Archive for July, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-6-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 29, 2013

கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற்சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்குஎன்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.

பொ-ரை :- கற்பகச்சோலையைப் போன்ற சிறந்த பல தோள்களையுடையவனுக்கு, பிரகாசம் பொருந்திய பொன்மலையைப் போன்ற அழகிய குளிர்ந்த திருமுடியையுடையவனுக்கு, அன்று பூத்த அழகிய தாமரை மலர்கள்போன்ற திருக்கைகளையுடையவனுக்கு, வில்லினைப்போன்ற புருவங்களையுடைய பூங்கொம்புபோன்ற என் பெண்ணானவள் தனது சரீரத்தினை இழந்தாள்.

வி-கு :- கா – சோலை. அன்ன – ஒத்த. சுடர் பொற் குன்று என மாற்றுக.

ஈடு :- ஆறாம் பாட்டு. 1பெரும் புறக்கடலிலே திருப்பள்ளி கொண்டவனுடைய அவயவ சௌந்தர்யத்திலே அகப்பட்டு இவள் தன்னுடைய மெய்யினை இழந்தாள் என்கிறாள்.

கற்பகம் கா அன்ன நல் பல தோளற்கு – 2தன் அவயவங்களைக் காட்டி இவளுடைய அவயவியைக் கொண்டான். கற்பகச்சோலை போலேயாய், அவ்வளவன்றியே விலக்ஷணமான பல திருத்தோள்களை யுடையவனுக்கு. சுடர் பொன் குன்று அன்ன பூந் தண் முடியற்கு – ஒளியையுடைய பொன்மலை போலேயாய்க் காண்டற்கு இனியதாய்த் திருமுடிக்குத் தகுதியான திருவபிடேகத்தையுடையவனுக்கு. பூ என்பதற்கு, மாலைகளாலே அலங்கரிக்கப்பட்ட என்னலுமாம். திருமுடியைக் கூறியது, எல்லா ஆபரணங்களுக்கும் உபலக்ஷணம். நல் பல நாள் தாமரை மலர்க் கையற்கு – நன்றாய்ப் பலவாய்ச் செவ்வித்தாமரைப் பூப்போலே இருக்கிற திருக்கைகளையுடையவனுக்கு. என் வில்புருவம் கொடி – வில்போலே இருக்கிற என்பெண். 3பிரஹ்மாஸ்திரத்தைக்கொண்டிருந்தும் பட்டுக் கிடப்பாரைப்போலே, வெற்றிக்குக் காரணமான பரிகரத்தைக் கொண்டிருந்தும் கண்டீர் தோற்றது! தோற்றது மெய்யே – 4“ஒரு மாதத்திற்கு மேல் பிழைத்திருக்க மாட்டேன்” “ஜீவிதம் தாரயிஷ்யாமி மாஸம் தசரதாத்மஜ
ஊர்தவம் மாஸாத் ந ஜீவிஷ்யே ஸத்யே நாஹம் ப்ரவீமி தே”-
என்பது, ஸ்ரீராரா. சுந். 40 : 10.

என்னப் பண்ணும் வடிவைக் காட்டி, 1“கணநேரமும் பிழைத்திருக்கமாட்டேன்” “சிரம் ஜீவதீ வைதேஹீ யதிமாஸம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”–என்பது, ஸ்ரீராரா. சுந். 66 : 10.

என்னப் பண்ணும் வடிவினைக் கண்டீர் கொண்டது. தன்வசப்படாத சரீரத்தையுடையவளானாள் என்பது கருத்து.

அவயவ சௌந்தர்யம் அகப்பட்டு
மெய் இழந்தாள்
அவயவம் காட்டி அவயவியைக் கொண்டான்
ஒளியை உடைத்தாய் கிரீடம்
பூ மாலைகளால் அலங்கரிக்கப் பட்டு
திருவேம்கடமுடையனுக்கு கிரீடம் பூ உண்டே
நன்றாய் பலவாய் செவ்வித் தாமரை போலே திருக் கரங்கள்
உன் புருவ நெரிப்புக்கு
பயப்படுபவன் பிரம்மாஸ்திரம் கொண்டு பட்டு கிடப்பாள் போலே
தோற்றது மெய்யே
எந்த வடிவை காட்டி எந்த வடிவை அபஹரித்தான்
ஒரு மாதம் ஜீவிப்பேன் -ஒருஷணம்  ஜீவிப்பேன் –
காசு இழந்தவன் -பொன்னை இழந்தவன் போலே
குறைந்த அழகை காட்டி பெரிய அழகான வடிவைக் கொண்டான்
மெய்யைக் கவர்ந்தான்
எனது வசத்தில் இல்லை
மூர்ச்சையாகி இருக்க வைத்தான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-6-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 29, 2013

  பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்குஎன்
கண்புனை கோதை இழந்தது கற்பே.

பொ-ரை :- பகவானுடைய தன்மைகளை உள்ளவாறே சொல்லும் பண்பினையுடைய வேதங்களைப் பிரமனுக்கு உபதேசித்த மேலானவனுக்கு, அணுக்கள் செறிந்த உலகத்தை மேலே கொண்டுவந்த ஸ்ரீ வராகப்பெருமானுக்கு, தெளிந்த தண்ணீரையுடைய பிரளயவெள்ளத்திலே பள்ளிகொண்ட எம் தேவபிரானுக்கு, என்னுடைய, கண்டார் கண்களைப் பிணிக்க வல்ல மயிர்முடியையுடைய பெண்ணானவள் கல்வியை இழந்தாள்.

வி-கு :- மண் – அணுக்கள். “மண்திணிந்த நிலனும்” என்பது, புறம். (செய்-2.) கற்பு – கல்வி.

ஈடு :- ஐந்தாம் பாட்டு. 2வேதங்களைக் கொடுத்தல் முதலான உபகாரங்களைச் செய்தவனுக்கு என்மகள் கல்வியினை இழந்தாள் என்கிறாள்.

பண்புடைவேதம் – 3ஈசுவரனை உள்ளபடியே காட்டித் தரும்

நீர்மையையுடைய வேதம். பயந்த – 1தூங்கினவன் எழுந்தான் என்ற கணக்கிலே பிரமனுக்குக் கற்பிக்கை.

இவ்விடத்தில்

ஸம்ஸ்காரம் ப்ரதி ஸஞ்சரேஷு நிததத் ஸர்கேஷு தத்ஸ்மாரிதம்
ரூபம்நாமச தத்ததர்ஹ நிவஹே வ்யாக்ருத்ய ரங்காஸ்பத
ஸு ப்தோத்புத்த விரிஞ்சபூர்வஜநதாம் அத்யாப் யதத்தத்திதம்
சாஸந்நஸ்ம்ருத கர்த்ருகாந் வஹஸி யத்வேதா: பிரமாணம் தத:–என்ற ஸ்ரீ ரங்கராஜஸ்தவம் உத்தரசதகம் 17-வது சுலோகம் அநுசந்தேயம்.

பரனுக்கு-2“அந்தப் பகவான் உலகங்களைப் படைப்பதற்கு முன்பு பிரமனைப் படைத்து அவனுக்கு வேதங்களை உபதேசித்தார்” யோபிரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி   தஸ்மை” என்பது. இது, ஸ்வேதாஸ்வதரம்.-

என்கிறபடியே, மேற்பாசுரத்தில், “யோபிரஹ்மாணம் விததாதி பூர்வம்” என்பதனையும்,
இப்பாசுரத்தில் “யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை”
என்பதனையும் சொல்லுகிறது என்று அருளிச்செய்வர்

பிரமனுக்கு வேதங்களாகிய கண்களைக் கொடுக்கையாலும், வேதங்களிலேயே அறியப்படுகின்றவன் ஆகையாலும் எல்லோரைக்காட்டிலும் மேலானவனுக்கு. 3அறிவு இழய்தார்க்கு அறிவு கொடுக்குமவன் கண்டீர் இவள் அறிவை அழித்தான். மண்புரைவையம் – மண்மிக்க பூமி. இடந்த வராகற்கு

ஸ்திதே மனஸி ஸு ஸ்வஸ்தே சரீரே ஸதி யோ நர:
தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமகம்.

  ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம்கதிம்.– என்பன வராக சரமம்.

4மண்ணோடு விண்ணோடு வாசி அறத் தன்முகத்தால் ரக்ஷித்தபடி. 5பிறருடைய சொரூப சித்திக்காகத் தன்னை அழியமாறுமவன். 6அழிவுக்கு இட்டவடிவுக்கு ஆலத்தி வழிக்கவேண்டும்படி யன்றோ இருப்பது. 1“மானமிலாப் பன்றியாம்தேசு” –நாய்ச்சியார் திருமொழி, 11. 8,-என்னக் கடவதன்றோ. 2“மண் மிகுதி சொல்லிற்று, எடுக்கையில் அருமை தோற்றுகைக்காக. வராகற்கு 3அல்லாத ரக்ஷணம்போல் அன்றியே, எல்லார்க்கும் ஏற முக்கியமான ரக்ஷணம் இதுவன்றோ. 4“எயிற்றிடை மணகொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான்” என்கிறபடியே, பெரியாழ்வார் திருமொழி, 5. 2 : 3. ‘இவளைப் போன்றோர்க்கு’ என்றது, பெரியாழ்வாரை.

இவளைப் போன்றார்க்கு ஞானத்தைக் கொடுக்கிறவன் இவளை அறிவு அழித்தான்.

தெண் புனல் பள்ளி – தெளிந்த புனலையுடைய ஏகார்ணவத்தைப் படுக்கையாகவுடையவன். 5அழிந்த உலகத்தைப் படைத்து, படைக்கப்பட்ட சேதநர்க்கு அறிவு கொடுக்கக் கிடக்கிறவனுக்கு. 6சத்தையே பிடித்து உண்டாக்கி அறிவு கொடுக்கக்கடவ அவன்கண்டீர் உண்டான அறிவினை வாங்கிக்கொள்ளுகிறான்! எம் தேவபிரானுக்கு – பிரமன் சிவன் முதலானவர்கட்கும் உபகாரகனானவனுக்கு. 1“ஈசுவரோஹம்” என்று இருந்தாளாகில் அறிவு இழக்கவேண்டா கண்டீர்! என் கண் புனை கோதை – 2கண்டார் கண்கள் பிணிப்பு உண்கையாலே, அவற்றை ஆபரணமாகவுடைய மயிர்முடியையுடையவள்.

பண்புற நெடிது நோக்கிப் படைக்குநர் சிறுமை யல்லால்
எண்பிறங் கழகிற் கெல்லை யில்லையாம் என்று நின்றாள்
  கண்பிற பொருளிற் செல்லா கருத்தெனின் அஃதே நீண்ட
பெண்பிறந் தேனுக் கென்றால் என்படும் பிறருக் கென்றாள்.-என்பது, கம்பராமாயணம், சூர்ப்பணகைப்படலம்.

அதாவது, வைத்த கண் வாங்க ஒண்ணாதிருக்கை, கண்களுக்கு விஷயம் தலையாய்விட்டது. இழந்தது கற்பே – எல்லார்க்கும் ஞானத்தைக் கொடுக்கக்கூடியவனான அவனுக்குங்கூட அறிவினைக் கொடுக்கும் இவள் கண்டீர் அறிவினை இழந்தது! 3“இராஜாக்களின் இலக்ஷணங்களை அறிந்தவளே” அன்றோ. தேவகார்யம் ஸ்ம ஸா க்ருத்வா க்ருதஜ்ஞா ஹ்ருஷ்டசேதநா
அபிஜ்ஞா ராஜதர்மாணாம் ராஜபுத்ரம் ப்ரதீக்ஷதே”–
என்பது, ஸ்ரீராமா. அயோத். 26 : 4.

ஈஸ்வரனை உள்ளபடி காட்டும் வேதம்
நீர்மை உடையவை
பரன் இவன் ஒருவனே
ப்ரஹ்மாவுக்கு வேத சஷுஸ் கொடுத்து
சர்வ ஸ்மாத் பரன்
அறிவு இல்லாதவர்க்கு அறிவை கொடுத்தவன் இவள் அறிவை பரித்தான்
மண்-விண் வாசி அர முக பேதென ரஷித்து
வேதம் கொடுத்தது விண்ணை ரசித்து 
வராஹ முகத்தால் இங்கு மண்ணை
அழிய மாறி
அழிவுக்கு இட்ட அழகுக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி அவதாரம் –
காந்தாரி குந்தி
யானை தங்கத்தால் பூஜிக்க
குந்தி மண்ணால் பூஜிக்க
யானை விளக்கு இன்றும் ஏற்றுவார்கள் -மண்ணால் செய்து
திருநாராயணபுரத்தில்
மூன்றாம் நாள் ஜலத்தில் சேர்த்து
மானமில்லா பன்றியாய் தேசு -உபமானம் இல்லாத
மண் மிகுதி சொல்லிற்று எடுக்கையில் அருமை சொல்ல
ஆழ்வார் -எய்ற்றில் மண் கொண்ட ஞானம் பிரதானம்
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே 
பாழியான் அருளே
இவளோட்டை பூமிப்பிராட்டி -வராஹ சரம ச்லோஹம்
அழிந்த ஜகத்தை சிருஷ்டித்து
சேதனர் கார்யம் செய்ய ஏகார்ணவம் -ஆதி சிருஷ்டி ஒரே ஆர்ணவம்
அறிவு கொடுக்க
சத்தியே பிடித்து உண்டாக்கி
இவளுக்கு சத்தையை அழிக்க பார்க்கிறான்
தேவ பிரான் -ஈச்வரோஹம் ப்ரஹ்மாதிகள் -போல்வாருக்கும் அறிவு கொடுத்து 
அஹங்கரித்தால் ஞானம் கிடைக்கும்
நான் உனக்கு அற்று தீர்ந்தேன் தாசோஹம் என்றல் அறிவு இழக்க
தாயார் வார்த்தை
கண்டார் கண்கள் -கோதை -கூந்தல் உடையவள்
மாலை அர்த்தமும் கோதை
வைத்த கண் -வாங்காமல் கண்களுக்கு விஷயம் தலையாய் இருக்க
இருவரையும் திருத்துவது உபதேசத்தால்
வைதேகி -அவிஞ்ஞா ராஜா தர்மாணாம் -பெருமாளுக்கும் உபதேசித்து
இப்பொழுது
கற்பு கல்வி கற்கப்படுவது ஞானம் இழந்தாள்

கற்பு – கல்வி, அதாவது, ஞானம்.

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-6-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 29, 2013

பீடுடை நான்முக னைப்படைத் தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்குஎன்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.

பொ-ரை :- பெருமைபொருந்திய பிரமனை உண்டாக்கினவனுக்கு, செல்வம்பொருந்திய பூமியை அளந்த மணவாளனுக்கு, உலகத்தையுடையவர்களான பாண்டவர்களுக்குத் தூதுசென்ற நம்பிக்கு, என்னுடைய, பரப்புப் பொருந்திய அல்குலையுடைய பெண்ணானவள் பண்பினை இழந்தாள்.

வி-கு :- மணாளன் என்பது, மணவாளன் என்பதன் திரிபு. பாடுடை அல்குல்: அன்மொழித் தொகை.

ஈடு :- நான்காம்பாட்டு. 2பிரமனைப் படைத்தவன் என்னும் மேன்மையைப்பாராதே தன்னை அடைந்தவர்களுக்காகத் தூதுசென்ற மஹாகுணத்தையுடையவனுக்கு இவள் நீர்மையை இழந்தாள் என்கிறாள்.

பீடு உடை நான்முகனைப் படைத்தானுக்கு – 3பதினான்கு உலகங்களையும் படைக்கவல்ல பெருமையையுடைய பிரமனைப் படைத்தவனுக்கு, பீடு – பெருமை. மாடு உடை வையம் அளந்த மணாளற்கு – திருவுலகு அளந்தருளின வஞ்சனை பொருந்திய செயலாலே 4தன்னை எனக்கே யுரியவனாகச் செய்தவனுக்கு.

மாடுடை – செல்வம் பொருந்திய என்னுதல்; ‘மாடு’ என்று இடமுடைமையாய், பரப்பையுடைய என்னுதல். நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு – நாடுடைய இராஜாக்களான பாண்டவர்களுக்குத் தூதுபோய் அதனாலே பூர்ணனானவனுக்கு. 1பகவத் அபிப்பிராயத்தாலே, அவர்களை ‘நாடுடை மன்னர்’ என்கிறார் காணும். 2“இருக்கைக்கு ஒரு குறிச்சியும் கொடோம்” என்று இராச்சியம் செய்கிறவர்கள் துரியோதனா தியர்களாக இருக்க. “ஈ இருக்குமிடமெனினும் இப்புவியில் யானவர்க்கு அரசினிக்கொடேன்”
என்பது, வில்லிபாரதம். (கிருஷ்ணன் தூது.) குறிச்சி – குப்பம்; சிறிய ஊர்.

3“ஸ்ரீராமபிரான், விபீடணனை இராக்கதர்களுக்கு அரசனாக இலங்கையில் முடிசூட்டிச் செய்யத்தக்க செயலைச் செய்து முடித்தவரானார்” அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருதயஸ்ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”-என்பது, சங்க்ஷேப ராமாயணம். 85.

என்றது போன்று. ‘இன்னார் தூதன்’ என நின்ற செயலாலே, இட்ட சட்டை பீறும்படி இருத்தலின் ‘நம்பிக்கு’ என்கிறாள். 4அடியிலே உலகத்தை உண்டாக்கி, அபஹரித்தார் உளராகில் எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, அதனைத் தன்னை அடைந்தவர்க்கு ஆக்குகைக்கு இழிதொழில் செய்த இந் நீர்மையையுங் காட்டி இவள் நீர்மையைக் கவர்ந்தான். என்பாடுடை அல்குல்-இடமுடைத்தான நிதம்பப்பிரதேசத்தையுடையவள். பாடு – இடம். 5“திரௌபதியினுடைய நிதம்பப் பிரதேசத்தைக் கண்ட பெண்கள் மனத்தினாலே ஆண் தன்மையை அடைந்தார்கள்” பாஞ்சால்யா: பத்மபத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா: ஜகநம் கநம்
யா: ஸ்திரியோ த்ருஷ்டவத்ய: தா: பும்பாவாம் மநஸா யயு:”-
என்பது, பாரதம்.

என்பது போன்று, ஸஜாதீயரை அழிக்கும் வடிவழகைக் குறித்தபடி.1அவன், ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் அபஹரிக்கின்றவன் ஆனாற்போலே. பண்பு-நீர்மை.

  புண்ணவாம் புலவு வாட்கை பொலன்கழல் புனைந்த பைந்தார்க்
கண்ணவாம் வனப்பி னாளைக் காமனே கண்ட போழ்தும்
பண்ணவாம் பவளச் செவ்வாய்ப் படாமுலைப் பரவை அல்குல்
பெண்ணவா நிற்கு மென்றால் பிணையனாட் குய்தல் உண்டோ?–என்பது, சிந்தாமணி. 1528.

“ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய்
தாடகை என்பதுஅச் சழக்கி நாமமே”-என்பது, கம்பராமாயணம், தாடகை வதைப்பட.

அவன், ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் அபஹரிக்கின்றவன் ஆனாற்போலே. பண்பு-நீர்மை.

“பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 3 : 29.

சதுர முகன் ச்ரேஷ்டா
வையம் அளந்து
தூது சென்று
மேன்மை உடையவன் நீர்மை காட்டி
இவள் நீர்மை இழந்தாள்
பீடு உடை -சதுர முகனுக்கு பெருமை அவனால் படைக்கப் பட்டதால்
மாடுடை வையம் செல்வம் வசுமதி
பரப்பை உடைத்தான இடம்
உலகு அளந்த -காட்டி அடிமை ஆக்கிக் கொண்டான்
பாண்டவர் தூதன் பரிபூர்ணன் ஆனான்
நாடுடை மன்னர் பாண்டவர்
நாடு இல்லாத காலத்தில் தூது
பகவத் அபிப்ராயத்தால் சொல்லுகிறார்
இவர்களுக்கு தான் சொந்தம் உரியது அவன் முடிவு பண்ணி விட்டான்
குரிச்சி கிராமம் கொடுக்க மாட்டோம் –
இலங்கை -விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் கடல் கரையிலே செய்து அருளி –
அன்றே முடிவு செய்தார் பெருமாள் -அது போலே நாடுடை மன்னராக விபீஷணன் ஆனானே –
நம்பிக்கு பூரணன் இன்னார் தூதன் என்ற செயலால் இட்ட சட்டை மீறும் படி
பீறும் படி பூர்ணன் ஆனான்
இன்னார் தூதன் -நின்றான் -இப்பொழுது தான் தரித்து நின்றான்
நின்றான் -அவதாரம் எடுப்பதில் இருந்தும் நின்றான்
இதுக்கு கீழே சௌலப்யம் காட்ட முடியாதே
அடியிலே ஜகத்தை உண்டாக்கி –
அபஹரித்தார் உண்டாகில் எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
ஆஸ்ரிதர் வாழ தான் இழி தொழில்
நீர்மை காட்டி நீர்மை அபஹரித்தான்
பாஞ்சாலி அழகை கண்டு சஜாதீயர் அழிக்கும் வடிவு அழகு
இவள் பெண்கள் சித்தம் அபஹரிக்கும் அழகு உள்ளவள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-6-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 29, 2013

   நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங்கிளர் வாய்ச்சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கையவ னுக்குஎன்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.

பொ-ரை :- கரிய நிறத்தையுடையவனுக்கு, பெரிய உலகத்தை உண்ட கூறுபாடு விளங்குகின்ற திருவாயினையுடைய சிறிய வடிவிலே பெரிய உலகங்களை எல்லாம் அடக்கிய கள்வனுக்கு, சுழலுகின்ற சக்கரம் பொருந்திய கையையுடையவனுக்கு, என்னுடைய, விளங்குகிற கரிய கூந்தலையுடைய பெண்ணானவள் பெருமையை இழந்தாள்.

வி-கு :- பிறங்கிருங் கூந்தல் : அன்மொழித் தொகை. கறங்குதல் – கழலுதல்.

ஈடு :- மூன்றாம்பாட்டு. 1ஆலிலையில் சயனித்தவனுடைய படிகளிலே அகப்பட்டு இவள் தன் பெருமையை இழந்தாள் என்கிறாள்.

நிறம் கரியானுக்கு – 2“இழந்தது மாமைநிறம்” என்றாள்; அந்த நிறமும் அவன் பக்கலிலே கிடக்கையாலே இரட்டித்துக் காட்டிற்று வடிவு. 3தன் நிறத்துக்கு மேலே ஒருநிறம் உண்டாயிற்று. “நீலக் கருநிற மேக நியாயற்கு” என்ன வேண்டாவாயிற்று; நிறத்துக்கு ஒப்பாக மாட்டாமையாலே. நெய்த்துக்குளிர்ந்து சிரமத்தைப் போக்குகின்ற வடிவினையே சொல்லுகிறாள். நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய் – பரப்பையுடைத்தான பூமியைத் திருவயிற்றிலே வைத்த பிரகாரத்தைக் கோட் சொல்லாநின்ற திருவதரத்தையுடைய. கிளருகை – சொல்லுகை. 4“வையம் ஏழும் கண்டாள் பிள்ளைவாயுளே”- பெரியாழ்வார் திருமொழி, 1. 1 : 6.– என்னக்கடவதன்றோ. ரக்ஷிக்குந்தன்மையை விளக்கிக் காட்டுகின்ற திருவதரம். சிறுக் கள்வனவர்க்கு – 5சிறுவயிற்றிலே பெரிய உலகங்களை வைத்து, அளவிட முடியாத செயலையுடையவனுக்கு. நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய் – 1வேறு ஒருவர்வாயாலே கேட்கவேண்டாதே, இவன் வாயாலே சொல்லக் கேட்கலாம்படி. சிறுக்கள்வனவர்க்கு – 2வடிவில் சிறுமையும் ரக்ஷிக்குந் தன்மையில் பாரிப்பும் இருக்கிறபடி. தன்னுடைய ரக்ஷிக்கும் தன்மையையும் அகடிதகடநா சாமர்த்தியத்தையும் காட்டியாயிற்று இவளை அகப்படுத்திற்று.

கறங்கிய சக்கரக் கையவனுக்கு-பகைவர்களை அழிக்கவேண்டும் விரைவாலே எப்பொழுதும் சுழலாநின்றுள்ள திருவாழியைத் திருக்கையிலேயுடையவனுக்கு: 3தான் ரக்ஷகனான அளவன்றியே, பரிகரமும் ரக்ஷணத்திலே முயற்சியோடு கூடி இருக்கிறபடி. 4அவன் கைப்பிடித்தார் எல்லாரும் ரக்ஷணத்திலே விரைவுடையராயன்றோ இருப்பது. 3ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானும், “ஒரு வினை உண்டாகவற்றே, நாம் வாய்க்கரையிலே நின்று ஓசையை விளைத்து வினை தீர்க்க” என்று பிரார்த்தியாநிற்கும். என் பிறங்கு இரும் கூந்தல் – சுற்றுடைத்தாய் ஒழுகு நீண்ட மயிர்முடியையுடையவள். அன்றிக்கே, மிகவும் பெரிய குழலையுடையவள் என்றுமாம். இருமை – பெருமை. இங்குப் பெருமையாவது, நீட்சி. பிறங்குதல் – மிகுதல். கூந்தல் – மயிர். “கூந்தல் ஐம்பால். . . . . .குழல்” என்பது, திவாகரம், மக்கள் பெயர். 6எதிர்த்தலையைத் தோற்பிக்கும் குழலையுடையவள் கண்டீர் தன்பெருமையை இழந்தாள். பீடு – பெருமை.“ஸ்ரீஜனக மகாராஜனுடைய புத்திரியான அந்தச் சீதா பிராட்டி’ யாதொருவருக்கு மனைவியாக இருக்கிறாளோ அவருடைய பராக்கிரமும் அளவிட முடியாதது” –அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜனகாத்மஜா ந த்வம் ஸமர்தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம்வநே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 37 : 18.

என்று அவனுக்கும் பெருமையைக் கொடுக்கும் பெருமையை அன்றோ இவள் இழந்தது.

ஆலிலை -உலகுண்ட கள்வன் இடம் ஈடுபட்டு
பெருமை இழந்தாள்
இழந்த இவள் நிறம் அவன் இடம் சேர்ந்து -நிறம் கரியான்
த்ரௌபதி கிருஷ்ணா கருப்பாக இருப்பதால்
தன் நிறமும் அவன் பக்கலிலே இருப்பதால் இரட்டித்து
நீல மேக நிறமும் ஒப்பாகாதே
நிறம் கரியானுக்கு என்கிறாள்
நீடு உலகு உண்ட -சிறு கள்வன் அவர்க்கு -கரியானுக்கு அவனுக்கு
பரப்பை உடைத்தான உலகு
உதரத்தில் கொண்டான் -ரஷகம் காட்டும் திரு அதரம் -கோள் சொல்லும் வாய்
ரஷகத்வ பிரகாசமான
பரிச்சேதிக்க  ஒண்ணாத செஷ்டிதங்கள் உடையவனுக்கு
அவன் வாயாலே கேட்டவள்
வடிவில் சிறிய –
ரஷகத்வம் காட்டி
சக்கர கை
சுழலும் விரோதி நிரசன்னா த்வரையால்
பரிகரமும் ரஷனத்துக்கு சித்தம்
அவன் கை பிடித்தார் எல்லாரும் ரஷனத்தில் தீஷிதை
வாய் கரையிலே நின்று
பாஞ்ச ஜன்யமும் ஓசை விளைத்து -முடிக்கலாமே பாரித்து இருப்பான்
கூந்தல் உடைய இவள் –
சுற்று உடைத்தாய் -அடர்த்தி நெய்தது கருத்து -பெரிய
இருமை -பெருமை -நீட்சி
அவிழ்த்து விட்டால் கால் வரை விழும் சௌரி
ஐம்பால்
எதிர் தலையை தோற்ப்பிக்கும் தோகை மா மயில்
இவள் தனது பெருமை இழந்தாள்
அப்ரமேயச்த யஸ்யா ஜனகாத்மஜா
அவனுக்கும் தேஜஸ் கொடுக்க கூடியவள் இவள் இழந்தாள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-6-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 29, 2013

சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்குஎன்
மங்கை இழந்தது மாமை நிறமே.

பொ-ரை :- சங்கம் வில் வாள் தண்டு சக்கரம் என்னும் ஐந்து ஆயுதங்களையும் தரித்த திருக்கரங்களையுடையவனுக்கு, சிவந்த கோவைக்கனி போன்ற திருவதரத்தையும் செந்தாமரைபோன்ற திருக்கண்களையுமுடையவனுக்கு, தேனோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடையவனுக்கு, என் பெண்ணானவள் இழந்தது அழகிய நிறமேயாகும்.

வி-கு :- கொங்கு – வாசனையுமாம். மாமை – ஒரு நிறவிசேடமுமாம். இத் திருப்பாசுரத்தில், பஞ்சாயுதங்களையும் ஒருசேர அருளிச்செய்திருத்தல் காண்க.

ஈடு :- இரண்டாம் பாட்டு. 3திருவுலகு அளந்தருளின காலத்தில் திவ்விய ஆயுதங்கள் முதலியவைகளின் அழகிலே அகப்பட்டுத் தன்னுடைய அழகிய நிறத்தை இழந்தாள் என்கிறாள்.

சங்கு வில் வாள் தண்டு சக்கரம் கையற்கு – ஸ்ரீபஞ்சாயுதங்களின் சேர்த்தி அழகிலே ஆயிற்று இவள் ஈடுபட்டது. இவளுடைய 1ஓர் ஆபரணம் வாங்குகைக்கு எத்தனை ஆபரணம் பூண்டு காட்டினான்? கைக்குமேல் ஐந்துங் காட்டிக்காணும் இவளுடைய ஆபரணம் வாங்கிற்று. 2ஆபரணகோடியிலும் ஆயுதகோடியிலும் இருபுடைமெய்க் காட்டின அன்றோ இவைதாம். செம்கனிவாய்ச்செய்ய தாமரைக்கண்ணற்கு-கையிலே ஒன்றனைத் தரித்துக் காட்டிக் கவர்ச்சி செய்யவேண்டி இருந்ததோ? புன்சிரிப்பும் நோக்கும் அமையாதோ நலிகைக்கு? கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு – தேன் பெருக்கு எடுக்கின்ற திருத்துழாய்மாலையை, ஆதிராஜ்ய சூசகமான திருமுடியிலேயுடையவனுக்கு. வைத்த வளையத்தைக் காட்டிக்காணும் இவள் நிறத்தை அபகரித்தது. ஆக, ஆபரணசோபை, அவயவ சோபை, ஒப்பனை அழகு என எத்தனை செய்யவேணும் இவள் நிறத்தினைக் கொள்ளுகைக்கு என்றபடி. என்மங்கை -தன்பருவத்தாலே இவற்றையடையத் தோற்பிக்குமவள் கண்டீர் நிறம் இழந்தாள்! மாமைநிறம் – அழகிய நிறம். மாமை – அழகு.

நிறம் இழந்தாள்
திவ்ய ஆயுதம் -சேர்த்தி அழகை காட்டி
இவள் ஒரு ஆபரணம் கவர பஞ்ச ஆபரணங்கள் பூண்டு வந்தான்
கைக்கு மேல் ஐஞ்சு காட்டி இவள் ஆபரணம் வாங்கிற்று
ஆபரணம் ஆயுத கோஷ்டி மெய்ப்பாடு உண்டே
செம் கனி வாய் -செய்ய தாமரைக் கண் -ஆபரணம் வேண்டாத இரண்டு அவயவங்கள் இவை இரண்டும்
ஸ்மிதமும் நோக்கும் அமையாதோ அபஹரிக்க
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி யான் வகுத்த வளையம் காட்டி
ஆபரணம் -அவயவம் -ஒப்பனை இத்தனையும் காட்டி அபஹரிக்க
மங்கை -பருவம்
மாமை அழகிய நிறம் இழந்தாள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-6-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 29, 2013

ஆறாந் திருவாய்மொழி – “மாலுக்கு”

முன்னுரை

    ஈடு :- 1மேல் திருவாய்மொழியிலே இவளுக்குப் பிறந்த தசை முற்றி வியசனம் அதிகரிக்கையாலே மயங்கினவளாய்க் கிடக்க, அது கண்டு ஆற்றாளாய் இவளுடைய தோழியும் மயங்க, இந்த நிலையிலும் இவளைப் பிழைப்பதற்குரிய விரகுகளை எண்ணுகையாலே தரித்திருக்கிற திருத்தாயார் இவளுடைய வளயம் முதலானவைகள் காணக் காண உருக்குலைகிறபடியைக் கண்டு, அவற்றைத் தனித் தனியே சொல்லிக் கூப்பிடுகிறாள். 2ஒவ்வொரு நகரம் பத்தநம் முதலானவைகள் வேவப்புக்கால், ‘ஒருமாடம் முறிந்தது, மாளிகை முறிந்தது’ என்பாரைப்போலே. 3மேல் திருவாய்மொழியிலே பெறாத நிலைமையாய், ‘கிடையாது’ என்றாலும் விடமாட்டாதபடி தம்முடைய மனம் வாக்குக் காயங்கள் அவ்விஷயத்திலே மிக்க ஈடுபாடு உண்டானபடி சொல்லிற்று; இதில், அந்த அலாபத்தால் வந்த பரவசப்பட்ட தன்மையைச் சொல்லுகிறது. 4“நெடுமால் என்றே கூவுமால்” என்று தன்னுடைய வியாமோகத்தைக் காட்டியாயிற்று இவளை இப்படி விளைத்தது; 5பெரியவன் தாழ நின்றால் பொறுக்க

லாய் இராதன்றோ. 1“பெருமாளால் அபயம் கொடுக்கப்பட்டபோது, இராவணன் தம்பியும் மஹாபுத்திசாலியுமான விபீஷணன் பூமியைப் பார்த்துக்கொண்டு வணங்கினான்” –ராகவேண அபயே தத்தே ஸந்நதோ ராவணாநுஜ:
விபீஷணோ மஹா ப்ராஜ்ஞோ பூமிம் ஸமவலோகயந்”-  என்பது, ஸ்ரீராமா. யுத். 19 : 1.-
என்று இவன் தறைப்படும்படியன்றோ அவனுடைய வியாமோகம் இருப்பது.

கரங்கள்மீச் சுமந்து செல்லும் கதிர்மணி முடியன் கல்லும்
மரங்களு முருக நோக்கும் காதலான் கருணை வள்ளல்
இரங்கினன் நோக்குந் தோறும் இருநிலத் திறைஞ்சு கின்றான்
வரங்களின் வாரி யன்ன தாளிணை வந்து வீழ்ந்தான்.–என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக்கலப். 140.

608.

        மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச்செந் தாமரைக் கண்ணற்குஎன் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.

பொ-ரை :- திருமாலுக்கு உலகத்தை எல்லாம் அளந்த மணவாளனுக்கு மிகக் கரிய நிறத்தையுடைய மேகம்போன்ற தன்மையனுக்கு அழகிய செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடையவனுக்கு என்னுடைய தேனோடு மலர்ந்த பூக்களையுடைய வாசனைபொருந்திய கூந்தலையுடைய மகள் இழந்தது சங்கவளையலேயாம்.

வி-கு :- மேக நியாயன் – மேகம்போன்ற தன்மையன். ஏலம்-வாசனை. சங்கு – சங்கவளையல்.

இத்திருவாய்மொழி, கலிவிருத்தம்.

    ஈடு :- முதற்பாட்டு. 2இவள் வாமன அவதாரத்தில் குணங்களிலும் செயல்களிலும் அகப்பட்டு வளை இழந்தாள் என்கிறாள்.

  மாலுக்கு – 1“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, நீ எனக்கு வேண்டா என்ன, நீ எனக்கு வேண்டும் என்று தடுமாறி நின்ற நிலையைக் காட்டியாயிற்று இவளை இப் பாடுபடுத்திற்று. 2சர்வேசுவரனான உயர்வு தோற்ற நின்றானாகில் இப் பாடுபடாள் கண்டீர்! வையம் அளந்த மணாளற்கு – 3உகவாதாரையும் கூட விடமாட்டாத வியாமோகம். “அழித்தாய் உன் திருவடியால்” என்று இவளையும் தன் காற் கீழே இட்டுக்கொண்டான் அன்றோ. 4அச்செயலுக்கு எழுதிக்கொடுத்தாள் இவள் ஒருத்தியுமே அன்றோ; 5“மூவடிமண் கொண்டளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்” என்கிறாள். பெரிய திருமொழி, 9. 4 : 2. இத் திருப்பாசுரத்துக்கு ரசோக்தியாக, பாவம்
அருளிச்செய்கிறார் ‘அவன் இரந்து’ என்று தொடங்கி. உரை என்று
மாற்றாய், மாற்று ஏறியிருக்கும் என்னுதல்; உரை என்று
கொண்டாட்டத்தைக் கூறுவதாய், உலகத்தாருடைய
கொண்டாட்டத்தையுடைத்தாயிருக்கும் என்னுதல்.

அவன் இரந்து மண் பெற்றான், இவள் உகந்து பொன் பெற்றாள். உகப்பாலே பெறுமது உரைப்பெற்றிருக்குமே. மணாளன் – அநுபவிக்கிறவன். நீலக் கருநிற மேக நியாயற்கு-நெயத்துக் கறுத்த நிறத்தையுடைய மேகத்தைப் போன்ற தன்மையற்கு. அன்றிக்கே, நியாயம் – சமம், ஒப்பு என்னுதல். 6வேறு பிரயோஜனம் கருதாது கொடுக்கையும், கொடுக்கப் பெறாதபோது உடம்பு வெளுக்கையும். 1வியாமோகம் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவும் ஒளதார்யமும் இருக்கிறபடி. நீலக் கரு நிற மேக நியாயற்கு – 2மஹாபலியை வடிவைக் காட்டி அபகரித்தாற்போலே காணும் இவளையும் வடிவைக்காட்டி அபகரித்தபடி. 3இவள் பிச்சு ஏறுகைக்கு இட்ட மை இருக்கிறபடி. 4மைப் படி மேனி அன்றோ.-திருவிருத்தம், பாட்டு. 94.

கோலம் செந்தாமரைக் கண்ணற்கு – காட்சிக்கு இனியவாய் வாத்சல்யத்தாலே சிவந்து, மலர்ச்சி முதலானவைகளையுடையவான திருக்கண்களையுடையவனுக்கு. 6“தாமரைத்தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான்” என்று திருக்கண்களாலே யாயிற்று அகப்படுத்திக்கொண்டது. 6விசேடணம் தோறும் அவனுக்கு என்று தனித்தனியே அகப்பட்ட துறைகளைச் சொல்லுகிறாள். ‘மாலுக்கு’ என்று தொடங்கி, 7தன்மகள்மேல் பட்ட அம்புகளை எண்ணுகிறாள்; இது ஒரு குத்து, இது ஒரு வெட்டு, இது ஒரு அம்பு என்று. என் 8கொங்கு அலர் ஏலம் குழலி – தேன் பெருக்கு எடுக்கின்ற பூக்களையுடைத்தாய், நறு நாற்றத்தையுடைத்தான குழலையுடைய என்பெண்பிள்ளை. கொங்கு – தேன், அலர் – பூ, ஏலம் – நறுநாற்றம். 1இவள் மயிர்முடி ஒன்றுக்குத் தோற்றுக் குமிழிநீர் உண்ணும் அவன் கண்டீர் இவளை அழித்தான்! பங்களப்படைகொண்டு, தனிவீரம் செய்வாரை அழிக்குமாறுபோலே- இழந்தது சங்கே – 2இவள் மயிர்முடி கண்டு அவன் இழக்கக்கடவதனை இவள் இழந்தாள்.

இவள் உடைய மோகம் பார்த்து
வளைகள் போன்றவை தாமாகவே போக
தானாகவே போவதை தாயார் வார்த்தையால் அருளி

கீழே மோஹித்த இவர் நிலை தோழி பாசுரம்
இது தாயார் பாசுரம்
ஏறாளும் இறையோனும் -எம்பெருமான் விரும்பாத ஆத்ம ஆத்மீயங்கள் வேண்டாம் என்றார்
இதில் அவை தன்னடையே போகும் படியை அருளுகிறார் –
நிறம் வளை போவதை -அவன் மேல் ஈடுபாடு காரணமாக
தளர்ந்து போன தசையை தாயார் அருளுவதாக –
வியசனம் முற்றி -அது கண்டு ஆற்ற முடியாமல் தோழிகளும் மோஹிக்க
என்னில் முன்னம் அவர்கள் –
இத்தசையிலும் -இவளை தரிப்பிக்க வழி யோசித்து
அதனால் தரித்து
வளை நிறம் தனித் தனியாக சொல்லி
பட்டணம் வேவப் புக்கால் -இந்த மாளிகை விழுந்தது -அந்த மாடம் -சொல்லுவது போலே
வ்ரகம் அக்நியால் இழந்ததை சொல்லிக் கொண்டு
கீழில் தசையில் அலாப்ய தசை -கிடையாது என்றாலும் விட ஒண்ணாத
அதி பிரவணம் சொல்லி
அந்த அலாபத்தால் வந்த பாரவச்யம் இதில் சொல்லி
நெடுமால் என்றே நின்று கூவுமே -வ்யாமோஹம் காட்டி இவளைப் பண்ணி அருளினான்
உருக ஆரம்பிக்க
பெரியவன் தாள நின்றாள் பொறுத்துக் கொள்ள  முடியாதே
ராகவன் அபயம் அளித்த பின்பு விபீஷணன் வார்த்தை போலே
ராவணன் தம்பி எனக்கு போய் அனுக்ரகம் செய்தானே ராகவன் –
அவன் பெருமையையும் -தனது தாழ்ச்சியும் சொன்னது போலே

துடிப்புக்கு ஏற்ப அனுபவம் கிடைக்கவில்லை ஆற்றாமை மிக்கு கீழ் சொன்ன தசையும் கலங்கி
சம்பந்த ஞானம் தரிப்புக்கு உடலாக அன்றி தளர்ச்சிக்கு உறுப்பாக
உபாய அத்யவசாயம் இத்தனையும்
சம்பந்த ஞானம் தோழி பாசுரம் ஆனது
இது தாய் பாசுரம் -உபாயத்தில் துணிவு தான் தரித்து இருக்க
பிராப்ய அலாப்ய நிபந்தனம் -பாரவச்யம்
தான் வேண்டாம் என்று சொன்னவை தன்னடையே போவதை தாய் பாசுரமாக அருளிச் செய்கிறார்

ராமன் திருக்கல்யாண குணங்களில் ஈடு பட்டு
மாலுக்கு -வையம் அளந்த -மணாளன் –
கொங்கு அலர் -சங்கு இழந்தாள்
மின்னிடை மடவாரில் -எனக்கு வேண்டாம் என்று தள்ளினாலும் நீ எனக்கு வேண்டும் என்று
மேல் விழுந்த -தடுமாறி நின்ற நிலையைக் காட்டி
இவளை இப்பாடு படுத்தி
சர்வேஸ்வரன் என்று தள்ளி நில்லாமல்
தனி தனியாக சொல்லி -மாலுக்கு -வ்யாமோஹம் காட்டி
வையம் அளந்த மணாளர் -உகவாதாரையும் விடாத வாமனன் -மாலுக்கு திருஷ்டாந்தம் இது
மால் -கருமை பெருமை மையல் மூன்றும் அர்த்தம் –
இவளையும் கால் கீழே இட்டுக் கொண்டான்
அழித்தாய் திருவடியால் -சிற்றிலை மட்டும் இல்லை சிந்தையும் சிதைக்க கடவாயோ
அச் செயலுக்கு எழுதிக் கொடுத்தவள் இவள் ஒருத்தி இ றே
மற்றவர் உண்டியே உகந்து ஓடினார்கள்
வைவர்ண்யம் -மாலாகி பொன் பயந்தேன் –
இரந்து மண் பெற்றான்
உகந்து பொன்னைப் பெற்றால் இவள்
உகப்பாலே பெறுவது உறைத்து இருக்குமே
மணாளன்-போக்தா
மேக சியாமளன் -நீல -பிரயோஜன நிரபேஷமாக கொடுக்கை
கொடுக்க பெறாத பொழுது உடம்பு வெளுக்கை –
வ்யாமோஹம் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு
மகா பலியை வடிவை காட்டி அபஹரித்தான்
இவளையும் வடிவைக் காட்டி அபஹரித்தான்
வஞ்சித்து நெஞ்சு உருக்கி –
இவள் பிச்சேற்ற வைக்க இருக்கிற மை இருக்கிற படி
மை -கருப்பு மேகம்
மைப்படி மேனி இ றே
மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்
தர்சநீயம்
வாத்சல்யத்தால் சிவந்து
விகாசம்
அகவலைப் படுத்தி
கண்ணாலே
தனித்தனியாக அகப்பட்ட துறை தனித் தனியாக
மால் -அன்புகளை சொல்லி -மார்பில் பட்ட அம்பை பிடுங்கி காட்டுகிறாள்
இது ஒரு குத்து வெட்டு அம்பு எண்ணுவாரைப் போலே
கொம்பு அலர் -ஏல
தேன் பூ நறுநாற்றம்
அவன் இத்தால் மோஹிக்க இருக்க
தனி வீரன் போலே இவளை அழித்தான்
இழந்தது சங்கே
இவள் கரு முடியைக் கண்டு
சங்குக்கு கொடுக்க வேண்டிய அமிர்தத்தை இவளுக்கு கொடுக்க வேண்டும்
இவள் சங்கை இழந்தாள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-5-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 28, 2013

துகில் -வஸ்திர அபஹரணம் -ஸ்ரீ கிருஷ்ணன் -நினைவால் -சங்கதி-

பேய் இடைக்கிருந்து வந்த மற்றவள் பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த வென் தலைவன்
சேய் முகட்டுச்சி யண்டமும் சுமந்த செம் பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டிழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே —1-4-5-

பேய் இடைக்கிருந்து வந்த-தாய் போலே வேஷம் இட்டு வந்த பூதனை இடையில் இருந்து
இடைக்கிருத்தல் அஞ்சுவன்-போதனையின் மடியில் இருந்த இருப்பை நினைத்து அஞ்சுகிறாள்
செம் பொன் செய் விலங்கலில்-மேருவில் –
வாய் முகடு-இடமுடைத்தான சிகரம்-

வியாக்யானம்-

பேய் இத்யாதி
யசோதை பிராட்டி உடைய வடிவைக் கொண்டு
வந்த பூதனை உடைய மடியிலே இருந்து –
அதுக்கே மேலே அவளுடைய பெரிய முலையையும் உண்டிட
(அஹங்காரம் மமகாராம் -காம க்ரோதங்கள் போலே)

பெற்ற தாய் இத்யாதி –
இத்தைக் கண்ட யசோதை பிராட்டி யானவள்
நாம் மடியிலே வைத்து முலை கொடுத்துப் போந்த
வாசனை கொண்டு இவன்
கண்ட பாதகராய்
நம்மை அநு கரித்து வந்தார் மடியிலே பொருந்தி
அவள் முலை உண்கிறது என்று கூசி
அவள் பரிந்து வளர்க்க வளர்ந்த என் தலைவன் –

சேய் இத்யாதி –
ஓங்கி இருந்துள்ள சிகரத்தின் உடைய
உச்சியிலே அண்டத்தை தரிக்கிற சிவந்த பொன்னாலே
செய்யப்பட மேருவிலே விளங்கா நின்றுள்ள
இடமுடைத்தான சிகரத்தில் நின்றும்
இழிந்த கங்கையின் கரை மேல்
வதரி யாஸ்ரமத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-4-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 28, 2013

அவதார பிரயோஜனம் -வி நாசாய துஷ்கரம்
இனி தர்ம சம் ஸ்தானம் மோக்ஷ பிரதம்

துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு
பிணி யொழித்தமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான்
அணி மலர்க் குழலாரரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே —1-4-4-

(பேரருளாளன் -இமையோர் தலைவன் -அமரர்கள் அதிபதி -திரு ஹஸ்திகிரி நாதன் தானே
தொழுது எழு-ஆஸ்ரயித்து உஜ்ஜீவி
தொழுது எழு மனனே-நம்மாழ்வார்
தொழா விட்டால் விழுவோம் -தொழுதால் எழுவோம் )

வியாக்யானம் –

துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு
இப்போது உனக்கு உறுதியாக ஒரு நல் வார்த்தை சொல்லுகிறேன் -நெஞ்சே கேள்
சொல்லச் செய்தே பின்னையும் சொல்லாததின் பலமே யாகாமே
நீ அவனைத் தொழுது உஜ்ஜீவிக்கப் பாராய் –

நீர் உறுதியாக சொல்லும் காட்டில்
அவர் நம் விரோதியைப் போக்கி
நன்மையை தருமோ என்ன-

பிணி இத்யாதி
நம் விரோதியையும் போக்கி
பரம பதத்தையும் நமக்குத் தரும்

ஒரு கால் ஆஸ்ரயித்த மாத்ரத்திலே
நம் விரோதியைப் போக்கி
நித்ய சூரிகள் இருப்பை நமக்கு பண்ணித் தரும்
பரம க்ருபாளானவன் சர்வேஸ்வரன்-(எளிமையும் பரத்வமும்)

அணி இத்யாதி –
கிருஷ்ணன் படியாய் ஆயிற்று ஜலத்தின் உடைய செருக்கும் இருப்பது
மலராலே அணியப்பட்ட குழலை உடையராய்
அப்சரஸ்கள் உடைய பரிவட்டத்தையும் ஹாரத்தையும் வாரி
அணிகிற நீர் என்னுதல்
அழகிய நீர் என்னுதல்
இவற்றைத் திரட்டிக் கொண்டு தர்ச நீயமான நீரானது
ரத்னங்களைக் கொழித்துக் கொண்டு
வந்து இழியா நின்றுள்ள
வதரி யாஸ்ரமத்து உள்ளானை –

தொழுது எழு -என்கிற இது
இத் திரு மொழிக்கு எல்லாம் கிரியை-

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-3-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 28, 2013

வாலி வதத்துக்கு பின் ராவண வதம் -சங்கதி

இலங்கையும் கடலும் அடலருந்திப் பின் இரு நிதிக் கிறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும்  சுடர் சுழன்ற
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி யென விரிந்து
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே–1-4-3-

இரு நிதிக் கிறைவனும்-சங்க நிதி பத்ம நிதி இரண்டும் கொண்ட ராவணன்-
விலங்கலில் உரிஞ்சி-மேருவில் தாக்கி
வெண் துகில் கொடி-த்வஜ ஸ்தம்பம் -வெண் கொடி பறந்தால் போலே கங்கை -தன் குறிப்பு ஏற்று அணி

வியாக்யானம் —

இலங்கையும் இத்யாதி –
ஒருவராலும் அழிக்க ஒண்ணாத படியாக
ஒருவராலும் அடர்க்கரிய சாமர்த்தியம் உடையனான
ஜெயேஷ்டனான வைஸ்ரவணனை வென்று- குபேரனை வென்று
சங்கநிதி பத்ம நிதிகளை உடையவனாய் இருக்கிற ராவணனும்
அவனுக்கு பலமான ராஷச ஜாதி யாகவும்
மண் உண்ணும்படியாக க்ரூர வியாபாரங்கள் பண்ணினவரான
இஷ்வாகூணாம் இயம் பூமி -என்னக் கடவது இறே-

கொழும் சுடர் இத்யாதி –
ஆதித்யனானவன் சுழல வாரா நின்றுள்ள மேருவிலே தாங்கி
மேல் நின்ற விசும்பிலே ஆகாசத்திலே வெளுத்த நிறத்தை உடைத்தான
கொடி ஆடையை விரித்தால் போலே
இது வந்து விழும் போதை நீர் தெளிவு இருக்கும் படி

வலம் தரு மணி நீர் –
வேகத்தாலே மிடுக்கை உடைத்தாய்
தெளிவை உடைத்தாய் இருக்கும் ஆயிற்று

—————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-2-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 28, 2013

நான் கண்ட நல்லதுவே ஞானப்பிரான் என்றார் ஸ்ரீ நம்மாழ்வார்
பூமா தேவியை ரஷித்து -இதில் ஸ்ரீ சீதா தேவி ரக்ஷணம் -இப்படி சங்கதி

பன்றியாய் அன்று கீண்ட பாழியான் -கீழ் பாசுரம்
வாலி மா வலத்து நினைவால் -இதில் என்றுமாம்

கானிடை யுருவைச் சுடுசரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன்
ஊனுடை யகலத்தடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த வெம் மொருவன்
தேனுடைக் கமலத் தயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு
வானிடை முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே —1-4-2-

உரவோன்-மிடுக்கனான வாலி –
வெம் மொருவன்-என் ஸ்வாமி ஒப்பற்றவன் -அத்விதீயமான பலத்தை உடையவன் –
தேவர் சென்று சென்று-நான் நான் என்று முன்னிட்டு-ஆஸ்ரயிக்க -உறுப்பாக -நீராட –

வியாக்யானம் —

கானிடை யுருவை-
தன் நிலமான காட்டிலே சஞ்சரிக்கிற
உரு உண்டு –
மான் -மாயாம்ருகம் -அத்தைக் கண்டு

சுடு சரம் துரந்து –
ஒருவருக்கும் தோற்றாதபடி
மறைந்து தோற்றுவதாய் திரிகிற
(சிபி சக்கரவர்த்தி வெள்ளை பன்றி -திரு வெள்ளறை -போக்கு காட்டி -அங்கும் இங்கும்)
அத்தைக் கண்டு பொறுக்க  ஒண்ணாத படியான அம்பை விட்டு-

கண்டு முன் கொடும் தொழில் உரவோன் ஊனுடை யகலத்தடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த வெம் மொருவன் –
க்ரூரமான செயலை உடையனான வாலி யினுடைய
தசைந்து அகன்று இருந்துள்ள மார்விலே
கொலை அம்பானது அழுந்தும்படி பண்ணி
அவ்வழியாலே அவனுடைய பிராணனை அபஹரித்து
மஹா ராஜர் விரோதி போகப் பெற்றோம் -என்று
உகந்த அத்விதீயமான பலத்தை உடையவன் –

தேனுடைக் கமலத் தயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு –
வானிடை முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யச்சிராமத்துள்ளானே –
திரு நாபி கமலத்தை
உத்பத்தி ஸ்தானமாக உடைய ப்ரஹ்மாவோடே
தேவர்கள் ஆனவர்கள்
அஹம் அஹமிகயா இழிந்து
ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாக ஸ்நானம் பண்ணப் புக்கவாறே
ஒன்றால் குறைதல் நிறைதல் செய்யாதே
ஏக ரூபமாய் இருக்கக் கடவ ஜலம் பெருகும் ஆயிற்று –
திருவடிகள் ஸஹ்யம் ஆகையாலே-திருக் காவேரிக்கு ஸஹ்ய பர்வதம் உத்பத்தி ஸ்தானம் ஆனால் போலே

வானிடை முது நீர்-
ஆகாசத்திலே யாய்ப் பழையதான நீர் என்றபடி-

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –