கண்டகி நதி –25000–26000-அடி உயர மலைகள்
இவர் ஹிமாவானின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதியில் உள்ள சாளக்கிராமம் –
மலை பகுதியாகவே சென்று சேவிக்கிறார்
அங்கு இருந்து இறங்கி நைமிசாரண்யம் மங்களா சாசனம் –
வடதிசை மதுரை -அனைத்து திவ்ய தேசங்களையும் சேர்த்து பெரியாழ்வார் மங்களா சாசனம்
மந்த்ர ப்ரதன்-இரண்டு பதிகம் அருளிய பின்பும் -இவர் உகந்து அருளின பிரவணராய்
பல அர்ச்சா நிலங்களில் மண்டி நமக்காக அருளிச் செய்கிறார்
——–
பிரவேசம் –
சௌபரி போகத்துக்கு உறுப்பாக அநேகம் வடிவு கொண்டாற் போலே
ஆஸ்ரிதரை அனுபவிக்கைக்கு உறுப்பாக
உகந்து அருளின நிலங்கள் எல்லாம் புகுந்து
சந்நிதி பண்ணினான் ஆயிற்று அவன் –
இனி இவர் தாமும்
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி-
எங்கும் புக்கு அனுபவிக்கையிலே யாயிற்று அபேஷை பண்ணி இருப்பது –
ஒரு விஷயத்தை அனுபவிக்கப் புக்கால்
அவ்விஷயத்தில் அவயவங்கள் தோறும் ஸ்ப்ருஹை பண்ணுவாரைப் போலே யாயிற்று
இவர் எங்கும் புக்கு அனுபவிக்கப் பாரிக்கிறதும்
ஆக –
விரோதி நிரசன சீலனுமாய்
ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வாபவனாய்
ப்ரஹ்மாதிகள் ஆபன்நராம் அன்று -அவ் வாபத்துக்களைப் போக்கி
அவர்களுக்கு துக்க நிவர்தகனாய் இருக்கிறவன் –
நித்ய ஸூரிகளோடு
தம் பக்கல் ருசி உடையாரோடு
கேவலம் ப்ராஹ்மணரோடு
வாசி யற -சர்வ சமாஸ்ரயணீயனாய் கொண்டு
ஸ்ரீ சாளக்ராமத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான்-
அங்கே போய் அவனை ஆஸ்ரயிப்போம் என்று திரு உள்ளத்தோடே கூட்டுகிறார்-
கோசல ஜன பதமாகப் பெருமாளதாய் இருக்குமா போலே
ஒரு மண்டலமாக தனக்கு விஷயமாகக் கொண்டு
சந்நிஹிதனாக குறையற வர்த்திக்கிற தேசம் ஆயிற்று –
————————————————————-
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —1-5-1-
அஸாஹய ஸூரன்
கடந்து போய்-காட்டை அடைந்து இல்லை -விபீஷணனை அங்கீ கரிக்கவே -கடந்து சென்றான்
———————————————
வியாக்யானம் –
கலை -இத்யாதி –
கலை முதலாக –வர்த்திக்கக் கடவதான காட்டைக் கடந்து போய்-
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து-
தே வநே ந வநம் கத்வா -என்கிறபடியே
படை வீட்டில் நின்றும் காட்டிலே புகுகை அன்றிக்கே
காட்டில் நின்றும் ஆயிற்று காட்டிலே வந்து புகுந்தது-
(கைகேயி நாட்டில் இருந்து காட்டுக்கு செல்ல ஆணை– இவர் காட்டில் இருந்து காட்டுக்கு -)
அப்படியே இங்கும்
துஷ்ட சத்வ பிரசுரமான காட்டை கழிந்து
பின்னை யுத்த பூமியிலே யாயிற்று வந்து புகுந்தது
கலைகளையும் ஆனைகளையும் குதிரைகளையும் உடைத்தாய் இருக்கிற காட்டைக் கடந்து போய்
வென்றிச் செருக் களத்திலே வந்து புகுந்தான்
(கர தூஷணாதிகளை கொள்ள முடியாதே -கடந்து போய் என்பதால் இலங்கைக்கு சென்று என்றே கொள்ள வேண்டும்-)
அங்கு போய் புகுகிற இடத்து துணை யார் என்னில்-
சிலையும் கணையும் துணையாக-
வில்லும் அம்பும் துணையாக வாயிற்று போயிற்றது –
லஷ்மணாதிகளோ -என்னில்
அவர்களையும் ஓர் அவயவ விசேஷங்களாக நினைத்து இருந்தார்
இத்தனை போக்கி -தனித்து ஒரு துணையாக நினைத்து இருந்திலர் ஆயிற்று இவர் –
ராமஸ்ய தஷிணோ பாஹு –
முதலிகள் அடங்கலும் பெருமாளுக்கு குழைச் சரக்கானார்களாம் இத்தனை இறே
ரஷ்ய வர்க்கம் இறே
ராம லஷ்மண குப்தாச-(தூதர் வாக்கியம்-இவர்களால் ரக்ஷிக்கப்படும் முதலிகள் என்றவாறு )
வென்றிச் செருக்களத்து –
நலிய வேணும் என்னும் அபிசந்தி உண்டாய்
நலியாத மிருகங்களை தப்பிப் போனால்
பின்னையும் போய் புகுமிடம் யுத்த பூமியாய் ஆயிற்று
வெற்றியை உடைத்தான போரை விளைக்க கடவ யுத்த பூமியிலே –
அங்குப் போய் புக்க பின்பு செய்த சேஷ்டிதங்களை சொல்லுகிறது மேல்-
மலை -இத்யாதி –
பெரிய ஷோபத்தை உடைத்தான கடலை
நீரிலே ஆழக் கடவ மலைகளைக் கொண்டு அணையாகக் கட்டி –
மதிளையும் அதுக்கு-அரணான – கடலையும் உடைய இலங்கையை
கலவிருக்கையாக உடையவனுமாய் –
ஒரு தேவதையை ஆஸ்ரயித்து
அதின் பக்கலிலே ஒரு வாளைப் பெற்று
அது தனக்கு அரணாக நினைத்து இருப்பவனாய் –
துர் வர்க்கத்துக்கு எல்லாம் நியாமகனாய் –
இருக்கிற ராவணனுடைய
தலைகள் பத்தையும் அறுத்து –
தேவர்களும் தம் தாமுடைய குடி இருப்பு பெற்றார்கள்
ருஷிகளும் தம் தாமுடைய ஆஸ்ரமங்களில் இருந்து தபஸ் பண்ணப் பெற்றார்கள்
என்று உகந்தவன்
(ராமம் விராமம் -வரமும் -வரம் கொடுத்த நான்முகனும் வரம் பெற்ற ராவணனும் ஒய்வு )
அப்படி
ஆஸ்ரித விரோதியைப் போக்கி
பிற்பட்டாருக்கும் உதவுகைக்காக
வந்து வர்த்திக்கிற ஸ்ரீ சாளக்ராமத்தை
ஆஸ்ரயிக்கப் பாராய் -நெஞ்சே -என்கிறார்
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –