Archive for May, 2014

ஸ்ரீ பெரிய திருமொழி-8-2—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 15, 2014

தெள்ளியீர் பிரவேசம் –

உண்டிவர் பால் அன்பு எனக்கு -8-1-9–என்று தன் மகள் பாசுரத்தைக் கேட்ட திருத் தாயார்
இவள் அபஹ்ருத சித்தையானாள் போலேயாய்  இருந்தது –
பும்ஸாம் திருஷடி சித்த அபஹாரிணாம் -என்கிற சக்கரவர்த்தி திருமகனைக் கண்டாள் அல்லள்-
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத்தம்மானைக்  கண்டாளாம் இத்தனை
என்று நினைத்து –

முன்னிலையாய்
சௌரிப் பெருமாள் முகத்தைப் பார்த்து
இவள் நெஞ்சைப் பறிக்கை அன்றிக்கே
கையில் வளையையும் பறிக்க வேணுமோ -என்கிறாள் –

கண்டவர் தங்கள் உடைய கண்ணையும் நெஞ்சையும் பறித்துக் கொண்டு போமவர் இறே சக்கரவர்கி திரு மகன் –
கண்ட போதே தம்தாமுடைய நெஞ்சுகளைக் கொள்ளலாகாதோ என்று
எழுதிக் கொடுக்கும் படி இறே கிருஷ்ணனன் வடிவு அழகு இருக்கும்படி –

(தாயாரே மனம் மாறி -நெஞ்சைப் பறி கொடுத்து
வினவ வந்தவர்களுக்குச் சொல்வதாகவும் கொள்ளலாம்
கை வளை -அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு கொள்ளை கொண்டு
லஜ்ஜை அற்றுப் போகும்படி பண்ணி அருளினான்
மாலுக்கு– இழந்தது சங்கே மாண்பே -பராங்குச நாயகி பார்த்தோம் )

கீழே எற்றே காண்
ஆரானும் காண்மின்கள் -அம்பள வாய்
இவள் உபதேசம் பலித்து
திருத்தாயாருக்கும் பாவனா பிரகர்ஷம்
இதுவரை வினவ வந்தவர்களுக்கு சொன்னவள்
அவனையே முன் ஸந்நிஹிதனாய் இருக்க
விரஹம் இல்லையே
சக்ரவர்த்தி திருமகனை விட இங்கு உள்ள ஆதிக்யம் உண்டே இவனுக்கு
அவன் இடமே நேராகவே கேட்க்கிறாள் இதில்

——————————————–

கை வளை கொள்ளுவது தக்கதே என்ன -என்றாள்
நமக்குக் கை வளை கொள்ளத் தகாமை என்  -என்று சௌரிப் பெருமாள் கேட்க –
தகாது என்னும் இடத்தை உபபாதிக்கிறாள் கீழ் –

தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ
துள்ளு நீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-

1-தெள்ளியீர் -ஸர்வஞ்ஞத்வம் -இவள் கை வளை கொள்வது தக்கதே-
2-தேவர்க்கும் தேவர் -மனிசர்க்குத் தேவர் போல் தேவர்க்கும் தேவர் -சஷுஸ் அனைவருக்கும் –
இவள் கை வளை கொள்வது தக்கதே
3-திருத் தக்கீர்–பெரிய பிராட்டியாருக்குத் தக்க -திருவுக்கும் திருவாகிய செல்வர் -இவள் கை வளை கொள்வது தக்கதே
4-வெள்ளியீர் -ஸூ த்த ஸ்வபாவம் -இவள் கை வளை கொள்வது தக்கதே
5-வெய்ய விழு நிதி வண்ணரோ-சுட்டு உரைத்த நன் பொன் இவர் ஒளி ஒவ்வாது -இவள் கை வளை கொள்வது தக்கதே
ஐந்து பதங்களும் தக்கதே என்ற பத்துடன் சேர்த்து அன்வயித்து கொள்ள வேண்டும்

துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் -உம்மைத் தொழாமல் திவ்ய தேசம் தொழும் இவளை
அசேதனமான நீரும் களித்து வர்த்திக்க -இவள் கை வளை கொள்வது தக்கதே
கள்வியோ -அஞ்சலி பண்ணுவது குற்றமா -இவள் கை வளை கொள்வது தக்கதே-
போன்று கேள்வி கணைகளைத் தொடுக்கிறாள் –
ப்ராப்ய த்வரை மிக்கு தொழும் இவளா கள்வி –

தெள்ளியீர் –
தெள்ளிமை -அறிவுடைமை –
நீர் தான் சால  வாசி அறிவீர் ஒருவர் அன்றோ –
லோகே புருஷ சாரஜ்ஞ புருஷாந்தர கோவித -அயோத்யா காண்டம் -என்று இறே பெருமாளைச் சொல்லுவது –
அப்படியே லோகத்தில் புருஷர்களைக் கண்டால்
இவன் இன்னான் -இவனுடைய அளவிது-என்று வாசி அறிந்து போரக் கடவ நீர் –
பெண் பிறந்தார் வாசி அறிய வேண்டாவோ –
உம்முடைய சர்வஞ்ஞதைக்குப் போருமோ  இவள் கையில் வளையை அபஹரிக்கை –

(இவள் கை வளை பறித்து -லஜ்ஜை போகும்படி பண்ணி இவள் அத்யாவசாயத்தைக் குலைத்து
காரார் திருமேனி காணும் அளவும் மடல் எடுக்கப் பண்ண வேண்டுமோ )

(சர்வஞ்ஞனாக இருந்தால் உமது பெண் உடன் கூடவே அண்டியே இருக்க வேண்டுமோ
ஸதா பஸ்யந்தி -இருந்தது இல்லையோ என்று அவன் சொல்வதாகக் கொண்டு
அதையே பிடித்துக் கொண்டு திருத்தாயார் அடுத்த கேள்வி )

அது கிடக்கட்டும் –

தேவர்க்கும் தேவர் –
தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார் -நாச்சியார் திருமொழி -என்கிறபடியே
அக்லிஷ்ட ஜ்ஞானரான நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகராய் இருக்கக் கடவ நீர்
ஒரு அபலை கையில் வளையை அபஹரிக்கை உம்முடைய மேன்மைக்கு  போருமோ  –

நாட்டில் ஷூத்ர தேவதைகளும் -நாதாதும் தேவா வரம் அர்ஹந்தி -என்கிறபடியே
மனுஷ்யர்க்கு பிரத்யஷ த்ருஷ்டர் ஆனால்
வரம் கொடுத்து அல்லது போகார் இறே –
அத் தேவதைகள் தாங்களும் மனுஷ்யர் ஸ்தாநீயர் என்னும்படி இறே நித்ய ஸூரிகள் படி இருப்பது –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்திதேவ -என்னக் கடவது இறே –
அவர்களுக்கும் அபேஷித பலங்களை கொடுக்கக் கடவீராய் இறே தேவரீர் இருப்பது –
அந்த ஷூத்ர தேவதைகள்  படி இதுவானால்  உமக்குக் கொடுக்கத் தகுமோ கொள்ளத் தகுமோ -என்கிறாள் –
(தேவர்க்கும் -உம்மைத் தொகை -அப்ரதானமாக -ஷூத்ர தேவதைகளும் கொடுப்பதே
ஸ்வ பாவமாக இருக்க -நீர் கொள்ளலாமோ )

பெருமாள் திரு அயோத்யையில் நின்றும் போந்து ஸ்ருங்கி பேர புரத்திலே எழுந்து அருளி
ஸ்ரீ குஹப் பெருமாள் மலைத் தேனையும் காட்டுப் பழமும் கொண்டு சென்று உபகாரமாகக் கொடுக்க –
நாம் கொள்ளப் பிறந்தோம் அல்லோம் காணும்
கொடுக்கப் பிறந்தவர் காணும் -என்று அருளிச் செய்தார் இறே
ஆனால் பிறர் உடைமை கொள்ளத் தகுமோ -கொடுக்கத் தகுமோ -என்கிறாள் –

(அது சக்ரவர்த்தி திரு மகன் படி -நாம் கிருஷ்ணன் அன்றோ என்ன
அம்பரமே தண்ணீரே சோறே உமது தாமப்பனுக்கும் கொடுப்பதே ஸ்வ பாவம் அன்றோ )

(நாம் கொடுக்கவே பிறந்தோமே ஆகிலும்
மேன்மை உடையவராக இருந்தாலும்
நாரீணாம் உத்தமையான இவளைப் பிரியோமே என்று அவன் சொல்ல
இவளைத் திசை திருப்பப் பார்த்துச் சொல்லும் வார்த்தை
அதையே பிடித்து திருத்தாயார் அடுத்த கேள்வி )

உம்முடைய மேன்மை கிடக்கட்டும் –
திருத் தக்கீர் –
அஸ்யே  ஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ–யஜுர் வேதம் -என்றும் –
ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் -யஜுர் வேதம் -(ஏகோந சேஷித்வம் )-என்றும்
சொல்லுகிற பிராட்டிக்குத் தகுதாய் அன்றோ தேவரீர் இருப்பது –
(பெரும் தேவி கேட்டு அருளாய் -பெருமைக்குத் தக்க அவனுக்குப் பெருமை கொடுக்கும் பெரும் தேவி )

லோகத்தில் சேதனர் மூன்று கோடியாய் இறே இருப்பது
நித்யரும் முக்தரும்  முமுஷூக்களும் -என்று த்ரிவிதமாய் இறே இருப்பது –
சம்சாரிகள் -அசந்நேவ-இறே –

அதில் நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகாய் தேவரோடு ஒப்புச் சொல்லலாம்படி இறே பிராட்டி இருப்பது –
அலர் மேல் மங்கை -என்றும்
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -துல்ய அபி ஜன லஷணாம் -ராகவோ அர்ஹதி -என்றும்
சொல்லுகிறபடியே தகுதியாய் இறே இருப்பது –
ஆனால் உம்முடைய  பிரணயித்வத்துக்கு நமஸ்காரம் –
ஒரு பெண் பெண்டாட்டியை மார்விலே வைத்து பார்த்துக் கொண்டு இருக்கிற நீர்
ஒரு அபலை கையில் வளையை அபஹரிகைக்கு தகுதியோ -என்கிறாள்  –

(தகுதியை உப பாதிக்கிறார் –
நித்யர்களை விட சிறப்பாக -உள்ள பெரிய பிராட்டியார்
நீர் அவளை பிரியாமல் இருப்பதும் நமஸ்காரம் கும்பீடு
பிரணயித்வத்துக்கு நமஸ்காரம்
அபலையிடன் கை வளை கொண்டு தவிக்க விட்டால் அவள் என்ன நினைப்பாள் –
முன்பு ஜனக குல ஸூந்தரியை பத்து மாதம் இலங்கையில் இருக்க வைத்து பிரிய விட்டதை நாம் அறிவோம் )

(ந க்ஷணம் அபி ஜீவிதம் என்று இருந்தோமே என்ன
வண்ணான் சொன்னதை கேட்டு பிரித்தீரே
லோக அபவாதம் வரக்கூடாதே என்று அன்று என்ன
அந்த பிரணயித்வத்துக்கு நமஸ்காரம் –
தொழுது வந்த இவள் கை வளை பறிப்பது தக்கதோ 0

(நமது ஸ்வரூபம் ஸ்வ தந்திரம் அன்றோ
ஸத்யம் ஞானம் அநந்தம்ப்ரஹ்மம் என்ன
அதுக்கு
உன் ஸ்வரூபத்துக்குத் தான் இது சேருமோ என்று அடுத்த கேள்வி )

வெள்ளியீர் –
உம்முடைய பிரணயித்வம் கிடக்கட்டும் –
நீர் தான் ஹேய பிரதி படர் அன்றோ
ஒருத்தி கையில் வளையை அபஹரிக்கை ஹேயம் அன்றோ –

அதவா
நீர் தான் சுத்த ஸ்வ பாவர் அன்றோ
பர த்ரவ்ய அபஹாரம் பண்ணுகை உம்முடைய சுத்திக்குப் போருமோ –
யோர்த்தேசு சிஸ் சஹி ஸூசிர் ந ம்ருத் வாரி  சுசிஸ் ஸூசி -என்கிறபடியே
த்ரவ்ய சுத்தியே சுத்தி என்றும்
மண்ணாலும் நீராலும் பிறக்கும் சுத்தி
சுத்தி அல்லது என்றது இறே

அதவா –
வெண்மை என்று ஆர்ஜவமாய் இருக்கிறது –
மநோ வாக் காயங்களின் உடைய  சத்யதை வருகிற போது
பிரியேன் -பிரியில் தரியேன் -என்று சொன்ன சொலவுக்கும்
பொகட்டுப் போகைக்கும்-என்ன சேர்த்தி உண்டு –

(ஸ்வரூப கத ஸூ த்தி தெள்ளியீர் முதலில்
குண ஸூத்தி -தெள்ளியீர் -நேர்மை -அடுத்து
ரூப ஸூத்தி மேல் -வெய்ய விழு நிதி வண்ணரோ
அப்ரஹ்மாத்மக தத்துவமே இல்லையே
பெண் இருக்க நான் பிரியவில்லையே
நேர்மை போக வில்லை என்றானாம்
ந தே ரூபம் ந ஆயுதாநி உண்டே
ஆகவே பதார்த்தமாக உள்ள உனது வடிவு என்பதை மறந்தாய் -என்று திருத் தாயார் கேள்வி
ரூபம் பற்றி பேசுகிறாள் )

வெய்ய விழு நிதி வண்ணரோ –
உம்முடைய ஸ்வரூபம் கிடக்கட்டும்
இவ் வடிவைப் படைக்கவும் கொடாது இருக்கவும் தகுமோ –
இவ் வடிவை அபேஷித்தாருக்கு கொடுக்க அன்றோ தகுவது -என்கிறாள்

வெய்ய -காய்ச்சின
விழு நிதி -நல்ல பொன்
இத்தால் சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி -என்கிறாள்
வெய்ய -என்கையாலே சுட்டுரைத்த -என்றது
விழு நிதி -என்கையாலே நன் பொன் என்கிறது –
(இது அன்றோ அங்கி அங்க ஸ்ரீ ஸூ க்திகளின் சாம்யம் )

அதவா
வண்ணம் -என்றது ஸ்வ பாவமாய் -நிதியான ஸ்வ பாவத்தைச் சொல்லுகிறது –
அப்போது பிறர்க்கு உடைமையாம் இத்தனை போக்கி
பிறர் உடைமையை அபஹரிக்குமோ -என்கிறாள்-

இவன் படியை நேராகப் பேசினாள்-
தன் மகள் படியை முன்னுருக் கொண்டாள்  –
இவன் படி இதுவாவதாம்
இவள் படி இதுவாவதாம்
இது என்ன அந்யாயம் -என்கிறாள்  –

(தெள்ளியீர் –இத்யாதி பதங்களையும் -தொழுதாள் என்றதையும் கடாக்ஷித்து -ஓ -என்கிறாள்
துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் இவள் கள்வியோ-என்கிறாள் )

இப்படி இவள் கூப்பிட்ட  வாறே –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான பெரிய மேனாணிப்போடே இருக்கிற சௌரிப் பெருமாள்
ஒரு பெண் பெண்டாட்டி கூப்பிடா நின்றாள் -அதுக்கடி என் –
என்று விட்ட வாசலாலே புறப்பட்டு எதிரே வந்து
வாரீர் எம்மை நீர் கூப்பிடுகிறது என் -என்ன

கை வளை கொள்வது தக்கதே -என்கிறாள்-

நீயே சொன்னாய் இறே திருத் தக்கீர் -என்று
அத் திருவின் ஸ்வ பாவம் இவளுக்கு உண்டான போது அன்றோ
கையில் வளையை கொள்ளத் தகாது ஒழிவது-
அவளுக்கு ஸ்வ பாவம் ஏது என்னில்
ஸ்வ லாபத்துக்கு -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று அன்றோ அவள் இருப்பது –
இவள் ஸ்வ பாவம் -ஸ்வ யத்ன சாத்தியம் -என்று இருந்தாளே-

இன்னமும் விழி நிதி வண்ணர் -என்று ஸ்வ பாவம் சொன்னாயே
அந் நிதியை   உடையவன் கொடுக்க  கொள்ளுமது   ஒழிய
மேல் விழுந்து கொள்ளுதல் ஆத்மா அபஹாரிகள் கிருத்தியம் அன்றோ
ஆன பின்பு இக் கை வளையை கொள்ளத் தகும் காண்-என்று
சௌரிப் பெருமாள் இதுக்கும் உறைக்க நின்றார்-

துள்ளு நீர் கண்ண புரம் தொழுதாள் இவள் கள்வியோ -ஒ –
படு குலை படு குலை என்கிறாள் –
தாப ஹரமான தேசம்   ஆகையாலே அத் தேச ஸ்வ பாவத்தாலே
ஓர் அஞ்சலி பண்ணினாள் என்னா-இவளை ஆனைக்கு இட வேணுமோ

துள்ளு நீர் –
அசேதனமான ஜலமும் தன் அபிமதம் பெற்று களித்து
(அனுகூல ஞானமே தானே ஆனந்தம் )
வர்த்திக்கிற தேசத்திலே
தன் சைதன்யம் தோற்ற
ஓர் அஞ்சலி பண்ணினாள் என்ன
இது குறையாக வேணுமோ –
(உபாய பாவமாக இல்லை -ஞானத்தின் வெளிப்பாடே தானே இது )

கண்ண புரம் தொழுதாள்-
பர அவஸ்தையைத் தொழுதாளோ
வ்யூஹங்களைத் தொழுதாளோ
அவதாரங்களைத் தொழுதாளோ –
(அர்ச்சாவதாரத்தைத் தொழுதாளோ )
அர்ச்சாவதாரத்தில் நீர் நின்ற ஊரை அன்றோ இவள் தொழுதது —

(உறைக்க -சலியாமல் நின்றான்
பிரதிபதம் சொன்னதை -பிரத்யுக்தி சொல்லி -நிற்க
அவன் பக்கலில் களவை இவள் ஏற்ற
அவன் இவள் பேரிலே களவைச் சுமத்த
அதுக்கு தொழுத இவளா கள்வி
தொழுகை -அஞ்சலி -சாதனமாய் -மாம் நமஸ் குரு -சாதனா பக்தி –
அத்தாலே ஸ்வா தந்தர்யம் கோள் சொல்லப்படும்
ஆகவே ஆத்மா அபஹாரத்தையும்
ஸ்வர்ணம் போல் அவனையும் -பர த்ரவ்யத்தையும் அபஹரித்து
ஆகவே இரண்டு குற்றங்களைச் சுமத்தி
அபராதிகளை ஆனைக்காலில் இடுவது போல் அந்தப்புர பரிகரத்தைச் செய்யலாமோ
சர்வ ஸஹிஷ்ணுத்வம் அன்றோ அர்ச்சாவதார –
அவள் தலையில் குற்றம் சுமத்தலாமோ
பூத நிர்த்தேச தாத்பர்யம் -)

தொழுதாள் –
ஆத்மா அபஹாரி என்று இறே நீர் சொல்லிற்று
ந நமேயம் -என்று இருக்கை அன்றோ தொழாதவர்கள் கிருத்தியம் –
யஸ்யாஸ்மி -என்று அன்றோ இவள் ஸ்வரூபம்
பக்தா நாம்  -ந தே ரூபம் – என்று அன்றோ உன் ஸ்வரூபம்
உன் உடைமை யானது தோற்ற அஞ்சலி பண்ணினாளே
இவள் உடைமையை கட்டிக் கொண்டு கிடக்கிற நீ அன்றோ ஆத்மா அபஹாரி

அவ்வளவேயோ
ஸ்வர்ண அபஹாரமும்
ஆத்மா அபஹாரமும்
பரமாத்மா அபஹாரமும்
மூன்றும் பண்ணினாய் நீ அன்றோ என்கிறாள் –

(இவள் கள்வி யோ -என்றது
கை கூப்பின இவளா
இவள் இல்லை நீரே
வளை -ஸ்வர்ணம்
வண்ணம் -திரு மேனி -ஸ்வ பாவம் இரண்டும் அர்த்தம்
ஸ்வர்ணம் போல திருமேனி –
நிதியின் ஸ்வ பாவம் -போனதே
தெளிவுடைமை போனதே
மேன்மையார் இருப்பதும் போனதே
ஆகவே மூன்று அபஹாரங்கள் )

இவள் கள்வியோ
இவளோ களவி
நீ அன்றோ  -என்கிறாள் –

கை வளை கொள்வது தக்கதே  –
பிள்ளாய்
தொழத் தொழ வெட்டுவாரைப் போலே
தொழுத கையில் ஆபரணத்தை கழற்றுவார் உண்டோ

கீழ் சொன்ன சிலை இலங்கு பொன்னாழி-என்கிற தன் கையில்
வளைகளைக் கழற்றி 
இவள் கையில் இட்டு பார்த்து கொண்டு இருக்க அன்றோ தகுவது –

தக்கதே
நாட்டில் ஷூத்ர பிரணயிகளும் பிரணயிநிகளாய் இருப்பார்க்கு
சில உபகாரங்களைக் கொடுத்துக் கொடு போரக் கடவதாய் இருக்கும்-
பரம பிரணியியாய் இருக்கிற உனக்கு கொடு போகை தகுமோ

(கை -விசேஷித்து –
கையில் வளை
தொழுத கையில் -உள்ள வளையை -பறிப்பாரோ
நின் பிள்ளை தானே -இல்லம் புகுந்து என் மக்களை கூவி கையில் வளையைக் கொண்டமைக்கு
நினைவாக –
அன்று யசோதை இடம் -இங்கு திருத் தாயார்
அதே கண்ணன் இங்கே -ஆகவே பிள்ளாய் என்று இங்கும் கூப்பிடுகிறாள்
தக்கதே -ஏவகாரத்தால்
லௌகிக காதலர்களும் கொடுக்கிறார்களே
கொள்வது தக்கது இல்லை என்றால் எது தான் தக்கது )

சங்கு தங்கு முன்கை நங்கை -என்கிற ( கை கொள்ளாத ) அவனைப் போலே
இருக்கை அன்றோ தகுவது
தக்கது அல்ல
நதே ரூபம் -என்கிறாள் –

(தொழுதால் சரணாகதன் அன்றோ
அவனைப் பரிபவம் செய்யலாமோ
அவனுக்கு ஆபரணம் பூண்டு பார்த்துக் கொண்டே இருப்பது அன்றோ அடுத்து )

(தெள்ளியீர் அனுபவம்
நீணிலா முற்றம் அனுபவம்
பெற நீர் மலி வையகத்து நீடு இருந்து அனுபவிக்கலாம்
அச்சுவை பெறினும் வேண்டேன் என்று அன்றோ இருப்போம் )

—————————————–

சம்சாரக்க தோஷம் என்றது -பாணனார் -திரு நறையூர் நம்பி சம்பந்தம் ஏற்பட்டு விட்ட படியால்
இவளுக்கு நாணம் இல்லை -தென்று சங்கதி
ஒழிக்க ஒழியாத ஸம்பந்தம் மறந்து உள்ளோம்
நமக்கு சம்பந்த ஞானம் ஆச்சார்யர் அறிவித்து அருள -உகார -அர்த்தம் –
பகவத் சம்பந்தம் பாகவத சம்பந்தம் ஆச்சார்ய சம்பந்தம் நன்றாக விளக்கிக் காட்டும் பாசுரம்

ந நமேயம்  -என்கிற பிரதிஞ்ஞை குலைந்து
ஷிப்ரம் தேவ  பிரசாதி நீ -என்கிறபடியே
அபிவாதம் தோற்ற ஓர் அஞ்சலி பண்ணினாள் ஆகில் இது குறையோ -என்று இறே கீழ்ச் சொல்லிற்று –

இத்தைக் கேட்ட சௌரி பெருமாள் -நீ நம்மைக் குறை சொல்லக் கடவையோ
உன் மகளை நியமித்துக் கொள்ள மாட்டாயோ
ஸ்திரீகளுக்கு நாண மடம் அச்சம் பயிர்ப்பு -என்கிற ஆத்மா குணங்களில் பிரதான குணம் அன்றோ லஜ்ஜை –
அது உன் மகளுக்கு இல்லையான பின்பு
அவளை நியமிக்க வன்றோ அடுப்பது -என்ன

அவளுடைய உக்தி வியாபாரங்கள் இருந்தபடியாலும் –
சம்சர்க்க தோஷம் இருந்த படியாலும் –
அவளை நியமிக்க என்பதும் ஓன்று உண்டோ
இவளை அடியிலே அலை வலை யாக்கி புறப்பட  விட்ட
இவர் கார்யமே தலை காட்டிற்று -என்கிறாள் –

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-

பாணனார் -திருப்பாண் ஆழ்வார் -நம் பாடுவான் போல் பாடும் ஆச்சார்யர் என்றபடி
இந்தப் பெண்ணின் நாணம் முடிக்க சங்கல்பித்த திரு நறையூர் நம்பியுடைய க்ருத்யமே பலித்தது –

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்-
மனுஷ்ய சஞ்சாரம் இல்லாத பிர தேசத்திலே இவளைக் கொடு போய் இட்டு வைக்கவே
மீளக் கூடும் என்று நினைத்து
நீணிலா முற்றத்து வைத்துக் கொடு போய் வைத்தாள் –

(கை வளை கழலும்படியான தசை பிறந்து இருக்க
நீணிலா முற்றம் போனது எப்படி என்ன –
திருத்தாயார் கொடு வைத்தாள் )

நீணிலா முற்றம் –
அம் மனுஷ்யர்கள் உடைய வார்த்தையும் கூட செவிப் படாதபடி ஒக்கத்தை உடைத்தான நிலா முற்றம் –
முமுஷுவானவன் சரீர சம்பந்தாதிகள் உள்ள இடத்து
குத்சையும் பயமும் வர்த்தியா நிற்கச் செய்தேயும்
பதார்த்தங்களின் உடைய சந்நிதியில் கால் தாழ்கைக்கு யோக்யதை உண்டாம் இறே-
சரீர சம்பந்தம் கிடைக்கையாலே –
தத் பரிஹார அர்த்தமாக விவிக்த சேவியாய் வர்த்திப்பான் என்று சொல்லிற்று இறே
அப்படியே தானும் பூர்வார்த்த நிஷ்டையாகையாலே
தன் மகளுக்கு இந்த அதி பிராவண்யம்  உண்டாகைக்கு  அடி
சம்சர்க்க தோஷம் இறே என்று நினைத்து
நிர்மானுஷ்யமான நீணிலா முற்றத்திலே வைத்தாள் –

(பகவத் அலாப கிலேசத்தில் இருந்து மீள
நீணிலா -மூன்றாம் மாடி
அன்யா பதேசம் அருளிச் செய்து
ஸ்வாப தேசம் -அறிவின் நிலை முதிர முதிர மாடி
பகவத் ஏக உபாயம் ப்ரஞ்ஞா முதல் நிலை
பாகவத நிலை அடுத்து நிலை
ஆச்சார்ய நிஷ்டை அதுக்கும் மேல் -ஆகவே மூன்றாம் மாடி
பாகவதரே உபாயம் என்று –
சம்சர்க்கம் கிடைக்காமல் இட்ட கால் இட்ட கையாக இருந்த இவளை இப்படி ஏற்றிய பின்பு
வந்த நிலையால் நின்றாள் -ஸ்திரமாக -அவனைப் போல் ஸ்வா தந்தர்யம் இல்லையே-
திருநகரி -இன்றும் நீணிலா முற்றம் -மனுஷ்யர் யாரும் குறுக்கே போக விட மாட்டார்கள் )

நின்று  இவள் நோக்கினாள் –
அந் நிலா முற்றத்தைக் கண்டவாறே
கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வந்து -8-1-8-அனந்யார்ஹம் ஆக்கி
பிரதம சம்ஸ்லேஷம் பண்ணின இடம் போலே இருந்ததீ -என்று
இட்ட கால் இட்ட கைகளாய் இருந்த இவள் எழுந்து இருந்து தரித்து நின்றாள்

இதுவே போலே காணும் -ஆச்சார்ய உபதிஷ்டமான யதார்த்த ஞானம் பிறப்பதற்கு முன்பு
விஷயாந்தரங்களில் படும் கண் கலக்கமும் –
பின்பு வகுத்த விஷயத்தில் வந்து புகுந்தால்
அதஸோ அபயம் கதோ பவதி -என்று
நிர் பயனாய் தரித்து நிற்கும் நிலையும் –

இவள் நோக்கினாள் –
அவ்வளவே அன்றிக்கே
லோக தர்சனமும் பண்ண ஷமை யானாள் –

காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்-
சுற்றும் கண்ணை யோட்டிப் பார்த்தவாறே திருக் கண்ண புரம் கண்ணுக்கு விஷயம் ஆயிற்று –
அல்லாத பிரதேசங்கள் கிடக்க திருக் கண்ண புரம் கண்ணுக்கு விஷயமாக வேண்டுவான் என் என்னில் –
இவளுக்கு அபிமதம் சௌரிப் பெருமாள் பக்கலிலே ஆகையாலும் –
இவள் தான் லஷ்யத்தை உடையாள் ஆகையாலும்
திருக் கண்ண புரம் கண்ணுக்கு விஷயம் ஆயிற்று –

திரௌபதியை ஸ்வயம் வரிக்க வந்த ராஷாக்களுக்கு லஷ்யத்தைக் காட்டி
அதின் கழுத்தற எய்ய வல்லார்க்கு இவளைக் கொடுக்க கடவன் என்ன
அவர்களும் அதின் கால் கண்டேன் வயிறு கண்டேன் என்றாப் போலே சொன்னார்கள் –
அர்ஜுனன் -அதின் கழுத்தைக் கண்டேன் -என்றான் இறே
லஷ்யம் உடையான் ஆகையாலும்
இவள் உடைய ஸ்வயம் வரத்திலே மிகவும் ஸ்ரத்தை உடையான் ஆகையாலும்  –

(பாகவத நிஷ்டை யில் உள்ள இவளுக்கு
லோக தர்சனம் -லோக சாஸ்திரம் -விசேஷ சாஸ்திரம் பாகவர்களே -ப்ரதிபாதித என்ற ஸாஸ்த்ரம்
லஷ்யம் -இலக்கு பட நோக்கினாள்
பாகவதர்கள் எங்குமே உண்டே எண்ணில்
இவள் இலக்கு திருக்கண்ணபுரம் பாகவதர்கள் தானே என்றவாறு
தாயைக்காட்டிலும் மகள் சொன்னது சிறப்பு என்பதுக்கு த்ருஷ்டாந்தம் சொல்லி இந்த நிலையை ஸ்தாபிக்கிறார்
எல்லாம் வகுத்த இடமே என்று இருக்கக் கடவன்
நின்ற –என் தனக்கு இராமானுசா உம் இணை மலர்த் தாலே திவ்ய தேசம் -அமுதனார் )

காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்-
தொண்டீர் எல்லீரும் வாரீர் -திருவாய் -5-2-2-என்றாப் போலே கண்ணால் கண்டவர்கள் அடங்க
நீங்கள் கண்ண புரத்தை காணி கோள்-என்னா நின்றாள் –
உனக்கு அதி மாத்ர பிராவண்யம் ஆகாது காண் என்று நிஷேதிக்கிற தாயையும் கூட
திருக் கண்ண புரத்தைப் பாராய் -என்றால்
நல்லது கண்டால் தனியே அனுபவிக்கும் பிரகிருதி அன்றே –

கண்ண புரம் என்று காட்டினாள்-
பிரான் இருந்தமை காட்டினீர் -திருவாய்-6-5-5–என்று அவனைக் காட்டினாள் தாயார் –
அவன் இருந்த ஊரை காட்டுகிறாள் இறே இவள் –
இது போலே காணும் சதாசார்யானில் காட்டில் சத் சிஷ்யனுக்கு உண்டான வாசி –
உனக்கு பிராப்ய பிராபகங்கள் இரண்டும் ஈஸ்வரன் திருவடிகளே -என்று காட்டிக் கொடுக்கும் ஆசார்யன் –
அவ்விரண்டு அர்த்தைத்தையும் என் நெஞ்சில் பிரதிஷ்டிப்பித்த
உன் திருவடிகள் அன்றோ என் புருஷார்த்தம் -என்று இறே சச் சிஷ்யன் இருப்பது –
(அன்யா பதேசத்துக்கு ஸ்வா பதேசம் இது -மதுரகவி நிலை அன்றோ )

அதவா –
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்–
திருக் கண்ண புரத்தை காணி கோள்
அஞ்சலியைப் பண்ணி கோள்
என்று சொல்லப் புக்கு-முடியும் சொல்ல மாட்டாதே
குறையும் ஹஸ்த முத்ரையாலே காட்டினாள் –

அதவா –
காணுமோ -என்கிறாள் –
இக் கண்ணால் கொள்ளும் பிரயோஜனம் திருக் கண்ண புரத்தை காண்கை அன்றோ –
இத்தை நிஷேதிப்பாரும் சிலர் உண்டாவதே -என்று
விஷண்ணை யாகிறாள் -என்றுமாம் –

(காணும் ஓ பன்மை பத பிரயோகம்
தொண்டீர் போல் இங்கும்
ஓ போக்யதையால் வந்த ஹர்ஷ ஸூ சகம்
பாருங்கோள் -அஞ்சலி பண்ணுங்கோள் சொல்ல முடியாமல் காட்டினாள் -கைகளைக் கூப்பிக் காட்டினாள்
தனது கையைக் காட்டினாள் என்றுமாம் –
அடுத்து மூன்றாவது நிர்வாகம்
காணப் பெறுமோ
கையை நெரித்து தன் வெறுப்பைக் காட்டினாள்
இக்கண்ணால் பிரயோஜனம் காண்பதுக்கு அன்றோ
இத்தை வேண்டாம் என்று சொல்வாரும் உண்டே என்று வெறுப்பு )

வட மதுரைப் பிறந்தான் மகன் கோயில் ஆழ்வார் சன்னதியிலே கண்ணை செம்பளித்துக் கொண்டு இருந்து ஜபித்தான் –
பட்டர் திருவடி தொழ எழுந்து அருளினவர் இத்தைக் கண்டு
கோயில் ஆழ்வார் கண்ணுக்கு விஷயமாய் இருக்க கண்ணைச் செம்பளித்து இருப்பதே
இவன் கண்ணால் பிரயோஜனம் கொள்ள மாட்டான் ஆகாதே -என்று வெறுத்து எழுந்து அருளினார் –
அவனுக்கு ஓன்று இரண்டு மாசத்துக்கு உள்ளே கண் கெட்டது இறே
இது இவளுடைய உக்தி வியாபாரம் இருந்தபடி –
(காணுமோ யுக்தி
காட்டினாள் வியாபாரம் )

பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்-
சம்சர்க்கஜ பிராவண்யம் சொல்லுகிறாள் –

பாணனார் –
தலை மகன் பிரிந்தால் எதிர் தலையில் உண்டான மறத்தைப் போக்கி
சேர விடுகைக்காக பாணனைக் கொடுத்து வர விடும்
அவர்களும் இன் சொற்களாலே அவர்கள் நெஞ்சத்தில் மறத்தைப் போக்கி சேர விடுவர்கள் –

இங்கு பாணனார் ஆகிறார் –
சேதனருக்கு ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் மறத்தைப் போக்கி
சேஷத்வ ஞானத்தை உணர்த்தி
சேர விடும் ஆச்சார்யன் இறே
(ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்த இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் )

பாணனார் -என்கிறாள் காணும் இவள் –
பேராளன் பேரோதும் பெரியோர் -என்று தன் மகள் சொல்லக் கேட்டவள் ஆகையால்
இன்னார் இன்னாருக்கு சொல்ல என்பது இல்லை யாகாதே
சமித் பாணிஸ் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -முண்டகம் -என்கிறபடியே
தந் நிஷ்டனானம் இதுவே யாகாதே வேண்டுவது –

திண்ணம் இருக்க –
அவர்கள் அசல பிரதிஷ்டராய் இருக்க –

(மகள் சொன்னதையும் தாயார் கேட்கலாமே என்பதற்கு பிரமாணம் காட்டினார்
உனது மகளை அடக்கு என்றதற்கு
இனி நாணுமோ
இவளுக்கு நாணுமோ
நாணுமோ )

வினி  யிவள் நாணுமோ-
இப்படி இடைவிடாமல்  இருந்து துஸ் சிஷை பண்ணச் செய்தேயும்
இவள் மீள என்பது ஓன்று உண்டோ –

இனி இவள் நாணுமோ –
சம்சர்க்கஜ ப்ராவண்யத்தாலும்  மீள மாட்டாள் –
ஸ்வ கத பிராவண்யத்தாலும் மீள மாட்டாள் –
உனக்கு இது வாகாது காண்-என்று சொல்லுகிற நான் லஜ்ஜித்து மீளும் இத்தனை போக்கி
இவள் மீளுமோ என்கிறாள் –
ஆசார்யனாலும் பசை இல்லை இறே-
நாம் அவர் வசப்பட்டு ஸத் ப்ரக்ருதியாக இல்லா விட்டால்
இரண்டும் வேண்டி அன்றோ இருப்பது

(பாணனார் திண்ணம் என்றும்
இவள் என்றும்
இரண்டால் இவற்றைக் காட்டி அருளுகிறார்
ஆகவே இவள் நாணுமோ என்கிறாள்
இவள் ஸத் ப்ரக்ருதி )

நன்று நன்று நறையூரர்க்கே –
இவள் காரியமும் கிடக்கிடும்
அச் சௌரி பெருமாள் காரியமும் கிடக்கிடும்
அடியிலே இவள் கையிலே மடலைக் கொடுத்து
கொல்லை யாக்கி
புறப்பட விட்ட-அந் நறையூரார்  கார்யமே நன்றாய் தலைக் காட்டிற்று -என்கிறாள் –

———————————————————-

கீழே கண்ணபுரத்து அம்மானைக் குற்றம் சொல்வான் என்ன
உமது பெண்ணை அடக்கலாகாதோ
திரு நறையூர் நம்பி நாணம் அறப்பண்ண என்ன
எனது மேல் குற்றம் இல்லை என்று அவன் விலகி விட
தனியே இருந்த திருத்தாயார் வினவ வந்தர்வர்கள் இடம் சொல்லி புலம்புகிறாள் –

இனி இவள் நாணுமோ என்று இறே கீழ் சொல்லிற்று
அந்த லஜ்ஜை தான் உண்டாவது சத்தை உண்டானால் இறே
தான் பண்ணுகிற சிசுரோபசாரங்கள் கார்யமாய்த் தலைக் கட்ட காண்கிறிலோம்
என்னாய் முடியப் போகிறதோ -என்கிறாள்

தாபார்த்தராய் இருப்பார்
தாப ஹரனான ஜல நிலையனை இறே பற்றுவது
அவனைப் பற்றுமவள் அல்லை இறே இவள்
அவனைப் பற்றுவார் முக்த ப்ராயரான சநகாதிகள் இறே
இவள் பற்றுவது அர்ச்சாரூபத்திலே இறே
அதில் தனக்கு தாப ஹராமான திருப்பதிகளிலே சிலவற்றைச் சொல்லுகிறாள் –

அருவி சோர் வேங்கடம் நீர் மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ –8-2-3-

அருவி சோர் வேங்கடம் –
இதுக்கடி யான சஹ்யம் மாறாமையாலே
பிரவாஹமும் மாறாதே செல்லும்
தெண்ணீர் பாய் வேங்கடம் -நாச்சியார் -என்கிறபடியே ஸ்ரமஹரமான தேசம் –

நீர் மலை-
அந்த அருவி விழுந்தால் போக்கு உண்டாய் இறே இருப்பது –
அங்கன் அன்றியே சுற்றும் நீராய்
அதன் நடுவே திரு மலையாய்
அதன் நடுவே இறே கண் வளர்ந்து அருளுவது –

என்று வாய் வெருவினாள் –
அபஹ்ருதய ஹ்ருதையை யாகையாலே அஹ்ருதய உக்திகளை பண்ணா நின்றாள் –

மெய்யம் வினவி இருக்கின்றாள்-
ஆஸ்ரிதர்க்கு மெய்யே நின்று கார்யம் செய்த இடம் என்று
அன்றோ திரு மெய்யம் என்று பேர் ஆயிற்று -என்று கேட்கும் –
மறு மாற்றம் சொல்வார் இல்லை –
ஸ்தப்தோசி–சாந்தோக்யம் -என்று இரா நின்றாள் –

பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள் –
இவ்வோ திருப்பதிகள் போலே யுள்ளவளவும் சம்பத்தாய் இருக்கை அன்றிக்கே
ஆற்றுப் பெருக்குப் போலே மேன்மேல் என வரை யிட்டுக் காட்டும் ஐஸ்வர்யத்தை உடைத்தான –
வரையிட்டு -அந்த அந்த மலைகளை இட்டு -திருமலை -நீர்மலை -திரு மெய்ய மலை –
அங்கு உள்ள கல்யாண குணங்கள் நிறைந்த –
திருக் கண்ண புரத்தை வாய் விட்டுப் பேசா நின்றாள் –

கண்ண புரம் என்று பேசினாள் -உருகினாள் –
பேசுவதோர் அவஸ்தையும்
உருகுவதோர் அவஸ்தையும்
இன்றிக்கே பேசின வாயோடு நீர்ப் பண்டம் ஆகா நின்றாள் —

உள் மெலிந்தாள்-
அச்சேத்யேயோ மதாஹ்யோயம்-என்கிற ஆத்ம வஸ்து
நின்ற நிலையிலே வாடிற்று என்கிறாள் –
அதவா
சரீரம் உருகுவது அந்தக் கரணம் உருகினால் இறே-
நெஞ்சம் உருகிற்று என்கிறாள் —

இது என் கொலோ –
இவ் வாற்றாமைகளுக்கு அடி பாபம் இறே –
மதுரா நாம நகரீ புண்யாபாபா ஹரீ சுபா -என்று
அநவத்யம் நின்ற தேசத்தை பேசவே பாபங்களும் போம் –
போகங்களும் உண்டாம் -என்றது இறே சாஸ்த்ரம்
அது இவள் அளவும் காணாது  ஒழிகிறது என் பாபம் இறே -என்கிறாள் –

——————————————————————–

வாய் வெருவினாள்
வினவி இருக்கின்றாள்
பேசினாள்
உருகினாள்
என்கிற இவ்வாற்றாமை தான் உண்டானது தாரகம் உண்டானால் இறே
அது இருந்தபடி என் என்ன
அது தானே இல்லை -என்கிறாள் –

கீழ் உண்டான தசைகள் ஸ்வஸ்த்த தசைகள் என்னும்படி இருந்ததீ -என்கிறாள்
ஊணும் உறக்கமும் உண்டானால் இறே கீழ்ப் பிறந்த அவஸ்தைகளுக்கு அவகாசம் உள்ளது –

உண்ணும் நாளில்லை உறக்கமும் தான் இல்லை
பெண்மையும் சால நிறைந்திலள்  பேதை தான்
கண்ணனூர் கண்ணபுரம் தொழுங்கார்க் கடல்
வண்ணர் மேல் எண்ணம் இவட்கு இது என் கொலோ —8-2-4-

ஊணும் இல்லை உறக்கமும் இல்லை -அஹோ ராத்ரி

உண்ணும் நாளில்லை –
உபவாச க்ருசையாய்  இரா நின்றாள் –
ஊண் இல்லை -என்கை அன்றிக்கே -உண்ணும் நாள் இல்லை -என்கிறாள்
பிராட்டி பெருமாளைப் பிரிந்து பத்து மாசம் உபவாச க்ருசையாய் இருந்த போதே
தேவேந்தரன் அம்ருத மயமான அன்னத்தைக் கொடு வந்து
ராஷசரும் ராஷசிகளும் காணாமே கொடுக்க
அத்தை அமுது செய்தாள் என்று ருஷி எழுதி வைத்தான் –
இவளுக்கு அங்கன் இருப்பது ஒரு நாளும் இல்லை -என்கிறாள் –

உறக்கமும் தான் இல்லை-
அஹோராத்ரம் கூடி இறே ஒரு நாள் ஆவாது –
அதில் பகலுக்கு க்ருத்யமான ஊண் இல்லை யாகில்
ராத்ரிக்கு கிருத்யமான உறக்கம் உண்டோ என்னில்  இல்லை அதுவும் இல்லை என்கிறாள் –

உறக்கம் இல்லை என்கை அன்றிக்கே உறக்கமும் தான் இல்லை -என்கிறது
உறங்குகை தான் வேணும் இறே -அது இல்லை என்கிறாள் –

பெருமாள் காட்டிலே எழுந்து அருளின போது கண் வளர்ந்து அருளப் புக்க தசையிலே
இளைய பெருமாளைப் பார்த்து
மைதிலியான குழைச் சரக்கு கூடப் போந்தாள்
உம்முடைய உறக்கத்தையும் சோம்பலையும் வழி நடந்தத்தால் வந்த ஸ்ரமத்தையும்
பொகட்டு காவல் சோர்வு படாமல் நோக்கும் கிடீர் என்று பெருமாள் அருளிச் செய்ய
ஜஹௌ நித்ராஞ்ச தந்த்ரீஞ்ச  பிரசக்தஞ்ச பதி ஸ்ரமம் -அயோத்யா -என்கிறபடியே
அவற்றை எல்லாம் பொகட்டார் இறே
அவற்றைப் போலே உண்டாய் விட்டவள் அன்று இறே இவள் –

பெண்மையும் சால நிறைந்திலள்  பேதை தான்-
பர்த்ரு சம்ஸ்லேஷத்தில் அவகாஹனம் உண்டாகில் ஊணும் உறக்கமும் தவிரலாம் இறே –
அப் பருவம் அல்ல கிடீர் -என்கிறாள் –

பெண்மை -ஸ்த்ரீத்வம் –
ஸ்த்ரீதவத்தில் ஏக தேசமும் புதியது உண்டிலள் –

அதவா –
பெண்மையும் சால நிறைந்திலள்-
பர்த்ரு சம்ஸ்லேஷ ரச ஜ்ஞானம் உண்டு இத்தனை -அதில் தலை  நிரம்பிற்று இலள் –

பேரிளம் பெண்ணான அந்நிரப்பம் இல்லை யாகிலும்
மங்கையான பருவம் தான் உண்டோ -என்ன

பேதை தான் –
அதி முக்த்தை என்கிறாள் –
பேதை -பெதும்பை -தெரிவை -அரிவை -மடந்தை -மங்கை -பேரிளம் பெண் -ஏழு பருவத்திலும் முற்றாப் பருவம் –

கண்ணனூர் கண்ணபுரம் தொழும் –
இப் பருவமாய் இருக்கிற இவளுக்கு
தாரக போஷகங்கள் வேண்டாவோ
இவை இருந்தபடி என் என்ன –

கண்ணபுரம் தொழும் –
இது இவளுடைய தாரகம் –
அது என்னம்புது -ஒருவரைத் தொழுதால் என்றால் தாரகம் ஆமோ -என்ன –

கண்ணனூர் –
எல்லாம் கண்ணன் -என்கிற கிருஷ்ணன் அன்றோ உள்ளே நின்றான் –
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா -என்று இறே ஸ்வேத தீப வாசிகள் இருப்பது –
தோற்றோம் -என்றும்
ஜிதம் -என்றும் –
அஞ்சலி மாறாதே இவர்கள் இருப்பது –
அஞ்சலி மாறுவது சந்நிதி மாறில் இறே –
அஞ்சலியால் சர்வ அவயவங்களும் புஷ்டமாய் இறே அவர்களுக்கு இருப்பது –

கார்க் கடல்-வண்ணர் மேல் எண்ணம் –
அவ் ஊருக்கு உள்ளே கடல் தேங்கினால் போலே நிற்கிற கிருஷ்ணன் உடைய
வடிவை அணைக்க வேண்டும் என்று மநோ ரதியா நின்றாள் –
அவன் ஊரைத் தொழுகையாலே ஊண் போயிற்று –
அவன் வடிவை மநோ ரதிக்கையாலே உறக்கம் போயிற்று இவளுக்கு –

பெண்மையும் சால நிறைந்திலள்   -பேதை தான் -எண்ணம் இவட்கிது –
ஆரூட யோகராய் இருப்பார்க்கு பிறக்கும் அளவும் இவளுக்குப் பிறந்தபடி என் –
இது என்ன ஆச்சர்யம் -என்கிறாள்

என் கொலோ –
ஆரூட யோகிகளான ருஷிகள் பக்கல் கண்டிலோம் –
சாஷாத் கரித்து அனுபவித்த ஆழ்வார் பக்கல் கண்டிலோம் –
(நம்மாழ்வார் எல்லாம் கண்ணன் என்று இருப்பவர்
இவளோ கண்ணபுரம் அன்றோ )
இருபத்தைந்து சம்வத்சரம் பகலொடு இரவோடு வாசி அற
அறுபது நாழிகையும் கூட இருந்து அனுபவித்து
பின்பு பத்து மாசம் பிரிய ஷமை யானாள் இறே-பிராட்டியும் -அவளுக்கும் இது கண்டிலோம் –

பருவம் இதுவாவதாம்
தாரக போஷங்கள் இவை யாவதாம்
இது என்ன ஆச்சர்யம் இருந்த படி -என்கிறாள் –

————————————————————

(பசலை நோய் போகிறது -பொன்னிறம் மாறி தன்நிறம் ஆனதே
சிலை இலங்கு -இத்யாதிகளால் -இவளை அடக்கி விடலாம் என்று இருந்தவர்கள்
ஸம்ஸ்லேஷம் வார்ப்பித்து விடலாம்
பேதை யாய் இருப்பதால் -ஸ்த்ரீத்வம் நிறையாமல் இருக்க
அடக்கத்துடன் இருக்கிறாளோ என்று வினவ வந்தவர்கள் வினவ
என்னுடன் நன்றாக பேசுகிறாள் -அவற்றின் படிகளை வாய் வெருவுகிறாள்
வெட்கமும் விட்டு மறைக்கவும் தோன்றாமல் இருக்க
இவளுக்கு அடக்கமும் இல்லை என்கிறாள் -என்று சங்கதி – )

பெண்மையும் சால நிறைந்திலள் -என்று இறே கீழ்ப் பாட்டில் சொல்லிற்று –
அது காலாந்தரேண உண்டாகிறது –
அதுக்கடியான பெண்மை தான் உண்டோ -என்ன
அது தானே இல்லை என்கிறாள் –
நீ எது கொண்டு அறிந்தாய் என்ன
கரண த்ரயங்களும் அவனை நினைத்த மாத்ரத்திலே விக்ருதமாகா நின்றன
இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள் –

கண்ணனூர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்டு வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியுமே —-8-2-5-

காரிகை–ஸ்வா பாவிக அழகுக்கும் மேலே கண்ணபுரம் தொழுதலால் வந்த கூடுதல் அழகு

கண்ணனூர் கண்ணபுரம் தொழும் –
உக்தத்தை அனுபாஷிக்கிறாள் –
முன்பே சொன்னேன் இறே –
அவனைத் தொழும் அளவன்றியே அவனூரைத் தொழும் இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள் –

(அநுபாஷணம் என்பதுக்கு சொல் இல்லையே என்றாலும்
கீழே சொன்னதை சொன்னாள் என்றுமாம்
கண்ணனூர் கண்ணபுரம்-மேலே சொல்ல மாட்டாமல் தொழுகிறாள் மகள்
சொன்னதையும் செய்ததையும் திரும்பி சொல்கிறாள் என்றுமாம் )

கண்ணனூர் கண்ணபுரம் –
ஸ்ரீ மதுரை -திருவாய்ப்பாடி -ஸ்ரீ மத் த்வாரகை -என்கிற இவை எல்லாம்
கண்ணன் விண்ணூர் -என்கிற பரம பதத்தோபாதி கலவிருக்கை இறே –

(கலவிருக்கை -கொலு வைத்து -கொலு சாவடி -களைவது போல்
அங்கு எல்லாம் இருந்து தீர்த்தம் பிரசாதித்து போனானே
இங்கே 64 சதுர்யுகமாக நித்ய வாசம்
த்யக்த்யா வைகுண்டம்
ஸ்ரீ வைகுண்டம் விரக்த்யா ஸ்வாமி புஷ்காரணி தடம் போல் இங்கே தானே
கண்ணன் ஸ்வ பாவம் விட ஊரின் ஸ்வ பாவம் இருக்க ஓட்டவில்லையே )

தார நிதியோபாதி -பிறந்ததும் ஓர் இடத்திலேயே
வளர்ந்ததும் அங்கேயாய்  இறே  சக்கரவர்த்தி திருமகன் -இருப்பது –
அதுக்கு பிரதி சிரசியாய் இறே இவனுக்கு இருப்பது –
பிறந்த அன்றே போர வேண்டும்படி இறே ஊர்களின்  ஸ்வபாவம் இருப்பது –
அவற்றை விட்டு திருக் கண்ண புரத்தே புகுந்த பின்பு
இத்தையே யாயிற்று ஊராக நினைத்து இருப்பது –

தொழும் –
அவனுக்கு அவ் ஊர் நிரூபகம்  ஆனாப் போலே யாயிற்று
இவளுக்கு தொழுகையே நிரூபகமாய் இருக்கிறபடி –
ப்ராஞ்சலிம் ப்ரஹ்வ மாஸீநம் -என்கிறபடியே
பெருமாள் அந்தப்புரம் நின்றும் புறப்படுகிற போது
இரண்டாம் வாசலில் நின்ற இளைய பெருமாள்
தலை மேல் வைத்த கையும் முக்குணுக்கு இட்ட உடம்புமாய்
பெருமாள் கண் படும்படி நின்றார் இறே
அப்படியே இறே இவள் கையும் அஞ்சலியுமாய் இருப்பது –

காரிகை -என்று அழகு
இவ் வழகைக் கண்டால் -அவன் மேல் விழுந்து கையும் அஞ்சலியுமாய் நிற்க அன்றோ அடுப்பது –
அத்தலை இத்தலையாய் இருக்கிற இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள்
இத்தால் காயிக வியாபாரம் சொல்லிற்று –

பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்-
வாசிக வியாபாரம் சொல்லுகிறாள் –
(மனம் பூர்வோ வாக் உத்தர
உரைக்க மனசில் சிந்தித்து இருக்கவும் வேண்டுமே
ஆகவே மானஸ வியாபாரம் இத்தால் சொல்லிற்று என்றபடி
பெண்மையும் இல்லை என்பது நாலாவது மேல் )

பெண்மை -ஸ்த்ரீத்வம்
அதாகிறது ஏதேனும் ஓர் அவஸ்தை பிறந்தாலும்
உயிர் தோழிக்கும் கூட மறைக்கும் படி இறே இருப்பது –
அவளும் இவளுடைய வ்யாபாரங்களைக் கண்டு –
இவளுக்கு ஓடுகிற தசை இதுவாகாதே -என்று அறியும் இத்தனை இறே
ஆயிருக்கப் பெற்ற தாயான எனக்கும் வாய் விடா நின்றாள்
இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள் –

தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்–
தன்னுடைய உள்ளில் உண்டான வியாபாரம்
அதவா
தன்னுடைய உண்மை உண்டு சத்பாவம் -அத்தை சொல்லா நின்றாள் –

(பெண்மையும் -ச காரம் -உரைக்கப் போகாததை பேசி
பெண்மை யாவது
சம்ஸ்லேஷ ரஸஜ்ஜத்தை யாய் -அறிந்து –
தத் அனுகுணமான சத்தான வ்ருத்தி விசேஷங்களை
பெண்மையும் உண்மையும் -தன்னுடைய இருப்பையும் என்றபடி –
சொல்லக் கூடாதவற்றை அல்லாதது
கேளாமல் இருக்க தானே உரைக்கின்றாள்
இதே போல் நடந்த விஷயம் உண்டே –
என் இடத்தில்
என் மகளான இவள்
ஸத்பாவம்
சொல்கிறாளே
யார் யார் இடத்தில் எதை பேசக் கூடாதோ அத்தை அன்று
குகன் பரதனுக்கு இளைய பெருமாள் வைபவம் சொன்னான்
கழியின் பிரபாவத்தை கடல் இடத்தில் சொல்லுமா போல்
அதுவும் குகன் அன்றோ சொன்னான்
உண்மை -சத் பாவம் -அதே சொல் உள்ள ஸ்லோகம் நினைவுக்கு வர அதன் விளக்கம் மேல் )

ஆச சஷேத சத்பாவம் -இத்யாதி
ஸ்ரீ பரத ஆழ்வான் வாரா நின்றான் என்று ஸ்ரீ குகப் பெருமாள் கேட்ட அநந்தரம்
இளைய பெருமாள் செய்தது எல்லாம் சொல்லத் தொடங்கினார் –
வந்த போது செய்யும்படி சொல்லுகிறது என் –
ஓடம் நின்றதே
கோல் இருந்ததே –
தானும் தன் பரிகரமும் அக்கரைப் படும்படி காண்கிறேன் -என்று
ஆக்ரஹ சித்தனாய் இருந்தான் –
அநந்தரம் சுமந்தரன் உள்ளிட்டார் வந்து இளைய பெருமாள்
ஸ்வ பாவம் போலே காண்
பரத  ஆழ்வான்  உடைய ஸ்வ பாவம் இருப்பது –
அவனை நீ காண வேணும் காண் -என்ன
இவனும் போய் கண்ட அநந்தரம்
இவருடைய ஸ்வ பாவம் இருந்த படி என் -என்று
ஆச்சர்யப் பட்டு
இவருக்கு நம்மால் கொடுக்கலாம் உபஹாரம் என் என்று பார்த்து
இவருக்கு சத்ருசமான உபஹாரம் -இளைய பெருமாள் ஸ்வ பாவங்கள் இத்தனை என்று
அவற்றைச் சொல்லத் தொடங்கினான்  –

ஆச சசேஷ சத்பாவம் –
சத்பாவம் ஆகிறது -சத்துக்கள் உடைய ஆசாரம் –

சச் சப்தஸ் சாது வாசக –
சாதவ ஷீண  தோஷாஸ்து -என்கிறபடியே
சத்துக்கள் ஆவார் ஷீண தோஷர் இறே

பாவம் -ஆசாரம்
ஒருவன் -அர்த்தாவான் -அபிஜாதன் -வித்வான் -என்று அறிவது அவர்கள் அனுஷ்டானம் கொண்டு இறே
அப்படியே இறே இவருடைய அனுஷ்டானமும் –

பெருமாள் கண் வளர்ந்து அருளுகைக்கு புல்கள் அறுப்பது –
படுக்கை படுப்பது
தாமரை இலையைப் பறித்து தண்ணீரை முகந்து திருவடிகளை விளக்குவது –
பின்னையும் தண்ணீரை முகந்து அமுது செய்யப் பண்ணுவது –
சேஷித்ததை பிராட்டி அமுது செய்யப் பண்ணுவது  –
கண் வளர்ந்து அருளப் பண்ணி கையும் வில்லுமாய்க் கொண்டு
நம்மையும் கூட அசிர்த்து நோக்குவதாய் காணும் அவர் உடைய ஆசாரம் இருந்தபடி -என்று
அவர் விருத்தாந்தத்தை சொல்லத் தொடங்கினான் –

லஷ்மணஸ்ய மஹாத்மான –
கடலைக் கையாலே இறைக்கத் தொடங்கினான் –
(கழியின் பிரபாவத்தை கடல் இடத்தில் சொன்னான்
இவனோ சேஷன் -அவனோ பரதந்தர்யன் )

லஷ்மணஸ்ய மஹாத்மான –சத்பாவம் -அப்ரமேயாய -பரதாய ஆசசஷே-
சேஷ பூதன் ஆனால் நான் பணி செய்யக் கடவன்  என்று சொல்லியோ பணி செய்வது –
அது கிடக்க
அஹம் சர்வம் கரிஷ்யாமி -சொல்லிற்று எல்லாம் செய்வேன் என்று பிரதிஞ்ஞை பண்ணி
ராஜ்யத்தில் இரீர் என்ன
மாட்டேன் என்று  பின் போகை-சேஷத்வ க்ருத்யமோ –
நெருப்பிலே புகச் சொன்னாராகில் -அத்தைச் செய்தல்
அதில் நன்றாம்படி ராஜ்யத்தில் இருக்கச் சொன்னால் -அத்தைச் செய்தல் –
பின் போகச் சொன்னார் ஆகில் -அத்தைச் செய்தல் –
இப்படி சொல்லிற்று செய்கை அன்றோ சேஷத்வ க்ருத்யம் –

குஹ-
நெடு நாள் பரிசயித்த பரதனுக்கு ஒரு நாள் சீலித்த குஹன் சொல்லும்படி ஆவதே
இன்னான் இன்னாருக்குச் சொல்லுகை என்று இல்லை யாகாதே
கற்றவர்களாம் இத்தனை யாகாதே வேண்டுவது –

கஹன கோசர –
காட்டில் மரத்திலும் மட்டையிலும் பழகிப் போந்த இவன்
இளைய பெருமாள் படிகளைப் பேசி போந்த படி கண்டதே
என்று ருஷி கொண்டாடுகிறான் –

அங்கன் அன்றிக்கே
பெருமாள் உடைய வ்யதிரேகத்திலே
தூற்றிலே தலை மடுத்துக் கொண்டு கிடந்தவன்
பரதனைக் கண்டவாறே புறப்பட்டான் –

வெண்ணெய் உண்டு ஆப்புண்டு வண்ணம் விளம்பினால் -வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியுமே –
வாயாலே சொல்லும் அளவேயோ –
சகல கரணங்களாலும் சொல்லா நின்றாள் –
இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள் –

கீழ்ப் பாட்டில் -கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் -என்று
அவன் வடிவோடு அணைய வேண்டும் என்று மநோ ரதித்து
முலையிலங்கு பூம் பயலை முன்போட விறே இவள் இருக்கிறது –

அவன் ஆகிறான் ஒருத்தி உடைய உடைமையிலே சபலனாய்
அது கிட்டாமையாலே களவிலே இழிந்து
அது தன்னிலும் வாயது கையதாக அகப்பட்டு
கட்டுண்டான் காண்–11-5-5- என்று சிலர் சொன்னால்
அங்கனம் ஒரு ஸ்திரீ உடைமையிலே சபலனாவான் ஒருவனாகப் பெற்றோம் இறே
அது கிட்டாது என்று விட்டுப் போகை அன்றிக்கே
களவிலே இழியப் பெற்றோமே –
அது தன்னிலும் அகப்பட்டு கட்டுண்ணும்படி எளியனாகப் பெற்றோமே -என்ற
வ்யபதானங்களைக் கேட்ட மாத்ரத்திலே
(ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து அன்றோ அவதரித்தது )

அவ் உடம்போடு அணைந்தால் பிறக்கும் ஆஸ்வாசங்கள் அடைய பிறந்து சந்துஷ்டை யானாள் –

(கணை ஆழி வாங்கி -விரல் -கை -தோள் -திரு மார்பு -பார்த்தாவையே அணைத்த வாறே
வீணையை தடவி பரகால நாயகி -அவனாகவே நினைத்தது போல்
இங்கும் இவ்வார்த்தை கேட்டதும் அணைந்தது போல் )

அவாப்த சமஸ்த காமனானவன்
ஒருத்தி உடைமையை ஆசைப் படுவதாம்
சர்வ சக்தனானவன் களவிலே இழிவதாம்
அது தன்னிலும் அகப்பட்டு கட்டுண்ணும்படி எளியன் ஆவதாம்
இனி நமக்கு ஒரு குறை உண்டோ -என்கிறாள் –

———————————————————

அர்ச்சாவதாரத்தில் அனுகரித்து –
உண்மை கீழே சதவிருத்தி -சத் பாவம் –
அது தானும் பிரகார பிரகாரி பாவ அனுசந்தானம்
அதன் உறைப்பாலே -அபேத -விட்டுப்பிரியாத -சரீரம் சரீர பாவமாகவே தோன்றும் –
அபேத அனுசந்தானத்தால் -ஐக்யம் இல்லை -அங்கும் ஸ்வாமி தாஸ சொத்து அனுசந்தானம் உண்டே
இந்திரன் -அந்தராத்மா மாம் உபாஸ்யே -சொன்னது போல்
ஆண்டாள் கோபிகள் பிரகலாதன் நம்மாழ்வார் இவர்களும் அணுகரித்தார்கள் அன்றோ –

விரஹ தசையில் அப்படி அனுசந்தானம் வர ப்ரஸக்தி உண்டோ
கண்ணனூர் என்றாளே –
கோபிகா அவஸ்தை வந்து
சவுரி பெருமாளே கண்ணன்
இது திருவாய்ப்பாடி
கோபிகள் கண்ணனாக நினைத்து
ஆண்டாள் -கோபிகளாகவே நினைத்து -மார்கழி நோன்பு அனுஷ்டானம்
இவர் கண்ணனாகவே நினைத்து அனுகரித்து –

கீழ்ப் பாட்டிலே
தன்னுடை உண்மை உரைக்கின்றாள் -என்றும்
வெண்ணெய்  உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன்னிறம் ஆவது  ஒழியும் -என்றும் சொன்னாய்
அதில் உண்மை எது
பொன்னிறம் போனபடி என் -என்ன -அத்தைச் சொல்லுகிறாள் –

கண்ணனூர் -என்றாள் இறே கீழ்
அந்தக் கண்ணனூரான திரு வாய்ப்பாடியிலெ பெண்கள் அடைய
குரவ கிம் கரிஷ்யந்தி தக்த்தா நாம் விரஹாக்னி நா -என்று
இக் குருக்கள் நம்மைச் செய்யப் புகுகிறது என் –
விரஹ அக்னியால் வெந்து கிடக்கிற நம்மை ஆற்றி ஒரு குடம் நீர் சொரிவார்களோ -என்று
பந்து வர்க்கங்களை நேராக விட்டு
கிருஷ்ணனை அனுபவிக்கக் கடவதாக யமுனா தீரத்தேற வந்தார்கள் –
அங்கு கிருஷ்ணனைக் கண்டிலர்கள் –

பின்பு அனுகாரத்திலே இழிந்து
நான் நடவா நின்றேன் -நீ நடைச் சக்கரவத்து பிடித்துக் காண் -என்பது
துஷ்ட காளிய திஷ்டாத்ரா கிருஷ்ணோஹமிதி சாபரா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்று
பாரடா காளியனே -நான் உன் மேல் ஏறி ஆடப் புகா நின்றேன் -என்பது
இப்படிகளாலே அனுகரித்தார்கள் இறே

இவளும் -திரு ஆய்ப்பாடி -திருக் கண்ணபுரம் ஆகவும்
கிருஷ்ணன் சௌரிப் பெருமாள் ஆகவும் –
அச் சௌரிப் பெருமாள் தான் ஆகவும்
அனுகரித்து பேசுகிறாள் –

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ் ஜலான் சாந்திம் உபாஸீத -சாந்தோக்யம்
அஹம் பிரஹ்மாஸ்மி-ப்ரஹதாரண்யம் –
என்று தான் அவனாய்-அவன் தானாய்-இறே இருப்பது

இது இறே இவளுடைய   வைதிக லோகாயுத மதம்   இருக்கிறபடி –
வேறே அனுகரித்தாரும் சிலர் உண்டு இறே
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்-5-6- -என்று
அவளைப் போலே ஜகத் காரண ரூபியை பற்றுமவள் அன்று இறே இவள் –
அர்ச்சாவதார ரூபியை இறே இவள் அனுகரிப்பது
இவ் வர்ச்சாவதார ரூபத்தால் பிறக்கும் அனுபவம் ஒழிய
அந்த அந்த அவதாரங்களால் பிறக்கும் அனுபவத்தை நாய்க்கு இட என்று இருக்குமவள் இறே இவள் –

(அர்ச்சாவதார அனுபவிப்பாள் என்றால்
வட வரை நின்றேனும் யானே என்னும் -இத்யாதி சொல்லாமல் இப்படி அருளிச் செய்தமைக்கு காரணம்
வந்தது இன்னிடத்தில் நின்றும் –வந்த கார்யம் இன்னது -என்கிறாள் )

ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் ஆழ்வார் திரு நறையூர் அரையரும் இப்பாட்டை அனுசந்தித்து
இப்பாட்டுக்கு ஒரு சேர்த்தி கண்டிலோம் -என்று பட்டர் பாடே வந்து
இப்பாட்டு இருக்கிறபடி என் -என்று கேட்க –
மகள் அனுகாரத்தை தாய் அநு பாஷிக்கிறாள் -என்று அருளிச் செய்தார் –
ஆரூட யோகராய் இருப்பார் சிலர் வந்தால்
யோபவான் யன்நிமித்தம் வா யதாகமந காரணம் -என்கிறபடியே
நீ யார்
வந்தது எங்கு நின்றும் -என்று கேட்கக் கடவது இறே
அப்படியே -நீ எங்கு நின்றும் வந்தது -வந்த காரணம் ஏது -என்ன
வந்தது இன்னிடத்தில் நின்றும் –
வந்த கார்யம் இன்னது -என்கிறாள் –

வட வரை நின்றும் வந்தின்று கணபுரம்
இட வகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை யிவர்க்கிவள்
கடவதென் கண் துயில் இன்று இவர் கொள்ளவே —8-2-6-

வடவரை நின்றும் வந்து –
வடக்கில் திரு மலையில் நின்றும் வந்து –
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே -என்று
அத் தலையைப் பற்றி வருமவள் அன்றே இவள் –
அர்ச்சாவதாரத்தை பற்றுமவள் இறே
அர்ச்சாவதாரத்துக்கு கொண்டக்கோல் நாட்டின தேசம் இறே திருமலை –
(அதுக்கும் அடி ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா சொல்ல மாட்டாரே இவர்
அவனே விரக்தாயா-த்யக்த்வா என்று விட்டுவிட்டு வந்த பின்பு )

வந்த கார்யம் என் என்ன –
இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் –
இன்று திருக் கண்ண புரத்திலே நித்ய வாஸம் பண்ணுவதாக  வந்தது –
இது காண் நாம் வந்த கார்யம்
இது என்னுடைய உண்மை இருந்தபடி –

(செஞ்சொற் கவிகாள் -தெற்குத் திருமலை ஆழங்கால் பட்டு நம்மாழ்வார் அருளிச் செய்தார் அன்றோ)

என்று பேசினாள்-
உரைக்கின்றாள் -என்றாள் இறே கீழ்
அத்தை பேசினாள் என்று தாயார் சொல்லுகிறாள் –

மடவரல் மாதர் என் பேதை யிவர்க்கிவள்-
திரு வாய்ப் பாடியில் பெண்களைப் போலேயோ
அலவலைகளாய் புறப்பட்டு பழி தூற்றி அநு கரித்தவர்களைப் போலேயோ –
இவள் பந்துக்கள் சொன்னத்தை செய்து போந்தவள் அன்றோ –

மடவரல் மாதர்-
பவ்யையான பெண்

என் பேதை-
பந்துக்களுக்கு பவ்யையாய் போந்தாள் என்னும் அளவேயோ
பெற்று எடுத்த என் வார்த்தை அல்லது அறியாதவள் அன்றோ-

பேதை
பிராப்த யௌவநை யாகையாலே  என் வார்த்தை கொள்ளாது ஒழியவும் கூடும் இறே
பெற்ற தமப்பனுக்கும் பர்த்தாவுக்கும் வாசி அறியாத பருவம் கிடீர் இவளுக்கு

யிவர்க்கு-
அத திருவாய்ப் பாடியிலே பெண்களோடு அனுபவித்து
வைதக்த்த்ய மூர்த்த அபிஷிக்தராய்  இருக்கிற இவர்க்கு

இவள்-
ஆரு ருஷூவாய் இருக்கிற இவள்

கடவதென் –
தனிசுடையார் பணயம் எடுப்பாரைப் போலே (கடன் உள்ளவர் பிச்சை எடுப்பது போல்)
இவள் கண்ணுறக்கத்தைக் கொள்ளுகைக்கு என்ன பிராப்தி உண்டு –

கண் துயில் இன்று  இவர் கொள்ளவே  —
அவர்களைப் போலே அலவலையானால் பின்பு வேணுமாகில் கொள்ளுகிறார்  –
இன்று இவள் கண்ணுறக்கத்தை கொள்ளுகைக்கு என்ன பிரயோஜனம் உண்டு என்கிறாள்

(பொன்னிறம் –தேஹாத்ம பிரமம் -அதை நீக்கினார் – உறக்கம் அஞ்ஞானம் பறித்தார்
இங்கே தானே அவன் சொல்லும் பொழுதே இப்படிச் சொல்வதால் இது லௌகிக லோகாயுதம் மதஸ்தர் இல்லை
வைதிக லோகாயுத மதஸ்தர் அன்றோ )

கீழ் (பாட்டில் ) வண்ணமும் பொன்னிறம் ஆவது  ஒழியும் -என்றாள்
அந்த பொன்னிறம் ஆவது எது
ஸ்வா பாவிகமான தன்னிறம் ஆவது எது-என்ன
ய ஆத்மநி திஷ்டந ஆத்ம நோந்தர -ப்ரஹதாரண்யம் -என்றும்
யஸ் ஆத்மா சரீரம் -என்று
ஸ்ருதிகள் சொல்லுகிறபடியே
சரீர சேஷத்வமும்
சேஷ சேஷி ஜ்ஞானமும்
அந்த ஜ்ஞானத்தால் பிறக்கும் ஆனந்தமும்
ஆக -சேஷத்வ ஞான ஆநந்தங்கள்  -தன்னிறம் ஆகிறது

பொன்னிறம் ஆகிறது
தேவோஹம் மனுஷ்யோஹம் என்று
ப்ரவிஷ்ட ( கர்மாதீனமாக பிரவேசித்த )சரீரங்களிலே ஆத்ம புத்தியைப் பண்ணி
துக்க அஞ்ஞான அமல அதர்ம-ஸ்ரீ விஷ்ணு புராணம் – என்கிற
தர்மங்களை ஏறிட்டுக் கொள்ளுகை

ஆரூட யோகராய் இருப்பார்க்கு ( பிரகலாதன் மனு பகவான் போல்வார் ) கிட்டாத ஸ்வ பாவங்கள் அடைய
ஆரு ருஷூவாய் (யோகத்தில் பேதை ) இருக்கிற இவளுக்குப் பிறப்பதே
இது ஓர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்கிறாள் –

—————————————-

இவர்க்கு இவள் கடவது என் -என்று
இவள் கண்ணுறக்கத்தை இவர் கொள்ளுகைக்கு பிராப்தி உண்டோ  என்றாய்
இப்படி இவரோடும் இவளோடும் கொள் கொடை அற்றோ இருக்கிறது
கார்க் கடல் வண்ணர் மேல் எண்ணம் என்றும்
கண்ண புரம்  தொழும் என்றும்
கண்ண புரம் என்று பேசினாள் என்றும்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் அவனேயாம் படி அன்றோ அவள் இருக்கிறது –
அவரோடு அவளோடு பிராப்தி இல்லை என்று சொல்லக் கடவையோ
அது கிடக்கட்டும்
உன் மகள் தான் இவ்வீடுபாடுகள் தானே பொறுக்க ஷமையோ-என்ன
இவற்றுக்கு இவள் இளைக்குமவளோ  -என்கிறாள்  –

தரங்க நீர் பேசிலும் தண் மதி காயினும்
இரங்குமோ வெத்தனை நாள் இருந்து எள்கினாள்
துரங்கம் வாய் கீண்டு கந்தானது தொன்மையூர்
அரங்கமே எனபது இவள் தனக்காசையே —8-2-7-

தரங்க நீர் பேசினும் தண் மதி காயினும்
உறக்கம் போய் கண் விழித்து பார்த்தாள்-
பிரிந்தார் இரங்கும் நிலம் கடல் கரை யாகையாலே
சமுத்திர தீரத்திலே இருந்து அவன் தன்னோடு சம்ச்லேஷிக்கிற போது பெரிய அபி நிவேசத்தோடு மேல் விழுந்து
அணைத்த தோள்களுக்கு ஸ்மாரகமாயும்   –
சம்ச்லேஷிக்கிற போது -அடியேன் குடியேன் -என்றாப் போலே சொன்ன நீச பாஷணங்களுக்கும்  ஸ்மாரகமாயும்   –
அணைக்கிற போதை ஸ்பர்ச சௌக்யத்தால் வந்த குளிர்த்திக்கு ஸ்மாரகமாயும்   –
இவை நலியா நின்றால் இளைக்குமோ   –

தரங்க நீர் பேசிலும் –
திரைக் கிளர்த்தியை உடைத்தான
சமுத்ரம் கோஷிக்கிலும்-

தண் மதி காயினும்-
அந்த கடலிலே பிறந்தவன் இறே சந்தரன்
சர்வ பூத் ஸூ க்ருத்தான அவன் இவள் அளவிலே பாதகன் ஆனாப் போலே
சர்வ பிராணிகளுக்கும் ஆஹ்லாத காரனான சந்தரன்
நெருப்பை முகந்து தூவிலும்
அவன் படி இதுவானால் -இவர்கள் படி சொல்ல வேண்டா விறே
யச் சீல ஸ்வாமி தச் சீலா பிரகிருதி இறே     –

இரங்குமோ –
இளைக்குமோ -என்றாள்-

இவள் இளையாமைக்கு ஹேது என் -என்ன –
வெத்தனை நாள் இருந்து எள்கினாள்-
முன்பே நெடுநாள் இவற்றின் கையிலே அடி யுண்டு தகண் ஏறின
இவள் இவற்றுக்கு ஈடுபடுமா -எள்குதல் -ஈடுபடுதல்
விடு நகத்தைப் பூட்டினால் அதில் பழக்கம் இல்லாதவன் நோவு படும் இறே
அதிலே பழகிப் போந்தவன் விடு நகம் பூட்டினால் கட்டிக் கொள்ளாய் என்று கிடக்கும் இறே –

துரங்கம் வாய் கீண்டு கந்தானது தொன்மையூர்
இவள் இப்படி நோவு படா நின்றால்
இதுக்கு பரிஹாரம் பண்ண வேண்டாவோ
பெற்ற நீ யன்றோ பரிஹாரம் பண்ணுவாய்
அத்தைச் சொல்லிக் காணாய் என்ன –

அவளுக்கு பரிஹாரம் அறிவேன் நானே இறே-
அரங்கமே எனபது இவள் தனக்கு ஆசையே –
திரு வரங்கம் திரு வரங்கம் -எனபது இவளுக்கு ஆசை –
ஆனால் அது சொல்லத் தட்டு என் -என்ன
இவள் சத்பிரக்ருதி யாகையாலே வாய் விடில் சிதிலை யாகக் கூடும் என்று
வாய்க்காவல் இட்டு வைப்பார்கள் பந்துக்கள் –

ஆசையே –
வருந்திச் சொல்லப் புகில் -அருகே இருந்து -வாய் வாய் -என்பர்கள் இறே –

திருக் கண்ண புரத்திலே நிற்கிற கிருஷ்ணனே அன்றே இங்கும்
அவனில் காட்டில் இவனுக்கு வாசி உண்டோ -என்னில்
துரங்கம் வாய் கீண்டு உகந்தானது தொன்மையூர் –
கேசவ கிலேச நாசன -என்று போக விரோதியான கேசியை அழித்தவன் அன்றோ –
ஸ்ரீ பிருந்தாவனத்திலே பெண்களும் தானுமாய் அனுபவியா நிற்க
இதுக்கு விரோதியாய் வந்த கேசியின் வாயைக் கிழித்து
பெண்களுக்கு ஒரு கார்யம் செய்தானாக இருக்கை அன்றிக்கே
தன்னுடைய போக  விரோதி போயிற்று-என்று உகந்தான் –

தொன்மையூர் –
பழையதான கோயில்
கண்ணனூர் என்கிற திரு வாய்ப்பாடி போலே பழையதாய்
புராண பந்தமுமாய் இறே இருப்பது –
திருக் கண்ண புரம் ஆகிறது சமுத்திர மத்யத்திலே புதியதாக குடி ஏறின த்வாராவதி போலே ஆயிற்று
வேலை மோதும் மதிள்
வெள்ளி ஏய்ந்த மதிள் -என்றது
தனக்கு ஸ்மாரகமாய்
நலிந்த சந்த்ரனுக்கும் கடலுக்கும் தோள் தீண்டியாய் இறே இருப்பது –
தன்னை நோவு படுத்தின கடலின் வாயை அடக்கும் போது கேசியின் வாயைக் கிழித்தவன் ஆக வேண்டாவோ –
நெருப்பைத் தூவின சந்த்ரனை ஆற விடும் போது
தஷ சாபத்தாலே நோவு பட
தன்னுடைய சந்திர புஷ்கரணியிலே பரிசயிப்பித்து
அவனுடைய ஷயத்தை போக்கினவன் ஆகவேண்டாவோ –

அரங்கமே எனபது இவள் தனக்கு ஆசையே –
திருக் கண்ண புரம் என்று சொன்னாள் இத்தனை –
தானான தன்மை கோயிலையே சொல்லுகிறாள் -என்கை-
கண்ணனூரே  அது
இது ஸ்ரீ ரெங்கம் இ றே
ந கச்சின் ந அபராத்யதி-என்னும் பெண் அரசி இறே –
மயர்வற்ற யதா ஜ்ஞானம் பிறந்தால் ஆரூட யோகராய் இருப்பார்க்கும்
அபஏவச சர்ஜா தௌ -என்கிற அப்ஸ்ருஷ்டி வாசகமான மூல பிரக்ருதியும்
அதின் கார்யமான சப்தாதிகளும் போனால் அல்லது அனுபவம் பூர்ணம் ஆகாது இறே
இங்கே கடலின் உடைய ஸ்தானத்திலே பிரக்ருதி
அதில் பிறந்த சந்தரன் ஸ்த்தானே சப்தாதிகள் –

————————————————————–

முதல் பாட்டிலே -தெள்ளியீர் தொழுத இவள் கை வளை கொள்வது தக்கதே -என்று
தொழுத இவள் கையில் வளையை வாங்குகை தகுதி அல்ல தப்பச் செய்தோம் -என்று இசைந்து நின்றார் சௌரிப் பெருமாள் –
பின்பு தன்னிலே
இவர்க்கு இவள் கடவது என் கண் துயில் இன்றி   இவர் கொள்ள -என்றும் –
அரங்கமே இவள் தனக்கு ஆசையே -என்றும் சொன்னதை சௌரிப் பெருமாள் கேட்டார் –
சர்வதஸ் ஸ்ருதி மல்லோகே -என்று இருக்குமவர் இறே அவர்
இப்படி இவள் சொன்னவாறே
வளை கொடுப்பதாக நினைத்து இருந்தோம் –
இனி கொண்டு அது கொடுக்கிறது என் –
இன்னம் எட்டுமது உண்டாகில் வாங்க அமையாதோ -என்று
சௌரிப் பெருமாள் சிவட்கு என்று
உன் மகளுக்கு அரங்கமே எனபது ஆசை என்றாய் –
அவளோடு நம்மோடு பிராப்தி இல்லை என்றும் சொன்னாய் –
ஆனால் நம்மூருக்கு இவள் வருவான் என்
நாம் இவளை அழைத்தோமோ
ஆசைப் பட்ட இடத்தேறப் போகல் ஆகாதோ -என்ன
அதில் சம்சயம் இல்லை -அரங்கமே இவள் தனக்கு ஆசை -நினைவும் அதுவே
ஸ்வ அபிமத சித்திக்கு உறுப்பாக நாட்டார் செய்கிறதைக் கண்டு
தனக்கும் தன் அபிமதம் சித்திக்குமோ  -என்று தன் ஆசையாலே
செய்வான் முறைமை கண்டு போனாள் இத்தனை -என்கிறாள் –
கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் என்று என்றே இவளுக்கு  மநோ ரதம்
இலங்கொலி  நீர் பெரும் பௌவம் மண்டி யுண்ண பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் -என்று
கடலைப் பருகின காள மேகம்  போலே இறே பெரிய பெருமாள் வடிவு இருப்பது –
ஆகையாலே நினைவும் அங்கே என்னும் இடம் சித்தம் இறே –

தொண்டெல்லாம் நின்னடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ண புரம் தொழப் போயினாள்
வண்டுலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே —8-2-8-

தொண்டெல்லாம் நின்னடியே –
இப்பரப்பு எல்லாம் என்கிறாள் –
தொண்டர் -பகவத் பக்தர் -எல்லாம்
ஆர்த்தராயும்
ஆத்மபிராப்தி காமராயும்
பகவத்பிராப்தி காமராயும் -இருக்குமவர்கள் –
இவர்களுக்கு பந்தத்திலும் ஆஸ்ரயணத்திலும் பேதம் இல்லை இறே –
பலத்திலே இறே பேதம் -ஆகையால் -எல்லாம் -என்கிறாள் –
தொண்டெல்லாம் -என்று -பக்தரைக் காட்டுமோ என்னில் –
மஞ்சா க்ரோசந்தி -என்னுமா போலே –

தொழுது உய்யுமா-கண்டு-
சதுர்வித புருஷார்த்திகளும்
உன் திருவடிகளை ஆஸ்ரயித்து
தம்தாம் அபிமதங்களை பெறக் கண்டு –

தொழுது –
பத்தாஞ்சலி புடா -என்று காயிகமான வ்ருத்தி இறே அஞ்சலி   –

தான் கண்ண புரம் தொழப் போயினாள்-
நமக்கும் இங்கே கோயிலிலே சென்று புகலாமாகில்
திருக் கண்ண புரத்தை தொழுவோம் என்று போயினாள் –
நின் அடியே தொழுது -என்று உன்னை அன்றே இவள் தொழுதது
திருக் கண்ண புரத்தை இறே –
யதோ உபாசனம் அன்றோ பலம் –
ஐஸ்வர் யார்த்திகள் ஐஸ்வர்ய விசிஷ்டனை இறே பற்றுவது –
ஆத்மபிராப்தி காமன் சுத்தி விசிஷ்டனை இறே பற்றுவது
பகவத்பிராப்தி காமனும் -சோஸ்நுதே சர்வான் காமான் -என்று குண விசிஷ்டனை இறே பற்றுவது –
இவளும் இவ் ஊரை   ஆசைப் பட்டவள் ஆகையாலே இவ் ஊரைத்   தொழுகிறாள் –
யத் விசிஷ்ட வஸ்துவைப் பற்றினால் தத் விசிஷ்ட வஸ்து இறே பிராப்யம்
கிருஷ்ணனை ஆசைப் பட்ட பெண்கள் கிருஷ்ணன் மகனான காமன் காலிலே விழுந்தார்கள் இறே
உடையவர் பெருமாளுக்கு நெடுநாள் திரு மஞ்சனம் எடுத்து
அவரை ஆஸ்ரயமாகப் பற்றி
பின்பு இறே கோயிலிலே வந்தது –
தொண்டெல்லாம் என்பவர்களைப் போலே சாதன பேதம் கொள்ளுமவள் அன்றே இவள் –
பிராபக வஸ்துவே பிராப்யம் -என்று
தானுகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடித் திரியுமவள் இறே –
ஒருவர்க்கு உரியேனோ -என்றதும் சாதனாந்தரங்கள் இல்லை என்றது அத்தனை இறே –

தான் போயினாள் –
தொழுதாப் போலே குறி அழியாமல் போர வல்லள்  ஆகில் அன்றோ போவது –
தொழப் புக்கு நிறத்தைக் கொடுத்து போருவார் போருவர்களோ –

போயினாள் –
ஸ்ரீ மதுரையில் பிறந்தாரிலும்
குண்டின புரத்தில் பிறந்தாரிலும்
போனார் உண்டோ –
வரக் கண்ட வித்தனை யன்றோ செய்தது –

போயினாள் –
வேயின தோள் விசிறிப் பெடையன்னம் என நடத்த வவள் போக்கு
நீ காணப் பெற்றதில்லை காண் -என்கிறாள் –
இப்படி இருக்கிற இவள் போனால்-தன்னோடு ஒக்க ரூப சாம்யத்தை கொடுக்க அன்றோ அடுப்பது –
நிவாரகர் அல்லாத தேசத்திலே
தனி நிலத்திலே அடித்துப் பறிப்பாரைப் போலே
இவள் நிறத்தையும் கொள்ள வேணுமோ -என்கிறாள்
வண்டுலாம் கோதை என் பேதை –
இவள் மயிரைப் முடித்து பூவைச் சுற்றி விட்டால்
வண்டுகள் பறந்து வர்த்திக்குமதுக்கு வெருவி உள்ளே புகுரும் பருவம் -என்கிறாள்
தொண்டெல்லாம் –
தொண்டெல்லாம் பண்டு இவன் அடியைப் பற்றி கிடக்குமா போலே கிடீர்
தானுகந்த ஊரிலே வண்டுகள் இவள் மயிரைப் பற்றி கிடக்கும் படி -தெய்வ வண்டுகளான எம்பெருமான்களை –
இது ஒப்பனை அழகு இருந்தபடி –
என் பேதை –
மமசுதா-என்கிறபடியே அபிஜாதை -என்கிறாள்
பேதை -முக்த்தை —

மணி நிறம் கொண்டு தான் –
உன் மகள் முக்த்தை யன்றே –
விதக்த்தைகளும் அவ்வருகே அன்றோ இவள் பரிமாற்றம்
இவள் நிறம் கொள்ளக் குறை என் என்ன
நன் மணி வண்ணன் -என்கிறபடியே உம்முடைய நிறத்தை கொடுக்கை அன்றோ தகுவது
அது கிடக்க –
முக்த்தை அன்றோ
ஸ்வரூப ஜ்ஞானம் இல்லாதவள் அன்றோ –
உமக்கு ஸ்வரூப ஜ்ஞானம் இன்றியிலே ஒழிய வேணுமோ –

கொண்டு தான் –
இவள் ஒப்பனை அழகையும் கண்டால் ஆசைப் படுக்கை பிராப்தம் –
அது குற்றம் அல்ல –
கொண்டால் பின்னை கொடாது ஒழிகை க்ருத்யமோ –

கோயின்மை செய்வது தக்கதே-
ராஜ நீதி இல்லாதார் செய்யவற்றை நீர் செய்யக் கடவரோ –
இழந்தவற்றை மீட்டுக் கொடுக்கை அன்றோ ராஜ க்ருத்யம்
ராஜாக்களே வழி பறிக்கை-ராஜ நீதியோ –
அமர்ந்த நிலத்திலே கொடு போய் அனுபவிக்கை அன்றோ   தகுதி என்கிறாள் –
இவள் அடியிலே தொழுத போதே அமர்ந்த நிலத்திலே கொடு போனால் -இத் திரு மொழி முடிய அருளிச் செய்விக்க வேண்டுமே-
இங்கு நாமும் நம்முடையாரும் வாயிலே மண்ணைப் பொகட்டு கொள்ளவோ என்று இறே அவன் இருக்கிறது –

—————————————

ஸ்ரீ பராசர பட்டர் திருப் பாத தீர்த்தம் ஸ்ரீ ஆண்டாள் ஸ்வீ கரித்துக் கொண்ட ஐதிக்யம் –
பிள்ளை என்று எண்ணப் பெறுவரே -என்பதைக் கடாக்ஷித்து சங்கதி –

கீழ்ப் பாட்டிலே -என் பேதை மணி நிறம் கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே -என்று
நிவாரகர் இல்லாத தேசத்திலே வழி யடிப்பாரைப் போலே முக்த்தையான இவள்
நிறத்தைக் கொள்ள வேணுமோ என்று இவள் சொன்ன வார்த்தையைக் கேட்ட சௌரிப் பெருமாள் –

நீர் நம்மை நியமிக்கக் கடவையோ –
சர்வஸ்ய வஸி சர்வஸ்ய ஈஸானா -என்று சர்வர்க்கும் நியாமகராய் நம்மை நியமிக்கக் கடவையோ
மடவரல் மாதர் என் பேதை -என்று
உன் மகள் என்றும்
உனக்கு பவ்யை என்றும் -சொன்னாய்
அவளை நியமித்துக் கொள்ள மாட்டாயோ –
நீ நம்மை நியமிக்க போராய் காண் -என்ன

இவள் பருவம் இது
பாவம் இது
ஆன பின்பு என்னால் நியமிக்கலாயோ இருப்பது -என்கிறாள் –

(பூர்த்தியையும் ஸ்வா தந்த்ரத்தையும் குறைத்துக் கொண்டு அர்ச்சக பராதீனமாய் இருக்கும் உம்மை
நியமிக்கலாமே ஒழிய -உமது ஊரைத் தொழுதவளை நியமிக்கப் போகுமோ -என்று கருத்து –
பல் எழாத பருவம்
கை தொழும் அவகாஹத்தில் ஆதிக்யம் உண்டே
இதுக்கு வியாவ்ருத்தம் காட்ட திரு விருத்த பாசுரம் )

இவள் அளவு இதுவாய் இருக்க
இவளைப் போலே அவஹாகித்தாள் ஒரு பெண் பிள்ளை வார்த்தையாலே சொன்னாள் இறே
அவள் உடைய திருத் தாயார் –

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –ஸ்ரீ திரு விருத்தம்- 60-
அங்கு வாசிகம் -இங்கு காயிகம் –

முலையோ -இத்யாதி –
இவள் அளவு இதுவாய் இருக்க -அவகாஹனம் இருந்த படி என் –
அளவன்றி இருந்ததீ-என்றாள் இறே  –

முலையோ முழு முற்றும் போந்தில –
முலை புரைகிற வித்தனை –
வளரும் அளவும் செல்ல வரையிட்டதில்லை –
இது பருவம் இருந்தபடி –

திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே –
திருமலையை விடாமல் சொல்லா நின்றாள்
இது அவகாஹனம் இருந்த படி –

இவள் பரமே –
இவள் அளவன்றிக்கே இருந்ததீ-என்றாள் இறே –
அவளுடைய பருவம் இல்லையே இவளுக்கு
அவகாஹனத்திலும் வாசிக மாத்ரமே இறே அவளுக்கு உள்ளது –
காயிகத்தால் வந்த அவகாஹனம் உண்டே இவளுக்கு –

பங்குக்களாய் இருப்பார்க்கும் -முடவருக்கும் – அந்தகரராய் இருப்பார்க்கும் போக ஒண்ணாதபடி
பரமபதத்துக்கு அடுத்து அணித்தாய்
அர்ச்சிராதி போலே பெரிய ஏற்றம் ஏற வேண்டி இறே திருமலை இருப்பது
அத்தனை துஷ் ப்ராப்யமாய் அன்றே திருக் கண்ண புரம் இருப்பது
இருந்தபடியே எல்லார்க்கும் புக்கு அனுபவிக்கலாம் படி இறே திருக் கண்ண புரம் இருக்கிற படி –

ஆகையால் இவள் அளவு இதுவாய் இருந்தது –
அவகாஹநத்தில் எல்லை இதுவாய் இருந்தது
ஆன பின்பு இவளை நியமிப்பார் உண்டோ என்று பொதுவிலே சொல்லுகிறாள் –

(காயிகம் அவகாஹன ஏற்றமும் அன்றிக்கே
மானஸ அவகாஹனத்திலும் -எளிமையான திருக் கண்ண புரம்
பெறுவேனோ என்னாதே பெறுவரே -பொதுவிலே
மம மத் பக்த பக்தேஷூ ப்ரீதிரப்யதி காபவேத் -என்ற உன்னாலும்
என்னாலும் தோழிகளாலும் நியமிக்கப் போகுமோ -)

முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள்  என்பதோர்   தேசிலள்  என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே —8-2-9-

முள் எயிற்று ஏய்ந்திலக் –
எயிறு -தந்தம்
முள் எயிறு -தந்தாங்குரம்
எயிறு நிரம்பிற்று இல்லை –

கூழை முடி கொடா-
இவள் குழலை வாரி எடுத்து பிடித்து கலிக்கட்டாக கட்டு என்று
புக்கால் அதுக்கு பிடி கொடாது –

தெள்ளியள் என்பதோர் தேசிலள் –
இப்படி இருந்தாலும்
தன் வல்லபனை பத்து இருபது பட்டினி கொண்டாள் என்னும் சொல் படைத்திலள்  –
சர்வஞ்ஞன் ஆனவன் மதி மயங்கும்படியான தேஜசை பெற்றிலள்-

(கோபிகள் இவனை பத்து இருப்பது நாள்கள் பட்டினி கொள்வார்களே –
இப்படிப் படுத்தினாலும் அவனையே நினைத்து இருக்கிறாளே –
ஜனக குல ஸூந்தரி -தெளிந்து -மாசானனே ஜீவிஷ்யே நாள் இட்டு இருந்தாள்
தத் தஸ்ய ஸத்ருசம் பவதி -என்னுமவள் போல் இல்லையே இவள் )

என் செய்கேன் –
கீழில் இவள் உடைய முக்த்யை சொல்லி
மேல் இவளுடைய பிரபாவத்தை நினைத்து
என் செய்கேன் -என்கிறாள் –

என் செய்கேன் –
இவளை நியமிக்க அடுக்குமோ-
அனுவர்த்திக்க அடுக்குமோ –
என்கிறாள் –

கள்ளவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்-
பூர்வ அவஸ்தைப் பார்த்து நியமிக்க அடாது –
உத்தர அவஸ்தையைப் பார்த்து அனுவர்த்திக்க அடுக்கும் -என்கிறாள் –
இவளை அனுவர்த்திக்க அடுக்கும் என்று சித்தாந்திக்கிறது எது கொண்டு என் என்ன
இப்படிப் பட்ட பேர்  அளவுடையாளான பெரியவள் -என்கிறாள் –

கள்ளவிழ் சோலைக் கணபுரம்-
நித்ய வசந்தமான தேசம் –
புஷ்பங்களில் கட்டவிழ்ந்து மதுவைப் பிரவஹிக்கும் சோலையை உடைத்தான தேசம் –

கணபுரம் கை தொழும்-பிள்ளையை –
பால்யாத் ப்ருப்ருதி  ஸூஸ் நிக்த்த -என்று பிறந்த அன்றே
கால்கடையிலே தொட்டிலிட்டு வளரும்படி
ஸூஸ் நிக்தராய் இறே இளைய பெருமாள் இருப்பது –
இப்படி இருந்த அவரும் -ப்ராஞ்சலீம் ப்ரஹ்வமாசீ நம் -என்று
அவனைத் தொழுதார் இத்தனை இறே
அவனூரைத் தொழுமவள் இறே இவள்  –

பிள்ளையை –
இப்படிப் பட்ட பெரிய முதன்மை உடையவளை –

பிள்ளை என்று எண்ணப் பெறுவரே  –
தன் வயிற்றில் பிறந்தாள் என்கிற பந்தத்தைக் கொண்டு
நியமிக்கப் பெறுவர்களோ-

எண்ணப் பெறுவரே  —
நினைகத் தான் பெறுவார்களோ –
நினைத்தாள் ஆகில் -ஹரிசம் ஸ்மரணம் பரம் -என்கிறபடியே
பிராயச் சித்தம் பண்ண வேண்டி இறே இருப்பது –

க்ருதேபாபே அநுதாபோவை யஸ்ய பும்ஸ பிரஜாயதே
ப்ராயச்சித் தந்து தஸ்ய ஏகம் ஹரிசம் ஸ்மரணம் பரம்-ஸ்ரீ விஷ்ணு புராணம்
க்ருதேபாபே –
ஒருத்தன் ஒரு பாவத்தை புத்தி பூர்வகமாக பண்ணுவது
அநுதாப –
அநந்தரம்-தப்பைச் செய்தோம்  -புருஷோத்தமன் அறியில் செய்வது என் -என்று
அனுதபவித்தவன் பிராயச் சித்தத்துக்கு அதிகாரி –
யஸ்ய பும்ஸ பிரஜாயதே-
இதுக்கு இன்னார் என்று இல்லை
ஆரேனும் ஆகவுமாம் –
ப்ராயச்சித் தந்து தஸ்ய ஏகம் ஹரிசம் ஸ்மரணம் பரம்–
சர்வ பாபங்களையும் போக்குமவனை நெஞ்சாலே ஒரு கால் நினைக்க அமையும்
பரம்
பிராயச் சித்தங்களில் தலையான பிராயச் சித்தம் இதுவே -என்கிறது –

பெரிய திருவடி எழுந்தருளச் செய்தே ஒரு பர்வதாக்ரத்திலே வைகித் தங்கப் புக்கான் –
அந்த பர்வத சிகரத்திலே ஒரு பெண் பெண்டாட்டி பகவத் குணங்களைப் பேசக் கேட்டு
தான் ஸ்திரீயாய்  இருக்க பகவத் பஜனத்திலே இத்தனை ருசி உண்டாவதே
இவள் ஒரு புண்ய ஷேத்ரத்திலே இருக்கப் பெற்றது இல்லையே -என்று வெறுக்க
அநந்தரம்
விடிந்த அளவிலே இவன் போக நினைக்க
இவன் சிறகுகள் உதிர்ந்து எழுந்து இருக்க மாட்டாதே இருந்தான் -என்று
மகா பாரதத்திலே ஆரண்ய பர்வதத்திலே எழுதிற்று –

ஆக இத்தால் சொல்லிற்று ஆய்த்து-
பகவத் விஷயத்தில் ஒரு கீற்றுப் புகுர நின்றான் யாவன் ஒருவன்
அவன் பூர்வ வ்ருத்தத்தை பார்த்துக் குறைய நினைக்கக் கடவன் அல்லன் –
அவன் இருந்தபடியே உத்தேச்யம் பண்ணிக் கொண்டாட அடுக்கும் -என்கிற அர்த்தத்தை வெளியிடுகிறது –
துராசாரோபி -இத்யாதி –
(துராசாரனாகவும் -நாஸ்திகனாகவும் -இருந்தாலும் ஹரி நாம சங்கீர்த்தனம்-
புருஷோத்தமனை சரணம் அடைந்தால் – உஜ்ஜீவிக்கும் )

————————————————–

இத்தால்
1-கவி பாடிற்று இன்னாரை
2-பாடினேன் இந் நான்
3-என் கவி தான் இன்னது
4-இது கற்றார்க்கு பலம் இன்னது -என்று
இவை நாலையும் சொல்லுகிறார் –
(வக்த்ரு -வக்தா -விஷய -பல வைலக்ஷண்யம் )

கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை
பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்
சீர்மலி பாடல் இவை பத்தும் வல்லவர்
நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே  –8-2-10-

( கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை-நீல மேகப்பெருமாள் அன்றோ மூலவர்
சீர் மலி -காம்பீரம் -அர்த்தங்கள் பொதிந்தவை அன்றோ )

கார்மலி கண்ண புரத்து –
ஸ்ரமஹரமாய்
தர்ச நீயமுமாய்
உபகாரகமுமான
மேக சஞ்சாரங்களை உடைத்தான தேசம் –

கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை –
அம் மேகங்களைப் போலே தர்ச நீயமான வடிவை உடையனாய்
ஸூலபனுமாய்
பரம உதாரனுமாய்
தன்னை உகவாதார் தலையிலே இடி விழக் கடவனுமான
என் ஸ்வாமியை
குணைர் தாஸ்யம் உபாகதா -என்று
குணங்களுக்கு தோற்று அடிமை புகுகிறார் அல்லர் –
என் குடி நாதன் -என்கிறார் –
(ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யமே குண க்ருத தாஸ்யத்தை விட ஸ்ரேஷ்டம் )

பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல் –
லோகத்திலே இருவர் கூடின இடம் எல்லாம்
இதோர் அவகஹானமே
இதோர் கவித்வமே
இவருக்கு ருஷிகள் ஒப்போ
வேதங்கள் தான் ஒப்போ
அல்லாத ஆழ்வார்கள் தான் ஒப்போ -என்று
நின்றார் நின்றபடி கொண்டாடும்படியான பெரிய புகழை உடையவர் –
பரகாலன் -என்று பெயர் படைத்தவர் –

சீர்மலி பாடல் இவை பத்தும் வல்லவர்  –
தன்னைப் பொதிய வைக்கோல் இல்லாத படி விளையும் செய் போலே
சப்தம் அல்பமாய்
பகவத் குணங்கள் பிரசுரமாய் -இருக்கிற பாடல் –

இவை பத்தும் –
என்று கையிலே இட்டுப் பார்ப்பாரைப் போலே சொல்லுகிறார் –

வல்லவர் –
இயலாகவுமாம் –
இசை யாகவுமாம் -ஏதேனும் ஒரு பிரகாரத்திலே வல்லவர்கள் –

நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே   –
கடல் சூழ்ந்த பூமியிலே சிரகாலம் வாழப் பெறுவார்கள்  –

இது கற்றார்க்கு பலம் சம்சாரத்தில் இருக்கையோ -என்ன
பரம பதத்தில் தெள்ளியீர் இல்லையே
தெள்ளியீர் உள்ளது இங்கேயே அன்றோ-

பாவோ  நான்யத்ர கச்சதி -என்று திருவடி ராம குணங்களைக் கேட்டு
அத்தாலே பூர்ணனாய் –
அத் தேசத்தே இருந்தால் போலே
தெள்ளியீரை இங்கே பாடக் கேட்டு பூர்ணராய் இருக்கப் பெறுவர்கள் –

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

சிலை முதலா ஐந்து பூணாச் சீராகும் சேர் பல்
கலன் கலியன் கண்டு பிரியா நிலை எய்திக்
கண்ணபுரத்தான் பால் அவா மிகுதல் தான் கூறும்
தண் தமிழ் கற்பார் தெள்ளியார் -71-

ஐந்து பூண் — ஆழி சங்கு தண்டு வாள் வில் -பஞ்சாயுதங்கள் –
திவ்யாயுதங்கள் அநுகூலருக்கு திவ்ய ஆபரணங்கள் ஆகுமே
ஆக்கம் -திரு மார்பி -திரு மேனிக்கு உப லக்ஷணம்
ஒரு காலும் பிரிகின்றலேன் என்கின்றாளால் -தாய் வார்த்தையால் –
தெள்ளியார் -தெளிந்த ஞானத்தர்–

———

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

தெள்ளிதாத் தான் கண்ணபுரம் உள்ள வெம்மை நீங்க தொழில்
உள்ள அணுக்கரித்தல் ஆறு பேறாய் கொள்வது என
இன்னாமை கூறும் இரும் தமிழ் நூல் புலவன்
தன் தாள் வானாம் இக்கரை -72-

உள்ள வெம்மை -உள்ளத்தில் தோன்றும் ஆற்றாமை
நீர் மலி வையத்து நீடு நிற்பார்கள் -பல சுருதி -அங்கே தெள்ளியார் அனுபவம் இல்லையே –

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-8-1—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 13, 2014

நம்மாழ்வாருக்கு திருத்தொலை வில்லி மங்கலம் போல் இவருக்கு திருக்கண்ணபுரம்
இவர்களைப் பாட வைத்த முக்கோட்டை
திருமந்த்ரார்த்தம் அருளிய ஸ்ரீ சவுரிராஜப்பெருமாள்
நூறு பாசுரங்கள் அதனாலே இவருக்கும் திரு நறையூர் நம்பிக்குப் போலவே
உலகம் ஏத்தும் -திரு வேங்கடமுடையான் -திருமாலிருஞ்சோலை -திருவரங்கம் -கிழக்கே யானை
இங்கு
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -சரண்ய முகுந்தன்
மால் உமது வாஞ்சை முற்றும் மன் உடம்பின் முடிவில் சாலை நண்ணிச் செவன் எனத் தான் உகந்து

முதல் ஐந்து நாயிகா பாவம் ப்ரேமத்துடன்
முதல் இரண்டு தாய் பாசுரம்
மேல் மூன்றும் மகள் பாசுரம் –
அடுத்து ஞானத்துடன் ஐந்து
குலசேகரப்பெருமாள் ஐந்து திவ்ய தேச பதிகங்கள் –
64 சதுர்யுகம் கண்ட பெருமாள்
நீலமேகப்பெருமாள் -கருப்பு மலை -புண்டரீகாக்ஷன் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன் ஆகாதோ மதுராம் புரம்
திருக்கண்ணபுரம் சொல்லவே வந்தது
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தனி ஸ்லோக வியாக்யானம்
ஒவ் ஒரு பதமும் சவுரி பெருமாளையே குறிக்கும்
பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள்
திருக்கண்ண மங்கை திருக்கோவலூர் முன்பே பார்த்தோம்
மேலே திருக்கண்ணங்குடி இதுக்கு எடுத்ததுமே வரும்

சிலை இலங்கு- பிரவேசம் –

(கீழே போக்யத்தையிலே ஈடுபட்டு
இதில் பிரிந்து திருத்தாயார் பாசுரம் சொல்லும் படி பேசுவதற்கு சங்கதி அருளிச் செய்கிறார் )

கீழ்த் திரு மொழியில்
தன்னுடைய படிகளை எல்லாம் காட்டிக் கொடுக்க
அனுபவித்து –
(படிகளைக் காட்டிக் கொடுக்க -அனுபவித்து
கொடுக்க -அநந்தரம் – அப்பொழுது இங்கு உள்ள சவுரி ராஜப்பெருமாள் படியையும் கண்டு
அனுபவித்து -சேர்த்து யரும் பதம்-இவனும் கண்ணனே தானே -இரண்டும் கிருஷ்ண ஷேத்ரங்கள் )
பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்து –
அது கிடையாத படியாலே ஒரு பிராட்டி தசையைப் பஜித்து-
பிராட்டி உடைய (பிரிந்து இருக்கிற )அவஸ்தையைப் பார்த்த திருத் தாயார் –

1-தன் பெண் பிள்ளை உடைய பாசுரம் இருக்கிற  படியாலும் –
2-தன் பக்கல் விரக்தியாலும் –
3-ஆசைப் பட்ட விஷயத்தில் பிரேமத்தாலும் –
பிரிந்த விஷயத்தின் வைலஷண்யத்த்துக்கு அனுரூபமாக எதிர்தலையை அழிக்க வல்ல
குணங்கள் எவ்வளவாக உடைத்தாய் இருக்கும் –
அவற்றிலே கால் தாழ்ந்தமை தோற்ற

அவனுடைய
1-சௌந்தர்யாதிகளையும் –
2-சீலாதிகளையும் –
3-ஆண் பிள்ளைத் தனத்தையும் –
வாய் வெருவா நின்றாள் –

1-என் ஹித  வசனமும் கேடகிறிலள்-
2-தன் ஸ்த்ரீத்வமும் பார்கிறிலள்   –
3-அவன் ஸ்வரூபமும் பார்கிறிலள்   —

அது தானும்
பரத்வத்தில் ஆதல்
விபவத்தில் ஆதல் அன்றிக்கே
அவ்விடங்கள் எல்லா வற்றிலும் சொல்லுகிற ஏற்றங்கள் எல்லாவற்றையும்
உடைத்தாய் இருக்கிற திருக்கண்ண புரத்திலே   புக்கு
அங்கே எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ சௌரி ராஜ பெருமாளை சாஷாத் கரித்து
அந் நீர்மையிலே அகப்பட்டாள் போலே இரா நின்றது என்று
வினவ வந்தவர்களைக் குறித்துச் சொல்லுகிற
பாசுரமாய் இருக்கிறது -(அனுமானம் பண்ணி சொல்கிறாள் )

(யதோ வாசோ நிவர்த்தந்தே -வேதம் சொல்லும் அவனை பூர்ணமாக அனுபவித்து
மகள் பேச திருத்தாயார் அனுபவித்த பாசுரம் போல்
ஸத்வித்யா பிரகரணம் மேல் காட்டுகிறார்
ஸ்வேத கேது -உத்தாலகர் -சம்வாதம் –
இங்கு தெரியாதது ஒன்றுமே இல்லை என்று தாயார்
அங்கு தெரிந்து கொள்வதை அறியாமல் உள்ளான்
முகம் பார்த்து அனுமானம் தான் இரண்டுக்கும் பொது )

சில ஆசார்யர்கள் பக்கலிலே சென்று
சில அர்த்தங்களைக் கேட்டு
சரீர பேதத்தளவு அன்றிக்கே -ஜீவர்களுக்கும் பரஸ்பர பேதம் உண்டு என்று
அறிந்த ஏக தேச ஜ்ஞான மாத்ரத்தாலே
சர்வேஸ்வரன் உடைய ஜகத் வைசித்ரி இருந்தபடி என் -என்று கொண்டு
ஆச்சர்யப் பட்டு

எல்லாம் அறிந்தான் போலே பூர்ணனாய்
ஸ்வேதகேது வானவன் பிதாவின்  அருகே வந்து இருக்க -பிதா -உத்தாலகன்
பிதா மகன் -அருணன் –
பிதாவும் இவன் வடிவில் வேறுபாடு கண்டு
ஜ்ஞாதவ்யாம்சம் இன்னம் அநேகம் உண்டாய் இருக்க எல்லாம் அறிந்தாரைப் போலே இரா நின்றான் –
அவற்றையும் இவனுக்கு அறிவிக்க வேணும் என்று பார்த்து

(வடிவில் வேறு பாடு கண்டு அறியாததை அறிவிக்க இங்கு
அவள் அறிந்ததை திரும்ப சொல்கிறாள் திருத்தாயார் )

ஸ்தப்தோசி-பரி பூர்ணனைப் போலே எல்லாம் அறிந்தாயாய் இரா  நின்றாய்
தமாதேசமப்ராஷ்ய பரிபூர்ண இவ லஷ்யசே -இந்த ஆதேசத்தைக் கேட்டாயோ
ஆதேச -பிரசாசனம்-(சர்வ லோக நியாந்தா -நியமன சாமர்த்தியம் )
பிரசாசிதாரம் சர்வேஷாம் -என்று
ஒன்றை அறியவே எல்லா வற்றையும் அறிந்ததாய்
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களையும் ( பிரசாசிதவாக-சாசனம் பண்ணுபவனாக ) நியமிக்கக் கடவ
சர்வேஸ்வரனையும் அறிந்தாயோ நீ -என்ன
(ஏக விஞ்ஞானேந சர்வ விஞ்ஞானம் )

கோன்வாதேச -ஆதேசம் ஆவது என் என்ன
அவன் வேதத்தில் பூர்வ பாகத்தில் சிலவற்றை ஆதல்
ந்யாயாதிகளில் சிலவற்றை யாதல் -கேட்ட அளவாய்
வேதாந்த ஜ்ஞானம் இன்றிக்கே
சர்வேஸ்வரன் ஒருவனைக் கொண்டு
குலாலாதிகளுக்கு தண்ட சக்ராதிகள் மாத்ரம் நிமித்தமும் சஹகாரியுமாம் அளவே ஈஸ்வரன் –
(என்கிற நையாயிக பக்ஷம் மட்டும் அறிந்து
ப்ரஹ்மம் சரீரமே சேதன அசேதனங்கள் -பரிணாமம் அடையும் என்றும் அறிய வேண்டுமே -)
உபாதாநமும் தானேயாய் -( காரணமும் ப்ரஹ்மமேயாய்)-
பஹூஸ்யாம் -என்கிற காரியமும் ப்ரஹ்மமேயாய் –
சித் அசித்துக்கள் இரண்டும் விசேஷணம் என்று கொண்டு
வேதாந்திகள் போன வழியையும் அறிய வேணும் காண் -என்றான் –

அங்கு –
அவன் அறியாத அம்சம் அறிவிக்கைகாக பிதா கேட்டான் –
இங்கு –
தன் பிள்ளை உடைய படியாலும்
பேச்சாலும்
இவள் சர்வாதிகனான சர்வேஸ்வரனை மறுபாடுருவ அறிந்தாள்-என்று
அத்தை தான் அறிந்தமை தோற்றச் சொல்லுகிறாள் –

(கீழே அனுமானத்துக்கு மாத்திரம் திருஷ்டாந்தம்
இனி அறிந்ததமைக்கும் அனுமானத்துக்கும் சேர இந்த ஐதிக்யம் )

ராஜேந்திர சோழனில் ஒரு பிராமணன் மகன்
புத்தரோடு சம்ப்ரதாயம் உண்டாய்
பூண நூலையும் குடுமியையும் அறுத்துப் பொகட்டான்  –
கூரத் தாழ்வான் அங்கே நடந்த அளவிலே
சிகா யஞ்ஞா பவீதங்களைத் தரித்துக் கொண்டு வந்து புகுந்தான் –
பிதாவானவன்
ஸ்ரீ கூரத்தாழ்வானைச் சந்தித்தாயோ என்று கேட்க
புறம்பு உள்ளார் -நீ அறிந்த படி எங்கனே -என்று கேட்க
ஸ்ரீ ஆழ்வான் சந்நிதியில் தமோபி பூதரும் சத்வஸ்தர் ஆவார்கள்  காண் -என்கின்றான் –

பிள்ளை அமுதனார் இத் திருமொழிக்கு பிரவேசம் சொல்லா நிற்கச் செய்தே
ராஜாக்கள் அந்தபுரக் கட்டிலே-தெருவிலே –
பள்ளி யந்துலாத்திலே-தண்டிகை -பல்லக்கில் – ஏறி உலவா நிற்பர்கள் காண் –
என்றாப் போலே அநேகம் வாக்ய சில்பங்களை பண்ணினார் –
அப்போது பால்யத்தாலே அவ் வடைவுகள் புத்தி பண்ணப் பெற்றிலோம்
அவற்றுக்கு இதில் பற்றாசு ஏது என்று விசாரித்தோம் –
இது வாகாதே என்று தெளிந்தோம் காண் என்று இவ்வளவிலே நம் பிள்ளை அருளிச் செய்தார் –

கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே  வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-8-

————————————————–

தன் பெண் பிள்ளை சொல்லக் கடவ இது
தனக்கு ரசித்த படியாலே
அப் பாசுரத்தை தன் வாயாலேயும் ஒரு கால் பேசி
அனுபவிக்கப் பார்க்கிறாள் –

(என்கின்றாள் ஆல் – வர்த்தமானம் பிரயோகம் -பெண் தாயார் வினவ வந்தவர்கள் மூவரும் இருக்க
இவள் சொன்னதை வினவ வந்தவர்கள் கேட்கவும் பிரசக்தியும் இருக்க
திருத்தாயார் அனுவதிப்பது அவள் ரசிப்பதால் )

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு  ஒண் சங்கம்  என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருக்கின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானைக் கண்டாள் கொலோ 8-1-1-

என்கின்றாளால்-என்கின்றாள் ஆல் -ஆச்சர்யம்
ஆல் -விஷாத- வருத்தத்துக்கு அடையாளம்
கொலோ–அனுமானத்தால் சொல்வது –
கண்டாள்-பார்த்து இருப்பது நிச்சயம் –வந்தவர்களுக்கு மறைத்து பேசுகிறாள் –
சிலை என்கின்றாளால் இலங்கு பொன் ஆழி என்கின்றாளால் திண் படை என்கின்றாளால்
தண்டுஎன்கின்றாளால்   ஒண் சங்கம்  என்கின்றாளால்-ஒவ் ஒன்றுக்கும் தனித்தனியே அனுபவித்து
மகள் சொல்ல திருத் தாயார் சேர்த்தே சொல்கிறாள்
மற்று-மேலும் ஆபரணமாக –
தோள் நான்கே-ஆபரணமோ ஆயுதமோ இல்லை அவயவமே என்றாலும் இங்கு
மற்று அவற்றுக்கு -கீழேயும் இசையும் ஆபரணமாகவே இவளுக்குத் தோற்றுகிறது
எற்றே காண்- எப்படி பிடித்துள்ளான் மகள் வார்த்தை -என்ன அழகாக சொல்கிறாள் தாயார் வார்த்தையாக –
கலை இலங்கு மொழியாளர்-அவர்கள் திண்ணைப்பேச்சும் சாஸ்த்ரார்த்தம் –

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு  ஒண் சங்கம்  என்கின்றாளால்-
திவ்ய ஆயுதங்களைத் தரித்தால்
அவை பிரதி பஷ நிரசனத்துக்கு உறுப்பாய் இருக்கும் அதுவே அன்றிக்கே
ஆபரணங்களுக்கும்
அழகுக்கும்
முதல் விரலாய் யாயிற்று இருப்பது –

திவ்ய ஆயுதங்களை இவை ஆபரணங்கள் என்று அறியும் தனையும்
உள் புக்காள் ஆகையாலே
இவை ஆயுதம் என்று இருக்கும் அளவன்றிக்கே
பூஷணம் என்று இரா நின்றாள் –

ஆயுதம் என்று இருப்பார் எதிரிகள்
இங்கனே இருக்க விறே
பிரணயிநி யாமவள் இத்தைச் சொல்லி வாய் வெருவுகிறது  –

முன்பு இவனை அனுபவித்தவர்கள்
காண வேண்டும் என்று ஆசைப் படும் போது
கூராராழி வெண் சங்கேந்தி கொடியேன் பால் வாராய் மண்ணும் விண்ணும் மகிழவே -என்று இறே ஆசைப் படுவது –

(விரஹ தசையில் ஸுந்தர்யம் தானே சொல்லி வாய் வெருவுவார்கள்
திவ்ய ஆயுதங்கள் -ஆபரணங்களும் அழகுக்கும் முதலில் என்னும் படியாகவே காதலிகளை இருக்குமே
அப்படி சொன்ன பராங்குச நாயகியும் உண்டே
ஆயுத ஆகாரம் வெளியாக தோன்றினாலும்
ஆபரணத்வம் ஆகாரம் இவளுக்குத் தோற்றுவது இவள் உள்ளே புகுந்து அனுபவித்தவள்
மாறுபாடு உருவ பார்த்தவள் அன்றோ -)

திவ்ய ஆயுதங்கள் காந்தன் உடைய இடைச்சரி கடைச்சரி அறுகாழி  போலே
ஆபரண கோடியிலுமாய் இரா நின்றது –
(எத்தனை சொல்லினாலும் இரண்டு ஆகாரங்கள் இருப்பத்தைச் சொல்லுவான் என் என்னில்
ஆபரணமாகவே இருக்கும் இவை என்றே இவள் பார்க்கிறாள் )

(ஆயுதமே அடையாளமாகவும் சொன்ன இடங்களும் உண்டே என்பதை மேலே அருளிச் செய்கிறார் )

ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
வெடி விளக்கு எரித்துக் கொண்டு இருந்து அனுபவித்து
காந்தன் போன அநந்தரம் -இன்னார் என்று அறியேன் -என்கிறாள் இறே –
வ்ருத்த கீர்த்தனம் பண்ணுகிற போது சொல்லுகிற வார்த்தை இறே –
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் -என்று அடையாளம் சொல்லச் செய்தே இறே
இன்னார் என்று அறியேன் -என்று கலங்குகிறது –

பிரிந்து இருந்து தூது விடுகிற இடத்திலும்–செரு ஒண் சக்கரம் சங்கு -என்று இறே –
திரு வண் வண்டுறையும் பெருமாளுக்கு -அடையாளம் சொல்லி விட்டது –
இன்னார் என்று அறியேன் -என்று ஈடுபடுவது தான் அழகிலே இறே
அதுக்கு ( ஸம்ஸ்லேஷத்துக்கு ) முன்பு திவ்ய ஆயுதங்களாக இருக்குமே –

(நாலாவதாக- பல்லாண்டு பாடும் பொழுதும் மேல் )
சர்வேஸ்வரனுக்கு மங்களா சாசனம் பண்ணப் புகுந்தவர்களும்
சுடர் ஆழியும் பல்லாண்டு -என்றும் –
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு -என்றும்
திவ்ய ஆயுதங்களுக்கு மங்களா சாசனம் பண்ண வேண்டி இருப்பது –

(கீழே ஆக்ஷேப சமாதான அர்த்தமாக சமுதாயமாக
இனி பிரதி பதம் தாத்பர்யம் அருளிச் செய்கிறார்
சிலை -விசேஷணம் இல்லாமல் தொடங்கி இதன் வை லக்ஷண்யம் காட்டி அருளுகிறார் )

சிலை –
சக்ர சாப நிபே சாபே க்ருஹீத்வா சத்ரு நாசநே -என்று
(சக்ர இந்திரன் வர்ஜம் பிடித்து தானே இருப்பானே ஆகவே இந்திர தனுஸ் )
எங்களைத் தோற்பிக்கும் பரிகரமாய் இருந்தது –
இந்திர தனுஸ் போலே எங்களுக்கு தர்ச நீயமுமாய் –
எங்களுக்கு சத்ருவான வாலியை நிரசிக்கைக்கு பரிகரமுமாய் -இருந்தது
அனுகூலருக்கு வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டே இருக்கும் படியையும்
பிரதி கூலர் பிடித்த பிடியிலே மண் உண்ணும் படியுமாயும் இருக்கும் –

அதன்றிக்கே
சாபே –
வில் வலிக்கும் படியை நினைத்தால்
ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே-என்னும்படியாய் இருக்கும்
அழகுக்கு உறுப்பாய் இருக்கும் அனுகூலர்க்கு –
ஸ்மரன் ராகவ பாணா நாம் –
பெருமாள் திரு நாமத்தால் எழுத்து வெட்டின அஷரங்களையும்
திருச் சரங்களின் உடைய சந்நிவேசத்தையும் ஸ்ம்ரியா  நின்று கொண்டு –

விவ்யதே –
அவர் ஒரு கால் முன்னே நின்று போகச் செய்தேயும்
எப்போதும் ஒக்க முன்னே நிற்கக் கண்டாப் போலே வ்யதித்தான் —

ராஷேச்வர விவ்யதே –
இவர் ஆண்ட பரிகரம் அடங்கலும் வினைக்கு உடலாய் ஆயிற்று இல்லை –
எடுத்து எடுத்து குலைக்கிற போது சுளைப்பிடாம் -கம்பளி -இட்டு
அமுக்குகைக்கு உடலாம் இத்தனை –

சிலை –
ஒன்றை இட்டு விசேஷிக்க வேண்டாதே
தன்னையே சொல்ல  அமைந்து இருக்கிற ஸ்ரீ சார்ங்கம் –

இலங்கு பொன் ஆழி-
மேகத்திலே மின்னினாப்  போலே
ஸ்யாமளமான-திரு மேனிக்குப் பரபாகமாய்க் கொண்டு
எல்லா ஆயுதங்களுக்கும் தலையாய்  இருக்கிற புகர் தோற்றும்படியாய்
ஸ்ப்ருஹணீயமாய் இருக்கிற திரு வாழி –

திண் படை-
எதிரிகள் மேலிட்டாலும் பிற்காலிக்க வேண்டாத படி
திண்மையை உடைத்தான திரு வாள்

அன்றிக்கே
எதிரிகள் மேலே அழுந்தப் படச் செய்தேயும்
தனக்கு ஒரு விகாரம் இன்றிக்கே இருக்கிற  வாள்

படை -என்று
ஆயுத சாமான்யத்தைச் சொல்லக் கடவது –
வாளையும் சொல்லக் கடவது –
(குணவான் -சொல்லி குண சீலம் -குணனம் பெருக்கி பெருக்கி அனுபவிக்கும்
இப்படி பொதுவாகவும் ஒரே குணத்தையும் சொல்வது போல் இங்கும் )

தண்டு  –
அத்தோடு ஒரு கோவையான கதை –
இப்படி ஒரு விசேஷணம்  இட்டுச் சொல்ல வேண்டாத கதை -என்னுதல் –
இதுக்கு சொன்ன விசேஷணம் தன்னையே சொல்லிற்றாம்படி இருக்கிற தண்டு -என்னுதல் –
(கதை கௌமோதகீ -இதுக்கும் திண் அடைமொழி )

(ஒண் சங்கம்  –
திருச் சங்குக்கு ஒண்மை -பகவத் அருகாமை -ப்ரத்யாசத்தி
நான்கு வகையாக அருளிச் செய்கிறார் இத்தையே
1-ரசஞ்ஞதை -வாய் அமுதம்
2-ஸூக ஜீவனம்
3-ஐஸ்வர்ய செருக்கு
4-அந்தரங்கதை

ஒண் சங்கம்  –
1-ரசஞ்ஞதை -வாய் அமுதம்-
கருப்பூரம்  நாறுமோ கமலப்பூ நாறுமோ -என்று தேசிகராய் இருந்து வைத்து
ரச விசேஷங்கள் இவர்களுக்கும் (ஆண்டாளுக்கும் ஆழ்வார்களும் ) தன்னைக் கேட்டறிய
வேண்டும்படியாய் இருக்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் –
பிரணயிநிகள் இறே வாக் அம்ருதத்துக்கு தேசிகராய் இருப்பார்
அவர்களும் தன்னைக் கேட்டு அறிய வேண்டும்படி இறே –

2-ஸூக ஜீவனம்
உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம்
கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே –
(தூங்கு வதற்கு ஏற்ப கடல் வண்ணன் )
ஸ்திரீ ஜாதியாக ஸ்பர்த்தை பண்ணும் படியாக
பகவத் அனுபவத்திலே வாசனை பண்ணிப் போரும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் –

3-ஐஸ்வர்ய செருக்கு
மாதவன் தன் வாய் அமுதம் பொதுவாக உண்பதனைப் புக்கு
நீ உண்டக்கால் சிதையாரோ வுன்னோடு-
பகவத் பிரத்யாசன்னையான அவள் அங்கீகாரம் கொண்டு ஜீவிக்க இருக்கிற
சர்வ சாதாரணமான ஜீவனத்தை
நீ ஒருவனுமே ஜீவித்தால் அவர்கள் உன்னோடு சீறு பாறு என்னாரோ –
செல்வப் பெரும் சங்கே –
உன்னுடைய ஐஸ்வர்யச்  செருக்கு இறே -இங்கன்
முன்னடி தோற்ற வேண்டாது ஒழிகிறது-

4-அந்தரங்கதை-
அல்லாத ஆயுதத்துக்கு விரோதிகள் இருந்த இடத்தே சென்று நிரசிக்க வேணும்
இவனுக்கு உள்ளே அணுக நிற்க வமையும் இறே
(பாஞ்ச ஜன்யம் ச கோஷோ -உளுத்துப் போக வைத்ததே -வெண்மை சாத்வீகம் -சப்தம் கேட்டதுமே நிரஸிக்க வல்லமை
உள்ளே அணுக நிற்க அமையும் -கையில் இருந்து வாயுக்கு போக வேண்டுமே -)
பூக் கொள்  திரு முகத்து   மடுத்தூதிய சங்கு ஒலியும்-என்று
உகப்பாரும் இச் சேர்த்தியைக் காண வேணும்  என்று இறே ஆசைப் படுவது –
(ஸ்ரீ ருக்மிணி ஸந்தேஸம் -வந்ததுக்கு அடையாளம் இதுவே )

(ரசஞ்ஞதை -ஸூக ஜீவனம் -ஐஸ்வர்ய செருக்கும் -அந்தரங்கதையும் -சொல்லிற்று ஆயத்து -)

என்கின்றாளால்-
அப்பாசுரத்தை தான் ஒரு கால் அனுசந்திக்கை யாகிறது –
அதுக்கு அவத்யத்தை விளைக்கை இறே என்றாள் ஆயிற்று –
தான் சொன்னது அவள் சொன்னது போல் இராமையாலே –
அவள் உடைய பாவ பந்தம் தனக்கு இல்லையே –

என்றாள் -சொல்லாமல்-என்கிறாள்-சொல்லாமல்- என்கின்றாளால் -என்பதால் –
ஒரு கால் அனுசந்திக்கை அவத்யம் -என்றதாயிற்று –
ஒரு கால் கண்டு விட்டால் பின்னை பிராதி கூல்யத்தில் எல்லையில் நின்றாரோடு
ஆனுகூல்யத்தில் ( எல்லையில் )நின்றாரோடு வாசி அற துடிக்கும்படி யாயிற்று –

என்கின்றாளால்–
தலைமகளுக்கு திவ்ய ஆயுதங்கள் ஆகர்ஷகமாய் இருக்குமா போல் ஆயிற்று
இவளுக்கும் இருக்கிறபடி –
இவள் சொல்லுகிறது தன்னையே தானும் சொல்லச் செய்தே இவள் சொல்லக்
கேட்டால் போலே இருக்கிறது இல்லை யாயிற்று திருத் தாயாருக்கு –

நாந் ருக்வேத விநீதஸ்ய –
அனுஷ்ட அர்த்த பிரகாசமான ருக்வேதம் சிஷிதனானவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல ஒண்ணாது –
நா யஜூர் வேத தாரிணா –
யஜூர் வேத பாட தாரணம் தான் அரிது -கவலை பாயாமல் சொல்ல வல்லவன்
அது அறிந்தவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல முடியாது –
(நா சாம வேத விதூஷா -கான விசேஷம் அறிவது அரிது )
சக்யமேவம் பரபாஷிதும் –
இத்தை எல்லாவற்றையும் அதிகரித்தவனுக்கு அல்லது
நம் முன்னே இப்படி வார்த்தை சொல்லலாமோ -என்றார் இறே பெருமாள் –
(அவிஸ்ருதம் -வாக் மீ ஸ்ரீ மான் -சொல்லின் செல்வன்
மஞ்சு பாஷித ராகவன் ம்ருது பாஷித ராகவன் கொண்டாடும் படி அன்றோ
ஆயிரம் நாக்கு கொண்ட இள வலையும் பார்த்துப் பேசச் சொல்ல வேண்டும் படி அன்றோ
இவர்கள் சொல்லும் அவிடும் ஸ்ருதியாகுமே )

என்கின்றாளால் –
அடி தோறும் உளுக்கினமை தோற்றி இருக்கிறது –
ஆருக்கு நிலமானதிலே இவள் வார்த்தை சொல்லுகிறது -நித்ய ஸூரிகள் வார்த்தை அன்றோ —

சிலை இத்யாதி –என்கின்றாளால் –
பைசல் காசு – முக்கை காசு -என்னுமா போலே -கைசு -குட்டிச் சிறாங்கை-முக்கை-மூன்று சிறாங்கை-
இவளைப் பாதிக்கைக்கு இது எல்லாம் வேணுமோ –
(ஈடுபாட்டுக்கும் வருந்துவதற்கும் வெறுப்பிலும் என்றவாறு )

இவையோ இவனுக்கு ஆபரணம் -மற்றும் உண்டோ என்ன –
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு –
மற்று அவனுக்கு ஆபரணம் –
ஆபரணத்துக்கு   ஆபரணமாய் இருப்பன
தோள் நாலும் என்னா நின்றாள் –

திவ்ய ஆயுதங்களை அனுசந்தித்த இது
அவ்வாயுதங்களின் வழியே -அவற்றைத் தரித்து இருக்கும்
திருத் தோள்கள் அளவும் கொண்டு போய் மூட்டிற்று –
(சம்ஸ்லேஷத்துக்கு முன்னால் ஆயுதமாக தோற்றும் பின்பு ஆபரணமாகவே தோற்றும் முன்பே பார்த்தோம் )

புறம்பு ஓர் இடத்திலும் போக வேண்டாத படி இறே விஷயம் தான் இருப்பது –
சர்வ பூஷண பூஷார்ஹா -என்று
ஆபரணங்களுக்கும் ஆபரணமாகைக்கு அர்ஹமாய்  இறே தோள் தான் இருப்பது
ஆயுதங்களை ஆபரணமாக சொல்லிற்று இறே
ஆயுதங்கள் அபாஸ்ரயமுமாய் ஆகர்ஷகமுமாய் இருக்குமா போலே
தோள்களும் அபாஸ்ரயமுமாய் ஆகர்ஷகமுமாய் இருக்கிற படி –
(எடுத்த பிரமாணம் பூஷணங்களுக்கே ஆயுதங்களுக்கு இல்லையே என்று சங்கை வர
இவள் இவற்றை ஆயுதமாகவே பார்க்க வில்லையே )

மலை இலங்கு –
மலை போலே விளங்கா நிற்பதாய் -கல்பக தரு பணைத்தால்  போலே இருப்பன
நாலு திருத் தோள்கள் என்னா நின்றாள் –
மலை போலே எதிரிகள் பேதிக்க ஒண்ணாத படி இருக்கை –

மற்று அவனுக்கு –
ஆயுதங்களே போந்து இருக்கச் செய்தே அழகுக்கு வேண்டுவது –
அதுக்கு மேலே நாலு திருத் தோள்களையும் உடையான் என்னா நின்றாள்

மற்று -எனபது -துல்ய விகல்பங்களை இறே –
(துல்ய -ஒரே பெருமை உள்ளவை -விவஸ்திதம் -சமம் இல்லாதவை -இப்படி இரண்டு விகல்பங்கள் )
கீழே திவ்ய ஆபரணங்களைச் சொல்லி -இங்கே -மற்று -என்கையாலே –
தோள்களும் ஆபரணமாக இருக்க வேணும் இறே –
திவ்ய ஆத்மா குணங்களிலும்
திவ்ய ஆத்மா ஸ்வரூபத்தில் காட்டிலும் அனுபாவ்யமாய் இருப்பது திவ்ய விக்ரஹம் இறே
ஸூபாஸ்ரய  ப்ரகரணங்களில் த்யேயமாக சொல்லுகிறதும் அது தன்னையே இறே –
(தோள் நான்கே -ஏவகாரத்துக்கு இங்கு விளக்கம் -த்யேயம் ஸ்ரீ பதி ரூபமே -)

திவ்ய விக்ரஹத்துக்கும் திவ்ய ஆத்மா குணங்களுக்கும் உள்ளே
ஒன்றை உபாஸ்யம் என்று சொல்லிற்று –
இத்தை விட்டு அவ்வருகே போகச் சொல்லுகிறது அன்று –
அவ்வருகேயும் அனுபாவ்யம் உண்டு என்கைக்காக சொன்னது இத்தனை –
அங்கன் அன்றாகில் -சதா பஸ்யந்தி-என்னக் கூடாது இறே

தந்தாமுடைய தபஸ்ஸாலே ஷீண பாபரான ருஷிகளைப் போலே அன்றிக்கே
பகவத் பிரசாதம் அடியாக ஜ்ஞானம் பிறந்த ஆழ்வார்கள்
திவ்ய விக்ரஹம்  அல்லது அறியார்கள் இறே –

(தஹர வித்யை -தஹராகாசம் -அந்தம் உள்ளதை உபாஸ்யமாகச் சொல்லிற்றே –
இத்தைத் தாண்டித்தான் போக வேண்டும் இல்லையே
உள்ளேயும் இருக்கும் -என்று சொல்ல வந்ததே இந்த வாக்கியம்
ஸ்வர்க்க ஆரோகணம்-மேலே – உள்ளே போனால் காணலாம் –
ஆனால் அது பத்ரிகாஸ்ரமம் விட ஸ்ரேஷ்டம் இல்லையே )

நிலாதுக்குறி பகவர்-பட்டரை -ஸ்ரீ வைகுண்டத்திலே சதுர் புஜனாய் இருக்கைக்கு பிரமாணம் என்ன -என்று கேட்க
அவர் சொல்லி வாய் மாறுவதற்கு முன்பே
தமஸ பரமோ தாதா சங்கு சக்ர கதா தரா -என்னா நின்றது என்ன
(மண்டோதரி சதுஸ் ஸ்லோகம் )
போக்கடி காணாமையாலே கோபத்தாலே கண் சிவக்க
பிரமாண கதிகள் இவையே இருந்தது
பொறுக்கும் அத்தனை இறே -என்று அருளிச் செய்தார் –

எற்றே காண் என்கின்றாளால்-
எற்றே -என்கிறது
மலை இலங்கு தோள் நான்கே -என்னா -இருந்தபடி என் -என்று
தலைமகள் தான் ஆச்சர்யப் படுகிறாள் ஆகவுமாம் –
அதிமாத்ரா ப்ராவண்யம் ஆகாது என்று மீட்க் பார்த்த இடத்தும் மீட்க ஒண்ணாத படி
இவ் விஷயத்தில் அவஹாகித்த படி தான் என் -என்று
திருத் தாயார் ஆச்சர்யப் படுகிறாள் -என்னவுமாம்
என்னே காண் என்கிறாள் –
இதோர் ஆச்சர்யம் இருந்தபடி என்
நீங்களும் இத்தைப் பாருங்கோள் -என்னா நின்றாள் –

காண் என்கின்றாளால்–
நான் அதி மாத்ர பிராவண்யம் ஆகாது -என்ன
மூத்தார்க்கு முத்து
என்னுடைய ஹிதத்துக்காக இப் பேற்றை இழக்கிறது என் என்று விலக்கப் பார்த்த என்னையும்
தன் படி யாக்கப் பாரா நின்றாள் –
இவ் விஷயத்தில் பிராவண்யம் தான் திருத் தாயாருக்கு அபிமதமாய் இருக்கச் செய்தே
அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது என்று நிஷேதிக்கிறாள் இத்தனை இறே –
(ஆல் -ஆச்சர்யம் -ஹர்ஷம் -இரண்டும் என்றபடி )

என்கின்றாளால் –
இது திவ்ய ஆயுதங்களைச் சொன்ன போது போல் அன்று ஆய்த்து
திருத் தோள்களை சொன்ன போது இருக்கிறபடி –
இவளுக்கு திவ்ய ஆயுதங்கள் அழகுக்கு உடலாம் அளவே இறே
அணைக்கைக்கு பரிகரம் இறே தோள்கள் –
(ஆபரணங்களை உடையவன் -அவனுக்கு மற்று தோள் நான்கே இருக்க வேண்டுமே –
மயங்கி அக்ரமமாக -அழகில் ஈடுபட்டு மற்று அவனுக்கு என்கிறாள் )

என்கின்றாளால் –
(வார்த்தை அழகு மட்டும் இருந்தால் எற்றே கேள் இருக்க வேண்டுமே –
குறி அழிந்து இருப்பதைப் பார்க்கவே எற்றே காண் )
நாமும் எல்லாம் இவற்றை சொல்லுகிறோம் இறே
இவள் சொல்லுகிற போது இருக்கிறபடி பாருங்கோள் –
நாமும் எல்லாம் சொல்லி குறி அழியாதே இரா நின்றோம் –

திருத் தாயாரை  இவள் காண் என்னப் பெறுமோ என்ன -பெறும்
குடத்தில் விளக்கே போலே கொம்பனார் காமம் புறப்படா
புறப்படில் ஆ புகு மாலை யணி மாலை பிடி போல் கவ்வை தரும்
இவள் அறிவுக்கு  முன்பு மறைக்கும் இத்தனை போக்கி
அறிந்த பின்பும் மறைக்கை களவாம் இறே –

முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்-
இதர விஷயத்தில் ஸ்நேஹிக்கும் க்ரமம் இல்லை யாகாதே
பகவத் விஷயத்தில் தான் காட்ட காணும் அவர்களுக்கும் –
கதிர் பெருக்கி ஆர்ஜித்து கர்மத்தாலே ஷீண பாபராய்
ஸ்நேஹித்தவர்களுக்கும்
வாசி இருக்கும்படி இதுவாயிற்று –
(பர்வத பரம அணு வாசி போலும் -வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் )
அவர்களுக்கு அப்படியால் வந்த ஸ்நேஹம் முற்பட்டு இறே இருப்பது
அதின் கார்யம் இறே பயலைமை –
அங்கன் அன்றியே -இது பயலைமை முற்பட்டு -ஸ்நேஹம் பிற்பட்டு இருக்கிறது ஆயிற்று –

முலையிலே விளங்கா நிற்பதாய்  பூத்த பயலை -என்னவுமாம் –
பீர்க்கு பூத்தது -என்று வை வர்ண்யத்தை சொல்லக் கடவது இறே
பீர்க்கம் பூவை இட்டு தமிழர் சொல்லுவார்கள் இறே

அன்றிக்கே
பூ என்று  கொண்டு அழகாய்
முலையிலே விளங்கா நின்றுள்ள பயலைமை என்று
முலைக்கு ஆபரணமான வை வர்ண்யம் -என்றுமாம் –
அதாகிறது
யௌவனத்தில் முத்தாஹாரம் தொடக்கமானவை அல்லவாயிற்று –
முலைக்கு ஆபரணம் வை வர்ண்யம் ஆயிற்று –
அபிமதனைப் பிரிந்து வை வர்ண்யத்தைத் தரியா வாகில்
மரமுலையோ பாதியாம்  இத்தனை இறே
பிரிந்து வை வர்ண்யம் ஆகாதே இருந்தாள் ஆகில்
ஆணுக்கும் பெண்ணுக்கும் வாசி இல்லை யாம்
ஆகையால் இவளுடைய ப்ரணயத்துக்கு நமஸ்காரம் இறே –
(துஷ்க்ருதம் க்ருதவான் ராம -பிரபு -பெண் பிறவி எடுத்துப் பார்த்து இருந்தால்
தானே அறிவான் பிரிவாற்றாமை -திருவடி
பகவத த்வரையா நம -ரக்ஷணத்தில் உறுப்புக்கு நமஸ்காரம் போல் இவளுக்கும் இது )

பயலை முன்போட வன்போடு இருக்கின்றாளால் –
நாட்டார் படி அன்றிக்கே இரா நின்றது இவள் படி –
அன்பு பட்ட விஷயத்தின் உடைய அலாபத்தாலே பயலைமை உண்டாக கடவதாக இருக்க
பயலை வழி காட்ட -அத்தை பின் சென்றது அன்பு –
கார்யத்துக்கு பூர்வ வ்ருத்தியாய் இருக்குமதுவே காரணம்
இது அப்படி புத்தி பண்ணுகைக்கு அவகாசம் வைக்கிறது இல்லை

இங்கனே சொல்லுவான் என் என்னில்
ஒரு விஷயத்தில் அன்பு பட்டு அதன் உடைய அலாபத்தில்  வருமது ஓன்று அன்றோ பயலைமை -என்னில்
அப்படியே இது திருத் தாயார் வார்த்தை யாகையாலே -தான் கண்டு அனுபவித்த அடைவே சொல்லுகிறாள்
அன்பு முற்பட்டு இது பிற்பட்டாலும் முற்பட பிரதிபத்திக்கு விஷயமாவது இது இறே-
இவள் உடம்பில் வை வர்ண்யமும் பேச்சும் கொண்டு இறே
இவள் விரஹத்தை நிச்சயிப்பது –
இவளுக்கு முற்பட பிரதிபத்திக்கு விஷயம் இதுவாகையாலே
தான் பிரதி பத்தி பண்ணின க்ரமத்திலே  சொல்லுகிறாள் –
விஷய வைலஷண்யத்தாலே க்ரம விபர்யாசமும் பிறக்கும் இறே –

முலை இலங்கு பூம் பயலை –
பர்வதத்திலே ஏறும் போலே காணும் வெள்ளம் –
அதாகிறது –
இம்முலை கண்டார் வைவர்ண்ய அடங்க கடவத்தை
இதை பிரிந்து அவன் தானே வெளுத்து இருக்க வேண்டும்
பிரிந்து நோவு படும் லஷணம் இதுக்கு இல்லை -என்கை –
(மெய் இலங்கு -உடம்பு முழுவதும் இருந்தால் தானே விரஹம் அதிகம்
இங்கு முலை இலங்கு -இருப்பதற்கு வியாக்யானம் )

நீ அறிந்த படி என் என்னில் –
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –
இவ் வைவர்ண்யம் தான்  ஹேத்வந்தர க்ருதம் என்று புத்தி பண்ணவுமாம் இறே –
அது செய்ய ஒண்ணாத படி இவள் இவ்விஷயத்தில் அகப்பட்டமையை நிச்சயித்து தருகிறது –
இவள் பாசுரம் ஆகிறது
அதாகிறது –
அவன் உடைய திவ்ய ஆயுதங்களின் பேரை இறே சொல்லுகிறது –
(அன்புடன் இருப்பதுக்கு மூலம் -வைவர்ணயம் -அறிந்து
திருக்கண்ண புரத்து அம்மானைக் கண்டமையும் -அறிந்து )

கலை இலங்கு மொழியாளர்-
அவ் ஊரில் உள்ளார் லோக யாத்ரைக்கு உடலாக -உண்ண- உடுக்க -என்று சொல்லும் வார்த்தையிலே
இன்னதனை சாஸ்திரம் கற்றார்கள் -என்று கற்ற சாஸ்திரப் பரப்பு அடங்கலும்
தெரியும்படி வரிக் கொள்ளலாய் இருக்கும் –
(பத்து பாத்திரம் -பத்துடை அடியவர்க்கு எளியவன்
அரிசியில் கல் கரு மாணிக்க மலை ஒன்றுமே இல்லை பேசுவார்கள் போலும் )
கலை -என்கிறது வித்யா ஸ்தலங்களை அடைய -(4 வேதம் 6 அங்கம் 8 உப அங்கங்கள் 18 )
மொழியிலே கலை இலங்கா நிற்கும் –
கலை இலங்கும்படியான பேச்சை உடையராய் இருப்பார்கள்-
(பண் பகர் வில்லி புத்தூர் கோன் -பேசுவதே பாடலாக பண் மிக்கு இருக்குமா போல்
இவர்கள் திண்ணைப் பேச்சும் ஸாஸ்த்ரம் )

கண்ணுக்கு தோற்றாததும் தங்கள் வார்த்தையிலே அறியும்படி இருக்குமவர்கள்
நெடுநாள் பெற்று வளர்த்த என்னோட்டை சம்பந்தம் அற்று
அவ் ஊரில்   சம்பந்தம் தோற்றி இரா நின்றது இவள் வார்த்தை இருக்கிறபடி –

த்ருஷ்டும் சக்யம் அயோத்யாயாம் நா வித்வான் ந ச நாஸ்திக
சர்வே நராஸ்ஸ நார்ய்ச்ச தர்ம சீலாஸ் ஸூ சம்யதா-பால காண்டம் –
அறுபதினாராயிரம் ஆண்டு  வன்னியம் அறுத்து   நன்மைகளை உண்டாக்கிப் போந்த சக்கரவர்த்திக்கும்
இரண்டு பொருள் உண்டாக்க போச்சுதில்லை –
ஒரு அவித்வானை யாதல்
வைதிக அர்த்தங்களை இல்லை என்பான் ஒரு நாஸ்திகனை யாதல் உண்டாக்கப் போச்சுதில்லை –
(கள்வர் இலாமை இத்யாதி -கம்பர் )

அப் படை வீட்டில் உள்ளார் -ராஜ புத்ரர்கள்  ஆரேனும் ஒருவர் முடி சூட அமையாதோ
என்று இருக்குமவர்கள் அல்லர் –
பெருமாளே முடி சூடா விடில்
இஹைவ நித நம்யாமோ மகாப்ரச்த்தா நமேவவா
ராமேண ரஹிதா நாஞ்சகிமர்த்தம் ஜீவிதம் ஹின-என்று
பெருமாள் அபிஷேகம் பண்ணாத படை  வீட்டில் இருப்பது இல்லை
விழுந்த இடமே சுடுகாடாக போக அமையும் என்று இருப்பார்கள் புருஷர்கள் –

ஸ்திரீகளும் –
ராமமேவா அநுகச்சதத்வம ஸ்ருதிம் வாபி கச்சத – என்று
பெருமாள் வழி மாறிப் போனார் என்று திறக்க அழைத்த பர்த்தாக்கள் 
முகம் பிளக்கத் தள்ளிக் கதவு அடைத்துக் கொள்ளுவார்கள் –

தர்ம சீலா –
ராம அனுவர்த்தியே பரம தர்மம் என்று இருக்குமவர்கள் இறே
ஸூ சம்யதா -ஸுவ பிரயோஜனத்தில் நெஞ்சு செலுத்தாதவர்கள் யாயிற்று
அப்படி இருக்குமவர்கள் யாயிற்று இவ் ஊரில் உள்ளாறும் –

கண்ண புரத் தம்மானை கண்டாள் கொலோ –
ஸ்ரீ வைகுண்டத்தில் சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் –
விபவங்களில் மனுஷ்யத்வே பரத்வமாய் இருக்கும் –
அங்கன் அன்றிக்கே -அவதாரங்களில் காட்டில்
அர்ச்சாவதாரத்தில் பரத்வமும் அகப்பட அறிந்தாள்
என்று தோற்றி இரா நின்றது –

ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய ஸூரிகளுக்கு அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டிருக்குமதாய் இருக்கும் –
விபவங்கள் காதா சித்கமாக ஒரு விதுர சபர்யாதிகளுக்கு கொடுத்து விடுமதாய் இருக்கும் –
பிற்பட்டாருக்கும் இழக்க வேண்டாதபடி
பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களம் -திரு நெடும் தாண்டகம் -என்று
எல்லாருக்கும் அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு இருக்கும் இடம் இறே அர்ச்சாவதாரம் –
ஒரு வஸ்துவுக்கு குணத்திலே உத்கர்ஷம் ஆனால்
அவ்வேற்றம் உள்ளது இங்கே இறே –
(அம்மான் ஸ்வாமி -என்பதால் பரத்வம் -இது தானே அனைவருக்கும் ஆஸ்ரயிக்க வேண்டும் –
ஸுலப்யம் அனைவரும் அறிவார்கள் )

இங்கே உபாசித்து -அது விதேயமானவாறே -அவ்வருகே ஒன்றை உபாசித்து
அது விதேயமானவாறே அதுக்கும் அவ்வருகே ஒன்றை உபாசித்து
அதுக்கு அவ்வருகே  போகக் கடவதாக
இங்கனே ஒரு க்ரமம் சொல்லுவது உபாசகருக்கு –
முதலிலே சர்வ பர ந்யாசம் பண்ணினவர்களுக்கு இங்கேயே எல்லாம் புஷ்கலமாய் இருக்கும் இறே

கடல் அருகே போகா நின்றால்-கண்ணால் கண்ட அளவே உள்ளது -என்று இருக்கும் அவனுக்கு
அவ்வளவே அன்று இறே உள்ளது
அப்படி இவன் பிரதிபத்தியில் குறை போக்கி இங்கே எல்லாம் குறைவற்று இருக்கும்
என்று நினைத்து இருக்குமவனுக்கு புஷ்கலமாய் இருக்கும் இறே-
நாம் இவ்விசை யணித்தாக உகந்து  அருளப் பண்ணின இடம் -என்று இவன்
குறைய நினைக்கில் இழக்கும் இத்தனை –
உகந்து அருளின இடத்தில் உபாதான த்ரவ்யத்தை நிரூபித்தான் ஆகில்
மாத்ரு யோனி பரிஷையோடு ஒக்கும் இறே –

கண்ண புரத் தம்மானை –
உகந்து அருளின தேசத்தில் உண்டான ஏற்றம் எல்லாம்
தோற்றும்படி நிற்கும் ஸ்வாமி -அம்மான் – ஆயிற்று –

கண்டாள் கொலோ –
ஸ்ரவண ஜ்ஞானம் என்று தோற்றி இருக்கிறது இல்லை
கண்டவர்களுக்கு தெரியுமா போலே தெரியுமோ இவள் வார்த்தையை கேட்டு அறிந்த நமக்கு –

கண்டாள் கொலோ –
நெடு நாள் நோன்பு நோற்று பெற்ற தாயான முன்னே அறிந்த அம்சம் மறைக்கக் கடவதாய் இருக்க
என் முன்னே இப்படி வெளியிட்டுச் சொல்லும் போது
அவ்விஷயத்தில் இப்படி ஒரு சக்ருத் தர்சனம் உண்டாய் இருக்க வேணுமே  –
ஒரு கால் கண்டால் பூர்வ வாசனையும் மறக்கும் படியான
வை லஷண்யம் உள்ளது அவ் விஷயத்துக்கே இறே
(ஒரு நாள் முகத்திலே விளித்தார் படும் பாட்டை குகன் இடமும்
அவன் பரிகரங்கள் இடமும் கண்டோமே )

கலை இலங்கும்படியான பேச்சை உடையராய் இருப்பார் அவ் ஊரில் உள்ளார் –
அப்படியே இவள் பேச்சைக் கொண்டு
இவள் திருக் கண்ண புரத்திலே புக்கு
சௌரிப் பெருமாளை சாஷாத் கரித்தாள் ஆகாதே என்று சொல்லலாய் இரா நின்றது –
அக வாயில் ஓட்டம் எல்லாம் வார்த்தையிலே தெரியும் இறே
(அவர்கள் விஷயத்தில் சாஸ்த்ர வாசனை தெரிவது த்ருஷ்டாந்தம் இவள் கண்டதுக்கு )

திருத் தாயாராயும்
பெண் பிள்ளையாயும்
அனுபவிக்கிறார் ஆழ்வார் தாமே இறே
ஆறுகள் பெருகிப் போகா நின்றால்
வாய்க்கால்களாலும்
பெரு வாய்க்கால்களாலும்
வாய்த் தலைகளாலும்
போனாலும் பின்னையும் கடலிலே புகும் -அம்சம் விஞ்சி இருக்குமா போலே
எல்லார் உடைய தசையும் தமக்கே பிறக்கிறது
இல்லையாகில் கண்ண புரத் தம்மானை  கலியன் சொன்ன -என்று
தலைக் கட்ட ஒண்ணாது இறே –

சிலை -இத்யாதி
தன் பக்கல் உள்ளது எல்லாம் விட்டாப் போலே
(அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு அனைத்தையும் -தாயாரையும் )
ஆசைப் பட்ட விஷயத்தில் ஒன்றும் விட மாட்டு கிறிலள்-என்கிறாள்
உகப்பாரையும் வாய் வெருவப் பண்ணும்
உகவாதாரையும் வாய் வெருவப் பண்ணும் –
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் திருவாய் -4-2–என்னுமா போலே –

———————————————————

கீழே திவ்ய ஆயுதங்களை ஆபரணங்களாகக் கொண்டு வாய் வெருவ
பல்லாண்டு பாடின பெரியாழ்வாரும் ஆபரணமாகவே நினைத்து பல்லாண்டு
இப்படி பரம போக்யனானவன் வாராமல் இருக்க
நமது பக்கம் பிரபல பிரதிபந்தகங்கள் இருக்க வேண்டும் என்று சிந்தை செய்து
இவற்றைப் போக்குகைக்கு தமது பக்கம் ஒன்றுமே இல்லை என்பதால் –
வல் வினைகள் -தொடரும்
கையில் உபகரணங்கள் -இப்பொழுது அவையே திவ்ய ஆயுதங்களாக எண்ணி
ஆகவே அவனே போக்கி அருள வேண்டுமே
இவை இருந்தும் நான் இன்னும் உழல உடை குலைப் பட்டு சிதிலம் ஆகிறாள் இதில் –

திருக்கைத்தலத்து சேவையிலும் வில் சாத்தி உத்சவர்
கிருஷ்ண க்ஷேத்ரம் என்றாலும் விபீஷணனுக்கு ராமனாகவே சேவை
அரையர் ஐ திக்யம் -பல மதிள்கள் இருக்க -உடைக்க -வில் பொம்மையா அழகுக்கு விட்டதா ஆயுதமா
தாளம் வீச -அனைத்தையும் அழித்து அருளினான் அன்றோ –
இடது திருக்கையில் வில்லும் வலது திருக்கையில் ஸூ தர்சனமும் தரித்து சேவை உண்டே –

செருவரை முன்னா சறுத்த சிலை யன்றோ கைத் தலத்து என்கின்றாளால்
பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால்
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-2-

செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத் தலத்து என்கின்றாளால் –
ஒரு நாள் கண்டு விட்ட என்னை நித்ய அனுபவம் பண்ணி வைக்க வேண்டாவோ –
அது செய்யாது ஒழிகைக்கு ஹேது -கையில் அது விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இல்லாமையோ -என்கிறாள் –
பிராட்டியோடு சம்ஸ்லேஷத்துக்கு பிரதிபந்தகரான ராவணாதிகளை நிரசித்த
சார்ங்கம் அன்றோ கையிலே இருக்கிறது –
( சிலையினால் இலங்கை செற்ற தேவன் அன்றோ )
அது என்னைக் கூட்டிக் கொள்ள பரிகரம் ஆகாதோ –
என்னுடைய பிராப்தி பிரதிபந்தகமேயோ –
இங்கனே ஒருவக் கிடந்தது போவது -என்னா நின்றாள் –

செருவர் உண்டு -செருச் செய்வார் –
யுதி ராம வத்த்யம் -(திருவடி ராவணனுக்கு உபதேசம் )
யுத்தத்திலே எதிரிட்டு வெல்ல ஒண்ணாது
அநுதபித்து கால் கட்டி வெல்லில் வெல்லும் இத்தனை –
(தோற்றோம் மட நெஞ்சே என்றால் வெல்லலாம் )
த்விதா பஜ்யே யமப்யேவம் ந நமேயம் -என்று
பிராதி கூல்யத்தில் முதிர நின்றவர்கள் -அவர்களை  –

ஆசறுத்த –
யுத்தங்களை நிவர்த்திப்பித்த –
நமக்கோர் எதிரி உண்டாய் போரப் பெறுவது  காண்-என்று திரிந்த பையல்களை
வேறு ஓர் இடத்தில் நாங்கள் எதிரிகள் என்று நில்லாதபடி
அவர்களை வாசனையோடு போக்கின சிலை அன்றோ கைத் தலத்தது –
இது தான் கடக்க இருந்து எடுத்துக் வர வேண்டுவதாய் நான் ஆறி இருக்கிறேனோ –
(கடல் அரசன் இடத்தில் போல் இளைய பெருமாளை இட்டு வர வளைக்க வேண்டாமே இங்கு
அங்கு தபஸ் கோலத்தால் வில் கையில் இல்லை )
அது கையிலே இருக்க நான் இப்படிப் பட வேண்டுகிற ஹேது என்-
அழகுக்கோ கையிலே பிடித்து இருக்கிறது
விரோதிகளை நிரசிக்கைக்கு அன்றோ -என்னா நின்றாள் –

ந தநுர்ப் பூஷணாயமே-என்றார் இறே-இளைய பெருமாள் –
ஆபாத ப்ரதீதியிலே -அழகுக்கு உடல் -என்றே இருக்கையாலே
வீரத்துக்கு உடல் அன்று -என்று இருந்தீரோ -என்றார் இறே –

பிள்ளை திருக் கண்ண புரத்து   அரையர்   -விரோதி வர்க்கம் கூடிக் கொண்டு அற மிகைத்தவாறே  –
செருவரை முன் ஆசறுத்த சிலை அன்றோ கைத் தலத்து -என்று விண்ணப்பம் செய்ய
ஒரு ஷணத்திலே முடிக்கிறோம் என்று அருளிச் செய்தார் –
(அன்றோ -ஆபரணம் ஸூசகம் -போல் அரையர் சுரம் வைத்து -ஆயுதம் தானே என்று அர்த்தம் தொக்கி இருக்குமே )

பொரு வரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால் –
இக் கைக்கு வில்லானால்
மற்றக் கை ஒழிந்து இருந்தது -என்று நான் ஆறி இருக்கிறேனோ –
பிரணயிநி களுடைய விரோதியைப் போக்கி நோக்குமதுவே யாய்த்தான் ஆறி இருக்கிறேனோ –
நாட்டுக்காக வந்த நலிவை போக்கினதுவும் இல்லையோ எனக்கு -என்கிறாள் –
சிறகு எழுந்து பொருது கொடு திரிகிற மலைகளை பண்டு   யுத்தத்திலே முடித்த
அழகிய திருவாழி யன்றோ மற்றைக் கையிலே எடுத்திருக்கிறது –

முன்பு ஒரு காலத்திலே பர்வதங்கள் அடைய சிறகு எழுந்து  ஒரோ பிரதேசங்களிலே
பறந்து வந்திருந்தவாறே -அவ்வோ விடங்கள் நசிக்குமாய் -அத்தை –
பெருமாள் இளைய பெருமாளுக்கு பிரதிபந்தகங்களை  அறுத்துக் கொடுக்குமா போலே
இந்தரனுக்கு தம்பியாய் உபேந்திர மூர்த்தியாய் வளர்ந்து அருளுகிற காலத்திலே
அவற்றின் பஷங்களை திருவாழி இட்டு சேதித்தனாகச் சொல்லக் கடவது இறே –

பொன்னாழி –
அழகுக்கு பரிகரமானதைக் கொண்டு ஆயிற்று திண்ணிய மலைகளின் உடைய சிறகுகளை அறுத்தது –

அன்றியே
பொரு வரை என்று -குவலயா பீடமாய்
அத்தை கதுப்பிலே மலங்க புடைத்த போதை
கையும் அருகாழியுமாய் -முத்ரா மோதிரமாய் -இருந்த இருப்பைச் சொல்லவுமாம் –

புகர்ச் செம் முகத்த களிறு அட்ட பொன்னாழிக் கை  என்னம்மான்-திருவாய் -என்னக் கடவது இறே –
சிலர் உடைய நிர்பந்தத்தாலே திரு வாழியை மறைத்தான் இத்தனை போக்கி
கையிலே திருவாழி ஒழிந்து அன்று இறே இருப்பது –
ஆத்மாநம் மாநுஷம் மன்யே -என்று சூழ்த்து கொடுத்த அவதாரத்திலும்
பெரிய திருவடி வந்து கார்யம் செய்து போனான் இறே –
இவன் மறைக்கப் பார்த்தாலும் -ஸ்வயம் ஆருரோஹ -என்று வந்து  ஏறா நிற்கும் இறே –

ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா –
மற்று ஏதேனுக்கும் ஒப்பு உண்டானாலும்
வீர வாசிக்கு உன்னோடு ஒப்பார் இல்லாதவனே –
கையிலே ஸ்ரீ சார்ங்கத்தையும் திருவாழியையும் தரித்தால்
இவனே சர்வாதிகன் என்று தோற்றி இருக்கும் யாயிற்று –
உனக்கு ஒப்பார் ஒருவரும் இல்லாமையாலே
உபமான ரஹிதன் ஆனவனே  –

வென்னப்பா –
சர்வாதிகனாய்
அரியன்-என்று கை வாங்க வேண்டாதபடி நிருபாதிக சர்வவித பந்துவாய் உள்ளவனே –
நாட்டிலே கையில் ஆயுதம் பிடித்தவர்களை எல்லாம் உகவார்கள் இறே
எனக்கு நிருபாதிக பந்துவாய் உள்ளவனே என்னா நின்றாள் –
கையும் திவ்ய ஆயுதங்களுமாய்  பண்ணின உபகாரம் இன்னளவு என்று பரிச்சேதிக்கலாய் இருக்கிறதோ –
நிருபாதிக பந்து என்று தோற்றி யன்றோ செயல் இருக்கிறது –

கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ
இக் கூப்பீடு முன்பே தனக்கு உண்டு என்னும் இடம் தோற்ற நின்றான் ஆயிற்று –
தன்னை உபகரிக்கைக்கு தான் முற்பாடனாய்
அவசர ப்ரதீஷனாய் -வந்து நிற்கிறபடி –
(எனக்கு உபகரிக்கைக்கு இல்லை -தன்னை -என்பதால்
நமக்கே தன்னையே தரும் கற்பகம் அன்றோ )

கருவரை –
அஞ்சன கிரி போலே யாயிற்று கண்ணுக்கு விஷயமான போது இருக்கிறபடி –
( நீல மேகப்பெருமாள் தானே மூலவர் )

நின்றானை –
வந்து காண்பார் தாழ்வே யாம்படி
தன்னைக் குறைவறுத்துக் கொண்டு நிற்கிறவனை –

கண்ண புரத் தம்மானை  –
கருவரை போல் இருக்குமது ஸ்ரீ வைகுண்டத்திலும் உண்டு இறே
அங்கன் இன்றிக்கே
திருக் கண்ண  புரத்திலே வந்து ஸூலபனான சர்வேஸ்வரனை –
(கண்ண புரத் தம்மானை-கண்ணபுரம் -சுலபம் அம்மான் பரத்வம் -சர்வேஸ்வன் )

கண்டாள் கொலோ –
ஸ்ரவண மாதரத்தில் பர்யவசிக்கை அன்றிக்கே
அவ் வடிவில் கண்  வைத்தாள் போலே இருந்தது –

கண்டாள் –
அவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கையே அன்றிக்கே
இவளும் ஆபி முக்கியம் பண்ணப் பெற்றது
வடிவு அழகிலும் ஔதார்யம் தோற்ற
நின்ற நிலையிலும் போலே காணும்
இவள் கண் விழித்தது –
(கருவரை -வடிவு அழகு நின்றான் உதார குணம் )

———————————————————

சிலை அன்றோ கைத்தல த்து -வெறுப்பில் வார்த்தை
தோன்றுமால் -இதில் –
வில் வீசும் -வர்த்தமானம்
அணியாகத்து இலங்கும் -கண்ணால் கண்டதாக
இருப்பதால்
அஞ்சி முன் வந்து இவன் இருக்க
பாவநா பிரகர்ஷம் மிக்கு இவள் இருக்க
தாய்மார் தடுக்க இப்பாசுரம் –

இத்தனை (வெறுக்கும் அளவாக காதல் முற்றி )அதி மாத்ர பிராவாண்யம் ஆகாது காண்-
எல்லாம் செய்தாலும் நாங்கள் சொல்லுகிற ஹித வசனத்தை நீ கேட்க வேணும் காண் என்று
நீங்கள் சொன்னால் –
அவனுடைய ஆபரண சோபை கண்களுக்கு முற்படா நின்றது –
உங்கள் வார்த்தை செவிப் படுகிற இத்தை நான் கேட்கவோ
கண்ணுக்கு இலக்கான அவன் அழகிலே துவக்குண்ணவோ  -என்னா நின்றாள் –
சேஷித்வ ஸூசகமாய் இருக்கவோ -என்னா நின்றாள் –

துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணி யாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ்  கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-

துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் –
நெருங்கி இருப்பதாய் –
பெரு விலையனான ரத்னங்களாலே அலங்க்ருதமான
திரு அபிஷேகத்தின் மேலே சாத்தின திருத் துழாய் மாலையானது தோன்றா நிற்க
உங்கள் வார்த்தை செவிப் படுமோ -என்ன நின்றாள் –
சேஷித்வ ஸூசகமாய் இருக்கும் இறே திரு அபிஷேகமும் திருத் துழாயும் –
அர்ஜுனனுக்கு பர பஷத்தின் உடைய கழுத்து தோற்றினால் போலே
வைத்த வளையமே யாயிற்று இவளுக்கு தோற்றுகிறது –
(லஷ்யத்திலே குறி இருவருக்கும் -அவனுக்கு பக்ஷி உடைய கழுத்து -இவளுக்கு வளையம் )

மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால் –
வளையத்தின் நின்றும் நெஞ்சைப் பறித்துக் கொண்டது திரு மகரக் குழை –
அவற்றால் வந்த அழகுக்கு கை விளக்கு பிடித்துக் காட்டினாப் போலே யாயிற்று
திரு மகர குண்டலங்களின் உடைய புகர் இருக்கிறபடி –
மின்னா நிற்பதாய் மஹார்க்கமான ரத்னங்கள் அழுத்தப் பட்ட
திரு மகர குண்டலங்கள் ஆனவை
அவற்றை உள்ளாக்கி தான் புறம்பே திருமேனி அடங்கலும்
முட்டாக்கிடும்படி பிரகாசியா நின்றது -என்னா நின்றாள் –
(மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி ஆட -திரு நெடும் தாண்டகம் -)

பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால் –
பொன்னாலே செய்யப் பட்ட ரத்னங்கள் அழுத்தி இருந்துள்ள ஹாரமானது
அவ் வாரம் தனக்கும் ஆரமாய் இருக்கிற திரு மார்பிலே
விளங்கா நின்றது என்னா நின்றாள் –

அணி யாகத்து இலங்கும் –
பிராட்டி எழுந்து அருளி இருந்த திரு மார்பிலே விளங்கா நின்றது –
ஆபரணம் மிகையான மார்பு –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்கும்படி ஆபரணத்துக்கு
ஆபரணமான திரு மார்பிலே
ஆபரணங்களும் ஸ்ரீ கௌஸ்துபமும் விளங்கா நின்றது  –

கன்னி மா மதிள் புடை சூழ்  கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –
சேமித்து வைத்த வஸ்துவை இவள் ஒருத்தியுமே அறிந்து கொண்டாள் போலே இருந்தது –
உள்ளிருக்கிற வஸ்துவின் சீர்மைக்குத் தக்கபடி அரணாகப் போரும்படி இருப்பதாய்
ஒருவராலும் அழிக்க ஒண்ணாத   படியான பெருமையை உடைய மதிளாலே
சூழப் பட்ட திருக் கண்ண புரததிலே வந்து சந்நிஹிதனானவனை கண்டாள் போலே இருந்தது –

(அணி -ஆகம் –
ஹாரமாக -ஆபரணம்
அணித்து -பிராட்டி யாலே அணியப்பட்ட
அணி அழகு -ஆபரணம் –
இப்படி மூன்று அர்த்தங்கள்
பொன்னின் ஹாரம் மா மணி இரண்டும் சேர்ந்த அழகு என்றபடி _

—————————————————-

உருவ வெளிப்பாடு கீழே இவளுக்கு
தாய் -தோழி -காணவில்லை -ஆகவே
மீண்டும் உபதேசம்
அவர்களுக்கும் காட்டுகிறாள் இதில் -ஆரானும் காண்மின்கள்

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட் பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம் பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார் வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ–8-1-4-

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால் –
பூத்துத் தழைத்து செவ்வியை  உடைத்தாய்
குளிர்ந்து இருந்துள்ள திருத் துழாய் மாலையிலே படிந்த வண்டானது
அத் திருத் துழாயில் மதுவானது புறப்பட்டு
வண்டலிட்டுக் கிடந்த வரை போன்ற மார்பிலே உழா நின்றது -என்னா நின்றாள் –
இம் முலைகளைக் கொடு புக்கு  நடலாம்படி சேறு செய்த கிடக்கும் யாயிற்று மார்பு –
(கீழே விருப்பத்துடன் வார்த்தை
மேல் வெறுப்பால் வார்த்தை )
ஆர் ஆசைப் பட்டு பெறாதே இருக்கிறதை ஆர் பெறுகிறாள் -என்னா நின்றாள் –

போரானைக் கொம்பொசித்த (புட் பாகன் )என்னம்மான் என்கின்றாளால் –
யுத்தோன் முகமான குவலயா பீடத்தின் உடைய கொம்பை
அநாயாசேன பறித்து
அச் செயலாலே என்னை அனந்யார்ஹன் ஆக்கினவன்  -என்னா நின்றாள் –
சக்க்ய பஸ்யத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றவர்களிலே ஒருத்தி போலே காணும் இவள் –
(களிறு தரு புணர்ச்சி புனல் தரு புணர்ச்சி பூ தரு புணர்ச்சி மூன்றும் லௌகிகத்தில் –
தன்னைக் காத்துக் கொடுத்ததுக்கு என்னை நான் சமர்ப்பித்தேன் )

புட் பாகன் என்னம்மான் என்கின்றாளால் –
பெரிய திருவடி முதுகில் இருந்து
இருப்பைக் காட்டி
என்னை எனக்கு உரியேன் ஆகாதபடி -பண்ணினவன் –

ஆரானும் காண்மின்கள் அம் பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
ஹிதம் சொல்லி விலக்குகிற நீங்களும் பாருங்கோள்-
அழகிய பவளம் போலே இருந்துள்ள திரு வதரத்தைக் கண்டார்க்கு
விட்டுப் போகலாய் இருந்ததோ –

கார் வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –
கார் காலத்தில் மேகமானது நின்று கோஷியா நிற்கும் ஆயிற்று –
ஒக மேக ஸ்வன கிருஷ்ண -என்கிறதுக்கு ஸ்மாரகமாய் இருக்கை –
மேகோதய -என்னும்படியாய் எப்போதும் வர்ஷாவாய்
ஆகாசம் அதிரா நின்ற

திருக் கண்ண புரத் தம்மானை கண்டாள் கொலோ –
உக்தி மாத்ரத்திலே மீளாதே
அவ் விஷயத்தைக் கண்டு அனுபவித்தாள்
என்று தோற்றி இரா நின்றது –

—————————————————–

ஆரானும் காண்மின்கள் காட்டினாலும்
அவர்களுக்கு உருவு வெளிப்பாடு இல்லையே
ஆதலால் மீளவும் இவர்கள் உபதேசிக்க
உங்களுக்கு திருவடி முதல் திருமுடி அழகு
எனது நெஞ்சில் அகலாது இருக்கின்றனவே –

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும்  என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித் தடங் கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள்  என்கின்றாளால்
கடிக் கமலம் கள்ளுகுக்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-5-

அடித் தலமும் தாமரையே –
நம்முடைய உத்தேச்யமும் நிரதிசய போக்யமாய் இரா நின்றது –

(புள்ளும் சிலம்பின் முதலிலே உம்மைத் தொகை போல் –
நாங்கள் வந்ததே அடையாளம் முதலில் சொல்லி அத்தை அவள் மறுத்து ஏற்காமல் போக இரண்டாவது
இங்கும் அடித்தலமும் -உம்மைத்தொகை
நம்முடைய உத்தேஸ்யமும்-நிரதிசய போக்யமாய் இருக்கிறதே -ரக்ஷகம் மட்டும் இல்லையே )

அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் –
அத் திருவடிகளிலே தோற்று விழுந்தவர்களை
எடுத்து அணைக்கும்
கைகளும் தாமரை போலே இரா நின்றது -என்னா நின்றாள் –

முடித் தலமும் பொற் பூணும்  என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால் –
அணைத்த போதை ஸ்பர்சத்தாலே துவக்குண்டு
மேல் நோக்கிப் பார்த்த போது
இது பிராப்த விஷயம்  என்று  தோற்றும்படி இருக்கிற திரு அபிஷேகமும் –
அதிலே சாத்தக் கடவ திரு ஆபரணமும்
என் நெஞ்சை விட்டுப் போகிறது இல்லை -என்னா நின்றாள் –

(கீழ்ப் பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் சங்கதி இது என்றும்
கீழ்ப் பதத்துக்கும் மேல் பதத்துக்கும் சங்கதி இது என்றும் அரும் பதம் )

எல்லாம் செய்தாலும் இத்தனை அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது காண் -என்று
நாங்கள் சொல்லுகிற இத்தை நெஞ்சிலே கொள்ள வேணும் காண் -என்பர்களே –
நீங்கள் சொல்லுகிற வார்த்தை நெஞ்சிலே படுவது இவை
என் நெஞ்சை விட்டு அகலில் அன்றோ –

வடித் தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள்  என்கின்றாளால்  –
மார்புக்கு ஆபரணம் பிராட்டி போலே காணும் –
சேர்ப்பாரும் அருகே இருக்க -நான் எத்தைச் சொல்லி அகலுவது -என்னா நின்றாள் –
எனக்கு பற்றாசானார் இருக்க நான் என்ன கண் அழிவு சொல்லிக் கடக்க போவது

ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேராய்
போக்தாக்கள் அளவன்றிக்கே இருக்கிற
கண்ணை உடைய என் ஸ்வாமிநி யன்றோ திரு மார்பிலே இருக்கிறாள் –

அங்கன் இன்றியே
அவன் பிரணய தாரையிலே ஸ்ரோத்ரியன் அல்லன் என்று
நான் ஆறி இருக்கிறேனோ –
போக்யதை இல்லாமையோ –
பிராப்தன் அல்லாமையோ –
சேர்ப்பார் இல்லாமையோ –
நான் எத்தைச் சொல்லி அகலுவது –

கடிக்கமலம் கள்ளுகுக்கும் –
பரிமள பிரசுரமாய் இருந்துள்ள புஷ்பமானது மதுவை பிரவஹியா நிற்கும் ஆயிற்று –
மது பானம் பண்ண விருந்த வண்டுகளுக்கு பிரயோஜனம் இல்லாத படியாகவும்
ஆஸ்ரயம் பொறாத படியாலும்
மதுவை உகா நிற்கும் –
அவ் ஊரில் தாமரையில் படிந்த வண்டுகளால்
அதில் மது வற்றப் பருகப் போகாது -என்கை –

கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —
அவ் ஊரில் பதார்த்தங்கள் போக்தாக்கள் அல்லாத படி
போக்யதை விஞ்சி யாயிற்று இருப்பது –
அப்படி நிரதிசய போக்யனான இவனை
இவள் அனுபவித்து சொல்லுகிறாள் போலே இருந்தது –

—————————————————

உன்னை இப்படி பிச்சேற்றியவன் பேர் சொல்லு என்ன
ஒன்றா
தேவோ நாமோ சஹஸ்ரவான்
முன்பு அனுபவித்த அம்சம் எல்லாம் வாய் வெருவா நிற்கிறாள்

பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-6-

ஆயிரம் பேர் இருப்பதால் பேராளன்
ஸ்வாபாவிகமாகவே -இயற்கையிலே பெருமை உடையவன் பேராளன்

பேராயிரம் உடைய பேராளன் –
குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான
ஆயிரம் திரு நாமங்களை உடையவனை –

பேராளன் –
தேவோ நாம சஹஸ்ரவான் –
பேராயிரம் கொண்டதோர் பீடு உடையான் -நாராயணன் –
நாமம் பல சொல்லி நாராயணன் என்று –
பால் பசு உடையவன் -என்னுமா போலே
நாமம் பல உடைய நாராயணன் –
இந்த ஆயிரம் திரு நாமங்களை உடையன் ஆகையாலே வந்த பெருமையை உடையவன் –

பேராளன் –
பெரியதில் பெரியது  கூடிற்று இத்தனை –
அத் திருநாமங்கள் தானும் அவன் பக்கலிலே புகுருகையாலே நிறம் பெற்றன -என்னா நின்றாள் –
பேராளன் -என்று அவன் திரு நாமங்களால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி
அபரிச்சேத்ய ஸ்வ பாவன் ஆனவன் -என்னவுமாம் –
அன்றிக்கே –
பேராளன் பேராளன் என்கின்றாளால்-
பெரியோன் பெரியோன் என்னா நின்றாள்   –

ஏரார் கன மகரக் குண்டலத்தன் –
நாம த்வாரா சொல்லும் ஸ்வரூபம் இருக்கிறபடி -சொல்லுகிறது
முன்பு அனுபவித்த அழகுகள் பின்னாட்டுகிற படி –
அழகு நிறைந்து உள்ள ரத்னங்களாலே சமைக்கப் பட்ட
திரு மகர குண்டலங்களை உடையனாய் –

எண் தோளன் என்கின்றாளால் –
அவை வந்து அலை எறியா நின்றுள்ள தோள்கள்
எட்டையும் உடையவன் என்னா நின்றாள் –

எண் தோளன் –
திருத் தோள்கள் நாலாய் இருக்க
ஸ்ரீ பஞ்சாயுதங்களைத் தரித்தால் போலேயும்
நாலு தோளாய் இருக்கச் செய்தே ஆயிரம் தோள் போலே வ்யாபரித்து கடலைக் கடைந்தால் போலேயும்
நாலாய் இருக்க எண் தோளன் -என்கிறாள் என்கிறபடி –
(முதல் பாசுரம் தோள் நான்கே என்கின்றாளால் -இங்கு எண் தோளன் )

நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால் –
உபமானம் கதிர் பெருக்க  வேண்டி இருக்கிறபடி –
கடலைக் கழுத்தே கட்டளையாகப் பருகின மேகம் போலேயும்
அஞ்சன கிரி போலேயும்
இருக்கிற வடிவை உடையவன் என்னா நின்றாள் –
ஸ்ரமஹரதையும்
அபரிச்சேத்யையும்
இரண்டையும் சொல்லுகிறது –

காரார் வயல் மருவும் –
எங்கும் ஒக்க பயிர் மாறாமையாலே கறுத்த நிறத்தை உடைத்தான
வயலாலே சூழப் பட்ட  –
கருவடைந்த பயிர் ஆகையாலே எங்கும் ஒக்க கறுத்த படியே இருக்கும் ஆயிற்று –
முக்தர்  என்றும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகராய் இருக்குமா போலேயும்
உள்ளிருக்கிறவன் நிறம் போலேயும் –
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டும் -10-1-1-என்னக் கடவது இறே-
இப்படி என்றும் வயல் கறுத்து சினை கொண்டு இருக்கும் அத்தனை –

கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ   —
அவ்வடிவில் கண் வைத்தாள் போலே இரா நின்றது –

——————————————————-

வடிவு அழகு பின்னாட்டி அத்தையே சொல்லா நின்றாள் என்று சங்கதி

அவன் உடைய உடை வாய்ப்பிலே தோற்றமை தோற்ற வாய்  விடா நின்றாள் –
திருப் பீதாம்பரம் சாத்தினால்-
கௌசேய புஷ்பித கடீ தடம் -என்கிறபடியே
திருவரை பூத்தாப் போலே யாயிற்று இருப்பது –

செவ் வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவளிகைக் கச்சென்கின்றாளால்
அவ் வரத்த வடி யிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மை வளர்க்கும் மணி யுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கை வளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-7-

செவ் வரத்த-சிவந்த ஸ்ரேஷ்டமான –
அவ் வரத்த-அப்படியே சிவந்த –
வரத்த-சிவந்தது என்றும் ஸ்ரேஷ்டமும் அர்த்தங்கள்

செவ் வரத்த உடை ஆடை –
சிவப்பாலும்
ரக்தத்தாலும்
இரண்டாலும் சிவப்பையே சொல்லுகிறது –
அந்த சொல்லே வரவுமாம் –
அத்தோடு பர்யாயமான சொல் இரட்டித்து வரவுமாம் –
அப்போது அதுக்கும் மீமிசை என்று பொருளாய்
அர்த்தத்தின் உடைய அதிசயத்தைக் காட்டக் கடவது –
சிவந்த வரத்த ஸ்ரேஷ்டமான -என்றுமாம் –
ஆக -அறச் சிவந்த வாடை சாத்தும் –

யதன் மேலோர் சிவளிகைக் கச்சென்கின்றாளால் –
அதுக்கு மேலே
சிவளிக்கைக் கச்சு -என்று கட்டும் கச்சு
பொன் எழுதின கச்சு –

அவ் வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் —
அப்படியே சிவந்து இருக்கிற
திருவடிகளும்
திருக் கைகளும்
விகாசாதிகளாலே தாமரையே –

மை வளர்க்கும் மணி யுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்-
கிட்டினதனையும் மையேயாய் இருக்கிறது இத்தனை யாயிற்று
இருண்ட நிறத்தை வளரா நின்றுள்ள நீல மணி -போன்ற என்கை –
மல்கு நீலச் சுடர் தழைப்ப–7-6-6-என்கிறபடியே –
(நீலக்கடல் கடைந்தாய் -பாற் கடலையும் இவனது மை வண்ணம் அத்தையும் நீலம் ஆக்கிற்றே
பிராணவாரா விமானமும் வெண்மை நிறமாய் இருக்கச் செய்தேயும் உள்ளே இருக்கும்
அவனாலே கறுத்து தோன்றுகிறது -பட்டர் )

கை வளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —
அவ் ஊரில் ஒருவரும் தஷிணை கொடுத்து ஹோமம் பண்ணுவிப்பார் இல்லை யாயிற்று –
தன கையால் வளர்க்கப் பட்ட அக்னியை உடையனாகை அன்றோ
அவன் பரியட்டமே பிடித்து
அடைய
இவளுக்கு சிவந்து தோற்றுகிறது –

(தக்ஷிணை -கைக்கூலி கொடுத்து பண்ணுவியாமல் -என்கைக்கு ஞாபகம் இவன் செய்வதால்
ஆள் இட்டு அந்தி தொழாமல் -சந்தியாவந்தனம் -திருவாராதனம் –
உத்தர வீதியில் நான்முகன் அஸ்வமேத ஹோமம் –
ஸ்வயமேவ ஹவிர்பாவம் வாங்கிக் கொண்ட தேவாதி ராஜன் பிரத்யக்ஷம் ஆனால் போல்
இவர்களுக்கும் அந்தரவாதியாக மட்டும் இல்லாமல் கண் முன்னே தோற்றுவானே
ஆகவே அனைத்தும் சிகப்பாகத் தோற்றுகிறது )

——————————————

கீழே அவன் அடியைப் பிடித்தும்
மடியைப் பற்றியும் படியை அனுபவித்ததை கேட்டவர்கள்-
இவளுக்கு இப்படி  அனுபவம் செல்லா நின்றால்
முலையில் பூம் பயலை பிறக்கும்படி விரஹ வ்யசனம்
நடக்கைக்கு அடி என் என்று கேட்க –
இவளுக்கு கிட்டே வந்து சம்ஸ்லேஷித்தது அல்லாதே
அதூர விப்ரக்ருஷ்டமாய் வந்தாப் போலே தோற்றுகையாலே
தன்னிடத்தில் வரவில் நிர்ணயம் பிறவாதே
விரஹ கிலேசத்தை அடைந்தாள் என்று
அவள் வார்த்தையாலே அறிந்தாளாக -அனுவதிக்கிறாள் -என்று சங்கதி  –

பிள்ளை அமுதனார் இத் திருமொழிக்கு பிரவேசம் சொல்லா நிற்கச் செய்தே
ராஜாக்கள் அந்தபுரக் கட்டிலே-தெருவிலே –
பள்ளி யந்துலாத்திலே-தண்டிகை -பல்லக்கில் – ஏறி உலவா நிற்பர்கள் காண் –
என்றாப் போலே அநேகம் வாக்ய சில்பங்களை பண்ணினார் –
அப்போது பால்யத்தாலே அவ் வடைவுகள் புத்தி பண்ணப் பெற்றிலோம்
அவற்றுக்கு இதில் பற்றாசு ஏது என்று விசாரித்தோம் –
இது வாகாதே என்று தெளிந்தோம் காண் என்று இவ்வளவிலே நம் பிள்ளை அருளிச் செய்தார் –

கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே  வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-8-

கருட வாகன உத்சவம் அனுபவித்துப் பாசுரம் இது
வைகாசி -மாசி இரண்டும் ப்ரஹ்ம உத்சவம் -மாசி மகம் தீர்த்தவாரி
காஞ்சி தேவப் பெருமாள் ஆண்டுக்கு மூன்று தடவை -அவர் வீதி ஒரு நாள் என்று -அருளாழி புட் கடவீர் –
வெற்றிப் போர் இந்திரர்க்கும்-நகுஷன் யயாதி போல் இந்த்ரருக்கு சமானம்
ரிஷி கரி பூசுவது போல் இவளும் இங்கு கண் எச்சில் படாமைக்காக நகுஷன் யயாதிகள் போல்-

கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே  வருகின்றான் என்கின்றாளால் –
சர்வ சதாராணவன் விடாயர் இருந்த இடங்களிலே சாய் கரத்தை
கொடு வந்து கொடுப்பாரைப் போலே
எல்லார்க்கும் உபகரிக்கும் அத்விதீயனானவன் –
வாஹனத்தில் ஏறி சர்வ சாதாரண ஸ்தலத்திலே வாரா நின்றான் –

ஆர் இறாஞ்சிக் கொள்ளக் புகுகிறார்
ஆர் கையில் பறி யுண்ணப் புகுகிறான் –
என்று அறிகிலேன் என்கின்றாள் –
வந்தபடி தெரியாமல் வந்து
தன் கண்ணுக்கு உள்ளே இருக்கக் காணும் இவளுக்கு ஓடுகிறது –
வரப் புக்கால் ப்ரதிபந்தகம் இல்லை கிடீர் என்னா நின்றாள் –

வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால் –
வெறும் போரிலே பூசலில் வந்தால்
வீர்யே சாஷாச்ச சீபதே -என்னக் கடவது இறே-
இந்த்ரனுக்கும் இந்த்ரன் உண்டு மஹேந்த்ரன்   –
வ்ருத்ரவாதிகளாலே பட்டம் சூடினவன்
அவனோடு ஒக்கும் -என்னா நின்றாள் –

பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால் –
அவன் மார்வு இறே அணையப் பெற்றால்
ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாசாயா-என்று
அவனை அணையப் பெறில்  ஜீவித்தல்
இல்லையாகில் -அசந்நேவ-என்று நசிக்கும்படியாய் இருக்கிற நாங்கள்
உஜ்ஜீவிப்போம் என்னா நின்றாள்  –

கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –
அவ் ஊரில் விழுவேடு எடுத்துக் கொண்டு அறிதல் –
புஸ்தகம் பார்த்து அறிதல் -செய்வார் இல்லை –
ஆச்சார்ய உச்சாரண அனுச்சாரண க்ரமத்தாலே  கற்ற சாஸ்திரங்களையும்
வேதங்களையும் உடையராய் யாயிற்று எல்லாரும் இருப்பது –
அவ் ஊரில் அவனையே  கண்டாள் ஆக வேண்டாவோ –
வேத மயன் மேலே வருகிறபடியையும்
யமிந்திரமாஹூ  (தைத்ரியம்) -இத்யாதிப் படியையும்
சொல்லும் போது –
(அவ்வூரில் அவனையே கண்டாளாக வேண்டுமே )

———————————————————–

மன்னூடே வருகிறவன் -கிட்டே வந்தவனாகக் கொண்டு
திருத்துழாய் மணம் அலை வீசா நிற்க
இது என் என்று கேட்க
வெட்கம் இல்லாதவளுக்கு
முன்பு அன்பு உண்டு -எனக்கு -வெகு நாளாக தொடர்பு
கிட்டே கண்டு இவர் வார்த்தைகளை கெடுக்காமல்
அழகில் ஈடுஒப்பட்டு வை லக்ஷண்யத்திலேயே ஈடுபட்டு இப்பாசுரம் –

வண்டமரும் வன மாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-9-

சித்த அபஹாரி சக்ரவர்த்தி திருமகன் -இங்கே பார்த்தவர்கள் தங்கள் சித்தம் வழங்குவார்களே –

வண்டமரும் வன மாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்-
தன் நிலத்திலே நின்ற போது மணம் மட்டமாய் –
திருக் குழலிலே  ஏறினவாறே இரட்டிற்றாய் இற்று இருப்பது –
வண்டுகள் பரிமளம் போலே படிந்து கிடக்கும் யாயிற்று-

உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்-
பண்டு உனக்கு இவ் விஷயத்தில் அன்பு உண்டு என்று சொன்னால்
இல்லாமை சாதிக்குமவள் தானே
இப்போது உனக்கு இவன் பக்கலிலே அன்பு உண்டு என்னா நின்றாள் –
அத்தாலே பலித்தது என் என்ன
ஒரு காலும் உங்களை  அற சந்யசித்து சொன்னேன் -என்கிறாள் –

பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்-
முதல் நாள் கண்டால்
ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும்
முகத்தில் தண்ணளி யாலும் ஆக
முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ   –
எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –

சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் –
என்னும்படியாய் இருக்கும் –
நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி

சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது  காட்டுமோ –
பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் )
எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ –
இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)

(பிரதமத்தில் முன் கண்டால் போலேயும் –
காணாமல் இருந்தது போலேயும் அன்றோ இந்த சப்த பிரயோகம் –
சுரம் கொண்டே இரண்டு அர்த்தங்களும் காட்டுமே
பரி சீலிக்க பரி சீலிக்க பார்த்தது போலே இருக்குமே
இல்லையாகில் லௌகிக விஷய வியாவ்ருத்தம் இருக்காதே )

கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –
(இப்படி வார்த்தை )இருந்த படியால் அவ் ஊரிலே புக்கு அவளைக் கண்டாளாக வேணும் என் என்ன –
நெஞ்சு இழந்தார் வார்த்தையாய் இரா நின்றதே இவளது –
அபஹ்ருத சித்தை அன்றாகில் -தாய் முன்னே அவ் வார்த்தை சொல்லாள் இறே-
வந்து கண்டவர்கள் நெஞ்சை மேல் எழுத்துக் கொடா நிற்பர்கள் ஆயிற்று –

(அந்த திவ்ய தேச மக்கள் மனம் வழங்கியது போல் இவளும் வழங்கி இருப்பாள்
என்று அனுமானம் திருத்தாயாருக்கு )

——————————————————–

கண்டாள் கொலோ இது வரை
கண்டாள் -அறுதி இட்டு இதில் –

மா வளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பா வளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூ வளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-

மா வளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று –
இனி இவள் மீளாத படி யானாள் என்று தாயார் சொன்ன வார்த்தை இறே –
மான் போலேயாய்
பரப்பை உடைத்ததாய்
மிருதுவான நோக்கை உடைய தன் அவயவ சோபைக்கு ஈடாக
ஆச்சர்ய பூதனானவனை கண்டாள் என்று –

கா வளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன –
காவில் கடி யானது -அதாவது சோலையில் பரிமளம் –
பூமி எங்கும் வெள்ளம்   இடா நின்றது –
பொழில் -பூமி
காவானது சிலர் இட்டாக்கினது போலே தானே வளரா நின்றுள்ள பொழில் சூழ்ந்த –
அவை போலே யாயிற்று சூழ்ந்த சோலை அடைய இருப்பது –

பா வளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் –
சந்தஸ் ஸூக்களால் குறைவற்று
லஷணோபேதமுமான –

பூ வளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே  –
உபரிதன லோகங்களுக்கு அடைய
கற்பகத்தை சிறப்பாகச் சொல்லக் கடவர்கள் –
பரமபதத்தில் -ஆண்மின்கள் -10-9–என்றபடியே
தாங்களே நிர்வாஹகராய் -இவ் வருகு உள்ளார் அடங்கலும் சாத்யர் ஆவார்கள் –

————-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

பெருமான் இனியன் அழகன் தேவன் துப்பன்
திருத்தன் சேராச் சேர்ப்பன் நாதன் -விருத்தம் எனக்
கண்ணமங்கை கண்டு கலியன் சொல் அமுதப்பா
உண்ண பிறப்புக்கு நச்சிலை -70 –

தேவன் -விளங்கு சுடர்ச் சோதி/திருத்தன்-திருப்தன்-அவாப்த ஸமஸ்த காமன்
விருத்தம் -விருத்த விபூதி நாதன்-
வானவர் தன நாயகன் -மூத்தவன் –
ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவன்

————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-7-10—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 11, 2014

பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள்
திருக்கண்ண மங்கை -பத்தராவி பெருமாள்
திருக்கண்ண புரம்
திருக்கண்ணங்குடி -தாமோதர நாராயண பெருமாள்
வரிசையாக காட்டிக் கொடுக்க அனுபவம்
திருக்கோவலூர்
கபிஸ்தலம் -மற்ற இரண்டும்
பெரிய வடிவம் -நின்ற திருக்கோலம் -பெரும் புறக் கடல்
கற்கலாம் கவியின் பொருள் தானே இதிலே -இறுதியில் –
நம்பூர் வரதாச்சார்யார் -நம்பிள்ளை-கலி கன்றி தாஸர் -கார்த்திகை கார்த்திகை –
பெரியவாச்சான் பிள்ளை -ஆவணி ரோஹிணி – –

முதல் சொல்லே பெருமாள் திரு நாமம் -ப்ருஹத் பஹிர் ஸிந்து -பாற் கடல் இல்லாமல் வெளிக்கடல்
லஷ்மீ வனம்-கிருஷ்ணாரண்யம் -கண்ணன் கடு -கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்
மங்கையைக் கண்டு மணம் புரிந்த தேசம்
கடலைக் கடைந்து பெண் அமுதைக் கொண்டு உகந்தானே
பிராட்டி தபஸ் இருந்து திருக்கல்யாணம்
தேவர்கள்-வண்டு ரூபம் –
கண்ண மங்கை தாயார் -இன்றும் -தேன் வண்டுகள்
அயனம் மாறி பிறையில்
தர்சன புஷ்கரணி
சப்த அம்ருத க்ஷேத்ரம்
மூலவர் பத்தராவி
உத்சவர் -அபிஷேக வல்லி தாயார் பெரும் புற கடல்
திருக்கண்ண மங்கை ஆண்டான் -நாதமுனி சஸ் சிஷ்யர் –
நாய்கள் சண்டை -எஜமானர்கள் -வாக்குவாதம்
பார்த்து -பரமசேதனன் அபிமானம் இருக்க என்ன குறை
கௌஸ்துபம் ஸ்தானம் -நன் பொருள்
ஸ்வ வியாபாரத்தை விட்டார்
பகவத் கைங்கர்யம் ஒன்றே கார்யம்
சக்தி லஜ்ஜை வியாபாரம் விட உபாயம்
இவர் திருவரசும் இங்கே சந்நிதியில் தெற்குப்புறம்
பெரிய உடையார் இளைய பெருமாள் தீர்க்க சிந்தயந்தி நறையூர் அரையர் -உபேய த்ருஷ்டாந்தம்
இந்த பெருமாளே பெரிய வாச்சான் பிள்ளை -அனைத்துக்கும் வியாக்யானம்
உத்பல விமானம்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -கண மங்கை -கண்ணனூர் -மடலில்
கருத்தினால் வாக்கினால் நான்மறை காணாத இவனைக் ககாணலாம் -பிள்ளைப்பெருமாள் ஐ யங்கார்

பெரும் புறக் கடல் -பிரவேசம் –

அவன் அல்லது ஆஸ்ரயணீயன் இல்லை என்று
பிறருக்கு உபதேசிக்கப் புக்கவர்
அமலா அருளாய்-7-9-8- -என்றும்
உன தடியே சரணாமே -7-9-9–என்றும்
தம்முடைய அபேஷையின் மிகுதியைச் சொல்லி  தலைக் கட்டினார் –

( கீழே இப்படி பிரார்த்தித்தவர்
பரம ப்ராப்யம் பெறாமல் –
ஸ்ரீ வைகுந்தம் பெறாமலேயே –
இதில் கண்டு கொண்டேனே-ஒன்பதில் கால் – ஹ்ருஷ்டராய் அருளுகிறார்
நாட்டார் திருந்த இன்னும் இவரைக் கொண்டு பாசுரம் பெற வேண்டுமே
நம்மாழ்வார் ஆயிரம் ப்ரதிஜ்ஜை உண்டு
இவர் இடம் அது இல்லையே )

இவர்க்கு இனிச் செய்யலாவது என் என்று பார்த்து
வேறே ஒராசனமாக ( எழுந்து அருளி ) விருந்து
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை அடைய
காட்டிக் கொடுத்து
நம்மை ஒழிந்த வஸ்துக்கள் அடைய நமக்கு உபமானமாய் இருத்தல்
பிரகாரமாய் இருத்தல் செய்யும்படி இருக்கிற நாம்
(விபூதிகள் எண்ணிறந்தவை -ஸ்ரீமத் -உயர்ந்த எல்லாம் எனது தேஜஸ்ஸின் அம்சம் –
சிறந்ததாக உள்ளேன் சில வற்றைக் காட்டி அருளி ஸ்ரீ கீதையில்-பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம் )
உமக்கு ( மானஸ அனுபவமாக மட்டும் இல்லாமல் ) கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து நின்றோம் ஆகில்
நீர் என் பெறாதாராய் தான் கிடந்தது கூப்பிடுகிறது –
இனி
மேல் உள்ள காரியமும் நாமே செய்வுதோம் காணும் -என்று சமாதனம் பண்ண –
அப்படியே அனுசந்தித்து த்ருப்தராகிறார் –
(சரீர யாத்திரை கர்மாதீனம் -ஆத்மயாத்ரை கிருபாதீனம்
அனைத்தும் உபமானம் – பிரகாரம்
கண்ண மங்கையுள் கண்ணாலே கண்டேன் களித்தேன் என்று பேசி அருளுகிறார் )

ஆருரோஹ ரதம்  ஹ்ருஷ்டஸ் சத்ருக்க்ன சஹிதோ பலீ  –
பெரிய ஆசை உடன் வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு
நினைத்து வந்த கார்யத்தில் செய்தது ஒன்றும் இல்லை –
ஆகிலும் மீண்டு போகிற போது ஹ்ருஷ்டனாய்ப் போனான் இறே-

அப்படியே யாய்த்து இவர் விஷயத்தில் சமாதானம் பண்ணின படியும் –

———————————————————–

பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-

திரட்கோவையை-இனிமை பாக்யம் -ப்ராப்யம்
பக்தராவி -என்னது உன்னதாவியில் அவன் மதம் -பத்தருக்கு பிராணன் -என்றும்
முத்து மாலை -ப்ராப்யம் -கழுத்தில் போட்டு அனுபவிக்க
முத்துக்குவியல் -ப்ராபகம் -வித்து ஜீவிக்கலாம் -உபாயம்-ரக்ஷகனாய் -பிராபகம்
அரும்பினை யலரை-யுவா குமாரா –
திருமணம் பண்ண யுவா வாய் இருக்க வேண்டும் -பாலகன் மாறிக்கொண்டே யுவாவாய் இருப்பானே எப்பொழுதும்
மனத்தாசையை-ஆசை நிறைவேற்றுபவன் இல்லை -ஆசைக்கு விஷயமாகவே இருப்பானே –
அமுதம் பொதியின் சுவைக்கரும்பினை–அமுதமே நீராகி கருப்பஞ்சாறு போல் போக்யன் –

சென்று நாடி -ஆசையே வேண்டுவது
தபஸை -தப -ஆலோசனை பண்ணும் சர்வஞ்ஞன்

பெரும் புறக் கடலை –
சர்வ பதார்த்தங்களையும் தன்னுள்ளே அடக்கி நோக்கும் கடல் போலே
அபரிச்சேத்யனாய் உள்ளவனை –
எல்லா கடலுக்கும் புறம்பாய்
தான் பெருத்து இருக்கிற கடல் போன்று இருக்கிறவனை –

யடல் ஏற்றினைப்-
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த்த வஸ்துக்களையும்
தன்னுள்ளே இட்டு நோக்கும் படி
இவற்றை உடையன் ஆகையாலே வந்த
மேனாணிப்பை உடையவனை –

பெண்ணை –
அப்படி இருந்தால் ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத படியாய்
இருக்குமோ என்னில்
பரதந்த்ரனாய் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –

வெறும் பாரதந்த்ரமேயாய்  இருக்கம் இத்தனையோ என்னில் –
யாணை-
நிரங்குசமான ஸ்வா தந்த்ர்யத்தை உடையவனை –

எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை –
எண்ணிறந்த தபஸை உடைய யோகிகளுக்கு
அந்த தப  பலத்தை கொடுக்கும்
தபஸ் ஆனவனை –

முத்தின் திரட்கோவையைப் –
கண்ட போதே ஸ்ரமம் எல்லாம் ஆறும்படி
உடம்பிலே ஏறிட்டுக் கொண்டு அனுபவிக்கலாம் படி
முத்தின் உடைய திரண்ட மாலை போலே இருக்கிறவனை-

பத்தராவியை –
தன் பக்கல் பரிவை உடையார்க்கு
தன்னை ஒழிய ஜீவிக்க அரிதாம்படி இருக்கிறவனை –

நித்திலத் தொத்தினை –
மேன் மேல் என நமக்கு உண்டு என்று
தேறி இருக்கலாம்படி
முத்துக் குவை போன்று இருக்கிறவனை –
நித்திலம் -முத்தும் -அழகும் -சௌந்தர்யத் தொத்தை-

அரும்பினை யலரை –
இரண்டு அவஸ்தையும் ஒரு காலே
சூழ்த்துக் கொடுக்கலாம்படி இருக்கிறவனை –
யுவா குமார –

அடியேன் மனத்தாசையை –
நான் நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும்
இதுக்கு முன்பு அனுபவித்து அறியாதது ஒன்றில் போலே
பிறக்கிற ஆசை யானவனை –

அமுதம் பொதியின் சுவைக் கரும்பினைக்
அம்ருதத்தை நீராகப் பாய்ச்சி வளர்த்தால் போலே
நிரதிசய போக்ய பூதமான
கரும்பு போலே இனியனாய் இருக்கிறவனை –

கனியைச் –
அப்போதே நுகரலாம்படி
பக்வ பலமாய் இருக்கிறவனை –

சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே   –
பசித்த இடத்தே
ஸூக போஜனம் பண்ணப் பெறுவாரைப் போலே
அபேஷை பிறந்த இடத்தே
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

—————————————-

எவ்வழியால் காட்டினார்
பக்திக்கும் பிரபத்திக்கும் அவன் இட்ட வழக்கு -நிர்வாகன்
அவ்வழியால் அடைந்து பெரும் இன்பத்தை பெற்று அனுபவிக்கிறார்
நிரதிசய போக்யதையாய் -அவன் காட்டக்கண்டு பெற்று அனுபவிக்கிறார் –

மெய்ந் நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண  மங்கையுள்  கண்டு கொண்டேனே —7-10-2-

மெய்யை-விஸ்வசீயமான பிரபத்திக்கு விஷயமானவன்-
கையிலோர் சங்குடை மைந்நிறக் கடலை -உடையவனை இல்லையே ஆகவே சேர்த்தே பொருள்
மைந்நிறக் கடலை கடல் வண்ணனை-மை நிறம் -நிறம்சொல்லி வண்ணம் ரக்ஷண ஸ்வபாவம்
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய்–கடந்த வர்த்தமானம் வரும் காலம் –
நினைத்த மாத்திரமே இன்ப மயம் எப்பொழுதும் -ஆனந்தமயம் -சைந்தனம் போல் –

மெய்ந் நலத் தவத்தைத் –
ஸ்வரூப அனுரூபமாய்
சிநேக  ரூபமாய் இருக்கிற அபிமத சாதனமான பக்தியை –
(போஜனத்துக்கு ஷூத்து போல் )

திவத்தைத் தரும் மெய்யை –
பிரபத்தியை –

பொய்யினைக் –
இவ்விரண்டும் இல்லாதார்க்கு
தன் படிகளை ஒன்றும் அறிய ஒண்ணாது இருக்குமவனை –

கையிலோர் சங்குடை மைந்நிறக் கடலை –
கீழ்ச் சொன்ன இரண்டும் உடையார்க்கு
காட்சி கொடுக்கும் வடிவை உடையவனை –
கண்டத்தை எல்லாம் அடைய உள்ளே இட்டு நோக்கும்
கடல் போல் அன்றியே
ஓர் சங்குடை மைந்நிறக் கடலை –
(சேர்த்தி வெள்ளை விழி சங்கும் மைந்நிறம் -பராபக வண்ணம்-நிறம் இங்கு )

கடல் வண்ணனை –
சர்வ பதார்த்தங்களையும் தன்னுள்ளே அடக்கி
சிறியதை பெரியது நலியாத படி
தன் திரைகள் ஆகிற கைகளால் நோக்கும்
கடல் போலே இருக்கும் ஸ்வபாவத்தை உடையவனை –

மாலை –
சர்வாதிகனை –

ஆலிலைப் பள்ளி கொள் மாயனை –
அகடிதகடநா சாமர்த்தியத்தை உடையவனை –
ஒரு சிறு வடிவாலே சகல லோகங்களையும் அடக்கி
ஒரு பவனான ஆலந்தளிரிலே
கண் வளர்ந்து அருளின
ஆச்சர்ய பூதனை –

நென்னலைப் பகலை-
அபிமத லாபம் உண்டான பிற்றை நாளிலே நிர்வ்ருதி ( நினைவு )போலே
நேற்றைப் பகலிலே அனுபவம் இருந்தபடி என்-என்று
ஸ்மரித்து தரிக்கலாம் படி இருக்கிறவனை –

யிற்றை நாளினை –
அநு பூயமான நாள் ஆனவனை –

நாளையாய் வரும் –
இவ்வனுபவத்துக்கு விச்சேதம் பிறவாமே
நாளையாயும் வரப்  புகா நின்றது என்று
அனுசந்திக்கலாம்படி இருக்கிற நாளையாய்

நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்-
அது தான் ஒரு நாளேயாய்ப் போகாமே
அப்படி என்றும் ஒக்க யாண்டினைக்-
அப்படிப் பட்ட மாசங்களை உடைய ஆண்டு ஆனவனை –
இனி அவ்வாண்டு  தன்னை
அப்படியே இரட்டித்துக் கொள்ளும் இத்தனை –

கன்னலைக் –
நிரதிசய போக்கியம் ஆனவனை –

கரும்பினிடைத் தேறலைக் –
நெருக்கிக் கார்யம் கொள்ள வேண்டாதே
அப்போதே பருகலாம்படி இருக்கிற
கரும்பில் ராசம்சம் ஆனவனை –
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –

————————————————

கீழே தவம் மெய் இரண்டையும் வியாஜ்யமாக்கி ரஷிப்பான்
பக்தி பிரதிபத்தி -இதில்
உமக்கு எத்தாலே ரக்ஷித்தான்
நிருபாதிக கிருபையாலே ரக்ஷித்தன் என்று அருளிச் செய்கிறார் –

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலை மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனி மா மதி யந்தவழ்
மங்குலைச் சுடரை வட மா மலை யுச்சியை நச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப்  பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே—7-10-3-

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை –
அநந்ய கதிகளான எங்கள் பக்கலிலே
நிர்ஹேதுக கிருபையை  பண்ணுகிற
சர்வேஸ்வரனை –

வாசவார் குழலாள் மலை மங்கை தன்னை பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் –
எங்களைப் போல் அன்றியே -தானும் ஒரு ஸ்திரீயுமாய்
ஈஸ்வர அபிமானம் கொண்டாடி இருக்கிற ருத்ரனை
தன் திருமேனியிலே ஒரு பார்ஸ்வத்திலே வைத்து
அது தன்னை தன் பேறாக வைத்து உகந்து இருக்கிற சீலத்தை உடையவனை –

பான்மையைப் –
இந்த சீலம் தான் புழுக் குறித்து எழுத்தாமாப் போலே
ஒரு கால் உண்டாய் போமது அன்றிக்கே
இதுவே ஸ்வ பாவமாம்படி இருக்கிறவனை –

பனி மா மதி யந்தவழ் மங்குலைச் –
குளிர்ந்து நிறைந்து இருக்கிற சந்தரன் உடைய சஞ்சாரத்தை உடைய
ஆகாசம் ஆனவனை –

சுடரை –
நீர்க் களிப்பை அறுக்கைக்கு ஈடான
கிரணங்களை உடைய ஆதித்யனை –

வட மா மலை யுச்சியை –
இப்படி சாதாரணமான வடிவே அன்றியே
அசாதாரணமான விக்ரஹத்தோடே
அத் திருமலையிலே ஏக தேசமாய் இருக்கிறவனை –

நச்சி நாம் வணங்கப் படும் கங்குலைப்  –
நசையை  உடையோமாய்க் கொண்டு நம்மாலே
ஆஸ்ரயிக்கப்படுகிற போக யோக்யமான காலம் ஆனவனை –

பகலைச் –
அதுக்கு உறுப்பாக த்ரவ்யார்ஜனத்து ஈடான
காலம் ஆனவனை
சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

—————————————————————-

திருக்கோவலூர் சேர்த்து அனுபவம் -கிருஷ்ண க்ஷேத்ரம் அன்றோ –
நிர்ஹேதுக கடாக்ஷம் உம்மை மட்டுமேயோ -பலரையோ
முதல் ஆழ்வார்களும் கடாக்ஷித்தான்
என்றவர் திவ்ய தேசம் சொல்லாமல் போக மாட்டார்
ஆயனது பிள்ளைச் சேவகம் சேர்த்து அனுபவம்
அனைத்து ஆழ்வார்களும் கடாக்ஷித்து அருளினான் என்கிறார் இதில்
தெள்ளியார் என்று -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் –

பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-4-

தேவனை-ஆழ்வார்களை பெற்றதும் தேஜஸ் மிக்கு ஆனவனை –
அந்தணர்-பட்டர் பிரான் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திருமழிசைப்பிரான் -த்விஜர் இரு பிறப்பு

பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையைத் –
பூதனை உடைய முலை ஸ்தலத்தில் உண்டான விஷத்தை அமுது செய்து
விழுக்காடு அறியாத முக்த்தனை-

தெள்ளியார் வணங்கப் படும் தேவனை –
இப்படி முக்க்தர் அன்றியே
அறிவுடையாராய் இருப்பாராலே ஆஸ்ரயிக்கப் படுவானாய்-
அத்தாலே தீப்யம் ஆனவனை –
(தெள்ளியார் -முதல் ஆழ்வார்கள் மூவரும் )

மாயனை –
ஆச்சர்ய பூதனை –

மதிள் கோவலிடைக் கழி மைந்தனை –
இடம் இல்லாத இடத்தே
ஆஸ்ரிதரோடு புகுந்து நெருக்கின
நித்ய யௌவன ஸ்வ பாவனை –

யன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை-
அதுக்கு மேலே ஆஸ்ரிதர் உடைய ஹிருதயத்திலே புகுந்து
அவர்களைத் தன் வழியே நியமித்துக் கொண்டு இருக்கிறவனை –
(அந்தணர் சிந்தையுள் ஈசனை-பெரியாழ்வார் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -திருமழிசைப் பிரான்
பாடுபவர் இவர் தானே
இவர்களை உப லக்ஷணம் ஆக்கி
ஆஸ்ரிதர் ஹிருதயம் -என்றது மாறன் குலசேகரப்பெருமாள் பாணன் )

யிலங்கும் சுடர்ச் சோதியை  –
இவர்கள் உடைய சரீரத்திலும் ஆத்மாவிலும்
வர்த்தியா நிற்கச் செய்தே
அவற்றைப் பற்றி வரும் தோஷங்கள் தன் பக்கலிலே தட்டாதபடி இருக்கிறவனை –

எந்தையை –
இந்த ஸ்வ பாவத்தைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனை –

எனக்கு எய்ப்பினில் வைப்பினைக் –
எனக்கு கைம் முதல் இல்லாத வன்று
அழித்துக் கெடுத்து ஜிவிக்கலாம் படி யான
நிதியானவனை –

காசினை –
பொன் போலே ஸ்ப்ருஹணீயம் ஆனவனை –

மணியைச் –
அப் பொன்னை அழித்தும் ஸ்வீகரிக்கக் கடவ
ரத்னம் போலே ஸ்லாக்கியம் ஆனவனை –
சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

—————————————————

திரு நின்றவூர்
பத்தராவிப்பெருமாள் இருவரும்
சேர்த்து அனுபவிக்கப் பண்ண அருளுகிறார்
பால்யர் -ஒன்றும் அறியாதவர் போல் ஞானிகள்
கீழே தம்மை விஷயீகரித்தது த்ருஷ்டாந்தம் சொல்லி
ஆழ்வார்களைப் பெற்ற மேனாணிப்பு தோற்ற
திருப் ப்ரீதி தொடங்கி இவ்வளவும் வந்து அனுபவத்து ஹ்ருஷ்டராய்
அவனது ஐஹிக ஆமுஷ்கிக மோக்ஷ பிரதத்வம் அனுசந்தித்து அருளுகிறார்

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர்  நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-

ஏற்றினை-
ஸ்வ ஆனந்த அனுபவத்தால் வந்த
செருக்கை உடையவனை –

இமயத்துள் எம் மீசனை-
ஹிம வானில் திருப் பிரிதியில் இருக்கும் இருப்பைக் காட்டி
என்னை வசீகரித்தவனை –

இம்மையை மறுமைக்கு மருந்தினை –
ஐஹிகமாயும் ஆமுஷ்மிகமாயும் உள்ள பலங்களுக்கு சாதன பூதன் ஆனவனை –

ஆற்றலை-
ஒரு வஸ்துவோ எல்லாவற்றையும் தர வற்றோ என்னில்
அக் கண்  அழிவு   சொல்ல ஒண்ணாத படி
சர்வ சக்தி உக்தனாய் உள்ளவனை –

யண்டத்தப் புறத்து உய்த்திடும் –
இந்த சர்வ சக்தித்வம் கொண்டு கொள்ள இருக்கிற கார்யம் என் என்னில் –
இவற்றை பரம பதத் தளவும் செல்ல நடத்துகை –

அது தான் அவனுக்கு வேண்டுகிறது என் என்னில் –
ஐயனைக் –
நிருபாதிக பந்துவாகை-

கையில் ஆழி ஓன்று ஏந்திய கூற்றினைக் –
ஆதி வாஹிகர் கையிலே காட்டிக் கொடுத்து
கொடு போகா நின்றால்
ஆரேனும் சிலர் விலக்கினார் உண்டாகில்
இரு துண்டம் ஆக்குகைக்கு ஈடான பரிகரத்தை உடையவனாய்
சத்ருக்களுக்கு மிருத்யு போல் ஆனவனை –

குரு மா மணிக் குன்றினைக் –
ஸ்லாக்யமான நீல ரத்ன பர்வதம் போன்ற வடிவை உடையவனை –
அங்கே கொடு போனால் காட்சி  கொடுக்கும் படியான வடிவு இருக்கிறபடி –

நின்றவூர்  நின்ற நித்திலத் தொத்தினைக் –
அவ்வளவும் போகப் பற்றாதார்க்கு
(திருமங்கை ஆழ்வார் போல் அர்ச்சாவதாரத்தில் மண்டி அனுபவிப்பாருக்கு
அங்கு போகும் வரை காத்து இருக்க முடியாத ஆர்த்தர்களுக்கு )
காட்சி கொடுக்கைக்காக
திரு நின்றவூரிலே நிற்கிற
முத்துத் திரள் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –

காற்றினைப் –
ஸ்வ ஸ்பர்சத்தால் வரும்
ஸூகமாய் இருக்கிறவனை –

புனலைச் –
தாரகம் ஆனவனை –
சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

(வாழ் முதல் மகிழ் முதல் வளர் முதல் -தாயகம் -போக்யம் -போஷகம் )

——————————————————–

கீழ் பல பிரத உபயுக்தமான
சாமர்த்தியம் தத் கார்யமான விரோதி நிரசனத்தையும்
இவற்றுக்கு நிதானமான ஸ்ரீ யபதித்தவம் அனுசந்தானம் இதில்

துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
செப்பினை திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
யொப்பனை யுலகேழினை   யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6-

கற்பினை-சங்கல்பம் -அத்யயனம் இரண்டையும் சொல்லிற்று –

துப்பனைத்-
தான் நினைத்தது செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான
சாமர்த்தியத்தை உடையவனை -( ஸத்ய ஸங்கல்பன் அன்றோ )

துரங்கம் படச் சீறிய தோன்றலைச் –
கேசி உடைய வாய் கிழியும்படி
சீறிய முக்த்தனை -( அழகனை )

சுடர் வான் கலன் பெய்ததோர் செப்பினை –
ஒளியை உடைத்தாய் –
பெரிய விலையனாய் இருந்துள்ள ஆபரணங்களை
இட்டு வைக்கும் செப்பானவனே –
( பத்து ஆழ்வார்களைப் பூட்டி வைத்துள்ள பெட்டி அன்றோ இவன் )

சுடர் வான் கலன் ஆகிறது தான் என் என்னில் –
திருமங்கை மணாளனைத் தேவனைத் –
பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே
உண்டான ஒத்து மஞ்சளும்
செம்பஞ்சிக் குழம்பும்
மாளிகை சாந்தின் நாற்றமுமாயக் கொண்டு
திரு மேனியிலே புகர் தோன்ற நின்ற நிலை –

திகழும் பவளத்தொளி யொப்பனை-
சர்வைஸ் ஸ்ப்ருஹணீயமானவனை-

யுலகேழினை –
போக்ய
போக உபகரண
போக ஸ்தானங்களாய் உள்ளவனை  –

யூழியை –
காலமே சேஷித்த அன்று
காலமாய் நின்றவனை –

ஆழி ஏந்திய கையனை –
நித்தியமான திவ்ய ஆயுதங்களை
ஏந்தும் திருக் கையை உடையவனை –
நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை -என்றபடி –

யந்தணர் கற்பினை –
பிராமணர்  உடைய மரியாதை போலே இருக்கிற
சங்கல்பத்தை உடையவனை –
பிராமணராலே   அத்யயனம் பண்ணப் படுகிறவனை-என்றுமாம் –

கழுநீர் மலரும் வயல் –
செங்கழுநீர் தொடக்கமான புஷ்பங்கள் அலரா நின்றுள்ள
வயலை உடைத்தான –
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே  –

————————————–

ஸ்ரீ யபதியாய்
பரம ஸ்வாமி -அபரமன் –அப ரமன் ரம சம்பந்தம் இல்லாதவர்
சர்வ சக்தித்வம் சொல்லி
ஆஸ்ரித விரோதி நிரஸனம் அனுபவம் –

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனை களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே—7-10-7-

திருத்தனை-திருப்தன் –

திருத்தனைத் –
ஸ்வ ஆனந்த அனுபவத்தாலே
நித்ய த்ருப்தன் ஆனவனை –
(நித்யோதிக சாந்தோதிக திசைகள் உண்டே
த்யேயம் -த்யேயா இருவரும் அவனும்
ஸ்வரூபம் குண அனுபவம் செய்து திருப்தனாய் இருப்பானே)

திசை நான்முகன் தந்தையைத் –
இவ்வருகில் உள்ளாரைக் காட்டில் அதிகனாய் இருக்கிற
சதுர்முகனுக்கு
ஜனகன் ஆனவனே –

தேவ தேவனை-
அவன் ஒருவனுக்கும் அன்றிக்கே
தேவர்கள் ஆனார் எல்லாராலும் ஆஸ்ரயிக்கப்
படுமவனை –

மூவரில் முன்னிய விருத்தனை –
மூவருமான நிலையில்
மற்றை இருவருக்கும் தானே நியாமகனாய்
தானான நிலையில் வந்தால்
சேஷித்வத்தால் வந்த உறைப்புத் தோற்ற இருக்கிறவனை
விருத்தனை -தலைமகனை –

விளங்கும் சுடர்ச் சோதியை-
த்ரிமூர்த்தி மத்ஸ்யத் தனான நிலை ஒழிய
அசாதாரணமான
திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையன் ஆனவனை –

விண்ணை –
போக பூமிகளான ஸ்வர்க்காதிகள் ஆனவனை –

மண்ணினைக் –
அதுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணும்
கர்ம பூமி யானவனை –

கண்ணுதல் கூடிய அருத்தனை –
லலாட நேத்ரனான ருத்ரனை உடைத்தான
அர்த்த பாகத்தை உடையவனை –
அருத்தன் -அர்த்த பாகன் –

யரியைப் –
விரோதிகளைப் போக்குமவன் –

பரி கீறிய அப்பனை-
விரோதி நிரசனத்தை சீலமாக உடைய
உபகாரகனை –

யப்பிலார் அழலாய் நின்ற கருத்தனை –
படபாமுகாக்னி ஜலம் அடைய தன் பக்கலிலே வந்து
சுவரும்படி இருக்குமா போலே
சர்வ பதார்த்தங்களும் தன பக்கலிலே வந்து
லயிக்கும்படி இருக்கும் சக்தியை உடையவனை –

(படபாமுகாக்னி-குதிரை முக அக்னி கடலுக்குள் இருந்து -தண்ணீருக்கு லய ஸ்தானம் )

களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே-

——————————————————–

சர்வ ஸமாச்ரயணீயன்
அதுக்கு உறுப்பாக விரோதி நிரசனம் பலபடியாக அனுசந்தித்து
அப்ரதிஹதன் எதிர்ப்பவர்கள் இல்லாதவன் -என்கிறார் –

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே —7-10-8-

தோன்றலை-பாலகனாய் –

வெஞ்சினக் களிற்றை –
வெவ்விய சினத்தை உடைய மத ஹஸ்தி போலே
தர்ச நீயமானவனை –

விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை-
கன்றாயும் விளவாயும் வந்த அசுரர்கள் இருவரையும்
தன்னைக் கொண்டு தன்னையே மாய்த்துத் தர
தான் நினைத்தது தலைக் கட்ட வல்லவனை –

பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் –
பூதனை முடியும்படி அவளுடைய விஷத்தைப் போக்யமாகக் கொண்டு
அமுது செய்த முக்த்தனை –

தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை-
சத்ருவாக சர்வ லோகங்களிலும் பிரசித்தனாய்
சாயுதனுமாய் இருக்கிற
ராவணன் முடியும்படி தோன்றின மிருத்யுவை –

அமுதத்தினை-
அவ் விருப்பு தானே அனுகூலர்க்கு போக்யமாய்
இருக்கிறவனை –

நாதனை-
நிருபாதிக சேஷியை-

நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியைக் –
தன் பக்கல் ஆசை உடையார் தலை மேலே நிற்கிறவனாய்-
அது தான் பெறாப் பேறாக நினைத்து பூர்ணனாய் இருக்கிறவனை –
( உச்சி உளானே திரு முடி சேவை இன்றும் சேவிக்கிறோமே
ஆற்றாமை உள்ளாருக்கு சமகாலத்தில்
ஆசையின் தலை மேல் சடக்கென
வந்து ரக்ஷித்து அருளுவான்
ஆங்கு அப் பொழுதே தோற்றுவானே )

கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக் –
கம்சனுடைய துரபிசந்தியை அவன் தன்னோடு போக்கி
உகவாதாரோடு செவ்வை அழியப் பரிமாறுமவனை –
கண்ண மங்கையுள் கண்டேனே –

———————————————

விரோதி நிரசனத்துக்கு மட்டும் அன்றியே
ஒப்பனையை
நிரதிசய போக்யனாய்
சர்வபிரகார வை லக்ஷண்யம் அனுசந்திக்கிறார் –

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்  நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9-

மறையோர் தங்கள் கண்ணினை-வேதார்த்தம் விளங்க வைக்கும் கண் -அவனே

பண்ணினைப் –
யஆத்யஸ் ஸ்வா தூ நாம் -என்கிறபடியே
பண் போல் இனியன் ஆனவனை –

பண்ணில் நின்றதோர் பான்மையைப் –
இன்னார் இனையார் என்று அன்றியே
எல்லாரையும் ஒக்க வருத்தக் கடவதாய் இருக்கிற
அந்த பண்ணின் இசை போலே நிரதிசய போக்யன் ஆனவனை –

பாலுள் நெய்யினை –
சாராம்சத்தோடு ருஜீஷாம்சத்தோடு வாசி அற
இரண்டிலும் உண்டான உபாதேய அம்சம் ஆனவனை –

(பண்ணின் பான்மை
பாலில் நெய்
சார அம்சம் என்று மட்டும் இல்லை
சாரமாகவும் சாரா அம்சமும் அவனே
எல்லாவற்றிக்கும் போக்யம் உண்டே
பண்ணை போல் அல்லவே பால்
பாலே இனிமை -பாட்டு இசை இல்லாமல் ருசிக்காதே )

மாலுருவாய் நின்ற விண்ணினை-
த்ரிபாத்விபூதி -என்னலாம்படியான பரப்பை உடைய
நித்ய விபூதி உக்தன் ஆனவனை –

விளங்கும் சுடர்ச் சோதியை –
அங்கே நிரவதிக தேஜோ ரூபமான
திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனாய் நிற்கிறவனை –

வேள்வியை –
அத் தேசத்தை பிராபிக்கைக்கு
சாதனமான கர்மங்களாய் நிற்கிறவனை –

விளக்கின் ஒளி தன்னை –
ஸ்வ ஆயத்தமான தேஜஸ்சை உடையவனை –
(தன்னிலே தான் சார்ந்து இருப்பவன் )

மண்ணினை –
செய்தார் செய்த குற்றங்களை அடைய மறக்குமவனாய்
குற்றம் செய்வார்க்கு தன்னைப் பற்றி
நிற்கும்படி இடம் கொடுக்குமவனை -( பூமியைப் போல் )

மலையை –
இப்படிப் பட்ட தன் ஸ்வபாவத்தை ஒருவரால் சலிப்பிக்க அரிதாம்படி இருக்கிறவனை –

யலை நீரினை –
நினைத்த இடம் எங்கும் ஏற்றிப் பாய்ச்சிக் கொள்ளலாம்படி
இருக்கிறவனை –

மாலை –
ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹமே வடிவாய் இருக்கிறவனை

மா மதியை-
ததாமி புத்தி யோகம் தம் -என்கிறபடியே
தன்னைப் பிராபிக்கைக்கு ஈடான
புத்தி யோகத்தை கொடுக்குமவனை –
( மதி கொடுப்பவன் மா மதி )

மறையோர் தங்கள் கண்ணினைக்-
வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு
தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி
அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை –

கண்கள் ஆர அளவும் நின்று –
காணப் பெறாமையால்
உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –

——————————————————-

பல ஸ்ருதி அவனுக்கே சொல்லி நிகமிக்கிறார் –
ஸ்ரீ கீதா உபநிஷத்துக்கு அவன்
ஸ்ரீ திராவிட உபநிஷத் சாரம் அருளவே கண்ணனாக ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று –
ஒரு தேச விசேஷத்திலே போய் காணும் வஸ்துவை
சம்சாரத்திலே
திருக் கண்ண மங்கையிலே காணப் பெற்றேன் -என்று

காதலால் கலிகன்றி யுரை செய்த –
அபி நிவேசத்தால் ஆழ்வார் அருளிச் செய்த –

வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை –
இசையை உடைத்தாய்
அழகியதாய் இருக்கிற
இவை பத்தையும் –

வல்லராய் யுரைப்பார் –
அனுசந்திப்பார்க்கு
அடைவு படச் சொல்லுகையால் உண்டான அருமையாலே
வல்லராய் -என்கிறார் –

மதி யந்தவழ் விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் –
மதி தவழ் அம் விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் –
உபாதான லோகங்களில்
போக பூமிகள் எல்லாம் புக்கு
அங்கு உண்டான போகங்களைப் புஜிப்பார்கள்-

மெய்மை சொல்லில்-
அர்த்த தத்வம் இருந்த படி சொல்லில் –

வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ண நின் தனக்கும் –
ஐஸ்வர்ய ஸூசகமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கையிலே உடைய சர்வாதிகனே
உனக்கும் இதில் ஆதாரம் உண்டாகில்
எனக்கு சிஷ்யனாய்-உனக்கும் அதிகரிக்க வேண்டும்படி யாயிற்று
இதன் உள்ளீட்டின் கணம் இருக்கிறபடி –

குறிப்பாகில்
திரு உள்ளமாகில் –

கற்கலாம் கவியின் பொருள் தானே
ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
என்னோடு அதிகரிக்கில் அறியலாம்

ஒரு வசிஷ்டனோடே
ஒரு சாந்தீபனோடே
தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு
திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-7-9—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 10, 2014

கிருபா சமுத்திரம் -அருள் மா கடல் அமுது
பால சயனம்
ஆதி சேஷன் கருடன் போட்டி
கருடன் கீழே -ஆதி சேஷன் மேல் சயனம்
ஜல சயனம் -ஸமுத்ர கரையில் –
சல சயனம் -வஞ்சனை –
கடல் சின்னதாக மறைத்து சயனம்

பால சயனம்
லிங்க ரூபம் -வியாக்ரபாதர் புலிக்கால் முனிவர்
கணவர் இருவரும் கர்ப்பக்ருஹம்
ஆதி சேஷனால் பிரசித்தம் பெற்ற திவ்ய தேசம்
கருடன் கீழே தாழ
புஷ்காரணி கரையிலும் சேஷன் நாக தோஷம்
தெற்கு நோக்கி புஜங்க சயனம்
கிருபா -சமுத்திரம் -அருள் மா கடல்
அருமா கடலமுதே -பெரிய கடலைக் கடைந்து அருமைப் பட்டு வாங்கின
அமிர்தம் போலே நிரதிசய போக்யனாய்-
தயா நாயகி தாயார் –

கள்ளம் மனம் -பிரவேசம் –

கீழ்த் திரு மொழியிலே
அவனே கிடி கோள் ஆஸ்ரயணீயன் -என்றார் –
பாஹ்ய குத்ருஷ்டிகள் உடைய வார்த்தையைக் கேட்டு
அனர்த்தப் பட்டு போகாதே  –
ஆஸ்ரயணீயன் ஆனவன் திருவடிகளை ஆஸ்ரயித்து
உஜ்ஜீவித்து
போகப் பாருங்கோள் என்கிறார் –

முதல் நான்கு பாசுரங்கள் பர உபதேசம் –

————————————————–

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரையெங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறு புலியூர்ச் சல  சயனத்
துள்ளும் எனதுள்ளத் துள்ளும் உறைவாரை உள்ளீரே —7-9-1-

திருக் கடித்தானத்துள்ளும் ஆழ்வார் உள்ளும் போல் இங்கும் –

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர் –
யதாஹி சோரஸ் சததாஹி புத்த -என்கிறபடியே
(ஜாபாலிக்கு ராமன் வார்த்தை இது )
வேதார்த்த அபலாபம் பண்ணுவார் சோரார் இறே-
அதுக்கு மேலே அவனுடையதான ஆத்மாபஹாரம்
பண்ணிப் போருகிறார் சிலர் இறே
கிருத்ரிமத்தைப் பண்ணி வர்த்திக்கிற ஹிருதயம்
அதில் நின்றும் வேறுபடும் பிரகாரத்தை மநோ ரதித்து
அவன் திருவடிகளை ஆஸ்ரயிக்க வேண்டி இருப்பீர் –

வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரை யெங்கும் –
பழையதான கடல் திரைகளால் உண்டான வெள்ளமானது
கரை எங்கும் போந்தேற –

தெள்ளும் மணி திகழும் –
நினைவு இன்றிக்கே இருக்க
கடல் ஏறி வந்த படியாலே
அங்கு உண்டான ரத்நாதிகள் விளங்கா நின்றுள்ள  –

சிறு புலியூர்ச் சல  சயனத்துள்ளும் எனதுள்ளத்துள்ளும் உறைவாரை உள்ளீரே –
உகந்து அருளின நிலங்களும்
இவர் திரு உள்ளமும்
ஒக்க வாய்த்து அவன் விரும்பி இருப்பது –
இப்படி இருக்கையாலே
ஆஸ்ரயிப்பாருக்கு ஆஸ்ரயணீய ஸ்தானம்  இவை இரண்டும் யாய்த்து –
(நமக்கும் திவ்ய தேச ப்ராவண்யமும் ஆழ்வார் ப்ராவண்யமும் வேண்டும் )

சல சயனன் -என்றது
அது அவனுக்குத் திரு நாமமாய்
ஜல சயனன் வர்த்திக்கிற இடம்
சல சயனம் என்று ஊருக்கு பெயராகிறது –

சல சயனத்தைத் தொழும் –ஆறாம் பாட்டு
ம காரம் ன காரம் மாறி இருப்பதாகக் கொள்ள வேண்டும் –

———————————————–

கீழே புத்த அவதாரம் கள்ளர்
இதில் வீதிகளில் திரியும் சமணர்

தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ்சோற்றோடு கஞ்சி
மருவிப் பிரிந்தவர்  வாய் மொழி மதியாது வந்து அடைவீர்
திருவில் பொலி மறையோர்  சிறு புலியூர்ச் சல சயனத்து
உருவக் குறளடிகள் அடி யுணர்மின் யுணர்வீரே  –7-9-2-

திருவில்-திருவை இல்லமாகக் கொண்டவர் –

தெருவில் திரி சிறு நோன்பியர் –
அசதச்ய வேஷத்தை உடையராய்க் கொண்டு
தெருவிலே சஞ்சரிக்கிற அவைதிக வ்ருததத்தை உடையராய் –

செஞ்சோற்றோடு கஞ்சி மருவிப் பிரிந்தவர்  வாய் மொழி மதியாது வந்து அடைவீர்-
தண் தயிரினால் திரளை மிடற்றிடை நெருக்குவான் -என்றும் –
மனந் திரியாக் கஞ்சி என்றும் உண்டு அவர்கள் புஜித்து வாசனை  பண்ணிப் போருவது-
ஆக இப்படி அவைதிக அனுஷ்டானத்தை உடையராய்
வைதிக மரியாதையை அகன்று திரிகிறவர்கள் உடைய வாயில் வார்த்தையை
அநாதரித்து வந்து ஆஸ்ரயிப்பீர் –

திருவில் பொலி மறையோர்  –
ஐஸ்வர்யம் குறைவற்று இருக்கிற
பிராமணர் வர்த்திக்கிற –

சிறு புலியூர்ச் சல சயனத்து உருவக் குறளடிகள் அடி யுணர்மின் யுணர்வீரே
அழகியதாய்
கண்டார்க்கு மேல் விழும்படியான வடிவை உடைய ஸ்ரீ வாமனன் ஆன சர்வேஸ்வரன் உடைய திருவடிகளை
ஸ்மரியுங்கோள்-
அனுசந்திக்கப் பார்க்கிற நீங்கள்
உணர்வீர் -அனுசந்தானத்தை உடையீர் –

தெருவில் திரி சிறு நோன்பியர் -செஞ்சோற்றோடு கஞ்சி மருவிப் பிரிந்தவர்  உடைய
வாய் மொழி மதியாது வந்து அடைவீர்-அநாதரித்து வந்து ஆஸ்ரயிப்பீர் –
திருவில் பொலி மறையோர்  –
சிருபுலியூர்ச் சல சயனத்தை வந்து ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் –
உருவக் குறளடிகள் அடியை உணருங்கோள்–என்று கிரியை

அ நாதரித்து -ஆஸ்ரயித்து-உணர்ந்து மூன்று கிரியா பதங்கள் –

——————————————————

கள்ள மனத்தை விட்டு வாழ்ந்தவர்கள் உண்டோ என்ன அருளிச் செய்கிறார்

கண்டிகோளே நாம் இருக்கிறபடி
நீங்களும் இப்படியே இருக்கப் பாருங்கோள் -என்கிறார் –

பறையும் வினை தொழுது உய்மின் நீர் பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒரு பால் வயல் ஒரு பால் பொழில் ஒரு பால்
சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத்
துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே–7-9-3-

பறையும் வினை தொழுது உய்மின் நீர் –
அநாதி காலம் பண்ணின பாபங்கள் அடங்கலும் பறந்து போம் –
தொழுது உஜ்ஜீவியுங்கோள் –

பணியும் சிறு தொண்டீர்-
அப்ராப்த விஷயங்களிலே தொண்டு பட்டு இருக்கிற நீங்கள்
விழுந்து ஆஸ்ரயிங்கோள் –
(சிறு தொண்டீர்-அல்ப விஷயாந்தர ப்ராவண்யம் உள்ளவர்களே )

அங்கன் அன்றிக்கே –
சிறு தொண்டீர்-
அந்தரங்க கிங்கராக வேண்டி இருப்பீர் –
பணிமின் –
ஆஸ்ரயிங்கோள் -என்னுமாம் –

அறையும் புனல் ஒரு பால் வயல் ஒரு பால் பொழில் ஒரு பால்
சிறை வண்டினம் அறையும் –
அவ்வூர் தான்
ஓர் அருகு நீர் வெள்ளம் அறையா நிற்கும்
ஓர் அருகு பொழிலாய்  இருக்கும்
ஓர் அருகு வயலாய் இருக்கும்
இவை மூன்று இடத்திலும் ஒக்க அறையா நின்றுள்ள சிறகை
உடைத்தான வண்டுகளின்  உடைய சமூஹமானது
அறைகிற-

சிறு புலியூர்ச் சல சயனத் துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே-
சிறு புலியீர் சல சயனத்தில்
நித்ய வாஸம் பண்ணுகிற சர்வேஸ்வரன் உடைய
திருவடிகளை ஒழிய
வேர் ஒன்றை த்யாஜ்யதயா வாகிலும் அறிவது ஓன்று இல்லை –

————————————————————-

உம்மைப் போல் நாங்கள் வேறே ஒன்றை அறியாமல் இருக்க
விரோதிகளைப் போக்கி அநுக்ரஹிப்பானோ
தங்கள் நிகர்ஷம் சொல்லிக் கொள்வதே அதிகாரம் –
தம்முடைய வை லக்ஷண்ய அனுசந்தானத்தாலும் மகிழ்ந்து
ஆப்த வாக்கியமாக
அவனது ஸுலப்ய குணம் அநுஸந்தித்து
உங்களையும் அநுக்ரஹிப்பான்
அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் -என்கிறார் –

தம்மை அவர்கள் ஆப்தராக நினைத்து இருக்கிறபடியால்
தாம் சொல்லிற்று கேட்பார்கள் -என்று பார்த்து
தம் படியை அவர்களுக்கு அறிவித்து
நீங்களும் என்னைப் போலே அவனைக் கொண்டு
உங்கள் விரோதிகளைப் போக்கிக் கொள்ளப் பாருங்கோள்
என்கிறார் –

வானார் மதி பொதியும் சடை மழுவாளி யொடு  ஒருபால்
தானாகிய தலைவனவன் அமரர்க்கு அதிபதியாம்
தேனார் பொழில் தழுவும் சிறு புலியூர் சல சயனத்
தானாயனது அடி அல்லது ஓன்று அறியேன் அடியேனே —7-9-4-

வானார் மதி பொதியும் சடை மழுவாளி யொடு  ஒருபால் தானாகிய தலைவனவன் –
பரந்த ஆகாசத்துக்கு எல்லாம் தானே போரும்படியாய்   இருக்கிற சந்த்ரனை
தன் ஜடையிலே ஏக தேசத்திலே அடக்கி
தமப்பன் பிறர் என்று பாராதே கொல்லுகைக்கு பரிகரமான
மழுவை உடைய ருத்ரனுக்கு தன் திருமேனியிலே இடம் கொடுத்து கொடு நிற்கிற
சீலத்தை உடைய சர்வாதிகன் –

அமரர்க்கு அதிபதியாம் –
தேவர்களுக்கு நிர்வாஹகனான இந்த்ரனும்
தான் என்கிற சொல்லுக்குள் அடங்கும்படி இருக்கிறவன் –

தேனார் பொழில் தழுவும் –
தேன் மாறாத பொழி லாலே அணையப் பட்டு இருந்துள்ள

சிறு புலியூர் சல சயனத் தானாயனது அடி அல்லது ஓன்று அறியேன் அடியேனே –
கிருஷ்ணாவதாரம் தீர்த்தம் பிரசாதித்தது என்று
வெறுக்க வேண்டாதபடி -பிற்பாடருக்கும்
அனுபவிக்கலாம் படி
அவ்வதார்ரத்தின் படியே வந்து சாய்ந்தவன் –
அவன் திருவடிகள் அல்லது வேறு ஒன்றையும் அறியேன் –
அதுக்கடி அவன் சேஷ பூதன் ஆகையாலே –

————————————————-

கீழே நான்கும் பர உபதேசம்
திருந்தினவர்களும் திருந்தாதவர்களு மாக இருக்க
சம்சாரம் படுத்தும் பாடடை பேச பாயாவாஹமாய் இருக்க
பர உபதேசம் விட்டு
அருள் புரியே என்று அடுத்த ஐந்து பாசுரங்களில் –

நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறிநீர்ச்
செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை யடியாய் உனதடியேற்கு அருள் புரியே—7-9-5-

நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை –
ஒரு காலும் விட்டுப் பற்றக் கடவதல்லாத
நெடு நரகமான
சம்சாரத்துக்கு உள்ளே போய்ப் புகாதபடி –

நாளும் எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம்
ப்ரஹ்மாதிகள் காலம் எல்லாம் நின்று
என் ஆயனே -என்று  தொழுது ஸ்தோத்ரம் பண்ணுகிற தேசம்-

எறிநீர்ச் செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து –
மிக்க ஜலத்தை உடைத்தான பொய்கைகளிலே
அந்த நீர்ச் செறிவாலே
தாமரைகள் போய் அலறுகிற  சிறு புலியூர்ச் சலசயனத்திலே –
(சேஷ புஷ்கரணி -அநந்த சரஸ் இங்கு )

அந்தாமரை யடியாய் –
செவ்விப் பூ போலே இருக்கிற திருவடிகளை  உடையவனே –

உனதடியேற்கு அருள் புரியே   –
அல்லாதார் செய்தபடி செய்ய
அநந்ய கதியான என் பக்கலிலே உன்னுடைய
கண் அழிவற்ற கிருபையைப் பண்ணி அருள வேணும் –

—————————————————

ததீய சேஷத்வம்
சடக்கென அருள் புரியாமல் இருக்க
அடியார் அடியாரானால் உடனே அருளுவான்

முழு நீலமும் அலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக்
கழுநீரொடு மடவாரவர் கண் வாய் முக மலரும்
செழுநீர் வயல் தழுவும்  சிறுபுலியீர்ச் சலசயனம்
தொழு நீர்மை யது உடையார் அடி தொழுவார் துயர் இலரே —7-9-6-

சலசயனம்-சலசயனன் -பெருமாளையே சொன்னவாறு -மகார னகர மாற்று

முழு நீலமும் அலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக் கழுநீரொடு
எங்கும் ஒக்க கறுத்து இருக்கிற நீலமும்
அரக்காம்பலும்
தாமரையும்
செங்கழுநீரும்
இவை தன்னிலே கூடி  –

மடவாரவர் கண் வாய் முக மலரும் –
அங்கு உண்டான ஸ்திரீகள் உடைய
கண்ணையும்
வாயையும்
முகத்தையும்
காட்டா நிற்கிற –

செழுநீர் வயல் தழுவும்  –
அழகிய ஜலமானது வயலை அணைந்து இருக்கிற –

சிறுபுலியீர்ச் சலசயனம் –
தொழு நீர்மை யது உடையார் அடி தொழுவார் துயர் இலரே
சிறுபுலியீர்ச் சலசயனத்தை தொழுகையே
ஸ்வ பாவமாக உடையாருடைய திருவடிகளைத் தொழுவார்க்கு

துக்கங்கள் நில்லா –
அவை தன்னடியே விட்டுப் போம் –

————————————————

பக்தர் உள்ளத்திலா வேதாந்தமா ஹஸ்திகிரியா -கூரத்தாழ்வான் வரதராஜ ஸ்தவம்

கீழ் அடியாரைப் பற்றி தேறி இருந்தார்
அத்தைக்கு கண்டு உக்காந்து
எங்கும் உள்ளபடிகளைக் காட்டி அருள -இப்பாசுரம் –

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீ யோம்புகை  மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுன தடியார் மனத்தாயோ வறியேனே—7-9-7-

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்  மாயா –
சேய்-என்று
ஷேத்ர பாலகனுக்கு பேராய்
அவன் அவ்விடத்துக்கு காவலாக சொல்லிப் போருவது ஓன்று உண்டு அதாகிறது –
(பதினெட்டாம் படி கருப்பன் ருத்ரன் பிள்ளை காவல் தெய்வம் )

அன்றிக்கே –
சேய் -என்று
தூரத்துக்கு வாசகமாய் இருக்கையாலே
மிகவும் ஓங்கின திருமலையிலே நிற்கிற ஆச்சர்ய பூதனை –

வெனக்கு உரையாய் இது –
எனக்கு இத்தை அருளிச் செய்ய வேணும் –

மறை நான்கினுளாயோ-
எங்கும் ஒக்க உன்னையே சொல்லா நின்றுள்ள
வேதங்கள் நாலிலும் உளாயோ –

தீ யோம்புகை  மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத் தாயோ –
எப்போதும்  ஒக்க அக்நி கார்யத்தில் அவஹிதராய்ப் போருகிற
பிராமணர் உடைய
சிறுபுலியூர்ச் சலசயனத்தில் உள்ளாயோ   –

வுன தடியார் மனத்தாயோ வறியேனே   –
உன் திருவடிகளில் அசாதாரணராய்  இருப்பார் ஹிருதயங்களில் உள்ளாயோ –
அடியேன் அறிகிறேன் இல்லை –
எனக்கு இது தெரிய அருளிச் செய்ய வேணும் –

இத்தால் சொல்லிற்று ஆயத்து –
சௌபரி பல வடிவு கொண்டால் போலே
இவ்வோ இடங்கள் தோறும்
இனி அவ்வருகு இல்லை என்னும்படி
குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான் –

————————————————-

கீழே பல வடிவங்களைக்காட்டி அருள
ஆச்சார்யம் பட்டார்
அனுபவத்துக்கு தடைப்படும் படி சம்சாரத்தில் இருக்க
அது நியாமாக நிச்சயமாக இருக்க
ப்ராப்ய ஆபாசங்களில் நசை அற்று
சரணம் புக்கு
கிருபையை பிரார்த்திக்கிறார் –

பால சயனம்
லிங்க ரூபம் -வியாக்ரபாதர் புலிக்கால் முனிவர்
கணவர் இருவரும் கர்ப்பக்ருஹம்
ஆதி சேஷனால் பிரசித்தம் பெற்ற திவ்ய தேசம்
கருடன் கீழே தாழ
புஷ்காரணி கரையிலும் சேஷன் நாக தோஷம்
தெற்கு நோக்கி புஜங்க சயனம்
கிருபா -சமுத்திரம் -அருள் மா கடல்
தயா நாயகி தாயார் –

மையார் வரிநீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உன கழலே  தொழுது எழுவேன் கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஐவாய அரவணை மேல் உறை யமலா யருளாயே –7-9-8-

தொழுது எழுவேன்-அருளாய் -ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கும் படி
செவ்வாய் -நேராய் இருக்கிற -நேர்மையும் வண்ணமும்

மையார் வரிநீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு உய்வான் உன கழலே –
அஞ்சனத்தாலே குறைவற அலங்க்ருதமாய்-
செவ்வரி கருவரிகளை உடைத்தாய் –
நீல மலர் போலே இருக்கிற கண்களை உடைய ஸ்திரீகளை
மநோ ரதித்து இருக்கும் இருப்பை   விட்டு
உஜ்ஜீவிக்கைகாக உன் திருவடிகளை –

தொழுது எழுவேன் –
ஆஸ்ரயிப்பேன் –

கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சல சயனத்து –
கிளி போலே இருக்கிற ஸ்திரீகள் உடைய
அக் கிளி போன்ற பேச்சு நெருங்கி இருக்கிற
சிறுபுலியூர்ச் சல சயனத்த்தில் –

ஐவாய அரவணை மேல் உறை யமலா யருளாயே –
அனுபவ ஜனித ப்ரீதிக்குப் போக்கு விடுகைக்கு
பலவாய்த் தலைகளை உடையனாய்
சைத்யாதிகளை பிரக்ருதியாக உடைய திரு வநந்த ஆழ்வான் மேலே
சாய்ந்து அருளி
பிரயோஜன நிரபேஷமாக
ரஷணத்திலே ஒருப் பட்டு இருக்கிறவனே  –

என் பக்கலிலே உன்னுடைய கிருபையைப் பண்ணி அருள வேணும் –
கிளியானது மடவார் உடைய சிவந்த வாயில் பேச்சை அப்யசிக்கிற -என்னுமாம் –

கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சல சயனத்து –
ஐவாய அரவணை மேல் உறை யமலா-
மையார் வரிநீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு உய்வான் உன கழலே –
தொழுது எழுவேன்-அருளாய் -என்று அந்வயம்

————————————————-

முக்ய உயிர் பாசுரம்
உபாயமாகப் பற்ற வில்லை
சரணம் க்ருஹம் புருஷார்த்தம் இதுவே என்கிறார்
அவன் காட்டி அருளிய அவற்றால் உண்டான போக்யதா அதிசயத்தால்
ப்ராப்ய நிஷ்கர்ஷம் இது
தனக்கேயாக எனைக் கொள்ளு மீதே –2-9- அங்கு இது 7-9-

கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெரு மால் வரை  யுருவா  பிறவுருவா நினதுருவா
திருமா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அருமா கடலமுதே யுனதடியே சரணாமே—7-9-9-

பெரு மால் வரை-மூன்று விசேஷணங்கள் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதன்

கருமா முகிலுருவா-
ஆஸ்ரிதர்க்கு கண்ட காட்சியிலே
சகல தாபமும் போம்படி ஸ்ரமஹரமான பெரிய
மேகம் போன்ற
வடிவை உடையவனே –

கனலுருவா-
அநாஸ்ரிதர்க்கு கிட்ட ஒண்ணாத படி
அநபிபவ நீயமான வடிவை உடையவனே –

புனலுருவா –
சர்வ ஸூலபனான வடிவை உடையவனே –

பெரு மால் வரை  யுருவா-
அபரிச்சேத்யமான வடிவை உடையவனே –

பிறவுருவா-
இன்னும் சொல்லிச் சொல்லாத வடிவுகளை உடையவனே –

நினதுருவா –
இப்படி ஜகதாகாரமான வடிவுகளை ஒழிய
அசாதாராணமான வடிவுகளை உடையவனே –

திருமா மகள் மருவும் -சிறுபுலியூர்ச் சல சயனத்து –
பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணுகிற
(தயா நாயகித்தாயார் )

அரு மா கடலமுதே –
பெரிய கடலைக் கடைந்து அருமைப் பட்டு வாங்கின
அமிர்தம் போலே
நிரதிசய போக்யனாய்க் கொண்டு
பெரிய பிராட்டியாரோடும் கூட சிறுபுலியூர்ச் சல சயனத்த்திலே
சாய்ந்து அருளினவனே-

யுன தடியே சரணாமே  –
ஸ்ரீ யபதியான உனது திருவடிகளை   ஒழிய
எனக்கு வேறு ஒரு புகல் இல்லை
பிராப்யம் இல்லை –

———————————————–

சீரார் நெடு மறுகில் சிறு புலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே —7-9-10-

சீரார் நெடு மறுகில் சிறு புலியூர்ச் சல சயனத்து –
ஐஸ்வர்யத்தை அடையக் கோள் சொல்லித் தாரா நின்ற
பெரிய திரு வீதிகளை உடைய
சிறு புலியூர்ச் சல சயனத்த்தில் –

ஏரார் முகில் வண்ணன் தன்னை –
அழகிய வடிவை உடைத்தான மேகம் போன்ற வடிவை யுடையனாய்க் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிறவனை-

இமையோர் பெருமானைக் –
அங்கு கண் வளர்ந்து அருளுகிறவன் தான் ஆர் என்னில் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -யாய்த்து –

காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை –
நிரந்தர மேக சஞ்சாரத்தை உடைத்து -என்னுதல்
இருள் மிக்கு இருந்துள்ள வயலை உடைத்தான
திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
ஒலியை உடைத்தாம்படி அருளிச் செய்த மாலை –

பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே –
பாபம் வருகைக்கு யோக்யமான தேசத்திலே இருக்கச் செய்தேயும்
இவற்றை வாயாலே சொல்லி ஆஸ்ரயிக்க-
பாபங்கள் தானே
நமக்கு இவ்விடம் இருப்பிடம் அல்ல -என்று விட்டுப் போம்-

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கள்ள மதம் கொள்ளாச் சல சயனத்தார் தாள் நீர்
கொள்ளும் என்றும் பெண்டிர் நிரயம் தான் வெள்கி யவை
நீங்க பேறாச் சேர்ந்தான் பரகாலன் நெஞ்சே சொல்
பாங்காய் அவன் பெருமை -69-

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி–7-7- /7-8- —ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 10, 2014

1-நைமிசாரண்யம் -1-6–முதல் சரணாகதி
2-திருவேங்கடம் -1-9–ஆபாச பந்துக்கள் விட்டு
3-காவளம்பாடி -4-6- கண்ணா
4-திரு வெள்ளக்குளத்து அண்ணா இடரைக் களையாயே -4-7-
5-திருவரங்கம் -5-8- ஏழை ஏதலன்
6-திரு விண்ணகர் அப்பன் -6-2- இந்திரிய பயம்
7-திரு நறையூர் -இடர் கடுத்த திருவாளர் இணை அடி
கீழே ஏழு சரணாகதிகள் பார்த்தோம் –
இது எட்டாவது சரணாகதி

ஆ மருவி அப்பன்
கோ சகன்
ரத மக்ந புரம்
கண்ணன் கோகுலம் மாடு மேய்க்க
ப்ரம்மா அபசாரம் -பொறாமை -கவர்ந்து போக
தேடி இங்கு வர
ஆகாசம் தேர் போக நிழல்
கீழே பிடித்து இழுக்க
என்ன வேணும்
1000 குடம் வெண்ணெய் சாயங்காலம்
ஒன்றில் நீர் –
1000 நீராக இருக்க
மாயன் -தேவாதி ராஜன்
தை அமாவாசை -தர்ச புஷ்கரணி
அரசன் என்று நினைத்து திருமங்கை ஆழ்வார் போக
கால் தளர்ந்து நின்று 40
கம்பர் அவதாரம்
ஹிரண்ய வத படலம் –
கருடனும் பிரகலாதனும்
செங்கமல வல்லித்தாயார்
கருட விமானம்
மார்க்கண்டேயர் காவேரி தாயார் கர்ப்ப க்ருஹம்
வைநதேய விமானம் இங்கு -தாச சக -அருகில் இருந்து சேவை
வைநதேய முடி திரு நாராயண புரம்
லோக முத்ரா -அகஸ்தியர் தர்மபத்தினி -காவேரி
கோவிந்த ராஜர் தனி சந்நிதி வெளியில்
ரெங்க நாதர் சயன திருக்கோலம்
திரு நெடும் தாண்டகம் தூது விடும் பாசுரமும் உண்டே –

7-7-திருவுக்கும் திருவாகிய பிரவேசம்-

அடியேன் கண்டு கொண்டு களித்தேனே -என்றார் கீழ்
அது தானேயாய் நிற்கப் பெறாதே –
பாதகமான இந்த்ரியங்கள் விடாதே
அணித்தாய் நின்று நலிகிற படியை அனுசந்தித்து அஞ்சி
நம்மாழ்வார் -உண்ணிலாவியில் பட்ட க்லேசத்தை-( 7-1-) அடையப் பட்டு –
இதுக்குப் போக்கடி அவன் திருவடிகளிலே
விழுந்து சரணம் புகுகைக்கு மேற்பட இல்லை என்று அத்யவசித்து
புருஷகார பூதையான பிராட்டி முன்னாக
தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லிக் கொண்டு சரணம் புகுகிறார்-

(கீழே சகல இந்திரியங்களும் பகவத் விஷயத்தில் ப்ரவணமாய் ஈடுபட்டு கண்டு களித்தார்
மிகவும் களித்த இவருக்கு பயப்பட்டு சரண் அடையக் காரணம்
ஆரா இன்னமுதை அனுபவித்தார்
ஏதா மநோ ரதம் அனுபவம் பெறாமல்
இதுக்கு மூலம் சம்சாரமே -கர்ம க்ருதம் -பூர்வ வாசனா பலம்
மீண்டும் விஷயாந்தரங்களிலே மூழுவோமோ என்கிற அதி சங்கையால்
சரணாகதி -)

———————————————

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-

திருவுக்கும் திருவாகிய செல்வா-திருவாகிய திருவுக்கும் செல்வா
திரு மார்பா-மீண்டும் ஸ்ரீ யபதித்தவம்

திருவுக்கும் திருவாகிய செல்வா –
ஸ்வ வ்யதிரிக்தருடைய சம்பத்துக்கு நிதான பூதையான பிராட்டிக்கு சம்பத் ஆனவனே –

தெய்வத்துக்கு அரசே –
அயர்வறும் அமரர்கள் அதிபதியே –

செய்ய கண்ணா-
புண்டரீகாஷனான சர்வேஸ்வரனே

உருவச் செஞ்சுடராழி வல்லானே –
விரோதி நிரசனத்துக்கு பரிகரமாய்-அழகிய வடிவை யுடைத்தாய் -நிரதிக தேஜோ ரூபமான
திரு வாழியைக் கையிலே யுடைய சர்வேஸ்வரனே –

ஸ்ரீ லஷ்மீபதி என்னுதல்-
நித்ய ஸூரிகளுக்கு எல்லாம் நிர்வாஹகன் என்னுதல் –
கை சலியாமல் திரு ஆழியைப் பிடிக்க வல்லவன் என்னுதல் –
புண்டரீகாஷனானவன் என்னுதல் –
இவை இறே சர்வாதிகத்துவத்துக்கு லஷணம்

உலகுண்ட ஒருவா –
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே தளர்ந்தார் தாவளமானவனே-

திரு மார்பா-
உன்னைத் தளர்ந்தார் தாவளமாக்குமவளை திரு மார்விலே யுடையவனே
(தளர்ந்தார் தாவளமாக்குமவளைஇவன் ரக்ஷகன் ஆக்குபவளே இவள் –
இதில் புருஷகார பூதை என்கிறார்
கீழே பர ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்லிற்று )

ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை என்றால் –
ஏக விஷயத்தில் சேஷத்வம் குலைந்தது கிடாய் –
ஒருவருக்கு ஆடல் கொடுத்து உஜ்ஜீவிக்கும் படியாய் இருக்கிறது இல்லை

உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது-
ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன –
கர்ம வச்யன் ஆகையாலே கர்ம க்ருதங்கள் சேர்ந்தே இருக்கும்
நீ அவசரம் பார்த்து புகுந்தாய் -இவை சஹஜங்கள்-
உண்ணிலாய 7-1–என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியால்
நலியா நின்றுள்ள ஐந்து இந்த்ரியங்கள் என் பக்கல்
வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறவன வில்லை-

அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் –
என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு என்று இவை தனித் தனியே
அலைத்து நெருக்க-அவற்றுக்கு அஞ்சி வந்து

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –
சர்வ ஸ்வாமியான  உன் திருவடிகளிலே சரண ரஷணத்தில் அதிகரித்த உனக்கு
அத்தை முடிய நடத்த வேண்டாவோ –

—————————————————-

ஆஸ்ரயண ஸுவ்கர்ய குணங்கள் கீழே
அதுக்கு தூண்டி விட பிராட்டி சம்பந்தம்
தலை எடுக்க வைப்பவள்
ஆஸ்ரய கார்ய ஆபாதக குணங்களை சொல்லி
கைம்முதல் ஒன்றும் இல்லை என்று ஆகிஞ்சன்யம் சொல்லுகிறார் இதில்

பந்தார் மெல் விரலி நல் வளைத் தோளி பாவை பூ மகள் தன்னொடும் யுடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா மழை போல் ஒளி வண்ணா
சந்தோகா பௌழியா தைத்ரியா சாம வேதனே நெடு மாலே
அந்தோ நின்னடி யன்றி மற்றறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே–7-7-2-

பந்தார் மெல் விரலி –
சர்வேஸ்வரன் உடன் கலக்கும் போதும் அகப்பட -ஒரு ஷணமும் விடாதே பந்தை யுடையவளாய்
அப் பந்தும் உட்படப் பொறாத விரல்களை யுடையவளுமாய் –
(பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடி -நரமான நாம் ஒருகையில்
நாராயணனாக அவன் ஒரு கையிலும் விடாமல் )

நல் வளைத் தோளி –
தர்ச நீயமான வளைகளை யடைய திருத் தோள்களை யுடையவளுமாய் –

பாவை பூ மகள் தன்னொடும் யுடனே வந்தாய் –
தாமரைப் பூவை இருப்பிடமாக பெரிய பிராட்டியாரோடு கூட வந்தாய் –
அரவிந்தப் பாவையும் தானும் -5-2-10–என்கிறபடியே
ச பரிகரனாய்க் கொண்டாய்த்து வந்து புகுந்தது –

என் மனத்தே மன்னி நின்றாய் –
இவ் வரவாலே நெஞ்சை நெகிழப் பண்ணி
விலக்காமை யுண்டான வாறே –
ஆவாசந்த்வஹம் இச்சாமி -என்கிறபடியே வந்து புகுந்தான் ஆய்த்து-
(ரிஷிகள் இடம் பெருமாள் தங்க இடம் கேட்டது போல் )

மால் வண்ணா –
கறுத்த நிறத்தை யுடையவனே –
(மால் கருமை பெருமை பித்தம் )

மழை போல் ஒளி வண்ணா –
கறுத்து இருக்கை அன்றிக்கே
மேகம் போலே குளிர்ந்த வடிவை யுடையவனே –

சந்தோகா பௌழியா தைத்ரியா சாமவேதனே –
ஆர்த்த ரஷணத்துக்கு ஈடான சர்வஜ்ஞத்வத்தை யுடையவனே –
இத்தால் வேதார்த்த தத்வ ஜ்ஞானத்தை யுடையவனே என்றபடி –
(ஆஸ்ரிதர் கார்யம் செய்ய சர்வஞ்ஞன் சர்வசக்தன் ப்ராப்யம் பூர்த்தி வேண்டுமே )

நெடுமாலே –
அவ் வேதங்களாலே சொல்லப்படுகிற ஆதிக்யத்தை யுடைய சர்வாதிகனே –

அந்தோ நின்னடி யன்றி மற்றறியேன்-
வேறேயும் சில ரஷகரும் யுண்டாய் -அவர்கள் ரஷிக்கிறார்கள் என்று –
உனக்கு ஆறி இருக்க ஒண்ணாது கிடாய் –
அநந்ய கதியான நான் உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் –

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –
அநந்ய கதிகளை நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –

————————————————————————————–

அனிஷ்டம் தொலைத்து இஷ்டம் அருள
கீழே சர்வஞ்ஞத்வம் அனுசந்தித்து
சக்திமத்வத்தையும் பிராப்தியையும் இதில் அனுசந்திக்கிறார் –

நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் அடியேனைச்
செய்யாத வுலகத்திடைச் செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்குமுள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன்
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே -7-7-3-

செய்யாத செய்தாய் -உன் விஷயத்தில் ருசி விச்வாசாதிகளை உண்டு பண்ணி
விஷயாந்த்ரியங்களைக் கண்டு அஞ்சவும் பண்ணிணவனே-

நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் –
கடைந்து பற்றற நெய் இட்டு இருக்கிற திவ்ய ஆயுதங்களை யுடையவனே
நெய் -கூர்மை
ஆர்தல் -மிகுதி —
கூர்மை மிக்க திரு வாழி-
அவற்றுக்குத் தகுதியான திருத் தோள்களை யுடையவனே –

அடியேனைச்-
தேவர்க்கு யோக்யனாய் இருக்கிற யுன்னை –

செய்யாத வுலகத்திடைச் செய்தாய் –
லோகத்தில் செய்யாதவற்றை எல்லாம் செய்தாய்
உன் திருவடிகளில் கைங்கர்யத்தை நினையாத லோகத்திலே வைத்தாய்

சிறுமைக்கும் பெருமைக்குமுள் புகுந்து  பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் –
ஷூத்ர விஷயங்களை லபிக்கைக்கும்
கிட்டவரிய விஷயங்களை லபிக்கைக்குமாக
க்ருத்ரிம ரூபத்தாலே -நான் -என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும் படி
என் சரீரத்துக்குள் வந்து குடி புகுந்தன  வாய்த்து –

போற்றி வாழ்வதற்கு அஞ்சி-
அவற்றை ஆராதித்திப் பின் சென்று வர்த்திக்குமதற்கு  அஞ்சி –

நின்னடைந்தேன் –
நிருபாதிக சேஷியான யுன்னைக் கிட்டினேன் –

ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் –
நிருபாதிக பந்துவே உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகல் யுடையேன் அல்லேன் –

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
நிருபாதிக பந்தம் தோற்ற வந்து நிற்கிறவனே-

——————————————————————

தம்மை லோகத்தாரில் வியாவருத்தமாய் பண்ணியத்துக்கு நன்றி உடையவனாய்
மனம் அளவில் இல்லாமல்
உபகார ஸ்ம்ருதி அடியாக வாயாலே ஸ்தோத்ரம் இதில் –

பரனே பஞ்சவன் பௌழியன் சோழன் பார் மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும்
வரனே மாதவனே மதுசூதா மற்றோர் நற்றுணை நின்னலால் இலேன் காண்
நரனே நாரணனே திரு நறையூர் நம்பீ எம்பெருமானும் பாராளும்
அரனே ஆதி வராஹ முன்னானாய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே—7-7-4-

மன்னர் மன்னர்-ஐஸ்வர்ய பூர்த்தியும் அரசராயும் –
முன் ஆதி -ஆதி காலத்தில் ஜகத் காரண பூதன்-
நற்றுணை-பர அர்த்தம் -ஏக பிரயோஜனமாக உள்ள துணை –

பரனே-
சர்வ ஸ்மாத் பரனானவனே-

பஞ்சவன் பௌழியன் சோழன் பார் மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும் வரனே-
பஞ்சவன் என்றும்
பௌழியன் என்றும்
சோழர்கள் பேர் -ஒரோ ராஜ்யங்களுக்கு கடவராய் -ஐஸ்வர்ய பிரதானராய் இருக்கும் ராஜாக்கள்
தம் தாமுடைய அபிமத  அர்த்தமாக வந்து ஆஸ்ரயித்து
அவை பெற்றுப் போம்படிக்கு ஈடாக நிற்கிற பரனே –
அவர்களுக்கு ஆஸ்ரயணீயனாய் யுள்ளவனே-

மாதவனே –
அவர்களுடைய அபிமதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும்-கொடிப்பிக்கும் –
புருஷகாரத்தை யுடையவனே –

மதுசூதா –
அவர்களுடைய விரோதியைப் போக்குகைக்கு ஈடான விரோதி நிரசன சீலனானவனே –

மற்றோர் நற்றுணை நின்னலால் இலேன் காண்-
தன்னை அழிய மாறியும் அடைந்தாரை நோக்கும் துணை உன்னை ஒழிய
வேறு ஒருவரை யுடையேன் அல்லேன் –

நரனே நாரணனே –
ஆஸ்ரித அர்த்தமாக அவர்கள் உன்னைப்  பெறுகைக்கு பண்ணும் தபஸை-
நீ அவர்களைப் பெறுகைக்கு பண்ணுமவனே –

திரு நறையூர் நம்பீ –
திரு நறையூரிலே வந்து நிற்கும் கல்யாண குண பரிபூரணனே –

எம்பெருமான் உம்பராளும் அரனே –
எம்பெருமான் –
அங்கே பிராட்டியும் நீயும் நிற்கிற நிலையைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனே-

உம்பராளும் அரனே –
மேல் யுண்டான தேவதைகளை நிர்வஹிக்கிற ருத்ரனுக்கு அந்தராத்மாவாய் நின்று
அவர்களை நிர்வஹிக்கிறவனே-
ருத்ரம் சமாஸ்ரிதா தேவா ருத்ரோ  ப்ராஹ்மணம் ஆஸ்ரிதா
ப்ரஹ்மா மாமாஸ்ரித்த ராஜன் நாஹம் கஞ்சிது பாஸ்ரித -என்னக் கடவது இறே-
(பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரம் )

ஆதி வராஹ முன்னானாய் –
ஒருவனுக்கு உள்ளீடாய் நின்று ரஷிக்கை அன்றிக்கே வராஹ கல்பத்தின் யுடைய ஆதியிலே
மகா வராஹமாய் வந்து அவதரித்து
கண்ணுக்கு இலக்கை நின்று நோக்கினவனே-
(சகல மனுஷ நயன விஷய தாங்கதன் )

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
அது தன்னை பழம் கதை யாக்கி இப்பொழுது இங்கே வந்து நிற்கிறவனே

————————————————————————

கீழே அரசர்களுக்கு ரக்ஷகன்
நீர் இங்கே நம்மைக் கொண்டாடி
அநன்யார் ஹத்வம் சொல்லிக் கொண்டு
ஸ்தோத்ரம் பண்ணி
பலகாலும் தவிக்க மூலம் என்ன
உத்தரம் இதில் –

விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து
பண்டானுய்ய வோர் மால் வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே
கண்டேன் நான் கலி யுகத்ததன் தன்மைக் கரும மாவதும் என் தனக்கு அறிந்தேன்
அண்டா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே-7-7-5-

சமரம் -மருவி -சமம் -யுத்தம் என்றபடி –

விண்டான் விண் புக –
ஹிரண்யாசுரன் ஆனவன் வீர ஸ்வர்க்கம் ஏறிப் போம்படியாக –

வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து –
கொடிய யுத்தத்திலே நரசிம்ஹ வேஷத்தை யுடையனாய்
அஹங்கார மமகாரங்களாலே தடித்த வடிவை யுடையவனுடைய மார்வைச் சென்று
பற்றி இரு பிளவாம் படி பண்ணி –

பண்டானுய்ய வோர் மால் வரை ஏந்தும் பண்பாளா-
அத்தால் அது சிறுக்கன் அறியச் செய்த செயல் இறே-
அங்கன் உபகார ஸ்ம்ருதியும் இல்லாத பசுக்களுக்கும் இடையருக்கும் உதவின படி சொல்லுகிறது
முன்பு பசுக்களும் இடையரும் பிழைக்கும் படி கைக்கு எட்டிட்டு ஒரு பெரிய மலையை
எடுத்து ரஷித்த நீர்மையை யுடையவனே –

பரனே-
இப் பிரஜா ரஷண தர்மத்தில் இவனுக்கு அவ்வருகு ஒருவரும் இல்லாத படி இருக்கிறவனே –

பவித்திரனே –
அசுத்தரையும் சுத்தராக்கும் சுத்தியை யுடையவனே –

கண்டேன் நான் கலி யுகத்ததன் தன்மைக் –
இக் கலியுகத்தின் யுடைய ஸ்வ பாவத்தை நான் அழகியதாகக் கண்டேன் –
உன் பக்கலிலே வைமுக்யத்தை யுண்டாக்கி –
பின்பு விஷய ப்ராவண்யத்தையும் பிறப்பித்து
முடிக்கும் -சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் –

கருமமாவதும் என் தனக்கு அறிந்தேன் –
எனக்கு ஹிதமாவதும் உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமதுவே என்று அறிந்தேன் –

அண்டா –
அண்டத்துக்கு நிர்வாஹகனானவனே
அன்றிக்கே
இடையருக்கு நிர்வாஹகனானவனே என்றுமாம் –

நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கும்
இடையருக்கும் பசுக்களுக்கும்
உதவியது போல்
பிற்பாடாருக்கும் உதவவே இங்கு வந்து நிற்கிறது —

——————————————————–

கலியுகத்திலும் க்ருத யுக நன்மை பண்ண வல்லவனே –
பாலைவனத்தில் சோலை ஆக்க வல்லவனே அன்றோ நீ –

தோயாவின் தயிர் நெய் அமுதுண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது எங்கும்  தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
சேயாய் கிரேத திரேத துவாபர  கலியுகமிவை நான்கும் ஆனாய்
ஆயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-6-

பெற்ற தாயால் -பெற்ற தாய் போல் பிரியம் மிக்கு –
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ என்னும் படி
தரையோர்க்கும் -வசுந்தரா தரா -பூமி என்பதையே தரை இங்கு -மண்ணோர்க்கும் –

தோயாவின் தயிர் நெய் அமுதுண்ணச்-
அறத் தோயாத இனிய தயிரையும் நெய்யையும் பொருந்தி அமுது செய்ய –

சொன்னார் சொல்லி நகும் பரிசே-
வாய்க்குப் போந்தார் போந்தபடி சொல்லுகிற பழிக்கு அஞ்சாதே-
மழலைத் தயிரும் நெய்யும் புஜித்தோம் ஆகில்  இதுக்கு வருவது ஓன்று உண்டோ என்றும்
ஒன்றை இட்டுப் பழி சொல்லுகிறார்கள் அன்றே -என்று
நாட்டார் சொல்லுகிற பழிக்கு லஜ்ஜியாதே இருந்தானாய்த்து –

பெற்ற தாயால் ஆப்புண்டு-இருந்து அழுது –
யசோதை பிராட்டியால் கட்டுண்டு -அழுது-பிரதிகிரியை அற்றுப் போக மாட்டாதே-
நிற்க வேண்டப்பாட்டை யுடையவனே

எங்கும்  தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும் சேயாய்-
பூமி அந்தரிஷங்களில் யுள்ளார் ஸ்வ யத்னத்தால் காணப் பார்க்குமன்று
அவர்களுக்கு தூரஸ்தன் ஆனவனே –

நீர் இங்கனே பதறுகிறது என்-காலம் வந்து கார்யம் செய்ய வேண்டாவோ என்ன –
கிரேத திரேத துவாபர  கலியுகமிவை நான்கும் ஆனாய் ஆயா நின்னடியன்றி மற்று அறியேன் –
கலௌ கிருதயுகம் தஸ்ய -என்ன ஒண்ணாதோ யுனக்கு –
காலம் நீ இட்ட வழக்கு அன்றோ –
உன் திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை அறியேன்
(யார் உள்ளத்தில் கோவிந்தன் உள்ளானோ அவனுக்கு கலி யுகத்தில் க்ருத யுகம் வந்தது போல்
இல்லை என்றால் கிருதயுகத்தில் கலி யுகம் போலவே )

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே —–
அந்த கிருஷ்ணாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு  அன்றோ
நீ இங்கே வந்து நிற்கிறது –

——————————————————————

காலம் நீ இட்ட வழக்கு
என்னையே நினைக்கும்படி உபகரிக்க வேண்டினீர்
விஷயங்களில் இருந்து மீட்டு நீர் என்னை நினைக்கலாம்
என்னால் முடியாதே –
நீயே பண்ணி அருள வேணும்
எப்பொழுதும் அடியேன் உன்னையே நிரந்தரமாக நினைக்கும் படி நீ நினைக்க வேண்டுமே

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும்  முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும்  ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7-

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் –
எல்லாரும் ரஷை பெற்று ஜீவிக்க வேணும் என்று இருக்கிற இவன் பக்கலிலே
துர் அபிசந்தியை பண்ணினான் ஆய்த்து-கம்சன் –
அவன் பண்ணின அபிசந்தி அவன் தன்னோடு போம்படி கோபித்து
கம்சனானவன் பீதனாம்படி முனிந்தாய் -சீறினாய் –

கார் வண்ணா –
கண்டாருக்கு ஸ்ரமஹரமான வடிவை யுடையவனே-

கடல் போல் ஒளி வண்ணா –
கடல் போலே சர்வ பதார்த்தங்களுக்கும் ரஷகனுமாய் –
அத்தோடு ஒத்த நிறத்தை யுடையவனே –

(ஒளியையும் வண்ணத்தையும் –
ரக்ஷணம் சொல்லி அத்தோடு ஒத்த வண்ணம் -அக்ரமமாக அருளிச் செய்கிறார் )

இறுத்திட்டான் விடை ஏழும்  முன் வென்றாய் –
அசூரா வேசத்தாலே மிருத்யு போலே வந்த ருஷபங்கள் ஏழின்  வுடைய கொம்பையும்
முறித்து அவற்றையும் ஜெயித்தாய் –

எந்தாய் –
அச் செயலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டாய்-

அந்தரம் ஏழுமும்  ஆனாய் –
உபரிதன லோகங்கள் ஏழையும் யுடையவனே-

பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர் அறுத்துத் தின்றிட
வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே –
இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி
போகங்களைப் புஜிக்க வேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க
அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

——————————————————-

நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக்
குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே–7-7-8-

நெடியானே-
சர்வாதிகனான சர்வேஸ்வரனே –

கடியார் கலி நம்பீ –
பரிமளத்தை யுடைத்தாய் -அரண் பெற்று இருக்கிற -ஆர் கலி யுண்டு -கடல் –
அதிலே சாய்ந்து அருளின கல்யாண குண பரிபூரணனே –

நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
பரம பதத்தே இருந்து -அங்கு உள்ளார் நினைக்கும் நினைவை
இங்கேயே இருந்து
உன்னையே நினைத்து இருக்கும் என்னை-

கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த –
நெஞ்சில் நன்மை இன்றிக்கே பிறரை நலிய நலிய இளகிப் பதியா நின்ற பருவத்தை யுடைய
ஐவர் வந்து புகுந்து சிறை செய்கிற –

அக் காவலைப் பிழைத்துக் குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் –
த்யக்த்வா புத்ராம் ச தாராம் ச ராகவம் சரணம் கத -என்கிறபடியே
அவற்றைத் தப்பி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன்-

கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி –
எனக்கு கூறையும் சோறுமாய் இருக்கிற இத் திருவடிகளைத் தந்து அருளி –
தோட்டமில்லவள் -பெரியாழ்வார் -5-1-5- -என்றும் –
எல்லாம் கண்ணன் -திருவாய் -என்றும் சொல்லுகிறபடி
கூறை சோறாக நினைத்து இருப்பது இவை  யாய்த்து இவர் –

அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் –
வகுத்த ஸ்வாமியான நீ -ராஜ புத்ரனாய் பிறந்து முடி இழந்து போவாரைப் போலே ஆகாமே
அடியேனாய் இருக்கிற என்னை நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் –
(அடி சூடும் அரசு – கைங்கர்ய பட்டாபிஷேகம் )

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு வந்து புகுரலாம் படி கடல்கரை வெளியிலே வந்து நின்றால் போலே
எனக்கு உறவு முறையார் கை விட்ட அன்று வந்து கிட்டலாம் படி அன்றோ
தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –

——————————————————————–

நின்ற திருக்கோலம் தேவாதி ராஜன்
ரெங்கன் கிடந்த திருக்கோலம்
கோவிந்த -அமர்ந்த திருக்கோலம்
மூவரும் இங்கே உண்டே
கீழே அபீஷ்டம் பிரார்த்தித்தார் -தமக்கு அடுத்த கூறை சோறு
இதில் இந்திரியங்கள் தமக்கு பிடித்தவற்றை கேட்டு பாதிக்க
அநிஷ்டம் நிவ்ருத்தி இதில்

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-

செய்வது-செய்ய வேண்டியது என்றவாறு –

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக்-
நீ சேஷியாமது தவிர்ந்து இவை எனக்கு நியாமகமாய்க் கொண்டு வந்து என் சரீரத்திலே குடி புகுந்தது –

கூறை சோறு இவை தா என்று குமைத்துப்  போவார் நானவரைப் பொறுக்க கில்லேன்-
நான் ( வகுத்த ப்ராப்தமான திருவடிகளையே )கூறையும் சோறுமாக நினைத்து இருக்கும் அது ஒழிய
வேறு சிலவற்றைத் தா வென்று
என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்கு கிறிலர்கள் –
நான் அவர்களுடைய நலிவைப் பொறுக்க மாட்டு கிறிலேன் –

புனிதா-
என் விரோதியைப் போக்கி ரஷிக்குமது உன் பேறாக நினைத்து இருக்கும்
சுத்தி யோகத்தை யுடையவனே –

புட் கொடியாய் –
இவை எல்லா வற்றுக்கும் கொடி கட்டி இருக்கிறவனே-

நெடு மாலே –
ஆஸ்ரிதர் பக்கலில் மிக்க வ்யாமோஹத்தை யுடையவனே-

தீவாய் நாகணையில் துயில்வானே-
ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வ பாவனே-
உனக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாத படி சத்ருக்கள் மேலே நெருப்பை உமிழ்கிற
திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளினவனே –

திரு மாலே –
அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாயிற்று-

இனிச் செய்வது ஓன்று அறியேன் –
இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்-

ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் –
ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்-

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –

(நான் அவரை பொறுக்க மாட்டேன்
நீரே போக்கும் விரகு பார்க்கலாகாதோ
கிருபை ஒன்றே நான் அறிவேன் என்கிறார் )

——————————————————

அன்னம் மன்னும் பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன்  மங்கைக் குல வேந்தன்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார்
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மகிழ்வாரே –7-7-10-

பைம்-பரந்த
கன்னி மன்னு-அழிவில்லாமை இடைவிடாமல் பொருந்தி உள்ள –

அன்னம் மன்னும் பைம் பூம் பொழில் சூழ்ந்த –
அன்னங்கள் நித்ய வாசம்  பண்ணுகிற பரந்த பூவை யுடைத்தான பொழிலாலே சூழப் பட்ட   –
அன்னங்கள் ஒன்றோடு ஓன்று கூடினால் உடம்போடு உடம்பு அணுகாதபடி கிடைக்கைக்கு வேண்டும்படி
பரப்பு போந்து இருக்குமாய்த்து பூவின் பெருமை –

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக் –
திரு அழுந்தூரில் மேற்கு பார்ஸ்வத்திலே நின்ற சர்வாதிகனான சர்வேஸ்வரனை-

கன்னி மன்னு திண் தோள் -கலிகன்றி ஆலி  நாடன்  மங்கைக் குல வேந்தன்
ஒரு நாளும் அழியாத மிடுக்கை யுடைத்தான தோள்களை யுடைய ஆழ்வார் –
திருவாலி நாட்டுக்கு நிர்வாஹகராய் உள்ளார்
திரு மங்கையில் உள்ளார்க்கு பழையதாக ராஜாக்களாய் யுள்ளார்

சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார்-
சொன்ன இனிய தமிழான இந்த நல்ல ரத்ன மாலையை
லஷணங்களில் குறைவற்று இருக்கிற இப் பத்தையும் அப்யசிக்க வல்லார் –

மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மகிழ்வாரே —
சிரகாலம் ராஜாக்களாய் -லோகங்களை அடைய நிர்வஹித்து பெரிய முத்தின் குடைக் கீழே இருந்து
நிரவதிக ப்ரீதி  யுக்தராய்ப் பெறுவார் –

இந்த்ரிய வஸ்தையை  அனுசந்தித்து அஞ்சின ஆழ்வார் (யோகியாக இல்லாமல் போகியாக) இத்தை
பலமாகச் சொல்லுவான் என் என்னில்
இவருக்கு அந்த ஐஸ்வர்யம் பாகவத சேஷமாக்குக்கைக்கு உடலாகையாலே
அதுவும் புருஷார்த்தத்திலே புக்குப் போய்த்து காண்-என்று பட்டர் அருளிச் செய்தாராம் –

———-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

திரு வழுந்தூரான் நெடியான் நல் துணையான் தூயன்
திருவன் நிறைவறிவன் என்று திருத்த ஐவர்
செய் துயரை வேறு புகலின்றி கலிகன்றி சேர்ந்தான்
உய்ய தாளாம் செங்கமலம் -67-

ஐவர் -ஐந்து புலன்கள்
நெடியான் -தேவராய நிற்கும் அத்தேவும் அத்தேவரில் மூவராய் நிற்கும் முது புணர்ப்பும்
அம்மூவரில் முதல்வனாக நிற்கும் நெடியான் -மனிசர்க்குத் தேவர் போலெ தேவர்க்கும் தேவனான தேவாதி தேவன்
நிறைவறிவன் -சர்வஞ்ஞன் –

————————————————————-

7-8-செங்கமலத் திருமகளும் -பிரவேசம் –

(இப் பதிகம் பர உபதேசப் பதிகம் )

இந்த்ரிய அவஸ்தைக்கு அஞ்சிக் கூப்பிட்டார் –
நீர் இங்கனே கிடந்தது கூப்பிடுகிறது என் –
பேரளவுடைய ப்ரஹ்மாதிகள் தங்கள் ஆபத்தை அறிவிப்பிக்கும் போது
அக் கரையிலே நின்று கூப்பிடுமது ஒழிய
அவர்களுக்கும் கிட்ட ஒண்ணாத படி இருக்கக்  கடவ நாம் –
உமக்குப் பட்ட குறை அறிவிக்கலாம்படி பண்ணினோமாய் நின்றோமே –

இவ்வளவும் வர நின்ற நாம்
இனி மேல் உள்ள கார்யம் செய்வுதோம் என்று
உமக்கு ஆறி இருக்கக் குறை உண்டோ –
உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்கைக்கு அன்றோ நாம்  இங்கு வந்து நிற்கிறது என்று
அங்குற்றை நிலையைக் காட்டிக் கொடுக்க-

அத்தை அனுசந்தித்து திருப்தராய்
பிறரைப் பார்த்து
இவன் அல்லது ஆஸ்ரயணீயன் இல்லை
ஆன பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள்  –
என்கிறார் –

—————————————-

பிரகலாதன் கருடன் அருகில் இங்கு -கர்ப்ப க்ருஹத்தில் –

செங்கமலத் திருமகளும் புவியும் செம் பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும்  வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும்   இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி  யழுந்தூர் நின்றுகந்த வமரர்  கோவே –7-8-1-

கேள்விகளும்-கேட்டு அறிய வேண்டிய ஸ்ம்ருதிகள் போல்வனவும் –
அணி அழுந்தூர் -லீலா விபூதிக்கு ஆபரணம்

செங்கமலத் திருமகளும் –
ஆஸ்ரிதர் உடைய சர்வ அபராதங்களையும் பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் –

புவியும்-
அப் பொறைக்கு உவாத்தான ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் –

செம் பொன் திருவடியின் இணை வருட –
ஸ்ப்ருஹணீயமாய்
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளை வருட –

முனிவர் ஏத்த —
சனகாதிகள் நின்று ஸ்துதிக்க –

வங்கமலி தடம் கடலுள் –
மரக் கலங்களால் மிக்கு இருக்கிற பெரிய கடலுள்-

அநந்தன் என்னும்  –
திரு வநந்த வாழ்வான் என்று பிரசித்தனாய் இருக்கிறவன் மேலே –
சர்வேஸ்வரனையும்-அநந்தன் -என்னக் கடவது இறே
த்ரிவித பரிச்சேத ராஹித்யத்தாலே –
அநந்தன் தன்னையும் விளாக்குலை கொள்ள வல்லனாய் இருக்கையாலே
அநந்தன் -என்று பிரசித்தியை உடையனான   –

வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின் –
குன்றிச் சூடு-(மயில் தோகைக் கற்று ) போலே
சர்வேஸ்வரனுக்கு வைத்த கண் மாறாதே
கண்டு கொண்டே இருக்க வேண்டும் படி
தர்ச நீயமான வரிகளை உடையனாய்
சைத்ய சௌரப்யாதிகளை பிரக்ருதியாக உடைய
திரு வநந்த வாழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளின சர்வேஸ்வரன் கிடீர் கோள் இங்கு வந்து நிற்கிறவன் –

எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும்   இயன்ற தன்மை –
வேத ப்ராமாண்யம் ப்ராதேசிகமாய் இருக்கை அன்றிக்கே
எங்கும் ஒக்க மிகுகையால் வந்த நிறைந்த புகழை உடைத்தான
நான்கு வேதங்கள்
பஞ்ச மகா யஞ்ஞம்
மற்றும் ஸ்ரவணத்தால் அறிய வேண்டுயவற்றாலும் வந்த
இயற்றியை ஸ்வாபாவகமாக உடையராய் –

அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி  யழுந்தூர் நின்றுகந்த வமரர்  கோவே –
தனித் தனியே பிரஹ்மாவைப் போலே சிருஷ்டிக்க
ஷமராய் இருக்கிற
பிராமணர் நித்ய வாஸம் பண்ணுகையாலே
வந்த நிரவதிக சம்பத்தை உடைய திரு வழுந்தூரிலே
வந்து நின்று அருளின இது தான் அலாப்ய லாபமாகக் கொண்டு நிற்கிறவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான சர்வேஸ்வரன் கிடி கோள்
அவனை ஆஸ்ரயித்து
உஜ்ஜீவிக்கப் போகப் பாருங்கோள் –

—————————————-

தேவாதி ராஜனே இவர் அமரர் கோவே என்றும் பலகாலும் அருளிச் செய்கிறார் –
பாற் கடல் ஷீராப்தி நாதன் அனுபவம் =கீழ்
அங்கு நின்றும் போந்து விபாவமான
ஹயக்ரீவன் இதில் வேத பிரதானம் செய்து அருளி

முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம்  பரி முகமாய் அருளிய வெம் பரமன் காண்மின்
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னமலி  பெடையோடு மமரும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே –7-8-2-

முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண –
பண்டு இவ் உலகங்கள் ஏழையும்
அந்தகாரமானது தான் கண்ட படியே பரந்து புஜிக்க –

முனிவரோடு தாநவர்கள் திசைப்ப –
சாத்விகரோடு அசாத்விகரோடு வாசி அற அறிவு
கெட்டுக் கலங்க –
வந்து அவதரித்து –

பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம்  பரிமுகமாய் அருளிய வெம் பரமன் காண்மின்
பரம்பின கலைகளை உடைத்தான நாலு வகைப் பட்ட வேதங்களின் உடைய
அர்த்தத்தை எல்லாம்
ஹயக்ரீவ முகத்தாலே
அருளிச் செய்த சர்வ ஸ்மாத் பரன் கிடீர் –

செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் –
செந்நெலின் உடைய  கனத்த கதிரானது
கவரி வீச –

சங்க மவை முரலச்-
அங்கே ஊருகிற சங்கங்கள் ஆனவை த்வநிக்க-

செங்கமல மலரை ஏறி –
செவ்வி பெற்ற அலர்ந்த தானரைப் பூவை படுக்கையாகக் கொண்டு
அதின் மேல் ஏறி –

அன்னமலி  பெடையோடு மமரும் செல்வத்து –
அன்னமானது அப்பூம் படுக்கையிலே
போக ஸ்ரோதஸ்ஸில்
தன்னை விஞ்சின பெடையோடு ஒக்க சாய்கிற
நிரவதிக சம்பத்தை உடைய –
அங்குத்தை திர்யக்குகளும் அகப்பட
போக பிரதாநமாய்த்து இருப்பது  –

தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே –

———————————————

காவேரி தாய் பிரபாவம் -ஹேமாம் பத -பொன்னி –
அஞ்ஞானம் போகும்படி வேதம் பிரதானம் கீழ்
இதில் அந்த வேதத்தில் ப்ரதிபாத்யமான கைங்கர்யம் கொள்ளுவான்
அதுக்கு உண்டான விரோதிகளைப் போக்கு அருளுவதற்கு ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விருத்தாந்தம் –

குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் கோள் முதலை பிடிக்க வதற்கு அனுங்கி நின்று
நிலத்திகழும் மலர்ச் சுடரேய் சோதி யென்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய வென் நிமலன் காண்மின்
மலைத் திகழ்  சந்தகில் கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள் தோறும் மடைகள் பாய
அலைத்து  வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே—7-8-3-

குலத்தலைய மத வேழம்-கைங்கர்ய குலம் –

குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் –
நல்ல ஆகரத்திலே பிறந்து -தான் ஆனைகளுக்கு எல்லாம் பிரதானமாய்-
மதமுதிதமாய் –
மூலையடியே திரிகிற யானை  விழுக்காடு அறியாதே
தன்னிலம் அல்லாத வேற்று நிலத்திலே புக்கு
கொடிதான முதலையின் கையிலே அகப்பட்ட தாய்த்து –

கோள் முதலை பிடிக்க —
சபோபஹதமாய் -அதுக்குப் பரிஹாரமாக
எப்போதே இது நம் கையில் வந்து அகப்படுவது -என்று
இருக்கிற முதலையின் கையிலே புக்குப் பிடிபட –
(சாபம் போக -அன்றோ -ஆகவே கவ்வ என்னாமல் பிடிக்க )

வதற்கு அனுங்கி நின்று –
அதற்கு வெருவி –
முதலையினுடைய வ்யாபாரமேயாய்
தன்னுடைய வியாபாரம் அற்று நின்று –

நிலத் திகழும் மலர்ச் சுடரேய் சோதி யென்ன –
நிலவைப் பரப்பா நின்ற விகாசத்தை உடைய சுடர் உண்டு -சந்தரன் –
அவனோடு ஒத்த தண்ணளியை உடையையாய்க் கொண்டு
வந்து தோற்ற வேணும் -யென்ன –

நெஞ்சிடர் தீர்த்து அருளிய வென் நிமலன் காண்மின்   –
அதன் உடைய கையில் பூச் செவ்வி மாறாத படி
தன் திருவடிகளிலே இடுவித்துக் கொண்டு
அதினுடைய ஹிருதயத்தில் வியசனத்தைப் போக்கி அருளுகையாலே –
ஆஸ்ரிதர் உடைய விரோதியைப் போக்கி –
அவர்கள் உடைய அபேஷிதம் சம்விதானம் பண்ணும்
ஸ்வபாவன் என்கிற சுத்தியை எனக்கு
பிரகாசிப்பித்தவன் கிடீர்  –

மலைத் திகழ்  சந்தகில் கனக மணியும் கொண்டு –
சஹ்ய பர்வதத்தில் விளங்கா நின்ற சந்தனத்தையும்
அகிலையும் பொன்னையும் ரத்னங்களையும்
வாரிக் கொண்டு போந்து –

வந்துந்தி வயல்கள் தோறும் மடைகள் பாய
அலைத்து  வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –
பாரம் பொறுக்க மாட்டாமை சுமை பொகடுவாரைப் போலே தள்ளி –
வயல் என்று பேர் பெற்ற இடம் எங்கும்
மடைகள் தோறும் வந்து பாயா நிற்கும் ஆய்த்து-பொன்னி யானது –
இப்படி அலைத்துக் கொண்டு பெருகி வாரா நின்ற காவிரியால் வந்த
நிரவதிக சம்பத்தை உடைய –
அவன் தான் ஆர்த்தர் இருந்த இடம் எங்கும் வந்து ரஷிக்குமா போலே வந்து பாயா நிற்கும் ஆய்த்து –

———————————————————————–

பொய்கை–ஒரு முதலை -யானை பெரு மிடறு செய்ய வந்து ரஷித்தவன்
சம்சார பிரளயம்-ஐந்து முதலைகள் இங்கு
ரக்ஷிக்க வா என்று கூப்பிடக் கூட அறியாத பூமியை ரக்ஷித்து அருளின
வராஹா நாயனார் போல் வந்து ரஷித்து அருளுவான் என்கிறார் இதில் –

சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றியாகி
இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை   வைத்து அருளிய வெம் மீசன் காண்மின்
புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும்   குயில் கூவ மயில்கள்  ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4-

பூகம்-கமுகு-

சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றியாகி –
சிலம்பு துடக்கமான ஆபரணங்கள்
பலவற்றையும் அணிந்து
ஒரு மேருவானது நின்று விளங்குமா போலே
வராஹ வேஷத்தை உடையனாய் –

இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை   வைத்து அருளிய வெம்மீசன் காண்மின் –
அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி –
அந்த பூமிக்கும் அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை அணைத்து-
அந்த பூமி தன்னை திரு எயிற்றிலே ஒரு நீல மணி அழுத்தினால் போலே
வைத்து அருளின அச் செயலைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவன் கிடீர் –

புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் –
அழகிய சிறகை உடைத்தான வண்டுகள்
மதுபான மத்தமாய்த் த்வநிக்க –

பூகம் தொக்கப் பொழில்கள் தொறும்   குயில் கூவ –
கமுகுகள் திரண்ட சோலைகள் தோறும் குயில்கள் ஆனவை
முக்தர் சாமகானம் பண்ணுமா போலே கூவ –

மயில்கள்  ஆல –
அதினுடைய பாட்டுக்கு ஈடாக மயில்கள் ஆலிக்க –

அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத்து –
அலைத்து கொடு வருகிற திரைகளை உடைத்தான
ஜலமானது   பர்யந்தம் எங்கும்  சூழ்கையால் வந்த
நிரவதிக சம்பத்தை உடைத்தாய் –

தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –
சம்சார விபூதிக்கு ஆபரணம் போலே இருக்கிற
திரு அழுந்தூரிலே –

———————————————————

விரோதி நிரசனங்கள் இதில்
கீழே அனுகூல கஜேந்திர ரக்ஷணம்
ஜகத் ரக்ஷணம்
நாங்களோ பிரதி கூலர்
விரோதிகளும் கனத்து இருக்க
ரக்ஷிக்கும் படி -எங்கனம்
ஸர்வ சக்தன் -நரஸிம்ஹ ரூபனாய் ஹிரண்ய நிரஸனம்
பூதனா நிரசனங்கள் இதில் –

சின மேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு
மன மேவும் வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள வுயிர் வவ்விய  வெம் மாயோன் காண்மின்
இன மேவும் வரி வளைக்கை ஏந்தும் கோவை ஏய்வாய மரகதம் போல் கிளியின் இன் சொல்
அன மேவு நடை மடவார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர்  நின்றுகந்த வமரர் கோவே —7-8-5-

மாயோன்-ஆச்சர்ய சேஷ்டிதங்களைப் பண்ணி அத்தை எனக்கு பிரகாசித்து அருளினவன்
இங்கு பிரகலாதன ஆழ்வானும் கர்ப்ப க்ருஹத்தில் உண்டே-

சின மேவும் அடல் அரியின் உருவமாகித் –
சிறுக்கன் பக்கலிலே அவன் மிகைத்து வரப் புக்கவாறே
அது கண்டு பொறுக்க மாட்டாமை
சினத்தை இட்டு வகுத்தால் போலேயே
கிட்ட ஒண்ணாத நரசிம்ஹ வேஷத்தை உடையனாய் –

திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு –
நரசிம்ஹத்துக்கும் பிற்காலியாத
மிடுக்கை உடைய ஹிரண்யன் உடைய
உடலைக் கீண்டு –

மன மேவும் வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள வுயிர் வவ்விய வெம் மாயோன் காண்மின் –
இவனுடைய பருவத்தைக் கண்டால் –
கெட்டேன் இவனை அழியச் செய்கையால்
நெஞ்சிலே (இரக்கம் இல்லாமல் ) பொருந்தி இருக்கிற வஞ்சனத்தை உடையளாய் கொண்டு வந்த பூதனை
முடியும்படி அவள் உடைய முலை வழியே
அவளுடைய பிராணங்களும் வற்றி வரும்படி முலையை அமுது செய்த
ஆச்சர்ய பூதன் கிடி கோள்
இங்கு வந்து நிற்கிறவன் –

இன மேவும் வரி வளைக்கை ஏந்தும் கோவை ஏய்வாய மரகதம் போல் கிளியின் இன் சொல்
தர்ச நீயமான வளையை உடைத்தான கைகளாலே ஏந்தப் பட்டு
இவர்கள் தங்களோடு ஒத்து கோவை போன்ற அதரத்தை உடைத்தாய்
மரகதம் போன்ற நிறத்தை உடைத்தாய் இருக்கிற்
கிளியினுடைய பேச்சுப் போலே
இனிதான பேச்சை உடையராய் –
கற்ப்பிக்கிற வர்கள் பேச்சும் கிளியின் பேச்சும் வாசி தெரியாது –
(ஆச்சார்யர் உச்சாரணம் சிஷ்யர் அதே போல் இருப்பது போல் இங்கும் )

அன மேவு நடை மடவார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர்  நின்றுகந்த வமரர் கோவே –
அன்னம் போன்ற நடையை உடைய ஸ்திரீகள்
நெருங்கி வர்த்திக்கையால் வந்த நிரவதிக சம்பத்தை உடைய –

———————————————————–

விரோதி நிரசன சீலன் ஆகிலும்
பிரயோஜனாந்தர நசைகள் இல்லாமல் நாங்கள் இருக்க
இந்திரனுக்கும் உதவியவர் அன்றோ
தன்னை இரப்பாளன் ஆக்கி அவர்களுக்கும் கார்யம் செய்யும் சீலன் அன்றோ –

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்
தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர்  நின்றுகந்த வமரர் கோவே –7-8-6-

தம்-ஈஸ்வரோஹம் -என்றும் வான் உலகம் அடைவதே ப்ராப்யம் என்று இருக்கும் தேவர்கள் –
மாணாய் இல்லாமல் மாண் உருவாய் -கொண்ட கோலம் அன்றோ -உருவத்தின் சீர்மை –

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி –
அநந்ய சரண்யராய்
அவனை அல்லாது அறியாத
தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து  தோன்றுமவர்களுக்குக்காக அன்றிக்கே
கார்யம் செய்து தலைக் கட்டின அநந்தரம்
நான் ஈஸ்வரன் என்னும் தேவர்களுக்கு
அசூரர்களால் வந்த துக்கம் போம்படி வந்து அவதரித்து –

மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித் தானமர வேழலகு மளந்த
அவன் பக்கலிலே பெறா விடில் ஜீவிக்க அரிது -என்று
தோற்றும் இரப்பிலே தகண் ஏறின வடிவை உடையனாய் –
தனக்கு இல்லாதது மூவடியாய் –
அது உடையான் மகா பலியாய் –
அவன் கையில் தான் நீர் ஏற்றுப் பெற்று-
அந்த திருவடிகளின் கீழே ஏழு வகைப் பட்ட லோகங்களும்
அடங்கும்படிக்கு ஈடாக வளர்ந்து –

வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின் –
வெற்றியை உடைத்தாய்
அத்விதீயமாய்
ஆயதங்களுக்கு எல்லாம் பிரதாநமாய் இருக்கிற
திரு ஆழியைப் பரிகரமாக உடையவனான என் ஸ்வாமி கிடி கோள்

த்ரிவிக்ரம  க்ரமாக்ராந்த த்ரைலோக்யஸ் ஸ்ப்புரதாயூத –  என்கிறபடியே
இருக்கிற
திவ்ய ஆயுதங்களை உடையவன் –
ஜிதம்  பகவதா ஜகத்  -ஹரி வம்ச ஸ்லோகம் -ஜாம்பவான் கொண்டாடியது
(ஆழி எழ இத்யாதி )

தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச்
தேன் மாறாத பொழில் களாலே
தழுவப் பட்ட அழகை உடைத்தான வீதி –

செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
அழகிய மாடங்கள் மாளிகைகள் கூடங்கள்
மற்றும் அவகாசம் உள்ள இடம் எங்கும் –

ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர்  நின்றுகந்த வமரர் கோவே-
வித்யா வினயங்களால்
(ஆத்ம குணங்களால் )சம்பன்னராய்
பழையதான சீரையும் உடையராய்
நிரவதிக சம்பத்தை உடைய தேசம் –

———————————————————————

கீழே ப்ரயோஜனாந்தர ரக்ஷணம்
இப்படி அவன் செய்ய ஹேது
பிராட்டி போல் சேதனர் அனைவருக்கும் செய்பவன்
அவளது உகப்புக்காகவே ரக்ஷித்து அருளுபவன்
சக்ரவர்த்தி திருமகன் அனுபவம் இதில்
அடுத்து இரண்டு பாசுரங்களில் கிருஷ்ண அனுபவம் –

பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்
அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின்
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி  யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே—7-8-7-

பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன் –
சர்வேஸ்வரன் சந்நிதியிலும் பந்து கொண்டு போது போக்க வேண்டும் படியாய் –
அந்த பந்து தொடவும் பொறாதபடியான விரலை உடைய
பெரிய பிராட்டியாரோடு உண்டான சம்ஸ்லேஷத்துக்காக –
பிரிவுக்கு ஹேது பூதனாய்
சந்த்ராதித்யர்கள் மேலே சஞ்சரிக்கப் பெறாத அரணை உடைத்தாய் இருக்கிற
இலங்கைக்கு நிர்வாஹகனான ராவணன் உடைய –

அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின் –
அறுக்க அறுக்க முளைக்கையாலே அவதி இன்றிக்கே இருப்பதாய்
திண்ணியுதமாய் இருக்கிற தோள்களும் தலைகளும் தெறித்துப் பாய் வீழ
ஒரு கொலை அம்பாலே எய்து
அவனை அழித்து
விரோதி போக்கப் பெற்றோம் -ஆஸ்ரிதர்களும் குடி இருப்புப் பெற்றார்கள் –
என்று அவர்களுக்கு உகவக் கடவ உகப்பை தான் உகந்த
சர்வேஸ்வரன் கிடீர் –

செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் –
அர்த்தத்தை நேராக காட்ட வல்ல தமிழும்
சம்ஸ்க்ருதமும்
இவை அடங்க விளங்குகிற நாவை உடையருமாய்
தனித் தனியே சதுர்முகனைப் போலே சிருஷ்டி ஷமராய் இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற –

செம்மை மிக்க அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி  யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே  –
இப்படி வை லஷண்யம் விஞ்சி இருந்துள்ள பிராமணர் உடைய ஹோம தூமத்தையும்
அழகிய செல்வத்தையும் உடைய அணி அழுந்தூர் –

————————————————————————-

கீழே பிராட்டி போல் சேதனர்கள் இடமும் அபி நிவிஷ்டனாய் இருப்பதற்கு மூலம் என் -என்ன –
ஆஸ்ரித கர ஸ்பர்சம் இல்லாவிடில் தரிக்க மாட்டாத ஸ்வ பாவன்
ஆஸ்ரிதர்கள் அனைவர் இடமும் பேர் அன்பு காட்டுபவன் அன்றோ என்கிறார் –

கும்ப மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ  விடை யடர்த்துக்   குரவை கோத்து
வம்பவிழும் மலர்க் குழலாள் யாய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்
செம் பவள மரகதம் நன் முத்தம் காட்டத் திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
அம் பொன் மதிள் சூழ்ந்து அழகார் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த வமரர் கோவே —7-8-8-

கும்ப மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து –
ஆனைகளோடும் மலைகளோடும் பொருது
புண் பட்ட மஸ்தகத்தை உடைத்தாய்
குட்டிச் சுவர் போலே தளர்ந்து விழும்படி
அதனுடைய கொம்பை அநாயாசேன பறித்து –

மழ  விடை யடர்த்துக்  –
பருவத்தால் இளையதாய்
காட்டுக் காட்டு என்று மிருத்யு சத்ருசமாய் இருக்கிற
வ்ருஷபங்கள் ஏழையும்
அழியச் செய்து –

குரவை கோத்து –
பெண்கள் உடைய குரவை கூத்தில் தன்னையும் ஒருவனாக
விட்டுக் கோத்து –

வம்பவிழும் மலர்க் குழலாள் யாய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின் –
விரோதி வர்க்கத்தை தானே கை தொட்டு போக்கினவன் –
அனுகூல ஸ்பர்சம் ஒழிய த்ரவ்யம் ஒழிய செல்லாமையாலே
பரிமள பிரசுரமான பூவை உடைத்தான குழலை உடைய யசோதை பிராட்டி வைத்த
தயிரையும் வெண்ணெயும் அமுது செய்து
அத்தாலே பெறாப் பேறு பெற்றானாக இருக்கிற
ஆச்சர்ய பூதன் கிடீர் –

செம்பவள மரகதம் நன் முத்தம் காட்டத் திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
அங்கு உண்டான கமுகுகளில் பாளைகள் முத்தைக் காட்ட
பசும் காயானது மரகதத்தைக் காட்ட
பழங்கா யானது பவளத்தைக் காட்ட
ஆக இப்படி மூன்றும்
ஒரு காலே கண்டு அனுபவிக்கலாம்படி இருப்பதாய் –
வாழைகளின் உடைய மிகுதியால் வந்த அழகு குறைவற்று
எங்கும் ஒக்க ஸ்ப்ருஹணீயமாய்-

அம் பொன் மதிள் சூழ்ந்து அழகார் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த வமரர் கோவே    –
அரணாகப் போரும்படியான  மதிளாலே சூழப் பட்ட
பொழிலை உடைத்தாய் இருக்கிற  திரு வழுந்தூர்-

——————————————————————

ஆஸ்ரிதகர ஸ்பர்சம் -அல்லது தரியாத வியாமோஹம்
அந்த வ்யாமிஹம் தூண்ட அன்பர்கள் விரோதி போக்குபவன்
நேமியைக் கைவிட்டால் அன்றோ ஆஸ்ரிதர்களை கைவிடுவான் –

ஊடேறு கஞ்சனொடு வில்லும் மல்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற
நீடேறு பெரு வலித் தோளுடை வென்றி நிலவு புகழ் நேமி யங்கை நெடியோன் காண்மின் –
சேடேறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித் திரு விழவில்  மணி யணிந்த திண்ணை தோறும்
ஆடேறு மலர்க் குழலார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே —7-8-9-

10 வயசு நிறைந்த பின்பு கம்ச வதம் -நம்பி பிறந்த ஏழு திங்களில் சகடாசூர வதம் –
எல்லாம் ஒன்றாகத் தோற்றுகிறது இவருக்கு

ஊடேறு கஞ்சனொடு -வில்லும் மல்லும்-
தன் பயத்தாலே உயர மஞ்சத்திலே போயேறி நிற்கிற
கம்சனோடே கூட –
அவன் தனக்கு அரணாக நிறுத்தின மல்ல வர்க்கமும்
வில் விழாவுக்கு என்று விட்டு வைத்த வில்லும் –

ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற –
ஆனை நலிந்தது என்று மாதுலனாய் கண்ண நீரை
விழ விட்டு
இருப்பதாக கோலின குவலயா பீடமும் –
அசூரா வேசத்தாலே தொட்டில் பருவத்திலே
மேலே வந்து விழக்  கோலின சகடமும் –
இவற்றை எல்லாம் ஒரு காலே அழியச் செய்தாப் போலே
தோற்றுகிறது யாய்த்து
இவர்க்கு அனுசந்தானத்தில் வைசத்யத்தாலே  –
(சம காலத்தில் நடந்தது போல் விசதமாகக் காட்டக் கண்டு அருளிச் செய்கிறார் –
வைசத்யத்தாலே-விளக்கமான தர்சனத்தாலே )

நீடேறு பெரு வலித் தோளுடை வென்றி நிலவு புகழ் நேமி யங்கை நெடியோன் காண்மின் –
நாள் செல்ல நாள் செல்ல மிடுக்கு ஏறி வாரா நிற்பதான
தோளை உடையனாய்
விஜயமானது எப்போதும் ஒக்க வர்த்தியா நின்ற புகழை உடைத்தான
திரு வாழியைக் கையிலே  உடைய சர்வாதிகன் கிடீர் –

சேடேறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித் திரு விழவில் மணி யணிந்த திண்ணை தோறும்
இளமை மிக்கு வருகிற பொழிலாலே தழுவப் பட்டு
அத்தாலே எழில் மிக்கு இருக்கிற திரு வீதியிலே திரு நாள்களில்
ரத்னங்களால் அழுத்தப் பட்ட திண்ணைகள்  தோறும்-

ஆடேறு மலர்க் குழலார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே —
ஆடுகைக்காக ஏறின புஷ்பாதிகளால் அலங்க்ருதமான
குழலை உடைய ஸ்திரீகள் உடைய நெருக்கத்தால் வந்த
நிரதிசய
சம்பத்தை உடைய திரு வழுந்தூரிலே
ஆடு -என்று பரிமளம்
பரிமளம் மிக்கு இருந்த மலர்க் குழல் –

———————————————————-

பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல்  வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர்  ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே —7-8-10-

பன்றியாய் மீனாகி யரியாய் –
ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால்
தன்னைப் பேணாமையும் ரஷிக்குமவன் ஆய்த்து –

பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை –
பூமியை சிருஷ்டித்து
பன்றியாய் இத்யாதிகளால் காத்து -அத்தை ரஷித்து
திரியவும்
பிரளயம் வர -வயிற்றிலே வைத்து –
திரிய வெளிநாடு காணப் புறப்பட விட்டு
இப்படி சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில்
தன்னை எண்ணினால் பின்னை ஒருவரையும் எண்ணாது இருக்கிற
சர்வாதிகனை –

அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் –
அபிமானிகளான ப்ரஹ்மாதிகளும் வந்து ஆஸ்ரயித்து
தம்தாமுடைய அபிமதங்கள்
பெற்றுப் போம்படியாக வந்து நிற்கிற இடம் ஆய்த்து –
தேவர்களுக்கு எல்லாம் நியாமகனாய் இருக்கிற இந்த்ரனும்
இவ்வருகில் உள்ளாரில் காட்டில் விஜாதீயமான ஜென்மத்தை உடைய ப்ரஹ்மாவும்
அவன் மகனான ருத்ரனும்  –

அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை –
திருவடிகளில் விழுந்து  ஆஸ்ரயிக்க
திரு வழுந்தூரிலே நின்று அருளின
சர்வாதிகன் ஆனவனை –

கன்றி நெடு வேல்  வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல் –
சத்ரு நிரசனம் பண்ணிக் கறை கழற்ற அவசரம் இன்றிக்கே இருப்பதாய்
மஹத் தனு -என்னுமா போலே
ஒருவரால் நியமித்து ஆள ஒண்ணாத படி நெடிதாய் இருந்துள்ள வேலைக்
கையிலே கொண்ட ஆழ்வார்
ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த இனிய பாடலான –

ஒன்றினோடு நான்கும் ஓர்  ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே –
இப் பத்தையும் வல்லார்-
ஒன்றினோடு நான்கும் ஓர்  ஐந்தும்-என்று தாம் சேர்த்து அனுபவித்த பிரகாரம் இருக்கிறபடி –

முதல் பாட்டு -ஷீரார்ணவம்-அவதார கந்தம் –
2-4-5-10—அங்கு நின்று-திர்யக் திருவவதாரம் -நான்கு பாடல்களிலும்
ஆகவே ஒன்றினோடு நாலும் ஒரு பிரகரணம்
அடுத்து ஐந்தும் -தேவ மனுஷ்ய வேறே பிரகரணம்
ஹரியாய்–வாமன -ராம -கிருஷ்ண -அவதாரங்கள்
கஜேந்திர ரஷணம் வாமன – ராம கிருஷ்ண திரு வவதாரம் -மீது ஐந்து பாசுரங்கள்

இவற்றை அப்யசிக்க வல்லாருக்கு
ப்ரஹ்மாதிகள் உடைய பதம் உண்டாக முன்னம் தட்டில்லை –
திருமங்கை ஆழ்வார் தாம் பாகவத சேஷத்வம் ஆக்குகைக்கு
உடலாய் இருக்கையாலே ஐஸ்வர் யத்தையும் ஆதரித்து அருளினார்
என்று அருளிச் செய்வர் –

———-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

செங்கண் பொன்னன் கஞ்சன் மல்லர் இலங்கையன்
மங்க மறை இந்திரன் வெள்ளம் பூ மங்கை
அளிக்கும் அழுந்தூர் அமரர் கோ அடைந்து உய்யும் என்
கலியன் கெடுக்கும் கள்ளம் -68-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-7-6–சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 8, 2014

கோகுலத்தில் இருந்து மாடுகளை தேடி தெற்கே வர
கோ சகன் -ஆ மருவி அப்பன் -விடாமல் கூடவே ஆனந்தமாக –
கீழே மகள் பாசுரம் பார்த்தோம்
இதில் உகந்து பாடுகிறார் -சமாதானம் ப்ரவேசத்தில் காட்டி அருளுகிறார் –

சிங்கமதாய் -பிரவேசம் –

போன புனிதர் -7-5-9–என்று இன்னாதானார் –
(புனிதர் சுத்தர் -ப்ரணய ரஸம் இல்லா யோகி முனி –முனிவர் கோபிப்பவர்
என்றே சொல்லும்படி )
நாம் எங்கேனும் போனோமோ –
உமக்காகா வன்றோ இவ்வவோ இடங்களில் வந்து நிற்கிறது –
என்று உகந்து அருளின கோயில்களில் நிலையைக் காட்டினான்  –

இனித் தான் சிறுக்கன் உடைய பிரதிஞ்ஞா சம காலத்திலேயே வந்து
உதவினவன்  என்று நம்மை நீர் அறிந்து இலீரோ –
(அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப்பிரான் அன்றோ )

உமக்கு நினைத்த வகை எல்லாம் பரிமாறுகைக்காக இங்கே வந்து நின்றோம் –
உம்முடைய விரோதியைப் போக்கி
உம்மை அடிமை கொள்ளுகைக்காக இங்கே வந்து நின்றோம் –
என்று திரு வழுந்தூரிலே
நிற்கிற நிலையைக் காட்டக் கண்டு  த்ருப்தராய் அனுபவிக்கிறார் –

ததேவ கோபாயா யத பிரசாதாய ச ஜாயதே -என்கிறபடியே
இந் நிலை தான் ( அர்ச்சாவதாரம் )இவர்க்கு இழவுக்கும் உடலாய்
பேற்றுக்கும் உடலாய் யாய்த்து இருப்பது –

ஆகையால் இப்போது தமக்கு சமாதானமாய் விட்டது   –

(அப்பு அரும்பதம் -கீழே போன புனிதர் -இங்கே கண்டு கொண்டேன் -களித்து –
ஆஸ்ரிதர் சொன்னபடி செய்வதை அறிவிக்க ஹ்ருஷ்டர் ஆகிறார் )

—————————————————

சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
சங்க மிடத்தானைத் தழலாழி  வலத்தானைச்
செங்கமலத் தயனனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே —7-6-1-

தென்-அழகான

சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த்-
நரசிம்ஹ வேஷத்தை உடையனாய் அவுணன் உண்டு -ஹிரண்யன் –
அவனுடைய மிடுக்கை உடைய சரீரத்தை
சிறுக்கன் உடைய பிரதிஞ்ஞைக்கு முற்பாடனாய் கொண்டு
வந்து கிழித்து
அவனுடைய விரோதி போகப் பெற்றத்தால் வந்த உகப்பும் தன்னதாம் படி –
விரோதியைப் போக்குவானும் தானாய்
அத்தால் உகப்பானும் தானாய் -இருக்கிற் படி –
சிறு பிரஜை பால் குடித்தால் உகப்பாள் தாய் இறே –
( ப்ராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் அவனே )

சங்க மிடத்தானைத் தழலாழி  வலத்தானைச்  –
கையில் திவ்ய ஆய்தம் கொண்டு கார்யம் கொள்ள
அறிந்திலன் ஆயத்து –

செங்கமலத் தயனனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற –
சிருஷ்டி கார்யத்துக்கு கடவனான ப்ரஹ்மாவோடே ஒத்து இருக்கிற
பிராமணரதான திரு வழுந்தூரிலே  நித்ய வாஸம் பண்ணுகிற –

அங்கமலக் கண்ணனை-
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை –
(தேவாதி ராஜனே இங்கே சேவை )

அடியேன் கண்டு கொண்டேனே –
அவ் ஊரில்  உள்ளார் உடைய ஜன்மமும் இன்றிக்கே
ஸ்ரீ பிரகலதான் உடைய படியும் இன்றிக்கே
இருக்கிற நான்
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

——————————————

கீழே ஒரு அவுணன் நிரஸனம்
இருபத்தொரு படி கால்-க்ஷத்ரியர் நிரஸனம் இதில் –
பரசுராமர் -பார்க்கவ ராமர் -ஜாமதக்னேயர்- ரோஷ ராமர் -அனுபவம் –

கோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டு அருளும்
மூவா வானவனை முழு நீர் வண்ணனை அடியார்க்கு
ஆவா வென்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே –7-6-2-

பாசுரம் தோறும் அடியார்
தேவாதி தேவன் ஆ ஆ என்று இரங்கும்-திருப்பாவை போல்

கோவானார் மடியக்-
ஒரோ  பிரதேசங்களுக்கு நிர்வாஹகராய்
ஷத்ரியர் என்று பேர் பெற்ற எல்லாரும்
முடியும் படிக்கு ஈடாக –

கொலையார் மழுக் கொண்டு அருளும் –
இருபத்தொரு படி கால் ஷத்ரிய குலத்தை அறுத்துப்
பொகடச் செய்தேயும்
வேறு ஒரு ஆயுதம் வேண்டாத படி இருக்கிற மழுவைக் கொண்டு அருளின

மூவா வானவனை-
ஏக ரூபமான விக்ரஹத்தை உடையவனை –

முழு நீர் வண்ணனை –
ஜல ராசியான கடல் போன்ற நிறத்தை உடையவனை –

அடியார்க்கு ஆவா வென்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற –
அசாதாரண பரிகரத்துக்கு
ஐயோ என்று கிருபையைப் பண்ணி
திரு வழுந்தூரிலே வந்து நிற்கிற

தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே  –
அயர்வறும் அமரர்கள் அதிபதியை
நான் கண்ணாலே காணப் பெற்று
ஷோபம் அடையத் தீர்ந்து
களிக்கப் பெற்றேன் –

(ஷோபம் -கலக்கம் -ஸ்திதோஸ்மி –நாஷ்டோ மோஹ -அர்ஜுனன் போல் )

—————————————————

ஆஸ்ரித விரோதிகளை முடித்தமை கீழே
அந்த விரோதிகளுக்கு ஸஹாய பூதர்களையும் பின்னிடப் பண்ணி
விஜயனாக இருந்தது இதில் –

உடையானை யொலி நீர் உலகங்கள் படைத்தானை
விடையானோடே அன்று விறலாழி விசைத்தானை
அடையார் தென்னிலங்கை அழித்தானை யணி  யழுந்தூர்
உடையானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –7-6-3-

உடையானை –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த சேதனருக்கும்
நிருபாதிக சேஷியாய் உள்ளவனை –

யொலி நீர் உலகங்கள் படைத்தானை –
சர்வமும் உப சம்ஹ்ருதமாய் கிடக்க
கடல் சூழ்ந்த பூமியை சிருஷ்டித்த
காரண பூதனை –

விடையானோடே அன்று விறலாழி விசைத்தானை –
நாட்டுக்கு ரஷகராக நிறுத்தினவர்கள் தாங்களே
அசூரர்களோடே பாதகராய் வரும் அன்றும்
நோக்குமவனை  –

ருத்ரன் கெட்டொட இவன் பண்ணின வியாபாரம் என் என்னில்
மிடுக்கை உடைய திரு வாழியை விதிர்த்தான் இத்தனை இறே

விடையானோடே –
அவன் தான் -பாரவச்யம் சமாயாத -என்று
பரவசனாய்க் கிடந்தும் தெளிந்தும்
கிருஷ்ண கிருஷ்ண மகா பாஹோ -என்னும் இறே சொல்லுவது –

அடையார் தென்னிலங்கை அழித்தானை –
பிராதி கூல்யமேயாய்
அதிலே நிலை நின்றாரை அழியச் செய்யுமவனை –

யணி  யழுந்தூர்  உடையானை –
நித்ய விபூதி உக்தனான சம்பத்துக்கு மேலே ஓன்று காணும் –
திரு வழுந்தூருக்கு கடவன் ஆனது –

கீழே உபய விபூதி யோகத்தையும் சொல்லி
யணி  யழுந்தூர்  உடையானை -என்னும் போது
அதுக்கு மேலே ஒரு சம்பத்து ஆக வேணும் இறே  –
(த்ரிதீய விபூதி அரங்கம் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்)

அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –
அநந்ய கதியான நான் கிட்டப் பெற்று –
அசந்நேவ -என்னும் நிலை தவிர்ந்து –
உஜ்ஜீவித்து –
க்ருதார்த்தனாகப்  பெற்றேன் –

—————————————————————

ருத்ரன் எதிர்ந்தமை கீழே
இந்திரன் எதிர்ந் தமை இதில்
அனுகூலர் அன்றோ இவர்கள்
தானே அதிகாரி புருஷர்களாக நியமித்து -நாட்டினான் தெய்வம் –
அவர்களே ஆஸ்ரித விரோதிகள் ஆனால் வெல்லும் மஹா குணம் இதில் –

குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர்
நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே –7-6-4-

அமர்ந்து உண்ண –மனம் பொருந்தி உகந்து உண்ண –

குன்றால் மாரி தடுத்தவனைக் –
தலைக் காவலாக வைத்த இந்த்ரன்
தானே பாதகனாக நோக்கின படி -சொல்லுகிறது –
அவன் பசி க்ராஹத்தாலே வர்ஷத்தைப் பண்ண
அதுக்கு எதிராக கிடந்த தொரு மலையை எடுத்து பரிக்ரஹித்தவனை –

குல வேழம் அன்று பொன்றாமை அதனுக்கு அருள் செய்த –
நல்ல ஆகரத்திலே பிறந்து
மத முதிதமாய்
செருக்கி
மூலை யடியே திரிகிற யானை யானது
விழுக்காடு அறியாதே
பொய்கையிலே வந்து புக்கு
முதலையின் கையிலே அகப்பட்டு
அது முடிந்து போகாமே
அதின் பக்கலிலே ( நிருஹேதுக )கிருபையைப் பண்ணின  –

போர் ஏற்றை-
அவ் வவஸ்த்தையை அறிந்து
பரிஹரிக்க வல்ல
ஆண் புலியை –

அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர் நின்றானை-
அன்று பசுவின் நெய்யை அமர்ந்து அமுது செய்த
திரு வழுந்தூர் நின்றானை-
திருவாய்ப்பாடியிலே நின்ற படி யாய்த்து இங்கு நிற்பது –
(பசுமாடு கன்றுகளை தேடி ஆ மருவி அன்றோ இங்கு நின்று அருளுகிறார் )

யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே —
கண்ணாலே காணப் பெற்று
அபூர்ணனான நான்
பூர்ணனாகப் பெற்றேன் –

—————————————————–

திருக்கண்ண மங்கை இந்த பதிகம் கடைசியில் -அனுபவம்
கீழே இந்திரன் அனுகூலம் எதிர்த்து -பசியால் பாதகம் -உபாயத்தால் நிவர்த்தகம் அதில் –
வஞ்சனையால் இங்கு -வந்தவர்களை
தானும் வஞ்சித்து நிரசித்தமை இதில்

கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள்  நின்றானை
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச்
செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றம் தன்னை அடியேன்  கண்டு கொண்டேனே –7-6-5-

கஞ்சனைக் காய்ந்தானைக்-
கம்சன் உடைய நினைவை
அவன் தன்னோடே போம் படி முனிந்தவனை   –

கண்ண மங்கையுள்  நின்றானை –
இன்னும் இங்கனே இருந்துள்ள விரோதிகளை போக்கி
ரஷிக்கைக்காக
திருக் கண்ண மங்கையில் நின்றானை –

வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச்
வஞ்சனத்தை உடையளான பூதனை உடைய
முலை வழியிலே பிராணங்களும்  வற்றி வரும்படி
முலையை அமுது செய்தவனை –

செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
யதா பூத வாதியான வேதம்
கை வந்து இருக்கிற பிராமணரதான
திரு வழுந்தூரிலே நிற்கிற –

அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன்  கண்டு கொண்டேனே –
ஸ்ரமஹரமான வடிவை உடையனாய்க்  கொண்டு
தாப த்ரயம் போம் படி நின்றவனை
தாபத் த்ரயத்தாலும் தப்தனாய் இருக்கிற நான் கண்டு
என்னுடைய தாப த்ரயங்கள் தீரப் பெற்றேன் –

——————————————

காய்ந்தவரை காய்ந்தவன் என்றார்
வஞ்சனையால் வந்தோரை வஞ்சித்து முடித்தமையும் கீழே
பெரியாராக எண்ணி இருப்பாற்கு பெரியோனாய் அறிய முடியாதவன் என்கிறார் -இதில்

பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே –7-6-6-

தாபத் த்ரயம் நீங்கப் பெற்று அஞ்சன குன்றம் பார்த்து அநிஷ்ட நிவ்ருத்தி கீழே –
கரியானைக் கண்டு களித்தமை -இஷ்ட பிராப்தி –

பெரியானை –
சர்வ ஸ்மாத் பரனானவனை

யமரர் தலைவற்கும் –
தேவர்களுக்கு எல்லாம் நிர்வாஹகனாய் இருக்கிற இந்த்ரனுக்கும்

பிரமனுக்கும் –
ப்ரஹ்மாவுக்கும் –

உரியானை உகந்தான் அவனுக்கும் –
யானை உரி -தோலை -உகந்த ருத்ரனுக்கும்

உணர்வதனுக்கு அரியானை –
இவர்கள் எல்லாருக்கும்
நெஞ்சால் நினைக்கவும் கூட
அரியனாய் இருந்து உள்ளவனை –

அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும் கரியானை –
திரு அழுந்தூரில் உண்டான பிராமணர் ஆனவர்கள்
திருவடிகளில் ஆஸ்ரயிக்கும் படியாக நிற்கிற
ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –

அடியேன் கண்டு கொண்டு களித்தேனே  –
அனந்யார்ஹனான நான் கண்டு கொண்டு களிக்கப் பெற்றேன் –

——————————————————–

வேதாந்த அர்த்தம் -பெரியோன் ஆனமைக்கு ஹேதுக்கள்
ஜெகதாகாரன் -ஸ்ரீ யபதித்தவம் –

திருவாழ் மார்பன் தன்னைத் திசை மண் எரி நீர் முதலா
உருவாய் நின்றவனை யொலி சேரும் மாருதத்தை
அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே -7-6-7-

யொலி சேரும் மாருதத்தை-பூநிலா ஐந்துமாய் — –கால் இரண்டுமாய் –
தனக்கு அடைத்த ஸ்பர்சத்தையும்-ஆகாச குணமான சப்தத்தையும் உடைத்தாய் இருக்கிற காற்று

திரு வாழ் மார்பன் தன்னைத் –
ஸ்வ வ்யதிரிக்தர் உடைய ஐஸ்வர்யத்துக்கு
நிதான பூதையான பிராட்டி
அகலகில்லேன் -என்று விரும்பி வர்த்திக்கும் படியான மார்வு படைத்தவனை –
ஈசேசி தவ்ய வைஷம்ய நிம்னோன் நத மிதஞ் ஜகத்
நமஸ் ஸ்ரீ ரெங்க நாயக்யை யத்ப்ரூவி ப்ரமபேததா    -என்னக் கடவது இறே-

திசை மண் எரி நீர் முதலா  உருவாய் நின்றவனை –
திசை -திக்குகள்
காரண பூதமான பூத பஞ்சகத்துக்கும் நிர்வாஹகனாய்
அவற்றைத் தனக்கு சரீர தயா சேஷமாக உடையவனை  –

யொலி சேரும் மாருதத்தை-
தனக்கு அடைத்த ஸ்பர்சத்தையும்
ஆகாச குணமான சப்தத்தையும்
உடைத்தாய் இருக்கிற காற்றுத்
தனக்கு பிரகாரமாக உடையவன் ஆனவனை –

அருவாய் நின்றவனைத்-
இப்படி காரண பூதமான பதார்த்தங்களைக் கொண்டு
தேவாதி கார்யங்கள் அடைய உண்டாக்கி
தத் அநு பிரவச்ய -என்கிறபடியே
ஜீவத்வாரா அவற்றிலே அநு பிரவேசித்து
பின்னை அவற்றைச் சொல்லும் சொல்லு தன்னளவும் வரும்படி
இவற்றுக்கு அடங்கலாரன பூதனாய்
நிற்கிறவனை –

தென் அழுந்தையில் மன்னி நின்ற-
திரு வழுந்தையிலே நித்ய வாஸம் பண்ணுகிற –

கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே —
அடி உடைத்தான கல்பகம்  ஆய்த்து-
ஸ்வர்க்கத்திலே நிராலம்பநமாக நிற்கிறது அன்றிக்கே
பூமியிலே வேர்ப் பற்று உண்டான கற்பகத்தைக் கண்டு கொண்டு
என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று
ஹ்ருஷ்டன் ஆனேன் –

——————————

ஸ்ரீ யபதித்தவம் சர்வ அந்தராத்மா என்று அனுசந்தித்தார் கீழே
அந்த இரண்டாலும் தம்மை ஆள் கொள்ள வல்லவன் –
ப்ராபகன் -சேர்ப்பிக்க அவளும் இருக்க என்ன கவலை –

நிலையாளாக வென்னை உகந்தானை நிலமகள் தன்
முலையாள் வித்தகனை முது நான்மறை வீதி தோறும்
அலையாரும் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கலையார் சொற் பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே —7-6-8-

நிலையாளாக வென்னை உகந்தானை –
தேஹி மே ததாமி தே -என்னும் படி
ஏற்றுக் கொண்டு போகாமே
நித்ய கைங்கர்யத்திலே என்னை அந்வயிக்கும் படி உகந்தானை –
(எழுவார் விடை கொள்வார் போல் இல்லாமல் நிலையாக
உகந்தானை -திரு உள்ள ஹர்ஷத்தாலே கைங்கர்யம் )

தபஸ்ஸாலும் சமாதி யாலும் பெறுவது ஓன்று அல்ல காணும் –
அவன் உகப்பாலே பெறில் பெரும் இத்தனை அல்லது
பெற வரியது காணும்  –

நில மகள் தன் முலையாள் வித்தகனை –
ஸ்ரீ பூமிப் பிராட்டியார் உடைய திரு முலைத் தடத்துக்கு
ஆனைக்கு குதிரை வைக்க வல்ல
ஆச்சர்ய பூதனை -(அணைத்து ஆள்பவன் )

முது நான்மறை வீதி தோறும் அலையாரும் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னி நின்ற –
முது நான்மறை உண்டு -பாசி பூத்த வேதம் –
அது திரு வீதிகள் தோறும் திரைக் கிளப்பத்தை உடைய
கடல் போலே கோஷியா நின்றுள்ள
தென் அழுந்தையில் மன்னி நின்ற –

கலையார் சொற் பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே –
சகல கலைகளாலும் புருஷார்த்தமாக
பிரதிபாதிக்கப் பட்டவனைக் கண்டு கொண்டு
என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று
ஹ்ருஷ்டன் ஆனேன் –

நிலையாளாக வென்னை உகந்தானை-ப்ராபகம்
கலையார் சொற் பொருளை-ப்ராபகம்

—————————————————–

மிதுனமே உத்தேச்யம் –
கைங்கர்யத்துக்கு விஷயம் –

பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர்
வாரார் வன முலையாள் மலர் மங்கை நாயகனை
ஆரா வின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-

பேரானைக் –
திருப் பேரிலே சந்நிஹிதன் ஆனவனை –

குடந்தை பெருமானை –
திருக் குடந்தையிலே வந்து கண் வளர்ந்து தன்னுடைய
சேஷித்வத்தை
உதறிப்  -பிரகாசிப்பிக்க – படுத்தினவனை

இலங்கொளி சேர் வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை –
நித்தியமான யௌவனத்தை உடைய
பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவனை –

ஆரா வின்னமுதைத் –
அவ் விருவருமான சேர்த்தி
இவருக்கு இனிதாய் இருக்கிறபடி –

தென் அழுந்தையில் மன்னி நின்ற –
திரு அழுந்தூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற –

காரர் கரு முகிலைக் –
கார் காலத்திலேயே மேகம் போலே
ஸ்ரமஹரமான வடிவு அழகை உடையவனை –

கண்டு கொண்டு களித்தேனே-
கண்கள் குளிரக் காணப் பெற்று
ஹ்ருஷ்டன் ஆனேன் –

————————————————–

திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அற முதல் ஆனவனை யணி யாலியர் கோன் மருவார்
கறை நெடு வேல்  வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்
முறை வழுவாமை வல்லார் முழுதாள்வர் வானுலகே—7-6-10-

திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற –
மிடுக்கில் வந்தால் தேவ சேநாபதியான ஸூப்ரஹ்மண்யனில்
குறைந்தார் இல்லை யாய்த்து அவ் ஊரில் –

அற முதல் ஆனவனை –
தர்மத்தின் உடைய வேர்ப் பற்றானவனை –
ஸ்வ ஜன ரஷணம்
ஜீவ லோக ரஷணம்
ஆஸ்ரித ரஷணம்
என்று சொல்லப் படுகிற தர்மங்களுக்கு வேர்ப் பற்றானவனை –

யணி யாலியர் கோன் –
சம்சாரத்துக்கு ஆபரணமான
திருவாலியில் உள்ளாருக்கு நியாமகராய் உள்ளார் –

மருவார் கறை நெடு வேல்  வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும் –
சத்ரு நிரசனத்தில் வந்தால்
கறை கழற்ற அவசரம் இல்லாத படி இருப்பதாய் –
நெடியதான வேலைக் கையிலே உடையரான ஆழ்வார்
ஒலியை உடைத்தாம்படி அருளிச் செய்த இப் பத்தையும் –

முறை வழுவாமை வல்லார் முழுதாள்வர் வானுலகே   –
அடைவில் தப்பாதபடி அனுசந்திக்க வல்லவர்கள்
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே
த்ரிபாத் விபூதி அடையத் தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்கள் –

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

சிங்கம் விண்டார்க்கு அன்பன் தொண்டர்க்கு காப்பவன்
பொங்கு வித்தாய் மூவர் வாக்கு எட்டான் பூ நங்கை சேர்
ஆராவமுதை அழுந்தைக் கண்டு இன்புறும்
சீரார் நீலன் நம் திரு -66-

விண்டார் -அடியார்களுக்கு சத்ருக்கள் -/காக்கும் இயல்பினன் கண்ணபிரான் /
பொங்கும் வித்து -த்ரிவித காரணன்
மூவர் வாக்கு எட்டான் -இந்திரன் அயன் அரன்-வாக்கு எட்டான்-
யானும் ஏத்தி ஏழு உலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்-

——————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-7-5-தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நல்லிருள் கண் வந்த-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 8, 2014

4-8-பார்த்தன் பள்ளி தாய் பாசுரம்
5-5-திருவரங்கம் தாய்
6 பத்தில் எதுவுமே இல்லை
7-5- மகள் பாசுரம் -அடையாளம் ஸ்பஷ்டமாக ஏழாவது எட்டாவது ஒன்பதாவது பாசுரங்களில் ஸூ சகம்-
4-8 திருவாய் மொழியும் இப்படி ஸூ சகம் -வரிவளையால் 7-8-9-குறைவிலோமே-
7-8-9 பாசுரங்களில் அங்கும் -பேசிற்றெ பேசும் ஏக கண்டர்கள்

கோ சகன் -ஆ மருவி அப்பன் –

தந்தை கால் பிரவேசம் –

கீழே பாகவத சேஷத்வத்தை அனுசந்தித்தார் –
அது பகவத் விஷயத்துக்கு உத்தம்பகமாய் இருக்கும் இறே-
ஆகையால் அபேஷை பிறந்தது –
பிறந்த அபேஷை தான் -வரில் பொகடேன்-கெடல் தேடேன் –   என்று
ஆறி இருக்கும் அளவு அன்றிக்கே
இப்போதே பெற வேணும் என்னும் அளவாய் இருந்தது –

அப்போதே பெறாமையால் வந்த ஆற்றாமை
ஒரு பிராட்டி தசையைப் பிறப்பிக்க
அத்தாலே அவனோடு காதா சித்கமாக சம்ஸ்லேஷத்தை உடையளாய் இருப்பாள் ஒருத்தி
நம்மோடு நித்ய சம்ஸ்லேஷத்தை பிறப்பிக்கைகாக
திரு வழுந்தூரிலே  வந்து சந்நிஹிதன் ஆனான் என்று
அவள் பாசுரத்தாலே அங்குத்தைப் படிகளை
அனுசந்திக்கிறார் –

கீழே பாகவத சேஷத்வம் எல்லை அளவு போகையாலே –
அவர்கள் உகப்பாக -பகவத் விஷயத்தில் ஈடுபட்டு அனைத்தும் இழந்து
பிராட்டி தசை -7-8-9 பாட்டுக்களில் குறிப்பு இருப்பதால் நாயகி பாவம் –

—————————————————–

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ  நல்லிருள் கண்  வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1-

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ  –
ஆபத்திலே வந்து உதவி
அவற்றைப் போக்கும் ஸ்வபாவன் ஆய்த்து-
ஸ்ரீ வசுதேவர் காலில் உண்டான  பெரு விலங்கு உண்டு –
எட்டு கர்ப்பத்துக்கே அவ்வருகே இட்ட விலங்கு
அது தன்னடையே விட்டுப் போம்படியாக –
இவன் வந்து அவதரித்த அநந்தரம்
திருவாய்ப்பாடி ஏறக் கொண்டு போக வல்லாரானார் இறே  –

நல்லிருள் கண்  வந்த எந்தை பெருமானார் –
கம்சன் காவலாக வைத்த துஷ் பிரக்ருதிகள்
கண் படாத படி செறிந்த இருளிலே வந்து தோன்றின
என்னுடைய குல நாதர் ஆனவர் –

வந்த –
ஸ்ரீ வசுதேவருக்கு அன்றி தமக்காகத் தான் வந்து உதவிற்று –

மருவி நின்ற ஊர் போலும் –
அவ்வதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே
அந்த வசுதேவர் போல்வர் எல்லாருக்கும் உதவுகைக்காக
வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் போலும் –
அவன் நின்ற தேசம் இறே உத்தேச்யம் ஆவது –
பிராப்ய பூதனான அவன் வந்து நிற்கையாலே
நமக்கு பிராப்ய பூமி தான் போலே இருந்தது என்று
ஆதர அதிசயம் தோற்ற சொல்லுகிறது
இது அல்லாத பாட்டுகளில் அவற்றுக்கும் பொருள் –

முந்தி வானம் மழை பொழியும் –
வானமானது முந்தி மழையைப் பொழியும் ஆய்த்து –
இவர்கள் உடைய அபிசந்தி ஒழியவேயும்-
அவாந்தர பலங்கள் முற்பட்டு இருக்கும் ஆய்த்து –

மூவா வுருவில் மறையாளர் –
அங்கு உள்ளார் அடங்கலும் தருணாக்நி ஹோத்ரிகள் ஆய்த்து -இருப்பது –
சாஸ்த்ரோக்தமான க்ரமத்திலே  உப நய நாதி சம்ஸ்காரம் தொடங்கி
பிராப்தமான காலத்திலேயே யாகாதிகளைப் பண்ணி இருப்பார் சிலர் ஆய்த்து –

அந்தி மூன்று அனல் ஓம்பும் –
ஒரு பல அபிசந்தியை பண்ணிச் செய்கிறார்கள் அன்று இறே
நித்ய அனுஷ்டானத்துக்காக கொள்ளுவது   ஒரு பலம் இல்லை இறே –
ஆகையால் இதுவே யாத்ரையாய் –
(ஓம்பும் வர்த்தமானம் )

அணியார் வீதி அழுந்தூரே –

தர்ச நீயமான வீதியை உடைத்தான தேசம் –

———————————————————–

வந்து தோன்றிய அனுசந்தானம் கீழ்
அவதார பிரயோஜனம் இதில் –
பூ பாரம் தீர்க்கவே -இதுவே பிரதான பிரயோஜனம் –

பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாளப் பாரதத்துத்
தேரில் பாகனாயூர்ந்த தேவ தேவனூர் போலும்
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன  குருகினங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-2-

பாரித்து எழுந்த-
இன்று சாரதியைப் பிடிக்கக் கடவோம் -என்று ஒருப்பட்டு வந்த
வெறுங்கையோடு க்ருஹத்தில் போய்ப் புக்கவாறே
பொய்யாசனம் இட்டு
வஞ்சிக்கத் தேடினார்கள் இறே-

படை மன்னர் தம்மை மாளப் பாரதத்துத் –
சாயுதரான ராஜாக்கள் ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு
முடிந்து
தேர் காலிலே துகை உண்டு கிடக்க –

தம்மை மாள –
அவர்கள் தாங்கள் கோலி வந்ததை
அவர்கள் தங்களோடே போக்கி –

தேரில் பாகனாயூர்ந்த –
தேரில் ரதியாய் நின்று ஊர்ந்தான் ஆகில்
அத்தால் வரும் விஜயமும் தம் தலையிலே கிடக்கும் இறே –
பிரதி பஷமும் அழிய வேணும் –
அர்ஜுனன் தலையில் விஜயமும் கிடக்க வேண்டும் -என்று
அதுக்காக சாரதியாய்க் கொண்டு தேரை நடத்தினான் ஆய்த்து –

ஆழ்வானுக்கு மூலம் வாசித்துப் போந்த சிலரிலே
ஒருவருக்கு கிரந்தம் பார்க்க வேண்டி
ஆழ்வானோடே திரு முடிக் குறையிலே இருந்து பாரா நிற்கச் செய்தே
அரயன் வந்தானாய் –
அவ்வளவில் -அவர் கையில் கிரந்தத்தை
ஆழ்வான் தான் வாங்கி படித்துக் கொண்டு இருந்தானாம் –

தேவ தேவனூர் போலும் –
தன்னை யாராக நினைத்தான் –
அஸ்ப்ருஷ்ட  சம்சார கந்தர்க்கும் அவ்வருகாய் இருக்கிற தான்
சம்சாரிகளில் ஒருவனுக்கு தாழ்வு செய்வதே –

நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன  குருகினங்கள் ஆரல் கவுளோடு அருகு அணையும்-
குருகுகள் ஆனவை திரள் திரளாக
மத்ஸ்ய க்ரஹணத்துக்காக நீர் நிலங்களிலே வந்து இழிந்து
தனக்கு   வாய்க்கு அடங்கும் ஒன்றை க்ரஹித்து
தன் கதுப்பிலே இருக்கச் செய்தே –
வேறே ஒரு பெரிய மத்ஸ்யம்
யாத்ருச்சிகமாக தன் செருக்குப் போக்கு விட்டு மேல் எழப் பாயும் –
அத்தால் வந்த ஹர்ஷத்தாலே பணைத்துக் கொடுக்கும் –
அத்தைக் கண்ட இது தன் சாபலத்தாலே -ஆமிஷம் -என்று கணிசித்து வந்து கிட்டும் –
இதின் வடிவில் பெருமையைக் கண்டு
இது நீர் நிலங்களிலே கிடக்கிறது ஓன்று
பறக்கவும் மாட்டாதே இருக்கிறது ஓன்று -என்று அறிய மாட்டாதே
வெருவி ஓடினது –
பின்னையும் இதன் அருகே வந்து கிட்டா நிற்கும் –

அணியார் வயல் சூழ் அழுந்தூரே –
பாரத சமரத்திலே பீஷ்மாதிகள் -அதி ரதர் மகா ரதர் -என்று இங்கனே
ஆண் பிள்ளைகளாகப் பேர் பெற்று ஜீவித்து இருந்தோம்
இப்போதாக பூசல் கோழைகளாக ஒண்ணாது -என்று
சாரதி பக்கலிலே வந்து கிட்டுவது
தேர் காலில் உழக்குண்டு போக ஒண்ணாது   -என்று  அகலுவதாய்க் கொண்டு
அவர்கள் படுவுற்றை படா நின்றன வாய்த்துக் குருகு இனங்களும் –

———————————————————–

கீழே மஹா பாரதம்
இதிஹாச ஸ்ரேஷ்டமான ராமாயணம் இதில்
சாரதியாய் வென்றது கீழே
ரதியாய் வென்றது இங்கு –

செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும்
உம்பர் வாளிக்கு இலக்காக வுதிர்த்த வுரவோனூர் போலும்
கொம்பிலார்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டினங்கள்
அம்பராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே –7-5-3-

மாதவி-குருக்கத்தி பூ –

செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும் –
அரணை உடைத்தான ஊரிலே அன்றோ இருக்கிறது –
அவ் ஊருக்கு கடவோம் நாம் அன்றோ -என்று
துர்மானம் பண்ணி இருக்கிற ராவணன் உடைய தலைகள் பத்தையும்

உம்பர் வாளிக்கு இலக்காக வுதிர்த்த வுரவோனூர் போலும் –
ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்காக்கி
உதிர்த்துப் பொகட்ட வுரவோனூர் போலும்
இந்த்ராதிகள் உடைய வஜ்ரத்துக்கு அழியாத பையல் தலைகளை
மனிச்சுக்கு ஏகாந்தமான மிடுக்காலே அழித்தான் ஆய்த்து-

கொம்பிலார்ந்த மாதவி மேல் –
கொம்புகள் செறிந்து இருந்துள்ள
குருக்கத்தியின் மேலே –

கோதி மேய்ந்த வண்டினங்கள் –
தன் செருக்காலே தளிரையும் பூக்களையும் கோதி
அவற்றில் நின்றும் மது பானம் பண்ணின வண்டினங்கள் –

அதில் காட்டில் போக்யதையும்
இருட்சியுமாய் இருப்பதொரு பிரதேசம் தேடித் போய் இராத் தங்க வேணும் என்று பார்த்து –

அம்பராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே —
அம்பை இளைப்பிக்கிற கண்ணை உடையராய்
ஆத்மகுணோ பேதைகளாய் இருந்துள்ள  ஸ்திரீகள் உடைய
மயிர் முடியிலே போய்ச் சேரா நிற்கும் –

ஐம் பால் என்று
அஞ்சு வகையான மயிர் முடியைச் சொல்லுகிறது –
கந்தம் -மது -மார்த்த்வம் -ஸ்நிக்ததை -இருட்சி –

——————————————

மிடுக்கை அனுசந்தித்து அது பருவம் நிரம்பி -விசுவாமித்திரர் இடம் கற்ற பெருமாள் –
வித்யா ஸம்பத் உள்ளவர்
இதில் முக்த சிசுவாய் -இளம் தளிரில் –
பாவனா ப்ரகரஷத்தால் ப்ரத்யக்ஷ சமானா காரமாய் -உள்ளம் கண் உள்ளே –
கண்டு அனுபவிக்கிறார் –

வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி யடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடித் போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடு மணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-4-

வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி –
பிரளயத்தில்
ஒரு பவனான ஆலந்தளிரிலே -கண் வளர்ந்து அருளி –

யடியேன் மனம் புகுந்து –
இவன் பிரளயத்தில் கண் வளர்ந்து அருளா நின்றான்
பரிகைக்கு ஒரு யசோதாதிகளும் இன்றிக்கே இரா நின்றது –
என் வருகிறதோ -என்று ஆராய்ச்சி பிறக்கும்படி பண்ணி –
அது உண்டவாறே -அதுவே ஹேதுவாக –

என் உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் –
ஹிருதயத்திலே வந்து புகுந்து
மானஸ அனுபவமேயாய் கண்ணுக்கு விஷயமாகப் பெற்றிலோம் –
என்கிற விஷாதம் கிடவாதபடி
கண்ணுக்கும் தானே விஷயமாய்
ஹிருதயமும் வேறு ஒன்றில் போகாதபடி தானே விஷயம் ஆனவன் –

நின்ற ஊர் போலும் —
கண்ணுக்கு விஷயமாக்கிக் கொண்டு வந்து நிற்கிற தேசம் போலும் –

புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடித் போன காதல் பெடையோடும்-
குட்டிக்கு இரை தேடித் போகிற புள்ளானது
தனியே போகாதே காதலை இட்டு நிரூபிக்க வேண்டும்
பெடையோடே போய்  –

அள்ளல் செறுவில் கயல் நாடு மணியார் வயல் சூழ் அழுந்தூரே    –
சேறு என்றால் இறாய்க்கக் கடவ வவை-
அங்கு உள்ள போக்யதையின் மிகுதியாலே அத்தை மதியாதே
சஞ்சரியா நிற்கும்

இத்தால் சொல்லிற்று ஆய்த்து
பிரளயம் என்று பாராதே
ஜகத் ரஷணத்துக்காக மகா வராஹம் ஆனது இறங்குமா போலே இரா நின்றது ஆய்த்து –

—————————————————————–

ஆலிலை வ்ருத்தாந்தம் அனுசந்தித்து அஞ்சின இவரை
நீர் அஞ்ச வேண்டாம்
ஜகதாகாரம் காட்டி அருள ஸமாஹிதர் ஆகிறார் இதில் –

பகலும் இரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய்
நிகரில் சுடராய் இருளாகி நின்றார் நின்ற ஊர் போலும்
துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல் வாய்
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-5-

துன்னி-நெருங்கி -மூன்றுக்கும் அந்வயம் –

பகலும் இரவும் தானேயாய்ப் –
பகல் என்றும் இரவு என்றும் சொல்லப் படுகிற
இவற்றைத் தனக்கு விபூதியாக உடையானாய்-

பாரும் விண்ணும் தானேயாய் –
பூமி அந்தரிஷங்களை தனக்கு  விபூதியாக உடையானாய்–
(வெல்லும் வ்ருத்த விபூதிமான் திரு விண்ணகர் பார்த்தோமே )

நிகரில் சுடராய் இருளாகி நின்றார் நின்ற ஊர் போலும் –
தம பிரகாசங்களை விபூதியாக உடையானாய்
இப்படி ஜகதாகாரனானவன்
அசாதாரண விக்ரஹத்தைக் கண்டு அனுபவிக்கலாம் படி
வந்து நிற்கிற ஊர் போலும் –

துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல் வாய் அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் –
நெருங்கிக் கட்டின துகில்களால் உண்டான கொடியும்
தேர்கள் ஒன்றோடு ஓன்று தாக்கிக் கிளப்ப பட்ட தூளியும்
மிகுதியை உடைத்தாய்
அவ் ஊரில் ஸ்திரீகள் உடைய  குழலுக்கு வாசம் கொளுத்துகைகாக
அகிலைப் புகைப்பார்கள் –
அது மேகம் போலேயாய் வர்ஷாவைக் காட்ட நின்றது –

வர்ஷாவில் வந்தால்  -ஒரு காற்றும் தூளியும் மேகமும் –
மூன்றும் கூடி இறே இருப்பது –
அதில் கட்டின கொடிகளால் வந்த காற்று உண்டாயாய் இருந்தது –
தேர் காலாலே கிளப்பப் பட்ட தூளி உண்டாயாய் இருந்தது –
அவர்கள் குழலுக்கு புகைக்கிற அகில் புகையானது மேகமாய் இருந்தது –

ஆக இம் மூன்றுமே கூடி நித்ய வர்ஷாவைக் காட்டா நின்றது –
ருது விசேஷங்கள் தோறும் உண்டான பதார்த்தங்களை
அனுபவிக்க ஓட்டுகிறனவில்லை

அணியார் வீதி அழுந்தூரே –

——————————————————–

கீழே அச்சம் தீர ஜெகதாகாரம் காட்ட
அச்சம் நீங்கியவர் சத்தை பெற்றாராய் இருக்க
இவரைப் பெற்ற ஹர்ஷத்தாலே
தாம் ஹர்ஷம் தோற்ற கிட்டே வந்து நின்றபடியே அனுசந்திக்கிறார்

ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும்
நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத் தார்ப் போவா அணியார் வீதி அழுந்தூரே–7-5-6-

அரவத் தார்ப் போவா-அரவத்து ஆர்ப்பு ஓவா

ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும்-
இதழ் விளங்கா நின்றுள்ள தாமரை போலே
ஸ்மிதம் பண்ணி அருளி –
என்னைப் பெறுகையால் வந்த அலாப்ய லாபம்
தன்னது என்னும் இடம்  தோற்ற ஸ்மிதம் பண்ணி –
அத்தாலே தான் செய்தது விலக்காத படியான தசையை எனக்கு பிறப்பித்து
என் அருகே வந்து நின்று
அது சாத்மித்தவாறே
ஹிருதயத்திலே வந்து புகுந்து
இனி இவருக்கு ஒரு போக்கு இல்லை என்று தோற்ற நிற்கிறவர்
கண்ணுக்கு இலக்காகும்படி வந்து நிற்கிற தேசம் போலும் –

நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ –
ஓங்கின  மாடங்களில் உண்டான தனிச் சூலமானது -அத்விதீயமான மகுடமானது –
மேகங்களின் உடைய கீழ் வயிற்றைப் போழ அவை
வர்ஷத்தை உண்டாக்கும் –
இத்தால் மாடங்களின் உடைய ஒக்கம் சொன்னபடி –

ஆடல் அரவத் தார்ப் போவா -(ஆர்ப்பு ஓவா )
ஸ்திரீகள் ஆடுகிற போதை
ஆரவாரத்தால் உண்டான கோஷம் மாறாதே செல்லுகிற –

அணியூர் வீதி அழுந்தூரே  —
அது மாறாமையால் வந்த
அழகை உடைய வீதி -என்றபடி –

———————————————————————-

நாயிகா பாவம் பிரஸ்துதம்
கிட்டி வந்தார்
படுக்கையில் சம்ஸ்லேஷம்
சாத்மிக்கவாறே
அணைப்பு -ஹர்ஷம் மிக்கு முடியாமல் இருக்க –
பிரிவை பிரசங்கித்து –
அவ்வளவிலே கண்ண நீர் பொழிய போக மாட்டாமல் நின்றார் –

மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும்
வேலைக் கடல் போல் நெடு வீதி விண்டோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப்   புகையால்   அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே —7-5-7-

மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி –
போக யோக்யமான காலத்திலே வந்து புகுந்து
பூம் படுக்கையிலே தங்கி
அநந்தரம்
அங்கு நின்றும் போந்து –

அடியேன் மனம் புகுந்து –
அனன்யார்ஹையான என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து

என் நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும்
பிரிவை பிரசங்கித்து
என்னுடைய கண்ணும் கண்ணீருமான ஆற்றாமையைக் கண்டு
பின்னை கால் வாங்கிப் போக மாட்டாதே நின்றவர்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் போலும் –

வேலைக் கடல் போல் நெடு வீதி –
கரையை உடைத்தான கடல் போலே யாய்த்து
திரு வீதிகள் உடைய பெருமை இருக்கும் படி –

விண்டோய் சுதை வெண் மணி மாடத்து —
ஸ்வர்க்கத்து அளவும் ஓங்கி இருப்பதாய்
சாந்திட்டு
அத்தாலே வெளுத்து இருப்பதாய்
மணி மயமான மாடத்தில் உண்டான –
ஆலைப்   புகையால்   அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே –
ஆதித்யன் உடைய உஷ்ணமான கிரணங்களையும்
ஆலையில் உண்டான புகையானது வந்து வீதியையும்
(ஆலைப் புகை )மறையா நிற்கும்-

இத்தால் ஊருக்கும் வயலுக்கும் உண்டான அண்ணிமை  சொல்லுகிறது –

————————————————-

கீழே பிரிவை பிரசங்கித்து கண்ணீர் பொழிய
அங்கும் இங்கும் தங்கி சம்ச்லேஷிக்க வந்தவர்
கலந்த போவது ஏன்
இது எனது இடையாட்டுக் குற்றமே என்கிறார் –

தான் செய்த அபராதத்தை ஷமிப்பிக்க
நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார்-

வஞ்சி  மருங்குலிடை நோவ மணந்து நின்ற  கனவகத்து    என்
நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் நின்ற ஊர் போலும்
பஞ்சியன்ன மெல்லடி நற் பாவை மார்கள் ஆடகத்தின்
அஞ்சிலம்பின் ஆர்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே —7-5-8-

வஞ்சி  மருங்குலிடை நோவ மணந்து நின்ற  கனவகத்து   –
வஞ்சியின்
படியை உடைத்தான இடையானது
நோவக் கலந்து நின்ற ஸ்வப்ன கல்பமான சம்ச்லேஷத்தில்

என் நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் நின்ற ஊர் போலும்
இன்ன பரிமாற்றம் பெற்றிலோம் -என்கிற
அத்ருப்தி நெஞ்சில் கிடவாதபடி யாக வாய்த்து
நெஞ்சிலே குறைவறப் புகுந்து நின்றபடி –
(அணைத்தேன் சுகித்தேன் என்கிறார் -)

பஞ்சியன்ன மெல்லடி நற் பாவை மார்கள் ஆடகத்தின் –
செம் பஞ்சு போலே மிருதுவான காலை உடையராய்
நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை
உடையவர் ஆனவர்கள் உடைய
பொன்னாலே சமைக்கப் பட்ட –

அஞ்சிலம்பின் ஆர்ப்போவா –
அழகிய சிலம்பில் உண்டான
ஆரவாரமானது மாறாதே இருக்கிற –
அணியார் வீதி அழுந்தூரே –

——————————————————-

இடை நோவ மணந்த படி சொல்லி
அது முற்றும் போனால் முடிந்து போவார் என்று
நாலடி விலகிப் போக
கிலேசம்
அல்ப வெறுப்பு தோற்ற அவர் சன்னிஹிதமான தேசம் கொண்டாடுகிறார்

என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப்
பொன்னங் கலைகள் மெலி வெய்தப் போன புனிதரூர் போலும்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-9-

என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப் –
என்னுடைய ஸ்தோத்ராதிகளால் வந்த வெளிச் சிறப்பையும்
சமுதாய சோபையையும் கொண்டு
நினைவு இன்றிக்கே இருக்க
இங்கே நேற்றே எழுந்து அருளி –

பொன்னங் கலைகள் மெலி வெய்தப் போன புனிதரூர் போலும் –
அரையில் பரியட்டமானது தொங்காதபடிக்கு ஈடாக
பண்ணிப் போன புனிதரூர் போலும்
(வீத ராகம் இல்லாமல் சுத்தர் -காதலியைப் பிரிந்தும் -வெறுப்பால் பேசிய படி )

இத் தலையில் உள்ளதை
சர்வ ஸ்வாபஹாரம் பண்ணி
தன் பக்கல் உள்ளது ஒன்றும் தொங்காத படி பண்ணிப் போந்த
சுத்தியை உடையவர் வர்த்திக்கிற தேசம் போலும் –

மன்னு –
ஜல சர சத்வங்கள் மன்னி இருக்கிற –

முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட –
பழையதாய்
மாறாத ஜலத்தை உடைய
பொய்கைகளில் உண்டான
தாமரைப் பூக்களின் மேலே மது பானம் பண்ணின
தர்ச நீயமான நிறத்தை உடைத்தான
வண்டினங்கள் ஆனவை –
செருக்குக்கு போக்கு விட்டு இசை பாட –

அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே    –
அதனுடைய பாட்டுக்கு சேர
அன்னமானது
பெடையோடே ஒக்க ஆட நிற்கும் –

—————————————————-

கலியன் ஒலி சப்தம் இல்லாத சாற்றுப் பாசுரம் –

நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொதிந்த தமிழ் மாலை சொல்லப் பாவம் நில்லாதே –7-5-10-

நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட –
நெல்லுக்கு களையாக முளைத்த குவளைகள் கண்ணைக் காட்டி –
நீர் நிலங்களில் உண்டான அரக்காம்பல் ஆனவை
அவர்கள் உடைய அதரத்தைக் காட்ட –

அல்லிக் கமலம் முகம் காட்டும் –
மிக்க இதழை உடைத்தான தாமரைப் பூக்கள் ஆன

கழனி அழுந்தூர் நின்றானை —
வயலுக்கும் ஊருக்கும் வாசி தெரிவிக்க ஒண்ணாதது ஆய்த்து-

வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன் –
பூம் கொடிகள் ஆனவை நெருங்கி இருக்கிற முழஞ்சுகளிலே
குயில்கள் ஆனவை
முக்தர் சாம கானம் பண்ணுமா போலே கூவா நிற்கும்
திரு மங்கையில் உள்ளாருக்கு ராஜாவாய் உள்ளவர்
பிரதி பஷ நிரசன சீலராய் உள்ளார் –

சொல்லில் பொதிந்த தமிழ் மாலை சொல்லப் –
சொல்களால் சம்ருத்தமாய் உள்ள
தமிழ் தொடையை வாயாலே சொல்ல –

பாவம் நில்லாதே –
பாவத்தை உண்டாக்குவதானாலும் தவிர ஒண்ணாததைச் சொல்ல
பாவங்கள் தன்னடையே போம் –

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

தந்து கனவில் கலவி ஆல் துயில் தானாம்
அந்நிலை காட்டி ஐம்புலன் கொண்டு வந்து புகும்
மாடு அழுந்தூரானைப் பகரும் கலியன் ஒலி
பாடல் உண்பார் ஒப்பார் சிங்கம் -65-

மாடு -பக்கம் -செல்வம் -பொன்-அனைய அழுந்தூரான்
ஆழ்வார் பாடல் -பரசமயப் பஞ்சுக் கனலின் பொறி –ஒலி மிக்க பாடலை யுண்டு –வலி மிக்க சீயம் –

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-7-4-கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 7, 2014

பஞ்ச சார க்ஷேத்ரம்
சாரா நாத பெருமாள் பஞ்ச சாரம் க்ஷேத்ரம்
கும்ப கோணம் கூட வாசல் திருச்சேறை வயிறு
காவேரி தாயார் பிரசித்தம்
சப்த நதிகள் -கன்னிகை விளையாட
கும்பீடு
கங்கா காவேரி -ஏற்றம்
கங்கையைக் காட்டிலும் ஏற்றம்
அரச மரத்தடியில் தபஸ்
தை பூசம் மா மதலை -சார நாதன் -ஐந்து நாச்சியார்
மார்க்கண்டேயர் -தூண்ட சோழ மன்னன் புத்ரன்
அபய ஹஸ்தம் தாமரையும் கையில்
குளக்கரையில் காவேரி சேவை
பூபாலன் -மன்னார்குடி கோயில் செங்கல் இங்கே போட
அரசனுக்கு ராஜகோபாலனாகவே சேவை
சார-பெருமாள் -நாயகி விமானம் புஷ்கரணி க்ஷேத்ரம்
வனவாச ராமர் சேவை உண்டு இங்கு

இரண்டு பதிகம் பாகவத
பயிலும் சேஷிகள் -நெடுமாற்க்கு போக்யத்வம்
இவர் நண்ணாத -போக்யத்வம் முதலில் -இதில் சேஷிகள்
இவை இரண்டுமே உயர்ந்த பதிகங்கள் -அனைத்திலும் –
பயிலும் சுடர் ஒளி சொல்லாமல் இது நெடுமாற்க்கு அடிமை என்றது
இருவருக்கும் இரண்டாவது பதிகம்-என்று மட்டும் காட்ட வந்தது –
ஸர்வதா சாம்யம் கொள்ளக் கூடாதே

கண் சோர வெங்குருதி -பிரவேசம் –

இது திருமங்கை ஆழ்வார் உடைய நெடுமாற்கு அடிமை –
(இருகால் மட்டும் அனுசந்தித்தார் என்பதுக்கே த்ருஷ்டாந்தம் )
பாகவத சேஷத்வத்தைச் சொல்லுகிற திரு மொழி யாய்த்து –

பெரிய நம்பி  ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றார் ஒருவர்
(மாறனேரி நம்பி )திரு நாட்டுக்கு நடந்தாராய்
அவரை அநு கமனம் பண்ணி  தீர்த்தமாடாதே வந்து எழுந்து அருளி இருக்க
(தீர்த்தமாடி என்றே இருக்க வேண்டும் )
இத்தை எம்பெருமானார் கேட்டு அருளி
பெரிய நம்பி பாடே வந்து
மரியாதை கிடக்க கார்யம் செய்ய வேண்டாவோ என்ன
பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -கடலோசையோ பாதியோ
சிறிது குறைவாகிலும் ஆஸ்ரயிக்க வேண்டாவோ என்று அருளிச் செய்தார்
(குல தைவம் போல் செய்ய வேண்டுமே-மனுஷ்யர் போலவாவது செய்ய வேண்டாமோ )

(அன்று தேர் போக பிறர் பெரிய நம்பியை பழிக்க அத்துழாய் பெருமாள் இடம் முறையிட
தேர் நகராமல் பின்பே சென்ற ஐதிக்யம்
இன்றும் சித்திரை தேர் பெரிய நம்பி திரு மாளிகை வாசலில் நிற்கும் )

பிள்ளை அழகிய மணவாள அரையர் கரையே போகா நிற்க
உள்ளே மா மதலைப்  பிரானை திருவடி தொழுது போனாலோ என்ன
ஆர் தான் திருமங்கை ஆழ்வார் உடைய
பசைந்த வளையத்திலே ( திரு முடியில் ) கால் வைக்க வல்லார் -என்று அருளிச் செய்தார் –

திரு நறையூரிலே  புக்கு
நம்பி அழகை அனுசந்தித்து
அங்கு நின்றும் போந்து
திருச்  சேறையிலே வந்து
மா மதலைப் பிரான் உடைய மௌக்த்யத்தை அனுசந்தித்து
அம் மௌக்யத்தின் அநு குணமான கிருஷ்ண அவதாரத்தை அனுசந்தித்து
அவ் வழியாலே அவதாரங்கள் எல்லாவற்றையும் அனுசந்தித்து
அவை எல்லாவற்றுக்கும் அடியாக திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளுகிற படியை அனுசந்தித்து
இப்படி அவன் படிகளை அனுசந்தித்து
குணைர் தாஸ்யம் உபாகத ( தம்பி உரிமை -தாஸ்யம் உண்மை ) என்று தோற்று எழுதிக் கொடுத்து இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் தமக்கு உத்தேச்யர் என்று
இங்கனே பாகவத் சேஷத்வத்தை அனுசந்தித்து பேசி அனுபவிக்கிறார் –

இத்தால் ( உகார அர்த்தமான )அனன்யார்ஹ சேஷத்வத்தை சொல்லிற்று ஆகிறது –
அதாகிறது
ததீய சேஷத்வ பர்யந்தம் ஆகை  இறே
ஓன்று இரண்டு கிரயம் சென்றால் மீளாது இறே –

பயிலும் சுடர் ஒளி -ததீய சேஷத்வ அனுசந்தானம்
நெடுமாற்கு   அடிமை -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
நண்ணாத வாள் அவுணர் -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
கண் சோர வெங்குருதி -ததீய சேஷத்வ அனுசந்தானம் –

ஆர் எண்ணும் -ஜென்ம வ்ருத்த குறை உள்ளாறும்- நண்ணாத உண்டு
அந்த பிரஸ்தாபம் இங்கு இல்லை
இருகால் மட்டும் அனுசந்திப்பான் என்
ப்ரமேய பேதம் -போக்யத்வம் சேஷித்வம் சொல்லவே

————————————————

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட  மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள்  அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான்  தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

காண்மின்-பெருமாளை சொல்லி நம்மையும் சொல்கிறார்-

கண் சோர –
பூதனை யானவள் யசோதை பிராட்டி வடிவைக் கொண்டு வந்து கிட்டி
அவளை முடித்தான் ஆய்த்து
க்ரூரமாக நோக்கிக் கொடு வந்த  கண்கள்  சோர –

வெங்குருதி வந்திழிய-
முலைப் பால் வழியே
உதிர வெள்ளமானது
கொழித்து இழிய-

வெந்தழல் போல் கூந்தலாளை மண் சேர முலை உண்ட  மா மதலாய் –
பிராணன் போனவாறே
ஆக்கனான ஒப்பனையும் போம் இறே –
நெருப்புப் போலே சிவந்த மயிர் முடியை உடையளான பூதனை பிணமாய்
பூமியிலே விழச் செய்தேயும்
பின்னையும் முலை உண்ணும்படி யாய்த்து மௌக்த்யம்  –
(நம் தாயா இல்லையா -விஷப்பாலா இல்லையா =உயிர் உள்ளவளா இல்லையா
என்று அறியாத மா மதலை )

வானவர் தம் கோவே என்று  –
பூதனை தாய் வடிவு கொண்டு வந்து முலை  கொடுக்க
பேய் என்று பாராதே
முலை உண்டவன் தான் யார் என்னில்
நித்ய ஸூரிகள் பரிய இருக்கிறவன் ஆய்த்து –
(தத் ப்ரஹ்ம சிஸு -கோபால விம்சதியில் ப்ரஹ்மம் முதலில் இங்கு பின்பு )

விண் சேரும் இளம் திங்கள்  அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத் தண் சேறை எம்பெருமான் –
ஸூவர்க்கத்தில் ஸூகப் ப்ரதானனாய் வர்த்திக்கிற சந்தரன் உடைய
கீழ் வயிற்றை போழும்படியான  ஒக்கத்தை உடைத்தாய்
மணி மயமான மாடங்களால் வந்த நிரதிசய சம்பத்தை உடைத்தாய் இருக்கிற
திருச் சேறையிலே இருக்கிற ஸ்வாமி  –

தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே –
திருத் துழாய் போலேயும்
ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும்
உம்முடைய ஸ்பர்சம் நமக்கு இனிதாய் இரா நின்றது –
உம்முடைய தலையைக் கொடு வாரும் நம்முடைய காலை வைக்க என்ன
இங்கு உமக்கு ஒழியாது
வகுத்தவர்கள் காலுக்கு இடம் போரும் இத்தனை –
(கதா புன -இளையவர்க்கு அவித்த மௌலி எனக்கும் அருள வேண்டும் -பிரார்த்தித்தார்களே –
இவரோ உமக்கு இடம் இல்லை
அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை -ஆறு காலுக்கும் தலை -உமக்கு அல்ல )

(காண்மின் -உள் கருத்து –
பெருமாளுக்கும்-
நம்மைப் பார்த்தும் ததீய ஏற்றம் பிரத்யக்ஷம் என்று காட்டுகிறார் )

—————————————————

அம் புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-

அமர்ந்து-அமர்த்தி -பொருந்தி வைத்து –
கூத்தர் போலாம்-கன்று குணிலா எறிந்த கழல் போற்றி -உள்ளே சிவந்த திருவடி இங்கே தானே சேவை
குஞ்சித பாதம் -நின்ற திருக்கோலம் கூத்து போல் அழகாய் இருக்குமே –

அம் புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து –
அழகிய புருவத்தை உடையவளாய்-
செவ் வரியையும் கரு வரியையும் உடைத்தாய் –
ஈஸ்வரனுக்கு காலம் எல்லாம் அனுபவியா நின்றாலும் உண்டு அறுக்க
ஒண்ணாத படியான பரந்த திருக் கண்களை உடையவளாய் -(அஸி தேக்ஷிணா )
தாமரைப் பூவை இருப்பிடமாக உடையளாய் இருக்கிற பிராட்டியை
மலை போலே இருக்கிற திரு மார்விலே வைத்து-

மல்லல் கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம் –
இப்படி பிராட்டிக்கு இருப்பிடம் என்று பாராதே
தழைத்த கொம்புகளை உடைத்தாய் இருக்கிற விளாவாகிற அசுரனை
கன்றாய் வந்த அசுரனைக் கொண்டு இலக்கைக் குறித்து
எறிகைக்காக இட்ட அடி
நாலடியும் நடைச் சக்கரவத்துப் பிடிக்க வேண்டும் படியாய் இருந்தது ஆய்த்து –
மல்லல் -பெருமை –

வம்பலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய எம்பெருமான் தாள் தொழுவார் –
நித்ய வசந்தமாய்
ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற திருச் சேறையிலே
ஸ்பர்தையாலே ( போட்டியாலே )ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற
கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய
திருவடிகளைத் தொழுவார் –

எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –
நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்கு
இடம் காண்கிறிலேன்  –

(ஸ்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யா சி தவ்ய-த்ரஷ்டவ்ய
கேட்டு ஆராய்ந்து இடை விடாமல் சிந்தித்து காண )

—————————————————————

விபூதியில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்
தலையால் தரித்து
மனசால் தியானிக்க
பிரகிருதி மண்டலம் இருக்கும் பாகவதருக்கு இப்பிரபாவம் உண்டோ
விண்ணவர்களை விட சிறந்தவர்கள் இவர்களே என்கிறார் –

மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3-

மீதோடி வாள் எயிறு –
மேல் எங்கும் பரந்து
ஒளியை உடைத்தாய் இருக்கிற
எயிறானது ஒளி விட –

மின்னிலக –
மின் போலே விளங்க –

முன் விலகும் உருவினாளைக் –
மின்னின் எதிர் விழிக்க ஒண்ணாதாப் போலே
துணுக் என்ன வேண்டும்படியான வடிவை உடையவளை –

அன்றிக்கே –
மீதோடி -இத்யாதி –
மேலே பரந்து ஒளியை உடைய எயிறானது
மின் போலே விளங்க –

முன் விலகும் –
முன்னே சஞ்சரிக்கிற வடிவை உடையவள் -என்றுமாம் –

காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தா என்று நின்று
பிராட்டியோடு போலியாகப் பண்ணிக் கொடு வந்த-( பேணிக் கொண்டு வந்த )
அவயவங்களைப் போக்கின திருக் கைகளை உடையவனே
ராமஸ்ய தஷிணோ பாஹூ பாஹ்ய பிராணன் (இளைய பெருமாள் )-என்னக் கடவது இறே –
(கொல்லை அரக்கியை மூக்கு அறுத்து விட்ட குமாரனார் )

தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப் –
தாதோடே வண்டுகள் ஆனவை மது பானம் பண்ணி
அறையா நின்றுள்ள திருச் சேறை யிலே
எழுந்து அருளி இருக்கிறவன் திருவடிகளை ஏத்தி –

போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –
புஷ்பங்களோடு கூட ஜலத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிற
பாக்யாதிகரே –
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய ஸூரிகளில்
சம்ருத்தர் ஆகிறார் –
அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள்
இங்கே இருந்தபடியே   ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே   –

————————————————-

விண்ணுளாரிலும் சீரியர் என்று அனுசந்தித்து
அந்த ஏற்றத்தால் இவர்கள் இடத்தில் பிறந்த பரமபக்தியை அருளிச் செய்கிறார் =

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே  -7-4-4-

தேராளும் –
ஆனை குதிரை காலாளுக்கு அவதி இல்லாமையாலே
தேருக்கே யாய்த்து
மெய்க் காட்டு பட்டோலை கொள்ளுவது –

வாளரக்கன் –
அவையும் மிகையாம்படி
பிரதி பஷ நிரசனத்துக்கு
கையிலே வாளே அமையும்  –

தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப் –
தேவதைகளுக்கு பிரவேசிக்க வரிதான
ஊரை
பூசலிலே
சிதிலமாய்ப் போம்படி பண்ணி –

போராளும் சிலையதனால்   –
யுத்தத்தை நடத்தா நின்றுள்ள வில்லாலே –

பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும் –
தீப்த பாவக சங்காச  -என்கிறபடியே
தொடுத்து விடுகிற  போது அம்பாய்
எதிரிகள் மேலே நெருப்பை எரித்துக் கொடு போய் தைக்கிற அம்பை நடத்தினவனே -என்று –

தாராளும் வரை மார்பன் –
தாழும் அருவி போலே தார் கிடப்பச் சூழும் திரு மா மணி வண்ணன்
செங்கண் மால் மூன்றாம் திருவந்தாதி -59-என்கிறபடியே
ஜகத் ரஷணத்துக்காக தனி மாலை இட்டுக் கொண்டு இருக்கிறவன் –

தண் சேறை எம்பெருமான்-
ரஷணத்துக்குப் பாங்கான
கலவிருக்கையை உடையவன் –

உம்பராளும் பேராளன் –
உபரிதன லோகங்களை நடத்தும்
சர்வாதிகன் –

பேரோதும் பெரியோரை –
வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத
ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு
சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு -( ஓதும் நிகழ் காலம் )
அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –

யொருகாலும் பிரிகிலேனே  —
ஷண காலமும் பிரிய
காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும்
பிரிய ஷமன் அல்லேன் –

————————————————————

பாகவதர்களை மிகவும் ஆதரியா நின்று
பாஹ்ய குத்ருஷ்டிகள் -தங்கள் மதத்தாரை கொண்டாடி உள்ளார்கள் அன்றோ என்ன
நீங்கள் சொல்லும் இவர்களை மதியாமல்
நரசிம்மரை எல்லாமாக ஸ்தோத்ரம் செய்பவரையே கூடுவேன்

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை  எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு  என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-

வந்திக்கும் மற்றவர்க்கும் –
பௌத்தர்களும்-வந்தே -என்றால் போலே
சொல்லுவார்கள் போலே  காணும்   –

மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன் –
அழுக்கு கழற்றாது இருக்கும் இது தானே
தர்மம் என்று இருக்கிற அமணர்க்கும் கூட்டு அல்லேன் –

முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால் –
சிறுக்கன் உடைய பிரதிஞ்ஞா சம காலத்திலேயே ( ஆங்கே அப்பொழுதே தோன்றிய )
முன்னே சென்று
ஹிரண்யன் உடைய மிடுக்கைப் போக்கின
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரனுக்கு அல்லது
பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு கூட்டு அல்லேன் –
(வந்திக்கும் மற்றவர்க்கும்-உம்மைத் தொகையால் குத்ருஷ்டிகளைச் சொன்னவாறே )

நீர் தாம் இது அறிந்த படி எங்கனே -என்ன
ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றவாறே
என்னுடைய ஹிருதயத்துக்கு இனியதாய் இரா நின்றதே –
அப்படி இருக்கும் போது நான் அவனுக்கு அனந்யார்ஹன் ஆக வேண்டாவோ –
பாஹ்ய குத்ருஷ்டிகள் பக்கலிலே ருசி உடையாராய் இருப்பார்க்கு
பாகவதர்கள் பக்கலிலே ருசி உண்டாமோ –

சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை  எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பார்க்கு-
சந்தனப் பூ மலரை உடைத்தான சோலையை உடைத்தாய்
ஸ்ரமஹரமாய் இருக்கிற
திருச்  சேறையிலே நாயனார் உடைய திருவடிகளை
நாள் தோறும் போக ரூபமாக அனுசந்திப்பாருக்கு –

என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –
என்னுடைய ஹிருதயமானது
தேனூறி
எப்பொழுதும் இனிதாக நின்றது
இது வெருமனேயோ –

—————————————————-

ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுசந்திக்க இனிமை என்ன எவ்வாறு இந்நிலை பெற்றீர் என்ன
ஆபத் ரக்ஷணாதி சேஷ்டிதங்களில் ஈடு பட்டு
திருவடியே துணை என்று இருந்தேன்
திருவடி ஸ்தானம் தானே பாகவதர்
நெஞ்சும் கண்ணும் இவர்களுக்கே அற்றுத் தீர்ந்தது –

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை  எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று தொண்டானேன்-
முன்பு வராக கல்பத்தின் உடைய ஆதியிலே மகா வராஹமாய் –
அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை எடுத்துக் கொண்ட
ஏறின நீர்மையை உடையவனே –
என்று மாறாதே சொல்லி
அந் நீர்மையிலே தோற்று
தேவர் திருவடிகளிலே அடிமை யானேன் –

திருவடியே துணை அல்லால் துணை இலேன் –
தேவர் திருவடிகளே எனக்குத் தஞ்சம் –
வேறு ஒரு ஆஸ்ரயத்தை (அபாஸ்ரயத்தை)  உடையேன் அல்லேன் –

சொல்லுகின்றேன் –
இது சபதம் பண்ணித் தரலாம் -(அவனுக்கும் நமக்கும் )

இப்படி நீர் அத்யவசித்து சொல்லுகிறது என் கொண்டு என் என்ன –
வண்டு ஏந்து மலர்ப் புறவில் –
வண்டுகள் மாறாதே பசு மலரை உடைத்தான பர்யந்தத்தை உடைத்தான –

வண் சேறை  எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு –
வண் சேறை எம்பெருமான் அடியாரைக் கண்ட மாத்ரத்திலே –

இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே  –
கண்டி கோளே என்னுடைய நெஞ்சும்
கண் இணையும் களிக்கிற படி
ஆன பின்பு அத்யவசிக்கையில் ஒரு குறை உண்டோ  –

———————————————

பாகவதர்களை கண்டதுமே ஹர்ஷம் என்பதாலே அவனுக்கு அடிமை சித்திக்கும்
இதில் அவனுக்கு தொண்டனாதால் உள்ள பலத்தால்
ததீய சேஷத்வ எல்லைக்கு சென்றேன்
பாகவர்கள் உகக்கவே பெருமாளைப் பற்ற
இவன் அடியார்க்கு ஆட்படுத்தும் விமலன் –

பை விரியும் வரி யரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்று என்றும் வண்டார் நீலம்
செய் விரியும் தண் சேறை எம்பெருமான்  திருவடியைச் சிந்தித்தேற்கு என்
ஐ யறிவும் கொண்டானுக்கு  ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே -7-4-7

பை விரியும் வரி யரவில் –
பை -என்று பணம்
நிரந்தர பகவத் அனுபவத்தாலே விகசிதமான பணங்களை உடையனாய்
சர்வேஸ்வரனுக்கு வைத்த கண் மாறாதே கண்டு கொண்டு இருக்க வேண்டும் படியான
தர்ச நீயமான வரிகளை உடையவனாய்
சைத்ய சௌரப்ய மார்த்தவங்களை-பிரக்ருதியாக உடையனாய் இருக்கிற
திரு வநந்த ஆழ்வான் மேலே   –

படு கடலுள் –
படு கடலிலே -ரத்நாதிகள் படுகிற கடலிலே -என்னுதல்
ஆழத்தை உடைத்தான கடலிலே  -என்னுதல்

துயில் அமர்ந்த பண்பா என்றும் —
வீசு வில் விட்டு எழுப்பினாலும் எழுப்ப ஒண்ணாத படி
கண் வளர்ந்து அருளுகிற நீர்மையை உடையவனே -என்றும்

மை விரியும் மணி வரை போல் மாயவனே என்று என்றும் –
மை பரம்பா நின்றுள்ள
அஞ்சன கிரி போலே இருக்கிற
வடிவை உடைய ஆச்சர்ய பூதனே -என்றும் –

வண்டார் நீலம்-செய் விரியும் –
வண்டுகள் மாறாத நீலமானது
செய்களிலே
பரப்பு மாற மலர்ந்து கிடக்கும் ஆய்த்து –

தண் சேறை எம்பெருமான்  திருவடியைச் சிந்தித்தேற்கு
ஸ்ரமஹரமான திருச்  சேறையிலே நிற்கிற
நாயனார் உடைய ஸ்லாக்கியமான வடிவு அழகை
அனுசந்தித்தேற்கு  –

என் ஐ யறிவும் கொண்டானுக்கு  ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே –
ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான
வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் –
அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி –

ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை –
அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது
என் அன்பானது –

———————————————–

பாகவத முக விலாசம் -பிரயோஜனம் என்றோ பெருமாளை காண்பது
திரி தந்தாகிலும் –தேவ பிரான் கரிய திருக்கோலம் -ஆழ்வார் முக மலர்ச்சிக்காகவே
விரோதிகள் நிறைய உள்ள தேசம் அன்றோ என்ன
உத்தரம் அருளிச் செய்கிறார் -என்று சங்கதி
வேதகப் பொன் போல் அன்றோ பாகவதர்கள் உடன் சேர்க்கை –

பாகவதர்களை நெஞ்சாலே நினைக்க
மிருத்யுவால் வரும் பயம் போம் –
பாபங்கள் உடைய நலிவால் வரும் பயத்துக்கும் அஞ்ச வேண்டா
என்கிறது –

உண்ணாது வெங்கூற்றம்  ஓவாத பாவங்கள் சேரா மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானைப்
பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக்
கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே -7-4-8-

உண்ணாது வெங்கூற்றம்  –
க்ரூரமான செயலை உடைய மிருத்யு
தன்னுடைய ஆச்யத்திலே விழுந்தாலும்
கீழ் இழிச்சப் பயப்படும் –

ஓவாத பாவங்கள் சேரா –
ஒரு ஷண காலமும்  இடை விடாதே நெருங்கப் பண்ணின பாபங்கள்
பல அனுபவத்துக்காக வந்து கிட்டா –

இவை இப்படி வந்து கிட்டாமைக்கு அடி என் என்னில் –
மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானைப் –
உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனை
தங்கள் சர்வ கரணங்களாலும் அனுபவிக்கும் அவர்கள் பக்கலில் அன்றோ
இவர்கள் பிரவணர் ஆய்த்து –
உபய விபூதியில் உள்ளாறும் வந்து ஆஸ்ரயிக்கிற
ஸூ குமாரமான திருவடிகளை உடையவனை –

பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக்
பண் பேராத படி
வண்டுகள் த்வனியா நின்றுள்ள
பரந்த பொழிலை உடைய
தண் சேறை அம்மான் தன்னை –

கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே  –
கண்களின் உடைய விடாய் தீரக் கண்டு –
அந்த ப்ரீதியாலே இறைஞ்சி உருகி என்றும் பாடம் ஆகவுமாம்-
கைகளின் விடாய் தீரும்படி தொழுவாரை நினைக்கும் கால்

உண்ணாது  வெங்கூற்றம்
ஓவாத பாவங்கள் சேரா –

———————————————————-

ஸஜாதீய புத்தி பண்ணும்படி அன்றோ பாகவதர்கள்
பாகவத அபசாரம் பண்ணும் படி
உமக்கு நிரவாதிக ப்ரீதி உண்டாக ஹேது என் என்ன
அடி தேடி காண மாட்டாமையால்
நினைக்க விரோதி தோலையும் என்றால்
நினைக்க ஒட்டாமல் அன்றோ விரோதிகள் உள்ளன என்று சொல்ல
நினைத்தால் நெஞ்சு உருகாமல் இருக்க விரோதிகள் உள்ளனவே
பெருமாள் உண்டாக்கினார் என்று கொண்டால் எங்களுக்கும் அப்படி ஆக வேண்டுமே என்பர்
என்னால் உண்டானது சொல்ல மாட்டார்
ஏதுவாக இருக்கும்
பூர்வ விருத்தம் சொல்லிக் கொண்டு எங்கனம் வந்தது என்று அறியேன் வந்ததுக்கு மகிழ்வதே க்ருத்யம்

எனக்கு இது தான் உண்டான படி எங்கனே என்கிறார் –

கள்ளத்தேன் பொய்யகத்தேன் ஆதலால் போதொரு கால் கவலை என்னும்
வெள்ளத்தேற்கு என் கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்
தள்ளத்தேன் மண நாறும்  தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9-

கள்ளத்தேன் –
சோரேண ஆத்மா அபஹாரிணா–பாரதம் -என்கிறபடியே போந்தேன்
அநாதி காலம் ஆத்ம அபகாரம் பண்ணிப் போந்தேன்
(சூது களவு -உலகோரையும் அவனையும் ஏமாற்றுவது )

பொய்யகத்தேன் –
அது தன்னையும் தெரியாத் படி
உன்னையும் வஞ்சிக்கும் -என்கிறபடியே
(உள்ளத்தே உறையும் மாலை )என் அந்தராத்மா அறிகிறது என்று மறைத்துப் போந்தேன்

ஆதலால் போதொரு கால் கவலை என்னும் வெள்ளத்தேற்கு-
இப்படி செய்கையாலே ஒரு ஷணமும் இடை விடாதே
துக்க சாகரத்திலே-பிறப்பாகிற -சாகரத்திலே – அழுந்திப் போந்தேன்-
(கவலை-மறதி துக்கம் இரண்டும் )

என் கொலோ-
இப்படி இருக்கிற எனக்கு இப் பேறு உண்டான படி எங்கனயோ
ஆத்ம சமர்ப்பணம் பண்ணி
மெய்யான ஸ்நேஹத்தை உடையராய்
அவனை அநவரத பாவனை பண்ணிக் கொண்டு போருவார் பெரும் பேற்றை
நான் பெற்ற படி எங்கனேயோ —

விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால் தள்ளத் தேன்-
விளை வயலிலே களையாக முளைத்த நீலத்தை
கர்ஷகர் ஆனவர்கள் காலாலே தள்ள
அவ்வசைவாலே நிரம்பி இருக்கிற தேன் வெள்ளம் இட்டு

மண நாறும்  தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு
அதன் உடைய பரிமளமேயாய் இருக்கிற
தண் சேறை எம்பெருமான் திருவடிகளை
என்றும் ஒக்க ஹிருதயத்தில் வைக்குமவர்களுக்கு –

இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –
என்னுடைய ஹிருதயம் அழிகிற படி கண்டி கோளே –
இப் பேறு எனக்கு வந்த படி எங்கனேயோ –

———————————————–

பூ மாண் சேர் கருங்குழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான் தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்
தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10-

தண் சேறை அம்மான் தன்னை-எம்பெருமான் விஷயமாக -பாகவதர்களை பாடவே
அதுவே அவனுக்கு கைங்கர்யம்
பொன்னடி மேல் சூட்டுமின்-இத்தை அவனுக்கு சூட்டவே அவன் உகப்பானே

பூ மாண் சேர் கருங்குழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம் –
பூக்களை உடைத்தாகையால் வந்த அழகை
இருட்சியை உடைத்தான குழலை உடைய ஸ்திரீகள் போலே
நடக்க வேண்டும் என்று கணிசித்த அன்னங்கள்
தனியே நடக்கில் வாயாதே என்று பார்த்து
வயலில் நின்ற பெடையோடு ஒக்க நடக்கும் ஆய்த்து-

தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்-
அப்படி செய்த விடத்தும் வாயாமையாலே லஜ்ஜித்து
தேமாவின் உடைய இனிய நிழலிலே
போய் உறங்கா நிற்கும் –

தண் சேறை அம்மான் தன்னை –

வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை தொண்டீர்
தாவி வருகின்ற மாவை உடைய தேரை
அர்ஜுனன் உடைய தேரை நடத்தி பிரதி பஷத்தை அழிக்கும் கிருஷ்ணன் போலே
நடத்தி சத்ருக்களை அழியச் செய்த ஆழ்வார்
ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையைக் கொண்டு
பகவத் விஷயத்தில் ருசி உடையீர் –

தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –
ஹேய ப்ரத்ய நீகமாய்
தர்ச நீயமாய்
இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்-
அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை
உடையராய்க் கொண்டு தொழுது
இம் மாலையைச் சூட்டுங்கோள் –

பாகவத பிரபாவம் சூடுவதே பலன் -வேறே வேண்டாமே –

————-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கண் காண் விபவவித்தாம் பாற் கடல் பள்ளியானை
எண்ணும் விண்ணில் பொலி சீர் சேறையான்-தொண்டரை நீங்காது
அவர்க்கு ஆளாய் இன்பம் முப்புலன் எய்திற்று உரை செய்
காதல் நீலன் நம் தந்தை -64-

காதல் நீலன் -அன்பர்பால் ஆராத காதல் யுடைமையை தானே திருச்சேறை பதிகத்தில் அருளிச் செய்தார்
நீலன் நம் காதல் தந்தை என்று கொண்டு-ஆழ்வார் நம் பால் ஆராத அன்பால்
நன்மை செய்யும் தஞ்சமாகிய தந்தை அன்றோ ஆழ்வார்
இங்குள்ள அடியார் விண்ணுளாரிலும் சீரியர் என்பதால் தன் மேலாராக அருளிச் செய்து
மத்திய பர்வ நிஷ்ட அக்ரேஸராக விளங்குகிறார்
பாற் கடல் பள்ளியான் விபவ வித்தாம் -வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து அன்றோ –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-7-3—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 6, 2014

ஸ்ரீ நம்பிக்கை நாச்சியார் வஞ்சுள வல்லி திருமணக் கோலம்
ஸ்ரீ நிவாஸன்
குடும்ப சகிதம்
மாடக்கோயில்
நாச்சியார் கோயில் -அவளுக்கே பிரதானம்
கோ செங்கணான் -புனர் உத்தாரணம் -கைங்கர்யங்கள்
கல் கருடன் பிரசித்தம் பங்குனி மார்கழி இரண்டு கருட உத்சவம் ஆண்டுக்கு –
அம்ருத கலசம் பிரசாதம்
ஸூ கந்தனை வனம் -மேதாவி ரிஷி -மணி முத்தாறு நதிக்கரையில் தபஸ்ஸூ
பங்குனி உத்தரம் தாயார் அவதாரம் -வஞ்சுள மரத்தின் அடியில்
சதுராத்மா வ்யூஹ -நான்காக சேவை
வ்யூஹ வாசுதேவன் சுகந்த வன நாதன்
வலது கையில் கிளி இடுப்பில் சாவிக்கொத்து உடன் தாயார்
ஹேமா விமானம் ஸ்ரீ நிவாஸ விமானம்
நான்முகனும் ஆராதனாக கர்ப்ப க்ருஹம்
வில்வ வகுள மரங்கள் ஸ்தல வ்ருக்ஷங்கள்
திரு மடல் இந்த திவ்ய தேசத்துக்கே –
மாடக் கவாடம் திறந்து புக்கு சேவிக்க பிரார்த்தனை
தெய்வ வாள் சோழனுக்கு அருளிய விருத்தாந்தம்
ஆழ்வாருக்கு சங்கு சக்கர லாஞ்சனம் பிரசாதித்த திருக்கோலம்

சினவில் -பிரவேசம் –

(என் சிந்தை தன்னால் )நானே எய்தப் பெற்றேன் -என்றார் கீழ் -7-2-
அந்தப் பேறு தன்னைப் பேசுகிறார் இதில் –

———————————————-

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை  மரம் ஏழ்   எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே -7-3-1-

நான் அடியேன் -அசேதந வியாவ்ருத்த ஞானம் உடைய சரணாகதன் –சரண் அடைந்த நான் -பூர்வ வாக்யார்த்தம்
அடியேன் நான் ஈஸ்வர வியவ்வருத்த -கைங்கர்ய பிரார்த்தனை -உத்தர வாக்யார்த்தம்

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி –
மிக்க சினத்தை உடையராய் -சினத்துக்கு இல் —
சேதனர் விஷயமாக நிர் நிபந்தனமான த்வேஷத்தை உடையராய்
அந்த த்வேஷ பிராசுர்யம் தோற்றும்படி இருக்கிற கண்ணில் சிவப்பை உடையராய்
இருக்கிற ராஷசர் உடைய  பிராணன்கள் முடியும்படி
பிடித்த வில் வலியை உடையவனே –
மாதா வானவள் -பிரஜை என்று பாராதே ஹிம்சிக்குமா போலே
தேவாநாம் தாநவாநாஞ்ச சாமான்ய மதி தைவதம் -என்கிற
பொதுவைப் பாராதே அழித்து விட்டான் ஆயத்து –
இவர்கள் இருக்கில் ஜகத் உப சம்ஹாரமாம் என்று
விபூதி குடி கிடைக்கைக்காக அழித்தான் ஆயத்து –

என்று கற்றவர் தந்தம் மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை  –
அறிவுடையரான யோகிகள் ஆனவர்கள் தம் ஹிருதயத்திலே கொண்டு
எல்லா காலத்திலும் எல்லா அவஸ்தையிலும்
ஒருபடிப்பட நின்று ஏத்த
அவர்களுக்கு எல்லாம் செய்தும் பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்
பெரும் தனிசு பட்டால் போலே -இவர்களுக்கு செய்யல் ஆவது என் -என்று
இவற்றை அனுசந்திக்குமவனை –

மரம் ஏழ் எய்த மைந்தனை –
இப்படிப் பட்ட தன் படி அறியாதார்க்கும்
மழு ஏந்தி விஸ்வசிப்பித்து
கார்யம் செய்த மிடுக்கனை –

நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை –
கனவில் -என்றதற்கு எதிராய்
ஜாகரூக அவஸ்தையை காட்டுகிறது
நனவு -தெளிவு
எத்தனையேனும் அதிசய ஜ்ஞனராய் இருப்பார்க்கும்
நேர் கொடு நேர் சென்று
கிட்டிக் காண அரியனாய் இருக்கிறவனை –

நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக் கனவில் கண்டேன் இன்று கண்டமையால் –
இவர்களைப் போலே ஸ்வ யத்னத்தால் அன்றிக்கே
அவன் காட்டின வழியாலே காணப் பெற்ற
அடியேனான நான் –
திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற கல்யாண குண பூர்ணனை  –
மனஸ்ஸூ சஹகரிக்க -அத்தாலே கண்ணால் காணும் காட்சி அன்றிக்கே
அந்த நெஞ்சு தானே முழு மிடறு செய்து
பூரணமாக நெறிபட அனுபவிக்கப் பெற்றேன் –
நெறி பட -சஷூர் விஷயமாக
இன்று இப்படிக் காணப் பெறுகையாலே -கனவு -லஷணையாய் மானஸ அனுபவம் –

என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே  –
நெஞ்சே அனுபவித்து கண்கள் அனுபவிக்கப் பெற்றது இல்லை -என்கிற
குறை கிடவாமை -கண்கள் கண்டு அனுபவிக்க
அவற்றுக்கு ஆஸ்ரய பூதனாய் இருக்கிற நானும் –
என் கண்கள் களிப்பக் களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேனே -திரு வாய் மொழி -10-8-4-
என்கிறபடியே களிக்கப் பெற்றேன் –

——————————————————

எய்தப் பெற்றோம் களித்தோம் என்றாலும்
பூர்வ வாசனையால் மீண்டும் விஷயாந்தரங்களில் போனால் ஐயோ என்று நினைக்க
அது நம்மால் வந்ததாகில் அன்றோ அதி சங்கை வேண்டுவது
அவனே நினைக்கப் பண்ணினதால் வேறே ஒன்றில் நினைக்கப் போகேன் -என்கிறார் –

தாயை நினைந்த கன்றே ஒக்க வென்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்
காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை மகரக் குழை காதனை  மைந்தனை மதிள் கோவல் இடைகழி
யாயினை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே –7-3-2-

வென்னையும்- அவன் இடம் உபகாரம் பெற்ற என்னையும் -இதற்கே கன்று த்ருஷ்டாந்தம்

தாயை நினைந்த கன்றே ஒக்க வென்னையும் தன்னையே நினைக்கச் செய்து –
தாயை நினைந்த கன்றே போலே
நானும் தன்னையே நினைக்கும் படிக்கு ஈடாக பண்ணினான் –
அந்த கன்று தாயை நினைக்கிறது –வேறு ஒரு கார்யத்துக்கு அன்று இறே-
முன்னாள் முலை கொடுத்த உபகார  ஸும்ருதியாலே  இறே
அப்படியே நானும் உபகார ஸும்ருதியாலே தன்னை நினைக்கும்படி பண்ணினான் –

தான் எனக்காய் நினைந்து –
எல்லாம் செய்தாலும்
இவன் உடைய நினைவுக்கு வைகல்யம் உண்டாகக் கூடும்
இவன் தலையிலே இவ் வரும் தேவை இடுகிறது என் -என்று
அஹம் ஸ்மராமி -என்கிறபடியே
நான் நினைக்க மாட்டாத குறை தீர
எனக்காகத் தான் நினைத்து –

அருள் செய்யும் அப்பனை –
என் பக்கல் ஒரு ஹேது இன்றிக்கே இருக்க
தன்னுடைய நிரவதிகமான பிரசாதத்தை
ஒரு தலைத்து முழுக்கப் பண்ணின
நிருபாதிக பந்துவை –

அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட வாயனை –
ஆபன்னரான அன்று
எல்லாரையும் ஒக்க -வரையாதே நோக்கும்
ஸ்வ பாவனானவனை –
வயிற்றிலே வைத்தும்
புறப்பட விட்டும்
நோக்கின திருப் பவளத்தை உடையவனை

மகரக் குழை காதனை  –
பிரளயத்தில் தள்ளினும் விட ஒண்ணாத
வடிவு அழகை உடையவனை –

மைந்தனை –
நித்தியமான யௌவனத்தை உடையவனை –

மதிள் கோவல் இடை கழி யாயினை -( யாயனை -பாட பேதம் )
உகந்தார் நடுவே புகுந்து
நெருக்குமவனை –

அமரர்க்கு அரி ஏற்றை –
உகப்பார் திரளின் நடுவே புகுந்து நெருக்கும் இதுவே
ஸ்வ பாவமாய் உடையவனை –

என் அன்பனை –
இப்படி பூர்ணனாய் இருந்து வைத்து
என் பக்கலில் அன்பைப் பண்ணினவனை –

அன்றி ஆதரியேனே   –
அவன் என் பக்கலில் அன்பைப் பண்ணி மேல் விழா நிற்க
நான் அவனை ஒழிய வேறு சிலரை ஆதரிப்பேனோ –

————————————————————-

அநாதியாக ஸ்ருஷ்ட்டி அவதாராதிகளைப்பண்ணி
தன்னை நினைக்கும் படி யத்னம் செய்தாலும்
அவனை நினையாதே எம படர் காலில் அகப்பட்டு
வீணாகாமல் இருக்கும் படி
தன்னை மறவாத படி தானே வந்து நெஞ்சம் புகுந்து
நமக்கு என்ன குறை

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத்  தலைக் கோவினைக் குட மாடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம் பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-

வந்த நாள் வந்து –
பிரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சை உண்டாய்
அதுக்கு உபகரித்தான் ஆகில் இறே இந்நாள் என்னல் ஆவது –
அங்கன் ஓன்று இல்லாமையாலே
பிரதம ஸ்வீகாரத்தை -வந்த நாள் -என்னும்
இத்தனை யாய்த்து சொல்லல் ஆவது –

என் நெஞ்சு இடம் கொண்டான் –
ஆவா சந்த்வஹ மிச்சாமி -என்கிறபடியே
என்னுடைய ஹிருதயத்தை தனக்கு இடமாக்கிக் கொண்டான் –
(நீர் காட்டும் இடத்தில் குடிசை கட்டி வாழ பெருமாள் ரிஷிகள் இடம் பிரார்த்தித்து போல் )

மற்றோர் நெஞ்சு அறியான் –
திருவடி -திரு வநந்த வாழ்வான் தொடக்க மானவர் பக்கலிலும் போவானாய் இருக்கிறிலன்-
அனந்தன்  பாலும்  கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -பெரியாழ்வார் -5-4-8–என்றும்
இட வகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் –5-4-10–என்றும்
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல்-என்றும்
சொல்லுகிறபடியே
இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் –
பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில்
சௌபரி பல வடிவு கொண்டு   அனுபவித்தால் போலே
இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி –
(இளம் கோயில் கை விடேல் என்று இவர்கள் பிரார்த்திக்கும்படி )

அடியேனுடைச் சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் –
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் -என்கிற என்னுடைய
மநோ ரதத்தைத் தான்-( அடிமை கொடுக்க வேண்டும் என்று ) உடையானாய்க் கொண்டு
யம படர் கையில் என்னைக் காட்டிக்  கொடுப்பானாய் இருக்கிறிலன் –

இது சிக்கெனப் பெற்றேன் –
என் சங்கல்பம் அடியாக வந்ததாகில் இறே
இதுக்கு ஒரு குலைதல் உள்ளது –
அவன் அடியாக வருகையாலே ஒரு நாளும் குலையாத படி பெற்றேன் –

கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத்  தலைக் கோவினைக்
பூம் கொத்துக்களை உடைத்தாய் –
நித்ய வசந்தமாய் இருந்துள்ள
பொழிலாலே சூழப் பட்ட திருக் குடந்தையிலே சாய்ந்து அருளி
தன்னுடைய சேஷித்வத்தை உறுதிப் படுத்தினவனை –

குட மாடிய கூத்தனை –
மன்றிலே  குடக் கூத்தாடி வடிவு அழகை இடையருக்கு
முற்றூட்டாக்கினவனை –

எந்தையை எந்தை தந்தை தம்மானை எம் பிரானை –
எனக்கு ஜனகன் ஆனவனை
என்னுடைய குல நாதன் ஆனவனை –
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை எனக்கு பிரகாசிப்பித்த மகா உபாகாரகனை –

எத்தால் மறக்கேனே –
பண்ணின உபகாரம் அளவு பட்டு மறக்கவோ
நான் இட்ட பச்சையை நினைத்து  ஆறி இருக்கவோ
எவ் வழியால் மறப்பது –

———————————————————

மனம் அவனுக்கே ஆனபின்பு
நான் மறக்கிறேன் என்றாலும் முடியாதே –

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று
இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –7-3-4-

எம்பிரானை-எம்பிரான் -ஐ சாரிகை
எம்பிரான் அரங்கமாளி என்னாளி விண்ணாளி-நான்கு அடை மொழிகள் -தண் தாமரைக் கண்ணனுக்கு-
தாழ்ந்து நில்லாதே-நெஞ்சம் உருகி அடியேன் என்னாது –

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று  –
தர்ம பிரதானராய் நடத்துகை அன்றிக்கே
அசூரா வேசத்தாலே வந்த முன் கை மிடுக்கை உடையராய்
மிடுக்காலே நடத்திக் கொடு போருகிற ராஜாக்கள் உண்டு -துர்யோதநாதிகள் –
அவர்கள் முடியும் படிக்கு ஈடாக பாரத சமரத்திலே
வந்த பிரதி பஷத்துக்கு எல்லாம்
ஒரு தேரை எதிராக விட்டு
தான் பாண்டவர்களுக்காக தன்னை அழிவுக்கு இட்டுச் சென்று –

இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை –
ஐயோ இவர்கள் பால்யத்தில் பித்ரு ( பாண்டு ) ஹீநர் ஆனார்கள்
அரக்கு மாளிகையிலே அகப் பட்டார்கள்
நீரிலே கழுவிலே அகப் பட்டார்கள் -என்று
அவர்கள் பக்கலில் கிருபையைப் பண்ணி
அவர்களுக்காக தேரை நடத்தி
அவர்கள் அபேஷிக்க அவர்களுக்கு ஒரு கார்யம் செய்தானாய் இருக்கை அன்றிக்கே
தன் பேறாக அருளைப் பண்ணின
ஆஸ்ரித விஷயத்தில் பண்ணும் ஓரத்துக்கு எல்லை காண ஒண்ணாத் படி
இருக்கிற மகா உபகாரகனை –

வம்பார் புனல் காவிரி அரங்கமாளி –
பிரவாஹம் மாறாமையாலே
நித்ய அபூர்வமான ஜல சம்ருத்தியை உடைத்தாய் இருக்கிற
காவிரியை உடைய கோயிலை நிர்வாஹ்யமாக உடையவனை –

என்னாளி-
எனக்கு நிர்வாஹகனை –

விண்ணாளி –
நித்ய விபூதி உக்தனை –

ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி –
கடல் சூழ்ந்த அரணை உடைத்தாய் இருக்கிற இலங்கை
ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக
எடுத்து விட்டு  அம்புகளை நடத்தின
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு அல்லது –

என் மனம் தாழ்ந்து நில்லாதே –
ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும்
மார்விலே அம்பு ஏற்றும்
உபகரிக்கும் அவனுக்கு அல்லது
வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது –

—————————————————-

அதீத அபதானங்கள் இதில்
கீழ் சொன்ன சாரத்வம் மற்றும் வேறே சிலவற்றை
நினைவூட்ட அவற்றை அனுசந்தித்து
நெஞ்சு ஆழ்ந்தமையை அருளிச் செய்கிறார்

ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல்  என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத் தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு  உரலினிடை ஆப் புண்ட
தீங் கரும்பினைத் தேனை நன் பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே –7-3-5-

ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது –
பாபம் பண்ணுகிற சமயத்திலே வந்து கிட்டி
அவற்றில் நின்றும் திரிய விடுகை அன்றிக்கே
அவை செய்தற்று -அத்ருஷ்ட ரூபேண பல அனுபவம் பண்ணும்
துக்க அனுபவ பூமிகளிலே –
கொடிதான நரகத்திலே நோவு படும் அளவிலே –

அஞ்சேல்  என்று அடியேனை அங்கே வந்து –
இவன் தான் பண்ணின பாபத்துக்கு
பல அனுபவம் தானே பண்ணுகிறான் ஆகில் நமக்கு என் -என்று இருக்கை அன்றிக்கே
நாம் உளோமாக  நீ பாபங்களுக்கு ( குடி மகன் ஆக ) குடி போக வேணுமோ –
நீ அஞ்சாதே கொள் -என்று
அங்கே சென்று –

தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம் பிரானை-
ரஷிக்குமது செவ்வித் தாமரைப் பூ போலே
ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை கொண்டாய்த்து –
விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் -இவற்றுக்கு
தாமரையை ஒரு போலியாகச் சொல்லலாம் படியாய்
அவ்வளவு அல்லாத படி
அதி ஸூகுமாரமாய் -ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை-உடைய என் ஆயனே –

யும்பர்க்கு அணியாய் நின்ற வேங்கடத்து –
திருமலையில் நிற்கிற நிலை
நித்ய ஸூரிகளுக்கு ஆபரணம் போலே இருக்கிறது ஆய்த்து-

அரியை  –
உகப்பாருக்கு ஆபரணமாய் இருக்குமா போலே
உகவாதார்க்கு அப்ரதருஷ்யனாய் இருக்கும் ஆய்த்து –

பரி கீறியை –
கேசி உடைய வாயைக் கிழித்தவனை-

வெண்ணெய் உண்டு  உரலினிடை ஆப்புண்ட தீங் கரும்பினைத் தேனை –
ஆஸ்ரித (கர) ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் ஒழியச் செல்லாமை பிறந்து
அது நேர் கொடு நேர் கிடையாமை
களவு கண்டு புஜிக்கப் புக்கு
அது தன்னை முடியச் செய்து தலைக் கட்டாமை
வாயது கையதாக அகப்பட்டு
உரலோடு சேர்த்து கட்டுண்டு
அடியுண்டு
அடிக்கு இறாய்த்து
உடம்பு வெளுத்து
பயர்த்து
பேகணித்து
நின்ற நிலையை  அனுசந்திக்க அனுசந்திக்க
இவர்க்கு இவ்விருப்பு தானே யாய்த்து
சர்வ வித போக்யமுமாய் இருக்கிறது –
சர்வ ரச-என்கிற படியே இனியதாக நின்றது –

நன் பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே  –
இப்படி சர்வ வித போக்யனாய் இருக்கிறவனை ஒழிய
என் உடைய நெஞ்சு வேறு சிலரை
அநவரத பாவனை பண்ணாது –

———————————————–

கீழே தம்மைத் தவிர மனம் அவன் இடம் ஈடுபட்டதை அருளிச் செய்து
இதில் வாக் இந்த்ரியமும் அப்படியே
என் பண்பனை அன்றி பாடல் செய்யனே-கடாக்ஷித்து அவதாரிகை –

வ்யதிரிக்தர் பக்கலிலே அல்பம் உத்கர்ஷம் கண்டு
நான் பேசுவதாக ஒருப்பட்டாலும்
என்னுடைய வாக் இந்த்ரியமானது அதுக்கு உட்படாது –

எட்டனைப் பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்
தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின் தாழ் பொழில் திருமால் இரும் சோலை அம்
கட்டியைக் கரும்பு ஈன்ற இன் சாற்றைக் காதலால் மறை நான்கு முன்னோதிய
பட்டனைப் பரவைத் துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யனே –7-3-6-

தட்டு மிகவும்
அலர்ந்த -விகசித்த பாட பேதம் அலர்த்த -விகசிக்கப் பெற்ற –
பட்டனை–பண்டிதன் — பிருந்தாவன பண்டிதன் -தயிர் கடையும் ஓசையில் நாட்டியம் கற்ற பண்டிதன் –

எட்டனைப் பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ் –
அல்ப காலமும்
என்றும் ஒக்க
என்னுடைய நெஞ்சை அகலாது இருக்கையால் வந்த புகழை உடையவனாய்
பிராட்டி -அகலகில்லேன் இறையும் -என்று இருக்கும் இருப்பைக் காட்டிலும்
ஏற்றமாக நினைத்து இரா நின்றான் ஆய்த்து -என்று
என்றும் எட்டனைப் பொழுதும் அகலாது இருக்கும் என்றபடி –

தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின் தாழ் பொழில் திருமால் இரும் சோலை அம்  கட்டியைக்-
இதழ் விரியா நிற்பதாய்
பொன் போலே இருக்கிற அலரை உடைத்தான கோங்கினுடைய-என்னுதல்  –
இதழ் மிகும்படி அலரப் பண்ணப் பட்டு
பொன் போலே இருக்கிற அலரை உடைத்தான கோங்கினுடைய
தழைத்த  பொழிலை உடைய( தெற்குத் )திரு மலையிலே
அனுபவ யோக்யமாய்க் கொண்டு நிற்கிறவனை –

கரும்பு ஈன்ற இன் சாற்றைக்-
கை தொட்டு நெருக்குகையால் வரும்
செவ்விக் கேடு இன்றிக்கே
அக் கரும்பின் உடைய ரசமாய் யுள்ளவனை –

காதலால் மறை நான்கு முன்னோதிய பட்டனைப் –
இதுக்கு முன்பு ஒதப் போகாதவன்
அபி நிவிஷ்டனாய் ஓதுமா போலே
சாந்தீபநீயோடே சாதாரமாக நாலு வேதத்தையும் அப்யசித்த பண்டிதனை –

பரவைத் துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யனே –
இவ் வதாரத்துக்கு நாற்றங்காலாயக்  கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின நீர்மை
உடையவனை அல்லது பாடல் செய்யேன் –

——————————————–

(சமுதாயேன கரண த்ரயத்துக்கும் அவனே விஷயம் ஆனான் )

என்னுடைய மநோ வாக் காயங்கள்
அவனை அல்லது அறியாது
என்கிறார் –

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7-

கண்ணும்-காயங்களுக்கு பதம் –
வாய் யுரையாதே-மனம் உள்ளாது சரீரம் நாடாது சேர்த்துக் கொள்ள வேண்டும்

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து-
பண் வர்க்கத்திலே இனிய பேச்சை உடைய யாழ் நரம்பிலே –
யாழிலே பிறக்கப் பெற்ற -பாலை -யாகிற பண்ணாய்
அப் பண் போலே போக்யனாய்க் கொண்டு வந்து புகுந்து –

என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் –
கண்ணுக்கு வேறு ஒன்றும் காண ஒண்ணாத படி தானே விஷயமானான் –
வாக்குக்கு வேறு சிலரை பேசுகைக்கு விஷயம் இல்லாதபடி தானே விஷயம் ஆனான் –
நெஞ்சுக்கு வேறு சிலரை நினைக்க அவகாசம் இல்லாத படி தானே விஷயம் ஆனான் –
ஆக சர்வ இந்த்ரியங்களுக்கும் தானே விஷயம் ஆனான் –

கொண்ட பின்
மறையோர் மனம் தன்னுள் –
தன் உள்-வாசஸ் ஸ்தானம்
பிராமணர் உடைய ஹிருதயங்களைத் தனக்கு
வாசஸ் ஸ்தானமாய் உடையனாய் –

விண்ணுளார் பெருமானை –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யாய் உள்ளவனை –

எம்மானை –
எனக்கு ஸ்வாமியாய் உள்ளவனை –

வீங்கு நீர் இத்யாதி –
சம்ருத்தமான ஜலத்தை உடைத்தாய்
ஜல சர சத்வங்கள் தன்னில் கூடி விளையாடா நிற்கிற
கடல் போலே இருக்கிற நிறத்தை உடையனாய்
பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை –
இந் நிறத்தைக் காட்டி
என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவனுடைய நிறத்தை ஒழிய
என்னுடைய வாக் இந்த்ரியம் ஆனது வேறு ஒன்றைப் பேசாது –

(ஐயப்பாடு அறுக்கவும் ஆதாரம் பெருக்கவும் அழகன் அன்றோ )

———————————————————–

இந்திரிய சமுதாயம் சரீரம் -கர்மாதீனம் அன்றோ –
மீளுமே என்னில்
பாபம் -புண்யம் -ஈஸ்வர கோபமும் ப்ரீதியுமே
அனுக்ரஹம் பெற்றால் அவை உண்டோ என்கிறார் –

இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து  இன்பமே தருகின்றதோர் தோற்றத் தொன் நெறியை வையம் தொழப் படும்
முனியை வானவரால் வணங்கப் படும் முத்தினைப் பத்தர் தாம் நுகர்கின்றதோர்
கனியைக் காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –7-3-8-

துனி-கர்மம்
தோற்றத் தொன் நெறி-அழகிய பழமையான உபாயம் -திரு நாமம் சூட்டுகிறார்

இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு –
அவனுடைய நிக்ரஹ பலமான பாபங்கள் என்னைக் கிட்ட வற்றோ –
அவசியம் அநு போக்தவ்யம் -என்கிற வசனத்தைக் கொண்டு
அனுபவித்தால் அல்லது நசியேன் என்று கொண்டு சிலவை  நிற்றல்
(ந புக்தம் ஷீயதே கர்மம் சஞ்சித கர்மம் )
பிராரப்தம் காண் என்று சிலவை நிற்றல் செய்ய வற்றோ –

இனி -என்றது எத்தைக் கொண்டு என் என்ன –
இம்மையே அருள் பெற்றமையால் –
இஹ லோகத்திலேயே
பகவத் பிரசாதத்தைப் பெற்ற படியாலே
இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் –

அடும் துனியைத் தீர்த்து 
அச்சேத்யோயம் அதாஹ்யோயம்-என்று சொல்லப் படுகிற ஆத்ம வஸ்துவை
அசந்நேவ -என்னலாம் படி முடிக்கிற துனி உண்டு -பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள்
அவற்றை ச வாசனமாகப் போக்கி

இன்பமே தருகின்றதோர் –
யேஷஹ்யேவா நந்தபாதி -(ஆனந்திப்பிக்கிறார் )-என்கிறபடியே
நிரதிசய ஆனந்தியாம்படி பண்ணுகிற –

தோற்றத் தொன் நெறியை –
தோற்றம் -அழகு
தொன்மை -பெருமை
அழகிய மகா பதம் -உபாயம் -என்பர்
இதர உபாய பரிக்ரஹம் பண்ணினாருக்கும் தன்னையே  பற்ற வேண்டும்படியாய்
தன்னைப் பற்றினாருக்கு வேறு ஒன்றைப் பற்ற வேண்டாத படி பிரதானமாய்
நிலை நின்ற
உபாயமாய் உள்ளவனை –
அறம் சுவராகி நின்ற -( சாஷாத் தர்மம் )- இப்போதாக எடுக்க வேண்டா
பண்டே எடுத்து நிற்கிறது ஆய்த்து
( கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் ) சநாதனம் -என்கிறபடியே
அத்தையே இறே அவன் -மாம் -என்றது –

வையம் தொழப் படும் முனியை –
பூமியில் உள்ளார் இருந்ததே குடியாய் ஆஸ்ரயிக்கப் படுமவனாய்
சேதனர் உடைய ஸ்வரூப பேதத்தோ பாதியும்
போரும் இறே ருசி பேதமும்
அவ்வோ ருசிக்கு அநு குணமான பேறுகளை பண்ணுகைக்கு
மனனம் பண்ணி  கொண்டு இருக்கும் அவனை –

வானவரால் வணங்கப் படும் முத்தினைப்-
ஒன்றில் ஓர் அபேஷை இல்லாத நித்ய ஸூரிகளாலே
ஆஸ்ரயிக்கப் படுமவனாய்
அவர்கள் உடைய ஸ்ரமத்தைப் போக்கினவனை –

பத்தர் தாம் நுகர்கின்றதோர் கனியைக் –
சம்சாரத்தில் முமுஷூக்கள் உண்டு -தம் பக்கல் ருசி உடையராய் இருப்பார்
அவர்களுக்கு கண்ட போதே அனுபவிக்கலாம் படியாய்
பகவ பலமாய் உள்ளவனை –

காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –
அவை ஒன்றும் இன்றிக்கே இருக்கிற என் பக்கலில் தான் ஆசை உடையனாய்
என்னை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணினவனை –
நான் அநாதி காலம் பண்ணிப் போந்த ஆத்மாபஹாரத்தை
அரை ஷணத்திலே பண்ணினவனை
இன்று
நினைவு இன்றிக்கே இருக்க
காணப் பெற்றேன் –

———————————————-

கீழ் அவன் அனுக்ரஹத்தால் பாபம் வராதே
இதுக்கு என்ன பிரதி உபகாரம்
நான் உபகார பரம்பரைகளை அனுசந்தித்து
கைம்மாறு இல்லாமல்
பண்ண விரகு இல்லை
ஆத்ம சமர்ப்பணம் பண்ணினாலும் அதுவும் அவனது
இங்கும் அங்கும் ஒன்றும் இல்லையே –

என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கென்றும் என் மனத்தே இருக்கும் புகழ்
தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனைத்
தழலே புரை விஞ்ச வாள் அரக்கன்  நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை   யன்றி என் மனம் போற்றி என்னாதே –7-3-9-

கடல் சிறை வைத்து-சேது அணை கட்டி
தஞ்சை ஆளி-மணிக் குன்றப் பெருமாள்

என் செய்கேன் –
உபகாரம் பண்ணாமல் இருக்கிறது இல்லை –
உபகரிகலாவது ஒன்றும் காண்கிறிலேன் –
எத்தைச் செய்வேன் –

அடியேன் –
எனக்கு என்ன கைம்முதல் இல்லாதபடி ஸ்வரூபமே பிடித்து
பரதந்த்ரனான நான் எத்தைச் செய்வேன் –

உரையீர் இதற்கு –
மத்யஸ்தராய் கரை மேல் நிற்கிற நீங்கள் இதுக்கு ஒரு
போக்கடி சொல்ல வல்லி கோள்  –

கென்றும் என் மனத்தே இருக்கும் புகழ் தஞ்சை ஆளியைப் –
என்றும் ஒக்க என்னுடைய ஹிருதயத்தை விடாமல் இருக்கையால் வந்த புகழை உடையனாய் –
இங்கு புகுருகைக்கு உடலாக
தஞ்சாவூரிலே நின்றவனை –

பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனைத் –
எனக்குப் பண்டே உபகரித்து நின்றவனை –

தழலே புரை விஞ்ச வாள் அரக்கன்  நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து –
சிலரால் வந்து கிட்ட ஒண்ணாத படி நெருப்பை உமிழா நிற்பானாய்
அநபிபவ நீயனாய்
அவசர பிரதீஷனாய்
ஒளியை உடைத்தாய் இருப்பதொரு வாளை தேவதை பக்கலிலே பெற்று
(சந்த்ரஹாஸம் என்னும் வாள் பெற்று )
உடையனாய் இருக்கிற ராஷசனின் உடைய நகரி யானது பாழ் படும் படி
இலங்கைக்கு அகழான கடலை அணை செய்தவனை –

இமையோர் தொழும்-
இமையோர் உண்டு -ப்ரஹ்மாதிகள்-எங்கள் குடி இருப்பு பெற்றோம் என்று
பவான் நாராயணோ தேவ ஸ்ரீ மான் சக்ராயுத விபு –பூத பவ்ய ஜித் -என்றாப்  போலே
ஸ்தோத்ரம் பண்ண  –

பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை யன்றி என் மனம் போற்றி என்னாதே  –
அத்தாலே புகர் பெற்ற வடிவை உடையவனாய் நின்றவனை –
அத்தாலே குளிர்ந்த நிறத்தை உடையவனாய் நின்றபடி –
இப்படிப் பட்ட இவனை அல்லது போற்றி என்று என்னுடைய ஹிருதயம் ஆனது
மங்களா சாசனம் பண்ணாது –
பாழாளாகப் படை பொருதானுக்கு அல்லது என்னுடைய ஹிருதயமானது பல்லாண்டு பாடாது –

நித்ய ஸூரிகள் பெரும் பேற்றைப் பெற்றேன் –
சம்சாரியான நான் –
பர தந்த்ரனாய் இருக்கையாலே பிரத்யுபகாரம் பண்ணலாவது காண்கிறிலேன்
எத்தைச் செய்வேன்
சொல்லி கோள்
என்கிறார் –

——————————————–

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து  ஆடியும்  தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே -7-3-10-

சேவடி-அழகிய திருவடி – ஆஸ்ரித அநாஸ்ரிதர் வாசி அற பற்றும் படி அழகிய-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் –
இதழ் விண்டு அலருகிற பூவை உடைத்தான
பொழிலாலே சூழப் பட்ட திரு மங்கையில் உள்ளார்க்கு பிரதானராய் உள்ள ஆழ்வார்  –

வாள் கலியன் –
பகவத் பிராப்திக்கு பிரபத்தி போலே யாய்த்து
பிரதி பஷ நிரசனத்துக்கு கையிலே வாள் –

திருவாலி நாடன் —
இதுவே போருமாய்த்து ஏற்றம் –

நன்னறையூர் நின்ற நம்பி தன் –
திரு நறையூரிலே வந்து நிற்கையாலே
கல்யாண குண பூர்ணன் ஆனாவன்  –

நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச் சூடியும்-
நிரதிசய போக்யமாய்
குணாகுணம் நிரூபணம் பண்ணாத திருவடிகளை திரு முடிக்கு வளையமாக வைத்தும்  –

தொழுதும் எழுந்து  ஆடியும் –
நம புரஸ்தாத் அத ப்ருஷ்ட -முன்னும் பின்னும் எல்லாப் பக்கமும் தொழுத அர்ஜுனன் –
என்கிறபடியே தொழுதும்
தொழப் பெற்ற ஹர்ஷத்தாலே இச் சரீரம் இருந்த இடத்தே இராதே ஆடியும் –

தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை-
தாம் அறிந்ததாக அனுபவித்து விடுகை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் அனுபவ யோக்யமாம் படி
பக்தாம்ருதம்–தொண்டர்க்கு அமுது உண்ண -என்கிறபடியே
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் விருந்து இட்டார் ஆய்த்து –

பாடல் பத்திவை படுமின் தொண்டீர் –
அது தான் ச பாத லஷ க்ரந்தமாய்
புக்க இடமும் புறப்பட்ட இடமும் அறியாதே இருக்கை அன்றிக்கே
பாடல் பத்தும்
பகவத் விஷயத்தில் ருசி உடையார் இத்தைப் பாடப் பாருங்கோள்-

பாட நும்மிடைப் பாவம் நில்லாதே —
கரும்பு தின்னக் கூலி இறே
பாடுகை தானே பிரயோஜனமாக போந்து இருக்க
அதுக்கு மேலே
பிராப்தி பிரதிபந்தகமான பாபங்கள்
நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் இல்லை -என்று
தன்னடையே விட்டுப் போம் –

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

சினத்துச் செரு நீர் செற்றான் உட் புகுந்து
நனி நீங்கா தீது தீர் நம்பிக்கு மனம் செயல்
வாக்கற்றுக் கைம்மாறிலாமை சொல் வாட் கலியன்
வாக்கால் மலரும் உட் கண் -63-

என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் -என்பதால் நீங்காமை சொல்லி
கண் இணைகள் க்ளிப்பைக் களித்தேன் -அன்பனை அன்று ஆதரியேன் -என் மனம் தாழ்ந்து நில்லாது
என் மனம் சிந்தை செய்யாது -பண்பலை யான்றிப் பாடல் செய்யேன் –
எம் அண்ணல் வண்ணமே அன்றி என் வாய் யுரையாதே –
மனம் செயல் வாக்கு எம்பெருமானுக்கே அற்றுத்தீர்ந்தமையை அருளிச் செய்தார் –
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும்
என் மனத்தே இருக்கும் புகழ் என்றும் கைம்மாறு இல்லாமையையும் அருளிச் செய்தார் –

——————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-7-2—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 5, 2014

புள்ளாய்– பிரவேசம் –

கீழ்-(கிடந்த நம்பி பதிகத்தில்) சம்பந்த ஜ்ஞானம் பிறந்த-விளைந்த – படி சொல்லிற்று –
பின்பு தாம் நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே
பிறவாமை என்னைப் பணி-7-1-1- -என்று அபேஷித்தார்-

நீர் இப்பாடு படுவது என்-உமக்காக அன்றோ நாம்
உகந்து அருளின இடங்களில் வந்து நிற்கிறது -என்ன
எல்லாம் பெற்றாராய் சமாஹிதர் ஆனார்   –

இதுவே பேறும் இழவும் ஆகைக்கு நம் தலையில் ஏதேனும் உண்டோ -என்று ஆராய்ந்து பார்த்தார் –
இத் தலையில் ஒன்றும் இன்றிக்கே
அவன் எதிர் சூழல் புக்குப் பண்ணின கிருஷி
இப்படி பலித்த பலமாய் இருந்தது –
(பக்தி உழவன் ஷேம க்ருஷி வலன் )

ஊனேர் ஆக்கை தன்னை யுழந்தோம்பி வைத்தமையால் நானே எய்தப் பெற்றேன் -7-2-9-
(உயிர் பாசுரம் இந்தப்பதிகத்துக்கு )
இத் த்யாஜ்யமான சரீரத்தைக் கொண்டே
பேற்றுக்கு உடலாம்படி
பண்ணி அருளினான் –
என்கிறார் –

(தாழ்ந்த சரீரத்தில் புகுந்து உகந்து இருக்கும் உன்னை விட மாட்டேன் என்கிறார் இப்பதிகத்தில் )

————————————————–

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும்  என் கண்கள் நீர்கள் சோர் தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளி யக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-

என்னை உள்ளம் கொண்ட-விஷயாந்தர ப்ராவண்யம் உள்ள மனசை தனது வசமாக்கிக் கொண்ட
உன்னை-என்னுடைய உஜ்ஜீவனத்தில் முயன்ற உன்னை –
ஓ -ப்ரீதியால் -ப்ரீதி அதிசய யோதகம் -வெளிக்காட்டும் -அவ்யயம் –

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட –
என்னுடைய துக்க நிவ்ருத்திக்கு நான் பட்டது பட அமையாதோ –
நானும் பிறவாத பிறவிகளை அன்றோ நீ வந்து பிறந்தது –
(நாட்டில் பிறந்து மனிசர்க்காய் படாதன பட்டு )
அன்னமாயும்
வராஹமாயும்
செயலைக் காட்டி என் ஹிருதயத்தைக் கொண்டான் ஆய்த்து-
(என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் )
மன ஏவ மனுஷ்யாணாம்  காரணம் பந்த மோஷயா -என்று
பந்த ஹேதுவான தன்னையே
மோஷ ஹேதுவாம் படி பண்ணி அருளினான் –
(யஜமான சம்ஹயை இத்யாதி –2-57-60-நான்கு ஸ்லோகங்கள் கீதையில் )

கள்வா என்றலும்  என் கண்கள் நீர்கள் சோர் தருமால் –
இவர் நெஞ்சிலே புகுரா நின்றான் என்று அறியில்
ஒட்டார் என்று தெரியாதபடி யாகப் புகுந்தபடி -(ய ஆத்மா சரீரந வேத)
இவ் உபகாரத்தை அனுசந்தித்துப் பேசப் புக்கவாறே
கண்ணானது நீர் பாயா நின்றது –

என் கண்கள் –
ஸ்திரீகளை நினைத்து அழுது போந்த
என்னுடைய கண்கள் –

உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளி யக்கால் –
உன்னை அனுசந்தித்து புக்கவாறே
நெஞ்சாது உள்ளே நின்று உருகி
உடை குலைப் படா நின்றது –

நள்ளேன் உன்னை அல்லால் –
இனி வேறே நூறாயிரம் இதர விஷயங்கள் முகம் காட்டினாலும்
அவற்றோடு செறியேன் –

நறையூர் நின்ற நம்பீயோ —
நான் நோவு படுகிற சம்சாரத்தில்
நீயே முற்பாடனாய் வந்து நின்ற பின்பு
அவற்றோடு பொருந்துமோ –
ப்ரீதி அதிசயத்தாலே -ஒ -என்கிறார் –

(நான் உள்ளே புகுந்த -இரும்பு போல் வலிய நெஞ்சம் -பதம் செய்து –
அவ்வவ் அவதானங்களைக் காட்டி
ஆனந்த ஸ்ரு க்களை பிரவஹித்து
நெஞ்சை உருக்கினால்
பள்ளமடையான விஷயாந்தர ப்ராவண்யம் பிரபலம்
தன்னடையே பிரிய பண்ணவோ என்ன
மாட்டேன் -அவற்றோடு செறிய மாட்டேன் -)

(உன்னுடைய சங்கல்பமே ஜெயிக்கும் ஸத்ய ஸங்கல்பன் அன்றோ
பாபங்கள் வென்றால் மீண்டும் மீண்டும் பிறவி சூழலில் ஆழ்ந்து மாக்கிப் போவோமே
நான் தோற்று உன் குணங்கள் வென்றால் தானே பேறு -கூரத்தாழ்வான் )

—————————————

கீழே புள்ளாய் ஏனமாய்
தாழ்ந்த ஜென்மம் வேனுமாகில் பிறக்கலாம்
நாட்டார் பிறக்காத பிறக்க வேண்டுமா
நரமும் சிம்மமும் கலந்த நரஸிம்ஹ அவதார அனுபவம் –

ஓடா வாளரியின் உருவாய் மருவி என் தன்
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா
பாடேன் தொண்டர் தம்மைக் கவிதை பனுவல் கொண்டு
நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ-7-2-2

ஓடா வாளரியின் உருவாய் –
புள்ளாய் ஏனமுமாய் புகுந்து -என்றார் கீழே –
தாழ்ந்த ஜன்மத்தில் வேணுமாகில் பிறக்கிறாய் –
நாட்டார் பிறக்கும் பிறவிகளில் பிறக்கல் ஆகாதோ –
நாட்டில் நடையாடாத படியான நரசிம்ஹ ரூபத்தை யுடையையாய் –

மருவி –
நரசிம்ஹ வேஷ பரிக்ரஹம் பண்ணின அன்று தொடங்கி
இவர் உடைய ஹிருதயத்திலே காணும் கிட்டுவது –

என் தன் மாடே வந்து –
நீ பராவஸ்தன் ஆனாயாகில்
என் பாடு வந்து கிட்டலாமோ –

அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா –
ஸ்ரீ பிரஹலாத ஆழ்வான் நெஞ்சை உனக்காக்கிக் கொண்டாய் என்கிற இது
உனக்கு ஒரு மிடுக்கோ –
என்னை உனக்காக்கிக் கொண்ட உனக்கு –

அது செய்தோம் இறே
மேலே நீர் செய்யப் பார்த்தது என் என்ன –
பாடேன் தொண்டர் தம்மைக் கவிதை பனுவல் கொண்டு –
சாஸ்திர உக்தங்களான லஷணங்களிலே குறைவற்று இருக்கிற
கவிகளைக் கொண்டு நீசரைப் பாடுவது தவிர்ந்தேன் –
(தொண்டர் இங்கு விஷயாந்தர ப்ராவண்யம் உள்ளவர்களை
நாவில் இன் கவி ஒருவருக்கும் கொடிக்கிலேன் )

கவிதைப் பனுவல் என்றது -பனுவல் கவிதை -என்ற படியாய்
பனுவல் என்று நூலாய் -சாஸ்திரம் -என்ற படியாய்
சாஸ்திர உக்தமான லஷணங்களிலே குறை அற்ற கவி -என்றபடி –

நாடேன் உன்னை அல்லால் –
இவனைப் பாடுவோமோ -என்று விசாரிக்கும் அதுவும் தவிர்ந்தேன் –

நறையூர் நின்ற நம்பீயோ  –
நீ என்னுடைய சர்வ இந்த்ரியங்களுக்கும் உன்னை விஷயம் ஆக்கி வைக்க
நான் உன்னை விட்டு புறம்பே கவி பாடுகைக்கு
பிராப்தி உண்டோ –

————————————

தொண்டர் தம்மைப் பாடேன் -அஸேவ்ய ஸேவை பண்ண மாட்டேன் -என்றால்
உபகாரங்களைப் பண்ணினால் அதுக்காக ஏத்த வேண்டுமே என்ன
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
உபகாரர்களில் தலையான தாயும் தந்தையும் -விட்டு போனாலும்
மஹா உபகாரனான உன்னை ஒழிய வேறு எவரையும் பாடேன் –

எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே–7-2-3-

அடியேனுக்காகி –ஸ்வதா ஸித்தமான தாஸ்யம் உடைய எனக்கு –
மைம்மான வண்ணம்-அஞ்சன வண்ணன் –

எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின் அம்மானும் அம்மனையும்
நாட்டார் உபகரிக்கும் அளவிலே உபகரித்தாயாகில் அன்றோ உன்னை மறக்கல் ஆவது –
தாய் அளவிலே உபகரித்தான் –
தமப்பன் அளவில் உபகரித்தான் -என்ன ஒண்ணாதே –
அவர்கள் கை விட்ட அளவிலே முகம் காட்டின உன்னை –

மாதா பிதாக்கள் ராகாந்தராய்
பிரஜையை உபபாதித்து பின்பு
யௌவன விரோதி என்று கால் கடை கொள்ளுமவர்கள் –
ஜன்மம் தோறும் பழகிப் போந்த வாசனையாலே
அம்மே -என்றும் -அப்பா -என்றும் இவன் சொல்லிப் போருவது –
அதில் அம்மே என்ற போதாக பெண் குரலாலே ஏன் என்றும்
அப்பா என்ற போதாக ஆண் குரலாலே ஏன் என்றும்
இவன் அறிந்த வழியாலே யாய்த்து முகம் கொடுப்பது –
(மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ
ஸூகர் வியாசர் புத்ர வாத்சல்யம் புத்ரா கூப்பிட தன்மையில் மரங்கள் அப்பா கூப்பிட )

அடியேனுக்காகி நின்ற-
அந்த மாதா பிதாக்கள் அளவில்லாத படி
ஸ்வதஸ் சித்தமான முறையை உடைய எனக்கு
அம்மானும் அம்மனையும் ஆகி நின்ற –
(தாய் தந்தை உறவு கர்மாதீனம் -இது நிருபாதிகம்
அடியேன் உணர்ந்தால் தானே இந்த எண்ணம் சித்திக்கும் )

நல் மான ஒண் சுடரே –
விலஷணமாய்
அளவிறந்த ஒள்ளிய சுடரை உடையவனே
அப்படி இருப்பது பரம பதத்தில் அன்றோ என்ன –

நறையூர் நின்ற நம்பீ –
திரு நறையூரிலே வந்து சந்நிஹிதன் ஆன
கல்யாண குண பரிபூரணனே –

உன் மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே  –
அஞ்சனம் போலே ஸ்ரமஹரமான வடிவை உடைய
உன்னை அல்லது
புறம்பே சிலரை –
எத்தனை வேணும் என்று ப்ரேரித்தாலும்
ப்ரீதி புரஸ் சரமாக  ஏத்துமது இல்லை –

இப்போது புறம்பாக நினைக்கிறது -புறம்புற்றை திருப்பதிகளை –
(உன் அடியார் எல்லோரோடும் ஓக்க நினைத்தீர் -அங்கு நம்மாழ்வாரை போல் இங்கும் மற்ற திவ்ய தேசங்கள் )

அந்நிய விஷயத்தில் பிரேரித்தால் கடைமைக்குப் பாடுவேன் அன்று உகந்து பாட மாட்டேன் –

மைம்மான வண்ணம்-மை அளவான வண்ணம் -மை ஒத்த வண்ணம் –
ஸாளக்ராம திரு மேனி நறையூரில்

—————————————————-

வேறே திவ்ய தேசம் பாடேன் என்றவாறே
நெஞ்சில் உறைந்து நித்ய வாசம் செய்து அருள -அத்தை மறவாமையாலே
அன்றிக்கே
எத்தனை உபகார சீலனாய் இருந்தாலும் என்ன பயன்
நாட்டில் ஒருவரும் அத்த நினைப்பார் அல்லவே
நீரும் அப்படியே
நீ என் நெஞ்சில் இருக்க செய் நன்றி மறந்தவனாக ஆவேனோ என்கிறார் –

சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான்
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்
நறைவாரும் பொழில் சூழ்  நறையூர் நின்ற நம்பீயோ–7-2-4-

அறியாது இருந்தறியேன்-தெரிந்து கொள்ளாத நாள்களும் உண்டே -அத்தையும் காட்டி அருள
இரண்டு எதிர் மறை சொற்கள் இதில்

சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல் –
பாலனாய் ஏழு உலகு உண்டு -என்கிறபடியே
யசோதா ஸ்த நந்தயமும் நிரம்பின பருவம் என்னும் படியான பருவத்தை உடையையாய் –
அப் பருவத்திலே சகல லோகங்களையும் வயிற்றிலே வைத்து
ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளின
அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையையாய் –

(சிறியாய் ஓர் பிள்ளையுமாய்-உம்மைத்தொகை
பிள்ளை சிறுமை தெரியுமே
பாலனாய் -பாலன் காட்ட வேண்டுமே -பால் குடிக்கும் பருவத்துக்கும் சின்னவன்
உலகு உண்டு சின்ன ஆலிலையில் படுத்தது பொருந்தாது
சேராச் சேர்த்திக்கு உம்மைத் தொகை
நெஞ்சுள் உறைந்ததுக்கு எடுத்துக் காட்டு இந்த பொருந்தாத செயல்கள் )

உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான் அறியாது இருந்தறியேன் அடியேன் –
அப்படி சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து
அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே
பரம பதம் போலே இடம் பெற இருந்து
என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே
நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் –
அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் –

அணி வண்டு கிண்டும் நறைவாரும் பொழில் சூழ்  நறையூர் நின்ற நம்பீயோ –
உனக்கு உறைவிடம் இல்லாமை தான் செய்தாயோ நீ –
தர்ச நீயமான வண்டுகள் ஆனவை மேன் மேல் என படிகைக்கு
மேற்பட வேறு ஒன்றில் கால் வாங்காதபடி  மிக்க தேனை உடைத்தான
பொழிலாலே சூழப் பட்ட திரு நறையூரை வாசஸ் ஸ்தானமாக உடையவனே –
உனக்கு அசங்குசிதமாக வர்த்திகைக்கு ஒரு ஸ்தானம் இல்லையோ -இத் தேசத்தை உடைய உனக்கு  –

———————————————–

கீழ் பாட்டில் செய் நன்றி மறவாமல் அடிமையில் உருப்பட
இவர் ஆசையை வளர்க்க
கொஞ்சம் பிரிய உத்யோகிக்க -வளைக்கிறார் -போக ஓட்டேன் என்று

நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன்
நாண் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-5-

நீண்டாயை-இடம் காலம் வடிவம் -மூன்றாலும் நீண்டு

நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால் –
உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை சிலர் பேச என்று புக்கால்
எல்லாம் பேசி தலை கட்ட ஒண்ணாத படி
அபரிச்சேத்யனாய் உள்ள உன்னை
ப்ரஹ்மாதிகள் நெஞ்சால் கூட அனுசந்தித்து ஸ்தோத்ராதிகளைப் பண்ணி
கண்ணாலே காண வேணும் என்று ஆசைப் பட்டால்
காண அரியையாய் –

ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு –
என் ஆயனே என்று ஆதரிக்கப் படுகிற உனக்கு –
ப்ரஹ்மாதிகள் உடைய பாசுரம் இருக்கிறபடி –

நான் அடிமை பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன் –
இப்படி இருக்கிற உனக்கு
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று உன் திருவடிகளிலே சகல சேஷ வ்ருத்திகளிலும் அதிகரித்தேன்
என்னையும் அடிமையில் மூட்டுகைகாக என்னுடைய
ஹிருதயத்திலே புகுந்த
உன்னைப் போக ஒட்டுவேனோ
வந்த கார்யம் தலைக் கட்டினோம் ஆகில் இனி வேறே ஒரு இருப்பிடம்
தேடித் போக அமையாதோ -என்று போக நினைத்தான்
நான் போக ஒட்டுவேனோ –

அடியேன் –
அடியேன் -என்னா நின்றீர்
சேஷ பூதராவார் சேஷி செய்தபடி செய்யக் கண்டு இருக்குமவர்கள் அன்றோ
ஒட்டேன் என்று நிர்பந்திக்கை உம்முடைய ஸ்வரூபத்துக்குப் போருமோ  -என்ன –
நாண் தான் உனக்கு ஒழிந்தேன் –
மடல் எடுக்க நினைப்பார்
இது ஆம் இது ஆகாது என்று கார்யம் பார்த்தோ செய்வது –

நறையூர் நின்ற நம்பீயோ —
நீயோ சால நாண் உடையையாய் இருக்கிறாய் –
நீ முந்துற மடல் எடுத்து
பின்னை அன்றோ மடல் எடுப்பித்தது –
அவன் மடல் எடுக்கை யாகிறது -முற்பாடனாய் வர நிற்கை இறே-

(அடிமையை ஆசை மூட்டுவதே வந்த கார்யம்
விலக விலக ஆசை வளரும்
இரண்டாம் மூன்றாம் நாலாம் பாட்டில் மூன்று அடியேன் உண்டே
பிரணயம் -சிவிடக்கு தோன்ற ஓட்டேன்)

——————————————————————

வந்தது நாண் இல்லாமல்
நீரும் நாண் இன்றி
நாண் அற்ற இருவரும் ஸ்வ தந்த்ரர்
விலகுகிறேன் என்ன
குலா நாதன் அன்றோ என்று காலைப் பிடிக்கிறார்
திருமாலே நானும் உனக்கு பழ அடியேன்
எந்தை எந்தை –ஏழு படிகள்

கீழில் போக ஓட்டேன்
பாரதந்தர்யத்தில் வைத்து அருள திரு உள்ளம் பற்றி
ஆனைக் குப்பம் ஆடுவாரைப் போல் காதில் போட்டுக் கொள்ளாமல் இருக்க
இழப்பு உம்மதே என்கிறார்

எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ என் ஆர் உயிரே  அரசே அருள் எனக்கு
நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-6-

எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன் –
நான்
என்னுடைய தமப்பன்
அவனுடைய ஜநகன்
இவர்களோடு கூட அவ்வருகே எழுவர்
(மேல் பத்து கீழ் பத்து -21
என் தாதை -அர்த்த சித்தம்
தச பூர்வம் -உத்தரம்
கன்யாதான பல தயா -21 தலைமுறை பலம்
கேசவன் தமர் படி சம்பந்திகள் பலித்தமை -இங்கும்)
சப்த  சப்தஸ சப்தஸ –என்னக் கடவது இறே
ஒருவருக்கு உண்டான நன்மை அசல் காக்கும் இடத்தில்
ஏழ்  படி கால் சொல்லும் இறே –
இத்தால் குலமாக அனந்யார்கள் என்றபடி –
நான் அபேஷியாது இருக்க
நீயே என்னுடைய ஹிருதயத்தில் வந்து புகுந்த உன்னை
போக ஒட்டுவேனோ –
கைப் பட்ட நிதியை உதறுவார் உண்டோ –

அந்தோ என் ஆர் உயிரே  –
இவர் ஒட்டேன் என்னச் செய்தே
பின்னையும் போவானாக நினைத்தான் –
ஐயோ இவ் வஸ்துவை இழந்தாய் கிடாய் -என்கிறார் –
உன்னை ஒழிய ஜீவியாத படி
என் சத்தையை நிர்வஹித்துக் கொண்டு போருகிறவனே-

அரசே –
என்னை வன்னியம் அறுத்து ஆண்டவனே –

அருள் எனக்கு நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ  –
நீ போகாதே கொள் -என்று காலைக் கட்டி வளைக்கலாம் படி
என் பக்கலிலே அருளைப் பண்ணின
என் ஆயனே
திரு நறையூரிலே வந்து  நின்று ஆய்த்து-இவருக்கு அருளிற்று  –

——————————————–

இவருடைய ஹிருதயத்தில் புகுந்து இருந்த
ஈஸ்வரன் போக்கை நினைத்தான் –
போக ஒட்டேன் -என்றார் –
ஒட்டேன் ஆவது என் –
நம்மோடே மலைந்து விலக்கப் போமோ உமக்கு
இருப்பதொரு படி கால் ஷத்ரிய வம்சத்தை அறுத்துப் பொகட்ட
பெரு மிடுக்கர் அல்லோமோ நாம்  -என்ன
அதில் தட்டில்லை –
ஆனாலும் அவ்வோ பிரக்ருதிகளுக்கு அனுரூபமாக அன்றோ
நீ பரிமாறுவது -என்கிறார் –

மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர்
வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்
நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-7-

மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா –
ராஜ  லோகம் அடைய அஞ்சும்படி அவர்களுக்கு அடியான
சஹஸ்ர பாஹூ வர்ஜுனன் உடைய  தோள்கள் ஆயிரத்தையும்
மழுவாலே துணித்த மிடுக்கனே –
நீ தொடங்கின கார்யத்துக்கு ஒரு பிரதிஹதி உண்டாம் என்றவனும் அல்லேன்
உன்னுடைய மிடுக்கை இசையாதவனும் அல்லேன் –
ஆனாலும் அவ்வோருடைய ஸ்வபாவங்களை அறிந்து அன்றோ பரிமாறுவது –

எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர் வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் –
உன்னை ஒழிய அறியாத படி இருக்கிற
என்னுடைய நெஞ்சிலே வந்து புகுந்து இருந்து
இனி இங்கு நின்றும்  போயிருக்கவுமாய் -போகவுமாய் –
இருப்பார் நெஞ்சில் போய் இருக்க ஒட்டேன் –
(போகவுமாய் -இருப்பார் நெஞ்சில் -விஸ்லேஷத்தில் தரிப்பார் நெஞ்சில் )

ஒட்டேன் என்றாலும் நாம் தவிரோம் என்றால் –
வளைத்து வைத்தேன் –
நீ போகில் நான் முடிவன் -என்கிறார் –
இத்தலை இழக்க வரும் அளவில் -இட்ட அடி பேர்க்க மாட்டான் –

நீர் வளைக்கிறது என்ன மிடுக்கு கொண்டு என்ன –
நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ –
நீர் குற்றம் கண்டு  கை விடப் பார்க்கும் அன்றும்
ந கச்சின் ந அபராத்யதி -என்னும் அவள் அன்றோ அருகே இருக்கிறாள் –

—————————————————–

நீர் பிராட்டி சலுகை கொண்டு வளைக்க காரணம் என்ன –
முன்னமே வந்து பின்பு நீ புகுந்தது
ஆகவே போகிறேன் என்கிறேன்
நான் வர நீர் காத்து இருந்து -என் உள்ளமும் புகுந்து போகலாமா
தேவரீர் குறை இருந்து என்னால் தீர வில்லையே
பூர்த்தியை காட்டி அருளி
நீயே நான் நினைக்காத பொழுது உள்ளம் புகுந்து
உனது போக்யதையையும் காட்டி அருளி
பின்பு பிராட்டி ஸஹ கரிக்கவும் சந்நிஹிதையாய் இருக்க போக ஒட்டுவேனோ

எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள்
கைப் போது கொண்டு இறைஞ்சிக் கழல் மேல் வணங்க நின்றாய்
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல்  ஒட்டேன்
நற் போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-8-

எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள் கைப் போது கொண்டு இறைஞ்சிக் கழல் மேல் வணங்க நின்றாய் –
நாம் முன்பு வந்து புகுந்தது
ஒரு குறை உண்டாயோ
இப்போது போக நினைக்கைக்கு -சதா பஸ்யந்தி -என்கிறபடியே
எப்போதும் ஒக்க ஸ்ப்ருஹணீயமான புஷ்பங்களைக் கொண்டு
நித்ய ஸூரிகளானவர்கள் தொழுது
தங்கள் கைகள் ஆகிற புஷ்பங்களைக் கொண்டு
அஞ்சலியைப் பண்ணிக் கொண்டு
திருவடிகளிலே விழுந்து
ஆஸ்ரயிக்கும் படி இருந்தாய் –

இப்போது –
உன்னுடைய இவ் வரவுக்கு பூர்வ ஷணத்தில் எனக்கு ஒரு சம்ருத்தி இல்லை –

என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல்  ஒட்டேன்-
என் பக்கலில் ஒரு அபேஷம் மாதரமும் கூட இன்றிக்கே இருக்க
நீயே வந்து புகுந்து
உன்னுடைய போக்யதையை அறிவித்த பின்பு
இனி உன்னை போக ஒட்டுவேனோ –

நற் போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ –
விலஷணமான புஷ்பங்களிலே வண்டுகள் ஆனவை
குடைந்து வண்டு உண்ணும் -திருவாய்-1-7-11-என்கிறபடியே
உள்ளே உள்ளே அவஹாகிக்கும் அத்தனை போக்கி
வேறு ஒன்றில் போக ஒண்ணாத படி
போக்யமான தேசத்தை வாசஸ் ஸ்தானமாக உடையவனே-
அவ் ஊரில் அவஹாகித்தாருக்கு
வேறேயும் ஓர் இடம் தேடித் போகலாம் படியோ
அவ் ஊரில் போக்யதை இருப்பது –

————————————————

போக்யத்தை காட்டக் கண்டு வளைத்தேன் என்றதால்
பரம ஹ்ருஷ்டானாய் ஸ்திரமாய் அமர
சரீரத்துடன் இப்பேறு பெற்றேன் என்று
கீழ் எட்டு பாசுரக்களிலும் உள்ளவற்றை தொகுத்து
உயிர் பாசுரம் அருளுகிறார் –
தானாக -பரகத ஸ்வீ காரம் -வந்து அடியேன் மனம் புகுந்து
ஸ்வீகாரத்தின் உடைய பலம் பெற்றேன் -என்கிறார் –

ஈஸ்வரன் அநேக அவதாரங்களைப் பண்ணி
ஸ்வயம் வரித்துக் கொடு வந்த
ஸ்வீகாரத்தின் உடைய பலம் பெற்றேன் -என்கிறார் –
(கீழ் பாசுரங்களில் அருளிச் செய்த அனைத்தையும் தொகுத்து அருளுகிறார்)

ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த
தேனே தீன் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்
நானே எய்தப் பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-9-

ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் –
மாம்ச பிரசுரமான சரீரத்தை
வழி அல்லா வழியே த்ரவ்யார்ஜனம் பண்ணி
அது கொண்டு இத்தைப் பேணி வைத்த
பிரயோஜனம் இன்று பெற்றேன் –

யானாய் –
நாமும் நாமாய் இவரும் இவராய்
இவரோடு கலக்கும் இடத்தில்
இவர் ஆணை இட்டு விலக்குவார்-
ஆன பின்பு இவர் என்ற சொல்லுக்குள்ளே இவரை அடக்கி கலப்போம் -என்று பார்த்து
நானாகிற சொல்லுக்கு உள்ளே தன்னை அடக்கிக் கொடு வந்து புகுந்தான்   –

என் தனக்காய் –
சர்வாதிகனான தன்னை
எனக்காக ஆக்கி –

அடியேன் மனம் புகுந்த –
தன்னைத் தமக்காக்கி-( பெருமாளை ஆழ்வாருக்கு ஆக்கி )
தம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து
கலந்த படியை அனுசந்திக்க அனுசந்திக்க
தமக்கு இனிதாகா நின்றது –

தேனே தீன் கரும்பின் தெளிவே –
எனக்கு சர்வ வித போக்யமுமாய் உள்ளவனே –

என் சிந்தை தன்னால் நானே எய்தப் பெற்றேன் –
வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி
அது கொண்டு பெற இருக்கை அன்றிக்கே
ஊனேர் ஆக்கை தன்னை உழம்பி ஓம்பி வைத்த நான் –
இந்த சரீரம் தன்னையே கொண்டு பிராபிக்கப் பெற்றேன் –

அது செய்த படி தான் எங்கனே என்ன –
நறையூர் நின்ற நம்பீயோ  –
நீ வர நிற்கையாலே
நான் இப் பேறு பெற்றேன் –

———————————————

நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்
சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நன்னீர்மையால் மகிழ்ந்து  நெடும் காலம் வாழ்வாரே –7-2-10-

சொன்னீர்-சொல் நீர் -நீர்மை – ஸ்வ பாவம்

நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக் –
அழகிய ஜல சம்ருத்தியை உடைத்தான வயலானது
பர்யந்தம் எங்கும் சூழ்ந்து இருக்கின்ற
திருநறையூரை வாசஸ் ஸ்தானமாக  உடைய
கல்யாண குண பூர்ணனை யாய்த்து கவி பாடிற்று –

கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்-
கல் என்று த்வனிக்கு பெயர்
மிக்க த்வனிகளை உடைத்தான அருவிகளை உடைத்தாய் இருக்கிற
பெரிய மலை போன்ற தோள் மிடுக்கை உடையராய்
பிரதிபஷ நிரசன ஸ்வபாவரான
திரு மங்கையில் உள்ளாருக்கு நிர்வாஹகரான
ஆழ்வார் கவி பாடினவர் –

சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் –
இத்தை அனுசந்தித்தார்க்கு -இது ஒரு சப்தமே -என்று கொண்டாடும்
இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற சொல் தொடையைச் சொல்லும் அவர்கள்
இத்தை சொல்லுகையே போரும் ஆய்த்து பிரயோஜனம் –
அதுக்கு மேலே

சூழ் விசும்பில் நன்னீர்மையால் மகிழ்ந்து  நெடும் காலம் வாழ்வாரே –
போக பூமிகளிலே மேலாய் இருக்கிற பரம பதத்திலே போய்
இவ் வாத்மாவின் உடைய ஸ்வரூப அனுரூபமான முறையாலே
(சேஷத்வ பாரதந்த்ர முறையில் )
நிரதிசய ஸ்வரூபா நந்திகளாய்
பின்னை ஒரு நாளும் புநரா வ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவார்கள் –

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

புள் ஏனம் ஆம் நம்பி நெஞ்சுட் புகுந்தானைத்
தள்ளேன் வையத்து வான் இன்பம் விட மெய் உள்ளத்தோடு
சிந்தையால் எய்தி இன்புற்றேன் என் சீர்க் கலியன்
சிந்திப்பார்க்கு இல்லை சினம் -62-

விட மெய் -விடத்தக்க உடல் -நஞ்சாகிய உடல் என்றுமாம்
என் சீர்க் கலியன் -என்று அருளிச் செய்யும் ஆழ்வார் –

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-