ஐந்தாந் திருவாய்மொழி – “துவளில்”
முன்னுரை
ஈடு :- 1இத் திருவாய்மொழிக்கு முன்னும் பின்னும் எல்லாம் எம்பெருமானைக் கவிபாடினார்; இத் திருவாய்மொழியில் தம்முடைய படி சொல்லுகிறார். 2சிம்ஹாவலோகந நியாயத்தாலே 3“பொய்ந்நின்ற” என்னும் பாசுரம் தொடங்கி இவ்வளவும் வரத் தமக்குப் பகவத் விஷயத்தில் உண்டான பிராவண்யத்தின் மிகுதியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார். 4“இத்திருவாய்மொழி, ஆழ்வார் தன்மை சொல்லுகிறது” என்று நம் முதலிகள் எல்லாரும் போர விரும்பி இருப்பர்கள். 5பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தினையுடையவராய், “வேதவாக்குக்கள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்பின” என்கிற விஷயத்தை மறுபாடு உருவப் பேசினதாமே வேணுமாகாதே தம்படி பேசும்போதும்.
1ஸ்ரீஜனகராஜன் திருமகள் பிறந்த சமயத்திலே சோதிடர்களை அழைத்து, ‘இவள் ஜீவிக்கும்படிகள் என்?’ என்று கேட்க, ‘இவள் ஜீவிக்கும்படிகளில் ஒரு குறை இல்லை, எல்லாவுலகங்களையுமுடைய ஒருவனைக் கைப்பிடிக்கவும் கடவள்; இங்ஙனே இருக்கச் செய்தேயும் வனவாச ரசம் அநுபவிக்கக் கடவள்’ என்றார்கள்; அப்படியே, இப் பெண்பிள்ளை பிறந்தபோது இவள் திருத்தாயார் உள்ளிட்டார், காரணம் அறிந்தவர்களை அழைத்து, ‘இவள் ஜீவிக்கும்படிகள் எங்ஙனே?’ என்று கேட்க, ‘எல்லாம் நன்றாகத் தலைக்கட்டக்கடவன; ஆனாலும், இவளுக்கு ஓர் அகால மரணம் உண்டு; அது தப்பினாளாகில் சுகமே ஜீவிக்கும். அதாவது, திருத் தொலை வில்லி மங்கலத்திற் கொடுபோகாதே ஒழியப் பெறில் இவளைப் பெறலாம்’ என்றார்கள். 2இவள் மரணத்தையே அடையினும் திருத்தொலை வில்லிமங்கலத்தில் கொடுபோகாது ஒழியவல்ல குடி அன்றே; 3‘இவள் அங்கேபுக்கு இறப்பினும் அமையும்’ என்று இருப்பார் சிலர் அன்றோ. 4பிராட்டி வனவாச ரசம் அநுபவியாத அன்றே அன்றோ இவள் திருத் தொலை வில்லி மங்கலத்தில் புகாதொழிய வல்லளாவது. ஸ்ரீநளர் வார்த்தையை நினைப்பது. 1தேஹாத்மாபிமாநிகளாய் இருப்பார்க்கு எத்தனையேனும் அறிவு பிறந்தாலும் ‘நான் பருத்தவன், நான் இளைத்தவன்’ என்கிற நிலைமாற்றப் போகாதவாறுபோலே, இவரையும் எல்லா வகையாலும் உகந்தருளின நிலங்களிலே நின்றும் திருஷ்டத்தில் குறைசொல்லி மீட்கப் போகாது. 2சிற்றின்பத்திலே ஈடுபாடு உடையராயிருப்பார் ‘அதர்மம்’ என்றும், ‘பழி’ என்றும், ‘மேல் நரகம்’ என்றும் சொன்னால் சிற்றின்பத்தில் நின்றும் மீளார்களே அன்றோ. 3இங்குக் குணாதிக விஷயமாகையாலே ஒரு குறை சொல்லி மீட்கப்போகாதே. 4‘குறை சொல்லுவோம்’ என்று நினைக்கிலும் குணங்களின் மிகுதியைச் சொல்லுமத்தனை அன்றோ. 6அது பின்னை ஈடுபாட்டுக்குக் காரணமாமத்தனை அன்றோ. 6பழியும் உண்டாயிடுக, மதிப்புக்கேடும் வருக; ஆனாலும், அது கண்டு மீளமாட்டாத உறுதியன்றோ இவளது. 7அங்ஙனேயாகிலும், இவர்கள் இவ்விஷயத்தில் நின்றும் இவளை மீட்கப் பார்க்கிறது என்? என்னில், ‘பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் நம்மளவு அல்லாத அளவு கடந்த ஈடுபாடு இவளுக்கு விளையா நின்றது; அது இவளை இழக்க வரின் செய்வது என்?’ என்னும்அச்சமாயிற்று இவர்களுக்கு ஓடுகிறது. 1இனித்தான், அளவு கடந்த ஈடுபாடு சாதனத்தை அநுஷ்டிப்பார் கையிலே கிடக்கக் காண்கையாலே ‘இவள் சாதன புத்தியால் இழியின் செய்வது என்?’ என்னும் அச்சத்தாலே மீட்கவும் பார்ப்பரே. 2‘இந்த ஈடுபாடு சொரூபத்திற்கு விரோதமானாலன்றோ சாதனத்தில் சேர்வது என்றே அன்றோ இருப்பது இவள். 3‘சொரூபபேதத்துக்கு இசைந்தால் சொரூபத்திற்குத் தகுதியான காரியங்களுக்கு இசைய வேண்டாவோ?’ என்று காணும் இவள் கருத்து. 4சேஷிக்கு உபாயமாயிருத்தல் சொரூபத்திற்குச் சேர்ந்தது ஆனபின்பு, சேஷனாயிருப்பவனுக்கும் பிராவண்யம் சொரூபத்தில் கட்டுப்பட்டதாகக் கடவதன்றோ.
5இனித்தான், மேல் திருவாய்மொழியோடு இத் திருவாய்மொழி சேர்ந்திருக்கும்படி என்? என்னில், கிருஷ்ணனுடைய குணங்களை அநுபவியாநிற்கச்செய்தே, குடிக்கிற தண்ணீர் விக்கி அதுதானே பரவசமாந் தன்மையை விளைப்பிக்குமாறு போலே, அந்த அநுபவம்தானே வேறு ரசத்திலே மூட்டத் தமக்குப் பிறந்த துன்பத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார். அதாவது, “பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர, பகவத் விஷயத்தில் பூர்ண அநுபவம் இன்றிக்கே இருக்கையாலே, தமக்குப் பிறந்தபிராவண்யத்தின் மிகுதியை அருளிச்செய்கிறார். அன்றிக்கே, மேலே அநுபவித்த அநுபவம்தான் மானச அநுபவமாத்திரமாய், புறத்திலேயும் அநுபவிக்கவேண்டும் என்ற அபேக்ஷை பிறந்து, அது பெறாமையால் வந்த கலக்கத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் என்னலுமாம். 1இப்பெண்பிள்ளையின் தன்மையை அறியச் செய்தேயும் தாய்மார் விழுக்காடு அறியாமையாலே திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொடுபுக, அவள் “அரவிந்தலோசந” என்பது, “தேவபிரான்” என்பது: நீர்மையைச் சொல்லுவது, மேன்மையைச் சொல்லுவது, ஒப்பனை வாசி அறிந்தமை தோற்றச் சொல்லுவதாய் வாய்வெருவ, இவள் நிலை இருந்தபடியால் ‘இவள் கிடைக்கமாட்டாளே அன்றோ’ என்று தாய்மார் வெறுத்துத் தோழிபாடே வந்து, ‘இவள்படி உனக்குத் தெரியாமை இல்லை; இவளை மீட்கலாம் விரகு சொல்லவேண்டும்’ என்ன, தோழி, 2‘நீங்களே இவளுக்குப் பிராவண்யத்தை உண்டாக்கி இப்போதாக இவளை மீட்க ஆசைப்படுகிற இதனால் பிரயோஜனம் என்? முன்னரே விலக்கப் பெற்றிலீர்; இனி, இவள் பக்கல் நசை அறுங்கோள்; இவளைத் தடைசெய்யப் பாராமல் நீங்களும் துணையாக இருந்து இவள் உஜ்ஜீவிக்கும்படி பண்ணப் பாருங்கோள்’ என்கிறாள். 3தாய்மார் கேட்கத் தோழி அன்றோ சொல்லுகிறாள்; 4பகவத் விஷயத்துக்குப் “பழையார், புதியார்” என்று இலர்; தேசிகர் சொல்ல ஆதரமுடையார் கேட்குமித்தனை.ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந:” என்று இளையபெருமாள் படியை ஸ்ரீ பரதாழ்வானுக்கு ஸ்ரீ குகப்பெருமாளன்றோ சொல்லுகிறார். ஆசசக்ஷே – வாக்கு இந்திரியத்திற்கு நில மல்லாததையும் சொல்லலாமாகாதே“ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந:
பரதாய அப்ரமேயாய குஹோ கஹன கோசர:”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 86 : 1. சுலோகத்திற்குப் பொருள் அருளிச்
செய்கிறார் ‘வாக்கு இந்திரியத்திற்கு’ என்று தொடங்கி. “மஹாத்மந:”
என்கையாலே, நிலமல்லாமை தோற்றுகிறது. ‘சொல்லலாமாகாதே’ என்றது,
சிறிது சொன்னான் என்றபடி.
. அத – ஸ்ரீ பரதாழ்வான் தன்மை அறிந்தபின்பு. ஸத்பாவம் – 2“இளமைப் பருவம் தொடங்கியே அதிக அன்புள்ளவராயிருந்தார்” “பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்ட நித்யஸ:”- என்பது, ஸ்ரீராமா. பால. 18, 27.
என்றும், 3“பரதந்திரனாக இருக்கிறேன்” “பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.
என்றும் 4சத்தையோடு கூடியதாயிருக்கின்ற தன்மையைச் சொன்னான். லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: – கடலைக் கையாலே இறைக்கத் தொடங்கினான். பரதாய அப்ரமேயாய – ‘இன்னார் இன்னார்க்கு உபதேசிக்க’ என்று இல்லை ஆகாதே. குஹோ கஹந கோசர: காட்டில் மரங்களின் வாசி அறியுமவர் இவர்கள்நிலை அறியும்படி நிலவரானார். அன்றிக்கே, இராம விரஹத்தாலே ஒரு தூற்றடியிலே கிடந்தவன், தேசிகரைப் பெற்றவாறே தலையெடுத்துப் புறப்பட்டான் என்னலுமாம்.
துவளில்மாமணி மாடமோங்கு 5தொலைவில்லி மங்க லம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக் காசை இல்லைவிடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.
பொ-ரை :- குற்றம் இல்லாத பெரிய மாணிக்கங்கள் பதித்த மாடங்கள் உயர்ந்து விளங்குகின்ற திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்தைத் தொழுகின்ற இவளிடத்தில், அன்னைமீர்! உங்களுக்கு இனி ஆசைவேண்டா; நீங்கள் ஆசையை விடுங்கோள்; வெண்ணிறத்தையுடைய பிரகாசம் பொருந்திய சங்கு என்றும் சக்கரம் என்றும் தாமரை போன்ற விசாலமான திருக்கண்கள் என்றும் சொல்லிக்கொண்டு அழகிய குவளைமலர் போன்ற கண்களிலே தண்ணீர் தேங்கும்படி நின்று நின்று குமுறுவாள்.
வி-கு :- அன்னைமீர்! தொழும் இவளை உமக்கு ஆசை இல்லை; இனி நீர் விடுமின் என்றும், கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறும் என்றும் கூட்டுக. இவளை, வேற்றுமை மயக்கம். ‘இவளை விடுமின்’ என்று கூட்டி நேரே பொருள் கோடலுமாம்.
இத்திருவாய்மொழி, எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்
ஈடு :- முதற்பாட்டு. 1இவள் தன்மை அறியாதே திருத்தொலை வில்லிமங்கலத்தைக் காட்டின பின்பு உங்கள் நல்வார்த்தைக்கு இவள் மீளுவாளோ? என்கிறாள்.
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் இவளை உமக்கு ஆசை இல்லை இனி நீர் விடுமின் – 2‘உனக்கு இப்போது உதவாதபடி தூரத்திலேயுள்ளவை’ என்னுதல், ‘சென்ற காலத்தில் அவதாரங்கள்’ என்னுதல், உகந்தருளின நிலங்களிலே உள்ளே நிற்கிறவனளவிலே ஈடுபட்டவளாதல் செய்தாளாய் மீட்க நினைக்கிறீர்கோளோ? அசலிட்டுத் திருத் தொலை வில்லிமங்கலத்தை விரும்புகிற இவளை எங்ஙனே மீட்கும்படி? 1சரமாவதியிலே நிற்கிற இவளைப் பிரதமாவதியிலே நிற்பார் மீட்கவோ? 2அவ்வூர்ச் சரக்கிலே குற்றமுண்டாகிலன்றோ இவளை மீட்கலாவது? குற்றமுண்டாகிக் கழிந்தது அன்று. ஜீவன் பரன் என்னும் இருவர்க்கும் பாபம் இல்லாமை முதலானவைகள் உண்டாயிருக்கச்செய்தே, ஜீவாத்மாவுக்குக் குற்றம் உண்டாகிப் பகவானுடைய திருவருளாலே அது கழியும்; பரமாத்மாகுற்றங்கள் சேரத் தகுதி இல்லாதவனாகவே இருப்பான்; அப்படியேயாயிற்று, 3அவ்வூரில் மாடங்களில் இரத்தினங்களும். துவள்-குற்றம். இல் – அது இன்றிக்கே இருக்கை. மா மணி – ஒளியே அன்று; பெருவிலையனுமாயிருக்கும். ஓங்கு – அவ்வூரில் மாடங்களின் நிழலீடு திருநகரியளவும் வந்து காணும் இருப்பது. ‘இடமணித்து’ என்று போலே காணும் நாயகன் பிரிந்தது. மாளிகையின் நிழற்கீழே இட்டு வைத்துக் காணும் பிரிந்தது. 4அவன் பிரிந்தபோது தொடங்கி அவ்வூரையும் அவ்வூரில் மாடங்களையும் அவற்றில் மாணிக்கங்களையும் பார்த்து, வைத்த கண் வாங்கமாட்டாதே இருந்தாள்போலே காணும். 3துருப்புக்கூடுபோலே அவ்வூரை அன்றோ இவள் விரும்பியதுஎன்பாள் ‘தொலை வில்லிமங்கலம் தொழும்’ என்கிறாள். ‘கறுத்திருக்கும், வெளுத்திருக்கும்’ என்னுமாறு போலே, தொழுகையே நிரூபகமாகவுடையவள் என்பாள் ‘தொழு மிவளை’ என்கிறாள். 1“கை கூப்பினவனும் வணங்கினவனும் உட்கார்ந்திருக்கிறவனுமானவனைப் பார்த்துச் சொன்னார்” இதி ஏவம் உக்த: மாத்ரா இதம் ராமோ ப்ராதரம் அப்ரவீத்
ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வமாஸீநம் அபிவீக்ஷ்ய ஸ்மயந்நிவ”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 4 : 42.
என்னுமாறு போலே; “கணபுரம் கை தொழும் பிள்ளை” –பெரிய திருமொழி, 8. 2 : 9.-என்னுமாறு போலே. 2இவளை மீட்கப் பார்ப்பதே, இவள் படியைப் புத்திபண்ணியன்றோ மீட்பது! இவள்படி கைமேலே காணாநிற்கச்செய்தே நீங்கள் மீட்கத் தேடுகிறபடி எங்ஙனே? பழி சொல்லப் பணைக்கிறவள் இவள், பழியை நீக்குவதற்குப் பார்க்கிறீர்கோள் நீங்கள் என்பாள் ‘இவளை நீர்’ என்கிறாள்.
தொழுகை தேகயாத்திரை யாதற்கு முன்னே யன்றோ மீட்கப் பார்க்கவேண்டும் என்பாள் ‘இனி’ என்கிறாள். பகவத்விஷயத்தில் 3மூழ்குதல் என்று ஒன்று இல்லையோ? நியமித்தல் நியமிக்கப்படுதல் என்ற தன்மையேயோ வேண்டுவது; பெற்றவர்கள் என்னா, பொருத்தமில்லாத காரியங்களில் இழியக்கடவதோ? என்பாள் ‘அன்னைமீர்!’ என்கிறாள். தக்க பருவத்தினையுடையவர்களானார் பக்கல் பெற்றவர்களுக்குச் சம்பந்தம் உண்டோ? புக்க இடத்தே ஈடுபட்டவர்களாகாநிற்க, பெற்ற சம்பந்தம் கொண்டு மீட்கவோ என்பாள் ‘உமக்கு ஆசை இல்லை’ என்கிறாள். விடுமினோ – இவ்வளவில் நீங்கள் கைவாங்க அமையும்.1பெற்ற தாய்மார் ‘விடுமின்’ என்ற அளவிலே விடார்களே அன்றோ; பின்னையும் நிர்ப்பந்திக்க வேண்டா, இவளுக்கு ஓடுகிற ரசத்தைக் கண்டுகொடு நிற்கப்பாருங்கோள் என்கிறாள் என்றது, இவளுடைய அனுபவத்திற்குத் தண்ணீர்த் துரும்பு ஆகாதே இதனைக் கண்டு கொடு நிற்க அமையும் என்கிறாள் என்றபடி. 2‘எங்களை ‘ஆசைப்படவேண்டா, விடுங்கோள்’ என்கிறது என்? என்னில், இவள் பேச்சிலும் நினைவிலும் நீங்களாதல் நானாதல் உண்டோ? “புத்திரர்களையும் மனைவியையும் துறந்து” என்னும் நிலையன்றோ இவளது! “த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் ஸரணம் கத:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 14.
தவளம் ஒண் சங்கு – கரியநிறமுடைய திருமேனிக்குப் பரபாகமான வெண்மையையுடைத்தாய், 3“உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்” என்கிற அழகையுடைத்தான சங்கு. சக்கரம் – அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாத அழகையுடைய சக்கரம். என்றும் – ‘இவற்றைக்காணவேணும்’ என்னுதல்; ‘இவற்றோடே வரவேணும்’ என்னுதல் சொல்லமாட்டுகின்றிலள் பலக்குறைவாலே. தாமரைத்தடம் கண் என்றும் – அந்த ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற திருக்கண்கள். தாமரையை ஒருவகைக்கு ஒப்பாகச் சொல்லலாய், அநுபவிக்கின்றவர்கள் அளவன்றிக்கே இருக்கின்ற திருக்கண்கள் ஆதலின் ‘தடம்கண்’ என்கிறாள். 4ஒருமலை எடுத்தாற் போலே சொல்லுக்குச் சொல்லு தளர்ந்து நடு நடுவே விட்டு விட்டுச் சொல்லுகிறாள் என்பாள் ‘என்றும் என்றும்’ என்கிறாள். 5திவ்வியாயுதங்களையும் கண்ணழகையும் காட்டியாயிற்று இவளைத் தோற்பித்தது. குவளை ஒண்மலர் கண்கள் நீர்மல்க – 1இந்தக் கண்களைக்கண்டால் தாமரைத் தடங்கண்கள் அன்றோ நீர்மல்க அடுப்பது? 2கண்ணும் கண்ணீருமாய் இவள் இருக்கிற இருப்பைக் கண்டுகொண்டு இருக்க அன்றோ உங்களுக்கு அடுப்பது? 3“பகவத் அநுபவத்தால் உண்டான சந்தோஷத்தாலே குளிர்ந்தகண்ணீரையுடையவனாய், மயிர்கூச்சு எறிகின்ற சரீரத்தையுடையவனாய், பரமாத்மாவின் குணங்களால் எப்போதும் ஆவேசமடைந்தவனாய், மக்களால் பார்க்கத்தகுந்தவனாய் இருப்பான் ஞானி” என்பது விஷ்ணுதத்வம். “ஆஹ்லாத சீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான் ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:”-என்பது, ஸ்ரீ விஷ்ணு தத்வம்
இதனால், எப்பொழுதும் தரிசனம் செய்துகொண்டு இருப்பதற்கு ஒருதேசம் தேடிப்போக வேண்டாகாணும் என்பதனைத் தெரிவித்தபடி. குவளைப்பூப்போலே அழகிய கண்கள் நீர்மல்க. 4அவள் தன்னுடைய பெண் தன்மையைக் காற்கடைக்கொள்ள, நீங்கள் எங்ஙனே மீட்கப் பார்க்கும்படி? கண்ணநீர் பாய்கையாவது, பெண்தன்மை அழிதலே அன்றோ. நின்று நின்று குமுறும் – 5பேச்சுப்போய்க் கண்ணநீராய், கண்ணநீர்போய்த் தடுமாறுகிறநிலையிலே மீட்கப்போமோ?
6இராஜகோஷ்டியிலே “உகும், இறும்” என்று சிலர்பொருள் சொல்ல, விக்கிரமசிங்கன் என்பான் ஒருவன், ‘அங்ஙன் அன்று,கன்றைக் கடக்கக் கட்டிவைத்தால் முலைக்கண் கடுத்துப் பசு அலமந்து படுமாறுபோலே, உள்ளோடுகிற கிலேசம் வாய்விடமாட்டாதே நோவுபடுகிற இவளுக்கு இது வார்த்தையோ?’ என்றான். 1பெருவெள்ளத்தில் சுழிக்குமாறுபோலே, அகவாயில் உள்ளது வெளியிடமாட்டாள்; உள்ளே நின்று சுழிக்கிறபடி.
தொலை வில்லிமங்கலம் தொழும்’ என்கையாலே, சரீரத்தின் செயல் சொல்லிற்று; ‘தவள ஒண்சங்கு சக்கரம் என்றும், தாமரைத் தடங்கண் என்றும்’ என்று சொல்லுகையாலே, வாக்கின் செயல் சொல்லிற்று; ‘குமுறும்’ என்கையாலே, மனத்தின்செயல் சொல்லிற்று.
தம்படிகளைத் தாமேசொன்னால், தற்புகழ்ச்சி ஆகாதோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘பகவானுடைய’ என்று தொடங்கி. என்றது,
ஆப்தியின் பொருட்டுச் சொல்லுகிறாராகையாலே குற்றமில்லை என்றபடி.
மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்
தன்னுடை யாற்றல் உணரா ரிடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே.–என்பது நன்னூல்.
திருவடி தன்னைப் புகழ்ந்து பேசுதலையும் ஈண்டு ஒப்பு நோக்கத்தகும்.
தோழி பாசுரமாக செல்லும் திருவாய்மொழி இது
அவனே எல்லாமாக கொண்டு இருக்கிறாள்
பெரிய ஆனந்தம் -துக்கம் ஆக மாறி -மானச அனுபவம் என்பதால்
ஆனந்தத்துடன் அருளிச் செய்த
சன்மம்
வீற்று இருந்த
குரவை ஆய்ச்சியர் மூன்றும்
இதில் பூரணமாக கிருஷ்ண அவதார அனுபவம்
இப்ப்பொழுது துக்கம் ஏற்பட காரணம்
தீர்ப்பாரை -யாமினி -அசங்யேந சங்கதி என்பர்
இதில் சங்கதி -இரண்டு நிர்வாகம்
மானச அனுபவம் -பூர்வம்
பட்டர் -கீழ் நிரவதிக ஆனுபவம் அதுவே துக்கம்
தாகம் மிக்கவன் அதிக தண்ணீர் குடித்து -விக்கித்து -இருப்பது போலே
பொய் நின்ற ஞானம் முதல் இது வரை பூர்ண அனுபவம் இல்லை
கீழ் எல்லாம் சர்வேஸ்வரனை பேசி
இதில் தம்மை பேசுகிறார்
மேலும் எம்பெருமானை படுவார்
ஆழ்வார் ஈடுபாட்டை தோழி பேசுவதாக
யதோ வாச நிவர்த்தந்தே விஷயத்தை தாம் அல்லது பேச முடியாதே
அது போலே தமது அபிநிவேசம் பேச தாம் அல்லது வேறு ஒருவரால் பேச முடியாதே
சாதனா புத்தியாக பேச கூடாது தோழி
இவள் துடிக்க
சிம்ஹம் அவலோக நியாயம்
நடந்து திரும்பி பார்த்து மேலும்
நடக்கும் அது போலே தாம் வந்த தூரம் திரும்பி பார்த்து
தமது அபிநிவேசம் -பகவத் விஷயத்தில் பிராவண்யஅதிசயத்தை
ஆழ்வார் பிரகிருதி பேசுகிறது என்று முதலிகள் போர அனுபவித்து பேசுவார்
சம்பந்த உபாய பலங்களில் -தோழி தாயார் மகள் பாசுரம்
பகவத் பிரசாத்தால் லப்த ஞாநம் கொண்டு –
ஸ்ரீ ஜனக ராஜர் திரு மகள் -அவதரித்த பின்பு ஜோசியர் கூட்டு கேட்டு
இவள் ஜீவிக்கும்படி என்
சார்வபௌமன் கை பிடித்து -வனவாசம் உண்டுஎன்றார்
தடுத்தால் பிரிவு ஏற்படாது
பராங்குச நாயகி -அது போலே திருத் தாயார்
கேட்க எல்லாம் நன்றாக -ஒரு கண்டம் தப்பினால் சுகமே
ஜீவிக்கலாம் திரு தொலை வில்லி மங்கலம் கூட்டிப் போக கூடாது என்றார்களாம்
ஜீவியாது ஒழியிலும் கூட்டிப் போகாத குடி இல்லை
பிரார்த்தனை ஸ்தலம் இன்றும் அங்கு
பிரியா விடை
தொலை வில்லி மங்கலம் உத்சவம் -மாசி ஒரு நாள் உண்டு
ஆற்றம்கரை மணலில் எழுந்து அருளுவார்
கண் மறையும் வரையில் அப்படியே
அது போலே நவ திருப்பதி கருட சேவை பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பார்
சிந்தையாலும் செய்கையாலும் சொல்லாலும்
தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த சடகோபன்
வனவாசம் பிராட்டி போனது போலே-
ஸ்ரீ நளர் வார்த்தையை நினைப்பது
பெருமாள் காடேற -சீதை அபகரிப்பது -இப்படி துக்கம் வரும் என்று நினைத்தாரா
அது போலே இதுவும் நடக்கும் –
அணை கட்ட வார்த்தை சொல்லி –
பெரிய ஜீயர் காலம் தொடங்கி அர்த்தம் அறியாமல்
ராமானுஜ பிள்ளை அர்த்தம் சொல்லி –
சமுத்திர ராஜன் உக்தி சத்தியமே
ஏமம் உக்த்வா சமுத்ரேண -ஸ்ரீ ராமாயணத்தில் உள்ள இடத்தை கண்டு கொள்வது
வருமது தப்பாது
சர்வ பிரகாரத்தாலும் உகந்து அருளின நிலங்களில் இருந்து மீட்க முடியாதே
தேகம் குறைய வளர -சம்சாரிகள் தாம் என்று நினைப்பது போலே
இவருக்கும் அனைத்தும் சர்வேஸ்வரனே என்றே இருப்பார்
அதுவும் -இப்படி சொல்லி மீட்க முடியாதே
ஷூத்ர -விஷயம் போவான் பழி -நரகம் வரும் என்றாலும் மீளாதது போலே
இங்கு குணாதிக விஷயம் குறை சொல்லி மீட்க முடியாதே
குறை சொன்னாலும் குணாதிகம் சோழ அதுவே ப்ராவண்யம் வளர உடலாகும்
பழி உண்டானாலும் மதிப்பு கேடு உண்டானாலும் மீள மாட்டேன் என்கிற அத்யவசாயம் உண்டே
அங்கனே ஆகிலும் இவளை மீட்க பார்ப்பது எதனால்
பருவம் நிரம்பால் இருக்க செய்தேயும் நம் போல் இன்றி அதிகமான ப்ரீதி
இவளை இழக்க கூடாது என்று அச்சம்
அபி மாத்திர ப்ராவண்யம் சாதனர் -உபாசகர் இடமும் உண்டே –
இவளும் அது போல் செய்கிறாளோ என்று நினைத்து சாதனமாக கூடாது என்று மீட்க
ஆனால் இவளுக்கு இது ஸ்வரூபத்தில் -சேர்ந்தது அதி மாத்திர ப்ராவண்யம் ஆத்மாவிலே சேர்ந்து இருக்குமே
ஸ்வரூபத்துக்கு இசைந்தால் ஸ்வரூப அனுரூபமான ப்ராவண்யம் கைங்கர்யம் இசைய
வேண்டாவோ என்றே இவள் இருப்பாள்
சேஷிக்கு உபாய பாவம் ஆக நாம் -கொண்டால் அது ஸ்வரூபத்தில் சேர்ந்து -சித்த உபாயம்
அனுஷ்டிக வேண்டாதபடி ஸ்வரூபத்திலே இருக்குமா போலே -இதுவும் ஸ்வரூப அனுபந்தி
சங்கதி -இரண்டும் காட்டி –
கிருஷ்ண குண அனுபவம் -தரித்து அனுபவித்து -அதுவே -விக்கி -அதனால் பரவசம்
அடைந்து
அவ்வஸ்து தானே பாரவச்யத்தால் மோஹித்து
பூர்ண அனுபவம் இதில் மட்டும் -என்பதால்
பூர்வர்கள் -மானச அனுபவம் கீழ் -அது பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறப்பித்து கிடைக்காமல் துக்கம்
அரவிந்த -லோசனன் நீர்மையை சொல்லி
தேவபிரான் -மேன்மையை சொல்லி
வாசியும் வாய் வெருவ
தாய் வெறுக்க
தோழிமார் இடம் இவளை மீட்க விரகு கேட்டு
அவர்கள் -நீங்களே இவளுக்கு பிராவண்யம் விளைவித்து இப்பொழுது மீட்க
ஆசைப்படுவதால் என்ன பிரயோஜனம்
நசை அறுக்க முடியாது சஹாகரித்து உஜ்ஜீவிக்கும்படி பண்ணப் பார்க்க சொல்லி
தாய் கேட்க தோழி சொல்லும் திருவாய்மொழி
பெற்றவள் -தோழி இடம் கேட்கலாமா தாங்களே உணர்ந்து இருக்க வேண்டாவோ
பகவத் விஷயம் பேச பழையவர் புதியவர் இல்லையே
முறை உடன் அறிந்தவர் எல்லாரும் பேசலாமே
ஸ்ரீ ராமாயணம் –
குகன் -ஸ்ரீ பரத ஆழ்வான் இடம் இளைய பெருமாள் பெருமை பேச
தான் தூங்காமல் தமையனை காத்து இருந்த நிலையை புகழ்ந்து
யார் யாரைப் பற்றி யார் இடம் சொல்வது –
சொல்லப்படுவது பாகவத வைபவம் என்பதால் யாரும் சொல்லாம் யாரும் கேட்கலாம்
க்கன கோசர காட்டு வாசி குகன்
பரதன் அப்ரமேயாய
-லஷ்மணன் -மகாத்மா
மூன்று விசெஷணங்கள் மூவருக்கும்
ஆசசக்ஷே சொல்லத் தொடங்கி -வாக் இந்த்ரியம் சொல்ல முடியாததை
அத -பரதன் பெருமை அறிந்த பின்பு
சத்பாவம் சத்தை யோடு வ்யாப்தமான ஸ்வபாவம் தன்மை மட்டும் இல்லை ஸ்வரூப அனுபந்தியாக கொண்டவன்
பால்யாத் பிரவர்த்தி உண்டே
மீன் தண்ணீர் உள்ளிருப்பது போலே
கடலை கையாலே இறைக்கத் தொடங்கினான்
பரதனுக்கு -அளவிட முடியாத -கழியின் பெருமையை கடலுக்கு சொன்னான்
அப்ரமேயச்ய -லஷ்மணன் போலே நிர்பந்தித்து அடிமை செய்யாமல் –
உப்பும் கலி back water போலே லஷ்மணன் -கடல் போலே பரதன் –
இன்னார் இன்னாருக்கு உபதேசிப்பது என்று இல்லையே
காட்டில் மரங்களின் வாசி அறிபவன் இவர்கள் வாசி அறிந்து பேசுகிறான்
ராம விரகத்தால் –
தேசிகர் -அனுபவ ஆள் கிடைத்ததே
குகையில் துக்கம் -தேசிகர் கண்டவாறே பேச
ப்ராப்ய தவரையில் அதிமாத்ரா ப்ராவண்யம் ஆழ்வாருக்கு
ஆஸ்ரயம் அழியப் பண்ணுமே
உபாயத்திலே மூட்டும் என்று தாயார்
உபாய அத்யவசாய -காட்ட
சம்பந்த ஞானம் -உணர்த்த -தோழி –
பேற்றில் த்வரை -தலை மகள் பாசுரம்
சம்பந்த ஞானம் -தோழி பாசுரம்
உபாய அத்யவசாயம் -தாயார்
உணர்த்தி துணிவு த்வரை -ஆச்சார்யா ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி
இது அவனால் ஏற்பட்டது தோழி உணர்த்த சம்பந்த ஞானம் இங்கும் காட்டி –
தீர்ப்பாரை யாம் இனி போலே
துவளில் மா மணி
குற்றம் இல்லாத மணி களால் இழைக்கப் பெற்ற மாடங்கள்
granite building போலே
குற்றம் இல்லாத மணிகள் கொண்டு சமைத்த மாடங்கள் –
ஓங்கு -இருக்கும்
அன்னைமீர் –
உமக்கு ஆசை -இன்றி
கண்ணீர் நீர்
மல்க நின்று நின்று குமுறும் –
உனக்கு இப்போது உதவாதபடி தூரச்தம் –
பூத கால அவதாரம் கொண்டு மீட்க
உகந்து அருளின திவ்ய தேசம் போலே இல்லை
அசலிட்டு -சரமாவதியில் இருக்கும் இவள்
பிரதமாவதி -மேல் எழுந்து இவர்கள்
மாடங்களில் குற்றம் இல்லை
சரக்கில் குற்றம் உண்டு இருந்தால் மீட்கலாம்
கழியாமல் நித்யர் ஹேய சம்சர்க்க
அபகத பாப்மா –
கர்மம் கழிந்து பெற்றது இல்லை
ஏறிக் கழிந்தது இல்லை
முக்தாத்மாவுக்கு தோஷம் ஏறிக் கழிந்தது
தூ மணி -மாடம் -நாயனார் -பாகவத சேஷத்வம் சொல்லி திருப்பாவை -விசேஷ
அர்த்தம் குறையை பிரஸ்தாபித்து கழிக்க வேண்டாமே
பாங்காகா எழுந்து இருக்கிறீரா
வியாதி இன்றி இருக்கிறீரா –
அர்த்தம் -ஒன்றானாலும் -தோஷம் பிரஸ்துதம் ஆனதே
அப்படியே மாடங்கள்
இங்கு மா -ஒளி -விலையும் மிக்கு
granite -பெரியதாக கொண்டால் விலையும் அதிகம்
ரத்னமும் அப்படியே
அளவு பெரிதாக ஆக மதிப்பு
நிழல் ஈடு திரு நகரி வரை வரும்படி ஓங்க
அதனால் -நிழல் கீழே இட்டு வைத்து வாழ வைத்தான்
வைத்த கண் வாங்க மாட்டாமல் இருந்தாள்
துருப்பு கூடாக -முழுவதுமாக இவள் தேசம் பூர்த்தியையும் விரும்புகிறாள்
தொழுகை ஸ்வரூபம் இவளுக்கு
கறுத்து இருக்கும் வெளுத்து இருக்கும் போலே தொழுகை ஸ்வரூபம்
இளைய பெருமாள் போலே
கணபுரம் கை தொழும் பிள்ளை போலே
அடையாளம் தொழுகை
-இவளை
மீட்க தேடுவது எங்கனே
ஈடுபட்டாள் சோழ சொல்ல
மிழ கு ஆழ்வான் வைஷ்ணவன் சொன்னதும் சந்தோஷம் அடைந்தது போலே
இனி தொழுகை தேக யாத்ரை ஆன பின்பு
பெற்றவர்கள் அசக்யங்களில் இழியலாமா
உமக்கு ஆசை இல்லை
பிராப்த யவனம் ஆனபின்பு -பெற்றவர்களுக்கு பிராப்தி உண்டோ
புக்க இடம் பிரவிணையாய் இருக்க
வேண்டாம்
இவளுக்கு ஓடும் ரசத்தை கண்டு கொண்டு நிற்கப் பாரும்
இவள் அனுபவத்துக்கு தண்ணீர் துரும்பு ஆகாதே
தடையாக ஆகி விடாதீர்
இவள் பேச்சிலும் நினைவிலும் நீங்கள் நாங்கள் இல்லையே -விடுமினோ
த்யஜ்வா புத்ராம்ச தாராம்ச -போலே
தவள ஒண் சங்கு -பரபாகமான
வெளுத்த -சக்கரம் விசேஷணம் சொல்ல ஒண்ணாத
தாமரை கண் என்னும்
பல ஹாநி
ஆழ்வார்கள் அளவும் அலை எறியும் திருக் கண்கள்
இதை அர்ச்சிராதி எடுத்து கடியத்திலும் சொல்வார்கள்
என்றும் -என்றும் –
மலை எடுத்தாப் போலே சொல்லுக்கு சொல் தளர்ந்து
அவ்வளவு ஈடுபாடு
திவ்ய ஆயுதம் கண் அழகால் தோற்பித்தான்
குவளை கண்டால் அவன் கண்ணீர்
பெருக்கும்படி கண்ணும் கண்ண நீருமாய் இருப்பதே அழகு
திருவடி சீதை கண்டு -பெருமாள் காண வேண்டியது -ராமன் கமலா பத்ராஷன் ஈடு பட வேண்டி இருக்க தடுக்க பார்க்கிறீர்கள்
சீத நேத்ராம்பு ஆசைப்படும்படி
குளிர்ந்த கண்ணீர் பார்த்து ஆனந்தம்
தா தர்சனம் தேச விசேஷம் போக வேண்டாதபடி
ஸ்த்ரீத்வம் கால்கடை கொண்டாள்
நின்று நின்று
பேச்சு போய் கண்ண நீராய்
உள்ளுக்குள் குமுற
ராஜ கோஷ்டியில்
உகும் -இரும் பிரித்து அர்த்தம் சொல்ல
கன்றை கட்டி வைத்தால் பசு முலை கடுப்பால் -குமுறுவது போலே
குமுறும் வாயாலே சொல்ல முடியாமல் உள்ளே
உள்ளே கிலேசம் வாய் விட மாட்டாதே
இவை வார்த்தையோ
உள்ளே இருந்து சுழிக்கிற படி
என்றும் -என்றும் வாசிக வியாபாரம்
குமுறும் மானச வியாபாரம்
முக் கரணங்களாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்தாள்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.