***- பாகவத கைங்கர்யமாகிற பெருஞ்செல்வம் கிடைக்கப் பெற்றால் மூவுலகாளுஞ்
செல்வமும் இத்தோடொவ்வாதென்று இதன் பரம போக்யதையைப் பேசுகிறார்.
நெடுமாற்கு அடிமை செய்வன் போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள்
முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே
கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ
வியன் மூ வுலகு பெறினுமே-8-10-1-
பதவுரை
| நெடு மாற்கு |
– |
ஸர்வேச்வரனுக்கு |
| அடிமை செயவேன்போல் |
– |
அடிமை செய்பவன் போலவிருந்து |
| அவனை கருத |
– |
அப்பெருமானை நினைத்தவளவிலே |
| தீ கதிகள் முற்றும் |
– |
(என்னிடத்திலிருந்த) தீவினைகளெல்லாம் |
| வஞ்சித்து |
– |
வஞ்சனை செய்து (என்னோடு சொல்லாமலே) |
| தடுமாற்று அற்ற |
– |
நிச்சயமாக |
| தவிர்ந்த சதிர் நினைத்தால் |
– |
என்னைவிட்டு நீங்கிப் போனபடியை ஆராயந்து பார்த்தால் |
| வியல் மூ உலகு பெறினும் |
– |
விஷ்தாரமான மூவுலகையும் பேறாகப் பெற நேர்ந்தாலுங்கூட (அதை உபேக்ஷித்து |
| அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் |
– |
பாகவதர்களின் திருவடிகளையே அடைவது தவிர |
| கொடு மாவினையென் |
– |
பெரும் அந்த பாவியாகிய நான் |
| வீடும் ஆறு என்பது என் |
– |
(அந்த பாகவத சேஷத்தவ்தை) விடுவதென்று ஒன்று உண்டோ? |
| அந்தோ |
– |
இதை நான் சொல்லவும் வேணுமோ? |
நெடுமாற்கு அடிமை செய்வேன்போல் அவனைக்கருத –அடியார் பக்கலில் வியாமோஹமே வடிவெடுத்த எம்பெருமான்திறத்தில் உண்மையாக வடிமைசெய்ய ஊற்றமில்லையிகிலும் கபடபாவனை எம்பெருமான் திறத்தில் உண்மையாக வடிமைசெய்ய
ஊற்றமில்லையாகிலும் கபடபாவனை மாத்ரமேகொண்டு அடிமை செய்வதாகக் கருதின மாத்திரத்திலே,
தடுமாற்றற்ற தீக்கதிகள் முற்றும் வஞ்சித்துத் தவிர்ந்த சதிர்நினைந்தால் –பாவங்களெல்லாம் நானறியாதபடி ஒரு நொடிப்பொழுதில் உருமாய்ந்துபோனபடியை ஆராய்ந்து பார்க்கில்,
அவனடியாரடியே கூடுமிது எம்பெருமானைவிட்டு எம்பெருமானடியார்தம் அடிகளையே கூடக்கடவது. இதன் கருத்து யாதெனில்,
பகவானுக்கு அடிமைப்படுவதன் பயனே இதுவானால் பாகவதர்களுக்கு அடிமைப்பவதன் பயன் இதனில் மிகச் சிறந்திருக்குமன்றோ வென்று கொண்டு பாகவத சேஷத்வத்தில் நிற்கையே உறுவதாம் என்றவாறு.
தடுமாற்ற்ற்ற தீக்கதிகள் என்றே அந்வயித்து –நமக்கொருகாலம் சலனமில்லையென்று கொண்டு ஸ்தாவரப்ரதிஷ்டைபாவித்திருந்த அவித்யாதிதோஷங்கள் என்னவுமாம்.
வஞ்சித்து என்ற வினையெச்சத்தை முதலடியிலும் அந்விக்கலாம், இரண்டாமடியிலும் அந்வயிக்கலாம்.
“அவனை வஞ்சித்துக் கருத“ என்றவாறு, தீக்கதிகள் முற்று வஞ்சித்துத் தவிரந்த“ என்றாவது அந்வயிக்கலாம்.
தவிர்ந்த என்பதை “தவிர்ந்தன“ என்னும் பொருள்தான வினைமுற்றாகவும் கொள்ளலாம்,
“தவிர்ந்த சதிர்“ என்று சதிரிலே அந்வயிக்கவுமாம். தவிரப்பெற்ற பெருமை என்றபடி.
கொடுமாவினையேன் என்பது ஆனந்தம் தலைமண்டைகொண்டு சொல்லுகிற வார்த்தை.
ஸங்கீதம் கேட்பவர்கள் ஸங்கீத ஸ்வாரஸ்யத்திலீடுபட்டவாறே “பாவியேன்“ என்று மெய்மறந்து சொல்லுவதுண்டே,
அதுபோல. அன்றியே இப்படிப்பட்ட பாகவத சேஷத்வாநு ஸந்தானமிழந்திருந்த நாளைக்கு வெறுத்து, பாவியேன் என்கிறாராகவுமாம்.
“அவனடியாரடியே கூடுமிதுவல்லால்“ என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி –“தன் திருவடிகளைப் பற்றினார்திறத்திலே அவன் மிக்க வ்யாமோஹத்தைப் பண்ணுவானானால் அவன் விரும்பினாரையன்றோ நமக்கும் விரும்பவடுப்பது, அவன் ஆச்ரிதவ்யாமுக்தனானால் அவனுக்கு ப்ரிய விஷயத்தையன்றோ பற்றவடுப்பது.“
வியன்மூவுலகு பெறினும் விடுமாறென்பதென் அந்தோ –“பாகவத சேஷத்வம் வேணுமா? த்ரிலோகைச்வர்யம் வேணுமா? என்று கேட்டால், த்ரிலோகைச்வர்யம் சீரியதல்லவா என்று கொண்டு அதைப்பற்றி பாகவத சேஷத்வத்தை விடுவதென்பதுண்டோ? இதுவன்றோ சீரியது.
இங்கு அந்தோ! என்பது எதற்காகவென்னில், அபதார்த்தமான த்ரிலோகைச்வர்யம் எடுத்துக்கழிக்கவும் தகாததாயிருக்க, அதையொரு பொருளாக வெடுத்துக் கழிக்கவேண்டியதாகிறதே என்கிற நிர்வேதம் காட்டுதற்காகவென்க.
————-
***- ஐச்வர்ய கைவல்யங்களிரண்டுங் கூடினாலும் நான் பெற்ற பாகவத சேஷத்வமாகிற புருஷார்த்த்த்தோடு ஒவ்வாதென்கிறார்.
வியன் மூ வுலகு பெறினும் போய்த்
தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி
அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார்
திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
உறுமோ பாவியேனுக்கே–8-10-2-
பதவுரை
| வியல் மூ உலகு பெறினும் |
– |
விபுலத்ரிலோக ஸாம்ராஜ்யத்தைப்பெற்றாலும், |
| போய் |
– |
அதற்கும் மேலான |
| தானே தானே ஆனாலும் |
– |
தன்னைத் தானே யநுபவிக்கையாகிற கைவல்ய மோக்ஷம் பெற்றாலும் |
| புயல் மேகம் போல் திருமேனி அம்மான் |
– |
மழைகாலத்து மேகம் போன்ற திருமேனி வாய்ந்த எம்பெருமானுடைய |
| புனை பூ கழல் அடிகீழ் |
– |
சாத்தின புஷ்பங்களையும் வீரக்கழலையுமுடைத்தான திருவடி வாரத்திலே |
| சயமே |
– |
ஸ்வயம் பிரயோஜநமாக |
| அடிமை தலை நின்றார் |
– |
கைங்கர்யத்தின் மேலெல்லை யிலே நிலை நின்றவர்களுடைய |
| திரு தாள் வணங்கி |
– |
திருவடிகளைத் தொழுது |
| இம்மையே |
– |
இஹலோகத்திலேயே |
| யான் பெற்றது |
– |
நான் அடைந்த்து |
| பயனே இன்பம் |
– |
புருஷார்த்தமான சுகமே |
| பாவியேனுக்கு |
– |
பாவியான வெனக்கு |
| உறுமோ |
– |
(கீழ்ச்சொன்ன ஐச்வர்ய கைவல்யங்கள்) இப்பேற்றுக்கு ஒக்குமோ? |
“வியன் மூவுலகு பெறினும், போய்த்தானே தானே யானாலும் யான்பெற்ற வின்பம் உறுமோ? என்று அந்வயிப்பது.
வியன் மூவுலகு பெறினும் –விசாலமான த்ரிலேகைச்வர்யத்தையும் எனக்கொருவனுக்கே யாக்கினாலும் என்றபடி.
போய்த் தானேதானே யானாலும் –ஸம்ஸார பந்தமற்றுப் போய்க் கேவலாத்மாநுபவம் பண்ணப்பெற்றாலும் என்றபடி.
“போய்த் தானே யானாலும்“ என்பதே போதுமாயிருக்கவும் “தானே தானே“ என்று இரட்டித்துச் சொல்வதன் கருத்தாவது –
இங்கு ஸம்ஸாரத்தில் வாழும்நாளில் புத்ர பௌத்ராதிகளும் தானுமாய் ஜிவிகையாலே தானேயான வாழ்ச்சியில்லை,
திருநாட்டிலே சென்று களிக்கும் நாளிலும் * அடியார்கள் குழாங்களையுடன் கூடியிருக்குமிப்பாகையாலே தானேயான வாழ்ச்சியில்லை,
இனி கைவல்யாநுபவத்தில் தான் தானோதானேயான வாழ்ச்சியுள்ளது என்கை.
—————-
***- கீழ்ப்பாட்டில் பாகவத சேஷத்வப்ரயுக்தமான ஆனந்தமானது ஐச்வர்யகைல்ல்ய போகங்களிற் காட்டிலும் மேம்பட்டது என்றார்.
ஐச்வர்ய கைவல்யங்களிற் காட்டிலும் விலக்ஷணமான பகவல்லாபமுண்டானாலும் இங்கேயிருந்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்கையோடொவ்வாது என்கிறாப்பாட்டில்.
உலகமளந்த பொன்னடிக்கு நல்லரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் இங்கேயிருந்து என்னையடிமை கொண்டால்
உலகமளந்தவன் திருவடிவாரத்திலே அடிமை செய்வதும் இப்புருஷார்த்த்த்தோடொவ்வாது என்கிறார்.
உறுமோ பாவியேனுக்கு
இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த
எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார்
இங்கே திரியவே-8-10-3-
பதவுரை
| சிறு மா மனிசர் ஆய் |
– |
வடிவில் சிறுத்து அறிவில் பெருத்தவர்களாயிருந்து கொண்டு |
| என்னை ஆண்டார் |
– |
என்னை யீடுபடுத்திக் கொண்டவர்களான |
| அவன் அடியார் |
– |
பாகவதர்கள் |
| இங்கே திரிய |
– |
இந்நிலவுலகில் இருக்க |
| அன்றி |
– |
அன்னவர்களுக்கு அடிமை பூண்டிருப்பது தவிர |
| இவ் வுலகம் மூன்றும் உடன் நிறைய சிறு மா மேனி நிமிர்ந்த |
– |
இம்மூவுலகங்களும் ஏக காலத்தில் இடமடையும் படி தனது சிறிய பெரிய திருமேனியை வளரச்செய்த |
| செம்தாமரை கண் எண் திருகுறளன் |
– |
புண்டரீகாக்ஷனாய் எனக்கினியனான ஸ்ரீவாமநனுடைய |
| நறு மா விரை நாள் மலர் அடிகீழ் புகுதல் பாவியேனுக்கு உறுமோ |
– |
மிக்க பரிமளம் வாய்ந்த திருவடித்தாமரைகளிலே சென்று சேர்தல் எனக்குத் தகுமோ? |
இம்மூவுலகங்களும் ஏக்காலத்திலே நிறையும்படியாகச் சிறிய திருமேனியைப் பெரிய திருமேனியாக்கி வளர்ந்து உலகமுழுதும் வியாபித்த செந்தாமரைக்கண்ணனுடைய திருவடிகளின்கீழேயிருந்து கைங்கரியம் செய்வதானது பாவியேனுக்கு உறுமோ? உற்றதாகுமோ? உற்றதாகாது என்றவாறு.
ஏனென்னில், அவனடியார் சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய, அன்றி –அதைத்தவிர்த்து, நறுமாவியை நாண்மலரடிக்கிழ்ப்புகுதல் உறுமோ? பகவானளவிலே செல்லுகை எனக்கு உறுமோ?
சிறுமாமனிசர் என்றவிடத்து பட்டருடைய இதிஹாஸம் கேண்மின், பட்டர் சிறு பிராயத்திலே ஒருநாள், ஆழ்வான் திருவாய்மொழி அநுஸந்திக்கும்போது இப்பாட்டில் சிறுமாமனிசராய் என்றதைக்கேட்டு,
“சிறுமாமனிசரென்றால் சிறியராயும் பெரியராயுமுள்ள மனிசர் என்று பொருளல்லவா? ஒன்றுக்கொன்று எதிர்த்தட்டான சிறுமை பெருமை என்கிற குணங்களிரண்டும் ஒரு பொருளிடத்து ஒன்று சேர்ந்திருக்குமோ? ஆழ்வார் சிறுமாமனிசரென்று இரண்டையும் ஒருவரிடத்தே சேர அருளிச்செய்த்து பொருந்துவது எங்ஙனே? என்று திருத்தந்தையாரை வினாவினர்,
அதற்கு ஆழ்வான் ஆலோசித்து “பிள்ளாய்! நன்கு வினாவினாய், உனக்கு உபநயனமாகாமையால் இப்போது வேதசாஸ்திரங்களைக்கொண்டு விடைசொல்ல்லாகாது, ஆகிலும் ப்ரத்யக்ஷத்திற் காட்டுகிறோங்காண்“ என்று சொல்லச் சில பெரியோர்களைக்காட்டி,
திருமேனி சிறுத்து ஞானம் பெருத்திருக்கிற சிறியாச்சான் அருளாளப் பெருமாளெம்பெருமானார் போல்வாரைச் சிறுமாமனிசரென்னத் தட்டில்லையே, முதலியாண்டான் எம்பார் முதலிய பெரியோர்கள் உலகத்தாரோடொக்க அன்னபானாதிகள் கொள்வதோடு எம்பெருமான் பக்கலீடுபடுவதிற் பரமபதத்து நிர்யஸூரிகளைப் போலுதலால் இப்படிப்பட்டவர்கள் சிறுமாமனிசரென்னத் தக்கவரன்றோ?
இங்ஙனமே வடிவு சிறுத்து மஹிமை பெருத்தவர்களும், மனிதரென்று பார்க்கும்போது சிறுமை தோன்றிலும், பகவத் பக்தி ஞானம் அனுட்டானம் முதலிய நற்குணங்களை நோக்குமளவில் நித்ய முக்தர்களினும் மேன்மைபெற்று விளங்குகிறவர்களுமான மஹாபுருஷர்களையே ஆழ்வார் சிறுமாமனிசரென்று குறித்தருளினர்“ என்றருளிச்செய்ய, பட்டர் அதுகேட்டு, தகும் தகும் என்று இசைவுகொண்டனர்.
—————
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச்
செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்
புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்
வழி பட்டு ஓட அருளிலே–8-10-4-
பதவுரை
| முன் |
– |
முன்பொரு காலத்திலே |
| இரு மாநிலம் உண்டு உமிழ்ந்த |
– |
மிகப்பெரிய பூமியை யெல்லாம் தனது திருவயிற்றிலே வைத்து நோக்கிப் பிறகு வெளிப்படுத்தின |
| கோலத்த |
– |
அழகு வாய்ந்த |
| செம் பவளம்வாய் |
– |
சிவந்த பவழம் போன்ற அதரத்தையுடைய |
| செம் தாமரை கண் என் அம்மான் |
– |
புண்டரீகாக்ஷனான எம்பெருமான் |
| பொங்கு ஏழ் புகழ்கள் |
– |
பொங்கிக் கிளர்கின்ற தனது திருக்குணங்களானவை |
| வாய ஆய் |
– |
என் வாக்குக்கு விஷயமாகவும் |
| புலன் கொள் வடிவு |
– |
மநோஹமான தனது வடிவு |
| என் மனத்த்து ஆய் |
– |
என் மனத்திலுள்ளதாகவும் |
| அங்கு ஏய் மலர்கள் |
– |
அத்தலைக்கு ஏற்ற புஷ்பங்கள் |
| கைய ஆய் |
– |
என் கையிலுள்ளனவாகவும் பெற்று |
| வழிபட்டு ஓட அருளில் |
– |
பாகவதர்கள் செய்யும் கைங்கரிய மார்கத்திலே நானும் உடன்பட்டு நடக்கும்படியாக அருளாமாகில் |
| இங்கே திரிந்தேற்கு |
– |
(திருநாடு செல்ல விரும்பாதே) இந்த விபூதியிலேயே இப்படி திரிவேனான எனக்கு |
| இழுக்குற்று என் |
– |
என்னதாழ்வு? |
***- பாகவத சேஷத்வத்திலே யிடுபட்டவர்கள் பகவச் சேஷவத்திலே நிற்கலாகாதென்று சிலர் நினைப்பதுண்டு, அதுதவறு
பகவானுடைய முகோல்லாஸத்திற்காக பாகவதர்களையுகப்பதுபோல அந்த பாகவதர்களின் முகோல்லாஸத்திற்காகப் பகவானை யுகப்பதும் ப்ராப்தமே,
எம்பெருமானை விட்டுப்போய் நம்மாழ்வார் பக்கலிலே யீடுபட்ட மதுரகவிகளும் கண்ணி நுண் சிறுத்தாம்பில் மூன்றாவது பாட்டில் “திரிதந்தாகிலும் தேவபிரானுடையக் கரியகோலத்திருக்காண்பன் நான்“ என்றார்,
தாம் பற்றின ஆழ்வாருடைய முகோல்லாஸத்திற்காக எம்பெருமானைப் பற்றுவதும் உற்றதே யென்றார்,
அங்ஙனே அவர் கூறினதற்கு இப்பாசுரமே மூலமென்க.
ப்ரளயாபத்கைனாயும் செந்தாமரைக் கண்ணனாயுமிருக்கிற எம்பெருமான் தன் திருக்குணங்களை நம்வாயாலே புகழும்படியாகவும், தன் திவ்யமங்கள் விக்ரஹத்தையே நம் நெஞசாலே சிந்திக்கும்படியாகவும், புகழும்படியாகவும், தன் திவ்யமங்கள் விக்ரஹத்தையே நம் நெஞ்சாலே சிந்திக்கும்படியாகவும், புஷ்பங்களைக் கையிலே கொண்டு அவன்றன்னை அர்ச்சிக்கும்படியாகவும் அருள் செய்யப்பெற்றால் அப்படி பகவானளவிலே அவகாஹித்துக்கொண்டு இங்கே திரிந்தாலும் ஒரு குறையில்லை, இதனால் பாகவத பக்திக்குக் கொத்தையாகாது என்றாராயிற்று.
ஆசார்ய ஹ்ருதயத்தில் * அழுந்தொழும் ஸநேஹபாஷ்பாஞ்ஜலியோடே * இத்யாதி சூர்ணையில் “புலன்கொள் நித்யசந்ருவிசிந்தனம்“ என்ற ஸ்ரீஸூக்தி இங்கே அநுஸந்தேயம்.
ஸ்ரீ சத்ருக்நாழ்வான் பாகவத சேஷத்வமே பரமபுருஷார்த்தமென்று கொண்டு ஸ்ரீபரதாழ்வானுக்கே சேஷபூதராய் ஸ்ரீராமனது ஸளந்தரியத்திலீடுபடாதிருக்கச் செய்தேயும் * நாஹம் ஸ்வபிமி ஜாகர்மி தமேவார்ய் விசிந்தயந் * என்று சொல்லி, பரதாழ்வானுக்கு உகப்பென்கிற காரணத்தாலே பெருமாள்வடிவழகிலும் நெஞ்சுசென்று அவ்வழகையும் தன்னுள்ளத்தில் கொண்டிருந்தாப்போலே
இவ்வாழ்வாரும் பாகவத சேஷத்வநிஷ்டையைக் கொண்டிருக்கச் செய்தேயும் தமக்கு உத்தேச்யரான அந்த பாகவர்களுக்கு ப்ரீதிகரமென்னுங்காரணத்தினால் “புலன் கொள்வடிவென் மனத்த்தாய்“ என்று, பாகவத சேஷத்வநிஷ்டாவிரோதியான பகவத் விக்ரஹத்தைத் தம்முடைய நெஞ்சுக்கு விஷயமாக்கிக் கொண்டிருந்தார் – என்பது மேலெடுத்துக் காட்டிய ஆசார்யஹ்ருதய ஸூக்தி கண்டத்தின் தாற்பரியம்.
இங்கு, “புலன் கொள்வடிவு என் மனத்தாய்“ என்றதில் எம்பெருமானுடைய வடிவுக்குப் புலன்கொள் என்று இட்டிருக்கும் விசேஷணம் குறிக்கொள்ளத்தக்கது.
எப்படிப்பட்ட அத்யவஸாயமுடையவர்களினுடையவும் இந்திரியங்களைக் கொள்ளை மனத்திற்கு மாத்திரமேயன்று, த்ரிகரணங்களுக்குமாகச் சொல்லுகிறது பொங்கேழ்புகழ்கள் வாயவாய் இத்யாதியால்.
பாகவதர்களை புகழைப் பேசவேண்டி வாய்கொண்டு பகவானுடைய புகழைப் பேசவும், பாகவதர்களை அர்ச்சிக்க வேண்டிய புஷ்பங்களைக் கொண்டு பகவானை அர்ச்சிக்கவும் நேர்ந்தால் இதில் என்ன சேதம்?
நானுகந்த பாகவதர்களுக்கு உகப்பு என்னுங் காரணத்தினாலன்றோ இவை நேருவன –என்றாராயிற்று.
————-
***- எம்பெருமானுடைய திருநாட்டிலே பேரின்பம் நுகர்ந்திருக்கப் பெற்றாலும் அத்தோடே கீழ்ச்சிசொன்ன ஐச்வர்யாதிகளெல்லாம்
சேரக்கூடினாலும் இங்கே பாகவதர்களுக்கு உகப்பாகத் திருவாய்மொழிபாடி ரஸிக்குமதோடொக்குமோ வென்கிறார்.
வழி பட்டு ஓட அருள் பெற்று
மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி
வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில்
பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம்
நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5-
பதவுரை
| வழிபட்டு ஓட அருள் பெற்று |
– |
நித்ய கைங்கரியம் பண்ணும்படியாக அவனது திருவருளைப் பெற்று |
| மாயன் |
– |
ஆச்சர்ய விபூதி யுக்தனான அந்த ஸர்வேச்வரனுடைய |
| கோலம் மலர் அடி கீழ் |
– |
அழகிய திருவடித் தாமரைகளின் கீழே |
| கழிபட்டு ஓடும் சுடர் சோதி வெள்ளத்து |
– |
சுழித்து ஓடுகிற சுடர்ச்சோதி வெள்ள மென்னும்படியான பரம பத்த்திலே |
| இன்புற்று இருந்தாலும் |
– |
ஆனந்த வாழ்ச்சியாக இருக்கப்பெற்றாலும் |
| முழுதும் |
– |
கீழ்ச்சொன்ன ஐச்வர்ய கைவல்யாதிகள் எல்லாம் கூடினாலும் |
| இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து |
– |
தாழ்ச்சியின் மிக எல்லையில் நிற்பதான சரீரத்திலே பிறந்து |
| கற்று |
– |
தன்னுடைய குணங்களை நான் அப்யளித்து |
| மொழிபட்டு ஓடும் களி அமுதம் |
– |
அவ்வநுபவத்தா லுண்டான ப்ரீதிசொல்லாய் ப்ரவஹிக்கிற கவியாகிற அம்ருத்த்தை |
| நுகர்ச்சி உறுமோ |
– |
பாகவதர்களோடு கூடியநுபவித்து ரஸிக்கைக்கு ஒக்குமோ? (ஒவ்வாது) |
(வழிபட்டோட அருள் பெற்று இத்யாதி) க்ஷணகாலமும் விச்சேதமில்லாமல் நித்யகைங்கரியம் பண்ணும்படியான அவனருளைப் பெற்றுத் திருநாட்டிலே அவனது மலர்த்தாமரைப் பாதங்களின் கீழே அந்தமில் பேரின்பமெய்தியிருக்கப்பெற்றாலும் என்றபடி.
இழிபட்டோடு முடலினிற் பிறந்து – தாழ்வுக்கு எல்லையாம்படி கைகழியப்போன சரீரத்திலேபிறந்து. திருநாட்டிலே கைங்கரியம் ஞானமும் பொல்லாவொழுக்கும் நிறைந்த அழுக்குடம்போடே கூடியிருக்கப்பெற்றாலும் என்றபடி.
தன் சீர்யான்கற்று மொழிபட்டோடுங் கவியமுத நுகர்ச்சி உறுமோ? பரம போக்யனான அவனுடைய திருக்குணங்களை நீசனேன் நிறையொன்றுமிலேனான நான் அப்ஸித்து அவ்வநுபவத்தாலுண்டான ப்ரீதி சொற்களாகப் புறவெள்ளமிட்டு அதுவே அம்ருதமாக, அதுதன்னை அன்பர்களோடே கூடி ரஷிக்கையுண்டே, இதற்கு எந்த இன்பமும் ஈடாகாது என்றாராயிற்று
* தொண்டாக்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் * என்றபடி திருவாய்மொழி பாடுகையாகிற விதுவும் பாகவத் கைங்கர்பங்களிலே ஒன்றாகையாலே இவ்விஷயத்தை இத்திருவாயெமொழியிலருளிச் செய்தவிது மிகப் பொருந்தும்.
————-
***- கீழ்ப்பாட்டுக்கு சேஷபூதமாகவே இப்பாட்டுமருளிச் செய்யப்படுகிறது. எம்பெருமானுடைய ஒப்பில்லாத விலக்ஷணமான
புகழைத் திருவாய்மொழியாலே நுகருமதுக்கு விபுவான அவன்றன்னுடைய ஆனந்தமும் ஒவ்வாதென்கிறார்.
நுகர்ச்சி உறுமோ மூ வுலகின்
வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட
பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகரச் செம் பங்கி எரி விழிகள்
நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன்
பெரிய தனி மாப் புகழே–8-10-6-
பதவுரை
| தன் கேழ் இல் |
– |
தனக்கு ஒப்பின்றியே யிருப்பதாய் |
| புகர் |
– |
புகரை யுடைத்தாய் |
| செம்முகத்த |
– |
சீற்றத்தாலே சிவந்த முகத்தையுடைத்தான |
| களிறு |
– |
(குவலயாபீட மென்கிற) யானையை |
| அட்ட |
– |
கொன்று முடித்தவனும் |
| பொன் ஆழி கை |
– |
அழகிய திருவாழி மோதிர மணிந்த திருக்கையை யுடையவனும் |
| என் அம்மாள் |
– |
எனக்கு ஸ்வாமியும் |
| நிகர் செம் பங்கி |
– |
தங்கள் ஜாதிக்குத் தகுதி யாகச் சிவந்த செம் பட்ட) மயிர்களையும் |
| எரி விழிகள் |
– |
அக்நி சக்ரம் போன்ற கண்களையுமுடயராய் |
| நீண்ட |
– |
பருத்த வடிவு படைத்தவர்களான |
| அசுரர் |
– |
அசுரர்களினுடைய |
| உயிர் எல்லாம் |
– |
பிராணன்களை யெல்லாம் |
| தகர்த்து உண்டு |
– |
பிடித்த வாங்கி |
| உழலும் |
– |
இதுவே தொழிலாக ஸஞ்சரிக்கிற |
| புள் |
– |
கருடனுக்கு |
| பாகன் |
– |
நியாமகனுமான எம்பெருமானுடைய |
| பெரிய தனி மா புகழ் நுகர்ச்சி உறுமோ மூ உலகின் வீடு பேறு |
– |
பெரிய ஒப்பற்ற கல்யாண குண ராசியை அநுபவிக்கையோடு ஒக்குமோ ஸர்வேச்ரத்வம். |
“தன் கேழில் புகர்ச்செம்முகத்தகளிறட்ட பொன்னாழிகை யென்னம்மான்“ என்பதனால், கம்ஸனாலேவப்பட்ட குவலாபீட மென்னும் மதயானையின் நிரஸமும்,
“நிர்ச்செம்பங்கி யெரிவிழிகள் நீண்ட வசுர்ருயிரெல்லாம் தகர்த்துண்டுழலும் புட்பாகன்“ என்பதனால் கொடிய வசுரர்களின் நிரஸநமும் சொல்லப்பட்டு,
இப்படி விரோதி நிரஸந சீலனான எம்பெருமானுடை திருக்குணங்களை பாகவத ப்ரீதிகரமான திருவாய்மொழி முகத்தாலே அநுபவித்து ரஸிக்கைக்கு, மூவுலகின் வீடுபேறு உறுமோ? – ஸர்வேச்வரத்வம் ஈடாகுமோ?
மூவுலகின் வீடு –மூவுலகங்களையும் காண விடுகை, அதாவது ஸ்ருஷ்டிக்கை, அது வாகிற பேறு –ஸர்வேச்வரத்வ மென்றபடி.
ஈட்டு ஸ்ரீ ஸூக்தி –“மூவுலகின் வீடு பேறு தன் ஸங்கல்பைகதேசத்தாலே ஜகத்ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களாம்படியிருக்கிற ஐச்வர்யம்.“
————-
***- ஸ்வயம்புருஷார்த்த மாக்க் கொள்ளும் பகவதநுபவம் வேண்டா, பாகவத ப்ரீதிரூபமான பகவதநுபவத்தைப்
பண்ணிக்கொண்டு அந்த பகாவதர்களோடு கூடி வாழ்கையெ நமக்கு நாளும வாய்க்கவேணுமென்கிறார்.
தனி மாப் புகழே எஞ்ஞான்றும்
நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப்
புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே
நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-
பதவுரை
| தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படி ஆய் |
– |
ஒப்பில்லாத சிறந்த புகழே காலமுள்ளதனையும் வேதாந்த ப்ரஸித்தமாய் நிற்கும்படியாக |
| தான் தோன்றி |
– |
தானோ (படைப்புக் கடவுளாக) ஆவிர்ப்பவித்து |
| முனி |
– |
(ஸ்ருஷ்டிக்காக) ஸங்கல்பிக்கிற |
| மா பிரம்ம் |
– |
பரப்ரஹ்ம்மாகிற |
| முதல் வித்து ஆய் |
– |
பரமநாரணமாய் |
| உலகம் மூன்றும் |
– |
லோகங்களை யெல்லாம் |
| முளைப்பித்த |
– |
உண்டாக்கின |
| தனி மா தெய்வம் |
– |
ஒப்பற்ற பர தேவதையினுடைய |
| தளிர அடி கீழ் |
– |
தளிர்போன்ற திருவடியின் கீழே |
| புகுதல் அன்றி |
– |
புகுகையைத் தவிர்த்து |
| அவன் அடியார் |
– |
ஸ்ரீவைஷ்யவர்களுடைய |
| நனி மா கலவி இன்பமே |
– |
மிகச் சிறந்த்தான ஸம்ச்லேஷ ஸுகமே |
| நங்கட்கு நாளும் வாய்ந்த |
– |
நமக்கு எப்போதும் வாய்க்க வேணும். |
தனிமாப்புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியாய் –இங்கு தனிமாப்புகழாக நினைக்கிற புகழ் எதுவென்னில், மேலிரண்டாமடியிற் சொல்லுகிறபடிக்குச் சேர்ந்த புகழாக வேண்டுகையாலே ஜகத்து நாம்ரூபங்களழிந்து தாமோபூதமான ஸமயத்திலே இவற்றை யுண்டாக்க நினைத்த மஹாகுணமே இங்குத் தனிமாப்புகழாக விவக்ஷிதம்.
* அசிதவிசேஷிதாந் ப்ரளயஸீ மநி ஸம்ஸரத கரணகளே பரைர் கடயிதும் தயமாநமநா * (ஸ்ரீரங்கராஜஸ்தவ –உத்தரசதகம்) என்று பட்டர் அருளிச் செய்தபடியே, இறகொடிந்த பக்ஷிப்போலே யிருந்த சேதந ராசிகளைக் கரணகளே பரங்களோடே சேர்த்து விநியோகங் கொள்ளத் திருவுள்ளம்பற்றின மஹாகுணத்தைக்கண்டு
“இப்படியும் ஒரு கருணையுண்டோ! என்று இதையே வாய்வெரும்படியாக அவாப்தஸமஸ்தகாமனாயிருக்கிற தானே தன்பேருக தோன்றி. தோன்றி யென்றது –ஸங்கல்பித்துக் கொண்டு என்றபடி.
முனிமாப்பிரமுமுதல் வித்தாய் –பிரம்ம் என்றது ப்ரஹம்ம் என்றபடி. முனி என்று எம்பெருமானுக்குள்ளதொரு திருநாமம். மாப்பிரம்ம். முதல்வித்துஆய் –உபாதாநகாரணமாய் என்றபடி.
(உலகம் மூன்றும் முளைப்பித்த தனிமாத்தெய்வம் இத்யாதி) பஹுபவநஸங்கல்பம்பண்ணிக் கார்யவர்க்கமெல்லாம் தன் பக்கலிலே அரும்பும்படி பண்ணின ஒப்பற்ற பரதேவதையிலுடைய தளிர்போன்ற திருவடிகளின்கீழே புகுதல் ப்ராப்தமாயிருந்தாலும்,
அன்றி, அதைத் தவிர்ந்து, அவனடியார்நனிமாக் கலவியின்பமே நங்கட்கு நாளும் வாக்க – பாகவதர்களோண்டுடான பரம விலக்ஷணமான ஸம்ச்லேஷஸுகமு நாடோறும் நமக்கு வாய்க்கவேணும்.
—————
***- பாகவதர்களின் திரள்களைக் கண்டு கொண்டிருந்தாலே போதுமே யென்கிறாரிப்பாட்டில்.
நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும்
சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக்
காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே–8-10-8-
பதவுரை
| நளிர் நீர் கடலை படைத்து |
– |
குளிர்ந்த நீரையுடைய கடலை யுண்டாக்கி |
| சமன் இலாத |
– |
ஒப்பில்லாத |
| தன் பல தாளும் தோளும் முடிகளும் |
– |
தன்னுடைய பல திருவடிகளையும் திருத்தோகளையும் திருமுடிகளையும் |
| பரப்பி |
– |
பரப்பிக்கொண்டு |
| நீளும் படர் பூ |
– |
நீண்டு படர்ந்த புஷ்பங்களையும் |
| கற்பகம் காவும் |
– |
கற்பகச் சோலையையும் |
| நிறை பல் நாயிற்றின் கோளும் உடைய |
– |
நிறைந்த பல ஆதித்ய தேஜஸ்ஸையு முடைத்தான |
| மணி மலை போல் |
– |
மாணிக்கமலை போலே |
| கிடந்தான் |
– |
கண்வளர்ந்தருளின பெருமானுடைய |
| தமர்கள் |
– |
பக்தர்களோ டுண்டான |
| கூட்டம் |
– |
சேர்த்தியானது |
| நங்கட்கு நாளும் வாய்க்க |
– |
எமக்கு எப்போதும் உண்டாகவேணும். |
“தமர்கள் கூட்டமே நாளும் வாய்க்க நங்கட்கு“ என்று அந்வயிப்பது.
பாகவதர் என்னுஞ் சொல்லுக்கு “பகவானைச் சேர்ந்தவர்கள“ என் பொருளாதலால், எப்படிப்பட்ட பகவானைச் சேர்ந்தவர்கள் என்று கேள்வியுண்டாகுமே, அதற்குவிடை கூறு கிறது நளிர் நீர்க்கடலைப் படைத்து என்று தொடங்கி.
* அப ஏவ ஸ்ஸர்ஜாதௌ* என்கிற படியே ஏகார்ணவத்தை முதலிலே ஸ்ருஷ்டித்த அதிலே *ஸஹஸ்ரசீர்ஷா புருஷஸ் ஸஹஸ் ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்* என்று ஆயிரக்கணக்காகச் சொல்லப்பட்ட தன்னுடைய திருவடிகளையும் திருத்தோள்களையும் நிஸ்ஸங்கொசமாகப் பரப்பிக்கொண்டு, ஒரு மாணிக்கமலை சாய்ந்தாற்போலே திருக்கண் வளர்ந்தருளின பெருமானிடத்து ஈடுபட்டவர்களான பாகவதர்களின் திரள் நங்கட்கு நாளும்வாய்க்க,
இரண்டாமடியில் குறிக்கப்பட்ட உபமேய வஸ்துக்களுக்குப் பொருத்தமான உபமாந வஸ்துக்கள் மூன்றாமடியில் குறிக்கப்பட்டன.
நீளும் படர்பூப்போன்ற தாளும், கற்பகக்காவுபோன்ற தோளும், நிறைபன்னாயிற்றின் கோள் போன்ற முடிகளும் என்றதாகக் கொள்க.
பூக்களையும் கற்பகச்சோலையையும் பல ஸூர்யதேஜஸ்ஸையும் கொண்ட ஒரு மாணிக்கமலை எம்பெருமானுக்கு உவமையாக்க் கொள்ளப்பட்டதிங்கு.
அப்படிப்பட்ட எம்பெருமானுடைய தமர்கள் என்றது –இவ்வழக்கைச் சொல்லி வா வெருவுகின்ற பக்தர்கள் என்றபடி.
—————-
***- மணவாளமாமுனிகள் யதிராஜவிம்சதியில் ஈத்வத்தாஸதாஸகணநா சரமாவதௌ யஸ் த்த்தாஸதைகரஸதா அவிரதா ம்மாஸ்து * என்று
பாகவத சேஷத்வ காஷ்டையிலே தாம் நிற்கவேணுமென்று பாரித்தாரே, அந்தப் பாரிப்புக்கு இந்தப் பாசுரம் நிதானமாயிருக்கும்.
தமர்கள் கூட்ட வல்வினையை
நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள்
வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை
கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம்
சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-
பதவுரை
| தமர்கள் கூட்டம் |
– |
பக்த வர்க்கங்களுக்கு வருகின்ற |
| வல் வினையை |
– |
வலிய விரோதிகளை |
| நாசம் செய்யும் சதிர் |
– |
போக்கும்படியான திறமையுடைய |
| மூர்த்தி |
– |
ஸ்வாமியாய் |
| அமர் கொள் |
– |
போர் செய்யக் கிளர்கின்ற |
| ஆழி சங்கு வாள்வில் தண்டு ஆதி |
– |
பஞ்சாயுதங்கள் முதலிய |
| பல் படையன் |
– |
திவ்யாயுத வர்க்கத்டை யுடையனாய் |
| குமரன் |
– |
நித்ய்யுவாவாய் |
| கொலம் ஐங்கணை வேள் தாதை |
– |
அழகிற் சிறந்த பஞ்சபாணனான மன்மதனுக்குத் தந்தையான் எம்பெருமானுடைய |
| கோது இல் அடியார் தம் |
– |
கோதற்ற அடியார்க்கு |
|
தமர்கள் தமர்கள் தமர்கள் ஆம் சதிர் அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே |
||
| தமியேற்கு வாய்க்க |
– |
துணையற்றி அடியேனுக்கு வாய்க்கவேணும் |
“கோதிலடியார்தம் தமர்கள் தமர்கள் தமர்களாஞ் சதிரேவாய்க்க தமியேற்கை“ என்று தமர்கள் தமர்கள் தமர்களென்று மூன்று வர்க்கமே சொல்லியிருந்தாலும் யாப்பின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டுச் சொன்னவளவேயன்றி, பர்யாப்தி பிறந்து சொன்னதன்று சரமாவதி தாஸ்யமே விரும்ப்ப்படுகின்றதாகச் கொள்க.
தமரர்கள் கூட்ட வல்வினையை நாசஞ்செய்யும் என்பதற்கு மூன்று வகையாகப் பொருள் கூறுவர்,
(1) தமர்களுடைய கூட்டத்தின் வல்வினையை நாசஞ்செய்யும்.
(2) தமர்களின் கூட்டமான (அபரிமிதமான) வல்வினையை நாசஞ்செய்யும்
(3) தமர்கள் வல்வினை வுட்ட அதை நாசஞ்செய்யும் (அதாவது) வல்வினைகளை மேன்மேலும் ஆர்ஜித்துக்கொண்டிருக்க, அவற்றை நிச்சேஷமாக நாசஞ்செய்யுமென்றபடி.
“சதிர்மூர்த்தி “சதுமூர்த்தி“ என்பன பாடபேதங்கள். சதிராவது ஸாமர்த்தியம், அதையுடைய ஸ்வாமி. சதுமூர்த்தி –அநொகவிக்ரஹ பரிக்ரஹம் செய்பவன்.
(அமர்கொளாழியித்யாதி) விரோதிநிரஸனத்திற்காகச் செருக்கிளர்ச்சியையுடைய பஞ்சாயுதங்களையும் மற்றும் பலவாயுதங்களையுமு (ஷோடசாயுதங்களையும்) உடையவன்.
குமரன் –நித்யயுவாவாயிருக்குமவனென்கை. கோலவைங்கணை வேள்தாதை அழகுக்கு எனக்கு மேலில்லை யென்றிருக்கும் பஞ்பாணனுடைய அழகுக்கும் உத்பத்திஸ்தானமானவன்.
இப்படிப்பட்ட எம்பெருமானுடைய, கோதிலடியார் –ப்ரபோஜநாந்தர அபேக்ஷையாகிற கோது இல்லாத அடியார்.
இப்பதிகத்தில், கீழே * சயமே அடிமை தலைநின்றார் என்றும், இப்பாட்டில் கோதிலடியார் என்றும், மேற்பாட்டில் * நீக்கமில்லாத வடியார் என்றும் மூவகைச் சொற்களால் சொல்லுகிறார்.
இதற்கு நம்பிள்ளையருளிச்செய்யும்படி, சயமேயடிமை தலைநின்றார் –பரதாழ்வான் போல்வார், கோதிலடியார் –சத்ருக்நாழ்வான் போல்வார், நீக்கமில்லாவடியார் இளையபெருமாள் போல்வார் என்று.
————-
***- எம்பெருமானுக்கு அடியரானாருடைய ஸம்பந்தி ஸம்பந்திகளென்று போருகிற பரம்பரையின் எல்லையில் அடிமைசெய்து
நடக்கையாகிற கோட்பாடு என்னளவிலே நிற்காமல் என்னுடைய பரம்பரையிலும் வாய்க்கவேணு மென்கிறார்.
“தமியேற்கு ஊழி தோறூழியூழி வாய்க்க“ என்கையாலே இப்பேறு தம்மளவிலே பர்யவஸிக்காமல்
பரம்பரயா தம்மைச் சார்ந்தவர்கள் பக்கலிலும் பலிக்கவேணு னெமனும் விருப்பம் ஸித்திக்கின்ற தென்க.
வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்கு தோள்
பொன்னாழிக்கை என்னம்மான்
நீக்கமில்லா வடியார்தம்
அடியார் அடியார் அடியார் எம்கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்
நல்ல கோட்பாடே-8-10-10-
பதவுரை
| மா காயா பூகொள் மேனி |
– |
அழகிய காயாம்பூநிறத்தைக் கொண்ட திருமேனியையும் |
| நான்கு தோள் |
– |
நான்கு தோள்களையும் |
| பொன் ஆழி கை |
– |
அழகிய திருவாழியேந்திய கையையும் உடைய |
| எம் அம்மான் |
– |
எம்பெருமானுடைய |
| நீக்கம் இல்லா |
– |
பிரிவு இல்லாத |
| அடியார் தம் |
– |
அடியார்களுக்கு |
| அடியார் அடியார் அடியார் |
– |
சரமாவதிதாஸ பூதர்கள் |
| எம் கோக்ள் |
– |
எமக்கு ஸ்வாமிகள் |
| அவர்க்கே |
– |
அன்னவர்களுக்கே |
| குடிகள் ஆய் செல்லும் |
– |
சேஷவ்ருத்தி பண்ணுங்குலமாயச் செல்லும்படியான |
| நல்ல கோட்பாடு |
– |
திடமான அத்யவஸாயமானது |
| ஊழி ஊழி ஊழி தோறு |
– |
எஞ்ஞான்றும் |
| தமியேற்கு |
– |
அடியேனுக்கு உண்டாக வேணும். |
மகாயாம்பூக்கொள்மேனி –பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலரென்றுங் காண்டோறும் –பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும்,
அவ்வ்வையெல்லாம் பிரானுருவேயென்று * (பெரிய திருவந்தாதி) என்றருளிச் செய்தவராதலால் காயாம் பூக்கொள் மேனியனான எம்பெருமானிடத்தில் அத்திருநிறத்துக்குத் தோற்று அடிமைப்பட்டவர்கள் தமக்கு உத்தேச்யரென்கிறார்.
அழகிய காயாம்பூப்போன்ற திருமேனியையுடையனாய், நான்கு திருத்தோள்களையும் திருவாழியாழ்வானையுமுடையனான எம்பெருமானை ஒருகாலும் விட்டுப்பிரியாதே இளையபெருமாளைப் போலே ஒழிவில்காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யுமவர்களில் கல்லைநிலமா யிருக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள்,
அன்னவர்களுக்கே ஸகல சேஷவ்ருத்திகளையும் பண்ணவேணுமென்று மநோரதிக்கையாகிற புருஷார்த்தம் ஸித்திக்கவேணுமென்றாராயிற்று.
——————
***- இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்கள் இதிற்சொன்ன பாகவத சேஷத்வத்தைப்
பெற்று ஸகுடும்பமாக வாழப் பெறுவரென்று பயனுரைத்த தலைக் கட்டுகிறார்.
நல்ல கோட்பாட்டுலகங்கள்
மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-
பதவுரை
| நல்ல கோட்பாடு |
– |
நல்ல கட்டளைப்பாடுடைய |
| உலகங்கள் மூன்றின் உள்ளும் |
– |
மூவுலகங்களினுள்ளும் |
| தான் நிறைந்த |
– |
வியாபீத்த |
| அல்லி கமலம் கண்ணனை |
– |
விகஸித்த தாமரைப் பூப்போன்ற கண்களையுடைய பெருமான் விஷயமாக |
| அம் தண் குருகூர் சடகோபன் சொல்லப்பட்ட ஆயிரத்துள் |
– |
ஆழ்வாரா வருளிச் செய்யப்பட்ட ஆயிரத்தினுள் |
| இவையும் பத்தும் வல்லார்கள் |
– |
இவை பத்தையும் ஓதவல்லவர்கள் |
| கொண்ட பெண்டிர் மக்களே |
– |
ஸ குடும்பமாக |
| நல்ல பத்த்தால் |
– |
பாகவத சேஷ்த்வ பர்யந்தமான சிறப்புடனே |
| மனை வாழ்வார் |
– |
க்ருஹஸ்தர்களாக வாழப்பெறுவர்கள். |
கீழ்ப்பாட்டில் எந்தக் கோட்பாடு தமக்கு வாய்க்கவேணுமென்று விரும்பினாரோ அந்தக் கோட்பாடு உலகங்களுக்கெல்லாமுள்ளதாகச் சொல்லுகிறாரிங்கு.
(ஆசாம்ஸாயாம் பூதவச்ச) என்றார் பாணிநிமுனிவர், அதாவது, இப்படியாகவேணு அந்த ரீதியில், இந்தக் கோட்பாடு அது ஆய்விட்டதாகவே சொல்லுவது முண்டென்கை.
அந்த ரீதியில் இந்தக் கோட்பாடு உலகங்கட்கெல்லா முண்டாகவேணுமென்று ஆழ்வார் ஆசம்ஸிக்கிறாரென்று கொள்க.
அல்லிக்கமலக் கண்ணனை –ஆழ்வார் நம்மைவிட்டு நம்மடியாரடியார்களைத் தேடி யோடுகிறாரோ“ என்று எம்பெருமான் வெறுப்படையாமல் “நம்மிடத்திலே இவர் வைத்த அன்பு நம்முடைய ஸம்பந்தி ஸம்பந்திகள் பக்கவிலும் பெருகப் பெற்றதே! என்று மிக வுகந்து அல்விக்கமலக்கண்ணனாயின்ன் என்று கொள்க.
எம்பெருமான் இயற்கையாகவே அல்லிக்கமலக்கண்ணனாயிருந்தாலும் அது சொல்லுகிறதன்று இங்கு.
குருகூர்ச்சடகோபன் சொல்லப்பட்டவாயிரம் –வேதம் போலே தான் தோன்றியாயிருக்கை யன்றிக்கே திருவாய்மொழி ஆழ்வார் பக்கலிலே அவ்தரித்து ஆபிஜாத்யம் பெற்ற தாயிற்று.
ஈற்றடியில், இத்திருவாய்மொழிகற்கைக்குச் சொல்லப்படுகிற பலன் ஸம்ஸார வாழ்க்கையாக இருக்கின்றதே, இது கூடுமோ? அடுத்த பதிகத்தில் * கொண்ட பெண்டிர் மக்களுக்குச் சுற்றதவர் பிறரும் கண்டதோடு பட்டதல்லால் காதல்மாற்றி யாதுமில்லை * என்று இகழப்படுகிற குடும்ப வாழ்ச்சியை இங்கு பலவகை அருளிச்செய்யலாமோவென்று சங்கிக்கவேண்டா,
குடும்ப வாழ்ச்சி ஸர்வாத்மநாத்யாஜ்யமன்று, கூரத்தாழ்வான், அனந்தாழ்வான் போல்வார் க்ருஹஸ்தாச்ரமவாழ்க்கையிலேயே யிருந்து பகவத் பாகவத கைங்கரியத்திற்குத் துணைவரான களத்ர புத்ராதிகளோடு வாழப்பெற்றவர்களாதலால் இங்ஙனே பயனுரைக்கத் தட்டில்லையென்க.
க்ரஹஸ்தாச்யம்ம் ஸர்வோபகாரக்ஷம்மென்று ப்ரஸித்தம், பகவத் பாகவத கைங்கர்யத்திற்கு இணங்காத களத்கயுத்ராதிகள் த்யாஜ்யர்களேயன்றி இதற்கு இங்குமவர்கள் உபாதேயர்களே, இது தோன்றவே “நல்லபதத்தால் மனைவாழ்வீர்“ என்று விசேஷித்தருளிச் செய்தார்.
இவ்விடத்து ஈட்டில் ஒரு இதிஹாஸமருளிச் செய்கிறார், எம்பெருமானார் திருவனந்தபுரயாத்திரை பெருந்திரளாக எழுந்தருளச் செய்தே திருக்கோட்டியூரலே செல்வநம்பி திருமாளிகையிலே சென்று சேர, அப்போது புருஷர் வெளியூர் சென்றிருந்தாராம், க்ருஹத்திலே நூறுவித்துக் கோட்டை கிடந்த்தாம், வருதியழைத்தாலும் வரமாட்டாத மஹா பாகவதோத்தமர்கள் தாமாக வந்தருளினார்களேயென்று குதூஹலங்கோண்ட நங்கையார் அவ்வளவு நெல்லையும் குத்தித் த்தீயோராதனை நடத்திவிட, மறுநாள் புருஷர் வந்து சேர்ந்து தானியம் ஒன்று மில்லாமையைக் கண்டு செய்திகேட்க, “பரமபத்த்திலே விளைவதாக வித்தினேன்“ என்றாளாம். இப்படிப்பட்ட குடும்ப வாழ்க்கை ஆழ்வாருடைய மங்களாசாஸன பலத்தினால் அமைந்த்தென்று கொள்ளக்கடவது.
————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-