Archive for March, 2015

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 3-4-ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி-

March 20, 2015

தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மினீரே-என்றார்
இங்கு காழிச் சீராம விண்ணகரம் சேர்மினீரே-என்கிறார் –
மேலும் -திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -என்பர்
ஆழ்வார் திரு வாயில் நுழைந்து புறப்பட்ட திருப்பதிகள் எல்லாம் நாமும் நுழைந்து புறப்பட வேண்டியது ப்ராப்தம் –
பதியே பரவித் தொழும் தொண்டர் -பெரிய திருமொழி -7-1-7-என்றும்
உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார் -திருக் குறும் தாண்டகம் -19-என்றும் -யுண்டே
நாலு கவிப் பெருமாள் வந்தார் –ஆசு கவி -மதுர கவி -சித்ர கவி -விஸ்தார கவி –
பரவாத மத்தகஜ கண்டீர் அவர் வந்தார் –ஞான சம்பந்த மூர்த்தி நாயனார் -உமக்கு இவ் விருதுகள் தகும் என்று
வேலாயுதத்தை திருக் காணிக்கையாக சமர்ப்பித்தார்-

———————————————————

ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீ ராம விண்ணகரே சேர்மின் நீரே—3-4-1-

உலகளந்த பெருமாள் சேவை சாதிப்பதால் ஒரு குறளாய்-ஆரம்பித்து ஏழு வரை எண்கள் அழகாக அமைந்த பாசுரம்
ப்ரஹ்லாதன்  -விரோசனன் -மா வலி-ராஜ தானி -சோணித புரம்
கஸ்யபர் அதிதி-வாமனன் –
தாடாளன் -பெருமை பொருந்தியவன் -முயற்சி யுள்ளவன் -இந்த திவ்ய தேசம் தாடாளன்   சந்நிதி
சாகா பேதங்கள் பல என்பதால் திரள் நான்கும்
வேள்வி ஐந்தும் -ப்ரஹ்ம தேவ பூத பித்ரு மனுஷ்ய யஜ்ஞம்
அங்கங்கள் ஆறு -சிஷை -வியாகரணம் -சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம்

அஷரங்கள் உச்சரிக்க வேண்டிய முறைகள் -ஒன்றோடு ஓன்று சேர வேண்டிய முறைகளும் சிஷை சொல்லும்
பிரகிருதி பிரத்யயங்கள் பாகுபாடு வியாகரணம்
அவற்றின் அர்த்த விவேகம் நிருத்தம்
காயத்ரீ த்ருஷ்டுப் ஜகதீ இத்யாதி பேதங்கள் சந்தஸ்
வேத உகத கருமங்களை காலம் அறிந்து அனுஷ்டிக்க ஜ்யோதிஷம்
ஆச்வலாயனர் ஆபஸ்தம்பர் முதலியோர் செய்த கல்பங்கள் வைதிக கருமங்களை 
அனுஷ்டிக்க வேண்டிய முறைகள் சொல்லும்
ஏழு ஸ்வரங்கள்
நிஷாதம் -ரிஷபம் -காந்தாரம் -ஷட்ஜம் -மத்யமம் -தைவதம் -பஞ்சமம் –
அன்றிக்கே
மயிலின் அகவுதல் -ஷட்ஜ ஸ்வரம்
மாடுகளின் கூவுதல் -ரிஷப ஸ்வரம்
ஆடுகளின் கூவுதல் -காந்தார ஸ்வரம்
அன்றில் பறவை கூவுதல் -மத்யம ஸ்வரம்
குயிலுண் கூவுதல் -பஞ்சம ஸ்வரம்
குதிரையுன் கனத்தல் தைவத ஸ்வரம்
யானையின் முழக்கம் நிஷாத ஸ்வரம்
இப்படிப் பட்ட ஒலிகள் மலிந்து இருக்கும் ஸ்தலம் என்றவாறு-

——————————————————-

நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை நலமிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன்
ஊன் முகமார் தலையோட்டூண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழுசேயோடச்
சூழ் முகமார் வளையளைவாய் உகுத்த முத்தைத் தொல் குறுக்கு சினை என்னச் சூழ்ந்து இயங்க எங்கும்
தேன் முகமார் கமல வயல் சேல் பாய் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-2-

ரோமசர் என்பவர் கரடி போலே உடம்பிலே அடர்ந்த மயிர்களை யுடையவர் –
தவம் இருந்து அநேகம் ஆயிரம் பிரம்மாக்கள் ஆயுளை  பிராத்திக்க
ஒரு ப்ரஹ்மா காலம் முடிந்தால் உடம்பில் ஒரு ரோமம் உதிரும் –
இனி உடம்பில் ரோமம் இல்லை அளவும் நீ ஜீவித்து இருப்பாய் என்று வரம் கொடுத்து அருளினான் –
மிகத்தருக்கை -பாடம் பிழை
மிகைத்தருக்கை -சரியான பாடம் மிகை -ஆதிக்யம் -அதனால் யுண்டான தருக்கு -செருக்கு
இருக்கு வாய்மை -ரிக் வேதங்களை சொல்லும் வாய்மை -உச்சரித்தல் –

————————————————

வையணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்ந்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு
மையணைந்தகு வளைகள் தம் கண்கள் என்றும் மலர்க்குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்
செய்யணைந்து களைகளை யாதேறும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-3-

கடைசிமார்கள் -உழவுத் தொழில் செய்யும் ஈன சாதி மாதர்
நெய்தல் குவளை மலர்களை கண்களாக பாவித்து
குமுத மலர்களை வாயாகப் பாவித்து
களை பரியாமல் வெளியேற -மயக்க அணி
தம்மைச் சரண் என்ற தம் பாவையரை புனம் மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று –
கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம் -பெரியாழ்வார் -3-5-3-
வை -கூர்மை
மதங்கள் செய்து என்ற இடத்து
வானத்து எழுந்த மழை  முகில் போல் எங்கும் கானத்து மேய்ந்து கழித்து விளையாடி -பெரியாழ்வார் அருளிச் செயல் அனுசந்தேயம்-

————————————–

பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னம் பைம்பூண்
நெஞ்சிடந்து குருதி உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணை கிற்பீர் நீல மாலைத்
தஞ்சடைய இருள் தழைப்பத் தரளம் ஆங்கே த்ண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்
செஞ்சுடர் வெயில் விரிக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-4-

ஹிரண்யன் பல ஆபரணங்கள் தரித்து -பொன்னன் பைம்பூண் நெஞ்சு
உகிர் வேலாண்ட
நின்மலன் -குற்றம் அற்றவன் -ஆஸ்ரிதர்களை வாழ்விக்கச் செய்த கார்யங்கள்
இருள் சந்தரன் சூர்யன் மூன்றும் கூடி வாழ்கின்றன
நீல மணிகள் நீலச் சுடர் இருள்
முத்துகள் வெள்ளொளி நிலவு
பவளங்கள் செஞ்சுடர் உதய சூர்யன்
இருள் மாலைப் பொழுதை பற்றுக் கோடாக கொண்டதால் மாலை தஞ்சம் அடைய இருள் என்கிறார்
தாளம் -முத்து –

—————————————————-

தெவ்வாய மற மன்னர் குருதி கொண்டு திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து
வெவ்வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர் கோன் தாள் அணைவீர் விகிர்தமாதர்
அவ்வாய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்
செவ்வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-5-

ஸ்ரீ பரசுராம வ்ருத்தாந்தம் அனுபவிக்கிறார் –
விகிர்த   மாதர் -வேறுபாடு யுடைய -வை லஷண்யம் பொருந்திய மாதர் –
குவளை போன்ற கண் அழகும்
கமலம் போன்ற முகம் அழகும்
செவ்வாம்பல் போன்ற வாய் அழகும்
யுடையவர்கள் வாழும் ஸ்தலம்-

———————————————-

பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார் திண் கை
செங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் வெற்புப் போலும்
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி யிடையார் முகக் கமலச் சோதி தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-6-

ஸ்ரீ ராமாவதாரம் அனுபவம்
சந்தர மண்டலத்து அளவும் ஓங்கிய மாடங்களில் உள்ள மாதர்கள் –
திங்கள் திரு முகத்து சேயிழையார் -கண்டு சந்தரன் வெள்கி இருந்தானாம் –
துங்கம் -உன்னதமானது
ஆயம் -தோழி தோழமை
பனி -அச்சம் துக்கம் நடுக்கம் –

————————————————–

பொருவில் வலம்புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றுமறிந்தன போலப் புவி மேல் சிந்த
செருவில் வலம்புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி
மருவி வலம்புரி கைதைக் கழி யூடாடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே–3-4-7-

வலம் புரி -பலசாலி முதல் இரண்டு அடிகளில்
அடுத்து சங்கு -வலப்பக்கத்தில் சுழிந்த
புற்றுக்களை சிதைப்பது போலே அரக்கன் முடிகள் பத்தையும் சிதைத்து
சங்குகள் நீர் வளத்தை கண்டு கடலில் இருக்காமல் இங்கே கழிகளில் வந்து  சேர்ந்து –
வயல்களிலே வந்து சேர்ந்து தெருக்களிலே சங்குகளையும் முத்துக்களையும் பிரவேசிக்கின்றனவாம்-

———————————————————

பட்டரவேரகல்குல் பவளச் செவ்வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பாலாம் இன் சொல்
மட்டவிழும் குழலிக் காவானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி யணை வீர் அணில்கள் தாவ
நெட்டிலைய கரும் கமுகின் செங்காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத்
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-8-

பாரிஜாத அபஹரணம் பண்ணி அருளியவனே இங்கே சேவை சாதிக்கிறான்
பிரவாளம் -பவளம்
பணை -மூங்கில் -பசுமை -நெய்ப்புடைமை -திரண்ட வடிவாலும் தோளுக்கு உவமை
தெட்ட பழம்-அர்த்தம் எம்பெருமானாருக்கு -கனிந்த பழம் -திசைச் சொல்லாய் இருந்ததே என்று வியந்த  ஐ திஹ்யம்
குறுக்கும் வகை -திரு நாவாய் பதிகத்தில் போலே-திருவாய் -9-8-1-ஈடு வியாக்யானம்

————————————————-

பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழி நீர் கூடி
துறை தங்கு கமலத்துயின்று கைதைத் தோடாரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணிச்
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காசிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே—-3-4-9-

ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்து அருளுபவன் இங்கே சேவை சாதிக்கிறான்
வண்டுகள் செங்கழு  நீர் மலர்களிலே பேடைகளுடன் கூடி ரமித்து அதனால் உண்டான துவட்சிக்கு
பரிகாரமாக தாமரைப் பூக்களில் வந்து துயில் கொள்ள
தேனை குடித்த களைப்பு தீர
களிப்பின் மிகுதியால் இசை பாடுகின்றன

———————————————————-

செங்கமலத் தயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலிநாடன் அருள்மாரி யரட்டமுக்கி யடையார்சீயம்
கொங்குமலர் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முத்தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே–3-4-10-

தன்னைப் புகழ்தலும் தகும் புலவற்கே –
அந்தணர்கள் அனவரதம் வேத அத்யயனம் செய்து கொண்டு இருப்பதால் –
செங்கமல அயன் அனைய மறையோர் என்கிறார்
விண்ணகரின் செங்கண் மாலை -என்பதும் பாடமாம்
குழாம் களாய் அடியோருடன் கூடி நின்று ஆடுமினே -திருவாய் -2-8-11-போலே
கூடி அனுபவிக்க வேண்டிய அருளிச் செயல் என்றது ஆயிற்று-

சங்கம் முகம் -புலவர் கூட்டம் கூடி கொண்டாடத் தக்க அருளிச் செயல்

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 3-3-வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு-

March 19, 2015

தில்லைச் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்கள் -என்று பர உபதேசமாகச் சென்றது முந்திய திரு மொழி –
தம்முடைய அனுபவமாகச் செல்லுகிறது இத் திருமொழி –
விபவ வவதாரத் திருக் குணங்கள் எல்லாம் இவன் இடம் நிழல் இட்டு விளங்கக் காண்கையாலே
ஒவ் வொரு பாசுரத்திலும் ஒவ் ஒரு அக் குணங்களை அனுசந்தித்து அனுபவிக்கிறார்-

—————————————

வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு
ஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்
கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்
சேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–3-3-1-

ஸ்ரீ கிருஷ்ண அவதார  சேஷ்டிதங்களைப் பேசி அனுபவிக்கிறார் –
சீலைக் குதம்பை யொருகாது ஒரு காது செந்நிற மேல் தோன்றிப் பூ
கோலப் பணைக் கச்சும் கூறை யுடையும்  குளிர் முத்தின் கோடாலமும்
காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர் -3-3-1-என்றும்
பெரியாழ்வார் அருளிச் செய்த படியே

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ் பீலிக் குழல்களும் கீதமுமாகி
எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு மழை கொலோ வருகிறது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழைவனர் நிற்பனராகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே–3-4-1-என்றும்
பெரியாழ்வார் அருளிச் செய்த படியே-

அப்படிப் பட்ட அழகை நாமும் இழவாமல் இங்கே சேவிக்க பெற்றோம் –
ஒருங்கொத்த விணை மருதம்  உன்னிய வந்தவரை -என்றும் –
பொய் மாய மருதான அசுரரை -என்றும் பெரியாழ்வார் அருளிச் செய்த படியே
வாட மருதிடை போகி -பராத் பரனான ஸ்ரீ கிருஷ்ணன் கிட்டே வர அப்போதே வாட்டம் அடைந்தன
ஒக்கலித்திட்டு ஆடல் செய்த குதிரை -நடை பழகுவது போலே ஆடி அசைந்து கொண்டு வந்த குதிரை
நன்மா -விபரீத லஷணை-  நல்ல பாம்பு போலே
வருகின்றான் வருவான் என்று பாடல் தோறும் அருளிச் செய்வதால்
ஆழ்வார் இங்கே வரும் பொது  திரு வீதிப் புறப்பாடாக இருக்கலாம் என்பர்-

————————————————–

பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசு இது வென்றால்
மா நிலமா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டுண்
பூ மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி
தே மலர் தூவ வருவான் சித்திர கூடத்து உள்ளானே —3-3-2-

இடைப் பிள்ளை இவன் இல்லை -திருமடந்தை மண் மடந்தை கொழுந்தன் –
சாஷாத் ஸ்ரீ மன் நாராயணன் -என்று துதித்து தொழுவார்களாம்
பரத்வ சௌலப்யம் காட்டிக் கொண்டு சேவை சாதிக்கும் இடம் –
வாயுள் வையகம்   கண்ட மட  நல்லார் ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே -பெரியாழ்வார்
புலன் கெழு கோவியர் -கண் மனம் இந்த்ரியங்களைக் கவர்கின்ற அழகு வடிவு படைத்த இடைச்சிகள்
பொலன் கெழு -என்றும் பாடம் -பொன் மயமான ஆபரணங்களால் விளங்குகின்ற-என்றுமாம் –

——————————————————-

பண்டு இவன் வெண்ணெய் யுண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப
எண் திசையோரும் வணங்க இணை மருதூடு நடந்திட்டு
அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடு
திண் திறல் பாட வருவான் சித்திர கூடத்து உள்ளானே–3-3-3-

அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான்
காணேடி -பெரிய திரு மொழி -11-5-4-பேசிப் பேசிப் போது போக்குவார்கள் சிலர்
கானமரும் கல்லதர் போய் காடுறைந்த பொன்னடிகள் வானவர் தஞ்சென்னி மலர்
கண்டாய் சாழலே -11-5-1- பேசி வணங்கிக் கிடப்பார்கள் –
அண்டர் இடையர்கள் -அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் -பெரியாழ்வார்-

————————————————–

வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எய்ற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட
திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடததுள்ளானே–3-3-4-

காளிய மரத்தனத்தை தலைக் கட்டி வெற்றி யுடனே வீதி யார வந்தான் –
துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன அர்த்தமாக சேவை சாதிக்கும் இடம் இது
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கை -கட்டுண்டு இருந்து பிறகு அவிழ்ந்த –
விகசித்த படி -தாமரைகள் புஷ்பிக்கக் கூடிய பொய்கை
தடம் -கரை  –

—————————————————-

பருவக் கரு முகில் ஒத்து முத்துடை மா கடல் ஒத்து
அருவித் திரள திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை யொத்து
உருவக் கரும் குழல் ஆய்ச்சி திறத்து இனமால் விடை செற்று
தெருவில் திளைத்து வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-5-

கார்காலத்து காள மேகம் போலே நடந்து வந்து
முத்து வடங்கள் பூண்டு -முத்துக்கள் பூண்ட கரும் கடலோ
அருவிகள் விளங்கும் பொன் மலைகள் பல கூடி  உரு எடுத்து நடந்து வருகின்றானே
பருவம் -மாரி காலம்
பொன்மலையைச் சொன்னதால் ஆபரண சேர்த்தி
பல பலவே ஆபரணம் -திருவாய் -2-5-7-
ஆயிரம் பொன் மலை ஒத்து-என்கிறார்

————————————————–

எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான்
உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி
வையத் தெவரும் வணங்க அணங்கு எழு மா மலை போலே
தெய்வப் புள் ஏறி வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-6-

அம்பு தொடுத்த மாத்ரத்திலே இலங்கை நீறாகி ஒழிந்தது -என்பார்கள் இவன்
கருட வாகனத்தில் எழுது அருளிய வாறே –
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து பெண் ஆக்கை யாப்புண்டு தாமுற்ற போது -நாச் -11-7- என்றபடி சிலர் சொல்ல
மற்றும் சிலர் -மலங்க வரும் மழை காப்பான் உய்யப் பருவரை தாங்கி ஆ நிரை காத்தான் –
ஆஸ்ரித ரஷண அர்த்தமாக பின்னானார் வணங்கும் சோதி பிரகாசிக்கும் இடம்
வையத்து எவரும் -சரியான பாட -வையத் தேவரும் பாட பிழை -பெரிய வாச்சான் பிள்ளை
வ்யாக்யானத்து  சேராது -ஓசை இன்பமும் சிதையும் –

அணங்கு ஏழு மா மழை போல் -அணங்கு எழுதல் -தைவாவேசம் பெறுதல் –
காய்ச்சின பறவை யூர்ந்து பொன் மலையின் மீ மிசைக் கார்முகில் போலே -திறவாய் -9-2-6-போலே
மா மலை போலே தெய்வப் புள் -என்கிறார்-

—————————————————-

ஆவர் இவை செய்தறியார் அஞ்சன மா மலை போலே
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய
காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான்
தேவர் வணங்கு தண் தில்லைத் சித்திர கூடத்துள்ளானே–3-3-7-

ஸ்ரீ கண்ணபிரான் அழகை நாமும் அனுபவிக்கலாம் படி இங்கே பொருந்தி சேவை சாதித்து அருளுகின்றான்
ஆவர் இவை செய்தார் அறிவார் என்று அழகாய காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான் –
இவை -பன்மையில் சொன்னது -வழி இடையே வண்ணானைக் கொன்றது –
ஆயுதச் சாலையில் சென்று வில்லை முறித்தது -கம்சனை முடித்தது முதலியனவும் விவஷிதம் –

——————————————————

பொங்கி அமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ
அங்கு அவனாகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்தாட
பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றோடு பேழ் வாய்
சிங்க வுருவின் வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-8-

ஆசூர பிரக்ருதிகளுக்கு பயங்கரன் -ஸ்ரீ ப்ரஹ்லாத  ஆழ்வான் போன்ற பக்த சிகாமணிகளுக்கு
பிரசன்னா முகனாகவும் சேவை சாதிக்கும் இடம் –
ஆயிரம் தோள் எழுந்து ஆட -பரம பக்த விரோதியைப் புடைப்பதிலே  திருக் கைகளுக்கு
யுண்டான பதற்றத்தை பலமுகமாக்கி வருணித்த படி –

————————————————

கருமுகில் போல்வது ஓர் மேனி கையன் ஆழியும் சங்கும்
பெரு விறல் வானவர் சூழ ஏழுலகும் தொழுது ஏத்த
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத்
திருமகளோடும் வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-9-

ஆழ்வீர் பாசுரம் தோறும் வருவான் வருவான் என்று பாரித்தீர் –
உமக்காக நாய்ச்சிமார்கள் உடன் புறப்பாடு  கண்டு அருளுகிறோம் என்று
விபவம் பொலியப் புறப்பாடு எழுந்து அருளா நின்றான் –
ஆயர் மடந்தை -நப்பின்னை -நீளா தேவி-

—————————————————-

தேனமர் பூம் பொழில் தில்லைச் சித்திர கூடம் அமர்ந்த
வானவர் தங்கள் பிரானை மங்கையர்கோன் மருவார்
ஊனமர் வேல் கலி கன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்
தானிவை கற்று வல்லார் மேல் சாரா தீ வினை தானே–3-3-10-

இப்பதிகத்தைப் பயின்று
பிறருக்கும் பொருள் கூற வல்லமை பெறுமவர்கள்
தீ வினைகட்கு பாத்ரமாகாமல்
நல்லவராய் வாழ்வார் என்று பலன் யுரைத்து தலைக் கட்டி அருளுகிறார் –

————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 3-2-ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து-

March 19, 2015

சோழ நாட்டில் தில்லைத் திருச் சித்ர கூடம் மங்களா சாசனம் செய்து அருளுகிறார்
பரம புருஷார்த்தம் இங்கே சேர்ந்த மாத்ரத்திலே கிடைக்கும்
அங்கே சென்று சேருங்கோள்  என்று உபதேசிக்கிறார் –

——————————————–

ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-

ஒரு தொன் நெறியை   வேண்டுவார் வீழ்  கனியு மூழிலையும் என்னுமிவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பை துஞ்சியும் வெஞ்சுடரோன் மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னதோர் தன்மையார் ஈங்குடலம் விட்டு எழுந்து தொன் நெறிக் கண் சென்றார் -பெரிய திருமடல் –
மயில்கள் ஆடுவது சோலைகளே ஆடுவது போலே தோற்ற
மது வெள்ளத்தால் ஈக்கள் வண்டோடு மொய்ப்ப -கம்பர் –
தில்லை மரங்கள் அடர்ந்த காடு -சித்ரகூடம் போலே எம்பெருமானுக்கு உகந்து அருளி நிற்க பாங்கான திவ்ய தேசம் –
உத்சவர் வீற்று இருந்த திருக் கோலம் இங்கே -மூல மூர்த்தி ஷீராப்தி நாதன் திருக் கோலம்
திருச் சித்ர கூடம் -சரியான பாடம் -திருச் சித்திர கூடம் -சரியானது இல்லை -ஓசை குன்றாமைக்காக
நிகமத்தில் குன்றா ஒலி மாலை என்பர்-

————————————————-

காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2-

உயிர் காவல் இட்டு -என்று முதல் பாசுரத்தில் அருளியதை விளக்குகிறார்
காயிலை தின்றும் கானில் உறைந்தும் கதி தேடித் தீயிடை நின்றும் பூ வலம் வந்தும் திரிவீர்காள்
தாயிலும் அன்பன் பூ மகள் நண்பன் தட நாகப் பாயன் முகுந்தன் கோயிலரங்கம் பணிவீரே -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் -திருவரங்க கலம்பகம் –
வாயோது வேதம் -உச்சாரண அனுச்சாராண ரூபமான அத்யயன பரம்பரை -ஒலைப்படா பிரமாணம் -எழுதா மறை என்றபடி-

——————————————————-

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த
வம்புண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே—3-2-3-

பல்லவ ராஜன் சபரிவாரமாய் வந்து நவ ரத்னங்களையும் கொணர்ந்து சமர்ப்பித்து கைங்கர்யங்கள் செய்த ஸ்தலம்
மகா வராஹமாகி திருவவதாரம் செய்து அருளின பெருமான் பாதார விந்தங்களை பணிய  இங்கே வாருங்கோள்-

—————————————————–

அருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்
கருமா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின் அணைப் பள்ளியின் மேல்
திருமால் திரு மங்கையோடாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-4-

வாமன மூர்த்தியாய் வந்து  தன் பெருமையைப்  பிரகாசப் படுத்தி அருளியவனே
திருப் பாற் கடல் நாதனாக திரு வநந்த ஆழ்வான் மீது பள்ளி கொண்டு அருளும் திவ்ய தேசம் வந்து சேருங்கோள்
கவை நா வரவு -கவை -பிளவு-

———————————————————

கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் குல மன்னரங்கம் மழுவில் துணிய
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்காக கிற்பீர்
பூ மங்கை தங்கிப் புல மங்கை மன்னிப் புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-5-

ஸ்ரீ பரசுராமன் ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர் -கைலாச கிரியை வேரோடு பெயர்த்த இராவணனை வேரோடு பெயர்த்த
கார்த்த வீர்ய ரார்ஜூனனை  வேரோடு பெயர்த்த மிடுக்கர் –
ஆவேச விஷ்ணு சக்தி ஸ்ரீ ராமபிரானால் பெறப் பெற்றது
விரோதி நிரசன ஸ்வாபாவத்துக்காக துதிப்பர் -மன்னடங்க மழு  வலங்கை கொண்ட இராம நம்பி என்றும்
வென்று மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னரை மூ வெழு கொன்ற தேவா -என்றும்
கோக்குல மன்னரை மூ வெழு கால் போக்கிய தேவன் -என்றும் -துதிப்பர்
-உபாசனதுக்கு அல்ல
அது போலே இங்கும்-வென்றித் தவ மா முனியைத் தமக்காக கிற்பீர்-

வங்கம் -கப்பல் -பங்கம் -திரிந்து வங்கம் அழைக்கும் பெயர்
ஸ்ரீ தேவி பூ தேவி -இரு அருகிலும் இருக்க மூன்றாவதாக கீர்த்தி தேவி உலகம் முழுவதும் வியாபித்து -சமத்கார அருளிச் செயல்

———————————————————–

நெய் வாயழ்லம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு அணி யார்ந்து இலங்கு
மையார் மணி வண்ணன் எண்ணி நுந்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர்
அவ்வாய்  இள மங்கையர் பேசவும் தான் அருமா மறை யந்தணர் சிந்தை புக
செவ்வாய்க் கிளி நான் மறை பாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-6-

கடலிலே அணை கட்டிய பெருமானே இங்கே சேவை சாதித்து அருளுகிறான் –
வைதிக பிராமணர்கள் விசேஷமாக வர்த்திக்கும் தேசம் –
மூவாயிர நான் மறையாளர் நாளும் முறையால் வணங்க -இவர் மேலே அருளிச் செய்வார்
தில்லை நகர் திருச் சித்ர கூடம் தன்னுள் அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி யாசனத்து
இருந்த அம்மான் தானே -பெருமாள் திருமொழி -10-2-
நாங்கை நாலாயிரம் தில்லை மூவாயிரம் -வகல்லச் சொல் உண்டே
அநவரதம் வேதம் ஓதுவதால் பெண் பிள்ளைகளும் காதில் பட்ட உறைப்பின் மிகுதியால் வேதங்களைச் சொல்ல
அவர்கள் கையில் இருந்து வளர்கிற பேசிற்றே பேசும் கிளிப் பிள்ளைகளும் நான்மறைகள் பாடுகின்றனவாம்
அவ் வாயிள மங்கையர் -கிளிகளின் வாய் போலே பழுத்த வாயை யுடைய வர்கள்
அந்தணர் சிந்தை புக –
அத்யயனத்துக்கு இட்டுப் பிறவாத இப் பஷிகளும் வேதம் ஓதுகிற விசித்ரம் என்னே -என்று மனம் உருகும்படி –

————————————————————–

மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு திரு மார்பனைச் சிந்தை யுள் வைத்தும் என்பீர்
கௌவைக் களிற்றின் மருப்பும் பொறுப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்
தெய்வப் புனல் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-7-

நிவா என்னும் நதி புடை சூழ -மற்றும் பல புண்ய தீர்த்தங்களும் நிறைந்த திவ்ய தேசம்
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து-நப்பின்னைப் பிராட்டி மணாளனாய் இருக்குமாற்றைச் சொன்னபடி
நீர் பயந்த தெய்வத் திரு மா மலர் மங்கை-பாற்கடல் கடையும் பொழுது தோன்றினவள் –

கௌவை–கவ்வை -பேரொலி என்னும் பொருள் -மத நீர் என்றும் சொல்வர்
சந்து -சந்தானம்
நிவா -வெள்ளாறு-

——————————————————

மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முதுகுன்று எடுத்து ஆயர் தங்கள்
கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்புடையீர்
மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-8-

கேசி நிரசனன்-கோவர்த்தன கிரி தாரி -இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாடினவன் இவனே
பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளினவனும் இவனே
அணங்காய சோதி -அணங்கு -தெய்வம் -திவ்யமான சோதியை யுடைய என்றபடி-

————————————————————

செரு நீல வேல் கண் மடவார் திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்
அரு நீல பாவம் அகலப் புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்
பெரு நீர் நிவா வுந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-9-

திருச் சித்ர கூடம் சிலகாலம் வாழ்ந்தால் பரமபத பிராப்தி யுண்டாகும் -அவ்விருப்பே பரமபதம் என்றுமாம்
செரு நீல வேல் கண் -செருச் செய்யும் வேலையையும் நீல மலரையும் போன்ற கண்களை யுடைய மடவார்
அரு நீல பாவம் அகல -அருமையாயும் நீலமாயும் இருக்கும் பாவம் –
பிராயச் சித்தத்தாலும் போக்க ஒண்ணாத அருமை -நெஞ்கை இருளைப் பண்ணுவதால் நீலம் –
வித்தும் வயல் -விதைக்கப் பெற்ற வயல்
வெள்ளாறு பெரு வெள்ளமாக பெருகி வர
முத்துக்களை கொழித்துக் கொண்டு கழனிகளிலே தள்ள –
அந்த முத்துக்கள் விதை  விதைத்தது போலே விளங்க
அவற்றை மீன்கள் கண்டு இவை என்னவோ என்று வெருவித் தாவித் திரிகிற -என்றவாறு  –

—————————————————–

சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே–3-2-10-

பரம உதாரரான பரகாலர் பாடின இப்பாடல்கள் பகவத் பக்தி மிகுந்த ஸ்ரீ வைஷ்ணவர்கட்கு கர்ணாம்ருதம் ஆனவை
இப்படிப் பட்ட பாடல்களை ஓத வல்லவர்கள் எம்பெருமான் திருவடி நிழலில் ஒதுங்கி வாழப் பெறுவார் –

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 3-1-இரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி-

March 19, 2015

நடு நாட்டுத் திருப்பதிகளில் மற்று ஒன்றான திரு வஹீந்திர புரம் திவ்ய தேசத்தை மங்களா சாசனம் செய்து அருளுகிறார்-

இரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நன் மலர்த் தேறல்
அருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே–3-1-1-

உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன் -பெரிய திரு மொழி -4-3-9-
என்னப் பட்ட பகவத் விஷயம் ஆகிற தேனை விரும்பியும் –
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனது அடிப்போதில் ஒண் சீராம் தெளி தேன் யுண்டு
அமர்ந்திட வேண்டி -இராமானுச  நூற்றந்தாதி -99- என்கிறபடியே
ஆசார்ய பாதாராவிந்த சேவை யாகிற மதுவைப் பருகுதலாகிய வ்ரதம் பூண்டும்
ஊர்த்த கதிக்கு சாதனம் ஆகிற இரண்டு சிறகுகள் கர்ம ஞானம் -சார க்ரஹிகள்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் -வண்டு-

அவர்கள் பகவத் பாகவத போக்யதைகளை அனுபவித்த ஆனந்தத்துக்கு போக்கு வீடாக –
பண்கள் தலைக் கொள்ளப் பாடி -திருவாய் -3-5-2-என்கிறபடியே
நாரத முனிவர் -திருப் பாண் ஆழ்வார் -தம்பிரான்மார் முதலானவரை போலே இசை  பாடுவதாலே -இன்னிசை முரன்று எழும் –
பகவத் பாகவத குண அனுபவங்களுக்கு வாய்த்த இடங்களே பொழில்
செருந்தி -ஒரு வ்ருஷ விசேஷம் -அதன் மேலே சென்று அணைவது-
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே  -திருவாய் -6-3-9-என்றும்
வாசுதேவ தருச்சாயா -என்றும்
சம்சாரம் ஆகிய கொடிய வெய்யிலே தபிக்கப் பட்டவர்களுக்கு  விடாய் தீர்க்கும் வாசுதேவருடைய
பாதமலர் சென்று சேர்ந்து இருக்கும் இருப்பு -இதுவே திருவயிந்தபுரம் –

இவ்வாறு ஸ்வாபதேச வியாக்யானம் -திருவாய் -5-9-1- மானேய் நோக்கு நல்லீர் -என்கிற பாட்டில் –
தேனார் சோலைகள் சூழ் –
நித்ய ப்ராப்யனாய்க் கொண்டு அங்கே இருக்கிறவன் ஆஸ்ரிதர் உகந்ததொரு த்ரவ்யத்தை
திருமேனியாகக் கொண்டு முகம் கொடுத்துக் கொடு நிற்கிறாப் போலே
அங்கு உள்ளாறும் இங்கே போந்து ஸ்தாவரங்களாயும் ஜங்கமங்களாயும் திர்யக்குகளாயும் அவனை விட மாட்டாதே நிற்கிறபடி –
நித்தியரும் முக்தரும் அவன் இடம் ருசியுடையாரும் உகந்து அருளின நிலங்களையே இறே பற்றி இருப்பது-

அஹ்ருத சஹஜ தாஸ்யாஸ் சூரயஸ் ஸ்ரச்த பந்தா  -விமல சரம தேஹா இத்யமீ ரங்கதாம
மஹிதமநுஜ திர்யக் ஸ்தாவரத்வா -ஸ்ரயந்தே ஸூ நியதமிதி ஹ ஸ்ம ப்ராஹூரேப்யோ நமஸ் ஸ்தாத்-சர் ரெங்கராஜ சத்வம் –
ஸ்வேதா வராஹ கல்பம் இப்பொழுது -முந்திய பாத்ம கல்பத்தில் மகா வராஹ ரூபி
பாரார் உலகம் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில் ஏரார் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மான் -பெரிய திருமொழி -8-8-3-
வளை மருப்பின் அகலத்து ஒடுக்கி -பிரான் உன் பெருமை யார் அறிவார் –

உராய் உலகு அளந்த நான்று -வராகத்து எயிற்று அளவு போதாவாறு என் கொலோ
எந்தை அடிக்களவு போந்தபடி -பொய்கையார்
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் –
அவன் நிழல் இட்டாலே கருத்த நிறம் கொண்ட திருப் பாற் கடல் –
அன்றிக்கே –
திருப் பாற் கடல் தானே மகா வராஹத்தின் யுடைய குளம்பிலே துகளாய் குழம்பித் தன்நிறம் போயிற்று என்னவுமாம்
தேறல் -தேன்
பொதுளுதல் -நெருங்குதல்
செறிந்து அழகிய பொழிலூடே-என்றபடி-அவன் பூஜித்த ஸ்தலம்-

—————————————————-

மின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம் வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் தரு திருவயிந்தபுரமே–3-1-2-

பரமபத லஷணம்  மூன்றையும் சொல்லி அருளி
காளமேகத்திலே மின்னல் போலே திரு ஆழி -மின்னும் ஆழி யம் கையவன் –
மின்னல் கொடி நித்ய ஸ்ரீ யாய் -செய்யவள் உறை தரு திரு மார்பன்
தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே பூ விரிய மது நுகரும்
பொறி வரிய சிறு வண்டே -பெரிய திரு மொழி -3-6-1–
வண்டானது சாகைகளின் நுனியில் திரியுமா போலே வேத சாகைகளின் நுனியிலே விளங்கும்
எம்பெருமான் பிராட்டி உடன் ப்ரணய  கலஹம் -என்றுமாம் –

பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே பிரணய கலஹம் மாறாதே செல்லுமா போலே ஆயிற்று
அங்குத்தை திர்யக்குகள் உடைய யாத்ரையும் –

———————————————————————

வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு
மெய்யனாகிய தெய்வ நாயகனிடம் மெய்தகு வரைச் சாரல்
மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யம் கொடி யாட
செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு திருவயிந்திரபுரமே–3-1-3-

தாஸ சத்யன் -இங்கு உள்ள எம்பெருமான் திரு நாமம் -அதனால்; அடியவர்க்கு மெய்யன் -என்கிறார்
அத்வேஷம் முதல் படி -அவர்களையும் அடியவர் என்று திரு உள்ளம் பற்றி
தனது ஸ்வரூப ஸ்வ பாவங்களை மெய்மையாகக் காட்டி அருளுபவன்

——————————————————————–

மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்பகம் இரு பிளவா
கூறு கொண்டு அவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவனிடம் மிடைந்து
சாறு கொண்ட மென் கரும்பு இளங்கழை தகை விசும்புற மணி நீழல்
சேறு கொண்ட தண் பழனமது எழில் திகழ திருவயிந்தபுரமே–3-1-4-

ஆஸ்ரித பஷபாதம் ஆகிய திருக் குணங்கள் விளங்க வாழும் இடம்

——————————————————-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து
ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் பொன் மலர் திகழ் வேங்கை
கொங்கு செண்பகக் கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்தோடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர் தரு திருவயிந்திரபுரமே–3-1-5-

குரங்குகளை சொன்னது சபலரான-நின்றவா நில்லா நெஞ்சை யுடையரான – சம்சாரிகளை கூறியவாறாம்
வேங்கை கோங்கு செண்பக மரங்களை -பூக்கள் பொன்னிறம் ஆதலால் -பொன் மலர் திகழ்-
ஸ்வா பதேசத்தில் நெஞ்சைக் கவர்கின்ற விஷயாந்தரங்களைச் சொன்னபடி
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும் -பெரியாழ்வார்-

——————————————–

கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து இளங் கொடியோடும்
கானுலாவிய கருமுகில் திரு நிறத்தவன் இடம் கவினாரும்
வானுலாவிய மதி தவழ் மால்வரை மா மதிள் புடை சூழ
தேனுலாவிய செழும் பொழில் தழுவிய திருவயிந்திரபுரமே–3-1-6-

கொங்கை வன் கூனி சொல் கொண்டு –வன் கானடை -பெரியாழ்வார்
வனவாசோ மஹோதயா-சந்தோஷமே விஞ்சி திருமேனி புகர் பெற்று -கானுலாவிய கரு முகில் திரு நிறத்தான்
பிராட்டியுடன் எழுந்து அருளும் இருப்பு மின்னல் உறைந்த மா முகில் -நடந்து செல்லுகிற படி
மால்வரை மா மதிள்–மலைகளாலும் மதில்களாலும் சூழப் பட்ட
அன்றிக்கே
உம்மைத் தொகையாகக் கொள்ளாமல் உவமைத் தொகையாக கொண்டு மலை போன்ற மதிளால் சூழப் பெற்ற திவ்ய தேசம் –

————————————————-

மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை
மன்னன் நீள் முடி பொடி செய்த மைந்தன் இடம் மணி வரை நீழல்
அன்ன மா மலர் அரவிந்தத் தமளியில் பெடையொடும் இனிதமர
செந்நெலார் கவரிக்குலை வீசு தண் திருவயிந்திரபுரமே–3-1-7-

கானுலாவிய என்றவர் ராவண சம்ஹார பர்யந்தமான செயல்களையும் அருளிச் செய்கிறார்
மின்னின் நுண்ணிடை -மின்னப் போன்ற மின்னலை விட -தேக குணங்களுக்கு எல்லாம் உப லஷணம்
மடம் -என்றது ஆத்ம குணங்களுக்கு உப லஷணம்
விலங்கலின் மிசை இலங்கை -விலங்கல் என்று மலைக்கு பெயர் –
ஸூ வேல பர்வதத்தின் மேலே த்ரிகூடத்தின் மீது அமைக்கப் பட்ட இலங்கை
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் யுரைத்த போலே ஆசார்யர்கள் சிஷ்யர்களுக்கு யுரைத்தும்
பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்து அழுந்தார் – என்றபடி
சம்சாரத்தில் பொருந்தாத கூரத் ஆழ்வான் போல்வார் அன்னம்
பெடையொடும் என்றதால் க்ருஹ ஆஸ்ரமத்தில் இருப்பாரை
அரவிந்தமளி -எம்பெருமான் உடைய-ஆசார்யன் யுடைய பாதார விந்தங்கள்
செந்நெலார் கவரி குலை வீச -சிஷ்யர்கள் சாமரங்கள் சமர்ப்பிக்க -கைங்கர்யம் செய்து உஜ்ஜீவிக்கும் படி சொல்லிற்று –

———————————————————-

விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்த அடல் மழைக்கு
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடமார்
வரை வளம் திகழ மதகரி மருப்பொடு மலைவளர் அகில் உந்தித்
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே–3-1-8-

ஸ்ரீ ராமபிரானுடைய பராக்ரமமும் ஸ்ரீ கிருஷ்ணனுடைய சௌலப்யமும் தைவ  நாயகன் பக்கலில் கண்டேன் என்கிறார் –
கருட நதி பிரவஹிக்கும் படியை வருணிக்கிறார் –

——————————————————-

வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணித்தேர்
கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரைச் சாரல்
கால் கொள் கண் கொடிக் கை எழக் கமுகு இளம் பாளைகள் கமழ சாரல்
சேலைகள் பாய் தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே–3-1-9-

ஸ்ரீ பார்த்த சாரதியாய் இருந்து வெற்றி பெறுவித்தவன் வாழும் இடம்
வெற்றிலைத் தோட்டங்களும் பாக்குச் சோலைகளும் நீர் வாய்ப்பும் உள்ள கழனிகளும் நிறையப் பெற்ற திவ்ய தேசம் –

———————————————————

மூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே–3-1-10-

ப்ரஹ்ம ருத்ரனுக்கு   அந்தர்யாமியாக இருந்தும் தானான தன்மையாலும் -மூவராகிய ஒருவனை
தேவர்களும் அசுரர்களும் வந்து இஷ்ட சித்திக்காக ஆஸ்ரயிக்கலாம் படி எழுந்து அருளி இருக்கும்
விஷயமாக அருளிச் செய்த இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்
பாபங்கள் நீங்கி புண்ய பலம் அனுபவிக்கப் பெறுவார்கள் –

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-10-மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்-

March 19, 2015

நடு நாட்டுத் திருப்பதிகளில் அனுபவிக்கக் கோலி-இதில் திருக் கோவலூரிலே ஆழம் கால் படுகிறார் –
கோபாலன் என்கிற ஆயனார் எழுந்து அருளி இருக்கும் திவ்ய தேசம் என்பதால் திருக் கோவலூர் -என்று திரு நாமம் ஆயிற்று
கோபால -என்ற சொல் கோவல -என்று திரிந்து உள்ளது –
பாவரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவின்
மூவரு நெருக்கி மொழி விளக்கேற்றி முகந்தனைத் தொழுத நன்னாடு -என்று புகழ்ந்து கூறும்படி
முதல் ஆழ்வார் மூவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து அந்தாதி பாடின ஸ்தலம் இது-

——————————————

மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே—2-10-1-

ஆபத் சகனைக் காணப் பெற்றேன் -திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளிய –
சிறுக் குழந்தையாகி கண்  வளர்ந்து அருளும் -முழு முதல் கடவுளைக் காணப் பெற்றேன் –
பெண்ணை யாற்றின் -தஷிணபிநாகிநீ நதி யின் -தென் கரையில் -அநந்ய பிரயோஜனர்கள் வைதிக கர்மங்களை -சோம  யாகம் -செய்து
ஒரு தேசம் கருதாது வழிச் செல்பவனுக்கு தேச பிராப்தி தன்னடையே கிட்டுமா போலே த்ருஷ்ட பலன்கள் சம்பவிக்கும் –

——————————————-

கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழப் பணங்கொள் பாம்பில்
சந்தணி மென்முலை மலராள் தரணி மங்கை தாமிருவர் அடி வருடும் தன்மையானை
வந்தனை செய்து இசை ஏழ் ஆறங்கம் ஐந்து வளர் வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்
சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும் செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10–2-

திருப் பாற் கடலிலே -திரு மகளும் கண் மகளும் திருவடிகளை வருட -ப்ரஹ்மாதிகள் தொழும் படி –
கண் வளர்ந்து அருளுபவனே இங்கே சேவை சாதிக்கிறான்
தூய  நான் மறையாளர் -எழுவாய் -கீழ் பாட்டில் இருந்து தருவித்துக் கொள்ள குறை இல்லை –
ஞானம் அனுஷ்டானங்கள் குறை இல்லாதவர்கள் –

———————————————–

கொழுந்தலரும் மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக்கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி
அழுந்திய மா களிற்றுனுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரம்மே வரத்தோன்றி அருள் செய்தானை
எழுந்த மலர்க் கருநீலம் இருந்தில் காட்ட இரும்புன்ன முத்தரும்பிச் செம்பொன் காட்ட
செழுந்தட நீர்க்கமலம் தீவிகை போல் காட்டும் திருக் கோவலூர் அதனுள் கண்டேனே–2-10-3-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு அருள் செய்த அந்த ஆதி மூலமே நம்மை ரஷிக்க இங்கே சேவை சாதிக்கிறான் –
அந்தரம் மேவர -மேவுதல்-ஆகாசம்  இடமடைய நிரம்புதல்
அருள் செய்தானை -பூவை தன திருவடியில் ஏற்றுக் கொண்டு காலில் புண் ஆறும்படி உபசாரங்கள் செய்து அருளினான்
பொற் களரி -தட்டான் யுடைய கார்யச் சாலை –
கரிகள் -பொன்கள் -முத்துக்கள் -நிரம்பி இருக்கும் -நேருக்கு ஜ்வாலையும் இருக்கும் –
கரு நீல மலர்கள் -கரியாகவும்
புன்னை மொக்குகள் முத்தாகவும் –
புன்னைப் பூக்கள் பொன்னாகவும் –
தாமரைப் பூக்கள் நெருப்பாகவும் -திகழ்வனவாம் –

———————————————————

தாங்கரும் போர் மாலி படப்பறவை யூர்ந்து தாரலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை
கோங்கரும் புசுர புன்னை குரவர் சோலைக் குழா வரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-

மாலி மால்யமான் சுமாலி போன்றோரை நிரசித்த சீலனே இங்கே சேவை சாதிக்கிறான் –

கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு-
ஆஹ்லாத சீத நேத்ராம்பு -கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் –
பக்தர்களுக்கு -தேனே பாலே கண்ணாலே அமுதே -என்னும்படி இருக்கும் எம்பெருமான் —
முதல் ஆழ்வார்களை நெருக்குண்டு அனுபவித்த கரும்பு -அன்றோ அவன் -கருப்பஞ்சாறு மூன்று திருவந்தாதிகள் –

வரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர்-
கரும்புக்கு நீர் பாய்ச்ச கணுக்கள் விட்டு வளருமா போலே –
வண்டுகள் இசைப் பாடல் ஆகிய இன்ப ரசம் பயப் பெற்று கரும்புகள் கணுக்கள் வளரப் பெற்றன –
கண் வளரும் -உறங்கும் என்னும் பொருளிலும் -கண்ணபிரான் குழல் ஓசையால் சராசரங்கள்
மெய் மறந்து நின்றால் போலே வண்டுகளின் இன்னிசையைக் கேட்டு
அக்றிணைப் பொருளாகிய கரும்பும் அசைவற்று நிற்கும் படியை சொல்லிற்று –
மருண்டு மான் கணங்கள்  மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர  இரண்டு பாடும் துலுங்கா
புடை பெயரா எழுது சித்திரங்கள் போல் நின்றனவாம் -என்றால் போலே –

———————————————–

கறை வளர் வேல் கரன் முதலாகக் கவந்தன் வாலி கணை யொன்றினால் மடிய இலங்கை தன்னுள்
பிறை எய்ற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை
மறை வளரப் புகழ் வளர மாடந்தோரும் மண்டபம் ஒண் தொளி யனைத்தும் வாரமோத
சிறை யணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே-2-10-5-

ரத்த மாம்சங்கள் கறை மாறாது இருக்கும் வேலை கொண்ட கரன் -கபந்தன் வாலி போன்றாரை நிரசித்த
சக்ரவர்த்தி திருமகனே இங்கே சேவை சாதிக்கின்றான்
கவந்தன் -தனு யஷன் யுடைய மகன் -ஸ்தூல சிரஸ் முனிவரால் யுடைய சாபத்தால் -அரக்கனாகி
பெருமாளால் தோள்கள் துணிக்கப் பட்டி சாப விமோசனம் பெற்றான்
பெரும்தகை -அரசன் -ராவணன் –
ஒண் தொளி அனைத்தும் -அழகிய வீதிகள் எங்கும்
வாரம் ஓத -அனுவாகம் அடியையோ பஞ்சாதியின் அடியையோ ஒருவர் எடுத்துக் கொடுத்து பதபாடம் சொல் என்று சொல்ல
மயங்காமல் மேலே ஏற்றக் குறை இன்றி 250 பதங்கள் சொல்லும் முறை
சிறை -ஜல ப்ராந்தம் –

————————————————–

உறியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறியார்ந்த கருங்களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை
வெறியார்ந்த மலர்மகள் நா மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வச்
செறி யார்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-6-

ஒளியாச் சென்ற -ஒளியால் சென்ற -பாட பேதங்கள்
ஒளியா -ஒளிந்து கொண்டு என்றபடி
ஒளியா வெண்ணெய் யுண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் விளியா வார்க்க
ஆப்புண்டு விம்மி அழுதான்   -என்பர் மேல் ஆறாம் பத்தில் –
ஒளியால் -என்ற போது -நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து வேயகம் பால் வெண்ணெய் தொடு யுண்ட -திருவாய் -3-8-3-என்றபடியே
திரு முத்துக்களின் ஒளியையே கை விளக்காகக் கொண்டு -என்றபடி
களவாலே அன்றியே -நாள் இளம்  திங்கள் இத்யாதிப் படியே -பெரிய வாச்சான் பிள்ளை –

தறி -யானை கட்டும் கம்பம் -உரலைத் தறியாகவும் -கண்ணபிரானை கரும் களிறாகவும்
வெறியார்ந்த மலர்மகள்  இத்யாதி – ஸ்ரீ மகா லஷ்மி சரஸ்வதி துர்க்கை மூவரும்
விந்தை மேய கற்புடைய மடக் கன்னி  காவல் பூண்ட கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி
பொற்புடைய மலையரையன் பணிய நின்ற பூங்கோ வலூர் -திரு நெடும் தாண்டகம் -7-
ஷேத்திர பாலனம் செய்வதால் -வியன்கலை எண் தோளினாள் விளங்கு -என்கிறார்
வெய்ய கலைப்பாகி-பெரியாழ்வார் -1-3-9- பாசுரமும் இத்தை காட்டி அருளும்
திருக் கோவலூர் உள்ளார் அடங்கலும் லஷ்மி கடாஷம் பெற்ற செல்வர்கள் -சரஸ்வதி -நா மங்கை -கடாஷம் பெற்ற வித்வான்கள் –

————————————————–

இருங்கைம்மா கரி முனிந்து பரியைக் கீறி இனவிடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து
வரும்சகடம் இற உதைத்து மல்லை யட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சானானை
கருங்கமுகு பசும்பாளை வெண் முத்து ஈன்று காயெல்லாம் மரகதமாய்ப் பவளம் காட்ட
செருந்தி மிக மொட்டலர்த்தும் தேன் கொள் சோலைத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-7-

திருக் கோவலூர் ஆயனார் யுடைய சிறுச்  சேவகங்களை நெஞ்சார அனுசந்திக்கிறார்
சோலையின் அழகை-முத்து மரகதம் பவளம் -முதலிய சிறந்த பொருள்கள் பொழில்களின் நின்று
வருகின்றன என்று சமத்காரமாக அருளிச் செய்கிறார் –

———————————————

பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதி யங்கி பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை
போரேறொன்று உடையானும் அளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல்
சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-8-

மண்ணின் பாரத்தை நீக்கி அருளிய அவனே இங்கே சேவை சாதிக்கிறான்
இங்கு உள்ளார் காமனை வென்ற ஜிதேந்த்ரியர் பலர் -ரிஷப வாகனன் சிவன் பொருந்தும் ஊரோ
செல்வம் மிக்கவர் பலர் உளதால் குபேர பட்டணமோ-அளகா புரியோ –
அழகு மிக்கு இருப்பதால் தேவேந்திர பவனமோ
வேதம் வல்லார் நிறைந்து இருப்பதால் சத்ய லோகமோ-

————————————————

தூவடிவின்பார்மகள் பூ மங்கையோடு சுடராழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற
காவடிவின் கற்பகமே போலே நின்று கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு வுருவமானான் தன்னை
தீவடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-9-

திருமகளும் மண் மகளும் இரு பாலும் திகழ -திரு கைகளில் திரு ஆழி திருச் சங்குகள் பொலிய-
பெரியதொரு கல்பக வருஷம் போலே சர்வ ஸ்வதானம் பண்ணி அருள்பவனும்
செந்தாமரை போன்ற திருவடி -திருக்கை திருவாய் திருக்கண் பீதகவாடை காந்தியாலும்
செம்பொன் மயமான திரு உருவம் விளங்கப் பெற்ற பெருமான் -நித்ய வாசம் செய்து அருளி –
ப்ரஹ்ம ருத்ராதிகள் போலே சிருஷ்டி சம்ஹாரங்கள் பண்ண வல்லோர் வாழும் திவ்ய தேசம்
காவடிவில் கற்பகம் பெரிய சோலை போலே பரந்து விளங்கும் -கப்பும் கிளையுமாகப் பணைத்து-
தீ வடிவில் சிவன் -ஓர் உருவம் பொன் உருவம் ஓன்று செந்தீ -திரு நெடும் தாண்டகம் –

——————————————–

வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னை
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் என்று
வாரணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் வாள் கலியன் ஒலி யைந்தும் யைந்தும் வல்லார்
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே–2-10-10-

சர்வ வியாபியான சர்வேஸ்வரனை சேவிக்கப் பெறுவார்கள்
சீரணங்கு மறையாளர் -ஆத்மகுண பூர்தியைப் பார்த்தவாறே -இவர்களுக்கு அடிமைப் படக் கடவோம் -என்று
விரும்புவதற்கு உரிய அந்தணர்கள்
வாரணங்கு முலை மடவார் மங்கை -சோலை வாய்ப்பு வயல் வீறு -மதிள் பொலிவு போலே
ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணி-

காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே –
ஐஸ்வர்யாத்துக்காகவும்
ஆத்ம பிராப்திக்காகவும்
பகவத் பிராப்திக்காகவும்
லோகத்தில் உள்ளார் திரண்டு ஆஸ்ரயிக்க-
ஆஸ்ரயித்த போதே ஆஸ்ரயித்தார் அபேஷிதத்தை
கொடுக்கைக்காக
எங்கும் புக்கு வியாபித்து
அந்யைரத்ருஷ்டனாய்
நம்மை ஆஸ்ரயிப்பாரோ என்று
அவசர பிரதீஷனாய் நிற்கிறவனைக் காணப் பெறுவார்-பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள்

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-9-சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்-

March 18, 2015

திரு பரமேஸ்வர விண்ணகரத்து எம்பெருமானை -ஸ்ரீ வைகுண்ட பெருமாள் -மங்களா சாசனம் செய்து அருளுகிறார்
பல்லவ ராஜன் பல திருப் பணிகள் செய்ததாக பிரபலம்
முன்னடிகள் பகவத் குண கீர்த்தனம் -பின்னடிகள் பல்லவராஜன் புகழ்ச்சி
என்நாவிலின்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -திருவாய் -3-9-1-
இழியக் கருதி ஒரு மானிடம் பாடல் என்னாவதே -திருவாய் -3-9-3-
பகவத் விஷயத்திலே அபிமானம் பூண்டு கிஞ்சித் கரிக்கப் பெற்றார்களே என்னும் உவப்பினால் புகழ்ந்து பேசுகிறார்
மேலும் ஆறாம் பத்தில் திரு நறையூர் பதிகத்திலும் -அம்பரமும் பெரு நிலனும் -செங்கணான் கோச் சோழனைப் புகழ்ந்து பேசுவர் –
எம்பெருமானோடு எம்பெருமான் உகந்து அருளின நிலங்களோடு -அந்நிலங்களை அபிமானித்து இருக்கும் மனிசரோடே
வாசி அற எல்லாருமே ஆழ்வாருக்கு உத்தேச்யமாய்   இருக்கும் என்கை –

————————————————————

சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் அதுவே–2-9-1-

சொல் -சப்த ராசிகள் -அந்தராத்மா -எம்பெருமான் அளவும் சொல்லி நிற்குமே -அபர்யவஸாநவ்ருத்தி-
வன்சொல்லாவது-அழியாமல் வலிதாய் இருக்கக் கூடிய சப்தம் -வேதம் –

யோகிகட்கு -ரசம் ஸ்பர்சம் சப்தம் கந்தம் ரூபம் போல்வன எம்பெருமானே –
த்வக்ச   த்ருச்ச நிபிபரசதி ஜிஹ்வா -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -24
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு -என்றும் பாடம் -அந்தர்யாமியான நாராயணன் என்றவாறு
தடம் சூழ்ந்த அழகாய கச்சி -பரமேஸ்வர விண்ணகரத்திலே   அன்வயிக்கும்
பல்லவர் கோன் திருக் கடல் மல்லையை படைவீடாகக் கொண்டு அரசாட்சி புரிந்தமை பற்றி மல்லையர் கோன் எனப் பட்டான்
கழல் பல்லவன் -பல்லவம் போன்ற பாதத்தை யுடையவன் -பல்லவம் -தளிர்

————————————————————–

கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திரள் வாட்டிய திண சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-2-

உந்திக் கமலத்தில் மன்னி இருக்கையாவது -இவற்றுக்கு எல்லாம் பிறப்பிடமாய் இருக்கை
உந்தித் தார் -தார் -புஷ்பம்
சகரவர்த்தி   திருமகன் யுடைய பராக்கிரமம் போலே  புகழ்ந்து பேசுகிறார்
பாண்டிய ராஜனுக்கும் இப் பல்லவ ராஜனுக்கும் பெரும் போர் விளைய அதில் இவ்வரசன் வெற்றி பெற்றான் என்பர்
தேர் வீரனான பாண்டியனை  -தேர் மன்னு தென்னவனை
அதிரதர் -தானாகவே இருந்து பல்லாயிரம் போர் செய்ய வல்லவர்
மகாரதர் -தானாகவே இருந்து பதினாறாயிரம் பேருடன் போர் செய்ய வல்லவர்
சமரதர் -ஒரு வீரரோடு தாமும் ஒருவராய் போர் செய்கை
அர்த்தரதர் -அப்படி போர் செய்து தமது தேர் முதலியவற்றை இழந்து போவார்
முனையில் செருவில் -செருகின்ற   வில்லை யுடையவர்
செருவில் முனையில் -போர் முகத்தில் என்றுமாம்
பாண்டியனுடைய வில்லை பங்கப் படுத்தின வில்லை யுடைய பல்லவ ராஜன் கிஞ்சித் கரித்த
திவ்ய தேசம் -தாமரைக் கண்ணன் இடம் என்றது ஆயிற்று-

——————————————————————-

உரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான் ஒரு கால் முன்னம் மா வுருவாய்க்கடலுள்
வரந்தரு மா மணி வண்ணனிடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல் நெடு வாயிலுகச் செருவில் முன நாள்
பரந்தவன் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே–2-9-3-

திருப் பாற் கடலிலே திரு வநந்த ஆழ்வான் மேலே சயனித்து அருளுபவனே –
பேர் அருளாளப் பெருமாளாய் வராத ராஜன் என்று திரு நாமம் பூண்டு சேவை சாதித்து அருளுகிறான் –
அவனே பரமேஸ்வர விண்ணகரிலே ஸ்ரீ வைகுண்ட நாதனாக சேவை சாதித்து அருளுகிறான்
உரம் தரு மெல்லணை -உரமாவது வலிவு -பிராட்டிமார் உடம் எம்பெருமான் வருத்தித்  துகைத்தால் வருத்தம் இன்றி
பொறுத்து இருக்க வல்ல வலிமை  யுடையவன்
வரம் தரு மா மணி வண்ணன்- என்பதால் இப்பாசுரத்தை இரட்டித்து ஓதுவார்
ஸ்ரீ ஹஸ்திகிரி பேர் அருளானை மங்களா சாசனம் செய்து அருளுவதால் –
மண்ணையில் இருந்த சத்ருக்களை இவ்வரசன் வேல் படையாலே மாண்டு ஒழிந்தனாராம்
உக -உகுதல் பொடியாய்ப் பேசுதல்-

—————————————————————–

அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரோடு வான் எரி கால் முதலா
உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
விண்டவர் இண்டைக் குழாமுடனே விரைந்தார் இரியச் செருவில் முனிந்து
பண்டு ஒரு கால் வளைத்தான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-4-

பிரளயத்தில் திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளிய அவனே சம்சார பெரும் கடலில் இருந்து நம்மை நோக்கி
அருள இங்கே சந்நிதி பண்ணி விரும்பி நிற்கிறான்
விண்டவர் -சத்ருக்கள் -அவர்கள் தாம் மட்டும் இன்றி
இன்டைக் குழாம் உடனே இரிய -தங்களைச் சேர்ந்த கூட்டங்களும் சிதறி ஓடும்படி இப்பல்லவன் வில் வளைத்த மிடுக்கு –
செருவில் போர் செய்கின்ற வில்லை வளைத்தான்
சூழ்ந்து கொண்டான் -சிதறி ஓடும் படி ஆக்ரமித்தான் என்றுமாம் –

———————————————————-

தூம்புடைத் திண் கைவன்தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம்புனல் பொய்கை புக்கனவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
தேம் பொழில் குன்றெயில்  தென்னவனைத் திசைப்பச் செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-5-

யானையினுடைய துதிக்கையிலே துளை உள்ளதனால் தூம்புடைத் திண் கை -எனப் பட்டது
களிற்றின் துயர் தீர்த்து -கையில் உள்ள தாமரைப் பூவை திருவடியிலே சாத்தப் பெற்றதே-

தேம் பொழில் -தேம் -ஈரம் -கள்-தித்திப்பு -தேன் -வாசனை –
பாம்புடை -பல்லவ ராஜன் நாகத்து லோகம் அளவும் சென்று வென்று வந்தவன் -என்பதால் நாகத்தை கொடியாய் கொண்டவன்
குரு வம்ச அரசன் துரியோதனன் -அரவு நீள் கொடியோன் -எனப்படுவன் –

———————————————————-

திண் படைக் கோளரியின் உருவாய்த் திறலோன் அகலம் செருவில் முன நாள்
புண் படப் போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப விடை வெல் கொடி வேற் படை முன் உயர்த்த
பண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே–2-9-6-

ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்திக்கு திரு உகிரே படை என்பதால் திண் படை -என்கிறார் –
விட வெல் கொடி -என்றும் -விடை வெல் கொடி -என்றும் -விறல் வெல் கொடி -மூன்று பாடங்கள்
விட வெல் கொடி -நாகக் கொடியோன்
விடை -இளம் நாகம் -இதுவே பெரிய  வாச்சான் பிள்ளை –
எருது என்றும் பொருள் கொள்ளலாம்
பல்லவனுக்கு ஆதி காலமாக விருஷபக் கொடி இருந்தது என்றும்
பின்பு நாகத லோகம் சென்று வெற்றி பெற்று நாகக் கொடி கொண்டான் என்பர்

—————————————————————

இலகிய நீள் முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
உலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மா மதிள் சூழ் கரு ஊர் வெருவ
பல்படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-7-

நம் போன்ற அஹங்காரிகளையும் திருவடிக் கீழ் கொள்ளுவதற்க்காகவே இங்கு நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்
சலமொடு -ஜலம் -தத்தம் பண்ணிய நீர்த் தாரையோடே
க்ருத்ரிமத்தால் -சிறிய வடிவைக் காட்டி பெரிய வடிவால் அளந்து கொண்டது என்றுமாம்
பாண்டிய ராஜ நகரான கருவூரையும் பல்லவ ராஜன் வென்றி கைக் கொண்ட வரலாறு-

——————————————————————-

குடைத்திறல் மன்னவனாய் ஒரு கால் குரங்கைப் படையா மலையால் கடலை
யடைத்தவன் எந்தை பிரானது இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
விடைத் திறல் வில்லவன் நென் மெலியில் வெருவச் செரு வேல் வலங்கைப் பிடித்த
படைத்திறல் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே—2-9-8-

சக்கரவர்த்தி திருமகனே இங்கே சந்நிதி கொண்டு அருளுகிறான்
நென்மெலி என்னும் நகரத்திலே மிடுக்கனாய் இருந்த வில்லவன் என்னும் எதிரி அரசன் அஞ்சி
நடுங்குபடியாக வேல்  படையை கையிலே  பிடித்தவன்
சத்ருக்களை வென்று த்ரவ்யம் பெற்று அத்தைக் கொண்டு பல்லவன் கைங்கர்யம் செய்த திவ்ய தேசம் –

——————————————————–

பிறை யுடை வாணுதல் பின்னை திறத்து ஒரு கால் செருவில் உருமின்
மறை யுடை மால் விடை ஏழு அடர்த்தாற்கு இடம் தான் தடம் சோந்து அழகாய கச்சி
கறை யுடை வாள் மற மன்னர் கெடக் கடல் போல் முழங்கும் குரல் கடுவாய்
பறை யடைப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே—2-9-9-

ஏழு எருதுகளையும்   ஏழு திரு  யுருக் கொண்டு வலி அடக்கின பெருமான் உறையும் திவ்ய தேசம் இது
கடல் போல் கர்ஜிக்க வல்ல கடுவாய்ப் பறையை நிரூபகமாக யுடைய பல்லவ ராஜனால் கைங்கர்யம் செய்யப் பெற்றது
உரும் உருமு என்றாலும் இடிக்கு பெயர் -இடி போன்ற குரலை இலக்கணையால் குறிக்கும்
பல்லவராஜன் யுடைய பறை கடுவாய்ப் பறை என்பதாக செப்பேடுகள் யுண்டு-

————————————————————–

பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகர் மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம் தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகாண்டு திகழ்வர்களே—2-9-10-

நிலை நின்ற புகழை யுடைய பல்லவ ராஜன் பணிவிடைகள் செய்யப் பெற்ற பரமேஸ்வர விண்ணகர்
விஷயமான இத் திரு மொழியை
ஓத  வல்லவர்கள் -ஸ்ரீ மகா லஷ்மியின் திரு அருளுக்கு இலக்காகி அரசாள வல்ல அரசராகி விளங்குவார்கள்-

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-8-திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப-

March 18, 2015

ஸ்ரீ தண்ட  காரண்யத்தில் ராஷசர்களால் புண்பட்ட ரிஷிகளைக் கண்ட பெருமாள்
ப்ரஸீதந்து பவந்தோ மே ஹ்ரீஷோ ஹி மமதுலா -யதீர்ருசை ரஹம் விப்ரை உபச்தேரை ரூபஸ்தித-என்று
குற்றவாளியாய் வெள்கி நிற்க
ஆழ்வார்கள் -பர்வதத்துக்கும் பரமாணுக்கும் வாசி  அன்றோ –
ஆழ்வார்களுக்கும் ரிஷிகளுக்கும் -விஷயத்தில் பன்மடங்கு அதிகமாகப் பேசுவான் அன்றோ –

ஆழ்வார் துடிப்பைக் கண்டு நாம் பிற்பட்டோமே -அடியார்களுக்கு உதவின குணங்களையும்
பரம விக்ரஹ விலஷண வடிவு அழகையும் பிரகாசப் படுத்திக் கொண்டு
திரு அட்டபுயகரத்திலே ஆழ்வாருக்கு பரம போக்யமாக சேவை சாதிக்க –
ஆழ்வாருக்கு எங்கும் கண்டு அறியாத திருக் கோலமாய் இருந்தது –
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -10-10-9- என்றால் போலே
அறிய மாட்டிலர் -அறிந்து கொள்ளவும் முடிய வில்லை –
நீர் யார் என்று கேட்க வாய் எழும்பவில்லை -சோதி வெள்ளம் அலை எறித்து தள்ளுகின்றது –
நம் பர்த்தாவாக இருக்கக் கூடும் என்னும் வெட்கத்தால் கேட்க மாட்டிலர்
கேட்காமலும் இருக்க முடியாமல் தெரிந்து கொள்ள விருப்பமும் அதிகரிக்க –
அவரை நேரே முகம் பார்த்து கேட்க முடியாமல் வேறு ஒருவரை நோக்கி இப்பெரியவர் யார் கொல்-என்று கேட்க
எம்பெருமான் தானே -நான் அட்டபுயகரத்தேன்-என்று மறுமொழி கூற
படுக்கைத் தலையிலே வார்த்தை நடந்து கொண்டு இருப்பதை தோழிமார் தாய்மார்கள் செவியுற்று –
நங்காய் ஏதேனும் பிரமித்தாயா இவை என்ன வார்த்தைகள் -என்று கேட்க
நான் பிரமித்தேன் அல்லேன் -ஒரு மகா புருஷரை சேவிக்கப் பெற்றேன் –
நான் தான் அட்டபுயகரத்தேன் என்று உத்தரம் அருளிச் செய்கிறார் காண்-என்று
நடந்த வரலாறு சொல்வதாகச் செல்கின்றது இத் திருமொழி –
கீழ் -திருத்தாயார் பாசுரம் -இது தலைவி பாசுரம் –

——————————————————

திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப
முரிதிரை மா கடல் போல் முழங்கி மூ உலகும் முறையால் வணங்க
எரியன கேசரி வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உருவாம் இவர் யார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே –2-8-1-

அன்று ஒரு கால் ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு உதவின மாதரம் அன்று –
உனக்கு உதவுகைக்காக இங்கே வந்து சமயம் பார்த்து நிற்கிறவன் அன்றோ -என்றார் -என்கிறாள் –
அடையாளம்  சொல்லா நிற்கச் செய்தே நிச்சயிக்க ஒண்ணாத படி இறே விஷய ஸ்வ பாவம் –
இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் யுடைய வடிகளை இன்னார் என்று அறியேன் போலே
திருவடி கை கூப்பி மெய்யே வார்த்தை சொல்லா நிற்கச் செய்தேயும் –
கிம் நு ஸ்யாத் சித்த மோஹோயம் பவேத் -வாதகதி ஸ்திவ்யம் உன்மாதஜோ விகாரோவா ஸ்யாதியம் ம்ருக த்ருஷ்ணிகா-என்று
மதி மயக்கத்தால் வந்ததா -காற்றின் போக்கின் தோற்றரவா -பித்த விகாரத் தோற்றமோ –
கானல் காட்சியோ என்று பலவாறு சந்கித்தாப்   போலே –

தாரகாசுரன் புத்ரர் வித்யுன்மாலி -தாரகாஷன் -கமலாஷன் -பரமன் இடம் தவம் செய்து வரம் பெற்று  திரியும் பறக்கும் –
சிவபெருமான் பூமியை தேராகவும் -சந்திர சூர்யர்களை தேர்ச் சக்கரங்களாயும்-நான்கு வேதங்களை குதிரைகளாயும்
பிரமனை சாரதியாகவும் -மகா மேருவை வில்லாகவும் -ஆதி சேஷனை வில் நாணியாகவும் –
விஷ்ணுவை வாயுவாகிய சிறகு அமைந்து அக்னியை முனையாக யுடைய அம்பாகவும் –
சிரிக்க சிரிப்பிலே அவ் வசுரர்களையும் நரகங்களையும் எரித்தான்-

த்ரி புரம் மூன்று சொல்வான் என் என்னில் -திரியும் மூன்று பட்டணங்கள் —
பஞ்ச பஞ்ச  ஜனா -சப்த சப்தர்ஷய-என்னுமா போலே தனித் தனியே நாமதேயம் ஆகவுமாம் –
கேசரம் -சிங்கம் பிடரி  மயிர் – கேசரி -சிங்கம்
அரி யுருவாகிய நீர் யார் -என்னாமல்-அருகில் இருந்த வேறு ஒருவரைக் கேட்பது போல் இவர் யார் கொல்
அதற்கு அட்டபுயகரத்தேன் என்று அவரே மறுமொழி கூறினார்
க்ருஹம் -கரம் எனத் திரிந்து அட்டபுயகரம் -அஷ்ட புஷ ஷேத்ரத்துக்கு   அதிபதி என்றும் –
அஷ்ட புஜ ஷேதத்ரத்தில் கிடப்பான் ஒருவன் என்றும் பொருளில் –
துஷ்யந்த மகாராஜன் சகுந்தளையை அடைந்து -புரு வம்சத்து அரசனால் தர்ம கார்யங்களை செய்யுமாறு நியமிக்கப் பட்டவன் –
புரு வம்ச அரசனாகிய தனது தந்தையால் நியமிக்கப் பட்ட அரசன் -வேலைக் காரன் என்ற பொருளில் சொன்னது போலே
அட்ட புய அகரம் -அக்ரஹாரம் -என்னவுமாம் –

————————————————–

வெந்திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதம் உரைத்து இமையோர் வணங்கும்
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல் தெரிக்க மாட்டேன்
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மா வலி வேள்வியில் மண் அளந்த
அந்தணர் போன்று இவர் யார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே-2-8-2-

ஸ்ரீ இராமபிரானாகவும் -வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் இவர் -மகா வீரன் ஸ்ரீ ராமன் அன்றோ
திருவேங்கடமுடையானாகவும் -செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் –
திருவிக்ரமனாகவும் -மா வலி வேள்வியில்-வந்து குறள் உருவாய் நிமிர்ந்து-
மண் அளந்த அந்தணர் போன்று இவர் மாறி மாறி சேவை சாதித்த படி –

மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி யாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் -போலே
வேதமுரைத்த இமையோர் வணங்கும் – ஸ்ரீ ராமபிரானுக்கும் ஒக்கும் -பவான் நாராயணோ தேவ –
தெரிக்க மாட்டேன் -அறிகிலேன் -மேன்மையைப் பார்த்தால் -ஸ்ரீ ராம பிரானைப் போலே –
தாழ நிற்கும் சீலத்தைப் பார்த்தால் திருவேங்கடமுடையானாகவும் –
நீர்மையும் மேன்மையும் ஒரே ஆஸ்ரயத்திலே தோன்றும்படி  உலகளந்த பெருமானாகவும் தோற்றுகிறாரே-
கழஞ்சு மண் இரந்து வந்தவன் அல்லன் -உன்னை இரந்து வந்தவன் நான் என்கிறார் –
பிறருக்காக இறந்தவன் அல்லேன் -எனக்காக இரந்து வந்தேன் என்கிறார் -பெரிய வாச்சான் பிள்ளை –
வேதம் உரைத்த இமையோர் வணங்கும் -செந்தமிழ் பாடுவாருக்கும் இயைக்கலாம்   என்பர்

——————————————————

செம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மறுப்பொன்று பறித்து இருண்ட
அம்புதம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-3-

பஞ்ச ஆயுதங்களோடு கண்ணனுடைய சிறுச் சேவகமும் திரு மணி அழகும் தோன்றுமாறு சேவை சாதிக்கிறபடி –
எதிரிகளை வெல்லவும் என் போன்றாரை வசப் படைத்தவும் பரிகரங்கள் யுடையவர் –
வாளி-அம்பு
சிலை
தண்டு
சங்கம்
வாள்
ஆழி
கேடகம் -கேடயம் -கடகம்
மலர் –
ஆயுத கோடியிலும் ஆபரண கோடியிலும்-
வலங்கை -என்றது இரண்டு திருக் கைகளுக்கும் உப லஷணம் –
அன்றிக்கே ஆழ்வாருக்கு மட்டும்-
அனைத்தும் வலங்கை இலே ஏந்தி சேவை சாதித்ததாகவுமாம்

—————————————-

மஞ்சுயர் மா மணிக்குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாயவானை
அஞ்ச அதன் மருப்பன்று வாங்கும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்
வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து
அஞ்சுடர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே—–2-8-4-

கிருஷ்ணானுபவம் பின்னாட்டுகிற படி
திரு ஆழியும் திருச் சங்கும் ஏந்தி
வாயில் வேத ஒலிகள் வெளிப்பட
சாஷாத் பரமபத நாதரோ
அவர் இங்கே வர ப்ரசக்தி இல்லையே -அவரைப் போலே இருக்கிற இவர் யார்
தூரஸ்தன் அல்லன் -அட்டபுயகரத்தேன் என்றார் என்கிறாள்-

——————————————–

கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து நீண்ட
மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலைகடல் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே—2-8-5-

சாஸ்தரங்களான கடலைத் தந்து அருளின கரும் கடலோ
கலைகள் -சாஸ்திரங்கள் என்றாலும் பிரகரண பலத்தால் வேதாந்தங்கள்
நீதி நூல் -இதிகாசங்கள்
கற்பம் -கல்பம்
சொல் -வியாகரணம்
பொருள் -மீமாம்சை
நீண்ட திருத் தோள்கள் -கடலிலும் மலைகள் உண்டு இவனிடமும் மலைகள் யுண்டு
கடல் ரத்னாகாரம் ஆகையாலே மா மணிகளை யுடையது
குருமா மணிப் பூண் பூண்டவன் இவனும்
மலர்மங்கை தங்கப் பெற்றது கடல் -அகலகில்லேன் இறையும் என்று உறை மார்பினன் இவன்
சங்குக்கு உறைவிடம் கடல் இவனும் சங்குடையான்
ஆக இப்படிகளாலே கடலைப் போன்றவன் –

——————————————

எங்கனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவும் எல்லாம் தம் மனவாகப் புகுந்து தாமும்
பொங்கு கருங்கடல் பூவை காயா போதவிழ் நீலம் புனைந்த மேகம்
அங்கனம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-6-

சர்வ ஸ்வத்தையும் கொள்ளை கொள்ளுதற்கே   வந்தவர் போலும்
எங்கனும்-உம்மைத் தொகையைப் பிரித்து -எண்ணில் என்பதோடு கூட்டிப் பொருள்  –
இவரைக் கண்ட உடனே விரும்பின படி கலவி செய்ய பெறாமையாலே உடல் இளைத்து கை வளையல்கள் கழன்று ஒழியும்படியும்
நெஞ்சு இவர் இடத்தில் பதிந்து இருக்கும் படியும்
அடக்கத்தை விட்டு பதறி மேல் விழும்படியும் செய்து கொள்வதையே-ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவும் எல்லாம் தம் மனவாகப் புகுந்து என்கிறார் -தம்மன -தம்முடையவை
புனைந்த மேகம் -கீழ் சொன்ன கடல் முதலியவற்றோடு ஒரு கோர்வையாகச் சேர்க்கப் பட்ட என்ற பொருளிலுமாம்-

————————————————

முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும் மேனி யஞ்சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும் எங்கனம் சொல்லுகேன் ஓவி நல்லார்
எழுதிய தாமரை யன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் இவரார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே–2-8-7-

திருமேனி இயற்க்கை அழகிலும் செயற்கை அழகிலும் ஈடுபட்டு பேசுகிறார்
வண்டு முழுசி ஆடிய -திருத் துழாய் மாலையில் மது வெள்ளத்தின் பெருமை சொல்லிற்று
மேனி அஞ்சாந்து இழிசிய கோலம் –
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத் தேறி யவளும் திரு யுடம்பில் பூச -பெரியாழ்வார் -1-8-4-
ஏட்டிலே கேட்டு இருந்தோம் இன்று நேரிலே காணப் பெற்றோம்
ஓவி  நல்லார் -நல் ஓவியர் -என்றபடி –
ஓவில் நல்லார் -ஓவியம் எழுதுவதில் வல்லார் என்றபடி
ஓவி நல்லார் எழுதிய தாமரை என்றும் கொண்டு அது போன்ற திருக் கண்கள் என்றபடி-

——————————–

மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி யொப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என்
ஆவி யொப்பார் இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே—2-8-8-

நித்ய சூரிகள் சுற்றிலும்  சூழ்ந்து வணங்கா நிற்க வந்தார்
வேதங்கள் ஓதிக் கொண்டு வந்தார்
முந்நீர் மடந்தை கடலில் பிறந்த ஸ்ரீ மகா லஷ்மி
ஆற்று நீர் ஊற்று நீர் வேற்று நீர் -மலை நீர் -முந்நீர் என்பர்
முச்செய்கை யுடைய -மண்ணைப் படைத்து காத்து அழித்தல்-முத் தொழில் களும்  கடலுக்கு உரியதாம்
நீரில் இருந்து நிலம் பிறக்கும் -முடிவில் நீரினால் மூடப் பட்டு உலகம் அழியும் -நடுவில் நீரால் காக்கப் படும்
முந்நீர் -பழைய நீர் என்றுமாம் ஆதியில் நீரையே படைத்தார் -நாராயணன்-

————————————————–

தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
நஞ்சமுடைத்திவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறிய மாட்டேன்
அஞ்சுவன் மற்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-9-

கை வளையல்களும் நெஞ்சும் அவன் இடம் சேர்ந்து விட்டன –
இன்னும் தங்கி இருப்பதை கொள்ளை கொள்ள உற்று நோக்கி வார்த்தையும் சொன்னானே
ரஷிக்க வந்தவரா பஷிக்க வந்தவரா -கேட்கவும் அஞ்ச -அத்தை அறிந்து கொண்டு அஞ்ச வேண்டாதபடி
அட்டபுயகரத்திலே எளியனாய் வந்து நிற்கிறவன் அன்றோ என்கிறார்
என் வளையும் இவர்க்கு நில்லா -இவருக்காகி என்னிடத்தில் நில்லா என்றபடி
இங்கே குடியிருப்பாய்   அவருக்காகவே  வர்த்தின்றன -வியாக்யானம்
தஞ்சம் -தத்த்யம் -தஞ்சமாக  திரிந்து -உண்மையாக என்றபடி –

———————————————-

மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி தன்னை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே—2-8-10-

வைகுந்தம் சென்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்
அன்றிக்கே அவர்கள் வசிக்கும் இடமே பரமபதம் –
வயிரமேகன் -தொண்டை நாட்டரசன் அபிமானித்து ஜீர ணோத் தாரணம் முதலிய சிறப்புகளை செய்தான் –

————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-7-திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த வவளும்-

March 17, 2015

ஒரு ஆறானது பல வாய்க்கால் களாக பெருகினாலும் பிரதானமான பெயர் ஒன்றே போலே
தாய் தோழி மகள் பாசுரங்களும் -மன்னு மா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் -என்று
ஆழ்வார் பாசுரமாகவே தலைக் கட்டும் –

பரவசமாக ஸ்திரீ பாவம் ஏறிட்டுக் கொள்வார்கள் ஆழ்வார்கள்
ஸ்வா தந்த்ர்யா நாற்றமே இல்லாமல் பார தந்த்ர்யமே வடிவாய் இருப்பதால் ஸ்திரீ பாவனை வந்தேறி இல்லை
தண்ட காரண்ய வாசிகளே சௌந்தர்ய அனுபவித்தில் ஈடுபட்டு ஆயர் மங்கைகளாக கண்ணனைக் கூடினார்கள் –
பரபக்தி பரஞான பரமபக்திகளே கொங்கை முதலிய சொற்கள் –
தோழி -திருமந்த்ரத்தில் சொல்லும் அனன்யார்ஹ சேஷத்வம் -சம்பந்த ஜ்ஞானம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தை –
தாய் -அவனே விஷயீ கரிக்க வேணும் -நம பத -உபாய அத்யாவசாய ப்ரஜ்ஞா  அவஸ்தை
கிட்டி அனுபவித்தால் ஒழிய தரிக்க மாட்டாத மகள் -நாராயண பதம் -அர்த்தம் ப்ரஜ்ஞா அவஸ்தை-

தன் ஸ்வரூபத்தை நோக்கும் அளவில் -பதறக் கூடாது என்கிற -அத்யவசாயமும்
அவனுடைய வைலஷண்யத்தை நோக்கும் அளவில் பதற்றம் உண்டாகுமே
ஆசை விடாளால் –போதுமோ நீர் மலைக்கே என்னும் -இத்யாதிகளால் மகளது பதற்றமும்
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -வினாக்களால் அத்யவசாயமும் வெளியாம் –
ஆழ்வார் உடைய அளவற்ற அபி நிவேசம் இத் திரு மொழியாய் பரிணமித்து விட்டது –

——————————————————–

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு  நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-

அரிவை-நித்ய யௌவனம் உடையவள் -தெய்வப் பெண் என்றுமாம் -யுவ குமாராக்கு ஏற்ற படி
ந ஜீவேயம் ஷணம் அபி விநா தாம் அஸி தேஷணாம்-கண் அழகில் ஈடுபடுபன் என்பதால் குவளயம் கண்ணி  என்கிறாள்
சேதனனுடைய க்ரியாகலாபம் பேற்றுக்கு சாதனம் அன்று -பரம புருஷனுடைய திரு உள்ளத்தில் இரக்கமே –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறாள்-புருஷகார பூதை திரு மார்பிலே இருக்க இழக்கவோ –
அஞ்சாமல் உன் அருகில் வருகிறேன் –

சிசுக்களுக்கு தாயின் முலை போலே -அடியவர்களுக்கு எம்பெருமானது பாதார விந்தமே உத்தேச்யம் –
ஆதலால் நின் தாள் நயந்து இருந்தவளை -என்கிறாள் –
திருமகள் ஆனவள் ஸ்வரூப ஜ்ஞானம் இன்றி திரு மார்பை விரும்பினால் –
என் பெண் நல குடிப்பிறப்பும் நல்லறிவும் யுடையவள் ஆகையாலே -திருவடியையே விரும்புகின்றாள்-
குவளயம் கண்ணி-உட்கண் ஜ்ஞானத்தை சொன்ன படி –
ஒண் தாமரையால் கேள்வன் ஒருவனையே நோக்கும் யுணர்வு -முதல் திரு -67-
கொல்லியம்பாவை -ஆத்ம வைலஷண்யம் -சொன்னபடி –
வல்வில்ஓரி -சிற்றசருக்கு உரிய பெண் பதுமை -அசுரரும் அரக்கரும் இவள் சிரிப்பைக் கண்டே மயங்கி உயிர் துறப்பர்களாம்-
அவர்கள் வாடை பட்டதுமே இது நகைக்குமாம் –
திரி புரத்தைச் செற்றவனும் கொல்லிச் செழும் பாவையும் நகைக்க கற்றது எல்லாம் இந்த நகை கண்டாயோ -சித்ர மடல் பாடல்
செரு வெம் கோலம் அவுணர் நீங்கத் திருவின் செய்யோள் ஆடிய பாவையும் -சிலப்பதிகாரம் -கடலாடு காதலி -60-61-
ஒப்புயர்வற்ற அழகில் சிறந்த மாதர்க்கு உவமை நற்றிணை அகநானூறு புற நானூறு 
சீவக சிந்தாமணி குறுந்தொகை -முதலிய இடங்களில் யுண்டு
கொல்லி யம்பாவை போன்றவள் என்னாமல் முற்று  உவமை யாக –
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே -திருவாய்மொழி -6-9-9- போலே –

—————————————————-

துளம்படு முறுவல் தோழி யார்க்கருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள்
குளம்படு குவளைக் கண்ணினை எழுதாள் கோல நன் மலர் குழற்கு அணியாள்
வளம்படு முந்நீர் வையம்முன்னளந்த மால் என்னும் மாலின மொழி யாள்
இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-2-

லௌகிக விஷயங்களிலே நெஞ்சு செல்லாமல் -பகவத் காமமே அதிகரித்து —
வாய் விட்டு சொல்ல நேர்ந்தால் -அன்று இவ் யுலகம் அளந்தாய் -மாலே -நெடியானே கண்ணனே -என்று வாய் வெருவி
அநந்ய பக்தையாய் இவள் திறத்தில் என்ன திரு உள்ளம் பற்றி இருக்கிறாயோ –
துளம்படு முறுவல் -மாதுளம் -துளம் என்று சுருங்கி  -மாதுள விரை போன்ற பற்கள் என்றபடி –
குளம்படு குவளை -தன்னிலத்தில் இருந்து செவ்வி மாறாத குவளை மலர் -என்றபடி
மால் இன மொழியாள் -வ்யாமோஹனனுக்கு -வ்யாமோஹத்துக்கு -தகுதியான பேச்சை யுடையவள்
புறம் சுவர் கோலம் செய்து -பிராக்ருதர்கள் யுடன் ஒப்பு இல்லாதவள் –
இப்படிப் பட்ட என்னை அபேஷிக்கப் போகிறாயா உபேஷிக்கிறாயோ-என்கிறாள் –

————————————————-

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தட முலைக்கணியிலும் தழலாம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாந்தளிர் மேனி  வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே –2-7-3-

குளிர்ந்த உபசாரங்களை திருத் தாயார் செய்தவாறே நெருப்பை வாரிக் கொட்டினால் போலே இருந்தனவே
சாந்து –சந்தனக் குழம்பு -கலவைச் சந்தனத்தையும் வெறும் சந்தனத்தையும் சொன்னபடி
ஏந்திழை இவளுக்கு -ஏந்துதல் -தரித்தல் -தரிக்கப் பட்ட ஆபரணத்தை யுடையவள் என்றபடி
உன்னுடைய சம்ச்லேஷம் ஓன்று தானே இவளை நான் ஆபரணங்களோடே   தரித்து காணப் பெறுவேன் –
பகவத் குணங்களை அனுசந்தித்து கண்ணும் கண்ண நீருமாய் இருத்தலும்
மயிர்க் கூச்சு எறிந்து இருத்தலமே  பக்தர்கட்கு ஆபரணம்  -அதனால் ஏந்திழை -என்கிறாள்-

———————————————–

ஊழியில் பெரிதால் நாழிகை யென்னும் ஒண் சுடர் துயின்றதால் யென்னும்
ஆழி யும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிதாம்
தோழியோ வென்னும் துணை முலை யரக்கும்சொல்லுமின் என் செய்கேன் யென்னும்
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே—2-7-4-

பரகால நாயகி யுடைய வாய் வெருவுதலை திருத்  தாயார் பாசுரமிட்டுப் பேசுகிறாள்
பலபல ஊழிகள் யாடிடும் அன்றியோர் நாழிகையை பலபல கூறிட்ட கூறாயிடும் —
அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும் -திரு விருத்தம் –
கொடியார் கொடுமையில் ஆற்றாக் கொடிய இந்நாள் நெடிய கழியுமிரா -திரு குறள்-
ஒண் சுடர் துயின்றதால் என்னும் –
பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று ஒண் சுடரான் வாராது ஒழிந்தான் -திருவாய் -5-4-4-
துயின்றது -தீர்க்க நித்தரை யாயிற்று என்ற பொருளில் சூர்யன் செத்தே ஒழிந்தானோ என்கிறாள்
தோழி இடம் சொல்வதை தாய் அனுவாதம் செய்கிறாள் –
-அன்றிலும் -பனை மரத்தில் வாழும் உன்னை பிரியாது இருக்கும் -க்ரௌஞ்சம் என்பர் -வாய் அலகைக் கோத்துக் கொண்டே உறங்கும்
துணை முலை  அரக்கும்-அரக்குதல் -ஸ்தானத்தை விட்டுப் பெயர்த்தல் –
கொள்ளும் பயன் ஒன்றுமிலாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலைத் தீர்ப்பேனே  -நாச்சியார்
ஏழையேன் பொன்னுக்கு பாடம் சரி இல்லை ஏழை என் பொன்னுக்கு -சரியான பாடம் -அன்பின் மிகுதியால் பொன் என்கிறாள் –

—————————————————–

ஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் உருகும் நின் திரு வுரு நினைந்து
காதன்மை பெரிது கையற வுடையள் கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்
பேதையன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே—2-7-5-

ஓதிலும் -உம்மைத் தொகையாலே சொல்வதில் அருமை -ஒரு கால் வாய் திறந்தாலும் –
அம்மா அண்ணா என்னாதே கோபாலா கோவிந்தா என்கிறாள் –
விக்ரேதுகாமா கில கோப கன்யா முராரி பதார்ப்பித்த சித்தவ்ருத்தி –தத்யாதிகம் மோஹவசாதவோசத்
கோவிந்த தாமோதர மாதவேதி -விற்பவளும் கூவிக் கொண்டே சென்றது போலே –
திரு நாமம் சொன்னவாறே ஸ்வரூபம் ரூபம் குணங்கள் நினைவுக்கே வர ரூபத்திலே உருகா நின்ற சீதளத்தை யுடையவள் ஆனால்
கடல் போலும் கார் முகில் போலும் குளிர்ந்த திரு மேனி என்னே -என்று நீர்ப்பண்டம் ஆனால்
காதன்மை பெரிது -உன்னுடைய திருமேனியைப் குளப்படி ஆக்கும் படி இவள் ஆசையே பெரிது
கையறவு யுடையள் கையறவாவது -செயல் அறுதலும் -உதவியின்மையும் -செயல் அற்று சகாயம் அற்று இருக்கின்றாள்
பேதையேன் பேதை-அறிவு கெட்டவள் வயிற்றில் பிறந்த பெண் அன்றோ –
ஏதலர் முன்னா -உபாயாந்தர நிஷ்டர்களை ஏதலர் -என்கிறார் -மார்பிலே கை வைத்து உறங்கப் பிராப்தி அன்றோ –

———————————————————

தன் குடிக்கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயிலங்கை
வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயத்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே——2-7-6-

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8-என்ற படியே –
ஆறி இருப்பதே பிரபன்ன குல மரியாதை –
பதறுகிறாள் ஆகையாலே -தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் –
சீதா பிராட்டியைப் பெற செய்த கார்யங்களை கேட்டு இன்புற்று -நம்மை உபேஷிப்பதே-வருந்தி மூர்ச்சை அடைகிறாள்
அவன் மேல் விழுந்து அனுபவிக்க அவளது அவயவ சௌந்தர்யத்தை மேலே பேசுகிறாள் திருத் தாயார் -மின் கொடி-இத்யாதியால் –

—————————————————————

உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி எனக்கன்பு ஒன்றிலளால்
வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே யென்று வாய் வெருவும்
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடே வலம் சேர்ந்திருந்த
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-7-

பரிபக்குவமான நெஞ்சை யுடையவளாய் -நெஞ்சு கனிந்து உன்னையே சொல்லுவதும்  
உகந்து அருளின நிலங்களையே சொல்லுவதுமாக –
வாய் வெருவுகின்றாள்
இந்த அழகியை நீ இழக்கலாமா -களங்கனி முறுவல் -பயன் உவமை களங்கனி வாய்க்கு இனிமை போலே
முறுவலும் இனிமையாய் -மாரி வண்  கை-கற்பக வள்ளல் போலே
இளங்கன்னி இவளுக்கு -இளங்கனி இவளுக்கு -தொகுத்தல்  விகாரம் –

——————————————————————

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்
புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்
குலங்கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே—2-7-8-

ஆம்பல் -இசைக் குழல் என்னும் பெயர்
அலம் கெழு தடக்கை ஆயன் –  ஹலாயுதன் -பலராமனைச் சொல்லிற்று என் என்னில்
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் தானாய்ப் பின்னும் இராமனாய்
தாமோதரனாய் கல்கியும் ஆனான் -பெரிய திருமொழி -8-8-10-ஒற்றுமை நயம் தோன்ற
அலம்புரிதடக்கை யாயனே -1-6-2-என்றார் கீழும்
அலமும் ஆழிப் படையான் -9-3-8-என்பர் மேலும் –
போதுமோ நீர் மலைக்கு என்னும்
திருநீர்மலையிலே விசேஷ அபிமானம் இவ் வாழ்வாருக்கு –
கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர் மலை வாழ் எந்தை -5-2-8- என்றும்
நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே -7-1-7-என்றும்
அருவி சோர் வேங்கடம் நீர் மலை என்று வாய் வெருவினாள்  -8-2-3–என்றும்
நெருநல் கண்டது நீர் மலை -10-1-1-என்றும்
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும் -திரு நெடும் தாண்டகம் –
போதும் -தன்மைப்  பன்மை விகுதி -போவோம் என்றபடி
நெடு மழைக் கண்ணி – ஆஹ்லாத சீத நேத்ராம்பு -பரம பக்தர்கள் நிலை –

—————————————————–

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இவ் வணங்கினுக்குற்ற நோய் அறியேன்
மின் குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய  வன முலையாளுக்கு
என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே—–2-7-9-

ஊரூண் கேணி யுண்டு யுறைத்து ஒக்க  பாசி அற்றே பசலை காதலர் தொடு யுழி நீங்கி
விடு வுழி பரத்தலானே -குறுந்தொகை -399
இவ் வணங்க்கு ஏற்ற நோய் அறியேன் -உனது  கடாஷத்தில் ஆசைப் பட்டா -புன் முறுவலில் ஆசைப் பட்டா –
திரு மேனி யுடன் அனைய ஆசைப் பட்டா -அறிகிலேன் என்றவாறே-

மின் குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு-உள்ளுறை பொருள் –
ஆசரயத்தின் அளவில்லாத பக்திப் பெரும் காதலை யுடையவள் என்றவாறு
என்தன் அளவன்றால் யானுடைய அன்பு -இரண்டாம் திருவந்தாதி -100- போலே
குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவேந்தை எந்தை பிரானே –
தாய் உதவுவள் -தமப்பன் உத்தவுவன் -உறவினர் உதவுவர் -நமக்கு என் -என்று நினைத்து இருக்கிறாயோ
இப்படி யாகில் பரமபதத்தை விட்டு நீ இந்நிலத்தில் வந்து திரு விடவெந்தையிலே சந்நிதி 
பண்ணி அருளிற்று பிரயோஜனம்  அற்றதாகுமே என்றவாறு  –

——————————————————–

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே—2-7-10-

தாமான தன்மையில் பேசி அருளி தலைக் கட்டுகிறார்
திருவவதாரம் செய்து பலருக்கும் அருள்  செய்தால் போலே எனக்கும் அருள் புரிய வேண்டும்
தீ வினைகள் முற்றும் அறுத்து நித்ய கைங்கர்ய பிராப்தி இப்பதிகமே  அருளும்
கலியன் வாய் ஒலிகள் -பக்தி பெரும் காதலை அந்யா பதேசத்தால் அருளியவை
அருளாய் என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை என்றதானால் –
எம்பெருமான் சோதி வாய் திறந்து அருளிச் செய்தது கொண்டு தேறுதல் அடைந்து
இத் திரு மொழியைத்  தலைக் கட்டி அருளுகிறார் எனபது விளங்குமே –

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-6-நண்ணாத வாள் அவுணர் இடைப்புக்கு வானவரை-

March 16, 2015

நண்ணாத வாள் அவுணர் பிரவேசம் –

எம்பெருமானுக்கு அடிமைப் படுவதில் காட்டிலும்  பாகவதர்களுக்கு அடிமை படுதலே விசேஷம் என்கிற
சகல சாஸ்திர பொருளை ஸ்ரீ ஸ்தலசாயீ பெருமாளுடைய திருவருளால் ஸ்மரிக்கப் பெற்று –
அந்த பாகவத பக்தி நிஷ்டையிலே தாம் ஊன்றின படியை இத் திரு மொழியிலே வெளியிடுகிறார் –
கீழ் திரு மொழி போலே இதுவும் திருக் கடல் மலை திருப்பதியே விஷயம் ஆயினும் –
இப்போது இவருக்கு உத்தேச்யம் அத் திருக் கடல் மலை அன்று –
அத் திருப் பதியில் எழுந்து அருளி இருக்கிற எம்பெருமானும் உத்தேச்யன் அல்லன் –
அத் திருப்பதியையோ -அப் பெருமானையோ இடைவிடாது சிந்திக்கின்ற பாகவதர்கள் உண்டே –
அவர்கள் தாம் உத்தேச்யர் எனபது வெளியாகின்றது –

பகவத் பக்தியின் எல்லை நிலமே பாகவத பக்தி -பகவத் பக்தியின் உறைப்பையே பாகவத பக்தி வெளிப்படுத்தும் –
ஸ்வாமி யினுடைய பாதுகைகளிலே நாம் ஆதரம் வைத்து அவற்றை கண்ணில் ஒற்றிக் கொள்வதும்
தலை மேல் அணிந்து கொள்வதும் -அலம்பித் தீர்த்தம் பருகுவதும் செய்கிறோம் –
இத்தால் நமக்கு ஸ்வாமி இடத்தில் யுள்ள பக்தி அபாரமானது எனபது அன்றோ வெளியாகின்றது –
அதே போலே ஆழ்வார் உடைய பக்திப் பெரும் காதலே -பாகவதர்களே உத்தேச்யம் என்னப் பண்ணுகிறது –
மேலே திருச் சேறை திருப் பதியை மங்களா சாசனம் -கண் சோர வெங்குருதி -திரு மொழியிலும்
இந்த பாகவத நிஷ்டை அருளிச் செய்யப் படும் –

———————————————————

நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார்  மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே—2-6-1-

தல சயனத் துறைவாரை சிந்தை செய்யாதவர்களை ஒரு பதார்த்தமாக எண்ண மாட்டேன் –
அவனை சிந்திக்கும் மகான்களையே அநவரதம் சிந்திப்பேன் –
அவனையே பரம பிரயோஜனமாக கொள்வதே ஸ்வரூபம்
அப்படி இல்லாமல் பிரயோஜனாந்த பரர்கள் இவனைப் பற்ற –
இதற்க்காகவாவது வேறு ஒரு சூத்திர தேவதை பற்றாமல் நம்மை பற்றினார்களே
என்று உகந்து அருமையான கார்யங்கள் செய்து அவர்கள் மநோ ரதம் நிறைவேற்றி அருளுபவன்
என்பதை விளக்க -நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப் பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார்-என்கிறார் –
நண்ணாத -பகவத் விஷயத்தில் பகையை இயற்கையாக யுடைய என்றபடி –
கண்ட உடனே சாதுக்களை அழிக்க கையிலே வாள் பிடித்து இருக்கும் வாள் அவுணர்
மருவி இனிய -எம்பெருமான் பொருந்தி நித்ய வாசம் பண்ணுவதற்கு ஈடான திருக் கடல் மலை –
ஆன்விடை ஏழு அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடவர் அல்லர் என்று
என் மனத்தே வைத்தேனே –என்பர் பதினோராம் பத்திலும் –

——————————————————

பார்வண்ண மட மங்கை  பனி நன் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வகத்தில்  இருக்கையை முன் நினைந்தவனூர்
கார் வண்ண முது நீர்க் கடல் மல்லைத் தல சயனம்
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே—2-6-2-

ஸ்தல சயன பெருமாளை சிந்திப்பவர்களே எனக்கு ஸ்வாமிகள்-
நம் அபராதங்களை பொறுப்பிக்க வல்ல ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் -குற்றங்களை நற்றங்களாக உரைக்க வல்ல
பெரிய பிராட்டியாரும் நித்ய அனபாயிநிகளாக இருக்க
அஞ்ச வேண்டிய பிரசக்தியே இல்லையே
நீர் வண்ணன் மார்வத்தில் -பிழையான பாடம் -மார்வகத்தில் -மார்விலும் அகத்திலும் —
பனி நன் மலர்க் கிழத்தியான பெரிய பிராட்டியார் திரு மார்விலும் –
பார் வண்ண மடமங்கை யாகிய பூமிப் பிராட்டி அகத்திலும் -அருகிலும் இருக்கை கண்டு
பார் வண்ணம் -பூமி  ஸ்வரூபம் திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழ -பெரிய பிராட்டியார் ஸ்ரீ தேவி என்னும் உபய நாச்சியாராகவும்
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை யுறை மார்பா -என்கிறபடியே திரு மார்பு நாச்சியாராகவும்
எழுந்து அருளி இருந்து புருஷகாரம் செய்து அருளுவதால்
அவ்விருப்பை எடுத்து பேசி அருளுகிறார்
மலர்க் கிழத்தி -தாமரை மலரில் பிறந்த தலைவி -என்றபடி
நீர் வண்ணன் -திரு நீர் மலை பெருமாள் யுடைய திரு நாமம் ஆயினும் கடல் வண்ணன் என்ற பொருளைக் கொண்டு
தல சயனப் பெருமாளையும் அவ்வண்ணமே அருளுகிறார் –

————————————————————–

ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்துறை கின்ற
ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே –2-6-3-

இங்கே ஞானப் பிரான் திரு நாமத்துடன் திருக் கோயில் கொண்டு இருக்கும் பெருமாளை மங்களா சாசனம் செய்து அருளுகிறார்
பாசி தூர்த்துக் கிடந்த  பார்மகட்கு –நாச்சியார் -11-8-எடுத்து பழைய படி நிலை நிறுத்தி அருளினான் -நில மங்கை கொண்டான்
வானத்திலவர்-நித்ய சூரிகளையும் -ஸ்வர்க்காதி லோகங்களில் யுள்ள தேவர்களையும்
வலம் கொள்ள -திரு வல எந்தை பிரான் சேவை இங்கே யுண்டே –
வரம் கொள்ள -என்றும் பாடம் -அவர்கள் தம்தம் அபிமதங்களை பெற்றுக் கொள்ள என்றபடி
கானத்தின் கடல் மலை -ஸ்ரீ வராஹ அவதாரத்தில் நெடும் காலம் காட்டிலே விளையாடினதாக புராணம் யுண்டே
வானத்து எழுந்த மழை  முகில் போல் எங்கும் கானத்து மேய்ந்து குளித்து விளையாடி ஏனத்து யுருவாய் -பெரியாழ்வார் -2-10-9-
ஞானப் பிரான் என்பதால் ஞானத்தின் ஒளியுரு -என்கிறார் -ஞானப் பிரகாசமே உரு எடுத்து நிற்பவன் –
ஞான ஒளி மயமான திவ்ய மங்கள விக்ரஹம் யுடையவன் -என்றபடி
எறி திரை வையம் முற்றும் ஏனத்து யுருவாய் இடந்த பிரான் ஞானப் பிரான் -திரு விருத்தம் –

————————————————————–

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே –2-6-4-

பாகவதர்களே எங்கள் குல தெய்வம் –
அஹங்காரிகளான   ஆசூர பிரப்ருதிகளின் செருக்கை நீக்கி அருளி
அஹங்காரிகள் உடலை நாயும் நரியும் பிடுங்கித் தின்னும் படியாகவும்
மாதர்கள் ஏறி அனுபவித்த அவர்கள் மார்பை அக்னி பகவான் ஏறி அனுபவிக்கும் படியாகவும் செய்து அருளுபவர் –
நம் அஹங்காரங்களையும் தொலைத்து நம்மை ஆட்கொள்ள தரைக் கிடை கிடந்து  அருளுகிறான் –
எனக்கு அவர் உத்தேச்யர் அல்லர் –
அவரைக் கொண்டாடிக் கொண்டு போது போக்கும் பாகவதர்களே எனக்கும் என் குலத்துக்கும் உத்தேச்யர்-

————————————————-

பிச்சச் சிறு பீலி சமண்  குண்டர் முதலாயோர்
விச்சைக் கிறை யென்னும் அவ் விறையைப் பணியாதே
கச்சிக் கிடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம்
நச்சித் தொழுவாரை நச்சென்றன் நன்னெஞ்சே—2-6-5-

அவைதிக மதங்களில் சேராமல் -தேவதாந்தரங்களைப் பணியாமல் -தல சயனத் துறைவாரை பணியுமவர்களே
தமது நெஞ்சு பணியக் கடவது என்கிறார் –
சமன் குண்டர் -குண்டரான சமணர் -குண்டர் நீசர்
பிச்சச் சிறு பீலி -புச்சம் -மயில்  இறகுகள் கொண்டு செய்த குடையும் -பீலி -விசிறியையும் கொண்ட சமணர்
நிழலுக்கு ஈடாக ஒரு கையிலே பிச்சத்தைப் பிடித்து ஒரு கையிலே பீலித் தழையைப் பிடித்து –
கண்டாருக்கு இவர்களும் தார்மிகரோ என்று தோற்றும் படி
அநு கூல வேஷத்தைப் பரிகிரஹித்து-பெரியவாச்சான் பிள்ளை-

சமணர்கள் தங்கள் தெய்வமே கல்விக்கு கடல் -என்று பணிவார்களாம் –
வித்யா எனபது விச்சை என விகாரப் பட்டு கிடக்கிறது
முதலாயோர் -ஆதி சப்தத்தால் பௌத்தரையும் லோகாயுதரையும் கொள்க
கச்சிக் கிடந்தவனூர் -திரு வெக்கா யதோத்த காரி பெருமாளே இங்கே தல சயனப் பெருமாள்  –
வங்கத்தால் மா கடல்-திரு நெடும் தாண்டகம் –
பர வாசுதேவன் -சிறந்த ரத்னம் -வாச்தல்யம் என்கிற கப்பல் இங்கே தள்ள
கானத்தின் கடல் மலை என்பதால் பேணுவார் இல்லாமையாலும்
ரத்னம் விலை போவது மகா நகரங்களில் ஆகையாலும் அந்த கப்பல் காஞ்சியில்  அந்த ரத்னத்தை தள்ளிற்றாம் –
அதனால் -கச்சிக் கிடந்தவனூர் கடன் மல்லைத் தல சயனம் -என்று அருளிச் செய்கிறார்-

————————————————-

புலன் கொள் நிதிக் குவையோடு  புழைக் கைம்மா களிற்றினமும்
நலம் கொள் நவ மணிக் குவையும் சுமந்து எங்கும் நான்றொசிந்து
கலங்களி யங்கும் மல்லைக் கடல் மல்லைத் தல சயனம்
வலங்கொள் மனததாரவரை வல்ங்கொள் என் மட நெஞ்சே–2-6-6-

புலன் கொள்  நிதி -கடல்கரையில் இருப்பதால் -சிறந்த வஸ்துக்களை திவீபாந்தரங்களில் இருந்து கப்பல்கள்
காணப் படுவதால் -புலன் கொள் நிதி என்று அருளிச் செய்கிறார் –
நிதி -பொன்
சிறந்த பொற் குவியல்களையும் யானைக் கூட்டங்களையும் நவ மணித் திரள்களையும் அளவு மீறித் தாங்கிக் கொண்டு
பாரம் கனந்து துவண்டு நிற்கின்றனவாம் மரக் கலங்கள் –
அப்படிப் பட்ட கப்பல்கள் யுள்ள திரு மல்லாபுரியை வழி பட நினைக்கும் பாகவதர்களே அடியேன் வழி படக் கடவேன் –
நான்று ஒசிந்த -பாட பேதம் -தொங்கலாடி தளர்ந்து -என்றபடி -கனத்தாலே தளர்ந்து என்றபடி –

——————————————————–

பஞ்சிச் சிறு கூழை உருவாகி மருவாத
வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல் முன் நண்ணாத
கஞ்சைக் கடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம்
நெஞ்சில் தொழு வாரைத் தொழு வாய் என் தூய் நெஞ்சே—2-6-7-

பஞ்சிச் சிறு கூழை-பூதனை இடத்திலும் கண்ணபிரான் இடத்திலும் அன்வயிக்கலாம்
பஞ்சு போலே மெல்லிய சிறிய கூந்தலை -தாய் வேடம் பூண்டு வந்தாள்
பிடித்துக் கட்ட ஒண்ணாத படியான மயிர் முடியை யுடைய இளம் பிள்ளை கண்ணபிரான் என்றுமாம்
கம்ச -கஞ்ச  -என்று திரிந்து -கஞ்சிக் காய்ந்த கருவில்லி -நாச்சியாரும் -13-3-அருளிச் செய்தாரே-

——————————————————-

செழு நீர் மலர்க் கமலம் திரையுந்து வன் பகட்டால்
உழு நீர் வயல் உழவர் உழப் பின்முன் பிழைத்து எழுந்த
கழுநீர் கடி கமழும் கடன்மல்லைத் தலசயனம்
தொழு நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய நெஞ்சே -2-6-8-

வல் பகட்டால் -வழிய எருதுகளைக் கொண்டு -பகடு -எருது -யானைக்கும் பெயர் –
பிழைத்து எழுந்த கழு நீர் -உழவுக்கு தப்பி எழுந்த செங்கழுநீர் மலர்களினுடைய
திரை யுந்து -என்பதை விட -திரை யுந்தி -பாடம் வ்யாக்யானத்துக்கு சேரும்
உழு நீர் -வயலுக்கும் உழவர்க்கும் அடை மொழி –
எப்பொழுதும் உழுவதே இயற்கையாக யுடையவர் உழவர்
வயலும் எப்பொழுதும் உழப் பட்டுக் கொண்டே இருக்கும் –

—————————————————–

பிணங்களடு காடதனுள்  நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் விசும்பில்
கணங்களி யங்கும் மல்லைக் கடல் தல  சயனம்
வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே–2-6-9-

சௌசீல்ய திரு குணத்தை அனுசந்திக்கிறார்
தாமஸ தெய்வமான ருத்ரனும் வலப்பக்கம் இடம் கொடுத்து ஆதரித்து அருளுபவன்
வலத்தனன் திரிபுரம்   எரித்தனன் -1-3-9-என்றும் —
பஸ்யை காதச மே ருத்ரான் தஷிணம் பார்ச்வம் ஆஸ்ரிதான்-மோஷ தர்ம வசனம் –
தபஸா  தோஷிதாஸ்  தேந விஷ்ணு நா ப்ரப விஷ்ணு நா -ஸ்வ பார்ஸ்வே தஷிணே சம்போர் நிவாஸ பரிகல்பித -என்றும் –
ஏறாளும் இறையோனும் திசைமகனும் திரு மகளும் கூறாளும் தனியுடம்பன் -என்றும்
அக்கும் புலியன தளுமுடையார் அவர் ஒருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர் -என்றும் -ஆழ்வார்கள் அருளிச் செயல்கள்
சர்வ காலமும் இவர்கள் எம்பெருமான் திரு மேனியில்  இருப்பார்களோ என்னில் –
ஆபத்துக்களில் திரு மேனியிலே இடம் கொடுத்து அருளும் –
அது மகா குணம் ஆகையாலே ஆழ்வார்கள் எப்போதும் ஒக்க அருளிச் செய்து கொண்டு போருவார்கள் –
சாமந்தர்க்கு புறம்பே நாடுகள் கனக்க யுண்டாகிலும் மாளிக்கைக்கு யுள்ளே செம்பாலே நாழி யரிசியைத்
தங்களுக்கு வரிசையாக நினைத்து இருப்பார்கள் இறே-
அப்படியே இவர்களும் திரு மேனியிலே பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள் இறே
ஒரோ   கலஹங்களிலே அடைய வளைந்தானுக்கு உள்ளே குடி வாங்கி யிருந்து கலஹம் தெளிந்த வாறே புறம்பே புறப்பட்டாலும்
இவ்விடம் இன்னார் பற்று இவ்விடம் இன்னார் பற்று -என்று பின்னும் பிராப்தி சொல்லி வைக்குமா போலே –

பிணங்கள் இடு காடு -என்பதை விட -பிணங்கள் அடு காடு -பாடம் சிறக்கும் –
அடுதல் சுடுதல் -ஸ்மசான பூமி -அங்கெ நடமாடும் ருத்ரன் பிஞ்ஜகன்
அவனோடு இணங்குதல் ஆவது திரு மேனியில் இடம் கொடுத்து அருளி
திருச் சக்கரத்து எம்பெருமானார் -நித்ய சூரிகளுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்து அருளுவது போலே
அஹங்காரியான ருத்ரனுக்கும் இடம் கொடுப்பவன் –
சௌசீல்யம் வாய்ந்த பெருமான் உறையும் திவ்ய தேசம் -தேவதாந்தரங்களும் தங்கள் அதிகாரம் நிலை நிற்க இங்கே 
வந்து தொழுது வழிபாடு செய்யா நிற்பார்கள்
இப்படிப் பட்ட திவ்ய தேசம் வணங்கும் பாகவதர்களையே என் நெஞ்சு வணங்கக் கடவது  -என்றார் ஆயிற்று –

——————————————————-

கடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து
அடிகளடியேநினையும் அடியவர்கள் தம்மடியான்
வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி வல்லார்
முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே—2-6-10-

பாகவத சேஷத்வமே பரம புருஷார்த்தம் என்று பரம போக்யமாக அருளிச் செய்த ஆழ்வார்
பலன் சொல்லும் இடத்து இஹ லோக ஐஸ்வர்யத்தை பலனாகச் சொல்லுவது என் -என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க -ரசோக்தியாக
திரு மங்கை ஆழ்வார் திரு வவதரித்த பின்பு த்யாஜ்யமான ஐஸ்வர்யமும் பரம புருஷார்த்தமாய்விட்டது காணும் –
பணம் யுள்ள இடங்களில் சென்று கொள்ளை அடித்து பகவத் பாகவத கைங்கர்யங்கள் பண்ணுகிறவர் ஆகையால்
ஹேயமான ஐஸ்வர்யமும் இவ் வாழ்வார் திரு உள்ளத்தால் உத்தேச்யமாய் விட்டது இறே-என்றாராம்
ஆரார் எந்த எந்த பலன்களை விரும்பினாலும் அந்த அந்த பலன் இந்த அருளிச் செயல்கள் மூலமாகக் கிடைக்கும்
அன்றிக்கே
முடி கொள் நெடு மன்னவர் -ஷத்ரியர்கள் -அவர்களுக்கும் முதல்வர் -ப்ரஹ்மாதிகள்-
அவர்களுக்கும் முதல்வர் -அவர்கட்கு நிர்வாஹகரான நித்ய சூரிகள்
பரம புருஷார்த்தமே பலனாக சொல்லிற்று -இதுவே பெரிய வாச்சான் பிள்ளை திரு உள்ளமும் –

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-5-பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணைப்–

March 16, 2015

திருக்கடல் மலை திருப்பதி விஷயம் —

பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணைப்
படு கடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தை யுள்ளே
முளைத்து எழுந்த தீங்கரும்பினை
போரானைக் கொம்பொசித்த போர்ஏற்றினை
புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை
காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக்
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே ————–2-5-1-

கடன்மலை தலசயனத்து -ஸ்ரீ ஸ்தல ஸ்தாயீ-ஸ்ரீ தல சயனப் பெருமாள் -ஸ்ரீ புண்டரீக மகரிஷிக்காக –
பவளத் தூண் -பக்தர்களின் யோக ஷேம பாரங்களை தாங்கிக் கொண்டு
திவ்ய சேஷ்டிதங்களைக் காட்டி அருளி ஆட் கொண்டு அருளுபவன்
பக்த சிந்தை யாகிற தோட்டத்திலே முளைத்து -அவ்விடத்திலே -அவிவிருத்தி அடையும் மதுரமான கரும்பு
சர்வ ஸ்வதானம் செய்து அருளுபவன்
பாரை யுண்டு -என்னாது -பாரயாதுண்டு -என்றது -அமுது செய்யாமல் மிச்சப் பட்ட வஸ்து எதுவும் இல்லை –
பார் என்று பேர் பெற்றவை எல்லாம் யுண்டு -என்றபடி
பார் இலக்கணையால் -உலகம் என்று சாமான்ய பொருளில் –
படுகடல் -ரத்னங்கள் படுகிற -யுண்டாகிற கடல் -ஆழ்ந்த கடல்-

———————————————————————-

பூண்ட வத்தம் பிறர்க்கடைந்து தொண்டு பட்டுப்
பொய் நூலை மெய் நூல் என்று என்றும்  ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின்
எந்தை என் வணங்கப் படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்ற வூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கன லெரி வாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே –2-5-2-

காருண்யத்தால் அனைவரையும் மங்களா சாசன பரர் ஆக்குவிக்க அழைக்கிறார்
ஒருவரும் மீண்டு வரக் காணாமையாலே -அவர்களை விட்டு ஒழிந்து தாம் சேவிக்கப் பெற்ற பாக்யத்தை
வாயாராகச் சொல்லி மகிழ்கிறார் –
எந்தை என் வணங்கப் படுவானை
கணங்கள் ஏத்தும் -மகான்கள் கூட்டம் கூட்டமாக வந்து நின்று ஏத்தும் படி உள்ளவன்
நீண்டவத்தைக் கருமுகிலை -என்றும் -நீண்ட  வத்தக் கருமுகிலை -என்றும் பாட பேதம்
ஒரு வகையாலும் அளவிட முடியாதவன் -ஹஸ்தம்  அத்தம் -நீண்ட திருக்கைகள் என்றுமாம்
திரு நின்றவூர் பத்தராவி பெருமாள் என்னைப் பெற்ற தாயாரால் தூண்டப் பட்டு ஆழ்வார் திரு வாக்கால்  பாசுரம் பெற்றார் என்பர் பெரியோர்
நித்திலம் -நிஸ்தலம் – முத்து என்றபடி -ஆவி திக்ரு
விலஷணமான போக்யதையும் -குளிர்ந்த வடிவுடைமையும் -முத்துக் கொத்தாக -ஆழ்வார் அருளிச் செய்கிறார் –

—————————————————————-

உடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து
விளையாட வல்லானை வரை மீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்
கடி பொழில்  சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –2-5-3-

அங்காநி அந்ய தேவதா -சரீர சரீரி பாவம்
ஸ ப்ரஹ்ம ச சிவ  சேந்த்ரஸ்   சோஷர பரம்ஸ் ஸ்வராட் -என்றும் –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் -என்கிறார்
உலகு உய்ய -உலக வியாபாரங்கள் நடக்க
வரை மீ கானில் தடம் பருகு  கரு முகிலை –
நஞ்சீயர் வேறு விதமாக பொருள் சொல்ல -பிள்ளை அழகிய மணவாளப் பெருமாள் அரையர் –
பட்டர் அருளிச் செய்யும் விசேஷ அர்த்தத்தை சமர்ப்பிப்பாராம்
இளம் கன்றுகள் மலைக் காட்டில் யுண்டான தடாகங்களில் நீரிலே முன்னே இறந்குக் குடிக்க அஞ்ச
அவற்றை பழகு  விப்பதற்க்காக கண்ணபிரான் தன் முதுகிலே கையைக் கட்டி கவிழ்ந்து நின்று தண்ணீர் அமுது செய்து காட்டுவானாம்
அத்தைச் சொல்லுகிறது-

தவ நெறிக்கு ஒரு பெரு  நெறியை -தன்னை அடைய தானே -சித்த சீரிய உபாயம் –
ஆனை தன் மேல் ஏற ஆனை தானே உதவுமா போலே
மண்ணின் பாரம் நீக்க -கடும் பரி மேல் கல்கியாய் -பவிஷ்யவதாரம் –

—————————————————-

பேய்த்தாயை முலையுண்ட  பிள்ளை தன்னைப்
பிணை மருப்பில் கரும் களிற்றைப் பிணை மானோக்கின்
ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை
அந்தணர் தமமுதத்தைக் குரவை முன்னே
கோத்தானை குடமாடு கூத்தன் தன்னைக்
கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-4-

நமது விரோதிகள் பூதனை பட்டது படும் –
பரமானந்த ஜனகமான திவ்ய மங்கள விக்ரஹம் யுடையவன் –
தயிர் வெண்ணெய் வயிறார விழுங்கி களித்தவன்
அந்தணர் தம் அமுதத்தினை -பெரியாழ்வார்
குரவை கூத்து இடையருக்கு செல்வம் விஞ்சி செருக்குக்கு போக்கு வீடாக ஆடுவர்
கோவர்த்தன கிரி தாரி -இவனே இங்கே சேவை சாதிக்கிறான் –

—————————————————–

பாய்ந்தானைத்  திரி சகடம்  பாரி வீழப்
பாலகனாய் ஆலிலையில் பள்ளி யின்ப
மேய்ந்தானை இலங்கொளி சேர் மணிக் குன்றன்ன
ஈரிரண்டு மால் வரைத் தோள் அம்மான் தன்னை
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதிற் சென்று
அப்பொய்யறை வாய்ப்புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே-2-5-5-

பாலுக்கு அழுகிற பாவனையிலே தன் சிறிய திருவடிகளைத் தூக்கி உத்தைத்து சகடத்தை சின்ன பின்னம் ஆக்கினவன் –
பிரளய காலத்தில் உலகங்களை வயிற்றினில் வைத்து ஆலம்  தளரில் சுகமாக கண் வளர்ந்து அருளுபவன்
பாண்ட தூதனாக விஸ்வரூபம் எடுத்து மல்லர்களை முடித்தவன்
இப்படி விரோதி நிரசன ஸ்வபாவங்கள் இன்றும் விளங்கும்படி சேவை சாதிக்கிறான் –

——————————————————-

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக்
கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே
படர்ந்தானை படுமதத்த களிற்றின் கொம்பு
பறித்தானைப் பாரிடத்தை எயிறு கீற
விடந்தானை வளை மருப்பின் ஏனமாகி
இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

கிளர் பொறிய மறி-
மறி -என்று ஆண் மானுக்கு பெயர்
பிணை என்று பெண் மானுக்கு பெயர் -அதனின் பின்னே  படர்ந்தானை -மாரீசனை கொன்று ஒழித்தது விவஷிதம் –
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை –
அனந்த சாயி-ராம -கிருஷ்ண -வராஹ -உலகளந்த பெருமாளே இவன் -அங்கு தப்பினார்களும் உஜ்ஜீவிக்கும் படி –

————————————————————–

பேணாத வலி யரக்கர் மெலியவன்று
பெரு வரைத் தோளிற நெரித்தன்ற வுணர்கோனை
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனைப்
பொரு கடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாகப் பேய் முலை நஞ்சுண்டான் தன்னை
உள்ளுவார் உள்ளத்தே யுறைகின்றானை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-7-

ராஷச வர்க்கங்கள் தோள்களை  துணித்து
இரணியன் உடைய மார்பை பிளந்து
ஆயாசம் தீர திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளி
ஆஸ்ரிதர் கூக்குரல் கேட்டு புள்ளூர்ந்து அரை குலைய தலை குலைய வந்து ரஷிப்பவன்
பூதனை மாய அருளி -ஆஸ்ரிதர் ஸ்பர்ச த்ரவ்யமும் -அநாஸ்ரிதர் பிராணனும்- தாரகம் இவனுக்கு –

——————————————————————

பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப்
பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண்ணார்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும்
தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி
எண்ணானை எண்ணிறந்த புகழினானை
இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-8-

திரு மெய்யம் திரு மலையில் திரு வனந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளும் பெருமாளுக்கும் மங்களா சாசனம்
எண்ணானை-எண்ணுகிறவன் –எண்ணப் படுகிறவன் -எண்ணாதவன் -மூன்று பொருள்களிலும்
நம் போல்வாரை காத்து அருளும் வகையை எண்ணம் கொண்டும்
நித்ய சூரிகள் பணியுமாறு நலமந்த மில்லதோர் நாட்டில் இருக்க வேண்டியவன் நம் நடுவே கிடப்பதே –
இது என்ன நீர்மை -என்று பக்தர்களால் எண்ணப் படுபவன்
நம் குற்றம் குறைகளை ஒரு பொருளாக இட்டு எண்ணாதவன் –

————————————————————-

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப்
படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல்
விண்டானை தென்னிலங்கை யரக்கர் வேந்தை
விலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு
பண்டாய வேதங்கள் நான்கும்
ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கமாறும்
கண்டானை தொண்டனேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லத்தை தல சயனத்தே–2-5-9-

ஆயார் -ஆனார் என்றபடி
தாளாளற்கு-தாளாளான-தனக்கு என்றபடி
ருக்கு யஜூஸ் சாமம் அதர்வணம் -வேத வியாசர் பிரித்து அளித்த பெயர்கள்
முன்பு இருந்தவை -தைத்ரியம் -பௌடியம் – தலவகாரம் -சாமம் -என்பவை ஆகும்
ஐந்து வேள்விகள் -ப்ரஹ்ம-தேவ -பூத -பித்ரு -மனுஷ்ய யஜ்ஞம் –
வேதத்தில் நித்யம் ஒரு பிரஸ்னம் ப்ரஹ்ம யஜ்ஞம்
அக்னி ஹோத்திரம் தேவ யஜ்ஞம்
பிராணிகளுக்கு பலி இடுவது பூத யஜ்ஞம்
பித்ரு தர்ப்பணம் போல்வன பித்ரு யஜ்ஞம்
விருந்தளிப்பது மனுஷ்ய யஜ்ஞம்
கேள்வி -மனு பராசர ஸ்ம்ருதிகள்
அன்றிக்கே கேள்வியோடே அங்கமாறும் -உபதேச பரம்பரைகள்
சீஷா வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் -ஆறு அங்கங்கள் –

———————————————–

பட நாகத்தணைக் கிடந்து அன்று அவுணர் கோவை
பட வெகுண்டு மருதிடை போய்ப் பழன வேலி
தடமார்ந்த கடல் மல்லை  தல சயனத்துத்
தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை
கடமாரும் கருங்களிறு வல்லான்
வெல் போர்க் கலி கன்றி யொலி செய்த வின்பப் பாடல்
திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார்
தீவினையை முதலறிய வல்லார் தாமே —2-5-10-

திருவவதாரங்கள் செய்து அருளி விரோதி நிரசனம் செய்த ஸ்ரமம் தீர இங்கே கண் வளர்ந்து –
ஓத வல்லார்கள் முன்னைத் தீ வினைகளை வேரோடு அறுத்து தொலைத்து நித்ய அனுபவம் அனுபவிக்கப் பெறுவார்கள்
திடமாக -என்பதை ஐந்தும் ஐந்தும் வல்லார் என்பதிலும்
தீ வினையை முதலரிய  வல்லார் -என்பதிலும் அன்வயிக்கலாம் –
நிச்சயமாக போக்கிக் கொள்வர் என்றபடி

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .