Archive for May, 2014

ஸ்ரீ பெரிய திருமொழி-7-1—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

(திரு மந்த்ர அர்த்தம் முதல் பத்திலேயே பெற்று
மீண்டும் அத்தைப் பாடி அருளினார் கீழ்
நானே பெற்றேனே நமரும் உரைமின் -ஒன்பதின் கால்
சம்பந்த ஞானம் திரு உள்ளத்தில் உறைக்க
ப்ராப்ய த்வரை மிக்கு
இதில் முதல் இரண்டு பாசுரத்தால் -கூப்பிட
மூன்றாம் பாசுரம் பெருமாள் சமாதானம் –
உமக்கு எல்லாம் பெற உறுப்பாக அன்றோ நாம் இவ்வோ இடங்களில்
என்று
இதில் பல திவ்ய தேசங்களைக் கொத்து கொத்து அருளிச் செய்கிறார்
இவ்வாறு உகந்து அருளினை நிலங்களைக் காட்ட இவரும் எல்லாம் பெற்றாராய் க்ருதார்த்தர் ஆகிறார்
கீழே சரணம் புகுந்தார்
கைங்கர்ய பிரார்த்தனை தலை எடுத்து -விருப்பம் மிக
கூப்பிட்ட கூப்பாட்டுக்கு சமாதானம் பண்ண ஸமாஹிதர் ஆகிறார் என்று சங்கதி
கண்கள் சிவந்து திருவாய் மொழி முதல் இரண்டும் மூன்றாம் பாசுரம் பாதியும் போல்
இங்கு முதல் இரண்டும் அடுத்த எட்டும் -)

கறவா பிரவேசம் –

கீழே சம்பந்த ஞானம் பிறக்கை யாலே
கைங்கர்ய லாபத்துக்கு கூப்பிட்டார் –
நீர் இங்கனே கிடந்தது படுகிறது என்ன
உமக்கு எல்லாம் பெறுகைக்கு உறுப்பாக அன்றோ
நாம் இவ்வோ இடங்களிலே நிற்கிறது என்று
உகந்து அருளின நிலங்களில் நிலையைக் காட்ட
இவரும் எல்லாம் பெற்றாராய்
க்ருதார்த்தர் ஆகிறார் –

———————————————–

அனுபவ விரோதியான சம்சார சம்பந்தத்தை
கழித்து அருள வேணும் -என்கிறார் –

கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1-

நம்பி-கல்யாண குண பூர்ணனே சம்வாதம் இதில்-

கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல் –
கறக்கப் பெறாத நாகினுடைய கன்று தன் தாயை நினைக்கும போலே –
கறவா மட நாகானது-தன் கன்றை உள்ளினால் போலே
என்று சொல்ல நினைத்து
அர்த்தத்துச் சேராமையாலே
மிடி பட்டார் பிள்ளை அமுதனார் –
அது தான் அபஷ   தர்மமாம் இறே –
ஆகையால் பட்டர் அருளிச் செய்யும் படி -கறவா மட நாகை (தாய் பசுவை ) தன் கன்று உள்ளினால் போலே என்று –
கறக்கப் பெறாமையாலே முலைக் கடுப்பாலே வந்த நோவு உண்டு இறே அதுக்கு –
அத்தாலே அவன் உடைய ஆற்றாமை எல்லாம் தோற்றும் இறே  –
(இரண்டு இடத்திலும் ஆற்றுமை உண்டே -பெருமாளுக்கும் ஆழ்வாருக்கும் -நாகுக்கும் கன்றுக்கும் )

(வேத சதுஷ்ட்ய அங்க உப அங்கங்கள் 14 போல் -18 என்று இல்லாமல் –
மா முனிகள் -வேத சதுஷ்ட்யத்துக்கு – உருபு சேர்த்தது போல்
இங்கு நாகு -நாகை -உருபு சேர்த்து பட்டர் அருளிச் செய்யும் படி)

தன் கன்றுள்ளினால் போல் –என்கையாலே
முலை உண்ணப் பெறாமையாலே வந்த நாக்கு ஓட்டுதல் தோற்றும் இறே –
அத்தாலே இத்தலை ஆற்றாமை எல்லாம் தோற்றும் இறே
கறக்கப் பெறாத நாகின் உடைய கன்று தன் தாயை நினைக்குமா போலே –

மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்-
மறைக்கைக்கு சம்பாவனை உள்ள சம்சாரத்தே இருந்து
அனந்யார்ஹனான நான்
ஸ்வாமியான உன்னையே
சொல்லிக் கூப்பிடா நின்றேன் –

நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி –
தேன் மிக்கு இருந்து உள்ள பொழிலாலே சூழப் பட்ட
நறையூரிலே வந்து நிற்கிற
கல்யாண குண பூரணன் ஆனவனே –

பிறவாமை என்னைப் பணி –
பிறக்கை மறுப்போடு வ்யாப்தமாய்த்து இருப்பது –
அந்த மறப்பு வருகைக்கு ஈடான பிறப்பு -பிறவாமையை நான் பெறும்படி
பண்ணி அருள வேணும் –

எந்தை பிரானே  –
கடவ நீயே என்னுடைய விரோதியைப் போக்கா விட்டால்
வேறு சிலர் கடவார் உண்டோ –

நீயே நினைத்து கார்யம் செய்யில் உளேனாய்
இல்லையாகில் இல்லை யாம் படி
அநந்ய கதியாய் இருக்கிற நான்
ஸ்வாமியான உன்னையே
நினைத்துக் கூப்பிடா நின்றேன் –

என்னுடைய விரோதியை நீயே போக்கா விடில்
வேறு சிலர் போக்குவார் உண்டோ   –

————————————————–

கீழ் பாட்டிலும் இதிலும் கூப்பிடுகை –

இது தான் மிகை அன்றோ –
(கன்றுக்குட்டி அம்மா நாகை கூப்பிட்டதே கீழ் )
பிரளயம் கொண்ட பூமியை நீ எடுத்தது ஆர் கூப்பிட –
நீ அறிந்த ஆபத்தும்
விலக்காமையும்
அன்றோ வேண்டுவது உனக்கு ரஷிக்கைக்கு –
பிரளயம் கொண்ட பூமி ஆழ்ந்த இத்தனை அல்லது
என்னை எடுக்க வேண்டும் -என்றதோ –

வற்றா முது நீரொடு மால் வரை ஏழும்
துற்றாக முன் துற்றிய தொல் புகழானே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள் தந்திடும் எந்தை பிரானே —7-1-2-

அற்றேன் -அநந்யார்ஹ சேஷ பூதன் -தத் ஏக உபாயத்வ அத்யவசாயம் –
அடியேன்-ஸ்வரூபத்தை உணருகையும் –

வற்றா முது நீரொடு மால் வரை ஏழும் துற்றாக முன் துற்றிய தொல் புகழானே  –
வற்றாத ஜலத்தை உடைத்தான சமுத்திர ஜலத்தோடே கூட
குல பர்வதங்கள் ஏழையும்
அதுக்கு ஆஸ்ரயமான பூமியும்
ஓர் அவதாநமாக அமுது செய்து
இப்படி பழையதாக நீ ஆர்ஜித்த குணங்களை
நான் கூப்பிட
அரை ஷணம் தாழ்த்து இழக்க விறே புகுகிறாய்   –

அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் –
பிரளயத்தில் அகப்பட்ட பூமியில் காட்டில் இவருக்கு உண்டான வாசி
அவன் பக்கல் வ்யவசிதன் ஆகையும்-( தத் ஏக உபாயத்வ அத்யவசாயம் )
ஸ்வரூபத்தை உணருகையும் –
அநந்ய கதிகளாகக் கூப்பிடுகையும்  –

பெற்றேன் –
ஆபன்னனான போதாக என்னுடைய ரஷணத்துக்காக
நான் நாலடி இடத் தேடாதே (தொடாதே)
உன்னையே சொல்லிக் கூப்புடுகை யாகிற
இப் பேறு பெற்றேன் –
(கைங்கர்ய பேற்றைச் சொல்ல வில்லை -அவனையே கூப்பிடுகை யாகிய பேறு )

அருள் தந்திடும் எந்தை பிரானே –
இனி உன்னுடைய அருளுக்கு தண்ணீர் துரும்பு இல்லை இறே –
நாம் எல்லாம் செய்வோமாக இருக்கச் செய்தே
நீ ஒட்டுகிறலை என்ன வேண்டாவே –
நான் கை வாங்கினேன் –
அருள் தந்திடு எனக்கு என் குல நாதனே –

(பெற்றேன் சாதனமாக கொள்வானோ
உன் அருள் தான் உறுதி -இது அதிகாரி விசேஷணம் தானே
நீ தந்திடு -இதுவே சாதனம் )

—————————————-

திருப் பாற் கடல் கிடந்ததும்
திரு மலை நின்றதும்
திருக் கோட்டியூர் -கிடந்ததும்
அநேக வடிவம் கொண்டு-இங்கு எல்லாம் நின்ற நிலையைக் காட்டி
அதீத பிரத்யேக பரிமாற்றம்
தந்திடு என்றவர் அருளை வைத்தீர்
ஹ்ருஷ்டராய் வேறு ஒருவருக்கும் தாரேன் என்கிறார் =

தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய்
ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன்
காரேய் கடலே மலையே திருக் கோட்டி
ஊரே உகந்தாயை உகந்தேன் அடியேனே–7-1-3-

அதுவே-களிப்பதும் ஆராமல் இருப்பதும் அதையே –

தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய் –
வேறு ஒருவருக்குக் கொடேன் –
தேவர் உடைய பிரசாதத்தை வேறு ஒருவருக்கு விட்டுக் கொடேன் –
இவர் கொடாதே ஒழிகை யாவது என் என்றால்
விஷய ஸூசகமான-(ஹர்ஷ ஸூசகமான-என்றுமாம் ) உக்தி இருக்கிற படி –
இதனுடைய கண் அழிவு அற்ற கிருபையை என் பக்கலிலே வைத்தாய் –

(பிரயோஜனாந்தர பரர்களும் வந்து வணங்கும் படி எங்கும் நித்ய வாசம்
ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம்
இதுவே அருள்
இவர் தாரேன் என்பது
நானே விஷயம் உனது அருளுக்கு -என்றபடி
இவர் ஒருவர் இடத்தில் தான் க்ருஷி பலித்தது )

ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன் –
உன்னுடைய கிருபையை புஜித்து
பர்யாப்தனாய் இருக்கை அன்றிக்கே
மேன் மேல் என அபி நிவிஷ்டனாய்க் கொண்டு
உன்னுடைய கிருபையை புஜித்து
அத்தாலே வந்த ஹர்ஷத்தாலே செருக்கி
யமாதிகள் தலையிலே அடி இட்டு திரியும்படி ஆனேன் –
(அதுவே உபயத்திலும் அந்வயம் )

காரேய் கடலே மலையே திருக் கோட்டி ஊரே உகந்தாயை உகந்தேன் அடியேனே
என்னை உகந்து வந்த உன்னை
நான் உகந்து 
மேகங்களால் நெருங்கி இருந்துள்ள
சௌபரி பல வடிவு கொண்டால் போலே
அநேக வடிவம் கொண்டு
அவ்வோ இடங்கள் தோறும் இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி
வர்த்தியா நின்றான்  –

திருப் பாற் கடலில் கிடந்ததும்
திரு மலையில் நின்றதும்
திருக் கோட்டியூரிலே வந்ததும் தமக்காக -என்று அறிந்த ஹர்ஷம்
அதுவே பருகி ஆரேன் -அதுவே பருகிக் களிக்கின்றேன் -என்கிறார் –

உகந்தாயை உகந்தேன் -களை அற்ற கைங்கர்யம் -எனக்கே உகந்தாயை முதலில்

————————————————–

உகப்பு தலை மண்டியது கீழ்
அது தெகுட்டி மறக்கத் தேட
மறக்காமல் உள்ளே புகுந்ததை அனுசந்தித்து
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை மறப்பனோ

புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா
கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே
வள்ளால் உன்னை எங்கனம் நான் மறக்கேனே –7-1-4-

வள்ளால்-உதாரனான –

பகாசுரன் உடைய வாயைக் கிழித்து
ஆஸ்ரித விரோதியை ஆளிட்டு அந்தி தொழாதே
தானே கை தொட்டுப் போக்கினான் என்னும் சுத்தியை
உடையனாய் இருக்கிறபடி –

புள் வாய் பிளந்த புனிதா என்று -ஆய்த்து  இவர் கூப்பிட்டது-
இவர் இப்படி அழைக்க
பின்னை அவன் செய்தது என் என்னில்

உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா –
புறப்பட்டு  வந்து தோற்ற இவருக்குப் பற்றாது என்று பார்த்து
ஹிருதயத்திலே நின்று
கமர் பிளந்த இடம் எங்கும் வவ்வல் இடும்படி பண்ணினான் ஆய்த்து –

கள்வா –
ஆஸ்ரித விஷயத்தில் இவன் செய்யுமவை
பரிச்சேதிக்கப் போகாதது ஆய்த்து –

கடல் மல்லைக் கிடந்த கரும்பே –
திருக் கடல் மல்லையிலே வந்து சாய்ந்து அருளின பரம ரசிகனே –
கரும்பே -என்கிறது
கை தொட்டு நெருக்குதலால் வரும் செவ்வி அழிகை இன்றிக்கே  இருக்கை –
(ரசிக அஸ்ய -ரஸவான் ரஸம் உடையவன்
பாலே சொல்லாமல் கரும்பே என்றது
கைப்பட்டால் திரிந்து போகுமே பால்
திரியாத ரஸவான் )

வள்ளால் –
தஸ்யைஷ ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம்-என்கிறபடியே
தன் வடிவு அழகை முற்றூட்டாக சர்வ ஸ்வ தாநம் பண்ணின படி –

உன்னை எங்கனம் நான் மறக்கேனே –
மகா உபகாரகனாய் இருக்கிற உன்னை
உன்னாலே உபகாரம் கொண்டு இருக்கிற நான்
எத்தைச் சொல்லி மறப்பது –

(புனிதன் இல்லை என்று மறக்கவோ
உள்ளத்தில் இல்லை என்று மறக்கவோ
குளிரப் பண்ண வில்லை என்று மறக்கவோ
ஆஸ்ரித பவ்யன் இல்லை என்று மறக்கவோ
பக்கத்தில் இல்லை என்று மறக்கவோ
ரசம் இல்லை என்று மறக்கவோ
உதாரம் இல்லை என்று மறக்கவோ
எம்பிரானை என் சொல்லி மறப்பேன் -நம்பியை -செம் பொன்னே திகழும் -இத்யாதி போல் இங்கும் -)

—————————————————

மறக்கவே முடியாத அனுபவம் கீழே
அனுபவ ஜெனித ப்ரீதி -உந்த -கைங்கர்யம் பண்ணும் விரகை அருளிச் செய்ய வேண்டும் –

வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும்
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி
சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5-

வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும் –
வில்லோடு ஒத்த நுதலையும்
வேலோடு ஒத்த கண்களையும் உடையளுமாய்
உனக்கும் கூட ஆகர்ஷகமான சௌகுமார்யத்தை உடைய பெரிய பிராட்டியாரும்-

நீயும்-
அவள் தானும் கூடத் துணுக் துணுக் என்னும்படியான சௌகுமார்யத்தை உடைய நீயும்  –

கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே –
துஷ்ட சத்வ பிரசுரமாய்
சஞ்சார யோக்யதை இல்லாத காட்டிலே
ஒரு களித்த யானை பிடியோடு கூட
ஸ்வைரமாக சஞ்சரிக்குமா போலே
ஆள் பார்த்து உழி தருவானாய்க் கொண்டு திரிந்தவன் –

நல்லாய்-
பிரஜைகள் விஷயத்தில் அவர்கள் – (மாதா பிதாக்கள்) – தங்களில் காட்டிலும்
வாத்சல்யத்தை உடையவனே -வத்சல்யனாய் இருக்குமவனே –

நர நாரணனே –
ஸ்த நந்தய பிரஜைகாகா தாய் குடி நீரை-மருந்து கஷாயம் – குடிக்குமா போலே
இவர்களுக்காக தபஸ்ஸூ பண்ணுமவனே-

எங்கள் நம்பி-
குறைவாளரான எங்கள் குறையை நிரப்புகைக்கு ஈடான
பௌஷ்கல்யத்தை உடையவனே  –

சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே  –
உன்னுடைய கைங்கர்யத்துக்கு நானே விரோதிகளை
நானே போக்கித் தருகிறேன்
அஞ்சாதே கொள் -என்று
மாஸூச என்றாப் போலே ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –
சர்வ பூதேப்ய அபயம் ததாமி -என்றாப் போலே
இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –

(கிருஷ்ணனாகவும் ராமனாகவும் அருளிச் செய்த சரம ஸ்லோகம் போல் )

————————————————————

சொல்லாய் என்று சொல்ல வேண்டுமோ
வட திசைக்கு எல்லை தொடக்கமாக ஸ்ரீ பதிரி தொடங்கி
ஸ்ரீ ரெங்கம் -ஆராமங்கள் எங்கும்
கைங்கர்யம் கொள்ளவே என்றதும்
கேட்டு ஹ்ருஷ்டர் ஆகிறார் –
திரு மூழிக் களத்து விளக்கு -விபவ சரம ஸ்லோக மொழி களை
அருளிச் செய்ததைக் காட்டி அருளவே நித்ய சேவை

பனியேய் பரங்குன்றின் பவளத் திரளே
முனியே திரு மூழிக் களத்து விளக்கே
இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய
கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-6-

பனியேய் பரங்குன்றின்   பவளத் திரளே-
பனி மிக்கு இருந்துள்ள ஹிமா வானிலே திருப் பிரிதியிலே
சர்வைஸ் ஸ்ப்ருஹணீயனாய்க் கொண்டு
சந்நிஹிதன் ஆனவனே –

முனியே –
இச் சேதனர் அறியாது இருக்கச் செய்தே
எப்போதும் ஒக்க இவர்களுக்கு
ஹிதத்தை அனுசந்திக்குமவனே –

திரு மூழிக் களத்து விளக்கே  –
திரு மூழிக் களத்திலே வந்து உன்னுடைய
ஸ்வரூப ரூப குணங்களுக்கு
நீயே பிரகாசகனாய்க் கொண்டு நிற்கிறவனே –

இனியாய –
இனிமைக்கு பிரகாசத்தைப் பண்ணுகை
அன்றிக்கே
இனிமை தானேயாய் இருக்கை –

தொண்டரோம் பருகு –
தேவர்கள் பருகும் அமிர்தம் போல் அன்றிக்கே
கைங்கர்ய ருசி உடையராய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பருகும் அம்ருதமாய் –

இன்னமுதாய கனியே-
அப்போதே எடுத்து நுகரலாம் படி
கனி போலே இருக்கிறவனே –

உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –
காணப் பெறாமையாலே
அசந்நேவ-என்கிறபடியே
உரு மாய்ந்த நான்
கண்டு
உஜ்ஜீவிக்கப் பெற்றேன் –

————————————————————-

ப்ராப்யமும் ப்ராபகமும் நீயே
கதி முதலில் உபாயம் -இறுதியிலும் கதி
கீழ் பாட்டில் பிறந்த போக்யதா ப்ரகரஷத்தாலே
நீயே இரண்டாகவும் பெற்றேன்
க்ருதார்த்தராய் அருளிச் செய்கிறார் –

கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-7-

நித்திலத்தொத்தே-முத்து மாலை –

கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு –
கதியாகிலும் உன்னுடைய
பிரசாதம் ஒழிய எனக்கு வேறு ஓன்று இல்லை –
கதி -என்றது புகல் என்றபடி –
பிராப்யம் ஆகிலும் உன் திருவடிகளை ஒழிய வேறு ஓன்று இல்லை –
நான் அநந்ய கதி  –

நிதியே –
வைப்பான தனமே –

திரு நீர் மலை நித்திலத்தொத்தே –
திரு நீர் மலையிலே வந்து
முத்து மாலையை உடம்பிலே அள்ளி ஏறிட்டுக் கொள்ளுமா போலே –
குளிர உடம்பிலே எறட்டு அணைத்துக்  கொள்ளலாம் படி இருக்கிறவனே –

நித்திலம் -பனி ஸ்தலம் -முத்து
தொத்து -மாலை –

ஆஸ்ரிதர்க்கு வாஸஸ் ஸ்தானமாய் உள்ளவனே –
பதியே- பரவித் தொழும் -தொண்டர் தமக்குக் கதியே-
அடைவு கெட ஏத்தித் தொழும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனே –

அன்றிக்கே –
பதியே பரவித் தொழும் -தொண்டர் தமக்குக் கதியே-என்று
என்னோடு ச கோத்ரிகளாய்
தான் உகந்த ஊர் எல்லாம் -திரு நெடும் தாண்டகம் -என்கிறபடியே
உகந்து அருளின நிலங்கள் எல்லாம் புக்கு அனுபவிக்கும் அவர்களுக்கு
பிராப்யனாய் உள்ளவனே –

உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே   –
நீ உகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே
உன்னைக் கண்டு கொண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன் –

————————————————

ஒருகால் சொன்னதையே ஒன்பதில் கால்
தேன் குடித்த நரி போல் கண்டு களித்தீர் ஆகில்
உம்மை இந்த நாளிலே
ஆசையை குறைத்து ஆனந்தம் மட்டுப்படுத்த
ஏதம் தோஷம் சொல்லி ஆதரவை மட்டுப்படுத்த வேண்டி இருக்கும்
பேசினாலும் விடும் படியாகவோ உனது போக்யதை -படி இருப்பது
ஒரு நாளும் விட முடியாதே –

அத்தா அரியே என்று உன்னை அழைக்கப்
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னை எங்கனம் நான் விடுகேனோ –7-1-8-

அத்தா அரியே என்று உன்னை அழைக்கப் –
என் ஸ்வாமியே –
என்னுடைய விரோதியைப் போக்கினவனே-என்று உன்னை நான் சொல்லிக் கூப்பிட  –

பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை –
அத்தா என்று அசங்கத பாஷணம் பண்ணிக் கூப்பிடா நின்றான்
இவன் பித்தனாய் இரா நின்றான் -என்னா நின்றார்கள் –
இவர்கள் அசங்கத பாஷணம் பண்ணா நின்றார்கள்
பிச்சராய் இரா நின்றார்கள் -என்று
நான் நினைத்து இருக்கும் அவர்கள் என்னை -பித்தா என்று பேசுகின்றார் –

பிறர் என்னை பேசா நின்றார்கள் என்று
கை விடலாம்படி இருக்கிறாய் அல்லையே நீ –
முத்தே-
முத்துப் போலே ஸ்ரமத்தைப் போக்குமவனே –

மணி மாணிக்கமே-
பெரு விலையனான  மாணிக்கம் போலே இருக்கிறவனே

முளைக்கின்ற வித்தே-
பலத்தோடு வ்யபசரியாதவனே –
முளையாத வித்து – நிஷ்பலம் என்பதால் –
முளைக்கின்ற வித்தே -என்கிறார்

உன்னை எங்கனம் நான் விடுகேனோ –
உன்னை எத்தைச் சொல்லி நான் விடுவது –

————————————————

ப்ரத்யக்ஷமாய் இருக்கும் மாதா பிதாக்கள் அன்றோ என்று பிறர் ஏசத் தொடங்க
சாஸ்திரத்தில் சொல்லிய என்னை விட வேண்டி வரும்
ஹர்ஷம் பிரயோஜனம் ஆகாதே என்ன
நீ சர்வ பிரகாரத்தாலும் சர்வ வித பந்துவாக இருந்தாலும்
நீ மாத்ராதிகளைக் காட்டிலும் அணித்தாக இருந்தாலும்
பாஹ்ய ஹீனர்கள் அறியாதபடி அன்றோ உள்ளார்கள் –

தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ  –7-1-9

தூயாய் –
ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிறபடியே
சர்வ பூத ஸூ ஹ்ருதாய்
ஆனுகூல்யம் பண்ணினாரோடு
பிரதி கூல்யம் பண்ணினாரோடு
வாசி அற-எல்லாருக்கும் ஒக்க நன்மையைப் பண்ணுகையால்
வந்த பாவ சுத்தியை உடையவனே –

சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா-
சகல தாபங்களும் ஆறும்படி ஸீதமான கிரணங்களை உடைய
பூர்ண சந்தரனைப் போலே -சர்வ பிராணிகளையும்
தாயாய் கொண்டு அளிக்கின்ற குளிர்ந்த
திருக் கண்களை உடையவனே -என்று
திருக் கண்களுக்கு விசேஷணம் ஆதல் –

அன்றிக்கே
சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிப்பவனுமாய் –
அவ் வாத்சல்யம் எல்லாம் தோற்றும்படியாக இருக்கும்
திருக் கண்களை உடையவனே -என்னுதல் –

ஆயா –
இப்படி இருந்து வைத்து
உன்னுடைய விபூதி பூதரிலே சிலர் -இவன் என் புத்திரன் -என்று
அபிமாநிக்கலாம் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனே –

அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ  –
ஆபத்து கரை புரண்டால் வரையாதே எல்லாரையும் ஒக்க ரஷிக்கும் ஸ்வபாவன் ஆனவனே –
திரைக் கிளர்த்தி உடைய கடல் சூழ்ந்த பூமியை அமுது செய்த
திருப் பவளத்தை உடையவனே –
(முற்று உவமை -பவளம் போல் வாயை உடையவன் என்னாமல் பவளத்தை உடையவனே)
இப்படி ஆபத் சகனான உன்னை
எங்கனே மறக்கும் படி –

—————————————–

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ்  மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு  இல்லை துயரே -7-1-10-

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும் –
மது வெள்ளத்தாலே வண்டுகள் ஆனவை
பரிமளம் போலே படிகிற பொழில்களை உடைத்தான
திரு நறையூரிலே நிற்கிற கல்யாண குண பரிபூர்ணனைக் கவி பாடிற்று –

தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ்  மாலை –
அவன் திருவடிகளில் நித்ய கைங்கர்யத்தை அதிகரித்த
திருமங்கை ஆழ்வார்
ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடை –

தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட உண்டே விசும்பு உந்தமக்கு  இல்லை துயரே –
என்னைப் போலே நீங்களும்
இவ் விஷயத்திலே ருசியை உடையி கோளாய்
பாடுவது ஆடுவதாகவே
பரம பதம் தன்னடையே சித்திக்கும் படியாம் –
அதுக்கு விரோதியான பாபம் தன்னடையே போம் –

(முதலில் உம் தமக்கு விசும்பு உண்டு
பின்பு துயர் இல்லை
க்ரமம் மாறி பேறு )

———-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கறவையாய் நம்பியைத் தான் மற்ற ஊர் சீரோடு
மறவாது அழைத்துச் சிறையாம் பிறவி அற
தாய் கரும்பு வள்ளல் கதியாய்க் கலியன் காண்
மாயன் ஆனான் புள் ஏனம் -61-

தாய் நினைந்த கன்றே ஓக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து -7-3-2-கறவை எம்பெருமானே –
தாயாய் உலகு அளித்தும் -கரும்பின் சுவை போலே போக்யனாயும் அபேக்ஷிதங்கள் அருளும் வள்ளலாயும்-
அடையும் கதியாகவும் –
ஆக உபாய உபேயமாக இருக்கும் தன்மையைக் காட்டிக் கொடுத்து அருளுகிறான்
புள் ஏனம் ஆனான் -அன்னமாய் அருமறை பயந்து –
வென்று சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள்ளெயிற்று ஒள்ளெரித்தறு கண் பன்றியாய்
யன்று பார்மகள் பயலை தீர்த்தவனாய் -இவ்வாறு பல பல திருவவதாரங்கள் மூலம் உபகரித்து அருளுபவர்
இவற்றைக்காட்டக் கண்ட கலியன் தானே நமக்கு இவை எல்லாம் –

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-6-10—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

களவு -ஆத்ம அபகாரம் தொலைய ஓம் அர்த்தம் -திருட்டு நடை ஆடாது
நம -நம்மால் ரக்ஷிப்பது -துற பிக்ஷம் பஞ்சம் போல் -அர்த்தம் புரிந்து போக்கலாம்
நாராயணாயா -பிராப்த பந்து -ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் -வியாதி போக இதன் அர்த்தம்
இப்படி மஹாத்ம்யம் உள்ள திரு மந்த்ரம்
அரசு -மந்த்ர அரசு ஆலி நாட்டு அரசனுக்கு அரச மரத்தில் தெய்வ அரசன் அருளி
இனியது தனி அருந்த மாட்டாரே -நமக்கும் மதி நலம் அருளுகிறார் –
ஆச்சார்ய முகத்தால் பெற வேண்டுமே -ஆகவே பிரணவம் இல்லாமல் உபதேசம் –

கிடந்த நம்பி -பிரவேசம் –

திரு உள்ளத்தைக் குறித்து -திருவடிகளிலே சரணம் புகு -என்றார் –
சரணம் புகுகைக்கு ஈடாக இங்கு எல்லாம் சரண்யதை குறை வற்றதோ என்ன –
அவனுடைய திரு நாமம் கேட்டு அறிவது இல்லையோ -என்கிறார் –

(இங்கு -அர்ச்சையில்
அவனே நம் கை பார்த்து இருக்கிறானே என்ற சங்கைக்கு பதில் -இது
இங்கு தானே சங்கு சக்கர லாஞ்சனை பெற்றார்
அதே பாங்கில் நம்பி இன்றும் சேவை –
திருவாலி நம்பி மந்த்ர உபதேசம் –

அஞ்ஞரைப் போல் அசக்தரைப் போலவும் அன்றோ இவன் இருக்கிறான் –
நம்மையும் கை விடுவதிலும் சக்தி இல்லாதவன்
சரண்யதையில் குறை இல்லை என்னலாமோ
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் நம் போல்வார் அர்ச்சையிலே
பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர்
அஞ்ஞானம் -ஞானம் மிக்கு உள்ள ஆச்சார்யர்கள் – பக்தி பரவசமாய் உள்ள ஆழ்வார்கள் –
குண பூர்த்தி இங்கே தானே
ஸுவ்லப்யம் நிரம்பி இங்கேயே
இதுக்கு பிரமாணம் என்ன பிரஸ்னத்தில்
பிரதமத்தில் ஸ்ரீ பத்ரியில்
அத்தை ஸ்மரிப்பிக்கிறார் இதில்
இதம் பூர்ணம் இத்யாதி
பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா  மகள் மலர் மா
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய-ஒன்பதாவது பாசுரம் )

ஆஸ்ரித ஸூலபனாய் –
அதி மானுஷ சேஷ்டிதங்களை உடையனாய் –
விரோதி நிரசன சீலனாய் –
உபய விபூதி உக்தனாய் –
இருக்கிற இருப்புக்கு வாசகமான திரு நாமத்தோடே –
(திரு மந்திரத்தோடே -பாட பேதம் )
ஸ்ரீயபதித்வத்தையும் சேர்த்து
அனுபவிக்கிறார் –

———————————————————-

குடந்தை மேவி கிடந்த நம்பி -என்று அந்வயம் –
கீழே நின்ற திருக் கோலம் இழக்கக் கூடாதே –
இங்கு கிடந்ததோர் கிடை அழகை இழக்கக் கூடாதே –

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-1-

நம்பி வேறே வேறே அர்த்தம் இப் பாசுரத்தில்
1-கிடந்த நம்பி-சயனித்த அழகால் பூர்ணன்
2-இடந்த நம்பி-சாமர்த்தியத்தால் பூர்ணன்
3-எங்கள் நம்பி-சம்சாரிகள் குறைகளைத் தீர்க்க வல்ல பூர்ணன்
4-கடந்த நம்பி-வீரத்தால் பூர்ணன் ராமன்
5-நடந்த நம்பி-ஆச்சர்ய அதி மானுஷ சேஷ்டிதங்களால் பூர்ணன்
ஐந்து நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே

கிடந்த நம்பி குடந்தை மேவிக் –
பரம பதத்தில் காட்டிலும்
திருப் பாற் கடலைக் காட்டிலும்
திருக் குடந்தையிலே பொருந்தி சாய்ந்து அருளின போதை அழகை
நிற்றல் இருத்தல் செய்து இழக்க வரில் செய்வது என்  -என்று
அஞ்ச வேண்டாத படி கண் வளர்ந்து அருளுகிற போதை
அழகாலே பூரணன் ஆனவன் –

கேழலாய் யுலகை இடந்த நம்பி –
அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி
அதுக்கடியான சாமர்த்த்யத்தால் குறைவற்றவன் –

எங்கள் நம்பி –
சம்சாரிகளாய்
குறைவே நிரூபகமாம் படி இருக்கிற நம்முடைய குறைவு தீர்க்கைக்கு அடியான
பௌஷ்கல்யத்தை உடையைவன்   –

எறிஞர் அரண் அழியக் கடந்த நம்பி கடியார் இலங்கை –
சத்ருக்கள் இட்ட அரண் அழியும்படியாக
குரூரமான ராஷசர்
திரண்ட இலங்கையை அழியச் செய்து
அத்தால் வந்த வீர ஸ்ரீ யால் குறைவற்றவன் –

யுலகை ஈரடியால் நடந்த நம்பி –
பரப்பை உடைத்தான பூமியை அடைய இரண்டு அடியாலே அளந்த
அத்புத கர்மத்தால் குறைவற்றவன் –

நாமம் சொல்லில் நமோ நாராயணமே –
அவனுடைய பேர் சொல்லில் -நமோ நாராயணமே –

—————————————————–

கீழ்ப் பாட்டில் விரோதி நிரசன சீலம்
கீழ் சொன்ன சாமர்த்தியம்
வராஹ திரிவிக்ரமன் மீண்டும் அனுபவம் இதில்

விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன்
தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே  –6-10-2-

முன நாள் முன்-காலத்தாலும் இடைப்பிள்ளைகள் முன்னே இடத்தாலும் முன்னே
தாடாளன்-நாட்டியம் ஆடிய தாள் அன்றோ -காளியன் பெற்ற பேறு
விஷ துஷ்டமான ப்ரக்ருதி ஒட்டி –

விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன் தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு
கீழ்ச் சொன்னவை திரியட்டும் பின்னாட்டின படி –
விஷத்தை உடைய காளியன் அஞ்சும்படியாக
யுத்தத்தில் முன்பு ஒரு நாள்
தன்னேராயிரம் பிள்ளைகளுக்கு முன்னே
பரப்பு மாறாப் பூத்த தாமரைகளையும்
நினைத்த வகைகள் எல்லாம் விநியோகம் கொள்ளலாம் படியான
ஜல சம்ருத்தியையும் உடைய பொய்கையிலே போய்ப் புக்கு

மிக்க தாடாளன் –
அவனைத் துரத்தின ஏற்றத்தை உடையவன் –

தாடாளன் –
திருவடிகளை உடையவன் –

இடந்தான் வையம் கேழல் ஆகி
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு
பிரளயங்கதையான பூமியை
எடுத்துக் கொண்டு ஏறினான்

யுலகை ஈரடியால் நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே  –
லோகத்தை இரண்டு அடியாலே அளந்து கொண்டவன் உடைய நாமம் –

——————————————————

முதல் பாட்டில் அருளிச் செய்த
விரோதி நிரசன சீலத்தையும்
அத்புத சாரித்ரத்தையும்
ஆஸ்ரித ஸூ லபத்தையும்
வேறே புடைகளால் அனுசந்திக்கிறார் இதில் –

பூணாது அனலும் தறு கண் வேழம்  மறுக வளை மறுப்பைப்
பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்
பாணா  வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே-6-10-3-

பூணாது அனலும் தறு கண் வேழம்  மறுக வளை மறுப்பைப் பேணான் வாங்கி –
தறியோடே சேரக் கடவது அன்றிக்கே
சேர்க்க நினைத்தார் பக்கலிலே நெருப்பை உமிழும்படியாய்
ஜாதி பிரயிக்தமான வட்டணித்த கண்ணை உடைத்தாய் இருக்கிற
குவலயா பீடமானது கலங்கும்படியாக
அதனுடைய வளைத்த குவடுகளை
பெரிய பலத்தை உடைத்த தொரு பதார்த்தம் என்று பாராதே அநாதரித்து
வைத்ததை வாங்குவாரைப் போலே பறித்தான்   –
(கோட்டுக் கால் காட்டில்- நப்பின்னைக்காக- கொம்பு பறித்தான் )

யமுதம் கொண்ட பெருமான்
அதுக்கு மேலே கடலைக் கடைந்து
அம்ருதத்தை வாங்கி
அதைப் புஜிப்பாருக்கு வரக் கடவ ப்ரீதி தனக்கு உண்டாகும் படி இருந்தான்
அதுக்கடி என் என்னில் சர்வேஸ்வரன் ஆகையாலே  –

திரு மார்வன்-
பஸ்யதாம் சர்வ தேவா நாம் -என்கிறபடியே
பிராட்டியை திரு மார்விலே உடையவனாய் இருக்கிறவன் –
(பெண்ணுக்கு பெண் கோஷ்ட்டியில் வெட்கப்பட வேண்டாமே
அமுத்தினில் வரும் பெண் அமுது கொண்டானே )

பாணா  வண்டு முரலும் கூந்தல்-
சிஷா பலத்தாலே மது பாநமத்தமாய்
பாடும் போது பண்ணிலே ஆளத்தி வையா நின்றுள்ள
வண்டுகளை உடைத்தான மயிர் முடியை உடைய –

ஆய்ச்சி தயிர் வெண்ணெய் நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே  –
யசோதை பிராட்டி உண்ட தயிரையும் வெண்ணெயும்
களவு கண்டு அமுது செய்யப் புக்கால்
அவள் கண்டு பிடித்து  கட்டுவது அடிப்பதாக நிற்கும் இறே-
அப்போது வெண்ணெயைக் களவு கண்டோம் என்றால்
வருவதோர் எளிவரவு உண்டோ -என்று இருக்கும் ஆய்த்து –
(அவதார பிரயோஜனம் நிறைவேறியது என்று பெருமிதம் படுவான்)

———————————————

கீழ்ச் சொன்ன
ஆஸ்ரித சுலபன்
விரோதி நிரசனம்
வேறே முகத்தால் இங்கு

கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள்
எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான் இலங்கைக் கோன்
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை  விபீடணற்கு
நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே —6-10-4-

கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள் எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான்-
அரணாகப் போரும்படியான மதிளை உடைத்தான
திருக் கச்சியை ஆசைப் பட்டு
திருப் பாடகத்துள்
சர்வ லோகமும் வந்து ஆஸ்ரயிக்கும் படி
இருக்கிற சர்வேஸ்வரன் –

இலங்கைக் கோன் வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை  –
இவ் ஊருக்கு நான் நியாமகன் அல்லேனோ -என்ற
துர்மாநத்தை உடைய ராவணன் உடைய வல்லாண்மை உடைய
சரீரத்தை வில்லாலே வேண்டாம் என்ற
என்னாயன்-

விபீடணற்கு  நல்லான் -உடைய நாமம் சொல்லில்-
தமையன் பக்கல் த்வேஷம் மிக்கு இருக்குமா போலே யாய்த்து
இவன் பக்கல் ராகம் மிக்கு இருக்கும் படி –
முதலிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் பரிவை
இவன் ஒருவன் பக்கலிலும் பண்ணினவன் உடைய நாமம் சொல்லில் –
(ராமனுக்கும் நாமம் நாராயணமே )

நமோ நாராயணமே –
வாத்சல்யத்துக்கும் வாசகம் இறே –
(அன்று அதனை ஈன்று உகந்த ஆ )

—————————————–

முதல் பாட்டில் அருளிச் செய்த
சாமர்த்தியம்
ஸுலப்யம்
விரோதி நிரசனத்வம்
வேறே முகத்தால் இதில் –

குடையா வரையால் நிரை முன் காத்த  பெருமான் மருவாத
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை
அடையா வரக்கர் வீயப் பொருது மேவி  வெங்கூற்றம்
நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே–6-10-5-

கோவல்-ஆயன் மாயன் -கண்ணன் -பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரங்களில் ஓன்று
ஊராகத் தொட்டவனும் உலகாகத் தொட்டவனும் இவனே –

குடையா வரையால் நிரை முன் காத்த  –
வரையைக் கொண்டு நிரையைக் காக்கிறான் –
மலை எடுத்தானாய்-சுமையாய் இருக்கை அன்றிக்கே
வர்ஷத்துக்கு ஒரு குடை எடுப்பாரோ பாதி யாய்த்து –

பெருமான் –
பசுக்களையும் இடையரையும் நோக்கி
அவர்களுக்கு நிர்வாஹகனாய் நின்ற நிலை –

மருவாத விடை தான் ஏழும் வென்றான் –
அஸூ ராவேசத்தாலே ஒன்றோடு ஓன்று பொருந்தாத
மிருத்யு சத்ருசமான
ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்தான் –

கோவல் நின்றான் –
அது ஒரு கால விசேஷத்திலே யாய்
பிற்பட்டோம் என்ன வேண்டாத படி
திருக் கோவல் ஊரிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –

தென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது-
இலங்கையில் உள்ள ராஷசர்
ஒரு வழியாலும் உன்னோடு பொருந்தோம்-என்ன
பின்னை
அவர்களை முடியும்படி பொருதான்  ஆய்த்து  –

மேவி  வெங்கூற்றம் -நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே –
பண்டு மிருத்யு ராஷசரைக் கிட்ட அஞ்சி யாய்த்து இருப்பது –
(கால தேவதை – மிருத்யு தேவதை -தர்ம தேவதை மூன்றும் இவனே )
இப்போது பெருமாள் தோளை அண்டை கொண்டு
அத்தாலே பொருந்தி
புஜியா நிற்கும் ஆய்த்து –

நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே –
இதுவே ஸ்வ பாவமாம் படி பண்ணினவன் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –

——————————————————————

முதல் பாட்டில் அருளிச் செய்த
விரோதி நிரசனம்
ச பிரகாரமாக விவரித்து இதில் அருளிச் செய்கிறார் –

கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே —6-10-6-

முசுவும்-கோலாங்கூலம் -நீண்ட வால்களைக் கொண்ட குரங்கு வகை –

கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி யம்மான்-
இந்த்ராதி தேவதைகள் முதுகிட்டு போமது ஒழிய
எதிர் நிற்க மாட்டாத படி பண்ணும் மிடுக்கை உடையனான
ராவணன் உடைய துர்மாநத்தை போக்கும் இடத்தில் –
இடக்கை வலக்கை வாசி அறியாதே
என்றும் காட்டிலே வர்த்திக்குமது ஒழிய
பூசல் கண்டு அறியாத –
எண்கும் -கரடியும்
குரங்கையும் முசுவையும் சேனையாகக் கொண்டு
திக்பாலாதிகளை அழியச் செய்த மிடுக்கை உடைய
ராவணன் உடைய துர்மாநத்தைப் போக்கின
சர்வாதிகன் –

எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய –
எனக்கு சர்வ வித போக்யமுமான

திருமால் -திரு நாமம்
ஸ்ரீ யபதி உடைய திரு நாமத்தை –
மிதுனமான வேஷமே காணும் இவர்க்கு  ரசிப்பது –
ரமா மாணா வநே த்ரய -என்னுமா போலே –
(தண்டகாரண்யத்தில் –சித்ரகூடம் அடைந்து -அழகான இடம் பெருமாளும் பிராட்டியும் –
சேர்ந்து இருப்பதை கண்டு இளைய பெருமாள் மகிழ்ந்து போல் இங்கும் )

நானும் சொன்னேன் நமரும் உரைமின் –
இதர விஷயங்களின் உடைய பேரைச் சொல்லிப் போந்த நானும் அன்றோ சொன்னேன்  –
இனி இது கண்டால் எல்லார்க்கும் சொல்லத் தட்டில்லை இறே
என்னோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் இத்தையே சொல்லிப்  போருங்கோள் –

நமோ நாராயணமே –
நமக்கு வகுத்ததையே சொல்லிப் போருங்கோள்-

நாராயணமே
ஆழ்வார்கள் கோஷ்டியில் இது ஒழிய வேறு ஒரு திரு நாமம் உண்டாக நினைத்து இருப்பார் இல்லை –
உண்டாகில் ஆயிரம் -என்று திரளாக சொல்லும் இத்தனை
பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையான் –
தேவோ நாம சஹஸ்ரவான் -(பீஷ்மர் ராஜசூய யாகத்தில் சொன்ன)
பல பசு உடையவன் -என்னுமா போலே
ஸ்ருதி வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லும் அன்று ஆய்த்து
இவர்கள் வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லுவது –

அந்தர்யாமி ப்ராஹ்மணத்தோடு
காரண வாக்யங்களோடு–
இது ஒழிந்தவை ஞான சக்த்யாதிகளைப் போலே –
இது ஞான ஆனந்த அமலத் வாதிகளைப் போலே
ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும் –
(சர்வ பூதாத் அந்தராத்மா விபு நாராயணா -ஸூ பால
ஏகோவை நாராயணா ஆஸீத் ப பிரம்மா நே ஈசாத்
நாராயணனே -பர ப்ரஹ்மம் ஜோதி தத்வம் )

————————————————

முதல் பாட்டில் அருளிச் செய்த
ஆபத் ரக்ஷண சாமர்த்தியம்
மீண்டும் அனுசந்தித்து
காரணத்வத்தையும் அருளிச் செய்கிறார் இதில் –

நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும்
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார்
குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7-

நன்று காண்மின்-இனியவன் -இனிய நாமம் -இனிதாக நானும் சொன்னேன் -உங்களுக்கும் இனிக்குமே –

நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும் ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார் –
பூமிக்கு ஆணி அடித்தால் போலே பேராதே நிற்கிற
குல பர்வதங்களையும்
ஈஸ்வர சங்கல்ப்பத்து அளவும் செல்ல கரையை அதிக்ரமியாதே கிடந்த இடத்திலே கிடந்த கடலும் –
பராபர விபாகம் பண்ணுகைக்கு ஈடாய் இருக்கிற திக்குகளும் -( பராபர -மேற்கும் கிழக்கும் )
பிராணிகளுக்கு சஞ்சார யோக்யதை உடைத்தாம்படி பரப்பை உடைத்தான பூமியும்
இப்படிப் பட்ட பதார்த்தங்கள் ஒன்றும் குறைய ஒண்ணாது என்று
தன் சங்கல்ப்பத்தாலே இவற்றை இன்டாக்கிக் கொடு நிற்கிற
சர்வேஸ்வரன் –

குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம் –
வர்ஷத்தாலே நோவு படுகிற
பசுக்களுக்கும் இடையருக்கும் ஒரு நோவு வாராதபடி
மலையை குடையாக கொண்டு நோக்கின
ஸ்வாமி உடைய திரு நாமம் –

நன்று காண்மின் –
காரண பூதனானவன் பேர் சொல்லுகை ப்ராப்தம் இறே
பிராப்தம் செய்யப் பார்த்ததிலி கோள் ஆகில்
இனியது தான் வேணுமே –

தொண்டீர் சொன்மின் –
பகவத் விஷயத்தில் கைங்கர்ய ருசி உடையார் எல்லாருக்கும்
சொன்னேன்
இது செய்யாதார் கேளாதாராம் இத்தனை –

நமோ நாராயணமே —
சஹஸ்ர அஷரீ மாலா
மந்த்ரமாய் இருக்கிறதும் அல்ல –
(அஷ்டாக்ஷரம் கூட இல்லையே )

————————————————-

கீழ்ப் பாட்டில் ஆபத் ரக்ஷண விவரணமே இது

கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன்
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8-

அல்லே-காள ராத்ரி –
அஞ்ச அஞ்சா முன்-அச்சம் கார்யகரமாகும் முன்னே –

கடுங்கால் மாரி கல்லே பொழிய-
வெட்டிய காற்றை உடைத்தான மாரி யானது கல்லை வர்ஷிக்க –

அல்லே எமக்கு என்று படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன் –
நமக்கு இது பிரளயத்தில் செல்லுகிற ராத்திரி யாகாதே
என்று அவர்கள் நெஞ்சில் பட்ட அளவிலே
நாங்கள் எங்கள் கார்யத்துக்கு கடவோம் அல்லோம் –
நீ எங்களுக்கு ரஷகனாக வேணும் -என்று இடையர் அஞ்ச
அந்த அச்சத்தின் உடைய கார்யம் பலிப்பதற்கு முன்னே –

நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச்
சிரமத்தால்  நடுங்கா வண்ணம் காத்தான்-
நெடிய காலை உடைத்தான மலையைத் தரித்து
பர்யந்த பர்வங்களை உடைத்தான மலையைத் தரித்து –
பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை
சிரமத்தாலே நோவு படாத படியாக  ரஷித்தான் –

தான் அறிந்த ஆபத்தும்
விலக்காமையும்
இறே வேண்டுவது -ரஷிக்கைக்கு
ஸ்வ பாவிக சம்பந்தத்தில் கண் அழிவு இல்லையே –
(நாரங்களுக்கு அயனம் ஒழிக்க ஒழியாத சம்பந்தம் உண்டே )

நாமம் நமோ நாராயணமே –

——————————————-

இதில் ஸ்ரீ யபதித்தவம் ஸ்பஷ்டம் –

பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா  மகள் மலர் மா
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய
எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம்
நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே –6-10-9-

பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா  மகள் மலர் மாமங்கை-
பல காலும் இத்தை ஆதரியா நின்றீர் –
இதுக்கு அர்த்தம் என் என்ன –
இன்னது என்கிறார் –
கிளர்ந்த திரையை உடைத்தாய் இருக்கிற கடலாலே
சூழப் பட்ட மேகலையை
இடையளாய்-( உடையவளாய் -அரை நாண் போல் -) இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டி –
தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியார் –

பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய –
ப்ரஹ்மா ருத்ரன் இந்த்ரன் தொடக்கமான
தேவர்களுக்கு எல்லாம்
நியாமகனாய்  உள்ளான் –
(அகில ஜகத் ஸ்வாமிந் )

எங்கள் உடைய அடிகள் –
அஸ்மின் ஸ்வாமின் என்னுமா போலே –

இமையோர் இத்யாதி
கீழே ப்ரஹ்மாதிகளைச் சொல்லி  நிற்கையாலே
இமையோர் என்கிற இடம் நித்ய ஸூரிகளாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதி உடைய  திரு நாமம் –

ஆக உபய விபூதி உக்தன் -என்றபடி
உபய விபூதி யோகத்தை சொல்லுகை இறே-இதுக்கு-( நாராயண நாமத்துக்கு ) அர்த்தம்

ஆக
குறைவற்றாரோடு
குறை வற்றாராக பிரமித்து இருப்பரோடு
குறைவாளரோடு
வாசி அற
எல்லாருக்கும் ஒக்க நிர்வாஹகனாய் இருக்கை  –

நங்கள் வினைகள்
நீங்கள் அநாதி காலம் புத்தி பூர்வகமாக பண்ணின பாபம் தீரும்படி சொல்லப் பாரும் கோள்-

(அஷ்ட ஸஹஸ்ர கிராமம் )எண்ணாயிரத்து திரு வாய்க் குலத்து ஆழ்வான் -நஞ்சீயரை
பிரபத்தி யாகிறது புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கும்
பரிஹாரம் ஆகவற்றோ –
பிராமாதிகத்துக்கேயோ -என்ன
அதன் உடைய ப்ரபாவத்தைப் பார்த்தால்
புத்தி பூர்வகத்துக்கும் பரிஹாரமாகவற்று
ஜ்ஞானம் நடையாடும் இடத்தில் அனுதாபம் இன்றிக்கே இராது இறே
ஆகையால் இவன் பக்கல் ப்ராமாதிகம் அல்லாது கூடாது
பூர்வாகத்தைப் போக்குகிற இது
புத்தி பூர்வகத்துக்கு பரிஹாரம் ஆகாது என்ன ஒண்ணாதே
அதில் -பூர்வாகத்தில்- புத்தி பூர்வகம் ஒழிய இல்லாமையாலே –

நமோ நாராயணமே –
வினையைப் பண்ணுவதானாலும் சொல்ல வடுப்பது இது –

(வினைகள் சாமான்யம் -சப்தமாக இருந்தாலும் –
அநாதி காலம் புத்தி பூர்வகம் போக்குவதை சொன்னது சம்வாத ரூபமாக
ஞானம் வரும் முன் எல்லாம் தெரிந்தே
ஞானம் வந்த பின்பு தெரியாமல் கவனக்குறைவால்
அப்படி தெரிந்து பண்ணினாள் அது பூர்வாகம்
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -)

——————————————

வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தைக்
காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10-

வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை
பொய்கைகளையும்
அளவுபட்ட நீர் நிலைகளையும்
உடைத்தாய் இருந்துள்ள திரு நறையூரிலே
வந்து நிற்கிற சர்வாதிகனான சர்வேஸ்வரனை –

நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தைக் —
நம்பி உடைய திரு நாமத்தை
நாவாலே பரவி
நெஞ்சாலே அனுசந்தித்து –

காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை –
முன்பு எனக்கு ஏற்றமாக நினைத்து இருப்பது இது -( பண்டு காமனானவாறும் )
இப்போது எனக்கு பிறந்த செவ்வியும் கண்டி கோளே-
இப்போது மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும்
இதுவும் விஷயமான படி கண்டி கோளே –
(நாராயண நாமத்தால் வந்த மஹிமை ப்ரத்யக்ஷம் )

மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –
இதிலே பொருந்தி
இத்தை சொல்ல வல்லவர்கள் உடைய
பாபம் இவர்கள் பக்கலில் நில்லாது –

இவர்களை விட்டுப் போய் பின்னையும் தான்
நிற்கை அன்றிக்கே
நசிக்கும் –
த்விஷந்த பாப க்ருத்யாம் -என்கைக்கு முதல் இல்லை –

(புத்ரருக்கு தாயபதி சொத்து -ஸூஹ்ருத் புண்ணியம் -த்வேஷித்தார்க்கு பாபம் போகும் வசனம் -)

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கிடந்த பவ்வன் நாமமுடன் நம்பி நறையூரான்
இடர் கடிவான் விண் மண் இரண்டும் கடவன் ஈசன்
மாதவன் மாயன் காரணன் சீலன் என் நீலன்
வேத சாரம் சொல் கறவை -60-

கிடந்த பவ்வன்-ஷீராப்தி நாதன்
நாமமுடன் நம்பி நறையூரான் -திருமந்த்ரார்த்தத்தை பொருளுடன் அடைவே விவரிக்கிறார்
இடர் கடிவான் -விரோதி நிரசன சீலன்
விண் மண் இரண்டும் கடவன் -உபய விபூதி நாதன் -ப்ராப்தியை யுடையவன்
ஈசன் –நியமிப்பதை ஸ்வ பாவமாக யுடையவன்
மாதவன்–திருமால் –
மாயன்–ஆச்சர்ய சேஷிடிதங்களை யுடையவன் –
காரணன்–காரணம்ஸ்து த்யேயா –
சீலன்–ஸுசீல்யன்
என் நீலன் -என்று நாராயண நாமார்த்தை அருளிச் செய்யும் கலியன்
வேத சாரம்–ஆரண சாரம்
சொல் கறவை -ஆழ்வார் பசு -ஆச்சார்யர் ஸ்தானம் –

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-6-9—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

(மீண்டும் ஒரு முறை சரணாகதி இதில்
1-நைமிசாரண்யம் முதல் பத்தில் நரக அனுபவ பயத்தால்
2-அடுத்து திருவேங்கடம் -ஆபாச பந்துக்களை விட்டு
3-திருக்காவளம் பாடி –
4-திரு வெள்ளக்குளம் -இடரைக் களையாய்
5-திருவரங்கம் -ஏழை ஏதலன்-
6-திரு விண்ணகர் –6-2-
இப்பொழுது ஏழாவது சரணாகதி
பாசுரம் தோறும் திருவடி பிரஸ்தாபம் – உலகம் உண்ட பெரு வாயா போல் இங்கும்
திருவாளன் இணை அடி அடை நெஞ்சே –சரணவ் சரணம் -உபாயமாக திருவடிகளை )

பெடையடர்த்த -பிரவேசம் –

நான் சென்று நாடி நறையூரிலே கண்டேனே -என்று
ஆஸ்ரயணீய வஸ்துவை ஒரு தேச விசேஷத்தில் போய் காண்கை அன்றிக்கே
சம்சார பூமியிலே
திரு நறையூரிலே
காணப் பெருகையால் வந்த அலாப்ய லாபத்தால்
ஹ்ருஷ்டர் ஆனார் –

அவனைக் காணப் பெற்ற பின்பு
அவன் ஸ்வரூபத்துக்கும்
நம் ஸ்வரூபத்துக்கும்
அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை  பண்ணப் பார் கிடாய் நெஞ்சே
என்று திரு உள்ளத்தைப் பார்த்து அருளிச் செய்கிறார் –
(பிரபத்தியை இங்கு வ்ருத்தி விசேஷம் என்கிறார் -பொதுவாக கைங்கர்யத்தைச் சொல்லுவோம் )

திரு நறையூரிலே திர்யக்குகளும் அகப்பட
பேடை பிரதானமாய்த்து இருப்பது –
ஆகையால் அங்கு நிற்கிற நம்பிக்கும் பிராட்டி பிரதாந்யம் உண்டாகக் கடவதே
ஆகையால் ஆஸ்ரயணீயதை குறைவற்ற தேசம் ஆயத்து –
ஷணம் தோறும் ஸூகுமாரராய் இருக்குமவர்கள் முகத்திலே நீர் ஏறிட்டுக் கொள்ளுமா போலே
பிராப்தி அளவும் பிரபத்தி பண்ணா நிற்பார் ஆயத்து

சக்ரு தேவ வுக்கு –
சஹ சைவ ( சடக்கென )-என்று ஆழ்வான்
நிர்வஹிப்பதோர் பொருள் உண்டு இறே-

ஒரு ஜென்மமாக பிரபத்தி பண்ணுமது சாலவும் அ சக்ருத்தாய் இருந்ததோ
பெற்ற பேற்றைப் பார்த்தால் -என்று அருளிச் செய்தார் எம்பார் –

(அந்யத் பூரணாத் –கும்ப -அந்யத் பாதார -அந்யத் குசல ப்ரஸ்னம் போதுமே
நூறு தடா வெண்ணெய் அக்கார அடிசில் வேண்டுமோ என்ன
பெறுகிற பேற்றுக்கு -வெள்ளி மலை ஒத்த வெண்ணெய் உண்டவனுக்கு
அந்யத் பூர்ணத்துக்கும் அதமம் தானே இவையும் )

(சரணம் முதல் தடவை -அப்புறம் இனிமையால் விடாமல் சொல்கிறோம் -பட்டர் நிர்வாகம்
ஆர்த்தி உடன் சரணாகதி கீழே -பரம போக்யமாக இருப்பதால் இப்பொழுது -)

பகவல் லாபம் ஒழிய புறம்பு தரிக்க வல்லர் அல்லர்  –
இது ஒழிய வேறு ஒரு உபாயம் உண்டு என்று இருக்குமவர் அல்லர் –
வேறு ஒரு உபாயம் உண்டு என்று இருக்கும்படி அன்று இறே
இதில் உண்டான நிலை –

(ஸக்ருத் ஏவ -ஒரு முறை ஒன்றே -இது ஒன்றே உபாயம் வேறே இல்லை -என்ற அர்த்தத்தில் இது
ந சாஸ்திரம் நைவ க்ரமம் -பக்தி பரவசராய் இருப்பதால் )

(அநு ரூபமான வ்ருத்தி விஷயம் -அநந்ய போக்யத்வமான -நாராயணாயா -அதன் அநு குணமாக பிரபத்தி

ஸ்த்ரீ பிராயர் முக்யத்வம்
ஏழை ஏதலன் பிராப்திக்கு பூர்ண பிரபத்தி
அவன் ஸ்வ தந்த்ரன்
பாசுரம் பெற
இவருக்கு உகந்து அருளினை நிலங்களில் பிராவண்யத்தாலும் –
இங்கே வைத்துக் கொண்டு அனுபவிக்கத் தேட
பிரபத்திக்கு குறைவற்ற தேசமாக இங்கு பிராட்டிக்கு முக்யத்வமாக இருக்க
மீளவும் சரணம்
பரம போக்யமாக இருப்பதால் விட மாட்டாமல் கண்ட போது எல்லாம் செய்கிறார் என்றபடி )

(ஆர்த்தி அதிசயத்தால் கீழே பல முறை
இப்பொழுது போக்யத்தால் விடமாட்டாமல் செய்கிறார்
விளம்ப நிஷேதம் -காலம் கடத்தாமல் -உடனே செய்ய வேண்டும் -ஆவ்ருத்தி நிஷேதம் இல்லை கூரத்தாழ்வான்
ஆவ்ருத்தி நிஷேத பரமானாலும் பக்திக்குப் போல் அநேக ஜென்ம ஆவ்ருத்தி வேண்டாம் இதுக்கு -எம்பார்
இப்படி இரண்டு வித பரிகாரம்-
அசக்ருத்தாயாக இருக்காதே -ஒரு முறை பண்ணினத்துக்கே சமம் –
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு -பக்தி ஆரம்ப விரோதி தொலைந்து பின்பு பக்தி செய்து உபாசகர்
அத்துடன் ஒப்பிட்டால் இது சுலபம்
இங்கே கண்ட மட்டில் -நினைத்தபடி அனுபவிக்க வேறே ஒன்றை அறியாமல் செய்கிறார் என்றபடி -)

———————————————————————–

பெடை யடர்த்த மட வன்னம் பிரியாது மலர்க் கமலம்
மட லெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர்
முடை யடர்த்த சிர மேந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர் கெடுத்த திருவாளன் இணை யடியே  யடை நெஞ்சே —6-9-1-

(திருவாளன் இணை யடியே யடை நெஞ்சே-ஸ்ரீ மன் நாராயணன் சரணவ் சரணம் ப்ரபத்யே –
பூர்வாக்யார்த்தம் இதில் -பிரியாது-நித்ய யோகம் மதுப்பின் அர்த்தம் )

பெடை யடர்த்த மட வன்னம் –
பூவிலே சஞ்சரிக்கையாலே பேடைக்கு சேவலின் பக்கல்
எப்போதும் ஒக்க அதிசங்கை வர்த்தியா நிற்கும் ஆய்த்து –
பேடையாலே அடர்க்கப் பட்ட மட அன்னமானது –
மட வன்னம் போய் அத்தலை இத்தலை யானபடி –
பல் காட்டுவது காலைப்  பிடிப்பது இரப்பதாகா நிற்கும் –

பிரியாது –
ஒரு ஷணம் இத்தை விட்டு புறம்பே போகாதே
இதுக்கு இனியது கொடு வந்து இட  வேணும் -என்று
மது பான அர்த்தமாகவும் போகாதே –

மலர்க் கமலம் மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர் –
வேறு ஒரு பூவில் போய் அன்றிக்கே
அந்த பூத் தன்னிலே இருந்து
மது நிரம்பின பூவில் நின்றும்
மடலை வாங்கித் தான் சேவிப்பது
பேடையை சேவிப்பதாகா நிற்கும் –
(மடல் -தாமரை இதழ்
சேவிப்பது சேவகம் பண்ணுவது குடிப்பது )

இது வாய்த்து இவ் ஊரில் வயல் இருக்கும்படி –
உள்ளு நிற்கிறவன் எத்தனையேனும் அபிமானிகளுக்கும் புகலாம்படி இருக்குமவன் –
(புருஷர்கள் அவர்கள் வசப்பட்டு இருப்பர் இங்கே -புருஷோத்தமனும் அப்படியே –
வாத்சல்யத்துடன் இருப்பானே )

முடை யடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன்-
லோக குருவுமாய் தனக்கு பிதாவாயும் இருந்த வனுடைய தலையை அறுத்து
அத்தாலே பாதகியாய் (பாதகம் -மிக்க பாவம் )
முடை மிக்கு இருந்துள்ள -துர்க் கந்தம் மிக்கு இருந்துள்ள –
ப்ரஹ்ம சிரஸை தரித்து
கூறு செய்த ஊரிலே கையும் கைத் தளையுமாய் திரியும் கூறு செய்வானைப் போலே
ஈஸ்வர அபிமானியாய்
தான் செலுத்திப் போந்த பூமிப் பரப்பு எங்கும்
பிஷை புக்குத் திரிந்தான் ஆயத்து –

இடர் கெடுத்த திருவாளன் –
அருமந்தான் ஒரு மதிப்பன் இப்படி எளிவரவு படுவதே -என்று திரு உள்ளம் புண்பட்டு
அவனுடைய சாபத்தை போக்கினான் ஆயத்து –
அதுக்கடி என் என்னில்

திருவாளன் –
தத்ர நாராயண ஸ்ரீ மான் மயா பிஷான் -என்கிறபடியே
ஸ்ரீயபதி யாகையாலே
(ருத்ரனே பார்வதிக்கு சொன்னது )

இணை யடியே  யடை நெஞ்சே  —
அவனுடைய -இணை யடியே  யடை நெஞ்சே  —
அபிமானிகளும் ஆபன்னர் ஆன அன்று
பற்றும் திருவடிகளை
நெஞ்சே நீ பற்றப் பார் –

(விடாமல் பதிகம் தோறும் நெஞ்சுக்கு உபதேசம்
உறவாடி பேசி தட்டி நம் பக்கம் கூட்டி வர வேண்டுமே )

————————————————————-

கீழே சிவன் ஆபத்தைப் போக்கி அருள் செய்த படி
வாத்சல்யம் உள்ளவனைப் பற்ற அருளிச் செய்து
அப்படி குணாதிகனும் கூட
குற்றமே செய்து கொண்டே இருக்கக் கூடாதே –
ராவணன்- ந நமேயம்-என்று இருந்தவனை -வணங்கலில் அரக்கனாக -இருக்கக் கூடாதே
அடை நெஞ்சே -வணக்கத்துடன் பற்று என்கிறார் –

கழி யாரும் கன சங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி
வழி யார முத்தீன்று  வளம் கொடுக்கும் திரு நறையூர்
பழி யாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற
அழலாரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே–6-9-2-

கழியாரும் கன சங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி –
சமுத்ரத்தில் நின்றும்
சங்குகள் ஆனவை கழி நிறையும் படியாக
வந்து புகுரும் ஆய்த்து-உப்பு நீரில் நின்றும் ரசித்த ஜலத்துக்காக –
(திரு சங்கணித்துறை -கடலில் இருந்து தாமிர பரணி வருமே அதே போல் )

கன சங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி –
கர்ப்ப கேதத்தாலே ஐப்பசி திரு நாளுக்கு
பிராணிகள் சர்வதோ திக்கமாக வந்து புகுருமா போலே
எங்கும் ஒக்கக் கலந்து
ஒழுகு மாறாதே வந்து புகுந்து –

வழியார முத்தீன்று  வளம் கொடுக்கும் திரு நறையூர் –
ஊர் ஏற்றின தார்மிகர் அவகாசம் உண்டாகும் படி
குறும் தெருவும் நெடும் தெருவும் உண்டாக்கினார்கள்
இவை சஞ்சார யோக்யதை இல்லாத படி
வழிகளிலே முத்தை மலையாக சுரவா  நிற்கும் ஆய்த்து –

பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற அழலாரும் சரம் துரந்தான்
ஜனனி என்று வாசி பார்க்க மாட்டாமையாலே
மிக்க பழியைத் தரித்து இருப்பானாய்
முன் கை மிடுக்காலே தோன்றின படி நடந்து திரிகிற
ராவணன் உடைய
தலைகள் சிதறும்படியாக –
எதிரிகளை அம்பாய் நலிகை அன்றிக்கே
நெருப்பாக சுடுகிற் அம்புகளை நடத்தினவன் உடைய –

அடி இணையே அடை நெஞ்சே  –

————————————————–

சர்வாத்மா ந நமேயம் என்பாரை அழித்தது கீழ்
அனுகூலர் விஷயத்தில் கர ஸ்பர்சம் பட்ட த்ரவ்யம் அல்லது செல்லாமை உடையவன்
இவன் என்கிறார்

சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாயக் கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலைத் திரு நறையூர்
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான் தன் அடி இணையே அடை நெஞ்சே –6-9-3-

சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாயக் கதலிகளின் திளை கொண்ட பழம் கெழுமி
சுளை  மிக்கு இருந்துள்ள பலாப் பழம் ஆனது தேன் ஒழுக –
வாழைகளில் பருத்த பழங்கள் ஆனவை நெருங்கி

திகழ் சோலைத் திரு நறையூர் –
விளங்கா நின்றுள்ள
சோலையாலே சூழப் பட்ட திரு நறையூர் –

வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல்
நம்பி மூத்த பிரானுக்கு பின் பிறந்தவன் –

மூவுலகோடு அளை வெண்ணெய் உண்டான் தன் அடி இணையே அடை நெஞ்சே –
பூமிப் பரப்போடு கூட
தயிரையும் வெண்ணெயும் அமுது செய்தவனுடைய
திருவடிகளை அடை –

—————————————————————

ஆஸ்ரித கர ஸ்பர்சம் அல்லது செல்லாமை உடையவனாய் இருந்தாலும்
அந்த ஆஸ்ரிதரே விரோதித்தான் ஆகில்
தான் மலை எடுத்தாகிலும் ரக்ஷிக்கும் ஸ்வ பாவன் –

துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல்
நின்றார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர்
மன்றாரக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த
குன்றாரும் திரள் தோளன் குரை கழலே அடை நெஞ்சே—6-9-4-

துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல் –
நெருங்கி  ஒழுங்காய் இருந்துள்ள துகில்களாலே சமைந்த
கொடிகள் ஆனவை
மாளிகைகள் எங்கும் பரம்பி நெருங்கி –

நின்றார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர் –
ஆகாசம் தோற்றாத படி
மறைக்கிற நிரவதிக சம்பத்தை உடைய
திரு நறையூர் –

மன்றாரக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த
மன்றில் பரப்படைய
பாழ் தீரும்படி
குடக் கூத்தாடி-
இந்த்ரன் வர்ஷிப்பிக்க  மலையை எடுத்து
வர்ஷத்தை பரிக்ரஹித்த

குன்றாரும் திரள் தோளன் குரை கழலே அடை நெஞ்சே –
மலையாலே மலையை எடுத்தால் போலே
திரண்ட தோளை உடையவன் –

——————————————————

ஊருக்காக வந்த வர்ஷத்தால் ரஷித்தது கீழே
லோகத்துக்காக வந்த பிரளயம் ரக்ஷித்து அருளியது இதில் –

அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னு மணி முத்தும்
மிகக் கொணர்ந்து திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
பகல் கரந்த சுடராழிப் படையான்  இவ் உலகு எழும்
புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே  அடை நெஞ்சே—6-9-5-

அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னு மணி முத்தும் மிகக் கொணர்ந்து திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர் –
அகில் குறடும்
சந்தனமும்
அம் பொன்னும்
அழகிய முத்தையும்
போக்தாக்கள் அளவில்லாத படி கனக்கக் கொடு வந்து தள்ளா நின்றுள்ள
ஆச்சர்யமான பொன்னியை உடைய திரு நறையூர் –

பகல் கரந்த சுடராழிப் படையான்  –
நிரவதிக தேஜஸ்ஸாலே தேஜோ பதார்த்தத்தை மறைத்தான் ஆய்த்து
ஆதித்யன் உடைய தேஜஸ்ஸூ கண்ணாலே முகக்கலாம்
திரு ஆழி ஆழ்வான் உடைய தேஜஸ்ஸூ கண் கொண்டு முகக்க ஒண்ணாத படி
இருக்கையாலே இருண்டு காட்டிற்று ஆயிற்று –

இவ் உலகு எழும் புகக் கரந்த திரு வயிற்றன் –
லோகங்கள் ஏழையும் வயிற்றிலே வைத்து
பிரளயம் தேடி வந்தால்
இங்கு உண்டோ என்று பண்டையிலும் இளைத்துக் காட்டும்
திரு வயிற்றை உடையவன் –

பொன்னடியே  அடை நெஞ்சே  –
தன்னைப் பற்றினாரை உள்ளே இட்டு
தன்னை பிரளயத்துக்கு இலக்காக்கி
நோக்குமவன் திருவடிகளிலே அடையப் பார் –

————————————————-

கீழே நாராயண சப்தம்
இங்கு ஸ்ரீ மத் -மதுப்பின் -நித்ய யோகம்
ஆபத்சகாதவாதிகள் சொல்லும் புடையில் நாராயண சப்த அர்த்தங்கள்
இதில் ஸ்ரீ மத் அர்த்தம் -மெல்லியலைத் திரு மார்பில் மன்னத் தான் வைத்து உகந்தான்

பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கைம்மா கரிக் கோடும்
மின்னத் தண் திரை  யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில்
மன்னத் தான் வைத்து உகந்தான் மலரடியே அடை நெஞ்சே –6-9-6-

பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கைம்மா கரிக் கோடும் மின்னத்
சிம்ஹங்கள் ஆனைகள் உடன் பொருது
அதின் மஸ்தகத்தை  கிழித்து
அது உதிர்த்த முத்துக்களையும்
மலைகளில் உண்டான பொன்னையும்
சிம்ஹங்களின் உடைய உகிரையும்
ஆணைக் கொம்புகளையும்
ஆற்றுத் தலையிலே மேற்கே மின்ன

தண் திரை  யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர் –
தண் திரைகள் ஆனவை -நீர் வரவானது
கொடு போந்து தள்ளா நிற்கும் ஆய்த்து –

மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில்
மின் போலே நுண்ணிய இடையை உடையவளாய்
சௌகுமார்யத்துக்கு தானும் ஒப்பாகாதபடி
இருக்கிற பெரிய பிராட்டியாரை திரு மார்பில் –
(வஞ்சுள வல்லித் தாயார் )

மன்னத் தான் வைத்து உகந்தான் மலரடியே அடை நெஞ்சே –
மன்ன –
நாம் சென்று திருவடிகளைக் கிட்டினால்
அவன் நம்முடைய தோஷங்களை கணக்கிடுவான் ஆகில்
ந கச்சின் ந அபராத்யதி -என்று அத்தைப் பொறுப்பிக்கும் பிராட்டியை உகந்து
எப்போதும் திரு மார்பில் வைத்துக் கொண்டு இருக்கிறவன் உடைய
ஸூகுமாரமான திருவடிகளை அடை
மதுப்பில் அர்த்தத்தை சொல்லுகிறது –

—————————————————–

திருவடி அர்த்தம் இதில்
கீழே ஸ்ரீ மத் அர்த்தம்
சரணவ் சப்தம் உப லக்ஷணம் திரு மேனி
இவற்றால் நித்யர் அடியார் உடன் வாசி இல்லாமல் உஜ்ஜீவிப்பவன்
இதனால்-உபய விபூதி நாதத்வத்துக்கு -வெற்றி மாலை சூடி இருப்பவன்

சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங்கமலத் திடையிடையில்
பார் தழைத்துக் கரும்போங்கிப் பயன் விளைக்கும்  திரு  நறையூர்
கார் தழைத்த திரு வுருவன் கண்ண பிரான் விண்ணவர் கோன்
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே  –6-9-7

சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் –
அழகு மிக்க கதிரை உடைய செந்நெல் –
வைத்த கண் மாறாதே கண்டு கொண்டே இருக்க வேண்டும் படியான
தர்ச நீயமான செந்நெல் –

செங்கமலத் திடையிடையில் -பார் தழைத்துக் கரும்போங்கிப் பயன் விளைக்கும்  திரு  நறையூர் –
முதல் தன்னிலே கரும்பு நிலத்திலே யாய்த்து செந்நெல்லை நடுவது –
அதுக்கு களையாக நடுவிலே தாமரை எழும் –
முன்பு வெட்டிப் பொகட்ட-கருப்பங்கட்டை – கரும்பு பழைய வாசனை கொண்டு எழும்
அது பலிக்க வேணும் என்னும் அபிசந்தி பண்ணி
கிருஷி பண்ணின செந்நெல்லுக்கு முன்பே அத்தைக் கொடுக்கும் –

கார் தழைத்த திரு வுருவன் கண்ண பிரான் விண்ணவர் கோன்-
கழுத்தே கட்டளையாக நீரைப் பருகி ஆகாச அவகாசம் இடம் அடையும் படியான வடிவை உடைத்தாய்
கொடு வந்து தோற்றுகிற
மேகம் போன்ற வடிவு அழகை உடைய –

கண்ண பிரான் –
உபகார சீலனான கிருஷ்ணன்

விண்ணவர் கோன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி –

தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே  –
உபய விபூதி நாயகன் என்னும் இடம் தோற்ற
வைத்த வளையத்தை உடையவன்
திருவடிகளை அடை –

——————————————-

கீழ் மாம் ஏகம் சரணம் சரணம் வ்ரஜ -அர்த்தம் அருளிச் செய்து
அதிலும் வியாவர்த்தமான போக்யத்வம் இதில் –

குலை யார்ந்த பழுக் காயும் பசும் காயும்  பாளை முத்தும்
தலை யார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலை யார்ந்த கோலஞ்சேர் மணி மாடம் மிக மன்னி
நிலை யார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே –6-9-8-

நீள் கழலே-போக்யத்தை மிக்கு இருக்கும் -உபாயமாக இல்லையே இப்பதிகம் –

குலை யார்ந்த பழுக் காயும் பசும் காயும்  பாளை முத்தும் –
குலை மிக்கு இருந்துள்ள பழுக் காயும்
பழுக்கப் போகிற காய்களும்
பாளைகளிலே நிறைந்து உள்ள  முத்துக்களும்
பிரதம அவஸ்தையும் சரம அவஸ்தையும்
ஒரு காலே கண்டு அனுபவிக்கலாம் படி இருக்கும் ஆயத்து –

தலை யார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர் –
இளம்  குலைகளும் -ஆகிய இவைகளினால்  நிறைந்து உள்ள தேசம் –

மலை யார்ந்த கோலஞ் சேர் மணி மாடம் மிக மன்னி நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே –
மலை போலே தர்ச நீயமான திரு  மணி மாடக் கோயிலின் உள்ள
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே
நிலை யார நின்றான் ஆய்த்து-

நிற்கிற  போதை அழகைக் கண்டு
இவன் இருத்தல் சாய்ந்து அருளுதல் செய்து இவ் வழகை இழக்க வரில் செய்வது என்-என்று
துணுக் துணுக் என்ன வேண்டும்படியாய் இருக்கும்  –

மலையை ஒக்க ஒக்கத்தை உடையதாய்
அழகை உடைய மணி மாடங்கள் மிக உடைய
திருநறையூரில் மன்னி நிலையார நின்றான் –

—————————————————————–

கீழே நிலையார நின்ற படியை அருளிச் செய்து
அந்த நிலையிலே ஆஸ்ரயணீயர்களான ப்ரஹ்மாதிகளும் வந்து ஆஸ்ரயிக்க
சர்வாதிகனாய் உள்ளான் இங்கே-என்கிறார்

மறையாரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறையார வான் மூடும்  நீள் செல்வத் திரு நறையூர்
பிறையாரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த
இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே —6-9-9-

மறையாரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும் நிறையார
வேதோக்தமான  மகா யஞ்ஞங்களை
அநபி சம்ஹித பலமாக அனுஷ்டியா நின்றுள்ள
பிராமணர் உடைய ஹோமத்தில் உண்டான கொழுவிய புகையானது
பரப்புள்ள இடம் எங்கும் போய் ஆகாச அவகாசத்தை மறைக்கையாலே

வான் மூடும்  நீள் செல்வத் திரு நறையூர் –
ஆகாசம் தோற்றாத படி இருக்கிற நிரவதிக சம்பத்தை உடைத்தான தேசம் –

பிறையாரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த –
சாதனா வேஷம் தோற்றும்படி சடையையும்
போக பிரதாந்யம் தோற்ற  சந்திரனையும் தரித்துக் கொண்டு இருக்கிற ருத்ரனும்
அவனுக்கு ஜனகனான சதுர் முகனும்
ஸ்தோத்ராதிகளைப் பண்ணி ஆஸ்ரயிக்க –

இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே —
லோகத்துக்கு ஆஸ்ரயணீயராய் இருப்பாருக்கும்
ஆஸ்ரயணீயனாய் இருக்கையாலே
சர்வாதிகன் –
அவன் திருவடிகளையே ஆஸ்ரயிக்கப் பார் –

———————————————————

திண் களக மதிள் புடை சூழ்  திருநறையூர் நின்றானை
வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார்
விண் களகத்து இமையவராய் வீற்று இருந்து வாழ்வாரே –6-9-10-

முதல் அடியில் -களகம்-சந்தனப்பூச்சு
இரண்டாம் அடியில் -களகம்-ஹம்சம் -கதிர் செந்நெலுக்கும்
மூன்றாம் அடியில் –பண்கள் அகம் இங்கு -ராகத்துக்கு சாரம் -சார தமம்
நான்காம் அடியில் -விண்கள் அகத்து -மேல் உள்ள லோகங்கள் ஸ்ரேஷ்டம்-பரமாகாசம் ஸ்ரீ வைகுண்டம்-
இதில் கலியன் பெயர் இல்லை –

திண் களக மதிள் புடை சூழ்  திருநறையூர் நின்றானை-
திண்ணியதாய்
சாந்திட்ட மதிள்களாலே சூழப் பட்டு இருந்துள்ள
திருநறையூரில்  நிற்கிற சர்வேஸ்வரனை –
வஸ்துவின் சீர்மைக்குத் தக்க அரண் போருமாய்த்து –

வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன் –
அழகிய தான அன்னங்களின் உடைய சஞ்சாரத்தை ஆதல்
அன்றிக்கே
செந்நெல் கதிர்களின் உடைய ஒளி ஆதல்
களகம் -என்று அன்னத்துக்கு பேராய்
அவை ஆகிற நிலவை உடைத்தான வயலாலே சூழப் பட்டு இருந்துள்ள
திரு மங்கையில்  உள்ளாருக்கு நிர்வாஹகரான
திரு மங்கை ஆழ்வார் –

பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார் –
பண்களின் உடைய அகமான பண்ணிலே சொன்ன
இப் பாடல் பத்தும் வல்லார் –

விண் களகத்து இமையவராய் வீற்று இருந்து வாழ்வாரே
போக பூமிகளில் பிரதானமான பரம பதத்திலே போய்
நித்ய ஸூரிகள் உடன் ஒரு கோவையாய்
அவனை நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

————–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

பெடையாம் பூ மங்கையோடு பத்தர் தம் பண்டம்
அடைந்து உகந்து அண்டர் தொண்டர் தம் இடையூறு
நீக்கு நிறையூர் நம்பி தாள் சரணாய் நீலன் தான்
நோக்கும் புகலாய்க் கிடந்து -59-

புகலாய்க் கிடந்து -ஒரே சொல்லாக்க கொண்டு ரக்ஷகனாகக் கொண்டு என்றபடி
சரணாய் நோக்கும் -சரணாகதி அடைகிறார் என்றவாறு
உலகம் உண்ட பெறுவான் போலே இந்த பதிகத்தில் பாசுரம் தோறும் எம்பெருமான் அடியிணை உண்டே –
பூ மங்கை -மலர்மகள் மண் மகள் இருவரையும் குறிக்கும்
பெடையாம் பூ மங்கையோடு -பூ மங்கையாம் பெடையோடு என்று மாற்றி பொருள் –

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-6-8—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

கீழ் எல்லாம் திரு உள்ளத்தைக் குறித்து உபதேசிக்க
முதல் இரண்டில் நேராக திரு உள்ளத்துக்கு
அடுத்து பர உபாசம் முகத்தால் திரு உள்ளத்துக்கு
அடுத்து நேராக திரு உள்ளத்துக்கு
அனுபவ ப்ரகர்ஷத்தால்
சன்னிஹிதனாக அவன் நித்ய வாசம் பண்ண
அவனைக் காணப் பெற்றேன் என்று ஹர்ஷிக்கிறார் இதில்

மான் கொண்ட -பிரவேசம் –

இந்த்ராதி தேவதைகள் தன்னைக் கொண்டு ஒரு கார்யம் இன்றிக்கே
பிரயோஜனாந்தரங்களை அபேஷிக்க
அவர்களுக்காக தன்னைப் பேணாதே
இரப்பாளன் ஆக்கி  –
கடல் கடைந்தும்
இப்படி அபேஷித சம்விதானம் பண்ணும் அவனை
நான் உத்தேச்யனாகப் பற்றி
அவன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற திரு நறையூரிலே நான் காணப் பெற்றேன் –
அத் தேசமே உத்தேச்யம் -என்கிறார் –

ஏழு திவ்ய தேசங்கள் சேர்த்து ஏழு பாசுரங்கள் இதில் அருளிச் செய்கிறார் –

——————————————————-

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல்  திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –6-8-1-

தாளால் அளந்த பெருமானை- திரி விக்ரமன் -சொன்ன உடனே திரு வேங்கடம் –
மான் கொண்ட தோல் மார்வில்-வக்ஷஸ்தல மஹா லஷ்மி மறைக்க கிருஷ்ணாஜினம் யவனிகா திரை
அளந்த பெருமானை-சர்வ சேஷி –

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் –
மானுடைத்தான தோலை மார்விலே யுடைய மாணியாய் –
தன்னுடைய விநீத வேஷத்தைக் காட்டி
அவன் நெஞ்சை நெகிழ்த்து
பின்னை யாய்த்து பூமியை வாங்கிற்று –

மாணியாய் –
பூர்வ ஜன்மமும் இரந்தேயோ ஜீவித்தது -என்று தோற்ற இரக்கை –
கொண்டு அல்லது போகேன் -என்று இரப்பிலே
தகண் ஏறின படி  –

மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத் –
கிடந்த ஆனை கண்டு  ஏறின மகா பலியதான பூமியைத்
தான் அவன் பக்கலிலே இரந்து பெற்றானாய் இருக்கை-
அவன் அல்லாததை அவனதாக்கி
உடைய தான்
தன்னது அல்லாதது ஓன்று அவன் பக்கலிலே பெற்றானாய் இருக்கை –
நமக்கு  ஏதேனுமாக –
பெறும் இத்தனை யன்றோ வேண்டுவது -என்று இருந்தான் –

தாளால் அளந்த பெருமானை- –
கையிலே நீர் விழுந்த அநந்தரம்-
அவன் மறு மனஸ்ஸூ படுவதற்கு முன்பே எல்லை நடந்து கொண்டான் ஆய்த்து –

தாளால்-
பிராட்டி திரு முலைத் தடத்திலும் கண்ணிலும் வைத்துக் கொள்ளுகைக்கு அர்த்திக்கும் படி
ஸூகுமாரமான திருவடிகளாலே யாய்த்து
காடையும் மேடையும் அளந்து கொண்டது –

பெருமானை –
சர்வ சேஷியாய்-
சர்வாதிகனாய் –
இருக்கிறவன் இப்படி  தன்னை தாழ விட்ட இடத்திலும்
தாழ்ந்து தோற்றாமை இறே
தாழ விட வல்லான் ஆய்த்து –

தேன் கொண்ட சாரல்  திரு வேங்கடத்தானை –
தேன் மிக்க பர்யந்தத்தை உடைத்தான
திரு மலையிலே வந்து நிற்கிறவனை –
தாளால் அளந்த போது தப்பினார்க்கும் இழக்க
வேண்டாத  படி திருமலையிலே வந்து நின்றான் ஆய்த்து-

நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –
அவன் நாடித் திரிகிற போது
வைமுக்யம் பண்ணி இறாய்த்து திரிந்த  நான்
தேடிச் சென்று –

நறையூரில் –
அறுகாத பயணம் போய்
பரம பதத்தில் காண்கை அன்றிக்கே
விடாய்த்த இடத்தில் தண்ணீர் குடிக்கப் பெறுவாரைப் போலே
திரு நறையூரிலே காணப் பெற்றேன் –

—————————————————–

இந்திரனுக்காக இரந்த
இதில் அந்த இந்த்ராதிகளுக்கு அமுதம் அருள
உடம்பு நோவ கடலைக் கடந்து
மீனாய் பிரளயம் கொண்ட பூமியை ரஷித்த படி
கடல் கடைந்த போது பிராட்டி வர ஆலிங்கனம் -திருவாலி -சேர்த்து அனுபவம் இதில்

முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத்
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல் சூழ் நறையூரில்  கண்டேனே—6-8-2-

அமைத்த-கீழ் வயிற்றில் பிரளய ஆர்ணவத்தை அடக்கி பூமியை மேலே வைத்து
ரக்ஷித்து அருளினான் அன்றோ

முந்நீரை முன்னாள் கடைந்தானை –
மூன்று வகைப் பட்ட நீர் திரண்ட கடலை
கிருத யுகத்திலே கடைந்தவனை –
தேவர்கள் அசுரர்கள் கையிலே அகப்பட்டு கிடக்கப் புக்கவாறே
அவர்களை ஜீவிப்பைக்காக
கடலை நெருக்கிக் கடைந்தான் ஆய்த்து –

மூழ்த்த நாள் –
லோகத்தை பிரளயம் கொண்ட காலத்து –

அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத் –
அந்நீர் தானே பாடி காப்பாரே களவு காணுமா போலே
ஜகத்தை அடையக் கோக்க
ஒரு மத்ஸ்யமாய்
அத்தை தன்னுடைய செலுவிலே ஏக தேசத்திலே
அடக்கினான் ஆய்த்து –

கடல் கடைகைக்கு தேவர்களையும் அசுரர்களையும் கூட்டி
தானான மேன்மை குறையாதே நிற்க வேண்டிற்று –
ஜகத்துக்காக வந்த பிரளயத்தை பரிகரிக்கிற இடத்தில்
அங்கன் ஒரு சகாயமும் இன்றிக்கே
தானும் தன்னைக் குறைய விட்டு நிற்கும் அளவிலே ஆய்த்து
ஓன்று செய்யும் இடத்தில் அநேகம் பேரைக் கூட்டி கொண்டு செய்யவும் வல்லனாய்
தனியேயும் செய்ய வல்லனுமாய்
இருக்கும் பெருமானை –
சர்வாதிகன் உடைய செயல் இறே –

தென்னாலி மேய திருமாலை யெம்மானை-
தேவர்களுக்கு கடல் கடைந்தாப் போலேயும்
ஜகத்துக்கு பிரளயத்தைப் பரிகரித்தால் போலேயும்
என்னுடைய சம்சார பிரளயத்தை பரிகரிக்கைகாக
பிராட்டி யோடும்  கூடத் திரு வாலியிலே நிற்கிற சர்வேஸ்வரனை

அன்றிக்கே
தேவர்களோடு
லௌகிகரொடு
என்னோடு
வாசி அற
அபேஷிதம் செய்யும்படி யான சர்வேஸ்வரனை –
பிராப்தி உடையவனை –

நன்னீர் வயல் சூழ் நறையூரில்  கண்டேனே  –
கெட்ட நீர் அன்றிக்கே
மிக்கு -குறைவற்று
வேண்டும் அளவான நீரை உடைத்தான வயலாலே
சூழப் பட்ட திரு நறையூர்  –

———————————————————–

நாவாய் முகுந்தன் -நவ யோகி ஸ்தலம் -தனிக் கோயில் நாச்சியார் உள்ள
பிரயோஜனாந்தர பிறர்க்கும்
லோகத்துக்கு -ஆபத்து அறியாத
இதில் அநந்ய பிரயோஜனராய்
பூ இட முடியாமல் இழவு தீர
பெரிய திருவடி மேல் வந்து கடாக்ஷம் செய்த படியை அனுசந்திக்கிறார் –
கஜேந்திர மோக்ஷம் -பூ பரிக்க பிராட்டி உடன் போட்டி -க்ஷேத்ர மஹாத்ம்யம் –

தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானைத்
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுளானை  நறையூரில் கண்டேனே –6-8-3-

தூவாய –
சர்வேஸ்வரன் திருவடியை மேற்கொண்டு
தன் திருவடிகளால் தாக்கி நடத்தப் புக்கால்
அந்த ஸ்பர்ச ஸூத்தாலே திமிர்த்து
எங்கள் அம்மை  நாயனார் உடைய ஸ்பர்ச ஸூகம் இருந்த படி என் -என்று
ஏத்தும் வாயை உடையவாதல் –

அன்றிக்கே –
நிர் தோஷமான சப்தத்தை வடிவாக உடையவன் -என்னுதல் –
வேதாத்மா விஹாகேஸ்வரா -என்னக் கடவது இறே-

புள்ளூர்ந்து வந்து துறை –
அவனுடைய ஸ்வாபாவிக வேகம் போராமை நடத்திக் கொண்டு
அவன் இடர் பட்ட பொய்கைக் கரையிலே வந்து –

வேழம் மூவாமை நல்கி –
அது முடியாதபடி
அதன் பக்கலிலே ஓரத்தைப் பண்ணினான் ஆய்த்து-
அதாவது
பூவில் செவ்வி மாறுவதற்கு முன்பே
திருவடிகளிலே இடுவித்துக் கொண்டான் ஆய்த்து –

தானும் மூவாமை பெற்றான் யாய்த்து –
அவன் ஆபன்னானன்  ஆன பின்பு அரை ஷணம் தாழ்த்தான் ஆகில்
தன் குனங்களை இழந்து போனான் ஆம் இறே-
(மூன்று பரீஷைகளிலே தேறினானே -ஸ்ரீ எம்பார்
மழுங்காத –தொழும் காதல் வேழம் -இத்யாதி – )

முதலை இத்யாதி –
இடர்ப் பட்ட பொய்கையிலே போய்ப் புக்கு
பெரிய அவதானத்தோடு இரண்டையும் கூடக் கரையிலே கொடு போய் வைத்து
ஆனைக்கு இடர் இன்றிக்கே
முதலைக்கே இடர் ஆம்படி பண்ணினான் ஆய்த்து –
ராஜ புத்ரர்களைப் பிணைத்தால் கைக் கூட்டனுக்கும் பாலும் சோறும்
இடக் கடவது காண் -என்று அருளிச் செய்தார் -பட்டர்

துணித்தானை –
பீஷ்மாதிகள்  மேலே கிளருமா போலே –
எதிரிகள் பக்கல் சீறுமா போலே –
நீர்ப் புழு என்று பாராதே சீறினான் ஆய்த்து –
ஆஸ்ரித விரோதி என்னும் ஆகாரத்தாலே கனத்துத் தோற்றுகையாலே-

ஆனை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே
பெரிய சீற்றத்தோடு
தன்னைப் பேணாதே
வந்து விழுந்தவன் தான் ஆர் என்னில் –

தேவாதி தேவனை –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -யாய்த்து –

செங்கமலக் கண்ணானை –
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை –

நாவாய் யுளானை –
பரம பதம் கலவிருக்கையாய் இருக்க
என்னுடைய ரஷணத்துக்காக
திரு நாவாயிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-

அந்த திரு நாவாய் தான் பரம பதத்தோபாதியாம் படி
அடுத்து அணித்தாக
திரு நறையூரிலே-காணப் பெற்றேன் –

—————————————

ஆனைக்கு புள்ளூர்ந்து
அங்கனே தேசாந்தரத்தில் இருந்து வர வேண்டாதே
நினைத்த இடத்தில்
ஆங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய வ்ருத்தாந்தம்

ஒடா வரியாய் இரணியனை ஊன் இடந்த
சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே –6-8-4-

ஒடா வரியாய் –
ஹிரண்யன் உடைய முரட்டு உடலைக் கண்டால்
பிற்காலியாத நரசிம்ஹமாய் -என்னுதல் –

அன்றிக்கே
நாட்டில் நடையாடாத நரசிம்ஹமாய் -என்னுதல் –

இரணியனை ஊன் இடந்த சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை –
வர பலத்தாலே பூண் கட்டின ஹிரண்யன் உடைய முரட்டு உடலை பிளந்து
இன்னம் இங்கனே இருந்துள்ள விரோதிகள் ஆஸ்ரிதர்க்கு
அடர்த்து வரில் செய்வது என் -என்று
அவற்றைப் போக்குகைகாக
இளமை மிக்க பொழில் சூழ்ந்து இருந்துள்ள
திரு நீர் மலையிலே சந்நிஹிதன் ஆனவனை –

வாடா மலர்த் துழாய் மாலை முடியானை –
ஜகத் ரஷணத்துக்காக முடி கவித்து
மாலை இட்டுக் கொண்டு இருக்கிறவனை

நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே –
நாள் தோறும் நித்ய ஸூரிகள் உடைய ஆசையே யாத்ரையாக
உடையனாய்க் கொண்டு
இங்கே காணப் பெற்றேன் –

—————————————

அப்பன் பகையாக உதவியது கீழே
தமையன் பகையாக உதவியது இங்கு
சுக்ரீவனையும் விபீஷணனையும் -ரக்ஷித்து கைக்கொண்டது
ஈஸ்வரனை ஒழிந்த அனைவரும் ரக்ஷகர் அல்லர் பிரபன்ன பரித்ராணத்தில் சொன்னோம் –
இதிலும் அடுத்ததிலும் வேறே திவ்ய தேச பிரஸ்தாபம் இல்லை –

கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறாக
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5-

கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன் –
கல்லார் மதிள் சூழ்ந்து
அரண் மிக்கு இருந்துள்ள இலங்கையிலே
கறுத்த நிறத்தை உடைய ராவணன் -என்னுதல் –

அன்றிக்கே
தண்ணியன் -என்னுதல்
கறுப்பு -தண்மைக்கும் நிறத்துக்கும் -இரண்டுக்கும் பேர் இறே –

வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த வில்லானைச்
ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் சிளையாத படி வரபலத்தாலே
திண்ணியதான
உடல் கிழியும்படிக்கு   ஈடாக
தர்ச  நீயமாய்
தீப்த பாவக சங்காசை  -என்கிறபடியே
தொடுத்து விடும் போது அம்பாய்
சத்ருக்கள்  சரீரங்களில் அக்னியாய் பிரவேசிக்கும்
அம்பை நடத்தின வில் வலியை உடையவனை  –

செல்வ விபீடணற்கு
ராவண பவனத்தை விட்டு
ஆகாச ஸ்தானனானன் ஆன போதே
அந்தரிஷ கதஸ் ஸ்ரீ மான் -என்கிறபடியே
ஸ்ரீ ராம சம்பந்தத்தால் வந்த ஐஸ்வர்யம் குடி கொண்டாய்த்து –

வேறாக நல்லானை –
வருகிற விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று
மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க
அவனைக் கைக் கொள்ளுகை தவிரோம் – என்று
பெருமாளும் நிர்பந்திக்க
ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன
வேணுமாகில் அது செய்கிறது  -இது ஒரு படியாலும் தவிரோம் (கதஞ்சன -நத்வதேயம் ) என்று
அவன் பக்கலிலே விசேஷித்து சங்கத்தைப் பண்ணினவனை-

நாடி நறையூரில் கண்டேனே   –
நான் அவனைத் தேடி
நறையூரிலே காணப் பெற்றேன் –

———————————————-

சதுர் தேச ப்ரஹ்மாவுக்கும் உத்பாதகன்
ஆஸ்ரித பவ்யனாக
மேன்மையைப் பாராமல் இடைச்சி கையால் கட்டுண்டு இருந்த வ்ருத்தாந்தம் –

உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை
அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே –6-8-6-

உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில் வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை –
ப்ரஹ்மாதிகள் குடி இருப்போடே
கூடே மற்றும் உள்ள மனுஷ்யாதிகளை அடைய
தன் திரு உந்தியிலே செவ்விப் பூவின் மேலே
தன்னுடைய சங்கல்ப்பத்தாலே உண்டாக்கின
ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனை –
(தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைக்க – நம்மாழ்வார் தெளிவாக )

தன் சங்கல்ப்பத்தால் எல்லாவற்றையும் உண்டாக்குமவன் தான்
மெய்யே வந்து அவதரித்தான் ஆய்த்து –
அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
பிள்ளை உறங்கா வல்லி தாசர்
பிள்ளைக்கு தாய் வழி ஆகாதே கண் -என்று அருளிச் செய்வர் –
(தன்யன் -பெருமை உடையன் ஆவான் தாய் போல் பிள்ளை இருந்தால் வசனமும் உண்டே )

நம்பனை –
தன்னை அணுகினவருக்கு
தன் கையிலே சமர்ப்பிக்கலாம் படி
விஸ்வச நீயன் ஆனவன் -என்றபடி  –

நாடி நறையூரில் கண்டேனே –
சம்சாரத்தில் இருக்கச் செய்தே
அவனை விஸ்வசித்து பற்றப் பெற்றேன் –

—————————————————-

மீண்டும் திவ்ய தேசம் இதில் திரு மெய்யம் -திருத் த்வாரகையும் இதில் –
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் கீழ்
அதன் பிரயோஜனம் இதிலும் அடுத்ததிலும் –

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே —6-8-7-

கட்டேறு நீள் சோலைக் –
இந்த்ரன் உடைய காவல் காடு என்கிற மதிப்பாலே மிக்க அரணை உடைத்தாய் இருக்கிற-

காண்டவத்தைத் தீ மூட்டி விட்டானை –
அர்ஜுனனும் தாமுமாய் யமுனா தீரத்தில் பூம் பந்து இறட்டு
விளையாடா நிற்க
அக்னி ஒரு ப்ராஹ்மன வேஷத்தை  கொண்டு வந்து நிற்க
நீ இந்த்ரன் உடைய காட்டை புஜி-என்று விட்டான் –

மூட்டி விட்டானை –
துஷ்ட மிருகங்களின் மேலே விட்டானாய்
தான் கிட்டுகைக்கு பயப்படுமா போலே
பிரவேசிப்பிக்கையில் உண்டான அருமை சொன்னபடி –

மெய்யமர்ந்த பெருமானை –
இன்னும் ஆரேனும் அர்த்தித்து வரில் செய்வது என்-என்று
திரு மெய்யத்தில் வந்து சந்நிஹிதன் ஆனவனை-
(திரு மெய்யம் –
சத்யம் ஆழமாக இருக்கும்
காட்டை அழித்ததும் தப்பில்லை -)

மட்டேறு கற்பகத்தை –
பரிமளம் மிக்கு வாரா நின்றுள்ள
கல்பக விருஷத்தை –

மாதர்க்காய் –
ஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி பக்கல்
தாதர்த்தத்தை முடிய நடத்தின் படி –

வண்டுவரை நட்டானை –
இந்தரனுக்கு நரகாசுரன் உடன் விரோதம் விளைய
அவனுக்காக எடுத்து விட்டு
அவனை அழித்து
மீண்டு வந்து ஸ்வர்க்கத்தை குடி ஏற்றுகிற அளவிலே

இந்த்ராணி யானவள் -கல்பக வருஷத்தின் பூ வர
உங்களுக்கு இது பொராது இறே
உடம்பு வேர்க்கும் இறே
தரையில் அல்லது கால் பாவாதே -என்று இங்கனே
தன்னுடைய தேவதத்வத்தையும்
இவள் உடைய மனுஷ்யத்வத்தையும் சொல்லி
ஷேபித்துச் சூடினாள்-

அவளும் கிருஷ்ணன் தோளைப் பற்றி -இத்தை என் புழக் கடையில் நட வேணும் -என்ன
அத்தை பிடுங்கிக் கொடு போந்து
ஸ்ரீமத் த்வாரகையிலே நட்டு
பின்னை யாய்த்து திரு மஞ்சனம் பண்ணிற்று

தான் சோபன -நன்றாக -குடி ஏறுவதற்கு
முன்பே தன்னைக் குடி இருத்தினவன்
தன் புழக் கடையிலே ஒரு குப்பை மேனியைப் பிடுங்கினான் என்று
வஜ்ரத்தை கொண்டு தொடருவதே -என்று
பிள்ளை அமுதனார் பணிக்கும் படி –

நாடி நறையூரில் கண்டேனே   –
என்னுடைய அபேஷிதம் செய்கைக்காக
திரு நறையூரிலே வந்து நின்றவனைக்
காணப் பெற்றேன் –

—————————————————-

பாரம் -ந கிஞ்சித் பர்வதிகா
ந சப்த சாகரம்
ஸ்வாமி துரோகம் மஹா பாரம்
கண்ணனுக்கு விரோதியாலே பாரம் -ஸ்ரீ தேவி பொறுக்க மாட்டாள் –

மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர்
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேற விசயன் தேரூர்ந்தானை
நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8-

மண்ணின் மீ பாரம் கெடுப்பான்
எல்லா வற்றையும் பொறுக்கக் கடவ பூமி
பொறுக்கப் போகிறதில்லை -என்ன –
அதனுடைய பாரதத்தைப் போக்குகைகாக –

மற மன்னர்  பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து விண்ணின் மீதேற-
மறத்தை உடைய கர்ண துர்யோநாதிகள்
கையும் அணியும் வகுத்து மேலிட்டு வந்த பரிகரம் அடைய மீளவும்
அவ் ஊரில் போகாதே வீர ஸ்வர்க்கத்தை பிராபிக்கும் படி -யுத்தப் பண்போடு வந்த படை எல்லாம்-

விசயன் தேரூர்ந்தானை —
அர்ஜுனன் உடைய தேரை நடத்தினவனை –

நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –
ஆசை உடையேனாய்க் கிட்டி –
அவ் வாசைக்கு அனுரூபமாக திரு நறையூரிலே காணப் பெற்றேன் –

—————————————————————-

பூமிக்கு ஆனந்தம் கொடுக்க வந்த கிருஷ்ணனே ஆராவமுது
சக்கர பாணி சாரங்க பாணி -திவ்ய ஆயுதங்கள் உடன் சேர்த்தி –
இதிலும் அடுத்ததிலும் வேறே திவ்ய தேசம் சேர்த்து அனுபவம் –

பொங்கேறு நீள் சோதிப் பொன்னாழி தன்னோடும்
சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானைக்
கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே–6-8-9-

பொங்கேறு நீள் சோதிப் பொன்னாழி தன்னோடும் சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானைக் –
மிகைத்து ஆற்றுப் பெருக்கு போலே ஏறி வாரா நின்றுள்ள
நிரவதிக தேஜசை உடைத்தாய்
ஸ்ப்ருஹநீயமாய் இருக்கிற திருவாழி யோடே கூட
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கும் குடி இருப்பான
அழகிய திருத் தோள்களை உடைய சர்வேஸ்வரன் –

ஆழ்வார்களை ஒழியவே
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படி யாய்த்து
திருத் தோள்கள் அழகு இருக்கும் படி –
ஆபரணத்துக்கும் ஆபரணம் போலே –

கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானைநங்கோனை நாடி நறையூரில் கண்டேனே-
பரிமளம் ஆதல்
தேன் ஆதல்
பரம பதத்தில் இருப்பு நித்ய ஸூரிகளுக்காய் இருக்குமா போலே
நமக்கு ஸ்வாமி ஆனவனை
நமக்காக வந்து நிற்கிற திரு நறையூரிலே  காணப் பெற்றேன் –

—————————————–

கீழே ஸ்ரீ திருக்குடந்தையுடன் அனுபவம்
இதில் ஸ்ரீ வடமதுரை உடன் அனுபவம் =

மன்னு மதுரை வசு தேவர் வாழ் முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்  தார்க்
கன்னவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே–6-8-10-

மன்னு மதுரை –
சித்தாஸ்ரமமாய் ஸ்ரீ வாமனன் இருந்து தபஸ்ஸூ பண்ணி
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் வன்னியம் அறுத்து படை வீடு செய்து
சர்வேஸ்வரன் தான் உகந்து வந்து அவதரித்து
ஆனை படும் அடவி ( காடு ) போலே
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –

வசு தேவர் வாழ் முதலை –
ஸ்ரீ வசுதேவர் உடைய சத்தைக்கு நிமித்த பூதனாய் உள்ளவனை  –
இவனைக் கண்டு அத்தாலே உளராய்த்துத் திரிவது –

நன்னறையூர் நின்ற நம்பியை –
ஸ்ரீ மதுரையில் காட்டிலும் மிக்க நன்மை உடைத்தான
திரு நறையூரிலே நிற்கிற
கல்யாண குண பூர்ணனை –

வம்பவிழ்  தார்க் கன்னவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
செவ்வி மாலையையும்
அதுக்கு ஆஸ்ரயமாய்-கல் என்று சொல்லப் படும் திண்ணிய
தோளையும் உடையரான
திருமங்கை ஆழ்வார் ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த
தமிழ்த் தொடை வல்லவர்கள்-

பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே  –
பரம பதத்தில் அங்கு உள்ள நித்ய ஸூரிகளுக்கு தைவங்கள் ஆவார்கள்
வைகுந்தன் தமர் எமர் -10-9-9–என்று இறே  அவர்கள் சொல்லுவது –
அவர்களுக்கு ஆஸ்ரயணீயர் ஆவார்கள் –

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

மானமுடை வானவர் தொண்டர்க்கு வாசியற
தான் அழிய மாறி அருள் நம்பியிடம் நான் உகந்த
மாற்ற வூரான் பான்மை நீலன் கண்டான் நறையூரில்
உற்ற திருவாம் பெடையோடு-58-

திருவேங்கடம் திருவாலி திருநாவாய் திரு மெய்யம் திருகி குடந்தை திரு நறையூரில் கண்டதாக அருளிச் செய்கிறார்
நரசிம்மம் கண்ணன் இராமன் தன்மைகளையும் கண்டார் –
உற்ற திரு -பகவான் நாராயண அபிமத அனுரூப ஸ்வரூப ரூபம் –
நமக்கு உற்ற திரு என்றுமாம் –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-6-7—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

ஆளும் பிரவேசம் –

ராஜ்ய லாபத்துக்காக ஆஸ்ரயிக்கை அன்றிக்கே
ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியைக் கொண்டான் என்னை –
ஆன பின்பு ஆபன்னர்க்கு எல்லாம் புகல் அவன் அல்லது இல்லை –
இப்படி இருந்த பின்பு எல்லாரும்
அத் தேசத்தில் போய்ப் புக்கு அவனை அனுபவிக்கப் பாருங்கோள்-
என்கிறார்-

(பர உபதேசமாக கீழ் –
ஆழ்வார் திரு உள்ளம் நாட்டாருக்கு அபேக்ஷை இல்லை என்று சொன்னதாகக் கொண்டு
மீண்டும் ஒரு பிரவேசம் நெஞ்சுக்குச் சொல்வது போல் பர உபதேசமாக
கீழ் திரு உள்ளத்துக்கு சொல்லும் வியாஜ்யம்
அவர்கள் -தேவரீர் சோழன் பற்றி பல காலம் சொல்லி
அவன் த்ருஷ்ட அர்த்தி தானே
சம்சார பய பீதராய் நமக்கு ஆஸ்ரயிக்க கூடுமோ என்ன -பாரா உபதேசம் முதலில்
அடுத்து உள்ளத்துக்கு
நம்மை குறித்து அருளிச் செய்யாமல்
நாட்டார் பவ்யமாக உம்மை கிட்டி கேட்டார்களா என்ன
அடுத்த பிரவேசம் -)

புனஸ்ஸ
நான் சொன்ன ஹிதத்தில் நாட்டாருக்கு அபேஷை இல்லை யாகிலும்
எனக்கு ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்திலே ருசியைப் பிறப்பித்து
அதுக்கு விரோதியையும் போக்கின அவன் அல்லது ஆபன்னார்க்கு புகல் இல்லை
ஆன பின்பு அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசமே
ஆஸ்ரயணீய ஸ்தலம்
என்கிறார்-

——————————————————-

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி யோவா நறையூர் நின்ற நம்பியே–6-7-1-

நாளும் விழவின் ஒலி-

(ஆளும் -உம்மைத் தொகை சேர்த்து -முன் அடியேன் ஸ்வதா தாஸ பூதன் –
அடியேனை-ஆளும் பணியும்-கொண்டான்-
அடியேன் சேஷத்வம் உடைய ஜீவன் -யோக்யதையைச் சொன்னவாறு –
ஆள் கொண்டான் -சேஷத்வம் இருந்தால் மட்டும் போதாது -உணர்தல் புரிதல் –
மயர்வற மதி நலம் அருளி புரிய வைத்தான்
பணி கொண்டான் -உணர்ந்தால் மட்டும் போதாதே –
அதுக்குத் தந்த கைங்கர்யமும் கொண்டான் என்றவாறு –
இப்படி மூன்று நிலைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் )

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்-
தன் திருவடிகளுக்கு அர்ஹமான வஸ்து
தனக்கு அரிது என்று இராதபடி -ஆளாக ஸ்வீகரித்து
அந்த ஆளாதினுடைய பலமான
கைங்கர்யத்தையும் கொண்டான்  –

அடியேனை-ஆளும் பணியும்-கொண்டான்-
முதல் தன்னிலே யோக்யமான வஸ்துவையும்
அயோக்யதையேயாய்
தன்னை ஸ்வ தந்த்ரனாக புத்தி பண்ணி வைக்கை அன்றிக்கே
பர சேஷன் என்னும் புத்தியைப் பிறப்பித்தான் என்கையும்
அந்த சேஷத்வத்தின் உடைய பலமான
தாஸ்யத்தில் ருசியைப் பிறப்பித்தான் என்கையும் –

விண்ட நிசாசரரை தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரந்துரந்தான் வேளும் சேயும் –
இவ் வடிமையிலே பொருந்தாத படியான ஜென்மத்தை உடைய
துஷ் பிரக்ருதிகளை அழியும் படி சொல்லுகிறது –
இவர்களுக்கு இன்னும் இதிலே ருசி பிறக்க கூடுமோ என்று
ஆந்தனையும் அவசரம் பார்த்து நின்று
த்விதா பஜ்யேய மாப்யேவம் ந நமேயந்து கஸ்யசித் –  என்று
அவர்கள் பொருந்தாமையிலே நிலை நின்றால்
பின் கண் பாராதே அழியச் செய்யும் –
தோளைக் கழிப்பது
தாளை முறிப்பது
தலையை அறுப்பதாகக் கொண்டு
சிறிது போது காலயாபநம் பண்ணி
பின்னை அம்பாலே அழிக்கைகாக
காணவே-எதிரிகள் குடல் குழம்பும் படியான வில்லில் நின்றும்
தீப்த பாவக  சங்காசை -என்கிறபடியே
தொடுத்து விடுகிற போது அம்பாய்
சத்ரு சரீரங்க ளிலே அக்நியாய் பிரவேசிக்கும்
அம்புகளை நடத்தினான் –

வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி –
அத்தேசத்தில் வர்த்திப்பார் எல்லாம்
போக்தாக்களும் போக்யைகளுமான ஸ்திரீகளுமே யாய்த்து –
வடிவு அழகுக்கு காம வேளையும் ஸூப்ரஹமணியனையும் போலே இருக்கும்  புருஷர்களும்
அவர்கள் தங்களையும் ஒரு நோக்காலே அனந்யார்ஹராம் படி பண்ண வல்ல
ஸ்திரீகளும் வர்த்தியா நின்றுள்ள –

நாளும் விழவின் ஒலி யோவா நறையூர் நின்ற நம்பியே   –
திங்களும் நாளும் விழவறாத -என்றபடியே
நாள் திரு நாளும் திங்கள் திரு நாளும் மாறாதே இருக்கிற
திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற
நம்பி -ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் –

——————————————————-

கீழே நிசாசரரை வென்ற -ராமாவதாரம் –
ராஜாக்கள் சிறிதும் அதி மாத்ரமாக கை விஞ்சினால்
அழிக்கும் சக்தன் இதில் -பரசுராம அவதாரம் இதில் –

முனியாய் வந்து மூ வெழு கால் முடி சேர் மன்னர் உடல் துணியத்
தனிவாய் மழுவின் படை யாண்ட  தாரார் தோளான்  வார் புறவில்
பனி சேர் முல்லை பல்லரும்ப பானல் ஒரு பால் கண் காட்ட
நனி சேர் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே–6-7-2-

முனியாய் வந்து –
ஆன்ரு சம்சய வ்ரத பிரதானனான ருஷியாய் வந்து –
அவ வான்ரு சம்சய வ்ரதருக்கு வைத ஹிம்சையில் கை கூச ஒண்ணாது இறே –
(கருணா காகுஸ்தன் ராமர்
ரோஷ ராமர் முனி –பரசுராமர் -விதித்த தண்டனை கொடுக்க-
வைதிக ஹிம்சை கருணை தடுக்காதே )

மூ வெழு கால் முடி சேர் மன்னர் உடல் துணியத்
தனிவாய் மழுவின் படை யாண்ட –
இருபத்தொரு படி கால் ஷத்ரிய வம்சத்தை அறுத்துத் தூவும்படி
அத்விதீயமான வாயை உடைய மழுவை
ஆயுதமாக நிர்வஹித்து –

தாரார் தோளான் –
ஜகத் ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவன் –

வார் புறவில் பனி சேர் முல்லை பல்லரும்ப பானல் ஒரு பால் கண் காட்ட –
நீண்ட புறவில் -பரந்த பர்யந்தத்தில் –
தர்ச நீயமான-குளிர்ந்த – முல்லை யானது –
அங்குத்தை ஸ்திரீகள் உடைய தந்த பங்க்தியைக் காட்ட –
நெய்தலில் அவாந்தர ஜாதியான பானலானது கண்களைக் காட்ட –

நனி சேர் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே  –
நனி சேர் வயலுள் முத்து அலைக்கும் -பாட பேதம் –
கடல் போலே பரந்த வயலிலே முத்தானது அலையா நின்றுள்ள –
அன்றிக்கே –
ரீதி பேதம் பிறவாமைக்காக-கமலம் -என்றது ஆகில் –
அவ்விரண்டுக்கும் ஆஸ்ரயமான   முகத்தை
பெருத்த தாமரையானது காட்டும் –

——————————————————

ராம -வாமன -கந்தமான திருப் பாற் கடல் –
பரசுராமர் முன் பின் அவதாரங்கள் -திரு உள்ளம் ஓடி
இவற்றுக்கு நாற்றங்கால் அனுபவம் இதில் –

தெள்ளார் கடல் வாய் விட வாய சின வாளரவில் துயில் அமர்ந்து
துள்ளா வருமான்  வீழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண்
புள்ளார் புறவில் பூங்காவி புலன் கொள் மாதர் கண் காட்ட
நள்ளார் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே–6-7-3-

விட வாய்ச் சின வாளரவில் -மூன்று அடை மொழிகள் அரவுக்கு –

தெள்ளார் கடல் வாய் விட வாய்ச் சின வாளரவில் துயில் அமர்ந்து துள்ளா வருமான்  வீழ வாளி துரந்தான் –
தெண்மை யார்ந்து
திரை கொழித்து எறட்டா நின்ற  கடலிலே –
செந் தெங்குக்கு முள் கட்டினால் போலே
வஸ்துவின் நீர்மைக்குத் தக்கபடி
பிரதி பஷத்தின் மேலே விஷத்தை  உமிழா நின்றுள்ள வாயை உடையனாய்
அவர்கள் மேலே மிக்க சினத்தை உடையனுமாய்

நிரந்தர பகவத அனுபவத்தால் வந்த ஒளியை உடையனுமாய் இருந்து உள்ள
திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாகக் கொண்டு
அவன் மேல் சாய்ந்து
ராவணாதி கண்டகர் வந்து தோற்றினவாறே
அப் படுக்கையை விட்டுப் போந்து
அவதரித்து
அங்கே இங்கே துள்ளி வருகிற மாயா ம்ருகமானது இலக்குப் பட்டு
விழும்படி அம்பை நடத்தினவன் –

இரந்தான் மாவலி மண்-
அவ் வம்பு கையிலே இருக்கச் செய்தே
ஓர் இயற்றி இல்லாதாரைப் போலே
மகா பலி பக்கலிலே சென்று மண்ணை இரந்தான்-

சாமத்துக்குச் செல்லாத இடத்தில்  யாய்த்து
பேதத்தில் இழிவது –
(சாம தான பேத தண்டங்களில் )

புள்ளார் புறவில் பூங்காவி புலன் கொள் மாதர் கண் காட்ட நள்ளார் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே-
அன்னம் தொடக்கமான பஷிகளாலே
நெருங்கி இருந்துள்ள  பர்யந்தத்திலே
தர்ச நீயமான செங்கழுநீர் ஆனது
(புலன் கொள்-புலன்களால் அனுபவிக்கப்படும் )
ஆபரணங்களால் அலங்க்ருதைகளாய் இருந்துள்ள  ஸ்திரீகள் கண்ணைக் காட்ட
செறிந்த இதழை உடைய தாமரைப் பூவானது
அக் கண்களுக்கு ஆஸ்ரயமான முகத்தைக் காட்டா  நின்றுள்ள திரு நறையூர் –

—————————————————————

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத –நாக பர்யங்க உத்ஸ்ருஜ்ய —
ஆகதோ மதுராம் புரீம்
சர்வ நியாந்தா
கிருஷ்ணனாய் பிறந்து
நியாம்யனாய் இருந்த வ்ருத்தாந்தம் –

ஒளியா வெண்ணெய்  உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒள் கயிற்றால்
விளியா வார்க்க வாப்புண்டு விம்மி யழுதான்   மென் மலர் மேல்
கழியா வண்டு கள் உண்ணக்  காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே —6-7-4-

ஒளிக்கப் பட்ட -ஒளிக்க முடியாத -தானே ஒளித்து நின்று -மூன்றும் –

ஒளியா வெண்ணெய்  உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒள்  கயிற்றால் விளியா வார்க்க –
மறைய நின்று சேமித்து வைத்த வெண்ணெயை
தைவம் கொண்டது என்னும் படியாக அமுது செய்து

அன்றிக்கே
மறைக்க அரிதான வெண்ணையை அமுது செய்தான் என்று
யசோதை பிராட்டியானவள்  சீறி
உரலோடு சேர்த்து திரு மேனியிலே அழுந்தும்படியாக
கயிற்றாலே நெருக்கிக் கட்ட

அன்றிக்கே
திரு மேனியை ஸ்பர்சிக்கப் பெற்றது -என்று ஒண் கயிறு -என்றார் ஆகவுமாம் –

வாப்புண்டு –
அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் ஒழிய செல்லாமையாலே
அப்படி கட்டுண்டு –
நாக பாசாதிகளை இட்டு கட்டில் இறே அறுத்துக் கொடு போக வல்லான் ஆவது –

அன்றிக்கே
துர் யோநாதிகள் கட்டில்  ஆதல்
அனுகூலர் கட்டினால் போக மாட்டான் –
யதிசக் நோஷி கச்ச த்வம் -என்றாள் இறே  –

(சர்வ விபு எப்படி நகர முடியும் வேதாந்தம் படியும் -அறிந்து யசோதை –
ஆஸ்ரிதர் மீறாமலும் -குடும்பிநி -அகாரத்தை கட்டி ஆகாரத்தை கட்டப் போனாள் )

வங்கி புரத்து நம்பி பல காலம்
திரு வாராதன க்ரமம் அருளிச் செய்ய வேணும் என்று  போருமாய்
அவசர ஹானியாலே அருளிச் செய்யாமலே போந்தாராய்
திருமலையிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஆழ்வானுக்கும் நம்பி   ஸ்ரீ ஹனுமந்தத் தாசருக்கும் அது தன்னை அருளிச் செய்தாராய்
சமைக்கிற அளவிலே நம்பி தோற்ற
திரு உள்ளம் துணுக் என்று  அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை –
என்றும் உள்ள இஸ் சம்சயம் தீரப் பெற்றோம் ஆகிறது
நியாமகன் நியாம்யங்களிலே   சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு
அழுது நின்றான் என்றால்  இது கூடுமோ என்று இருந்தோம் –
இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி
நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று –
(கேட்டதுக்கு சொல்லாமலும் இப்பொழுது முன்பே கூட்டி சொல்லாததுக்கும் -இரண்டுக்கும்
கண்ணனே பார்த்த சாரதியை உடையவர் அன்றோ )

விம்மி யழுதான்   –
அக வாயில் ஓட்டத்துக்கு ஓர் எல்லை இல்லை இறே
அது எல்லாம் தோற்றும்படி
அதுக்கு போக்கு விட்டு அழுத படி –
வாய் விட்டு அழ ஒண்ணாத படி -வாய் வாய் -என்னுமே –

மென் மலர் மேல் கழியா வண்டு கள் உண்ணக்  காமர் தென்றல் அலர் தூற்ற –
கண்ட விடம் எங்கும் பரப்பு மாறப் பூத்துக் கிடக்கும் இறே –
அதிலே மது பான அர்த்தமாக கிட்டின வண்டுகள்
அத்தைக் கிட்டப் பெற்ற ஹர்ஷத்தாலே களித்து
நிஷித்த சேவை பண்ணுவாரைப் போலே  மது பானத்தை பண்ணிற்றன-

அத்தைக் கண்ட ஸ்ப்ருஹநீயமான தென்றல்
நாட்டிலே பழியைத் தூற்றிற்று –
(தீக் குறளைச் சென்று ஒதுகின்றதே )

நளிர் வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே –
அத்தைக் கண்ட முல்லை
புகுந்த பிரமாதத்தை அனுசந்தித்து
அது தான் அப்படி செய்கிறது இது தான் இப்படி செய்யக் கடவதோ என்று
வாய் விட்டுச் சிரிக்க மாட்டாமை ஸ்மிதம் பண்ணிற்று –

—————————————————————-

ஆஸ்ரித பவ்யன் கீழே
ஆஸ்ரித விரோதிகள் மேல் தானே சென்று வெல்ல வல்ல சர்வ சக்தன் இதில் –

வில்லார் விழவில் வட மதுரை விரும்பி விரும்பா மல் லடர்த்துக்
கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல்லார் சுருதி முறை யோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே–6-7-5-

சோமுச் செய்யும் தொழிலினோர்-சோமா யாகாதிகள் செய்யும் கர்ம யோகிகள்-
நல்லார் -பயனுக்காக இல்லாமல் – அநந்ய பிரயோஜனராய் அனுஷ்டிக்கும்படியான
வை லஷண்யத்தை உடையவர்கள் –
வாழும்-நித்ய வாஸம் -ஸ்வரூப அனுரூபமாக வாழும் –

வில்லார் விழவில் வடமதுரை விரும்பி –
கம்சன் மாதுலனாய் -வில் விளைவு -என்ற வியாஜத்தை இட்டு அழைப்பித்து
வாசலிலே ஆனையை நிறுத்தி
அது கொன்றது என்று கண்ண நீர் விழ விட்டு துக்கம் கொண்டாடி இருப்பானாகக் கோல
அத்தை அறியாதானாய் இருக்கை அன்றிக்கே
அடியே தொடங்கி
அவன் பண்ணிப் போருகிற ப்ரதி கூல்யத்தை அறியச் செய்தேயும்
அத்தை மதியாதே வில் விழவுக்கு   என்று
அவ் விடத்தை உகந்து புகுந்தான் ஆய்த்து –

விரும்பா மல் லடர்த்துக்
உகவாத மல்ல வர்க்கத்தை அழியச் செய்து –

கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் –
திண்ணிய தோள் உடைய கம்சன் கோலின  கோலுதலை
அவன் தன்னோடே போம்படி
பண்ணி அவனை முடித்து –

பாய்ந்தான் காளியன் மேல் –
கம்சன் முதுகில் பாய்ந்தால் போலே
காளியன் தலையிலே பாய்ந்த படி –

சொல்லார் சுருதி முறை யோதிச்
புருஷ புத்தயா  அதீனம் ஆகையாலே
நிர்த் தோஷமாய் இருக்கிற ஸ்ருதிகளை
பத நியமங்களோடே அதிகரித்து –

சோமுச் செய்யும் தொழிலினோர்
கேவல அத்யயனம் பண்ணுகை அன்றிக்கே

தொழிலினோர்
அதனுடைய அனுஷ்டானம் அளவும் போருமவர்கள்
அது தான் காதா சித்கமாய் இருக்கை அன்றிக்கே
அது தான் யாத்ரையாய் இருக்குமவர்கள் –

நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே –
அது தன்னை ஒரு பலத்துக்காக அனுஷ்டிக்கை அன்றிக்கே
அநந்ய பிரயோஜனராய் அனுஷ்டிக்கும்படியான
வை லஷண்யத்தை உடையவர்கள் –

———————————————

வள்ளி கொழு நன் முதலாய மக்களோடு முக் கணான்
வெள்கியோடே விறல் வாணன்  வியன் தோள் வனத்தைத் துணிந்து உகுந்தான்
பள்ளி கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே—6-7-6-

வள்ளி கொழு நன் முதலாய மக்களோடு முக் கணான் வெள்கியோடே –
வள்ளி என்று ஒரு சண்டாள ஸ்திரீக்கு பெயர் –
அவளுடைய கொழுநன் ஆய்த்து ஸூ ப்ரஹ்மண்யன்  –
அவன் துடக்கமான புத்ராதிகளோடே கூட -அவி நீத ப்ருத்யவர்க்க -என்னும் இத்தனை இறே இங்கு –

முண்டன் நீறன் -இத்யாதி
தலையைச் சிரைத்து சாம்பலைப் பூசி இருப்பான் ஒருவனும் –
அவனுடைய புத்ரர்களும் –
ஜ்வரங்களும்
பிடாரியும்-(மோடியும்)
அக்னியும்
இவை அடைய முதுகு  காட்டி ஓட –
அத்தைக் கண்டு
ஸ்திரீ பிரதானவர்களோடே யாகாதே நாம் பொர இழிந்தது  -என்று லஜ்ஜித்து –

விறல் வாணன்  வியன் தோள் வனத்தைத் துணிந்து உகுந்தான்–வாணனுக்கு இரங்கினான் –
ஆஸ்ரயணீயர் அல்லாதாரை ஆஸ்ரயித்து வந்தான் அத்தனை என்று
அவனுடைய தசையை அனுசந்தித்து கிருபை பண்ணினான் ஆய்த்து –

முக் கணான் வெள்கியோடே   –
ருத்ரன் தான் நோக்குவதாக ஏறிட்டுக் கொடு வந்து வாணனைக் காட்டிக் கொடுத்து
பரிகரத்தோடே லஜ்ஜித்து ஓட
பெரு மிடுக்கனான வாணன் உடைய பாஹூ வனத்தை சேதித்து ஹ்ருஷ்டனானான் –
தேவதாந்திர பஜனத்துக்கு பரிகரமான தோள்களைத்  துணித்தான்
ஒரு கையால் அஞ்சலி பண்ணினால் கையைப் பறிப்பதாக சொல்லா நின்றது இறே –

பள்ளி கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே-
பட்டர் அருளிச் செய்ய குறிப்பாக கேட்டு இருப்பதொரு பாட்டு -என்று அருளிச் செய்வர் –
பகுவாய் அலவன் கமலத்தின் இடைப் பள்ளி பட்டது –
நள்ளியானது கர்ப்ப தாரணத்தாலே கேதித்து இருக்க
அதுக்கு இனியது தேட வேணும் -என்று மதுவுக்காக   போந்த அலவன் ஆனது 
தாமரைப் பூவில் வந்து இழிய கொள்ள
போது அஸ்தமிக்கையாலே
உடம்பைக் கொண்டு அங்கே இங்கே புரண்டு ராத்திரி அதிலே தங்கி –
அதிலே தாதும் சுண்ணமும் உடம்பிலே நிழல் இட்டு தோற்ற
போது விடிந்த வாறே வந்தது –

இது போன போதே தொடங்கி-கதவைத் திறந்து வரவு பார்த்து கொடு நின்ற நள்ளி யானது
இத்தைக் கண்டு
ராத்திரி தங்கின படியாலும்
உடம்பிலே சுவடு இருந்த படியாலும்
இது வெருமன் அல்ல என்று முகம் மாறி கதவை அடைத்து உள்ளே போய்ப் புக்கது

இத்தை பட்டர் அருளிச் செய்த அநந்தரம்
பிள்ளை திரு நறையூர் அரையர்
ஆராய்ந்து குற்றம் நிரம்பினால் பின்னை அன்றோ தண்டிப்பது -என்ன
என் செய்வோம் கேள்வி இல்லாத படி   பெண்ணரசு நாடாய்த்து -என்று அருளிச் செய்வர்  –

———————————————————

படை எடுத்து வந்த வாணன் கர சேதம் முக்கண்ணன் முதுகு காட்டி ஓடியது கீழே
அவ்வளவு இல்லாமல்
துர்வர்க்கம் எதிர் இட்ட வர
வென்ற சாதுர்யம்
இந்திரன் மழை பொழிய
குன்று எடுத்து ஆநிரை காத்த விருத்தாந்தம்
இரண்டு இடங்களிலும் ஆழி அலங்காரமாகவே –

மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவிக்
குடையா வரை யொன்று எடுத்த ஆயர்கோவாய் நின்றான் கூர் ஆழிப்
படையான் வேத நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ்
நடையா வல்ல அந்தணர் வாழ நறையூர் நின்ற நம்பியே –6-7-7

மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவிக்
துர்வர்க்கம் அடைய அப்பஷத்தை திரண்டு வந்தது ஆயத்து
பூமிப் பரப்பு அடங்கலும் நெளியும் படி நெருங்கி சாயுதராய் வந்த ராஜாக்கள் முடிய
கையில் ஆயுதம் கொண்டு வியாபாரிக்க ஓர் அவகாசம் அறும்படி அர்ஜுனன் உடைய தேரை நடத்தி

குடையா வரை யொன்று எடுத்த-
இந்த்ரன் உடைய கல் வர்ஷத்தை பரிஹரிக்கைக்காக
கைக்கு எட்டிற்று ஒரு மலையை
வர்ஷத்துக்கு பரிஹாரமான குடையை எடுத்து –
ஒரு மலையை எடுத்தானாய் இருக்கை அன்றிக்கே
அநாயாசமாய் இருந்த  படி –

ஆயர் கோவாய் நின்றான்-
அந்த இந்த்ரன் தானே வந்து கோவிந்த அபிஷேகம் பண்ணும் படி
இடையருக்கும் பசுக்களுக்கும் நிர்வாஹகனாய் நின்றான்-
(ஸ்ரீ கோவிந்த குண்டம் இன்றும் அங்கு உண்டே )

கூர் ஆழிப் படையான் –
கையிலே திரு ஆழியும் இருக்கச் செய்தேயும் யாய்த்து மலையை எடுத்தது –
பசியிலே நலிந்தோம் ஆகில் தானே தவிருகிறான் –
அவ்வளவும் நாம் பரிகரத்தை நோக்குவோம் -என்று பார்த்தான் –

வேத நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ் நடையா வல்ல அந்தணர் வாழ நறையூர் நின்ற நம்பியே   –
இவையே யாத்ரையாம் படி கை வந்து இருக்கிற  பிராமணர் வர்த்திக்கிற தேசம்
தங்களை நோக்குகைக்காக
தங்கள் உடைய வித்யா  வ்ருத்தங்களால்
அவன் தன்னையும் நோக்க வல்லார்கள் ஆயத்து –
(ஸ்வரூப ரக்ஷணம் -மங்களா சாசனம் செய்தல் இது அன்றோ வாழ்கை )

———————————————————–

கீழ் சொன்ன பாரத சமரத்துக்கு காரணம் இதில் –

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர்  கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும்  அனைய பெருமையோர்
நந்தா  வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே –6-7-8-

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் –
பந்து கொண்டு லீலா நோதம் பண்ணுமது ஒழிய
பரிபவத்துக்கு யோக்யதை அல்லாத த்ரௌபதி பரிபூதையாய் குழலை விரித்து
இது என்னுடைய சத்ருக்களை அழியச் செய்து
அவர்கள் தலை மேல் இருந்து அல்லது
முடிப்பது இல்லை -என்று பிரதிஞ்ஞை பண்ண –

பாரதத்துக் கந்தார் களிற்றுக் கழல் மன்னர்  கலங்கச் சங்கம் வாய் வைத்தான் –
ராஜாக்கள் தூசி ஏறின யுத்தத்திலே
கம்பத்தை முறித்துக் கொண்டு திரிகிற மத்த கஜங்களை
மேல் கொள்ள வல்லரான
வீரக் கழலை உடைய ராஜாக்கள் முழுக்காயாக அவியும்படி
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்தான் ஆய்த்து   –

செந்தாமரை மேல் அயனோடு சிவனும்  அனைய பெருமையோர் நந்தா  வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே  –
தனித் தனியே சிருஷ்டி சம்ஹாரத்துக்கு ஷமராய்
ப்ரஹ்ம ருத்ரர்களில் காட்டில் ஏற்றமான ஔதார்யத்தை உடைய
பிராமணர் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

——————————————————————

கோவிந்தா என்றவள் குழல் முடிக்க பாரதப்போர் கீழ்
கபாலி=துர் அபிமானி -எங்கும் திரிய
பிக்ஷையிட்டு ரஷித்த குணம் இதில் –

ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம்
நீறும் பூசியேறூரும் இறையோன் சென்று குறை யிரப்ப
மாறு ஒன்றில்லா வாச நீர் வரை மார்வகலத்து அளித்து உகந்தான்
நாறும் பொழில் சூழ்ந்து அழகாய நறையூர் நின்ற நம்பியே–6-7-9-

ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம் நீறும் பூசியேறூரும்
என்னுடைய ரஷணம் நானே பள்ளிக் கொள்ள வல்லேன் -என்று
துர்மானத்தைப் பண்ணி அதுக்கு ஈடான
அடையாளங்களை  உடையனாய் இருக்கிற
தன் ஜடையில் ஏக தேசத்தில் கங்கையை தரித்து -( கங்கா தரன் )
போக பிரதானன் என்று தோற்ற சந்த்ரனையும் தரித்து -( சந்த்ர சேகரன் )
சர்ப்பத்தையும் அடப்பம் பூவையும் ஜடையிலே அணிந்து –
அடம்பம் பூ
கடம்பம் மர விசேஷ பூ –
உடம்பிலே பஸ்மத்தையும் அணிந்து
ருஷபத்தை நிர்வஹியா நின்றுள்ள

இறையோன் சென்று குறை யிரப்ப-
இறையோன் உண்டு –
ஈஸ்வர அபிமாநியானவன்
லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமாய் இருக்கிற
ப்ரஹ்மாவின் உடைய தலையைச் சேதித்து
அத்தாலே பாதகியாய்க் கொண்டு
சர்வேஸ்வரன் திருவடிகளில் தன் குறையை அறிவிக்க –

மாறு ஒன்றில்லா வாச நீர் வரை மார்வகலத்து அளித்து உகந்தான்
சர்வ கந்த -என்கிற -திரு மேனியிலே
ஸ்வேத ஜலத்தைக் கொடுத்து
மதிப்பனாய்த் திரிகிற இவன் உடைய குறையை தீரப் பெற்றோம் -என்கிற இத்தால்
தான் உகந்தான் ஆய்த்து –

நாறும் பொழில் சூழ்ந்து அழகாய நறையூர் நின்ற நம்பியே  –
சர்வ கந்த -என்கிற வஸ்துவையும் துவக்க வற்ற
பரிமளத்தை உடைத்தான பொழிலாலே சூழப் பட்டு
தர்ச நீயமாக இருக்கிற திரு நறையூர் –

—————————————–

நன்மை யுடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
பன்னி யுலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள்
மன்னி யுலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே –6-7-10-

நன்மை யுடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை –
அநந்ய பிரயோஜனரான பிராமணர் வர்த்திக்கிற
திரு நறையூரிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற
கல்யாண குண பூரணன் ஆனவனை  –

கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை —
அரணாக போரும்படியான மதிளாலே சூழப் பட்ட
திரு மங்கைக்கு ராஜாவான ஆழ்வார்
ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையை

பன்னி யுலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள்
லோகத்திலே ஆராய்ந்து சொல்லுமவர்கள் உடைய அருகே
பாபங்கள் ஆனவை கிட்டாது –
பாபங்கள் வரப் போக்க வேணும் என்று அர்த்திக்கும் படி இருக்கை அன்றிக்கே
இவ்விடம் நமக்கு இருப்பிடம் அன்று என்று பிராக்தமான
பாபங்கள் தானே விட்டுப் போம்

மன்னி யுலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே –
சம்சாரத்தில் நெடுநாள் இருந்து
ஐஹிக போகங்களையும் புஜித்து
பின்னை பரம பதத்தே போய்
நித்ய ஸூரிகள் ஆதரிக்க
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

————–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

ஆளுமவன் தான் தனக்காட் செய்யும் அறிவு அருளி
ஆளறக் கொள் நம்பி புகழ் பேறாய்த் தான் -ஆள் கொள்வான்
நன்னறையூர் நின்றான் அங்காட் செய்து உயும் என்றான்
மங்கையர் மன்னன் எம்மான் -57-

புகல்-ரக்ஷகன் /பேறு-பெரும் பலன் புருஷார்த்தம் /
சேஷிக்கு உகந்த அடிமை செய்வதே உய்வதற்கு ஆறும் பேறுமாகும்–

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-6-6—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

ருத்ரனுக்கு 70 கோயில்களைக் கட்டி
பின்பு இங்கு வந்து பக்ந அபிமானனாய் ஆஸ்ரயித்து அபிமதம் –
ஐஹிக -ஆமுஷ்மிகம் பெற்றான்
உள்ளத்து சொல்வது போல் பர உபதேசம் –
கீழே திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்து
இங்கு பர உபதேச முகத்தால் உள்ளத்துக்கு
கீழே உள்ள பிரகரணத்துடன் சேர வேண்டுமே –
மணி மாடக் கோயில்
அனைவருடன் ஸ்நிக்தமான சாளக்ராம திருமேனி
கல் கருடன் சேவை பிரசித்தம் –

அம்பரம் பிரவேசம் –

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனானவன் வந்து நிற்கிற  தேசம்
திரு நறையூர் என்று அனுசந்தித்தார் –
நமக்கு அந்த ஸ்நேஹமும் இன்றிக்கே
தாந்தரும் அன்றிக்கே இருக்கிற நாம்
(தாந்தி சாந்தி தம சம -உள் வெளி இந்திரிய அடக்கம் )
ஆஸ்ரயிக்கும் படி எங்கனே -என்கிற
திரு உள்ளத்தைக் குறித்து

தான் துர் மாநியுமாய்
ஸ்நேஹமும் இன்றிக்கே
இருக்கிற ராஜா தான்
ஸ்ரீ மார்கண்டேய பகவானைப் போலே
தேவதாந்திர பஜனம் பண்ணி
அங்கு தன்னுடைய அபிமதம் தலைக் கட்டிக் கொள்ளப் பெறாமையாலே
இங்கே வந்து
பக்ன அபிமானனாய்
திருவடிகளிலே விழுந்து ஆஸ்ரயித்து
ஐஹிக  ஆமுஷ்மிகங்கள் இரண்டையும் பெற்றுப் போனான் –

ஆன பின்பு
திரு நறையூரை ஆஸ்ரயி என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து
பர உபதேச பிரவ்ருத்தர் ஆகிறார் –

நம்பி ஒரு வாள் கொடுத்து அருள
அத்தைக் கொண்டு பூமியை அடைய தன் காலின் கீழே இட்டுக் கொண்டான் -என்று
ஒரு பிரசித்தி உண்டாய்த்து –

—————————————————————–

அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வட மரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூட கிற்பீர்
வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-1-

அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் –
ஆகாசத்தையும்
பரப்பை உடைத்தான பூமியையும்
திக்குகள் எட்டையும்
ஷோபத்தை உடைத்தான கடலையும்
பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற குல பர்வதங்களையும்
அமுது செய்த கண்டத்தை உடையவன் –

கொம்பமரும் வட மரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூட கிற்பீர் –
தழைத்த கொம்பை உடைத்தான
ஆல மரத்தின் இலையிலே கண் வளர்ந்து அருளின
அகடி தகடநா சாமர்த்தியம் உடையவன்
திருவடிகளை பெற வேண்டி இருப்பீர்  –
(நித்ய யுக்த -சதத யுக்தாம் -நித்தியமாக சேர்ந்து இருக்க ஆசை இருக்க வேண்டுமே )

வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு-
பரிமளத்தை புறப்பட வருகிற செண்பகத்தில் உண்டான
பரிமளத்தைப் புஜித்து
அத்தாலே நரை திரை (மூப்பு )மாறி
அச் செண்பகத்தில் உண்டான வெக்கையை  மாற்றும் ஆய்த்து
மகிழம் பூவிலே படிந்து –

செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –
செம்பியன் கோச் செங்கணான் -அவன் தனக்கு பெயர்
அவனுடைய அகடிதகட நா சாமர்த்தியம் உடன்
இந்த வண்டுகள் மகிழம் பூவிலே படிந்த இத்துடன்
வாசி அற
உத்தேச்யமாய்த்து இருக்கிறது இவருக்கு
அவ் ஊரில் உள்ளதாகையாலே –

(இத்தால் அவனுடைய அகடிதககடநா சாமர்த்யத்தோடு
இவையும் இவருக்கு உத்தேச்யம்
இருவரும் திவ்ய தேசம் உத்தேசியமாய் உகந்து அருளி வசிக்கிற படியால்
மணி அழகாய் கிழத்தன்மை போய்
செண்பகம் போன வண்டு -அவ் ஊரில் உள்ளவர்களாய் –
வர்ஜனீயமான பிராகிருத போகங்களை புஜித்தும் -ஸ்வரூப நாசம் போகாமல்
பகவத் அனுபவத்தால் போன படி-
ஆனால் அது இவருக்கு உத்தேஸ்யமோ என்னில்
திவ்ய தேச வாசித்தால் -செய்தாரேல் நன்றே செய்தார் என்னும் அவன் அன்றோ
இவர்களையும் அவன் கைக் கொள்ளுவதால்
ஆகவே அவர்கள் எனக்கும் உத்தேச்யர்களே )

—————————————————————

கீழே பிரளயம் ஆலிலை சயனம்
இதில் மத்ஸ்ய அவதாரம்
பிரளயத்தில் ஓடி விளையாடி
ஒரு லக்ஷம் யோஜனை பெரிய உருவத்துடன்
க்ருதமாலா -பாண்டியன் -கையில் -வந்து -வளர்ந்து –
கடாக்ஷத்தாலே ரக்ஷித்து அருளும் எந்தை அன்றோ ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி –

கொழுங் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீதோடி யண்டத் தப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் இன வண்டாலும்
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி  வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-

கொழுங் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீதோடி யண்டத் தப்பால் எழுந்து இனிது விளையாடும் ஈசன்-
மிக்க ஜலமானது பூமியை அடையக் கொண்ட காலம் –
கொழு விதமான-த்ருடமான கயலாய்
குல வரைக்கு மேலே போய் அண்ட பித்தி அளவும் செல்லத் துள்ளி
ஸ்வைரமாக லீலா ரசம் அனுபவிக்கும் ஸ்வ தந்த்ரன்  –

எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் –
வகுத்த ஸ்வாமி யானவன் திருவடிகளை ஆஸ்ரயித்து-
ஆனந்த நிர்ப்பரராய் இருக்க வேண்டி இருப்பீர் –

இன வண்டாலும்-
இன வண்டு -திரண்ட வண்டுகள் ஆனவை –
சசப்ரம ந்ருத்தம் பண்ணா நிற்பதாய் –

உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள –
உழுகிற செய்களிலே வரம்புகளிலே மணிகளைக் கொடு வந்து சிதறா நிற்பதாய்
லோகம் அடங்கலும் அகிலையும் சந்தனத்தையும் கொள்ளை கொள்ளும்படியாக –

செழும் பொன்னி   வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –
தர்ச நீயமான பொன்னியானது சம்ருதிகளைக் கொடு வந்து கொடுக்கிற திரு நறையூர் என்று
ஊருக்கு விசேஷணம் ஆதல்
அன்றிக்கே
சோழன் தனக்கு விசேஷணம் ஆதல்

அவனுடைய
விலாச  சேஷ்டிதங்கள் உடன்
காவேரியினுடைய ஸ்வைர சஞ்சாரத்தோடே
வாசி அற
இவருக்கு உத்தேச்யமாய் இருக்கிறது காணும் அங்கு உள்ளது ஆகையாலே –

—————————————————————

பெரிய மீனாக துள்ளி விளையாடும் அளவு அன்றிக்கே
ஜெகதாகாரன்
விஸ்வரூபம் போல் இதுவும்
விராட் ஸ்வரூபம்
பாதம் பாதாளம் -இத்யாதி -த்யானம் பண்ண -ஸூகர் இடம் திரும்பி
தாமரைக் கண்ணன் -அசாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹம் த்யானம் எளிமை அன்றோ –

பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா
செவ்வி மாதிரமெட்டும்  தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர்
கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல்  மன்னர் மணி முடி மேல் காகமேறத்
தெய்வ வாள் வலங் கொண்ட சோழன்  சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-2-

பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா –
கடல் நீரானது திருப் பீதாம்பரமாய் –
பூமிப் பரப்பு அடைய திருவடிகளாய்-
வாயு ஸ்கந்தமானது ( கூட்டமானது ) திரு மேனியாகவும்  –

செவ்வி மாதிரமெட்டும்  தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர்   –
அழகிய திக்குகள் எட்டும் திருத் தோள்கள் ஆகவும் (அஷ்ட புஜ கரத்தான் )
அண்ட பித்தியானது திரு அபிஷேகமாகவும்
இப்படி ஜகதாகாரனாய் இருக்கிற சர்வேஸ்வரன் திருவடிகளை கிட்ட வேண்டி இருப்பீர் –

கவ்வை மா களிருந்தி –
பெரிய மிடுக்கை உடைத்தாய்
கதறிக் கொடு வருகிற ஆனையைத் தள்ளி –

விண்ணி ஏற்றிக் கழல்  மன்னர் மணி முடி மேல் காகமேறத்
விண்ணி -என்று யுத்த பூமிக்கும் படை வீட்டுக்கும் பெயர்
யுத்தத்தில் வந்து எதிர்ப்பாராய்
வீரக் கழலை உடையராய் இருக்கிற ராஜாக்கள்
முடிகளிலே
காகமானது படியும் படியாக –

தெய்வ வாள் வலங் கொண்ட சோழன்  சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே-
ஆயுதத்தைக் கொண்டு வ்யாபரித்தான் ஆய்த்து-

அவன் ஜகதா காரனாய் நிற்கிற நிலையோடு
இவன் யுத்தத்தில் பராக்ரமித்ததோடு
வாசி அற -இவருக்கு
உத்தேச்யமாய் இருக்கிறது காணும்
அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே –

——————————————————————

ஜெகதாகார அனுபவம் கீழ்
அதுக்கு உப யுக்தமாய் எங்கும் வியாபித்த
நரஸிம்ஹ அனுபவம் இதில் –

பைங்கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கிப் பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி  பொங்குவித்தான் அடிக் கீழ் நிற்பீர்
வெங்கண் மா களிருந்தி விண்ணி யேற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம்மா வுய்த்த
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-4-

பைங்கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கிப் பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி –
ஜாதி உசிதமான கண்ணில் பசுமையை உடைத்தாய் இருக்கிற நரசிம்ஹமாய் –
பார்த்த பார்வையாலே அஞ்சும் படியாக நோக்கி –
வர பலத்தாலே திண்ணியதான தோள் உடைய ஹிரண்யன் பக்கலில்
பிற்காலியாதே சென்று  கிட்டி
மடியைப் பிடித்து இழுத்து –

அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி  பொங்குவித்தான் அடிக் கீழ் நிற்பீர் –
வெறும் புறத்திலே அழகியதாய் –
ஒளியை உடைத்தாய் இருக்கிற திரு உகிரில் ஏக தேசத்தாலே
ஹிரணியன் சரீரமானது ருதிர வெள்ளம்  கொழிக்கும் படியாக
பண்ணினவன் திருவடிகளைப் பெற வேண்டி இருப்பீர் –

வெங்கண் மா களிருந்தி விண்ணி யேற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம்மா வுய்த்த –
வெவ்விய கண்ணை உடைத்தாய் இருக்கிற ஆனையை தள்ளி
யுத்தத்திலே வந்து எதிர்ந்த  ராஜாக்கள் உடைய திறல்
அழியும் படியாக
குதிரையை நடத்தினவன் வர்த்திக்கிற தேசம் –

செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –
அவன் ஆஸ்ரித விரோதிகளைப் போக்கினதோடு
இவன் யுத்தத்தில் வ்யாபரித்ததோடு
வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும்
இவருக்கு –

———————————————–

கீழே வியாப்திக்கு நரஸிம்ஹ அனுபவம்
அதுக்கு அடுத்த
வாமன திரி விக்ரம பெருமாள் -அனுபவம் –
மீண்டும் நரஸிம்ஹ அனுபவமும் இதில் உண்டே –

அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய்  இரணியனதாகம் கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செல யுய்த்தாற்கு விருந்தாவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —6-6-5-

அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய்  இரணியனதாகம் கீண்டு வென்றவனை –
த்ரை லோக்யத்தையும் தன் கால் கீழே இட்டுக் கொண்டு
நாட்டிலே நடை யாடாத  ஒரு  நரசிம்ஹமாய்
ஹிரண்யன் உடைய சரீரத்தைக் கிழித்து வென்று –

விண்ணுலகில் செல யுய்த்தாற்கு –
ஸ்வ ஹஸ்த வதத்தாலே
வீர ஸ்வர்க்கம் பெற்றான் என்னக் கடவது இறே-

விருந்தாவீர் –
அவனுக்கு அதிதீ வர்க்கமாய் புக்கு அந்வயிப்பீர்-

மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து  பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் –
கிளர்ந்து கொண்டு
நடுவே தகைந்து கொண்டு இருக்கிற மலைகளை முறித்து
அந்த மலைகளிலும் சஹ்யத்திலும் உண்டான
பொன்களையும் மணிகளையும் கரையிலே  கொடு வந்து சிந்துமாய்த்து –

புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் –
வெளி நிலம் உள்ள இடம் எங்கும் பரந்து
பூமிப் பரப்பு அடங்கலும் தானே கைக் கொள்ளும் ஆய்த்து –
பொன்னி நாடன் -பொன்னி நாட்டை உடையவன் –

தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே  –
ஆக மூன்று ராஜ்யமும் தானே ஆண்டான் ஆய்த்து –
(தென் தமிழன்- சேர பாண்டிய/ வடபுலக் கோன்-தொண்டை வடநாடு / சோழன்-மத்ய
புலம் பூமி )

அவன் பூமியை அடைய அளந்து  கொண்டத்தோடு
இவன் பூமியை அடையத் தானே நெருக்கி ஆண்டத்தோடு
வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இவருக்கு
அவனை  ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே –

(எம்பார் -கொண்டாட -எல்லாம் எம்பெருமானார் சம்பந்தம் என்பதால் உண்டே என்ற ஐதிக்யம் –
திருவடி மஹாத்ம்யம் இல்லை என்னப் போகாதே -)

—————————————————————-

மூன்று லோகங்களையும் காலில் கீழே இட்டுக் கொண்ட
மூ உலகும் தான் ஆனான்
ஜகத் சர்வம்
சர்வம் கல் இதம் ப்ரஹ்ம
வியாப்தி புதுக் கணித்த -நீக்கமற நிறைந்து இருக்கும்
உபய விபூதி நிர்வாகம்- கிருஷ்ணன் அனுபவம் –

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய்
தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய் தானாயன் ஆயினான்  சரண் என்று உய்வீர்
மின்னாடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏறத்  தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென்னாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே  —6-6-6-

குட-மேற்கு –

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் –
தன்னுடைய ஸ்வரூபாதிகளை
ஸ்வா தீனமாக வுடையவன் ஆகையாலே
இதர விசஜாதீயனாய் உள்ளவன் –
(பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரன் -அநன்யாதிபதி )
தன்னுடைய ஸ்வரூப ஸ்திதியாதிகள் தானிட்ட வழக்காம் படி
இருக்குமவன் ஆய்த்து ஈஸ்வரன் –

தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய்-
க்ருதகம்-அக்ருதகம் -க்ருதக அக்ருதகம் -என்று
மூன்று வகையாக சொல்லப் படுகிற
லீலா விபூதி அடைய தானிட்ட வழக்காக  உடையவனாய்  –
(பூ புவ சுவ -க்ருதகம் நைமித்திக பிரளயத்தில் அழியும்
மகர் லோகம் அழியாது -மேல் லோகம் போவார்கள் ஆகவே க்ருதாக்ருதகம்
ஜன இத்யாதி அக்ருதகம் )

தன்னது என்னும் அத்தாலே
மிக்க ஒளியை உடைத்தாய்க் கொண்டு
அசைந்து வருகிற -பளபளத்து வருகிற மூ வுலகும் -என்னுதல்-
அன்றிக்கே
தயங்கொளி சேர்-மூர்த்தி என்று வடிவுக்கு விசேஷணம் ஆதல் –

வானாய்-
நித்ய விபூதி நிர்வாகன்

தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய்
அந்த லீலா விபூதியினுடைய
ஸ்ருஷ்டியாதிகளுக்கு அனுரூபமான மூன்று வடிவை உடையவனாய் –
(ஆதி ரக்ஷணம் ஸம்ஹாரம் )

ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணியும் –
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்த ராத்மாவாய் நின்று
சிருஷ்டி சம்ஹாரங்களை நடத்தியும்
இப்படி மூன்று கார்யத்துக்கும் ஈடான
மூன்று வடிவையும் உடையவனாய் –

தானாயன் ஆயினான்  சரண் என்று உய்வீர் –
இப்படிப் பட்ட தான்
லீலா விபூதியிலே தன்னுடைய விபூதி பூதரிலே சிலர்
இவன் எனக்கு மகன் -என்று அபிமாநிக்கும் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன்
நமக்கு புகல் என்று உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர் –
மாம் ஏகம் -என்றவனுடைய திருவடிகளையே பற்றி உஜ்ஜீவிக்கப் பார்ப்பீர் –

மின்னாடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏறத்  தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட –
ஒளி வர்த்தியா நின்று உள்ள வேலைக் கையிலே உடைய
விளைந்த வேள் ஆகிற குறும்பனை ( சிற்று அரசனை )
வீர ஸ்வர்க்கத்து ஏறப் போம் படி ஏக பிரயோகத்திலே வேலை நடத்தி
ஜகத்தை அடைய தான் இட்ட வழக்காம் படி நிர்வஹித்த ராஜாவானவன்
கிட்டி ஆஸ்ரயித்த திரு நறையூர் –

தென்னாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே    –
பாண்டிய நாட்டையும்
மேல் கொங்கையும்
கொண்ட சோழன் சேர்ந்த —
சர்வேஸ்வரன் உடைய ஜகதா காரதையோடு
இவன் மூன்று ராஜ்யத்தையும் நிர்வஹித்ததோடு
வாசி அற
உத்தேச்யமாய் இருக்கிறது ஆய்த்து
அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்தது ஆகையாலே –

——————————————————

ஆயன் பிரஸ்த்வமானது கீழே
சேஷ்டிதங்களை அனுபவிக்கிறார் இதில்

முலைத் தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி  முது துவரைக் குலபதியாக் காலிப்  பின்னே
இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-7-

முலைத் தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி  –
பூதனை முடியும்படி
அவளுடைய வடிவுக்கு தக்க
பெரிய முலையை உண்டு

முது துவரைக் குலபதியாக் காலிப்  பின்னே இலைத் தடத்த குழலூதி
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
பசுக்களின் பின்னே பெருத்த இலைக் குழலை ஊதிக் கொடு போய் -அவற்றை மேய்த்து –

ஆயர் மாதர் இன வளை கொண்டான் –
மீண்டு திரு வாய்ப்பாடியிலே புகுந்து –
இடைப் பெண்கள் உடைய வளை தொடக்கமான வற்றை கொண்டவன்

அடிக் கீழ் எய்த கிற்பீர் –
திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்

மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனலம் பொன்னி நாடன்  –
மலைத் தாழ்வரைகளில் உண்டான ரத்னங்களைக் கொடு வந்து
பூமி அடைய உஜ்ஜீவிக்கும்படி சம்ருத்தியைத் தள்ளா நின்றுள்ள
ஜல சம்ருத்தியை உடைத்தாய்
தர்ச நீயமான பொன்னி நாட்டை உடையவன் –

சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –
பெரிய ஆண் பிள்ளை யானவன்
அவ் வாண் பிள்ளை தனத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக
ஆஸ்ரயிக்கிற தேசம் –

——————————————————-

ரத்நாதிகளை கொழித்துக் கொடு வருகிற ஆற்று வரவோடு –
கிருஷ்ணன் இடைப் பெண்கள் உடைய துகில்களையும் வளைகளையும்
வாரிக் கொடு வருகிற வரவோடு வாசி அற –
உத்தேச்யமாய் இருக்கிற படியை சொல்லிற்று -கீழ்ப் பாட்டில் –
இப்பாட்டில் –
நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனாய் இருக்கும் இருப்போடு
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்த செயலோடு வாசி அற
உத்தேச்யமாய் இருக்கிற படி சொல்லுகிறது –

முருக் கிலங்கு கனித் துவர் வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச்  சென்று வென்றிச்
செருக் களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக் கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு  எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8-

முருக் கிலங்கு கனித் துவர் வாய் பின்னை கேள்வன் –
முருக்கம் பூ போலேயும்
விளங்கா நின்றுள்ள கனி போலேயும்
இருக்கிற அதரத்தை உடைய
நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் –

மன்னெல்லாம் முன்னவியச்  சென்று வென்றிச் செருக் களத்து திறல் அழியச் –
ராஜ லோகம் அடங்க வழிப் போக்கிலே முடியும் படி
யுத்த பூமியிலே சென்று கிட்டி –

செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்-
இந்த பிராதி கூல்யத்துக்கு ஹேது பூதனான
சஹஸ்ர பாஹூ வர்ஜுனன் உடைய மிடுக்கு எல்லாம் போய்
அவன் முடிந்து போம் படிக்கு ஈடாக
தலைகளைத் துணித்த சர்வேஸ்வரன் திருவடிகளை
உங்கள் தலை மேலே வைக்க வேண்டி இருப்பீர் –

இருக் கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு  –
வேதத்தில் ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளை உச்சரியா நின்றுள்ள
வாயை உடையராய்
எட்டுத் தோள்களையும் உடையராய் இருக்கிற தேவர்க்கு -(ருத்ரன் )
(எல்லா வேதங்களிலும் புருஷ ஸூக்தம் உண்டே )

எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட-
தர்ச நீயமான மாடங்கள் எழுபதும் சமைத்து
பின்னையும் தம்முடைய அபிமதம் கிடையாமையாலே
அவ் வபிமத சித்யார்த்தமாக –

திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே-
அவன் வந்து ஆஸ்ரயிக்கிற தேசம் –

—————————————————————

கீழே விபவ அனுபவம்
ப்ரீதி அதிசயத்தால் பரத்வாதி பஞ்சகங்களையும் அனுபவம்
அன்றிக்கே
கீழே கிருஷ்ண அனுபவம் ஸ்வா பாவிக ஆகாரத்துடன் கொண்டாடுகிறார்

தாராளன்  தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேராளன் ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்
பாராளர் அவரிவர் என்று அழுந்தை ஏற்றப் படை மன்னர் உடல் துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —-6-6-9-

(தாராளன்  -பரத்வம்
தண்ணரங்க வாளன் –அர்ச்சா
பூ மேல் தனியாளன் -ஸ்ரீ யபதி த்வம்
முனியாளர் ஏத்த நின்ற பேராளன் -வ்யூஹம்
ஆயிரம் பேருடைய வாளன் -அந்தர்யாமி தேவோ நாம சஹஸ்ரவான்
பின்னைக்கு மணவாளன்-விபவம் )

தாராளன் –
உபய விபூதியினுடைய ரஷணத்துக்கு
தனி மாலை இட்டு இருக்கிறவன்

தண்ணரங்க வாளன் –
ஜகத் ரஷணத்துக்கு உறுப்பாக கோயிலை வாசஸ் ஸ்தானமாக கொண்டு இருக்கிறவன் –

பூ மேல் தனியாளன் –
தாமரைப் பூவை இருப்பிடமாக உடையளாய்
அத்விதீயமான ஸ்த்ரீத்வத்தை உடைய
பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் –

முனியாளர் ஏத்த நின்ற பேராளன் –
கேவலம் ப்ரஹ்ம பாவனையேயாய் இருக்கிற
சநகாதிகள் ஏத்துகையால் வந்த பெருமையை உடையவன் –

ஆயிரம் பேருடைய வாளன் –
அனுபவிப்பாருக்கு இழிந்த இடம் எங்கும்
துறையாகும் படியாய் இருக்கிற
ஆயிரம் திரு நாமங்களை உடையவன் –

பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர் –
நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் உடைய
பெருமையைக் கேட்க வேண்டி இருப்பீர் –

பாராளர் அவரிவர் என்று அழுந்தை ஏற்றப் படை மன்னர் உடல் துணியப் –
பூமிப் பரப்புக்கு அடைய நிர்வாஹகராய்
இன்னார் இன்னார் என்று பிரசித்தராய் இருக்கிற
ராஜாக்கள் ச பரிகரரய்க் கொண்டு
திரு வழுந்தூரில் வந்து எதிரிட
அவர்கள் உடைய உடல் துணியும் படிக்கு ஈடாக –

பரிமா வுய்த்த தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –
குதிரை பூண்ட தேரை உடையவன் –

———————————————————–

செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங் கண் மாலைப்
பொய்ம் மொழி  யொன்றில்லாத மெய்ம்மை யாளன் புல மங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம் மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல்  பாடுவார் வியனுலகில் நமனார் பாடி
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே —6-6-10-

செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங் கண் மாலைப்-
யதா பூத வாதிகளாய்
வேதத்துக்கு வியாச பதம் செலுத்த வல்லராய்
இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற
தர்ச நீயமான மாடங்களை உடைய திரு நறையூரிலே வர்த்திக்கிற
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை  கவி பாடிற்று –

பொய்ம் மொழி  யொன்றில்லாத மெய்ம்மை யாளன்
அவ் வேத சப்தம் போலே இருக்கிற
சப்தத்தை உடையவர் –

புல மங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த அம் மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல்  பாடுவார் –
தர்ச நீயமான திரு மங்கைக்கு நிர்வாஹகரான திரு மங்கை ஆழ்வார்
அறிவு நிறைவு எல்லாம் பேச்சிலே தோற்றும்படியான
அப்படிப் பட்ட பேச்சை உடைய ஆழ்வார் உடைய இன்பப் பாடல் உண்டு
அனுபவத்துக்கு போக்கு விட்டுச் சொன்ன பாசுரம் -அத்தை –

வியனுலகில் நமனார் பாடி வெம் மொழி கேட்டு அஞ்சாதே-
புறம்பே உண்டு உடுத்து போது போக்குகிற
சம்சார விபூதியிலே
வ்யாவ்ருத்தராய்க் கொண்டு அதிகரிப்பார்
யம படருடைய குரூரமான சப்தம் கேட்டு அஞ்சாதே –

மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே-
மேல் பெரும் பேறு இருந்த படி சொல்லில் –
பரம பதத்திலே போய்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினார் -10-9-10- -என்கிறபடியே
நித்ய ஸூரிகள் எதிரே வந்து தந்தாம் இருப்பிடங்களிலே
கொண்டு புக்கு உயர வைத்துத் தாங்கள்
தாழ விருந்து
ஸ்ரீ பாதம் விளக்கி
கொண்டாடும்படியான பெருமையை உடையராய் ஆவார்கள் –

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

அம்பரம் தீ தானாய் அவை விழுங்கி ஆயன் அரி
அம்மீனாயத் தோன்று நம்பி சேர் நறையூர் அம்பணி செய்
செம்பியன் சீர் ஊர் எழிலுடன் செப்பும் சீர்க் கலியன்
செம் கழல் சேர்ந்து வான் ஆளும் –56-

செஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெறுக்கிப் புகப்
பொன் மிடறு அத்தனை போது அங்காந்தவன் –10-6-1-
வான் ஆளும் -ஆண்மின்கள் வானகம் -திருவாய் -10-9-6-
கலி wயனுடைய செம் கழல் சேர்வது வான் ஆள்வதற்கு ஒப்பாகும்
வான் செம் கழல் சேர்ந்து ஆளும் -உபய விபூதி -இங்கே இருந்து கிட்டும்-

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-6-5—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

(கீழே விஷயாந்தரங்களைக் குறித்து பரிபவம் -நெஞ்சுக்கு
தொழு என்ன
திரு உள்ளம் -இவ் விபூதியில் திரு நறையூர்
சரீரம் பரிணாம விஷயம் அன்றோ
பகவத் விஷயத்துக்கும் ஆளாக மாட்டோம்
என்றும் பஞ்ச விம்சதி நித்ய ஸூ ரிகள் உடன் கோவையாக அன்றோ வேண்டுவது என்ன
நாம் ஸ்த்ரீகள் உடைய பரிபவம் வேண்டாம் என்ற காரணத்தால் அன்றி
கேவலம் ஸ்வரூப அனுரூபமாகவே ஆஸ்ரயிக்க
பிரதிபந்தகங்கள் அனைத்தும் போக்கி கூட்டிச் செல்வான்
ஆஸ்ரயண விரோதி நிரஸனம் தொடங்கி நித்ய கைங்கர்யம் பெரும் வரை தானே அளிக்கும்
அதுக்கு ஈடான அவன் குண விசேஷங்களை அனுசந்தித்து கால ஷேபம் பண்ணுவோம் என்கிறார் இதில் -)

கலங்க முந்நீர் பிரவேசம் –

ஸ்திரீகள் உடைய பரிபவத்துக்கு பரிஹாரமாக திரு நறையூரிலே புக்கு
ஒதுங்குகை அன்றிக்கே
அங்கே போய்ப் புகவே
அம்ருத மதனம் தொடக்கமான அபதானங்களைப்  பண்ணி
தேவ ஜாதிக்கு உபகாரகனாய் –
ஆஸ்ரிதருக்கு உதவும் ஸ்வ பாவனாய்-
உதவும் இடத்து பிராட்டிமாரோடு  ஆஸ்ரிதரோடு வாசி அற உதவும்
ஸ்வ பாவன் வந்து நிற்கையாலே
அவ்வருகே உள்ளவை எல்லாம் அவன் தானே தலைக் கட்டித் தரும் –

அவன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் ஆகையாலே
முக்த ப்ராப்யமான பூமியோடு போலியான தேசம் என்று
அத் தேசத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

—————————————————–

இஷ்டம் கொடுத்தது இதில்
அநிஷ்டம் போக்கினது அடுத்த இரண்டு பாசுரங்கள்
அமுதம் கொண்டு நல்கு என்றாலே தேவர்களுக்கு என்று தோன்றுமே
இமையோர்-என்று தனித்து சொன்னது ப்ரயோஜனாந்தரர்களுக்கு –
ஈஸ்வரோஹம் என்று பின்பு எதிர் அம்பு கோக்குமவர்களுக்காக
நறையூர் இதுவே பண்ணிக் கொடுக்கும் -நெஞ்சுக்கு சங்கை போக்கி –
ஆகவே கீழ் போல் அங்கு போகலாம் சொல்ல வேண்டாமே இதில்

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய
வலங் கை யாழி இடங் கைச் சங்கம்  உடையானூர்
நலங் கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே –6-5-1-

நலங் கொள் வாய்மை-சத்யம் சொல் -உண்மையை உரைக்கும் சொல்
நலம் -வாய்மை பேச்சு -வாக் இந்திரிய வியாபாரம்

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு –
ஜல ராசியானது கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படி கடைந்து –
அம்ருதத்தை வாங்கி –
அசூர வர்க்கத்தாலே நோவு படுகிற தேவ ஜாதிக்கு கொடுத்து
இப்படிச் செய்தது அந்தப்புரத்துக்கு ஆதல்
அந்தப் புர பரிகரத்துக்கு ஆதல் அன்றிக்கே
இது பெற்ற அநந்தரம் -ஈஸ்வரோஹம் -என்று இருக்கும் தேவர்களுக்காக வாய்த்து –

சோதிச் சுடராய –
இவற்றின் நேர்த்தி அடைய தன்னதாய்
அம்ருத பானம் பண்ணுகையிலே அவர்களுக்கு அந்வயமாம் படி  கொடுத்து
அவர்கள் புஜிக்கப் பெற்றது  தன் பேறு என்னும் இடம்
வடிவில் புகரிலே தோற்ற இருக்கிறவன் –

வலங் கை யாழி இடங் கைச் சங்கம்  உடையானூர்-
அம்ருதத்தை புஜிக்கிற இவர்கள் உடைய
விரோதியைப் போக்குகைக்காக கையிலே
திவ்ய ஆயதங்களை தரித்துக் கொண்டு இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –

நலங் கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே –
யதா பூத வாதியான வேதம் கைப் பட்டு இருக்கிறவர்கள் -என்னுதல்
யதா பூத வாதிகளான பிராமணர் வர்த்திக்கிற ஊர் என்னுதல் –

————————————————-

கீழே காதாசித்கமாக விரோதி போக்கியது தேவர்களுக்கு –
எப்போதுமே விரோதிக்கும் அசுரனாகவே பிறந்த சிறுக்கனுக்கு
தன் பேர் சொன்னதே குற்றமாக தகப்பனே பகையாக இருந்த பொழுது
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப்பிரான்
அதே சமயத்தில் வந்து ரஷித்த வ்ருத்தாந்தம்

முனையார் சீயமாகி யவுணன் முரண் மார்வம்
புனை வாள் உகிரால் போழ் பட  வீர்ந்த புனிதனூர்
சினையார் தேமாம் செந் தளிர் கோதிக் குயில் கூவும்
நனையார் சோலை சூழ்ந்து அழகாய நறையூரே –6-5-2-

முனையார் சீயமாகி யவுணன் முரண் மார்வம் –
பூசல் என்னப் பணைக்கும் நரசிம்ஹமாய்
முனையில் அநபிபவ நீயனான  ஹிரண்யன் உடைய வர பலத்தாலே
பூண் கட்டின திண்ணிய மார்வை-

புனை வாள் உகிரால் போழ் பட  வீர்ந்த புனிதனூர் –
அழகுக்கு சேர்ந்தால் போலே ஒளியை உடைத்தாய்
தர்ச நீயமாய் இருக்கிற
திரு உகிராலே இரண்டு கூறாம் படி  கீண்டு பொகட்டு-

புனிதனூர்
1-ஆஸ்ரிதனுக்கு பிரதிஜ்ஞ சம காலத்திலேயே
உதவினான் என்கிற சுத்தியை உடையவன் வர்த்திக்கிற தேசம் –
2-ஆளிட்டு அந்தி தொழுகை அன்றிக்கே
தானே கை தொட்டுப் போக்கின சுத்தியை உடையவன் –

சினையார் தேமாம் செந் தளிர் கோதிக் குயில் கூவும் –
தழைத்து இருந்துள்ள தேமாக்களிலே
மது பானத்தைப் பண்ணின குயில்கள் ஆனவை
ரசாந்தரத்தை இட்டு அத்தை மாற்றுகைக்காக
அதினுடைய் தளிர்களைக் கோதி
முக்தர் சாம கானம் பண்ணுமா போலே இருந்து கூவா நிற்கும் –

நனையார் சோலை சூழ்ந்து அழகாய நறையூரே –
செவ்விப் பூ மாறாதே என்றும்
நித்ய வசந்தமான பொழிலாலே சூழப் பட்டு
தர்ச நீயமான திரு நறையூர் –
நனை -பூ மொட்டு –

—————————————————-

ஆஸ்ரிதனுக்கு உதவியதை கீழே சொல்லி
அதுவும்
பிராட்டிக்கு உதவினால் போல் உதவினான் என்று காட்டி அருள
தசராத்மஜன் விருத்தாந்தம் இதில் –

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே–6-5-3-

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்-
ராவணனுடைய படை எழுச்சியை
அந்த க்ரமத்திலே  பேசுகிறார் –
மலைகள் நடந்தால் போலே யானைகளைப் புறப்பட விட்டு
அநந்தரம் –
குதிரைகளை விட்டு
அநந்தரம்  
தேர்களாலே அலங்கரித்து –
இவை அத்தனைக்கும் காவலாக காலாளைப் புறப்பட விட்டு
இப்படிப் பட்ட சேனா சமூஹத்தை துகைத்து கழித்து
இலங்கையை அழியச் செய்த
தசரதாத் மஜன் வர்த்திக்கிற ஊர் –
(ஒரு வில்லால் செற்றவன்-தாசாரதி பெயரே உகக்கும் பெருமாள் – )

மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து-
நிலப் பண்பாலே சில மலைகளைப் போலே யாய்த்து
மத்ஸ்யங்கள் வளர்ந்து இருக்கும் படி –
அத்தைப் பிடிக்குமவர்கள் இரண்டு கையாலும் தழுவுவார்கள்
அவை பின்னையும் இவனைத் தள்ளா  உதறிப் போம்
அதிலே விழுந்த இவன் திரியவும் சாபலத்தாலே பிடிக்கக் கணிசிக்கும் –
மள்ளர் -என்று உழவர் –

நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே –
இத்தைக் கண்ட ஆமையானது தான் அஞ்சி வரம்பிலே நின்ற மஞ்சள் பற்றையிலே புக்கு  மறையும்
நானம் -மஞ்சள்
அன்றியே
நானப் புதலில் –
கருமுகையும் பிச்சியுமாய் நின்ற செடியிலே புக்கு மறையும்

—————————————

இஷ்ட ப்ராப்தியையும்
அநிஷ்ட நிவ்ருத்தியும் அருளிச் செய்தாராய்
அதுக்கு அடியான ஆஸ்ரித கர ஸ்பர்ச த்ரவ்ய ப்ராவண்யத்தை இதில் –

உறியார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றானூர்
பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட
நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே —6-5-4-

உறியார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு –
உறியிலே கள்ளக் கயிறு உருவி
சேமித்து வைத்த வெண்ணெயை (ஆத்மாவை கொண்டது போல் )
தெய்வம் கொண்டதோ என்னும்படி யாய்த்து அமுது செய்தது
இது இவனை ஒழியப் போகாது என்று உரலோடு சேர்த்துக் கட்டுவார்கள்
அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் ஒழியச் செல்லாமையாலே
கட்டுண்டு இருக்கும்
இரண்டுக்கும் -அத்தோடும் இவனோடும் -(உரலுக்கும் இவனுக்கும் )–வாசி அற்று இருக்கிறபடி –
வெண்ணெய் உண்கை – கட்டு உண்கை -இரண்டுக்கும் வாசி அற்ற படி –

வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றானூர் –
பரிமளம் மிக்கு இருந்துள்ள திருக் குழலை உடைய நப்பின்னை பிராட்டிக்காக
ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்தவன்
வர்த்திக்கிற தேசம் –

பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட –
பரப்பு மாறப் பூத்த பொழில்களின் மேலே
நாநா வர்ணமான மயில்கள் ஆனவை
ஆலியா நிற்கும் –

நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே –
செவ்வித் தாமரைப் பூவிலே
மது பான அர்த்தமாக இழிந்த வண்டுகள் ஆனவை அவற்றின் உடைய காலுக்கு இசையப் பாடா நிற்கும் –

———————————————–

உரலோடு கட்டுண்டவர்
மருத மரம் தவழ்ந்து சென்று நிரசித்தவன்
கட்டுப்பட்ட நம்மை விடுவிப்பானே அவன்
அவனே கட்டுப்பட்டு இருந்தாலும் ஆஸ்ரித விரோதிகளை நிரசிக்க வல்லவன்
நப்பின்னைக்காக வென்ற வ்ருத்தாந்தம் –

விடை ஏழ்  வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்ற மருதம் சாய்ந்த நாதனூர்
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று
நடையோடு இயலி நாணி யொளிக்கும் நறையூரே–6-5-5-

விடை ஏழ்  வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய் –
மிருது ஸ்வ பாவமான தோள் அழகை உடைய நப்பின்னை பிராட்டிக்காக
ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்தான் ஆய்த்து
அவளுடைய பிரேமத்தாலே-

நடையால் நின்ற மருதம் சாய்ந்த நாதனூர்-
தவழுகிற நடையாலேயே
அசூரா வேசத்தாலே பேராதே நின்ற மருதுகளை வேரோடு பறிந்து
விழும்படி  சாய்த்த சர்வ ரஷகன் வர்த்திக்கிற தேசம் –

பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று நடையோடு இயலி நாணி யொளிக்கும் நறையூரே
அன்னமானது பேடையோடே கூட
அங்குத்தை ஸ்திரீகள் உடைய நடை அழகைக் கண்டு
தானும் அப்படியே நடக்கைக்காக பின் செல்லும்
அந்நடை அழகு தனக்கு வாராமையாலே
லஜ்ஜித்து
அருகே ஒதுங்கா நிற்கும் –

—————————————————-

கீழே மரங்களை முறித்த அளவு
திரு ஆய்ப்பாடியிலும் ஸ்ரீ வடமதுரையில் செய்து அருளின அதி மானுஷ சேஷ்டிதங்களை
அருளிச் செய்து
இத்தால் சைசைவமோ பின்போ விரோதி நிரசன சீலத்தவம் ஒழியாமல் நடந்தமையை
அருளிச் செய்கிறார்

பகு வாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகு வாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்
நெகு வாய் நெய்தல்  பூ மது மாந்திக் கமலத்தின்
நகு வாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே —-6-5-6-

இரண்டு வரிகளால் பத்து வயசு சேஷ்டிதங்களை –
பூதநா நிரஸனம் தொடங்கி குவலயா பீடம் நிரசனம் வரை

பகு வாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு –
வடிவில் பெருமைக்கு தகுதியான பெரிய வாயை உடையளாய்
இவன் கிட்டி  வரச் செய்தேயும்  இரங்காத படியான நெஞ்சில்
வன்மையை உடையாளாய் இருக்கிற
பூதனையினுடைய முலையை உண்டு
அவ் வழியாலே பிராணனை முடித்து –

புகு வாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்-
புகுகிற வழியிலே நிறுத்தி வைத்தான் ஆய்த்து-குவலயாபீடத்தை
பிரமாதத்தாலே விளைந்தாய்
தான் மாதுலனாய்
கண்ண நீரை விழ விட்டு   துக்கம் கொண்டாடுவானாக
மலை முறிந்து விழுமா போலே
அது விழும்படி பொருத ஆண் பிள்ளை வர்த்திக்கிற தேசம் –

நெகு வாய் நெய்தல்  பூ மது மாந்திக் கமலத்தின் நகு வாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே –
கட்டவிழ்கிற   நெய்தல் பூவிலே
மது பானத்தைப் பண்ணி
கழிய வளர்ந்த தாமரைப் பூவைப் படுக்கையாக கொண்டு
அதிலே போய் சாயும் ஆய்த்து –

—————————————–

மதுரையில் புகுந்த யானையை முடித்த அளவோ
சாந்தீபன் பிள்ளையைக் கொண்டு கொடுத்த அதி மானுஷ சேஷ்டிதம் –

முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த
அந்தணாளன் பிள்ளையை யன் நான்று அளித்தானூர்
பொந்தில் வாழும் பிள்ளைக்காகிப் புள்ளோடி
நந்து வாரும் பைம் புனல் வாவி நறையூரே —6-5-7-

முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த அந்தணாளன் பிள்ளையை யன் நான்று அளித்தானூர்
முன்பே பழக
அபௌருஷேயமாய் போருகிற வேத அஷர ராசியையும்
வேத அத்யயனத்துக்கு அதிகாரம் உண்டாக்கிக் கொடுக்கிற
உப நயனாதி சம்ஸ்காரத்தையும்
பண்ணிக் கொடுத்த அந்தணாளன் உண்டு –
சாந்தீபநீ
அவனுடைய புத்ரனைக் கடல் கொள்ள
அவனை மீட்டுக் கொடுத்தவன் வர்த்திக்கிற தேசம் –
இழந்தார்கள் இழவுகள் தீர்க்குமவன் வர்த்திக்கிற தேசம் –

பொந்தில் வாழும் பிள்ளைக்காகிப் புள்ளோடி நந்து வாரும் பைம் புனல் வாவி நறையூரே-
மரத்தின் பொதும்பிலே வர்த்திக்கிற பிள்ளைக்கு
போஷகம் தேடித் புள்ளானது
கழியப் போய்ச் சங்குகளை வாரும் ஆயத்து
அதுக்கு அளவானவற்றை தேடிக் கொடுக்கிறோம் என்று –
நந்து என்று நத்தைக்கு பெயர் –

——————————————-

கீழே சர்வ சக்தித்வம் -உள்ளவன் கிடீர்
ஆஸ்ரிதற்கு கையாளாக இருந்தான் –

வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம்
விள்ளச் சிந்துக் கோன் விழ ஊர்ந்த  விமலனூர்
கொள்ளைக் கொழு மீன்  உண் குருகோடிப் பெடையொடும்
நள்ளக் கமலத் தேறல் உகக்கும் நறையூரே —6-5-8-

வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம்  விள்ளச் சிந்துக் கோன் விழ ஊர்ந்த  விமலனூர்-
வெள்ளைக் குதிரை பூண்ட தேரை உடைய விசயனுக்காய் –
அர்ஜூனனுக்காக
பெரிய மிடுக்கை உடைத்தான கையும் அணியுமாக வகுத்துக் கொடுக்கிற
சேநா சமூஹமானது  முடிந்து போம்படியாகவும்
ஜயத்ரதன் தலை அறுப்புண்ணும் படியாகவும்
ஆஸ்ரிதன் உடைய பிரதிஜ்ஞ சம காலத்திலேயே வந்து
உதவின ஓரத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம் –

கொள்ளைக் கொழு மீன்  உண் குருகோடிப் பெடையொடும் நள்ளக் கமலத் தேறல் உகக்கும் நறையூரே –
அது தான் சம்ருத்தமாய்
பெரிய வளர்த்தியை உடைத்தாய் இருக்கிற மத்ஸ்யத்தை புஜித்த
குருகு பேடையோடே கூடி
செருக்குப் போக்கு விட்டுப் போய்
செறிந்த இதழை உடைத்தாய் இருக்கிற தாமரைப் பூவிலே நிறைந்து இருக்கிற
தேனை உகக்கும் யாய்த்து  –

—————————————————-

அவதார பிரதான பிரயோஜனம் பூ பாரம் போக்கி அருளுவதே –

பாரை யூரும் பாரந் தீரப் பார்த்தன் தன்
தேரை யூரும் தேவ தேவன் சேருமூர்
தாரை யூரும் தண் தளிர் வேலி புடை சூழ
நாரை யூரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே –6-5-9-

பாரை யூரும் பாரந் தீரப் பார்த்தன் தன் தேரை யூரும் தேவ தேவன் சேருமூர் –
பொறுக்க மாட்டாத படியாய் இருக்கிற பூமியினுடைய பாரமானது போம் படியாக
அர்ஜுனன் உடைய தேரை நடத்தி –
தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்கிற
தன் மேன்மை கிடக்கச் செய்தே
ஆஸ்ரிதனுக்காக தாழ நின்று சாரத்தியம் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம் –

தாரை யூரும் தண் தளிர் வேலி புடை சூழ –
பூவை தோற்கும் படியான தளிரை உடைத்தான வேலியாலே சூழப் பட்டது -என்னுதல் –
தாரை என்று நினைக்கிறது தாரையாய்
அத்தாலே தேன் ஒழுகா நின்று உள்ள வேலி -என்னவுமாம் –

நாரை யூரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே –
நாரைகளின் உடைய சஞ்சாரத்தை உடைத்தாய்
அழகிய வயலாலே சூழப் பட்ட
திரு நறையூர் –

—————————————————————

தாமத் துளப நீண் முடி மாயன் தான் நின்ற
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல்
காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை
சேமத் துணையாம் செப்பு மவர்க்குத் திருமாலே–6-5-10-

தாமத் துளப நீண் முடி மாயன் தான் நின்ற
திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதமாய்
ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகத்தை உடையனாய்
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை உடையவனானவன் வந்து
வர்த்திக்கிற தேசம் –

நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல் —
இன்ன மாளிகை இன்ன மாளிகை என்கிற பிரசித்தியை  உடைத்தான
நெருங்கின ஒக்கத்தை உடைத்தான
மாளிகைகளாலே சூழப் பட்ட
திரு நறையூரிலே அருளிச் செய்தது

காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை –
அழகிய புகரை உடைத்தான
காமம் என்று பிரகாமமாய்-பிரதிஷ்டமாய் -அத்தால் நினைக்கிறது மிகுதியாய்
மிக்க புகரை உடைய வேலைக் கையிலே உடைய
திரு மங்கை ஆழ்வார் ஒலி உடைத்தாய் சொன்ன மாலை –

சேமத் துணையாம் செப்பு மவர்க்குத் திருமாலே –
செப்பு மவர்க்குத்-திருமால் -சேமத் துணையாம் –
இவனை அடை கொடு பாழ் போக்குகை அன்றிக்கே
இவனுடைய ரஷணத்தை முடிய
தலைக் கட்டிக் கொடுக்கும் துணையாம்-

(நெஞ்சை இவனது பல்வேறு ஆபத் சகத்வங்களைச் சொல்லி அன்றோ இங்கே கூட்டி வந்தார்
நமக்கும் ரக்ஷணம் செய்து அருளுவான்
சேமம் -நித்தியமான துணை
பாணனுக்கு துணை என்று வந்த ருத்ரன் க்ஷேமமாக இல்லையே
கோலத் திரு மா மகளோடு உயிர்கள் காப்பான் -சாலப் பல நாள் உகந்து ஸ்ரீ யபதி அன்றோ )

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கலங்கச் செய் துன்பம் தீர்த்து அண்டர் மா தொண்டர்
துலங்கச் செய் நம்பி நறையூர் கலங்கா வான்
ஒக்கும் எனும் மங்கை வேந்தன் பாதம் நமக்கு அளிக்கும்
இக்கரையாம் அம்பரம் -55-

இக்கரை ஏறி இளைத்து இருந்தேனே –பெரியாழ்வார் -5-3-7-இக்கரை எனப்படும் வானாடு-அம்பரம் -பரமபதம் –
திவ்ய தேசமே பரமபதத்தில் உத்தேச்யம் –
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத தன்மை தேவபிரான் அறியும் –திருவாய் -7-10-10-

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-6-4—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

இங்கும் திருக்கண்ண புரத்துக்கும் நூறு நூறு பாசுரங்கள்
ஆச்சார்ய சம்பாவனை -இரட்டை -பெரிய பெருமாளுக்கு ஐம்பது பாசுரங்கள்
ஆறாம் பதிகம் -நாயிகா பாவம் இல்லை –
ஆனால் மடல் பிரபந்தம் நறையூர் நம்பிக்கே –
இரண்டு கல் கருட சேவை ஆண்டு தோறும் உண்டே –

கண்ணும் சுழன்று –பிரவேசம் –

வினைகள் நலியாமை நம்பு நம்பீ-என்றார்-
அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட்டு இருக்க –
அத்தனை  க்ரமம் பார்த்து ஆறி இருக்க ஒண்ணாத படி ஆற்றாமை விஞ்சிற்று –
சேஷ பூதன் சேஷி செய்த படி செய்யக் கண்டு இருக்கும் அது ஒழியக்
கால் கட்டி நிர்பந்திக்கக் கடவன் அல்லேன் இறே-

அம்முறை பார்த்து நிற்க ஒண்ணாத படி ஆற்றாமை கரை புரளுகையாலே
இனிச் செய்யும் அது எத்தனை -என்று பார்த்து
சரீர விஸ்லேஷத்து அளவும் இருந்து அர்ச்சிராதி மார்க்கத்திலே ஒரு தேச விசேஷத்திலே கொடு போய்
தன்னை அனுபவிப்பிக்கும் அளவும் செல்ல
அவன் வைத்த தண்ணீர் பந்தலிலே ஒதுங்குவோம் என்று பார்த்தார் –

அதாகிறது
அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூக மாஸ்வே-என்கிறபடியே
அத்தோடு போலியாக சொல்லலாய் இருக்கிற உகந்து அருளின நிலங்களிலே அனுபவிக்கை இறே  –

பிரஜையினுடைய ஆர்த்திக்கு உதவுகைக்காக மாதா பிதாக்கள் சேர இருக்குமா போலே
சர்வேஸ்வரனும் பிராட்டியும் கூடே வந்து சந்நிதி பண்ணுகிற
திரு நறையூரிலே புக்கு அனுபவிக்கப் பார்த்தார்-
அத்தை ஒழிய வேறு சிலவற்றை அனுபவிக்கும் இடத்தில்
அதுக்கு பரிகரம் சரீரமே-
(உகந்து அருளின நிலங்களிலே அனுபவிக்கை-இது ஒன்றே ஆத்மாவுக்கு )

சரீரம் தான் பரிணாமி  ஆகையாலே ஒரு நாள் இருந்த படி இராதே
ஷணம் தோறும் வேறுபடா நிற்கும் இறே-
அந்த சரீரம் கொண்டு அனுபவிக்கும் இடத்தில் அதுக்கு விஷயம் ஸ்திரீகளே-
அவர்கள் ஆகிறார் –
இவன் பக்கல் ஏதேனும் சில உபாதியைப் பற்ற சில நாள் ஸ்நேஹித்து அது போனவாறே அவனை அநாதரித்து
உபேஷாவாதத்தைப் பண்ணி
பரிபவிக்குமவர்களாய் இருந்தார்களே -ஆன பின்பு
அவர்களை விட்டு
சர்வ அவஸ்தையிலும் சென்று பற்றலாம் படி ஸூலபனாய்
தான் சந்நிஹிதனுமாய்க் கொண்டு
சர்வேஸ்வரன் திரு நறையூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –

மோஷார்த்தமாக யத்தனித்த நீ
அதில் தோள் மாறும் அளவும் செல்ல
அத்தோடு போலியாய் சொல்லலாயிருக்கிற திரு நறையூரிலே புக்கு
ஆஸ்ரயிப்போம் வா -என்று  திரு உள்ளத்தோடே கூட்டுகிறார் –

(வான் உலகம் என்று எய்வோம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அன்றோ
அவ்வளவும் திரு நறையூரில் அனுபவிக்க
துறப்பேன் இன்பம்
இப்படி கிராமமாக வர
இவரை இங்கேயே வைத்து கைங்கர்யம் -கொண்டு அருள
ஆற்றாமை விஞ்சினால் நின் ஆணை திரு ஆணை கண்டாய் -என்று நிர்பந்திக்க மாட்டாமல்
சேஷி சேஷ முறைமையை அறிந்து
இதில் ஆற்றாமை விஞ்சி கீழ் போல் இருக்க
அவன் சங்கல்பம் அறிந்து இருக்கலாம் என்று பாடுவார்
இதனால் குறை ஒன்றும் இல்லை
இனி இனி என்றும் இவரும் பல இடங்களில் த்வரிப்பார் –
திரு நறையூர் தேனே பொசிந்து காட்டியது வெள்ளம் எடுத்து ஓடுகிறது -)

——————————————–

கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும்  வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே –6-4-1-

பண்ணின் மொழியார்-ராகத்தை விட இனிய பாஷை உள்ளவர்
ஒல்லை இங்கே வா -பகவத் விஷயீ காரர்-இங்கேயோ பைய நடமின்

கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால் பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்-
யௌவனம் -என்று ஒரு கைம் முதல் கொண்டு
நாலு நாள் மூலை யடியே தோற்றின படி நடக்கும் அதுவும் போய்
ஒன்றைப் பார்க்கப் புக்கால் இலக்கில் தையாத படி மாம்ச பிரசுரமான  கண் சுழன்று
ஆற்றுப் பெருக்கில் ருஜீ ஷாம்சம் ஒர் இடத்தில் திரளுமா போலே பீளை சேர்ந்து
அதுக்கு மேலே ஈளை  கைக் கொண்டு
பின்னை சொல்லப் புக்க வார்த்தை முடிய தலைக் கட்ட மாட்டாத படி இளைத்தால் –
பண்ணில் இனிய பேச்சை உடையவர்கள்
மெள்ள நடக்கலாகாதோ -என்று ஸ்திரீகள் அநாதரிப்பதற்கு முன்பே –

காரணமான பூத பஞ்சகத்திலும் முற்பட உண்டான ஆகாசமும்
பிற்பாடு உண்டான பிருத்வி கார்யமான பர்வதமும்
ஆகாசத்தை சொன்ன இடம் காரண பதார்த்தங்களுக்கும் உப லஷணம்
பிருத்வி கார்யமான பர்வதத்தை சொன்ன இடம் கார்ய வர்க்கத்துக்கு அடைய உப லஷணம்
ஆக
இரண்டாலும் ஜகதா காரனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –

வேதமும்  –
இப்படி ஜகதா காரனாய்
வேத பிரதிபாத்யன் ஆனவன்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-சாந்தோக்யம் -என்று இறே-சொல்லுகிறது –

வேள்வியும் ஆயினான்
அந்த வேதோக்தமான
சர்வ கர்ம சமாத்ராத்யன் ஆனவன்

நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே-
சம்சாரிகள் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக கிட்டி
வர்த்திக்கிற
திரு நறையூரை ஆஸ்ரயிப்போம்
ஒருப்படு என்று திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –

—————————————-

பைய நடமின் என்ற இது
போகு நம்பி -6-2-2-என்றால் போல் இனிதாய் இருக்குமே
புடவைத் தலைப்பைத் தொடாதே என்று அபிப்ராயம் –
கண்ணன் அறிந்து பராங்குச நாயகி கிட்டே போனானே
இப்படி இங்கு கிட்டே வந்து அதுக்கு இந்த பாசுரம்
கண் போனாலும் ஆசை யாரை விட்டது

கொங்குண் குழலார் கூடியிருந்து சிரித்து நீர்
இங்கு என் இருமி எம் பால் வந்தது என்று இகழாத முன்
திங்கள் எரி கால் செஞ்சுடராயவன் தேசுடை
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே–6-4-2-

கொங்குண் குழலார் கூடியிருந்து சிரித்து –
கொங்கு –
மது என்றுமாம்

அன்றிக்கே
பரிமளம் என்றுமாம்

மிக்க பரிமளத்தை உடைத்தான குழலை உடைய ஸ்திரீகள்
முன்பு இவன் பக்கல் அர்த்தமும் யௌவனமும் உண்டான போதே
ஒருவருக்கு ஒருவர் சீறு பாறு என்று சேராது இருந்தவர்கள்
அவை போனவாறே இவனை ஷேபிக்கைக்கு
உறுப்பாக திரள இருந்து சிரித்து –

நீர் இங்கு என் -இருமி எம்பால் வந்தது என்று இகழாத முன்-
உம்மை அறியீரோ-
எங்களை அறியீரோ-
நீர் இங்கு என் செய்வதாக வந்தது-
நீர் வரும் இடமோ இவ்விடம் என்று சொல்லுகிற அநாதார உக்திகள் செவிப் படுவதற்கு முன்பே-

திங்கள் எரி கால் செஞ்சுடராயவன் தேசுடை-
ஜகத்துக்கு உபகாரகமான பதார்த்தங்களை உண்டாக்கின
ரஷகனான சர்வேஸ்வரன்
பரிக்ரஹித்த தேசம் ஆகையாலே
உஜ்ஜ்வலமாகா நின்றுள்ள –

நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே-
அவன் நமக்காக வந்து நிற்கிற தேசத்திலே
நாமும் புக்கு ஆஸ்ரயிப்போம் –

————————————

எல்லாம் போனாலும் ஆசை மட்டுமே உள்ளது
போகும் பொழுது கண்ணைத் திறந்து பார்த்துப் போவோம் என்று பார்க்கிறார்கள் –
அப்பொழுது இவர்கள் பாசுரம் இருக்கும் படி –

கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம் கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன்
செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர்
நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே–6-4-3-

கோ செங்கணான் சோழன் கைங்கர்யம் –
துர் அபிமானம் ஒழிந்து ஸ்தோத்ரம் பண்ணிய தேசம்
இது மேலும் பல இடங்களில் உண்டே –

கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
பரிமளத்தால் மிக்க குழலை உடையரான ஸ்திரீகள் ஆனவர்கள்
திரள இருந்து சிரித்து

எம் கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன் –
உம்முடைய பாகம்-( மூப்பு-) ஒன்றையும் புத்தி பண்ணுகிறிலீரோ –
எங்களுடைய ஒப்பனையை நீர் இனி ஏத்திக் காண்பது-
என்று இங்கனே பண்ணுகிற ஷேப உக்திகள் செவிப் படுவதற்கு முன்பே –

செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர்-
துரபிமாநியான ஷத்ரியன் ஆனவன்
பக்ன அபிமானியாய் திருவடிகளிலே விழுந்து
ஸ்தோத்ராதிகளைப் பண்ணி
ஆஸ்ரயித்து த்ருஷ்டத்தில் தனக்கு வேண்டுமவற்றைப் பெற்று
உஜ்ஜ்வலனாகிற ஊர் –

நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே    –
தளர்ந்தார் தாவளம்-( ரக்ஷகம்-) யாய்த்து
எல்லாருக்கும் தம் தாமுடைய அபேஷிதங்கள் பெற்று  போகலாம்படி
அவன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை
நாம் போய் ஆஸ்ரயிப்போம் –

—————————————————–

எம் கோலம் என் காண்பது என்றாலும்
போகவும் மாட்டாதே
இடையிலே கிடைக்க
இடை அழகிலே சிக்குப்பட்டு இடை கழியிலே இருக்க –

கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வம்புண் குழலார் வாசலடைத்து இகழாத முன்
செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ்
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே —6-4-4-

கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வஞ்சிக் கொம்பையும்
அரவையும்
வல்லிக் கொடியையும்
(மற்று உள்ள வற்றையும் )
தோற்கடிக்கும்
இடையை உடையராய்
(இடை இருப்பதை அநு மானித்தே அறிய வேண்டும் படி )

வம்புண் குழலார் வாசலடைத்து இகழாத முன் –
பரிமளிதமான குழலை உடைய ஸ்திரீகள் ஆனவர்கள்
முற் காலம் இவனை விரும்பி
பின்பு வெறுவியன் ஆனவாறே
புறம்பே தள்ளிக் கதவடைப்பார்கள் –

இகழாத முன்-
இவன் தான் பின்னையும் சாபலத்தால் போகாதே புறம்பே நிற்கும்-
லஜ்ஜித்து இவன் அங்கு நின்றும் கால் வாங்கிப் போகைக்காக
இவனுக்கு போக யோக்யதையை இல்லாமையைச் சொல்லி பரிபவிப்பவர்கள் –
இப்படிப் பட்டவர்கள் பரிபவ உக்தி செவி படுவதற்கு முன்பே-

செம் பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ் –
அங்கு உள்ளவை அடைய
எப்போதும் பக்வ பலமாய் இருக்கும் ஆய்த்து –
கமுகுகள் ஆனவை செம் பொன் போலே இருக்கிற
கனிகளை உண்டாக்குகிற பொழிலாலே சூழப் பட்டு இருக்கும்
(ஞான பக்த்யாதிகளால் பழுத்த ) முக்த பிராப்ய பூமி என்னும் இடம் தோற்றி இருக்கும் –

நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –
சர்வ அவஸ்தையிலும் பற்றலாம்படி
விஸ்வச நீயனானவன் வர்த்திக்கிற திரு நறையூரை
நாம் ஆஸ்ரயிப்போம்  –

—————————————————

கீழே வாசலடைத்து இருந்து பரிபவிக்கச் செய்தாலும்
கண்ணின் அழகைச் சொல்லிக் கொண்டாடினாலும்
நெஞ்சு நெகிழாமல் இருப்பார்களே –

விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும்  வென்ற கண்
சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழா முன்
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ் தரு
நலங்கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே—6-4-5-

சலம் கொண்ட சொல்-கபட யுக்திகள் –
நலங்கொள் நறையூர்-அபீஷ்ட பிரத நன்மை –

விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும்  வென்ற கண் –
கண்ணின் உடைய மௌக்த்யத்துக்கு மானும்
துள்ளுதலுக்கு கயலும்
கூர்மைக்கு வேலும்
சிவப்புக்கு காவியும் (செங்கழு நீர்ப்பூ)
போலேயாய்
பின்னையும் இவற்றைத் தோற்பித்த கண்ணை உடையராய்  –

சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழா முன் –
ஒரு காலும் அனுகூல வாதம் பண்ணக் கடவர் அன்றிக்கே
சல உக்திகளைப் பண்ணக் கடவர்களான
ஸ்திரீகள் அபஹசித்து அநாதரிப்பதற்கு முன்பே   –

மலங்கும் வராலும் வாளையும் பாய்  வயல் சூழ் தரு நலங்கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –
அங்கு உள்ள திர்யக்குகளும் அகப்பட
இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே
அபிமத லாபத்தாலே களித்து வர்த்திக்கிற தேசம் ஆய்த்து

ஆக
இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே
உத்தேஸ்யத்தைப் பெற்று களித்து வர்த்திகலாம் படியான
நன்மையை உடைய தேசத்தை
நாம் ஆஸ்ரயிப்போம் –

————————————————

சலம் கொண்ட சொல்லார்
ஒரு கால் அல்லது ஒரு கால் சங்கம் வாராதோ என்னும் நப்பாசையால் இருக்க
அபி நிவேசம் மாறியதை சொல்லி அவமதிப்பார்கள்

மின்னேர் இடையார் வேட்கையை மாற்றி இருந்து
என்னீர் இருமி எம்பால் வந்தது என் என்று இகழா முன்
தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான்
நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே –6-4-6-

மின்னேர் இடையார் வேட்கையை மாற்றி இருந்து –
மின்னொடு ஒத்த இடையை உடையரான ஸ்திரீகள் ஆனவர்கள்
இவன் பக்கல் அபி நிவிஷ்டைகளாய் இருக்கும் இருப்பைத் தவிர்ந்து –

என்னீர் இருமி எம்பால் வந்தது என் என்று இகழா முன் –
நீ எங்கள் பக்கல் வருகைக்கு கொடு வந்த பரிசிலோ இது
இருமிக் கொண்டு எங்கள் பக்கல் என் என்று  வந்தீர்
என்று இங்கனே அநாதார உக்திகளை பண்ணுவதற்கு முன்னே –

தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான் –
கடலை அகழாக-(அகழியாக துர்கமாக ) உடைத்தான இலங்கை
ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி
விலங்காலே எரி ஊட்டினான் -என்னவுமாம் –

அன்றிக்கே –
இலங்கு எரி ஊட்டினான் -என்னவுமாம் –
விலங்கு என்ற போது
திருவடியாலே -என்கிறது

இலங்கு என்ற போது-
முன்பு சோறு வேவப் பண்ணுகைக்கு
வேண்டும் அளவு புக்கு வெளுத்து இருந்தது

பெருமாள் தோளை அண்டை கொண்டு
அத்தாலே வயிறு நிறைய புஜித்து
தன்னிறம் பெற்று உஜ்ஜ்வலமாம் படியைச் சொல்லுகிறது-

நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே –
சகல தாபமும் ஆறும்படியான
ஜல சம்ருத்தியை உடைத்தான திரு நறையூரை
நாம் புக்கு ஆஸ்ரயிப்போம் –

பொருந்தாத ராவணனை அழியச் செய்து
விபீஷணனுக்கு புகலாய் நின்ற  சக்கரவர்த்தி திரு மகனைப் போலே
நம்முடைய விரோதியை வாசனையோடே போக்குகைக்கு ஈடான
பெரு மிடுக்கனானவன்  வந்து வர்த்திக்கிற திரு நறையூரிலே
போய்ப் புகுவோம்  –

—————————————

புறத் திண்ணையில் கிடக்க
வருபவர் வர மாட்டார்களே
போனானோ என்று வாசலில் எட்டிப் பார்க்க
தனது மேல் அபி நிவேசத்தாலே பார்த்தார்களாக
நுதல் அழகை பார்த்து பேச
தங்கள் நைராஸ்யம் எல்லாம் தோற்ற பொல்லாங்குகளை வர்ணித்து
புறம்பாக்கும் முன் போக வேண்டுமே என்கிறார் –

வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன் முன்னம்
சொல்லார் மறை நான்கோதி யுலகில் நிலா யவர்
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே  –6-4-7-

நல்லார் -வேத அத்யயனம் பண்ணி -அனுஷ்டானமும் செய்து இருக்கும் ஆச்சார்ய சீலர் –

வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து இவன் –
வில்லோடு ஒத்த நுதலை உடைய
ஸ்திரீகள் ஆனவர்கள்
இவனைப் பெறா விடில் பிழையாதாரைப் போலே  ஆசைப் பட்டார்கள்
இருக்கும் இருப்பைத் தவிர்ந்து
அது தவிர்ந்தாலும்
அது தன்னை மறைத்து இருக்கை அன்றிக்கே சிரித்து –

பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன் முன்னம் –
முன்பு இவன் உடைய வடிவு அழகையும்
அதினுடைய ஏக ரூபதையையும் சொல்லிக் கொண்டாடிப் போந்தவர்கள்
இவன் பொல்லான் திரைந்தான் -என்று அவர்கள் உடைய புல்லிய சொல்லு
செவிப் படுவதற்கு முன்னே –

சொல்லார் மறை நான்கோதி –
பதத்தில் வர்ண க்ரம நியதத்வம் போலே யாய்த்து
வாக்யத்தில் பத க்ரம நியதத்வம் இருக்கிற படி –

ஓதி –
பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தைப் பற்ற
உத்தர உத்தர உச்சாரணத்வம் ஆகிற க்ரமத்திலே அப்யசித்து-

இது தான் காதா சித்தகமாய் இருக்கை அன்றிக்கே
யுலகில் நிலா யவர் -நல்லார் –
வேதத்துக்கு ஸ்தாபகராய் போரும் இதுவே ஸ்வ பாவமாக உடையராய் இருக்கை –
வேதத்தில் வாசனை போய்
ஆசாரத்திலே ஏதேனும் ஓர் வைகல்யம் உண்டாய் இருக்கை அன்றிக்கே
ஆசார பிரதானவர்கள் வர்த்திக்கிற தேசத்தை –

நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே  –
நாமும் போய் ஆஸ்ரயிப்போம்  –

———————————————————

இவன் பொள்ளான் என்றவாறே
நீங்கள் தானே கண்ணால் வசப்படுத்தி மன்மதன் என்று கொண்டாடினீர்கள்
இப்பொழுது புன் சொல் என்ன
அவர்கள் இவர்களை அநாதரித்து
பார்ஸ்வத்தில் உள்ள பெண்களை பார்த்து உன்னை பார்த்தோ இவன் வந்தான்
என்று பேசும்படி இருக்கவோ –

வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மைக்
கேண்மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர்
நாளு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-8-

வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மைக் கேளுங்கள்-
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராய்
மற்றும் கண் அழகுக்கு வேண்டும் நன்மைகளை உடையரான ஸ்திரீகள் ஆனவர்கள்
தாங்கள் முன்பு இவன் பக்கல் த்ரவ்யமும் யௌவனமும் உண்டான அன்று
இவன் காமன் என்று கொண்டாடிப் போந்தவர்கள்
அருகு இருந்தாரைப் பார்த்து -கேளுங்கள்-

ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன் –
ஈளையோடு ஏங்கு கிழவன்-என்பதற்கு முன்னே -என்னுதல்
ஈளையோடு ஏங்கு கிழவன்-உங்கள் -கேள் -( உங்கள் காதலனா )
முன்பு என்னுடையவன் என்று ஆதரித்தவர்கள்
இப்போது ஒருவருக்கு ஒருவர் உங்களிடைய கேள் உங்களுடைய கேள் என்னா நிற்பார்கள்  –

வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர் –
நித்ய உத்சவமும்
வைதிக சமாராதானமும்
என்றும் மாறாத ஊர் –

நாளு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –
பரம பத்திலே போய் நித்ய அனுபவம் பண்ணும் அளவும் செல்ல
இப் பிரக்ருதியோடே
அத்தோடு போலியான திரு நறையூரிலே புக்கு அனுபவிப்போம் –

—————————————–

கீழே முகம் பாராமே பரி பவிக்க
அதர பழுப்புக்கு தோற்று
போகப் பார்க்க
விழுந்து கோலை பற்றி நாலா நிற்கும் அத்தனை போக்கி
அடி இட்டு கிட்டே போக முடியாமல்
சரம அவஸ்தையோ -கிட்டாமல் அணைக்காமல் போக வேண்டி உள்ளதே
அங்கு அவன் அணைப்புக்கு பாரித்து இருக்க வேண்டி இருக்க இதுவோ வேண்டியது-

கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட
குனி சேர்ந்து வுடலம் கோலில் தளர்ந்து இளையா முன்
பனி சேர் விசும்பில் பால் மதி கோள் விடுத்தான் இடம்
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-9-

கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட –
கோவைப் பழம் போலேயாய்
விளங்கா நின்று உள்ள  அதரத்தை உடைய ஸ்திரீகள்
இவன் பக்கல் தாங்கள் பண்ணி வைக்கும்
ஸ்நேஹத்தைத் தவிர்த்து –

குனி சேர்ந்து வுடலம் கோலில் தளர்ந்து இளையா முன் –
முன்பு இறுமாந்து இறே இருப்பது –
இப்போது வளைவு தானே ஸ்வ பாவமாய்
நிமிர்ந்து வியாபாரிக்க ஒண்ணாத படி யாய் இருக்கும் ஆய்த்து –
அநந்தரம் ஒரு கோலை அபாஸ்ரயமாகப் பற்றும்
அத்தைத் தரிக்க பிடிக்க மாட்டாமையாலே  அது தனக்கு அபாஸ்ரயம் ஆக மாட்டாது
தான் அதுக்கு அபாஸ்ரயம் ஆக மாட்டாதே
இப்படி இளைப்பதற்கு முன்னே –

பனி சேர் விசும்பில் பால் மதி கோள் விடுத்தான் இடம்-
ஆகாசப் பரப்புக்கு அடைய தானே
பிரகாசகனாய் இருக்கிற சந்த்ரனுக்கு வந்த ஷயத்தைப் போக்கினவன்
வந்து வர்த்திக்கிற தேசம் –

நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –
பிராட்டிக்காக பரிகிரஹித்தான் என்கிற பெருமையை உடைய
திரு நறையூரை
அவள் பரிகர பூதரான   நாம் போய்
ஆஸ்ரயிப்போம்
நனி -பெருமை –

(நீளா தேவி பிரதானம் இங்கே
திரு வெள்ளறை ஸ்ரீ தேவி பிரதானம்
ஸ்ரீ வில்லி புத்தூர் ஸ்ரீ பூமா தேவி பிரதானம் )

————————————

பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை யிலாத முன்
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற
கறையார் நெடு வேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு  ஆவரே –6-4-10-

பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை யிலாத முன் –
பிறை ஒத்த நுதலை உடையரான ஸ்திரீகள் ஆனவர்கள்
நம் பக்கல் பேணுதல் தவிருவதற்கு முன்னே –

நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற –
மது மிக்க  பொழிலாலே சூழப் பட்ட
திரு நறையூரிலே புக்கு ஆஸ்ரயிப்போம் என்று
தம் திரு உள்ளத்தோடு கூடி –

கறையார் நெடு வேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல் –
பிரதி பஷத்தை அழியச் செய்து
கரை கழற்ற அவசரம் இல்லாத படி இருக்கிற
நெடு வேலைக் கையிலே உடையராய்
திரு மங்கையிலே உள்ளாருக்கு நிர்வஹகரான ஆழ்வார் அருளிச் செய்த –

மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு  ஆவரே  –
ஸ்திரீகளும் கண்ணுக்கு இலக்கான யௌவனமும் உண்டான போதாக
இத்தை மறவாதே-
அப்யசிக்க வல்லவர்கள்
என்றும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகரான
நித்ய ஸூரிகள் உடைய தேசத்துக்கு நியாமகராகப் பெறுவார் –
(அவனோ -வான் இளவரசு -நித்ய யுவா குமாரன்)
என்றும் ஒக்க ஏக ரூபராய் இருக்கும் அவர்கள் இறே அவர்கள் –
அவன் சாம்யா பத்தி கொடுத்து வைக்கையாலே –
ஆண்மின்கள் -என்னும் படி தடங்கல் இல்லாத நியாமகராகப் பெறுவார் –

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கண்டால் பொருள் இன்பம் கொண்டாடி அற்ற காலை
கண்ட பேசி ஏசுவாராய்க் கை விட்டு தண்ணறையூர்
பற்றாத் தொழு நெஞ்சே என்னு பரகாலன் சொல்
கற்றார்க்கு இல்லை கலக்கம் -54-

அற்ற காலை –பொருள் இல்லாத போது –

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-6-3–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

துறப்பேன் -பிரவேசம் –

வண்டுண் நறு மலரிலே-6-1- -வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர்  மேயவனே -என்று
தாம் பல காலும் விண்ணப்பம் செய்த வார்த்தை
ச ஹ்ருத்யம்   என்று
அப்பன் திரு உள்ளத்தில் படும்படியாக

பொறுத்தேனில் -6-2–அம் மனை வாழ்க்கையிலே அந்வயித்து
அவற்றால்
தாம் மாறுபடுருவ கிலேசப்பட்ட படிகளையும்
தத் ஹேதுக்களையும் விண்ணப்பம் செய்து –
இவ் வநிஷ்டமான வாழ்க்கையை தவிர்த்து
எனக்கு இஷ்டமான உன் தாளிணைக் கீழ் வாழ்ச்சியை
நான் பெறும்படி பண்ணித் தந்து அருள வேணும்
என்று திருவடிகளிலே சரணம் புகுகிறேன் -என்றார் –

சர்வேஸ்வரனுக்கு ஒரு ஸ்வ பாவம் உண்டு
அநாதி காலம் சம்சரித்துப் போந்தான்  ஒருவன்
சம்சாரத்தில் விரக்தி பிறந்து
இத்தை வேண்டேன் என்று இதில் தோஷங்களை சொல்லிக் காட்டுவது
இத்தைத் தவிர்த்து தர வேணும் என்று சரணம் புகுவதானாலும்
திரியவும்
பூர்வ வாசனையாலே அவற்றில் சில பாசம் கிடக்க அடுக்கும் என்று
அவற்றில் தன்னால் ஆராயும் அளவிலே ஆராய்ந்து
தனக்கேயாக
அவற்றில் கடையறப் பாசங்கள் விட்டார்க்கு அன்றி கார்யம் செய்யான் –

ஆகையாலே -பொறுத்தேன் -என்று கீழ் இவர் சொன்ன வார்த்தைகளை
தனித் தனியே ஆராய்ந்து
இவற்றில் அற விடாதே
எத்தை இன்னும் அனுசந்திக்கப் பார்த்தீர் -என்றாப் போலே கேட்க
அவற்றில்
தமக்கு அவிருத்தமாய் விடாதே ஒழிய நினைத்தவற்றையும்-
விருத்தமாய் விட நினைத்தவற்றையும் –
விண்ணப்பம் செய்து
குல வானவர் தம் கோதா -6-2-9-என்று கீழ் சொன்ன தேச விசேஷ பிராப்தியில்
தமக்கு உள்ள த்வரையும் அறிவித்துத் தலைக் கட்டுகிறார்-

பொறுத்தேன் பதிகத்தில் முதல் பாட்டில்
பொருள் இன்பம் -இவற்றில் பிரதானமான இன்பத்தில்
நீர் நின்ற நிலை என் என்ன -சொல்லுகிறார்   –

சரணம் புகுந்தால் கார்யம் செய்யாமல் இருப்பது என் -என்ன
கீழே கோவிந்த ஸ்வாமியின் கருத்து அறிந்து போகம் எய்தி வரச் சொன்னவோ பாதி
இவருக்கும் திவ்ய தேச ப்ராவண்யம் இருக்குமே
தனக்கே ஏற -ச வாசனமாக போக்கியத்துக்கு அடையாளங்கள் இருக்க வேண்டுமே
இவ்விபூதியில் அனுபவிக்கக் கொடுத்தாலும் விஷம் மிஸ்ர போகம் போல் விடும் படியான பாகம் பக்குவம்
உள்ளதா என்று தன் திரு உள்ளத்தில் படும் படி
மருள் ஒழி நீ மட நெஞ்சே -வாட்டாற்றான்
திருவாறன் விளை -இருக்கவே =மேவி வலம் வரவே -ஆசை
இத்தை தொலைத்தால் தானே கூட்டிப் போவான்
திவ்ய தேச ப்ராவண்யம் இன்னும் இருக்கு என்று அவன் திரு உள்ளத்தில் பட்டால் கூட்டிப் போக மாட்டானே
இந்த உயர்ந்த ஆசையும் விட்டால் தான் கூட்டிப் போவான்
ஆழ்வார் நிஷ்டை புரிந்தே இதை உணர முடியும் –
தனக்கு ஏற -இதனாலே எந்த பக்குவம் அடைந்த பின்பு
ஆழ்வாராதிகளையும் ஆச்சாரிகளையும் கூட்டிப் போனான் என்று வியாக்யானங்களில் இருக்காதே
யாரும் அறியாத -அவன் மட்டுமே அறிந்த விஷயம்
அற விடாத -மிகவும் விடாதே
திருப்பேர் நகர் நந்தி புர விண்ணகரத்தில் மண்டி இருந்தவர்
இன்னும் உகந்து அருளினை நிலங்களில் பிறாவண்யம் இன்னும் பின்னாட்டுமே
உன்னை மறக்காது இருக்கும் இன்பமே -இந்த காமமே வேண்டும் என்கிறார்
இங்கு அநித்யம் என்பதால் ஸ்ரீ வைகுண்டம் பிரார்த்திக்கிறேன் என்கிறார் என்றபடி

————————————————

துறப்பேன் அல்லேன்  இன்பம் துறவாது நின்னுருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யானுலகில்
பிறப்பேனாக எண்ணேன்  பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆ தன்மையால் திரு விண்ணகரானே–6-3-1-

மறவாது யானுலகில் பிறப்பேனாக எண்ணேன்-மறவாமையாலே பிறக்க எண்ண மாட்டேன் –
திரு விண்ணகரானே-நேராக விளித்து அருளிச் செய்கிறார் –

துறப்பேன் அல்லேன்  இன்பம் –
விஷயானுபவ ஸூகத்தை துறக்கும் இத்தனை ஒழிய
நின் திறத்தேன்-யாகும் இருக்கிற  பிரதான ஸூகத்தை விடுவேன் அல்லேன் –
சப்தாதி விஷயங்களை விட்டீரே யானால் இன்பத்தை
இங்குத் துறவாது ஒழியும்
விரகு என் என்ன  –

துறவாது நின்னுருவம் மறப்பேன் அல்லேன்-
ஸூகத்தை துறவாமை யாவது
உன்னுடைய வடிவை மறவாது இருக்கை –
மறந்தேன் உன்னை முன்னம் -என்று கீழ் உள்ள காலம் எல்லாம் மறந்தேனே யாகிலும்
இனி மேல் உள்ள காலம் மறவாதே ஒழியப் பார்த்தேன் –

இத்தால் பலித்தது என் என்ன
மறந்தேன் உன்னை முன்னம்
அது ஹேதுவாக பிறந்தே எய்த்து ஒழிந்தேன் -என்றேன்
இனி உன்னை மறவாதே நினைக்கப் பார்த்தால்
பிறவாமை அன்றோ இதுக்குப் பலம்
என்றும் மறவாது யானுலகில் பிறப்பேனாக எண்ணேன்-
அம் மறவாமையால் பெற்றது
சம்சாரத்தில் பிறப்பேன் என்னும் மநோ ரதமும் தவிர்ந்தேன் –

(இப்படி முப்பது பாசுர சுருக்கம் அழகாக தொகுத்து ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
அழகிய வியாக்கியான ஸ்ரீ ஸூ க்திகள் )

அழகிது
(என்றும் மறவாது வார்த்தையைக் கேட்டதும் )
தைல தாராவ விச்சின்ன ஸ்ம்ருதி  உமக்கு உண்டாகையாலே
நமக்கு இனி ஜன்மம் வாராது என்று நினைத்து இருக்கிறீர் அன்றோ  என்ன
பிறவாமை பெற்றது நின் திறத்தேன் ஆ தன்மையால் –
அந்த பிறவாமையை நான் லபித்தது
உன் அபிமானத்துக்கு உள்ளே அடங்கி
நீயே நிர்வாஹகன் என்று இருக்கையாலே
இத்தனை அல்லது நான் அனுஷ்டித்தது ஒன்றால் அல்ல-

திரு விண்ணகரானே-
உன் திறத்தேனாக பெற்றது தானும்
நீ இங்கே சந்நிஹிதனாகை –

துறப்பேன் அல்லேன் இன்பம் –சுகத்தை சந்யசிப்பேன் அல்லேன்
துறவாது நின்னுருவம் மறப்பேன் அல்லேன் –சுகத்தை துறவாமை யாவது உன்னுடைய வடிவை மறவாதே இருக்கை
என்றும் மறவாது யான்  உலகில்  பிறப்பேனாக எண்ணேன் –மறவாமையால் பெற்றது பிறவாமை
பிறவாமை நின் திறத்தேன் ஆன தன்மையால் -பிறவாமை பெற்றது-திரு விண்ணகரானே –
உன் திறத்தேனாக பெற்றது நீ சந்நிஹிதன் ஆகை  –

(பொருள் இன்பம் இவற்றால் கிலேசம் என்றார் கீழ்
துறப்பேன் என்ன கூடுமோ
பகவத் அநு பூதியில் -பகவத் இன்பமும் உலக இன்பமும் சேர்ந்தே தானே இருக்கும்
மறந்தேன் உன்னை கீழ் உள்ள காலம் –
இனி மறவாமல் இருப்பதால் பெரும் பலன் பிறவாமை
என்றும் மறக்காமல் இருந்தேன் -சொல்லவே உபாசனம் -த்ருவ ஸ்ம்ருதி -சாதனமோ –
உன் அபிமானத்தில் ஒதுங்கி
பால் குடிக்க நோய் போகுமா போல் இத்தைப் பெற்றேன்
பால் உபாயமா – நான் பால் குடித்ததா உபாயம் -இது விஷயத்தின் ஸ்வ பாவம்-அதிகாரி ஸ்வரூபம் வேறே உபாயம் வேறே
நோய் உள்ள நான் உபாயம் இல்லையே
மறவாமை உபாயம் இல்லை
நின் திறத்தேன் -என்றதும் உம்மால் தானே
திரு விண்ணகர் வந்து என்னைப் பிடித்து ஆள் கொள்ளவே
மறவாமை -அதிகாரி ஸ்வரூபம் –
கீழ் பாட்டுக்கள் நெஞ்சில் நன்றாக பட மீண்டும் ஸங்க்ரஹித்து அருளி உள்ளார் )

——————————————————-

கீழ் விஷயாந்தர இன்பம் ஒழிந்தது
ப்ராப்த விஷய இன்பம் ஒழியாமல் இருக்கப் பெற்றேன் என்றார் கீழ்
இது இன்பம் ஆக விஷயாந்தர பற்று போக வேண்டுமே
ஆர்வ செற்றம் போனதோ என்ன
ராக த்வேஷம் போனமை
ஆர்வம் -சுற்றத்தாலே வருமே -அத்தை விட்டமையை இதில்

துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே
அறந்தானாய்த் திரிவாய் யுன்னை என் மனத்தகத்தே
திறம்பாமல் கொண்டேன்  திருவிண்ணகரானே -6-3-2-

துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம்  –
உனக்கு புறம்பே சில பற்று உண்டு -என்று தேவர்க்குப் பழி இட ஒண்ணாத படி யானேன் –
பரி த்யக்தா மயா லங்கா -என்னுமா போலே
அநாதி கால வாசனையாலே
விஷயங்களிலே ஸ்ம்ருதி பிறந்து
அது அடியாக ஸ்நேஹம் பிறந்து
பின்பு அவ்விஷயத்தை பெறில் ஜீவித்தல்
இல்லை யாகில் முடியும் அளவாய்
அது கிடையாது ஒழிந்தவாறே
இவன் இறே இதுக்கு நிரோதகன் – என்று கண்டார் மேல் எல்லாம் குரோதம் பிறந்து
(ஸ்ரீ கீதையில் -ஸ்ம்ருதி ஸ்நேஹம் சங்கம் -காமம் -க்ரோதம் )
யுக்த அயுக்த  நிரூபண  ஷமன் அன்றிக்கே
தோற்றின படி நடந்து திரியக் கடவனாய்
இவை தான் இத்தனைக்கும் அடி –புறம்பே சிலரை உறவு முறை என்று இருக்கை இறே
அது தவிர்ந்தேன் –

பண்ணின சங்கம் தவிரவே
அது அடியாக த்வேஷம்  போம் இறே
இவை இரண்டும் போம் இறே–

புறம்பே சிலரை உறவு முறை என்று இருக்குமது தவிரவே –
துறந்தமையால் சிறந்தேன் நின்னடிக்கே யடிமை –
புறம்பே சிலரை உறவு முறை என்று இருக்கை இறே -இழவு வருகைக்கு அடி –
அது தவிர்ந்தால் இப்போதாக உறவு சம்பாதிக்க வேண்டியது இல்லை இறே
இவன் பக்கல் சம்பந்தம் ஸ்வா பாவிகம் இறே
பாஹ்ய விஷயங்களை விட்
ராவண பவனத்தை விட்டு ஆகாஸ ஸ்தானனான போதே ஸ்ரீமான் ஆனான் இறே
அப்ராப்த விஷயங்களை விட்ட அநந்தரம்
ப்ராப்த விஷயத்தின் உடைய சரம அவதியிலே நின்றேன்-
பிராப்தி பலமான கைங்கர்யத்துக்கு யோக்யன் ஆனேன் –

நாம் சர்வஞ்ஞராய் இருந்தோம்
நீர் அநாதி காலம் புறம்பே சிலரை உறவு முறை என்று இருந்தவராய் இருந்தீர்
இப்படி இருக்க இப்போது சிறந்த படி எங்கனே என்னில் –
திருமாலே –
ஸ்ரீயபதி யாகையினாலே

இவன் தான் அகல நின்று பண்ணின குற்றத்தைக் கணக்கிட்டு கை விடும் அத்தனையோ
உம்மோடு உண்டான குடல் துடக்கை பார்த்துக் (கைக்) கொள்ளும் இத்தனை அன்றோ -என்று
ஆற விடுவார் அருகே உண்டாகையாலே
இவனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஔபாதிகமாய்
ஈஸ்வர பாரதந்த்ர்யம் ஸ்வா பாவிகமாய் இருக்கும் இறே –

ந கச்சின் ந அபராத்யதி -என்பார் அருகே உண்டானால் கிட்டுகைக்கு ஒரு குறை உண்டோ  –
பிராட்டியோட்டை சம்பந்தமும் ஒரு தலை குலுக்கு மாத்ரமுமாய்
அவன் தான் பிரஜைகள் பக்கலில் இருக்கும் இருப்பைச் சொல்கிறது
என் அடியார் அது செய்யார் -என்று அவளோடு மன்றாடும் ஏற்றம் உண்டு இறே அவனுக்கு
பொறுக்கைக்கு ஒரு சாமக்ரி மாத்ரமாய்-
பொறுப்பிப்பார் வேறு சிலராய்-
பொறை தாமேயாய் இருக்கை –
இத்தால்
இதர தர்ம வ்யாவருத்தி சொல்கிறது –

கேவல தர்மம் ஆகிறது தான் அசேதனமுமாய்
செய்த போதே நசித்து விடும் இறே
ஆகையால் இவன் செய்தது அறியாதே
பலம் பெறுகைக்கு வேறு ஒருவனை  கால் கட்ட வேண்டும்படியாய் இருக்கும் இறே
அவன் தன்னையே பற்றிப் பெறும் இடத்தே இவற்றை விட்டே பெற வேண்டும் இருக்கும் இறே
ஆகையால் இறே சாதன நைரபேஷ்யம் சொல்லுகிறது
கூறு செய்வான் ஓன்று கொடுக்கும் போது ராஜாவின் ஆஞ்ஞை வேணுமே
ராஜா ஓன்று கொடுக்கும் போது கூறு செய்வான் வேண்டாம் இறே   –

அறந்தானாய்த் –
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -என்றும்
அக்ஷரம் ப்ரஹ்மம் சத்யம் — லோகா நாம் த்வம் -பரோ தர்ம -என்றும்
ராமோ விக்ரஹவான் -என்றும்
சத்யா தர்ம பராயணா சாஷாத் ராமாத் வி நிர்வ்ருத்த -என்றும் -சொல்லுகிறபடியே

திருமாலே அறந்தானாய்த் திரிவாய் –
நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன் அறம் பெரியன் -இரண்டாம் திருவந்தாதி -52-என்னுமா போலே –

ஆரது அறிவார் –
அவன் படி இதுவாய் இருக்க
உடம்பை ஒறுத்துக் கார்யம் பாரா நிற்பார்கள்

திரிவாய்
பலம் கொடுக்கைக்கு அவசரம் பார்த்து திரியும் தர்மம் ஆயத்து –

யுன்னை என் மனத் தகத்தே திறம்பாமல் கொண்டேன் –
உன்னுடைய தடுமாற்றத்தைத் தவிர்த்தேன் –
ஸ்ரீ லஷ்மீ பதியாய் இருந்த உன்னை –
பிராட்டி புருஷகாரமாகவும்
என்னுடைய அநந்ய கதித்வத்தையும் முன்னிட்டு
என்னுடைய ஹிருதயத்திலே இனி  நீ  கால் வாங்கில்
காதகரோ பாதி யாம்படியாக வைத்துக் கொண்டேன் –

நீயே வந்து புகுகிற இடத்தில்
நான் விலக்கிற்றிலேன்-என்ற படி

அநந்ய கதியை விடில் நிர்க் க்ருணன் ஆம்
பிராட்டிக்கு அநபிமதம் செய்யில் பிரணயி  யன்றிக்கே ஒழியும்
ஆக
ஸ்வரூபமும் பிரணயித்வமும்-இரண்டும் இழவாம்   –

நீர் ( ஏற்றுக் )கொள்ள வல்லீர் ஆன படி என் என்ன –
திரு விண்ணகரானே-
நீ ஸூலபன் ஆகையாலே –
நீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன்  ஆன படியாலே  –

———————————————————

ராக த்வேஷ ஹேதுவான சுற்றம் துறந்தாலும்
வித்வான்களை ஈர்க்கும் கண் அழகுக்கு தப்பினால் அன்றோ என்ன
அதுக்கு உத்தரம் இதில் –

தப்ப ஒண்ணாததைத் தப்பி
திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன்
என் பக்கலில் தயைப் பண்ணி யருள வேணும் -என்கிறார் –

மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊனேய்  கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன்
கோனே குறுங்குடியுள் குழகா  திரு நறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே —6-3-3-

கண் வாளி-அம்பு அன்ன கண்ணாள்

மானேய் நோக்கு நல்லார்-
மானோடு ஒத்த நோக்கை உடையாராய்
மற்ற வடிவழகுக்கு  உறுப்பான  நன்மைகளை உடைய ஸ்திரீகள் உடைய –

மதி போல் முகத்து உலவும் –
தர்ச நீயமாய்
தங்கள் பக்கல் சேர்த்துக் கொள்ளுகைக்கு   பரிகரமான முகத்திலே சஞ்சரியா நின்றுள்ள –

ஊனேய்  கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன் –
மாம்ச பிரசுரமான  கண் ஆகிற
அம்புக்கு ஈடுபட்டு
ஓடி வந்து -உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

கண்களாலே கார்யப்பாடு இல்லாதாரைப் போலே நோக்கி
இவனைப் தப்பாமல் அகப்படுத்தி
இவன் ஆழங்கால் பட்ட அநந்தரம்-
தங்களைக் கொண்டு பேர நின்று  இவனை நோவு படுத்தா நிற்பர்கள் இறே-
அத்தைத் தப்பி திருவடிகளிலே சரணம் புகுந்தேன்-

கோனே –
அத்தைத் தப்பி திருவடிகளிலே ஒதுங்கின இடம்
தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே
ப்ராப்த விஷயமாய் இருந்தது –

குறுங்குடியுள் குழகா-
பரம பதம் கலவிருக்கையாய் இருக்க
இவரோடு கலந்து
சேர்த்துக் கொள்ளுகைக்காக
திருக் குருங்குடியிலே வந்து சந்நிஹிதன் ஆனவன்-
(இவர் திருவரசு இங்கேயே தானே )

திரு நறையூர்த்  தேனே –
பிரஜையினுடைய ஆர்த்திக்கு உதவுகைக்காக மாதா பிதாக்கள் சேர இருக்குமா போலே
தமக்காக திரு நறையூரிலே நிற்கிற நிலையை அனுசந்தத்த வாறே இனிதாக நின்றது
பட்டர் -திரு நறையூர் பெருக்குக்கு சினையாறு படுகிறது கிடாய் -என்று அருளிச் செய்வர்  –

வரு புனல் சூழ் திரு விண்ணகரானே-
காட்சியிலே சகல தாபங்களும் ஆறும் படியான ஜல சம்ருத்தியை உடைய திரு விண்ணகரிலே
நீ வந்து சந்நிஹிதன் ஆகையாலே
அந் நோக்குக்குத் தப்பி
திருவடிகளிலே வந்து கிட்டப் பெற்றேன் –

—————————————————-

கண் வலைக்குத் தப்பி ஓடி வந்தேன் என்று சொன்னீர்
சுக பிராந்தி ஜனகமாய்
ஓடி வர மூல ஸூஹ்ருதம் ஒன்று இருக்க வேண்டுமே என்ன
அதுக்கு உத்தரம் இதில்

போந்தேன் -நிர்ஹேதுகமாக உன்னிடம் போகப் பெற்றேன்
உன்னை எய்தினேன்
சந்நிதி கண்டு அடைந்து
கைங்கர்யம் செய்து
மோக்ஷம்
அடைந்தேன் –

சாந்தேந்து மென் முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே  உன்னை எய்த்து என் தீ வினைகள்
தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே —6-3-4-

சாந்தேந்து-
தட முலை செய்ய சாந்து -என்னக் கடவது இறே-
குங்குமத்தைச் சொன்னபடி
விஷயங்களை விட்டு இவ்வருகே போந்த இவர்
வீத ராகர்க்கும் ஸ்ப்ருஹை பிறக்கும்படி சொல்லுவான் என் -என்று பட்டர்க்கு விண்ணப்பம் செய்ய
முரிக்குக் கிழக்கு என்னும் போது இங்கன் அல்லது இராது காண் திரு மங்கை ஆழ்வார் நா வீறு -என்று அருளிச் செய்தார்
கிடாம்பி அம்மாள்- சிறியாண்டான் பெருமாள் – பணித்தானாக பல காலும் சொல்லும்
நான் சொல்லுகிற வாச்ய வாசகங்களே அன்றோ பட்டரும் வ்யவஹிகரிக்கிறது
என்று இருக்க ஒண்ணாது
அங்குத்தைக்கு ஏற்றம் உண்டு
முன்னே நின்ற தூணை நான் தூண் என்றவாறே சிறாய்த்துத் தோற்றும்
அவர் சொன்னவாறே தளிரும்  முறியுமாய்த் தோற்றும் -என்று –

மென் முலையார் –
விரஹம் பொறாத முலையை உடைய ஸ்திரீகள் உடைய –

தடந்தோள் புணரின்ப வெள்ளத்து –
முலைகள் ஆகிற மலைகளோடு
தோள் ஆகிற பாசங்களாலே நெருக்கிக் கட்டி
கடலிலே புகத் தள்ளுவாரைப் போலே
அவர்களோடு தோள்கள் உடன் அணைகையில் உண்டான
ஆனந்த சாகரத்திலே தரை காண ஒண்ணாத படி
அவஹாகித்தேன்

உன்னுடைய கிருபைக்கும் அவிஷயம் ஆனேன் –
ஆனந்த மய -என்கிற விஷயத்தை உள்ளபடி கண்ட இவர்
இப்போது இங்கே இன்ப வெள்ளம் என்கிறது
இவ்வளவும் வரக் கால் கட்டின படியைக் கொண்டு
அநந்த கிலேச பாஜனமான இத்தை
இன்ப வெள்ளம் என்கிறது நெடு நாள் துவக்கின படியைக் கண்டு இறே –

இத்தால் பலித்த தோர் பலம் உண்டு  –
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்-
காலம் எல்லாம் இடை விடாதே அவனுடைய கல்யாண குணங்களை
அனுபவிக்க இட்டுப் பிறந்த நான்
காலம் எல்லாம் நித்ய சம்சாரியாய் போகையாகிற
பிரயோஜனத்தைப் பெற்றேன்
விஷய ப்ராவண்யம் சம்சார பீஜம் -என்று இருக்கிறார்  –

போந்தேன் –
ஒரு கர்மத்தை அனுஷ்டித்து அத்தாலே
ஷீண  பாபனாய்
அநந்தரம் ஜ்ஞானம் பிறந்து
அத்தாலே இது தீது இது நன்று என்கிற இனிமையாலே கிட்டுகை அன்றிக்கே
நினைவு இன்றிக்கே இருக்க ஸ்ரீ மதுரையிலே உறங்குகிறவர்கள்
ஸ்ரீ மத் த்வாரகையிலே   விழித்தால் போலே
திருவடிகளிலே வந்து கிட்டிக் கொடு நிற்கக் கண்டேன் –

இந்நாள் வரைப் போந்த விடத்து ஒரு ஸுஹ்ருதமும் பண்ணிற்று இலீராகில்
இப்போது நம்மை வந்து கிட்டினபடி எங்கனே என்னில்-

புண்ணியனே  –
உன்னை கிட்டுகைக்கு மூல ஸுஹ்ருதமும் நீயே
என்கிறார்

உன்னை எய்தி  என் தீ வினைகள் தீர்ந்தேன் –
சர்வாதிகனான உன்னைக் கிட்டி
என்னுடைய பிராப்தி பிரதிபந்தகமான
பாபங்களை அடியைப் போக்கினேன் –

நம்மைக் கிட்டிய விரகு தான் என் என்னில் –
நின்னடைந்தேன் திருவிண்ணகரானே
ராவணனாலே நெருக்குண்டு புகலிடம் அற்ற
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு புகலாகக் கடவதாக
கடல் கரை வெளியிலே எடுத்து விட்டு நின்றால் போலே
சம்சாரத்திலே விஷயங்களாலே நெருக்குண்டு
நோவு படுகிற எனக்கு புகலாக
திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே
அத்தைத் தப்பித் திருவடிகளிலே வந்து புகுந்தேன் –

—————————————————

விஷயாந்தர சம்பந்தம் விட்டதை கீழே
தேவதாந்த்ர சம்பந்தம் இல்லை என்கிறார் இதில்
இதிலும் எனக்கு வைராக்யம் அடையப் பெற்றேன்
பிறவாமை பெற்றேன் இங்கு தேவதாந்த்ர சம்பந்தம் யோக்யதை விட்டமை –

மற்றோர் தெய்வம் எண்ணேன்  உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம்பெருமான்
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை ராவணனைச்
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே–6-3-5-

பெற்றேன்-அலாப்ய லாபம் அடைந்தேன்

மற்றோர் தெய்வம் எண்ணேன்-
மநோ ரத சமயத்திலும் வேறு ஒரு ஆஸ்ரயணீய வஸ்து உண்டாக நினையேன்

உன்னை என் மனத்து வைத்துப் –
சர்வாதினகாய் இருக்கிற் உன்னை
விலக்காமை மாத்ரத்தாலே
என்னுடைய ஹிருதயத்திலே வைத்து
ஓர் அலாப்ய லாபம் பெற்றேன் –

அப்பேறு தான் என்  என்னில்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம்பெருமான் –
இதர தேவதைகளை ஆஸ்ரயிக்கைக்கு யோக்யமான
ஜன்மமும் கூடக் கழியப் பெற்றேன்
அதுக்கு யோக்யதையே தொடங்கி இன்றிக்கே இருந்த படி –

வற்றா நீள் கடல் சூழ் இலங்கை ராவணனைச் செற்றாய் –
ஒருவரால் அழிக்க  ஒண்ணாத அரணை முறித்து புக்கு
நான் இவ் ஊருக்கு நிர்வாஹகன் அல்லேனோ-என்று
அபிமானித்து இருக்கிற ராவணனை
கிழங்கு எடுத்தவனே
அரியன செய்யும் இடத்தில் வருத்தம் அற செய்ய வல்லவன் அன்றோ நீ   –

கொற்றவனே-
பெரு மிடுக்கனான ராவணனை அழியச் செய்த
வருத்தம் உண்டோ
என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி  சேர விட்டுக் கொள்ளுகைக்கு –

நான் இலங்கையை அழியச் செய்தது கடல் கரை வெளியிலே எடுத்து விட்டு நின்று
உம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கிற்று எங்கே வந்து நின்று என்ன –
திருவிண்ணகரானே  –
எனக்காக வந்து நிற்கிற இடம்
திருவிண்ணகர் -என்கிறார் –

————————————————–

தேவதாந்த்ரங்களை எண்ணா மைக்கு காரணம்
உமக்கு சரீரமாக இருந்தாலும்
ஈஸ்வரோஹம் என்று இருப்பதால் வைராக்யம் பெற்றேன் இவர்கள் மேல் –

மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர்
தெய்வம் பிறிது அறியேன்  திருவிண்ணகரானே—6-3-6-

மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும் செய்ய சுடர் இரண்டும் –
சர்வேஸ்வரன் உடைய திரு மேனிக்குப் போலியாய்
அஞ்சனம் போலே தர்ச நீயமாய் இருந்துள்ள சமுத்ரமும்
அது வேலியாக உள்ளே கிடக்கிற பூமியும்
அந்த பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற குல பர்வதங்களும்
இப்படிப் பட்ட இதுக்கு இரண்டு விளக்கு ஏற்றினால் போலே இருக்கிற் சந்திர ஸூர்யர்களும் –

இவையாய-நின்னை-
இப்படி ஜகதா காரனாய் இருக்கிற உன்னை –

நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால்-
நெஞ்சாலே அசந்நேவ-என்கிறபடியே
அசத் கல்பனாய் உரு மாய்ந்து போன நான்
இப்போது உஜ்ஜீவிக்கும் படி தேவரை அனுவர்த்தித்தேன்   –
இவ் வாத்மாவுக்கு நீயே சேஷி
உன்னைக் குறித்து இவ்வாத்ம வஸ்து அத்யந்த சேஷம் -என்கிற முறையாலே –

இனி யாதும் மற்றோர் தெய்வம் பிறிது அறியேன்  –
தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத
படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயணீயனாக நினைத்து இரேன் –

திருவிண்ணகரானே –
இப்படி திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதனான உன்னை ஒழிய
பரதத்வமும் அறியேன் –
(பர ப்ரஹ்மம் பர தத்வம் பர தேஜஸ் பர ஆத்மா அனைத்தும் நாராயணனே )

——————————————————-

தேவதாந்த்ரம் அறியாதவராயும்
விஷயாந்தரங்களில் பற்றும் இல்லாமலும்
பந்துக்களை விட்டவராயும்
திரு விண்ணகரில் நித்ய வாசம் செய்வதை அறிந்தவராயும் இருக்க
அனுபவித்துக் கொண்டு சுகமாய் இருக்கலாமே என்ன
அவை எல்லாம் இருந்தும்
இன்றும் ஓன்று விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று அருளிச் செய்கிறார்

வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கு
மாறே  நீ பணியாது அடை நின் திரு மனத்து
கூறேன் நெஞ்சு தன்னால் குணம் கொண்டு மற்றோர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே —6-3-7-

வேறே கூறுவது உண்டு –
இது ஓர் ஓலக்க வார்த்தை யாக அன்றிக்கே
பலத்தோடு வ்யாப்தமாக வேண்டும்படி
திரு உள்ளத்தில் பட விண்ணப்பம் செய்கிறேன் –
விசேஷேணது ஸூக்ரீவோ ஹநூமத்யர்த்தம் உக்தவான் -என்னுமா போலே
முதலிகள் எல்லாரையும் எல்லாத் திக்கிலும் விடா நிற்கச் செய்தே
மகா ராஜர் திருவடியைப் பார்த்து
அடையாளமும் சொல்லி
திரு வாழி மோதிரமும் கொடுத்து
விசேஷித்து  விட்டால் போலே –

அடியேன் -கூறுவது உண்டு –
சேஷ பூதன் சேஷி செய்த படி செய்ய கண்டு இருக்கை இறே முறை
அப்படி ஆறி இருக்க ஒண்ணாதே
என்னுடைய ஆற்றாமையாலே ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்கிறேன் –

விரித்து உரைக்குமாறே  நீ பணியா தடை நின் திரு மனத்து -பணியாது அடை –
என்னுடைய வார்த்தை அர்ஜுனன் உடைய பிரஸ்னம் போலே ஆக ஒண்ணாது
பகவான் உவாச என்று தலைக் கட்ட வேணும்
கர்மன்யே வாசதி காரஸ்தே -என்று சிலவற்றை பரக்க சொல்ல ஒண்ணாது
ஸ்திதி  தோஸ்மி -நஷ்டோ மோஹா – ஸ்ம்ருதி லப்த -என்னும் இடம் பலிக்கச் சொல்ல வேணும்
நான் பரக்க சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்யும் பிரகாரம்
அருளிச் செய்யாத படி திரு உள்ளம் பற்ற வேணும் –

கூறேன் நெஞ்சு தன்னால் குணம் கொண்டு மற்றோர் தெய்வம் தேறேன் –
நான் ஒரு அநந்ய கதி -என்கிறார்
இதர தேவதைகளை வாயாலே பேசேன் –
அவ்வளவே அன்றிக்கே
நெஞ்சால் அவற்றுக்கு ஒரு ஆதிக்யம் உண்டாக நினையேன்
ஆபாத ப்ரதீதியிலே அவற்றுக்கு ஒரு உத்கர்ஷம் உண்டாய்த்
தோற்றிற்று ஆகிலும் அத்தை விஸ்வசியேன் –

உன்னை அல்லால் திருவிண்ணகரானே –
சர்வாதிகனாய் இருக்கிற நீ
திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆனாய்
நீயே ஆஸ்ரயணீயன் என்று அறிவித்த பின்பு
இனி உனக்கு விபூதி பூதரானார் பக்கல்
பரத்வ பிரதிபத்தி பண்ணேன் –

———————————

தேவதாந்த்ரம் -பற்றி நீர் அறிந்தது என்ன என்றும்
கூறுவது என் என்றும் கேட்க
அதுக்கு உத்தரம் -ஸ்பஷ்டமாக இதில் அருளிச் செய்கிறார் –

முளிந் தீய்ந்த வெம் கடத்து மூரிப் பெரும் களிற்றால்
விளிந் தீய்ந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந் தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம்
தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –6-3-8-

முளிந்தீய்ந்த வெம் கடத்து-
நிலத்துக்கு அடைத்த வாகை வெண்டு என்கிறாப் போலே
சொல்லுகிற சிறு மரங்கள் ஆனவை
நில வெம்மையாலே உலர்ந்து
தீய்ந்து போகிற பாலை நிலத்திலே –

மூரிப் பெரும் களிற்றால் விளிந் தீய்ந்த மா மரம் போல்-
அதன்  நிலத்தில் உள்ளது ஒன்றாகையாலே வளர்ந்து
அப்ரதி ஹதமாக சஞ்சரியா நின்றுள்ள ஆனையாலே
தள்ளுண்டு விழுந்த பெரு மரம் போலே –

வீழ்ந்தாரை நினையாதே –
சில பதார்த்தங்கள் தோற்றி முடியும்
சிலர் நெடு நாள் இருந்து கர்ம ஷயத்தால் முடிவார்கள்
ஷூத்ர பதார்த்தங்களுக்கு உத்பத்தியோடே விநாசமாய் இருக்கும்
இந்திர ப்ரஹ்மாதிகள் நெடு நாள்  ஜீவித்து பின்னை முடிவார்கள்
இது ஆய்த்து சம்சார ஸ்வபாவம்

ஆக இங்கே இருந்து
இன்னார் இன்னதனை நாள் ஜீவித்து முடிந்தார்கள்
இன்னவை தோற்றா நசித்தன -என்று
இத்தை மநோ ரதியாதே –
(தேவர்கள் ஆயுஸ்ஸு நீண்டு உள்ளது
நாமும் முயன்று அங்கு போகலாம் என்று எண்ண மாட்டேன் )

அளிந் தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்துவது –
உன் பக்கலிலே தெளிவை உடையேனாய்
ஸ்நேஹத்தை உடையேனாய்
அநவரதம் உண்டான அவதானத்தை உடைத்தான
மநோ ரதத்தை உடைய அநந்ய கதியான எனக்கு
அ புநரா வ்ருத்தி லஷணமான மோஷத்தை என்று தருவது-

திரு விண்ணகரானே –
அவ் வருகு படுத்துகைக்காக வந்து இருக்கிற உனக்கு
தரும் நாள் இந்நாள் என்று தெரியும் இறே –

வெட்டிதான நிலத்திலே
வலியதொரு பதார்த்தாலே தள்ளுண்டு போகிற மா மரம் போலே
சம்சாரத்திலே இருந்து
ஜீவித்து முடிந்து போவாரை மநோ ரதியாதே
தேவர் பக்கலிலே ஸ்நேஹித்து
அவதானத்தைப் பண்ணி
அநவரதம் மநோ ரதிக்கும் படியான தெளிவை உடைய எனக்கு
புநரா வ்ருத்தி இல்லாத மோஷத்தை
தரப் பார்த்தது என்று
அத்தைத் தருகைகாக வந்து நிற்கிற நீ

——————————————————

உகந்து அருளினை நிலங்களில் பேர் ஆசையால்
துறப்பேன் அல்லேன் இன்பம் என்றும்
வான் உலகம் போவது என்றோ என்றும் சொல்ல
இரண்டிலும் ஆசை என்றால் எத்தைச் செய்வோம்
இந்த கலக்கம் கொண்டாடத் தக்கது தானே என்று
அவனும் பெரிய பிராட்டியாரும் ஸ்மிதம் பண்ண
இத்தை அறியாதே
கை விட திரு உள்ளமோ என்று கலங்கி –
அருளிச் செய்கிறார்
உகந்து அர்ஜுனனை வியாஜ்யமாகக் கொண்டு ஸ்ரீ கீதை அருளினால் போலே இங்கும் ஸ்மிதம்
எனக்கு அவதி சொல்லி அருள வேணும் என்கிறார்

சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை  நம்பு நம்பீ
மல்லா குடமாடி மதுசூதனே யுலகில்
செல்லா நல்லிசையாய் திரு விண்ணகரானே-6-3-9-

நல்லிசையாய்-லோகத்தில் நடையாடாத வை லக்ஷண்யம் –
ஸ்ரீ வைகுண்டத்தில் நடையாடாத ஸுவ் லப்யாதிகள்
இதற்கு அன்றோ வைகுந்தது அமரர்கள் இங்கே வந்து அனுபவிக்கிறார்கள்
மல்லார் குடமாடி -பாட பேதம் –

சொல்லாய் –
தேவர் இதுக்கு ஒரு போக்கடி சொல்ல வேணும்

திரு மார்பா –
ஸ்ரீ லஷ்மி பதியாய் இருக்கிற நீ
எனக்கு ஓன்று சொல்லாது ஒழிய ஒண்ணாது
இவன் தான் பண்ணின பாப பலம் தான் அனுபவிக்கிறான் -என்று
நீ ஆறி இருக்கைக்கு நான் ஒரு பிரஹ்மசாரி எம்பெருமானையோ பற்றிற்று-

உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை  நம்பு-
ஸ்ரீயபதியான உன் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யத்திலே அந்வயிக்கும் படியான
வைலஷண்யத்தை உடைய என்னை
எனக்கு அதி தூரத்திலே வர்த்திக்கிற கர்மங்கள்
என்னை நெருக்காத படி
நீ அங்கீ கரித்து அருள வேணும்-

நம்பீ-
ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் மிகையாம் படி அன்றோ
தேவரீர் உடைய பூர்த்தி –
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என் அடியார் அது செய்யார் -என்று
அவளோடு மன்றாடும்படியான கல்யாண குணங்களாலே பூர்ணன் அன்றோ –

மல்லார் குடமாடி –
மிடுக்கால் மிக்கு
மன்றிலே குடக் கூத்தாடி
உன் வடிவு அழகை சர்வ ஸ்தானம் பண்ணிணவனே
ஸ்வரை சஞ்சாரம் பண்ணா நின்றால் ஒருவரால் திரிய விடுகை அரியதாய் இருக்கை –

அன்றிக்கே
மல்லா குடமாடி -என்ற பாடமாகில்
செருக்கனே -செருக்குக்கு  போக்கு வீட்டுக் குடக் கூத்தாடி கொண்டு இருப்பவனே -என்கிறது –

மதுசூதனே –
அசூர வர்க்கத்தை
பக்க வேரோடு வாங்கினவனே –
(மது கைடபர் சூதனன் -உப லக்ஷணம் )

யுலகில் செல்லா நல்லிசையாய் –
லோகத்தில் பரிமாறாத புகழை உடையவனே –
இசை -யசஸ்

திரு விண்ணகரானே  –
பராவஸ்தையில் குணம் பரிச்சின்னம் போலே –
சம்சாரிகளை விட்டு
நித்ய ஸூரிகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிறவன் ஆகையாலே
அங்கு குணம் பரிச்சின்னம் ஆய்த்து இருப்பது

திரு விண்ணகரிலே  வந்து
சம்சாரிகளுக்கு முகம் கொடுத்த பின்பு ஆய்த்து
குணம் அபரிச்சின்னம் ஆய்த்து –

——————————————————–

தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக்
காரார் புயல் தடக் கைக் கலியன் ஒலி மாலை
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே –6-3-10-

தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண்  புறவில்
தார் -என்கிறது இதழை
இதழ் மிக்க பூவை உடைத்தான
தாமரைகளை உடைய தடாகங்களாலே சூழப் பட்ட

அன்றிக்கே
தார் -என்று ஒளியாய்
ஒளியை உடைத்தான பூவை -என்னுதல்
ஊரில்  பர்யந்தம் அடங்கலும்
தாமரை தடாகங்களாலே அலங்க்ருதமாய் யாய்த்து இருப்பது  –

சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக்-
ஐஸ்வர்ய பிரகாசமாய்
நெடிதான வீதிகளை உடைய
திரு விண்ணகரிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற வனைக் கவி பாடிற்று –

காரார் புயல் தடக் கைக் கலியன் ஒலி மாலை
கார் காலத்திலே கழுத்தே கட்டளையாக நீரைப் பருகின மேகம் போலே
கொடுத்து வளர்ந்த கையை உடைய ஆழ்வார்
ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த
தமிழ் தொடையை வல்லார் –

அஹம் வக்தா பவான் ஸ்ரோதா வாச்யோ யோகோ விமுக்தித -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்கிறபடியே
(யோகோ விமுக்தித–மோக்ஷ தர்மம் சொல்லும் )
இது கற்பார்க்கும் இன் நன்மைகள் வேணுமோ என்னில் –
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே –
ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஒரு படியாக அமையும்
இத்தை அதிகரிக்கைக்கு அடியான ருசியில்
கண் அழிவு அற்று இருக்கும் அத்தனையே வேண்டுவது
(ஆசை உடையார்க்கு எல்லாம் )
அவர்களுக்கு பகவத் பிராப்தி பிரதிபந்தகங்கள்
போக வேணும் என்று இவர்கள் இரக்க வேண்டா
அவை தானே -நமக்கு இவ்விடம் இருப்பல்ல -என்று கால் வாங்கிப் போம் –

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

துறக்க அரிய சிற்றின்பம் தேவல்லாரை
இறையா நினைதல் இகந்து -மறவாமல்
விண்ணகரான் எண்ணும் தனக்கு விண் வேண்டும் நீலன்
திண்ணமதா நம் களை கண் –53-

—————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-6-2—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

என் அப்பன் -பொன் அப்பன் -மணி அப்பன் -முத்து அப்பன்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -எனக்கும் அப்பன் –
மிருகண்டு புத்திரர் மார்க்கண்டேயர் க்ஷேத்ரம்
துளஸீ க்ஷேத்ரம்
மஹா லஷ்மி போல் சாம்யம்
ஸ்ரீ தேவி பூமா தேவியாக பிறந்து
தாயாருக்கும் தாயார்
நெஞ்சிலும் திருமுடியிலும் வைக்கும் படி பெருமை
மநோ வாக் காயங்கள் கைங்கர்யம் -பெரு விண்ணகரம் பேறும் வேண்டாம் -ஐயங்கார் பாசுரம்
ஐப்பசி சிரவணம் திருக்கல்யாணம்
முத்தப்பன் பலி பேரர்
பொன் அப்பன் உத்சவர்
என் அப்பன் -தனி சந்நிதி -பிரயோக சக்கரம் தான ஹஸ்தம்
அஹோ ராத்திரி புஷ்கரணி
தக்ஷிண கங்கா யமுனா தீர்த்தம்
புறப்பாடு சேர்த்தியிலே எப்பொழுதும்
ஆகவே பெருமான் திரு மார்பா-6-2-2- -என்கிறார்

கீழே ஒரு கால் போல் ஒன்பதில் கால் வேண்டேன் மனை வாழ்க்கை அருளிச் செய்தவர்
இதில் பூர்வ விருத்தம் சொல்லி சரணம் புகுவது எதனால் -என்ன
அநாதி காலம் சம்சாரத்தில் இருந்து வாசனை பண்ணி இப்பொழுது வேண்டேன் என்றால்
இது ச ஹ்ருதய யுக்தியாக இருக்குமோ
உதட்டு அளவு வார்த்தையாக -வெறுப்பு வந்த சமயத்தில் மட்டும் சொல்லும் வார்த்தையாக இருக்குமோ –
நமக்கும் இவர் பாசுரம் சொல்ல வேண்டேன் என்று சொல்லாத தோன்றுமே
உள்ளத்தில் இருந்து உள்ளுவதை எல்லாம் அறிபவன் அன்றோ
காம்யமாக செய்ய தேவர்கள் உடன் பலமாக கொடுக்க
நான் மோக்ஷம் அப்படி அருளுவது இல்லை
பக்குவ நிலை அடைந்த பின்பே -என்றானே ஸ்ரீ கீதையில்
அந்த நினைவாலே வைத்தானாக இருக்கும் என்று பூர்வ வ்ருத்தாந்தம் சொல்லி பிராட்டி முன்னாக சரண் அடைகிறார் –
சரண வரண வாக்கு ஒன்றே இருந்தாலும் நம்மை ருசி பெருக்கி கூட்டிக் கொண்டு போகிறேன் –

பொறுத்தேன் பிரவேசம் –

சம்சாரத்தில் தமக்கு உண்டான அருசியை விண்ணப்பம் செய்தார் –
விண்ணப்பம் செய்யச் செய்தேயும்
கடுக வந்து அத்தைத் தவிர்த்து
தன்னைக் கொடு நிற்கக் கண்டிலர்

காணாமையாலே
முன்பு அநாதி காலம் அவற்றை விரும்பி தன்னை நெகிழ்ந்து போந்தோம்
இப்போதும் அவ் வாசனையைக் கொண்டு
அவற்றை விரும்பி தன்னை நெகிழ்ந்து இருந்தோம்
இப்பொழுதும் அவற்றை விரும்பி தன்னை நெகிழ்ந்து இருந்தோம் என்று
நினைத்து இருந்தானாக வேணும் என்று -என்று
(பொய் நின்ற ஞானமும் –மெய் நின்று கேட்டு அருளாய்
மெய் சரீரம் உண்மை அங்கும் உண்டே
உண்மையே நின்று கேட்டு அருளாய் போல் இங்கும் )

பூர்வ வருத்தத்தை ஸ்மரிப்பித்து
அதில் எனக்கு ருசி இல்லை என்னும் இடத்தை
சர்வஞ்ஞன் திரு உள்ளத்திலே படுத்தி
கடுக கிட்டலாவது ஒரு சாதனத்தை பரிக்ரஹித்து கொடு நிற்க வேணும் -என்று பார்த்து
அதுக்கு உறுப்பாக

அநாதி காலம் தாம் சம்சரித்து போந்த படியையும்
அது தன்னில் ஜன்ம பரம்பரைகளில் கை கழிந்த படியையும்
அர்த்த காமங்களை விரும்பிப் போந்த படியையும்
இந்த்ரிய வஸ்யனாய் போந்த படியையும்
இப்போது மேல் வரக் கடவ
நரகாநுபவத்தை நினைத்து அஞ்சுகிற படியையும்
விண்ணப்பம் செய்து

இவை என்னால் கழித்துக் கொள்ளல் ஆவது அன்றிக்கே இருந்து
என்னுடைய இக் குற்றங்கள் ஒன்றையும் பாராதே
தேவரோடு உண்டான நிருபாதிக சம்பந்தத்தையே பார்த்து
பிராட்டி புருஷகாரமாக
என்னை ஸ்வீகரித்து அருள வேணும்
என்று திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார் –

———————————————–

பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-1-

பொருள் இன்பம் என இரண்டும்-அர்த்தம் காமம் -மட்டுமே விரும்பினேன் –
யார்வச் செற்றமவை-விருப்பு வெறுப்பு -ராகம் த்வேஷம் -இரட்டை –
ஐம்புலன் கட்கனாயின-ஐம்புலன்களை கடன் போல் -வைதமாய் -அனுபவம் பண்ணும் படி –
இவற்றுக்கு அர்த்தம் காமம் புருஷார்த்தம்
நமக்கு அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பிராப்தி
வாயிலொட்டி யறுத்தேன் -ப்ரதிஜ்ஜை பண்ணி அனுஷ்டான பர்யந்தமாக செய்தேன்
மனத் தகற்றி வெறுத்தேன்-மனத்தை அகலப்படுத்தி விறுப்பையும் வெறுப்பையும் விஸ்தரித்து பின்பு துக்கப் பட்டேன்

பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில்
சம்சாரிகளை பந்துக்கள் என்று நினைத்து இருந்தால்
அவர்கள் தாங்கள் சத்ருக்களாய் இருக்கச் செய்தேயும்
அண்ணியாரைப்   போலே வர்த்தித்து
இவன் பண்ணின உபகாரங்களைக் கொண்டு
உபகரியாதானாக வார்த்தை சொன்னால்
இவர்கள் வேறு சிலரை இவ்வார்த்தை சொல்லா நின்றார்களோ
நம்மை இவ்வார்த்தை சொல்லிற்று நம்மோடு உண்டான உறவில் ஊற்றம் அன்றோ -என்று
அவர்கள் சொல்லும் புல்லிய சொற்களை சஹித்துப் போந்தேன் -என்னுதல்

அன்றிக்கே
சமஸ்த கல்யாண குணாத்மகனாய்
புண்டரீ காஷனாய் இருக்கிற
சர்வேஸ்வரனை ஸ்துதிக்கக் கடவ பாசுரங்களைக் கொண்டு
பாரிலோர் பற்றையை -என்கிறபடியே
த்ருண சமனாய் இருக்கிற ஷூத்ரனை
பனியிரும் குழல்கள் -திருவாய் -9-9-3–என்றும்
சுந்தரத் தோள்-நாச்சியார் -9-1- -என்றும் சொல்லிக் கவி பாடும்படி
புல்லிய சொற்களை நெஞ்சிலே தரித்து போந்தேன் -என்னுதல்
சொல்லுக்கு புன்மை விஷயத்தைப் பற்ற வருமது இறே-
(அவனைப் பற்றிச் சொன்னால் தானே அருளிச் செயல்கள் ஆகும்
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றாய் -இன்றாவது சொன்னாய் என்று மகிழ்ந்தது உண்டே )

பொருள் இன்பம் என இரண்டும் இறுத்தேன் –
(இறுத்தேன் -கொடுத்தேன்
உறவுக்காரர்களுக்கு கொடுத்ததும்
இந்திரியங்களுக்கு கொடுத்ததும் )
சிலரை பந்துக்களாக நினைத்து இருந்தால்
அவர்களுக்கு உபகரிக்கும் போது அர்த்தம் வேணுமே –
பிறரைக் கவி பாடுவது அர்த்தத்துக்காக விறே
ஆகையால் ஸ்தோத்ராதிகளுக்கு பிராப்தமாய் இருக்கிற
அர்த்த  காமங்கள்   என்று சொல்லப் படுகிற இரண்டையும்
கடமை இருப்பாரைப் போலே
அவற்றாலே பரி பூதனாய்க் கொடுத்துப் போந்தேன்

யார்வச் செற்றமவை-வாயிலொட்டி யறுத்தேன்
இப்படி அர்த்த க்ரஹணம் பண்ணப் புக்கால்
அதுக்கு சஹாகரித்தவர்களுக்கு ஸ்நேஹித்து வாழ்விக்கக் கடவன் என்றும்
அதுக்கு விரோதத்தை பண்ணினாரைச் செற்று முடிக்க கடவன் என்றும்
பிரதிஞ்ஞை பண்ணி
அந்த சங்கல்பத்தை அனுஷ்டானம் பர்யந்தம் ஆக்கி
தலைக் கட்டிப் போந்தேன்
பொருள் இன்பம் இரண்டும் இறுத்தேன் –

அவை தன்னை மனத்து அகற்றி வெறுத்தேன்-
(அவை தன்னை -பொருள் இன்பம் என்றும் ஆர்வம் செற்றம் )
இப்படி நெடு நாள் வாசனை பண்ணிப் போந்த இவற்றை
கழித்துக் கொள்ளப் பார்த்து
அது என்னால் செய்து தலைக் கட்டப் போகாதாகையாலே
வெறுத்து வந்து உன் திருவடிகளைப் பற்றினேன் -என்னுதல்

அன்றிக்கே
இவை தன்னை சங்கல்ப்பிக்கும் இத்தனை போக்கி
இவனால் அனுஷ்ட்டித்து தலைக் கட்டப் போகாதே
வாசனையால் அவை தான் நெஞ்சிலே பட்டுக் கிடக்குமே
அவற்றை ஹிருதயத்திலே விரிய (அகல -பருக்க -விஸ்திருதமாக )விட்டு கூடு பூரித்து
அவை தன்னை -என்று ராக த்வேஷங்களை

வெறுத்தேன் –
அது தான் பின்னை சோகம்  மோகங்கள் உடன் தலைக் கட்டும் இறே
அத்தாலே வந்து
தேவர் திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன்    –

திரு விண்ணகர்
இவன் இப்போது செய்கிற இவை விபாகத்தில்
அனர்த்தத்தோடே தலைக் கட்டக் கடவது
அப்போதாகா சுக்கிடத்திட்டு உண்டோ என்பாரைப் போலே
நமக்கு தஞ்சமாவார் யார் -என்று ஆராயக் கடவன்

அவ்வளவில் நாம் தூரஸ்தராக ஒண்ணாது என்று
நான் விபரீதத்திலே கை வளருகிற நாளே தொடங்கி எண்ணித்
திரு விண்ணகரிலே வந்து  சந்நிஹிதன் ஆகையாலே
திருவடிகளில் வந்து சரணம் புகுந்தேன் என்னும் அளவாய் ஆய்த்து இறே
இங்கே வந்து நின்றது –

(சுக்கு வியாபாரி செட்டியார் அக்கரை போகா நிற்க
ஓடக்காரன் காசு கேட்க
நான் நடந்து போவேன்
நட்டாற்றில் மார்பு மாட்டு கழுத்து மாட்டாய்
அப்போது பயப்பட்டு
திட்டா திடரா இருக்க சொன்னது போல்
வருவார் என்று அன்றோ இங்கே நித்ய ஸந்நிஹிதன் ஆனாய் )

——————————————————–

ஸ்ரீ விஷ்ணு தர்மம் -கேசவன் வைத்தியர் மேரு பாபக் கூட்டங்கள் போகும்
பெருமான் திரு மார்பா சிறந்தேன்  நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே-
புருஷகாரம் -லஷ்மீ ஸஹ -காருண்யம் கிளப்ப – பிராட்டி முன்னாக சரண் –

மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியில்  மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன்  நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-2-

மறந்த மதியில்-நினைக்காமல் விட்டேன் ஞானமும் இல்லை -அநு தாபமும் இல்லை –
இறந்தேன்-அசித் கல்பம் ஆனேன் –

இத்தனையோ செய்த குற்றம் –
மறந்தேன் உன்னை முன்னம் –
அந்த பொருள் இன்பங்களோ பாதி உன்னையும் ஒரு மூலையிலே
ஆதரித்துக் கொடு போரப் பெற்றிலேன் –
அது செய்து போந்தார் ஆகில்
அப்போதைக்கு இப்போது அவற்றுக்கு இப்போது பரிஹாரம் பண்ணினார் ஆவரே –

மறந்தேன் –
யாதொரு விஷயம் விடாதே நினைக்க வடுக்கும்
அது ஒன்றையும்  மறந்து போனேன்

நம்பிள்ளை மதுரையிலே நிர்வஹியா நிற்கச் செய்தே
ஒப்பிலாத பெருமாள் -த்யேயோ நாராயணஸ் சதா –
என்கிற விஷயத்தை யாகாதே மறந்து போந்தது -என்றார் –

(கங்கை கொண்ட சோழ புரம் -குருகைகே காவல் அப்பன் நினைக்க வழி கேட்டவர்களுக்கு –
நீங்கள் -மறக்க வழி சொல்லில் அன்றோ நான் சொல்ல முடியும்
எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன் அன்றோ)
அல்லாதவை செய்தபடி செய்ய உன்னை முந்துற முன்னம் மறந்து
மறந்து கொடு நின்றேன் -என்னுதல்

அன்றிக்கே
அநாதி காலம் மறந்து போனேன் -என்னுதல்
இம்மறப்பு போருகிறது நெடு நாள் உண்டாகில்
உன்னை முன்னம் மறந்திலேன் என்று அன்றோ சொல்ல அடுப்பது என்னில்
அது வேண்டா யாய்த்து
(பல நாள்களாக மறந்தேன் என்றால் அதுக்கு முன்னம் மறந்திலேன் சொல்ல வழி இல்லாமல் –
முன்னம் என்று அநாதியாகவே என்றத்தைச் சொன்னவாறு _

உன்னை
என்கிற இடத்தில் சம்பந்தத்தை ஸ்மரித்தவர் ஆகையாலே
சம்பந்தம் ஸ்வா பாவிகமே யாகையாலே
முன்பு நெடு நாள் மறந்து போரச் செய்தேயும்
சில நாள் ஸ்மரித்து
மறந்தால் போலே இருக்கத் தோற்றிற்று –
(உறவில் உறைப்பு தோன்ற உன்னை என்கிறார்
என்னைப் பார்த்தால் அநாதி –
உன்னைப் பார்த்தால் நினைத்து இருந்த காலமும் உண்டு என்று தோன்றுமே )

கலங்கா   பெரு நகரம் தன்னிலே இருந்து மறுக்கிறது அன்று இறே
சம்சாரத்த்லே இருந்து மறக்கை குற்றமோ என்ன   -அவ்வளவே என்று
நான் சேதனாகப் பெற்றிலேன் -என்கிறார்
சேதனன் ஆகில் மறந்தோம் என்னும் அனுதாபம் பிறக்க வேணும் இறே மறந்தால் –
மறந்தோம் என்கைக்கு யோக்யதை இல்லை இறே அசித்துக்கு-
சித்துக்கு ஞாத்ருத்வம் ஆகிறது -ஜ்ஞான குணங்களுக்கு ஆஸ்ரயம் ஆகை இறே-
அக் குணங்கள் தன பக்கல் காணாமையாலே
அவற்றுக்கு ஆஸ்ரயம் உண்டாகப் பெற்றது இல்லை
(அசித் சமமாக அன்றோ இருந்தேன் )

மறந்தோம் என்கிற மதி இல்லாத நெஞ்சை உடையேன் என்கையாலே
அனுதாப ரூப ஜ்ஞானமும் த்வாரம் மனஸ் இறே
அது இல்லாமையால் -உண்டாய் இருக்கச் செய்தேயும்
இல்லை என்று வ்யவரிக்கலாம் படி நசித்தேன்

மறந்த மதி இல் மனத்தால் இறந்தேன் இத்தனையும் –
அசித்துக்கு அவ்வருகே ஆனேன்
முதலிலே நினைக்கைக்கும் யோக்யதை இல்லை இறே அசித்துக்கு
சித்துக்கு யோக்யதை உண்டாயிருக்கச் செய்தேயும்
நினையாமையாலே
அசித்துக்கும் அவ்வருகே கை கழியப் போனேன்
அசந்நேவ என்று பிரமாணங்களும் சொல்லும்படி யானேன்
(ப்ரஹ்மம் இல்லது என்றால் இல்லாமல் -உண்டு என்றால் உளனாகி இருப்பானே –
ஆத்மா இருந்தால் ஞானம் இருக்க வேண்டும்
மறந்தேன் -மறந்த மதி இல்லாமல் அனுதாபமும் படாமல் இருக்கவே இறந்ததுக்கே சமம் )

மறந்த மதியில் –
நினையாது ஒழிந்தேன் என்கிற ஜ்ஞான அனுதாபமும் இல்லாதாகையால்
மனத்தால் -மனசை உடையேனாக
எத்தனையும் -மிகவும் அசித்தைக் காட்டிலும்
இறந்தேன் -கை கழியப்  போந்தேன்-

அதனால் –
அவித்யா தருசம்பூதி பீஜமே தத்த்விதா ஸ்த்திதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்கிறபடியே
அநாத்ம ந்யாத்ம புத்தியும் அஸ்வே ஸ்வ புத்தியும்
சம்சாரத்துக்கு பீஜம் என்று இருப்பார்கள்
இவர் அனுதாபம் இல்லாமை சம்சார பீஜம் என்று இருக்கிறார் –
(அஹங்காரம் மமகாராம் வேர் முதல் ஆழ்வார் -பீஜம் இங்கு
இருந்தேன் -அனுதாபம் கூட இல்லாமல் இருந்தேன்
அதனால் இடும்பை குழியில் பிறந்தேன் என்கிறார் அன்றோ -ஆகவே இதுவே பீஜம் )

இடும்பை -குழியில்
துக்கம்
துக்கத்தை விளைக்கக் கடவதான கர்ப்பத்திலே போய் புக்கு
சாவது பிறப்பதாகக்  கொண்டு
கிலேசப் பட்டே போந்தேன்

(ஜனன மரணம் -ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம்-சொல்வைதை விட சாவது பிறப்பது இங்கே
லவ குசர் குசலவர் மாற்றி அன்றோ சொல்லுகிறோம் )

பிறந்தே-
இப்படி சாவது பிறப்பதாய் போரா நின்றால்
நடுவில் காதாசித்கமாக
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினால் இறே
அது ஒரு ஜென்மத்துக்கு பிரதி பந்தமாக  வற்றாவது –
அப்படி புருஷகாரம் காட்டி மீண்டது இல்லை –

எய்த்து ஒழிந்தேன்-
இன்னும் பிறக்கைக்கு அடியான கர்ம வாசனை உண்டே யாகிலும்
பிறக்கைக்கு த்ரவ்யம் இல்லாத படி ஆனேன்
கர்ம வாசனை கிடந்தது பிறக்க வேண்டினாலும்
பிறக்கைக்கு ஷமன் அல்லேன்
ஒழிந்தேன் -நானே –எய்த்தேன் –
இனி உடையவர்களுக்கு எடுத்துக் கொள்ள நல்ல காலம் என்கிறார் –

உடையவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்கிறது
நீர் தாம் எது நினைத்து என்ன –
பெருமான் –
உம்மை நினைத்து கை கழிந்தீர் ஆகில்  செய்யலாவது உண்டோ என்ன –
பெருமான் –
எனக்கு நானேயோ உளன்
நீ அல்லையோ
சேஷித்வ பிராப்தியைப் பற்றி சொல்லுகிறீர் ஆகில்
சேஷிகள் ஆவாருக்கு ஸ்வா தந்த்ர்யம் உண்டாய் இருக்குமே

ஸ்வ தந்த்ரரான நம்மை சொல்லுகிறது நீர் என்ன
திரு மார்பா –
உன்னுடைய ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து
ஸ்வீகரிப்பிக்கும் பிராட்டி   அன்றோ  அருகே இருக்கிறாள் –
நகச்சின் நபராத்யதி-என்பார் அன்றோ அருகே –

சிறந்தேன்  -நின்னடிக்கே-
அவள் ஏதேனும் தப்புச் சொல்லிலும்
விடேன் என்னும் நீயும்
(தன் அடியார் திறத்தகத்து -என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்னுமவன் அன்றோ நீர் )
உன் ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து உன்னை இட்டு ஸ்வீகரிப்பிக்கும் அவளும்
இருவரும் இங்கே சந்நிதி   பண்ணுகையாலே
தேவர் திருவடிகளுக்கு தகுதி யானேன் –
( பெருமான் -திரு மார்பா -சிறந்தேன் -தகுதி உடையவன் ஆனேன் )

திரு விண்ணகர் மேயவனே –
கலங்கா பெரு நகரம் இருப்பாய் இருக்க
அவ்விடத்தை விட்டு
பிராட்டியோடு கூட
எய்த்தாரை எடுக்கைக்காக திரு விண்ணகரிலே சந்நிஹிதனாய் –
நான் எய்த்துக் கொடு நின்றேன் –
எய்த்தாருக்கும் எய்த்தாரை   எடுக்க வந்து    நிற்கிறவர்களுக்கும்
ஒரு சேர்த்தி இல்லையோ –

——————————————————–

கர்ப்ப வாசம் எண்ணி பயப்பட்டேன்
ஈஸ்வராய நிவேதிதே -என்று அன்றோ உம்மை ஸ்ருஷ்டித்தது
கைங்கர்யம் செய்யவே என்றாலும் அப்படி உதவ வில்லையே -என்று வருந்துகிறேன் –

மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊனேர் ஆக்கை தன்னை யுதவாமை உணர்ந்து உணர்ந்து
வானே மா நிலமே வந்து உவந்து என் மனத்து இருந்த
தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-3-

வானே-நித்ய விபூதிக்கு நிர்வாஹகனே
மா நிலமே-லீலா விபூதிக்கு நிர்வாஹகனே
ஊனேர் ஆக்கை-புருஷார்த்தத்துக்கு சாதனமாக இருக்கும் ஏர் -சீர்மை உண்டே சரீரத்துக்கு

மானேய் நோக்கியர் –
மானேய்ந்த நோக்கை உடையராய் இருக்கிற
ஸ்திரீகள் உடைய –

தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்-
ஒரு தேச விசேஷத்திலே போய்
யமனுடைய தண்டலிலே உழைக்குமது கிடக்கச் செய்தே
கர்ப்பத்திலே புக்குப் படும்
கிலேசத்துக்கு அவதி இல்லையாய்த்து இருப்பது –
தங்கள் உடைய பருவமும்
மௌக்த்யமும் கிடக்கச் செய்தே
ஒரு பிரஜை உண்டாக வேணும் என்று நோன்பு நோற்பார்கள் ஆய்த்து –

இவனுடைய விநாசத்துக்கு   ஆய்த்து யத்தனிப்பது –

ஊனேர் ஆக்கை தன்னை
ஊனே ஆக்கை -என்னவுமாம்
ஊனேர் ஆக்கை-என்னவுமாம் –
மாம்ச பிரசுரமான சரீரம் -என்றபடி
உள்ளும் புறமும் ஒக்க த்யாஜ்யமாய் இருக்கை
இதுக்கு இரண்டு ஆகாரம் உண்டு
தன்னை விரும்பினாரைத் தானும் விரும்பி
தன்னை வேண்டாதாராய் தானும் வேண்டாதது
ஆகையாலே
புருஷார்த்த சாதனமான ஆகாரம் கிடக்கச் செய்தே
பந்தகமான ஆகாரமே யாய்த்து சித்திப்பது-

யுதவாமை உணர்ந்து உணர்ந்து –
காண்கிற தேஹத்தில் விருப்பத்தைப் பண்ணி
இது தன்னையே ஆத்மாவாக அபிமானித்து
ஆத்மாவையும்
அதுக்கு சேஷியான ஈஸ்வரனையும் நெகிழ்ந்து போந்தால்
பின்னை  பந்தமாய் யாய்த்து தலைக் கட்டுவது
நல்வழி போகைக்கு உடலாமது கிடக்க
அனர்த்தத்தை விளைக்கு மதாய்
த்யாஜ்யமாய் இருக்கும் என்னும் இடத்தை விசதமாக அறிந்து –

வானே மா நிலமே –
உபய விபூதி யோகத்தாலே வந்த உயர்த்தியும் கிடக்கச் செய்தே
என்னைப் பெறுகை தனக்குப் பெறாப் பேறு என்னும் இடம் தோற்ற இரா நின்றான் –
வானே -என்கிறது -நித்ய விபூதியை
மா நிலம் -என்கிறது லீலா விபூதியை
ஆக உபய விபூதி உக்தன் -என்றபடி
விபூதி த்வயத்தையும் தனக்கு பிரகாரமாக உடையனாய் இருந்து வைத்து
என்னைப் பெறுகை தனக்கு தேட்டமாக வந்தான் ஆய்த்து –

வந்து வந்து –
முன்பு அநாதி காலம் இவரைப் பெறுகைக்கு உறுப்பாக வந்து
இவர் பக்கல் முகம் பெறாமையாலே போனமை அடையத் தோற்றி இருக்கிறது
எதிர் சூழல் புக்கு இறே அவன் திரிந்தது
(எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால்-திருவாய் –2-7-6-)

அன்றிக்கே
வந்து உவந்து -என்னவுமாம்
அதாகிறது
கலங்கா பெரு நகரத்தை இருப்பிடமாக உடையவன்
தனக்கு என ஒரு குடி இருப்பு இல்லாதாரைப் போலே
இருக்க வந்து த்ருப்தனான் ஆய்த்து

ஆவாசந் த்வஹ மிச்சாமி ப்ரதிஷ்ட மிஹகா நனே-போலே யாய்த்து
( மஹா முனே-ரிஷிகளின் பார்ஸ்வத்தில் இருக்க இச்சை பெருமாளுக்கு )
லோக நாத புரா பூத்வா  ஸூக்ரீவம் நாதம் இச்சதி –
ஸூக்ரீவ மகா ராஜரை நாதராகப் பெறுகைக்கு யோக்யதை
சம்பாதித்த படி யாய்த்து-லோக நாதர் ஆனது-
(உபய விபூதி நாதத்வம் பயிற்சி செய்து ஆழ்வார் திரு உள்ளம் உவந்து வந்தது போல் )
நாதம் இச்சதி -இச்சைக்கு விதேயத்வம் இல்லை-
பெறுவார் பெறாது ஒழிவார்-முந்துற இச்சியா நின்றார்
(நாம் விலக்கினாலும் அவன் இச்சை உண்டே -அத்தை தடுக்க முடியாதே )
ச ராமோ வானரேந்தரஸ்ய  பிரசாதேம்பி காந்ஷதே –
(யஸ்ய பிரசாதம் -யார் பிரசாதம் சர்வரும் எதிர் பார்த்து இருக்க பெருமாள்
இவர் பிரசாதம் எதிர் பார்த்து அன்றோ இருக்கிறார் )

என் மனத்து இருந்த –
இன்னும் வரத்தும் போக்கும் உண்டு
என்று தோற்றாதபடி
ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தான் ஆய்த்து –

தேனே –
தன்னைப் பெறுகைக்கு
அவன் வருவது போவதாய்ப் போந்த படியை அனுசந்தித்தவாறே
தமக்கு இனிதாய் இருக்கிறபடி
நிவேசிதாத்மா-ஸ்தோத்ர ரத்னம் –
(திருவடித் தாமரையில் தேன் இருக்க கள்ளிச் செடிக்குப் போகுமோ வண்டு )
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்கிறபடியே –

நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –
அறு காத பயணத்துக்கு பொதி சோறு கொண்டு போம் விஷயம்
இங்கே சந்நிஹிதம் ஆய்த்து –

—————————————–

உமக்கு தர்ம சாதனமான தேகம் உதவாமல் போனால்
பந்து வர்க்கங்கள் உண்டே
அவர்களால் சித்திக்கலாமே என்ன
விட்டேன்
விட்டு விட்டு பற்றினேன்
பரித்யஜ்ய -எறிந்தேன்
செறிந்தேன் -ராகவம் சரணம் கதா -விட்ட அனைத்தும் நீயே என்று பெற்றினேன் –

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும்  ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-4-

நீ-ஆபத் சகனான நீ
வருள்-சரம ஸ்லோகத்தையே அருள் என்கிறார் இதில் -இரக்கமே உபாயம் -இதுவே ஒள் வாள் –
ஐம்புலன்கள்-சப்தாதிகளும் -இவற்றுக்கு தீனி போடும் விஷயங்களும்
செறிந்தேன்-இடை வெளி இல்லாமல் பொருந்தினேன் –

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது –
பிறிந்தேன் –
சம்சாரத்தில் சிலரை பந்துக்களாக நினைத்து
தான் உபகரித்து போருகிறது
தனக்குத் தான் உதவாத வன்று இவன் செவியில் திரு நாமத்தைச் சொல்லுதல்
இவனுக்கு நல் வழி போகைக்கு விரகு பார்த்தல்  செய்கைக்காக இறே
அதில் அவர்கள் செய்வது -சோர்வினால் பொருள் வைத்தது
உண்டாகில் சொல்லு சொல்லு
என்னா நிற்பார்கள் ஆய்த்து
இவன் தான் தனக்கு உணர்த்தி உண்டான வன்றே தன்னுடைய
சர்வஸ்த்தையும் இவர்கள் இட்ட வழக்காக்கி யாய்த்து வைப்பது
நீ மறந்து ஏதேனும் வைத்தது உண்டாகில்
அத்தை சொல்லு என்னா நிற்பார்கள் ஆய்த்து –

இவன் தனக்கும் அவர்களோபாதி புன்மை போரும் காணும்
இவன் தன்னுடைய சர்வஸ்வத்தையும் அவர்களுக்கு ஆக்கா நிற்கச் செய்தேயும்
சிறிது இவன் பக்கலில் உண்டு என்று தோற்ற வாய்த்து வர்த்திப்பது
சுற்றும் இருந்து –
எமபடர் ஒரு திரளும்
இவர்கள் ஒரு திரளும் யாய்த்து இருப்பது
இவர்கள் அலையா நின்றால் அவன் செய்வது என் என்னில்
ஆர் வினவிலும்
தன் உடைமையை அடைய எழுதிக் கொடுத்து
ஸ்வீகரித்த இளையாளைக்
கொடு வந்து முன்னே நிறுத்திலும் வாய் திறவான் ஆய்த்து –

பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது —
வயிற்றிலே பிறந்த புத்திரன்
பார்யை-இவர்கள் இறே அண்ணிய உறவாய் போருவர்-
அவர்களும் இவன் பக்கல் முன்பு உபகாரம் கொள்ளும் நாள் கொண்டு
பின்பு இவனுக்கு உதவ வேண்டும் அளவானவாறே போகா நிற்பார்கள்
ஸ்வப்னத்தில் பதார்த்த தர்சனம்- உணர்ந்தால்  இன்றியே இருக்குமா போலே-
யாய்த்து இவர்களோட்டை சம்பந்தமும் –

(அறிந்தேன் -பிறிந்தேன் -செறிந்தேன் –மூன்று வினைச் சொற்களால் சித்தாந்தம்
சரம ஸ்லோக வார்த்தை எப்பொழுதும் உண்டே -இருள் நீங்கிய பின்பு அறிவது போல் அறிந்து செறிந்தேன் )

அறிந்தேன் –பிறிந்தேன் –
ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்
த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை –
இவ்வருக்கு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்
இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே
என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே
அது இப்போது வாரா உதவிற்று

நீ பணித்த வருள் என்னும்  ஒள் வாள் உருவி
அவன் பணித்த மாமேகம் -என்ற வார்த்தை ஆய்த்து
அருள் என்கிறது என் என்றால்
என்னுடைய பிரசாதத்தையே உன்னுடைய உஜ்ஜீவன ஹேதுவாக அத்யவசி என்றான் இறே

ஒள் வாள்
சம்சயங்களை அடைய துணித்துப் பொகட்டு
நஷ்டோ மோஹ -ஸ்ம்ரித் லப்த -ஸ்திதி தோஸ்மி கத சந்தேக கரிஷ்யே -என்னப் பண்ண வற்றாய் இருக்கை

மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் -என்றது உபாய விஷயம் உண்டாய் இருக்கிறது –
(நீயோ புத்ராதிகளோ ரக்ஷகம் என்கிற சம்சயம் தீர்ந்தேன்
சத்ருக்களை தமது வாள் வீசும் ஆழ்வார்
இப்பொழுது இவர் பெற்ற வாள்-ஐயத்தை வெட்டும் வாள் )

ஐம்புலன் இடர் –
பிராப்ய ஆபாசங்களாயும் பிராபக ஆபாசங்களாயும்
வருமவை அடைய நினைக்கிறது
அஹங்கார மமகார கர்ப்பமான கிரியா கலாபங்கள் கிட்டாத படியாகவும்
தன் பக்கலிலே உத்தேஸ்யதா புத்தியை  பிறக்கக் கடவதான விஷயங்கள் கிட்டாத படியாகவும் –

(ஐந்து புலன்களால் அனுபவிக்கும் ஐஸ்வர்யாதிகள் -ப்ராப்யா ஆபாசங்கள்
இவற்றைக் கொண்டு உபாயாந்தரங்கள் -ப்ராபக ஆபாசங்கள் -கிரியா கலாபங்கள் )

செறிந்தேன் –
இனி அவன் தானே நான் அல்லேன் என்னிலும்
அன்னத்தின் மூக்காலும் பிரிக்க ஒண்ணாத படி
செறிந்தேன் –
அன்னம் போன்ற பிராட்டியாலும் சிதகுரைத்துப் பிரிக்கப் போகாது  –
(அன்ன நடையான அணங்கு -பிராட்டி )

நின் இத்யாதி –
இவருக்கு இப் புத்தி விசேஷத்தை பண்ணுவித்து
திரு விண்ணகரிலே வந்து சந்நிதி பண்ணி யாய்த்த்து-
அர்ஜுனன் உடைய தேர்த் தட்டு போலே யாய்த்து திரு விண்ணகர்-
அர்ஜுனனுக்கு அருளிச் செய்த வார்த்தை
அவனோடு ஒத்த சம்பந்தம் உடையார்க்கு எல்லாமாம் இறே-

—————————————————

பந்துக்கள் உதவாதார் என்றால்
ஐஸ்வர்யம் -பொருள் கையில் இருந்தால் -உதவுவார்களோ என்ன
அது ஸ்திரமாக இருந்தால் அன்றோ இது உண்டாவது
ஆகவே பந்துக்களும் அஸ்திரம்
(ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் –பாசுரம் போல் )

பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனை வாழ்க்கை தன்னை
வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-5-

ஆண்டவர் ஆட்சி மாண்டார் -என்றுமாம் –
ராஜ்ஜியம் இழந்து கரு நாய் கவர பிச்சை தாமே கொள்ளும் படி

பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆனை குதிரை தேர் காலாள் கூட்டி
அவை கொண்டு பிரதி பஷத்தை அழியச் செய்து
அவ் வழியாலே ஐஸ்வர் யத்தையும் தன்னதாக்கிக் கொள்ள வேண்டும் அது அன்றிக்கே
சித்தமான ஐஸ்வர் யத்துக்கு மங்களா சாசனம் பண்ணுவார் தேட்டமாய் இருக்கை-
இன்றாக ஒரு ஐஸ்வர்யம் சம்பாதிக்க வேண்டாதே
முன்பே உண்டானதுக்கு மங்களா சாசனம் பண்ணுவார் தேட்டமாய் இருக்கை –
பாட்டையும் தேனையும் உடைத்தான வண்டுகள்
மதுபான மத்தமாய்க் கொண்டு
த்வனியா நின்றுள்ள குழலை உடைய ஸ்திரீகள் ஆனவர்கள் மங்களா சாசனம் பண்ண –

ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே –
ஒரு பிரதேசத்துக்கு கடவர் அன்றிக்கே
ஒரு நாயகமாய் -என்கிறபடியே
ஒரு முத்தின் குடையாம்படி பூமிப் பரப்பை அடங்கலும்
நிர்வஹித்து போந்தவர்கள் -முன்பு இப்படி நடத்திப் போந்தவர்கள் தாங்களே –

மாண்டார் என்று வந்தார் –
முடி சூடினார் என்று ஒரு ஓலையிலே இட்டால்
துஞ்சினான் என்று வேறு ஒரு ஓலையிலே இட்டு வரக் காட்டுகைக்கு
அவசரம் இல்லாதபடி முடிந்து நிற்கையாலே
அவ்வோலையிலே மறு புறத்திலே துஞ்சினான் என்று இட்டு யாய்த்து வருவ்து  –
ஆண்டவன் ஆண்டே வந்தான் என்று சொல்லப் படுவது இல்லை யாய்த்து

என்று வந்தார்-
இப்படி யாய்த்து முடியச் சொல்லிப் போருவது
ஆண்டார் மாண்டார் என்கிற சொல்லும் இடை ஒத்து இருக்கும் ஆய்த்து-
ததா தேஹாந்தர ப்ராப்தி
உத்பத்தி விநாசங்கள் ஆக்கின ஆத்மாவுக்கு அவஸ்தாந்த்ரா பத்தி இறே  –

ஆண்டவரே மாண்டார்
இப் பரப்பு அடங்கலும் தனக்கு நிலை நிற்கும் என்று அவன் விசாரியா நிற்கச் செய்தே
ஆயுஸ்ஸூ அடி அற்று இருக்கும் ஆய்த்து –

இவருடைய பாரிப்பையும்
அதின் உடைய நிலை இல்லாமையும் அனுசந்தித்து
தயை பண்ணிப் பொறுக்க மாட்டாமையாலே
அந்தோ -என்கிறார் –

நந்தந்த்யுதித ஆதித்யே -இத்யாதி
(வாள்களாக நாள்கள் செல்ல )
அபிமத விஷயங்களை பிறர் காணாத படி
புஜிக்கைக்கு காலம் வந்தது என்று உகவா நிற்பார்கள்
உதித்த வாறே அதுக்கு த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று ஹிருஷ்டராகா நிற்பார்கள் –
சாலில் எடுத்த நீர் போலே தங்கள் ஆயுஸ்ஸூ
கழிகிற படியை அறிந்து
நடுவு பட்ட நாளிலே அவ் வருகில் எளிவரவு வராதபடி
பரிஹரித்து கொள்ள வேணும் என்று இருப்பார் ஒருவரும் இல்லை-
(சாலில் எடுத்த நீர் போலே-ஏத்த சாலில் நீரை இறைப்பதே கொட்டத்தானே )

மனை வாழ்க்கை தன்னை
ஆள ஆசைப் பட்டில் இறே மாலை வேண்டுவது
ஐஸ்வர்யம் பிரத்யஷம்
நீர் ஆசைப்படுகிறது அதீந்த்ரம்
என்ன ஒண்ணாத படி திரு விண்ணகரிலே வந்து நிற்கிறது –
கைங்கர்ய சாம்ராஜ்யத்தை தருகைக்கு அன்றோ இந்நிலை தான்
(இந்த சாம்ராஜ்யம் நித்யம் அன்றோ -மாளாதே )
நீயே சரண்யனாய் வந்து நிற்கப் பெற்ற எனக்கு
ஆண்டார் மாண்டார் என்கிற இவை இரண்டும் இரண்டு வியக்தியிலேயாகப் பெற்றது இல்லை –
பெருக்காறு அடி சுட்டாப் போலே
பட்ட தர்ம ஹானியை கண்டு ஐயோ என்கிறார்

மனை வாழ்க்கை தன்னை வேண்டேன் –
ஆள ஆசைப் படில் இறே
மாளாமையை ஆசைப் படுவது
இது ஸ்த்திரமாகிலும் வேண்டேன்
நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –

—————————————————–

ஐஸ்வர்யம் பல ஸ்ருதியாக பல பதிகங்கள் உண்டே
அவை எல்லாம் பாகவத சேஷத்வம் உணர்ந்து ப்ராப்த விஷயத்தில் செலவிட்டால் அன்றோ
ஈஸ்வராய நிவேதிதம் -இந்திரியங்கள் ப்ராப்த விஷயத்தில் இல்லாமல் பட்டி மேய்கின்றனவே
பதிம் விஸ்வஸ்ய -என்று அறிந்து -க்ருஹஸ்த தர்மம் அனுபவிக்கலாகாதோ என்ன
ராஜ போகமும் வேண்டாம் என்றவர் இதில்
இல்லற சுகமும் வேண்டாம்

கல்லா  ஐம் புலன்கள்   வவை கண்டவாறே செய்ய கில்லேன்
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த
மல்லா மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-6-

கல்லா-சாஸ்திரம் படி செல்லாமல்
மல்லல்-சம்ருத்தமாய்

நீர் போய் கார்ஹஸ்யத்துக்கு எடுத்துப் போன இந்த்ரியங்களின் -வழியே -வகையே
(அவை உகந்த விஷயத்தை கொடுத்து )போய் மாட்டீரே
இங்கனே என் செய்ய கிலேசப் படுகிறீர் என்ன
அவை உன்னைக் காண வேணும் என்றும் கேட்க வேண்டும் என்றும்
உடன் பட்ட அன்று இறே எனக்கு உடலாய்தின வாவது
அவை இங்கன் அன்றிக்கே
எல்லாம் கல்லா ஐம் புலன்கள் ஆயத்தே -கல்லா சாஸ்திர மார்க்கத்தில் நடவாத ஐம்புலன்கள்
ராவணனுடன் ஒக்கும்  ஆய்த்து
மூலையடியே போக்கி முடிக்கப் பார்க்கும் இத்தனை
அல்லது நல் வழி போக ஒட்டாதது ஆய்த்து
அவை பார்த்து வைத்த வழி போக ஷமன் ஆகிறிலேன்
அதாகிறது
சப்தாதி விஷயங்களை அனுபவிக்கை இறே
அதுக்கு நான் ஷமன் ஆகிறிலேன்
மேல் வரும் அனர்த்தத்தை அனுசந்தித்த வாறே –
(நெருப்பு எரிய மேலே விறகு போட மேலும் பற்றி எரியும் -அதே போல்
இந்திரியங்களுக்கு தீனி கொடுத்து பின்பு வைராக்யம் வளர்க்க முடியாதே )

இந்திரியங்கள் ஆனவை சிலரால் திரிய விடுவிக்க ஒண்ணாத படி
மூலை யடியே நடப்பன சில உண்டாகில்
நம்மால் செய்யலாவது உண்டோ என்ன

மல்லா –
இந்த்ரிய வஸ்யதையை தவிர்க்கைக்கு ஈடான சக்தி உனக்கு இல்லையோ –
இந்த்ரியங்களை நியமிக்க போகாது ஆகில்
என் பக்கலிலே நெஞ்சை வை என்றாயே
நம் சக்தி எங்கே வ்யபரிக்கக் கண்டு  நீர் இவ்வார்த்தை சொல்லுகிறது என்ன

மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த
மல்ல யுத்தத்திலே
மல்லர் முடியும்படி
அவர்கள்  மிடுக்கை அழித்த மல் தொழில் வல்லவனே –

மல்லா மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை அழித்த வில்லா
முன் கை மிடுக்காலே அழியச் செய்யவும் வல்லவன் –
செவ்வைப் பூசலிலே அழியச் செய்யவும் வல்லவன்-
ஜனனி என்று வாசி அறியாதே ராவணனை அழியச் செய்த
அருமை உண்டோ
என்னுடைய இத்ரிய வஸ்யதையை தவிர்கைக்கு-

நிரவதிக சம்பத்தை உடைத்தான
ஊர் அரணையையும் ஐஸ்வர்யத்தையும் கண்டு திருவடி
அஹோ வீர்ய மஹோதைர்ய மஹோ சத்வ  மஹோத்யுதி
அஹோ ராஷச ராஜஸ்ய சர்வ லஷண யுக்ததா -என்றும்
யதீத் ருசீ ராகவ தர்ம பத்னீ–சாது புத்யா -என்றும்-
ராவணன் தானும் ஸ்த்ரீக்களுமான இருப்பைக் கண்டு
இவ் விருப்பை
பெருமாளும் பிராட்டியுமாக சேர விருக்க சம்வதித்தான் ஆகில்
இவ் வைஸ்வர்யம் குலையாத படி இருக்கலாய்த்து கிடீர்
மதிளையும் அரணாகப் போம் படி கடலையும் உடைய
இலங்கையை அழியச் செய்த –
வில் வலிமை உடையவனே –

நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே
அந்த வில் கொண்டு வியாபாரிக்க
அங்கே வந்து முகம் காட்டப் பெற்றது இல்லை என்ன
அந்த பிரதி பஷத்தை அழியச் செய்து
அங்கனே போனாயோ
போக்குக் காட்டி இங்கே அன்றோ வந்து புகுந்தது –

(ஸ்ரீ சுமந்திரனை அயோத்யா நோக்கி போவதாக –
தேர் தடம் பதியாமல் சிங்கி பேர புரம் போகச் சொல்லி -போக்கு காட்டுவதில்
வல்லவர் அன்றோ இவர்-இந்த வில்லி
விண்ணகரம் போவதாக சொல்லி திரு விண்ணளர் மேயவனே )

———————————————–

ஐஸ்வர்யம் படுத்தும் பாடு
கல்லா ஐம்புலன்கள் நலியும் வகை என் என்ன
அவற்றின் கொடுமையை விவரிக்கிறார் இதில்

வேறாய் யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய்
ஆறா வென் நரகத்து அடியேனை இடக் கருதிக்
கூறா வைவர் வந்து குமைக்கக் குடி விட்டவரைத்
தேறாது உன்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே–6-2-7-

வேறாய்-திருப்தனாய் காட்டிலும் வேறாக -ஆர்த்த பிரபன்னன் –
வென் நரகத்து-அதி குரூரமான சம்சாரம் –
கூறு -பாகமாக -அவித்த சோறாகக் கொண்டு –
குடி விட்டவரை-நீர் வைத்த இந்திரியங்கள் -நல் வழிப்பட வைத்த கரணங்கள் –

வேறாய் யான் இரந்தேன் –
இரந்த கார்யம் க்ரமத்தாலே செய்யலாம் படியாய் இருப்பனவும் சில இரப்புக்கள் உண்டு-
(இரப்பு-பிரார்த்தனை -சரணாகதி என்றவாறு )
அப்போதே செய்து தலைக் கட்ட வேண்டும் படியான சில இரப்புக்கள் உண்டு-
க்ரமத்தால் கார்யம் செய்து தலைக் கட்டும் அளவும் இவன் பொறுக்கும் என்று
தோற்றி இருக்கும் இடத்தில் அந்த க்ரமமும் பொறுக்கும் இறே
அப்போதே செய்யா விடில் இவனைக் கிடையாது  என்று தோற்றின இடத்தில்
அப்போதே செய்து தலைக் கட்ட வேண்டும்படியாய் இருக்கும் இறே
அதில் செய்தே அற வேண்டும்படி
அர்த்தித்வத்தை உடையேனாய்க் கொண்டு
இரந்தேன் வேறாக -என்றபடி –

யான் இரந்தேன்
அத்தலை இத்தலையான படியை திரு உள்ளம் பற்ற வேணும்
நீ எதிர் சூழல் புக்கு இரந்து திரிய
நான் அதை மறுத்து வைமுக்க்யம் பண்ணி திரிந்த காலத்தின் நீட்சியும்
திரு உள்ளம் பற்றுகை உண்டே
நீ இரக்க மறுத்துத் திரிந்த நான் அன்றோ இப்போது இரக்கிறேன் –

வெகுளாது –
என்னுடைய பாசுரம் கேட்டால்
தேவர் திரு உள்ளத்துக்கு சிவீல் என்ன வேண்டும்படியாய் இருக்கும்
இன்று அநந்ய கதியாய் வந்து நிற்கிறவன்

முன்பு -நான் அநாதி காலம் பிடிக்க மறுத்துப் போந்தவன் அன்றோ -என்று
என்னுடைய பூர்வ வ்ருத்தத்தைப் பார்த்தால்
தேவர் சீற வேண்டும்படியாய் இருக்கும்

நான் சர்வ தோஷ உக்தனாய் இருந்தேன்
நீ சர்வஞ்ஞனாய் இருந்தாய்
ஆனபின்பு -நம்மையும் தன்னையும் பாராதே
இவன் நிர் தோஷரைப் போலே நம் காலைப் பிடிப்பதே என்று சீறாதே –

மனக் கொள்-
கார்யம் செய்ய வேண்டும் அளவில்
ஆனைக் குப்பாடுவாரைப் போலே-( சதுரங்க விளையாட்டு போலே-பாராமுகமாய் – )
அநாதரித்து இருக்க ஒண்ணாது
இத்தை திரு உள்ளம் பற்றி அருள வேணும் –
சீறாமை   போராது
இத்தை திரு உள்ளத்தே கொண்டு அருள வேணும்-

உம்மை ச தோஷராக சொல்லி வைத்து
ஸ்வ தந்த்ரனாய் இருக்கிற என்னை
சீறாதே திரு உள்ளம் பற்ற வேணும் என்று
நீர் சொல்லுகிறது என்ன ஹேது கொண்டு -என்ன

எந்தாய் –
என்னால் அழித்துக் கொள்ள ஒண்ணாத பிராப்தியைக் கொண்டு
பொறுக்கை ஒழிய -செய்த குற்றத்தைக் கணக்கிட்டு
கை விடலாம்படியோ தேவரோடு உண்டான பிராப்தி இருப்பது
தஸ்மாத் ப்ரணம்ய –பிதேவ் புத்ரஸ்ய-என்னா நின்றது இறே –
(ஸ்ரீ அர்ஜுனன் -விஸ்வரூபம் கண்டதும் -பிரார்த்தனை -இத்தையே கத்யத்திலும் உண்டே )

பொறுப்பிக்கிற இடத்தில் வந்தவாறே செய்த குற்றத்தை பார்த்துச் சீறாதே
பிராப்தியைப் பார்த்து கைக் கொள்ள வேண்டும்படி
உமக்கு இப்போது வந்தது என் என்ன -(என்ன ஆபத்து என்ன)

ஆறா வென் நரகத்து –
இந்த்ரியங்களின் உடைய சாலப் பொல்லாதாய் இருந்தது
செய்த பாபம் அகஞ்சுரிப் பட்ட அளவிலே விட்டடிக்கவும் கூடும் இறே யமனுடைய தண்டல்
அங்கன் ஓர் அளவு அல்ல மாறாத நரகம் ஆயத்து சம்சாரம் –

அடியேனை இடக் கருதிக்
கோமுற்றவர் படுக்கைப் பற்றிலே நலியக்  கோலுமா போலே-கோமுற்றவர் -மணியகாரர் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்னுமா போலே அங்குத்தைக்கு எல்லா அடிமையும் செய்து
வர்த்திக்கைக்கு ஈடான பிராப்தியை உடைய என்னை
அஹங்கார மமகாரங்களுக்கு அடிமை செய்யும் சம்சாரத்திலே
போகத் தள்ளுவதாக நினையா நின்றது –

கூறா வைவர் வந்து குமைக்கக் –
இது ஐவருக்கு பொது இறே என்று இருக்கிறன வில்லை –
அஹம் அஹமிகயா பற்றி நலியா நின்றன –

ஐவர் –
சைதன்ய பிரசர த்வாரம் மாத்ரம் இறே -என்று இருக்கிறிலர்
சேதனர் என்றே இருக்கிறார் ஆய்த்து பாதகத்தில் உறைப்பாலே

ஐவர் குமைக்க –
ஒரு துர்பலனை பிரபலராய் இருப்பார்  ஐந்து சேவகர் ஐந்து திக்கிலே
வலித்து கலங்கப் பண்ணி நெருக்குமா போலே –

குடி விட்டவரைத்
நீ குடி புகுர விட்டவர்களை
அதுக்கடி
இத்தைக் கொண்டு நம் காலிலே குனிந்து
அவ்வழியாலே நம்மைப் பெற வேண்டாவோ
என்னும் கருத்தாலே இத்தைத் தந்தாய் நீ
அது உன் நினைவே ஒழிய
மற்றப் படியே உன் பக்கலில் நின்றும் அகற்றி
விஷயங்களிலே மூட்டி முடிக்குமவையாய் இரா நின்றன –

தேறாது –
உன் நினைவின் படி நடக்குமவை அன்றிக்கே ஒழிகையாலே
அவற்றை விஸ்வசிக்கப் போருகிறது இல்லை –

நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே    –
விஸ்வச நீயனான நீ
சந்நிஹிதனாய் இருக்க
பயாவஹமான பதார்த்தங்களுக்கு
அடிமை செய்து திரிய வேணுமோ –

———————————————

நம் காலில் -கைங்கர்யம் செய்யவே இவற்றை நாமே குடி வைத்தோம் என்று அறிந்தால்
அவை வேறே குமைக்கும் காரணம் என்ன -என்ன
வல் வினையார் -கர்மமே காரணம் என்கிறார் –

தீவாய் வல் வினையார் உடன் நின்று சிறந்தவர் போல்
மேவா வென் நரகத்து இட உற்று விரைந்து வந்தார்
மூவா வானவர் தம் முதல்வா மதி கோள் விடுத்த
தேவா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-8-

தீவாய்
அனல் ஆஸ்ரயராய்த்து
நெருப்பை உமிழா நின்ற வாயை உடைய –

வல் வினையார் –
பிராயச் சித்தத்தால் பரிஹரிக்கப் படுமவை அல்ல –
அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடி
அனுபவித்தால்  அல்லது போக்கி நசியாதவை யாய்த்து-

உடன் நின்று சிறந்தவர் போல்
நிருபாதிக பந்துக்களைப் போலே விடாதே நின்று கலந்து
கலந்து நலியும் கடும் துயர் -பெரிய திருவந்தாதி -65–என்னக் கடவது இறே
சிறந்தவர் போலே
ஒரு காலும் விடாத ப்ராதாக்கள் மற்றையாரைப் போலே-

மேவா வென் நரகத்து –
ஆனந்த மய என்கிற வஸ்துவை அனுபவிக்கைக்கு யோக்யமான வஸ்துவுக்கு
பொருந்தாத படி இருக்கிற நரகத்திலே தள்ளுவதாக வந்தன
இங்கு உள்ள துக்கங்களை அனுபவி
இப்போது நரகம் என்கிறது இந்  நரகம் தன்னையே-

விரைந்து வந்தார் –
இத்தால் இக் காலத்தில் ஒரு ஸூஹ்ருதம் நுழைகைக்கு அவகாசம் இன்றிக்கே போந்த படி சொல்கிறது
கர்மத்துக்கு பிரவாஹ அநாதித்வம் உண்டு இறே –
(இந்  நரகம் தன்னையே-இந்த சம்சாரம்
விரைந்து -வேகம் -ஸ்தாயியாக நின்றால் தானே விரைய முடியும்
கங்கை வேகமாக ஓடும்-ஓடிந்தே வேகமாக ஓடுவது போலே பாபங்கள் )

இது நீர் பண்ணின கர்மத்தின் உடைய பலன் அன்றோ
தம் தாமின் கர்ம பலன் தந்தாம் அனுபவிக்க வேண்டாவோ
இப்போதாக செய்யலாவது உண்டோ என்ன

மூவா வானவர்-
அகர்ம வஸ்யராய் உன்னை அனுபவிக்கும்படி பண்ணி வைத்தாயே
ஒரு விபூதியாக எப்போதும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகராய் இருப்பார்களே
புஜியா நிற்கச் செய்தே -இது நமக்குக் குலைகிறதோ -என்று இருக்க வேண்டா வாய்த்து –
(மூவா-வயசானவர் -வருத்தம் இல்லாதவர் )

முதல்வா –
அவர்களை அகர்ம வஸ்யராக்கி
அவர்களுக்கு உன்னை அனுபவிக்க கொடுத்து
அவ் வழியாலே அவர்கள் சத்தையை நிர்வஹித்துக் கொண்டு போர நின்றாய்-
விண்ணுளார் பெருமானேயோ-திருவாய் -7-1-5–என்றால் போலே யாய்த்து
பிராதாக்களில் ஒருவன் முடி சூடி வாழா நிற்க
ஒருவன்  சிறைப் பட்டு கிடந்தால் போலே தோற்றா நின்றது யாயிற்று –

ஹா ராமா ஹா லஷ்மணா ஹா சுமித்ரே–ஸூந்தர காண்டம் –
இப்படிப் பட்ட அவர்க்கும்
இது மாயா மிருகம் கிடீர் என்று உணர்த்தி நோக்கும் இளைய பெருமாள் என்னும்
ஹா சுமித்ரே -அவர் தமக்கும் ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாசாய –பிரமாதம் மா கார்ஷீ -என்ற சுமித்ரையாரைச் சொல்லும் –
(வெறுப்புத் தோற்ற -சம்பந்தம் உடையவர் பேரைச் சொல்லி விஷாதம் இங்கும் -சீதாப் பிராட்டி )

அப் பரிமாற்றம் உள்ளது அவ் விபூதியிலே காணும்
இங்கு இல்லை என்று அவனுக்கு சொல்ல ஒண்ணாத படி
மதி கோள் விடுத்த தேவா –
ஸ்வரூப லாபம் பெற வேணும் என்று இருப்பாருக்கு அத்தைப் பண்ணிக் கொடுப்பது
(மதி கோள் விடுத்த-ஸ்வரூப ஞானம் ஷயம் அடையாமல் )
இஸ் சரீரத்தில் கைவல்யம் போக வேணும் என்று இருப்பாருக்கு அத்தைப் பண்ணிக் கொடுப்பது –

தேவா –
ஆர் உடம்பில் ஷயம் தான் தீர்ந்ததாய் இருக்கிறது-

நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –
என்னுடைய ஷயத்தை போக்குகைகாக நீயே வந்து
சந்நிஹிதனாய் இருக்க
நான் பிறருக்கு அடிமை செய்து திரியவோ –

—————————————————————–

இன்னும் பரத்வம் காட்டி கேள்விகளே கேட்டு இருக்காமல் இருக்க
புருஷகாரம் உண்டே
பிராட்டி மூலம் சரண் அடைகிறார் –

பிராட்டிமாரும் நித்ய ஸூரிகளும் புருஷகாரமாக சரணம் புகுகிறார் –

போதார் தாமரையாள் புலவிக் குல வானவர் தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே —6-2-9-

போதார் தாமரையாள் –
காலத்திலே அலர்ந்த செவ்விப் பூவை இருப்பிடமாக உடையவள் -என்னுதல்
அன்றிக்கே –
செவ்விப் பூவை உடைத்தான தாமரையை வாசஸ் ஸ்தானமாக உடையவள் -என்னுதல் –
போது என்று காலம் ஆதல் புஷ்பம் சொல்லிற்று ஆதல்-
(போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன் )

புலவி-
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு திரு நாமம் ஆகவுமாம் –
அன்றிக்கே
போதார் தாமரையாள் புலவி இடத்தில் குல வானவர் தம் கோதா -என்றுமாம்

புலவிக் குல வானவர் தம் கோதா
அப்போது சர்வேஸ்வரனுக்கும் பிராட்டிக்கும் சம்ஸ்லேஷ வர்த்தகமான
விஸ்லேஷங்கள் உண்டானால்
அப்போது ர ரஷ தர்மேண—கிஷ்கிந்தா -என்கிறபடியே -இளைய பெருமாள் ஆஸ்வசிப்பிக்குமா போலே
(பலத்தாலும் தர்மம் உபதேசத்தால் ரஷித்தார் -இளைய பெருமாள் )
அவ் ஊடலைத் தீர்த்து ஆஸ்வசிப்பிக்கிற நித்ய ஸூரிகள் உடைய
கௌதூலஹத்துக்கு விஷய பூதன் ஆனவனே –

குல வானவர் தம் கோதா
பகவத் அனுபவம் வ்யபிசாரம் இல்லாதவர்கள்
வடிவுடை வானவர் -என்னுமா போலே -யாய்த்து
பெரிய பிராட்டியார் உடன் உண்டான ஊடல் இடையாட்டத்தில் அத்தைப் பரிஹரித்து ஆஸ்வசிப்பிக்கிற
நித்ய ஸூரிகள் உடைய கொண்டாட்டத்துக்கு விஷய பூதன் ஆனவனே
கோது குலம் என்கிற இடத்தில் கோதா என்கிறது –

அங்கன் அன்றிக்கே
புலவிக் குல வானவர் –
என்று நித்ய ஸூரிகளுக்கு விசேஷணமாய்
அந்தப் பஷத்தில்
பிராட்டி உடைய பின்பு கூடாதபடி பிரித்த பிரிவை யாய்த்து புலவி என்கிறது
அத்தாலே
நித்ய வாஸம் பண்ணா நிற்கச் செய்தேயும்
இதுக்கு  முன்பு ஒரு காலமும் அனுபவித்து அறியாரைப் போலே உண்டாகிற அத்ருப்தியை பற்ற
அவர்கள் சொல்லிற்று ஆகவுமாம் –

இப்படி சர்வாதிகனான சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து
ஆஸ்ரித அர்த்தமாக தன்னை அழிய மாறி தூது போன படியைச் சொல்லுகிறது
கோதா கோதில் செங்கோல் குடை மன்னர்-இடை நடந்த தூதா-
துர்யோத நாதிகளைச் சொல்லிற்று என்னவுமாம்
பாண்டவர்களைச் சொல்லுகிறது -என்றும் அருளிச் செய்வர்

பாண்டவர்கள் உடைய சத்ர சாமாராதிகள்  அடையப் பறித்துக் கொண்டு
ஒருவரால் பிரதிஹதி பண்ண ஒண்ணாத ஆஞ்ஞையை உடையராய்க் கொண்டு
முத்தின் குடை நிழல் கீழ் இருந்து  பூமிப் பரப்புக்கு எல்லாம் தாங்களே ராஜாக்களாக நிர்வஹித்துக் கொண்டு
போருகிற
துரியோத நாதிகளின் நடுவே
கழுத்திலே ஓலையைக் கட்டிக் கொண்டு தூது போனவனே
அன்றிக்கே
கிருஷ்ணன் உடைய அபிப்ராயத்தாலே
கோதில் செங்கோல் குடை மன்னர் -என்று பாண்டவர்களையே சொல்லுகிறது ஆகவுமாம் –

தூ மொழியாய் -சுடர் போல் என் மனத்து இருந்த  –
பாண்டவர்களும் நீங்களும் செய்யப் பார்த்தது என் என்ன -என்று கேட்க
அவர்களுக்கு தர்மமும் தர்ம பலமான ஸ்வர்க்கமும் உண்டு
அவர்கள் ஐவர்-நாங்கள் நூற்றுவர்
ஆகையாலே பூமிப் பரப்பு அடைய எங்களுக்கு இடம் போரும் இத்தனை
நாங்கள் ஒரு ஸூஸி (ஊசி) அக்ரமும் கொடுப்பது இல்லை -என்று அவன் வார்த்தை சொல்ல
உன் அபிப்ராயம் இதுவான பின்பு
உண்பன உண்டு  உடுப்பன உடுத்துப் பூசுவன பூசி எல்லா வழியாலும்
ஆஸ்வசித்து ஒருப்பட்டு இருக்கிற ராஜாவானவன்
ஜெயத்திலே த்வரியா நின்றான் என்று
ஆஸ்ரித விஷயத்தில் உண்டான ஓரம் தோற்ற சொன்ன வார்த்தை ஆகையாலே
மறுக்க ஒண்ணாத படி உஜ்ஜ்வலனாய் கொண்டு என் ஹிருதயத்தில் பிரகாசித்தவனே –

(இவர்களை கடகராக -கங்குலும் பகலும் வடிவுடை வானோர் தலைவனே போல்
இங்கும் புருஷகாரமாகப் பற்றுகிறார் )

வேதா –
இப்படி பிரகாசிக்கிறவன் தான் ஆர் என்னில்
வேதைக சமதிகம்யன் –

நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே –
ஓலைப் புறத்தில் கேட்டுப் போகை அன்றிக்கே
கண்ணாலே காணலாம் படி
திரு விண்ணகரிலே வந்து சந்நிதி பண்ணின
உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன்
என்கிறார் –

———————————————————

தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை
வானாரும் மதிள் சூழ்  வயல் மங்கையர் கோன் மருவார்
ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே –6-2-10-

தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை
தேன் மிக்கு இருந்துள்ள பூக்களை உடைத்தான பர்யந்தத்தை உடைத்தான
திரு விண்ணகரிலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை –
தேன் -என்று வண்டைச் சொல்லிற்று ஆகவுமாம் –

வானாரும் மதிள் சூழ்  வயல் மங்கையர் கோன் –
ஆகாச அவகாசம் இடம் அடையும்படியான ஒக்கத்தை உடைய மதிளாலே சூழப் பட்டு இருப்பதாய் –
வயலை உடைத்தான திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் –

மருவார் ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார் –
திருமங்கை  ஆழ்வார் கையில் வேல் உருவிய சத்ரு சரீரங்கள் ஆயத்து
சத்ரு சரீரங்களிலே குளித்த வேலை உடையரான
ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார் –

கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே –
அங்கே போய் சிலருக்கு பரதந்த்ரராய் இருக்கை அன்றிக்கே
ஆண்மின்கள் வானகம் -திருவாய் -10-9–என்கிறபடியே
தாங்கள் அங்குத்தைக்கு நிர்வாஹகராய்க் கொண்டு
ஸ்ரீ வைகுண்டத்தைப் பிராபிக்கப் பெறுவார்  –

——–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

பொறுக்க ஓணாச் சுற்றம் பொருள் புலன்கள் தம்மைத்
துறந்து விண்ணாட்டுச் சீர் நீலன் பெற மா முன்
ஆர்த்தனாய் விண்ணகரான் சீர்த்தாள் சரண் அடைந்தான்
சீர்த்தாள் சேர் மற்ற துறந்து -52-

பொறுக்க ஓணா–சுற்றம் பொருள் புலன்கள் மூன்றிலும் அன்வயம்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஓணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர் அறுத்துத் தின்றிட -7-7-1-

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-