய கிரந்தத்தில் சொல்லியபடி பகவானை ஆராதிக்க வேண்டும் –

—————

ப்ரத₃க்ஷிண நமஸ்காரை ꞉ ஸ்தோத்ரை ரேகாந்தி ஸம்மதை ꞉ ।
யதா ₂ ப்₄ருத்யோ மஹா ராஜம் ப்ரீணயேத் ப்ரேம விஹ்வல꞉ ॥33॥

சேவகனாக இருக்கும் ஒருவன் தன் பிரபுவை எவ்வாறு அன்புடன் மனம் உகக்கச் செய்வானோ அவ்வாறு ஆத்ம ஸ்வாமியான பகவானை ப்ரபன்னன் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகளாலும் பரமை காந்தி ஸம் மதங்களான ஸ்தோத்ரங்களினாலும் திரு உள்ளம் உகக்கச் செய்ய வேண்டும் –

————

ததா ₂(ஆ)த்ம ஸ்வாமிநம் தே₃வம் ப்ரீணயேத் உபதி₄ம் விநா ।
மஹா வராஹோ ப₄க₃வான் அக₃ஸ்த்யாய யது₃க்தவான் ॥34॥

மஹா வராஹம் செய்த பெருமான் அகஸ்திய முனிவருக்கு உபதேசித்து இருக்கும் கீழ்ச் சொல்லிய பக்தி அங்கங்கள் யாவையும் அந்தவந்த காலங்களில் தவராமல் அனுஷ்ட்டிக்க வேண்டும் –

———-

ப₄க்த் யங்க₃ஜாதம் தத் குர்யாத் யதா ₂காலம் ஸமாஹித꞉ ।
மத்₃ப₄க்த ஜந வாத்ஸல்யம் பூஜாயாம் சாநுமாேத₃நம் ।
ஸ்வயமப்₄யர்சநம் சைவ மத₃ர்தே₂ த₃க்₃ப₄வர்ஜநம் ॥
35॥

மத் கதா ₂ஶ்ரவணே ப₄க்தி꞉ ஸ்வர நேத்ராங்க₃விக்ரியா |
மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோப ஜீவதி ॥36॥

ப₄க்திரஷ்ட விதா ₄ ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்ச்₂ரே (அ)பி வர்ததே ।
ஸ விப்ரேந்த்₃ரோ முநி꞉ ஶ்ரீமான் ஸ யதி꞉ ஸ ச பண்டி₃த꞉ ॥37॥

மூன்றரை ஸ்லோகங்களினால் மேற் சொல்லிய பக்தி அங்கங்களை அருளிச் செய்கிறார்
என் பக்தி ஜனங்களில் அன்பு -அவர்கள் செய்யும் ஆராதனத்தை சந்தோஷிப்பது -தாமும் ஆராதிப்பது -என்னுடைய கைங்கர்யங்களில் டம்பத்தை விடுவது -என் கதைகளைக் கேட்பதில் பக்தி -என் கதைகளில் சொல்லப்படும் சுக துக்கங்களைக் கேட்க்கும் பொழுது கண்ணீர் விடுதல் -குரல் தழ தழுப்பது -அங்கங்கள் பூரிப்பது -எப்பொழுதும் என்னையே நினைத்து இருப்பது -இப்படிச் செய்யப்படும் பக்தியினால் என்னிடத்தில் ஐஹிக ப்ரயோஜனங்களை விரும்பாமல் இருப்பது
ஆகிய இவ்வெட்டு வித பக்திகள் இவரிடத்தில் உண்டாகின்றனவோ அவர் மிலேச்ச ஜாதியில் பிறந்திருந்த போதிலும்
வாரீர் மஹா முனிவரே
அவர் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டராயும் யாதியாகவும் பண்டிதராகவும் இருக்கிறார்
ஆகையால் அவருக்குத் தானம் கொடுக்கத் தகும் -அவரிடத்தில் தானம் வாங்கத் தகும் – அவர் என்னைப் போலவே பூஜிக்கத் தக்கவராவார் –

கொடுமின் கொள்மின் -ஞானம் கொடுத்து பெறலாம்

—————–

தஸ்மை தே₃யம் ததோ க்₃ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ₂ ஹ்யஹம் ।
ஏவமர்சாவதாரம் து யஜேத் சவ்நக வாக்யத꞉ ॥38॥

ஸுரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ ꞉ ப்ரஸந்நவத₃நேக்ஷணாம் ।
க்ருத்வா(ஆ)த்மந꞉ ப்ரியகரீம் ஸுவர்ண ரஜதாதி
பி₄꞉ ॥39॥

சவுனாக மஹா முனிவர் அருளிச் செய்தபடியே பகவானுடைய அர்ச்சாவதாரத்தை கீழ்ச் சொல்லிய படியே ஆராதிக்க வேண்டும் -அதாவது மிகவும் அருள் பொருந்திய திருக்கண்களோடும் அழகுள்ள திருமுக மண்டலத்தோடும் கூடியதாகவும் -அதை ஸேவிக்கும் தமக்கு மிகவும் பக்தியை யுண்டாக்கத் தக்கதாகவும் பகவானுடைய பிரதிமையை பொன் வெள்ளி முதலிய லோஹங்களினால் செய்வித்து-அதில் பகவானை ஆவாஹனம் செய்து -அவரை மனஸ்ஸால் தியானித்து -அவருடன் தன்னை ஐக்யம் அடைந்ததாகவும் தியானிக்க வேண்டும் –

—————

(தஸ்யாம் ப்₃ரஹ்ம ஸமாரோப்ய மநஸா தந் மயோ ப₄வேத் ।
தாமர்சயேத் தாம் ப்ரணமேத் தாம் ப₄ஜேதாம் விசிந்தயேத் ॥40॥
விஸத்யபாஸ்த தோ₃ஷஸ்து தாமேவ ப்₃ரஹ்ம ரூபிணீம் ।)

அர்ச்சா ரூபியான அந்த பகவானை ஆராதிக்க வேண்டும் -அவரிடத்தில் வணங்க வேண்டும் -அவரை சேவிக்க வேண்டும் -அவரைத் தியானிக்க வேண்டும் -இப்படி அனுஷ்டிப்பதால் ஸகல தோஷங்களும் அற்ற இந்த பக்தன் பர ப்ரஹ்ம ஸ்வரூபரான அந்த பகவானை அடைகிறார் –

—————–

யத் கிசித₃பி குர்வாணோ விஷ்ணோர் ஆராயதநே வஸேத் ॥
விஷ்ண்வாலயே வஸேந் நித்யம் குர்யாத் தத் கர்ம ப₄க்தித꞉ ॥41॥

எதையாவது ஓர் கைங்கர்யத்தைச் செய்து கொண்டு ப்ரபன்னர் பகவானுடைய திவ்ய தேசங்களில் வஸிக்க வேண்டும் -எப்பொழுதும் திவ்ய தேசங்களில் வஸித்துக் கொண்டு தம்முடைய சக்திக்குத் தக்கபடிக்கு பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டும் –

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
ஊரிலேன் காணி இல்லேன்

—————-

யத்₃ப₃லம் மந்தி₃ரம் விஷ்ணோ : யத₃லங்காரகம் ப்ரியம் ।
போ₄கோ₃ப யுக்தம் வா கிஞ்சித் குர்யாந் நோபாய பு₃த்₃தி₄த꞉ ॥42॥

ப்ரபன்னர்கள் பகவானுக்கு ஸ்திரமாகக் கோயில் கட்டுவதும் -அவன் திரு உள்ளம் உகக்கும் படியாகத் திரு ஆபரணம் செய்வது -அவன் அமுது செய்யத்தக்க ப்ரஸாதம் முதலிய உபகாரங்களை ஸமர்ப்பிப்பது -இவை முதலிய கைங்கர்யங்களை தான் கோறிய பலன்களுக்கு சாதனங்களாக வேண்டும் என்று பிரார்த்தனையோடு செய்வது தகாது-கைங்கர்ய புத்தியுடனேயே செய்ய வேண்டும் என்று கருத்து –

————

யந் முஹுர்தம் க்ஷணம் வா(அ)பி வாஸுதே₃வோ ந சிந்த்யதே ।
ஸாஹாநி꞉ தந் மஹச் சி₂த்₃ரம் ஸா ப்₄ராந்தி꞉ ஸா ச விக்ரியா ॥43॥

ப்ரபன்னர்கள் பகவானைத் த்யானிக்காமல் ஒரு முஹூர்த்த காலத்தை யாவது அல்லது க்ஷண காலத்தை யாவது வீணாக்கப் போக்குவார்களாகில் அது தான் தங்களுக்கு ஓர் கெடுதி என்றும் அபாயம் என்றும் மதி மயக்கம் என்றும் தீங்கு என்றும் நினைக்க வேண்டும் –

—————-

ஏகஸ்மிந் நப்யதி க்ராந்தே முஹூர்தே த்₄யாந வர்ஜிதே ।
த₃ஸ்யுபி₄ர்முஷிதேநேவ யுக்த மாக்ரந்தி₃தும் ப்₄ருஸம் ॥44॥

ப்ரபன்னர்களுக்கு ஒரு முஹூர்த்த காலமாவது பகவத் த்யானம் இன்றியில் கழியுமாகில் அவர்களால் திருடர்களுக்குப் பறி கொடுத்தவர்கள் போலே மிகவும் குரல் பாய்ச்சி அழத் தகும்

————–

ஆலோட்₃ய ஸர்வ ஸாஸ்த்ராணி விசார்ய ச புந꞉ புந꞉ ।
இ₃தமேகம் ஸுநிஷ்பந்நம் த்₄யேயோ நாராயண: ஸதா ₃ ॥45

ஸர்வ ஸாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து அடிக்கடி விசாரித்த்துப் பார்த்ததில் இது ஓன்று தான் நன்றாகத் தேறியது -அதாவது எப்பொழுதும் பகவானைத் த்யானித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே –

—-

பஞ்சமீ -பகவத் பரிசர்யா பத்ததி -ஸம் பூர்ணம்

————-

ஷஷ்டீ -பகவத் பரிஜன உபாஸந பத்ததி

அத₂ லக்ஷ்மீம் ஸமப்₄யர்ச்ய பூ₄மி நீலாதி₃பி₄ஸ்ஸஹ ।
ஸூத்ரவத்யாதி₃பி₄ஶ் சைவ ப்ரபந்நேந விஸேஷத ꞉ ॥1॥

ப்ரபன்னராக இருக்கும் ஒருவர் பூ தேவி நீளா தேவி முதலிய திவ்ய மஹிஷிகளுடனும் ஸூத்ரவதி முதலிய பரிவார மஹிஷிகளுடனும் பகவானுக்குப் பெரிய பிராட்டியாரான ஸ்ரீ மஹா லஷ்மியை ஆராதிக்க வேண்டும் –

—————

கு₃ரூணாம் விஶ்ரமஸ்தா₂நம் ஈஸாநாம் ஜக₃தோ(அ)ஸ்ய ச ।
மஹிஷீம் தே₃வதே₃வஸ்ய தி₃வ்யாம் நித்யாநபாயிநீம் ॥2॥

நமது குரு பரம்பரை முடிவதற்கு ஓர் இடமாயும் இவ்வுலகத்துக்கும் மற்ற உலகங்களுக்கும் ஈஸ்வரியாகவும் தேவதேவனான பகவானுடன் என்றும் பிரியாத திவ்ய மஹிஷியான ஸ்ரீ மஹா லஷ்மியும் ப்ரபன்னருக்கு அவஸ்யம் ஆராதிக்கத் தக்கவள் –

————

யதா ₂(ஆ)ஹ ப₄க₃வாஞ்ச்சா₂ஸ்த்ரே விஷ்வக் ஸேநாய ஶ்ருண்வதே ।
லக்ஷ்ம்யாம் மயி ச யுஷ்மாஸு ப₄க்தோ யோ பு₄வி து₃ர்லப₄꞉ ॥3॥

இவ்வாறு பகவானும் விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து அருளி உள்ளார் -அத்தை அருளிச் செய்கிறார் –
வாரீர் விஷ்வக் சேனரே -என்னிடத்திலும் மஹா லஷ்மியிடத்திலும் உங்கள் இடங்களிலும் பக்தரான ப்ரபன்னர் அரிதாக இருக்கிறார் –

—————–

அநந்தரம் ஹரேஸ்ஸர்வை ꞉ உபசாரைஸ் ஸமாஹித꞉ ।
தத்₃வத்ஸமர்சயேத்₃தே₃வீம் தே₃வ தே₃வஸ்ய வல்லபா₄ம் ॥4॥

பகவானை ஆராதித்த பின்பு தேவ தேவனான பகவானுக்கு இனிய வல்லபை யாகிய பெரிய பிராட்டியாரை ஸர்வ உபசாரங்களினால் ஜாக்கிரதையுடன் பகவானைப் போலவே ஆராதிக்க வேண்டும் –

அதிகமனம் -நோக்கிச் செல்லுதல் -அடுத்து உபகரணங்களைச் சேகரித்து ஆராதனம்-

—————-

அஸ்யா வைப₄வமாக்₂யாதி தத்த்வரத்நே யதா ₂ ஹரி꞉ ।
பரவ்யூஹாதி₃கான் பஞ்ச ப்ரகாராநாத்மநோ வித₃ன் ॥5॥

தத்வ ரத்னம் என்னும் ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸம்ஹிதையில் பர வ்யூஹாதி ரூபங்களான தம்முடைய அவதார பேதங்களைச் சொல்லும் பகவான் இம்மஹா லஷ்மியின் வைபவத்தை அவ்விடத்தில் எவ்வாறு அருளிச் செய்கிறாரோ அதை அருளிச் செய்கிறோம் –

————–

ததா ₂ லக்ஷ்ம்யா꞉ ஸ்வரூபம் ச வக்ஷ்யே ஶ்ருணு ஸமாஹித꞉ ।
கு₃ணதஶ்ச ஸ்வரூபேண வ்யாப்திஸ் ஸாதாரணீ மதா ॥6॥

வாரீர் விஷ்வக் சேனரே -அப்படியே இம்மஹா லஷ்மியின் ஸ்வரூபத்தையும் சொல்லுகிறோம் -ஸாவதானமாய் இதைக் கேட்க வேண்டும் -அதாவது -குணத்தினாலும் -நியாமிகை -நியமிக்கிறவள் –
ஸ்வரூபத்தினாலும் -ஈஸ்வரி-ஆளுகிறவள்
ஸர்வ லோகங்களையும் வியாபித்து இருப்பது எங்கள் இருவருக்கும் பொதுவான தர்மமாகும் -இங்கு சொல்லிய ஸ்வரூபமாவது தீபத்தின் ஜ்வாலை போலே தேஜோ ரூபமாய் இருக்கும் ஓர் ஞான ஆஸ்ரயம் -அதன் குணமாவது தீபத்தின் ஒளி போலே ப்ரகாஸ ரூபமாய் இருக்கும் ஓர் ஞானம் -வியாபித்து இருப்பதாவது இவைகள் எங்கும் பரவி இருப்பதாகும் –

ஸ்ரீ எங்கள் ஆழ்வானுடைய ஸ்ரீ விஷ்ணு புராணத்துக்கு சி விஷ்ணு சித்தீயம் வியாக்யானம் ஒட்டியே இங்கு இவ்வாறு அருளிச் செய்கிறார்-

ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-அணுவாக இருந்தாலும் பிராட்டிக்கு இவ்வாறு வியாப்தி உண்டே -அநபாயினியாக இருப்பதால் -ஸ்வரூப நிரூபக தர்மம் -பகவான் விபுத்வேன சர்வ கத னான விஷ்ணு -யுடைய ஸ்வ பாவம் போல் -நீக்கமற நிறைந்து இருப்பது போல் இவளும் நீக்கமற நிறைந்து உள்ளாள் -தனக்கு உள்ள சக்தியால் விசேஷ அபிமானம் வைத்து அணுவாக இருந்தாலும் சர்வ கதத்வம் இவளுக்கும் ஆக்கி வைத்துள்ளான் –

———–

மயா யதா ₂ ஜக₃த்₃வ்யாப்தம் ஸ்வரூபேண ஸ்வபா₄வத ꞉ ।
தயா வ்யாப்த மித₃ம் ஸர்வம் நியந்த்ரீ ச ததே₂ஶ்வரீ ॥7॥

மேற் சொல்லிய படி ஸ்வரூபத்தினாலும் குணத்தினாலும் என்னால் இவ்வுலகம் எவ்வாறு வியாபிக்கப்பட்டு இருக்கின்றதோ அவ்வாறே இம்மஹா லஷ்மியினாலும் வியாபிக்கப்பட்டு இருக்கின்றது -என்னைப் போலவே இவளும் இவ்வுலகத்துக்கு நியாமிகையாகவும் ஈஸ்வரியாகவும் இருக்கின்றாள் –

விளக்கு -வெளிச்சம் எங்கும் பரவி குண வியாப்தி -சர்வத்வ வர்த்தமானத்தவம்
ஏகத்வ வர்த்தமானத்தவம் -விளக்கு
ப்ரஹ்மம் -ப்ரஹ்ம ஞானம் -இதே போல் -ப்ரஹ்மத்துக்கு ஸ்வரூப வியாப்தியும் உண்டு -இதுக்கு த்ருஷ்டாந்தம் சொல்ல முடியாதே –
நித்ய அநபாயினி என்பதால் அவளுக்கும் இவ்வாறே
ஆபாச விருத்திக்கு ஸுவ்பரி த்ருஷ்டாந்தம்

————–

மயா வ்யாப்தா ததா ₂ ஸா(அ)பி ததா ₂ வ்யாப்தோ(அ)ஹமீஶ்வர꞉ ।
மம தஸ்யாஶ்ச ஸே நேஸ ! வைலக்ஷண்யமித₃ம் ஶ்ருணு ॥8॥

வாரீர் விஷ்வக் சேனரே -என்னால் இம்மஹா லஷ்மியும் இம்மஹா லஷ்மியினால் யானும் ஒருவருக்கு ஓருவர் மேற் சொல்லிய ஸ்வரூபாதிகளினால் சூழப்பட்டு இருக்கிறோம் -ஆனால் எனக்கும் இம்மஹா லஷ்மிக்கும் பேதம் என் என்னில் அதைச் சொல்லுகிறோம் கேள்மின் -என்கிறார் –

———–

மச் சே₂ஷபூ₄தா ஸர்வேஷாமீஶ்வரீ வல்லபா₄ மம ।
தஸ்யாஶ்ச ஜக₃தஶ் சாஹமீஶ்வரோ வேத₃விஶ்ருத꞉ ॥ 9 ॥

ஸர்வர்களுக்கும் ஈஸ்வரியாகவும் எனக்கு மிகவும் இஷ்டையாகவும் இருக்கும் இம் மஹா லஷ்மி எனக்கு சேஷபூதையாய் இருக்கிறாள் -இம்மஹா லஷ்மிக்கும் இவ்வுலகங்களுக்கும் நான் ஈஸ்வரனாக வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கிறேன் –

————-

அஸ்யா மம ச ஸேஷம் ஹி விபூ₄தி ருப₄யாத்மிகா ।
இதி ஶ்ருதி ஶிரஸ் ஸித்₃த₄ம் மச் சா₂ஸ்த்ரேஷ்வபி மாநத₃ ॥10॥

யதா ₂ பூ₄மிஶ்ச நீலா ச தேஷபூ₄தே மதே மம ।
ததா ₂(ஆ)த்மநாஞ்ச ஸர்வேஷாம் ஜ்ஞாநதோ வ்யாப்திரிஷ்யதே ॥11॥

வாரீர் விஷ்வக் சேனரே -நித்ய விபூதி என்றும் லீலா விபூதி என்றும் விபூதிகள் இருவகைப்பட்டு இருக்கும் -இந்த உபய விபூதிகளும் எனக்கும் இம்மஹா லஷ்மிக்கும் சேஷ பூதங்கள் -யங்கள் இருவருக்கும் ஏற்றத்தைச் செய்வதற்காகவே இருப்பவர்கள் -இவ்வர்த்தம் வேதாந்த சாஸ்த்ரங்களிலும் ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்த்ரத்திலும் சொல்லப்பட்டு இருக்கின்றது -அப்படியே பூமி தேவி நீளா தேவிமார் இருவரும் எங்களுக்கு சேஷ பூதை களாக இருக்கிறார்கள் –

முக்த ஜீவர்களுக்கு எல்லாம் குணபூத ஞானத்தினால் மட்டும் வியாப்தி உண்டு -ஸ்வரூபத்தினால் வியாப்தி கிடையாது -இப்படியே பூமி தேவி நீளா தேவி இவர்களுக்கும் குண பூத ஞானத்தினால் மட்டும் வியாப்தி உண்டு ஒழிய ஸ்வரூபத்தினால் வியாப்தி கிடையாது-

விபூத்தவம் இல்லாத ஸ்வரூப வியாப்தி பெரிய பிராட்டியாருக்கு மட்டுமே -விசேஷ அபிமானத்தால் இவ்வாறு உண்டாக்கி வைத்துள்ளான் -நம்மாழ்வாருக்கு சூழ் விசும்பில் பரமபத அனுபவம் காட்டி அருளிச் செய்து வைத்தது போல் –

———————-

ஸ்வரூபதஸ்து ந தயோ ꞉ வ்யாப்திர் வேதா₃ந்த பாரக₃ ! ।
அஸ்மின் ஸாஸ்த்ரே யதா ₂(அ)ந்யத்ர ததா ₂ லக்ஷ்மீரபி ஸ்வயம் ॥12॥

ஸ்வஸ்ய நாத₂ஸ்ய ஸம்ப₃ந்த₄ம் வ்யாப்திமைஶ்வர்ய மேவ ச ।
அப்ருத₂க்₃பூ₄த ஸேஷித்வாத் ப்₃ரஹ்மாத்₃வைதம் தது₃ச்யதே ॥13॥

இந்தப் பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரத்தில் ஸ்ரீ மஹா லஷ்மி தனக்கும் தன் கணவனான பகவானுக்கும் இச் சேதன அசேதனங்களில் அடங்கவும் உண்டாயிருக்கும் சேஷ சேஷித்வ ரூப ஸம்பந்தத்தையம் -வியாப்தியையும் –ஆளுகையும்-எவ்வாறு சொல்லி இருக்கிறாளோ அவ்வாறே ஸ்ரீ ஸ்துதி ஸ்ம்ருதி சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டு இருக்கின்றது -ஆகையால் ப்ரஹ்மத்தின் சக்தி ரூபமான இம்மஹா லஷ்மி ப்ரஹ்மத்தைக் காட்டி லும் வேறுபடாமல் இருப்பதால் பஹ்மம் ஒன்றே என்று சொல்லப்படுகிறது –

—————

தஸ்ய யா பரமா ப₄க்தி: ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீ₃தி₄தே꞉ ।
ஸர்வாவஸ்தா ₂க₃தா தே₃வீ ஸ்வாத்மபூ₄தா (அ)நபாயிநீ॥
அஹந்தா ப்₃ரஹ்மணஸ் தஸ்ய ஸாஹமஸ்மி ஸநாதநீ ॥14॥

மேற் சொல்லியபடி இம்மஹா லஷ்மிக்கு பகவான் வேறுபாடு இல்லாமையை அருளிச் செய்கிறார் -சந்திரனுக்கு நிலவு போன்றதான அப்பரமாத்மாவின் சக்தி எதுவோ அது தான் அப்பரமாத்மாவுடன் ஸர்வ அவஸ்தையிலும் பிரிவில்லாமலும் அப்பரமாத்மாவின் ஸ்வரூபையுமாக இம்மஹா லஷ்மி சொல்லப்படுகிறாள்

பகவத் ஸாஸ்த்ரத்தில் தன் ஸ்வரூபாதிகளைப் பற்றி இம்மஹா லஷ்மி அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார் –

இம்மஹா லஷ்மி தான் பரமாத்மாவின் தன்மையாக இருக்கிறாள் என்றும் -இப்பரமாத்மா ஸர்வ பிராணிகளுக்கும் அந்தராத்மாவாய் இருப்பதால் அப்பிராணிகளைச் சொல்லும் தேவாதி பதங்கள் அப்பரமாத்மாவையும் சொல்லுகின்றது -அவ்வாறே அப்பரமாத்மாவின் தன்மையான தன்னையும் அப்பதங்கள் சொல்லும் விதத்தை இதனால் அருளிச் செய்கிறாள்

நான் அப்ப்ரஹ்மத்தின் தன்மையாக இருக்கிறேன் -அப்ப்ரஹ்மம் ஸர்வ பிராணிகளுக்கும் அந்தராத்மாவாக இருப்பதால் அந்த சர்வ பிராணிகளால் நான் என்று சொல்லத்தக்கவராக இருக்கிறார் -அது எப்படி என்னில் -ஆத்மஞானம் இல்லாத ஒருவன் தன் தேஹத்தைக் காட்டி நான் என்றால் அத்தேஹத்திற்க்கு ஆதாரமாக இருக்கும் ஆத்மாவும் அப்பதத்தில் பொருள் படுவது போலே -அவ்வாத்மாவுக்கும் ஆதாரமாக இருக்கும் இப்பரமாத்மாவும் பொருள் படுகிறார் என்பதாகும் –
இப்படிக்கு இப்பிராணிகள் இடத்தில் அடங்கி இருக்கும் அசித்து சித்து ஈஸ்வரன் என்ற மூன்று தத்வங்களும் வேறுபட்டு இருக்கச் செய்தேயும் இவற்றுள் அசித்தான தேஹ வாசகமான தேவன் மனிதன் என்ற பதங்களைக் கொன்டு இம்மூன்று தத்துவங்களையும் பேதம் இன்றி வ்யவஹரிக்கக் காரணம் என் என்னில்
இம்மூன்று தத்வங்களும் பிரிவின்றி ஒன்றாய்ச் சேர்ந்து வேறுபாடு தோன்றாமல் சரீரமாகவும் தேஹமாகவும் இருக்கை -இதைத்தான் விசிஷ்ட வைதிகர்கள் பிரதிதந்தரம் என்பார்கள் – பிரதிதந்தரமாவது இதர சித்தாந்திகளுக்கு இசையாததாய் தமது வேதாந்த ஸித்தாந்த மாத்திரத்தில் இசைவதாய் இருக்கும் ஓர் அர்த்தம் -அதாவது ஸர்வ பூதங்களுக்கும் ஈஸ்வரனுக்கும் இங்கு சொல்லிய சரீர ஆத்ம பாவம் இதைக்கொண்டு தான் -இம்மூன்று தத்துவங்களில் பிரதானனாயும் மற்றவர்களுக்கு தாரகனாயும் இருக்கும் இப்பரமாத்மாவைக் கொண்டு விஷ்ணுர் ஏவ ஜகத் ஸர்வம் என்றும் ப்ரஹ்ம ஏவ சகலம் ஜகத் என்றும் சில ஸாஸ்த்ரங்களிலே ப்ரஹ்மத்தையே ஸகல ப்ரபஞ்சங்களாயும் சொல்லுகிறது

ஆகையால் இப்பிராணிகள் நான் என்று வியவஹரித்தால் அதில் பரமாத்மா பொருள் படுவதால் இம்மஹா லஷ்மி யான் அதில் தோற்றும் தன்மையாக இருக்கிறேன் என்கிறாள் –

————–

ஆத்மாஸ்மி ஸர்வபூ₄தாநாம் அஹம்பூ₄தோ ஹரி꞉ ஸ்ம்ருத꞉ ॥15॥
(அஹந்தா ஸர்வ பூ₄தாநாம் ஸாஹமஸ்மி ஸநாதநீ ।)
யேந பா₄வேந ப₄வதி வாஸுதே₃வ꞉ ஸநாதந꞉ ॥16 |

பகவான் எல்லா இடங்களிலும் வஸிப்பதால் வாஸூ தேவன் என்று சொல்லப்படுகிறார் -இப்படிக்கு பகவான் எல்லா இடங்களிலும் வஸிக்கிறார் என்பதை தேச காலங்களில் குறைவு படுத்துவதற்கு யாதொரு பிரமாணமும் இல்லாமையால் அவர் ஸர்வ தேச ஸர்வ காலங்களில் உள்ளவர் என்றும் -ஆகையால் அவர் ஓர் வஸ்து என்றும் ப்ரஹ்மம் என்றும் ஏற்படுகின்றது -ஆகையால் அவர் இச்சேதனருக்கு அழியாத பேறாக இருக்கிறார் –

——–

(ப₄வத்₃பா₄வாத்மகம் ப்₃ரஹ்ம ததஸ்தச்சா₂ஶ்வதம் பத₃ம் ।)
ப₄வாந் நாராயணோ தே₃வோ பா₄வோ லக்ஷ்மீரஹம் பரா ॥17 ॥

முன் ஸ்லோகத்தில் சாமான்யமாக ப்ரஹ்ம ஸ்வரூபத்தைச் சொல்லி இந்த ஸ்லோஹத்தினால் அந்த ஸ்வரூபம் உள்ள லஷ்மி நாராயணனே பரப்ரஹ்மம் என்று சொல்லுகிறாள் –
மேற் சொல்லிய சத்தையோடு கூடியவர் -சத்தை –உண்மை -இருக்கை -ஸர்வ உத்தமனான நாராயணன் -ஸ்ரீ மஹா லஷ்மி என்றும் திருநாமத்தை யுடைய நான் மேற் சொல்லிய சத்தையாக இருக்கிறேன் –
ஆகையால் ஸ்ரீ மஹா லஷ்மியுடன் கூடிய ஸ்ரீ மன் நாராயணனே என்றும் ஆதியும் அந்தமும் இல்லாத பரப்ரஹ்மம் –

ஸர்வத்ர வஸதி வாஸூ தேவன்
பவது -இருப்பது -பாவ -இருக்கும் தன்மை -சத்தை -அவளுடன் இருப்பதாலேயே இருக்கும் தன்மை –

————

லக்ஷ்மீ நாராயணாக்₂யம் தத் ததோ ப்₃ரஹ்ம ஸநாதநம் ।
அஹந்தயா ஸமாயுக்தோ ஹ்யஹமர்த₂꞉ ப்ரஸித்₃த்₄யதி ॥18॥

வேதாந்தம் முதலிய ஸாஸ்திரங்களில் ப்ரஹ்மம் ஏகம் என்று சொல்லப்படுகின்றது -நீர் மேற் சொல்லிய ஸ்லோகத்தின் படி ஸ்ரீ லஷ்மீ நாராயணன் ப்ரஹ்மமாகில் ப்ரஹ்மம் இரண்டு என்று ஏற்படுகிறதே -அது கூடுமோ என்னில்
இம்மஹா லஷ்மி தமக்கும் பரமாத்மாவுக்கு பேதம் இல்லாமையால் ப்ரஹ்மம் ஏகம் என்று சொல்லக்கூடும் என்கிறாள் -இந்த ஸ்லோகத்தினால்
நான் என்பதற்குப் பொருள் தன்மையோடு கூடியதாகவே கிடைக்கின்றது -இத்தன்மையும் நான் என்ற பொருளில் கிடைக்கிறது -இவ்விரண்டும் ஒன்றோடு ஓன்று பிரிவின்றி சேர்ந்தே இருப்பதால்
இவ்வர்த்தங்களாக இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி பரமாத்மா ஆகிய இருவருக்கும் பேதமில்லை
ஆகையால் ப்ரஹ்மம் ஏகம் என்று சொல்லக் குறை இல்லை

மேற் சொல்லியபடி ஸ்ரீ மஹா லஷ்மியின் வைபவத்தைப் பற்றி இதர சாஸ்திரங்களிலும் சொல்லியவற்றை அருளிச் செய்கிறார் –

—————

அஹமர்த₂ ஸமுத்யா ச ஸா(அ)ஹந்தா பரிகீர்திதா ।
அந்யோந்யஸ்யா(அ)விநாபா₄வாத் அந்யோந்யேந ஸமந்வயாத் ॥19॥

தாதா ₃த்ம்யம் வித்₃தி₄ ஸம்ப₃ந்த₄ம் மம நாத₂ஸ்ய சோப₄யோ ꞉ ।
பராஸரஸ்து ப₄க₃வான் ஹைநாம் ப்₃ரஹ்ம ரூபிணீம் ॥20॥

பராசர முனிவரும் இம்மஹா லஷ்மியை பரப்ரஹ்ம ஸ்வரூபியாக ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் ஸர்வ ஜகத்துக்கும் மாதவாய் இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி நித்ய ஸ்வரூபையாகவும் பரமாத்மாவான பகவான் இடமிருந்து என்றும் பிரிவில்லாமலும் இருக்கிறாள் -பரமாத்மா ஸர்வ வ்யாபியாக இருப்பது போல் இம்மஹா லஷ்மியம் ஸர்வ வியாபியாக இருக்கிறாள் –

தாதார்த்தம் -அவனுக்காகவே இவள் -இவளுக்காகவே அவன் –

——————

நித்யைவைஷா ஜக₃ந்மாதா விஷ்ணோ ꞉ ஶ்ரீரநபாயிநீ ।
யதா ₂ ஸர்வக₃தோ விஷ்ணு꞉ ததை ₂வயம் த்₃விஜோத்தம ! ॥21॥

தே₃வ திர்யங் மநுஷ்யேஷு புந்நாமா ப₄க₃வான் ஹரி꞉ ।
ஸ்த்ரீநாம்நீ லக்ஷ்மீ மைத்ரேய ! நாநயோர் வித்₃யதே பரம்
॥22 ॥

வாரீர் மைத்ரேய முனிவரே
தேவர் பசு மிருகம் பஹ்யாதிகளான திர்யக்குகள் மனிதர்கள் இவர்களில் ஸ்த்ரீ ரூபிகளாய் இருக்கும் அனைவரும் ஸ்ரீ மஹா லஷ்மி -புருஷ ரூபிகளாக இருக்கும் அனைவரும் பகவானது ஸ்ரீ மன் நாராயணன் என்றால் ஸ்த்ரீகள் லஷ்மி தேவியின் விபூதிகள் -புருஷர்கள் பகவானுடைய விபூதிகள் –
முன் ஸ்லோகத்தினால் இருவருமே ஸர்வ வ்யாபிகளாய்ச் சொல்லப்பட்டது -இங்கு இவ்வாறு பிரித்துச் சொல்வது எதனால் என்றால் இருவர்களும் சமானமாய் அந்தராத்மாவாய் -அந்தர்யாமிகளாய் -இருக்கச் செய்தேயும் ஸ்திரீகளை நியமிப்பதில் லஷ்மிக்கும் புருஷர்களை நியமிப்பதில் பகவானுக்கும் முயற்சி அதிகம் என்று கருத்து –

—————–

அபராதை₄க ஸக்தாநாம் அநர்ஹாணாம் சிரம் ந்ருணாம் ।
ப₄ர்துராஶ்ரயணே பூர்வம் ஸ்வயம் புருஷகாரதாம்
॥23 ॥

வால்லப்₄யே நாநுதிஷ்ட₂ந்தீம் வாத்ஸல்யாத்₃ யுப ப்₃ருஹிம்ணீம் ।
உபாயஸமயே ப₄ர்து꞉ ஜ்ஞாந ஸக்த்யாதி₃வர்தி₄நீம் ॥24॥

(முக்தாநாம் போ₄க₃வ்ருத்₃த்₄யர்த₂ம் ஸௌந்த₃ர்யாதி₃விவர்தி₄நீம் ।)
ஆகார த்ரய ஸம்பந்நாம் அரவிந்த₃ நிவாஸிநீம் ॥25 ॥

இம்மஹா லஷ்மி உபாயத்வ உபேயத்வ புருஷகாரத்வ ரூபங்களான மூன்று ஆகாரங்களோடு கூடியவள் என்பதை இதனால் அருளிச் செய்கிறார் –
எப்பொழுதும் அபராதங்களையே செய்வதில் மனமுடையவர்களான இச்சேதனர்கள் தன் பர்த்தாவான பகவானை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில் பகவானுக்கு தாம் இஷ்டையாய் -வல்லபையாய் -இருப்பதால் அவனுக்கு இச்சேதனர்கள் இடத்தில் மிகவும் கிருபையை வளரச் செய்பவளாயும் -புருஷகாரம் செய்பவளாயும் –
இச்சேதனர்கள் உபாயத்தை அனுஷ்ட்டிக்கும் சமயத்தில் தம்முடைய கணவனுக்கு இச்சேதனர்களைக் காப்பதற்கு போந்தவைகளான ஞான சக்தியாதிகளை விருத்தி செய்பவளாயும்
முக்தர்களாகும் இச்சேதனர்களுக்கு பரிபூர்ண ஆனந்த அனுபவம் உண்டாகும்படி தனது வல்லபனான பகவானுக்கு தன்னுடைய சம்பந்தத்தினால் ஓர் அளவற்ற வடிவழகை யுண்டாக்கிறவளாய் இருப்பதால்
உபாயத்வ உபேயத்வ புருஷகாரத்வ ரூபங்களான மூன்று ஆகாரங்களோடு கூடியவளாகவும்
ஸர்வ லோக ஈஸ்வரியாகவும்
தம்மை அடைந்தவர்களுக்கு ஸர்வ ஐஸ்வர்யங்களையும் அளிப்பவரான -பகவானுக்கு மிகவும் இஷ்டதமையுமான தாமரை மேல் வீற்று இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மியை ஸேவிக்கிறேன் –

———–

அஸேஷ ஜக₃தீ₃ஶித்ரீம் வந்தே₃ வரத₃வல்லபா₄ம் |
ததா ₂ பூ₄மிம் ச நீலாம் ச தே₃வஶ்சாந்யா꞉ ஸஹஸ்ரஸ ꞉ ॥26 ॥

நித்ய ஸூரிப்ரோ₄நாம்ஶ்ச தத் தந் மந்த்ரை ꞉ ஸமர்சயேத் ।
யத்₃த₄ஸ்வேத்ரவஸக₃ம் ஜக₃ச்சித₃சிதா₃த்மகம் ॥27 ॥

அப்படியே பூ தேவியையும் நீளா தேவியையும் மற்றுமுள்ள அவனுடைய அநேக திவ்ய மஹிஷிகளையும் மற்றும் விஷ்வக் சேனர் முதலிய பிரதானர்களான நித்ய ஸூரிகளையும் அவர்களுக்குச் சொல்லிய மந்திரங்களினால் ஆராதிக்க வேண்டும் –

வேத்ரம் -திருப்பிரம்பின் கீழ் வளர்ந்த வஸ்து ப்ரஹ்மம்

—————-

விஷ்ணே ரமாத்யம் ஸேநேஸம் பரிவாரைஸ் ஸமர்சயேத் ।
யே நித்ய ஸூரயோ (அ)நந்த க₃ருடா₃த்₃யா꞉ ஸஹஸ்ரஸ ꞉ ॥28 ॥

சேதன அசேதன ரூபங்களான இவ்வுலகம் அனைத்தும் விஷ்வக் சேனர் திருக்கையில் பிடித்து இருக்கும் செங்கோலின் வசமாக இருப்பதால் விஷ்வக் சேனரை அவரது பரிவாரங்களோடு ஆராதிக்க வேண்டும் –

————-

பரிவாரை ꞉ ஸஹைதாம்ஶ்ச சக்ராதீ₃ந்யாயுதா ₄நி ச ।
தே₃வ்யஶ்ச ஸூத்ரவத் யாத்₃யா꞉ யா லக்ஷ்ம்யா꞉ பரிசாரிகா꞉ ॥29॥

பின்னும் அநந்த கருடாதிகளாயுள்ள அநேகம் நித்ய ஸூரிகள் எவர்களோ அவர்களையும் அவர்களின் பரிவாரங்களையும்
ஸ்ரீ ஸூதர்சனம் முதலிய திவ்ய ஆயுதங்களையும் ஸ்ரீ மஹா லஷ்மியின் பரிசாரிகளாய் இருக்கும் விஷ்வக் சேனர் முதலிய நித்ய ஸூரிகளுக்கு பத்னிமார்களான ஸூத்ரவதி முதலிய நித்ய ஸூரிகளையும் அவர்களின் பரிவாரங்களையும் அவர்களின் அந்தஸ்தின் கிரமப்படி ஆராதிக்க வேண்டும் –

————

தாஶ்ச தத் பரிவாரம் ச பூஜயேத் தத ₃நுக்ரமாத் ।
ப₄ஜந்தே யே ததா ₂ விஷ்ணோ : ஆக₃தா மந்தி₃ரே ஸுரா꞉ ॥30॥

நித்ய ஸூரிகளின் கோஷ்ட்டியில் சேராதவர்களாய் -பகவத் ஸேவார்த்திகளாய் -பகவானுடைய ஆலயத்தில் வந்திருக்கும் தேவர்கள் முமுஷுக்களான ப்ரபன்னர்களால் ஆராதிக்கத்தக்கவர்கள் அன்று

———–

விநா விதா₄நம் நித்யேஷு நோபாஸ்யா: தே முமுக்ஷுபி₄꞉ ।
ப்₃ரஹ்ம ருத்₃ரார்ஜுந வ்யாஸ ஸஹஸ்ர கர பா₄ர்க₃வா꞉ ॥31॥

ககுத்ஸா(அ)த்ரேய கபில பு₃த்₃தா₄த்₃யா யே ஸஹஸ்ரஸ ꞉ ।
ஸக்த்யா வேஸாவதாராஸ்தே விஷ்ணோஸ் தத் கால விக்₃ரஹா ꞉ ॥32॥

முமுஷு உபாஸ்யத்வம் -முக்கியமான குணம் –போற்றும் புனிதன் -ராமானுஜன் -உபாசனம் அல்ல

பிரம்மதேவன் ருத்ரன் அர்ஜுனன் வ்யாஸ முனிவர் பரசுராமன் காகுஸ்த மஹா ராஜன் தத்தாத்ரேயர் கபில மகரிஷி புத்தர் இவர்கள் முதலாக பகவானுடைய அவதாரங்களாகச் சொல்லப்படும் அநேகர் சிலகாலம் இவர்கள் இடத்தில் பகவானுடைய சக்தி அனுபிரவேசம் இருந்ததால் சக்தி ஆவேச அவதாரங்கள் என்பர் -பகவானுடைய சக்தி இருந்தவரையில் பகவானுக்கு சரீரங்களாயும் அச்சக்தி நீங்கிய பின்னர் அக்னி முதலிய தேவர்களைப் போல் இவர்களும் சாமான்யவர்களாக இருப்பதால் முமுஷுக்களான ப்ரபன்னர்களால் ஆராதிக்கப்படத் தக்கவர்கள் அல்லர்

———-

அநுபாஸ்யா முமுக்ஷூணாம் யதே₂ந்த்₃ராக்₃ந்யாதி₃தே₃வதா ꞉ ।
யதா ₂ ப₄க₃வதை வோக்தம் விஷ்வக்ஸேநாய ஶ்ருண்வதே ॥33॥

முமுஷுக்களுக்கு ஆராதிக்கத் தகாதவர்களான தேவர்கள் தம்மிடத்தில் ஸாஸ்த்ரார்த்தங்களைக் கேட்க்கும் -விஷ்வக் சேனருக்கு பகவான் எவ்வாறு உபதேசித்தாரோ -அதைச் சொல்லுகிறோம் –

——–

அநுகாலம் முமுக்ஷூணா மநுபாஸ்யா விஸேஷத꞉ ।
அநர்ச்யாநபி வக்ஷ்யாமி ப்ராது₃ர் பா₄வான் யதா ₂க்ரமம் ॥
34॥

சதுர்முக₂ஸ்து ப₄க₃வான் ஸ்ருஷ்டி கார்யே நியோஜித꞉ ।
ஸங்கராக்₂யோ மஹான் ருத்₃ர꞉ ஸம்ஹாரே விநியோஜித꞉ ॥35॥

மாேஹநார்தே₂ ததா ₂ பு₃த்₃த₄꞉ வ்யாஸஶ் சைவ மஹாந்ருஷி꞉ ।
வேதா ₃நாம் வ்யஸநே தத்ர தே₃வேந விநியோஜித꞉ ॥36॥

அர்ஜுநோ த₄ந்விநாம் ஶ்ரேஷ்தடோ ₂ ஜாமத₃க்₃ந்யோ மஹாந்ருஷி꞉ ।
வஸூநாம் பாவகஶ்சா(அ)பி வித்தேஸஶ்ச ததை ₂வ ச ॥37॥

(யத்₃யத்₃விபூ₄திமத் ஸத்த்வம் ஶ்ரீமதூ₃ர்ஜிதமேவ வா ।
தத்ததே₃வாவக₃ச்ச₂ த்வம் மம தேஜோம்(அ)ஸ ஸம்ப₄வம் ॥38 ॥)

யத்₃யத்₃விபூ₄திமத் ஸர்வம் ஶ்ரியா ஜுஷ்டம் விஸேஷத꞉ ।
ராக₃த்₃வேஷ விஹீநம் து ஸ்வதோ ப₃லவது₃ல்ப₃ணம் ॥39॥

தத்த₃ம்ஸம் விஜாநீயாத் மம கார்யார்த₂மாத₃ராத் ।
ஏவமாத்₃யாஸ்து ஸேநேஸ ! ப்ராது₃ர்பா₄வை ரதி₄ஷ்டி₂தா ꞉ ॥40 ॥

ஜீவாத்மாநஸ் ஸர்வ ஏதே நோபாஸ் யாஸ்தே முமுக்ஷுபி₄꞉ ।
ஆவிஷ்ட மாத்ராஸ்தே ஸர்வே கார்யார்த₂ம் அமிதத்₃யுதே ॥41

முமுஷுக்களுக்கு பூஜிக்கத் தகாதவர்களான என்னுடைய ஆவேச அவதாரங்களைச் சொல்லுகிறேன் –
சதுர்முகனான பிரமன் உலகங்களை ஸ்ருஷ்டிக்க என்னால் நியமிக்கப்பட்டவன்
சங்கரன் என்னும் ருத்ரன் ஸம்ஹாரம் செய்ய என்னால் நியமிக்கப்பட்டவன்
புத்தன் பாபங்களைச் செய்த பிராணிகளுக்கு மோஹத்தை உண்டாக்க என்னால் நியமிக்கப்பட்டவன்
வ்யாஸ முனிவர் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும் நான்கு வேதங்களுக்கும் ருக்கு யஜுர் சாமம் அதர்வணம் என்ற பிரிவுகளைச் செய்வதற்காக என்னால் நியமிக்கப்பட்டவன்
இவர்களும் பின்னர் வில்லாளிகளில் சிறந்தவனான அர்ஜுனனும் மஹரிஷியான பரசுராமனும் அஷ்ட வசுக்களில் ஒருவனான பாகவன் என்னும் வாசுவும் குபேரன் என்னும் திக் பாலனும்
பின்னும் இவர்களைப் போல் பிரபுத்வமான ஐஸ்வர்யத்துடனும் சம்பத்து கொண்டவர்களாயும் -ராக துவேஷாதி துர்குணங்கள் இல்லாதவராயும் -பல பராக்ரமுள்ளவர்களாயும் இருக்கும் பிராணிகள் எவர்களோ அவர்கள் அனைவருமே ஓரோர் காரியத்துக்காக என்னுடைய ஓர் அம்சத்துடன் கூடியவர்களாக அறியவேண்டும் –
இப்படிக்கு என்னுடைய அம்சத்தால் அடையப்பட்டு இருக்கும் இவர்கள் ஜீவர்களாக இருப்பதால் இவர்கள் வைஷ்ணவர்களால் பூஜிக்கத் தக்கவர்கள் அல்லர் –

——–

அநர்ச்யா: ஸர்வ ஏவைதே விருத்₃த₄த்வாந் மஹாமுநே ।
அஹங்க்ருதி யுதாஶ் சைதே ஜீவமிஶ்ரா ஹ்யதி₄ஷ்டி₂தா꞉ ॥42 ॥

ஒரு கார்ய நிமித்தமாக என்னாலே அனுபிரவேசிக்கப்பட்டு இருக்கும் இஜ்ஜீவர்கள் கர்மபரவசப்பட்டு இருப்பவர்களாதலால் கர்ம பந்தத்தை நீக்கிக்கொள்ள விரும்பும் ப்ரபன்னர்களுக்கு உபாஸிக்கத் தக்கவர்கள் அல்லர் -பகவானால் அனுபிரவேசிக்கப்பட்டு இருக்கும் இவர்கள் ஸ்வ தந்திரம் என்னும் அஹங்காரத்துடன் கூடியவர்கள் –

———-

ப்ராது₃ர் பா₄வாஸ்து முக்₂யா யே மத₃ம் ஸத்வாத்₃ விஸேஷத꞉ ।
அஜஹத் ஸ்வ ஸ்வபா₄வா ஹி தி₃வ்யா꞉ ப்ராக்ருத விக்₃ரஹா ꞉ ॥43॥

தீ₃பாத்₃தீ₃ப இவோத்பந்நா ஜக₃தோ ரக்ஷணாய தே ।
அர்ச்யா ஏவ ஹி ஸேநேஸ ஸம் ஸ்ருத் யுத்தரணாய வை
॥44॥

விசேஷித்து என்னுடைய அம்சமாகவே இருப்பதினால் முக்கியமானவைகளாக இருக்கும் ராம கிருஷ்ண முதலிய அவதாரங்களோ என்னில் அவைகள் கர்மபந்தமில்லாத -அபஹத பாப்மா முதலிய ஸத் குணங்களோடு கூடியவைகளாயும் -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹங்களோடு கூடியவைகளாயும் -தீபத்தில் இருந்து உண்டாகும் தீபங்கள் போல் இவ்வுலகோரை ரக்ஷிப்பதற்காகவே அவதரித்தவைகள் ஆகையால் இவ்வவதாரங்கள் சம்சாரத்தைக் கடப்பதற்கு ப்ரபன்னர்களால் ஆராதிக்கத் தக்கவைகளாகும்-

——————–

யதாஹ₂ப₄க₃வான் வ்யாஸ꞉ புராணே ச பராஸர꞉ ।
ப்₃ரஹ்மாணம் ஶிதிகண்ட₂ம் ச யாஶ்சாந்யா தே₃வதாஸ்து தா ꞉ ॥45 ॥

ப்ரதிபு₃த்₃தா ₄ ந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் ப₂லம் ।
அந்யே து புருஷ வ்யாக்₄ர ! சேதஸா யே வ்யபாஶ்ரயா꞉ ॥46॥
அஸூத்₃தா₄ஸ்தே ஸமஸ்தாஸ்து தே₃வாத்₃யா꞉ கர்மயோநய꞉ ॥

வ்யாஸ முனிவரும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பராசர முனிவரும் எவ்வாறு அருளிச் செய்துள்ளார்களோ அவற்றை அருளிச் செய்கிறோம்
பிரமதேவன் சிவன் முதலிய பகவானை ஒழிந்த தேவர்கள் இவர்களோ அவர்கள் தங்களை அடைந்த வர்களுக்கு மோக்ஷம் ஒழிந்த ஸ்வல்ப பலன்களை கொடுப்பவர்களாகையால் முமுஷுக்கள் அவர்களை அடைவதில்லை

பராசர முனிவர் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார் –

வாரீர் புருஷ ஸ்ரேஷ்டரான மைத்ரேய முனிவரே -மொஸார்த்திகளினால் தியானிக்கத் தகாதவர்களான பகவானை ஒழிந்த மற்ற தேவர்கள் துஷ்க்ருத ஸூஹ்ருத ரூப கர்மங்களினால் வசப்பட்டு அசுத்தராக இருப்பவர்கள் -ஆகையால் அவர்கள் பிரபன்னர்களால் ஆராதிக்கத் தகுந்தவர்கள் அல்லர் –

—–

ஷஷ்டீ₂–ப₄க₃வத் பரிஜந உபாஸநா பத்₃த₄தி–ஸம் பூர்ணம்

————

அத₂ -ஸப்தமீ-பா₄க₃வத் உபாஸநா பத்₃த₄தி꞉

வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தஞ் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர் பாகவத ஸஹ -முனிவர்களும் யோகிகளும் -குண நிஷ்டர்கள் -கைங்கர்ய நிஷ்டர்கள்-ஆச்சார்யர் -மந்த்ர ப்ரதன் -அடுத்து -பகவத் -இப்பொழுது பாகவத -ஸத்துக்கள் உபாஸனம் –-ஆச்சார்யர் வைபவம் காட்டிக்கொடுத்தவர் யாதலால் பாகவதர் ஸ்ரேஷ்டர் -கண்ணி நுண் சிறுத்தாம்பு பிரவேசம் –மற்றவரைச் சிரித்து இருப்பார் மதுரகவி ஆழ்வார் ஒருவரே -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்க்கு அடிமை -திருவாய் மொழிகளின் ப்ரமேயம் -பாகவதர்களே உபாயம் -உபேயம் -சேஷீ –

அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ —விபவம்–காசை இழந்தவனை விட -அர்ச்சை -பொன்னை இழந்தவனை விட -பாகவத சமாஹம் -வைரம் இழந்தது போல் மிக்க வருத்தம்-கேசவ பக்தியை விடவே -கேசவ பக்த பக்தி ஸ்ரேஷ்டம் – வேதகப்பொன் போல் இவர்களோட்டை ஸம்பந்தம்

ஶ்ருதார்த₂ஸம்ஸ யோச்சி₂த்யை போ₃த₄நாய பரஸ்பரம் ।
ஸாத ₄வஸ்த்வபி₄க₃ந்தவ்யா꞉ ஸந்தஸ் ஸங்க₃ஸ்ய பே₄ஷஜம் ॥1॥

வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கும் அர்த்தங்களிலாவது -ஆச்சார்யர்களிடம் கேட்க்கப்பட்ட அர்த்தங்களிலாவது உண்டாகும் ஸம்சயங்களைப் போக்கிக் கொள்வதற்காகவும் -ஒருவருக்கு ஒருவர் ஞானத்தை யுண்டாக்கிக் கொள்வதற்காகவும் -தங்களுக்கு உண்டாயிருக்கும் விஷய அனுபவங்களாகிய நோய்க்கு ஓர் மருந்தாக இருக்கும் சாதுக்களான ஞானிகள் ப்ரபன்னர்களினால் அடையத் தக்கவர்கள்

——————

(யதா₂ஹ ப₄க₃வான் வ்யாஸோ விஷய த்யாக₃ பே₄ஷஜம் ।
ஸங்க₃꞉ ஸர்வாத்மநா த்யாஜ்ய꞉ ஸ சேத் த்யக்தும் ந ஸக்யதே ॥2 ॥

பகவானாக வ்யாஸ முனிவர் விஷய அனுபவங்களை விடுவதற்கு ஓர் உபாயம் சொல்லி இருக்கிறார் -அதைச் சொல்லுகிறோம் -ப்ரபன்னர்கள் ஸர்வ பிரகாரத்தாலும் இவ் விஷய அனுபவங்களை விடவேண்டும் -விடுவதற்கு அஸக்யமாக இருக்குமாகில் அப்பொழுது ஸாதுக்களான ஞானிகளை ஆஸ்ரயிக்க வேண்டும் -அவர்கள் இவ்விஷய அனுபவங்களைப் போக்கும் மருந்தாக இருக்கிறார்கள் –

——————

(ஸாத₄வஸ்த்வபி₄க₃ந்தவ்யா꞉ ஸந்தஸ் ஸங்க₃ஸ்ய பே₄ஷஜம் ।)
விசிகித்ஸா யதா ₃ து ஸ்யாதா₃த்மந꞉ கர்ம வ்ருத்தயோ ꞉ ॥3 ॥

தத்ர ஸம்மர்ஶிநோ யுக்தா யே விப்ரா꞉ ஸத்பதே₂ ஸ்தி₂தா ꞉ ।
தேஷாம் ஸமீபம் விநயாத் உபேத்யார்த₂ம் து ஶிக்ஷயேத் ॥4॥

ப்ரபன்னராய் இருக்கும் ஒருவருக்கு தாம் அனுஷ்ட்டிக்கும் கர்மங்களிலும் தம்முடைய நடத்தைகளிலும் ஸந்தேஹம் யுண்டாகில் அது விஷயத்தில் ஸாஸ்த்ர விசாரம் யுடையவராயும் -சன்மார்க்கத்தில் நிஷ்டை யுடையவராயும் -ஞானிகளுமான ப்ராஹ்மணர்களின் சமீபத்தில் சென்று அவ்வர்த்தத்தை சந்தேகமறத் தெரிந்து கொள்ள வேண்டும் –

——————-

யதா ₂ தே தத்ர வர்தேரன் ததா ₂ வர்ததே ஸாத்த்விக꞉ ।
அபி₄க₃ந்தவ்யா꞉ ஸந்தோ யத்₃யபி குர்வந்தி நைகமுபதே₃ஸம் ।
யாஸ்தேஷாம் ஸ்வைரகதா ₂꞉ தா ஏவ ப₄வந்தி ஸாஸ்த்ராணி ॥5॥

ஞானிகளான சாதுக்களை ஆஸ்ரயித்து இருக்கும் பிரபன்னர் அவர்கள் எந்த நன்னடத்தையுடன் கூடியவர்களாக இருக்கிறார்களோ அதே நன்னடத்தையுடன் கூடியவர்களாக இருக்க வேண்டும் -அந்த ஞானிகள் தன்னை ஆஸ்ரயித்து இருக்குமவர்களுக்கு அநேகமாய் ஸத் உபதேசங்களைச் செய்யவே செய்வார்கள் -அப்படிக்கு நேரா விடினும் அவர்கள் தன்னிச்சையாய் சொல்லிக்கொண்டு இருக்கும் கதைகளும் கூட ஸாஸ்த்ரார்த்தமாகவே இருக்கும் –

கலை இலங்கு மொழியாளர் -திண்ணைப் பேச்சும் ஸ்ருதார்த்தங்களே -சொல்லும் அடு ஸ்ருதியாம்

————–

சவ்நகஸ்து யதா ₂ ப்ராஹ ஸாதூ₄நாம் த₃ர்ஸநே ததா ₂ ।
ஸுதூ₃ரமபி க₃ந்தவ்யம் யத்ர பா₄க₃வதா ꞉ ஸ்தி₂தா ꞉ ॥6॥

ப்ரயத்நே நாபி த்₃ரஷ்டவ்யா꞉ தத்ர ஸந்நிஹிதோ ஹரி꞉ ।
( இமமே வார்த₂மாஹ ஸ்ம நாரத ₃ஶ்சவ்நகாய வை ।
பாபாவஸாநமிச்ச₂த்₃பி₄꞉ நித்யம் விஷ்ணு பராயணை ꞉॥
ஸுதூ₃ரமபி க₃த்வா ச த்₃ரஷ்டவ்யா லோக பாவநா꞉ ।)
ஸாதூ₄நாம் த₃ர்ஸநம் புண்யம் தீர்த₂பூ₄தா ஹி ஸாத₄வ꞉ ॥7॥

சவ்னக முனிவர் சாதுக்களின் தர்சனத்தைப் பற்றி எவ்வாறு சொல்லி இருக்கிறாரோ அதைச் சொல்லுகிறோம் -சத்துக்களான ஞானிகள் இருக்கும் இடம் வெகு தூரமாக இருந்த போதிலும் அவ்விடத்திற்கு பிரபன்னர்கள் அவஸ்யம் போக வேண்டும் -அவ்விடத்தில் இருக்கும் தத்வ ஞானியை ப்ரயத்தனமாவது செய்து பார்க்க வேண்டும் -அந்த சாதுவினிடத்தில் பகவான் வஸிக்கிறார் –

ரகு குணன் ஸாது ஸ்ருதி தேடிச் சென்றானே -தர்ம ஸந்தேஹம் தீர்க்க –

சாதுக்களின் தர்சனம் மிகவும் புண்ணியங்களை யுண்டாக்கத் தக்கது -அவர்கள் ஒரு புண்ய தீர்த்தங்களாக இருக்கிறார்கள் -அனால் புண்ய தீர்த்தங்கள் காலம் கழிந்த பின்பே பலன்களைக் கொடுக்கும் -சாதுக்களின் ஸஹ வாஸமோ அப்படிக்கு இல்லாமல் உடனே பயன்களை அளிக்க வல்லதாகும் –

———–

காலேந ப₂லதே தீர்த₂ம் ஸத்₃ய꞉ ஸாது₄ஸமாக₃ம꞉ ।
ஸூகோ (அ)பி ப₄க₃வாநாஹ ஸதாம் து கு₃ண கீர்தநம் ॥8॥

ஸூக மஹ ரிஷியும் சாதுக்களின் குணங்களைக் கொண்டாடுவது நெடும் காலமாய்த் தான் செய்திருக்கும் புண்ணியங்களின் பலனாகச் சொல்லி இருக்கிறார் -அதையும் சொல்லுகிறோம்

—————–

சிரகாலார்ஜி தஸ்யை தத் ஶ்ருதஸ்யவ ப₂லம் யதா ₂ ।
ஶ்ருதஸ்ய பும்ஸாம் ஸுசிரஶ் ரமஸ்ய நந்வஞ்ஜஸா ஸூரிபி₄ரீரிதோ(அ)ர்த₂꞉ ।
தஸ்மாத்₃கு₃ணாநுஸ்மரணம் முகுந்த₃பாதா₃ரவிந்த₃ம் ஹ்ரு₃தயேஷு யேஷாம் ॥9॥

நெடும் காலமாய் வருத்தமடைந்து சம்பாதிக்கப்பட்டு இருக்கும் ஸாஸ்த்ர ஞானத்திற்கும் மோக்ஷ ரூபமான பலன் சீக்கிரம் கிடைப்பதில்லை -ஆகையால் அதைப் பெறுவதற்கு எப்பொழுதும் பகவானுடைய திருவடிகளை தம்முடைய ஹ்ருதயத்தில் தியானித்து இருக்கும் சத்துக்களின் குணங்களைக் கொண்டாட வேண்டும் –

———–

ஸத்₃பி₄ர் க்₃ருஹா க₃தா ꞉ ஸந்த꞉ பூஜநீயா விஸேஷத꞉ ।
ப்ரியவாக்யை ꞉ ததா ₂ர்க்₄யாத்₃யை ꞉ போ₄கை ₃ரிஷ்டைர்யதோ₂சிதை ꞉ ॥10॥

சத்துக்களாக இருக்கும் பிரபன்னர்களினால் தம்முடைய க்ரஹத்துக்கு அதிதிகளாய் வந்திருக்கும் சத்துக்களான ஸ்ரீ வைஷ்னவர்கள் குசல ப்ரஸ்னம் செய்வது முதலிய பிரியமான ஸல்லாபங்களினாலும் -அர்க்க்ய பாத்ய ஆசமநீயம் முதலிய உபசாரங்களினாலும் அவர்களுக்குத் தகுந்தவைகளாயும் இஷ்டங்களாயும் இருக்கும் உபஹாரங்களை சமர்ப்பிப்பதினாலும் பூஜிக்கத் தக்கவர்கள் –

————-

நாகாம்ஸ்யே தா₄வயேத்பாதவ் ₃ இதி ஸ்ம்ருத்யா(அ)ந்ய பா₄ஜநே ।
ம்ருண்மயாத₃வ் க்ஷாலயீத யதா₂ஹ ப₄க₃வான் ஸூக꞉ ॥11॥

வெண்கலப் பாத்திரத்தில் கால்களை அலம்பக்கூடாது என்று ஸ்ருதிகளில் சொல்லி இருப்பதால் பாகவதர்கள் திருவடிகளை மண் பாத்திரம் முதலியவை கொண்டு அலம்ப வேண்டும் -இவ் விஷயத்தில் சுக முனிவர் எவ்வாறு சொல்லி இருக்கின்றாரோ அதைச் சொல்லுகிறோம்

————

வ்யாளாலயத்₃ருமா ஹ்யேதே ஹ்யரிக்தாகி₂லஸம்பத₃꞉ ।
யே க்₃ருஹாஸ்தீர்த பாதீ₃யபாத ₃தீர்த₂ விவர்ஜிதா꞉ ॥ 12 ॥

எந்த கிரஹங்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் சேர்த்துக் கொள்ளத் தக்கின பாகவதர்களின் திருவடி தீர்த்தங்களைப் பெறாதவைகளோ அவைகள் குறைவற்ற பெரும் செல்வங்கள் உள்ளவைகளாக இருந்தும் சர்ப்பங்களுக்கு இருப்பிடமான சந்தன மரங்கள் போன்றவைகளாம் -அவைகள் சத்துக்களினால் கிட்டத் தக்கவைகள் அன்று –

—————–

ஸர்வேஷாமேவ பாபாநாம் ப்ராயஶ்சித்தம் மநீஷிபி₄꞉ ।
வர்ணிதம் ப₄க₃வத்₃ ப₄க்ததாபாதோ₃த₃க நிஷேவணம் ) ॥13॥

பகவத் பக்தர்களின் திருவடி தீர்த்தங்களைப் பானம் செய்வது சகல பாபங்களுக்கும் பிராயச் சித்தம் என்று பண்டிதர்களினால் நிர்ணயிக்கப் பட்டுள்ளது

—————-

தத் தீர்த₂ம் ஶிரஸா தா₄ர்யம் ததா ₂ங்கை ₃ஶ்ச க்ஷுராதி₃பி₄꞉ ।
பேய மந்தர்யதா ₂ ஸோமே தத்ர நாசமந க்ரியா ॥14॥

அந்த ஸ்ரீ பாத தீர்த்தம் சிரஸ்ஸிலும் அங்கங்களிலும் கண்களிலும் தரிக்கத் தக்கது -அப்படியே பானம் செய்து உள்ளுக்கும் உபயோகிக்கத் தக்கது -இந்த தீர்த்தத்தைப் பானம் செய்தால் ஸோம பானத்தைப் போலவே ஆசமனம் செய்ய வேண்டியதில்லை –

பகவானுடைய திருவடி தீர்த்தத்தை யாவது பாகவதர்களின் பாத தீர்த்தத்தை யாவது பானம் செய்தால் சோம பானத்தில் ஆசமனம் செய்ய வேண்டியது இல்லாமல் போனது போல் இதிலும் ஆசமனம் செய்ய வேண்டியதில்லை –

—————

பீதே பாதோ₃த₃கே விஷ்ணோ ꞉ வைஷ்ணவாநாம் ததை ₂வ ச ।
தத்ர நாசமநம் கார்யம் யதா ₂ ஸோமே த்₃விஜோத்தம ॥15॥

நாரத₃ஸ்யாதிதே₂꞉ பாதவ் ₃ ஸர்வாஸாம் மந்தி₃ரே ஸ்வயம் ।
க்ருஷ்ண꞉ ப்ரக்ஷால்ய பாணிப்₄யாம் பபௌ பாதோ₃கம் முநே ꞉ ॥ 16 ।

ஸ்ரீ கண்ணனும் தம்முடைய பதினாறாயிரம் பட்ட மஹிஷிகளின் க்ருஹங்களிலும் -அநேகம் திவ்ய ரூபங்களை எடுத்துக் கொண்டு எழுந்து அருளி இருக்கும் காலத்தில் -அவ் விடங்களில் அதிதியாக வந்த முனிவருடைய திருவடிகளை தம்முடைய கைகளினால் தாமே அலம்பி அந்த ஸ்ரீ பாத தீர்த்தத்தை கண்ணன் அமுது செய்தார் –

————-

போ₄கே₃ரிஷ்டைஶ்ச ஸாஸ்த்ரீயை ꞉ தோஷயேத்₃வைஷ்ணவான் க்₃ருஹே
த்ரிவித₄த்யாக₃பூர்வம் து ஸேஷத்வ ஜ்ஞாந வ்ருத்₃த₄யே ॥17॥

தம்முடைய க்ரஹத்தில் வந்திருக்கும் வைஷ்ணவர்களை தமக்கு சேஷத்வ ஞானம் வளருவதற்கு அவர் ப்ராப்யர் என்றும் ப்ராபகர் என்றும் சேஷீ என்றும் மூன்றுவித ஞானங்களையும் முன்னிட்டு ஸாஸ்திரங்களில் சொல்லப் பட்டவைகளாயும் -அவர்களுக்கு இஷ்டங்களாயும் இருக்கும் போக வஸ்துக்களினால் ஸந்தோஷிப்பிக்க வேண்டும் –

——————-

பு₄க்தவத்ஸு ததா ₂ தேஷு ஸேஷம் பு₄ஞ்ஜீத ஸாத்த்விக꞉ ।
யது₃ச் சி₂ஷ்டாஶி நஸ் ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பி₃ஷை ꞉ ॥18॥

அந்த பாகவதர்கள் அமுது செய்த பின்பு அந்த சேஷத்தை ஸாத்விகரான ப்ரபன்னர் புசிக்க வேண்டும் -அந்த சேஷத்தை புசிக்கும் சத்துக்கள் ஸர்வ பாவங்களில் நின்றும் நீங்குவார்கள்

—————

(தே த்வத₄ம் பு₄ஞ்ஜதே பாபா꞉ யே பசந்த்யாத்ம காரணாத் ।
தைஶ்ச ஸம்பா₄ஷணாதீ₃நி ப₄க₃வான் ஸாஸ்த்ர உக்தவான் ।
(த்ரிஷு வர்ணேஷு ஸஞ்ஜாதோ மாமேவ ஸரணம் க₃த꞉ ।)
நித்ய நைமித்திக பரோ ………………………………….
வேத₃ஸாஸ்த்ர ரதா ₂ரூடா ₄꞉ ஜ்ஞாந க₂ட்₃ க₃த₄ராத்₃விஜா꞉ ।
க்ரீடா ₃ர்த₂மபி யத்₃ப்₃ரூயு꞉ ஸ த₄ர்ம꞉ பரமோ மத꞉ ॥19॥

அந்த பாகவதர்களுடன் ஸம்பாஷணை செய்வது முதலியவை ஸாஸ்த்ரார்த்தங்களாக இருக்கின்றன என்று பகவத் சாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கிறார் -அதாவது வேத சாஸ்த்ரங்களாகிய ரதத்தின் மேல் ஏறி ஞானமாகிய கத்தியை கையில் ஏந்திய ப்ராஹ்மணர்கள் விளையாட்டாகச் சொல்லும் வார்த்தைகளும் ஸாஸ்த்ரீயங்களான தர்மங்களைச் சொல்லுகின்றன என்பதாகும் –

—————

வாஸு தே₃வம் ப்ரபந்நாநாம் யாந்யேவ சரிதாந் யபி ।
தாந்யேவ த₄ர்ம ஸாஸ்த்ராணீத் யேவம் வேத₃விதோ₃ விது₃꞉ ॥20॥

பகவானைச் சரணம் அடைந்த ப்ரபன்னர்களின் அனுஷ்டானங்கள் எவையோ அவைகள் அனைத்தும் தர்ம சாஸ்த்ரார்த்தங்கள் என்று வேதம் அறிந்தோர் சொல்லுகிறார்கள் -தர்ம சாஸ்திரங்களில் சொல்லியவற்றையே அவர்களும் அனுஷ்டிக்கிறார்கள் என்று கருத்து –

———-

வீக்ஷணாதே₃வ ஸித்₃த₄யந்தி வைஷ்ணவாநாம் ஹி மாநவா꞉ ।
ததா ₂ ந தீர்தை ₂ஶ்ஸூத்₄யந்தி சவ்நகஸ்து யதோ
க்தவான் ॥21॥

ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கடாக்ஷத்தினால் மனிதர்கள் எவ்வளவு பரிசுத்தர் ஆகிறார்களோ அவ்வளவு புண்ய தீர்த்தங்களினாலும் அடைவது இல்லை -இவ்வாறு சவுனக முனிவரும் சொல்லி உள்ளார் –

———–

ந ஸூத்₄யதி யதா ₂ ஜந்து꞉ தீர்த₂வாரிஸ தைரபி ।
லீலயைவ யதா ₂ பூ₄ப வைஷ்ணவாநாம் ஹி வீக்ஷணை ꞉ ॥22॥

சவ்னக முனிவர் அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார் -வாரீர் பரீக்ஷித் மஹா ராஜரே –ஸ்ரீ வைஷ்ணவர்கள் கடாக்ஷங்களினால் இப்பிராணிகள் எவ்வாறு சுத்தி அடைகிறார்களோ அவ்வாறு அநேக புண்ய தீர்த்தங்களினாலும் அடைவதில்லை –

———-

(வரம் ஹுதவ ஹஜ்வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்தி₂தி꞉ ।
ந சவ்ரி சிந்தா விமுக₂ ஜந ஸம்வாஸ
வைஸஸம் ) ॥23॥

பகவத் த்யானத்தில் விமுகர்களாக இருக்கும் ஜனங்களுடன் ஸஹவாஸம் செய்வதால் உண்டாகும் தீங்கை விட சுற்றிலும் அக்னி ஜ்வாலைகளினால் சூழப்பட்டு இருக்கும் கூண்டின் நடுவில் இருப்பது மேலானது –

——-

யே து பா₄க₃வதா நங்கை ₃꞉ ஸ்ப்ருஸந்த் யுபவிஸந்தி ச ।
பஶ்யந்த்யபி ச ஶ்ருண்வந்தி தா ₃ஸஸ் தேஷாம் மஹா முநே ॥24॥

வாரீர் மஹா முனிவரே -எவர்கள் பாகவதர்களை தங்கள் சரீரத்தினால் ஸ்பர்சிக்கிறார்களோ -அல்லது அவர்களை எழுந்த அருளி இருக்கச் செய்கிறார்களோ -அல்லது அவர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கேட்க்கிறார்களோ -அவர்களுக்கு நான் தாஸனாக இருக்கிறேன் –

————-

ஸத்₃பி₄ரேவ ஸஹா ஸீத ஸத்₃பி₄꞉ குர்வீத ஸங்க₃மம் ।
ஸத்₃பி₄ர் விவாத₃ம் மைத்ரீம் ச நாஸத்₃பி₄꞉ கிஞ்சிதா ₃சரேத் ॥25॥

சத்துக்களுடன் கூட இருக்க வேண்டும் -சத்துக்களுடன் கூட ஸஹவாஸம் செய்ய வேண்டும் -வழக்காடினாலும் ஸ்நேஹம் செய்தாலும் சத்துக்களுடனேயே செய்ய வேண்டும் அல்லது அசத்துக்களுடன் ஒரு காரியமும் செய்யத்தக்கது அன்று –

———–

யதா ₂ பதித்வா ஸந்மத்₄யே யயாதி꞉ புநராப்தவான் ।
ஸ்வபத₂ம் தத் ததா ₂ ஸத்ஸு பதிதோ ந விமுஹ்யதி ॥26॥

யயாதி மஹாராஜன் -ஸ்வர்க்க லோகத்தில் பதம் இழந்தவனாய் -அங்கிருந்து விழும் போது -அஷ்டகர் என்னும் சில சத்துக்களின் நடுவே விழுந்து அதனால் மறுபடியும் தன் பதத்தை அடைந்தது போலே சத்துக்களை சேர்ந்தவர் மோஹத்தை அடைவதில்லை –

———

ஸப்தமீ–பா₄க₃வது₃பாஸந பத்₃த₄தி꞉ ஸம் பூர்ணம்

———–

அத₂ விஹித வ்யவஸ்தா₂ந பத்₃த₄தி꞉ அஷ்டமீ

வைகுண்டேது பரே லோகே –பக்த பாகவத -முனிவர்களும் யோகிகளும்-குண அனுபவ ர்களும் -கைங்கர்ய பரர்களும் -இவ்வாறு பாகவதர்கள் இரண்டு கோஷ்ட்டிகள்
ஆச்சார்யர்கள் அனைவரும் பாகவதர்கள்-பேராளன் பேர் ஓதும் பெரியோர்கள் -ஆனால் எல்லா பாகவதர்களும் ஆச்சார்யர்களாக மாட்டார்கள் -மந்த்ர உபதேஸம் செய்து அருளினவர்கள்
ஆச்சார்யர் -பெருமாள் -பரிஜனங்கள் -பாகவதர்கள் -இவ்வாறு நான்கு பத்ததிகள் -இதில் –

விஹிதேஷு வ்யவஸ்தா ₂நம் ப்ரபந்நாநாம் ப்ரபஞ்ச்யதே ।
ஶ்ருதி ஸ்ம்ருத்யாதி₃விஹிதம் அநுஷ்டே ₂யம் து நைத்யகம் ॥1॥

ஶ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா இத்யாஹ லக்ஷ்மீபதிர் யத꞉ ।
ப்ரபந்நஸ்து விஸேஷேண ஸாஸ்த்ரேஷு விஹிதாந் யபி ॥2 ॥

ஸ்ருதி ஸ்ம்ருதி அனைத்தும் என்னுடைய ஆணையாக இருக்கின்றன -எவனாவது இவற்றை எனது கட்டளைகளை மீறி நடப்பார்களோ அவன் எனக்கே த்ரோஹம் செய்தவனாகிறான் -அவன் எனது பக்தனாக இருந்தாலும் வைஷ்ணவன் ஆவதில்லை –

ப்ரபன்னர்கள் விசேஷித்து சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் மாலை கட்டுதல் முதலிய அனுஞ்ஞா கைங்கர்யங்களையும் விடாமல் செய்ய வேண்டும் –

———–

குர்யாத் ஸ்ரக்₃ப₃ந்த₄நாதீ₃நி கர்மாணி ஶ்ரீபதேஸ் ஸதா ₃ ।
யதா ₂ லக்ஷ்ம்யா ஸ்வ தந்த்ரே (அ)பி ஸக்ரா யோக்தா து ப்ருச்ச₂தே ॥3॥

ந்யாஸ வித்யா நிஷ்டரான ப்ரபன்னருக்கு சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் கர்மங்களில் வியவஸ்தை ஸ்ரீ மஹா லஷ்மியால் தேவேந்திரனுக்கு அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறோம் –

——–

ந்யாஸ வித்₃யைக நிஷ்ட₂ஸ்ய விஹிதேஷு வ்யவஸ்தி₂தி꞉ ।
உபாயாபாய ஸந்யாஸீ மத்₄யமாம் வ்ருத்திமாஶ்ரித꞉ ॥4 ॥

ரக்ஷிஷ்யதீதி நிஶ்சித்ய விக்ஷிப்ய ஸ்வ ஸ்வ கோ₃சர꞉ ।
பு₃த்₄யேத தே₃வ தே₃வம் தம் கோ₃ப்தாரம் புருஷோத்தமம் ॥5॥

பகவானிடத்தில் பர ஸமர்ப்பணம் பண்ணிய ப்ரபன்னர் கீழ்ச் சொல்லும் லக்ஷணங்கள் உள்ளவைகளான -உபாய அபாய ரூபங்களான உபாயாந்தரங்களை விட்டு நித்ய நைமித்திக கர்மங்களை விடாமல் அனுஷ்ட்டித்து தேவாதி தேவனான புருஷோத்தமனையே நமக்கு ரக்ஷகனாக அறிந்து இருக்க வேண்டும் –

————-

உபாயாபாய யோர்மத்₄யே கீத்₃ருஶீ ஸ்தி₂திரம்பி₃கே ।
உபாயாபாய தாமேவ க்ரியா꞉ ஸர்வா வளம்ப₃தே ॥6॥

மேற் சொல்லிய உபாய அபாய இரண்டு வித கர்மங்களுக்கு மத்யஸ்தனாக ப்ரபன்னர் இருக்க வேண்டும் என்றால் எவ்விதமாகும் -அனைத்து கர்மங்களுமே உபாய அபாய ரூபங்களாகவே தானே இருக்கும் –

———

ஸ்வீகாரே வ்யதிரேகே வா நிஷேத₄விதி₄ஸாஸ்த்ரயோ ꞉ ।
த்₃ருஶ்யதே கர்மணோ (அ)வ்யக்தம் உபாயாபாய ரூபதா ॥7॥

நிஷேத சாஸ்திரங்களையும் விதி சாஸ்திரங்களையும் அனுஷ்ட்டித்தாலும் அல்லது விட்டாலும் அதில் உண்டாகும் கர்மங்கள் உபாய அபாய ரூபங்களாக இருக்கும்

——————

த்ரிவிதா₄ம் பஶ்ய தே₃வேஸ கர்மணோ க₃ஹநாம் க₃திம் |
நிஷேத₄விதி₄ஸாஸ்த்ரேப்₄ய꞉ தாம் விதா₄ம் ச நிபோ₃த₄ மே ॥8॥

நிஷேத விதி சாஸ்த்ரங்களினால் உண்டான இக்கர்மங்களின் வர்க்கங்கள் மூன்று விதங்களாக இருக்கின்றன -அவைகள் மிகவும் ஸூஷ்மமானவைகள் -அவற்றைச் சொல்கிறோம் -நீர் அறிய வேண்டும் –

—————-

அநர்த₂ஸாத₄நம் கிஞ்சித் கிஞ்சிச் சாப்யார்த ₂ஸாத₄நம் ।
அநர்த ₂பரிஹாராய கிஞ்சித் கர்மோபதி₃ஶ்யதே ॥9 ॥

இக் கர்மங்களில் சில அநர்த்த சாதனங்கள்-ஸூராபாநாதிகள் – சில அர்த்த சாதனங்கள் -ஜ்யோதிஷ்ட ஹோமாதிகள் -சில அநர்த்த பரிஹாரங்கள்-சாந்த்ராயுத ரூபாதி கர்மங்கள் – இவ்வாறு மூன்று வகைப்பட்டவை –

————

த்ரை ராஶ்யம் கர்மணா மேவம் விஜ்ஜேயம் ஸாஸ்த்ர சக்ஷுஷா ।
அபாயோபாய ஸஞ்ஜ்ஞவ் து பூர்வ ராஶீ பரி த்யஜேத் ॥10॥

சாஸ்திரங்களை அறிந்தவரால் இவ்வாறு மூன்று வர்க்கங்களாக கர்மங்களைச் சொல்லி -ப்ரபன்னர் முதலில் சொல்லிய அபாய உபாய கர்மங்களை விட்டுவிட வேண்டும் –

————–

த்ருதீயோ த்₃விவிதோ₄ ராஶி꞉ அநர்த₂பரிஹாரக꞉ ।
ப்ராயஶ்சித்தாத்மக꞉ கஶ்சித் உத்பந்நா நர்த ₂நாஸந꞉ ॥11॥

மேற் சொல்லிய கர்மங்களின் மூன்று ராசிகளில் மூன்றாவது ராசியான அநர்த்த பரிஹார ரூபங்களான கர்மங்கள் இரண்டு வகைப்படும் -அவற்றுள் தாம் செய்த பாவங்களினால் உண்டாகும் அநர்த்தங்களைப் போக்கும் பிராயச்சித்த ரூபங்களான சந்தராயணாதி கர்மங்கள் முதல் வகுப்பு -இவற்றையும் ப்ரபன்னர்கள் கீழ் சொன்ன உபாய அபாய ராசிகளை விட வேண்டியது போல் விடத் தக்கவையே யாகும்-பிராயச்சித்த கர்மங்களை செய்ய சக்தி உள்ளவராக இருந்தாலும் -அவற்றால் வரும் கால விளம்பம் ஸஹியாத ஆர்த்த ப்ரபன்னர்கள் விஷயத்திலும் ஆக வேண்டும் -என்று இந்த பத்ததியில் 23 ஸ்லோகத்த்தில் சொல்லுகிறோம் –

————-

தமம் ஸம் நைவ குர்வீத் மநீஷீ பூர்வ ராஶிவத் ।
க்ரியமாணம் ந கஸ்மைசித் யத₃ர்தா₂ய ப்ரகல்பதே ॥12॥

அக்ரியாவத₃நர்தா ₂ய தத்து கர்ம ஸமாசரேத் ।
ஏஷா ஸா வைதி₃கீ நிஷ்டா ₂ ஹ்யுபாயாபாய மத்₄யமா ॥13॥

எந்த கர்மங்களை அனுஷ்ட்டித்தால் யாதொரு பயன்களும் கிடைப்பதில்லையோ ஆனால் அனுஷ்ட்டிக்கா விடில் ப்ரத்யவாதங்களை யுண்டாக்கத் தக்க வைகளாக இருக்கின்றனவோ அவ்விதமான -நித்ய நைமித்திக கர்மங்களை மாத்திரம் ப்ரபன்னர் அவஸ்யம் அனுஷ்ட்டிக்க வேண்டும் –

————————–

அஸ்யாம் ஸ்தி₂தோ ஜக₃ந் நாத₂ம் ப்ரபத்₃யேத ஜநார்த₃நம் ।
ஏதது₃க்தம் ப₄வத் யத்ர ஹிம்ஸாஸ்தேயாதி₃கம் ச யத் ॥
14॥

இது தான் மத்தியஸ்தமான வைதிக நிஷ்டை -இதில் இருப்பை யுடையவராய் ஜகத்பதியான பகவானை அடைய வேண்டு -இவற்றை ஸ்பஷ்டமாக மேல் ஸ்லோகங்களினால் அருளிச் செய்கிறார் –

—————–

அநர்த₂ஸாத₄கம் கர்ம காம்யம் த்வர்த₂ஸ்ய ஸாத₄கம் ।
சைத்யாதி₃கம் ததா ₂ கர்ம ஸாங்க்₂ய யோகா₃தி₃கம் ததா ₂ ।15॥

ப்ராயஶ் சித்தம் ததா ₂ த்₃வேதா ₄ க்ருத பாப ப்ரணாஸநம் ।
சாந்த்₃ராயணாதி₃கம் த்வேகம் அந்யத் ஸந்த்₄யார்சநாதி₃கம் ॥ 16 ।

ஸ்ரீ மஹாலஷ்மியால் லஷ்மி தந்திரத்தில் தேவேந்திரனுக்கு அருளிச் செய்த ப்ரமேயங்களை அருளிச் செய்கிறார் -கொலை முதலிய அநர்த்த கர்மங்கள் -ஐஹிக ஆமுஷ்மிக பலன்களைக் கொடுக்கும் காம்ய கர்மங்கள் -சாந்தராயணாதி பிராயச்சித்த ரூப கர்மங்களும் விடத்தக்கவையே –

ஸ்நாத்வா புஞ்சீதா -குளித்தே உண்ண வேண்டும்
பாபங்களைச் செய்திருந்தாயாகில் சாந்த்ராயணம் பண்ண வேண்டும்
முமுஷுப்படியில் உண்டே –

————

அத்ர ஹிம்ஸாத்₃யபாயம் ச காம்யம் சௌத்யாதி₃கம் ததா ₂ ।
உபாயம் கர்ம ஸாங்க்₂யாதி₃ ப்ராயஶ்சித்தாதி₃கம் ததா ₂ ॥17 ॥

சாந்த்₃ராயணாதி₃கம் கர்ம ந குர்யாச்ச கதா₃சந ।
பா₄வ்யநர்த₂ஸ்ய யத் கர்ம பரிஹாரேண கீர்திதம் ॥18 ॥

ஸந்த்₄யார்சா பஞ்ச யஜ்ஞாதி₃ தந் முமுக்ஷுபி₄ராத்₃ருதம் ।
நைமித்திகம் சாக்₃ரயணம் ஸீமந்தோந் நயநாதி₃கம் ॥19॥

ஆனால் எந்தக் கர்மங்களை அனுஷ்டியா விடில் கெடுதி சம்பாதிக்கும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்படும் ஸந்த்யாவந்தனாதிகள் -பஞ்ச மஹா யாஜ்ஞம் -ஆக்ரயண ஸ்தாலீபாகம் சீமந்த உன்னயநாதி களான நைமித்திக கர்மங்களும் ப்ரபன்னர்களான முமுஷுக்களுக்கு அவஸ்யம் அனுஷ்ட்டிக்கத் தக்கவைகளாகும் –

————-

அக்₃ந்யாதா ₄நாதி₃கம் கார்யம் அதி₄காரே ஸதி த்₃விஜை ꞉ ।
நிஷித்₃த₄காம்யோ பாயாக்₂ய கர்மாண்யாநி நாசரேத் ॥20 ॥

அக்ன்யா தானம் முதலிய சிலஸ்ரளத கர்மங்களும் அவற்றை அனுஷ்ட்டிக்கும் அதிகாரமும் இருக்குமாகில் ப்ராஹ்மணர்கள் இடத்தில் அனுஷ்ட்டிக்கத் தக்கவைகளாம் -கீழ்ச் சொல்லிய நிஷித்த காம்ய கர்மங்களை அனுஷ்ட்டிக்கக் கூடாது –

———–

ப்ராயஶ்சித்தம் ப்ரபந்நஸ்ய விஸேஷேண யது₃ச்யதே ।
லக்ஷ்மீ தந்த்ரே கமலயா நிமித்தே து ததா ₃சரேத் ॥21 ॥

ப்ரபன்னர்களுக்கு பிராயச்சித்தம் பண்ணிக கொள்ளும் படியான ஏதாவது நிமித்தம் உண்டாகில் லஷ்மி தந்திரத்தில் ஸ்ரீ மஹா லஷ்மியால் ப்ரபன்னர்களுக்கு விசேஷித்து விதிக்கப்பட்டு இருக்கும் ப்ராயச்சித்தத்தை அனுஷ்ட்டிக்க வேண்டும்

————-

ஸக்தவ் ப்ரதிபதோ₃க்தம் ஸ்யாத் அஸக்தவ் ஸரணாக₃தி꞉ ।
ப்ராயஶ்சித்த மித₃ம் ஹ்யேதத் நிர்ணீதம் து மநீஷிபி₄꞉ ॥ 22 ॥

ப்ரபன்னர்கள் உபாய அபாய ரூபமான நிஷித்த கர்மங்களைச் செய்வாராகில் ப்ரபந்ந நிஷ்டையில் குறைந்தவர்களாகி விடுவார்கள்

————————

அநந்ய ஸாத்₄யே ஸ்வாபீ₄ஷ்டே இதி ந்யாஸஸ்ய லக்ஷணாத் ।
ஸக்தவ் ப்ரதிபதோ₃க்தம் ஸ்யாத் ப்ராயஶ்சித்தம் ஹி ஸித்₃த்₄யதி ॥23॥

அந்யதா ₂(அ)திப்ரஸங்க₃ஸ் ஸ்யாத் அவைஷ்ணவ க்₃ருஹாஸநே ।
ஸரணாக₃த ஹந்துஸ் ஸ்யாத் ப்ரபத்த்யைவ பரிக்₃ரஹ꞉ ॥24॥

அப்பிராய்ச சித்தமாவது மீண்டும் சரணாகதி செய்வதே -உபாய புத்தியாகச் செய்தவற்றுக்குப் ப்ராயச்சித்தமும் இதுவே -அவற்றை 30-33 ஸ்லோகங்களில் அருளிச் செய்துள்ளார் -ப்ரபன்னர்களில் சக்தி யுள்ளவர்கள் சாந்த்ராயணாதி ப்ராயச்சித்தங்களும் அசக்தர்களும் ஆர்த்த ப்ரபன்னர்களும் புனர் பிரபத்தியையே பிராயச்சித்தமாகவும் அனுஷ்ட்டிக்க வேண்டும் என்பதே ஆச்சார்யர்களது திரு உள்ளம் –

————-

(ப்ராயஶ் சித்திரியம் ஸாத்ர ய꞉ புநஶ் ஸரணம் வ்ரஜேத்) ஸக்ருதே₃வ ஹி
ஸாஸ்த்ரார்த₂꞉ க்ருதோ(அ)யம் தாரயேந் நரம் ।
உபாயாபாய ஸம் யோகே ₃ நிஷ்ட ₂யா ஹீயதே(அ)நயா ॥ 25 ।

ப்ரபன்னர்களுக்கு பிராயச்சித்தம் வேண்டும்படியாய் நேர்ந்தால் தேவ தேவனான பகவானுக்கு திவ்ய மஹிஷியான என்னைச் சரணம் அடைய வேண்டும் –

———-

அபாய ஸம்ப்லவே ஸத்₃ய꞉ ப்ராயஶ் சித்தம் ஸமாசரேத் ।
ப்ராயஶ் சித்திரியம் ஸா(அ)த்ர யத் புநஶ் ஸரணம் வ்ரஜேத் ॥26॥

ப்ரபன்னர்களுக்கு புத்தி பூர்வகமாவது அபுத்தி பூர்வகமாவது உண்டாகும் பாபங்கள் அனைத்துமே இச் சரணாகதியால் போய் விடும்

———-

உபாயாநாமுபாயத்வ ஸ்வீகாரேப் யேத தே₃வ ஹி ।
ப்ராயஶ் சித்த ப்ரஸங்கே ₃ து ஸர்வபாப ஸமுத்₃ப₄வே ॥27॥

யாவன் ஒருவன் அக்ருத்யங்கள் என்று தெரிந்து இருந்தும் அவற்றைச் செய்கிறானோ அவனுக்கு இந்த சரணாகதியும் ப்ராயச்சித்தமாகாது -புத்தி பூர்வகமாக துஷ்க்ருத்யங்கள் செய்யத்தகாது என்று கருத்து –

—————–

மாமேகாம் தே₃வ தே₃வஸ்ய மஹிஷீம் ஸரணம் வ்ரஜேத் ।
தஸ்மாத் ப்ரமாதா ₃த் ப₄க்த்யா வா யத் ப்ரபந்நஸ்ய து₃ஷ்க்ருதம் ॥28 ॥

தத் ஸர்வம் ஸமயத்யாஸூ ஸரணாக₃தி ரேவ ஸா ।
ஜ்ஞாத்வா(அ)ப்யபாயே பாதித்வம் ய꞉ கரோதி விமூட ₄தீ₄꞉ ।
போ₄க₃ ஏவ ஹி தத்ர ஸ்யாத் நிஷ்க்ருதிர்நா(அ)நயா(அ)பி ஹி ॥29॥

நாம் பிரபன்னராய் விட்டதால் எந்த துஷ்க்ருத்யங்களையும் நாம் செய்ய அடுக்கும் என்னும் கர்வத்தினால் ஒருவன் அதிக துஷ்க்ருத்யங்களைச் செய்யக் கூடாது -அப்படி அறிந்து இருந்தும் அபராதங்களைச் செய்வானாகில் அவன் அதோகதியை அடைந்து விடுவான் -இவன் விஷயத்தில் பகவான் அந்தப்பிராயச்சித்த ப்ரபத்தியையும் செய்ய ஒட்டாமல் இவனுக்குத் தீங்கை வளர்த்து விடுவான் என்று கருத்து –

கர்ம பலன்களையும் கிருபா பலன்களையும் அனுபவித்தே தீர வேண்டும் –

———-

ப்ரபந்ந இதி க₃ர்வேண ந குர்யாத் புரு து₃ஷ்க்ருதம் ।
ஜ்ஞாத்வாப் யபாய கர்மாணி குர்வன் மூட ₄꞉ பதத்யத₄꞉ ॥30॥

ஞானிகளான ப்ரபன்னர் கள் ஒருக்காலும் அக்ருத்யங்களைச் செய்யார் -தெரியாமையிலாவது அஜாக்ரதையிலாவது அக்ருத்யங்களைச் செய்தாராகில் அவைகளை தம்முடைய ப்ரஹ்ம ஞானமாகிய நெருப்பிலே எரித்து விடுவார்கள் –

———-

ஜ்ஞாநிநோ ந ச குர்வந்தி யத்₃யஜ்ஞாநாத் ப்ரமாத₃த꞉ ।
தச்ச ஜ்ஞாநாக்₃நிநா ஸர்வம் த₃ஹந்தி விமலாஸயா꞉ ॥31॥

(அத்ராஹ ப₄க₃வான் க்ருஷ்ண꞉ அர்ஜுநஸ்ய து ஶ்ருண்வத꞉ ।
யதை ₂தா₄ம்ஸி ஸமித்₃தோ₄(அ)க்₃நி꞉ ப₄ஸ்ம ஸாத் குரு தே(அ)ர்ஜுந ॥32

ஜ்ஞாநாக்₃நிஸ் ஸர்வ கர்மாணி ப₄ஸ்ம ஸாத் குருதே ததா ₂ ॥33॥

இது விஷயத்தில் பகவானாக கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதா சாஸ்திரத்தில் -தீக்களினால் பரவி எரியும் அக்னி எவ்வாறு விரகுகளை பஸ்மமாய் எரித்து விடுகின்றதோ அவ்வாறே ப்ரஹ்ம ஞானமாகிற அக்னி மேற் சொல்லிய கர்மங்கள் அனைத்தையும் பஸ்மமாக எரித்து விடும் என்று அருளிச் செய்கிறான்

———

ப₄க₃வ ஜ்ஜ்ஞாந விஸ்ரம்ப₄ விஸூத்₃த₄ மநஸாம் ஸதாம் ।
ஸாஸ்த்ரோக்தம் ப₄க₃வஜ் ஜ்ஞாநம் ப்ராயஶ் சித்தம் க்ருதைநஸாம் ॥34 ॥)

பகவத் ஞானம் ஸர்வ பாபங்களையும் போக்கி விடும் என்னும் நம்பிக்கையினால் விசுத்த மனசை யுடைய ஸத்துக்களுக்கு வேதாந்த ஸாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்டு இருக்கும் உபாஸன ரூபமான பகவத் ஞானமானது அவர்களால் செய்யப்பட்டு இருக்கும் பாபங்களுக்குப் ப்ராயச்சித்தமாய் இருக்கின்றது –

———-

யஸ்ய யாவாம்ஶ்ச விஶ்வாஸ꞉ தஸ்ய ஸித்₃தி₄ஶ்ச தாவதீ ।
நைதாவா நிதி விஶ்வாஸ: ப்ரபா₄வ꞉ பரிமீயதே
॥35

பகவத் ஞானத்தில் எவ்வளவு நம்பிக்கை உண்டாகிறதோ அவ்வளவு ஸித்தியும் கிடைக்கும் -இந் நம்பிக்கையின் பிரபாவம் இவ்வளவு என்று அளவிட முடியாது -ஆகையால் உபாஸகர்களுக்கு பகவத் தியானமே ஸர்வ பாபங்களும் ப்ராயச்சித்தமாய் விடுகிறது என்று கருத்து –

————-

வேதோ₃தி₃தம் ஸதா ₃சாரம் (ஆத்₃ரியேத ஸதா ₃ ஸுதீ₄꞉ ।
அஸ்மின் தந்த்ரே யதோ₂க்தம் து வைதி₃காசாரளங்க₄நே ॥36॥

ஸாஸ்த்ர ஞானம் உள்ளவராய் இருக்கும் இப்பிரபன்னர் வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கும் ஸத் ஆச்சாரங்களை அனுஷ்ட்டிக்க வேண்டும் -பாஞ்சராத்ர சாஸ்திரத்தில் வேதாந்த யுக்த கர்மங்களைக் கடந்தால் என்ன வென்று அருளிச் செய்யப்பட்டுள்ளது அவற்றை அருளிச் செய்கிறோம் –

——–

அவிப்லவாய த₄ர்மாணாம் பாலநாய குலஸ்ய ச ।
ஸங்க்₃ரஹாய ச லோகாநாம் மர்யாதா ₃ஸ்தா₂பநாய ச ॥37॥

ப்ரியாய மம விஷ்ணோஶ் ச தே₃வ தே₃வஸ்ய ஸார்ங்கி₃ண꞉ ।
மநீஷீ வைதி₃காசாரம் ) மநஸா(அ)பி ந லங்க₄யேத் ॥38 ॥

வேத யுக்த தர்மங்கள் அழியாமல் இருப்பதற்கும் ப்ராஹ்மண்யாதி நான்கு வர்ணங்களையும் காப்பாற்றுவதற்காகவும்-லோகத்தார்கள் அங்கீ கரிப்பதற்கும் -தேவதேவனான பகவானுக்கும் அவர் பெரிய பிராட்டியாரான எனக்கும் இஷ்டத்தை உண்டாக்குவதற்கும் ஞானியாக இருக்கும் பிரபன்னர் வேத யுக்த தர்மங்களை மனதாலும் கடக்கக் கூடாது –

———-

யதா ₂ஹி வல்லபோ ₄ ராஜ்ஜோ நதீ₃ம் ராஜ்ஞா ப்ரவர்திதாம் ।
( லோகோ பயோகி₃நீம் ரம்யாம் ப₃ஹு ஸஸ்ய விவர்தி₄நீம் ॥39 ॥)

லங்க₄யன் ஸூல மாரோஹேத₃நபேஷோ (அ)பி தாம் ப்ரதி ।
ஏவம் விளங்க₄யன் மர்த்யோ மர்யாதா₃ம் வேத₃நிர்மிதாம் ॥40॥

ராஜனுக்கு மிகவும் இஷ்டனாக இருக்கும் ஒருவன் -அந்த ராஜாவால் லோக உபயோகத்துக்காகக் கட்டித் திருப்பப் பட்டதாயும் -அதன் தண்ணீர் பாய்வதனால் பயிர்களை விருத்தி செய்யத் தக்கதாய் இருக்கும் ஓர் நதியின் அணையை அழிப்பானாகில் -அவ்வணையால் உபயோகம் அற்றவனாக இருந்தும் அவன் சூலத்தின் மேல் ஏற்றி அவனால் தண்டிக்கத் தக்கவனாவது போலேவே வேத யுக்தமானஹத்தை மீறி நடக்கும் ப்ரபன்னனும் எனது ஆஜ்ஜையைக் கடந்தானாகில் அவன் எனக்கு இஷ்டனாக இருந்த போதிலும் -இஷ்டனாக இல்லாமல் போவதும் அதுக்கும் மேலே தண்டிக்கத் தக்கவனாவான் என்று கருத்து –

————

ப்ரியோ (அ)பி ந ப்ரியோ மே (அ)ஸௌ மதா₃ஜ்ஞாவ்யதி வர்தநாத் ।
உபாயத்வமஹம் தத்ர வர்ஜயேந் மநஸா ஸுதீ₄꞉ ॥41॥

ஸ்வ வர்ணாஶ்ரம யுக்தம் து தே₃ஸ காலாநுரூபத꞉ ।
விஸேஷ விஹிதம் யச்ச தத் குர்யாச்ச்₂ரீபதே꞉ ப்ரியம் ॥
42 ॥

ஞானியாக இருக்கும் பிரபன்னர் தான் அனுஷ்ட்டிக்கும் நித்ய நைமித்திக்க கர்மங்களில் இவைகள் மோக்ஷ உபாயங்கள் என்னும் புத்தியை விடவேண்டும்
ஆகையால் தம்முடைய வர்ணாஸ்ரம தர்மங்களோடே கூடியவராகவே வைஷ்ணவர்களுக்கு என்று விசேஷித்து ஸாஸ்திரங்களில் விதித்து இருக்கும் பகவத் கைங்கர்யங்களான கர்மங்களையும் அப்பிரபன்னர் செய்ய வேண்டும் –

அஷ்டமீ–விஹித வ்யவஸ்தா₂ந பத்₃த₄தி꞉ ஸம் பூர்ணம் –

————————

அத₂ வர்ஜநீய பத்₃த₄தி꞉ நவமீ-

வர்ஜநீயம் ப்ரபந்நாநாம் வர்ண்யதே லோக தவேத₃யோ ꞉ ।
ஸ்வாவஸ்தா ₂தே₃ஶகாலாநாம் விருத்₃த₄ம் வர்ஜயேத் ஸதா₃ ॥ 1 ॥

லௌகிக வைதிக கர்மங்களில் ப்ரபன்னர்களுக்கு விடத்தக்கவை சொல்லப்படுகின்றன -அதாவது தாம் இருக்கும் அவஸ்த்தைக்கும் தேசத்துக்கும் காலத்துக்கும் விருத்தமான கர்மங்களை ப்ரபன்னர்கள் எப்போதும் விடவேண்டும் –

—————

வர்ணாஶ்ரம விருத்₃த₄ம் யத் மந்வாத்₃யுக்தம் விஸேஷத꞉ ।
ஸ்வாதி₄கார விருத்₃த₄ம் ச ஶாஸ்த்ரோக்தம் ந ஸமாசரேத் ॥ 2 ॥

மநு தர்ம ஸாஸ்த்ரம் முதலியவைகளில் தன்னுடைய வர்ணாஸ்ரம தர்மங்களுக்குத் தகாதவைகளாகச் சொல்லப்பட்டு இருக்கும் கர்மங்களையும் -ஸாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருந்தும் தன்னுடைய ப்ரபந்ந அதிகாரத்துக்குத் தகாதவைகளாய் இருக்கும் கீழ்ச் சொல்லும் கர்மங்களையும் ப்ரபந்நர்கள் செய்யக்கூடாது –

————-

ஸாமாந்ய ஶாஸ்த்ராநுஜ்ஞாதம் விருத்₃த₄ம் யத்₃விஸேஷத꞉ ।
சதுஷ்பத₃வநஸ்பத்யோ ꞉ மங்க₃ளாதே₃꞉ ப்ரத₃க்ஷிணம் ॥ 3 ॥

ப்ரதோ₃ஷே ஶங்கரார்சாதி₃ பாபஹாநிகரம் ந்ருணாம் ।
ந குர்யாத் பரமை காந்தீ காம்யம் லோத்₃வய ப்ரத₃ம் ॥ 4 ॥

நற் சந்தி பெரிதான வ்ருக்ஷம் மங்கள வாத்யம் முதலியவைகளான இவைகளைப் ப்ரதக்ஷிணம் செய்வது -சந்தி வேளையில் சிவா பூஜை செய்வது இவை முதலியவை மனிதர்களின் பாபங்களைப் போக்குகின்றனவாக ஸாமான்ய ஸாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன-இவைகளையும் இஹத்திலும் புறத்திலும் நன்மை யுண்டாக்குவதாக சில ஸாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கும் காம்ய கர்மங்களையும் -இன்னும் வைஷ்ணவர்களுக்கு விருத்தங்களாக இருக்கும் விபூதி தரணம் முதலிய அடையாளங்களையும் பிரபன்னர்கள் செய்யக்கூடாது –

—————–

ஸாமாந்ய ஶாஸ்த்ரவிஹிதம் விருத்₃த₄ம் சாங்கநாதி₃கம் ।
க₃திந்ருத்தாதி₃கம் யத்து விஸேஷாக₃மசோதி₃தம் ॥ 5 ॥

தத் ஸர்வம் வைஷ்ணவ꞉ குர்யாத் யதோ₂க்தவ் யம ஶௌநகௌ ।
“ஹரி கீர்திம் விநை வாந்யத் ப்₃ராஹ்மணேந நரோத்தம ।
பா₄ஷாகா₃நம் ந கா₃தவ்யம் தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம் ॥ 6 ॥

பகவத் குணங்களை கானம் செய்வது -பகவானுக்கு எதிரில் நர்த்தனம் செய்வது இவை முதலாவதாக பகவத் ஸாஸ்திரங்களில் பாகவதர்களுக்கு விசேஷித்து விதிக்கப்பட்டு இருக்கும் கைங்கர்யங்கள் எவைகளோ அவைகளை வைஷ்ணவர்கள் -ப்ரபன்னர்கள் -அவஸ்யம் செய்ய வேண்டும் -யமதர்மராஜன் சவுனாக முனிவர் இவ்விருவர்களும் இவ்வாறு அருளிச் செய்துள்ளார்கள் –

——————-

விஷ்ணோ : கா₃நம் ச கே₃யம் ச நடநம் ச விஸேஷத꞉ ।
ப்₃ரஹ்மன் ! ப்₃ராஹ்மண ஜாதீநாம் கர்தவ்யம் நித்ய கர்மவத் ॥ 7 ॥

வாரீர் நர ஸ்ரேஷ்டரே -பகவத் குணங்களை கானம் செய்வது ஒழிய ப்ராஹ்மணானால் இதர பாஷையில் கானம் செய்யத் தகாதாகையால் நீர் அதைச் செய்தால் பாபங்களைச் செய்தீராவீர்

வாரீர் -ப்ராஹ்மணரே -ப்ராஹ்மண ஜாதியில் பிறந்தவர்களினால் பகவானுடைய கல்யாண குணங்களைப் பற்றிய கானங்களும் கீர்த்தனைகளையும் நர்த்தனங்களையும் தங்கள் நித்ய கர்மங்களைப் போலவே அவஸ்யம் செய்யத்தக்கவைகள் ஆகின்றன –

————–

ந்ருத்யதாம் ஶ்ரீபதே ரக்₃ரே கர ஸம்ஸ்போ₂ட நாதி₃பி₄꞉ ।
உட்₃டீ₃யந்தே ஶரீரஸ்தா ₂꞉ மஹா பாதக பக்ஷிண꞉ ॥ 8 ॥

பகவானுடைய எதிரில் நர்த்தனம் செய்கிற பாகவதர்களின் சரீரங்களில் இருக்கும் மஹா பாதகங்களாகிற பஷிகளானவை அவர்கள் போடும் கைத்தாளம் முதலியவைகளால் வெளியில் கிளம்பி விடுகின்றன –
மரத்தின் மேல் இருக்கும் பக்ஷிகள் கைகளைத் தட்டி ஓசைப் படுத்துவதினாலும் கிளைகளை அசைப்பதினாலும் உயர்க் கிளம்பி விடும் போலே பாகவதர்கள் பகவான் எதிரில் தாளம் போடுவதாலும் நர்த்தனம் செய்வதாலும் அவர்களின் மஹா பாதகங்களும் கழிகின்றன -என்று கருத்து –

————

ஏவம் விஸேஷ ஶாஸ்த்ரோக்தம் விஷ்ணு சக்ராங்கநாதி₃கம் ।
விஸேஷ ஶாஸ்த்ர ப்ராப₃ல்யாத் வைஷ்ணவஸ்து ந வர்ஜயேத் ॥ 9 ॥

இவ்வாறு விசேஷ ஸாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டு இருக்கும் விஷ்ணு சக்ராங்கனம் முதலியவைகளை விதிக்கும் ஸாஸ்த்ரம் ஸாமான்ய ஸாஸ்த்ரங்களைக் காட்டிலும் பலமுள்ளதாகையாலே வைஷ்ணவர்கள் விடத்தகாது -வைஷ்ணவர்கள் அவஸ்யம் சக்ராங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்று கருத்து –

————-

லோகே (அ)நுஷ்டா₂ந ஸங்கோசாத் லாக₄வாத் ப₂ ல கௌ₃ரவாத் ।
விமுக்தி ஸாத₄நத்வம் ஹி ப்ரபத்தேரவ ஜாநதே ॥ 10 ॥

அந்யதா₂ யோஜநாச்சாபி ப்ரமாணாநாம் குதர்கத꞉ ।
தேந து₃ஷ் க்ருதிநோ மூடா₄꞉ நராணாமத₄மா꞉ ஸ்ம்ருதா ꞉ ॥ 11 ॥

உலகத்தில் ப்ரபத்தியை அனுஷ்டிப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவுற்றவராக இருப்பதாலும் -இப்பிரபத்தி லகுவான உபாயமாக இருப்பதாலும் -இதற்குக் கிடைக்கும் மோக்ஷம் மிகப்பெரிய பலனாக இருப்பதாலும் -இப்பிரபத்தி ப்ரமாணங்களான ஸாஸ்த்ரங்களுக்கு தர்க்கங்களினால் சிலர் வேறுவிதமாக அர்த்தம் செய்வதாலும் இப்பிரபத்தி மோக்ஷ உபாயம் என்பதை சிலர் அநாதரித்து வருகிறார்கள் –

————-

மாயயா(அ)பஹ்ருதஜ்ஞாம்நா꞉ ஆஸுரீம் யோநிமாஶ்ரிதா ꞉ ।
யாந்ந பஶ்யேஜ் ஜாயமாநான் பாபிநோ மது₄ஸூத₃ந꞉ || 12 |

இப்பிரபத்தி மோக்ஷ சாதனம் என்பதை அபலாபம் செய்யும் மேற் சொல்லியவர்கள் மிக்க பாபங்களைச் செய்த மூடர்கள் -மனிதர்களில் அதமர்கள் -பகவத் மாயையினால் ஞானம் இழந்தவர்கள் -அசுரர் ஸ்வ பாவத்தை அடைந்தவர்கள் –

————-

ப்₃ரஹ்மா ருத்₃ரோ (அ)த₂வா பஶ்யேத் ரஜஸா தமஸா வ்ருதான் ।
தைராளாபம் ந குர்வீத நாஸத்₃பி₄꞉ கிஞ்சிதா ₃சரேத் ॥ 13 ॥

பாபிகளாய் இருக்கும் எவர்களை பகவான் ஜனன காலத்தில் கடாக்ஷிக்க வில்லையோ அல்லது பிரம தேவனால் ருத்ரனால் அவர்களைப் பார்க்கப்பட்டதால் ரஜோ குணத்தோடும் தமோ குணத்தோடும் கூடியவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடன் ப்ரபன்னர்களால் ஸல்லாபம் செய்யத்தக்கத்து அன்று -அந்த அசத்துக்களுடன் யாதொரு காரியமும் செய்யத்தக்கதன்று –

———

கௌதஸ்குதாநாம் ஶாஸ்த்ராணி தாம ஸாந்யவத₃ன் மநு꞉ |
வாங் மாத்ரேணாபி ஸம் ஸர்க₃ தைஸ் ஸாகம் து நிஷேத₄தி ॥ 14 ॥

கௌதஸ் குதர்களின் ஸாஸ்த்ரங்களை தாமஸ ஸாஸ்த்ரங்களாக மநு அருளிச் செய்துள்ளார் -ஆகையால் அவர்களுடன் ஸல்லாபம் செய்வதைக் கூட அம்மனு ஸாஸ்த்ரத்தில் நிஷேதித்து இருக்கிறார் –

————————-

யா வேத₃பா₃ஹ்யா ஸ்ம்ருதயோ யாஶ்ச காஶ்ச குத்₃ருஷ்டய꞉ |
ஸர்வாஸ்தா நிஷ்பலா ꞉ ப்ரேத்ய தமோ நிஷ்டா₂ஹி தா꞉ ஸ்ம்ருதா ꞉” ॥15॥

வேத விருத்தங்களாக இருக்கும் ஸ்ம்ருதிகள் எவைகளோ -ஸார்வாக மதம் முதலிய குத்ஸிக மதங்கள் எவைகளோ அவைகள் அனைத்தும் பர லோகத்தில் நிஷ்பலன்களாய் விடுகின்றன -அவைகள் தமோ குணத்தில் இருப்புள்ளவைகள் –

————–

பாஷண்டி₃நோ விகர்மஸ்தா₂ன் பி₃டா₃ லவ்ரதி காம்ஞ்ச₂டா₂ன் ।
ஹைதுகான் ப₃கவ்ருத்தீம்ஶ்ச வாங் மாத்ரேணாபி நார்சயேத் || 16 ||

வேத விருத்தங்களான சின்னங்களைத் தரிப்பவர்களாயும் -ஸாஸ்த்ர விருத்த கர்மங்களைச் செய்பவர்களாயும் வேதங்களை நம்பாதவர்களாயும் கபிடால விருத்திகளாயும் -வேதங்களின் பேரில் ஹேது வாதம் செய்பவர்களாயும் -பக விருத்திகளாயும் இருக்கும் அதிதிகளாய் வந்திருக்குமவர்களை பிரபன்னர்கள் வாக்கினால் கூட பூஜிக்கத்தக்கவர்கள் அன்று
பிடா விருத்திகளுக்கு லக்ஷணம்
தர்மத்வஜீ ஸதா லுப்தச் சாத்மிகோ லோக டம்பக
பைடால விருத்திக ஒக்ஜேயோகி மஸ்ரஸ ஸர்வாபி சந்தக
தான் தார்மிகன் என்று பேர் பெறுவதற்காக பலர் கூடுமிடத்தில் தர்மங்களைச் செய்து தன்னையே ஸ்துதி செய்து கொள்கிறவனாயும் -பிறர் பொருள்களில் ஆசை யுள்ளவனாயும் -கபடம் உள்ளவனாயும் -நம்பியவர்களை மோசம் செய்பவனாயும் -பிறர்களுக்குத் துன்பம் உண்டாக்குபவனாயும் -நல்லோர்களிடத்தில் பொறாமையால் தோஷங்கள் சொல்பவனாயும் இருக்குமவன் பிடால வ்ருத்தி யாவான் -பூனையின் நடவடிக்கை உள்ளவன்
பக விருத்தியின் லக்ஷணம் -கொக்கின் நடவடிக்கை உள்ளவன்
அதோ த்ருஷ்டிர்கை க்ருதிகஸ் ஸ்வார்த்த சாதன தத்பர கடோ மித்யா விநீத ச பக விருத்தி தரோ த்விஜ
எப்பொழுதும் கீழ் பார்வை யுள்ளவனாயும் கெடு நினைவு உள்ளவனாயும் பிறருக்கு கெடுதி செய்து தன் கார்யங்களை சாதித்துக் கொள்பவனாயும் துர் நடத்தை உள்ளவனாயும் கபட விநயம் உள்ளவனாயும் இருக்குமவன் பக விருத்தி உள்ளவன் என்று சொல்லப்படுகிறான் –

—————

ப்ரபத்தே꞉ ப்ரதிப₃ந்த₄ஸ்து ஜாயதே யைர்ஹி கர்மபி₄꞉ ।
ப்ரபந்நோ ந நிஷேவேத தாத்₃ருஶாநி ந கிஞ்சந ॥ 17 ॥

தே₃வதாந்த்ர ஸம் ப₄க்திம் நித்ய கர்மவிதி₄ம் விநா ।
உபாயாந்தர நிஷ்டா₂ம் ச த்₃ரோஹம் பா₄க₃வதேஷ்வபி ॥ 18 ॥

விஶ்வாஸ மாந்த்₃யம் விஷயேஷ்வதி ப்ராவண்ய மேவ ச ।
ஶ்ரீஶ்ரீஶயோ ꞉ பரிஜநே நிந்த₃நாதீ₃நி ஸர்வஶ꞉ ॥ 19 ॥

தே₃ஹாவத்₄ யநு வ்ருத்தாநி நாநுதாப யுதாநி ச ।
ப்ராயஶ்சித்த விஹீநாநி பாதகாநி மஹாந்தி ச ॥ 20 ॥

ப₃ந்த₄காநி ப்ரபந்நஸ்து ந குர்யாத்தாத்₃ருஶாந்யபி ।
தேஷ்வந்வயே ஸதி ஸதா மநுதாபோ ப₄வேத்₃யதி₃ ॥ 21 ॥

ப்ராயஶ்சித்தம் தத ꞉ குர்யாத்₃ரஹஸ்யம் ச ப்ரகாஶகம் ।
(ப்ரபந்நஸ்யாநு தப்தஸ்ய ரஹஸ்யே த்வதி₄காரிதா || 22 ||

நித்ய நைமித்திக கர்மங்களைத் தவிர மற்ற இடங்களில் தேவதாந்தர ஸம்பந்தம் பெறுவதும் -உபாயாந்தரங்களை அனுஷ்டிப்பதும் -பாகவதருக்கு த்ரோஹம் செய்வதும் -பகவத் பாகவதர்கள் இடத்தில் விச்வாஸம் குறைவு படுவதும் -ஸ்த்ரீ முதலிய விஷயாந்தரங்களில் ப்ராவண்யம் கொண்டு இருப்பதும் -பெருமாள் பிராட்டிமார்கள் பரிஜனங்கள் இவர்களை நிந்தை செய்வதும் -ஆகிய இவைகள் தேஹம் இருக்குமளவுக்கு இவனிடத்தில் உள்ளவைகளாய்- இவைகளினால் பரிதாபாத்திகளையும் உண்டாக்காதாவைகளாயும் -நின்று இருக்கும் இவ்வபதாரங்களையும் பிராயச்சித்தம் இன்றிக்கே இருக்கும் மஹா பாதகாதிகள் எவையோ அவ்விதமான ஸம்ஸாரத்தில் கிடக்கச் செய்யும் பாதகங்களையும் ப்ரபன்னர் ஒருக்காலும் செய்யத்தகாதவைகள் –

——————

ப்ராயஶ்சித்தே யதே₂ந்த்₃ராய ப்ருச்ச₂தே கமலா ஆஹ ச ।
) ரஹஸ்யம் து ப்ரபந்நஸ்ய த₃ர்ஶிேம் பூர்வ பத்₃த₄தவ் ॥ 23 ॥

ஸத்துக்களான ப்ரபன்னர்களுக்கு மேற்கண்ட பாதகங்கள் நேர்ந்து அதனால் அனுதாபம் பிறக்குமாகில் பின்பு அவர்கள் ரஹஸ்யமாகவும் ப்ரகாசகமாயும் பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும் –

—————

ஏத த₃ர்த₂மபி₄ப்ரேத்ய பராஶர வஸோ யதா ₂ ॥ 24 ॥
” க்ருதே பாபே (அ)நுதாபோ வை யஸ்ய பும்ஸ꞉ ப்ரஜாயதே ।
ப்ராயஶ்சித்தம் து தஸ்யைகம் ஹரி ஸம் ஸ்மரணம் பரம் ॥
(பாபே கு₃ரூணி கு₃ரூணி ஸ்வல்பாந் யல்பே ச தத்₃வித₃꞉
ப்ராயஶ்சித்தாநி மைத்ரேய ஜகு₃꞉ ஸ்வாயம்பு₄வாத₃ய꞉ ॥ 26 ॥

துஷ் க்ருதங்களைச் செய்து அதனால் அனுதாபத்தோடு கூடிய ப்ரபன்னருக்கு ரஹஸ்ய ப்ராயச்சித்தத்தில் அதிகாரம் உண்டாகிறது -இவ்வாறு தன்னிடத்தில் உபதேசம் கேட்க்கும் தேவேந்திரனுக்கு ஸ்ரீ மஹா லஷ்மி உபதேசித்து அருளி உள்ளாள்
இவ்வாறே பிராயச்சித்த பிரபத்தியைப் பற்றி பராசர முனிவர் அருளிச் செய்தவற்றை மேலும் அருளிச் செய்கிறோம் –

——————-

ப்ராயஶ் சிதாந்ய ஸேஷாணி தப꞉ கர்மாத்மகாநி வை ।
யாநி தேஷாமஸேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம் ॥ 27 ॥

எவர் ஒருவர் பாபம் செய்ததால் அனுதாபம் உண்டாகின்றது அவருக்கு பகவந் நாம ஸ்மரணமே பிராயச்சித்தம் ஆகின்றது –

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே

——————-

ப்ரமாதா₃த் க்ரியதே கர்ம ப்ரச்ய வேதாத்₄வரேஷு யத் ।
ஸ்மரணாதே₃வ தத்₃விஷ்ணோ ꞉ ஸம் பூர்ணம் ஸ்யாதி₃தி ஶ்ருதி꞉ ॥ 28 ॥

வாரீர் மைத்ரேய முனிவரே ஸ்வயம்பவ மநு முதலிய ரிஷிகளானவர்கள் அதிக பாபங்களுக்கு அதிக ப்ராயச்சித்தமும் அல்ப பாபங்களுக்கு அல்ப ப்ராயச்சித்தமும் சொல்லி இருக்கிறார்கள் –

பிரஸ்ய -நழுவுதல் -த்ரவ்ய லோபம் கிரியா லோபம் மந்த்ர லோபம் -போன்ற அசேஷ லோபங்களையும் போக்க வல்லது

———–

ப₄க₃வத்₃ த்₄யாந யுக்தஸ்ய தத்₃த்₄யாநாவதி₄கா꞉ க்ரியா꞉ ।
(நாஸ்திகஸ்ய து மூர்க₂ஸ்ய யுக்தம் த்₃வாத₃ஶ வார்ஷிகம் ) ॥ 29 ॥

தபோ ரூபங்களாயும் கர்ம ரூபங்களாயும் ப்ராயச்சித்தங்கள் எவையோ அவைகள் எல்லாவற்றுக்கும் பகவந் நாம ஸ்மரணமே உயர்ந்த பிராயச்சித்தமாக இருக்கின்றது –

————–

(நாஸ்திகஸ்ய து கர்தவ்யம் யதோ₂க்தம் த₃ஶ வார்ஷிகம்) ।
ஏவம் விஷய பே₄தே₃ ந கு₃ருலத்₄வோர் ந ஸங்கர꞉ ॥ 30 ॥

யாகங்களில் அஜாக்ரதையால் பிழைகளாவது -செய்ய வேண்டியவற்றை தவரி விட்டாவது அனுஷ்ட்டிக்கப்படும் கர்மங்கள் பகவந் நாமங்களை ஸ்மரித்த மாத்திரத்தாலேயே பரிபூர்ணமாய் விடுவதாய் வேதத்தில் சொல்லப்படுகின்றது –

———-

ஷேத்ரஜ்ஞஸ் யேஶ்வரஜ்ஞாநாத் விஶுத்₃தி₄꞉ பரமா மதா ।
இத்யேவம் யாஜ்ஞவல்க்யேந ப்₃ருவதா (ஆ)த்மேஶ யோரபி ॥ 31 ॥

ஸேஷ ஸேஷித்வ விஜ்ஞாநாத் ஶுத்₃தி₄ர் ஜீவஸ்ய வர்ணிதா ।
“அதி பாப ப்ரவ்ருத்தோ(அ)பி த்₄யாயந் நிமிஷ மச்யுதம் ॥ 32 ॥

ப்ரபன்னர் அனுஷ்ட்டிக்கும் யாகாதி கர்மங்கள் அவர்களுக்கு பகவத் த்யானம் நிலைத்த உடனே முடிவாய் விடுகின்றன -பகவான் இடத்தில் நிஷ்டை இல்லாதவர்களால் பன்னிரண்டு வருஷங்களால் முடியத்தக்க யாகாதி கர்மங்கள் அனுஷ்ட்டிக்கத் தக்கவைகளாம்

மேற் சொல்லியபடி பகவத் பக்தர்கள் அல்லாதவர்கள் பல ஆண்டுகள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பகவத் பக்தர்கள் ஸ்வல்ப பிராயச்சித்தம் செய்து கொள்ளுவதே போதும் என்றும் ப்ராயச்சித்தங்களை விதிக்கும் ஸாஸ்த்ரங்களுக்கு வ்யவஸ்தை ஏற்படுவதால் ஒன்றுக்கு ஒண்டு விரோதம் இல்லை –

இவ்வாத்மாக்கள் பரமாத்மாவை அறிவதால் இவர்களுக்கு பரமமான பரிசுத்தி யுண்டாவதாய் யாஜ்ய வல்க்யர் என்னும் மகரிஷி சொல்வதால் -இஜ்ஜீவர்கள் தமக்கும் ஈஸ்வரனுக்கும் யுண்டாய் இருக்கும் சேஷ சேஷித்வ ஞானத்தை அறிவதாலேயே இவர்களுக்குப் பரிசுத்தி சொல்லப்பட்டதாகிறது –

———-

பூ₄யஸ் தபஸ்வீ ப₄வதி பங்க்தி பாவந பாவந꞉ ।
அபவித்ர꞉ பவித்தரோ வா ஸர்வா வஸ்தா₂ம் க₃தோ(அ)பி வா ।
ய꞉ ஸ்மரேத் புண்ட₃ரீகாக்ஷம் ஸ பா₃ஹ்யாப்₄ யந்தரஶ் ஶுசி꞉ ॥ 33 ॥

ஒருவர் அதிக பாபங்களைச் செய்தவராய் இருந்தாலும் ஒரு நிமிஷ காலமாவது பகவானைத் த்யானிப்பவராகில் அவர் மறுபடியும் தபஸ்வியாகவும் பங்க்தி பாவனர்களையும் பரிசுத்தம் செய்பவர்களாயும் ஆகிவிடுகிறார்கள் –

———–

இத்யாதி₃ ஶௌநகாத்₃ யுக்தே꞉ ப₄க₃வத்₃ ஜ்ஞாநிநாம் ந்ருணாம் ।
க்ருதே பாபே (அ)நுதப்தாநாம் தாத்₃த்₄யாநாவதி₄கா꞉ க்ரியா꞉ ॥ 34 ॥

அபரிசுத்தராக இருந்தாலும் பரிசுத்தராக இருந்தாலும் அல்லது அவர் எந்த துரவவஸ்தையை அடைந்து இருந்த போதிலும் எவர் ஒருவர் பகவானைத் தியானிக்கிறாரோ அவர் உள்ளத்திலும் புறத்திலும் பரிசுத்தர் என்று செல்லப்படுகிறார் –

இது முதலாக யுள்ள ஸுநகர் முதலிய மஹரிஷியின் வசநங்களினால் பகவத் பக்தர்களுக்கு பாபம் நேர்ந்து அதனால் அவர்கள் அனுதாபம் உள்ளவர்களாக இருப்பார்களாகில் அவர்கள் செய்யும் பகவத் த்யானத்து அளவிலேயே அந்த பாபங்கள் தீர்ந்து விடும் –

—————

தே₃வோந்தர ஸம் ஸக்தை ꞉ ஸங்க₃ம் த்யக்த்வைவ வைஷ்ணவ꞉ ।
உபாயாந்தர ஸக்தைஶ்ச ப்ரபந்நைஸ் ஸஹ ஸம் வஸேத் ॥ 35 ॥

பின்னர் வேறு தேவதைகளை அடைந்தவர்களாயும் வேறு உபாயங்களை அடைந்தவர்களாயும் இருக்குமவர்களுடன் ஸஹ வாசத்தை விட்டு ப்ரபன்னர்களுடன் வஸிக்க வேண்டும் –

————–

ந மூர்க₂மாஶ்ரயேத் ஸாது₄꞉ ந மூர்கா₂ய கு₃ருர்வதே₃த் ।
ய ஆஶ்ரயேத₃வித்₃வாம்ஸம் தாம ஸஸ்து தமோ விஸேத் ॥ 36 ॥

ஸாதுவாக இருக்கும் ஒருவர் மூர்க்கனாக இருக்கும் குருவை ஆஸ்ரயிப்பது தகாது -மூர்க்கனான சிஷ்யனுக்கு உபதேசிப்பது தகாது -யாவன் ஒருவன் மூடரான ஆசார்யனை ஆஸ்ரயிக்கிறானோ அவன் தமஸ்ஸில் இருந்து காட அந்தகாரத்தை அடைந்தவனாகிறான் –

————–

மூர்க₂த₃த்தம் து யஜ்ஜ்ஞாநம் உப்தம் பீ₃ஜமிவோஷரே ।
அந்யோந்யஸ்மை கு₃ருச்சா₂த்ரௌ ந த்₃ருஹ்யேதாம் கதா₃சந ॥ 37 ॥

மூர்க்கனிடத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஞானம் களர் பூமியில் விரைத்த விதையோடு ஒத்தது -ஆச்சார்யனும் சிஷ்யனும் ஒருவருக்கு ஒருவர் த்ரோஹம் செய்யத்தகாது -இவர்களில் எவர் த்ரோஹம் செய்கிறாரோ அவர் மோக்ஷ மார்க்கத்தை இழந்து விடுவார் –

ஓம் சஹ நாவவது சஹ நவ் புனக்து சஹ வீர்யம் கரவா-அவஹை தேஜஸ்வி நவ்-அதீ-தம்-ஆஸ்து மா விட்விச்ஸ்-ஆவஹை ஓம் சாந்தி சாந்தி சாந்தி
எங்களுக்கு சிறந்த அறிவாற்றலைக் கொடு, ஊக்கத்துடன் பணிபுரிய சக்தியைக் கொடு, எங்களுக்கு வரும் துன்பங்களை நீக்கி, மனிதர்களாகிய எங்கள் மனதிலுள்ள பேதங்களை நீக்கி எங்களுக்கு என்றென்றும் அமைதியை மட்டும் கொடுப்பீராக.

————

யோ த்₃ருஹ்யத் யநயோஸ் ஸோ(அ)யம் ப்₄ரஶ்யதே முக்தி மார்க₃த꞉ ।
அநாதி₃ஷ்டே ந கு₃ருணா மந்த்ரேண ந ஹரிம் ஶ்ரயேத் ॥ 38 ॥

கு₃ரும் ந க₃ர்ஹயேச் சி₂ஷ்யா꞉ தா₄ர்மிகம் த்வர்த₂லோப₄த꞉ ।
அநிவேத்₃ய கு₃ரோ ꞉ கிம்ஶ்சித் நோப பு₄ஞ்ஜீத பு₃த்₃தி₄மான் ॥ 39 ॥

ஆச்சார்யரால் உபதேசிக்கப்படாமல் இருக்கும் மந்திரத்தால் பகவானை ஆராதிக்கத் தகாது -தர்ம நிஷ்டராக இருக்கும் ஆசார்யரை சிஷ்யன் தனத்தின் ஆசையால் பழிக்கக் கூடாது -விசேஷ வஸ்துக்கள் தனக்கு ஏதாவது கிடைத்தால் அதில் சிலதை ஆச்சார்யருக்கு சமர்ப்பிக்காமல் சிஷ்யன் தனக்கு அதை உபயோகித்துக் கொள்ளக் கூடாது -தன் ஆச்சார்யருக்கு த்வேஷிகளாய் இருப்பவர்களை சிஷ்யன் விட்டுவிட வேண்டும் –

—————-

கு₃ருவித்₃வேஷிண: ஸர்வான் வர்ஜயேத்₃வைஷ்ணவோத்தம꞉ ।
விஷ்ண்வாலய ந குர்யாத்து நிஷ்டீ₂வநமலாதி₃கம் ॥॥ 40 ॥

பாதவ் ₃ ந ஷாலயேத் தத்ர நாந்தரா தே₃வபீட₂தயோ ꞉ ।
க₃ச்சே₂த் ப்ரபந்நோ நா(அ)த்₃வாராத் ஸம் விஸேத்₃த₄ரிமந்தி₃ரம் ॥ 41 ॥

பகவானுடைய ஆலயத்தில் காறி உமிழ்தல் -மல மூத்ராதி விஸர்ஜனம் செய்தல் -கால்களைக் கழுவுதல் -இவை முதலிய கெட்ட கார்யங்களை ப்ரபன்னர்கள் செய்யவே கூடாது -பகவான் எழுந்து அருளி இருக்கும் இடத்துக்கும் பலி பீடத்துக்கும் நடுவில் குறுக்கே போகக் கூடாது -பகவத் ஆலயத்தில் வாசல் அல்லா வழியாகப் புகுந்து போகக் கூடாது –

——————

(க்ருஷ்ணகம்ப₃ ல ஸம்வீதோ ந விஸேஜ் ஜாது வைஷ்ணவ꞉ ।
விநா தீ₃பாதி₃கம் கர்ம தந்மாலா ப₃ந்த₄நாதி₃கம்) || 42 ॥

வைஷ்ணவராய் இருக்கும் ஒருவர் கறுப்புக் கம்பளியினால் போர்வை யுள்ளவராய் பகவத் ஆலயத்தில் பிரவேசிக்கக் கூடாது -திரு விளக்கு முதலியவைகளினால் வெளிச்சம் இல்லாத இடத்தில் பகவானுக்கு மாலை கட்டுதல் முதலான கைங்கர்யங்களைச் செய்யக் கூடாது –

—————–

அந்யத் கார்யம் ந குர்வீத வைஷ்ணவோ விஷ்ணு மந்தி₃ரே ।
நாந்யம் தே₃வம் நமஸ் குர்யாத் நாந்யம் தே₃வம் நிரீஷயேத் ॥
43 ॥

வைஷ்ணவர் பகவத் ஆலயத்தில் பகவத் கைங்கர்யம் ஒழிய வேறொரு காரியங்களையும் செய்யக் கூடாது -அங்கு இருக்கும் வேறொரு தேவாலயத்தில் புகுரக் கூடாது -வேறே ஒரு தெய்வத்தைத் தொழவும் பார்க்கவும் கூடாது –

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்

ஆழ்வான் -இஷ்ட சித்தி வாசிக்கிற வர்களோடு இருந்து தாழ்த்து வர
ஆழ்வானுக்கு உடையவர் சொன்ன வார்த்தையை அனுசந்திப்பது –
இஷ்ட சித்தி -என்பது
சாங்க்ய வாசஸ்பதி என்று பேரான சாங்க்ய சாஸ்திரம் –
ஆழ்வானுக்கு சொன்ன வார்த்தை யாவது
இத்தனை போது விளம்பித்தது என் என்ன
ஆழ்வான் இவ் விருத்தாந்தத்தை அருளிச் செய்ய-கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ -என்று
அருளிச் செய்து
புனஸ் ஸ்நானம் பண்ணுவித்து அருளி
ஸ்ரீ பாத தூளியும் இடுவித்து அருளினாராம் உடையவர்-

————–

நாந்யம் ப்ராஸாத₃மாரோஹேத் நாந்ய மாயதநம் வ்ரஜேத் ।
உத்₃தே₃ஶ தஸ்து த்₃வாத்ரிம்ஶத₃பசாரா ஹரே ꞉ ஸ்ம்ருதா ꞉ ॥ 44 ॥

ஸ்ரீ வராஹ புராணத்தின் 32 பகவத் அபசாரங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன -வைஷ்ணவர்கள் இவற்றில் எதையுமே செய்யக் கூடாது

———–

புராணே க₂லு வாராஹே வர்ஜயேத்₃வைஷ்ண வஸ்து தான் ।
க₃ந்த₄ம் புப்பம் ததா ₂ வாஸ꞉ பூ₄ஷணாநி பஶூன் க்₃ருஹான் ॥ 45 ॥

ததா ₂ போ₄ஜ்யாநி சாந்யாநி நாத்மார்தே₂ வைஷ்ணவோ ஹரேத் ।
கர்தவ்யா ஸேஷதா பு₃த்₃தி₄꞉ நாத்மநஸ்த நயாதி₃ஷு ॥ 46 ॥

சந்தனத்தை யாவது புஷ்ப்பங்களையாவது வஸ்திர பூஷணங்களை யாவது பின்னும் பசு க்ரஹம் முதலிய பாக்யங்களையாவது அப்படியே அமுது செய்யத்தக்க பதார்த்தங்களையாவது ப்ரபன்னர் தன ப்ரயோஜனத்துக்காக ஸம்பாதிப்பது தகாது -பகவத் ப்ரயோஜனத்திற்காக மட்டுமே ஸம்பாதிக்க வேண்டும் என்று கருத்து –

—————

விஷ்ணோர் விபூ₄தி பூ₄தேஷு மமதாம் வர்ஜயேத் ஸுதீ₄꞉ ॥ 47 ॥
ஏகாந்தீ வ்யபதே₃ஷ்டவ்யோ நைவ க்₃ராம குலாதி₃பி₄꞉ ।
விஷ்ணுநா வ்யபதே₃ஷ்டவ்ய꞉ தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி ॥ 48 ॥

ப்ரபன்னர் தமது பிள்ளைகள் முதலியவர்களை தமக்கு நியாமகர்கள் என்னும் எண்ணத்தையும் -அவர்கள் நம்முடையவர்கள் என்னும் எண்ணத்தையும் விட வேண்டும் -அவர்களும் தம்மைப்போலவே பகவானுக்கு நியாமகர்கள் என்றும் பகவானுடைய சொத்துக்கள் என்றும் நினைக்க வேண்டும் –

ஏகாந்தியாக இருக்கும் ப்ரபன்னர் கிராமம் குலம் முதலிய அடையாளங்களை இட்டு வியவஹரிக்கத் தக்கவர் அல்லர் -அவர் பகவானுடைய திரு நாமத்தாலேயே வியவஹரிக்கத் தக்கவர்-அவனுக்கு எல்லா அடையாளங்களும் பகவானாகவே இருக்கிறார்

மாம் மதீயஸ்ய சேதன அசேதன -உனது சொத்து -ஈஸ்வர ப்ரக்ருதிகளுக்கு நாம் கரைய வேண்டாமே-

————–

நத்₃யாஸ் தஸ்யைவ நாமாநி ப்ரவிஷ்டாயா யதா₂ர்ணவம் ।
ஸர்வாத்மநா ப்ரபந்நஸ்ய விஷ்ணுமே காந்தி நஸ்ததா ₂ ॥ 49 ॥

கடலில் பிரவேசித்து இருக்கும் நதியின் ப்ரவாஹத்திற்கு அக்கடலின் பெயர் ஒழிய அந் நதியின் பெயர் இல்லாமல் போவது போலவே ஸர்வ பிரகாரத்தாலும் பகவானைச் சரணம் அடைந்த ப்ரபன்னருக்கு அந்தப் பாகவான் திரு நாமம் ஒழிய வேறு ஒரு பெயர் இல்லையாம்

——–

சா₂யா விளங்க₄ நாதீ₃நி ந குர்யாச்ச ஸதாம் ஸதா ₃ ।
ஸத்₃பி₄ஶ்ச ஸஹ வர்தேத விவாத₃ம் தேஷு வர்ஜயேத் ॥ 50 ॥

சத்துக்களின் நிழலைத் தாண்டுவது முதலிய குறைவான செயல்களைப் ப்ரபன்னர் செய்யத் தகாது -எப்பொழுதும் ஸத்துக்களுடனே ஸஹ வாஸம் செய்ய வேண்டும் -அவர்களுடன் வழக்காடுவதைத் தவிர்க்க வேண்டும் –

—————

ப்ரபந்நாநநு ஶாஸ்தீத்த₂ம் விஷ்வக் ஸேநேஶ ஸம்ஹிதா ।
நா வைஷ்ணவ க்₃ரந்த₂ரதி꞉ நா ஸச் சா₂ஸ்த்ர ரதோ ப₄வேத் ॥ 51

ஸ்ரீ விஷ்வக் சேன ஸம்ஹிதை ப்ரபன்னர்களைக் கீழ்ச் சொல்லியபடி கட்டளை இடுகின்றது -அதாவது ப்ரபன்னர் பகவானைப் பற்றியதல்லாத ஸாஸ்த்ரங்களில் ஆசை வைப்பது தகாது -அப்படியே அசத்துக்களினால் செய்யப்பட -அசத்துக்களைப் பற்றியதாக இருக்கும் கிரந்தங்களிலும் ஆசையுள்ளவராகவும் இருப்பதும் தகாது –

—————-

நாந்ருதம் ஶபத₂ம் குர்யாத் ந ச ப்ருச்சே ₂ச்சு பா₄ஶுபே ₄ ।
விஷ நிர்ஹரணம் சாபி பிஶாசாதி₃விமோசநம் ॥ 52 ॥

ஸமஸ்தவ்யாதி₄ஹரணம் ஸூத்₃ர மந்த்ரைர் ந ஸாத₄யேத் ।
ந தா₄ரயேஜ் ஜடாபா₄ரம் ப₄ஸ்ம சைவ ந தா₄ரயேத்
॥ 53 ॥

ப்ரபன்னர் பொய்யாக சபதம் கூறுவது கூடாது -ஜ்யோதிஷம் அறிந்தவர்களிடத்தில் தனக்கு நேரிடும் நன்மை தீமைகளைக் கேட்கக் கூடாது – விஷங்களை போக்குதல் -பிசாசம் முதலிய க்ரஹ விமோசனம் செய்தல் -ஸமஸ்த வியாதிகளுக்கும் சிகிச்சை செய்தல் -இவைகளை சூத்ர மந்திரங்களால் ஸாதிக்கக் கூடாது –

————-

பா₃ஹ்ய லிங்கா₃நி ஸர்வாணி ஸந்த்யஜேத்₃ யாவதா ₃யுஷம் ।
யத்ர யத்ர ஹி நீதிஸ்யாத் வைஷ்ணவீ ஶிஷ்டஸம்மிதா ।
தத்ர தத்ராவ ஸேந்நித்யம் நாந்யத்ரேதி மதிர் மம ॥ 54 ॥

சிரஸ்ஸில் சடை முடிதல் -பஸ்மம் தரித்தல்-பின்னும் வைதிக மந்திரங்களுக்கு வெளிப்பட்டவைகளான மதங்களில் இருப்போர் செய்து கொள்ளும் அடையாளங்கள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் ப்ரபன்னர் விடவேண்டும் – –

—————-

ந லோக வ்ருத்திம் வர்தேத வ்ருத்தி ஹேதோ꞉ கத₂ஞ்சந ।
ஸத்ஸம்மதா து யா வ்ருத்தி꞉ தே₃ஶகாலா நுரூபிணீ ॥ 55 ॥

எந்த எந்த இடங்களில் சிஷ்ட சம்மதங்களான வைஷ்ணவ தர்மங்கள் நடக்கின்றனவோ அந்த இடங்களிலேயே ப்ரபன்னர் வஸிக்க வேண்டும் -மற்ற இடங்களில் வஸிக்கக் கூடாது என்றும் எனக்குத் தோற்றுகிறது –

————-

தாமாஸ்தி₂தோ ந லோபே₄ந ஹீநாம் வ்ருத்திம் ஸமாஶ்ரயேத் ।
வ்யாஸஸ்து ப₄க₃வாநாஹ வர்ஜநீயம் ஸதாமிஹ ॥ 56 ॥

தன் ஜீவன நிமித்தமாக சாமான்யர்களான லோகத்தார்கள் செய்யும் ஜீவன உபாயத்தை ப்ரபன்னர் செய்யக்கூடாது -அப்போதைய தேச காலங்களுக்குத் தக்கவைகளாயும் சத்துக்களினால் ஒப்புக் கொள்ளப் பட்டவைகளாயும் இருக்கும் ஜீவன உபாயங்கள் எவைகளோ அவைகளை பிரபன்னர் அடைந்து இருக்க வேண்டும் -அர்த்த ஆசையினால் ஹீந விருத்தியை இவர்கள் செய்யத் தகாது-

ஸத்துக்களுக்கு விடத் தக்கவைகளை பகவானான வ்யாஸ முனிவர் சொல்லி இருக்கிறார் –

————————-

ந ஶப்₃த₃ஶாஸ்த்ராபி₄ரதஸ்ய மோஷோ ந சாபி ரம்யாவஸத₄ப்ரியஸ்ய ।
ந போ₄ஜநாச்சா₂த₃ந தத்பரஸ்ய ந த லோக வ்ருத்த க்₃ரஹணே ரதஸ்ய ॥ 57 ॥

ஶிஶ்நாே₃தரே தய(அ)பி₄ரதா ꞉ ஸதை₃வ ஸ்தேயாந்ருதா வாக்பருஷாஶ்ச நித்யம் ।
வ்யபேத த ₄ர்மா இதி தாந் விதி₃த்வா ………………………… ஸம்பரிவர்ஜயந்தி ॥ 58 ॥

வ்யாஸ முனிவர் அருளிச் செய்ததை அருளிச் செய்துள்ளார் -ஸப்த ஸாஸ்த்ரத்திலேயே ஊற்றம் யுடையோனுக்காகவாவது -அஸனாச் ஸாதனங்களைப் பெறுவதிலேயே நினைவு யுடையோனுக்காகவாவது-உலகத்தாரின் ஸித்தங்களை வசப்படுத்திக் கொள்வதிலேயே யத்தனம் யுடையோனுக்காகவாவது-மோக்ஷம் கிடைப்பதில்லை -ஒரே நிச்சயம் யுடையோராயும் உறுதியான உறுதியான நன்னடத்தை யுள்ளவராயும் -ஐம் புலன்களில் ஆசையைக் கழித்தவராயும் -ஒருவருக்கும் துன்பம் யுண்டாக்காதவராயும் -ப்ரஹ்ம ஞானத்தில் மனமுடையவராயும் இருக்கும் ஞானிக்கே மோக்ஷம் நிச்சயமாகக் கிடைக்கத் தக்கதாகும் –

———–

ஏகாந்த ஶீலஸ்ய த்₃ருட₄வ்ரதஸ்ய பஞ்சேந்த்₃ரிய ப்ரீதி நிவர்தகஸ்ய ।
அத்₄யாத்மவித்₃யா ரதமாநஸஸ்ய மோஷோ த்₄ருவோ நித்ய மஹிம்ஸ கஸ்ய| 59

———-

நாபி₄நந்தே₃த மரணம் நாபி₄நந்தே₃த ஜீவிதாம் |
காலமேவ ப்ரதீஷேத நிர்வேஶம் ப்₄ருதகோ யதா₂ ॥ 60 ॥

ப்ரபன்னர் தமக்கு சீக்கிரத்தில் மரணம் யுண்டாகும் என்றாவது நெடுநாள் ஜீவித்து இருப்போம் என்றாவது ஸந்தோஷிப்பது கூடாது -கூலி வேலைக்காரன் தனக்குக் கூலி கிடைக்கும் காலத்தை எதிர்பார்த்து இருப்பது போல் அவைகளின் காலத்தையே எதிர்பார்த்து இருக்க வேண்டும் –

—-

ப்ராயேண அக்ருதக்ருத்யாஸ்து ம்ருத்யோருத்₃வேஜிநா ஜநா꞉ ।
க்ருதக்ருத்யா꞉ ப்ரதீக்ஷந்தே ம்ருத்யும் ப்ரிய மிவாதிதி₂ம் ॥ 61 ॥

உலகத்தில் உள்ளவர்கள் தமோ வஸ்யராய் செய்ய வேண்டிய மோக்ஷ உபாயத்தை செய்யாமையாலேயே அநேகமாய் மரணத்தின் நின்றும் பயப்படுகிறார்கள் -அப்படிக்கு அல்லாமல் தாம் செய்ய வேண்டிய மோக்ஷ உபாயத்தை செய்தவர்கள் தம்முடைய க்ருஹத்திற்கு வரும் அதிதிகளை எதிர்பார்ப்பது போல் மிருத்யுவையும் எதிர்பார்த்து இருப்பார்கள் –

————-

தத்பாத₃ப₄க்தி ஜ்ஞாநாப்₄யாம் ப₂லமந்யத் கதா₃சந ।
ந யாசேத் புருஷோ விஷ்ணும் யாசநாந் நஶ்யதி த்₄ருவம் ॥ 62 ॥

ப்ரபன்னர்கள் பகவானிடத்தில் அவன் திருவடிகளில் பக்தி ஞானம் இவைகள் ஒழிய வேறு ஒன்றையும் கேட்பது தகாது -அப்படிக் கேட்ப்பாராகில் ஞானம் அழிந்து விடுவார் -இது நிச்சயம் –

————–

ப்ரமாதா₃த்₃பு₃த்₃தி₄தோ வா(அ)பி யதா₃க₃꞉ க்ரியதே ஸதாம் ।
அநுதப் தஸ்து தாநேவ ஷாம யேந் நாந்யதா ₂ ஶம꞉ || 63 ||

அபுத்தி பூர்வகமாவது புத்தி பூர்வகமாவது ப்ரபன்னர்கள் ஸத்துக்களிடம் அபசாரப் படுவார்களாகில் உடனே அனுதாபம் உள்ளவராய் அவர்கள் இடத்திலேயே அபதாரத்துக்கு ஷாமணம் செய்து கொள்ள வேண்டும் -வேறு விதமாக அவ் வபதாரம் கழியாது

———-

ப₄க₃வத் யபசாரே(அ)பி நைஷா ஶாந்திர நுத்தமா ।
ஸ்த்ரீணாம் ஸ்த்ரீஸங்கி₃நாம் சைவ ஸம்ஸர்க₃ம் வர்ஜயேத் ஸுதீ₄꞉ ॥64॥

பகவானிடத்தில் அபசாரம் நேர்ந்தாலும் இப்படி க்ஷமை கொள்ளுவதே உத்தமம் -நல்ல ஞானமுடியவர் ஸ்த்ரீகள் இடத்திலும் ஸ்த்ரீகளுடன் சமசர்க்கம் செய்பர்களிடமும் ஸஹ வாஸத்தை விட வேண்டும் –

———–

தஸ்மாத் ஸர்வாத்மநா வித்₃வான் விஷயாந் விஷவத் த்யஜேத் ।
அவித்₃ய꞉ ப்ராக்ருத꞉ ப்ரோக்தோ வைத்₃யோ வைஷ்ணவ உச்யதே
॥ 65 ॥

ஆகையால் ஞானியாக இருக்கும் பிரபன்னர் ஸ்த்ரீ முதலிய விஷயாந்தரங்களை விஷத்தைப் போலே விடவேண்டும் -இவ்விஷயாந்தர அனுபவத்தினால் அஞ்ஞானம் மேலிடுகிறது -அஞ்ஞானி பிராகிருத மண்டலத்திலேயே அழுந்தி விடுவான் -ஞானியாகவே இருக்குமவர் பகவானைச் சேர்ந்து விட்டவராகவே சொல்லப்படுவார் –

———-

அவித்₃யேந ந கேநாபி வைத்₃ய꞉ கிஞ்சித் ஸமாசரேத் ।
இதி ஹ்யுக்தம் ப₄க₃வதா ஶாஸ்த்ரே மந்வாதி₃பி₄ஸ்ததா ₂ ॥ 66 ॥

ஞானியாக இருக்குமவர் அஞ்ஞானியுடன் யாதொரு காரியமும் செய்யத் தகாது -இவ்வாறு பகவத் ஸாஸ்த்ரத்தில் பகவானும் மன்வாதி சாஸ்திரங்களில் மநு முதலியவர்களாலும் அருளிச் செய்யப்படுகின்றது –

————

தஸ்மாத் ப்ராக்ருத ஸம் ஸர்க₃ம் வர்ஜயேத்₃வைஷ்ணவோத்தம꞉ ।
ஏகஶய்யாஸநம் பங்க்தி பா₄ண்ட₃ம் பக்வாந்நமிஶ்ரணம் ॥ 67 ॥

யாஜநாத்₄யாபநே யாநம் ததை ₂வ ஸஹ போ₄ஜநம் ।
நவதா ₄ ஸங்கர꞉ ப்ரோக்தோ ந கர்தவ்யோ (அ)த₄மைஸ்ஸஹ
|| 68 ॥

ஆகையால் ப்ரக்ருதி போகங்களில் ஆசை யுள்ளவர்களுடன் ஸஹ வாஸத்தை பாகவத உத்தமரான ப்ரபன்னர் விட வேண்டும் – அந்த பிராகிருத போகிகளுடன் ஒரே படுக்கையில் படுப்பது -ஒரே ஆசனத்தில் இருப்பது -ஒரே பங்க்தியிலே சேருவது -அவர்கள் உபயோகப்படுத்திய பாத்திரங்களை சுத்தி செய்யாமல் உபயோகப்படுத்திக் கொள்வது -அவர்கள் அன்னத்தை தங்களுடைய அன்னத்தோடு கலந்து கொள்வது- அவர்களுக்கு ப்ரோஹிதர்களாய் வைதிக கர்மங்களைச் செய்விப்பது -அவர்களுக்கு வேத அத்யயனம் செய்விப்பது -அவர்களுடன் பந்துத்வம் செய்வது -அவர்களுடன் கூட புசிப்பது -ஆகிய இவ்வொன்பது விதங்களில் கலப்பு உண்டாகிறது -இவ்விதங்களில் அவர்களுடன் கலந்து இருப்பதை ப்ரபன்னர்கள் தவிர வேண்டும்-

—————

ஸல்லா பஸ் பர்ஶந ஸ்வாபவிதா ₄நா(அ)ஸநஶாயநாத் ।
யாஜநாத்₄யாபநாத்₃யாநாத் பாபம் ஸங்க்ரமதே ந்ருணாம் ॥ 69 ॥

ஸம்வத்ஸரேண பததி பதிதேந ஸமாசரன் ।
யாஜநாத்₄யாபநாத்₃யாநாத் ஸஹ ஶய்யாஸநாஶநாத் ॥ 70 ॥

ப்₃ருஹஸ்பதி மநுப்₄யாம் து ஸங்கரஸ்ய து வர்ணநம் ।
வைவித்₄யம் யாஜநாதீ₃நாம் ஸத்₃ய꞉ பாதித்ய ஹேதுநா ॥ 71 ॥

மேற் சொல்லியபடி தர்ம சாஸ்திரங்களில் சொல்லியவற்றையும் அருளிச் செய்கிறார் -பாபங்களைச் செய்த்தவர்களிடம் சம்பாஷணை செய்வது -ஸ்பர்சிப்பது -தூங்குவது -உட்க்காருவது-படுப்பது -ப்ரோஹிதம் செய்வது -வேத அத்யயனம் செய்விப்பது -பந்துத்வம் செய்வது -இவைகளினால் பாபம் செய்யாதவர்களுக்கும் அப் பாவிகளின் பாவங்கள் வந்து சேர்கின்றன –

புரோஹிதம் செய்வது வேத அத்யயனம் செய்வது -எப்பொழுதும் கூடத் திரிவது -கூடப் படுப்பது – உட்க்காருவது -புசிப்பது -இவைகளினால் பதிதனோடு ஒரு வருஷ காலம் ஸஹவாஸம் செய்தவன் அவனைப் போலவே தானும் பதிதனாகி விடுகிறான் –

ப்ருஹஸ்பதி மநு இவர்களினால் மேற் சொல்லியபடி கலந்திருக்கை பலவிதமாகச் சொல்லப்படுகின்றது -அப்பதிதர்களுக்கு புரோஹித தொழில்கள் முதலிய வைதிக கர்மங்களைச் செய்வித்தால் அவன் உடனேயே பதிதனாய் விடுவான் என்றும் சொல்லப்பட்டு உள்ளது –

—————

ந்யாஸ வித்₃யைக நிஷ்டா₂நாம் வைஷ்ணவாநாம் மஹாத்மநாம் ।
ப்ராக்ருதாபி₄ஷ்டுதிர்நிந்தா ₃ நிந்தா ₃ஸ்துதிரிதி ஸ்ம்ருதா ॥ 72 ॥

ந்யாஸ வித்யை என்னும் ப்ரபத்தியில் நிஷ்டையுடைய ப்ரபன்னர்கள் இப்பிரக்ருதி போகங்களை யுடையோர்களை ஸ்துதிப்பது அப் ப்ரபன்னர்களுக்கு பழிப்பு என்றும் அவைகளைப் பழிப்பது இவர்களுக்குப் புகழ் என்றும் சொல்லப்பட்டு இருக்கின்றது –

——–

அத்₃ய ப்ரப்₄ருதி ஹே லோகா யூயம் யூயம் வயம் வயம் ।
அர்த₂காம பரா யூயம் நாராயணா பரா வயம் ॥ 73 ॥

நாஸ்தி ஸங்க₃தி ரஸ்மாகம் யுஷ்மாகம் ச பரஸ்பரம் ।
வயம் து கிங்கரா விஷ்ணோ ꞉ யூய மிந்த்₃ரிய கிங்கரா꞉ ॥ 74 ॥

மேற் சொல்லியபடி ப்ரபன்னர்கள் ப்ராக்ருதர்களைப் பற்றி அருளிச் செய்ததை அருளிச் செய்கிறார் –
வாரீர் உலகத்தார்களே -இது முதல் நீங்கள் நீங்களே -நாங்கள் நாங்களே -எங்கனே ஏன் என்றால் -நீங்கள் அர்த்த காமங்களில் ஆசையை வைத்தவர்கள் -நாங்கள் ஸ்ரீ மந் நாராயணனையே அடைக்கலம் புகுந்தவர்கள் -ஆகையால் எங்களுக்கும் உங்களுக்கும் ஒரு துவக்கும் இல்லை -நாங்கள் பகவானுக்கே தாஸர்களாக இருக்கிறோம் -நீங்களோ ஜம்புவான் களுக்கு தாஸர்களாக இருக்கிறீர்கள் –

——–

9-வர்ஜநீய பத்₃த₄தி꞉ நவமீ-ஸம் பூர்ணம்

—————-

அத₂ ப₂லோத₃ய பத்₃த₄தி꞉ த₃ஶமீ

ஏவம் ப்ரபந்நா விஷ்ணோஸ்து பாத₃வ் தத் ப்ராண ஸஞ்ஜ்ஞிதான் ।
அநுவ்ரஜதி தாந் விஷ்ணு꞉ அத்யர்த₂ப்ரேம விஹ்வல
꞉ || 1 ||

இவ்வாறு பகவானுடைய திருவடிகளைச் சரணம் புகுந்தவர்களாயும் பகவானால் தன்னுடைய பிராணனாகச் சொல்லப்பட்டு இருக்கும் இப்ரபன்னர்களை பகவான் மிகுந்த திருவருளோடு கூடியவராய் பின் செல்கிறார் –

————–

ஸ்வயம் ப₄க₃வதா சோக்தம் “ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ” ।
ப₃ஹு ஜந்ம ஸஹஸ்ராந்தே தி₃ஷ்ட்யா யஸ்து ப்ரபத்₃யதே
॥ 2 ॥

“வாஸுதே₃வஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄꞉” ।
உக்தா ஶஸ்த்ரே ப₄க₃வதா ப்ரபந்நே க்ருதக்ருத்யதா ॥ 3 ॥

ஞானியாக இருக்குமவர் என் ஆத்மாவாகவே எண்ணப்படுகிறார் என்னும் இவ்வர்த்தம் பகவானால் சொல்லப்படுகின்றது -எவர் ஒருவர் அநேக ஜென்மங்கள் கடைசியில் தமக்கு உண்டாய் இருக்கும் ஸூஹ்ருத விசேஷத்தால் எனக்கு ஸர்வ பயனும் பகவானே என்று என்னிடத்தில் பிரபத்தி செய்கிறார் -அந்த மஹாத்மா உலகத்தில் அரும் பொருளாகக் கிடைக்கத் தக்கவர்-

பகவான் இடத்தில் உயர்ந்த பக்தி உள்ளவராய் இருப்பதும் பகவான் சர்வோத்தமர் என்று அறிந்து இருப்பதுமே ப்ரபன்னர்களுக்கு க்ருதக்ருதையாக ஸாஸ்த்ரத்தில் பகவானால் சொல்லப்பட்டுள்ளது –

மம பிராண பாண்டவ -ஞாநீத் ஆத்மைவ மே மதம் -அறிவார் உயிரானாய்-அறிவார்களுக்கு உயிர் போல் -சாமான்ய அர்த்தம் -அறிவார்களா உயிராகக் கொண்டவன் –என்னது உன்னாவி உன்னது என்னாவி –ஸ மஹாத்மா துர்லபம் -விரஹம் ஸஹியாத மார்த்வம் களத்தில் கூடு பூரிக்கும் –

—————-

தஸ்மிம்ஶ் சாநுத்தமா ப்ரீதி꞉ ஸ்வஸ்யாஸேஷ விஶிஷ்டதா ।
விஷ்ணூபாயோ யோ (அ)ந்யப₂ல ꞉ ஸோ (அ)த₄ம꞉ பரிகீர்தித꞉ ॥ 4 ॥

அந்யோ பாயோ விஷ்ணுப₂ ல ꞉ மத்₄யம꞉ பரிகீர்திதா ꞉ ।
மாத₄வாங்க்₄ரி த்₃வயோ பாயோ மாதா₄வாங்க்₄ரி ப்ரயோஜந꞉ ॥ 5 ॥

பகவானை உபாயமாகக் கொண்டு பகவானை ஒழிந்த வேறு பலன்களை விரும்பும் ப்ரபன்னர் அதமர் என்றும் வேறே உபாயங்களைக் கொண்டு பகவானை அடைய விரும்புபவர்கள் மத்யமர் என்றும் சொல்லப்படுவார்கள் –

அங்கு விஷ்ணு பத பிரயோகம் -இங்கு மாதவ பத பிரயோகம் -த்வயம் போலவே -திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்

——–

ஸ உத்தமாதி₄காரீ ஸ்யாத் க்ருதக்ருத்யோ (அ)த்₃ய ஜந்மநி ।
யா꞉ க்ரியா꞉ ஸம் ப்ரயுக்தா ꞉ ஸ்யு꞉ ஏகாந்தக₃த பு₃த்₃தி₄பி₄꞉ ॥ 6 ॥

பகவானுடைய திருவடிகளையே உபாயமாகக் கொண்டு அத் திருவடிகளையே பயனாக விரும்புபவர்கள் ப்ரபன்னர்களில் உத்தமராவார் – அவர் இஜ் ஜென்மத்திலேயே க்ருதக்ருத்யராய் செய்ய வேண்டிய அனைத்தையுமே செய்தவராகிறார்கள்

ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண -அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே | ஸதைகரூப_ ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே || -புருஷோத்தமன் –

——————

தாஸ் ஸர்வா ஶிரஸா தே₃வ꞉ ப்ரதி க்₃ருஹ்ணாதி வை ஸ்வயம் ।
“ப₄க்தை ரண்வப்யுபாநீதம் ப்ரேம்ணா பூ₄ர்யேவ மே ப₄வேத் ॥ 7 ॥

பகவான் ஒருவர் இடத்திலேயே பரம நிச்சயமுடைய ப்ரபன்னர்களினால் எந்த ஆராதனங்கள் செய்யப் படுகின்றனவோ அவைகளை பகவான் தனது சிரஸ்ஸால் வஹிக்கிறார்
இவ்வாறு பகவான் பரிக்கிரஹிக்கிறார் என்பதற்கு பகவத் ஸ்ரீ ஸூக்திகளையே பிரமாணமாக அருளிச் செய்கிறார் –

குறும்பறுத்த நம்பி விருத்தாந்தம் அறிவோம்-பூரி ஜெகந்நாதப் பெருமாளுக்கு சமர்ப்பித்த புஷ்ப்பம் கனத்ததே -விதுரஸ்ய மஹா மதி –

—————

பூ₄ர்யப்ய ப₄க்தோபஹ்ருதம் ந மே தோஷாய கல்பதே” ।
ப₄க்த ஶப்₃த₃ஸ்து முக்₂யோக்யதா ப்ரபந்நே பர்யவஸ்யதி ॥ 8 ॥

எனது பக்தர்களினால் அன்புடன் எனக்கு ஸமர்ப்பிக்கப் பட்டு இருக்கும் உபஹாரம் கிஞ்சித்த்தாக இருந்தபோதிலும் அது அதிகமானதாகவே யாகி விடும் -என்னிடம் பக்தி இல்லாதவர்களால் ஸமர்ப்பிக்கப்படும் உபஹாரம் அதிகமாக இருந்த போதிலும் அது எனக்கு சந்தோஷத்தை உண்டாக்குவதில்லை –

மேற் சொல்லிய பக்த ஸப்தம் ப்ரபன்னர்கள் இடத்திலேயே முக்கியமாக முடிகிறது -இவ்வாறு விஷ்வக் சேனர் ஸம்ஹிதையில் அருளிச் செய்யப்பட்டுள்ளது –

மத் பக்தம் நயாமி பரமம் பதம் -விசேஷித்து ப்ரபன்னர் என்றே பொருள் –

———–

ஆத்மீய ஸம் ஹிதாயாம் து யதா₂ ஸேநேஶ உக்தவான் ।
“ஸேவா து ப்ரோச்யதே ஸத்₃பி₄꞉ ப₄க்தி ஶப்₃தே₃ந பூ₄யஸீ ॥ 9 ॥

ஒருவரிடத்தில் அதிகமாகச் செய்யப்படும் ஸேவை ஸத்துக்களினால் பக்தி என்று சொல்லப்படுகிறது -தனது ஸ்வாமியிடத்தில் தான் மிகவும் தாழ்ந்தவனாக இருப்பது ஸேவை எனப்படுகிறது –

எதுவே என் பணி என்னாது அதுவே ஆட்ச் செய்யுமீடே

—————-

ஸேவா சாத்யந்த நீசத்வா பதிர்ஹி ஸ்வாமிநம் ப்ரதி ।
தஸ்மாத் பரஸ்ய தா₃ஸ்யை கரஸதா ப₄க்தி ருச்யதே ॥ 10 ॥

ஆகையால் பகவானிடத்தில் தாஸனாக இருப்பதையே தனக்கு போகமாகக் கொண்டிருப்பது பக்தி என்று சொல்லப்படுகிறது –

———-

ஆகிஞ்சிந்யைக ஶரணா꞉ கேசித்₃பா₄க்₃யாதி₄கா꞉ புந꞉ ।
லக்ஷ்மீ புருஷகாரேண வ்ருத வந்தோ நரோத்தமா꞉ ॥ 11 ॥

மாமேகம் ஶரணம் ப்ராப்ய மாமேகம் ப்ராப்நுவந்தி தே ।
ஏவம் மாம் ப்ராப்ய ஶரணம் வீதஸோக ப₄யக்லமா꞉ ॥ 12 ॥

வேறொரு கதி இல்லாமல் இருப்பதையே உபாயமாகவுடைய பாக்யவான்கள் நரோத்தமர்கள் ஸ்ரீ மஹா லஷ்மியை புருஷகாரமாகக் கோலி ஸ்ரீ மஹா லஷ்மியுடன் கூடிய என்னைச் சரணம் அடைய விரும்புபவர்களாய் இவ்வாறு என்னைச் சரணடைந்து என்னையே பெறுகிறார்கள் –

———–

நிராளம்போ ₃ நிராஶஶ்ச நிர்மமோ நிரஹங்க்ருதி꞉ ।
மாமேவ ஶரணம் ப்ராப்ய தரேத் ஸம்ஸார ஸாக₃ரம் ॥ 13 ॥

என்னுடைய கைங்கர்யங்களையே செய்கிறவர்களாயும் -என்னையே பரமனாக நம்பியவராயும் -அதனால் சம்சாரத்தில் உண்டாகும் பய சோக வருத்தங்கள் தீர்ந்தவராயும் வேறொரு உபாயங்களை யுடையாதவராயும் -வேறொரு பயன்களை விரும்பாதவராயும் -அஹங்கார மமகாரங்கள் இல்லாதவராயும் என்னையே அடைந்தவர்கள் ஸம்ஸாரக் கடலைக் கடக்கிறார்கள் –

பற்றிலார் பற்ற நின்றானே -அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் அரங்கம் -கைவளையும் மேகலையும் காணேன் -கண்டேன் கன வளையும் நான்கு தோளும்

—————

ஸத் கர்மநிரதா ꞉ ஶுத்₃தா ₄꞉ ஸாங்க்₂ய யோக₃வித₃ஸ்ததா ₂ ।
நார்ஹந்தி ஶரணஸ் த₂ஸ்ய கலாம் கோடிதமீமபி ॥ 14 ॥

கர்ம யோகத்தை அனுஷ்ட்டித்து அதனால் பரி சுத்தமாக இருப்பவர்களும் ஞான யோகத்தை அனுஷ்டித்தவர்களும் இச்சரணா கதியை அனுஷ்டித்த ப்ரபன்னர்களின் மஹிமையில் கோடியில் ஒரு அம்சத்தைக் கூடப் பெறத் தக்கவர்கள் ஆகார்கள் –

————-

உபாயாதி₄க்ருதஸ்யாபி ப₄வேது₃த்தர பூர்வ யோ ꞉ ।
அஶ்லேஷஶ்ச விநாஶஶ்ச புண்ய பாப மயாக₄யோ꞉ || 15 |

உபாயத்தை அனுஷ்டித்தவரான ப்ரபன்னருடைய உத்தராகங்களும் -பிரபத்தி செய்த பின் அபுத்தி பூர்வகமாகச் செய்த பாபங்களும் -பூர்வாகங்களும் நசித்து விடுகின்றன -பிரபத்தி செய்த பின்னர் புத்தி பூர்வ ஆகங்களோ என்னில் மேற் சொல்லப்பட்டு இருக்கும் ப்ராயச் சித்தங்களினால் தீர்ந்து விடுகின்றன –

புகுதறுவான் நின்றனவும் -உத்தர -அஸ்லேஷம் -தாமரை இலைத்தண்ணீர் போல் ஒட்டாமல் போகும்
போய பிழையும் -பூர்வ -விநாஸம் -தீயில் இட்ட பஞ்சு போல் ஆகும்

———

ப்ராரப்₃த₄தே₃ஹ போ₄க்₃யம் து விநா த்₃ருப்தஸ்ய நஶ்யதி ।
பூர்வாக₄முத்தராக₄ம் து மதி பூர்வம் மஹத்தரம் || 16 ||

ஆதே₃ஹ பதநாத்₃வ்ருத்தம் அநுதாப விவர்ஜிதம் ।
யத்தத்₃விநைவா(அ)ஶ்லேஷஸ் ஸ்யாத் அந்யஸ் யாக₄ஸ்ய யுக்தித꞉ ॥17॥

திருப்த ப்ரபன்னர் ஒழிந்த மற்றப் ப்ரபன்னர்களின் பூர்வாகங்களில் -பிராரப்த கர்மங்கள் ஒழிய மற்றைய கர்மங்கள் நசித்து விடுகின்றன -உத்தராகங்களில் புத்தி பூர்வமாய் செய்யப் பட்டவைகளாயும் -தேஹம் இருக்கும் அளவும் ஒழியாதவைகளாயும் -அனுதாபாதிகள் பிறவாதவைகளாய் இருக்கும் கர்மங்கள் ஒழிய மற்ற அபுத்தி பூர்வாகங்கள் கழிந்து விடுகின்றன என்று யுக்தியால் ஏற்படுகின்றது-

————-

அயமர்தோ₂ ப₄க₃வதா ஸ விஸேஷ முதீ₃ரித꞉ ।
“உபாய ப₄க்தி꞉ ப்ராரப்₃த₄ வ்யதிரிக்தாக₄ நாஶிநீ ॥ 18 ॥

ஸாத்₄ய ப₄க்திஸ்து ஸா ஹந்த்ரீ ப்ராரப்₃த₄ஸ்யாபி பூ₄யஸீ” ।
உபாய ப₄க்தி ரித்யுக்தோ ப₄க்தியோகோ ₃ஹி ஸாங்க₃க꞉ ॥ 19 ॥

இவ்வர்த்தம் பகவானால் விவரித்துச் சொல்லப்பட்டு இருக்கின்றன –
உபாய பக்தி பிராரப்த கர்மங்களை ஒழிந்த மற்ற கர்மங்களைப் போக்கி விடும் -ஆகையால் உபாய பக்தியைக் காட்டிலும் ஸாத்ய பக்தி ஸ்ரேஷ்டம் –

பகவான் அருளிச் செய்தவற்றை இரண்டரை ஸ்லோகங்களினால் அருளிச் செய்கிறார் -சாங்கமாக இருக்கும் பக்தி யோகம் உபாய பக்தி யோகம் என்று சொல்லப் படுகின்றது -அது அநேக ஜென்மங்களுக்குக் காரணமாக இருக்கும் பிராரப்த கர்மங்களைப் போக்க மாட்டாது

———–

ப₃ஹு தே₃ஹ நிமித்தம் ஹி ப்ராரப்₃தா₄க₄ம் ந நாஶயேத் ।
ஸாத்₄ய ப₄க்திரிதி ப்ரோக்தா ப்ரபத்திர் மோக்ஷ ரூபிணீ ॥ 20 ॥

மோக்ஷ ரூபமாக இருக்கும் இப்பிரபத்தி ஸாத்ய பக்தி என்று சொல்லப் படுகிறது -பக்தி யோகத்தைக் காட்டிலும் ஸ்ரேஷ்டமாக இருக்கும் இப்பிரபத்தி ஆர்த்த ப்ரபன்னர்களின் விஷயத்தில் பிராரப்த கர்மங்களையும் போக்கி விடும் –

————-

ஆர்தாநாம் பூ₄யஸீ ஸா(அ)பி ப்ராரப்₃த₄மபி நாஶதயத் ।
ப்ராரப்₃த₄தே₃ஹபோ₄க்₃யம் து த்₃ருப்தஸ்யாக₄ம் ந நாஶயேத் ॥ 21 ॥

இப்பிரபத்தி திருப்த ப்ரபன்னர்களின் பிராரப்த கர்மங்களுக்குப் பயனாகக் கிடைத்து இருக்கும் தேஹத்தினால் அனுபவிக்கத் தக்கவைகளான அக்கர்மங்களைப் போக்க மாட்டாது –
ஆர்த்த ப்ரபன்னர் திருப்த ப்ரபன்னர் இவர்களின் லக்ஷணங்கள் ஸ்வரூப பத்ததியில் -27-38 ஸ்லோகங்களில் சொல்லப்பட்டுள்ளன –

————-

ஏதது₃க்தம் ப₄வத் யத்ர ப₄க்தி யோகா₃த்₃ விமுச்யதே ।
ப்ராரப்₃த₄ கர்ம நிர்மோகே ப₃ஹு ஜந்மோபபோ₄க₃த꞉ ॥ 22 ॥

மேற் சொல்லிய அர்த்தங்களுக்கு இக்கிரந்த கர்த்தா கீழ் சொல்லும் ஸ்லோகங்களினால் தமது ஸித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
அநேக ஜன்மங்களின் அனுபவத்தால் பிராரப்த கர்மங்கள் கழிந்தால் பக்தி யோகத்தால் பக்தர்கள் ஸம்ஸார பந்தத்தின் நின்றும் விடுவிக்கப் படுகிறார்கள் –

————–

கர்மணஶ் ஸோக ஹேதோஸ் த்வாம் மாேக்ஷ யிஷ்யாமி மா ஶுச꞉ ।
ஏவம் ப₄க₃வதோக்தத்வாத் ஏதத்₃தே₃ஹே (அ)பி ஸோசநாத் ॥ 23 ॥

ஆர்தஸ்ய ஸத்₃யோ முக்தி꞉ ஸ்யாத் ப்ரபத்திர் பூ₄யஸீ யத꞉ ।
த்₃ருப்த꞉ ப்ராரப்₃த ₄தே₃ஹாத்து ந ஸோசதி யத꞉ ஸ்வயம் ॥ 24 ॥

உன் வ்யஸனத்திற்குக் காரணமாக இருக்கும் ஸர்வ கர்மங்களின் நின்றும் உன்னை விடுக்கின்றேன் என்று சரம ஸ்லோகத்தில் பகவான் அருளிச் செய்திருப்பதால் -இவ்வார்த்த ப்ரபன்னர் இப்பொழுது தமக்குக் கிடைத்திருக்கும் தேஹத்திலும் சோகமுடையவராக இருப்பதாலும் -இவர் அனுஷ்ட்டிக்கும் பிரபத்தி திருப்த ப்ரபத்தியைக் காட்டிலும் அதிக ஆர்த்தியோடு கூடியதால் ஸ்ரேஷ்டமாக இருப்பதாலும் இவ்வார்த்த ப்ரபன்னருக்கு இப்பிரபத்தியை அனுஷ்டித்த உடனே மோக்ஷம் கிடைக்கும் –

————-

தே₃ஹாந்தே முச்யதே ஸைஷா மாேக்ஷ கால வ்யவஸ்தி₂தி꞉ ।
ஸோ (அ)யம் ஶ்ரிய꞉ பத்யுரந்தர் ஹ்ருத₃யாம் போ₄ஜவாஸிந꞉ || 25 ||

திருப்த ப்ரபன்னர் இப்பொழுது தமக்குக் கிடைத்திருக்கும் தேஹத்தில் சோகம் இல்லாதவராக இருப்பதால் இவர் தேஹ அவசானத்தில் ஸம்ஸார பந்தத்தின் நின்றும் விடுவிக்கப் படுகிறார் -இது தான் திருப்த ப்ரபன்னருக்கும் ஆர்த்த ப்ரபன்னருக்கும் கிடைக்கும் மோக்ஷத்திற்கு வியவஸ்தையாக இருக்கின்றது –

————

ப்ரஸாதே₃நைவ ஸுஸுக₂ம் நாடீ₃ம் பி₄த்வா ஶதாதி₄காம் ।
ஸத்₃யஸ்த யோர்த்₄வ முத்க்ரம்ய க₃த்வா தான் ஆதி வாஹிகான் ॥ 26 ॥

அர்சிராதீ₃ன் ஸ தைர்நீத꞉ ப்ரீதியுக்தை ꞉ பதே₃பதே₃ ।
அமாநவ கர ஸ்பர்ஶாத் ஸூக்ஷ்ம தே₃ஹம் விஸ்ருஜ்ய ச ॥ 27 ॥

விரஜாம் மநஸா தீர்த்வா ப்₃ரஹ்ம க₃ந்தா₄தி₃ளாஞ்சி₂த꞉ | ஸாலோக்யமத₂
ஸாரூப்யம் ஸாமீப்யம் ச க்ரமாத்₃வ்ரஜேத் ॥ 28 ॥

ஸாயுஜ்யம் சாதி₄க₃ச்சே₂த ப்₃ரஹ்மணா ஸஹ ஸர்வஶ꞉ ।
அநு ஸஞ்சரந் நிமான் லோகான் காமாந் நீ காம ரூப்யபி ॥ 29 ॥

இப்பிரபன்னர் தமக்கு நேரும் நிர்ணய காலத்தில் தமது ஹ்ருதயத்தில் மத்யத்தில் வஸிக்கும் பகவானுடைய திருவருளால் நூற்று ஓராவது நாடியான ஸூஷும்நா நாடியைப் பிளந்து அதனால் வெளிப்புறப்பட்டு அக்னி முதலிய ஆதி வாஹிகர்களை அடைந்து மிகவும் அன்புடன் கூடிய அவர்களினால் அடிக்கடி மரியாதை செய்து அழைத்துக் கொண்டு போகப்பட்டவராய் -அமானவர் என்னும் நித்ய ஸூரியின் கர ஸ்பர்சத்தால் தமக்கு அப்பொழுது உண்டாயிருக்கும் ஸூஷ்ம தேஹத்தை கழித்து விட்டு -பிராகிருத மண்டலத்துக்கு எல்லையாய் இருக்கும் விரஜை என்னும் ஓர் நதியை தம்முடைய ஸங்கல்பத்தினால் தாண்டி பர ப்ரஹ்மத்தின் திருமேனியில் உள்ளவைகளான திவ்ய கந்தங்களை அணிந்தவராய் வரிசையாக
முதலில் ஸா லோக்யத்தையும்
பின்பு ஸா ரூப்யத்தையும்
பின்பு ஸா மீப்யத்தையும் அடைந்து
இறுதியில் ஸா யுஜ்யத்தையும்
அடைகிறார் –
இவ்வாறு அப் ப்ரஹ்மத்துடன் ஸர்வ விதத்தாலும் அவன் குணங்களைச் சேர்ந்து அனுபவித்து கைங்கர்யங்களைச் செய்து அவனைப்போலவே ப்ரீதி அடைகிறார்

ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே –ப்ரஹ்ம குண சேஷ்டிதங்களை-அவனுடன் சேர்ந்தே அனுபவிக்கிறோம்

———

ஸாம கா₃யன் கிங்குருதே ஸூரிபி₄ஸ் ஸஹ ஸர்வதா ₃ ।
யத்₃வா(அ)ர்சிராதி₃மார்கே₃ண விளம்ப₃ மஸஹந்நிவ ॥ 30 ॥

இவ்வாறு பர ப்ரஹ்மத்துடன் ஸா யுஜ்யத்தை அடைந்த முக்தர் தாம் ப்ரஹ்ம ஆனந்த அனுபவம் யுள்ளவராய் தாம் நினைத்தபடி ஓர் ரூபத்தை எடுத்துக் கொண்டு நித்ய ஸூரிகளோடு இவ்வுலகம் எல்லாம் திரிந்து கொண்டும் ஸாம கானத்தால் பகவானுக்கு ஸர்வ காலமும் கைங்கர்யங்கள் செய்து கொண்டும் இருப்பர் –

அப்படிக்கு இல்லாமலும் பகவான் ப்ரபன்னருக்கு அர்ச்சிராதி மார்க்கத்தால் உண்டாகும் கால விளம்பத்தை ஸஹியாதவராய் அந்த மார்க்கம் அன்றியிலே அவரைத் தம் இஷ்டப்படி மோக்ஷத்தில் சேர்ப்பிக்கிறார் என்றும் வேதங்களில் சொல்லப்படுகின்றது –

————-

ப்ரபந்நம் ஹரதி க்ஷிப்ரம் யதே₂ஷ்டமிதி ச ஶ்ருதம் ।
மஹா வராஹோ ப₄க₃வா நேதத் ஸம்வாத₃கம் வச꞉ ॥ 31 ॥

மஹா வராஹ அவதாரம் செய்த பிரான் பூமிப் பிராட்டி கேட்டிருக்கும் சமயத்தில் மேற் சொல்லிய சங்கதியுடன் ஓத்ததான திரு வாக்கை அருளிச் செய்துள்ளார் –

————

யதா₃ஹ தே₃வ்யாம் ஶ்ருண் வந்த்யாம் பூ₄ம்யாம் ப்ரவத₃தாம் வர꞉ ।
ஸ்தி₂தே மநஸி ஸுஸ்வஸ்தே₂ ஶரீரே ஸதி யோ நர꞉ ।
தா₄து ஸாம்யே ஸ்தி₂தே ஸ்மர்தா விஶ்வ ரூபம் ச மாமஜம்
॥ 32 ॥

ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்ட₂பாஷாண ஸந்நிப₄ம் ।
அஹம் ஸ்மராமி மத்₃ப₄க்தம் நயாமி பரமாம் க₃திம் ॥ 33 ॥

மஹா வராஹப் பெருமான் அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார்
நோய் முதலிய தேஹ பீடைகள் இல்லாமல் ஸம தாதுவான தேஹத்துடனும் -தெளிந்த மனத்துடனும் – கூடியிருக்கும் சமயத்தில் யார் ஒருவர் விஸ்வ ரூபனாயும் பிறப்பிலியாயும் இருக்கும் என்னை ஸ்மரிக்கிறாரோ -பின்பு மரணம் அடையும் ஸமயத்தில் கட்டையைப் போலும் கல்லைப் போலும் நினைப்பில்லாமல் இருக்குமவரை நான் ஸ்மரிக்கிறேன் -அவரை உத்தம கதியிலும் சேர்ப்பிக்கிறேன்

————-

யதா ₃கதா₃சித் வாதாதி₃ தா₄து ஸாம்யாத் அரோக₃த꞉ ।
மநஸ்தி₂ திஸ் ஸம்ப₄வதி ய꞉ கஶ்சித்து ததா ₃ நர꞉ || 34 ॥

ஸ்மரேத் ஸ்வாமித்வ ஸௌஶீல்ய வாத்ஸல்யாதி₃ மஹாேத₃தி₄ம் ।
அவதீர்ணம் வராஹம் மாம் ஶ்ரியா தீ₃ப்த கு₃ணைர் யுதம் ॥ 35 ॥

நாராயணம் விஶ்வரூபம் அஜம் இச்சா₂த்த விக்₃ரஹம் ।
ஶ்ரீமந் நாராயண ஸ்வாமின் ! அநந்ய ஶரணஸ்தவ ॥ 36 ॥

சரணவ் ஶரணம் யாத꞉ இதி மாம் யஸ் ஸ்மரேத் ஸக்ருத் ।
ததஸ்த மித ரோபாய வ்யவதா ₄ந விவர்ஜிதம் ॥ 37 ॥

தத ₃வஸ்த₂ம் ம்ருதி ப்ராப்தவ் காஷ்ட₂ பாஷாண ஸந்நிப₄ம் ।
காஷ்ட₂ வத்து ஸ்வதோ தே₃ஹே மநஶ் ஸேஷ்டா விவர்ஜிதம் ॥ 38 ॥

பரப்ரபோ₃தா₄ஸஜ்ஞம் து விளுப்தஹ்ருத₃யம் தத ꞉ ।
ஆத்மவத் ஸ்வய மந்யைஶ்ச ஹித ஸ்மரண வர்ஜிதம் ॥ 39 ॥

எப்பொழுதாவது ஒருக்கால் தேஹத்தில் ரோகம் முதலிய உபாதிகள் இல்லாமல் இருக்கும் போது வாத பித்தாதி தாதுக்கள் சமமாக இருக்கும் ஸமயத்தில் மனம் தெளிந்து ஸ்திரமாக இருக்கச் செய்தே யாவன் ஒருவன் ஸ்வாமியாகவும் ஸுசீல்யம் வாத்சல்யம் இவை முதலிய கல்யாண குணங்களுக்கு கடலாகவும் வராஹ ரூபியாக அவதாரம் செய்கிறான் என்றும் -ஸ்ரீ மஹா லஷ்மியினால் விளங்குபவராயும் பின்னும் அநேக மங்கள குணங்களோடு கூடியவராயும் -இப்பிரபஞ்சத்தையே ரூபமாக யுடையவராயும் -பிறப்பில்லாமல் இருக்கச் செய்தேயும் எனது இச்சையால் அநேக திவ்ய தேஹங்களோடே கூடியவராயும் இருக்கும் ஸ்ரீ மன் நாராயணான என்னை
வாரீர் ஸ்ரீ மன் நாராயணனே -ஸ்வாமியே -யான் வேறு ஒரு கதியில்லாதவனாக உமது திருவடிகளை சரணம் அடைந்தேன் என்று நினைக்கிறாரோ -பின்பு வேறொரு உபாயத்தினால் இன்றியிலே அப்பிரன்ன நிஷ்டையிலேயே இருப்பேன் என்றும் நினைக்கும் அவர் மரண அவஸ்தையில் காஷ்ட பாஷாணங்களோடே சமானராக இருக்கும் -கட்டை போல் மனதில் உணர்வு இல்லாதவராயும் உடலில் அசைவு இல்லாதாராகவும் -பிறர் தெரிவிக்கிலும் அறிவு இன்றியிலே மனம் இழந்தவராயும் -அப் பொழுது தம்முடைய நன்மையைத் தாம் அறியாது இருக்குமா போல் அங்கிருக்கும் சுற்றத்தார்களான பிறருக்கும் தம்முடைய நன்மை தோன்றாமல் இருக்கும் படியான துர் அவஸ்தையுடன் கூடியவராயும் இருக்கும் ஸமயத்தில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவர்களுக்கு சித்தியை யுண்டாக்குவதற்காக விழித்து இருக்கும் நான் என் பக்தர்களை ரக்ஷிப்பதில் மனம் யுடையோன் ஆகையால் அவர்களை நான் ஸ்மரிக்கிறேன்

——————–

ஆஶ்ரிதேஷு ப்ரஸுப்தேஷு புருஷோ யோ வ்யவஸ்தி₂த꞉ ।
காமம் காமம் நிர்மமாண꞉ தேஷாம் ஜாக₃ர்தி ஸித்₃த₄யே ॥ 40 ॥

ஸோஹமாஶ்ரித தந்த்ராத்மா ஸ்மராமி ச ததா ₃ ஸ்வயம் ।
இமம் மத்₃போ₄க₃யோக்₃யம் து க்ருபா பூர ப்ரகாஶநாத் ॥ 41 ॥

நயாமி பரமம் ஸ்தா₂நம் அர்சிராதி₃க₃திம் விநா ।
க₃ருட₃ஸ்கந்த₄மாரோப்ய யதே₂ஷ்ட மநிவாரித꞉ ॥ 42 ॥

நான் அனுபவிக்கும் திவ்ய போகங்களை அனுபவிப்பதற்குத் தக்கவராய் இருக்கும் இவரை இவரிடத்தில் எனக்கு உண்டாய் இருக்கும் கிருபையை வெளிப்படுத்துவதால் அர்ச்சிராதி மார்க்கத்தால் போவதால் உண்டான கால விளம்பமும் இன்றிக்கே என் இஷ்டப்படி கருடாழ்வான் தோளில் மேல் ஏற்றி யாதொரு தடையும் இன்றிக்கே உத்தம கதியான என் பதத்தைச் சேர்ப்பிக்கிறேன்

கனக கிரி மேல் கரிய முகில் போல
வினதை சிறுவன் மேற்கொண்டு தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என்பால்
வாரா முன் நிற்பர் மகிழ்ந்து–52-

———-

ஏதத் ப்ரபா₄வயுக்தஸ்ய ப்ரபந்நஸ்ய து பார்ஶ்வத꞉|
அபயாந்தி த்₃ருதம் பீ₄தா ꞉ பாஶிநோ யம கிங்கரா꞉ || 43 ||
அயம் ந கஸ்யசித்₃ப்₄ருத்ய꞉ பராஶர ஶுகௌ யதா₂ ॥ 44 ॥

இவ்விதப் ப்ரபாவத்தோடே கூடிய ப்ரபன்னர்களின் பக்கங்களிருந்து பாஸ ஆயுதங்களோடு கூடிய யம கிங்கர்கள் பயந்தவர்களாக ஓடிப் போகிறார்கள்

இப்பிரபன்னர் பகவானை ஒழிந்த வேறு ஒருவருக்கும் கீழ்ப் பணிந்தவர் அன்று
இவ்வாறே பராசர முனிவரும் சக முனிவரும் அருளிச் செய்துள்ளார்கள்

———-

ஸ்ரீ விஷ்ணுபுராணே –
ஸ்வ புருஷமபி₄வீக்ஷ்ய பாஶ ஹஸ்தம் வத₃தி யம꞉ கிலம் தஸ்ய கர்ணமூலே ।
பரி ஹர மது₄ஸூத₃ந ப்ரபந்நான் ப்ரபு₄ரஹ மந்ய ந்ருணாம் ந வைஷ்ணவாநாம்
॥ 45 ॥

யமதர்ம ராஜன் பாஸ ஆயுதத்தைக் கையில் பிடித்திருக்கும் தன்னுடைய கிங்கரர்களைப் பார்த்து அவன் செவியில் ரஹஸ்யமாகச் சொல்லுகிறான்
வாரீர் கிங்கரரே -பகவான் இடத்தில் பிரபத்தி செய்திருக்கும் பாகவதர்களைப் பரிஹரித்து விடுங்கள் -நான் வைஷ்னவர்கள் ஒழிந்த மற்றப் பிராணிகளுக்குப் பிரபுவே ஒழிய வைஷ்ணவர்களுக்கு பிரபு அன்று –

ஸத்யம் ப்₃ரவீமி மநுஜா꞉ ஸ்வய மூர்த்₄வ பா₃ஹு꞉ யோ மாம் முகுந்த₃ நரஸிம்ஹ ஜநார்த ₃நேதி ।
ஜீவோ ஜபத்யநுதி₃நம் மரணே ப்ய்ருணீவ பாஷாண காஷ்ட₂ஸத்₃ருஶாய த₃தா₃மி மாேக்ஷம் ॥

——

ஶ்ரீபா₄க₃வதே –
தே₃வர்ஷி பூ₄தாத்ம ந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம்ருணீ ச ராஜன் ।
ஸர்வாத்மநா ய꞉ ஶரணம் ஶரண்யம் நாராயணம் லோக கு₃ரும் ப்ரபந்ந
꞉ ॥46॥

ஸர்வ லோகங்களையும் ரக்ஷிக்கத் தக்கவராயும் ஸர்வ லோகங்களுக்கும் பிதாவாகவும் இருக்கும் ஸ்ரீ மந் நாராயணனை எவர் ஸர்வ பிரகாரங்களாலும் சரணம் அடைந்திருக்கிறாரோ அந்தப் பிரபன்னர் தவர்கள் ரிஷிகள் பூதாத்மாக்கள் பித்ருக்கள் இவர்களுக்கு கிங்கரரும் அன்று -கடனாளியும் அன்று

——

உப ஸம்ஹார꞉ –
த்ரை யந்த ஸ்ம்ருதி முக்₂ய ஸந்முநிவச꞉ ஶ்ரீபாஞ்சராத்ராசல ஷோதை ₃꞉
ஸங்க₄டித꞉ ப்ரபந்நசரித꞉ க்ஷீராப்₃தி₄ஸேதுர் மஹான் ।
யே வாஞ்ச₂ந்த்ய முநா பதா ₂(ஆ)ப்துமசிராத் பாரம் ப₄வாம் போ₄நிதே₄꞉
தே பூர்வோத்தர பாப கர்ம நிசயை ꞉ முக்தா விமுக்தா ꞉ ஸ்ம்ருதா ꞉ ॥ 47 ॥

ப்ரபன்னர்களின் சரித்ரங்களாகிற பாற் கடலில் வேதாந்த ஸாஸ்திரம் ஸ்ம்ருதி முதலிய ரிஷிகளின் வசனங்கள் ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரம் இவைகளாகிற மலைகளின் பொடிகளினால் -இக்கிரந்தத்த்தில் சொல்லப்பட்ட ப்ரபந்ந நிஷ்டையாகிற பெரிய அணை கட்டப்பட்டு இருக்கிறது -இவ்வணையால் எவர் ஸம்ஸாரக் கடலின் கரையை சீக்கிரத்தில் அடைய விரும்புகிறார்களோ அவர்கள் மேல் சொல்லப்பட்டு இருக்கும் பூர்வாகங்கள் -உத்தராகங்கள் இவற்றின் நின்றும் நீங்கியவராய் முக்தர்களாகி விடுவார்கள் என்று ஸாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது –

——-

கார்பண்யாசிதப₃த்₃த₄ மூலப₂ லகா விஶ்வாஸ கீலாசிதா
யாச்நா ப₃ந்த ₄நரஜ்ஜுக்ருஷ்டி வஶகா₃ நிஷேப ஸங்ஷேபணி꞉ ।
ஸம்ஸாரார்ணவ தாரிணீ தநுப்₄ருதாம் ந்யாஸாத்மநவ் ꞉ தாமிமாம்
அர்ச்சி₂த்₃ராமத₂ பாரயிஷ்ணுமப₄யா꞉ ஸத்₃யோ (அ)தி₄ரூடா₄ ஜநா꞉ || 48 ||

பிரபத்தியை ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிக்கும் ஓடமாக நிரூபிக்கிறார் -அதாவது கார்ப்பண்யத்தோடு கூடிய -(கார்ப்பண்யம் -வேறொரு கதி இல்லாமையால் உண்டாகும் மன இரக்கத்தால் )-புத்தியாகிய அடிப்பலகைகளோடு கூடியதாகவும் -மஹா விசுவாசமாகிற ஆணிகளினால் பிணையப்பட்டதாகவும் -பிரார்த்தனை யாகிற அதில் கட்டிய கயிற்றின் வசமாய்ப் போகத் தக்கதாயும் -பர ஸமர்ப்பணமாகிற ஓர் துடுப்போடே கூடி யதாயும் இருக்கிற ந்யாஸ வித்யை என்ற பெயர் பெற்று இருக்கும் இப்பிரபத்தியாகிற ஒடமானது இப்பிராணிகளின் ஸம்ஸாரக் கடலைத் தாண்டி வைக்கத் தக்கதாக விளங்குகிறது -ஸந்தேஹம் இல்லாமல் கரை சேர்க்கத் தக்கதாயும் இருக்கிறது -இவ்வோடத்தை பயமில்லாதவர்களாய் ஸத்துக்கள் ஏறினார்கள் –

——-

அஸேஷா பேக்ஷிதம் யத்ர பரிதோ ஜாயதே ஸதாம் ।
ப்ரபந்ந பாரிஜாதாக்₂ய꞉ ப்ரப₃ந்த₄꞉ கதி₂தோ பு₄வி ॥

உலகில் ப்ரபன்னர்கள் அபேக்ஷிக்கும் ஸகல அர்த்தங்களையும் தெரிவிக்கின்ற ப்ரபந்ந பாரிஜாதம் என்னும் இக் க்ரந்தம் வரதகுரு என்னும் ஆச்சார்யரால் அருளிச் செய்யப்பட்டது –

————–

இதி ஶ்ரீவாத்ஸ்ய வரதா₃சார்ய மஹா கு₃ருபி₄ரநுக்₃ருஹீதே
ப்ரபந்ந பாரிஜாதே ப₂லோத₃ய பத்₃த₄தி꞉ த₃ஶமீ ஶ்ரீமத்₃வரத₃மஹா
கு₃ரு தி₃வ்ய சரண நலிநே ஏவ ஶரணம்

—————————————————-

சுத்த குண விட்டு சித்தன் சுடர் அடியோன் வாழியே
ஸ்ருதப் பிரகாசிகையைச் சொல்லி வைத்தோன் வாழியே
தத்வ ப்ரமேயத்தின் தரம் அறிந்தோன் வாழியே
புத்தி மிகு சாரார்த்த சதுஷ்டயத்தோன் வாழியே
புகழ்ப் பாடியப் பொருளை புதர்க்களிப்போன் வாழியே
சித்திரையில் சித்திரை நாள் கச்சி வந்தோன் வாழியே
சீராரும் அம்மாள் தன் சேவடிகள் வாழியே

திங்கள் போன்ற திருமுகம் வாழியே
திருமங்கை காப்புத் திகழ் நெற்றி வாழியே
தொங்கு முப்புரி நூல் மார்பு வாழியே
தோன்று இலச்சினைத் தோள் மிக வாழியே
தனக்கு கோசம் விளங்கு கை வாழியே
தாங்கு சின் முத்ரை விரல் வாழியே
பொங்கு வத்ஸ குல வரதாரியன்
பொன் மலர்ப்பாதம் வாழியே வாழியே

—————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading