Archive for July, 2020

ஸ்ரீ பாஷ்யம்— 1-1-11– இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 ) -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —-ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 )

———————

ஸ்ரீபாஷ்யம் – அதிக.11 சூத்.29-32 ::

இந்திரப்ரணதிகரணம் ::

ப்ராண: ததா அநுகமாத் – சூத் .1-1-29 (அதிக.11-சூத் . 29-32)

ஆகாசாதிகரணம், பிராணாதிகரணம், ஜ்யோதிர் அதிகரணம் போல இதுவும்,
பரமாத்ம பின்னமான வஸ்து ஜகத் காரணம் என்கிற விபர்யயத்தை போக்க வந்தது. எனவே இந்த 4 அதிகரணங்களும் ஒரு பேடிகா என்று பார்த்தோம்.

ஆகாச,ப்ராண , ஜ்யோதிர் சப்தங்கள் பிரஹ்ம வாச்சியமே ஒழிய, நம் கண்ணுக்குப் புலப்படுகிற பிரசித்தமான நீலவானமோ,
பிராண வாயு சஞ்சாரமோ, சூரியனோ இல்லை என்பதுபோல , இந்த அதிகாரணத்திலும் அதே-
”பிரசித்தவந் நிர்திஷ்ட”- நியாயத்தின் அடிப்படையில், இந்திர சப்தம், தேவர்கள் தலைவனான தேவேந்திரனைச் சொல்லாது,
பரமாத்மாவையே சொல்லும் என்பதாக இங்கு

விஷய வாக்கியம் :
கௌஷீதகி பிராஹ்மணத்தில் உள்ள பிரதர்தன வித்யாவைப் பற்றியது. இது தசோபநிஷத் கணக்கில் இல்லாவிட்டாலும்,
சங்கராச்சாரியார் அநுவாகம் பண்ணியிருக்கிறபடியால் , பரபக்ஷ பிரசங்காது , அனுசந்தேயம்.
தவிர, ஸுபாலோபநிஷத், ஸ்வேதஸ்வேதர உபநிஷத், அந்தர்யாமி பிராஹ்மணம் இத்யாதி ஸ்வகோஷ்ட்டி விசாரணீயம்.

கௌஷீதகி உபநிஷத், ருக்வேத சாகையைச் சேர்ந்தது. சாங்காயன ஆரண்யகத்தின் ஒருபகுதி.
கோஷீதகி ஆரண்யகத்திலுள்ள 15 அத்தியாயத்தில், 4 அத்தியாயங்கள் கௌஷீதகி உபநிஷத் பாகமாகும். பத்ய, கத்ய ரூபத்தில் அமைந்தது.
கத்ய, பத்ய மயம் காவியம்
சம்பு இத் அபிதீயதே.
இந்த, 4 அத்தியாயங்கள் முறையே 6, 15,9,20 கத்யங்களைக் கொண்டவை.
பிரதர்தன வித்யா என்பது, 3வது அத்தியாயத்தில் வருமது .
பிரதர்தனன் என்கிற ராஜாவுக்கு தியான விஷயமாக, இந்திரன் செய்த உபதேச பாகம்தான் இங்கு பேசப்படுகிறது.

பிரியம், ஹிதம் :
கிம் கர்ம ? கிம் அகர்மா? கவையோர் தத்ர மோஹிதா:
லௌகிக கர்மாக்கள்
பிராம்மண்ய பிரயுக்த கர்மாக்கள்
ஸ்ரீவைஷ்ணவ பிரயுக்த கர்மாக்கள்
எது எவ்வளவு தூரம் செய்ய வேண்டும் என்பது, பண்டிதர்களுக்கு கூட புரியாத புதிர்.
நம்முடைய மந்த புத்திக்கு, எது ஆத்மாவுக்கு பிரியம் எது ஹிதம் என்று அறிய முடியாதாகையால்,
அதை பகவானே செய்யக் கடவன். இதே விஷயத்தை, பிரதர்தன மஹா ராஜா, இந்திரனை வேண்டுகிறான்.

”யம் தம் மனுஷ்யாய ஹித தமம் மன்யது தமேவ பிரஸீத” என்று வேண்ட,
இந்திரன் ”த்வமேவ மாம் வரம் விருணீஷ்வ ” , ”த்வாம் மாம் விஜாநீத ” என்று சொல்வதாக அமைந்த இடம்
”ஸஹோவாச பிரானோஸ்மி பிரக்ஞாத்மா தம் மாம் ஆயுர் அமிருதம் இத் உபாஸ்வ”
நானே பிராணன். நானே க்ஞான ஸ்வரூபமான ஆத்மா. இந்திரனாக இருக்கக் கூடிய என்னையே அமிருதத்வ பிராப்திக்கு –
மோக்ஷ உபாயமாய் பற்றக்கடவாய். இதுவே உனக்கு ஹித தமமானது என்று சொன்னான்.

சித்ரயா யஜேத பசு காம:-ஜ்யோதிஷ்ட ஹோமேன ஸ்வர்க்க காமோ யஜேத
என்பதுபோல அல்லாமல்
மீமாம்ஸா ஸாஸ்திரத்தில் பலனைச் சொல்லாமல் கர்மாவை விதித்தால்,
தத் ஸ்வர்க : ஸர்வான் பிரதி அவிசிஷ்டத்வாத் – அதற்கு ஸ்வர்க்கம் தான் பலம் என்பது பொதுவான விதி.
எனவே எல்லோருமே ஆசைப்படக் கூடிய அமிருதத்வ பிராப்தி உபாய: ஹித தமம்

எது காரணமோ அது அமிருத்வ பிராப்திக்கு உபாயம். எது அமிருத்வ பிராப்திக்கு உபாயமோ, அதுவே உபாஸ்யம்.
இங்கு பிரசித்த ஜீவா பாவ இந்திரனே மோக்ஷித்துக்கு உபாயம் என்று சொல்லப்பட்டதால்
இந்திர பிராண : பரமாத்மா இல்லை. ஜீவாத்மாவே என்பது

ஸம்சயம்:
பிரதர்த்தன சம்வாதம் இந்திரன் ”மாம் உபாஸ்வ ” என்று தன்னைக்காட்டி சொன்னபடியால்,
இந்திர பிராண ஸ்ப்தங்கள் , தேவர்கள் தலைவனான இந்திரனையே குறிக்கும், பரமாத்மாவைக் குறிக்காது என்பது பூர்வ பக்ஷம் .

சித்தாந்தம் :
ப்ராண: – இந்திர பிராண சப்த நிர்திஷ்ட : ந ஜீவா மாத்ரம் . இந்திரா: பிராண: என்ற இரண்டு சொற்களாலும்
குறிக்கப் பட்டவன் ஜீவன் இல்லை. ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு பட்டவனான பரமாத்மா தான் – எப்படி ?என்றால்
ததா அநுகமாத் — முன்னும், பின்னுமாக வரும் வார்த்தைகள்,
ஸ ஏஷ : பிராண ஏவ பிரக்ஞாத்மா ஆனந்த: அஜர : அமிருத : என்பதான சப்தங்கள் சாமான்யாதிகரணத்தாலே பரமாத்மாவுக்கே ஏற்கும்.
ஆக, இந்திரன், பிராணன் என்கிறது இந்திரனுக்கு அந்தர்யாமியாக உள்ள, பரமாத்மாவையே குறிக்கும்.

————

இதற்கு எதிர் கேள்வி கேட்பதாக அமைந்த பூர்வ பக்ஷம் சூத்.

1-1-30. ந வக்து: ஆத்மோபதேசாத் இதி சேத் , அத்யாத்ம சம்பந்த பூமா யஸ்மின்

ந –
இந்திர பிராண சப்தம் பரமாத்மாவைக் குறிக்கும் என்று சித்தாந்திகள் சொல்வது தவறு.

வக்து: ஆத்ம உபதேசாத் –
வக்தாவான இந்திரன் ”த்ரீ சீர்ஷாணம் த்வஷ்டா வாதார்பிஹி” ”மாம் உபாஸ்வ” , ”மாம் ஏவ விஜானீத ” என்று
தன்னுடைய வார்த்தைகளாக சொல்லியள்ள படியால்

முக்கிய பிரயோகம் – literal meaning
கௌண /லாக்ஷணிக பிரயோகம் -;implied meaning
உ.ம். கங்காயாம் கோஷ: என்றால் கங்கா தீரே கோஷ :
ந விதெள பர சப்தார்த்த: என்பது மீமாம்ஸா நியாயம்.
விதி வாக்கியங்களில் derived meaning / கௌண பிரயோகம் கூடாது. முக்கிய பிரயோகமாவே கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.
”மாம் உபாஸ்வ ” என்பது விதி வாக்கியம் . எனவே அந்தர்யாமியான பரமாத்மாவை சொல்வதாக கருத்தாக் கூடாது என்பது பூர்வ பக்ஷம்

இதி சேத் –
இந்த பூர்வ பக்ஷம் சரிப்படாது.

அத்யாத்ம சம்பந்த பூமா ஹி யஸ்மின் —
ஆத்மன்யேவ முக்கிய விருத்த: பரமாத்மா. ஆத்மாநம் ஆகிருத்ய அத்யாத்மம். பரமாத்மாவுக்கே அசாதாரணமான
ஆனந்த: அஜர : அமிருத : என்பதான சின்னங்களை யிட்டு சொல்லித் தன்னை இந்திரன் காட்டி இருப்பதாலும் ,
எப்படி வண்டி சக்கரத்தின் ஆரங்கள் அதன் மத்தில் இணைக்கப் பட்டுள்ளனவோ,
அதுபோல பூதங்கள் எல்லாம் ஆத்மாவிலும், ஆத்மா பரமாத்மாவிலும் பர்யவாசிக்குமாகையாலும் ,
இந்திர, பிராண சப்தம் அவனுக்கு அந்தராத்மாவான பரமாத்மாவையே சேரும்.
அவன்தான் ஶ்ரீமன் நாராயணன். அவனே இந்திர ப்ராணன்.

ஸ்வாயத்தே சப்த பிரயோகே , கிமிதித் அவாசகம் பிரயுஞ்ஜீதா ? — பேசக்கூடிய வார்த்தை நம் ஆதீனமாக இருக்க,
ஏன் சுற்றி வளைத்து பேச வேண்டும்?
இந்திரன் ”மாம் உபாஸ்வ ” என்று சொல்லாமல், ”மத் சரீரகம், பரமாத்மாநம் உபாஸ்வ ” என்று சொல்லி இருக்கலாமே என்றால்
அயம் உபதேச: சாஸ்திர திருஷ்டியா கிராஹ்யவது – சாஸ்திர திருஷ்டி படி என்றால்,
சரீர-சரீரி பாவ பிரயுக்தமாகவே ”அஹம் பிரஹ்மாஸ்மி ” அனுபவம் ஏற்படுகிறது.
”ஸோ-ஹம் ” என்கிற இந்த அனுபவம், வேத காலத்தில் வாம தேவர்க்கும், புராண காலத்தில் பிரஹ்லாதனுக்கும்,
சரித்திர காலத்தில் நம்மாழ்வாருக்கும் ஏற்பட்டது என்று கீழே பார்த்தோம்.

”த்ரீ சீர்ஷாணம் த்வாஷ்ட்ட ஹனனம் ” என்று இந்திரன் தன்னை காட்டி
”மாம் உபாஸ்வ ”, ”அஹமேவ விஜானீதா ” என்பன ”அஹம் பிரஹ்மாஸி ” என்கிற அநுபவ தசையில் நின்று
பேசினான் என்பதாகக் கொள்ள வேண்டும்.

”ஸோ ஹம்” என்கிற ”அஹம் பிரஹ்மாஸ்மி ” நிலையும் ,
”தாஸோகம் ” என்கிற சரீராத்மா நிலையம் ஒரு வியக்தியுள் பார்ப்பது, சரீரக சம்பிரதாயமான, விசிஷ்டாத்வைதத்தில் மட்டுமே சாத்தியம்.
அத்வைதத்தில் ”தாச” பாவமும் , துவைத்ததில், ”அஹம் பிரஹ்ம” பாவமும் கூடா வழக்கு.

அத்வைதி -ஸோஹம்/ விசிஷ்டாத்வைதி-தாஸோஹம்
அத்வைதி -ஸதாஸோஹம் / விசிஷ்டாத்வைதி- தாஸதாஸோஹம்.

பிரத்யகர்தஸ்ய பரமாத்மநி பர்யவாஸாநா – என்று இரண்டுமே சமன்வயம் ஆவது பகவத் இராமானுஜ சித்தாந்தத்தில் மட்டுமே எனலாம்.
இதுவே சமாதி ஸ்திதி -; ஸோஹம் ஸ்திதி – Raising above bodily state and bestowed in நிஷ்கிருஷ்ட ஆத்ம ஸ்திதி.
வியுத்தான ஸ்திதி – தாஸோஹம் ஸ்திதி – Cognizant of bodily state and endowed in விசிஷ்ட ஆத்ம ஸ்திதி. வியுதானம் = down grade.

எனவே, இந்திரன் , பிரதர்தனனுக்கு ”மாம் உபாஸ்வ” என்றது,
சாஸ்திர திருஷ்டியில் செய்த உபதேசம் ஆகும். வேத காலத்தில் வாம தேவருக்கு ஏற்பட்ட
” பிரதிபதே அஹம் மநுரபவம் சூரியஸ்சாஹம்” என்பதான அனுபவம் போலே நிஷ்கிருஷ்ட ஆத்ம ஸ்திதியில் நின்று பேசின வார்த்தை.

எல்லா சப்தங்களும் பிரஹ்மத்திடத்தில் பர்யவசிக்கும் என்று சொன்னால் ,
பிறரைப் பார்த்து த்வேஷத்தில் சொல்லும் ‘ஹம்’ ‘த்வம்’ இத்யாதி நீச சப்தங்களும் பரமாத்மாவைச் சேருமா ? என்றால்
பிரஹ்ம தாஷா: பிரஹ்ம தாசா: பிரஹ்மைமே கிதவா: என்று ஏழை, ஏதலன், கீழ்மகன் இவர்களிடத்திலும்,
ஞானியானவன் பிரஹ்மத்தையே பார்க்கிறான்.
வித்யா வினய சம்பந்நா: கவி ஹஸ்திநி–ஸுநீசி ஸ்வபாகேச பண்டிதா: சமதர்ஸின:
யார் பண்டிதன் என்றால்
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காம சங்கல்ப வர்ஜிதா:-ஞானாக்நி தத்த கர்மாணம் தமாஹு பண்டிதம் புதா:
கியாதி லாப பூஜைகளுக்கு ஆசைப்படாமல், பல அபேக்ஷை இல்லாமல், பரமாத்ம ஞானத்தால் கர்மங்கள் தகிக்கப்பட்டவனை
பண்டிதன் என்று சொல்லலாம். அப்படிப்பட்டவர்கள் சொல்லும் அபசப்தங்களும் பிரஹ்மத்திடமே போய்ச் சேரும்.
எனவே அவர்கள் அதிலிருந்து விலகி இருப்பர்.
ஸர்வம் கல்விதம் பிரஹ்ம, ஸர்வம் பரமாத்ம அந்தரயாமிதம் என்பதாய்
“ஸோஹம்” என்கிற ஆந்தர-ஞானம் சரீர-ஆத்ம பாவத்தை ஒத்துக் கொண்டால் மட்டுமே சரிபடும்.
பாஹ்ய-பிரஜ் ஞை இருக்கும்போது அவர்களுக்கே “தாசோகம்” என்கிற நினைவுமாகிற, இரண்டு நிலையும் ஒரு வியக்தியிலே உண்டு.

———–

1-1-31 சாஸ்திர திருஷ்டியா து உபதேச: வாமதேவ வத்

யஸ்ததக்ரே விஷமிவ பரிணாமே அமிர்தோபம – ஹித தமம் என்பதாக கீதை.
யத் ஹிதம் மம தேவேச, தத் ஆக்ஞாபய மாதவா -> ஜிதந்தே ஸ்தோத்திரம்.
மனுஷ்யாய ஹிததமம் மன்யதே தமேவ ப்ரூயம்- என்று கேட்ட பிரதர்தன மஹா ராஜாவுக்கு,
இந்திரன் “மாம் உபாஸ்வ” என உபதேசித்தான். மாம் என்றது தன்னையா? தனக்குளிருக்கிற பரமாத்மாவையா? என்பது கேள்வி.
காரணம்-இந்திரன் ஒரு ஆதிகாரிக புருஷன். இந்திர பதவியில் இருக்கிற கர்ம சம்பந்தமுடைய ஜீவாத்மா.
ஒரு ஜீவாத்மா இன்னொரு ஜீவாத்மாவை உபாசிப்பது சரிபடாது அல்லவா? நாமக்கு எது ஹிதம் என்றால்,
“நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி” என்று விஜர: விமிருத்யு: விசோக: என பரமாத்ம சாம்யத்தை வேண்டி,
பரமாத்மாவையே உபாசிக்க வேண்டும். எனவே “மாம் உபாஸ்வ” என்பதற்கு பரமாத்மாவை உபாசிக்க வேண்டும்
என்பதாக புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் எப்படி? என்பதாக பூர்வ பக்ஷம் –

பரமாத்மாவுக்கு அசாதாரணமான விஷயங்களை கூடவே சொல்லி இருப்பதால்,
இந்திர பிராண சப்தத்துக்கு பரமாத்மா என்றுதான் அர்த்தம் , என்ன
துவஷ்டாவின் பிள்ளை, துவாஷ்டாசுரனைக் கொன்றவன் எனவும் கூறி இருப்பதால் ,
வக்து: ஆத்மோபதேசாத் – உண்மையில் இந்திரன் தன்னைச் சொல்லிக் கொள்வதாவன்னோ தேறும்? என மீண்டும் ஆஷேபம்

ஆத்யாத்ம விஷய பூமா – எப்படி ஒரு வண்டி சக்கரத்தின் ஆரம் (spokes) அதன் அச்சோடு இணைக்கப்பட்டு சுழல்கிறதோ அதுபோல,
ஆத்மாவின் அம்சங்கள் வெகுவாக பரமாத்மாவையே சேரும் என்பதால், இந்திரன் தன்னைச் சொல்லிக்கொண்டாலும்
அது பரமாத்மாவரை பர்யவசிக்கும் என்பது சமாதானம். பூமா = பஹுத்வம்.

விஸ்வ ஜிதா யஜேத – என்கிற பூர்வ மீமாம்ஸா சூத்ரத்தில் காட்டப்பட்ட
“விஸ்வ ஜிதா ” நியாயம் = எந்த இடத்தில் யார் அதிகாரி, என்ன பலன் என்று சொல்லப்பட வில்லையோ,
அங்கு ஸவர்கப் பிராப்தி தான் பலம். ” தத் ஸ்வர்க: ஸர்வாந் அவிசிஷ்ட:” என அனைவருக்கும்
ஸ்வர்கப் பிராப்தி இஷ்டமாய் இருக்கக் காண்கையாலே, அதற்கு இச்சிப்பவர்கள்தான் அதிகாரி என்கிற விஸ்வஜிந் நியாயப்படி
ஹித தமமான மோக்ஷ பிராப்த்திக்கு பரமாத்மாவே கடவன். பலத்தை வைத்து, உபாஸ்யம் இந்திரன் என்றாலும்,
இந்திர சரீரியான பரமாத்மாவையே குறிக்கும்.

எந்த ஜீவாத்ம விஷயத்தில் பகவதநுகிரகம் (உந்மீஷதி= ஊர்துவம் நேதும் இச்சதி – நயாமி பரமாம் கதிம் என்பதாக) பிரசவிக்குமோ,
அவர்களைக் கொண்டு ஸாதுகாரியங்களையும்,
யார் விஷயத்தில் நிக்ரகாவேசமோ, அவர்களைக் கொண்டு துஷ்ட காரியங்களையும் செய்விக்கிறான் என்கிற
ஸர்வ நிர்வாஹக சாமர்த்தியம், பகவானுக்கன்றி இந்திரன் போன்ற ஜீவாத்மாவுக்கு இல்லை என்பதாலும்,
“மாம் உபாஸ்வ” என்றால் பரமாத்மா ஏவ உபாஸயம் என்று கொள்ள வேண்டும்.

அப்படியானால், ஜீவாத்மாவுடைய அனைத்து காரியங்களும் தெய்வ இச்சை – பூரவ நியோஜிதம் (predetermined) மட்டுமா?
ஸ்வயிச்சை (free will) என்பது கிடையாதா? என்றால் புருஷ பிரயத்ன சார்தக்கியம் பகவதநுகிரகத்தாலே என்றே சொல்லவேண்டும்.
Human efforts are needed but that will fructify, if only God destines என்பதே சாரம்.
ஜீவாத்மாவுடைய புண்ய பாப பலிதமான கர்த்ருத்வம், பகவத் அதீனம். இதன் வியாபகம் அதிகாரி பேதத்துக்கேற்ப மாறும்.
சைதன்யா உசித பிரதம ப்ரவிருத்தி ஸ்வாதந்திரியம் எல்லா ஜீவாத்ம்மாவுக்கு உண்டு.
ஆனாலுல் அதை உத்தரோத்ரம் நடத்துவது பகவததீனம் அத்தனையே.
கடவுளை நம்பாத நாத்திகனும், விதி என்ற பெயரால் இத்தை ஒப்புக் கொள்வதைப் பார்க்கலாம்.

துவமேவ ஸாது கர்ம காரயிதும் இமே லோகேப்பிய : உந்மீஷதி
துவமேவ அஸாது கர்ம காரயிதும் இமே லோகேப்பிய: அதோன்மீஷதி
இதி ஸர்வஸ்ச கர்மண: காரயித்தும்ச்ச பரமாத்மா

நாம் கெட்ட விஷயங்களைச் செய்யும்போது, பகவான் அதற்கு துணையோ ?
ஸர்வ பூத ஸுஹ்ருதனான அவன் தீச்செயலில் ஒருவனைச் செலுத்தி, பாபத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்கிற கேள்வியும் எழலாம் .
அது அவன் விஷயத்தில் வைஷம்யத்தைக் காட்டாதா என்றால்,
அவன் நம்முடைய கர்ம பலவியாப்திக்கு அநுசரணையாக செய்கிறானே ஒழிய, நைர்கிருண்யத்தால் அன்று.

மஹாபாரதத்தில் ஏகலைவனுடைய விருத்தாந்தத்தில், துரோணர் அவன் கடைவிரலை வாங்கியது மேல் ஜாதி ஆதிக்கியத்தால்
என்பன போன்ற தூஷணங்களுக்கு இடமாக, அவனுக்கு ஒரு அநியாயத்தை பண்ணினது,
பின்நாளில் வரப்போகும் பாரதப்போரில் தர்மம் நிலைபெற, இவன் கர்ணனைப்போல் துரியோதனன் பக்கல் விலைபோகாமல்
இருக்க செய்யப்பட்ட துரோகம்
அதுவும், பகவத் சங்கல்பத்தை அநுசரித்தே, ஒரு நாட்டைக் காக்க சிலரைப் பணயம் வைக்கலாம் என்பதுபோல.
When greater melody is fixed, lesser is scarcely less felt.

ஆனந்த: அஜர : அமிருத : என்பதான பரமாத்மாவுக்கே அசாதாரணமான சின்னங்களை யிட்டு சொன்னதோடல்லாமல்
ஏஷ லோகாதிபதி: ஏஷ ஸர்வேஷ: ” என்றும் காட்டி ”மாம் உபாஸ்வ ” என்று ஏன் சொல்லவேண்டும்?
ஸ்வாயத்வே ஸப்த பிரயோகம் கிமித் அவாசகம் பிரயுஞ்ச ? என்கிற பூர்வ பக்ஷம்- ஆக்ஷேபம் முடிந்த பாடில்லை.

இங்கு ”மாம் ” என்பது ”அஸ்மத் ” (Me) சப்தத்தினுடைய 2ஆம் வேற்றுமை உருபு.
”மம ” (My) என்பது 6ஆம் வேற்றுமை உருபு . ”அஹம் ” என்றால் யாரு?
அஹமர்த்த : ஆத்மத்வ வாதம்
அஹமர்த்த : அநாத்மத்வ வாதம் –என்பதாக இரண்டு பக்ஷம்.
ஜிக்ஞாசா அதிகரணத்தில் அஹமர்த்தம் ஆத்மா என்று பார்த்தோம். அத்வைதிகள் அஹமர்த்தம் ஆத்மா இல்லை என்பர்.
அஹமர்த்த விநாசம் மோக்ஷம் என்பது அவர்கள் வாதம்.
ஆத்ம-பரமாத்மாவுக்கான சம்பந்தம் சரீர-சரீரி பாவமாகையால், அஹமர்த்தம் ஆத்மாவோடு நில்லாமல்
சரீரியான பரமாத்மாவளவும் காட்டும் என்பதான விசிஷ்டாத்வைத சித்தாந்ததுக்கு உயிரான சூத்ரம் இது.

வாமதேவர் பகவத் ஸாட்சாத்காரமான ஒரு மஹரிஷி. அவர் “எல்லாம் நான்தான்” என்றால் வாஸ்தவமான வார்தையாக இருக்கும்.
அடியேனைப் போன்ற அல்பஜ்ஞர்கள் அதே வார்த்தையைக் சொன்னால், அது புரட்டு அல்லால் வேறு இல்லை.
எல்லாம் நான்தான் என்கிற வார்த்தை “அஹம் பிரஹ்மாஸ்மி” என்பதான அநுபவம்.
“அஹம் அநுரபவம் சூர்யஸ்ச” (பிரஹதாரண்யம்),
” கட்சீவாந் சிரஸ்ய விப்ர:” (ருக்) என்பது அவர் வார்த்தை.
இதில் பிரஹ்ம சப்தம் குறிப்பிடப்படவில்லை யானாலும் , அவனுக்குறிய சின்னங்களைக் கூறினபடியால்,
இது “அஹம் பிரஹ்மாஸ்மி” அநுபவம்.

“நான்” என்கிற வியக்தித்வத்தில், மநுவாக, சூரியனாக இருக்கிற தன்மையும் (தர்மம்) சேருமானால்,
அதற்கு அஹம் பிரஹ்மாஸ்மி போன்ற அநுபவம் என்று சொல்லலாம். அப்போது இரண்டு தர்மமும் சத்யமானதாகவே
சாமான்யாதிகரணத்திலே இருக்க வேண்டும்.
அஹம் என்பது பொய்யானால், பிரஹ்மா “அஸ்மி” என்று சொல்லப்போகாது.

சத்ரி, குண்டலி, வாஸஸ்வி, தேஜஸ்வி தேவதத்த: என்ற வார்த்தை ஏற்புடைத்து.
சத்ரி, குண்டலி, வாஸஸ்வி, ஸ்த்ரீ: தேவதத்த என்பதான வார்த்தை சரிபடாது,
காரணம் பும்ஸ்துவமும், ஸ்த்ரீத்வமும் ஒரே வியக்தியில் இருக்க முடியாது.
சொல்லப்பட்ட 5 தர்மங்களில், தேவதத்தனாக இருக்கிற தர்மத்தோடு, ஸ்த்ரீத்வமாகிற-மித்யாபூதமான ஒரு தர்மம் சேர்ந்தாலும்,
அந்த ஞானம் அயதார்த்த ஞானமாகும்.
அதுபோல, அத்வைத சித்தாந்ததின்படி, அஹமர்த்தம் ஆத்மா இல்லை, அது மித்யா என்றால்-
சத்யமான பிரஹ்ம தத்வத்தோடு/தர்மத்தோடு அசத்யமான ஆத்ம தத்வம்/தர்மம் சேர்வதால் ஏற்படும் ஞானமும் அசத்யமாகும்.
அஹமர்த்தம் ஆத்ம தத்வத்தை சொன்னால் அல்லது “அஹம் பிரஹ்மாஸ்மி” என்கிற அநுபவம் சாத்யமாகாது.

ஆத்ம ஞானம் கை வராதவர்களுக்கு, ஆத்மா = தேகம் (நான்); அஹம் = தேகம்.
ஞானிக்கு , நிஷ்கிருஷ்ட ஆத்மா – தேகம் (இது) ; அஹம் = ஆத்மா.
சமாதி ஸ்திதியில்
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி, பரமாத்மா (சரீரி) – ஆத்மா (சரீரம்) ; அஹம் = பரமாத்மா.
மூன்றாவது நிலையே “அஹம் பிரஹ்மாஸ்மி” என்கிற அநுபவத்தில் பிரத்யகரத்தம் பரமாத்மநி பர்யவஸாநாத்.
பிரத்யக் = ஸ்வயம் பிரகாஸ்யம். தான் ஒளி விடுவது. தனக்கு ஒளி விடுவது.
பராக் = ஸ்வஸ்மை பிரகாஸ்யம். தான் ஒளி விடுவதோடு, தனக்கும் பிறர்க்குமாய் ஒளி விடுவது.

இந்திரனைத் தவிற இப்படிப்பட்ட அநுபவத்தை, வேத, புராண, சரித்ர காலத்தில், கண்டவர்கள் குறிப்பாக சொல்லப் போனால் :-
வாம தேவர் – “அஹம் அநுரபவம் சூர்யஸ்ச” (பிரஹதாரண்யம்), ” கட்சீவாந் சிரஸ்ய விப்ர:” (ருக்)
பிரஹ்லாதன் – “ஸ ஏவ அஹம், மத்த ஸர்வம், அஹம் ஸர்வம், மயி ஸர்வம்”
நம்மாழ்வார் – கடல் ஞாலம் செய்வேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
அபின்ன நிமித்த, உபாதான, சககாரி காரணம் பிரஹ்மம் என்பதாகச் சொன்னவர்.

இந்த திருஷ்டியில் “மாம் உபாஸ்வ” என்பதான இந்திரனுடைய உபதேசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

——–

இந்த திருஷ்டியில் நம்முடைய சித்தாந்ததுக்கே உயிரான சூத்ரம் இது எனலாம்.

1-1-32 ஜீவ முக்கிய பிராண லிங்காத் ந , இதி சேத் , ந உபாசாத்ரைவித்யாத் ஆஸ்ருதாத் அஸீதத்வாத் இஹதத் யோகாத் ::

ஜீவ பிராண லிங்காத், ந –
இவ்வளவு சொன்னாலும் சமாதானம் ஆகாத பூர்வ பக்ஷம் .
“மாம் உபாஸ்வ” என்று சொன்னதற்கான விளக்கங்கள் சரி,
ஜீவாத்ம லிங்கமான ‘த்ரீசீர்ஷாணம் த்வாஷ்ட ஹநனம்’ என்பதை ஏன் சொல்ல வேண்டும்? என மீண்டும் ஆஷேபம் எழுப்ப,

சிலசமயம் பெருமையான விஷயங்களை தன் பேரிலும், தானே செய்திருந்தாலும் அடாது செய்தன ‘பகவதிச்சை’ என
அவன் பேரில். பழியிடுபவர்கள் உண்டு. அதுபோல இந்திரன் இங்கு பேசியிருப்பனோ? என்பது கேள்வி.
இதிசேத் ந –
அங்கனில்லை.
உபாசநாத் திரைவித்யாது-
பகவத் உபாசனம் மூன்று வகையாக பண்ணலாம்.

1. ஸ்வரூப உபாசனம் –
நேராக பகவானை உபாசிப்பது. ”சத்யம், க்ஞானம், ஆனந்தம் பிரஹ்ம – ஆனந்தம் பிரஹ்மே திவ்ய க்ஞானத் ” இத்யாதி
குணாஸ்ரய ஸ்வரூப அநுசந்தானம் .
ஒவ்வொரு பிரஹ்ம வித்யையிலும் ஒவ்வொரு பகவத் குணத்தை தியான விஷயமாக சொல்லியுள்ளாதால்,
இப்படி எல்லா வித்யைகளையும் ஒருவன் அத்யேனம் பண்ணவேண்டுமா? என்றால் இல்லை.
எல்லா பிரஹ்ம வித்யைக்கும் பகவத் பிராப்தியாகிற பலம் ஒன்றுதானாகையால்,
அவரவர் இச்சை, சக்திக்கு உசிதமான ஒரு பிரஹ்ம வித்யையே போதுமானது, விகல்ப : அவிசிஷ்ட பலத்வாத் .

2. சித் சரீரக உபாசனம் — தன்னதேயான ஜீவாத்மாவுக்கு அந்தர்யாமியாக உபாசனம்.
போக்த்ரு வர்க துவாரா – குறிப்பாக இங்கு சொல்லப்பட்ட இந்திரனுக்கு அந்தர்யாமியாக அநுஸந்தானம்.

3. அசித் சரீரக உபாசனம் — கல்லு, கட்டை போன்ற (பிரகிருதிக்கு) அசித்துக்கு அந்தர்யாமியாக உபாசனம்.
ஆரண்ய ரூபமாக, ஜல ரூபமாக, பிரசாத ரூபமாக,கோவர்தன ரூபமான உபாசா – போக்கிய போபோகோபகரண வர்க துவாரா –
சொல்லப்பட்ட பிராண வாயுவுக்கு அந்தர்யாமியாக அநுஸந்தானம் .

போக்த போக்கியம் பிரேரிதாரம் ச மத்வா |
ஸர்வம் புரோக்தம் த்ரிவிதம் பிரஹ்ம ஏதது ||
என்பதாக நம்முடைய சம்பிரதாயம் போக்தா (சித்து), போக்கியம் (அசித்து), பிரேரிதா (ஈஸ்வரன்) என்கிற தத்வ த்ரய வாதம்.
அவை மூன்று தத்துவங்களாக இருந்தாலும், மற்ற இரண்டும் ”த்ரிவிதம் புரோக்தம்
பிரஹ்ம ” என்று பிரஹ்மத்தினிடத்திலேயே பிரகாரமாக இருப்பன.
சித்தசித் விசிஷ்டம் பிரஹ்ம ஏகமேவ தத்வம் என்கிற ஸ விசேஷ அத்வைதம் நம்முடையது.

ஏக தத்வ வாதிகள் 4 பேர் .
பிரஹ்ம விவர்த்த வாதம் – சங்கரர்.
விஜ்ஞான விவர்த்த வாதம் – யோகாசார பௌத்தன்.
சூன்ய விவிர்த்த வாதம் – மாத்யமிக பௌத்தன்.
சப்த விவர்த்த வாதம் – பர்த்ரு ஹரி

த்வி தத்வ வாதிகள் – சாங்கியர்கள்
பிரகிருதி (Matter) + புருஷன் (Mind)

”ஸது ஏவ சௌம்ய ! இதம் அக்ரே ஆஸீத் ” என்ற வாக்கியத்தில்,
அக்ரே – சிருஷ்டிக்கு முன்னால் , ஸ்திதிக்கு வெகு பின்னால் , மூன்று தத்துவமும் – ஒரு தத்வமேயோ என்று சொல்லாம்பட்டி –
”ஸது” என்ற பெயரோடு இருந்தது.
ஏக மேவ அ-திவிதீயம் – ஸ்வேநாபி ஸ்வ சரீரதயா பிரதத் பிரதிபத் அநர்ஹ ஸூக்ஷ்மதஸா சமம் –
தனக்கும் தன் தன்மை அறியக்கில்லா – நாம ரூப விபாக மற இருக்கிற பிரளய கால ஸ்திதி — விசிஷ்டேன ஏகம் .

ஸ்வரூப உபாஸனம் மட்டுமே போதாதா? மற்ற இரண்டும் எதற்கு? என்றால்
ஸ்வரூப உபாஸனம் கடினமானது. உபாசனம், தியானம் இவை செய்ய முதலில் தரிசன சமானாகார அனுபவம்
( நெஞ்சென்னும் உட்கண்ணால் காணும் உணர்வு ) ஏற்பட வேண்டும். பிறகு தான் அதைக் கொண்டு அவனை ஸ்மரிக்க முடியும்.

பிள்ளை உறங்காவில்லி – தனுர் தாசர் – சரித்திரத்தை இங்கு ஸ்மரிப்பது .
மனைவியின் கண்ணழகுக்கு வாட்டம் வராமல் குடைப்பிடிப்பவரை , பெரிய பெருமாள் கண்ணழகை சேவிக்கப் பண்ணி ,
அவரை நம்பெருமாள் மெய்க்காப்பாளராக , பகவத் ராமானுஜர், மாற்றிய விருத்தாந்தம் போல் ஈடுபாடு ஏற்பட
அர்சா அவதாரம் உகந்ததும், ஸுலபமானதும் ஆகும். இது அசித் சரீரக உபாசனா கோடியிலே சேரும்.

சித் சரீரக துவரா உபாசனமாவது, தம்முடைய ஆத்மாவுக்கு அந்தர்யாமியாக இருக்கிற பிரஹ்மத்தை தியான, யோக முறையில் ஆராதிப்பது.
அல்லது யாக, யக்ஞங்கள் மூலம் செய்யப்படும் அந்தர்யாமி ஆராதனம்.
ஆகாஸாத் பதித்தம் தோயம் யதா கச்சதி ஸாகரம் |
ஸர்வதேவ நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி ||

அதிகாரி பேதேந உபாஸாத் த்ரை வித்யேந. இதற்கு உபநிஷத அங்கீகாரமும் உண்டு என்பதாக பூர்வ பக்ஷத்துக்கு சமாதானம்.

பகுஸ்யாம் பிரஜாயே ஏதி
இதகும் ஸர்வம் அஸ்ருஜ
தத் ஸ்ருஷ்ட்வா ததேவா அநுபிராவிஸது
தது அநுபிரவிஸ்ய தத் ஸச்சா பவது
நிருக்தஞ்ச அநிருக்தஞ்ச
நிலயநஞ்ச அநிலயநஞ்ச
விஜ்ஞானஞ்ச அவிஜ்ஞானஞ்ச
சத்யம்ச அநிருதம்ச சத்யமவபவது
சத்யமும் (நிஜமும்) அநிருத்மும் (பொய்யும்) சேர்ந்து சத்யமாயித்து என்றால் அசத்கல்பமாய் இருந்த சித்து, அசித்து
இரண்டினுள்ளும் அவைகளின் ஸத்தாபிரயுக்தமாக புகுந்து நாம ரூபே வியாகரவாணி என்பதாக ஸிருஷ்டியும்,
அவனுடைய அந்தர்யாமித்வமும் கொண்டு சித்ரூபமான உபாசனமும், அசித் ரூபமான உபாசனமும் ஸ்ருதியை அநுசரித்தே எனலாம்.

இந்திரன் “மாம் உபாஸ்வ” என்றாலும், இந்திர சரீர அந்தர் வர்தியான பரமாத்ம உபாசனமே செய்யத் தக்கது.
ஏதத் உக்தம் பவதி.
இதி பிரதமஸ்ய அத்யாயஸ்ய பிரதம பாத:

இந்திர பிராணா அதிகரணம் -முதல் பாதம் இறுதி அதிகரணம் -தேவதைகளுக்கு அரசன் -இதுவும் பர ப்ரஹ்மத்தை காட்டும் -கௌஷீகித்த உபநிஷத் சாரம் –
தச உபநிஷத்துக்களில் சேராது -இது -ரிக் வேத உபநிஷத் -கௌஷீதக ப்ராஹ்மணோ உபநிஷத் -சம்ஹிதா / ஆரண்யம் /ப்ராஹ்மணோ உபநிஷத் பாகங்கள் –
ப்ரதர்தன அரசன் இந்திரன் வாலப்யம் பெற்று உபாசனத்துக்கு கேட்க சொல்லுவது
ஜிதந்தே ஸ்தோத்ரம் -நித்யபடி திரு நாராயண புரத்தில்-ஜிதந்தே புண்டரீகாக்ஷ -ஆரம்பித்து –ஹிதம் சுரேஷிடம் நமக்கு தெரியாதே
ராவணன் ஹிரண்யகசிபு போலே வரம் ஆல்பமாக பெற்று முடியும் படி ஆகுமே
அஹம் அறியாதவன் -யத் ஹிதம் நீயே அறிவாய் அருளுவாய் என்று முடிக்கும்
மாம் உபாஸ்யம் என்பான் -இந்திரன் -ஹித தமம்-மாம் ஏவ விஜாநீயே-
பரம புருஷ ஏவ இந்திர பிராண இதுக்கும் காரணத்வமே உபாஸ்யத்துக்கு யோக்யம் என்பதால் –
அம்ருதத்வ பிராப்தம் -காரணத்வ வியாப்தம் என்பதால் -இதுவே சங்கதி நான்கு அதிகரணங்களுக்கும்
வித்யை அனுகுணமாக 4 ஸூ த்ரங்கள் இதிலும் -ஆதிகாரிக புருஷர்கள் இந்த்ராதிகள் -100 அஸ்வமேத யாகம் செய்து இந்திர பதவி பெறுவான்
பரிணாம வாதம் -நிரஸனம் த்வதிகள் சொல்லுவர் -தோஷம் -உபாதானம் -நாம் ஸ்வரூப ஸ்வ பாவ பரிணாமம் சொல்லுவோம்
உபாதானம் புரிவது சிரமம் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -நிமித்த காரணம் மட்டும் போதும் என்பர் த்வைதிகள் –
வேதாந்த சாஸ்திரம் விரோதிக்கும் –
வாதிராஜர் -ஹயக்ரீவர் ப்ரத்யக்ஷமாக வந்து பிரசாதம் கொடுத்து -மத்வர் அடுத்த இந்திர பதவி
வாதி ராஜர் வாயு பகவான் ஆவார் -ஆதிகாரிக புருஷர்கள் –
சங்கரர் -32 வருஷம் -782-820 சிலர் சொல்வார் –சிலர் தப்பாக -வித்யாராணர் -எழுதிய சங்கர விஜயம் விவரிக்கும் –
இந்திர சப்தம் ஜீவ விசேஷம் -பூர்வ பக்ஷம் -நானே பிராணன் -சாமா நாதி காரண்யத்தில் இந்திர பிராண —
பிராண இந்திர -பர ப்ரஹ்மம் -இரண்டு சப்தங்களாலும் -ஜீவா அர்த்தாந்தர பூதம் -ஆனந்த -ஸ்வரூபம் -ஞான ஸ்வரூபம் -அம்ருதம் ஜரா மரணம் இல்லாமல்
implied meaning -கங்கா தீரே தேசம் -மாஞ்சா க்ரோசம் போலே விதி வாக்கியங்களில் இவை கூடாதே –
ஆத்ம உபதேசம் சொல்லுவதால் அந்தர்யாமி சொல்லக் கூடாதே பூர்வ பக்ஷம்
ஸ்வரூபேண–சித்த சரியாக -அசித் சரீரி பகவத் உபாசனம் மூன்று வகை உண்டே -சித்தாந்தம் –
மாட்டை கை அடித்தது கைக்கு அதிதேவதை இந்திரனுக்கு பாபம் சேரும் -பூ வைத்த பலன் எனக்கே சொல்ல இந்திரன் வேஷத்தில் வந்து காட்டிய கதை
அத்யாத்ம சம்பந்தம் பூமா -பஹூத்த்வம் என்று -ஆத்மனி ஆதேயத்தயா சம்பந்தம் பரமாத்மா ஏவ –
பரமாத்மா அசாதாரண சம்பந்தம் அத்யந்தமா சம்பந்தம் என்றுமாம் -இத்தையே மாம் உபாஸ்ய -என்கிறார்
இரண்டாவது வர்ணக்கம் இது -ஸ்வர்க்க காமன் ஜோதிஷ்ட யாகம் -பூர்வ மீமாம்சை -விஸ்வஜின் நியாயம் –
பலன் சொல்லாமல் இருந்தால் சுவர்க்கம் பலன் என்பர்
ஹித தர்மம் மனுஷ்யருக்கு மோக்ஷம் தான் பரம புருஷார்த்த லக்ஷணம் தானாகவே இருக்கும் -உத்க்ருஷ்ட ஸ்ரேயஸ்
-இந்திரன் உபாசனையால் இது பெற முடியாதே ஜனார்த்தனன் ஒருவனே மோக்ஷ ப்ரதன்
கர்த்ருத்வம் ஜீவாத்மாவுக்கு இல்லை என்றால் விதி நிஷேத சாஸ்திரங்கள் வியர்த்தமாக போகுமே –
தெய்வ பிரயத்தனம் -புருஷ ஜீவ பிரயத்தனம் -இரண்டும் உண்டே -எல்லாம் பூர்வ நியோயிதம் இல்லையே –
ஸூ ஹ்ருதம் சர்வ பூதானாம் -அவனே
ஏஷ ஸர்வேஷா -அவனுக்கே உள்ள அசாதாரண லக்ஷணங்கள் -இந்திரா பிராண சப்தம் அவனையே குறிக்கும்
சாஸ்த்ரா த்ரஷ்டாயா -வாமதேவர்
அஸ்மத் அஹம் சப்தம் -மாம் -உபாஸ்யம் சொல்லி -அஹம் அர்த்தம் ஜீவாத்மா -அஹம் அர்த்த வி நாசம் புரிந்தால் மோக்ஷம் அத்வைதி
மோக்ஷ கதா பிரஸ்னம் -கந்தம் -சரீர சரீரி பாவத்தால் -அஹம் பரமாத்மாவையும் குறிக்கும் அஹம் ப்ரஹ்மாஸ்மி -ஸம்ப்ரதாயார்த்தம் –

சாஸ்த்ரா த்ருஷ்டாயா -வாமதேவயா –சம்பிரதாய ஸூத்ரம்-வாம தேவர் போலே -மாம் என்று பரமாத்மாவையே இந்திரன்
உபாஸ்யமாக கொள்ள சொல்கிறான் -அஹம் ப்ரஹ்மாஸ்மி
அஹம் ஏவ இதம் சர்வம் –
அவிபாத்தேனா திருஷ்டத்வாத் மேலே -வரும் -அஹம் ப்ரஹ்மாஸ்மி அனுபவம் -அஹத்வமும் இன்றைய நிலையும்-வாஸ்த்வம்
இரண்டும் பொய்யானால் சேராதே -அதனால் அஹம் ப்ரஹ்மாஸ்மி அத்வதாம் பாரமான சுருதி இருக்க முடியாதே
சாத்ரி குண்டலி தேஜஸ்வி தேவ தத்வா –தர்மங்கள் சேர்ந்து -உள்ள வியக்தி-என்றவாறு -ஸ்த்ரீத்வம் சொல்லி -அது மட்டும் பொருந்தாதே
யதார்த்த ஞானம் ஆகாதே ஒரே தப்பு இருந்தாலும் -அஹம் ப்ரஹ்மச்சாரி -கல்யாணம் ஆன பின்பு மாறும் -அஹம் அர்த்தம் ஆத்மா
சாமானாதி கரண்யம் வராதே -மித்யா பூதமான வார்த்தை இல்லை –
ஸ்த்தூலஹம் -தேஹாத்ம அபிமானத்தால் அஹம் உடம்பு என்று பிரமிக்கிறோம்
பரமை யோகி -சமாதி நிலை -இல்லை -ஆத்ம யாதாம்யா ஞானம் வந்த பின்பு -அறிகிறோம்
இது -உடம்பு -இதுக்கு சிரமமாக இருக்கு -சரீரம் ஸூ கம் துக்கம் அனுபவிக்காதே -ஆத்மாவுக்கு ஜுரம் வராதே
இது எனக்கு எப்படி சொன்னாலும் ஞானம் மாறாதே -சரீரம் /ஆத்மா /பரமாத்மா பர்யந்தம் அஹம் அர்த்தம் வருமே
மூன்று நிலைகள் -அந்தர்யாமியாக இருப்பதை அறிந்த பின்பு
அஹம் -பரமாத்மா -ப்ரத்யக் -ஆத்மா ஸ்வயம் பிரகாசம் -அவன் வரை -பர்யவசிக்கும்-
மம சரீரம் என்னுடைய சரீரம் -ஜீவாத்மா சரீரம் வேறாக உணர்ந்து -பரமாத்மா வரை ஞானிகள் உணர்வார்கள் –
வேத காலத்தில் -வாம தேவர் -புராண காலத்தில் -பிரகலாதன் — நம்மாழ்வார் -கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -போல்வார் –
திருமங்கை ஆழ்வாரும் அர்ச்சையில் அனுகரித்து ஒரு பாசுரம் அருளிச் செய்து உள்ளாரே -சரீர சரிரீ பாவம் -அசாதாரண விசிஷ்டாத்வைத கொள்கை –

அஹம் ப்ரஹ்மாஸ்மி -நம் சித்தாந்தத்துக்கே பொருந்தும் –அஹம் மோடி -அஹம் பிரதான மந்த்ரீத்வம் ஆனார்
இரண்டும் வெவ்வேறே முன்பு -இப்பொழுது ஒன்றாக -அஹத்வமும் பிரதான மந்த்ரீத்வமும் சேர —
அஹம் இல்லை என்பது இல்லையே -அகமும் ப்ரஹ்மமும் ஒன்றும் இல்லை என்பது இல்லையே –
சைத்ரீ குண்டலி வாசவீ தேஜஸ்வீ தேவதத்தா —
அஹம் -மித்யா -ப்ரஹ்மம் சத்யம் -இரண்டும் சேருமோ -அத்வைதி வாதம் தேவ தத்வம் ஸ்த்ரீத்வம் மித்யா போலே அன்றோ
அஸ்மி -வர்த்தமானம் -இதுவும் பெரிய விஷயம் —
அஹம் -தேகமா ஆத்மாவா -ஜீவஸ்ய சரீராதி வியாவ்ருத்தம் அன்றோ -ஞான அவஸ்தையில் அஹம் ஆத்மா –
சரீரம் நோய் -இது படுத்தும் பாடு -என்பார் –ஆத்மாவுக்கு நோய் இல்லையே -இது எனக்கு சொன்னாலும் -ஒன்றே தானே –
மேல் நிலை அந்தர்யாமி அந்தராத்மா ப்ரஹ்மம் உணர்வது -இப்படி மூன்று நிலைகள் -அஹம் -தேகம் /ஆத்மா /ப்ரஹ்மா என்றவாறு –
ப்ரத்யக் பரமாத்மா பர்யவசிக்கும் என்றவாறே –
வாம தேவர் / ப்ரஹ்லாதன் -அனந்தன் -மத்தஸ் சர்வம் -அஹம் சர்வம் மயி சர்வம் / நம்மாழ்வார் -திருமங்கை ஆழ்வார்
உபாசனம் சஹா அஹம் -சோகம் -அத்வைதி சொல்ல –
சோகம் /தாஸோஹம் –/-மீண்டும் -சதா சோகம் –எப்போதும் நானே அவன் //தாஸ தாஸோஹம் —
சாஸ்திர ஸித்தமான உபதேசம் -என்றபடி -/ சரீராத்மா பாவம் -நம் சம்பிரதாயத்தில் அசாதாரண யுக்தி -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம —

அடித்த சூர்ணிகை –ஜீவ முக்கிய பிராண லிங்காத்–இந்த்ர-ஜீவாத்மா -தன் புகழுக்காக சொன்னானோ -இல்லை
உபாசனம் -உபாஸா-த்ரை வித்யா -மூன்று விதம் -பரமாத்மா உபாசனம் மூன்று விதம் என்றபடி —
ஸ்வரூபேண உபாசனம் / சித் சரீரத்தால் / அசித் அந்தர்யாமி -நீராய் நிலனாய் போலே
கிராமத்தில் வெளியப்ப ஸ்வாமி கோயில்கள் -கல்லையும் மரத்தையும் வணங்குவார்களே –
கோவர்த்தன மலைக்கே-சொன்னதும் அசித் அந்தர்யாமி —
புஷ்கரம் / நைமிசாரண்யம் /பூரி — நீர் ஆரண்யம் பிரசாத ரூபி -மூன்றிலும் உண்டே –
இந்த இரண்டு சூரணைகளும் நம் சம்பிரதாய முக்கிய சூரணைகள் என்பர் –

சர்வகாரணத்வ / போக்த்ரு வர்க்க /-போக உபகரண /-தத்வ த்ரய வாதம் ஒட்டி மூன்று வித உபாசனம்
விஞ்ஞான விவர்த்த வாதம் /சூன்ய வாதம் /–போன்ற ஏக தத்வ
சாங்கியர் பிரகிருதி புருஷன் –mind -mattar -போக்தா போக்யம் ப்ரேரிதா –சர்வம் ப்ரோக்தம் -த்ரிவிதம் ப்ரஹ்மம் –
ச விசேஷ அத்வைதம் -விசிஷ்டா அத்வைதம் –
அக்ரே -பிரளய காலத்தில் –சத் -ஒன்றே -ஸூ ஷ்ம தசையில் –நாம ரூப விபாகம் அநர்ஹம் -/
ஏக மேவ அத்விதீயம் -நிகில காரண பூதஸ்ய
கோடி ஜென்ம –பாபம் கிருஷ்ண ஸ்மாரித்து போகும் -அனுபவம் இருந்தால் தானே ஸ்மரணம்
அனுபவம் தர்சனம் சமானாதிகாரம் -சாஷாத்காரம் மானஸ அனுபவம் –
அர்ச்சா மூர்த்தி -பிள்ளை உறங்கா வல்லி தாசர் -தனுர் தாசர் விருத்தாந்தம் –
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்வு -வேண்டுமே -ஜீவ பர யாதாம்யதா ஞானம் பூர்வகமாக சாஷாத் கரித்து –
த்ரிவித அனுசந்தானம் பிரமாணம் உண்டே -சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம -ஸ்வரூப உபாசனம் /
ஆனந்தோ -திவ்ய உபாசனம் -தத் ஸ்த்ருஷ்ட்வா –தத் அனுபிரவேச -போக்த்ரு சரீர தயா –பஹுஸ்யாம் -பிரஜாயேயா —
ப்ரஹ்ம வித்யை பல குணங்களில் ஒவ் ஒன்றைக் கொண்டே அடையலாம் அது போலே -இம் மூன்றும் -பலம் கொடுக்கும்
பரமாத்மா பிராப்தி அனைத்துக்கும் சமம் –விகல்ப அவிசிஷ்டா பலத்வாத் -மேலே வருமே -பலம் து அவிசிஷ்டம் –
ஜீவ விசேஷண –அசாதாரண –சாமா நாதி கரண்யம் –அந்தராத்மா அனுசந்தானம் இது -நிகமிக்கிறார்–

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— -1-4–8-சமந்வய அத்யாயம்- சர்வ வியாக்யான அதிகரணம்–1-ஸூத்ரம்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் /
ஐந்தாவது -ஜகத்வாசித்வாதி கரணம் -3-ஸூத்ரங்கள்-/
ஆறாவது – வாக்ய அந்வயாதி கரணம்-ஸூத்ரங்கள் -4 ஸூத்ரங்கள்/
ஏழாவது பிரக்ருத்யதிகரணம்-6 ஸூத்ரங்கள் /
எட்டாவது -சர்வ வியாக்யான அதிகரணம்–1-ஸூத்ரம்-ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

—————

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-1-ஸூத்ரம்-

1-4-29-ஏதேந சர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா

இதன் மூலம் ப்ரஹ்மமே அனைத்துக் காரணமும் என்றும்
ஸ்ரீ மன் நாராயணனே ப்ரஹ்மம் என்றும் படிக்கப் பட்டது –

ஜகத் காரண உபநிஷத் வாக்கியங்கள் அனைத்தும் -எல்லா அதிகரண நியாயங்களாலும் –
ப்ரஹ்மமே அபின்ன நிமித்த உபாதான காரணம் என்று சொல்வதைக் காட்டினோம்
அப்பியாசம் -இரண்டு தடவை -வ்யாக்யாதா-technique-of interpretation–

சர்வ வியாக்யான அதிகரணம்-சம்பூர்ணம்

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -சம்பூர்ணம்

முதல் அத்யாயம் மட்டுமே நிகமனம் ஆனாலும் – ஸ்ரீ பாஷ்யத்தில் கிட்டத்தட்ட பாதி பகுதி பார்த்தோம் —

——————————–——————–——————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— -1-4–7-சமந்வய அத்யாயம்- பிரக்ருத்யதிகரணம்-6 ஸூத்ரங்கள்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் /
ஐந்தாவது -ஜகத்வாசித்வாதி கரணம் -3-ஸூத்ரங்கள்-/
ஆறாவது – வாக்ய அந்வயாதி கரணம்-ஸூத்ரங்கள் -4 ஸூத்ரங்கள்/
ஏழாவது பிரக்ருத்யதிகரணம்-6 ஸூத்ரங்கள்

———–

1-4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –6 ஸூத்ரங்கள்-

1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —

ப்ரஹ்மமே உபாதான காரணமாக இருந்தால் மட்டுமே பிரதிஞ்ஞை எனப்படும் உண்மையான வரிகள் பொய்யாகாது
ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்-என்று மாயையான பரம் பொருள்
மாயையான பிரகிருதி கொண்டு உலகைப் படைக்கிறான்

பூர்வ பஷி –
இதனால் நிமித்த காரணமும் உபாதான காரணமும் வெவ்வேறே என்பர்
ப்ரஹ்மத்தை உபாதான காரணமாகக் கொண்டால் மாறுதல் அடைய வேண்டி வரும் –
அவிகாராய என்றது பொய்யாகும் என்பர்

சித்தாந்தம்
பிரதிஜ்ஞை -உததமாதே சம்ப்ராஷ்ய யே நாஸ்ருதம் ஸ்ருதம் பவத்யமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம் -என்று
பரம்பொருளைக் குறித்து சொல்லிற்று
எதை ஒன்றைக் கேட்டால் கேட்க்கப் படாதது கேட்க்கப் படுகிறதோ நினைத்தால் நினைக்கப் படாதவை
நினைக்கப் படுகிறதோ அறிந்தால் அறிந்தது ஆகின்றதோ -அதுவே பரம்பொருள்
சாந்தோக்யம் –
திருஷ்டாந்தம் -யதா சோம்ய ஏகேந மருத் பிண்டேந சர்வம் ம்ருண்மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்
குயவன் என்று மட்டும் கொண்டால் அனைத்தையும் அறிந்தது ஆகாதே
ப்ரஹ்மத்தை உபாதானமாக் கொண்டு ஏற்படும் மாறுதல்கள் அவனது உடலாக உள்ள நமது சரீரத்தில் நிகழ்வதால் அவனுக்கு தோஷம் தட்டாதே
இத்தையே அஸ்மான் மாயீ ஸ்ருஜ்யதே -என்கிறது

உயிரான அதிகரணம் இதுவும்
பிரதி தந்த்ர சித்தாந்தம் –
ப்ரஹ்மமே நிமித்த காரணம் எல்லாரும் ஒத்துக் கொண்டு -மேலே உபாதானம் பற்றிய விசாரம் –
அபின்ன நிமித்த உபாதான காரணம் ப்ரஹ்மமே –
நியாய சாஸ்திரம் சமவாயி என்பர்
பிரகிருதி ச-உபாதான காரணமும் ப்ரஹ்மமே -உம்மைத் தொகை நிமித்த காரணமும் ப்ரஹ்மமே
மூன்று -முக்கிய -24-கிளைகள் உண்டே
உபாதானத்வம்-உபேயதானத்வம் -மண் பானை -தங்கம் வளையல் –
உரம் -கழிவு கொண்டு-sewage- தானியம் -விளைய -பரிணாம வாதம் -ஹேயமான வஸ்துவில் இருந்து –
அ மேத்யம் -யாகத்துக்கு ஆகாதது -உண்ணுவதும் யாகம் –
பிராண அக்னி ஹோத்ரம் -வைஸ்வாரன அக்னிக்கு ஆஹுதி -ப்ராணாயஸ்வாஹா இத்யாதி
பிராயச்சித்தம் பண்ணி உண்ண வில்லையே
ஆரம்பவாதம் -தார்க்கிகள் -காரண -கார்ய –
பரிணாம வாதத்திலும் சாங்க்ய நம் சம்ப்ரதாயம் வாசி உண்டே
சங்காத வாதம் புத்தர்கள் –
மாத்வர்-உபாதானம் ஒத்து கொள்ளாமல் நிமித்த காரணமே ப்ரஹ்மம் என்பர்
சங்கரர் -உபாதேயம் மித்யை -உபாதானம் இருந்தாலும்
மண்ணே சத்யம் -பானை இத்யாதி மித்யை -ஜகாத் மித்யை ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் –
மித்யா பூதமான வஸ்துவுக்கு காரணம் சொல்ல வேண்டுமா -உபாதான காரணம் வருமா –
அபின்ன நிமித்த உபாதானம் நமக்கு மட்டுமே -இதனாலே –

விஷய வாக்கியம் -சத் வித்யை சாந்தோக்யம் -அருணா -குரு ஸ்வேதகேது சிஷ்யர் பிள்ளை சம்வாதம்
நிரீஸ்வர சாங்க்யர் -சேஸ்வர சாங்க்யர் -இரண்டு விதம் -யோகம் -சேஸ்வர சாங்க்யர் -சாங்க்ய காரிகை -இவர்கள் பிரமாணம்
பிரகிருதி-பிரகர்ஷேன க்ருத்யம் -பிரக்ருதி ஸ்வயமேவ காரணம் -நிரீஸ்வர சாங்க்ய நிரசனம் இது வரை –
இனி சேஸ்வர சாங்க்ய நிரசனம் -26-தத்வம் யோகம் -என்பர் இவர்கள் –
ஸ்ரீ மத் பாகவதம் -மூன்றாவது ஸ்கந்தம் -கபிலர் தேவபூதை சம்வாதம் -உண்டே –
யோகம் தவிர சேஸ்வர சாங்க்யர் உண்டு என்பாரும் உண்டே

ப்ரஹ்ம வஸ்து ஈஷதே பஹுஸ்யாம் பிரஜாயேதி -சங்கல்பித்து -பலவாக கடவேன்-
நிஷ்கலம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்சனம் நிர்விகாரம் –போன்ற சுருதி வாக்கியங்கள் விரோதிக்குமே -பூர்வ பக்ஷம்
கடம் படம் -நிமித்த காரணம் சேதனம் உபாதானம் அசேதன வஸ்து தானே
பிரக்ருதியே உபாதானம் என்றால் சரியாகும்
மாயா -பிரகிருதி என்னும் அசேதனத்தை கொண்டு நிமித்தமாக ப்ரஹ்மம் என்பர் –
நிமித்த உபாதான பேதம் நியமம் உண்டே -லோக சித்தம் -பரமாத்மாவால் அதிஷ்டமான பிரக்ருதியே உபாதானம் என்பர் –
சேஸ்வர சாங்க்யர் பூர்வ பக்ஷம் -சாங்க்ய காரிகையில் ஈஸ்வர நிராகரணமும் ஈஸ்வர பிரஸ்தாபமும் இல்லை

ஈஸ்வர ஜகத் நிமித்த காரணம் இவர்களும் ஒத்துக் கொண்டார்கள்
கிலேசம் கர்மம் விபாகம் இல்லாமல் இருப்பவன் ஈஸ்வரன் -புருஷ விசேஷம் ஈஸ்வரன் என்பர் இவர்
நாம் ஜகத் காரண பூதன் -அனந்த கல்யாண குணாத்மகன் உபய லிங்கத்தவம்-
உபரோதம் -வியாதாக -விருத்தமான வார்த்தைகள் -சொல்லுவது –
ப்ரதிஜ்ஜை அருணர் ஸ்வேதகேதுவுக்கு -ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் -மூன்று த்ருஷ்டாந்தங்கள் சொல்லி –
நமக்கு ஸ்ருதியே பரம பிரமாணம் -தர்க்கம் -யுக்தி பிரதானம் இல்லை –logic-does-not-have—final -say-
சாஸ்த்ரீக சமைதி கம்யம்-
தங்கம் -வளையல்–உபாதான காரணத்துக்கும் உபாதேயத்துக்கும் -இரண்டுக்கும் அபேதம் -காண்கிறோம் –
ப்ரஹ்மம் அறிந்தால் அனைத்தையும் அறியலாம் என்பது -உபாதானமாக இருந்தால் தான் ப்ரதிஜ்ஜைக்கு ஒத்து வரும் –
பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத்-
உபாதானம் -material-cause–அவஸ்தா -மண் -குடம் -பிண்டத்வா அவஸ்தா -கடத்வா அவஸ்தா -லோஷ்டம் அவஸ்தை உடைத்தால் –
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டப்ரஹ்மம் காரண அவஸ்தை -ஸ்தூல சித் அசித் விசிஷ்டப்ரஹ்மம் காரிய அவஸ்தை
ஆகந்துகம் அப்ருதக் சித்த தர்மம் -அவஸ்தைகள் -பரிணாமங்கள் -இரண்டும் வேண்டும் உபாதானத்துக்கு –
ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் யோகம் -இரண்டும் ஒத்து போக வேண்டுமே –

————————————————————————————-

1-4-24-அபித்யோப தேஸாத் ச-

தனது சங்கல்பத்தை ப்ரஹ்மம் –
ததைஷத பஹூஸ்யாம் -சாந்தோக்யம் என்றும்
ஸோ காமயத பஹூஸ்யாம் -தைத்ரியம் -என்றும்
சொல்லுவதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று அறியலாம்-

ஆதேசா–என்று ப்ரஹ்மத்தை சொல்லும்
காரணம் -கார்யம் -பாவம் -கரணம் சாதக சமம் -அதிசயிதமான காரணம் கரணம் என்பர் -காரணம் கர்த்தா –
ஆதிஷ்யதே-ப்ரதிஷ்யதே–ஆதேசா -பரமாத்மா -சாதக சாமார்த்யம் –
சர்வஞ்ஞன் சர்வவித் -சமூக ஞானமும் ஒவ் ஒன்றின் ஞானமும் -ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் –
மண் -தங்கம் -திருஷ்டாந்தம் -ஸத்வித்யா பிரகரணம்
பாதிதமான அர்த்த வாக்கியம் -யானை ஆகாசத்தில் பறக்கிறது – -புலி புல்லை சாப்பிடுகிறது -போல்வன-
த்ருஷ்டாந்தத்தில் மண் குயவன் பானை -தங்கம் தட்டான் மோதிரம் -இங்கு ப்ரஹ்மம் ஒன்றே ஒவ்வாதே-பாதிதமான அர்த்த வாக்கியம் இது என்பர்
ஸர்வதா பொருத்தம் -த்ருஷ்டாந்தத்துக்கும் தார்ஷ்டாந்தத்துக்கும் இருக்க வேண்டாமே -சந்திரன் இவ முகம்-போலே உண்டே
சகல இதர விலக்ஷனான் ப்ரஹ்மம் -த்ருஷ்டாந்தம் கொண்டு விளக்க முடியாதே -சர்வ சக்தன் -சர்வேஸ்வரன் -ஸத்யஸங்கல்பன் –

அபித்யோப தேஸாத் ச-அபித்யா உபதேசாத் ச —இரண்டு பிரமாணங்கள் –
தைத்ரியம் -சாந்தோக்யம் ஸத்வித்யை -அஹம் ஏவ -I-will-transform-myself–into -many-பஹஸ்யாம் பிரஜாயேதி
ததைஷத பஹூஸ்யாம்-ஐஷத-சங்கல்பம் -பூர்வகம் -transformation-
சதேவ –சத் சப்த வாஸ்யம் மட்டுமாகவே இருந்தது
ஏகமேவ -ஒன்றாகவே இருந்தது
அத்விதீயம் -இரண்டாவது இல்லாமல்
தன்னையே தான் மாற்றிக் கொண்டு -அநேகமாக ஆக்கிக் கொண்டு -உபதேசம் –

——————————————————————————————–

1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச

வேத வரிகளும் ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று சொல்லுகின்றன
யஜூர் வேதம் –
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வருஷ ஆஸீத் யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்ட தஷூ
மநீஷிணோ மநஸா விப்ரவீமி வோ ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவ நாதி தாரயன்-என்று
காடு போலே ஆதாரமாக உள்ளவனும் ப்ரஹ்மமே –
உபாதான காரணமாக இருக்கும் மரமும் ப்ரஹ்மமே
நிமித்த காரணமும் ப்ரஹ்மமே -என்றதாயிற்று-

சாஷாத் உபயாம்நா நாத் ச–சாஷாத்தாக உபய ஆம்நாநாத் -வேதமே சொல்லுமே –
வேதம் ஆம்னாயம் -பர்யாய சப்தங்கள்
வனம் த்ருஷ்டாந்தம் -வ்ருக்ஷங்களும் வனமாக இருப்பதும் ப்ரஹ்மமே –

—————————————————————————————–

1-4-26-ஆத்ம க்ருதே

தன்னைத் தானே படைத்துக் கொண்டதாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே
தைத்ரியம் –
ஸோ காமயத பஹூஸ்யாம் -என்றும்
ததாத்மானம் ஸ்வயமக்ருத-என்றும் கூறப்பட்டது
உலகில் உள்ளவற்றை தனது உடலாகக் கொண்டு-அவற்றை படைக்கும் கர்த்தாவாகவும்
தன்னால் படைக்கப் பட்ட தானே உருவாக்கப் பொருளாகவும் ப்ரஹ்மம் உள்ளது
இத்தாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே -என்னலாம்-

ஆத்ம க்ருதே–தன்னையே தானே மாற்றிக் கொள்கிறான் -ஸ்ருஷ்டும் இச்சா -முமுஷு இச்சை போலவே –
தாதுவுக்கு அநேக விருத்திகள் -பஞ்ச விருத்தி சமஸ்க்ருதம் –
கர்த்தா -கர்மம் -ராமன் பழத்தை சாப்பிடுகிறான் -கிரியா பதம் -கர்த்ரு பதம்-பாணினி விளக்கம் –
ஆத்மாநாம் ஸ்வயம் க்ருத -ஒரே பதம் கர்த்தாவுக்கும் –
தன்னைத் தான் பரிணாமம் உண்டு பண்ணும் படிப் பண்ணிக் கொண்டது –
தனக்காகவே தன்னுள்ளே -பண்ணிக் கொண்டதே -புரிவது ஞானிகளுக்கு மட்டும் –
விலக்ஷணம் -தானே த்ரிவித காரணம் மட்டும் அல்ல காரியமும் தானே –

————————————————————————————

1-4-27-பரிணாமாத்–

பரிணாமத்தைக் கூறுவதால் ப்ரஹ்மம் குறையற்றது
ப்ருஹத் உபநிஷத்தில் –
தத் ஹ இதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் தத் நாம ரூபாப்யாம் வ்யாக்ரியத
ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் –ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -எப்பொழுதும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ளது
தோஷங்கள் தட்டாது-

பரிணாம வாதம் -transformation- பால் தயிராக மாறுவது –ஆதஞ்சனம்-காய்ச்சி -உறை குத்தி –த்ருஷ்டாந்தம் –
நாம ரூப விபாகம் –
உபாதான காரண வஸ்து தானே பரிணாமம் அடையும் –
அவாப்த ஸமஸ்த காமன் -லீலா கார்யம் -சங்கல்பம் -நிரங்குச ஐஸ்வர்யம் -தோஷ ரஹிதம் –
பரிணாமம் என்றாலே தோஷ பூயிஷ்டம் -புத்தர் வாதம் -பால் தயிர் -கெட்ட வாசனை நாள் செல்ல செல்ல –
தோஷத்துக்கு ஆஸ்பதம் ஆகும் -அநித்யமாகும் -துஷ்டமாகும் -தர்மம் மாறி வஸ்து விகாரம் –

அகிலஹேய ப்ரத்ய நீகம் -கல்யாணை குண ஏக -உபய லிங்கம் -தோஷம் தட்டாத அமலன் –
ஸூவ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் -சர்வஞ்ஞன் சத்ய சங்கல்பம் அவாப்த ஸமஸ்த காமன் அனவதிக அதிசய ஆனந்த மயன்
சரீர பூத பிரபஞ்சம் –தமஸ்-மூலமாக வைத்து பரிணாமம் -black-hole-இந்த தமஸ் -பூர்வவத் -ஸ்ருஷ்ட்டி -ஆத்மாநம் பரிணாமம்

வைசேஷிகம் நியாயம்–இவை இரண்டும் தர்க்க சாஸ்திரம்
சாங்க்யம் யோகம் -இவை இரண்டும்
பூர்வ உத்தர மீமாம்சிகர் -இவை இரண்டும் ஆஸ்திக புற மதங்கள்
அதாதோ ப்ரஹ்ம ஞிஞ்ஞாச்சா –ஈஸ்வர-ஆத்ம பகவத் நாராயண சப்தம் இல்லாமல் ப்ரஹ்ம சப்தம் –
அமர நிர்ஜரா தேவர் பர்யாய சப்தங்கள் –

புருஷ -பூர்ஷ-சேத்- சரீரத்துக்குள் அந்தராத்மா -ப்ரஹ்மம் என்றவாறு -புருஷோத்தம -லௌகிக புருஷர்களின் வியாவிருத்தம்
புருஷோத்தம உத்தமன் -ஸ்ரீ மத் பாகவதம்-
பும்ஸத்வம் அவன் ஒருவனுக்கே -ஜீவாத்மா அனைவரும் சேஷ புத்தர் ஸ்த்ரீத்வம் -மணி வல்லிப் பேச்சு வந்தேறி இல்லை –
ஆத்மா ஞானமயம் என்பதையே கொண்டு நியாய சாஸ்திரம் த்விதம் ஜீவாத்மா பரமாத்மா -நம்மது தத்வ த்ரய வாதம் –
சாங்க்யம் யோகம் வேத பாஞ்சராத்ரம் பாசுபதம் ஐந்தும் ஆத்ம பிரமாணங்கள்
சில அம்சங்களே க்ராஹ்யம் இல்லை
அனுக்தம்-யுக்தம் -சிலவும் உண்டே இவற்றில் –
பேதம் ஆமுக்தே ரேவ பாஞ்சராத்ரம் சொல்லும் -ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் முத்தி அடையும் வரையில் தான் பேதம் –
முக்த தசையில் பேதம் போகும் – பேத ஹேது இல்லாததால்
பர்வத பரமாணு வாசி பிரகிருதி ஸ்வரூபம் ஜீவ ஸ்வரூபம் பரமாத்மா ஸ்வரூபம் -போக்தா போக்யம் பிரேரிதா-
பரிணாம விவரணம் -சிருஷ்ட்டி பிரகிரியை விவரிக்கிறார் ஸ்ரீ பாஷ்யத்தில் -கர்ம நிபந்தம் சரீரம் –
ஷட்பாவ விகாரங்கள் -சரீரத்துக்கு தான்-அநித்தியம் –நிரங்குச ஐஸ்வர்யம் –
ப்ரஹ்மத்துக்கு-இந்த வ்யாப்த கத தோஷம் விகாரம் தட்டாதே

அவயவி அவயவ பாவ விசாரங்கள்
பரிணாம வாதம் -கார்ய காரண பாவம் -ஆரம்ப வாதம் தார்க்கிகள் -சங்காத வாதம் புத்தர்கள் -கேவல யுக்திகளை வைத்து –
ஸத்கார்ய வாதம் -அஸத்கார்ய வாதம் –
ஸ்ருஷ்ட்டி -ஸ்திதி -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் – ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம்-
ஸூஷ்மத்வம்- நாம ரூப விபாக அனர்ஹத்வம் -ரூபம் -ஸ்வரூபம் -form-நாமம் –
எழுத்துக்களின் சேர்க்கை -ஆனுபூர்வி -முயல் கொம்பு இல்லை நாஸ்தி -முயல் அறிவோம் -கொம்பு அறிவோம் –
முயல் கொம்பு இல்லையே -முயலுக்கு கொம்பு இல்லை என்பதே முயல் கொம்பு இல்லை என்பது –
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -undivided–whole-முன்பு ப்ரஹ்மம்
இவை அவனில் அடங்கி உள்ளவை – விபாகம் இல்லை -சர்வஞ்ஞனான ப்ரஹ்மமும் அறியாதபடி —
அஞ்ஞானம் இல்லையே முயல் கொம்பு இல்லை என்று அறிவதே ஞானம் –
தஸ்மாத் விபாக அனர்ஹாத் ஏகி பூதம் அத்யந்த ஸூஷ்மம் –

தைத்ரியம் பர ப்ரஹ்மம் தபஸ்ஸை பண்ணி -ஸ்ருஷ்ட்வா அநு பிரவேசித்து –
தபஸ் சப்தம் ஞானம் வருவதற்கு இல்லையே சர்வஞ்ஞனனுக்கு -யதா பூர்வம் ஸ்ருஷ்டிக்க -நாநா ரூபம் –
நரத்வம் ஸிம்ஹத்வம் கோத்வம் ஜாதி -நிறைய தர்மங்கள் இருப்பதால் -நரசிம்ஹத்வம் ஜாதியா -தர்க்க சாஸ்திரம் கேள்வி –
ஜாதி தான் -யுகம் தோறும்-கல்பங்கள் தோறும் உண்டே –
அசத் கல்பம் -லீல உபகரணங்கள் -சரீரதயா–தேவாதி -தத் யச்சா பவதி -யதா பூத -ஆத்மபூத -தயாவான் –
ருதம் சத்யம் – அசத்தியம் அருதம் -சேதன அசேதனங்கள் -ப்ரஹ்மா மூலம் வந்தவற்றுக்கு எப்படி தோஷம் -கேள்விகள் வருமே –
சப்த மூலத்வாத் -சுருதிகள் படியே -எதற்க்காக ஸ்ருஷ்ட்டி -லோகவத் லீலாவத்-அவாப்த ஸமஸ்த காமனுக்கு
என்ன பிரயோஜனம் இருக்க முடியும் இதனால் -ஸ்வயம் பிரயோஜனம் வியாபாரம் லீலா -க்ரீடைக்காகவே -குழந்தை விளையாட்டு போலே –

அநு பிரவேசம் ஏழு வித பிரவேசம் -தேவதத்தன் கிருஹத்துக்குள் போவது போல இல்லை –
குடத்துக்குள் ஜலம் போவது போலே -இப்படி விசாரம் சங்கரர் பாஷ்யத்தில் -அந்தர்யாமித்வம் -subtle-issue-
ஏகத்துவம் நாநாத்வம்-அறிந்து கொள்வது துர்லபம் -தர்க்க பாதம் மேலே பல கேள்விகளும் பதிலும் உண்டே –
தோஷ பூயமானவை எவ்வாறு பரமாத்மா இடம் வந்தவற்றுக்கு வரும்
இங்கும் ஸ்ரீ பாஷ்யத்தில் கொஞ்சம் காட்டி அருளுகிறார் –

———————————————————————————-

1-4-28-யோநிஸ் ஸ கீயதே ஹி-

ப்ரஹ்மத்தை யோநியாகவும் கூறுவதாலும் அவனே உபாதான காரணமாவான்
முண்டக உபநிஷத் –
யத் பூத யோநிம் பரிபஸ்யந்தி தீரா -ஞானம் உடையவர்கள் பூதங்களின் யோனியாக காண்கின்றார்களோ -என்றும்
கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் -படைப்பவனும் புருஷனும் யோநியும் ஆக உள்ள ப்ரஹ்மம் -என்றும்
யதோர்ணநாபி ஸ்ருஜதே கிருஷ்ண தேச
யதா ப்ருதிவ்யாமொஷதய சம்பவந்தி
யதா சத புருஷாத் கேசலோ மாநி ததா ஷராத் சம்பவதீஹ விச்வம் -என்று
சிலந்தி நூலை தன்னுள்ளே இழுத்துக் கொள்வது போலேயும் -பயிர்கள் பூமியில் இருந்து தோன்றுவது போலேயும் –
பரம் பொருளின் இடத்தில் இருந்து உலகம் தோன்றுகிறது-

கர்த்தா என்கிற பதம் நிமித்த காரணத்தையும்
யோநி என்கிற பதம் உபாதான காரணத்தையும் குறிக்கும்-

கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம்-அவனே கர்த்தா -யோநி -புருஷன் -ப்ரஹ்மாதிகளுக்கும் காரணம்
யதோர்ணநாபி ஸ்ருஜதே கிருஷ்ண தேச-spaider-த்ருஷ்டாந்தம் –
யதா ப்ருதிவ்யாமொஷதய சம்பவந்தி–பூமியில் இருந்து ஓஷதிகள் வருமா போலே
சாந்தோக்யம் -குரு சிஷ்ய சம்வாதம் -ஆலமரம் -வித்து -உடைத்து -பார்த்து -பெரிய ஆலமரம் -பீஜம் -root–cause-
பகவத் சங்கல்பத்தால் தானே -sprout-வரும் -திவ்யமான விஷயம் இதிலே பார்க்கலாம்
அக்ஷரம் -ப்ரஹ்மம் -தானே யோநி -கர்த்தா –
பூத யோநி -எல்லாவற்றுக்கும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே –
நிமித்த காரணம் அனைவரும் விவாதம் இல்லாமல் ஒத்துக் கொண்டார்களே

பிரக்ருத் யதிகரணம் சம்பூர்ணம்

——————————————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— -1-4–6-சமந்வய அத்யாயம்- வாக்ய அந்வயாதி கரணம்-ஸூத்ரங்கள் -4 ஸூத்ரங்கள்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் /
ஐந்தாவது -ஜகத்வாசித்வாதி கரணம் -3-ஸூத்ரங்கள்-/
ஆறாவது – வாக்ய அந்வயாதி கரணம்-ஸூத்ரங்கள் -4 ஸூத்ரங்கள்/
ஏழாவது பிரக்ருத்யதிகரணம்-6 ஸூத்ரங்கள் /
எட்டாவது -சர்வ வியாக்யான அதிகரணம்–1-ஸூத்ரம்-ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

———-

ஆறாவது வாக்ய அந்வயாதி கரணம்-ஸூத்ரங்கள் -4 ஸூத்ரங்கள்

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -காணப்படுபவன் ப்ரஹ்மமே –

1-4-19-வாக்ய அந்வயாத்

ப்ருஹத் ஆரண்யாகாவில்-6-5-
நவா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவதி ஆத்ம நஸ்து காமாய பதி ப்ரியோ பவதி -என்றும்
ஆத்மா வரே அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய -மைத்ரேயி ஆத்ம நி கல்வரே த்ருஷ்டே
ஸ்ருதே மதே விஞ்ஜாதே இதம் சர்வம் விதிதம் -என்றும்
அனைத்தும் அறிந்தவை ஆகும் –
இதம் சர்வம் யதயமாத்மா -இந்த ஆத்மாவே அனைத்தும் என்பதால் பரமாத்மா என்று உணர்ந்தால் மட்டுமே பொருந்தும்-

வேதாந்த சாரமான அதிகரணம் இது
மைத்ரேய ப்ராஹ்மணம் -நித்ய வாழ்வுக்கு உபயோகமான பலவும் உண்டே –
அஸ்வமேதம் கர்மம் பற்றி இருப்பதால் -மூன்றாவது அத்தியாயத்தை முதல் அத்யாயம் சேர்த்து அத்வைதி –
ஆகவே இந்த விஷய வாக்கியம் அவர்களுக்கு நான்காவது அத்யாயம் -நமக்கு ஆறாவது அத்யாயம் – –
யாஜ்ஜ்வக்யர் -காத்யாயினி மைத்ரேயி இருவரும் பத்தினிகள் -செல்வம் பிரித்துக் கொடுத்து சன்யாசம் போக யத்னிக்க –
க்ரஹஸ்த ஆஸ்ரமம் தாண்டிப் போக -அந்த கர்மங்களை முடித்து -வான ப்ரஸ்ன ஆஸ்ரம கர்மங்களையும் முடித்து சன்யாசம்
ரிஷிகள் யாருமே சந்யாசிகள் இல்லை -தப்பாக லௌகிக வேஷம் போடுகிறார்கள் –
மைத்ரேயி -அமிர்தத்வம் -மோக்ஷம் கிடைக்குமா -யதைவ உபகரணம் -போக சாதனங்கள் -கொண்டு அத்தைப் பெற முடியாதே –
இந்த ஐஸ்வர்யம் கொண்டு நான் என்ன பண்ணுவேன் -அமிர்தத்வம் பெறுவதை சொல்லும்
பிரியையாய் இருப்பதால் அனுகம்பயா-வா -உட்கார் -சொல்லி உபதேசம் -வேறே விஷயம் இல்லாமல் கவனமாக கேள்
அடுத்தது விஷய வாக்கியம்
நவா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவதி ஆத்ம நஸ்து காமாய பதி ப்ரியோ பவதி-இப்படி ஒவ் ஒன்றுக்கும் சொல்லி
பத்து விஷயங்களை சொல்லி
ஆத்மா வரே அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய -மைத்ரேயி ஆத்ம நி கல்வரே த்ருஷ்டே
ஸ்ருதே மதே விஞ்ஜாதே இதம் சர்வம் விதிதம்
ஆத்மா என்று இதில் -சாஷாத்காரம் -அடைய ஸ்வரூபம் பற்றி கேட்டு மனனம் பண்ணி இடைவிடாத த்யானம் -அநு சிந்தனம் பண்ணி

பதி பத்னி இச்சாதீனம் இல்லை -ஆத்ம நஸ்து காமாய–ஆத்மாவுக்கு இஷ்டம் சங்கல்பம் -அடியாகவே –
இதே போலவே -புத்திரர் விஷயத்திலும்-ஐஸ்வர்யம் விஷயத்திலும் -irresponsiblity -ப்ரஹ்மண தேவதா விஷயத்திலும் —
புகழ்ச்சியிலும் -க்யாதி-fame- லாப- பூஜா விஷயத்திலும் -லோகா ப்ரீதி விஷயத்திலும் –
இப்படி ஒன்றுக்கு மேல் ஒன்றாக சொல்லிக் கொண்டு போய்
அதி தைவம் அதி பூதம் -சர்வமும் இப்படியே –
ஆத்மாவின் சங்கல்பம் -அத்தை சாஷாத்காரம் பண்ண-சொல்லிக் கொடுத்து
ஆத்ம ஞானம் -சுருதி வாக்யங்களைக் கேட்டு ஆலோசனை பண்ணி த்யானம் -விவித ஞானம் விஞ்ஞானம் –
மேலும் –இதம் சர்வம் யதயமாத்மா-வரை -சர்வம் ப்ரஹ்மம் -ஞானம் வருமே இந்த ஸ்வரங்களைக் கேட்டாலேயே-
ஆத்ம தர்சனமே கிட்டும் –
இத்தை அறிந்தவன் வேறே எங்கும் போக மாட்டான் -அறியாதவன் எவ்வளவு வேறே அறிந்தாலும் அறியாதவன் ஆகிறான்
கண்டவன் வேறே எதையும் காண மாட்டான்
கேட்டவன் வேறே எதையும் கேட்க மாட்டான்
த்வைதம் -இருவர் இருந்தால் தான் ஒருவர் ஒருவரை பார்க்கலாம் அறியலாம்
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ பாஷ்ய வியாக்கியானங்களைக் கொண்டு ஸ்ரீ ராகவாச்சார்யார் தொகுத்து -35-வருஷங்களுக்கு
முன்பு அருளிச் செய்துள்ளார் –
அனைத்தும் பகவத் சங்கல்ப அதீனமே என்றதாயிற்று –

தர்சனத்தால் -ஸ்ரவணத்தால் மனனத்தால் விஞ்ஞானம் –

சர்வேஸ்வரன் சர்வஞ்ஞன் ஸத்யஸங்கல்பனையே குறிக்கும் –
பூர்வ பஷி -தந்த்ர சித்த புருஷன் -பிரகிருதி -இரண்டையும் -கபில நிரீஸ்வர வாதம் –
mind-matter-/ ஞான யோக நிஷ்டையால் பிரகிருதி புருஷ விபாகம் அறிந்து –கர்த்ருத்வம் போக்த்ருத்வம் விலகி
பந்தம் நீங்கி மோக்ஷம் -சாங்க்ய காரிகை -realaisation-ஒன்றே வேணும் என்பர்
ஜீவன் முக்தன் -இரண்டும் ஒன்றாக முடியாதே -மலடியின் புத்ரன் போலே –
சரீரம் இருந்தால் தான் ஜீவன் -இல்லை என்றால் முக்தன்
inertia-ஞானம் வந்த பின்பும் தொடரலாம் -ப்ரவ்ருத்தி சம்பந்தம் அறுத்து -முக்தன் –
முதலிலும் நடுவிலும் இறுதியிலும் ஜீவாத்மாவே என்பர் பூர்வ பஷி –
ஜீவாத்மா தான் கர்ம வஸ்யன்-
விஞ்ஞான கன–ஞானமயன் -ஆத்மாவையே குறிக்கும் -crystal-form–of-விஞ்ஞானம் –
பூதம் வேறே பவ்திகம் வேறே பூத ஸூஷ்மம் -பூதங்களால் ஆக்கப்பட்டவை இவை –ஸூஷ்ம பூதம் அறிவது ஸ்ரமம்
சித்ர குப்தன் -குப்த சித்திரம் -record-of-karmas-
பிருத்வி -பல ஆகாரங்கள் -நீர் -ஆகாரம் அற்று பாத்திரம் வடிவில் -அதுக்கு மேலே தேஜஸ் –தணலால் தேஜஸ்ஸின் ஆதாரம் –
வாயு ஆகாசம் இவற்றை விட ஸூஷ்மம்
பஞ்ச பூதங்களையே அறியாமல் -இருக்க ஆத்மஞானம் பெறுவது ஸ்ரமம் தானே
தந்த்ர சித்த புருஷனே சொல்லப்படுகிறது இங்கே பூர்வ பக்ஷம் –

ஆனால் அமிருதத்துக்கு காரணம் -மோக்ஷம் எதனால் -ஜீவாத்மஞானம் ப்ரஹ்ம ஞானத்துக்கு அங்கம் தானே –
ப்ரஹ்மம் அறிந்து தானே மோக்ஷம் –
மைத்ரேயா கேட்டது முதலில் மோக்ஷம் எதனால் -ஆகவே இது ஒவ்வாது

இதுக்கு பூர்வ பஷி -வாதம் -பிரகிருதி சம்பந்தம் அற்றவன் -சுத்தனான ஜீவாத்ம ஞானம் பெற்றதும் -ஸ்வரூபம் அறிந்ததும் –
முக்தனாக யோக்யதை அடைகிறான் என்கிறது இது என்பர் –
ஜகத்துக்கு ஜீவ அதிஷ்டானமான பிரகிருதி தான் உபாதானம் -என்பர் பூர்வ பஷி-புருஷன் என்றது ஜீவனையே சொல்லும் –

நிதித்யாஸ தவ்ய –try-to-meditate-இதுக்கு மட்டும் -யத்னிக்கவே வேண்டியது -கீழே கேட்கவும் மனனம் பண்ணவும் இப்படி இல்லையே
ஞானம் வேறே விஞ்ஞானம் வேறே -சாருவாகர்-ஆத்மா பிரக்ருதியில் இருந்து வந்து அதிலே லயிக்கிறான் -என்பர் –

வாக்ய அன்வயம் -ஆத்மா -பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் -விசேஷணங்கள் இவனுக்கே பொருந்தும் -அப்பொழுது தான் எல்லாம் சமஞ்சஸா பவதி –
சர்வேஸ்வரன் -அம்ருதத்வம் -ப்ராப்ய உபாயம் -பரமாத்மா ஏவ -ஸூவ வியதிரிக்தங்களில் அநாதாரம் காட்டி மைத்ரேயீ-
தர்சனம் -சாஷாத்காரம் -ப்ரத்யக்ஷம் -பர்யாய சப்தங்கள் –
ஸ்வேதர- தமேவ அதி மிருத்யு -தாண்டி -தமேவ வித்வான் அம்ருதம் பவதி -புருஷ ஸூக்தம்
பரம புருஷ விபூதி -ஜீவாத்ம யாதாம்ய ஞானமும் இதுக்கு அங்கமாக வேண்டும் –
அர்த்த பஞ்சக ஞானமும் வேண்டுமே -அபவர்க்கம் மோக்ஷ சாதனமான பரம புருஷன் அறிய இவை வேண்டுமே

சிந்தவ் பிந்து –drop -in–ocean-காஞ்சி ஸ்வாமி காசியில் உபன்யாசம் —
பிந்தவ் சிந்து -பிரணவத்துக்குள் கடல் -மஹா உபாத்தியாயர் விருத்தி கொடுத்தார்கள்
அநந்தா வேதா -இதற்குள்ளே அடங்கும் –
பர ப்ரஹ்மத்துடைய -உச்வாசம் நிச்வாஸம் -வேதம் -திவ்ய மங்கள விக்ரகத்தில் இருந்து ஆவிர்பாவம்
ஹிரண்ய மயம் கேசம் –சர்வ ஏவ ஸ்வர்ணயம் -கமநீய திவ்ய மங்கள விக்ரஹம்
இந்த விசேஷணங்கள் பரமாத்மாவுக்கே அன்வயம் -ஜகத் வியாபாரங்கள் இவனுக்கே அன்வயம்
ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் இவனுக்கே பொருந்தும் -ஜீவாத்மா என்றால் பொருந்தாது –
பகவத் சங்கல்பமே அனைத்துக்கும் காரணம் -boss-is-always-right–கர்ம பரவசன் அல்லவே –
சர்வ நிரங்குச ஸூதந்த்ரன் -புண்ய பாபங்களும் அவனது ப்ரீதியும் அப்ரீதியுமே –
சர்வ நியாந்தா -ஒவ் ஒருவருக்குள்ளும் உள்ளே புகுந்து நியமிக்கிறார் -சர்வ ஸ்வாமியாக இருந்தாலும் –
அனந்த கோடி ஜீவாத்மாக்கள் இருந்தாலும் ஒவ் ஒருவருக்கும் உள்ளே இருந்து நியமித்து தனது நிரதிசய ஆனந்தம் கொடுக்கிறான் –
கர்ம அனுகுணமாக பிரதி நியதி தேச கால ஸ்வரூப பரிமாணம் ஒவ் ஒருவருக்கும் அளிக்கிறான் –
வித்யை கர்மம் பூர்வ பிரகிரியை அடிப்படையாக பகவத் நியமனம் —

பதி பத்னி புத்ர ஐஸ்வர்யாதிகள் பல விஷயங்களை கீழே சொல்லி இவை எவ்வாறு பரமாத்மாவுக்கு பொருந்தும்
என்பதை அடுத்த ஸூத்ரம் விளக்கும் ஆப்த வசனத்தால் –
ஜீவ சப்தங்கள் பரமாத்மாவையே சொல்லும் என்பதை மூன்று ரிஷிகளின் ஆப்த வசனம் காட்டும் –

————————————————————————————-

1-4-20-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-

ஆஸ்மரத்யர் என்பவர் இதம் சர்வம் விதிதம் -ஒன்றை அறிந்தால் அதனைச் சார்ந்த அனைத்தையும் அறிந்தது போலே
ஆகும் என்பதால் பரமாத்மாவே என்கிறார்

ஜீவ சப்தம் -பிராண தாரணம் -ஜீவித்து இருப்பது என்றாலே பிராணனை தரித்து இருப்பவன் தானே
தாது பிரத்யயம் கொண்டே அர்த்தங்கள் –
கரோதி காரயதி-செய்பவன் செய்விப்பவன் -பிராணன் தரிக்கப் பண்ணும் என்று கொண்டாலே பரமாத்மாவையே சொல்லும் –
ஆத்ம சப்தம் பரமாத்மாவேயையே முக்கிய விருத்தமாக அர்த்தமாக கொள்ளும்
ஸ்வாமித்வம் -சேஷித்வம் ஆத்மத்வம்-அவனுக்கு -தாஸஸத்வம் சேஷத்வ சரீரத்வம் ஜீவனுக்கு –
பகவத் சங்கல்பம் இல்லாமல் ஒன்றுமே இல்லையே
ஜீவ உத்பத்தியும் லயமும் அவன் இடமே
ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் முன்பே பல இடங்களில் பார்த்தோம் –
உபாதானம் பரமாத்மாவே அனைத்தைக்கும் -ஆகவே உத்பத்திக்கும் அவனே காரணம் -உபாதான உபாதேய பாவம் –
ஒரே சப்தத்தால் இரண்டையும் சொல்லலாமே -இதம் ஜகத் ப்ரஹ்மம் -ஜகத்துக்கும் ப்ரஹ்மமும் இதே சம்பந்தம்

பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய–பரமாத்மாவின் இடம் இருந்து உத்பத்தியே ஜீவாத்மா -என்றவாறு
காரண கார்ய சம்பந்தம் -உண்டே -ஏகத்வம் ஸ்ருஷ்டிக்கு முன்னால்-உத்பத்தியும் லயமும் -ஸ்பஷ்டமாக சுருதிகள் சொல்லுமே –
ஆகவே ஜீவ சப்தத்தால் பரமாத்மாவையே குறிக்கும் –
ஆஸ்மரத்ய-ரிஷி -நித்யர்களுக்குள் நித்யர் பரமாத்மா -ஜீவர்களும் நித்யர் -விநாசமே இல்லையே -உத்பத்தி எப்படி –
நித்யோ நித்யானாம் சேதன அசேதனாம் -ஸ்ரீ கீதை –

———————————————————————————–

1-4-21-உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாத் இதி ஔடுலொமி

ந ஜாயதே ம்ரியதே -கட உபநிஷத் -கர்ம வினைகளால் தோன்றி மறைகின்றான் –
தனது உருவம் மட்டும் மாறும் மண் குடம் போலே அன்றி ப்ரஹ்மத்துடன் ஒன்றி விடுகிறான்
இந்த ஔடுலொமி கருத்து படியே -சாந்தோக்யம் –

ஏஷ சம்ப்ரசாத அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரஞ்ஜ்யோதி ரூப
சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்றும்
முண்டக உபநிஷத்தில்
யதா நத்ய ச்யந்தமாநா சமுத்ரே அஸ்தம் கச்சந்தி நாம ரூபே விகாயா
ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்று
ஜீவன் முக்தி அடையும் பொழுது ப்ரஹ்மமாகவே மாறுகின்றான் என்பதை உணர்த்தும்-

ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி –
ஆமுக்த மோக்ஷம் அடையும் -வரையில் தான் பேதம் -முக்த அவஸ்தையில் பேதம் இல்லை –
பேத ஹேது இல்லையே -பாஞ்சராத்ரம் –
நதிகள் கடலில் கலந்த பின்பு வேறு பாடு இல்லையே -நாம ரூபங்கள் இழந்து லயம்
எனவே ஜீவ சப்தங்கள் பரமாத்மாவையே குறிக்கும் -பானை மண் -போலே கார்ய காரண பாவத்தை சொன்னபடி –

—————————————————————————————

1-4-22-அவஸ்திதே–இதி காசக்ருத்சன

ஜீவன் ப்ரஹ்மமாக இல்லாதது இயற்கையா -அப்படியானால் மோட்ஷம் அடையும் பொழுது ஜீவ ஸ்வரூபம் அழிய வேண்டும்
ஜீவன் தன் ஸ்வரூபம் அழிய முயலாதே
ஏதோ ஒரு காரணத்தினால் ப்ரஹ்மமாக இல்லை என்று கொண்டால் முன்பு ப்ரஹ்மமாக இருந்து இருக்க வேண்டும்
மோஷத்தின் பொழுது ப்ரஹ்மம் ஆகிறான் என்றது தவறாகும் –பரம் பொருள் ஜீவன் உள்ளேயே இருப்பதாக உணர்த்தவே
ஜீவனைக் குறித்த பதங்கள் கூறப்பட்டன
ப்ருஹத் ஆரண்யாகாவில்-
ய ஆத்மா நி திஷ்டன் யச்யாத்மா சரீரம் -போன்ற பல வாக்யங்கள் உண்டே –
இதையே காசக்ருத்ச்னர் எடுத்துக் காட்டுகிறார்-

அஜா நித்ய ஸாஸ்வதா புராணா-சப்தங்கள் -ஜகத் ஸ்ருஷ்டியே ஜீவாத்மாவின் கர்ம பலன்களை அனுபவிக்கவே –
ஆகவே முக்தன் ஐக்கியம் என்றது ஒன்றாக என்பது இல்லை -சாம்யா பத்தியைச் சொன்னபடி
அஹம்- ஜீவ நாசம் என்றால் முமுஷு மோக்ஷம் ஆசைப்படுவார் உண்டோ -கடம் உடைந்து மண் ஆவதே மோக்ஷம் என்றால்
அது அபுருஷார்த்தம் ஆகுமே -இத்தை ஆசைப்பட மாட்டார்களே –
பரஞ்சோதி -ஸ்வேன ரூபேண -ஸ்வரூப ஆவிர்பாவம்
வித்வான் -ப்ரஹ்ம ஞானம் அடைந்தவன் -உதக்ரமணம் -பரமாத்மா பாவம் அடைந்து -ஜீவ சப்தமே இல்லாமல் இருக்குமே –
ஆத்ம ஞானம் இல்லாமல் விஷ்ணோர் லோகம் சம்பு லோகம் சத்ய லோகம் தாண்டினேன் என்றாலும் பயன் இல்லையே -சங்கரர்
ஜீவ பர யாதாம்யா ஞானம் பூர்வகமாகவே மோக்ஷம் –
தேக ஆத்ம பிரமம் போக வேண்டும் என்றும் சொல்லி -நாம் அவன் சரீரம் என்று உணர வேண்டும் –
ஜீவாத்மா அகண்டம்–ரூபம் விஞ்ஞானம் வேதனம் சம்ஸ்காரம் சம்பந்தம் –
ஆகவே நித்யம் என்பதையும் உத்பத்தி என்பதையும் சமன்வயப் படுத்தி உணர வேண்டும் –
சப்தத்தால் வரும் உபதேசம் கொண்டு உணர முடியாது –
சப்தம் காதில் சொல்லி பத்து பேர் கடந்து மீண்டும் நம்மிடம் வரும் பொழுது மாறுதல்களை உணர்வோம்
குரு கடாக்ஷம் -பிரதானம் -ஆத்மாவுக்கும் ஆத்மாவுக்கும் நேராக சம்பந்தம் -பிரதானம் –
யஸ்யா மதம் தஸ்ய மதம் -நேராக அனுபவமே வேண்டியது -தெரியாது என்று சொன்னாலே தெரிந்தவர் ஆகிறோம் –

தம்முடைய சித்தாந்தம் இந்த முனிவருடைய ஆப்த வசனமாக இதில் –
பலாதிகரணம்–கர்மங்கள் பலன்களைக் கொடுக்கும் பூர்வ பஷி -ஜைமினி -பாதராயணர் அபிப்ராயம் அது இல்லை –
என்று சில இடங்களிலும் உண்டே
அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ப்ரச்னம் -ப்ருஹதாரண்யம் உபநிஷத் –
யஸ்ய ஆத்மா சரீரம் -22-தடவை -பிருத்வி -ஜலம் தேஜஸ் ஆகாசம் -கடைசியில் ஆத்மா –ஸ்பஷ்டமாக சரீர சரீரி பாவத்தை காட்டும்
பரஸ்பர சா பேஷா சப்தங்கள் -இவை -பிதா பித்ரு போல்வன -சம்பந்தம் -விசிஷ்ட புத்தி நியாமகத்வம் -யானை யானைப்பாகன் –
Husain Sahar separate unite Secundrabad Hydraabad –
கடக சுருதி -இது கொண்டே சமன்வயம் –
சர்வே சப்தா பரமாத்மா வாசா -குண கிரியா வாஸ்ய சப்தங்கள் இல்லை -சங்கோசம் பண்ணிக் கொண்டு
த்ரவ்ய வாஸ்ய சப்தங்கள் எல்லாம் என்று கொள்ள வேண்டும்

ஒன்றாக ஆகிறது என்பது தப்பு என்று முன் சொன்ன ரிஷி வாக்ய குற்றங்களை காட்டி -இதில் -இவர் வசனம் -விகல்ப்ய தூஷணம்
ஸ்வா பாவிகம்-ப்ரஹ்மத்துக்கே –திரோதானம் நீக்கி ஸ்வரூப ஆவிர்பாவம் -முக்தர்களுக்கு –
பேதம் -ஸ்வ பாவ சித்தி -பாடம் குடம் -இரண்டுக்கும் -பேதம் ஸ்வா பாவிகம்-
குடத்து நீர் சொம்பு நீர் -இரண்டுக்கும் பேதம் உபாதி அடியாகவே -உபாதி போக்கவே ஐக்கியம் உண்டாகும்
உபாதி பாரமார்த்திகமா இல்லையா -விசாரம் -ஜலத்வத்துக்கு உபாதி அபாரமார்த்திகம் தானே –
ஸ்வா பாவிகமா -உபாதி அடியாகவா -பரமாத்மா ஜீவாத்மா பேதம்
ஸ்வரூப ப்ரயுக்தம் -இவற்றுக்கு -என்றுமே ஒன்றாகாதே –

உபாதி -பாரமார்த்திகமா இல்லையா -அடுத்த கேள்வி –real- un-real-
முன்பே ஒன்றாக இருந்தால் இப்பொழுது உபாதி நீங்கி மறுபடியும் எப்படி ஒன்றாக முடியும்
முக்தன் முமுஷு ஆக முடியாதே / ப்ரஹ்மம் உபாதி இரண்டுமே உள்ளது ஜீவாத்மா இல்லை -என்றதாகுமே –
எது வந்து ப்ரஹ்ம பாவம் அடைகிறது என்ற கேள்வியும் வருமே –
பரமாத்மாவே அவித்யை உபாதையால் ஜீவாத்மா ஆகிறது -பந்தம் மோக்ஷம் இரண்டும் ப்ரஹ்மத்துக்கே -ஒவ்வாதே –
சரீர சரீரி பாவத்தால் தானே அனைத்தையும் சமன்வயப்படுத்தலாம்

ஆத்மனி திஷ்டன் -ஆத்மன அந்தர -யம் ஆத்மா ந வேத -யஸ்ய ஆத்மா சரீரம் -ஆத்மாநாம் அந்தரோ யமையதி-நியமிக்கிறான்-
அந்தர்யாமியாக அமிர்தமாக இருக்கிறான்
ஜீவ சப்தம் பரமாத்மாவை குறிக்கலாம் அந்தர்யாமியாக இருப்பதால் –
ஸூத்ரகாரர் இந்த மதத்தை ஒத்துக் கொண்டுள்ளார் -பரஸ்ய ப்ரஹ்மணம்-
சோக மோகங்கள் பக்த ஜீவனுக்கு -ப்ரஹ்ம ஞானம் பெற்று -அவை நீங்கப் பெற்று ஸ்வரூப ஆவிர்பாவம் அடைகிறான் என்றவாறு

ஸங்க்ரஹம் பண்ணி இந்த அதிகரணம் நிகமிக்கிறார் ஸ்ரீ பாஷ்யகாரர்
பரமாத்மா உபாசனம் அமிருதத்வம்-மோக்ஷ உபாயம் –
உபாசன லக்ஷணம் -துந்துபி த்ருஷ்டாந்தம் -உபாசானம் த்யானம் –ப்ரத்யாஹாரம் இதுக்கு பூர்வகம் –
ஐந்து குணங்களை ஐந்து இந்த்ரியங்களால் க்ரஹிப்பது ஆஹாரம்
இவற்றில் இருந்து விலக்குவதே ப்ரத்யாஹாரம் -துந்துபி -drum-இந்திரியங்கள் விலகாமல் ப்ரஹ்மம் பற்றி
உபாசனம் பண்ண முடியாதே –

நிகில காரணம் -சகல விஷய ப்ரவ்ருத்தி மூல கரண க்ராமம்- இந்திரிய சமூகம் –
நாராயண சப்த உச்சாரணமே மோக்ஷ ஹேது -பகவத் வைபவம் சொல்ல வந்தது–
சாஷாத்காரம் அடைந்தாள் தான் வித்வான் -இந்திரியங்கள் கட்டுப்படுத்தாமல் -கிட்டாதே –
ப்ரத்யாஹாரம் பண்ணியே தாரணம் -அஷ்டாங்க யோகம் -தைலதாராவத் த்யானம் –
அபரிச்சின்ன ஞான ஆனந்த மயன்–பூத பரிணாம திரோதானம் போக்கி சாம்யா பத்தி -ஐக்கியம் இல்லை –
சத்யம் -சத்யதரம் -சத்யதமம் -சத்யத்திலும் தாரதம்யம் உண்டே
அதே போலே பரமாத்மாவும் ஜீவாத்மாவும் -அங்கும் வாசி உண்டே –
தனியாக பேச -இருவர் வேண்டும்
பார்க்க இரண்டு வஸ்து வேண்டுமே –
ஒன்றாகவே இருந்தால் சதா பஸ்யந்தி ஸூரயா-எப்படி –
ப்ரஹ்மாத்மகமான வஸ்து இல்லை என்றவாறு –
நேதி நேதி -ஜகத் மித்யை என்பது இல்லையே -ஸர்வஸ்ய ப்ராஹ்மாத்மகம் -என்றவாறு –

பரமாத்மா ஞானம் வந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமே -சர்வஞ்ஞனை அறிவது எப்படி –
சர்வேஸ்வரன் -ஸ்வ இதர விலக்ஷணன் -உபாசனம் மூலமே அறிய வேண்டும் –
அவனை த்யானிப்பதே அவனை அடைய வழி-ப்ரஹ்ம உபாசனமே உபாயம் – -ப்ரஹ்ம பிராப்தி பலம் –
அவனே ஜகத்காரணம் சொல்லும் வியாஜ்யத்திலே பலவும் சொல்லும் இந்த அதிகரணத்தில் –
உயிரான அதிகரணம் இது என்பர் –

வாக்ய அந்வயாதி கரணம் சம்பூர்ணம்

——————————————————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— -1-4-4–காரணத்வாதிகரணம்–2-ஸூத்ரங்கள்—- ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் —
இரண்டாம் அதிகரணம்-சமச அதிகரணம் –3-ஸூத்ரங்கள்—
மூன்றாம் அதிகரணம்—சங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணம் -3-ஸூத்ரங்கள்-
நான்காம் அதிகரணம்— காரணத்வாதிகரணம்–2-ஸூத்ரங்கள்- ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாசாரர்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

——————————–

நான்காம் அதிகரணம்— காரணத்வாதிகரணம்-2-ஸூத்ரங்கள்-

விஷயம்
வேதங்கள் அனைத்தும் ப்ரஹ்மம் ஒன்றையே ஜகத் காரணமாக கூறுகின்றன என்று
உரைக்க முடியும் என்பது நிரூபணம்

1-4-14-காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –

ஆகாசம் போன்றவற்றுக்குக் காரணமாக உள்ளது என்று கூறப்பட்டதையே மீண்டும் கூறுவதால் –
ஆகாயம் உட்பட அனைத்துக்கும் காரணமாக பர ப்ரஹ்மமே உள்ளது என்று கூறப்பட்டதால்
ப்ரஹ்மமே உலகின் காரணப் பொருள் –

பூர்வ பக்ஷம்
பிரதானமே அனைத்துக்கும் காரணம் என்று சொல்லும் சாங்க்யர்கள் இங்கு மீண்டும் ஒரு ஆஷேபம்
வேதாந்தங்களில் ஒரு வஸ்துவிடம் இருந்து மட்டுமே ஸ்ருஷ்ட்டி ஏற்படுவதாகக் கூறப்படுவது இல்லை –
ஆகவே ப்ரஹ்மம் மட்டுமே ஜகத் காரணம் என்று கூற இயலாது என்பர்

சாந்தோக்யம் -6-2-1-
சத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் –என்று தொடக்கத்தில் சத் என்பது மட்டுமே காணப்பட்டது என்பதால் –
சத் என்பதில் இருந்தே ஸ்ருஷ்ட்டி தொடங்கியது என்று கூறப்பட்டது –

தைத்ரிய உபநிஷத்தில் -2-7-1-
அசத் ஏவா இதம் அக்ர ஆஸீத் -என்று தொடக்கத்தில் இந்த அசத் மட்டுமே இருந்தது -என்பதால் –
அசத் என்பதில் இருந்தே ஸ்ருஷ்ட்டி தொடங்கியது என்று கூறப்பட்டது –

வேறு ஒரு இடத்தில் சாந்தோக்யம் -3-19-1-
அசத் ஏவ இதம் அக்ர ஆஸீத் தத் சத் ஆஸீத் தத் சம்பவத் -என்று
முதலில் அசத்தாக இருந்தது -பின்பு சத் என்று ஆனது -தொடர்ந்து உத்பத்தி அடைந்தது -என்று உள்ளது
ஆகவே வேதாந்தங்களில் ஸ்ருஷ்ட்டிக்கு காரணம் இன்னது என்று கூறப்படாதலால்
ஜகத்துக்கு ப்ரஹ்மமே காரணப் பொருள் என்று உறுதியாக கூற இயலாதே

மாறாக -ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் ஏதத் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -என்று ஜகத் அப்போது அவ்யாக்ருதமாக –
நாம ரூப வேறுபாடுகள் இல்லாமல் – இருந்தது -என்று தொடங்குவதன் மூலம்
ஜகத்து பிரளயத்தில் அவ்யாக்ருதத்தில் லயிப்பதாக கூறப்பட்டு
தொடர்ந்து 1-4-7-தந் நாம ரூபாப்யாம் ஏவ வியாக்ரியதே-என்பதன் மூலம்
அவ்யாக்ருதத்தில் இருந்தே ஜகத் ஸ்ருஷ்ட்டி யாகிறது என்று கூறப்பட்டது
இந்த அவ்யாக்ருதமே பிரதானம் -நித்யம் –அனைத்து வித பரிணாமங்களுக்கும் இதுவே இருப்பிடம்
இந்த காரணத்தால் தான் ஜகத் காரணமாக இதனைக் கூறும் இடங்களில் சத் என்றும் அசத் என்றும்
இரண்டு விதமாகக் கூறினாலும் முரண்பாடு ஏற்படவில்லை
ஆனால் ப்ரஹ்மம் என்றால் இரண்டு சொற்களையும் முரண்பாடு இல்லாமல் உபயோகிக்க இயலாது

இப்படியாக அவ்யாக்ருதம் என்பதே அனைத்துக்கும் காரணம் என்று நிச்சயித்த பின்பு -ஈஷணம்-அதாவது
பார்த்தல் -சிந்தித்தல் -பஹுஸ்யாம் -பலவாகக் கடவேன்-என்பது போல உபநிஷத்தில் கூறப்பட்ட
ஜகத் காரண வஸ்துவுக்கு இருக்கும் தன்மைகள் அவ்யாக்ருதமானத்துக்கு பொருந்தும்
பிரதானம் மிகப் பெரியதாகவும் பரந்தும் உள்ளதால் -ப்ரஹ்ம சப்தம் ஆத்ம சப்தம் பிரதானத்துக்கு பொருந்தும்
ஆகவே ஸ்ம்ருதிகள் மற்றும் நியாயம் ஆகியவற்றால் உணர்த்தப்படும் பிரதானமே ஜகத்காரணமாகும்
என்றே வேதாந்த வாக்கியங்களும் நிரூபிக்கின்றன என்பர்

ப்ரஹதாரண்யம் -தத் ஏதத் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத்-அவ்யக்தம் -சாங்க்யர்
பின்பு நாம ரூபங்களை அடைந்தது -name-form-பிரக்ருதியே காரணம் என்பர் பூர்வ பஷி-
இதனால் -ப்ரஹ்மமே காரணம் என்று சொல்ல முடியாது என்பர்
சாந்தோக்யம் -சத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்-சத் என்ற வாஸ்துவில் இருந்தும் என்றும்
அசத் ஏவ இதம் அக்ர ஆஸீத் தத் சத் ஆஸீத் தத் சம்பவத்-அசத்தில் இருந்தும் -என்றும் பல வாசிகள் –
வ்ருத்தமான சுருதி வாக்கியங்கள் உண்டே
சத் அசத் என்று பிரக்ருதிக்கே சொல்லலாம் என்பர்
ஈஷத் அதிகரணத்திலே சத் அசத் என்பது பரமாத்மாவையே குறிக்கும் -சொன்ன விஷயம் தானே என்ன
அது கௌணம்-simbolical- பர்வதம் நதி சாக்ஷி சொல்வது போலே -பிரகிருதி பார்த்தது என்கிறது என்பர்
ப்ரஹ்மம் ப்ருஹத்வாத் சொல்வது பிரக்ருதிக்கும் பொருந்தும்
ஆத்ம சப்தமும் இதுக்கு சொல்லலாம் என்பர்
ஸ்ருஷ்ட்டி கர்த்தாவுக்கு விவஸ்தை இல்லை -ப்ரஹ்மம் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது
பிரக்ருதியும் காரணம் -அவ்யாக்ருதம் -என்று இருப்பதால் பரிணாமம் அடையாமல் வியக்தமாக இருந்து பின்பு
பரிணாமம் அடைந்து நாம ரூபம் அடைந்து வியக்தம் -அவ்யக்தம் பிரதானம் ஏவ ஜகத் காரணம் என்பர்

சித்தாந்தம்
காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –
இதில் ச -என்பது -து –ஆனால் -என்ற பொருளில் வந்துள்ளது –
ஸர்வஞ்ஞத்வ – ஸர்வேஸ்வரத்வ -ஸத்ய ஸங்கல்பத்துவம் -அகில ஹேய பிரத்ய நீகத்வம்-இவை
அனைத்தும் பொருந்திய பர ப்ரஹ்மத்துக்கே ஜகத் காரணத்வம் நிச்சயமாக உரைக்க இயலும் –
ஆகாசாதிஷூ காரணத்வேன ச யதா வ்யபதிஷ்ட உக்தே -ஆகாசம் போன்றவற்றுக்கு ப்ரஹ்மமே காரணம்
என்று கூறப்படுவதால் ஆகும் –
ஸ்ருஷ்டிக்குத் தேவையான அனைத்தும் அறிந்த தன்மை போன்ற சிறப்புக்களுடன் ப்ரஹ்மம் உள்ளதாக
ஜந்மாத் யஸ்ய யத-1-1-2- என்பது போன்றவற்றால் முன்பே கூறப்பட்டது

மேலும் ப்ரஹ்மமே ஆகாசம் போன்றவற்றுக்கு காரணமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது
தைத்ரியம் -2-1-1-
தஸ்மாத் வா ஏதஸ்மாத் ஆத்மந ஆகாசஸ் ஸம்பூத–என்று அந்த ஆத்மா எனப்படும்
ப்ரஹ்மம் இடம் இருந்தே ஆகாசம் உண்டானது -என்றும்
சாந்தோக்யம் -6-2-3-
தத் தேஜஸ் அஸ்ருஜத–என்று அந்த தேஜஸ்ஸை உண்டாக்கியது என்று அனைத்தும் அறிந்த
ப்ரஹ்மமே காரணமாக உள்ளது என்றும்
தைத்ரியம் -2-1-1-
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-ஸூ சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –என்று
சத்யம் ஞானம் அநந்தம் என்பதாக உள்ள ப்ரஹ்மம் ஜூ -முக்தாத்மா -இப்படிப்பட்ட அனைத்தும் அறிந்த
ப்ரஹ்மத்துடன் கூடி இருந்து அனைத்து விருப்பங்களையும் அனுபவிக்கிறான் என்பதால் சர்வஞ்ஞன் என்று கூறப்பட்டு
தஸ்மாத் வா ஏ தஸ்மாத் ஆத்மான ஆகாச சம்பூத் -என்று அந்த ஆத்மாவான ப்ரஹ்மத்திடம் இருந்து தொடங்கி
மேலே உள்ளவை சொல்லிற்று
இது போன்று -சாந்தோக்யம் -6-2-3-
தத் ஐ ஷத பஹூச்யாம் –நான் பலவாக தோன்றுவேன் என்று சங்கல்பம் செய்தது-என்று கூறப்பட்ட சர்வஞ்ஞனான ப்ரஹ்மமே
சாந்தோக்யம் -6-2-3-
தத் தேஜஸ் அஸ்ருஜத –அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்டித்தது -என்பதில் கூறப்பட்டது –
இப்படியே அனைத்து ஸ்ருஷ்ட்டி குறித்த வாக்யங்களுக்குப் பொருள் கொண்டு
சத் அசத் அவ்யாக்ருதம் போன்றவையும் ப்ரஹ்மத்தை குறிக்கும் பதங்கள்
ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் நாம ரூபாப்யம் வ்யாக்ருத யதா -என்று இத்தையே குறிக்கும் -பர ப்ரஹ்மமே காரணம் என்றதாயிற்று

ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபிக்கப் பட்டது

கர்த்தா -கார்ய உபாதானம் -கடத்துக்கு குயவன் மண் -படத்துக்கு நெசவாளி நூல் –
கர்த்ருத்வம் -ஞானம் பிரயத்தனம் சேதன தர்மங்கள் பிரக்ருதிக்கு கூடாதே
பஹஸ்யாம் ப்ரஜாயேய -என்று சங்கல்பித்து -த்ரிவித காரணம் -அடையக் கடவேன்-சங்கல்பித்து -ஸ்ருஷ்ட்டி –
சர்வஞ்ஞத்வம் வேணுமே -சர்வ ஸ்ருஷ்டிக்கு -சர்வ சக்தித்வமும் வேணும் –
து சகாரார்த்தம் -இங்கு -அவ்யய த்துக்கு அநேக அர்த்தம் கொள்ளலாமே –

பூர்வ பக்ஷம்
தைத்ரிய உபநிஷத்தில் -2-7-1-
அசத் ஏவா இதம் அக்ர ஆஸீத் -என்று உள்ள போது சர்வஞ்ஞனான -ஸத்யஸங்கல்ப விசிஷ்டனான ப்ரஹ்மமே
காரணம் என்பது எப்படி நிச்சயிக்கப்படும்

இதற்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

—————-

1-4-15-சமாகர்ஷாத் –

தொடர்ந்து கூறப்படுவதால் -என்றபடி –

இந்த ஸூத்ரத்துக்கு -அநு கர்ஷம் அபகர்ஷம் -அதி கர்ஷம் -மூன்று வித பொருள்கள்
முந்தைய இடத்தில் உள்ளத்தை பிந்தைய இடத்தில் சேர்த்துக் கொள்ளுவது அநு கர்ஷம் ஆகும் –
பிந்தைய இடத்தில் உள்ளதை முந்தைய இடத்தில் சேர்த்துக் கொள்ளுவது அபகர்ஷம் ஆகும்
புதிதாக ஒன்றைச் சேர்த்தல் அதி கர்ஷம் ஆகும்
தைத்ரியத்தில் உள்ள -ஸோ அகாமயத–தத் சத்ய மித்யா சஷதே -என்பதில் கூறப்பட்ட பொருளையே
அசத்வா இதம் அக்ர ஆஸீத் -என்பதில் உள்ள அசத் என்னும் சொல்லால் கூறத் தொடங்குவதால் இது அநு கர்ஷம் ஆகும்
சாந்தோக்யத்தில் அசத் ஏவ இதம் அக்ர ஆஸீத் என்பதில் தத் சத் ஆஸீத் -என்று பின்னர் வரும் இடத்தில்
உள்ள சத் என்பதற்கு கூறப்பட்ட பொருளை முன்பு உள்ள அசத் என்பதற்கு எடுப்பதால் இது அபகர்ஷம் ஆகும்
பிருஹத் உபநிஷத்தில் –
தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத-என்பதில் வியாக்ரியத என்பதான
செயல் புரியும் சொல் உள்ளதால் -புதிதாக ஒரு கர்த்தாவைச் சேர்ப்பதால் இது அதிகர்ஷம் ஆகும் –

சித்தாந்தம்
சர்வஞ்ஞனான -ஆனந்த மாயா -ஸத்யஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மமே
தைத்ரியம் -3-7-1-அஸத்வா இதம் அக்ர ஆஸீத் -என்ற வாக்யத்திலும் தொடர்ந்து கூறப்பட்டது –
எப்படி என்றால் முந்திய பகுதியில் -அநு கர்ஷ முறை –
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத்-அந்ய அந்தரே ஆத்மா ஆனந்த மய—2-5-என்று
ஜீவாத்மாவை விட வேறுபட்ட ப்ரஹ்மம் என்றும்
ஸோ காமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேய–2 6-என்றும்
இதம் சர்வம் அஸ்ருஜத யதிதம் கி ஞ்ச டு தத் ஸ்ருஷ்ட்வா-தத் ஏவ அநு பிராவிஸத்-தத் அநு பிரவிஸ்ய –
சத் த்யத் ச அபவத்-என்று அனைத்தையும் ஸ்ருஷ்டித்து புகுந்து அனைத்துக்கும் ஆத்மாவாகவே
ப்ரஹ்மம் -என்று கூறப்பட்டது –

தொடர்ந்து -2-6- தத் அபி ஏஷ ஸ்லோகோ பவதி -என்று
இதுவரை கூறிய அர்த்தத்தில் பின்வரும் மந்த்ரமும் உள்ளது -என்றுள்ள வரி மூலமாக இதுவரை கூறப்பட்டவற்றை விளக்க –
அதற்கு சாட்சியாக பின் வரும் மந்த்ரமும் உள்ளது என்று கூறிய பின்னர்
அசத் வா இதம் அக்ர ஆஸீத்–2-7- -என்று தொடக்கத்தில் இவை அனைத்தும் அசத்தாகவே இருந்தன
என்னும் வாக்கியம் உள்ளது

அடுத்து இந்த மந்திரத்தின் அடுத்த வரியை குறைப்பதால் -அபகர்ஷம் தோன்றுகிறது
இத்தைத் தொடர்ந்து பீஷாஸ்மாத் வாத பவதே–தை -2-8- போன்ற வாக்யங்களால் அதே ப்ரஹ்மம் கூறப்பட்டு
ஸர்வேச்வரத்வம் சர்வ ஆனந்த விசிஷ்டத்வம் போன்ற பலவும் உரைக்கப் படுகின்றன
ஆகவே இந்த மந்த்ரம் -அசத் குறித்த வாக்கியம் -ப்ரஹ்மத்தைக் குறித்த விஷயமே யாகும் என்றதாகிறது
அப்போது -ஸ்ருஷ்டிக்கு முன்பு நாம ரூப வேறுபாடுகள் என்பதால் ப்ரஹ்மத்துக்கு சத் -அதாவது -இருக்கின்ற பொருள்
சம்பந்தம் இல்லை என்பதால் ப்ரஹ்மம் அஸத் சப்தத்தால் கூறப்படுகிறது
அஸத் ஏவ இதம் அக்ர ஆஸீத் –சாந்தோ 3-19-1-/6-2-1–போன்ற வாக்யங்களுக்கும் இதே கருத்தே

அடுத்து பூர்வ பக்ஷத்தில்
ப்ருஹி–தத் ஏதத் அவ்யாக்ருதம் ஆஸீத் 1-4-7-என்பது பிரதானமே ஜகத் காரணம் என்பர் -அது கூடாது –
இங்கும் அவ்யாக்ருதம் என்ற சொல்லால் கூறப்படுவது அவ்யாக்ருத சரீரம் கொண்ட ப்ரஹ்மமே –
ப்ருஹ -1-4-7-
ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆநகாக் ரேப்ய -பஸ்யம்ச் சஷு ச்ருண்வஞ்சரோத்ரம் மந்வாநோ மந –
ஆத்ம இதி ஏவ உபாஸீத்-என்று ச ஏஷ -என்று உணர்த்தப்படுகிற -தத் -அது என்பதன் மூலம் அவ்யாக்ருதம் என்ற சொல்லால்
கூறப்பட்ட ப்ரஹ்மமே அனைத்துக்கும் உட் புகுந்து நியமிக்கிறார் –
இப்படி முன்னம் கூறப்பட்ட விஷயம் இங்கு சேர்க்கப்பட்டதால் இது அநு கர்ஷம் ஆகும்

மேலும் தை -2-6-1-
தத் ஸ்ருஷ்ட்வா தத் ஏவ அநு ப்ராவிஸத்-என்றும்
சாந்தோக்யம் -6-3-2-
அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்றும் உள்ளவற்றால்
சர்வஞ்ஞனான பர ப்ரஹ்மமே உட் புகுந்து நாம ரூபங்களை ஏற்படுத்துகிறான் என்றதாயிற்று
மேலும் தைத்ரியம் 3-11-2-
அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -என்றும் உள்ளதால்
உட் புகுந்து நியமித்தல் பிரதானத்துக்கு சம்பவிக்காது –
ஆகவே அவ்யாக்ருதம் என்று கூறப்படுவது அவ்யாக்ருத சரீரம் கொண்ட ப்ரஹ்மமே ஆகும்

அடுத்து அதிகர்ஷ முறையில் விளக்கம்
பிருஹு -1-4-7-
தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியதே –என்று அதே ப்ரஹ்மம் -பல சரீரங்கள் கொண்டதாக தன்னை மாற்றிக் கொண்டது
பஹுஸ்யாம் ப்ரஜாயேய -போன்ற சங்கல்பம் -ஈஷதே-போன்ற பார்வை
இப்படி பல மேன்மைகளை கொண்ட தன்மை பிரதானத்துக்கு இல்லை என்பதால் ப்ரஹ்ம ஆத்மா சொற்களால் கூற இயலாது
ஆகவே ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபணம்

மற்ற உபநிஷத்களிலும் கூறப்பட்டவற்றை குறிப்பிடுவதாலும் பர ப்ரஹ்மமே காரணம்
தைத்ரிய உபநிஷத் –
சோகா மயத பஹூச்யாம் பிரஜா யேய-என்றும்
அசத் வை இதம் அக்ர ஆஸீத் -என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்றும்
அதே உபநிஷத் –
ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய-என்று உள்ளே புகுந்து நகக் கண்கள் வரையில் உள்ளான் -என்கிறது-

ஆனந்தவல்லி தைத்ரியம் -அசத்-சுருதி வாக்கியம் -அனைத்தையும் ப்ரஹ்மம் குறிக்கும் என்பதைக் காட்ட வந்தது
ப்ராஹ்மண ஷத்ரியம் வைஸ்யம் சூத்திரர் அனைத்திலும் நான்கு வர்ணங்களும் உண்டே
நான்கு வர்ணங்களுக்கு நான்கு வேதங்கள் -யஜுர் க்ஷத்ரியர் -சாம வேதம் ப்ராஹ்மணர் ரிக் வேதம் வைசியர் –
முகத்தில் இருந்து ப்ராஹ்மணர் -அது வேறே விஷயம் -விராட் புருஷன் மூலம் வாதத்தை சொன்னபடி
தைத்ரியம் உபநிஷத் -திருமஞ்சனம் சமயம் -சொல்லுவார்
ராமாயணத்திலும் மனு சாஸ்திரம் quote-உண்டே
நாம ரூப விபாகம் இல்லாததால் அசத் -அவ்யாக்ருதம் இதுவே
தைத்ரியம் -அசன்நேவஸ் ய பவதி -இல்லாமலே ஆகிறான் -ப்ரஹ்மத்தை அறியாதவன் -அசத் ப்ரஹ்ம வேத ச –
ப்ரஹ்ம சத் அவேத ச -என்று கொண்டு கூட்டிப் பொருள் இங்கு
அஸ்தி –சந்தமேனம்-பவதி –
சர்வே சப்தா பரமாத்மாவாவையே குறிக்கும் -அசத் சப்தமும் அவனையே சொல்லலாமே –
அவ்யாக்ருதமான சரீரம் உடைய பர ப்ரஹ்மம் -சொன்னபடி -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் –

——————–———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— -1-4-2–சமந்வய அத்யாயம்–சமச அதிகரணம் –3-ஸூத்ரங்கள்—ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் –

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் —
இரண்டாம் அதிகரணம்-சமச அதிகரணம் –3-ஸூத்ரங்கள்—

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாசாரர்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———————————————————————————————————–

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் 29–ஸூத்ரங்கள் –
இரண்டாம் அதிகரணம்–சமச அதிகரணம் –3-ஸூத்ரங்கள்–1-4-8/9/10-—-ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள்

—————————————————-

விஷயம் –
அஜா -என்ற சொல்லால் -ப்ரஹ்மத்தை அந்தர் யாமி யாகக் கொண்ட –
மூலப் பிரக்ருதியே கூறப்பட்டது என்று நிரூபணம்

1-4-8-சமசவத் அவிசேஷாத்-

சமசம் போன்று சிறப்பித்துக் கூறப்படாதலால் -என்றவாறு –
இதிலும் கபில தந்திரம் மூலம் கூறப்படும் சித்தாந்த நிரசனம் –

பூர்வ பக்ஷம் -ப்ரதிகோடி-வேதாந்த தரிசனத்துக்கு -சாங்க்ய -நிரீஸ்வர வாதம்
பிரகிருதியின் பரிமாணம் ஜகத் என்பர் –
குண குணி பாவம் ஒத்துக் கொள்ளாதவர்கள் இவர்கள் –
இரண்டாக சொன்னால் பிரித்து காட்ட முடிய வேண்டுமே என்பர் –
தர்ம தர்மி -ஆஸ்ரயம் நாம் சொல்வது போலே இல்லை அவர்களது –
பிரகிருதி -மஹத் -அஹங்காரம் -தன்மாத்திரைகள் -இந்திரியங்கள் -பூதங்கள் –
இப்படி 24-பிரக்ருதியும் அதன் பரிணாமமும் -25-th தத்வம் ஜீவாத்மா –
தாமரை இலைத் தண்ணீர் ஒட்டாது போலே இருந்தாலும் தானே கர்த்தா –
கர்த்ருத்வம் தன்னிடம் ஆரோபித்து கொண்டு பந்துக்கு உட்படுகிறான்
ப்ரக்ருதி புருஷ விவேக ஞானமே மோக்ஷம் என்பர் –
கேவலஸ்ய பாவம் -பிரக்ருதியில் இருந்தாலும் -அடைகிறான் —
சாங்க்ய காரிகையே இவர்களது பிரமாணம் –
ஞான பாகம் -கொண்டே மோக்ஷம் -வேதம் ஒத்துக் கொண்டாலும் நிரீஸ்வர வாதர் இவர் –
ஈஸ்வர நிராகரணமும் -இல்லாதவர் ஈஸ்வரர் பற்றி -indifferant-இவர்கள்
அவ்யக்த மார்க்கம் தபஸ் பண்ணி தனது முயற்சியால் விவேக ஞானம் -realaisation-அடைகிறான் –
பரம காருணிகர் இவன் படும் ஸ்ரமம் கண்டு -பகவத் கிருபையை விளக்கி -இவர்களை மாற்றுவார்கள்
ப்ரக்ருதிக்கும் அதிஷ்டானம் அந்தர்யாமியாக இருப்பவன் என்று உணர்த்தி -சம்ரதாயத்துக்கு -கூட்டி வருவார்கள்
ஞான மார்க்கம் மாற்றி பக்தி மார்க்கம் -ஊட்டி நல் வழி நடத்துவார்கள்
ப்ரஹ்மாத்மகம் இவை என்று சொல்வதே வாசி
தந்திரம் என்பதாலே சாங்க்ய தத்வ பிரகிரியை -இங்கே —
யோக தர்சனம் -பக்தி மார்க்கம் –ஈஸ்வர தத்வம் ஒத்துக் கொள்பவர்கள் –

மாந்த்ரீக உபநிஷத் 21-மந்த்ரங்கள் -அதர்வண வேதம் விஷய வாக்கியம் இதில் –
இதுக்கு திராவிட ஆந்திர பாட வாசிகள் இல்லை என்பர்
திராவிட பாடம் – ஆந்திர பாடம் -ச பிரம்மா ச சிவ ச ஹரி -ஈஸ்வர ஸ்வராட் -வித்யாரண்யர் காலத்தில் உருவானது என்பர்
சங்கரர் உபநிஷத் வியாக்யானம் திராவிட பாடங்களுக்கே–
அதர்வண கிலம் -ப்ரஷிப்தம் -அப்புறம் சேர்த்தது -என்பர்
ஹயக்ரீவர் உபாத்யானம் -பின்பே சேர்த்தது மஹாபாரதத்தில் -என்பர் சிலர்
ஞானிகளுக்கு சாஷாத்காரம் கிடைத்து சேர்த்தாலும் பிரமாணமே
ஹரி வம்சம் கிலமானாலும் பிரமாணம்
ஈஸாவா சா -உபநிஷத் -18-மந்திரங்களுக்கு ஒரு வழியில் இவை சாம்யம்

சமசம் என்பது யாகங்களில் பயன்படுத்தப்படும் மரத்தால் செய்யப்பட ஒரு வகைப் பாத்திரம்
கீழ்ப் பாகம் அகலமாகவும் மேல் பாகம் ஒரு சிறிய துளை மட்டுமே கொண்டதாகவும் இருக்கும்
இதில் சோமலதை எனப்படும் மூலிகை ரசம் வைக்கப்படும்
உபநிஷத்தில் சமசம் -பதம் தெளிவாக கூறப்பட்டுள்ளது –

ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொண்ட ப்ரக்ருதி மஹத் அஹங்காரம் -என்பதை ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் சொல்லும்
பரமாத்மாவால் அதிஷ்டானமான பிரக்ருதியை குறிக்கும் –
சமசம்-spoon-shaped -சோமரசம் -சோமயாகம் -ப்ரஹ்மானுபவம் -ஜீவாத்மா ஜோதி ரூபம் -பரமாத்மா -பரஞ்சோதி ஸ்வரூபம் -திவ்யம் ரசம் –
ப்ரஹதாரண்யம் –நான்காம் அத்யாயம் -அர்வா கீழே -க்லக ஊர்த்வ புந்தவா-போன்ற கரண்டி பற்றியும் உண்டே
தலை கீழ் கவிழ்த்த பானை -மனுஷ்யர் தலையை சொல்ல வந்ததே இந்த வார்த்தைகள் —
அதே போலவே இங்கும் அஜா என்பது ப்ரஹ்ம அதிஷ்டமான பிரக்ருதியையே குறிக்கும் –
அப்ராஹ்மாத்மக பிரக்ருதியை சொல்ல வந்தது இல்லை -அர்த்தம் -பிரகரணம் ஒட்டியே கொள்ள வேண்டும்
அதி தேசம் –அதே -rule-இங்கும் –

அதர்வணத்தில்–ஸூலி-3-/7–
விகார ஜநநீம் அஞ்ஞானம் அஷ்ட ரூபாம் அஜாம் த்ருவாம்–த்யாயதே அத்யாசிதா தேந தன்யதே ப்ரேர்யதே புந –
ஸூயதே புருஷார்த்தே ச தேந ஏவாதிஷ்டிதா ஜகத் –
கௌரநாத் யந்தவதீ சா ஜநித்ரீ பூத பாவிநீ -ஸீதா அசீதா ச ரக்தா ச சர்வ காமதுகா விபோ-
பிபந்த்யே நாம் அவிஷமாம் அவிஞ்ஞாதா குமாரகா
ஏகஸ்து பிபதே தேவ ஸ்வச் சந்தோ அத்ர வசாநுகாம் -த்யான க்ரியாப்யாம் பகவான் புங்க்தே அசவ் பிரசபம் விபு –
சர்வ சாதாரணீம் தோக்க் நீம் பீட்யமா நாம் து யஜ்வபி -சதுர்விம்சதி ஸங்க்யாகம் அவ்யக்தம் வ்யக்தம் உச்யதே –என்று
அனைத்துக்கும் தாய்-பிரகிருதி -எட்டு விதமாக –மஹத் அஹங்காரம் தன்மாத்திரைகள் பஞ்ச பூதங்கள் ஆகிய எட்டும் –
சர்வேஸ்வர நியமன அதீனம்-இந்த ஜகத்தே புருஷார்த்தங்களை அடைய சாதனம்
பிரக்ருதியே பசு போலே -வெண்மை கருமை -சிகப்பு -மூன்றுமாக இருந்து இன்பமான -பால் -கர்மம் -அளிப்பவள் -என்றும்

முதல் இரண்டு மந்த்ரங்கள்
ஓம் அஷ்ட பாதம் இத்யாதி –ஹம்சம் ஜீவாத்மாவை -ரூபகம்
என்றும் -பிரபஞ்சம் கோ போலே -என்றும் –
ஹம்ஸம் வெளுப்பு -ராஜ ஹம்சம் -வாத்தும் -வெளுப்பு -நீரையும் பாலையும் பிரிக்கும் சாமர்த்தியம் இல்லையே –
ஹம்ஸ கீர நியாயம் -mithalogical–சரபம் -யானை சரீரம் சிம்மம் முகம் போலே –
கண்ட பேரண்டம் இதுக்கும் பிரபலம் -இரண்டு தலை -தந்த்ர சாஸ்திரம் –
மானஸ சரோவர் -மானஸ ராஜ ஹம்சம் -சுத்த ஜீவாத்மா -பாஹ்ய த்ருஷ்ட்டி கொண்டு அறிய முடியாதே
சத்வ குணத்தால் அறிய முடியும்

விகார ஜநநீம் –விகாரங்களை உண்டு பண்ணும் -evalution-அஞ்ஞானம் அஷ்ட ரூபாம் அஜாம் த்ருவாம்–
நித்யம் -ஜனனம் மரணம் இல்லாதவை –
மூல பிரகிருதி- -மஹான் –inteligent- புத்தி –அஹங்காரம் -ego
-தப்பான translaton -–த்யாயதே அத்யாசிதா தேந தன்யதே ப்ரேர்யதே புந –பரமாத்மாவை அந்தர்யாமியாக கொண்டவை
ஸூயதே புருஷார்த்தே ச தேந ஏவாதிஷ்டிதா ஜகத் –அவனாலே அதிஷ்டானம்
கௌரநாத் யந்தவதீ சா ஜநித்ரீ பூத பாவிநீ -ஸீதா அசீதா ச ரக்தா ச சர்வ காமதுகா விபோ-மூன்று குணங்கள் -மூன்று நிறங்கள் —
சத்வம் வெள்ளை -சிகப்பு ரஜஸ் கறுப்பு தனுஷ் –
ஸ்த்ரீகள் புருஷர்கள் -mental–physical-makeup-நிறைய வாசி உண்டே
ஸ்ருஷ்ட்டி பிரதானம் -பொறுப்பு அவர்களுக்கு உண்டே –
ஞானம் விஞ்ஞானம் கொண்டே இவற்றின் வாசிகளை அறிவோம் –
இந்திரிய ஸூஷ்மம் -software-போலே –
கரை உள்ள வேஷ்ட்டி -இரண்டு வர்ண ஸஹவாசம் வேண்டுமே -சம்சாரத்தில் இருக்க –

ரஜஸ் -சத்யத்துடன் சேர்ந்து ஸத்கார்யம் -தமஸ்ஸுடன் சேர்ந்து அசத் கார்யம் –

ஸூலி -14-
சதுர்விம்சதி சங்க்யாகம் அவ்யக்தம் வ்யக்தம் உச்யதே – அவ்யக்தமான அதுவே வெளிப்பட்டு
வ்யக்தம் ஆகிறது -என்றும் ப்ரக்ருதி ஸ்வரூபம் கூறப்பட்டது –
மேலே சூலி -13-/14-
தம் ஷட் விம்சகாம் இத்யாஹு சப்த விம்ச மதா பரே -புருஷம் நிர்குணம் சாங்க்யம் அதர்வ சிரசோ விது –
அவனை -26-தத்வம் என்றும் சிலர் -27-தத்வம் என்றும் கூறுகிறார்கள்
அதர்வண சிரசை அறிந்தவர்கள் அவனை நிர்க்குணம் என்றும் அறியத்தக்கவன் என்றும் சொல்வார்கள்
வேறே சில அதர்வண சாகைகளில்
அஷ்டவ் ப்ரக்ருதய ஷோடச விகார -என்று பிரகிருதியின் நிலைகள் -8-மாற்றங்கள் -16-என்பர்

பிரகிருதி புருஷன் ஈஸ்வர ஸ்வரூபங்களை
ஸ்வேதரா -1-8-
சம்யுக்தம் ஏதத் ஷரம் அக்ஷரம் ச வ்யக்த அவ்யக்தம் பரதே விஸ்வம் ஈஸ -ஆநீ சச்ச ஆத்மா பத்யதே போக்த்ரு பாவாத்
ஞாத்வா தேவம் முச்யதே சர்வ பாஸை–என்றும்
ஸ்வேதரா-1-9-
ஜ்ஞ அஜ்ஜவ் த்வவ் அஜவ் ஈஸ அநீசவ் அஜா ஹி ஏகா போக்த்ரு போகார்த்த யுக்தா -அனந்தச்ச ஆத்மா விஸ்வ ரூபோ ஹி
அகார்த்தா த்ரவ்யம் யதா விந்ததே ப்ரஹ்மம் ஏதத் -என்றும்
இப்படி அனுபவிப்பவன் அனுபவிக்கப்படுவது அனுபவம் மூன்றையும் அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் -என்றும்
ஸ்வேதரா-1-10-
ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் ஹர ஷர ஆத்மாநவ் ஈஸதே தேவ ஏக -தஸ்ய அபி த்யாநாத் யோஜநாத்
தத்வ பாவாத் பூயஸ் ச அந்த விஸ்வ மாயா நிவ்ருத்தி -என்றும்
ஸ்வேதரா-4-9-
சந்தாம்ஸி யஜ்ஞா க்ரதவோ வ்ரதாநி பூதம் பவ்யம் எச்ச வேதா வதந்தி -அஸ்மாத் மாயீ ஸ்ருஜதே விஸ்வம்
ஏதத் தஸ்மிம்ச்ச அந்யோ மாயயா சந்நிருத்த -என்றும்
ஸ்வேதரா-4-10-
மாயம் து ப்ரக்ருதிம் வித்யான் மாயிநம் து மஹேஸ்வரம் -தஸ்ய அவயவ பூதைஸ்து வ்யாப்தம் சர்வம் இதம் ஜகத் -என்றும்
ஸ்வேதரா-6-16-
பிரதான ஷேத்ரஞ்ஞா பதிர் குணேச சம்சார மோக்ஷ ஸ்திதி பந்த ஹேது -என்றும் உள்ளதே

ஸ்ம்ருதி -ஸ்ரீ கீதையிலும் -13-19-
ப்ரக்ருதிம் புருஷம் ச ஏவ வித்த்யநாதீ உபாவபி விகாராம்ச் ச குணாம்ச் ச ஏவ வித்தி ப்ரக்ருதி ஸம்பவாந் -என்றும்
ஸ்ரீ கீதை-13-20-
கார்ய காரண கர்த்ருத்வ ஹேது -ப்ரக்ருதிர் உச்யதே புருஷ ஸூக துக்காநாம் போக்த்ருத்வே ஹேது உச்யதே -என்றும்
ஸ்ரீ கீதை-13-21-
புருஷோ ப்ரக்ருதிஸ் தோ ஹி புங்க்தே ப்ரக்ருதி ஜாந் குணாந் -காரணம் குண சங்கோஸ்ய சத சத் யோநி ஜென்ம ஸூ
ஸ்ரீ கீதை-14-5–
சத்துவம் ரஜஸ் தம இதி குணா பிரகிருதி ஸம்பவா -நிபத் நந்தி மஹா பாஹோ தேஹ தேஹிநம் அவ்யயம் -என்றும்
ஸ்ரீ கீதை-9-7-
சர்வ பூதாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம் கல்பக்ஷய புநஸ் தாநி கல்பாதவ் விஸ்ருஜாமி அஹம் -என்றும்
ஸ்ரீ கீதை–9-8-
ப்ரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய விஸ்ருஜாமி புந புந -பூத க்ராமம் இமம் க்ருத்ஸ்னம் அவசம் ப்ரக்ருதேர் வசாத் -என்றும்
ஸ்ரீ கீதை-9-10–
மயாத்க்ஷேன ப்ரக்ருதி ஸூயதே ச சராசரம் ஹேது நாநேந கௌந்தேய ஜகத் விபரி வர்த்ததே -என்றும் கூறியதே

மேலும் -ஸ்வேதரா-4-5-
அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா
அஜோ ஹி ஏகோ ஜூஷமாண அநு சேதே ஜஹாத் யேநாம் புக்த போகாம் அஜ அன்ய–என்று
பிரக்ருதியை முக்தாத்மா விட்டுச் செல்கிறான்

அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் -முக்குணங்கள் மூன்று வர்ணங்கள்
பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா அஜோ ஹி ஏகோ ஜூஷமாண அநு சேதே ஜஹாத் யேநாம் புக்த போகாம்
அஜ அன்ய-பிரகிருதியின் ஆட்டம் -அறிந்து – கேவலனாகி -பகவத் கிருபையால் -பிரகிருதி சம்பந்தம் அறுத்து
பகவானை அடைகிறான் –

இங்கு கபில தந்திரத்தில் சொல்லப்படும் ப்ரஹ்மாத்மகம் இல்லாத பிரக்ருதியா -ப்ரஹ்மாத்மகமான பிரக்ருதியா -சங்கை

பூர்வ பக்ஷம்
அஜம் ஏகம் என்று பிறப்பற்ற ஓன்று என்பதால் ப்ரஹ்மாத்மகம் இல்லாத பிரக்ருதியே யாகும்
பிரகிருதி எதனாலும் உண்டாக்கப்படுவது இல்லையே
மேலும்
பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா-என்பதால் பிரஜைகளை தனது ஸ்வரூபம் போலே
ஸ்வ தந்திரமாக ஸ்ருஷ்டிக்கும் சக்தி பிரக்ருதிக்கும் உள்ளதாகவும் கூறப்பட்டது –

சித்தாந்தம்
சமசவத் அவிசேஷாத்-
இங்கு கபில தந்திரத்தில் கூறப்பட்ட பிரகிருதி இல்லை
சமசவத்-என்று சமசம் போன்றதாகும்
பிருஹு -2-2-3-
அர்வாக்பிலச் சமச ஊர்த்வ புத்ந -என்று
மேலே பருத்து கீழே துளை உள்ள -உணவு உண்ண பயன்படும் பொருள் -என்றே அன்றி
ஒரு குறிப்பிட்ட சமஸத்தை-என்று சிறப்பித்து சொல்ல வில்லையே
சம் -உண்ணுதல் பருகுதல்-என்பதால் சமாசம்
அதாவது பிருஹு –4-2-3-
இதம் தச்சிர ஏஷ ஹி அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன-என்று-இப்படி மேலே பருத்து கீழே துளை உள்ளது
தலையே -மண்டை ஓடே -ஆகும் -என்று நிச்சயிக்கலாம்
இதே போலே அஜா -சொல்லின் பொருளையும் அதன் பயன்பாடு மற்றும் இந்தப்பகுதியில் உள்ளது என்பவை
போன்றவற்றால் அறிய வேண்டும்
இங்கு அஜா -பிரகிருதி ஸ்வ தந்திரமாக செயல்படும் என்று கூறவில்லை
பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா–ஸ்வேதரா-4-5-என்பதன் மூலம் ஸ்ருஷ்ட்டி செய்கிறது என்னும் விவரமே உள்ளது
ஆகவே இந்த மந்திரத்தில் ப்ரஹ்மாத்மகம் இல்லாத பிரகிருதி கூறப்பட வில்லை என்றதாயிற்று

அஜா வித்யை என்றே இதுக்கு பெயர் –

இப்படியாக கல்ப தந்திரத்தில் கூறப்பட்டதான ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொள்ளாத
ப்ரக்ருதி போன்ற பலவும் தள்ளப் பட்டது –

மேலும் ஒரு காரணத்தாலும் அஜா என்று ப்ரஹ்மாத்மகமான பிரக்ருதியே என்பதை அடுத்த ஸூத்ரத்தில் நிரூபணம்

——————

1-4-9-ஜ்யோதி ரூப க்ரமா து ததா ஹி அதீயதே ஏகே –

இது உயர்ந்த ஜ்யோதியான ப்ரஹ்மத்தைக் காரணமாகக் கொண்டதாகும்
ஒரு குறிப்பிட்ட சாகையைச் சார்ந்தவர்கள் இப்படியே ஓதுகிறார்கள் -என்றவாறு

சித்தாந்தம் –
ஸூத்ரத்தில் உள்ள– து –என்ற சொல்லானது –
இங்கு கூறப்படும் கருத்தை அதிக அழுத்தத்துடன் கூறுவதை உணர்த்துகிறது –
அஜா -என்பது ஜ்யோதியை தனது காரணமாகக் கொண்டதாகும் –
இந்த ஜ்யோதி ப்ரஹ்மமே –
பிருஹு -4-4-16-
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி -என்றும்
சாந்தோக்யம் -3-13-7-
அத யதத பரோ தேவோ ஜ்யோதிர் தீப்யதே -என்றும் சொல்வதால் பிரசித்தம் ஆகிறது
ஜ்யோதிர் உப க்ரமா-என்று
ப்ரஹ்மத்தைக் காரணமாகக் கொண்ட -என்று பொருள்
ததா ஹி அதீயதே ஏகே-என்று
இப்படியாக தைத்ரிய சாகையைச் சேர்ந்த சிலர் கூறுகிறார்கள்
ஹி -என்பது
காரணத்தைக் குறிக்கும்

ஜ்யோதிர் உப க்ரமா–ஜ்யோதி ப்ரஹ்மம் -காரணிகம்-

இந்த அஜா -ப்ரக்ருதி என்பது ப்ரஹ்மத்தைக் காரணமாகக் கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள்
ஜோதியான பரம் பொருளைச் சார்ந்தே அஜா என்னும் பிரகிருதி உள்ளது –
தைத்ரியம் –
அணோர் அணீயான் மஹதோ மஹீயாந் ஆத்மா–குஹாயா நிஹித அஸ்யா ஜந்தா-என்று சொல்லி தொடர்ந்து
சப்த பிராணா ப்ரபவந்தி தஸ்மாத் –என்றும்
அஜாம் ஏகாம் லோஹித சுக்ல கிருஷ்ணம் பஹ்வீம் ப்ரஜாம் ஜன யந்தீம் ச ரூபாம் –
அஜோ ஹி ஏகோ ஜுஷமான-அநு சேத ஜஹாத் யோநாம் புக்த போகம் அஜ அந்ய–என்றும் இத்யாதிகளால்
அனைத்துக்கும் காரணமான பிரகிருதி ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி ஆனது என்று கூறப்பட்டது –

ஸர்வஸ்ய ஸ்வ வியதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் -ப்ரஹ்மமே காரணம் –

இந்த அஜா தன்னைப் போன்ற வஸ்துக்கள் தோன்ற காரணம் –
இது கர்ம வஸ்யரான ஜீவாத்மாவால் அனுபவிக்கப் படுகிறது
பின்பு முக்தாத்மாவால் கை விடப்படுகிறது
இந்த அஜா மற்றவற்றைப் போலவே ப்ரஹ்மத்தின் இடம் உத்பத்தியாகி ப்ரஹ்மத்தையே
ஆத்மாவாகக் கொண்டுள்ளது என்றவாறு

அதீயதே ஏகே -என்று
ஸ்வேதாஸ்வர உபநிஷத்தில் உள்ள அஜா என்ற சொல்லுக்கு மற்ற ஒரு சாகையைச் சேர்ந்த மஹா உபநிஷத்தில்
காணப்படும் அதே போன்ற வரியில் இருந்து பொருள் –
ஸ்வேதாஸ்வர-1-1-
கிம் காரணம் ப்ரஹ்ம -என்று தொடங்கி
ஸ்வேதாஸ்வர-1-3-
தே த்யான யோக அநு கதா அபஸ்யன் தேவாத்ம சக்திம் ஸ்வ குணைர்நி கூடாம்-என்று
அஜா ப்ரஹ்மத்தின் சக்தி என்று சொல்லி
ஸ்வேதாஸ்வர-4-9-
அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வம் ஏதத் தஸ்மிம்ச் ச அந்யோ மாயயா சந் நிருத்த–என்றும்
ஸ்வேதாஸ்வர–4-10-
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாந் மாயிநம் து மஹேஸ்வரம் -என்றும்
ஸ்வேதாஸ்வர-4-11-
யோ யோநிம் யோநிம் அதிஷ்டதி ஏக-என்றும் போன்ற பல வரிகளால்
அதே அஜா -ப்ரஹ்மாத்மகமான ப்ரக்ருதியே கூறப்படுகிறது –
திஷ்டத் யந்தராத்மா-என்று
அஜா எனபது பரம் பொருளைச் சார்ந்த பிரக்ருதியே என்றதாயிற்று –
கபில தந்திரத்தில் சொல்லிய ப்ரஹ்மாத்மகம் இல்லாத பிரகிருதி குறித்து சிறு வாசனை கூட இல்லை என்றதாயிற்று

ப்ரஹ்ம -ஸூத்ரம்–story -of -soul-தானே -ஆகவே தான் பன்ன பன்ன ப்ரஹ்மமே காரணம் –
வேறே ஒன்றுமே இல்லை என்று படிப்படியாக ப்ரஹ்மத்திடம் கூட்டிப் போகும்
உபநிஷத் வாக்கியங்கள் முழுவதும் அறிந்து அடைவது பல ஜன்மாக்கள் ஆகுமே – –
spirutual-travalogue-தான் ப்ரஹ்ம ஸூத்ரம் ஆழ்ந்து அறிவது –

இதற்கு பூர்வ பக்ஷம்
அப்படியானால் ஜ்யோதியான பரமாத்மாவைக் காரணமாகக் கொண்டது என்றும் –
சிகப்பு வெளுப்பு கருப்பு நிறங்களைக் கொண்டது என்றும் கூறப்படும் பிரகிருதி அஜா -பிறப்பற்றது என்று எப்படிக் கூறப்படுகிறது
பிறப்பற்றது என்று கூறப்படும் பிரகிருதி ஜ்யோதியில் இருந்து தோன்றுவதாகக் கூறுவது எப்படி –

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

—————

1-4-10-கல்பநோபதேசாத் ச மத்வாதி வத் அவிரோத –

ஸ்ருஷ்ட்டியைக் கூறுவதால் -மது -என்பது போன்று விரோதம் இல்லை -என்றதாயிற்று –
பிரகிருதி பிறப்பற்றது என்றும் கல்பாதியிலே உருவாக்கப் பட்டது என்பதும் முரண் பட்டது இல்லை –

சித்தாந்தம்
ஸூத்ரத்தில்–ச -சப்தம் –
இங்குள்ள சங்கையைப் போக்கும்
பிரகிருதி பிறப்பற்றது என்பதற்கும் -ஜ்யோதியான பர ப்ரஹ்மத்தின் இடம் வெளிப்பட்டது என்பதற்கும் முரண்பாடு இல்லை
கல்பந உபதேசாத்-என்று
ஸ்ருஷ்ட்டி குறித்து உபதேசிப்பதால் –கல்பநம் என்றது உண்டாக்குதல் -ஸ்ருஷ்ட்டியைச் சொன்னவாறு –
அதாவது ஜகத் ஸ்ருஷ்ட்டி குறித்து உபதேசம் –

தைத்ரிய உபநிஷத்தில் –
சூர்யா சந்திர மசவ் ததா யதா பூர்வம் கல்பயந் –5 7-என்றும்
ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–4-9 –என்று படைக்கப் பட்டதை சொல்லிற்று –
இத்தால் ப்ரக்ருதி கார்ய காரண இரண்டு நிலைகளில் உள்ளதாக உணர்த்தப் படுகிறது –
பிரகிருதி காரண நிலையில் உள்ள போது அஜா -பிறப்பற்றது –
கார்ய நிலையில் உள்ளது ஜ்யோதியைக் காரணமாகக் கொண்டது என்றவாறு

அஜா -பிறக்காதது -ஆதி அந்தம் இல்லாத நித்யம் -எப்படி பரமாத்மாவால் உண்டாக்கப்படும்
மாயீ-மாயையை உடையவன்
கல்பநம் -ஸ்ருஷ்ட்டியை பற்றியே உபதேசம் என்பதால் –
கார்ய காரண ரூபம் அவஸ்தைகளைச் சொன்னபடி
அக்னி பிளம்பில் இருந்து -spark-பலவும் வருவது போலே -பரமாத்மாவின் இருந்து உத்பன்னம் -அதிலே லயிக்குமா போலே
நித்யமானவைகள் அஜா நித்யா சாஸ்வதம் புராணம் -பல தடவையும் சொல்லி
ஜ்யோதிர் உபக்ரமா என்றும் சொல்லுவதால் விரோதம் இல்லை
காரண அவஸ்தையில் -சதேவ சோம்ய இதமேவ அக்ர ஏகமேவ அத்வதீயம் –
நாம ரூப விபாகம் இல்லாமல் ஒன்றாகவே இருக்கும் -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம்
you too brutus -the most unkindest-double superlative-
லோக ஜனகா ஜனனி -என்று மிதுனத்தையே சொல்கிறோம் –

மத்வாதி வத்–
ஆதித்யன் காரண நிலையில் உள்ள போது ஈஸ்வரனுடன் ஒன்றாகவே உள்ளான்
அதே ஆதித்யன் கார்ய நிலையில் உள்ள போது ருக் யஜுர் சாம அதர்வண வேதங்களில் கூறும் கர்மங்கள் மூலமாக
உண்டாகும் தேனின் இருப்பிடமாகவும்
தன்னை உபாசிக்கும் வஸூக்கள் மற்றும் தேவர்களால் அனுபவிக்க வல்ல தேனாகவும் இருக்கிறான்
அந்த நிலையிலும் உதயம் அஸ்தமனம் குறித்து எந்த முரண்பாடும் இல்லையே –
சாந்தோக்யம் -மது வித்யையில்-
பிரளயம் முடிந்து உலகம் படைக்கப் பட்ட பின்பு —
அசௌவா ஆதித்யோ தேவமது-3-1-1 -என்று தேவர்களுக்கு மதுவாக உள்ளதையும்-சொல்லித் தொடங்கி
பிரளய காலத்தில் –
அத தத் ஊர்த்வ உதேத்ய ந ஏவ உதேதா ந அஸ்த மேதா ஏகல ஏவ மத்யே ஸ்தாதா — என்று
சூரியன் மறைவதும் இல்லை உதிப்பதும் இல்லை -எனபது போலே –
ஏகல -என்று ஒரே இயல்புடன் மாறாமல் உள்ளான்
ஆக இந்த மந்திரத்தால் ப்ரஹ்மாத்மகமான பிரக்ருதியே -அஜா -என்று கூறப்பட்டது அல்லாமல்
கபில தந்திரத்தில் கூறப்பட்ட பிரகிருதி அல்ல என்றதாயிற்று

பிரக்ருதி மட்டும் இல்லை -ஜீவாத்மாவையும் ஸ்ருஷ்ட்டி -சரீர ஜீவ சம்பந்தம் பண்ணுவதும் அவனே –
பஞ்சாக்னி வித்யை -விவரிக்கும் –

அத்வைதிகள் இந்த மந்திரத்தில் தேஜஸ் நீர் பூமி ஆகியவற்றால் உண்டாக்கிய
ஒரு அஜா என்பது கூறப்படுவதாகச் சொல்வார்கள் –
இவர்கள் இடம் பூதங்களாகிய தேஜஸ் நீர் பூமி ஆகியவை ஒரே தத்துவமாக உள்ள அஜா என்பதை குறிக்கின்றனவா
அல்லது கார்ய நிலையில் உள்ள ப்ரஹ்மமே தேஜஸ் நீர் பூமி என்று உள்ளதால் அஜா என்கிறதா அல்லது
தேஜஸ் நீர் பூமி ஆகியவற்றுக்குக் காரணமாக உள்ள ஓன்று மூலப்ரக்ருதி -அஜா என்பதாக உள்ளதோ

இதில் முதல் கருத்தை ஏற்றால் -தேஜஸ் நீர் பூமி இவை ஒன்றுக்கு மேற்பட்டவை
ஸ்வேதாஸ்வர -4-5-
அஜம் ஏகாம் -ஒரே ஒரு அஜம் என்பதுடன் முரண்படும்
இவை மூன்று அல்ல -த்ரிவ்ருத்க்கரணத்தால் ஒன்றாகும் என்னில் -அவை பலவாக உள்ள தன்மை மாறாதே
சாந்தோக்யம் 6-3-2-
இமாஸ்திஸ்ரோ தேவதா -என்று இந்த மூன்று தேவதைகள்
சாந்தோக்யம் -6-3-3-
தாஸாம் த்ரிவ்ருதம் த்ரிவ்ருதம் ஏகைகாம் கரவாணி –என்று ஒவ் ஒன்றுக்கும் த்ரிவித்கரணம் சொல்லப்படுகிறதே

இரண்டாவது கருத்தில் இரண்டு கேள்விகள் -ப்ரஹ்மமே தேஜஸ் நீர் பூமி மாறுதல்கள் அடைந்து அஜா வஸ்துவாகிறதா –
அல்லது ப்ரஹ்மம் ஸ்வரூப மாறுதல் இல்லாமல் ஒரு அஜா எனப்படுகிறதா
முதல் கேள்வி தள்ளுபடி பலவாக உள்ள தன்மை மறையாமல் உள்ளதால்
இரண்டாவது -சாந்தோ –4-5-
லோஹித சுக்ல க்ருஷ்ணாம் என்பதுடன் முரண்படும்
மேலும் ப்ரஹ்மம் தனது ஸ்வரூபத்துடன் உள்ள போது தேஜஸ் முதலானவற்றை அதன் லக்ஷணமாகக் கூற முடியாது

மூன்றாவது கருத்தின் படி அஜா என்று தேஜஸ் நீர் பூமி பூதங்கள் உணர்த்தப்பட்டு அவை மூலம்
அஜா காரண நிலையில் உள்ளது என்றதாயிற்று
இதற்கு மாறாக அஜா என்பது தேஜஸ் நீர் பூமி ஆகியவற்றின் காரண நிலையான பிரகிருதி உள்ளதை
சுருதி கூறுவதால் அப்படியே கொள்ளலாம்
சில அத்வைதிகள் அஜா என்று -ப்ரக்ருதி ஒரு பெண் ஆட்டின் உருவமாக கூறப்பட்டது என்பர்
இந்த கற்பனையால் எந்த பயனும் இல்லை என்பதால் பொருத்தம் ஏற்றதாகும்
கட -ஆத்மாநம் ரதிநம் வித்தி -சரீரம் உபாயம் என்பதைக் காட்டவே உருவகம்
இதே போலே ஆதித்யனை அனுபவிப்பதால் தேனாக உருவகம்
பெண் ஆடாக உருவகம் பயன் இல்லை என்பது மட்டும் இல்லை -முரண்பாடும் ஏற்படும்
எல்லை அற்ற கால சம்பந்தம் -சகலத்துக்கும் மோக்ஷ பந்த ஹேது அசேதனம் இப்படிப்பட்ட தன்மையான பிரக்ருதியை
பால் மட்டும் கொடுக்கும் சேதன உருவகம் முரண்பாடு ஆகுமே

மேலும் ஸ்வேதாஸ்வர -4-5-
அஜாம் ஏகாம் —அஜோ ஹி ஏக –அஜ அந்ய–என்பதில் உள்ள அஜா சொல்லுக்கு
பலவிதமான பொருள்களைக் கற்பிப்பது சரி இல்லை
இதற்கு அத்வைதிகள் பெண் ஆடு பொருளையே கொள்ளலாம் என்றால் இது அடியோடு முரண்படும்
ஜஹாத்யேநாம் முக்த போகாம் அஜ அந்ய–ஸ்வே -4-5-என்று முக்தாத்மா
இந்த பெண் அத்துடன் சம்பந்தம் கொள்கிறான் என்னும் முரண்பாடு வரும்

——————–——————–———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்- -2-1-4 : சிஷ்ட அபரிக்ருஹ அதிகரணம் —

July 8, 2020

இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் -முதல் பாதம் -ஸ்ம்ருதி பாதம் -10-அதிகரணங்கள்–
நான்காவது-சிஷ்ட அபரிக்ருஹ அதிகரணம்-1 சூத்திரம்–

2-1-4 : சிஷ்ட அபரிக்ருஹ அதிகரணம் :

சூத்திரம் – 2-1-13 : ஏதேந சிஷ்ட அபரிக்ருஹா அபி வ்யாக்யாதா :

வேத புறம்பான -ப்ரஹ்மமே உபாதான காரணம் -என்று கொள்ளாத
காணாபர் -கௌதமர் -வைசேஷிகம்
அஷ பாதகர் நியாயம்
புத்தர் –
இந்த வாதங்களை நிரசனம் பண்ணி
நிமித்தம் ஒத்துக் கொள்கிறார்கள் –
பரம அணு உபாதானம் என்கிறார்கள் இவர்கள் –
கீழே வேத விருத்த தர்க்க பாகத்துக்கு நிரசனத்துக்கு அருளிச் செய்தவையே இதற்கும் பொருந்தும்

ஏதேந -கீழே சாங்க்ய நிரசனம் பண்ணி ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று காட்டியது போலே

வேதத்தில் சொன்னதை ஒத்துக் கொள்ளாதவை-vetha sanction-இல்லையே –
கண பஷ
அஷ பாதக -கௌதமர் -காலில் கண் உள்ளவர் –
ஷபனகர்-ஜைனர்கள்
பிஷு -புத்தர்
இவர்கள் பக்ஷங்களும் நிராகரணம் -பரம அணு வாதிகள் என்பதால் இவர்களைச் சேர்த்து –தர்க்கம் அப்ரதிஷிஷ்டிதம் -அ பிரமாணம் –
இவர்களை நிரசிக்கவே இங்கு தனியாக அதிகரணம் -தர்ம மூலத்தவம் இருந்தாலும்
ஞாநாத்மகம் நித்யத்வம் க்ஷணிகம் ஏகாந்தத்தவ அநேகாந்தத்தவ இவ்வாறு பல வேறு பாடுகள் உண்டே இவர்கள் வாதங்களில் —
பரஸ்பர விரோதம் -நித்யத்வம் அநித்யத்வம் –
ஜைனர் இரண்டும் இருக்கலாம் -அநேகாந்த வாதம் அவர்களது –
அநேகாந்தம் ஜகத் சர்வம் -மனுஷ்யத்வம் கஜத்வம் ஒரே இடத்தில் கணபதி –
நரஸிம்ஹர்-ஸிமஹத்வமும் மனுஷ்யத்வமும் சேர்ந்து -என்று த்ருஷ்டாந்தங்கள் காட்டி
நித்யத்வமும் அநித்யத்வமும் சேர்ந்து இருக்கலாம் என்பர் ஜைனர்கள்
சிஷ்ட அபரிக்ருஹா அபி வ்யாக்யாதா :-அதே போலே இவர்களது வாதங்களும் நிரசனம்
வைபாஷிகர் -ஸுத்ராத்ம்யகர் -யோகாச்சார்யார்-ஞானம் மட்டும் -மாத்யாத்மீகர் -சர்வம் சூன்யம் –
இப்படி நான்கு வித புத்தர் வாதங்களும் நிரசனம்-

ஏதேந சிஷ்ட அபரிக்ருஹா –
வேத சாஸ்திரத்துக்கு விருத்தமான கணாத , கௌதம , பௌத்த மத கோட்பாடுகள்
அபி வ்யாக்யாதா –
கீழில் பிரகாரங்களால் நிராகரிக்கப் பட்டதாகவே கொள்ள வேண்டும்.
காரணம். வைதிக மதத்துக்கு உயிரான நிலைப்பாடு, பிரஹ்மம் ஜகத்துக்கு உபாதான காரணம் என்று.
வைசேஷிக மத பிரவர்த்தகரான கணாதர், நியாய மத பிரவர்த்தகரான கௌதமர் இவர்கள் எல்லாம்
ஈஸ்வரன் நிமித்த காரணம் என்பதை ஒத்துக்க கொண்டாலும், பரமாணுதான் உபாதான காரணம் என்பதாக கொள்கின்றனர்.
சாங்கியர்கள் பிரஹ்மா அதிஷ்டியாத மூலப் பிரக்ருதித்தான் உபாதான காரணம் என்கின்றனர்.

வேத பிராமாண்யத்தை ஒத்துக்க கொள்கிற கணாத, கௌதம ரிஷிகளையும்
ஜைன, பௌத்தர்களோடு சேர நிராகரித்தமைக்கு காரணம் , இவர்களுடைய வாதங்கள் தர்க்கத்துக்கு அனுகுணமாக இருந்ததாயினும்
வேத சாஸ்திரத்துக்கு விருத்தமானவை அதாவது இவர்கள் நால்வரும் தர்க்கத்தைக் கொண்டு,
பரமாணுதான் ஜகத் காரணம் என்பாதாலேயாம்.
எனவே இங்கு தர்க்கம் அப்பிரமாணம் என்று சொல்லாமல், அப்பிரதிஷ்டிதம் என்பதாக ஸ்ரீபாஷ்யம்,

தர்கா பிரதிஷ்டாநாம் அபி என்று சொல்லிய பிறகு,
இந்த அதிகாரணத்துக்கு அவசியம் என்னவோ என்றால் நால்வருடைய வாதங்களிலும் தர்க்கம் பிரதானமாக இருந்தாலும் ,
பரமாணு என்றால் யாது என்கிற விஷயத்தில் அவர்களுக்குள் விசம்வாதம் உண்டு.
பௌத்தன் அதை க்ஷணிகம் என்கிறான்.
கணாதர் அத்தை நித்யம் என்கிறார்.
ஒருத்தர் அது க்ஞாநாத்மகம் என்ன, ஒருத்தர் அர்த்தாத்மகம் என்கிறார்.
ஹேரம்ப, நரசிம்மவது அநேகாந்தம் என்று ஜைனர்கள் சொல்ல
நித்யத்வ அநித்யத்வாதி , ஏகத்துவ, அநேகாந்த விசம்வாதம் அவர்களுக்குள் உண்டு.

மாத்யமிகனும் , யோகாசாரனும் இருவருமாக சேர்ந்து மஹாயான பிரிவு.
சௌத்திராந்திக, வைபாஷிகர்கள் ஹீனயான பிரிவு. நாலு பிரிவுக்கும் பொதுவான கொள்கை ஸர்வம் க்ஷணிகம் என்பது.
வேற்றுமையாவது,
வைபாஷிகன் – பாஹ்யார்த்தம், ஆந்தரார்த்தம் இரண்டும் சத்யம் .
சௌத்திராந்தன் – பாஹ்யார்த்தம் சூன்யம் (அ ) மித்யா.
யோகாசாரன் – விஜ்ஞானம் சத்தியம். மற்றவை மித்யா.
மாத்யமிகன் – ஸர்வம் சூன்யம்.

ஸது
அஸது
ஸதஸது
ஸதஸத் விலக்ஷணம்
என்கிற 4 ஸ்திதியை தாண்டினது சூன்யம்.

சதுஸ் கோடி விநிர்முக்தம் சூன்யம் மாத்யமிகா விதும்.

நம்முடைய சம்பிரதாயத்தில், வேத மூலம் தான் பிரதானம். எல்லா வஸ்துவும் ஸது என்பதாக.
அஸது என்பதே கிடையாது, முயல் கொம்புபோல.
ஸதஸது என்றால் ஸ்வ – ரூபேண ஸது, பர – ஸ்வரூபேணா அஸது
புத்தகம் என்பது புத்தகம் என்ற கணக்கில் சத்யம்.
மாடு பேனா இன்னும் தன்னைத் தவிர்ந்த எல்லா கணக்கிலும் அசத்தியம்.

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம் —பிரயோஜநவத் வாதிகரணம்: (2-1-10)-ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

July 6, 2020

பிரயோஜநவத் வாதிகரணம்: (2-1-10)

பிரஹ்ம காரண வாதத்தை மறுக்கும் முகமாக, பிரஹ்மம் ஜகத் காரணம் இல்லை என்பதற்கான காரணங்கள்
ஒவ்வொரு குணத்தையும் இட்டு அவனுடைய – ஸர்வக்ஞத்வம் ஸர்வ சக்திமத்வம் இவைகளை மறுத்த போது ,
அத்தை எல்லாம் சரிக்கட்ட, இப்போது
அவன் செய்கிற ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் இல்லையாய் அவனுடைய காருண்யத்வாதிகளை இல்லை செய்கிறார்கள்
பூர்வபக்ஷதாலே–

————-

சூத். 2-1-32 :: ந பிரயோஜந வத்வாத் —

ஸது ஏவ சௌம்ய – என்று இருக்கிற பிரஹ்மம் ஸகலேதர விலக்ஷணனாய், ஸர்வ சக்திமானாக
ஜகத் ஸ்ருஷ்டியை செய்வதற்கு சக்தி இருந்தாலும் –
அவாப்தஸமஸ்த காமனய் – எல்லா ஆசையும் நிறைவேறினவனான படியாலே – பாலாபிஸந்தி இல்லையாய்
பிரஹ்மம் ஸ்ருஷ்டிக்கு காரணமாகாக மாட்டாது. –
ந பிரயோஜன வது என்பதாக பூர்வ பக்ஷம்-

அவாப்த ஸமஸ்த காமேப்ய ஸ்ருஷ்டியா சிந்தனம் பிரயோஜனம்
சேதனே ஜீவா இவ ஹந்ததே கருணா ஹரே! – நாநவாப்த அவாப்த்தவ்யம் வர்ததே கர்மணா இவ – கீதை.
ஒரு காரியத்தை செய்ய இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
1. ஸ்வார்த்த பிரயோஜனம்.
2. பரார்த்த பிரயோஜனம்.
இரண்டு காரணமும் இல்லாதபோது ஜகத் ஸர்கம் ந கிஞ்சித்து பிரயோஜனம்.
அவாப்த ஸமஸ்த காமன் என்பதால் தனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.
பிறர்க்காகவாக ஆகின், அது அநுக்ருஹ பலனாக இருக்க வேண்டும்.
அதற்கு கர்ப்பவாசம், ஜன்மம், வார்தக்யம், மரணம், நரகம் என்று துக்காவகமான ஜகத்தை சிருஷ்டிக்க மாட்டான்.
இப்படி உபய பிரகாரத்தாலும் நிஷ்பிரயோஜன காரியம் ஜகத்து என்பதால், பிரஹ்ம காரணம் நோபாபத்தியதே.
பிரஹ்மமானது ஜகத்துக்கு காரணமாகாது என்பது ஆஷேபம். இதற்கு பதில் அடுத்த சூத்திரத்தில் சொல்லப் படுகிறது.

————

சூத். 2-1-33 :: லோகவத்து லீலா கைவல்யம் —

பொருளென்னு இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் அருளுள்ளவன் தாள் அடைவிக்கும் முடித்தே — நம்மாழ்வார்.
வித்தும் இடவேண்டும்கொலோ ? விடையடர்த்த பத்தி உழவன் பழம் புனத்து — நான்.தி.வ.- 23.
இந்த பாசுரங்களில் ஆழ்வார்கள் காட்டியதை இல்லை செய்யப் போமோ?

ஜகத்தை ஸ்ருஷ்டிப்பதன் பயன் தன்னுடைய லீலைக்காக மட்டுமே என்பது பூர்வ பக்ஷ ஆக்ஷேபத்துக்கு பதில்.
கைவல்யம் என்றது ஐஸ்வர்ய, கைவல்யமாகிற தர்மார்த்த காம புருஷார்த்தங்களைப் பற்றி அல்ல.
கேவலம் லீலா ரசத்துக்காவே என்ற பொருளில் சொல்லப்பட்டது.
லோகவத்து என்றால் லோகத்தில் பிரபுக்கள் லீலைக்காக சில விளையாட்டு கேளிக்கைகளில் ஈடுபடுவது போல என்று கொள்ளவேண்டும்.

என் பந்தும் கழலும் தந்து போகு நம்பி – என்று பிராட்டிக்கு லீலோபகரணமான – கந்துகம் எது என்றால்
அண்டமும், அண்டத்திலுள்ள சேதனாம்சமும் ஆம்.
மட்டை அடி உற்சவத்தில் , புஷ்பத்தைக் கொண்டு செய்த பந்தை எறிந்து விளையாடுவதைப் போலேயாய் கொள்வது.
புஷ்ப பந்து விளையாட்டு வேணுமானால் ரஸமாக நடக்கலாம், இந்த துக்காவக சிருஷ்டியில் ஆயாசம் தானே மிஞ்சும் என்றால்
அத்தை அவன் சங்கல்ப மாத்திரத்திலே பண்ணுவதால் , இதிலுள்ள ஆயாசமும் அதற்கு இல்லை என்பதாக விளக்கம்.
நிலை பெருத்தலும் நீக்கலும் அலகிலா விளையாட்டுடையான் என்று இவ்வுலகில் லீலா ரசம் என்றால் ,
நித்திய விபூதியில் அனுபவம் போக ரசம் என்றும் கொள்க.

—————–

சூத். 2-1-34 :: வைஷம்ய நைர்க்ருண்யே ந ஸாபேக்ஷத்வாத் ததாஹி தர்சயதி —

தாரதம்ய விஷம ஸ்ருஷ்டியாலே, நீங்கள் சொல்லுகிற பிரஹ்மத்துக்கு பாரபக்ஷ , ஒருதலையாக நடத்துகிற தோஷமும்,
நைர்க்ருண்யமாகிற கருணை இன்மையாகிற தோஷமும் சம்பவிக்கும் என்று சாங்கியன் சொல்ல,
ந – இல்லை
சாபேக்ஷத்வாத் – கர்மம் காரணமாகவே ஸ்ருஷ்டி நடக்கிறபடியால்
ததாஹி தர்சயதி – என்பதாக ஸ்ருதிகளில் காட்டப்பட்டு இருக்கிற படியாலே.

கொடுவுலகம் காட்டேல்
இது என்ன உலகியற்கை
என்று ஆழ்வார் வெறுக்கும்படியான உலகம் ஸ்ருஷ்டிப்பவனை கருணை உடையவன் என்று எப்படிச் சொல்வது?
கருணையே வடிவான பிராட்டி புருவ நெறிப்பில் பிரம்மா முதல் பிபீலிகா வரை ஜந்து ஜாதங்கள் படைக்கிறான் என்றதால்,
அவனுக்கு அகில ஹேய பிரத்யநீக கல்யாணைகதானத்வம் எப்படி சித்திக்கும்? – என்பது கேள்வி.

ஸாபேக்ஷத்வாத் – இந்த வைஷம்ய நைர்க்ருண்யத்துக்கு வேறு ஒரு அபேக்ஷை – காரணம் உண்டு.
அவாப்த ஸமஸ்த காமனுக்கு ஸ்வயம் அபேக்ஷை எதுவும் இல்லை.
விஷம ஸ்ருஷ்டிக்கு சேதநாசேதன அநாதி சித்த பாப வாசனைதான் காரணம்.
அவரவர் பாப-புண்ய தோலனத்துக்குச் சேர பாப சரீரமோ, புண்ய சரீரமோ கொடுத்து, அந்தந்த ஆத்மாவை அதிலே புகுர விட்டு,
தானும் அனுபிரவேசம் பாண்ணுகிறான் என்கிற சமஷ்டி ஸ்ருஷ்டி அளவாக பகவத் சங்கல்பம் அத்தனை

ஆக, அதற்கு பின் அவரவர் போக்கு ஸ்வயமார்ஜிதமாய், படைத்தவன் சாட்சி பூதனாக
”அநஸ்னன் அன்ய சாகி ” என்றொழிந்தானாக சேதனனுடைய பிரவிருத்தி நிவிருத்திகளை முன்னடத்துகிறான் என்பதே
வேதாந்தங்களில் சொல்லப்பட்ட விஷயமாக இருக்க, பகவத் பக்ஷத்தில் காருணயம் அன்றி நைர்க்ருண்யம் சொல்லப் போகாது
கர்ம ஸாபேக்ஷத்வாத் .விஷம ஸ்ருஷ்டிஹி என்பதாக தர்சயந்தி ஸ்ருதி ஸ்மிருதியாதவ :
பிராரப்தம் புக்தைவ ஜீர்ணோ பவேத். என்கிற வசனம் நோக்கத்தக்கது.
மாமேவ ஏ பிரத்யந்தே மாயா ஏதாம் தரிந்தி தே — கீதை. என்று பிரபத்தியாலே பகவத் சரணாரந்த விந்தங்களை
கால் காட்டினார்களுக்கு அல்லது இந்த சம்சாரமாகிற கால் கட்டு கழற்றப்போகாது.
விஷம ஸ்ருஷ்டிக்கு காரணம் பிராரப்தம் தான். ஸ்ருஷ்டி கர்த்தா அன்று. அவன் தயாவான்தான்.
ஸ்ருஷ்டிக்கு பிரதான காரணம். அப்பிரதான காரணம் என்று உண்டு–
அத்துவாரக காரணம் , ஸத்துவாரக காரணம் என்றும் சொல்லுவர்.
அதாவது நேர ஸாஷாத்தாக காரணம் ஒன்று உண்டு. பரம்பரையாக வருகிற காரணம் ஒன்று உண்டு.

நிமித்த மாத்திரம் மே வாசௌ ஸ்ருஜாணாம் ஸர்க கர்மணி –
எப்படி உழுதிட்ட நிலம், நீர், எரு எல்லாம் ஒன்றேயாக இருக்க, விளைகின்ற தானியும் நெல், கோதுமை, சோளம், கேழ்விரகு என்று
முளைப்பதற்கு அதனதன் சக்தி காரணமோ அதுபோல ,
ஸ்ருஜ்யமான அசேதன சம்சாரகமுடைய ஆத்மாவினுடைய சக்தி தான் இந்த விஷம ஸ்ருஷ்டிக்கு பிரதான காரணமமே ஒழிய
கிருஷீவலன் அன்று காண் . இங்கு ஆத்மாவினுடைய சக்தி என்றது அவனுடைய பிராசீன கர்மம் என்று கொள்க.
பகவானும், பிராட்டியும் அந்த ஹிருஷீவலன் போல அப்பிரதான, அமுக்கிய காரணமாவர்.
கரண களேபரம் கடயிதும் தயமான மன : என்று அவர்களுடய தயைக்கு ஒரு குறைவும் இல்லை .

முகுந்த கருணாம் வந்தே முக்தேர் ஸ்வதிக வத்ஸலாம் |
ஸ்வரூப ஸம்ஸ்தௌ யஸ்யா : நிர்ஹேதுக ஸஹேதுகௌ ||– வேதாந்தச்சார்யர்.
பகவானுடைய க்ருபை , எப்படி பிராட்டி சம்பந்தம் இயற்கையானதோ , அதுபோல இயற்கையாக நிர்ஹேதுகம் தான்.
ஆனால் அது சேதனன் விஷயத்தில் பலிக்க – தானியத்துக்கு உழுத நிலமும், தண்ணீரும், எருவும் போல
ஏதோ சில காரண காரியம் அபேக்ஷித்தமானாலும், பகவத் கிருபை ஸஹே துகம் ஆகிவிடாது.
ஸ்வரூபதயா நிர்ஹேதுகம் தான் என்கிற ஸ்வாமி தேசிகனுடைய கருத்தோடு இது ஒத்துப் போகிறதும் காணலாம்.

ஆக, நிமித்த மாத்ரம் முக்தத்வாத் , ந அந்யத் கிஞ்சித் அபேக்ஷதே . ஸ்வ சக்தியா வஸ்துதா வஸ்துதாம்.
Hence Karma are IMMEDIATE CAUSE and God is REMOTE CAUSE for the Creation of this World of Disparities.

நிமித்த மாத்ரம் என்பது உபாதான, நிமித்த, ஸககாரி காரணத்தைப் பற்றியது அல்ல.
விஷம சிருஷ்டிக்கு அமுக்கிய காரணம் என்றபடி.

நின்னோதம் ச கருணம் (துக்கம்) ச ஜகத் விசித்ரம் |
கர்மா வ்யபேக்ஷ்ய ஸ்ருஜதஸ் தவ ரங்க சேஷிநே|| —பராசர பட்டர் ரங்கராஜ ஸ்தவம் உத்தர சதகம் –42-
இந்த கருத்தையே சொல்வதாக அமைந்திருப்பதைக் காணலாம்.

——————

சூத். 2-1-35 :: ந கர்மா அவிபாகாத் இதி சேத் ந அநாதித்வாத் உபபத்தயே ச அபி உபலப்பியதேச

பிரளயகாலத்தில்
தமஸ் பரே தேவ ஏகீ பவதி அக்ஷரம் தமஸி லீயதி — ஸுபாலோபநிஷத்து காட்டியபடி
ஸது ஏவ சௌம்ய ! இதம் அக்ர ஆஸீத்
என்பதாக, பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு ”ஸது” என்று ஒன்றாக இருந்தது.
அந்த ஸது என்கிற பிரஹ்மத்திலே அதி ஸூக்ஷ்மமாக இந்த சேதனாசேதங்கள் எல்லாம் ஒரு ஏகதேசமாய் அடங்கிக் கிடக்க,
ஸ்வேச்சையாலே , சங்கல்ப மாத்ரேண , அந்த சேதனங்களின் உஜ்ஜீவனார்த்தமாக செய்கிற ஸ்ருஷ்டி
அவனுடைய கிருபை அன்றி வேறு எதுவாகும்? அதுவே அதற்கு பிரயோஜனமும் ஆகும்.
அதிலே லீலா ரஸம் பாகியாய் கருணையே பிரதானமுமாய் காரியம் செய்கிறான் என்பது கீழே சொல்லப்பட்டது.
இத்தால் நிர்கிருணன் என்பது மறுக்கப்பட்டது.
வைஷம்ய ஸ்ருஷ்டிக்கு அவரவர் கர்ம பரம்பரையே காரணம் அன்றி காடோப கூடா நிதே என்று பிராட்டி நித்ய ஸம்யோகத்தாலே
அவ்விருவருடைய க்ருணத்துக்கு குறைவே இல்லை.
அவாப்த ஸமஸ்த காமேப்ய ஸ்ருஷ்டியா சிந்தனம் பிரயோஜனம்
சேதனே ஜீவா இவ ஹந்ததே கருணா ஹரே! – என்பதை நோக்கவும்.

இப்போது சாங்கியனும், வைசேஷிகனும் சேர்ந்து
ந கர்மா – ஸ்ருஷ்டி காலத்தில் பிரஹ்மம் தவிர்ந்து ஏதும் இல்லை என்றதால் கர்மா எங்கு வந்தது?
ஸது ஏவ என்றதால் ஜீவ அவிபாக மற்ற பிரஹ்மம் என்றுதானே பொருள் படும்–
ஜீவனே தனித்து இல்லாத போது, கர்மம் எங்கிருந்து வந்தது?
ஸதி குட்யேத் ஸது சித்திரம் ? சுவர் இருந்தால் தானே சித்திரம்?
கர்மம் இல்லாத போது விஷம ஸ்ருஷ்டி கர்மத்தை எதிர்பார்த்து எப்படி நடக்கிறது ?
இதிசேத் ந – என்று சொவீர்களாகில் தவறு.
அநாதித்வாத் உபபத்யதே – க்ஷேத்ரஜ்ஞனும் அநாதி. கர்மமும் அநாதி–
எப்போது இவைகளின் தொடக்கம் என்று அறிய முடியாத படிக்கு அநாதி என்று

ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித் – கடோபநிஷத்து (ஜீவாத்ம அநாதி என்கிறது )
ஸூர்யா சந்த்ரமசௌ யதா பூர்வம் அகல்பயந் – மஹா நாராயண ஸூக்தம்.
(பிரகிருதி அநாதி என்கிறது)
பிரக்ருதிம் புருஷம் ச ஏவம் வித்தி அநாதி உபாவபி — கீதை 13-19.
ஸ்ருதிகளில் சொல்லப் பட்டு இருக்கையால்

சூழ்தகன்றாழ்ந்த்துயர்ந்த என்று மூன்று தத்வங்களையுமே அநாதி, நித்யம் பிரஹது என்று ஆழ்வாரும் காட்டியுள்ள படியால் .
அவிபாகமாக இருந்தபோதும் ஜீவன் என்கிற தத்வம் – ஏகமேவ அதுவிதீயம் என்ற போதும் – உண்டு.
அவை இல்லாமல் போகவில்லை. பரமாத்மா எப்படி அநாதியோ,
அதுபோல ப்ரக்ருதி, ஜீவன் என்கிற மூன்று தத்துவங்களும் அநாதிதான் என்றே தேறும்.
அவரவர்க்கான கர்மாவும் வாசனா ரூபமாக ஜீவ ஏக தேசம்.

சதுர்முக பிரம்மா தொடங்கி ஆஸ்தம்ப பர்யந்தம் கர்ம பாசம் ஒருபோதும் விடுவதில்லை.
அவித்யா நிவர்த்தி ஏவ மோக்ஷம் என்றார் சங்கரர்,
ஏக விம்சதி துக்க துவம்ச மேவ மோக்ஷம் என்றார்கள் நையாயிகர்.
அப்படியன்று.
கர்ம பிரவாகரூப, அவித்யா நிவர்திப் பிரத பகவத் பிரசாதத்தாலே மோக்ஷம் – என்று கீழ்ப்படியிலிருந்து
மேல்படிக்கு வந்து சேரவேண்டும் என்பது தாத்பர்யம்.

தமஸ் பரே தேவ ஏகீ பவதி – என்றாலும்
சேதநாசேதன தத்வங்கள் அதிசூக்ஷ்ம பரிணாமத்தில் , நாம ரூப விபாகமற ஸது என்கிற தத்வத்தில் ஒடுங்கி கிடக்கின்றன-
அமானவனும் தீண்டல் கடன் என்று அவை மோக்ஷ பர்யந்தம், நித்ய பிரளயம், அவாந்தர பிரளயம், ஆத்யந்த்திக்க பிரளயம் என்று
எக்காலத்து எப் பிறப்பிடை தோறும் கர்ம வித்யத ஏவ.

அத்யாயம் 1-3-2 ல் , முண்டகோபநிஷத் மந்திரங்கள்
ததா வித்வாந் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி என்றும்
யதா நந்ய : சயந்தமாநா : சமுத்ரே அஸ்தம் கச்சதி நாமரூபே விஹாய
ததா வித்வாந் நாம ரூபாத் விமுக்த : பராத்பரம் புருஷன் உபைதி திவ்யம் என்றும் –சொல்லியபடி
2வது மந்திரம் பிரளய காலத்துக்கும் பொருந்தும்.
ஆனால் 1, 2 மாக நாம ரூபம் போவது மட்டுமல்லாமல், புண்ய பாபமும் தொலைவதே மோக்ஷ தசை.
இதன் படி, பிரளயத்தில் நாம ரூப விபாகம் இல்லா விட்டாலும், புண்ய பாபங்கள் விடுவதில்லை என்பது காட்டப்பட்டது.

பரமாத்ம ஸம்பத்தி – சேர்க்கை –
நித்ய பிரளயம் – காட நித்ரையிலும் உண்டு.
ஆத்யந்த்திக்க பிரளயம் – பிரம்மாவுக்கு ஆயுசு முடிந்த காலத்தில் -தமஸ் பரே தேவ ஏகீ பவதி-என்ற காலத்திலும் உண்டு.
மோக்ஷ திசையிலும் உண்டு.
வித்யாசம் என்ன வென்றால்
நித்திரை தமஸ் காரியமாதலால் அந்த சேர்த்தியை நாம் உணருவதில்லை.
பிரளயத்தில் வென்னில், கரண-களேபரம் அற்ற நிலையில் அறிவதற்கில்லை.
அந்தர்யாமி அவஸ்தையிலும் உண்டு–ஆகிலும் அது யோகிகளுக்கு மட்டுமே பிராப்தம்.
மோக்ஷ தசையில் மட்டுமே அது ஸர்வோபஜீவிதம்.

சிந்தயந்திக்கு கிருஷ்ண சாஷாத்காரத்தாலே புண்யங்கள் தொலைய, அவனை அடைய ஒட்டாது மாமிமார்கள் தடுத்த
விரஹ தாபத்தால் பாபங்களும் தொலைந்த படியாலே மோக்ஷம் உடனே பெற்றாள்.
தீர்க்க சிந்தயந்தியான ஆழ்வாருக்கும் அடியிலே மயர்வற மதிநலம் அருளி, ஸம்ஸ்லேஷ விஸ்லேஷதிகளாலே
பகவத் சாக்ஷஅத்காரம் கிட்டினபோதும் மோக்ஷம் போகாமல் விட்டு வைத்தது
நாடு திருந்த;
நச்சுப் பொய்கை ஆகாமைக்கு;
பிரபந்தம் தலைக்கு கட்ட
என்றார் இறே ஆசார்ய ஹ்ருதயக் காரர்.

பிரதான காரண வாதியான சாங்கியர் என்ன,
பரமாணு காரண வாதியான வைசேஷிகன் என்ன,
நீங்கள் வைதீகர்களாக இருந்தும் , பிரவாகதாயா கர்ம சித்தாந்தத்தை ஒத்துக் கொள்ளாது போவீர்களாகில்,
நீங்களுக்கும் ஸ்வபாவ வாதியான சாருவாகர்கள் போலே யாவீர்கோள்? என்பதான நிந்தனைக்கு ஆஸ்பதம்.

சாருவாக மதம் ரிணம் கிருத்வா க்ருணம் பிபேத் என்கிற கண்டதே காட்சி. கொண்டதே கோலம் என்றிருக்கிற நாஸ்திக வாதிகள்.
மயில் தோகைக்கு வண்ணத்தை தீட்டியது, காக்கைக்கு கடூர ஸ்வரமும், , குயிலுக்கு மதுர ஸ்வரமும் போல
பிரகிருதி பேதம் ஸ்வபாவம் அல்லாது கடவுள் என்ன தூரிகை கொண்டு தீட்டினானா?
அல்லது தொண்டைக் குழியை வளைத்து நிமிர்த்தினானா? என்கிறான்.
அதற்கு புண்ய பாபங்களை கற்பித்து, தர்மாதர்மங்களை சிருஷ்டிக்க வேண்டாம் என்பதான அவைதிக மதம்.
அவர்களோடு ஓக்க கர்மாவை கடைக் கணிச்சிக்க வேண்டாம் என்பதான புரிதலோடு
பூர்வ பக்ஷம் அனைத்தும் தள்ளுண்ணப் பட்டது.

—————-

சூத். 2-1-36 ::ஸர்வ தர்ம உபபத்தே : ச —

சாங்கியர்களுடை பிரதானத்துக்கு இல்லாத குணங்கள்,
வைசேஷிகர்களின் பரமாணுவுக்கு இல்லாத தர்மங்கள் ,
லோக விசஜாதீயமான பர பிரஹ்மத்திடம் இருக்கின்றபடியால், நீங்கள் சொல்லுகிற பிரதான காரண வாதமோ,
பரமாணு காரண வாதமோ பொருத்தமில்லை.
பிரஹ்ம காரண வாதம் தான் அவிசாரணீயம். உங்களுடைய மதத்தில் என்ன என்ன தர்ம வைகைல்யம், நியூனதை ,
குறைபாடு உண்டோ ,அது எதுவும் பிரஹ்ம காரண வாதத்தில் கிடையாது.
ஜகத் காரணத்து தேவை என்று எவை எவை உள்ளனவோ அவை அனைத்தும் பிரஹ்மத்திடத்தில் உள்ளதால்-
பிரஹ்மமே ஜகத் காரணம் என்பது ஸ்திதம்.

இதம் சூத்ரம் ஸர்வ அதிகரண சேஷம்–
இந்த கடைசீ சூத்ரம் அவிரோத அத்யாயம் 10 அதிகரணத்துக்கும் மட்டும் அல்லாது ,
கீழ் உள்ள ஸமன்வய அத்யாயத்திலுள்ள அனைத்து அதிகரணத்துக்குமாக சேர பிடித்து சொன்னதாகக் கொள்ள வமையும்.

ஸ்ரீபாஷ்யம் 2ம் அத்யாயம் முதல் பாதம் ஸம்பூர்ணம்.

—————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானத்திலும் -பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானத்திலும் -உள்ள அமுத மொழிகள் —

July 4, 2020

ஸ்ரீ சர்வேஸ்வரன் -லோக த்ருஷ்டியாலும் -வேத த்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்
தானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –
திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து
தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்
வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே
திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு
க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹஸ்யத்தை உபதேசித்து அருளுகிறார் –

முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க-அதுக்கு களை பிடுங்குகிறார் –
ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி –
அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை
உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –

————

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –
ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–தந் நிவ்ருத்திக்கு
ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –
ஆழ் பொருள்-மங்கிப் போகிற பொருள்-நசிக்கிற பொருளை -என்றுமாம் –
இப்படி துர்வகா ஹமான பொருளை நானே அனுபவித்துப் போகில்-சம்சாரிகள் அனர்த்தப் பட்டு போவார்கள் என்று
செம்பிலும் கல்வெட்டிலும் வெட்டுமா போலே பிரபந்தத்தில் இட்டு இதுக்கு பிரதானனாய் அறிவித்தேன்-
சம்சாரத்தின் உடைய தண்மையையும் நான் சொன்ன அர்த்தத்தின் அருமையையும்
உணர்ந்து இவ்வர்த்தம் மங்காமல் புத்தி பண்ணுங்கோள்-நீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-

———–

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2-

ஸ்ருதி பிரக்ரியையால் நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன்
ப்ரஹ்மாதிகள் கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் –
இதில் –இதிஹாச பிரக்ரியையால் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு-
ப்ரஹ்மாதிகளுக்கு சிருஷ்டிக்கு அப்பால் உள்ள நன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் -என்கிறார்
எல்லா சாதனா அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்-அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-

————-

ஞாலத் தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில் அரு பொருளை யான் அறிந்தவாறு –3-

கார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும்-ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே
அத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை முட்டக் காண வல்லார் இல்லை –
நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் -என்கிறார்-
அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது

—————

எப்பொருட்கும் சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4-

தனக்கு பிரகாரமான சகல பதார்த்தங்களையும் வஹிக்கிற வாசக சப்தங்களுக்கும் வாச்யனாம் படி
இருக்கிற படியைக் காட்டி என்னை யடிமை கொண்டவனைத் திரளச் சொன்னேன்
சர்வ சப்த வாச்யன் ஆனவனை எல்லா பொருளுக்கும் சொல்ல வேண்டும்படி நின்றவனை தொகுத்து சொன்னேன் –
அவதரித்து எல்லார்க்கும் ஸ்துதி சீலனாய் நின்றவனை -என்றுமாம்-

————-

யுள் வாங்கி நீயே–5-
சம்ஹரிக்கிறாய் நீயே –ஜகத் அடைய சம்ஹரித்த நீயே-
தன்னுடைச் சோதி ஏற எழுந்து அருளுகிற படி யாகவுமாம்

——-

வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் ஈனவரே யாதலால் இன்று –6-

நிரதிசய போக்யனான ஆச்சர்ய பூதனாய் வ்யாமுக்தனாய் ஸ்ரீ ய பதியான சர்வேஸ்வரனை –
ஏத்தாதார் ஈனவரே யாதலால் இன்று – அவர்கள் ஏத்தாமையாலே தண்ணியரே
ஹீநர் என்றும் அஹீநர் என்றும் நான் பிரதிபாதிக்க வேணுமோ என்கிறார்-

————-

நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே நீ என்னை அன்றி இலை -7-

இப்படி இருப்பது ஓன்று உண்டோ என்று வேணுமாகில் பார்த்துக் கொள்ளாய் என்று
நடுவே பிரமாணத்தைப்-நாரணனே -என்று பேர்த்திடுகிறார்-
உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும் விடப் போகாது –

———-

இலங்கையை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை–8-

கூரிய அம்பை யுடையவன் துணை யல்லது நம்முடைய குறையில் நமக்கு சாபேஷை இல்லை –
வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே- எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள்-
அசேதனமான க்ரியாகலாபத்தின் உடைய கூர்மையை-விஸ்வசிதது இருப்பர்கள் –
இவர்கள் சக்கரவர்த்தி திருமகன் உடைய அம்பின் கூர்மையை-தஞ்சமாக நினைத்து இருப்பர்கள் –

—————-

கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு–9-

அண்டம் விம்ம வளர்ந்தவனுடைய திரு உலகு அளந்து அருளின சர்வேஸ்வரன் திருவடிகளை-அக்காலத்திலே
நீல கண்டனுடைய சிரஸ் ஸிலே படும்படியாகக் கழுவினான் –
சாஹசிகரான பிரஜைகள்-வழியே வழியே வர வேணும் என்று தீர்த்தத்தை மேலே தெளிப்பாரைப் போலே –

—————–

ஆங்கு ஆரவாரமது கேட்டு- அழல் உமிழும் பூங்கார் அரவு–10-
திசை வாழி எழ -என்னும்படி திரு உலகு அளந்து அருளின போது உண்டான-வார்த்தை கேட்டு –
தன் பரிவாலே பிரதிகூலரான நமுசி ப்ரப்ருதிகள் மேலே விஷ அக்னியை உமிழா நிற்பானாய்-பரிவின் கார்யம் ஆகையாலே
அடிக் கழஞ்சு பெறும் படியாய் இருக்கிற அழகிய சீற்றத்தை யுடைய திரு வநந்த ஆழ்வான்-

—————

மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12-

மடுவிலே பெரிய முதலையினுடைய வாயிலே அகப்பட்ட யானையை விடுவிக்கைக்காக திருவாழியை விடுக்கைக்கும்
இரண்டு இரண்டு சரீரத்தையும் விட்டு இரண்டும் முக்தமாம் படியும் நினைத்தாய் –
இரண்டும் ஒன்றை ஓன்று விட்டுப் போய் ஸூகிகளாம்படி -என்றுமாம்-
விடும்படிக்கு ஈடாக சங்கல்பம் இன்றிக்கே-திரு ஆழியை விடுகைக்கு நினைத்தாய் –
பூர்வ ஆகாரங்களை விட்டு-முதலை -கந்தர்வனாய்-ஆனை திருவடிகளைப் பெறும்படிக்கு ஈடாகவும்-நினைத்தாய்-

—————–

வீடாக்கும் மெய்ப்பொருள் தான் – வேத முதல் பொருள் தான் -விண்ணவர்க்கும் நற்பொருள் தான் -நாராயணன்-13-

மோஷத்தை தருவிக்கும் மெய்யான உபாயமும் –வேதை க சமதி கம்யனுமாய் –அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்-
பிராப்யனுமாய் இருக்கிறானும் – சர்வேஸ்வரன்-
மோஷத்தை உண்டாக்கும் அவயவஹீத சாதனம் –மோஷ ப்ரதன் என்று வேதத்திலே பிரதிபாதிக்கப் படுமவன் –
நித்ய ஸூரிகளுக்கு பிராப்யன் ஆனவன் –சர்வேஸ்வரன் –

————–

திருமால் -தன் பேரான பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14-

திருமால் தன் பேரான பேசப் பெறாத என்று விசேஷிக்கையாலே இவ்வர்த்தத்துக்கு இசையாத ஏகா யனனை நினைத்து
அருளுகிறார் என்று -பட்டர் –பிணச் சமயர் என்கிறது –
தேவதாந்திர பரரையும்-உபாயாந்தர பரரையும் -அபூர்வம் பல ப்ரதம் என்கிற குத்ருஷ்டிகள் ஆகவுமாம் –
அவற்றைக் கேட்டு-காலாழும் நெஞ்சழியும் என்று பகவத் விஷயத்தினுள் புக்கவர்கள்
ஆழங்கால் படுமாப் போலே -ஈடுபடுவர் -என்றுமாம்-
இப்படி சர்வ ரக்ஷகனானவனுடைய திரு நாமங்களைப் பேசப் பெறாதே -ஜீவியா நிற்கச் செய்தே -ம்ருதப் ப்ராயராய் இருக்கும்
பாஹ்ய குத்ருஷ்டிகள் வேறே ஓர் அர்த்தம் உண்டு என்று சூழக் கேட்டு-அனர்த்தப் படுவார் சிலர் உண்டு என்றும்-
பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார்

———

மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீர்க்கண்டன் கண்ட நிலை-15-

நீலகண்டனை புருஷகாரமாகக் கொண்டு மார்க்கண்டேயன் கண்ட பிரகாரத்தை அவ்யவதாநேந காணலாம்
நீர்- விஷ ஜலம் -நீல கண்டன் -என்றபடி –

————–

பல மன்னர் போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-

ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆனபின்பு
நம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என் என்கை
ந்யாசோ நாம பகவதி – -இஸ் ஸ்லோகத்தில் நினைத்த உரம் இப்பாட்டால் சொல்லுகிறது-

—————

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –
பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –சாத்தி இருப்பார் ஆகிறார் –வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-
பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார் –தவம் -ஸூ க்ருதம்-

———————-

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–21-

ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின எம்பெருமானுடைய சீற்றத்தையும்-
அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார் –நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் –
இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்–அக்நி போலே உஜ்வலமான திருமேனியை உடையனாய்-
நித்ய சூரிகளுக்கு நிர்வாஹன் ஆனவன்
அன்றிக்கே-அக்நி கொடுக்கும் ஹவிசை உடைய இந்த்ராதிகளுக்கு நிர்வாஹகன் –
அரி பொங்கிக் காட்டும் அழகு – நித்ய சூரிகள் பரிய இருக்குமவன்-ஆஸ்ரித அர்த்தமாக நரசிம்ஹமாய்ச்
சீறிக் காட்டின அழகு–இவை இவை என்றது நரசிம்ஹம் வளர்ந்து தோற்றின அழகுகள் பாரீர் -என்றவாறு
சாஷாத் காரமான ஸ்வ அனுபவத்தைப் பிறருக்குச் சொல்லுகிறார் –
நரசிம்ஹத்தின் யுடைய அருமை சொல்லிற்றாகவுமாம் –

———–

அழகியான் தானே அரி உருவன் தானேபழகியான் தாளே பணிமின்–22-

ஆபத் சகனானவனே அழகியான் –த்யஜிக்கிற சரீரத்திலும்-வர்த்திக்கிற சரீரத்திலும்-புதுயிகோளாய் இருந்துள்ள நீங்கள் –
உங்கள் கையில் உங்களைக் காட்டிக் கொடாதே-கால த்ரயத்திலும் சரீரங்களில் பிரவேசிகைக்கு நிதானத்தையும்-
அதுக்கு பரிகாரத்தையும் அறியுமவனை ஆஸ்ரயிக்க பாருங்கோள்-
பிரகிருதி வாசி அறிந்து பழையனாய் பரிகரிக்கும் வைத்தியனைவ்யாதிக்ரஸ்தர் பற்றுமா போலே

—————

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-

பகவத் விஷய பக்திக்கு இவன் செய்ய வேண்டுவது ஓன்று யுண்டோ –
பிரதிபந்தகங்களைத் தானே போக்கி -ருசியைப் பிறப்பித்து -பக்தியை விளைப்பானான -எம்பெருமானுமாய்ப்
பழையதான சம்சாரப் பரப்பில் பழம் புனம் என்கிறது –
விளைந்து வருகிற நிலத்தில் உதிரியே முளைக்குமாபோலே ஈஸ்வரன் சம்சார பிரவாஹத்தைப் பண்ணி
வைத்த படியாலே யாத்ருச்சிகமாக ஸூ க்ருதங்கள் பிறக்கும் என்று கருத்து –
ஈர நெல் வித்தி என்கிறபடியே விஷய ருசி யாகிற விதையைத் தான் தேடி இட வேணுமோ
அவன் வடிவோடு போலியான தன் வடிவைக் காட்டி தத் விஷய ருசியை வர்ஷூ கவலாஹம் தானே
முன்னின்று பிறப்பியா நிற்கும் -இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்-
இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் –
ருசி பிறந்த பின்பு பிராப்தி அளவும் நாம் தரிக்கைக்கு-அவன் திருமேனிக்கு போலி உண்டு -என்கை-

—————-

எற்றைக்கும் கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை கண்டுகொள் கிற்குமாறு –26-
கடல் போலே இருண்டு குளிர்ந்த வடிவை யுடையவனே உன் அழகிலே பிணிப்பு யுண்டேன்-
ஸ்ரமஹரமான வடிவை உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும் –

————–

மால் தான் புகுந்த மட நெஞ்சம் –27-
மால் தான்-ஈஸ்வரன் வ்யாமுக்தனாய்-அவன் தானே அபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் பக்கலிலே புகுரா நின்ற பின்பு
கடல் வண்ணா –நான் அவன் திரு நிறத்திலே சிறிது அறிந்தேன் என்று இது =பேறாகக் கொள்வேனோ –
ஒரு லாபமோ -என்கிறார்-

—————-

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28–

இது என்று ப்ரத்யஷ சாமா நாகாரமான ஸ்ரீ இராமாயண பிரசித்தியைச் சொல்லுகிறது –
இது என்று பிரத்யஷமாதல் -ஈடுபாடு ஆதல்-வில் பிடித்த படியில் -ஈடுபட்டு அருளுகிறார்-

————–

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-

கோயிலிலே வந்து ஸூ லபனானவன் என்னை அடிமை கொண்டான் –இனி சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் –
அவன் என் ஹிருதயத்திலே நின்றான் இருந்தான் . திருப்பாற் கடலிலே திரு அரவணை மேலில் கண் வளர்ந்து அருளுமோ –
அரங்கு – சம்சாரம் ஆகிற நாடக சாலை –பிறவி மா மாயக் கூத்து -என்று-சம்சாரம் ஆகிய
நாடக சாலையில் என்னை ப்ரவேசியாமல்-காப்பார்
என் ஹிருதயத்தில் புகுருகைக்கு-அவசர ப்ரதீஷனாய் கோயிலிலே கண் வளர்ந்து அருளி-அவகாசம் பெற்று-
என் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ –

————-

வானோர் பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும் கரு மாயம் பேசில் கதை –31-

ஒருத்தன் தலை அறுத்துப் பாதகியாக-ஒருத்தன் சோச்யனாக- இருவருடைய வியசனத்தையும் போக்குவதும் செய்து –
ருத்ராதிகளுக்கும் ரஷகனானவனை ஆஸ்ரயியாத பேய்காள்
உங்களுக்கு சம்சாரத்தில் பிறக்கும் ஆச்சர்யமான துரிதங்கள் பேசி முடிக்க ஒண்ணாது –
நித்ய ஸூரிகளுக்கு பிராப்யன் ஆனவனை-ஏத்தாத அறிவு கேடர்காள் – இவ்வறிவு கேடு கிடக்கப் பிறவிக்கு அடியான
கர்ப்ப ஸ்தானத்தில் உள்ள ஆச்சர்யம் சொல்லப் புகில்-மகா பாரதம்-

————–

குறிப்பு எனக்கு க் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்-34-

என் நெஞ்சில் ஓடுகிறது எனக்கு இனிதாகத் திருக் கோட்டியூரிலே வந்து எழுந்து அருளி இருக்கிற நாயனாரையும்-
திருவேங்கடமுடையானையும் ஏத்துகை-
ஒருக்கால் விட்டுப் பிடித்தாலோ என்ன -வெவ்விய பாபங்களும் அதின் பலமான நோவுகளும் நலியாத படி
சம்சாரத்தைக் கடத்தக் கடவதான அவன் திருவடிகளை விடுவேனோ –
சரீரம் அடியாக வந்த வியாதியும்-வ்யாதிக்கு ஹேதுமான கர்மமும் கிட்டாமல் மாற்றுமவன் திருவடிகளை மறப்பேனோ –

—————

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

போக ப்ரதர்க்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரிலே நீர் வாய்ப்பான திரு வல்லிக் கேணியிலே
திரு வநந்த வாழ்வான் ஆகிற குளிர்ந்த படுக்கையிலே சேஷ்டியாதே -வாய் திறவாதே -கிடவா நின்றான் –
இதுக்குக் காரணம் பிறந்த அன்றே ஸூகுமாரமான திருவடிகளாலே லோகத்தை அளந்த ஆயாசமோ -என்கிறார் –
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும்
திருவடிகளை கொண்டு- காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
இல்லாததை உண்டாக்கும் சங்கல்பம் போராதோ -உண்டானதை உஜ்ஜீவிப்பிக்க-
வாய்ப்பான படுக்கையில் அலை எறிவாயிலே கண் வளருகிறது வ்யசன அதிசயத்தால் -என்று கருதுகிறார்-

——————–

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

திருக் குடந்தை -திரு வெக்கா-திரு வெவ்வுள் -கோயில் -திருப்பேர் -அன்பில் -திருப்பாற் கடல் –
முதலான இடங்களிலே திரு அரவணை மேல் கண் வளர்ந்து அருளுகிறான் –
ஆதி நெடுமால் –சர்வ காரணமாய் ஆஸ்ரிதர் பக்கல் பெரும் பிச்சன்-
அணைப்பார் கருத்தனாவான் – ஆஸ்ரிதர் கருத்திலே ஒழுகைக்காக –
அவர்கள் ஹிருதயத்தில் புகுகைக்கு -என்றுமாம் – இளைப்பாகில் ஓர் இடத்திலே கிடக்க அமையும்
பல இடங்களிலே திரு அநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுகிறது –
அவ்வவ தேசங்களிலே ஆஸ்ரயிப்பார் யுடைய நெஞ்சிலே புகுகைக்கு அவசரம் பார்த்து -என்கிறார் –
தான் புகுரப் புக்கால் ஆணை இடாதார் ஹிருதயத்தில் புகுருகைகாக இப்படி அவசர ப்ரதீஷனாக வேண்டுவான்-
என் என்னில் -தான் ஆகையாலே-

—————–

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி நிற்கின்றேன்-நின்று நினைக்கின்றேன் –-40-

விசேஷித்து ஓன்று செய்தது இல்லை -அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி இத்தைச் சொல்ல –
அநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு நின்று ஒழிந்தேன்
இப்பேற்றை நின்று அனுசந்திப்பதும் செய்யா நின்றேன் –எது சொல்லிற்று எது பற்றிற்று என்று-விசாரியா நின்றேன்-

——————-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41-

சென்று காணல் உறுகின்றேன் -என்று அந்வயம் – இப்படி இவர் திரு மலையைக் காண ஆசைப் பட்டவாறே –
அவன் தான் திரு மலையில் சம்பத்துக் கிடக்க வந்து இவர் திரு உள்ளத்திலே புகுந்து அருளினான் –
திருமலையில் சம்பத்தைக் காண ஆசைப்படா நிற்க என் மநோ ரதத்தை விசதம் ஆக்கினார் -என்கிறார் –
சம்பத்தாவது திரு அருவிகளோடே கலந்து முத்துக்கள் சிதருகையும்-திருவேங்கடமுடையானுக்கு
திருப் பல்லாண்டு பாடுவாரும் வேத பாராயணம் பண்ணுவாரும்- ஆடுவாரும் –

—————-

ஆற்றங் கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து ஆச்சர்ய பூதனை-அனந்தரம்
திருக் கபிஸ்தலத்திலே கண் வளர்ந்து அருளுகிற கிருஷ்ணன் –
உன்னுடைய ரஷணததுக்கு நானே கடவன் -நீ சோகிக்க வேண்டா -என்று அருளிச் செய்த
சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே கிடக்கும்
அவனுடைய திருநாமங்கள் ஹிருதயத்தில்-கிடக்கும் எனக்கு
தத் விஷய ஜ்ஞானம் அவன் வார்த்தை -அவன் விஷயமான திரு நாமம் -இரண்டு அர்த்தங்களும் உண்டே-

—————-

என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

உன்னை அறிந்த என்னுடைய மதிக்குப் பரமபதமும் விலையாகாது –
சரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ -என்கிறார்
ஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே அவனும் எனக்கு ஒப்பு அன்று –
சம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –

——————

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

சேதனரோடு கூடி இருந்த புண்ய பாப ரூப கர்மங்கள் ஆவான் –பெரிய குருந்தத்தைச் சாய்த்தவனே .
பெரும் குருந்தம் சாய்த்தவன் என்கிறது சொன்ன பொருளுக்கு சாதனமாக திருஷ்டாந்த உக்தி –
வேறு பட்டிருக்கிற தேவதைகள் -அசுரர்கள் -தாரகை தான் -நஷத்ரங்கள் தான் என் ஹ்ருதயம் தான் –
இது எல்லாம் அவன் இட்ட வழக்கு -ததீனம் இல்லாதது ஒன்றும் இல்லை –ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே –
நெஞ்சுக்கு எம்பெருமானோடு யுண்டான ப்ராவண்யத்தைக் கண்டு -என் நெஞ்சமானவர் -என்கிறார் –

——————

கிளரொளி என் கேசவனே கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

மிக்கு இருந்துள்ள ஒளியை யுடையையாய் பிரசஸ்த கேசனானவனே –
அனர்த்தப் படாமே நிர்வஹிக்கிற உனக்கு நான் அடிமை –
இவருடைய ஸ்நேஹத்தை கண்டு இவரிலும் காட்டில் ஸ்நேஹித்து இவருக்கு நிரதிசய போக்யனாய்
இவருக்கு தன்னுடைய அனுபவ ஸூகத்தையும் கொடுத்து
இன்னமும் எல்லா ஸூ கத்தையும் கொடுக்க வேணும் என்று பிச்சேறின ஸ்ரீ யபதி படியை அனுசந்தித்து
நீ அங்கனே அபி நிவேசித்தாய் ஆகிலும் எனக்கு அவை எல்லாம் வேண்டா
என்னுடைய ஸ்வரூப அநு குணமாக நான் அடிமை செய்ய வமையும் -என்கிறார் –
சர்வஞ்ஞன் ஆனவனுக்கு நான் உனக்கு ஆள் என்று-சொல்ல வேண்டாது இருக்க ஆள் என்று சொல்லிற்று-
அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும் என்று
முறை உணர்த்த வேண்டுகிறது-அவன் விரும்பின படியை கொண்டு-

———————-

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்–62-

அபாங்கா பூயாம் சோ யதுபரி-என்னும்படியே-இன்ன வஸ்து என்ன வேண்டா –
ஏதேனும் ஒரு வஸ்துவிலே அவளுடைய கடாஷம் உண்டாகில்-அது சர்வேஸ்வர தத்வம் ஆகிறது –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தமும் தன் அதீனமாய் -வேறு ஒன்றால் அறியாதது –-ஒரு சேதனர் ஆகில் அறியலாம்

———-

பொன் மகரக் காதானை ஆதிப் பெருமானை நாதானை நல்லானை நாரணனை
நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது –64-

ஆஸ்ரயிப்பார்க்கு மேன்மேலே அபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் அழகை யுடையவனுமாய் –
சர்வ காரணணுமாய்-எனக்கு நாதனுமாய் -ச்நேஹியுமாய் -ஆஸ்ரித வத்சலனுமாய் -நம்முடைய சம்சாரத்தைப்
போக்கித் தரும் நாமங்களை யுடையனானவனைச் சொல்லுமதுவே உறுவது –
சொன்ன குணங்கள் திரு நாமத்தினுடைய அர்த்தம் என்கிறார் –சொல்லானை -சப்த மாதரம் –
கை கூலிக் கொடுத்தும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்படி ஸ்ப்ருஹணீ யனானவனை –
அழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே நமக்கு உத்பாதகனானவன் – ஸ்வாமி யாய் வத்சலன் ஆகையாலே
நாராயண சப்த வாச்யனாய் நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும் திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே
இவ்வாத்மாவுக்கு உறுவது –

——————

மாதாய மாலவனை மாதவனை –யாதானும் வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-

தாயைப் போலே பரிவான ஸ்ரீ யபதியை பக்த்யா விவசனாய்ப் பேச ஷமன் அன்றிக்கே-
சொல் மாலையாலே ஏதேனும் வல்ல பரிசு சிந்தித்து இருக்கிற எனக்கு-அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீ வைகுண்டத்திலே
இடம் இல்லையோ -சொல்லிக் கொள் –இதுவே வாய்ப்பு என்று நெஞ்சிலே அத்யவசித்தேன் என்கிறார் -என்றுமாம் –
சொன்மாலை –தம்முடைய திருவந்தாதி–ஸ்ம்ருதி மாதரம் உடையாருக்கும் பரமபதம் சித்தியாதோ என்கை –
ஸ்ம்ருதோ யச்சதி சோபனம் -என்கிறபடியே பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே
ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா என்று தாத்பர்யம்

———-

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68-

ஸ்வ புருஷம் அபிவீஷ்ய பாச ஹஸ்தம் வத்தி யம தஸ்ய கர்ணமூலே பரிஹர மது ஸூ தன பிரபன்னான்
ப்ரபுரஹம் அந்ய ந்ருணாம் ந வைஷ்ணவா நாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-என்றத்தைத் தன் தூதுவரை என்கிறார் –
கூவி என்கையாலே அபி வீஷ்ய-என்கிறவையின் கருத்தை வ்யக்தம் ஆக்கின படி
சாதுவராய் -என்று பாச ஹஸ்தம் -என்றதுக்கு எதிர் தட்டு இருக்கிற படி என்றான்
வத்தி -இருக்கிறபடி –
நமனும் – யம பதத்தில் அர்த்தம் சொன்னபடி
புறம் தொழா மாந்தர் -என்று –மது ஸூ தான பிரபன்னான் -என்கிற பதத்தில் அர்த்தம் சொன்னபடி
பிரபன்னான் -என்கையாவது தேவதாந்திர பஜனம் பண்ணாது ஒழிகை
பர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் க்ரமத்திலே மறக்க்கவுமாம் –
பர்த்ரந்தர பரிக்ரஹம் அற்று இருக்கை பாதிவ்ரத்யத்துக்கு வேண்டுவது –
அந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று நெஞ்சு பறை கொட்டுகிறது-

————————

ஆயன் துவரைக்கோன் – மாயன் அன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –
கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –
ஒரு ஷூத்ரனுக்குத் தோற்று–அவ்விரவிலே கடலைச் செறுத்து படை வீடு பண்ணினான் –
மதுரையில் கட்டளையிலே யங்கே குடியேற்றி–அதுக்கு மேலே நரவதம் பண்ணிக் கொண்டு வந்த கந்யகைகள்
பதினாறாயிரத்து ஒரு நூற்றுவரையும் ஒரு முஹூர்த்தத்திலே-அத்தனை வடிவு கொண்டு அவர்களோடு புஜித்த படி
தொடக்கமான ஆச்சர்யங்கள்
அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்-லோகத்தில் அந்யராய்
ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்–மெய்யான ஞானம் இல்லை –
இடையனாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய் ஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல ஆச்சர்ய குணத்தை உடையவன் –
தேர் தட்டிலே நின்று-உன்னுடைய சகலத்துக்கும் நானே கடவன் நீ சோகிக்க வேண்டா – என்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக
நினைத்து இருக்கைக்கு அடியான தத்வ ஞானம் இன்றிக்கே ஈஸ்வரன்
தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று நினைக்கும்படி சத்ருக்களாய் தாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்-

—————

நல்லறம் ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

நிவ்ருத்தி தர்மமும் -ருகாதி பேதமான நாலுவகைப்பட்ட வேதத்தில் சொல்லுகிற மகத்தான பிரவ்ருத்தி தர்மமும்
நாரணனே யாவது –அதில் சொல்லுகிற உபாய பாவம் உள்ளதும் ஆஸ்ரயிப்பாருக்கு எளியனான நாராயணனுக்கே என்று கருத்து –
எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளாலும் இப்பொருளை அன்று என்ன முடியாது
வேதங்களோடு வேத வேத்யனோடு வைதிக புருஷர்களோடு அல்லாத ஆழ்வார்களோடு
வாசி அற எல்லாருக்கும் இவ்வர்த்தத்தில் ஐக கண்ட்யம் சொன்னபடி –
யமைவேஷ வ்ருணுதே தேந லப்ய-கட -1-2-23-என்றும்
நயாச இதி ப்ரஹ்ம–நயாச ஏவாத்ய ரேசயத் -தைத் -2-62-77-என்கிறது முதலானவை அன்றோ வேத புருஷன் வார்த்தை –
லோகா நாம் த்வம் பரமோ தர்ம -யுத்த -120-15-என்றும்
ராமோ விக்ரஹவான் தர்ம -ஆரண்ய -37-13- என்றும்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -பார வன -71-123-என்றும்
பாவ நஸ் சர்வ லோகா நாம் த்வமேவ -உத்தர -82-9- என்றும்
மாமேகம் சரணம் வ்ரஜ -ஸ்ரீ கீதை -18-66- என்றும்
மாம் ப்ரபத் யஸ்வ-என்றும்
அறம் தானாய்த் திரிவாய் – பெரிய திருமொழி -6-3-2-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5-10-11-என்றும்
களை கண் நீயே -திருவாய் -5-8-8-என்றும் -இவை இறே அவர்கள் வார்த்தை –

பலாபிசந்தி ரஹீதமான கர்மங்கள் இதிஹாச புராணங்களில் சொல்லுகிற திருநாம சங்கீர்தனங்கள்
பூர்வ பாகத்தில் சொன்ன கர்ம யோகம் இவை எல்லாம் நாராயணன் பிரசாதம் அடியாக –
அவை பல பிரதங்கள் ஆம்போது பகவத் பிரசாதம் வேணும் –பகவான் உபாயம் ஆகும் இடத்தில் அவை சஹகரிக்க வேண்டா
என்னும் பிரமாண பலத்தால் சொல்லுகிறேன்
அல்லாதவை போல் அன்றிக்கே உபாயமாக வற்றான இத்தை அன்று என்ன வல்லார் உண்டோ-

—————

அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி–73-

பண்டு ஸ்ரீ கீதையில் அருளிச் செய்தபடி தான் எழுந்து அருளி இருக்கும் திரு நாடு
அவன் பழையதாக வைத்த பிரதிஷ்டை இருக்கும் இடம் –அதாவது உத்தம -சரம -ஸ்லோகம் –
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாயபாவம் இவர்களால் அறியப் போகாது-

————

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-

குல சத்ருவாய் இருக்கிற பெரிய திருவடிக்கு ஆற்றாதே –
குளிர்ந்து இருந்துள்ள திருப்படுக்கையிலே எழுந்து அருளி இருக்கிற எம்பெருமான் தன்னையே இத்தசைக்கு
அபாஸ்ரயம் என்று நினைத்து அடைந்து-அவனை அபாஸ்ரயமாகப் பெற்ற ப்ரீதியாலே ஒளியை யுடைத்தான
ஸூமுகனான பாம்பை அங்கீ கரித்து-திரு மார்விற்கு ஆபரணமாக கொடுப்பதும் செய்து
ஸ்லாக்கியமான திரு நிறத்தை யுடையனாய் ஆச்சர்ய பூதனான அவனை அல்லது வேறு ஒருத்தரை என் நாவானது ஏத்தாது
சரணாகதர் ஒரு தலையானால்-பிராட்டி திருவடி திரு அநந்த ஆழ்வான் -ஆன அசாதாராண-பரிகரத்தை விட்டும்-ரஷிப்பான் ஒருவன்
அத்தாலே நிறம் பெற்று க்ருதக்ருத்யனாய்-ஆச்சர்ய யுக்தனான ஈஸ்வரனை ஒழிய-வேறு ஒன்றை ஏத்தாது என் நா-

————–

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-

பாட்டும் –கீர்த்தனமான இதிஹாசங்கள்-
பல்பொருளும்-அவற்றுக்கு வ்யாக்யனாமான நாநாவான அவ்வர்த்தங்களைச் சொல்லுகிற புராணங்கள்
கேட்ட மனுவும் –ஆப்த தமமாக ஜகத்து எல்லாம் கேட்டுப் போருகிற மனுவும்
சுருதி மறை நான்கும் –ஓதி வருகிற நாலு வேதங்களும்
மாயன் –ஆச்சர்ய பூதனானவனுடைய
தத மாயையில் பட்ட தற்பு-தன்னுடைய சங்கல்ப்பத்திலே யுண்டான தத்தவத்தை யுடைத்து
தற்பு –தத்த்வார்த்தம் –
பாட்டு -அருளிச் செயல்
முறை -ஸ்ரீ மத் ராமாயணம்
படுகதை -மகா பாரதாதி புராணங்கள்
பல் பொருள்கள் -இவற்றால் பிரதிபாதிக்கிற அர்த்த விசேஷங்கள்
தற்பு-சத்தை -உண்மையை உடைத்தது என்றபடி-

——————–

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78-

தபஸ்வியான ருத்ரனுக்கு-மஹிஷியான உமா தேவி முறை மாறாடி யுணர்த்த – எம்பெருமான் திரு நாமங்களைக் கேட்டிருந்து –
அவற்றுக்கு உள்ளீடான குணங்களை அனுசந்தித்து அத்தாலே புஷ்கலான படியால்-முடிந்து வாடின பூ மாலை போலே பரவசனாய்த் துவண்டபடி
ப்ராசங்கிகமாக பகவத் குணங்களைக் கேட்டு-சிஷ்யாசார்ய க்ரமம் மாறாடி
அவள் வாயாலே தான் கேட்டு ஆதிராஜ்ய சூசகமான முடியையும் உடைய-சர்வேஸ்வரன் திரு நாமங்களையே கேட்டு
நெஞ்சாலே அனுசந்தித்துக் கொண்டு இருந்து பாரவச்யதையைச் சொன்ன படி-
தபஸ்வியான நாரதர் -வால்மீகி கேட்டபின்பு பாரவஸ்யரானது போலவே –

————–

ஏய்ந்த தம் மெய் குந்தமாக –79-

ச்தூலோஹம் க்ருசோஹம் என்று-தானாக சொல்லலாம்படியான சரீரத்தை குந்தமாக -நோயாக-
குந்தம் -வடுக பாஷையாலே வியாதி-

———–

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-

ஈண்டென ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –
பண்டு ஒரு நாள் பிரளயமாகத் திரு வயிற்றிலே வைத்து லோகத்தைக் காத்து ரஷித்த கிருஷ்ணன் யுடைய திரு நாமங்களை
லோகங்கள் ஆனவை பரந்து பாடி யாடிற்றன –
பிறர் சொல்லக் கேட்டு பாதகமான நரகத்தில் வாசல் கதவுகள் பாதிர் இல்லாமையால் திறக்கவும் அடைக்கவும் தவிர்ந்தன –

—————-

விதையாக நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்–81-

வித்தாக நல்ல தமிழை வித்தி என்னுடைய ஹ்ருதயத்தை-நினைத்தது தலைக் கட்ட வல்ல ஞான சக்தியாதிகள்
குறைவற்ற நீ விளையப் பண்ணினாய் அப்யசித்த சொல்லாய்க் கொண்டு வந்து -நான் அறிந்த தமிழ் பாஷைக்கு
வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து-நல்ல தமிழ் பாஷைக்கு வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து
நல்ல தமிழ் வித்தை யுண்டாக்கி என் ஹிருதயத்தை அழகிய கவி பாடுகைக்குப் பாங்காம் படி பண்ணினாய் –

————

சார்ந்தவர்க்குத் தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் பின்னால் தான் செய்யும் பிதிர்–83-

பிரபன்னராய்க் கொண்டு தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு-ருணம் ப்ரவ்ருத்தம் இவமே -பார உத்தியோக -58-21-என்னும்படி
எல்லாமானாலும் பின்னையும் ஒன்றும் செய்யப் பெறாதானாய் தரிக்க பெறாதவனாய்
பிரதிகூல நிரசன ஸ்வ பாவமான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரன்
சரீர அவசநத்திலே வாசா மகோசரமான போகத்தை புஜிக்கக் கொடுக்கும்
ஆஸ்ரித விஷயத்தில் இன்னது செய்தது இன்னது செய்யாதது என்று விவேகிக்க மாட்டாத படி-
பிச்சுத்தான் ஒரு வடிவு கொண்டால் போலே நெஞ்சாறல் பட்டு இருக்கும் படி சொல்லுகிறது
யா கதிர் யஜ்ஞ சீலா நாம் -ஆரண்ய -68-30-என்றபடி கார்யார்த்தமாக தம்மை அழிய மாறின பெரிய யுடையாருக்குச்
செய்வது அறியாமல் அர்வாசீ ந போகத்தோடே பரம பத போகத்தோடே சர்வத்தையும் கொடுத்தார் இறே பெருமாள் –

——————

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

பிதிரும் மனம் இலேன் – இரண்டு பட்ட மனசை யுடையேன் அல்லேன் –
பிரயோஜனாந்தரம் கொண்டு விடும் மனசை யுடையேன் அல்லேன் -என்றபடி –
பிஜ்ஞகன் இத்யாதி-ஞானத்தில் ருத்ரன் தன்னோடு ஒப்பான்-அவ்வளவே அன்று -ஆசையில் அவன் என்னோடு ஒவ்வான் –
சத்வம் தலை எடுத்த போது எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிறவன் எனக்கு ஒப்போ-
ஆஸ்ரித விரோதி நிரசன த்துக்கு வீரக் கழல் இடுவதும் செய்து அச் செயலாலே என்னை அடிமை கொண்ட ஸ்ரீ கிருஷ்ணனை-
என்றும் தொழுகைக்கு ஈடான காதலே தொழிலாக ஏறிட்டுக் கொண்டேன் –
கிருஷ்ணனை தொழுகையே-தொழிலாக காதல் பூண்ட எனக்கு ரஜஸ் தமஸ் தலை எடுத்த போது –
ஈச்வரோஹம் -என்று இருக்குமவன் ஒப்பு அன்று

—————–

உத்தமன் என்றும் உளன் கண்டாய் –உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –86-

இத்தலையில் உள்ள போகம் தன் பேறாக கொண்டே என்றும் உளன் கிடாய்-
இதுக்கு முன்பு நிர்ஹேதுகமாக ரஷித்தவன்-ப்ராப்தி தசையிலும் ரஷிக்கும் –
அவன் ரஷிக்க-இத்தலையால் செய்ய வேண்டுவது -ஆணை இடாமை –

————-

ஓடி அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்–88-

ஆஸ்ரிதர் ஆனவர்களை-ஆள் இட்டு அந்தி தொழாதே தானே ஓடி-அவர்கள் தர்சனத்தால் வந்த
அறிவு கேடு முதலான-துரிதங்களை எல்லாம் போக்குமவன்
திருநாமத்தை பிரியமுடன் சொல்லி-தனக்கு ஒரு சாத்யம் இல்லாத படி அனுசந்தித்து வாழ்வாரே வாழ்வார் –
இவ்வாத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை -எம்பெருமானே நிர்வாஹகன் என்று இருக்குமவர்கள் வாழ்வார்-

————

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுது போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு
ஆஸ்ரயித்து வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு
ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறது-
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் –

———-

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-90-

பகவத் சமாஸ்ரயண பூர்வகம் அல்லது ஒருவருக்கும் பகவத் ப்ராப்தி இல்லை -என்கிறார்
பாகவதராலே அங்கீ க்ருதரானவர்கள் எல்லாரிலும் மேற்பட்டார் -என்கிறார் ஆகவுமாம்-
தத் சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் தத் கைங்கர்யத்தைப் பெறுவார்கள்
ததீய சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் ததீய கைங்கர்யத்தைப் பெற்று வாழப் பெறுவார்கள் -என்றபடி
யதோபாசனம் பலம் -என்கை-எல்லாருக்கும் ஒக்கும் இறே-
விலஷணமான பகவத் கைங்கர்யத்தில் அதிகரித்து-ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளார்க்கும் அப்படியே வர்த்திக்க
வேண்டி இருக்கப் பெற்றவர்கள்-திருவேங்கடமுடையான் திருவடிகளிலே நிரந்தரமாக-ஆஸ்ரயித்தவர்கள்-
அதிலும் விலஷணமான பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்
எம்பெருமான் திரு உள்ளத்தில் செல்லுவன அறிந்து-அதுக்கு ஈடான அடிமைகளில் ச்நேஹித்து-
அவன் பக்கலில் பிரவணர் ஆனவர்களாலே-விஷயீ க்ருதர் ஆனவர்கள் -யதோ உபாசனம் பலம் –

————

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே-
என்றும் திரு இருந்த மார்பன் சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று வ்யாமுக்தனானவனை-
என் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க நின்றபோதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் என்கிறார்-
ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே –

———————–

அடியேற்கு வேம்பும் கறியாகும் என்று-94-

நீ ஹேயரையும் ஏறிட்டுக் கொண்டால் ரஷிக்கலாம்
கறியாகக் கொள்ளுவோம் என்று அபிமானிக்க-வேம்பு கறியாகுமா போலே
வஸ்து ஸ்திதி அறிவார் எவ்வளவு செய்யார்கள் –
கிமத்ர சித்ரந்தர் மஜ்ஞ-இதிவத்
சரணாகதி தர்மம் அறிந்தவர்கள் தோஷவானையும்-கைக் கொள்ளுவார்கள் -என்றபடி-

———–

எம்பெருமானை ஆஸ்ரயித்துத் தமக்குப் பிறந்த பௌஷ்கலயத்தை யருளிச் செய்கிறார்-

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

அடிமை என்றால் மருந்து போலே இராதே அதிலே பொருந்தினேன் –
அடிமைக்கு விரோதியாய் சாம்சாரிகமான அஹங்கார மமகாரங்கள் ஆகிற துக்கரூப பர்வதத்தில் நின்றும் இழிந்தேன் –
ப்ரஹ்மாதிகளுக்கும் என்னைக் கண்டால் கலங்க வேண்டும்படி ஞான பக்திகளால் பரிபூர்ணன் ஆனேன்
அதுக்கு மேலே புண்ய பலங்களை பூசிக்கும் ஸ்வர்க்காதி லோகங்களையும் புண்யார்ஜனம் பண்ணும் விபூதியையும் உபேஷித்து
விஸ்வதே ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ என்னும்படி
இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தன் ஆனேன்-

————

சர்வேஸ்வரன் என்னும் இடம் இப்போது அறிந்தேன் -என்கிறார் –
சர்வ ஸ்மாத் பரன் எம்பெருமானே என்று பத்ராலம்பனம் பண்ணத் தொடங்கினாப் போலே முடிக்கிறார்-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்
என்னுடைய நாதனான யுன்னை –
அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்
இப்போது அறிந்தேன் -சர்வ காரணமும் நீயே
பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய்
சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –
நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்- அதுக்கடியான சேஷியான நாராயணன் நீ
இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்-

இத்தால் –
1-ப்ராப்யமான கைங்கர்யத்தில் தமக்கு அளவிறந்த சாரஸ்யம் விளைந்த படியையும்
2-அதுக்கு விரோதியான அஹங்கார மமகார ரூப துக்க சம்பந்தம் விட்டு நீங்கின படியையும்
3-அடிமைக்கு அடைவில்லாத சம்சாரத்தில் தமக்கு யுண்டான விரக்தியையும்
4-அடிமைக்கு ஏகாந்தமான பரமபதத்தில் புக்கு அல்லது தரிப்பது அரிதாம்படி பரமபக்தி பிறந்தபடியையும்
5-இப்படி இருக்கிற நம் அதிகார பரிதியைக் கண்டு ப்ரஹ்மாதிகள் தொடை நடுங்கித்
தம் கண் வட்டத்தில் வந்து கிட்ட மாட்டாமல் கிடக்கப் போம்படியான தம்முடைய வேண்டற்பாட்டையும் அருளிச் செய்தார் ஆய்த்து-

மஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே
சர்வ ஸ்மாத் பரன் என்று பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும்
அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக உபபாதித்துக் கொண்டு போந்து-
அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ யதீந்த்ர பிரவணர் வைபவம் —

July 1, 2020

ஸ்ரீ மணவாள மாமுனிகள்-

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்

ஸ்ரீ சடாரி குரோர் திவ்ய ஸ்ரீ பாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீ மத் யதீந்திர பிரவணம் ஸ்ரீ லோகாச்சார்ய முனிம் பஜே

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம்

ஸ்ரீ மத் ரெங்கம் ஜெயது பரமார்த்த தர்ம தேஜோ நிதானம்
பூமா தஸ்மின் பவதி குசலி ஹோ பிபோ மா ஸஹாய
திவ்யார்த் தஸ்மை திசத்து விபவத் தேசிகோ தேசிகானாம்
காலே காலே வர வர முனி கல்பயன் மங்களானி

மாசற்ற செம்பொன் மணவாள மா முனிவன் வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

திரு மூலமே நமக்கு மூலம்
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ ?
பூம் கமழும் தாதர் மகிழ் மார்பன் தான் இவனோ ?
தூத்தூர வந்த நெடுமாலோ
மணவாள மா முனி எந்தை இம் மூவரிலும் யார் ?–ஸ்வாமி ஆய் அருளியது

பழைய பெருமைகளை மீண்டும் ஒளிர, ஸ்ரீ வைஷ்ணவம் என்னும் ஆலமரம் தழைக்க
ராமானுஜரின் மறு அவதாரமாக தோன்றினார் ஸ்ரீ மணவாள மாமுனிகள் .

ஓராண் வழியில் இறுதி ஆச்சாரியாராக விளங்கி, வைணவ சம்ப்ரதாயங்கள் மேலோங்கிட உழைத்தார் .
அவர் அவதாரம் ஐப்பசி மாதம் மூல நக்ஷத்ரம்

ஸ்ரீ மணவாள மாமுனிகள் –
பெற்றோர் தாதரண்ணன் +ஸ்ரீ ரங்கநாச்சியார்
காலம் 1370 AD-1443 AD–சாதாரண வருஷம்-
கலி யுகம் 41 72-சக வருஷம் 1292-சாதாரண வருஷம் -ஐப்பசி -26 நாள் -சுக்லபஷம் -வியாழன்
சதுர்த்தி -மூலம் நஷத்ரம் திரு அவதாரம்

இயற்பெயர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
பிறந்த இடம் சிக்கில் கிடாரம்
அவதாரம் ஆதிசேஷன்
ஆச்சாரியன் திரு வாய் மொழிப் பிள்ளை

குரோதன சம்வச்தரம்- 16 வயசில் மகர மாசம் க்ருகதாச்ரமம் –1386 AD
சன்யாச -45 -விஜய நாம சம்வச்த்ரம் -பெரிய திரு மண்டபம் –1415 AD
ஆனந்த சம்வச்தரம் -மிதுன மாசம் பூர்ணிமா -மூலம் -ஈடு காலஷேமம் முடிந்து -65 வயசில்

யதீந்திர ப்ராவண்யமும் தீ பக்தி வைராக்ய குணார்ணத்வமும் –
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்ததாக அருளுகிறார் –

சாம்ய பத்தி-கும்ப -மாசி-மாசம்-
கிருஷ்ண பஷம் த்வாதசி சரவணம் சனி கிழமை
ருதிரோதடரி சம்வச்தரம் 1444 AD

1323-1371 நம் பெருமாள் ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து போக
48 வருஷம் கழித்து திரும்பி நம் பெருமாள் திரும்பி
1370 மணவாள மா முனிகள் திரு அவதாரம்
கவலை இல்லை இனி என்று வந்தானாம்

அஷ்ட திக் கஜங்கள்
1-வானமாமலை ஜீயர்
2-கோயில் கந்தாடை அண்ணன்
3-பட்டர்பிரான் ஜீயர்
4-திருவேங்கட ஜீயர்
5-பிரதிவாதி பயங்கரம் அண்ணன்
6-எறும்பியப்பா
7-அப்புள்ளார்
8-அப்புள்ளை

சிறப்புப் பெயர்கள்
யதீந்த்ர ப்ரவணர்
வரவர முனி
சௌமய ஜாமாத்ரு முனி
பெரிய ஜீயர்
விசத வாக் சிரோமணி

இயற்றிய நூல்கள் – சமஸ்க்ருதம்
யதிராஜ விம்சதி
தேவராஜா மங்களம்
ஸ்ரீ காஞ்சி தேவராஜமங்களம்

யதீந்த்ர ப்ரவண பிரபாவம் -மா முனிகள் ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ கிடாம்பி திருமலை நாயனார் இடம் கேட்டு அருளினார்
அவர் தனியனை-ஸ்ரீ வரதாச்சார்யர் -என்று குறிப்பிட்டு தென்கலை குரு பரம்பரையில் உண்டு

திரு மண் பெட்டி சொம்பு – இரண்டு திரு மேனி -வீற்று இருந்த திரு மேனிதிரு அரங்கம்
நின்று இருந்த திரு மேனி ஆழ்வார் திரு நகரி

பல்லவராய மண்டபம்-ஸ்வாமி மண வாளமா முனிகள் சந்நிதி ஸ்ரீ ரெங்கம்
திரு பரியட்டம் திரு மாலை சாத்துபடி
பொன் அடியாம் செம் கமலம்-மா முனிகள் திரு அடி பிரசாதம்
ரகஸ்யம் விளைந்த மண் இன்றும் சேவிக்கலாம் கால ஷேப கூடத்தில்
தொட்டி பிரசாதம்-தயிர் சாதம் உப்பு இன்றி

வேதத்தின் உட் பொருள் நிற்கப் -பாடி என் நெஞ்சுள் -நிறுத்தினான் மதுரகவி ஆழ்வார்
வேதப்பொருளே என் வேங்கடவா –
பொருள் அவன்
உள் பொருள் பாகவதர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் –
திருவடி நிலை என்பதால் எம்பெருமானார் ஆழ்வாரினும் வேறுபட்டு இல்லை
அவரது புநர் அவதாரம் என்பதால் பெரிய ஜீயரும் எம்பெருமானாரினும் வேறுபட்டு இல்லை –
ஆக மூவருமே உள் பொருள் -உத்தாரக ஆச்சார்யர்கள்
பகவான் புறப் பொருள் –
புறப்பொருள் மதிளரங்க மணவாளன்
உள் பொருள் மணவாள மா முனிகள்
அரங்கன் உடைய உலகளந்த பொன்னடி புறப்பொருளின் சாரம்
மா முனிகளின் பொன்னடியாம் செங்கமலம் உட் பொருளின் சாரம் –

எறும்பி அப்பா -வர வர முநி -சதகம் 63
ஆத்மா நாத்மப்ரமிதி விரஹாத் பத்யுரத் யந்ததூர
கோரே தாபத்ரி தய குஹரே கூர்ணமா நோஜ நோயம்
பதச்சாயாம் வர வர முனே ப்ராபிதோயத் ப்ரசாதாத்
தஸ்மை தேயம் ததி ஹகிமிவ ஸ்ரீ நி தேர் வர்த்ததே தே
பதச்சாயா -உள் பொருளின் முடிவு நிலமான மா முனிகள் திருவடியே உபாயம் -நிழல் உபேயமும் –

விஷ்ணு சேஷி ததீய ஸூப குண நிலையோ விக்ரஹ ஸ்ரீ சடாரி
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் –
என்றபடி எம்பெருமான் நல்குணம் மிக திரு மேனியே ஆழ்வார்
அவர் இணைத் தாமரையே ஸ்ரீ ராமானுஜர்
அவர் திறத்து அத்யந்த பாரதந்த்ர்யம் அனுசந்தித்து நிழல் போலே யதீந்திர ப்ரவணர்
திருவடி நிழலாகி உபேயமாகிரார்
இதனாலே ஸ்ரீ ரம்ய ஜாமத்ரு முனிவருக்கு தனியன் சமர்ப்பித்து முதலிலும் முடிவிலும் அனுசந்திக்க
ஸ்ரீ ரெங்கராஜ திவ்யாஞ்ஞை –
அந்த கட்டளையின் பலனே நாம் இன்று முடிவுப் பொருளாய் அனுசந்திக்கும்
ஜீயர் திருவடிகளே சரணம் -என்பதாகும்

திடமான அத்யாவசாயம் நாமும் பெற வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் -என்று
மா முனிகளை சரணம் பற்றுவோம்

சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ்வு இப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே –

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மண் உலகம் வாழ மணவாள மா முனியே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்

நாமார் பெரிய திரு மண்டபமார் நம்பெருமாள்
தாமாக வென்னைத் தனித்து அழைத்து நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாள் தோறும்
வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து

சேற்றுக்கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொலும் நல்ல அந்தணர் வாழ்வு இப் பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே

கிருபயா பரயாச ரங்கராட் மஹிமானம் மஹதாம் பிரகாசயன்
லுலுபே ஸ்வயம் ஏவ சேதஸா வரயோகி ப்ரவரச்ய சிஷ்யதாம் -ஸ்ரீ சைல அஷ்டகம்

பிற்றை நாள் –
மாறன் மறைப் பொருளை கேக்க மணவாள மா முனியை ஏறும் அணை தனில் இருத்தி -ஸ்ரீ சைல அஷ்டகம் -1-

ரங்கீ வத்சரம் ஏகம் ஏவம் அஸ்ருணோத் வ்யக்தம் யதோக்த க்ரமாத் -ஸ்ரீ சைல அஷ்டகம் -2

ஸ்ரோதும் திராவிட வேத பூரி விவ்ருதம் சௌம்யோ பயந்தூர் முனே
உத்கண்டா அஸ்தி ம்மை நமா நயத தம் தர்ஷயாச்ராயம் மண்டபம்
ஆவிச்யார்ச்சாக மூசிவா நிதி மூதா -ஸ்ரீ சைல அஷ்டகம் -2

நல்லதோர் பரீதாபி வருடம் தன்னில் நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில் செல்வ மிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்று
வல்லி யுறை மணவாளர் அரங்கர் நங்கண் மணவாள மா முனிக்கு வழங்கினாரே –அப்பிள்ளார் -சம்பிரதாய சந்த்ரிகை

தெருளுடைய வ்யாக்கியை ஐந்தி னோடும் கூடி -சம்ப்ரதாய சந்திரிகை -9-

ஸ்ருதி பிரக்ரியை
ஸ்ரீ பாஞ்சராத்ர பிரக்ரியை
ஸ்ரீ இராமாயண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாரத பிரக்ரியை
ஸ்ரீ விஷ்ணு புராண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாகவத பிரக்ரியை
ஸ்ரீ பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ கீதா பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ ஸ்ருத பிரகாசா பிரக்ரியை
பதார்த்தம் -வாக்யார்த்தம் -மகா வாக்யார்த்தம் -சமபிவ்யாஹார்த்தம் -த்வயனர்த்தம் –
அர்த்த ரசம் பாவ ரசம் ஒண்பொருள் உட்பொருள்

போத மணவாள மா முனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள் -அரையர் கொண்டாட்டம்

ஆனி மாசம் திரு மூல நஷத்ரம் பௌர்ணமி திதி ஞாயிற்றுக் கிழமை
ஆனந்த வருடத்திலே கீழ்மை யாண்டில் அழகான வருடத்தில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய பௌர்ணமியின் நாளிட்டுப் பொருந்தி
ஆனந்தமயமான மண்டபத்தில் அழகாக மணவாளர் ஈடு சாத்த —
வைத்தே வானவரும் நீரிட்ட வழக்கே என்ன மணவாள மா முனிகள் களித்திட்டாரே –
சமாப்தௌ கிரந்தச்ய பிரதித விவித உபாய நசயே
பரம் சஜ்ஜீபூதே வரவரமுனே ரங்க்ரிசவிதே
ஹடாத்பால கச்சித்குத இதி நிரஸ்தோப்யுகத
ஐ கௌ ரங்கே சாக்யே பரிணத சதுர்ஹாய ந இதம் –ஸ்ரீ சைகள அஷ்டகம் -5-

ஸ்ரீ சைலே சேதி பத்யம் ககபதி நிலயே மண்டபே தத் சமாப்தௌ
உக்த்வாத் யேதவ்யம் ஏதன் நிகில நிஜக்ரு ஹேஷ்வாதி சத்தத்த தாதௌ -ஸ்ரீ சைல அஷ்டகம் -6

ஸ்ரீ சைலே சேதிபத்யம் ஸ்வயமிதி பகவான் ஆதி சத் ரங்கநாத -ஸ்ரீ சைல அஷ்டகம் -7

தேசம் எங்கும் ஈது திருப்பதிகள் தோறு உரைக்க நேசமுற அரங்கர் நியமித்தார் -ஸ்ரீ சைல வைபவம் -7-

ஸ்ரீ பன்நகாதீச முனே பத்யம் ரெங்கேச பாஷிதம்
அஷ்டோத்தர சதஸ்தா நேஷ்வ நுசந்தான மாசரேத்
இத்யாஞ்ஞா பத்ரிகா விஷ்வக்சேநேன பிரதிபாதிதா
ததாரப்ய மகாத் பிச்ச பட்யதே சந்நிதே புரா

வதரியாச்சிராமத்தில் இரு மெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடி வணங்கி
கதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே அடியோங்கள் தேற வென்ன
சதிராக சீர் சைல மந்த்ரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்கு சென்மின் நீவிர்
பாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார் –என்றும்

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்கன் தினசரியை கேளா நிற்ப
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாத்த நின்ற சமயம் தன்னில்
பொன்னி தன்னில் நீராடிப் புகழ்ந்து வந்து
புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்ப
சந்நிதியில் நின்று அரங்கர் தாமே அந்தத்
தனியன் உரை செய்து தலைக் கட்டினாரே -சம்ப்ரதாய சந்த்ரிகை -4/5-

வாசி அறிந்த வதரியில் நாரணனார் மனம் கொள்
தேசுடை எந்தை மணவாள மா முனி சீர் தழைப்பச்
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டுரைத்தான் இவ்வையகம் சீருறவே-கோயில் கந்தாடை அண்ணன் –
மணவாள மா முனி கண்ணி நுண் சிறுத் தாம்பு -13-
திருமந்தரம் வெளி இட்டு அருளின ஸ்ரீ பத்ரி நாராயணனே இத்தையும் வெளி இட்டு அருளினார்

ஹடான் தஸ்மின் ஷணே கச்சித் வர்ணே சம்ப்ராப்ய பத்ரிகாம்
வாதூல வரதாச்சார்யா தர்ம பத்ன்யா கரே ததௌ–பஹூ முகமாக இத்தநியனை பிரகாசிப்பித்தது அருளுவதே

———————————————————————————

ஸ்ரீ அழகர் கோயில் அனுபவம்

ஸ்ரீ சைல ஸூந்தரே சச்ய கைங்கர்ய நிரதோயதி
அமன்யத குரோஸ் ஸ்வஸ்ய பத்ய சம்பவ மார்யத

ஜிஹ்வாக் ரேதவ வஷ்யாமி ஸ்த்தித்வா வத ஸூ பாவ நம்
பத்யம் த்வதார்யா விஷயம் முனே ரஸ்ய மமா ஆஜ்ஞ்ஞாய

தன்யோச்மீதி ச சேனே சதே சிகோஸ்வதத ஸ்வயம்
வஹன் சிரசி தேவஸ்ய பாதௌ பரம பாவனௌ
———————————————————–
ஸ்ரீ திருவேங்கடமுடையான் அனுபவம்

உபதிஷ்டம் மயா ஸ்வப்னே திவ்யம் பத்யமிதம் ஸூ பம்
வரயோகி நமாஸ்ரித்ய பவத ஸ்யாத் பரம் பதம்
இத்யுக்த்வா தம் வ்ருஷாத்ரீச ஸ்ரீ பாதாத் ரேணு மேவச
தத்த்வாஸூ பரேஷா யாமாச கச்ச யோகிவரம் ஸூ சிம்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ
த்ரிஷூ பக்திஸ்சதா கார்யா சா ஹி பிரதம சாதனம் -ஸ்ரீ மா முனிகள்

பட்டர்பிரான் முதலாய பதின்மர் கலைப் பழிச்சலிலும்
சிட்டர்களாய் தினம் தோறும் திரு மணிடு வேளையிலும்
இட்டமுற உணும் பொழுதத்து ஒண் கரநீர் ஏற்கையிலும்
அட்ட திக்கும் விளங்குரைத்தார் ஆரியர்கள் அனைவருமே -ஸ்ரீ சைல வைபவம் -3

மணமுடைய மந்த்ரமா மதிக் கொள்ளீர் தனியனையே -ஸ்ரீ பரவஸ்து பிரான் பட்டர் ஜீயர்
த்வயம் -நம் ஆழ்வார் த்வயம் -எம்பெருமானார் த்வயம் -பெரிய ஜீயர் த்வயம்
சடரிபுரேக ஏவ கமலாபதி திவ்ய கவி
மதுரகவிர் யதா ச சட ஜின்முனி முக்யகவி
யதிகுல புங்க வஸ்ய புவி ரெங்க ஸூ தாக விராட்
வரவர யோகி நோ வரத ராஜ கவிஸ் ச ததா -ஸ்ரீ எறும்பி அப்பா

கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன்
தேவில் சிறந்த திருமாற்கு தக்க தெய்வ கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
கண்ணனை பாட நம் ஆழ்வாரே
நம் ஆழ்வாரைப் பாட மதுர கவி ஆழ்வாரே
ராமானுஜரை பாட அமுதனார்
மா முனிகளை பாட எறும்பி அப்பாவே

நாயனார் திருக்குமாரர் –எம்மையன் இராமானுசன் -என்று திருவாய் மொழிப் பிள்ளை திரு நாமம் சாத்தி அருளினார் –
(பின்பு இவருக்கு இரண்டு திரு குமாரர்கள் -அழகிய மணவாள பெருமாள் நயினார் -பெரியாழ்வார் -என்ற திருநாமங்கள் இருவருக்கும்

இன்றோ வெதிராசர் இவ்வுலகில் தோன்றிய நாள்
இன்றோ கலியிருள் நீங்கு நாள் இன்றோ தான்
வேதியர்கள் வாழ விரை மகிழோன் தான் வாழ
வாதியவர்கள் வாழ் வடங்கு நாள் –திருவாய்மொழிப் பிள்ளை முதல் இரண்டு வரிகளையும்
மணவாள மா முனிகள் இறுதி இரண்டு வரிகளையும் சாதித்து அருளியது –

நல்லதோர் பரீதாபி வருடம் தன்னில்
நலமான வாவணியின் முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர்பக்க நாளா நாளில்
செல்வ மிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளைச் செப்பும் என்று
வல்லி யுறை மணவாளர் அரங்கர் நம் கண்
மணவாள மா முனி வழங்கினாரே —

ஆனந்த வருடத்தில் கீழ்மை யாண்டில்
அழகான ஆனிதனின் மூல நாளில்
பா நுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையின் ஆளியிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாத்த
வானவரும் நீரிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே-

பாராரு மங்கை திருவேங்கட முனி பட்டர்பிரான்
ஆராமம் சூழ் கோயில் கந்தாடை யண்ணன் எறும்பி அப்பா
ஏராரும் அப்பிள்ளை அப்பிள்ளார் வாதி பயங்கரர் என்பேர்
ஆர்ந்த திக்கயம் சூழ் வர யோகியைச் சிந்தியுமே-

சொன்ன வண்ணன் செய்த பெருமாள் சந்நிதியில் அடியார்க்கு உபய வேதாந்தம் சாதித்து அருளியதால்
இன்றும் அங்கே ஞான முத்திரை யுடனும் த்ரிதண்டத்துடனும் சேவை சாதிக்கிறார்

வானமா மலை ஜீயர் -பிரியாது ஆட்செய்து
கந்தாடை அண்ணன் -உடையவருக்கு முதலியாண்டான் போலே பாதுகா ஸ்தாநீயர்
எறும்பி அப்பா -வடுக நம்பி போலே அத்யந்த அபிமதராய்
பிரதிவாத பயங்கர அண்ணா -கூரத் ஆழ்வான் போலே ப்ரதிபஷ நிரசனம் ஸ்ரீ பாஷ்யம் உசாத்துணை
அப்பிள்ளை -சேனை முதலியார் அண்ணன் -சடகோப தாசர் -திருப்பாண் ஆழ்வார் தாசர் -அருளிச் செயலுக்கு உசாத்துணை
அப்பிள்ளார் -அமுதுபடி சேவை
பட்டர்பிரான் ஜீயர் ஸ்ரீ பதாச்சாய ஆபன்னார்
ஜீயர் நாயனார் இளவரசராய் திருக் குறுகிப் பிரான் பிள்ளான் போலே அத்ய ஆதரணீயராய் இருப்பார்-

ருதிரோத்காரி சம்வத்சரம் மாசி மாத கும்ப ராசி சனிக் கிழமை கிருஷ்ண பஷம் த்வாதசி –
திருவோணம் நஷத்ரம் -ஸ்ரீ வைகுண்டம் மீண்டு எழுந்து அருளினார்-

ஸ்ரீ யதீந்த்ரரும் ஸ்ரீ யதீந்த்ர பிரவணரும்–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

1–வ்யாக்யான -கிரந்த –தாநாத் –வியாக்கியான கிரந்தங்கள் அருளிச் செய்வதிலே பிரதான நோக்கு –
ஸ்ரீ பாஷ்யம் -வேதாந்த தீப சாரங்கள் -ஸ்ரீ கீதா பாஷ்யம்
மா முனிகள் வ்யாக்யான கிரந்தங்கள் பிரசித்தம்
கத்ய த்ரயம் வேதாந்த ஸங்க்ரஹம் போலே யதிராஜ சப்ததி -உபதேச ரத்னமாலை இத்யாதிகள்

2–பரிவதன கதா கந்த வைதேசிகத்வாத்–பரிவதனமாவது பரிவாதம் நிந்தை –
பரிகாசமோ நிந்தையோ அணு அளவும் இல்லாமல் பரம பவித்ரமான திவ்ய ஸ்ரீ ஸூக்திகள் அன்றோ இவர்களது

3–நாநா சாஸ்த்ரார்த்த ப்ருந்த ப்ரசுர பணிதிபி –ப்ராஞ்ஞா ஹ்ருத் ரஞ்சகத்வாத் —
தொட்ட தொட்ட இடம் எங்கும் சாஸ்த்ரார்த்த திரள்களே மலிந்த ஸ்ரீ ஸூக்திகள் -பண்டிதர்கள் உள்ளத்தை உகப்பிக்கும்

4–பூர்வாச்சார்ய யுக்தி ராகாத் -ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ பாஷ்யம் தொடங்கும் பொழுதே –
பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம் பூர்வாச்சார்யாஸ் சஞ்சிஷிபு
தன் மத அநுசாரேண ஸூத்ர அக்ஷராணி வ்யாக்யாஸ் யந்தே-என்று
பூர்வாச்சார்யர் ஸ்ரீ ஸூக்திகளில் தமக்கு உள்ள அபிநிவேச அதிசயத்தை காட்டி அருளியது போலவே
மா முனிகளும் -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு –முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம் -என்றும்
தம்முடைய வியாக்கியான கிரந்தங்களை பூர்வாச்சார்ய ஸ்ரீ ஸூக்தி மயமாகவே அருளிச் செய்கிறார்

5–சடரிபு முநிராட் ஸூக்தி சம்வர்த்தகத்வாத்
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுசன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்
சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பப் போற்றித் தொழு நல்ல அந்தணர் வாழ இப்பூதலத்தே
மாற்றாற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

6–பீடாதி ச ப்ரதிஷ்டாபந க்ருதி கரணாத்
ஸ்வாமி -74-ஸிம்ஹாஸனாபதிகள் ஸ்தாபித்து தர்சன நிர்வாஹம்
லஷ்மீ நாதாக்ய சிந்தவ் சடாரி புஜலத-இத்யாதிகளை உண்டே
மா முனிகளும் –
திறமாக திக் கஜங்கள் இட்டு அருளும் பெருமாள் -அஷ்ட திக் ஆச்சார்யர்கள் ஸ்தாபித்து தர்சன நிர்வாஹம்

7–திவ்ய தேச அபிமானாத்
மன்னிய தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடும் நாள்
ஸ்ரீ ரெங்கம் கரி சைலம் அஞ்சன கிரீம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலவ் –
ஸ்ரீ ரெங்கேச ஜெய த்வஜோ விஜயதே ராமாநுஜோயம் முநி
மா முனிகளும்
அடைவுடனே திருப்பதிகள் நடந்த வேர்வை ஆறவோ
அதவா
திவ்ய தேச ஸ்ரேணியில் சேராது இருந்த திரு நாராயணபுரத்துக்கு ஒரு நாயகமாய் -சமர்ப்பித்தும்
மா முனிகள் ராஜ மன்னார் சந்நிதிக்கு -தீர்ப்பாரை யாம் இனி -சமர்ப்பித்தும்
திவ்ய தேசமாக அபிமானித்ததும் உண்டே –

8–பணி ராஜ அவதாரவாத்
ஸ்வாமி சேஷ அவதாரம் என்று பிரசித்தம்
வர வர முனி சதகத்தில் -துக்தோதந்வத் தவள மதுரம் சுத்த சத்வ ஏக ரூபம் ரூபம் யஸ்ய ஸ்புட யதிதராம் யாம்
பணீந்திர அவதாரம் -என்றும் -பல சரித்திர பிரசித்தங்கள் படியும் ஸூவ்யக்தம்

9–ஸ்ரீ ரெங்க ஸ்ரீ விவர்த்த நாத் –
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
அரங்க நகர் வாழ இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்

10–ஸ்ரேஷ்ட சிஷ்யத்வாத்
அப்பனுக்கு சங்காழி கொடுத்தான் வாழியே
எதிராஜசம்பத் குமாரர்
ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம் -தனியன் பெற்றார் மா முனிகள்

ஆக இத் தன்மைகளால் -யதீந்த்ர பிரவணஸ் சாஷாத் யதீந்த்ரோ பாஷ்ய க்ருத த்ருவம்-

—————————————————

ஆசிலாத மணவாள மா முனி யண்ணல் பூமியுறு வைப்பசியில் திரு மூலம்
தேச நாளது வந்தருள் செய்த நம் திருவாய் மொழிப்பிள்ளை தான்
ஈசனாகி எழுபத்து மூவாண்டு எவ் வுயிர்களையும் வுய்வித்து வாழ்ந்தனன்
மாசி மால் பக்கத் துவாதசி மா மணி மண்டபத்து எய்தினான் வாழியே-

குருநாதன் எங்கள் மணவாள யோகி குணக் கடலைப்
பல நாளும் மண்டிப் பருகிக் கழித்து இந்தப் பாரின் உள்ளே
உலகாரியன் முனி மேகம் இந்நாள் என்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே –

” செய்ய தாமரைத் தாளினை வாழியே ,சேலை வாழி திருநாபி வாழியே
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே சுந்தரத் திரு தோளினைவாழியே
கையுமேந்திய முக்கோலும் வாழியே கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யில்லாத மணவாள மாமுனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே”

“ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி” .
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தன் தமிழ் நூல் வாழ
கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ
மண வாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய சீர் நித்ய மங்களம் –

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .