***– வேறு புகலற்ற அடியேனைக் குறித்து ஒரு வார்த்தை யருளிச் செய்து பிறவி கெடக் குளிர நோக்கியருளவேணுமென்று வேண்டுகிறார்.
பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-
பதவுரை
| தெண் திரை பொருநல் |
–
|
தெளிந்த அலைகளையுடைத்தான தாமிரபர்ணியோடு சேர்ந்த |
| தண் பணை சூழ்ந்த |
–
|
அழகிய சீர்நிலங்களால் குழப்பட்ட |
| திருப்புளிங்குடி |
–
|
திருப்புளிங்குடி யென்கிற திருப்பதியிலே |
| கிடந்தானே |
–
|
சயனித்தருள்பவனே! |
| நின் திரு அருளும் |
–
|
உனது க்ருபையையும் |
| பங்கயத்தாள் திரு அருளும் |
–
|
பெரிய பிராட்டியாருடைய க்ருபையையும் |
| பண்டை நாளாலே கொண்டு |
–
|
நெடுநாளாகவே அடைந்து கொண்டு |
| நின்கோயில் சீய்த்து |
–
|
உன்னுடைய திவ்யதேசத்திலே உரிய கைங்கரியத்தைப் பண்ணி |
| பல்படிகால் குடி குடி வழி வந்து |
–
|
அநாதிகாயமாய்ப் போருகிற வம்ச பரம்பரையாக |
| ஆள் செய்யும் தொண்ட ரோர்க்கு |
–
|
அடிமைசெய்து யோருகிற அடியோங்கள் விஷயத்திலே |
| அருளி |
–
|
அருள் செய்து |
| சோதி யாய் திறந்து |
–
|
அழகிய திருப்பவளத்தைத் திறந்து |
|
(நல்வார்த்தைகளைப் பேசி)
|
| உன் தாமரை கண்களால் நோக்காய் |
–
|
உனது தாமரை போன்ற திருக்கண்களாலே நோக்கியருள வேணும். |
முன்னடிகளிரண்டாலும் தம்முடைய படியை நிரூபிக்கிறார்.
திவ்ய தம்பதிகளின் திவ்ய கடாக்ஷமே விளைநீராகக் கொண்டு நித்ய கைங்கர்யம் பண்ணும் ஸந்தானத்திலே தோன்றப் பெற்ற தந்து பெருமையை யெடுத்துப் பேசுகிறார்.
*எதிர் சூழல்புக்கெனைத்தோர் பிறப்பு மெனக்கே யருள்கள் செய்ய விதி சூழ்ந்ததாலெனக்கே லெம்மான் திரிவிகிரமனையே* என்றருளிச் செய்தவராகையாலே “பண்டை நாளாலே நின் திருவருள்” கொண்டதாகக் கூறுகின்றார்.
பிராட்டியின் க்ருஷிபல மாகவே எம்பெருமானது திருவருள் வாய்த்ததாதலால் “பங்கயத்தாள் திருவருளுங்கொண்டு” என்கிறார்.
முற்பட்டதை முன்னே சொல்லிப் பிற்பட்டதைப் பின்னே சொல்ல வேண்டியிருக்க, பிற்பட்டதான எம்பெருமான் திருவருளை முன்னே சொல்லியிருப்பது வழுவாகாது கார்யத்தை முன்னே சொல்லிக் காரணத்தைப் பின்னே சொல்லுவதும் முறையே.
நின் கோயில் சீய்த்து–திவ்ய தேசங்களிலே பண்ணுங் கைங்கரியங்களில் தலையானது இது.
*வயலணியனந்தபுரம் கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே* என்று மேலுமருளிச் செய்வர்.
திருவலகிடுதல் மெழுகுதல் கோலமிடுதல் முதலிய செய்கைக்குக் கோயில் சீய்க்கை யென்று பெயர்.
இங்கே ஈட்டில் திருக்கண்ணமங்கையாண்டானிதிஹாஸ் மொன்றுளது; அவரைப் பற்றி ஸ்ரீவசநபூஷணத்தில் “திருக்கண்ண மங்கையாண்டான ஸ்வவ்யாபாரத்தை விட்டான்” என்றருளிச் செய்யப் பட்டிருக்கின்றதன்றோ.
அப்படிப்பட்டவவர் அவ்வூரில் ஒரு மகிழ மரத்தடியிலேயிருந்து திருவலகிடா நிற்கையில் உண்மையுணர்ச்சியற்ற வொருவன் ‘எம்பெருமானே உபாயமென்றிருக்கிற அநந்ய ப்ரயோஜநர் இங்ஙனே கிலேசப்படுவது எதற்கா–’ என்றானும்;
அப்போது திருவலகிட்ட விடத்தையும் இடாத விடத்தையுங் காட்டி ‘இவ்விடமும் அவ்விடமும் இருந்தபடி கண்டாயே இதற்கொரு பலமில்லை யென்று தோற்றியிருந்ததோ?’ என்று பணித்தாராம் திருக்கண்ண மங்கையாண்டான்.
இங்கு அறிய வேண்டுவதாவது;–த்ருஷ்டப்ரயோஜந மென்றும் அத்ருஷ்ட ப்ரயோஜநமென்றும் ப்ரயோஜந மிருவகைப்படும். அத்ருஷ்ட ப்ரயோஜகத்திற்கொரு ஸாத்நாநூஷ்டாநம் பண்ணுமையே அநந்ய ப்ரயோஜநர்க்குற்றது.
ஸன்னிதி வாசலை அலகிடுதல் முதலிய திருப்பணிகளை ஒரு ப்ரயோஜநாபேசைஷயின்றிக்கே செய்வதனால் ஒரு குறையுமில்லை;
இது நிஷ்ப்ரயோஜநந்தானே யென்ன வேண்டா; திருவலகிடாதவிடம் கண்கொண்டு காண வொண்ணாதாயும், திருவலகிட்டவிடம் கண்ணுற்கான வினிதாயுமிருப்பதே ப்ரயோஜனம். இது அநந்ய ப்ரயோஜநத்வத்திற்கு விரோதியன்று என்பதாம்.
பல்படிகால் என்பதனால் வம்ச பரம்பரையாக இங்ஙனே கைங்கரியஞ்செய்யும் ஸந்தான மென்கிறது.
தொண்டனேற்கு என்று ஒருமையாகச் சொல்லாமல் ‘தொண்டரோர்க்கு’ என்று பன்மையாகச் சொன்னது அநுபந்திகளையுங் கூட்டிக் கொண்டு சொன்னபடி.
சோதிவாய் திறந்து பூவலருமாபோலே வாய்திறந்தொரு வார்த்தை யருளிச் செய்யவேணும்.
வாய் திறக்கும் போது திருமுகத்தில் பிறக்கும் செவ்விளையும் அதுபயிக்க வேண்டிச் ‘சோதிவாய்’ என்கிறார்.
இங்கே ஈடு :– “*மாம் அக்ரூரேதி வசஷ்யதி*” யென்று வார்த்தையனவிலேயிற்கு அக்ரூரன் அநுபதித்தது தத்காலத்தில் திருமுகத்திற் செவ்வியும் உத்தேச்யமாயிருக்கிறதாயிற்று இவர்க்கு.
உன் தாமரைக் கண்களால் நோக்காய்–வார்த்தையில் தோற்றாத பந்தமும் நோக்கிலே தெரியும்படி குளிர நோக்கியருளவேணுமென்கை.
கோயிலில் பிள்ளை தேவப்பெருமாளரையா இப்பாட்டை ஸேவிக்கையில் *உன் தாமரைக் கண்களால் நோக்காய்* என்று ஒருவிசை சொல்லி நிறுத்தாதே ‘நோக்காய் நோக்காய் நோக்காய்’ என்று பலகாலும் ஒருவிசை கொண்டிருந்து மேலடியில் போகமாட்டாதே நின்றாராம் ;
அப்போது கோஷ்டியில் வீற்றிருந்து அவரது திருத்தகப்பனாரான ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் எழுந்திருந்து ‘பிள்ளாய்! நீ எம்பெருமான் திருவுள்ளம் புண்டும்படி இங்ஙனே பலகாலும் சொல்லி நிப் பத்திக்கலாமோ? அழகிய மீற்றைத் தந்து நல்ல பாட்டைத் தந்து ஐச்வர்ய ஸந்தானங்களையும் தந்தருளியிருக்க ஒன்றும் செய்யாதாராக நினைத்து இன்னமும் நோக்காய் நோக்காய் நோக்கயென்றால் இது என்னே! மேலே பாடு என்றாராம்.
—————
***– உன் திருவடிகளை என் தலைமேல் வைத்தருளவேணு மென்று திருப்புளிங்குடிக் கிடந்தானைப் பிரார்த்திக்கிறார்.
குடிக் கிடந்து ஆக்கம் செய்து
நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த
நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-
.
பதவுரை
| கொடி கொள் பொன் மதிள் சூழ் |
–
|
கொடிகளாலே அலங்காரங்கொண்ட பொன்மயமான மதிகாளலே சூழப்பட்டு |
| குளிர் வயல் சோலை |
–
|
குளிர்ந்த வயல்களையும் பொழில் களையுமுடைத்தான |
| திருப்புளிங்குடி கிடந்தானே |
–
|
திருப்புளிங்குடியிலே சயனித்தருளும் பெருமானே |
| குடி கிடந்து |
–
|
ப்ரபந்நகுல மரியாதை வழுவாமலிருந்து |
| ஆக்கம் செய்து |
–
|
குடியில் பண்டில்லாத நன்மைகளை யுண்டாக்கி |
| தீர்த்த நின் அடிமை குற்றவேல் செய்து |
–
|
இதரவிஷயங்களில் ருசியைப் போக்கின வின் விஷயமானை அந்தரங்க கைங்கரியங்களை செய்து |
| உன்பொன் அடி கடவாதே |
–
|
உனது அழகிய திருவடிகளை விட்டு நீங்காதே |
| வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி |
–
|
பரம்பரையாய் வருகின்ற அடி யோமுக்கு அருள் செய்து |
| நீ ஒரு நாள் |
–
|
சி முன் பொருகாலத்தில் |
| படிக்கு அளவு ஆக நிமிர்த்த |
–
|
பூமிக்குத் தகுதியாக நிமிர்க் தளந்து கொண்ட |
| தலைக்கு அணியாய் |
–
|
என் தலைக்குத் தக்க அலங்காரமாம்படி பண்ணியருளவேணும். |
முன்னிரண்டடிகளால் தம்முடைய சேஷத்வப் பெருமையைப் பேசிக் கொள்ளுகிறார்.
குடிக்கிடத்தல், ஆக்கஞ் செய்தல், தீர்த்தவடிமைக் குற்றவேல் செய்தல் இங்குச் சொல்லப்படுகிறது.
குடிக் கிடத்தலாவது–குலமரியாதை தப்பாதபடி வர்த்தித்தல் பரதாழ்வான் தலையிலே முடியை வைக்கப்புக “இசஷ்வாரு வம்சத்தவர்களில் மூத்தாரிருக்க இளையார் மூடி குடிறயரியர்” என்றான் அவன்.
அப்படியே ஆழ்வாரும் தம்முடைய சேஷத்வத்தைக் காத்துக் கொள்ளும் விஷயத்தில் குலமரியாதை தவறாதவரென்க.
ஆசார்ய ஹருதயத்தில் பரதாழ்வானோடு ஆழ்வார்க்கு ஸாம்யம் நிர்வஹிக்குமிடத்து “குடிக்கிடந்தகையறவும்” என்றருளிச் செய்ததுங் காண்க.
ஆக்கஞ் செய்தலாவது–குடியில் பண்டில்லாத நன்மைகளை யுண்டாக்குகை.
ஆசார்ய ஹருதயத்தில் (82) *ஜநக தசுரத வஸீதேவ குலங்களுக்கு மூத்த பெண்ணும் நடுவிற் விள்ளையும் கடைக்குட்டியும்போலே இவரும் பிறந்து புகழு மாக்கமுமாக்கி அஞ்சிறையுமறுத்தார்* என்று விடத்து ஆழ்வார்க்கு பரதாழ்வானோடே ஸாம்யம் நிர்வஹிக்குமிடத்து ஆக்கஞ் செய்தல் என்கிறவிது எடுத்துக் காட்டப்பட்டது.
அவ்விடத்து வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகளின் திவ்ய ஸூக்தி வருமாறு – ‘ஸ்ரீ பரதாழ்வான் பிறந்து’ ராஜ்யஞ் சரஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்துமிஹார்ஹஸிஹ கதம் தசரதாஜ்ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக: இத்யாதியாலே மூத்தாரிருக்க இளையார் முடிசூடக் கடவதன்றென்கிற குலமர்யாதையை நடத்தினவளன்றிக்கே, *ஐடிலம் சீரவஜநம் ப்ராஞ்ஜலிம் பதிதம் புவி* என்றும், *பங்கதிக்தஸ்து ஐடிலோ பரதஸ் த்வாம் ப்ரதீக்ஷதே* என்றும் சொல்லுகிறபடியே ஜ்யேஷ்டரான பெருமாளுடைய விச்லேஷத்தில் ஜடை புனைந்து வல்களையுடுத்து கண்ண நீராலுண்டான சேற்றிலே தரைக்கிடை கிடந்து குலத்துக்கு முன்பில்லாத ஏற்றத்தை யுண்டாக்கினாப் போலே ஆழ்வாரும் *குடிக்கிடந்து* என்கிறபடியே க்ஷத்வ குலமர்யாதை தப்பாதபடி னிற்நமாத்ர மன்றிக்கே, *ஆக்கஞ் செய்து* என்கிறபடியே சேஷி விரஹக்லேசாதிசயத்தாலே காண வாராயென்றென்று கண்ணும் வாயுந்துவர்ந்து, *கண்ண நீர் கைகளாவிறைத்து, *இட்ட காலிட்ட கையாம்படி நிச்சேஷ்டராய்த் தரைக்கிடைகடந்த ப்ரேமவிசேஷத்தாலே இக்குடிக்குப் பண்டில்லாத வேற்றத்தையுமுண்டாக்கினார்” என்று.
நின் தீர்த்த படிமைக் குற்றவேல் செய்து–அடிமைக் குற்றேவலென்றும் தீர்த்த வடிமைக் குற்றேவலென்று மிரண்டுண்டு;
எம்பெருமாள் திறத்துக் கைங்கர்யம் பண்ணுவது அடிமைக் குற்றேவல், அப்போது விஷயாந்தரங்களிலும் போக்யதாபுத்தி அநுவர்த்திருக்கவும் கூடும் ;
அப்படியன்றிக்கே தன்னுடைய பரம போக்யதையாலே இதர புருஷார்த்தத்தில் நகையை அறவேயறுத்த அடிமைக் குற்றேவலுண்டு, அதற்குத் தீர்த்த வடிமைக் குற்றேவலென்று பெயர்.
மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு பரமாத்மநி யோரக்தோ விரபதோபரமாத்மநி என்னுமாபோலே, நாமும் சுதாசித் பகவத் விஷயத்திலே அடிமைக் குற்றேவல் செய்யா நின்றோமாகிலும் விஷயாந்தரங்களில் நசையும் கலசியிருக்கும்.
அவற்றைக் காரியுமிழ்ந்து செய்யும் குற்றேவலே தீர்த்த வடிமைக் குற்றேவேல். அதனை செய்து.
உன் பொன்னடிக் கடவாதே வழிவருகின்ற–இது அத்யந்த பாரதந்திரியத்திற்குச் சேர்ந்ததொரு வழிபாடு,. இளைய பெருமாளும் அடிமை செய்தார். பரதாழ்வானும் அடிமை செய்தான். இளைய பெருமாளுடையது நிர்ப்பந்தித்த வடிமை : பாரதந்திரியும் குடிபுகாத வடிமை : பரதாழ்வானுடையது அப்படிப்பட்ட தன்று:
*ஸ காமம் அநவாபைய* என்னா நிற்கச் செய்தேயும் *ஆருரோஹ ரதம் ஹருஷ்டா* என்னு நின்றதே.
ஆகவே பொன்னடிக் கடவாத வழிபாடாவது ஆணையை மீறாத வழிபாடென்றதாயிற்று.
ஆக இப்படிப்பட்ட வழிபாடுகளில் ஊன்றியிருக்குமடியரான வெமக்குக்கருணை புரிந்து ‘அருளி’ என்ற வினையெச்சம் ‘அணியாய்’ என்ற வினைமுற்றிலே சென்று அந்வயிக்கும்.
அடியரோர்கருளிப் பாதபங்சயமே தலைக்கணியாய் என்க.
பாதபங்கயத்தை விசேஷிக்கிறார் நீயோருநாள் படிக்களவாக நிமிர்த்த என்று குணுகுண நிரூபணம் பண்ணுதே எல்லார் தலையிலும் வைத்த திருவடிகளல்லவா? அப்ரதிஷேதமே பற்றாசாக விஷயீகரிக்கும் திருவடிகளல்லவா? அவற்றை, ஆசைப்படுமென் தலையிலே வைக்கலகாதோ?
விசாலமான பூமிக்களவாக்கின திருவடியை என் தலைக்கு அளவாக்கலாகாதோ?
*கோலமாமென் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழலே* என்றும்
*அடிச்சியோந்தலைமிசை நீயணியாய் ஆழியங்கண்ணுவுன் கோலப்பாதம்* என்றும் ஆசைப்பட்டுக் கிடக்குமென் தலையிலே உன் பாத பங்கயத்தை வைத்தருளாய்.
இனி ஈற்றடி “கொடிக்கொள் பொன்மதின்சூழ் குளிர்வயல்சோலைத் திருப்புனிங்குடிக் கிடந்தானே” என்பது,
இதற்கு நம்பிள்ளையருளிச் செய்யும் வியாக்கியானத்தைக் கண்டால் ‘என்னே அவருடைய மேதாவிலாஸம்!’ என்று உருகவேண்டியிரா நின்றது ;
ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின் :– [கொடி யித்யாதி] ஸா ராமஸங்கீர்த்தநவீ தசோகா ராமஸ்ய சோகேஞ ஸமாநசோகா = பிராட்டிக்கு பெருமாளுடைய ஸத்பாவத்தில் அதிஸங்கையோலேயும் ஒரு சோகமுண்டு ; பிரிவாற்றாமையாலே படுகிறதும் ஒரு சோகமுண்டு ;
அதில் திருவடியைக் கண்ட பின்பு ஒன்று தீர்ந்ததிறே. அப்படியே, ஸீரக்ஷிதமாய் ச்ரமஹாமான தேசத்திலே கண்வளர்ந்தருளப் பெற்றபடியாலே ‘இத்தலைக்கு என் வருகிறதோ?’ என்கிய பயம் தீர்ந்தது;
இனி யென்னை விஷயீகரிக்ருமதுவே குறை; அக்குறையும் தீர்த்தருளவேணும் என்று இக்கருத்தைச் சிறிது விவரிப்போம் ;
ஆழ்வார்க்கு இரண்டு சோகங்களுண்டாம்; திருநாட்டிலே மங்களாசாஸநபரர்களான நித்யஸுரிகள் புடை சூழ நிர்ப்பபயமாய் எழுந்தருளியிருக்கிறானே! அந்தோ! என்ன அவத்யம் வருகிற தோவிங்கு–என்பது ஒரு சோகம்.
இப்பெருமானோடே யதாநநோரதம் தமக்கு அநுபவம் கிடைக்கவில்லையே யென்பது மற்றொரு சோகம்.
இவ்விரண்டு சோகங்களில் முந்தின சோகம் தீரப்பெற்றதாம்; எப்படி யென்னில், கொடிக் கொள் பொன்மதின் சூழ்ந்திருக்குமிருப்பைக் கண்டதனாலே ‘அவனுக்கென் வருகிறதோ’ என்கிற சோகம் தொலைந்ததாம்.
இனி இரண்டாவது சோகம் தீரவேணுமென்பதே மூன்றா மடியினால் தெரிவிக்கப்பட்டதாயிற்று
———–
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-
பதவுரை
| திருப்புளிங்குடி கிடந்தானே |
–
|
திருப்புளிங்குடியிலே திருக்கண் வளர்ந்தருளுகிறவனே |
| கிடந்த நான் கிடந்தாய் |
–
|
இங்கு சயனிக்கத் தொடங்கினகாலம் முதலாக இப்படியே ஏகரீதியாகச் சயனித்துக் கொண்டிரா நின்றாய் |
| உன் திரு உடம்பு அசைய |
–
|
உன் திருமேனி நோவ |
| எத்தனை காலம் கிடத்தி |
–
|
இன்னு மெத்தனை காலம் சயனித்திருப்பாய் |
| தொடர்ந்து குற்றவேல் செய்து |
–
|
நிரந்தரமான நித்ய கைங்கரியஞ் செய்து |
| தொல் அடிமை வழிவரும் தொண்டரோர்க்கு அருளி |
–
|
அநாதியான அடிமைவழியிலே அக்வயித் திருக்கின்ற அடி யோமுக்கு அருள் செய்து |
| தடம் கொள் தாமரை கண் விழித்து |
–
|
(உனது) விசாலமான தாமரைக் கண்களைப் பார்க்க விழித்து |
| உன் தாமரை மங்கையும் நீயும் |
–
|
திருத்தேவியாருடனே |
| இடம் கொள் மூ உலகும் தொழ |
–
|
விசாலமான மூவுலகமு தொழும்படியாக |
| இருந்தருளாய் |
–
|
வீற்றிருந்து ஸேவை ஸாதிக்க வேணும் |
***– ஆசார்ய ஹருதயத்தில் (81) “பண்டைநாளிற்பிறவி உண்ணுட்டுத்தேசிறே” என்றொரு அத்புதமான ஸூக்தியருளிச் செய்கிறார்.
*பண்டைநாளிற்பிறவி* என்றது ஒரு கம்பீரமான வருளிச் செயல்
*பண்டை நாளாலேயென்று தொடங்குகிற இத்திருவாய் மொழியில் ஒரு விலக்ஷணமான பிறவி சொல்லப்படுகிறது.
அதாவது, தாஸ்ய பிரோதியான ஜந்மாத்யபிமாநமின்றிக்கே கைங்கர்யாநுரூபமான குடிப்பிறவி.
இப்பதிக்கத்தில் முதற்பாட்டில் *பல்டிகால் குடிகுடி வழிவந்தாட் செய்யுந்தொண்டர்* என்றார் ;
இரண்டாம் பாட்டில் *உன் பொன்னடிக் கடவாதே வழிவருகின்ற வடியர்* என்றார் ;
மூன்றாம் பாட்டான விதில் *தொல்லடிமை வழிநருந்தொண்டர்* என்கிறார். இப்படிப்பட்ட மிகச்சிறந்தான தொண்டக்குலப் பிறவியை வெளியிடும் பதிகமாயிற்று இது.
தொடர்ந்து குற்றவேல் செய்து தொல்லடிமை வழிவருந் தொண்டராம் ஆழ்வார்.
எம்பெருமான் போமிடமெடங்கும் இளையபெருமாளைப் போலே கூடவே திரிந்து ‘இந்த நிலைமையில் இன்ன கைங்கரியம் செய்ய வேணும், இந்த நிலையில் இன்ன கைங்கரியம் செய்ய வேணும்’ என்று அந்தாங்கவடிமைகளைச் செய்து ஆத்மாவுக்கு ஸ்வாபாவிமாக அடிமையில் நின்றும் வழுவாதிருப்பவர் என்க.
இப்படிப்பட்ட தொண்டரான தமக்கு அருள் வேணுமெனறு இரண்டாமடியால் பிரார்த்திக்கிறபடி.
அருள் செய்ய வேண்டும் ப்ராகாரத்தைப் பின்னிரண்டடிகளால் விளக்குகிறார்.
தடங்கொள் தாமரைக்கண் விழிக்க வேணும், எழுந்திருக்க வேணும்; கைங்கரியங் கொள்ளுகைக்குத் தாமரைமங்கையோடு கூட விருக்க வேணும் என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றியருளும் வியாஜத்தினால் மூவுலகுந்தொழ வீற்றிருந்தருள வேணும் என்றிரக்கிறார்.
அர்ச்சாவதாரநிலை என்றைக்குமொருபடிப்பட்டே யிருக்கு மென்பதும் அது குலைக்க வொணணுததென்பதும் ஆழ்வாரறியாததன்று :
அறிந்து வைத்தும் “நீ யெழுந்து–இருந்தருளாய்” என்று பிரார்த்திக்கிறார் –
திருமழிசைப்பிரான் திருக்குடந்தையாராவமுதன் பக்கலிலே பிரார்த்தித்துப் பெற்றாரென்னும் ப்ரஸித்தியாலே *நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலமேனமாய், இடந்தமெய் குலுங்கவோ விலஞ்குமால் வரைச்சுரம், கடந்தகால பரந்த காவிரிக்கரைக் குடந்தையும் கிடந்தவாறு–எழுந்திருந்து பேசுவாழி சேகனே (திருச்சந்த விருத்தம்) என்ற பாசுரத்திலை திஹயமுணர்க.*
அப்பாசுரத்தின் சாயலாகவே யருளிச்செய்கிறார் கிடந்தநாள் கிடந்தாயெத்தனை காலங்கிடத்தி உன் திருவுடம்பசைய = கிடையழகு காணவேணுமென்று ஆசைப்பட்ட வொருவனுக்காகக் கண்வளர்ந்தருளினாய்;
இனியொருவன் வந்து “கிடந்தவாறெழுந்திருந்து பேசு” என்றால் அதற்குப் பிறகும் கிடந்தருளலாமோ? எழுந்திருக்க வேண்டியதன்றோ.
[உன் திருவுடம்பகைய எத்தனை காலங்கிடத்தி] இடம்பலங் கொள்ளாதே ஏகாகாரமாக நெடுங்காலம் சயனமே செய்தருளினால் சாலவும் சிரமமாயிராதோ? ஸுகுமாரமான திருமேனிக்குத்தகுமோவிது. என்றைக்கோ வொருவன் பிரார்த்திதானென்று அவனுடைய வேண்டுகோலையே பார்க்குமித்தனையோ?
திருமேனியின் ஸெளகுமார்யத்தையும் அவனுடைய வேண்டுகோலையே பார்க்குமித்தனையோ?
திருமேனியின் ஸெளகுமார்யத்தையும் அடியேன் போல்லாருடைய வேண்டுகோளையும் கணிசிக்க வேண்டாவோ?
கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த காரியமாராய்ந்தருள் என்று வேண்டினால் அங்ஙனமே செய்தருள வேண்டாலோ?
————-
புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய்
சிவப்ப நீ காண வாராயே–9-2-4-
பதவுரை
| புளிங்குடி கிடந்து |
–
|
திருப்புளிங்குடியிலே சயனித்தும் |
| வாருண மங்கை இருந்து |
–
|
வாகுரை மங்கையிலே வீற்றிருந்தும் |
| வைகுந்தத்துள் நின்று |
–
|
ஸ்ரீவைகுண்டத்திலே நின்றும் |
| தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் |
–
|
என் சிந்தையைத் தெளிவித்து அங்கே விட்டுக் பிரியாதேயிருந்து என்னை யாளுமவனே |
| எனக்கு அருளி |
–
|
எண் திறத்திலே க்ருபை பண்ணி |
| நரிள்ந்த சீர் |
–
|
(உனது) குளிர்ந்த திருக்குணத்தை பற்றி |
| உலகம் மூன்று உடன் வியப்ப |
–
|
மூவுங்கும் ஒருமித்து ஆச்சரியப் படும்படியாகவும் |
| நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப |
–
|
நாங்களும் கூத்தாடிக் கோளாஹலம் செய்யும்படியாகவும் |
| பளிங்கு நீர் |
–
|
தெளிந்த நீரையுடைத்தான |
| மூகிலின் |
–
|
காளமேகத்திலே |
| பவளம் போல் |
–
|
பவளக்கொடி படர்ந்தாற்போலே |
| கனிவாய் சிவப்பு |
–
|
கனிந்த திருவதரம் சிவந்து தோன்று மழகை |
***– திவ்யதேசங்களில் சில தலங்களில் சயனிப்பது, சில தலங்களில் வீற்றிருப்பது, சில தலங்களில் நிற்தாகவன்றோவுள்ளது.
இந்நிலைமைகளைத் தனித்தனியே அநுபவிப்பது தவிர, இவை மூன்றையும் சேர்த்ததுபவிப்பதொரு சுவையுமுண்டு
ஆழ்வார்களிடத்தில்*நின்ற தெந்தையூரகத்து இருத்தெந்தை பாடகத்து அன்று வெஃகனைக் கிடந்தது* என்றார் இவர்தாமே கீழே.
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகத்தில் *கல்லுயர்ந்த நெடுமதில் சூழ் கச்சிமேயகளிறென்றும் கடற்கிடந்த கனியேயென்றும் அல்லியம் பூ மலர்ப்பொய்கைப் பழனவேலி ணணியழுந்தூர் நின்று கந்தவம்மானென்றும்* என்றொரு பாசுரம் பாடினார்.
இதில் *கச்சிமேய களிறென்பதற்குத் திருப்பாடகத் தெம்பெருமானை அர்த்தமாகவுரைத்தார் பெரியார் வாச்சான் பிள்ளை.
களிறு என்றதற்குப் பொருத்தமாக ஹஸ்திகிரிநாதரான பேரருளாளப் பெருமாளை அர்த்தமாகப் பணிக்க வேண்டியிருக்க அவரைவிட்டு ஒரு மூலையிலுள்ள பாண்டவ தூதனை ஏதுக்குப் பணித்தாரென்று சிலர் விசிகித்ஸை செய்வதுண்டு,.
ஆழ்வாருடைய திருவுள்ள மறிந்து செய்தருளின வியாக்கியான மன்றோவது; அப்பாட்டில், கடல்கிடந்த கனியே யென்று கிடையழகையும், அணியழுந்தூர் நின்றுகந்த வம்மானென்று நிலையழகையும் அது பவித்திருக்கையாலே அதற்குப் பொருத்தமாக வீற்றிருக்குமழகின் அனுபவந்தான் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் உறைந்திருக்குமென்றும்
அதற்கு சேர ஸ்ரீபாண்டவதூதனையே பொருளாகக் கொள்ளவடுக்கு மென்றும் திருவுள்ளம் பற்றியே பெரியவாச்சான்பிள்ளை வீற்றிருந்த தலமான திருப்பாடகத்தை யெடுத்துக் காட்டியருளினர். அது பவரஸிகர்களின்படி இது.
இந்த ரீதியிலே புளிங்குடிக்கிடந்து வாகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று* என்று இப்பாசுரமைந்தவழகு பரமபோக்யம்.
ஆசார்யஹருதயத்தில்– திருவாய்மொழியாயிரத்திலும் நம்மாழ் வாருகந்த திவ்ய தேசங்களில் விளங்கும் திருக்குணங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் ககாட்டும் பிரகாணத்தில் இம்மூன்று தலங்களிலுஞ் சேர்ந்து ஒன்றாக விளங்குந்திருக்குணத்தை யெடுத்துக்காட்டியுள்ள சூர்ணையாவது–”போக்யபாகத்வரை தெளிந்த நதைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம்” என்பது
(இதன் கருத்தாவது) பசி களத்தவன் அன்னம் பக்வமாருமளவும் ஆறியிருக்க மாட்டாமல் பதற்றத்தாலே அன்னம் பக்வமாருமிடத்திற்கு அணித்தாகவந்து கிடப்பதும் இருப்பதும் நிற்பதுமாய் தன்னுடைய அலமாப்பைக் காட்டுவளும்; அதுபோல, எம்பபெருமானும் தனக்கு போக்ய பூதாரான ஆழ்வார்க்குப் பரமபக்திபாகம் பிறக்குமளவும் ஆறியிருக்க மாட்டாமல் தனக்குண்டான பதற்றத்தைத் திருப்புளிங்குடி வரகுணமங்கை ஸ்ரீவைகுண்டங்களில் கிடப்பதிருப்பது நிற்பதான நிலைமைகளினால் காட்டியருள்கிறானாம். இதை ஆழ்வார் *தெளிந்த வென்சிந்தை யகங்கழியாதே யென்னையாள்வாய்!* என்கிற விளியினால் ஒருவாரு காட்டியருளுகிறார். பசிகனத்தவன் அன்னம் பக்வமாருமிடத்தை விட்டகலா தாப்பாலே எம்பெருமானும் ஆழ்வாருடைய பக்தி பரிபக்வமாகுமிடமான திருவுள்ளத்தைவிட்டு ஆகலாதே வர்த்திக்கிறபடி.
திருப்புளிங்குடியிலே கிடந்ததோர் கிடக்குமழகைக் காடியும், லாகுணமங்கையிலே *பிரானிருந்தமை காட்டினீர்* என்னுமிருப்பழக் காட்டியும், ஸ்ரீவைகுண்டத்திலே *நிலையார நின்றான்* என்னும் நிலையழகைக் காடியும் தம்மையீடுபடுத்திக் கொண்டமையை முதலடியிலே பேசினாராயிற்று.
தெளிந்த வென்சிந்தை யகங்கழியாதே யென்னை யாள்வாய்–என் சிந்தையைக் தெளிவித்து அத்தைவிட்டுப் பிரியாதேயிருந்து குணஜ்ஞானத்தாலே யென்னைத் தரிப்பித்துக் கொண்டு போருமவனே! என்றபடி.
அயோக்யதாநுஸந்தானம் பண்ணி அகலாதபடி கண்கண் சிவந்தென்கிற பதிகத்திலே என்னுள்ளத்தைத் தெளிவித்து அத்தைக் கைவிடாதே அதிலே நிரந்தவாஸம்பண்ணி எடுப்பும் சாய்ப்புமாக என்னை நடத்திக் கொண்டு போருமவனே! என்க.
எனக்கருளி என்பது நீ காணவாராயே யென்பதிலே அங்வயிக்கும்,
நளிர்ந்த சீரை உலகம் மூன்றும் வியக்கவும், நாங்கள் கூத்தாடி நின்று ஆர்க்கவும் நீ வரவேணும் என்கிறார்.
‘நளிந்த சீர்’ என்றது குளிர்ந்த குணம் என்றபடி. அநுஸந்திதவர்களின் உள்ளத்தைக் குளிரச் செய்யும் சீலகுணமென்க.
ஆழ்வார் எப்படியபேக்ஷித்தாரோ அப்படியே செய்தான் என்று இம்மஹா குணத்தைச் சிறியார் பெரியாரென்னும் வாசியின்றிக்கே எல்லாருமறிந்து ஆச்சரியப்படும்படி வரவேணும்.
அவ்வளவேயுமன்றிக்கே நாங்களும் மதுவனமழித்த வானர முதலிகள் போலே ஸஸம்ப்ரமந்ருத்தம் பண்ணி நின்று கோலாஹல பரவசர்களாம்படியாகவும் வரவேணும் என்கிறாராயிற்று.
பளிங்கு நீர் முகிலின் பவளம்போல் கனிவாய் சிவப்ப–தெளிந்த நீர் நிறைந்த காள மேகத்திலே பவளக்கொடி படர்ந்தாற்போலே யிருக்கிற திருவதரம் சிவந்து தோன்று மழகை நாங்கள் காணும்படியாகவும் வரவேணும்.
————-
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண
வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண்
தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்
தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-
பதவுரை
| பளவம் நன்படர் கீழ் |
–
|
நல்ல பவளப் படரின் கீழே |
| சங்கு உளை |
–
|
சங்குகள் உறையப் பெற்ற |
| பொருநல் |
–
|
தாமிர பர்ணியையுடைய |
| நண் திருப்புளிங்குடி கிடந்தாய் |
–
|
அழகிய திருப்புளிங் குடியிலே திருக்கண் வளர்ந்தருளுமவனே! |
| கவளம் மா களிற்றின் |
–
|
பவளங்கொள்ளுமியல்லினான கஜேந்திராழ்வானுடைய |
| இடர் கெட |
–
|
துயரம் தீரும்படி |
| தடத்து |
–
|
பொய்கைக் கரைக்கு |
| காய் சினம் பறவை ஊர்ந்ததானே |
–
|
(விரோதிகள் திறந்து) வெல்லிய கினத்தை யுடைய பெரிய திருவடியை நடத்திக் கொண்டு வந்தவனே! |
| பவளம் போல கனிவாய் சிவப்ப |
–
|
பவளம் போன்று கனிந்த அதரம் விந்து தோன்ற |
| நின் பல் நிலா முத்தம் |
–
|
உன்னுடைய பல்லாகிற நிலாவையுடைய அதரத்தினது |
| கதிர் தவழ் முறுவல் செய்து |
–
|
கதிர் உள்ளடங்காதே புறம்பே தவழும்படி புன்முறுவல் செய்து |
| காண நி வந்து |
–
|
நான் காணும்படி நீ வந்தருளி |
| நின் திரு கண் தாமரை தயங்க நின்றருளாய் |
–
|
உனது திருக்கண்களாகிற தாமரை விளங்கும்படி நின்றருளவேணும். |
***– இப்பாட்டில் *கவளமாகளிற்றினிடர்கெடத் தடத்துக் காய்சினப் பறவை மயூர்ந்தானே!* என்ற விளியினால் கஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாப் போலே தமக்கு வந்து தோற்றி யருளவேணுமென்று பிரார்த்திக்கின்றமை விளங்கும்.
கீழ்ப் பாட்டில், பவளம் போல் கனிவாய் சிவப்பல் காண வரவேணுமென்றாரே; அவவளவிலும் பர்யாப்தியில்லாமையாலே இன்னமும் சில மநோரதங்களையும் விஜ்ஞாக்கிறாரிதில்,
பவளம் போல் கனிவாய் சிவப்பக் காண வந்து, அதற்குமேலே பன்னிலாமுத்தல் தவழ்கதிர் முறுவல் செய்ய வேணும்; அதற்குமேலே திருக்கண் தாமரை தயங்க நின்றருளவும் வேணும் என்கிறார்.
பல்லாகிற நிலாமுத்து நிரையானது கதிர் உள்ளடங்காதே புறம்பேதவழும்படி புன்முறுவல் செய்யவேணுமென்கிறார். நிலாமுத்த மென்றது–ஒளியுடைய முத்துக்கோவை யென்றபடி.
இனி மற்றொரு வகையாகவும் பொருள் கூறுவர்; முத்தம் என்று அதரத்தைச் சொன்னபடியாய், அதரத்திலே பல் நிலாக்கதிர் தவழும்படி என்று, முந்துற நாலடிவந்து, பின்னை அதுவும் மாட்டாதே ஸ்தப்தனாய் நிற்கும் நிலை காணவேண்டி ‘நின் திருக்கண்தாமரை தயங்க நின்றருளாய்’ என்கிறார்.
பின்னடிகளிரண்டும் விளி. நல்ல பவளப்படரின் கீழே சங்குகள் நிராபாதமாய் வர்த்திக்கப் பெற்ற தாமிரபர்ணியையுடைத்தான திருப்புளிங்குடியிலே திருக்கண் வளர்ந்தருளுமவனே!
*நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய்! வாரா யென்னாரிடரை நீக்காய்* என்று கூயிழைத்த ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய இடர் கெடும்படிபயாக மடுவின் கரையிலே பெரிய திருவடியை நடத்தினவனே ! என் வேண்டுகோளைத் தலைக்கட்டியருள வேணுமென்றோராயிற்று.
கவனமாகளிறு என்றது யானையின் சாதிக்குரிய சொய்போக்கு, “கவளமால் யானை கொன்” “கவள யானை கொம்பொசித்த” “கவளக்கடாக் களிறட்ட பிரான்” என்பன காண்க.
—————
காய்ச்சினப் பறவை யூர்ந்து
பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று
அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே–9-2-6-
பதவுரை
| பொன்மலையின் மீ மிசை |
–
|
பொன்மயமான மஹாமேருமலையின் மேலே படிந்த |
| கார்முகில் போல |
–
|
காள மேகம் போலே |
| காய் சினம் பறவை ஊர்ந்து |
–
|
வெல்லிய சினத்தையுடைய பக்ஷி ராஜனை நடத்தி |
| மா சினம் மாலி |
–
|
பெரிய சினத்தை யுடையனாய்க் கொண்டு வந்த மாலி யென்ன |
| மான் மாலி |
–
|
சமாலி யென்ன |
| என்றவர் அங்கு பட |
–
|
இப்படிப்பட்டவர்கள் அங்கே முடியும் படியாக |
| கனன்று முன் நின்ற |
–
|
சீறி அவர்கள் முன்னே நின்ற |
| காய் சின யேந்தே! |
–
|
காய்சின வேந்தென்னுச் திரு நாமமுடைய பெருமானே! |
| கதிர் முடியானே |
–
|
விளங்காநின்ற திருவபிஷேகத்தை புடையவனே! |
| கலி வயல் திரு புளிங்குடியாய் |
–
|
செழித்த வயலையுடை திருப் புளிங்குடியில் வாழ்பவனே! |
| காய்சினம் |
–
|
வெவ்விய சினத்தை யுடைய |
| ஆழி சங்கு வாள்வில் தண்டு |
–
|
திருவாழி முதலான பஞ்சாயு தங்களையும் |
| வந்தி |
–
|
திருக்கைகளில் தரித்துக் கொண்டு |
| எம் இடர் கடிவானே |
–
|
எமது இடங்களைப் போக்குமவனே |
|
(திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய் என்று
கீழ்ப்பாட்டோடே அந்வயம்)
|
***– கீழ்ப்பாட்டில் அபேக்ஷித்தபடிகளைத் திருச்செவி சாத்தின எம்பெருமான் ஆழ்வீர் ! உம்முடைய அபேக்ஷிதங்க ளவிந்தோம் ; அப்படியே செய்ய நமக்கும் விருப்பமுண்டு ; ஆனால் அதற்குச் சில ப்ரதிபந்தகளுண்டே; அவையிருக்க நாம் எப்படி செய்து? என்ன,
மாலி ஸீமாலி மால்யவான் முதலான அரக்கர்களை அநாயாஸமாகப் பொடி படுத்தின எனக்கு என் விரோதிகளைப் போக்குகை அசிதோ ? அவர்களிலும் வலிதோ என் விரோதி என்கிறாரிப்பாட்டில், உகவாதரர்முன்னே பெரிய திருவடியை மேற்கொண்டு சென்று நின்ற நீ, உகந்து காண வாசைப்பட்ட என் முன்னே அப்படி வந்து நின்றருள நினைத்தால் தடையுண்டோ? அவசியம் அப்படி வந்து நின்றருளவேணும் என்கிறார்.
இராவணனுக்கு முன்பு இலங்கையை யாண்டு கொண்டிருந்த மாலி ஸீமாவிப்ரப்ருதிகளான அரக்கர்களை எம்பெருமான் கருடாரூடனாய்ச் சென்று முடித்தருளின வரலாற்றைத் திருமங்கை யாழ்வார் பெரிய திருமொழியில் (8–6–2) ‘பொருந்தாவரக்கர் வெஞ்சமத்துப் பொன்றவன்று புள்ளூர்ந்து, பெருந்தோள் மாலி தலை புரளப்பேர்ந்தவரக்கர் தென்னிலங்கை இருந்தால் தம்மையுடன் கொண்ட அங்கெழிலார் பிலத்துப் புக்கொளிப்பக் கருந்தான் சிலைகைக் கொண்டான்’ என்ற பாசுரத்தினால் விரிவாக அநுஸந்திப்பது காண்க.
“அருளாழிப்பள்” என்று விசேஷிக்கப்படுகிற புள்ளரையன் இங்குக் “காய்சினப் பறவை” என்று விசேஷிக்கப்படுகிறான்; விரோதிகளின் மீது எம்பெருமானுக்கு ஒருநால் அருள்தோன்றினாலும் கருடனுக்கு அருள் தோன்றாதாம் ; கண்ணற்ற அழியச்செய்வனாம். காய்சினப் பறவை யென்றது–விரோதிகள் விஷயத்திலே வெவ்விய சீற்றத்தையுடைய கருடன் என்றபடி.
அவன்மேல் எம்பெருமான் ஏறிநின்ற நிலைக்குத் தகுதியாக ஒருவமை கூறுகின்றாய பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல் என்று. மேருமலையின்மீது காளமேகம் படிந்தாற் போன்றிருந்த தென்க. கருடன் பொன்மலையாகவும் எம்பெருமான் கார்முகிலாகவும் கொள்ளப்பட்டானன். அப்படி கருடாரூடனா யெழுந்தருளினபோது மாண்டு போனவர்களைச் சொல்லுகிறது இரண்டாமடி.
‘மாலிமான்’ என்றதை ‘மான்மாலி’ என்றாக்கி மஹானான மாலி ஸீமாலி என்று கொள்க.
மாலி ஸீமாவிகளைச் சொன்னது மால்யவானுக்கும் வலக்ஷணம். என்று அவர் பட–என்று சொல்லப்படுகிறத அவ்வரக்கர் களெல்லாம் முடியும்படியாக, கனன்று முன்னின்ற–சீற்றங் கொண்டு அவர்கள் முன்னே நின்ற என்றபடி.
கொல்லப்பட வேண்டிய பாபிகளான அவர்களுக்குப் பெரிய திருவடிமேல் நின்று ஸேவை ஸாதிக்கவும் வேணுமோ? அடியேனுக்குத்தானோ அந்த ஸேவை அரிதாக வேண்டும்? என்பது உள்ளுறை.
காய்சின வேந்தோ! விரோதிகளைக் காய்ந்து போடும் சினத்தையுடைய ஸ்வாமியே! என்றபடி,. இங்கு ஓர் ஆராய்ச்சி குறிக்கொள்ளத்தக்கது; திருப்புளிங்குடி யெம்பெருமானுக்குத் காய்சின வேந்து என்று திருநாமம். ஈட்டிலும் நம்பிள்ளை இது திருநாமமென்றே யெடுத்துக் காட்டியுள்ளார்.
இப்படியிருக்க, காய்சின வேந்து என்கிற இச்சொல்லைச் சிலர் ‘காசினி வேந்து’ என்று ஆக்கினதோடு நில்லாமல், காசினி யென்று பூமிக்குப் பெயராதலால் காசினி வேந்தென்றது பூமிக்கு அரசன் என்றவாறு என்று கொண்டு இத்தலத்தெம்பெருமானைப் பூமிபாலன் என்கிற வட சொல்லால் வழங்கி வருகின்றனர்.
திருநரங்கூரைச் சேர்ந்த மாலைப் பூமிபாலன் என்கிற வட சொல்லால் வழங்கி வருகின்றனர். திருநாங்கூரைச் சேர்ந்த பதினொரு திருப்பதி களையுஞ் சேர்த்து “நத்தீப கடப்ரணர்த்தக மஹாகாருண்ய ரக்தாம்பக” இத்யாதியாக ஒரு ச்லோகம் இருப்பதுபோல, ஆழ்வார் திருநகரியைச் சார்ந்த நவ திருப்பதிகளையுஞ் சேர்த்து “வைகுண்ட நாத விஜயாஸந பூமிபால” இத்பாதியாக வொரு ச்லோகம் ப்ரஸித்தமாகவுள்ளது. இது மணவாள மாமுனிகள் அருளிச் செய்ததென்றும் சொல்லி வருகிறார்கள்.
ஈட்டிலருளிச்செய்த படிக்கு நேர்விரோதமாகக் காசினி வேந்தென்று பாடங்கொண்டு பூமிபாலனென்று அதற்கு ஸம்ஸ்கருதமாக்கி மணவாள மாமுனி களருளிச் செய்தாரென்றால் இது ஸம்பாவிதமாகுமோ?
ஒரு வியாக்யானத்திலாவது காசினி வேந்தென்கிற பாடமும் அதற்குரிய பொருளும் காணப்படவில்லை.
“காயுஞ் சினத்தையுடை வேந்தே!” என்றே ஸகல வியாக்யானங்களிலு முள்து. “இது திருநாமம்” என்று இருபத்தினாலாயிரப்படியிலும் ஈட்டிலும் விசேஷித்து அருளிச் செய்யப்பட்டுமிருக்கிறது. இங்ஙனேயிருக்க, விபரீதம் எங்ஙனே புகுந்ததென்று ப்ராமாணிக ப்ராஜ்ஞர்கள் ஆராயக்ககடவர்கள்.
உண்மை யென்ன வென்றால் காய்சின வேந்தென்பதைக் காசின வேந்தென்று வழங்கிவர, பிறகு அது காசினி வேந்தென்று வழங்கப்பட்டு, அதற்கு பூமிபாலனென்று அர்த்தமும் செய்யப்பட்டதாயிற்று. திவ்யப்ரபந்தத்திலும் வியாக்யானங்களிலும் பரிசய மற்றவர்களின் பணி இது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபத்திலுள்ள திருத்தண்கால் என்னுந் திருப்பதியைத் திருத்தங்காவென்று வழங்கி வந்து ஸம்ஸ்க்ருத்தில் தங்கால சேஷத்ரமாக்கி ஸ்தல புராணமும் இட்டிருப்பதுபோல, இங்கும் பூமிபால சேஷத்ர மாஹாத்மிய மென்று ஒரு ஸ்தல புராணமும் தோன்றி யிருக்கக் கூடும்.
கதிர் முடியானே! – அடியார்களை ரக்ஷிப்பதற்கென்று நீ திருவபிஷேக மணிந்திருக்க, நான் இழக்கலாமோ வென்கிறார் போலும்,
கலிவயல் திருப்புளிங்குடியார்!= செழிப்புமிக்க வயலையுடை திருப்புளிங்குடியிலே திருக்கண்வளர்ந் தருளுமவனே! நீ இப்படி அணினாயிருக்க நானிழக்கலாமோ வென்கை.
ஈற்றடியில் பஞ்சாயுதச் சேர்த்தியை யருளிச்செய்கிறார். *எப்போதுங் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்* என்றாப்போலே அடியோங்களுடைய ஆபத்துக்களைப் போக்குகைக்காக நீ பஞ்சாயுதாழ்வார்களோடே கூடியிருக்க என் ப்ரதிவந்தகங்கள் என் செய்யும்? என்றவாறு.
இப்பாட்டில் வினை முற்று இல்லை; விளியோடே நின்றிருக்கிறது, கீழ்ப்பாட்டோடே அந்வயம். “எம்மிடர்கடிவானே! திருக்கண்தாமரை தயங்க நின்றருளாய்” என்று கூட்டுக.
—————-
எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே
இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து
நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள்
இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-
பதவுரை
| எம் இடர் கடிந்து |
–
|
எம்முடைய இடரைப் போக்கி |
| இங்கு என்னை ஆள்வானே |
–
|
இங்கு என்னை அடிமை கொண்டு போருமவனே |
| இமையவர் தமக்கும் ஆங்கு ஆணையாய் |
–
|
பிரமன் முதலிய தேவர்களுக்கும் அப்படியே ரக்ஷகனானவனே |
| செம்மடல் மலரும் தாமரை பழனம் |
–
|
சிவந்த இதழ்கள் மலருகிற தாமரைகள் பொருந்திய நீர் நிலங்களை யுடைத்தான |
| தண் திருப்புளிங்குடி கிடந்தாய் |
–
|
அழகிய திருப்புளிங்குடியிலே சயனித்தருள்பவனே |
| நாம் |
–
|
அடியொம் |
| நம்முடைய அடியர் கவ்வை கண்டு உகந்து |
–
|
பாகவதர்களின் கோலாஹலங் கண்டு மகிழ்ந்து |
| களித்து உளம் நலம் கூர |
–
|
உள்ளத்தினுள்ளே பரமானைத்தம் பொங்கும்படியாக |
| இம் மடவுலர்காண |
–
|
அறிவிலிகளான இவ்வுலகத்தாருங் காண |
| நீ ஒருநாள் எங்கள் கண் முகப்பே இருந்திடாய் |
–
|
நீ ஒருநாள் எமது கண்ணெதிரே இருந்தருளவேணும் |
***– உலகில் துர்ப்பலர்களென்றும் ப்ரபலர்களென்றும் இருவகுப்பினருளர் ப்ரபலர்கள் தங்களைத் தாங்களே ரக்ஷித்துக் கொள்ள வல்லவர்களென்பது கிடையாது;
எப்படி துர்ப்பலர்கள் எம்பெருமானால் ரக்ஷிக்கப்பட வேண்டியவர்களோ, அப்படியே ப்ரபலர்களும் அவன் கைபார்த்திருக்கவேண்டியவர்களே–என்னு மர்த்தத்தை வெளியிட்டுக் கொண்டு, அடியோங்கள் வாழும்படி எங்கள் கண் வட்டத்திலே ஒருநாள் இருக்கவேணுமென்று இரக்கிறார்.
ஆதியிலேயே *மயர்வற மதிநல மருளினன்யனவன்* என்று நான்பேசும்படிபாய என்னுடைய மயர்வையறுத்து என்னையடிமை கொண்டவனன்றோ நீ என்னுங்கருத்துப்படவருளி செய்கிறார்.
எம்மிடர்கடிந்து இங்கென்னையாள்வானே யென்று, இருள் தருமாஞாலமான விந்நிலத்திலேயன்றோ இவ்வுபகாரம் செய்தது! என்பது, இங்கு என்றதனால் காட்டப்படுகிறது.
இப்படி ரக்ஷகனாவது எங்களுக்கு மாத்திரமல்ல; “ஈச்வரோஹம்” என்று செருக்கியிருக்கிற பிரமன் முதலிய தேவர்களுக்கும் நிர்வாஹகன் நீயேயன்றோ வென்கிறார் இமையவர் தமக்குமாங்கனையாய்! என்று.
இப்படி துப்பலரோடு ப்ரபலரோடு வாசியற அனைவர்க்கும் ரக்ஷகன் நானேயென்னுமிடத்தை ஸர்வலோக ஸாக்ஷிகமாக நிருபித்துக் கொண்டு திருப்புளிங் குடியிலே சாய்ந்தருளா நிற்பவனே யென்கிறது இரண்டாமடி. தமக்குச் செய்தருள வேண்டுவதைப் பின்னடிகளாலருளிச் செய்கிறார்.
“இம்மடவுலர்காண நீ யொருநாள் எங்கள் கண் முகப்பேயிருந்திடாய்” என்பது பிரார்த்தனை. திருப்புளிங்குடியில்நின்று மெழுந்துவந்து திருப்புளியடியிலே ஸேவை தந்தருளவேணுமென்கிறார்.
ஒருநாளிருந்தால் போதுமோ வென்று கேட்வேண்டா பெருவிடாயன் ‘நாக்குநனைக்கத் தண்ணீர்வேணும்’ என்றால் அதற்கு அவ்வளவேயோ கருத்து
“அதர்சநே தர்மநமாத்ரகாமா: த்ருஷ்ட்வா பரிஷ்வங்க ரஸைகலோலா” என்றான் ஒருமஹாகவி. முதலடியிலேயே ஆசாஸ்மஹே விக்ரஹயோ ரபேதம் என்று ஆசம்ஸிக்கவொண்ணாதே.
அன்றிக்கே, இருந்திடாய் என்றது–சயனத்திருக்கோலத்தை விட்டு வீற்றிருந்த திருக்கோலத்தைக் காட்டியருளவேணுமென்று பிரார்த்திகிறரென்றுமாம்.
மூன்றாமடிக்கு ஆறாயிரப் படியருளிச் செயல் காண்மின்–”உனக்கு நல்லராயிருப்பார் நீ யிருந்தருளுமிருப்பைக் கண்டால் படும்பாடுகண்டு நாங்கள் வாழும் படியாக” என்று. ‘நும்முடையடியர்’ என்பதற்கு பர்யாயமாக ‘நம்முடையடியர் என்பது உலகவழக்கு ‘நம் அகத்தில் எல்லாரும் ஸெளக்கியந்தானே” என்றால் “நும் அகத்தில் ” என்று தானே பொருள்படும்.
‘எங்களைப் போன்ற அடியவர்கள் ‘என்கிற பொருளிலும் ‘நம்முடையடியர்’ என்பதுண்டு. பக்தபாகவதர்களின் கவ்வையை–கோலாஹலத்தைக் கண்டு நாங்கள் களிக்கும் படியாக என்றதாயிற்று
எம்பெருமான் எழுந்தருளியிருந்த ஸேவைஸாதிப்பது எப்படி உத்தேச்யமோ, அப்படியே அப்போது பாகவதர்கள் தங்களுடைய ஆனந்தபரீவாஹமாகச் செய்யும் கோலாஹலங்களைக் கண்டுகளிப்பதும் உத்தேச்யம்ம என்பது இங்குத் தெரிவிக்கப்படுகிறது.
*நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குமாங்கே பொசியுமால்* என்றகணக்கிலே ஸம்ஸாரிகளும் காணம்படியாக வேணுமென்கிறார்.
இம்மடவுலகர் காண என்பதனால். இந்த ஸம்ஸாரத்தில் அறிவுகேடராய் இடக்கை வலக்கையறியா தவர்களாயிருப்பாரும் கண்ணாலேகாணும்படியாக வென்கை.
‘மடவுலகர்’ என்பதற்கு ஸ்வாபதேசம் ஆசார்யஹருதயத்தில் (142) “ஊரார் காட்டார் உலகர் கேவலைச் வர்யகாமஸ்வதந்த்ரர்” என்ற சூர்ணையில் காணத்தக்கது.
—————
எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம்
இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்
தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய்
திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள்
இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8-
பதவுரை
| திங்கள் சேர்மாடம் |
–
|
சந்திர மண்டலத்தளவுமோல்கின மாடங்களையுடைய |
| திருப்புளிங்குடியாய் |
–
|
திருப்புளிங் குடியில் வாழ்பவனே |
| திருவைகுந்தத்துள்ளாய் தேவா |
–
|
ஸ்ரீவைகுண்ட மென்னுந்திருப்பதியில் நிற்கும் தேவனே |
| எங்கள் எண் முகப்பே |
–
|
எங்கள் கண் முன்னே |
| உலகர்கள் எல்லாம் |
–
|
லோகத்திலுள்ளாரெல்லாரும் |
| அடி இணை |
–
|
திருவடியினையை |
| தொழுதுஎழுது இறைஞ்சி |
–
|
தொழுவது மெழுவதுமாயிருந்து வணங்கி |
| தங்கள் அன்பு ஆர |
–
|
தங்களுடைய பக்தி வளர |
| நமது சொல்வலத்தால் |
–
|
தாம்தாம் சொல்லக் கூடியவளவிலே |
| தலைத் தலை சிறந்து பூசிப்ப |
–
|
ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து ஸ்தோத்திரங்களைப் பண்ணும்படி |
| இ கண் மா ஞாலத்து இதனுளும் |
–
|
இந்த மிக விசாலமான பூமியிலே இத்திருப்புளிங்குடியிலும் |
| வீற்றிடங் கொண்டு |
–
|
உனது மேன்மை இடங்கொண்டு தோன்றும்படி |
| ஒரு நாள் இருந்திடாய் |
–
|
ஒரு நாளாவது இருந்தருள வேணும் |
***– கீழ்ப்பாட்டில், “இருந்திடாயெங்கள் கண்முகப்பே” என்று பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கி, ‘ஆழ்வீர்’ ; வீற்றிருக்குமழகு காண வேண்டில் அது திருநாட்டிலே காணும். ஸவ்யம் பாதம் ப்ரஸார்ய ச்ரிதரிதஹரம் தஷிணம் குஞ்சயித்வா இத்தியாதி யநுஸர்தானம் இங்குச் செய்யலாமேயொழி, அது காண்பது பரமபதத்திலேயன்றோ என்று எம்பெருமானருளிச் செய்ய,
அஃது இங்குக் காட்டியருள வேணுமென்கிறாரிப்பாட்டில், பாட்டடியில் எங்கள் கண்முகப்பே யென்றதற்கு ஈற்றடியில் இருந்திடாய் என்றத்தோட அந்வயம்.
வீற்றிருக்குமவ்வழகை இம்மைப் பிறவியில் இங்கே காணப்பெறாதே தேசாந்தரே காலாந்தரே காண்பது இவ்வுலகத்திலுள்ளா ரெல்லாரும் திருவடிகளின் சேர்த்தியழகு கண்டு திருவடிகளிலே விழுவது மெழுவதுமாகி, தங்கள் பிரேமம் புறவெள்ளமிட்டுத் தம்தம் இயற்றிக்குத் தக்கவாறு தோத்திரங்கள் செய்து வழிபடுபவர்களே, அதுவுங்காணவன்றோ நாஞ்சைப்படுவது,.
தங்களன்பாரத் தமது சொல்வலத்தால் பூசிக்கையாவது–நூறு பிராயம் புகுவீர், பொன்னாலே பூணூநூலிடுவீர் என்றாப்போலே சொல்லுகை.
இவ்விடத்து ஈட்டில் “வங்கிப் புரத்து நம்பி விஜயஸ்வ என்ன, ஆண்டான் சொன்ன வார்த்தையை நினைப்பது” என்றுள்ளது. அவ்வைதிஹயமாவதென்னென்னில், வங்கிப்புரத்து நம்பி பெருமாளை ஸேவிக்க எழுந்தருளின வளவிலே ஒரு பக்கத்தில் ஸ்ரீவைஷ்ணவர்களும் மற்றொரு பக்கத்தில் ஆய்ச்சிகளும் நின்று கொண்டு பெருமாளை ஸேவித்திருந்தார்களாம்; வங்கிப்புரத்து நம்பி ஸ்ரீவைஷ்ணவர்கள் நிற்கிற பக்கமாக நில்லாமே ஆய்ச்சிகள் நிற்கிற பக்கமாக நின்றராம்.
அதை முதலியாண்டான் கண்டு இதென்ன? ஸ்ரீவைஷ்ணவர் திரளிலே சேராமல் ஆய்ச்சிகள் பக்கமாக நிற்கிறதேன்? என்று கேட்டாராம். அதற்கு நம்பி சொன்னாராம் எப்படியும் நாம் பலவகை யபிமானங்கொண்டு அஹங்காரமமாகாரயுக்தர் களாயிருப்போம், நம்மேல் பகவத்கடாக்ஷம் பாய்வது மேட்டு மடையாகவேயிருக்கும்; அவர்கள் உண்மையில் தாழ்சசி யுடையவர்களாயும் தாழ்ச்சி தோற்றப் பேசுமவர்களாயும் இருப்பவர்களாகையாலே அவர்கள்மேல் பகவத் கடாக்ஷம் பாய்வது பள்ள மடையாயிருக்குமென்று அவர்கள் பக்கமாகக் நின்றேன். என்று.
ஆனாலும் எம்பெருமானை நோக்கி ஆய்ச்சிகள் போற்றும்படியையும் நம்பி போற்றும் படியையும் ஆண்டான் கண்டவராகையாலே இந்த வாசியையெடுத்துக் காட்ட வேமென்று திருவுள்ளம் பற்றி நம்பியை நோக்கி கேட்டராம்–’ஆய்ச்சிகள் சொன்னதென? தேவரீர் அருளிச் செய்ததென்?’ என்று “பொன்னாலே பூணூநூலிடுவீர், நூறுபிராயம் புகுவீர், அழுத்தவிரட்டையெடுப்பீர் என்று ஆய்ய்சசிகள் சொன்னது; விஜயஸ்வ, விஜயீபவ இத்யாதிகள் அடியேன் சொன்ன வார்த்தை” என்று நம்பி சொல்ல,
அதற்கு ஆண்டான் “அங்குப்போயும் முரட்டு ஸம்ஸ்க்ருதம் விட்டீரில்லையே; எங்கேயிருந்தாலும் நாம் நாமே; இங்கே யெழுந்தருளீர்” என்றருளிச் செய்தாராம்.
இதுதான் தங்களன்பாரத் தமது சொல்வலத்தால் பூசிப்பது. அது தன்னிலும் தலைத்தலைச் சிறந்து பூசிப்பதாவது–ஒருவர்க்கொருவர் மேல்விழுந்து மிகவும் ஆச்ரயித்துக் கொண்டாடுவது. இப்படிப்பட்ட ஸந்நிவேசங்களை யெல்லாம் ஆழ்வார் காண விரும்புகிறபடி,
திங்கள்சேர் மாடத்திருப்புளிங்குடியாய்–சந்திரமண்டலத் தளவும் ஒங்கியிராநின்ற மாடங்களையுடைய திருப்புளிங்குயென்கிறவிது பொய்யுரையல்லவா? *பொய்யில் பாடலாயிரத்தில் இங்ஙனே பொய்புரை புகலாமா? என்று சிலர் சங்கிக்கக் கூடும்; கேண்மின்;
அலங்கார சாஸ்த்ரத்தில் அதிசயோக்தியென்பதோர் அலங்காரமுண்டு. (தமிழர் உயர்வு நவிற்சியணி என்பர்) அதனை அப்ராப்த விஷயங்களில் உபயோகிப்பர் ஸாமாந்யசுவிகள் ஆழ்வார் போல்வார் ப்ராப்த விஷயமான பகவத் விஷயத்திலே உபயோகிப்பர்கள். அவர்களுடைய திருக்கண்களுக்கு அங்ஙனே காட்சி தந்தபடி. உயரலோங்கின மாடங்களுண்டாக வேணுமென்கிற ஆசம்ஸையினால் அருளிச் செய்கிற படியுமாகலாம்.
*அந்யத்ர அதத்குணோக்திர் பகவதி ந* என்று பட்டரருளிச் செய்கையாலே பகவத் விஷயத்தில் பொய்யுரை யென்பதற்கு ப்ரஸக்தியில்லை யென்க.
திருவைகுந்தத்துள்ளாய் = புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று என்ற பாசுரத்தில் பேசப்பட்ட ஸ்ரீவைகுண்டமென்கிற அணித்தான திவ்ய தேசத்தைச் சொல்லுகிறபடி.
——————-
வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து
இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப்
புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும்
செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த
கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9-
பதவுரை
| சேறுஇளவாளை |
–
|
தன்னிலமான சேற்றிலே வள வருகையாவே இளமை தங்கிய வாளைகள் |
| செந்நெலூடுஉகளும் |
–
|
செந்நெற்பயிர்களினிடையே களித்து வர்த்திப்பெற்ற |
| செழு பணை திரு புளிங்குடியாய் |
–
|
அழகிய நீர் நிலங்களையுடைய திருப்புளிங்குடியிலே வாழ்பவனே |
| அடியோம் போற்றி |
–
|
அடியோங்கள் மங்களா சாஸனம் பண்ணி |
| ஓவாத |
–
|
இடைவிடாதே |
| கண் இணை குளிர |
–
|
கண்கள் குளிருமாறு |
| புது மலர் ஆகத்தை பருக |
–
|
புதிய மலர்போலே ஸுகுமார மாயிரக்கிற உன் திருமேனியை யநுபகிக்கும்படி |
| கூற்றம் ஆய் |
–
|
(எதிரிகளுக்கு) மிருத்யுவாய் கொண்டு |
| அசுரர் குலம் |
–
|
அஸுரவர்க்கத்தை |
| முதல் அரிந்த |
–
|
வேரோடே களைந்ததொழித்த |
| கொடு வினை படைகள் வல்லவனே |
–
|
கொடுந்தொழில் செய்யவல்ல ஆயுதங்களை விதேயமாக புடையவனே |
| மீற்றிடல் கொண்டு |
–
|
உனது மேன்மை இடங்கொண்டு தோன்றும்படி |
| வியன் கொள்மா ஞாலத்து இதனுளும் |
–
|
விஸ்தாரமான மஹா பூமண்ட லத்தினுள்ளேயும் |
| இருந்திடாய் |
–
|
இருந்தருளவேணும் |
*** – எம்பெருமானுடைய பரமஸுகுமாரமான திருமேனிக்கு இந்த முரட்டு நிலம் அடியோடு தகாது ; ஆயினும் இங்குள்ள பக்தர்கள் ஸேவிக்கும்படியாக இம்முரட்டு நிலத்திலும் எம்பெருமானெழுந் தருளியிருக்க ப்ராப்தமாகிறது என்கிற தத்துவத்தை வெளியிட்டுக் கொண்டு பிரார்த்தனை பண்ணுகிறாரிப் பாட்டில்
“மாஞாலத்திதனுளும்” என்கிற உம்மை–எம்பெருமானுடைய ஸெளருமார்யத்திற்கு இந்நிலத்திவிருப்பு தகுதியற்றது என்னுமிடத்தைக் காட்டித்தரும். வீற்றிடங்கொண்டு இருந்திடாய்=உன்னுடைய பெருமை தோற்ற இருந்தருள வேணுமென்றபடி.
இதனுளும்–”உன்னைக் கொண்டு ஒரு கார்யமில்லாத இந்த ஸம்ஸாரத்திலே” என்பர் நம்பிள்ளை.
உண்மையில் இந்த ஸம்ஸாரத்திலுள்ள பொருள்களையெல்லாம் ஹேயமென்று சிறிதும் பாராதே உகக்கிறோம். எம்பெருமானொருவனையே வெறுக்கிறோம். இப்படியிருந்தும் இங்கே வந்து நிற்பதுமிருப்பதும் கிடப்பதுமாயிருக்கிறானவன் தன்னுடைய பரமக்ருபையாலே “தன்னை அநாதரிக்கிறவர்களைத் தான் ஆதரித்து நிற்கிற விடம்” என்பது ஸ்ரீவசநபூஷணம்.
இருந்திடாய் = சாய்ந்தருளினபோதையழகு கண்டோம்; இருந்தருளும் போதை யழகுங்காணவேண்டாவோ? அதையுங் காட்டியருளாய் என்கிறார். இங்கே பட்டர் அருளிச் செய்வராம்– “இவையெல்லாம் நமக்குக் கோயிலே காணலாமிறே சாய்ந்தருளினவழகு பெரியபெருமாள் பக்கலிலே; நின்றருளினவழகு நம்பெருமாள் பக்கலிலே; இருப்பிலழகு பெரிய பிராட்டியார் பக்கலிலே” என்று.
‘இருந்திடாய்’ என்று நிர்ப்பந்திருக்கிறது எதற்காகவென்ன, அடியோம் போற்றி ஓவாநே கண்ணிணை குளிரப் புதுமலராகத்தைப் பருக என்கிறார். அடியோமென்றது–இவ்விருப்பைக் காண ஆசைப்பட்டிருக்கிற நாங்களென்றபடி, போற்றி–இவ்விருப்பு இங்ஙனே நித்யமாகச் செல்லவேணு மென்று மங்களாசாஸனம்பண்ணி யென்றபடி.
புதுமல ராகத்தைக் கண்ணிணை குளிரப் பருக–செவ்விப்பூப்போலே ஸுகுமாரமாயிருக்கிற திருமேனியைக் கண்குளிர அநுபவிக்கும்படியாக புஷ்பஹாஸ ஸுகுமாரமான வடிவுக்கு “புது மலராகம்” என்று ஆழ்வார் திருநாமஞ்சாத்துகிறார்.
ஆகம்–திருமேனி ஆகத்தைக் காண என்னவேண்டியிருக்க ‘ஆகத்தைப்பருக’ என்றதுடிதேனும்பாலுங்கன்னலுமமுதமான திருமேனியை “லோசநாப்யாம் பிபந்நில” என்கிறபடியே பருகவேணுமென்னுமாசையே தமக்குள்ளமையைக் காடினபடி. உபநிஷத்தும் “ரஸோ வை ஸ:” என்று கூறினவிஷயமாகையாலே பருகத்தக்கதேயன்றோ,.
திருப்புளிங்குடியின் நீர்வள நிலவளங்களைக் கூறுவது மூன்றாமடி நெநெலினிடையே சேற்றிலே வாளை மீன்கள் களித்துக் துள்ளாநிற்கும்படியைச் சொன்னது–அவ்வூரில் அஃறிணைப் பொருள்களுங்கூட அபிமதம் ஸித்தித்துக் களித்து வர்த்திக்கின்றனவே, அப்படி என்னபிமதமும் ஸித்தித்துக் களித்து வர்த்திக்கும்படி செய்தருள வேண்டாவோவென்ற குறிப்பு.
ஈற்றடியால் எம்பெருமானுக்குள்ளதான விரோதிநிராஸந ஸாமர்த்தியத்தை யருளி செய்கிறார். இதுகாறும் என்னுடைய இடையூறுகளையெல்லாம் போக்கினவுனக்கு இனிமேலுள்ள இடையூறுகளைப் போக்குதல் அரிதோ?
———-
கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-
பதவுரை
| கொடுவினைபடைகள் வல்லையாய் |
–
|
(விரோதிகள் திறத்துக்) கொடுந் தொழில் புரியவல்ல ஆயுதங்களை கொண்டு காரியஞ்செய்ய வல்லவனே! |
| அமரர்க்கு இடர் கெட |
–
|
தேவர்களுக்கு இடர் கெடும்படியாக |
| அசுரர்கட்கு இடம் செய் |
–
|
அசுரர்களுக்கு துக்கத்தை வினைக்குமிடத்து |
| கடு வினை நஞ்சே |
–
|
விரைவில் முடிக்கவல்ல நஞ்சானவனே! |
| என்னுடைய அமுதே |
–
|
எனக்குப் பரம போக்யமான அம்ருதமே! |
| கலிவயல் திரு புளிங்குடியாய் |
–
|
செழித்த வயல் சூழ்ந்த திருப் புளிங்குடியில் வாழ்பவனே! |
| வடிவு இணை இல்லா மலர் மகள் |
–
|
வடிவழகில் ஒப்பற்ற பெரிய பிராட்டியாரும் |
| மற்றை நிலமகள் |
–
|
அப்படிப்பட்ட பூமிப் பிராட்டியாரும் |
| பிடிக்கும் மெல் அடியை |
–
|
வருடுகின்ற ஸுகுமாரமான திருவடியை |
| கொடு வினையேணும் பிடிக்க ஒரு நாள் |
–
|
தௌர்ப்பாக்ய சாலியான நானும் வருடுமாறு ஒரு நாளாகிலும் |
| கூவுதல் வருதல் நீ செய்யாய் |
–
|
என்னை யழைத்துக் கொள்வதோ வந்தருள்வதோ செய்ய வேணும் |
**** – கீழே ஆறாம்பத்தில் தோழிபாசுரமாக அவதரித்த துவளில் மாமணிமாடப் பதிகத்தில் பின்னை கொல் நிலைமா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள் என்ற பாசுரத்தினால் ஆழ்வார் பிராட்டியாருடைய ப்ராதுர்ப்பாவவிசேஷமென்பது காட்டப்பட்டிருக்கின்ற தல்லவா ;
அப்பிராட்டிமார்தாம் *கோவநம்பியைக் கால்பிடிப்பாளென்னும் பேற்றைப் பெற்றவர்களாகையாலே அப்பேற்றில் தமக்கும் அந்வயமுண்டாக வேணுமென்று கருதி உன்னுடைய திருவடிகளிலே நானும் வந்து அடிமை செய்யும்படி என்னை அங்கேயழைப்பதோ நீ யிங்கே வருவதோ இரண்டத்தொன்று செய் வேணுமென்கிறார்.*
எம்பெருமான் கீதையில் தன்னைப்பற்றித் தானே கொல்லி கொள்ளும்போது ஸமோஹம் ஸர்வபூதேஷீ நமே த்வேஷ்யோஸ்தி ந ப்ரி என்று, தான் ஸர்வபூதங்களிடத்து ஒரு நிகராயிருப்பவென்றும்,. தனக்கு த்வேஷபாத்ரமாவானும் ப்ரீதிபாத்ரமாவானும் ஒருவனுமில்லையென்றும் சொல்லிக் கொள்ளுகிறான்.
இப்படி அவன் தான் சொல்லிக்கொள்வது மாத்திரமேயல்லாமல் அவனையறிந்தவர்கள் சொல்லுமிடத்தும் தேவாநாம் தாந்வாநாஞ்ச ஸாமார்யமதிதைவதம் என்று தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பொதுவான தெய்வமென்கிறார்கள்.
இப்படிப்பட்ட எம்பெருமான் அமரர்களை வாழ்விப்பதும் அசுரர்களைத் தொலைப்பதுமாயிரா நின்றான்;
இப்பாட்டில் “அமரர்க்கு இடர்கெட அசுரர்கட்கிடர் செய்” என்ற அருளிச் செய்யப்படுகிறது.
ஸர்வபூதனமனாகக் குலாவப்படுகிற பகவானுக்கு இது பொருந்துமோவென்று சங்கைதோன்றும்.
உண்மையில் எம்பெருமான் ஸர்வபூதஸமனென்பதில் ஸந்தேஹமில்லை;
தேவஜாதியில் ப்ரீதியும் அஸரராக்ஷ ஜாதியில் த்வேஷமும் அவனுக்கில்லை. அப்படியிருக்குமாகில் அசுரஜாதியிற் பிறந்தவனான ப்ரஹலாதாழ்வானிடத்தும் ராக்ஷவஜாதியிற் பிறந்தவனான விபீஷணாழ்வானிடத்தும் அருள் செய்யப் பொருத்தமில்லை யாகும்.
விளக்கில் விட்டில்கள் தரமாகவே வந்து விழுந்து முடிந்து போவதுபோல அஸுர ராக்ஷஸர்களும் தாங்களே வந்து விரோதங்களைச் செய்து, கழுத்திலே கல்லுக்கட்டிக் கொண்டு குளத்திலே விழுந்து சாவாரைப்போல மடிந்து போனால் அது எம்பெருமானுடைய குற்றமன்றே.
ராமாவதாரத்தில் இராவணன் கரிகுழற்கனிவாய்த திருவினைப்பிந்தத கொடுமையிற் கடுவிசையரக்கன் என்று திருமங்கையாழ்வாரருளிச் செய்தபடி கனத்த அபராதியாயிருக்கச் செய்தேயும், பெருமாள் அவனையும் அங்கீகரிக்கத் திருவுள்ளங் கொண்டிருந்தமையை விபீஷணோலா ஸீக்ரீவ! யதி வா ராவணஸ் ஸ்வயம் என்பதனால் நன்கு அறியா நின்றோம்.
இராவணனையும் வலியடக்கி வெற்றிப்புகழ் பெற்றிருந்த வாலியையே ஓர் அம்பினால் முடித்தருளின பெருமாளுக்கு இராவணனை முடித்தல் அரிதன்றே.
*பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானை* என்று ஆண்டாளருளிச் செய்தபடி அவலீலையாகக் கிள்ளிக்களைய வேண்டியவனன்றோ இராவணன். அன்னவனை விரைவில் கொன்றிடாதே தாமதஞ்செய்ததும்,
*கச்சாநுஜநாமி* என்று சொல்லிப் போர்களத்தில் நின்றும் போகவிட்டதும் அவனுடைய அநுகூல்யத்தை யெதிர்பார்த்தேயன்றோ.
ஆகவே “அமரர்க்கிடர்கெட அசுரர் கட்கிடர் செய்” என்றவிதில் எம்பெருமானுக்கு குணஹநியொன்றும் வாராதென்க
கடுவினை நஞ்சே! என்னுடையமுதே! = ஒரு வஸ்துதானே சிலர்க்கு விஷமாயும் சிலர்க்கு அமுதமாயுமிராநின்றதாயிற்று.
*வஞ்சஞ்செய் சஞ்சனுக்கு நஞ்சானனை* என்றார் திருமங்கை யாழ்வாரும்
“என்னுடையமுதே” என்று சொல்லப்பட்ட இவ்வமுதம் எங்கிருக்கிறதென்ன, கலிவயல் திருப்புளிங்குடியாய்! என்கிறார்.
இங்கே ஈடு:– “இவ்வம்ருதத்துக்குக் கடல் கடைதல் ஸ்வர்க்கத்திலே போதல் செய்யவேண்டா; திருப்புளிங்குடியிலே ஸந்நிஹிதமாயிற்று இவ்வம்றுதம்”
திருப்புளிங்குடியா யென்றழைத்து அவனுக்கு ஸமாசாரம் சொல்லுகிறார் பின்னடிகளால் வடிவழகுக்கு ஒப்பில்லாத பெரிய பிராட்டியாரும் ஸ்ரீபூமிப் பிராட்டியாரும் தங்களுடைய பரம ஸுகுமாரமான திருக்கைகளாலே பிடிக்கும்போதும் கூசிப்பிடிக்க வேண்டும்படி அத்யந்த ஸுகுமாரமான திருவடிகளை பாவியேனும் பிடிக்குமாறு என்னை அங்கேயழைத்துக் கொள்ளுதல்,
அன்றிக்கே இங்கே வந்தருளுதல் ஒருநாள் செய்ய வேமென்றாராயிற்று. கொடுவினையேனும் என்றது–ப்ராப்தியுடையேனாயும் அதில் போக்யதையை யறிந்த வனுயுமிருந்து வைத்து நெடுங்காலம் இழந்திருக்கும்படி கொடிய பாபத்தை யுடையேனான நானும் என்றபடி.
கூவுதல் வருதல் செய்யாயே = இரண்டு காரியங்களை விகற்பித்துச் சொல்லுமிடங்களில் பெரிய காரியத்தை முன்னே சொல்லுவதும், சிறிய காரியத்தை பின்னே சொல்லுவதும் இயல்பு. எம்பெருமான் தானே வருவதென்பது பெரிய காரியமாயும், ஆழ்வாரைக் கூவிக் கொள்வதென்பது சிறிய காரியமாயுமிருப்பதால் “வருதல் கூவுதல் செய்யாயே” என்று சொல்ல ப்ராப்தமாயிருக்க, கூவுதல் வருதல் செய்யாயே யென்று சொல்லியிருப்பதேன்? என்று சங்கை தோன்றும் ;
இதற்கு நம்பிள்ளை யருளிச் செய்வது காணீர்– “முற்பட ‘வருதல்’ என்றிலராயிற்று அஸ்ஸமுதாயத்தைக் குலைக்க வொண்ணா தென்னுமத்தாலே” என்று. அதாவது, *வடிவிணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் ஸந்நிவேசத்தைத் தாமம் கண்டுகளிக்க ஆழ்வார் ஆசைப்பட்டவராகையாலே அந்தச் சேர்த்தி யழகைக் குலைக்க மனமில்லாமை பற்றி, வருதலை முன்னே சொல்லிற்றிலரென்கை.*
——————-
*** – இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலன் எம்பெருமானுடைய திருவடிகளை நிரந்தரம் சிந்திக்கப் பெறுதலேயாம் என்று தலைக்கட்டியருளுகிறார்.
கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான்
அடி இணை யுள்ளத்தோர் வாரே–9-2-11-
பதவுரை
| குரைகடல் கடைந்தவன் தன்னை |
–
|
குமுறுகின்ற கடலைக் கடைந்தவனான எம்பெருமானைக் குறித்து |
| கூவுதல் வருதல் செய்திடாய் என்று |
–
|
அழைத்துக் கொள்வதோ வந்தருள்வதோ இரண்டதொன்று செய்ய வேணுமென்று அபேக்ஷித்து |
| மேலி நன்கு அமர்ந்த |
–
|
(அப்படியே பெறுகையாலே) நன்கு தரிக்கப்பெற்ற |
| வியன்புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் |
–
|
பரிபூர்ணமான தீர்த்ததையுடைய தாமிர பர்ணி சூழ்ந்த வழுதி நாட்டுக்குத் தலைவரான ஆழ்வாருடைய |
| நாஇயல் பாடல் |
–
|
திருநாவின் தொழிலான லாகிய |
| ஆயிரத்துள்ளும் |
–
|
ஆயிரம் பாசுரங்களினுள்ள |
| இவையும் பத்தும் வல்லார்கள் |
–
|
இப்பதிகத்தைக் கற்க வல்லவர்கள் |
| மூன்று உலகம் அளந்தான் அடி இணை |
–
|
திரி விக்கிரமனுடைய பாதங்களை |
| ஓவுதல் இன்றி |
–
|
அநவரதமும் |
| உள்ளத்து ஓர்வார் |
–
|
நெஞ்சிலே அநுஸ்திக்கப் பெறுவர்கள். |
குரை கடல் கடைநதவன் தன்னைக் குறித்து ‘கூவுதல் வருதல் செய்திடாய்’ என்று பிரார்த்தித்த ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்தினுள்ளும் இப்பதிகம் வல்லார் அடியவர்க் கெளியனான எம்பெருமானுடைய திருவடிகளை நிரந்தமாக நெஞ்சினுள்ளே யநுபவிக்கப்பெறுவர் என்றாராயிற்று,.
திருவடி வருடவேணுமென்டிகிற அபிநிவேச மில்லாமலே ஸ்வப்ரயோஜனத்திலேயே ஊன்றியிருக்குமவர்களுக்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அமுதங்கொடுத்துக் காரியஞ் செய்யுமெம்பெருமாள் நம் அபேக்ஷிதம் செய்தருளத் தட்டில்லை யென்பது தோன்றுகைக்காகக் குரை கடல் கடைந்தவன் தன்னை என்றதிங்கு.
“ஓவுதவின்றி” என்பதை ‘ஒர்வார்’ என்கிற வினை முற்றிலும் அந்வயிக்கலாம் உலகம். மூன்றளந்தானென்பதிலும் அந்வயிக்கலாம்.
குணாகுண நிரூபணம் பண்ணாதே அஸங்கோசமாக உலகங்களை யளந்தவனுடைய என்றபடி.
————————————————————————————————————————