திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-4-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

  மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே?

பொ-ரை :- பூமியின்மேலே பெரிய பாரம் நீங்கும்படி ஒப்பற்ற மிகப் பெரிய பாரதமாகிய போரைச்செய்து ஆச்சரியமான காரியங்களைச் செய்து சேனைகள் பாழ்படும்படியாக மந்திரித்துப் போய்ப் பரமாகாசமான தன்னுடைய வைகுண்டலோகத்தைச் சென்று அடைந்த பரஞ்சோதியினுடைய திருவடிகளைச் சேர்ந்து நான் வணங்கப்பெற்றேன்; எனக்குத் தலைவர் வேறுயாவர் உளர்?

வி-கு :- நீங்கப் பண்ணிச் செய்து நூற்றிட்டுப் போய்த் தனதாமமே மேவிய சோதி என்க. நூற்றிட்டு – சாம்பலாக்கி என்னலுமாம். நூறுதல் – கொல்லுதல்.

ஈடு :- பத்தாம்பாட்டு. 1அபாயங்களே மிகுதியாகவுடைய சம்சாரத்திலே வந்து அவதரித்து யாதொரு அபாயமும் இல்லாமல் பரமபதத்திற் போய்ப் புக்க படியை அனுபவிக்கப்பெற்ற எனக்கு வேறே சிலர் நிர்வாஹகர் வேண்டும்படி குறையுடையவனோ நான்? என்கிறார்.

மண்மிசைப் பெரும் பாரம் நீங்க – 3‘விஸ்வம்பரை’ என்றும், ‘க்ஷமை, பொறை’ என்றும் பெயர்களையுடைத்தாய்த் தாங்கக்கூடிய தான பூமியாலும் பொறுக்க ஒண்ணாதபடி அன்றோ துர்வர்க்கம்

திரண்டபடி, 1பரமபதத்தில் “எந்தப் பரமபதத்திலே பழையர்களான சாத்தியர் என்கிற தேவர்கள் வசிக்கிறார்களோ” என்கிறபடியே, கனத்தார் உண்டாயிருக்கச் செய்தேயும், பாரம் இல்லை அன்றோ அகங்கார சம்பந்தமுடையார் இல்லாமையாலே. “யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:”

என்பது, புருஷசூக்தம். இங்குப் பாரம் என்கிறது, மக்கள் பாரம் அன்று;
யான் எனது என்னும் செருக்கே பாரம் என்றபடி.

2தங்கள் பாரத்தினை அவன் தலையிலே வைத்திருக்குமவர்களன்றோ அவர்கள். ஓர் மாபெரும் பாரதப்போர் பண்ணி – ஒப்பற்றதான மஹாபாரதமாகிற மஹா யுத்தத்தைச் செய்து. மாயங்கள் செய்து – பகலை இரவாக்குவது, ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுப்பது, எதிரிகளுடைய மாமத்தைக் காட்டிக்கொடுப்பது ஆனவை தொடக்கமானவற்றைச் செய்து. சேனையைப் பாழ்பட நூற்றிட்டு – சேனை வெறுந்தறையாம் படி மந்திரித்து. 3“எவனுக்கு, மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனார்த்தனனுமான கண்ணன் மந்திரியாயும் ரக்ஷகனாயும் சிநேகிதனாயும் இருந்தானோ, அந்தத் தர்ம்புத்திரனுக்கு ஜெயிக்கப்படக் கூடாதது யாதுளது” என்னக்கடவதன்றோ.“யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸுஹ்ருச்சைவ ஜநார்தந:
ஹரிஸ் த்ரைலோக்ய நாதஸ்ஸ: கிந்து தஸ்ய ந நிர்ஜிதம்”-என்பது, பாரதம் ஆரண்யபர்வம், 49 : 20.

4‘ஆயுதம் எடுக்க ஒட்டோம், என்கையாலே சூழ்ச்சியாலே அழித்தான்.

போய் விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள் – 5பகைவர்களை அழித்ததற்குமேலே அன்றோ இவர்கள் இருந்த நிலத்தில் இராமல் பரமபதத்திலே போய்ப் புகப்பெற்றபடி என்று உகக்கிறார். 1பொய்யாசனம் இடுவார், பரிபவிப்பவர் இவர்களையுடைய இந்த நிலத்தை விட்டுப் பரிவரேயான பரமபதத்து ஏறப் போகப் பெறுவதே! 2“ப்ருது லோசந: ப்ருதிவ்யா: பாராவதரணம் க்ருத்வா – நீண்ட கண்களையுடைய கண்ணன் பூமியினுடைய பாரத்தைக் கழித்து, மோஹயித்வா ஜகத்சர்வம் – ப்ரதிகூலரை அடங்கலும் உழவு கோலாலே விழவிட்டு, அநுகூலரை யடங்கலும் கண்களாலே விழவிட்டுப் போனான்; கத: ஸ்வம் ஸ்தானம் உத்தமம் – விண்மிசைத் தன தாமமே புக்கான். உத்தமம் – கம்சன் முதலானோர் துரியோதனன் முதலானோர் இவர்களால் வரும் அச்சம் இன்றியே, தனக்குப் பரிவரானவர்கள் இருக்கிற நிலத்திலே போய்ப் புகப் பெற்றபடி

பூமியின் பாரத்தைப் போக்கித் தன் தாமத்தை அடைந்ததற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘பிருது லோசந:’ என்று தொடங்கி.

“க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருது லோசந:
மோஹயித்வா ஜதத்ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநம் உத்தமம்”-  என்பது, பாரதம் மௌசலபர்வம்.

. 3ஒரு தீர்த்தத்தின் அன்று நாயிறுபோது ஆண்டானும் எம்பாரும் தங்களிலே சந்தித்து, “யான் எனது என்னும் செருக்கினால் மலினமாக்கப் பட்டவராயிருப்பார் பத்துக்கோடிபேர் நடுவே, அதிசுகுமாரமான திருமேனியைக்கொண்டு பத்துநாள் எழுந்தருளி, அபாயம் இல்லாமல் புக்கருளப் பெற்றபடி கண்டதே!” என்று ஒருவரை ஒருவர் தண்டன் இட்டுத் தழுவிக்கொள்ளாநிற்கக் கண்டேன் என்று சீயர் அருளிச்செய்வர். நண்ணி நான் வணங்கப்பெற்றேன் – 4காலயவனன், ஜராசந்தன் தொடக்கமானாரைப்போலே, எதிரிட்டுக் கிட்டு கை அன்றிக்கே, முறையாலே கிட்டப்பெற்றேன். எனக்கு நாயகர் பிறர் ஆர் – 1அவனுடைய அவதாரம் தொடக்கமாக, நடுவுள்ள அபாயங்களைத் தப்பி அடியார்களை வாழ்வித்துத் தனக்கு அமர்ந்த நிலத்தேபோய்ப் புக்கபடி யளவும் அநுபவிக்கப்பெற்ற எனக்கு ஆர் தான் நியமிக்கின்றவர்கள் என்கிறார். 2“பயிலும் திருவுடையார்யவரேலும்” என்றதனை மறந்தார்போலே இருந்தது. அன்றிக்கே, அவர்களைப் பிறராக நினையாரே யன்றோ என்னலுமாம்.

எனக்கு யார் நாயகர் பிறர் -எம்பெருமானை தவிர என்கிறார்
பெரும் பாரம் நீங்க பாரத பெரும் போர் பண்ணி
சேனைகள் அழித்து
தன்னுடை சோதி தனதானம் புகுந்து
அவன் திருவடிகளை நண்ணி வணங்கப் பெற்றேன்
பூமிக்கு பாரம் -பொறை -விஸ்வம் -தாங்கும் ஷமை உடையவள்
தரிக்க கடவ பூமியாலும் பொறுக்க முடியாமல்
கனத்தார் -மூன்று பங்கு இருந்தாலும் அங்கு பாரம் இல்லை
தங்கள் பாரத்தை அவன் தலையில் வைத்து இருப்பார்கள் அங்கு
பாரத யுத்தம் அத்வதீயம்
மகா -பாரதம் -யுத்தத்துக்கே பெயர்
பாரத்தை போக்க வந்த யுத்தம் பாரத யுத்தம்
இதிகாசத்துக்கு மட்டும் பெயர் இல்லை
மாயங்கள் பகலை
இரவாக்கி ஆயுதம் எடேன் சொல்லி ஆயுதம் எடுத்து எதிரிகள் மர்மம் காட்டிக் கொடுத்து
கொல்லா மா கோல் -கொண்டு
நூற்றல் -செய்து யோஜனை
மந்த்ரியாகவும் ரஷகனாகவும் இருந்து
சூழ்ச்சியால் அழித்து
பிரதி கூல நிரசனதுக்கு மேலே தன்னுடை சோதிக்கு எழுந்து அருளி
நல்ல வேளை போனானே ஆழ்வார் சந்தோஷிக்கிறார்
பொய் ஆசனம் -இடுவார் பழி சொல்லும் சிசுபாலன் -போலே
அன்றி பரிவர் உள்ள ஸ்தானம் போனானே
தன்னுடைய வசஸ்தானம்
மேவிய ஜோதி
மோஹயித்வா ஜகத் சர்வம்
பிரதி கூலரை கோலால்
அனுகூலரை கண்ணால்
உத்தமம் ஸ்தானம் -பரிவர் உள்ள தேசம்

தீர்த்த தினம் அன்று
சூர்ய அஸ்தமம் ஆன பின்பு
கர்பக்ருஹம் ஏற
ஆண்டான் எம்பார்
அதி சுகுமாரமான திரு மேனி கொண்டு பத்து கோடி நடுவே பத்து நாள்
தண்டன் இட்டு தழுவிக் கொள்ளா நிற்க
நஞ்சீயர் கண்டேன் என்று அருளிச் செய்வர்
முதலி ஆண்டானை நஞ்சீயர் சேவித்து இருப்பாரா கேள்வி உண்டே
ஆண்டான் சரம தசை சரியாக இல்லை
எம்பெருமானாருக்கு பின்பே நஞ்சீயர்
கந்தாடை ஆண்டான் என்பர்
சம வயசாக இருக்க வேண்டுமே தழுவிக் கொள்ள
நஞ்சீயர் வந்த பின்பும் ஆண்டான் இருந்து இருக்க வேண்டும்
பூர்வாஸ்ரமத்தில் பார்த்து இருக்கலாமே
அத்வைதீயாக இருந்த போதே பார்த்து இருக்கலாம்
எதிரிட்டு கிட்டுகி அன்றி
நண்ணி முறையாக கிட்டப் பெற்றேன்
முழுக்க அனுபவிக்கப் பெற்றேன்
முதலா தன்னுலகம் புக்கதீரா
யார் எனக்கு நிகர்
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் எனக்கு நாயகர் மறந்தார் போலே
யார் நாயகர் என்கிறார்
அவர் பிறராக நினையார் இ றே
அந்த கோஷ்டியில் சேர்த்தார் இவர்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading