Archive for May, 2013

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -வியாக்யானம் -அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –

May 16, 2013

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன்  விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

பதவுரை

அமலன்–பரிசுத்தனாய்
ஆதி–ஜகத்கார பூதனாய்
பிரான்–உபகாரகனாய்
என்னை–(இழி குலத்தவனான) என்னை
அடியார்க்கு–(தனது) அடியவர்களான பாகவதர்களுக்கு
ஆள்படுத்த–ஆட்படுத்துகையாலே வந்த
விமலன்–சிறந்த புகரை யுடையனாய்
விண்ணவர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனாயிருந்து வைத்து
(ஆஸ்ரிதர்கட்காக)
விரை ஆர் பொழில்–பரிமளம் மிக்க சோலைகளை யுடைய
வேங்கடவன்–திருவேங்கடமலையில் வந்து தங்குமவனாய்
நிமலன்–ஆஸ்ரயிப்பார்க்கு அரியனாயிருக்கையாகிற குற்றமற்று, ஆஸ்ரித பாரதக்திரியத்தை வெளியிட்டு நிற்குமவனாய்
நின்மலன்–அடியாருடைய குற்றத்தைக் காண்கையாகிற தோஷமில்லாத வத்ஸலனாய்
நீதி வானவன்–சேஷ சேஷி முறை வழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரமபதத்துக்கு நிர்வாஹகனாய்
நீள் மதிள்–உயர்ந்த மதிள்களை யுடைய
அரங்கத்து–கோயிலிலே (கண் வளர்ந்தருளுகிற)
அம்மான்–ஸ்வாமியான அழகிய மணவாளனுடைய
திருக் கமல பாதம்–திருவடித் தாமரைகளானவை
வந்து–தானே வந்து
என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே–என் கண்ணுக்குள்ளே புகுந்தன போலிரா நின்றனவே

———

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை —

பெரிய பெருமாள் திருவடிகளில் அழகு மேல் விழுந்து தம்மை அடிமை கொண்டது என்கிறார் –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –
முதல் பாட்டில் –
பெரிய பெருமாள் திருவடிகளின் அழகு தம்மை ஆட்கொண்டது என்கிறார் –

ஆகாசத்தின் நின்றும் சஹ்யத்திலே வர்ஷித்து
அங்கு நின்றும் காவேரி யாறாய்ப் போய் இழிந்து
கால்களாய்ப் புகுந்து போய்
நாட்டாருக்கு உப உக்தமாமா போலே

பரமபதம் ஆகிற பரம வ்யோமத்தின் நின்றும்
திருமலையிலே வந்து இழிந்து
தெற்கு நோக்கி வந்து
பள்ளநாலியான கோயிலிலே தேங்கி
கீழ் மேலாக கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் ஆகிற
மதுரவாற்றின் இடைப் புகுந்து ஓடுகிற காலை அனுபவிக்கிறார் –

———

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம்-

அமலன் –
ஸூத்தன் -என்றபடி
இவன் ஸூத்தனாகை -யாவது -தான் ஒருவன் ஸூத்தனாகை யன்று -தன்னோடு சம்பந்தித்தாரையும்
ஸூத்தராக்க வல்ல அடிவுடைமை –
துயரறு சுடரடி இறே
பாவநஸ் சர்வ லோகானாம் த்வமேவ ரகு நந்தன -என்னுமா போலே-

அமலன் -என்கிறது
ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற தம்மை விஷயீ கரித்த பின்பு தன் பக்கல்
தோஷம் தட்டாதே -அநச் நன்ந நயோ அபிசாக ஸீத -என்கிறபடி விளங்குகிறபடி
பரமாத்மா அக்னியை உண்ணாமலேயே -பிரகாசிக்கிறது –
என் கண் பாசம் வாய்த்த பரஞ்சுடர் சோதிக்கே-

ஆதி –
ஆதியத இதி ஆதி -ஸ்ப்ருஹணீயன் -என்றபடி –
தம்மை விஷயீ கரிக்கைக்கு அடியானான் -என்று -ஆதி –என்னவுமாம் –
ஜகத் காரணத் வாதிகளைச் சொல்லவுமாம் –
ஆக இரண்டு -பதத்தாலும் -ஹேய ப்ரத்யநீகத்வமும் கல்யாண குண யோகமும் சொல்லுகிறது –

பிரான் –
இவ்வோ நிலைகளை எனக்கு அறிவித்த உபகாரகன்

பிரான் –
உபகாரத்தைச் சொல்லி -சொல்லப் பற்றாமே -எத்திறம் -என்கிறார்

அடியார்க்கு-
சத்நஹாரீ ச பார்த்தவ -என்கிறபடியே -இவ் வஸ்துவின் சீர்மையாலே இது நம்மளவில் அடங்காது-
நம் அடியார்க்கு ஆம் இத்தனை -என்று அவர்களுக்காக்கினான் என்கிறார் –
அடியார் -தம் பக்கலிலே சேஷி ப்ரதாரராய் இருக்குமவர்கள் –

என்னை யாள்படுத்த விமலன் –
தன்னிடை யாட்டமும் யறியாத என்னை -தன் அடியார்க்கு சேஷ பூதன் ஆக்கின
ஸூத்தன் -என்கிறார் –

என்னை –
ப்ரக்ருதிக்கு அடிமை செய்து போந்த என்னை –
தந்தத்தின் சீர்மை அறியாத என்னை –
தேஹாத்ம அபிமாநிகள் தீண்டாத என்னை –
நன்மைக்கு தனக்கு அவ்வருகு இல்லாதது போலே தீமைக்கு எனக்கு அவ்வருகு இல்லாத என்னை –

ஆள் படுத்த –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வைத்திலன்
அவர்களுக்கு சேஷம் ஆக்கினான்
பகவத் சேஷத்து அளவில்  நின்றால் மீள சங்கை உண்டு –
பாகவத் சேஷத்தளவும் சென்றால் மீளப் போகாதே
உகப்பாலே வருமது ஆகையாலே -ஒரு ஷேத்ரம் பத்து எட்டு க்ரயம் சென்றால் மீள விரகு இல்லை –

ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு முதலிகள் உடைய விஷயீ காரம் பெருமாளுடைய விஷயீ
காரத்துக்கு முற்பட்டாப் போலே இவருக்கு ததீய விஷயீ காரம் முற்ப்பட்ட படி –

ஆநயை நம் ஹரிச் ரேஷ்ட -அங்கு
இங்கு லோக சாரங்க மஹா முநிகளை போய் ஆழ்வாரை அழைத்துக் கொண்டு வாரும் என்றான்-

அடியார்க்கு என்னை ஆட்படுத்த –
தான் சேஷித்வதினுடைய எல்லையில் நின்றால்  போலே -சேஷத்வத்தின்
எல்லையில் என்னை வைத்தான் –

விமலன் –
என் சிறுமை பாராதே ததீயர்க்கு சேஷம் ஆக்குகையால் வந்த ஔஜ்வல்யம்
எதிரிகள் தரம் பாராதே சீரியர் தாம் தாம் அளவிலே இறே கொடுப்பது-

விண்ணவர் கோன் –
ஆள் இல்லாதவன் அல்லன் கிடீர் இப்படி விஷயீ கரித்தான் –
நித்ய ஸூரிகள் எடுத்து கை நீட்டும் படி இருக்கிறவன் கிடீர் -கதிர் பொறுக்கி ஜீவிப்பாரை போலே
நித்ய சம்சாரியாய் இருக்கிற என்னை நித்ய முக்தரோடு ஒக்க விஷயீ கரித்தான்
இவ் ஔதார்யம் கற்றதும் அவர்களோடே கிடீர் என்றுமாம்
அஸ்மாபிஸ் துவ்யோ பவதி -விபீஷணன் நம்மோடு ஒருவனாக ஆகட்டும் -என்றார்கள் இறே

விண்ணவர் கோன்
இங்குத்தை குழாத்தை ஒழிய அங்குத்தை குழாத்தையும் காட்டிக் கொடுத்தான்
உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப்பட வேண்டியது இல்லை

கோன்
அவர்களாலும் எல்லை காண முடியாது-

விரையார் பொழில் வேங்கடவன் –
பரிமளம் நிறைந்து இருந்துள்ள சோலையை உடைய திரு வேங்கட மலையை உடையவன் –
பெரிய பெருமாளை பாடா நிற்க்க திருமலையிலே போவான் என் என்னில்
ஒருவனைக் கவி பாடும் போது அவனுடைய வரத்து சொல்லி இ றே கவி பாடுவது –
பரம பதத்தில் -நின்றும் ஸ்ரீ மதுரையிலே தங்கி -திருவாய்ப்பாடிக்கு வந்தால் போலே –
ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும் -திருமலையிலே தங்கிக் காணும் கோயிலுக்கு வந்தது –
என்று பட்டர் அருளிச் செய்யும் படி

அன்றியே –
கோயில் போக்யதை தமக்கு நிலம் அல்லாமையாலே திருமலையிலே போய் தரிக்கப்
பார்க்கிறார் -என்றுமாம் –

விரையார் –
நித்ய ஸூரிகளை உடையவன் ஆவதுக்கு மேல் ஓர் ஐஸ்வர்யம்

விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் –
ஆற்றிலே அழுந்துவார் -ஆழம்காலிலே இளைப்பாறத் தேடுமா போலே அவர்களும்
வந்து அடிமை செய்யும் இடம்

வேங்கடவன் –
அர்ச்சாவதாரத்துக்கு பொற் கால் பொலிய விட்ட இடம் –

நிமலன்
இத் தலையை பெறுகைக்கு பச்சை இட்டவனும் தானே
இத் தலையில் அர்த்தித்வம்  இன்றிக்கே இருக்க இப்படி உபகரிக்கையால் வந்த ஔஜ்வல்யம்
இவனும் ஓர் அடி இடப் பார்த்து இராது ஒழிகை
பத்ப் யாமபிக மாச்சைவ ஸ்நேக சந்தர்சநேந ச-

நீதி -வானவன்
சேஷ சேஷித்வங்கள் முறை மாறாத நித்ய விபூதியில் உள்ளவன்
ஈஸ்வரோஹம்  -என்று எதிரிட்டு இருக்கும் இடம் இ றே இவ்விடம் –
அங்கு கலக்குவாரும் இல்லை கலங்குவாரும் இல்லை
இங்கு கலக்குவாரும் உண்டு கலங்குவாரும் உண்டு –

நீள் மதிள்  அரங்கத்தம்மான் –
நீதி வானவன் -என்னா -நீள் மதிள்  அரங்கத்தம்மான் –என்கிறார் –
அளப்பரிய ஆரமுதை அரங்கமேய அந்தணனை -என்னுமா போலே

நீள் மதிள்-
ரஷகத்துவதுக்கு போரும்படியான மதிளை உடைய பெரிய கோயிலிலே கண் வளர்ந்து
அருளுகிற பரம சேஷி –

அம்மான் –
ஈரரசு தவிர்ந்தால் இ றே சேஷித்வம் பூர்ணம் ஆவது
திரு மலையிலே போக்யதை நிலம் இல்லாமையாலே மீளவும் கோயிலிலே புகுகிறார்
வெள்ளத்தை கள்ளமடையாலே பள்ளத்தே விடுமா போலே
திருவேம்கடமுடையான் வடக்குத் திருவாசலாலே வந்து புகுந்தான் அத்தனை -என்றுமாம்

திருக் கமல பாதம் –
செவ்வி குளிர்த்தி  விகாசம் பரிமளம் தொடக்கமானவை
ஆதித்யனைக் கண்டால் இறே  தாமரை அலருவது –
இத்தாமரைக்கு ஆதித்யன் இவர் –
பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்
இவருடைய தளிர் புரையும் திருவடிகள் இருக்கிற படி
அம்மான் திருக் கமல பாதம் –
தொடர்ந்து வருகைக்கு ப்ராப்தி –

வந்து –
த்விபாந்தரத்தில் சரக்கு சேர வேண்டினால் பாதிப் பாதி வழி யாகிலும் –
வருதல் -ஒருதலைப் பற்றுதல் செய்ய வேணும் இறே -அங்கன் இன்றியே –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்கிறபடி
வழி வந்தானும் -தானே பற்றினானும் தானே -என்கிறது-

என் கண்ணினுள்ளன
எத்தைக் கண்ட கண்களுக்கு இவை விஷயம் ஆகின்றன

நீதி வானவன் -கமலபாதம் -என் கண்ணினுள்ளன-
சதா தர்சனம் பண்ணுகிறவர்கள் உடைய கண்ணுக்கு இலக்கானது கிடீர் என் கண்ணுக்கு இலக்கு ஆய்த்து –
வல்லதனை நாளும் விரோதம் பண்ணினேன்
போக்கற்றவாறே என் கண்ணை செம்பளித்தேன்
தொடர்ந்து வந்து செம்பளித்த கண்ணை யுறுத்து உள்ளே புகுந்து நிற்கையாலே என் கண்ணினுள்ளன-என்கிறார்

அன்றியே
தம் கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று கண்ணைச் செம்பளித்தார்
கண்ணினுள்ளே பிரகாசிக்கத் தொடங்கிற்று-

ஒக்கின்ற –
பிரயோஜனம் இரண்டுக்கும் ஒத்திரா –
நின்றது அங்குதைக்கு சீல ஸித்தி -இங்குத்தைக்கு ஸ்வரூப ஸித்தி

ஒக்கின்ற –
ப்ரத்யஷ சாமாநகாரமாய் -இருத்தது -என்னுதல்
என் கண்ணுக்கு இலக்கான இடத்திலும் பழைய நிலை குலையாது -இருந்தது என்னுதல்
சம்சாரிகளைப் பார்த்து உங்களுக்கும் ஒக்குமோ என்கிறார் ஆதல்
இந்த லாபம் அத் தலைக்கு ஒக்குமோ என்கிறார் ஆதல் –

அமலன் -உயர்வற உயர்நலம் உடையவன்
ஆதி –யவன்
பிரான் மயர்வற மதி நலம் அருளினன்
அடியார்க்கு -பயிலும் சுடர் ஒளி
விண்ணவர் கோன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
வந்து -அவர் தொழுது எழு -என்றார் -இவர்க்கு அவை தானே -வந்தன-

——————————————————————-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய வியாக்யானம்-

அமலன் –
ஸ்ரீ வால்மீகி பகவான் -கோ குணவான் -என்று ப்ரஸ்நம் பண்ண -இஷ்வாகு வம்ஸ ப்ரபவ –
என்று சீல குணத்தை முந்துறச் சொன்னாப் போலேயும் –
நம் ஆழ்வார் ஆநந்த வல்லியில் ஆநந்த குணத்தை -உயர்வற உயர்நலம் உடையவன் –
என்று ப்ரதமத்திலே அநுபவித்தாப் போலேயும் –
இவரும் தம்முடைய நிஹீநதையைப் பாராதே மேல் விழுந்தபடியைக் கண்டு
அவனுடைய ஹேய ப்ரத்யநீகதையைப் முற்பட அனுபவிக்கிறார் –

தம்முடைய ஜன்மாதிகளால் உண்டான நிகர்ஷ அனுசந்தாநத்தாலே அகல –
அது தானே பற்றாசாக -திரு உள்ளம் புண்பட்டு மேல் விழுந்த இடத்திலும்
அத் தலைக்கு அவத்யம் இன்றியிலே நிர்மலனாய் இருக்கிற படியைக் கண்டு -அமலன் -என்கிறார் –
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதி –

அமலன் –
அபஹத பாப்மத்வாதி குணங்கள் ஆத்மாவுக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஹேய சம்பந்த அவஹமாய் பகவத் ப்ரசாதத்தாலே உண்டாக வேண்டி இருக்கும் –
இவன் அங்கன் அன்றியே இருக்கும் –

அமலன் –
ஸூத்தன் என்றபடி -இவன் ஸூத்தனாகை -யாவது -தான் ஒருவன் ஸூத்தனாகை யன்று -தன்னோடு சம்பந்தித்தாரையும்
ஸூத்தராக்க வல்ல அடிவுடைமை –
துயரறு சுடரடி இறே-
பாவநஸ் சர்வ லோகானாம் த்வமேவ ரகு நந்தன -என்னுமா போலே-

அமலன் –
அகில ஹேய ப்ரத்ய நீகன் –
அசித் கதமான பரிணாமம் -தத் சம்ஸ்ருஷ்ட சேதன கதமான -அஞ்ஞான துக்கங்கள் –
முக்த கதமான ஜ்ஞான சங்கோச விகாசங்கள் –
நித்ய சித்த கதமான பாரதந்த்ர்யம்
இவையாகிய ஹேயங்களுக்கு ப்ரத்ய நீகனாய் இருக்கும்

பாரதந்த்ர்யத்துக்கு குறை என் என்னில் –
தனக்கு அவ்வருகு ஒருவன் உளனானால் வருமதே பாரதந்த்ர்யம் -அது ஈஸ்வரனுக்கு
அவத்யம் இறே -பரதந்த்ரனுக்கு சேஷித்வம் அவத்யமா போலே
புருஷனுக்கு ஸ்தநோத் பேதமும் ஸ்திரீகளுக்கு சமச் குணம் யோகமும் காணும் அந்த
மாறாட்டத்தாலே வரும் அவத்யம் –

ப்ரத்ய நீகனாகையாவது -உக்த அவத்யங்கள் தன்னை ஸ்பர்சியாமல் இருக்கும் அளவன்றிக்கே
புறம்புள்ள அவத்யங்களையும் அறுத்துக் கொடுக்க வல்லவனாகை
தேஜஸ் திமிரங்கள் போலே ஹேய ப்ரத்யநீகன் -என்கை –
ஆகை  இறே இவனை ஒழிந்தாருக்கு அடைய இவனே சுபாஸ்ரயமாய் இருக்கிறது –

ஆதி –
இப்படி நிஹீநரான உம்மை மேல் விழுந்து அங்கீகரிக்கைக்கு அடி என் என்ன
பெற்ற பாவிக்கு விடப்போமோ -என்கிறார் –

ஆதி –
ஆதி யத இதி ஆதி -ஸ்வரூப ரூபாதிகளைக் கண்டு எல்லாரும் மேல் விழும்படி இருக்கிற தான்
இத் தலையில் நிஹீநதை பாராதே மேல் விழுந்தான் -என்கை
ஆதி யத இதி ஆதி-தன்னை அனுபவித்தால் வேறு ஒன்றில் போக ஒட்டாதபடியாய் இருக்கும் –

ஆதி –
பூர்வஜ -என்னுமாபோலே -என்னுடைய நிகர்ஷத்தைப் போக்கி தன் பக்கலில் சேர்த்துக் கொள்ளுகையாலே
என் பேற்றுக்கு முற்பாடன் ஆனவன் –

ஆதி –
அடியில் அழிந்த ஜகத்தை உண்டாக்கினாப் போலே -நான் அழித்துக் கொண்ட ஸ்வரூபத்தை
உண்டாக்கினவன் –
இத்தால் -கல்யாண குண யோகத்தை சொல்லிற்று –

ஆக இரண்டு -பதத்தாலும் -ஹேய ப்ரத்யநீகத்வமும் கல்யாண குண யோகமும் சொல்லிற்று –

பிரான் –
கீழ்ப் பண்ணின உபகாரத்தை நினைத்து -பிரான் -என்கிறது ஆதல் –
மேல் பண்ணப் புகுகிற உபகாரத்தை நினைத்து பிரான் -என்கிறது ஆதல் –

பிரான் –
என் நிகர்ஷம் பாராதே என்னை விஷயீ கரித்த உபகாரகன்-

அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –
எனக்கு -என்றும் -பிறர்க்கு -என்றும் திரிந்த என்னை –
தனக்கும் தன் அடியார்க்கும் ஆக்கின பரிசுத்த ஸ்வபாவன்
தலையைப் பிடித்து கால் கீழே இட்டுக் கொண்டான் –
ரத்ன ஹாரீ ச பார்த்திவ என்னுமா போலே நல்லது கண்டால் -அவர்களுக்கு -என்று இறே –

ஸ்வ விஷய சேஷத்வத்தை உண்டாக்கின அளவு அன்றிக்கே
ததீய சேஷத்வ பர்யந்தமாக்கி
ததீய சேஷத்வம் நிலை நிற்கும்படி பண்ணினான்
ஆத்மாவுக்கு நிலை நின்ற வேஷம் சேஷத்வம் ஆகையாலே -அடியார்க்கு -என்கிறார்-

அடியார்க்கு –
இவர்களுக்கு -ஊரும் பேரும் தாருமாகிறது சேஷத்வம் ஆய்த்து –
சேஷத்வம் இறே இவ் வாத்மாவுக்கு பிரதம நிரூபகம்

என்னை –
தேஹாத்ம அபிமாநிகளும் தீண்டாத என்னை –
ப்ரக்ருதிக்கு அடிமை செய்து போந்த என்னை –
தந்த பதத்தின் சீர்மை யறியாத வென்னை –
நன்மைக்கு தனக்கு அவ் வருகு இல்லாதாப் போலே தீமைக்கு எனக்கு அவ் வருகு இல்லாத வென்னை

ஆட் படுத்த –
பகவத் சேஷத்து அளவில்  நின்றால் மீள சங்கை உண்டு –
பாகவத் சேஷத்த்ளவும் சென்றால் மீளப் போகாதே
உகப்பாலே வருமது ஆகையாலே -ஒரு ஷேத்ரம் பத்து எட்டு க்ரயம் சென்றால் மீள விரகு இல்லை –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு முதலிகள் உடைய விஷயீ காரம் பெருமாளுடைய விஷயீ
காரத்துக்கு முற்பட்டாப் போலே இவருக்கு ததீய விஷயீ காரம் முற்ப்பட்ட படி –
ஆநயை நம் ஹரிச் ரேஷ்ட –

ஆட் படுத்த –
தான் சேஷித்வதினுடைய எல்லையில் நின்றால்  போலே -சேஷத்வத்தின்
எல்லையில் என்னை வைத்தான் –

அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –
அவர்களோடு சம புத்தி பண்ணித் தராமே -அவர்களுக்கு சேஷ பூதன் ஆக்கின பரிசுத்த ஸ்வபாவன் –
ஐஸ்வர்யார்த்திகளும் ஆத்ம ப்ராப்தி  காமரும் தன்னைப் பற்றுவர்கள் இறே –
இவ்வளவு புகுர நிறுதுகைக்கு அதிகாரிகள் அல்லர்களே யவர்கள்
அநந்ய பிரயோஜனர் இறே இவர்க்கு ஆவார்
தாமும் அநந்ய பிரயோஜனர் ஆகையாலே -விசேஷித்து லோக சாரங்க மஹா முனிகளை
இட்டு தம்மை விஷயீ கரித்ததை சொல்லுகிறார்
தம்மை வஹித்த அளவில் தாம் சேஷ பூதர்  ஆனபடி என் என்னில்
திருத்துழாய் திரு அபிஷேகத்தில் இருந்தது என்னா சேஷத்வம் குலையாதே-

மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம்ன் ருபை -என்றாம் என்னா
அவனுடைய சேஷித்வம் குலையாதாப் போலே

(மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம் ந்ருபை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12-என்றும்
கிங்க ரௌ சமுபஸ்தி தௌ -பால -31-4-என்றும் சொல்லக் கடவது இறே-

சர்வ நியந்தா வானவன் ஒரு சம்சாரிக்கு புத்திரன் ஆனான் இறே –
இது இறே ஆஸ்ரித அர்த்தமான ஸ்வரூப அந்யதா பாவம் –)

விமலன் –
என் சிறுமை பாராதே ததீயர்க்கு சேஷம் ஆக்குகையால் வந்த ஔஜ்வல்யம்
எதிரிகள் தரம் பாராதே சீரியர் தம் தாம் அளவிலே இறே கொடுப்பது-

விண்ணவர் கோன் –
நிஹீ நரான உம்மை இப்படி விஷயீ கரித்தது ஆள் இல்லாமையாலேயோ என்னில் –
ஒரு த்ரிபாத் விபூதியாக தன்னை தாலாட்ட இருக்கிறவன் கிடீர் என்னை விஷயீ கரித்தான் -என்கை
இவ் ஔதார்யம் கற்றது அவர்களோடே கிடீர் என்றுமாம் –
அஸ்மாபிஸ் துவ்யோ பவதி -விபீஷணன் நம்மோடு ஒருவனாக ஆகட்டும் -என்றார்கள் இறே

விண்ணவர் கோன்
இங்குத்தை குழாத்தை ஒழிய அங்குத்தை குழாத்தையும் காட்டிக் கொடுத்தான்
உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப்பட வேண்டியது இல்லை

கோன்
அவர்களாலும் எல்லை காண முடியாது-

விரையார் பொழில் வேங்கடவன் –
பரிமளம் நிறைந்து இருந்துள்ள சோலையை உடைய திரு வேங்கட மலையை உடையவன்
சர்வ கந்த என்கிற வஸ்து வாகையாலே போலியான பரிமளம் கண்டு கால் தாழ்ந்தது இத்தனை
குஸஸ்தலே நிவஸத் -என்னுமா போலே
பரம பதத்தில் நின்றும் கோயிலிலே ஏற வருகைக்கு என்று தங்குகிற தேசம் திருமலை

பிள்ளை திரு நறையூர் அரையரை சிலர் -பெரிய பெருமாளை அனுபவிக்க இழிந்தவர்
திருவேம்கடமுடையானைப் பாடப் போவது என் என்ன –
ஆற்றிலே அமிழ்ந்துகிறவன் ஒரு காலை  தரையிலே ஊன்றினால் பிழைக்கலாமோ
என்று கால்
தாழ்க்குமா போலே இவரும் பெரிய பெருமாள் அழகிலே அழுந்துகிறவர் ஆகையாலே
திருமலையிலே கால் தாழ்ந்தார்-

அது மடுவாகிறது அறிகிறிலர் -வேறு சிலர்
பெரிய பெருமாளை பாடா நிற்க்க திருமலையிலே போவான் என் -என்று அவரைக் கேட்க
ஒருவனைக் கவி பாடும் போது அவனுடைய வரத்து சொல்லி இறே கவி பாடுவது –
பரம பதத்தில் -நின்றும் ஸ்ரீ மதுரையிலே தங்கி -திருவாய்ப்பாடிக்கு வந்தால் போலே –
ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும் -திருமலையிலே தங்கிக் காணும் கோயிலுக்கு வந்தது –
நித்ய சூரிகளை உடையவன் ஆவதுக்கு மேல் ஓர் ஐஸ்வர்யம்

விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் –
ஆற்றிலே அழுந்துவார் -ஆழம்காலிலே இளைப்பாறத் தேடுமா போலே அவர்களும்
வந்து அடிமை செய்யும் இடம்

வேங்கடவன் –
அர்ச்சாவதாரத்துக்கு பொற் கால் பொலிய விட்ட இடம் –

நிமலன்
நிர்ஹேதுகமாக விஷயீ கரித்த ஸூத்தி யோகத்தை உடையவன் –
இத்தலையை பெறுகைக்கு பச்சை இட்டவனும் தானே
இத்தலையில் அர்த்தித்வம்  இன்றிக்கே இருக்க இப்படி உபகரிக்கையால் வந்த ஔஜ்வல்யம்
இவனும் ஓர் அடி இடப்பார்த்து இராது ஒழிகை
ஓர் அடி இட்டார் உண்டாகில் -பத்ப் யாமபிக மாச்சைவ ஸ்நேக சந்தர்சநேந ச -ஆபிமுக்யம்
அடியாக அங்கீகரித்து ஓர் அஞ்சலி மாதரமும் கூட உண்டு அறுக்க மாட்டாதான் ஒருவன்

நிமலன் –
இத்தலைக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே தன பேறாக இருக்கை

அமலன் -என்றது இவரைத் தனக்கு ஆக்கினபடி –
விமலன்-என்றது தன் அடியார்க்கு ஆக்கினபடி –
நிமலன் -என்றது நான் பச்சை இடா நிற்க என் கார்யம் செய்தான் -என்கை

நிமலன் –
இது தன் பேறாக செய்தான் -என்கிறார் –
க்ருத க்ருத்யஸ்த தாராம -என்கிறபடியே

நின் மலன் –
தான் உபகரித்தானாய் இத்தலை -உதவிக் கைம்மாறு என்னுயிர் -என்றால் போலே
பிரத்யுபகாரம் தேடித் தடுமாறாத படி -ப்ரணஷ் டஸ்ய யதா லாப என்கிறபடியே
உடையவன் உடைமையைப் பெற்றான் ஆகில் நமக்கு என் என்று –
ஆத்ம லாபம் தன்னதாம்படி இருக்கிற ஸூத்தியை உடையவன் –

நீதி -வானவன்
இப்படி புகுர நிறுத்துகைக்கு அடி -சேஷ சேஷித்வங்கள் முறை மாறாத நித்ய விபூதி-வாசனை என்கை
ஈஸ்வரோஹம்  -என்று எதிரிட்டு இருக்கும் இடம் இறே இவ்விடம் –

அங்கு கலக்குவாரும் இல்லை கலங்குவாரும் இல்லை
இங்கு கலக்குவாரும் உண்டு கலங்குவாரும் உண்டு –

நீள் மதிள்  அரங்கத்தம்மான் –
நீதி வானவன் -என்னா -நீள் மதிள்  அரங்கத்தம்மான் –என்கிறார் –
அளப்பரிய ஆரமுதை அரங்கமேய அந்தணனை -என்னுமா போலே
நீள் மதிள் அரங்கம் –

ரஷகத்துவதுக்கு போரும்படியான மதிளை உடைய பெரிய கோயிலிலே கண் வளர்ந்து
அருளுகிற பரம சேஷி –
இப் பாசுரம் கேட்டுப் போலே காணும் திருமங்கை ஆழ்வார் திரு மதிள் செய்தது
அழகிய வாயாலே இது அருளிச் செய்த பின்பாகாதே திரு மாளிகைகளும் திருக்
கோபுரங்களும் கனத்தது-

அம்மான் –
அங்குள்ளோரோடு ஒத்த ப்ராப்தி இங்கு உள்ளோரோடும் உண்டாகையாலே இங்கு வந்து சாய்ந்து அருளிற்று

அம்மான் –
ஈரரசு தவிர்ந்தால் இறே சேஷித்வம் பூர்ணம் ஆவது
திரு மலையிலே போக்யதை நிலம் இல்லாமையாலே மீளவும் கோயிலிலே புகுகிறார்
வெள்ளத்தை கள்ளமடையாலே பள்ளத்தே விடுமா போலே
திருவேம்கடமுடையான் வடக்குத் திருவாசலாலே வந்து புகுந்தான் அத்தனை -என்றுமாம்-

திருக் கமல பாதம் –
பெரும் காற்றிலே யிழிவார் தெப்பம் கொண்டு இழியுமா போலே -ஒரு தாமரைப் -பூவை
திருஷ்டாந்தம் -ஆக்குகிறார் -செவ்வி குளிர்த்தி நாற்றம் விகாசம் -இவை தாமரைப் பூவைப் போலே இருக்கையாலே –
ஆதித்ய சன்னதியிலே அலறும் தாமரை போலே ஆஸ்ரித சன்னதியிலே அலறும் தாமரை யாயத்து -திருவடிகள்-

பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்
இவருடைய தளிர் புரையும் திருவடிகள் இருக்கிற படி
அம்மான் திருக் கமல பாதம் –

என்கையாலே ப்ராப்தமுமாய் ப்ராப்யமுமாய் ஆன திருவடிகள் -என்கை
நாராயண சரணங்கள் –என்றபடி

வந்து –
என்று அவனுடைய உபாய பூர்த்தி -சொல்லுகிறது
விதிஸி வசனகாத் யைர்தத் யாது மத்யந்த தூரமான திருவடிகள் கிடீர் என்னளவும் வந்து
விஷயீ கரித்தது

த்விபாந்தரத்தில் சரக்கு சேர வேண்டினால் பாதிப் பாதி வழி யாகிலும் –
வருதல் -ஒருதலைப் பற்றுதல் செய்ய வேணும் இறே -அங்கன் இன்றியே –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்கிறபடி
வழி வந்தானும் -தானே பற்றினானும் தானே -என்கிறது-

என் கண்ணினுள்ளன
எத்தைக் கண்ட கண்ககளுக்கு இவை விஷயம் ஆகின்றன
நீதிவானவன் -கமலபாதம் -என் கண்ணினுள்ளன-
சதா தர்சனம் பண்ணுகிறவர்கள் உடைய கண்ணுக்கு இலக்கானது கிடீர் என் கண்ணுக்கு இலக்கு ஆய்த்து –
வல்லதனை நாளும் விரோதம் பண்ணினேன்
போக்கற்றவாறே என் கண்ணை செம்பளித்தேன்
தொடர்ந்து வந்து செம்பளித்த கண்ணை யுறுத்து உள்ளே புகுந்து நிற்கையாலே என் கண்ணினுள்ளன-என்கிறார்
அன்றியே
தம் கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று கண்ணைச் செம்பளித்தார்
கண்ணினுள்ளே பிரகாசிக்கத் தொடங்கிற்று-

ஒக்கின்ற –
பிரயோஜனம் இரண்டுக்கும் ஒத்திரா –
நின்றது அங்குதைக்கு சீல ஸித்தி -இங்குத்தைக்கு ஸ்வரூப ஸித்தி

ஒக்கின்ற –
என் கண்ணுக்கு இலக்கான உங்களுக்கும் ஒக்கும் என்கிறார் –ஆதல்
கண்ணினுள்ளன ஒக்கின்றவே -என்று ஒரு பதமாய்
என் கண்ணினுள்ளன வானாப் போலே இரா நின்றது -என்றபடி –

ஒன்பது பாட்டு வழியிலே அனுசந்தித்து பத்தாம் பாட்டிலே திருவடி தொழுதார் என்கிற
ஐதிகத்தின் படியே மானஸ சாஷாத்காரம் தான் கண்ணிட்டுக் கண்டால் போலே இருக்கை
அங்கன் இன்றிக்கே –
மானஸ சாஷாத்காரத்தோடு சேர்ந்து இருந்ததீ -சஷூர் விஷயமான திருவடிகள் என்றுமாம் –

அமலன் -உயர்வற உயர்நலம் உடையவன்
ஆதி –யவன்
பிரான் மயர்வற மதி நலம் அருளினன்
அடியார்க்கு -பயிலும் சுடர் ஒளி
விண்ணவர் கோன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
வந்து -அவர் தொழுது எழு -என்றார் -இவர்க்கு அவை தானே -வந்தன –

———————————————————————-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -அவதாரிகை
இதில் முதல் பாட்டு -திரு மந்த்ரத்திலும் த்வயத்திலும் முமுஷுவுக்கு அவஸ்ய
அனுசந்தேயங்களான அர்த்தங்களை ஸூசிப்பிக்கிறது

வியாக்யானம்
அமலன் -என்கிறது மலப்ரதிபடன் -என்றபடி -இத்தால் மோஷ ப்ரதத்வம் சொல்லிற்று ஆய்த்து –
இது பிரதானமான ரஷகத்வம் ஆகையாலே பிரியப் பேசப்படுகிறது

ஆதி –
ஏஷ கர்த்தா ந க்ரியதே -இத்யாதிகளில் படியே சர்வ ஜநதேக காரண பூதன்

இத்தால் -காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுவுக்கு சரணமாக பற்றப்படுமவன் என்று பலிதம்

இக் காரணத்வமும் மோஷ பிரதத்வமும் சத்ர சாமரங்கள் போலே சர்வ லோக
சரண்யனுக்கு விசேஷ சிஹ்னங்கள்-

பிரான் –
கருணா க்வாபி புருஷே இத்யாதிகளில் படியே சர்வ உபகாரகன்
இங்கு ஆத்மாக்கள் உடைய சத்தாதி ஸ்தாபனம் முதலாக பரிபூர்ண கைங்கர்ய ப்ரதான
பர்யந்தமாக -ப்ரத்யுபகாராதி நிரபேஷனாவனனுடைய
அநுகம்பா அக்ருத்யங்கள் எல்லாம் சாமான்யேந -சொல்லப்படுகிறது
இது எல்லாம் பிரதம அஷரார்தமான ரஷண -பேதம்
இவை தம்மளவில் பர்யவசித படியிலே இம் மூன்று பதத்துக்கும் தாத்பர்யம்
இது மேல் பாசுரங்களிலும் காணலாம்-

அடியார்க்கு என்னை -ஆட்படுத்த -என்கிற இடத்தில் –
அடியார்-என்கிற இத்தால் -த்ருதீய அஷரத்திலே சொன்ன ஜீவ வர்க்கமும்
ஜீவனில் ஈஸ்வரனைக் காட்டில் வேறுபாடும் அந்யோந்யம் பிரிவும் -காட்டப்படுகிறது –

அடியார் -என்றால்
சர்வ சாதாரணமாக சதுர்த்தியில் சொன்ன தாதர்த்யவான்களை எல்லாம்
காட்டிற்றே யாகிலும் -இங்கு அடியார் -என்கிறது –
யோ ஹ்யேநம் புருஷம் வேத தேவா அபி ந தம் விது –
என்னும்படி அபரிச்சேத்ய மகாத்யம்யரான சேஷத்வ ஜ்ஞான ரசிகரை –

இப்படி அடியார்க்கு -என்று விசேஷ உபாதானம் பண்ணுகையாலே –
மத்யம அஷரத்தின் படியே நிருபாதிக சேஷிகள் வேறு இல்லாத -படியும்
கர்ம உபாதிக சேஷிகளோடு தமக்கு துவக்கு அற்ற படியும் சொல்லிற்று ஆயிற்று –

சர்வ சேஷி யாகையாலே சர்வத்தையும் யதேஷ்டமாக விநியோகிக்க ப்ராப்தனாய் –
நிரந்குச ஸ்வதந்த்ரன் ஆகையாலே சர்வத்தையும் யதேஷ்டமாக விநியோகிக்க சக்தனுமான
சர்வேஸ்வரன் -அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரீ தர்க்கு சர்வமும் சேஷமாகக் கடவது -என்று
விநியோக விசேஷத்தால் சர்வருக்கும் பாகவத சேஷத்வம் நித்ய சித்தமானால்
அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரீதர்க்கு பகவத சேஷத்வம் ஈஸ்வரன் தன்னையும் பாகவதரையும் ஒழிந்த
அந்யரைப் பற்ற சேஷத்வம் இல்லாதபடி-வருகிறதே இதின் பலமான -கைங்கர்யமும் இப்படி
வருகிறது ஆகையாலே -என்னை அடியார்க்கே ஆட்படுதினான் -என்ற அவதாரணமும்
இங்கே விவஷிதம்

மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பரோடு உற்றிலேன் -என்று இறே இவர்களுடைய -பாசுரம்-

என்னை ஆட் படுத்த –
யூயமிந்த்ரிய கிங்கரா -என்னும்படி இந்திரிய கிங்கரனாய் வைத்து -அதுக்கு மேலே –
ஈஸ்வரோஹம் -என்று இருக்கக் கடவ -என்னை -அதோஸஹமபி தே தாஸ -என்னப்
பண்ணின உபகாரத்தில் காட்டிலும் -உற்றதும் உன் அடியார்க்கு -அடிமை என்னப்
பண்ணின இதுக்கு மேலே ஒரு உபகாரம் உண்டோ என்று -இப் பரம உபகாரத்தையும்
பிரித்து -பேசுகிறார்
இது நமஸில் தாத்பர்யம்
கீழ்ச் சொன்ன க்ர்த்ருத்வாதிகளாலே -எருத்துக் கொடி யுடையான் -முதலான ஆத்மாந்தரங்களுக்கு
போலே அஜ்ஞாநாதி தோஷங்கள் இவனுக்கு உண்டாகில் இவன் முன்பு சொன்ன
சாஷான் மோஷ ப்ரதானம் பண்ண வல்லனோ -என்ன –

விமலன்
நித்ய நிர்தோஷன் -இத்தால் பத்த முக்த விலஷணன் -என்றது ஆயிற்று –

இவ்வளவு ஸூரிகளுக்கும் இல்லையோ என்ன –
விண்ணவர் கோன் –
பராதீன ஸூத்தி யோகத்தை உடையரான ஸூரிகளைக் காட்டில் வேறு பட்டவன் –
இத்தாலே ஸூரி சேவ்யமான பர ரூபமும் தோன்றுகிறது
இப்படி எட்டா நிலத்திலே இருக்கும் இருப்பு இங்கு உள்ளாருக்கு நிலம் அன்றே -என்ன-

விரையார் பொழில் -வேம்கடவன்
பரிமளம் வடிவு கொண்டால் போலே இருக்கிற திருச் சோலைகளை உடைய திரு மலையிலே
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்கிறபடியே எல்லாருக்கும்
ஆஸ்ரயிக்கவும் அநுபவிக்குமாம்படி -இருள் தரும் மா ஞாலத்துள் குன்றத்து இட்ட விளக்காய் -நிற்கிறவன்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் -ஆவேனே என்னும்படி பிறந்த ஸ்தாவரங்களுடைய
ஆமோதம் அதிசயமாய் இருக்கும் –

இப்படி சர்வ ஸூலபன் ஆனாலும்
அவ் வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
என்னும்படி -நிற்குமோ -என்ன

நிமலன்
ப்ரஹ்ம ருத்ராதிகளும் அஞ்சி அருளப்பாடு முன்னாக அணுக வேண்டும்படியான
ஐஸ்வர்யத்திலே குறும்பற்ற நம்பிக்கு கூசாதே நிரந்தர சம்ஸ்லேஷம் பண்ணலாம்படி
தன்  ஈஸ்வர சுணை யாகிற ஆஸ்ரயண விரோதி தோஷத்தை -மறைத்து
அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி -என்கிறபடியே ஆஸ்ரீத பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு நிற்குமவன்
இப்படி சௌலப்ய சௌசீல்யங்கள் உண்டானாலும் ஆஸ்ரீத தோஷத்தைக் காணும் ஆகில்
அணுகக் கூசார்களோ –என்னில்

நின்மலன் –
அவிஜ்ஞாதா -என்றும் -என் அடியார் அது -செய்யார் என்றும் சொல்லுகிறபடியே
ஆஸ்ரீதருடைய தோஷ தர்சனம் ஆகிற சரண்ய தோஷம் இல்லாதவன்
சர்வஜ்ஞனாய் இருக்கச் செய்தே ஆஸ்ரீத தோஷத்தை காணான் என்றது –
காணும் அதுவும் இவர்கள் உடைய தோஷத்தைக் கழிக்க உறுப்பாம் -என்றபடி –

விமலன் -என்று தொடங்கி -இவ் வஞ்சு பதங்களாலே நாராயண சப்தத்தில்
உபாயத்வ ப்ராப்யத்வங்களுக்கு உபயுக்தமான உபய லிங்கத்வமும்
உபய விபூதி நிர்வாஹகத்வமும் சொல்லிற்று ஆயிற்று

மேல் -இவன் ஸ்வரூப ப்ராப்த கைங்கர்ய ரூபமான நீதியிலே நிரதரான நித்ய ஸூரிகளுக்கு
சேவ்யனானாப் போலே நமக்கும் சேவ்யனாம் என்று -சதுர்த்தியில் கருத்தான
கைங்கர்ய பிரதி சம்பந்தித்வத்தை அனுசந்திக்கிறார்

நீதி -வானவன்
இங்கு வான் -என்கிற சப்தம் ஸூரி சஹிதமான பரம பதத்தை சொல்லுகிறது
நீதியை நடத்துவிக்கும் வானிலே வர்த்திக்குமவன் -என்னவுமாம் –

தேன வஞ்சயதே லோகன் மாயா யோ கேந கேசவ -என்கிறபடியே –கலக்குவாரும்
அவசா நந்தி மாம் மூடா -என்கிறபடியே கலந்குவாரும் இல்லாத தேசம் ஆகையாலே
தாஸ்யம் ஐஸ்வர்ய யோகேன ஜ்ஞாதீ நாஞ்ச கரோம் யஹம் –என்றும்
பரம ஈஸ்வர சம்ஜ்ஞோஸ்ஜ்ஞா கிமந்யோ மய்ய வஸ்திதே -என்றும்
இங்கு பிறக்கும் ஈசேசி தவ்யத்தின் மாறாட்டம் இல்லாத பரம பதத்தில் நித்ய வாஸம்
பண்ணுகிறவன் என்றது ஆய்த்து-

இப்படி சர்வ சேவ்யனான சர்வ சேஷி -விபீடணற்கு வேறாக நல்லான் -என்கிறபடியே
தமக்கு இப்போது விசேஷித்து அனுபவிகலாம்படியைப் பேசுகிறார் –

நீள் மதிள் அரங்கத்தம்மான் –
அயோத்யை -என்றும் அபராஜிதை -என்றும் சொல்லுகிற கலங்கா பெரு நகரத்தின் படியைக்
கொடி யணி நெடு மதிள்களாலே -ஸூ ரஷிதமான ஸ்தல விசேஷத்தாலே காட்டி –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான -தன் படியை -செங்கோல் உடைய திருவரங்க செல்வனார் ஆன
ஆகார விசேஷத்தாலே அறிவித்துக் கொண்டு சேஷித்வத்தின் எல்லையிலே தான் நின்றால் போலே
சேஷத்வத்தின் எல்லையில் என்னை நிறுத்தின ஸ்வ தந்திர ஸ்வாமி

அரங்கத்தம்மான் –
நீர்மைக்கும் மேன்மைக்கும் எல்லை யானவன்
இவனுடைய உபாயத்வ ப்ராப்யத்வங்களில் உறைப்பு உண்டான திருவடிகளை அனுபவிக்கிறார்

திருக் -கமலபாதம்
பாவநத்வ போக்யத்வங்களாலே சுபாஸ்ரயமான திருவடிகள் –
திருவுக்கு லீலா கமலம் போலே இருக்கிற பாதம் -என்னவுமாம்-

வந்து
வந்து என்கிற இத்தால் ஓடின தம்மை துடர்ந்த படியும்
அயத்ந லப்தங்களான படியும் -தோன்றுகிறது -இத்திருவடிகளில் வைத்த கண்
வாங்க ஒண்ணாத படியான போக்ய அதிசயத்தை ஓர் உத்ப்ரேஷையாலே அருளிச் செய்கிறார்

என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
தேவாதிகளில் தலைவரான ப்ரஹ்மாதிகள் அடையவும்
சனகாதிகளான யோகிகள் அடையவும்
திவ்ய சஷூஸ் ஸுக்களுக்கும் கூட தூயமாய் இருக்கக் கடவ அவை –
மனுஷ்ய மாத்ரமான என்னுடைய மாம்ஸ சஷூஸ் ஸுக்களுக்கும்
அத்ய அசன்னமாய் இரா நின்றன -என்று ஆச்சர்யப் படுகிறார் –
நீள் மதிள் அரங்கத்தம்மான் திருக்கமல பாதம் -என்று
த்வயத்தில் பூர்வ உத்தர நாராயண சப்தார்த்தையும் -சரண சப்தார்த்தையும் அனுசந்தித்த படி –

இப்பாட்டால் –
1-மோஷ -பிரதத்வத்தையும்
2-ஜகத் -காரணத்வத்தையும்
3-மற்றும் சர்வப்ரகார உபகாரத்வத்தையும்
4-அவற்றில் சார தமமான உபகார விசேஷத்வத்தையும்
5-நித்ய நிர்தோஷத்வத்தையும்
6-நித்ய ஸூரி நிர்வாஹத்வத்தையும்
7-நித்ய விக்ரஹவத்தையும்
8-சர்வ ஸூலபத்வத்தையும்
9-சௌசீல்யத்தையும்
10-வாத்சல்யத்தையும்
11-கைங்கர்ய உத்தேஸ்யத்வத்தையும்
12-கைங்கர்ய ஸ்தான விசேஷத்வத்தையும்
13-சர்வ ஸ்வாமித்வத்தையும்
14-15-திருவடிகளினுடைய பாவனத்வத்தையும் போக்யத்வத்தையும்
16-அவற்றை தான் அநாயாசமாக அநந்ய த்ருஷ்டிகளாகக் கொண்டு அனுபவிக்கப் பெற்ற படியையும்
முன்னிட்டு ஸ்ரீ ய பதியினுடைய பராகாஷ்டாப்ராப்த குண ப்ரகர்ஷங்களை அனுசந்தித்தார்-

அவற்றில்
1-சம்சார நிவர்தக காஷ்டை யாவது -களை யற்ற கைங்கர்யத்தை கொடுக்கை –
2-காரணத்வ காஷ்டை யாவது -காரணாந்தரங்கள் எல்லாம் தான் இட்ட வழக்காய் –
தனக்காதல் -தன்னுடைய ஜ்ஞான சக்திகளுக்கு ஆதல் -ஒரு காரண சம்பாவனை இன்றிக்கே இருக்கை –
3-சரண்யத்வ காஷ்டை யாவது -தன்னை ரஷகனாக பற்றினவர்களுக்கு தன்னை ஒழிய
மற்றவரை ரஷகராகப் பற்ற வேண்டாதபடி இருக்கை
4-உபகாரத்வ காஷ்டை யாவது -ஒரு ஷூத்ர வ்யாஜத்தை அவலம்பித்து உபய விபூதி
விசிஷ்டனான தன்னை அனுபாவ்யனகக் கொடுத்தும் -அதுக்கு மேல் கொடுக்க லாவது
இல்லாமையாலே நித்யருணியாய் இருக்கை

5-க்ருபா காஷ்டை யாவது -சத்ருவினுடைய சம்பந்திகளும் கூட த்யாஜ்யர் என்ற பரிவர் முன்னே
சத்ரு தானும் இசையில் ஸ்வீகரிப்பேன் -என்று எதிர் பேசும்படியான இரக்கத்தை உடையனாய்
அவர்கள் தாங்களும் இவனை கைக் கொள்ளும்படி பண்ணுகை –
6-ஸ்வா தந்திர காஷ்டை யாவது -தன்னையும் பிறரையும் தான் நிறுத்தின நிலைகளிலே
நிறுத்தும் போது விலக்க வல்லார் இன்றிக்கே இருக்கை
7-நிர்தோஷத்வ காஷ்டை யாவது -தோஷ யுக்தங்களான பதார்த்தங்களோடு உண்டான
சம்சர்க்கத்தாலும் -பிறர்க்குஅஞ்ஞான துக்க ஹேதுக்கள் ஆனவற்றை தான் அனுஷ்டித்தாலும்
தனக்கு அஞ்ஞான துக்கங்கள் வராது இருக்கை
8-ஸ்வாமித்வ காஷ்டை யாவது -விபூதிமான்களை எல்லாம் தனக்கு விபூதியாக உடையவனாய் இருக்கை
9-சௌலப்ய காஷ்டை  யாவது -அகல நினைப்பாருக்கும் அகல ஒண்ணாத படி அணுக நிற்கை

10-சௌசீல்ய காஷ்டை யாவது -தன் பக்கல் ஈச்வரத்தை சந்கிப்பாருக்கும் வெளி இடுவாருக்கும்
தானே மறு மாற்றம் சொல்லி மேலும் தன்னை தாழ விட்டு பரிமாறா நிற்கை
11-வாத்சல்ய காஷ்டை யாவது -அந்தரங்கராய் இருப்பாரும் ஆஸ்ரீத விஷயத்தில்
ஆயிரம் கோடி  குற்றம் காட்டிலும் அநாதரம் பிறப்பிக்க ஒண்ணாது இருக்கை –
12-ப்ராப்யத்வ காஷ்டை யாவது -தன் விசேஷணம் ஆக அல்லது மற்று ஒரு ப்ராப்யம் இல்லாது இருக்கை
13-ஆஸ்ரீத பஷ பாதித்வ காஷ்டை யாவது -சர்வ வர்ண சமனான தான் ஆஸ்ரீத சங்கல்பத்தோடே

விரோதித்த தன் சாமான்ய சங்கல்பத்தைஅசத் கல்பமாக்கி அநிதர சுலபமான ஆபிமுக்யதைப் பண்ணுகை
14-போக்யத்வ காஷ்டை யாவது -தன் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால் தன் விசேஷணமாக
சர்வத்தையும் அனுபவிக்குமது அதின் திவலையோடு ஒத்து இருக்கை
15-அயத்ந போக்யத்வ காஷ்டை யாவது -போகார்தமாக கரண பிரேரணமும் வேண்டாதபடி
தென்றலும் பரிமளமும் வந்தாப் போலே -வந்தது விலக்க ஒண்ணாத படி அனுபாவ்யனாய் இருக்கை
16-இவை எல்லாம் இப்பதங்களில் அடைவே ஆழ்வார் அனுபவித்த படியை அனுசந்திப்பது-

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

May 16, 2013

அன்னைஎன் செய்யில்என்? ஊர்என் சொல்லில்என்? தோழிமீர்!
என்னைஇனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.

பொ-ரை :- தோழியர்களே! முற்பட்டவர்களான நித்திய சூரிகளுக்குத் தலைவனும் வளம் பொருந்திய துவாரகை என்னும் திவ்விய தேசத்திற்கு அரசனும் மணிவண்ணனுமான வாசுதேவனுடைய வலைக்குள்ளே அகப்பட்டேன்: ஆதலால், இனி, தாயானவள் எந்தக் காரியத்தைச் செய்தால் என்ன? ஊரிலுள்ள மக்கள் எந்தப் பழிச் சொற்களைக் கூறினால் என்ன? என் பக்கல் உங்களுக்கு ஆசை வேண்டாம் என்கிறாள்.

வி-கு :- என்னை, என்பது: வேற்றுமை மயக்கம். வண்ணம்-நிறம். வசுதேவன் குமரன்; கண்ணபிரான்.   ஈடு :- ஆறாம் பாட்டு. 1மேல் ‘அன்னை, நீ செய்கிற இதனைப் பொறுக்க மாட்டாள்’ என்ன, “அன்னை என் செய்யும்” என்று, அவள் பொறாமல் செய்வது என்? என்னுமளவிலே நின்றாள். இப்பாசுரத்தில், நீ இப்படி ஒரு விஷயத்தில் அறுதியிட்டிருப்பதை அறிந்தால், அவள் பிழைக்க மாட்டாள் என்ன, அவள் பிழைத்தால் என்? முடிந்தால் என்? என்கிறாள்.

அன்னை என் செய்யில் என்- அவள் பிழைத்தால் என்? முடியில் என்? என்கிறாள். 2“விரக அக்னியினால் கொளுத்தப்பட்டிருக்கிற நமக்குப் பெரியோர்கள் என்ன செய்வார்கள்” என்கிறபடியே, முடியாதே இருப்பார்க்கு அன்றோ இதனை நீக்க வேண்டுவது, கையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்? நன்று; – ‘தாயாருடைய நாசம் ஒரு தலையாகவும் மீளாதபடியாய், இவள் நாயகனுடைய அழகு முதலானவைகளில் ஈடுபட்டவள் ஆனாள்’ என்று ஊரார் பழி சொல்லுவார்களே என்ன, ஊர் என் சொல்லில் என்-அவர்கள் பழி சொல்லில் என்? குணங்களைச் சொல்லில் என்? 3“கொல்லை” என்னுதல், “குணமிக்கனள்” என்னுதல், இத்தனை அன்றோ அவர்கள் பழி சொல்லுவது. தோழிமீர்-‘தாய் என் செய்யில் என், ஊர் என் சொல்லில் என்’ என்று நீங்கள் மேல் விழுந்து என்னை இவ்விஷயத்தில் ஈடுபாடு உடையவளாக ஆக்குகை அன்றிக்கே, ‘தாய் பிழையாள், ஊரார்பழி சொல்லுவர்கள்’ என்று இதனைப் பழியாகச் சொல்லுமளவு உங்களது 1ஆன பின்பு. என்னை – 2“தாய் வாயிற் சொற்கேளாள் தன் ஆயத்தோடு அணையாள்” என்கிற ‘தாயார் பிழையாள், ஊரார் பழி சொல்லுவார்கள்’ என்றால் மீளாதபடி இவ்விஷயத்தில் ஈடுபாடுடையவளாய் இருக்கிற என்னை. இனி-உங்கள் சொல்லும் கேளாதபடி கைகழிந்த பின். உமக்கு – ‘இது பழி’ என்று மீட்கப் பார்க்கிற அளவிலே நிற்கிற உங்களுக்கு. ஆசை இல்லை-இனி என் பக்கல் உங்களுக்கு நசை அற அமையும்.

தோழிமீர் – 3இதற்கு முன்பு எல்லாம் ‘தோழி’ என்று உயிர்த்தோழி ஒருத்தியையும் பார்த்து வார்த்தை சொல்லிப் போந்தாள்; இப்போது இவளுடைய துணிவின் மிகுதியைக் கண்டவாறே ‘ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லியாகிலும் மீட்க வேணும்’ 4என்று ஆயவெள்ளம் எல்லாம் திரண்டன; அதனாலே ‘தோழிமீர்’ என்கிறாள். அகப்பட்டேன்-“இப்போது ‘ஹிதம்’ என்கிற புத்தியாலே ஒரு வார்த்தை சொன்னோமேயாகிலும், ஊரார்க்கும் தாய்மார்க்கும் இவ்வருகே எங்களிடத்தில் 5ஒரு வாசி நினைத்திருக்க வேண்டாவோ உனக்கு” என்ன, அது அப்படியே, அதில் குறை இல்லை; என்னைக் கடல் கொண்டது காணுங்கோள், நான் என் செய்வேன் என்கிறாள். முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதிமன்னன் – 1“சிறியார் பெரியார்’ என்ற வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒரு சேர ஆழப் பண்ணும் கடலிலே அன்றோ நான் அகப்பட்டது. “ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை. “குணம்” என்றது, கொள்ளுகிறவனைக்காட்டிலும் தாம் தாழநின்று கொடுக்கும் சீலத்தை. தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ; அதற்காகத் தாழநின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது. “பும்சாம்” – 2அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது, பலம் அற்ற பெண்கள் படுமதனை வன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி. அன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றாற்போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும் ஈடுபடுத்த வல்லன என்னவுமாம். “திருஷ்டி சித்தாபஹாரிணம்”-3கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின்செல்லுமத்தனை நெஞ்சு. தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம்அன்றோ என்றபடி. 1“எந்தப் பரமபதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும், பகவானுடைய அநுபவத்தில் எப்பொழுதும் ஒருபடிப்பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள் ஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது. நித்தியசூரிகளுக்கும் சத்தைக்குக் காரணமாயிருக்கிற மேன்மையுடையவன் ஆதலாலே 2‘முதல்வன்’ என்கிறது. அன்றிக்கே, அப்பொழுதைக்கு அப்பொழுது ஆசைப்படக்கூடிய விஷயமானவன் என்னுதல். ஆக, அத்தகைய விஷயத்திலே அன்றோ நான் அகப்பட்டது என்பதனைத் தெரிவித்தபடி. ‘வண் துவராபதி மன்னன்’ என்றதனால், 3முதன்மை தோற்ற ஓலக்கங் கொடுத்துக்கொண்டிருக்கிற துறை அல்லாததிலேயோ நான் இழிந்தது’ 4“பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்றிருந்த மணவாளர் மன்னுகோயில்” என்கிறபடியே பெண்களுக்கு உடம்பு கொடுத்துக்கொண்டிருக்கிற நம் துறையிலே அன்றோ இழிந்தது என்பதனைத் தெரிவிக்கிறாள். அன்றிக்கே, ‘மன்னன்’ என்றதனால் 5மேன்மை தோற்ற ஓலக்கங் கொடுத்துக் கொண்டிருக்கிற இடமே நன்றாய் விட்டது நீர்மை தோற்ற இருக்கிற இடத்தில் விழுகிற பிரம்புகளிற் காட்டில் என்பதனைத் தெரிவிக்கிறாள் ஆதலுமாம்.மணி வண்ணன்-1அவ்விரண்டும் இல்லையேயாகிலும் விட ஒண்ணாததாயிற்று வடிவழகு. காதலி துவக்குண்பது வடிவழகிலே அன்றோ. வாசுதேவன்-வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப்பிறப்பு. 2“நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே, பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது ‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும். “எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே, எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ? பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.

3முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன்-அவனுடைய 4அருள் அற்ற தன்மையோடு நீர்மையோடு, ஊராருடைய பழியோடு புகழோடு வாசி அற்றாற் போலே, அவன் மேன்மையோடு சௌலப்யத்தோடு வாசி அற இரண்டும் மனக் கவர்ச்சியாய் இருக்கிறதாயிற்றுஇவளுக்கு. வலையுள் . . . அகப்பட்டேன் – 1அந்தப் பொதுவானதில் அன்றிக்கே, அவன் என்னைக் குறித்து நோக்கின நோக்கிலும் புன்முறுவலிலும் அன்றோ நான் அகப்பட்டது. 2ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடாநிற்க, எம்பெருமானார் திருக்கண்களைக் காட்டியருளினார், “கமலக்கண் என்னும் நெடுங்கயிறு” எனக் கடவதன்றோ. அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப்படுத்திக்கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்

“குரவ : கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா”

என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம், 5. 18 : 22. இச்சுலோகத்தில், “கிம் கரிஷ் யந்தி”
என்றதற்கு, பாவம், ‘முடியாதே’ என்று தொடங்கும் வாக்கியம். “தக்தாநாம்”
என்று இறந்த காலமாகச் சொல்லுவதற்கு, பாவம், ‘கையற்றார்க்கு’ என்று
தொடங்கும் வாக்கியம். இந்தச் சுலோகம் இங்குப் பிரமாணமானபடி எப்படி?
எனின், “பெரியோர்கள் என்ன செய்வார்கள்?” என்ற போதே, ‘அவர்கள்
இறந்தாலும் அதனையும் நாம் அநாதரித்திருப்போம்’ என்று
தோற்றுகையாலே, பிரமாணமாகத் தட்டு இல்லை என்க. “வாசுதேவன்
வலையுள் அகப்பட்டேன், அன்னை என் செய்யில் என்?” என்றதுவும்,
“விரஹாக்நிநா தக்தாநாம் குரவ: கிம் கரிஷ்யந்தி” என்றதுவும் ஒரு
பொருளையே கூறுவனவாம்.

குரவ –
பெரியார்கள் வந்து கலந்து நின்றனர் காவலும் கடந்து
கயிறுகள் -மாலையாகி
அன்னை சொன்னால் என்ன
முன் அமரர்
முதல்வன் துவராபதி மன்னன்
தாயார் -சொல்லையும் மீறி அவன் இடம் ஈடுபட்டு
பழி -புகழ்

வரம்பு மீறி -அப்பால் போனால் -குணம் மிக்கு -என்பார்கள்
தாய் வார்த்தை கேளாள் -மீலாத படி ஈடுபட்டு –
கை கழிந்த -பின்பு இனி
தோழி மீர் -பன்மையில் சொல்லி –
முன்பு தோழி சொல்லி ஒருத்தியை பார்த்து வார்த்தை சொல்லிப் போந்தாள்
ஆய வெள்ளம்  திரண்டு இவளை மீளப் -பார்த்தார்கள்
பரதன் சைன்யம் முழுவதும் கூட்டிப் போனானே பெருமாளை மீட்க
வாசி உண்டே –
நான் மீள முடியாமல் -சிக்கி கடல் கொண்டது காணும் என்கிறாள்
முனை அமரர் -பெரியான் அனைவரையும் அகப்படுத்தும் சமுத்ரம் –
சௌந்தர்ய சாகரம்
ரிஷிகளும் முளுகும்படி –
பும்ஸாம் திருஷ்டி சிந்த அபஹரினாம் ரூபம் ஔதார்யம் குணங்களாம்
ஆண்களையும் கூட அகப்படுத்தும் அழகு
கண்களையும் மனதையும் கொள்ளை கொள்ளும் ரூப ஔதார்யம்
தான் தாழ நின்று கொடுக்கும் -சீலம் மேன்மை தொன்றகொடுக்காமல் சக்கரவர்த்தி திருமகன்
வஜ்ரம் கூட உருக்கும்படி –புருஷாம் -அசேதனம் தவிர மற்றை அனைத்தும் உருகும் அழகு
திருஷ்டி சித்தம் கண்ணுக்கு மனசு சககாரியம் வேண்டாமல்
-தசரதன்
தாய் வேறு கன்று வேறாக
முன்னை அமரர் -முதல்வன் -மேன்மை உடையவன் –

எல்லா இந்திரியங்களும் பிரதானமான மனத்தினைப் பின் செல்லுவன
ஆகையாலே “சித்த த்ருஷ்டி அபஹாரிணம்” என்ன வேண்டாவோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கண்களுக்கு’ என்று தொடங்கி. அதற்குக்
காரணம் யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தாய் வேறு’
என்று தொடங்கி. கரணங்களுக்குப் பிரதானமானதாகையாலே மனத்தினைத்
‘தாய்’ என்றும், மற்றைக் கரணங்கள் மனத்தினைப் பின் செல்லுவன
ஆதலின், அவற்றைக் ‘கன்று’ என்றும் அருளிச்செய்கிறார். ஸ்ரீ
பரதாழ்வானையும் கைகேசியையும் வேறாக்கின விஷயம் அன்றோ இது
என்பது, தொனிப் பொருள்,

மேன்மை தோற்ற ஓலக்கம் -நீர்மை தோற்ற ஓலக்கம் துவராபதி –
இரண்டும் இல்லை என்றால் விட முடியாத அழகு –

குடிப் பிறப்பு விட ஒண்ணாமைக்கு மேற்கோள் அருளிச்செய்கிறார் “நான்
தசரத சக்கரவர்த்தியினுடைய” என்று தொடங்கி.

“ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந:
ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”

என்பது ஸ்ரீராமா. சுந். 33 : 15, 16. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
மற்றைய சம்பந்தங்களை இட்டுக் கூறாமல், சக்கரவர்த்தியின்
சம்பந்தத்தைக்கொண்டு கூறுவதற்கு, பாவம் ‘பிராட்டி’ என்று தொடங்கும்
வாக்கியம்.
சத்ரு சைதன்யம் பிரதானம் தசரதர் -மகள் -முதலில் சீதை சொல்லி
மாமனார் உண்டாகில் இவ்விருப்பு இருக்காதே
இல்லையே வசுதேவர் -புத்திரன் இங்கு அது போலே
மணி வண்ணன்
பொதுவாக என்னை குறித்து நோக்கின நோக்கிலும் ஸ்மிததிலும்
மணிவண்ணன் வாசுதேவன் வலை உள்ளே அகப்பட்டேன்
என் சினம் தீருவேனே
கமலக் கண்ணன் என்னும் நெடும் கயிறு கொண்டு என்னை ஈற்றுக் கொண்டான்
அனுகூலம் போலே நோக்கி வலைப் படுத்திக் கொண்டான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

May 16, 2013

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடியஎன் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடிகொள் இடை மடத்தோழி! அன்னை என்செய்யுமே!

பொ-ரை :- கடியன், கொடியன், நீண்ட மால், உலகத்தைத் தாவி அளந்த திருவடிகளையுடையவன், அறிதற்கு அரிய திருமேனியையுடைய மாயத்தையுடையவன் ஆகிலும், கொடிய என் மனம் அவன் என்றே கிடக்கும்; என்ன ஆச்சரியம்! துடியினது வடிவத்தைக் கொண்ட இடையினையும் மடப்பத்தினையுமுடைய தோழீ! தாய் என்ன செய்ய மாட்டுவாள் என்கிறாள்.

வி-கு :- முதல் இரண்டு அடிகளின் பொருள்களை வியாக்கியானத்திற்காணல் தகும். துடி-உடுக்கை.

ஈடு :- ஐந்தாம் பாட்டு. 2“நீ அவனுக்கு நீர்மை இல்லை, அவன் அருள் அற்றவன்’ என்றாயாகிலும், அச் சொல்லுக்கு ஒரு பிரயோஜனம் இல்லைகாண், அவன் குணம் இல்லாதவன் என்று நீ சொல்லுவது என்னை மீட்கைக்காக அன்றோ, அதுவும் நான் அவனைப் பற்றுகைக்கு உறுப்பாகச் சொன்னாய் ஆயினாயித்தனை என்கிறாள்.

கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட அடியன் 3அவன் குணம் இல்லாதவன் என்று சொல்லும்போதும் நானே சொல்ல வேணுங்காண்; 1நீ மூட்டிக் கடக்க நின்றாயித்தனை போக்கி, அவனைக் கலந்து உட்புகாநின்ற என்னளவு தெரியுமோ உனக்கு அவனை; ஆனபின்னர் அவை தம்மையும் நான் சொல்லக் கேள் என்கிறாள். 2கடியன்-கூரியன்; தன் காரியத்திலே நோக்குள்ளவன். என்றது, தனக்கு ஒரு காரியம் உள்ளது ஆனால், எதிர்த்தலையின் அளவு பாராதே மேல்விழுந்து வந்து கலக்குமவன் என்றபடி. கடுமை-கூர்மை. கொடியன் –3தான் மேல் விழுந்து வந்து கலக்கச் செய்தே ‘பிரியேன்’ என்ன வல்லவன். என்றது, 4கலவியின் மத்தியத்திலே பிரிவினை நினைத்தவன் இனிச் செய்ய மாட்டாதது ஒன்று உண்டோ? என்றது, 5“பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான்” என்கிறபடியே, கலக்கச்செய்தே மற்று ஒன்றினை நினைக்க வல்லவனுக்கு இனிச் செய்ய அரியது ஒன்று உண்டோ? என்றபடி. நெடிய மால்-மால் என்பது பெருமை. நெடிய என்பது, அதன் மிகுதியைக் குறிக்கின்றது. அறப்பெரியவன் என்றபடி. இதனால், கைபுக்கு இருக்கச் செய்தேயும் அளவிட ஒண்ணாதபடி இருக்குமவன் என்கை. 1‘பிரிய நினைக்கின்றான்’ என்று அறியா நிற்கச்செய்தேயும் “சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவு” என்ன ஒண்ணாதபடியாய் இருக்கை. என்றது, 2மேல் விழுந்து வந்து கலவாநிற்கச்செய்தே பிரிய நினைத்தால், அதனை அறியச் செய்தேயும், ‘நீ பிரிய நினைத்தாய்’ என்று மடிபிடித்துக் காற்கட்டி விலக்க ஒண்ணாதபடியாய் இருக்கை. உலகம் கொண்ட அடியன் – 3பிறர் உடைமையைத் தனக்கு ஆக்க நினைத்தால் பின்னையும் அவர்களுக்கு ஓர் அடியும் எஞ்சாதபடி செய்யுமவன். அவர்களைப் பின்னே பாதாளத்திலே தள்ளுமவன். 4பாதாளங் கலவிருக்கை கொடுக்குமவன். 5ஒன்றைக் கொள்ளப் பார்த்தால், அவர்களுக்கு ஒன்றும் எஞ்சாதபடி கொள்ளும் திருவடிகளையுடையவன்.

அறிவு அரு மேனி-கிட்டினால், ‘இத்தலைக்கு எல்லாச் செல்வத்தையும் தர நினைக்கின்றானோ, எல்லாச் செல்வத்தையும் கொள்ளை கொள்ள நினைக்கின்றானோ, என்று அறிய ஒண்ணாதபடியான 1வடிவையுடையவன். 2‘என்னுடைய ஆத்மாவும் என்னுடைமைகளும் நீ இட்ட வழக்கு’ என்பாரைப் போலே சொல்லி ஆயிற்று இத் தலையில் ஆத்மாவையும் மற்றைச் செல்வத்தையும் கொள்ளைகொள்வது. என்றது, தன்னையும் தன்னுடைமையையும் இவள் இட்ட வழக்கு ஆக்கி, பின்னையாயிற்று இவளைத் தனக்கு ஆக்கிற்று என்றபடி. மாயத்தன்-‘நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கு’ என்ற இவ்வார்த்தையை நினைத்து அதிலே நெஞ்சு மூழ்கியிருக்க, அவ்வளவிலே கண்களிலே மணலைத் தூவி அகல வல்லவன். ஆகிலும்- 3நீ சொல்லிச் சொல்ல மாட்டாதவையும், சிசுபாலன் முதலானோர் சொல்ல மாட்டாதவையும் எல்லாம் நான் சொல்ல வல்லவள் அன்றோ அவை விடுகைக்கு உறுப்பாகப் பெற்றேனாகில். கொடிய என் நெஞ்சம் – 4உல்லோகமாய் உலகத்திற்கு வேறுபட்டதான என் நெஞ்சு. என்றது, நாட்டாருக்கு, குணம் பற்றுகைக்குப் பற்றாசாய்த் தோஷம் விடுகைக்கு உடலாய் இருப்பது; அங்ஙனன்றிக்கே, குணஹாநிதன்னையே பற்றுகைக்கு உடலாகக் கொள்ளும்படியான என் நெஞ்சம் என்றபடி. அவன் என்றே கிடக்கும்-5இத்தோஷங்கள் அவன் உடைமைகள் அன்றோ என்று ஈடுபட்டுக் கிடக்கும் என்றுபிள்ளான் பணிப்பர். என்றது, 1அவன் கடியன் என்றால் அவன் கடுமை இப்போதே காணவேணும்; கொடியன் என்றால், அவன் கொடுமை இப்போதே காணவேணும்; அவன் அடைய முடியாதவன் என்றால், அவன் அடைய முடியாதவனானபடியை இப்போதே காணவேணும்; அவன் எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொள்பவன் என்றால், அவன் எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொள்ள நான் இழந்திருக்கவேணும்; அவன் அறிய முடியாதவன் என்றால், அவன் அறிய முடியாதவனாக இருக்கும் தன்மையை இப்போதே அறியவேணும் என்ற படியாம். அன்றிக்கே, என் நெஞ்சுக்கு 2மாயாவாத ருசி உண்டோ? அறிகின்றிலேன் என்பர் சீயர். என்றது, விசேஷணாம்சத்தில் தாத்பரியம் இன்றிக்கே, விசேஷ்யத்திற்கு அவ்வருகு அறிகின்றது இல்லை என்றபடி. இதனால், அவனுடைய சம்பந்தம் குணம் காரணமாக வந்தது அன்று, ஸ்வரூபத்தோடு கூடியிருப்பது என்கை. எல்லே-என்னே! இஃது ஓர் ஆச்சரியம் இருக்கும்படியே! அன்றிக்கே, ‘உன்னை மீட்க நினைத்த நான் சொன்னபடியே அன்றிக்கே ஒழிந்த பின்பு, இனி, நீ நினைத்தபடியே நினைத்திரு’ என்று போகப் புக்காள் தோழி; இங்ஙனே வாராய் என்று அவள் கையைப் பிடித்து ‘எல்லே’ என்று அழைக்கிறாள் என்னலுமாம்.

இவள் இப்படிச் சொன்னவாறே, ‘இது ஓர் அன்பின் தன்மை இருந்தபடி என்?’ என்று நினைத்தவாறே தோழிக்கு ஒரு விகாரம் பிறந்தது; அதனைக் கண்டு ‘துடிகொள் இடை மடம் தோழி’ என்கிறாள். துடியோடு ஒத்திருக்கிற இடையையும், ஆத்ம குணத்தையுமுடைய தோழீ! அன்றிக்கே, 3உன் வடிவிற்கும் குணத்திற்கும் என் பக்கலுண்டான அன்பிற்கும் ஈடாக வார்த்தை சொல்லப்பாராய் என்கிறாள் என்னுதல். 1நான் அது அறியாமையாலும் வேண்டாமையாலும் சொல்லுகிறேனோ, தாய்சொல்லுமதற்கு அஞ்சிக்காண் நான் இப்படிச் சொல்லுகிறது என்ன, அன்னை என் செய்யுமே-உன் சொல் கேளாத நான், இனி, தாய் சொல்லோ கேட்கப் புகுகிறேன். 2அநசூயை, பிராட்டியைப் பார்த்துப் ‘பெண்களுக்குத் தெய்வம் கணவனே காணும்’ என்ன, கேட்ட பிராட்டி நாணமுற்றுக் கவிழ்தலை இட்டிருந்தாள்; ‘நான் இவர் பக்கல் ஈடுபாடுடையவளாய் இருக்கிற இருப்புக்குக் காரணம், பெருமாள் பக்கல் உண்டான குணங்களாலே என்றே அன்றோ நாட்டார் நினைத்திருப்பது; தெய்வ சம்பந்தத்தால் அவருக்குக் குணமுண்டான தித்தனை போக்கி, குணங்கள் இல்லாதவருமாய் அழகு இல்லாதவருமானாலும் நான் அவரை விடமாட்டாதே இருக்கும் இருப்பைக் காட்டலாமே அன்றோ அவரைக் குணங்களோடு பிரித்து வைக்கப் பெற்றதாகில்’ என்றாளே அன்றோ. 3ஒரு விஷயத்தில் பாவபந்தம் உறைத்திருப்பார் வார்த்தையாயிற்று இது. 4“வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது; என்னக் கடவதன்றோ. நன்று; 1“இது, குணாதிக விஷயத்தில் சொல்லுகிற வார்த்தையாகில், ‘கரும்பின் புழு கரும்பு அன்றி உண்ணாது’ என்ன வேண்டவோ? என்னில், ‘அவனுக்கு இந்நன்மைகள் இல்லையேயாகிலும் நான் அவனை விட மாட்டேன்’ என்கிற பாவபந்தத்தில் உறைப்புத் தோற்றும்படி மாறாடிச்சொல்லுகிறதல்லது, குணாதிக விஷயத்தில் இது இருப்பதாமோ என்க. 2என் ஸ்வரூபத்தைப் பார்த்தால் நான் உன்னை விட மாட்டேன், நீ நீ அன்றிக்கே இருந்தாலும் என்னால் விடப் போகாது.

கடியன்
ஓன்று மட்டும் இல்லை
கொடியன்
ஐந்து சொல்லி
நீ சொல்வதே பற்றாசாக
குண க்ருத தாஸ்யம் இல்லை
ஸ்வரூபம் பற்றியே தாஸ்யம்
குணஹாணி சொல்லும் பொழுதும் நானே சொல்லுவேன்

மூட்டி கடக்க நின்றாய் நீ –
கலந்து முழுவதும் உட் புகுந்து அறிந்த என்னை போல் அறிவாயோ –

குருகுலம் -குட்டுப்பட்டு அறிந்த நன் அறிவேன்
சமுத்ரம் ஆழம் வானரம் அறியுமா மந்த்ரம் அறியுமே –
அவை தன்னையும் நானே சொல்லே கேளாய்
கடுமை கூர்மை ஸு கார்யம் பார்ப்பவன் -கடியன் –
கொடியன் மேல் விழுந்து கலக்கும் பொழுது பிரியேன் என்பான் -கேட்காமல் இருக்கும் பொழுதே
பேதை பிரியேன் -சொல்லி பிரிந்தான்
நெடிய மால் பெருமை மிகுதி அற பெரியவன்
இன்னது நினைந்து இருக்கிறன் அறியாமல்பிரிய இருக்கிறான் அறிந்தும் விலக்காமை

தன் மேன்மை அளவிட ஒண்ணாதபடி இருத்தலைத் திருஷ்டாந்த மூலம்
காட்டுகிறார் ‘பிரிய நினைக்கின்றான்’ என்று தொடங்கி.

காண்கின் றனகளும் கேட்கின் றனகளும் காணில் இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின் றனஇதெல் லாமறிந்தோம்
மாண்குன்ற மேந்திதண் மாமலை வேங்கடத் தும்பர் நம்பும்
சேண்குன்றம் சென்று பொருள்படைப் பான்கற்ற திண்ணனவே-  என்பது, திருவிருத்தம், 8.

கலக்கிறபோது பிரியேன் என்று சொன்னானோ? என்ன, ‘பேதை நின்னை’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘மற்று ஒன்றினை’
என்றது, பிரிவினை. ‘செய்ய அரியது ஒன்று உண்டோ’ என்றது. முகம்
காட்டாமலே இருந்து முடித்தே விடுவான் என்றபடி.


ஏது செய்தால் மறக்கேன்? மனமே! தொழுதும் எழு
தாது மல்கு தடம்சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே.-
  என்பது, பெரிய திரு. 9. 3 : 3.

உலகம் அளந்து -பாதாளம் கலவிருக்கை -தாடாளன் -கொள்ளப் பார்த்தால்
ஒன்றும் சே ஷியாத படி திருவடி கொண்டவன்-அடியன் –

குறட் பிரமசாரியாய் மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்துகந்த எம்மான் கோயில்”

என்பது, இங்கே அநுசந்தேயம். பெரியாழ்வார் திருவாய்மொழி,
ஆனால் திருமேனி பார்த்தாள் சர்வ சொத்தையும் தர நினைக்கிறானோ
கொண்டு போக பார்க்கிறானா சொல்ல முடியாமல் மாயம்
திருமேனி காட்டி மகா பலியை ஏமாற்றி
ஆத்ம ஆத்மீயங்கள் நீ இட்ட வழக்கு சொல்லி அனைத்தையும் கொண்டு போவான்
வைஸ்யன் நித்யம் காசு கொடுத்து நம்பிக்கை வளர்த்து
தங்க ரதம் பண்ண சொல்லி -10 kg தங்கம் கொண்டு போய் –
மாயத்தன் -நெஞ்சை அபஹரித்து கண்ணில் மணல் தூவி அகன்று
ஆகிலும்
சிசுபாலாதிகள் சொல்ல முடியாத குறைகளையும் சொல்லுவேன்
கொடிய என் நெஞ்சம் லோக விசஜாதீயமான நெஞ்சு
நாட்டாருக்கு குணம் பற்றாசாக தோஷம் விடுகைக்கு
குண ஹாநிதானே எனக்கு பற்றுக்கைக்கு
அவன் என்றே கிடக்கும் –
அவன் கடுமை இப்போதே காண வேண்டும்
அவன் கொடுமை இப்போதே காண வேண்டும்
பிள்ளான் அருளிச் செய்த வார்த்தை -இவை

அன்றிக்கே
நஞ்சீயர் மாயாவாதியாக முதலில்
விசேஷ்யத்தில் ஊன்றி -குணங்கள் பற்றி -உண்மையாக நிர் குணம் –
ஈடுபட்டது அவன் இடம் தான் சொல்வதாக வியாக்யானம்
நெஞ்சுக்கு மாயாவாதி ருசி உண்டோ அறியேன்

மாயாவாத ருசியாவது, மாயாவாதிகளைப் போன்று விசேஷண அம்சத்தை
ஆதரியாமல், விசேஷ்யரூப பிரஹ்ம ஸ்வரூப மாத்திரத்தை ஆதரித்தல்.

எல்லே இது ஒரு ஆச்சர்யம்
உன்னை -மீட்பதுவாக சொல்லி -முடியாமல் தோழி போக புக்க இங்கனே வாராய் என்கிறாள்
பிரேம ஸ்வபாவம் இருந்த படி என் –
துடி கொள் இடை வடிவு மடப்பம் ஆத்ம குணம் வடிவுக்கும் சேர வார்த்தை சொல்லு
பிடிக்காமல் சொல்ல வில்லை
தாய் சொல்லுக்கு அஞ்சி சொல்கிறேன்
அன்னை என் செய்யுமே –
நீ சொல்வதையே கேட்க்க வில்லையே
அன்னை சொன்னால் என்ன
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் விவரிக்கிறாள் அடுத்து
ஸ்ரீ வசன பூஷணம்
அனசூயை பிராட்டி சம்வாதம்

இங்கே, ‘அநசூயை’ என்று தொடங்கி அருளிச்செய்யும் இது, “குணஹாநி
உண்டானாலும் அது விடுகைக்கு உறுப்பு அன்றிக்கே, பற்றுகைக்கு உறுப்பு’
என்னுமதற்குக் காட்டப்படும் சம்வாதமாகும். ஆதலால், இதனை,
இத்திருப்பாசுரத்தின் அவதாரிகையில் ‘அதுவும் நான் அவனைப் பற்றுகைக்கு
உறுப்பாகச் சொன்னாய் ஆயினாயித்தனை’ என்ற வாக்கியத்தின் பின்
கொண்டு கூட்டிப் பொருள் காணல் தரும். ‘நாட்டார் நினைத்திருப்பது’
என்றது, ‘நீ நினைத்திருப்பது’ என்றபடி. பிராட்டி இங்ஙனம்
அருளிச்செய்ததனால், பெருமாள் பக்கல் தமக்கு உண்டான பிராவண்யம்,
அவருடைய குணத்தால் வந்ததன்று; ஸ்வரூபத்தோடு கூடியது என்பது
தெளிவாம்.

குணஹாநி பற்றுகைக்கு உறுப்பாம் என்பதற்கு வேறு பிரமாணம்
காட்டுகிறார் “வேம்பின் புழு” என்று தொடங்கி.வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடியன்றி நயவேன்”-என்பது, பெரிய திருமொழி, 11. 8 : 7.

குண ஹீனரானாலும் விடாமல் இருப்பேன் -காட்ட முடிய வில்லையே
துரத்ரிஷ்டம் -குணங்களை பிரிக்க முடியவில்லையே -நிரூபிக முடியாதே
விஷய ஈடுபாடு -ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் குண க்ருத தாஸ்யம் விட சிறந்ததே

வேம்புக்கு என்று இட்டு பிறந்த புழு போலே –
கரும்பின் புழு கரும்பு அன்று உண்ணாது சொல்லாமல் -இப்படி அருளி
வஸ்து பார்த்தே குணம் பார்க்காமல்
அது போல் எம்பெருமானை சத்தா பிரயுக்தமாக பற்றி இருக்கிறேன்
ஸ்வரூபத்தை பார்த்தால் –
அத்யந்த சேஷத்வம் பாரதந்த்ரம்
நீ குணாதிகனாக இல்லாமல் இருந்தாலும் விட போகாது-

குண க்ருத தாஸ்யம் -குணங்களுக்கு தோற்று
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் -குணங்கள் இல்லை என்றாலும் தாஸ்யம்
வேம்பு புழு -உதாரணம்
நிருபாதிக சேஷித்வம் ஸ்வரூபம் பார்த்தால் விட
மாட்டேன் நீ நீ அன்றிக்கே இருந்தாலும் உன்னை விடப் போகாது –
அடியேன்-அனந்யார்ஹன் -எனது ஸ்வரூபம்
கரும்பாய் இல்லாமால் இருந்தாலும் விட மாட்டேன்
வேம்பை அவனுக்கு திருஷ்டாந்தமாக சொல்லலாமா -சர்வ ராச வச்துதானே இவன் –
உன்னைக் கொண்டு விரோதியை போக்கி கொள்ள சந்தரன் போக்குக் கொள்கிறான்
ஆதி செஷன் கூடி இருந்து -அணைய ஆசைப்பட்டவனுக்கு உன்னைக்
கொடுக்கிறாய் வேம்பின் புழு
ஸ்வரூப ப்ரயுத தாஸ்யம் பிரதானம் குண க்ருத தாஸ்யம் விட
சிறந்தது முன்னோர் அருளிய வசனம் மிகக் கொண்டு ஸ்ரீ வசன பூஷணம்
உயிர் க்கு அணியாக அவரே வைத்த -பெயர்
ஆகிலும் கொடிய என்நெஞ்சம் அவர் என்றே கிடக்கும் -நம்பிள்ளை வார்த்தை-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -வியாக்யானம் -அவதாரிகை –

May 15, 2013

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை-அருளிய-வியாக்யானம் –அவதாரிகை –

பிரணவம் போலே -அதி சங்குதிமாய் இருத்தல் –
வேதமும் வேத உபப்ரும்ஹணமான மஹா பாரதமும் போலே பரந்து துறுப்புக் கூடாய் இருத்தல் -செய்யாதே –
பத்துப் பாட்டாய் -ஸூக்ரஹமாய் -சர்வாதிகாரமுமாய் இருக்கும் –

வேத அநத்யாபயாமாஸ மஹா பாரத பஞ்சமான் -என்றும் சொல்லுகிறபடியே
வேத உப ப்ருஹணமான -மஹா பாரத ராமாயணங்களும்
நாராயண கதாம் இமாம் -இத்யாதிகளைச் சொல்லி வைத்து
பகவத் கதை அல்லாவற்றையும் சொல்லி வைத்தது-

திருவாய் -மொழியும்
அமர்சுவை -யாயிரம் -என்றும்
பாலோடு அமுதன்ன ஆயிரம் -என்றும் –
உரை கொள் இன் மொழி -என்றும் –
ஏதமிலா ஆயிரமாய் இருந்ததே யாகிலும் –
அந்ய உபதேச ஸ்வா பதேசம் -என்ன
ஸாமாநாதி கரண்ய நிர்ணயகம் -என்ன –
த்ரி மூர்த்தி சாம்ய தத் உத்தீர்ண தத்வ நிஷேதம் -என்ன –
இவை தொடக்கமான அருமைகளை உடைத்தாய் இருக்கும் –

திரு நெடும் -தாண்டகமும்
பரப்பற்று முப்பது பாட்டாய் இருந்ததே யாகிலும்
அதுக்கும் அவ் வருமைகள் உண்டு –

திருமாலைக்கு
அவ் வருமைகள் இல்லையே யாகிலும்
தம்முடைய லாப அலாப ரூபமான ப்ரிய அப்ரியங்களை
ப்ரதிபாதியா -நிற்கும்-

திருப் பல்லாண்டுக்கு இக்குற்றங்கள் இல்லையே யாகிலும் –
அதுக்கும் ஒரு குற்றம் உண்டு –
த்ரிவித அதிகாரிகளுடைய குணாகுணங்களைப் ப்ரதி பாலிக்கையாலே-

பிரணவம் போலே அதி சங்குசிதிமாய் -துர் ஞேயமாய் -இராமையாலே –
யதி ஹாஸ்தி ததத் அந்யத்ர யன்நே ஹாஸ்தி நத்க் வசிக் -என்கிறபடியே
ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே
புறம்பு இல்லாதவை எல்லாம் இதிலே உண்டாய்
இதில் இல்லாதது ஒன்றும் புறம்பு இன்றியே இருக்கும் –

பர வியூஹ விபவங்களை பிரதிபாதிக்கை அன்றிக்கே –
அர்ச்சாவதார ரூபேண வந்து அவதரித்து
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருட
பள்ளி கொள்ளும் கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு
மணத் தூணே பற்றி நின்று வாயார வாழ்த்துகிற பிரபந்தம் ஆகையாலே
எல்லா பிரபந்தகளிலும் இதுக்கு வை லஷண்யம் உண்டு –

மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவர்க்கு நெடு வாசி உண்டு –
பல்லாண்டு -போற்றி -என்று பாவிக்க வேண்டிற்று அவர்களுக்கு –
அது வேண்டாதே -ஜந்ம சித்தமாய்த்து இவர்க்கு –

குலங்களாய வீரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -என்கிறபடியே இவர் தம்மை
நாலு வர்ணத்திலும் புறம்பாக நினைத்து இருப்பர் –

பெரிய பெருமாளும் அப்படியே நினைத்து இருப்பர் –
நித்ய ஸூரிகள் நாலு வர்ணத்தில் உள்ளார் அல்லரே –

ஆழ்வார்கள் இரு கரையர் -என்னும்படி இறே ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி யாழ்வார்  ஐகாந்த்யம்
அவரிலும் இவர்
பரோபதேசமும்
இதர நிரசனமும்
அனுபவ விரோதி என்று
வெறும் பெரிய பெருமாளையே அடித்தலை செவ்விதாக வநுபவிக்கிறார்

ஸ்நேஹே மே பரம –
என்றன் வளவன்றால் யானுடைய வன்பு –
ராஜம் ஸ்த்வயி –
இது தானும் என்னால் வந்தது அன்று -அதுவும் அவனது இன்னருளே –
நித்யம் பிரதிஷ்டித-
இன்றன்றாகில் மற்றொரு தர்மியைப் பற்றி வருகிறதாகையாலே –
நின்னலால் இலேன் காண் -என்னுமா போலே

பக்திஸ்ச நியதா

ஸ்நேஹம் ஆவது என் -பக்தி ஆவது என்
பக்தி ஆவது என் என்னில் -பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து வ்யதிரேகத்தில்
முடிந்த சக்கரவர்த்தி நிலை -ஸ்நேஹம் –
பக்தி -யாவது நில் -என்ன -குருஷ்வ -என்னும்படியாய் முறை அறிந்து பற்றின
இளைய பெருமாள் நிலை –

வீர -தன்னைத் தோற்பித்த துறை
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்று இங்கு வெல்ல முடியாது –
தானும் வீரன் ஆகையாலே தோற்பித்த துறையைப் பிடித்துப் -பேசுகிறான்

பாவோ நாந்யத்ர கச்சதி -என்று என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சை மீட்க்கப் போகாது

அந்யத்ர-என்கிறது –
மற்று ஆரானும் உண்டு -என்பார் என்னுமா போலே
கொடு போக நினைத்த தேசத்தின் பேரும் கூட தனக்கு அசஹ்யமாய் இருக்கிறபடி –
இப்படி ராமாவதாரம் அல்லது அறியாத திருவடியைப் போலே ஆய்த்து இவரும்
இவர் தேவாரமான பெரிய பெருமாளை அல்லது பர வ்யூஹ விபவங்களை-அறியாதபடியும்

(ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ ந அந்யத்ர கச்சதி’-என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16. இது திருவடி கூற்று.

மற்றுங் கற்பரோ’ என்கிறார்.
ஸ்நேஹ: மே பரம:-
எழுந்தருளுகிற போது ‘என் வழியே போந்தாலோ?’ என்ன,
‘அவ்வளவு அன்று காணும் எனக்கு ஸ்நேஹம்’, என்கிறான்.
‘மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-’-(இரண்டாம் 100 )என்றும்,
‘உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1- என்றும் சொல்லுமாறு போலே

ராஜந் த்வயி-
இது தானும் என்னால் வந்தது அன்று.-‘ரஞ்ஜயதீதி ராஜா’ ஆகையாலே.

நித்யம் ப்ரிதிஷ்டித; –
‘இப்போது ஒண்ணாதாகில், மற்றொரு போது கொள்ளுகிறோம்’, என்றால், அது செய்ய ஒண்ணாது,
தர்மியைப் பற்றிக் கிடப்பது ஒன்று ஆகையாலே .

பக்திஸ்சநியதா –
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை சினேகம்;
பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – கொள்க’ என்னும் படியாய், முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை.

வீர –
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா, இங்கும் வெல்ல முடியாது.
தானும் அவன் ஆகையாலே ( நீயும் வீரன் நானும் வீரன் )தோற்பித்த துறையைப் பிடித்துச் சொல்லுகிறான்,

பாவோ ந அந்யத்ர கச்சதி –
என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சினை மீட்கப் போகாது,
‘என்னுடை நல் நெஞ்சந்தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி’ திருவாய். 1. 7 : 8.என்னுமாறு போலே.
‘சர்வ சத்தியான அவனாலும் மீட்கப் போகாது,’ என்கை.
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணோவே’ என்னுமாறு போலே, ‘அந்யத்ர ந கச்சதி’ என்கிறது.

‘அந்யத்ர’ என்கிறது,
போகிற இடத்தின் பேரும் சொல்லுகை பொறாதபடி;
‘மற்று ஆரானும் உண்டு என்பார்’( திரு மடல் ) என்னமாறு போலே,
இவரும், ‘மற்றுங் கற்பரோ?’ என்கிறார்.)

ஸ்ரீ வைகுண்டம் திருப்பாற் கடல் திருவவதார ஸ்தலம் உகந்து அருளின திருப்பதிகள்
இவை எல்லாம் -பெரிய பெருமாளே யானாப் போலே -அவ்வோ இடங்களில் உண்டான
சௌந்தர்ய குண சேஷ்டிதங்கள் எல்லாம் பெரிய பெருமாள் பக்கலிலே காணலாம் –
பெரிய பெருமாள் அழகும் ஐஸ்வர்யம் எல்லாம் பரமபதத்திலே முகிளிதமாய் இருக்கும் –
அவதாரத்திலே ஈரிலை போரும் –

இங்கே வந்த பின்பு தழைத்தது -எங்கனே என்னில் –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும்  சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் ஆகையாலே
அவ்வோ இடங்களிலே சங்குசிதமாய் இருந்தது இறே

தன்னை உகந்தாரை அனுபவிக்கை இன்றியே -தான்-என்றால் விமுகராய் இருப்பாரும் கூட அநுபவிக்கலாம் படி
இருக்கையாலே நீர்மையினால் வந்த ஏற்றமும் இங்கே உண்டு –
குணாதிக்யத்தாலே இறே வஸ்துவுக்கு உத்கர்ஷம் –
குணம் விலை பெறுவது இங்கே இறே –

குணத்தில் அகப்பட்டார் இவ்விஷயம் போக்கி அறியார்கள் இறே –
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதங்களுக்கு எட்டாத சர்வேஸ்வரனை
ஆற்றில் தண்ணீரோபாதி -ஆற்றுக்குள்ளே கண்டு அநுபவிக்கலாம் படி இருக்கிற இடம் இறே –
மழைக்கு அன்று வரை முன்னேந்தும் மைந்தன் மதுரவாறான அவ்வாறு இவ்வாறு -ஆய்த்து காணும் –

இவர் தமக்கு
ப்ராப்யரும்
ப்ராபகரும்
ருசி ஜனகரும்
விரோதி நிவர்தகரும்
எல்லாம் பெரிய பெருமாளே என்கிறார் –

பல போக்த்ருத்வம் தம்மதாய் இருக்க -எல்லாம் அவரே -என்கிறபடி எங்கனே என்னில் –
பிரதம ஸூஹ்ருதமும் தானேயாய் –
இப்பேற்றுக்கு வேண்டியன நிர்வஹித்துப் போந்த சௌஹார்த்தமும் அத்தலையிலே கிடைக்கையாலே –
பேற்றுக்கு இத்தலையில் உள்ளது சொல்லப் பாத்தம் போதாது இறே –
உள்ளது உண்டாகில் அவன் அனுக்ரஹத்தாலேயாம் இத்தனை –

இதர விஷயங்களில் அருசியும் -பகவத் விஷயத்தில் அப்ரதிஷேதமும் விளைந்த
மாத்ரத்திலே பெரிய பெருமாள் தம்முடைய -ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டக் கண்டு அநுபவித்து ப்ரீதர் ஆகிறார் –

ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட -என்று மஹா ராஜரை இட்டு -ஸ்ரீ விபீஷண ஆழ்வானை
அருள் பாடிட்டாப் போலே –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து –
கடைத்தலை இருந்து வாழும் சோம்பரான லோக சாரங்க மஹா முநிகளை யருள் பாடிட்டு –
நம்பாடுவானை அழைத்துக் கொண்டு வாரும் -என்ன –

அவரும் -அருள்பாடு அருள் பாடு -என்று சொல்ல –

இவரும் -அடியேன் அடிப் பாணன் அடிப் பாணன் -என்று இறாய்க்க –

அவரும் விடாதே தோள் மேலே எழுந்து அருளப் பண்ணுவித்து கொண்டு போக
வழியிலே ஒன்பது பாட்டுப் பாடித்
திருப் பிரம்புக்குள்ளே நின்று பத்தாம் பாட்டுப் பாடித் தலைக் கட்டுகிறார் –

—————————————————————-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்-அருளிய-வியாக்யானம் -அவதாரிகை —

வேதம் போலே முதல் ஆழ்வார்கள் மூவரும் பரத்வத்திலே மண்டி –
அர்ச்சையையும் தொட்டுக் கொண்டு -போந்தார்கள் –

ஸ்ரீ வால்மீகி பகவானைப் போலே -ஸ்ரீ குலசேகர பெருமாள் ராமாவதாரத்தில்
ப்ரவணராய் -அர்ச்சாவதாரத்தையும் அநுபவித்தார் –

ஸ்ரீ பராசர பகவானையும் ஸ்ரீ வேத வியாச பகவானையும் போலே –
நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் ஆழ்வார் திருமகளாரும்
கிருஷ்ணாவதாரத்தில் மண்டி அர்ச்சாவதாரைத்தை அநுபவித்தார்கள் –

திரு மழிசைப் -பிரான் -நான்முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி
இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் -தெய்வம் -என்று
தேவதாந்திர பரத்வ நிரசநத்திலே தத் பரராய் இருந்தார் –

திருமங்கை ஆழ்வார் –
தேரோர் நிறை கதிரோன் மண்டலத்தை கீண்டு புக்கு ஆராவமுதம் அங்கு எய்தி
அதில் நின்றும் வாரா ஒழிவது ஓன்று உண்டே -அது நிற்க
ஏரார் முயல் விட்டு காக்கை பின் -போவதே
என்று -பரத்வத்தை காற் கடைக் கொண்டு
அர்ச்சாவதாரத்திலே இழிந்து
அது தன்னிலும் ஓர் இடத்தில் இரண்டு இடத்தில் அன்றிக்கே
நெருநற் கண்டது நீர்மலை இன்று போய் கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டும் –
என்று இப்படி
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி பரபரப்பாய் திரிந்தார் –

பெரிய -பெருமாளையும் அல்லாத திருப்பதிகளோ பாதி
கண்டியூர் யரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை -என்று
கோல் தேனாக வநுபவித்தார் இத்தனை இறே

அது -தானும்
என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட -என்கிற படியே
பெரிய பெருமாளுடைய விபவ தசையில் பாசுரங்கள் உபதேசமாய்க் கொண்டு
தம் திரு உள்ளத்திலே ஊற்றி இருக்க –
நின்னடி இணை -அடைந்தேன் -என்று
திருவடிகளை அனுபவித்த அளவு இறே -உள்ளது

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பெரிய பெருமாளை அநுபவியா நிற்கச் செய்தே
தம்மை உணர்ந்து அனுபவிப்பது
பரோபதேசம் பண்ணுவது
சப்த பூர்வகமாக பெரிய பெருமாளுடைய பரத்வ ஸ்தாபனம் பண்ணுவதாய் –
அந்ய பரராய் போந்தார் –

இவர் அங்கன் அன்றியே
இதம் பூர்ணம் என்று சொல்லுகிறபடியே பரத்வாதிகளாலே பூர்ணரான
பெரிய பெருமாளை அநுபவிக்கிறார் –

நம் ஆழ்வார் தொடக்கமான ஆழ்வார்களுக்கு பகவத் அனுபவம் நடவா நிற்கச் செய்தே –
முன்புள்ள ஜன்ம பரம்பரைகளில் உண்டான துக்க அநுபவ ஸ்மரணத்தாலும் –
ஸ்வரூப அநுரூபமான பகவத் போகத்தினுடைய அலாபத்தாலும்
க்லேச அநுபவம் கலசி நடவா -நின்றது

ஜாத்யந்தனுக்கு கண்ணைக் கொடுத்து கடலை இலக்காக்குமா போலேயும்
அர்ஜுனனுக்கு திவ்ய சஷூசை கொடுத்து வைஸ்வரூப்யத்தைக் காட்டி
அநுபவித்தாற் போலேயும்
அக்ரூர மாலாகாராதிகளுக்கு -சௌந்தர்ய சௌசீல்யாதி குணாவிஷ்காரத்தாலே
அநுபவித்தாப் போலேயும்-

ஏகைகஸ்மின் பரமவயவேநந்த சௌந்தர்ய மக்நம் சர்வம் த்ரஷ்யதே கதமிதி முதமாமதாமந்தசஷூ –
த்வாம் சௌ ப்ராத்ர வ்யதி கரகரம் ரங்க ராஜாங்க காநாம் தல் லாவண்யம் பரிணமயித விஸ்வ பாரீண வ்ருத்தி –
என்கிறபடியே
இவருடைய சத்யதையாலே பெரிய பெருமாள் அர்ச்சா ரூபமாய் இருக்கச் செய்தேயும்
தம்முடைய சௌந்தர்யத்தை ஆவிஷ்கரிக்க
அந்த சௌந்தர்ய சாகரத்தை
லாவண்யம் ஆகிற மரக் கலத்தாலே
எங்கும் ஒக்க அநுபவிக்கிறார்-

இன்னம் மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவர்க்கு வாசி –
பல்லாண்டு -போற்றி -என்று பாவிக்க வேண்டிற்று அவர்களுக்கு
அது வேண்டாதே இது இவர்க்கு ஜன்ம சித்தமாய்த்து

குலங்களாய வீரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -என்கிறபடியே இவர் தம்மை
நாலு வர்ணத்திலும் புறம்பாக நினைத்து இருப்பர் –
பெரிய பெருமாளும் அப்படியே நினைத்து இருப்பர் –
நித்ய ஸூரிகள் நாலு வர்ணத்தில் உள்ளார் அல்லரே –
ஆழ்வார்கள் இரு கரையர் -என்னும்படி இறே ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி யாழ்வார்  ஐகாந்த்யம்
அவரிலும் இவர்
பரோபதேசமும்
இதர நிரசனமும் அநுபவ விரோதி என்று –
வெறும் பெருமாளையே அடிக்கும் தலைக்கும் செவ்விதாக அநுபவிக்கிறார்

ஸ்நேஹே மே பரம –
என்றன் வளவன்றால் யானுடைய வன்பு –
ராஜம் ஸ்த்வயி –
இது தானும் என்னால் வந்தது அன்று -அதுவும் அவனது இன்னருளே –
நித்யம் பிரதிஷ்டித-
இன்றன்றாகில் மற்றொரு தர்மியைப் பற்றி வருகிறதாகையாலே –
நின்னலால் இலேன் காண் -என்னுமா போலே பக்திஸ்சநியதா
ஸ்நேஹம் ஆவது என் -பக்தி ஆவது என் என்னில் –
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து வ்யதிரேகத்தில் முடிந்த சக்கரவர்த்தி நிலை -ஸ்நேஹம் –
பக்தி -யாவது நில் -என்ன -குருஷ்வ -என்னும்படியாய் முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை –
வீர -தன்னைத் தோற்பித்த துறையைப் பிடித்துப் -பேசுகிறான்
பாவோ நாந்யத்ர கச்சதி -என்று என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சை மீட்க்கப் போகாது
அந்யத்ர-என்கிறது –
மற்று ஆரானும் உண்டு -என்பார் என்னுமாபோலே
கொடு போக நினைத்த தேசத்தின் பேரும் கூட தனக்கு அசஹ்யமாய் இருக்கிறபடி –
இப்படி ராமாவதாரம் அல்லது அறியாத திருவடியைப் போலே ஆய்த்து இவரும்
இவர் தேவாரமான பெரிய பெருமாளை அல்லது பர வ்யூஹ விபவங்களை-அறியாதபடியும்

அனுபாவ்யரான பெரிய பெருமாள் தம்மைப் பார்த்தாலும் –
பரத்வம் போலே தேச விப்ரக்ருஷ்டமாய் இருத்தல் –
வ்யூஹம் போலே தத் ப்ராயமால் இருத்தல் –
விபவம் போலே கால விப்ரக்ருஷ்டமாய் இருத்தல் –
அந்தர்யாமித்வம் போலே அசஷூர் விஷயமாய் இருத்தல் –
அர்ச்சாவதாரங்கள் போலே -தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாது இருத்தல் –
அங்கு வர்த்திக்கும் பேர் -சிலைக்கை வேடரேயாய் பயங்கரராய் இருத்தல் –
பெரிய ஏற்றமேற வேண்டி இருத்தல் –
வருந்தி பெரும் கூட்டத்தோடு போய் ஏறினால் -கானமும் வானரமும் வேடுமே யாய்
மேலை வானவர் இன்றிக்கே இருத்தல் –
செய்கை அன்றிக்கே
இத்தேசத்தில் -இக்காலத்தில் -எல்லார் கண்ணுக்கும் விஷயமாய்க் கொண்டு
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நின்ற திருவரங்கம் –
என்கிறபடியே
எல்லார்க்கும் நின்ற நின்ற நிலைகளிலேயே ஆஸ்ரயிக்கலாம் படி
சர்வ ஸூலபருமாய்
வன் பெரு வானகம் -இத்யாதிப் படி -உபய விபூதியையும் நிர்வஹித்துக் கொண்டு
போருகிற மேன்மையை உடையராய் -இப்படி
சர்வாதிகாருமாய் -சர்வ சேஷியுமாய் -சர்வ ரஷகருமாய் -சர்வ சமாஸ்ரயணீ யருமாய் –
நிரதிசய போக்ய பூதருமாய் -இருப்பவர் –

சேஷ்யே புரஸ்தாச் சாலாயாம் யாவந்மே ந ப்ரசீததீ -என்று
ஸ்ரீ பரதாழ்வான் என் தலையில் சுமை வாங்கினால் அல்லது எழுந்திரேன் என்று கிடந்தாப் போலே –
உங்கள் சுமைகளை என் தலையில் வைத்தால் அல்லது எழுந்திரேன்-
யோஹ ஷேமம் வஹாம் யஹம் -என்று கிடக்கிறவர் இறே-

ஸ்ரீ வைகுண்டம் திருப்பாற் கடல் திருவவதார ஸ்தலம் உகந்து அருளின திருப்பதிகள்
இவை எல்லாம் -பெரிய பெருமாளே யானாப் போலே -அவ்வோ இடங்களில் உண்டான
சௌந்தர்ய குண சேஷ்டிதங்கள் எல்லாம் பெரிய பெருமாள் பக்கலிலே காணலாம் –
பெரிய பெருமாள் அழகும் ஐஸ்வர்யம் எல்லாம் பரமபததிலே முகிளிதமாய் இருக்கும் –
அவதாரத்திலே ஈரிலை போரும் -இங்கே வந்த பின்பு தழைத்தது -எங்கனே என்னில் –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும்  சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் ஆகையாலே
அவ்வோ இடங்களிலே சங்குசிதமாய் இருந்தது இறே
தன்னை உகந்தாரை அனுபவிக்கை இன்றியே -தான்-என்றால் விமுகராய் இருப்பாரும் கூட அநுபவிக்கலாம் படி
இருக்கையாலே நீர்மையினால் வந்த ஏற்றமும் இங்கே உண்டு –
குணாதிக்யத்தாலே இறே வஸ்துவுக்கு உத்கர்ஷம் –
குணம் விலை பெறுவது இங்கே இறே –
குணத்தில் அகப்பட்டார் இவ்விஷயம் போக்கி அறியார்கள் இறே –
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதங்களுக்கு எட்டாத சர்வேஸ்வரனை
ஆற்றில் தண்ணீரோபாதி -ஆற்றுக்குள்ளே கண்டு அநுபவிக்கலாம் படி இருக்கிற இடம் இறே –
மழைக்கு அன்று வரை முன்னேந்தும் மைந்தன் மதுரவாறான அவ்வாறு இவ்வாறு -ஆய்த்து காணும் –

ஆஸ்ரயணீயர் ஆகையாலே மேன்மையும் –
நீர்மையாலே உபாய பாவத்தையும் –
வீர்யாதிகளாலே விரோதி நிரசநத்தையும்
சௌந்தர்யத்தையும் சொல்லுகையாலே போக்யதையும் சொல்லிற்று ஆகிறது –

பிராபக ஸ்வரூபம் அநுபவத்திலே மறைந்து போய்த்து –
இப் ப்ரபந்தம் தான் பிரணவம் போல் அதி சங்குசிதமாய் இருத்தல்

வேதமும் வேத உபப்ரும்ஹணமான மஹா பாரதமும் போலே பரந்து துறுப்புக் கூடாய் இருத்தல் -செய்யாதே –
பத்துப் பாட்டாய் -ஸூக்ரஹமாய் -சர்வாதிகாரமுமாய்
ப்ராப்யஸ்ய -இத்யாதிப்படியே அர்த்த பஞ்சக ப்ரதிபாத்யமுமாய் இருக்கும்

வேதோ உப ப்ரும்ஹணார்த்தா யதா வக்ராஹ்ய தப்ரபு -என்றும்
வேத அநத்யாபயாமாஸ மஹா பாரத பஞ்சமான் -என்றும் சொல்லுகிறபடியே
வேத உப ப்ருஹணமான -மஹா பாரத ராமாயணங்களும்
நாராயண கதாம் இமாம் -இத்யாதிகளைச் சொல்லி வைத்து
பகவத் கதை அல்லாவற்றையும் சொல்லி வைத்தது-

திருவாய் -மொழியும்
அமர்சுவை -யாயிரம் -என்றும்
பாலோடு அமுதன்ன ஆயிரம் -என்றும் –
உரை கொள் இன் மொழி -என்றும் –
ஏதமிலா ஆயிரமாய் இருந்ததே யாகிலும் –
அந்ய உபதேச ஸ்வா பதேசம் -என்ன
ஸாமாநாதி கரண்ய நிர்ணயகம் -என்ன –
த்ரி மூர்த்தி சாம்ய தத் உத்தீர்ண தத்வ நிஷேதம் -என்ன –
இவை தொடக்கமான அருமைகளை உடைத்தாய் இருக்கும் –

திரு நெடும் -தாண்டகமும்
பரப்பற்று முப்பது பாட்டாய் இருந்ததே யாகிலும்
அதுக்கும் அவ்வருமைகள் உண்டு –

திருமாலைக்கு
அவ்வருமைகள் இல்லையே யாகிலும்
தம்முடைய லாப அலாப ரூபமான ப்ரிய அப்ரியங்களை
ப்ரதிபாதியா -நிற்கும்-

திருப் பல்லாண்டுக்கு இக்குற்றங்கள் இல்லையே யாகிலும் –
அதுக்கும் ஒரு குற்றம் உண்டு –
த்ரிவித அதிகாரிகளுடைய குணாகுணங்களைப் ப்ரதி பாலிக்கையாலே-

பிரணவம் போலே அதி சங்குசிதிமாய் -துர் ஞேயமாய் -இராமையாலே –
யதி ஹாஸ்தி ததத் அந்யத்ர யன்நே ஹாஸ்தி நத்க் வசிக் -என்கிறபடியே
ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே
புறம்பு இல்லாதவை எல்லாம் இதிலே உண்டாய்
இதில் இல்லாதது ஒன்றும் புறம்பு இன்றியே இருக்கும் –

பர வியூஹ விபவங்களை பிரதிபாதிக்கை அன்றிக்கே –
அர்ச்சாவதார ரூபேண வந்து அவதரித்து
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடிவருட
பள்ளி கொள்ளும் கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு
மணத் தூணே பற்றி நின்று வாயார வாழ்த்துகிற பிரபந்தம் ஆகையாலே
எல்லா பிரபந்தகளிலும் இதுக்கு வை லஷண்யம் உண்டு –

இவர் தமக்கு ப்ராப்யரும் ப்ராபகரும் ருசி ஜனகரும் விரோதி நிவர்தகரும்
எல்லாம் பெரிய பெருமாளே என்கிறார் –
பல போக்த்ருத்வம் தம்மதாய் இருக்க -எல்லாம் அவரே -என்கிறபடி எங்கனே என்னில் –
பிரதம ஸூக்ருதமும் தானேயாய் –
இப் பேற்றுக்கு வேண்டியன நிர்வஹித்துப் போந்த சௌஹார்த்தமும் அத் தலையிலே
கிடைக்கையாலே -பேற்றுக்கு இத்தலையில் உள்ளது சொல்லப் பாத்தம் போதாது இறே –
உள்ளது உண்டாகில் அவன் அனுக்ரஹத்தாலே யாம் இத்தனை –

இதர விஷயங்களில் அருசியும் -பகவத் விஷயத்தில் அப்ரதிஷேதமும் விளைந்த
மாத்ரத்திலே பெரிய பெருமாள் தம்முடைய -ஸ்வரூப ரூப குண விபூதிகளைக்
காட்டக் கண்டு அநுபவித்து ப்ரீதர் ஆகிறார் –
ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட -என்று மஹா ராஜரை இட்டு -ஸ்ரீ விபீஷண ஆழ்வானை
அருள் பாடிட்டாப் போலே –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து –
கடைத்தலை இருந்து வாழும் சோம்பரான லோக சாரங்க மஹா முநிகளை யருள் பாடிட்டு –
நம்பாடுவானை அழைத்துக் கொண்டு வாரும் -என்ன -அவரும் -அருள் பாடு அருள் பாடு -என்று சொல்ல –
இவரும் -அடியேன் அடிப் பாணன் அடிப் பாணன் -என்று இறாய்க்க –
அவரும் விடாதே தோள் மேலே எழுந்து அருளப் பண்ணுவித்து கொண்டு போக
வழியிலே ஒன்பது பாட்டுப் பாடித் திருப் பிரம்புக்குள்ளே நின்று பத்தாம் பாட்டுப் பாடித்
தலைக் கட்டுகிறார் –

————————————————————-

வ்யாசிக் யாசத பக்த்யா விரக்த தோஷாயா  வேங்கடேச கவி
முகுந்த விலோகந முதித முநி வாஹந  ஸூக்தி பங்க்தி மிமாம் –

பாவளரும் தமிழ் மறையின் பயனே கொண்ட
பாண் பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில்
காவலனும் கணவனுமாய் கலந்து நின்ற
காரணனைக் கருத்துற நான் கண்ட பின்பு
கோவலனும் கோமானுமான வந்நாள்
குரவை பணர் கோவியர் தம் குறிப்பே கொண்டு
சேவலுடன் பிரியாத பெடை போற் சேர்ந்து
தீ வினையோர் தனிமை யெலாம் தீர்ந்தோம் நாமே

காரண விசேஷம் இன்னது என்று அறுதி இட அரிதாய் இருப்பதொரு பகவத் கடாஷத்தாலே
அயத்ந லப்தமான பர தத்வ -பரம ஹித -பரம புருஷார்த்த -விவேகத்தை உடையவராய் –
அநாதி கால பிரவ்ருதங்களான ஷூத்ர புருஷார்த்தராதிகளையும் –
ஷூத்ர புருஷ ஸ்தோத்ராதிகளையும் -ஷூத்ர புருஷார்த்த பிரவ்ருத்திகளையும்
தப்பின தம்முடைய கரண த்ரவ்யமும் இப்போது ப்ராப்தமான
ஏக விஷயத்திலே -அநந்ய பிரயோஜன அநுகூல வ்ருத்தியை உடைத்தான படியைக் கண்டு
சந்தோஷ யுக்தரான திருப்பாண் ஆழ்வார் -பின்பு பரம பதத்திலே பெரும் பேற்றை இங்கே
பெரிய பெருமாள் திருவருளாலே பெற்று –

இப் பேற்றை அடி தொடங்கி –
அமலனாதி பிரான் முதலான பத்துப் பாட்டாலே அநுபவ ப்ரீவாஹமாக அருளிச் செய்கிறார்-
இப் ப்ரபந்தம் அதி விஸ்தரம்  அதி சங்கோசம் அதி க்ருதாதிகாரத்வம் துர்க்ரஹத்வம்
துரவபோதார்த்த்வம் சம்ச்யாஸி ஜநகத்வம் விரஹ க்லேசம் தூத ப்ரேஷணம்
பரோபதேசம் பர மத நிரசனம் என்றாற் போலே
மற்றுள்ள அத்யாத்ம பிரபந்தங்களில் உள்ளவை ஒன்றும் இன்றிக்கே
அநுபவ கந ரசமாய் இருக்கிறது –
முதல் பாட்டான அமலனாதிபிரான் தொடங்கி
கொண்டல் வண்ணனை என்கிற தலைக் கட்டுப் பாட்டளவும்

இதில் முதல் பட்ட மூன்று பாட்டுக்கு முதல் அஷரம்
மூலமாகிய ஒற்றை எழுத்தின் முதல் -நடு -இறுதி யானவை-

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் -தனியன் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய-வியாக்யானம் –

May 12, 2013

ஸ்ரீ பெரிய நம்பிகள் அருளிச் செய்த தனியன் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வியாக்யானம் –
அவதாரிகை –

ஆபாத சூட-மித்யாதி –
இதில்
கருட வாஹனனும் நிற்க –என்றும்
அஞ்சிறை புட் பாகனை யாம் கண்டது தென் அரங்கத்தே -என்றும்
சொல்லுகிறபடியே பெரிய பெருமாளை சேவித்து அனுபவித்த முநி வாஹநரை மனஸாலே
அநுபவிக்கும் படி சொல்லுகிறது –

கருட வாஹநத்வமும் -சேஷ சாயித்வமும் -ஸ்ரீய பதித்வமும் இறே
சர்வாதிக வஸ்துவுக்கு லஷணம்

இப்படி சர்வாதிக வஸ்துவினுடைய திவ்ய அங்கங்களை திருப் பாதம் தொடங்கி அனுபவித்த க்ரமம் சொல்லுகிறது –

ஆபாத சூடம் அநுபூய ஹரிம் சயாநாம்
மத்யே கவேரே துஹிதுர் முதித அந்தராத்மா
அத்ருஷ்ட் ருதாம் நயநயோர் விஷயாந்த்ராணாம் –
யோநிஸ் சிகாயா மநவை முநி வாஹநம் தம் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வியாக்யானம் –

ஆபாத சூடம் –
திருப் பாத கேசத்தை-
அநுபூய
அமலனாதி பிரான் அடைவே அனுபவித்து
ஸூக்ஸூப்த பரந்தப -என்னும்படியாய் கிடைக்கை –

கிடந்ததோர் கிடைக்கை கண்டும் எங்கனம் மறந்து வாழ்கேன் -என்றும் –
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் -என்னும்படி
தாபஹர் ஆனவரை –

அவர் தாம் –
அரவினணை மிசை மேய மாயனாரான முகில் வண்ணன் இறே –
இப்படி அநுகூல பிரதிகூல ரஷண ஸிஷணங்களை பண்ணுமவரானவரை-

கவேரே துஹிதுர் மத்யே –
கவேரே கந்யையான காவேரி மத்யே –
கங்கையிற் புனிதமாய காவேரி நடுவு பாட்டிலே இறே படுகாடு கிடக்கிறது –

வண் பொன்னி -திரைக் கையால் அடிவருட –
திருவாளன் இனிதாக வாய்த்து -திருக் கண்கள் வளருகிறது

குடதிசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி
கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு -அநுபவித்தார் -என்கை-

முதிதாந்தராத்மா –
இப்படி அநுபவித்து ஹ்ருஷ்ட மநாவானவர் –
அக மகிழப் பெற்றார் –

உவந்த உள்ளத்தார் ஆனார் –
சந்துஷ்ட சித்த சமாஹிதரானார் –
மகிழ்ந்தது -சிந்தை என்னக் கடவது இறே-

இனி அவ்வளவிலே நில்லாதே
அத்ருஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்த்ராணாம் –
என்னும்படி-காணாக் கண் உடையவர் ஆனார் –
அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே –
என்றாய்த்து இவர் இவ் விஷயத்திலே –
அஸ்தமித அந்ய பாவராய் இருப்பது –
ஏத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ரருப்யந்தி –

அரங்க மா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்டு என் கண் இணை களிக்குமாறே –
ராமம் மே அநுகதா த்ருஷ்டி –
நத்வா பஸ்யாமி -இறே –
சௌந்தர்ய சாகரத்திலே மக்நர் ஆனார்
இவருக்கு அழகு அஞ்ஞானத்தை விளைத்தது ஆய்த்து
அத்ருஷ்டம் த்ருஷ்டம் ஆகையாலே த்ருஷ்டம் அத்ருஷ்டம் ஆய்த்து –

அன்றிக்கே –
சிந்தை மற்று ஒன்றின்  திறத்து அல்லா –
பாவோ நான்யத்ர -கச்சதி என்னும்படி
பரத்வாதிகளை ஆய்த்து பரோஷ விஷயம் ஆகிறது என்னுதல்

கட்கிலி -என்னும் வடிவை இறே
கண்ணால் கண்டு அனுபவித்தது

காணாதவையும் கண்ட வஸ்துவில் உண்டு இறே
இப்படி மைப்படி மேனியை அனுபவித்து -மற்ற விஷயங்களை காணாக் கண்ணாய்
இருக்குமவரைச் சொல்லுகிறது-

யோநிஸ்சிகாயா மநவை முநி வாஹநம் தம் –
என்று யாவர் ஒருவர் -கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்று அறுதி இட்டார்
அப்படிப்பட்ட -அந்த முநி வாஹநரை

மநவை –
மனஸ்ஸாலே -பிரதிபத்தி பண்ணுகிறேன் என்றபடி –
அயன் அலர் கொடு தொழுதேத்த -என்னும்படி -ஹம்ச வாஹனான சதுர்முகன்
பஹு முகமாக அநுபவித்தால் போலே
முநி வாஹநாரான இவரும் ஏக முகமாக இரண்டு கண்ணாலும் கண்டு அனுபவித்தார்-

கிரீட கேயூரக ரத்ந குண்டலம் ப்ரலம்ப முக்தாமணி ஹேம பூஷிதம் –
விஸால வஷ்ஸ் ஸ்தல ஸோபி கௌஸ்துபம்
ஸ்ரீ யாச தேவ்யாத் யுஷி தோரு விக்ரஹம்
ப்ரதப்த சாமீகர  சாரு வாஸஸம்
ஸூ மேகலா நூபுர ஸோபி தாங்க்ரிகம்
ஸூ பந்து நீ ஜாதாம்ருணள கோமளம் ததா நமச்சச்ச வியஜ்ஞ ஸூத்ரகம்
புஜோ பதாநாம் ப்ரஸருதான்ய ஹஸ்தம் நி குஞ்சிதோ ததா நித பாத யுக்மம்
ஸூ தீர்க்க முர்வம்ஸ முதக்ர வேஷம் புஜங்க தல்பம் புருஷம் ததர்ஸ -என்று
ப்ரஹ்மா வானவன் அபிமானி ஆகையாலே முடியே தொடங்கி அனுபவித்தான் –

இவர் -அடியார் ஆகையாலே -அடியே தொடங்கி அநுபவித்தார்

அவன் கண்ட அநந்தரம் விஷயங்களைக் கண்டான் –
இவர் விஷயங்களைக் கண்டிலர்

திருக்கமல பாதம் வந்து என் கண்ணினுள் உள்ளன –
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றார் –

வீணையும் கையுமாய் சேவிக்கிற இவர்க்கு -சேமமுடை நாரதநாரும் ஒரு வகைக்கு
ஒப்பாகார் –
பெரியாழ்வார் அவதாரத்தில் அனுபவம் இவர்க்கு அர்ச்சாவதாரத்திலே

அவர் -பாத  கமலம் -என்றதை -திருக் கமல பாதம் -என்றார் –
பீதகச் சிற்றாடை யொடும் -என்றதை -அரைச் சிவந்த ஆடையின் மேல் -என்றும்
அழகிய -உந்தியை – அயனைப் படைத்தோர் எழில் உந்தி -என்றும் –
பழம் தாம்பால் ஆர்த்த வுதரத்தை -திரு வயிற்று உதர பந்தம் -என்றும் –
குருமா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பை -திரு வார -மார்வென்றும்
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய -கண்டத்தை முற்றும் உண்ட கண்டம் -என்றும் –
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத் தலத்தை -கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் என்றும் –
செந்தொண்டை வாயை -செய்ய வாய் -என்றும் –
கண்கள் இருந்தவா –என்றத்தை அப்பெரிய வாய கண்கள் -என்றும் –
உருவு கரிய ஒளி மணி வண்ணன் -என்றத்தை -எழில் நீல மேனி -என்றும் –
குழல்கள் இருந்தவா -என்றதை -துளவ விரையார் கமழ் நீண் முடி -என்று
அருளிச் செய்தார் –

கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் இறே பெரிய பெருமாள் –
ஆகையால் -அனுபவத்தில் இருவரும் ஸ கோத்ரிகளாய் யாய்த்து இருப்பது –
இப்படி மந ப்ரீதி பிறக்கும்படி அநுபவித்த ஆழ்வாரை
இங்கு மந ப்ரீதி பிறக்கும்படி -மனஸாலே சேவிக்கும்படி -சொல்லிற்று-

———————————————————————————————-

திருமலை நம்பி அருளிச் செய்த தனியன் –

அவதாரிகை –
பெரிய பெருமாளை பதாதி கேச அந்தமாக அநுபவிக்கப் பெற்ற
பாண் பெருமாளை
ஸ்தோத்ரம் பண்ணி
ஹர்ஷிக்கும் படி சொல்லுகிறது –

காட்டவே கண்ட பாத கமல நல்லாடை உந்தி
தேட்டரும் உதரபந்தம் திரு மார்வு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே –

வியாக்யானம் –
காட்டவே கண்ட பாத கமலம் –
அரங்கத் தம்மான் திருக் கமல பாதம் என் கண்ணினுள்ளன ஒக்கின்றவே -என்று

நல்லாடை –
அரங்கத்தம்மான் அரைச் சிவந்த வாடை -என்று ரெங்க துரந்தரனுடைய பீதாம்பரதைச் சொல்லுகிறது

உந்தி –
அரங்கத் தரவின் அணையான் -அயனைப் படைத்ததோர் எழில் உந்தி -என்று
விதி சிவ நிதானமான நாபீ பத்மத்தைச் சொல்லுகிறது –

தேட்டரும் உதர பந்தம் –
தேட்டரும் திறல் தேனான தென் அரங்கன் உடைய தேடற்கு அரிய உதர பந்தம் –
அரங்கத்தம்மான் திரு வயிற்று உதர பந்தம் –
என்றும் பட்டம் கிலேதர பந்தநம் -என்றதை சொல்லுகிறது –

திரு மார்வு –
அரங்கத்தம்மான் திரு வார மார்வு -என்று லஷ்மீ லலித க்ருஹமான
வஷஸ் ஸ்தலத்தைச் சொல்லுகிறது –

கண்டம் –
அரங்க நகர் மேய வப்பன் முற்றும் உண்ட கண்டம் -என்று
ஸ்ரீ ரெங்க நேதாவின் கண்டத்தைச் சொல்லுகிறது –

செவ்வாய்
அணி அரங்கனார் செய்ய வாய் -என்று –
அதர மதுராம் போஜம் -என்று அருணா தர பல்லவத்தைச் சொல்லுகிறது

வாட்டமில் கண்கள் –
ஷணோஜ் வலமாய்
அழலானியை உடைய தாமரைப் பூவில் வ்யாவ்ருத்தமாய்
சதைக ரூபமாய
அரங்கத் தமலன் முகத்து கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி
நீண்ட அப்பெரியவாய கண்கள் -என்று
விஸால ஸ்பீதாய த்ருசி ஸி ஸிரா தாம்ர தவளமான
ஸ்ரீ ரெங்க ப்ரணயி நயநாப்ஜங்களை சொல்லுகிறது

மேனி
ஏவம் விதமான திவ்ய மங்கள விக்ரஹத்தை
முனியேறி
முனி வாஹநராய்
தனி புகுந்து
இந்த மஹா போகத்திலே தாம் ஏகராய் உள் புகுந்து-

பாட்டினால் –
அநுபவத்துக்கு பாசுரம் இட்டுப் பேசின -அமலனாதிபிரான் -என்கிற
பிரபந்தத்தின் பாட்டுக்களாலே –
அண்டர் கோன் அணி அரங்கனைக் கண்டு வாழுமவர் யாய்த்து -இவர் –
பின்பு இவ் வநுபவத்துக்கு பட்டர் தேசிகர் ஆனார்-

கண்டு வாழும்
காட்சியே வாழ்ச்சியாக வாழுகிற

பாணர் தாள்
வீணா பாணியாய் பெரிய பெருமாள் திருவடிக் கீழே
நிரந்தர சேவை பண்ணிக் கொண்டு நிற்கிற திருப்பாண் ஆழ்வார்
திருவடிகளை

பரவினோம்
ஸ்தோத்ரம் பண்ணினோம்
அலாப்ய லாபமானது லபிக்கவும் பெற்றோம்
இனி ஒரு குறைகளும் இல்லை -என்கிறது-

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

கண்ணி நுண் சிறுத் தாம்பு -11- அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 11, 2013

நிகமத்தில் இப்ப்ரபந்தத்தையே தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு
வாசபூமி பரமபதம் -என்கிறார்

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–

அன்பன் –
வாத்சல்யத்தையே நிரூபகமாக உடையவன் ஆயிற்று ஈஸ்வரன் –
இன்னானுக்கு அன்பன் என்று விசேஷியாமையாலே
ரிபூணாமபி வத்சலா -என்கிறபடியே-சர்வ விஷயம் ஆயிற்று அவனுடைய வாத்சல்யம் இருப்பது -அதுக்கு ஹேது என் என்னில் சர்வேஷா மேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ -என்றும்–தேவா நாம் தாநவாநாஞ்ச சாமான்யமதி தைவதம் -என்றும்
ஜனகத்வ பிரயுக்தமான சம்பந்தம்-சர்வ சாதாரணமாய் இருக்கையாலே
வாத்சல்யமும் பொதுவாய் இருக்கும் –

தன்னை அடைந்தவர்கட் கெலாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பி-
ஆழ்வாருடைய அன்பு அங்கன் பொதுவாய் அன்றே இருப்பது
பரமனைப் பயிலும் திருவுடையார் எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -என்கிறபடியே
பகவத் சம்பந்த நிபந்தனமாய் இ றே இருப்பது -(கீழே அன்பு -வாத்சல்யம் -இங்கு பக்தி -என்றவாறு  )தம்மைப் போலே -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்பார் எல்லாரையும் தமக்கு நாதராக-வாயிற்று நினைத்து இருப்பது –
தென் குருகூர் நகர் நம்பி –
அடியார் அடியார் தம் அடியார் -என்று தத் சம்பந்திகள் அளவும் பண்ணின பிரேமத்தாலே
பூரணராய் இருப்பர்

நம்பிக்கு அன்பனாய் –
பகவத் விஷயத் தளவும் அன்றிக்கே -ததீயர் அளவும் அன்றிக்கே-ஆசார்ய விஷயத்திலே சக்தராய் –
தனக்கு புருஷார்த்தம் வேண்டி இருக்கில் பகவத் விஷயத்தை பற்ற -அமையும்
அங்கன் தான் உகந்தது அன்றிக்கே -ஈஸ்வரன் உகப்பே புருஷார்த்தம் -என்று இருக்கில்
பாகவதர்களைப் பற்ற அமையும் -ஜ்ஞா நீத்வாத்மைவ மே மதம் என்றும் மம ப்ராணா ஹி பாண்டவா -என்றும் பாண்டவர்களை தனக்கு தாரகராக இ றே நினைத்து இருப்பது –ஈச்வரனோடு ஸ்ரீ வைஷ்ணவர்களோடு வாசியற எல்லாருடைய உகப்பும் புருஷார்த்தம் என்று இருக்கில்-ஆச்சார்யனைப் பற்ற அடுக்கும்-ஆசார்ய வான் -என்று ஆயிற்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் உகப்பது-பிரதமத்திலே -1-ஆசார்யன் தனக்கு அஜ்ஞாத ஜ்ஞாபந முகத்தாலே-ஸ்வரூப ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து-2-பகவத் சமாஸ்ரயண வேளையிலே புருஷகார -பூதனாய்–3-தன்னுடைய அனுஷ்டாநத்தாலே இவனை நல் வழியே கொண்டு போய்-4-ப்ராப்தி தசையிலும் சாத்ய வ்ருத்தியை பண்ணிக் கொடுக்கக் -கடவனாய் இப்படி பஹூ முகத்தாலே உத்தேச்யனாய் இ றே -இருப்பது-

மதுரகவி சொன்ன -சொல்
ஆழ்வாரைத் தாம் சொன்ன பாசுரம் தமக்கு இனிதாய் இருக்கையாலே-மதுரகவி -என்கிறார் (குருகூர்  குயில் போலே  -தானாய் தன்னைப் பாடிக்கொ ண்டார் -கண்ணன் இவரை இட்டு பயாடிக் கொண்டால் போலே )
சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
இனிதாய் இருந்தில்லை யாகிலும்-(மதுரகவி சொல் போதுமே -சொன்ன – நடுவில் -சொன்னதாக வள வள பேச்சாக இருந்தாலும் என்றவாறு )-இப்பிரபந்தத்தை தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு-வஸ்தவ்ய தேசம் பரம பதம் –
ஆழ்வார் உத்தேச்யர் ஆனால் திரு நகரி அன்றோ ப்ராப்யமாவது -என்னில்
திரு நகரியில் -பொலிந்து நின்ற பிரான் ஆணையும்-ஆழ்வார் ஆணையுமாய் இரு புரியாச் செல்லும்-அங்கன் இன்றிக்கே ஆழ்வார் ஆணையே யாய்ச் செல்லும் -பரமபதம்
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ –என்றும் /வானவர் நாடு -என்றும் /சொல்லக் கடவது இ றே /நம்பி திரு வழுதி வள நாடு தாசர் –நம்புவார் பதி வைகுந்தம் -என்று
அவர்கள் இருந்த தேசம் காணும் பரமபதம் –என்று சொல்லுவர் –
உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் -எல்லாம் -என்னக் கடவது இ றே-(உள்ளுவாருக்கு உம்பர் ஊரே -அநந்த புரம் பதிகம் -உம்பர் -ஊர் திரு நாடு / திரு வனந்த  புரம்  / வசிக்கும் ஊர்  மூன்றும் -சாண்ட்லி விவகாரத்தில் கண்டோமே -இது அன்றோ  எழில் ஆலி என்னார் தாமே -போலே )
கூரத் ஆழ்வான் மகன் பிறந்த பின்பு சம்சாரமும் பரம பதமும் இடைச் சுவரைத் தள்ளி
ஒரு போகி யாயிற்று காண் -என்று பெற்றி பணித்தார் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு -10- பயனன் றாகிலும் பாங்கலராகிலும் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 10, 2013

( ஆட் புக்க காதல் அடிமைப்பயன் -சொல்லி உடனே பயன் இல்லை பாங்கு இல்லை என்கிறீரே -அவர் திருத்த திருந்தி உள்ளீர் -பாங்கும் உண்டே -என்னில் தம்மைப் பார்த்தால் இப்படி தின்றும் -அவர் செய்து அருளினை உபகாரம் அனுசந்தித்த வாறே இப்படி தோற்றும் -)ஆழ்வார் தமக்கு உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்தவாறே
தாம் இதுக்கு முன் ஆழ்வார் விஷயத்தில் நின்ற நிலை யடங்க
முதலடி இட்டிலராகித் தோற்றுகையாலே –அவர் பண்ணின உபகாரத்தைப் பேசுகிறார் –
ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையோ என்னில் –
க்ருத்ஸ்நாம் வாப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே-
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமியும் சத்ருசமம் அல்ல என்று இ றே சாஸ்திரம் -(பொன்னுலகு  ஆளீரோ புவனம் எல்லாம் ஆளீரோ – )அவன் இவனுக்கு உபகரித்தது சர்வாதிகமாய் இருப்பதொரு மிதுனைத்தை யானால்-அப்படியே இருப்பதொரு மிதுனத்தை உபகரித்தால் இ றே இவன் பிரத்யுபகாரம் பண்ணினான் ஆவது –
ஆகையால் -ஆச்சார்யர் விஷயத்தில் எல்லாம் செய்தாலும் -அவன் பண்ணின
உபகாரத்தைப் பார்த்தால் -ஒன்றும் செய்திலேன் நான் -என்று முகக் குறைவாளனாய்
போரும் இத்தனை –

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-

பயனன் றாகிலும் –
நாட்டிலே ஒருவனை -உபகரிப்பது ஒரு பிரயோஜனத்தைப் பற்றி இ றே
அங்கன் ஒரு பிரயோஜனம் இல்லாது இருக்கச் செய்தேயும் –
பாங்கலராகிலும் –
பிரயோஜனம் இல்லாவிட்டால் -சொல்லுகிறபோது ஹிதம் கேட்க்கைக்கு
பங்காய் இருக்கலாம் இ றே
அங்கன் பாங்கு இன்றிக்கே இருந்தார்களே -ஆகிலும்
இப்படி இருக்குமவர்களுக்கு ஹிதம் சொல்லுகைக்கு ஹேது என் என்னில் –
இவர்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமை இ றே
இப்படி உபதேசிப்பார் உண்டோ -என்னில் –
ராவணனுடைய துர்கதியைக் கண்டு மித்ர மௌபயிகங்கர்த்தும்-என்று-அவனுக்கு ஹிதம் சொன்னாள் இ றே பிராட்டி-(தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும்  இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் -இதில் சீதை மட்டும் காட்டி )-ஒருவன் தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்துக் கொண்டு-அகத்துக்குளே கிடக்க அகம் நெருப்பு பட்டு வேகா நின்றால் கண்டு நின்றாரவிக்கும் போது-தங்களுக்கு ஒரு பிரயோஜனத்தைப் பார்த்தல் -உள்ளே கிடந்தவன் அபேஷித்ததுக்காக-வரதல் அன்றி இ றே அவிப்பது -இப்படி யாயிற்று ஆழ்வார் படியும்-

செயல் நன்றாகத் –
தனக்கு ஒரு பிரயோஜனம் இல்லை யானாலும்-எதிர்தலை பாங்கின்றியே  ஒழிந்தால்
அவன் உஜ்ஜீவிக்கும்படி என் என்னில் –
தன்னுடைய செயலாலே எல்லாம் நன்றாம்படி பண்ணி –
இவன் செயல் தான் நன்றாம்படி –என்னவுமாம்

திருத்திப் பணி கொள்வான் –
தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்தி பணி கொள்ள வல்ல -(-3-5-)என்று-ப்ராப்யமும் ப்ராபகமும் தானே -என்று அத்யவசித்து இருக்குமவர்கள் உடைய-விரோதியைப் போக்கி அடிமை கொள்ளுமவன் என்றது இ றே சர்வேஸ்வரனை –
அங்கன் இன்றிக்கே
இவை ஒன்றும் இன்றிக்கே -இருக்குமவர்களையும் திருத்திப் பணி கொள்ளுமவர் இ றே ஆழ்வார் –பணி கொள்வான் –குருகூர் நம்பி -என்று அந்வயம்-(கொள்வான் -கொள்ளுகைக்காக -)

குயில் நின்றார் பொழில் சூழ் -என்ற இடம்-திருத்திப் பணி கொள்ளும்படிக்கு த்ருஷ்டாந்தம்-
இவர் ஒரு காலத்திலே-ஆற்றாமையாலே -காண வாராய் -என்று கூப்பிடுவதும் ஒரு பாசுரம் உண்டு
யாவர் நிகர் அகல் வானத்தே -என்று களித்துச் சொல்லும் ஒரு பாசுரம் உண்டு
இவர் பாசுரத்தைக் கேட்ட குயில்களும் செவியோத்து அத்தாலே இப்பாசுரத்தை சொல்லும்-ஆக இரண்டு பாசுரதுக்கும் குயில்கள் ஆயிற்று பயிற்றுவன –

குருகூர் நம்பி –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்று சேதனர் உடைய அளவு அன்றிக்கே
திர்யக்குகள் அளவும் ஏறும்படி யாயிற்று ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது –

முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே –
உன்னுடைய ஸ்லாக்கியமான திருவடிகளுக்கு அன்பையே முயல்கின்றேன் –
அர்த்தியா நின்றேன் –
செய்கிற அடிமையால் பர்யாப்தி பிறவாமையாலே
திருவடிகளிலே எனக்கு அபிநிவேசம் பிறக்க வேணும் -என்று அர்த்திக்கிறார் இ றே
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -என்று ஆழ்வார் தாம்
அவ்விஷயத்தில் தடு மாறினாற் போலே-
பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமையாலே தடு மாறுகிறார்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு – 9- மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 10, 2013

ஒன்பதாம் பாட்டில் –
ஆழ்வாருடைய அருள் உலகினில் மிக்கது -என்கைக்கு அடி என் என்னில் –
என்னுடைய தண்மை பாராதே-சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை பாடி –
அத்தை எனக்கு உபகரித்தார் -என்கிறார் -(வேதம் -பொருள் -பகவத் சேஷத்வம் -உட் பொருள் பாகவத சேஷத்வம் )-நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதி -என்று அவ் விஷயத்தில் ஆழ்வார் அருளிச் செய்தத்தை-ஆழ்வார் திருவடிகளிலே இவர் அருளிச் செய்கிறார்-

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-

மிக்க வேதியர் –
ப்ரமாண ஸ்ரேஷ்டமான வேதத்தை நிரூபகமாக உடையவர்கள் –
உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று ஆழ்வார் அருளிச் செய்ய கேட்டிருக்கையாலே –
அநேக சாக அத்யயனம் -பண்ணினவர்கள் என்றுமாம் –

வேதத்தின் உட் பொருள் –
சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை –
வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இ றே
வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-

நிற்கப்பாடி –
துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –
பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் –
எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இ றே-

என் நெஞ்சுள் நிறுத்தினான் –
பகவத் சேஷத்வத்துக்கும் கூட மேட்டு மடையான என் நெஞ்சிலே இத்தை
ஸ்திரமாக்கினார் –
கல்லைத் துளைத்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே
நிர் விவரமான என்  நெஞ்சுக்கும் இதுவே விஷயமாம் படி பண்ணினார்
இது இ றே –என் தண்மையைப் பாராதே என் திறத்தே பண்ணின உபகாரம் -(ஆழ்வார் ஏவ கைங்கர்யம் இவருக்கு -ஆழ்வாருக்கு அர்ச்சை பெருமாள்  ஏவ மாட்டாரே  -ஏவிப் பணி கொள்ளப் படுவது அங்கே தானே )

தக்க சீர் சடகோபன் –
இது தொடங்கி (இப்பாட்டில் சேஷமும் மேல் பாட்டுக்களாலும் ) உபகார ஸ்ம்ருதியாலே தமக்குப் பிறந்த அபிநிவேசத்தை பேசுகிறார் –
தக்க சீர் சடகோபன் –
சர்வேஸ்வரன் கவிகள் -என்றால் தகுதியான கல்யாண குணங்களை உடைய ஆழ்வார் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றால் சர்வேஸ்வரத்துக்கு போரும்படி இருக்குமா போலே-சர்வேஸ்வரன் கவிகள் -என்றால் போரும்படி யாயிற்று ஆழ்வார் இருக்கும் படி –
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு-ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் -என்று தாமே அருளிச் செய்தார் இ றே-

என் நம்பிக்கு –
அதுக்கு மேலே (கீழே அவனுக்கு தக்க குணம் -இதில் தாழ்ந்த என்னை அபகரித்த குணம் அன்றோ -) ஒரு பௌஷ்கல்யம் இ றே இது -என்னை விஷயீ கரிக்கைக்கு தகுதியான சீலாதி குண பௌஷ்கல்யத்தை வுடையவர் ஆனவர்க்கு –
ஆட் புக்க காதல் –
அனந்யார்ஹ சேஷமாக்கின ருசி-(ஆள் புகப் பண்ணின காதல் -கைங்கர்யத்தில் மூட்டின காதல் )

அடிமைப் பயன் அன்றே –
இந்த ருசி யன்றோ அப்போதே தாஸ்யமான பிரயோஜனத்தோடே வ்யாப்தமாய் இருப்பது -பகவத் விஷயத்தில் ருசி அடியாகபிறந்த தாஸ்யம் -சரீர விச்லேஷம் பிறந்தால்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே -ஒரு தேச விசேஷத்தில் சென்றால் பெறக் கடவதாய் இ றே இருப்பது –
அங்கன் அன்றிக்கே
ஆழ்வார் பக்கல் பிறந்த ருசி -இச் சரீரத்தோடே இங்கே யாழ்வார் திருவடிகளிலே எல்லா
அடிமையும் செய்யலாம்படி பண்ணும் –
துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு
முனியே நான்முகனுக்கு அவ்வருகு இ றே பேறாயிற்று
இவ்விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பியாது என்கிறது –
அன்றே -என்றது –ஆம் என்றுமாம் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு – 8-அருள் கொண்டாடும் அடியவர் இன்புற -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 10, 2013

எட்டாம் பாட்டில் –
எண் திசையும் அறிய இயம்புகேன் -என்கைக்கு ஹேது என் -என்னில் –
ஆழ்வாருடைய அருள் -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும்
கபளீ கரித்து இருக்கையாலே -என்கிறார் –

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-

அருள் கொண்டாடும் அடியவர் –
இவ் வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் –
அதுவும் அவனது இன்னருள் -என்றும் –
அருள் பெறுவார் அடியார் தம் அடியன் -என்று இருக்கும் இவர் தம்மைப் போலே –
ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றும் –
நின்னோடும் ஒக்க வழி பட வருளினாய் -என்றும் –
அருள் புரிந்த சிந்தை -என்றும் –
நின் அருளே புரிந்து இருந்தேன் -என்றும்
அருளாது ஒழியுமே -என்றும் -(சீறி அருளாதே -சீற்றத்தையும் அருள் -கொண்ட சீற்றம் ஓன்று உளது -என்றும் கொண்டாடுவார்கள் அன்றோ )
இப்படிகளால் அவன் அருளைக் கொண்டாடும் அடியவர் –
இப்படியே பகவத் பிரசாதத்தையே கொண்டாடி போருமவர்கள் –
பகவத் பிரசாத ஹேதுவாக -ஸ்வகதமான கர்ம ஜ்ஞான பக்திகளை உபாயமாக
ஆதரிக்கும் அவர்கள் அன்றிக்கே -கேவல பகவத் ப்ரசாதமே உஜ்ஜீவன ஹேது -என்று இருக்கும் அவர்கள் -தம் தாம் பக்கல் உள்ள ஆனுகூல்யங்களை பிரசாத பலமாக நினைத்து இருக்கும்-அது ஒழிய -பிரசாதமாக நினைத்து இராதவர்கள் –
இவர் இப்படி நினைத்து இருப்பது மற்றைய ஆழ்வார்களை இ றே –
ஆழியான் அருளே -என்றும் –
நின் அருளே புரிந்திருந்தேன் -என்றும் இ றே அவர்கள் பாசுரங்கள் -(கிருபையால் பக்தியை பெற்றோம் என்பார்கள் –சரணாகதி கிருபா ஜனகமா -கிருபா ஜன்யமா –சரணாகதி கிருபையை தூண்டாது –கிருபா ஜனகம்  இல்லை ஜன்யம் தானே -கிருபைக்கு பலம் தான் பக்தி -சரணம் நாக்கு பிறந்ததே தேவரீர் பிரசாதம் கூரத் தாழ்வான்-வைஷம்யம் இல்லை -அனைவரையும் -வரவாறு ஓன்று இல்லை -வெறிதே அருள் செய்வார் செய்வார்க்கு உகந்தே  -பண்ணுவதற்காக கொடுத்தால் சாதிய உபாயம் -அவனே கொடுப்பதால் சாத்தியம் நிர்ஹேதுகம் –உபாயம் எதிர் பார்க்காமல் -அதிகாரி ஸ்வரூபம் -அடைய ஆசை இச்சை வேண்டும் -ஆசை தகுதி -என்றவாறு -புருஷ சாபேஷமாய் புருஷகார சாபேஷமாய் இருக்கும் -)

இன்புற –
ஆநந்த நிர்பரராக –
எண்ணாதனகள் எண்ணு நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப -என்கிறபடியே –
சாதநத்தில் அந்வயம் இன்றிக்கே -பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கும்படியாக -(உபாயமாக ஒன்றையும் செய்ய வேண்டாம் கைங்கர்யத்துக்காக அனைத்தையும் பண்ண வேண்டும் )

வருளினான் அவ் வருமறையின் பொருள் –
அவ்வரு மறை –
பிரசித்தமாய் -பெறுதற்கு அரிதாய் இருக்கிற மறை -அதாகிறது –
வேத ரஹஸ்யமான உபநிஷத் இ றே –
அவ்வரு மறையின் பொருளை அருளினான் –
நித்ய சத்வஸ்தர்க்கு அல்லது தோன்றாத உபநிஷத் அர்த்தத்தையும் அருளிச் செய்தார் –
பரம சாத்விகர்க்கு நித்தியமான ஐஸ்வர்யமும் -உபநிஷத் ரஹஸ்யமே   இ றே-
சா ஹி ஸ்ரீ ரம்ருதா சதாம் -என்னக் கடவது இ றே -அதாவது சர்வ ரச என்றும் ரசோ வை ச -என்றும்-சொல்லுகிற விஷயத்தை தத் ப்ரசாதத்தாலே லபிக்கை
ஏஷ ஹ்யேவா நந்தயாதி – என்றும் -தத்ஹேது  வ்யபதேசாச்ச -ப்ரஹ்ம ஸூ த்ரம்-1-1-15–என்றும் சொல்லக் கடவது இ றே

அருள் கொண்டு –
இவர் தாம் ஸுவ புத்தியாலே அருளிச் செய்தார் அன்று –
மயர்வற மதிநலம் அருளினான் -என்கிறபடியே -ப்ரசாத லப்த ஜ்ஞாநத்தை முதலாகக்
கொண்டு -தத் ப்ரேரிரதராய் கொண்டு ஆயிற்று அருளிச் செய்தது –
என்னாகியே தப்புதலின்றி தன் கவி தான் சொல்லி -என்கிறபடியே
பிறரோபாதி -கவி பாடுகிற் தாமும் -விஸ்மிதர் ஆம்படி நிரவத்யமாக இ றே
கவி பாடுவித்துக் கொண்டது –

ஆயிரம் இன் தமிழ் பாடினான் –
சதுர்விம்சாஸ் சஹஸ்ராணி ஸ்லோகா நாமுக்தவான் ருஷி -என்றாப் போலே-(500 சர்க்கம் ஆறு காண்டம் / 24000 ஸ்லோகம் -630 சர்க்கம் ஏழு காண்டம் -உத்தர காண்டம் சேர்த்தே 24000 ஸ்லோகங்கள் )ஆயிரமாக ஆயிற்று பாடிற்று –
ஓர் ஆத்மாவுக்கு ஹித அம்சத்துக்கு ஒரோ பாட்டே அமையும் படி இ றே இருப்பது –
இன் தமிழ் பாடினான் –
துர் அவகாஹமான வர்த்தத்தை -பாட்யே கேயே ச மதுரம் -என்கிறபடியே-ரசகநகமகவும் -சர்வாதிகாரமாம் படியும் பாடினார் –

பாடினான் அருள் கண்டீர்-
மயர்வற மதிநலம் அருளினான் -என்னும்படியான அருள் அல்ல –
அது தன்னையும் விளாக் குலை கொண்டு இருக்கும் அருள் இ றே -ஆழ்வார் அருள் –
ஈஸ்வரன் கை விட்ட ஆத்மாக்களிலும் -அவர்களுடைய துர்கதியைக் கண்டு திருத்த
ஒருப்பட்ட படியாலே இவர் அருள் ப்ரத்யஷம் அன்றோ -என்கை

இவ் உலகினில் மிக்கதே –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயதையும் கபளீ கரித்திருக்கை –
அதனில் பெரிய என் அவா -என்று பகவத் விஷயத்தில் தமக்கு உண்டான
அபிநிவேசத்தளவும் போருமாயிற்று- என்னளவில் -கிருபையும்-(நீசனேன் நிறை ஒன்றும் இல்லா என்னளவும் என்றவாறு )

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு-7 – கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 10, 2013

ஏழாம் பாட்டில் –
ஆழ்வார் தம் பக்கலில் பண்ணின நிர்ஹேதுக விஷயீ காரத்தை கண்டு –
இவ் விஷயீ காரத்துக்கு யோக்யதை உண்டாய் இருக்க நாட்டார் இழக்கைக்கு அடி என் –
என்று அனுசந்தித்து –
இவருடைய பெருமையை அறியாமையாலே இருக்கிறார்கள் -என்று
எல்லாரும் அறியும்படி சொல்லக் -கடவேன் என்கிறார் –

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–

கண்டு கொண்டு-
காணாததை கண்டு கொண்டு -தேடினதை கண்டு கொண்டு –
நான் கிட்டின அளவிலே ஆழ்வாருக்கு உண்டான திரு உள்ளம் நிதி எடுத்தாற் போலே
இருந்தது -என்கிறார் -(கண்ணால் கண்டார் -கைகளால் கொண்டார் –புதையல் போலே -கண்டுகொண்டார் -)
தம்மைப் பெறுகைக்கு எதிர் சூழல் புக்குத் திரிந்தார் இவர் -என்று தோற்றும்படி இருந்தது -என்கிறார் –
அவருடைய கிருபைக்கு அனுத்தமமான பாத்ரம் இ றே நான் -(ந உத்தமம்-உத்தமம் இல்லை  / யத்தை காட்டிலும் உத்தமம் இல்லையோ அது அநுத்தமாம் -என்றுமாம் -நம்மாழ்வார் பாத்திரம் ஆக நீசத் தன்மை நிறைந்து இருக்க வேணுமே -)
என்னை –
நாட்டாரில் காட்டில் ஆழ்வாருக்கு உண்டான வாசி யறியாத என்னை -(இயம்புகேன் -என்றாலே- என்னை -வேண்டாமே -ஆழ்வார் பிரபாவம் தெரியாத என்னையும் என்றவாறு)
தம்முடைய நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு ப்ரதிபத்தி பண்ணவும் கூட மாட்டாத என்னை –என்றுமாம்-

காரி மாறப் பிரான் –
ஆழ்வார் தம் பக்கல் பண்ணின உபகாரத்தை நினைத்துப் பிரான் என்கிறார் –
காரி மாறப் பிரான் -என்கிற விசேஷணத்தாலே -ஆழ்வாருக்கு உபகாரகரான
ஈஸ்வரன் பக்கலில் போகாமைக்காக விசேஷிக்கிறார்-
ஸூ ஹ்ருதம் சர்வ பூதானாம் என்கிறபடியே அவனுடைய உபகாரகம் சர்வ சாதாரணமாய் ஆயிற்று இருப்பது -(காரி மாறனைக் கொடுத்த பிரான் என்றுமாம் -உலக பிள்ளை இல்லையே -லோகத்துக்கு கொடுத்த உபகாரகன் -எதில் மாறி இருந்தார் -புன்மையாக கருதுவதால் கைக் கொண்டார் அன்றோ  )
அந்த சாமான்யத்தில் புகாமைக்கு தம்முடைய ஸூ ஹ்ருதத்தை விசேஷிக்கிறார்-(என்னை காரிமாறப் பிரான் -)

பண்டை பல்வினை –
1-அநாதி காலம் சஞ்சிதமாய் -விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபம்
2-சூர்ப்பணகையை போலே -வகுத்த விஷயத்தை பற்றுகைக்கு வழி யல்லா வழியே
இழிகைக்கு ஈடான பாபம் –
3-பிரதம அவதியான பகவத் விஷயமே புருஷார்த்தம் -என்கிற புத்திக்கு அடியான பாபம்
இவை யாயிற்று பண்டை பல் வினை யாவது –
வல் வினை
பிராய சித்த சாத்தியமும் அன்றிக்கே-அனுபவ விநாச்யமே அன்றிக்கே -இருக்கை-

பாற்றி யருளினான் –
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கிறபடி-சும்மனாதே கைவிட்டோடி தூறுகள் சாய்ந்தனவே -என்று சொல்லும் பிரகாரங்கள் அன்றிக்கே-உரு மாய்ந்து போம் படி பண்ணினான் –

தன் புகழ் ஏத்த அருளினான் என்றபடி தம்மையே வாய் புலத்தும்படி பண்ணினார் –
எண் திசையும் அறிய இயம்புகேன் –
விசேஷஞ்ஞர் உடன் அவிசேஷஞ்ஞர் உடன் வாசியற-ருசி உடையார் எல்லாரும் அறியும் படி சொல்லுகிறேன் –
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசநை யாலே சொல்லுகிறார்
அவர் -பகவத் விஷயத்தில் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்
இவரும் ஆழ்வார் பக்கல் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்
ஆழ்வார் பக்கல் பாவ பந்தத்தாலே-

ஒண் தமிழ் சடகோபன் அருளையே-
மயர்வற மதிநலம் அருளினவனுடைய அருள் போலே அல்ல ஆழ்வார் உடைய அருள் –
அவ்வருளுக்கும் அயலான அளவிலே பண்ணி யருளின அருள் இ றே
ஒண் தமிழ் -ஒள்ளிய தமிழ் -அழகிய தமிழ் -என்றபடி –
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்படி திருவாய்மொழி பாடின
அருளுக்கு மேலே இ றே என்னை விஷயீ கரித்த அருள் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –