Archive for December, 2023

ஸ்ரீ ஈட்டில் வியாக்கியானத்தில் வந்துள்ள ஐதிஹ்யங்கள் –ஏழாம் பத்து –

December 14, 2023

ஆண்டாள் ஒருநாள் ஆழ்வானுக்குப் ‘பிள்ளைகள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள்; இவ்விடையாட்டம் ஒன்றும் ஆராயாது இருக்கிறது என்?’ என்ன, ‘பகவத் குடும்பத்துக்கு என்னை இன்று இருந்த கரையச் சொல்லுகிறாயோ? நாளை நான் வாசித்துச் சமையக்கொள்ள அங்கே வரக் காட்டு,’ என்ன, பட்டரையும் சீராமப் பிள்ளையையும் கொடுத்துப் போகவிட, வாசித்துச் சமைந்து பெருமாள் திருவடிகளிலே நிற்க, ‘ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே!’ என்று திருவுள்ளமாக, ‘இவர்கள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள் என்னாநின்றார்கள்,’ என்று விண்ணப்பம் செய்ய, ‘எல்லாம் செய்கிறோம்,’ என்று திருவுள்ளமானர்; பிற்றை நாளே மன்னியைக் கொடு வந்து கொடுத்தார்கள்

அகளங்க பிரஹ்மராயர் அடையவளைந்தான் செய்யாநிற்கச் செய்தே மதிள்போக்குகைக்காக இளையாழ்வான் அகத்தை வாங்கப்புக, பட்டர் அதனைக் கேட்டருளி, ‘வாரீர் பிள்ளாய்! நீர் செய்கிற மதிள் பெருமாளுக்கு இரட்சகம் என்று இராதே கொள்ளீர்; இங்குக் கிடக்கும் நான்கு குடிகளுங்காணும் பெருமாளுக்குக் காவல்; ஆன பின்பு நீர் செய்கிறவை எல்லாம் அழகிது; இவை எல்லாம் நாம் செய்கிறோம் என்றிராதே, பெருமாள்  செய்விக்கிறார் என்று இரீர்; உமக்கு நல்வழி போக உடலாங்காணும்’ என்று அருளிச்செய்தார்.

என் திருமகள் சேர் மார்பனே என்னும் –அனந்தாழ்வான் தான் பெண் பிள்ளையை ‘என் திருமகள்’ என்று திருநாமம் சாத்தினான். பட்டர் பெருமாளிடத்தில் ‘அடியேனை ஸ்திரீதனமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திருவுள்ளம் பற்றவும், நானும், ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று அவ்வழியே ‘அழகிய மணவாளப்பெருமாள்’ என்று நினைத்திருக்கவும் வேணும்,’ என்று வேண்டிக்கொண்டார்

 பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யுமவை கேட்கைக்காக நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுதுசெய்யாநிற்க, இப்பாட்டளவிலே வந்தவாறே ‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே! என்னும்,’ என்று இயலைச் சேர்த்து அருளிச்செய்ய, அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீ ரங்கநாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர் என்று அருளிச்செய்வர். அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு, ‘இவர்க்குப் பகவானை அடைகிறது அணித்தாகிறதோ?’ என்று அஞ்சி இருந்தேன்’ என்று சீயர் அருளிச்செய்வர்–இவர்க்குப் பிராணம் ஒரு காற்று விசேடம் அன்று: ஒரு மிதுநமாயிற்று. ‘திருமகள் சேர் மார்பனாய்க்கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.

பெரிய திருவடியோடே கூட இவர் திருவுள்ளத்தே உலாவுகிறபடி. 1இப்படியே அன்றோ அநுகூலரோடு பரிமாறும்படி?–நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளாநிற்க, வழியிலே திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் கண்டு, ‘ஈஸ்வரனுக்குச் சொரூப வியாப்தியோ, விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, ‘பாஷ்யகாரர் தோற்ற அருளிச்செய்துகொண்டு போந்தது சொரூப வியாப்தியாய் இருக்கும்; ஆகிலும், எம்பார் ஒரு நாள், ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்ததற்பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே விக்கிரஹத்தோடே வியாபித்திருக்கும்,’ என்று அருளிச்செய்யக் கேட்டேன்,’ என்று பணித்தார்.

ஏஷாம் இந்தீவர ஸ்யாம: ஹ்ருதயே ஸூப்ரதிஷ்டித;’-என்பது, ஸ்ரீராமா.-மனமாகிய குகையில் வசிப்பவர்’ என்றும், ‘மனத்தில் இருப்பவரும் புராணபுருஷரும்’ என்றும், ‘அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து’ என்றும், ‘எவர்களுடைய மனத்தில் கருநெய்தல் போன்ற நிறத்தையுடைய பகவான் நன்கு எழுந்தருளி இருக்கிறாரோ’ என்றும், ‘என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற’ என்றும் வருவனவற்றைக் காண்க.

ஸ்ரீவிதுராழ்வான்? ‘மஹாபுத்திமானான அந்த விதுரர் கண்ணனுடைய படுக்கையைத் தடவிப் பார்த்தார்,’ என்கிறபடியே, கடல் கலங்குவது தன்னளவிலே அன்றோ? 3பிள்ளையுறங்காவில்லிதாசர் ‘மஹாமதி என்றது, மதிகேடர் என்றபடியோ?’ என்றார், 4பிள்ளைதாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று சொட்டையை உருவிப் பிடித்துக்கொண்டு சேவிப்பாராம். நம்முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள். 5அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?

ஆழ்வான் ஒருகால், இத்திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் இராமாவதார விஷயமாக்கி நிர்வஹித்தாராம். 2அதற்குக் காரணம்: ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே, பெருமாளுடைய குணத்தில் ஒரு பகுதியே அன்றோ? அல்லாத அவதாரங்கள் எல்லாவற்றிலும் உள்ளது ஆதலின். 3‘பேரெயில் சூழ்கடல் தென்னலங்கை செற்ற பிரான்’ என்றும், ‘மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்றும், மேலே சொல்லிப் போந்த இராமாவதாரத்தினுடைய செயலை அநுசந்தித்து, அவ்வழியாலே அன்றோ அவதாரங்களை அநுசந்திக்கிறது? மற்றைய அவதாரங்களிலே ஈடுபட்டவர்களும் இராமாவதாரம் பிராசங்கிகமாகச் சொல்ல வேண்டி வந்தால், 4‘மனத்துக்கு இனியானை’ என்றே அன்றோ சொல்லுவது?-பட்டர் இராமாவதாரத்தில் போர பக்ஷபதித்திருபர்,’ என்று அவர் அருளிச்செய்யுமது கேட்கைக்காகச் சிறியாத்தான் ஒருநாள், ‘பெருமாளுக்கு எல்லா நன்மைகளும் உளவாகிலும், கழுத்திலே ஓலைக் கட்டித் ‘தூது போ’ என்ன, தூது சென்ற கிருஷ்ணன் நீர்மை இல்லையே!’ என்ன, ‘அது அங்ஙன் அன்றுகாண்; கழுத்திலே ஓலை கட்டித் ‘தூது போ’ என்பார் இல்லாமையாலே தவிர்ந்தாரத்தனை காண்,’ என்று அருளிச்செய்தார்.

ஆளவந்தார் ‘சிசுபாலன் பெற்றிலன்காண்’ என்று அருளிச்செய்வர்; ‘அது என்?’ என்னில், ‘இதற்கு அடியாகச் சொல்லலாவது ஒரு சாதனம் இவன் கையில் இல்லாமையாலே, நாட்டை நலியாமைக்குக் கொற்றவன் வாசலுக்குள்ளே சுழற்றி எறிந்தானத்தனைகாண்,’ என்று அருளிச்செய்வர்-‘காகம, திருமுன்பே எய்த்து விழுகையாலும், இவன் திருநாமத்தைச் சொல்லித் துவங்கரிக்கையாலும், அவன் குணங்கள் நினைத்தபடி விரிவாகப் பெறாதே குறைந்தவகள் ஆயிற்றன’ என்றே அன்றோ சொல்லுகிறது?–பலிபுஜி சிசுபாலே தாத்ருக் ஆகஸ்கரே வா    குணலவ ஸஹவாஸாத் த்வத்க்ஷமோ ஸங்குசந்தீ’-என்பது, ஸ்ரீரங்கராஜஸ்தவம், 3:97. 5‘காகாசுரனிடத்திலும் சிசுபாலனிடத்திலும் சிறிது குணமாயினும் இருந்ததனால் குறைவுபட்டதான் தேவரீருடைய பொறுமை’ என்கையாலே. 6பலபல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை, அலைவலைமை தவிர்த்த அழகன்’ என்றார் அன்றோ பெரியாழ்வாரும்? ‘வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்’ என்றார் திருமழிசையாழ்வார்.

அருச்சுனன் தான் எம்பெருமானைப் பெற்றானோ, இல்லையோ?’ என்று நம்பிள்ளை சீயரைக் கேட்க, ‘உமக்கு அதுகொண்டு காரியம் என்? இது சொன்னவன் எல்லார்க்கும் பொதுவானவனாகில், பகவானுடைய வார்த்தை என்னுமிடம் நிச்சயமாகில், தங்கள் தங்களுடைய கர்மங்கட்குத் தகுதியாகவும் ருசிக்குத் தகுதியாகவும் பெறுகிறார்கள்; பெற்றவர்களை ஆராய்ந்து பார்த்து அதனாலே அன்றே நாம் பற்றப் பார்க்கிறது?’ என்று அருளிச்செய்தார்–சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் இருந்தால், அது குடித்துத்தாகம் கெட்டவனைக் கண்டு அன்றே தாகம் கொண்டவன் தண்ணீர் குடிப்பது?

அம்மங்கி அம்மாள், ‘இத்திருவாய்மொழி (ஆறாந்திருவாய்மொழி-‘பாமரு’)பாடக் கேட்டு அனுபவித்துப் போருமிதற்கு மேற்பட, இதில் ஓடுகிற ஆர்த்திக்கு நம்மாற்பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது என்று பணிக்கும்,’ என்று அருளிச்செய்வர்-ஆர்த்தியாலே இத்திருவாய்மொழியில் கூப்பிடுகிறார் என்பதற்கு ஆப்த வசனம்  காட்டுகிறார்

என் முன் சொல்லும் – அவன் முன்னே சந்தையிடப் பின்னே நான் சொன்னேன். 2தான் சொன்னான் ஆகில் ஸ்ரீகீதையைப் போன்று வறுமுறுகலாய்ப் போம் அன்றோ-நம்பி திருவழுதிநாடு தாசர், ஸ்ரீ கீதை போவான் ஒருவன் சந்நியா சதஸ்ஸிலே வந்து கண்டால், பின்னை இவனுக்கு உழக்கு அரிசியைக் கொடுப்பித்து விடுமத்தனை போக்கி அங்கு அவர்கள் உள்ளிடம் கொடார்கள்; திருவாய்மொழி கற்றவன் ஒரு விண்ணப்பம் செய்வான் சென்றால், சர்வேஸ்வரன் கிராமத்தில் உள்ளாரும் புறப்பட்டு எதிர்கொண்டு தங்கள் இருப்பிடத்தை ஒழித்து அவனுக்குக் கொடுத்து ஆதரியாநிற்பார்கள்,’ என்று அருளிச்செய்வர்.

ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி-‘முதல்வன் ஆம் இவன்,’ என்று தன் பக்கலிலே எனக்குத் தெளிவு உண்டாம் படியாகச் செய்து-திருப்புற்றுக்குக் கிழக்கே கரியமாணிக்காழ்வார் திருமுன்பின் படிக்கட்டிலிலே ஆளவந்தார் எழுந்தருளியிருக்க, உடையவர் திருப்புற்றுக்குக் கிழக்காக எழுந்தருளி நிற்கிறவரைக் கண்டு ‘ஆம் முதல்வன் இவன்’ என்று அருளிச்செய்தாராம்

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பூர்வாச்சார்யர்களின் விலக்ஷண நிர்வாஹங்கள் –ஏழாம் பத்து –

December 14, 2023

(1) ஸ்ரீ ஆளவந்தார் –

என்னால் தன்னை இன்தமிழ் பாடிய’ என்பதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்,-கிருஷ்ணத்வைபாயநர் என்னும் பெயரையுடைய வியாசரைச் சுவாமியான நாராயணன் என்று தெரிந்துகொள்; செந்தாமைரக் கண்ணனான அவனைத் தவிர வேறு யார்தான் மஹாபாரதம் செய்தவர் ஆவார்?’ என்றாற்போலே இருக்கிறதாயிற்று.-க்ருஷ்ணத்வைபாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும்     கோஹ்யந்ய: புண்டரீகாக்ஷாத் மஹாபாரதக்ருத் பவேத்’
என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 3. 4 : 4.இதற்கு ஆளவந்தார் அருளிச்செய்யும்படி: ‘சர்வேஸ்வரன் செய்யப் புக்கால் அரியதும் ஒன்று உண்டோ?’ என்றாம். அங்ஙன் அன்றிக்கே, எம்பெருமானார், ‘இவர் தாம் சொன்னாராகிலும் ஒருபடி போகச் சொல்லித் தலைக்கட்டுவர்: அவனும் தானே சொன்னானாகில் ஒரு குற்றுமும் இல்லாதபடி தலைக்கட்டுவான்: சிறு குழந்தை எழுத்திடப் புக்கார் தானே ஏதேனும் ஒருபடி இட்டுத் தலைக்கட்டும்; தந்தையாதல் உபாத்யாயனாதல் இடப்புக்கால்தானே எழுத்தாய் இருக்கும்? அங்ஙன் அன்றிக்கே, இவன் கையைப் பிடித்து இடுவிக்கப் புக்கவாறே, இவன் ஓரிடத்தே இழுக்க அவன் ஓரிடத்தே இழுக்கக் குதறிக் கொட்டியாய் உருவம் அழிந்து சிதறிப்போம்; அப்படியே, என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடாநிற்கச் செய்தேயும, என்னால் வரும் குற்றம் தன் பக்கல் தீண்டாதபடி பாடுவித்தான் என்கிறார்’ என்று அருளிச்செய்வர்.

 ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்துக்கு, ‘இன்தமிழ்  பாடிய ஈசன்’ என்றதிலே நோக்கு. ஈசன் – ‘சமர்த்தன்’ என்றபடி.
எம்பெருமானார் நிர்வாஹத்துக்கு ‘என்னால் தன்னை இன்தமிழ் பாடிய  ஈசனை’ என்றதிலே நோக்கு. ஈசன்-குற்றங்கட்கு எல்லாம்  எதிர்த்தட்டானவன்.

(2) திருமலையாண்டான் –

மூவுலகாளியே! கடிகமழ் கொன்றைச்சடையனே! நான்முகக் கடவுளே’ என்று சொல்லப்படுகிற, வடிவுடை வானோர்க்குத் தலைவனே!’ என்னும் என்று, 2திருமலையாண்டான் வையதிகரண்யமாக்கிப் பொருள் நிர்வஹிப்பர். ‘என்னும்’ என்பதற்கு ‘என்னுமவனாய்’ என்பது பொருள். இதனை எம்பெருமானார் கேட்டருளி, ஸாமாநாதிகரண்யாத்தாலே அருளிச்செய்தருளினார்: ‘மூன்று உலகத்திற்கும் உரியனான இந்திரனுக்கு அநதர்யாமியாய் நின்று அவனுடைய அதிகாரத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்: ‘வாசனையையுடைத்தான கொன்றையைச் சடையிலேயுடைய சிவபிரானுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய பதத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்; ‘அவர்களோடு இவ்வருகுள்ளரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகனாயிருக்கிற நான்முகனாகிய தெய்வத்துக்கு அந்தர்யாமியானவனே!’ என்னும் என்று.

திருமலையாண்டான் நிர்வாஹத்திற்கு, ‘என்று சொல்லப்படுகின்ற வடிவோடு கூடிய  வானோர்களுக்குத் தலைவனே!’ என்பாள் என்பது பொருள். ஏகாரங்கள்: எண்ணுப்  பொருளன. ஈற்றிலேயுள்ள ‘என்னும்’ என்பது மாத்திரம் முற்று. வையதிகரண்யம் –  வெவ்வேறான பொருள்களைக் கூறுகின்ற சொற்கள், சாமாநாதிகரணயம் – ஒரே  பொருளைக் கூறுகின்ற வெவ்வாறான பல சொற்கள். திருமாலையாண்டான்  அருளிச்செய்த பொருள், அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது எம்பெருமானார்  திருவுள்ளம். ‘என்னும், என்னும்’ என்பதற்குத் திருமாலையாண்டான் அருளிச்செய்த  பொருளில், மகள் வார்த்தையைத் திருத்தாயார் அநுபாஷிக்கிற தன்மை தோன்றாமை  காண்க. மேலும், இவ்விடத்தில், ஏகாரங்களை விளியாகக் கோடலே ஏற்புடைத்தாம்.
மேலும், திருமாலையாண்டான் நிர்வாஹத்தில், லீலாவிபூதிக்கு மாத்திரம் நாதன்  என்பது போதரும்; எம்பெருமானார் நிர்வாஹத்தில் இரண்டு உலகங்கட்கும் நாதன்   என்பது போதரும்.

(3)எம்பெருமானார் 

என்னால் தன்னை இன்தமிழ் பாடிய’ என்பதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்,-கிருஷ்ணத்வைபாயநர் என்னும் பெயரையுடைய வியாசரைச் சுவாமியான நாராயணன் என்று தெரிந்துகொள்; செந்தாமைரக் கண்ணனான அவனைத் தவிர வேறு யார்தான் மஹாபாரதம் செய்தவர் ஆவார்?’ என்றாற்போலே இருக்கிறதாயிற்று.-க்ருஷ்ணத்வைபாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும்     கோஹ்யந்ய: புண்டரீகாக்ஷாத் மஹாபாரதக்ருத் பவேத்’
என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 3. 4 : 4.இதற்கு ஆளவந்தார் அருளிச்செய்யும்படி: ‘சர்வேஸ்வரன் செய்யப் புக்கால் அரியதும் ஒன்று உண்டோ?’ என்றாம். அங்ஙன் அன்றிக்கே, எம்பெருமானார், ‘இவர் தாம் சொன்னாராகிலும் ஒருபடி போகச் சொல்லித் தலைக்கட்டுவர்: அவனும் தானே சொன்னானாகில் ஒரு குற்றுமும் இல்லாதபடி தலைக்கட்டுவான்: சிறு குழந்தை எழுத்திடப் புக்கார் தானே ஏதேனும் ஒருபடி இட்டுத் தலைக்கட்டும்; தந்தையாதல் உபாத்யாயனாதல் இடப்புக்கால்தானே எழுத்தாய் இருக்கும்? அங்ஙன் அன்றிக்கே, இவன் கையைப் பிடித்து இடுவிக்கப் புக்கவாறே, இவன் ஓரிடத்தே இழுக்க அவன் ஓரிடத்தே இழுக்கக் குதறிக் கொட்டியாய் உருவம் அழிந்து சிதறிப்போம்; அப்படியே, என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடாநிற்கச் செய்தேயும, என்னால் வரும் குற்றம் தன் பக்கல் தீண்டாதபடி பாடுவித்தான் என்கிறார்’ என்று அருளிச்செய்வர்.

 ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்துக்கு, ‘இன்தமிழ்  பாடிய ஈசன்’ என்றதிலே நோக்கு. ஈசன் – ‘சமர்த்தன்’ என்றபடி.
எம்பெருமானார் நிர்வாஹத்துக்கு ‘என்னால் தன்னை இன்தமிழ் பாடிய  ஈசனை’ என்றதிலே நோக்கு. ஈசன்-குற்றங்கட்கு எல்லாம்  எதிர்த்தட்டானவன்.

மூவுலகாளியே! கடிகமழ் கொன்றைச்சடையனே! நான்முகக் கடவுளே’ என்று சொல்லப்படுகிற, வடிவுடை வானோர்க்குத் தலைவனே!’ என்னும் என்று, 2திருமலையாண்டான் வையதிகரண்யமாக்கிப் பொருள் நிர்வஹிப்பர். ‘என்னும்’ என்பதற்கு ‘என்னுமவனாய்’ என்பது பொருள். இதனை எம்பெருமானார் கேட்டருளி, ஸாமாநாதிகரண்யாத்தாலே அருளிச்செய்தருளினார்: ‘மூன்று உலகத்திற்கும் உரியனான இந்திரனுக்கு அநதர்யாமியாய் நின்று அவனுடைய அதிகாரத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்: ‘வாசனையையுடைத்தான கொன்றையைச் சடையிலேயுடைய சிவபிரானுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய பதத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்; ‘அவர்களோடு இவ்வருகுள்ளரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகனாயிருக்கிற நான்முகனாகிய தெய்வத்துக்கு அந்தர்யாமியானவனே!’ என்னும் என்று.

திருமலையாண்டான் நிர்வாஹத்திற்கு, ‘என்று சொல்லப்படுகின்ற வடிவோடு கூடிய  வானோர்களுக்குத் தலைவனே!’ என்பாள் என்பது பொருள். ஏகாரங்கள்: எண்ணுப்  பொருளன. ஈற்றிலேயுள்ள ‘என்னும்’ என்பது மாத்திரம் முற்று. வையதிகரண்யம் –  வெவ்வேறான பொருள்களைக் கூறுகின்ற சொற்கள், சாமாநாதிகரணயம் – ஒரே  பொருளைக் கூறுகின்ற வெவ்வாறான பல சொற்கள். திருமாலையாண்டான்  அருளிச்செய்த பொருள், அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது எம்பெருமானார்  திருவுள்ளம். ‘என்னும், என்னும்’ என்பதற்குத் திருமாலையாண்டான் அருளிச்செய்த  பொருளில், மகள் வார்த்தையைத் திருத்தாயார் அநுபாஷிக்கிற தன்மை தோன்றாமை  காண்க. மேலும், இவ்விடத்தில், ஏகாரங்களை விளியாகக் கோடலே ஏற்புடைத்தாம்.
மேலும், திருமாலையாண்டான் நிர்வாஹத்தில், லீலாவிபூதிக்கு மாத்திரம் நாதன்  என்பது போதரும்; எம்பெருமானார் நிர்வாஹத்தில் இரண்டு உலகங்கட்கும் நாதன்   என்பது போதரும்.

(4)திருக்குருகைப்பிரான் பிள்ளான்

எண் இலாப் பெருமாயனே – 3‘ஈஸ்வரன் இந்த மூலப் பிரகிருதியினின்றும் இந்த உலகத்தைப் படைக்கிறான்,’ என்றும், ‘என்னுடைய மாயை தாண்ட முடியாதது,’ என்றும் சொல்லுகிறபடியே, எண்ணிறந்த செயல்களைச் செய்யவற்றாய், நீ வேண்டாதாரைச் சிறை இட்டு நலியக்கடவதான பிரகிருதியைப் பரிகரமாகவுடையவனே! அன்றிக்கே, ‘எண்ணிறந்த மஹா ஆச்சரியமான குணங்களையுடையவனே!’ என்று பிள்ளான் பணிக்கும்படி

அஸ்மாந்மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்’--உபநிடதம்.     ‘மம மாயா துரத்யயா’--ஸ்ரீ கீதை, 7 : 14.

ஸ்ரீஜனகராஜன் திருமகள் காட்டிலே கூடப் போய் அவர் இருந்த இடம் நின்ற இடம் உலாவின இடந்தோறும் கூட இருந்து அனுபவித்தாற்போலே, நானும் அவன் இருந்த இடத்தே போய்ப் புக்கு அல்லது நில்லேன்,’ என்றாள்; அதனைக் கேட்ட அவர்கள், ‘உன் தலைமைக்கு இது போராது: நீ சொல்லுகிறது வார்த்தை அன்று,’ என்ன, அவர்கள், ‘அதற்கு நாங்கள் வழிப்படோம்’ என்ன, ‘ஆகில், 3நானேயாகிலும் போகை தவிரேன்,’ என்கிறாள் என்று 4பிள்ளான் பணிப்பர்.

அணுகியடைந்தான்’ என்றதனால், கலவி நிகழ்ந்தது என்பது பிள்ளான் திருவுள்ளம்;  கலவி உண்டானால் தனியே ஒரு திருவாய்மொழி அருளிச்செய்வார்; அது   செய்யாமையாலே பிள்ளான் நிர்வாஹம் அத்துணைச் சிறப்புடைத்து அன்று என்பர்.

அம் கள் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே – அழகிதாய்த் தேனோடு கூடின மலரையுடைத்தாய்க் குளிர்ந்திருந்துள்ள திருத்துழாயைத் திருமுடியிலேயுடையையாய், 3அந்த ஒப்பனையால் வந்த அழகுக்கு ஒரு நாளும் ஒரு வேறுபாடும் இன்றிக்கே என்றும் ஒக்க நித்தியாம்படி இருக்கிறவனே! 4வைத்த வளையத்தைப் போன்றும் போக்கியமாகிறதாயிற்று விபூதி அனுபவம் இவர்க்கு. 5‘மேல் திருவாய்மொழியிலே ‘விள்கின்ற பூந்தண் துழாய் விரை நாற வந்து’ என்று சொன்னதை நினைக்கிறார்’ என்று. பிள்ளான் பணிப்பர். 1மாயன் குழல் விள்கின்ற பூந்தண் துழாய் உருவு வெளிப்பாடாய்த் துன்புறுத்தல் தவிர்ந்து, நேரே கண்டு அனுபவிக்கிறார் அன்றோ-மேல் திருவாய்மொழியிலே துன்பத்தைச் செய்வனவாக அருளிச்செய்த பொருள்களை,  தாரகமாக அனுபவிக்கிற இத்திருவாய்மொழியிலே நினைத்தல் தகுமோ?’ என்ன, ‘மாயன்  குழல்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே – அப்போது அலர்ந்த தாமரைப்பூப்போலே இருக்கின்ற திருக்கண்களையுடையவனாய்ப் பவ்யனாய் இருக்கிறவனே! 2அவனுடைய திருக்கண்கள் போலே ஆயிற்று, இவர்க்கு விபூதியும் கவர்ச்சியாய் இருக்கிறபடி. அன்றிக்கே, ‘திருக்கண்களைப் போன்று துன்பத்தைச் செய்வதாகா நின்றது ஆயிற்று விபூதி அனுபவமும் இவர்க்கு,’ என்னுதல். 3‘துன்பத்தைச் செய்வதாவது என்?’ என்னில், ‘இன்னது’ என்று நிச்சயிக்கமாட்டாதே ஐயுற்றுப் பட்டது ஒரு துக்கம் உண்டே அன்றோ? அதுவும் துன்பத்தைச் செய்வதாக இருக்குமே? அதனைச் சொல்லுகிறது. (முடிச்சோதியாய்’ என்ற திருவாய்மொழியிற் கூறியபடியே சந்தேகமாய்க்கொண்டு  பாதகமாகிறது என்றபடி.)அன்றிக்கே, ‘மேல் திருவாய்மொழியிலே, ‘சூழவும் தாமரை நாண்மலர்போல் வந்து தோன்றும்’ என்றதனை நினைக்கிறார,்’ என்று பிள்ளான் பணிக்கும். 4அதனைச் சீயர் கேட்டருளி, ‘மேலே ஓடுகிறரீதியின்படியே இதுவும் ஆகப்பெற்றதாகிர் அழகிது!அங்ஙன் அன்றிக்கே, இது வேறு ரசமாய் அறிவுண்டான பின்பு இவ்விடத்தோடு பொருந்தமாட்டாது’ என்று அருளிச்செய்தாராம்.

துயரங்கள் செய்யும் கண்ணா-துக்கங்களைச்செயக்கூடிய கிருஷ்ணனே! ‘எதனாலே நலிவது?’ என்னில், ‘முடிச்சோதி’ என்ற திருவாய்மொழியிற்கூறியபடியே திருமுடியில் அழகைக் காட்டியாயிற்று. சுடர் நீள் முடியாய்– 1விபூதியைச் சொல்லுவதும் திருமுடியைப் போன்று பாதகம் ஆகாநின்றதாயிற்று. (திருமுடியைப் போன்று’ என்றது, ‘நிற்றி முற்றத்துள்’ (7. 7 : 10.) என்ற   திருப்பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி.)அன்றிக்கே, ‘‘முற்ற இம்மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே ஒற்றுமை கொண்டது’ என்றது, ‘பின்னாட்டுகிறது,’ என்று பிள்ளான் பணிப்பர்

தன்னை உறப் பல இன்கவி சொன்ன – 1‘சொல்ல மாட்டாது அந்த ஆனந்த குணத்தினின்றும் எந்த வேத வாக்கியங்கள் மீண்டனவோ’ என்கிறபடியே, 2‘வேதங்கள் மீண்ட விஷயத்தை மறுபாடு உருவச் சொன்ன’ என்று சீயர் அருளிச்செய்வர். அன்றிக்கே, ‘சர்வேஸ்வரனுக்குச் சால உற்றது என்கிறார்’ என்று பிள்ளான் அருளிச்செய்வர்.-உற’ என்பதற்கு, ‘மறுபாடுருவ’ என்பதும், ‘தகுதியாக’ என்பதும் இரு பொருள்;

இதுதான் ஒரு வார்த்தை மாத்திரமேயாய் உம்முடைய நெஞ்சு பரமபதத்தை விரும்பினாலோ?’ என்ன, ‘அதனை. என் நினைவிற்கு வாய்த்தலையிலே இருக்கிற சர்வேஸ்வரனைக் கேட்டுக்கொள்வது’ என்று இங்ஙனே அருளிச்செய்வர் சீயர். (அறியும்’ என்கையாலே ‘கேட்டுக்கொள்வது’ என்கிறார். வாய்த்தலை –  மூலம். ‘இவ்வர்த்தத்திற்குச் சாக்ஷியாக அவனைக் கேட்டுக்  கொள்ளுங்கோள்,’ என்பது நஞ்சீயர் திருவுள்ளம்.)அன்றிக்கே, ‘நீர் திருவாறன்விளையை பிராப்பியம் என்று இருக்கிறீர்; ஈஸ்வரன் சுவதந்திரன் அல்லனோ? அவன் பரமபதத்தைத் தரிலோ?’ என்ன, ‘அவன் முற்றறிவினன் அல்லனோ? அறியானோ?’ என்கிறார் என்று பிள்ளான் பணிப்பர்;

5 (கூரத்தாழ்வான்)

ஆழ்வான் ஒருகால், இத்திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் இராமாவதார விஷயமாக்கி நிர்வஹித்தாராம். 2அதற்குக் காரணம்: ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே, பெருமாளுடைய குணத்தில் ஒரு பகுதியே அன்றோ? அல்லாத அவதாரங்கள் எல்லாவற்றிலும் உள்ளது ஆதலின். 3‘பேரெயில் சூழ்கடல் தென்னலங்கை செற்ற பிரான்’ என்றும், ‘மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்றும், மேலே சொல்லிப் போந்த இராமாவதாரத்தினுடைய செயலை அநுசந்தித்து, அவ்வழியாலே அன்றோ அவதாரங்களை அநுசந்திக்கிறது? மற்றைய அவதாரங்களிலே ஈடுபட்டவர்களும் இராமாவதாரம் பிராசங்கிகமாகச் சொல்ல வேண்டி வந்தால், 4‘மனத்துக்கு இனியானை’ என்றே அன்றோ சொல்லுவது?

6-எம்பார் –

என் ஆகிய தப்புதல் இன்றித் தனைக்கவி தான் சொல்லி – என்னைக் கருவியாகக்கொண்ட கவிபாடுகிற இடத்து, என்னுடைய சம்பந்தத்தால் வந்த குற்றமும் தட்டாதபடி கவி பாடினான். என் ஆகியே – ‘என் பக்கலிலே தானாய்’ என்றவாறு. 1இவ்விடத்தில் ‘தான் பாடினானாகில் ஒரு குற்றமும் இல்லாமல் தலைக்கட்டும்; நான் பாடினேனாகிலும் வருந்தி ஒருபடி தலைக்கட்டுவேன்; என்னைக் கருவியாகக் கொண்டு கவி பாடாநிற்கச்செய்தேயும் என்னுடைய சம்பந்தத்தால் வந்த குற்றம் தட்டாதபடி கவி பாடித் தலைக்கட்டினான்’ என்று எம்பார் அருளிச்செய்வர். விஷயத்துக்குத் தகுதியாகக் கவி பாடினான் ஆதலின், ‘தனைக் கவி தான் சொல்லி’ என்கிறார்.

7–பட்டர்

கிரமப் பிராப்தி பொறுக்காமாட்டாமல் படுகிறார்; 2ஈஸ்வரனுடைய முற்றறிவிற்கும் அவ்வருகான இவருடைய மிருதுத்தன்மையின் சொரூபம் இருக்கிறபடி. 3பிராட்டியைப் போலே ‘அவ்வாறு செய்தல் அவருக்கு ஒத்தாகும்’ என்று இருக்கமாட்டார், ருசி அளவு இல்லாமையாலே. 4சம்சாரத்தினுடைய தோஷத்தையும் நினைத்து, எம்பெருமானுடைய குணங்களின் உயர்வையும் நினைத்தால் ஆறி இருக்கப் போகாதே அன்றோ? 5பகவத் விஷயம் அறியாத சம்சாரிகள் இவர்க்குக் கூட்டு அல்லர்; பகவானுடைய பிரிவு அறிய வேண்டாத நித்தியசூரிகளும் இவரக்குக் கூட்டு அல்லர்; பிரிவில் நோவுபடுகைக்கு இவர் ஒருவருமே உள்ளார்.
6
பட்டர், இத்திருவாய்மொழி (7-2)அருளிச்செய்யும் போதெல்லாம் ‘ஆழ்வார்க்கு ஓடுகிற நிலை அறியாதே அவருடைய உள்ளக்கிடையும் இன்றிக்கே இருக்கிற நாம் என் சொல்லுகிறோம்?’ என்று திருமுடியிலே கையை வைத்துக்கொண்டிருப்பார்.(இப்படி இருக்கிற இவருடைய ஆரித்தியைக் காட்டுகிற இத்திருவாய்மொழிக்குப்  பொருள், கரைமேலே நிற்கிற நம் போன்றார் சொன்னால் சுவை இராது என்பதனை ஆப்த வாக்கியத்தாலே காட்டுகிறார், )

 5பட்டர் இராமாவதாரத்தில் போரப் பக்ஷிபதித்து இருப்பர்’ என்று, அவர் அருளிச்செய்யுமது கேட்கைக்காகச் சிறியாத்தான் ஒருநாள் ‘பெருமாளுக்கு எல்லா நன்மைகளும் உளவாகிலும், கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்ன, தூது சென்ற கிருஷ்ணன் நீர்மை இல்லையே?’ என்ன, ‘அது அங்ஙன் அன்று காண்; கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்பார் இல்லாமையாலே தவிர்ந்தார் அத்தனைகாண்,’ என்று அருளிச்செய்தார். 1நாடுடை மன்னர் வேறே சிலர் இலரே. முடி சூடிய க்ஷத்திரிய குலத்திலே  பிறக்கையாலே போக விடுவாரைப் பெற்றது இல்லை. முடியைத் தவிர்ந்து சடையைப் புனைந்து நாட்டினை விட்டுக் காடு ஏறப் போனவர், தூது போகாமை இல்லை அன்றோ?

8-பிள்ளை உறங்காவில்லி தாசர்

‘ஸம்ஸ்ப்ருசந் ஆஸநம் ஸௌரே: விதுரஸ்ஸ மஹாமதி:’(  என்பது, பாரதம், உத்யோக.)–துரியோதனன் கோட்டியிலே கிருஷ்ணன் எழுந்தருளின போது அவர்கள் செய்த வஞ்சனத்தைக் கண்டு, அச்சங்கொண்டு, தம்முடைய திருமாளிகையில் படுக்கையையும் தடவிப் பார்த்தாரே அன்றோ ஸ்ரீவிதுராழ்வான்? ‘மஹாபுத்திமானான அந்த விதுரர் கண்ணனுடைய படுக்கையைத் தடவிப் பார்த்தார்,’ என்கிறபடியே, கடல் கலங்குவது தன்னளவிலே அன்றோ? 3பிள்ளையுறங்காவில்லிதாசர் ‘மஹாமதி என்றது, மதிகேடர் என்றபடியோ?’ என்றார், 4பிள்ளைதாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று சொட்டையை உருவிப் பிடித்துக்கொண்டு சேவிப்பாராம். நம்முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள். 5அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?

9-நஞ்சீயர் 

வட்கு இலள் இறையும் – இதற்குச் சீயர் அருளிச்செய்வது. ‘இவள் முடிந்தாள்’ என்று. 2நாணத்தைக்கொண்டே அன்றோ பெண்மையை அறிவது? சொரூபத்தைப் பற்றி வரும் குணம் போனால் சொரூபமும் போயிற்றாமத்தனை அன்றோ? 3நிரூபகத்தை ஒழிய நிரூபிக்கப்படும் பொருளின் சித்தி இல்லையே! இவள் நாணம் நீங்கினமைக்கு அறிகுறி என்?’ என்னில், மணிவண்ணா என்னும் – 4கணவனுடைய திருப்பெயரைச் சொல்லாநின்றாள்

தெளிதல் அச்சங்கொடுக்கும் அன்றோ? முடிவு காலத்தில் பிறக்கும் தெளிவிற்குமு அஞ்சவேணுமே? 1உய்ந்த பிள்ளை பாடும் போது, ‘கெட்டேன், இவள் ‘தேறும்’ என்பதே’ என்று சீயர் அருளிச்செய்வராம்

என்னுடையக் கோமளக்கொழுந்து – கலக்கப் பொறாத மிருதுத் தன்மையையுடைவள் பிரியப் பொறுக்குமோ? 5‘தசை முறுகினால் வைத்தியர்கள் முகம் பாராதவாறு போலே, மகள் அவஸ்தையைக் கண்டு தளர்ந்து பெரிய பெருமாள் முகம் பாராமலே வார்த்தை சொல்லுகிறாள்’ என்று அருளிச்செய்வர் சீயர். கொழுந்து – 1கொள் கொம்பு தேட்டமான அளவிலே தரையிலே படர விடுவதே(பதி ஸம்யோக ஸூலபம் வய;’-என்பது, ஸ்ரீராமா. அயோந். 118 : 34.). ‘நாயகனுடைய கலவிக்குத் தகுந்த என்னுடைய வயதை’ என்கிறபடியே,  2இப்பாசுரத்தில் ஒரு தலைக்கட்டு இன்றிக்கே இருக்குமிதற்குக் கருத்து, ‘பரிஹரிக்கும் எல்லை கழிந்தாள், நாம் இவர்க்குச் சொல்லுவது என்?’ என்று தன்னிலே நோவு படுகிறாள் என்று வங்கிப்புரத்து நம்பி பணிக்கும்.

கண்களோடு திவ்விய ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு. 2இவ்விடத்தே நிலாத்துக் குறிப்பகவர் வார்த்தையை அருளிச்செய்வர் சீயர். 3கைக்கு ஆழ்வார்கள் ஆபரணமாய் இருக்குமாறு போலே ஆயிற்று, முகத் திருக்கண்கள் ஆபரணமாய் இருக்கும்படியும். (திவ்விய ஆயுதங்களைப் பற்றிய பிரசங்கத்திலே, ‘சர்வேஸ்வரன் இருதோளனோ,  நாற்றோளனோ?’ என்ற சங்கைக்கு விடை அருளிச்செய்கிறார், ‘இவ்விடத்தே’ என்று
தொடங்கி. என்றது, ‘நிலாத்துக் குறிப்பகவர் கேட்ட வினாவிற்குப் பட்டர் அருளிச்செய்த  திருவார்த்தையை அருளிச்செய்வர் நஞ்சீயர்’ என்றபடி)

ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் உய்விடம் எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல் – ‘அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் பெண்களுக்கும் தப்பிப்போய்ப் பிழைக்கும் இடம் எவ்விடம்?’ என்று விளங்குகின்றனவாய்க் கொண்டு மகரம் தழைக்கின்ற தளிரே? 2அசுரரும் அரக்கரும் அழகு கண்டால் பொறுக்கமாட்டாமல் முடிவர்கள்; பெண்கள் அடையப் பெறாமல் முடிவர்கள். ‘பெண்களை நலியுமாறு போலே அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் சினேகத்தை விளைத்துப் பாதகம் ஆகாநின்றன’ என்று ஒரு தமிழன் கூறிவைத்தான் என்று கூறியதனைச் சீயர் கேட்டருளி, 3‘இப்பொருள் அழகிது: ஆனாலும். அபக்ஷதர்மம்;-(பிரகரணத்துக்குச் சேராதது’ என்றபடி.) அசுரர்களுக்கும் அரக்கர்களுக்கும் பாதகம் ஆகாநின்றது என்று இப்போது இது சொல்லுகை, தேட்டம் அன்றே? ஆன பின்பு அது வேண்டா,’ என்று அருளிச்செய்தாராம். (அசுரர்களுக்குப் பாதகம் எனபதனை இங்குச் சொல்ல  வேண்டவே’ என்றபடி. ‘அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் பாதகமாமாறு போன்று,  பெண்களுக்கும் பாதகமாம்’ என்பதே முதல் அடிக்குப் பொருளாம்.)

கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே – அப்போது அலர்ந்த தாமரைப்பூப்போலே இருக்கின்ற திருக்கண்களையுடையவனாய்ப் பவ்யனாய் இருக்கிறவனே! 2அவனுடைய திருக்கண்கள் போலே ஆயிற்று, இவர்க்கு விபூதியும் கவர்ச்சியாய் இருக்கிறபடி. அன்றிக்கே, ‘திருக்கண்களைப் போன்று துன்பத்தைச் செய்வதாகா நின்றது ஆயிற்று விபூதி அனுபவமும் இவர்க்கு,’ என்னுதல். 3‘துன்பத்தைச் செய்வதாவது என்?’ என்னில், ‘இன்னது’ என்று நிச்சயிக்கமாட்டாதே ஐயுற்றுப் பட்டது ஒரு துக்கம் உண்டே அன்றோ? அதுவும் துன்பத்தைச் செய்வதாக இருக்குமே? அதனைச் சொல்லுகிறது. (முடிச்சோதியாய்’ என்ற திருவாய்மொழியிற் கூறியபடியே சந்தேகமாய்க்கொண்டு  பாதகமாகிறது என்றபடி.)அன்றிக்கே, ‘மேல் திருவாய்மொழியிலே, ‘சூழவும் தாமரை நாண்மலர்போல் வந்து தோன்றும்’ என்றதனை நினைக்கிறார,்’ என்று பிள்ளான் பணிக்கும். 4அதனைச் சீயர் கேட்டருளி, ‘மேலே ஓடுகிறரீதியின்படியே இதுவும் ஆகப்பெற்றதாகிர் அழகிது!அங்ஙன் அன்றிக்கே, இது வேறு ரசமாய் அறிவுண்டான பின்பு இவ்விடத்தோடு பொருந்தமாட்டாது’ என்று அருளிச்செய்தாராம்.

தன்னை உறப் பல இன்கவி சொன்ன – 1‘சொல்ல மாட்டாது அந்த ஆனந்த குணத்தினின்றும் எந்த வேத வாக்கியங்கள் மீண்டனவோ’ என்கிறபடியே, 2‘வேதங்கள் மீண்ட விஷயத்தை மறுபாடு உருவச் சொன்ன’ என்று சீயர் அருளிச்செய்வர். அன்றிக்கே, ‘சர்வேஸ்வரனுக்குச் சால உற்றது என்கிறார்’ என்று பிள்ளான் அருளிச்செய்வர்.-உற’ என்பதற்கு, ‘மறுபாடுருவ’ என்பதும், ‘தகுதியாக’ என்பதும் இரு பொருள்;

இதுதான் ஒரு வார்த்தை மாத்திரமேயாய் உம்முடைய நெஞ்சு பரமபதத்தை விரும்பினாலோ?’ என்ன, ‘அதனை. என் நினைவிற்கு வாய்த்தலையிலே இருக்கிற சர்வேஸ்வரனைக் கேட்டுக்கொள்வது’ என்று இங்ஙனே அருளிச்செய்வர் சீயர். (அறியும்’ என்கையாலே ‘கேட்டுக்கொள்வது’ என்கிறார். வாய்த்தலை –  மூலம். ‘இவ்வர்த்தத்திற்குச் சாக்ஷியாக அவனைக் கேட்டுக்  கொள்ளுங்கோள்,’ என்பது நஞ்சீயர் திருவுள்ளம்.)அன்றிக்கே, ‘நீர் திருவாறன்விளையை பிராப்பியம் என்று இருக்கிறீர்; ஈஸ்வரன் சுவதந்திரன் அல்லனோ? அவன் பரமபதத்தைத் தரிலோ?’ என்ன, ‘அவன் முற்றறிவினன் அல்லனோ? அறியானோ?’ என்கிறார் என்று பிள்ளான் பணிப்பர்;

10-பிள்ளை திருநறையூர் அரையர்

பிள்ளை திருநறையூர் அரையர் 1‘இப்பாசுரங்களில் முன் அடிகள் இரண்டும், புலியின் வாயிலே அகப்பட்ட குழந்தை தாய் முகத்திலே விழித்துக்கொண்டு புலியின் வாயிலே கிடந்து நோவுபடுமாறு போலே இருக்கிறது,’ என்று குணாநுசந்தான பரமாக பணிப்பர்

பவாமி த்ருஷ்ட்வாச புந: யுவேவ-அறுபதினாயிரம் ஆண்டு வயது நிறைந்து கிழவனான சக்கரவர்த்தி, பெருமாளைக் கண்ட பின்பு, பெருமாளுக்கும் தனக்கும் வாசி தெரியாதபடியானான்.’ 2‘காமனைப் பயந்த காளை’ என்னுமாறு போலே 3தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலே ஆக்கி உஜ்ஜீவிப்பிக்கும் விஷயம் போலேகாணும்.- (மஹோத்ஸவமிவ ஆஸாத்ய புத்ராநந விலோகநம்    யுவேவ வஸூதேவ: அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்’ என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 52.)4‘ஸ்ரீவசுதேவர்’ பெரிய திருவிழாவை அடைந்தாற்போலே பிள்ளைகளின் திருமுகங்களைப் பார்ப்பதை அடைந்து, தமக்கு உண்டாய் இருந்த முதுமை நீங்கி யௌவனம் உடையவரானார்’ என்னும்படி ஆனாரே அன்றோ ஸ்ரீவசுதேவரும்?
 3அன்றிக்கே, ‘மேலே, ‘கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்’ என்று கொண்டு இத்தலையில் தோல்விக்கு எதிர்த்தலையான அத்தலையில் வெற்றிச் செயல்களை அநுசந்திக்கிறார்’ என்று பிள்ளை திருநறையூர் அறையர் பணிக்கும்படி.

11-வங்கிப்புரத்து நம்பி –

கோலம் மா மலர்க்கண் பனிமல்க இருக்கும் – காட்சிக்கு இனியானவாய்ப் பரந்து. சிரமஹரமான கண்கள் நீர் மல்க இராநின்றாள். கண்ணும் கண்ணநீருமான அழகு, காட்டில் எறித்த நிலா ஆவதே! 4இக்கண்ண நீருக்குச் சாதனத்தைச் செய்து பல வேளையிலே இழப்பதே! (தண்புனல் சூழ் திருவரங்கத்தாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இக்கண்ணநீருக்கு’  என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.) என்னுடையக் கோமளக்கொழுந்து – கலக்கப் பொறாத மிருதுத் தன்மையையுடைவள் பிரியப் பொறுக்குமோ? 5‘தசை முறுகினால் வைத்தியர்கள் முகம் பாராதவாறு போலே, மகள் அவஸ்தையைக் கண்டு தளர்ந்து பெரிய பெருமாள் முகம் பாராமலே வார்த்தை சொல்லுகிறாள்’ என்று அருளிச்செய்வர் சீயர். கொழுந்து – 1(பதி ஸம்யோக ஸூலபம் வய;’, ஸ்ரீராமா. அயோந். 118 : 34.)கொள் கொம்பு தேட்டமான அளவிலே தரையிலே படர விடுவதே. ‘நாயகனுடைய கலவிக்குத் தகுந்த என்னுடைய வயதை’ என்கிறபடியே,  2இப்பாசுரத்தில் ஒரு தலைக்கட்டு இன்றிக்கே இருக்குமிதற்குக் கருத்து, ‘பரிஹரிக்கும் எல்லை கழிந்தாள், நாம் இவர்க்குச் சொல்லுவது என்?’ என்று அவனை விளித்துக் கூறியது போன்று
கூறாமல், தன்னிலே நோவு படுகிறாள் என்று வங்கிப்புரத்து நம்பி பணிக்கும்.

12-நம்பிள்ளை

பெரிய பெருமாள் திருவடிகளிலே, திருவாய்மொழி ஆயிரமும் சொல்லிற்று; 2‘திருமோகூர்க்கு ஈத்து பத்து’. ‘திருவேங்கடத்துக்கு இவை பத்து’ என்று பிரித்துக்கொடுத்த இத்தனை; பெருமாள் திருப்பலகையில் அழுதுபடியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்கட்கும் அளந்து கொடுக்குமாறு போலே’ என்று பிள்ளை அருளிச்செய்வர்

தேவ குமார ரூபம் – 5அது-எனக்கு ஹிதத்தைச் செய்து போந்தவளாயிருக்கிற தன்மை- கிடக்க; இவரையே நீ தான் ‘காடு ஏறப்போக’ என்கிறது? ‘இவர்க்கும் அவ்வளவேயோ?’ என்று சிறியத்தான் பிள்ளையைக் கேட்க, ‘கண்ணெச்சில் ஆம்’ என்று தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி இருடிகரிபூசுகிறான் என்றார்

13-அம்மாள்

அப்பன் ஊளி எழ-ஒலி உண்டாக. என்றது, ‘ஒவ்வொரு காலத்தில் கலகங்கள் உண்டானால் நம்முடைய 2அடைய வளைந்தானுக்குள்ளே புகும் போது திருவாசலில் பிறக்கும் ஆரவாரம் போலே, திருவயிற்றிற்புகுகிற போது பிராணிகளுக்கு உண்டான பரபரப்பான ஒலிகள் கிளர’ என்றபடி. அன்றிக்கே, ‘‘இவற்றை உரிஞ்சுகிற போதை ஒலிகாண்!’ என்று அம்மாள் பணிக்கும்படி’ என்று அருளிச்செய்வர்’ அதனால் நினைக்கிறது, 3ஈஸ்வரத்வப் பிடரால் அன்றியே பத்தும் பத்தாக அடியார்களைக் காப்பாற்றுதலேயாய் இருக்கிறபடி.

14-தமிழ்ப்புலவர் 

எனது ஆவியுள்ளே – என் மனதிற்குள்ளே. மாட்டிய – ‘சுடர்வெட்டிய’ என்னுதல்: ‘ஏற்றிய’ என்னுதல், வல் விளக்கின் சுடராய்-விரக தாபத்தாலே அவியாத விளாக்காயிற்று. 2‘‘ஏற்றிய பெருவிளக்கு’ என்று ஒரு தமிழ்புலவன் இட்டு வைத்தான்’ என்று அருளிச்செய்வர். நிற்கும் வாலியதே – வலிதாய் நின்று நலியாநிற்கும். 3‘விளக்காகிறது தான் சிறிது நேரம் இருப்பதுமாய் ஓர் இடத்திலே இருப்பதுமாய் அன்றோ இருப்பது? இது அங்ஙன் அன்றிக்கே, எப்போதுமாய் எங்கும் உண்டாய் இராநின்றது: பாதகத்துவத்தில் உறைப்பை நினைத்துச் சொல்லுகிற வார்த்தை அன்றோ இது?

ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் உய்விடம் எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல் – ‘அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் பெண்களுக்கும் தப்பிப்போய்ப் பிழைக்கும் இடம் எவ்விடம்?’ என்று விளங்குகின்றனவாய்க் கொண்டு மகரம் தழைக்கின்ற தளிரே? 2அசுரரும் அரக்கரும் அழகு கண்டால் பொறுக்கமாட்டாமல் முடிவர்கள்; பெண்கள் அடையப் பெறாமல் முடிவர்கள். ‘பெண்களை நலியுமாறு போலே அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் சினேகத்தை விளைத்துப் பாதகம் ஆகாநின்றன’ என்று ஒரு தமிழன் கூறிவைத்தான் என்று கூறியதனைச் சீயர் கேட்டருளி, 3‘இப்பொருள் அழகிது: ஆனாலும். அபக்ஷதர்மம்;-(பிரகரணத்துக்குச் சேராதது’ என்றபடி.) அசுரர்களுக்கும் அரக்கர்களுக்கும் பாதகம் ஆகாநின்றது என்று இப்போது இது சொல்லுகை, தேட்டம் அன்றே? ஆன பின்பு அது வேண்டா,’ என்று அருளிச்செய்தாராம். (அசுரர்களுக்குப் பாதகம் எனபதனை இங்குச் சொல்ல  வேண்டவே’ என்றபடி. ‘அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் பாதகமாமாறு போன்று,  பெண்களுக்கும் பாதகமாம்’ என்பதே முதல் அடிக்குப் பொருளாம்.)

15-உடாலி

கைகேசியின் உறவினர்களுக்கு வேலைக்காரியும் எங்கேயோ பிறந்தவளும்’ என்கிறது அன்றோ? ‘இதற்குக் கருத்து என்?’ என்னில், ‘இந்த அயோத்தியிலே பிறந்தாளாகில் பெருமாளுக்கு விரோதம் செய்யாள் ஆகையாலே, எங்கேனும் ஓரிடத்தே பிறந்தநாள் ஒரு விழுந்தான் கிடக்கை’ என்றது. 2யத: குதஸ்சித்ஜாதா – யாதாம் ஓரிடத்தில் பிறந்தாள்’ என்று வியாக்கியானம் செய்தான் உடாலி. ‘இந்த நிலத்திற்பிறவாமை இவளுக்குக் கொடுமை விளைந்தது,’ என்கிறான் அன்றோ?

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள் –ஏழாம் பத்து –

December 14, 2023

சம்சாரத்தின் சுபாவத்தை நினைத்துப் போக்கடி அற்று அவ்வடியைப் பற்றிச் சரணம் புக்கார்; புக்க இடத்திலும் தாம் விரும்பிய காரியத்தைச் செய்யாமையாலே, சரணம் புக்கார் மேலே வேல்காரரை ஏவித் துன்புறுத்தும் அருளற்றவரைப்போலேயாக அவனை நினைத்து அஞ்சினவராய், இவ்வளவிலும் பலிக்கக் காணாமையாலே, ‘வைப்பனாக வைத்த பிரஹ்மாஸ்திரம் வாய்மடிந்ததுகாண்! என்று கூப்பிடுகிறார்.

இங்ஙனே இருக்கக்கடவ இவர், அவன் தலையிலே குறையை ஏறிட்டுக் கூப்பிடுகிறார் அன்றோ அந்த நிலை விளைகையாலே? 2‘இவர் தாம் தம்மாலே வந்ததனை அவன் தலையிலே ஏறிடுவான் என்?’ என்னில், சம்பந்தத்தை உணர்ந்தால், இத்தலையாலே வந்ததனையும் அவன் பக்கலிலே ஏறிடலாய் இருக்கும் அன்றோ? குழந்தை கிணற்றிலே விழுந்தால், ‘தாயானவள் தள்ளினாள்’ என்னககடவாதாயிருக்கும். என்றது. ‘தாயானவள் கண்களிலே வெண்ணெய் இட்டுப் பார்த்திருந்தாளாகில் இக்குழந்தை விழுமோ? இவள் நோக்காமை அன்றோ கேடுற்றது?’ என்று கொண்டு அவள் தலையில் குறை சொல்லக் கடவதாய் இருக்கும் என்றபடி. 3உதங்கன் கிருஷ்ணன் பக்கலிலே வந்து, ‘உனக்கு இரு திறத்தாரோடும் சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே, பாண்டவர்களை அழிக்காமல் துரியோதனாதியர்களை அழித்தாய்; இப்படிச் சார்வு செய்யப்போமோ?’ என்றாற்போலே வார்த்தைகள் சிலவற்றை அவன் சொல்ல, கிருஷ்ணனும் அவர்கள் குறைகளை எல்லாம் சொல்லி, ‘அவர்கட்குத் தருமத்தில் ருசி இல்லைகாண் என்ன, ‘நீ பின்னை அவர்களுக்குத் தருமத்தில் ருசி உண்டாக்கிக் கொடாது ஒழிவான் என்?’ என்றான் அன்றோ?

முதலிகள் அடங்கலும் அரக்கர்கள் வாயிலே கிடந்து பெருமாளைச் சரணம் புக்காற்போலே, இவரும் மனம் ஆளும் ஓர் ஐவர் வன்குறும்பரான இந்திரியங்களுக்குப் பயப்பட்டுக் கூப்பிடுகிறார். 2பிரியமான ஜனங்களைப் பாராதவளும், அரக்கியர்களின் கூட்டத்தைப் பார்ப்பவளும், தன் கூட்டத்தால் விடப்பட்டதும் நாய்க்கூட்டத்தால் சூழப்பட்டதுமான பெண் மான் போன்றிருப்பவளும்’ என்கிறபடியே, ஸ்ரீஜனகராஜன் திருமகள் பட்டது படுகிறார்.

ராக்ஷஸை: வத்யமாநாநாம் வாநராணாம் மஹாசமூ:
        ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதா த்மஜம்’–என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.

ப்ரியம்ஜநம் அபஸ்யந்தீம் பஸ்யந்தீம் யராக்ஷஸீகணம்
        ஸ்வகணேந ம்குகீம் ஹீநாம் ஸ்வகணை; ஆவ்ருதாமிவ’–என்பது, ஸ்ரீராமா. சுந். 15 : 24.

  ‘மயிலி யற்குயின் மழலையாள் மானினம் பேடை
        அயிலெ யிற்றுவெம் புலிக்குழாத் தகப்பட்ட தன்னாள்’–என்பது, கம்பரா. சுந். காட்சிப். 4.

பிள்ளை திருநறையூர் அரையர் 1‘இப்பாசுரங்களில் முன் அடிகள் இரண்டும்(குணாநுசந்தான பரமாக), புலியின் வாயிலே அகப்பட்ட குழந்தை தாய் முகத்திலே விழித்துக்கொண்டு புலியின் வாயிலே கிடந்து நோவுபடுமாறு போலே இருக்கிறது,’ என்று பணிப்பர்

விடுநகம் கட்டுவாரை ‘நெகிழக்கட்டினாய்’ என்று உறுக்கிக் கட்டுவிப்பாரைப் போலே, ‘இந்திரியங்கள் தண்ணளி செய்யாமே ஒக்க இருந்து நலிவிக்கிறான்’ என்றிருக்கிறார். —விடுநகம் – கிட்டிக்கோல். இவை
நலிகிறபோது இறைவன் அண்மையிலிருக்கிறானாகையாலும், இருடிகேசனாகையாலே  தடுப்பதற்கு ஆற்றலுள்ளவனாகையாலும், துன்புறுத்தாதபடி செய்தல் தகுதியாயிருக்க,  அது செய்யாமையாலே, ‘இவனே துன்புறுத்துகிறான்’ என்னலாம் என்பது  இவ்வாக்கியங்களுக்குக் கருத்து.விடுநகங்கட்டி நலியாநிற்கச்செய்தே ‘தண்ணீர்’ என்பாரைப்போலே, அவன் குணங்களைச் சொல்லுகிறபடி. இமையோர்கள் ஏத்தும்–தன்னால் அல்லது செல்லாதாரை ஒருவன் போகட வல்லபடியே என்று’ கொண்டாட ஒரு விபூதி உண்டாவதே! 3அவர்கள் முகங்கொடுக்கையாலன்றோ அவன் இங்கு வாராதிருக்கிறது?’ என்றிருக்கிறார். 4திரிசங்குவினுடைய ஓலக்கம் கிளர்ந்தாற்போலே கிளர்ந்ததாகில், அவனுக்கு என்னை விட்டிருக்கப்போமோ?

என்னை ஆளும் வன் கோ – 1என்னை நோக்குவாய் நீயாய், பணி கொள்வார் வேறே சிலர் ஆவதே! அத்தலை இத்தலை ஆயிற்றுக் காண். 2ஈஸ்வரன் என்பான் ஒருவன் உண்டாய், அவனுக்கு ஆத்துமா சேஷமாய், அவனுக்கு மனம் அந்தரங்கத் துணையாய், அதற்கு இந்திரியங்கள் சேஷமாகை தவிர்ந்து கலகத்தில் பள்ளிகள் போலே என்னை இந்திரியங்கள் ஆளும்படி ஆவதே!

இவை பெய்து 2அவற்றின் பக்கல் குறை உண்டோ? அவற்றை இட்டு நலிவிக்கிறாய் நீ அல்லையோ? 3ஸ்ரீபிரஹ்லாதனை பாம்புகளைக் கூட விட்டுக் கட்டி நலிந்தாற்போலே இருக்கிறதுகாணும், இவற்றை உண்டாக்கி என் பக்கலிலே நீ விட்டது

உன்னை அனுபவிக்க வேணும் என்று போந்த பிராட்டியை மாயமானைக் காட்டிப் பிரித்து, ஒற்றைக்கண்ணன் ஒற்றைக்காதள் இவர்கள் கைகளிலே காட்டிக்கொடுத்து, உன்னைக் கொண்டு அகன்றாற்போலே

உன்னடிப்போது நான் அணுகா வகை செய்து – உன் திருவடிகளாகிற செவ்விப்பூக்களை நான் கிட்டாதபடி செய்து. என்றது, 4மயிர் கழுவி இருக்கிறவனைச் செவ்விப்பூச் சூடாமல் தடுப்பாரைப் போலே’ என்றபடி

ஆழ்வாராகிய தாம் திருவடிகளை  அடைவது எப்போதோ என்று பிரபத்தி செய்திருக்கிற தன்மையை நினைத்து, ‘மயிர்  கழுவி இருக்கிறவனை’ என்கிறார். இப்படி இருக்கிற தமக்கு, ஈஸ்வரன் தன்   திருவடிகளில் அனுபவ கைங்கரியங்களைக் கொடாமையைத் திருவுள்ளம் பற்றிச்  ‘செவ்விப்பூச்சூடாமல் தடுப்பாரைப் போலே’ எனகிறார்.

போதி கண்டாய் – 1கூட நிற்கில் இவை எல்லாம் பட வல்லேன்காண்! 2கூடநிற்கில் கண்ணோட்டம் பிறக்கும்’ என்று கடக்கப் போவாரைப் போலே போனாள். 

விண்ணுளார் பெருமானேயோ– 2ஒருவன் சிறை இருக்க, தாயும் தந்தையும் உடன் பிறந்தார்களுமாய்க் கலியாணம் செய்யக்கண்டு தான் கூடப் பெறாதே நோவுபடுமாறு போலே நித்தியசூரிகளும் அவனும் பிராட்டியுமாகப் பரமபதத்திலே இருக்கிறபடியே நினைத்து அங்கே கேட்கும்படி கிடந்து கூப்பிடுகிறார். 3ஹா ராம! ஹா லக்ஷ்மண! ஹா ஸூமித்ரே!’ என்று பிராட்டி தனியே கிடந்து கூப்பிட்டாற்போலே, பரமபதத்திலே இருப்பும் அணி கலங்கும்படி கூப்பிடுகிறார்.

ஹா ராம ஹா லக்ஷ்மண ஹா ஸூமித்ரே
         ஹா ராமமாத: ஸஹமே ஜநந்யா’–
என்பது, ஸ்ரீராம. சுந். 28:8.

‘நிருதாதியர் வேரற நீண்முகில்போல்
        சரதாரைகள் வீசினர் சார்கிலிரோ?
        வரதா! இளை யோய்! மறு வேதுமிலாப்
        பரதா! இளை யோய்! பழி பூணுதிரோ?’–என்பது, கம்ப, சடாயு உயிர் நீத்த பட. 79.

சுமுகன் என்கிற பாம்பு திருவடிகளிலே சென்று கிட்ட, பெரிய திருவடி ஓடிச்சென்று, ‘எனக்கு உணவாக இருக்கிற இதனைக் கைக்கொண்டு நோக்குவதே!’ என்று வெறுத்து, ‘தேவரீரையும் நாய்ச்சிமாரையும் நெடுங்காலம் தாங்கிக் கொண்டு திரிந்தேன்: நான் ஏன் பெற்றேன்?’ என்றதனைத் தெரிவித்தபடி. 4இதுவன்றோ சம்சாரத்தின் தன்மை இருக்கிறபடி? 5அவன் தான் அவதரித்துச் சோகிப்பது மோகிப்பதானாற்போலே ஆயிற்று இவர்களும்.

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம்
        வெருவி வந்துநின் சரணெனச் சரணா
        நெஞ்சில் கொண்டுநின் அஞ்சிறைப் பறவைக்கு
        அடைக்கலம் கொடுத்து அருள் செய்த தறிந்தும்’–என்னும் திருப்பாச்சுரத்தால் உணர்தல் தகும். பெரிய திருமொழி, 5. 8:4.

இரட்சகனான நீ விட்டிலையாகில், மஹாராஜர் வாலியை வென்றாற்போலே நானும் இந்திரியங்களை வெல்லேனோ?’ 6‘அந்த மனத்தினை அடக்குதல் காற்றை அடக்க முடியாதது போலச் செய்ய முடியாத காரியமாக நான் நினைக்கிறேன்,’ என்றான் அன்றோ? என்றது, ‘காற்றை ஓரிடத்தில் கட்டிவைக்கில்,’ அன்றோ மனத்தினை நியமிக்கலாவது?’ என்றபடி.

சுமடு தந்தாய் – உன் பக்கலினின்றும் அகற்றி விஷயங்களிலே கொடுபோய் மூட்டக் கூடியதான சரீரத்தைத் தந்தாய்; என்னை அனுபவிக்கைக்கு உறுப்பாக போமாறுபோலேயாயிற்று, பகவானுடைய அனுபவத்துக்கு ஈடாகக் கொடுத்த சரீரம் இந்திரியங்களுக்குப் பணி செய்யும்படியாய்விட்டது. சுமடு – சும்மாடு. சரீரமாகிற சும்மாட்டைத் தந்தாய்.ச் சரீரத்தைத் தந்தாயானாய் நீ; அதுதானே எனக்கு இழவுக்கு உடலாயிற்று. 2இராஜபுத்திரன் தலையில் முடியை வாங்கிச் சும்மாட்டைக் கொண்டு வழியிலே நின்றால், அடி அறியாதார் சுமை எடுத்துக்கொண்டு போமாறுபோலேயாயிற்று, பகவானுடைய அனுபவத்துக்கு ஈடாகக் கொடுத்த சரீரம் இந்திரியங்களுக்குப் பணி செய்யும்படியாய்விட்டது.

திசை திசை வலித்து-இவர்கள் அனைவரும் ஒரு திக்கிலே போக இழுத்தார்களாகில்தான் மெள்ளப் போகேனோ? எற்றுகின்றனர்-உடையவனாகிலன்றோ போக்குவிட்டு நலிவது? வலியில்லாதான் ஒருவன் தலையிலே மிக்க பாரத்தைச் சுமத்திச் சுற்றும் நின்று தந்தாம் வழியே இழுத்துக்கொண்டுபோகத் தேடுமாறு போலே காணும் இவையும்.

தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் – 1விஷயங்களையும் இந்திரியங்களையும் நினைத்த நெஞ்சாரல் தீர, சேஷத்துவத்தினுடைய எல்லை நிலத்திலே போய் நிற்கிறார்; 2தாபத்தாலே வருந்தினவன் மடுவிலே தாழ இழியுமாறு போலே.

பிற்பாடு பொறுக்கமாட்டாத இவரை வைக்கப் போருமோ?’ என்னில், குழந்தைகளைப் பட்டினி இட்டு வைத்தும் வந்த விருந்தினரைப் பேணுவாரைப் போல, ‘இவர்தாம் நான்கு நாள்கள் நோவு பட்டாராகில் படுகிறார்; இவருடைய பிரபந்தத்தைக் கொண்டு உலகத்தை வாழ்விப்போம்,’ என்றிருந்தான்

பெருமாளும், மீளாமைக்குக் காரணமாயிருப்பன பலவற்றை அவனுக்குச் சொல்லி, ‘பிள்ளாய்! நீ நிர்ப்பந்திக்கக் கடவையல்லை: உன்னைச் சுவதந்திரனாக்கி வார்த்தை சொன்னார் எதிரே, உன் சொரூபத்திற்குத் தகுதியான பாரதந்திரியத்தைப் பெற்று நீ போ,’ என்று சொன்னாற்போலே, இவர் விரும்பியது ஒழிய ஏதேனும் ஒன்றனைக் கொடுத்துப் போகட்டுப் போக வல்லான் ஒரு சுவதந்திரன் அல்லனோ? ஆகையாலே, தான் நினைத்த போது காரியம் செய்யக் கடவனுமாய் இருப்பன் அன்றோ

இப்பெண் பிள்ளை மோகித்துக் கிடக்க, இவளைக் கண்டு உறவு முறையார் அடங்கலும் மோகித்துக் கிடக்க; 3பெருமாளைக் காட்டிலும் இளையப்பெருமாளுக்குத் தளர்த்தி உண்டாயிருக்கச் செய்தே, பெருமாளுடைய இரட்சணத்துக்காக இளையப்பெருமாள் உணர்ந்திருக்குமாறு போலே, திருத்தாயாரும் இவளுடைய இரட்சணத்துக்காக உணர்ந்திருந்து, எந்த நிலையிலும் தங்கள் காரியம் தலைக்கட்டும் குடியாகையாலே, பெரிய பெருமாள் திருவடிகளிலே இவளை இட்டு வைத்துக்கொண்டிருந்து, ‘இவள் அழுவது, தொழுவழு. மோகிப்பது, பிரலாபிப்பது, அடைவு கெடப் பேசுவது, நெடுமூச்சு எறிவது, அது தானும் மாட்டாது ஒழிவது, தன்னை மறந்திருப்பது, இப்படி அரதி விஞ்சிச் செல்ல நின்றது; இவள் திறத்தில் நீர் என் செய்யக் கடவீர்?’ என்று கூப்பீடாய்ச் செல்லுகிறது, 4எல்லா அளவிலும் அவனையே பரிகாரம் கேட்கும் குடியே அன்றோ?

என்றும் சிறைக்கூடத்திலே பிறந்து வளர்ந்தாரைப் போலே பிரிந்த நாள்களில் இழவேகாணும் இவள் நெஞ்சிலே பட்டுக்கிடக்கிறது.

கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய். என்னக் கணிசித்து, வலி இல்லாமையாலே தலைக்கட்ட மாட்டாதே, விடாயன் கையை மடுத்துத் தண்ணீரை வேண்டுமாறு போலே, குறையும் அஞ்சலியாலே தலைக்கட்டாநின்றாள்.

இவள்படி பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே காட்டுகிறாள். என்றது, ‘இராக்கதர்கள் தின்ற உடம்பைக் காட்டினாற்போலே, விரஹம தின்ற உடம்பைக் காட்டுகிறாள்’ என்றபடி

வானமே நோக்கும் – 4‘மணிவண்ணா’ என்னும் துயர ஒலி கேட்டிருப்பதற்குச் சத்தன் அல்லன், ஒலி வழியே ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோன்றினாற் போலே தோன்றி யருள்வான் என்று ஆகாயத்தையே பாரா

ஒருகால் செய்தது கொண்டோ?’ என்ன, கண்ணனே – ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியர்களுக்கு உன்னைக் காட்டிற்றிலையோ? 4தாஸாம் ஆவிரபூத்ஒரு நீர்ச்சாவியிலே ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலே இருக்கை. 

தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமாக முகாம்புஜ:
        பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத;’–என்பது, பாகவதம், 10. 32:2.

வாராக வாமன னேயரங் காவட்ட நேமிவல
    வாராக வாஉன் வடிவுகண் டால்மன் மதனும்மட
    வாராக ஆதரம் செய்வன்என் றால்உய்யும் வண்ணமெங்கே
    வாராக வாச முலையேனைப் போலுள்ள மாதருக்கே?’–
என்பது, திருவரங்கத்தந்தாதி.

எழுந்து உலாய் மயங்கும்- 1அவியும் விளக்குக் கிளர்ந்து எரியுமாறு போலே அடி அற்ற எழுச்சியும் அடி அற்ற உலாவுகையுமாய் இராநின்றது; 2அது கிளர்ந்து எழுந்தவுடனே அவியுமாறு போலே மயங்காநின்றாள்

கடல் வண்ணா கடியைகாண் என்னும்-6‘கடல் எல்லாப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கி, ஒன்றை ஒன்று நலியாதபடி நோக்குமாறு போலே, எல்லாப்பொருள்களையும் காப்பாற்றுகின்ற நீ அருள் இல்லாதவன் ஆனாய்’ என்னும். அன்றிக்கே, ‘பிரிந்தார்க்குத் தரிக்க ஒண்ணாதபடியான வடிவு படைத்த நீ கொலைஞன் ஆகாநின்றாய்’ என்னும் என்னுதல்.

பிரஹ்ம ஹத்தியைகளைச் செய்து பூணூலை வெளுக்கவிட்டுக் கையிலே பவித்திரத்தையுமிட்டு ஓத்துச் சொல்லித் திரிவாரைப்போலே இருந்ததே உம்முடைய படி’ என்றபடி. செழுநீர்த் திருவரங்கத்தாய் – சிரமத்தைப் போக்கும்படியான நீரையுடைய கோயில். 2தண்ணீர்ப் பந்தலிலே கொலைஞர் தங்கினதைப் போன்றதேயன்றோ நீர் இவ்வூரில் சாய்ந்ததும்?

புழுகூற்றிச் சட்டம் போகடுவாரைப் போலே

வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்- 3திவ்ய ஆயுதங்கள் பகைவர்களை அழிப்பதற்கு உடலாக இருக்குமாறு போலே காதலிகளை அழிக்கைக்கும் உடலாக இருக்குமன்றோ உகப்பாரையும் உகவாதாரையும் ஒக்கத் தோற்பிக்குமவை? 4முன்னே கைகண்டு வைக்கிறவை அன்றோ?

என்னுடையக் கோமளக்கொழுந்து – கலக்கப் பொறாத மிருதுத் தன்மையையுடைவள் பிரியப் பொறுக்குமோ? 5தசை முறுகினால் வைத்தியர்கள் முகம் பாராதவாறு போலே, மகள் அவஸ்தையைக் கண்டு தளர்ந்து பெரிய பெருமாள் முகம் பாராமலே வார்த்தை சொல்லுகிறாள்’ என்று அருளிச் செய்வர் சீயர்.

அறா-தீர்த்தம் கொடுத்த பிற்றை நாளே திருமுளைச் சாத்தாநிற்குமத்தனை. 7சமந்தகமணி கைப்பட்ட பின்பு அக்குரூரன் அடுத்து அடுத்து அஸ்வமேதம் செய்தாற் போலே, அவர்க்கும் அடுத்து அடுத்துத் திருவிழாவாகச் சொல்லுகிறதித்தனை

‘மாட்டேன்’ என்ற உறைப்பாலே. 5சம்சாரிகள் ஐம்புல இன்பங்களினின்றும் மீளமாட்டாதவாறு போலே அன்றோ, இவர் பகவத் விஷயத்தினின்றும் மீளாமாட்டதபடி?

செங்கனி வாயின் திறத்ததுவே – 5கிண்ணகத்தில் ஒரு சுழியிலே அகப்படுவாரைப்போலே, வாய்க்கரையிலே அகப்பட்டது; 6ஆசைப்பட்ட விஷயத்தைக் கரை கண்டது ஆகில் அன்றோ மீளுவது?(கிண்ணகம் – ஆற்றுப்பெருக்கு.
வாய்க்கரை-அதரம். ‘மேல்’ என்பது, தொனிப்பொருள்.)

‘செங்கனி வாயின் திறத்ததாயும், செஞ்சுடர் நீண்முடி தாழ்ந்ததாயும், சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும், தாமரைக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும், நெஞ்சும் நாணும் நிறையும் இழந்ததுகாண்!’ என்கிறாள் திருப்பாற்கடல் கடைகிற காலத்தில் தான் எட்டு வடிவு கொண்டாற்போலேகாணும், இதுவும் விஷயத்திற்குத் தகுதியாகப் பல வடிவு கொள்ளுகிறபடி,’

இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் – (திறம்’ என்பதற்குக் கூட்டம் என்று பொருள் அருளிச்செய்யத் திருவுள்ளம் பற்றிப்   பதப்பொருள் அருளிச்செய்கிறார்)5நிறம் தொடக்கமாக இழந்தவை அடைய மீட்பதாகச் சொல்லிப் போன நெஞ்சினரும் அங்கே கால் தாழ்ந்தார். 6வினைத்தலையிலே படை அறுக்குமாறு போலே, வரிசையும் கொடுத்துத் தம்மோடு ஒப்புமையையும் கொடுத்தார். 1‘இந்த விபீஷணன் இராஜாவன்றோ?’ என்னுமாறு போலே, வரிசை பெற்றுத் திரியாநின்றார்.  (வினைத்தலை – போர்த்தலை. படையறுத்தல் – எதிர்த்தலையில் சேனையைத் தன்   வசமாக்கிக்கொள்ளுதல்.)

அவ்விருப்பைக் கண்டு முத்தர் சாமகானம் பண்ணிப் பிரீதிக்குப் போக்கு விடுமாறு போலே. முழங்கு சங்கக் கையன் – 6வேத ஒலியானது ஸ்ரீபாஞ்சஜன்யத்தைக் கிட்டி எதிர் ஒலி எழாநிற்கும்.

ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னும் இவை மூன்றும் கூடி இருக்கையாலே தண்ணீர் நிறைந்திருத்தலின் ‘கூடுபுனல் திருப்பேரெயில்’ என்கிறது. திருப்பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமின்கள் – 3என் விடாய் தீரச் சிரமத்தைப் போக்கும்படியான தேசத்திலே கொடுபோய்ப் போகடப் பாருங்கோள். அன்றிக்கே, ‘அங்குள்ள செந்நெல்லுக்குத் தண்ணீர் தாரகமாய் இருக்குமாறு போலே, இவளுக்கும் அவ்வூரில் காட்சியே தாரகமாய் இருக்கிறபடி’ என்னுதல்.

சிகரம் மணி நெடு மாடம் நீடு தென்திருப்பேரெயில் வீற்றிருந்த – மலைகளின் சிகரங்களைக் கொடுவந்து வைத்தாற்போலே ஓக்கமுடைத்தாய், இரத்தின மயமான மாடங்களையுடைய பெரிதான தென்திருப்பேரெயில் வீற்றிருந்த.

ஆ வ்ரஜந்தம் – 3மலர் மலரும்போது எங்கும் ஒக்கப் பிறக்கும் மலர்ச்சி போலே4அதுவும் வண்டினை நோக்கி அன்றோ மலர்வது? இவரும் அனுபவிக்கின்றவர்களைக் குறித்தே அன்றோ?

ஆழி எழ – 7‘ஆயிரக்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூற்றுக்காதம் சிறகு அடிக்கொள்ளும்’ என்னுமாறு போலே முற்கோலி வளர்ந்தபடி.

ஆழி எழ – 5தோற்றத்திலே அரசு போராயிற்று; 1ஹேதி ராஜன் அன்றோ? திவ்விய ஆயுதங்களுக்கெல்லாம் பிரதானம் அன்றோ திருவாழி? 2பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேலே பாய்ந்தாற்போலே; 3‘பையல் முடியுந்தானுமாய்ப் பெருமாள் திருமுன்பே நிற்பதே! ஈர் அரசு ஆயிற்றோ?’ என்று பொறாமையாலே மேல் விழுந்தார் அன்றோ?

அத ஹரிவரநாத: ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
    நிஸிசரபதிம் ஆஜௌ யோஜயித்வா ஸ்ரமேண,
    ககநமதிவிஸாலம் லங்கயித்வா அர்க்கஸூநு:
    ஹரிவரகணமத்யே ராமபார்ஸ்வம் ஜகாம.’–  என்பது, ஸ்ரீராமா. யுத். 40:29

சங்கும் வில்லும் எழ-தூசி ஏறினவர்கள் பொரப் புக்கவாறே நின்ற 2இளவணி கலங்கி மேலே நடக்குமாறு போலே, மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கைகளிலே ஏறினார்கள்

தண்டும் வாளும் எழ– ‘தூசித்தலையில் அவர்களே 2கை தொடராய்த் தரம் பெற்றுப் போக ஒண்ணாது’ என்று நின்று பேரணியும் குலைந்து மேல் விழுமாறுபோலே; ‘பிற்பட்டோம், கெட்டோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் படுகிறபடி

அரவு ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி – வாசுகியினுடைய உடலைச் சுற்றிக் கடைகிற போதைச் சரசரவென்கிற ஒலியும். ஊறு – உடம்பு. சுலாய் – சுற்றி. கடல் மாறுசுழன்று அழைக்கின்ற ஒலி – மந்தர மலைய்க் கொடுபுக்கு நட்டுத் திரித்த போது, 4கீழ்க்கடல் மேற்கடலாய்க் கிடாய்ப் பாய்ச்சல் போலே திரையோடு திரை தாக்கிக் கிளருகிற ஒலியும்

  ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி-வலியைப் போரப் பொலியச் சொல்லி வைத்து, ‘ததர்ந்த’ என்கிறார்காணும், 3பசளைக்கலம் நெரித்தாற்போலே வருத்தம் இன்றியே நெரித்தபடியைப் பற்ற.

தன்னோடு ஒக்க ஆறல்பீறலாய் இருப்பது ஒரு தேவதையைப்பற்றி, அரணுக்குள்ளே இருப்பாரைப் போலே திண்ணியனாய் இருந்தானாயிற்று. புருடோத்தமனைப் பற்றி இருப்பாரைப் போலே, கபாலிகந்தரைப் பற்றி நிர்ப்பரனாய் இருந்தான். 4சர்வேஸ்வரனைப் பற்றி ‘எதினின்றும் அஞ்சுகிறான் அல்லன்’ என்று இருப்பாரைப் போன்று எண்ணினான்.

இடராக வந்தென்னைப் புன்சிறு தெய்வங்கள் என்செயுமான்
        இடாரக வன்பிணி மாநாக மென்செயும் யான்வெருவி
        இடராக வன்னி புனல்இடி கோள்மற்று மென்செயும்வில்
        இடராக வன்அரங் கன்திருத் தாள்என் இதயத்ததே.’–
என்பது, திருவரங்கத்தந்தாதி, 39.

இதர ஸஜாதீயனோ!’ என்று இருந்தேன்; ‘கழுத்திலே கயிறு இட்ட பின்புகாண் நான் பூனை என்று அறிந்தேன்’ என்பாரைப் போலே. 

சுனை வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய-சுனையிடத்து நிறைந்து நிற்கிற நீரானது, நிறைகுடத்தைக் கவிழப் பிடித்தாற்போலே ஒலித்துக் கொண்டு சொரிய. 3ஒரு மழை காக்கப் புக்கு அங்கே பல மழையை உண்டாக்கினபடி

பாதுகாப்பதற்கே உரியனவான பிறவிகளிலே வந்து பிறந்த படியையும், தன் சொரூபம் ரூபம் குணம் முதலானவைகளையும் பிறர்க்கு ஆக்கி வைக்கிறபடியையும், அதற்குக் காரணமான கிருபையைத் தனக்கு வடிவாகவுடைனாய் இருக்கிறபடியையும், கிருபையின் காரியமான செயல்களையும் நினைத்து, முற்றத்திலே பொற்குவியல் புைதைந்து கிடக்க, அதனை அறியாதே மேலே சஞ்சரித்துப் புறங்கால் வீங்குவாரைப் போலே இச்செல்வம் தங்களுக்காக இருக்கச் சம்சாரிகள் புறம்பே போது போக்குவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.

புல் எறும்பு – ஆதி பிறிவிகளிற் கடையான எறும்பு தொடக்கமாக. 4பிரமனை எண்ணினால் பின்பு முடிவில் நிற்கக்கடவது அன்றோ எறும்பு? 5‘புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி’ என்று இவற்றுக்கு ஒரு முதன்மை சொல்லுகிறார் அல்லர்; ‘ஸ்ரீராமபிரானுடைய திருவுள்ளத்துக்கு முற்பட்டன இவை,’ என்கிறார்; 1வெள்ளமானது தாழ்ந்த இடத்திலே ஓடுமாறு போலே

நான்முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் – 4அரசன் தன் னுடையான் ஒருவனுக்கு ஒரு நாட்டைக் கொடுத்தால் அவனுடைய ஆணையும் ஆஜ்ஞையுமாக அவனுடைய சுவாதந்திரியமே நடக்கும்படி செய்து கொடுக்குமாறு போலே, சம்சாரி சேதநர்க்குத் தலையான பிரமனுக்குக் கையடைப்பான நாட்டுக்குள்ளே, அவன் சுவாதந்திரியத்தையும் தவிர்த்து, இவற்றின் கர்ம பாரதந்திரியத்தையும் தன் குணத்தாலே பதஞ்செய்து, தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய்ப் பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான். ஆன பின்பு அவனை ஒழிய வேறேயும் சிலவற்றைக் கற்பரோ?

கோயில் கந்தாடை நாயன், ‘திருவடியும் திருப்பாணாழ்வாரும்  தொண்டரடிப்பொடியாழ்வாரும் கூடி இருக்கிறதற்குக் கருத்துத் தெரியுமோ?’  என்று ஸ்ரீபாதத்து முதலிகளைக் கேட்க, ‘அடியோங்களுக்குத் தெரிந்தது இல்லை,’
என்ன, ஆனால், ‘ந அந்யத்ர கச்சதி’ என்றும், ‘மற்று ஒன்றினைக் காணாவே’  என்றும், ‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்றும் மூவரும் ஏக ப்ரகிருதிகள்  ஆகையாலே கூட எழுந்தருளியிருக்கிறார்கள் என்று அறியக்கடவீர்,’ என்று  பிரசாதித்தருளினார்.

பிரமன் முதலான தேவர்களும், 1‘நீவிர் நாராயணரான தேவர் ஆவீர்’ என்றார்களே அன்றோ? 2ஒருவன் சோற்றை உண்டவர்கள் அவனை ஒழிய வேறு ஒருவர்க்குக் காரியம் செய்வார்களோ?’ என்னுமாறு போலே.

‘கேளாச் செவிகள் செவி அல்ல கேட்டாமே’ என்னா நின்றதே அன்றோ? 5எறும்பு வளையைப் போன்றதே அன்றோ?

இழிந்த துறைகள்தோறும் அழுந்த வல்லார் ஒருவர் அன்றோ? 3ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் வேறு குணங்களில் கால் வாங்கமாட்டாதவாறு போலே ஆயிற்று

ஈஸ்வரன் உலகத்தை அழித்து நெடுங்காலம் பாழ் கூவிக் கிடக்கும்படி இட்டு வைப்பான். பயிர் செய்கிறவன் விளைநிலம் உவர் கழியும்படி நீரைத் தேக்கி வைக்குமாறு போலே, இவற்றினுடைய துர்வாசனை போகைக்காகப் படைத்ததைப் போன்ற காலம் அழித்திட்டு வைப்பன்

தன்பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட – பெரிய பூமியைத் தன் எயற்றிலே 1நீலமணி போலே கொண்ட2தன் திரு எயிற்றிலே ஒரு கூற்றிலே கொண்ட. 3உதாரராய் இருப்பார் நாற்பது பேருக்குச் சோறு இட நினைத்து நூறு பேருக்குச் சோறு சமைக்குமாறு போலே, பாதுகாக்கப்படுகிற பொருள்களின் அளவு அன்று காணும் கொண்ட எயிற்றின் பெருமை

போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை – பரணி, கூடு வரிந்தாற்போலே, இவ்வாத்துமாவை அறிய ஒண்ணாதபடி சூழப் பொதிந்து கிடக்கிற பிறவிகள், அவை புக்க இடத்தே புகக்கடவ நோய், அங்ஙனேயாகிலும் சிலநாள் செல்லாதபடி இடி விழுந்தாற்போலே நிற்கிற முதுமை, அங்ஙனேயாகிலும் இருக்க உண்ணாதபடி இவனுக்கு விருப்பம் இல்லாத இறப்பு, இவற்றை எல்லாம். பேர்த்து – 5ஈஸ்வரனுக்கு ஒரு விரகு பார்த்துத் தள்ள வேண்டும்படி அன்றோ அவற்றின் கனம், விரகர் நெடுஞ்சுவர் தள்ள மாறுபோலே தள்ளி?

அவனுக்கு அல்லது ஆள் ஆவரோ1மேலே கூறிய குணங்கள் எல்லாம், ‘மண் தின்ன வேணும்’ என்று அழுத குழந்தைக்கு அதனை இட்டு அதற்குப் பரிஹாரம் பண்ணுமாறு போலே ஆயிற்று; இங்கு, இவற்றினுடைய ஹிதமே பார்த்துச் சம்சாரம் தொடக்கமான எல்லாத் துன்பங்களும் மறுவலிடாதபடி போக்கித் தன் திருவடிகளின் கீழே வைத்துக் காத்த பெரிய நீர்மைக்குப் போருமோ மேலே கூறியவை அடங்கலும்?
-மேலே செய்த பரிஹாரங்கள் கிரந்தி கிடக்கச் செய்யும் பரிஹாரம் போலே சம்சாரம் கிடக்கச் செய்த பரிஹாரங்கள் அன்றோ? அது புண் இல்லாதபடி அறுத்து நோக்குவாரைப்போலே இதிற் சொல்லுகிற குணம். 3மேற்கூறியவை சம்சாரிகள் இச்சையாலே செய்தவை; இது ஈஸ்வரன் தன்னிச்சையாலே செய்ததன்றோ?

தெளிவுற்ற ஆயிரம் – 3மலையிலே கலங்கின நீரானது ஒரோ பிரதேசங்களில் வந்து தெளிந்து உபயோகத்திற்குத்தகுதியாமாறு போலே ஒரு சிலரே ஓதத் தகுந்ததாய்க் கூளமும் பாலப்பசினும்போலே ஒன்றே அறுதியிட்டுப் பிரிக்க ஒண்ணாதபடியாயிருக்கிற வேதார்த்தாமானது, எல்லாரும் படிக்கத்தகுந்ததாய் எல்லா ஐயங்களும் தீர்ந்து தெளிந்தது அவர் பக்கலிலே வந்தவாறே.

மிகவும் துக்கித்தவராய்ச் சர்வேஸ்வரனுக்குப் பரமபதத்திலும் இருப்பு அரிதாம்படி ஆர்த்தியாலே நிரம்பிற்று. ஒரு கடல் கையெடுத்துக் கூப்பிடுமாறு போலே கூப்பிடுகிற கூப்பீடு கேட்டு அவ்விருப்புக் குலைந்து வந்து முகங்காட்ட வேண்டும்படி, அவன் 1பிராப்பியனாய் இருக்கிறபடியையும் பிராபகனாய் இருக்கிறபடியையும் விரோதிகளை அழிக்கும் தன்மையனாய் இருக்கிறபடியையும் சொல்லி, கேட்டாரடைய நீராகும்படி பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்.

படுகொலைக்காரர் கையிலே அகப்பட்டார், ‘தப்ப வேணும்’ என்று பார்க்குமாறு போலே நீங்கள் இங்ஙன் கூப்பிடுகைக்கு நான் செய்த குற்றம் என்?’

தாதுக்களுக்கு இமயமலை போன்று குணங்களுக்குப் பிறப்பிடமாய் இருக்கின்றான், ஒருவராலும் அசைக்கக்கூடாத ஆற்றலையுடையனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே, 4தாதுக்களானவை ‘இன்ன மலையிற்பொன்’ என்றவாறே விலை போமாறு போலே, புறம்பே குணங்கள் சிலவற்றைக் கண்டால், பெருமாள் பக்கல் குணம்’ என்று இட்டாயிற்று அங்கு விலை போவது,

ஜ்ஞாந விஜ்ஞான ஸம்பந்நோ நிதேஸே நிரத: பிது:
     தாதுநாம் இவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்’–என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.

என் தாயே’ என்பாரைப் போலே ‘படைத்த பற்ப நாபாவோ!’ என்கிறார்–பாமரு மூன்று உலகும் அளந்த பற்ப பாதாவோ – 5இவற்றை உண்டாக்கி ‘மேல் பட்டது படுகிறது’ என்று இருந்தாயாகில்தான் ஆறி இரேனோ? பெற்ற தாய் வளர்க்குமாறு போலே இவற்றைக் கண்களிலே வெண்ணெய் இட்டுக்கொண்டு நோக்குமவன் அல்லையோ-மஹாபலி போன்றவர்கள் இறாஞ்சினாற்போலே இதனைக் கவர்ந்து கொண்டால் எல்லை நடந்து மீட்டுக் கொள்ளுமவன் அன்றோ நீ?

நிலம் நீர் எரி கால் விண் உயிர் என்ற இவை முதலா முற்றுமாய் நின்ற1பெற்ற பின்பு நோக்குகை அன்றிக்கே, ‘குழந்தையைப் பெற வேணும்’ என்று ஏற்கவே வருந்தும் தாயைப் போலே, படைப்பதற்கு முன்பே இவற்றை உண்டாக்குகைக்காகத் 2திருவ்ருத்கரணத்தை நினைத்துப் பஞ்சீகரணத்தைச் செய்து, இவற்றை அடையப் படைத்து

என்னுடையக் கோவலனே(இன்னார்  தூதன் என நின்றான்) – 2பாண்டவர்களுடைய கோவலன் ஆனாற்போலே ஆயிற்று: இது சீலம் இருந்தபடி.

கருமாணிக்கமே-இது வடிவழகு இருந்தபடி. 1 ‘அழகிது’ என்னில், உலகத்தோடு ஒப்பாம் என்று பார்த்து, வேறு சொல்லாலே சொல்லுகிறாராதல்; அன்றியே ‘தொளையா மணி’ என்கிறாராதல். பொல்லல்-தொளைத்தல். 2 ‘அனுபவிக்கப்படாத இரத்தினம் போலே’ என்றபடி

குறைவு அற்ற நீலப் புகரானது தழைப்ப5கர்மம் காரணமாக வந்தது அல்லாமையாலே மேன்மேலென மிக்கு வருதலின், ‘தழைப்ப’ என்கிறார். –மல்கு நீலம்’ என்றவர், மீண்டும் ‘தழைப்ப’என்றது, ‘இவ்வளவு என்ன ஒண்ணாதபடி மேன்மேலென வளராநிற்கின்றது’ என்றபடி. நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து-சிவந்த சுடரையுடைத்தான ஒளியானது காலப்பூ அலர்ந்தாற் போலே பூத்து. ஒரு மாணிக்கம் சேர்வது போல் –அனுபவத்திற்குத் தகுதியாம்படி ஒரு மாணிக்கமானது சாய்ந்தாற்போலே.மல்கு நீலம் சுடர் தழைப்ப’ என்கையாலே, நிறம் இருந்தபடி சொல்லிற்று; ‘நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கையாலே, திவ்விய அவயங்கள் இருந்தபடி சொல்லிற்று; ‘ஒரு மாணிக்கம் சேர்வது போல்’ என்கையாலே, இரண்டும் பற்றுக்கோடான திருமேனியைச் சொல்லுகிறது.

புற்றுகள் எப்போதும் ஒக்கப் பாம்பு பற்று அறாதவாறு போலே என்றும் ஒக்கு அரக்கர்கள் மாறாதே, ‘மாலி, சுமாலி, மால்யவான்’ என்றாற்போலே சொல்லப்படுகிறவர்கள் வாழ்ந்து போந்தவர்களாய், பெரிய திருவடி முதுகிலே வந்து தோன்றி, அவர்களை அழித்தானாகச் சொல்லக்கடவது அன்றோ? அதனை இங்கே அருளிச்செய்கிறார்

கடிய வினையே முயலும் –கடிய வினைதாயையும் தமப்பனையும் இரண்டு இடங்களிலே ஆக்குவாரைப் போலே அன்றோ, பெருமாளையும் பிராட்டியையும் இரண்டு இடங்களிலே ஆக்கிற்று?

அரி ஏறுபசுக்களின் கூட்டத்தின் நடுவே ஓர் இடபம் செருக்கித் திரியுமாறு போலே, நித்தியசூரிகள் கொண்டாட, அவர்கள் நடுவே அதனாலே செருக்கி மேனாணித்திருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. 1நித்தியசூரிகள் திரளிலே அந்த ஓலக்கத்தின் நடுவே இருக்கும் இருப்பைக் காண்கை அன்றோ பிராப்பியமாகிறது?

அந்தக் கண்ணபிரான், கிரீடம் கீழே விழும்படி மயிரைப் பிடித்து இழுத்துப் பூமியிலே தள்ளினார்’ என்றதற்குக் கருத்து என்னையோ?’ எனின், ‘இராஜத் துரோகிகளைக் கொல்லும்போது இராஜ சிந்நங்களை வாங்கிக் கொல்லுவாரைப் போலேகாண்’ என்று அம்மாள் பணிப்பர்

சூழவும் தாமரை நாண்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் – 2மூலபலத்தின் அன்று பார்த்த இடமெல்லாம் பெருமாளே ஆனாற் போலே ஆயிற்று; 3இராம பாணத்துக்கு இராக்கதர்கள் தப்பலாம் அன்றாயிற்று, இக்கண்களின் அழகின்கீழ் அபலைகளாய் இருப்பார்க்குத் தப்பலாவது? 4‘புண்டரீக நெடுந்தடங்கள் போலப் பொலிந்து (திருவிருத்தம், 39.)எமக்கு எல்லா இடத்தவும்’ என்னக் கடவது அன்றோ? 5பாம்பைக் கண்ட அச்சம் போலே இருக்கை6இறாய்க்க நினைத்த இடம் எங்கும் தானேயாய் இராநின்றது.

அன்னைமீர் என்னை நீர் நலிந்து என் – 3ஹிதத்திலே நடக்கும் தமப்பனைப் போலே, என் பிரியத்திலே நடக்கும் நீங்கள் என்னை நலிகிறது என்?

யானை அணி செய்து வந்து தோன்றினாற்போலே இருத்தலின், ‘அணிமுத்தம்’ என்கிற்று. (தீமை செய்தலின்  உறைப்பைக் காட்டினபடி. அணி செய்து-நிரை செய்து.)அன்றிக்கே, ‘அழகிய முத்தம்’ என்னுதல்

பிரளயம் கோத்தாற்போலே, கண்ணைக் கண் கோத்து அன்றோ கிடக்கிறது (கண்ணைக்கண் கோத்துக்   கிடக்கையாவது, தம்முடைய கண்ணை அவனுடைய கண் கோத்துக் கிடக்கிறது என்றபடி.)

முடியவும் ஒட்டாதே வாழவும் ஒட்டாதே நடுவே இருத்தி நலிகிறபடி நினைத்து, ‘எனக்கு இதில் பொருந்தாமை உண்டாய் இருக்கச் செய்தேயும் இச்சம்சாரத்திலே வைத்து என்னை நடத்திக்கொடு போருகிற இவ்வாச்சரியத்தை எனக்கு அருளிச்செய்ய வேண்டும்,’ என்ன ஒன்றைக் கேட்க, வேறே சிலவற்றைச் சொல்லுவாரைப் போலே, ‘இது ஒன்று கண்டோ நீர் ஆச்சரியப்படுகிறது? இவ்வளவு அல்லாத நம்முடைய விசித்திர உலக உருவமாய் இருக்குந் தன்மையைப் பாரீர்!’ என்று தன்னுடைய ஆச்சரியமான உலக உருவமாய் இருக்குந் தன்மையைக் காட்டிக்கொடுத்தான்.

உம்மைக்கொண்டு, ஸ்ரீ வீடுமரைப் பாணங்களாகிய படுக்கையிலே இட்டு வைத்து நாட்டுக்கு வெளிச்சிறப்பைப் பண்ணிக்கொடுத்தாற்போலே, நமக்கும் 3நம்முடையார்க்கும் போது போக்காகச் சில பிரபந்தங்கனைப் பண்ணுவிக்கப் பார்த்தோம்: அது தலைக்கட்டுந்தனையுங்காணும் உம்மை இங்கு வைப்பது,’ என்று நேரான பரிகாரத்தை அருளிச்செய்தான்

என் சோதியை – 2பிடாத்தை விழவிட்டுத் தன் வடிவழகைக் காட்டினான். ‘திருத்திரை எடுத்தாற் கூப்பிடுமாறு போலே கூப்பிட்டேன்; அது கவியாய்த் தலைக்கட்டிற்று.

இதனை இனிய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கினான். 3‘பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம்’ என்கிறபடியே. 4தான் வென்று மற்றையாரோடு ஒருசேர நின்று அருச்சுனனைப் புகழுமாறு போலே

அருகு இருந்த தேன் கலந்து – 4திருமஞ்சனத்துக்கு உபகரணங்கள் சமைந்திருக்குமாறு போலே, அருகே மலை முழைஞ்சுகளிலே நிரம்பியிருக்கிற தேன்களிலே வாங்கித் தோய்த்து

தன்னை என் ஆக்கி – என்னைத் தன்னோடு ஒக்கச் செய்து. அன்றிக்கே, ‘தனக்கு ஆம்படி செய்து’ என்னுதல். என்னால் தன்னை வைகுந்தனாகப் புகழ – தந்தையானவன் மகனுக்கு ஒரு பசுவை நீர் வார்த்துக் கொடுத்து மீண்டு அவன் பக்கலிலே பசுவை நீர் ஏற்றுப் பெறுமாறு போலே இருப்பது ஒன்றாயிற்று இதுவும்

ஆகையாலே, ‘ஸ்ரீவால்மீகி பகவான் பாடின ஸ்ரீராமாயணம் கேட்கைக்குத் திருவயோத்தியையிலே திருத்தம்பிமாரும் தாமுங்கூடப் பெருமாள் பேரோலக்கம் இருந்தாற்போலே, சர்வேஸ்வரனும் நாம் பாடின திருவாய்மொழி கேட்கைக்காகத் திருவாறன்விளியிலே 2பரியங்க வித்தியையிற்சொல்லுகிறபடியே திருவனந்தாழ்வான் மேல்3நாய்ச்சிமாருடனே கூடி நித்திய பரிஜனங்களோடே கூட எழுந்தருளியிருந்தான்

மநஸ்வீ – 4பிரணயதாரையில் வந்தால், அவள் பாரித்த பாரிப்புக்கு எல்லாம் யானைக்குக் குதிரை வைக்கைக்கு ஈடான நெஞ்சில் அகலமுடையவராயிற்று–    தத்கத: – திரவியம் திரவியத்தோடு சேர்ந்தாற்போல அன்றிக்கே, சாதி குணங்கள் திரவியத்தோடு சேர்ந்தாற்போலே சேர்ந்தார்;அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா’--என்பது, ஸ்ரீராமா. சுந். 21 : 16–அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா’ ஸ்ரீராமா. யுத். 122 : 19.

ஆவார் ஆர்?’ என்ன, ‘ஆழ்வானைப் போக விடலாகாதோ?’ என்றாராம். ஆக, பல முதலிகள் இருக்க, ஆழ்வானைக் கொடுத்தாற்போலே

அவனுடைய கல்யாணகுணங்களைப் பிரீதியினாலே தூண்டப்பட்டவராய்க்கொண்டு பாட. நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடும் – 2பாபம் போகைக்காகத் தனித்து ஒரு முயற்சி செய வேண்டா; பால் குடிக்க நோய் தீருமாறு போலே நம்முடைய பாபங்கள் தாமே நசித்துப் போம்.

தத்கத – என்கையாலே, இவர் தம்மை அவள் பக்கலிலே 1ஓக்கினபடி சொல்லிற்று, ‘நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’  என்கையாலே. அவள், தன்னை இவர் பக்கலிலே ஓக்கினபடி (ஆக்கினபடி; பரதந்திரர் ஆக்கினபடி.)சொல்லுகிறது. 3இப்படி இருவருமான சேர்த்தியிலே, இதற்கு முன்பு ஆனந்தம் புதியது உண்டு அறியாதான் ஒருவனுக்கு ஆனந்தம் உண்டாமாறுபோலே ஆயிற்று, கணந்தோறும் உண்டாம்படி.’

எழில் மலர் மாதரும் – 3ராகவன் வைதேவியை ஒக்கின்றான்’ என்னுமாறு போலே ஆயிற்று இத்தலை. தானும் – ‘எவனுக்குச் சீதை மனைவியாக ஆவாளோ’ என்றும் ‘ஜனகனுடைந பெண்ணாகிய சீதை எவனுடைய மனைவியோ’ என்றும் சொல்லலாம்படி ஆயிற்று.

‘ராகவோர்ஹதி வைதேஹீம்’–என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 5. 

‘யஸ்ய ஸீதா பவேத் பார்யா’–என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 34 : 18.

 ‘யஸ்ய ஸா ஜநகாத்மஜாஎன்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 37 : 18.

  ஆக, ‘ராகவோர்ஹதி’ என்கையாலே, ‘எழில் மலர் மாதர்’ என்று பிராட்டி வைலக்ஷண்யமும், ‘யஸ்ய ஸீதா பவேத் பார்யா’ என்று ‘பார்யா’   என்கையாலும், ‘யஸ்ய ஸா ஜநகாத்மஜா’ என்பதில் ‘யஸ்ய’ என்பது,
அடிமைப் பொருளில் ஆறாம் வேற்றுமையாகையாலும், ‘தானும்’ என்று   பெருமாள் வைலக்ஷண்யமும் சொல்லுகிறது என்றபடி

இராமர் சீதையைப் பெற்றுப் பின்னர் இராச்சியத்தை அடைந்தார்; உலகம் மிக்க உவகையை அடைந்தது’ என்கிறபடியே, தந்தை தாயார் இருவரும் சேர இருந்து பரியப் புக்கால் குழந்தைகளுக்கு ஒரு குறையும் பிறாவாதே அன்றோ? 2ஆக, இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தம் உண்டாக, அச்சேர்த்தியைக் காண்கையாலே உலகத்துக்கு ஆனந்தம் உண்டாக, அதனைக் கண்டு குழந்தை பால் குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப்போலே இவர்களுக்கு உண்டான பிரீதியைக் கண்டு அதனாலே தாங்ஙள் இனியராய் இருப்பர்களாயிற்று

‘ராம: ஸீதாம் அநுப்ராய ராஜ்யம் புந: அவாப்தவாந்
    ப்ரஹ்ருஷ்டமுதிதோ லோக: துஷ்ட: புஷ்ட: ஸூதார்மிக:’–என்பது, சந்க்ஷேப ராமா. 1. : 89.

யானைக்கும் தனக்குத் தக்க வாதம்’ என்னுமாறு போலே, தேவதைகளுக்கு நம்மைக் காட்டிலும் அறிவு கேடு விஞ்சியிருக்கும்

‘நினைக்கவும் சத்தி இல்லாத யானை ஏத்துதல் எப்படி?’ என்ன-ஏத்திய – 2முட் பாய்ந்தால் ‘அம்மே!’ என்பாரைப்போலே, வாசனையாலே சொன்ன இத்தனை

இராசபுத்திரனைச் சிறையிலே இட்டு வைத்தால் கைக்கூட்டனுக்கும் (காவற்காரனுக்கும்)பாலுஞ்சோறும் இடுவாரைப்போலேகாண்,’ என்று இதற்குப்(இரண்டின் வீடு’ என்றதற்கு.) பட்டர் அருளிச்செய்வர். 2இரண்டும் மோட்சத்தைப் பெற்றதே! முதலை சாப மோட்சமும், ஸ்ரீகஜேந்திராழ்வான் சாக்ஷாத் மோட்சமும் பெற்றமையைத் தெரிவித்தபடி.

பருவம் அல்லாத மற்றைக் காலங்களில் கடல் தீண்டலாகாது,’ என்றாற்போலே, அதற்கு ஒரு நியதி இல்லை ஆதலின், ‘வைகலும் பூசித்து-என்கிறார். வைகல் – காலம். ‘ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி’ என்று அவன் விஷயத்தில் இவர் பிரார்த்தித்ததை இது கற்ற அடியார் விஷயத்திலே நித்தியசூரிகள் அடிமை செய்வார்கள் என்றபடி.

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஈட்டில் வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள் –ஆறாம் பத்து –

December 13, 2023

பம்பையின் கரையிலே அநுமானோடு கூடினார்” என்பதுபோலே, ஆள்இட்டு அறிவிக்கவேண்டிய நிலையிலே நீங்களே வந்து. 2வழி பறி உண்டவிடத்தே தாய் முகம் காட்டினாற்போலே காணும் பிராட்டியைப் பிரிந்து நோவுபடுகிற சமயத்திலே திருவடி வந்து முகங்காட்டினபடி. ஹநூமதா தளர்ந்து, 3“ஆவாரார் துணை” என்று தடுமாறுகிற சமயத்திலே, 4வெற்றித் தழும்பு சுமந்த ஆண்பிள்ளையோடே கூடப்பெற்றது என்கிறது. வாநரேணசந்நியாசி வேடம்கொண்டுவந்து பிரிவைவிளைத்து நலிவு பண்ணுமவனைப் போலன்றிக்கே, செவ்வியான் ஒருவனோடே சேரப் பெறுவதே.

ஒரு கலத்திலே ஒக்க உண்டு திரிவாரைப்போலே6இனித்தான் போகப் பிரகாரந்தான் மூன்று வகைப்பட்டாயிற்று இருப்பது. அவை : ஊடல், உணர்தல், புணர்தல் என்பனவாம்.

எங்கள் கையில் பாவை பறிப்பது – இவர்கள் கையிலே பாதிகொடுத்துப்போலே காணும் பறிப்பது! 1அவர்கள் விட்டுக் கடக்க நிற்குமதில் ஒரு பிரயோஜனம் இல்லையே; அதனை அவர்கள் ஒருதலை பற்றத் தானும் ஒரு தலை பற்றும்போதேயன்றோ ஒருகலத்திலே உண்பாரைப்போலே இன்பமாயிருப்பது. கையில் பாவை பறிப்பது

வந்து மேயும் இனங்காள்-3நிருபாதிக பாந்தவமுடையார்பக்கலிலே மனைவி மக்களோடே சென்று ‘சோறுஇடும்’ என்று உண்பாரைப் போலே காணும் இவற்றின்படி-தரும புத்திராதிகள்.-கிருஷ்ணனைப்  போலே என்றபடி.

கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமான் – இராஜ புத்திரர்கள் கையில் 2இடைச்செறி கடைச்செறிகட்குத் தோற்றிருக்குமாறு போலே, திருவதரத்தில் பழுப்புக்கும் கையும் திருவாழியுமான சேர்த்திக்குமாயிற்று இவள் எழுதிக்கொடுத்தது.(இடைச்செறி கடைச்செறிகளாவன -ஒரு விரலிலே கீழும் மேலும் இடுகிற  மோதிரங்கள்.)

உடன் மேயும் கருநாராய் – 2அதற்கு ஒரு குற்றம் தேடிச் சொல்லுவாரைப்போலே சொல்லுகிறாள் தன் காரியம் செய்கைக்காக. 3அடுகுவளத்தைத் தடுப்பாரைப்போலே4தன் துயர் ஒலி செவிப்பட்டால் அவற்றுக்கு மிடற்றுக்குக் கீழ் இழியாது என்று இருக்கிறாள் காணும்

 பாதம் கைதொழுது – கண்டு, திருவடிகளிலே தண்டன் இட்டு. 2“‘கைகள் கூப்பி’ என்றதே; தொழுதார்க்கு நிற்க ஒண்ணாதே யன்றோ. உண்ணாநிற்க, மிடற்றைப் பிடித்தாற் போலே இருப்பது ஒன்று அன்றோ

மதித்தான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் ஸ்ரீபாதத்தே தலைபடத் தண்டன் இட்ட அன்று, எனக்கு உண்டு பசி கெட்டாற்போலே இருக்கும்” என்று அருளிச்செய்வர் சீயர்

திறங்களாகி எங்கும் – 4பிராட்டியைப் பிரிந்து பெருமாள் நோவுபடுகிற சமயத்திலே முதலிகள் அடங்கலும் நாலு திக்குகளிலும் புகுந்து அங்கும் இங்கும் திரிந்தாற் போலே காணும் இவையும் திரிகிறபடி,

போற்றி – 2சம்சார வெக்காயம் தட்டாதபடி, வைமாநிகர் விமானங்களிலே உயர இருக்குமாறு போலே, புன்னைமரத்திலே உயர இருந்தன சிலகுயில்கள்; அவற்றின் செவிகளிலே தன் துயரத்தைக் காட்டுகின்ற ஒலி படும்படி உயர ‘போற்றி’ என்கிறாள்

போற்றி இரந்தேன் – 1பெருமாளும் பிராட்டியுமாகக் காட்டிற்கு ஏகாந்த போகத்துக்குப் போகாநிற்கச்செய்தே நடுவே இராவணன் வந்தாற்போலே, உங்கள் போகத்துக்குப் பிரிவு உண்டாக்க நான் தோற்றினேன் போலே இருந்தது. இத்தால் ஒரு வியசனம் இன்றிக்கே ஒழிந்திடுக உங்கள் போகத்துக்கு என்கிறாள் என்றபடி

நால் தடம் தோள் – அவளை அணைந்து அத்தாலே கல்பகதரு பணைத்தாற்போலே இருக்கிற திருத்தோள்கள்.

வேறுகொண்டு – 2திக்குகள்தோறும் முதலிகளைப் போகவிடா நிற்கச்செய்தே திருவடி கையில் திருவாழிமோதிரம் கொடுத்து விட்டதுபோலே காணும்

வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன் –5நம் ஆசாரியர்கள் வியாபக மந்திரங்கள் மூன்றிலும் துவயத்தையே ஆதரிக்குமாறுபோலே.

பல்வலாநி ஸராம்ஸிச – சிறு குழிகளோடு பெருங்குளங்களும்”. 4மரங்களோடு வசிஷ்டர் முதலானவர்களோடு வாசியற அழியுமாறு போலே இப்படியேயன்றோ இவள் இருக்கிற இடம். வடபாலைத் திருவண் வண்டூர் -ஊரும் ஆறும் இன்ன இடத்திலே என்னுமிடம் நெஞ்சிலே பட்டுக்கிடக்கிறது காணும் இவளுக்கு. வடபால் – வடதிசை. கடலுக்குத் தென்பால் இருக்கிற பிராட்டியைப்போலேயாயிற்று இவள் இருக்கிற இருப்பு.

இத்திருவாய்மொழி வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகர் இனிய பொருளாயிருக்குமாறுபோலே, சர்வேசுவரனுக்கு விரும்பத் தக்க பொருளாவர் என்கிறார்.மடவார்க்கு மதனர் – 1காமினிகளுக்குக் காமுகர் எவ்வளவு, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவ்வளவு ஆவர்-காமினிகளுக்குக் காமுகரைப் போலே 3அபிமதவிஷயத்திற்கு இனியராவர் என்கிறார். 4திருவடியைச் சொல்லப்புக்குத் தாமரையைச் சொல்லாநின்றதன்றோ. எல்லாவகையிலும் ஒத்திருப்பனவற்றிற்கு உபமானத்தையே சொல்லக்கடவது. ‘அதுபோல’ என்றும், ‘அதுதான்’ என்றும் சொல்லக்கடவதாயிருக்கும்.

மின்னிடை மடவார்க்குக் கிழக்கு வெளுக்கிறபடி. 2அதாவது மஹாபலியினுடைய செருக்கினைப் போக்கி ஒன்று ஒழியாமல் கைக்கொண்டாற்போலே, பிரணயரோஷத்தாலே வந்த இவளுடைய அபிமானத்தைப் போக்கிச் சேரவிட்டுக் கொண்டபடி. 3எதிரியாய் வந்தவனுடைய செருக்கினைப் போக்கினாற் போலே அன்று, காதலியுடைய மானம்4அது அழிக்கலாம், இது அழிக்க ஒண்ணாதே. 5விஷயமில்லாமலே கோபிக்கின்றவர்கள் இலக்குப் பெற்றால் மிகைப்பர்களத்தனையன்றோ. அவன் சந்நிதியிலும் அழியாதது ஒன்றேயன்றோ இது.

நீலக் கரு நிற மேக நியாயற்கு – 2மஹாபலியை வடிவைக் காட்டி அபகரித்தாற்போலே காணும் இவளையும் வடிவைக்காட்டி அபகரித்தபடி. 3இவள் பிச்சு ஏறுகைக்கு இட்ட மை இருக்கிறபடி. 4மைப் படி மேனி அன்றோ.

பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு – 5‘ஈழம் பிரம்புகொண்டது’ என்னுமாறு போலே பண்ணே மிக்கிருத்தலின் ‘பண்கொள் ஆயிரம்’ என்கிறது. (ஈழதேசம் பிரம்பு மிகுந்தது.)

தூதுவிட்டார்; விட்ட ஆள் சென்று அத்தலைப்பட்டு அவனுக்கு அறிவிக்க, அவனும் இழவாளனாய், யானைக்கு அருள்செய்ய வந்து தோற்றினாற் போலே பதறி நடந்து வராநிற்க, அவ்வளவு பற்றாமே கிடந்து துடித்து அலமந்து, ‘இனி இவ்வளவில் நாம் செய்ய அடுப்பது என்?’ என்று பார்த்து, ‘முடிந்து போவதற்கு மேற்பட்ட பரிஹாரம் இல்லை’ என்று அறுதியிட்டு முடியப் பார்க்கிறாள்

புக்த ஸேஷம் இவ் உதகம்-குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; 1இவையும் அப்படி யாகாதேதான்–இவையும்’ என்றது, பொறாமை கோபம் இவற்றை. ‘அப்படியாகாதே’  என்றது, குடித்து எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று தள்ளத் தக்கவை  ஆகாவோ என்றபடி.-“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்க்ருத்ய புக்தஸேஷம் இவோதகம்   நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”  , ஸ்ரீராமா. அயோத். 27 : 6.

ஸுபாம் – 4மண் தின்று வந்த நகடுபோல் அன்றே குணாதிகவிஷயத்தைப் பிரிந்தால் இருக்கும்படி; கடலேறி வடிந்தாற்போலே இருக்கிற அவ்விருப்பு தனக்கே ஆலத்தி வழிக்கவேண்டும்படி இருக்கை

நரம் ஸ்ரியாஜு ஷ்டம் இவ உபஜீவந:- அர்த்திகளாயிருப்பார் உதாரர்பக்கலிலே சென்று தங்கள் தங்கள் பிரயோஜனம்பெற்று உவகையினராமாறுபோலே. இப்படியாயிருந்தன நிமித்தங்களின் அளவு.

இனி, அவன் அளவு பார்த்தால், “ஆர்த்தோவா யதிவாதிருப்த:-ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்; அன்றிக்கே, நாம் திருநாமங்களைச் சொன்னால் சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறுபோலே செருக்காலே சொல்லவுமாம்2இங்ஙனம் விகல்பிப்பான் என்? 3ஆர்த்தனுக்கு அன்றோ பலத்தை அடைதல் உள்ளது? மற்றையோனுக்கு உண்டாகச் சொல்லுகிறஇடம் பிரசித்தம் அன்றே? என்னில், 4இந்தச் சுலோகம் சரணாகதத்தின் லக்ஷணம் சொல்லுகிறதன்று;-நிமித்தங்கள் மாத்திரமே யல்லாமல், ‘அவன்தான் பேரருட்கடல்  ஆகையாலும், அவனுடைய வரவு தப்பாது என்றுகொண்டு இருந்தாள்’  என்று, இரண்டாவது பரிஹாரம் அருளிச்செய்கிறார்

ஆர்த்தோவா யதிவா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:  அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா”  ஸ்ரீராமா. யுத். 18 : 28.

சுலோகத்திலுள்ள  “த்ருப்த:” என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘நாம் திருநாமங்களை’  என்று தொடங்கி. திருப்தனாவான், சம்சாரதோஷ ஞானமும்
பகவத்வைலக்ஷண்ய ஞானமுமுடையவனாய், நல்லாசிரியனை அடைதலை  முன்னாகக்கொண்டு ஈசுவரனே உபாயோபேயம் என்று அறுதியிட்டு,
இனிவரும் பிறவியினைப் பொறுக்காதவனாய், இப்பிறவி முடியுமளவும்  ஆறியிருக்குமவனாய் இருக்க, ‘சேவகர் நம்மைப் பரிகசித்துச்  சொல்லுமாறு போலே’ என்று, அவனை எளிமைப் படுத்துதல் என்? எனின்,  சரண்யனுடைய வைபவத்தைச் சொல்லும் இடமாகையாலே நஹிநிந்தா   நியாயத்தாலே எளிமைப்படுத்துகிறார் என்று அருளிச்செய்வர்.

பூவை கிளி பந்து தொடக்கமான சேதனமாயும் அசேதனமாயுமுள்ள விளையாட்டுக் கருவிகளை ஊரழி பூசலில் அரண் உள்ள கோட்டைகளிலே சரக்கு வாங்குவாரைப் போலே ஓரிடத்தே திரள வாங்கி

அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் உகவாத இரணியன் முதலானோர் கோஷ்டிகளில் 2திருநாமம் சொல்லுகை பொறுக்கமுடியாதவாறு இருப்பது போன்று, இவர்கள்கோஷ்டியிலும் உகவை தலைமண்டையிட்டு, திருநாமம் சொல்லில் நெஞ்சு சிவிட்கு என்னும்படியாய்க் கொண்டு இருந்தார்கள் இவர்கள். இது இத்தலை இருந்தபடி

பின்னர் என் மனம் அவரிடம் சென்றது” என்கிறபடியே, அம்புப்படுக்கையில் படுத்திருப்பவரான ஸ்ரீவீடுமர்க்கு முற்பட்டவராய் உதவவேண்டியிருக்கப் பிற்பாடரானோம் என்று நோவுபட்டாற்போலேயும் பிற்பாட்டுக்கு நோவுபடுமவன் அன்றோ

இனி, சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் அண்மையிலிருக்க, பெருவிடாயனானவன் அழிஞ்சுக்காடு ஏறப்போகமாட்டானே. என்றது, ‘இவன் சிறிது தாழ்த்தான்’ என்று வெறுத்து, ‘புகுருவான் அல்லன் நம் கோஷ்டியில்’ என்று இருக்கிற இவர்களைவிட்டு நாட்டாரோடு உறவு செய்யப்போவான் அல்லனே என்றபடி.

ஆற்றாமை கரைபுரண்டு கால் தரையில் பாவாதபடியாய்க்கொண்டு தடுமாறி வருகிற சமயத்திலே, இவனுடைய ஜீவன அதிருஷ்டத்தாலே இவர்கள் மறந்து போன பந்தும் கழலும் இவன் காலிலே தாக்கின. தாக்கவே, இருட்டு அறைகளிலே தடவிக்கொண்டு வாராநின்றால் உறியும் வெண்ணெயும் கையிலே தாக்கினால் உவகையனாமாறுபோலே, பெரிய உவகையோடு விழுந்து அவற்றை எடுத்துக்கொண்டான். எடுத்துக் கொண்டு, அத்தலையில் செய்த வியாமோகம் அடங்கலும் அவற்றிலே தோற்றும்படி கண்களிலே ஒற்றிக்கொள்வது தலையிலே வைத்துக் கொள்வதாய், பிராட்டி திருவாழி மோதிரங் கண்டு பட்டனவெல்லாம் பட்டான்.

க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர் து: கர விபூஷணம்
   பர்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்”—  என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 4.

க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா – ‘இராவணன் மாயையாலே வந்ததோ’ என்னும் பயத்தாலே முற்படக் கண்வைக்கமாட்டாதே இருந்தாள்; ‘அத் தலையாலே வந்தது’ என்று தெளிந்த பின்பு கண் மாறவைக்க அரிதாம்படி இருந்தாள். ஸா – ப்ரேக்ஷமாணா – 2“பஸ்யதேவி – தேவியே! பார்க்க்” என்றுகொண்டு முன்பு பார்வைக்குக் கிருஷி பண்ணவேண்டும்படி இருந்தவள் தானே, கண் மாற வைக்கைக்குக் கிருஷி பண்ணவேண்டும்படியாய் இருந்தாள். பர்த்து: கரவிபூஷணம் – முதல் கைப்பிடிக்கிறபோது உறுத்தினபடியை நினைத்தாள். கரவிபூஷணம் – அணி மிகு தாமரைக்கை யன்றோ. ஆபரணத்துக்கு ஆபரணங் காணும். பர்த்தாரம் இவ3இவன் இத்தைத் திருக்கையில் கொடுத்தவாறே, இதனோடே சேர்ந்த விரலையும் தோளையும் நினைத்தாள்; அந் நினைவுதான், தான் இக்கரையில் ஆளாகவும், அவர் அக்கரையில் ஆளாகவும், கடல் இடையிலே கிடக்கிற தாகவும் அறிந்திலள்; ஒருபடுக்கையிலே கூட இருந்ததாக நினைத்தாள்; ஒரு 1சூது சதுரங்கங்களிலே தோற்றுத் தன்கையில் இருந்ததாக நினைத்தாள். 2இவ” என்கிறான் இருடி, 3உலகமாதா என்ற கருத்தாலே. இவள் உணர்ந்தால் என்படக் கடவள் என்று. ஜாநகீ-இன்ப துன்பங்களுக்கு இளையாத குடியிலே பிறந்தவள். முதிதாபவத்- உவகையளானாள். அப்படியேயாயிற்று இவனும் இவைபெற்ற பின்பு. 4சம்சாரி முக்தனானால் அவனுடைய லீலோபகரணமும் போகோபகரணமும் சமமாகத் தோற்றக் கடவது. வேறு ஆகாரமான நினைவு இல்லையே. ததீயத்வ ஆகாரத்தாலே நித்தியவிபூதியோடு ஒக்கத் தோற்றுமித்தனை. அப்படியே இவளுடைய லீலோபகரணமும் போகோபகரணமுமாகத் தோற்றக்கடவது.

மன்னுடை இலங்கை அரண் காய்ந்த – 1நிலமிதிதான் எதிரிகள் மண்ணுண்ணும்படியாய், அதற்குமேலே “இராவணனாலே காப்பாற்றப்படுகின்ற இலங்கை” என்று கொண்டு, சிங்கம் கிடந்த முழஞ்சு போலே பையல் உணர்ந்து நோக்குகிற ஊரை அழியச்செய்த, மாயவன்-வஞ்சனை பொருந்திய செயல்களை யுடையவன்

உயிரை வைத்துப்போம்” என்பாரைப்போலே ‘தந்துபோகு’ என்கிறாள்

சர்ப்பயாகத்தில் சர்ப்பங்கள் வந்து விழுமாறு போலே, நீ குழல் ஊதவே பெண்கள் அடங்கலும் உன்காற்கீழே வந்து விழுவார்கள் காண்

நெடும் கண் இளமான் இனிப்போய் – 6விழுக்காடு அறியாமையாலே புறப்பட்டுப் போனாளத்தனை கண்டீர்! 7இந்தக் கண்ணுக்கு இலக்கானவர்கள் சர்ப்பயாகத்தில் சர்ப்பங்கள் சுருண்டு வந்து விழுமாறு போலே, தந்தாம் முதன்மையோடே வந்து விழவேணும் கண்டீர்!

மந்தரத்தை நட்டுக் கடலை நெருக்கிக் கடைந்து பெரிய பிராட்டியாரைப் பெற்ற அன்றும் இந்த வேறுபாடு கண்டோம் இல்லையே! பழையாரைப் பெற்றாற்போல் அன்றே புதியாரைப் பெற்றால் இருக்கும்படி.

சூட்டு நான்மாலைகள் தூயன ஏந்தி” என்றுகொண்டு அவர்கள் சமாராதனத்துக்கு வேண்டுவன கொண்டு நிற்க, ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்தான் அன்றோ. அதுதன்னையும் விட்டு அன்றோ அடல் ஆயர்தம் கொம்பினுக்குக் கோட்டிடை ஆடினான். 2பழையாரை எல்லாம் காற்கடைக் கொள்ளுகிற இடமாய் இருக்கிறதன்றோ. நவப்பிரியைகளை விரும்புவாரைப் போலே காணும்.–பழையார்’ என்றது, இங்கே, ஊடுகிறவர்களை. ‘புதியார்’
 என்றது, அவன் மின்னிடை மடவாரை. நவப் பிரியைகள் – விருப்பத்திற்கிடமான புதியர்கள்.

கொம்பை இழந்த தளிர்போலேகாண் அவர்கள் நெஞ்சுகள் வாடும்படி. ‘கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள், தங்குமேல் என் ஆவி தங்கும்’ என்று இருக்குமவர்கள் அலரோ அவர்கள்.

இத் திரு அருள்கள் 1எம்பரமே-நீ எங்கள் அளவல்லாத ஆசையை வைத்து, குளப் படியிலே கடலை மடுத்தாற் போலே நீ செய்கிறவை எல்லாம் எங்களால் பொறுக்கப் போமோ? நீ செய்கிறவை எல்லாம் பொறுக்கவல்லார் வேறே சிலவர்கள் என்கிறார்கள்.

சாது கோட்டியுள் கொள்ளப்படுவார்’ என்று சொல்லுவது, 5வைஷ்ணவர்களுடைய திரளிலே ஒருவன் வந்து புகுந்தால் செருக்காலே மலையிட்டு அமுக்கினாற் போலே இருக்கை அன்றிக்கே, நீரும் நீரும் கலந்தாற் போலே இவன் புகுந்தமை தெரியாதபடி இருந்து, அவர்கள் இடம் கொடுத்து அவர்கள் ஏற்றுக்கொள்ள இருத்தல் அன்றோ ஒருவனுக்கு நன்மையாவது. இவர்களுக்கே அன்றியே, அவனுக்கும் ஒத்திருக்கிறபடி; 6“அந்த இராமனும் மற்றவர்களோடு கூட இருந்து அநுபவிக்கவேண்டும் என்னும் விருப்பத்தால் மெதுவாகச் சபையை அடைந்தவனாய்க் குசலவர்களின் கானத்தைக் கேட்பதில் மனமுடையவனாய் இருந்தான் என்று, மஹரிஷி ஆச்சரியப்படுகிறார்”

தத:து தௌ ராமவச: ப்ரசோதிதௌ
   அகாயதாம் மார்க விதாந ஸம்பதா
   ஸ சாபி ராம: பரிஷத்கத: ஸநை:
   புபூஷயா ஸக்த மநா பபூவ”— என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 31.

தடி பிணக்கே – பின்னைக் குத்தும் பூசலுமாயன்றோ தலைக்கட்டுவது. 2இராமாவதாரத்தில் எல்லாக் காரியங்களையும் வில்லினைக் கொண்டே செய்யுமாறுபோலே, கிருஷ்ணாவதாரத்திலே தடிகொண்டே காரியம் கொள்ளுமத்தனை.

குழலை ஊதவே பசுக்கள் வயிறு நிறையும். 2சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில் கைவந்திருக்குமாறுபோலே யாயிற்று, கிருஷ்ணனுக்குக் குழல் கைவந்திருக்கும்படி.

ஒவ்வொரு கலகத்திலே அமர்ந்த நிலங்களிலே குடிவாங்கிப் பின்பு தெளிந்தவாறே தம்தம் இடங்களிலே புகுந்து, விட்ட காரியங்களிலே அதிகரிப்பாரைப் போலே5ஒருவன் செய்த கர்மம் வேறு ஒருவன் சென்று அநுபவியாதபடி தன்பக்கல் நின்றும் பிரித்தும். பேதியாதது

இவன் ‘போகவொட்டேன்’ என்று வளைத்துக் கிடந்ததற்குப் பிரயோஜனம் உள்ளது இவன் நினைத்தபடி பரிமாறப் பெற்றால் அன்றோ? ஒருதேச விசேடத்திலே முக்தர் சம்சாரிகளோடு உறவு அற்று இருக்குமாறுபோன்று இவன் முகம் பாராதே இருக்கிறோம்” என்று அறுதியிட்டுப் பேசாதே இருந்தார்கள்;

 ஜன்னி ஜு ரத்தாலே பீடிக்கப்பட்டவர்களைப் போலே பிதற்றுமித்தனை அன்றோ. “தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை” என்பதன்றோ மறைமொழி.

தன் சிற்றிலை அன்றோ சங்கல்பத்தால் அழிக்கலாவது; 2இவர்களுடைய சிற்றிலைத் தொட்டு அழிக்க வேணுமே; 3உன் சிற்றில் அழிக்கும் பரிகரம் அமையாதோ இதற்கு? உலகத்தை அழிப்பது சங்கல்பத்தாலே அன்றோ. 4அடியவர்களுக்குத் திருவடிகள் உத்தேசியமாமாறு போன்று காதலிமார்கட்கும் உத்தேசியமாய் அன்றோ திருவடிகள் இருப்பன.

 நின்று இலங்கு முடியினாய் – 1இவர்களை வெல்வதற்கு முன்பு தலைச்சுமையாய்க் காணும் கிடந்தது; இப்போதாயிற்று நற்றரித்து ஒளிவிடத் தொடங்கிற்று. 2இராசாக்கள் சிலர் தந்தாம் பகைவர்களை அழித்து வீர அபிடேகமும், விஜய அபிடேகமும் பண்ணிநிற்குமாறு போலே. முன்பே முடிசூடி இருக்கச் செய்தேயும் இவர்களைத் தோற்பிப்பதற்கு முன்பு இல்லாததற்குச் சமமாகக் காணும் இருந்தது

சீற்றம் உண்டு அழு கூத்த அப்பன் தன்னை – 4தாயார் பொடியப் பொடியுண்டு அழுகிற நிலையில் “பையவே நிலையும்” என்கிறபடியே நிற்கிற நிலை, வல்லார் ஆடினாற்போலே இருந்தபடி

பரந்த பெருமான் என்னை ஆள்வானை – இங்ஙனம் பரந்து இருத்தல் எல்லாம் தம்மை அகப்படுத்த என்று இருக்கிறார்; 4ஒருவனை அகப்படுத்த நினைத்தார் ஊரை வளையுமாறு போலே

செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேன்-5மருபூமியிலே பொய்கை கண்டாற்போலே இருக்கிறபடி. மிக்க செல்வத்தை யுடைத்தான குடிகளையுடைய திருவிண்ணகர் என்பார் ‘செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்’ என்கிறார்.(மருபூமி – நீரும் நிழலும் அற்ற பாலை நிலம்)

எனக்கு என் அப்பன் ஆய் – எனக்கு அசாதாரணனாய்ச்சத்தைக்குக் காரணமாயுள்ள பிதாவாய். 3பஞ்சகாலத்திலே குழந்தைகளைவிற்று உண்ணும் தமப்பனைப்போல் அன்றியிலே, தன்னை அழிய மாறியும் என்னை நோக்கக்கடவ தமப்பனாய்.

என்னைப் பெற்றவளாய் – வளர்த்துக் கொள்ளியான தாயைப் போல் அன்றியே, பத்து மாசம் வயிற்றிலேவைத்து நோக்கிப் பெற்ற தாயாய்.-தன் உகப்பே எனக்கு உகப்பாக இருக்குமவளன்றோ நான். இவளுடைய காதலனுக்குக் கடகையும் தானே அன்றோ

கொடு வாருங்கோள்’ என்றால், இசையார் என்று பார்த்து, நான் காட்டப் புகுவது ஓர் ஆச்சரியத்தைப் பாருங்கோள் என்பாரைப் போலே இவர்கள் கண்முகப்பே நிமிர்ந்த திருவடித் தாமரைகளையுடையவனை

பரநிலையும் கூட வேண்டேன்’ என்ற திருவடியைப் போலே யாயிற்று இவரும் கிருஷ்ணாவதாரம் ஒழிய வேறு ஒன்று அறியாதபடி

அநுபவத்திற்குத் தக்கதான காலமாகையாலே, நல்ல இரவும் நல்ல பகலும் என்கிறார். பிரிந்த காலத்திலே அன்றோ நெருப்பை உருக்கி ஏறட்டினாற் போலே இருப்பது

மேவி-பகவானுடைய குணங்களிலே நெஞ்சினை வைத்து. நைந்துநைந்து – 4தான் பற்றியிருக்கும் பொருள்களை அழிக்கும் நெருப்புப்போலே குணங்கள்தாம் அழிக்குமே

இராமாவதாரத்தில் எல்லாக்காரியங்களையும் வில்லினைக் கொண்டே செய்யுமாறுபோலே, கிருஷ்ணாவதாரத்திலே தடிகொண்டே காரியம் கொள்ளுமத்தனை.சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில் கைவந்திருக்குமாறுபோலே யாயிற்று, கிருஷ்ணனுக்குக் குழல் கைவந்திருக்கும்படி

கெண்டை ஒண்கண் – கெண்டை போலே மிக இளமையினையுடையனவாய், அமிருதத்தைப் பெய்தாற்போலே குளிர நோக்குகிற திருக்கண்கள்.

புழுக்குறித்தது எழுத்தானாற்போலே இங்ஙனே வாய்த்துக்கொண்டு நிற்கக்கண்ட தித்தனை. 2இல்லையாகில், இளைஞர் சிலருடைய செயல்களாக மாட்டாதே அன்றோ.-குணாக்ஷர நியாயம் என்பர். “மானத்து வண்டல் உழ ஓர் எழுத்தின்  வடிவுற்ற சீர்மான” என்பது, திருவரங்கத்தந்தாதி.

தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனிமல்கும் தன்மையானை” என்கிறபடியே, ஒரு மத்தயானையைத் தறியோடே சேர்த்தாற்போலே காணும் இவன் கட்டுண்டு நின்ற நிலை.

யசோதைப்பிராட்டியின் முலை உண்ணும்போதும் தான் உயிர்பெற உண்ணுமாறுபோலே காணும், இவள் முலை உண்கிறபோதும் தான் உயிர்பெற முலையுண்டபடி; ஆதலின், ‘உண்டதும்’ என்கிறார்

மனப் பரிப்போடு அழுக்கு மானிடசாதியில் தான் பிறந்து – 1நாட்டாரை அழுக்கு உடம்பு கழிக்குமவன்தான் கண்டீர் அழுக்கு மானிடச் சாதியில் வந்து பிறந்தான்; 2குழந்தை கிணற்றிலே விழுந்தால் எடுக்க வரும் தாய் நெஞ்சு நொந்து வந்து எடுக்குமாறு போலே3‘இவற்றிற்கு உதவப் பெற்றிலோம்’ என்னும் திருவுள்ளத்தில் தளர்த்தியோடேவந்து பிறந்தவனாதலின் ‘மனப் பரிப்போடு பிறந்து’ என்கிறது

தான் தன சீற்றத்தினை முடிக்கும் – 3அடியார்களுடைய விரோதியைப் போக்கினானாய் இருக்கையன்றிக்கே, தன் சினம் தீர்ந்தானாய் இருக்கை; தாயானவள், குழந்தையை நலிந்தவர்களைத் தான் நலிந்து தன்சினம் தீருமாறுபோலே.

1தேஹாத்மாபிமாநிகளாய் இருப்பார்க்கு எத்தனையேனும் அறிவு பிறந்தாலும் ‘நான் பருத்தவன், நான் இளைத்தவன்’ என்கிற நிலைமாற்றப் போகாதவாறுபோலே, இவரையும் எல்லா வகையாலும் உகந்தருளின நிலங்களிலே நின்றும் திருஷ்டத்தில் குறைசொல்லி மீட்கப் போகாது

கிருஷ்ணனுடைய குணங்களை அநுபவியாநிற்கச்செய்தே, குடிக்கிற தண்ணீர் விக்கி அதுதானே பரவசமாந் தன்மையை விளைப்பிக்குமாறு போலே, அந்த அநுபவம்தானே வேறு ரசத்திலே மூட்டத் தமக்குப் பிறந்த துன்பத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார்.

குமுறும் ஓசை விழவொலி” -கன்றைக் கடக்கக் கட்டிவைத்தால் முலைக்கண் கடுத்துப் பசு அலமந்து படுமாறுபோலே, உள்ளோடுகிற கிலேசம் வாய்விடமாட்டாதே நோவுபடுகிற இவளுக்கு இது வார்த்தையோ?’ என்றான். 1பெருவெள்ளத்தில் சுழிக்குமாறுபோலே, அகவாயில் உள்ளது வெளியிடமாட்டாள்; உள்ளே நின்று சுழிக்கிறபடி

குமுறும் ஓசை விழவு ஒலித் தொலை வில்லிமங்கலம் கொண்டு புக்கு–பாவியேன்! இந்த ஒலி செவிப்பட்டால் கொண்டு மீள அன்றோ அடுப்பது! ‘இவ்விடம் பிள்ளை கொல்லி’ என்று கூப்பிடுமாறுபோலே காணும் ஒலி இருக்கிறது

நெக்கு – கட்டுக்குலைந்தவளுமாய். ஒசிந்து – பரவசப்பட்டவளாய். கரையும் – நீராகாநின்றாள். நெக்கு ஒசிந்து கரையும்-3பெருவெள்ளத்தில் கரையானது நெகிழ்ந்து ஒட்டுவிட்டு ஒசிந்து பொசிந்து அவயவி ஆகாதபடி கரைந்துபோமாறுபோலே, ஓர் அவயவியாக்கிக் காண ஒண்ணாதபடி கரைந்து போகாநின்றாள்.

பொருநல் வடகரை – விரஜைக்கு அக்கரை என்னுமாறு போலே. 

இவள் பேச்சுக் கற்கை என்றும், திருநாமம் சொல்லுகை என்றும் இரண்டு இல்லை. 2கோயிலிலுள்ளார் “கோயில்” என்றும், “பெருமாள்” என்றும் கற்குமாறு போலே3தோழி, தன்வாயாலே ‘திருத்தொலைவில்லிமங்கலம்’ என்றால், இவள்சொன்ன இனிமை பிறவாமையாலே, ‘அவ்வூர்’ என்கிறாள் காணும். என்தான்! முன்பு சொன்னாளே? என்னில், அது அப்படி இராமையால் அன்றோ ‘அவ்வூர்’ என்கிறது

அவன் முன்னி வந்து நின்று இருந்து உறையும் – தன்னுடைய வியாமோகத்துக்கும் அவன் கிருஷி செய்தபடி. முற்பாடனாய் வந்து அவன் நிற்பது இருப்பதாய்க் கொண்டு நித்தியவாசம் செய்கிற ஊர். 1பசியன், சோறு தாழ்த்தால் படுமாறுபோலே. சென்னியால் வணங்கும் – தன்கரங்கள் கூப்பித் தொழுகையும் 2வேண்டத் தக்கதானபடி. இருந்த இடத்தே இருந்து தலைசாய்க்கும்படி ஆனாள்

பழையதான வேதார்த்தத்தை அருளிச்செய்கையாலே. சர்வேசுவரன் இதர சஜாதீயனாய் அவதரித்தாற் போல, வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்தபடி என்னுதல்.

பெருமாளும் பிராட்டியும் சேர இருக்க இளையபெருமாள் அடிமை செய்தாற்போலே, சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர் என்பார் 2திருமாலுக்கு அடிமை செய்வார்’ என்கிறார்.

இவளைப் பிழைப்பதற்குரிய விரகுகளை எண்ணுகையாலே தரித்திருக்கிற திருத்தாயார் இவளுடைய வளயம் முதலானவைகள் காணக் காண உருக்குலைகிறபடியைக் கண்டு, அவற்றைத் தனித் தனியே சொல்லிக் கூப்பிடுகிறாள். 2ஒவ்வொரு நகரம் பத்தநம் முதலானவைகள் வேவப்புக்கால், ‘ஒருமாடம் முறிந்தது, மாளிகை முறிந்தது’ என்பாரைப்போலே

மஹாபலியினுடைய செருக்கினைப் போக்கி ஒன்று ஒழியாமல் கைக்கொண்டாற்போலே, பிரணயரோஷத்தாலே வந்த இவளுடைய அபிமானத்தைப் போக்கிச் சேரவிட்டுக் கொண்டபடி

நீலக் கரு நிற மேக நியாயற்கு – 2மஹாபலியை வடிவைக் காட்டி அபகரித்தாற்போலே காணும் இவளையும் வடிவைக்காட்டி அபகரித்தபடி. 3இவள் பிச்சு ஏறுகைக்கு இட்ட மை இருக்கிறபடி. 4மைப் படி மேனி அன்றோ.

இவள் மயிர்முடி ஒன்றுக்குத் தோற்றுக் குமிழிநீர் உண்ணும் அவன் கண்டீர் இவளை அழித்தான்! பங்களப்படைகொண்டு, தனிவீரம் செய்வாரை அழிக்குமாறுபோலே- இழந்தது சங்கே – 2இவள் மயிர்முடி கண்டு அவன் இழக்கக்கடவதனை இவள் இழந்தாள்.

என் வில்புருவம் கொடி – வில்போலே இருக்கிற என்பெண். 3பிரஹ்மாஸ்திரத்தைக்கொண்டிருந்தும் பட்டுக் கிடப்பாரைப்போலே, வெற்றிக்குக் காரணமான பரிகரத்தைக் கொண்டிருந்தும் கண்டீர் தோற்றது! தோற்றது மெய்யே

அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் – 4நிலவோடும் நக்ஷத்திரதாரா கணங்களோடும் கூட சந்திரன் குடிவாங்கின ஆகாசம்போலே கிடந்தது. அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது

ஆஹ்லாத ஸீதநே்த்ராம்பு:-விரகத்தாலே கொதித்துப் புறப்படும் துக்கக்கண்ணீர் போலன்றிக்கே, பகவானை அநுபவிப்பதனால் உண்டான மிகுந்த உவகையினாலே குளிர்ந்த கண்ணீரையுடையனாவது-பரகுணாவிஷ்ட:-பகவானுடைய குணங்களாலே ஏறப்பட்டிருப்பவனாவது, தெய்வம் ஏறினவரைப்போலே. 

பூ அலரும்போதைச் செவ்வி போலே ‘திருக்கோளூர் எத்தனை இட்ம போரும்’ என்று கேட்கும் போதைத் திருப்பவளத்தில் செவ்வி காணப்பெற்றிலேன் என்று காணும் திருத்தாயார்தான் நோவுபடிகிறது.

புகுமூர் – 3காட்டுத் தீயிலே அகப்பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப் புகுமாறு போலே, சம்சாரமாகிற பாலை நிலத்தில் காட்டுத் தீயிலே அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை பொய்கையும் பொழிலும் போலே அன்றோ. புகும் ஊர் என்கையாலே, புக்கார் போகும் ஊர் அன்று என்கை.

அவன் அங்குள்ளாரைத் தன்னோடு ஒத்தவர்களாயிருக்கும்படி செய்தாற்போலே அன்றோ, இங்குள்ளாரை இவள் தன்னோடு ஒக்கப் பண்ணினபடி. ஊரும் நாடும் உலகமும்-2 தான் இருந்த ஊரும் அதனோடு தோள் தீண்டியான நாடும் அதனோடு சேர்ந்த உலகமும்.

ஸ்ரீராமாவதாரத்திலும் ஓர் ஊரேயன்றோ திருந்திற்று; இங்குச் சம்சாரமாகத் திருந்நிற்றுக் கண்டீர் என்கை. 3இன்று நம்மளவும் வர வேறிப் பாயும்படி அன்றோ இவள் சம்பந்தம் வெள்ளம் இட்டபடி. 4பகவத் பக்திக்கு மேட்டுமடையான சம்சாரத்திலே ஈசுவர அவதாரம் போலே ஸ்வயம் பிரயோஜனமாக அவதரித்தவராய்ப் பரமப் பிரயோஜன ரூபமாய் நிறைவுற்றிருக்கின்ற பக்தி யோகத்தையுடையவர்’ என்னும்படியே, எல்லா மேடுகளிலும் ஏறிற்று என்கை

வான்கற்புஇடறி-4 வானான கற்பை இடறி. சூருவரால் கடக்க ஒண்ணாத மரியாதையைக் கடந்து. மலை போல இருக்கிற மரியாதையை, காற்கீழே அகப்பட்ட தொரு சிறிய கல்லை இடறுமாறு போலே இடறி5பெருவெள்ளமானது, சிறிய கரைகளோடு பெரிய கரைகளோடு வாசி அற ஏறுமாறுபோலே, நாணம் மடம் அச்சம் தொடக்க மானவற்றை மதியாதே போதல்.

கொடி-கொள் கொம்பை ஒழியில் தறைப்படும். 2கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும்மனம் அன்றோ. அன்றிக்கே, 3பெற்ற என்னையும் விட்டு வேறேயும் ஒரு பற்றுக்கோடு உண்டாம்படியான பாவத்தைச் செய்துள்ளேன் என்பாள் ‘கொடியேன்கொடி’ என்கிறாளாகவுமாம்

ஸ்ரீ பரதாழ்வானுடைய ராஜ்ய தரிசனம் அவனுக்குப் பொறுக்க முடியாமற்போனது போலே-திருநாமச் சுவடு அறிந்த பின்பு விளையாட்டுக்குரிய கருவிகளைப் பார்த்தல்

ஜகர்ஹேச-சந்தியா வந்தனத்துக்குப் பிற்பட்டாரைப் பெரியோர்கள் பழிக்குமாறு போலே.

நைந்துநைந்து – 4தான் பற்றியிருக்கும் பொருள்களை அழிக்கும் நெருப்புப்போலே குணங்கள்தாம் அழிக்குமே:

மா மணிக் கோயிலே வணங்கி” என்கிறபடியே, அவனிலும் அவன் விரும்பி வாழ்கிற கோயிலையும் கண்களாரக் கண்டு. 6திவ்யாத்ம சொரூபத்துக்குப் பிரகாசகமான திவ்வியமங்கள விக்கிரஹம்போலே, அவை இரண்டுக்கும் பிரகாசகமான கோயில்

1‘பிள்ளை திருநறையூர் அரையரும், பட்டருமாக உள்ளே பிரதக்ஷணம் செய்யாநிற்க, இட்டஅடி மாறி இட மாட்டாதே கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்து வாழ்ந்து கொண்டு போகிறபடியைப் பின்னே நின்று கண்டு அநுபவித்தேன்’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்

ஓர் ஆபரணம்தானே எல்லா ஆபரணங்களுக்கும் நிறம் கொடுக்குமாறு போலே, திருக்கோளூர் உண்டாகையாலே திக்கு முழுதும் சிலாக்கியமானபடி;

நின்று நின்று நையும் – மாறாமல் உருக்குலையாநின்றாள். கிண்ணகத்தில் இளகின கரைபோலே உடைகுலைப் படுகிறபடி

வண்டாலே எடுக்கப்பட்ட சாரத்தையுடைய பூப்போலே காணும் நித்யசம்ச்லேஷத்தாலே துவண்டிருக்கும்படி

தெய்வங்காள் – 3இதனை, ‘கொல்லை’ என்பார் முகம் பார்த்துச் சொல்ல ஒண்ணாதே; 4பழிசொல்லாமையையும், சிறை உறவு போலே தன்னோடு ஒக்க உறங்காமையையும் பார்த்துச் சொல்லுகிறாள்

இராகவனுடைய மனையில் அனைத்துப் பொருள்களையு முடையவளாய்ப் பன்னிரண்டாண்டு தேவபோகங்களை நுகர்ந்தவளான நான்” என்கிறபடியே, பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த்துரும்பு அறக் கலந்து பிரிந்த பிராட்டியைப் போலே, அங்கேபுக்கு நெடுங்காலம் அவனை அநுபவித்துப் பிரிந்து தூது விடுகிறாள் என்று பிள்ளான் பணிப்பர்

பாண்டவர்களுக்குத் தூதுபோன கிருஷ்ணன் படியும், ஆளவந்தார்க்குப் பச்சை இட்ட 1மணக்கால்நம்பி படியும் போலே இருந்ததே உங்கள்படி! 

கிளிகாள் விரைந்து ஓடி வந்து – 7பிராட்டியைக் கண்டு மீண்ட பின்பு முதலிகள் வந்து பெருமாளை உகப்பித்தாற்போலேயும், பெருமாள் மீண்டு எழுந்தருளுகிறபோது திருவடி முன்னே வந்து ஸ்ரீபரதாழ்வானை உகப்பித்தாற்போலேயும், நீங்கள் முன்னே வரவேணும். கிளிகாள் விரைந்து ஓடி வந்து – 1அறிவித்துக் கூட வர இராதே கொள்ளுங்கோள்

சூடிய தண் துளபம் உண்ட தூ மதுவாய்கள் கொண்டு ஓடி வந்து என் குழல்மேல் ஒளி மா மலர் ஊதீரோ என்பான் என்? காரியம் செய்து சமைந்தால் கைக்கூலி கொடுப்பாரைப்போலே? என்னில், இவற்றுக்கு இவள் குழலிலே 1விஷயம் உண்டாகவேணுமே. இப்போது மது மாறிச் சருகாய் அன்றோ கிடக்கிறது; இவை மீண்டால் அன்றோ இத் தலையில் செவ்வி பிறப்பது

நுங்கட்கு யான் உரைக்கேன் – 2யாருக்குச் சொல்லும் வார்த்தையை யாருக்குச் சொல்லுகிறது? 3தனக்கு முன்னே ஆற்றாமையோடே அன்றோ அவைதாம் இருக்கின்றன; 4ஆற்றாமை சொல்லுவியாதது இல்லையன்றோ. நுங்கட்கு யான் உரைக்கேன் – 5உங்களுக்குச் சொல்லுமது அன்று; நான் சொல்லுமது அன்று. வியசனத்துக்கு உரியவர்கள் இருக்க, வேறே சிலர் வார்த்தை சொல்லுமாறு போலே

வெம்கண் புள் ஊர்ந்து வந்து – 2பட்டம் கட்டின யானையிலே ஏறிக் காதலியைக் கிட்டும் இராஜபுத்திரனைப் போலே3“அருளாழிப் புட் கடவீர் அவர் வீதி ஒருநாள்” என்றே அன்றோ அடியிலே தூதுவிட்டது, அப்படியே வந்தபடி.

பூவைகள்போல் நிறத்தன்-3ஆண் பெண்ணாம்படியான நிறம் படைத்தவன். 4“பார்க்கின்ற ஆடவர்களுடைய கண்ணையும் மனத்தையும் கவர்கின்றவன்” என்னும்படியே. 5பேற்றுக்குப் பாவையின் காலிலே விழும்படியான வடிவுபடைத்தவன். பூவைப்பூ போன்ற வடிவையுடையவன். புண்டரீகங்கள் போலும் கண்ணன் – 6ஒருபூ ஒருபூவினைப் பூத்தாற்போலே காணும் வடிவும் கண்ணும் இருக்கும்படி;

வந்திருந்து-4மஹாராஜருடைய இடரைப் பெருமாள் வினவிக்கொண்டு சென்று தீர்த்தாற்போலே என் துன்பத்துக்கெல்லாம் உடன்கேடராயிருந்து

மணிச்சேவல் – 2இதுவும் ஒரு சேவலேதான்! 3தன்னுடைய மணிச்சேவல் கடக்க இருந்து இவளை உடம்பு வெளுப்பித்துத் தான் குறியழியாதேயன்றோ இருக்கிறது. எல்லாம் – 4புத்திர பௌத்திரர்களோடு மற்றுமுள்ள கூட்டத்தோடு” என்னுமாறு போலே. 5மனைவி புத்திரர்கள் முதலாயினார்களோடே கூடப் பிறர் காரியம்செய்ய ஒருப்பட்டிருப்பாரைப்போலே. அந்தரம் ஒன்றும் இன்றி – 6என்னைப் போலே பிரிவோடேகூடி இருக்கிற கலவி இன்றிக்கே இருக்கப் பெறுவதே

மந்திரங்களை இருடிகள் காணுமாறு போலே2“சொல் பணி செய் ஆயிரம்” என்று ஆழ்வாருடைய திருவாக்கிலேபுக்கு ‘அங்கிட்டுப் பிறந்து நாம் தூயராய் அடிமை செய்யவேணும்’ என்று அச்சொற்கள் தாம் ‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று வந்து அடிமை செய்கிறபடி

இவர் படுகிற வியசனத்துக்குக் காரணம் சொல்லப்போகாது, பிராட்டி சிறை இருந்தமைக்குக் காரணம் சொல்லப்போகாதவாறு போலே2அவள் இருப்பு பிறர்மேல் வைத்த திருவருளாலே ஆனாற்போலே, இவருடைய வியசனமும் பிறர்மேல் வைத்த திருவருளுக்குக் காரணமாய் இருக்கிறபடி

அவள் சிறையிருந்தபடியை ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதிவைக்க இன்று நாடு எல்லாம் வாழுமாறு போலே, அன்று இவர்தாம் வியசனப் பட்டாரேயாகிலும் இவர் அருளிச்செய்த பிரபந்தங்கள் உலகத்திற்குத் தண்ணீர்ப்பந்தலாயிற்றது.

இவைதாம் ஒருபொருளும் அன்றே; பல பொருள்களாக இருக்கச் செய்தே ஒரே பொருளாக்கி ஒரு காரியம் கொள்ளவேணும் அன்றோ: 2அது செய்யும்போது, குலாலனானவன் மண்ணும் நீரும் செதுகும் கூட்டிச் சேரத் துகைத்துக் குடம் முதலான பொருள்களாய்க்கொண்டு தோற்றுவிக்குமாறுபோலே, தண்ணீரை உண்டாக்கி, 3அது நீர்ப்பண்டமாகையாலே அதனோடு கடினமான பொருளைக் கூட்டி, பின்னையும் நெகிழ்ந்திருக்கையாலே அதனைச் சிறிது வலிக்கைக்காக ஒளிப்பொருளை உண்டாக்கி, அதுதான் மிகைத்துத் தீயுமளவானவாறே அதனை ஆற்றுகைக்குக் காற்றினை உண்டாக்கி, அது தனக்குச் சஞ்சரிக்கைக்காக இடத்தைக்கொடுக்கின்ற ஆகாசத்தை உண்டாக்கி. இவ்வளவும் முதலில் சங்கல்பந்தன்னையே கொண்டு அண்டசிருஷ்டியைப் பண்ணி நின்றது. 4இனி, பெரியதொரு மாளிகையைச் சமைத்து இருள் உறைய விட்டுவைக்க ஒண்ணாதே அன்றோ; அதற்கு இரண்டு விளக்குகள் இட்டாற்போலே சந்திர சூரியர்களை உண்டாக்கி. 5நீர்க்களிப்பு அறுகைக்கும் வளர்ச்சி பெறுகைக்குமாக இருவரையும் உண்டாக்கினபடி.

ஒருநாள்-விடாயர் ‘ஒரு கால் நாக்கு நனைக்கத் துளி தண்ணீர்’ என்னுமாறு போலே ‘ஒருநாள்’ என்கிறார்.

மண்ணும் விண்ணும் மகிழவே7எனக்காக வந்திலையாகிலும் உன் விபூதி அழியாமைக்கு வா என்கிறார். 8மானாவிச்சோலைபோலே ஆவது அழிவதான இதுபோனால் என்செய்யவேணும்?’ என்று இருக்கிறாயாகில், அவ்விபூதியும் அழியுங்காண்; இது அழியவே 1அதுவும் அழிந்ததாமன்றோ

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் – 1இவ்வளவில் ஸ்ரீ வாமனனாய் வந்து தோற்றிற்றிலையாகில், உபய விபூதியும் அழியுமாகாதே. ஒரு பாட்டம் மழை விழுந்தால் பொருள்களெல்லாம் செவ்வி பெறுமாறு போலே.

இங்கே கொடுவந்து இதர சஜாதீயமாக்கிக் காட்டிற்றிலையோ என்றார் இரண்டாம் பாசுரத்தில்; அது ஒரு நாள் சற்றுப்போது காட்டாறு பெருகினாற்போலே செய்தோம் என்ன, ‘அது ஒரு காலத்திலே நிகழ்வது’ என்ன ஒண்ணாதபடி யுகந்தோறும் இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்து காப்பாற்றுதல் உன்னுடைய சுபாவமாக இருக்க, நான் நோவுபடக் கடவேனோ என்கிறார்.

ஞாலத்தூடே நடந்தும் – 1எப்பொழுதும் காணக்கூடியவர்கள் முன்னே நடக்கக்கடவ நடையை, யாதானும் ஒரு காலத்தில் வந்தாலும் பாராதவர்கள் முன்னே காணும் நடப்பது; குருடர்களுக்கு முன்னே நடக்குமாறு போலே2“ஸ்ரீராமபிரான் முன்னே நடந்து சென்றார்” என்றும், 3“பின்னர் விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு சக்கரவர்த்தித் திருமகனாய் வீரராய் மஹாபல முள்ளவராய் இராமன் என்ற பிரசித்தியுடையவராக இந்தப் பூமியில் சஞ்சரித்தார்” என்றும் சொல்லுகிறபடியே, நடந்தும்.

தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து சாவாரைப்போலே தன் குற்றத்தால் கெட்டானத்தனை காண் வாலி என்றாள் அன்றோ!

ராமேண ஸரை: நிஹதம் த்ரஷ்டும் ந இச்சாமி”–இருத்திப் பிடித்த வில்லும், தெரித்துப் பிடித்த பகழியுமாய்க் கொண்டு நிற்கும்போது அபிராமராய் அன்றோ இருப்பது; அவ்வழகைக் கண்டு அநுபவிக்கமாட்டாமல், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து முடிவாரைப்போலே, தயரதன்பெற்ற மரகத மணித்தடத்தை எதிரிட்டு முடிந்துபோக நான் காணமாட்டுகிறிலேன்.

திருக்கையைத் தலைக்கு அணையாகக்கொண்டு பகைவர்களை அழிக்கும் பெருமாள் கிழக்குமுகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு சமுத்திரத்திற்கு நேர்முகமாகப் படுத்தார்” என்கிறபடியே, கடலை வேண்டி நின்று கிடக்கிற கிடைதானே இலங்கை குடிவாங்க வேண்டும்படி இருக்கை. “பிரதிசிஸ்யே-எதிராகப் படுத்தார்” என்கிறதாயிற்று, அரிஸூதந: “மஹோததே”-கடல்தன்னைப் போர அளவு உடைத்தாக நினைத்திருக்குமாயிற்று, அதற்காக, ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கை; “கருணையங் கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி” என்னும்படி அன்றோ. இருந்தும் உபவிஷ்டம் ஸ்வலங்கிருதம்– 1“அலங்காரஞ்செய்து உட்கார்ந்திருக்கிறவரை” என்றும், 2“பர்ண சாலையில் எழுந்தருளியிருக்கிற சடையோடு கூடிய இராமனை” என்றும் சொல்லுகிறபடியே இருக்கை.அபித: பாவகோபமம்”- 2திருவயோத்தியி லிருக்கும் பேரோலக்கம் சிறியது” என்னும் படியன்றோ தனியிடத்தில் ஓலக்கம் இருந்தபடி. அந்த ஓலக்கத்தில் கிட்டும் தம்பிக்கும் கிட்ட ஒண்ணாதபடி அன்றோ இந்த ஓலக்கம் இருந்தபடி: “சுற்றிலும் நெருப்புப்போல் இருக்கிறவரை” என்கிறபடியே, நெருப்பு எரியா நின்றால் கிட்டப்போகாதவாறு போலே கிட்டுதற்கு அரியராயிருந்த இருப்பு.

அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
   பாஹு ம் புஜகபோகாபம் உபதாய அரிஸூதந:”  என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 1.

உடஜேராமமாஸீநம் ஜடாமண்டலதாரிணம்
  க்ருஷ்ணாஜிநதரம் தம்து சீரவல்கலவாஸஸம்
  ததர்ஸ ராம மாஸீநம் அபித: பாவகோபமம்”–  என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 25.

தம்பிமார் மஹாராஜர் மைந்தர் துவிவிதர்கள் உள்ளிட்ட முதலிகள் எல்லாரும் இலங்கையிலே கிட்ட, ஆகாசம் எல்லாம் வெளிக் காவல் அடைத்து, நிதி நோக்குவாரைப்போலே பெருமாளை நோக்கிக்கொண்டு கிடக்க, இவர்கள் இத்தனைவரும் கண் சோர்ந்த அளவிலே, பெருமாள், தாம் கையும் வில்லுமாய்க் கொண்டு இவர்களுக்குப் புறம்பே நின்று உலாவினார் அன்றோ.

கோலம் திருமாமகளோடு உன்னைக் கூடாதே – 2தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப்பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாறு போலே இருக்கிறது காணும். 3“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.

இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் – 3கண்ணாலே காணில் சிவிட்கு என்னுமவர்களுக்கு, அவர்கள் காண ஒண்ணாதபடி மறைந்து வசிக்கின்றவனே! சிற்றின்பத்திலே ஈடு பாடுடைய ஒருவன் ‘தாய் முகத்திலே விழியேன்’ என்றால், தான் மறைய நின்று அவன் உகந்தாரைக்கொண்டு ரக்ஷிக்கும் தாயைப்போலே4“அதாவது, சிசுபாலன் முதலாயினோர் நறுகுமுறுகு என்றால், அவர்கள் கண்களுக்குத் தோற்றாதபடி அந்தர்யாமியாய் நின்று நோக்கும்படி-மறைந்து–கோபிக்கும்; அல்லது,  அசூயைப்படும்.

அசுணமா என்று சில பறவைகள் உள்ளன; அவை பிடிகொடா ஒன்றுக்கும்; அவற்றைப் பிடிக்க நினைத்தார் முற்படப் பாடுவார்கள்; அதுகேட்டு நெஞ்சுநெகிழும்; பின்பு பறையை அடிப்பார்கள்; இதன் வன்மையாலே பட்டுக் கிடக்குமாம். அதுபோலே, இவர் பகவானுடைய குணங்களிலே நைந்தபடி. இதர விஷயங்களைக் கேட்ட அளவிலே முடியும்படி ஆனார்

சீறா எறியும்’ என்கிறார். என்றது. இவை முடிந்துபோகச் செய்தேயும் கொண்ட 1குதை (உத்யோகம்; முயற்சி.)மாறாமல், இரை பெறாத பாம்புபோலே ஒளி விடாநிற்கும். 

செந்தீ மலரும் திருவேங்கடத்தானே – சேறுகள் ஆர்ந்துள்ள சுனைகளிலே தாமரைகளானவை செந்தீப்போலே மலராநிற்கும். 1எண்ணெயாலே எரியும் விளக்கு ஒழிய, நீராலே எரியும் விளக்குக் கண்டு அநுபவிக்கக் காணும் இவர் ஆசைப்படுகிறது; 2நீரிலே நெருப்பு எழுந்தாற்போலே காணும் இருக்கிறது. 

இமையோர் அதிபதியே – 2மதுவிரதம் போலே, இந்த அமிருதமே ஜீவனமாக இருக்குமவர்கள்.

தீ வாய் வாளி – 1பெருமாள் தொடுத்து விடும்போதாயிற்று அம்பு என்று அறியலாவது; படும்போது நெருப்புப் பட்டாற்போலே இருக்கை. ஸ்ரீகோதண்டத்தில் நாணினின்றும் கழிந்து செல்லும் போது காலாக்னி கவடுவிட்டாற் போன்று எரிந்துகொண்டு செல்லாநிற்கும். குணஹீநமானால் இருக்கும்படி அன்றோ இது.

தீப்த பாவக ஸங்காஸை: ஸிதை: காஞ்சநபூஷணை:
   ந்த்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம்ஸரை:”– என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 22. இராவணனைப் பார்த்து விபீடணன் கூறியது.

வைதேஹீ – உபாத்தியாயர்கள் பெண்பிள்ளைகளுக்குச் செவி ஏற்றாலே ஓத்து போயிருக்குமாறு போலே, வீரவாசி அறியும்

பொருந்துமாறு புணராயே – 2அசோகவனத்திலே இருந்த பிராட்டியைப் போலே காணும் தம்மை நினைத்திருக்கிறது; புணராய் – உன்னைக்கிட்டும் வழி கல்பிக்கவேணும் என்னுதல்; நான் கிட்டும்படி செய்யவேணும் என்னுதல்.

இமையோர்கள் இனம் இனமாய் நின்று எந்நாளும் ஏத்தி இறைஞ்சி – நித்தியசூரிகள் காலமெல்லாம் நின்று துதிசெய்து பின்னைத் திருவடிகளிலே விழுந்து, கிண்ணகத்தில் இழிவாரைப் போலே திரள்திரளாய்.

உன பாதம் காண நோலாது ஆற்றேன்3உன் திருவடிகளைக் காண்கைக்கு ஒரு சாதன அநுஷ்டானம் செய்யாதிருக்க, கணநேரமும் ஆற்றமாட்டுகிறிலேன். என்றது, சாதனத்தைக் கண்ணழிவு அறச் செய்து பலம் தாழ்ப்பாரைப் போலே படாநின்றேன் என்றபடி

கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் – அடக்கமில்லாமல் செருக்குக்கொண்டு திரியும் பிள்ளைகள் தலைகளிலே ஸ்ரீ பாத தீர்த்தம்கொண்டு தெளிப்பாரைப் போலே’.

அலர்மேல்மங்கை5அவனை, (நஜீவேயம்க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10.)“பிரிந்து கணநேரமும் ஜீவித்திருக்கமாட்டேன்” என்னப் பண்ணவல்ல இனிமையையும் பருவத்தையுமுடையவள். 6பரிமளந்தான் ஒரு வடிவு கொண்டாற்போலே இருக்கை.

மலரில் தள்ளத் தக்கனவான தாதும் சுண்ணமும் கழிந்த பரிமளமே வடிவானாற்போலே இருந்துள்ள மிருதுத்தன்மையும், எப்பொழுதும் அநுபவிக்கத் தக்கதான பருவமுமுடையவள். 4அவனை ‘அகலகில்லேன்’ என்னச் செய்யவல்ல பரிகரத்தையுடைய இவள், ‘அகலகில்லேன்’ என்கிறாள் அன்றோ. 5அவன் மார்வின் சுவடு அறிந்த பின்பு, பிறந்தகமான பூவும் நெருஞ்சி முள்ளினைப் போன்றதாயிற்றாதலின் ‘உறைமார்பா’ என்கிறது. என்றது

ஒளி, ஒளியையுடைய பொருளுக்குச் சேஷமாய் நின்றே அத் தலைக்கு நிறம் கொடுக்குமாறு போலவும், வாசனை, மலருக்குச் சேஷமாய் நின்று பெருவிலையன் ஆக்குமாறு போலவும், ஈசுவரன், சுவாதந்திரியம் குலையாமலே பரதந்திரன் ஆமாறு போலவும் அன்றோ, இவளும் அத்தலைக்கு அநந்யார்ஹ சேஷமாய்க்கொண்டே நிறம் கொடுக்கும்படி

இறையும் அகலகில்லேன்” என்னப் பண்ணுமோ? என்ன, விலை உயர்ந்ததான இரத்தினம் ஒன்று கிடைத்தால் ‘இது நமக்குத் தொங்குமோ?’ என்று துணுக்குத் துணுக்கு என்னுமவனைப்போலே ‘அவன் மார்விலே இருந்து அகலிற் செய்வது என்?’ என்று 4அஸ்தாநேபயசங்கை பண்ணுகிறாள்

புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் (இறுகத் தழுவுவதற்காக  நெகிழ்த்து அணைக்கை. )பொறுக்கமாட்டேன் என்பாள் ‘இறையும் அகலகில்லேன்’ என்கிறாள். என்றது, அவன் உபாயமாமிடத்தில் அங்கத்தைச் (ஆநுகூல்ய சங்கல்பம் முதலானவைகளை)சஹியாத சுணையுடைமை போன்று, புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் பொறாத மிருதுத் தன்மையைத் தெரிவித்தபடி.

இவள் பூவினைக் காணாதவாறு போன்று- ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலையை நினையாதவாறு போலே. திருமார்விற்கு அவ்வருகே வேறு அவயவங்களைக் காணாளாதலின் ‘உறைமார்பா’ என்கிறது.

இருட்டு அறையிலே விளக்குப்போலே, பரமபதத்திற் காட்டிலும் 2“கானமும் வானரமும்” என்கிறபடியே, எத்தனையேனும் தாழ்ந்தார்க்கும் முகம் கொடுக்கிற சீலம் முதலான குணங்கள் இங்கே உள்ளன ஆகையாலே, அங்கே இல்லாததும் இங்கே பெறுகையாலே, ‘விரும்பும் திருவேங்கடத்தானே’ என்கிறது,

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஹனுமத் பஞ்ச ரத்னம்-ஸ்ரீ சங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமிகள்-ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சஜநேயர் ஸ்தோத்திரம் —

December 13, 2023

ஸ்ரீ ஹனுமத் பஞ்ச ரத்னம்

வீத அகில விஷயேச்சம் ஜாத ஆனந்த அஸ்ரு புலகமத்யச்சம்
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜ மத்ய பாவயே ஹ்ருத்யம்-1-

எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகிய வற்றை அடைந்தவரும்,
சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும்,
ஸ்ரீ வாயு குமாரனுமான ஸ்ரீ ஹனுமனை தியானிக்கிறேன்.

உலகத்திலேயே லௌகிக அல்ப அஸ்திர அனுபவங்களை எல்லாவற்றையுமே நினைத்தே பார்க்காதவர் ஹனுமான்.
ஸ்ரீ ராம நாம கீர்த்தன ஆனந்தத்திலேயே திளைத்து மயிர்கூச்சலோடு கண்களில் ஆனந்தக்கண்ணீர் மல்கப் பரவசமடைபவர்.
ஸ்ரீ ராமதூதன். ஹனுமான்.பரமபரிசுத்தர்.
இலக்கியங்களிலேயே- முதல் முதலாகக் காணப்படுகின்ற ‘தூது’- என்ற இலக்கிய மரபை ஆரம்பித்தவர் ஸ்ரீ ஹனுமான். என் இதயத்திலே உறைபவர்.
அத்தகைய வாயு குமாரனை த்யானிக்கிறேன்

——————

தருணாருண முக கமலம் கருணா ரஸ பூரபூரிதா பாங்கம்
ஸஞ்சீவன மாஸாஸே மஞ்சுல மஹிமான அஞ்ஜனா பாக்யம்–2-

பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த
கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப்
பிழைக்கும்படி செய்தவரும், புகழத் தக்க மகிமை உள்ளவரும்,
ஸ்ரீ அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஸ்ரீ ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.

பூத்த சிவப்பு ரோஜா நிறமுடைய முக விலாஸம்.
கடைக் கண்களிலே எப்பொழுதுமே கருணை அமுத நீர்
ஊற்றெடுக்கும்.
நன்கு வாழ வைப்பவர்.
மனத்திற்கு இனிய மஹிமை பொருந்தியவர்.
அஞ்ஜநாதேவியின் பாக்கியமே உருவெடுத்தவர். அவரையே கொண்டாடுவேன்.

———–

ஸும்பரவைரி ஸராதிகமம் புஜதள விபுல லோசனோதாரம்
கம்புகளமநில திஷ்டம் பிம்ப ஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே–3-

மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்தியவரும்,
சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவரும், ஸ்ரீ வாயுதேவரின் பாக்கிய பூதருமான
ஸ்ரீ ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.

மன்மதனின் ஏவுகணைக்கு அப்பாற்பட்டவர்.
தாமரை இதழ் போல அகன்றும் ஓரத்தில் கூராகவும் விரிந்த திருக் கண்களை உடையவர்.
வெண்சங்கு போல நடுவில் பருத்து வழுவழுவென்று ஜொலிக்கின்ற கழுத்து அழகன்.
வாயு தேவனின் புண்ணியப் பயனானவர்.
கோவைப் பழம்போல சிவந்து, பளபளவென்று ஜ்வலிக்கின்ற உதடுகலை உடைய
ஸ்ரீ அநுமானைச் சரணம் அடைகிறேன்.

————-

தூரீக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீ க்ருத ராம வைபவஸ் பூர்த்தி:
தாரித தஸ முக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி–4

ஸ்ரீ சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும்,
ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீ ஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.

ஸீதாதேவியின் துயர்கள் அனைத்தையும் துடைத்தவர்.
தனி ஒருவனாக லங்கையின் வீதிகளில் -‘‘எடுத்த காரியங்களில் ஒன்றில் கூட தோல்வியடையாத
ஸ்ரீராமனின் அடிமை நான்’’ -என்று பெருமையோடு ராமனுடைய புகழைப் பரப்பியவர்.
ராவணனுடைய புகழைப் பொடி யாக்கினவர்.
அந்த ஸ்ரீ ஹநுமானுடைய திருவுருவம் என் முன்னே விளங்கட்டும்.

————–

வானரநிகராத் யக்ஷம் தானவ குல குமுத ரவிகர ஸத்ருஸம்
தீன ஜனவன தீக்ஷம் பவனதப: பாக புஞ்ஜமத்ராக்ஷம்--5-

வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு
சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்தவரும், துக்கம் அடைந்தவர்களை
ரட்சிப்பதில் உறுதி கொண்டவரும், ஸ்ரீ வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான
ஸ்ரீ ஹனுமனை நேரில் தரிசித்தேன்.

சூரியன் உதித்தால் -இரவு முழுவதும் மலர்ந்திருந்த ஆம்பல் மலர்களும் கூம்பி விடுமாம்.
அதுபோல ஹனுமானைக் கண்டதும் ராவணனின் அரக்கர் படைகள் எல்லாம் வணங்கி ஒளிந்து கொண்டன.
ஏழ்மையினால் செய்வது அறியாமல் செயலற்று வாடி வதங்கி கிடக்கின்றவர்களெல்லோரையும்
ஸ்ரீ ராம நாம கர்ஜனை செவிப்பட்டு
‘‘இதோ ராமதாஸன் நான் இருக்கிறேன். உங்களை கை தூக்கி விடுவேன் சொல்லுங்கள் ’’ ராம ராம’’- என்று
ஏழைகளைக் காப்பாற்ற கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்ற ஸ்ரீ ஹனுமானை –
வாயு பகவானின் திருக் குமாரரானவரை உயிர்கள் அனைத்தையும் ரக்ஷித்தே தீருவேன்
என்ற பெரும் தவத்தை ஓயாமல் ஆற்றி வருகின்ற
வாயு பகவானின் உயர்ந்த பயனான ஸ்ரீ ஹனுமானைக் கண்டு கொண்டேன்.

———–

ஏதத் பவன ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீ ராம பக்தி பாக்பவதி

ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம்-என்ற இந்த ஸ்தோத்திரத்தை படிக்கிறவர்களுக்கு – ஆயுஸ்ஸூ வளமுண்டு.
வாழ்க்கை பூராவும் கஷ்டமே தொடர்ந்து வந்தால் ஆயுஸ் ஸூ எதற்கு?
ஸ்ரீ ஹனுமானை நினைத்து ஸ்ரீ ராம நாமம் சொன்னால் கஷ்டமே வராது. விரும்பிய சுகங்கள் எல்லாம் கிடைக்கும்.
பிறகு இத்தனை சுகங்களைக் கொடுத்த ஸ்ரீ ராமனின் நாமத்தையே ஜபிப்போமே!
அவனுடைய சரித்திரத்தையே படிப்போமே!
அவனுடைய சரணங்களில் நறு மலர்களால் அர்ச்சிப்போமே!
நமக்கு கிடைத்த நல்ல பொருள் களை எல்லாம் அவருக்கே சமர்ப்பணம் பண்ணுவோமே!
நாமே அவனுடைய சொத்தாகவே என்று ஆவோமே! என்று ஆசை வளரும்.
இது தான் ராம பக்தி.-என்னும் உயர்ந்த பேறு
பாவோ நான்யத்ர -என்று இச்சுவை பெற்ற பின்பு அச்சுவை வேண்டோமே

———–

ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சஜநேயர் ஸ்தோத்திரம்

ஹனுமார் – கிழக்கு முகம்
நரசிம்மம் – தெற்கு முகம்
கருடன் – மேற்கு முகம்
வராகர் – வடக்கு முகம்
ஹயக்ரீவர் – மேல் முகம்

ஹனுமார்(கிழக்கு முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே !

ஸகல சத்ரு ஸம்ஹா ரணாய ஸ்வாஹா ! 1–பகைவர்களால் ஏற்படும் தொல்லை நீங்கும் .

நரசிம்மம்(தெற்கு முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே !

கரால வதனாய நிருஸிம்ஹாய !

ஸகல பூத ப்ரேத ப்ரமதனயா ஸ்வாஹா ! 2–எல்லாவித பயங்கள், தோஷங்கள், துர் தேவதைகள் தோஷங்கள், நீங்கும் .

கருடன்(மேற்கு முகம் )

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பச்சிம !

முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா ! 3–எல்லாவித உடல் உபாதைகள் , விஷக்கடி , விஷ ஜுரங்கள் நீங்கும் .

வராகர்(வடக்கு முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய உத்தர முகே !

ஆதி வராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா ! 4--தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்

ஹயக்ரீவர்(மேல் முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே !

ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா ! 5–ஜன வசீகரம் ,வாக்கு பலிதம் , கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

கடலைத் தாண்டும் போது கருடன் ஆனார்.
ஸீதா தேவிக்கு ஆறுதல் கூறி தைரியமூட்டின போது வாநரனாகவே இருந்தார்.
அசோக வனத்தில் அரக்கர்களை அழித்த போது நரசிம்ம ஸ்வாமியாகவே ஆனார்.
ராவணனுக்கு உபதேசம் அருளிய போது குதிரை முகத்துடன் ஹயக்ரீவராகவே ஆனார்.
சத்ருவின் நகரத்தை அழித்த போது வராஹ ஸ்வாமியாக ஆனார்
அந்த மந்தர மூர்த்தியான ஹநுமான் நமது உள்ளத்திலே ஸ்ரீராம சரணங்களில் பக்தியை வளர்க்கட்டும்.

———–

பஞ்சமுக ஹனுமான் மந்திரம்:

ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய
வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
சப்த சமுத்ர நிராலங்கிதாய,

—————-

ஸ்ரீ ஹனுமத்  ஸ்தோத்திரம்  

அஞ்ஜநா நத்தநம் வீரம் !ஜாநகீ ஶோக நாஶநம் !கபீஶ மக்ஷஹந்தாரம் !வந்தே லங்கா பயங்கரம் ! 1

ஆஞ்சஜநேய மதிபாடலாநநம் !
காஞ்ச நாத்ரி கமநீய விக்ரஹம் !
பாரிஜாத தருமூல வாஸிநம் !
பாவயாமி பவமாந நந்தநம் !  2
யத்ர யத்ர ரகு நாத கீர்த்தநம் !
தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம் !
பாஷ்பவாாி பாிபூா்ண லோசநம் !
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் !   3
மநோஜவம் மாருத துல்ய வேகம் !
ஜிதேந்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் !
வாதாத்மஜம் வானரயூத முக்யம் !
ஶ்ரீ ராம தூதம் ஶிரஸா நவாமி !
ஆஞ்ஜநேய மதிபாடலாநநம் காஞ்ச நாத்ரி கமநீய விக்ரஹம்  !
பாாிஜாத தருமூல வாஸிநம் பாவயாமி பவமாந நந்தநம்  !   4புத்திர்பலம் யஶோ தைர்யம் !
நிர்பயத்வம் அரோகதா !
அஜாட்யம் வாக்படுத்வம் ச !
ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ! 5

அஸாதீய ஸாதக ஸ்வாமிந் !
அஸாதீயம் தவ கிம் வத !
ராம தூத க்ருபாஸிந்தோ !
மத் கார்யம் ஸாதய ப்ரபே !  6

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே !
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே ! 7

உலகம் யாவையும் தாமுள வாக்கலும் !
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா !
அலகிலா விளையாட்டுடை யாரவர் !
தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே ! 8

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே !
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே !
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே !
இம்மையே இராமஎன் றிரண்டெ ழுத்தினால் !  9

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி !
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி !
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கை கண்டயலார் ஊரில் !
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான் !  10
நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம் !
வீடியல் வழிய தாக்கும் வோியம் கமலை நோக்கும் !
நீடிய அரக்கா் சேனை நீறுபட் டழிய வாகை !
சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோா்க்கே !  11
மும்மைசால் உலகுக் கெல்லாம் மூலமந் திரத்தை முற்றும் !
தம்மையே தமா்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தாமே !
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்துமாம் இராமன் (என்னும்) !
செம்மைசோ் நாமம் தன்னைக் கண்களில் தொியக் கண்டான் !    12

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவடி மஹாத்ம்யம் —

December 13, 2023

ஸ்ரீ வேதங்களில் ஸ்ரீ திருவடி –ஸ்ரீ மந்த்ர ராமாயணம்

தே வாஸ ஆயந் பர சூ ர பி ப் ரந் 
வநா வ்ருக்ஷந்தோ அபிவிட் பி ராயந் 
நி ஸுத்ருவம் தத தோ லக்ஷணாஸு 
யத்ரா க்ருபீட மநு தத்த ஹந்தி

ஸீதையைத் தேடிச் சென்ற ஹநுமான் லங்கையிலே அசோக வனத்திலே ஸீதையைக் கண்டு பிடித்த
ஆனந்தத்தில் பல பெரிய மரங்கஷீமீ அடர்ந்த அசோக மரங்களை அழித்து விடுகிறார்.
இதைக் கண்ட அரக்கர்கள் எட்டத்தில் இருந்தபடியே வனம் நாசமாவதைக் கண்டு -ராவணனிடம் சென்று முறையிடுகிறார்கள்

தேவர்கள் கோடாலிகளை தூக்கி வந்தார்கள். அங்கே காவல் காக்கின்ற எங்களையும் சேர்த்து காட்டை அழித்துக் கொண்டே வந்தார்கள்
வெகு வேகமாகப் பரவுகின்ற காட்டுத் தீ போல கட்டிடங்களுக்கு தீ வைத்துக் கொண்டு –
பின்னால் உயர்ந்த மர அடுக்குகளையும் எரித்து தொடர்ந்து மற்ற மரங்களையும் கொளுத்துகிறார்கள்
ஹநுமான் ஒருவன் செய்த காரியத்தை பல தேவர்கள்கூடிச் செய்ததாக புகார் செய்கிறார்கள்.

ச ச : க்ஷுரம் ப்ரத்யஞ்சம் ஜகாரா த்ரிம்
லோகே ந வ்ய பே த மாராத் ।
ப்ருஹந்தம் சிதூ ஹதே ரந்தயாநி
வயத் வத்ஸோ வ்ருஷப ம் சூ சு வாந: ॥

ராவணன் அலட்சியமாகச் சிரிக்கிறான். கூறுகிறான்.குட்டி முயல் பட்டாக் சக்தியை விழுங்கிவிடுமோ?
தூரத்திலிருந்த மணல் முட்டைக் கலைத்துவிட்டதனால் பர்வதத்தையே உடைத்ததாகி விடுமோ?
இப்போது தான் பிறந்த காளைக் கன்று வளர்ந்து காளை ஆகி பெரிய காளையைச் சீண்ட முடியுமா?
ஆனாலும் நான் பரமாத்மாவை சிற்றின்ப வேட்கையினால் துன்புறுத்தி பெரிய பாவத்தைக் கட்டிக் கொள்கிறேன்
ராவணன் தன் தவற்றை உணருகிறான் என்று பொருள்

ஸுபர்ண இத்தா நக மா ஸிஷாயா வருத்த :பரிப தம் – ந ஸிம்ஹ: ।
நிருத்தச் சிந்மஹிஷஸ் தர்ஷ்யாவாந் கோ தா தஸ்மா அயத ம் கர்ஷதே தத்

பட்சி போல ஆகாசத்திலே ஸஞ்சரிக்கின்ற ராவணன் எவ்வளவு அடிபட்டும் கூட அயராதவன்.
கம என்றால் வேதனை, துக்கம் என்று பொருள் .“ந கம்” என்றால் துயரப்படாதவன் ஹநுமான்.
அந்த ஹநுமானை பிரம்மாஸ்திரத்தினால் கட்டிப் போடச் சொன்னான் .
ஹநுமான் சிங்கம் போலே அங்கும் இங்கும் தாவிக் குதித்தான்
“ந”என்றால் வேதத்தில் சில இடங்களில் ‘‘போலே’’ என்று பொருள் .
அவரை அடக்கிப் போட முடியவில்லை. தண்ணீர் வேட்கை கொண்ட எருமை தண்ணீரை நோக்கித் தாறுமாறாக ஓடுமே
அது போல தரி கெட்டு ஒடுகின்ற ஹநுமானை அரக்கர்கள் கயிற்றினால் கட்டி இழுத்துச் சென்றார்கள் .

பிரஹ்மாஸ்த்ர பாசத்தினால் கட்டி இழுத்துச் சென்ற போது -ஹநுமானை தேவ கணங்கள் பிராத்தனை புரிந்தனர்.

அக்ஷா நஹோ நஹ்யதநோத ஸோம்யா
இஷ்க்ருணுத்வம் ரசநா ஓத பிம்சத

அஷ்டாப ந்துரம் வஹதா பிதோ ர தம்
யேந தே வாஸோ அநயந்நபி ப்ரியம் ॥

ராம பக்தரான ஹனுமான் அவர்களே! (இங்கு
ஹனுமானை அழைக்கின்ற தேவர்கள் அவரைப் பன்மையில் அழைக்கிறார்கள்

(ஏகத்துவம் ந ச தாத்வ்யம் கு ராவாத்மநி சேச்வரே)

குருவையும் தன்னையும் ஈச்வரனையும் பற்றிக் கூறும் போது -ஏகவசனத்தில் ஒருமையில் பேசக்கூடாது என்று ஒரு சாஸ்திரம் கூறுகிறது.
அது போல அரக்கர் கூட்டம் ஹநுமானைச் சுற்றி வளைத்தாலும் கூட்டம் கூடி அடக்க முடியவில்லை. அநுமானைப் பாசத்தினால் கட்டி இழுத்தனர்.

அக்ஷா நஹோ நஹ்யத நோத ஸோம்யா
இஷ்க்ருணுத்4 வம் எச + நா ஞத பிம்சத
அஷ்டா பந்து4ரம் வஹதா பி4 தோ ரத 2 ம்
யேந தே வாஸோ அநயடந்நபி ப்ரியம்

ராமாயணத்தில் இந்திரஜித்து தான் ஹநுமானை¨பிரஹ்மாஸ்திரத்தினால் கட்டி வீதி வழியே ஊர்வலமாக
இழுத்துப் போனான் -என்று வருகிறது.
இங்கு ராவணனுடைய இளைய குமாரன் அக்ஷன் இழுத்துப் போவதாக ஸூசனை
உங்களைக் கட்டி இழுக்கின்ற அக்ஷன். போன்ற அரக்கன் (ராமாயணத்தில் வரும் இந்திரஜித் பெயர்)
தன்னையே ம்ருத்யு பாசத்தினால் கட்டிக் கொண்டு விட்டான்.
தற்போது தயவு செய்து இந்த ப்ரஹம்ம பாசத்திற்கு மதிப்புகொடுங்கள் -(ராவணன் முன் சென்றவுடன்) விரும்பினால்
ப்ரஹ்ம பாசத்தைத் துண்டு துண்டாக அறுத்து எறியுங்கோள்
இரண்டு கைகள். இரண்டு கால்கள். இரண்டு முஷ்டிகள். இரண்டு முழங்கால் இவ்விதம் எட்டு இடங்களில்
கட்டப் பட்டிருக்கின்றன.
தேர் போன்ற உங்கள் திருமேனியே லங்கையில் ஊர்வலமாக வரட்டும். அதனால் தேவதைகள்
தமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள் .
ராவணன் அநுமானின் வாலில் தீ வைத்து ஊர் முழுவதும் இழுத்துப் போகிறான் -என்று கேள்விப்பட்ட
ஸீதாதேவி அக்நி தேவனை வேண்டுகிறாள்

ரக்ஷோஹணம் வாஜிநமா ஜிகர்மி
மித்ர ப்ரதிஷ்ட ணிாயாமி ச ர்ம ।
சி சா னோ அக்னி: க்ரதுபி:
ஸ நோ தி வா ஸ ரிஷ: பாது நக்தம் ॥

அரக்கர்களை வதைக்கின்ற வேகமுடைய ஸ்ரீராம தூதனை இந்த நிலையில் கண்டு -துயரத்தினால் கண்ணீர் வடிக்கின்றேன். –
வாயு தேவனின் பரம மித்ரன் அக்நி தேவன். அவரிடம் ஹநுமானுக்கு க்ஷேமத்தை பிராத்திக்கிறேன்.
என்கணவரால் பல யாகங்கள் செய்யப் ப்பெற்று நன்கு வளர்க்கப்பட்டிருக்கிறார். –
அந்த அக்னி நமக்கு நம் ஹனுமானை இரவு பகலாகக் கொடுமை செய்கின்ற அரக்கர்களிடமிருந்து காப்பாற்றட்டும்.

அயோ த ம்ஷ்ட்ரோ அர்சிஷா யாதுதா நான் உப
ஸ்ப்ருச ஜாதவேத : ஸமித்த :
ஆ ஜிஹ்வயா மூரதேவாந் ரப ஸ்வ
க்ரவ்யாதோவ்ருக்வ்யபி தத்ஸ்வாஸந்

இரும்பினால் ஆன -கடைவாயில் பல கோரைப் பற்களை உடைய அக்நி தேவனே! தீ நாக்கினால் அரக்கர்களைத் தீண்டுங்கள் :
நடந்ததெல்லாம் (ராவணன் ஸீதா தேவியை கொண்டு வந்ததெல்லாம்) உங்களுக்குத் தெரியுமே!
கொழுந்து விட்டு எரிகின்ற -தீ நாக்கினால் தேவர்களுக்கு
மூத்தவர்களான அசுரர்களை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டு எரித்து விடுங்கள் . அவர்கள் மாமிசம்
சாப்பிடுபவர்கள் தானே! -ஒரு சுருட்டாகச் சுருட்டி வாயில் அடைத்துக் கொள்ளுங்கள்

ஹரிம் ம்ருஜந்த்யருஷோ ந யுஜ்யதே
ச ஸம் தேநுப: கல ஸோமோ அஜ்யதே
உத்வாச மீரயதி ஹிந்வதே மதீ
புருஷ்ருதஸ்ய கதிசிக் பரிப்ரிய:

ஸீதையைக் கண்டுபிடித்து விட்டு திரும்பிய ஹநுமான் ஸ்ரீராமனிடம் வருகிறார்.
சத்ருவிடம் கூட பகை கொண்டாடாத (ரிபூணவமபி வத்ஸல:=வால்மீகி ) ராமன் ஹநுமானின் தோளில் அன்புடன்
கைபோட்டுக் கொண்டார்.
பசுவினிடம் கிடைக்கின்ற பஞ்சகவ்யம் கலந்த கலசத்தில் ஸோமக் கொடியின் ரஸம் நன்கு கலக்கப்படுகிறதே
அதுபோல ஹநுமான் பவித்திரமான ப்ரேமையே நிரம்பிய ஸ்ரீ ராமனுடைய இதய கலசத்தில் ஸீதா தேவியின் அன்புச் சேதியை நிரப்புகிறார்.
ராமனுடைய திரு உள்ளம் பூரிக்கிறது. ப்ரம்ஹ தேவன் சிவபெருமான் முதலியோர் ராமனைக் கொண்டாடுகிறார்கள்
இப்படி கொண்டாடப்படுகின்ற ராமனுக்கு ஹநுமானுடைய ஸீதாதேவியின் ப்ரேம வசனங்களுக்கு முன்னால்
அவையெல்லாம் நிறைவு பெறவில்லை.

நீலகண்ட ஸூரியின் இந்த விளக்க உரை பெருமளவு வலிந்து கூறப்பட்டதுதான்.
அவரே ‘‘ஸூசனை தெரிகிறது’’ என்று சொல்லுகிறாரே தவிர, ஹநுமானுடைய சரிதம்
ருக்வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது -என்று சொல்லவில்லை.

———————–

ருக்வேதத்தில் முதல் மந்த்ரமே ஹநுமானைத்தான்
குறிப்பிடுகிறது. என்று ருக்வேதத்தின் சாந்த்ரபாஷ்யத்தின்
ஆதாரத்தில் எடுத்துக் கூறுகிறார்.

அக்நிம் ஈளே புரோஹிதம்
யஜ்ஞஸ்ய தே வம் ருத்விஜடி
ஹோதாரம் ரத்ந தாதமம்
புரோஹிதம் -யஜ்ஞஸ்ய என்ற
பதங்களுக்கு முதலில் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்வோம்

அக்நிம் தூ தம் வ்ருணீமஹே
ஹோதாரம் விச்வ வேதஸம்
அஸ்ய யஜ்ஞடய ஸுக்ரதும்

இந்த மந்த்ரத்தில் ஸுக்ரீவன் ஸ்ரீராமனுடைய
நட்பைப் பெறுவதற்காக ஹநுமானை அனுப்புகிறான்
என்பதை தூதம் என்ற சொல் ஸூசனை செய்கிறது.

புரோஹிதம் -என்ற பதம் கார்யத்துவக்கத்திலே
அநுகூலமாக இருப்பவன் என்ற கருத்தை கூறுகிறது.
இங்கு ஸீதாதேவியை தேடுவதற்காக ஸ்ரீராமன் ஹநுமானை அனுப்பினார்.
ஹநுமான் செய்த இந்த முதல் உதவி தான் தேவியை அடைவதற்கு முதலில் கிடைத்தது. ஆகவே ஹநுமான் புரோகிதன்.

யாகத்தில் ஹோதா -தேவதைகளை அழைப்பவர். ஹநுமான் முன்னே இலங்கை சென்று அரக்கர்களை போருக்கு அறைகூவி அழைக்கிறார்.
அதனால் ஹோதா என்ற மந்த்ரத்தின் சொல் ஹநுமானைக் குறிக்கிறது.
ரித்விஜம் -ருத்வா ஏஜம் கடலைக் கடந்து சென்று
அரக்கர்களின் உள்ளங்களை கலக்கினார்.
ஆகவே ருத்விஜம் என்ற சொல் ஹநுமானைக் குறிக்கிறது.

இந்த மந்த்ரத்தில் –உஷீமீள ரத்நதா4தமம் -என்ற சொல் ஹநுமானைக் குறிக்கும் விஷயத்தில் மிகவும் அர்த்த புஷ்டி உடையது.
ராமன் அடையாளமாக ஹனுமானிடம் ரத்நக்கணையாழியை அளித்தார். அதை ஏந்திச் சென்றார் ஹநுமான்.
இந்த ஒருசொல்லே இந்த மந்த்ரம் ஹநுமானைக் குறிப்பது என்பதற்கு முக்கியச் சான்று. சங்கமும் சக்ரமும் கதாயுதமும்
ஏந்தியவர் சங்க சக்ர கதாதர : என்ற அடைமொழி –
ஹரி என்று சொல்லுக்கு பல பொருள்கள் இருந்தாலும் -இங்கு நாராயணனையே குறிப்பிடுமோ அதுபோல
யஜ்ஞஸ்ய தேவம்& ஸ்ரீராமனுக்கும் ஸுக்ரீவனுக்கும் -தோழமை -என்ற வேஷீமீவியை –
அக்நி ஸாக்ஷியாக நடத்தி வைத்தவர் அல்லவா ஹநுமான் இந்த அடைமொழிகளால் அக்நிம் -என்ற சொல் ஹநுமானையே குறிக்கிறது -என்று ஊர்ஜிதம் செய்யலாம்.

அக்ரே நயதி அக்நி: ஒரு கார்யத்தை முன் நின்று நடத்துபவன் -அக்நி. ஸீதையை மீட்பது -என்ற காரியத்தை
முன்னே நின்று நடத்திக் கொடுத்தவர் ஹநுமான்.
ஈளே அவனைத் துதிக்கிறேன். என்று ருக் வேதம் ஆரம்பிக்கிறது.
அக்நிம் தூதம் என்ற மந்த்ரம் இதே கருத்தை விவரமாகக் கூறுகிறது.
அஸ்ய யஜ்ஞடய தூ தம் ஸீதையை மீட்பது – என்ற வேஷீமீவிக்கு -தூதனாக அமைந்தவர் ஹநுமான்.

அரக்கர் நகரத்தையே கொளுத்திய அக்நி. -அஸ்ய யஜ்ஞஸ்ய தூதம் -யஐஞம் என்ற சொல் நாராயணனைக் குறிக்கும்.
டீஐளதீவயஜ்ஞபதி: யஜ்வா- என்று ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் ராமனாக அவதாரம் செய்த விஷ்ணுவை வேஷீமீவிகளின் ஸகல வடிவங்களாகவும் குறிப்பிடுகிறது.
அந்த யஜ்ஞ புருஷனுடைய தூதன் ஹநுமான் அஸ்ய யஜ்ஞஸ்ய ஸுக்ரதும் ராமன் எடுத்துக்கொண்ட ஸீதையை மீட்பது என்ற – வேஷீமீவியை செவ்வனே நடத்திக்
கொடுத்தவன் ஹநுமான். எப்படி அவனால் அதை சாதிக்க
முடிந்தது?
அவன் விச்வவேதா: அவன் எல்லாச் செயல்களையும் நன்கு அறிந்து செம்மையாகச் செய்வதில் ஸமர்த்தன். அதனால் முடிந்தது.

வ்ருணீமஹே -அவனையே நாமும் -நமது
நல்ல கார்யங்களைச் செவ்வனே நடைபெறுவதற்கு துணையாக ஏற்போம்.

இந்த மந்த்ரத்தில் வருகின்ற அக்நி என்ற சொல்
பொருட் செரிவு உள்ளது.
அஞ்ஜனை பெற்ற பிள்ளைக்கு ஹநுமான் . என்ற
பெயர் எப்படி வந்தது. இதையும் ருக்வேதம்
ஸூசிப்பிக்கிறது.
மமச்சந தே மகவன் வ்யம்ஸோ
நிவி வி த்வாம் அபஹந¨ஜகாந
அதா நிவித்த உத்தரோ
ப பூவாந் சி ரோ தாஸஸய
ஸம் பிணக் வதே ந ॥

இந்திரனே ! நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்
போதே விசாலமான தோஷங்களை உடைய ஹநுமான்
ஸூர்யனை விழுங்க முனைந்தான்.
அவனைத் தடுப்பதற்காக அவனுடைய தாடைகளை வஜ்ராயுதத்தினால் = ராமதூதனாக வரப் போகிறவனுடைய = தலையின் பகுதியான தாடையை -நன்றாக தாக்கிவிட்டீர்கள்
விரிந்த தோள்களுடைய ஹநுமான் இப்படி அடிபட்டு
சிறந்த வீரன் ஆனான்.
வேதங்களை முக்கியமான செய்திகளை
மறைத்துத் தான் சொல்லும் ‘‘பரோக்ஷப்ரியா இவ ஹி தேவா ’’ தேவர்களும் மறைந்திருப்பதையே விரும்புவார்கள் .
அடுத்த மந்த்ரத்தில் இது நன்கு விளங்கும்.

அநுஸ்வதாம க்ஷரந்நாபோ
அஸ்யா வர்த் த மத் ய ஆநாவ்யாநாம
ஸத் ரீ சீநேந மநஸா தமிந்த்ர
ஓஜிஷ்டே ந ஹந்மநா ஹந் நபி. த்யூந்

ஆகாயத்தில் ஒரு நீலக்கடல் (மேகம்) அந்தக் கடலின்
உஷீமீள நீல நீர் தேவர்களுக்கு யாகத்தில் ஹோமம்
செய்யப் படுகின்ற ஹவிஸ்.
நெல் போன்ற தானியங்களை உற்பத்தி செய்கின்ற தண்ணீர் நிறைந்த ஆகாயத்தில் கப்பல்கள்
போகின்ற அளவுக்கு பெருத்த மேக வெள்ளத்தின் இடையே
ஹநுமான் மூழ்கிவிடாமல் மிதந்தார்.
இந்திரன் மேக மண்டலத்தில் மிதந்த ஹநுமான் மீது தன் வாஹனமான ஐராவதத்தை ஏவினார். ஐராவதத்தையே கபளீகரம் செய்த மனதினுடைய வேகத்தை மிஞ்சுகின்ற ஹநுமான்
(இங்கு ஹனுமநா என்ற சொல்லுக்கு – ஹநுமானால் என்று பொருளில் -ஹநுமதா என்ற சொல் மருவி ஹந்மநா என்று
ஆகியிருக்கிறது.)
துரத்தப்பட்ட இந்திரன் வஜ்ராயுதத்தால் அடித்தான்.

இவ்விதம் ருக் வேதத்தில் நூற்றுக்கு மேற்பட்ட
ஹநுமானைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

ஹிரண்ய ரூப : ஸ ஹிரண் யஸம்த் ருக்
அபாம் ந பாத் ஸேதுஹிரண்ய வர்ண:

ஹிரண்ய யாத் டரி யோநேர் நிஷக்யா
ஹிரண்யதா த த த்யத்ர மஸ்மை ॥

தங்க மயமான சரீரம் உடையவர் ஹநுமான்-ஹிரண்ய, தங்க மயமான புலன்களை உடையவர். கண்களும்
காதுகளும் மூக்கு முதலியன தங்கமயமானவை.

அபாம் நபாத்& முன் மந்த்ரத்தில் கூறிய படி
ஆகாயக்கடல் நீரை அபாம் என்று சொல் குறிப்பிடுகிறது.
ஆகாசத்தின் குமாரன் வாயு. ‘‘ஆகாசாத் வாயு:’’ வாயுவின்
குமாரன் ஹநுமான். ஆகவே ஹநுமான் ஆகாசத்தின் பேரன்
அபாம் நபாத் (நப்தா என்பது நபாத்). ஸேது ஹிரண்ய வர்ண = உண்மையான ஹநுமான் ஸ்வர்ண காந்தி உடையவன்.
தங்கமயமான ஸூர்யமண்டலத்தின் மீது உட்கார்ந்து தங்கத்தை வழங்குபவன் ஹநுமான். அவனுக்கு சாப்பிட
கொழுக்கட்டைகளை அளிப்போம். அஸ்மை அத்ரம்
(அன்னடி) மருத்பி: என்ற ஒன்பது தடவை வருகின்ற
மந்த்ரங்களில் -வாயுவின் குமாரன். அக்நி -ஹநுமான் என்றே பொருள் .
இதையே மருத்பி : அக்ந என்ற தொடர்
குறிப்பிடுகின்றது

இவ்வாறு கேசவாநந்தஜீ அழுத்தமாக
‘‘வேதங்கள் ஹநுமானின் அவதாரத்தை சிறப்பிக்கின்றன’’
என்று ஸித்தாந்தம் கூறுகிறார்.

————–

புராணங்கள் -ஏழு மஹநீயர்களை சிரஞ்ஜீவிகள் என்று கூறுகின்றன.

அச்வத்தாமா பலி: வ்யாஸ : ஹநுமான்- ச விபீஷண: । க்ருப : பரசுராம ஸப்த ஏதே சிரஜீவிந

அச்வத்தாமா-துரோணாசாரியரின் குமாரன்-பலி சக்ரவர்த்தி-வ்யாஸ: பகவான் -பராசரமுனிவரின் குமாரர்.

க்ருப:  மஹா பாரதத்தில் கௌரவர்களுக்கு ஆசார்யராக இருந்தவர். பரசுராம: -ஜமதக்நி முனிவரின் குமாரர்.

———-

.1. தேஜோ –நல்ல முக விலாஸம்-கபடமில்லாத
வனிடம் மட்டுமே இந்த முக விலாஸம் பளீர் என்று
துலங்கும்.
2.த் ருதி: -மன உறுதி. எடுத்துக் கொண்ட காரியம் உலகுக்கு
நன்மை தரும் என்பதில் உறுதியாக நம்பிக்கையோடு பிறந்த தைரியம்.
3.யசோ -இத்தகைய நல்லெண்ணம் கொண்டவன் இவன் என்ற புகழ் பெற்றிருக்க வேண்டும்.
4.தாக்ஷ்யம் -செயல் திறன்-ஒரு கருவியைக் கையாளுவதில் கூட லாகவம் வேண்டும்
5. ஸாமர்த்த் யம் -இந்த செயல்திறன் பயிற்சியினால் பழகிப் போன பின்பு செய்யும் போது லகுவாகத் தெரியும்.-இதுதான் ஸாமர்த்தியம் எனப்படுவது.
6. விநயோ –இத்தனை இருந்தாலும் அவற்றை
படாடோபமாகக் காட்டிக் கொள்ளக்கூடாது. இயல்பாக
இருப்பது போல நடந்து கொள்ள வேண்டும்.
7.நய: -செய்வதில் நியாயம் இருக்க வேண்டும்.யாரும்
தவறு கண்டு பிடிக்கக்கூடாது.
8.பௌருஷ -ஆளுமை வேண்டும்
9.விக்ரம்:-பணிகளில் பணியாளர்கள் அலட்சியம்
காட்டினால்-எதிர்ப்பு காட்டினால் அவர்களை உறுதியாக
அடக்க அதிகார தோரணை வேண்டும்.
10. பு த்தி : இந்த ஒன்பது திறன்களையும் வரிசையாக
முறைப்படி வெளிப்படுத்துவதற்கு முன்கூட்டியே திட்டம்
யஸ்மிந்நேதாநி நித்யதா ॥ :
இவ்வனைத்தும் ஹனுமானிடம் இருந்தது என்கிறார்
ராமன்

———————————-

ருச்யமூகப் பர்வதம்

(1)ருச்யமூகப் பர்வதம் கர்நாடகாவில் ஹம்பிக்கு அருகே உள்ளது -.
பெல்லாரி மாவட்டத்தில் ஹாஸ்பெட்டிலிருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவு.
ஹம்பியில் தான் விரூபாட்ச பரமேச்வரன் ஆலயம். அதற்கு முன்னே ஸந்நிதி வீதியில் -நேரே சென்றால் ருச்யமூக அடிவாரத்தில் கொண்டுவிடும்.
இங்கு தானே வாலிக்கு பயந்து கொண்டு சுக்ரீவன் ஒளிந்து கொண்டிருந்தான்?
அதன் அடிவாரத்தில் தானே ஹநுமான் ஸ்ரீராம லட்சுமணர்களை முதலில் கண்டார்
இங்கு இந்த மலையை பிரதட்சிணமாக வில் வளைவாக துங்க பத்ராநதி ஓடுகிறது. அங்கே அதற்குச் சக்கர தீர்த்தம் என்று பெயர்.
அதன் கரையில் மலை அடிவாரத்தில் ஸ்ரீராம மந்திர் உள்ளது.
அங்கே ஸீதா லட்சுமண ராமர்களை ஸேவித்துக் கொண்டு
ஹநுமான் ஸேவார்த்திகளுக்கு வரம் அருளுகிறார்.

கிஷ்கிந்தை
ஹம்பிப் பிரதேசத்திலேயே விட்டல நாத ஆலயத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் சென்றால்
சாலை வடக்கே திரும்புகிறது.
ஸ்படிக சிலா – என்ற இடத்திலிருந்து வருகின்ற சாலை இந்தச் சாலையில் சேருகிறது.
அதே வழியில் சற்று தூரம் போனால் துங்கபத்ரா நதி. அதன் அக்கரையில் அரைமைல் தூரத்தில் அநாங்குடி
என்ற கிராமம்.
இது தான் ராமாயண காலத்திய கிஷ்கிந்தை.
இங்கு பக்கத்தில் தான் ஸ்ரீராமன் ஒரே அம்பினால் துளைத்த ஏழு மாமரங்கஷீமீ இருந்தன.
சுக்ரீவன் ராமனுடைய அபார திறமையை மெச்சி வணங்கினான். அங்கு ஸ்ரீராமன் தன்னுடைய அடிபுறாத் தூணியை கழற்றி வைத்திருக்கிறார்.
அந்த அடையாளம் தெரிகிறது அங்கு தான் வாலி சுக்ரீவ
போர்கள் நிகழ்ந்தன. துங்க பத்ரா நதிக்கரையில் வாலி
ராமபாணத்தில் அடிபட்டு வீழ்ந்தான்.
அங்கெல்லாம் பாறைக பளீரென்று கண்களைப் பறிக்கின்றன. அதன் பக்கத்தில் ஒரு குகை.
அங்கு ராமன் மழை நாட்களில் தங்கி இருந்திருக்கிறார்.

ஹநுமான் பஹாடீ
அந்த குகையின் பக்கத்தில் ஹநுமான் பஹாடீ என்ற
ஸ்தலம். பக்கத்தில் குன்று -சுக்ரீவன் குன்று.
ஹாஸ்பெட் அருகில் கமலாபுரத்தில் மதுவனம் என்ற கிராமம். லங்கையிலிருந்து ஸீதையைக் கண்டு திரும்பிய பின்பு வாநரப்படை அங்கு தான் வெற்றி கொண்டாடி தேன் குடித்தது.
இனிய பலாப் பழங்களைச் சுவைத்தது. அங்கு ஒரு ஹநுமான் ஆலயம். பம்பா ஸரஸ். நினைத்து நினைத்து மேனி சிலிர்த்து ஆஞ்ஜநேயரை தர்சித்து பிறவிப் பயன் பெறலாம்.
பக்கத்தில் ஆஞ்ஜநேய மலை சற்று உயரமான இடத்தில்
ஒரு குகை. அதில் அஞ்ஜனி -பால ஹநுமான் தர்சனம்.

மால்யவான் மலை
மால்யவான் மலை -அதற்கு இன்று ஸ்படிக சிலா
என்று பெயர். விரூபாக்ஷ ஆலயத்திலிருந்து ஆறு
கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
பக்கத்தில் ப்ரவர்ஷண கிரி. மால்யவான் மலையில் ஸ்படிக சிலை மீது அமர்ந்து ஸ்ரீராமன் ஸீதையின் பிரிவு தாங்காமல் -ஓயாமல் கண்ணீர் விட்ட இடம்.
ப்ரவர்ஷணக் குன்றிலிருந்து ஒரு சிற்றருவி கலகல
வென்று நீரைப் பெருக்குகின்றது.
ஸ்ரீமத் ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் 27,28 ஸர்க்கங்களின் ஸ்லோகங்களை வரிவரியாக நிறுத்திப் படித்தால் புலம்பிய ராமன் தோன்றுவான்.
அவருடைய கண்களைத் துடைத்து விடலாம். அந்தப் பெரும் பேறு கிடைக்கும். நான்கு மாதங்கள் அங்கே ராம லட்சுமணர்களைத் தாங்கி இருந்திருக்கிறார்களே.
ஹநுமான் லங்கையிலிருந்து திரும்பி வந்து இங்கு தான் ‘‘ஸீதாதேவி உயிருடன் இருக்கிறாள் ’’ என்று மங்களச்சேதி கூறியிருக்கிறார்.
அந்த ஹநுமானை அங்கு தர்சிப்பவர் பெரும் புண்ணியம் செய்தவர்களாகும்

———

பொதுவாக தென்னாட்டில் பக்தர்கள் மார்கழி க்ருஷ்ண சதுர்தசி மூல நக்ஷத்திரத்தில் ஸ்ரீ ஹநுமத் ஜயந்தி கொண்டாடுகிறார்கள்

வட நாட்டில் சித்ரா பூர்ணிமையன்றும் -சைத்ர சுக்ல ஏகாதசியிலும் சில இடங்களில் மாறுதலாக ஸ்ரீ ஹநுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது.

மைவார் நறும் கூந்தல் அஞ்சனை அமைந்த திருமஞ்சறூக்களை மாட்டி
வார் நறும் சுண்ணம் திமிர்ந்து, திருநெற்றி மிசைமணிநிலக்காப்பு மிட்டு
கைவார் நறும் குஞ்சிசூட்டி, மணிநூபுரக் காலணிகலன்களைப் பூட்டிக்
கைவிரல் சுவைத்தன்னை, மெளிணி விரற்சிந்தூர காந்தி கொஷீமீ இரேகை தீட்டிப்
பெளிணி வாளிணி நறுத் தேறல் ஒழுக, ஒழுக்கக்கால்பெயர்த்த முலை உண்டு, விம்பிப்
பெரு விழிக்கடை சிவந்தங் காந்து குறுநதை பெருக்கி மணி முத்தமாடிச்
செவ்வாளிணி திறந்து, பலர் சீராட்ட வளர் குழவி செங்கீரை யாடி அருளே
தீர திரி நேத்ரம் உள வீர அநுமந்தனே? செங்கீரை ஆடி அருளே –அருணாச்சலக் கவிராயர். பிள்ளைத் தமிழ் பாடல்

பிறந்த நாற்பது நாட்களுக்குள் கமகம வென்று நறும் கூந்தல் அழகியான அஞ்ஜனை – குழந்தையை கணுக்கால்களிடையே போட்டுக் கொண்டு –
தரையில் அமர்ந்து -கஸ்தூரிகோரோசனை கலந்து காளிணிச்சிய நல்லெண்ணையை தலையிலும் கண்களிலும் பார்த்து வழித்துக்
கை கால்களைப் பிடித்து விட்டுக் களபமாட்டி குழந்தையை பூந்துகில் கொண்டு ஒத்தி ஒத்தித் துடைத்து விட்டு, கண்களுக்கு மைதீட்டி –
நெற்றியில் பொடித்த முத்துத்துகளால் திலக மிட்டு -சுருஷீமீ சுருளான கேசங்களை கை விரலினால் கோதிவிட்டுப் பதிய வைத்து
ரத்தினச்சரம் சூட்டி கால்களில் மணி நூபுரக் காலணிகளைப் பூட்டி குழந்தையின் பிஞ்சு விரல்களைத் தம் வாயினால் சுவைத்து முத்தமிட்டு
விரல்களில் சிந்தூரம் தீட்டி உள்ளங்கைகளில்
சிந்தூர ரேகை எழுதி வாயில் விரலிட்டுக் குதப்பும் கடை வாளிணி வழியே நறும் தேன் ஒழுக –
அப்படி ஒழுக்கக்கால் – குழந்தை கையினால் குச கலசத்தைப் பெயர்த்து முலை உண்ணத் தாளிணி
விடுகிறாள்
குழந்தை பரபரப்பாக பெரு விழிக்கடை சிவந்து, அண்ணாந்து தாயின் முகம் பார்த்து குறு நகை பெருக்குகிறது.
தாய் குழந்தை வாயில் முத்தமிடுகிறாள் குழந்தை கால்களை உதைத்து -கைகளை ஆட்டி ஆட்டி அங்கிங்கு உங்க என்றெல்லாம்
செவ்வாயினைத் திறந்து மழலை பேசும் போது – ஓடி
வந்து சிறு பெண்கள் கை கொட்டி குழந்தை என்னோடு
பேசுகிறான் – என்று குலவும் போது
தீரனே – த்ரிநேத்ரம் உள்ள முக்கண்ணனின் அவதாரமே! வீர அநுமந்தனே -என்று அழைத்து செங்கீரை பாடி அருளே -என்று பாடுகிறார்

————–

ஸீதாராம பதாம் புஜே மதுபவத் யந் மாநஸம் லீயதே
ஸீதாராம கு ணாவளீ நிசி திவா யஜ்ஜிஹ்வயாssச்ரீயதே
ஸீதாராம ஸுபத்ர ரூபம நிசம் யச்சக்ஷுஷோ: பூஷணம்
ஸீதாராம ஸுநாம தேய ரஸிகம் தம் வாதஸூநும் பஜே ॥

ஸீதாராமர்களுடைய திவ்ய சரணத் தாமரைகளில் தேன் வண்டுகளே போல மனது எப்போதும் மொய்த்துக் கொண்டே உள்ளது
ஸீதாராம கல்யாண குணங்களை நாக்கு இரவு பகலாகப் பாடிக் கொண்டே இருக்கிறது –
ஸீதா ராமர்களுடைய மங்கள ஸ்வரூபம் கண்களுக்கு அழகூட்டுகின்றது.
ஸீதாராமர்களுடைய திருநாமத்தையே சொல்லிச் சொல்லிச் சுவைத்துக் கொண்டிருக்கின்ற அந்த வாயு குமாரனை சரண் புகுகின்றேன்.

அஞ்ஜநா கேஸரீ புண்யாய மங்களம்
ஸ்ரீராம பக்தாக்ர கண்யாய மங்களம்
ஸ்ரீராம நாமைக வத நாய மங்களம்
ஜாநகீ சோகாத் ரி தமநாய மங்களம்
ஸஞ்ஜீவிதாநுஜ ராமமோதாய மங்களம்
த்வம் ஜீவஸர்வதேத்யாசி ஷே மங்களம்
காத்ராச்லிஷத்ராம ப த்ராய மங்களம்
ஆத்ரேய ஸாபல்யதாயிநே மங்களம்

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஈட்டில் பூர்வாச்சார்யர்களின் விலக்ஷண நிர்வாஹங்கள் –ஆறாம் பத்து –

December 10, 2023

1-அனந்தாழ்வான்

பொன்னுலகு ஆளீரோ புவனிமுழுது ஆளீரோ–இவள் தான் உபயவிபூதியையும் கொடாநின்றாளாகில், அவன் வந்தால் தானும் அவனும் எங்கே இருப்பது?’ என்ன, ‘இக் குருவி காட்டின இடத்தே’ என்று அனந்தாழ்வான் அருளிச்செய்வர்.

2-ஆளவந்தார்

சிலவண்டுகளைக் குறித்து, அவர் இத்தலையில் சத்தையும் இல்லை என்று இருப்பர், அவளும் உளள் என்று சொல்லுங்கோள் என்று சொல்லுகிறாள்” என்று ஆளவந்தார் அருளிச்செய்வர். “இத்தலை இல்லையாகில் அத்தலை உண்டாகக் கூடாது; ‘பெண்பிறந்தார் காரியம் எல்லாம் செய்தோம்’ என்று கிருதக்கிருத்யராயிருக்குமவர்க்கு, ரக்ஷ்யவர்க்கத்திலே நானும்ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள்” என்று   எம்பெருமானார் அருளிச் செய்வர்.
அருளிச் செய்வர்.

என்னையும் உளள் என்மின்கள் – இன்னமும் நோவுபடுகிறார் உண்டு என்று சொல்லுங்கோள். இதற்கு, “‘இத்தலையைப் பிரிந்தாரில் இருப்பார் இல்லை’ என்று இருக்கையாலே வாராது ஒழிந்தார் அத்தனை; இத்தலையில் சத்தை உள்ளமையைஅறிவியுங்கோள்” என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பணிப்பர். இதனை, எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது ஆகிலும், இன்றியமையாமை என்று தமிழரது ஒரு 1பிரவாதம்(பொதுவான வார்த்தை.) உண்டு; அதாகிறது, ஒருதலை உண்டானால் ஒருதலை இன்றிக்கே இராது; இரண்டு தலையும் உண்டாதல், இரண்டு தலையும் இன்றிக்கே ஒழிதல் இத்தனையாயிற்று. அதில், தாம் உளராகையால் இத்தலையும் உண்டு என்கை நிச்சிதம்; ஆனபின்பு, பிரதி கூலித்தாரைக் கிழங்குஎடுத்துப்பொகட்டு அநுகூலித்தார் தலையிலே முடியை வைத்துக் கிருதக்கிருத்யராய், ‘இனிச் செய்ய வேண்டிய குறை ஒன்றும்இல்லை” என்றிருக்கிறவர்க்கு, இன்னமும் ரக்ஷ்யவர்க்கம் ஒன்று உண்டு என்று சொல்லுங்கோள் என்கிறாள் என்று அருளிச்செய்தார்.

நையா நின்றனென் நானிருந் திங்ஙன்
மெய்வானோர் திருநாடு மேவினாய்
ஐயா! நீ என தாவி யென்றதும்
பொய்யோ! பொய்யுரையாத புண்ணியா!– என்ற கம்பராமாயண–கிட்கிந். அரசியற். 9

இத் திருத் தாயார்க்கு மகளைப் பிரிந்த துக்கமும், தனிவழியே போன  துக்கமுமாகிய இரண்டும் உண்டாகையாலே, அவற்றுள், பிரிவால் வந்த துக்கத்தை மேல் திருவாய்மொழியில் அருளிச்செய்து, தனி வழி  சென்றமையால் வந்த துக்கத்துக்குச் சூசக சம்வாதம் காட்டுகிறார்–ஆளவந்தார் கோஷ்டியில், “உண்ணுஞ்சோறு” என்ற திருவாய்மொழியில் வருகின்ற பிராட்டிக்கோ அஞ்சவேண்டுவது” என்று கேட்க, “இருவராகப் போனவர்கட்கு வயிறு எரியவேணுமோ? தனிவழியே போனவளுக்கன்றோ வயிறு எரியவேண்டுவது!” என்று இருந்த முதலிகள் சொல்ல, “அங்ஙன் அன்று காணுங்கோள்! (கள்வன்கொல்” , பெரிய  திருமொழி, 3. 7 : 1.)இருவராகப் போனவர்கள் ஆகையாலே, இருவர்க்கும் அஞ்சவேணும்; தனியே போனவளுக்கு அச்சம் உண்டோ?” என்று அருளிச்செய்தார். அதற்கு அடி, இருவரும் இருவர்க்கும் 2ஊமத்தங்காயாய், கடித்ததும் ஊர்ந்ததும் அறியார்கள்(அந்யோந்ய  வைலக்ஷண்யங்களாலே ஒருவர்க்கு ஒருவர் மயக்கத்தை  உண்டுபண்ணுமவராய்-அகலகில்லேனிறையும்”, “பித்தர்  பனிமலர்மேல் பாவைக்கு” ): 3இவள் அங்கே புக்கல்லது தரியாள் (திண்ணம்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.)என்பதாம்.-அள்ளல் அம்பூங்கழனி அணி ஆலி புகுவர்கொலோ!” அன்றியே, இலங்கையின் வாசலிலே புகுவர்கொலோ! என்றே அன்றோ அங்கே -கொலோ” என்றது, ஐயம்.

3-உய்ந்தபிள்ளை

இன்னம் என் கையகத்து ஈங்கு ஒருநாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே”( பெருமாள் திருமொழி, 6 : 8.) என்று, இதனை உய்ந்தபிள்ளை பாடா நிற்கச் செய்தே, காலாலே உதைப்பது கையாலே தள்ளுவதாய் அபிநயித்துக் காட்டினார். இதனை எம்பார் கேட்டருளி, ‘அங்ஙன் அன்று, அது, பின்னைப் பெற்றானாகில் அவன் நெடுநாள் பிரார்த்தித்துக்கிடந்தது அன்றோ; ஆன பின்னர், அதுவன்று பொருள்’ என்று முகத்தைத் திரிய வைத்துக் காட்டினார். 2“நீ அகல நின்று செய்தவை எல்லாம் உன் சந்நிதியிலே உன்னைச் செய்வேன் என்கிறாள்’ என்று அருளிச்செய்தார். 3எம்பார், புறம்பான விஷயங்களிலே ருசி இல்லாமையாலே பதார்த்த ஞானம் இன்றிக்கே இருப்பர். இப்படி இருக்கையாலே ‘பெண்களுக்கு அசாதாரணமான சிந்நங்கள் எங்ஙனே இருக்கும்படி?’ என்று, சிங்கப்பிரானைக் கேட்டருளினார் என்பது பிரசித்தம். 4இப்படி இருக்கிறவர் தாம் “மின்னிடை மடவார்” என்ற இத்திருவாய்மொழி அருளிச் செய்யப்புக்கால், ‘இந்தச் சந்நியாசி பிரட்டுப் பாடத் தொடங்கினார்’ என்பாராம் பிள்ளையுறங்கா வில்லிதாசர். 5பக்வத் விஷயத்தில் இவருடைய உட்புகுவு இருக்கும்படி. ஒரு க்ஷுத்ர விஷயத்திலே நான்கு நாள்கள் வாசனை பண்ணினவர்கள் போர விதக்தராய் இராநின்றார்கள்; அவ்வளவு அல்ல அன்றோ சமஸ்த கல்யாண குணாத்மகனோடே நெடுநாள் வாசனை பண்ணினார்க்கு இருக்கும்படி. 1எம்பார் ‘ஈசுவரன் முன்னே வந்து நின்றாலும் ‘வா’ என்பாரையும் கிடையாத சம்சாரத்திலே, அவன் சிறிது தாழ்த்தான் என்னா ‘போ’ என்பாரைப் பெறுவதே! என்பர்.

4-எம்பார்

5-எம்பெருமானார்

சிலவண்டுகளைக் குறித்து, அவர் இத்தலையில் சத்தையும் இல்லை என்று இருப்பர், அவளும் உளள் என்று சொல்லுங்கோள் என்று சொல்லுகிறாள்” என்று ஆளவந்தார் அருளிச்செய்வர். “இத்தலை இல்லையாகில் அத்தலை உண்டாகக் கூடாது; ‘பெண்பிறந்தார் காரியம் எல்லாம் செய்தோம்’ என்று கிருதக்கிருத்யராயிருக்குமவர்க்கு, ரக்ஷ்யவர்க்கத்திலே நானும்ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள்” என்று எம்பெருமானார் அருளிச் செய்வர்.

6-சிறியாத்தான்

தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யயுத்ஸவ:   மாமகா: பாண்டவாஸ்சைவ கிம் அகுர்வத ஸஞ்ஜய”–  என்பது, ஸ்ரீ கீதை. 1 : 1.
என்னுடைய புத்திரர்களான துரியோதனன் முதலியோர்களும், பாண்டவர்களும்” என்கிறவிடத்துச் சிறியாத்தான் சொல்லும்படி: “என்னுடையவர்கள் என்றும், பாண்டவர்கள் என்றும் பிரித்தான், அதுவன்றோ விநாசபர்யந்தம் ஆகிவிட்டது” என்று. 2இதுதான் உண்மை நிலையை மாத்திரம் பற்றிய வார்த்தை அன்று, பிரணய கோஷ்டியிலும் கலவியிலே வந்தால் ‘உன்னது, என்னது’ என்கையன்றோ உறவு அறுகையாவது. என்னுடைய பந்தும் கழலும்3“தான் என்றே பரமாத்மாவைத் தியாநிக்கக் கடவன்” என்கிறபடியே, ஒன்றை ஒன்று உபாசியாநிற்கச்செய்தே, தன்னை உபாசித்தது என்று சொல்லலாம்படி அன்றோ இரண்டு வஸ்துக்களுக்கும் தொடர்பு இருக்கிறபடி. 4சொரூபம் தெளிவானால் ‘நான்’ என்னவுமாய், ‘அடியேன்’ என்னவுமாய்க் காணும் இருப்பது.

  “ஆத்மேத்யேவது க்ருஹ்ணீயாத் ஸர்வஸ்ய தந் நிஷ்பத்தே:”என்பது, வாக்யகாரர் வசனம். என்றது, இவ்வுயிரானது சர்வேசுவரனை
வழிபடாநிற்கச்செய்தே தன்னையே வழிபட்டது என்னலாம்படியன்றோ சரீர  சரீரி பாவத்தால் வந்த சம்பந்தம் இருக்கிறபடி. இப்படிச் சரீர பூதனாய்
அவனுடைய அபிமானத்திலே அடங்கியவனாயிருக்கை உறவு அறாமையாம்  என்றபடி.

7-திருமாலையாண்டான்

8-நஞ்சீயர்

சர்வேசுவரன் இவரிடத்தில் மிகுந்த பிரீதியுள்ளவனாயிருக்கச் செய்தேயும்,  இவர் இடைவிடாது நோவுபடுகிறபடியை அநுசந்தித்து நஞ்சீயர்
ஈடுபட்டருளுகிற விதத்தை அருளிச்செய்கிறார்–சீயர், இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கவாறே, உருத்தோறும் அருளிச்செய்யும் வார்த்தை: ‘பாண்டவர்கள் காரியத்துக்காகத் தன்னை ஓக்கி அவர்கள் கழுத்தைக் கட்டிக்கொண்டு கூடத் திரியச்செய்தேயும் அவர்கள் பட்ட வியசனமெல்லாம் படுகிறார் காணும் இவரும். 4அவர்கள்தாம் ஒரு தர்மஆபாசம் உண்டு என்று இருக்கையாலே வியசனப்பட்டார்கள்; இவர்க்கு அதுவுமின்றிக்கே இருக்க என்செய்யப்படுகிறார்’ என்று அருளிச்செய்வர்

பாதம் கைதொழுது – கண்டு, திருவடிகளிலே தண்டன் இட்டு2“‘கைகள் கூப்பி’ என்றதே; தொழுதார்க்கு நிற்க ஒண்ணாதே யன்றோ. உண்ணாநிற்க, மிடற்றைப் பிடித்தாற் போலே இருப்பது ஒன்று அன்றோ தொழுதுவைத்து விழாதே ஒழியுமது” என்று பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள். 3“மதித்தான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் ஸ்ரீபாதத்தே தலைபடத் தண்டன் இட்ட அன்று, எனக்கு உண்டு பசி கெட்டாற்போலே இருக்கும்” என்று அருளிச்செய்வர் சீயர். அன்றிக்கே, கிலாம்தோற்றும்படி அவர் திருவடிகளிலே கைசென்று தாக்கும்படி விழுந்து கிடவுங்கோள் என்னுதல்; என்றது, தீர்க்கப் பிரணாமம் பண்ணுங்கோள் என்றபடி.

இப்படித் தாழநின்றவன் சர்வேசுவரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச்செய்வர். அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய சர்வேசுவரத்வத்தை அருளிச்செய்கிறார் என்றபடி. ‘இதிலே 2ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச்செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர். 3அதாவது, “சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேரவிட்டுக்கொண்ட ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்

நல்குரவும்போகு நம்பி”, “கழகம்ஏறேல் நம்பி” என்னலாம்படி –இப்படித் தாழநின்றவன் சர்வேசுவரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச்செய்வர். அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய சர்வேசுவரத்வத்தை அருளிச்செய்கிறார் என்றபடி. ‘இதிலே 2ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச்செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர். 3அதாவது, “சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேரவிட்டுக்கொண்ட ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்-(நல்குரவும் செல்வும்” என்றது முதலாக  முரண்பட்ட தன்மையை அருளிச்செய்கையாலே ஒரு விசேடம் தோற்ற  என்றபடி.)

திருவிண்ணகரிலே நின்ற உபகாரகன்- தன் ஒப்பார் இல் அப்பன் – சிலர்க்கு ஒன்றைக் கொடுக்குமிடத்தில், தன்னோடு ஒக்கக் கொடுக்கவல்லார் இல்லாதபடியான மஹோபகாரகன். இதற்கு, 1‘மின்னிடை மடவார்’ என்ற திருவாய்மொழியிலே, அவன் மேல் வந்து விழ, ‘நீ எனக்கு வேண்டா’ என்று நான் தள்ளத் தள்ள, ‘நீ உனக்கு ஹிதம் அறிந்தாயோ? நான் உனக்கு வேணுங்காண் என்று தன்னை எனக்குத் தந்தவன்’ என்று சீயர் அருளிச்செய்வர். தன தாள் நிழல் தந்தனன் – 2‘உன்னை ஒழிந்த வெய்யிலே எனக்கு அமையும்’ என்று நான் அகலப் புக, “அழித்தாய் உன் திருவடியால்” என்று தன்னுடைய திருவடிகளாலே என் செருக்கைப் போக்கி, திருவடிநிழலை எனக்குத் தந்தான்–அடிபட்டவாறே, ‘எனக்கு’ என்று வைத்தவற்றையும் பொகடுவர்களே. (ரசோக்தியாக  அருளிச்செய்கிறார் ‘அடிபட்டவாறே’ என்று தொடங்கி. திருவடிகள்  என்றும், தண்டனை என்றும் பொருள்.)

என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று – 5பேச்சுக்கு நிலமன்று போலே காணும். என்னை – அச்சேர்த்தியிலே அடிமைசெய்ய ஆசைப்பட்டிருக்கிற என்னை. ‘இப்படி சீர்கேட்டினை அடைந்தாள் இவள் என்று, 6இவள் பசலை நிறத்தைத் தம்முடம்பிலே காட்டவும் வற்றாகாதே இவை’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். (அன்னம் வெண்மையாக இருக்கும் ஆகையாலே, அதனைக்கொண்டு இப்படி வெளுத்த பிரகாரத்தையுடையவள் என்பதனைக்
காட்ட வற்றாயிருத்தலைக் குறித்தபடி.)7அன்றிக்கே, உம்முடைய தேவாரமோ! (அர்ச்சக பரதந்திரமான  வீட்டில் உள்ள அர்ச்சாவதாரம்போலே உமக்குப் பரதந்திரமோ? என்றபடி.-  தேவாரம் – வீட்டில் அர்ச்சிக்கும் இறைவனுடைய வடிவு.)இவள் அந்தப்புர பரிகரம் அன்றோ என்னுங்கோள் என்னுதல்.

நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே அடைந்த ஒருவன், ‘;எம்பெருமானே உபாயமாகில் சரணாகதிகொண்டு இங்குச் செய்கிறது ஒன்றும் கண்டிலேன்’ என்ன, செவியைப் புதைத்து ‘நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரம ரஹஸ்யமாக உபதேசித்து ஓரான் வழியாய்க் கொண்டு போந்த இதனை, இதன் சீர்மை அறியாத உனக்கு மஹாபாபியேன் இதனை வெளியிடுவதே!’ என்று திருமுடியிலே அடித்துக்கொண்டு திருப்பள்ளியறையிலே புக்கருளினார். 1திவ்வியமங்கள விக்கிரஹமும் விக்கிரஹ குணங்களும் திவ்வியாத்ம சொரூப குணங்களும் நித்திய முக்தர்கட்குப் பிராப்யமானாற் போலே, முமுக்ஷுவாய்ப் பிரபந்நனான இவ்வதிகாரிக்குச் சரணாகதியே பிராப்பியமாய் இருக்கும் அன்றோ.-உபாயம் சித்தமானாலும் ஸ்வீகாரம் வேண்டுகையாலே  முதல்தசையிலே அதிகாரி விசேஷணமாய், உத்தர உத்தர தசையிலே  பிராப்பியமாயிருக்கும் என்றபடி. திருப்பள்ளி அறையிலே புக்கதற்குக்  கருத்து, துக்கத்தையுடைய ஒருவன் ஆப்தபந்து உள்ள இடத்திலே  போமாறுபோலே போனார் என்பது. அன்றிக்கே, இவனுக்கு நல்ல  புத்தியைக் கொடுப்பதற்குப் பிரார்த்திக்கப் போனார் என்னுதலுமாம்.  திருப்பள்ளியறை – பெருமாளது.

9-நம்பிள்ளை

பெற்றி நிர்வாகத்தில், “கூவி’ என்பதற்குக் கூவும்படி செய்து  என்றும், “எழும்” என்பதற்குச் சந்தோஷிக்கும் என்றும் பொருள்.ஊரும்நாடும் உலகமும் தன்னைப்போல்’ என்கிறபடியே, இவை தாம் திருநாமத்தைச் சொல்லினவானால் ஆகாதோ’ என்று, பெற்றி, நம்பிள்ளையைக் கேட்க, “அதற்குக் குற்றம் உண்டு, ‘பந்து தூதை புட்டில்’ என்கிற விடத்தில் தட்டுப் பிறக்கும்” என்ன, அங்ஙனேயோ என்று இசைந்து போனார். நன்று;

அருளாளப்பெருமாள் எம்பெருமானாருடைய அந்திம தசையிலே, ‘திருவுள்ளத்தில் ஓடுகிறது என்?’ என்ன, ‘ஒரு பறவை பெருமாளுடைய திருவுள்ளத்தைப் 1புண்படுத்தியபடி என் என்று கிடந்தேன்’ என்றார் என்பது. இதற்குக் கருத்தாக நம்பிள்ளை அருளிச்செய்யும் வார்த்தை: 2‘நாம் பண்ணின சரணாகதி, ஆகையாலே பலத்தோடு அவ்யபிசாரியாக மாட்டாது; இனி, சரண்யன் நீர்மையின் ஏற்றத்தாலே நமக்கு ஒருகுறை இல்லை என்கிறது’ என்பது.(வேடுவனது  சரணாகத ஆநுகூல்யாதிகளால் அன்றிக்கே சரண்யமான புறாவினது  குணாதிக்யத்தாலே பலம் சித்தித்தது போன்று, நம்முடைய ஆநுகூல்ய
சங்கல்பாதிகளாலன்றிக்கே சரண்யனான சர்வேசுவரனுடைய குணாதிக்யத்தாலே பலிக்கும் என்பது. அவ்யபிசாரியாகமாட்டாது  பலத்தோடே கூட்டு விக்க மாட்டாது.)

10-பட்டர்

குருகினங்காள்! கைகள் கூப்பிச் சொல்லீர் என்று கூட்டுக. பண்டை முதலிகள், ‘பத்தாம் பாசுரத்திலே, பிரணயரோஷம் தோற்றச் சொல்லுகிறாள்’ என்று நிர்வஹிப்பர்கள். 4‘பாசுரந்தோறும், கிலாம்தோற்றச் சொல்லுகிறாள்’ என்று பட்டர் அருளிச்செய்யும்படி. வந்து மேயும் குருகினங்காள்! கைகள் கூப்பிச் சொல்லீர்-5என்றும் பிறர்க்கு உதவிசெய்யவே தேடித்திரியுமித்தினையோ, உங்கள் காரியமும் செய்யவேண்டாவோ!-பட்டர் நிர்வாகத்துக்குக் காரணம், “உணர்த்தல் ஊடல் உணர்ந்து”  (பா. 5.) என்ற பிரணய ரோஷத்தைக் கூறுகிற பாசுரம். கிலாம் –  பிரணயரோஷம்.

புணர்த்த பூந்தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு – தொடுக்கப்பட்டு அழகியதாய்ச் சிரமத்தைப் போக்கக்கூடியதான திருத்துழாயினைத் திருமுடியிலேயுடையவனாய், அதனாலே என்னைத் தனக்கே உரிமையாக்கினவனைக் கண்டு. என்றது, 1நீங்கள் சென்று அறிவிக்குமித்தனையே வேண்டுவது; இங்குத்தைக்கு வருகைக்கு ஒப்பித்தபடியே இருக்கிறவன் என்பதனைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, இத்தலையைத் தோற்பித்த வேண்டப்பாடு தோற்றும்படி வளையம் வைத்து முதன்மை கொண்டாடி இருக்கின்றவனைக் கண்டு என்று பணிப்பர் பட்டர். என்றது, தம் ஒப்பனையையும் முதன்மையையும் நம்மோடே காட்டியிருக்கிறவனைக் கண்டு என்றபடி-புணர்த்த கையினராய் – 2(பட்டர் நிர்வாஹத்திலே பாவம் அருளிச்செய்கிறார்)அங்கே சென்றால் தொழப் பார்த்திராமல், கைஒத்துச்  (அஞ்சலி செய்துகொண்டு.) செல்லுங்கோள் 3-வழியே பிடித்துத் தொழுது கொடு போங்கோள்

‘உயர “போற்றி” என்கிறாள்’ என்று, தாம் மேலே அருளிச் செய்ததற்குச்   சம்வாதம் காட்டுகிறார் -போற்றி” என்றது, எடுத்தல் ஒசையாகையாலே, “வானார் வண்கமுகு”,  “சேண்சினை ஓங்குமரச் செழுங்கானல்” என்றபடியே, அங்குள்ள   புன்னைகளும் உயர்ந்து ஓங்கி இருக்கும் என்கிறபடி‘-பிள்ளையமுதனார், திருவிருத்தவரைமார்வனை, ‘புன்னை மேல் என்னும் இப் பதங்கட்குப் பட்டர் அருளிச்செய்தது என்?’ என்ன, ‘தன் துன்பஒலி அவற்றின் செவியிலே படும்படி உயரச் சொல்லுகிறாள் என்று அருளிச் செய்தார்’ என்ன, ‘நெய்தல் நிலத்திலே 3புன்னை படர்ந்தன்றோ கிடப்பது, இங்ஙனே சொல்லக் கூடுமோ?’ என்ன, அவன் பட்டர்பாடே வந்து, ‘இங்ஙனே பணித்தார்’ என்ன, 1‘இவ்வர்த்தத்துக்கு நிர்ணாயகம், இசையாயிற்று; அது, ‘போற்றி’ என்று, உயரச் சொல்லி யிருக்குமோ? தாழச் சொல்லி இருக்குமோ’ என்று அருளிச்செய்தார்.

ஆற்றல் ஆழி அம் கை அமரர் பெருமானைக் கண்டு-அடியார்கள் விஷயத்தில் எல்லாம்செய்தாலும் ‘ஒன்றும் செய்யப்பெற்றிலோம்’ என்று நோவுபட்டு இருப்பான் ஒருவனுமாய், அவர்கள் இரக்ஷணத்துக்குக் கருவியான திருவாழியைக் கையிலே யுடையனாய், நான் காண ஆசைப்பட்ட கையும் திருவாழியுமான அழகை விருப்பமில்லாதார்க்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்குமவனை. அன்றிக்கே, ‘ஆற்றல்’ என்பதனைத் திருவாழிக்கு அடைமொழியாகக் கொண்டு, அடியார்களைக் காப்பாற்றுவதில் அவனைக்காட்டிலும் கிருபையையுடைய திருவாழியைக் கையிலேயுடையவனை என்னுதல்  ஆற்றல்’ என்பதனை, அவன் தனக்கே அடையாகக்கொண்டு, பிரிவுக்குச் சிளையாதே ஆறியிருப்பானாய்க் கையும் திருவாழியுமான சர்வேசுவரனை என்று பட்டர் அருளிச்செய்வர்(பூர்வர்கள் நிர்வாஹத்திலே ஆற்றல்” என்பதற்கு, அருள்  என்பது பொருள்.-பட்டர் நிர்வாஹத்திலே பொறை’ என்பது பொருள்.

 ஒரு வண்ணம் சென்று புக்கு – இதற்கு இரண்டுபடியாக அருளிச்செய்வர்கள். இத்தலையில் தனிமை நினையாதே போய் நிற்கையாலே, போர முதலிகளாய் இருப்பர்; மேன்மேலெனப் பிரம்புகள் விழும்; அதனைப் பொறுத்துப் போய்ப் புகுங்கோள் என்று அருளிச் செய்வர் பட்டர். அன்றிக்கே, செல்லும் வழி, நெஞ்சினைக் கொள்ளை கொள்ளும்படியான இனிமை நிறைந்திருக்கும்; அதிலே கால்தாழாதே வருந்தி ஒருபடி சென்று புகுங்கோள் என்பது முன்புள்ள முதலிகள் நிர்வாஹம்.

நிறமித்தனையும் கண்டீர் மேகத்துக்கு ஒப்பு, அகவாயில் திண்மை இவர்க்குத் தன்னேற்றம். கறுத்து அகவாய் திண்ணியதாயிருப்பதொரு மேகம் பெறிலாயிற்று இவர்க்கு நேரே ஒப்பாவது என்று அருளிச் செய்வர் பட்டர். திருமேனி அடிகளையே – 1வேறு ஒன்று சொல்ல வேண்டாதபடி வடிவு கண்டபோதே ‘இவனே இவற்றிற்கெல்லாம் கடவன்’ என்று தோற்றும்படி இருக்கை. அன்றிக்கே, அவ் வடிவினைப் படைத்துத் தமக்கு என்றிருக்கிற ஸ்வாமிகளை என்று பட்டர் அருளிச்செய்வர்.

கண்ணனை நெடுமாலை – எளிமை ஒரு காலவிசேஷத்தில் உள்ளது, முதன்மையே கண்டீர் பெருத்திருப்பது 1இனி, எளியனானதுவும் வேண்டிச் செய்தான் அல்லன், இத்தலையை நலிகைக்காகச் செய்த செயல் கண்டீர் என்று அருளிச்செய்வர் பட்டர்.

இத்திருவாய்மொழி தன்னை, பூர்வாசாரியர்கள், ‘பகவத் விஷயத்தில் பிரணயரோஷம் தோற்ற வார்த்தை சொல்லுகை சேஷத்வ லக்ஷணமன்று; “வளவேழ் உலகு” என்ற திருவாய்மொழியைப் போன்று தம் தாழ்ச்சியை அருளிச்செய்கிறார்’ என்று நிர்வஹிப்பர்கள். இதனைப் பட்டர் கேட்டு ‘என் சொன்னாரானார்கள்! இவர்க்குப் பகவத்விஷயத்தில் உண்டான ருசிக்குப் பிரகாசம் இத்திருவாய் மொழியாயிருக்கும்; இதற்கு வேறே ஒருவழி இடுவதே! ஆனபின்பு இதுவே பொருளாமித்தனை’ என்று அருளிச்செய்தார். 1“சத்தியத்தினின்றும் பிறழ்ந்த உன்னையோ உறவினர்களுடன் கொன்றுவிடுவேன்” என்று மஹாராஜரோடே பெருமாளுக்குக் கிலாய்க்கைக்கும் உறவு உண்டாயிற்று அன்றோ

சேஷத்வ லக்ஷணம் அன்று’ என்றதற்குக் கருத்து, “உன்தன் திருவுள்ளம்  இடர் கெடுந்தொறும் நாங்கள் வியக்க இன்புறுதும்” என்று இருக்கிற இவர்,
ஸ்ரீ வைஷ்ணவர்களோடே கலத்தலைத் தமக்கு அஸஹ்பமாகச் சொல்லுதல்  சேஷத்வத்திற்கு விரோதம் என்பது. ‘இதுவே பொருளாமித்தனை’ என்றது,
இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற பிராவண்ய காரியமான  பிரணயரோஷமே சுவாபதேசத்திலும் பொருளாம் என்றபடி.

ஏக ஏவ ரணே வாலீ ஸரேண நிஹதோ மயா
   த்வாம் து ஸத்யாத் அதிக்ராந்தம் ஹநிஷ்யாமி ஸபாந்தவம்”– என்பது, ஸ்ரீராமா. கிஷ். 30 : 82.

இப்படித் தாழநின்றவன் சர்வேசுவரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச்செய்வர். அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய சர்வேசுவரத்வத்தை அருளிச்செய்கிறார் என்றபடி. ‘இதிலே 2ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச்செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர். 3அதாவது, “சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேரவிட்டுக்கொண்ட ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்.

வலம் கை ஆழி இடம் கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு – 2இவ்விடத்தைப் பட்டர்அருளிச்செய்யா நிற்கச்செய்தே கஞ்சனூரில் இருந்தவரான வண்டு வரைப்பெருமாள் என்பவர், மால்வண்ணனை ‘மலக்கு நாவுடையேன்’ என்ன அமையாதோ? ‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை’ என்று விசேடித்ததற்குக் கருத்து என்? என்ன, 1“சோளேந்திரசிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன் என்கிறார் காணும்” என்று அருளிச்செய்தார்.(சோளேந்திர சிங்கன்’ என்பது, பெருமாளுடைய யானை. உளுக்காக்க  – இருக்கும்படி. என்றது சர்வேசுவரனாகிற மத்த யானையானது பணிந்து  கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.) 2அறப் பெரியவனுக்கு லக்ஷணம் அன்றோ சங்க சக்கரங்கள்

பிள்ளை திருநறையூர் அரையரும், பட்டருமாக உள்ளே பிரதக்ஷணம் செய்யாநிற்க, இட்டஅடி மாறி இட மாட்டாதே கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்து வாழ்ந்து கொண்டு போகிறபடியைப் பின்னே நின்று கண்டு அநுபவித்தேன்’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். ஆச்சானும் ஆண்டானுமாகக் கிழக்கே நடக்கிறபோது, திருப்பேர் நகருக்குக் கிழக்குப் போகவும் மாட்டாதே, ஏறித் திருவடி தொழவும் மாட்டாதே, திருப்பேர் நகரான் கோயிலைப்பார்த்துக் கொண்டு இருந்தார்களாம்.

ஆவி உள்குளிர – இவ்விடத்தைப் பட்டர் அருளிச்செய்யாநிற்கச்செய்தே மேல்எழ அருளிச்செய்தாராய், அங்கே இருந்தவரான 2சீராமப்பிள்ளை, ‘சீயா! எம்பார் அருளிச்செய்யும்படி கேட்டறிகை இல்லையோ?’ என்று அருளிச்செய்தார். கமர் பிளந்த பரப்பு அடங்கலும் மறுநனையும்படியா யிருக்கை. எங்ஙனே உகக்கும்கொல் – 3இவள் பருவம் நிரம்பாதிருக்கச் செய்தே புறம் புள்ளவற்றை விட்டு அவனை நினைத்து உருக்குலைகிறபோது அவ்வழகு கண்டு அநுபவிக்கப் பெற்றேன்; அவனைக் கண்டு அநுபவிக்கிறபோதை அழகு நான் கண்டு வாழப்பெற்றிலேன் என்கிறாள்

தன்மன்னு நீள் கழல்மேல் தண்துழாய் நமக்கு அன்றி நல்கான்” என்கிறபடியே, அசாதாரணமானது அன்றே வடிவு; அடியார்களோடு ஏகரசன் ஆகையன்றோ என்று பார்த்து ஐகரஸ்யம் பற்றாசாகத் தூதுவிடுகிறாள் என்று பட்டர் அருளிச்செய்வர். “பல பாசுரங்களிலும் ‘இதுவோ தக்கவாறு’ என்கையாலே, உயிர்கள் மாட்டு அருளுடைமை பற்றாசாகத் தூது விடுகிறாள்” என்று பிள்ளான் பணிப்பர்.(ஐகரஸ்யம் – ஒரே  இன்பம். ஜீவாத்மா அநுபவிக்கிற இன்பத்தையே பரமாத்மாவும் தனக்கு  இன்பமாகக் கொள்ளுகிறான் என்றபடி. )

ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
   புஞ்ஜாநா மாநுஷான் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ”  என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 18.

பிராட்டியைக் கண்டதனாலுண்டான உவகை, நடுவில் மதுவனம் இன்றாகில் இராஜபுத்திரர்கள் முதுகோடே போம்’ என்று பட்டர் அருளிச்செய்வர்.

தன் மன்னு நீள் கழல்மேல் தண்துழாய் நமக்கு அன்றி நல்கான் – 7எல்லாம் செய்தாலும் “அவன் திருமேனியும் பக்தர்களுக்காகவே இருக்கிறது” என்று இருக்கிற திருமேனியைப் பிறர்க்கு ஆக்கான். 1இத் திருவாய்மொழிக்கு, நிதானமான பாட்டு அன்றோ இது. 2அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவனாகையாலே, ‘அடியார்கட்குச் செல்வமான பின்பு அறிவிக்க வரும்’ என்று ஐகரஸ்யம் பற்றாசாகத் தூதுவிடுகிறாள். தன் நீள் கழல்மேல் மன்னு தண்துழாய் நமக்கு அன்றி நல்கான்-இனிமை அளவிறந்த திருவடிகளிலே பொருந்திச் சிரமத்தைப் போக்கக்கூடிய திருத்துழாயை எவ்வகையிலும் பிறர்க்கு ஆக்கான்.

11-பண்டைய முதலிகள்

பண்டை முதலிகள், ‘பத்தாம் பாசுரத்திலே, பிரணயரோஷம் தோற்றச் சொல்லுகிறாள்’ என்று நிர்வஹிப்பர்கள். 4‘பாசுரந்தோறும், கிலாம்தோற்றச் சொல்லுகிறாள்’ என்று பட்டர் அருளிச்செய்யும்படி.

பாதம் கைதொழுது – கண்டு, திருவடிகளிலே தண்டன் இட்டு. 2“‘கைகள் கூப்பி’ என்றதே; தொழுதார்க்கு நிற்க ஒண்ணாதே யன்றோ. உண்ணாநிற்க, மிடற்றைப் பிடித்தாற் போலே இருப்பது ஒன்று அன்றோ தொழுதுவைத்து விழாதே ஒழியுமது” என்று பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள். 3“மதித்தான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் ஸ்ரீபாதத்தே தலைபடத் தண்டன் இட்ட அன்று, எனக்கு உண்டு பசி கெட்டாற்போலே இருக்கும்” என்று அருளிச்செய்வர் சீயர். அன்றிக்கே, கிலாம்தோற்றும்படி அவர் திருவடிகளிலே கைசென்று தாக்கும்படி விழுந்து கிடவுங்கோள் என்னுதல்; என்றது, தீர்க்கப் பிரணாமம் பண்ணுங்கோள் என்றபடி.

இத்திருவாய்மொழி தன்னை, பூர்வாசாரியர்கள், ‘பகவத் விஷயத்தில் பிரணயரோஷம் தோற்ற வார்த்தை சொல்லுகை சேஷத்வ லக்ஷணமன்று; “வளவேழ் உலகு” என்ற திருவாய்மொழியைப் போன்று தம் தாழ்ச்சியை அருளிச்செய்கிறார்’ என்று நிர்வஹிப்பர்கள். இதனைப் பட்டர் கேட்டு ‘என் சொன்னாரானார்கள்! இவர்க்குப் பகவத்விஷயத்தில் உண்டான ருசிக்குப் பிரகாசம் இத்திருவாய்மொழியாயிருக்கும்; இதற்கு வேறே ஒருவழி இடுவதே! ஆனபின்பு இதுவே பொருளாமித்தனை’ என்று அருளிச்செய்தார்

ஆளவந்தார் கோஷ்டியில், “உண்ணுஞ்சோறு” என்ற திருவாய்மொழியில் வருகின்ற பிராட்டிக்கோ அஞ்சவேண்டுவது” என்று கேட்க, “இருவராகப் போனவர்கட்கு வயிறு எரியவேணுமோ? தனிவழியே போனவளுக்கன்றோ வயிறு எரியவேண்டுவது!” என்று இருந்த முதலிகள் சொல்ல, “அங்ஙன் அன்று காணுங்கோள்! இருவராகப் போனவர்கள் ஆகையாலே, இருவர்க்கும் அஞ்சவேணும்; தனியே போனவளுக்கு அச்சம் உண்டோ?” என்று அருளிச்செய்தார்.

12-பிள்ளான்

 அப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் – 2“‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கரணங்களையுடைய ஆழ்வார் ஆகையாலே, நெஞ்சுதானே நினைக்கவும் வற்றாய்க் காணவும் வற்றாயிருக்கும் என்று பிள்ளான் பணிப்பர்” என்று அருளிச்செய்வர். அன்றிக்கே, ‘கட்கண்’ என்றும், ‘உட்கண்’ என்றும் சொல்லுகிறபடியே, நெஞ்சு தன்னையும் கண்ணாகச் சொல்லக்கடவதன்றோ; அது ஆகவுமாம்.

இராகவனுடைய மனையில் அனைத்துப் பொருள்களையு முடையவளாய்ப் பன்னிரண்டாண்டு தேவபோகங்களை நுகர்ந்தவளான நான்” என்கிறபடியே, பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த்துரும்பு அறக் கலந்து பிரிந்த பிராட்டியைப் போலே, அங்கேபுக்கு நெடுங்காலம் அவனை அநுபவித்துப் பிரிந்து தூது விடுகிறாள் என்று பிள்ளான் பணிப்பர். 4‘புறப்பட்டவள் முடியப் போகமாட்டாதே நகரத்தை அடுத்த வனத்திலே கிடந்து தூதுவிடுகிறாள்’ என்று பட்டர் அருளிச்செய்யும்படி. 1“கீர்த்தியையுடைய ஸ்ரீராமபிரான் என்னைப் பிழைத்திருக்கின்றவளாக எப்படிக் கௌரவிப்பாரோ அப்படியே உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது” என்கிறபடியே, பிறர் இழுக்கினைப் பொறாத குடிப்பிறப்புடையவரன்றோ. அதிலே தமக்கு வந்த துக்கத்தை நீக்குவதற்குச் சொல்ல வேண்டாவே. கடலை அணை செய்து இராவணாதிகளை அழித்துத் தாம் வரக்கொள்ள, இத்தலை வெறுந்தறையாய்க் கிடவாமே செய்ய நினைத்தாராகில் ஏற்கவே நீக்கித் தம்புகழை நோக்கிக்கொள்ளச் சொல் என்று சொன்னாள் அன்றோ; அப்படியே இவளும் தன் நிலையை அறிவித்து விடுகிறாளாயிருக்கிறது.

மெய் அமர்காதல் – 2‘தம்மைப்போலே (தம்முடைய காதலைப்போலே.)பொய்யுமாய் நிலைநில்லாததுமான காதல் அன்று எங்களது என்று சொல்லுங்கோள்’ என்று பிள்ளான் அருளிச்செய்வர். சத்தியமான காதல் என்றபடி.

13-பிள்ளையமுதனார்

பிள்ளையமுதனார், திருவிருத்தவரைமார்வனை, ‘புன்னைமேல் என்னும் இப் பதங்கட்குப் பட்டர் அருளிச்செய்தது என்?’ என்ன, ‘தன் துன்பஒலி அவற்றின் செவியிலே படும்படி உயரச் சொல்லுகிறாள் என்று அருளிச்செய்தார்’ என்ன, ‘நெய்தல் நிலத்திலே 3புன்னை படர்ந்தன்றோ கிடப்பது, இங்ஙனே சொல்லக் கூடுமோ?’ என்ன, அவன் பட்டர்பாடே வந்து, ‘இங்ஙனேபணித்தார்’ என்ன, 1‘இவ்வர்த்தத்துக்கு நிர்ணாயகம், இசையாயிற்று; அது, ‘போற்றி’ என்று, உயரச்சொல்லியிருக்குமோ? தாழச் சொல்லி இருக்குமோ’ என்று அருளிச்செய்தார்.

என்னப்படுமவனும் புறம்பானான், உங்களைப்பார்க்க. 4உங்கள் நீர்மை அறியாதே, என் செல்லாமையாலே ‘அதனைக் கொள், இதனைக் கொள், என்று நலிந்தேன் அன்றோ! 5உங்கள் தரத்துக்கு அது ஓர் அறுகும் தாளிப்பூவும் அன்றோ’ என்பராம் பிள்ளையமுதனார்

தேஜ: க்ஷமா த்யுதி: ஸ்தைர்யம் விநீதத்வம் ந ஸம்ஸய:
   ஏதேச அந்யேச பஹவோ குணா: த்வயிஏவ ஸோபநா:”-, ஸ்ரீராமா. யுத். 116 : 28. இராவணனைக் கொன்றபின் வந்து சேர்ந்த
திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது. என்னப்படுமவன் – திருவடி.

  அறிவு மீதே உருவீதே ஆற்ற லீதே அரும்புலத்தின்
  செறிவுமீதே செயலீதே தேற்ற மீதே தேற்றத்தின்
  நெறியு மீதே நினைவீதே நீதி யீதே நினக்கென்றால்
  வெறிய ரன்றோ குணங்களால் விரிஞ்சன் முதலா மேலானோர்.-  , கம்பராமாயணம், உருக்காட்டுப்பட. 111.

14-பிள்ளையுறங்காவில்லிதாசர்

இன்னம் என் கையகத்து ஈங்கு ஒருநாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே” என்று, இதனை உய்ந்தபிள்ளை பாடா நிற்கச்செய்தே, காலாலே உதைப்பது கையாலே தள்ளுவதாய் அபிநயித்துக் காட்டினார். இதனை எம்பார் கேட்டருளி, ‘அங்ஙன் அன்று, அது, பின்னைப்பெற்றானாகில் அவன் நெடுநாள் பிரார்த்தித்துக்கிடந்தது அன்றோ; ஆன பின்னர், அதுவன்று பொருள்’ என்று முகத்தைத் திரிய வைத்துக் காட்டினார். 2“நீ அகல நின்று செய்தவை எல்லாம் உன் சந்நிதியிலே உன்னைச் செய்வேன் என்கிறாள்’ என்று அருளிச்செய்தார். 3எம்பார், புறம்பான விஷயங்களிலே ருசி இல்லாமையாலே பதார்த்த ஞானம் இன்றிக்கே இருப்பர். இப்படி இருக்கையாலே ‘பெண்களுக்கு அசாதாரணமான சிந்நங்கள் எங்ஙனே இருக்கும்படி?’ என்று, சிங்கப்பிரானைக் கேட்டருளினார் என்பது பிரசித்தம். 4இப்படி இருக்கிறவர் தாம் “மின்னிடை மடவார்” என்ற இத்திருவாய்மொழி அருளிச்செய்யப்புக்கால், ‘இந்தச் சந்நியாசி பிரட்டுப் பாடத் தொடங்கினார்’ என்பாராம் பிள்ளையுறங்கா வில்லிதாசர். 5பக்வத் விஷயத்தில் இவருடைய உட்புகுவு இருக்கும்படி. ஒரு க்ஷுத்ர விஷயத்திலே நான்கு நாள்கள் வாசனை பண்ணினவர்கள் போர விதக்தராய் இராநின்றார்கள்; அவ்வளவு அல்ல அன்றோ சமஸ்த கல்யாணகுணாத்மகனோடே நெடுநாள் வாசனை பண்ணினார்க்கு இருக்கும்படி. 1எம்பார் ‘ஈசுவரன் முன்னே வந்து நின்றாலும் ‘வா’ என்பாரையும் கிடையாத சம்சாரத்திலே, அவன் சிறிது தாழ்த்தான் என்னா ‘போ’ என்பாரைப் பெறுவதே! என்பர்.

பிறந்ததும் வீங்கு இருள்வாய் – 1“எல்லா உலகங்கட்கும் ஆதாரனான ஸ்ரீ கிருஷ்ணன் நடு இரவில் அவதரித்தார்” என்னும் படி அன்றோ. 2‘இவனும் விழுக்காடு அறியாதே அகப்பட்டுக் கொடு நின்றான், கம்ச பயமும் ஏற்பட்டதாயிரா நின்றது, இருளாலே அன்றோ நாம் பிழைத்தது. இனி, இந்த இருளைச் சரணம்புகுமித்தனை அன்றோ’ என்று பிள்ளையுறங்காவில்லிதாசர் பணிப்பாராம்.

15-விக்கிரமசோழன்

தடுமாறுகிற நிலைக்குச் சம்வாதம் காட்டுகிறார்-இராஜகோஷ்டியிலே “உகும், இறும்” என்று சிலர்பொருள் சொல்ல, விக்கிரமசிங்கன் என்பான் ஒருவன், ‘அங்ஙன் அன்று,கன்றைக் கடக்கக் கட்டிவைத்தால் முலைக்கண் கடுத்துப் பசு அலமந்து படுமாறுபோலே, உள்ளோடுகிற கிலேசம் வாய்விடமாட்டாதே நோவுபடுகிற இவளுக்கு இது வார்த்தையோ?’ என்றான். 1பெருவெள்ளத்தில் சுழிக்குமாறுபோலே, அகவாயில் உள்ளது வெளியிடமாட்டாள்; உள்ளே நின்று சுழிக்கிறபடி.

16-மற்றையோர்

நோக்கும் பக்கம் எல்லாம் – 2பார்த்த பார்த்த இடமெல்லாம். “திருப்பொருநல் நோக்கும் பக்கமெல்லாம்” என்று கூட்டிப் பொருள் கூறுவாரும் உளர். கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை – கரும்பும், அதனோடே இசலி வளர்கிற செந்நெலும், இரண்டற்கும் நிழல்செய்கின்ற செந்தாமரையும். வாய்க்கும் – நிறைந்திருக்கும் என்னுதல்; இட்டன எல்லாம் நூறு கிளைகளாகப் பணைக்கும் என்னுதல்.

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் வியாக்கியானத்தில் வந்துள்ள ஐதிஹ்யங்கள் –ஆறாம் பத்து –

December 10, 2023

கழகம் ஏறேல் நம்பீ – அவர்கள் முன்னம் ஆனார் ஆகிடுக; 3ஏறிட்டுக் கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ? (இதற்கு முன்பு  இல்லாத ஆசார்ய பதத்தை ஏறிட்டுக்கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ  என்னுதல். அன்றிக்கே, போம் வழியும் போனால் செய்யும்படிகளும்  சொல்லுமதனை ஏறிட்டுக்கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ என்னுதல்.)நீர் முன்னம் எங்கள் ஓலக்கத்தில் புகுராதே கொள்ளும்.–இவ்விடத்தே பட்டர் அருளிச்செய்வது ஒருவார்த்தை உண்டு. அதாவது, “சமஸ்த கல்யாண குணாத்மகனாய் உபய விபூதியுக்தனாய் ஸர்வாதிகனாய் ஸர்வநியந்தாவாயிருக்கிற சர்வேசுவரன் நான்கு இடைப்பெண்கள் இருந்த இடத்தே புக்கு அல்லது நிற்கமாட்டாத செல்லாமை விளைய, அவர்கள் ‘நீ இங்குப் புகுராதே கொள்’ என்ன, விலங்கு இட்டாற்போலே பேரவும் திரியவும் மாட்டாதே தடுமாறி நின்றான் என்கிற சௌசீல்யம் யார் அறிந்து கொண்டாட வியாசர் முதலாயினோர் எழுதியிட்டு வைத்துப்போனார்களோ?” என்பது.

(உணக்கி நீ வளைத்தால்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி, இவன்  அவர்களை வளைத்துக் கிடக்கும்போது, இவன் மிறுக்குக் காரணமாக  அவர்கள் போகப் புக்கார்களாக வேண்டும் என்கிறார்-)-கிட்டுநின்று இவர்களைச் சிலமிறுக்குக்களைச் செய்யப் புக்கான்; ‘இங்கே இருக்கில் அன்றோ இவைஎல்லாம் செய்வது’ என்று பார்த்து, ஒருவர் ஒருவராகப் போகப் புக்கார்கள். ‘இதுவோ பார்த்தபடி!’ என்று வழியைப்பற்றி இருவிலங்காகக் கிடந்தான். பூஞ்சோலையாகையாலே வழி ஓர் அடிப்பாடாய் இருக்குமன்றோ-இப்பாசுரத்தைச் சீயர் அருளிச்செய்யாநிற்கச்செய்தே அங்கே இருந்தவரான ஆப்பான் ‘இவர்கள் இவனைக் கடந்து போனார்களாகிற் செய்வது என்?’ என்று கேட்க, ‘அது யார் காரியம்? பின்னை இரண்டத்தில் ஒன்று சித்திக்கும் என்றன்றோ அவன்தான் கிடந்தது!’ என்று அருளிச்செய்தார்.(இரண்டத்தில் ஒன்று’ என்றது, தகைவுபட்டு நிற்கையாதல், கடந்து  போகும்போது தீண்டுதலாதல். கிடக்கின்றவனைத் தீண்டாமல் தாண்ட  முடியாதே.)

ஞானிகட்கு எல்லாம் பரம்பொருள் மயமாகவே தோற்றும் என்பதற்கு  ஐதிஹ்யம் காட்டுகிறார்-நல்லாரும் நம்பி சேநாபதி தாசரும் கூடத் திருமலைக்குப் போகா நிற்க, ஸ்ரீ நம்பிசேநாபதிதாசர் ஒரு கோலை இட்டுத் தூற்றை அடிக்க, நல்லார், அர்த்தகாம நிமித்தமான துவேஷம் இதனோடு இன்றிக்கே இருக்க, ஒரு காரணமும் இல்லாமல் ஈசுவரனுடைய விபூதியை நலிவதே? என்ற வார்த்தையை நினைப்பது.

சீயர், இத் திருப்பாசுரத்தை அருளிச்செய்யப் புக்கால் “நோவ” என்று அருளிச்செய்யும் அழகு காணும். ‘நோவ’ என்கிறார் காணும் ஆழ்வார், தம் திருமேனியிலே கயிறு உறுத்தினாற்போலே.ஒரு துவேஷம் உண்டாய்க் கட்டுகிறாள் அல்லளே, சிநேக காரியமான கோபமாகையாலே சிநேகமுள்ள அளவும் இடைநிற்கும் அன்றோ கோபமும். தாய் எடுத்த சிறுகோலுக்கு உளைந்து ஓடியன்றோ, விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான்; வாய்விட்டு அழமாட்டாதது அன்றோ இவரை வருத்துகிறது.

விண்மிசைத் தன தாமமே புக்கான். உத்தமம் – -கம்சன் முதலானோர் துரியோதனன் முதலானோர் இவர்களால் வரும் அச்சம் இன்றியே, தனக்குப் பரிவரானவர்கள் இருக்கிற நிலத்திலே போய்ப் புகப் பெற்றபடி-ஒரு தீர்த்தத்தினன்று ஞாயிறுபோது ஆண்டானும் எம்பாரும் தங்களிலே சந்தித்து, ‘யான் எனது என்னும் செருக்கினால் மலினமாக்கப்பட்டவராய் இருப்பார் பத்துக்கோடிபேர் நடுவே, அதி சுகுமாரமான திருமேனியைக் கொண்டு பத்துநாள் எழுந்தருளி, அபாயம் இல்லாமல் புக்கருளப் பெற்றபடி கண்டதே! என்று ஒருவரை ஒருவர் தண்டனிட்டுத் தழுவிக் கொள்ளா நிற்கக் கண்டேன்’ என்று சீயர் அருளிச்செய்வர்.

ஆளவந்தார், மணக்கால் நம்பி பக்கல் எம்பெருமானைக் கேட்டவுடனே, ‘உபாயம் இதற்குமேல் இல்லை; இவ்விஷயத்தை இப்போதே நேரே காண்டற்கு விரகு இல்லையோ?’ என்றாராம்.அப்படிக் கண்டவுடனே கண்ணநீர் வெள்ளமிடப்புகுந்த தத்தனை.

மரங்களும் இரங்கும் வகை – 3(மரங்களும்” என்ற உம்மை, மக்களைத்  தழுவுகிறது.)சேதனம் என்றும், அசேதனம் என்றும் வேறுபாடு அற அழியும்படி காணும், இவள் வாய்விட்டுக் கூப்பிடும் படி-எம்பாரை ‘மரங்களும் இரங்கக்கூடுமோ?’ என்று கேட்க, ‘இது அருளிச்செய்த அன்று தொடங்கி எத்தனை பாவசுத்தி இல்லாதார் வாயிலே புக்கது என்று தெரியாது; இங்ஙனே இருக்கச் செய்தே, இயமம் நியமம் முதலிய யோக உறுப்புக்களாலே பதம் செய்யப் பார்த்தாலும் சுக்கான்பருக்கை போலே நெகிழாதே இருக்கிற நெஞ்சுகளும் இன்று அழிகிறபடி கண்டால் சமகாலத்தில் மரங்கள் இரங்கச் சொல்லவேணுமோ?’ என்று அருளிச்செய்தார்–மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர்கொம்புகள் தாழும்” (பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 4)என்று அவதாரத்தில் திருக்குழல் ஓசையில் பட்ட எல்லாம் இத் துன்ப ஒலியிலே படுமாயின; “அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:”“(ஸ்ரீராமா. அயோத். 59 : 10.)மரங்களும் வாடி நின்றன” என்று, இராமனைப்பிரிந்த பிரிவில் பட்ட எல்லாம் இவள்பேச்சிலே படாநின்றன-

அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ’ என்று சேதனராகில் மங்களாசாசனம் செய்யக்கடவது.–நஞ்சீயர், ‘பிள்ளை திருநறையூர் அரையரோடே மூன்று திருவாய்மொழி கேட்டேன், அதில் எனக்கு ஒரு வார்த்தையும் போகாது; ஒரு திருவாய்மொழியைச் சொன்ன அளவிலே அவர் சிதிலராய்க் கண்ணும் கண்ணநீருமாய் இருக்கும் இருப்பை நினைத்திருப்பன்’ என்று அருளிச்செய்வர்.-ஆஹ்லாத ஸீதநே்த்ராம்பு:-விரகத்தாலே கொதித்துப் புறப்படும் துக்கக்கண்ணீர் போலன்றிக்கே, பகவானை அநுபவிப்பதனால் உண்டான மிகுந்த உவகையினாலே குளிர்ந்த கண்ணீரையுடையனாவது புளகீக்ருத காத்ரவாந் – உடம்பு முழுதும் மயிர் எறிந்து இருப்பது. பரகுணாவிஷ்ட:-பகவானுடைய குணங்களாலே ஏறப்பட்டிருப்பவனாவது, தெய்வம் ஏறினவரைப்போலே. அவன், ஸர்வதேஹிபி:-த்ரஷ்டவ்ய:-அவன் தேகத்தை எடுத்தவர்கள் எல்லாருக்கும் பார்க்கத் தகுந்தவன். சரீரத்தை எடுத்ததற்குப் பயன் இவனைக் காண்கையாயிற்று. ஸதா த்ரஷ்டவ்ய:-எப்பொழுதும் காண்கைக்கு ஒரு தேச விசேடம் தேடிப் போகவேணுமோ? ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான்  ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:”  (ஸ்ரீவிஷ்ணுதத்வம்)

ஈசுவரனே தாரக போஷக போக்யங்கள் எல்லாமாக இருப்பான் என்பதற்கு  ஐதிஸ்யம் காட்டுகிறார் ‘-‘அளந்தாழ்வான் சோழ குலாந்தகனிலே பயிர்த்தொழில் செய்து கொண்டிருப்பவனான ஒரு ஸ்ரீவைஷ்ணவனைக் கண்டு, உம்முடைய ஊர் எது’ என்று கேட்க, ‘என்னுடைய ஊர் திருக்கோளூர்’ என்ன, ‘அங்கு நின்றும் போந்தது என்?’ என்ன, ‘தேகயாத்திரை நடவாமே போந்தேன்’ என்ன, அவ்வூரில் கழுதையை மேய்த்து ஜீவிக்க மாட்டிற்றிலையோ? நிலை நின்ற ஜீவனத்தை விட்டுப் போந்தாயே யன்றோ! என்றானாம்.

புகுமூர் – 3காட்டுத் தீயிலே அகப்பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப் புகுமாறு போலே, சம்சாரமாகிற பாலை நிலத்தில் காட்டுத் தீயிலே அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை பொய்கையும் பொழிலும் போலே அன்றோ. புகும் ஊர் என்கையாலே, புக்கார் போகும் ஊர் அன்று என்கை.-எம்பெருமானார் தெற்கே எழுந்தருளாநிற்க, எதிரே வருகின்றாள் ஒரு பெண்பிள்ளையைக் கண்டு ‘எங்கு நின்றும்!’ என்ன, ‘திருக்கோளூரில் நின்றும்’ என்ன, ‘அவ்வூரில் புக்க பெண்களும் போகக் கடவர்களாயிருப்பர்களோ?’ என்று அருளிச்செய்தார்.என் இளமான் மண்ணினுள் புகும் ஊர் திருக்கோளூரே, இது திண்ணம் – இவள் போய்ப் புகும் ஊர் திருக்கோளூரே, இது நிச்சயம். 5இவ்வூரில் பிள்ளைகளைக் காணாவிட்டால், கோவிலுக்குள் தேடுமத்தனை அன்றோ.

இங்கே இருந்து மானச அநுபவமாத்திரமேயாய்க் கிலேசப் பட்டவள் கண்ணாரக் கண்டு–(அவன் கோயிலைக் கண்களாலே காண்கையே புருஷார்த்தம் என்பதற்கு  இரண்டு ஐதிஹ்யங்கள் காட்டுகிறார்)-பிள்ளை திருநறையூர் அரையரும் பட்டருமாக உள்ளே பிரதக்ஷணம் செய்யாநிற்க, இட்டஅடி மாறி இடமாட்டாதே கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்து வாழ்ந்துகொண்டு போகிறபடியைப் பின்னே நின்றுகொண்டு அநுபவித்தேன் என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

ஆச்சானும் ஆண்டானுமாகக் கிழக்கே நடக்கிறபோது, திருப்பேர் நகருக்குக் கிழக்குப் போகவும் மாட்டாதே, ஏறித் திருவடி தொழவும் மாட்டாதே, திருப்பேர் நகரான் கோயிலைப்பார்த்துக் கொண்டு இருந்தார்களாம்.

ஆவி உள்குளிர – இவ்விடத்தைப் பட்டர் அருளிச்செய்யாநிற்கச்செய்தே மேல்எழ அருளிச்செய்தாராய், அங்கே இருந்தவரான  கேட்டறிகை இல்லையோ?’ என்று அருளிச்செய்தார். கமர் பிளந்த பரப்பு அடங்கலும் மறுநனையும்படியா யிருக்கை.

நேர் இழை நடந்தாள் – 1கடைப் பணிக்கூட்டம் (கடைப் பணிக்கூட்டம்  -ஆபரணங்களினுடைய நுனி கூடின இடம்.)கண்டு கொண்டு பின்னே போகவன்றோ இவள் ஆசைப்படுகிறது. நடந்தாள் -(போனாள்’ என்னாமல், “நடந்தாள்” என்று கௌரவமாகச் சொல்லுவான்  என்? என்ன) 2தன் பெண்பிள்ளையே யாகிலும், ‘திருக்கோளூரிலே போக’ என்று நாலடி புறப்பட்ட இவளை இங்ஙனல்லது சொல்ல ஒண்ணாதே அன்றோ. தன் மகளை எங்ஙனே கனக்க நினைத்திருக்கிறாள் தான்! வயிற்றிற் பிறக்கவுமாம், சிஷ்யர்களாகவுமாம்: பகவத் விஷயத்தில் தொடர்புடையவர்கள் உத்தேசியராமித்தனை-ஒருநாள் நம்பிள்ளையை, சீயர், கோஷ்டியிலே வைத்துப் போரக் கொண்டாடியருளி, ‘தன் சிஷ்யனைத் தான் கொண்டாடாநின்றான்’ என்றிராதே கொண்மின்; “கணபுரம் கைதொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே” (பெரிய திருமொழி, 8. 2 : 9.) என்று பண்டு சொன்னாரும் உளர் காணுங்கோள் என்று அருளிச்செய்தார்.

அம்முணி ஆழ்வான், தன் சிஷ்யனைத் தான் தண்டன் இடாநிற்குமாம்; ‘இது என்?’ என்று கேட்க, ‘அல்லாத வைஷ்ணவர்களை ஒழுக்கத்தாலே அறியவேணும்; இவர் நான் அறிய வைஷ்ணவர் என்று ஆதரிப்பன்’ என்றான்.

கலக்கும் காலத்தில் சொன்னதைக் கொண்டு கொடுக்கலாமோ? என்ன,தன்னையும் தன்னுடைமையையும் இவர் இட்ட வழக்கு ஆக்கி இவர்க்கு
அவன் பரதந்திரனாயிருக்கையாலே, இவர் கொடுக்கலாம் என்னுமதனை  ஓர் ஐதிஹ்யமுகத்தால் விளக்குகிறார் –அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நோவிலே, பிள்ளையுறங்காவில்லி தாசரைக் கொண்டு ஆழ்வான் புக, ‘ஆழ்வான் செய்த நெஞ்சாறல் ஆறுவது(ஆழ்வான் செய்த செஞ்சாறல்’ என்றது,  கூரத்தாழ்வார்க்குப் பரமபதத்தைக் கொடுக்கும் சக்தி இருந்தும், அருளாளப்பெருமாள் எம்பெருமானார்க்கு  அதனைக் கொடாமல், அவர் படும் துன்பத்தை அவர் கண்டுகொண்டிருந்தமையால் வந்த மனோதுக்கம் என்றபடி) ஆளவந்தார் ஸ்ரீபாதத்து ஏறப்போனால் அன்றோ’ என்ற வார்த்தையை நினைப்பது.

சுக்கிரீவனே! அந்தப் புறாவானது தன் மனைவியை அபஹரித்தவனைத் தன்னைக்கொடுத்துக் காத்தது; என்னைப் போன்றவர்கள் சரணாகதி செய்கிறவனைக் கைக்கொள்ளவேணும் என்பது சொல்லவும் வேணுமோ?” என்ற இடத்தில் சொல்லுவது ஒருவார்த்தை உண்டு. அது-அருளாளப் பெருமாள் எம்பெருமானாருடைய அந்திம தசையிலே, ‘திருவுள்ளத்திலே ஓடுகிறது என்?’ என்ன, ‘ஒரு பறவை பெருமாளுடைய திருவுள்ளத்தைப் புண்படுத்தியபடி என்? என்று கிடந்தேன்’ என்றார்.இதற்குக் கருத்தாக நம்பிள்ளை அருளிச்செய்யும் வார்த்தை: 2‘நாம் பண்ணின சரணாகதி, ஆகையாலே பலத்தோடு அவ்யபிசாரியாக மாட்டாது; இனி, சரண்யன் நீர்மையின் ஏற்றத்தாலே நமக்கு ஒரு குறை இல்லை என்கிறது’ என்பது.

வட தேசத்தினின்றும் போரப் பாடவல்லராயிருப்பார் ஒருத்தர் பெருமாளைத் திருவடி தொழவேணும் என்று வர–நாயன்தே! தேவரீர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருவன் தேவரைத் திருவடிதொழ நெடுந்தூரமுண்டு வந்திருக்கிறது; இவனை அழைத்துக்கொண்டு சம்பாவனை பண்ணி யருளவேணும்” என்ன, அவரைப் பெருமாள் அருளப்பாடிட்டு, திருப்புன்னைக்கீழ் நின்றும் அவர் நின்றவிடத்தே திருக்கைத்தலத்தே எழுந்தருளி, விண்ணப்பஞ்செய்வார்களை அருளப்பாடிட்டு, “வாரீர்கோள்! நாம் இவன் வந்த தூரத்துக்கு எல்லாம் போருமோ செய்த தரம்?” என்று திருவுள்ளமானார்; 1அப்படியே அன்றோ நம் இழவுகளும் திருவுள்ளத்தேபட்டு, அவை எல்லாம் ஆறும்படி முகம் தந்தருளும் படியும்.

இனிமை அளவிறந்த திருவடிகளாதலின் ‘தடம் தாமரை’ என்கிறது. இதனால் பிராப்யம் சொல்லுகிறது. ‘கூவிக்கொள்ளும் காலம்’ என்கையாலே பிராபகத்தின் தன்மை சொல்லுகிறது. ‘இன்னம் குறுகாதோ’ என்கையாலே, ருசியின் தன்மை சொல்லுகிறது. 1இதர விஷயங்களின் கான்சி முடியும்படியாய், உன் திருவடிகளின் இனிமை அறிந்து விடமாட்டாத அளவு பிறந்து பின்பு இன்னம் தாழ்க்குமத்தனையோ?–பிள்ளானுடைய அந்திமதசையிலே நோவு அறிய நஞ்சீயர் புக்கு இருக்க, “கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ”! என்று பலகால் சொல்ல, இதனைக் கேட்டுச் சீயர் அழ, ‘சீயரே! நீர் கிடந்து அழுகிறது என்? அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தான்.

பொருந்துமாறு புணராயே” என்றதிலே நோக்காக அவதாரிகை  அருளிச்செய்கிறார்-உன்னை அடைவதற்கு உறுப்பாக நீ கண்டு வைத்த சாதனங்கள் எனக்கு ஒன்றும் உடல் ஆகின்றன இல்லை; ஆன பின்பு, தேவரை நான் அடைவதற்கு எனக்கு என்னத் தனியே ஒரு சாதனம் கண்டுதரவேணும் என்கிறார்.- நஞ்சீயரை, நம்பிள்ளை ஒருநாள் பஞ்சமோபாயம் என்று கொண்டு ஒன்று உண்டு என்று சொல்லுகின்றார்கள்; நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்று உண்டோ? என்று கேட்டருள, நான் அறிகிலேன்; இனி நான்காவது உபாயந்தான் பகவானேயாயிருக்க, ஆகாயம் என்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்றுண்டு என்று சொல்லுவாரைப் போலே, (தத்ராபிதஹரம்”  என்கிறபடியே, நாராயணனைச் சொல்லி, “தஸ்மின் யதந்த:”
என்கிறபடியே, அவனுக்கு அந்தர்யாமியாக இருப்பவன் சிவன் என்று  சொல்லுவாரைப்போலே என்றபடி. அங்ஙனம் சொல்லுபவர், சைவர்.)அவனுக்கும் அவ்வருகே ஒன்று உண்டு என்கை அன்றோ, அது நான் கேட்டறியேன் என்று அருளிச்செய்தார்.

ஸாஹம் கேஸக்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவித்யபி ப்ரபோ – நீயும் உளையாயிருக்க, என் மயிரைப் பிடித்துச் சிலர் நலியும் படி நான் மானபங்கம் செய்யப்பட்டவள் ஆவதே! உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு? ப்ரபோ – நீயும் என்னைப் போன்று பெண்ணானாயாகில் நான் ஆறியிருக்க லாயிற்றே; நீ பரிபவத்தைப் போக்கக்கூடியவனாய் இருக்கச்செய்தே நான் நோவுபடுவதே என்றாளன்றோ

ஸாஹம் கேஸக்ரஹம் பிராப்தா பரிகிலிஷ்டா ஸபாங்கதா
   பஸ்யதாம் பாண்டுபுத்ராணாம் த்வயி ஜீவத்யபி ப்ரபோ”  என்பது, மஹாபாரதம்.

கற்றைத் துகில்பிடித்துக் கண்ணிலான் பெற்றெடுத்தோன்
  பற்றித் துகிலுரியப் பாண்டவரும் பார்த்திருந்தார்
  கொற்றத் தனித்திகிரிக் கோவிந்தா! நீ அன்றி
  அற்றைக்கும் என்மானம் ஆர்வேறு காத்தாரே. என்பது, வில்லிபாரதம்.

பிரபத்தியினால்  காரியம் இல்லையோ? என்கிற சங்கையைப் போக்குவதற்காக ஓர்  ஐதிஹ்யம் காட்டுகிறார் –நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே அடைந்த ஒருவன், ‘எம்பெருமானே உபாயமாகில் சரணாகதிகொண்டு இங்குச் செய்கிறது ஒன்றும் கண்டிலேன்’ என்ன, செவியைப் புதைத்து ‘நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரம ரஹஸ்யமாக உபதேசித்து, ஓரான்வழியாய்க் கொண்டு போந்த இதனை, இதன் சீர்மை அறியாத உனக்கு மஹாபாபியேன் இதனை வெளியிடுவதே!’ என்று திருமுடியிலே அடித்துக்கொண்டு திருப்பள்ளி அறையிலே புக்கருளினார்.

ஆ ஆ என்னாது – 2ஈசுவரனுக்குப் பிரியம் செய்கையாகிறது, அவன் விபூதியிலே கிருபை செய்தலே அன்றோ-நஞ்சீயர், ஒருவனுக்கு, பிறர் துக்கத்தைக் கண்டால் சகிக்க முடியாத தன்மை வந்ததாகில் ‘நமக்குப் பகவத்சம்பந்தம் உண்டு’ என்று அறுதி இடலாம்; ‘அது தக்கது’ என்றிருந்தானாகில் ‘நமக்குப் பகவத்சம்பந்தம் இல்லை’ என்று தனக்கே கைவாங்க அமையும் என்றருளிச் செய்தார்.பிறர் ஆகிறார் யார்? என்னில், தன்னினின்றும் வேறுபட்டவர். ஆனால், பிரதிகூலர்பக்கலிலும் கிருபையைச் செய்யவோ? என்னில், அப்படியே யன்றோ இவர்களுக்கு மதம். 4‘கெட்ட வாசனை கழிந்து அநுகூலராகப் பெற்றிலோம்’ என்று இருக்க அன்றோ அடுப்பது-அவன் “இராவணனே யானாலும்” என்றால், அவன் உலகத்திலேயுள்ள இவனுக்கு இத்தனையும் வேண்டாவோ? ஆனால், 1“நண்ணா அசுரர் நலிவெய்த” (திருவாய். 10. 7 : 5.)என்ற இடத்தில், அது எங்ஙனே பொருந்தும்படி? என்னில், அதற்கு என்? நண்ணாமை நிலை நின்ற அன்று கொல்லத் தக்கவனாகிறான். 2யாக காரியங்களில் செய்கிற கொலையைப் போன்று அதுதானே நன்மை ஆகக் கடவது அன்றோ

விபீஷணோவா ஸுக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்”  என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 35.  இங்கே, “யச்சீல: ஸ்வாமீ தச்சீலோதாஸ:” என்றது, அநுசந்தேயம்.

இமையோர் அதிபதியாய், கொடியா அடுபுள் உடையானாய், செடியார் வினைகள் தீர்மருந்தாய், திருவேங்கடத்து எம்பெருமானாய், கோலக் கனிவாய்ப் பெருமானாய், அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்–பட்டர், “நித்தியத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும்போது தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’ என்று இருக்கிறதே, என்ன தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது?” என்ன, “‘அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சைமாமலைபோல்மேனி’ என்பன போலே இருக்கும் திருப்பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்றருளிச் செய்தார்.

பிராட்டியினுடைய புருஷகாரம் அவசியம் வேண்டும் என்கைக்கு  ஐதிஹ்யம் காட்டுகிறார் ‘-ஒருநாள் பட்டர், பிள்ளை அழகிய மணவாள அரையர்க்குத் துவயம் அருளிச்செய்கைக்காக எல்லாரும் செல்லுங்கோள் என்ன, நஞ்சீயரும் எழுந்து சென்று போய் நம்மை ‘இராய்’ என்றருளிச் செய்திலர் என்று வெறுத்திருக்க, அப்பொழுதே ‘சீயர் எங்குற்றார்?’ என்று கேட்டருளித் தேடி அழைத்துக் கூட வைத்துக்கொண்டிருந்து துவயத்தை அருளிச்செய்த வார்த்தை என்று சீயர் அருளிச்செய்வர்.

“இந்த ஆத்ம வஸ்து சேஷமாகில் அவன் சேஷியாகில் இங்குப் பிராட்டி சம்பந்தத்தால் செய்கிறது என்?” என்று கேட்க, “அது இருக்கிறபடி கேளீர், இராவணனுக்கும் காகத்துக்கும் சம்பந்தமும் செயலும் ஒத்திருக்க, இனி, இராவணன் சாபத்தாலே கிட்டமாட்டாதே இருப்பது ஒன்று உண்டே அன்றோ; அங்ஙன் அன்றிக்கே, தாய் பக்கல் குற்றத்தில் கைதொடனாயிருக்கத் தலைகொண்டு தப்பினான் அன்றோ, அவள் சந்நிதி உண்டாகையாலே. அவள் கடக்க இருக்கையாலே இராவணன் தலை அறுப்புண்டான்.” போக்கு அற்றுச் செயல் மாண்டு நின்ற நிலை அவனுக்கும் ஒக்கும் அன்றோ; இங்ஙனே இருக்கச்செய்தேயும் காரியகரமாயிற்றது இல்லை அன்றோ, அவனுக்குப் பிராட்டி சந்நிதி இல்லாமையாலே. இனித்தான், தாயும் தந்தையுமானால் தந்தையைப்போல் அன்றே, மக்கள் பக்கல் தாய் இருக்கும்படி; இவன் செய்த குறைகளைத் தான் காணாக்கண் இட்டிருக்கை அன்றிக்கே, தந்தையிடத்தும் மறைத்துக் காட்டுவாள் ஒருத்தி அன்றோ. ஆகையால் அன்றோ துவயத்தில் பின்பகுதியில் அவனோடு ஒப்புச்சொல்லி, முன்பகுதியில், புருஷகாரமாகையாகிற நீர்மையில் ஏற்றம் சொல்லுகிறது. தொட்டாரைத்தொட்டு(நகஸ்சிந் ந அபராத்யதி” -, ஸ்ரீராமா. யுத். 116 : 44.) 1“குற்றம் செய்யாதார் யாவர்” என்னக்கடவ இவள், ‘நம்மை ஒரு காரியத்தில் ஏவுவது காண்’ என்று காலத்தை எதிர்நோக்கி இருக்குமவனைப் பெற்றால் விடாளே அன்றோ. தன் வார்த்தை கேளாதார்க்கும் கூட (மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்ராம: ஸ்தாநம் பரீப்ஸதா   வதம்ச அநிச்சதா கோரம் த்வயாஅஸௌ புருஷர்ஷப:”ஸ்ரீராமா. சுந். 21 : 19.)2“ஆடவர்களுள் ஏறு போன்றவரான இந்த இராமபிரான், இராச்சியத்தை விரும்புகிறவனாயிருக்கிற உன்னால் சிநேகிதராகச் செய்து கோடற்குத் தக்கவர்” என்னக்கடவ இவள், தன் முகம் பார்த்து வார்த்தை கேட்குமவனைப் பெற்றால் விடாளே அன்றோ.(தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ துர்பலா”  , ஸ்ரீரா. யுத். 116 : 40.) 3“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுகிறேன்” என்றாளே அன்றோ. என்றது, திருவடி, ‘அரக்கியர்களை என்கையில் காட்டித்தரவேணும்’ என்ன, ‘பிறர் கண்குழிவு காணப்பொறாத துர்ப்பலை காண் நான்’ என்றாள் அன்றோ என்றபடி. ஈண்டு, “துர்ப்பலை” என்றது, இராவணன் பட்டானாகில், பெருமாளும் வெற்றியோடே நின்றாராகில், திருவடி வந்து முன்னே நின்றானாகில், வேறு ஒரு வலி இல்லாத தன்மை இல்லையாதலின், பிறர் நோவு காண மாட்டாமையாகிற துர்ப்பலத்தையே குறித்தபடி. துர்ப்பலம் – வலி இன்மை.

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள் –ஐந்தாம் பத்து –

December 10, 2023

நண்ணாதார் முறுவலிப்ப” என்ற திருவாய்மொழியிலே சம்சாரிகள் படுகிற துக்கத்தை அநுசந்தித்து, அதற்குப் பரிஹாரமாகப் ‘பகவானுடைய பரத்துவ ஞானத்தை உண்டாக்குவோம்’ என்று பகவானுடைய பரத்துவத்தை உபதேசித்தார் மேல் திருவாய்மொழியிலே; இரண்டு கிட்டம் தம்மிலே சேரக் கிடக்க அவற்றிலேஒன்று பொன்னாய் இருக்குமாறு போலே அவர்களிலே ஒருவராக இருக்கிற தாம், அவர்களையும் திருத்தும்படி தமக்குப் பிறந்த நன்மைக்கு ‘அடி என்?’ என்று பார்த்து, அதற்குக் காரணம் தம்பக்கல் ஒன்றும் காணாமையாலே தன்னுடைய 1நிர்ஹேதுகமான கிருபையாலே செய்தானத்தனை என்கிறார் இத் திருவாய்மொழியில்

அமுதம் இருக்க விஷத்தை விரும்புவாரைப் போலே ஆராவமுதை விட்டு இனிய அமுதம் என்னும்படி இனியபொருளாகத் தோன்றின ஐம்புல இன்பங்களை விரும்பிப் போந்தபடியையும்

மணி வண்ணனே! – 2பெருவிலையனான இரத்தினம் போலே சிலாக்கியமான வடிவை எனக்கு உபகரித்தவனே!

உன்னை விட்டு என் கொள்வன் என்னும் வாசகங்கள் சொல்லியும் – 1பரமைகாந்திகளைப் போலே உன்னை ஒழிய நான் எதனைக் கொள்வன்? என்று இங்ஙனே வாயாலே சொல்லா நிற்கச்செய்தேயும். வன் கள்வனேன் – களவாவது – பிறருடைய பொருளை அவர் அறியாமலே கொள்வது

ஆத்மாவுக்குச் சரீரத்தின் சேர்க்கை அநாதியாக இருக்கச் செய்தேயும், அது ஒளபாதிகமாய்த் தோற்றுகையாலே ‘நடுவே ஓர் உடம்பு’ என்கிறார். 2சலகில் கிடந்த முத்துக்கும் பொன்னுக்கும் அழுக்கு ஏறின நாள் அறிவார் இல்லை, பின்பு கழியக் காண்கையாலே ‘இது வந்தேறி’ என்று தோற்றாநின்றதே அன்றோ? அப்படியே, பகவானை அடைவதனாலே கழியக் காண்கையாலே ‘இது வந்தேறி’ என்று தோற்றுமே அன்றோ? 4இராஜ புத்திரன் வழியிலே போகாநிற்கச் செய்தே வேடர் கையிலே அகப்பட்டுத் தன்னை வேடனாகவே எண்ணுமாறு போலே இருப்பது ஒன்றே அன்றோ, சேதனன் தேகத்திலே அஹம் புத்தி பண்ணி “நான் தேவன்” என்று இருக்கும் இருப்பு?

போர வைத்தாய் புறமே – 2ஏகாந்த போகத்துக்காகப் போந்த பிராட்டி அசோகவனத்திலே இருந்தாற்போலே தோன்றாநின்றதாயிற்று, சொரூப ஞானம் பிறந்த பிறகு தேகத்திலே இருக்கிற இருப்பு. புறமே – உன் குணங்கள் நடையாடாத சம்சாரத்திலே வைத்தாய். 3தம்முடைய சொரூபத்தைப் போன்று ‘கர்மங்களும் அவனைக் குறித்தபோது பரதந்திரங்கள்’ என்று இருக்கும் பரமவைதிகர் ஆகையாலே ‘போரவைத்தாய்’ என்று அவன் செய்தானாகச் சொல்லுகிறார்.

திறந்து கிடந்த வாசல்தோறும் நுழைந்து திரியும் பொருள் போலே, கர்மங்களுக்குத் தகுதியாகத் தேவர்கள் முதலான சரீரங்கள் தோறும் பிரவேசித்துத் திரியும்

அந்தத் துவாரத்தின் மத்தியில் பரமாத்மாவினது அப்ராகிருதமான சரீரமானது மெல்லியதாயும் மேல் நோக்கின பிரகாசத்தையுடையதாகவும் இருக்கிறது; அத் திருமேனி எங்ஙனம் இருக்கிறது? எனின், –கரிய மேகத்தை நடுவிலுடையதான மின்னற்கொடி போன்று மெல்லியதாகவும் உருக்கின தங்கம் போன்ற காந்தியை யுடையதாயுமிருக்கிற ஒரு சிகை இருந்தால் அது போன்று இருக்கிறது” என்கிறபடியே, இருதயத்திலே இருக்கிற படி. முன்பு 2இவ்வுடம்பு அவ்வுடம்பை மறப்பித்தாற் போலே இப்போது அவ்வுடம்பு இவ்வுடம்பை மறப்பித்தது.

முட்பாய்ந்தவாறே ‘அம்மே!’ என்பாரைப் போலே நோவுபட்டவாறே திருவடிகளை நினைக்க, சர்வாதிகனான தான் தன் மேன்மை பாராமல் மடுவின் கரையிலே அரைகுலையத் தலைகுலைய வந்து காப்பாற்றிய நீர்மையை நினைத்து, ‘இது ஓர் உபகாரம் இருக்கும்படியே!’ என்று அந்த உபகாரத்தின் நினைவாலே அன்புள்ளவர்கள் சொல்லும் பாசுரத்தை அன்பு இல்லாத நான் சொன்னேன்.

எம்பிரானும் என் மேலோனே-எனக்கு உபகாரகனானவனும், கலியர் சோறு கண்டாற்போலே என் பக்கலிலே வந்து மேல் விழுந்தான்.

திருமாலார்1இளையபெருமாளும், இடக்கை வலக்கை அறியாத குரங்குகளும் ஒக்க அடிமை செய்தாற்போல, இரண்டு உலகங்களில் உள்ளவர்களும் ஒரு மிடறாகச் சேர்ந்து அடிமை செய்யும் சர்வாதிகனானவன்.

இவர் தாம் 2பூவேளைக்காரரைப் போலே,(அரசர்களுக்கு அவ்வக்காலங்களில் பூ இடாவிடில்  குத்திக்கொண்டு முடியுமவர்கள்.) இவை காணாதபோது கைமேலே முடிவார் ஒருவரேயன்றோ

ஸ்ரீ ராமபிரான் தன் திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு அப்போது தோன்றிய இளஞ்சந்திரனைப் போன்று காணப்பட்டார்

கமலத் தடங்கண்ணன் தன்னை – 2மலர்ந்த தாமரைத் தடாகம் போலே குளிர்ந்து செவ்வியை யுடைத்தான திருக்கண்களை யுடையவன்-அன்றிக்கே, வடிவு முழுதும் கண்களாய் இருக்கிறபடி. கமலத்தடம்” என்பதற்கு, இரு வகையான பொருள் அருளிச் செய்கிறார்.  ஒன்று, மலர்ந்த தாமரைகளையுடைய தடாகம் என்பது. மற்றொன்று, தடம் –  விரிவு. கமலம் – தாமரை.

பொலிந்தே அடிக்கீழ்ப் புகுவார் – 4நம்பிக்கை மாத்திரமேயாய் ருசி இன்றிக்கே இருக்கப் போய்ப் புகுதல் அன்றிக்கே, எம்பெருமானாரைப் போலே நூறு ஆண்டுகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே இருந்து, பின்பு தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே அவன் திருவடிகளிலே புகப் பெறுவர்.

உயிர் வல் சாபம் போயிற்று-உயிரினுடைய வலிய சாபம் போயிற்றது. 3சாபத்தாலே பற்றப்பட்டவரைப்போலே அநுபவித்தால் அல்லது அழியாதது ஆகையாலே, பாபத்தைச் ‘சாபம்’ என்கிறார்

பகவானுடைய அநுபவத்திற்கு மேட்டுமடையான சம்சாரத்தில் மருபூமியில் தண்ணீர் போலே எங்கேனும் ஒருவர் இருவர் உண்டாமத்தனையன்றோ? என்ன, மலியப் புகுந்து- 2“அடியார்கள் குழாங்கள்” என்கிறபடியே, நெருங்கப் புகுந்து. இசை பாடி ஆடி உழிதரக் கண்டோம்-சந்தோஷத்தின் மிகுதியாலே பாடுவது, உடம்பு இருந்த இடத்திலே இராமல் ஆடுவதாய்க் கொண்டு, 3யமன் முதலானோர்கள் தலை மேலே அடியிட்டுச் சஞ்சரிக்கக் கண்டோம்.

இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே    – பயிர் தேயும்படி களை வளருமாறு போலே சத்துவ குணத்தையுடைய பெரியோர்கள் ஒதுங்கும்படி வளருகின்ற புறச் சமயங்களை எல்லாம் பறித்துப் போகடுவாரைப் போலே

நெற் செய்யப் புற்றேயுமா போலே, இவர்கள் ஊன்ற ஊன்ற அவர்கள் தாமாகவே தேய்வார்கள் அத்தனை

நாடகம் செய்கின்றன – இவர்கள் செய்யும் காரியம் இவர்க்கு வல்லார் ஆடினாற் போலே இருக்கை. 3எம்பெருமானாருடைய நிற்றல் நடத்தல் படுத்தல் முதலியவைகளை நாம் கொண்டாடுமாறு போலேயும், ஆளவந்தாருடைய நடையை அரசன் கொண்டாடினாற் போலேயும் இவர் கொண்டாடுகிறபடி” என்று அருளிச்செய்வர் நஞ்ஜீயர்.ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய  செயல்கள் இவர்க்கு மனக் கவர்ச்சியாக  இருப்பதற்குத் திருஷ்டாந்தங்கள்

அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும்வகை இல்லை – இராக்கதத்தன்மை வாய்ந்தவர்களாயும் ஆசுரத்தன்மை வாய்ந்தவர்களாயும் இருப்பார் மனித சரீரத்தை ஏறிட்டுக்கொண்டு, 1ஸ்ரீ வானர சேனையின் நடுவே சுக சாரணர்கள் புகுந்தாற்போலே புகுரப் பார்த்தீர் உளராகில் உங்களுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை. என்றது, “ஒன்றும் தேவும்” என்ற திருவாய் மொழியைக் கேட்டுச் சம்சாரம் திருந்தினபடி

செய்த பயிருக்குக் 1கடமை இறுக்குமாறு போன்று, உங்களுடைய புண்ணிய பாவங்களுக்குத் தகுதியாக அவ்வவ் தேவதைகளுக்குக் கொடுக்கும் திரவியங்களைக் கொடுத்து ஜீவிக்கைக்காக, எல்லா உலகங்களிலும் தனக்குச் சரீரமாக இருக்கிற தேவதைகளை நிறுத்தினான். என்றது, இராஜாக்கள் ஊர்தோறும் 2கூறு செய்வார்களை (வரி வசூலிக்கும் மணியக்காரர்களை.)வைக்குமாறு போன்று நிறுத்தி வைத்தான் என்பார் ‘நிறுத்தினான்’ என்கிறார்.

மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகம்-அவனை விடாமல் நின்று அடிமை செய்யுமவர்களாலும், குணங்களை அநுசந்தானம் செய்வதற்கு அவ்வருகு ஒன்றுக்கும் ஆற்றல் இல்லாதே இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களாலும் மிக்கது உலகம். என்றது, தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும், கிடந்த இடத்தே கிடந்து குணாநுபவம் செய்யும் ஸ்ரீ பரதாழ்வானையும் போலே இருப்பாரே ஆயிற்று உலகம் அடைய என்றபடி. ஆதலால், நீங்களும் மேவித் தொழுது உய்ம்மின் என்க.

கலிதோஷங்கள் ஒன்றும் வாராதபடி தன் அடியார்க்கு அருள் செய்யும். 1நாட்டுக்கு இட்ட அஃகம் அல்லவே யன்றோ அந்தப் புரத்துக்கு இடுவது.

மடல் எடுத்தல் என்பது, துணிவுள்ள காரியமுமாய், மிகச்சிறிய  பலமுமாயிருக்கும் என்பதனைக் காட்டுகிறார்–மடல் எடுக்கையாவது, போர் சுட்டுப் பொறி கொறிக்கையைப் போன்றது ஒன்றாம்

அவ்விஷயங்கள் கிடையாவிட்டால் ‘அவற்றை அப்போதே பெறவேணும்’ என்னும்படியான மனோவேகம் பிறந்தால், பின்பு அவ்விஷயங்கள் இருந்த இடங்களிலே புகை சூழ்ந்து புறப்பட வேண்டி இருப்பது ஒரு சாகசத்தைச் செய்து புறப்பட விடுவித்து முகத்திலே விழிப்பாரைப் போலே, ‘அத்தலைக்குப் பழியை விளைத்தாகிலும் முகத்திலே விழிக்குமத்தனை’ என்று சாகசத்திலே ஒருப்பட்டு, தனக்கு இவ்வளவாகப் பிறந்த நிலையை அந்யாப தேசத்தாலே பேசுகிறார்.

அலக்குப் போர் போலே ஒருவர்க்கு ஒருவர் புகலாய் அங்ஙனம் கூடுதல், தோழிமார் கூட்டக் கூடுதல், ஆற்றாமை கூட்டக் கூடுதல், தலைவியானவள் குணங்களால் சிறந்தவளாயிருப்பாளேயாகில் பழிக்கு அஞ்சிக் கூடக் கூடுதல், இவை இத்தனையும் இல்லையாகில், முடிந்து போதல் செய்கையாகிற சாகசமானதொரு தொழில் விசேடமாயிற்று.

சிறைக்கூடத்திலே பிறந்து அங்கே வளருமாறு போலே2பிரிவினாலே ஊகிக்கப்படுமித்தனை காணும் புணர்ச்சி

‘என்னை நிறைகொண்டான்’ என்கிறாள். என்றது, கடலைத் தறை காணுமாறு செய்வது போன்று, என்னைச் செய்தான் என்றபடி

செய்யவாயும் கருங்கண்ணும் பயப்புஊர்ந்த-1கடலும் மலையும் குடியிருப்புமான இடங்கள் எல்லாம் பிரளய காலத்தில் ஒரே வெள்ளமாய் இருக்குமாறு போலே எங்கும் ஒக்க வைவர்ண்யமேயாயிற்று.-ஒரே வெளுப்பு ஆயிற்று. 2விஷம் பரந்தாற்போலே காணக் காண வண்டல் இட்டு வைவர்ண்யமானது பரப்பு மாறிற்று.

இரண்டு சகடத்தை இரண்டு அருகும் இழுத்து நடுவே தொட்டிலை இட்டு வளர்த்திப் போனாள் தாயார்; பாடி காப்பாரே களவு காணுமாறு போலே, காவலாக வைத்த சகடமே அசுர ஆவேசத்தாலே ஊர்ந்து வந்ததாயிற்று.

சகடம் வந்து கிட்டினபோது சிலராலே நீக்கப்படலாம்; பூதனை தாய் வடிவுகொண்டு வந்து நலியப் புக்கால் அதற்குப் பரிஹாரம் இல்லையே அன்றோ, ஈன்றோரே நஞ்சு இட்டாற்போலே இருப்பது ஒன்றே அன்றோ

தீ்ர்ந்த என் தோழி – தாய்மார் சொல்லுகிற நல்வார்த்தைகளை நீயும் சொல்லுகையாலே, ‘நீயும் அவர்களைப் போன்று விலக்குகிறாய்’ என்று இருந்தேன், உன் நினைவு இதுவாகப் பெறுவதே! 1நீ நீயேயாம்படி இருந்தாய் வர இரு என்கிறாள். 2இராவணன் வரவிட்ட ஆள்” என்று ஐயம் உற்று இருந்தவள், “பெருமாள் பக்கல் நின்றும் வந்தவன்” என்று அறிந்த பின்பு அவனைக் கொண்டாடிற் போலே. என்றது, “பெருமாளால் அநுப்பப் பட்டவனாயிருப்பதனாலே, ஓ வானர உத்தமனே! என்னுடன் இரஹசியமான சமாசாரங்களைச் சொல்லுவதற்கும் தகுதியுள்ளவன் ஆகிறாய்” என்றாள் என்றபடி

சிறியதைப் பெரியது நலியுமாறு போலே, ஒருவன் செய்த புண்ணியத்தினுடைய பலத்தை வேறு ஒருவன் பறித்துக்கொள்ளாமல், அப்புண்ணியத்தைச் செய்தவனே அநுபவிக்கும்படி செய்யும் போதும் அவன் திருவருள் வேணுமே.

அறிவு அரு மேனி-கிட்டினால், ‘இத்தலைக்கு எல்லாச் செல்வத்தையும் தர நினைக்கின்றானோ, எல்லாச் செல்வத்தையும் கொள்ளை கொள்ள நினைக்கின்றானோ, என்று அறிய ஒண்ணாதபடியான 1வடிவையுடையவன். 2என்னுடைய ஆத்மாவும் என்னுடைமைகளும் நீ இட்ட வழக்கு’ என்பாரைப் போலே சொல்லி ஆயிற்று இத் தலையில் ஆத்மாவையும் மற்றைச் செல்வத்தையும் கொள்ளை கொள்வது. என்றது, தன்னையும் தன்னுடைமையையும் இவள் இட்ட வழக்கு ஆக்கி, பின்னை யாயிற்று இவளைத் தனக்கு ஆக்கிற்று என்றபடி

நீ எல்லா நிலைகளிலும் அவரை ஆதரித்துப் போருவாய்’ என்று அவர் என்னைக் குறித்துச் சொல்லிவிட்டார்; நானும் அப்படியே செய்து போராநிற்க, கிண்ணகத்தில் குமிழிக் கீழே சாவி போமாறு போலே, தாம் என்னுடைய ரக்ஷணத்தில் நெகிழ நின்றது அவர் நினைவு குறைவுபட்டது ஆகவோ என்று சொன்னேன் என்று சொல்லு

நான் கையும் மடலுமாகச் சென்றவாறே அஞ்சி எதிரே புறப்பட்டு நிற்கக் கடவன், அப்போதாக அவன் காலிலே குனியக் கடவன். 2வட்டிக்குமேல் வட்டி ஏறின கடன் போலே” என்னும்படி தொட்டுவிடக் கடவேன்

ஆபத்திலே உதவும் தன்மையனுமாய் எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான புருஷோத்தமனுடைய குணங்களை நினைக்க, அவைதாம் பிரிவிலே நினைக்கையாலே மிகவும் ஆற்றாமைக்கு உறுப்பாய், சடையினால் தூக்கிட்டுக் கொள்ளுதல் முதலியவைகளிலே 1ஒருப்பட்டவரைப் போன்று முடிந்து பிழைக்கவேண்டுமளவாய், அது தன்னைப் பெறுகை மடல் ஊரப் பெறுகையைப் போன்று தேட்டமாய்;

திருவடி செல்லுகிற கணத்திலே அரக்கியர்கள் முழுதும் உறங்கினாற் போன்று பழிசொல்லுவார் முழுதும் உறங்கினார்களாயிற்று.

இவள் பிறந்த ஊர் ஆகையாலே இவள் நிலையைக் கண்டு சோகித்து, கோரை சாய்ந்தாற் போன்று எல்லோரும் ஒரு சேர உறங்கினபடியைச் சொல்லிற்று

உலகு எல்லாம் நள் இருளாய் – பிரளயம் கோத்தாற் போலே உலகமடைய இருளே ஆயிற்று.

வாரானால் – வயிற்றிலே வைத்துக் காக்க வேண்டா, உடம்போடே அணைய வேண்டா, வந்து முகம் காட்ட அமையுமே அன்றோ. 5உதிக்கின்ற சூரியன் ஆனவன், உலகம் எல்லாவற்றிலும் உள்ள இருளைப் போக்குவதைப் போன்று, பெருமாள் பார்க்கப்பட்டவுடனேயே நமது வருத்தத்தைப் போக்குவார்”

காவி சேர் வண்ணன் – 2“அலர்ந்த கருநெய்தல் இதழ் போன்ற நிறத்தையுடையவர்” என்கிறபடியான நிறத்தையுடையவன். என்றது, இருளோடு ஒரு கோவையான நிறம் என்றபடி. 3இருள் அன்ன மா மேனி அன்றோ. 4கறுப்பு உடுத்து வருவாரைப் போன்று வரலாமே அன்றோ

சாத்தன், கூத்தன்’ என்பது போன்று சில பெயர்களையுடையவர்களாய், அவர்கள் தாங்கள் ஜீவிக்கப் புக்கவாறே சிறுபேர் தவிர்ந்து ‘சோழக்கோனார்’, ‘தொண்டைமானார்’ என்று பட்டப் பெயர் பெற்று வாழுமாறு போன்று, இரவு என்ற பெயர் நீங்கிக் ‘கல்பம்’ என்னும் பெயரையுடைத்தாகா நின்றது என்பாள் ‘ஊழியாய்’ என்கிறாள்

எல்லார்பக்கல் செய்யும் அன்பையும் என்பக்கலிலே ஒரு மடையாகச் செய்து வைக்கையாலே, எல்லாம் செய்தாலும், கடலை அணை செய்து பகைவர் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துத் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று வருகை தவிரார்; தாபத்தாலே வருந்தினவன் விடாய்ப்பட்டுப் பந்தல் ஏறவரக்கொண்டு தண்ணீர்ச்சால் உருண்டு கிடந்தால் பிழையாதாமாறு போன்று, அவர் இப்படி வரக்கொண்டு நான் இன்றிக்கே இருப்பேனாகில் பின்னை அவரைக் கிடையாது என்று, அவருக்காக என்னை நோக்கிக் கொண்டிருந்தேன்

கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்ஒரு நீர்ச் சாவியிலே ஒரு பாட்டம் மழை பெய்தாற்போலே குளிரும்படியான வடிவையுடையனுமாய், 3“அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் வந்து தோன்றினான்

பேர் என்னை மாயாதால் – அவனோடு ஒத்திருக்கின்றதே! பேரும். 2அவன் வருகின்றிலன், இது போகிறதில்லை. 3நான் காரியத்திலே முடிந்தேனாயிருக்கச் செய்தேயும் ‘இன்னாள், இன்னாள்’ என்கிற இப்பெயர் என்னை முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை-ஆழ்வாருடைய திருநாமம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குச் சத்தைக்குக் காரணமாக இருப்பது போன்று அவர் தமக்கும் சத்தைக்கு ஏதுவானபடி. 5அடியுடைய பெயர் ஆகையாலே எல்லார்க்கும் தாரகமாக இருக்குமே. இதனுடைய அடியுடைமையே அன்றோ எல்லாரும் தலை மேல் தாங்குவது.

காதல் நோயும் இரவாகிய கல்பமும் தம்மிலே சங்கேதித்துக்கொண்டு வந்தாற் போலே இராநின்றது. 4நான் பின்னிட்டு வருகிறேன், நீ முன்னே தப்பாமல் சூழ்ந்துகொள்’ என்று வருவாரைப் போன்று வந்தன என்றபடி-எதிரிகள் எளியரானால் அவர்கள் கைகளில் விற்களைப் பறிப்பது பரிகசிப்பதாய்க் கொண்டு பரிபவம் செய்வாரைப் போன்று 6இத்தலையில் எளிமை கண்டு இரவாகிய ஊழி, முன்னே நின்று கண்களை மறையா நின்றது. 7உட்கண்ணினைக் காதல் மறையா நின்றது, கட்கண்ணை இரவு மறைத்தது.

தமிழர்க்கு அகத்தியரைப் போன்று இருப்பான் தமிழாசிரியன் ஒருவன், செல்கின்ற கங்குல் வாய் என்பதற்குச் செல்கின்ற நாளகத்து என்று உரை எழுதி வைத்தான்

தூப் பால வெண்சங்கு சக்கரத்தன் தோன்றானால் – இருளைப் போக்கும்போது சந்திர சூரியர்கள் சேர உதித்தாற்போன்று இருக்கின்ற திவ்விய ஆயுதங்களையுடையவன் வருகின்றிலன்

உண்டோ கண்கள் துஞ்சுதல்” என்றிருப்பவள். அதற்குமேல் இப்போது இருளுக்கு அஞ்சியும் உறங்காள். தன் நிலையைக் கண்டு அதற்கு அவர்கள் உறங்காதே இருக்கிறார்களாகக் கொண்டு, அவர்களைத் தஞ்சமாக நினைத்துக் கேட்கிறாள், சிறை உறவு போன்று. தோழிமாருங்கூட உறங்கா நிற்கச் செய்தே அவர்கள் உறங்காதிருக்கையாலே, அவர்களைக்காட்டிலும் இவர்களை அன்னிய உறவாக நினைத்துச் சொல்லுகிறாள். “ஆயும் அமருலகுந் துஞ்சிலும்” என்று தாய்மாரோடு ஒரு சேர எடுத்துப் பேசப்படுகிறதே அன்றோ தேவர்களையும். துன்பம் மிக்கால் ‘அம்மே! என் செய்வேன்’ என்றாற்போலே இருக்கிறது காணும்.

ஊழியாய்’ என்றது, இராத்திரி மாத்திரமேயாய் நின்று நலிந்தது என்னும்படி, இது பல கல்பமாக நலியாநின்றது. 1சௌபரி, இன்பத்தை அனுபவிப்பதற்குப் பல வடிவுகள் கொண்டாற்போன்று, இதுவும் துன்புறுத்துவதற்குப் பல வடிவுகள் கொள்ளாநின்றது என்றபடி.

மெய் வந்து நின்று2ஈச்வரன் கட்டின மர்யாதை குலைக்க ஒண்ணாமை வந்தது மாத்திரம் அன்றிக்கே, தனக்கே சீற்றமுடையாரைப் போலே மெய்யே முன்னே வந்து நின்று. 3இராவணன் இடம் பார்த்து வந்தாற்போன்று, விரகநிலை என்று அறிந்து நலியாநின்றது என்பாள் ‘வந்து நின்று’ என்கிறாள்

எனது ஆவி மெலிவிக்கும் – 4மோர்க்குழம்பு கொடுத்துத் தேற்றி விடுநகம் கட்டி நலிவாரைப் போன்று, ‘சென்றற்றது’ என்னும்படி இருக்கிற என்னுடைய உயிரை உண்டாக்கி நலியாநின்றது. என்றது, போன உயிரை மீளக்கொடுத்து நலியா நின்றது என்றபடி.

 தர்மாத்மா-ஐயரும் ஒருவரே! தாம் பரமதார்மிகர் கண்டீர்; தாம் இருந்த நாளும் நமக்கு வேண்டும் ரக்ஷணங்களைச் செய்து, தாம்சென்ற பின்னரும் தண்ணீர்ப் பந்தலை வைப்பாரைப் போன்று உம்மை வைத்துப் போவதே!

 வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளியாய் – இராவணன் மாரீசனைத் துணையாகக் கொண்டு வந்து தோற்றினாற் போலே ஆயிற்று, நுண்ணிய துளியோடே செறித்த இருள் வந்து தோன்றினபடி

இது, (இது’ என்றது, அணிநெடுந்தேர் தோன்றாதே  அகல நின்றதனை. அன்றி, சூரியன் மறைந்ததனை என்னலுமாம்.)இளைய பெருமாள் அகல நின்றாற்போலே ஆயிற்று

பிரளயத்தில் சிறிது தூரம் எஞ்சி இருக்க நீந்தி, ‘கரையைக் கிட்டினோமோ, கிட்டினோமோ!’ என்று பார்ப்பாரைப் போலே காணும், இரவு முழுவதும் நோவுபட்டு, ‘விடிந்ததோ, விடிந்ததோ, என்று பார்க்கிறபடி.

சூரிய மண்டலத்திலே எழுந்தருளியிருக்கிறவனும் வருகின்றிலன். என்றது, 1சூரியனுடைய வரவுக்கு அருணோதயம் போலே இருப்பது ஒன்றே அன்றோ, அந்தச் செல்வத் திருமாலுடைய வரவுக்குச் சூரியனுடைய தோற்றரவு என்றபடி.

புழுக்குறியிட்டது எழுத்தானாற் போன்று எதுவோ ஒரு காலத்தில் வந்தது ஒன்று, அது அவனுக்கு என்றைக்கும் உள்ளது ஒரு தன்மை அன்று காண்” என்று சொல்லுகிறார் இலர்

பிரான்’ என்னாநிற்கச்செய்தே அன்றோ ‘வாரான்’ என்கிறது. என்றது, “உலக முழுதினையும் அளந்துகொண்ட உபகாரகன் அன்றோ என்று நினைக்கிறாயாகில், பெருக்காறு பெருகினாற்போலே அது அங்ஙனே ஒருகால் செய்து போன இத்தனை, வாராமையே காண் ஸ்வபாவம்” என்கிறார் இலர் என்றபடி. ஒன்று-‘வரும்’ என்ன வேண்டா, ‘வாரான்’ என்ன அமையும். 3‘இன்னம் வருவான்’ என்னும் நசைகொண்டு ஜீவிக்க இருப்பார்க்கே அன்றோ ‘வரும்’ என்றே சொல்ல வேண்டுவது. ‘வரும்’ என்னவுமாம், ‘வாரான்’ என்னவுமாம்

பிராட்டி, திருவடி வார்த்தையைக் கேட்டபோது (அம்ருதம் விஷஸம்ஸ்ருஷ்டம் த்வயா வாநர பாஷிதம்   யச்ச நாந்யமநா ராமோ யச்ச ஸோக பராயண:”(ஸ்ரீராமா. சுந். 37 : 2.)2“வாநர! உன்னால் சொல்லப்பட்ட பெருமாள் என்னை அல்லது அறியார், பிரிவாலே தளர்கின்றார் என்ற இரண்டு வார்த்தைகளும் விஷத்தோடு கூடின அமுதம் போல் இருக்கிறது” என்று, பெருமாள் என்னைப் பிரிந்த இடத்தில் என்னை அல்லது அறிந்திலர் என்று சொன்னது எனக்கு இனியதாயிருந்தது, அவர் பிரிவாலே தளர்கின்றார் என்று சொன்னபடியாலே வெறுப்பாய் இருந்தது என்றாளே அன்றோ. 1அப்படியே, இவர்க்கும் பிரீதி அப்ரீதிகள் சமமாகச் செல்லுகின்றன.

சங்கினோடும் – “செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்” என்கிறபடியே, கருநிறமான திருமேனிக்குப் பரபாகமான வெளுத்த நிறத்தையுடைத்தான ஸ்ரீ பாஞ்சசன்யத்தோடும்

செம்கனிவாய் – கண்டபோது, நான் உன் சரக்கு அன்றோ, “தவாஸ்மி-உன்னுடையவன் ஆகிறேன்” என்ற முறுவலோடும், ஒன்றினோடும் – 3சம்சார யாத்திரையை முக்தன் மறக்குமாறு போலே, இவ்வருகுண்டானவற்றோடு அவ்வருகுள்ளவற்றோடு வேற்றுமை அற எல்லாவற்றையும் மறக்கும்படி செய்ய வல்லதான திரு அதரத்தோடும். 4அன்றிக்கே, சாதி, பொருள்கள்தோறும் நிறைந்து இருக்குமாறு போலே, நெஞ்சு அழகுதோறும் சொல்லாநின்றது

சங்கினோடும்-2 ஸ்ரீ பாஞ்சசன்யத்தோடே விசேடித்து ஒரு சம்பந்தம் உண்டு காணும் இவளுக்கு; திருவாயின் அமிர்த இனிமையை அறிந்திருக்கையாலே; ஒரு கலத்திலே ஜீவிப்பாரைப் போலே.

மின்னுநூலும் – மேகத்தில் மின்னியது போன்றிருக்கின்ற திரு யஜ்ஞோபவீதமும்.குண்டலமும்-பரந்த மின் ஓரிடத்திலே சுழித்தாற்போலே இருக்கிற திருமகரகுண்டலமும். 

நான்கு தோளும்2“எல்லா ஆபரணங்கட்கும் அழகினைக் கொடுக்கக் கூடியதான” என்கிறபடியே, ஆபரணங்கட்கு ஆபரணமாய்க் கல்பகதரு பணைத்தாற் போலே இருக்கிற திருத்தோள்கள் நான்கும்.

மரவுரி, மான்தோல் இவற்றை உடுத்திருப்பவரும், வில்லைத் தரித்திருப்பவருமான ஸ்ரீ ராமபிரானை, பாசக்கயிற்றைக் கையிலேயுடைய யமனைப்போன்று ஒவ்வொரு மரத்திலும் பார்க்கிறேன்” என்பது போலே, உகப்பார்க்கும் உகவாதார்க்கும் பலம் ஒன்றாய்விட்டது. நான் எங்கே ஒதுங்குவேன், சொல்லிக் 4காணீர்கோள்.

நால்தோள் எந்தாய் – கல்பக தருபணைத்தாற்போலே இருக்கிற திருத்தோள்களைக் காட்டி என்னைத் தனக்கே உரியவனாக எழுதிக்கொண்டவனே! 3‘திருவடி தோற்ற துறையிலே ஆயிற்று இவரும் தோற்றது.

நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்கங்கையின் அலைகளின் நடுவே வசிப்பாரைப் போலே ஒளிகளாகிய அலைகளின் நடுவே ஆயிற்று இருப்பது. 3ஒளிகளின் நடுவே வடிவு ஊகிக்கப்படுவதாயாயிற்று இருப்பது. அவ்வடிவுதான் எவ்வளவு போரும் என்னில், அளவிட்டு அறிதற்கு அரியதாய்ச் சிலாக்கியமாய் இருக்கும்.

மை கொள் மாடம்-பழைமையாலே யாதல்; 2ஸ்ரீராமபிரான் தன்னுடைய திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு’ என்னுமாறு போன்று உள்ளே நிற்கின்றவனுடைய நிழலீட்டாலேயாதல்

எந்தச் சீதாபிராட்டி முன்பு ஆகாயத்தில் வசிக்கின்ற பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ” என்று சொல்லப்பட்ட பிராட்டியைப் போலே இருக்குமவள் அன்றோ இவள்தான்.ஒருவர் முன்பும் நின்று அறியாமைக்குப் பிரமாணம்-யா நஸக்யா புரா த்ரஷ்டும் பூதைராகாஸகைரபி   டதாமத்ய ஸீ தாம் பஸ்யந்தி ராஜமார்க்ககதாஜநா:”   ஸ்ரீராமா. அயோத். 33 : 8.

குழுமித் தேவர் குழாங்கள் கைதொழ – திரள் திரளான நித்தியசூரிகள், கிண்ணகத்தில் இழிவாரைப் போலே கைகோத்துக்கொண்டு இழியும்படி. சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு-4“ஒளிகளின் திரள்” என்கிறபடியே, தேஜஸ்ஸின் நடுவே ஊகிக்கப்படுவதாயன்றோ வடிவு இருப்பது. என் நெஞ்சுள் எழும் – நித்திய சூரிகள் நடுவே தோன்றுமாறு போலே என் நெஞ்சுக்குள்ளே பிரகாசியா நின்றது. ஆர்க்கும் அறிவு அரிது – 5எனக்கு மறக்க ஒண்ணாதாப் போல ஆயிற்று, தம் முயற்சியால் அறிவார்க்கும் அறிய ஒண்ணாதிருக்கிறபடியும்.

 ஒவ்வோர் அர்த்தத்தைப்பற்றி உபந்யாசங்கள் செய்ய இருப்பாரைப் போலே ஞான முத்திரையும் தானுமாய்க் கீதோபநிடத ஆசாரியனைப் போலே இருந்தாள்; இதனைக் கண்ட திருத்தாயார், ‘இது ஏதேனும் மணிமந்திர ஒளஷதம் முதலியவைகளாலே வந்த விகாரமோ’ என்று ஐயங்கொண்டு, அத்தன்மைகள் காணாமையாலே ‘அவை அல்ல’ என்று அறிந்தாள்.

கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்-மஹாபலி போல்வார், பருந்து இறாஞ்சினாற்போன்று இதனை அபஹரித்து ‘என்னது’ என்னும் அன்று, இதனை எல்லை நடந்து மீட்டுக்கொண்டேன் நான் என்னாநின்றாள். என்றது, இவற்றைப் படைத்து, ‘மேல் உள்ளன தாமே நடக்கின்றன’ என்று விடுகை அன்றிக்கே, இவற்றை அடி ஒற்றிக்கொண்டு சென்று காத்தலைத் தெரிவித்தபடி

திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்-ஒருதாழிக்கு உட்பட்ட தயிரை ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி கடைவாரைப் போலே, சமுத்திரம் என்கிற மஹாதத்துவத்தின் நடுவே மந்தரத்தை நட்டுக் கடைகிற இடத்துக் கீழே விழுதல் மேலே கொந்தளித்தல் செய்யாதபடி கடலைக் கடைந்தேனும் நான் என்னும்.

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்-2அணுக்கனைக் கவிழ்த்துப் பிடித்தாற்போலே, திரள்திரளான மூங்கிலையுடைத்தான மலையை வருத்தம் இன்றியே தரித்தேன் நான் என்னாநின்றாள்.

இன ஆநிரை காத்தேனும் யானே என்னும் – முன்பு பிரஹ்மசர்யம் அநுஷ்டித்துப் பின்பு இல்லற தர்மம் அநுஷ்டிப்பாரைப் போலே, இளமைப் பருவத்தில் கன்றுகளை மேய்த்து, பருவம் நிரம்பின பின்பு பசுக்களை மேய்த்தேனும் நான் என்னும்

கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்-நாடகம் கட்டி ஆடுவாரைப் போலே தேவனாகவும், மனிதனாகவும், இப்படிப் பல வகையான சரீரங்களை மேற்கொள்ளுகிற ஆத்மாக்களும் யானே என்னும். அன்றிக்கே, கோலம் கொள் உயிர்கள் – 1ஞான ஆனந்த லக்ஷணமான உயிர்கள் என்னுதல்.

கடற்கரையின் வெளியில் மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும், (லக்ஷ்மணம் புண்ய லக்ஷ்மணம்” ஸ்ரீராமா. யுத். 18:7.)3“புண்ணியத்தையே இலக்ஷணமாகவுடைய இளையபெருமாள்” என்கிற தம்பியோடுங்கூட எழுந்தருளியிருக்க, ஸ்ரீவிபீஷணாழ்வான்(ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர:  தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத: ஸ்ரீராமா. யுத். 17:10.) 4“கெட்ட ஒழுக்கத்தையுடையவன், இராவணன் என்று பிரசித்தி பெற்றவன், அரக்கர்களுக்கெல்லாம் அரசனான அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; விபீஷணன் என்று பிரசித்தி பெற்றவன்” என்று தன்னுடைய தாழ்ச்சியை முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே, இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர, பிராட்டிமாரோடும் 1நித்திய பரிகரத்தோடுங் கூடச் சிரீவரமங்கல நகரிலே திருவனந்தாழ்வான்மேலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார்.

சிரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே வீழ்ந்து வேறு கதி இல்லாதவராய்க் கொண்டு சரணம் புக்கார்; இவர் அப்படிப் பெரிய ஆர்த்தியோடே சரணம் புகச் செய்தேயும் வந்து முகங்காட்டாதிருக்க; 2கடலில் அமிழ்ந்துவார் அங்கே ஒரு மிதப்புப் பெற்றுத் தரிக்குமாறு போலே, “இவ்வளவிலும் ‘வேறு ஒன்றாலே பேறு’ என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல் என்னும் மயக்கத்தைத் தவிர்த்தானே அன்றோ” என்று கொண்டு தரித்தார்;

ஆறு  எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்றதனைக் கடாக்ஷித்து,  ‘இவ்வளவிலும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். இங்கே, ‘வேறு
ஒன்றாலே பேறு என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல்  செய்தல்’ என்றிருக்கையாலே, “ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத்  தந்தொழிந்தாய்” என்பதற்கு, மேல் அருளிச்செய்த மூன்று  யோசனைகளையும் தவிர, இன்னமும் ஒரு யோசனை உண்டு என்று  தோற்றுகிறது. அதாவது, எனக்கு உன் பாதமே உபாயமாகவும், ரக்ஷகமாகவும்  தந்தாய் என்பது. “நின் பாதமே ஆறாக” என்கையாலே வேறு ரக்ஷகங்களை  நீக்குகிறது; “நின் பாதமே சரணாக” என்கையாலே வேறு உபாயங்களை  நீக்குகிறது; ஆக, “ஆறு” என்றதனால், ஆகிஞ்சந்யமும், “சரண்”  என்கையாலே, அநந்யகதித்வமும் போதரும். இத்தால், இந்த நிலையிலும்,  ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களுக்கு ஒரு ஹாநி வராதபடி செய்தான்  என்றபடி.

நோன்பிலேன்’ என்ன அமையாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்ன வேண்டுமோ? என்ன, சாதனங்களைச் சமைய அநுஷ்டித்து, பலத்தோடே கூடியிருப்பதாகப் பார்த்திருக்கலாவது ஒன்று இல்லை என்கைக்காகச் சொல்லுகிறார். என்றது, 3சக்கர்வர்த்தி, ஸ்ரீ வசுதேவரைப் போலே பேற்றுக்கு அடியாக நினைத்திருக்கலாவது ஒன்றில்லை என்றபடி

சேற்றுத் தாமரை செந்நெலூடு வளர் சிரீவரமங்கல நகர்சேறுகளிலே தாமரைகளானவை செந்நெலூடே அவற்றுக்கு அணுக்கன் இட்டாற்போலே அலரா நிற்கின்ற தேசம்

வீற்றிருந்த-‘அங்கே இருக்கக்கூடிய நமக்கு, இவ்விருப்பு இருக்க வேண்டாநின்றதே!’ என்னும் வெறுப்போடு அன்றிக்கே, 5தட்டியிலிருந்தவன் முடி சூடினாற்போலே தன் வேறுபாடு தோற்ற இருக்கை.

தவச அர்த்த: ப்ரகல்பதே-தேவரீருக்கே பிரயோஜனம் கிடைக்கப் போகிறது” என்கிறபடியே, இத்தால் வரும் பிரயோஜனமும் தேவரீருடையதே–இவரை அடிமை கொள்வது அவன் பேறாயிருக்கும் என்னுமதனைத்  திருஷ்டாந்த முகத்தால் காட்டுகிறார். ‘. 5பால்குடிக்கும் குழந்தையை, பால்குடித்து வயிறு நிறையக்கண்டு உகக்கும் தாயைப் போலே, அடிமையாக இருப்பவன் ஸ்வரூபம் பெற்று அடிமைசெய்கை சேஷிக்குப் பேறே அன்றோ.

அங்குற்றேன் அல்லேன் – 2முக்தர் இந்தச் சம்சாரத்திலே உலாவினாற்போன்று சித்த சாதனனாய்த் திரிகிறேன் அல்லேன்- இங்குற்றேன் அல்லேன் – 1இங்கே இருந்து சாதனங்களைச் செய்கின்றவர்களிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன்

உபாசகர், ஆரப்தயோகர் என்றும், ஆரூடயோகர் என்றும் இரு வகையர்.  அவர்களில் ஆரூடயோகர் படி தமக்கு இல்லை என்கிறார் என்று கூறத்  திருவுள்ளம்பற்றி அதனை அருளிச்செய்கிறார் ‘முக்தர்’ என்று தொடங்கி.  ‘சித்தசாதனனாய்’ என்றது, சாதனங்கள் எல்லாம் அநுஷ்டித்துப் பலத்தினை
அநுபவிப்பதற்காக அங்கே செல்ல இருக்கிற ஆரூடயோகனாய் என்றபடி-ஆரப்தயோகர் படி தமக்கு இல்லை என்கிறார் என்று கூறத்  திருவுள்ளம்பற்றி அதனை அருளிச்செய்கிறார் ‘இங்கே இருந்து’ என்று  தொடங்கி. ‘சாதனங்களைச் செய்கின்றவர்களிலே’ என்றது, சாதன  அநுஷ்டானம் செய்ய ஆரம்பித்த ஆரப்தயோகரிலே என்றபடி. ஆக, மேல்  திருப்பாசுரத்தில் “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்று  சொன்ன உபாயம் இன்மையை, இத்திருப்பாசுரத்தில் “அங்குற்றேன்  அல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்று வேறு வகையாக  அநுபாஷிக்கிறார் என்பதாம்.

இலங்கை செற்ற அம்மானே – 1தம் தலையில் ஒன்றும் இல்லாமையைக் கண்டார், ஒன்றும் இல்லாதார் பெற்ற இடத்தைப் பார்க்கிறார்; கைம்முதல் அற்றவன் முன்பு ஈட்டி வைத்த செல்வத்தை வாங்கிப் பார்க்குமாறு போலே. 2தன்பேறாகக் கொள்ளுமவன் என்பார் ‘அம்மானே!’ என்கிறார்

மங்க – மாள. 2விளக்குப்பிணம் போலே காண ஒண்ணாதவாறு செய்தபடி.

எய்தக் கூவுதல் ஆவதே – நீ  எனக்குக் கைப்படும்படியாக விரும்புதல் ஆவதே. எனக்கு-வலி இல்லாதான் ஒருவன் தலையிலே ஒரு மலையை வைத்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு

நெஞ்சிடம் கொண்ட’ என்றதனால் திரவிய குணங்கள் போலே சேர்ந்தான் என்பதனைத் தெரிவித்தபடி4திரவியமாக இருக்கச்செய்தேயும் குணங்களைப் போன்று சிலபொருள்கள் சேரக் காணா நின்றோமே யன்றோ.

பூதாநாம் ய : அவ்யய: பிதா” என்பது, மஹாபாரதம் ஸஹஸ்ர நாமம்.–உயிர்களுக்கு எவன் அழியாத தந்தையோ” என்கிறபடியே, நாலு நாட்கள் மணற்கொட்டகம் இட்டு விளையாடுமாறு போலே அழியும் தாயும் தமப்பனும் அன்றோ அவர்கள், ஒருநாளும் அழியாத மாதா பிதாக்கள் அன்றோ இவர்கள்.

சர்வேஷாம் ஏவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ:
   கச்சத்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:”-  
என்பது, மஹாபாரதம் ஆரண்ய பர்வம். பாண்டவர்களைப் பார்த்து   மார்க்கண்டேயர் கூறியது

வேத வேள்வி அறா – வேத ஒலியும் வைதிக கார்யங்களின் கோலாகலமும் மாறாதே செல்லுகை. 3பிராப்பிய விரோதியாதல் பிராபகவிரோதியாதல் இல்லாமையாலே, நாய்ச்சி மாருடைய கலவியைப் போன்று நித்தியமாய்ச் செல்லாநிற்கும். 1காதலியை அணைக்கிறதற்கு வேறு ஒரு பலம் உண்டாகில் அன்றோ இதற்கு வேறு ஒரு பலம் உண்டாய் அவ்வளவிலே தலைக்கட்டுவது.

புள்ளின்வாய் பிளந்தாய் மருதிடை போயினாய் எருது ஏழ் அடர்த்த – 2கலியர் சோறு இட்ட நாட்களை எண்ணுமாறு போன்று, பண்டு உபகரித்த படிகளைச் சொல்லுகிறார். பகாசுரனை அழித்தாய், இரட்டை மருதமரங்களைப் பொடிபடுத்தினாய், இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக நெரித்தாய்.

தாய்முகமே பார்த்துக் கிடக்கும் குழந்தையைப் போலே2“வத்யதாம் – கொல்லுதற்குரியவன்” என்கிற மஹாராஜரையும், அவரிலும் கொடிய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ விபீஷணாழ்வான் தெளிவு போன்ற தெளிவினையுடையவர்கள் என்னுதல்.

ஆத்ம சமர்ப்பணம் செய்கையாவது5இராஜமகேந்திரன் படியை (நம் பெருமாள் திருமார்பில் அணிந்துகொள்ளும் ஒரு பதக்கம்.)எடுத்து ‘என்னது’ என்று கொண்டு பெருமாளுக்குக் கொடுப்பாரைப் போன்று களவு வெளிப்படுதலே அன்றோ.

தமப்பன் இல்லாத இழவுதீரச் சக்கரவர்த்திக்குப் பிள்ளையானாற் போன்று, வேதமும் இவர்பக்கல் வந்து பிறந்தது ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது-வேதமும் இவர் பக்கல் வந்து பிறந்து நிறம்பெற வேண்டும் என்றபடி.

வைகலும் வானோர்க்கு ஆராவமுதே – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்தியசூரிகளுக்கு இனியபொருளாகப் பெறுவர். 5தேவசாதிகள் அமுதம்பெற்றுக் கிருதார்த்தராமாறுபோலே, நித்தியசூரிகள் ‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘அமுதே’ என்கிறார்.

கடலில் அமிழ்ந்துவார் அங்கே ஒரு மிதப்புப் பெற்றுத் தரிக்குமாறு போலே, “இவ்வளவிலும் ‘வேறு ஒன்றாலே பேறு’ என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல் என்னும் மயக்கத்தைத் தவிர்த்தானே அன்றோ” என்று கொண்டு தரித்தார்;

அம்பு எய்வார் படை திரட்டிக்கொண்டு போமாறு போல, திருவயோத்தியிலுள்ளாரில் மரங்கள் அகப்பட ஆர்த்தியில் தன்னில் குறைந்த பொருள்கள் இல்லை அன்றே, நம் ஆர்த்தி கண்டு மீண்டிலராகிலும் ஆர்த்தர் பலரையும் கண்டால் மீளாமை இல்லை என்று பார்த்து

இனிமையாலும் ஈடுபட்டு, அழகு முதலாயினவற்றாலும் போர நொந்து, பால் குடிக்கும் குழந்தை தாய் பக்கலிலே கிட்ட முகம் பெறாவிட்டால் அலமந்து நோவு படுமாறு போலே, அவன் சந்நிதியிலே தளர்ந்து கிடந்து கூப்பிட்டு, 2இன்னம் எத்தனைத் திருவாசல் தட்டித் திரியக்கடவேன் என்னும் ஆர்த்தியோடே தலைக்கட்டுகிறார்.

ஆராஅமுதே – 1ஸஹபத்நியா – பத்திநியோடு கூட” 2ஆழங்காலிலே இழிவார் ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக் கைப்பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே, பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக்கூடக் கொண்டாயிற்று இழிவது

அழிக்கிறவன் ‘ஆபரணங்கள்’ என்று பாராதே உருக்கி அழிக்குமாறு போலே காணும் இவனும் உருக்கி அழிக்கிறபடி

கருத்து அறிந்து அடிமை செய்வாரைப் போலே. அன்றிக்கே, 2சேஷ வஸ்துக்களின் தொழில்கள் முழுதினையும் சேஷி தனக்கு அடிமையாக நினைத்திருக்கிறபடியால் ‘கவரி வீசும்’ என்கிறார் -அஹ்ருத  ஸஹஜ தாஸ்யரான நித்தியசூரிகளுடைய அவதாரமாகையாலே கூடும்   என்றபடி. அஹ்ருத – அபகரிக்கப்படாத.

கர்மம் அடியாக இவன் பிறக்குமாறு போலே அன்றோ அநுக்கிரஹம் அடியாக அவன் பிறக்கும்படி என்பார் “வேண்டுமாற்றால் ஆவாய்” என்கிறார்.

சாதநாநுஷ்டானம் செய்து வாரும்’ என்று நளன் தமயந்திக்கு வழி காட்டினாற்போலே கைவிடப் பார்த்தாயோ?

பெறுவது உன்னையேயாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன், என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன். 2மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூபவிரோதியானது எனக்கு வேண்டாம். 3கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது, இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்

விஷயம் அண்மையில் இருக்கச்செய்தே ஆகாசத்தைப் பார்க்கிறது. நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே. ‘ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாற் போலே தம் தசையைப் பார்த்துத் தோற்றுகிறானோ’ என்று பார்த்து.

ஆடிக் காண்பன் – ‘இத்தனை சோறு இடுகிறோம், ஆட வல்லையோ’ என்றால், கலியர் ஆடுமாறு போலே ஆடியும் பார்ப்பன்

செந்தாமரைக்கண்ணா2கையிலே நிதி உண்டாயிருக்க வறியர்க்கு இடாதாரைப் போலே. வேறு முகத்தாலே என் ஜீவனமாய்க் கிடக்கிறாய் இல்லை, என் ஜீவனம் ஒருமுகம் செய்து கிடக்கிறதன்றோ

உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே – முலை கொடுத்துச் சிகித்சிப்பாரைப் போலே, முற்படத் திருவடிகளைத் தந்து, பின்பு பிறவியின் சம்பந்தத்தை அறுக்க வேண்டும்.

நிழலும் அடிதாறும் ஆனோம்” என்கிறபடியே, மிதிஅடியாம்படி ஸ்ரீசடகோபன் ஆக்கி. 2பெருங்காற்றில் பூளைபோலே யாதானும்பற்றி நீங்கும் விரதமாய் அன்றோ முன்பு போந்தது.

ஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த
பூளை யாயின கண்டனை 
இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வாவென நவின்றனன் நாகிளங் கமுகின்
வாளை தாவுறு கோசலை நாடுடை வள்ளல்.-  என்பது, கம்பராமாயணம்

அசைவில்லாத அமரர் – நித்தியசூரிகள். அசைவில்லாமையாவது, பிரமன் முதலியோருடைய அழியாமை போலே 3ஆபேக்ஷகமன்று. கல்ப காலத்தை எல்லையாக உடையது அன்று என்றபடி.-ஆபேக்ஷிகமன்று’ என்றது, நம்மைக்காட்டிலும் நாலுநாள் சாவாதிருக்கிற  தன்மையையிட்டு, அவர்களை ‘அமரர்’ என்னாநின்றதேயன்றோ; அப்படி  அன்று என்றபடி.

முடிவில், 1இப்பத்தைப் பழுது அறக் கற்க வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகரைப்போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனியர் ஆவர் என்கிறார்.

மேல் கொடிதான நரகம்” என்னாநிற்கச்செய்தேயும், விஷயத்தில் ஈடுபாடுடையவர்கள் அது பாராதே மேல் விழுமாறு போலே, இது கற்றாரை எம்பெருமானும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மேல்விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள் என்றபடியாம்

ஏகதத்விதத்ரிதர்கள் சுவேதத்தீபத்தைச் சென்று கிட்டி, உள்ளுப் புகுகைக்குத் தகுதியில்லாமையாலே புறம்பே நின்று, அங்குள்ளார் எம்பெருமானைக் கண்டு படுகிற சம்பிரமத்தைச் செவியாலே கேட்டு நிற்பது, கண்ணாலே காணப் போகாதொழிவதாய்க் கிடந்து பட்டாற்போலே கிடந்து கூப்பிடுகிறாராயிற்று இவரும். 

அவ்வூரிற் சோலைக்கு நீர் இத்தலையில் மெலிவு போலே காணும். ஆகாயத்தைக் கண்செறி இட்டாற் போல் இருத்தலின் ‘வானார்’ என்கிறது

காட்சிக்கு இனியதாக இருத்தலின் ‘வண்கமுகு” என்கிறது. “குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளை முத்தும், தலையார்ந்த இளங்கமுகு” என்னுமாறு போலே இருத்தல்

மனத்தினை உள் முகமாக்கி அநுபவிக்க மாட்டாதார்க்கு, தன்னை அவர்கள் கண்களுக்கு இலக்காக்கிக்கொண்டு உபாயவஸ்து நிற்கிறாப் போலே காணும் இவையும். யாவர்க்கும் தொழுகுலமான சர்வேச்வரனுடைய உபாய பாவத்தில் நிலை போலே. நித்தியப் பிராப்பியனாய்க் கொண்டு அங்கே இருக்கிறவன்,

இயல்பாயமைந்த சேஷத்வத்தையுடைய நித்தியசூரிகளும், சம்சார சம்பந்தம் நீங்கப்பெற்ற முக்தர்களும், பாவங்கள் எல்லாம் நீங்கி இனிமேல் சரீர சம்பந்தம் இல்லை என்னும்படி முடிவான சரீரமுடையவர்களான முமுக்ஷு க்களும் ஆகிய இவர்கள், மனிதப்பிறவியையும் விலங்கின் பிறவியையும் தாவரப் பிறவியையும் விரும்பினவர்களாய்க் கொண்டு ஸ்ரீரங்கத்தை எப்போதும் பற்றியிருக்கிறார்கள் என்று பௌராணிகர்கள் சொல்லிவைத்தார்கள்; இப்படிப்பட்ட மனித விலங்கு தாவரங்களின்பொருட்டு நமஸ்காரம் ஆகுக” என்றார் பட்டர். 2இராமாவதாரத்திலும் ஒரு இலக்குமணன் முதலியோர்கள், வானரங்களின் உருவத்தை அடைந்தார்கள், விபீஷணன் முதலியோர் பற்றிக் கிடந்தார்கள். அது போன்று. 1அதிலும் நடையாடித் திரிகின்றவர்கட்குப் போகைக்கும் தகுதி உண்டேயன்றோ, அதுவும் இல்லையே அன்றோ தாவரங்களுக்கு.

அஹ்ருத ஸஹஜ தாஸ்யா: ஸூரய: ஸ்ரஸ்தபந்தா:
விமல சரம தேஹா இத்யமீ ரங்கதாம”
மஹித மநுஜதிர்யக் ஸ்தாவரத்வா: ஸரயந்தே
ஸுநியதம் இதி ஹஸ்ம ப்ராஹு: எப்யோ நம: ஸ்தாத்”– என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்

இலக்குமணன்  முதலியோர்கள்-நித்தியர்கள். வானரங்களின் உருவத்தையடைந்தவர்கள்  -தேவர்கள். விபீஷணன் முதலியோர்-முமுக்ஷு க்கள்.

வானுளோ ரனைவரும் வான ரங்களாக்
கானினும் வரையினும் கடித டத்தினும்
சேனையோ டவதரித் திடுமின் சென்றென
ஆனன மலர்ந்தனன் அருளின் ஆழியான்.

வளையொடு திகிரியும் வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்
இளைஞர்கள் எனவடி பரவவேகி நாம்
வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன்.–  என்பன, கம்பராமாயணம்

நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும் போலே‘கோனாரை அடியேன்’ என்கிறாள். 3அவனைச் சொல்லும் போது தம்மையிட்டல்லது சொல்லப் போகாது; தம்மைச் சொல்லும்போதும் அவனையிட்டல்லது சொல்லப்போகாது. 4‘கோனாரை’ என்ற இடம், நாராயண சப்தார்த்தம்; ‘அடியேன்’ என்ற இடம், பிரணவார்த்தம். பிரணவம், ஜீவப்பிரதானம்; நாராயண பதம், ஈச்வரப் பிரதானம். ‘அடி கூடுவது என்று கொலோ’ என்ற இடம், நான்காம் வேற்றுமையின் பொருள்; 5‘என்று கொலோ’ என்று பிரார்த்தனையோடு தலைக்கட்டுகிறதன்றோ.

அடியேன் அடிகூடுவது என்று கொலோ – 1ஸ்வரூபத்துக்குத் தகுதியாக வேற்றுமையின் பொருளோடே தலைக்கட்டுகிறபடி. 2எல்லா அளவிலும் சொரூபம் அழியாதன்றோ. தாமாகவுமாம், பிராட்டிமார் தசையை அடைந்தவராகவுமாம், அதற்கும் அவ்வருகே சில அவஸ்தைகளையுடையராகவுமாம், எல்லாக் காலத்திலும் ஸ்வரூபம் மாறாது; 3பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்களாகிற நிலை வேறுபாடுகளை அடைந்தாலும் மண்ணான வடிவுக்கு அழிவில்லையன்றோ4தாமான தன்மையில் 5“அடி தொழுது எழு” (திருவாய். 1. 1 : 1.)என்பர்; பரோப தேசத்தில் 6“திண்கழல் சேர்” (திருவாய். 1. 2 : 10.)என்பர்; தூதுவிடப்புக்கால் 7“திருவடிக்கீழ்க் குற்றேவல்” (திருவாய். 1. 4 : 2.)என்பர்; பிறரைச் சொல்லப் புக்கால் 8“தாட்பட்ட தண்துழாய்த் தாமம் காமிற்றாயே” (திருவாய். 2. 1 : 2.)என்பர்; கலங்கி மடல் எடுக்குமளவானாலும் 9“தலையில் வணங்கவுமாங்கொலோ” (திருவாய். 5. 3 : 7.)
என்பர்; பித்தேறிச் சொல்லும்போதும் 10“கண்ணன் கழல்கள் விரும்புமே” (திருவாய். 4. 4 : 8.)என்னுதல், 11“ஏறிய பித்தினொடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு” (திருவாய். 4. 4 : 7)என்னுதல் சொல்வார் இத்தனை.

அத்தலையில் உள்ளவை அடங்கக்கொண்டு தந்தாமது ஒன்றும் கொடாதே போருகை அந்நிலத்துள்ள பொருள்கட்கெல்லாம் ஸ்வபாவம் கண்டீர். 3கலம்பகன் அல்லது சூடப்பொறாத சுகுமாரரைப் போலே காணும் தென்றலின் ஸ்வபாவம் என்பாள். ‘பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித் தென்றல் மணம் கமழும்’ என்கிறாள். இதனால், பூவில் பரிமளத்தைத் தேடுவாரைப் போலே காணும் இது பரிமளத்தில் கலம்பகன் தேடுகிறபடி என்பதனைத் தெரிவித்தபடி. 4செருக்கராயிருக்கும் இராஜபுத்திரர்கள் முலைசரிந்தாரைப் ‘போகத்திற்குத் தகுதியுள்ளவரல்லர்’ என்று கழிக்குமாறு போன்று, கழிய அலர்ந்தவற்றைப் பாராமல் போருகிறது என்பாள் ‘புது மாதவி மீதணவும்’ என்கிறாள்

வாஹி வாத யத: காந்தா”(  ஸ்ரீராமா. யுத். 5 : 6.)காற்றே வீசுக” என்று, ( ரசோக்தியாக   அருளிச்செய்கிறார் ‘காலைப்பிடித்து’ என்று தொடங்கி. காலை – காற்றை.)இவர் கையாலே தொட வேண்டாதபடி இடைச்சுவரான கடல் கிடந்தேயாகிலும், ஒரு படுக்கையிலே இருப்பாரைப் போலே அவள் இருந்த பூமியிலே இருக்கப் பெற்றோமே என்றாரேயன்றோ பெருமாள். 2காலைப் பிடித்து ‘நீ இப்படிச் செய்ய வேணும்’ என்று வேண்டிக்கொள்ளுகிறாரேயன்றோ இவருடைய செல்லாமை. நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவது என்றுகொல் – 3பூவில் சுண்ணம் பெறுவது என்றோ. மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலக் காணும். 4இவர்கள், இப்போது பிரிய நின்றார்களேயாகிலும் கலக்கும்போது அநுபவம் இவர்களுக்கும் ஒத்திருக்குமாதலின் ‘அடியோம்’ என்கிறாள். 5அவன் வந்தாலும் இவளுக்கு முன்னே கொண்டாடுவது இவர்களையன்றோ

அவன்தான் வந்து இவள் பக்கல் பாவபந்தம் உறைக்க உறைக்கக் கொண்டாடுவது இவர்களையாகையாலே, பெரிய திருநாள் சேவித்தார் இரட்டைகள் அழுக்கானாலும் மடிகுலையாமல் வைக்குமாறு போன்று, இவர்களும் அவன் கொடுத்த மாலையின் செவ்வியழிந்ததேயாகிலும் மாறாதே வைத்துக்கொண்டிருப்பர்களே அன்றோ; அது இவளுக்கு நினைவூட்டுவதாய் நலியாநின்றதாதலின் ‘சூடு மலர்க் குழலீர்’ என்கிறாள் என்னுதல்.

தொண்ணூற்றைந்து வயதுக்கு மேலாய் ஆசையற்றவர்களாய் இருப்பாரை அன்றோ அந்தப்புரங்களுக்கு வைப்பது. “வேத்ர பாணீந்-பிரம்பைக் கையிலுடையவர்களை;” பெருமாள் விற் பிடித்தாற்போல அவர்கள் பிரம்பு பிடித்தபடி. விற்பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் பிரம்பு பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் காணும்.

இவள் தனக்கு வேத ஒலியைக் கேட்டவாறே, நாயகன் பேர் வைத்துப் புணர்த்த புணர்ப்பினைக் கேட்டாற்போலே காணும் அஸஹ்யமாயிருக்கிறபடி. 5இருவரும்கூட இருந்து கேட்கக்கூடியதனைத் தனியிருந்து கேட்கப் புக்கால் பொறுக்க ஒண்ணாதேயன்றோ

திருவல்லவாழ் நீடு உறைகின்ற பிரான் – அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே பிற்பாடர்க்கு உதவும்படி சிரமஹரமான திருவல்லவாழிலே நித்தியவாசம் செய்கிற உபகாரகன். நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே – 1குணாகுண நிரூபணம் பண்ணாதே (சௌலப்யம். ஸ்ரீ வாமனனுக்கும் இவனுக்கும் ஒக்கும்,)எல்லார் தலைகள் மேலும் பொருந்தும்படி சுலபமான திருவடிகளைக் கொண்டு, அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாமல் நித்தியவாசம் செய்கிற உபகாரமே இங்குத்தைக்குத் தன்னேற்றம்

நிச்சலும் நலிந்து”–எனக்கு ‘அவனைக் காண வேண்டும் என்னும் ஆசை எப்பொழுதும் செல்லுகிறாப்போலே, உங்களுக்கும் ‘என்னை மீட்க வேண்டும்’ என்கிற இந்த நினைவு மாறாதே செல்லுகிறப

மச்சு அணி மாடங்கள் – 4பல நிலங்களையுடைத்தாகையாலே அலங்காரத்தையுடைத்தான மாடங்கள். மச்சு-மேல்தளம். மீது அணவும் – செல்வப் பிள்ளைகளுக்கு அணுக்கன் இட்டாற்போலே காணும் கவிந்துகொண்டு நிற்கிறபடி.

நஞ்சு அரவின் அணை1படுக்கையும் தானேயாய்க் காத்து ஊட்டவும் வற்றாயிருக்கை- போகிகளாய் இருப்பார் விடாமல் வசிக்கக்கூடிய தேசம் என்பது.(ரம்யம் ஆவஸதம்  க்ருத்வா ரமமாணா வநே த்ரய:” என்பது, சங்க்ஷேப ராமா. 31.) 2இளையபெருமாள் கையும் வில்லுமாய் வெளிக்காவல் நிற்க, பெருமாளும் பிராட்டியுமாய்க் காட்டிலே இன்பம் அநுபவித்தாற்போலே. மூவரும் காட்டிலே இன்பத்தை அநுபவித்தார்களேயன்றோ, அப்படியே இங்கும் காவல் உண்டாயிருக்கிறபடி. அநந்த முகமான காவலே (சிலேடை.)யன்றோ.

தண் திருவல்லவாழ் கன்னல் அம் கட்டிதன்னை – கரும்பினுடைய கோது அற்ற கட்டியை. ‘இன்னமலையின் கட்டி’ என்னுமாறு போலே,

தேவர்களுடைய உப்புச்சாறு போலன்றிக்கே, ஆத்ம உஜ்ஜீவனம் பண்ணிக் கொடுக்கவற்றதாயிருத்தலின் ‘இன்னமுதம்’ என்கிறாள்.

என்றுகொல் கண்கள் காண்பதுவே-‘நான்பட்டதுபட, குழந்தை ஜீவிக்கப்பெறுவது காண்’ என்பாரைப் போலே, என் கண்களின் விடாய் தீர்வது என்றோ? என்கிறார். “முடியானே” என்கிற திருவாய்மொழியிற்கூறிய கரணங்களையுடையவர் அன்றோ. இந்திரியங்களும் தாமும் தனித்தனியே சேதன சமாதியாலே விடாய்கொள்ளுகின்றவர் அன்றோ

திருவடிகளைக் காண்பது எஞ்ஞான்றுகொலோ? அப்போது அலர்ந்த தாமரை போலே எல்லையற்ற போக்யமான திருவடிகள் என்பாள் ‘மலர்த்தாமரைப் பாதங்கள்’ என்கிறாள். 1அடியிலே இவர்க்குத் தானே அன்றோ ருசியை உண்டாக்கினான்(தமக்குத் திருவடிகளிலே ருசி பிறந்தது வாமனன் திருவருளாலே
என்பது கருத்து.). 2‘அடிகள் அடிகள்’ என்று வாய்புலற்றும்படி அன்றோ திருவடிகளில் இனிமை இருப்பது.

பாவை நல்லீர் – 1இவளை விலக்குவதற்கு ஆற்றல் இல்லாதவர்களாய் மரப்பாவைகளைப் போன்று இருந்தபடி. அன்றிக்கே, எழுதின பாவை போன்று இருந்தார்கள் என்னுதல். அன்றிக்கே, விலக்காமையாலே மகிழ்ந்து பெண்களில் நல்லரானவர்களே! என்று விளிக்கிறாள் என்னுதல்-பாவை” என்பதற்கு, மரப்பாவை என்றும், கொல்லிப்பாவை என்றும்,  பிரதிமை என்றும் மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார் ‘இவளை விலக்குவதற்கு’ என்று தொடங்கி. முதற்பொருள், விலக்குதற்கு  ஆற்றல் இல்லாமையைக் குறித்தது. இரண்டாவது பொருள், அழகிய  உறுப்புகளையுடையவர்கள் என்பதனைக் குறித்தது. மூன்றாவது பொருள்,  ஸ்வாதந்திரியம் இல்லாதவர்கள் என்பதனைக் குறித்தது.

நாடொறும் வீடின்றி”–நித்திய அக்நிஹோத்ரத்தைப் பிரிக்கிறது. 1“ஒழிவில் காலமெல்லாம்” என்கிறபடியேயன்றோ இவர் பிரார்த்திப்பது. 2ஆசாரிய உபதேசத்தை நம்பி விரும்புகிற நம்மைப்போல் அன்றியே, அடிமை ரசித்து ஆசையாலே விரும்புகிறாரே அன்றோ.

நல்லுதலீர் – 3அவன் வந்த உபகாரத்துக்கு அவன் திருவடிகளிலே விழுந்து வணங்கிய வணக்கத்தினால் புழுதி படிந்த நெற்றியுடையவர்களாக உங்களைக் காண வல்லேனோ.-தலையில் வணங்கவுமாங்கொலோ” (திருவாய். 5. 3 : 7.)என்று தொழக் கடவளே, அப்போது இவர்களும் தொழுவர்களே; இவளுக்குக் கைங்கர்யத்தில் உகப்புப்போலே, இவள் பேறே தங்களுக்கு உகப்பாயிருக்குமவர்களே.

கழல்வளை பூரிப்ப 1“வெள்வளை” (திருவாய். 10. 3 : 7.)என்னுமாறு போலே. ‘கழல்வளை’ என்று, வளைக்கு விசேடணமாய் விட்டது காணும். 2இவளைக் கைவிடுகையாலே அன்றோ இது விசேடணமாக வேண்டிற்று. (இவளை அவன் கைவிடுகையாலே என்றும், இந்த வளை கையை  விடுகையாலே என்றும் இரு பொருள்படும்.)

குழல் என்ன யாழும் என்ன குழல் என்னவுமாய் யாழ் என்னவுமாய் இருக்கை. 5நாட்டில் இனியவற்றை எல்லாம் சேரக் கேட்டாற்போலே இருக்கை6(விஷ்ணுநா ஸத்ருஸோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஸந:”   , ஸ்ரீ ராமா. பால. 1 : 18.)“வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்”என்னுமாறு போலே

மழலை வரி வண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ் – இளமையோடு கூடியதாய்க் காண்பதற்கு இனியதாயிருக்கின்ற வண்டுகள், பிரீதிக்குப் போக்குவிட்டுப் பாடாநின்றுள்ள திருவல்லவாழ். செருக்கருமாய் ஸுகுமாரருமாயிருப்பார், ‘மரம்’ என்று சந்தனத்தைக் கழித்துப் புழுகு நெய்யை ஏறிட்டுக்கொண்டு திரியுமாறு போலே, இவையும் இயலைவிட்டு இசையையே பாடுகின்றனவாதலின் ‘இசை பாடும்’ என்கிறது.

ஆராய்ந்து அருளிச்செய்யப்பட்ட திருநாமங்களைப் போன்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள்,

சிறந்தார் பிறந்தே – 2ஒருவனுக்குப் பிறக்கை போக்கித் தாழ்ச்சி இன்றிக்கே இருக்க, அவனுக்குப் பல பிறப்பாய் ஒளி வருமாறு போலே, இவர்களும் இங்கே பகவானுடைய குணங்களை அநுபவம் பண்ணுகையாலே சீரியர்கள். 3சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்” (திருவிருத்தம்.79.) என்னக் கடவதன்றோ

இரகு வம்சத்தில் அவதரித்தவரே! உம்மை நீங்கினால் சீதா பிராட்டி உயிர் வாழாதது போன்று, நானும் உயிர் வாழ மாட்டேன்” என்கிறபடியே, லாபாலாபங்களில் பிராட்டியையும் தம்மையும் ஒரு தன்மையராகச் சொன்னாரன்றோ இளையபெருமாள். (நச ஸீதா த்வயா ஹீநா நச அஹமபி ராகவ
முஹூர்த்தமபி ஜீவாவ: ஜலாந்மத்ஸ்யாவிவ உத்ருதௌ:   ஸ்ரீராமா. அயோத், 53 : 31.)(ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி”
    ஸ்ரீராமா. உத். 40 : 16.)4“சுவாமியே! சிறந்த பிரீதியானது எப்பொழுதும் தேவரீரிடத்திலேயே நிலைத்து விட்டது, பக்தியும் நியதமாக இருக்கிறது, என் எண்ணமும் வேறிடத்தில் எனக்குச் செல்வது இல்லை” என்று, திருவடி ஸ்ரீராமாவதாரம் ஒன்றிலும் சக்தனாயிருக்குமாறு போன்று, இவர் எல்லா அவதாரங்களிலும் எல்லாச் செயல்களிலும் அகப்பட்டிருப்பார் ஒருவர். 1அர்ச்சாவதாரத்தில் தம் அபேக்ஷிதம் பெற ஆசைப்பட்டவர், அது கிடையாமையாலே அவதாரங்களிலே போகிறார்; ‘விபவம் உள்ள இடத்தே சென்றால் சிறிது அபேக்ஷிதம் கிடைக்கும்’ என்று இருப்பரே. நன்று; அவதாரங்களிலே இழந்தார்க்கும் 2இழவு தீர்க்கிற இடம் அர்ச்சாவதாரமாயிருக்க, இதனை விட்டு, ‘பெறலாம்’ என்று அவதாரமுள்ள இடம் தேடிப் போகையாவது என்? என்னில், அர்ச்சாவதாரத்தில், கண்களால் காண முடியாதவனான தன்னை, சம்சாரிகள் கண்களுக்கு விஷயமாக்குகையும் விரும்பினவை அனைத்தையும் கொடுக்கையும் ஒழிய, குளிர நோக்குதல், வினவுதல், அணைத்தல் செய்யக் கடவோம் அல்லோம் என்று சங்கல்பித்திருக்கையாலே, 3‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி அதிநிர்ப்பந்தம் செய்யக் கடவோமல்லோம்’என்று,(ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா  ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே”   ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 2.) 1“அந்தக் கிருஷ்ணனும் துவஜம், வஜ்ஜிரம், தாமரை என்னும் இந்த ரேகைகளை அடையாளமாகவுடைய கைகளாலே நன்றாகத் தொட்டு இழுத்து அன்போடு கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்” என்னும் கிருஷ்ணாவதாரத்திலே போந்தார் அண்மைக் காலமாகையாலே.

இவ்விடத்திலே,  “கூரத்தாழ்வான் ஆர்த்தராய்ச் சரணம் புக, பெருமாளும் இரங்கி ‘மூன்றாம்  நாளைக்கு வீடு தந்தோம்’ என்ன, ‘ஆழ்வான் திருமதிளுக்குப் புறம்பானார்’  என்னக் கேட்டு உடையவர் ஓடிச்சென்று, ‘ஆழ்வான் நாம் இங்கே இருக்க  உமக்குப் பரமபதத்தே போக வேண்டிற்றோ’ என்ன, அடியேன்
சம்சாரத்திலே அடிக்கொதிப்பாலே மறந்தேன்’ என்ன, ‘ஆகில் நாமும் சரணம் புக்கால் இன்னம் சிலநாள் ஆழ்வானை இங்கே வைக்க இரங்குவர்’  என்று திருவாசலளவும் சென்று, ‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பத்தைக்  குலைக்க வேண்டா’ என்று மீண்டு எழுந்தருளினார்” என்ற சரிதம்  அநுசந்திக்கத் தகும். என்றது, நான் ஒருவன் தோன்றிப் பெருமாளை  இரண்டு வார்த்தை சொல்லுவாராகச் செய்யலாமோ என்றபடி. ‘அதி  நிர்ப்பந்தம் செய்யக்கடவோம் அல்லோம்’ என்கையாலே, நிர்ப்பந்தித்தால் செய்வர் என்பது கருத்து.

கல் கண்ட குழியிலே இரவிலே விழுவாரைப் போன்று, பருவம் முற்றினவளவிலே “எத்திறம்” என்று மோஹித்து விழக்கடவ இவர், அதற்கும் அவ்வருகே சென்று இழிகிறாரன்றோ, கலக்கம் இருக்கிறபடி. ‘எத்திறம்’ என்று அங்கே ஆறு மாதங்களும், ‘பிறந்தவாறும்’ என்று இங்கே ஆறு மாதங்களும் மோஹித்துக் கிடந்தார் என்று பிரசித்தமன்றோ! (ததவஸ்தம் து பரதம் ஸத்ருக்ந: அநந்தரஸ்தித:”   ஸ்ரீராமா. அயோத். 87 : 4.)2ஸ்ரீபரதாழ்வான் ஸ்ரீராமபிரானுடைய பிரிவாலே மோஹித்துத் தறைப்பட்டுக் கிடக்க, தாய்மார் அடங்கலும் சுற்றும் பார்த்து நிற்க, “சத்ருக்நாழ்வான் செயலற்று நின்றான்” என்கிறபடியே, ஸ்ரீ சத்துருக்நாழ்வான் கிட்டவுங்கூடப் பயப்பட்டுச் செயலற்றவனாய் நின்றானன்றோ. 3அப்படியே, நல்லார் நவில் குருகூரன்றோ, உலகத்தில் அறிவுடையாரங்கடலும் திரண்டு இவர் படிகளைக்கண்டு அறிவு கெடும்படி அன்றோ இவர் கலங்கிக் கிடந்த கிடை.

(க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந:   மோஹியித்வா ஜகத்ஸர்வம் கத:ஸ்வம் ஸ்தாநமுத்தமம்”   பாரதம்).நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணன், பூமியின் பாரத்தை நீக்கி உலகத்தையெல்லாம் மோஹிக்கச் செய்து மேலான இடமான தன் பரமபதத்தை அடைந்தார்” என்று, வந்து திருவவதாரம் செய்து, அநுகூலர் காரியங்கள் அடையத் தலைக்கட்டி, பிரதிகூலரையடைய முட்கோலுக்கு இரையாக்கி, அனுகூலரையடையக் கண்களாலே விழவிட்டு, இரு திறத்தாரையும் நோவுபடுத்தி, இங்கு நின்றும் போய்த் தப்பப் பெறுவதே! என்கிறது. “ஸ்வம் ஸ்தாநம் உத்தமம் – தன்னுடைய உத்தமமான ஸ்தானத்தை” என்கிறபடியே, இங்குள்ளாரடங்கலும் எதிரம்பு கோக்குமாறு போலேயன்றோ அங்குள்ளாரடங்கலும் எதிர் ஏற்கப் போனபடி

ஏறு“பாய்ந்ததும்   பொய்கையிலே பாய்ந்தாற்போலே இரா நின்றதாயிற்று-“பாய்ந்ததும் –அவன் சௌகுமார்யத்தையும் அவற்றின்  கொடுமையையும் நினைக்கையாலே, யமன் வாயிலே விழுந்தாற்போலே  இருந்தது இவர்க்கு; அவனுக்கு அவளுடைய கலவிக்குக் காரணமாகையாலே  பொய்கையிலே பாய்ந்தாற்போலே சுகரூபமாய்த் தோன்றியது என்றபடி

(வ்யாதிதாஸ்ய: மஹாரௌத்ர: ஸ: அஸுர: கிருஷ்ணபாஹுநா   நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:”  என்பது ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 16 : 7).நன்கு திறந்த வாயையுடையவனும் மஹா பயங்கரமானவனுமான அந்த அசுரன் இடியினாலே பிளக்கப்பட்ட மரம் போலே கிருஷ்ணனுடைய திருக்கையாலே இரண்டு கூறு செய்யப்பட்டவனாய்க் கீழே விழுந்தான்” என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம்

நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரைக்கண்கள் நீர் மல்க பையவே நிலையும் – பருவம் நிரம்புவதற்கு முன்பு, தான் பிரதிகூலரை அஞ்சப்பண்ணுமாறு போலே காணும் பருவம் நிரம்ப நிரம்ப அநுகூலர்க்குத் தான் அஞ்சும்படியும்

சேதனனைக் கொண்டு காரியங் கொண்டதோடு, அசேதனத்தைக்கொண்டு காரியங் கொண்டதோடு வாசி இல்லை இவனுக்கு. சிவன் தன்னோடு அவன் கையில் வில்லோடு வாசியில்லை இவனுக்கு. 3காரண நிலையில் சித்து அசித்துக்களைக் கொண்டு காரியங்கொண்டதைப் போன்றதாயிற்று. 4முன்பு அவன்தானே செய்வானாகக்கொண்டு எடுத்துப்பார்த்தான் அன்றோ; அது முடியாதொழிய, பின்னர் இவன் உள்ளீடாய் நிற்கையாலன்றோ செய்து தலைக்கட்டவல்லனாயிற்று. 1பண்டு ஓர் அரசன் “சிவனே பரம்பொருள்” என்று எழுதி, ‘எழுத்திட்டுத் தாருங்கோள்’ என்ன, அப்படிப் பலரும் எழுதி எழுத்திடா நிற்கச்செய்தே, ஒருவர் வாராய், நீ இந்த ஓலை கெடாமே நோக்கி வைத்தால் அன்றோ இவனுடைய பரத்துவம் சாதிக்கலாவது; நீ நினைக்கிற தேவதைக்கு உண்டாவ உயர்வுகள் ‘சர்வேச்வரனாலே’ என்று பிரமாணங்கள் சொல்லா நின்றன; ஆனபின்னர், இன்று, நீ சொல்ல நான் எழுந்திட்டுப் போகிறேன்; நாளை ஒரு விவக்ஷிதன் தோன்றி ‘இவன் அறிவீனனாயிருந்தானே!’ என்னக் கேட்பதில் இன்று நீ நினைத்ததைச் செய்துகொள்ள மாட்டாயோ” என்றார்.

விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய அமித தேஜஸ:
   தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸ விஷேஹே மஹேஸ்வர:  , பாரதம் கர்ண பர்வம்.

மலைபோற் பொறுத்தாரும் தாஅம், பணிவில்சீர்ச்
செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்
தொல்புகழ் தந்தாரும் தாம்”– , பரிபாடல்.

அவத்தப்புன் சமயச்சொற் பொய்யை மெய்யென்று     அணிமிடறு புழுத்தான்தன் னவையின் மேவிச்
சிவத்துக்கு மேற்பதக்குண் டென்று தீட்டும்    திருக்கூர வேதியர்கோன் செவ்வி பாடப்
பவத்துக்கம் பிணிநீங்க நரகந் தூரப்    பரமபதம் குடிமலியப் பள்ளி கொள்ளும்
நவத்துப்புச் செங்கனிவாய்க் கரிய மேனி    நம்பெருமாள் அரங்கேசர் ஆடி ரூசல்.

 எண்ணுந்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே 2அவனுடைய ரக்ஷணத்திலும் பரப்பு உண்டாகாதே இவருடைய பாரிப்பு3எண்ண மாட்டார், எண்ணாதிருக்க மாட்டார்; ரக்ஷணத்திற்கு அவன் சமைந்தாற்போலே காணும் அழிகைக்கு இவர் சமைந்தபடி. 4இதனை நினைத்தே நாட்டார் உண்டு உடுத்துக் காலம் போக்கா நின்றார்களாதலின் ‘என் நெஞ்சு’ என்கிறார். நெருப்பின் அருகில் இருக்கும் மெழுகு போலே உருகா நின்றது என்பார் ‘எரிவாய் மெழுகு ஒக்கும்’ என்கிறார். அது ஒருகாலே உருகுதல் கரிதல் செய்யுமன்றோ, இது உருகினபடியே இராநின்றதாதலின் ‘நின்றே’ என்கிறார்.

தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே கல்லைக் கட்டிக்கொண்டு விழுந்து முடிந்துபோவாரைப் போலே கொடிய தன்மையனானவாறே முடிந்துபோனான் வாலி;

அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:”  , (ஸ்ரீராமா. யுத். 21 : 1.)ஸ்ரீ ராமன் கடற்கரையில் கடலை நோக்கிக் கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு படுத்தார்” என்கிறபடியே, கடற்கரையிலே கிடந்த கிடையும். “ப்ரதிஸிஸ்யே-எதிர்நோக்கிப் படுத்தார்” என்கிறதன்றோ, ஒரு கடலோடே ஒருகடல் பொறாமைகொண்டு கிடந்தாற்போலே இருக்கையாலே; “கருணையங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி” என்றான் அன்றோ

தருண மங்கையை மீட்பதோர் நெறிதரு கென்னும்
பொருள் நயந்துநன் னூல்நெறி யடுக்கிய புல்லில்
கருணை யங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி
வருண மந்திரம் எண்ணினன் விதிமுறை வணங்கி.

ஒன்று நன்கு உரையாய்-5அருச்சுனனுக்குச் சொன்னாற்போலே எனக்கும் உரையாய்

திண்கொள்ள – ‘மானசாநுபவத்தைப் பிரத்யக்ஷசமாநாகாரமாகப் பண்ணினோமே’ என்று நீ சொல்லுமது எனக்கு வார்த்தையன்று காண். 5கனாவில்கண்ட காட்சி போன்று மானசாநுபவம் ஆக ஒண்ணாது; நன்கு கண்கூடாகக் காண வேண்டும்.

கண்ட கனாவின் பொருள்போல யாவும்பொய்; காலனென்னும்   கண்டக னாவி கவர்வதுவே மெய்”   திருவரங்கத்தந்தாதி.

ஒருநாள் அருளாய் – 2ஒரு நாள் அமையும் என்கிறாரல்லர், விடாயின் பெருமை சொல்லுகிறார்; விடாய்கொண்டவன் ‘ஒருகால் நாக்கு நனைக்க அமையும்’ என்றாற்போலே. ‘கிட்டினால் பின்னை விடும்படி சொல்லுகிறோம் என்று.

வீற்றிருத்தலாவது, தன் ஐஸ்வர்யத்தால் உள்ள மேன்மை தோன்ற இருத்தல். 1பொற்குப்பியில் மாணிக்கம் போலே-பரபாகத்தால் வந்த அழகு

பொருவில் உன் தனி நாயகம் அவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு அருவி சோரும் கண்ணீர்-ஒப்பின்றிக்கே அத்விதீயமாய் ஐஸ்வர்யப் பிரகாசமான உன் குணங்களையும் செயல்களையும் கேட்குந்தோறும் என் நெஞ்சமானது மலைநெகிழ்ந்தாற்போன்று நெகிழ்ந்து, கண்ணநீர் அருவியாய்ப் பாயாநின்றது

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பூர்வாச்சார்யர்களின் விலக்ஷண நிர்வாஹங்கள் –ஐந்தாம் பத்து –

December 9, 2023

1. ஆளவந்தார் :

தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும் ஆஆ என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே”

பின் இரண்டு அடிகட்கு, 3“கையில் ஆழ்வார்களோடு பொருந்தினாற்போலே என்னோடே வந்து கலந்தான்” என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பணிப்பர். 1இதனை எம்பெருமானார் கேட்டருளி “இங்ஙனேயாக அடுக்கும், ‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய்’ என்றாயிற்று இவர் ஆசைப்பட்டிருப்பது; ஆசைப்பட்டபடியே திவ்விய ஆயுதங்களோடே வந்து கலந்தான்” என்று அருளிச்செய்தார். இவர் தாம் 2பூவேளைக்காரரைப் போலே, இவை காணாதபோது கைமேலே முடிவார் ஒருவரேயன்றோ. 3“கேசவன் தமர்” என்ற திருவாய்மொழி தொடங்கி லோபத்தாலே, கிருபையை, ‘விதி’ என்ற சொல்லால் சொல்லிப் போந்தவர், இப்பாசுரத்தில் அதனை ‘அருள்’ என்று வெளியிடுகிறார். 4ஸ்வரூபத்திற்குத் தகுதியாகச் சேஷியாகவே வந்து கலந்தான் என்பார் ‘அடியேனொடும் ஆனானே’ என்கிறார்.

அடியேனொடும்” என்ற  உம்மையாலே, கையில் ஆழ்வார்களோடு சேர்ந்தார்போலே என்னோடும் சேர்ந்தான் என்றபடி. “கோலத்தோடும்” என்ற உம்மை, அசை நிலை.-திருச்சக்கரம் சங்கினொடும்” என்றதனைத்  திருஷ்டாந்தமாக யோஜித்த ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாகத்தைக் குறித்தபடி.
எம்பெருமானார் நிர்வாகத்தில் “அடியேனொடும்” என்ற உம்மை, இழிவு  சிறப்பு. “கூராராழி வெண்சங்கு” என்பது, திருவாய். 6. 9 : 1.

வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்”

வெள்ளநீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் – “பிரஹ்ம ருத்திரர்கள் நடுவே நின்றது ஒரு 3முதல் களவு உண்டு, அதனைச் சொல்லுகிறது” என்று ஆளவந்தார் அருளிச்செய்ததாகத் திருமாலையாண்டாள் பணிப்பர். என்றது, சிவனையும் தன்னையும் சமமாகச் சொல்லலாம்படி திரிமூர்த்தி மத்திய நிலையைச் சொல்லுகிறது என்றபடி.(முதல் களவு’ என்றது, “மத்யே விரிஞ்ச கிரிசம்” என்கிறபடியே  அவதரித்து, அவர்களோடே ஒருசேரக் கூறலாம்படி திரிமூர்த்தி மத்திய  நிலைமையை.) இதனை எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது, அத்தனை தூரம் தேடிப் போக வேணுமோ, இவன் தன் விஷயத்திலே, 1முன்பு செய்த உபகாரத்துக்கு . (முப்புரத்தை எரித்த காலத்தில்  அந்தராத்மாவாயிருத்தல் முதலானவை.) ஓர் அளவு உண்டோ, இதுதானே அமையாதோ” என்று அருளிச்செய்தார் -கங்கையைத் தன் சடையில் ஏகதேசத்திலே தரித்த பிரபாவத்தையுடைய சிவனும் உன் பக்கல் வேறு அல்லாதபடி தோற்ற நின்றமையும். என்றது, ‘சரீரமாக இருப்பவன்’ என்னுமிடம் தோன்ற நின்றபடி.

2. பிள்ளான் :

    “கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்”

அவன் என்றே கிடக்கும்5இத்தோஷங்கள் அவன் உடைமைகள் அன்றோ என்று ஈடுபட்டுக் கிடக்கும் என்று பிள்ளான் பணிப்பர். என்றது, 1அவன் கடியன் என்றால் அவன் கடுமை இப்போதே காணவேணும்; கொடியன் என்றால், அவன் கொடுமை இப்போதே காணவேணும்; அவன் அடைய முடியாதவன் என்றால், அவன் அடைய முடியாதவனானபடியை இப்போதே காணவேணும்; அவன் எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொள்பவன் என்றால், அவன் எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொள்ள நான் இழந்திருக்கவேணும்; அவன் அறிய முடியாதவன் என்றால், அவன் அறிய முடியாதவனாக இருக்கும் தன்மையை இப்போதே அறியவேணும் என்ற படியாம். அன்றிக்கே, என் நெஞ்சுக்கு 2மாயாவாத ருசி உண்டோ? அறிகின்றிலேன் என்பர் சீயர். என்றது, விசேஷணாம்சத்தில் தாத்பரியம் இன்றிக்கே, விசேஷ்யத்திற்கு அவ்வருகு அறிகின்றது இல்லை என்றபடி.(மாயாவாதிகளைப் போன்று விசேஷண அம்சத்தை  ஆதரியாமல், விசேஷ்யரூப பிரஹ்ம ஸ்வரூப மாத்திரத்தை ஆதரித்தல். )இதனால், அவனுடைய சம்பந்தம் குணம் காரணமாக வந்தது அன்று, ஸ்வரூபத்தோடு கூடியிருப்பது என்கை.

ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்”

ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் – உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம்படி  செய்து தந்தாயே என்று பிள்ளான் பணிப்பர். ஆறு – வழி. வழி – உபாயம். 1“எவ்வாறு நடந்தனை”, “இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்” என்னக்கடவதன்றோ. 2சரண் – உபேயம். அன்றிக்கே. 3இவை இரண்டாலும் உபாயத்தையே சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச்செய்வர்4ஆறு – உபாயம். “சரணம் என்கிற இந்தச் சொல்லானது உபாயம், வீடு, காப்பவன் என்ற இம்மூன்று பொருள்களைக் காட்டும்; இப்போது இந்தச் சரணம் என்ற சொல் உபாயத்தையே சொல்லாநின்றது” என்கையாலே ‘சரண்’ என்பதும் உபாயம். ஆக, 5எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றபடி. வேறு உபாயங்களை அநுஷ்டிக்கிறவர்களைக்காட்டிலும் தமக்கு உண்டான வேறுபாட்டினைச் சொல்லுகிறார் ‘எனக்கு’ என்ற சொல்லால்.

மான் ஏய் நோக்கு நல்லீர்”

மான் ஏய் நோக்கு நல்லீர் – 2“நான் திருவல்லவாழிலே போய்ப் புகும்படி உங்கள் கண்களாலே குளிர நோக்கித் திருவருள் புரிய வேணும் என்கிறாள்” என்றுபிள்ளான் பணிப்பர். மான் ஏய் நோக்கு நல்லீர் – மானை ஒத்த நோக்கினையுடையீராய் எனக்கு நல்லவர்களே! அன்றிக்கே, 1‘பிரிவாற்றாமையாலே நோவுபட்டும், சோலையழகிலே ஈடுபட்டும், நம்முடைய ஹிதவசனத்தாலே தளர்ந்தும் இருக்கின்ற இவளுக்கு, ‘போகலாகாது’ என்று விலக்கும் நம்முடைய வார்த்தைகள் செவிப்படுமாகில், இவள் மோஹிக்கும் என்று விலக்குகிற காரியம் தோற்றும்படி காதரேக்ஷணைகளாய்க் கொண்டிருக்க, ‘மான் ஏய் நோக்கு நல்லீர்’ என்கிறாள் என்னுதல். 2இவள் தனக்கு “அசூயையில்லாத” என்னும் இவ்வளவே அன்றோ வேண்டுவது.

சூடு மலர்க் குழலீர்”

    சூடு மலர்க் குழலீர்-‘உங்களைச் சூடு மலர்க் குழலாராக நான் காண்பது என்றோ’ என்று பிள்ளான் பணிப்பர்.-என்றது, 1இவள் பூவுக்கு இறாய்க்க, அவர்கள் மலர்களைச் சூடி இரார்களே யன்றோ என்றாயிற்று அபிப்பிராயம். அங்ஙன் அன்றிக்கே, 2அவன்தான் வந்து இவள் பக்கல் பாவபந்தம் உறைக்க உறைக்கக் கொண்டாடுவது இவர்களை யாகையாலே, பெரிய திருநாள் சேவித்தார் இரட்டைகள் அழுக்கானாலும் மடிகுலையாமல் வைக்குமாறு போன்று, இவர்களும் அவன் கொடுத்த மாலையின் செவ்வியழிந்ததேயாகிலும் மாறாதே வைத்துக்கொண்டிருப்பர்களே அன்றோ; அது இவளுக்கு நினைவூட்டுவதாய் நலியாநின்றதாதலின் ‘சூடு மலர்க் குழலீர்’ என்கிறாள் என்னுதல்

எம்மை நீர் நலிந்து என்செய்தீரோ”

எம்மை நீர் நலிந்து என்செய்தீரோ – 4பிராவண்யத்தை விளைப்பதற்கு முற்பாடரானால் பேற்றிற்கு முற்பாடராக வேண்டாவோ. நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ என்பதற்கு, “மாசறு சோதி” என்ற திருவாய்மொழி தொடங்கி இவ்வளவும் வர ஹிதம் சொல்லுகிற நீங்கள் என்ன பிரயோஜனம் பெற்றீர்கோள்’ என்று பிள்ளான் பணிப்பர்.

பத்தாம் திருவாய்மொழி முன்னுரை”

இருடிகளுக்குண்டான சம்சார பயத்தை ஒத்ததாயிற்று ஆழ்வார்களுக்குப் பகவானைப் பிரிந்த விரஹத்தால் வரும் கிலேசம்; 3அவர்கள், தங்கள் தங்கள் பேற்றிற்குத் தாங்கள் தாங்கள் சில முயற்சிகள் செய்யாநிற்பர்கள், இவர்கள் அத்தலையாலே பேறாகுமளவும் அசோகவனத்திலே பிராட்டியைப் போன்று துடியாநிற்பர்கள்

அது இது உது என்னலாவன அல்ல”

அது இது உது என்னலாவன அல்ல – அதுவாகவுமாம், இதுவாகவுமாம், உதுவாகவுமாம், எனக்கு இதில் ஒரு நிர்ப்பந்தம் இல்லை. என்னை உன்செய்கை நைவிக்கும் – 5அச்செயலாகவுமாம், இச்செயலாகவுமாம், உச்செயலாகவுமாம், அவற்றில் எனக்கு ஒரு தாத்பர்யம் இல்லை; உன்னுடைய செயல்களாகையும், நானாகையுமே எனக்கு நோவு படுகைக்கு வேண்டுவது. 6“இத்தால் சொல்லிற்றாயிற்று, இப்பாசுரத்தில் மூன்று பொருள்கள் சொல்லப்படுகின்றன. அவை யாவன: அனுகூல சம்ஸ்லேஷமும், பிரதிகூல நிரசனமும், மத்தியஸ்த ரக்ஷணமும்; (மத்தியஸ்த ரக்ஷணமும்’ என்றது,  நப்பின்னையைப் போன்று அந்தரங்கைகளுமன்றிக்கே,)இவற்றையே, ‘அது இது உது’ என்கிறது” என்று பிள்ளான் பணிக்கும்.

3. எம்பெருமானார்:

தேவார் கோலத்தொடும் . . . ஆனானே”

பின் இரண்டு அடிகட்கு, 3“கையில் ஆழ்வார்களோடு பொருந்தினாற்போலே என்னோடே வந்து கலந்தான்” என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பணிப்பர். 1இதனை எம்பெருமானார் கேட்டருளி “இங்ஙனேயாக அடுக்கும், ‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய்’ என்றாயிற்று இவர் ஆசைப்பட்டிருப்பது; ஆசைப்பட்டபடியே திவ்விய ஆயுதங்களோடே வந்து கலந்தான்” என்று அருளிச்செய்தார். இவர் தாம் 2பூவேளைக்காரரைப் போலே, இவை காணாதபோது கைமேலே முடிவார் ஒருவரேயன்றோ. 3“கேசவன் தமர்” என்ற திருவாய்மொழி தொடங்கி லோபத்தாலே, கிருபையை, ‘விதி’ என்ற சொல்லால் சொல்லிப் போந்தவர், இப்பாசுரத்தில் அதனை ‘அருள்’ என்று வெளியிடுகிறார். 4ஸ்வரூபத்திற்குத் தகுதியாகச் சேஷியாகவே வந்து கலந்தான் என்பார் ‘அடியேனொடும் ஆனானே’ என்கிறார்.

இரண்டாம் திருவாய்மொழி பொலிக பொலிக”அவதாரிகை”

ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைக் காண்கைக்காக நித்தியசூரிகள் இங்கே வர, அவர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார். இத்திருவாய்மொழியால்” என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பணிப்பர். அங்ஙன் அன்றிக்கே, “நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே, சம்சாரிகள் படுகிற கிலேசத்தை நினைத்து, அதற்குப் பரிஹாரமாக, ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய்மொழியிலே பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேசித் திருத்த, அதனாலே திருந்திச் சம்சாரம் பரமபதம் என்ற வேறுபாடு இல்லாமல் அங்குள்ளாரும் இங்கே வரலாம்படி இருக்கிற இருப்பைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்” என்று இங்குள்ளார் பக்கலிலே பிராதாந்யம் தோற்ற எம்பெருமானார் அருளிச்செய்வர்.

வெள்ளநீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்”

வெள்ளநீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் – “பிரஹ்ம ருத்திரர்கள் நடுவே நின்றது ஒரு 3முதல் களவு உண்டு, அதனைச் சொல்லுகிறது” என்று ஆளவந்தார் அருளிச்செய்ததாகத் திருமாலையாண்டாள் பணிப்பர். என்றது, சிவனையும் தன்னையும் சமமாகச் சொல்லலாம்படி திரிமூர்த்தி மத்திய நிலையைச் சொல்லுகிறது என்றபடி.(முதல் களவு’ என்றது, “மத்யே விரிஞ்ச கிரிசம்” என்கிறபடியே  அவதரித்து, அவர்களோடே ஒருசேரக் கூறலாம்படி திரிமூர்த்தி மத்திய  நிலைமையை.) இதனை எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது, அத்தனை தூரம் தேடிப் போக வேணுமோ, இவன் தன் விஷயத்திலே, 1முன்பு செய்த உபகாரத்துக்கு . (முப்புரத்தை எரித்த காலத்தில்  அந்தராத்மாவாயிருத்தல் முதலானவை.) ஓர் அளவு உண்டோ, இதுதானே அமையாதோ” என்று அருளிச்செய்தார் -கங்கையைத் தன் சடையில் ஏகதேசத்திலே தரித்த பிரபாவத்தையுடைய சிவனும் உன் பக்கல் வேறு அல்லாதபடி தோற்ற நின்றமையும். என்றது, ‘சரீரமாக இருப்பவன்’ என்னுமிடம் தோன்ற நின்றபடி.

    “நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்”

நின்றும் இருந்தும் கிடந்தும்” என்கிறபடியே, தம் திருவுள்ளத்திலே கிடந்தபடியும் என்னுதல். அன்றிக்கே, 2திருவூரகத்திலே நின்றபடியும், திருப்பாடகத்திலே இருந்தபடியும், திருவெஃகாவிலே கிடந்தபடியும் என்னுதல்.   ‘நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்’ என்று 3‘ஆழ்வார் பாடாநிற்க, ‘இவையெல்லாம் தொட்டிலிலே’ என்று அருளிச்செய்தார் எம்பெருமானார். தொட்டிற் பழுவைப் பிடித்துக்கொண்டு நிற்கும்படியும், தரித்து நிற்க மாட்டாமை விழுந்திருக்கும்படியும், அது தான் பொறுக்க மாட்டாமை சாய்ந்து கிடக்கும்படியும் சொல்லுகிறது. அன்றிக்கே, 4போரார் வேற்கண் மடவாள் போந்தனையும் பொய்யுறங்கி, அவள் போனவாறே எழுந்திருந்து நின்றவாறும், அடி ஓசை பட்டவாறே வந்து இருந்தபடியும், நிழல் ஆடினவாறே முன்கிடந்த தானத்தே ஓராதவன்போல் கிடந்தவாறும் என்றுமாம்

இவ்விடத்திலே,  “கூரத்தாழ்வான் ஆர்த்தராய்ச் சரணம் புக, பெருமாளும் இரங்கி ‘மூன்றாம்  நாளைக்கு வீடு தந்தோம்’ என்ன, ‘ஆழ்வான் திருமதிளுக்குப் புறம்பானார்’  என்னக் கேட்டு உடையவர் ஓடிச்சென்று, ‘ஆழ்வான் நாம் இங்கே இருக்க  உமக்குப் பரமபதத்தே போக வேண்டிற்றோ’ என்ன, அடியேன்
சம்சாரத்திலே அடிக்கொதிப்பாலே மறந்தேன்’ என்ன, ‘ஆகில் நாமும்  சரணம் புக்கால் இன்னம் சிலநாள் ஆழ்வானை இங்கே வைக்க இரங்குவர்’
என்று திருவாசலளவும் சென்று, ‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பத்தைக்  குலைக்க வேண்டா’ என்று மீண்டு எழுந்தருளினார்” என்ற சரிதம்  அநுசந்திக்கத் தகும். என்றது, நான் ஒருவன் தோன்றிப் பெருமாளை  இரண்டு வார்த்தை சொல்லுவாராகச் செய்யலாமோ என்றபடி. ‘அதி  நிர்ப்பந்தம் செய்யக்கடவோம் அல்லோம்’ என்கையாலே, நிர்ப்பந்தித்தால்  செய்வர் என்பது கருத்து.

4. கூரத்தாழ்வான்:

    “பத்தாம் திருவாய்மொழி முன்னுரை”

திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்திலே சென்று புக்கு அங்கு நிற்கின்றவனோடே பரிமாற வேண்டும் என்று மநோரதித்துக் கொண்டு போக, கால்நடை தாராமல் நடுவழியிலே விழுந்து கிடந்து கூப்பிட்டார்; இனி, “இவ்வளவில் குணாநுபவம் பண்ணியாகிலும் தரிப்போம்” என்று பார்க்க, அதுதானும் பேற்றினைப் போன்று அரிது என்னலாம்படி சைதில்யத்தை விளைப்பிக்க; எல்லா அவஸ்தைகளிலும், உன்னைப் பிரிந்து நின்றாலும் தரித்து நின்று குணாநுபவம் பண்ண வல்லேனாம்படி செய்தருள வேணும் என்று திருவடிகளிலே சரணம் புகுகிறார்.

2இருடிகளுக்குண்டான சம்சார பயத்தை ஒத்ததாயிற்று ஆழ்வார்களுக்குப் பகவானைப் பிரிந்த விரஹத்தால் வரும் கிலேசம்; 3அவர்கள், தங்கள் தங்கள் பேற்றிற்குத் தாங்கள் தாங்கள் சில முயற்சிகள் செய்யாநிற்பர்கள், இவர்கள் அத்தலையாலே பேறாகுமளவும் அசோகவனத்திலே பிராட்டியைப் போன்று துடியாநிற்பர்கள்;அவர்களுக்குத் தங்கள் தலையிலேயும் சில கிடக்கையாலே விளம்பம் பொறுக்கலாம், இவர்களுக்கு அங்ஙன் சொல்லலாவது ஒன்று இல்லையாகையாலே கிடந்து அலமாப்பார்கள். 2‘அவன் அடியாலே நம் பேறு’ என்றிருக்குமவர்களுக்கு ஒரு கண்ணழிவு இல்லையே சொல்லலாவதுஎல்லாச் செயல்களிலும் அகப்பட்டிருப்பார் ஒருவர். 1அர்ச்சாவதாரத்தில் தம் அபேக்ஷிதம் பெற ஆசைப்பட்டவர், அது கிடையாமையாலே அவதாரங்களிலே போகிறார்; ‘விபவம் உள்ள இடத்தே சென்றால் சிறிது அபேக்ஷிதம் கிடைக்கும்’ என்று இருப்பரே. நன்று; அவதாரங்களிலே இழந்தார்க்கும் 2இழவு தீர்க்கிற இடம் அர்ச்சாவதாரமாயிருக்க, இதனை விட்டு, ‘பெறலாம்’ என்று அவதாரமுள்ள இடம் தேடிப் போகையாவது என்? என்னில், அர்ச்சாவதாரத்தில், கண்களால் காண முடியாதவனான தன்னை, சம்சாரிகள் கண்களுக்கு விஷயமாக்குகையும் விரும்பினவை அனைத்தையும் கொடுக்கையும் ஒழிய, குளிர நோக்குதல், வினவுதல், அணைத்தல் செய்யக் கடவோம் அல்லோம் என்று சங்கல்பித்திருக்கையாலே, 3‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி அதிநிர்ப்பந்தம் செய்யக் கடவோமல்லோம்’என்று, 1“அந்தக் கிருஷ்ணனும் துவஜம், வஜ்ஜிரம், தாமரை என்னும் இந்த ரேகைகளை அடையாளமாகவுடைய கைகளாலே நன்றாகத் தொட்டு இழுத்து அன்போடு கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்” என்னும் கிருஷ்ணாவதாரத்திலே போந்தார் அண்மைக் காலமாகையாலே.

சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி’ என்ற இவ்விடத்திலே,  “கூரத்தாழ்வான் ஆர்த்தராய்ச் சரணம் புக, பெருமாளும் இரங்கி ‘மூன்றாம்
நாளைக்கு வீடு தந்தோம்’ என்ன, ‘ஆழ்வான் திருமதிளுக்குப் புறம்பானார்’  என்னக் கேட்டு உடையவர் ஓடிச்சென்று, ‘ஆழ்வான் நாம் இங்கே இருக்க
உமக்குப் பரமபதத்தே போக வேண்டிற்றோ’ என்ன, அடியேன்  சம்சாரத்திலே அடிக்கொதிப்பாலே மறந்தேன்’ என்ன, ‘ஆகில் நாமும்  சரணம் புக்கால் இன்னம் சிலநாள் ஆழ்வானை இங்கே வைக்க இரங்குவர்’  என்று திருவாசலளவும் சென்று, ‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பத்தைக்  குலைக்க வேண்டா’ என்று மீண்டு எழுந்தருளினார்” என்ற சரிதம்  அநுசந்திக்கத் தகும். என்றது, நான் ஒருவன் தோன்றிப் பெருமாளை  இரண்டு வார்த்தை சொல்லுவாராகச் செய்யலாமோ என்றபடி. ‘அதி  நிர்ப்பந்தம் செய்யக்கடவோம் அல்லோம்’ என்கையாலே, நிர்ப்பந்தித்தால்  செய்வர் என்பது கருத்து.

5. எம்பார் :

    “பத்தாம் திருவாய்மொழி முன்னுரை”

6. பட்டர் :

என்கொள்வன் உன்னைவிட்டு”

பொய்யே கைம்மை சொல்லி’ என்றும், ‘சில கூத்துச் சொல்ல’ என்றும், ‘உள்ளன மற்றுள வாப் புறமே சில மாயம் சொல்லி’ என்றும், பகவத் விஷயத்திலேயும் பொய் சொல்லிப் போந்தேன் என்றார்; இப்படிப் பொய்யன் ஆகைக்குக் காரணம் யாது? என்று பார்த்தார்; சரீரத்தின் சேர்க்கையாய் இருந்தது; ‘மெய்யே பெற்றொழிந்தேன்’, ‘கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்’ என்றவற்றை மறந்தார்; இந்தப் பிரகிருதி சம்பந்தத்தால் இதர விஷயங்களிலே ஈடுபட்டுள்ள மனத்தினை அவற்றில் நின்றும் மீட்டு உன் பக்கலிலே ஈடுபடும்படி செய்து, தேகத்திற்காட்டில் ஆத்மாவைப் பிரிய அநுசந்திக்கைக்கு ஆற்றல் இல்லாதவனாக இருக்கிறேன், நீயே என் விரோதியைப் போக்கி உன் திருவடிகளிலே அழைத்துக்கொண்டருளவேண்டும் என்கிறார்” என்று பட்டர் அருளிச்செய்வர்.

    “ஆறெனுக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்”

ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் – உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம்படி  செய்து தந்தாயே என்று பிள்ளான் பணிப்பர். ஆறு – வழி. வழி – உபாயம். 1“எவ்வாறு நடந்தனை”, “இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்” என்னக்கடவதன்றோ. 2சரண் – உபேயம். அன்றிக்கே. 3இவை இரண்டாலும் உபாயத்தையே சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச்செய்வர்4ஆறு – உபாயம். “சரணம் என்கிற இந்தச் சொல்லானது உபாயம், வீடு, காப்பவன் என்ற இம்மூன்று பொருள்களைக் காட்டும்; இப்போது இந்தச் சரணம் என்ற சொல் உபாயத்தையே சொல்லாநின்றது” என்கையாலே ‘சரண்’ என்பதும் உபாயம். ஆக, 5எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றபடி. வேறு உபாயங்களை அநுஷ்டிக்கிறவர்களைக்காட்டிலும் தமக்கு உண்டான வேறுபாட்டினைச் சொல்லுகிறார் ‘எனக்கு’ என்ற சொல்லால்.

இயல்பாயமைந்த சேஷத்வத்தையுடைய நித்தியசூரிகளும், சம்சார சம்பந்தம் நீங்கப்பெற்ற முக்தர்களும், பாவங்கள் எல்லாம் நீங்கி இனிமேல் சரீர சம்பந்தம் இல்லை என்னும்படி முடிவான சரீரமுடையவர்களான முமுக்ஷு க்களும் ஆகிய இவர்கள், மனிதப்பிறவியையும் விலங்கின் பிறவியையும் தாவரப் பிறவியையும் விரும்பினவர்களாய்க் கொண்டு ஸ்ரீரங்கத்தை எப்போதும் பற்றியிருக்கிறார்கள் என்று பௌராணிகர்கள் சொல்லிவைத்தார்கள்; இப்படிப்பட்ட மனித விலங்கு தாவரங்களின்பொருட்டு நமஸ்காரம் ஆகுக” என்றார் பட்டர்2இராமாவதாரத்திலும் ஒரு இலக்குமணன் முதலியோர்கள், வானரங்களின் உருவத்தை அடைந்தார்கள், விபீஷணன் முதலியோர் பற்றிக் கிடந்தார்கள். அது போன்று. 1அதிலும் நடையாடித் திரிகின்றவர்கட்குப் போகைக்கும் தகுதி உண்டேயன்றோ, அதுவும் இல்லையே அன்றோ தாவரங்களுக்கு.

அஹ்ருத ஸஹஜ தாஸ்யா: ஸூரய: ஸ்ரஸ்தபந்தா:
விமல சரம தேஹா இத்யமீ ரங்கதாம”
மஹித மநுஜதிர்யக் ஸ்தாவரத்வா: ஸரயந்தே
ஸுநியதம் இதி ஹஸ்ம ப்ராஹு: எப்யோ நம: ஸ்தாத்”–  என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்

இலக்குமணன்  முதலியோர்கள்-நித்தியர்கள். வானரங்களின் உருவத்தையடைந்தவர்கள்  -தேவர்கள்.– விபீஷணன் முதலியோர்-முமுக்ஷு க்கள்.

வானுளோ ரனைவரும் வான ரங்களாக்
கானினும் வரையினும் கடித டத்தினும்
சேனையோ டவதரித் திடுமின் சென்றென
ஆனன மலர்ந்தனன் அருளின் ஆழியான்.

வளையொடு திகிரியும் வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்
இளைஞர்கள் எனவடி பரவவேகி நாம்
வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன்.  என்பன, கம்பராமாயணம்

7. நஞ்சீயர் : 

    “பொலிக பொலிக பொலிக”

ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்தைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.    பொலிக பொலிக பொலிக – நீடூழி  வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும். “சாந்தி: சாந்தி: சாந்தி:” என்று வைதிகமான மங்களாசாசனங்கள் மும்முறை சொல்லக்கடவதாயிருக்குமேயன்றோ? ஆதலால், ‘பொலிக பொலிக பொலிக’ என்கிறார். ‘பெரியாழ்வாரைப் போலே முற்படப் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்து, பின்பு பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்ய வேண்டாவோ?” என்ன, அப்படியே யன்றோ செய்தது,வீற்றிருந்தேழுலகு” என்ற திருவாய்மொழியால் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்தார்கண்டீரே; பின்னை இத்திருவாய்மொழியிலே பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்கிறார்” என்று நஞ்சீயர் அருளிச்செய்தார்.

    “நாடகம் செய்கின்றன”

நாடகம் செய்கின்றன – இவர்கள் செய்யும் காரியம் இவர்க்கு வல்லார் ஆடினாற் போலே இருக்கை. 3எம்பெருமானாருடைய நிற்றல் நடத்தல் படுத்தல் முதலியவைகளை நாம் கொண்டாடுமாறு போலேயும், ஆளவந்தாருடைய நடையை அரசன் கொண்டாடினாற் போலேயும் இவர் கொண்டாடுகிறபடி” என்று அருளிச்செய்வர் நஞ்ஜீயர்.

    “கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்”

அவன் என்றே கிடக்கும்-5இத்தோஷங்கள் அவன் உடைமைகள் அன்றோ என்று ஈடுபட்டுக் கிடக்கும் என்று பிள்ளான் பணிப்பர். என்றது, 1அவன் கடியன் என்றால் அவன் கடுமை இப்போதே காணவேணும்; கொடியன் என்றால், அவன் கொடுமை இப்போதே காணவேணும்; அவன் அடைய முடியாதவன் என்றால், அவன் அடைய முடியாதவனானபடியை இப்போதே காணவேணும்; அவன் எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொள்பவன் என்றால், அவன் எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொள்ள நான் இழந்திருக்கவேணும்; அவன் அறிய முடியாதவன் என்றால், அவன் அறிய முடியாதவனாக இருக்கும் தன்மையை இப்போதே அறியவேணும் என்ற படியாம். அன்றிக்கே, என் நெஞ்சுக்கு 2மாயாவாத ருசி உண்டோ? அறிகின்றிலேன் என்பர் சீயர். என்றது, (மாயாவாதிகளைப் போன்று விசேஷண அம்சத்தை  ஆதரியாமல், விசேஷ்யரூப பிரஹ்ம ஸ்வரூப மாத்திரத்தை ஆதரித்தல்.)விசேஷணாம்சத்தில் தாத்பரியம் இன்றிக்கே, விசேஷ்யத்திற்கு அவ்வருகு அறிகின்றது இல்லை என்றபடி. இதனால், அவனுடைய சம்பந்தம் குணம் காரணமாக வந்தது அன்று, ஸ்வரூபத்தோடு கூடியிருப்பது என்கை.

    “கொடியான்”

கொடியான் இலங்கை செற்றேனே என்னும்4சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையுடையவனாதலின் ‘கொடியான்’ என்கிறது. இவ் விடத்தில் 1‘கொடியான்’ என்றது, திருத் தாயார் வார்த்தை காண்’ என்று அருளிச்செய்வர் சீயர், 

    “கோலங்கொள் சுவர்க்கமும் யானே”

கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் – சுகரூபமான சுவர்க்கமும் யானே என்னும். 1நிலை நில்லாமையாலே, முகப்பில் காட்சிக்கினியதாந் தன்மையைப் பற்ற, ‘கோலம் கொள்’ என்கிறது. 2‘நரகத்தோடு ஒத்திருக்கச் செய்தே, வாசலிலே கழஞ்சு செம்மண் பூசி இருக்குமாறு போலே காண்’ என்று அருளிச்செய்வர் சீயர்.

8. ஆண்டான் :

    “உற்றார்களை அழிப்பேனும் யானே”

உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்-அவர்களுக்கு வேறு பிரயோஜனங்களிலே ருசி உண்டானால், அந்தப் பிரயோஜனங்களைக் கொடுத்து என்பக்கல் நின்றும் அகற்றுவேனும் யானே என்னும். அன்றிக்கே, அவர்களை அழகு முதலியவைகளாலே அழிப்பேனும் யானே என்னாநின்றாள் என்று ஆண்டான் பணித்தானாக 1இளையபெருமாள் (முதலியாண்டான் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த ஒரு  பெரியார்.)பணிப்பர்.

    “அலப்பாய் ஆகாசத்தை நோக்கி”

உன்னை’ என்னா நிற்கச்செய்தே ‘ஆகாசத்தை நோக்கி’ என்பான் என்? என்னில், ‘அலப்பாய்’ என்றாரே அன்றோ, கலக்கத்தின் காரியம் இருக்கிறபடி. விஷயம் அண்மையில் இருக்கச்செய்தே ஆகாசத்தைப் பார்க்கிறது. நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே. ‘ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாற் போலே தம் தசையைப் பார்த்துத் தோற்றுகிறானோ’ என்று பார்த்து.
அன்றிக்கே, ஆகாசத்தை நோக்கி என்பதற்கு, என்னுடைய 5நிராலம்பநதையைப் பார்த்து” என்று ஆண்டான் அருளிச்செய்வர். அன்றிக்கே, 1“வயோதிகரான தசரத சக்கரவர்த்தி அப்படியே வெம்மை தோன்ற பெருமூச்சுவிட்டு ஆகாசத்தை நோக்கிய கண்களையுடையவராய்த் துக்கத்தால் பீடிக்கப்பட்டவன் போலக் கதறினார்” என்று கொண்டு, கண்கள் இலக்கில் தைக்க மாட்டாதபடியாயிற்றுச் சென்றற்றபடி என்னுதல்.

9. பிள்ளையமுதனார் :

    “அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் ஆர்”

அம்மான் – சர்வேச்வரன். ஆழிப்பிரான் – கையும் திருவாழியுமான அழகை 2நித்தியசூரிகளுக்குக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்குமவன். அவன் எவ்விடத்தான் – அவன் எத்தகைய பெருமை பொருந்திய நித்தியசூரிகளால் ஆராதிக்கப்படுமவன். யான் ஆர் – நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் இருந்தேன் யான். 3பிள்ளையமுதனார், ‘அம்மான் ஆழிப்பிரான்’ என்று மேலே காட்டி, ‘யான் ஆர்’ என்று குறையச் சொல்லிக் காட்டுவர்

10. ஆப்பான் திருவழுந்தூர் அறையர் :

    “பெரிய கிருதயுகம் பற்றி”

பெரிய கிருதயுகம் பற்றி – கலிகாலம் முதலிய காலங்களால் மறைக்கப்படுதல் இல்லாத 1ஒரு போகியான கிருதயுகத்தையுடையராய். பற்றி – பற்றினவராய்; இது, தேவர்களுக்கு அடைமொழி.(தேவர்கள் தாமும் புகுரலாம்படியாகவும், பேரின்ப வெள்ளம்  பெருகலாம்படியாகவும், திரியும் கலியுகம் நீங்க, பெரிய
கிருதயுகத்தையுடையரான கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன்  பூதங்கள் மண்மேல் இரியப் புகுந்து இசைபாடி எங்கும் இடம் கொண்டன”  என்று சொற்களைப் பிரித்துக் கூட்டிப் பொருள்) 2அன்றிக்கே, ஆப்பான் ‘ஆதி சிருஷ்டியில் கிருதயுகத்தைக் காண் சொல்லுகிறது’ என்பராம்.

    “ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்”

ஆறாக எனக்குத் தந்தொழிந்தாய்; நின் பாதமே, எனது ஆவியும் உனதே” என்று கூட்டி நின் பாதமே’ என்பதனைச் சபதமாக்கி நிர்வஹிப்பர் ஆப்பான் திருவழுந்தூர் அரையர்.

11. உய்ந்த பிள்ளை :

“பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்”

பச்சிலை நீள்கமுகு என்றாற்போலே, பலவும் தெங்கும் வாழைகளும்’ என்று உய்ந்த பிள்ளை கூட்டி அருளிச் செய்வர்காணும்” என்று சீயர் அருளிச்செய்வர். -பச்சிலைநீள்” என்ற அடைமொழிகளை, பலா தெங்கு  வாழைகளுக்கும் தனித்தனியே கூட்டிக்கொண்டு -பச்சிலை நீள் பலவும்,  பச்சிலைநீள் தெங்கும், பச்சிலைநீள் வாழைகளும் என்று பொருள் அருளிச்செய்ய   வேண்டும்

12. அம்மங்கியம்மாள் :

    “தொல் அருள் நல்வினையால் சொலக் கூடும்கொல்”

தொல் அருள் நல்வினையால் சொலக் கூடும் கொல்-1அவனுடைய ஸ்வாபாவிகமான அருளாலே அவனைக் காணப் பெற்று, அதனால் வந்த பிரீதியாலே உகந்து கொண்டு திருநாமத்தைச் சொல்லக்கூடவற்றோ என்னுதல்; நல்வினை – உகப்பு. அன்றிக்கே, ஸ்வாபாவிகமான கிருபையால் உண்டான புண்ணியத்தாலே அவனைக் கண்டு திருநாமங்களைச் சொல்லக் கூடவற்றோ என்னுதல். 2“நா, நீர் அற்று இருக்கை பாபத்தின் பலம் அன்றோ. நாக்கிலே நீர் உண்டாய்த் திருநாமம் சொல்லவல்லோமே என்கிறாள்’ என்று அம்மங்கி அம்மாள் வாக்கியார்த்தமாக அருளிச்செய்வர் என்று அருளிச்செய்வர்.

13. முன்புள்ள முதலிகள் :

    “செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை”

செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை என்பதற்கு, 3‘ஆராவமுதாழ்வார், திருமழிசைப்பிரான் போல்வார் புருஷரத்நங்கள் சேரும் திருக்குடந்தை’ என்று நிர்வஹிப்பர்கள்.

 ———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –