ஸ்ரீ ஹனுமத் பஞ்ச ரத்னம்-ஸ்ரீ சங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமிகள்-ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சஜநேயர் ஸ்தோத்திரம் —

ஸ்ரீ ஹனுமத் பஞ்ச ரத்னம்

வீத அகில விஷயேச்சம் ஜாத ஆனந்த அஸ்ரு புலகமத்யச்சம்
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜ மத்ய பாவயே ஹ்ருத்யம்-1-

எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகிய வற்றை அடைந்தவரும்,
சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும்,
ஸ்ரீ வாயு குமாரனுமான ஸ்ரீ ஹனுமனை தியானிக்கிறேன்.

உலகத்திலேயே லௌகிக அல்ப அஸ்திர அனுபவங்களை எல்லாவற்றையுமே நினைத்தே பார்க்காதவர் ஹனுமான்.
ஸ்ரீ ராம நாம கீர்த்தன ஆனந்தத்திலேயே திளைத்து மயிர்கூச்சலோடு கண்களில் ஆனந்தக்கண்ணீர் மல்கப் பரவசமடைபவர்.
ஸ்ரீ ராமதூதன். ஹனுமான்.பரமபரிசுத்தர்.
இலக்கியங்களிலேயே- முதல் முதலாகக் காணப்படுகின்ற ‘தூது’- என்ற இலக்கிய மரபை ஆரம்பித்தவர் ஸ்ரீ ஹனுமான். என் இதயத்திலே உறைபவர்.
அத்தகைய வாயு குமாரனை த்யானிக்கிறேன்

——————

தருணாருண முக கமலம் கருணா ரஸ பூரபூரிதா பாங்கம்
ஸஞ்சீவன மாஸாஸே மஞ்சுல மஹிமான அஞ்ஜனா பாக்யம்–2-

பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த
கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப்
பிழைக்கும்படி செய்தவரும், புகழத் தக்க மகிமை உள்ளவரும்,
ஸ்ரீ அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஸ்ரீ ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.

பூத்த சிவப்பு ரோஜா நிறமுடைய முக விலாஸம்.
கடைக் கண்களிலே எப்பொழுதுமே கருணை அமுத நீர்
ஊற்றெடுக்கும்.
நன்கு வாழ வைப்பவர்.
மனத்திற்கு இனிய மஹிமை பொருந்தியவர்.
அஞ்ஜநாதேவியின் பாக்கியமே உருவெடுத்தவர். அவரையே கொண்டாடுவேன்.

———–

ஸும்பரவைரி ஸராதிகமம் புஜதள விபுல லோசனோதாரம்
கம்புகளமநில திஷ்டம் பிம்ப ஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே–3-

மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்தியவரும்,
சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவரும், ஸ்ரீ வாயுதேவரின் பாக்கிய பூதருமான
ஸ்ரீ ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.

மன்மதனின் ஏவுகணைக்கு அப்பாற்பட்டவர்.
தாமரை இதழ் போல அகன்றும் ஓரத்தில் கூராகவும் விரிந்த திருக் கண்களை உடையவர்.
வெண்சங்கு போல நடுவில் பருத்து வழுவழுவென்று ஜொலிக்கின்ற கழுத்து அழகன்.
வாயு தேவனின் புண்ணியப் பயனானவர்.
கோவைப் பழம்போல சிவந்து, பளபளவென்று ஜ்வலிக்கின்ற உதடுகலை உடைய
ஸ்ரீ அநுமானைச் சரணம் அடைகிறேன்.

————-

தூரீக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீ க்ருத ராம வைபவஸ் பூர்த்தி:
தாரித தஸ முக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி–4

ஸ்ரீ சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும்,
ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீ ஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.

ஸீதாதேவியின் துயர்கள் அனைத்தையும் துடைத்தவர்.
தனி ஒருவனாக லங்கையின் வீதிகளில் -‘‘எடுத்த காரியங்களில் ஒன்றில் கூட தோல்வியடையாத
ஸ்ரீராமனின் அடிமை நான்’’ -என்று பெருமையோடு ராமனுடைய புகழைப் பரப்பியவர்.
ராவணனுடைய புகழைப் பொடி யாக்கினவர்.
அந்த ஸ்ரீ ஹநுமானுடைய திருவுருவம் என் முன்னே விளங்கட்டும்.

————–

வானரநிகராத் யக்ஷம் தானவ குல குமுத ரவிகர ஸத்ருஸம்
தீன ஜனவன தீக்ஷம் பவனதப: பாக புஞ்ஜமத்ராக்ஷம்--5-

வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு
சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்தவரும், துக்கம் அடைந்தவர்களை
ரட்சிப்பதில் உறுதி கொண்டவரும், ஸ்ரீ வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான
ஸ்ரீ ஹனுமனை நேரில் தரிசித்தேன்.

சூரியன் உதித்தால் -இரவு முழுவதும் மலர்ந்திருந்த ஆம்பல் மலர்களும் கூம்பி விடுமாம்.
அதுபோல ஹனுமானைக் கண்டதும் ராவணனின் அரக்கர் படைகள் எல்லாம் வணங்கி ஒளிந்து கொண்டன.
ஏழ்மையினால் செய்வது அறியாமல் செயலற்று வாடி வதங்கி கிடக்கின்றவர்களெல்லோரையும்
ஸ்ரீ ராம நாம கர்ஜனை செவிப்பட்டு
‘‘இதோ ராமதாஸன் நான் இருக்கிறேன். உங்களை கை தூக்கி விடுவேன் சொல்லுங்கள் ’’ ராம ராம’’- என்று
ஏழைகளைக் காப்பாற்ற கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்ற ஸ்ரீ ஹனுமானை –
வாயு பகவானின் திருக் குமாரரானவரை உயிர்கள் அனைத்தையும் ரக்ஷித்தே தீருவேன்
என்ற பெரும் தவத்தை ஓயாமல் ஆற்றி வருகின்ற
வாயு பகவானின் உயர்ந்த பயனான ஸ்ரீ ஹனுமானைக் கண்டு கொண்டேன்.

———–

ஏதத் பவன ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீ ராம பக்தி பாக்பவதி

ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம்-என்ற இந்த ஸ்தோத்திரத்தை படிக்கிறவர்களுக்கு – ஆயுஸ்ஸூ வளமுண்டு.
வாழ்க்கை பூராவும் கஷ்டமே தொடர்ந்து வந்தால் ஆயுஸ் ஸூ எதற்கு?
ஸ்ரீ ஹனுமானை நினைத்து ஸ்ரீ ராம நாமம் சொன்னால் கஷ்டமே வராது. விரும்பிய சுகங்கள் எல்லாம் கிடைக்கும்.
பிறகு இத்தனை சுகங்களைக் கொடுத்த ஸ்ரீ ராமனின் நாமத்தையே ஜபிப்போமே!
அவனுடைய சரித்திரத்தையே படிப்போமே!
அவனுடைய சரணங்களில் நறு மலர்களால் அர்ச்சிப்போமே!
நமக்கு கிடைத்த நல்ல பொருள் களை எல்லாம் அவருக்கே சமர்ப்பணம் பண்ணுவோமே!
நாமே அவனுடைய சொத்தாகவே என்று ஆவோமே! என்று ஆசை வளரும்.
இது தான் ராம பக்தி.-என்னும் உயர்ந்த பேறு
பாவோ நான்யத்ர -என்று இச்சுவை பெற்ற பின்பு அச்சுவை வேண்டோமே

———–

ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சஜநேயர் ஸ்தோத்திரம்

ஹனுமார் – கிழக்கு முகம்
நரசிம்மம் – தெற்கு முகம்
கருடன் – மேற்கு முகம்
வராகர் – வடக்கு முகம்
ஹயக்ரீவர் – மேல் முகம்

ஹனுமார்(கிழக்கு முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே !

ஸகல சத்ரு ஸம்ஹா ரணாய ஸ்வாஹா ! 1–பகைவர்களால் ஏற்படும் தொல்லை நீங்கும் .

நரசிம்மம்(தெற்கு முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே !

கரால வதனாய நிருஸிம்ஹாய !

ஸகல பூத ப்ரேத ப்ரமதனயா ஸ்வாஹா ! 2–எல்லாவித பயங்கள், தோஷங்கள், துர் தேவதைகள் தோஷங்கள், நீங்கும் .

கருடன்(மேற்கு முகம் )

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பச்சிம !

முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா ! 3–எல்லாவித உடல் உபாதைகள் , விஷக்கடி , விஷ ஜுரங்கள் நீங்கும் .

வராகர்(வடக்கு முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய உத்தர முகே !

ஆதி வராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா ! 4--தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்

ஹயக்ரீவர்(மேல் முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே !

ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா ! 5–ஜன வசீகரம் ,வாக்கு பலிதம் , கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

கடலைத் தாண்டும் போது கருடன் ஆனார்.
ஸீதா தேவிக்கு ஆறுதல் கூறி தைரியமூட்டின போது வாநரனாகவே இருந்தார்.
அசோக வனத்தில் அரக்கர்களை அழித்த போது நரசிம்ம ஸ்வாமியாகவே ஆனார்.
ராவணனுக்கு உபதேசம் அருளிய போது குதிரை முகத்துடன் ஹயக்ரீவராகவே ஆனார்.
சத்ருவின் நகரத்தை அழித்த போது வராஹ ஸ்வாமியாக ஆனார்
அந்த மந்தர மூர்த்தியான ஹநுமான் நமது உள்ளத்திலே ஸ்ரீராம சரணங்களில் பக்தியை வளர்க்கட்டும்.

———–

பஞ்சமுக ஹனுமான் மந்திரம்:

ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய
வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
சப்த சமுத்ர நிராலங்கிதாய,

—————-

ஸ்ரீ ஹனுமத்  ஸ்தோத்திரம்  

அஞ்ஜநா நத்தநம் வீரம் !ஜாநகீ ஶோக நாஶநம் !கபீஶ மக்ஷஹந்தாரம் !வந்தே லங்கா பயங்கரம் ! 1

ஆஞ்சஜநேய மதிபாடலாநநம் !
காஞ்ச நாத்ரி கமநீய விக்ரஹம் !
பாரிஜாத தருமூல வாஸிநம் !
பாவயாமி பவமாந நந்தநம் !  2
யத்ர யத்ர ரகு நாத கீர்த்தநம் !
தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம் !
பாஷ்பவாாி பாிபூா்ண லோசநம் !
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் !   3
மநோஜவம் மாருத துல்ய வேகம் !
ஜிதேந்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் !
வாதாத்மஜம் வானரயூத முக்யம் !
ஶ்ரீ ராம தூதம் ஶிரஸா நவாமி !
ஆஞ்ஜநேய மதிபாடலாநநம் காஞ்ச நாத்ரி கமநீய விக்ரஹம்  !
பாாிஜாத தருமூல வாஸிநம் பாவயாமி பவமாந நந்தநம்  !   4புத்திர்பலம் யஶோ தைர்யம் !
நிர்பயத்வம் அரோகதா !
அஜாட்யம் வாக்படுத்வம் ச !
ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ! 5

அஸாதீய ஸாதக ஸ்வாமிந் !
அஸாதீயம் தவ கிம் வத !
ராம தூத க்ருபாஸிந்தோ !
மத் கார்யம் ஸாதய ப்ரபே !  6

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே !
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே ! 7

உலகம் யாவையும் தாமுள வாக்கலும் !
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா !
அலகிலா விளையாட்டுடை யாரவர் !
தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே ! 8

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே !
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே !
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே !
இம்மையே இராமஎன் றிரண்டெ ழுத்தினால் !  9

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி !
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி !
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கை கண்டயலார் ஊரில் !
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான் !  10
நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம் !
வீடியல் வழிய தாக்கும் வோியம் கமலை நோக்கும் !
நீடிய அரக்கா் சேனை நீறுபட் டழிய வாகை !
சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோா்க்கே !  11
மும்மைசால் உலகுக் கெல்லாம் மூலமந் திரத்தை முற்றும் !
தம்மையே தமா்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தாமே !
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்துமாம் இராமன் (என்னும்) !
செம்மைசோ் நாமம் தன்னைக் கண்களில் தொியக் கண்டான் !    12

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading