நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் பறந்தான் -பஞ்ச அம்ருத சேவை
அர்த்த பஞ்சகம் -பஞ்ச பிரகாரங்கள் ஐந்தையும் காட்டி அருளும் திவ்ய தேசம்
மன்னு தண் பொழிலும்-பரத்வம் பொழில் ஏழும்
வாவியும் –திருப்பாற் கடல் வ்யூஹம்
மதிளும்–அந்தர்யாமி
மாட மாளிகையும் மண்டபமும் –விபவம்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை-அர்ச்சாவதாரம்
யானைக்குளம் கஜேந்திர ஸரஸ் அருகில் திருமழிசை வரதனை மங்களா சாசனம்
பரத்வம் அந்தர்யாமித்வம் இரண்டிலும் ஆழ்ந்த ஆழ்வார் என்பதாலேயே இருவருக்கும் அருகில் இன்றும் நித்ய சந்நிதி
இவர் சாத்து முறைக்கு மட்டும் வரதரே எழுந்து அருளுகிறார்
இன்றும் யானைக்குளத் தெருக்கள் உண்டே
கஜேந்திர வரதர் பிரபையில் திருக்கச்சி நம்பியும் எம்பெருமானாரும் சேவை உண்டே
துவாதச ஆராதனம் அனைவரையும் ஒரு சேர சேவை ப்ரஹ்ம உத்சவம் -பார்த்த சாரதிக்கும் -தெள்ளிய சிங்கருக்கும் நடக்கும்
எம்பெருமானாராக பார்த்தசாரதியை அவதாரம்
அருளிச் செயல் மண்டபம் என்றே பிரசித்தி இதற்கு
புஷ்ப -போக -தியாக -ஞான மண்டபங்கள் போல்
எம்பெருமானார் திருவவதார ஆறாம் நாள் வெள்ளைச்சாத்து உத்சவத்தில் எதிராஜ மடம் எழுந்து அருளுகிறார்
அங்கு காவி வஸ்திரம் திருமண் காப்பு ஜீயர் சமர்ப்பிக்கிறார்
கோஷ்டியார்களுக்கும் திருமண் காப்பு விநியோகம் உண்டே
ப்ருந்தாரண்யம் -பிருந்தாவனம் போல் இங்கும் -ப்ரஹ்மாண்ட புராணம் விவரிக்கும்
————–
அவதாரிகை –
திருப்பாற் கடலிலே நின்றும் தம் திரு வுள்ளத்துக்கு வருகிற போது
நடுவு வழி வந்த படியை அருளிச் செய்கிறார் –
மனந்தன் அணைக் கிடக்கும் -என்றாரே
இப்படி வந்து கிடைக்கைக்கு அடி பிராட்டியோட்டை சம்பந்தம் என்கிறார் –
திருப்பாற்கடலிலே நின்றும் தம் திரு உள்ளத்துக்கு வருகிற போது திருவல்லிக் கேணியிலே
வந்து தங்கினான் -என்கிறார் –
—————————————————————————————–
வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று —-16–
பதவுரை
ஒரு அல்லி தாமரையாள்–அழகிய இதழ்களையுடைய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய பிராட்டி
சென்று ஒன்றிய சீர் மார்பன்–வந்து பொருந்திய அழகிய திருமார்பை யுடையவனும்
வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவளம் வெண் முத்தம்–வந்து வீசுகின்ற வெளுத்த
அலைகளிலுண்டான சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும்
அந்தி விளக்கும் அணி விளக்கும் ஆம்–ஸ்ந்தியா காலத்தை விளக்குகின்ற மங்கள தீபங்களாகப் பெற்ற
திருவல்லிக்கேணியான்–திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருப்பவனுமான பெருமான்
எந்தை–எனக்கு ஸ்வாமி
—————————————————————————————–
வியாக்யானம் –
வந்துதித்த வெண் திரைகள் –
வந்து உதையா நின்றுள்ள
வெள்ளத் திரைகளாலே தள்ளப் படுகிற –
செம்பவள வெண் முத்தம் –
சிவந்த பவளங்களும்
நீர்மையை உடைத்தான முத்துக்களும் –
அந்தி விளக்காம் மணி விளக்காம் –
சந்த்யைக்கு பிரகாசஹமான
மங்கள தீபத்தை யுடைத்தான –
எந்தை –
எனக்கு ஸ்வாமி-
ஒரு வல்லித் தாமரையாள் –
நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியாரானவள்
ஒரின்னிள வஞ்சிக் கொடி-பெரிய திருமடல் -என்னுமா போலே
கொள் கொம்போடு சேர்ந்தால் அல்லது தரிக்க மாட்டாமை
அவன் புருஷோத்தமன்
ஆனாப் போலே
இவள் நாரீணாம் உத்தமை –
தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்-
மலர்மகள் விரும்புகையாலே
சர்வாதிகத்வம் ஆகை-
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்-
பஸ்யதாம் வரவா தேவா நாம் யயௌ வஷ ஸ்தலம் ஹரே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105-
அநாதரே சஷ்டி –
பிரஜைகள் பார்த்து இருக்க
பர்த்தாவின் படுக்கையைக் கணிசித்து ஏறும் தாயைப் போலே
தேவர்கள் பார்த்து கிடக்கத் திரு மார்விலே ஏறினாள்
தயா அவலோகிதா தேவா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-106-
பின்னை சர்வேஸ்வரன் இவர்கள் உடைய அலமாப்பைப் பாராய் என்று
திரு உள்ளத்தாலே நினைத்த படி தோற்ற
பின்னை அவளாலே பார்க்கப் பட்டார்கள்
முன்பு கடாஷியா விட்டது என் என்னில் –
தன் ஸ்வரூபத்தை பெற்று பிறரை ரஷிக்க வேணுமே –
பிரதேஹி ஸூ பகே ஹாரம் -யுத்த -131-80-என்று
அவன் நினைவும் சொலவும் அறிந்து இறே
ஒருவரைக் கடாஷிப்பதும்
ஒருவருக்கு ஒன்றைக் கொடுப்பதும்
இவள் பிரிந்து இருக்கையாலே
பெருமாள் கடாஷம் பெற்றுப் பின்பு
பிராட்டி கடாஷம் பெற்றான் திருவடி
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் முந்துற பிராட்டி கடாஷம் பெற்றுப் பின்னைப் பெருமாள் கடாஷம் பெற்றான்
ஸ்ரீ குஹப் பெருமாள் இரண்டும் ஒருக்காலே பெற்றார்
நின் திருவருளும் பங்கயத்தாள் திரு வருளும் கொண்டு -திருவாய்மொழி -9-2-1-
திருவல்லிக் கேணியான் எந்தை -சென்று
திரு வல்லிக் கேணியிலே எழுந்து அருளி இருந்து எனக்கு நாதனானவன் –
எந்தை
பெறாப் பேறு பெற்றாப் போலே
ஒரு வல்லித் தாமரையாள் சென்று
ஒன்றிய சீர் மார்வனுமாய்
திருவல்லிக் கேணி யானுமானவன்
எந்தை –
அந்தி விளக்கும் அணி விளக்காம் திருவல்லிக் கேணியான்-
வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்-அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை–திருவல்லிக் கேணியான்–
வந்து உதையா நின்றுள்ள வெண் திரைகளாலே உண்டான சிவந்த பவளமும்
ஒளியை யுடைத்தான முத்தும் -அந்திக்கு பிரகாசகமாக நின்ற மங்கள தீபத்தை யுடைத்தான
திரு வல்லிக் கேணியிலே நின்றவன்(கிடந்த திருக்கோலம் மன்னாதன் -அடியேனை கைக்கொள்ள அவகாசம் பார்த்து நிற்கிறான் என்றபடி )
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் சென்று —-
பஸ்யதாம் சர்வ -பார்த்துக் கிடக்க -திரு மார்பிலே ஏறினாள் –
(பெண்ணுக்கு பெண்கள் கோஷ்ட்டியில் வெட்கப்பட வேண்டாமே ஸ்த்ரீ பிராயர் அனைவருமே )
தயா வ லோகிதா தேவா –
பின்னை சர்வேஸ்வரன் இவர்களுடைய அலமாப்பைப் பாராய் என்று திரு உள்ளத்தால் நினைத்த படி -தோற்றப்
பின்னை அவளாலே பார்க்கப் பட்டவர்கள் –
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் -அவன் நினைவும் சொல்லும் அறிந்து இறே
சிலரைக் கடாக்ஷிப்பதும் -(சிலருக்கு )சிலரைக் கொண்டு கொடுப்பதும் –
பெரிய பிராட்டியார் தானே சென்று அடையும் திரு மார்பை யுடையனாய் திரு-
——————————————
திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே
ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு
இது திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார் –
(பேய்காள் (31)-என்றார்
மேல் யுக்தி பிரதி யுக்திகள்
வதைப் பொருள்- உதைப்பளவு அடியை அடைய உபதேசிக்க
விரோதிகளை அவனே போக்குவானாய் இருக்க
நான் அடியை அடையும்படி தானே என் மனம் புகுந்தான் என்றார்
இதில் அவனது ஸாஹஸச் செயல்களுக்கு பரிவதே போது போக்காய் இருக்கும் எனக்கு
பிறர் தன்மையைக் கண்டு வெறுப்பது ஆவது என் -என்கிறார் –
ஸ்தோத்ரம் பண்ணவும் நன்மை பயக்கவும் இரண்டு குறிப்புகள் கீழே
ஐந்தலை ஐந்து வாய் இதற்காகவே -தலைகளால் ரக்ஷித்து வாய்களால் ஸ்தோத்ரம் பண்ணவே –
என்னை ஆளுடை அப்பன்- மந் நாதப் பெருமாளுக்கு மங்களா ஸாஸனம்
ஸ்வ அனுபவம் -பர உபதேச கர்ப்பம்
மா நகர பெருமை மயிலைக்கு
மா அல்லிக்கேணி க்ஷேத்ர பெருமை
வாயும் பேசவில்லை அசையும் இல்லை
இங்கு ஒரே கேள்வி
திருக் குடந்தையில் இவரே இரண்டு கேள்விகள் ஞானமாய் இடந்த அசைவையும் சேர்த்து
மாற்றமும் தராமல் வாசலும் திறவாமல் -வாசலை செம்பளித்தால் வாயையும் செம்பளிக்க வேண்டுமோ -)
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-
பதவுரை
நீளோதம்–பெரிய அலைகள்
வந்து அலைக்கும்–கரையிலே வந்து வீசப் பெற்ற
மா மயிலை–மயிலாபுரிக்கு அடுத்த
மா வல்லிக் கேணியான்–திருவல்லிக்கேணியில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரன்
ஐ தலை வாய் நாகத்து அணை–ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும் உடையானான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
வாளா–வெறுமனே
கிடந்தருளும்–சயனித்திரா நின்றான்
வாய் திறவான்–வாய் திறந்து ஒன்று மருளிச் செய்வதில்லை
(இப்படி யிருப்பதற்குக் காரணம்)
தாளால்–திருவடியாலே
உலகம் அளந்த அசவே கொல்–உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ?
போக ப்ரதர்க்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரிலே
நீர் வாய்ப்பான திரு வல்லிக் கேணியிலே
திரு வநந்த வாழ்வான் ஆகிற குளிர்ந்த படுக்கையிலே
சேஷ்டியாதே -வாய் திறவாதே -கிடவா நின்றான் –
இதுக்குக் காரணம்
பிறந்த அன்றே ஸூகுமாரமான திருவடிகளாலே லோகத்தை அளந்த ஆயாசமோ -என்கிறார் –
வாய்ப்பான படுக்கையில் அலை எறிவாயிலே கண் வளருகிறது
வ்யசன அதிசயத்தால் -என்று கருதுகிறார்
நீளோதம்-பெரிய ஓதம் –
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்-
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று
பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளைக் கொண்டு-
காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
(அசைவு -தளர்த்தி )
இல்லாததை உண்டாக்கும் சங்கல்பம் போராதோ –
உண்டானதை உஜ்ஜீவிப்பிக்க-
வாளா கிடந்தருளும் வாய் திறவான்-
ஏக ரூபமாய் கிடப்பதும் செய்து
வார்த்தையும் பேசுகிறிலன்-
(வாளா -வெறுமனே
ஓரு படியாய் -ஏக ரூபமாய் -என்றபடி )
(கள்வப் பணி மொழி கேட்க பார்க்கிறார்
மாஸூ ச
தாதாமி ஏதத் விரதம்
அஹம் ஸ்மாரமி நயாமி பரமாம் கதி
போன்ற இடங்கள் உண்டே
விரோதி நிரசனம் -தாதாமி புத்தி யோகம் -அஹம் வோ பாந்தவ ஜாத -இஷ்ட பிராப்தி
க்ஷமாமி என்றும் வாய் திறந்ததும் உண்டே
சீறியாவது அருளலாமே
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
அஸ்துதே -சொன்ன இடமும் உண்டே )
நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத்தணை-
நீர்க் கரையைப் பற்றி கண் வளருகிறதும்
ஸ்ரமத்தின் மிகுதி என்று இருக்கிறார்-
(பரியும் அத்தனை அன்றோ என்கிறார் இதில் -என்றபடி
முந்துற வந்து கைக்கொள்ளும் உன்னை அன்றோ இது வந்து அலைக்கிறதே )
(வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி கொண்டு
சம்பந்தம் மட்டும் பார்த்து தடவிக்கொடுத்து உஜ்ஜீவிக்கவும் பார்க்க வேண்டுமோ
பஹஸ்யாம் சங்கல்பம் மட்டுமே போதாதோ
அயர்வறும் அமரர்கள் அதிபதியான இவனுக்கும் அயர்வு உண்டு என்று பரிகிறார் -பொங்கும் பரிவாலே
அஸ்தானே பய சங்கை
கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–திருவாய் –8-3-5-அடி யொற்றி இப் பாசுரம் )
பெரிய திரைகளானவை வந்து தொடை குத்த உறங்குவாரைப்போலே
தனது குளிர்ந்த திரைகளாலே சிஸீரோ உபசாரம் பண்ண
போக பிரதானருக்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரில்
ஸ்லாக்யமான திருவல்லிக்கேணியில் நித்ய வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரன்
காற்றும் வெய்யிலும் தாக்காத படி தனது வளைவான ஐந்து தலைகளாலும்
சைத்திய மார்த்தவ ஸூரபி கொள் கலமான
வாயாற் யீரைநூறு பரிவுடன் ஏத்துகைக்கு பரிவுடன் ஐந்து திருப்பவளாம் உடைய
இடம் வலம் கொள்ளாமல் பாடோட கண் வளர்ந்து
இளைப்பின் கனத்தால் திருப்பவளாம் தோன்ற அருளிச் செய்யவும் மாட்டுகிறிலன்
இதுக்கு அடி
மலர் மகள் முதலான பிராட்டிமார்கள் -கூசிப் பிடிக்கும் மெல்லடி – தாளால் அசைவு –
பலம் பொருந்தியதாய் இருந்தாலும் மென்மை
(ஸூ குமாரவ் மஹா பலவ்
உலகம் அளந்த -பலம்
தாளால் -ஸூ குமாரம் )
காடும் மோடையுமான லோகத்தை அளந்த அசைவோ
———–
(சிங்க வேள் குன்றம் இருந்தவாறும் -திருவேங்கடத்திலும் நின்றவாறும் -திரு எவ்வுள்ளில் கிடந்தவாறும் அனுபவித்து
அனைத்து திருக்கோலங்களும் சேவித்து
கரி ரக்ஷணம் அனுபவித்து -திரு நறையூர் திருவாலி குடந்தை -கோவல் நகர் -முதலான தோற்றி
அவை எல்லாவற்றிலும் உள்ள
அபிநிவேசத்துடன் இங்கே வந்து அனுபவிக்கிறார் )
பிராட்டிமாரோடே கூட வந்து
விரோதி நிரசன சீலனாய்
பிரபல விரோதியான பாபங்களை
அநாயேசேந போக்க வல்லவனாய்
சர்வ ஸ்வாமியான
சர்வேஸ்வரன்
உகந்து அருளின நிலங்கள் எங்கும்
பண்ணும் விருப்பத்தை
திரு நீர் மலையிலே பண்ணிக் கொடு வந்து
சந்நிஹிதனானான் –
அநவஹிதராய் இருப்பார் வார்த்தையைக் கேட்டு
அநர்த்தப் பட்டுப் போகாதே
அவனை ஆஸ்ரயித்து க்ருதார்த்தராய்
போங்கோள் என்று பரோபதேச பிரவ்ருத்தர் ஆகிறார்-
———————————————————————-
அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு
என்றானுமிரக்க மிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும் பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-
நடந்தது -எல்லை நடந்து -அளந்த என்றவாறு
———————————————————————————
வியாக்யானம் –
அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி –
முன்பு பண்டு ஒரு நாள்
நப்பின்னை பிராட்டியாரோடும்
அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய
பெரிய பிராட்டியாரோடும்-( ஸ்ரீ ருக்மிணித் தாயாரோடும் )
விரும்பிக் -கலந்து
அவுணர்க்கு என்றானுமிரக்க மிலாதவனுக்கு –
அவர்கள் உடன் கூட இருந்த போதும்
அசுர வர்க்கத்துக்கு ஒரு காலும் இரக்கம் இல்லாத வனுக்கு –
உறையுமிடமாவது
நித்ய வாஸம் பன்னுகைக்கு ஸ்தானம் ஆவது –
இரும் பொழில் சூழ் —
பரந்த பொழிலாலே சூழப் பட்ட –
நன்றாய புனல்-
நல்ல ஜல சம்ருத்தியை உடைத்தான –
நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர் –
திரு நறையூர் –
இப்படிப்பட்ட நன்மைகளை உடைய திருவாலி -திருக் குடந்தை –
தடாகங்கள் திகழா நின்றுள்ள திருக் கோவலூர் –
இவை துடக்கமானவற்றில் –
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு
திரு நறையூரிலே நின்றான்
திருவாலியிலே இருந்தான்
திருக் குடந்தையிலே சாய்ந்தான்
திருக் கோவலூரிலே நடந்தான் –
இடம் மா மலையாவது நீர் மலையே –
மலையாய் இருக்கச் செய்தே அல்லாதவை
வாஸஸ் ஸ்தானம் ஆகிறது இல்லை இறே –
(மா விசேஷணம் மற்ற மலைகளுக்கு வியாவ்ருத்தம் )
உகந்து அருளின நிலங்களில் எங்கும் பண்ணக் கடவ
விருப்பத்தைப் பண்ணிக் கொடு வந்து
சந்நிஹிதனான தேசம் திரு நீர் மலை-
————-
நெறி எல்லாம் எடுத்து உரைத்த ஸ்ரீ கீதாச்சார்யன் இன்றும் நாம் சேவிக்கும்படி-
ஸ்ரீ பார்த்த சாரதி -ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
நின்றும் நடந்தும் கிடந்தும் இருந்தும் பரந்தும் ஐவர் சேவை –
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் பலராமன் சாத்விகி அநிருத்தன் பிரத்யும்னன் இப்படியும் ஐவர்
நம்மாழ்வார் -தேர் கடவிய பெருமான் கனை கழல் சேவிக்கப் பெறுவேன் -நம்மாழ்வார் மங்களாசாசனம்
பெற்றே புறப்பாடு இன்றும் -திருத்தேர் புறப்பாடும் நம்மாழ்வார் சந்நிதிக்கு அருகிலே –
கீழே இவரை வசீகரித்த ராம கிருஷ்ண அவதாரமும்
கிடை அழகையும்
சிங்க வேழ் குன்றம் ஸ்ரீ நரசிம்மம்
திரு வேங்கடத்தில் கஜேந்திர வ்ருத்தாந்தம் கஜேந்திர வரணும் இங்கே சேவை
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் -ஐவரும்
மன்னாதன் -சயனம் தகிரு எவ்வுள் போலே
இப்படி இரண்டு வித சங்கதி )
ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபவனாய் –
ஆஸ்ரித சுலபனாய் –
இதர விஸாஜதீயனாய் –
இருக்கிற சர்வேஸ்வரன்
இக் குணங்கள் தான் தர்மி அனுவர்த்திறவோபாதி
எங்கும் அனுவர்த்திக்குமவை இறே –
இப்படி இருக்கிறவன் மனுஷ்யராய் இருப்பார்
புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி-( இண்டை கொண்டு பாசுரம் கீழே பார்த்தோம் )
வந்து கிடந்த மாத்ரம் அன்றிக்கே-
ஒரு திர்யக்குக்கு இப் பூவில் செவ்வி அழியாதபடி திருவடிகளில் பரிமாற வேணும்
என்று இடர் பட -(மீனமர் பொய்கை பாசுரம்)
அவ்விடர் தீர்க்கைக்காக-
அது இடர் பட்ட மடுவின் கரையிலே-
அரை குலையத் தலை குலைய வந்து விழுந்து-
அத்தை ஆற்றி-
இன்னமும் இப்படி இடர் படுவார் உண்டோ என்று
சாய்ந்து அருளினான் கண்டேனே -என்கிறார் –
(மன்னாதன் தானே இங்கே முன்னம் )
——————————————
விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-1-
சிற்றவை-நடுவில் ஆய்ச்சி -மாற்றுத் தாய்-
தேவை–ஸ்வாமியை –
——————
வியாக்யானம் –
விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் –
விற் பெரு விழா வாயிற்று
சத்ரு நிரசனம் பண்ண நினைக்கிறான் ஆகையாலே -பெருக்கக் கோலினான் -ஆயிற்று –
அத்தைக் கோலின கம்சனும்
அவனுக்கு பலமாய் மலை துள்ளினாற் போலே
பெரிய கிளர்த்தியோடே கூடின மல்ல வர்க்கமும் –
அவர்கள் பார்க்கிலும் கண் பாராதே இடையற வீசும்படி
மதிப்பித்து ( மதமூட்டி ) வழியிலே நிறுத்தின ஆனையும்
அத்தை தள்ளினாலும் அது தன்னை உயிர்ப்புள்ளது போலே
நடத்த வல்ல -பாகனும் –
வீழ செற்றவன் தன்னை-
ஏகோத் யோகத்திலே நிரசித்தாற் போலே
வினை செய்த சடக்கு-
(வார் கெடா -கஞ்சனை குஞ்சி பிடித்து -வரிசையாக நம்மாழ்வார் -இங்கு அக்ரமம் )
புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை –
திரிபுர தஹந அபதாநத்தாலே சஞ்சாத அபிமாநனான -ருத்ரன்
பிதாவுமாய் -லோக குருவுமாய் -இருக்கிறவன் தலையை அறுத்து -பாதகியாய் இருக்கும் –
மதிப்பனாய் இருக்கிறவன் எளி வரவு பட ஒண்ணாதே -என்று அத்தைப் போக்கி
அத்தாலே லோகத்துக்கு எல்லாம் தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை- வெளி -இட்டவன் –
தத்ர நாராயண ஸ்ரீ மான் மயா பிஷதாம் ப்ரயா சித விஷ்ணு பிரஸாதாத் –
சர்வேஸ்வரன் பிரஸாதத்தாலே
ஸூஸ்ரோணி
அவனைக் கிட்டுகையாலே உன் வடிவு அழகு சுலபமாக பெற்றது இறே-என்கிறான்-
(மாத்ஸ்ய புராணம் -வாம அங்குஷ்ட நகத்தால் கிள்ளப்பட்டது -கபாலித்தவம் பவிஷ்யதி சாபம் –
பூ தல புண்ய க்ஷேத்ரம் போனேன் ஹிமாசலம் சென்றேன் -பதரி விசால் பெருமானைப் பிரார்த்தித்தேன்
ரத்தம் வியர்வை கபாலம் பட்டு வெடிக்க ஸ்வப்ன தனம் போல் கபாலம் தொலைந்தது
இதனாலே உன் வடிவு அழகு சுலபமாக பெற்றது என்று பார்வதி இடம் சொன்னானே )
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு –
பற்றலர் -உண்டு -சத்ருக்கள்
அவர்கள் முடிந்து போம் படி
ஆயுதம் எடுக்க ஓட்டோம் என்றவாறே
குதிரைகளை நடத்தும் கோலைக் கையிலே கொண்டு –
பார்த்தன் தன் தேர் முன்னின்றானை –
ரதியைச் சீறினால்
சாரதியை இறே அழியச் செய்வது
அவனை பின்னே இட்டு -தன்னை அம்புக்கு இலக்காக்கி –
நின்றவனை
சிற்றவை பணியால் முடி துறந்தானை-
மாற்றுத் தாய் சொன்ன வார்த்தைக்காக
ப்ராப்தமாய் வருகிற முடியை சந்யசித்தவனை
ந நூநம் மம கைகேயி
சக்கரவர்த்தி வார்த்தை சொல்ல மாட்டாமையாய் இருக்கிறான் அத்தனை-
உம்முடைய தம்பிக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்-
உம்மைக் காடேறப் போகக் காணும் அவன் நினைத்து இருப்பது –
என்று சக்கரவர்த்தி கருத்தைச் சொல்ல
அத்தைக் கேட்டு நடுவில் ஆய்ச்சி –
திருவடிகளிலே அழகியதாய் ஸூஸ் ரூஷித்தோம் என்று இருந்தோம்
நம் பக்கல் ஒரு குணம் உண்டாக நினைத்து இராமை இறே
தாம் போகச் சொல்லாமே அய்யர் கருத்தாக அருளிச் செய்தது -என்று
ஐயரோ பாதியாகவோ உம்மை நினைத்து இருப்பது –
அவரை ஈஸ்வரராகவும்
உம்மை ஈஸ்வர தரையாகவும் இறே நினைத்து இருப்பது -என்றார் இறே-
(ஒவ் ஒரு பாசுரத்துக்கும் ஸ்வா பதேசமும் அருளிச் செய்கிறார் )
விரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்குமவனாய் –
ஈஸ்வர அபிமாநிகளுக்கு இடர் வந்தால் போக்குமவனாய் –
தனக்கு ஸ்நேஹிதர் ஆனார்க்காகத் தன்னை அழிய மாறுமவனாய் –
போலியான ஸ்நேஹிகளுக்கும் ஏவிற்றுச் செய்யுமவனானவனை –
திருவல்லிக்கேணிக் கண்டேனே
திருவல்லிக்கேணியிலே காணப் பெற்றேன்
என்கிறார்
———————————————
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை யமுதை யென்னை யாளுடை யப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே–2-3-2-
மயிலாப்பூர் படைவீடு
திரு வல்லிக்கேணி ஆரண்யம்
கனி-நிரதிசய போக்யம்
நந்தனார் களிற்றை-வேழ போதகம் -யானைக்குட்டி
யாளுடை யப்பனை-அடிமை கொண்ட உபகாரகன்
மா-செல்வம் நிறைந்த மாதவன் கேசவன் பார்த்தசாரதி உள்ளடக்கிய செல்வம்
———————————————————–
வியாக்யானம் –
வேதத்தை –
த்ரை குண்ய விஷயா வேதா –
என்கிறபடியே எல்லார்க்கும் ஹிதம் சொல்லப் போந்த
வேதத்தை தனக்கு விபூதியாக உடையவன்
வேதத்தின் சுவைப் பயனை –
வேதோக்தமான கர்மங்களை அநுஷ்டித்து
ராஜசராயும் தாமசராயும் சாத்விகராயும் உள்ளாருக்கு
அவ்வவருடைய ருசி அநு கூலமாக பல பிரதானம் -பனண்ணுமவன் –
(அ சாஸ்திரம் படி செய்பவர் அசுரர்
சாஸ்திரம் முக் குணம் உள்ளோருக்கும் )
விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை-
கர்ம பாவனை யாதல் உபய பாவனை யாதல் அன்றிக்கே
கேவலம் ப்ரஹ்ம பாவனையாயே இருக்கும்
சநகாதிகளுக்கு நிரதிசய போக்யனாய் உள்ளவனை –
நந்தனார் களிற்றை-
ஸ்ரீ நந்த கோபர்க்கு தன்னுடைய
அதி மானுஷ சேஷ்டிதங்களாலே
எப்போதும் ஒக்க இனியனானவனை –
குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை-
பூமியில் உள்ளார் -காரணந்து த்யேய -என்கிறபடியே
தன்னையே ஆஸ்ரயிக்கும் படி
ஜகத் காரண பூதனாய் உள்ளவனை –
யமுதை-
அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனை –
யென்னை யாளுடை யப்பனை-
அவர்களுக்கு எல்லாம் புறம்பாய் இருக்கிற என்னை
அடிமை கொண்ட உபகாரகனை –
ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாட மா மயிலை-
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன்
என்று பிராட்டி ப்ராதான்யமேயான ஊராகையாலே
பிராட்டி பரிகரமே யாயிற்று –
நா நயோர் வித்யதே பரம் -என்று
அவள் விபூதியும் ஈஸ்வர விபூதியுமாய்
இரண்டு கூறாய் இறே இருப்பது –
(தேவர் திர்யக் மனுஷ -புருஷன் ஹரி -ஸ்த்ரீ தன்மை ஸ்ரீ லஷ்மீ -மைத்ரேயருக்கு )
மயிலாப்பூர் என்று படை வீட்டுக்கு பேர் –
திரு வல்லிக்கேணிக் கண்டேனே –
—————————————
நந்தனார் களிறு என்றவர் மற்ற பிள்ளைச் சேவகங்களையும் அனுபவிக்கிறார் –
வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேர
நஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்டநாதனைத் தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி
அஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே-2-3-3-
விஞ்சை வானவர் -வித்யாதரர்
வியந்துதி-வியந்து துதி – கடைக்குறை
————————————————————–
வியாக்யானம் –
வஞ்சனை இத்யாதி –
தாய் வடிவு கொண்டு வஞ்சிக்க வந்த
பூதனை கதறிக் கொண்டு போய்
பூமியிலே விழும்படியாக
விஷம் நிரம்பின முலை வழியே
அவளுடைய பிராணன்கள் போம் படி அமுது செய்த –
நாதனை –
தனக்கு சேராத வடிவு கொண்டு
உலகத்துக்கு பிராணனான தன்னை நலிய வந்தவளை
முடித்து தன்னைத் தந்தவன்
ஸ்தந் யம்தத் -(விடமும் அமுதமும் சமம் -பிராணன் உடன் சேர்ந்து குடித்தார் -ரசமாக இருந்ததாம்
ஜகத் குருவுக்கு -விஷ்ணு புராணம்
பன்னிரண்டு மைல் நீளமாக உடல் விழுந்ததாம் வில் கடை தூரம் அன்று –
கொழு மோர் கொடுத்தாள் தாய் பரிந்து இவன் அச்சம் தீர்க்க )
தானவர் கூற்றை –
ஆசூர வர்க்கத்துக்கு ம்ருத்யு வானவனை
வித்யாதரர் சாரணர் ஸித்தர் உள்ளிட்ட
தேவ வர்க்கம் அடைய விஸ்மிதராய்
ஸ்தோத்ரம் பண்ணும்படி –
புருஷோத்தமனான தனக்கு சேராத வடிவைக் கொண்டு
அம்ருதத்தை அனுகூலரை புஜிக்கும் படி பண்ணினவனை –
————————
(பூதனை நிரசனத்து அளவு இன்றிக்கே த்ரை லோக இந்திரன் கல் மழை பொழிய –
கடுங்கால் மாரி கல்லே பொழிய -கோவர்த்தன விருத்தாந்தம் அனுபவம் இதில் )
இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடு இனவானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே –2-3-4-
———————————————————————
வியாக்யானம் –
இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் –
திரு ஆய்ப்பாடியில் உள்ளார் த்ரை லோக்ய ஈஸ்வரனான
இந்த்ரனுக்காக வருஷார்த்தமாக ஆண்டுக்கு ஒரு
விருந்திடக் கடவர்களாய் –
நாம் பிறந்து வளருகிற ஊரிலே
புரோடாசத்தை நாய் தின்றாற் போலே
ஒரு தேவதை வந்து புஜிக்க யாவது என் -என்று
நீங்கள் செய்யப் புகுகிறது தான் என்ன -என்று கேட்டான் –
நாங்கள் இந்தரனுக்கு வருஷார்த்தமாக விருந்திடப் புகுகிறோம் என்றார்கள்
இந்த மலை யன்றோ நமக்கும் பசுக்களுக்கும்
ஒதுங்க இடமும் தந்து -புல்லும் தருகிறது
ஆரேனுக்குமோ பிரத்யுபகாரம் பண்ணுவது இம் மலைக்கு இடுங்கோள் -என்றான் –
முகத்தைப் பார்த்து ஓன்று சொன்னால் மறுக்கலாம் படி அன்றே இருப்பது –
ஒன்றாகக் கொடு வந்து குவித்தார்கள் –
(வாய் திறந்து ஓன்று பணித்தது ஓன்று -அழகைக் கண்டவள் ஏது என்று அறிய மாட்டாளே )
இந்த்ரன் இத்யாதி –
இந்தரனுக்கு என்று இடையர் எடுத்த
எழில் உடைத்தான விழவிலே
முன்பு செய்து போரும் படியிலே
மந்த்ரோக்தமான படியே பண்ணுகிற
அநுஷ்டான ரூபமான பூஜையை பெறாமையாலே
அவன்
பசி க்ராஹத்தாலே கோபித்து மஹா வர்ஷமாக வர்ஷிப்பிக்க –
அத்தாலே இடையரானவர்கள் தளர்ந்து
ரஷகரான எங்களோடே
எங்கள் உடைய ரஷ்யமான பசுக்களும் தளராதபடி
நோக்கி அருள வேணும் -என்ன –
இத்தால்
புறம்புண்டான ரஷ்ய ரஷக பாவமும்
அப்ரயோஜகம் என்றபடி –
அந்தமில் –
அந்த மழையின் அளவு அல்லாத
பெரிய மலையாலே
மழையைத் தடுத்து –
(தேவதாந்த்ர பிரசாதம் தனது அநந்யார்ஹ பக்தர்களுக்கு கூடாதே -தானே உண்டான் -அவனுக்கு எல்லாம் ஆகுமே )
அப்படியே
பஹுதா சந்தத துக்க வர்ஷிணி -என்கிற
என்னுடைய சம்சாரம் ஆகிற வருஷத்தை
பரிகரிக்க வந்தவன்..
——————
அதி மானுஷ சேஷ்டிதங்களை அனுபவித்து -ஸ்ரீ பூமா நீளா தேவி நாயகனாய் இருந்து
வைத்தும் தூது சென்றான் என்று ஈடுபடுகிறார்
இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன் நற் புவி தனக்கிறைவன்
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றை யோர்க்கெல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-5-
நற் புவி-ஷமை பிருத்வி சமாயா –
தன் துணை யாயர் பாவை-தன்னையே துணை இவளுக்கு மட்டும் தந்தை சுல்கம் வைத்து பற்றினான்
———————————————————-
வியாக்யானம் –
இன் துணைப் பதுமத் தலர்மகள் –
நெஞ்சுக்கு இனிய துணையாய் இருக்கிற
பதுமத்தலர் மகள் உண்டு –
தாமரைப் பூவை உத்பத்தி ஸ்தானமாக உடைய பெரிய பிராட்டியார்
அவளுக்கு இன்பனானவன் –
தனக்குமின்பன் —
எல்லார்க்கும் ஸ்ப்ருஹணீயையாய் இருக்கிற
பெரிய பிராட்டியார் தான் -அகலகில்லேன் -என்று
விரும்பி வர்த்திக்கும்படி அவளுக்கு ஸ்ப்ருஹணீயனானவன் –
நற் புவி தனக்கிறைவன் –
சர்வேஸ்வரனான தனக்கும் கூட
பொறைக்கு உவத்தாய் இருக்கிற
பூமிப் பிராட்டியாருக்கு வல்லபனானவன் –
(புவிக்கு இல்லாமல் புவி தனக்கும் என்பதால் -பொறுமைக்கு இவள் சம்பந்தமே காரணம் )
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை-
தன்னையே துணையாக உடையாளான
ஆயர் பாவை உண்டு -நப்பின்னை பிராட்டி –
அவளுக்கு ஸ்வாமி யானவன் –
(சர்வேஸ்வரன் -நீர் வார்த்து கொடுத்துப் பெற்றான் -இவளையே -ஆகவே தன் துணை இவளுக்கு விசேஷணம் )
மற்றை யோர்க்கெல்லாம் வன் துணை –
இப்படி இருக்கையாலே
அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன் –
பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும் என் துணை-
ஆஸ்ரிதரான பாண்டவர்களுக்காக
அவர்கள் வாயில் சொல்லி விட்ட வார்த்தையை அங்கே சென்று சொல்லுவது –
இங்கே வந்து அறிவிப்பதாய் –
இப்படி ஆஸ்ரித விஷயத்தில்
தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை
(தூது இயங்கும் என் துணை -என்பதால் )
எனக்கு அறிவித்தவன் –
எந்தை –
எனக்கு ஸ்வாமியாய் –
தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
என் குலத்துக்கு நாதன் ஆனவன் -.
———————————
தூது சாரத்யங்கள் பண்ணிற்றும் திரௌபதி உடைய மங்கள ஸூத்ரத் தக்காகவே -பிரதான ஹேது –
அந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன் அணி யிழையைச் சென்று
எந்தமக்குரிமை செய்யெனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமில் குழலாள் அலக் கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே -2-3-6-
அரசர் தம் அரசன் ராஜ ராஜன் -துரியோதனன் அவன் நினைவால்
அணி யிழை-அப்படிப்பட்டவள் இப்படி மூன்று நாள்கள் இருக்கும் பொழுதும்
அலக்கண் -துக்கத்தை
இந்திர புத்ரன் -அர்ஜுனன் -வாலி -அங்கு
சூர்ய புத்ரன் -கர்ணன் -சுக்ரீவன் -அங்கு
——————————————————-
வியாக்யானம் –
அந்தகன் சிறுவன்
குருடன் பெற்ற பிள்ளை யாயிற்று
இத்தால் அறிவு கேடு வழி வழி வருகிறது என்கை –
பிதாவானவன் கண் அஞ்ச வளர்க்க வளருகை அன்றிக்கே
தான் கண்டபடி மூலையடையே திரிந்தவன் –
அரசர் தமரசற் கிளையவன்
ராஷச ராஜாவான துரி யோதனனுக்கு பின் பிறந்தவன் –
துச்சாதனன் -என்றபடி –
அவன் கொண்டாடி வளர்க்க -செருக்காலே வளர்ந்தவன் என்று
தீம்புக்கு உறுப்பாக சொல்லுகிறது –
(யவ்வனம் -தன சம்பத்- பிரபுத்வம் – அவி விவேகம் நான்கும் இருந்தால் கேட்க வேண்டுமோ )
அணி யிழையைச் சென்று —
மஹோ உத்சவம் ஆகையாலே
ஆபரணங்களாலே அலங்க்ருதையாய் நின்றவள்
பக்கலிலே கிட்டி –
எந்தமக்குரிமை செய்யென-
சூதிலே உன்னையும் தோற்றார்கள்
நீ போந்து எங்களுக்கு இழி தொழில் செய் -என்ன –
தரியாது –
அவள் அந்ய சேஷத்வத்தை பொறுத்து இலள் ஆயிற்று –
இவ்வளவில் ஸ்வாமி யான நீ என் பக்கல் கிருபை பண்ண -வேணும் என்ன
ஆண் பிள்ளைகளான பர்த்தாக்கள் சந்நிதிஹிராய் இருக்க
தூரஸ்தனான கிருஷ்ணன் பேரைச் சொல்லுவான் என் என்று
எம்பாரைக் கேட்க
அறிந்தோமே -முன்பே சில ஸூரு ஸூரூ கேட்டு வைத்தாள் -போலும்
மஹத்யாபதி யம்ப்ராப்தே ஸ்மர்தவ்யோ பகவான் ஹரி –என்று
(வசிஷ்டர் சொல்ல கேட்டு இருக்கிறாளே )
இது தன்னைப் பட்டரைக் கேட்க
பர்த்தாவின் கையைப் பிடித்துப் போகா நின்றாலும்
இடறினால் அம்மே -என்னக் கடவது காண் -என்று அருளிச் -செய்தார்
அர்த்தம் அதாய் இருக்கச் செய்தே
விசைப்பு கிடந்தபடி காணும் -விசைப்பு -ஸ்நேஹாதிக்யம்
(எவ்வுயிர்க்கும் தாயாய் இருக்கும் வண்ணமே )
சந்தமல் குழலாள் –
சந்தம் என்று நிறம்
அல் -என்கிற இத்தால் இருளை லஷித்து ( அல்லும் பகலும் இருளும் பகலும் )
நிறம் இருண்ட குழலை உடையவள் என்னுதல் –
அன்றிக்கே
சந்தமல் குழலாள் –
சந்தனப் பூ மாறாத குழலை உடையவள் என்னுதல்
அவள் பட்ட அல்லல் உண்டு –துக்கம் அத்தை
துர் யோதாநாதிகள் உடைய ஸ்திரீகள் பட்டு –
அதில் தன்னேற்றமாக நூலும் இழந்தார்கள் ஆயிற்று –
அவர்களுக்கு துக்கம் நிலை நிற்கும்படி பண்ணினான் ஆயிற்று –
இந்திரன் -இத்யாதி -(ஸ்வாபதேசம் )
வலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும்
தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை சொல்லுகிறது–
த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-
அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –
———————
(ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய பதத்தில் ஆசை கொண்டு தேர் தட்டிலும் குரு பரம்பரையில் இடம் பிடித்தான்
சிற்றவை பணியால் முடி துரந்தானே -கீழே பெருமாள் மங்களாசானம் இதில் விரித்து ச குடும்பமாக
ப்ருந்தாரண்ய துளசிக் காடு -நிவாஸாய –
கைரவணி புஷ்கரணி –மீன்கள் இல்லாதது
துர்வாசர் சாபத்தால் விஸ்வகர்மா-உடல் அற்று கீழே விழ சபித்து -அ ரஜ நதிக்கரையில் –
சாபம் போக இங்கு தபஸ் அங்கங்கள் பெற்றார்
ஆர்த்ரேயர் வியாசர் இருவரும் -வியாசர் எழுந்து அருளப்பண்ணிய வேங்கட கிருஷ்ணம்
வலது திருக்கையில் பாஞ்ச ஜன்யம்
இடது திருக்கையில் தான ஹஸ்தம் வைகுண்டம் ஹஸ்தம் ஞான முத்திரை
ஒரு திருவடி முன் வைத்து பார்த்தனை கடாக்ஷித்து -சாட்டை வைத்து பார்த்தசாரதி சேவை
சேஷ பீடத்தில் ஒட்டியாணம் நாகாபரணம் தரித்து ஹிரண்ய மீசை
சுமதி அரசன் -இரண்டு தோள் அமுது
அத்ரி முனிவர் தபஸ் -அத்ரி குமாரர் ஆர்த்ரேயர் நரசிம்மர் )
ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் நடுவில் வழி பரிப்பாரைப் போல் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -சிற்றவை –
நெஞ்சுக்குள் புகுந்து பாடல் பெறுகிறார் இங்கு –
பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–
காட்டுக்கு கூட சென்றவர்களும் செல்லாதவர்களும் பிரித்து-
————————-
வியாக்யானம் –
பரதனும் தம்பி சத்ருக்கனனும்-
ஸ்ரீ பரதாழ்வானும்
அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –
(கச்சதா மாதுல குலம் அ ந க -என்பதால் இங்கு தம்பி-உடைவாள் போல்வான் )
இலக்குமனோடு மைதிலியும் –
இதுவும் இங்கனே ஒரு சேர்த்தி –
ஸீதே ஸ லஷ்மணாம் -என்கிறபடியே தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –
பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தியுமாம் -( அக்குளத்தில் மீன் முஹுர்த்தம் அபி ஜீவிதம் )
ராவண வதத்தின் அன்று விஜய கோஷத்தின் சடக்கு கேட்டு இருக்கையில் உண்டான சேர்த்தியுமாம் –
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற-
சமரம் காலத்திலே கண்டு அனுபவித்தார்களோடு –
கேட்டார் வாய் கேட்டாரோடு வாசி யற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று –
தேசிகர் அடங்கலும் திரள் திரளாக நின்றாயிற்று ஏத்துவது –
(சத்ருக்களும் கொண்டாடும் பெருமாள் -வேண்டியவர்களுக்கு கை விடுவார்கள் கண்ணனை-
தீர்த்த யாத்திரை போனார் நம்பி மூத்தபிரான் –
கேட்டார் கேட்ட வாய் ஸ்தோத்ரம் பரத சத்ருக்னர்கள்
ராவண விஜயம் கேட்டவர்களும்-கேட்ட வாய் கேட்டவர்களும்
முதலிகளும் தேவர்களும் ரிஷிகளும் )
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற-
நமக்கும் ஓர் காலம் நெஞ்சு ஒழிந்த போது ஏத்துவது என்று ஓன்று அன்றோ
அங்கன் இன்றிக்கே
திவ ராத்ர விபாகமற கிட்டினதனையும் ஆழம் கால் படுகைக்கு
உடலான வித்தனை -( கண்டு அறிவாரும் கேட்டு அறிவாரும் )
இராவணாந்தகனை –
இப்படி ஏத்துவது தான் ராவண வதம் பண்ணின
அபதானம் ஒன்றுமே ஆயிற்று –
யெம்மானை –
அவர்களோபாதி நானும் தோற்று
ஏத்தும்படி -பண்ணினவனை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
குரவம் கமழா நிற்பதாய்
ஸ்ரமஹரமான
பொழிலின் ஊடே
குயில்களோடே கூட
மயில்கள் ஸ ஸம் ப்ரம ந்ருத்தம் பண்ண –
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று –
பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று-
(ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ-
பகதர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )
——————————
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—-2-3-8-
ஒள்ளியவாகி-அழகாக
ஆஹ்வாத ஹஸ்தம்-பூரிப்புடன் திரு முகம்
—————————————————————
வியாக்யானம் –
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் –
பள்ளி ஓதும் பருவத்தில் சொன்னவை அடங்கலும்
சிரஸா வஹிக்க வேண்டும்படி இருக்கும் –
இதாயிற்று பருவம் -இருந்தபடி –
அதுக்கு மேலே தன் வயிற்றில் பிறந்த பிரஜை
சொன்னவை அடையப் பொறுக்க வேணும் –
வாயில் ஓர் ஆயிர நாமம் –
அவன் அப்போது சொல்லிற்று
நால் இரண்டாகிலும்
பருவத்துக்கு தக்க அளவல்லாதபடி
இருக்கையாலே குவாலாகச் -சொல்லுகிறார் –
நால் இரண்டு -திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்
நாராயண -ஹரி என்றுமாம்
விஷ்ணு ஷட் அஷரி-யாகவும் –
ஒள்ளியவாகிப் போத –
வயிற்றில் பிறந்தவன் சொல்லுகையாலே
இனிதாய் இருக்குமே –
வாங்கு –
அவ்விடத்தில் –
அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி –
பள்ளியில் ஓதும் பருவத்தில் சொல்லுவது எல்லாம் பிரியமாய் இருக்கும் –
தன் வயிற்றில் பிறந்தவன் சொல்லிற்று எல்லாம் இனிதாய் இருக்கும் –
சத்ருவே சொன்னாலும் சிரசா வஹிக்க வேண்டுமத்தை சொல்லிற்று –
அசஹ்ய அபசார ப்ராசுர்யத்தாலே
திரு நாமம் கேட்டுப் பொறுக்க மாட்டாமையாலே
முனிந்தான் ஆயிற்று –
பிள்ளையை-
திரு நாமம் சொன்னதுவே ஹேதுவாக வயிற்றில் பிறந்தவனை
கை விட்டான் அவன் –
திரு நாமம் சொன்னாரோடே தமக்கு சம்பந்தமாக நினைத்து
இருக்கிறபடியாலே -பிள்ளையை –என்கிறார்
சீறி வெகுண்டு தூண் புடைப்ப-
கோபத்தாலே செய்வது அறியாதே
தூணைத் தட்ட –
பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய் –
பிறை போலே இருந்த எயிற்றையும்
அக்நி போலே இருந்த கண்களையும்
புறப்பட விடா நின்றுள்ள பெரிய வாயையும்- உடைய -( இவையாய் பிலவாய் )
தெள்ளிய சிங்கமாகிய தேவை திருவல்லிக்கேணிக் கண்டேனே –
ஹிரண்யன் உடைய முரட்டு வடிவைக் கண்டு பிற் காலியாதே
நரசிம்ஹமாய்
அவ்வழியாலே தானே ஆஸ்ரயணீயன்
என்னும் இடத்தை வெளி இட்டான் –
——————————
ஆண் பிள்ளை ஐவருக்கும் பெண் பிள்ளைக்கும் சிறுக்கனுக்கும் உதவியது அன்றிக்கே
திர்யக்குக்கும் ஒரு திரியக்கால் வந்த நோவுக்கு அரை குலையத் தலை குலைய வந்த
மஹா குணத்தில் கட்டுண்டு அனுபவிக்கிறார்
மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-9-
———————————————
வியாக்யானம் –
மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த –
நெடுநாள் பூத் தேடி பெறாமையாலே
இடர் பட்டுத் திரிந்த விது –
பூத்த தடாகத்தைக் கண்டு –
ஷூத்ர மத்ஸ்யத்துக்கு மேற்பட துஷ்ட தத்வம் உண்டு என்று மதியாதே
வந்து செவ்விப் பூவைப் பறிக்கைகாக பெரிய அபிநிவேசத்தோடே
வந்து இழிந்த –
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ –
காட்டிலே ஸ்வ சஞ்சாரம் பண்ணக் கடவ யானையானது
கை எடுத்துக் கூப்பிடும்படியாக
முதலை யானது இதின் காலைக் கதுவ –
முதலைக்கு தன்னிலமாய்
இதுக்கு வேற்று நிலமாயிற்று –
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை –
ஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம்
போம்படியாக
பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து
ஆனைக்கு இடர் இன்றிக்கே
முதலைக்கே இடர் ஆம்படியாக
திரு வாழியை ஏவினான் ஆயிற்று –
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
வண்டுகள் அமர்ந்த சோலையையும்
மாடங்களையும் உடைத்தான
மயிலாப்பூரில் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
——————
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே—2-3-10-
பாண்டிய தேச அரசர் வம்சம் -தென்னன்
நின்றானை-ஸ்ரீ வேங்கட கிருஷ்ணனை –
இவர் பாடலே இவனுக்கு அரண் -ஆகவே மதிள் மங்கை நாட்டில் இருக்க வேண்டுமே
சீர்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
சொல் மாலை -ஸப்த சந்தர்பமான
——————————-
வியாக்யானம் –
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
நித்யமாய்
குளிர்ந்து இருந்துள்ள பொழிலும்
நீர் நிலங்களும்
அரணாகப் போரும்படியான மதிள்களும்
மாடங்களும்
மாளிகைகளும்
மண்டபங்களும்-
தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை –
இன்னமும் சொல்லிச் சொல்லாத நன்மைகளும் எல்லாம்-( நன் மயிலை-சொல்லாத நல்லவைகளும் )
உண்டாம்படி யாயிற்று
தொண்டமான் சக்கரவர்த்தி ஏற்றிற்று –
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் –
அரணாகப் போரும்படியாய்
நன்றாய் இருக்கிற மாடங்களை உடைய
திருமங்கைக்கு ப்ரதானர் –
காமரு சீர்க் கலிகன்றி -சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார்-
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உடைய
ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும்
அப்யசிக்க வல்லார்கள் –
சுகமினி தாள்வர் வானுலகே –
நித்ய அனுபவம் பண்ணலாம் படியான
நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .
————
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
வில் நுதல் அண்டர் கரிக்கு சார்வு பற்றாய் நீக்கியவர்
அல்லல் கிடந்தது இருந்து நின்று புள்ளூர் -செல்வனாம்
ஓர் அஞ்சுவை அமுதைக் கண்டான் கலிகன்றி
சீர் அல்லிக் கேணியுள் அன்று–13-
சார்வு -ரக்ஷகத்வம் /பற்று -சரண்யத்வம்/ஓர் -அத்விதீயம் -ஓர்தல் -என்றுமாம் -/
புள்ளூர் செல்வன் -கஜேந்திர வரத்தான் நித்ய சேவை /
கோயில் திருமலை பெருமாள் கோயில் -ஒரே திவ்யதேச சேவையால் வந்த சீர்மை –
எம்பெருமானாராக அவதரித்த சீர்மையும் உண்டே –
கண்ணனும் ராமனும் குடும்ப ஸஹித சேவையால் வந்த சீர்மையும் உண்டே
அஞ்சுவை அமுதம் -மன்னாதன் கிடந்து-தெள்ளிய சிங்கர் இருந்தும் -பார்த்த சாரதி நின்றும் –
புள்ளூர் செல்வன் வரதன் -மனத்துக்கு இணையான நின்றும் –
கலிகன்றி கண்ட அஞ்சுவை அமுதம் அன்றோ இவர்கள் –
வில் நுதல் -திரௌபதி /அண்டர் தேவர் இடையர் -இருவர் இடர் தீர்த்தமை பாசுரங்களில் உண்டே –
——————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply