நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ணபி ரான்என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.
பொ-ரை :- நித்தியமான நான்கு வேதங்களிலும் வல்லவர்களான அந்தணர்கள் வாழ்கின்ற திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்தைப் பார்த்த பின்னர் இவள் அடக்கம் என்னுமது ஒன்றனை அடியோடு விட்டாள்; நம்மை மீறினாள்; தாய்மார்களே! கற்கப்படுகின்ற கல்வி முழுதும் கரிய கடல்போன்ற நிறத்தையுடையவனான கண்ணபிரான் என்று சொல்லிக்கொண்டே தளர்ச்சி சிறிதும் இல்லாதவளாயிருக்கின்றாள்; மகிழ்ந்து மகிழ்ந்து மனம் களித்துக் குழையாநின்றாள்.
வி-கு :- அன்னைமீர்! இவள் தொலைவில்லி மங்கலம் கண்டபின் அறவுறாள் மலிந்தாள் என்க. அற்கம் – அடக்கம். ஒற்கம் – தளர்ச்சி.
ஈடு :- நான்காம் பாட்டு. 1அந்த ஊரினையும் அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களையும் யாதொருநாள் கண்டாள், அன்று தொடங்கித் தடைநிற்கை தவிர்ந்தாள் என்கிறாள்.
நிற்கும் நான்மறை-நித்தியமான நான்கு வேதங்கள். 2நித்தியத்வமாவது, பூர்வ பூர்வ உச்சாரண கிரமத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சார்யமாணத்வம். ஆகையாலே, நித்தியமான வேதம். புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே குற்றமற்ற தாயிருக்குமன்றோ. வாணர் – வியாசபதம் செலுத்தவல்லராயிருப்பவர்கள். வாழ் – வேதப் பொருளாய் விளங்குமவனைக் கண்ணாலே கண்டு வாழாநிற்பர்கள். வாழ் தொலைவில்லி மங்கலம் – வேததாத்பரியனானவனைக்கண்டுநித்தியாநுபவம் பண்ணுகிற ஊர். 1“வேதத்தை அத்யயனம் செய்வதனால் அவ்வேதத்தில் சொல்லப்படுகின்ற பரமாத்மாவின் தியானத்தைச் செய்யக்கடவன்” என்னுமளவன்றியே, ஸ்வாத்யாயாத் யோகமாஸீத யோகாத் ஸ்வாத்யாயம் ஆமநேத்”
என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 6 : 2. ஆரூடயோகர் – சித்தித்தயோகத்தையுடையவர்.
“அந்த யோகத்தினால் தன்னால் அத்யயனம் செய்யப்படாத வேதபாகங்களின் பொருள்களைக் கண்டு மனனம் செய்யவேண்டும்” என்று ஆரூட யோகராயிருக்குமவர்கள். கண்டபின் – 2அவ்வூரில் வைஷ்ணவர்களும் அவனுமான சேர்த்தியைக் காட்டிக் கொடுத்துக் கெடுத்தீர்கோள். அற்கம் ஒன்றும் அற உறாள் – நம்சொல்வழி வந்திருக்கும் இருப்புத் தவிர்ந்தாள். அற்கம் – அல்குதல். அதாவது, அடக்கம். மலிந்தாள் – நம்மால் ஹிதம்சொல்லி மீட்க ஒண்ணாதபடி மிக்காள். என்றது, மீட்கைக்குத் தகுதியுமில்லாதபடி ஆனால் என்றபடி. அன்றிக்கே, எனக்கும் தெரியாதபடி இவள் பகவானிடத்தில் ஈடுபட்டிருத்தலில் விஞ்சினாள் கண்டீர் என்னுதல்.
அன்னைமீர் – 3மீட்கத் தேடுகிற உங்களோடு இவள் கருத்து அறிந்தேனாகச் சொல்லுகிற என்னோடு வாசிஇல்லை தெரியாமைக்கு. நித்தியசூரிகள் யாத்திரை சம்சாரிகளுக்குத் தெரியிலன்றோ நமக்கு இவள் அளவு தெரிவது. கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல்வண்ணன் கண்ணபிரான் என்றே – சொல்லும் சொல்லெல்லாம் திருநாமமேயாய், அவற்றிலும் வடிவழகிற்கும் அடியார்கட்குப் பரதந்திரப்பட்டிருத்தற்கும் வாசகங்களான திருநாமங்களையே சொல்லாநின்றாள். 4“கிருஷ்ணனாகில் அடியார்கட்குப் பவ்யன்” என்பது பிரசித்தமன்றோ. அவ்வடிவழகைத் தாழநின்று இவளை அநுபவிப்பித்த உபகாரகனாதலின் ‘பிரான்’ என்கிறது. திருநாமங்களை இடைவிடாதேசொல்லா நின்றால் இளைப்பு ஒன்றும் இன்றிக்கே இராநின்றாள் என்பாள். ‘என்றே ஒற்கம் ஒன்றும் இலள்’ என்கிறாள். 1‘விரஹத்தால் வலியற்று இருத்தலாலே திருநாமத்தை முட்டச்சொல்லமாட்டாள்’ என்று இராநிற்கச்செய்தே, வருத்தம் அறச்சொல்லாநின்றாள். 2திருநாமந்தான் தரிப்பினைக் கொடுத்துச்சொல்லுவிக்கும்போலே காணும்; 3“பாடி இளைப்பிலம்” –திருவாய்மொழி, 1. 7 : 10.-என்றாரே யன்றோ முன்னம். ஒற்கம் – மிடி. என்றது, இளைப்பின்றிக்கே என்னுதல்; அன்றிக்கே, ஒற்கமாவது, ஒடுக்கமாய், தாய்மார் முன்பே ‘இப்படிச் சொல்லாநின்றோமே’ என்னும் நாணம் இன்றிக்கே என்னுதல். உகந்து உகந்து – திருநாமங்களைச் சொல்லுதல் மூலமாக அவனுடைய அழகு சீலம் முதலிய குணங்களை நினைத்து மேன்மேல் எனப் பிரீதியுடையவள் ஆகாநின்றாள். உள்மகிழ்ந்து குழையும் – மனத்திலே உண்டான பிரீதியின் மிகுதியாலே உடல் அழியாநிற்பாள்.
துன்பமொரு முடிவில்லைத் திசைநோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான்”-என்றார் கம்பநாட்டாழ்வார்.
யானே தன்னைத் தான் பாடி –
உரை கொள் மொழியாள் -தனது படியை தானே பாடும்படி -தோழி பாசுரமாக
அந்த திவ்ய -தேசமும் அங்கு உலா ஸ்ரீ வைஷ்ணவர்களையும் சேர்ந்து கண்ட இவளை மீட்க முடியுமா
நிற்கும் நான் மறை நித்தியமான வேதங்கள்
அற்க்கம் -அடக்கம்
இவன் கற்கும் கல்வி எல்லாம் கடல் வண்ணன்
ஒர்க்கம் ஒடுக்கம்
நித்யத்வம் பூர்வ பூர்வ உச்சாரண க்ரமம் பற்ற –
உத்தர உத்தர உச்சாரண
நிர் தோஷம் -அபௌ ருஷ்த்வம்
வாணர் வல்லவர்
கண்ணாலே கண்டு வாழா -நிற்பார் வாழ்ச்சி கைங்கர்யம் செய்வதே
வேத தாத்பர பூதனை கண்டு நித்ய அனுபவம் செய்து வாழும்
ஸ்வ அத்யயனம் செய்து -யோகம் செய்து –
வேதம் அவனை அறிந்து கைங்கர்யம் செய்ய தான்
யோகம் -அவன் உடன் சேர்ந்து
யோகம் வந்த பின்பு -ஆரூட யோகன்
செர்தியைக் காட்டிக் கொடுத்து கெடுத்து –
அடக்கம் இன்றி-தமது சொல்லை கேட்க்காமல்
மீட்கைக்கு யோக்யதைக்கு இன்றி
பகவத் ப்ராவண்யம் -தோழிக்கும் அறியாத படி விஞ்சி இருக்கும் படி
நித்ய சூரிகள் யாத்ரை சம்சாரிகள் அறியாத படி
தமது பேச்சு தாமே சொல்லிக் கொண்டது இது
சொலும் சொல் எல்லாம் திரு நாமங்கள் கடல் வண்ணன் கண்ணபிரான்
ஸ்ரமஹரமான வடிவு அழகாய் உபகரித்த பிரான்
விரகத்தால் திரு நாமங்கள் முற்ற சொல்ல முடியாமல் இருப்பாளோ
சொல்வதே தரிப்பைக் கொடுக்கும்
திரு நாமம் சொல்லி தரித்து மேலும் சொல்லி
பாடி இளைப்பு இலோம்
துக்கம் இன்றி
தாய் முன்னே திரு நாமம் சொல்லும் லஜ்ஜை இன்றி சௌந்தர்யம் சீலம் அனுசந்தித்து
யானி நாமானி கௌணாநி –
உகந்து உகந்து
உள் மகிழ்ந்து குழையும்
ஆத்மாவும் கரைய -உருகி
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply