இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல
அகல்கொள்வைய மளந்த மாயன் என்னப்பன்தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே.
பொ-ரை :- பகைமை கொண்ட பகாசுரன் என்னும் பறவையின் வாயினைப் பிளந்ததும், திமில்களையுடைய இடபங்கள் ஏழனையும் அழித்ததும், உயர்ந்து ஓங்கித் தழைத்த குருந்த மரத்தினை முறித்ததும் முதலாக வேறும் இத்தன்மையவான, அகன்ற பூலோகத்தை அளந்த மாயப் பிரானாகிய என்னப்பனுடைய ஆச்சரியமான செயல்களையே பகலும் இரவும் துதிக்கப் பெற்றேன்; எனக்கு மனத்தின்கண் துக்கம் என்ன இருக்கிறது?
வி-கு :- இகல்-வலிமையுமாம். மற்றும் பலவாகிய மாயங்கள் என்க. பரிவு – பரிப்பு – துக்கம்.
ஈடு :- ஆறாம் பாட்டு 1கிருஷ்ணனுடைய பிரதிகூலர்களின் நிரசன பரம்பரையை அநுபவிக்கப்பெற்ற எனக்கு ஒரு மனோதுக்கம் இல்லை என்கிறார்.
இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் – 2கேவலம் புள் மாத்திரமாய் வந்து தோற்றுகை அன்றிக்கே போரினை மேற்கொண்டு எதிரிட்ட புள்ளினை அழித்ததும். அசுராவேசத்தோடு வரச்செய்தேயும் ‘பாதிக்க வருகிறது’ –பெரியாழ்வார் திருமொழி, 2. 5 : 4.
-என்று பிறர் அஞ்சாத வடிவு கொண்டு வந்தபடி. பள்ளத்திலே மேயும் பறவை உருக்கொண்டு வந்தது. இமில் ஏறுகள் செற்றதுவும், திமிலையுடைத்தான இடபங்களைச் செற்றதுவும். உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் – ஓக்கத்தையுடைத்தாய்ச் சோலைசெய்து நின்ற குருந்தமரத்தை முறித்ததும். 3‘இளைஞராயிருப்பார்க்குக் கவர்ச்சிகரமாயிருக்கும்’ என்று தழைத்து நின்றது;இனி, இதனை முறித்துக் காரியம் கொள்ளுவோம் என்று பொடிபடுத்தினான். உட்பட மற்றும் பல – இப் புடையிலே பகைவர்களை அழித்தல் பலவே அன்றோ. அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே – பரப்பையுடைத்தான பூமியடங்கலும் வருத்தம் இன்றி வளர்ந்து அளந்த ஆச்சரியத்தையுடையனான உபகாரகனுடைய ஆச்சரியமான செயல்களையே. பகல் இராப்பரவப் பெற்றேன் – 1நாட்டார் அபிமத விஷயங்களை அநுபவிப்பதற்குப் ‘பகல் இரா’ என்று கூறிட்ட காலம் இரண்டும் இந்த விஷயத்திலே அநுபவிக்கப்பெற்ற எனக்கு, இரவு பகல் புறம்பே விஷயங்களை அனுபவிப்பாருடைய மனோ துக்கம் உண்டோ? பரிவு – துக்கம். அதிலே ஒரு ஒற்றெழுத்து ஏறினாலும் அந்தப் பொருளையே காட்டக்கடவது.
இகல் கொள் புள்ளை -பகாசுர வதம்
உட்பல மற்றும்பல செய்தவன் வையம் அளந்த
மாயன் பகல் இரா பரவப் பெற்றேன்
எனக்கு என்ன துக்கம்
இகல் யுத்தம் -முகமாக எதிரிட்ட புள்ளை பிளந்து
அசுர ஆவேசத்தில் வந்தும் ஹிம்சை பண்ண வந்தது போல் அறியாமல் கொக்கு வடிவம்
கொண்டு
பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு –
பள்ளம் ஜலம் மீன் அதை உண்ண வந்தது -என்று கள்ள அசுரர்
பொசுக்கென் வாயைக் பிளந்து
இமில் -ககுஸ்து
குருந்தை முறித்ததும்
மற்றும் பல பிரதிகூல நிரசயனங்கள் கன்று விளம் காய்
திர்யக் -ஸ்தாவரங்கள் கைங்கர்யத்துக்கு நித்யர் கொள்ளும் உரு
அசுரர் அதே திர்யக் ஸ்தாவரம் உருக் கொண்டு -இங்கு
பாப ப்ராதுல்யம் -அடி அங்கு இச்சை அடி
அகன்ற வையம் அளந்த மாயன்
பூர்த்தியாக கிருஷ்ண அவதாரம்
வரையாதே தீண்டும் ஸ்வ பாவ சாம்யம் உண்டே -இருவருக்கும்
இருவரும் குழைந்தை
உருவம் வருக வருக இங்கே வாமன நம்பி
ஓங்கி உலகு அளந்த உத்தமன்
ஆச்சர்ய செஷ்டிதங்களை பரவா பெற்றேன்
போகம் அனுபவிக்க இரவு பகலாக நாட்டார் அபிமத விஷயம் புஜிக்க
இவ்விஷயம் அனுபவிக்க எனக்கு -துக்கம் இன்றி இரவும் பகலும்
பரிப்பு -பரிவு -துக்கம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply