நீணிலத்தொடு வான்வியப்ப நிறைபெரும் போர்கள்செய்து
வாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பல
மாணியாய்நிலம் கொண்டமாயன் என்னப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?
பொ-ரை :- பெரிய உலகத்திலேயுள்ள மக்களோடு தெய்வலோகத்திலேயுள்ள தேவர்களும் கண்டு ஆச்சரியப்படும்படியாக, குறைவில்லாத பெரிய போரைச் செய்து வாணாசுரனுடைய ஆயிரம் தோள்களைத் துணித்ததும் முதலான மற்றும் பலவான, பிரமசாரியாய் நிலத்தை வாங்கின மாயனாகிய என்னப்பனுடைய ஆச்சரியம் பொருந்திய செயல்களையே காண்கின்ற நெஞ்சினையுடையேன்; ஆதலால், எனக்கு இனி என்ன கலக்கம் இருக்கின்றது?
வி-கு :- வியப்பப் போர்கள் செய்து துணித்ததும் என்க. மற்றும் பலவான மாயங்கள் என்க. மாணி – பிரமசாரி.
ஈடு :- எட்டாம்பாட்டு. 3வாணனை வெற்றிகொண்டது முதலான கிருஷ்ணன் செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சினையுடைய எனக்கு ஒரு கலக்கம் இல்லை என்கிறார்.
நீள்நிலத்தொடு வான்வியப்ப – பூமியிலுள்ளாரோடு சுவர்க்கத்திலுள்ளாரோடு வாசிஅற ஆச்சரியப்பட. கண்டவற்றுக்கெல்லாம் ஆச்சரியப்படும் மனிதர்களோடு ஒக்க, ஒன்றற்கும் வேறுபட்டவராகாதே தந்தாமைப் போரப் பொலிய நினைத்திருக்கும் தேவர்களும் ஆச்சரியப்படும்படி. கும்பிடுவாரோடு கும்பீடு கொள்வாரோடு வாசிஅறும்படியாக என்றபடி. ‘வியப்ப’ என்று மேலே வருகையினாலே, ‘கட்டில்கள் கூப்பிடுகின்றன’ என்பது போன்று, ‘நிலம், வான்’ என்பன ஆகுபெயர்கள். நிறை பெரும் போர்கள் செய்து-குறைவற்ற மஹாயுத்தத்தைச் செய்து. அதாவது, ஈசுவர அபிமானிகளான சிவன் முதலாயினோர்களும் கெட்டு ஓடும்படியான போரைச் செய்து என்றபடி. வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் – 1சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றின தோள்களைக் கழித்தபடி. 2‘இவன் கரபாதை ஆற்றமாட்டாமல் கண்டார்கால்களில் எல்லாம் குனிந்து திரியாநின்றான்’ என்று அந்தக் கரத்தைக் கழித்துவிட்டான். 3‘கை கழியப் போய்ச் சிவனை அடைந்தான், இவன் கரபாதை ஆற்றாமை’ என்று அதனைப் படைக்கு அடைத்துவிட்டான். 4வாணன் வேறு தெய்வத்தை பஜனம் பண்ணுகையன்றோ, அவனுக்கு இங்ஙனம் கை பிழைபாடு வந்தது என்று நாட்டார் கைவந்தபடி செய்கைக்காகச்செய்தான். 1“ஈசுவரனை வணங்கும் பொருட்டு” என்றேயன்றோ சரீர சம்பத்தைக் கொடுத்தது. ஈசுவரன், கை வந்தபடி செய்யாதவர்களைக் கைமேலே தண்டிக்கை தக்கதே அன்றோ. சர்வேசுவரன் தன்னைப் பற்றுகைக்காக இவனோடே கைசெய்தன்றோ அடியிலே விட்டது. 2‘அதனை மதித்திலன், இவன் அறக் கை விஞ்சினான்’ என்று தண்டித்துவிட்டான். 3வேறு தெய்வத்தைப் பற்றிக் கையிலே பலம் பெற்றுவிட்டான். 4பகவானைப் பற்றுவதற்குக் கைம்முதல் இல்லாமை விட்டான் அன்றே. உட்பட மற்றும் பல – அவனுக்கும் 5பெருநிலை நின்றாரையும் முதுகுகாட்டும்படி செய்தபடி. 6“கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ” என்று க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாநம் அநாதி நிதனம் பரம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.
பின்பு அன்றோ அவன் இவனை உள்ளபடி அறிந்தது.
மாணியாய் நிலம் கொண்ட மாயன் – பெறில் ஜீவிப்பானாய்ப் பெறாவிடில் முடிவானாய், இரப்பிலே தழும்பு ஏறின வடிவைக்கொண்டு. 1இவர் அந்த அவதாரத்திலே கால்வாங்குகிறார் அல்லர்; கண்ணழிவற்ற அழகாலும், வரையாதே எல்லாரையும் தீண்டுகையாலும், அடியார்கள் விஷயத்தில் ஓரத்தாலும், செய்யும் ஆனைத்தொழில்களாலும் கிருஷ்ணாவதாரத்தோடு ஒத்திருக்கையாலே, ஸ்ரீ வாமனாவதாரத்தை அநுபவிக்கிறார். நிலம் கொண்ட மாயன் என் அப்பன் – ‘திருஉலகு அளக்க’ என்று ஒரு வியாஜத்தை இட்டு அளந்துகொண்டது தம்மை என்று இருக்கிறார். அப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் – 2“‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கரணங்களையுடைய ஆழ்வார் ஆகையாலே, நெஞ்சுதானே நினைக்கவும் வற்றாய்க் காணவும் வற்றாயிருக்கும் என்று பிள்ளான் பணிப்பர்” என்று அருளிச்செய்வர். அன்றிக்கே, ‘கட்கண்’ என்றும், ‘உட்கண்’ என்றும் சொல்லுகிறபடியே, நெஞ்சு தன்னையும் கண்ணாகச் சொல்லக்கடவதன்றோ; அது ஆகவுமாம்.
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து”-(பெரிய திருவந். 28.)– என்பது, ஈண்டு அநுசந்தேயம்–
எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே – ‘இந்த விஷயத்தைக் காணப்பெற்றிலோம்’ என்கிற கலக்கம் எனக்கு உண்டோ? அன்றிக்கே, 3வேறு தெய்வங்கள் ‘ரக்ஷகர்’ என்று இருக்கிற கலக்கமும், ஈசுவரனுடைய ரக்ஷணத்திலே ஐயப்படும் கலக்கமும், ‘தானே தனக்குக் கடவன்’ என்னும் கலக்கமும் இல்லை என்னலுமாம்.
பாண விஜயம் போன்ற
வான் உலகும் வியக்கும்படி
நினைக்கும் எனக்கு கலக்கம் ஒன்றும் இல்லையே
நெஞ்சாலே காண்கிறேன்
கண்டதுக்கும் ஆச்சர்யப்படும் மனுஷ்யர் உடன் ஒக்க ஒன்றுக்கும் விகிரதராய் -வானவரும் ஆச்சர்யம் படும்படி
கும்பிடுவாரும் கும்பிடு கொள்வாரும்
மஞ்சா குரோசக்தி போலே ஆகு பெயர்
-உலகம் உலகில் உள்ள மனுஷ்யர் -உயர்ந்தோர் மட்டும் என்ற அர்த்தம் இங்கு இல்லை
மகா யுத்தம் -பண்ணி ருத்ராதிகளும் கெட்டு ஓடும்படி
நேர் செறிந்தான் –முக்கண் மூர்த்தி
கண்டீர் வாணன் திண் தோள் கொண்ட வன்றே
ஆழ்வார் பாசுரங்களில் பிள்ளையார் இல்லை
7 நூற்றாண்டு அப்புறம் தான் என்பர்
அமுதனார் கார்திகையானும் கரி –முகத்தானும் -மோடியும் -வெற்பும் முதுகிட்டு
வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏற்றும் பூர்ணர் ராமானுசன்
ஆயிரம் தோள்களை துணித்து
வகுத்த விஷயம் அல்லாத -சேவித்த -பாகாத விஷயம் அனுவர்தித்த
கரைபாதி -தோள் தினவு கழித்து
கண்டார் ,காலில் உனிய
நின்றான் கை கழிய போய் ருத்ரனை ஆஸ்ரயிக்க
தேவதாந்தர பஜனம் செய்தது கை பிழைப்பாடு ஆனது
நாட்டார் கை வந்த படி
செய்கைக்கு ஈஸ்வரன் கை வந்த படி
சர்வேஸ்வரன் கை செய்து தன்னை
ஆச்ரயிக்க அரை கை விஞ்சி கையிலே பலன்
கை முதல் இல்லை
ருத்ரனை ஆச்ரயித்த ஒன்றுமே கை பட்டது
உன்னாலே நான் பட்டது அழ கைகள் வேண்டுமே
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ பின்பு தன உள்ளபடி அறிந்தான்
மாணி பிரமாச்சாரியார் -இரப்பில் தழும்பு
வாமன அவதாரத்தில் கால் வாங்குகிறார் அல்லர்
கண் அழிவற்ற அழகு
வரையாதே எல்லாரையும் தீண்டி
செய்யும் ஆனைத் தொழில்
ஆஸ்ரிதர் பஷ பாதம்
இவற்றால் இரண்டு அவதாரத்துக்கும் சாம்யம்
விளாம் பழம் விழுங்கி சாரம் உண்டு கொட்டை வெளியிலே உமிளுமாம் யானை தொழில்
சரீரம் குறி அழியாமல் இருக்க ஆத்மாவைக் கொண்டு
உலங்கு உண்ட விளம் கனி போலே ஆண்டாள்
ஆனைத் தொழில் -ஆச்சர்யம் உண்டே
ஆலிலை கண்ணன் இப்படி தான்
பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டான்
அதுவும் இப்படி சாம்யம் உண்டே
உலகு அளந்து கொண்டவன் எனக்கு ஸ்வாமி -உபகரிக்க செய்தான்
முடியானே கரணங்கள்
நினைக்கும் நெஞ்சு -முன்பு
சொல்லி காணும் நெஞ்சு இங்கே
பிள்ளான் பணிக்கும்
கட்கண் உட் கண் -சாஷாத் கரித்தல்
கலக்கம் உண்டோ எனக்கு
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply