Archive for March, 2024

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு-வடமதுரை -ஸ்ரீ மதுரா

March 24, 2024

திரு-வடமதுரை -மதுரா
மூலவர் –கோவர்த்த நேசன் -பால கிருஷ்ணன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -ஸத்ய பாமா
விமானம் -கோவர்த்தன விமானம்
தீர்த்தம் -சக்ர தீர்த்தம் -கோவர்த்தன தீர்த்தம் -யமுனா நதி
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -குலசேகர ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திருமங்கை ஆழ்வார்

முக்தி தரும் க்ஷேத்ரம் -மதுரா நாம நாகரீ புண்யா பாப ஹரே ஸூ பா -நினைத்தாலே அனைத்து பாபங்களும் விலகி விடும்
கண்ணனின் திரு அவதார ஸ்தலம் -நான்கு யுகங்களிலும் பகவத் சம்பந்தம் உண்டே
க்ருத யுகம் -வாம ஆஸ்ரமம் / த்ரேதா யுக -சத்ருக்நனால் ஆளப்பட்ட பூமி
த்வாபர யுகத்தில் கண்ணனின் அவதார ஸ்தலம் -யமுனைக் கரையில் உள்ளது
-பிருந்தாவனம் 10 கி மீ தொலைவிலும் -கோவர்த்தன கிரி 12 கி மீ தொலைவிலும் உள்ளன –
ஜென்ம கர்ம மே திவ்யம் -மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
மது பிள்ளை லவணாசுரனை -செம்புகன் தன்னை -லவணன் தன்னை தம்பியால் வான் ஏற்றி –
விராஜா கானகம் பாடி உலவி உலவி -யமுனை -பாபம் சேராது -ராசா க்ரீடை -நாக தீர்த்தம் –கண்ணனை கூட்டிப் போன இடம்
அக்ரூர காட் / கேசாவ்ஜி மந்திர் / போத்ரா குண்டம் / விஸ்ராம் காட் -நிறைய -வனங்கள் –

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ மதுரா
மூலவர் ஸ்ரீ கோவர்த நேசன், ஸ்ரீ பால கிருஷ்ணன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ இந்திர தீர்த்தம்,ஸ்ரீ யமுனை ஆறு
விமானம் ஸ்ரீ கோவர்த்தன விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் ஸ்ரீ உத்தரபிரதேசம்
அடிப்படை இடம் ஸ்ரீ தில்லி
நாமாவளி ஸ்ரீ ருக்மிணீ ஸத்திய பாமா ஸமேத ஸ்ரீ கோவர்த்த நேசாய நமஹ

———————

ஸ்ரீ பெரியாழ்வார் -16-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -19-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -4- பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் -50- பாசுரங்கள் மங்களாசாசனம் –

—————

ஸ்ரீ பெரியாழ்வார் -16-பாசுரங்கள் மங்களாசாசனம்

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறு நெய் பால் தயிர் நன்றாக தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனராய் ஆய்ப்பாடி ஆயரே –1-1-4-

அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளரும் அடங்கப்
பொட்ட துற்று மாரிப் பகை புணர்த்த பொரு மா கடல் வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடம் கண் மடமான் கன்றினை வலை வாய் பற்றிக் கொண்டு குற மகளிர்
கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-1 –

வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட
மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப மது சூதன் எடுத்து மறித்த மழை
இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி இளம்சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 -5 2-

அம் மை தடம் கண் மட வாய்ச்சியரும் ஆன் ஆயரும் ஆநிரையும் அலறி
எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப இலங்கு ஆழிக்கை எந்தை எடுத்த மலை
தம்மை சரண் என்ற தம் பாவையரை புன மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று
கொம்மை புயம் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5 3-

கடு வாய் சின வெம் கண் களிற்றினுக்கு கவளம் எடுத்து கொடுப்பான் அவன் போல்
அடி வாய் உற கை இட்டு எழ பறித்திட்டு அமரர் பிரான் கொண்டு நின்ற மலை
கடல் வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி கதுவாய்ப் பட நீர் முகந்து எறி எங்கும்
குட வாய்ப்பட நின்று மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5 4- –

வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை
கானக்களியானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து
கூனர் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-5 –

செப்பாடு உடைய திருமால் அவன் தன் செம்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள்காம்பாகக் கொடுத்து கவித்த மலை
எப்பாடும் பரந்து இழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ
குப்பாயம் என நின்று காட்சி தரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5 6-

படங்கள் பலவும் உடை பாம்பரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல்
தடம் கை விரல் ஐந்து மலர வைத்து தாமோதரன் தாங்கு தடவரை தான்
அடங்க சென்று இலங்கையை ஈடு அழித்த அனுமன் புகழ் பாடி தம் குட்டங்களை
குடம் கை கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-7 – –

சல மா முகில் பல் கணப் போர் களத்து சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பை தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய
கொலை வாய்ச்சின வேங்கை கண் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-8 –

வன் பேய் முலை உண்டதோர் வாயுடையன் வன் தூண் என நின்றதோர் வன் பரத்தை
தன் பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தடவரை தான்
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம்முடைக் குட்டங்களைக்
கொம்பேற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-9- –

கொடி ஏறு செம்தாமரை கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று இல
வடிவேறு திரு உகிர் நொந்தும் இல மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்
முடியேறிய மா முகில் பல் கணங்கள் முன் நெற்றி நரைத்தன போலே எங்கும்
குடி யேறி இருந்து மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-10 –

அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடிமுல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல்
திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ பட்டார் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் நன்குடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3 5-11 –

வானிளவரசு வைகுந்த குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தர்
கோனிளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடூதின போது
வானிளம்படியர் வந்து வந்தீண்டி மனமுருகி மலர்க் கண்கள் பனிப்பச்
தேனளவு செறி கூந்தல் அவிழ சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே – 3 6-3-

ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்துச் செய்தான் மலை
வான் நாட்டில் நின்று மா மலர் கற்பகத்து ஒத்து இழி
தேனாறு பாயம் தென் திரு மால் இரும் சோலையே – 4 2-4 –

வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய தலை பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-9 –

நான் ஏதும் உன் மாயம் ஒன்றும் அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புக என்று மோதும் போது அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்
வானேய் வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 8-

—————-

ஸ்ரீ ஆண்டாள் -19-பாசுரங்கள் மங்களாசாசனம்

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகு தருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.–திருப்பாவை – 5-

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே—4-5-

அற்றவன் மருத முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே–4-6-

கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—-6-5-

தட வரையின் மீத சரற் கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தால் போலே நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெரும் சங்கே —7-3-

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–12-1-

கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்–12-8-

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த னனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே–13-8-

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –-14-1-

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின்மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–14-2-

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-3-

காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-4-

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ
பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே —14-5-

தருமம் அறியா குறும்பனைத் தன் கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே –14-6-

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-7-

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —14-8-

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே —14-9-

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

—————

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரங்கள் மங்களாசாசனம்

வளவெழும் தவள மாட மதுரை மாநகரந் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை
துவளத் தொண்டாய தொல் சீர்த் தொண்டரடிப் பொடி சொல்
இளைய புன் கவிதையேலும் எம் பிறார் கினியவாறே. –திருமாலை – 45-

——————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -4- பாசுரங்கள் மங்களாசாசனம் –

வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து
கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே. –6-7-5-

மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ் தார்க்
கன்னவிலும் தோளான் கலியனொலி வல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே. –6-8-10-

நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திருமாலிருஞ் சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணுங்கொலோ? –9-9-6-

சீராரும் மாலிருஞ் சோலை திருமோகூர் பாரோர் புகழும் வதரி வடமதுரை –சிறிய திருமடல் – 74

——————

ஸ்ரீ நம்மாழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்-

வாய்க்குங் கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ் செந்நெலும் வயல் சூழ் திரு வாறன் விளை
வாய்க்கும் பெரும் புகழ் மூவுல கீசன் வட மதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே என்று என்று ஏங்கி யழுதக்கால்
எதுவே யாகக் கருதுங்கொல் இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே—8-5-9-

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுள்ளால் அல்லால் இல்லை கண்டீர் அரணே—9-1-3-

அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னே வட மதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-4-

சதிர மென்று தம்மைத் தாமே சம்மதித் தின் மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்
அதிர்காள் செய்கை யசுரர் மங்க வட மதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லை யார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர் வட மதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வட மதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாது மில்லை மிக்கதே–9-1-8-

யாதும் இல்லை மிக்க தனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட வட மதுரைப் பிறந்த
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–9-1-9-

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10—

திருவடமதுரை (மதுரா)-(பிருந்தாவனமும், கோவர்த்தனமும் அடங்கியது.)

கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆநிரை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் களித்திருந்த பிருந்தாவனம்,
ஆநிரைகளையும் கோபால கோபியரையும் காக்க குன்றைக் குடையாக எடுத்துப் பிடித்த கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும்
சேர்த்தே மங்களாசாசனமாகக் கொள்வர். இந்த மூன்று இடங்களும் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளது. ஆழ்வார்கள் பிருந்தாவனத்திற்கு
கோவர்த்தனத்திற்கும் தனித் தனி பதிகங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

ஸ்ரீமத் பாகவதத்தில் முழுக்க முழுக்க மதுரா, கோவர்த்தனம், பிருந்தாவனம் ஆகிய மூன்றும் பின்னிப் பிணைந்துப் பயின்று வந்துள்ளன. ஸ்ரீகிருஷ்ணன்
பிறப்பிற்கு முன் வாசுதேவர் சிறை வைக்கப்பட்டது. தேவகியின் வயிற்றில் வரும் 7வது கெர்ப்பத்தில் தனக்கு மரணம் என்பதையறிந்த கம்சன் மற்ற
குழந்தைகளை எல்லாம் கொன்றது, கிருஷ்ணன் பிறந்தவுடன் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர என்றார் போல்
சிறைச்சாலையில் தேவகிக்குப் பிறந்து அன்று இரவே ஆயர்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டு நந்தகோபாலன் வீட்டில் யசோதை மகனாக வளர்ந்தது, அங்கு
லீலா விநோதங்கள் புரிந்து கோபிகைகளின் இல்லங்களிலெல்லாம் ஆடிக்களித்து, அதன் பின் வாலிபனாகி மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம்
செய்தது என்று இவ்வாறான வரலாறுகளுடன் துவாரகையில் கண்ணன் புதிய மாளிகை கட்டிச் செல்லும் வரை உள்ள ஸ்ரீகிருஷ்ணவரலாற்று நிகழ்ச்சிகள்
இந்த மதுராவின் தல வரலாற்றாகப் பேசப்படுகிறது.

மூலவர்–  கோவர்த்தன நேசன், பாலகிருஷ்ணன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்-   சத்திய பாமா நாச்சியார்
தீர்த்தம்-   இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், யமுனா நதி
விமானம்–   கோவர்த்தன விமானம்
காட்சி கண்டவர்கள்–   மதுரா நகர்வாசிகள், கோபாலர்கள், கோபியர்கள், இந்திராதி தேவர்கள், வசுதேவர், தேவகி, யசோதை, கம்சன்,

ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற வடநாட்டு நகரங்களில் மது என்னும் ஒரு நகரம் தலைசிறந்து விளங்கியது. அந்நகரை அரசாண்டு வந்த
லவணாசுரன் என்னும் அசுரன் மிகவும் கொடியவனாக இருந்தது மட்டுமன்றி யாகங்களை அழித்து ரிஷிகட்குத் துன்பம்
விளைவித்துக் கொடும்பாதகம் புரிந்து வந்தான். இந்நிகழ்ச்சி இவ்வூரில் இராமாவதார காலத்தில் நிகழ்ந்ததாகும். ரிஷிகள் இராமபிரானிடம் சென்று
லவணாசுரனை சம்ஹாரம் செய்து விசுவாமித்திரருக்கு உதவியது போல தமக்கும் உதவி தம்மை ரட்சிக்க வேண்டுமென்று விண்ணப்பித்தனர். ராமன்
தன் தம்பி சத்ருக்கனை அனுப்பி லவணாசுரனை அழித்தான்.

அரக்கனையழித்த பிறகு பிறைவட்ட வடிவில் யமுனை நதிக்கரையில் இந்த மது நகரத்தை விரிவாக்கி புதுமைப்படுத்தி மதுரா என்று பெயரிட்டு
சத்ருக்கனன் நெடுங்காலம் ஆண்டு வந்தார். இவரது வம்சத்தாருக்குப் பிறகு இந்நகரம் வசுதேவரின் பரம்பரையினருக்கு வந்துற்றதாக ஐதீஹம். இந்த
மதுராநகர்தான் இன்று கிருஷ்ண ஜென்ம பூமியாக தனது தொல்லியல் புகழை மெல்லிய வேணுகானத்தில் இழைத்துக் கொண்டுள்ளது.

ஆயர்பாடியில் இந்திர பூஜை நடப்பது வழக்கம். இந்திரனுக்கு ஆண்டுதோறும் யாதவர்கள் பூஜை நடத்தி மழை வேண்டி ஆடல் பாடல்
புரிவர். ஸ்ரீகிருஷ்ணன், ஆயர்பாடியில் வளர்ந்து வரும் சமயம் ஒரு நாள் இந்திர பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கவே இவைகளெல்லாம்
என்னவென்று கேட்டான். இந்திர பூஜைக்காக இந்திரனுக்குப் பிடித்தமான உணவு வகைகளைச் செய்து கொண்டுள்ளோம் என்று சொன்னவுடன் அட
அப்படியா இந்த உணவு வகைகள் எனக்கு பிரியமானவைகள் தான் இவைகளை எனக்கே படையுங்கள் என்று கூறி கோவர்த்தன மலைக்கு அவ்வுணவுகளை இடச்சொல்லி தானே கோவர்த்தன மலையாக இருந்து முழுதும் உண்டு தீர்த்தான் உலகுண்டவாயன்.

இதனால் சீற்றம் கொண்ட இந்திரன் கடும் மழையை உண்டாக்கி ஆநிரைகளையும், ஆயர்களையும் அப்பாலும் இப்பாலும் அலைக்கழிக்க
எல்லோரும் ஒன்றாகக் கண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கோவர்த்தன மலையருகே ஓடி வந்தனர். இவர்கள் வருவதைக் கண்டவுடன் கண்ணன் அந்த
மலையை பெயர்த்தெடுத்து தலைக்குமேல் குடைபோல் பிடித்துக் கொள்ள அதற்குள் வந்து ஆயர்களும், ஆநிரைகளும் அடைக்கலமாயினர். பயங்கர மழை கொட்டியும் எவ்வளவோ இந்திர ஜாலங்கள் செய்தும் பயனின்றி போகவே இறுதியில் இந்திரன் வந்து கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கோரினான்.

இந்திரன் ஆணையிட்டவுடன் மேகங்கள் வாயைத் திறந்து கொண்டு சென்று கடல்நீரை அப்படியே கபளீகரம் செய்து பானையிலிருந்து கொட்டிக்
கவிழ்த்ததைப் போல கொட்டியதாம்.இவ்வாறு கொட்டு கொட்டு என்று கொட்டிய மழையைக் கண்ணன் தடுத்தானாம்.

தனது ஐந்து விரல்களையும் தாமரை மொட்டுப் போல் கவித்து வைத்து மலையைத் தூக்கி அந்தக் கைவிரல்கள் தாங்குவதற்கு தமது நெடுந்தோள்களை
காம்பு போல் வளைந்து கொடுத்து ஆனாயசமாக தூக்கினானாம்

மதுரா செல்பவர்கள் மதுரா, பிருந்தாவனம், கோவர்த்தன கிரி இங்கிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள கோகுலம் இவைகளை வரிசைப்
படுத்தி ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வோர் நாள் தங்கி கண்ணன் லீலைகளை மானசீகமாக உணர்ந்து திவ்யமான பக்தி உணர்வில் திளைத்து ஸ்ரீகிருஷ்ண
நினைவுடன் திரும்பி வரலாம். கோகுலாஷ்டமி சமயத்தில் இங்கே சென்றால் ஆடல் பாடல்களும் திவ்ய நாம பஜனைகளும் உபன்யாசங்களும், கிருஷ்ண
நாடகங்களும் ஒரே விழாக் கோலமாகத் தான் இருக்கும்.

பிருந்தாவனத்தில் தென்னக முறைப்படி அமைக்கப்பட்ட ஸ்ரீரெங்கநாதர் கோவில் ஒன்று உள்ளது. ரங்கமந்திர் என்றழைக்கப்படும் இந்த
விசாலமான கோவிலில் நுழைந்தவுடன் தமிழ்நாட்டிற்கே வந்துவிட்டோமோ என்ற எண்ணம் வந்துவிடும். காரணம், இங்கு எம்பெருமானின் கைங்கர்யத்தில்
ஈடுபட்டிருப்பவர்கள் தமிழ்நாட்டு வைணவர்களேயாவர். இங்கு ஸ்ரீரெங்கநாதர், ஸ்ரீஆண்டாள்,
திருவேங்கடமுடையான், ஸ்ரீஇராமானுஜர் ஆகியோர்கட்கும் சன்னதிகள் உண்டு.
இவர்களை வரிசைக் கிரமமாக சேவித்து வரும்போது தமிழ்நாட்டுக் கோவில்களில் பெருமாளை தரிசிப்பது போன்ற எண்ணம் வந்து விடும்.
தமிழகத்திலிருந்தும் மற்றும் தென் மாநிலங் களிலிருந்தும் வரக்கூடிய பக்தர்களுக்கும், அடியார்கட்கும் இக்கோவில் கைங்கர்யத்தில் ஈடுபட்டுள்ள
தமிழக வைணவர்கள் பேருதவி புரிந்துவருகின்றனர்

செல்வம் உயிர் உடம்பு சேர உரித்தாக்கி
வல்வினையை நீக்குமினோ மாந்தர்காள் தொல்லை
வடமதுரையான் கழலே வாய்த்த தஞ்சம் என்று
திடமது உரை செய்தான் திறத்து –104-

(இ – ள்.) மாந்தர்காள் – மனிதர்களே! – (அனைவர்க்கும்),
“கழலே – எனது திருவடிகள்தாம்,
வாய்த்த தஞ்சம் – பொருந்திய ரக்ஷகமாகும்,’ என்று -,
திடம்அது உரைசெய்தான் – உறுதியாக உபதேசித்தவனும்,
தொல்லை வடமதுரையான் திறத்து – பழமையான (முதற்கடவுளான) வடமதுரையிற் பிறந்தவனுமாகிய பெருமானிடத்தில், –
செல்வம் – (நுமது) செல்வங்களையும்,
உயிர் – பிராணனையும்,
உடம்பு – உடம்பையும்,
சேர – ஒருசேர,
உரித்து ஆக்கி – உரியனவாகச் சமர்ப்பித்து,
வல் வினையின் நீங்குமின் – வலிய இருவினைத் தொல்லைகளினின்று நீங்குங்கள்; (எ – று.)

கர்மம் ஜ்ஞாநம் பக்தி ப்ரபத்தி முதலிய உபாயங்களையெல்லாம் ஒழித்துத் தனது திருவடிகளையே தஞ்சமாகப்
பற்றும்படி உபதேசித்த ஸ்ரீகிருஷ்ண பகவான்திறத்தில் உமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஒருசேர அர்ப்பணம்பண்ணி,
அப்பிரானருளால் இருவினைத் தொல்லைகளினின்றும் நீங்கி உய்வுபெறுவீர்களென்று உலகத்தார்க்கு உபதேசித்தவாறு,
“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய – மாமேகம்ஸரணம்வ்ரஜ” என்று அப்பிரான் சரமஸ்லோகத்தில் தன்னையே ரக்ஷகமாக
அடையுமாறு கூறியிருக்கவும், ஸேஷபூதன் இழியுந் துறை ஸேஷியின் திருவடிகளே யாதலால்,
‘கழலே வாய்த்ததஞ்சமென்று திடமது உரைசெய்தான்’ என்றார்.
திடம் = த்ருடம்; அது – பகுதிப்பொருள்விகுதி. செல்வமுயிருடம்பு உரித்தாக்கி – பன்மையொருமை வழுவமைதி.

இது – ஸ்ரீகிருஷ்ணபகவானது திருவவதாரஸ்தலம்; முத்திதரும் நகரமேழனுள் இதுவும்ஒன்று.
கண்ணுக்கு மதுரமாயிருத்தலாலும், மதுவென்ற அசுரனை யழித்த இடமாதலாலும், இதற்கு மதுரையெனப் பெயர்வந்ததென்பர்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு-சாளக்கிராமம்

March 24, 2024

மூலவர் -ஸ்ரீ மூர்த்தி — வீற்று இருந்த திருக் கோலம் / வடக்கே திரு முக மண்டலம்
தாயார் -ஸ்ரீ தேவி நாச்சியார்
விமானம் -ககன விமானம்
தீர்த்தம் -சக்ர தீர்த்தம் -கண்டகி நதி
மங்களா சாசனம் -பெரியாழ்வார் -திருமங்கை ஆழ்வார்

முக்தி நாத் -நேபாள தேசம் -கண்டகி நதி பெருமாள் இடம் த்வம் புரிந்து அவர் தன் கர்ப்பத்தில் இருக்க பிரார்த்தித்தாள்-
-பகவான் நான் சாளக்ராம ரூபத்தில் உன் மடி யிலே இருப்பேன் என்று வரம் அளித்தார்
அன்னபூர்ணா -மற்றும் தவ்லகிரி மலைத் தொடர்க ளுக்கு நடுவில் உள்ள திருத்தலம் -இதுவும் ஸ்வயம் வியக்த க்ஷேத்ரம் –
போஹ்ரா ஜவம்சம் வழியாக -உலகில் ஆழமான பள்ளத்தாக்கு கண்டகி நதி ஓடும் -சாளக்கிராமம் அடை நெஞ்சே –

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ முக்தி நாத்
மூலவர் ஸ்ரீ முக்தி நாராயணன், ஸ்ரீ மூர்த்தி
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் மேற்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீ தேவி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ சக்ர தீர்த்தம்,ஸ்ரீ கண்டகி ஆறு
விமானம் ஸ்ரீ கனக விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் நேபாளம்
அடிப்படை இடம் ஸ்ரீ காத்மண்டு
நாமாவளி ஸ்ரீ தேவீ நாச்சியார் ஸமேத ஸ்ரீ மூர்த்தயே நமஹ

——————-

ஸ்ரீ பெரியாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல் வளையாள் என் மகளிருப்ப
மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராம முடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழியனைய அசோதை நங்காய்! உன் மகனைக் கூவாய். –2-9-5-

வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இட முடை வதரி யிட வகை யுடைய எம் புருடோ த்தமனிருக்கை
தட வரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப் பற்றிக் கரை மரஞ்சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னும் கடிநகரே. –4-7-9-

—————-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம் –

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —-1-5-1-

கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும்
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான்
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-2-

உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி
வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாள்க்கிராமம் அடை நெஞ்சே——1-5-3-

ஊரான் குடந்தை யுத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய
தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-

அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்
கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-5-

தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி யுருவில் குறளாய்ச் சென்று மா வலியை
ஏயான் இரப்ப மூவடி மண்ணின்றேதா வென்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-6-

ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பாரிய விரணியனை
ஊனார கலம் பிளவெடுத்த ஒருவன் தானே யிரு சுடராய்
வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும்
தானாய் தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-7-

வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-8-

தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-9-

தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே–1-5-10-

இத்தலம், நேபாளம் காட்மண்டு பகுதியில் அமைந்துள்ள கண்டகி நதி பிராந்தியத்தில் உள்ளது.
அதாவது கண்டகி நதி முழுவதுமே சாளக்கிராமப் பகுதியாகும். நேபாளத்தின் தலைநகரான காட்மண்டு நகரிலிருந்து 170 மைல் தூரத்தில் கண்டகி நதிக்
கரையில் அமைந்துள்ளது. இங்கிருந்து 15 மைல் தூரத்தில் முக்தி நாராயண சேத்திரம் உள்ளது. இந்த முக்தி நாராயண சேத்திரமே சாளக்கிராமம் என்று
சொல்வாருமுண்டு.

பண்டைய இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம். இங்கு இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல்
ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது. இங்கு சக்ரதீர்த்தம் என்னும் பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகின்றது. இந்தப் பகுதி தான் சாளக்கிராமம்
என்றழைக்கப்படுகிறது.

இந்த ஹரி சேத்திரத்தில் உள்ள சகல கற்களிலும், (குளிர், காற்று இவைகளில்லாமல் அமைந்துள்ள ஸைலகர்ப்பத்தில்) விஷ்ணுவின் சகல
அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது. இங்குள்ள மூர்த்தியும் சாளக்கிராம
வடிவத்தினர்தான்.

மூலவர்–  ஸ்ரீமூர்த்தி வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்-  ஸ்ரீதேவி
தீர்த்தம்-    சக்ர தீர்த்தம், கண்டகி நதி
விமானம்-   கனக விமானம்
காட்சி கண்டவர்கள்–   பிரம்மா, சிவன், கண்டகி.

சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒரு வகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கற்களாகும். இவைகள் நத்தைக் கூடு, சங்கு
போன்ற பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன.
மஹாவிஷ்ணு தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்ற பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராமத்தைக் குடைந்து அதன் கர்ப்பத்தை
அடைந்து அங்கு ரீங்காரமான சப்தத்தில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பலவிதமான சுருள் ரேகையுடன் கூடின பல சக்கரங்களை
வரைந்து பலவித ரூபங்களில் பல மூர்த்திகளை (அதாவது தனது அவதார ரூபங்களை) பல வடிவங்களில் விளையாட்டாக வரைந்து வெகு காலத்திற்கு
அங்கேயே இருந்து பின் மறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது.

இப்பேர்ப்பட்ட வடிவங்களே நாம் சேவிப்பதற்கு உகந்தவையாகும். இவைகளில் ஸ்ரீமந் நாராயணனின் ஜீவரூபம் கலந்திருப்பதாக ஐதீஹம்.
இந்நிகழ்ச்சி (சாளக்கிராம உற்பத்தி) தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஐதீஹம்.

சாளக்கிராமங்கள் உருண்டையான வடிவத்திலும் தட்டையான வடிவத்திலும் முக்கோணத்தில் பாதிக் கூறான அரை முக்கோண வடிவிலும்
சங்கு, நத்தைக் கூடு வடிவிலும் சுருள் சுருளான ரேகைகளுடன் கூடினதாகவும், துவாரங்களுடன் கூடினதாகவும், இன்னும் வடிவு சொல்லவியலாத சில
வடிவங்களிலும் தோன்றுகின்றன. இங்குள்ளவர்கள் இதனைச் சாளக்கிராவா என்று அழைக்கின்றனர்.

சாளக்கிராமங்கள் எந்தவிதமான வண்ணத்தில் அமைந்துள்ளனவோ, அந்த ரூபங்கொண்ட விஷ்ணுவாசம் செய்யும் ஸ்தலமாகவே அவைகள்
கருதப்படுகின்றன.

1. வெண்மை நிற சாளக்கிராம வாசுதேவ சேத்திரம்
2. கருமை நிற சாளக்கிராமம் விஷ்ணு சேத்திரம்
3. பச்சை நிற சாளக்கிராமம் ஸ்ரீநாராயண சேத்திரம்
4. பசும்பொன் (அ) மஞ்சள் சற்று மஞ்சள் கலந்து சிகப்பு நிற
சாளக்கிராமம் ஸ்ரீநரசிம்ம சேத்திரம்
5. மஞ்சள் நிற சாளக்கிராமம் வாமன சேத்திரம்
6. கருநீல நிறசாளக்கிராமம் ஸ்ரீகிருஷ்ண சேத்திரம்

இந்த வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜாபலன்களும்   மாறுபடுகின்றனவாம்.

நீலநிறம்   – செல்வத்தையும், சுகத்தையும்
பச்சை     – பலம், தைரியம்
வெண்மை  – ஞானம், பக்தி, மோட்சம்
கருப்பு     – புகழ், பெருமை
புகை நிறம் – துக்கம், தரித்திரம்

சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமன்றி அவற்றில் 14 உலோகங்கள் (உலோகங்களின் சக்திகள்) இருப்பதாகக் கூறப்படுகிறது.
பூஜிக்கப்பட்ட சாளக் கிராமங் களை சாஸ்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளவேண்டுமென்பது நியதி. இதைப்பால் அல்லது அரிசி மீது
வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் அதன் எடை முன்பு இருந்ததை விட கூடுதலாக இருக்கும். துண்டிக்கப்பட்டிருந்தாலும் அல்லது விரிந்து
போனதாய் இருந்தாலும் சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோசமில்லை. சாளக்கிராமம் உடைந்திருந்தாலும் அதில் சக்கர ரேகைகள்
இருந்தால் அது மிகவும் சிறப்பம்சமாகும்.

சாளக்கிராமம் விற்பனை செய்வதை வாங்குதல் நன்றன்று. பெரியவர்களின் கையிலிருந்து வாங்குதல் நன்று அல்லது பிறரால்
பூஜிக்கப்பட்ட சாளக்கிராமத்தைப் பெற்றுக் கொள்வதும் நன்று. நேபாளத்தில் கடைத்தெருவில் இதைக் குவித்து வைத்து விற்கிறார்கள். இதன் மீது புனித
நீரை தெளித்துப் பூக்களைச் சொரிந்து புனிதப் படுத்தி விற்கிறார்கள். இருப்பினும் இங்கிருக்கும் பெரியவர்கள் அல்லது சாளக்கிராமத்தின்
தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள், ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களது ஆலோசனையின் பேரில்
வாங்குதல் சிறப்பு.

சுமார் 20 ஆண்டுகட்கு முன்பு இராமேஸ்வரத்தில் ஏற்பட்ட ஒரு புயலின் போது கடலில் ஒரு சாளக்கிராமம் கிடைக்க அதனை ஸ்ரீராமர் பாதம்
அமைந்திருக்கும் கந்தமான பர்வதம் அருகேயுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் (இராமேஸ்வரம் கோவிலிலிருந்து வடக்கே 5 மைல்) வைக்கப்பட்டுள்ளது.
தேங்காயளவு பருமனான இந்தச் சாளக்கிராமத்தில் நரசிம்ம மூர்த்தியின் திருமுகம் ரேகை வடிவில் அமைந்துள்ளது.

நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவில் இருந்து சுமார் 65 மைல் தூரத்தில் தாமோதர குண்டம் என்னும் ஓர் இடம் உள்ளது. இதுதான்
சாளக்கிராமம் என்ற ஓர் கருத்துண்டு. இதுவும் கண்டகி நதிக் கரையில் தான்அமைந்துள்ளது.
இருப்பினும் காட்மண்டுவிலிருந்து முக்தி நாராயணசேத்திரம் செல்லும் வழியில் உள்ள பூஜைக்குரிய ஸாளக்கிராமங்கள் உற்பத்தியாகக் கூடிய கண்டகி
நதிக் கரையில் அமைந்துள்ள சேத்திரமே சாளக்கிராமமாகும். இவ்விடத்திற்குச் செல்ல நேபாள அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. மலையேறிச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த யாத்திரையில் 50 பேர் கொண்ட குழுக்களாகச் செல்லவே நேபாள அரசு அனுமதியளிக்கிறது.

ஸ்ரீஇராமானுஜர் இங்கு எழுந்தருளியுள்ளார்.
இங்கு பகவான் தீர்த்த ரூபியாவார்.
வடநாட்டில் உள்ள முக்கிய நதிகள் எல்லாம் விஷ்ணு சம்மந்தம் பெற்றிருப்பதைக் கண்ட கண்டகி நதியானவள் மஹாவிஷ்ணுவைக் குறித்து
கடுந்தவம் செய்து மஹாவிஷ்ணு தன்னிலும் அவதாரம் செய்ய வேண்டுமென தவமிருக்க அதற்குகந்த எம்பெருமான் இதில் நித்ய அவதாரம் (சாளக்கிராம
ரூபியாக) செய்து கண்டகி நதிக்கு சிறப்பளிக்கிறார் என்பதும் ஓர் வரலாறு.

சாளக்கிராமத்தின் வயது பல கோடி ஆண்டுகள் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

சாளக்கிராமங்கள் அறிவியல் நோக்கில் அம்மோனைட் (AMMONITES) என்ற வகையைச் சார்ந்த கற்படிவம் ஆகும்.

ஏறத்தாழ 7 கோடியிலிருந்து 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இடை ஊழிக்காலத்தில் (MESOZOIC) வாழ்ந்து பின்னர் அற்றுப்போய்விட்ட ஒரு
வித மெல்லுடலிகள்தான் அம்மோனைட்டுகள் அல்லது அம்மோனாய்டுகள் என்றழைக்கப்படுகின்றன.

உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏறத்தாழ 8000 வகை அம்மோனைட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அம்மோனைட்டுகளின் ஓடுகள்
அளவிலும், வடிவிலும் வேறுபட்டவை. 1.3 செ.மீ முதல் 2 செ.மீ அளவு விட்டமுடையவை. ஒருதளச் சுருளமைப்பு உடையவை. அம்மோனைட்டுகளின்
ஓடுகள் தவிர மென்பகுதிகள் கற்படிவங்களாக மாற்றமடையாததால் அவற்றின் தன்மையை அறிய இயலவில்லை.

இந்தியா நேபாளம் உள்பட பல நாடுகளிலும் அம்மோனைட்டுகளின் கற்படிவங்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் அரியலூர்ப்
பகுதியில் கிரெட்டேசியஸ் காலத்து (கிரெட்டேசியஸ் காலம் என்பது சுமார் 7 கோடி ஆண்டுகட்கு முற்பட்டதாகும்) அம்மோனைட் கற்படிவங்கள்
சுண்ணாம்பு கற்பாறைகளிடையே நிறையக் கிடைக்கின்றன. இவை வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன. நேபாள நாட்டில் கண்டகி நதியில் கிடைக்கும் கருங்கல்லாலான அம்மோனைட் கற்படிவங்கள் பார்க்க மிக அழகாக இருக்கும். இவையே நம் நாட்டில் சாளக்கிராமம் என்று புகழ்பெற்றுள்ளன.

பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாளக்கிராமமோ என்ற முதுமொழி ஒரு பழைய தமிழ் நூலில் (சேது புராணம்) மேற்கோளாக
எடுத்தாளப்பட்டுள்ளது. இதிலிருந்து நத்தை போன்ற, ஆனால் வேறொரு உயிரின் படிவமே சாளக்கிராமம் என்று நம் முன்னோர்கள்
அறிந்திருக்கின்றனர்.இயற்கையில் மிகத் தொன்மையான அற்புதமான இந்தச் சிருஷ்டியில் நம் முன்னோர்கள் இறைத் தத்துவத்தைக் கண்டது நமது மரபாகும்.

உண்டாம் முறைமை உணர்ந்து அடிமைப் பேர் பூண்டேன்
பண்டம் குடி குலத்தால் பல் மதத்தால் கொண்டாட்டால்
ஆளாம் கிராமத்தால் அல்லல் பேர் பூணாமல்
சாளக்கிராமத்தார் தாட்கு –100-

(இ – ள்.) பண்டு ஆம் – தொன்று தொட்டுவருகிற,
குடி (ஆல்) – குடியினாலும்,
குலத்தால் – குலத்தினாலும்,
பல் மதத்தால் – பலவகையாகவுள்ள மதத்தினாலும்,
கொண்டாட்டால் – (தாம்தாம்செய்யுந் தொழில்முதலியவற்றாலுண்டாகின்ற) ஏற்றத்தினாலும்,
ஆள் அ கிராமத்தால் – உரிமைகொண்டு வசிக்கிற தம்தமதுகிராமத்தினாலும்,
அல்லல் பேர் பூணாமல் – துன்பத்திற்கு இடமாகிய பெயரை வைத்துக்கொள்ளாமல், –
சாளக்கிராமத்தார் தாட்கு – சாளக்கிராமமென்னுந் திவ்வியதலத்திலெழுந்தருளியுள்ள திருமாலினது திருவடிகளோடு,
உண்டாம் – பொருந்திய,
முறைமை – சம்பந்தத்தை,
உணர்ந்து – ஆராய்ந்து தெரிந்துகொண்டு,
அடிமை பேர் – (அப்பெருமானுக்கு) அடியவனென்கின்ற பேரை (தாஸ்யநாமத்தை),
பூண்டேன் – வைத்துக்கொண்டேன்; (எ – று.)

குடி முதலியவற்றால் வருகின்ற பேர்கள் அகங்காரத்திற்கே இடனாகி அழிதற்கே யுரியனவாதலோடு தாமும்
நிலையாதன வாதலால் அவற்றை நல்லாசிரியரது உபதேசம் முதலியவற்றால் அறநீத்து,
ஆத்மாவுக்கு நிலைநின்ற பேராகிய ஸ்ரீவைஷ்ணவதாஸனென்கின்ற அடிமைப்பேரைப் பூண்டு கொண்டே னென்று
தாம் நல்லுணர்ச்சிபெற்றிருத்தலை இப்பாசுரத்தால் தெரிவிக்கின்றன ரென்க.
“அஹங்காரமாகிற ஆர்ப்பை (மாலிந்யத்தை)த் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் அடியா னென்றிற.
க்ராம குலாதிகளால் வரும் பேர் அநர்த்தஹேது” என்ற ஸ்ரீவசநபூஷணவாக்கியங்கள் இங்குக் கருதத்தக்கன.
குடி குலம் முதலியவற்றால் வரும் பெயர்கள் உடலைப்பற்றி வருவன வாதலால், அவற்றிற்கும் ஆத்துமாவுக்கும்
யாதொரு தொடர்பு மில்லாது நின்று உடலொழியும்போது அவை தாமும் ஒழியும்;
ஆகலான், அவற்றால் ஆத்மாவுக்கு எவ்வகைப்பயனும் விளையாது; அடிமைப்பேரோ என்றும் உளதாகையால்
அதனையுணர்ந்து பூண்டோர்க்கு எம்பெருமானதுபேரருள் சித்திக்கு மென்க.
இங்ஙனம் குலம்குடி முதலியவற்றால் வரும் பேர்கள் கேவலம் அகங்காரத்திற்கே காரணமாய்
ஸ்வரூப ஹாநியையு முண்டாக்கு மென்பார் ‘அல்லற்பேர்’ என்றார்.
குடியென்பது – பிறந்த வமிசம்; குடியால்வரும் பேராவன – கந்தாடையார் ப்ரதிவாதிபயங்கரத்தார் சக்கரவர்த்தியார் என்றாற் போல்வன.
குலம் – வர்ணம்; குலத்தால்வரும் பேராவன – பிராமணன் க்ஷத்திரியன் என்றாற் போல்வன.
மதத்தால் வரும் பேராவன – சைவன் வைஷ்ணவன் என்றாற் போல்வன.
கொண்டாட்டால்வரும் பேராவன – சதாவதானி மஹோபாத்யாயன் சமயகோளரி மகாபண்டிதன் என்றாற் போல்வன.
ஈகிராமத்தால் வரும் பேராவன – திருமலையார் நாவற்பாக்கத்தார் என்றாற் போல்வன.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருவதரி -ஸ்ரீ பத்ரிநாத்

March 24, 2024

மூலவர் -பத்ரீ நாராயணன் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -அம்ருத வல்லி
விமானம் -தப்பித்த காஞ்சனா விமானம்
தீர்த்தம் -தப்பித்த குண்டம்
ஸ்தல வ்ருக்ஷம் -பத்ரீ மரம் -இலந்தை மரம்
மங்களா சாசனம் -பெரியாழ்வார் -திருமங்கை ஆழ்வார்

பத்தரிக்கா -இலந்தை -இந்த மறைத்து அடியில் நான்கு திருக் கரங்களோடு பத்மாசனத்தில்
யோகத்தில் பத்ரீ நாராயணப் பெருமாள் எழுந்து அருளி இருக்கிறார் –
நர நாராயண பர்வதத்தில் திருமால் தானே சிஷ்யனான நரனாகவும் -ஆச்சர்யனான நாராயணனாகவும்
-அஷ்டாக்ஷர திரு மந்த்ரத்தை உபதேசித்த இடம் –
கயா ஸ்ரார்த்தம் இங்கு ப்ரஹ்ம கபாலத்தில் பிண்ட பிரதானம் செய்வது மரபு -இது ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம் –
பத்ரி -நர நாராயணன் -23210 அடி உயரம்
நீல கண்ட பர்வம் -ஐ ராவதம் குத்த -நர நாராயண மலையாக பிரிய –
நர நாராயணன் அர்ஜுனன் கிருஷ்ணன் -3 நாள் இருந்து சேவை /
தப்த குண்டம் -நாரத சிலா -ஆதி சங்கரர் தேடி எடுத்து பிரதிஷ்டை பத்ரி நாராயணனை என்பர்
நம்பூதிரிகள் நாரதர் உத்தவர் குபேரன் -கருடன் -நர நாராயணர் 7 பெரும் சேவை
-கருடன் தனி சந்நிதி வெளியில் –
ப்ரஹ்ம கபாலம் -தனி இடம் -கோயில் பிரசாதம் -௧௬ பிண்டம் 2 பிதாவுக்கு 14 மாதாவுக்கு -மந்த்ரம் சொல்லி க்ஷமை பிரார்த்தித்து-

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ பத்ரிநாத்
மூலவர் ஸ்ரீ பத்ரி நாராயணன்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ பத்ரி நாராயணன்
தாயார் ஸ்ரீ அரவிந்த வல்லி
தீர்த்தம் ஸ்ரீ தப்த குண்டம்
விமானம் ஸ்ரீ தப்த காஞ்சன விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் உத்தராகண்ட்
அடிப்படை இடம் ஸ்ரீ ஹரித்துவார்
நாமாவளி ஸ்ரீ அரவிந்த வல்லீ ஸமேத ஸ்ரீ பத்ரீ நாராயணாய நமஹ

——————-

ஸ்ரீ பெரியாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இட முடை வதரி யிடவகை யுடைய எம் புருடோ த்தமனிருக்கை
தட வரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப் பற்றிக் கரைமரஞ்சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னும் கடி நகரே. 4-7-2-

———-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -21-பாசுரங்கள் மங்களாசாசனம் –

முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை
வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே –1-3-1-

முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோலூன்றி
விதிர் விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டு இருமி
இது வென்னப்பர் மூத்தவாறு என்று இளையவர் ஏசாமுன்
மது வுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-2-

உறிகள் போல் மெய்ந்நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடுங்கா முன்
அறிதியாகில் நெஞ்சம் அன்பாய் ஆயிர நாமம் சொல்லி
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-3-

பீளை சோர கண் இடுங்கி பித்தெழ முத்து இருமி
தாள்கள் நோவ தம்மில் முட்டி தள்ளி நடவா முன்
காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான்
பாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே—-1-3-4-

பண்டு காமரர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம்
உண்டவாறும் வாழ்ந்தவாரும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே—1-3-5-

எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம்
பித்தர் போலே சித்தம் வேறாய் பேசி அயரா முன்
அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே–1-3-6-

பப்ப வப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப ஐக்கள் போத வுந்த உந்தமர் காண்மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியா முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வு மானான் வதரி வணங்குதுமே—1-3-7-

ஈசி போமின் ஈங்கு இரேன் மின் இருமி இளைத்தீர்
உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும் குவளை யம் கண்ணியர் பால்
நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கல் உறில்
வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-8-

புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந்த உள்ளம் எள்கி
கலங்க வைககள் போத உந்திக் கண்ட பிதற்றா முன்
அலங்கலாய தண் துழாய் கொண்டு ஆயிர நாமம் சொல்லி
வலம் கொள் தொண்டர் பாடி யாடும் வதரி வணங்குதுமே —1-3-9-

வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே –1-3-10-

னம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க
தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே —1-4-1-

கானிடை யுருவைச் சுடுசரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன்
ஊனுடை யகலத்தடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த வெம் மொருவன்
தேனுடைக் கமலத் தயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு
வானிடை முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யா ச்சிராமத்துள்ளானே——1-4-2-

இலங்கையும் கடலும் அடலருந்திப் பின் இரு நிதிக் கிறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும் சுடர் சுழன்ற
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி யென விரிந்து
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே—1-4-3-

துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு
பிணி யொழித்தமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான்
அணி மலர்க் குழலாரரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-4-

பேய் இடைக்கிருந்து வந்த மற்றவள் பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த வென் தலைவன்
சேய் முகட்டுச்சி யண்டமும் சுமந்த செம் பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டிழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே —1-4-5-

தேரணங்கல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பாரணங்கிமிலேறேழு முன்னடர்த்த பணி முகில் வண்ணன் எம்பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிள வெழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே–1-4-6-

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே—-1-4-7-

மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே——1-4-8-

கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க் குரை கடல் உலகுடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான்
அண்டமூடறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கவனி யாளலமர பெருகு
மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே—–1-4-9-

வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே–1-4-10-

சீராரும் மாலிருஞ்சோலை திரு மோகூர் பாரோர் புகழும் வதரி வட மதுரை –சிறிய திருமடல் – 74-

கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,500 அடி உயரத்தில் இமய மலையில் பனிக்குன்றுகட்கு மத்தியில் பனிபடர்ந்த சூழலில் இலந்தை மரக்காடுகள்
நிறைந்து விளங்கும் இடத்தில் அமைந்துள்ளது. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள்.

எம்பெருமான் தானாக சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் இடமாகவும், மோட்சத்தைத் தரத்தக்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ள இத்தலம்
பற்றி தனி நூலொன்றே யாக்கும் அளவிற்கு வடநாட்டுப் புராணங்களும், வடநாட்டு நூல்களும் குறிப்புக்களை வாரிவாரியிறைக்கின்றன.

இங்குதான் பெருமாள் தாமே குருவாகவும், சீடனாகவும் இருந்து கொண்டு திருமந்திர உபதேசத்தை செய்தருளினான். ஓம் நமோ நாராயணாய
என்ற மந்திரத்தை நாராயணன் என்ற திருநாமத்துடனே வந்து உலகத்திற்கு உகந்தருளின இடம் இந்த தலமாகும். திருமந்திரம் பகவான் மூலமாகவே
வெளியான இடம்.

எம்பெருமானைச் சரண்புகுந்து மோட்சம்புகும் பக்தர்கட்கு மிக எளிய வழியான திருமந்திர உபதேசத்தை போதித்துத் தன்னை காட்டிக் கொடுத்த
தலம்.

மகாலெட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பத்ரி (இலந்தை) எனப்படும் மரத்தின் கீழே அமர்ந்ததால் பத்ரிகா-ஆஸ்ரமம் – பத்திரகாச்ரமம்
ஆயிற்றென்பர். உபதேசம் செய்வதற்கு ஆஸ்ரமம் அவசியமன்றோ.-எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசிக்க இந்த இடத்தை ஒரு ஆஸ்ரமமாக
தேர்ந்தெடுத்ததால் பத்திரகாஸ்ரமம் ஆயிற்றென்பர். இங்கு கோயிலைச் சுற்றிலும் பனிமலைகள் உள்ளன. இதற்கு எதிர்புறம் அமைந்துள்ள நீலகண்ட
பர்வதம் காண்பதற்குப் பேரெழில் பொலிந்ததாகும்.

மூலவர்- பத்ரி நாராயணன், சங்கு சக்கரத்துடன் சதுர் புஜங்களுடன் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார்–   அரவிந்த வல்லி
தீர்த்தம்-   தப்த குண்டம்
ஸ்தல விருட்சம்-   பத்ரி, இலந்தை மரம்
விமானம்-   தப்த காஞ்ச விமானம்
காட்சி கண்டவர்கள்-   மானிடரூப சிஷ்யனான நர நாராயணன்.

108 திவ்ய தேசங்களிலேயே இங்குதான் பகவான் ஆச்சாரியன் ரூபத்தில் எழுந்தருளிய ஸ்தலமாகும். மற்றெல்லா ஸ்தலங்களிலும் அவனருள்
காட்டி அவனது பலத்தைக் காட்டி நின்றாலும் இங்கு மட்டும்தான் ஆச்சார்ய திருக்கோலத்தில் திகழ்கின்றான். பக்தர்களுக்காகவும் இவ்வுலகிற்காகவும்,
பிராட்டிக்காகவும், பிற ஸ்தலங்களில் தன்னை வெளிக்காட்டிய எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசம் செய்ய தன்னை ஆச்சார்யனாக வெளிப்படுத்திய
ஸ்தலம் இது ஒன்றுதான். எனவேதான் இங்கு தனது இடது கைகளை யோக முத்திரையாகக் கொண்டு ஒரு தபஸ்வியின் வடிவில் இலந்தை மரத்தடியில்
பத்மாசனத்தில் எழுந்தருளியுள்ளார்.

பத்ரிநாத்தானது, அலகநந்தாவும், தோலி கங்காவும் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ளது. அலகநந்தாவின் கரையில்தான் கோவில்
அமைந்துள்ளது. இந்த பத்ரி நாதனைக் குறித்து நாரதர் அஷ்டாச்சர மந்திரத்தால் ஜபம் செய்து மஹா விஷ்ணுவின் அருள்பெற்றார் என்னும் ஓர் வரலாறும் உண்டு.

பத்ரிநாத் செல்லும் வழியில் ஹனுமான் கட்டி என்ற ஓர் இடம் உள்ளது. இங்கு பீமனும் அனுமனும் சண்டையிட்டதாகக் கூறுவர். ஹனுமான்
கட்டியைத் தாண்டி சுமார் 4 கி.மீ. சென்றதும் பத்ரிகாஸ்ரமம் காட்சி தரும்.

பத்ரிநாராயணன் ஆலயத்திற்கு எதிரில் தப்த குண்டம் என்னும் தீர்த்தம் உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்றாகும். தப்த குண்டத்தில்
நீராடிவிட்டு சில படிகள் ஏறிச்சென்றதும் கருடாழ்வார் நமக்கு காட்சி தருகிறார். கருடாழ்வாரைத் தரிசித்துவிட்டுத் தான் பத்ரிநாராயணன்
ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு பத்ரி நாராயணன், கருடாழ்வார், நாரதர், நாராயணன் முதலானோர் மிக்க பேரெழில் பொங்க
வீற்றிருக்கின்றனர்.

இங்கு பெருமாள் சாளக்கிராம மூர்த்தியாக (ஸாளக்கிராமச் சிலையாக) எழுந்தருளியுள்ளார்.

இங்கு பெருமாளுக்கு நடைபெறும் சகல விதமான பூஜைகளும் (திருமஞ்சனம்) திருவாராதனம், சாத்துமரை மக்களுக்கு எதிரிலேயே
நடைபெறுகின்றன. திரைபோடுவது இல்லை. இங்கு நடைபெறும்  பூஜாமுறைகளை பக்தர்கள் நேருக்கு நேர் நின்று காணலாம்.

இங்கு இரவில் பெருமாளுக்கு சாந்தி பஞ்சகம் என்னும் பூஜை நடைபெறும். இந்த பூஜைக்குரிய மந்திரங்களை வடநாட்டு பிராம்மணரே
ஓதுவர். அப்போது எம்பெருமானின் ஆடைகளையும், மாலைகளையும் கலைவர். இந்த நிகழ்ச்சிக்கு கேரள தேசத்து நம்பூதிரிகளே தலைமை
அர்ச்சகராக இருந்து செயல்படுவர். இவ்வாறு எம்பெருமானின் ஆடைகள் மற்றும் மாலைகளை களைந்துவிட்டு சிறிய துண்டு ஒன்றை அணிவிப்பர்.
இந்நிகழ்ச்சிக்கு கீதகோவிந்தம் என்று பெயர். மிகவும் நல்லொழுக்கம் வாய்க்கப் பெற்றவர்களும், சாஸ்திரங்களிலும், சமஸ்கிருதத்திலும் மிக்க தேர்ச்சி பெற்ற பிராம்மணர்களே இந்த நிகழ்ச்சிக்கு குழுவினராக நியமிக்கப்படுவர். இந்த பூஜை நடைபெறும் சமயம் பெருமாளின் பக்கத்தில் அமர்ந்தே பூஜை
நிகழ்ச்சிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும். இதற்குத் தனிக் கட்டணம் உண்டு.

இங்கு கோவிலின் வடபுறம் கங்கை கரையில் பிரம்ம கபாலம் என்னும் ஒரு இடம் உள்ளது. இங்குள்ள ஒரு பெரிய பாறையில்
பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்யப்படுகிறது. இவ்விடத்தில் சிரார்த்தம் செய்தால் நம் முன்னோர்களின் அனைத்து தலைமுறையினர்க்கும் மோட்சம்
கிடைப்பதாக ஐதீஹம்.

இங்கு இராமானுஜருக்கும், சுவாமி தேசிகனுக்கும் தனித்தனியே சன்னதிகள் உள்ளன.

இங்கு அமைந்துள்ள வசுதரா என்ற பனிமலையில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இந்த நீர் வீழ்ச்சியின் பனித்திவலைகள் மிகவும் புனிதம் வாய்ந்தவை
என்றும், இவைகள் மேனியில் படுதலால் புனிதம் உண்டாகிறதென்றும் நம்பிக்கை. இங்கு யாத்திரை செல்வோர் இந்த திவலைகளில் குளித்து வருவர்.

எல்லையற்ற பெருமைகொண்ட இத்தலத்திற்கு விசாலபுரி என்ற பெயரும் உண்டு. பாண்டவர்களின் அவதாரஸ்தலம் இதுதான் என்று ஒரு
கருத்தும் உண்டு.

இத்தலம் 6 மாதங்களுக்கு மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்குத் திறந்துவிடப்படும். அதாவது குளிர் காலமான 6 மாதத்தில் விடாது பனிபெய்து
இத்தலத்தையே மூடுமளவிற்கு வருவதால் குளிர்காலமான 6 மாதத்திற்கு இத்தலம் மூடப்பட்டு சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமியன்று மீண்டும்
திறக்கப்படும். பூட்டப்பட்ட 6 மாதத்தில் தினந்தோறும் இரவில் தேவர்கள் இங்கு வந்து பாரிஜாத மலர்களால் எம்பெருமானை அர்ச்சிப்பதாகக் கூறுவர்.
அதாவது பனிக்காலத்தில் கோவிலை அடைத்து விட்டு 6 மாதங்கழித்து திறந்து பார்க்கும்போது முதல்நாள் இரவில் பெருமாளுக்குச் சூட்டிய மலர் மாலைகள்
மறுநாள் காலையில் பார்த்தால் எந்த அளவுக்கு லேசாக வாடியிருக்குமோ அந்த அளவிற்குத்தான் மலர்களின் வாட்டம் இருக்குமாம். அதனால் தான்
மூடப்பட்ட 6 மாத காலமும் தேவர்கள் வழிபட்டுச் செல்கின்றனர் என்னும் ஐதீஹம் உண்டானது.

மே மற்றும் ஜூன் மாதங்களே இந்த யாத்திரைக்கு மிகவும் உகந்ததாகும்.

தாட்கு அடிமை என்று தமை உணரார்க்கு எட்டெழுத்தும்
கேட்க வெளியிட்டருளும் கேசவனை வேட்கையொடு
போவது அரிது ஆனாலும் போய்த் தொழுவோம் நெஞ்சமே
மாவதரியாச்சிரமத்து –101-

(இ – ள்.) நெஞ்சமே – (எனது) மனமே! –
தாட்கு – (தனது) திருவடிகட்கு,
அடிமை என்று – அடிமைப்பட்டவ ரென்று,
தமை – தங்களது ஸ்வரூபத்தை,
உணரார்க்கு – அறியாத இவ்வுலகத்தவர்க்கு,
எட்டு எழுத்தும் – (ஆத்மாவினது ஸ்வரூபத்தை உள்ளபடிஉணர்த்துவதான) திருவஷ்டாக்ஷர மகாமந்திரத்தை,
கேட்க – காதிற்படும்படி,
வெளியிட்டு அருளும் – கருணையோடு வெளியிட்ட,
கேசவனை – திருமாலை, –
போவது அரிது ஆனாலும் – யாத்திரைசெய்வது வருத்தமுடையதாயிருந்தாலும்,
மா வதரியாச்சிரமத்து – சிறந்தபதரிகாச்சிரம மென்னுந் திவ்வியதலத்தில்,
வேட்கையொடு – பக்தியுடனே,
போய் -, தொழுவோம் – வணங்குவோம்; (எ – று.)

முன்னொருகாலத்தில் குருசிஷ்யகிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும் விளக்குதற்பொருட்டு
நரனென்னும் ஸிஷ்யனும், நாராயணனென்னுங் குருவுமாகப் பதரிகாச்சிரமத்தில் திருமால் தோன்றி,
சிஷ்யனுக்குக் குரு திருமந்திரத்தை உபதேசித்தருளி, தன்னை உணராத உலகோர்க்குத் தான் அறிந்த தொடர்பையே
பற்றாசுஆகக்கொண்டு ஈடேறுதற்கு ஏற்ற வழியைக் காட்டியருளியதனால், அப்பெருமானெழுந்தருளியிருக்கின்ற
தலம்போய்த் தொழுதற்கு அரியதாயிருந்தாலும், அப்பிரான்செய்த உபகாரஸ்மிருதியால் அங்கு அருமைப்பட்டாயினுஞ் சென்று
அப்பிரானைத் தொழுது உய்வுபெற வேண்டுமென்று தமதுநெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றன ரென்க.
“நரநாரணனா யுலகத்தறநூல், சிங்காமைவிரித்தவன்” என்ற திருமங்கையாழ்வார் பாசுரமும்,
“ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து ஈஸ்வரகைங்கர்யத்தையுமிழந்து இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே
ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட, ஸர்வேஸ்வரன் தன் க்ருபையாலே இவர்கள் தன்னையறிந்து
கரைமரஞ் சேரும்படி தானே ஸிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டருளினான்.
ஸிஷ்யனாய் நின்றது, ஸிஷ்யனிருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக” என்ற
முழுக்ஷுப்படியும் இங்குக் காணத்தக்கன.
திருமாலால் வெளியிடப்பட்ட திருமந்திரம் ஆத்மஸ்வரூபத்தை உள்ளபடி காட்டவல்ல தென்பார்
‘தமையுணரார்க்கு எட்டெழுத்துங் கேட்க வெளியிட்டருளுங் கேசவன்’ என்றார். எட்டெழுத்து – திருவஷ்டாக்ஷரம்.

பதரிகாஸ்ரமம் என்ற வடசொல் திரிந்துவந்தது; (பதரி – இலந்தை மரம்.) இலந்தைமரங்களடர்ந்த ஆஸ்ரமமென்பது, பொருள்;
இது – இமயமலையிலுள்ளது; அதுபற்றியே, “போவதரிதானாலும்” என்றார்.

பத்ரிநாத் பகவானின் மூர்த்தி சுயம்பு. தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு, அபிஷேகத்தின் சமயம், பூஜை, அபிஷேகம் செய்யும் நம்பூதிரி சாலக்கிராம சிலையிலான மூல மூர்த்திக்கு ஆரத்தி செய்து, ஒவ்வொரு அங்கத்தையும் தரிசனம் செய்து வைத்து விளக்கம் அளிக்கிறார். பத்ரிநாத் பகவான் (மூலமூர்த்தி – சாளக் கிராம சிலை) பத்மாசனத்தில் அமர்ந்து, தரிசனம் அளிக்கிறார்.
பகவானின் ஜடா மண்டல் (ஜடை விழுது) மேலும் கம்புக்ரீவா (மூன்று கீறுள்ள கழுத்து) நன்றாகக் காணப்படுகிறது. பகவானின் நான்கு கரங்கள் தெரியும். சங்கு சக்ர கதாதாரியாக சதுர்புஜ பகவான் பத்ரிநாராயணன் மார்பில் ஸ்ரீவத்ஸ சின்னத்துடன் (விஷ்ணு) நாராயண சொரூபமாக சேவை சாதிக்கிறார். பகவானின் கருவறையில், உற்சவமூர்த்தி, நாரதர், தனாதிபதி குபேரர், மேலும் கருட பகவானின் விக்ரகங்களையும், சுதர்சன சக்கரம், சரணபாதுகை முதலியவைகளையும் தரிசிக்கிறோம்.
பத்ரிநாராயணனின் இடது பக்கத்தில் எப்பொழுதும் அகண்ட ஜோதி – நந்தா தீபம் எரிந்து கொண்டே இருக்கிறது.
(குளிர்காலத்தில் கோயில் கதவுகள் மூடப் பட்டிருக்கும் 6மாதகால சமயத்திலும் இந்த தீபம் எரிந்துகொண்டு இருக்கும்). தெற்குப் பிரகார ஆரம்பத்தில் அனுமான் சந்நிதிக்குப் பிறகு வடக்கு நோக்கியுள்ள மகாலக்ஷ்மி சந்நிதியில், மகாலக்ஷ்மி (அரவிந்த வல்லித்தாயார்) தரிசனம் அளிக்கிறாள்.
குளிர்காலத்தில், சுமார் 6மாத காலத்திற்கு கோயிலின் கதவுகள் மூடப்பட்டிருக்கும். இந்தக் காலத்தில் பத்ரிநாராயணனின் உற்சவ மூர்த்தியை, பாண்டுகேச்வர் – ஜோதிர்மட் (ஜோஷீமட்) கோயிலுக்கு எழுந்தருளச் செய்து, அங்கு கிரமப்படி நித்ய ஆராதனை நடை பெறுகிறது. மறுபடியும் அக்ஷய திருதியைக்கு மறுநாள், கோயில் கதவுகள் திறக்கப்படுகின்றன.
பத்ரிவிசால் கோயிலில் இந்த 6மாத காலம் தேவர்கள் ஆராதனம் செய்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
தரிசன நேரம் : காலை 5.00மணி முதல் 6.00வரை அபிஷேகம் – தரிசனம் – பக்த யாத்ரிகர்கள் அபிஷேக தரிசனம் செய்யலாம்.
காலை 9.00மணி – பாலபோக் (காலசந்தி)
மதியம் 12.00 – ராஜபோக் (உச்சிகாலம்)
இதற்குப் பிறகு மதியம் 3.00மணிவரை
சந்நிதிக் கதவு மூடப்பட்டிருக்கும்.
மாலை 3.00மணிக்கு சந்நிதி திறக்கப்படும்.
இரவு 9.00மணிவரை தரிசனம் செய்யலாம்.
உரிய கட்டணம் செலுத்தி அர்ச்சனை, கற்பூர ஆரத்தி முதலியன செய்யலாம். மாலை தரிசனத்தின் சமயம் கற்பூர ஆரத்தி, (தீப ஆராதனை) ரஜத (வெள்ளி) ஆரத்தி தரிசனம் செய்யலாம். இரவு 9.00மணிக்கு சயன ஆரத்தி சேவிக்கலாம்.
ஆரத்தி (தீப ஆராதனை) சமயத்தில் பகவானின் தரிசனம் செய்வது பெரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது. கோயிலின் பின்புறம் இலட்சுமி நரசிம்ம மந்திரில் (தனிக் கோயில்), ஸ்வாமிதேசிகன், ஸ்ரீமத் ராமானுஜர் மேலும் இலட்சுமி நரசிம்மன் சந்நிதிகள் உள்ளன.

————–——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு கண்டம் என்னும் கடி நகர் -ஸ்ரீ தேவ பிரயாகை –

March 24, 2024

மூலவர் -நீல மேகப் பெருமாள் -புருஷோத்தமன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -புண்டரீக வல்லித் தாயார்
விமானம் -மங்கள விமானம்
தீர்த்தம் -மங்கள தீர்த்தம் -கங்கை நதி
மங்களா சாசனம் -பெரியாழ்வார்

கடி நகர் -பரிமளம் மிக்கு உள்ள பிரதேசம் -கண்டம் -பகுதி -பூ மண்டத்தில் முக்கிய பகுதி ஹிமாசலம் –
அதில் முக்கிய திவ்ய க்ஷேத்ரம் -அழகா நந்தாவும் -பாகீரதியும் கலக்கிற படியால் இது பிரயாகை –
ஸ்ரீ ராமன் ப்ரம்மா ஹத்தி தோஷம் நீங்க இங்கே த்வம் புரிந்தார் -அவர் த்வம் செய்த பாறையை இன்றும் சேவிக்கலாம் –
ஸ்ரீ ராமபிரான் வில்லும் அம்பும் ஏந்தி சீதா லஷ்மண ஹனுமத் சமேதராய் எழுந்து அருளி உள்ளார் –
70 mile தேவ பிரயாக் -முதலில் -புருடோத்தமன் இருக்கை -பச்சை வர்ணம் பாகீரதி நதி -அலக்நந்தா சிகப்பு -கலப்பதை பார்க்கலாம் -வேகமாக ஓடி வரும்
உத்சவர் -ராமர் அமர்ந்த திண்ணையில் எழுந்து 10 நாள் உத்சவம்
கங்கையின் -திருமால் கழல் இணைப் கீழ் -குளித்து இருந்த கணக்கே பதிகம் பலன்
மந்தாகினி ருத்ர பிரயாக் —நந்த பிரயாக்
விஷ்ணு பிரயாக் மேலே
பிந்து சரஸ் -பளிங்கு பாறை –

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ தேவ ப்ரயாக்
மூலவர் ஸ்ரீ நீலமேக பெருமாள், ஸ்ரீ புருஷோத்தமன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீ புண்டரீக வல்லி
தீர்த்தம் ஸ்ரீ மங்கள தீர்த்தம், ஸ்ரீ கங்கை நதி
விமானம் ஸ்ரீ மங்கள விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் உத்தராகண்ட்
அடிப்படை இடம் ஸ்ரீ ரிஷிகேஷ்
நாமாவளி ஸ்ரீ புண்டரீக வல்லீ ஸமேத ஸ்ரீ நீல மேகாய நமஹ

———————-

ஸ்ரீ பெரியாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்

தங்கையை மூக்கும் தமையனை தலையும் தடிந்த தாசரதி போய்
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடுவினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற கண்டம் என்னும் கடிநகரே -4 -7-1 –

சலம் பொதி உடம்பில் தழல் உமிழ் பேழ் வாய் சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்து எழுந்து அணவு மணி வண்ண வுருவின் மால் புருடோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர்படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4-7-2 –

அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்து அழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து அங்கு
எதிர் முக அசுரர் தலைகளை இடரும் எம் புருடோத்தமன் இருக்கை
சது முகன் கையில் சத்துப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-3 –

இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை
நமபுர நணுக நாந்தகம் விசுறு நம் புருடோத்தமன் நகர் தான்
இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இருகரை உலகு இரைத்தாட
கமைஉடை பெருமை கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே -4 7-4 –

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும்
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-5-

தலைப் பெய்து குமிறி சலம் பொதி மேகம் சல சல பொழிநதிடக் கண்டு
மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு
அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-6-

வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேல் இருந்தவன் தலை சாடி
மல் பொருது எழப் பாய்ந்த அரையனை உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு
அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும்
கற்பக மலரும் கலந்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே – 4-7 7-

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4-7-8 –

வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய தலை பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-9 –

மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை
என்று கொண்டு இருப்பார்க்கு இரக்க நன்குடைய வெம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான்
கான்றடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-10-

பொங்கு ஒலி கங்கை கரை மலி கண்டத்துறை புருடோத்தமன் அடி மேல்
வெங்கலி நலியா வில்லிபுத்தூர் கோன் விட்டு சித்தன் விருப்புற்று
தங்கியவன் பால் செய் தமிழ் மாலை தங்கிய நா வுடையார்க்கு
கங்கையில் திரு மால் கழல் இணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே -4 7-11 –

இத்தலம் ரிஷி கேசத்திலிருந்து பத்திரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ரிஷிகேசத்தில் இருந்து நேராக பத்திரிநாத் சென்றுவிட்டும் திரும்பும் வழியிலும் சேவித்துவிட்டு வரலாம். பத்ரியிலிருந்து சுமார் 60 மைல் தூரமாகும்.

இவ்விடத்திற்கு தேவப்ராயகை என்றும் பெயர். ப்ர-சிறந்த யாகம், வேள்வி, மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால்
இவ்விடத்திற்கு ப்ராயாகை என்னும் பெயராயிற்று. ஸ்ரீமந் நாராயணனையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்ராயாகை
என்றாயிற்று என்றும் சொல்வர். தேவலோகத்திற்குச் சமானமான சக்தி இவ்விடத்தில் பரவியிருப்பதால் தேவப்ராயாகை ஆயிற்றென்றும் சொல்வர்.

ப்ரயாகைக்கு கிழக்கே உள்ளே பிரதிஷ்டானம் என்ற இடத்தில் உள்ள தீர்த்தக் கிணறு. வடக்கேயுள்ள வாசுகி என்ற இடம், மேற்கே காம்ப்ளாஸ்
என்னும் சர்ப்பங்கள் உள்ள இடம். தெற்கு திசையில் உள்ள பஹூ மூலம் என்னும் பகுதி ஆகியன ப்ரயாகையின் எல்லைகளாகும்.
இந்த தேவப்ரயாகையின் சிறப்பை பற்றி பாத்ம, மத்ஸய, கூர்ம அக்னி புராணங்கள் பகர்கின்றன.

கங்கையும், யமுனையும் கூடும் இடமே ப்ரயாகை. மிக ரஹஸ்யமான தீர்த்தமிது. விதிப்படி இங்கே வசித்துக் கர்மாக்களைச் செய்தால் முற்பிறவியில்
எங்கிருந்தோம் எப்படி இருந்தோம் என்ற ஞானத்தை நமக்கு தரும் என்றுகூர்ம புராணம் கூறுகிறது.

கங்கையும், யமுனையும், சேருமிங்கு விதிக்கப்பட்டுள்ள முறைகளின்படி தூய்மையான மனத்துடன் யாகம் செய்பவர்கள் நற்கதி (மோட்சம்)
அடைகின்றனர். என்றும், இங்கே உயிர்விடுபவர்கள் மோட்சம் பெறுகின்றனர் என்றும் ரிக்வேதம் பகர்கிறது.
தேவேந்திரன் ப்ரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் தான் ப்ரளய காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதனிலையில்தான் பெருமாள்
குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மாத்ஸய புராணம் கூறுகிறது.
இத்தலத்தைச் சேவிப்பதும், ப்ரயாகையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டிய கடமையாகும்.

மூலவர்-  நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன்) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். இப்பெருமாளுக்கும், பிராட்டிக்கும் வேணி மாதவன், விமலா
என்ற பெயரை வடநாட்டு நூல்கள் சூட்டி மகிழ்கின்றன.
தாயார்–   புண்டரீக வல்லி
தீர்த்தம்–  மங்கள தீர்த்தம், கங்கை நதி ப்ரயாகை
விமானம்-   மங்கள விமானம்

காட்சி கண்டவர்கள்–  பரத்வாஜ முனி, பிரம்மா

பாண்டவர்கள் எதிரிகளைக் கொன்றாலும் அவர்கள் சகோதரர்கள் அல்லவா, சகோதரர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க ப்ரயாகையில்
நீராடினால் போதும், ப்ரயாகை சகல பாவத்தையும் போக்கிவிடுமென மார்க்கண்டேயர் கூற, பாண்டவர்கள் அவ்விதமே செய்தனர் என்பது வரலாறு.
பிரம்மா, இவ்விடத்தில் செய்தயாகத்திற்குப் பின்பே தனது படைக்கும் தொழில் சக்தியை அதிகரித்துக் கொண்டாராம்.
பரத்வாஜர் இங்கு யாகம் செய்தே, சப்தரிஷிகளுள் ஒருவராக ஆனார்.
ப்ரயாகை யாத்திரை செய்வதாக நிச்சயித்தவுடன் நம் உடம்பில் இருக்கும் பாவங்கள் எல்லாம் நடுங்குகின்றன.
இவ்விடத்தில் செய்யும் அன்னதானம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதற்கொரு கதை உண்டு. சுவேத கேது என்னும் மன்னன் எண்ணற்ற
தர்மங்கள் செய்தும் அன்னதானம் மட்டும் செய்யாதிருந்தான். அதன் மகத்துவத்தை முனிவர்கள் உணர்த்தியும் அவன் பின்பற்றவில்லை.
அம்மன்னன் இறந்து மேலுலகு சென்ற பின் அவனை பசி வாட்டியது.
இப்பசியை அடக்க தாங்கள் தான் வழிகாட்ட வேண்டுமென்று பிரம்மாவிடம் விண்ணப்பித்தான். அதற்குப் பிரம்மா, நீ அன்னதானம் செய்யாததால்
உன்னை இங்கு கொடும்பசி வாட்டுகிறது. பூவுலகில் தானம் செய்யாதபொருள் இங்கு கிடைக்காது. எனவே நீ மண்ணுலகு சென்று பாதுகாப்பாக உனது
சரீரத்தை மிதக்க வைப்பதற்காக நீ வெட்டிய குளத்தில் மிதந்து கொண்டிருக்கும் உனது சரீரத்தை கத்தியால் அறுத்து அதைப் புசி என்றார்.

வேறு வழியின்றி சுவேத கேது அவ்வாறே செய்தான். ஆயினும் அவன் பசி அடங்கவில்லை. அப்போது முனிவரொருவர் ப்ரயாகையில் நீராடு என்று
சொல்ல அவ்விதமே நீராடியும் பயனில்லை.அப்போது அங்குவந்த அகஸ்தியர் ப்ரயாகையில் அன்னதானம்
செய்தால் உன்சாபம் அகலுமென்றார். தேவ சரீரத்தில் நான் அவ்விதம் செய்ய இயலாதே என்று மன்னன் தெரிவிக்க அவ்வாறாயின் கையில் உள்ள
யாதாயினும் ஒரு பொருளைக் கொண்டு அதை பிறரிடம் கொடுத்து அன்னதானம் செய்விக்கலாமென கூறினார். தனது தேவ சரீரத்தில் அவ்வாறு
கழற்றிக் கொடுக்க அணிகலன்கள் யாதுமில்லையே என்று கூற, நீ செய்த பிற புண்ணியங்களின் பலன்களை திரட்டி கொடு என்று கூற, தான் செய்த
தர்மத்தின் பலனையெல்லாம் திரட்டி ஒரு கணையாழி ரூபத்தில் தர அகஸ்தியர் அதனை அங்கிருந்த சீடர்களிடம் கொடுத்து இப்பொருளை விற்று
அன்னதானம் செய்யுமாறு கூற அவ்வாறே அன்னதானம் செய்ய சுவேத கேதுவின் கொடும்பசி அகன்று மோட்சம் பெற்றாரென்பர்.

மகாபுண்ணிய தீர்த்தமான இந்த ப்ராயாகையில் பல தீர்த்தங்களும் பல நதிகளும் சங்கமிக்கின்றன. கங்கையும், யமுனையும் கலப்பதோடு
அளகநந்தாவும் பாகீரதியும் இங்கு சங்கமிக்கின்றன. ப்ரயாகையில் நீராடும் போது மிகவும் கவனத்துடன் நீராட வேண்டும். வெள்ளப் பெருக்கும் நீரின்
விரைவும் இங்கு திடீரென உண்டாகும்.
இத்தலத்திற்கருகிலேயே ஆஞ்சநேயர், கால பைரவர், மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.
பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் ஸ்ரீராமபிரானும் இங்கு தவமியற்றினார்.
ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள்.

கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடுமிடம் திரிவேணியாகும். அ.உ.ம. என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையான ஓங்கார வடிவமானது
ப்ரயாக சேத்திரம். அ எழுத்தாகவும், பிரத்யுமனனாகவும் இருக்கிறாள் சரஸ்வதி. யமுனா உ என்ற எழுத்தாகவும், அநிருத்தனாகவும்இருக்கிறாள் ம என்ற எழுத்தாகவும், சங்கர்ஷனனாகவும் இருக்கிறாள் கங்கை.

இங்குள்ள ஆலமரம் அழிவற்றது. அதில் வேணிமாதவன் என்ற பெயரில் விஷ்ணு, ஆடலங்கேசர் என்ற பெயரில் சிவன், மற்றும் பிரம்மனும் இதில்
வாசம் செய்கின்றனர்.

பாண்டவர்கள் போருக்குப்பின் தமது சத்துருக்களைக் கொன்ற பாவங்களைப் போக்க யாது வழி என்று மார்க்கண்டேயரிடம் கேட்க, அவர்
ப்ரயாகை ஒன்றே சகல பாவங்களையும் போக்கவல்லது என்று பாண்டவர்களை இங்கு அனுப்பி வைத்ததாக மாத்ஸய புராணம் கூறுகிறது.

மத்தால் கடல் கடைந்து வானோர்க்கு அமுது அளித்த
அத்தா எனக்கு உன் அடிப் போதின் புத்தமுதை
கங்கைக் கரை சேரும் கண்டத்தாய் புண்டரிக
மங்கைக்கு அரசே வழங்கு –102-

(இ – ள்.) மத்தால் – (மந்தரமலையாகிய) மத்தினாலே,
கடல் கடைந்து – திருப்பாற்கடலைக்கடைந்து,
வானோர்க்கு – தேவர்களுக்கு அமுது அளித்த – அமிருதத்தைக் கொடுத்தருளிய,
அத்தா – தலைவனே!
புண்டரிக மங்கைக்கு அரைசே – செந்தாமரைமலரில் வாழ்கின்ற பெரியபிராட்டியார்க்குத்தலைவனே!
கங்கை கரைசேரும் கண்டத்தாய் – கங்கைநதிக்கரையிற்பொருந்திய கண்டமென்னுங் கடிநகரி லெழுந்தருளியிருப்பவனே! –
எனக்கு – அடியேனுக்கு,
உன் அடி போதின் புது அமுதை – உனது திருவடித்தாமரையில்) தோன்றுகின்ற புதிய அமிருதத்தை,
வழங்கு – கொடுத்தருள்வாயாக; (எ – று.)

இதனால், ஐயங்கார், எம்பெருமானை நோக்கி, உனது திருவடிகளின் போக்யதையை அனுபவிக்குமாறு
எனக்கு நல்லறிவைத்தந்தருள்வாயென்று பிரார்த்திக்கின்றனர்.
“தேனேமலருந் திருப்பாதம்,”
“விஷ்ணோ: பதே பரமேமத்வஉத்ஸ: (விஷ்ணுவினது சிறந்ததிருவடிகளிலே தேனின்பெருக்கு உள்ளது)” என்றபடி
எம்பெருமானது திருவடிகளில் போக்யதை விஞ்சியிருக்குமென்க. பாற்கடலைக் கையினால் வருந்திக் கடைந்து
அதனினின்று எழுந்த அமிருதத்தைப் பிரயோஜநாந்தரபரரான தேவர்கட்குக் கொடுத்தது போலன்றி,
அநந்யப்ரயோஜநனான அடியேனுக்கு உன் திருவடிகளினிடத்து இயற்கையாகவேயுள்ள இனிமையைத் தருவது
மிகவும் எளிதாகு மென்ற கருத்து,
‘மத்தாற் கடல்கடைந்து வானோர்க்கு அமுதுஅளித்த அத்தா! எனக்கு உன்னடிப்போதிற் புத்தமுதை வழங்கு’ என்ற
தொடரில் தோன்றும் அமுதம் வேண்டுமென்று பிரார்த்தியாத தேவர்கட்கு அதனை உண்டாக்கியளித்த
நீ அதனைவேண்டுகின்ற எனக்கு இயற்கையாக உன்னிடத்திலுள்ள அதனை அளிக்கலாகாதோ?
சமயம் வந்தபோதுமாத்திரம் காலைக்கட்டிக் காரியங்கொண்டு மற்றைச்சமயங்களில் விலகிநிற்பவர்க்குத்தான் உதவவேண்டுமோ?
எப்போதும் உன்னையே அணுகிநின்று உன்னாலல்லது மற்றையாவராலும் ஒன்றுங்குறைவேண்டாத எனக்கு உதவலாகாதோ?
என்பவை முதலிய கருத்துக்களும் இங்குத்தொனிக்கும்.
புத்தமுதுஎன்றது – எத்துணைக்காலம் அனுபவித்தாலும் தெவிட்டுதலில்லாது மேன்மேலும் இன்சுவைபயப்பதும்,
‘தேவாமிருதம்போல அசுரர்கள் கைக்கொள்ளப்புகுகிறார்களே!’ என்று அஞ்சவேண்டாததுமாகிய அமிருத மென்றபடி.

இத்தலம் இப்பொழுது தேவப்ரயாகை யென்று வழங்குகின்ற தென்பர். புண்டரீகமங்கையென்பது – இத்தலத்துநாச்சியார்திருநாமம்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருப் பிரிதி-ஸ்ரீ ஜோஷிமட்

March 24, 2024

மூலவர் -பரம புருஷன் / புஜங்க சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -பரிமள வல்லி நாச்சியார்
விமானம் -கோவர்த்தன விமானம்
தீர்த்தம் -இந்த்ர -கோவர்த்தன தீர்த்தம் -மானஸ சரோவரம் ஏரி
மங்களா சாசனம் -திரு மங்கையாழ்வார்

பத்ரீகாஸ்ரமத்திற்குச் செல்லும் வழியில் இருக்கும் திவ்ய தேசம்
-அமர்ந்த திருக் கோலத்தில் நரசிம்ஹப் பெருமாள் எழுந்து அருளி இருக்கிறார் –
திருமங்கை ஆழ்வார் திரு வாக்கில் முதலில் வந்த திவ்ய தேசம் இதுவே -இன்று ஜோஷிமட் என்று வழக்கத்தில் உள்ளது –
ஆழ்வார் திரு வாக்கில் பரம புருஷன் புஜங்க சயனம் -ஆழ்வார் அருளிச் செய்தது இன்று
திபெத் நாட்டில் இருக்கும் மானசரோவர் க்ஷேத்ரமாக இருக்கலாம் –
பல காலும் பெரியோர்கள் ஜோஷிமட் தான் திருப் பிரிதி என்கிறார்கள் –
கோவிந்தா கீதா கங்கா காயத்ரி –நான்கும் புனிதம் -பள்ளி கொள் பரமா -திருமங்கை ஆழ்வார் –

மூலவர் ஸ்ரீ பரம புருஷன், ஸ்ரீ வாசு தேவன்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ கோவர்த்தன தீர்த்தம்
விமானம் ஸ்ரீ கோவர்த்தன விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் உத்தராகண்ட்
அடிப்படை இடம் ஸ்ரீ பத்திரிநாத்
நாமாவளி ஸ்ரீ பரிமள வல்லீ ஸமேத ஸ்ரீ பரம புருஷாய நமஹ

———————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்

வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று
ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள்
ஆலி மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-1-

கலங்க மாக்கடல் அரிகுலம் பணி செய்ய அருவரை யணை கட்டி
இலங்கை மா நகர் பொடி செய்தவடிகள் தாம் இருந்த நல்லிமயத்து
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர் கூர
பிலம் கொள் வாள் எயிற்று அரியவை திரிதரு பிரிதி சென்றடை நெஞ்சே –1-2-2-

துடி கொள் நுண்ணிடைச் சுரி குழல் துளம் கெயிற்று இளம் கொடி திறத்து ஆயர்
இடி கொள் வெங்குரலின விடை யடர்த்தவன் இருந்த நில்லிமயத்து
கடிகொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி யறை மிசை வேழம்
பிடியினோடு வண்டிசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-3-

மறம் கொள் ஆள் அரி யுருவென வெருவர ஒருவனதகல் மார்வம்
திறந்து வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளை மருப்பி இடந்திடக் கிடந்து அருகு எரி வீசும்
பிறங்கு மா மணி யருவி யொடிழி தரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-4-

கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-5-

பணங்கள் ஆயிரம் யுடைய நல்லரவணைப் பள்ளி கொள் பரமா வென்று
இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்றி
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6-

கார்கொள் வேங்கைகள் கனவரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புனவரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-7-

இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும்பசியது கூர
அரவம் ஆவிக்குமகம் பொழில் தழுவிய அருவரை யிமயத்து
பரமனாதி எம்பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடி தொழும் பெரும் தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-8-

ஓதி யாயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதும் இன்றி நின்று அருளும் நம் பெரும் தகை இருந்த நல்லிமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-9-

கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை
அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே –1-2-10-

வண்கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று, மாணியாய்
மண்கையால் இரந்தான் மராமரமேழும் எய்த வலத்தினான்
எண்கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய எம்பிரான்
திண் கைம் மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே!–1-8-5-

பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையத் தெள்ளியார் வணங்கப்படுந் தேவனை
மாயனை மதிட் கோவலிடை கழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே.–7-10-4-

திருமங்கையாழ்வாரால் தொடக்க மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம். இமயமலைக்கு வடபுறத்தில் மலைகளும் குன்றுகளும் சூழ்ந்த எல்லையற்ற
அழகுள்ள இடத்தில் எங்கோ அமைந்துள்ளது. அல்லது அமைந்திருந்தது என்றும் சொல்லலாம். ஏனெனில் இத்தலம் எங்கிருந்தது என்று அறுதியிட்டுச்
சொல்ல முடியாததால் இதனைச் சேவிக்க இயலாது.

மூலவர்-  பரமபுருஷன், புஜங்க சயனம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்-   பரிமளவல்லி நாச்சியார்
விமானம்-    கோவர்த்தன விமானம்
தீர்த்தம்-   இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானஸரோவஸ்

ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷிமட் என்ற இடந்தான் திருப்பிரிதி என்னும் கருத்து ஒன்றும் நிலவுகிறது. இந்த
இடத்தில் தற்போது கோவில்களும், மூர்த்திகளும் உள்ளனர். இன்னுமொருசாரர் நந்தப் பிரயாகை என்னுமிடமே திருப்பிரிதியாகுமெனவும் கூறுவர்.
இவ்விரண்டும் அல்ல. அது எங்கோ இமய மலைக்கு உட்புறம் அமைந்துள்ளது என்றொரு கருத்துமுண்டு.

இதில் தற்போது திருப்பிரிதி என்றழைக்கப்படும் ஜோஷிமட் திருப்பிரிதியாகாது. திருப்பிரிதி இமயத்திற்குள் உள்ளது என்று அறுதியிட்டுக்
கூறுகிறார். ஸ்ரீவைஷ்ணவ சுதர்சன ஆசிரியர் ஸ்ரீமான் திரு. கிருஷ்ணசுவாமி ஐயங்கார். இவர் கூறும் கருத்துக்களே ஏற்றுக்கொள்வதற்கு உடன்பாடாய்
இருப்பதாலும் அதுவே உண்மையாகுமாதலாலும் அவர் தமது கட்டுரையில் கூறியுள்ள கருத்துக்களை இங்கே சுருங்கச் சொல்கிறோம்.

திருமங்கையாழ்வார் வதரி, சாளக்கிராமம், நைமி சாரண்யம், சிங்கவேள் குன்றம் திருமலை என்று வடக்கு தொட்டு தெற்கு நோக்கி
வரிசைக் கிரமமாக மங்களாசாசனம் செய்து கொண்டே வருகிறார்.
இதில் வதரி எனப்படும் பத்ரிகாச்ரமம் ஜோஷி மடத்திற்கு வடக்கே அமைந்துள்ளது. ஜோஷி மடமே திருப்பிரிதியாக இருந்திருந்தால் ஆழ்வார்
முதலில் ஜோஷி மடத்தை மங்களாசாசனம் செய்து விட்டு அதன்பிறகு பத்ரியை மங்களாசாசனம் செய்திருப்பர். ஆனால் ஆழ்வார் முதலில்
திருப்பிரிதியை தமது திருமொழியில் 1-2ல் மங்களாசாசனம் செய்து விட்டு அதன் பிறகு பத்ரியை மங்களாசாசனம் செய்கிறார். (எனவே ஜோஷி மடமே
திருப்பிரிதியாக இருந்தால் ஆழ்வார் பத்ரியை மங்களாசாசனம் செய்திருக்க மாட்டார்)

திருமங்கையாழ்வாரும், மற்றும் பிற ஆழ்வார்களும் தாம் மங்களாசாசனம் செய்யும் திவ்ய தேசத்தின் மருங்கமைந்த இயற்கை
காட்சிகளை தம் பாடல்களில் மறவாது குறிப்பிடுவர். உதாரணமாக திருவரங்கத்தைப் பாடும் பாக்கள் பலவற்றில் ஆழ்வார் காவிரியைக்
குறித்துள்ளார்.

கங்கை கரையில் உள்ள வதரியச்சிரமத்தை பாடும் போது முதல் ஒன்பது பாசுரங்களிலும் ஈற்றடியில் கங்கையின் கரைமேல் வதரியாச் சிரமத்துள்ளானே
என்று முத்திரை பொறிக்கிறார். இதே போல் கண்டமென்னும் கடிநகர்ப் பதிகப் பாசுரம் ஒவ்வொன்றிலும் அந்த நகர் கங்கை கரையில் உள்ளதென்பதை
உணர்த்தியுள்ளார்.

கங்கைக் கரையின் மேலுள்ள ஜோஷி மடமே திருப்பிரிதியாகில் திருப்பிரிதிப் பதிகப் பாசுரம் ஒன்றிலாவது கங்கையைப் பற்றிச் சொல்லி
இருக்கவேண்டும். கங்கை பெருகி ஓடும் நதி. திருப்பிரிதி பாசுரத்தில் தடஞ்சுனைகளையும், அருவிகளையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
செய்கிறார். இவைகள் கங்கைகரையில் இல்லை. ரிஷிகேசத்திலிருந்து வதரி வரை செல்லும் பாதையை ஒட்டியே கங்கை பாய்கின்றது. திருப்பிரிதிக்கு
கங்கையின் சம்பந்தத்தை திருமங்கையாழ்வார் சொல்லாமல் இருப்பதிலிருந்தே திருப்பிரிதியானது கங்கையின் உற்பத்தி ஸ்தானங்களையெல்லாம் தாண்டி வதரிக்கு மிகவும் வடக்கே இருந்திருக்க வேண்டும் என்று காட்டும் முக்கியமான அகச் சான்றாகும்.

திருமங்கையாழ்வார் திருப்பிரிதிக்கு இட்டருளிய பாசுரங்களில் எல்லாம் இமயத்துள் என்று இந்த திவ்ய தேசத்தைக் குறிக்கிறார். இமயத்துள்
என்னும் பதத்தாலே இமயத்தின் நடுவில் இருப்பதே திருப்பிரிதி என உணர்த்துவதன் மூலம் இமயத்தின் தென்பகுதியில் உள்ள வதரி முதலிய திவ்ய தேசங்களைக் காட்டிலும் திருப்பிரிதியை வேறுபடுத்திக் காட்டுகிறார். இவ்வாறே பிரிதியில் உள்ளவனென்றும் இமயத்துள் இருப்பவனென்றும் ஆழ்வார் திருவுள்ளம் பற்றியதாலே ஏற்றினை இமயத்துள் எம்மீசனை என்ற பதத்திற்கு பெரியவாச்சான் பிள்ளை பொருள் கூறுமிடத்து ஹிமவானில் திருப்பிரிதியில் வந்து ஸந்நிஹிதனானவன் என்று அருளினார். (பெரியவாச்சான் பிள்ளை கங்கையையோ வதரியையோ குறிப்பிடவில்லை. இமயத்தை ஹிமவான் என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது)     

திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் திருப்பிரிதியின் இயற்கை காட்சிகளை விளித்துப் போகும்போது அங்கு வாழும்
காட்டு மிருகங்களை தமது பாக்களில் கூறிப்போகிறார்.பெரிய யானைகளை இம்சித்துக் கொண்டு சிங்கங்கள் சஞ்சரிக்கும்
பிரதேசம் என்கிறார்-போர் செய்தலையே தொழிலாக கொண்ட வேங்கைப் புலிகள் திரியுமிடமென்கிறார்.-யானைகளை விழுங்கக்கூடிய மலைப் பாம்புகள் ஊர்ந்து செல்லக்கூடிய இடமென்கிறார்.

திருப்பிரிதியை இவ்வண்ணம் பாடியிருக்கும் திருமங்கையாழ்வார், வதரியைப் பற்றிப் பாடும்பொழுது ஒரு பாசுரத்திலாவது துஷ்ட மிருகங்கள்
இருப்பதைப்பற்றிப் பாடவில்லை பாரோர் புகழும் வதரியென்று திருமங்கையாழ்வார் காலத்திலேயே ஆயிரக்கணக்கான ஜனங்கள்
வருடந்தோறும் வதரி சென்று வந்திருக்கிறார்களாகையாலே துஷ்ட மிருகங்கள் சஞ்சரித்திருக்க முடியாது. ஆகவே சிங்கம், புலி, மலையரவு ஆகிய துஷ்ட
ஜந்துக்கள் வாழுமிடமாய் பாடப்படும் திருப்பிரிதி வதரிக்கு 20 மைல் தெற்கே உள்ள ஜோஷி மடமாக இருக்கவே முடியாது.

ஜோஷி மடம் பிரிதியாய் இருக்க முடியா தென்பதற்கும் அடர்ந்த காட்டுப் பிரதேசமொன்றில் அமைந்தது திருப்பிரிதி என்பதற்கும் இது
முக்கியமான அகச்சான்றாகும்.-இந்த அகச்சான்றுகள் போக, சில புறச்சான்றுகளையும் இனி காண்போம்.

பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானங்களிலும் உகந்தருளிய நிலங்களுக்கெல்லாம் எல்லையாயிருப்பது திருப்பிரிதி என்று அருளியிருப்பது மற்ற திவ்யதேசங்கள் அனைத்திலும் வடக்கே இருப்பது என்று ஐயந்திரிபறக் காட்டுகிறது.

பெருமாள்-பரமபுருஷன், கிழக்கே திருமுகம், புஜங்க சயனம், பார்வதிக்குப் பிரதயட்சம்.
தாயார்–   பரிமளவல்லி நாச்சியார்

விமானம்–  கோவர்த்தன விமானம்
தீர்த்தம்–   இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானஸரோவஸ்.

விபூதூர் வித்வான் கி.வேங்கிடசாமி ரெட்டியாரிடமிருந்து கிடைத்த 108 திருப்பதியந்தாதியென்னும் கட்டளைக் கலித்துறையிலமைந்த
நூலில்,“நாரங்களுக் கிறைவன் பார்வதிக்கு நயந்தருள்வோன்
வாசஞ்செய் மானச வாவி அனந்தன் வர்த்தனத்தில்
பாரமர் பரிமளவல்லிக் கின்பாகத் தென்பால் துயிலும்
ஆரம் செறி இமயப்பால் திருப்பிரித்திக் கரசே–என்று அமைந்துள்ள இப்பாட்டிலும் இவ்விவரங்களே காணப்படுகின்றன.

108 திருப்பதியந்தாதி பாடலில் மான ஸரஸ் என்னும் தீர்த்தம் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பண்டைப் புராணங்களும் இதிகாசங்களும்
மானஸரோ வரம் என்னும் இந்த நதியை பாரதத்தின் வட எல்லையாக வர்ணிக்கின்றன. இந்நதி இன்றும் திபெத் நாட்டில் இதே பெயரில்
வழங்கப்படுகிறது. இது 54 மைல் சுற்றளவும் 200 சதுர மைல் பரப்பளவும், 250 அடிக்கும் மேலான ஆழத்தையும் கொண்டது. கடல் மட்டத்திற்கு மேல் 15000
அடி உயரத்தில் கடல் போல் விளங்குகிறது. பிரம்மன் தனது மனத்தாலே (ஸங்கல்பத்தாலே) முதன் முதலில் பாரத தேசத்தின் வட எல்லையாக இந்த
ஏரியைச் சிருஷ்டித்தால் மானஸரஸ் என பெயர் உண்டானதாகக் கூறுவர்.
உலகிலேயே மிகப் பெரியதும் அழகியதுமாகையால் ஸரோவரம் என்னும் புகழைப் பெற்றுள்ளது.
மிக முக்கியமான இயற்கை காட்சியொன்று ஒரு திவ்ய தேசத்தில் இருக்குமானால் திருமங்கை அதை தமது பாடலில் குறிக்காமல் விடார். அவ்வாறெனின் இந்த ஏரியைக் குறித்திருக்கிறாராவெனின் முதல் பாசுரத்திலேயே தடஞ்சுனை பிரிதி என்று பிரிதிக்குத் தடஞ்சுனை என்றே பேரிட்டு மானஸரோ வரத்தையே உணர்த்துகிறார் என்பது நமது பதில். ஸரோவரம் என்பதை தடஞ்சுனை என்று தமிழாக்கியுள்ளார். தடஞ்சுனை பிரிதி பெரிய ஏரிகளை உடைய பிரிதி என்றும் பொதுவாய் பொருள் கொள்ளலாம்.

மேலும் இங்குள்ள பெருமாளின் பெயர், பிராட்டியின் பெயர், சயன திருக்கோலம், போன்றவற்றையும், திருமங்கை தமது பாசுரங்களில் குறிக்கிறார்.

பணங்கொள் ஆயிரம் உடைய நல் அரவனைப் பள்ளி கொள் பரமா என்று
இறங்கி வானவர் மணிமுடி பணிதர இருந்த நல்லிமயத்துள்–என்று பெருமாளின் திருநாமத்தோடு அவரின் சயனத்
திருக்கோலத்தையும் குறிக்கிறார். இப்பாசுரத்திற்கு முன் உள்ள பாசுரத்தில் கரைசெய் மாகடல் கிடந்தவன் என்று திருப்பாற்கடல் நாதனை அனுபவித்து
விட்டு அங்கே கிட்டமுடியாதாரும் அனுபவிக்கலாம்படி இங்கே தன் திருக்கோலத்தைக் காட்டுகிறான் என்னும் ஸங்கதி தோன்ற அப்படித்
திருப்பாற்கடலில் சாய்ந்தருளினவன் இங்கே வந்து எழுந்தருளியிருக்கும் படியை அனுஸந்திக்கிறார் என்று பெரியவாச்சான் பிள்ளை இப்பாசுரத்திற்கு
அவதாரிகை இட்டிருப்பதிலிருந்து திருப்பிரிதியின் பனங்கொள்ளாயிரமுடைய நல்லரவணைப் பள்ளி கொள் பரமனாகவே எம்பெருமான் சேவை ஸாதிக்கிறார் என்று விளங்குகிறது. எனவே புஜங்க சயனமில்லாத ஜோஷி மடக்கோவில் திருப்பிரிதியாய் இருக்க இடமில்லை என்பது தெளிவு. பார்வதியோடு சிவன் வாழும் கயிலை மலைக்கு அருகில் உள்ள திருப்பிரிதியில் எம்பெருமானைப் பார்வதிக்குப் பிரதயட்சமாக ப்ரபாவ நூலில் பேசியிருப்பதிலும் பொருத்தமுள்ளது.

இவ்வண்ணமாக நூற்றெட்டுத் திருப்பதி ப்ரபாவ நூல்களில் திருப்பிரிதிபற்றிக் கூறியுள்ள விபரங்கள் ஆழ்வார் பாசுரங்களோடும்
பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தோடும் ஒத்திருக்கையாலே பாரதத்தின் வட எல்லையில் இமயத்தினுள்ளே மானஸரோவர தீர்த்தத்தில் உள்ளதொரு அடர்ந்த காடே திருப்பிரிதியென்று பெயர் பெற்றிருந்ததென்றும், அதில் எம்பெருமான் பரமபுருஷன் என்னும் திருநாமத்தோடு பரிமளவல்லி
நாச்சியாரோடு ஆதிசேட சயனத்திருக் கோலத்தில் எழுந்தருளியுள்ளார் என்பது வெள்ளிடை மலையாக விளங்குகிறது.

திருப்பிரிதி என்னும் திருநாமம் எவ்வாறு வந்துள்ளதெனில், பதரி கண்டம் முதலான வடநாட்டுத் திருப்பதித் திருநாமங்களைப் போல இதை
வடமொழி பெயராகக் கொண்டு பிரீதி எனவழைத்து காலப்போக்கில் பிரிதியாக மருவியுள்ளதாகக் கருதலாம். எம்பெருமான் பிரீதியுடன் (உகப்புடன்)
எழுந்தருளியிருக்கும் இடம் என்றபடி,

அல்லது இத்திருநாமம் தமிழர்கள் இட்ட திருப்பெயரே எனக் கொண்டால் பாரத தேசத்தை, தேசாந்திரத்திலிருந்து பிரிக்குமிடமாகையாலே
பிரிதி என்று பெயரிட்டதாகக் கொள்ளலாம். உகந்தருளின நிலங்களுக்கு எல்லை என்று பெரியவாச்சான் பிள்ளை பிரிதியைக் குறிப்பிட்டிருப்பது இப்படி
பொருள் கொள்ள இடமளிக்கிறது. மானஸரோவரம் பாரதத்தின் வட எல்லையென்று இதிஹாச புராணங்களில் காட்டப்பட்டிருப்பதும் இப்படி
பொருள் கொள்வதற்குப் பொருந்தியிருக்கிறது.
இந்த மானஸரோவரக் கரையில் திருப்பிரிதி எங்கோ இருக்க வேண்டும் என்பதுதான் தெளிவு.

வழங்கும் உயிர் அனைத்தும் வாரிவாய்ப் பெய்து
விழுங்கும் கவந்தன் விறல் தோட் கிழங்கை
பொருப்பு இருதிக்கும் கிடந்தால் போல் துணித்து வீழ்த்தான்
திருப்பிருதிக்கு என் நெஞ்சே செல் -103-

(இ – ள்.) என் நெஞ்சே – எனது மனமே! –
வழங்கும் உயிர் அனைத்தும் – சஞ்சரிக்கின்ற எல்லாப்பிராணிகளையும்,
வாரி – (தனது இரண்டு கைகளாலும் ஒருசேரத்) திரட்டியெடுத்து,
வாய் பெய்து – (தனது) வாய்க்குள் தள்ளி,
விழுங்கும் – விழுங்குந்தன்மையுள்ள,
கவந்தன் – கபந்தனென்னும் அசுரனது,
விறல் தோள் கிழங்கை – வலிமையுள்ள தோள்களின் மூலபாகத்தை,
பொருப்பு இரு திக்கும் கிடந்தால் போல் – மலை இரண்டுபக்கத்திலும்வீழ்ந்து கிடந்ததுபோலக் (கிடக்கும்படி),
(இராமாவதாரத்தில்) துணிந்து வீழ்த்தான் – வெட்டித்தள்ளிய திருமாலினது,
திருப்பிருதிக்கு – திருப்பிருதியென்னுந் திவ்வியதலத்திற்கு,
செல் – நீ சென்று சேர்வாயாக; (எ – று.)

திருமாலினது திருப்பிருதியென்னுந் திவ்வியதலத்தைப் போய்ச்சேர்ந்தாயாயின், உனது சகலவிரோதிகளும் போய்
நற்கதிபெறுவது திண்ணமென்பது, கருத்து. இராமபிரான் கவந்தனது வலத்தோளையும்,
லஷ்மணன் அவனது இடத்தோளையும் வெட்டித் தள்ளியதாகக் ஸ்ரீராமாயணத்திற் கூறியிருக்க,
இங்கு இவ்வாசிரியர் கவந்தனது இருதோள்களையும் இராமபிரானே வெட்டித்தள்ளியதாக கூறியது –
“ராமஸ்ய தக்ஷிணோ பாஹு:” என்றபடி லஷ்மணனை இராமபிரானது வலக்கையாகக் கூறியிருப்பதுகொண்டு
அவ்விலக்குமணனது செயலையும் இராமபிரானது செயலாகவே கொண்டதனாலாகுமென்க.
இது, ஒருவகை உபசாரவழக்கின்பாற்படுமென்னலாம். கவந்தனதுதோள்கள் யோசனைதூரம் நீண்டிருந்தன வாதலால்
அவை வெட்டப்பட்டுக் கீழ்வீழ்ந்துகிடந்ததற்கு – இருபொருப்புக்கள் கீழ்வீழ்ந்திருத்தலை உவமை கூறினார். தோட்கிழங்கு – புஜமூலம்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு-நைமிசாரண்யம் –

March 24, 2024

மூலவர் -தேவராஜன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -புண்டரீக வல்லி
விமானம் -ஸ்ரீ ஹரி விமானம்
தீர்த்தம் -சக்ர தீர்த்தம் -கோமுகி நதி
ஸ்தல வ்ருக்ஷம் -தபோவனம்
மங்களாசாசனம் -திரு மங்கையாழ்வார்

கோமதி நதி -மற்றும் சக்ர தீர்த்தத்தின் கரையில் -பெருமாள் காடு ரூபத்தில் காட்சி கொடுக்கிறார்
-நேமி -சக்கரத்தின் விட்டம் -அது சுற்றி வந்து இக்காட்டில் நின்று ரிஷிகளின் தவத்திற்குச் சிறந்த இடம்
எனத் தேர்ந்து எடுத்த படியால் நைமிசாரண்யம் ஆயிற்று –
ஸ்ரீ மத் பாகவதம் உபதேசிக்கப்பட்ட இடம் -ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம் –
ப்ரஹ்ம வனம் -ப்ரஹ்ம வ்ருக்ஷம் ஆஸீத் -இயற்கையே பெருமாள் -அனைத்துக்குள்ளும் வியாபித்து -சனாதன -மதம் –
தீர்க்க சத்ர யாகம் லோக க்ஷேமம் -நிமிச புல்லுக்கு காடு -தர்ப்பைகள் என்றுமாம் –
வியாசர் சுகர் நைமிசார்யர் -உபதேசித்த இடம் – சதை ரூபை -தபஸ் -ஸ்வயம்பூ மனு கல்யாணம்
ஹனுமான் பெரிய ரூபம் / வியாசர் சந்நிதி ஓலைச் சுவடி வேதங்கள் புராணங்கள் இதிகாசங்கள் –

மூலவர் ஸ்ரீ தேவ ராஜன் ( ஸ்ரீ ஹரி )
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீ ஹரி லக்ஷ்மி, ஸ்ரீ புண்டரீக வல்லி
தீர்த்தம் ஸ்ரீ சக்ர தீர்த்தம், ஸ்ரீ கோமுகி ஆறு
விமானம் ஸ்ரீ ஹரி விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் உத்தரபிரதேசம்
அடிப்படை இடம் லக்னோ
நாமாவளி ஸ்ரீ ஹரி லக்ஷ்மீ ஸமேத ஸ்ரீ தேவராஜாய நமஹ

————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம் –

வாணில முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை யெனக் கருதிப் பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்—1-6-1-

சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து
புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை யாயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-2-

சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து கரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை யலமரக் கடைந்த
நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-3-

வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் —1-6-4-

இடும்பையால் அடப்புண்டு இடுமினோ துற்றென்று இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-5-

கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர் களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற் கடல் கிடந்தாய்
நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-6-

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—-1-6-7-

ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-8-

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-9-

ஏதம் வந்து அணுகா வண்ண நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
நாதன் வந்து இறைஞ்சும் நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே–1-6-10-

ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் எல்லாம் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர்.
அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு
வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தான்.

இந்த பாரத தேசத்தில் அலகநந்தா நதி தீரத்தில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது
என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர்.
நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம் ஆனதால் நேமிச ஆரண்யமாகி
நைமிசாரண்யம் ஆயிற்று.
இதே கதை சில நூல்களில் பின்வருமாறு சொல்லப்படுகிறது.
தீர்க்க ரோமர் என்ற மகரிஷியின் தலைமையில் பிரம்மனிடம் சென்ற முனிவர்கள் சத்திர வேள்வியைத் துவக்கத் தகுதியான இடத்தைக்காட்டுமாறு
வேண்ட, பிரம்மன் அவர்களை ஒரு விமானத்தில் ஏற்றி இவ்வுலகை (பூவுலகை)  வலம் வருமாறும், அவ்வாறு வரும்போது விமானத்தின் நேமி, (சக்கரம்)
தானாக எவ்விடத்தில் கழன்று விழுகிறதோ அதுவே வேள்வியைத்துவக்க சிறந்த இடமென்று கூறியனுப்ப விமானத்தின் சக்கரம் இவ்விடத்தில்
விழுந்ததாகவும் அதனால் இவ்விடம் நேமிச ஆரண்யம் ஆயிற்றென்றும் கூறுவர்.

எவ்வாறாயினும் நேமிசம் விழுந்த ஆரண்யம் அலகநந்தா நதி தீரத்தில் உள்ள இந்த இடம்தான் என்பதில் ஐயமில்லை.

வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை மஹாவிஷ்ணுவிற்கே வழங்க எண்ணினர். அவ்விதமே மஹாவிஷ்ணு குறித்து
தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே எழுந்தருளி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம்
எம்பெருமான் அருள்புரிந்து அவர்களை சாயுஜ்ய பதவிக்குரியனாக்கினார் என்பது வரலாறு.

இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய ஸ்வரூபியாக
(காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர்.

மூலவர்-  தேவராஜன் (ஸ்ரீஹரி) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்–  ஸ்ரீஹரிலெட்சுமி

தீர்த்தம்- சக்கர தீர்த்தம் – கோமுகி நதி
விமானம்-   ஸ்ரீஹரி விமானம்
ஸ்தல விருட்சம்-    தபோவனம்
காட்சி கண்டவர்கள்-   இந்திரன், சுதர்மன், சூதபுரானிகர், ரோமசர் முதலான முனிவர்கள்

இங்குள்ள சக்ர தீர்த்தம் சகல பாவங்களையும் போக்க வல்லது. எம்பெருமானுக்கும் சக்ரநாராயணன் என்றொரு திருநாமம் உண்டு. இந்த சக்ர
நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் ராம, லட்சுமண, சீதை முதலியோருக்கும் சன்னதிகள் உண்டு. வினோதமான முறையில் இங்கு விநாயகருக்கும் சன்னதி
உண்டு. இதுவும் வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லாதது.

இங்கிருந்து கோமுகி நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும்,
சுகப்பிரும்ம முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் போன்றவற்றை உருவாக்கினார்கள். இதனால் வேறெந்த ஸ்தலத்திற்கும்
இல்லாத பெருமை (வேத நூல்களை உருவாக்கிய முனிவர்கள் வாஸம் செய்தது) இத்தலத்திற்குண்டாகிறது.

இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள ஹனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் உள்ள பிரும்மாண்ட
அனுமார், இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள காட்சி மிகவும் ரம்மியமானதாகும்.

ஒரு அறிவும் இல்லாத என் போல்வார்க்கு உய்யலாம்
பேர் அறிவு உண்டேனும் பிறர்க்கு அரிது பார் அறிய
நைமிசாரண்யத்து நாதர் அடியாரோடும்
இம்மிசார்வு உண்டாயினால் –99-

(இ – ள்.) பார் அறிய – உலகத்தார் அறியும்படி,
நைம்மிசாரண்ணியத்து நாதர் அடியாரோடும் – திருநைமிசாரணியத்தி லெழுந்தருளிய ஸர்வஸ்வாமியினது பக்தர்களோடும்,
இம்மி சார்வு உண்டாயினால் – கொஞ்சமாவது சம்பந்தம் ஏற்படுமேயாயின், –
ஓர் அறிவும் இல்லாத – சிறிதேனும் அறிவில்லாத,
என் போல்வார்க்கு – என்னைப்போன்றவர்கட்கும்,
உய்யல் ஆம் – ஈடேறுதல் கூடும்;
பிறர்க்கு – (அவ்வாறு பாகவதசம்பந்தம்பெறாத) மற்றையோர்க்கு,
பேர் அறிவு உண்டு ஏனும் – விசேஷஞானம் உளதாயினும்,
அரிது – (ஈடேறுதல்) முடியாத காரியமாகும்; (எ – று.)

வீடுபேற்றுக்கு அறிவு பிரதானகாரண மன்று; பாகவத சம்பந்தமே முக்கியமானகாரண மென்பதாம்.
“ஜ்ஞாந அநுஷ்டாநங்களை யொழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள்பக்கல் ஸம்பந்தமே அமைகிறாப்போலே” என்கிற ஸ்ரீவசநபூஷணமும்,
“பகவலலாபஹேதுவான தத்வஜ்ஞாநமும், ததநுரூப (அந்தஞானத்திற்குஏற்ற) அநுஷ்டாநமு மின்றிக்கே யொழிந்தாலும்
பகவல்லாபத்துக்கு “பஸுர்மநுஷ்ய: பக்ஷீவா – யேசவைஷ்ணவஸம்ஸ்ரயா:) தேநைவதேப்ரயாஸ்யந்தி –
தத்விஷ்ணோ:பரமம்பதம் (பசுவாயிருந்தாலும் மநுஷ்யனாயிருந்தாலும் பக்ஷியாயிருந்தாலும் யாராயிருந்தாலும்
ஸ்ரீவைஷ்ணவர்களை யாஸ்ரயித்தவர் – அந்தஸம்பந்தத்தினாலேயே அந்தவிஷ்ணுவினுடைய பரமபதத்தைச் சார்வர்)” என்றும்,
“யம்யம்ஸ்ப்ரூஸதிபாணிப்யாம் – யம்யம்பஸ்யதி சஷுஷா ஸ்தாவராண்யபிமுச்யந்தே –
கிம்புநர்பாந்தவா ஜநா: (விஷ்ணுபக்தன துஸ்பர்ஸம் நேரிட்டாலும் பார்வைக்கு இலக்கானாலும் ஸ்தாவரங்களும் மோக்ஷம் பெறும்;
அப்படியிருக்க, பந்துக்களைப் பற்றிச் சொல்லவேண்டுமோ?)” என்றும் சொல்லுகிறபடியே
பாகவதஸம்பந்தமே நிரபேக்ஷஸாதநமாகிறாப்போலே” என்ற அதன்வியாக்கியானமும் இங்குக் காணத்தக்கன.
(பாகவதர்கட்கு இடைவழியில் இளைப்புத்தீருமாறு நிழல்கொடுத்து உதவின புளியமரமொன்று
ஸ்ரீமணவாளமாமுனிகளின் திருவருளால் முத்திபெற்ற வரலாறு இங்குக் கருதத்தக்கது.)

ஒருகாலத்தில் முனிவர்கள் ‘தவஞ்செய்தற்குச் சிறந்த இடம் நிலவுலகத்தில் யாது?’ என்று தங்களுக்கு விளக்கிக்
காட்டுதற்பொருட்டுப் பிரமனை வேண்டியபோது, அம்முனிவர்க்கு, அப்பிரமதேவன் தான் ஒரு தருப்பை யாழியைச்செய்து
மண்ணுலகத்திலுருட்டி அதுசென்று நின்ற இடத்தையே சிறந்ததென்று காட்டினனாதலால்,
அதற்கு இடமான இத்தலம் நைமிச மெனப் பெயர்பெற்றது. நைமிசம் – நேமிவிழுந்த இடம்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு அயோத்தி

March 24, 2024

மூலவர் -ஸ்ரீ ராமன் -சக்கரவர்த்தி திருமகன் -ராகு நாயகன் -வீற்று இருந்த திருக் கோலம் -வடக்கே திரு முக மண்டலம்
தாயார் -சீதா பிராட்டி
விமானம் -புஷ்கல விமானம்
தீர்த்தம் -பரம பத ஸத்ய புஷ்கரிணி -சரயூ நதி
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -குலசேகராழ்வார் -பெரியாழ்வார் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

ஸ்ரீ ராமர் திரு வவதாரம் -அயோத்யா -அபராஜிதா -முக்தி தரும் க்ஷேத்ரம் –
ஸ்ரீ வைகுண்ட அம்சமான ஒரு சிறு பகுதியை பகவான் பிரமனுக்குக் கொடுக்க -அவன் ஸ்வயம்புவ மனுவுக்குக் கொடுத்தார்
அதை சரயூ நதியின் தெற்குக் கரையில் எழுந்து அருள பண்ணினார் -சரஸ் யூ –பிரமனின் மனமே உருகி பெரிய நதியாக மாறியது –
ஸ்ரீ ராம ஜென்ம பூமி -கனகசரயு நதி கரையில் கோ தானம் பிரசித்தம்
ராம ஜென்ம பூமி -கனக பவன் -சீதா ராமர் அந்தப்புரம் -பரத பவன் -குப்தார்காட் -லஷ்மண் காட் சேவிக்க வேண்டும்
பஜரேன்பாலி ஹனுமான் காவல் தெய்வம்
வால்மீகி பவன் -24000 ஸ்லோகங்கள் கல் வெட்டு -லவ குசர்
அம்மாஜீ மந்திர்
நந்தி கிராமம் -பரதன் இருந்த இடம்

மூலவர் ஸ்ரீராமன், ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன், ஸ்ரீ ரகு நாயகன்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் வடக்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீ சீதாபிராட்டி
தீர்த்தம் ஸ்ரீ பரமபத ஸத்ய புஷ்கரணி, ஸ்ரீ சரயு நதி
விமானம் ஸ்ரீ புஷ்கல விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் உத்தர பிரதேசம்
அடிப்படை இடம் ஸ்ரீ லக்னோ
நாமாவளி ஸ்ரீ ஸீதா ஸமேத ஸ்ரீ ரகு நாயகாய நமஹ

————–

ஸ்ரீ பெரியாழ்வார் -6-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

மொத்தம் –13-பாசுரங்கள் மங்களாசாசனம்

———-

ஸ்ரீ பெரியாழ்வார் -6-பாசுரங்கள் மங்களாசாசனம் –

முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கருளென்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை யீந்தானைப் பாடிப்பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.–3-9-6-

தார்க்கு இளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம்
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடைச்
சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற அயோத்திக் கரசனைப் பாடிப் பற.–3-9-8-

காரார் கடலை யடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோ டொன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள ரசீந்த
ஆராவமுதனைப் பாடிப் பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற.–3-9-10-

வாரணிந்த முலை மடவாய்! வைதேவீ! விண்ணப்பம்
தேரணிந்த அயோத்தியர் கோன் பெருந்தேவீ! கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓரடையாளம்.–3-10-4-

மைத் தகு மா மலர்க் குழலாய்! வைதேவீ! விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடனிருந்து நினைத்தேட
அத்தகு சீரயோத்தியர் கோன் அடையாளமிவை மொழிந்தான்
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கைம் மோதிரமே.–3-10-8-

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோ த்தம னிருக்கை
தட வரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக் கரைமரஞ் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னும் கடி நகரே. –4-7-9-

———————

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -4-பாசுரங்கள் மங்களாசாசனம்

சுற்றமெல்லாம் பின் தொடரத் தொல் கான மடைந்தவனே!
அற்றவர்கட் கருமருந்தே! அயோத்தி நகர்க் கதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா! தாலேலோ.–8-6-

ஆலினிலைப் பாலகனாய் அன்றுலக முண்டவனே!
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக் களித்தவனே!
காலின் மணி கரை யலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க் கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ.–8-7-

அங்கணெடு மதிள் புடை சூழயோத்தி யென்னும்
அணி நகரத் துலகனைத்தும் விளக்கும்சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி
விண் முழுது முயக் கொண்ட வீரன் தன்னை
செங்கணெடுங் கரு முகிலை யிராமன் தன்னைத்
தில்லை நகர்த் திருச் சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை யெம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிரக் காணும் நாளே. –10-1-

அம்பொனெடு மணி மாட அயோத்தி யெய்தி
அரசெய்தி அகத்தியன் வாய்த்தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதைக் கேட்டு மிதிலைச் செல்வி
உலகுய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம்பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
தில்லை நகர்த் திருச் சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன்னமுதை மதியோ மன்றே.–10-8-

——————

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள்
வேய்ங் குழலோசையும் விடை மணிக் குரலும்
ஈட்டிய விசை திசை பரந்தன வயலுள்
இருந்தின சுரும்பினம், இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவரேறே!
மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய வடு திறல் அயோத்தி யெம்மரசே!
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாயே.–திருப்பள்ளியெழுச்சி – 4-

———————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

கவள யானை பாய் புரவி தேரோட ரக்கரெல்லாம்
துவள வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே
தவள மாடம் நீடயோத்திக் காவலன் தன் சிறுவன்
குவளை வண்ணன் காண ஆடீர் குழ மணி தூரமே–10-3-8-

—————————

ஸ்ரீ நம்மாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி யொன் றின்றியே
நற்பால யோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக் குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே. –7-5-1-

புராணங்கள் யாவற்றிலும், எண்ணற்ற இலக்கியங்களிலும், கணக்கிலடங்கா நூல்களிலும் இந்த அயோத்தி விரித்துரைக்கப்பட்டுள்ளது.

ஸ்காந்த புராணத்தில் மீன் வடிவில் அமைந்திருக்கும் நகரம் என்று வர்ணிக்கப்படும் அயோத்தி வேதத்திலேயே அயோத்யா என்ற சப்தம்
பெற்றுத் தனிச்சிறப்புடன் திகழ்கிறது. “செங்கண்மால் பிறந்து தனிச் சிறப்புடன் ஆண்டு அளப்பருங்காலம் திருவின் வீற்றிருந்தான்” என்கிறான் கம்பன்.
திருவயோத்தியென்றும் அயோத்தி நகர் என்றும் மாந்தி மகிழ்வர்கள் ஆழ்வார்கள்.

பிரம்மாவின் முதல் புத்திரனான ஸ்வயம்புவான் என்பவனுக்கு ஸ்ரீநாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியென்னும்
பாகத்தை பிரம்மா மூலம் கொடுக்க, அதை அவர் மனுச் சக்கரவர்த்திக்கு அளிக்க, அவர் பூலோகத்தில் சரயு நதியின் தென்கரையில் ஸ்தாபித்தார்
என்பதே பிரதானமான ஸ்தல வரலாறு. இதுவே பல நூல்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. இதனால்தான் அம்புயத்தோன் அயோத்தி
மன்னனுக்கே அளித்த கோயில் என்னும் வழக்கு உண்டாயிற்று. தான் பின்னொரு காலத்தில் அவதாரம் எடுப்பதற்காகவே ஸ்ரீமந் நாராயணன்
வைகுந்தத்தை முதலிலேயே இங்கு இறக்கிவைத்துவிட்டாரோ என்னவோ.  இத்தகைய அயோத்தியின் இன்றைய நிலைமை எல்லோருக்கும் தெரிந்த
ஒன்றாகும். இன்றைய அயோத்தியே பாரத மண்ணில் பக்தி மணத்தைக் கமழச் செய்து கொண்டிருக்கிறதென்றால் திரேதாயுகத்தின் அயோத்தி எப்படி
இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மையிலேயே வைகுந்தமாகவே இருந்திருக்கும்.

மூலவர்–  ஸ்ரீராமன், சக்கரவர்த்தி திருமகன், ரகுநாயகன், வடதிசை நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார்- சீதா பிராட்டி
தீர்த்தம்–   சரயூ நதி, பரமபத புஷ்கரணி
விமானம்–   புஷ்கல விமானம்
காட்சி கண்டவர்கள்–   பரதாழ்வான், தேவர்கள், முனிவர்கள், திரேதாயுகத்து அயோத்தி நகர்வாசிகள்.

முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் ஒன்றான இந்த அயோத்தியில் திரேதாயுகத்தில் உதித்த ராமநாமம் இந்தியா முழுவதும், ஏன் உலகம்
முழுவதும், எந்நேரமும் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது.
வானொலியிலும், தொலைக்காட்சியிலும், சங்கீதங்களிலும், மனிதர்களின் பெயர்களிலும், புராண இதிகாச இலக்கியங்கள் மூலமாகவும்,

கோவில்களிலும் இந்த நாமம் ஒலிக்காத நாளும், ஒலிக்காத நேரமும் இல்லை என்று சொல்லலாம். ராம நாமத்தின் மகிமையும் எழுத்தில் எழுதி
விரித்துரைக்கும் தன்மையதன்று. சொன்ன மாத்திரத்தில் ராம பாணம் போல் பாவங்களைச் சுட்டெரிக்கவல்லது. திருவாரூரில் பிறந்த தியாகராஜ சுவாமிகள் ராம நாம மகத்துவம் பற்றி இயற்றியுள்ள கீர்த்தனங்கள் இம்மண்ணுள்ளவரை அழியா மகத்துவம் பெற்றவைகளாகும். ராம நாமம் ஜென்ம ரட்சக மந்திரம் என்றார் போல் ராம நாமத்தை உலகிற்குப் பயந்த சிறப்பே அயோத்தியின் தனிச் சிறப்பும், தலையாய சிறப்புமாகும்.

இட்சுவாகு வம்சத்தார்கள் தவமிருந்து பிரம்மனிடம் பெற்ற பள்ளிகொண்ட நாதனை முதன்முதலில் பூவுலகில் வைத்து தலைமுறை
தலைமுறையாக வழிபட்டது இங்குதான். பிற்காலத்தில் தான் அந்த இட்சுவாகு குலதனம் விபீடணன் மூலமாக திருவரங்கத்தில் அரங்க நாதனாக பள்ளி
கொண்டது. பரமபதத்தின் ஒரு பகுதி பூலோகத்திற்கு வந்ததும் இந்த அயோத்திக்குத் தான். திருப்பாற்கடலில் பள்ளிகொண்டவன் பூவுலகிற்கு வந்து
முதன் முதலாக வழிபாடுகளையும் பூஜைகளையும் ஏற்றுக்கொண்டது இங்குதான்.
திரேதாயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனே (விபவ அவதாரமாக) ஸ்ரீராமனாக இங்கு அவதரித்தார். இதன் பெருமைகளை எளிதில் சொல்லிடவும் முடியுமோ.

சூரிய வம்சத்து மன்னர்களால் ஆளப்பட்டு 7 புண்ணிய மோட்ச புரிகளில் முதன்மை பெற்றதும், சரித்திர கோசல ராஜ்யத்தின் தலைநகரமாக
விளங்கியதும் மனு என்னும் மன்னரால் கட்டப்பட்டதுமான இந்த அயோத்தியை, மாந்தாதா, அரிச்சந்திரன், பாகீ ரதன், தீலிபன், ரகு, போன்ற
புகழ்பெற்ற சூரிய வம்சத்து மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.

இந்த அயோத்தியை (அதாவது அன்றைய அயோத்தியா ராஜ்யத்தை) ராமன் தனது புதல்வர்களான லவ குசனுக்கும், பரதனின் குமாரர்களான தசு-
புஷ்கலனுக்கும், லட்சுமணனின் புதல்வர்களான அங்கத, சந்திர கேசனருக்கும், சத்துருக்கன் புதல்வர்களான சூரஸேன, சூடாஹி ஆகியோருக்கும் 8
பாகங்களாகப் பகிர்ந்து கொடுத்தார்.

இங்கு ராம, லட்சுமண, சீதை, அனுமார் ஆகியவர்கட்கும் எண்ணற்ற சின்னஞ்சிறு கோவில்கள் உண்டு. எங்கு நோக்கினும் ராமபிரான் சந்நிதிகளே.
பைசாபாத் ரயில் நிலையத்திலிருந்து அயோத்தி வரும் வழியில் எண்ணற்ற ஆஞ்சநேயர் கோவில்கள் ஆங்காங்கே வழி நெடுக இருப்பது நம்மை
ஆஞ்சநேயரே ராமபிரானிடம் அழைத்துச் செல்வதுபோல் உள்ளது.

இங்கு அமைந்துள்ள கனகமந்திர் என்னும் மண்டபத்தில் (மந்திர் என்றால் இந்தியில் கோவில் என்று பொருள்) கனகமந்திர் என்னும் இவ்விடம்
ஒரு மண்டபம் போல் காட்சியளிப்பதால் மண்டபம் என்றே எடுத்தாண்டுள்ளோம். இராமாயணக் காட்சிகள் யாவும். வெகு நேர்த்தியாகவும்.
பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இதன் முகப்பில் தங்கம் பதித்திருப்பதால் கனக மந்திர் என்னும் பெயருண்டாயிற்று. இங்கு
துறவிகள் இருவர் நடத்திக் கொண்டிருக்கும் ராம பஜனை கேட்பதற்கும், பார்ப்பதற்கும் பேரழகு பொருந்தியதாகும்.

இராம சரித்திரத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை இன்றும் அயோத்தியில் காணலாம். சீதாதேவி தினமும் துளசி பூஜை செய்த
துளசி மாடம், இராமபிரானுக்கும் அவரது தம்பிகட்கும் திருமணம் நடந்த இடம், ராமன் பட்டாபிசேகம் செய்த இடம் (இந்த இடம் இன்று ஒரு
நந்தவனம் போல் உள்ளது) சீதையின் தகப்பனார் ஜனகர் தங்கியிருந்த இடம், அஸ்வமேத யாகம் நடத்தப்பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர்
ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களைக் காணும் போது இராமாயண காலத்தோடு கலந்து ஒன்றிவிட்ட உணர்வு
ஏற்படுகிறது.

பரதன் ராமபிரானின் பாதுகைகளுடன் இராமன் வரும்வரை காத்திருந்த நந்திகிராமம் (நந்திகிராமம் அயோத்தியிலிருந்து 20 மைல்)
லகட்மண்டி என்றழைக்கப்படும் இடமான தசரதன் புத்திர காமேஷ்டி செய்த இடம், அயோத்தியிலேயே பெரிய மாளிகையாகத் திகழும் கனகபவனம்
என்றழைக்கப்படும் கைகேயியின் அரண்மனை ஆகிய ஒவ்வொன்றையும் காணும்போது ராமாயண காலத்தில்  வாழ்ந்தது போன்று உணர்வுகள் தலைதூக்கும்.

அயோத்தியென்றதும் சரயு நதிதான் சடக்கென்று நினைவுக்கு வரும். இந்நதி இமயத்திற்குள் உற்பத்தியாகி அயோத்தியில் நுழைகிறது.
அயோத்திக்குள் நுழையுமுன் இதனுடன் காளி என்னும் நதி கலந்துறவாடுகிறது. இப்போது இதனை கோக்ரா என்று அழைக்கின்றனர். இந்த சரயு நதியில்
உள்ள ராம்காட் என்னுமிடத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம்.
மேலும் சக்ர தீர்த்தம், அக்னி தீர்த்தம், குப்தகாட், லட்சுமணகாட் போன்றனவும் முக்கிய தீர்த்தங்களாகும்.

ஸ்ரீராம அவதாரத்தின் காலகட்டம் முடிவுற்றதை எமதர்மன் ஒரு தபசியின் ரூபத்தில் வந்து இராமனுக்கு நினைவு படுத்த ராமன் இந்தச் சரயு
நதிக்குச் சென்று தமது சரீரத்தை சரயுநதியில் கரைத்து விட்டுப் பரமபதம் சென்றார். இந்த இடம் குப்த காட் என்று தற்போது அழைக்கப்படுகிறது.

ராமன் தனது சரீரத்தைக் களைந்து பூத உடலைத் துறந்து இந்தச் சரயுநதியில் நீராடுவது மோட்சத்தை நல்கும் என்ற நம்பிக்கையில் இங்கு
வருவோரனைவரும் இதில் நீராடுவர்.

அநுமான்கடி என்றழைக்கப்படும் மிகப்பெரிய ஆஞ்சநேய மூர்த்தி கோவில் ஒன்று இந்த ராமஜென்ம பூமிக்கருகில் உள்ளது. ஐம்பது
படிக்கட்டுகளை உடைய இத்தலம் சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடினதாக கம்பீரத்தோற்றத்துடன் பேரழகு பொருந்தி திகழ்கிறது. இந்த ஆலயத்தின்
சுற்றுப்புறங்களிலும், மண்டபங்களிலும், படிக்கட்டுகளிலும் இடைவிடாமல் ராமாயணம் படித்துக்கொண்டிருக்கும் பக்தர்களைக் காணும்போது இந்து
மதத்தின் தார்மீக வளர்ச்சியை எவரும் அசைத்துவிட முடியாது என்று சொல்லாமற் சொல்வது போல் உள்ளது.

சரயு நதிக்கருகில் அம்மாஜி மந்திர் என்றழைக்கப்படும் ஒரு கோவில் உள்ளது. தென்னிந்திய கோவில்களின் பாணியில் கட்டப்பட்டுள்ள
இத்தலத்தில் தென்னிந்திய வைணவர்களே பூஜை செய்கின்றனர். ரெங்கநாதன் சன்னதியுடன் இராமபிரான் சன்னதியும் அமைந்துள்ள இத்தலம் புராதன
காலந்தொட்டு இதே இடத்தில் எச்சிதைவு இல்லாது அமைந்துள்ளது.

இராமகாதையின் தாக்கம் இந்தியாவின் எண்ணற்ற இலக்கியங்களில் பிரதிபலிக்கிறது. தமிழிலக்கியம் பலவற்றில் இராமாயணம் இழைந்தோடுகிறது.
சிலப்பதிகாரத்தில் இராமாயணத்தின் தாக்கம் அதிகம் என்றும், சிலம்பு பயந்த இளங்கோவடிகள் பல மதக் கருத்துக்களையும் தம் நூலில்
கூறிப்போந்துள்ளாரெனினும் வைணவ கருத்துக்களையும், இராம காதையின் நிகழ்ச்சிகளையும் அதிகமாக எடுத்தாண்டுள்ளார் என்பதை சிலம்பைக் கற்றவர்கள் யாரும் மறுத்துவிட முடியாது. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்வோம்.

கோவலன் புகார் நகரைவிட்டுப் பிரிந்து செய்திக்கு உவமானம் கூறவந்த இளங்கோவடிகள் ராமன் அயோத்தியை விட்டுப் பிரிந்ததை நினைவு கூர்கிறார்.
ராமன் அயோத்தியை விட்டுப் பிரியும்போது மக்கள் எவ்வாறு அலமந்தனரோ அதுபோல் புகார் நகரத்தினர் துயருள்ளாயினர் என்கிறார்.

பெருமகன் ஏவல் அல்லது யாங்கனும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல
பெரும் பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும் -என்கிறார்

ராமகாதையில் இளங்கோவடிக்கு இருந்த ஈடுபாடு தன் காவியத்தில் ராம நிகழ்ச்சியைப் புகுத்த வேண்டுமென்ற தாக்கம்
இவ்வுவமானமாக மிளிர்ந்தது.
அதேபோல் கோவலன் புகாரை விடுத்து மதுரை நோக்கி வரும் வழியில் “அறியா தேயத்து ஆரிடை உய்ந்து சிறுமையுற்றேன்” என்று
கோவலன் வருந்தியபோது அவனுக்கு ஆறுதல்மொழி பகர்ந்த கவுந்தி அடிகள்.

தாதை ஏவலின் மாதுடன் போகி
காதலி நீங்க கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வ பயந்தோன் என்பது
நீயறிந்திலையோ நெடுமொழியன்றோ – என்கிறார்.
தந்தையின் கட்டளைப்படி வனமேகிய ராமன் சீதையைப் பரிந்து கடுந்துயறுற்றதை நீ அறியவில்லையா உலகோ ரனைவரும் அறிந்த நெடு மொழியல்லவா? அது என்று கூறி கோவலனைத் தேற்றுகிறார்.

ஆர்க்கும் இது நன்று தீது ஆனாலும் நெஞ்சே நீ
பார்க்கும் பல கலையும் பன்னாதே சீர்க்கும்
திரு ஐ யோதிப் புயலை சீரிய மெய்ஞ்ஞானத்து
உருவை ஒத்தின் பொருளை ஓர் –98–

(இ – ள்.) நெஞ்சே – (எனது) மனமே! –
இது – (யான்சொல்லுகின்ற) இவ்விஷயம்,
ஆர்க்கும் நன்று – எல்லோர்க்கும் நல்லதே;
தீது ஆனாலும் – (ஒருகால்அதனால்) தீமையேநேர்வதானாலும், – நீ -,
பார்க்கும் பல கலையும் – (உலகத்திற்) காணப்படுகின்ற பலவகைச்சாஸ்திரங்களையும்,
பன்னாது – கண்டபடி கற்காமல்,
சீரிய மெய் ஞானத்து உருவை – சிறந்த தத்துவஞான சொரூபியானவனும்,
ஓத்தின் பொருளை – வேதத்தின் அர்த்தமாகி யிருப்பவனுமாகிய.
சீர்க்கும் திரு ஐயோத்தி புயலை – சிறப்புப்பொருந்திய திருவயோத்தியென்னுந்திவ்வியதலத்தி லெழுந்தருளிய
காளமேகம்போலக் கருநிறமுடைய ஸ்ரீராமபிரானை,
ஓர் – தியானிப்பாயாக; (எ – று.)

தர்க்கம் வியாகரணம் முதலிய உலகத்துச்சாஸ்திரங்கள் பலவற்றையும் படித்துப் பழுதே பலபகலும்போக்காமல்,
தத்துவஞானஸ்வரூபியாகிய கடவுளையே தியானஞ் செய்வாயாக என்று மனத்திற்கு உபதேசித்தனரென்க.
உலகத்துவழங்குகின்ற சாஸ்திரங்களிற் பயிலுதல் வேதத்தின்நுண்ணியபொருளை உணர்தற்பொருட்டே யாதலாலும்,
வேதப்பொருளாகிய கடவுளையறியாது மற்றைச்சாஸ்திரங்களிற் பயில்வது பயனற்றதாதலாலும் அதனை விட்டு
வேதப்பொருளாகிய கடவுளைத் தியானித்தலே சிறந்த செயலாகுமென்பதாம்.
அன்றியும், கலைகளிற்பயிலுதல் மிகவும்வருத்தமாயிருத்தலோடு புத்தியில்நிஷ்கர்ஷம் தோன்றாமல்
புத்திசலித்தற்குங் காரணமாயிருத்தலால் அதனைநீத்து, கடவுளை உபதேசத்தினா லுணர்ந்து வழிபடுக வென்று போதித்தன ரென்க;
“ஸாஸ்த்ரஜ்ஞாநம் பஹுக்லேஸம் – புத்தே: சலநகாரணம் : உபதேஸாத் ஹரிம் புத்வா – விரமேத்ஸர்வகர்மஸு” என்ற
மேற்கோள் இங்கு உணரத்தக்கது. கடவுளைத் தியானித்தலென்பது அனைவர்க்குங்கடமை யாதலால்
‘ஆர்க்கும் இதுநன்று’ என்றும், அவ்வாறு செய்தலில் தீதுஒன்றுமில்லை யென்பதை வற்புறுத்துதற்பொருட்டு
‘தீதானாலும்’ என்றும் கூறினர்.
திருவயோத்தியென்பது – திரிபுநோக்கி, திருவையோத்தி என வந்தது. ஓதப்படுதலினால், வேதத்திற்கு ‘ ஓத்து’ எனப்பெயர்.

அயோத்தி – பகைவர்களாற் போர்செய்து வெல்லமுடியாதது எனப்பெயர் பெறும்: அரண்
முதலியவற்றால் மிக்கபாதுகாவலையுடையது என்பது கருத்து;
இது, ஸ்ரீராமபிரானது திருவவதாரஸ்தலம்: முத்திதரும் நகரமேழனுள் ஒன்று.

————-——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு மெய்யம்–

March 24, 2024

மூலவர் -ஸத்ய கிரி நாதன் -ஸத்ய மூர்த்தி -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -மெய்யப்பன்
தாயார் -உய்ய வந்த நாச்சியார்
விமானம் -ஸத்ய கிரி விமானம்
தீர்த்தம் -கதம்ப புஷ்கரிணி -ஸத்ய தீர்த்தம்
ஸ்தல வ்ருக்ஷம் -பலா மரம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார் –

ஆதிசேஷன் -கருடன் -சந்திரன் -புரூரவஸ் ஸத்ய ரிஷி ஆகியோர் த்வம் புரிந்த இடம்
ஆதி சேஷன் தனக்கு சத்வ குணம் மட்டும் வளர வேண்டும் என்று தன் நீண்ட திரு மேனியைச் சுருக்கிக் கொண்டு
பூமிக்குள் இருந்து இவ்விடத்தில் வெளியே வந்தார் –
அவரால் ஏற்படுத்தப் பட்ட நதி சர்ப்ப நதி -பாம்பாறு –
இரண்டு கர்ப்ப க்ருஹங்கள் -ஒன்றில் ஸத்ய நாதனும் -மற்று ஒன்றில் மிகப் பெரிய
ஆதி சேஷ பர்யங்கத்தில் சயனத் திருக் கோலம் சேவை –
ஹிமவானில் த்வம் புரிந்த ஸத்ய ரிஷியை இங்கே அழைத்து வந்து ஸத்ய மூர்த்தியாகவே
பெருமாள் காட்சி கொடுத்து அருளினார் -இது ஒரு குடை வரைக் கோயில் –
புஷ்ப்ப பத்ரா பத்ர வடம் சித்ர சாலா -மூன்றுமே இங்கு வந்தது என்பர்-

மூலவர் ஸ்ரீ ஸத்ய கிரி நாதன், ஸ்ரீ ஸத்ய மூர்த்தி
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ மெய்யப்பன், ஸ்ரீ ராஜ கோபாலன்
தாயார் ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்,ஸ்ரீ உஜ்ஜீவன தாயார்
தீர்த்தம் ஸ்ரீ கதம்ப புஷ்கரணி,ஸ்ரீ சத்ய தீர்த்தம்
விமானம் ஸ்ரீ சத்திய கிரி விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ உய்ய வந்தாள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஸத்ய கிரி நாதாய நமஹ

—————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -9-பாசுரங்கள் மங்களாசாசனம் –

உடம்புருவில் மூன்றொன்றாய் மூர்த்தி வேறாய் உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம் பருகு வித்தகனைக் கன்று மேய்த்து விளையாட வல்லானை, வரை மீ கானில்
தடம் பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை, வையங் காக்கும்
கடும் பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தலசயனத்தே. –2-5-3-

நிலையாளா! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே?
சிலையாளா! மரமெய்த திறலாளா! திரு மெய்ய
மலையாளா! நீயாள வளையாள மாட்டோமே. –3-6-9-

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை *
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் * வண்துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே.–6-8-7-

அருவி சோர் வேங்கடம் நீர்மலை யென்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரமென்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ? –8-2-3-

வேயிருஞ்சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர், இவ் வையமெல்லாம்
தாயின நாயகராவர் தோழீ! தாமரைக் கண்க ளிருந்தவாறு
சேயிருங்குன்றம் திகழ்ந்த தொப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும் அச்சோ ஒருவ ரழகியவா!–9-2-3-

சுடலையில் சுடுநீறனமர்ந்தது ஓர்
நடலை தீர்த்தவனை நறையூர் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ள முருக்கி யுண்
விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துளே.–10-1-5-

மையார் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானை கை தொழா கை யல்ல கண்டாமே. –11-7-5-

பிண்டியார் மண்டை யேந்திப் பிறர் மனை திரி தந்துண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை யென்று
மண்டினார் உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே? –திருக்குறுந்தாண்டகம் – 19

அன்ன வுருவி னரியை திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூ ரந்தணனை –பெரிய திருமடல் – 126-

பிரம்மாண்ட புராணம் இத்தலத்தைப் பற்றி மிகவும் விவரித்துப் பேசுகிறது. இதில் நாரதருக்கும் சிவபெருமானுக்கும் நடந்த ஸம்பாஷணையாக
10 அத்தியாயங்களில் இத்தலத்தின் வரலாறு பேசப்படுகிறது.

சத்தியகிரியென்றும், சத்திய சேத்ரமென்றும் புராணம் புகழக்கூடிய இத்தலத்தில் ஆதிசேடன், சந்திரன், சத்திய மகாமுனி போன்றோர் தவமிருந்து
நற்பெயர் பெற்றுள்ளனர். ஒரு காலத்தில் மதுரையை ஆண்டபுருரவச் சக்ரவர்த்தியும் இங்குவந்தே மோட்சம் எய்தினார்.

ஆதிசேடன் தவம்-தன்னிடம் தீய குணங்களே மிகுந்திருப்பதால் தனக்கு ஸத்வ குணம் வேண்டுமென்று ஆதிசேடன் எம்பெருமானை ஒரு நாள் வேண்டினான். அவ்வாறாயின் என்னைக் குறித்துக் கடுந்தவஞ்செய்து நீ அந்த வரத்தைப் பெற்றுக்கொள் என்று பெருமாள் உரைத்ததும் ஆயிரம் தலைகளுடனும் பல மைல் நீளமுடையதுமான தனது உடம்பை 5 தலைகளுடனும், ஒரு பாக நீளத்தால் அளவிடத்தக்கப் பருமனுடனும், ஒரு பனை மரத்தின் அளவிற்கு நீண்ட சரீரத்தையும் எடுத்துக் கொண்டு பூமிக்குள்ளாகவே துளைத்துக் கொண்டு வந்து இவ்விடம் வெளிப்பட்டான். ஆதிசேடன் வந்த மார்க்கம்
பள்ளமானபடியால் அது ஸர்ப்ப நதியாயிற்று (பாம்பாறு) அவன் வெளிப்பட்டஇடம் சத்திய சேத்ரமாயிற்று. இங்கிருந்த சத்தியகிரிக்கு அருகில் உள்ள சத்திய
புஷ்கரணியில் நீராடி எம்பெருமானைக் குறித்து கடுந்தவஞ் செய்யலானான் ஆதிசேடன் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு ஹயக்ரீவ வடிவத்தில் (குதிரைமுகம் கொண்ட வித்தைகட்கு தேவதையான அவதாரம்) தோன்றினார். உடனே ஆதிசேடன் தனது உடலால் ஆசனமும் செய்து, 5 தலைகளால் பாத்தியம், அர்க்கியம், ஆசமனீயம் முதலியன கொடுத்து தன் சிரங்களாகிய புஷ்பங்களால் பூஜித்து, வாசம் மிகுந்த வாய்க்காற்றினால் தூபம்
கொடுத்து, தன் சிரத்தில் உள்ள ரத்தினங்களால் தீபாராதனை செய்து நாக்குகளால் ஆலவட்டம் வீசி, படங்களால் குடைபிடித்து மானசீகமாக அன்ன
நிவேதனம் செய்து ஆராதித்தான். இதனால் மிக மகிழ்ந்த மகாவிஷ்ணு ஆதிசேடனுக்கு ஸத்வகுணத்தை அளித்து, அவனது கோர குணத்தை
மாற்றியது மட்டுமன்றி இன்னும் வேறு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார்.
அதற்கு ஆதிசேடன் திருப்பாற்கடலில் என் மீது சயனித்துள்ளவாறு இங்கும்சயனித்துக் காட்சியருள வேண்டுமென்று கேட்க, அவ்வண்ணமே ஆகட்டும்
என்றார். பின்னர் அர்ச்சாரூபமாய் மாறிய பின்னர் இருவரும் திருப்பாற்கடலெய்தினர்.

சந்திரன் தவம்-அத்திரி என்ற முனிவரின் கற்புடை மனைவி அனுசூயை என்பவள் மும்மூர்த்திகளே தமக்குப் புத்திரர்களாக வாய்க்க வேண்டுமென
கடுந்தவமியற்றினாள். அதன் பயனாக மஹாவிஷ்ணு அம்சமாக தத்தாத்திரேயர் என்ற தவநிதியாகவும், கோபாம்சக் குணம் கொண்ட ருத்ரன் அம்சமாக
துர்வாசர் என்ற கோபம் மிகுந்த முனிவராயும், பிரம்மாவின் அம்சமாக சந்திரனும் வந்து பிறந்தனர். தக்க பருவம் அடைந்ததும் அத்திரி முனிவர்
மூவரையும் அழைத்து மந்திர உபதேசம் செய்து தவஞ்செய்ய அனுப்பினார்.
துர்வாசர் கைலாய மலையினையும், தத்தாத்திரேயர் இமயமலையினையும், சந்திரன் ஸத்திய கிரியையும் அடைந்தனர். பிரம்மனுக்கு திருமாலைக் குறித்து
தவம் செய்வதே எப்போதும் பொழுது போக்கான விஷயம். எனவே பிரம்மனின் அம்சமாக வந்த சந்திரன் இச்சத்திய கிரியை அடைந்து
திருமாலைக் குறித்துக் கடுந்தவம் செய்யலானான். திருமால் வாமன வடிவில் சந்திரனுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டுமென்று வினவினார்.
இத்தலத்தில் எனக்கு காட்சி கொடுத்த மாதிரியே சந்திர மண்டலத்திலும் தாங்கள் எழுந்தருளி நித்திய வாசம் செய்யவேண்டுமென சந்திரன்
வேண்டவே ராஜ ஹம்ஸம் வெண் தாமரையில் வசிப்பதுபோல் திருமால் அங்கு எழுந்தருளி நித்திய வாசம் செய்யலானார்.

ஸத்திய மகரிஷியின் வரலாறு இமயத்தின் வடபுரத் தாழ்வரையில் புஷ்ப பத்திரை என்னும்
நதியோடுகிறது. அதன் கரையில் சித்ரசிலை என்ற பாறை இருக்கிறது அந்தப் பாறையினருகில் பத்ரவடம் என்ற ஒரு ஆலமரம் இருந்தது. அதனடியில் ஸத்திய தவர் என்னும் முனிவர் தவமியற்றினார். இவர் மகா தபசி. இவரது தவத்தை மெச்சி காட்சி கொடுத்த எம்பெருமான் என்ன
வரம் வேண்டுமென்று கேட்க அதற்கு ஸத்தியத்தவர் எனக்கு வரம் எதுவும் வேண்டாம். ஆயின் நான் நினைக்கும் போதெல்லாம் தாங்கள் எழுந்தருள
வேண்டும் என்றார். மகாவிஷ்ணுவும் சரி என்று ஒப்புக்கொண்டார். பின்னர் அம்முனிவரைப் பார்த்து இவ்விடத்தில் (இமயச்சாரலில்) பின்னொரு யுகத்தில்
யாம் இன்னொரு திருவிளையாடல் புரிய சித்தமாயுள்ளோம். ஆகவே நீங்கள் தவம் செய்ததற்கு பிறிதொரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். உம்
விருப்பப்படி நீங்கள் நினைத்த மாத்திரத்தில் வரக்கடவோம் என்றார் மஹாவிஷ்ணு.

இதைச் செவிமடுத்து மிகவும் சந்தோஷித்த ஸத்தியதவர் திருமாலை நோக்கி அவ்வாறாயின் யான் தவம் செய்தற்குத் தகுந்த இடத்தை தாங்களே
திருவாய்மலர்ந்தருளும்படி வேண்டினார். உடனே மஹாவிஷ்ணு சந்திரனும், அனந்தனும் தன்னைக் குறித்து தவமிருந்த இந்தச் சேத்திரத்தில் (சத்திய
ஷேத்திரத்தில்) சென்று தவமியற்ற அருளினார்.

தமக்கு கிடைத்த பெரும் பேற்றை எண்ணிய ஸத்தியதவர் மீண்டும் மஹாவிஷ்ணுவை நோக்கி அவ்வாறாயின் இவ்வளவு காலம் என்னோடு
ஒன்றிப் போய்விட்ட புஷ்ப பத்திரா என்னும் நதி, சித்திரசிலை என்னும் பாறை, பத்ரவடம் என்னும் ஆலமரம், என்னும் இம்மூன்றும் எனக்குத் தாய்,
தந்தை, தோழன், போன்றன. எனவே இவைகளை விட்டுப் பிரிவதும் மிகவும் கஷ்டமாயுள்ளது. என்றார். உடனே மஹாவிஷ்ணு அவரின் நன்றியறிதலை
மெச்சி அவ்வாறாயின் இந்த மூன்றையும் அந்தச் சேத்திரத்திற்கே அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி ஐராவதத்திற்கு உத்தரவிட அம்மூன்றும் இங்கு
வந்து சேர்ந்தன. புஷ்பத்திரா நதி புஷ்கரணியாயிற்று. சித்திர சிலை என்னும் பாறையே தற்போதுள்ள மெய்ய மலையாயிற்று. பத்ரவடம் என்னும்
ஆலமரமே தற்போது அரசமரமாகக் காட்சியளிக்கிறது. இந்த ஆலமரம்,

கிரேதாயுகத்தில் பத்ரவடமாகவும்
திரேதாயுகத்தில் அஸ்வத்தமாகவும்
துவாபரயுகத்தில் புத்திரதீபமாகவும்
கலியுகத்தில் பநஸ என்ற பெயரில் அரச மரமாகவும் திகழ்கிறது.

ஸத்திய முனிவரும் இங்கு வந்து கடுந்தவஞ் செய்ய, ஓர் நாள் வைகாசி சுக்ல பட்சம், பஞ்சமி ஞாயிறன்று சிம்ம லக்கினத்தில் எம்பெருமானை நினைக்க உடனே பிரத்யட்சமாகி யாது வேண்டுமென்று கேட்க ஸத்திய முனிவர் மோட்சம் வேண்டுமென்றார். அதற்கு
திருமால் ஸத்திய முனிவரை நோக்கி இன்னும் கொஞ்சகாலம் இங்கேயே தவம் புரிந்து கொண்டிருக்குமாறும் புருரவச் சக்கரவர்த்தி இவ்விடம் வந்து
சேர்ந்தவுடன் இருவருக்கும் மோட்சம் அளிப்பதாகவும் கூறியருளினார்.

நவக்கிரகங்களில் ஒருவனான புதனின் மைந்தன் புருரவச் சக்கரவர்த்தி, இக்காலத்தில் இவன் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி
செய்துவந்தான். இவன் விஷ்ணு பக்தியில் அளவற்ற ஈடுபாடும் பேராற்றலும் பெற்றவன். இவனுக்கு அருள்பாலிக்கும் பொருட்டு அடிக்கடி பிராட்டியால்
வேண்டப்பட்ட எம்பெருமான் தன் பரிவாரங்களையெல்லாம் வராகங்களாக்கி தானும் வராக ரூபங்கொண்டு மதுரைக்கு எழுந்தருளினார்.

வைகைக்கு வடக்கு பக்கமாகவும், வெள்ளாற்றுக்கு தெற்கு பக்கமாகவும் உள்ள செழிப்பான பகுதியில் இந்த வராகங்கள் புகுந்து வயல்களை நாசம்
செய்ய கிராம மக்களால் இவைகளை அடக்க முடியாமல் போக மதுரைக்கு மன்னனான புருரவச் சக்கரவர்த்தியிடம் முறையிட்டனர் (பிர்ம்மாண்ட
புராணம் ஸ்லோகம் 217)

மன்னன் தன் சேனைகளை அனுப்ப அவர்கள் தோற்றுப் போய்வர, இதைக்கண்டு திகைத்த மன்னன் தானே நேரில் யுத்தத்திற்கு சென்று வராகக்
கூட்டங்களின் மீது சரமாரியாக அம்புகளை எய்து கொண்டிருக்கையில் தலைமை வராகம் மட்டும் (விஷ்ணு) புருரவச் சக்கரவர்த்தியின் முன்பு வந்து
அவன் கைகளில் வைத்திருந்த வில்லையும் அம்பையும் பறித்துக் கொண்டு ஓட இவன் துரத்த இறுதியில் இந்த சத்தியகிரிவரை ஓடிவந்த அந்த வராகம்
ஆலமரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த ஸத்திய முனிவருக்கு முன்னால் ஒரு மனிதன் பேசுவது போல் இதோ புருரவன் வந்துவிட்டான், புருரவன்
வந்துவிட்டான் என்று இரண்டு முறை சப்தமிட்டுவிட்டு மறைந்துவிட்டது.

சப்தத்தைக் கேட்டு தவத்திலிருந்து கண்விழித்த ஸத்திய முனிவரும் புருரவச் சக்கரவர்த்தியும் யாரையும் காணாது திகைத்து நிற்க
அவ்விருவருக்கும் சக்ரதாரியாக காட்சி தந்து சத்திய முனிவருக்கு மோட்சம் கொடுத்துவிட்டு, புருரவனை நோக்கி நீ இன்னும் 3 ஆண்டுகள் இங்கு
தங்கியிருந்து இந்த ஆலயத்தை நல்லவிதத்தில் கட்டி முடித்து அதன்பின்பு என்னைச் சேர்வாயாக என்று
அருளி மறைந்தார்.

மூலவர்-ஸத்யகிரி நாதன், ஸத்யமூர்த்தி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம், அனந்த சயனத்தில் பள்ளிகொண்ட பெருமாள்.
உற்சவர்- மெய்யப்பன். ராஜ கோபாலன் என்ற திருநாமமும் உண்டு.
தாயார்-   உஜ்ஜீவனத் தாயார், உய்யவந்த நாச்சியார், என்பதும் திருநாமம்.
தீர்த்தம்-  கதம்ப புஷ்கரணி, ஸத்ய தீர்த்தம்
ஸ்தலவிருட்சம்-   அரச மரம் (அஸ்வத்தம்)
விமானம்-    ஸத்திய கிரி விமானம்
காட்சி கண்டவர்கள்-     ஸத்திய முனி, புருரவன் ஆதிசேடன், சந்திரன், கருடன்.

கருடன் தன் தாயின் அடிமைத் தளையைத் தீர்க்க அமிர்தம் கொண்டுவர வேண்டிய நிலையேற்பட்டது. அதற்கு வேண்டிய மகாபலத்தையும்
சக்தியையும் இவ்விடத்திலிருந்துதான் மஹாவிஷ்ணுவைக் குறித்துத் தவமிருந்து பெற்றான் என்பர்.

சுவேதத் தீவில் பகவானுடைய கோட்டை வாசற் காவல் பூண்ட தச்சகன் என்பவன் கோபங்கொண்ட துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு
உடனே பாம்பினுருவத்தையடைந்து பூமியில் பல இடங்களிலும் திரிந்து இறுதியில் இத்தலத்தை அடைந்த மாத்திரத்தில் பகவானின் அனுக்கிரகத்தால்
முன்பு போலவே விஷ்ணு சிங்கார ரூபத்தையடைந்தான்.

இங்கு சந்திரனால் ஆராதிக்கப்பட்ட பிம்பம் ஸத்திய புஷ்கரணிக்கு தெற்கில் ததிவாமன மூர்த்தியாய் உள்ளது.-இது முழுமையும் சந்திர காந்தக் கல்லினால் அமைக்கப்பட்டது.

அதற்கு மேற்கில் திருமெய்ய மலைக்குத் தென்புறம் அடிவாரத்தில் மிக்க அழகுள்ளதாகவும், சயன மூர்த்தியாகவும் திகழ்பவர் ஆதிசேடனால்
அமைக்கப்பட்டு ஆராதிக்கப்பட்டவராகும்.

மெய்யமலையின் உச்சியில் கருடனால் பிரதிட்டை செய்யப்பட்ட பிம்பம் உயர்ந்ததான ஒரு கருடப் பச்சைக் கல்லினால் அமைக்கப்பட்டதாகும்.

ஆதிசேடன் தனக்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள சர்வஞானமும் தெரியவேண்டுமெனப் பிரார்த்தித்த தலம், எனவே இச்சேத்ரம் அஞ்ஞான
இருள் நீக்கி மோட்சம் தரத்தக்கதாகும்.

தற்போதுள்ள ஆலய அமைப்பு பல்லவ மன்னர்களின் குடவரைக்கல் கோவில்கள் என்பதின் அடிப்படையில் வருவதாகும். பல்லவ மன்னன்
இரண்டாம் நரசிம்மவர்மனால் (இப்போதுள்ளவாறு) கட்டப்பட்டதாகும்.

இங்கு ஆதிசேடனில் சயனித்துள்ள பெருமாள் ஸ்ரீரங்க நாதனைவிட மிகவும் நீளமானவர். இதற்கு அருகில் உள்ள சுவற்றில் பிரம்மன் முதலிய சகல
தேவர்களும் எழுந்தருளியுள்ளனர்.

ஆதிசேடன் இத்தலத்தைப் பாதுகாப்பதாக ஐதீகம். இவன் பாதுகாப்பிலிருந்த பெருமானை ஒரு முறை அசுரர்கள் திருட்டுத்தனமாய் தூக்க
வந்ததாயும் ஆதிசேடன் விஷக் காற்றைவிட்டு அந்த அசுரர்களை அழித்ததாகவும் வரலாறு. இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் முகத்தான் இங்குள்ள
ஆதிசேடன் வாயிலிருந்து விஷ ஜு வாலைகள் செல்வது போன்று செதுக்கப் பட்டிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.

ஆள் ஆய் உனக்கு அன்பு ஆய் ஆசை ஆய் நாணிலி ஆய்
வாளா மனைவி என்று வாழ்வேனைக் கேளாய்
திரு மெய்ய மாயா சிலைகால் வளைத்து
வரும் எய்ய மாயா மதன் –43-

திரு மெய்ய மாயா
உனக்கு
ஆள் ஆய்
அன்பு ஆய்
ஆசை ஆய்
நாணிலி ஆய் -யானே என் காமத்தை வெளியிட்டு புலம்பும் படி -வெட்கம் இல்லாமல் –
வாளா -பெயர் மாத்ரத்திலே -மனைவி என்று வாழ்வேனைக்
கேளாய் -நீ கேளாமல் உபேஷித்து விட்டாய்
மாயா மதன் -அழிந்து ஒழியா மன்மதன்
சிலைகால் வளைத்து வரும் எய்ய -என் செய்வேன்
நீ கேட்டால் தான் நான் வாழ்வு பெறுவேன் –

சத்ய கிரி -சத்ய தேவதைகள் -சத்ய கிரி நாதனை குறித்து -தவம் இருந்த ஸ்தலம் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருப் புல்லாணி-

March 24, 2024

மூலவர் -கல்யாண ஜகந்நாதன் / வீற்று இருந்த திருக் கோலம் கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கல்யாண வல்லி -பத்மாசனித் தாயார்
விமானம் -கல்யாண விமானம்
தீர்த்தம் -ஹேம -சக்ர தீர்த்தம் -ரத்நாகர சமுத்திரம்
ஸ்தல வ்ருக்ஷம் -அஸ்வத்த வ்ருக்ஷம்
மங்களா சாசனம் -திரு மங்கையாழ்வார்

ஆதி ஜெகந்நாத க்ஷேத்ரம் -புல்லாரண்ய க்ஷேத்ரம் -தர்ப்பை புள் நிறையா விளையும் க்ஷேத்ரம் –
புல்லவர்-காவலர்- கண்வர் ஆகிய ரிஷிகளின் தவத்திற்காகப் பெருமாள் அஸ்வத்த மரமாகத் தோன்றினார்
இன்றும் ஒரு பெரிய அஸ்வத்த மரம் சந்நிதிக்குப் பின் இருக்கிறது -அஸ்வத்த நாராயணர் சந்நிதி
தர்ப்ப சயனப் பெருமாள் -தயாரித்த சக்ரவர்த்தி ஜெகந்நாதப் பெருமாளை வேண்டியே ராமனைப் பெற்றார் –
தை அம்மாவாசை சேது சமுத்திர கூட்டம் மிக்கு -இருக்கும் -புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே
உத்சவர் – தெய்வச்சிலையார் நின்ற திருக் கோலம் –

மூலவர் ஸ்ரீ ஆதி ஜகந்நாதன், ஸ்ரீ சக்கரவர்த்தித் திருமகன்
கோலம் நின்ற, சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன்
தாயார் ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ பத்மாஸநி
தீர்த்தம் ஸ்ரீ ஹேம தீர்த்தம், ஸ்ரீ ரத்னாகர சமுத்ரம்
விமானம் ஸ்ரீ கல்யாண விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ கல்யாண வல்லீ ஸமேத ஸ்ரீ கல்யாண ஜகந் நாதாய நமஹ

—————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -21-பாசுரங்கள் மங்களாசாசனம் –

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி மண நீழல் வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே –9-3-1-

உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தேன் தொழுதும் எழு
முருகு வண்டுண் மலர்க்கைதையின் நீழலில் முன்னொரு நாள்
பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
பொருது முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே -9-3-2-

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே —9-3-4-

உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம்
புணரி யோதம் பணில மணி யுந்து புல்லாணியே –9-3-5-

எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தென் தொழுதும் எழு
வள்ளல் மாயன் மணி வண்ணன் எம்மான் மருவும் இடம்
கள்ளவிழும் மலர்க்காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே –9-3-6-

பரவி நெஞ்சே தொழுதும் எழு போயவன் பாலமாய்
இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேற்கொண்டு வெண் திரை
புரவி என்னப் புதம் செய்து வந்து யுந்து புல்லாணியே–9-3-7-

அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய்ச்
சாலமதாகித் தகவொன்றிலர் நாம் தொழுதும் எழு
உலவு கானல் கழி யோங்கு தண் பைம்பொழி லூடிசை
புலவு கானல் கழி வண்டினம் பாடு புல்லாணியே–9-3-8-

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர்ப்
பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாத லில்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பராய்ப்
போதுமாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே –9-3-9-

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை
வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடல் வைகுந்தமே –9-3-10-

காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்
ஏவாயின் ஊடு இயங்கும் எக்கில் கொடிதாலோ
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே –9-4-1-

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே மாலகிப் பொன் பயந்தேன்
பொன்னங்கழிக் கானல் புள்ளினங்காள் புல்லாணி
அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனைச் செப்புமினே –9-4-2-

வவ்வித் துழாயதன் மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வியறியாது நிற்கும் கொல் நித்திலங்கள்
பவ்வத்திரை யுலவு புல்லாணி கை தொழுதேன்
தெய்வச் சிலையார்க்கு என் சிந்தை நோய் செப்புமினே-9-4-3-

பரிய விரணியதாக மணி யுகிரால்
அரியுருவாய்க் கீண்டான் அருள் தந்தவா நமக்குப்
பொரு திரைகள் போந்துலவு புல்லாணி கை தொழுதேன்
அரி மலர்க் கண்ணீர் ததும்ப வந்துகிலும் நில்லாவே –9-4-4-

வில்லாலிலங்கை மலங்கச் சரம் துரந்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும்
எல்லாரு மென் றன்னை யேசிலும் பேசிடினும்
புல்லாணி யெம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே–9-4-5-

சுழன்று இலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்
அழன்று கொடிதாகி யஞ்சுடரில் தான் அடுமால்
செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கை தொழுதேன்
இழந்து இருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே–9-4-6-

கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா வாடல்
தினை யேனும் நில்லாது தீயில் கொடிதாலோ
புனையார் மணி மாடப் புல்லாணி கை தொழுதேன்
வினையேன் மேல் வேலையும் வெந்தழலே வீசுமே –9-4-7-

தூம்புடைக் கை வேழம் வெருவ மருப்பொசித்த
பாம்பின் அணையான் அருள் தந்தவா நமக்குப்
பூஞ்செருந்திப் பொன் சொரியும் புல்லாணிக் கை தொழுதேன்
தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர் வெந்தழலே–9-4-8-

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்குப்
போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன்
ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே –9-4-9-

பொன்னலரும் புன்னை சூழ் புல்லாணி யம்மானை
மின்னிடையார் வேட்கை நோய் கூர விருந்ததனைக்
கன்னவிலும் திண தோள் கலியன் ஒலி வல்லார்
மன்னவராய் மண்ணாண்டு வானாளும் உன்னுவரே–9-4-10-

மன்னும் மறை நான்குமானானை புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் –பெரிய திருமடல் – 131-

இத்தலவரலாறு வியாசபகவானால் எழுதப்பட்ட 18 புராணங்களில் ஒன்றான ஆக்கினேய புராணத்தில் 9 அத்தியாயங்களில் பேசப்படுகிறது.

திரேதாயுகத்தின் விபவ அவதாரமான இராமாவதாரத்திற்கும் முற்பட்டது இத்தலம், ஸ்ரீ இராமனின் தந்தை தசரதனால் பூஜிக்கப்பட்டதெனில் தொன்மை
எழுத்தில் அடங்குந் தன்மையதன்று.

சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லற் பொருட்டு இராமபிரான் வானர சேனையுடன் புறப்பட்டுச் சென்று தென்கடற்கரையடைந்து
(சேதுக்கரை) கடலைக்கடக்க உபாயஞ் சொல்லவேண்டும்மென்று அக்கடலரசனான வருணணைப் பிரார்த்தித்து 7 நாட்கள் பிரயோபவேசமாக
(தர்ப்பைப் புல்லான நாணலில்) கிடந்த தலமாதலால் இத்தலம் வடமொழியில் தர்ப்பசயனம் எனவும், (இராமன் தர்ப்பசயன ராமன் எனவும்) தமிழில்
புல்லணை எனவும் பெயராயிற்று.

இராமபிரானே இத்தலத்து பெருமாளைப் பூஜித்தான். திருவரங்கனைப் போன்று இவரும் பெரிய பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார். இத்தலத்தில்
உள்ள ஆதிஜெகநாதப் பெருமாளை இராமன் பூஜித்து அவரால் கொடுக்கப்பட்ட வில்லைப் பெற்று இராவண வதஞ்செய்ததாகவும் வரலாறு.
பூரியில் ஜெகந்நாத சேத்திரத்தில் அரூபியாக திகழும் இப்பெருமாள் இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு கரங்களுடன் ஸ்வரூபராய்த் திகழ்கிறார்.

புல்லவர், கண்ணுவர், காலவர் என்ற மூன்று மஹரிஷிகளும் இப்புண்ணிய பூமியில் தவமியற்ற அவர்களுக்காக பகவான்
வைகுண்டத்திலிருந்து இத்தலத்திற்கு வந்து அஸ்வத்தமாக (அரசமரமாக) பொன் மயமாய் அவதரித்தார். இந்த அரச மரத்தையே உபாஸகர்கள்
அஸ்வந்த நாராயணன் வடிவமாக தியானித்தனர்.

இத்தலத்தை வடமொழியில் புல்லாரண்யம் என்றும் தமிழில் புல்லணை என்றும் கூறுவர். வடமொழிச் சொல்லுக்கு மலர்ந்து மலர்கள் அடர்ந்த காடு
என்றும் முனிவர் தவஞ்செய்த காடு என்றும் இருபொருள் கொள்ளலாம்.

புல்லணை என்பதற்கு திருப்புல் – அதாவது தருப்பை அப்புல்லை அணைந்து ஸ்ரீராமன் பள்ளி கொண்டதால் புல்லணை என்றும், தருப்பை
புற்கள் (நாணற்புதர்கள்) அடர்ந்தோங்கி வளருங்காடு என்றும் பொருள்படும்.

இராமன் இலங்கையினின்றும் திரும்புகையில் மீண்டும் இவ்விடத்திற்கு வந்தபோது பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்கி இங்கு பட்டாபிஷேகம் செய்து
கொண்டதால் பட்டாபிராமன் எனவும் திருநாமம் உண்டாயிற்று.

மூலவர்- ஆதிஜெகந்நாதன் (தெய்வச்சிலையார்) நின்ற திருக்கோலம். சக்ரவர்த்தி திருமகன், தர்ப்பசயனம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்–   கல்யாணவல்லி, பத்மாஸனி என்ற இரண்டு தேவிமார்கள்.
உற்சவர்–   கல்யாண ஜெகந்நாதன்

தீர்த்தம்-மொத்தம் 10 தீர்த்தங்கள். சக்கர தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம், வருண தீர்த்தம், தரும தீர்த்தம், ஆதிஸேது (சேதுக்கரை) ராமதீர்த்தம் போன்றன
முக்கியமானவைகள்.
ஸ்தலவிருட்சம்- அஸ்வத்த விருட்சம் (அரசமரம்)
விமானம்–   கல்யாண விமானம் (மொத்தம் 7 விமானங்கள்)
காட்சி கண்டவர்கள்–   அச்வத்த நாராயணன், புல்லர், சமுத்திரராஜன்.

கடற்கடவுள் தன் பத்தினியோடு இராமனைச் சரணமடைய அவனுக்கு மோட்சமளித்த ஸ்தலம்.

புல்லவர், கண்ணுவர், சமுத்திர ராஜன், வீடணன், போன்றோர்எம்பெருமானை இவ்விடத்துச் சரண் புகுந்து பரமபதம் பெற்றதால் இது ஒரு
சரணாகதித் தலம் சரணாகதி தத்துவத்திற்கு 108 திவ்யதேசங்களில் இது தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வால்மீகி இராமாயணம், துளசிராமாயணம், மஹாவீர சரிதம், ரகுவம்சம் போன்ற நூல்களில் இத்தலம் குறிக்கப்படுதல் இதன் தொன்மைக்குச்
சான்று. சங்க காலத்து புலவர் புல்லங்காடர் என்பவர் இவ்வூரினர்.
இவ்வூரின் பெயரை வைத்தே அவரை விளித்தமை இவ்வூரின் தொன்மைப் புகழுக்கோர் சான்று.

இங்கு ஸ்தல விருட்சமாக அமைந்துள்ள அரசமரம் (அசுவத்தம்) மிகச்சக்தி வாய்ந்தது. லட்சுமி அரசமரத்தில் உறைகிறாள் என்றும், மரங்களில்
நான் அரசமரமாக உள்ளேன் (அச்வத்த ஸர்வ விருட்சாணாம்) என்று கீதையில் கண்ணனும் கூறியது. இதன் சிறப்பை விளக்கும். புத்திரப்பேறு
இல்லாதவர்கள் ஸேதுவில் நீராடி இத்தலத்தில் உள்ள மூர்த்தியை வணங்கி இங்குள்ள தெய்வாம்சம் பொருந்திய அரசமரத்தினடியில் நாகப் பிரதிஷ்டை,
செய்து பால்ப் பாயாசம் அருந்தினால் புத்திரப்பேறு உண்டாகுமென்பது புராண வரலாறு. இம்மரத்தை பக்திச் சிரத்தையோடு வலம் வந்தால் ஏற்படு நன்மைகளைப் பற்றிக் கீழ்க் காணும் கவிதை விளக்குகிறது.

பெருவயிறு கண்டமாலை, உதரவலி அண்ட வாயு, பிரமியகிரந்தி, சூலை, தலைநோவும்
இருமலொடு, தந்தவாயு, குருடு, செவிடு, சொல் ஊமை இவைகள் முதல் தொந்த ரோக வினையாவும்
ஒருநொடியில் அஞ்சி ஓடும் வறுமையொடு சஞ்சிதாவி யுபரியனடைந்த பாவம் அவைதாமும்
மருமலர் பிறந்த கோதை மருவி மகிழ்புலாணி வளர் அரசு கண்ட பேரை அணுகாவே”

தர்ப்பசயன ராமன், ரசாயனச் சத்து பொருந்திய சக்ர தீர்த்தம் இவ்விரண்டும் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

ஆதிஸேது, என்றழைக்கப்படும் சேதுக்கரை இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. ரத்னாகாரம் என்றும் இதனை அழைப்பர். ஸேது என்ற
வட சொல்லுக்கு “அணை” என்று பெயர். எனவே ஸ்ரீ வைஷ்ணவர்கள் இந்த சேதுவைத் “திருஅணை” என்பர். ஒரு காலத்தில் இந்த ஸேதுவே (திரு
அணை) இந்தியாவின் தெற்கெல்லையாகத் திகழ்ந்தது என்பதை “ஆதிஸேது ஹைமாசலம்” என்று பழங்கால நூல்களில் கூறுவதிலிருந்து அறியலாம்.

கண்ணன் திருமேனிபட்ட பிருந்தாவனம் என்ற நெருஞ்சிக்காடு புனிதம் பெற்றது போல், இராமனின் சம்பந்தத்தால் இந்த ஸேதுவும் மேன்மை
பெற்றது. இந்த ஸேதுக் கரைக்குப் பக்கத்தில் கடலுக்குள் கிழக்கே சற்று தள்ளி ராமன் கட்டிய அணை என்று கூறப்படும் நீண்டதொரு “கல் அரண்”
தென்படும். இதன் அருகில் சென்று பார்ப்பது சகல பாவங்களையும் போக்கும்.என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கடற்கரையில் இராம தூதனான அநுமான் தென்றிசை நோக்கி கூப்பிய கரங்களுடன் இராம தியானத்தில் ஆழ்ந்துள்ள காட்சி மிகவும் எழில்
வாய்ந்ததாகும். இந்த ஆஞ்சநேயரும் மிகப் பெரும் வரப்பிரசாதியாக மக்களின் துன்பங்களைப் போக்கி அருள் பாலிக்கிறார்.

இராமாயணத்தோடும், இராமாயணம் பேசுவோருடனும் நீங்காத் தொடர்பு கொண்டது இத்தலம்.

இத்தலத்தில் கிருஷ்ண பரமாத்மா தொட்டில் கண்ணணாக அவதரித்துள்ளார். தசரதர் புத்திரப் பேற்றை வேண்டி இங்கு வந்து புத்திர
காமேஷ்டி யாகம் செய்தாரென்பர். அவர்கள் இங்கு செய்த யாகத்தின் பயனாகவே நான்கு வேதங்களும் இராமன் முதலான 4 புத்திரர்களாக
அவதரித்தனர் என்பது வரலாறு. எனவே இன்றளவும் இத்தலம் புத்திரப் பேற்றை நல்கும் புனித தலமாகக் கொள்ளப்படுகிறது.

புல்லை, அந்தாதி, திருப்புல்லாணி மாலை, தெய்வச்சிலையான் ஸ்துதி, வாசனமாலை, புல்லாணிப் பெருமாள், நலுங்கு போன்ற நூல்களும் இத்தலத்தைப் பற்றி செய்திகள்  தருகின்றன.

வெள்வேர் கவுரியிர் தொன் முதுகோடி முழங்கிடும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் ராமன் அருமறைக் கவித்த பல்வீழ் ஆலம் போல் ஒலி அவிந்த தன்றிவ் வழுங்கலூரே”-அகநானூற்றின் 70வது பாடல்
வேலினை உடைய பாண்டியரது மிக்க பழமையுடைய திருவணைக் கரையின் அருகில் முழங்கும் இயல்பினதாக பெரிய கடலில் ஒலிக்கின்ற துறைமுகத்தில் வெல்லும் போரினில் வல்ல இராமன் அரிய மறையினை ஆய்தற் பொருட்டாக புட்களின் ஒலி இல்லையதாகச் செய்த
பலவிழுதுகளையுடைய ஆலமரம் போல இவ்வூரில் எழும் ஒலி அவிந்து அடங்கியது.

இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் சேதுபதிகள் தொன்றுதொட்டு இத்திருத்தலத்திற்கு ஆற்றும் தொண்டு அவர்தம்
பெருமையை வரலாற்றோடு இணைக்கும் சிறப்பை பெற்றதாகும்.

ரத்னாகாரம் எனப்படும் இந்த சேதுவை கண்ணுற்ற பேர்கட்குப் பாவங்கள் இல்லையென்று இராமபிரானே தெரிவித்துள்ளார். “திரு அணை
காண அருவினை இல்லை” என்று இதைக் கூறுவர். இதன் மேன்மையைக் கம்பர்.

மெய்யின் ஈட்டத்து இலங்கையர் மேன்மகன்
மெய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்”

எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த நிகழ்வினை சமீபகால விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது. ஆம். விண்வெளியில்
உலகைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளிக்கலம் ஒன்று இந்த சேது அணையை முழுவதுமாகப் படம் பிடித்துக் காட்டி நம் புராணங்கூறுவது
யாதும் பொய்யே அல்லவென்றும், முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்றும் நிரூபணம் செய்துள்ளது.

விபீடணன் சரணாகதிக்கு வந்துள்ளதை இராமபிரானுக்கு தெரிவித்து அவனுக்கு அடைக்கலம் கொடுத்தருள வேண்டுமென்ற பாவனையில் சிரந்தாழ்த்தி, வாய் புதைத்து நிற்கும் அனுமனின் தோற்றம் மனமுருக வைக்கிறது. இது போன்ற ஆஞ்சநேயரை மற்ற திவ்யதேசத்தில் காண்பதரிது.

மூலவரின் திருநாமத்தை,
பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன்
தெய்வச் சிலையாற் கென் சிந்தை நோய் செப்புமினே – என்று திருமங்கையாழ்வார் எம்பெருமானின் பெயரை இதில் குறிப்பிடுகிறார்.

மத யானைக் கோள் விடுத்து மா முதலை கொன்ற
கதையால் இதயம் கரையும் முதல் ஆய
புல்லாணி மாலே புறத்தோர் புகழ் இருப்பு
வல் ஆணி என் செவிக்கு மாறு –44-

முதல் ஆய புல்லாணி மாலே
மத யானைக் கோள் விடுத்து மா முதலை கொன்ற கதையால் இதயம் கரையும்
அது இல்லாமல்
புறத்தோர் புகழ்-தேவதாந்த்ரங்கள் யுடைய புகழ்
இருப்பு வல் ஆணி என் செவிக்கு மாறு –இரும்பு போன்ற வழிய ஆணி போலே
செவிக்கு இனாத கீர்த்தியார் –

த்ரஷ்டவ்யர் அல்லாரோ பாதி ஸ்ரோதவ்யரும் அல்லர் -கேட்க வேண்டி இருந்தி கோளேயாகிலும் -பித்ருவத பிரசத்தி என்ன –
தத் பலமான பிஷாட நசாரித்ர ப்ரதை என்ன -அத்வரத்வம்ச கதை என்ன -ஸ்வ ஸூ ரவதை கதை என்ன இத்யாதி
ஸ்ரவண கடுகமான கீர்த்தியை யுடையராய் இருப்பார் -ம்ருதனான புத்ரனை சாந்தீபனுக்கு மீட்டுக் கொடுத்தான்
புனராவ்ருத்தி இல்லாத தேசத்தின் நின்றும் விதிக்க புத்ரர்களை மீட்டுக் கொடுத்தான்
என்றும் இத்யாதிகளாலே சம்ச்ரவே மதுரமான கீர்த்தியன் இறே
திருப் புல்லணை மருவி திருப் புல்லாணி -தர்ப்ப சயன பெருமாள் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருக் கோட்டியூர்

March 24, 2024

மூலவர் -உரக மெல்லணையான் -சவும்ய நாராயணன் / புஜங்க சயனம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -திரு மா மகள் நாச்சியார்
விமானம் -அஷ்டாங்க விமானம்
தீர்த்தம் -தேவ புஷ்கரிணி
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -பேயாழ்வார் -திருமழிசை யாழ்வார் -பெரியாழ்வார் -திருமங்கை யாழ்வார்

கதம்ப மகரிஷி ஆஸ்ரமத்தில் தேவர்கள் கூடி ஹிரண்ய கசிபுவை அளிக்க ஆலோசனை -பண்ண கோசடியாக வந்ததால் கோஷ்டீ புரம் –
திருமந்த்ராரார்த்தம் உபதேசம் பெற ஸ்வாமி எம்பெருமானார் 18 தடவை எழுந்து அருளி உபதேசம் பெற்றார் –
அஷ்டாங்க விமானம் மீது எறி ஆசை யுடையவர்களுக்கு எல்லாம் திரு மந்த்ரம் உபதேசித்து எம்பெருமானார் ஆனார் –
மூன்று தளம் -இங்கும் /- உத்சவர் வெள்ளியில் –

மூலவர் ஸ்ரீ உரக மெல்லணையான்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ சௌம்ய நாராயணன்
தாயார் ஸ்ரீ திரு மா மகள் நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ தேவ புஷ்கரணி
விமானம் ஸ்ரீ அஷ்டாங்க விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ திரு மா மகள் நாச்சியார் ஸமேத ஸ் ரீசௌம்ய நாராயணாய நமஹ

————————

ஸ்ரீ பெரியாழ்வார் -22-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமழிசைப் பிரான் -1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -13-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

மொத்தம் -39-பாசுரங்கள் மங்களாசாசனம்

———–

ஸ்ரீ பெரியாழ்வார் -22-பாசுரங்கள் மங்களாசாசனம்

வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணைய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே–1-1-1-

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பர்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்
றாடுவார்களுமாய ஆயிற்று ஆய்ப்பாடியே -1-1-2-

பேணிச் சீருடை பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்கு போதுவார்
ஆண் ஒப்பர் இவர் நேரில்லை காண் திரு
வோணத்தான் உலகாளும் என்பார்களே -1 -1 -3-

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறு நெய் பால் தயிர் நன்றாக தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனராய் ஆய்ப்பாடி ஆயரே –1-1-4-

கொண்ட தாளுறி கோலக் கொடு மழுத்
தண்டினர் பறியோலை சயனத்தர்
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் –1-1-5

கையும் காலும் நிமிர்த்து கடார நீர்
பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித் தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டால் பிள்ளை வாயுளே 1-1-6

வாயுள் வையகம் கண்ட மட நல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அரும்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே -1-1-7-

பத்து நாளும் கடந்த விரண்டா நாள்
எத்திசையும் சயமரம் கோடித்து
மத்த மா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே–1-1-8-

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்து கொள்ளின் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடிக்காலமையால் நான் மெலிந்தேன் நங்காய் -1-1-9-

செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே–1-1-10-

கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன்
சங்கம் பிடிக்கும் தடக்கைக்கு தக்க நல்
அங்கம் உடையதோர் கோல் கொண்டு வா அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா -2 6-2 –

நா அகார்யம் சொல்லிலாதவர் நாள் தோறும் விருந்து ஒம்புவார்
தேவ கார்யம் செய்து வேதம் பயின்று வாழ் திருக் கோட்டியூர்
மூவர் காரியமும் திருத்தும் முதல்வனை சிந்தியாத
பாவ காரிகளைப் படைத்தவன் எங்கனம் படைத்தான் கொலோ -4 4-1 –

குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய்
செற்றம் ஓன்று இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
துற்றி எழ உலகு உண்ட தூ மணி வண்ணன் தன்னைத் தொழாதார்
பெற்ற தாயர் வயிற்றினை பெரு நோய் செய்வான் பிறந்தார்களே – 4-4 2-

வண்ண நன் மணியும் மரகதமும் மழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக் கோட்டியூர் திருமாலவன் திரு நாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ண கிலாது போய்
உண்ணக் கண்ட தம் மூத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்களே -4-4-3 –

உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல் மட வன்னங்கள்
நிரை கணம் பரந்து ஏறும் செம்கமல வயல் திருக் கோட்டியூர்
நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன தான் கொலோ -4 4-4 –

ஆமையின் முதுகத்திடை குதி கொண்டு தூ மலர் சாடிப் போய்
தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர்த் திருக் கோட்டியூர்
நேமி சேர் தடம் கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி புல்லை திணிமினே -4 -4 -5-

பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே – 4-4 6-

குருந்தம் ஓன்று ஒசித்தானோடும் சென்று கூடி யாடி விழா செய்து
திருந்து நான் மறையோர் இராப் பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனை கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ – 4-4-7-

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம்கண் மால் திருக் கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4 4-8 –

கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4 9-

காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியர்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே – 4-4 10-

சீத நீர் புடை சூழ் செழும் கனி வுடைத் திருக் கோட்டியூர்
ஆதியான் அடியாரையும் அடிமை இன்றித் திரிவாரையும்
கோதில் பட்டர் பிரான் குளிர் புதுவை மன் விட்டு சித்தன் சொல்
ஏதமின்றி உரைப்பவர் இருடீகேசனுக்கு ஆளரே – 4-4 11-

————————–

ஸ்ரீ திருமழிசைப் பிரான் -1-பாசுரம் மங்களாசாசனம்

குறிப் பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த
குறிப் பெனக்கு நன்மை பயக்க – வெறுப்பனோ?
வேங்கடத்து மேயானை மெய் வினை நோயெய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்.–நான்முகன் திருவந்தாதி – 34

—————-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -13-பாசுரங்கள் மங்களாசாசனம்

தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய்
ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன்
காரேய் கடலே மலையே திருக் கோட்டி
ஊரே உகந்தாயை உகந்தேன் அடியேனே –7-1-3-

எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே –9-10-1-

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்குஇறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம்
தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே –9-10-2-

வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை சந்தந முந்தி வந்தசை
தெள்ளு நீர் புறவில் திருக் கோட்டியூரானே —9-10-3-

ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பிலோர்
கூறு தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்
நாறு செண்பக மல்லிகை மலர் புல்லியின் இளவண்டு நன்னறும்
தேறல் வாய் மடுக்கும் திருக் கோட்டியூரானே –9-10-4-

வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன் விண்ணவர் கோன் மது மலர்
தொங்கல் நீண் முடியான் நெடியான் படி கடந்தான்
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகமீது உயர்ந்தேறி வானுயர்
திங்கள் தான் அணவும் திருக் கோட்டியூரானே —9-10-5-

காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்
நாவலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு எனத்
தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே -9-10-6-

கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்
தென்றல் வந்து உலவும் திருக் கோட்டியூரானே –9-10-7-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே –9-10-8-

கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் தட மா மலர் மிசை
மேவு நான் முகனில் விளங்கு புரி நூலர்
மேவு நான் மறை வாணரை வகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்
தேவ தேவபிரான் திருக் கோட்டியூரானே–9-10-9-

ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந்
நாலும் ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே –9-10-10-

கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க ஓர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனை
கொம்புலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே. –10-1-9-

பெரிய திருமொழி – பத்தாம் பத்து
ஒன்றாம் திருமொழி – ஒருநல்சுற்றம் – 9

மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் –பெரிய திருமடல் – 125

——————

ஸ்ரீ பூதத்தாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம் –

பயின்றது அரங்கம் திருக் கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்றது
அணி திகழுஞ் சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால். –இரண்டாம் திருவந்தாதி – 46

இன்றா வறிகின்றே னல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்களந்த திருவடியை – அன்று
கருக் கோட்டியுள் கிடந்து கை தொழுதேன், கண்டேன்
திருக்கோட்டி யெந்தை திறம்.–இரண்டாம் திருவந்தாதி – 87

———————–

ஸ்ரீ பேயாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு.–மூன்றாம் திருவந்தாதி – 62-

பிர்ம்மாண்ட புராணத்தில் 6 அத்தியாயங்களிலும், பிரம்ம கைவர்தத்தில் இரண்டு அத்தியாயங்களிலும் இத்தலம் பற்றிச் சிறப்பித்துப் பேசப்படுகிறது.

பிரம்மனைக் குறித்து தவமிருந்த இரண்யன், தனக்கு தேவர்களாலும், மனிதர்களாலும், விலங்குகளாலும், எந்த ஆயுதத்தாலும் மரணம் நேரக்கூடாது
என்று வரம் பெற்று, தேவர்களையுந் துன்புறுத்தி, உலகெங்கும் நமோ ஹிரண்யாய நமஹ என்றே சொல்லுமாறு செய்து வந்தான். இரண்யனின்
இம்சை பொறுக்காத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட, சிவன் வரங்கொடுத்த பிரம்மாதான் இதற்கு உபாயம் சொல்ல முடியுமென்று சொல்ல
பிரம்மரோ ஸ்ரீமந் நாராயணன் ஒருவனால்தான் இரண்யாட்சகனுக்கு சரியான முடிவு கட்ட முடியும் என்று கூற எல்லோரும் திருமால் பள்ளிகொண்டுள்ள
பாற்கடலுக்கு விரைந்து பணிந்து நின்று விபரங்கூறினர்.

இவர்களின் குறையைக் கேட்ட ஸ்ரீமந் நாராயணன் எல்லா உலகங்களிலும் இரண்யனின் ஆதிக்கம் மேலோங்கிவிட்டது.

இரண்ய நாமம் ஒலிக்காத இடம் எங்காவது இருந்தால் கூறுங்கள் அங்கு சென்று நாமெல்லாரும் ரஹஸ்யமாய் இரண்யவதம் செய்வது பற்றிப் பேசலாம்
என்று சொன்னதும், பூவுலகில் ஸ்ரீமந் நாராயணனை சீராப்தி நாதனாகக் காண வேண்டுமென்று “கதம்பரிஷி” கடுந்தவம் புரிகிறார். எந்நேரமும் நாராயண
மந்திரம் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த ஒரு ஆஸ்ரமம் தான் இரண்யாதிக்கம் செல்லாத இடம். இப்போது நாம் கூடிப் பேசுவதற்கு அதுவே
உகந்த இடம் என்று பிரம்மதேவன் கூற தேவர்களும் மும்மூர்த்திகளும் கதம்பரிஷியின் ஆஸ்ரமத்திற்கு எழுந்தருளி, அம்முனிவரின் தவப்பயனாக
சீராப்திநாதனாக எம்பெருமான் அவனுக்கு காட்சி கொடுத்து, இரண்ய சம்ஹாரத்தைப் பற்றி பேசி முடித்தனர். பேசி முடித்தபின், மற்றெல்லோரையும்
கதம்பரிஷியின் ஆஸ்மரத்திலேயே மறைந்திருக்கச் செய்து தான் மட்டும் திருப்பாற்கடலுக்கு எழுந்தருளினார் ஸ்ரீமந்நாராயணன்.

 மூம்மூர்த்திகளுடன், தேவர்களும், ஸப்தரிஷிகளும் கூட்டம் கூட்டமாய் இவ்விடத்திற்கு (கோஷ்டி கோஷ்டியாய்) வந்தமையால் திருக்கோஷ்டியூர்
ஆயிற்று.   (திருக்கு + ஓட்டியூர்) திருக்கு என்றால் பாவம். எனவே பாவங்களை ஓட்டக்கூடிய ஊர் என்றும் பொருள்படும்.

திருக்கோட்டியூர் அமைந்துள்ள இடத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம் பின்வருமாறு கூறுகிறது.

“காவேரி நதிக்குத் தெற்குப் பக்கத்தில் விருஷபாசலத்திற்கு (அழகர் கோவிலுக்கு) கீழ்ப்புறத்தில் புண்ணியமாய் சக்தியையுடைய மணிமுத்தா
நதிக்கரையில் பரமாத்ம ஞானம் பிறந்த பாகவதர்கள் தங்குமிடமாய் நான்கு யோஜனை விஸ்தீரணமாய் (யோஜனை 10 மைல்) கதம்ப மஹரிஷியின்
ஆஸ்ரமம் அமைந்துள்ளது.  (பிர்ம்மாண்ட புராணம், திருக்கோட்டியூர் க்ஷேத்ர மகிமை சுலோகம் 42, 43)

பாற்கடலுக்கு எழுந்தருளின பரந்தாமன், தனது அருகாமையில் இருந்த சங்கு கர்ணனைப் பார்த்து நீ சென்று இரண்யன் மனைவி வசந்தமாலையின்
வயிற்றில் பிரஹலாதனாகப் பிறக்க கடவாய் எனக் கூற, அவ்விதமே பிரஹலாதன் பிறந்து நாராயண மந்திரத்தைச் சொல்ல, எங்கேயடா உன்
நாராயணன் என்று இரண்யன் கேட்க, தூணிலிருப்பான், துரும்பில் இருப்பான் என, பிரஹலாதன் சொல்ல, இத்தூணில் உள்ளானோ என்று “பிள்ளையைச்
சீறி வெகுண்டு தூண் புடைப்ப, பிறையெயிற் றண்ணல் விழி பேழ்வாய், தெள்ளிய சிங்கமாகிய” தேவாய்த் தோன்றி இரண்யனைக் கொன்று
நரசிம்மவதாரம் முடிவுற்றது.

இதையெல்லாம் அறிந்த கதம்பரிஷி ஸ்ரீமந் நாராயணன் இரண்யனைப் பிடித்தது கொன்றது போன்றவற்றைக் குறிக்கும் மங்கள விக்ரகங்களைத்
தனக்குத் தரவேண்டுமென்று பிரம்மனை வேண்ட, பிரம்மன், தேவசிற்பியான விஸ்வகர்மாவையும், அசுர சிற்பியான மயனையும் அழைத்து தேவலோகத்தில் உள்ளது போன்ற விமானத்தை இவ்விடத்தில் எழுப்புங்கள் என்று சொல்ல, மூன்றடுக்குகள் கொண்டதான அஷ்டாங்க விமானத்துடன் அழகிய கோவிலை நிர்மாணித்து முடித்தனர்.

மூன்று தளங்களுடன் கூடிய இந்த விமானம் மூன்று பதங்களுடன் கூடின மூலமந்திரம் போன்ற தாயும் (ஓம் என ஒருபதம், நமோ என ஒருபதம்,
நாராயண என ஒரு பதம்) விளங்குகிறது.

இரண்யவதம் முடியும் வரை இங்கு தங்கியிருந்த தேவேந்திரனான இந்திரன் இந்திர லோகத்தில் தன்னால் பூஜிக்கப்பட்ட பேரழகு வாய்ந்த
ஸ்ரீபூமி நீளா தேவிகளுடன் கூடின ஸ்ரீ சௌமிய நாராயணனை, கதம்ப மஹரிஷிக்கு கொடுக்க மிக்க சந்தோஷத்துடன் பெற்று அர்ச்சித்து வரலானார்.
கதம்பரிஷியை வாழ்த்தி வணங்கிவிட்டு அனைவரும் தேவருலகெய்தினர்.

மூலவர்-உரக மெல்லணையான் (திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட ஷீராப்தி நாதன்) புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம் (பன்னக மருதுசாயி
என்றும் பெயர்)
உற்சவர்-   சௌம்ய நாராயணன் நின்ற திருக்கோலம்.
தாயார்-  திருமாமகள் நாச்சியார்.
தீர்த்தம்-தேவபுஷ்கரணி (திருப்பாற்கடல்)
விமானம்–  அஷ்டாங்க விமானம்
காட்சி கண்டவர்கள்-   பிரம்மா, தேவர்கள், கதம்ப முனி.

கதம்ப முனி 64 சதுர்யுகங்கள் இப்பூவுலகில் இருந்ததாக பிர்ம்மாண்ட புராணங்கூறுகிறது. எனவே இந்த திவ்யதேசத்தின் தொன்மை எழுத்தில்
அடங்கும் தன்மையதன்று.

மூன்று தளங்களுடன் கூடிய அஷ்டாங்க விமானம் இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும். 108 வைணவ திவ்ய ஷேத்திரங்களில் இங்கும் திருக்கூடல்
என்னும் மதுரையிலும் ஆகமவிதிகட்குட்பட்ட அஷ்டாங்கவிமானம் அமைந்துள்ளது.

முதல் தளத்தில் “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்ததன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற” திருப்பாற்கடல்
நாதனாகப் பள்ளி கொண்ட காட்சி.
பாற்கடலில் இருந்து எழுந்துவந்த காரணத்தால் ஷீராப்தி நாதனாக முதல் தளத்திலும், அதன்பிறகு 2வது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் 3வது
தளத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
தேவர்களின் நடுவில் நின்றமையால் ஸ்தித நாராயணன் எனவும், ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டதால் உரக மெல்லணையான் என்றும்
திருப்பெயர்கள் உண்டாயிற்று.

அஷ்டாங்க விமானத்தின் வடபகுதியை மயனும், தென்பகுதியை விஸ்வகர்மாவாகவும் அமைத்தனர். விஸ்வகர்மாவால் செய்யப்பட்ட பாகத்தில்
இரண்யனைப் பிடித்துக் கொண்ட நரசிம்ம உருவமும், மயனால் செய்யப்பட்ட பகுதியில் இரண்யனைக் கொன்ற நரசிம்ம உருவமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நரசிம்ம மூர்த்திகள் காண்போரை பிரம்மிக்கச் செய்யும் தோற்றமுள்ளவை.

அஷ்டாங்க விமானத்தில் தென்திசை நோக்கிய நரசிம்மனுக்கு தெற்காழ்வான் (தட்சினேஸ்வரன்) என்றும், வடதிசை நோக்கிய நரசிம்மனுக்கு
வடக்காழ்வான் (உத்தரேசுவன்) என்பதும் திருநாமம்.

நகக்கிரகங்களில் சந்திரனின் மகன் புதன். இந்த புதனின் மைந்தன் புருரவன் என்பவன் மிகச்சிறந்த தர்மவானாக இருந்து செங்கோல் செலுத்தி
நாட்டையாண்டுவந்த காலத்தில் கங்கா ஸ்நானம் செய்யும் பொருட்டுதனது விமானத்திலேறி வரும்போது, இத்திவ்ய தேசத்தின் மேல் பறக்க முடியாதபடி
(அஷ்டாங்க விமானத்தின் சக்தியால்) தரையிறங்க நேர்ந்ததும் அதன்பின் இங்குள்ள பெருமானின் சக்தியறிந்து வழிபட்டு, இத்திருக்கோவிலைச் சுற்றி
அந்தணர்களும், பெரியோர்களும், வாழ்வதற்குரிய அழகிய நகரத்தை நிர்மாணித்துச் சென்றான்.   (இக்கதை பிரம்ம கைவர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது.)

மற்ற ஸ்தலங்களில் உள்ளதைப்போன்று பஞ்ச லோகங்களால் அமையாது, தூய வெள்ளியில் உற்சவருக்கு விக்ரகமிருப்பது இன்னொரு
சிறப்பாகும் (இச்சிலை இந்திரன் கொடுத்ததாக ஐதீகம்) வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம்
செய்யப்பட்டது.

வைணவ மத வளர்ச்சியில் ஸ்ரீரங்கத்திற்கு எவ்வளவு ஏற்றமுண்டோ அதற்குச் சமமான ஏற்றம் இந்த திருக்கோட்டியூருக்கு உண்டு. “திருமந்திரம்
விளைந்த திவ்ய தேசம்” என்ற திருப்பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
இராமானுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து 17 முறை இங்குவந்து திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ஞானம் பெறமுயல, 17 முறையும் பல காரணங்களைக் கூறி
திருப்பியனுப்பி இறுதியாக 18வது முறை வந்தபோது இராமானுஜருக்குத் “திருமந்திர உபதேசம்” செய்வித்து இதனை யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது.
அவ்வாறு குருவின் கட்டளையை மீறித் தெரிவித்தால் உமக்கு நரகம்தான் கிடைக்குமென்றார்.
சரி, என்று ஒப்புக்கொண்ட இராமானுஜர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி “எல்லீரும் வாருங்கள்,
திருமந்திரம் தெரிந்து கொள்ளுங்கள்” என்று உரக்கக் கூவி திருமந்திரத்தை எப்படி உச்சரிப்பதென்பதை எல்லோருக்கும் தெரிவித்தார்.

இதனைச் செவியுற்ற திருக்கோட்டியூர் நம்பி விரைந்து வந்து இராமானுஜரை நோக்கி “இராமானுஜரே திருமந்திரத்தைப் பிறருக்கு
உரைத்தால் உமக்கு என்ன தண்டனை கிடைக்குமென்பதை மறந்து விட்டீரா” என்றார்.
அதற்கு இராமானுஜர் “தெரியும் சுவாமீ, இம்மந்திரத்தைப் பிறருக்குச் சொன்னால் எனக்கு நரகம் கிட்டுமென்றீர் பரவாயில்லை, அடியேன் ஒருவன்
நரகம் புகுந்தாலும் பரவாயில்லை. இம்மந்திரம் தெரிந்து உச்சரிக்கும் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் மோட்சம் கிட்டுமே என்றார்.
இதனைக் கேட்டு, ஒரு கணம் சிந்தித்த நம்பிகள் இராமானுஜரை பகவானின் அவதாரம் என்றே கருதி “நீர் தான் எம்பெருமானாரோ” என்று
கூறி கட்டித் தழுவிக் கொண்டார்.
அது முதல் இராமானுஜருக்கு “எம்பெருமானார்” என்னும் திருநாமம் உண்டாயிற்று. இராமானுஜருக்கு, உடையவர், ஸ்ரீபாஷ்யகாரர், திருப்பாவை
ஜீயர் என்னும் திருநாமங்களும் உண்டு.
எனவே வைஷ்ணவ சம்பிரதாய ஏற்றத்திற்கும் ஒரு மறுமலர்ச்சிக்கும் பாசறையாக திருக்கோட்டியூர் திகழ்ந்ததென்பதில் ஐயமில்லை.

அஷ்டாங்க விமானத்தின் மூன்றாவது தளத்திலிருந்து கொண்டுதான் இராமானுஜர் திருமந்திர ரகசிய அர்த்தத்தை வெளியிட்டார். இந்த 3வது
மாடியில் கோபுரத்தின் உச்சியில் ஊரைப் பார்த்தவண்ணம் இராமானுஜருக்கு   சிலை வைக்கப்பட்டு உள்ளது.
திருக்கோட்டியூர் நம்பியின் அவதாரஸ்தலமான இங்கு அவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. திருக்கோட்டியூர் நம்பியின் வம்சா வழியினர்
இன்னமும் இவ்வூரில் வாழ்ந்து வருகின்றனர்.
மற்றவிடத்து இல்லாதவாறு, இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் என்ற மூன்று திருநாமங்களுண்டு.

இங்குள்ள திருக்கோட்டியூர் நம்பிகள் சன்னதியில் அவரின் திருவாராதன மூர்த்தியான ஸ்ரீராமன், சீதை, இலட்சுமணன்,அனுமான், பவிஷ்யதாச்சாரியர் விக்ரகமும் எழுந்தருளியுள்ளன.

திருக்கோட்டியூருக்கு தெற்கில் சுமார் 18 கீ.மி. தொலைவில் அமைந்துள்ள ஒக்கூர் என்னும் ஊரில் வாழ்ந்த சங்ககாலத்துப் பெண்பாற்
புலவர் “ஒக்கூர் மாசாத்தியார்” என்பார் இக்கோவிலைப் பற்றிப் பாடிய பாட்டொன்று புறநானூற்றில் காணப்படுகிறது.

முகம்மதிய படையெடுப்பின் போது இப்பெருமானை (உற்சவரை) கும்பகோணத்தில் மறைத்து வைத்திருந்தனர், என்றும் அதற்கு காரணமாய்
இருந்த அமுதனுக்கு நன்றிப்பாக்கள் பாடப்பட்டன என்றும் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.

பத்ரிகாச்ரமத்தைப் போல இத்தலம் பெருமைவாய்ந்ததெனவும், அதனால் இதனை தென்பத்ரியென்றும் கூறுவர் “நைமிசாரண்யத்தில்
செய்ததவப்பயனும், கங்கை கரையில் நேர்ந்த மரண பலமும் (ஆயுள் விருத்தி) குருச்சேத்திரத்தில் செய்த தனப்பிரயோஜனமும்” ஆகிய இம்மூன்றும்
திருக்கோட்டியூரைச் சேவிப்பதால் கிடைக்குமென்று ப்ரம்மாண்ட புராணத்தில் 47வது ஸ்லோகம் கூறுகிறது. கோஷ்டியூர் போகாதவன் குரங்காய்ப் போவான்
என்பதும் வைணவப் பழமொழி.

மகாமகக் கிணறு (சிம்மக்கிணறு) இங்கு உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு நீராடுவது மிகவும் விசேஷம்.

திருக்கோட்டியூர் வாழ்ந்த செல்வ நம்பிகளைத்தான் பெரியாழ்வார் தம் பாசுரத்தில் அவ்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர் கோன் அபிமான
துங்கன் செல்வன் என்று தனக்கு பரதத்துவ நிர்ணயம் செய்ய உதவி செய்ததைக் குறிக்கிறார்.
இவ்வூரின் செல்வநம்பிகள் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனை புரோகிதர் ஆவர்.

பராசர பட்டர் என்பவர் கூரத்தாழ்வாருடைய திருக்குமாரர். வீரசுதந்திர சிம்மராயன் என்னும், சிற்றரசன் திருவரங்கன் கோயிலை
ஜீர்னோத்தரணம் செய்கையில் “திருவீதி பிள்ளை பட்டர் என்பாரின் திருமாளிகை மதிற்புரத்து மூலையில் இருந்தது. அதை இடித்து அப்புறப்படுத்த
சிற்றரசன் முனைந்தபோது மனம் வெதும்பிய பராசர பட்டர் சிற்றரசனை பகைத்துக்கொண்டு திருவரங்கத்தினின்றும் வெளியேறி 1 1/2 ஆண்டுகள்
திருக்கோட்டியூரில் தங்கி இருந்தார். இவர் கோஷ்டிஸ்தவம் என்னும் நூல் எழுதியுள்ளார்.பராசரபட்டர் ஆண்டாள்மீது அருளியுள்ள ‘நீளாதுங்க’ என்று தொடங்கும் வடமொழிச்சுலோகம் இவ்வூரில் இயற்றப்பெற்றதாகவும் அறிகின்றோம்.

செல்வ நம்பிகள் பெரியாழ்வாரைத் திருக்கோட்டியூருக்கு அழைத்து வந்தபொழுது ஸ்ரீஜெயந்தி உற்சவம் நடைபெற்றது. பக்திப் பரவசத்துடன்
மிகவும் நேர்த்தியான ஆடல்பாடலால் உற்சவம் நடந்ததைக் கண்டு இதுதான் ஆயர்பாடி என்றும், வண்ண மாடங்கள் சூழ்…. திருக்கோட்டியூர் என்று
மங்களாசாசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து தாலாட்டு, நீராட்டல், பூச்சூடல் போன்றனவும் இவருக்கே பாடினதாயும் கொள்வர்.
உரக மெல்லணையான் என்று பெரியாழ்வார் மூலவரையும் திருமாமகட் கினியான் என்று உற்சவரையும் மங்களாசாசனம் செய்கிறார்.
திருமங்கையாழ்வார், திருப்பிரிதி என்ற திவ்ய தேசத்தில் தொடங்கிய பதிகம் மூலமான அர்ச்சாவதார மங்களாசாசனத்தை, திருக்கோட்டியூரில் நிறைவு
செய்கிறார்,

செந்நெற்குடி புலவர் சுப்புராயலு என்பர் சௌமிய நாராயண மூர்த்திப் பிள்ளைத் தமிழ் என்னும் நூலை இப்பெருமானுக்கு யாத்துள்ளார்.

சிவகங்கை சமஸ்தானத்து வாரிசினர் தொன்று தொட்டு இத்தலத்திற்குப் பெருந்தொண்டு புரிந்து வருகின்றனர்.

வான்பார்க்கும் பைங்கூழ் போல் வாளா உனது அருளே
யான் பார்க்க நீ பார்த்து இரங்கினாய்-தேன் பார்ப்பின்
ஓசைத் திருக் கோட்டி யூரானே இன்னமும் என்
ஆசைத் திருக்கு ஒட்டி ஆள் –42-

தேன் பார்ப்பின் ஓசைத் -இள வண்டுகளின் உடைய ரீங்கார ஓசை மிகுந்த
சாரக்ராஹி -எம்பெருமானார் திருக் கோட்டியூர் நம்பியின் இடத்தே திரு மந்த்ரத்தை உபதேசம் கொண்டு அருளி
வெளியிட்டு அருளியதை ஸூ சிப்பிக்கிறார்
திருக் கோட்டி யூரானே-
வான்பார்க்கும் பைங்கூழ் போல் –
வானத்து எழுகின்ற மழையையே எதிர் நோக்குகின்ற பசிய பயிரைப் போலே
வாளா -எப்பொழுதும்
உனது அருளே
யான் பார்க்க -ஆதாரத்தோடு எதிர் நோக்க
நீ பார்த்து இரங்கினாய்-நீ கடாஷித்து அருள் புரிந்தாய்
இன்னமும் என் ஆசைத் திருக்கு ஒட்டி ஆள் –இன்னமும் உலகப் பற்றாகிய மாறுபாட்டை போக்கி என்னை ஆட்கொள்வாயாக-

மண் ஆசை பெண் ஆசை பொன் ஆசை
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை -இருள் தரும் மா ஞாலம் –
திருக் கோஷ்டீ புரம்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்