Archive for July, 2013

ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-1-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 28, 2013

பிரவேசம்
ஸ்ரீ பதரி என்றும்
ஸ்ரீ பதரி  காஸ்ரமம் என்றும்
இரண்டு திருப்பதியாய்
அதில் இங்குத்தை இருப்பாகிறது
( இன்று நாம் சேவிக்கும் திவ்ய தேசத்துக்கு மேலே ஓன்று இருக்க வேண்டும் )

பிரஜையினுடைய ரஷணத்துக்கு உறுப்பாக
தாய் குடிநீர் குடிக்குமோ பாதி
இவை தன்னை வழிப்படுத்துகைக்கு உறுப்பாக
தான் தபஸ் பண்ணி
ஹித காமனாய் இருக்கும் இடம்
சென்று ஆஸ்ரயிக்கும் நம் குறையே குறையாக
ஆஸ்ரயணீயானவன் தன் குறை அறுத்துக் கொண்டு
இருக்கிற இடமாய் இருந்தது -ஆனபின்பு நாம் அங்கே  போய்
ஆஸ்ரயிப்போம் என்று திரு உள்ளத்தோடே கூட்டுகிறார் –

இங்கு திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்கிற இடம் உண்டோ என்னில்
கீழே –
வதரி வணங்குதுமே -என்றும்
அறிதியாகில் நெஞ்சம் -என்றும் – சொல்லிக் கொடு போந்து
இதிலும்
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே -என்று
முடியத் திரு உள்ளத்தை குறித்து சொல்லிற்றாய் இறே இருக்கிறது –
கீழ் தாம் பெற்றதாகச் சொல்லி
அர்த்த அனுசந்தானம் பண்ணிப் போந்த மந்திர பிரதனன நாராயணன் வந்து
இருக்கிற-வர்த்திக்கிற- தேசமாய் இருக்கும் இறே –

கீழ் திரு மொழியிலே -மந்திர பிரதனான ஸ்ரீ நாராயணன் வர்த்திக்கிற
தேசத்தை ஆஸ்ரயிப்போம் என்று திரு உள்ளத்துக்கு சொல்ல –
நமக்கு சச் சிஷ்ய லஷணங்கள் அறிந்து அன்றோ
ஆஸ்ரயிக்க அடுப்பது -என்று ஆறி இருக்க –
அக்குறை தீர்த்தான் எழுந்து அருளி இருக்கும் தேசமான
ஸ்ரீ பத்ரி காஸ்ரமத்தை ஆஸ்ரயிப்போம் என்று
அருளிச் செய்கிறார் என்று சங்கதி
சிஷ்யனாய் இருப்பது நாட்டார்க்கு சிஷ்யனாய் இருக்கும் இருப்பை அறிவித்து சேதனரை வெளிப்படுத்த வாயிற்று
சிஷ்ய லக்ஷணங்கள் பரக்க பேசி ஆச்சார்ய லக்ஷணங்கள் குறைய அருளிச் செய்கிறார்கள் ஸ்ரீ வசன பூஷணத்தில்
கீழே மூன்று திரு மொழிகளிலும் அருளிச் செய்த வற்றை அனுவதித்து
சங்கதி அருளிச் செய்கிறார் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

——————————————-

(அலகானந்தா- பாகீரதி-இரண்டும் தேவ பிரயாகையில் கலந்து -கங்கை -திரிவேணி சங்கம் -பின்பு சாகரம்-கலந்து
பஹு முகமாக கடலில் கலக்கிறாள் -கங்கை மஹாத்ம்யம் –
கங்கா கீதா கோவிந்தா காயத்ரி
காம் பூ ஆகாசத்தில் இருந்து பூமியை அடைந்தவள் கங்கா -நாம் உஜ்ஜீவிக்க
லோக விக்ராந்த சரணம்-நம்மை புனிதமாக்கி -13000-அடி -கங்கோத்ரி உத்பத்தி ஸ்தானம் பாகீரதி
அலகானந்தா மற்று அலகாபுரி-மகா -ஸ்வர்க்க-ஏழு நாள் நடந்து மேலே -பெரிய பிராட்டி திரு குழல் -போலே
வேறு வேறு நிறம் -த்ரி பாதம் ஓடி -ஸ்வர்க்கம் நாடு லோகம் பூமி -தேவ நதி -விஷ்ணு திருப்பாத தீர்த்தம்
தேவ கங்கை -நாலாக பிரிந்து -துருவ நக்ஷத்ரம் -தலையில் ஓன்று -தரித்து
மூன்று மார்க்கம் -ஸ்வர்க்கம் அந்தரிக்ஷம் பாதாளம்
அந்தரிக்ஷம் -மீண்டும் பிரிந்து-ருத்ரனார் தலையில் தரிக்க -மங்களமாக்கி
ஏழாக பிரிந்து -ஒரு கிளை பூமி நோக்கி வந்தது -சகர சக்ரவர்த்தி பிள்ளைகளுக்கு –
ச கர -விஷங்களுடன் கூடி -அசமஞ்சஸ் -அவன் பிள்ளை -அம்சுமான் -அவன் பிள்ளை திலீபன் –
அவன் பிள்ளை -பகீரதன் -தபஸ் பண்ணும் இடம் இன்றும் சேவிக்கலாம் )

ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க
தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-1-

(தான வனாகம்-தனுவுக்கு பிறந்த பிள்ளைகள் -ஹிரண்யன் அசுரர் -ராவணன் ராக்ஷசர் –
ஹிரண்யாக்ஷன் கொள்ள வேண்டுமே
சிலை குனித்த -என்பதால் -அம்மா வழியில்-ராவணன் தானவன் என்று சொல்லலாம் )

வியாக்யானம் –
ஏனம் முன் ஆகி -இத்யாதி
முன் ஏனமாகி –
ஸ்ரீ வராஹ கல்பத்தின் உடைய ஆதியிலே -அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்து –
பரப்பை உடைத்தான பூமியை –
அத்தை எடுக்கைக்கு ஈடான செருக்கை உடைய மஹா வராஹமாய் எடுத்துக் கொண்டு-
(ஸ்வேத வராஹ கல்பம் -28-மனுவில் நாம் உள்ளோம் -ஒவ் ஒரு மனுவுக்கு -71-சதுர் யுகம் -இதன் ஆதியில் -)

நமஸ்தஸ்மை வராஹாய லீல யோத்த்ரதே மஹம் குர மத்யகதோ யஸ்ய மேரு கணா கணா யதே –
என்கிறபடி வளர்ந்த திரு மேனி யாகையாலே –

அன்று இணை யடி யிமையவர் வணங்க-
அப்போது அந்த உளை மயிர்களிலே-பிடரி மயிர்களிலே – ஒதுங்கிக் கிடந்த ப்ரஹ்மாதிகள்
சேர்த்தி அழகை உடைத்தான -திருவடிகளை ஆஸ்ரயிக்க –
ஸூ கவி கடஸடா ஸங்கமை -என்னக் கடவது இறே-

உத்திஷ்ட தஸ் தஸ்ய ஜலார்த்ரகுஷேர் மஹா வராஹஸ்ய  மஹீம்
ப்ரக்ருஹ்ய விதிர்ந்த்வதோ வேத மயம் சரீரம் ரோமாந்த்ரஸ்தா முநயஸ் ஸ்துவந்தி -என்னக் கடவது இறே –
ஜலார்த்ரகுஷேர்-பாசி தூர்த்த-இத்யாதி என்றபடி

தானவன்  ஆகம் தரணியில் புரள –
இப்பொழுது தானவன் என்கிறது ராவணனை –
தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன் -என்னக் கடவது இறே
தநுவினுடைய வம்சஜன் என்று தானவன் என்கிறது ஆதல் -தநு வம்சம் ராவணனுக்கு மாத்ரு வம்சம்
ஆசூரமான வியாபாரங்களை உடையவன் என்றாதல் –
ராவணன் உடைய வராதிகளாலே  பூண் கட்டி இருக்கிற சரீரமானது
அம்பு தைச்சு பூமியிலே புரளும் படியாக-

தடஞ்சிலை குனித்த
மஹத் தநு -என்கிறபடியே
அளவுடைத்தான வில்லை வளைத்த –

வென் தலைவன்-
வீர ரசத்தில் பிரதானனான என் -ஆயன்
(பலத்தை காட்டியவர் ஸ்ரீ வராஹம் -சக்தியை காட்டியவர் ஸ்ரீ பெருமாள்)

தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –
ராவணன் உடைய மிடுக்காலே
கற்பக வருஷத்தின் உடைய பூவை
பணிப் பூ இட்டு திரிவர்கள் ஆயிற்று தேவர்கள் -முன்பு –

அவன் தலை அறுப்பு உண்டவாறே
அத்தை ப்ராப்த விஷயத்தில் ஆக்கினார்கள் ஆயிற்று –
தேன் மிக்கு சோலை செய்து இருந்துள்ள கல்பகமானது உண்டாக்கின- திவ்யமாய் –
விலஷணமாய் -செவ்வியை உடைத்தான பூக்களைக் கொண்டு தேவர்கள் ஆஸ்ரயிக்கும் படி
ஸ்ரீ கங்கா தீரத்திலே
ஸ்ரீ பதரிகாஸ்ரமத்திலே வந்து சந்நிஹிதன் -ஆனான்

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் அனுபவம்—சூரணை-94- 114-ஸ்ரீ M.A.V.ஸ்வாமிகள் ..

July 28, 2013

சூர்ணிகை -94-
சாத்ய சமானம் விளம்ப அசஹம் என்று இ றே சாதனத்துக்கு ஏற்றம்
சாத்ய  ப்ராவண்யம் அடியாக இ றே சாதனத்தில் இழிகிறது
சூர்ணிகை -95-
இவனுக்கு பிறக்கும் ஆத்ம  குணங்கள்
எல்லாவற்றுக்கும் பிரதான ஹேது
இந்த பிராவண்யம்
சூர்ணிகை -96-
மாற் பால் மனம் சுழிப்ப
பரமாத்மநி யோரக்த –
கண்டு கேட்டு உற்று மோந்து –
சூர்ணிகை -97
ஆத்ம குணங்களில் பிரதானம்
சமமும் தமமும்

சாத்தியமான எம்பெருமான் மேலில் ஈடுபாடு காரணமாக செய்யும் அதி பிரவ்ருதிகள்
சாத்திய ப்ராவண்யம் அடியாக செய்தவை
அளவற்ற ஈடுபாடு –
காமன்  காலில் விழுவது   நோன்பு நூற்று -பெருமை காரணமாக
எத்தை தின்னால் பித்தம் தெளியும்

சமதமாதி ஆத்ம குணங்கள்  இருந்து இருந்து ஈடு பட வில்லை
உண்டாக்கிக் கொண்டு இழிய வேண்டுமா
பகவத் ப்ராவண்யம் வந்தால் இவை தன்னடையே -வருமே
சம தம -நியத ஆத்மா -அமாநித்வம் போன்ற குணங்கள்
அனுகூல சகவாஸ -சாஸ்திர அப்யாசம் -ஆசார்ய உபதேசாதிகள் -இவை போல்வன விட

பகவத் ப்ராவண்யம் தானே முக்கிய காரணம்
மூன்று பிரமாணங்கள்
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு
பரமாத்மா மேல் -அத்தால் இதர விஷயத்தில் விரக்தி

பரமாத்மா யோ ரக்த அபரமாத்மா விரக்தி
கண்டு -கேட்டு ஒண் டோடியாள் நீயுமாக நிலா நிற்க கண்ட சதிர்  கண்டு சிற்றின்பம் ஒழிந்தேன்
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு -ஐந்து இந்த்ரியங்கள்
சேர்த்தி கண்டு அங்கெ ப்ராவண்யமாய் –
அளவில்லா சிற்றின்பம் ஒழிந்தேன் -கைவல்யம் கூட போக்கி விட்டேன்

சுவையோடு நாற்றமும் எல்லாம் நீயே என்கிற நிலை அடைந்த பின்பு
சேர்த்தியைக் கண்டு அங்கே ப்ரவணராய் -இதர விஷய விரக்தி தன்னடையே வரும் –
அவகாசத்தில் ஸ்வேதம் போலே
உலக்கை குற்ற வேர்வை தன்னைடையே உண்டாகுமே
வேர்வை உண்டாக்கிய பின்பு உலக்கை குத்த வேண்டாமே
ஜலத்தில் குதித்து நீச்சல் தன்னடையே கற்றுக் கொள்வது போலே –
கைங்கர்யம் செய்ய செய்ய நமக்கே ஆசாரம் அனுஷ்டானம் கொள்ள ஆசை வருமே –
பாலகனாய் பல தீமைகள் செய்து விட்டேன்
சாதனமாக நினைக்காமல் பலமாக கொள்ள வேண்டும் இந்த ஆத்ம குணங்களை
கீழே அருளிச் செய்த விஷயங்களின் தொடர்ச்சி இது –
இதர விஷய வைராக்கியம் மட்டும் இல்லை –
ஆத்ம குணங்களும் வரும்
சமம் அந்த கரண நியமம் -மனஸ் அடக்கம்
தமம் -பாஹ்ய கரணங்கள் நியமம் -இந்திரியங்கள் அடக்கம் –

இரண்டும் வேண்டுமே
தபஸ் த்யானம் ஸ்திரீ போக
பார்த்ததால் கலைந்து போக கண்ணை கட்டி
அடுத்த நாள் காலடி ஓசை -காதை அடைக்க
வாசனை அடுத்த நாள் -மூக்கை மறைக்க
நித்யம் இத்தனை நேரம் போவாள் -மனஸ் நினைக்க -கல்லை வைத்து அடைக்க முடியுமா
நின்றவா நில்லா நெஞ்சு
தமோ பாஹ்ய கரண அர்த்த விஷயமேன நியமனம்
சம சித்த பிரசாந்தி -அந்த கரண நியமம்
ஸ்ரீ பாஷ்யம் -கீதா ஸ்லோஹ வியாக்யானம் -பிரதானம் இவை இரண்டும்
கீழ் சொன்ன விரக்தி -ஹேதுத்வம் -சம தமங்கள்
இவை சகல ஆத்ம குணங்களுக்கும்  உப லஷணம் –
சூர்ணிகை -98
இவை   இரண்டும் உண்டானால் ஆசார்யன் கை புகுரும் –
ஆசார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுரும் –
திரு மந்த்ரம் கை புகுந்தவாறே ஈஸ்வரன் கை புகுரும் –
ஈஸ்வரன் கை புகுந்தவாறே
வைகுந்த  மா நகர் மற்றது கை யதுவே -என்கிறபடி
ப்ராப்ய பூமி கை புகுரும்-

ஆசார்யன் கை புகுரும் இவை வந்த பின்பு
ஓன்று இருந்தால் அடுத்து தானே வரும்
ஸ்ரீ பாஷ்யம் கற்று கற்பித்து
-திருவாய்மொழி கற்று கற்பித்து
-த்வயம் அனுசந்தானம் –
திவ்ய தேச கைங்கர்யம்
ஸ்ரீ வைஷ்ணவர் அபிமானம் –
திரு நாராயணபுரம் குடில்
ஏதாவது ஓன்று  என்றால் ஆறும் சமமா கேள்வி வருமே
ஞான மண்டபம் குடில் கட்டி இருந்தால்
ஸ்ரீ வைஷ்ணவர் அபிமானம் தானே வருமே -பழக ஆரம்பித்து
கோயில் தவிர வேறே இல்லையே
broad band -cell phone -tv வந்தால் அணைத்து கேட்டதும் தானே வருமே
திவ்ய தேச கைங்கர்யம்
அருளிச் செயல் ஆசை பிறந்து
பஞ்ச சம்ஸ்காரம் செய்து
த்வயம் கற்று
கால ஷேபம் கேட்டு
ஸ்ரீ பாஷ்யம் இது கொண்டு சூத்திர வாக்கியம் ஒருங்க விடுவார்
ஓன்று மேலே மேலே கூட்டிப் போகுமே பரம்பரையாக
சமுத்ரம் -இறங்க கையில் தள்ளாதா -அதுவே உள்ளே கூட்டிப் போகுமே-

பகவத் ப்ராவண்யம் அடியாக இது கிட்டி -இவ்வாதம குணம் கண்டு
இதன் அடியாக அனைத்தும் கை புகுரும்
ஆசார்யன் இவனுக்கு வஸ்யமாகை
இது இருக்கா பார்க்க தான் எம்பெருமானார் திருக் கோஷ்டியூர் 18 தடவை நடக்க –
ஆத்மகுணம் இருந்தால் ஆசார்யன் உகந்து -கூட்டி அங்கீகரிப்பார்
பெரிய திருமந்த்ரத்தை சார்த்தமாக உபதேசித்து
ப்ரஹ்ம வித்தை பெற -சாந்தி தாந்தி வேண்டுமே
உபபன்னாயா பிரசாந்த சித்தையா -சமான்விதாயா -ப்ரோவாசா –
அஹங்காரியான சிஷ்யருக்கு உபதேசிக்க கூடாது –

முத்தரை வைக்கும் முன் பரிட்ஷை வைத்து
திருக் கோஷ்டியூர் பரிட்சை செய்தது தப்பு இல்லையே
சொல்வதை கவனித்து கேட்க வேண்டுமே
எல்லாம் புரிந்ததா வால் மட்டும் நுழையவில்லை கதை போலே இல்லாமல்
உபாசனம் பண்ணுபவன் -சம தமம் போலே இல்லை -அது அஷ்டாங்க யோகம் பர்யந்தம்
ஸ்ரவணதுக்கு வேண்டியவை மட்டுமே
திரு மந்த்ரம் கை புகும் -இது ஆசார்யன் ஆதீனம்
நெஞ்சிலே பதியும் -அர்த்தத்துடன்
ப்ரஹ்மத்தை அறிந்தவன் பிராமணன்
வெறும் நூல் மட்டும் விலை செல்லாது
ப்ரஹ்ம வித் -ஆசார்யன்
மந்திர அதீனம் இட்ட வழக்கு ஈஸ்வரன்
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்தி பூர்வகமாக ப்ராபகன் ஆகிறான்
திருமந்தரம் அறிந்தவன்
உன்னுடைய திரு உள்ளம் மகிழ உனக்கு கைங்கர்யமே இஷ்டம்
இஷ்டம் அநிஷ்டம் -இந்த அதிகாரக்கு அறிவோமே
ஈஸ்வரன் கை புகுந்த பின்பு
மீட்சி இன்றி வைகுந்த  மா நகர் மற்றது கை அதுவே
1973-பகவத் விஷயம் அச்சு போடபொறுப்பு 1 லஷம் -19 வயசில் கொடுத்தார் காஞ்சி ஸ்வாமிகள்
சவரன் 400
இன்று 50 மடங்கு
நாலாம் பத்து முடியும் பொழுது advance கேட்டு
முடித்தால்  கொடுப்பேன்
late ஆனது
மற்றது கை அதுவே கண்ட உடன் மற்றது கை அதுவே –

தைவாதீனம் ஜகத் சர்வம்
உபய விபூதியும் ஈஸ்வரன் இட்ட வழக்கு தானே
பிராப்ய பூமியும் கிட்டுமே
பகவத் ப்ராவண்யம் இது வரை கூட்டிப் போகுமே
ஆரோக க்ரமம்
அவரோக க்ரமம் அடுத்து சொல்லி
சூர்ணிகை -99
பிராப்ய லாபம் பிராபகத்தாலே
பிராபக லாபம் திரு மந்த்ரத்தாலே
திரு மந்திர லாபம் -ஆசார்யனாலே
ஆச்சர்யலாபம் -ஆத்ம குணத்தாலே

வாக்ய குரு பரம்பரை -கீழே -இருந்து -ஆரோக க்ரமம்
ஸ்லோக குரு பரம்பரை -அவரோக க்ரமம்
பிராப்ய லாபம் -பிராபகத்தாலே
ஸ்ரீ வைகுண்டம் எம்பெருமானாலே தானே
பிராபக லாபம் -திரு மந்தரத்தால் -இது ஆச்சர்யனாலே -இது ஆத்ம குணத்தாலே
அவஸ்யம் இவை இரண்டும் உண்டாக வேணும் என்பதால்
மீண்டும் மீண்டும் அருளி

ஈச்வரனே பிராபகம் -உபாயன் -வழி
அவனே பிராப்யமும்

சூர்ணிகை -100
இது தான் ஐஸ்வர்ய காமருக்கும்
உபாசகருக்கும்
பிரப்பன்னர்கும்
வேணும்-

இவை ஐஸ்வர்ய காமர்க்கும்
உபாசகருக்கும்
பிரபன்னருக்கும்
வேணும்
சாதன அனுஷ்டான வேளையில் இவை வேண்டுமே
வாயவ ஹோமம் செய்பவன் -இந்த்ரியங்களை முதலில் அடக்கி தான் செய்ய வேண்டும்
திருஷ்டாந்தம்
லோகத்தில் பணம் சம்பாதிக்க –
சௌக்யமாக இருக்க கஷ்டப்பட்டு படித்து –
வேடிக்கை கதை
வெறுமனே பொழுது போக்க -படித்து -என்ன செய்வன்
பணம் சம்பாதித்து
நிம்மதியாக இருக்கிறேன்
retire ஆனால் ஹாயாக பொழுது போக்கலாம்
அதை இப் பொழுதே செய்கிறேனே என்றானாம்
சாதன அனுஷ்டானம் வேளையில்
ராவணன் -மண்டோதரி வார்த்தை
இந்த்ரியங்களை அடக்கி மூன்று லோகம் வென்றாய்
அவை வன்மம் தீர்க்க உன்னை படுத்தி இப்படி ஆனாயே

ஐம்புலன் வென்று ஆழ்வார்
உபாசகர் -வித்யைக்கு அங்கமாக அஷ்ட அங்கம் வேண்டுமே -முதலில் சமம் தமம்
தஸ்மாத் எவம் வித் சாந்தோ தாந்தோ
ஞான நல சுடர் -புன புல வழி அடக்கி இலச்சினை செய்து -seal வைக்க
நன்புல வழி -திரு மழிசை ஆழ்வார்
ஏகாந்தி கிருஷ்ண பிராப்தௌ -பிரமாணம் –
ஐந்து அடக்கி ஆசை யாமவை துவக்கு அறுத்து –
அனைவருக்கும் வேணும்
சூர்ணிகை -101-
வைத்துக் கொண்டு
மிகவும்   வேண்டுவது
பிரபன்னனுக்கு
சூர்ணிகை -102-
மற்றை இருவருக்கும்
நிஷித்த விஷய நிவ்ருத்தியே அமையும்
பிரபன்னனுக்கு
விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம்

இவனுக்கு இது ஆதிக்யம் சொல்லவே அல்லாதவரை இங்கே காட்டி
மற்ற இருவருக்கும் நிஷித்த விஷய நிவ்ருத்தி
மற்றவர் இடம் உள்ள ஆசை விட்டால் போதும்
இதர விஷய வைராக்கியம்
பிரபன்னனுக்கு சாஸ்த்ரத்தில் அனுமதி உள்ளவர் இடமும் விரக்தி வேண்டும்
நிரடல் –
உயர்ந்த ideal இது

ஐஸ்வர்யம் = நியமன சாமர்த்தியம்
இஷ்டப்படி நியமித்து அனுபவிக்க –
பதவி மேல் ஆசை -அதற்கும் ஐஸ்வர்யம் பெயர்
எல்லை மேலே மேலே போகும் hitlar
ராவணன் மகா பலி மூன்று லோகங்களும் நியமிக்க ஆசைப்பட்டு
சாஸ்திர நிஷித்த பரதாராதி விஷய நிவ்ருதியே அமையும்
பிரபன்னனுக்கு சுதாரத்தில் கூட நிவ்ருத்தி வேணுமே
தர்ம புத்யா பிரவ்ருத்தி சாதன தசையில் கூட இல்லை
ஆசை உடன் அணுக கூடாது
க்ரஹ்ச்த ஆஸ்ரமம் -நிராசமம் -ஆஸ்ரமம் இல்லாமல் இருக்க கூடாது
வயசானால் கூட மறு கல்யாணம் செய்தார்கள்
நைஷ்டிக பிரமச்சாரி இவர் -பிள்ளை லோகாச்சார்யர் -நாயனாரும்
ப்ரபன்னனுக்கு விஹித விஷய நிவ்ருது தன்னேற்றம்
போக்ய்தா புத்தி வேறு ஒன்றில் கூடாதே
பகவத் விஷயம் அனுபவம் ஒன்றிலே
கைங்கர்ய புத்யா செய்யலாமே தர்ம புத்யா இல்லாமல் -விசேஷ தர்மம் -இது
போக்யதா புத்தியால் இழியாமல் கைங்கர்யா புத்யா செய்யலாம்
சூர்ணிகை -103
இது தான் சிலருக்கு அழகாலே பிறக்கும்
சிலர்க்கு அருளாலே பிறக்கும்
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும்-

அழகை பார்த்து வைராக்கியம் பிறக்கும்
அருள் -அனுக்ரக்கத்தால் பிறக்கும்
சிலருக்கு ஆசார்யத்தால்
பக்தி பரவசர் ஆழ்வார் -மாதரார் கயல் கண் என்னும் வலையுள் -போதரே -தன பால் ஆதாரம்

பெருக வைத்த அழகன்ப்ர் அரங்கன் -கண் அழகு கொண்டு
மழைக்கு அன்று
வலையுள் பட்டு அழுந்துவேனை நோக்காமல்
உன்னை அழைக்கின்றேனே
கல்லாலே வந்த ஆபத்தை கல்லாலே போக்கினாய்
கண்ணாலே வந்த ஆபத்தை கண்ணாலே போக்க வேண்டாமோ –
சௌந்தர்ய அனுபவத்தால்
ஞானாதிக்ய பிரபன்னர் -அருளால் பிறக்கும்
அனுபவிக்க இட்டுப் பிறந்த வஸ்து அனர்த்தப் படுவதே பரம கிருபை
நம் போல்வாருக்கு
பூர்வாச்சார்யர் ஆசார்யம் அனுசந்திக்க அனுசந்திக்க பிறக்கும்
சூர்ணிகை -104
பிறக்கும் க்ரமம் என் என்னில்
அழகு -அஞ்ஞானத்தை விளைக்கும்
அருள் -அருசியை விளைக்கும்
ஆசாரம் -அச்சத்தை விளைக்கும்

அழகு அஞ்ஞானம் விளைக்கும்
சித்த அபஹாரி ஆகையாலே
விஷயாந்தரங்கள் அறிய முடியாமல் போக்கும்
அருள் -அருவருத்து -வைராக்கியம்
ஆசாரம் -அனர்த்தமே உண்டாக்கும் அச்சம்
ஓர் இருவர் உண்டாகில் இவை -உண்டாகும்

சூர்ணிகை -104
இவையும் ஊற்றத்தை பற்றி சொல்கிறது
இவர்களுக்கு ஊற்றம் அதிகம்
அதாவது
விரக்தி ஹேதுக்கள்
சாஷாத்கரித்து -அனுபவிப்பதால் அழகே உறைத்து இருக்கும்
ஆசார்யர் -அர்ச்சாவதார அனுபவம் -கிருபை -அருசிக்கு அடியான கிருபை உறைத்து இருக்கும்
அஞ்ஞான பிரபன்னருக்கு எப்பொழுதே சேவித்து
கிருபையும் உண்டாகி இருக்க செய்தே
பூர்வர் ஆசார்யர் ஆசாரமே அனுஷ்டித்து போவதால் இது ஊன்றி இருக்கும்

கறைவைகள்
அறிவு ஒன்றும் இல்லா ஆய்க் குலம்
இடையர்கள் போராட்டம் செய்வார்கள்
ஆண்டாள் அருளியது
ஜாதி குறிப்பிட்டு சொல்ல கூடாதே
ஞானம் எனபது சிறிதும் இல்லாத கோபாலர் -சொல்லினால் தப்பு இல்லை
புரியாதபடி சொல்ல வேண்டும்
அத்யந்த பாரதந்த்ர்யம் வேண்டும்  -அநந்ய போக்யத்வம் -வேண்டுமே
விகித விஷய நிவ்ருத்தி வேண்டுமே பிரபன்னனுக்கு
அபத்னி-பிரமசாரியும் சஞாசியும் யாகம் செய்ய கூடாது அபத்னி பட்டர் கொடி ஏற்ற கூடாது
அஸ்வமேத யாகம் செய்ய பெருமாள் யோக்யதை இல்லை
சீதை பிராட்டி போலே தங்க பிரதிமை செய்து ஆவாகனம்செய்த்து செய்ய சொல்லி
சபத்நியாக இருப்பாரையே பிரமணார்தம் இருக்க -தீட்டு கூட இருக்க கூடாது
சாஸ்திரம் விதித்து இருக்கிறது
பிரபன்னனுக்கு சு தார போக்யமும் கொள்ளக் கூடாது
தர்ம புத்யா ப்ரவர்த்தியும் குற்றம் தான்
வடக்கு திரு வீதி பிள்ளை இடம் கைங்கர்யமாக சந்நிதி
வர ஒரு நாள் கூடி இருக்க நியமித்தார் நம்பிள்ளை
விசேஷ தர்மம் கைங்கர்யம் தானே-

சூர்ணிகை -105-
அருசி பிறக்கும் போதைக்கு
தோஷ தர்சனம் அபேஷிதமாய் இருக்கும் –

அழகு கண்ணில் பட வேற ஒன்றும் அழகாக தோன்றாதே
அருள் -அருசியை பிறக்கும் எம்பார் போல்வாருக்கு
-ஆச்சாரம் அச்சம் -விளைக்கும்
இவையும் ஊற்றத்தை பற்ற சொல்கிறது
முக்கிய காரணம் இது -மற்றவையும் உண்டே –
அருசி -உலகியல் வாழ்வில் ஈடுபாடு இன்றி -தோஷ தர்சனம் அபேஷிதமாய் இருக்கும்
வெறுப்பு ஏற்பட வஸ்துவில் தோஷம் இருக்க வேண்டுமே –
சம்சார அனுபவம் குற்றம் உண்டே அல்பம் அஸ்தரம் -போல்வன உண்டே
ஐந்து புலன்கள் –
நாக்கு ரசம் -வஸ்து நாக்கில் இருக்கிற அளவு தான்-

சூர்ணிகை -106-
அது பிரதான ஹேது அன்று

சூர்ணிகை -107
அப்ராப்ததையே பிரதான ஹேது

மின்னின் நிலை இல -ஆக்கைகள்
இருப்பது போலே பிரமம் உண்டாக்கி –
தோஷ தர்சனம் செய்து -அருசி பிறக்குமா
விஷய வை லஷண்ய -அதிசயத்தாலே -பகவத் விஷயம் அறிந்து
விஷயாந்தர அஞ்ஞானம் விளையக் கூடும் –
அபிமத விஷயம் அச்சம் -பிறக்கலாம்
அருசி பிறக்கை கஷ்டம் தானே
அருள் வேண்டும் இது பிறக்க
இதற்க்கு தோஷம் -தர்சனம் அபேஷிதம்
ஸ்திரீ அணைத்து –சீயும் வேண்டா நாற்றம்  மிகு உடல்
தோலை வைத்து மூடி -திண்ண அழுந்த கட்டி
பிரத்யஷ பிரமாணங்களால் தர்சிக்கை
அது கூட -தோஷ தர்சனம் கூட -பிரதான ஹேது இல்லை
அப்ராப்த்யையே ஹேது
தகுதி இல்லை இவனுக்கு

ஸ்வரூபத்துக்கு சேராது என்பதே பிரதான காரணம்
-பிராப்தி ஏற்றது தகுதியானது
-அப்ராப்தம் தகாது -தோஷம் இல்லை -என்றாலும் கூடாதே
பகவத் ஏக போகம் என்பதருக்கு சேராதே
அருசி உண்டாக்கினாலும் அப்ராப்தி என்பதையே முக்கிய காரணம்
தோஷ தர்சனம் secondary

சூர்ணிகை -108-
பகவத் விஷயத்தில் இழிகிறதும்
குணம் கண்டு அன்று –
ஸ்வரூப ப்ராப்தம் என்று –

பகவத் விஷயத்தில் இழிவதும் குணம் கண்டு இல்லை
பிராப்தி என்பதால் தான்
பாகவத சேஷத்வம் வருவது கஷ்டம்
நஞ்சீயர் -பகவத் விஷயம் விட்டு இங்கே வருவது
விஷயாந்தர தோஷம் கண்டு
அதுவோ ஆரா அமுதம் -விட்டு போவது
எத்தை சொல்லி இதை கழிப்பது
கையை பிடித்து -காலை பிடித்து கார்யம் கொள்ளுவது போலே என்று சொல்வார்
ஸ்வரூப பிராப்தம்
குணம் இருக்க பார்க்க கூடாது
பர்த்தா பார்யை போலே அற்று தீர்ந்து இருக்க வேண்டும்
குணத்தோடும் கூடி இருக்கிறது-

வகுத்த விஷயம் என்பதால் பற்றுகிறோம்

சூர்ணிகை -109-
இப்படி கொள்ளாத போது
குண ஹீனம் என்று நினைத்த தசையிலே
பகவத் விஷய பிரவ்ருத்தியும்
தோஷ அநுசந்தான தசையிலே
சம்சாரத்தில் பிரவ்ருத்தியும் கூடாது –

சூர்ணிகை -110-
கொடிய வென்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –
அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் –
என்னா நின்றார்கள் இ றே –

இப்படி கொள்ளாத பொழுது
கடியன் கொடியன் ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்
சம்சாரத்தில் குறை அறிவோம் –
இதர விஷயத்தில் அருசிக்கு காரணம் தோஷ தர்சனம் என்றும்
பகவத் விஷயத்தில் ருசிக்கு காரணம் குணம் என்றும் இருந்தால் –
அவன் முகம் -காட்டாலும் அவன் என்றே இருப்பார்கள் -சேராதே
சம்சாரத்தில் -மாதா பிதாக்களும் -துக்க பிரத்யஷமாக அறிந்தும் -விடாமல்
வம்புலாம் கூந்தல் மனைவியை துரந்து -செம்பினால் எரியும் பாவையை பாவி தழுவு என்பர்
அதுக்கு பெரிய q -நாம் போகும் பொழுது ஜில் ஆகி விடும் -சொல்லி தப்பு செய்கிறார்கள்
தோஷ தர்சனம் கண்டும் பிரவர்தியில் இருந்து மீளுகிறது இல்லையே
அபிநிவேசம் மறந்து
செல்லாமல் தத்வ வித்துக்கள் மக ரிஷி தொடக்கமானவர்கள்
விச்வாமித்ரர் போல்வார் –
வியாசர் -சாமான்ய தர்மத்தில் புத்தி பண்ணி -சம்சாரத்தில் பிரவர்த்தி செய்து
ஆழ்வார்கள் கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்
கடியன் -சு கார்யம் செய்து கொண்டு
கொடியன் பிறர் நோவு அறியான் மாயத்தான் எட்டாதவன் வஞ்சகன்
ஆகிலும் அடியேன் நான் நீ என்றே இருப்பேன்
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது -கரும்பைக் கண்டாலும் விரும்பாதே -அப்ராப்தம் என்பதால்
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்
நீ வேம்பு போலே இருந்தாலும் உனது திருவடிகளை அன்றி மற்று அறியேன்
கடல் மலை கிடந்த கரும்பே –

சூர்ணிகை -111-
குணா க்ருத தாஸ்யத்தில் காட்டில்
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் இ றே
பிரதானம் –

குணத்தை இட்டே இ றே ஆழ்வாரை கொண்டான்
குண தாஸ்யம் உபாகத
அஹம் அஸ்ய
ராமனுக்கு நான் பின் பிறந்த
தம்பி குணங்களால் அடிமை -சாதாரணமான அர்த்தம்
செய்கிறேன் குணங்களுக்கு தோற்று
அடியவன் அசய -அவனுக்கு நான் தம்பி
அவன் அபிப்ராயத்தால் தம்பி
நான் அவனுக்கு அடிமை -என்கிறார் இளைய பெருமாள்

குகன் கேட்க இளைய பெருமாள் அருளிய வார்த்தை
அவன் தம்பி என்று நினைக்க நான் வேலைக்காரன் என்றாரே
குணத்துக்கு தோற்று அடிமை
அதை விட ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் சிறந்ததே –
சூர்ணிகை -112-
அநசூயைக்கு பிராட்டி அருளிச் செய்த
வார்த்தையை ஸ்மரிப்பது

ஸ்வரூபத்தால் தாஸ்யம் இருந்தாலும் குணம் பிரிக்க முடியாதே
ஔ பாதிகம் குண க்ருத தாஸ்யம்
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் -முக்கியம்
அர்த்தங்களை நெஞ்சில் பட எடுத்துக்காட்டுகள் காட்டி ஆசார்யர்கள்

அநசூயை பிராட்டி -அத்ரி பகவான் ஆஸ்ரமம்
பிராட்டிக்கு அலங்காரம் செய்து வார்த்தை  பேச –
பெருமாள் பின்னே காட்டில் போனது
பந்து -ஜனம் அபிமானம் விட்டு ஐஸ்வர்யம் விட்டு
தெய்வ யோகத்தால் கூடி
பெருமாள் வனத்தில் இருந்தாலும் நகரத்தில் இருந்தாலும்
நல்ல வரோ கெ ட்டவரோ வெறுக்க கூடாது
பெருமாள் விஷயமான அனுகூலித்து போக வேண்டும்
பிராட்டி -ச்வகதா பாவ பந்தம்
எனக்கு குணவாளர் என்பதால் இல்லை குணாதிகர் என்பதால்
அவருக்கே அற்று தீர்ந்தவள்
காட்ட முடியாது குணங்களை பிரிக்க முடியாமல்
இதை காட்டவே அக்னி பிரவேசம்

சூர்ணிகை -113-
பகவத் விஷய ப்ரவ்ருத்தி பின்னை சேருமோ வென்னில்
அதுக்கடி பிராவண்யம்
அதுக்கடி சம்பந்தம்
அது தான் ஔபாதிகம் அன்று
சத்தா ப்ரயுக்தம் –

மடல் எடுத்தல் போல்வன சேருமோ இப்படி என்றால் –
கீழ் சொன்னவை பிரசாங்கிகமாக கொண்டு மீண்டும் அதே விஷயம் அருளுகிறார்
அவனே -உபாயம் அநந்ய உபாயத்வம் குலையும் படி நோன்பு செய்தல் பிராண த்யாகம்  செய்தது சேருமோ
அதுக்கடி பிராப்வண்யம் -அதுக்கடி -சம்பந்தம் அதுக்கடி சத்தா பிரயுக்தம்

அபிமாத்ர -ப்ராவண்யம் பண்ண கூடாத செயல் செய்கிறார்கள்
பிராவண்யம் -விஷய வை லஷண்யம் இல்லை -சம்பந்தம் என்கிறார் இங்கு
குணம் இல்லாவிடிலும் செய்ய வேண்டுமே
சம்பந்தம் சேஷ சேஷி பாவம் -நவ வித சம்பந்தங்கள் உண்டே
பிதா–ரஷகன் -சேஷி -பர்த்தா -ஸ்வாமி -ஆதாரம்-ஆத்மா -போக்தா
காரணத்தால் வரும்
-கர்மம் அடியாக பார்யை -பர்த்தா
இயற்கையாக அவன் உடன் சம்பந்தம்
சத்தா பிரயுக்தம் ஆத்மா உடைய சத்தை யே -பிடித்து

சூர்ணிகை -114-
அந்த சத்தை ப்ராவண்ய கார்யமான
அனுபவம் இல்லாத போது குலையும்
அது குலையாமைக்காக வருமவை எல்லாம்
அவர்ஜநீயங்களுமாய் –
ப்ராப்தங்களுமாய் –
இருக்கும் –
ஆகையாலே பகவத் விஷய ப்ரவ்ருத்தி சேரும் –

ஆத்மாவின் சத்தையே பிடித்து உள்ளது
சம்பந்தமும் நித்யம்
ஆத்மா நித்யம் என்பதால்
சத்தை போலே பிராவண்ய கார்யம் நித்யம்
அனுபவம் இல்லாத பொழுது சத்தை குலையும்
அது குலையாத படிக்கி அதி பிரவர்த்தி தவிர்க்க முடியாதே
நப்பின்னை -பிராட்டி அடைய அவனே கரு மாரி பாய்ந்தாகிலும் அடைய
முயன்றானே விஷயத்தில் -ஈடுபாடு எதுவானாலும் செய்யலாமே
ஈட்டி குளத்தில் வைத்து குதிப்பார்
கொண்டாட தக்கதாக இந்த அதி பிரவர்த்தி கார்யம்
இது பிராப்தமாகவும் இருக்கும்
பகவத் விஷய அதி பிரவர்த்தி சேரும் உபேயத்துக்கு இவை எல்லாம் சேரும்
இளைய பெருமாள் திருக்கண்ண மங்கை ஆண்டான் அரையர் பெரிய உடையார்
போன்றவர் செய்தவை சேரும்

இல்லாத பொழுது ஆத்மாவே அழியுமே
மடல் எடுத்தல்  போன்ற -பலவும் தவிர்க்க முடியாதவை
ப்ரீதி உடன் செய்யும் கார்யங்கள் இவை –
எம்பெருமான் உகப்பான்
சேஷிக்கு அதிசயம் விளைக்கும்
சங்கை இத்தால் நீக்கி அருளுகிறார்
நான்கு பிரகரணங்களில் முதல் பிரகரணம் முடிந்தது
ஒன்பதில் இரண்டாவது பிரகரணம் முடிந்தது

ஸ்வரூபத்துக்கு சேராது
வேறு ஒன்றை உபாயமாக கூடாது தோஷம் என்பதால் இல்லை
பிரபகாந்தரம் ஸ்வரூபதுக்கு சேராதே
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது என்பதை விவரிக்கிறார் -அடுத்து

——————————————————————————————————————————————————————————

பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழி-1-3-10-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 27, 2013

வண்டு தண்  தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே -1-3-10-

————————————————

வியாக்யானம் –
வண்டு தண்  தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
சர்வ பதார்த்தங்களும் உத்தேச்ய லாபத்தாலே களித்து வர்த்திக்கும் தேசமாயிற்று –
இப்படி இருக்கிற ஸ்ரீ வதரியிலே வந்து இருக்கிற சர்வாதிகனை கவி பாடிற்று-

கண்டல் வேலி –
கண்டல் என்று தாழை –
கடல் அணித்தாய் இருக்கையாலே
தாழைகள் உண்டாய் இருக்கும் இறே –
பூத்த தாழைகளை வேலியாக உடைத்தான திருமங்கைக்கு நிர்வாஹகரான ஸ்ரீ ஆழ்வார்
அருளிச் செய்த மாலை

கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் –
இவற்றைக் கொண்டு –
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -என்று இருக்கிறவர்கள் பாடுவதாக ஆடுவதாக கூடிடில்-

நீள் விசும்பில்
நீள் விசும்பு -என்கிறது
உபரிதந லோகங்களின் உடைய சமுதாயத்தை
அதில் –

அண்டம் அல்லால் –
ஸ்ரீ பரம பதம் அல்லது அவர்க்கு ஆட்சி அறியோம் என்னுதல்
அன்றிக்கே
நீள் விசும்பு என்கிறது ஸ்ரீ பரம பதமாய்
அது அல்லால் மற்று ஓர் அண்டம் அவர்க்கு ஆட்சியாக அறியோம் என்னுதல் –

ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில்
இவர் அருளிச் செய்த தோஷம் ப்ரத்யஷித்து அநுபவியா நின்றோம்
அவ்வோபாதி
ஸ்ரீ பகவத் விஷயமாக இவர் அருளிச் செய்ததும் மெய்யாக இருக்கும் இறே –

ஆன பின்பு
இவர் விடச் சொன்னவற்றை விட்டு
இவர் பற்றச் சொன்னவற்றை பற்றுகை இறே
சேதனராய் இருப்பார்க்கு செய்ய அடுப்பது-

——

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

முற்ற மெய்யின் பொய் நாசமான பாசத்தின் புன்மை
உற்ற மால் ஏற்றத்தோடு உரைத்து மூப்பு -முற்று முன்
மந்த்ரம் ஈந்தோன் சேர் வதரி வணங்கு என்னு நீலன்
சிந்தையான் ஆனான் என்னும் -3-

மந்த்ரம் ஈந்தோன் -நர நாராயணனாய் சிங்காமை விரித்தவன் –
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே -4-9-2-நீலன் சிந்தையுள் எப்பொழுதும் உள்ள ஸ்ரீ வராஹாவதாரம் -ஏனம் என்றவாறு –

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-3-9-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 27, 2013

புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந்த உள்ளம் எள்கி
கலங்க  வைக்கள் போத உந்திக் கண்ட பிதற்றா முன்
அலங்கலாய த்ண் துழாய் கொண்டு ஆயிர நாமம் சொல்லி
வலம் கொள் தொண்டர் பாடி யாடும் வதரி வணங்குதுமே –1-3-9-

—————————————————-

வியாக்யானம்-

புலன் இத்யாதி –
சரீரத்தில் இந்த்ரியங்கள் ஆனவை –
சந்நிவேசமும் கிடக்கச் செய்தே –
தம்தாமுடைய விஷயங்களை பரிக்கிரஹிக்கவும் மாட்டாதே –
சிதிலமாம்படி மூத்து –

போந்திருந்து –
அல்லாதாரோபாதி காண்பன காணவும்
கேட்பன கேட்கவும் பெறாமையாலே –
ஆள் நடம் யாடாத விடம் தேடி போந்திருந்து-

உள்ளம் எள்கி –
நாம் பட்டதோ என்று ஹிருதயமானது ஈடுபட்டு-

கலங்க இத்யாதி –
தோஷ த்ரயமும் -வாத பித்த ஸ்லேஷ விகாரங்கள் -தலை எடுத்தவாறே
ஸ்லேஷ்மாவானது-கபமானது- போரத் தள்ளும் ஆயிற்று –

கண்ட பிதற்றா முன் –
பின்னை பிரதிபந்தங்களை பிதற்றுவதற்கு முன்னே –

அலங்கலாய –
அங்குத்தைக்கு சாத்தி அருளுகைக்கு ஈடான
மாலையான திருத் துழாயைக் கொண்டு –

ஆயிரம் நாமம் சொல்லி
கண்ட பிதற்றாமே-அவ்வழியே இந்த்ரியத்துக்கு அடைத்த திருநாமம் சொல்லி –
நா வாயில் உண்டே -இத்யாதிப் படியே –

வலம் கொள் இத்யாதி –
அநுகூல வ்ருத்திகளை பண்ணா நின்றுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள்
சாத்துகைக்கு ஈடான மாலைகளையும் ஏந்தி
திரு நாமங்களையும் சொல்லி
பாடுவதாக
ஆடுவதாக
நிற்பர்கள்-

அத்திரளிலே புக்கு
அவர்களில் ஒருவராய்
ஆஸ்ரயிப்போம்

————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் அனுபவம்—சூரணை-81- 93-ஸ்ரீ M.A.V.ஸ்வாமிகள் ..

July 27, 2013

பிரபத்தி செய்வதும் சாத்தியம் இல்லை என்பதை
ஸ்வரூபம் தன்னை பெறாது ஒழிகை -சூர்ணிகை -55  என்று அருளி –
த்வமேவ உபாய பூத மே பவ -அவனே உபாயம் –
பலத்துக்கு ஆத்ம ஞானமும் அப்ரதி ஷேதமே வேண்டுவது -சூர்ணிகை -60 என்று அருளி
ரஷ்யத்துக்கு அனுமதியே வேண்டுவது -63
இதுவும் உபாயம் இல்லை
நன்றி சொல்லி -அவன் ஆனந்தம் கண்டு மகிழவே சைதன்யம்
எதிர் விழி கொடுத்து
அசித் வ்யாவ்ருத்திக்கு பிரயோஜனம் உபாயத்தில் உபகர ஸ்ம்ருதியும் உபேயத்தில் உகப்பும் -65
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே ப்ராப்திக்கு உபாயம் அவன் நினைவு
அது தான் எப்போதும் உண்டு
அது பலிப்பது இவன் நினைவு மாறினால்
அந்திம காலத்துக்கு தஞ்சம் -இப்போது தஞ்சம் என் என்கிற நினைவு குலைகை
என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் -69

பிராப்தாவும் பிராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே -70-
அவனே நம்மை அடைகிறான் -சம்சாரத்தில் இருந்து விடுவித்து பெறுகிறான்
விடுவித்து பற்றுவிப்பவனும் அவனே
அஹங்காரம் ஆகிற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் அடியான் என்று இ றே -77
ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய –
குலம் -பகவத் சம்பந்தம் இட்டே -காஞ்சி ஸ்வாமி சொல்வது போலே
அதிகாரி நிஷ்டை திருஷ்டாந்தம் உடம் அருளிச் செய்கிறார்
சூர்ணிகை -80

கீழே உபாயம் சொல்லி மேலே உபேயம் -அருள –
உபாயம் உபேயாந்தரம் –உபேயத்தில் அடங்குமே -பலத்துக்கு தானே அனுஷ்டிக்க படுகிறது
உபேய அதிகாரி காட்டும் பொழுதும் இதை காட்டி
உபயமும் -உபாயமும் உபேயமும் -த்வய நிஷ்டை அதிகாரிக்கு அபேஷிதம்
இப்படி இருக்க வேணும் என்று காட்டி அருளுகிறார் –
யார் அது அநுஷ்டித்தார் ஓர் இருவர் -உண்டாகில் –
தந் நிஷ்டரை காட்டி அருளுகிறார்
உபாயத்துக்கு பிராட்டியையும் த்ரௌபதியையும் திருக்கண்ண மங்கை ஆண்டானையும்
போலே இருக்க வேணும்
உபேயதுக்கு இளைய பெருமாளையும் பெரிய உடையாரையும் பிள்ளை திரு நறையூர் அரையரையும்
சிந்தயந்தியையும் போலே இருக்க வேணும்

உபாயதுக்கு அதிகாரி ஆகும் பொழுது -என்று உபாயதுக்கு
இப்படியே உபேயதுக்கும்
உபயதுக்கும்
உபாயத்தில் என்றும் பாட பேதம்
உபய விஷயத்திலும் அதிகாரி நிஷ்டை அருளுகிறார்
அவனையே உபாயமாக பற்றி –
சூர்ணிகை -81
பிராட்டிக்கும் த்ரௌபாதிக்கும் வாசி சக்தியும் அசக்தியும்

பதி வ்ரதை சக்தி -கொஞ்சம் குறைவு உண்டு -அர்ஜுனன் இடம் அதிக ப்ரீதி கொண்டாள் த்ரௌபதி –
சக்தி இருக்க செய்தேயும் பிராட்டி தன்னை ரஷித்து கொள்ள வில்லை
சக்தி இருக்கவுமாம் இல்லையுமாம் அவனை பற்ற -வாசி அற அவனே உபாயம் என்று பற்ற
தது தது சத்ருசம் பவத் -லங்காம் எரிக்க பண்ணினவள் -நெருப்பை நீராக்க
வல்ல -சீதோ  பவ -சொல்லி -ஸ்வபாவம் மாற்ற வல்ல –
அக்நி தானே நீரை உண்டாக்கி -தகப்பனாரை பிள்ளையாக்கி –
நெருப்பை நீராக்கி –
எரிய நெருப்பை எரிய வைக்க வல்லவள்
சக்தி இருந்தும் -விட்டாள் பிராட்டி
சக்தியே இன்றி த்ரௌபதி –
கோவிந்தம் புண்டரீகாஷம் ரஷமாம் –

சூர்ணிகை -82
பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்
த்ரௌபதி லஜ்ஜையை விட்டாள்
திருக்கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வ்யாபாரத்தை விட்டான்-

நம்முடைய சக்தியால் காத்து கொண்டால் –பாரதந்த்ர்யதுக்கு குறைவு
ராமன் வில்லையே நம்பி -சாம்பலாக போக சபிக்க வில்லை ஸ்லோகம்
த்ரௌபதி லஜ்ஜையை விட்டு -இரண்டு கையையும் விடுகை
தான் ஒரு கை எம்பெருமான் கை இன்றி -என்றுமாம்
இரு கையையும் விட்டேனோ த்ரௌபதி போலே –

வியாதிக்கு மருந்து சாப்பிடலாமா
உறுதியாக இருந்து
அவனை அடைய சம்சாரம் விட வேண்டுமே
ரஷணம் எது என்று அறிந்து கொள்ள வேண்டும்
சரீரம் இருப்பது ரஷணம் இல்லை
நம்மை நாமே ரஷிக்க சக்தி பிராப்தி ஸ்வரூபம் இன்றி இருக்க
அத்யவசாயம் வர வேண்டும்
சக்தி அதனை அளவும் இன்றிக்கே -மகா ஆபத்தில் மகா விசுவாசம் பண்ணி
சபையில் நடுவில் லஜ்ஜையை விட்டாள் -உசத்தி என்கிறார் இந்த அர்த்தத்தில் –
பெருத்து ஞானம் உடையவள் -அவனே ரஷகம் அறிந்த பிராட்டி
ராவணன் மான பங்கம் பண்ண வில்லை
இவளுக்கு மகா ராஜ சபையில் -மகா விசுவாசம் உடன் லஜ்ஜை விட்டு
இதுவே அரிது
திருக்கண்ண மங்கை ஆண்டான் –
செற்ற நம் சேவகனார்
சேவகன் வேலைக்காரன்
திருமாலை வியாக்யானம் பெரியவாச்சான் பிள்ளை காட்டி அருளியதை மா முனிகள் இங்கே காட்டி அருளுகிறார்

சேவகன் நாய் உடன் போக -எதிரே வேற சேவகன் நாயை அடிக்க
அது பொறாமல் காத்த -அவனை அடிக்க

யஜமானன் அபிமானத்தில் ஒதுங்க தன்னை அழிய மாறி ரஷிக்க
-சர்வேஸ்வரன் இடம் ஒதுங்க
சூத்திர யஜமான் இப்படி இருக்க
புருஷோத்தமன்
ஸ்வ -வ்யாபாரத்தை விடு -ஸ்வ ரஷணம் தான் வ்யாபாரம் என்று மா முனிகள் அருளி காட்டி
நாயைப் போலே தன்னை அனுஷ்டித்துக் கொண்டு
எஜமானனே எல்லாம் என்று
பத்தராவி பெருமாள் இடம் புகுந்து
கடைத்தலை புகுந்து -வியாக்யானம் இதை மீண்டும் அருளி
சீயக்க -பெருக்கிய இடம் தூய்மையாக இருக்க
திருக்கோயில் சுத்தம்
கைங்கர்யமாக பண்ண வேணும்
ஒன்றுமே பண்ண கூடாது என்று இல்லை-

சூர்ணிகை -83
பசியராய் இருப்பார் அட்ட சோறும் உண்ண வேணும் -அடுகிற சோறும் உண்ண வேணும்
என்னுமா போலே -காட்டுக்கு போகிற போது இளைய பெருமாள் பிரியில் தரியாமையை
முன்னிட்டு அடிமை செய்ய வேணும் -எல்லா அடிமையும் செய்ய வேணும் ஏவிக் கொள்ளவும் வேணும் என்றார் –
படை வீட்டில் புகுந்த பின்பு காட்டில் தனி யிடத்தில் ஸ்வயம் பாகத்திலே வயிற்றைப்
பெருக்கின படியாலே ஒப்பூண் உண்ண மாட்டாதே -ஒரு திருக்கையாலே திரு வெண் கொற்றக் குடையையும்
ஒரு திருக்கையாலே திரு வெண் சாமரத்தையும் தரித்து அடிமை செய்தார்

இது இவருக்கு ஸ்வரூப சித்தி
காட்டுக்கு போகும் முன்பும் இதே செய்து அருளி
காட்டிலே வயிறு பருக்கிய பின்பு இதை செய்யாமல் இருப்பாரா
கிஞ்சித்கரித்து நிற்க மாட்டாத -முன்பு செய்ததையே செய்வாரே
இரண்டு அடிமையும் செய்து அருளி –
பிரமாணம் ஸ்ரீ ராமாயணத்தில் இல்லையானாலும் பாத்ம புராணத்தில்
உள்ளதே பிராட்டி பார்த்தாராம் ரஷியும் காகாசுர வ்ருத்தாந்தம்
பிராட்டியே சொல்லி அருளுவதால் தமது வாயாலே சொல்ல சங்கோசம் இருக்குமே
காஞ்சி ஸ்வாமி -கிருபையா பரிபாலாயா சப்தம் பிராட்டி செய்வதையே குறிக்கும்
சத்ரஞ்ச சாமரம் பாத்ம புராணத்தில் உண்டே

சூர்ணிகை -84-
பெரிய உடையாரும் பிள்ளை திரு நறையூர் அரையரும் உடம்பை உபேஷித்தார்கள்
சிந்தயந்திக்கு உடம்பு தன்னடியே போயிற்று
ஜடாயு மகராஜர் -பெரியப்பா
சிறகுகள் அடியில் தங்கி ஜீவிக்க ஆசைப்பட்டார் பெருமாள்
திருவடிக்கு பரியராய் -ஆசனமாக வர்த்திக்க
ராவணன் -அபகரித்து போக
உறங்குகிற இவர் ஆர்த்த த்வனி
கேட்டு பிராணன் உடன் இது கண்டு வாழ
அதி பல பராக்ராமர் ஆகையால் மகா யுத்தம்
பண்ணி சந்திர ஹாசம் வாளால் வெட்ட அடி பட்டு விழ
ஸ்ரீ கார்யத்தால் பிராணன் விட
திரு நாராயணபுரத்தில் -அக்நி -புற சமயத்தார் வைக்க
வேத நாராயணபுரம்பெருமாள் தொட்டியூர் தொட்டியம் திரு நாராயணபுரம்
மேல் நாட்டில் உள்ளது மேல்கோட்டை
இது கீழ்  நாட்டில் உள்ள தேசம்
பிள்ளை களும் தாமுமாக -சிறிய குழந்தைகள் -புகை சூழ்ந்து
அத்யவசாயம் கிஞ்சம் சற்று பொறுத்தால் நிரதிசய சுகம் பெறுவோம் என்றார்
சிந்தயந்தி உடம்பு தன்னடையே போக
துக்கம் பாபம் போக்க குழல் ஓசை புண்ணியம் போக
ஸ்ரீ பாகவத பிரமாணம்
கோவிந்தனிடம் போக முடியாமல் தச் சித்த ஷீண புண்ய
அப்ராப்த அசேஷ பாகத
எம்பெருமானை நினைத்து கொண்டு இருந்தவள் கோப கன்னியை
கயிறு மாலையாகி மற்றவர் போக

திருக்குரவை அன்று பிருந்தாவனம் போக முயன்ற
போக மாட்டாமல்
நின்று கிரிஷ்ணனை தினம் பண்ணி
தத் கத சிந்தையால் நிர்மல சுகத்தாலும்
நிரவதிக சுகம் சென்றாள்
தான் உபெஷிக்க வேண்டாதபடி தானே உடம்பு போக
நிஷ்டை அதிகம்
படிப்படியாக இளைய பெருமாள் ஜடாயு சிந்தயந்தி இளைய கோப கன்னிகை
நிஷ்டை அரிது
பிரயத்ன பூர்வமாக போக வில்லை

காலத்தால் பின் பட்டாலும் சிந்தயந்தி பின்பு சொல்லி அருளி
அரையர் குடும்பத்துடன் பிராணனை விடத்தல் ஜடாயுவுக்கு பின்பு சொல்லி அருளி

நிதர்சனமான நால்வரையும் இப்படி சொல்லி அருளி
ஆய் ஜகன்னாதாசார்யர் இதை விஸ்தரித்து காட்டி
நாட்டார் சிரிக்கும் என்றாலும் லஜ்ஜையும்
பரிக்கிரக உபாயம் ஸு யத்னமும் விட வேண்டும்
சூர்ணிகை -85
உபாயதுக்கு சக்தியும் லஜ்ஜையும் யத்னமும் குலைய வேணும்
உபேயத்துக்கு பிரேமமும் தன்னைப் பேணாமையும் தரியாமையும் வேணும்
சூர்ணிகை -86-
இவனுக்கு வைதமாய் வருமது இ றே த்யாஜிகலாவது
ராக ப்ராப்தமாய் வருமது த்யஜிக்க ஒண்ணாது இ றே
பட்டர் துக்கப்பட்டாராம் திரு நறையூர் அரையர் வ்ருத்தாந்தம் கேட்டு -எம்பெருமானார் சிஷ்யர் இந்த அரையர்
உபாயம் விட -வேண்டும் அவனை ரஷிக்க தன்னை அழிய மாறியும் அவனை நோக்க வேணும்
எம்பெருமானுக்கு திருக்குடை பிடிக்க வேண்டும் உபேயம் என்று கருதி
ரஷிக்க பிராப்தி இல்லை –
நம்மை இரண்டும் வேண்டும்
எம்பெருமான் அமுது செய்யா விடில் ஆத்தில் உண்ண மாட்டார்கள்
பிரேமமும் வேண்டும்
குழந்தை போலே காக்க வேண்டும் எம்பெருமானார் செல்ல பிள்ளை பற்றி அருளிச் செய்தார்

முன்னோர் மொழிந்த -ஸ்ரீ வசன பூஷணம் திவ்ய சாஸ்திரம்
புருஷகார வைபவம்
உபாய வைபவம்
உபாய பெருமை -கௌரவம்
உபேயமும் அந்தர்பூதம் உபாயத்தில் –
அதிகாரி நிஷ்டை -பிராக்டிகலாக காட்டி அருளி திருஷ்டாந்தம் மூலம்
சக்தி லஜ்ஜையை யத்னம் விட்ட மூவரும் உபாயத்துக்கு காட்டி
பிராட்டி சக்தியை விட்டு
இருகையையும் விட்டு -த்ரௌபதி லஜ்ஜையை விட்டு
திருகண்ண மங்கை ஸு யத்னம் விட்டு
உபேயதுக்கு இளைய பெருமாள் பெரிய உடையார் பிள்ளை திரு நறையூர் அரையர் சிந்தயந்தி
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும்
பேற்றுக்கு த்வரிக்கையும் -வழி அல்லா வழி சென்றும் கிட்ட முயன்று
அடிப்படி தத்வம் புரிந்து கொள்ள வேண்டும்
பிராணனை விட்டு ரஷிக்க பார்த்தார்கள் என்றால் முரண் போலே தோன்றுமே
பிராண த்யாகம் சாஸ்திரம் உபாயமாக சொல்லி இருக்க
இது தகுமோ
வைதமாய் வருவது த்யஜிக்க வேண்டியது
ராக ப்ராப்தமாய் வருவது த்யஜிக்க வேண்டுவது இல்லை

ஆக்னேய புராணம் பிரமாணம்
பாதக கிருது நரன் தேக கார்யதுக்காக சரீரம் விட்டால் விஷ்ணு சாயுஜ்யம் அடைகிறான்
வாயவ்ய புராணம் இப்படி சொல்லி
ரெங்க நாதனை  அடைந்து தேக த்யாகம்  செய்தால் அவன் வம்சத்தில் வருபவர் அனைவரும்
அவனை அடைகிறார்கள் –
பெரிய நம்பி -சரம தசையில் கூரத் ஆழ்வான் இடம் சாதித்த ஸ்ரீ ஸூக்தி -அனுசந்தேயம்
அவனுக்காக பிராண த்யாகம் செய்பவர்
வைஷ்ணவ தர்ம சாஸ்த்ரத்தில் பஞ்சம -அக்னி ப்ரேவேசம் -யகா குருதே
அவனையே நினைந்து நெருப்பில் விழுந்தால் விமானம் ஏறி அவனை அடைகிறான்
பிரபத்தி பண்ணி -பால சூர்யன் போலே பிரகாசித்து சேருகிறான் -தானே அருளி
மோஷ சாதனம் தேக த்யாகம் என்பதற்கு பிரமாணம்
அரையர் இதை அனுஷ்டிப்பான் என் -எம்பெருமானார் இஷ்யர்
இதனால் சூர்ணிகை 86 அருளி
விதி என்றால் விட வேண்டும்
ராக பிராப்தம் வைதகம் ஆனால் – இருக்கும் முமுஷுப்படி பார்த்தோம்
பித்தம் தலை சுத்த பாலை சாப்பிட சொல்லி மருத்துவர்
விருந்தே மருந்தானால் ரசித்து சாப்பிடுகிறார்
மருந்தாக மட்டும் இருந்தால் விடுவோம் வியாதி தீர்ந்த பின்பு
வைதம் -விதி என்பதால்
ராக பிராப்தம் ஈடுபாடு

பிராப்ய அப்ராப்ய விவேகம் பண்ணி -வைதிகம் ஆனால்
வாயவ்ய யாகம் ஐஸ்வர்யம் வர சாஸ்திரம் சொல்ல -ஆசை உள்ளவனுக்கு தான்
மேல் நாட்டில் ஆயுஷ் ஹோமமும் காம்ய அர்த்தம் என்பர்
பிராப்தம் அப்ராப்தம் விவேகம் பண்ணி விடுகிறார்கள்
தமது விரகத்தால் ஆற்றாமை மிக்கு -போக்கியம் பிராப்தம் -வருந்தியும் கை விட போகாதே
ஆஞ்ஞா கைங்கர்யம் சந்த்யா வந்தனம் போல்வன -திரு உள்ளம் பிரீதிக்கு செய்வன
திரு விளக்கு எரிக்கை -அனுக்ஞ்ஞா கைங்கர்யம் ஈடுபாடு காரணமாக
விட முடியாதே இவை
அரையர் இதனால் செய்து அருளினார்
சூர்ணிகை -87
உபாயத்வ அனுசந்தானம் நிவர்த்தகம்
உபேயத்வ அனுசந்தானம் ப்ரவர்த்தகம்
ஆய் ஸ்வாமி பொதுவாக காட்டி அருளி
மா முனிகள் அரையர் வ்ருத்தாந்தம் காட்டி அருளுகிறார்

தினவு எடுத்தாலும் சொறிந்து கொள்ள மாட்டான்
உடம்பு அவனது தானே
இந்த உபாயம் செய்ய கூடாது
எம்பெருமானே உபாயம் என்று நினைத்து இருந்தாலும் ஒன்றுமே செய்யாமல் மீள்வான்
உபேய அநுசந்தானம் வந்தால் வழி அல்லா வழி சென்று அடைய பார்ப்பானே
ஆழ்வார்கள் மடல் எடுத்தால் போலே

தேக த்யாகமே புருஷார்த்தம் என்று இருந்தார் அரையர் இதனால்

உபாயத்வ அனுசந்தானம் இதனால் மீள்விக்கும்
செய்ய கூடிய கார்யம் உபாயம் என்று நினைத்தாலும்
எம்பெருமானே உபாயம் என்று நினைத்தாலும் மீள்வான்
துரும்பு நறுக்க பிராப்தி இல்லையே
தேக ரஷணம் சர்வேஸ்வரன் கார்யம் தானே
இதுவும் அவனுக்கு சரீரம் தானே
யஸ்ய ஆத்மா சரீரம் பிர்துவி சரீரம் போலே
இதை வைத்து தான் மேலே விஷயம் போகும் –

காமன் காலில் விழுந்து /மடல் எடுத்து -ஆழ்வார்கள் -உபேய அனுசந்தானம்
விஷய வை லஷண்யம் -ஆறி இருக்க ஒட்டாதே
சூர்ணிகை -88
அப்ராப்த விஷயங்களிலே சக்தனானவன் அது லாபிக்க வேணும் என்று இரா நின்றால்
ப்ராப்த விஷய ப்ரவணனுக்கு சொல்ல வேண்டாவிறே

ஈடுபாடு காரணமாக சரீரம் விடுவானோ
தத் விஷய ப்ராவண்யம் இப்படி செய்ய தூண்டுமோ
அப்ராப்த விஷயங்களில் லபிக்க என்ன என்னவோ செய்பவன்
ஸ்வரூபத்துக்கு தகாத -அழிய மாறியும் -செய்பவன்
கிம் புன நியாய சித்தம்
தண்ட அபூவம் நியாயம் -வடை ஓட்டை வைப்பது
மூங்கிலே நெய் ஊறி போக
மூங்கிலே இல்லாத பொழுது வடை இருக்குமோ

வேசி அளவில் -வியாதி கனக்க -தலை காணிக்கை தருவேன் பிராரத்து செய்த கதை திருஷ்டாந்தம்
நெருப்பு சுடும் என்று நினைக்கா விடிலும் சுடும்
உபாயத்தை நினைக்காமல் செய்தாலும் அரையர் செய்தது உபாயம் ஆகுமே
நியாய சஞ்சாரம்
நினைக்காமல் செய்தால் உபாயம் ஆகாது
அப்படி உபாயம் ஆனாலும் ஒன்றும் தப்பு இல்லை என்கிறார் மேலே

சூர்ணிகை -89
அனுஷ்டானமும் அ நநுஷ்டானமும் உபாய கோடியிலே அன்வயியாது

அநந்ய சாதனன் -செய்த தேக த்யாகம் -உபாய கோடியிலே அன்வயித்து இல்லாமல் நிற்காதே
உபாயமாக செய்யாவிடிலும் தீங்கு விளையாதா
தெரியாமல் செய்தாலும்
ராக ப்ராப்தமாய் அனுஷ்டித்தாலும் –
அநுஷ்டானம் -அநநுஷ்டானமும் உபாய கோடியிலே அன்வயியாது என்கிறார்
எந்த அபிப்ப்ராயதுடன் செய்கிறோம் எனபது முக்கியம்
கார்யம் செய்வதும் செய்யாததும்
வானம் பொழிகிறது வரி கெடா சொன்னால் – சிறை வைப்பான் சிலை வைத்தான்
1947 தாமரை பட்டம் -தண்டனை இப்பொழுது
இன்னாரை குறித்து அபிப்பிராயம் தான் முக்கியம்- கார்யமே தப்பு இல்லை
விட -சக்தி லஜ்ஜை யத்னம் -சொல்லி -இதுவும் கிரிசை தான்
நெய் உண்ணோம் இதுவும் செய்யும் கிரிசைகள்
செய்ய கூடாதது 6 சொல்லி செய்ய வேண்டியது 4 சொல்லி
அதுவும் செய்யும் கிரிசை தான் விடுகையும் செய்கை தானே
ஸு சக்தி த்யாகம் -லஜ்ஜை விடுகை -வியாபாரம் விடுகை போல்வன சாதனம் ஆகாது

அது எப்படி உபாயம் ஆகாதோ அது போலே பிராணன் விட்டதும் உபாயம் ஆகாது
உபாய உபேய -அதிகாரி அந்தர்பூதம்
சக்தி விட வேண்டும் தேக த்யாகம்  விட கூடாது –
உபாயதயா சாஸ்திரம் இருந்தாலும் -உபேய
புண்ய தேச வாசமும் உபாயத்தில் அன்வயியாது
தேனுகா பேட்டை -தேனு =பசு
மந்தவெளி
பெருமாள் இடம்
தோட்டம்
ஆயிரம் விளக்கு
எல்லாம் பெருமாள் இடம்
ஈக்காடு தாங்கல் விட்டு guindy estate பெருமாள் இடம்
பெருமாள் கோயில் மாமந்தூர் கூட போலே
ஜீயர் புரம் நம் பெருமாள்
திவ்ய தேசம் வாசம் விடக் கூடாது
சென்னை குரு  அச்சகம்
திருவல்லிக்கேணி குரு அச்சகம் போடு -காஞ்சி ஸ்வாமி அருளி –

பகவத் கைங்கர்யமாக செய்கிறோம்
மோஷ சாதனமாக செய்ய வில்லை
சாதனமாக இருந்தாலும் கூட –
அனுஷ்டானமும் அநநுஷ்டானமும் உபாய கோடியிலே அன்வயியாது
கங்கையில் உள்ள மீன் ஞானம் இல்லாததால் அப்படியே இருக்கும்
பாசுரம் திரு நாமம் சொல்லும் பொழுது அர்த்தம் தெரியாமல் சொன்னாலும் பலன் கிட்டும்
நெருப்பு ஸ்வாபம் போலே பலன் கொடுத்தே சேரும்
இதை தவிர மற்ற விஷயங்களில் அபிப்பிராயம் கொண்டே பலன்

தீட்டு -அறிந்த பின்பு தான் வரும்
அறியாத பொழுது செய்தால் தீட்டு இல்லை –
ஞானம் ஏற்ப்பட்டால் தான் பலன் –
lottary பலன் தெரிந்த பின்பு சந்தோஷம் –
கார்யம் பலன் தரவில்லை அதன் ஞானமே பலன் கொடுக்கும்
கங்கையில் உள்ள மீனுக்கு மோஷம் இல்லையே
செய்ததும் த்யாகமும் உபாய கோடியிலே அன்வயியாது
சூர்ணிகை -90
அநந்ய உபாயத்வமும் அநந்ய உபேயத்வமும் அநந்ய தைவத்வமும்
குலையும்படியான பிரவ்ருத்தி காணா நின்றோம் இ றே

உபாய கோடியிலே அன்வயித்தாலும்
ஈடுபாட்டால் செய்தால்
ஆழ்வார்கள் விஷயத்தில் காணா நின்றோம்
எம்பெருமானே உபாயம் -குலைகையாவது
திருந்தவே நோக்கின்றேன்
மடல் ஊர்தும் உலகு அறிய
ஊராது ஒழியேன்
நோன்பு நோற்பதும் -மடல் எடுப்பதும் -ஓதி நாமம் –
திருப்புல்லாணி
ஓதி -குளித்து -பாத மா மலர் சென்னியில் சூடி நமக்கே நலம் சாதனமாக
கைங்கர்யமாக இல்லை
அலறி அடித்து பலன் கொடுப்பான்
ராஜ மகிஷி உஞ்ச வ்ருத்தி பண்ணினால் அவத்யம் ராஜாவுக்கு இ றே

நமக்கே நலமாதல் என்று அத்தலைக்கு அதிசயம் விளைக்கும் என்று இராமல்
அநந்ய உபேயதவம் குலைதல் -நமக்கே நலமாதல்
பூம் துழாய் சென்னியில் சூடுவோம்
அநந்ய தைவத்வம் குலைதல்
உன்னையும் உம்பியையும் தொழுது
காமன் சாமன் காலில் விழுந்து
பேசுவது இங்கு ஓன்று எம்பெருமான் போல்வன

அரையர் உபாயமாக அனுஷ்டிக்க வில்லை
ஆழ்வார் உபாயமாகவே அனுஷ்டித்து -சாதனமாக சொல்லி
ஈடுபாடு காரணமாக உபாயமாக நினைத்து செய்தாலும் செய்யா விடிலும்
மேலையார் செய்வனகள்
செய்யாதன செய்யோம்
ஆழ்வார்கள் பரிவின் காரணமாக செய்வதால் தப்பு இல்லை என்கிறார்

சாஸ்தா தேவதைக்கு தாயார் -மகளுக்கு வர கூடாது என்று
துடிப்பு ஒன்றாலே இப்படி செய்கிறார்கள்
மாம் ஏகம் -அவனே சாதனம் ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே பகலிலே கூரத் ஆழ்வான் அமுது செய்ய எழுப்பி அருளி எம்பெருமானார் துடிப்பின் காரணமாக
அரையர் செய்ததும் தோஷம் இல்லை
கலக்கத்தில் செய்தது பிரமாணம் இல்லை
அஞ்ஞானத்தால் வந்தது
ஞான விபாக கார்யத்தால் முதிர்ந்த பரிபக்குவ நிலை –
அடிக் கழைஞ்சு பெறும்
விலை உயர்ந்தது
சதுர அடிக்கு கழைஞ்சு பொன்
மதி நலம் -நலம் பக்தி -மதி ஞானம்
முதிர்ந்த நிலை
-சூர்ணிகை 91
ஞான விபாக கார்யமான அஞ்ஞானத்தால் வருமவை எல்லாம்
அடிக் கழஞ்சு பெறும்
கொடுத்த ஞானம் கனிந்து நலமானது
ஞானம் கனிந்த நலம் அமுதனார்

ஐந்து அறிவு புலன்கள்
மூலம் ஆறாவது அறிவு மனசால் அறிவது நமக்கு மட்டும் உண்டு பகுத்து அறிவு
பிராப்தம் -அப்ராப்தம் தேகத்துக்கு  இல்லை ஆத்மாவுக்கு –
மதி எல்லாம் உள் கலங்கி நீ கொடுத்த மயர்வற மதி நலமும் கலங்கிற்றே
மதி கலங்கி எல்லாம் கலங்கி உள்  கலங்கி -அதி பிரவர்த்தி
பிராப்த அப்ராப்த விபாக அபாவம் -அதி ஸ்லாக்கியம்
முட்டாள் தனம் உசந்ததாக இருக்குமா
கர்மத்தின் காரணமாக வருமவை இல்லை
விஷய வை லஷண்யத்தால் -வேருமாவை முடிந்த நிலையில் வருவது
பெரியாழ்வார் ஞானம் முற்றி திருப்பல்லாண்டு பாட -பொங்கும் பரிவால்

காய் -பழம் -முதிர்ந்து -உலர்ந்த dry fruit
அஞ்ஞானம் -ஞானம் -முதிர்ந்த நிலை அஞ்ஞானம்
கலக்கத்தால் செய்தார்கள் உயர்ந்தது -தான் –
அரையர் செய்தது உயர்ந்ததே

இத்தலையில் பிரவ்ருத்தி சகியாத சித்தோ உபாயம் –
தடுக்காமல் -இருப்பது -நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பது
ஸு பிரவ்ருத்தி முதல் விரோதி
metal detector வைத்து check பண்ணுவானாம்
அப்படி இருக்க -தேக த்யாகம் -செய்தது -ஸு பிரவ்ருத்தி தானே
அதி பிரவர்த்தி -ஆழ்வார்கள் செய்ததும் அரையர் செய்ததும் -சித்தோ உபாயத்துக்கு ஹாநியோ
பிரதிபந்தகம் ஆகாதோ
சூர்ணிகை -92
உபாய பலமாய் உபேய அந்தர்ப்பூதமாய் இருக்குமது
உபாய பிரதிபந்தகம் ஆகாது
பகவத் பிரவ்ருதிக்கு விரோதி ஸு பிரவ்ருத்தி தானே-

உபாய பலம் எம்பெருமான் பண்ணின கிருஷி பலம் தானே இந்த அதி பிரவ்ருத்தி
உபாய பலமே உபாய ப்ரதிபந்தகம் ஆகாதே
உபேய அந்தர்பூதம் -உள்ளேயே இருப்பது உபாயதுக்கு பிரதி பந்தகம் ஆகாதே
அவன் செய்த கிருஷி பலன் -தானே இப்படி செய்ய வைத்தது –
மயர்வற மதி நலம் அருளி பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி காட்டி
கடலில் மிக பெரிதாக
நீள் விசும்பும் பெரிய
தத்வ த்ரயத்தையும் விலாக்குலை  கொண்ட காதலாக பெருக்கி
பக்திக்கு உத்பாதகன் விளைவித்த –
-வர்த்தகன் -வளர்த்து
விஷய வை லஷண்யம் –
பக்தி பாரவச்ய கார்யம்

இது போய் தடையாகாதே
உபேய அந்தர்பூதம் -முகம் மலர உறுப்பு ஆகையாலே
தடை ஆகாது
ஆசை இருந்தால் தான் துடிப்பான்
சந்தோஷம் -பிராப்ய த்வரை முற்று கண்ணான் சோலை இட்டு
நம்மை ஆசைப்பட்டு இவள் படுவதே
முகம் மலர்ச்சிக்கு பண்ணும் கைங்கர்யம் போலே இவை
கைங்கர்யம் பண்ணி அவனை ஆனந்திப்பிக்க தானே
உபேயம் =கைங்கர்யம்
அந்தர்பூதம் தானே தடையாகாதே

சூர்ணிகை -93
சாத்திய சமானம் விளம்பாஸஹடம் என்று இ றே சாதனத்துக்கு ஏற்றம்
சாத்திய ப்ராவண்யம் அடியாக இ றே சாதனத்தில் இழிகிறது
விளம்பம் கால தாமதம் ஏற்படுமே பக்தி யோகம் விளம்பித பலப்ரதம்
பிரபத்தி -கோதின காலத்தில்
ஆர்த்த பிரபன்னர் -அடுத்த ஷணமே கேட்டு
திருப்த பிரபன்னர் இந்த சரீரம் முடிந்த பின்பு அருளி
சாதனம் பகவானாலே சித்த சாதனம்
எம்பெருமானை பற்றும் காலத்திலேயே கிட்டி
சுசுகம் கர்த்தும் –
சாதனம் செய்யும் பொழுதே பலன் கிட்டுமே
அசுவமேத -யாகம் குதிரை மூச்சை அடக்கி -கொன்று செத்த குதிரையை -கட்டி படுத்துண்டு
அருவருப்பு நினைத்தால் பலன் கிட்டாதாம்
மேலே கிடைக்கும் பலன் சாம்ராஜ்யம்
சாதனம் கஷ்டம்
தேக ஆரோக்கியம் மருந்து கசப்பது போலே
இங்கே சாதனமே சுக ரூபம் சாத்திய சமானம்

அதி பிரவர்த்திக்கும் இவை உண்டே
பண்ணும் காலத்திலேயே சுகம்
ஓடி வந்து ரஷிக்கிறான் துடிக்கிறாரே என்று அனுக்ரகம் செய்கிறான்
ஆக சுக ரூபம் கால தாமதம் இல்லாமல் பலன் இவற்றுக்கும் உண்டே

மடல் எடுத்தல் சேஷிக்கு அதிசயம் விளைவிக்கும் கார்யம்
கைங்கர்ய ரூபா சாத்தியம் சமானம்
சர்வேஸ்வரன் த்வரித்து வந்து கார்யம் செய்வானே
இந்த அதிபிரவர்திகள் எம்பெருமானே போலே
இதுவும் சித்த உபாயம்
இரண்டு இல்லை
அவனை அடைய இவை காரணம்
கார்ய காரணம் ஆகாரம் ஒத்து இருக்குமே
பிரதிபன்தகம் இல்லையே
ஒரு அர்த்தம்
அன்றிக்கே
இன்னும் ஒரு முக பாவத்தாலே
சாத்திய வஸ்துவே சாதனம்
மருந்தே விருந்து போலே இவை
அவன் சரித்ரம் சொல்லி மடல் எடுப்பத்தால்
கால விளம்பம் இன்றி கடுக பலன்
உடனே அடைய துடிப்பால் செய்வதால்
தான் அடியாக விளைந்து
மேல் விழுந்து கார்யம் செய்ய உடலாகும் இவை

ஆக
விதியினால் வருமவை தவிர்க்க வேணுமே ஒழிய ராக பிராப்யம் அடியாக வருமவை விட முடியாது
உபாய கோடியிலே அன்வயியாது
அன்வயித்தாலும் தோஷம் இன்றி இருக்கும்
ஆழ்வார்கள் கூட செய்தவை -கண்டோமே இந்த அதிபிர்வர்திகள்
உயர்ந்தவை தான் இவை

தாயார் குழந்தை போலேதூர தேசம் செல்பவனை குறித்து பொங்கும் பரிவால்

பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழி-1-3-8-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 26, 2013

ஈசி போமின் ஈங்கு இரேன் மின் இருமி இளைத்தீர்
உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும் குவளை யம் கண்ணியர் பால்
நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கல் உறில்
வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே—-1-3-8-

———————————————

வியாக்யானம் –
ஈசி போமின் –
நடவும் -சீ சீ என்றபடி
போமின் -போகீர் என்பர்கள்
என்றவாறே இருக்கச் சொல்லிற்றாகக் கொண்டு இருக்கும் இறே பழைய வாசனையாலே –

ஈங்கு இரேன் மின் –
நீர் இருக்கிற இடம் தன்னை அறிந்திலரோ –
உமக்கு இங்குத்தை இருப்பில் ஓர் அந்வயம் இல்லை காணும் போம் என்பர்கள் –
என் தான் எனக்கு போக வேண்டுகிற ஹேது என் -என்னுமே –

இருமி இளைத்தீர் உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும்-என்பர்கள்
இருமலாலே போர இளைத்தீர் -உம்மை அறிவீரே
இவர்கள் முன்னே இப்படி படுவோமே என்று எங்கள் சன்னதியை அனுசந்தித்து
ஹ்ருதயம்  கூசினீர் என்று சொல்லுகிற –

குவளை அம் கண்ணியர் பால் –
இவனுடைய எளிவரவு காண்கைக்காக சாதரமாகப் பார்ப்பார்கள் ஆயிற்று
அரு நஞ்சாகிலும் ஆகிறது -ஆரா அமுதாலும் ஆகிறது -இவர்களால் தாம் பார்க்கப் பெற்றோம் இறே
என்று இவனுடைய பாவ பந்தத்துக்கு உடலாய் இருக்கும் ஆயிற்று

நாசமான பாசம் விட்டு –
ஏதேனும் தசையிலும் இவனை விடாதே
விநாசத்தைப் பலிக்கும் படியான சங்கம் ஆயிற்று –
ஹேய விஷயத்தில் சங்கம் விநாசத்தைப் பலிக்கும் இறே –

நன்னெறி நோக்கல் உறில் வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே –
அத்தை தவிர்ந்து நல் வழி போகப் பார்க்கில் –
தன்னை ஆஸ்ரயித்தார்க்கு கொடுத்து ஆதரிகைக்காக
மாலை இட்டு இருக்கிற அவனதான வதரியை வணங்குதுமே
நன்னெறி நோக்கல் உறில் வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-3-7-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 26, 2013

பப்ப வப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப ஐக்கள் போத வுந்த உந் தமர் காண்மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியா முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வு மானான் வதரி வணங்குதுமே–1-3-7-

——————————————

வியாக்யானம் –
பப்ப –
ஷேபோக்தியில் இவருடைய அநுகாரம் இருக்கிற படி –

வப்பர் மூத்த வாறு –
எல்லார்க்கும் மூப்பு வருகை தவிராது இறே
இத்தனை கழிய மூக்கலாம் ஆகாது இறே -என்பர்கள் -ஆயிற்று
மூப்பை ப்ரக்ருதி யாக்கி அதிலே மூத்த படியாக வாயிற்று சொல்லுவது –

பாழ்ப்பது –
இது சாலப் பொல்லாது
அறப் பொல்லாதாய் இருந்ததீ
இது அசித் சம்சர்க்கம் என்று வெறுப்புக்கு உடலாயிற்று-

சீத் திரளை ஒப்ப ஐக்கள் போத வுந்த –
பூய பிண்டம் போலே க்லேஷம் ஆனது போரத் தள்ள
சீத் திரளை ஒப்ப ஐக்கள்-கோளை- போத வுந்த —
அப்பர் மூத்தவாறு
பாழ்ப்பது -என்பர்கள் –

உந்தமர் காண்மின் என்று –
இவன் பக்கல் யௌவனமும் கையில் வீசமும் உள்ள வன்று
எல்லாரும் ஒக்க என் தமர் என் தமர் என்பர்கள் –
கையில் வீசமும் போய் இவனோட்டை   சம்பந்தம் நமக்கு
அவத்யாவாஹம் என்று தோற்றும் படி யௌவனமும் போனவாறே
உன்னுடையவன் -என்றும் –
மற்றை அவளும் உன்னோடே -அன்றோ அவனுக்கு உறவு என்றும் –
தங்கள் உடன் ஒற்று அற சொல்லி பின் வாங்கா நிற்பர்கள்

செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியா முன்னம் –
இவனைக் கொண்டு போது போக்கைகாக
முலைக் கச்சை நெகிழ்த்தி
முலையினுடைய சந்நிவேசத்தை காட்டுவார்கள்
இவன் கண்ணை விடுத்து எழப் பார்க்கும்
அத்தைக் கண்டு பிள்ளாய் -இவன் இவற்றோடு என்ன உறவு உண்டாய் பார்க்கிறான்
என்று சிரிப்பார்கள் ஆயிற்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் அப்பர் என்று சிரியாத முன்னம் என்னுதல் –
பண்டு தன் சர்வ ஸ்வத்தை நேர்ந்து இறே ஸ்மிதம் பெறுவது-
இப்போது இவன் இருப்பு கண்டு விட்டு சிரிப்பர்கள் ஆயிற்று –

வைப்பும் நங்கள் வாழ்வு மானான் –
பரிஹரித்த அன்றே சாதனமுமாய்
பின்னை
பிராப்யனுமானவன் வர்த்திக்கிற –

வதரி வணங்குதுமே –
ஒரு நாள் ஆதரித்து ஒரு நாள் சிரியாதவன் ஆயிற்று –
அம்ருதம் சாதனம் சாத்யம் -என்னக்  கடவது இறே-

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-3-6-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 26, 2013

எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம்
பித்தர் போலே  சித்தம் வேறாய் பேசி அயரா முன்
அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே–1-3-6-

வியாக்யானம் –
எய்த்த சொல்லோடு –
ஈளை துடங்கி எய்க்கை அன்றிக்கே முந்துறவே எய்த தாயிற்று சொல்லுவது –
அது தான் அநந்தரம் ஈளை யோடே கொடு போய்  சேர்க்கும்-
அதின் அனந்தர மாக இளைப்பு வந்து கைக் கொள்ளும் ஆயிற்று –
இருமி இளைத்து உடலம் அது தான்  இருமலுக்கு பூர்வ பஷ வர்த்தியாய் இருக்கும் இறே
இருமி அத்தாலே சரீரம் போர இளைக்கும் ஆயிற்று –

பித்தர் போலே-
நினைவு ஒன்றும் சொல் ஒன்றுமாய் இருக்கும் ஆயிற்று-
பித்தேறினால் போலே நெஞ்சல் நினைப்பது ஒன்றாய் வாயால் சொல்லுமதும் ஒன்றாய் இருக்கும் ஆயிற்று –

சித்தம் வேறாய் பேசி -அயரா முன் –
இப்படி பேசுகையும் கூட அரிதாம் படி அயர்வோடே தலைக்கட்டும் –
இப்படி மோஹிப்பதர்க்கு முன்னே –

அத்தன் எந்தை யாதி மூர்த்தி
அங்குத்தை ஸ்வாமி யானவன் எனக்கு ஹித காமன் ஆனவன்
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரன் –

ஆழ் கடலைக் கடைந்த
அரியன செய்தும் அபேஷிதம் செய்து கொடுக்குமவன் –

மைத்த சோதி
அபேஷிதம் செய்யா விடிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவன் –

எம்பெருமான் –
அவ்வடிவு அழகைக் காட்டி என்னை அடிமை கொண்டவனுடைய

வதரி வணங்குதுமே –
வதரியை ஆஸ்ரயிப்போம்

——————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-3-5-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 26, 2013

பண்டு காமரர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம்
உண்டவாறும் வாழ்ந்தவாறும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே–1-3-5-

————————————————————–

வியாக்யானம் –

பண்டு காமர் இத்யாதி –
தனக்கு என யோக்யதை உள்ள நாள் நிஷித்தங்களையே
முன்னடி தோற்றாதே அனுஷ்டித்துப் போரும் –
பின்பு பகவத் ஆஸ்ரயணம் பண்ணுமாகிலும்
(வணக்கொடு மாள்வது நலம் என்று இல்லாமல்)
சேஷித்த நாள் வ்ருத்த கீர்த்தனம் பண்ணி செத்துப் போம் ஆயிற்று –

பண்டு இத்யாதி –
முன்பு தாம் ஸ்திரீகளுக்கு ப்ரூஹா விஷயமாய் போந்த படியையும்
அவர்கள் உடைய வாக் அம்ர்தத்தை புஜித்த படியையும்
அன்றிக்கே
அவர்கள் தாங்கள் ஆதரித்து மேல் விழத் தான் இருந்த படியையும் –

வாழ்ந்த வாறும் –
இன்னம் கெடுப்பாயோ -என்கிறபடி
இப்பொழுது கேடாக இறே தாம் நினைக்கிறது –
(விபரீத லக்ஷணையாக கெட்டோம் என்றபடி )

ஒக்க உரைத்து இருமி –
இவற்றைச் சொல்லத் துடங்குமே
அநந்தரம் இருமல் வருமே
பின்னையும் சாபலத்தாலே விட்ட குறையிலே சொல்லத் துடங்குமே
ஆக இருமுவதும் சொல்லுவதாகவும் நிற்கும் –

தண்டு காலா
காலால் கொள்ளும் கார்யத்தை ஒரு தண்டாலே ஆயிற்று கொள்வது –

ஊன்றி ஊன்றி –
ஸ்ரீ பிள்ளை அழகிய மணவாள அரையர் இதுக்கு ஸ்ரீ பட்டர்   செய்தாராக சொன்ன படி
ஒரு கால் சரீரம் வர்த்திக்க வேண்டும் அளவும் ஊன்ற மாட்டாதே
கையில் மிடுக்கு இல்லாமையாலே பல கால் இத்தை எடுத்து எடுத்து இடா நிற்கும்  -என்று –

தள்ளி இத்யாதி
தடுமாறி நடப்பதுக்கு முன்னே –

வண்டு இத்யாதி –
அன்று இன்று -என்ன வேண்டாதே
என்றும் ஒக்க அனுபவமே யாத்ரையாக செல்லும் தேசம் –
சில நாள் அனுபவித்து பின்பு இருந்து வ்ருத்த கீர்த்தனம் பண்ண வேண்டா

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி-1-3-4-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 26, 2013

பீளை சோர கண் இடுங்கி பித்தெழ முத்து இருமி
தாள்கள் நோவ தம்மில் முட்டி தள்ளி நடவா முன்
காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான்
வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே–1-3-4-

————————————————————-

வியாக்யானம் –

பீளை சோர கண் இடுங்கி-
கண் ஆனது சங்கோசத்தை பஜித்து –
பசை அற்ற படியாலே பீளை பாய்ந்து

பித்தெழ –
கழிய மூத்து
ஸ்க்காலித்யம் பிறக்கும்படி மூத்து

தாள்கள் இத்யாதி –
ஒரு சஸ்த்ராதிகளால் ஆதல் -மற்று ஒன்றிலே இடறி ஆதல் -அன்றிக்கே
காலோடு கால் உராய்ந்து நோவ –
தாள்கள் தம்மில் முட்டி நோவ என்றபடி
பின்னையும் சாபலத்தாலே பேரத் துடங்குமே
தடுமாறி நடப்பதுக்கு முன்னே –

காளை யாகி –
தன்னை ஆஸ்ரயித்தார்க்கு தன்னோடு சாம்யா பத்தியைக் கொடுக்குமவன்
நித்ய யுவா ஆகவுமாம்

கன்று மேய்த்து
ரஷ்ய வர்க்கத்தை வரையாதே ரஷிக்குமவன்

குன்று எடுத்து அன்று நின்றான்-
அரியன செய்து நோக்குபவன் ஆயிற்று

வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே-
தனக்கு என ஒரு யோக்யதை இல்லாத பதார்த்தங்களும்
களித்து வர்த்திக்கும் தேசம் ஆயிற்று

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –