Archive for the ‘SRi Valimiki Raamaayanam’ Category

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ கிஷ்கிந்தா காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 22, 2024

ஸ தாம் புஷ்கரிணீம் கத்வா பத்ம உத்பல ஜஷா குலம்
ராமஸ் சவ்மி த்ரி ஸஹிதோ விலலாபா குலேந்த்ரிய
-1-1-

இலக்குமணனோடு இருந்த ஸ்ரீ ராமன் -என்று-
அவர் தாம் நோவு பட்டு கூப்பிடுகிற போது ஒரு தம்பியார் ஆகிலும் கூட உண்டு நோவு படுகைக்கு
அங்கனம் ஒரு துணை இல்லை எனக்கு -என்பாள் -தமியம் -என்கிறாள்
ஸ –
பிராட்டியை பிரிந்து நடுவே கபந்தன் கையிலே அகப்பட்டு-நோவு பட்டு நிற்கிற நிலையை சொல்லுகிறது –
தாம்-
இப் பிரிவும் ஆற்றாமையும் அழிக்க வற்றாயிற்று
புஷ்கரிணீம் –
பரப்பு மாறப் பூத்த பொய்கைகளும் -சோலைகளுமாய்-நீர் விளையாட்டுக்குத் தகுதியான தேசமாயிற்று -என்றது –
பிரிந்து தனி இருப்பார்க்கு கண் கொண்டு காணப் போகாது -என்றபடி –
காத்வா –
நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே-கூற்றுவனுடைய வாயிலே புகுவாரைப் போலே-வந்து கிட்டிக் கொடு நின்றார்
கூற்றுவனாகிற புடை தான் யாது -என்னில் –
பத்ம உத்பல ஜஷாகுலாம் –
பிராட்டியினுடைய முகத்துக்கும்-கண்களுக்கும் போலியானவற்றை உடைத்தாய் இருந்தது –

உயர் தாமரை செங்கழுநீர் மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் –5-9-7-என்னக் கடவது அன்றோ –
ராம –
பிறர் கூப்பீடு தவிர்த்துப் போந்தவர் ஆயிற்று
ராமயதீதி ராம –சௌமித்ரி சஹித –
அரச நீதிகளை சொல்லிக் கொண்டும்-தனது வலிமையை கூறிக் கொண்டும்-அந்த ஸ்ரீ ராமனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே-
தம் மத்த மதாங்க விலாசகாமீ கச்சந்தம்-அவ்யக்ரமனாமகாத்மா

ஸ லஷ்மனோ ராகவம் அப்ரமத்த ராஷ-தர்தமன பலேனச ஏவ -கிஷ்கிந்தா -1-126-
ஏதேனும் அளவிலும் கூட இருந்து நோக்கிக் கொண்டு போந்தவரும் முன்னாக-ஆறு இழியுமவன் தெப்பம் முன்னாக இழியுமாறு போலே
விலலாப ஆகுலேந்த்ரிய –
பல இலக்கணங்கள் உடன் ஆயிற்று கூப்பிட்டது

——-

மயூரஸய வநே தூநம் ரக்ஷஸா ந ஹ்ருதா ப்ரியா
தஸ்மாந் ந்ருத்யதி ரம்யேஷு வநேஷு ஸஹ காந்தயா –1
-40-

தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே-3-6-1–மயூரஸ்ய நேநூநம் ரஷா பஹ்ருதா ப்ரியா –
இந்த மயில்கள் இருந்த இடத்தில் வந்திலனோ அப்பையல்-என்கிறார் –
இருவரை இருப்பார் எல்லாரையும் –
தனி யாக்கினான் என்றே யாயிற்று இருப்பது –

கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ-10-3-1-கலந்து –
இவ்வளவில் நான் சேர்வது பெண் கொலை என்று அறிந்து மீள்கின்றன இல்லை-
ஆனாலும் சேர்ந்த சேர்க்கையால் வந்த உவகைக்கு போக்கு வீடாக நடனம் செய்யா நின்றன-
என்று கண் கூடாக கண்டு வைத்து -அவை என்னும் போது முகத்தை மாற வைத்து சொல்கிறாள்-என்பது தோற்றுகிறதே அன்றோ-
மயூரச்ய வனே நூனம் ரஷசா நஹ்ருதா ப்ரியா-தஸ்மாத் ந்ருத்யதி ரம்யேஷூ வநேஷூ சஹ காந்தயா-கிஷ்கிந்தா 1-40-
மயூரச்ய-இருவராய் இருப்பார் எல்லாரையும் பிரித்தான் என்றே இருக்கிறார்-
மயிலினுடைய பெண்டாட்டியை இராவணன் கொண்டு போயிற்று இலனோ-
வனே-திரு அயோத்தியில் வந்து பிரித்தான் அல்லனே –இன்பத்துக்கு தனி இடமான காட்டில் அன்றோ –
ரஷசா நஹ்ருதா ப்ரியா –
நீர்மை கேடனான அப் படுகொலை காரனால் பிரிக்கப் படாதது இது ஒன்றுமே அன்றோ –

———-

பத்ம கேஸர ஸம் ஸ்ருஷ்டோ வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத
நிச்ச்வாஸ இவ ஸீதாயா வாதி வாயுர் மநோ ஹர
-1-71-

ஸ்ரீ பெரிய திருமொழி-5-3–1—பத்ம கேசர சம்ஸ்ருஷ்ட –கிஷ்கிந்தா 1-71-
துராலான அம்சத்தைக் கழித்து
பூத் தன்னிலும் சம் சர்க்கத்துக்கு   மேற்பட
ஆழ விழியுமது   அன்றிகே இருக்கை –
வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத  –
வெய்யில் படப் பெறாத செல்வாலே
சோலைக்கு உள்ளீட்டாய் யாய்த்து வழி போந்தது –

———-

பத்ம ஸுகந்திக வஹம் சிவம் சோக விநாஸநம்
தன்யா லஷ்மண ஸேவந்தே பம்போ பவந மாருதம் –
-1-105-

ஓர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே–8-2-
இந்த பாதக பதார்த்தத்துக்கு தம்மோபாதி சக்தி போதாது என்று இருக்கிறாரோ

பம்போ பாவன மாருதம் -என்று தாமும் கால் வாசி அறியாரோ
அவன் கால் ஆசைப் பட்டு இருக்கும் நான் இக் காலாலே துகை உண்ணக் கடவேனோ

பத்ம சௌகந்தி கவஹம் -கலம்பகம் சூடுவாரைப் போலே –
சிவம்
 -இதின் தனை நன்மை யுடையவர் ஒருவரும் இல்லை
இதுக்கு நன்மை என் என்னில் –
சோக விநாசனம்
 -நம்மைச் சித்ர வதம் பண்ணாது -அழித்தே விடும்
சோகம் மறுவதலிடாதபடி பண்ணும் போலே இரா நின்றது
தன்யா -தனம் உடையார் இருப்பார் ஷாமத்துக்கு அஞ்சார்கள் இறே
சேவந்தே -அஞ்சாமை அன்றிக்கே இத்தை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் தேடா நிற்பார்கள்
பம்போ பாவன மாருதம் -ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே –
அக்னி குண்டத்தில் நெருப்பு போலே மிகவும் கொளுத்துவதாகும்
இலக்காய் -ஏக லஷ்யமாய்-

ஈடு -1-4-7–பாம்போ பவன் மாருதம் -என்று நாயகனுக்கு இருக்குமா போலே இரா நின்றது காணும் இவ்வாடை இவளுக்கு
பத்ம சௌள கந்தி கவஹம் – கலம்பகன் சூடுவாரைப் போலே தாமரை ஓடை செங்கழுநீர் ஓடைகளிலே சென்று புக்கு
பூவில் இழியில் அதில் வெக்கை திட்டும் -என்று மேல் எழ நின்று அபரிமிதமான பரிமளத்தை கொய்து கொண்டு வாரா நின்றது
அரி மிதியான -வண்டு காலால் மிதிக்கப்பட்ட -என்றுமாம்
-சிவம் கலப்பற்று பசும் தென்றலாய் இரா நின்றது -அதாவது புறம்பே சிலர்க்கு உடம்பு கொடுத்து சுணங்கு அழியாதே தாய்த்தலை தென்றலாய் இருக்கை
தாய்த் தலை தென்றல் -பிரதமம் ஸ்லாக்கியமான தென்றல் –
சோக விநாசநம் -நம்மை இனி பிராணன் உடன் வைத்து நலியாது போலே இருந்தது -பிராணனை போக்கி -நல்லது பண்ணும்படி –
தன்யா -காற்று வாரா நின்றது என்றால்-ஏகாந்த ஸ்தலம் தேடித் படுக்கை படுப்பவர்களும் சிலரே
லஷ்மண சேவந்தே-இது எப்போது வருவது என்று இருப்பார்கள்
பாம்போ பவன் மாருதம் -ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே -பாடபாக்னி -கடலுக்குள் வெப்பமான அக்னி போலே –

சக்ர சாப நிபே சாபே க்ருஹீத்வா சத்ரு ஸூதநே –3-9-
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு  ஒண் சங்கம்  என்கின்றாளால்-8-1-1-சிலை –
சக்ர சாப நிபே சாபே க்ருஹீத்வா சத்ரு நாசநே -என்று
(சக்ர இந்திரன் வர்ஜம் பிடித்து தானே இருப்பானே ஆகவே இந்திர தனுஸ் )
எங்களைத் தோற்பிக்கும் பரிகரமாய் இருந்தது –
இந்திர தனுஸ் போலே எங்களுக்கு தர்ச நீயமுமாய் –
எங்களுக்கு சத்ருவான வாலியை நிரசிக்கைக்கு பரிகரமுமாய் -இருந்தது
அனுகூலருக்கு வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டே இருக்கும் படியையும்
பிரதி கூலர் பிடித்த பிடியிலே மண் உண்ணும் படியுமாயும் இருக்கும் –

அதன்றிக்கே
சாபே –
வில் வலிக்கும் படியை நினைத்தால்
ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே-என்னும்படியாய் இருக்கும்
அழகுக்கு உறுப்பாய் இருக்கும் அனுகூலர்க்கு –
ஸ்மரன் ராகவ பாணா நாம் –
பெருமாள் திரு நாமத்தால் எழுத்து வெட்டின அஷரங்களையும்
திருச் சரங்களின் உடைய சந்நிவேசத்தையும் ஸ்ம்ரியா நின்று கொண்டு –

விவ்யதே –
அவர் ஒரு கால் முன்னே நின்று போகச் செய்தேயும்
எப்போதும் ஒக்க முன்னே நிற்கக் கண்டாப் போலே வ்யதித்தான் —

ராஷேச்வர விவ்யதே –
இவர் ஆண்ட பரிகரம் அடங்கலும் வினைக்கு உடலாய் ஆயிற்று இல்லை –
எடுத்து எடுத்து குலைக்கிற போது சுளைப்பிடாம் -கம்பளி -இட்டு
அமுக்குகைக்கு உடலாம் இத்தனை –

வாலி மா வலத்தொருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து-1-2-1-

வாலியும் அழிகையும் கிடக்கச் செய்தேயும்
அக் கையும் வில்லும் சேர்ந்த சேர்த்தியும் தர்சநீயதையும் அனுபவிக்கிறார் யாயிற்று இவர்-
(எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர் போலே )

சத்ரு நாசனே -என்கிறது கிடக்க –
சக்ர சாப நிபே -என்கிறதை அனுபவிக்கிறார்
உகப்பாரோடு உகவதாரோடு வாசி யற இரண்டு திறத்தாரையும் அழிக்கும் ஆயிற்று –

சக்ர சாப நிபே -இத்யாதி
இந்திர தனுஸ் போலே அனுகூலருக்கு வைத்த கண் மாறாதே கண்டு கொண்டு இருக்க
வேண்டும்படி தர்சநீயமாக இருக்கும் –

க்ருஹீத்வா -வில் பிடித்த பிடியிலே பிரதிகூலர் முடிந்து போம் படியுமாய் இருக்கும் –
அநுகூலரை அழகாலே அழியச் செய்யும் —
பிரதி கூலரை அம்பாலே அழியச் செய்யும் –

————-

ஆயதாச்ச ஸூ வ்ருத்தாச்ச பாஹவ பரி கோபமா
ஸர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா
-3-15-

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று-திரு விருத்தம் -44-

நிறம் இத்யாதி –
இவனை பற்றித் தான் நிறம் பெரும் படி யான ஒப்பனையும் —

ஆயதா –
திருவடி வந்த கார்யத்தை மறந்து கவி பாடத் தொடங்கினான் –
வந்த கார்யம் முடிந்தது என்று அறிந்தானாகத்  தோள்களைக் கண்ட போதே –

ஆயதா ஆஜான பாஹூ —
திரு முழம்  தாள் அளவும் நீண்டு பின்னையும் முடியாது இருக்கை –

பாஹவ-ராமஸ்ய தஷிணோ  பாஹூ-என்கிறபடியே
(பாஹவ-பஹு வசனம் -நான்கு தோள்கள் )

சர்வ பூஷண பூஷார்ஹா –
அழகு இழந்து கிடக்கிற ஆபரணங்களை அலங்கரியாது ஒழிகிறது என் –

கிமர்தம் ந விபூஷிதா –
இவ் ஆபரணங்களின் எழிலை கழற்றி இட்டு வைக்கிறது என் –

(திருத் தோள்களில் சாத்தினால் தானே ஆபரணங்களுக்கு அழகு
கலன் அணியாது -அங்கங்கள் அழகு மாறி -குலசேகரப் பெருமாள்
ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள் அன்றோ )

————

நாந் ருக் வேதவிநீ தஸ்ய நா யஜுர் வேத தாரிண
நா ஸாம வேத விதுஷ ஸக்யமேவம் ப்ரபாஷிதம் –3-29-

பெரிய திருமொழி-8-1-

என்கின்றாளால்–
தலைமகளுக்கு திவ்ய ஆயுதங்கள் ஆகர்ஷகமாய் இருக்குமா போல் ஆயிற்று
இவளுக்கும் இருக்கிறபடி –
இவள் சொல்லுகிறது தன்னையே தானும் சொல்லச் செய்தே இவள் சொல்லக்
கேட்டால் போலே இருக்கிறது இல்லை யாயிற்று திருத் தாயாருக்கு –

நாந் ருக்வேத விநீதஸ்ய –
அனுஷ்ட அர்த்த பிரகாசமான ருக்வேதம் சிஷிதனானவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல ஒண்ணாது –
நா யஜூர் வேத தாரிணா –
யஜூர் வேத பாட தாரணம் தான் அரிது -கவலை பாயாமல் சொல்ல வல்லவன்
அது அறிந்தவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல முடியாது –
(நா சாம வேத விதூஷா -கான விசேஷம் அறிவது அரிது )
சக்யமேவம் பரபாஷிதும் –
இத்தை எல்லாவற்றையும் அதிகரித்தவனுக்கு அல்லது
நம் முன்னே இப்படி வார்த்தை சொல்லலாமோ -என்றார் இறே பெருமாள் –
(அவிஸ்ருதம் -வாக் மீ ஸ்ரீ மான் -சொல்லின் செல்வன்
மஞ்சு பாஷித ராகவன் ம்ருது பாஷித ராகவன் கொண்டாடும் படி அன்றோ
ஆயிரம் நாக்கு கொண்ட இள வலையும் பார்த்துப் பேசச் சொல்ல வேண்டும் படி அன்றோ
இவர்கள் சொல்லும் அவிடும் ஸ்ருதியாகுமே )

———–

அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத -4-11-

ஈடு -1-1-1- இளைய பெருமாளை நீர் இவருக்கு என்ன ஆவீர் என்ன -பெருமாள் ஒருபடி நினைத்து இருப்பர் -நானும் ஒருபடி நினைத்து இருப்பன் -என்றார்
அவர் நினைத்து இருக்கும்படி என் -நீர் நினைத்து இருக்கும்படி என் என்ன
அவர் தன் பின் பிறந்தவன் என்று இருப்பர் -நான் அவர் குணங்களுக்குத் தோற்று அடியேனாய் இருப்பன் என்றார் இறே –

———–

லோக நாத புரா பூத்வா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி –4-18-

எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது –
எப்பொருட்கும் நின்று –
ஒரு குரங்கு -வேடுவிச்சி இடைச்சி இவர்களுக்கும் ஸூ லபனாய் நின்று-
ஸூக்ரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -4-19—
ஸூக்ரீவம் நாதம் இச்சதி
 –கிஷ்கிந்தா 4-18- என்கிறபடியே-
தாம் சொல்லுகை அன்றிக்கே அருகே நின்றாரும் கூட சொல்லலாம் படி தம்மை அமைத்து வைக்கை-

லோக நாத புரா பூத்வா –
லோக நாதனான இது மகா ராஜர் பக்கலில் பார தந்த்ர்யத்துக்கு குருகுல வாஸம் பண்ணின படி
இப் பார தந்த்ர்யம் குணம் ஆகைக்கு வேண்டும் ஸ்வா தந்த்ர்யமே யாய்த்து உள்ளது-
எளியவன் தாழ நின்றால் அது குணம் ஆகாது இறே

இச்சதி –
எல்லாரும் தம்தாமுக்கு இல்லாததை ஆசைப்படும் அத்தனை இறே
அநாதன் இறே இவன்
இடைச்சிக்கு கட்டவும் அடிக்கவுமாம் படி நின்றும்
வேடுவிச்சிக்கு கிட்டி அசாதாரணர் பண்ணும் பரிசர்யைகள் பண்ணலாம் படி நின்றும் போரும்படியும்

ஒரு நாள் எம்பெருமானார் பரத்வமே பிடித்து சௌலப்யத்து அளவும் செல்ல உபபாதித்து அருள –
அத்தைக் கேட்டு எம்பார்
கண்ணும் கண்ணநீருமாய் வித்தராய் இருக்க
அவரைப் பார்த்தருளி அவனுடைய சௌலப்யத்தை சொன்னவாறே நாட்டார் –
இத்தனை எளியவனோ -என்று கை விட்டுப் போனார்கள் –
பாக்ய ஹானியாலே –அறப் பெரியவன் இப்படி எளியவன் ஆவதே -என்று நெருங்குகைக்கு
உடலாய்த்து உமக்கு ஒருவர்க்கும் –
 என்று அருளிச் செய்து அருளினாராம்

———

நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் ஆபந்நா நாம் பரா கதி
ஆர்த்தா நாம் ஸம்ஸ்ரயஸ் ஸைவ யஸஸ்ஸைக பாஜநம்
–15-19-

திருவிருத்தம்-58-

திருமால் இரும் சோலை எந்தாய் -உன் பாத நிழல் அல்லால்  மற்றோர் இருப்பிடம்
நான் எங்கும் காண்கின்றிலேன் –( பெரியாழ்வார் )
ஆஸ்ரித ரஷகனுமாய் –
ஆஸ்ரித விரோதி நிரசகனுமாய் இருக்கையாலே –
உன் திருவடிகளின் நிழல் ஒழிய வேறு எனக்கு ஒதுங்கலாவது  ஒரு நிழல்  கண்டிலேன் –

நிவாச வ்ருஷ ஸாதூநாம் ஆபன்நாநாம் ஆர்த்தா நாம் யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்—-இத்யாதி (தாரை வார்த்தை )

நிவாச வ்ருஷ ஸாதூநாம்-
வாலிக்கு சுக்ரீவனோடு நீ விரோதிக்கை கார்யம் அல்ல காண்-
அங்கத பெருமாள் காட்டிலே விளையாட போன இடத்தில் அவனுக்கு ஓர் அபாஸ்ர்யம் உண்டாக-
கேட்டு வந்து சொன்னான் காண் -என்ன

அபாஸ்ர்யம் ஆகிறவர் தாம் யார் -என்ன –

பெருமாள்-என்றாள் –

ஆனால் அவர் பின்னை நமக்கு அபாஸ்ர்யம் ஆக மாட்டாரோ-என்ன –
சொல்லுகிறாள்

நிவாச வ்ருஷ ஸாதூநாம் –
இந் நிழலிலே ஒதுங்குவோம் என்பாருக்கு நிழலாய் காண் இருப்பது –
பூவாயும்
பழமாயும் 
நிழலாயும்-
தான் வெய்யிலை சுமந்தும் -பிறர்க்கு இடம் கொடுத்தும்
தன் கீழே இருந்து தன்னை அழியச்  செய்ய நினைப்பார்க்கு பல பிரதமாயும் –
இவை எல்லாம் உண்டு இறே-அதுக்கு –
(வாஸம் மட்டும் அல்லவே
நிவாஸம் அன்றோ என்பதுக்கு வியாக்யானம்
கல்லடி பட்டாலும் பழத்தைக் கொடுக்கும் )

நான் தான் அவர்க்கும் ஏதேனும் அநிஷ்டம் உண்டோ –
செய்தது நமக்கு நிழலாக ஒதுங்கத் தட்டு என் -என்ன –

ஆபன்நாநாம் –
ஒதுங்கோம் என்னாமை போராது காண் –  
ஆபன் நராகவும் வேணும் காண் –

நான் தான் ஆபன்னன் அன்றோ –
உடன் பிறந்தான் சத்ருவாம்படி அன்றோ நம்முடைய நிலை -என்ன –

ஆர்த்தா நாம் –
ஆபன் நராக இருக்கவே அமையாது காண் –
ஆபத்தை இசையவும் வேணும் காண் –
நமக்கு ஒரு ரஷகன்  வேணும் என்று இருக்க வேணும் காண் என்ன –

இவர் அவனுக்கே புகலாய்–புகவாய் நின்றாகில் நமக்கு
இப்படி இருப்பான் ஒரு அபாஸ்ரயத்தை தேடிக் கொள்கிறோம் -என்ன

யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்-
இனி இங்கன் இருப்பதொரு நிழல் இல்லை காண் ஒதுங்க –

நாலு வகையாலே மூன்று அதிகாரிகளை ஸ்ரீ கீதையிலே சொல்லிற்று இறே
அவர்களை சொல்லுகிற  இதில்  ஒரு ஸ்திரீ வசனமாய் இருக்க
இதுக்கு இத்தனை கருத்து-உண்டாக வற்றோ என்னில் –
வேத உப ப்ருஹ்மண அர்த்தமாக பிரவ்ருதமான ப்ரபந்தம்-ஆகையாலே –
கோல் விழுக்காடாலே அவையும் சம்பவிக்கும் இறே –

ஏக பக்திர் விசிஷ்யதே -என்கிற ஞானியை சொல்கிறதாய்-
முந்துற சம்சாரத்தில் நொந்து –  
பிரகிருதி-சம்பந்தத்தை அறுத்து கொள்ள வேணும் என்று இருக்கிற ஆத்ம ப்ராப்தி காமனையாய்-
அநந்தரம்
பிரஷ்ட ஐஸ்வர்ய காமனையாய்    –
இது பிரதமமாக ஐஸ்வர்யத்தை பெற இருக்கும்-அவனுக்கும் உப லஷணமாய் இருக்கிறது –

(நிவாச வ்ருஷ ஸாதூநாம் ஆபன்நாநாம் ஆர்த்தா நாம் யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்—-இத்யாதி (தாரை வார்த்தை )
இதிலும் அதிகாரி பேதங்களுக்கு பலம் சொல்லிற்றே
ஞானி சாதுக்களுக்கு நிவாஸ மாகவும்
ஆபன்னானாம் கைவல்ய பரர்
ஆர்த்தா நாம் -இழந்த ஐஸ்வர்யம் -பிரஷ்ட ஐஸ்வர்யா காமர் இருவரையும் சொன்னபடி
அனைவருக்கும் -பராம் கதி )

————-

அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுர் ஊர்ஜிதம்
ராமம் ராமானுஜம் சைவ பர்த்துஸ் சைவ அநுஜம் ஸுபா –19-26

திருவாய்மொழி – -5-10–6-நின்ற வாறும் –
இலங்கையின் வாசலிலே கையும் வில்லுமாய் நின்றபடியாதல்,
வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய் நின்றபடியாதல்;
“கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராம பிரானையும் இளைய பெருமாளையும் தன்
கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்”
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ் சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்காந். 19 : 25.
வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய்க் கொண்டு வென்றி புனைந்து நின்ற பெருமாளையும்,
அவரை இடுவித்துக் கொல்லுவித்த தம்பியாரையும், இருவரையும் தொடர்ந்து பின்பற்றி முடிசூட இருக்கிற
மஹாராஜரையும் கண்ட இவள் ‘நமக்குப் பகைவர்கள்’ என்றிராமல், –
ஸுபா-நல்ல மனமுடையவளானாள் அவர் பக்கல் சாங்கத்தாலே.
சாங்கத்தாலே. -பக்ஷபாதம் என்றும் வில்லும் என்றும் சாடு-
இனித் தான், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே கல்லைக் கட்டிக் கொண்டு விழுந்து முடிந்து போவாரைப் போலே
கொடிய தன்மையனானவாறே முடிந்து போனான் வாலி; இவர் செய்த குற்றமுண்டோ? என்று இருந்தாள்.
அவர் தம் உயிர் நிலையிலே நலிந்தாரை விட்டு வைப்பரோ.
(வல்லசுரர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித்தடம் அன்றோ -)

நின்றும் –6-9-3-
“கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற இராமனையும் இலக்ஷ்மணனையும்
தன் கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்’’ –
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ்சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.
தன் கணவனைக் கொன்ற பெருமாளைத் ‘தப்பச் செய்தீரே’ என்கை யன்றிக்கே,
இவரது குற்றமுண்டோ? தம்மை யடைந்தவர்களுடைய பகையைப் போக்கத் தவிர்வர்களோ?
இவனும் அநுகூலித்தானாகில் ரக்ஷியாரோ? தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலை கீழதாக விழுந்து
சாவாரைப் போலே தன் குற்றத்தால் கெட்டானத்தனை காண் வாலி என்றாள் அன்றோ!-
மரகத மணித்தடம் -வல்லரக்கர் புக்கு அழிந்த –
இப்படி உகவாதாருடைய பெண்களுக்கும் கவர்ச்சி கரமாம்படி யன்றோ கையும் வில்லுமாய் நிற்கும் நிலை இருப்பது.

———————

நிஸ் ஸ்வநம் சக்ர வாகாணாம் நிசம்ய ஸஹ சாரி ணாம்
புண்டரீக பலா சாஷீ கதம் ஏஷா பவிஷ்யதி
–30-10-

திரு விருத்தம் -51-

அழைக்கின்றதே –
கார்யப்பாட்டால் கூப்பிடா நின்றது –
வழிப்பறிக்காரர் அழைக்குமா போலே –

ஒரு சர்வ சக்தி தன் தோள் வலியாலே உலக்கையை விடு நகம்-கட்டி தன் பக்கல் உள்ளது கொண்டு அன்று
அங்கு ஒரு குரல் கூப்பிட மாட்டிற்று இல்லை –
அபலை என்று பற்றி நலியத் தொடங்கிற்று

(இப்படி ஓசை படுத்தின இடத்துக்கு மேல்
பிரிவில் சக்ரவாக பக்ஷி ஓசை நலிந்ததே
பூர்வ அவஸ்தை சீதா பிராட்டிக்கு )

நிச்வசஞ் சக்ரவாகாநாம்  –
பிரிவிலே ஆகையாலே அவற்றின் பேச்சு அசஹ்யமான  படி–

சஹ சாரணாம்-
பூர்வ அவஸ்தையில் அவற்றைப் போலே அக்தே தாமும்-

புண்டரீக விசாலாட்ஷி-
வேல் போலே அவற்றின் சப்தம் -செவி வழியே குளிக்கப் புக்கவாறே
வெளுக்க விழித்த-விழி இருந்தபடி –

கதேமேஷா பவிஷ்யதி –
என்ன துன்பம் பட்டாளோ-

—————-

க்ருத அபராதஸ்ய ஹி தே நான்யத் பஸ்யாம் யஹம் க்ஷமம்
அந்தரேண அஞ்ஜலிம் பத்வா லஷ்மணஸ்ய ப்ரஸாதநாத் –
-32-17-

திருவாய்மொழி – -1-1-5-அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதிநீ க்ருதா பரா தஸ்ய ஹி தே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் அந்தரேணாஞ்சலிம்
பத்த்வா லஷ்மணஸ்ய பிரசாத நாத் -ஸ்ரீ பரத்வாஜ சம்ஹிதை –
இளைய பெருமாளுடைய ஜ்யா கோஷத்தைக் -நாண் ஒலி -கேட்டு மகாராஜர் கழுத்திலே மாலையை அறுத்துப் போகட்டு காபேயமாக சில
வ்யாபாரங்களைப் பண்ணி அருகே நின்ற திருவடியைப் பார்த்து -இவ்வளவில் நமக்குச் செய்ய வடுப்பது என் என்ன
அபராத காலத்திலேயே அனுதாபம் பிறந்து மீண்டோமாய் எளியன சில செய்கிறோம் அல்லோம்
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு இனி ஓர் அஞ்சலி நேராமல் போகாது -என்றான் இ றே-

———–

ஸா ப்ரஸ் கலந்தீ மத விஹ்வாஷீ ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம ஸூத்ரா
ஸ லக்ஷணா லஷ்மண ஸந்நிதானம் ஜகாம தாரா நமிதாங்க யஷ்டி -33-38-

மென்னடைய அன்னங்காள்–திருவாய் ஈடு-1-4-3-
இவ்வன்ன நடை கொண்டோ என் கார்யம் செய்யப் புகுகிறது
சா ப்ரச கலந்தீ -என்னுமா போலே இளைய பெருமாளுடைய ஜ்யா கோஷம் செவிப்பட -அனந்தரம் மது பானத்தாலே வந்த கலக்கமும் தெளிந்து
-கழுத்தில் மாலையும் அறுத்துப் பொகட்டு -இந்தச் சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது -என்று தாரையைப் புறப்பட விட –
தேற்றமாய் வந்து திற -தேராமல் வந்து திறந்த தாரை போலே இல்லாமல் -அங்கே வியாக்யானம்
தாரையை -எண்ணெயை -விட்டு ஆற்ற சிலேடை –அவள் கல்வியால் உண்டான பாரவச்யம் அடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாள்
போலே இரா நின்றதாயிற்று இவற்றின் நடையும்
-இளைய பெருமாளுடைய திரு உள்ளத்தில் சிவ்ட்கு தாரையை இட்டு ஆற்ற வேண்டிற்று காணும்
சா -ஒரு கலவியும் பிரிவும் வேண்டாத படியான நடை அழகை உடையவள்
ப்ரஸ் கலந்தீ –-சம்ச்லேஷத்தால் உண்டான த்வட்சியாலே தடுமாறி -அடி மேல் அடியாக இட்டு வைத்தாள்
மதவிஹ்வலாஷீ –-மதுபா நாதிகளால் தழு தழுத்த நோக்கை உடையாளாய் இருந்தாள்
ப்ரலம்ப காஞ்சீ குண ஹோம ஸூ தரா –அரை நூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையில் கிடந்த படியே பேணாதே வந்தாள்
ச லஷணா-சம்போக சிக்னங்கள் காணலாம் படி வந்தாள்
லஷ்மண சந்தி தானம் ஜகாம -தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு வந்தாள்
தாரா -தாரை யானவள்
இளைய பெருமாள் திரு உள்ளத்துக்கு சிவட்கு எத்தாலே ஆற்றலாம் என்று மகா ராஜரும் திருவடியும் விசாரித்து
வேறு ஒன்றால் ஆற்றுமது அல்ல -தாரையை இட்டு ஆற்ற வேணும் -என்று தாரையை விட விட்டார்கள்
நமிதாங்க யஷ்டி -கிஷ்கிந்தா -33-37–உருக்கு பதத்திலே வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதாப் போலே இத் துவட்சி நிரூபகம் இவளுக்கு என்று
தோற்றும்படி இருந்தாள் –அப்படிப் பட்ட நடை அழகாலே அவரைத் துவக்கி கார்யம் கொள்ளவற்று இவையும் -என்று இருக்கிறாள் –

—–

கிம் கோப மூலம் மனுஜேந்த்ர புத்ர கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேசே –33-41-

திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள் –
தேவரீர் கிருபைக்கு தண்ணீர் துரும்பாக ஏதேனும் ப்ரதஷிண நமஸ்காராதிகள் பண்ணிற்று உண்டோ -என்று நம்பிள்ளை அருளிச் செய்யும் படி
ஓதி நாமம் குளித்து –உச்சிதன்னால் –பாதம் நாளும் பணிவோம் –உபாய புத்தியாக -திருப்புல்லாணி —
ஈஸ்வர பிரவ்ருத்தி விரோதி ஸுவ பிரவ்ருத்தி –
தகவினுக்கு
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -என்று சொல்லும் படி இருக்கும் நிலைக்கு என் பிழைத்தாள்
-என்ன தப்பு செய்தாள்-கிம் கோப மூலம் -என்றாள் இ றே தாரை
ராஜ புத்ரர்களை நாலு மாசம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் போக பிரவணராய் இருந்தவற்றை ஒன்றும் புத்தி பண்ணாதே –
உம்முடைய கோபத்துக்கு அடி என் என்றாள் இ றே -காமம் கோபம் ஒரே தாய் வயிற்று பிள்ளைகள் -விஸ்வாமித்ரர் கதை -தாரை –
அவர்கள் பொறையை நினைத்து இருந்த கனத்தாலே
மநு ஜேந்திர புத்ர-அறுபதினாயிரம் ஆண்டு -செய்தார் செய்த குற்றங்களை பொறுத்துச் சேர விட்டு- ஆண்டு கொண்டு போந்தார் உங்கள் தமப்பனார்
அவன் வயிற்றிலே பிறந்து குற்றம் செய்தோம் என்று தலை யறுக்க வந்து நின்றீர் நீர் -அழகியதாய் இருந்தது உங்களுடைய போக்கு
கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேச -சாஸ்திர வஸ்யதையும் அன்றிக்கே -கண்டதிலே கடுக சாபலத்தைப் பண்ணி மீள மாட்டாத திரியக்குகளை
நீரே -இழந்த போகங்களை புஜிப்பது -என்று சேர விட்டு
நீர் சொல்லிற்று செய்தன வென்று தலை யறுக்க வந்து நின்றீர் -இப்படி சொல்லலாம் படி இறே இவர் பொறை இருப்பது
பதிகத்துக்கு நிதானம் அபராத சஹத்வம் தானே

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ ஆரண்ய காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 22, 2024

ரூப ஸம்ஹநநம் லஷ்மீம் ஸுகுமார்யம் ஸூ வேஷதாம்
தத்ருசுர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வந வாஸிந —
1-12-

விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும்  இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே–திரு விருத்தம் -43-

(தண்டகாரண்ய ரிஷிகள் பெருமாளின் மான் தோல் மரவுரியை அனுபவித்த ஸ்லோகம்
ஆடவர்கள் பெண்மையை அளாவும் தோளினாய் )

சொவ்குமார்யம் –
பிராட்டியும் இளைய பெருமாளும் அடுத்து பார்க்கவும் பொராது இருக்கை –
(மையாள் கரும் கண்ணி செய்யாள் -பார்க்கவே சிவக்கும் படியான ஸுகுமார்யம் )

ஸூவேஷதாம் –
தாபச வேஷம் இருந்தபடி –

தத்ருசிர்  விஸ்மிதாகாரா –
விஸ்மித அந்தகரனராய் கொண்டு கண்டார்கள்-

ராமஸ்ய வன வாஸின –
அயோத்யா வாசிகளுக்கு கிடையாதது கிடீர் –
நெடும் காலம் சரகு இலை தின்று கிடந்த பலம் பெற்றார்கள் என்கிறான் ருஷி –

நித்யராலும் பரிச்சேதித்து அறிய முடியாத
அவயவ சோபையையும்
திருமேனியின் எழிலையும்
அவனது நிர்ஹேதுக கிருபையால் உள்ளபடி அறிந்து அனுபவித்தேன் என்கிறார் –

ஈடு -8-1-2-ரூப சம்ஹனனம் -திருமேனியை
லஷ்மீம் -சமுதாய சோபையை
சௌகுமார்யம்
அனுகூலருக்கும் அடுத்துப் பார்க்க பொறாது இருக்கை-
ஸு வேஷதாம் -தாபத வேடம்
தத்ரூஸூ விஸ்மித ஆகார -ஆச்சர்யத்தோடு கூடிய அந்தக் கரணங்களை உடையவர்களாயக் கொண்டு கண்டார்கள் –
யார்தாம் என்னில்
வனவாசிநாம்–ராமஸ்ய ஆரண்ய காண்டம் -1-13
படை வீட்டில் உள்ளார் காணப் பெறாததை
சருகு இல்லை தின்று தூற்றிலே கிடந்தவர்கள் பெற்றார்கள் –

——

தே வயம் பவதா ரஷ்யா பவத் விஷய வாஸிந -1-19-

ஈடு -3-5-2-தண் கடல் வட்டத்துள்ளார் – ஒரே தேசத்தில் வசிக்கும் காரணத்தால் வந்த சம்பந்தமே காரணமாக ஆயிற்று நலிவது. சர்வேசுவரன் ரக்ஷிக்கைக்கு ஏது யாது ஒன்று? அதுவே ஆயிற்று இவர்கள் நலிவதற்குக் காரணமும். 2‘தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள் உம்மாலே ரக்ஷிக்கத் தகுந்தவர்கள்,’ என்பதுஸ்ரீராமனைப் பார்த்த மகரிஷிகள் கூற்று.-

ஆர்த்த ரஷணம் -தண்ட காரணிய -ஆர்தர்
வாசிகள் என்பதே காரணம் -தபசுக்காக இல்லை –
தபசே ரஷிக்க -விஷயத்திலே கண் வட்டத்திலே இருக்க –
சுபிரயத்ன பரர் அன்று -கண் அழிவு வரலாமே அப்படி இருந்தால்
காக்க வல்ல  எல்லைக்கு புறம்பாய் இல்லையே

தண்டனை கொடுக்க வேறு தேசம் கடத்த முடியாதே பகவானால்
ராஜாவால் முடியுமே -பெரியவன் தான் பண்டிதன் வார்த்தை  –
புறம்பு சொல்ல முடியுமானால் சொல்லிக் காண் -ரிஷிகள் வார்த்தை-

———

ரஷிதவ்யாஸ் த்வயா சஸ்வத் கர்ப்ப பூதாஸ் தபோதநா –1-20-

ஸ்ரீ பெரிய திருமொழி-11-5–1-

காடுறைந்தான் –
ரிஷிகள் உடைய ரஷணத்துக்காக காட்டிலே வர்த்தித்தான் காண் –
ரஷிதவ்யாஸ் த்வயா சச்வத் கர்ப பூதாஸ் தபோ தநா-
எங்களுடைய ரஷணம்-உமக்குத் தவிர ஒண்ணாது –
உமக்குத் தலையோட்டில் பொறி –
( தலையோட்டில் பொறி –தலை எழுத்து -திருவடி எழுத்து அன்றோ -)
உங்கள் தபஸ்ஸும் ப்ரபாபவமும் கிடக்க நான் ரஷிக்க வேண்டுகிறது என் –  என்ன

கர்ப்ப பூதா
எங்களுக்கு கைம் முதல் உண்டானாலும் ரஷணத்தில் பிராப்தி இல்லை காணும் –
(சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லையே )
ராஜ மகிஷியானவள் சக்தி உண்டு என்னா அவகாதம் பன்னாள் இறே
ஜனனி தானே கைச்சதும் புளித்ததும்   தவிர்ந்து நோக்கும் இத்தனை அன்றோ –
இவ் வாத்மாவின் ஸ்வரூபத்தை உணர்ந்தாலும் உம்மைக் குறித்து நித்ய ஸ்தநந்தமாய் காணும் இருப்பது –
இப்படிச் சொன்ன மாற்றத்துக்கு
ஒரு மாற்றம் இல்லாமை இறே
பிரசீதந்து -என்றது –
(ஆமோதித்தார் -பெண் வெட்கப்பட்டால் போல் பட்டார்
அதுக்கு ரிஷிகள் வார்த்தை மேல் )

————

ப்ரஸீ தந்து பவந்தோ மே ஹ்ரீ ரேஷா ஹி மம துலா
யதீத்ருசைரஹம் விப்ரை ருபஸ்த்தேயை ருபஸ்த்தித
-10-9-

காடுறைந்தான்-ஸ்ரீ பெரிய திருமொழி-11-5–பூர்ணரராய் இருக்கிற நீங்கள் குறைவாளர் அளவில் இரங்கும் அத்தனை அன்றோ –
நாங்களும் பிறர் கையில் நோவு பட்டு நிற்கையாலே குறைவாளர் அன்றோ என்ன-

உங்களுக்கு நோவு வந்தது உங்களால் அன்றே
நோவு பட்ட உங்கள் அளவு அல்ல
நோவுக்கு ஹேது பூதரான நம்முடைய லஜ்ஜை –
யதீத்ருசைர் அஹம்  விப்ரை  –
ஈத்ருசமான விலஷண புத்தியை உடையவர்களாலே

(ஈத்ருசமான- இப்படிப்பட்ட சிறப்பான புத்தி உடையவர்கள் -அப்படிப்பட்ட சொல்லாமல் –
சீதாப்பிராட்டியைப் பார்த்து சொன்ன வார்த்தை
ஸீதா விஷயம் சொல்லி -இத்தை விளக்குகிறார் மேல் )

நெருப்பை குளிருக -என்ற வாயைக் கொண்டு
ராவணனை -நஷ்டாவாய் -என்று சொல்ல மாட்டாமை யன்று இறே இருந்தது –
நம்முடைய ரஷணத்தில் நமக்குப் பிராப்தி இல்லை
தத் தஸ்ய -என்று இருந்தவளைப் போலே இறே இவர்களும் சிலர் –

நோவு பட்டால் அங்கே வந்து அவர்கள் குறை தீர்க்க ரஷணத்துக்கு ஸ்வரூபமாய் இருக்க
நோவு படுவுதிகளும் நீங்களே யாய்
பட்ட குறை அறிவிப்பிகோளும் நீங்களே யாம் படி
நாம் பிற்பாடார் ஆனோம் எனபது யாதொன்று –

————

ஏவ முக்தஸ்து ராமேண லஷ்மண ஸம்யத் அஞ்சலி
ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்த்தம் இதம் வசனம் அப்ரவீத் –15-6-
பரவா நஸ்மி காகுத்ஸ்த்த த்வயி வர்ஷ சதம் ஸ்த்திதே
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத –15-7-

‘ஈடு -2-9–நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: – 2நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று அஞ்சலி. ஸீதா ஸமக்ஷம் – பண்ணின அஞ்சலிக்கு 3அந்யபரதை பாவிக்க ஒண்ணாதவள் – சந்நிதியிலே. காகுத்ஸ்தம – பிராட்டி சந்நிதியும் மிகையாம்படியான குடியிற்பிறப்பை உடையவரை. இதம் வசனம் அப்ரவீத் – இவ்வார்த்தையைச் சொல்லுவானே!’ என்று கொண்டாடுகிறான் இருடி. மேலும், 4‘பரவா நஸ்மி – உம்முடைய அஸ்மிதை போல அல்ல-

———-

இஹ வத்ஸ்யாமி ஸுமித்ரே சார்த்த மேதேந பக்ஷிணா –15-18-

ஈடு -9-4-6-

இலக்குமணா இவ்விடம் புண்யத்தைக் கொடுக்கக் கூடியது
பரிசுத்தமானது

மிருகங்களோடும் பறவைகளோடும் கூடியது
இந்த ஜடாயு பறவை உடன் நான் வசிக்கப் போகிறேன்
என்றும் அருளிச் செய்தார் அன்றோ பெருமாள் -என்றது
ஐயர் கண் வட்டத்திலே வசிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம்
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் செய்ய வேண்டுகையாலே அது செய்யப் பெற்றிலோம்
இனி இவர் சிறகின் கீழே யாகிலும் வசிக்கப் பாரா நின்றோம் -என்கிறார் -என்கிறபடி-

ஈடு -10-8-6–இன்று வந்து- இருப்பேன் என்று -ஐயர் கோல் கீழே வசிக்க வேண்டும் -என்று நினைத்து இருந்தோம் \
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் இல்லாமையாலே போந்தோம்
இனி மேல் உள்ள காலம் எல்லாம் இவர் சிறகின் கீழே வசிக்கப் பாரா நின்றோம் -என்றான் அன்றோ –

———

பாவஜ்ஜேந க்ருதஜ்ஜேந தர்மஜ்ஜேந ச லஷ்மண
த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம் வ்ருத்தஸ் பிதா மம –15-28-

பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணைப் பள்ளி கொள் பரமா வென்று-ஸ்ரீ பெரிய திருமொழி-1-2-6-

நல் அரவணை –
அத் தலைக்கே உறுப்பாய் இருக்கை –
சேஷ பூதனுக்கு நன்மை யாவது-எனக்கு என்னுமது அன்றிக்கே
சேஷிக்கே உறுப்பாய் இருக்கை இறே-(பிரபலதர விரோதி – நமஸ் அர்த்தம்)

பாவஞ்ஞேந  -க்ருதஞ்ஞேந -தர்மஞ்ஞேந -லஷ்மண
த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம்வ்ருத்தே பிதா மம-

பாவஞ்ஞேந  –
க்ரியதாம் -என்று சொல்லுகிறவர் இறே இளைய பெருமாள்
இப்படி செய்ய வல்ல நீர் நம்மை கேட்டது என் -என்கிறார்
பர்ண சாலையை சமைத்த அநந்தரம் சொல்லுகிற வார்த்தை இறே –

பாவஞ்ஞேந  –
அல்லாதவை சொன்னாலும் தாமும் பிராட்டியுமாய் ஏகாந்தமாய் இருக்கும் இடங்கள் சமைக்கும்படி 
இளைய பெருமாளுக்கு பெருமாள் அருளிச் செய்யார் இறே
நெஞ்சாலே நினைக்கும் இத்தனை இறே –
இந் நினைவு அறிந்து செய்தார் –

க்ருதஞ்ஞேந –
அதுவே அன்றிக்கே செய்து போம்படி அறிந்து செய்தார்-
நெடு நாள் மலடு நின்று பிள்ளை பெற்றவன் ஆகையாலே இவர் என் நினைந்து இருக்கிறாரோ –
என்று நினைவை ஆராய்ந்தும் –
இவருக்கு எத்தாலே என்ன குறை வருகிறதோ என்று பொருந்தும் இடங்கள் பார்த்தும்
அவன் செய்து போரும் அடைவு அறிவராயிற்று-

தர்மஞ்ஞேந –
நினைவு அறிந்தாலும் -செய்து போருமிடம் அறிந்தாலும் –
தானும் ராஜ புத்திரன் ஆன பின்பு எனக்கும் ஓர் இருப்பிடம் வேண்டாவோ –
என்று இருக்குமவனுக்கு இது செய்ய ஒண்ணாது இறே –
அங்கன் அன்றிக்கே
அத் தலையில் தாதர்யதமே நமக்கு ஸ்வரூபமான பின்பு
அத் தலைக்கு உறுப்பாக செய்து போருமதே நமக்கு -வகுத்தது என்று
அத் தலைக்கு செய்யுமத்தையே தமக்கு கர்த்தவ்யம் என்று இருப்பர்-

லஷ்மண த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம்வ்ருத்தே பிதா மம
தாம் உள்ளவன்று தாம் உளராய்
தாம் போன வன்றைக்கும் உம்மை வைத்துப் போனாரே என்கிறார்

புத்ரே
புத் என்று ஒரு நரக விசேஷமாய் -அதில் புகாதபடி நோக்கும் என்றாயிற்று
புத்திரன் என்று பேராகிறது
ஐயருக்கு நம்முடைய அபிமத ஸித்தி இன்றிக்கே ஒழிகை தனக்கு மேற்பட நிரயம் இல்லை இறே
அவருக்கு அது வராதபடி நோக்குகிறீர் நீர் இறே
(ஸ்ரீ ராம கைங்கர்யம் சிறிது குறைந்தாலும் ஸ்ரீ சக்கரவர்த்திக்கு அதுவே நரகம் –
அத்தைப் போக்கி அருளினார் அன்றோ ஸ்ரீ இளைய பெருமாள் )

தர்மாத்மா –
சக்ரவர்த்தி ப்ரஸ்துதன் ஆனவாறே -நம் ஐயரை ஒப்பார் உண்டோ
அவரும் ஒருவரே
தாம் இருந்த நாள் தாம் வேண்டுவன எனக்குச் செய்து
தாம் போன வன்றும் நமக்கு வேண்டுவன செய்கைக்கு உம்மைப் பெற்று
தண்ணீர் பந்தல் வைத்துப் போவதே

மம –
இருவருக்கும் பிதா ஆவது ஒத்து இருக்கச் செய்தே -மம -என்கிறார் ஆயிற்று –
அவர் நமக்கு செய்யுமவை நீர் இருந்து செய்கையாலே நாம் அவரை இழந்திலோம்
நீர் இழந்தார் ஆகில் இத்தனை இறே-

அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிற இடத்தில் சேஷி உடைய வியாபாரமும்
புகாதாகில் -சர்வம்-என்ன ஒண்ணாது இறே-
(ஸ்ரீ சக்ரவர்த்தி பிதா காட்டும் ஆசை அன்பும் பரிவும் சர்வத்துக்குள்ளும் அடங்கும் )

ஈடு -5-4-8-கைவந்த சக்கரத்து-5இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல்தான் இருக்கிறானோ? 6அழையாதிருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும்திருவாழியையுடையவன். கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தையுடையவன் என்றபடி. 1“பாவஜ்ஞேந – இளைய பெருமாள் பர்ணசாலை சமைக்கும்போது, இருடிகளுக்கு ஓலக்கம் கொடுத்திருக்குமிடம் செய்யும்படியும், அக்நிசாலை சமைக்குமிடமும், இவையேயன்றோ பெருமாள் அருளிச்செய்தது; பிராட்டியும் தாமும் ஏகாந்தமாக இருப்பதற்குரிய இடத்தைச் சமைக்கும்படியை இவருடன் தாம் அருளிச்செய்யாரே, அவை முழுதும் கருத்து அறிந்து செய்தாராயிற்று. 2அவர் தூதுசெய் கண்கள் கொண்டு ஒன்று பேசினால், இவரும் செவி கண்ணாகக் கேட்டுச் சமைப்பாரித்தனை. கிருதஜ்ஞேந – 3வருந்தி இவர் நினைவைப் பின்சென்ற மாத்திரம் அன்றிக்கே, அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பிள்ளை பெற்ற சக்கரவர்த்தி, பெருமாளுக்குப் பொருந்துமிடம் பார்த்து மாளிகை சமைத்து முன்பு செய்து போந்த கட்டளைகள் அறிந்து, அப்படியே செய்தாராயிற்று. தர்மஜ்ஞேந-இதுதான் ‘தம்பியாய் இருந்து இப்படிச் செய்தார்’ என்று குணமாகை அன்றிக்கே, இது செய்யத்தக்கது’ என்று செய்தார். என்றது, உஜ்ஜீவனத்திற்குக் காரணமாகச் செய்ய வேண்டிய தர்மம் இது’ என்று செய்தார் என்றபடி. த்வயா புத்ரேண-போன ஐயர்க்கு நரகத்தைப் போக்குதற்குரிய புத்திரர் நீரே ஆவீர். என்றது, 1‘நாம் உள்ளதனையும் இவருடைய ரக்ஷணம் இப்படிச் செல்லுகிறது, நமக்குப் பின்னர் இவர்க்கு ரக்ஷகர் யார்? என் செய்யக் கடவது’ என்று இதுவே ஆயிற்று ஐயர்க்கு எப்போதும் நெஞ்சாறல்; ஐயர் செய்யுமவற்றை நீர் செய்கையாலே அவர்க்குத் துக்கத்தைப் போக்கினவர் நீரே அன்றோ. தர்மாத்மா-ஐயரும் ஒருவரே! தாம் பரமதார்மிகர் கண்டீர்; தாம் இருந்த நாளும் நமக்கு வேண்டும் ரக்ஷணங்களைச் செய்து, தாம்சென்ற பின்னரும் தண்ணீர்ப் பந்தலை வைப்பாரைப் போன்று உம்மை வைத்துப் போவதே! ந ஸம்விருத்த: பிதா மம – நாம் ஐயரை இழந்தோம் அல்லோம், நீர் இழந்தீரானீரித்தனை அன்றோ.”

——————–

அத்யந்த ஸூக ஸம் வ்ருத்தஸ் ஸூ குமார ஸூ கோஸிதஸ்
கதம் ந்வ பர ராத்ரேஷு ஸரயூம் அவகாஹதே —
16-30-

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும்-ஸ்ரீ திரு விருத்தம் -24-ஸோபி வேலாமிமாஂ நூநமபிஷேகார்தமுத்யதஃ.
வரிதஃ ப்ரகரிதிபிர்நித்யஂ ப்ரயாதி ஸரயூஂ நதீம்৷
৷3.16.29৷৷

வ்ருதா பிரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி சரயூம் நதீம் –ஆரண்ய காண்டம் -16-29–
ப்ரக்ருதி வர்கத்தாலே-சூழப் பட்டு போன படி….
பெருமாளைப் பிரிந்து ,மித்ர வர்க்கம் சேவிக்கப் ,போகிறானோ என்னில்-
கால் நடை கொடாமையாலே தாங்கிக் கொண்டு போன படி-

அத்யந்தஸுகஸஂவரித்தஸ்ஸுகுமாரஸ்ஸுகோசிதஃ.
கதஂ ந்வபரராத்ரேஷு ஸரயூமவகாஹதே৷৷3.16.30৷৷

அத்யந்த ஸூக சம்விருத்த ஸூகுமார ஸூ கோஜித –ஆரண்ய காண்டம் -16-30-
சக்கரவர்த்தி அறுபத்தினாராயிரம் சம்வச்தரம் மலடு-நின்று பெற்றவன் ஆகையாலே ,
அவன் கொண்டாடின ஸூகம் இறே இவனுடைய ஸூகம்
உம்முடைய கண்ணாலே பார்க்கவும் பொறாத  சொவ்குமார்யம்
உம்மோடு கலவிக்கு உசிதன் அத்தனை அல்லது பிரிவுக்கு சிதன் அன்று இறே

கதந்னு-
தன் படியே என்று நினைக்கிறார் பிரிவு இல்லாமையாலே தமக்கு நீர் குளிருகிற படியாலே-
சுடும் என்று அறியாதே குளிரும் என்று அஞ்சுகிறார்

(ராஜ்ஜியம் போகங்களைத் துறந்து தபஸ் கோலத்தில் உயிர் வாழ மட்டும் உண்டு தரையிலே தூங்கினான்
குளிர்ந்த நீரில் எவ்வாறு குளிப்பான் என்று இளைய பெருமாள் சொல்ல
கூடி இருப்பதால் இவ்வாறு
இவன் தாபத்தால் சரயுவே சுடுமே
தசரதன் கொண்டாடும் ஸுகுமாரம் பெருமாளுக்கு
பெருமாளே கொண்டாடும் ஸூகுமாரன் பரதனுக்கு )

அபர ராத்ரேஷு —
அகாலத்திலே போவான் என் என்னில் ,
புதிசாக வைதவ்யம் (விதவை )வந்தவர்கள் ,ஆள் கிளம்புவதற்கு முன்னே
மனிதர் முகத்தில் விழியாமல் போமா போலே
கைகேயி மகன் என்றும்,
இவனாலே இப்படி புகுந்தது என்றும்
சொல்லும் அதற்க்கு அஞ்சி

சரயூம் அவகானே –
நீரிலே முழுகினால் தடவி எடுக்க வேண்டும் படி-
(நீர் எல்லாமே உறிஞ்சி போக -கீழே போவான் )

தர்மஜ்ஞ ஸ்ஸத்யவாதீ ச ஹ்ரீநிஷேதோ ஜிதேந்த்ரியஃ৷৷3.16.31৷৷
ப்ரியாபிபாஷீ மதுரோ தீர்கபாஹுரரிந்தமஃ.
ஸந்த்யஜ்ய விவிதாந்போகாநார்யஂ ஸர்வாத்மநா ஷ்ரிதஃ৷৷3.16.32৷৷

நோய் வந்தவன் நடந்ததுக்கு பிரமாணம் இந்த ஸ்லோகங்கள்

———-

நதேம்பா மத்யமா தாத கர்ஹி தவ்யா கதஞ்சன
தாமேவேஷ்வாகு நாதஸ்ய பரதஸ்ய கதாம் குரு –
-16-37-

ஈடு -9-1-4–வருணித்து என்னே
உபகாரம் செய்வார்களுக்கு அபகாரம் செய்வார் படியை நினைந்து வெறுத்து –
வருணித்து என்னே -என்கிறார்
இளைய பெருமாள் கைகேயின் தன்மையை நினைந்து
தன் கார்யத்தில் நோக்கு உள்ளவளும் -எப்போதும் கொடிய தன்மை உடையவளும்
கோபம் உள்ளவளும் -தனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணிக் கொண்டு இருப்பவளுமான என் தாயான கைகேயி -என்று
ஸ்ரீ பரத ஆழ்வான் சொன்னால் போலே –
ஆத்மகாமா சதாசண்டீ க்ரோதனா ப்ராஞ்ஞா மானி நீ
அரோகாசாபி மே மாதா கைகேயி கிம் உவாச ச -அயோத்யா -71-10
வாராய் பிள்ளாய் நீ தான் இவை எல்லாம் சொல்லுகிறது நடுவில் ஆய்ச்சியையே
அப்பா உன்னுடைய நடுத் தாயாரான கைகேயி யானவள்
எவ்விதத்திலும் நிந்திக்க தக்கவள் அல்லள்-என்கிறபடியே –
ந தேம்பா மத்ய மாதாத கர்ஹிதவ்யா கதஞ்சன
தாமேவ இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய கதாம் குரு -ஆரண்ய -16-37-
ஒருபடியாலும் நீ அவளை இவ்வார்த்தை சொல்லக் கடவை அல்லை
தாமேவ –
வேண்டுமாகில் கை கண்ட மருந்தைச் செய்யப் பாராய்
இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய –
ஐயரோ போகட்டு முடிந்து போனார்
நாம் போகட்டு போக்க இராச்சியத்தை இக்குடியின் மரியாதை
குலையாதபடியாக நோக்கிக் கொண்டு
கிடந்த பிள்ளை பரதன் அன்றோ இக்குடிக்கு நாதன் –
பரதச்ய கதாம் குரு –
நாக்கிலே நீர் வரும்படியான வார்த்தை சொல்லப் பாராய் -என்றார் பெருமாள் –

———-

கதான் வஹம் ஸமேஷ்யாமி பரதேந மஹாத்மநா
சத்ருக்நேந ச வீரேண த்வயாஸ ரகு நந்தன –16-40-

ஈடு -2-4-1-ஸ்ரீ பரதாழ்வானோடும் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானோடும் கூடப்பெறாத கிழிக்குறையால் கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய்த் தோற்றிற்று இல்லை இறே

————–

விபீஷணஸ் து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித–17-24-

ஈடு -5-3-4-விபீஷணஸ் து தர்மாத்மா -இவன் இக் குடியில் உள்ளார் படி அல்லன் -இவனுக்கு வாசியுண்டு
அந்த வாசி தன்னைச் சொல்லுகிறது -தர்மாத்மா-என்று
மறக்குடி அறம் செய்யக் கெடும் என்னக் கடவது இறே
ந து ராக்ஷஸ சேஷ்டித–ஜாதி மாத்ரமே இவன் பக்கலில் ஜீவிக்கலாவது –

————

தம் த்ருஷ்ட்வா ஸத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிக்ஷஸ்வஜே –30-31-

திரு நெடும் தாண்டகம்–21–-தம் த்ரஷ்டா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம் பபூவ ஹ்ர்ஷ்ட
வைதேஹி பர்த்தாரம் பரிஷஸ்வஜே
 -என்னக்  கடவது இறே –

ராஷச வேட்டையாடின பெருமாள் உடைய யுத்தாஸ்ரம பரிக்லின்னமான திருமேனியிலே
ராஷச சரவராத வ்ரணரோபமான திவா ஔஷதமான காட ஆலிங்கனத்தை பண்ணி சத்தை பெற்றால் என்கிறது –
தம் -1–ராஷச பூயிஷ்டமான தேசத்திலே உன்னைக் கொடு போக அஞ்சுவேன் என்கிற த்வரை –

தம் –
2-ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் -என்று பிராட்டியாலே ஆண்கள் முன்பாகவே உண்ட அன்று தொடங்கி திரு உள்ளத்திலே கறுவி இருந்து
பதினாலாயிரம் ராஷசரையும் ஆழி மூழையாக தரித்து ரத்த வெள்ளத்தே மிதக்க விட்டு
பிராட்டியை பிடித்துக் கொண்டு சேவகத்தை மூதலித்துக் காட்டி அருளினவரை –

தம் –
3-ஆதித்ய இவ தேஜஸ்வீ -(ஸூந்தர) இத்யாதியாலே வீரப் பாட்டுக்கு சிறு விரல் முடக்கும்படி அவதீர்ணர் ஆனவரை –

தம் –
4-படுக்கைத் தலையிலே விடு பூ விழுந்து திரு மேனி சிவக்கும்படி யான சௌகுமார்யத்தை உடையவரை – –

தம் –
5-உகப்பாலே அடுத்துப் பார்க்கில் ராகமான தேஜஸ்ஸூ குலையும்படியான திருமேனியை உடையவரை –

தம் –
6-வீர ஸ்ரீ பரிணயமான மணக் கோலத்தோடு தர்ச நீயமான சௌகுமாராதி அதிசயத்தை உடையவரை –

தம் –
7-ரிஷிகளுக்கு பண்ணின பிரதிஞ்ஞை கடலோசை யாகாத படி
அது செய்து தலைக் கட்டுகையாலே பூர்ண மநோரதர் ஆனவரை

சத்ரு ஹந்தாரம் –
ரத்ன கசிதமான பொன்னரி மாலை போலே சத்ரு சர வ்ராத வ்ர்ணாங்கிதமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவரை –

த்ர்ஷ்ட்வா –
ஆதபாச அபி பூதர் உடைய சீதள தடாகப் பிரவேசம் போலே ராஷச சர நிகராபி பூதமான திருமேனியை
தன் பூர்ண கடாஷமாகிற ஹிமா ஜலத்தாலே வழிய வார்த்து –

சத்ரு ஹந்தாரம் –
பிரதிபஷ நிரசனத்தால் வந்த புகருடைமை
சர்வ பூத ஸூஹ்ருத்தான சர்வேஸ்வரனுக்கு பிரதி பஷம் உண்டோ என்னில்
பத்தர் – இத்யாதி பிரக்ரியையாலே ஆஸ்ரித விரோதிகளே தனக்கு விரோதிகளாம் இத்தனை -இறே

(ஞானி ஆத்மைமேவ மேதம் -மம பிராணா ஹி பாண்டவ-பத்தராவிப்பெருமாள் )
(பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-)

மஹர்ஷீனாம் ஸூ காவஹம் –
1-யுத்த ப்ராரம்பம் தொடங்கி –கிம் பவிஷ்யதி -என்று வயிறு பிடித்து
துக்கிதராய் இருந்த மகர்ஷிகள் உடைய பயம் தீர சத்ருக்களை கட்டடங்க கொன்று விட்டு அவர்களுக்கு ஸூகவஹராய் உள்ளவரை –

மஹர்ஷீனாம் ஸூகாவஹம்–
2-தம்முடைய போஷ்ய குடும்பத்துக்கு சுகத்தை பண்ணி தாமுடைய சத்திக்கு ஆபாதகமானவரை –

பபூவ-சத்தை பெற்றாள் –மாலையும் மணமும் போலே -அத்யந்த ஸூகுமாரமான விக்ரஹத்தையும் ஸ்வ பாவத்தையும் உடையராய் இருக்கிற பெருமாள் கடினமான காத்ரங்களையும் ஸ்வ பாவங்களையும் உடைய முரட்டு ராஷசரோடு யுத்தம் பிராரம்பித்த போதே தொடங்கி
பிரேம அதிசயத்தாலே சத்தை மாண்டு கிடந்த பிராட்டி
திருமேனியிலே ஒரு தீங்கு இன்றியிலே நின்ற பெருமாளைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது –

ஹ்ர்ஷ்டா
தர்மி உண்டானால் தர்மம் பிறக்கக் கடவது இறே
ராம சௌந்த்ர்யத்தை முழுக்கக் கண்டு திரு உள்ளத்தில் இருந்த களிப்பு புற வெள்ளம் இட்டபடி –

வைதேஹீ –
1-ஐயர் வயிற்றிலே பிறந்திலேன் ஆகில் நமக்கு இந்த பேறு இல்லை இறே –

வைதேஹீ –
2-இக் குடியில் பிறந்திலேன் ஆகில் பெருமாள் என்னைக் கைப் பிடியாரே –

வைதேஹீ-
3-இந் நிலத்தில் பிறந்திலேன் ஆகில் எனக்கு இவ் வில்லோட்டை சௌப்ராத்ரம் கிடையாதே –
அவ் வில்லோட்டை சௌப்ராத்ரம் இல்லையாகில் வீர்ய சுல்கமான இவ்வாகாரம் கூடாதே –

வைதேஹீ –
4-தனுர்ப் பங்க மாத்ரத்திலே என்னையும் தம்முடைய வம்சத்தையும் பெருமாளுக்கு அடிமையாக எழுதிக் கொடுத்த ஐயர்
இற்றை நாள் ஆகாரம் கண்டால் என் படுகிறாரோ –

வைதேஹீ
5-ரூப ஓவ்தார்ய குணைஹி பும்ஸாம் தர்ஷ்டி சித்த அபஹாரிணாம் -என்கிறபடியே(பும்ஸாம்-ஆண்களையும் )
சர்வ லோக ஆகர்ஷகமான இந் நிலையை -ஐயரை ஒழிய நான் காண்பதே -என்று பித்ர் ஸ்ம்ர்த்தி பண்ணுகிறாள் –

பார்த்தாராம்
பாணி க்ரஹண வேளை தொடங்கி -பதித்தவ பிரதிபத்தி பண்ணிப் போந்தேன் –
இப்போது இறே தாத்வர்த்தம் ஜீவித்தது –

பரி ஷஸ்வஜே –
சஸ்வஜே -ஆலிங்கனம் பண்ணினாள்-
ரி ஷஸ்வஜே -1–பூரணமாக தழுவினாள்-
பரி ஷஸ்வஜே -2–பர்யாப்தமாக தழுவினாள் –
பரி ஷஸ்வஜே –3-திருமேனியில் தழும்பு மாறும் அளவும் தழுவினாள் –
பரி ஷஸ்வஜே -4–சர வ்ரணங்களால் வந்த தழும்பு மாறும் அளவும் திரு முலைத் தடங்களால் வேது கொண்டாள் –
தான் கைக் கண்ட மருந்து இறே -சர வர்ணங்களுக்கு ஆலிங்கனம்
ஔஷதமாம் இடத்தில் -ஜந்துடன் ஞானவான்களுடன்  வாசி இல்லை இறே –
(மன்மதன் )அந்தரங்கன் உள்ளூற எய்த புண்ணுக்கு மருந்தான இது தோல் புரையே எய்த புண்ணுக்கும்
மருந்தாக சொல்ல வேணுமோ என்று இருந்தாள் –

ஒரு கொடியாகில் கொள் கொம்பை தழுவி அல்லாது நில்லாது இறே -(போது அமர் செல்வக் கொழுந்து )

பார்த்தாராம் பரிஷஸ்வஜே –
5-நித்ய சம்யோக ஸ்திதி ரூபமான பர்த்தவ ஆகாரம் ஒரு கொள் கொம்புக்கு உண்டானால்
தத் ஆதாரமாகப் படர்ந்து அத்தை மூடி அக் கொள் கொம்பை சிறப்பித்து கொண்டால் அல்லது
கொடிக்கு ஸ்வ பாவம் இல்லை இறே -(தர்ம ஸ்லோகம் பெண் கணவன் உடன் கூடி நின்றே உயிர் வாழ வேண்டுமே)

தம் -என்கிற பதம் -பெருமாள் உடைய சர்வாதாரத்தைக் காட்டுகிறது –
த்ர்ஷ்ட்வா -என்கிற பதத்தாலே –
பெருமாள் உடைய ஆகாரங்களை எல்லாம் நேராக காண வல்லாள் பிராட்டி -என்கிறது –

சத்ரு ஹந்தாராம் மஹர்ஷீணாம் ஸூ காவஹம் -என்கிறவற்றால்
தன்னோடு குடல் துவக்குண்டான சேதனருக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
பண்ணின போது அல்லது அவரைக் காண கண் இல்லை -என்கிறது –
பபூவ -என்கிற இத்தால் -அவரைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது –
ஹ்ர்ஷ்ட -என்கிற இத்தால் -தர்மி உண்டானவாறே தர்மம் குடி புகுந்தது என்கிறது –
வைதேஹீ -என்கிற பதத்தால் ஹேது பூதர் பக்கல் உபகார ஸ்ம்ர்த்தி சொல்கிறது –
பர்த்தாராம் -என்று –பிதுர்த் தச குண மாதா கௌரவேண  -என்று
புத்திர ரஷணத்திலே உகப்பாலே புருஷகாரத்வம் சொல்லுகிறது –
பரிஷஸ்வஜே -என்று ஆஸ்ரித ரஷணத்தால் வந்த உகப்புக்கு போக்கு வீடு ஆலிங்கனமாய்
அது தான் பரம பிரயோஜனம் என்கிறது –

இத்தால் வீர பத்னி அகப்பட்ட வீரக் கோலம் சொல்லிற்று –

ஈடு -3-5-4–வம்புஅவிழ் கோதை பொருட்டா மால்விடை ஏழும் அடர்த்த செம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் -பிராட்டி பெருமாளை அணைத்தது போன்று நப்பின்னைப்பிராட்டி அணைக்க நின்றபடி’ என்றவாறு.-தந் திருஷ்ட்வா – பிரணயதாரையில் ரசிகத்வமேயாயிற்று முன்பு கண்டு
போந்தது, ‘அந்தப் போகத்துக்கு விரோதிகளானவற்றைப் போக்க வல்லர்’
என்று கண்டது இன்றாயிற்று. வேட்டைக்குப் போனால், ‘இன்ன
துஷ்டமிருகத்தைக் கொன்றார்; இன்ன ராக்ஷசனைக் கொன்றார்,’ என்று
கூடப்போனவர்கள் சொல்லக் கேட்குமத்தனை முன்பு; அவ்வளவன்றிக்கே,
கண்ணாலே கண்டது இன்றாயிற்று. ஸத்ருஹந்தாரம் – தம் திருமேனியில் ஒரு
வாட்டம் வாராமே எதிரிகளே நோவுபடும்படியாக. அம்போடே வெட்டோடே
போகாமே எதிரிகளை முதல் அற மாய்த்து வந்தவரை. மஹர்ஷீணாம்
சுகாவஹம் – பார்யை பக்கல் முகம் பெறுகைக்குப் பிரஜையை
எடுத்துக்கொண்டு போவாரைப்போலே, இருடிகட்கு விரோதிகளான
ராக்ஷசரைக் கொன்று பிராட்டியை அணைக்கைக்கு அது பச்சையாக வந்தார்.
பபூவ – ராக்ஷசருடைய குரூரத் தன்மையையும் பெருமாள்
சௌகுமார்யத்தையும் அநுசந்தித்து, ‘என் புகுகிறதோ!’ என்று ‘சத்தையில்லை’
என்னும்படியிருந்தவள், வெற்றியோடே கண்டு உளளானாள், ஹ்ருஷ்டா –
தர்மியுண்டானால் தர்மங்களும் உண்டாமிறே. வைதேஹீ – ‘வீரவாசியறியும்
குடியிலே பிறந்தவள்’ என்னுதல்; அன்றிக்கே, ‘ஒரு வில்லை முரிக்க
என்னைக் கொடுத்த எங்கள் ஐயர், தனியே நின்று பதினாலாயிரம்
ராக்ஷசரைக் கொன்ற வீரவாசியைக் கண்டாராகில், என்படுவரோ!’ என்று
அவரை நினைத்தாளாகவுமாம். பர்த்தாரம் – ‘ஐயர் நீர் வார்த்துக்
கொடுத்தவர்’ என்று விரும்பிப் போந்தாள் முன்பு: இப்போதாயிற்று
‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது; ‘ஆண் வடிவாக இருக்கின்ற பெண்’
என்றவளேயன்றோ முன்பு? பரிஷஸ்வஜே – யுத்தவடு உள்ள இடமெங்கும்
திருமுலைத் தடத்தாலே வேது கொண்டாள். அப்படியே. நப்பின்னைப்
பிராட்டி அணைக்க நின்றபடி. பிராட்டி – சீதாபிராட்டி. பெருமாள் –
ஸ்ரீராமபிரான்.

————

தவ் வநாநி கிரீம் சைவ ஸரி தச்ச ஸராம்ஸி ச
நிகிலேந விசின்வாநவ் ஸீதாம் தசரதாத் மஜவ் —
61-21-

ஈடு -2-1-4-ஸீதாம் –தேடிக் கண்டிலோம் என்று ஆறி இருக்கலாம் விஷயம் அன்று
தசரதாத் மஜவ் –தேடப்பிறந்தவர்கள் அல்லர்

—————

அஸ்மின் மயா ஸார்த்தம் உதார சீலா சிலா தலே பூர்வம் உபோவிஷ்டா
காந்த ஸ்மிதா லஷ்மண ஜாத ஹாஸா த்வாமாஹ ஸீதா பஹு வாக்ய ஜாதம் –
63-12-

களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடே அவலம் சேர்ந்திருந்த
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-7-

களங்கனி முறுவல்
பிள்ளாய் -ஆர் வாய் வெருவ கடவத்தை
ஆர் வாய் வெருவுகிறார்
சீதேதி சாருததீம் -யென்று அவன் இறே வாய் வெருவுவான்-

எதிர் தலையை தோற்பித்தோம் ஆக வேணும் யென்று
இருக்கிறவர்களாய்-விலஷணமாய்-பக்வமாய்
தோற்றினது போலே யாயிற்று -முறுவல் இருப்பது

அஸ்மி-அஸ்மின் -மயா தார்த்தம்-உதார சீலா-சிலாதலே பூர்வம்- ப்ரேஷித ஜ்ஞாச்து கோசலா-
உபோபவிஷ்டா-காந்த ஸ்மிதா -த்வாமாஹா-பீதா பஹு வாக்ய ஜாதம்

அஸ்மி –
முன்பு தாமும் பிராட்டியுமும் ஜல க்ரீடாதிகள் பண்ணி
ரம்யமாய் பரிமாறிற்று ஓர் இடத்தில்
பிராட்டியைப் பிரிந்து தாமும்  இளைய பெருமாளுமாய்
தேடிக் கொடு வாரா நிற்கச் செய்தே
அவ்விடத்தைக் கண்டு இளைய பெருமாளைப் பார்த்து
அருளிச் செய்கிறார் –

அஸ்மின் –
இப்படி வெறும் தரையாய்  இருக்கிற இடத்திலே காண்
அன்று நாம் எடுப்பு எடுத்தது –

மயா தார்த்தம் -ப்ரணய தாரையிலே தம்மைத் தாம் சால மதித்து இறே இருப்பது
நாமும் கூட காண வந்த சோழரோபாதியாக கடக்க நிற்கும்படி
அவளுடைய அளவுடைமையும் விதக்த்தமாக பரிமாறின
படியும் காண் –

உதார சீலா -படை வீட்டில் இருந்த நாள்
மாமனார் மாமியாருக்கு கூசி
சிறிது படி விடுவாரோபாதி அளவு பட வாயிற்று போகம் செல்லுவது –
இப்போது அவ்வளவு இன்றிகே ஏகாந்தமான ஸ்தலம் ஆகையாலே
தன்னை முற்றூட்டாக சர்வ ஸ்வதானம் பண்ணிக் கொண்டு
இருந்தால் ஆயிற்று –

சிலாதலே பூர்வம் -ஜலக்ரீடை பண்ணுகறதோர் இடத்தில்
சிலா தலமாய் இளைத்த இடத்திலே அதிலே ஏறுவதாக பெருமாள்
முற்கோலிக் கணிசிக்க

ப்ரேஷித ஜ்ஞாச்து கோசலா -என்கிற அதிலும் ஒரு
சம்பந்தம் உண்டு இறே இவளுக்கு –
அத்தை இவருடைய இங்கிதாதிகளைக் கொண்டு அறிந்து
இவரை இளைப்பிக்க வேண்டும் யென்று பார்த்து
பெருமாள் ஏறுவதாக கணிசித்த துறையை
அடைத்துக் கொண்டு இருந்தாள்-

உபோபவிஷ்டா
அப்படியேயாய் இருக்கும் இறே எங்கும் –

காந்த ஸ்மிதா –
வெறும் புறத்திலே தாமே துவக்க வல்லவள்
முறுவலைச் சேர்த்தாப் போலே ஆயிற்று முகம் தான் இருப்பது
அதுக்கு மேலே அப்போது பிறந்த வெற்றியாலே
ஜாத ஹாசை யானாள் யாயிற்று

த்வாமாஹா-
இதுக்கு முன்பு துடங்கின கார்யத்தில்
தலைக் கட்டாதே மீளுமது  இல்லை இறே பெருமாள் –
இது ஒன்றும் தலைக் கட்டப் பெற்றது இல்லை –
அத்தாலே லஜ்ஜித்து கவிழ தலை இட்டார் பெருமாள் –
அவரை விடா இவரைப் போரப் பொலிய கொண்டாடுகிற இளைய பெருமாள் முகத்தைப் பார்த்தாள்-
பாரீரோ தம்பியார் -நீங்கள் நினைத்தது எல்லாம் தலைக் கட்டினி கோள் இறே –
நீங்கள் வலிய வல்ல ஆண் பிள்ளைகள்
நாங்கள் பெண் பெண்டுகள்
நீங்கள் வேட்டைக்கும் வினைக்கும் போய் வ்யாபரிக்குமவர்கள்
நாங்கள் வீடு விட்டு புறப்பட்டு அறியோம்

————

புரவே மே சாரு ததீம நிந்திதாம் திசந்தி ஸீதாம் யதி நாத்ய மைதிலீம்
ஸதேவ கந்தர்வ மநுஷ்ய பன்னகம் ஜகத் ஸ சைலம் பரிவர்த்த யாமஹம்

புரேவ மே சாரு ததீம் –
மாயா மிருகத்தின் பின்னே போவதுக்கு முன்பே
இம் மானைப் பிடித்துத் தர வேணும் என்ற முறுவலோடு
கொடு வந்து காட்டிற்று இலர்கள் ஆகில்

அநிந்திதாம்-
அவளைப் பெறாமையால் ஜகத் உபசம்ஹாரம் பண்ணினார் என்றால்
அவளுக்காக இது செய்த விடம் தப்பச் செய்தார் -என்ன வல்லார் உண்டோ –

யுக்த மித்யேவ மே மதி –( திருவடி வார்த்தை-முதல் தடவை பிராட்டியைப் பார்த்ததும் )
என்னும் இத்தனை யாகாதே
பிராட்டியை உள்ளபடி எல்லாம் அறியாத எனக்கும் இருந்த படி இது –
இனி இவளை உள்ளபடி அறிவார் என் நினைந்து இருப்பார்களோ –

சதவேத்யாதி –
இத்தை வகுக்கைக்கு-(சதேவ –ஸ்ருஷ்டிக்க ) நெஞ்சால் பட்ட இடர் பட வேணுமே அழிக்கைக்கு
(ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்து போல் சம்ஹரிக்கவும் சங்கல்பம் செய்யலாமே )

புரவே மே சாரு ததீம நிந்திதாம் திசந்தி ஸீதாம் யதி நாத்ய மைதிலீம்
ஸதேவ கந்தர்வ மநுஷ்ய பன்னகம் ஜகத் ஸ சைலம் பரிவர்த்த யாமஹம் —


உங்களுக்கு நினைத்த வகைகள் எல்லாம் தலைக் கட்டலாம் இறே
உங்கள் தமையனார் வென்றார் இறே -யென்று
பஹூ முகமாகக் கொண்டு வார்த்தை அருளிச் செய்தாள் ஆயிற்று-

இப்படி பெருமாள் புலம்பினத்தை அறிவோம் இவள் அன்றோ புலம்புகிறாள்-

———–

ராஜ்யாத் ப்ரம்சோ வநேவாஸஸ் ஸீதா நஷ்டா ஹதோ த்விஜ
ஈத்ரு ஸீயம் மமா லஷ்மீர் நிர்தஹேதபி பாவகம் –
-67-25-

பரமபதத்தில் துக்கம் கலவாத இன்பமேயாக இருக்குமாறு போலே, இதுவும் எல்லை இல்லாத துக்கமேயாய் இருக்குமாயிற்று.  2‘இராச்சியத்தினின்று  நீங்கியதும், வனத்தில் வாசம் செய்கிறதும், சீதை காணாமற் போனதும், பெரியவுடையார் ( ஜடாயு ) மரணமடைந்ததும் ஆகிய இப்படிப்பட்ட என் துக்கங்கள் நெருப்பையுங்கூட

எரித்துவிடும் என்றாரேயன்றோ பெருமாள்? 1இவர்கள் படுகிற துக்கத்தைக் கண்டு தன் கிருபையாலே அவன் எடுக்கக் கைநீட்டின இடத்திலே படுகிற பாடே அன்றோ இது?

திரு அபிஷேகம் பண்ண நாளிட்ட வாறே -ராஜ்ஜியம் எனக்கு வேணும் என்றார்கள் சிலர் -அத்தை இழந்தால் படைவீட்டில் இருக்கப் பெற்றதாகிலும் இறே
என் மகன் ராஜ்யம் பண்ண வேண்டா -பிக்ஷை புக்காகிலும் என் கண் வட்டத்திலே இருக்க அமையும் என்றார் இறே கௌஸல்யை யார்
ஸீதா நஷ்டா –பிராட்டியும் தாமுமாய் ஏகாந்தமாக புஜிக்கலாம் என்று போர இருவரும் இரண்டு இடத்திலேயாம் படி விழுந்தது –
ஹதோ த்விஜ–பிராட்டிக்குத் தனி இடத்திலே உதவப்புக்க பெரிய யுடையாரையும் இழந்தது
ஈத்ரு ஸீயம் மமா லஷ்மீர் நிர்தஹேதபி பாவகம்

ராஜ்ய நாசம் -ராம சந்தரன் -இரவில் பிரகாசிக்கும் படி -அன்று அலர்ந்த தாமரையை ஒத்ததே -என்றாரே –ராஜ்யோ நாஸோ பகர்ஷயதி வந வாஸோ மஹோதய -என்றும் சொல்லிப் போந்தவற்றை- இங்கு அனர்த்தமாக சொல்வான் என்
ஆஸ்ரித சம்ச்லேஷம் -ரிஷிகள் கூட -இருக்க அன்றோ புகுந்தது–
புருஷகாரம் -இழந்த நிலை -ஜடாயு இழந்தார்- அதனால் வருத்தம் தோன்ற வார்த்தை –

நிர்தஹேதபி பாவகம்–பிரியாத இளைய பெருமாளையும் பிரிக்கவும் வற்றாய் இறே இந்தத் துக்கங்கள் இருப்பது

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ அயோத்யா காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 20, 2024

கச்சதா மாதுல குலம் பரதேந தத அநக
சத்ருக்நோ நித்ய அயோத்யாநீதஸ் ப்ரீதி புரஸ் க்ருத
–21-1-

இது தான் ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருன ஆழ்வான் பக்கலிலே காணலாம்
வேதோப ப்ரும்ஹணார்த்தாய தவாக்ராஹ்யத பிரபு -என்கிறபடியே வேத உபப்ரும்ஹணார்த்தமாகப் பிறந்த
ஸ்ரீ ராமாயணத்தில் தர்ம சம்ஸ்தாபநார்த்தமாக அவதரிக்கையாலே ஸ்ரீ இராமாயண புருஷர்கள் நால்வரும் நாலு தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டினார்கள் –
ஒருவன் சொல்லிற்று ஒருவன் செய்யக் கடவன் -என்கிற தர்மம் நேராகா அழிந்து கிடக்கையாலே
பித்ரு வசன பரிபால நாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் பெருமாள்
பிதுர் வசன நிர்த்தேசாதீ -என்றும் -அகஸ்த்யவசநாத் -என்றும் ஸூ க்ரீவ வசநாத் என்றும் சமுத்திர வசநாத்-என்று இ றே இவருடைய அனுஷ்டானங்கள்
சேஷ பூதன் சேஷியைக் குறித்து கிஞ்சித்கரிக்கக் கடவன் -என்கிற விசேஷ தர்மத்தை அநுஷ்டித்தார் இளைய பெருமாள்
குருஷ்வமாம நுசரம் -என்றும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றும் இ றே இவருடைய அனுஷ்டானம் –

ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான் –

அப்படி இருக்கிற இவனை யல்லது அறியாதே இருக்கையாலே பகவச் சேஷத்வ காஷ்டியான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான்
கச்சதா மாதுல குலம் பரதேன ததா நக சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரஸ்க்ருத
கச்சதா
கச்சதா டேன்கிற வர்த்தமான நிர்தேசத்தாலே தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயாதல் -பூர்வ ஷணத்தில் போகுகைக்கு நினைவு யுண்டாயாதல்
இன்றியே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே போனான் என்கை –
மாதுல குலம்
யுதாஜித்து அழைத்து வந்ததும் அவனை யாகையாலே போக்கிலும் உத்தேச்யம் அவனுக்கு
இவனுக்கு அவன் பின்னே போகை உத்தேச்யமாய்ப் போனான் என்கை
பரதேன –
பரத இதி ராஜ்யச்ய பரணாத் -என்கிறபடியே சக்ர வர்த்தியும் துஞ்சி பெருமாளும் ராஜ்யத்தைப் பொகட்டுப் போய்
இளைய பெருமாளும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்று போய்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானும் தன்னை அல்லது அறியேன் என்று இருக்கிற் தசையிலே ராஜ்யத்தை வஹித்துக் கொண்டு இருந்தான் -என்கை
தத-
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதமும் உண்டாய் இருந்தால் முஹூர்த்தம் இட்டுப் போகப் பிராப்தமாய் இருக்க
அவன் போனதுவே தனக்கு முஹூர்த்தமாகப் போனான் என்கை-
அநக
அநம் இல்லாதது இவனுக்கு இ றே-அல்லாதார்க்கு ராமபக்தியும் கலாசி இருக்கையாலே பாபமிச்ற ஜீவனம் என்கிறது
ராமபக்தியைப் பாப்பம் எண்ணப் போமோ வென்னில் பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி ஆகையாலே புண்யமும்
புண்ய பாபே விதூய என்று கொண்டு பாப சப்த வாச்யமாகா நின்றது -ஆகையாலே பாத அனுவ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு
விரோதி யாகையாலே ராம பக்தியும் பாபமாம் இத்தனை –
சத்ருக்ன
பிள்ளைகளை உடைய சந்நிவேசன்களைப் பார்த்து திரு நாமம் சாத்துக்கிற வசிஷ்ட பகவான் பெருமாள் கண்டாரை
அழகாலே துவக்க வல்லார் என்று தோற்றி இருக்கையாலே ராமன் என்றும்
இளைய பெருமாளுக்குக் கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே ஸ்ரீ பரதாழ்வான் என்றும் திரு நாமம் சாத்தி
இவனுடைய சந்நிவேசத்தைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கக் காண்கையாலே சத்ருக்னன் என்று திருநாமம் சாத்தினான் –
நித்ய சத்ருக்ன –
பாஹ்ய சத்ருக்களை யன்றிக்கே ஆந்தர சத்ருவான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருக்கும் என்கை –
இந்த்ரிய ஜெயத்துக்கு எல்லை எங்கனம் என்னில் பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரீணம் -என்கிற ராம சௌந்தர்யத்திலும் துவக்கு ஒண்ணாது இருக்கை-
அதாவது பெருமாளைப் பற்றும் போதும் தன உகப்பால் அன்றியே அவன் உகந்த விஷயம் என்று பற்றுகை
நீத
ராஜாக்கள் போம் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமா போலே அவன் கொண்டு போகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்ட்டமாய் இருக்கும் -அது போல் அன்றியே ஜாதி குணங்களோ பாதி போனான்
ப்ரீதி புரச்க்ருத
தமையன் பின்னே தம்பி போகக் கடவன் என்கிற முறையால் போனான் அல்லன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
இளைய பெருமாளைப் போலே எல்லா வடிமைகளும் போனவிடத்தில் செய்யலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி ப்ரேரிதனாய் போனான்
படை வீட்டில் இருந்தால் பரத அனுவ்ருத்தி ஒருவர்க்கு இட்ட சோற்றை பகிர்ந்து உண்பாரோ பாதி ஒகஹரியாய் இ றே இருப்பது
பாஷ்யகாரர் –அநக –நித்ய சத்ருக்ன -என்ற இதுக்கு ப்ரமேயமாகச் சொற்கட்டிலே
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரதழ்வானை யல்லது அறியாதபடி யானான் என்று அருளிச் செய்வர்
இதுவே பிரயோஜனமானால் சொல்லும் மிகை எல்லாம் பொறுக்கும் இ றே
அ நக -நித்ய சத்ருக்ன -என்று பாவனத்வத்தாலும் போக்யதையாலும் அவனைப் பற்றினான் என்னவுமாம்

இது தான் ராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பக்கலிலே அநுஷ்டாந
சேஷமாக –காணப்பட்டது -எங்கனே -என்னில்
வேத உப ப்ரும்ஹணார்த்தமாக பிரவ்ருதமான ஸ்ரீ ராமாயணத்தில் ராமாயண புருஷர்
நால்வரும் -தர்ம சமஸ்தான அர்த்தமாக -அவதரிக்கையாலே நால்வரும் நாலு அர்த்தத்தை-அனுஷ்டிதித்து -காட்டினார்கள்
பித்ரு வசன பரிபாலநாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் –பெருமாள்
நிருபாதிக சேஷியைக் குறித்து சேஷபூதன் கிஞ்சித் கரித்து தானாகக் -கடவன்
என்கிற விசேஷ தர்மத்தை அனுஷ்டித்து காட்டினார் இளைய பெருமாள் –
நிர்பந்தித்து அடிமை செய்கை -அன்றிக்கே -சேஷி உகந்த அடிமையே சேஷ பூதனுக்கு
கர்த்தவ்யம் -என்பதை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ பரத ஆழ்வான் –
தன் செல்லாமையை பாராதே -சேஷி உடைய ஹ்ருதயதைப் பார்த்து ப்ரீதியோடே
மீண்டான் இ றே

இப்படி இருக்கிற இவனை அல்லாது அறியாதே இருக்கையாலே பகவத் சேஷத்வ
காஷ்டையான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ சத்ருந ஆழ்வான் –
அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே உடன் -போனான் -அவன் போனதுவே முஹூர்தமாக போனானே -அஹம் இல்லாதது இவனுக்கே -அஹம் ஆவது உத்தேச்ய விரோதி –
இவ் விஷயத்தில் ராம பக்தியும் விரோதி -இத்தை பாபம் எண்ணப் போமோ என்னில்
பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதியாகையாலே அதுவும் த்யாஜ்யம் இ றே-பரத அனுவ்ர்த்தி ஆகிய உத்தேச்யத்தில் ராம சௌந்தர்யத்தில் கால் தாழாமல் –
அதுவும் இடைச் சுவர் இவருக்கு -என்பதால்

பிள்ளைகளுடைய சந்நிவேசம் பார்த்து திரு நாமம் சாத்தும் ஸ்ரீ வசிஷ்ட -பகவான்
-பெருமாளை அழகாலே கண்டாரை துவக்க வல்லவர் ஆக தோற்றுகையாலே -ராமர் –என்றும்
இளைய பெருமாளுக்கு கைங்கர்யமே நிரூபகமாக தோற்றுகையாலே –லஷ்மணன் என்றும் –
சத்ருக்குகள் மண் உண்ணும்படி இவர் சந்நிவேசம் இருக்கவே –சத்ருனன் -என்றும் -சாத்தினான்-

பாஹ்ய சத்ருக்கள் அன்றிக்கே -ஆந்தர சத்ருக்களான இந்திரியங்களை ஜெயித்து -இருப்பவன்-அவ் விந்திரிய ஜெயத்தின் -எல்லை என் என்னில் -ராம சௌந்த்ர்யத்திலும் துவக்கு-ஒண்ணாது ஒழிகை –
அதாவது பெருமாளைப் பற்றும் -போதும்
தன உகப்பாலே -யாதல்
அவனுடைய வை லஷண்யத்தாலே யாதல் -அன்றிக்கே –
தனக்கு உத்தேச்யரான இவன் உகந்த விஷயம் -என்று பற்றுகை
ராஜாக்கள் போகும் போது உடை வாள் கொண்டு போவது போலே -அவன் கொண்டு போக போனான் –
ஜாதி குனங்களோபாதி போனான் –
சர்வ வித அடிமை செய்ய வாய்ப்பு என்று ப்ரீதி ப்ரேரிக்க போனான் –
படியாய் கிடந்தது உன் பவள வாய் -காண்பேனே
ஸ்வரூப அனுரூபமான வ்ர்த்தியில் சைதன்ய ப்ரயுக்தமான தர்மங்களோடு கூடி இருக்கை-பாவநத்வத்தாலும் போக்யத்தாலும் அவனையே பற்றி இருக்கை –
ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த – வார்த்தை ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பெருமாளுக்கு
நல்லனான படி -அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லது வேறு ஓன்று அறியாத -படியானான் என்று
ஆக ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் -நிஷ்டை
இனி இவர்க்கு ததீயர் உத்தேச்யர் ஆம் இடத்தில்
பகவத் சம்பந்த மாதரத்தில் விஷயீ கரித்தும்
தத் விஷயத்தில் அவஹாகிப்பித்தும்
குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத தசையிலே
போது போக்குகைக்கு உசாத் துணையாகவும்
ப்ராப்தி  தசையில் -பகவத் அனுபவ சஹாகாரிகளாயும்
சர்வ அவஸ்தையிலும் ததீயரை என்று அத்யவசித்து
தமக்கு வைஷ்ணவ விஷயீகாரத்துக்கு முன்பே அஞ்ஞா தஜ்ஞாபந
முகத்தாலே பகவத் விஷயத்தில் மூட்டின மஹா உபாகாரகரான ஆழ்வார்
தம்மையே பற்றுகிறார்

திருவாய் மொழி-3-9- ஈடு பிரவேசம்–கச்சதா – போகின்ற. இதற்கு எம்பெருமானார், பயிலுஞ்சுடரொளி’ என்ற திருவாய்மொழியிலும்
‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழியிலும் சொல்லுகின்ற அர்த்தத்தை ஸ்ரீ சத்ருக்னாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்’ என்று அருளிச்செய்வர்.
கண்ணி நுண் சிறுத் தாம்பு -இந்த ஸ்லோகம் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் பார்த்தோம் -இங்கு நம்பிள்ளை அருளிச் செய்கிறார் –
இவ்வர்த்தத்துக்கு அடி திருமந்திரம் ஆயிற்றே; அது மூலமாக அநுஷ்டிக்கவே, இத் திருவாய்மொழியிற் சொன்னதைச் செய்தது ஆம்
ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட அவதாரமாய், அதில் பெருமாள் ‘பிதா சொல்லிற்றுப் புத்திரன் செய்யக்கடவன்,’-
என்கிற மரியாதை குலையாதே அதனை நிலைநிறுத்துகைக்காகப் பித்ருவசன பரிபாலனம் முதலான சாமாந்ய தருமத்தை அநுஷ்டித்தார்
’இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்துக் காட்டினார் இளையபெருமாள்;
‘அது செய்யுமிடத்தில் அவன் உகந்த அடிமை செய்யக்கடவது,’ என்னுமிடத்தை ஸ்ரீ பரதாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்;
‘அதுதான் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை முடிவாகக் கொண்டு இருக்கும்,’ என்னுமிடத்தை ஸ்ரீ சத்ருக் நாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்.
பெருமாள், ‘பிதா சொல்லிற்றுச் செய்யக் கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் நேரே பிதாவைப் பின்பற்றக் கடவன்
என்னுமிடத்தை இளையபெருமாள் அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் ‘குருஷ்வ – செய்’ என்று நிர்ப்பந்திக்கக் கடவர்அல்லர்;
‘இராச்சியத்திலே இரும்’ என்னில், அது இன்னாதாகிலும் அதிலிருந்து அடிமை செய்யக்கடவன் என்னுமிடத்தை
அநுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான்; அதன் எல்லையை அநுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்நாழ்வான்.
பல்லவிதம் -பகவத் கைங்கர்யம் -புஷ்பிதம் -பாகவத கைங்கர்யம் -பலிதம் -ஆச்சார்ய கைங்கர்யம் –

அவன் படி சொல்லுகிறது ‘கச்சதா’ என்னும் சுலோகம்.
‘மாதுல குலம் கச்சதா பரதேந நீத: –
அம்மான் வீட்டிற்குச் செல்லுகிற பரதனாலே அழைத்துச் செல்லப்பட்டான்’ – மாமன் வீடு உத்தேஸ்யமாகப் போனான் அவன்;
அவன் தான் உத்தேஸ்யமாகப் போனான் இவன். ‘இவனும் மாமன் வீடு உத்தேஸ்யமாகப் போனான் என்ன ஒண்ணாதோ?’ எனின்,
யுதாஜித்து அழைத்தது ஸ்ரீபரதாழ்வானை அன்றோ? ‘கச்சதா – போகிற’ என்கிற இந்த நிகழ்காலச் சொல்லால் முன் கணத்திலும் தன்னெஞ்சிலும் இல்லை;
பெருமாளுக்கு விண்ணப்பஞ்செய்தமையும் இல்லை; சக்கரவர்த்தியைக் கேள்வி கொண்டமையும் இல்லை என்கை.
‘பரதேந –
பரதனால்’ – பெருமாளும் போகட்டுப் போக, இளையபெருமாளும் அவரைத் தொடர்ந்து போக, சக்கரவர்த்தியும் இறக்க,
ஸ்ரீ சத்ருக்நாழ்வானும் தன்னையல்லது அறியாதே இருக்க, பெருமாளுடைய இராச்சியத்தைப் பரித்துக்கொண்டிருக்கையாலே ‘பரதன்’ என்கிறது
‘பரத இதி ராஜ்யஸ்ய பரணாத் – பரதன் என்னும் இப்பெயர் ராஜ்யத்தைத் தாங்குகையாலே.’
‘ததா – அப்படியே’ –
தானும் ராஜபுத்திரனாய் நக்ஷத்திரமும் வேறுபட்டிருந்தால், பிரிந்து தனக்குப் பொருந்தும் முகூர்த்தத்திலே செல்லுதலே முறையாம்.
அது செய்யாதே அவன் புறப்பட்டதே தனக்கும் முகூர்த்தமாகப் போனான்.
‘அநக: –
பாபம் அற்றவன்’ – அப்படை வீட்டில் அல்லாதார் எல்லாம் பாபம் கலந்த ஜீவனம் போலேகாணும். என்றது,
இராம பத்தி கலந்திருத்தலைக் குறித்தபடி. ‘ஆயின், இராம பத்தியைப் பாபம் என்னலாமோ?’ எனின்,
‘இருவினைகளில் புண்ணியம் உத்தேஸ்யமாயினும், மோக்ஷ உலகிற்கு விரோதி என்னும் முறையாலே இரு வினையும் விடத்தக்கது
என்னாநின்றதே அன்றோ? இங்கும், உத்தேஸ்ய விரோதியாகையாலே சொல்லலாம்,’ என்பது.
-கிருஷ்ண பக்தி பாபம் – வல்வினையேன் போனேன் குடக் கூத்து ஆடுவதை கான
‘ஆயின், இது உத்தேஸ்ய விரோதியோ?’ என்னில், பேற்றுக்கு முடிவின் எல்லையை நோக்க, முதற்படியில் நிலை விரோதி அன்றோ?
‘சத்ருக்ந:’ –
பிறந்த போதே ‘எதிரிகள் மண்ணுண்ணும்படி வளரும்’ என்று தோற்றியிருக்கையாலே, இப்படித் திருநாமம் சாற்றினான் வசிஷ்டன்.
‘நித்ய சத்ருக்ந:’
புறம்பேயுள்ள பகைவர்களை வெல்லுதல் அன்றியே, உட் பகைவர்களான இந்திரியங்களை வென்றிருப்பவன். என்றது,
‘பும்சாம் திருஷ்டி சித்தா பஹாரிணம் –
ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் கவரக்கூடியவன்’ என்கிற விஷயத்தில் கண் வையாமையைத் தெரிவித்தபடி.
அங்கும் ‘இவனுக்கு இனிது’ என்று இவ்வழியாலே புகுவானித்தனை.

‘‘அநக:’ என்பதற்கும், ‘நித்யசத்ருக்ந:’ என்பதற்கும் வேறுபாடு என்?’ என்னில்,
அநக: என்னும் இதனால், பரிசுத் தத்தில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது;
‘நித்ய சத்ருக்ந:’ என்னுமிதனால், இனிமையில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது.
‘நீத: – அழைத்துச் செல்லப்பட்டான்’ – ஒரு குற்றுடைவாள், நிழல் உள்ளிட்டவையைப் போன்று போனான். என்றது
‘ஒருவனோடு மற்றொருவன் சேர்ந்து செல்லுகின்ற காலத்துச் செல்லுதலாகிய அத்தொழில் செல்லுகின்ற இருவர் இடத்திலும் இருக்குமே?
தான் வேறு ஒருவனாக இருந்தும், ஜாதி குணங்களைப் போன்று பரதந்திரனாய்ப் போனான்,’ என்றபடி.
‘பிரீதி புரஸ்க்ருத: – தமையன் பின்னே தம்பி போகக் கடவன்’ என்னும் முறையாலே தேவை போன்று இருக்குமோ?’ என்னில், அங்ஙன் அன்று;
‘படைவீட்டிலே இருந்தால் ஒருவன் சோற்றைப் பகுந்து உண்ணுமாறு போன்று படை வீடாகப் பெருமாளுக்கு அடிமை செய்வார்கள்;
ஏகாந்தமான இடத்தில் நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்,’ என்று, ‘அஹம் சர்வம் கரிஷ்யாமி –
நான் எல்லா அடிமைகளையும் செய்வேன்’ என்று இளைய பெருமாள் காடேறப் போயினமை போன்று,
இவனும் ‘நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்’ என்கிற பிரீதி பிடரி தள்ளத் தள்ளப் போனான்.

எம்பெருமானார் இச்சுலோகத்துக்கு வாக்கியார்த்தமாக, ‘ஸ்ரீசத்ருக்நாழ்வான் பெருமாளுக்கு நல்லனானபடி,
பெருமாளைக் காற்கடை கொண்டு, பெருமாளுக்கு நல்லனான ஸ்ரீ பரதாழ்வானையல்லது அறியாதபடியானான்’ என்று அருளிச்செய்தார்.
இது காரணமான பின்பு, சொன்ன மிகை எல்லாம் பொறுக்கும் அன்றோ? அல்லது, ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன்
உத்தேஸ்யன் ஆகையாவது, ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாம் அன்றோ?
‘அநந்யா – இறைவனைத் தவிர வேறொன்றனையும் விரும்பாத’ என்கிற நிலை இவர்களுக்கு உண்டானால்
இவர்களைப் பின்பற்றுகிறது அவனைப் பற்றியதாம் அன்றோ?

அமிர்தம் ஒத்த பாயாசம் கொடுத்து பிறந்த சத்ருக்னன் அன்றோ -பெருமாள் கைங்கர்யத்துக்கு இளைய பெருமாளும்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு ஸ்ரீ சத்ருகன ஆழ்வான்
இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னும் இவ்விடத்தில்,
நற்றா தையும்நீ; தனிநா யகன்நீ; வயிற்றில் பெற்றாயும் நீயே; பிறரில்லை: பிறர்க்கு நல்கக்
கற்றா யிதுகா ணுதிஇன் றெனக்கை மறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை யன்னான்.’-(கம்ப அயோத்:நகர்நீங்கு. 136)
‘முத்துருக் கொண்டுசெம் முளரி அலர்ந்தால் ஒத்திருக் கும்எழி லுடையஇவ் வொளியால்
எத்திருக் கும்கெடும் என்பதை உன்னாச் சத்துருக் கன்எனச் சார்த்தினன் நாமம்.’-கம்பர்
தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப்
போயினை என்ற போது புகழினோய்! தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின்கே ழாவரோ தெரியி னம்மா!’ஸ்ரீ குகப்பெருமாள்.
எண்ணில் கோடி இராமர்க ளென்னிலும் அண்ணல் நின்னரு ளுக்குஅரு காவரோ?
புண்ணி யம்எனும் நின்னுயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?’-கௌசல்யா தேவியார்.

———-

ஸஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி
அர்த்திதோ மாநுஷ லோகே ஜஜ்ஜே விஷ்ணுஸ் ஸநாதந –
-1-7-

பாரின் மேலாய் –திரு நெடும் தாண்டகம் -9-
ஆசூர ராஷசராலே குடி இருப்பு இழந்து சகல தேவதைகளும் வந்து சரணம் புகுர
ராம கிருஷ்ணாதி  ரூபத்தாலே தன்னை அழிய மாறி வந்து ரஷித்த படியைச் சொல்கிறது –

(வேண்டித் தேவர் இரக்க இத்யாதி -ஸாஷாத் நாராயண ஸ்ரீ மான் ஷீராப்தி நிகேதன ஆகாதாம் மதுராம் புரீம் -மனிசர்க்காகப் படாதன பட்டு)

ச ஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி -அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஞ்ஞே விஷ்ணுஸ் சனாதன –
தச் சப்தம் பிரக்ருத பராமர்ச்சி இறே –
பபூவ குண வத்தர -என்று இறே கீழ் சொல்லிற்று –
அப்படிப் பட்ட குணாதிகன் ஆகையால்
பிறந்தான் -என்கிறார்
அநந்ய பிரயோஜனர்க்காக பிறக்கை குணம் அன்று இறே –

ஹி-சப்தம் – ஹேதுவிலே
தேவை -வந்து பிறந்தது –
திருவடி திரு வநந்த ஆழ்வான் அர்த்திக்கவோ –
பிரயோஜனாந்த பரராய் ஈஸ்வரோஹம் என்று இருக்கிற துர்மானிகள் அர்த்தித்த கார்யம் செய்யக் கிடீர்
கார்யம் கொண்ட சமனந்தரம் எதிர் அம்பு கோக்குமவர்கள் இறே –

உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி –
தன்னுடைய செருக்காலே லோகத்தை அடைய அழித்துக் கொண்டு திரியும் ராவண நிரசன அர்த்தமாக
சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்க
அர்த்திக்கிறவர்கள் பிரயோஜனாந்த பரராய் இருக்க
அவர்களை அழியச் செய்கைக்காக கிடீர் பிறந்தது –

அர்த்தித
இது இவர்கள் பண்ணின தபஸ் ஸூ –

மானுஷே லோக
தேவதைகளும் அகப்பட கீழ் நோக்கி முகம் காட்டாத தேசத்திலே கிடீர் வந்து பிறக்கிறது

ஜஜ்ஞ்ஞே –
நாட்டார் பத்து மாசம் கர்ப்ப வாஸம் பண்ணுவார் ஆகில்
பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாஸம் பண்ணிக் கிடீர் பிறக்கிறது –

விஷ்ணு –
வ்யாபக வஸ்து கிடீர் வ்யாப்ய ஏக தேசதத்துக்கு சேஷமாய் பிறந்தது

சனாதன
நித்ய வஸ்து கிடீர் பிறந்தான் என்னும்படி
ஒருத்தனுக்கு புத்ரனே வந்து பிறந்தது

இப்படி
பிரயோஜனாந்த பரருக்கும் அகப்பட தன்னை அழிய மாறி கார்யம் செய்கிறவன் கிடீர்
அநந்ய பிரயோஜனான எனக்கு முகம் காட்டாது ஒழிகிறான் -என்கிறார் –

(குண பூர்ணன் -பிரயோஜனாந்தர பரர்களுக்கு -ராவணாதிகளை நிரசிக்க -ஆர்த்தித்த மாத்ரம்
தேவர்களும் கால் வைக்க கூசும் -12 மாதங்கள் கர்ப்ப வாசம்
எங்கும் நிறைந்தவன் இங்கு பாரின் மேல் -ஆஸ்ரித பரதந்த்ரனாக –
இப்படி எட்டு விஷயங்கள் இந்த ஸ்லோகத்தில் -அப்படிப்பட்டவன் எனக்கு முகம் காட்டாமல் ஒழிவதே-பரமபதம் வ்யூஹம் விபவம் சொல்லி மேல் அர்ச்சை )

நாட்டிற் பிறந்து படாதன பட்டு –திருவாய் மொழி -7-5-2-

‘ஸஹிதேவை: உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி;
அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு: ஸநாதந;’-என்பது, ஸ்ரீராமா அயோத். 1 : 7

5ஸ:-ஜஞே ஹி – ‘கர்மங் காரணமான பிறவி இல்லை’ என்று பிரமாண பிரசித்தனானவன் கண்டீர் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்கட்கும் இவ்வருகாய் வந்து பிறந்தான்’ என்றபடி. ‘இப்படிப் பிறப்பதற்குக் காரணம் என்?’ என்னில்,

‘அர்த்தித:’ என்கிறது, அவர்கள் இரந்ததற்காக என்றபடி. 1இரப்புதான் இச்சையும் பிறப்பிக்குமே அன்றோ? 2‘இச்சையாலே மேற்கொள்ளப்பட்டது’ அன்றோ?

‘இச்சா க்ருஹீத அபிமதோருதேஹ;
ஸம்ஸாதிக அஸேஷ ஜகத்தித: ய;’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84.

தேவை:- 3தங்கள் காரியத்துக்காக இரந்து பிறக்கச் செய்து காரியம் தலைக்காட்டினவாறே எதிரிட்டு ‘ஈஸ்வரோஹம்’ என்று இருப்பார்க்ககாக் கண்டீர், ‘நீள் நகர் நீள் எரி வைத்தருளாய்’  திருவிருத். 92.என்பார்கள். என்றது, ‘இலங்கையை சுட்டுத் தரவேணும்,’ என்பர்கள் என்றபடி. உதீர்ணஸ்ய ராவணஸ்ய – 4அச்சத்தை உண்டாக்குகின்றவனான பையல், தானே வரபலத்தாலே அழியச் செய்யவேண்டும்படி விஞ்சினவாறு. வத அர்த்திபி:-5தாங்கள் பட்டி நலிவாலே திருவுள்ளத்துக்குப் பொருந்தாதனவற்றையும் விண்ணப்பம் செய்தார்கள். 6‘ஒருவனை அழியச் செய்ய ஒரு நாடாகப் பிழைக்குமாதில் ஆகாதோ?’ என்று அழியச்செய்தானைத்தனை. அர்த்தித:- 1தன்னுடையச் சோதிக்கு எழுந்தருளுந்தனையும் திருவுள்ளத்திற்பட்டக் கிடந்து இதுவே.அர்த்தித:– 2உபாசித்தவர் அல்லர்.

மாநுஷே லோகே விஷ்ணு: ஸநாதந;- 3‘உண்டு பண்ணப்பட்ட தேவர்கள், மனித வாசனைக்கு வாந்தி பண்ணிப் பூமியில் இழிய அருவருத்து, ஒன்றரை யோசனைக்கு அவ்வருகே தின்று ஹவிஸ்ஸினைக் கொள்ளுவார்கள்; அவர்கள் மனிதத் தானத்திலேயாம்படியான பொருள்கண்டீர் இங்கே வந்து பிறந்தது,’ என்கிறார். மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் அன்றோ?திருவாய். 8. 1 : 5.- ஜஜ்ஞே– 4தோன்றிய மாத்திரமன்று; நாட்டார் பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் அனுபவிக்கில் பன்னிரண்டு மாதங்கள் அன்றோ இவன் அனுபவித்தது?’ பின்னர்ப் பன்னிரண்டாவது மாதமான சித்தரை மாதத்தில்’ என்பது ஸ்ரீராமாயணம்.  ‘ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ’-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 10.

5‘நான் உன்னுடைய உதரத்தினின்றும் உண்டானேன்’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.‘ஜாதோஹம் யத்தவோதராத்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 3 : 14.

————

குணைர் தசரத உபம –1-9-குணங்களில் தசரதருக்கு ஒப்பாவான்

கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால் உரு வொளி காட்டுகின்றீர்–நாச்சியார்-9-3-நஞ்சீயர் ஸூந்தர பாண்டிய தேவரைக் கண்டிரா நிற்கச் செய்தே –
குணைர் தசரத உபம
 -அயோத்யா -1-9-என்கிற இடத்துக்கு
பிறந்து படைத்த குணங்களும் ஸ்வா பாவிக குணங்களும் எல்லாம் கூடினாலும் -மார் -அரை -மாட்டே யாய்-
சக்கரவர்த்தி திருமகன் -என்னப் போரும் அத்தனை என்று அருளிச் செய்ய
அத்தைக் கேட்டு –
பரம புருஷனுக்கு ஒருவன் வயிற்றில் பிறந்து ஓர் ஏற்றம் உண்டாக வேணுமோ
அவன் பிறக்கை யாலே அக்குடி தனக்கும் ஏற்றமாம் அத்தனை அன்றோ என்றானாம்
நாம் போன சமாதி இவன் அறிந்திலன் என்று பார்த்து –
அது எல்லாம் கிடக்க பரம புருஷன் என்னும் படி என் தான் என்றாராம்
ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத் மஜம் -யுத்த -120-11–என்று
அருளிச் செய்த பெருமாள் திரு உள்ளத்தின் படி தசரத உபம -என்று
உபமானத்தைக் காட்டிலும் உபமேயம் மட்டமாய் இருக்கும் என்பதை ஒட்டி அருளிச் செய்த படி

சௌசீல்யம் அன்றிக்கே பரம புருஷத்வம் உண்டோ
தசரதன் பிள்ளை யானதால் நற்குணங்கள் பெற்றார்
பிராட்டியாலும் நிறம் பெற்றார் பெருமாள்

பெரிய திருமொழி -10-4-1—பரம புருஷனுக்கு ஓர் இடத்தே பிறந்து ஒரு குணம் தேட வேண்டுமோ -என்றார்
சுந்தர பாண்டிய தேவர் –
நாம் ஓடுகிற நரம்பு இவன் அறிந்திலன் -என்றத்தை விட்டு
(ஸுசீல்யம் சொல்ல வந்ததை அறியாமல் இருந்தானே
ஆத்மாநாம் மானுஷ்ய மன்யம் என்னுமவன் அன்றோ )
பரம புருஷன் என்ற போதை அழகு இருந்தபடி என் -என்றாராம்

எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே அந்வயம் இல்லாதார்
பகவத் விஷயத்தில் சொன்ன ஏற்றம் எல்லாம் அர்த்தவாதம் என்று இருப்பார்கள் –
அது உடையவர்கள் பகவத் பிரபாவத்துக்கு அவதி இல்லாமையாலே
சொன்னவை  சில சொன்ன அத்தனை –
சொல்லாததுவே பெரிது -என்று இருப்பார்கள் –
சத்யே நாதி வததி-இறே  –
(பகவத் விஷயத்தில் அதி வாதம் பண்ணுபவனே சிறப்பானவன் )

அபியாதா ப்ரஹர்த்தாச ஸேநாநய விசாரத –1-29

யுத்தத்தில் தானாக எதிர்த்துச் செல்பவன் -எதிரிகளைக் கொல்லுபவன் -ஸேனையை நடத்துவதில் ஸமர்த்தன்

காயும் கடும்சிலை என்காகுத்தன் வாரானால்
மாயும்வகை அறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே.-5-4-3-
தானே எடுத்துவிட்டுச் சென்று பொருமவர் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் “அபியாதா” என்று.

“அபியாதா பிரஹர்தா ச ஸோநாநய விஸாரத:”-என்பது, ஸ்ரீராமா. அயோத், 1 : 29.

“அபியாதா – முன் செல்பவர்” – பகைவர்கள் வரப் பொர இருக்கை அன்றிக்கே, எடுத்துவிட்டுப் பொருகையும் தமக்கே பணியாயிருக்கும். “பிரஹர்த்தாச-அடிப்பவர்” – தூசித்தலையில் நின்று, ‘முதல் வெட்டு யாரது’ என்றால், அதில் முற்பாடும் தம்மதாயிருக்கும். “சேநாநய விசாரத:-சேனையை நடத்துவதில் சமர்த்தர்”-தாம் போகாமல், தூசியும் அணியும் பேரணியுமாக வகுத்துவிட்டால், ஒருசேர நின்று பொருவித்தாற் போலே வென்று மீளும்படி படை கோக்க வல்லவர்.

——–

த்ரை லோக்யம் அபி நாதேந யேந ஸ்யாந் நாதவ்த் தரம் –2-13-

மூன்று உலகும் எந்த ராமன் நாதனாக இருந்தால் மிகவும் நாதனை யுடையதாக இருக்குமோ

அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை–8-4-10-

அமர்ந்த நாதனை –
உபய விபூதிகட்கும் காரணம் பற்றாத சேஷி என்றால் போரும்படி இருக்கிறவனை
எந்த நாதனால் மூன்று உலகங்கட்கும் நல்ல நாதனை உடையன ஆகுமோ -என்ற பிரமாணம் படி
மூன்று உலகங்களையும் பெருமாளுக்கு கை யடைப்பு ஆக்கினாலும்
பின்னையும் காக்கப் படும் பொருள்கள் சுருங்கி காப்பாற்றுகின்ற துடிப்பே விஞ்சி இருக்கும் –—————

பஹவோ நிருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –2-26-

அரசனே உங்கள் பிள்ளை ராமனுக்கு அநேக கல்யாண குணங்கள் உள்ளன-

திருவாய் -7-6- ஈடு பிரவேசம்–பஹவோ ந்ருப’ – சக்கரவர்த்தி, ‘பெருமாளைத் திருமுடிசூட்ட’ என்று கோலி, ‘அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை மேல் எழும்படியான இராச்சியத்தை வருந்தி ஒருபடி அடிப்படுத்தினோம்; இதனை ஒரு சிறு பிள்ளையின் தலையிலே வைத்தால் பொறுக்குமோ, போறாதோ?’ என்று விசாரித்து, ‘இதனை உலகத்தோடே கூட்டிப் பார்ப்போம்’ என்று கோலி, அரசர்கள் எல்லாரையும் திரட்டி, ‘நான்  இங்ஙனே பெருமாளைத் திருமுடிசூட்டப் பாராநின்றேன்: உங்களுக்கு இஷ்டமோ, இன்றோ?’ என்று கேட்க, உடனே, 3‘கிழவா! போகாய்’ என்ன, கிழவா போகாய்’ என்றது

‘அநேகவர்ஷ ஸாஹஸ்ரோ வ்ருத்தஸ்த்வம் அஸி பார்த்திவ
ஸராமம் யுவராஜாநம் அபிஷிஞ்சஸ்வ பார்த்திவம்’-(ஸ்ரீராமா. அயோத். 2 : 21 .) என்றதனைத் திருவுள்ளம் பற்றி.

‘கதம்நு மயி தர்மேண ப்ருதிவீம் அநுஸந்ஸதி
பவந்தோத்ரஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மஐம்’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 25.

நாம் ஒருப்பட்ட காரியம் நன்றாக விழுந்தது; அரசர்கள் கூட்டம் இப்படி விரையப்பெறுவதே!’ என்று அதிலே மிகுந்த உவகையனாய், அந்த உவகையை நெஞ்சிலே இட்டுவைத்து, ‘அதனை இவர்கள் வாயாலே சொல்லக் கேட்கலாகாதோ?’ என்று நினைத்து, ‘வாரீர்கோள்! அறுபதினாயிரம் ஆண்டு அரசைச் செலுத்துகிற இடத்து. இற்றைவரை எனக்கு என்று ஒரு சுகத்தைக் கோலாதே உங்கள் இரட்சணத்துக்கு ஆமவையே தேடிக்கொடு போந்த நான். ஒரு வார்த்தை சொன்னால், ‘இப்போது நீ இருந்தாயாகில் வீகம் என்? கிரமத்திலே செய்து கொள்ளுகிறோம்,’ என்னதல்: அன்றாகில், ‘உனக்குப் பிரியமாகில் அப்படிச் செய்யலாகாதோ?’ என்று ஒருவார்த்தை சொல்லி ஆறியிருத்தல் செய்கை ஒழிய, படுகொலைக்காரர் கையிலே அகப்பட்டார், ‘தப்ப வேணும்’ என்று பார்க்குமாறு போலே நீங்கள் இங்ஙன் கூப்பிடுகைக்கு நான் செய்த குற்றம் என்?’ என்ன,

1‘ஓஅரசனே! உன் பிள்ளையான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன’ என்கிறபடியே,

‘‘தே தம் ஊசு: மஹாத்மாநம் பௌரஜாபதைஸ்ஸஹ
பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.

எதிரிகள் அம்பால் அழியப்பெற்றது இல்லை உன்னுடைய தேசம்; உன் மகனுடைய குணத்தாலே நாட்டைப் படுகொலைக்குத்தினாய்காண் நீ,’ என்றார்கள் ஆயிற்று. என்றது, 2‘நாங்கள் குணங்களால் வெல்லப்பட்டவர்களாய் இவ்வார்த்தை சொன்னோமித்தனை அல்லது ஒரு காரியபுத்தியோடு சொன்னோம் அல்லோங்காண்,’ என்றார்கள் என்றபடி. 3‘தாதுக்களுக்கு இமயமலை போன்று குணங்களுக்குப் பிறப்பிடமாய் இருக்கின்றான், ஒருவராலும் அசைக்கக்கூடாத ஆற்றலையுடையனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே,

‘ஜ்ஞாந விஜ்ஞான ஸம்பந்நோ நிதேஸே நிரத: பிது:
தாதுநாம் இவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.

 4தாதுக்களானவை ‘இன்ன மலையிற்பொன்’ என்றவாறே விலை போமாறு

போலே, புறம்பே குணங்கள் சிலவற்றைக் கண்டால், பெருமாள் பக்கல் குணம்’ என்று இட்டாயிற்று அங்கு விலை போவது, ‘இவ்வடித்தில் குணம்’ என்றாயிற்றுப் புறம்பு விலைபோவது; இப்படிப்பட்டவனுடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிடுகிறார். 

திருவாய் -9-6- ஈடு பிரவேசம்-

குணங்கள் பல ஈடுபடுத்தும் -என்பதற்கு பிரமாணங்கள் மேலே காட்டி அருளுகிறார்
தே தம் ஊசு மகாத்மானாம் பௌர ஜானபதை சஹ
பகவோ ந்ருப கல்யாணா குணா புத்ரஷ்ய சந்தி தே -அயோத்யா -2-26-
சக்கரவர்த்தி பெருமாளுக்கு திருமுடி சூட வேண்டும் என்று கோலி-
நாம் அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை கிளற இப்படி வருந்தி அடிப்படுதின
இராச்சியத்தை
இனிதரு சிறியவன் தலையில் வைத்தால் இது பொறுக்குமோ
என்று பார்த்து
இதை நாட்டோடு சேர விசாரித்து செய்வோம் என்று அரசர்கள் கூட்டத்தை கூட்டின இடத்து
சநிக்தோ நுநாத சஞ்ஜஞ்ஞே நேத்ர ஹர்ஷ சமீரித
ஜனௌ கோத்குஷ்ட சந்நாதோ விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா -2-18-
மக்கள் ஆரவாரித்த ஆரவாரமானது அரண்மனையை கிடு கிடுக்கச் செய்தது -என்கிறபடியே
சகரவர்த்தி மாளிகையை அளித்து செய்யும்படி ஆரவாரிக்க அதனைக் கேட்டு
நாம் நினைத்த கார்யம் பலித்தது -ஆயினும் இவர்கள் நினைவை இவர்கள் வாயால் சொல்லக் கேட்டால் ஆகாதோ என்று நினைத்து –
கதம் நு மயி தர்மேன பிருதிவீம் அனுசாசதி
பவந்தோ த்ருஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மாஜம் –அயோத்யா -2-25-
வாரீர் கோள் -நான் அற நெறியில் தேசத்தை ஆண்டு வரும் போது இளவரசனைப் பார்க்க வேண்டும் என்று
எவ்வாறு விரும்புகிறீர்கள் -என்கிறபடியே
அறுபதினாயிரம் ஆண்டு சிறியது பெரியதை நலியாதபடியாக
பூமிப் பரப்பை அடைய நோக்கிக் கொண்டு
இதம் சரீரம் க்ருத்ச்னச்ய லோகஸ்ய சரதா ஹிதம்
பாண்டரஷ்ய ஆத்பத்ரஷ்ய சாயாயாம் சரிதம் மா -அயோத்யா -2-7-
எல்லா உலகங்கட்கும் நன்மையைச் செய்கிற என்னால் இந்த உடல் வெண் கொற்றக் குடையின் நிழலில்
கிலம் ஆக்கப் பட்டது -என்கிறபடியே
முத்தின் குடை நிழலிலே திரிந்து -எனக்கு என்று ஒரு சுகம் கோலாதே
உங்களைப் பாதுகாக்கும் தர்மத்தையே செய்து கொண்டு போந்தேன்-
நான் ஒரு வார்த்தை கேட்ட இடத்து –
இப்போது நீ இருக்கச் செய்ய வேண்டாமோ
செய்ய வேண்டிய காலத்தில் செய்து கொள்ளுகிறோம் -என்னுதல்
அன்றியே
கார்யம் ஆகில் செய்ய லாகாதோ -என்று வார்த்தை சொல்லுதல் அன்றிக்கே –

ஜ்ஞான விஞ்ஞான சம்பன்ன நிதசே நிரத பிது
தாதுநாமிவ சைலேந்த்ரோ குணாநாம் ஆக்ரோ மகான் – கிஷ்கிந்தா -13-20-தாரை வாலி இடம் பேசியது
படுகுலை அடித்தவனை தப்ப ஒரு அறவன் கீழே ஒதுங்க நினைப்பாரைப் போலே
என்னை விட்டு என் மகனே அமையும் என்று நீங்கள் விரும்புகைக்கு நான்
உங்களுக்கு செய்த தீங்கு என் என்ன –
நீ எங்களுக்கு செய்த தீங்கு ஒன்றும் இல்லை
உன் மகனுடைய குண அபராதங்கள் கான் இதற்கு அடி –
நீ நோக்கிக் கொண்டு போந்த படிகளில் ஒரு குறை இல்லை
குணவானாய் இருப்பான் ஒரு புத்ரினைப் பெற்று நாட்டினை படுகுலை அடித்தாய் கான் –
பஹவ -உன் அளவு அன்று காண்-காக்கும் தர்மத்தில் அவர்க்கு உண்டான பாரிப்பு
விராஜயன் ராஜ ஸூதா ராஜமார்க்கம் நரை வ்ருதம்
ஹ்ருதயானி ஆமமந்தேவ ஜனச்ய குண வத்தையா -அயோத்யா -26-2-
பொன் முதலிய தாதுக்கள் இமய மலையைப் போன்று
சௌலப்யம் முதலிய குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருப்பவன் -என்கிறபடியே
நாட்டிலே சிலரை குணம் இல்லாதவர் என்று பழித்தும்
சிலரை குணவான்கள் என்று கொண்டாடுகிறதும்
இன்ன ஆகாரத்தின் பொன் -என்று விலை பெறுமா போலே
இன்னார் இடத்திலே இருக்கிற குணம் -என்று ஆயிற்று புறம்பு விலை போவது
சிறந்த குணம் உள்ளவர் ஆகையாலே மக்களின் மனத்தினைக் கடைந்தவர் போல் ஆனார் -எனபது ஸ்ரீ ராமாயணம் –

———-

ப்ரிய வாதீ ச பூதா நாம் ஸத்ய வாதீ ச ராகவா -2-33-

ராமன் பிராணிகளுக்கு பிரியமானதை பேசுவான் -உண்மையானதை பேசுவான்

திருவாய் -7-1-ப்ரியவாதீ ச –பெருமாள் ஒன்றை அருளிச் செய்தால் அது செவிப்படாது ஒழியில் செய்யலாவது இல்லை -செவிப்பதில் இனியதாய் அன்றி இராது
யாருக்குத் தான் என்னில்
பூதா நாம் -சத்தா யோகி ஸகல பதார்த்தங்களுக்கும் -அஸத் வ்யாவ்ருத்தி மாத்ரமே வேண்டுவது –
அப்போது பிரியமாய் விபாகத்தில் வேறு ஒன்றைப் பலிக்குமோ என்னில்
ஸத்ய வாதீ ச -அருளிச் செய்யுமது தான் பூத ஹிதமாய் அன்றி இராது என்கிறது
ஒரு யுக்தியே இரண்டுமாகா நின்றாள் அல்லாததுக்குச் சொல்ல வேண்டா விறே

————

வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவம் துக்கித –2-41-

மனிதர்களின் வ்யாசனங்களால் மிகவும் துக்கித்தவனாக ராமன் ஆகிறான்

வண் தீங்கவி செய்குந்தன் தன்னை எந் நாள்சிந்தித்து ஆர்வனோ?-7-9-7-வண் தீம் கவி செய் குந்தன் – வளவியனவாய் இனியனவாய் இருந்துள்ள கவிகளைப் பாடி, அது தனைத் தன் பேறாக நினைத்திருக்கும் தூய்மையையுடையவன். என்றது, 3‘துயர் அறு சுடர் அடி’ என்பது போன்று, இவரைக்கொண்டு கவி பாடின பின்பு தன் துயர் தீர்ந்தானாய் இருக்கிறபடியைத் தெரிவித்தவாறு. 4இவர் துயர் போன பின்பு, தனக்கு ஒரு துயர் உண்டாய் அது போனாற்போலே நினைத்து இராநின்றானாயிற்று. 5சரீரத்துக்கு வந்த வியாதி அனுபவிப்பான் சரீரி அன்றோ? ‘வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் -திவ்விய அந்தப் புரத்திலுள்ளர்க்காதல் திருத்தாய்மார்க்காதல் ஒரு துன்பம் வந்தாலோ துக்கத்தையுடையவராவது? என்றால், மநுஷ்யாணாம் ப்ருஸம் துக்கிதோ பவதி – துக்கத்தையுடையவனான அளவன்றிக்கே, யானை அளறுப்பட்டாற்போலே நோவுபடுவார் ஆயிற்று,

‘வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருஸம் பவதி துக்கித:
உத்ஸவேஷூ ச ஸர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி’-என்பது, ஸ்ரீ ராமா. அயோத். 2 : 40.

இன்று ஒரு படியாய், பிற்றை நாள் ஒரு படியாய், பின்னர் ஆறிப் போம் இவர்களுக்கு; இவர்கள் துக்கத்தில் நாள்தோறும் புதியராய் இருப்பர் ஆதலின். ‘துக்கிதோ பவதி’ என்கிறது. 1‘வியஸநம் இவனதானால் துக்கமும் இவனதாகவேண்டி இருக்க, இவர் துக்கத்தையுடையர் ஆதற்குக் காரணம் என்?’ என்னில், ‘இவன் படுகிற கிலேசம் இவன் காவற்சோர்வால் வந்தது ஒன்று அன்றே, நம் காவற்சோர்வாலே வந்தது ஒன்று அன்றோ?’ என்று காவலர் ஆகையாலே நாள்தோறும் புதியராய் இருப்பர் என்க.

இது எனக்கு மிகவும் நாணமாய் இருக்கின்றது; நீங்கள் என் குற்றத்தைப் பொறுக்க வேண்டும்,’ என்னுமவர் அன்றோ?

‘ப்ரஸீதந்து பவந்த: மே ஹ்ரீ: ஏஷாஹி ம்ம அதுலா
யத் ஈத்ருஸை: அஹம் விப்ரை: உபஸ்த்தேயை: உபஸ்தித:’-என்பது, ஸ்ரீ ராமா. ஆரண். 10 : 10.

————–

சைத்ர ஸ்ரீ மான் அயம் மாச புண்ய புஷ்பித காநந –3-4-

திருப்பாவை -1-சைத்த்ரச் ச்ரீமா நயம் மாஹ -என்று-
ஒரு சம்ருதியைப் பற்றி காலத்தை கொண்டாடிற்று இறே-சைதர–

அல்லாரில் காட்டில் பெருமாளுக்கு உள்ள பிராதான்யம் போலே
மாசங்களுக்கு எல்லா வற்றுக்கும் முதலான மாசம்-

ஸ்ரீ மான் –அவர் எல்லாருக்கும் ராஜாவாக பிராப்தர் ஆனாப் போலே
சைத்ர மாசம் சர்வருக்கும் ஸுகககரம் ஆகையாலே மாசங்களுக்கு எல்லாம் ராஜா என்கிறது

அயம் மாச –
அபிஷேக மனோரத சமயத்திலே சந்நிஹிதமான தன்னேற்றம் அங்கு
சேஷியை சேஷ பூதர் லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்
இங்கு-சேஷி பூதரை சேஷி லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்-

புண்ய புஷ்பிதகாநந-பாவநஸ்சர்வ லோகாநாம்த்வமேவ -என்றும்
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிண்ம் -என்றும்-
அவருக்கு இரண்டு ஆகாரம் உண்டானாப் போலே-
இக்காலமும்
பாவனமாயும்
போக்யமுமாயும் இருக்கை-

புஷ்பித காநந –
படை வீடு போலே நாம் அலங்கரிக்க வேண்டாதே தானே அலங்கரிக்கை-
புஷ்பித காநந —
பெருமாள் பொன் முடி சூட காடு பூ முடி சூடிற்று –

———-

ரூப ஒவ்தார்ய குணைர் பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணம் –3-28-

முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.
-5-3-6-

“ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை. “குணம்” என்றது, கொள்ளுகிறவனைக்காட்டிலும் தாம் தாழநின்று கொடுக்கும் சீலத்தை. தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ; அதற்காகத் தாழநின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது. “பும்சாம்” – 2அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது, பலம் அற்ற பெண்கள் படுமதனை வன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி. அன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றாற்போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும் ஈடுபடுத்த வல்லன என்னவுமாம். “திருஷ்டி சித்தாபஹாரிணம்”-3கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின்செல்லுமத்தனை நெஞ்சு. தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம் அன்றோ –

———–

ஸஹ பத்ந்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -6-1-என்றபடி. 

ஆராஅமுதே – 5-8-1-1“ஸஹபத்நியா – பத்திநியோடு கூட” 2ஆழங்காலிலே இழிவார் ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக் கைப்பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே, பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக்கூடக் கொண்டாயிற்று இழிவது. “விசாலாக்ஷ்யா – பரந்த கண்களையுடையவளோடு” இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கல் உண்டான பிரேமத்தின் மிகுதியைக் கண்டு, தன்னை அணைக்கும் போதையிற்காட்டிலும் உடம்பு முழுதும் கண்களானபடி. “நாராயணம் உபாகமத் – நாராயணனை அடைந்தார்” இவர் 3நியதி இருக்கிறபடி. இக்கண்களுக்கு இலக்காய் ஆழங்காற்படாதே அவ்வருகுபட்டார். இதனால் என் சொல்லியவாறோ? எனின், தான் தன்னை அநுபவிக்கும்போதும் கூட்டுத் தேடவேண்டும்படியாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம். ஆரா அமுதே – இத்திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான ஆற்றாமைக்கெல்லாம் வித்து இச்சொல்லே ஆயிற்று.

———

ஜ்ஞாதி தாஸீ யதோ ஜாதா –7-1

இதனால், ‘நிலமிதியே இராம பத்தியை விளைக்கும்’ என்கை. ‘இந்தத் தேசமானது விரும்பினவற்றை எல்லாம் தரக் கூடியத்’ என்கிறபடியே அன்றோ? 1கைகேசியின் உறவினர்களுக்கு வேலைக்காரியும் எங்கேயோ பிறந்தவளும்’ என்கிறது அன்றோ?

நற்பால் அயோத்தியில் – 7-5-1-நல்ல இடத்தையுடைத்தான திருவயோத்தியில். பால் – இடம்.

‘பவித்ரம் பரமம்
புண்யம் தேஸோயம் ஸர்வ காமதுக்’ என்பது, கருடபுராணம், 11.

    ‘மானத்து வண்ட லுழவோர் எழுத்தின் வடிவுற்றசீர்
மானத் துவண்ட வினையான ராயினு மால்வளர்வி
மானத் துவண்டல மாமரங் கம்வழி யாவரினும்
மானத்து வண்டமர் தாரண்ட ராம்பதம் வாய்க்குமங்கே.’என்பது, திருவரங்கத்தந்தாதி.

‘ஜ்ஞாதி தாஸீயதோ ஜாதா கைகேய்யாஸ்து ஸஹோஷிதா
ப்ரஸாதம் சுந்த்ர ஸங்நாஸம் ஆருரோஹ யத்ருச்சாயா’என்பது, ஸ்ரீராமா. அயோத். 7 : 1

‘இதற்குக் கருத்து என்?’ என்னில், ‘இந்த அயோத்தியிலே பிறந்தாளாகில் பெருமாளுக்கு விரோதம் செய்யாள் ஆகையாலே, எங்கேனும் ஓரிடத்தே பிறந்தநாள் ஒரு விழுந்தான் கிடக்கை’ என்றது.2‘யத: குதஸ்சித்ஜாதா – யாதாம் ஓரிடத்தில் பிறந்தாள்’ என்று வியாக்கியானம் செய்தான் உடாலி. ‘இந்த நிலத்திற்பிறவாமை இவளுக்குக் கொடுமை விளைந்தது,’ என்கிறான் அன்றோ? 

——

அஹம் புநர் தேவ குமார ரூபம் அலங்க்ருதம் தம் ஸூதம் ஆவ்ரஜந்தம்
நந்தாமி பஸ்யன் அபி தர்சநேந பவாமி த்ருஷ்ட்வாஸ புநர் யுவேவ
-12-106-

இவருக்கும் அவ்வல்லவியோ என்று சிறியாத்தான் கேட்க -தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி ரிஷி கரி பூசுகிறான் என்றார் –
அலங்க்ருதம் -அத்தாலும் வெறும் புறம் கிடீர் ஒரு போலி சொல்லலாவது -ஒப்பித்தால் ஒக்கச் சொல்வார் இல்லை
தம் ஸூதம் -இவனுக்கு இரண்டு படியும் உத்தேச்யமாய் இருக்கிற படி
ஆவ்ரஜந்தம்–புஷ்பம் அலரும் போது எங்கும் ஓக்க பிறக்கும் விகாஸம் போலே -அதுவும் வண்டை நோக்கி இறே–ஐவரும் போக்தாக்களைக் குறித்து இறே
நந்தாமி பஸ்யன் அபி –கண்டபடியே இருக்கச் செய்தே காணாது கண்டது போலே யாயிற்று நாள் தோறும் நாள் தோறும் க்ஷணம் தோறும் க்ஷணம் தோறும் உகக்கும் படி –
தர்சநேந –அணைத்தல் வார்த்தை சொல்லுதல் செய்ய வேண்டா -காட்சியே அமையும் -கரை புரண்டு அனுபவம் உள்ள இடத்திலே போலே காணும் பிரயோஜனம்-ஸதா பஸ்யந்தி இறே
பவாமி த்ருஷ்ட்வாஸ புநர் யுவேவ –அறுபதினாயிரம் ஸம்வத்ஸரம் வயசைப் புக்கு வ்ருத்தனான சக்ரவர்த்தி பெருமாளைக் கண்ட பின்பு பெருமாளுக்கும் தனக்கும் வாஸி தெரியாதபடி யானான்
காளையைப் பயந்த காளை என்னுமா போலே -தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலவே ஆக்கி உஜ்ஜீவிப்புக்கும் விஷயம் போலே காணும்
யுவேவ வஸூதேவ அபூத் விஹாயாப் யாகதாம் ஜராம் -என்னும்படி யானாரே இறே வஸூ தேவரும்

தத்ர காஷாயிணோ வ்ருத்தான் வேத்ர பாணீந் ஸ்வலங்க்ருதான்
ததர்ச விஷ்டிதான் த்வாரி ஸ்த்ரயத்யஷான் ஸூ ஸமாஹிதான்
–16-3-

சூடுமலர் குழலீர்” -5-9-3-அவன்தான் வந்தாலும் இவளுக்கு முன்னே விரும்புவது இவள் சம்பந்தமுடையார்களை அன்றோ. “தத்ர காஷாயிந:– அங்குக் காவி உடையணிந்தவர்களை;” தங்கள் தங்களைப் பேணுமவர்கள் அல்லாமையாலே அழுக்குச் சட்டையும் தாங்களுமாயன்றோ இருப்பது.

ஒரு சம்வாதம் காட்டுவதற்காக, மேலே கூறியதனை அநுவதிக்கிறார்
‘அவன்தான்’ என்று தொடங்கி. சொல்லப்போகும் அர்த்தத்திற்குப்
பிரமாணம் காட்டுகிறார் ‘தத்ர’ என்று தொடங்கி.

தத்ர காஷாயிந: வ்ருத்தாந் வேத்ரபாணீந் ஸ்வலங்க்ருதாந்
ததர்ஸ விஷ்டிதாந் த்வாரி ஸ்த்ர்யத்யக்ஷாந் ஸு ஸமாஹிதாந்”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 16 : 3.

இந்தச் சுலோகத்தில் “ஸு அலங்கிருதாந்” என்பதுவே இங்கு வேண்டுவது.
“ஸு அலங்கிருதாந்” என்றதிலுள்ள “ஸு ” என்ற பதத்துக்குப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘பெருமாளுடையவும்’ என்று தொடங்கி.

“விருத்தாந் – முதிர்த்தவர்களை;” தொண்ணூற்றைந்து வயதுக்கு மேலாய் ஆசையற்றவர்களாய் இருப்பாரை அன்றோ அந்தப்புரங்களுக்கு வைப்பது. “வேத்ர பாணீந்-பிரம்பைக் கையிலுடையவர்களை;” பெருமாள் விற் பிடித்தாற்போல அவர்கள் பிரம்பு பிடித்தபடி. விற்பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் பிரம்பு பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் காணும். “ஸுஅலங்க்ருதாந் – தங்களை அலங்கரித்தவர்களை;” பேணாத பரிவட்டங்களையுடையராய் விருத்தருமாய் இருந்தார்களாகில் இவர்களுக்கு அலங்காரமாவது என்? என்னில், பெருமாள் சக்கரவர்த்தி மாளிகையிலே போய்த் திருமஞ்சனம் ஆடி அமுது செய்து மீண்டு திவ்ய அந்தப்புரத்துக்கு எழுந்தருளும்போது, சக்கரவர்த்தியைப் போன்று, பழையராகையாலும் தங்கள் பரிவாலுமாக இவரை மடியிலே வைத்து அணைத்து உச்சியை மோந்துவிடுவர்கள்; அதனாலே, குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாக இருப்பர்கள். பெருமாளுடையவும் பிராட்டியுடையவும் ஒப்பனை போலன்று இவர்கள் ஒப்பனை. அப்படியே இவர்களும் ‘சூடுமலர் குழலீர்” என்னும்படியாயிருக்கிறபடி.

————–

பதி ஸம்மாநிதா ஸீதா பர்த்தாரம் அஸி தேஷிணா
ஆத் வாரம் அநுவவ்ராஜ மங்கலான் யபிதத்யுஷீ —
16-2-

புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னான்கொல் எம் கோல வளைக்கே -திரு விருத்தம் –24–

பதி சம்மாநிதா சீதா -அயோத்யா காண்டம் -16-21–
பெருமாள் சக்கரவர்த்தி பாடு சுமந்த்ரன் அழைக்க
எழுந்து அருளுகிற பொழுது ,
தொடர்ந்து-பின்னே புறப்பட்ட பிராட்டிக்கு
திரு தோளிலே மாலையை வாங்கி இட்டு ,
நாம் வரும் அளவும் விருத்த கீர்த்தனம் பண்ணி இரு என்று பழையவர்கள் நிர்வாகம் —
மாலையை இட்டு திரு அடிகளைப் பிடித்துக் கொண்டு எழுந்து அருளினார்-என்று பட்டர்..

(சூடிக்களைந்த மாலையையா தருவது என்று அபராத ஷாமணம் பண்ணிப்போந்தான் என்றபடி )

அஸி  தேஷணா –
இவர் தோளில் மாலை  இட்டதுக்கு
இவள் கண்ணாலே மாலை இட்ட படி-

(அரும்பூதம்
பதி பார்யைக்கு ஸம்மானம் பண்ண வேண்டுமோ
வஸ்திர பூஷணம் இவளுக்கு வேண்டாமே ஜனகராஜன் திருமகள்
தம்மைக்குறித்து பாரதந்தர்யம் காட்டவோ எண்ணில்
ஐயர் பார்த்து பண்ணிய கல்யாணம்
இனி உசிதம் என் என்னில்
தனக்கு அபிமதமான மாலை இவளுக்கு தாரகம் என்று
அபராத ஷாமணமும் பண்ணிப் போந்தான் என்று பட்டர் )

—-

தீஷிதம் விரத ஸம் பந்நம் வராஜி நதரம் சுஸிம்
குரங்கச் ஸ்ருங்க பாணிஞ்ச பஸ்யந்தீ த்வா பஜாம் யஹம்
–16-28-

குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே-14-2-

முடை நாற்றம் அனுபவிக்க வேணும் போலே காணும் இவள் தான் ஆசைப் பட்டு இருப்பது –

தீஷிதம் –
திரு மேனியிலே பூசின வெண்ணெயும்
போர்த்த உறுப்புத் தோலும்
யஜமான வேஷம் தோற்றும்படியாக இருக்கும் படி

வ்ரத சம்பன்னம் –
ரிஷி சொன்ன வளவன்றிக்கே –
அவன் ஒரு பட்டினி விடச் சொல்லுமாகில் இரண்டு பட்டினி விடுவர்

வராஜி ந்தரம் –
நல்ல பரியட்டங்கள் சாத்துமது அன்றிக்கே
வராஜி நதரராய் மான் தோலை அறிந்து -இருப்பார்

ஸூசிம்
ஒருவரையும் ஸ்பர்சிக்காலாகாது
பிராட்டி ஒருத்தியையும் செய்யலாவது இல்லை இறே -என்றால்
அவர் தன்னை ஸ்பர்சிக்கிலும்-அடுத்தடுத்து முழுகா நிற்பார்

தீஷிதம் வ்ரத சம்பன்னம் வராஜி ந்தரம் ஸூசிம் -குரங்க ஸ்ருங்க பாணிம் ச
பஸ்யந்தீ த்வாம் பஜாம்யஹம் -அயோத்யா -16-23-
(மான் கொம்பு வைத்து உடம்பை சொரிந்து கொள்ள கையால் பண்ண கூடாதே )

இதற்கு எதிர் தட்டு இறே –
கறையினார் துவருடுக்கை -கடையாவின் கழி கோல் கைச் சறையினார் தளிர் நிறத்தால் குறைவிலமே–திருவாய் -4-8-4-
அவன் விரும்பாத ப்ரஹ்மசாரி நிறத்தால் என்ன பிரயோஜனம் உண்டு
இப்படியே குணுங்கு நாற்றமாய்த்து இவள் உகப்பது –

பிராட்டி, ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட ஜனககுலத்திற் பிறந்தவளாகையாலே, ‘தீக்ஷிதம்’ என்ற சுலோகத்திற்கூறிய அவ்வடிவை விரும்பியது போன்று, ஆசார நிர்ப்பந்தமில்லாத ஆயர் குலத்தில் பிறந்தவளாகையாலே இவ்வடிவை விரும்பினாளாயிற்று இவள்,’ என்றபடி.

தீக்ஷிதம் – ‘உறுப்புத்தோலும் வெண்ணெய் பூசின உடம்புமான யஜமான வேஷத்தோடே நின்ற நிலையைக் காண ஆசைப்படாநின்றேன்’ என்கிறாள். விரத சம்பந்நம் – முனிவன் ஒரு பட்டினி விடச்சொன்னானாகில், ‘இவன் நம்முடைய மென்மைத் தன்மைக்குப் பொறாது என்று சொன்னானித்தனை,’ என்று நினைத்து, நான்கு பட்டினி விட ஒருப்படுவாராயிற்றுத் தர்ம சிந்தையாலே. வராஜிந தரம் – கூறையுடையையும்  காற்கடைக்கொள்ள வேண்டும்படியிருக்கை. சுசிம் – ‘ஒரு பெண்ணையும் தீண்டலாகாது; தர்மபத்நியாகையாலே பிராட்டியைத் தீண்டினால் வருவதொரு குற்றம் இல்லையேயன்றோ?’ ஆன பின்னர், அஃதொழியப் பரிஹரிப்பது’ என்றால், அது தன்னிலும் ஐயங்கொண்டு, பிராட்டியுடைய திருப்பரிவட்டம் தாக்கினாலும் முழுகத் தேடா நிற்பர். குரங்கசிருங்கபாணிஞ்ச – ‘வில்லையுடையவர், ஏகவஸ்திர தரோ தந்வீ – ஒரே வஸ்திரத்தைத் தரித்தவர்,’ என்னுமதைக்காட்டிலும், கையும் கலைக்கொம்புமாய் இருக்குமதுதானே போந்திருக்கை? பஸ்யந்தீத்வா பஜாம்யஹம் – பகவானைத் துதி செய்வார் செய்வனவெல்லாம் இவ்வுலக இன்பத்துக்கேயன்றோ? ஆகையாலே, இவ்வுலக

இன்பத்துக்காகத் துதிக்கிறாள் காணும். 1அங்கும் ‘சதாபஸ்யந்தி – எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருப்பதேயன்றோ?-நன்று; வழியில் கண்ணெச்சில் வாராமல் மங்களாசாசனம் செய்கிற இடத்தில், திருவபிஷேகத்திற்கு அங்கமானவற்றை ஆசைப்படுவான் என்?’ எனின், மேல் வரும் பலத்தை விரும்பவே, நடுவில் உள்ளது தன்னடையே வருமே அன்றோ என்னுமதனைப் பற்றச் சொல்லுகிறாள். என்றது, ‘வழிப்போக்கில் கண்ணெச்சில் வாராதொழிய வேண்டும்’ என்றேயன்றோ மங்களாசாசனம் பண்ணுகிறது? மேல் வரும் பலத்தை விரும்பவே, அது தன்னடையே வருமே அன்றோ?’ என்றபடி. 2சாவித்திரி தன் கணவனைக் காட்டி, ‘இவனுக்கு நான் பல பிள்ளைகளைப் பெறவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டாளே அன்றோ?    

———

யச்ச ராமம் ந பஸ்யேத் து யம் ச ராமோ ந பஸ்யதி
நிந்திதஸ் ஸ வஸேல் லோகே ஸ்வாத்மாப் யேநம் விகர்ஹதே —
17-14-

வாடினேன் வாடி வருந்தினேன்-1-1-1-

யஸ்ய ராமம் ந பஸ்யேத் து- -ராமம் என்கிறது கண்ணுக்கு வகுத்த விஷயத்தை
காணாது இருக்கிறான் யாவன் ஒருவன் -எத்தைனையேனும் உயர்ந்தவன் ஆகவுமாம்
இது தப்பினாலும் –
தப்பாதது தப்பினால் வருமது இவ்வளவு அன்று என்கைக்காக விசேஷிக்கிறது
பெருமாள் கடாஷம் தப்பாது இறே
யஞ்ச ராமோ ந பஸ்யதி -எத்தனையேனும் சிறியாரும் இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆகாதார் இல்லை –
யெம் -எத்தைனையேனும் சிறியவன் என்கிறது
எத்தனையேனும் சிறியார் இறே இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆவர்

யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாருமோர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -1-3-4-

ப்ரஹ்மாதிகள் ஞானத்துக்கும் அவிஷயமாய் இருக்கும்
ஓர் இடைச்சிக்கும் வேடனுக்கும் கை புகுந்து இருக்கும்

எத்தனையேனும் உயர்ந்தவன் ஆகிலும்
பெருமாளுடைய ஒரு நாளைப் புறப்பாடு காணான் ஆகில் அவன் பெரியன் அல்லன்

எத்தைனையேனும் சிறியான் ஆகிலும் அவன் பக்கலிலும் தப்பாது அவருடைய பார்வை
தப்புகிறான் யாவன் ஒருவன் அவன் அவஸ்துக்களோடும் எண்ணப் படான்
எண்ணப் படாமையிலே எண்ணப் படும்
எல்லாரும் நிந்தித்து சீ சீ என்னப் படும்
இவனை நிந்திப்பார் வசிஷ்டாதிகள் துடக்க மானவர் நால்வர் இருவரோ என்னில்
நிந்திதஸ் சவ சேல்லோகே -லோகே நிந்தித -இவனை நிந்திக்க உரியர் அல்லாதார் இல்லை

விஷய பிரவணன் ஆனவன் -இப்போது பழியாய் மேல் நரகமாய் இருக்கச் செய்தே தான்
நல்லது செய்கிறோம் என்று இறே இருப்பது –
அப்படித்தான் தான் நல்லது செய்கிறோம் என்று இருக்குமோ என்னில்
ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே -தானும் தன்னை நிந்தித்துக் கொள்ளும் –

திருக் கைத்தலம் இழந்தவன் -இற்றைப் புறப்பாடு காணப் பெறாத நாம் கர்ப்பூரமும்
எலுமிச்சம் காயும் பெற்றோம் ஆகில் முடிந்து பிழைக்கல் ஆயிற்று -என்று இருக்கும் இறே –
(இராப்பத்து ஏழாம் நாள் ஆழ்வாருக்குக் கைத்தலம் சேவை
திருக் கார்த்திகை அன்றும் கைத்தலம் சேவை)
ஒரு நாள் புறப்பாடு இழந்தார் வார்த்தை இதுவானால் -அநாதி காலம் இழந்தவருக்கு
வாடினேன் -என்று அல்லது வார்த்தை இல்லை இறே

வாடினேன் -என்கிற இது தான்
எவ் வஸ்த்தையைப் பற்றிச் சொல்லுகிற வார்த்தை –
விஷய ப்ரவணராய் போந்த போது அவற்றை அநுபவித்து களித்து போருகையாலே வாட்டம் இல்லை
பகவத் விஷயத்தில் கை வைத்த பின்பு தானே வாட்டம் இல்லை –
ஸ்வரூப ஞானம் பிறந்து பூர்வ வ்ருத்தத்தை அனுசந்தித்த போதை வார்த்தை –
(ஞானம் பிறந்து பிராப்தி பெற உள்ள இடைப்பட்ட காலத்தில் தானே வாடினேன் என்போம்)
ப்ராப்தி சமயத்தில் இறே பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரியாது ஒழிவது –
நோ பஜனம் ஸ்மரன் -என்னும் அளவில் வந்தது இல்லை இறே
ஞான லாப வேளையாகையாலே பூர்வ வ்ருத்தாந்தம் தான் இவருக்கு பிரத்யஷம் போலே இறே தோற்றுகிறது

வாடி என்கிற
இவ் அனுபாஷணம் இரண்டு இடத்திலும் பொருள் பெற்று கிடக்கிறது –
அநாதி காலம் இவ் இழவு ப்ரவ்ருத்தமாய் போந்தது  என்றும்
மேலே ஒரு அநர்த்தத்தை விளைத்தது என்றும் தோற்றுகிறது –
(வாடினேன் வாடி -தொடர்கிறது என்றும் வாடி வருந்தினேன்-அனர்த்தம் – என்றும் இரண்டு இடத்திலும் அன்வயம் – )

————–

ந நூநம் மயி கைகேயி கிஞ்சிதாசம்ஸஸே குணம்
யத் ராஜாநம் அவோசஸ் த்வம் மமேஸ்வரதரா ஸதீ
-19-24-

சிற்றவை பணியால் முடி துறந்தானை-2-3-1-
மாற்றுத் தாய் சொன்ன வார்த்தைக்காக
ப்ராப்தமாய் வருகிற முடியை சந்யசித்தவனை

ந நூநம் மம கைகேயி
சக்கரவர்த்தி வார்த்தை சொல்ல மாட்டாமையாய் இருக்கிறான் அத்தனை-
உம்முடைய தம்பிக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்-
உம்மைக் காடேறப் போகக் காணும் அவன் நினைத்து இருப்பது –
என்று சக்கரவர்த்தி கருத்தைச் சொல்ல

அத்தைக் கேட்டு நடுவில் ஆய்ச்சி –
திருவடிகளிலே அழகியதாய் ஸூஸ் ரூஷித்தோம் என்று இருந்தோம்
நம் பக்கல் ஒரு குணம் உண்டாக நினைத்து இராமை இறே
தாம் போகச் சொல்லாமே அய்யர் கருத்தாக அருளிச் செய்தது -என்று
ஐயரோ பாதியாகவோ உம்மை நினைத்து இருப்பது –
அவரை ஈஸ்வரராகவும்
உம்மை ஈஸ்வர தரையாகவும் இறே நினைத்து இருப்பது -என்றார் இறே-

——

ராஜ்யஞ்ச தவ ரஷேயம் அஹம் வேலேவ சாகரம்
ப்ரதிஜாநாமி தே வீர மா பூவம் வீர லோக பாக்
—-23-28-

ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்த கண்ணி நுண் சிறுத்தாம்பு வியாக்யானம்-அவதாரிகை 

ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான் –

————-

ஈர்ஷ்யா ரோஷவ் பஹீஷ் க்ருத்ய புக்த சேஷ மிவோதகம்
நய மாம் வீர விஸ் ரப்த பாபம் மயி நவித்யதே
-27-8-

எமக்கினி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே-பெரிய திருவந்தாதி–9-
இனி நமக்கு பேறு இழவு இரண்டும் ஒக்கும்
பசித்த போது கிடையாத சோறு என் செய்ய
விஸ்லேஷத்தில் உஜ்ஜீவிப்போமாகில் அன்றோ ஆறி இருக்கலாவது –

ஈர்ஷ்யாரோஷவ் (அயோத்யா -27 )–இத்யாதி
அதிலே துஷ்ட ஸத்வங்களும் ராக்ஷஸரும் உண்டு
ஸூ குமாரையாய் இருக்கிற உன்னைக் கொடு போக ஒண்ணாது என்று பெருமாள் அருளிச் செய்ய
ப்ரணய ரோஷத்தாலே பிராட்டி விண்ணப்பம் செய்கிறாள்

உம்முடைய பின்னே போந்தேன் என்று எனக்கு ஒரு உயர்த்தி யுண்டாம் காட்டிலும் உமக்கு
இத்தனை பொறாமையும் சீற்றமும் வேணுமோ
பிதாவினுடைய வசனத்தை அநு வர்த்தித்துக் காடு ஏறப் போனார் என்று உமக்கு ஒரு உயர்த்தி தேடுகிறவோ பாதி
உம்முடைய பின் போந்தேன் என்று எனக்கு ஒரு உயர்த்தி யுண்டானால் ஆகாதோ
அநு வர்த்த நீயரை அநு வர்த்திக்கலாவது உமக்கேயோ
அல்லாதாருக்கு ஆகாதோ

ஈர்ஷ்யாராஷவ் பஹிஷ் க்ருத்ய புக்த சேஷ மிவோதகம் (அயோத்யா -27 )
வசிஷ்ட சிஷ்யராய் ஞானவான்கள் ஆனால் த்யஜிக்கப் படுபவை த்யஜிக்க வேணும் காணும்
(தீர்த்தம் மிச்சம் இல்லாமல் குடிக்க வேண்டுமா போல் )

நய மாம்
அஸூயை யும் கோபமும் போனால் பர ஸம்ருத்தியே இறே உள்ளது –
ஆன பின்பு என்னக் கொடு போகீர்

வீர
பர ஸம்ருத்தி யுண்டானால் கொடு போகாது ஒழிகைக்கு வீர்யத்தில் கொத்தை இறே
அது இல்லை இறே உமக்கு

விஸ்ரப்த
உம்மை நீர் அறிவீர்
என்னை விஸ்வசித்துக் கொடு போம்

பாபம் மயி ந வித்யதே
உம்மைப் பிரிந்து ஜீவிக்கைக்கு அடியான பாபம் எனக்கு நிலை காணும்
பாபமாவது -கிலேச ஹேது இறே
உம்மைப் பிரிந்து கிலேசப் படுமது இல்லை காணும் எனக்கு

அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு
பேறும் இழவும் இரண்டும் ஒக்கும் என்று இருக்கலாமோ
நம்முடைய சத்தைக்கு அவன் வேணுமே என்ன

சத்தைக்கு இது எல்லாம் வேண்டாம் காண்
(இது எல்லாம் -நமஸ்காராதிகள் எல்லாம் )
அவர் நம்மை வேண்டா என்றத்தை நினைத்து இருக்க அமையும் –
நம்முடைய சத்தைக்கு அவர் சத்தை இறே காரணம் –

(அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே
பாவி என்று முன்னே வந்து சொன்னாலும்
“செம்மை யுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
விடை தான் தருமேல் மிக நன்றே” (நாச்சியார் திருமொழி 13-9)

ஈடு பிரவேசம் -6-2-

வாரீர்! ஒருவனுக்கு ஆற்றா ஒருத்தி உண்டோ? என் ஒருத்தியையும் நோக்க மாட்டாமையே வைத்துப் போகப் புகுகிறது! இதுதன்னை எங்கள் ஐயர் கேட்டால் போரவெறுப்பர்;’ “ஒருபெண்பெண்டாட்டி ஆண் உடை உடுத்து என்மகளைக் கைப்பிடித்துக் கொண்டுபோன இத்தனையாகாதே என்று இராமே கடுகக் கொண்டு போகப் பாரும்.”‘ஒரு பெண் பெண்டாட்டி’ என்று தொடங்கிச்
சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.

“கிம்த்வாம் அந்யத வைதேஹ: பிதாமே மிதிலாதிப:
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்திரியம் புருஷவிக்ரஹம்”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 3.

3“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்கிருத்ய – பிறர் உயர்த்தி கண்டால் பொறுக்கவேண்டாவோ? நான் ‘உம்மோடு கூடப்போர’ என்றுறப்பட்டு நாலடி இட்டால், எனக்கு அதனால் வரும் ஏற்றம் கண்டு பொறுக்கமாட்டாமையால் உண்டான கோபம் பொறாமை இவற்றைப் பொகடும்.

“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்க்ருத்ய புக்தஸேஷம் இவோதகம்
நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 6.

புக்த ஸேஷம் இவ் உதகம்-குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; 1இவையும் அப்படி யாகாதேதான். 2பிரணயிகள் கோஷ்டியில் இங்ஙனே காணும் பரிமாற்றம். காதலிக்கு உண்டான தன்னேற்றம் தன்ன தாயிருக்க வேண்டாவோ? நய மாம் வீர – 3என்னை அறியாதது போன்று உம்மையும் அறிந்திலீராகில், நான் சொல்லக் கேளும். உமக்கு ஒரு குறையும் இல்லைகாணும்; என்னைக் கொடு போகப் பாரும். விஸ்ரப்த: – தங்கள் தங்களை அறியாவிட்டால் ஆப்தர்வாயிலே கேட்டு அறியவேண்டும் காணும். பாபம் மயி ந வித்யதே – 4பொகடும்; இங்ஙன் அன்றாகில், நீர் என்னை இங்கே நிறுத்திப் போனால், நீர் மீண்டு வருந்தனையும் தரித்திருக்கைக்கு வேண்டும் காரணம்எனக்குஇல்லைகாணும்.” 1இப்படியே யன்றோ பிரணயரோஷம் தலைஎடுத்தால் இருக்கும்படி.

2இவ்வளவேயோ? இன்னம், இவர்தாம் இலக்காகச் சொன்னவையன்றோ இவை! இவர் வரவிட்ட ஆளின்முன்பேயும், “ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.

3காகுத்ஸ்த:- பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது; ‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனையல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ? கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி – ‘நீர்ப்பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ? கடலில் நீரே நெய்யாக எரிக்கவல்ல அம்பையுடையவரன்றோ. 4ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரேயன்றோ; இராஜாக்களுக்குப் பூமியும் பெண்போலேயன்றோ; ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண்சிவக்குமளவுமாகாதே என்றும்,“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தைவிட்டவரும், என்னையும் கால்நடையாகக் காட்டில் அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே, பித்ருவசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனையன்றோ என்றும்

தர்மாபதேஸாத் த்யஜ்த: ச ராஜ்யம்
மாம் ச அபி அரண்யம் நயத: பதாதிம்”-  என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 29.

இப்புடைகளிலே சொன்னவை பலவே யன்றோ.

———————

கிந்த் வாமந்யத வைதேஹ பிதா மே மிதிலாதிப
ராம ஜா மாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் –3
0-3-

அலை வலை வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-2–பிராட்டியும் -ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் -என்று எங்கள் ஐயர் கேட்கில்
பெண்ணுக்கு பெண்ணைக் கொடுத்தோம் -என்று
என்னை நிருத்திப் போகில் போர வெறுத்துச் சொல்லுவர்
அது என்னால் கேட்கப் போகாது என்று கிடீர் எனக்கு கிலேசம் -என்றார் இறே

நீர் நிறுத்திப் போனால் நிற்கும் பாபம் எனக்கும் இல்லை
நீர் தாமும் நிறுத்திப் போகிறவரும் இல்லை
ஆயிருக்க இந்த நெஞ்சு ஒழிந்த பல வார்த்தை  சொல்லி அலவலையாக வேணுமோ -என்றாள் இறே   –

திருவாய் ஈடு ப்ரவேஸம்-

இப்படிப் பிரணயரோஷத்தாலே ஊடின பேர் உளரோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘மிக்க அன்பினால்’ என்று தொடங்கி.

“ப்ரணயாச்ச அபிமாநாச்ச பரிசிக்ஷேப ராகவம்”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 2. எடுத்த சுலோகத்திற்குப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘அவரோடு உண்டான’ என்று தொடங்கி. வேண்டப்பாடு
– பெருமை. பலகாலம் பழகினவன் விட்டுப் போகப் புக்கால்
கோபமாமேயன்றோ. மேலும், ஒரேபொருள் என்னலாம்படி கலந்தவன்
விட்டுப் போகப் புக்கால் கோபமாமேயன்றோ. ஆதலால், பலகாலம்
பழகுதலும், கலவியும் மேலிட்டு வார்த்தை சொல்லுகைக்குக் காரணங்களாம்
என்க. தனக்குப் பரதந்திரராயிருந்தவர் விட்டுப் போகப் புக்கால் கோபமாம்
ஆதலாலும், ‘என்னுடையவரன்றோ என்கிற வேண்டப்பாடும்’ மேலிட்டு
வார்த்தை சொல்லுகைக்குக் காரணமாகும் என்க. மேலிட்டு வார்த்தை
சொல்லுகையாவது, வீரனானவனை வீரன் அல்லாதவனாக்கி வார்த்தை
சொல்லுதல்.

என் சொன்னாள்? என்னில், 2‘வாரீர்! ஒருவனுக்கு ஆற்றா ஒருத்தி உண்டோ? என் ஒருத்தியையும் நோக்க மாட்டாமையே வைத்துப் போகப் புகுகிறது! இதுதன்னை எங்கள் ஐயர் கேட்டால் போரவெறுப்பர்;’ “ஒருபெண்பெண்டாட்டி ஆண் உடை உடுத்து என்மகளைக் கைப்பிடித்துக் கொண்டுபோன இத்தனையாகாதே என்று இராமே கடுகக் கொண்டு போகப் பாரும்.”‘ஒரு பெண் பெண்டாட்டி’ என்று தொடங்கிச்
சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.

“கிம்த்வாம் அந்யத வைதேஹ: பிதாமே மிதிலாதிப:
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்திரியம் புருஷவிக்ரஹம்”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 3.

3“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்கிருத்ய – பிறர் உயர்த்தி கண்டால் பொறுக்கவேண்டாவோ? நான் ‘உம்மோடு கூடப்போர’ என்றுறப்பட்டு நாலடி இட்டால், எனக்கு அதனால் வரும் ஏற்றம் கண்டு பொறுக்கமாட்டாமையால் உண்டான கோபம் பொறாமை இவற்றைப் பொகடும்.

“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்க்ருத்ய புக்தஸேஷம் இவோதகம்
நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 6.

புக்த ஸேஷம் இவ் உதகம்-குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; 1இவையும் அப்படி யாகாதேதான். 2பிரணயிகள் கோஷ்டியில் இங்ஙனே காணும் பரிமாற்றம். காதலிக்கு உண்டான தன்னேற்றம் தன்ன தாயிருக்க வேண்டாவோ? நய மாம் வீர – 3என்னை அறியாதது போன்று உம்மையும் அறிந்திலீராகில், நான் சொல்லக் கேளும். உமக்கு ஒரு குறையும் இல்லைகாணும்; என்னைக் கொடு போகப் பாரும். விஸ்ரப்த: – தங்கள் தங்களை அறியாவிட்டால் ஆப்தர்வாயிலே கேட்டு அறியவேண்டும் காணும். பாபம் மயி ந வித்யதே – 4பொகடும்; இங்ஙன் அன்றாகில், நீர் என்னை இங்கே நிறுத்திப் போனால், நீர் மீண்டு வருந்தனையும் தரித்திருக்கைக்கு வேண்டும் காரணம்எனக்குஇல்லைகாணும்.” 1இப்படியே யன்றோ பிரணயரோஷம் தலைஎடுத்தால் இருக்கும்படி.

2இவ்வளவேயோ? இன்னம், இவர்தாம் இலக்காகச் சொன்னவையன்றோ இவை! இவர் வரவிட்ட ஆளின்முன்பேயும், “ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.

3காகுத்ஸ்த:- பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது; ‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனையல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ? கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி – ‘நீர்ப்பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ? கடலில் நீரே நெய்யாக எரிக்கவல்ல அம்பையுடையவரன்றோ. 4ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரேயன்றோ; இராஜாக்களுக்குப் பூமியும் பெண்போலேயன்றோ; ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண்சிவக்குமளவுமாகாதே என்றும்,“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தைவிட்டவரும், என்னையும் கால்நடையாகக் காட்டில் அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே, பித்ருவசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனையன்றோ என்றும்-

————

யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்கோ நிரயோ யஸ் த்வயா விநா
இதி ஜாநந் பராம் ப்ரீதிம் கச்ச ராம மயா ஸஹ
–30-18-

நலம்என நினைமின் நரகுஅழுந் தாதே;
நிலம்முனம் இடந்தான் நீடுஉறை கோயில்
–2-10-7-காட்டில் போமது துக்கம்; படை வீட்டிலே இருப்பது சுகம்’ என்று அருளிச்செய்தார் பெருமாள்; அங்ஙனம் அன்று, சுக துக்கங்கள் வடிவந்தோறும் முடிவு செய்யப்பட்டதாய்க்காணும் இருப்பது; 1‘உம்மோடு கூடிய யாதொரு வாசம் உண்டோ, அது சுகமாகிறது; உம்மை ஒழியப் படை வீட்டில் இருக்கும் இருப்புத் துக்கமாகிறது; இதிஜாநந் – தந்தாமுக்கு இல்லாதவை பிறர் பக்கலிலே கற்று அறிய வேணுங்காணும்; பராம் பிரீதிம் – உம்மைப்போல் நிறுத்து அல்லகாணும் என்னுடைய பிரீதி இருப்பது?’ என்று கூறினார் இளையபெருமாள்.

    ‘நன்று; நம்மில் உனக்குப் பிரீதி மிக்கது எனச்சொன்னாய்; அதற்கு நம்மைச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘கச்ச ராமமயாஸஹ. ‘என்னோடு கூடிப் புறப்படும்’ என்றும், 2‘அக்ரதஸ்தே கமிஷ்யாமி – நான் புறப்பட்டபடியே, என்னை முன்னே போக விட்டுப் பின்னே வரப்பாரும்,’ என்றும் கூறுகிறார் மேல். ‘ஆயின், பிராட்டிமார்க்கு அன்றோ பிரிவு நரகமாகத் தோற்றும்? ஆடவரான இவர்க்கு அப்படித் தோற்றுமோ?’ எனின், 3‘இராகவரே! உம்மாலே பிரிந்திருக்கப் பெற்ற பிராட்டி இலள் ஆவள்; நானும் அவ்வாறே; பிழைத்திருப்போமேயாயின், தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன் போல ஒரு முகூர்த்த காலமே உய்ந்திருப்போம்’ என்றார் அன்றே இளையபெருமாள்?

———

ந தேவ லோகா க்ரமணம் நாமரத்வ மஹம் வ்ருணே
ஐஸ்வர்யம் வாபி லோகாநாம் காமயே நத்வ யாவிநா
-31-5-

ஊழ் வினையை யஞ்சுமே விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-பெரிய திருவந்தாதி -79-
ப்ரஹ்மாதிகள் குடியிருப்பை ஒன்றாக எண்ணுமே
ஸூர புரீ யத் கச்சதோ துர்க் கதி (ஸ்ரீ குண ரத்ன கோஸம் ஸ்ரீ பராசர பட்டர் )

அஞ்சுமே -அஞ்சான் என்றபடி –

ஸ்வர்க்கத்துக்குப் போம் வழி தண்ணிது -என்கிறது
ந தேவ லோகா க்ரமணம் (ஸ்ரீ ராமாயணம் லஷ்மணன் வாரத்தை )
பறைச் சேரியில் அடியிடுமா போலே ஸ்வர்க்கத்தில் அடியிடுகை
வேண்டேன் என்கிறார்
தஸ்யாந்த ராயோ மைத்ரேய தேவேந்த்ராத் வாதிகம் பதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )
பகவத் விஷயத்திலே கை வைத்தவனுக்கு அந்தராயமாவது இந்த்ரனாய் இருக்கும் இருப்பு இறே

ஈடு மஹா ப்ரவேஸம் -வானவர் நாடு என்கிற பரமபதம் -ஆத்ம லாபம் -லோகா நாம் ஐஸ்வர்யம் இவை அனைத்தும் மக்குப் புறம்பாய் வருமன்று வேண்டேன்-

குருஷ்வ மாம் அநு சரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே –31-24-

திருவாய் -2-9-ப்ரவேஸம்-ஸ்ரீராமபிரான் ‘நில்’ என்ன, 1‘குருஷ்வ – செய்தருள வேண்டும்’ என்றார் இளையபெருமாள்; 2‘சேர்ந்திருப்பதனாலேயே தரிக்கக்கூடிய பொருளைப் பிரித்து நிற்கச் சொல்லுகையாகிறது அழிக்கையே அன்றோ?’ என்கிறார். ‘யாருடைய பிரயோஜனத்திற்கு யார்தான் இருக்கிறார்? உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்பார், 3‘குரு’ என்னாதே, ‘குருஷ்வ’ என்றார். 4‘நீர்தாம் ‘நில்’ என்று அருளிச்செய்தது, ‘நான், நிற்கச் சொல்லுகைக்குத்தக்கவனாம்படி இருக்கை அன்றோ? உம்முடைய சாயையை ‘நில்’ என்று சொல்லிற்றிலீரே; சாயையைப் போன்று உம்மைப் பின் செல்வேனாக வேண்டும்’ என்பார், ‘அநுசரம் – பின் தொடர்ந்து வருகிறேன்’ என்கிறார். இதனால், பண்ணும் பிரகாரத்தை விதித்தபடி. மேலும், 1‘நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: – 2நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று-

————

ஸ்ருஷ்டஸ்த்வம் வந வாஸாய ஸ்வநுரக்தஸ் ஸூஹ்ருஜ் ஜநே
ராமே ப்ரமாதம் மாகார்ஷீ புத்ர ப்ராதரி கச்சதி –

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-10—ஐயர் சொல்லிற்றுச் செய்ய வேண்டுகையாலே பெருமாள் காடேற எழுந்தருளாநின்றார்; நானும் கூடச் சேவித்துப் போவேன்,’ என்ன, ‘அவர் காட்டிலே எழுந்தருளாநிற்கப் படை வீட்டிலே இருக்கைக்கோ, நான் உன்னைப் பெற்றது? நீ இப்படிச் செய்தாயாகில் நான் உன்னைப் பெற்ற பயன் பெற்றேனாகிறேன்; அவர்க்கு யாதொருபோது துணை வேண்டியிருந்தது, அப்போது நீ துணையாகைக்காகவன்றோ நான் உன்னைப் பெற்றது? நீ சினேகிதர்கள் பக்கல் அன்பு உடையையன்றோ? ஆகையாலே, எல்லார்க்கும் வேர்ப்பற்றான பெருமாளை நோக்கித் தாராய்; அன்றிக்கே, பெருமாள் பக்கல் பண்டே அன்புடையவனாயன்றோ நீ இருப்பது? இப்போது ‘போ’ என்று நான் உனக்குச் சொல்லவேண்டியிருந்ததோ? ‘இல்லை என்றபடி’ என்னுதல். இப்படி இருக்கிற உன்னை நியமிக்க வேண்டுவது ஒன்று உண்டு; ‘அது யாது?’ எனின், ‘அஜாக்கிரதையாய் இராதேகொள்’ என்பது. ‘என் தான் அஜாக்கிரதை?’ என்னில், ‘உன் தமையனார் நடப்பர் அன்றோ? 1‘அவர் நடையிலே நடைகொள்வர்; அவர் நடை அழகிலே கண்வைத்துக் காவற்சோர்வு பட விடாதே கொள்வாய்,’ என்றாள் தேவி சுமித்திரை. ‘அப்படியே, இவ்வாத்துமாவையும் இங்கு வைத்தது திருமலைக்குப் போகைக்காக ஆயிற்று,’ என்றபடி.

வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் –3-9-9- 2வாய் வந்தபடி சொல்ல வல்லார் இவரே ஆவர். அவன் தன்னைஏத்துகைக்குத் தந்த வாயைக்கொண்டு புல்லரைக் கவி பாடுகைக்குப் பிறந்தவன் அல்லேன்; 1‘நான் பிறரைக் கவி பாடினால் என்னைப் படைத்ததனால் ஆய பயனை அவன் பெற்றானாம்படி என்? படைப்பிற்குப் பயன் பகவானை அடைதலேயோ?’ எனின், 2தன்னை உத்தேசித்தே அன்றோ படைப்பு? 3‘புத்திரனே! அழகாலே துவக்க வல்ல ஸ்ரீ ராமபிரானிடத்தில் மிக்க பற்றுதலையுடைய நீ, காட்டில் வசிக்கும்பொருட்டே உண்டுபண்ணப்பட்டாய்;உடன் பிறந்தவனான ஸ்ரீ ராமபிரான் சீதையோடு போகும்போது குறிக்கோள் இல்லாமல் இராதே,’ என்றாள் தேவி சுமித்திரை.

 ‘ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாஸாய
– ‘ஐயரையும் ஆச்சியையும் அநுவர்த்தித்துப் பெருமாள் காடேற
எழுந்தருளா நின்றார்; நானும் அவரை அநுவர்த்தித்துப் போகிறேன்,’
என்று இளைய பெருமாள் அறிவிக்க, ‘உமக்கு முடி வேணும் என்று
அபேக்ஷை உண்டாகில், முடி சூடுகைக்கு யோக்கியனாயிருப்பான் ஒருவன்
வேணும்’ என்றதற்கு ஈடாக நோன்பு நோலேனோ? அவரை
அநுவர்த்திக்கைக்காக அன்றோ நான் உம்மைப் பெற்றது? ஸூஹ்ருஜ்ஜநே
ராமே – ஸ்வநுரக்த: – உபதேச நிரபேக்ஷமாகப் பெருமாள் திருவடிகளுக்கு
நீரே பரிவரிறே; நான் இன்று இருந்து சொல்ல வேண்டுவது ஒன்று
உண்டோ? அடிமையில் உண்டான ருசி செவி கண்ணாகக் கண்டு அடிமை
செய்யுமவரிறே. அன்றிக்கே, ஸ்வநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே – ‘கருமுகை
மாலையை வெயிலிலே இட்டாற்போலே, பெருமாள்தம் சௌகுமார்யம்
பாராதே பித்ரநுவர்த்தநம் பண்ணிக் காட்டிலே போகாநின்றார்; என்
புகுகிறதோ!’ என்று வயிறு எரிந்திருக்கின்ற ஸூஹ்ருஜ்ஜநங்களுக்கு
நல்லீரிறே. ‘ஸூஹ்ருஜ்ஜனம்’ என்றது, திருத்தாயார் தொடக்கமான படை
வீட்டில் உள்ளாரை. ‘அவர்களுக்கு வேர்ப்பற்றான இவரை நோக்கித்
தாரீர்’ என்றுமாம். ராமே – நடக்கை மிகையாம்படி, வெறுமனே
இருந்தாலும் ஆகர்ஷ்கமான வடிவழகையுடையவர், ராமே ப்ரமாதம்
மாகார்ஷீ: – ‘பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த்த:’ (ஸ்ரீராமா. பாலா. 18 : 27.)
என்று, அவதார காலமே தொடங்கி அந்வயத்தில் தரித்து வியதிரேகத்தில்
தரியாதவர்க்கு இன்றாக ஒரு பிரமாதம் புகுருகைக்கு ஒரு சங்கை
இல்லையிறே; சம்பாவிதமானது ஒன்றைச் சொல்லுகிறாளாக வேணுமே.
பிராதரி கச்சதி – அவர் உம்முடைய முன்னே நடப்பர் கிடீர்; அவ்வழகிலே
கண்வைத்து, நீர் அதிகரித்ததற்குச் சோர்வு பிறவாதபடி குறிக்கொள்ளும்.
அக்ரத: ப்ரயயௌ – (ஸ்ரீராமா. ஆர. 11 : 1.) நடைச் சக்ரவத்துப்
பிடிக்கலாம்படி. ‘ஆடல் பாடல்’ இத்யாதி.’ இப்பாசுரம், பெரியாழ்வார்
திருமொழி, 3. 6 : 4.

————

ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜநகாத்மஜாம்
அயோத்யாம் அடவீம் வித்தி கச்ச தாத யதா ஸூகம் –
40-9-

நான்முகன் -47–ரஷணத்துக்கு உறுப்பாகையாலே திரு அயோத்யையிலும்-காட்டை விரும்பினார் இறே பெருமாள் –
அவர் விரும்பின காட்டை விரும்பிப் போகிற இளைய பெருமாள்-
அக்காட்டோபாதி இப்படை வீட்டையும் நினையும் கிடீர்-என்றார் இறே திருத் தாயார் –
ராமம் தசரதம் வித்தி-
வத்யதாம் பத்யதாம் -என்று அறுவராதே-
உங்கள் தமையனாரோபாதியாக உங்களையரையும் நினையும் கிடீர் –
(தசரதனை கொல்ல நினைக்காமல் அவரையும் ராமனாகவே எண்ணு என்கிறாள் )
மாம் வித்தி ஜனகாத்மஜம் -உங்கள் தமையனார் உகந்த பிராட்டியோபாதி என்னையும்
நினையும் கிடீர் என்கிறார் –

———

யேது ராமஸ்ய ஸூஹ்ருத ஸர்வே தே மூட சேதஸ
சோக பாரேண சாக்ராந்தா சயனம் நஜ ஹுஸ் ததா

நாச்சியார் திருமொழி -3-1-யேது -சக்ரவர்த்தி போக்கை அனுமதி பண்ணினான் -ஸ்ரீ கௌசல்யார் மங்களா ஸாஸனம் பண்ணி விட்டார் -அவ்வளவு அன்றிக்கே பத்தன்பதாம் பாஷையாயத்து தோழன்மார் படி
ராமஸ்ய ஸூஹ்ருத -தாய் தகப்பனுக்கு மறைத்தவையும் வெளியிடும்படி உடப்புக்கவர்கள் இறே தோழன்மார் ஆகிறார் -தங்களைப் பேணாதே அவனுக்கே நன்மை எண்ணிப் போந்தவர்கள் படு குலைப்பட்டார்கள் என்கிறது
ஸர்வே தே -ஒரு விபூதியாக சாம்யா பத்தி பெற்று இருக்குமா போலே
மூட சேதஸ–ஸூஹ்ருத்துக்கள் ஆகில் எழுந்திருந்து காலைக்கட்டி மீளாது ஒழிவான் என் எனில் -அறிவு கலந்தால் செய்யுமத்தை நெஞ்சில் வெளிச் சிறப்பு இல்லாத போதும் செய்யப் போகாது இறே
அறிவு கெடுகைக்கு ஹேது என் என்னில்
சோக பாரேண சாக்ராந்தா -மலை அமுக்கினால் போல் சோகம் அமுக்கா நிற்கச் செய்வது என்
சயனம் நஜ ஹுஸ் ததா -படுக்கையை விட்டு எழுந்து இருந்தார்களாகில் மீட்டுக் கொடு புகுந்த வாசி அன்றோ -தந்தாமே படுக்கையில் கிடந்து போந்தவர்கள் இறே

———-

புத்ர த்வய விஹீ நம் தத் ஸ்நுக்ஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ர மிவாம்பரம்
–42-30-

ஈடு -6-7- ப்ரவேஸம்-க்ஷுத்ரவிஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதே போகக் கடவ இவர், குணாதிக விஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதபடி ஆனார். 2‘என்னுடைமை புக்க இடத்திலே நானும் போய்ப் புக்கு அல்லது நில்லேன்’ என்கிறாள்.-

புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான். ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி

புத்ரத்வயலிஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31.

3குழைசரக்கு அறுத்துக்கொண்டு போனபடி. அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் – 4நிலவோடும் நக்ஷத்திரதாரா கணங்களோடும் கூட சந்திரன் குடிவாங்கின ஆகாசம்போலே கிடந்தது. அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது. 5“நல்லது ஓர் தாமரைப் பொய்கை” என்ற திருப்பாசுரத்திற் கூறியுள்ளபடியேயாயிற்று இவள் திருமாளிகை கிடக்கிறது.

நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர்மேல் பனிசோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறி ஓடிற்றாலோ என்மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின்போய் மதுரைப்புறம் புக்காள்கொலொ.-என்பது, பெரியாழ்வார் திருமொழி, 3. 8 : 1.

———

ராமம் மே அநு கதா த்ருஷ்டி ரத்யாபி ந நிவர்த்ததே
ந த்வா பஸ்யாமி கௌசல்யே ஸாது மா பாணிநா ஸ்ப்ருஸ
–42-34-

என் கண்ணினை களிக்குமாறே –திருமாலை–17-
நரஹாவகமான விஷயங்களைக் கண்டு களித்துப் போந்த
என் கண்கள் கிடீர்
இவ் விஷயத்தைக் கண்டு களிக்கின்றன

இணை –
களிப்புக்கு ஒன்றுக்கு ஓன்று ஒப்பாம் இத்தனை போக்கி வேறு
உபமானம் இல்லை-

முக்தர் சதா தர்சனம் பண்ணிக் களிக்கும் களிப்பும்
இக் கண்ணாலே இப்படி களிக்கிற இதுக்கு சத்ர்சம் அன்று –
கரணாதிபனான என்னை ஒழிய -தானே களியா நின்றன –

இந்த்ரியங்கள் ஞான பிரசரத்வாரம் என்கிற அந்நிலை குலைந்து
சேதன சமாதியாலே தானே களியா நின்றன –

ராமம் மே அநுகதா த்ருஷ்டி –

கர்த்தாவை ஒழியவே கரணங்களுக்கே
அந்வய வ்யதிரேகங்களிலே சோக ஹர்ஷங்கள் உண்டாம்படி இறே
விஷய ஸ்வபாவம் இருப்பது –

உம்மை நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்--நாச்சியார்-10-7-
கண் உடையவர்களுக்கு நல்ல காட்சி இறே

ராமம் மே அனுகதா திருஷ்டி அந்யாபி ந நிவர்த்ததே-ந த்வா பஸ்யாமி கௌசல்யே-
சாது மா பாணி நா ச்ப்ருச
—அயோத்யா -42-43-
கடல் கொண்ட வஸ்து இனி மீளப் புகுகிறதோ
மே –
அக்கடலில் இலியாது இருக்க மாட்டாதார்க்கு ஏறப் போமோ
அந்யாபி ந நிவர்த்ததே –
அவரைக் காணப் பெறா விட்டால் அவரைப் பெற்ற சௌபாக்யம் உடைய உன்னைக் காண்கைக்கு
நல்ல காலம் இறே -இவ்வளவிலும் மீளுகிறது இல்லை
ந த்வா பஸ்யாமி கௌசல்யே-
பெருமாள் முகத்தில் விழிக்கப் பெறாதே –
கைகேயி முகத்திலே விழித்ததால் வந்த தாபம் எல்லாம் ஆறும் படி உன்னைக் காண வேணும் என்று
ஆசைப் படா நின்றேன் -அது செய்யப் பெறுகிறிலேன்-
சாது மா பாணி நா ச்ப்ருச-
இந்த்ரியங்கள் தான் நித்ய அதீந்த்ர்ய வஸ்துக்கள் ஆகையாலே கார்யகல்ப்யம் இறே –
ரூப க்ரஹண அபாவத்தாலே சஷூர் இந்த்ரியம் குடி போய்த்தது என்று இருந்தேன்
த்வக் இந்திரியம் கிடந்ததோ இல்லையோ என்று ஸ்பர்சித்து பார்க்க வல்லையோ
சாது ச்ப்ருச –
கைகேயியோடே க்ருத சங்கேதனாய் பெருமாளை காடேறப் போக விட்டான் -அவர் கை கழியப் போனார் -இனி மீளார்
என்று அறிந்தவாறே பொய்யே கூத்தடிக்கிறான் என்று இராதே
இவனுக்கு இது சம்சர்க்கத்தாலே வந்தது -ஐயோ என் செய்வான் பாவி அகப்பட்டான் -என்னும்
நெஞ்சோடும் கூட என்னை ஸ்பர்சிக்க வல்லையே
நானோர் முதலிலேன் –
அவன் கூட இருந்தால் போலே காணும் இவளுக்கு கண் உள்ளது -விஷயத்தை உண்டாக்கினால் பிரயோஜனம் இல்லை
கண் உண்டாய்க் காண வேணுமே —
சஷூர் தேவா நாம் -உத்தமர்த்த்யா நாம் —
என்னக் கடவது இறே –
கண்ணாவான் விண்ணோர் க்கும் மண்ணோர்க்கும் அவனே –

பவள வண்ணா எங்குற்றாய் –திருநெடும் தாண்டகம்–17
வடிவின் போக்யதையை அனுசந்தித்து கண்ணான் சுழலை இட்டு
முன்னாடி தோற்றாமையாலே –எங்குற்றாய் -என்கிறார் –

(பவளம் போல் விரும்பத் தகுந்த்தான வடிவு படைத்தவனே! என்பது மாத்திரம் இதற்குப் பொருளன்று;
கச்சிமாநகரில் ‘திருப்பவள வண்ணம்‘ என்னுந் திருப்பதியிலுறைபவனே! என்கிறைவரையில் பொருளாகக் கொள்ளத்தக்கது.
இது பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் விளங்கக் கிடக்கின்ற தில்லையே யென்று சிலர் நினைக்கக் கூடுமேலும்
இங்ஙனே பொருள் கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்குவோம்;-
பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளிய நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் (86)
“கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால், உண்டறிந்து மோந்தறிந்து முய்யனே-
பண்டைத் தவளவண்ணா கார்வண்ணா சாம வண்ணா! கச்சிப், பவள வண்ணா! நின்பொற்பதம்‘ என்ற செய்யுளினால்
கச்சிமாநகரிலுள்ள திருப்பதிகளுள் திருப்பவள வண்ணம் ஒன்றாகப் பாடப்பட்டுள்ளது;
பெரியவாச்சான் பிள்ளைக்கு முற்பட்டவரும் பட்டர் திருவடிகளிற் பணிந்துய்ந்தவரும் ஆப்த தமருமான
அத்திவ்யகவியின் திருவுள்ளத்தைத் தழுவிச்செல்ல வேண்டுவத நமக்கு இன்றியமையாததாம் )

ராமம் மே அநுகதா த்ர்ஷ்டி ரத்யாபிந நிவர்த்ததே
நத்வா பஸ்யாமி கௌசல்யே சதுமா பாணினா ஸ்பர்ச –

மே த்ர்ஷ்டி ராமம் அநுகதா –
என்னுடைய கண்ணானது அபிராமதையைப் பற்றி பெருமாள் பின்னே போய்த்து –
ஆஸ்ரயத்தை விட்டு விஷயத்தின் பின்னே போய்த்து
பிறந்தகத்தில் சம்பந்தம் விஷயம் பெரும் அளவே காணும்

மே த்ர்ஷ்டி
என்று கண்ணைக் கொண்டாடுகிறான் –
நான் விஸ்லேஷத்தாலே தளர்ந்து தரைப் பட்டுக் கிடந்தேன்
கண் கூடப் போகப் பற்றது இறே –
கர்த்தாவாய் இராதே கரணமாக பெற்றிலேன் என்கிறான்

(கண்ணுக்கு உரியவனாக இல்லாமல் பார்க்கும் கண்ணாகவே இருந்து பேறு பெறாது இழந்தேனே)

அத்யாபிந நிவர்த்ததே –
இவ்வளவும் மீண்டது இல்லை –
உன்னுடைய தர்சனத்தாலே ஆஸ்வசிப்பிக்க யோக்யதை உண்டான தசையிலும் மீண்டது இல்லை –

நத்வா பஸ்யாமி –
ஆஸ்ரயமான நீர் இங்கே இருக்க
கண் அவர் பின்னே போகை யாவது என்னில்
காரணத்தைக் கொண்டு கார்யத்தை கற்ப்பித்தேன் -என்கிறான்
வந்து நிற்கிற உன்னைக் காணப் பெற்றிலேனே -அத்தாலே சொல்லுகிறேன் -என்கிறான்

நித்ய அனுமேயமாய் இறே இந்த்ரியங்கள் இருப்பது –
பதார்த்த தர்ஸனத்தாலே இந்த்ரியங்கள் உண்டு என்று அறிகையும்
அவை தோற்றாத போது இல்லை என்று அறிகையுமாய் இறே இருப்பது –

கௌசல்யே
கைகேயியாய் இட்டு காணாது ஒழிகிறேன் அன்றே

சதுமா பாணி நா ஸ்பர்ச –
என்னுடைய அதிக்ரமத்தை நினையாதே
துர்கதியைப் பார்த்து ஐயோ என்று இரங்கி
உன் கையால் என்னை ஸ்பர்சி என்கிறான்

அபிஷேகத்தைப் பாரித்து
காப்பைக் கட்டி வந்து ஏறப் போக விட்டேன் என்று பாராமல்
அவனைப் பிரிந்து முடியும்படியாய் விட்டதே என்று இரங்கி
ஸ்பர்சியாய் -என்கிறான்

கண்ணானது அவன் பின்னே போய்த்து
த்வக் இந்த்ரியம் போய்த்தோ இல்லையோ என்று அறியும்படி
உன் கையாலே தடவிப் பாராய் என்கிறான் -என்று
அருளிச் செய்வர் பட்டர் –

என்று தடவும் என் கைகள்–திருவாய் மொழி-3-8-3-கடல் கொண்ட பொருள் மீளுமோ? அறுபதினாயிரம் ஆண்டுமலடு நின்று பட்டினி விட்ட என் கண்கள் மீளுமோ? நல்லது கண்டு கால் தாழ்ந்தத்தை இனி நம்மது என்று வழக்குப் பேசினால் பசை உண்டோ? தன்னைக் கொண்டு காரியம் கொள்ள வேண்டும் இன்றைக்கும் உதவுகிறது இல்லை; அவரைக் காணாவிட்டால், அவரைப் பெற்ற சௌபாக்யமுடைய உன்னைக் கண்டு தரிக்க வேண்டும் இவ்வளவிலும் மீளுகிறது இல்லை,’ என்றான் தசரத சக்கரவர்த்தி.

‘ராமம் மேநுகதா த்ருஷ்டி: அத்யாபி நநிவர்ததே
ந த்வா பஸ்யாமி கௌஸல்யே ஸாது மா பாணிநா ஸ்ப்ருஸ.’

‘என்னுடைய பார்வையானது ஸ்ரீராமனைப் பின் சென்றது, இப்போதும்
திரும்பவில்லை; கௌஸல்யே! உன்னைப் பார்க்கிறேன் இல்லை; என்னைக்
கையினால் நன்றாகத் தொடு,’ என்பது. ‘கடல் கொண்ட வஸ்து மீளுமோ?’
என்பது, ‘ராமம்’ என்ற சொல்லிற்கு பாவம், ‘அறுபதினாயிரம்’ என்றது
முதல் ‘பசையுண்டோ?’ என்றது முடிய, ‘மே’ என்ற சொல்லிற்கு பாவம்.
பசை – பிரயோஜனம். ‘தன்னைக்கொண்டு’ என்ற இடத்தில் ‘தன்னை’
என்றது கண்களை.

————–

கதம் தாசரதவ் பூமவ் சயாநே ஸஹ ஸீதயா
சக்யா நித்ரா மயா லப்தும் ஜீவிதம் வா ஸூகாநி வா
-51-9-

திருவிருத்தம் -30–நிசாம் அதிஷ்டத் பரிதோச்ய கேவலாம்  –என்று பெருமாள்
ஸ்ரீ குகப் பெருமாள் பரிசரத்தே கண் வளர்ந்து அருளுகிற இடத்தில்
ஜங்கமான மதிள் போல் கையும் வில்லுமாய் இளைய பெருமாள் திரிகிற படியை கண்டு
ஸ்ரீ குகப் பெருமாள் —
இயந்தாத ஸூகாசய்ய தவதர்தம் உகல்பிதா -என்று
உமக்கு தகுதி ஆகும் படி பெருமாள் திரு அடிகளிலே தளிராலே  படுக்கை படுத்து கண் வளரீர் என்ன —

கதந் தாசரதவ் பூமவ் சயானே–என்று
அறுபதினாயிரம் சம்வச்த்ரம் மலடு நின்று பெற்ற பிள்ளை சுகுமாரமான வடிவை கொண்டு ,
தரைக் கிடை கிடக்க கண் உறங்குமோ ?

சயானே சஹா சீதாயா –
இவர் வசிஷ்டர் சிஷ்யர் ஆகையாலே இக் கிடை கிடக்கவும் பொறுக்கும்-
படி நடந்து புறப்பட்டு அறியாத செல்வ பெண் பிள்ளை தரை கிடப்பதே

சக்யா நித்ரா மயா லப்தும்  —
என் கண் தன்னில்-நித்தரை குடி புகுதரு தில்லை காணும் –

ஈடு -5-9-4—

பெருமாளும் இளையபெருமாளும் பிராட்டியும் சிருங்கி பேர புரத்திலே தங்கியிருந்த அன்று ஸ்ரீகுகப்பெருமாள் இளையபெருமாளைப் பார்த்து, ‘பெருமாளும் பிராட்டியும் திருக்கண் வளராநின்றார்கள், உமக்குத் தகுதியாம்படி திருவடிகளிலே தலையாம்படி படுக்கை படுத்தேன்; நாங்கள் காடராய் அங்கே இங்கே திரிகையாலே எங்களுக்கு உறக்கம் வராது. நீர் இராஜபுத்திரராகையாலே சுகுமாரர்; ‘பரதன் முதலானோர் வருவர்கள்’ என்று அஞ்ச வேண்டா, நானும் என் பரிகரமும் உண்டு, நீர் திருக்கண் வளர்ந்தருளும்’ என்ன, ‘தாசரதி சீதையோடு கூடப் பூமியில் உறங்கும்பொழுது என்னால் நித்திரை அடைய எவ்வாறு முடியும்?’

இளையபெருமாள் காத்த பிரகாரத்தைக் காட்டுகிறார் ‘பெருமாளும்’ என்று
தொடங்கி.

“கதா தாஸரதௌ பூமௌ ஸயாநே ஸஹ ஸீதயா
ஸக்யா நித்ரா மயா லப்தும் ஜீவிதம் வா ஸு காநி வா”

என்பது, ஸ்ரீராமா. அயோத். 9. குகப்பெருமாளைப் பார்த்து இளைய பெருமாள் கூறியது.

வாரீர், மஹாராஜனானசக்ரவர்த்தி அறுபதினாயிரம் ஆண்டு குழந்தையில்லாதவனாய் வருந்திப் பெற்ற சுகுமாரரான பெருமாள் தரைக்கிடை கிடக்க எனக்குக் கண்ணுறங்குமோ? அவர் தாம் வசிஷ்டர் முதலான முனிவர்கள் கீழே தறையிலே இருந்தும் அறிவர். அதுவுமின்றிக்கே இருக்கிற பிராட்டியோடேகூடக் கிடக்கிறபடி பாரீர்; ஆனபின்பு, எனக்கு உறக்கம் உண்டாய்  அதுபோகைக்கு நினைவுபண்ணி இருக்கிறேன் அல்லேன் காணும், உறக்கம் தேட்டமாய்க் கிடையாமையாலே இருக்கிறேன்-

————

ந ச ஸீதா த்வயா ஹீநா ந ச அஹமபி ராகவ
முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத் த்ருதவ்
–53-31-

நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்—பெரிய திருமொழி-4-9-1-

ந ச சீதேத்யாதி -தேவரை ஒழிந்த அன்று பிராட்டியும் உளள் ஆகாள்
அடியேனும் உளன் ஆகேன்
தேவரை ஒழிந்த அன்று முதலில் ஜீவிக்கும் அது தான் இல்லை
அபி ஜீ வாவ –எதி ஜீ வாவ -முஹூர்த்தம் ஒரு ஷண  காலம்
ஜலான்   மத்ஸ்யா விவ
ஜலத்தை பிரிந்த மத்ஸ்யம் ஜீவிப்பது
அந்நீர் நசை அறும் அளவு இறே

அப்படியே நில் என்று சொன்ன வார்த்தை உம்முடைய திரு உள்ளத்திலேயும் உண்டு என்று
என்று அறியும் அளவும் காணும் நாங்கள் ஜீவித்து இருப்பது
இவருடைய சத்தை உண்டு உண்மை
அது நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே
பரார்த்தமாய் யாய்த்து இருப்பது
சேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி-

அடியோம்
அத் தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே
ஸ்வரூபமாம் படி யாய்த்து  ப்ராப்தி இருப்பது –
(பர கத அதிசய ஆதேயானே இச்சையா -அதிசயம் பண்ணி நியமிக்கப்பட்டு இருப்பதே சேஷ லக்ஷணம்
கைங்கர்ய அலாபத்தால் கிலாய்க்கிறார்
பணி செய்தால் தரிப்பதும் இல்லை என்றால் இல்லாமல் இருப்பதோ ஸ்வரூபம்
மணம் புஷபம் ஒளி மணி சேஷத்வம் ஆத்ம
அஹம் அபி -ச அர்த்தம்
சீதாபிராட்டி போல் நானும் இல்லை
ஆழ்வார் ஸ்வரூபமும் பரார்த்தம்
ஏன் என்றால் தண்ணீர் தென்றல் சந்திரன் போல் )

ஈடு ப்ரவேஸம்
உம்மை ஒழிந்த அன்று பிராட்டியும் இல்லை -அடியேனும் இல்லை -ஜீவித்தோமோ முஹூர்த்தம் -என் போலே என்றால் -ஜலாத் உத்த்ருதமான மத்ஸ்யம் நீர் நசை அறும் அளவும் ஜீவிக்குமா போலே நீர் நிறுத்திப் போகிறோம் என்கிற வார்த்தை உம்முடைய திரு உள்ளத்தில் உண்டு என்று அறியும் அளவும் காணும் நாங்கள் ஜீவிப்பது என்றார் இறே -அத்தலையால் நினைவால் இறே இத்தலை ஜீவிப்பது
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போது ஒழியும் -என்கிறபடி அவன் நினைவு இல்லாத வென்று இவையும் இல்லை இறே

தாந யஜ்ஞ விவாஹேஷு ஸமாஜேஷு மஹத் ஸூ ச
ந த்ரஷ்யாம புநர் ஜாது தார்மிகம் ராம மந்தரா –
5-13-

வேதம் வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் –6-1-2- இவற்றின் அறிவுகேடு 6பலித்தபடி சொல்லுகிறது. அங்கு உண்டான வேத ஒலி, வைதிகக்கிரியை, இவற்றைக் கண்டு கால்தாழ வேண்டாவேயன்றோ இவற்றுக்கு. தன் நாயகன் அவை கண்டன்றோவரமாட்டாதே நிற்கிறது. 1“தாந யஜ்ஞ-தானங்கள் செய்யுமிடத்தே எழுந்தருளியிருப்பாராயிற்று;

“தாந யஜ்ஞ விவாஹேஷூ ஸமாஜேஷூ மஹத்ஸூச
ந த்ரக்ஷ்யாம: புநர்ஜாது தார்மிகம் ராமமந்தரா”-  என்பது, ஸ்ரீராமா. அயோத்.

தேசத்திலே காலத்திலே பிராப்த விஷயங்களிலே இடுவிக்கைக்காக யாகங்களிலே எழுந்தருளியிருப்பாராயிற்று. நியாயமாக ஈட்டிய பொருள்கொண்டு செய்விக்கைக்காகவும், சடங்குகளில் தப்பினவை உண்டாகில் அவற்றை எடுத்துக் கொடுக்கைக்காகவும். விவாஹேஷூ-இரண்டு தலையையும் பொருந்தவிட்டு, பொருந்தாதார்க்கு வேண்டுவன செய்து, ஹோமம் பண்ணுவித்துத் தலைக்கட்டிக் கொடுக்கைக்காக, விவாகம் செய்யுமிடங்களில் எழுந்தருளியிருப்பர். ஸமாஜேஷூ மஹத்ஸூச – 2தீர்க்கசத்திரங்களிலேயாதல், உத்ஸவங்களிலேயாதல். ச – 3யாவன் ஒருவன் ஓர் இடத்தே அத்ருஷ்ட காரியங்கள் செய்யும் அங்கே இருப்பர் என்கிறது. ந த்ரக்ஷ்யாம: புனர்ஜாது – அவரை அவ்வவ்விடங்களிலே இருக்கக் காண்கின்றிலோம். தார்மிகம் ராம மந்தரா – என் தான்? இவர் இவ்விடங்களிலே இருப்பது என்? என்னில், தர்மங்களிலே வருகிற ஐயங்களை அறுத்துக்கொடுக்கைக்கும், அவை தப்பாதே அநுஷ்டிப்பிக்கைக்குமாக. இப்படியேயன்றோ அவன்படிகள்.

——

மம த்வச் வா நிவ்ருத்தஸ்ய ந பிராவர்த்தந்த வர்த்தமநி
உஷ்ண மஸ்ரு விமுஞ்சந்தோ ராமே ஸம் ப்ரஸ்திதே வநம்
-59-7-

கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா–12-4-
பசுக்களின் பின்னே போய்த் தீம்பிலே கை வளரும் கிருஷ்ணனுக்கு அல்லது –
வழியே போய் வழி வந்து ஏக தார வ்ரதனாய் இருக்கும் சக்ரவர்த்தி திருமகனுக்கு வழி போகாது –

மம து அஸ்வா நிவ்ருதச்ய ந ப்ராவர்த்தந்த வர்த்மநி–அயோத்யா -69-1-
அஸ்வம் ஹ்ருதயம் அறிக்கைக்கு ஸூமந்தரன் -தன்னைத் தான் மதித்த படியால் –மம -என்கிறான்
து -இற்றைக்கு முன்பின் இன்றிக்கே இன்றைக்கே உள்ளதொரு விசேஷமாய்த்து இது
அஸ்வா –என் கருத்திலே நடந்து போனவை
நிவ்ருதச்ய -பெருமாளை எழுந்து அருளிவித்து கொடு போகிற போது போய்த்தின
ந ப்ராவர்த்தந்த வர்த்மநி– வழி செய்து கிடக்கிற பெரு வழியை விட்டு காடு பாயத் தொடங்கிற்றன

—————-

குஹேந சார்த்தம் தத்ரைவ ஸ்திதோஸ்மி திவஸாந் பஹுந்
ஆசயா யதி மாம் ராம புநஸ் ஸப்தாபயேதிதி
-59-7-

ஈடு ப்ரவேஸம் -3-8–ஸ்ரீ குகப்பெருமாளோடே கூட, பெருமாளைப் பிரிந்த இடத்தினின்றும் கால் வாங்க மாட்டாதே நின்றான் ஆயிற்றுச் சுமந்திரன்; அங்கு நின்றது ஒன்று இரண்டு நாளாய் இருக்கச்செய்தே, ‘பலநாள்’ என்னாநின்றான் ஆயிற்று; பிரிவாலே காலம் நெடுகினபடி. 2‘ஸ்ரீ குகப்பெருமாளோடே நிற்க, காலம் நெடுகுவான் என்?’ என்று மிளகாழ்வானைக் கேட்க. ‘ஸ்மாரக சந்நிதியில் ஆற்றாமை இரட்டிக்கும் அன்றோ? என்று அருளிச்செய்தாராம். ‘மேகக்குழாங்காள்! காட்டேன்மின் நும்முரு; என் உயிர்க்கு அது காலன்,’ என்றார் அன்றோ?

—————

விஷயே தே மஹாராஜ ராம வ்யஸன கர்சிதா
அபி வ்ருஷா பரிம்லாநா ஸ புஷ்ப அங்குர கோரகா –59-8-
உபதப்தோ தகா நத்ய பல்வலாநி ஸராம்ஸிச
பரி சுஷ்க பலாசாநி வநாந் யுபவநாநி ச
-59-9-

ஈடு 2-1-1-ஆறுகளோடு சிறு குழி களோடு பெரும் குழி களோடு வாசியற கரை யருகும் சென்று கிட்ட ஒண்ணாத படி விரஹ அக்னியால் கொதித்தது இறே
சிறு காட்டோடு பெரும் காட்டோடு வாசியற விரஹ அக்னி கொளுத்திற்று

ஈடு 6-1-10-“உபதப்தோதகாநத்ய: – மிகுந்த கொதிப்பை யடைந்தன நதிகள்”. ‘தாபார்த்தனுக்கு நீரிலே விழுந்தால் தாபம் ஆறும்’ என்னும் -இவ் வாசனையைக் கொண்டு, ‘இராமனைப் பிரிந்த பிரிவிற்கும் இது பரிஹாரமாமோ’ என்று தண்ணீரிலே விழுவதாகக் கொண்டு செல்ல, கரையிலுங்கூடக் கிட்ட அரிதாயிருந்தது. 3நிலைநீர்கள்தாம் குளிரவற்றோ என்று பார்த்தார்கள், அவையும் அப்படியே இருந்தன. “பல்வலாநி ஸராம்ஸிச – சிறு குழிகளோடு பெருங்குளங்களும்”. 4மரங்களோடு வசிஷ்டர் முதலானவர்களோடு வாசியற அழியுமாறு போலே இப்படியேயன்றோ இவள் இருக்கிற இடம்.

ஈடு -7-5-1—ஸ்ரீ பரதாழ்வானைக் கண்டு சேதநர் எல்லாரும் கண்ணநீர் விழவிட்டு நிற்கக் கழுத்தளவு நீரிலே நிற்கிற மரங்கள் அன்றோ வாடிநின்றனஉப தப்தஉதகா நத்ய: – நீரோடு, அந்நீரில் விழுகிறாரோடு வாசி அற்றபடி. உபதப்தமாகையாவது, கரையரும் கிட்ட ஒண்ணாதபடியாய் இருக்கை. பல்வலாநி ஸராம்ஸிச – இதில், சிறுமை பெருமை என்று ஒரு வாசி இல்லை, ‘வனம் என்ன உபவனம் என்ன’ என்பது போலே.

———–

அதோ து கிம் துக்க தரம் ஸோஹமிஷ்வாகு நந்தனம்
இமாம் அவஸ்தாம் ஆபந்நோ நேஹ பஸ்யாமி ராகவம்
–59-30-

ஈடு -6-7-6-

இன்று எனக்கு உதவாது அகன்ற – 2பிள்ளை பெற்று வளர்க்கிறது ஆபத்துக்கு உதவுகைக்கு அன்றோ? தன்னைப் பிரிந்த இத்தன்மைக்கும், இந் நிலைக்கும் மேற்பட எனக்கு ஓர் ஆபத்து உண்டோ? இன்று எனக்கு உதவாது ஒழிவதே! 3“இந்த நிலையை அடைந்த நான் இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்த ஸ்ரீராமபிரானை இங்குக் காண்கிறேன் இல்லை; இதைக் காட்டிலும் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம் வேறு யாது?” “அதோ நு கிம் துக்கதரம் ஸ: அஹம் இக்ஷ்வாகுநந்தனம்  இமாம் அவஸ்தாம் ஆபந்ந. நேஹ பஸ்யாமி ராகவம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 26. இது, தசரதன் புலம்பல்.

என்றது, நான் நெடுங்காலம் கூடிவருந்தித் தம்மைப் பெற்றது, தம்மைப் பிரிந்து நான் இந்த நிலையை அடைந்த இற்றைக்கு அன்றோ? இன்று தம்மை நான் காணாது ஒழிவதே என்றான் அன்றோ என்றபடி. எனக்கு உதவாது – சக்கரவத்த்தியில் தனக்கு உன்டான வாசி

ஈடு -9-7-9-இந்நிலையை அடைந்த நான் இஷ்வாகு வம்சத்தில் பிறந்த இராமனை
இங்கு காண்கிறேன் இல்லை -என்கிறபடியே
ஆற்றாமை எல்லாம் சொல்லுவிக்கும் அன்றோ -என்றது
எனக்கு ஓர் ஆற்றாமை உண்டான அளவிலே கிட்டி நின்று முகம் காட்டி
ஈரக் கையாலே தடவி நோக்குகைக்கு அன்றோ தம்மைப் பெற்றது –
தம்மைப் பிரிந்து நோவு படுகிற இற்றைக்கு மேற்பட ஆற்றாமை இல்லை அன்றோ எனக்கு
இவ்வளவில் பெருமாளை நான் காண்கின்றிலேன் -என்கிறாள் -என்றபடி –

———-

கஜம் வா வீஷ்ய ஸிம்ஹம் வா வ்யாக்ரம் வா வநம் ஆஸ்ரிதா
நாஹாரயதி ஸந்த்ராஸம் பாஹு ராமஸ்ய ஸம் ஸ்ரிதா
–60-20-

ஒருதரம் தலையை வணக்கியவர் விஷயத்தில் ஸர்வேச்வரன் திருவுள்ளம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து பார்த்தால் வணக்கத்தின் மேன்மை வெளியாகும். “ஏபிச்சஸசிவைஸ்ஸார்த்தம் சிரஸா யாசிதோ மயா, ப்ராது:சிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்த்துமரர்ஹஸி” என்று தலையால் யாசித்த பரதாழ்வான் விஷயத்தில் பெருமாள் எப்படி உளங்கனிந்திருந்தார் என்பது இராவண வதத்திற்குப் பிறகு விபீஷணனுக்கு பெருமாள் அருளிச் செய்யும் பாசுரத்தால் வெளியாகிறது. “சிரஸா யாசதோயஸ்ய வசனம் நக்ருதம் மயா” என்று வாடுகிறான் எம்பெருமான். பரதன் தலையால் வணங்கி யாசித்த விஷயத்தை (வார்த்தையை) நான் தலைக்கட்டவில்லையே என்று துக்கித்து அவனைக் காணப் பதைக்கிறான் பிரபு. பெருமாள் திருவுள்ள மறிந்த பிராட்டியும் திருவடியை (ஹனுமனை) நோக்கி “சிரஸா சாபிவாதய” (எனக்காக அவனை நீ தலையால் வணங்கு) என்று வேண்டுகிறாள். தலை தாழ்த்து இருகை கூப்பாத தமது பாழ்த்த விதியை மீறி “தலையில் வணங்கவுமாங் கொலோ”(நமக்கு வணங்கும் நாட்களும் வாய்க்குமோ) என்று பாடுகிறார் நம்மாழ்வார்.

பலர் கண்ண நீர் கண்டால் மீளாரோ என்னுமதைப் பற்ற வினை செய்யப் போவாரைப் போலே ஆனை குதிரைகளைத் திரட்டிக் கொடு போனான் ஆயிற்று –
பிரிவாற்றாமைக்குத் தன்னில் குறைந்தார் ஒருவரும் இல்லையாயிற்று பரிகரத்தில்
நான் தலையால் இரந்த காரியத்தையும் மறுப்பாரோ
சிரஸா யாசதோயஸ்ய வசனம் நக்ருதம் மயா” என்றார் இறே அவனும் –
அவனும் தனக்கு அடுக்கும்படி செய்தான் -நாமும் நமக்கு அடுக்கும்படி செய்தோம் என்றார் இறே
அவன் தலையால் இரந்த காரியத்தை மறுத்துப் போந்தோம் என்று இறே அவர் திரு உள்ளம் புண் பட்டது
ப்ராதா ஸ்வ மூர்த்திராத்மந -என்கிறபடியே அவர் தம் திரு மேனியாக யன்றோ என்னை நினைத்து இருப்பது

—–

நந்தந்யுத ஆதித்யே நந்தந்த்யஸ்த மிதே ரவவ்
ஆத்மநோ நாவபுத்த்யந்தே மனுஷ்யா ஜீவித க்ஷயம்
-105-24-

பெரிய திருமொழி -6-2-5–நந்தந்த்யுதித ஆதித்யே -இத்யாதி
(வாள்களாக நாள்கள் செல்ல )
அபிமத விஷயங்களை பிறர் காணாத படி
புஜிக்கைக்கு காலம் வந்தது என்று உகவா நிற்பார்கள்
உதித்த வாறே அதுக்கு த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று ஹிருஷ்டராகா நிற்பார்கள் –
சாலில் எடுத்த நீர் போலே தங்கள் ஆயுஸ்ஸூ
கழிகிற படியை அறிந்து
நடுவு பட்ட நாளிலே அவ் வருகில் எளிவரவு வராதபடி
பரிஹரித்து கொள்ள வேணும் என்று இருப்பார் ஒருவரும் இல்லை-

————

பதி ஸம்யோக ஸூலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தா மப்ய பகமத் தீநோ வித்த நாசா திவாதந
–118-34-

ஒரு கொள் கொம்பிலே கொண்டு போய்ச் சேர்த்து நோக்கில் நோக்கலாய், இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இராநின்றது; இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையில் காட்டிக்கொடுத்தோமாக வல்லோமே!’ என்று எங்கள் தந்தையார் கவலைக் கடலில் மூழ்கினவர் ஆனார்,’ என்றாள் பிராட்டி.

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ பால காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

May 18, 2024

முநே வஹ்யாம் அஹம் புத்த்வா –7- வால்மீகி முனிவரே நான் அறிந்து சொல்லுவேன்

வேரா விதிர் விதிரா மெய் சிலிரா –சிறிய திருமடல் -21-

பகவத் விஷயம் சொல்லப் புக்குத் தான் உடை குலை பட்டபடி
மெய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப -என்னக் கடவது இறே –
முனே வஷ்யாம் யஹம் புத்த்வா ஜ்ஞாது மேவம் விதம் நரம் -என்று பிரச்னம் பண்ணின ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு ஸ்ரீ நாரத பகவான் -ஆனவாறே சொல்லுகிறேன் -என்றான் –
அதுக்கு கருத்து என் என்னில் –
அந்ய பரராய் பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் என்றான் இறே –
பதார்த்தங்களை உள்ளபடி அறிந்து இருக்கிறவன் இனி பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் -என்றது –
ப்ரஸ்ன ரூபத்தாலே ராம குணங்களை ஸ்மரித்து
நெஞ்சை உடை குலையைப் பண்ணினான் ஆயிற்று –
தெளிந்து நான் பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் -என்றானாம் இத்தனை இறே –
நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் –என்னுமா போலே-

வாக்மீ ஸ்ரீ மான் –9-

பெருமாள் திருவடியைப் பற்றி –
நன்றாகக் பேசும் திறமை யுள்ளவன் –
பேசும் பொழுது விலக்ஷணமான ஸோபை யுள்ளவன் –

நாவுடையாய்–திருப்பாவை -14-
ந ரிக்வேத விநீ தஸ்ய ந யஜுர்வேத தாரிண -என்றும்
நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் -என்றும்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்றும்
நாந் ருக்வேத விநீதஸ்ய –நா சாம வேத விதூஷா –இத்யாதி (விரிஞ்சனோ -கல்லாத கலை இல்லையே -திருவடி பற்றி வாக்மீ-என்று வால்மிகி கொண்டாடும் -பெருமாள்-பணிவு இருப்பதால் ருக் வேதம் அறிந்தவன் – அர்த்தம் தரிக்க இருந்தவன் ஆகையால் யஜுர் வேதம் அறிந்தவன் ஞானம் மிக்கு இருப்பதால் சாமவேதம் அறிந்தவன் -என்ற கொண்டாட்டம் போல் )இவள் எல்லாம் படுத்தினாலும் விட ஒண்ணாத நா வீறுடைமை
விண்ணப்பம் செய்வார் எல்லா அநீதிகள் செய்யிலும் சத்துக்கள் தலையால் சுமக்கிறது நா வீறு அன்றோ –

(நா அவகாரியம் -பெரியாழ்வார் செய்யக் கூடாததையும் அருளிச் செய்கிறார் )

நாவுடையாய்-
வாக் மாதுர்யமுடையவரே
நீர் அஹ்ருதமாய் சொல்லிலும்
பேச்சின் இனிமையைப் பார்த்தால்
ச்வதஸ் சர்வஞ்ஞனான ஈஸ்வரனுக்கும் இது சஹ்ருதயம்
அவசியம் கர்த்தவ்யம் -யென்னும்படியாய் இருக்கை –

மணி வண்ணன் –வாய் நேரந்தான் –திருப்பாவை -16-
பூவலரும் போதை நெகிழ்ச்சியால் பிறக்கும் செவ்வி போலே
வார்த்தை அருளிச் செய்கிற போது பண்ணின ஸ்மிதமும்
நின்ற நிலையும்-வடிவும் -இருந்த படி காண் –
வாக்மீ ஸ்ரீ மான் —
பூ அலர்ந்தால் போல் வார்த்தை சொல்லுகிற போதை ஓஷ்டஸ்ப்புரணம் -என்னவுமாம்

பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்–சேஷ பூதரான எங்களுக்கு
நிரவதிக கிருபை பண்ணி
உஜ்ஜவலமான திருப்பவளத்தை சாந்த்வ வாதம் பண்ணி
உனக்கு அசாதாரணமான தாமரை போலே இருக்கிற திருக் கண்களாலே பூர்ணமாகப் பார்த்து அருள வேணும் –

சோதி வாய் திறந்து -பூ அலருமா போலே யாயிற்று வாய் திறந்து அருளிச் செய்யும் போது திருமுகத்தில் பிறக்கும் செவ்வி -ய அநந்த ப்ருதிவீம் தத்தே சேகர ஸ்திதி சமஸ்திதாம்-ச அவதீர்ண ஜகத்யர்த்தே மாம் அக்ரூர இதி வஷ்யதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-12-என்கிறபடியே- என்று வார்த்தை அளவிலே யாயிற்று அக்ரூரன் அனுபவித்தது -தத் காலத்திலே திரு முகத்தில் செவ்வியும் உத்தேச்யமாய் இருக்கிறதாயிற்று இவர்க்கு –

————-

ஸர்வதா அபி கதஸ் ஸத்பிஸ் ஸமுத்ர இவ ஸிந்துபி —15-

ஸ்ரீ ராமன் -கடல் நதிகளால் அடையப்படுவது போல் -சாதுக்களால் எப்போதும் தாமாக வந்து அடையப்படுபவன்

நல்லார் நவில் –திரு விருத்தம் -100-
லோகத்தில் சத்துக்கள் அடைய -ஆழ்வார் ஆழ்வார் -என்னா நிற்கும் இத்தனை –

ராமோ ராமோ ராம -இதிவத் -(ராமோத்வைதம் போல் ஆழ்வார் ஒருவரே இங்கு பேசப்படுகிறார் )
சர்வதாபி கதஸ் சத்பி
பெருமாள் சிரமம் செய்து விட்டு ஒரு-நிழலிலே இருந்த அளவிலே –
பர சம்ருத்யை ஏக பிரயோஜனாந்தர வர்கள் அதுக்கு உறுப்பான-கற்கைக்காக படு காடு கிடப்பர்கள் –
சமுத்திர இவ சிந்துபி -இப்படி கிடக்கிறது -இவர் குறை-நிரம்புக்கைக்கோ என்னில் –
பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புக்கைக்கு அன்றிக்கே ஆறுகள் வந்து புகுருகிறது –
நடுவு தரிப்பு இல்லாமை இத்தனை இறே –

குஹேந ஸஹிதோ ராமோ லஷ்மணேந ச ஸீதயா –28-

ஸ்ரீ ராமன் கானோடும் லஷ்மணனோடும் சீதையோடும் கூடினான்

ஈட்டில்-ஆடியாடி -பிரவேசம் –கதான்வஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மநா சத்ருநேன ச வீரேண த்வயா ச ரகு நந்தன
ஸ்ரீ பரத ஆழ்வானோடும் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வானோடும் கூடப் பெறாத கிழிக் குறையாலே-மனக்குறையாலே –
கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய் தோற்றிற்று இல்லை இறே பெருமாளுக்கு
பணப்பை -கிழி-

குஹேன சஹிதோ ராம லஷ்மணேந ச சீதயா -கூடப் போன இளைய பெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய் தோற்றிற்று
ஸ்ரீ குஹப் பெருமாள் உடன் கூடின பின்பு இறே

இப்படி இறே அவன் தனக்கும் அந்வய வ்யதிரேகங்கள் இருக்கும் படி
ததீய சம்ச்லேஷத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே வந்த இழவு-
பெற்ற பகவத் சம்ச்லேஷம் இழந்து அடியே பிடித்து பிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது
வாயும் திரையுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த சம்ச்லேஷம் முற்றுவதற்கு முன்னே
வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது இறே –

———-

ரம்ய மாவஸதம் க்ருத்வா ரமமாணா வநே த்ரய –30-

பெருமாள் பிராட்டி இலக்குவன் மூவரும் -அழகிய க்ருஹத்தை -பர்ணசாலையைக் கட்டி -காட்டில் -களிக்கின்றவராய் இருந்தனர்-

ரம மாணா வநேத்ரய -மாதா பிதாக்கள் கூட இருக்கும் படுக்கையில் சம்பந்தமே ஹேது வாக ஏறும் புத்ரனைப் போலே
பிராட்டியும் அவனும் திரு அநந்த ஆழ்வான் மேலே இருக்க
தமேவம்வித் பாதே நாத்யாரோஹதி -என்கிறபடியே

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது –2-8-1–அணைவது புணர்வது –
பொதுவான சப்தங்கள் -அணைந்தான் என்று அவனுக்கு பிரதான்யம் –அவன் ஏற்றான் என்று
இவனுக்கு பிரதான்யம் இல்லாமல் அணைவது -இருவருக்கும் பொது -ஆனந்தம் சமம் -மூவருக்கும் என்று காட்டி அருள –
ரம்ய மாவசதம் க்ருத்வா –அறுபதினாராயிரம் மலடு நின்ற
சக்கரவர்த்தி தன் ஆதரத்துக்கு போம்படி சமைத்த மாளிகைகளிலும் திரு உள்ளத்துக்கு பொருந்தி அழகியதாய் இருந்தது காட்டிலே
இளைய பெருமாள் சமைத்த ஆஸ்ரமம் ஆயிற்று
த்ரயகா ரமமாணா-நாயகரான பெருமாள் ரசம் அல்லவே பிராட்டி யுடையது
பிராட்டிக்கு பிறக்கும் ரசம் அல்லவே பெருமாளது
அப்படியே அச் சேர்த்தி கண்டு உகக்குமவர் இறே இளைய பெருமாள்
வெத்தலை பாக்கு இளைய பெருமாள் சேகரித்து பட்ட ஹர்ஷம் -மடித்துக் கொடுத்த ஹர்ஷம் பிராட்டிக்கு -போட்டு அனுபவித்த ஹர்ஷம் பெருமாளுக்கு
வநே -படை வீடர் காட்டிலே ரமித்தார்கள் என்று தோற்றாதே-காடர் காட்டிலே வர்த்தித்தால் போலே பொருந்தி இருந்த படியாகச் சொல்லிற்று யாயிற்று
சர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாக திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகமாகிறது

பல தேவேற்கோர் கீழ்க் கன்றாய் –-நாச்சியார் திருமொழி-14-1-
வாசனை இருக்கிறபடி –
திருவநந்த ஆழ்வான் மடியில் இருந்த வாசனை போக்க முடியாதே –
பெண்கள் அளவில் தீம்பு செய்து திரியுமவன் -இவன் அளவிலே பவ்யமாய் இருக்கும்
தனக்கு அபிமத விஷயங்களை சேர விடுகைக்கு கடகன் ஆகையாலே
அவன் நினைவின் படியே யாய்த்து திரிகிற படி

பெருமாளும் பிராட்டியுமாக பள்ளி கொண்டு அருளும் போது
இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து நின்று நோக்கி –
ரமமாணா-வநே த்ரய -பால -1-31–என்கிறபடியே
இருவருமான கலவியிலே பிறக்கும் ஹர்ஷத்தில் மூவராகச் சொல்லலாம் படி அந்வயித்து
அவர்களுடைய சம்ஸ்லேஷத்துக்கு வர்த்தகராய் இருக்குமா போலே

———

நந்தி க்ராமே கரோத் ராஜ்யம் ராமா கமந காங்க்ஷயா –37-

பரதன் -ராமனது வரவில் விருப்பத்தால் நந்திக்ராமம் என்னும் இடத்தில் ராஜ்யத்தை நடத்தினான்-

ஆடியாடி யகம் கரைந்து –2-4-1-முதல் ஆடி -என்றதுக்கு அவ்வருகே ஒரு நிலை இறே இரண்டாம் ஆடி –முதலிலே சஞ்சாரம் அரிதாம் படி இருக்கச் செய்தே ஆற்றாமை பிரேரிக்க சஞ்சரியா நிற்கும்
குணாதிக விஷயம் ஆகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாதே –

ராம கமன காங்ஷயா–பால -1-39-இன்னும் ஒரு கால் அவர் முகத்தில் விழிக்கலாம் ஆகில் அருமந்த பிராணனை
பாழே போக்குகிறது என் -என்று ராஜ்யத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தான் இறே -ஸ்ரீ பரத ஆழ்வான் நந்திக்ராமத்தில்

—-

பம்பா தீரே ஹநுமதா சங்கதோ வாநரேண ஹ –56-

ராமன் பம்பை என்னும் தாமரைப் பொய்கையின் கரையில் ஹநுமானுடன் கூடினான்

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!–6-1-1–வந்து –
“பம்பையின் கரையிலே அநுமானோடு கூடினார்” என்பதுபோலே,
“பம்பாதீரே ஹநூமதா ஸங்கத: வாநரேண ஹ”- என்பது, ஸ்ரீராமா. கிஷ்கந்த 1 : 8.
ஆள் இட்டு அறிவிக்க வேண்டிய நிலையிலே நீங்களே வந்து.
நாயகனை போலே உங்களை ஆள் இட்டு அழைக்க வேண்டாதபடி -நீங்களே வந்து –
திருவடியை இளைய பெருமாளை இட்டு பெருமாள் அழைத்தால் போலே இல்லாமல் நீங்களே வந்து
வழி பறி உண்டவிடத்தே தாய் முகம் காட்டினாற் போலே காணும் பிராட்டியைப் பிரிந்து நோவுபடுகிற சமயத்திலே
திருவடி வந்து முகங்காட்டினபடி.

ஹநூமதா-
தளர்ந்து, –“ஆவாரார் துணை” -திருவாய். 5. 1 : 9.-என்று தடுமாறுகிற சமயத்திலே,
வெற்றித் தழும்பு சுமந்த ஆண் பிள்ளையோடே கூடப் பெற்றது என்கிறது.
வாநரேண-
சந்நியாசி வேடம் கொண்டு வந்து பிரிவை விளைத்து நலிவு பண்ணுமவனைப் போலன்றிக்கே,
செவ்வியான் ஒருவனோடே சேரப் பெறுவதே.

ருஷி கொண்டாடுகிறான். போகத்துக்குச் சேர்த்துக் கொள்ளுகிறோம்,
சத்தை நோக்குவாரைப் பெற்றோமன்றோ! என்று உவகை கொண்டவனாகிறான்.

———-

ததோ வாநர ராஜேந –59-

ஸ்நேஹமான பிறகு குரங்குகளுக்கு அரசனால் -ஸூக்ரீவனால் -வாலிக்கும் தனக்கும் ஏற்பட்ட விரோதம் முதலியன ராமனுக்குத் தெரிவிக்கப்பட்டன

சங்கரையா –நாச்சியார்-7-7-
ததோ வானர ராஜேன-என்னுமா போலே
பெருமாள் மகா ராஜரை முடி சூட்டுவதற்கு முன்னே –
வானர ராஜேன
 -என்றான் இறே ரிஷி ஜடாயுவையும் கழுகு அரசனாக –

க்ருத்ர ராஜ்யம் பரித்யஜ்ய -ஆரண்ய -68-23
விடலாம் ராஜ்யத்தையோ அவர் விட்டது –
பித்ருபைதாமஹம் மஹத்
 –
இஷ்வாகு முதலான ராஜாக்கள் ஆண்டு போந்த ராஜ்யத்தை நாம் பொகட்டு போந்த அளவும் அன்று இறே
அவர் நமக்காக விட்ட கழுகு ராஜ்யம் என்கிறார் பெருமாள்

வானர ராஜர் கழுகு அரசர் போலே சங்கரையா என்று
அவனுடன் உள்ள நெருக்கத்தால் ஆண்டாள் விளிக்கிறாள் –

—————-

தேந நாதேந மஹதா நிர் ஜகாம ஹரீஸ்வர
அநு மான்ய ததா தாராம் ஸூக்ரீவேண ஸமா கதா
–66-

பெரிய அந்த ஸப்தம் நிமித்தமாக வானர ராஜனான வாலி அந்தப்புரத்தில் இருந்து வெளிக் கிளம்பினான் -அப்போது தாரை என்னும் தனது பத்நியை -நல்ல வார்த்தை சொல்லி சம்மதிக்கச் செய்து ஸூ க்ரீவனுடன் யுத்தம் செய்வதற்காக வந்து சேர்ந்தான்
ததா தாராம் அநு மான்ய நிர் ஜகாம -என்று அந்வயம்

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்-10-1–எங்குற்றான்-
தேன நாதேன ந மஹதா நிர்ஜகாம ஹரீச்வர -பால -1-68-
மஹா ராஜருடைய மிடற்று ஓசையின் தசைப்பைக் கேட்டு முன்பு போலே கோழைத் தனமாய் இருந்ததில்லை
ஓரடி இவனுக்கு உண்டாக வேணும் நமக்கு இரை போருமாகில் பார்ப்போம் -என்று புறப்பட்டான் இறே

அப்படியே இவற்றினுடைய உத்தியோகம் இருந்த படியையும் பாதகத்வம் இருந்தபடியும் கண்டோமுக்கு
இவற்றின் அளவல்ல -அவன் பின்னே வந்து நின்றான் -என்று எங்குற்றான் -என்கிறாள்

கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் –பெரிய திருமொழி-9-5-8-

கேவலம் அன்று கடலின் ஓசை –
இக்கடல் ஓசைக்கு ஓர் அடி உண்டு –
மகா ராஜர் பெருமாளை அண்டை கொண்டு வந்து அறை கூறின போது போலே இரா நின்றது –
பெருமாள் கையும் வில்லுமாய்க் கொண்டு கடக்க நிற்க அவரைப் பற்றிச் சென்று அறை கூறினார் இறே –

தேன நாதேன மஹதா நிர்ஜகாம
முன்பு பல காலும் நம் வாசலிலே வந்து அறை கூவக் கண்டறிவோம்
இப்போது அங்கன் அன்றிக்கே
இவன் மிடற்று ஓசையிலே தசை பிறந்த படியாலே இதுக்கு ஓர் அடி உண்டாக வேணும் –
பிரபலனாய் இருப்பான் ஒருவனைப் பற்றி வந்தானாக வேணும்

நிர்ஜகாம
முன்பு போலே புறப்பட்டு தரையிலே கை மோதிப் போகாதே
இவனும் இவன் அடியாக வந்தவனும் இலக்கு போருமாகில்
புறப்பட்டு போரப் பார்ப்போம் என்று புறப்பட்டான்
அடி உண்டு என்று அறிந்தான் ஆகில் பின்னை புறப்படுவான் என் என்னில்

ஹரீஸ்வர
எதிரிகள் ஜீவித்து இருக்க உஜ்ஜீவித்து இருந்தவன் அல்லாமையாலே

வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே
-திருவிருத்தம் -51 –

வேரித் துழாய் துணையா
நறு நாற்றத்தை உடைய திருத் துழாயை தனக்கு கூட்டுப் படையாகக் கொண்டு –
அங்கு நின்றும் இலை யமுது கொண்டு வந்து காணும் நலிகிறது –
(இலை அமுது -சாடு -வெற்றிலை -இலை திருத்துழாய் அமுது )
சக்கரவர்த்தி  திருமகனை அண்டை கொண்டு மகாராஜர் வாலியை அறை கூவினால் போலே-
திருத் துழையை அண்டை கொண்டு நலியத் தொடங்கிற்று –

தேன நாதேன மஹதா
மஹதா –
மகாராஜர் மிடற்றில் தசைப்புக்கு உரம் உண்டு என்று தோற்றும்படி இருக்கை –

நிர்ஜகாம –
புறப்பட்டான் –

ஹரீஸ்வர
பண்டு சிலர் அறை கூவ இருந்து அறியாதவன் –

அநுமான்ய-
ஆண்களோடு கலக்க வேண்டாவோ என்றான் –

ததா-
சர்வ ஸ்வஹரணம் பண்ணினாலும் புறப்பட ஒண்ணாத அவஸ்த்தை -(அணைத்த தசையில் )
பர்த்தாரம் பரிஷஸ்யஜேக்கு -ஆசைப் பட்டு இருக்குமே அவள்

(சுக்ரீவேந ஸமாஹிதா
சுக்ரீவன் அறை கூவப் போனானே வாலி )

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
-10-6-5-

நரகத்தை நகு நெஞ்சே
பரமபதம் கிட்டிற்று என்னா-கடுக கால் வாங்கிப் போகப் பாராதே காண் –
பல நாள்கள் நம்மைக் குடி மக்கள் ஆக்கி எளிவரவு படுத்தின-இவ் உலக வாழ்க்கையை புரிந்து-பார்த்து சிரித்து போரு காண் –
உன்னை வென்றோம் அன்றோ -என்று புரிந்து பார்த்து சிரித்து போரு-
பிள்ளை அழகிய பெருமாள் அரையர் -கிரந்தியைப் பார்த்து -கட்டியை பார்த்து-
திருவரங்க நாதன் திருமாலை திருப் பரிவட்டம் முதலானவை வரவிட்டு அருள-
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே -என்று-கிரந்தியைப் பார்த்து சிரித்து சொன்ன வார்த்தையை நினைப்பது –

அண்டை கொண்ட பலம் –
தத அகர்ஜத் ஹரிவர சுக்ரீவ ஹேமபிங்கல-தேன தாதேன மஹதா நிர்ஜகாம ஹரீஸ்வர-சந்ஷேப ஸ்ரீ ராமாயணம் -68-
என்கிறபடியே மகாராஜர் வந்து அறை கூவ
முன் கணத்திலே மானம் கெட்டு ஓடினவன் இப்போது வந்து அறை கூவும் போது-இது வெறுமன் -அன்று
போது அல்லாப் போதிலே நீ நீ புறப்படக் கடவை அல்லை –என்று தாரை கால் கட்டச் செய்தேயும்
ஷத்ரியன் ஆகையாலே மானக் கேட்டிற்கு பொறுக்க மாட்டாமல் புறப்பட்டு-மிடற்று ஓசை இருந்தபடி என் –
பழைய கோழைத் தனம் அற்று தெளிந்த முழக்கு ஓசையாய் இருந்தது-இதற்கு ஓர் அடி உண்டாக வேண்டும்
உண்டாயிற்றாகில் நமக்கு இரை போருகிறது -என்றானே அன்றோ –
ஹரீஸ்வர-
இதற்கு முன்பு இப்படி பிறர் கூவ கேட்டு இருந்தவன் அல்லன் –
அப்படியே அவனை அண்டை கொண்ட பலத்தாலே இவ் உலக வாழ்க்கையைப் பார்த்து
உன்னை வென்றோமே அன்றோ என்று கையைக் தட்டி சிரித்து காண் பொருவது –
அறிவு கேடர்கு நரகம் என்று எமன் முதலாயினோர் குடி இருப்பினைச் சொல்லிற்று ஆகவுமாம்
இங்கு மற்றை நரகம் -8-1-9- என்கிற இவ் உலக வாழ்க்கையை சொல்லுகிறது-
வான் உயர் இன்பத்துக்கு எதிர் தட்டே அன்றோ-

————

அபி ஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருதயஸ் ததா ராமோ விஜ்வர பிரமுமோத ஹ
–83-

க்ருதார்த்தனாக பெருமாள் தாபம் நீங்கி ஸந்தோஷித்தான்

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!-
6-2-10-

நின்று இலங்கு முடியினாய் –
இவர்களை வெல்வதற்கு முன்பு தலைச் சுமையாய்க் காணும் கிடந்தது;
இப்போதாயிற்று நற்றரித்து ஒளி விடத் தொடங்கிற்று.
இராசாக்கள் சிலர் தந்தாம் பகைவர்களை அழித்து வீர அபிடேகமும், விஜய அபிடேகமும் பண்ணிநிற்குமாறு போலே.
முன்பே முடி சூடி இருக்கச் செய்தேயும் இவர்களைத் தோற்பிப்பதற்கு முன்பு இல்லாததற்குச் சமமாகக் காணும் இருந்தது.
இராவணன் முதலாயினோர்களை வென்றதற்கு முடி சூடினது போன்று அன்று காணும்,
காதலிமார்களை வென்றதற்குச் சூடின முடி இருப்பது;
இவர்கள் எண்ணங்களைக் குலைத்துப் பொருந்தவிட்டுக் கொண்ட பின்பு காணும்
மேன்மையையுடையவனாய்ப் பிரகாசிக்கின்றவனுமாய் முடியும் நற்றரித்தது.

“ஸ்ரீராமபிரான் விபீடணனை அரக்கர்களுக்குத் தலைவனாக இலங்கையில் அபிடேகம் செய்து,
அப்போது செய்து முடித்த எல்லாக் காரியங்களையுமுடையவராயும் நடுக்கம் அற்றவராயும் மகிழ்ந்தார் அன்றோ.
அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீக்ஷணம்
க்ருத க்ருத்ய: ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”-
என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 85.
ஸ்ரீ பரதாழ்வானைப்போலே, ‘நான் முடி சூடேன், நீர் முடிசூடும்’ என்று முடிக்கு இறாய்க்கின் செய்வது என்? என்று
உடம்பு வெளுத்துக் காணும் இவர் இருந்தது;
ஒரு படி அத்தலைச் சுமையைக் கழித்துப் போந்தோம்; இதுவும் ஒரு தலைச் சுமையாகின் செய்வது என்?’ என்று.
இக்ஷ்வாகு குலத்தார்க்குப் பணியன்றோ முடிக்கு இறாய்க்கை.

குகனொடும் ஐவரானேம் முன்பு; பின் குன்று சூழ் வான்ம கனொடும் அறுவரானேம்; எம் முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய! நின்னோடும் எழுவ ரானேம்; புகலருங் கானந் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
நடுவினிப் பகர்வ தென்னே நாயக! நாயி னேனை உடனுதித் தவர்களோடும் ஒருவனென் றுரையா நின்றாய்
அடிமையிற் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித் தொடுகழற் செம்பொன் மௌலி
சென்னியிற் சூட்டிக் கொண்டான்.-என்பன அநுசந்தேயம்.-அடிக்கு இறாயாதிருக்கையும் முடிக்கு இறாய்க்கையுமன்றோ சொரூபம்.-

———

ராமஸ் ஸீதாம் அநு ப்ராப்ய ராஜ்யம் புநர் அவாப்தவாந் ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக –87-

பெருமாள் பிராட்டியுடன் மீண்டும் ஸிம்ஹாசனத்தில் இருந்து அருள -ஜனங்கள் ஹேஹத்தில் மயிர்க்கூச்சலும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் அடைந்தனர்

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
-7-10-1-

‘இராமர் சீதையைப் பெற்றுப் பின்னர் இராச்சியத்தை அடைந்தார்; உலகம் மிக்க உவகையை அடைந்தது’ என்கிறபடியே
, தந்தை தாயார் இருவரும் சேர இருந்து பரியப் புக்கால் குழந்தைகளுக்கு ஒரு குறையும் பிறாவாதே அன்றோ?

‘ராம: ஸீதாம் அநுப்ராய ராஜ்யம் புந: அவாப்தவாந் ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக:
துஷ்ட: புஷ்ட: ஸூதார்மிக:’-என்பது, சந்க்ஷேப ராமா. 1. : 89. 2
ஆக, இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தம் உண்டாக,
அச் சேர்த்தியைக் காண்கையாலே உலகத்துக்கு ஆனந்தம் உண்டாக,
அதனைக் கண்டு குழந்தை பால் குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப் போலே
இவர்களுக்கு உண்டான பிரீதியைக் கண்டு அதனாலே தாங்கள் இனியராய் இருப்பர்களாயிற்று.

—————–

ந ச அக்நி ஜம் பயம் கிஞ்சித் ந அப்ஸூ ஜந்தவ–90-

நெருப்பினால் ஏற்படும் பீதி கொஞ்சம் கூட இல்லை -பிராணிகள் ஜலத்தில் மூழ்கிப் போகிறதும் இல்லை

வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

தம்பி வார்த்தை கேட்க்கும் கோஷ்ட்டியில் புகுந்து ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தம்பி வார்த்தை கேட்க்காத தேசம் விலகினால் போலே
‘விளையாடும் இளம் பிள்ளைகளும் வீடுகளின் வாசல்களில் கூட்டங்கூடி ஒருவர்க்கு ஒருவர்
இராம தோத்திர விஷயமான கதைகளையே செய்தார்கள்’ என்கிறபடியே.
பாலா அபி க்ரீடமாநா க்ருஹ த்வாரேஷூ ஸங்கஸ:
ராமாபிஷடவ ஸம்யுக்தா: ச க்ருரேவ மித: கதா:-
என்பது, ஸ்ரீராமா. அயோத். 6:16.

ராமோ ராமோ ராம இதி-சோறு சோறு சோறு என்பாரைப் போலே.
ப்ரஜாநாம பவந் கதா:- -ஜனி தர்ம -பிறந்தவர்களுக்கு எல்லாம் பாசுரம் இதுவே.
ராம பூதம் ஜகத் அபூத்-நாடு அடங்க இராமன் ஒருவன் ஆனபடி.

‘நித்திய விபூதியில் பரிமாறக் கடவது இங்கே பரிமாறுகைக்குக் காரணம் என்?’ என்னில்,
ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி-நாடு அடங்கலும் தந்தாமுடைய கர்மங்களின் பலன்களை
அனுபவிக்கப் பெற்றார்கள் இல்லை; இராம பாக்யமே அனுபவித்து விட்டது.’

ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா:
ராமபூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’
-என்பது, உத்தர ராமாயணம்.

‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித்-நெருப்பும் சோறு வேக வேண்டிய உஷ்ணத்துக்கு மேற்பட உடைத்தாவது இல்லை.

‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித் நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:-என்பது, சங்க்ஷேப ராமாயணம், 1:92.

நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:– கொண்டு ஆழக்கடவ தண்ணீர் தானே கொண்டு மிதக்கப் புக்கது இராம சரத்துக்கு அஞ்சி.
பண்டே கை கண்டு இருப்பது ஒன்றே தண்ணீர் தான்.
வேலை வேவ வில் வளைத்தவனை அன்றோ?

——-

ஸ சாபி ராம பரிஷத் கத சநை புபூக்ஷயா சக்த மந பபூவஹ –4-36-

அந்த ராமனும் மெதுவாக சபையை அடைந்து கொடவிருந்து அனுபவிக்க வேண்டும் என்னும் விருப்பத்தால் குசலவர்கள் காநத்தைக் கேட்பதில் மனப்பற்றுள்ளவனாய் இருந்தான்-

வைஷ்ணவர்களுடைய திரளிலே ஒருவன் வந்து புகுந்தால் செருக்காலே மலையிட்டு அமுக்கினாற் போலே இருக்கை அன்றிக்கே,
நீரும் நீரும் கலந்தாற் போலே இவன் புகுந்தமை தெரியாதபடி இருந்து,
அவர்கள் இடம் கொடுத்து அவர்கள் ஏற்றுக் கொள்ள இருத்தல் அன்றோ ஒருவனுக்கு நன்மையாவது.
இது, இவர்களுக்கே அன்றியே, அவனுக்கும் ஒத்திருக்கிறபடி;

அந்த இராமனும் மற்றவர்களோடு கூட இருந்து அநுபவிக்க வேண்டும் என்னும் விருப்பத்தால் மெதுவாகச் சபையை
அடைந்தவனாய்க் குச லவர்களின் கானத்தைக் கேட்பதில் மனமுடையவனாய் இருந்தான்
தத:து தௌ ராமவச: ப்ரசோதிதௌ அகாயதாம் மார்க விதாந ஸம்பதா
ஸ சாபி ராம: பரிஷத்கத: ஸநை: புபூஷயா ஸக்த மநா பபூவ”
-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 31.
என்று, மஹரிஷி ஆச்சரியப்படுகிறார்” என்பது ஸ்ரீராமாயணம். என்றது,
பெரு மதிப்பராய்ப் பாட்டுக்களை அறிந்து கொண்டாடுகைக்குப் போரும்படி பேரறிவாளரான
புலவர்களும் தாமுமாகப் பேரோலக்கம் இருந்து, பிள்ளைகளைப் பாட விட்டுத் தாம் சிம்மாசனத்திலே இருந்தார்;
இவர்கள் தாழ இருக்கத் தாம் உயர இருந்த இடம் தமக்கு விருப்பம் இல்லாமையாலே சிம்மாசனத்தினின்றும் மெள்ள இழிந்து,
தெரியாதபடி இவர்கள் நடுவே புகுந்திருந்தார். -அது என்? என்னில்,
இராஜா எழுந்திருந்தால் ஓலக்கம் எழும் அன்றோ, தாம் எழுந்தவாறே ஓலக்கம் எழும் எனக் கருதி,
மெள்ளப் புகுந்திருந்தார் என்றபடி. -இங்ஙன் வேண்டுவான் என்? என்னில்,
“அநுபுபூஷயா – அநுபவிக்கும் இச்சையால்” என்னுதல்,
“பவிது மிச்சயா – தாம் உளராவதற்கு இச்சையாலே” என்னுதல். என்றது,
‘இவர்களோடே கூடி இருந்து அநுபவிக்கைக்காக’ என்னுதல். ‘தாம் உளராகைக்காக’ என்னுதல் என்றபடி.-

———

த்ரஷ்டும் சக்யம் அயோத்யாயாம் ந வித்வான் ந ச நாஸ்திக
ஸர்வே நராச்ச நார்யச்ச தர்ம ஸீலாஸ் ஸூ ஸம்யதா
–6-8-

அயோத்யையில் படிப்பில்லாதவன் காணப்பட முடியாது -நாஸ்திகனும் காணப்பட முடியாது -அனைவரும் தர்ம ஸ்வ பாவமுடையவர்கள் -இந்த்ரிய ஜெயமுடையவர்கள் –

கலை இலங்கு மொழியாளர்–பெரிய திருமொழி-8-1-1-

நெடுநாள் பெற்று வளர்த்த என்னோட்டை சம்பந்தம் அற்று
அவ் ஊரில்   சம்பந்தம் தோற்றி இரா நின்றது இவள் வார்த்தை இருக்கிறபடி –

த்ருஷ்டும் சக்யம் அயோத்யாயாம் நா வித்வான் ந ச நாஸ்திக
சர்வே நராஸ்ஸ நார்ய்ச்ச தர்ம சீலாஸ் ஸூ சம்யதா-
பால காண்டம் –
அறுபதினாராயிரம் ஆண்டு  வன்னியம் அறுத்து   நன்மைகளை உண்டாக்கிப் போந்த சக்கரவர்த்திக்கும்
இரண்டு பொருள் உண்டாக்க போச்சுதில்லை –
ஒரு அவித்வானை யாதல்
வைதிக அர்த்தங்களை இல்லை என்பான் ஒரு நாஸ்திகனை யாதல் உண்டாக்கப் போச்சுதில்லை –
(கள்வர் இலாமை இத்யாதி -கம்பர் )

அப் படை வீட்டில் உள்ளார் -ராஜ புத்ரர்கள்  ஆரேனும் ஒருவர் முடி சூட அமையாதோ
என்று இருக்குமவர்கள் அல்லர் –
பெருமாளே முடி சூடா விடில்
இஹைவ நித நம்யாமோ மகாப்ரச்த்தா நமேவவா
ராமேண ரஹிதா நாஞ்சகிமர்த்தம் ஜீவிதம் ஹின
-என்று
பெருமாள் அபிஷேகம் பண்ணாத படை  வீட்டில் இருப்பது இல்லை
விழுந்த இடமே சுடுகாடாக போக அமையும் என்று இருப்பார்கள் புருஷர்கள் –

ஸ்திரீகளும் –
ராமமேவா அநுகச்சதத்வம ஸ்ருதிம் வாபி கச்சத – என்று
பெருமாள் வழி மாறிப் போனார் என்று திறக்க அழைத்த பர்த்தாக்கள் 
முகம் பிளக்கத் தள்ளிக் கதவு அடைத்துக் கொள்ளுவார்கள் –

தர்ம சீலா
ராம அனுவர்த்தியே பரம தர்மம் என்று இருக்குமவர்கள் இறே
ஸூ சம்யதா -ஸுவ பிரயோஜனத்தில் நெஞ்சு செலுத்தாதவர்கள் யாயிற்று
அப்படி இருக்குமவர்கள் யாயிற்று இவ் ஊரில் உள்ளாறும் –

——-

லஷ்மணோ லஷ்மி ஸம்பந்ந –பால காண்டம் -18-31-

சம்பத்தோடு கூடிய லஷ்மணன் வெளியில் உள்ள ராமனின் உயிர் போன்றவன் –

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை
 –4-4-8-

செல்வனை –
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்றும்
அந்தரிஷா கதஸ் ஸ்ரீ மான் -என்றும்
சது நாகவரஸ் ஸ்ரீ மான்
-என்றும் சொல்லுகிற மூன்று ஸ்ரீ யும் இவர்க்கும் உண்டே
(செல்வச் சிறுமீர்காள் -இதே வியாக்யானம் பெரிய வாச்சான் பிள்ளை )

லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்று பெருமாள் ராஜ்யத்தை இழந்தார்- இவர் கைங்கர்ய சாம்ராஜ்யத்தை பெற்றார் –
சுற்றம் எல்லாம் பின் தொடர -எல்லா அடிமையும் பெற்றார் –
சம்பன்ன -என்கையாலே பாகவத கைங்கர்ய பர்யந்தம் ஆகை இறே பூர்த்தி –

(காட்டில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்தவர் பாகவத கைங்கர்யம் செய்தது எங்கே என்னில்
சுற்றம் எல்லாம் பின் தொடர -அனைவரும் செய்த கைங்கர்யம் செய்ததால்
அயோத்யா ஜனங்கள் -பாகவதர் திரு முகம் மலர்ந்தனவே
ஆகவே பெருமாள் விட்டுப்போன பாகவத கைங்கர்யமும் ஸித்தித்து )

பகவத் கைங்கர்யம் செய்தது தம்முடைய சத்தை பெருகைகாக –
அந்த சத்தையை அழிய மாறி இறே பாகவத கைங்கர்யம் பண்ணிற்று

(சக்ரவர்த்தி திரு மகன் முக உல்லாசம் அன்றோ இவருக்கு உத்தேச்யம் என்னில்
கங்கா அவதாரணாத் பூர்வம் செய்தது
அப்புறம் அஹம் ஏகோ -கௌசல்யா ரக்ஷணம் செய்ய போகச் சொல்லியும் –
ஜனங்கள் முக மலர்த்தி உத்தேச்யமாக பின்னாலேயே போனான்
சத்ருக்னனை அன்றோ பாகவத நிஷ்டை என்பர் என்னில்
இவர் பெருமாள் முக மலர்த்தி த்வாரா பாகவத கைங்கர்யம்
அவரோ நேராக பாகவத கைங்கர்யம் )

——-

இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ
ப்ரதீச்சை நாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணி நா
-73-33-

மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-6-

இயம் சீதா -பிறந்த உமக்கு பிறவாமையால் வந்த ஏற்றம் உடையார் தேட்டமே –
மம ஸூதா -சஹ தர்ம சரீ தவ
நீர் ஆர்த்த ரஷணத்திலே தீஷித்தால் உமக்கு முன்னே போய்க் கைச் சிறையாய் இருக்க வல்லவள்
ப்ரதீச்ச சை நாம் —-கரும்பு தின்ன கூலி அன்றோ
இவளைக் கைக் கொள்ளும் என்று அன்றோ உம்மை நான் கால் பிடிக்கிறது
பத்ரம் தே —-வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –என்கிறபடியே
ஐயரும் ஊரில் உள்ளாரும் வாராது இருக்க நான் கைக் கொள்ளுகை யாவது என் என்று
தன் வைதக்த்யம் தோற்ற இறாய்த்து நின்றார் -அது வேண்டா காணும்
உம்முடைய கையாலே இவள் கையைப் பிடியீர்
ப்ரதீச்ச -என்னச் செய்தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ -என்றான் இறே
இவளை அங்கீ கரிப்பீராக – என்ற பின்பும் கையைப் பிடியும் –
தந்தையார் அனைவரும் வந்து இருக்கும் இப்போது -முன்பு போலே மறுக்காமல் என்றான் இறே –

————-

ராமஸ் து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹுந் ருதூந்
மநஸ்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித
-77-32-

திருவாய் மொழி -23- ஈடு பிரவேசம்-ராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் மனச்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -பால -77-27-
அந்த ராமனோ என்னில் -72 ருதுக்கள் -12 வருஷங்கள் -பிராட்டி திரு உள்ளத்தில் சேர்ந்தாரே -தகப்பனார்கள் பார்த்து திருமணம் செய்ததால் -பித்ரு ஹ்ருதயா –ஐயரை கேட்டே பின்பே திருக் கல்யாணம் –
பங்குனி உத்தரத்தில் திருக் கல்யாணம் -ஒன்றாக கலந்தார்களே -ஜானகி மைதிலி வைதேகி சீதா-இயல் பெயர் –
ராமஸ்து -பெருமாளும் பிராட்டியும் ஏக தத்வம் என்னலாம் படி கலந்த கலவியைச் சொல்லுகிறது
பித்ரு சுச்ரூஷண பரரானார் -தர்மங்களை பிரவர்த்திப்பித்தார் தேவதா சாமாராதநம் பண்ணினார் -என்றாயிற்று சொல்லிக் கொண்டு போந்தது
இப்படிப் போந்த இவர் இப்போது வாத்ச்யாயனம் கற்றுக் காம தந்த்ரமேயோ நடத்திப் போந்தது -என்னும் படி வேறு பட்டார்
சீதயா சார்த்தம் -பரமபதத்திலே செவ்வியோடு வந்தவளும் பிற்பாடையாம்படி போகஸ் ரோதஸ் ஸிலே முற்பாடரானார்
விஜஹார -இப்படி பரிகாரச் செய்தேயும் போகோபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர் – போக உபத்காதம் -தொடக்க நிலை தாண்ட வில்லையே –
பஹூன் ருதூன் –நஹூன் சம்வத்சரான் என்னாது ஒழிந்தது -அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த போக உபகரணங்களை
கொண்டு புஜித்தார் என்று தோற்றுகைக்காக
மனச்வீ -சம்ச்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டு பரிமாறினார்
தத்கதஸ் -தஸ்யாம்-கத ஜாதி குணங்கள் த்ரவ்யத்துக்கு பிரகாரமாய் பிரிக்க ஒண்ணாதபடியாய் இருக்குமா போலே
பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி
தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -இவர் உயர்த்தியை அறிந்து இருப்பாள் ஒருத்தி யாகையாலே -அப்பெரியவன் இப்படி
தாழ விடுவதே -என்று அச்செயலிலே தன் நெஞ்சு துவக்கப்பட்டு –அது அது -என்று கிடக்குமாயிற்று –
அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவி தான் –
கடல் பள்ளியில் நீங்கி –அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி மனம் மாறிற்று -இப்பொழுது தான் அவர் அவர் மனஸ் அவர் இடம் வந்தது –

விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்–6-1-9-விடிவை-விடிவுகள் தோறும்.
பகலும் இரவுமாய்க் காணும் அவ்வூர் செல்லுகிறது என்பாள் ‘விடிவை சங்கு ஒலிக்கும் திருவண் வண்டூர்’ என்கிறாள்.
(இங்கோ நீள் இரவாய் அன்றோ நீண்டு உள்ளது சங்கு ஒலிக்க பிரஸ்துதமே இல்லையே இங்கு )
ருதூந் பஹூந் – பல ருதுக்களை” என்கிறபடியே, காலம் கூறிட்டு அவ்வக் காலத்துக்கு அடைத்த
உபகரணங்களைக் கொண்டு காணும் அவன் அநுபவிக்கிறது;
“ராமஸ்து ஸீதயா ஸார்தம் விஜஹார பஹூந் ருதூந்
மநஸ்வீ தத் கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:”
-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 26.
இல்லையாகில் “ருதுக்களை” என்ன வேண்டாவன்றோ, “வத்ஸராந் – வருடங்களை” என்ன அமையுமன்றோ,

‘ராம: –
ஸ்ரீபரசுராமாழ்வானைச் செருக்கு வாட்டிப் படை வீட்டிலே வந்து புகுந்து சக்கரவர்த்தியையும்
மஹரிஷிகளையும் பின் பற்றித் தர்மத்தையே மிகுதியாக நடத்திப் போந்தவர்.

து –
தமப்பனுக்குச் செய்ய வேண்டிய குற்றவேல் முதலியவைகளைச் செய்து பின்பு பிராட்டியுடைய ரச தாரையிலே இழிந்த பின்பு,

‘ராமஸ்து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹூந் ருதூந் மநஸ்வீ தத் கத: தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 25.

‘இதற்கு முன்பெல்லாம் வாத்ஸ்யாயநம் கற்றுக் காம தந்திரமே நடத்திப் போந்தாரித்தானையோ!’ என்னும்படி வேறுபட்டார். என்றது,
‘முன்பு போருகிற நாளில் ‘இவர் இதற்கு முன்பு காம ரசம் புதியது உண்டு அறியாரோ?’ என்னும்படி போந்த இவர்,
இப்போது ‘இதற்கு முன்பு தருமத்தின் உண்மையைப் புதியது உண்டு அறியாரோ?’ என்னும்படி வேறுபட்டார்,’ என்றபடி.

ஸீதயா ஸார்த்தம் – அயோநிஜையாய்ப் பரம பதத்தில் தானும் அவனுமாய் இருந்து கலந்த போதைச் செவ்வியில்
ஒன்றும் குறையாமல் இருந்தவள் அன்றோ பிராட்டி? இப்படி இருக்கச் செய்தேயும், தம்மை அழிய மாறி மற்றைச் சாதியினரோடு
ஒத்தவராக அவதரித்தாரே யாகிலும், போகத்தில் வந்தால் அவளுங்கூடப் பிரதானம் அற்றவளாம்படி அதில் தலை நின்றார்.

‘அதற்கு அடி என்?’ என்னில், இராச புத்திரரான ரசிகத் தன்மையால் வந்த ஏற்றத்தாலே.
விஜஹார – (அனுபவ பூவ என்னாமல் விளையாட்டு )பாரிப்பே ஒழியப் போகத்தில் இழியப் பெற்றிலர்; தொடக்கத்துக்கே பணி போந்ததித்தனை. என்றது,
‘உபோத்காதத்துக்கே காலம் போந்ததித்தனை’ என்றபடி.
பஹூ ந்ருதூந் – ‘ஸமா த்வாதஸ தத்ராஹம’ என்கிறபடியே.

‘ஸமா த்வாதஸ தத்ராஹம்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 17.
‘நான் அங்குப் பன்னிரண்டு வருடங்கள் முடிய’ என்பது இதற்குப் பொருள். இது, பிராட்டியின் வார்த்தை.

பன்னிரண்டு ஆண்டு ஒரு படிப்பட அனுபவிக்கச்செய்தேயும், ‘ருது’ சப்தத்தாலே சொல்லுகிறான் ஆயிற்று,
அவ்வவ காலங்களுக்கு அடைத்த மலர் முதலான உபகரணங்களைக் கொண்டு கால அவயவங்கள் தோறும்
அனுபவித்துப் போந்தமை தோற்ற. என்றது,
‘குளிர் காலத்துக்கு அடைத்தவை கொண்டு பரிமாறியும் வெயில் காலத்துக்கு அடைத்தவை கொண்டு பரிமாறியும்
அனுபவித்தமை தோற்றச் சொல்லுகிறான்’ என்றபடி.

(வசந்த ருது – சித்திரை, வைகாசி – இளவேனிற்கலம்
கிரீஸ்ம ருது – ஆனி, ஆடி – முதுவேனிற்காலம்
வருஷ ருது – ஆவணி, புரட்டாசி – கார்காலம்
சரத் ருது – ஐப்பசி, கார்த்திகை – குளிர்காலம்
ஹேமந்த ருது – மார்கழி, தை – முன்பனி
சசி ருது – மாசி, பங்குனி – பின்பனி)

மநஸ்வீ –
பிரணய தாரையில் வந்தால், அவள் பாரித்த பாரிப்புக்கு எல்லாம்
யானைக்குக் குதிரை வைக்கைக்கு ஈடான நெஞ்சில் அகலமுடையவராயிற்று.

தத் கத:
திரவியம் திரவியத்தோடு சேர்ந்தாற்போல அன்றிக்கே, சாதி குணங்கள் திரவியத்தோடு சேர்ந்தாற்போலே சேர்ந்தார்;
‘நான் பெருமாளோடே கூடியே இருப்பவள்’ என்றும், ‘சீதை என்னோடு கூடியே உள்ளவளன்றோ?’ என்றுமன்றோ

அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா’-என்பது, ஸ்ரீராமா. சுந். 21 : 16. இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா’ ஸ்ரீராமா. யுத். 122 : 19. இது,
இராவண வதத்தின் பின் வந்து கூடிய பிரமன் முதலிய தேவர்களைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது.-இருவர் வார்த்தைகளும்?

தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித: –
இதில் இழிவதற்கு முன்பு இவரை அறிந்திருக்குமவளாகையாலே,
‘அப்படிப் பெரியவர் இப்போது என் பக்கலிலே தாழ நிற்பதே இப்படி இது ஒரு நீர்மையே!’ என்று
எப்போதும் இந்த நினைவே செல்லுகை -அநு சந்தானமே யாத்திரையாக -ஆகையாலே, வேறு ஒன்றும் நெஞ்சிற்படாதே அவள்.
தன்னைத் தம் பக்கலிலே பொகடும்படி ஆனார்.

தத் கத – என்கையாலே,
இவர் தம்மை அவள் பக்கலிலே ஓக்கினபடி-பரதந்தரமாக- சொல்லிற்று

‘நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’ என்கையாலே.
அவள், தன்னை இவர் பக்கலிலே ஓக்கினபடி பரதந்தரமாக-சொல்லுகிறது.

இப்படி இருவருமான சேர்த்தியிலே, இதற்கு முன்பு ஆனந்தம் புதியது உண்டு அறியாதான்
ஒருவனுக்கு ஆனந்தம் உண்டாமாறு போலே ஆயிற்று, கணந்தோறும் உண்டாம்படி.’

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ரஹஸ்ய அர்த்தங்கள்-ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள்-

May 16, 2024

வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத் மஜே
வேத ப்ராசேதஸாத் ஆஸீத் ஸாஷாத் ராமாயணாத்மநா

ஸ்ரீ வைகுண்ட நாதனே பரம் பொருள்
வேதங்களால் ப்ரதிபாதிக்கப் படுகிறவன்
அவனே ஸ்ரீ ராமனாக திரு அவதரிக்கும் பொழுது வேதமே ஸ்ரீ ராமாயணமாக திருவவதரித்தது

வேதங்கள் சொல்லுகின்ற பரம புருஷன் ஸ்ரீராமனே ஆவான் -அந்தப் பரம புருஷனே தசரத புத்திரன் ஆன ஸ்ரீராமனாக ஆவிர்ப்பவித்தான், அவதாரம் செய்தான். வேதத்தின் சரீரமே ஸ்ரீராமன். அந்த சரீரம் ஸ்ரீராமனாய் அவதாரம் செய்தபின்னர் வேதங்கள் அனைத்தும், வால்மீகிக்கு வசப்பட்டு அவர் திருவாக்கால் ராமாயணமாக மாறிவிட்டன . அப்படி என்னதான் அந்த ராமாயணத்தில் சொல்லி இருக்கின்றது? தர்மத்தின் பாதையில் வாழச் சொல்லிக் கொடுக்கின்றது. அந்த தர்மமே மானுட உருவெடுத்து வந்த ஸ்ரீராமன் என்றும் சொல்லுகின்றது.
அவன் திரு நாமத்தை சொல்வதும், கேட்பதும், நமது பிறவியின் தோஷத்தை போக்க வல்லது

இந்தப் பெருமையால் தான் ஸ்ரீ ராமாயணத்துக்கு வ்யங்க்ய காவ்யம் என்று புகழ் பெற்று பல வேதாந்த ரஹஸ்யமான உட்ப் பொருள்களைக் கொண்டது என்று போற்றப்படுகிறது –

த்வா ஸூபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமா நம் வ்ருஷம் பரி க்ஷஸ்வஜாதே
தயோரந்யஸ் பிப்பலம் ஸ்வாத் வத்தி அநஸ்நன் அந்யஸ் அபிசாகவீதி
-முண்டக

ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் -ஒரு பறவை மரத்தில் பழுத்த பழங்களை உண்டு ஒளி குன்றியது
மற்றொரு பறவை பலத்தை உண்ணாமல் ஒளி விஞ்சியது
நம் உடல் என்னும் மரத்தில் ஜீவாத்மா -பரமாத்மா என்னும் இரண்டு பறவைகள் வாழ்கின்றன
உடலால் செய்த புண்யம் பாபம் ஆகிய கர்மங்களால் ஏற்படும் ஸூ கமும் துக்கமும் மரத்தில் ப்ளுத்ஹ பழங்கள்
ஜீவாத்மா கர்ம பலனை அனுபவித்து ஒளி குன்றுகிறார் –
பரமாத்மா கர்மத்தின் தொடர்பே இல்லாமல் ஒளி விஞ்சுகிறார்
இப்பொருள் மனத்தை ஈர்க்கிறது அன்றோ

இதே போல்
யாவத் ஸ்தாஸ் யந்தி கிரயஸ் ஸரிதஸ் ச மஹீ தலே
தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரசரிஷ்யதி —

எதுவரை மலைகள் நிற்குமோ -நதிகள் ஓடுமோ -அதுவரை ஸ்ரீ ராமாயணம் உலகில் புகழோடு விளங்கும் என்று பிரமன் வால்மீகியிடம் அருளினார்

மநந சீல முநி –மனனம் செய்பவர் முனி -அறிந்தத்தை விடாமல் சிந்தித்து உறுதிப் படுத்துபவரே முனி
ஸநா தனமான தர்மத்தை உண்மையாக உணர்ந்து -இக்காவியத்தை இயற்றியபடியால் இது காலம் கடந்து நிற்குமே –

இதில் குறிப்பிட்ட அனைத்து இடங்களும் -அயோத்யா தொடங்கி ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கை வரை இன்றும் சாக்ஷியாக உள்ளனவே-

——

நால்வரின் திருவவதாரப் பலன்கள்

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ் க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

ஸ்ரீ பெருமாளும்
குகன் ஜடாயு விபீஷணன் போன்ற சாதுக்களை ரஷித்து அருளினார் –
ராவணன் கும்பகர்ணன் போன்ற துஷ்டர்களை அழித்தார்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல் -தாய் தந்தை சொல்லுக்குக் கீழ்ப்படிதல் -உண்மை பேசுதல் -நேர்மை தவறாது நடத்தல் போன்ற ஸாமான்ய தர்மங்களை நிலை நாட்டினார்
அத்துடன் நிற்காமல் தானும் தம்பிகளுமாகச் சேர்ந்து சிறப்பான விசேஷ தர்மங்களையும் நிலை நாட்டினார்

பெருமாள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய உண்மை -நேர்மை ஆகியவற்றுக்கு முன் உதாரணமாக வாழ்ந்தார்
வீரம் நீதி தவறாமை சரணம் என்று தஞ்சம் அடைந்தவர்களைக் காத்தல் போன்ற அரச தர்மங்களைக் காத்தார்
இறுதியாக அனைத்து ஜீவா ராசிகளிடமும் கருணை -பறவைக்கும் முக்தி அளித்தல் போன்ற திருமாளுக்கே உரிய சிறப்பான தர்மங்களையும் கடைப்பிடித்தார்

ஆந்ரு ஸம்ஸயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருத -என்று பிராட்டி ராவணனுக்கு உபதேசிக்கும் பொழுது இரக்கமே பெருமாளுடைய சிறப்பான தர்மம் -என்று அருளிச் செய்து
இதுவே பெருமாளின் அவதாரப்பலன் என்று காட்டி அருளினாள்

ஆசார ப்ரபவோ தர்மஸ் தர்மஸ்ய ப்ரபுரச்யுத -என்று சொல்லும்படி நன்னடத்தை ஒழுக்கம் ஆகியவற்றால் தர்மம் காக்கப்படும்
உலகில் தர்மத்தை நிலை நாட்டி அதைக் கடைப் பிடிப்பவர்களுக்குப் பலன் அளிப்பவன் அச்யுதனான பெருமாள்

இரண்டாவதாக லஷ்மணன் –
தம்பிகள் வரிசையில் பரதன் இரண்டாவதாக இருப்பினும் -பெருமாளை க்ஷண நேரமும் விட்டுப்பிரியாமல் தொண்டு செய்த படியால் லஷ்மணனே பெருமாளுக்குப் பின் எண்ணப்படுகிறார்
ஒரு ஜீவாத்மாவுக்கு இன்றியமையாத அடையாளமான சேஷத்வமாகிய தர்மத்துக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் இலக்குவன்

சேஷத்வம் என்றால்
பர கத அதிசய ஆதாநேச்சயா உபாதேயத்வம் ஏவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ பர சேஷீ —ஸ்வாமி ராமானுஜருடைய விளக்க ஸ்ரீ ஸூக்திகள்

அதாவது -பெருமானுக்கு அடிமையாய் -இடைவிடாமல் தொண்டு பட்டிருத்தல் -பகவானுக்கு எது பெருமை சேர்க்குமோ அவருக்கு எது பிடிக்குமோ அதையே செய்தல்
இஷ்ட விநியோக அர்ஹத்வம் சேஷத்வம் -என்றும் சொல்வர்
பெருமாள் தனது இஷ்டப்படி நம்மைப் பயன்படுத்திக்கொள்வது தகுதி யுடையவனாய் இருத்தல்
ஜீவன் பரமனுக்கு அடிமை என்று காட்டியதே இவரது அவதாரப் பலன் –

பரதன் -சேஷத்வத்தை விட பாரதந்தர்யம் என்ற சிறப்பான பண்பின் படி வாழ்ந்து காட்டினார்
தொண்டு செய்யும் நம் விருப்பத்தை விட பெருமானின் திரு உள்ளபடியே நடக்க வேண்டும்
தந்த்ரம் -என்றால் ப்ரதானம் -முக்யம் -என்று பொருள்-பேரனின் விருப்பமே முக்கியம் -சித்ரா கூடத்தில் பெருமாள் ஆணையை மறுக்காமல் திரும்பினார் அன்றோ
மீண்டும் இளவரசு பட்டம் பெருமாள் சூட ஏற்றுக் கொண்டார் அன்றோ
இஷ்ட விநியுஜ்வ மாநத்வம் பாரதந்தர்யம்
பெருமானின் இஷ்டப்படி பயன்படும் தகுதி இருத்தல் சேஷத்வம் -பயன்படுத்தல் பாரதந்தர்யம் -இதை வெளிப்படுத்தியதே பரதனின் அவதாரப் பலன் –

சத்ருக்னன் சேஷத்வம் பாரதந்தர்யம் ஆகிய இரண்டுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்து
அதிலும் பெருமாளுக்கு இருப்பதை விட பாரதனுக்கே என்று வாழ்ந்து காட்டியவர் –
அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே
மூவரைக் காட்டிலும் இவருக்கே ஏற்றம் –

புத்ர காமேஷ்டி யாகம் செய்து பெற்று பாயாசம் மிகச்சிறந்த பகுதி சுமத்தரை தேவி உண்டு லஷ்மணன் சத்ருக்கனன் இருவரையும் பெற்றாள்
த்ருஷ்டத்வ வன வாஸம் -என்று தொண்டு செய்யவே இலக்குவனைப் பெற்றாள்
பெருமாளைத் தவிர மற்ற ஒருவரை அறியாத பரதனைத் தவிர மற்று ஒருவரையும் அறியாமல் வாழ்ந்து காட்டினார்-

லஷ்மணோ லஷ்மி ஸம்பந்ந –ஸ்ரீ ராம கைங்கர்யமே இங்கு நிலை நிற்கும் செல்வம் –
தொட்டிலில் இருக்கும் பொழுதே -ஸஹஜ பக்தி -காட்டி அருளியவர்
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த –கூடவே பிறந்து கூடவே விருத்தி –
திருத்துழாய் அங்குரிக்கும் போதே பரிமளத்துடன் கூடியே அங்குரிக்குமா போலே –
பெருமாளுக்கு ஜடாயுவுக்கு மோக்ஷம் அருளி ஸ்வா பாவிகமான சேஷித்வம் ஸ்புடமானால் போல்
இலக்குவனும் குடில் கட்டுவது மரக்கட்டைகளால் மிதவை செய்து பிராட்டியும் பெருமாளும் நதிகளைக் கடிக்கச் செய்வது போன்றவற்றை
குருகுலத்தில் கற்காமலேயே அறிந்து வைத்தவர்
சுற்றம் எல்லாம் பின் தொடர என்று கொண்டாடும்படி பின் தொடர்ந்தார் அன்றோ

அனுஷ்டானத்தை எல்லாம் விட்டு விட்டு கண்ணனையே அண்டியிருந்த இடையன் ஒருவனை குறிப்பிட்டு சொல்கிறாள் ஆண்டாள். இந்த கோபாலன் கண்ணனுக்கு தொண்டு செய்வதில் – கைங்கர்யம் செய்வதில் மிகவும் ஆவல் கொண்டு அதிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறான். இவன் தன்னுடைய சொத்தான பசுக்களை மேய்ப்பது, பால் கறப்பது போன்ற காரியங்களை சரிவர செய்வதில்லை. ஸ்வதர்மத்தை சாமான்யமாக கொண்டு அதை விட்டு, கிருஷ்ணனுக்கு தொண்டு செய்வதை விசேஷ தர்மமாக பிடித்துக்கொண்டிருக்கிறான். கைங்கர்யஸ்ரீ எனும் செல்வத்தைப்பெற்ற நற்செல்வன் தங்காய்! என்று அவனுடைய தங்கையை எழுப்புகிறாள் ஆண்டாள்.

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் றன்னையே தான் வேண்டுஞ் செல்வம் ” என்ற பெருமாள் திருமொழி-

———-

விஸ்வாமித்திரர் 12 திரு நக்ஷத்திரத்தில் பெருமாளையும் இலக்குவனையும் கால் நடையாகக் கூட்டிச் சென்று கங்கை சோணா நதியைக் கடந்து ஸித்தாஸ்ரமம் என்னும் புண்ய பூமியை அடைந்தார்
இவ்விடம் இன்றும் பீஹாரில் கங்கைக் கரையில் பக்ஸர் என்னும் இடத்தில் உள்ளது
விஸ்வாமித்ரர் ஆறு நாட்கள் யாகம் செய்தார் -இறுதி நாள் யாகத்தை அளிக்க மாரீசன் ஸூபாஹு என்ற இரண்டு அரக்கர்கள் வர -அம்பு எய்து ஸூபாஹு வை அழித்தார் -மாரீசனைக் கொள்ளாமல் அவ்விடத்தில் நின்றும் ஓட்டினார்
பூர்வ ஆகம் -முன் செய்த குற்றங்களைத் தீயில் இட்ட பஞ்சு போல் அழித்து விடுவதையும்
உத்தர ஆகத்தை தாமரை இலைத்தண்ணீர் போல் ஓட்டே இல்லாமல் சுவடு தெரியாமல் விலக்கி விடுகிறார்

தத் யதா இஷீக தூலம் அஃனவ் பிரேதம் ப்ரதூயதே ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே -என்றும்
தத் யதா புஷ்கர பலாஸே ஆப ந ஸ்லிஷ் யந்தே ஏவமேவம் விதி பாபம் கர்ம ந ஸ்லிஷ்யதே -என்றும் உபநிஷத்தில்
தததிகமே உத்தர பூர்வாகயோ -அஸ்லேக்ஷ விநாசவ்–என்று ப்ரஹ்ம ஸூத்ரம்

ப்ராக்ருதங்கள் ஸத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய -முக்குண மயம் -ரஜோ குணத்தில் இருந்து பிறப்பது காமமும் க்ரோதமும்
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குண ஸமுத்பவ
தாடகை -ரஜோ குணத்தின் அடையாளம்
காமத்தை ஒழித்தால் தானே கோபம் விலகி விடும்
ரஜோ குணமாகிய தாடகையை அழித்து
காமம் என்னும் ஸூ பாஹுவையும் அழிக்கவே
க்ரோதம் என்னும் மாரீசன் தானே ஓடிப்போனதே
பின்பு அந்த மாரீசனையும் அழித்தார்
ஸ்ரீ ராம நாமத்தைச் சொல்லவே ரஜோ குணம் தமோ குணம் காமம் க்ரோதம் அனைத்து தீமைகளும் விலகும்-

———

ஸேவா ஸ்வ வ்ருத்தி ராக்யாதா தஸ்மாத் தாம் பரி வர்ஜயேத் -மனு
தாஸ பூதா ஸ்வத ஸர்வே ஹ்யாத்மாந பரமாத்மந -என்கிறபடியே அனைத்து ஆத்மாக்களும் இயற்கையிலேயே பரமாத்வாவுக்கு தாஸர்கள்
ஸ்வரூப க்ருத தாஸ்யம் என்றும்
குண க்ருத தாஸ்யம் என்றும் இருவகை
இவற்றில் ஸ்வரூப க்ருத தாஸ்யமே உயர்ந்தது
அநஸூயை -ஸீதாப்பிராட்டி ஸம்வாதம் இத்தை உணர்த்தும் –
யத் யப்யேக்ஷ பவேத் பர்த்தா மமார்யே வ்ருத்த வர்ஜித -என்று ஒரு நிமிடம் கூட குணங்கள் பெருமாளை விட்டுப் பிரிவதில்லையே என்று நொந்து கொண்டாள்

அதே போல் லஷ்மணனும் –அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத-

ஆகவே அவன் ஸ்வாமி என்று கொண்டே தாஸ்யம் புரிவோம்
நம் பாக்யத்தால் அவன் ஸமஸ்த கல்யாண குண பூர்ணனாகவும் உள்ளான்

————

ப்ரணவம் -முன்பும் -பின்பு நான்காம் வேற்றுமை உருபுடன் நாமமும் -பின்பு நம-சேர்ந்து மந்த்ரமாகும்
ணு -என்னும் தாது -ஸ்தோத்ரம் செய்தல் என்னும் பொருளில் வரும்
ப்ரகர்ஷேண ஸ்தூயதே பகவான் அநேந இதி ப்ரணவ –இந்தச்சொல்லால் பகவான் நன்கு ஸ்தோத்ரம் செய்யப்படுகிறார் என்ற பொருளில் வரும்
ஓம் இதி ஏக அக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாம் அநுஸ்மரன்
ஆத்மாநம் யுஞ்ஜீத
-ஓம் சொல்லி ஆத்மாவை ஸமர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது
அகாரார்த்தோ விஷ்ணு
மந ஞாநே
உத்த்ருதா விஷ்ணுநா லஷ்மீ –உகாரேண உச்யதே ஸதா
அக்ரத பிரயயவ் ராம ஸீதா மத்யே ஸூ மத்யமா ப்ருஷ்டதஸ்து தனுஷ் பாணி லஷ்மண அநு ஜகாம
நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை எம்மிராமா ஓ
பொய்யோ எனும் இடையாளுடன் இளையானுடன் போனான்

அகார வாஸ்யனான பெருமாள் முன்பு போக
உக்கார வாஸ்யளான ஸீதாப்பிராட்டி நடுவில் நடுக்க
மகார வாஸ்யனான இலக்குவன் அவர்களுக்குத் தொண்டு செய்யவே பின் தொடர்ந்து
மூவரும் சென்றதை பார்த்தால்
அகார உகார மகார எழுத்துக்கள் கால் கொண்டு நடந்தால் போலே இருந்ததே
பிராட்டியாரும் கூடிப்பிடிக்கும் மெல்லடிகள் கொண்டு -நடந்த கால்கள் நொந்தவோ -என்று உருகும் படி அன்றோ நடந்தார்
நல்ல நடத்தையுடன் முன் உதாரணமாக வாழ்ந்து காட்டினார் அன்றோ

அற வழி நடந்து காட்டிய பெருமாள் திருவடிகள் வாழி

——–

ராம-அயனம்-சேர்ந்து ராமாயணம்
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயா சரிதம் மஹத்
முதலில் இருந்து முடிவு வரை ஸீதா பிராட்டி சரிதமே
ராமாயணம் என்று சொல்லும் பொழுது அடைமொழி ஒன்றுமே இடாமல் ஸீதா சரித்ரத்துக்கு முழுமையாக சொல்லப்பட்டது என்ற அடைமொழியுடன் அருளிச் செய்கிறார்
வேதம் -கர்ம காண்டம் -ப்ரஹ்ம காண்டம் –
உப ப்ரும்ஹணங்கள் -ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்கள்
இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றமே சொல்லிற்று
லங்கையில் சிறைப்பட்ட தேவப்பெண்களை விடுவிக்கவே தானே வலிய சிறை புகுந்தாள்

வ்யாஸர் ஒன்றேகால் லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்ட மஹா பாரதம் எழுதியும் திருப்தி பெறாமல் நாரதரின் உபதேசம் கேட்டு ஸ்ரீ மத் பாகவதம் அருளிச் செய்தார்
வால்மீகியோ நாரதருக்கும் தந்தையான நான்முகனின் அருளால் நேரே ஸ்ரீ ராமாயணம் அருளிச் செய்து திருப்தி அடைந்தார்
ந தே வாக ந்ருதா காவ்யே காசி தத்ர பவிஷ்யதி –என்று உன் காவ்யத்தில் ஒரு சொல்லும் பொய்யாக இருக்காது என்றும் நான்முகன் அருளிச் செய்தார்

மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ|
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குருத்வம் ரிஷிஸத்தம ||
ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி||

(இதன் பொருள் நான்முகக் கடவுள் வான்மீகரை நோக்கி “நம்முடைய சங்கல்பத்தினாலேயே
இந்த ஸரஸ்வதி உம்முடைய வாக்கிலிருந்து தோன்றினாள். நீர் ராம சரிதத்தை ஒரு பிரபந்தமாகச் செய்யக்கடவீர்.


மேலும் –யாவத் ஸ்தாஸ் யந்தி கிரய ஸரிதஸ் மஹீ தலே தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரஸரிஷ்யதி –என்று
உலகில் மலைகளும் நதிகளும் இருக்கும் வரை ஸ்ரீ ராமாயணம் எல்லா உலகங்களிலும் பெருமையோடு விளங்கும் -என்றும் அருளினார்
பெருமாள் தானே அமர்ந்து லவ குசர்கள் பாட தன் சரிதை கேட்டு அருளினார்

ராமோ பஹூன்யஹான்யேவ தத்கீதம் பர‌மம் சுபம் |
சுச்ராவமுனிபி: ஸார்த்தம் பார்த்திவை: ஸஹவானரை|”

(இ-ள்) ஸ்ரீராகவன் நாள்தோறும் பல முனிவர்களும், அரசர்களும் புடைசூழச் சபையினடுவே
முனிகுமாரர்களை வரவழைத்து மிகச் சிறந்ததும், சுபமுமான அவர்களது சங்கீதத்தைச் செவிசார்த்திக் களி கூர்ந்தனர்.

ஸூந்தரி ரகு நாதஸ்ய ஸூர ஸ்த்ரீ துக்க ஸாந்தயே தசாநதஸ்ய பவநே தசமாஸாந் உவாஸ ஹ -என்றபடி தேவ ஸ்திரீகளை விடுவிக்கவே வலிய சிறை புகுந்தாள்
தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் -நம்மாழ்வார்

ராமஸ்ய அயனம் எனப் பிரிந்து இராம சரிதமெனவும்,
ராம: அய்யதே அனேன இதி = ராமாயணம் எனப்பிரிந்து
இதனால் இராமன் அடையப் படுகிறான் எனவும் பொருள் படும்.
இன்னும் ரமாய இதம் சரிதம் = ராமம், தஸ்யாயன மிதி, ராமாயணம் எனப்பிரித்து,
சீதாப்பிராட்டியின் சரிதமெனச் சாற்றலுமுண்டு.
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயாச் சரிதம் மஹத்
மேன்மையான ஸீதாசரித்திரமாயும், மஹாகாவ்யமுமான ராமாயணத்தை என்பது இதை வலியுறுத்தும்.
தருமம் உலகத்தைத் தரிப்பதால், போஷிப்பதால், தருமமென்று சொல்லுகிறார்கள்.

வேதமு மற்றுஞ் சொல்லு மெய்யற மூர்த்தி வில்லோன் (கம்பர்)
கைவிலேந்தி இலங்கையிற் பொருதாரன்றே மறைகளுக் கிறுதியாவார். (கம்பர்)
என்றபடி, வேதத்தினால் அறியும்படியான பரமபுருஷன், ஸ்ரீராமனாக அவதரித்தபோது,
1. வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா
அவரை அறிவிக்கிற வேதமும், வான்மீக முனிவரினின்றும் நேராய் ஸ்ரீமத் ராமாயண ஸ்வரூபத்தினாலே அவதரித்தது.
2. இதம்பவித்ரம் பாபக்னம், புண்ணியம் வேதைச்சசம்மிதம்
இந்த ஸ்ரீராமசரிதமானது, பரிசுத்தம் செய்யத்தக்கதும், பாபங்களை நாசஞ்செய்ய வல்லதும்,
நன்மைகளை விளைவிக்கத் தக்கதும், வேதங்களோடு சமானமானதுமா யிருக்கின்றது.

————-

தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை நன் கொள்ளுமீதே
பிரபல தர விரோதி -களை அற்ற கைங்கர்யம்
ரமதே யத்ர பைதேஹீ த்வம் அஹம் சைவ லஷ்மண
–என்று பெருமாள் அருளிச் செய்ய
நான் எங்கு ஆனந்தம் அடைவேனோ என்று தனித்துச் சொல்லி -என்னை அஹங்காரத்தில் சிக்க வைப்பீரோ
நான் என்று அஹங்காரப்பட்டால் தானே எனக்கு என்று ஒரு ஆனந்தம் உண்டு
அடியேன் என்று தொண்டனான தன்மை புரிந்தால் எனக்கு என்று தனியாக ஒரு ஆனந்தம் இல்லையே
அறிவும் ஆனந்தமும்-ஞாத்ருத்வமும் சேஷத்வமும் ஆத்மாவுக்கு அடையாளமாக இருந்தாலும் சேஷமாக இருப்பதே இன்றியமையாத முதல் அடையாளம் –
நான் போக்தா -அனுபவிப்பவன் என்ற எண்ணம் தவறு
அடியேன் போக்யம் -பகவானால் அனுபவிக்கப்படும் வஸ்து என்பதே -சரி
சேஷி உகந்த கைங்கர்யமே புருஷார்த்தம்
படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே
மற்றை நம் காமங்கள் மாற்று
அவன் நம்மை அனுபவித்து ஆனந்தப்பட அது கண்டு நாமும் ஆனந்தப்படுவதே கர்தவ்யம்

———

ஸ்வாமி தானே சொத்துக்களைக் காத்து அருள வேண்டும்
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி யத் பரயந்தி ப்ரபி ஸம் விசந்தி
அனைத்துப் பொருள்களும் யாரிடமிருந்து உருவாகுமோ -படைக்கப்பட்டவை எல்லாம் யாரால் காக்கப்படுமோ -அனைத்தும் யாரிடத்தில் லயிக்குமோ அவரே ப்ரஹ்மம் -என்றதாயிற்று

கௌஸல்யா லோக பர்தாரம் ஸூஷு வேயம் மனஸ்விநீ தம் மமார்த்தே ஸூகம் ப்ருச்ச சிரஸா ச அபிவாதய –-ஸீதாப்பிராட்டி திருவடியிடம்

உலகத்தைக் காக்கும் பிள்ளை பெர்ஸ் வேண்டும் என்று கௌஸல்யா தேவி விருப்பப்பட்டுப் பெருமாளைப் பெற்றார் -காக்கும் பொறுத்து ராமனதே என்பதை வலியுறுத்தி பேசினாள்

நல்கித்தான் காதலிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
–என்று இதே கருத்தை ஆழ்வாரும் அருளிச் செய்கிறார்

சரைஸ்து சங்குலாம் க்ருத்வா பர பலார்தந
மாம் நயத்வேதி காகுத்ஸ்த தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் –

சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றுக்கு மாசு என்று அஞ்சி வீசினேன்

ஆகவே நம்மை ஸ்வாமியிடம் ஒப்படைத்து நிர்ப்பரோ நிர்பயோ மாக இருப்போம் –

———–

கொள் கொம்பு மூலம் கொடி படர்தல் -படித்துறையில் இறங்கி நீராடுதல் -போல் அடியார்கள் மூலமாகவே நாமும் அவனைப் பற்ற வேண்டும் -அவனும் பாகவர் மூலமாகவே தான் ஏற்றுக் கொண்டு அருளுவான்

வாலி ஸூக்ரீவன் யுத்தம் -கஜ புஷ்பிகா மாலையை இலக்குவன் சூட வாலி வாதம் -ஸூக்ரீவ மஹாராஜருக்குப் பட்டாபிஷேகம் செய்யும் போதும் இலக்குவன் மூலமே முடி சூட்டி அருளினார்
நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்
ஸர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மநே
-என்று வானர முதலிகள் மூலமே பற்றி
ஆநய ஏனம் ஹரி ஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா -என்று சுக்ரீவ மஹாராஜர் மூலமாகவே ஏற்றார்

இவன் முன்னிடுமவர்களை அவன் முன்னிட்டும் –இருவர் முன்னிடுகிறதும் தம் தாம் குற்றங்களை சாமிப்பிக்கைக்காக -ஸ்ரீ வசன பூஷணம்

இங்கு பக்தனுக்கு குற்றம் -வெகு காலமாக பெருமாளிடம் பாராமுகமாய் உலக இன்பங்களில் ஈடுபட்டு -பகவானது ஆணைகளை மீறு -பாபங்களையே சேர்த்து வைத்தது
இக்குற்றம் பகவானுடைய திரு உள்ளத்தில் பட்டு சீற்றம் வராதபடி குளிர்விக்கிறார்கள் கடகர்

பகவானுக்குக் குற்றமாவது -விட்டுப் பிரிக்க முடியாத உறவு இருந்த போதிலும் -அவனைக் காத்து ஆட்க்கொள்ளாமல் கர்மவசப்படி மாறி மாறி பல பிறவிகளில் பிறந்து உழலும் படி உதாசீனனாய் இருக்கை-

——————

ஸ ச பூஜ்ய யதாஹ் யஹம் -ஸ்ரீ கருட புராணத்தில் -என்னை விட உயர்வாக எனது அடியார்களை பூஜிக்க வேண்டும் என்கிறான்
பூஜிக்காததுக்கு மேல் பாகவத அபசாரப்படுவது பெரும் குற்றம்

ஹிரண்யன் -பிரகலாதன் இடம் அபசாரப்பட்டதால் நரசிம்ஹன் கொண்ட சீற்றம் ப்ரஸித்தம்
அர்ஜுனன் பேரில் அம்பு பட்டதும் தானே திருமுகத்தில் ஏற்று பார்த்தசாரதியாக இன்றும் நாம் ஸேவிக்கும் படி அருள்கிறான்
ராவணன் -திருவடியிடம் அஸ்திரம் விட பெருமாள் கொண்ட சீற்றம் பிரசித்தம்

க்யாத -பிராஜ்ஞா -க்ருதஜ்ஞஸ் ச -ஸ அநு க்ரோஸஸ் ச ராகவ
ஸத் வ்ருத்த நிர் அநு க்ரோஸ சங்கே மத் பாக்ய சங்க்ஷ யாத்
–ஸூ ந்தர -26-11-என்று
புத்திமானும் -செய் நன்றி மறவாதவரும் –நன்னடத்தை உள்ளவரும் -கருணையும் உள்ளவருமான பெருமாள்
எனது விஷயத்தில் இரக்கமற்று மீட்க வராமல் இருப்பது எனது துர்பாக்யமே -என்று அவர் இடம் குற்றம் இல்லை -தன்னிடத்திலேயே குற்றங்கள் உள்ளன என்றும்
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி ந ஸம்சய –ஸூந்தர -38-6-என்று
அம்மான் அருகில் இருக்க அம் மானை வேண்டியது சிறிய குற்றம்
மஹாத்மாவான இலக்குமன் இடம் அபசாரப்பட்டது மஹத் குற்றம் –
ஆகவே பாகவத அபசாரம் இல்லாமல் வாழ்வோம்

—————

நாரீணாம் உத்தம வதா
லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமர்ஷிபி
-ரிஷிகள் கொண்டாடுகிறார்கள்
அவனது கல்யாண குணங்கள் நீறு பூத்த நெருப்புப் போலே நிரங்குச ஸ்வா தந்தயத்தாலே மூடி இருக்க புருஷனை புருஷனாக நடக்க வைப்பதே புருஷகாரம்
நம்மையும் அருளால் திருத்தி தைரியமாக முன் வரும்படி ஆக்கி அருள்கிறாள்

அவோசத் யதி தம் தத்யம் பவேயம் சரணம் ஹி வ –என்று கொடுமைகளையே செய்து கொண்டு இருக்கும் சரண் அடையாத ராக்ஷஸிகளைத் தானே காப்பாற்றுவேன் முன் வந்து வாக்களித்து
லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி -என்று ஆக்கி அருளினாள்

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம
கார்யம் தருணம் ஆர்யேண ந கஸ்சித் ந அபராத்யதி
–பிராட்டியுடைய சரம ஸ்லோகம்

———–

கை கூப்பி வணங்கி ஆகிஞ்சன்யம் காட்டி
கால்களை சேர வைத்து அநந்ய கதித்வம் காட்டி
உத்ப பாத கதா பாணி சதுர்ப்பிஸ் ஸஹ ராக்ஷசை -என்று வந்ததும்
ஏஷ ஸர்வ ஆயுதோ பேதஸ் சதுர்பிஸ் ஸஹ ராக்ஷஸை ராக்ஷஸோப் யேதி பஸ்யத்வம் அஸ்மாந்

ஹந்தும் ந ஸம்சய
கைகளைக் கூப்பிய அஞ்சலியைப் பார்த்தே இவ்வாறு சொன்னான்
அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதி நீ
விபீஷணனுக்கு கிட்டிய பேறு கூட வந்த தொண்டர்களுக்கும் கிட்டியதே
அடியார்களின் நிழல் போல் இருந்தால் பெருமானுடைய அருள் தன்னடையே நமக்கும் கிட்டும் –
ஏழு ஏழு தலைமுறைகளுக்கும் பேறு கிட்டும் அன்றோ –

———————-

முதலும் முடிவும்
அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் ஸத்ய பராக்ரமம் வஸிஷ்டோபி மஹா தேஜா –யே சேமே தபஸிஸ்திதா —

புலஸ்த்ய வம்சத்தில் பிறந்து கடுமையான தவம் புரிந்து நான்முகனிடம் வரங்களைப் பெற்றான்
விபீஷணன் -ஸத்வ குணம் உடையவன்
சூர்ப்பணகை -ரஜோ குணம் நிரம்பியவள்
கும்பகர்ணன் தமோ குணம் நிரம்பியவன்
ராவணன் ஸத்வ குணத்தை வெளிய தள்ளி ரஜோ குண தமோ குணங்களை அருகே வைத்துக் கொண்டான்

தச இந்த்ரியா நநம் கோரம் யோ மநோ ரஜநீ சரம் விவேக ஸர ஜாலேந சமம் நயதி யோகிராட்

ஜீவனுக்குக் கட்டுக்கு அடங்காத மனமே ராவணன்
பத்து இந்திரியங்கள் அவன் தலைகள்
விவேகம் என்னும் அம்பால் மனம் என்னும் அரக்கனை அழிக்கிறான்
மனதில் இருக்கும் தீங்குகளை போக்கி பெருமானிடம் சேர்க்க வேண்டும்

யாந்தி நியாய ப்ரவ்ருத்தஸ்யதிர்யஞ்சோபி சஹா யதாம் அபந்தாநம் து கச்சந்தம் ஸோதரோபி விமுஞ்சதி-என்று

ஸாஸ்த்ரம் படி நடந்தால் விலங்குகளும் துணை புரியும்
தவறான வழியில் நடப்பவனுக்கு உடன் பிறந்தவனும் விட்டு விலகுவான்

இவ்வாறு ஸ்லோகங்கள் தோறும் வேதாந்த உள்ளுறைப்பொருள்கள் நிறைந்தே இருக்கும் ஸ்ரீ ராமாயணம்

————-

வித்யா சர்வாபீ
வாக்ய விரோதம்
அகில ஸத் தர்மங்கள்
ஆத்யாத்மீக யாதாத்ம்ய ஞானம்
அர்த்தானாம் பஞ்சகம்
ஸ்ரீ ரகுபதி பரத்வம்

——–

வித்யா சர்வாபீ
வேதவடிவே ஸ்ரீ ராமாயணம் –சக்ரவர்த்தி திருமகன் -வால்மீகி குழந்தை -ஆறு அங்கங்களின் பெருமை சொல்லும்

சிஷா -உச்சரிப்பு -வியாகரணம்- சந்தஸ் -நிருக்தம் அகர முதலி -ஜ்யோதிஷம் –கல்பம் செயல்முறைகள்
அயோத்யா 91-22-சிஷா பெருமை -பரத்வாஜர் பாரத ஸேனைக்கு உணவு –

ஷீக்ஷாஸ்வரஸமாயுக்தஂ தபஸா சாப்ரவீந்முநிஃ৷৷2.91.22৷৷

ஸமாதிநா in profound meditation, அப்ரதிமேந incomparable, தேஜஸா ச with radiance, தபஸா ச with the power of penance, யுக்தஂ filled with, முநிஃ ascetic, ஷீக்ஷாஸ்வரஸமாயுக்தம் with accent in conformity with Vedic instruction, ஏவம் in this way, அப்ரவீத் said.

The valiant ascetic of incomparable lustre and power of penance in profound meditation said this in an accent in conformity with Vedic instruction.
மநஸா த்யாயதஸ்தஸ்ய ப்ராங்முகஸ்ய கரிதாஞ்ஜலேஃ.

ஆஜக்முஸ்தாநி ஸர்வாணி தைவதாநி பரிதக்பரிதக்৷৷2.91.23৷৷

தஸ்ய his, ப்ராங்முகஸ்ய facing east, கரிதாஞ்ஜலேஃ with folded palms, மநஸா in mind, த்யாயதஃ while meditating, ஸர்வாணி all, தாநி தைவதாநி those deities, பரிதக்பரிதக் one by one, ஆஜக்முஃ arrived.

ஆயாதாஷா –ஸர்வ பூஷண -நான்கு தோள்கள் கண்டு வியாகரணம் படி திருவடி -புகழ்ந்து பெருமாள் -கிஷ்கிந்தா 3-15-dual சொல்லாமல் pulural -சொல்லின் செல்வன் வாக்ய விரோதம்

மண்டோதரிக்கும் சங்கசக்ர கதாதரனாக காட்சி

அனுஷ்டுப் பெரும்பாலும் -பாதம் தோறும் எட்டு எழுத்துக்கள் –
வில்லைத் தள்ள 500 பேர்-வால்மீகி தூக்கி போக 60000 பேர் கம்பர்
உடைத்து பிரித்து -வத்ஸ ராம தனுஸ் பஸ்ய -ஸ்லோகம் –
நாண் ஏற்றினால் மட்டும் போதாதே -வார்த்தையை உடைத்தது போல் நீ உடைத்து வா -என்றாராம்

நிருக்தம்–dictionary-ரம்யதே ராம -மனதுக்கு இணையான -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -நற் செல்வன் -பரதன் -பழி என்னும்-பரிக்கும் சக்தன் -சத்ருக்கனன் -நித்ய சத்ரு –

காய்கறி திருத்துவது -பரிடம் திருத்துவது -வேறே வேறே
மஹா வ்ருக்ஷம் கள்ளிச்ச்செடி -விபரீத லக்ஷனை
அஸ்ய ராமஸ்ய -பஸ்யதி -ராமனுக்கும் இருக்கும் ராமனை ராவணா நீ பார்ப்பாய் -மனதுக்கு இனியானின் கோபத்தைப் பார்ப்பான்

ஜ்யோதிஷம்
ஜடாயு -ஆயுஷ்மன் -பெரிய உடையார் -சீதையுடன் சேர்த்து உய்ரிரையும் கொண்டுபோனான் -13 ஸ்லோகம் -விந்தோ முஹூர்த்தம் -காணாமல் போன பொருள் போனபடியே மாறுதல் இல்லாமல் திரும்பிக் கிடைக்கும்

கல்பம்
சந்த்யா காலத்தில் ஆரண்ய காண்டம் 7-24 -உண்ணக் கூடாது -சுஷீஷ்ணர் -ஸாஸ்த்ரம் படி நடந்து விருந்து பரிமாறினார் –

———–

வாக்ய விரோதம்
பாஹ்ய த்யஜனம்
விலகி நிற்க வேண்டும்
தசரதனை நிந்திக்காமல் -பெருமாள் –
ஒரே இடத்தில் -ஜாபாலி -அயோத்யா 109-சர்க்கம்-39-define பண்ணவே தெரியாத நாஸ்திகன் பகவான் இல்லை என்பது போல்

——–

அகில ஸத் தர்மங்கள்
சாதாரண தர்மங்கள் நிறைந்தவை
பாலகாண்டம் 77-33-பிரியா சீதை ராமஸ்ய -தாரா பித்ருகிருத -அப்பா ஐயர் பார்த்து திருமணம்
அத்ரி அநஸூயா -சீதா வார்த்தை –

அயோத்யா 72-48-பரதன் கைகேயி சம்வாதம் -ராமன் செய்த தப்புக்கள் என்ன –

ராமோ த்விர் ந பாஷயே
சத்யம் மீது சத்யம் செய்து சுக்ரீவன் இடம்

பொய் சொன்னால் அத்தை நாம் காப்பாற்ற வேண்டும்
மெய் சொன்னால் அது நம்மைக் காக்கும்-ஜடாயு மோக்ஷம் -சத்யான் லோகான் ஜயதி

ஆத்யாத்மீக யாதாத்ம்ய ஞானம்
திருவடியே ஆச்சார்யர் -கடக க்ருத்யம் -ராவணன் மனஸ் -10 இந்திரியங்கள் -இலங்கை -ஸம்ஸாரம்-முக்குணங்கள் விபீஷணன் கும்பகர்ணன் சூர்ப்பணகை-அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவவில்லையே

அர்த்தானாம் பஞ்சகம்
மிக்க இறை நிலையும் இத்யாதிகளை நன்கு காட்டும்-காண்டம் தோறும் அர்த்தபஞ்சகம்
வில் வில்லனாக -பராக்ரமத்தால் -உடைத்து -சேர்த்துக் கொள்கிறான்-அயோத்யாகாண்டம் -பரதனின் கைங்கர்யத்துக்கு விரோதி கைகேயி வரன்கள் -சரணாகதி -பாதுகையே பெற்று -ஆரண்யகாண்டம் -ரிஷிகளை ரக்ஷித்து -கரதூஷணாதிகளை அழித்து -கிஷ்கிந்தா ஸுக்ரீவன் தனக்கு ராஜ்ஜியம் வாலி தடை -போக்கி -ஸூந்தர -அஞ்சிலே ஓன்று பெற்றான் -யுத்த காண்டம் -ராவணனை அழித்து -ஆச்சார்யர் பரிந்துரை –

ஸ்ரீ ரகுபதி பரத்வம்
ஸூந்தர 38-33-காகாஸுரன் -வ்ருத்தாந்தம் ஓடினால் பாணமுமோடி நின்றால் நின்று திரு உள்ளபடி –

51-45 ஸ்லோகம் திருவடி உபதேசம் ராவணனுக்கு -சர பலம் வர பலத்தை விட -நான்முகன் முக்கண்ணன் இந்த்ர மஹேந்த்ரனை விட உயர்ந்தவன்
தோலாத தனிவீரன் –
பிறக்க பிறக்க தேஜஸ்ஸூ விஞ்சி –

வேத பெருமை -பாஹ்ய விலகி -ஸத் தர்மம்-செய்து -ஆத்யாத்மீக ஞானம் பெற்று -அர்த்த பஞ்சகம் உணர்ந்து பரத்வம் இவனே என்று -புரிந்து செய்வதை மேல் பார்ப்போம்

சரணாகதிக்கு முன்பு வேண்டிய யாரையும் கீழே சொல்லி
மேல் பிரபத்தி -ஸ்ரீ ராமாயணம் சரணாகதி சாஸ்திரம் தானே
காண்டம் தோறும் உண்டே
லஷ்மண சரணாகதியை விட ராமானுஜ சரணாகதிக்கு ஏற்றம் அனைத்து உலகும் வாழப்பிறந்த யாத்திராசர் அன்றோ
பரத சரணாகதி மும்மடங்கு பலித்ததே -பாதுகா பட்டாபிஷேகம் -பின்பு ராம ஆலிங்கனம் -மடியில் வைக்கப்பெற்றான் -அயோத்யா புல் எறும்பு முதலாக வைகுந்தம் ஏற்றியதும் பரதன் அனைவரையும் கூட்டிச் சென்று சரணாகதி செய்த பலன்

7 ரஹஸ்யம் சரணாகதி
8- வாழ்வின் லக்ஷணம் -கைங்கர்ய பிரார்த்தனை -புமர்த்த-அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -ஆரண்யம் 15-29- பிதா மம -பெருமாளே கொண்டாடும் படி-சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே-

9-சேஷத்வம்–அவனது உகப்புக்காகவே -களை அற்ற கைங்கர்யம்
10-பாரதந்தர்யம்–ஸ்ரீ பாதுகா தேவி பூர்ண த்ருஷ்டாந்தம்
11-தத் அவதி-ததீய பர்யந்தம் சேஷத்வம்-ததீய பர்யந்தம் பாரதந்தர்யம்-12- அகதித்வம்

13-விரக்தி–உறங்கா வில்லி -கைங்கர்ய பிரதிபந்தகங்கள் போக வேண்டுமே
14-ஆச்சார்ய கடாக்ஷம் அறிதல் -குரோர் க்ருத்யம்–சபரி மோக்ஷ சாக்ஷி பூதராகப் பெருமாள்
15-ஸ்ரீ பார்ஸ்யம்
16-நிர்பரத்வம் நிர்பயோஸ்மு
17- ஸூ வஸதி -இருப்பிடம்
18-எதிர்பார்த்து வாழ வேண்டியது

வாழ்க்கை நடைமுறை விளக்குவதே ஸ்ரீ ராமாயணம் -முதல் அடியில் இழியவே மேல் மேலே கூட்டிப்போகுமே

———-

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே –
37-

ஸ்ரீ ராமாயணத்தை பக்தி சாகரம் என்றது நிரவதிக பக்தி ஜனகத்வத்தாலே-ஸ்ரீ வால்மீகி மலை -ஸ்ரீ ராமர் குணங்கள் கடல் -தேக்கி வைப்பது ஸ்ரீ ஸ்வாமி உள்ளத்தில் –
பக்தி ரசம் அறிந்து -தானே சுற்றம் எல்லாம் பின் தொடர்வது போலே சுயமாகவே அனுபவித்தார் –

சத்ய லோகத்தில் நின்றும் பிரம்மாவும் தாதர்சரான நாரத பகவானும் பூலோகத்தில் வந்து- வால்மிகியைக் குறித்து நியமித்தும்
உபதேசித்தும் போருகையாலே -இதனுடைய கீரத்தி ஊர்த்த லோகங்களிலும் இறே பிரசித்தமாய் இருப்பது

ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் –
காவ்யம் ராமாயணம் க்ரிச்னம் ஸீதாயாஸ் சரிதம் மஹத் – என்று இருந்தாலும்
யச்யைதே தஸ்ய தத்தனம் -என்கிற கட்டளையாலே அவளுடைய சம்பத் எல்லாம் சேஷியானவனது-ஆகையாலே
ராம விஷயமாய் இருக்கும் என்று சொல்லத் தட்டில்லை -இறே
தாசர்தமான ராமாயணம்-என்கிற கரை புரண்ட பக்தி ரசத்தை -இதில் பிரதிபாத்யமாய் இருந்துள்ள அர்த்தத்தை
பக்தி ரசம் என்று சொல்ல வேண்டி இருக்க-இது தன்னையே பக்தி வெள்ளம் என்றது –
தத் குண சாரச்யாத்து தத் வ்யபதேச -என்றால் போலே அதுக்கு உத்பாதகம் ஆகையாலே –
ஏகைகம ஷரம் ப்ரோக்தம் மகா பாதக நாசகம் -என்ற பிரகாரத்திலே
அர்த்த பர்யந்தம் போக வேண்டி இராதே-சப்த ராசி தானே ரசித்து இருக்கும் என்னுதல்
இப்படி பட்ட பக்தி தான் அங்கே ஆஸ்ரயித்து இருக்கும் நாங்கள் அத்தை பெருகைக்கு என் என்றால்

படி கொண்ட கீர்த்தி –
படி-
ஏனைய உலகங்களுக்கும் உப லஷணம்
பிரமனால் நூறு கோடிப் பிரபந்தமாக இராமாயணம் இயற்றப் பெற்று உம்பர் உலகில் பரவி இருப்பதாகவும் –
அதுவே நாரதர் வாயிலாக வால்மீகிக்கு வந்ததாகவும் சொல்லப் படுவது காண்க –
இனி
படியிலே கீர்த்தி கொண்ட இராமாயணம் என்று கூட்டி –
மற்ற முனிவர்கள் இயற்றிய-இராமாயணங்களை விட பிரசித்தி பெற்ற ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தை கூறிற்றாகவுமாம் –

இராமாயணம்-என்னும் பக்தி வெள்ளம் –
அளவற்ற பக்திப் பெருக்கிற்கு காரணமாகிய ஸ்ரீ இராமாயணத்தை -பக்தி வெள்ளம்-என்கிறார் –
இனி ஸ்ரீ வால்மீகி முனிவருடைய ஸ்ரீ ராம பக்தி உள் அடங்காது வெளிப்பட்டமை பற்றி -பக்தி வெள்ளம் –என்றார் ஆகவுமாம்-
வெள்ளம்-பிரவாஹம்
வால்மீகி கிரி சம்பூதா ராம சாகரகாமி நீ
புனாதி புவனம் புண்யா இராமாயண மகா நதீ–என்று
ஸ்ரீ வால்மீகி என்னும் மலையில் தோன்றி ஸ்ரீ இராமாபிரான் என்னும் கடலை நோக்கி செல்லும்
ஸ்ரீ இராமாயணம் என்னும் புண்ணிய நதி உலகத்தை சுத்தம் ஆக்குகிறது -என்று வெள்ளமாக-
ஸ்ரீ இராமயணத்தை முன்னோர் உருவகம் செய்து உள்ளமை காண்க –
இனி
வெள்ளம் -கடலுமாம் –
வெள்ளத்தின் உள்ளானும் – 99- என்று பொய்கை ஆழ்வாரால் கடல்-வெள்ளமாக சொல்லப்பட்டமை காண்க –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்வ கல்லோல சங்குலம்-காண்டாக்ராஹா மகாமீனம் வந்தே இராமாயண ஆர்ணவம் -என்று
ஸ்லோகங்களின் சாரத்தினால் நிறைந்ததும்
சர்க்கம் என்கிற அலைகள் நெருங்கினதும்
காண்டம் ஆகிற முதலையாம் பெரு மீன்கள் உடையதுமான
ஸ்ரீ இராமயணமாம் கடலினை வந்திக்கிறேன் -என்று ஸ்ரீ இராமாயணம் கடலாக உருவகம் செய்யப்பட்டு உள்ளமையும் காண்க –

வெள்ள நீர் சடையன் -வெள்ளம் தண்ணீர் பக்தி வெள்ளம் -உருகி நைந்து ஈரமான நெஞ்சம் -என்றுமாம்

குடி கொண்ட-கோயில் இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானாரே ஒரு கோயிலாக அவர் திரு உள்ளத்தை ஒரு ஷணம் பிரியாதே இவ்விடமே-குடியாக நித்ய வாசம் பண்ணி இருந்தது-
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மா இரும் சோலை என்னும் பொருப்பிடம்-மாயனுக்கு என்பர் நல்லோர் –
ஏதத் பிரதி பாத்யனான பரமபுருஷனுக்கு அவை எல்லாம் கோயில்கள் ஆமாப் போலே
தத் பிரதிபாதகமான ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி பிரவாஹத்துக்கு இவரும் ஒரு கோயிலாக காணும் இருப்பது –

இராமானுசன் –
அந்த ஸ்ரீ ராம அவதாரத்தில் திவ்ய தம்பதிகள் விஷயமாக சர்வவித கைங்கர்யங்களையும் பண்ணி-
வயிற்றைப் பெருக்கி பக்தியினுடைய ரசம் அறிந்தவர் இறே எம்பெருமானாராய் அவதரித்தது

குடி கொண்ட கோயில் இராமானுசன் –
பள்ளத்தாக்கான இடங்களில் வெள்ளம் கோத்து நிற்பது போலே எம்பெருமானாரது ஆழமான நெஞ்சத்தில்
ஸ்ரீ இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் புகுந்து புகுந்து தேங்கிக் குடி கொண்டது –
ப்ரேமேயத்துக்கு கல் அரணாய் அமைந்த கோயிலே போதும் –
பிரமாணத்துக்கோ அறிவார்ந்த ஸ்ரீ எம்பெருமானாரே அரணாக அமைய வேண்டி இருக்கிறது –
பிரமாணம் அல்லது பிரமேயம் சித்தி யாமையாலே பிரபல பிரமாணமான ஸ்ரீ இராமாயணத்துக்கு
கல் அரணாம் கோயிலாக ஸ்ரீ எம்பெருமானாரே அமைகிறார் –
ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தம் இராமாயணத்தில் பொதிந்து கிடக்கையாலே அந்த சித்தாந்தத்தை ஸ்ரீ எம்பெருமானாரே-பாதுகாக்கின்றார் -என்க –

ஸ்ரீ இராமாயணமும் ஸ்ரீ திருவாய் மொழியும் ஆகிற வலியன இரண்டு மகா பிரபந்தங்கள் உண்டாய் இருக்க –
ஒரு மதிளை இடித்து விட்டால் அந்த வைஷ்ணவ சித்தாந்தம் குலைந்து விடுமா –
என்று ஸ்ரீ வைணவ கோயில்களை இடித்த குலோத்துங்க சோழனின் மகன் கூறியதாக -10 7-5 – – ஈட்டில்-காணப்படுகிறது –
உகவாதாரும் நெஞ்சு உளுக்கும்படி ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தமான பக்தியை புகட்டும் ஸ்ரீ இராமாயணத்தை-
சித்தாந்த ஸ்த்தாபகராகிய ஸ்ரீ எம்பெருமானார் கோயிலாக பாதுகாப்பது பொருத்தமாக இருக்கிறது அன்றோ –
மற்று ஒரு சித்தாந்த சாஸ்திரம் ஆகிய ஸ்ரீ திரு வாய் மொழியை பேணி வளர்த்து காப்பது போலே-
ஸ்ரீ இராமயணத்தையும் அவர் பேணி வளர்த்து காக்கின்றார் -என்க

ஸ்ரீ திருவாய் மொழியில் –கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ – 7-5 1- -என்று நம் ஆழ்வார்-அருளி செய்ததை
பின்பற்றி ஸ்ரீ எம்பெருமானார் இராமாயணத்தை எப்போதும் நெஞ்சில் வைத்து-அனுசந்திப்பார் ஆயினர் –
மற்றைய அவதார சரித்ரங்களை ஸ்ரீ இராம சரித்ரித்தற்கு போலியாகவே நினைத்து அருளுவர் –
ஸ்ரீ கண்ணன் இடம் காதல் கொண்டவள் ஆயினும் ஸ்ரீ ஆண்டாள்-மனதிற்கு இனியான் –என்று ஸ்ரீ இராமனைக்-குறிப்பிடுகிறாள் அன்றோ –
ஸ்ரீ பெரும்புதூர் மா முனிக்கும் அவர்க்கு பின்னானாளுக்கும் ஸ்ரீ இராமன் திறத்து-ஒரே மனப்பான்மை தான்-
ஸ்ரீ இராமாயணத்தை இடைவிடாது அனுசந்திப்பதனால் இவரிடம் பக்தி கரை-புரண்டமை பற்றி –
ஸ்ரீ இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் -குடி கொண்ட கோயில்

ஸ்ரீ இராமானுசன் பக்தி வெள்ளம்-குடி கொண்ட கோயில் இராமானுசன் என்றதாகவும் கொள்ளலாம் –
பக்தி வெள்ளத்தை சுவை மிகுதி பற்றி –அமுத வெள்ளமாக -குறிப்பிடுகிறார் –
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவாசிரியத்திலே -இராம சரித்ரத்தை இடைவிடாது-அனுபவித்து பக்தி யாகிற அமுத வெள்ளத்தானாம்
சிறப்பு விட்டு நல் வீடு பெறினும் கொள்வது எண்ணாது அதனைப் புறக்கணித்தார் சிறிய திருவடி –

பக்தி வெள்ளம் எனப்படும் இராமாயணமாம் கடல் -சுவை மிக்கு இருத்தலின் ஸ்ரீ இராமானுச முனிவரின்-உள்ளத்திலேயே குடி கொண்டது –
அகஸ்த்ய முனிவரது உட் புகுந்த உப்பு வெள்ளம் அங்கே குடி கொள்ள-முடிய வில்லை -அகஸ்தியர் அதனை உமிழ்ந்து விட்டார் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அத்ருப்தச்தம் முனிம் வந்தே ப்ராசேதச மகல்மஷம் -என்று
எவர் எப்பொழுதும் ராம சரித்ரம் ஆகிய அமுதக்கடலை குடித்தும் -போதும் என்று திருப்தி அடையாது இருக்கிறாரோ –
குற்றம் அற்ற அந்த வால்மீகியை வணங்குகிறேன் -என்றபடி வால்மீகி போலே
ஸ்ரீ எம்பெருமானாரும் பக்தி அமுதக் கடலை குடித்து தெவிட்டாதவர்-என்க –

இனி கோயில் இராமானுசன்
என்பதற்கு கோயிலில் -ஸ்ரீ ரங்கத்தில் -வாழும் இராமானுசன் என்று-பொருள் ஆகவுமாம் –
இதனால் ஸ்ரீ அயோத்தியில் வாழ்ந்த ஸ்ரீ இராமானுசனை -ஸ்ரீ இளைய பெருமாளை -விலக்குகிறது
ஸ்ரீ கோயில் அண்ணன் -என்று ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்ததற்கு இது பொருந்தி இருப்பது காண்க –

கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ-ஸ்ரீ ஆழ்வார் -ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்-
சகல கல்யாண குணங்களை கொண்டவர் ஸ்ரீ ராமனும் ஸ்ரீ சுவாமியும்.
ஏசல் உத்சவம் பக்தி உலா நடை – ஸ்ரீ ராமன் சந்நிதி முன் நடந்து கற்றவர் இடம் நடந்து காட்டுவார்-ஸ்ரீ ஸ்வாமி இன்றும்
ஸ்ரீ பெரும் தூரில் -காண கண் கோடி வேண்டும்
ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி மூலமும் ஸ்ரீ ராமாயணம் மூலம் கண்டு ஸ்ரீ ராமனைக் கற்றார் .
காட்டிக் கொடுத்த ஸ்ரீ ராமாயணத்தையே நெஞ்சில் கொண்டார்.
நாயகனாய்-ஸ்ரீ ராமனுஜரையே ஸ்ரீ ஆண்டாள் அருளுவதாக சொல்வர்
அடியவர் துன்பம் துடைக்கும் நாயகன்-10 லஷண்யங்களை ஸ்ரீ வால்மீகி அருளுகிறார் ஸ்ரீ ராமனுக்கு –
அனைத்தும் ஸ்ரீ சுவாமி -பக்கல் காணலாமே
முதல்-உயர்குடி பிறப்பு ..ஷத்ரிய குல கொழுந்து சூரிய குல திவாகரன் –விவஸ்வான் மனு.28 சதுர் யுகம் முன்-
கேசவ சோமயாஜுலு பிராமணர்-/பிர பன்ன குலம்-ஸ்வாமி
2-சாமுத்ரா லஷணம்- திரு மேனி அழகு .மூன்று பதக்கம் கோவில் பெருமாள் திருமலை செல்ல பிள்ளை
3-ராஜா சார்வ பௌமன்- மகா பாக்யசாலி- கருவிலே திரு உடன்
4-யதி சார்வ பௌமன் /வாரி வழங்கும் தன்மை–
கோ தானம் கதை -கொடுக்கும் பொழுது பிராமணர் கேட்க தடி எறிய சொல்லி-ராமன் சிரிக்க-அது பசு மாடு கொடுத்தது போல
இவரோ காப்பேன் சொன்னார் -இவரோ பின் படரும் குணன் பார்த்தோம்
5-தேஜஸ்வீ -வனம் சோபை அடைந்தது. பெருமாள் தண்ட காரண்யம் வந்ததும்
ஸ்வாமி -உள் இருட்டே போக்கினாரே -ராமானுஷ திவாகரன்
6 வைதப்யம் -எதை எப்பொழுது செய்யணும் அதை அவர் மூலம் நடத்தும் தன்மை-விரோதி நண்பன் என்றதால் வாலி இடம் வர வில்லை என்று
பிள்ளை உறங்கா வல்லி தாசரை அழகிய கண்களை பெரிய பெருமாளையே காட்ட சொல்லி திருத்தினார் சுவாமி-அப்பொழுது ஒரு சிந்தை செய்தே –
7-தார்மிகத்வம் -நேர்மை கிருபை-விருத்தி கிரந்தம் பார்த்தே எழுத –பிரமாண்யத்தில் உள்ள ஊற்றம்
8-தெய்வ தன்மை– பவான் நாரயனோ தேவ -ஸ்வாமியும் .அடையார் கமல கேள்வன் -ராமானுஜ முனி ஆயின
9 –பாண்டித்வம் -ஐந்து ஆச்சார்யர் –ஜைனர்களை வென்ற பாண்டித்தியம்-யாதவ பிரகாசர் போன்றோரை வென்ற
10- விநயம் உடையவர் -விச்வமித்ரர் இடம் இருவரையும் ஏவி பண்ணி கொள்ள சொல்லி–
ஸ்வாமி யும் கோஷ்டி கடைசியில் தீர்த்தம் வாங்கி கொண்ட வினயத்வம்

————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகி மற்றும் சில ராமாயணங்கள் 

March 19, 2024

கம்பரே ஆதிகவியாகிய வால்மீகியை வணங்கி, வால்மீகியைப் பின்பற்றியே தாம் இராமாயணம் எழுதுவதாகக் கூறியுள்ளார், பாயிரத்தில் –

தேவ பாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம் உளும் முந்திய
நாவினார் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு. அரோ.

———-

தாய்லாந்தில் ராமகதை வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டை அடுத்தடுத்து ஆளும் அரசர்களின் பெயர்கள் *ராம* என்ற விகுதியுடன் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்தடுத்து தாய்லாந்தினை அரசாண்ட பல மன்னர்களும் ராமகதையை அதிவிஸ்தாரமாக பற்பல நூற்களாக எழுதியுள்ளனர். தாய்லாந்து தேசத்திய ராமகதை ராமகீன் (Ramakien…….story of rama) என்றும் ராமகீர்த்தி (Ramakirti …… the glory of Rama) என்றும் அழைக்கப்படுகிறது. தாய்லாந்தில் ராமன் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறான். தாய்லாந்தில் விஷ்ணு சிவபெருமானுக்கு அதீனமான தேவனாகக் கருதப்படுகிறார் 

வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படும் முனிவரான ரிஷ்யச்ருங்கர் கம்பராமாயணத்தில் களைக்கோட்டு முனிவர் என்று குறிப்பிடப்படுகிறார். தாய்லாந்து ராமாயணம் கம்பராமாயாணத்திலிருந்து கரந்துரையப்பட்டதால் அந்த ராமாயணத்தில் இந்த முனிவரின் பெயர் களைக்கோட்டு என்ற பெயரிலேயே காணப்படுவது

கம்பராமாயணம் ராம பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகையில் ……… தாய்லாந்திய ராமாயணம் மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் நிகழ்வுப் பட்டியலை ஒட்டி உத்தரராமாயணத்துடன் நிறைவு பெறுவதையும் கவனிக்காது போக முடியவில்லை.

————

ஹிந்தியில் ராமசரிதமானஸ் எழுதிய துளசிதாசர், கன்னடத்தில் ராமாயணம் குறித்த எழுதிய நவீன காலத்திய கவிஞர் எழுத்தாளருமான குவெம்பு போன்றோர் அனைவரும் ஆதிகவி வால்மீகியின் வழியே தாங்கள் செல்வதாக எழுதியிருக்கிறார்கள்.

பால காண்டம் மற்றும் உத்தரகாண்டம் இவையிரண்டில் மட்டிலும் ராமபிரான் விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டப்படுகிறார். இரண்டாம் காண்டம் முதல் ஆறாம் காண்டம் வரை பொதுவிலே தீரம் மிக்க கதாநாயகனாகவும் மனிதனாகவுமே ராமபிரான் காட்டப்படுகிறார். இந்தப் பகுதிகளிலும் சில இடங்களில் ராமபிரான் விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டப்படுகிறார் என்பது வாஸ்தவம் தான்

—————-

மஹாபாரதத்தில் நான்கு இடங்களில் ராமகதை சொல்லப்படுகிறது

  1. ஆரண்யக பர்வத்தில் காணப்படும் ராமோபாக்யானம் (ராமகதை)
  2. ஆரண்யக பர்வத்தில் காணப்படும் ஹனுமத் – பீம சம்வாதம் (உரையாடல்)
  3. த்ரோண பர்வத்தில் காணப்படும் ஷோடசராஜோபாக்யானம் ( பதினாறு ராஜாக்களைப் பற்றிய கதைகள்)
  4. சாந்திபர்வத்தில் காணப்படும் ஷோடசராஜோபாக்யானம்

வனவாசத்தில் இருக்கும் தர்மபுத்ரருக்கு ராமகதை சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் மிகவும் கஷ்டதசையில் இருப்பவர்கள் அது போன்று கஷ்டம் அனுபவித்த வேறு மாந்தர்கள் சுகத்தையும் எதிர்காலத்தில் அனுபவிப்பார்கள் என நம்பிக்கை தரும்படிக்காக இந்த சூழ்நிலையில் ராமகதை சொல்லப்படுகிறது. ஆகையால் இங்கு சொல்லப்படும் ராமகதை ராமபட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது. ஆயினும் விஷ்ணுவின் அவதாரமாக ராமபிரான் தேவர்கள் துயர்நீக்க அவதரிப்பது சித்தரிக்கப்படுவதும் ராக்ஷஸர்களின் பூர்வ சரித்ரம் சொல்லப்படுவதும் ராமாயண காவ்யத்தின் பாலகாண்டம் மற்றும் உத்தரகாண்டத்தில் சொல்லப்பட்ட பகுதிகளை உள்வாங்கியமையை துலக்குகிறது. இந்த மஹாபாரதமென்னும் இதிஹாசத்தைப் படைத்தவருக்கு, அந்த இதிஹாசம் படைத்த காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த ராமகதை உள்ளது உள்ள படிக்கு விபரங்கள் பகிரப்பட்டுள்ளன என்பதும் புலனாகிறது.

பீம ஹனுமத் சம்வாதத்தில் ஹனுமான் ராமபிரானிடம் ராமகதை புழக்கத்தில் உள்ள வரை ராமபிரான் புவியில் வாழ வேண்டும் என ப்ரார்த்தித்துக்கொள்வது உத்தரகாண்டத்தில் வரும் நிகழ்வை படம் பிடிக்கிறது.

யாவத்3ராம கதா2வீர ப4வேத் லோகேஷு சத்ருஹன்
தாவஜ்ஜீவேயமித்யேவம் ததாஸ்த்விதி ச ஸோ(s)ப்3ரவீத்
(மஹாபாரதம் – III – 147/37)

யாவத்3ராமகதா2ம்வீர ச்ரோஸ்யே(s)ஹம் ப்ருத்வீதலே
தாவச்சரீரே வத்ஸ்யந்து மம ப்ராணா ந சம்சயா
: (ராமாயணம் – உத்தரகாண்டம் – 39/16) – (கோரக்பூர் பதிப்பின்படி சர்க்கம் ஒத்துப்போகவில்லை)

சாந்திபர்வத்து ஷோடசராஜோபாக்யானம் ராமபிரான் பதினோராயிரம் வருஷம் ஆட்சி புரிந்ததாகச் சொல்கிறது.

த3சவர்ஷஸஹஸ்ராணி த3சவர்ஷசதானி ச
ராஜ்யம் காரிதவான் ராமஸ்ததஸ்து த்ரிதிவம் க3த:
(ம.பா XII – 29-54)

தசவர்ஷஸஹஸ்ராணி தசவர்ஷசதானி ச
ராமோ ராஜ்யமுபாஸீத்வா ப்3ரம்ஹலோகம் க3மிஷ்யதி
( ராமாயணம் – உ.கா – 1/76)

த்ரோணபர்வத்து ஷோடசராஜோபாக்யானத்தில் ராமபிரான் தனது தேசத்தை எட்டு பாகங்களாக விபாகம் செய்து அதனை தன் மகன்களான குச லவர்களுக்கும் தன் தம்பி மார்களுடைய மகன் களிடையேயும் ஒப்படைக்கும் விஷயம் சொல்லப்படுகிறது.

இவையாவும் ராமாயண காவ்யத்தில் உத்தர காண்டத்தில் சொல்லப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

——————

ரங்கநாத ராமாயணம்

ரங்கநாத ராமாயணம் என்பது தெலுங்கு மொழியில் கிபி 1300 முதல் கிபி 1310 வரையிலான காலகட்டத்தில் கோனா புத்தா ரெட்டி என்றும் அழைக்கப்படும் கவிஞர் ரங்கநாதரால் எழுதப்பட்ட வால்மீகி ராமாயணத்தின் பிரபலமான தழுவலாகும். தெலுங்கில் உள்ள ராமாயணத்தின் நான்கு பதிப்புகளில் இது ராமாயணத்தின் முழு கருப்பொருளையும் உள்ளடக்கியது. ராமரால் ஆசிர்வதிக்கப்பட்ட அணிலின் கட்டுக்கதையை பெரும்பாலான மக்கள் கேட்டிருப்பார்கள். ரங்கநாத ராமாயணத்தில் தான் இந்தக் கட்டுக்கதை உருவானது. 

ராமரின் வானவர் சேனை இலங்கைக்கு செல்வதற்கு பாலம் கட்டும் போது, ​​அவர்களின் முயற்சிக்கு ஒரு அணிலும் தன் பங்களிப்பை அளித்தது. நன்றியின் அடையாளமாக, ராமர் தனது விரல்களால் அதன் முதுகில் மூன்று கோடுகளை வரைந்து அதை ஆசீர்வதித்தார். இந்த பதிப்பு 17,290 வசனங்களைக் கொண்டுள்ளது மற்றும் அறிஞர்கள் மற்றும் பொது மக்களால் போற்றப்படுகிறது.

————-

காகவின் ராமாயணம்

இது அசல் ராமாயணத்தின் பழைய ஜாவானிய கவிதை விளக்கமாகும் மற்றும் ஜாவானிய மக்களால் இந்தோனேசியாவில் கலை வெளிப்பாட்டின் உச்சமாக அறியப்படுகிறது. காகவின் என்பது இந்து சமஸ்கிருத இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட மீட்டர்களைக் கொண்ட ‘காவ்யா’வின் ஜாவானிய பதிப்பாகும். இது ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேடாங் வம்சத்தின் ஆட்சியின் போது இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட ஏராளமான கையெழுத்துப் பிரதிகள் மூலம் அதன் பிரபலத்தை அளவிட முடியும். அசல் ராமாயணத்தைப் போலல்லாமல், இந்தோனேசியப் பதிப்பில், ஹனுமான் வானரர்களின் ராஜாவாகப் போற்றப்படுகிறார், பாலி அல்லது சுக்ரீவ் அல்ல. 

———————

ரீம்கர்

ரீம்கர் என்பது காவியமான ராமாயணத்தின் கம்போடிய பதிப்பு. ரீம்கர் என்ற வார்த்தையின் நேரடி அர்த்தம் “ராமின் மகிமை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ரீம்கர் என்பது கம்போடியாவின் தேசிய காவியம் மற்றும் அதன் பழமையான குறிப்பு 17 ஆம் நூற்றாண்டிலிருந்து ஜாதகாவின் கதைகளின் அடிப்படையில் பாறைக் கல்வெட்டுகளின் வடிவத்தில் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அசல் ராமாயணத்தைப் போலவே, இது அதே கதாபாத்திரங்களைக் கொண்டுள்ளது, ஆனால் அவற்றின் கம்போடிய பெயர்களுடன்: ஃபிரே ராமா, நியாங் சேடா மற்றும் க்ராங் ரீப், முறையே ராம், சீதா மற்றும் ராவணனைக் குறிக்கிறது. இது வால்மீகியின் ராமாயணம் போன்ற நீதி மற்றும் விசுவாசத்தின் உலகளாவிய கருப்பொருளைக் கையாள்கிறது. இருப்பினும், ரீம்கரின் மிகவும் சுவாரஸ்யமான அம்சம், ஹனுமான் தனது பயணத்தின் போது சந்திக்கும் தேவதையான சோவன்னா மச்சா போன்ற சில புதிய கதாபாத்திரங்களைச் சேர்ப்பதாகும். 

உலகின் மிகப் பெரிய இந்துக் கோயில்களில் ஒன்றான அங்கோர் வாட்டில் ரீம்கரின் காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஓவியங்கள் உள்ளன. இந்த முக்கிய கம்போடிய காவியம் அதன் உரை வடிவத்திற்கு மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் நடனம்-நாடகம், இசை மற்றும் சிற்பங்கள் போன்ற கலையின் பிற பிரதிநிதித்துவங்களாகவும் உள்ளது.

———-

ராமாயணத்தின் பிராந்திய பதிப்புகள்

மேற்கூறிய பதிப்புகளைத் தவிர, இந்தியாவில் காவியமான ராமாயணத்தின் சில முக்கிய பிராந்திய பதிப்புகளும் உள்ளன. கிருட்டிவாசி ராமாயணம் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான பெங்காலி பதிப்பு 15 ஆம் நூற்றாண்டில் கிருட்டிபாஸ் ஓஜாவால் இயற்றப்பட்டது. இதேபோல், சப்தகண்ட ராமாயணம் எனப்படும் அசாமிய பதிப்பு 14 ஆம் நூற்றாண்டில் மாதவ கந்தலியால் இயற்றப்பட்டது. கேரளாவில், 12 ஆம் நூற்றாண்டில் சீராமனால் ராமசரிதம் என்றழைக்கப்படும் நீடித்த மலையாளக் கவிதைப் பதிப்பு எழுதப்பட்டது.

 இந்த பதிப்புகளின் உள்ளார்ந்த கதைக்களம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் அதே வேளையில், எழுத்தாளர்கள் மற்றும் கதைசொல்லிகள் ராமரின் புகழ்பெற்ற கதையை தங்கள் மொழியில் மொழிபெயர்ப்பதை விட, அவர்களின் கலாச்சார சுழற்சியைக் கொடுத்து மறுபரிசீலனை செய்துள்ளனர். அவர்கள் தங்கள் தனித்துவமான நுண்ணறிவுகளைச் சேர்த்துள்ளனர், இது இந்த காவியப் படைப்பை வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் உதவியது

———-

ஜைன ராமாயணங்கள் :-

ப்ராக்ருதத்திலும் மற்றும் சம்ஸ்க்ருதத்திலும் 15க்கும் மேற்பட்ட ஜைன ராமாயண நூற்கள் கிட்டுவதாக டாக்டர் ஜேக்கபி அவர்களுடைய நூலின் வாயிலாகத் தெரிகிறது. மூன்று ஆசிரியர்களின் வெவ்வேறு கதைகளை ஒட்டி இவை சமைக்கப்படதாக ஸ்ரீ ஜேக்கபி கூறுகிறார். ஸ்ரீ விமலசூரி, ஸ்ரீ குணபத்ரர் என்ற இருவரின் வெவ்வேறான கதைகள் ஆனாலும் அவையல்லாமல் ஸ்ரீ சங்கதாஸர் மற்றும் ஸ்ரீ ஹரிஸேனருடைய வேறான மூன்றாவது கதைகள் ஜின ராமாயணக் கதைகள் .

ஸ்ரீ சங்கதாஸர் மற்றும் ஸ்ரீ ஹரிஸேனர் இருவருடைய ராமாயணக் கதைகள் ஆதிகவி ஸ்ரீ வால்மீகியின் ராமாயணக் கதைகளை பெரும்பாலும் ஒட்டியவை என்றும் மற்ற இருவருடைய கதைகளும் ஆதிகாவ்யமான ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திலிருந்து வேறுபடுவதாகவும் கூறுகிறார். ஸ்ரீ விமலசூரி மற்றும் பிந்தையவர்களது ராமாயணம் ப்ராக்ருதத்திலும் குணபத்ரருடைய ராமாயணம் சம்ஸ்க்ருதத்திலும் இயற்றப்பட்டுள்ளது.

ராமாயண கதாபாத்ரங்களை அடக்கியுள்ளது என்றாலும் ஜைனக் கோட்பாடான த்ரிஷஷ்டி சலாக புருஷர்கள் (அறுபத்து மூன்று சான்றோர்கள்) என்ற கோட்பாட்டினை ஒட்டி ஜைன ராமாயணக்கதை பௌமாசர்யத்தில் சமைக்கப்படுகிறது. 24 தீர்த்தங்கரர்கள், 12 சக்ர்வர்த்திகள், 9 பலபத்ரர்கள், 9 வாஸுதேவர்கள் மற்றும் 9 ப்ரதிவாஸுதேவர்கள் என்று அறுபத்துமூவர் காலசக்ரத்தில் திரும்பத் திரும்பத் தோன்றி தர்மத்தை நிலைநாட்டுவர் என்பது ஜைனக்கோட்பாடு. வாஸுதேவர்கள் ப்ரதி வாஸுதேவர்களை அழிப்பவர் என்பதும் ஜைனக்கோட்பாடு.

ராமர் பலபத்ரராகவும் லக்ஷ்மணன் வாஸுதேவனாகவும் ராவணன் அவனால் அழிக்கப்பட வேண்டிய ப்ரதிவாஸுதேவனாகவும் உருவகப்படுத்தப்படுகிறார்கள். சீதை ராவணனுக்கு மகளாகப் பிறந்தவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். அவளால் ராவணனுக்கு அழிவு என்பதால் ராவணன் பிறந்ததுமே அவளை அப்புறப்படுத்தி விடுகிறான். பின்னாளில் தன் மகள் தான் அவள் என்று அறியாது சீதையைக் கவர்ந்த ராவணனுடன் யுத்தம் நிகழ்கிறது.

ப்ரதி வாஸுதேவனாகிய ராவணன் லக்ஷ்மணன் மீது சக்ராயுதத்தை வீசுகிறான். ஆனால் லஷ்மணன் வாஸுதேவனானதால் அது அவனைத் தாக்கவில்லையாம். வீசப்பட்ட ஆயுதம் அவனைத் தாக்காது அவன் வசமகிறதாம். வாஸுதேவனாகிய லக்ஷ்மணன் தன்னுடைய ஆயுதத்தால் தாக்குவதன் மூலம் அழிக்கப்படவேண்டிய ப்ரதிவாஸுதேவனாகிய ராவணன் அழிக்கப்படுகிறான். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழும் சீதை இறந்தபின் ஸ்வர்க்கத்துக்குச் சென்று பின்னர் மறுபிறவி எடுத்து மோக்ஷம் அடைகிறாள். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழாத லக்ஷ்மணன் நரகத்திற்குச் செல்லுகிறான். மறுபிறப்பில் அவன் சீர்திருத்தம் அடைந்து மோக்ஷத்தை அடைவான் என்று நூல் சொல்லுகிறது. ஜைனக்கோட்பாடுகளின் படி வாழ்ந்த உதாரண புருஷனாகிய ……..ஜைன சமயம் விதந்தோதும் நற்பண்புகளின் இருப்பிடமாகிய……. பலபத்ரனான ராமபிரான் தன்னுடைய அந்த மனிதப்பிறவியில் மோக்ஷம் அடைகிறான்.

மற்ற ஜைன புராணங்களைப் போன்று இந்த ஜின ராமாயணமும் ஒரு ப்ரதி புராணம் ( Anti – Counter – Purana) என்று ஸ்ரீ ராமானுஜன் கருத்துப் பகிர்கிறார். வைதிக சமயத்தில் படைக்கப்பட்ட ராமாயணத்தில் சொல்லப்பட்ட பகுத்தறிவுக்கு முரணான கருத்துக்களை மறுதலித்துச் சமைக்கப்பட்டது ஜின ராமாயணம் என்று வ்யாசமும் பவுமசரிஅ என்ற நூலின் விவரணைகளும் தெரிவிக்கின்றன.

இதற்கு முந்தையதாகிய ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பகுத்தறிவிற்கு ஒவ்வாததான பற்பல நிகழ்வுகளையும் விவரணைகளையும் உடையதாகவும் அவற்றையெல்லாம் துலக்கி பகுத்தறிவின் பாற்பட்டு சமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது ஜைனராமாயணம்.

லங்காபுரியின் மக்கள் நரமாமிசம் உண்ணும் ராக்ஷசர்களாகச் சித்தரிக்கப்படுவதில்லை. அதே போல குரங்கினத்தவர்களாக வானரர்களும் சித்தரிக்கப்படுவதில்லை. இவர்கள் மனிதர்களும் இல்லாது தேவர்களும் இல்லாத வித்யாதரர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இந்த ராமாயணத்திலும் கூட விவரிக்கப்படும் சாஹசம் மிகுந்த நிகழ்வுகளின் பாற்பட்டு பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சில அமானுஷ்யமான சக்திகளை தம் வசம் உடையவர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். (Courtesy : Dr.Jacobi’s work…….. Chapter 15………Vanaras in reality are a race of Vidyadharas. A class of beings endowed with many supernatural qualities, if not human beings in the correct sense of the term) ஸ்வர்க்கம், நரகம், மறுபிறவி, மோக்ஷம் போன்ற கருத்தாக்கங்கள் இந்த ஜைன ராமாயணத்தில் காணக்கிட்டுகின்றன. பற்பல மொழிகளில் ஆன வைதிக சமய ராமாயணங்களில் விதந்தோதப்படுவதான ஏகபத்னீவ்ரதன் என்ற ராமனுக்கு எதிரான ஒரு கருத்தாக்கமாக ராமனுக்கு 8000 மனைவிகள் இருந்ததாகவும் லக்ஷ்மணனுக்கு 16000 மனைவிகள் இருந்ததாகவும் இவர்களுடையே வம்ச மூத்தவர்களாகிய சகரன் மற்றும் ஹரிஸேனர்களுக்கு தலா 64000 மனைவிகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

———-

தாய்லாந்து உள்ளிட்ட கிழக்காசிய தேசங்களின் ராமாயணங்கள்:

தாய்லாந்தில் ராமகதை வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டை அடுத்தடுத்து ஆளும் அரசர்களின் பெயர்கள் *ராம* என்ற விகுதியுடன் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்தடுத்து தாய்லாந்தினை அரசாண்ட பல மன்னர்களும் ராமகதையை அதிவிஸ்தாரமாக பற்பல நூற்களாக எழுதியுள்ளனர். தாய்லாந்து தேசத்திய ராமகதை ராமகீன் (Ramakien…….story of rama) என்றும் ராமகீர்த்தி (Ramakirti …… the glory of Rama) என்றும் அழைக்கப்படுகிறது. தாய்லாந்தில் ராமன் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறான். தாய்லாந்தில் விஷ்ணு சிவபெருமானுக்கு அதீனமான தேவனாகக் கருதப்படுகிறார் என்று இந்த வ்யாசம் சொல்லுகிறது.

தாய்லாந்து தேசத்திய ராமகதை கம்பநாட்டாழ்வாரின் ராமாவதாரம் என்ற கதையிலிருந்து கரந்துரையப்படுவதை ராமானுஜன் வ்யாசம் பகிருகிறது. குறிப்பாக கதாபாத்திரங்களின் பெயர்கள். வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படும் முனிவரான ரிஷ்யச்ருங்கர் கம்பராமாயணத்தில் களைக்கோட்டு முனிவர் என்று குறிப்பிடப்படுகிறார். தாய்லாந்து ராமாயணம் கம்பராமாயாணத்திலிருந்து கரந்துரையப்பட்டதால் அந்த ராமாயணத்தில் இந்த முனிவரின் பெயர் களைக்கோட்டு என்ற பெயரிலேயே காணப்படுவது ஒரு காட்டு. மானுட, ராக்ஷஸ, குரங்கின என்ற படிக்கு ராமகீர்த்தியில் மூன்று விதமான கதாபாத்திரங்கள் விவரிக்கப்படுகின்றன என்று வ்யாசம் பகிருகிறது. கதைக்களனைப் பார்க்கையில் ராம ஜனனம் துவங்கி, சீதாராம விவாஹம், வனவாஸம், சீதையை ராவணன் அபகரித்து லங்காபுரிக்கு எடுத்துச் செல்லுவது, ராமராவண யுத்தம், ராமபிரான் அயோத்திக்கு திரும்பி அரசாளுவது, உத்தரராமாயண நிகழ்வுகள் என்று தாய்லாந்திய ராமாயணங்களின் நிகழ்வுப் பட்டியல் நீளுகிறது.

வைதிக சமயத்தைச் சார்ந்த ராமாயணங்கள் விஸ்தாரமாக மனதில் பதியும் வண்ணம் சொல்லும் நிகழ்வுகளாகிய திவ்ய தம்பதிகளின் பிரிவு அதையொட்டிய சம்பவங்கள் பின்னர் அவர்கள் ஒன்றிணைவது என்ற நிகழ்வுகள் தாய்லாந்திய ராமாயணத்தில் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களல்ல. மாறாக தாய்லாந்து ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்லுதல் அதையடுத்து நிகழும் யுத்தம் போன்றவை மிக விஸ்தாரமாக விவரிக்கப்படுவதாக வ்யாசம் சொல்லுகிறது. யுத்தத்தைப் பற்றிய விவரணைகள், யுத்தத்தில் கையாளப்படும் யுக்திகள் அதில் கையாளப்பட்ட அதிசயத்தக்க யுத்த தளவாடங்கள் போன்றவை தாய்லாந்திய ராமாயணத்தில் வெகு விஸ்தாரமாகச் சொல்லப்படுவதாக ராமானுஜனுடைய வ்யாசம் சொல்லுகிறது. யுத்தத்தைப் பற்றிய விவரணைகள் தாய்லாந்திய ராமாயணத்தில் விஸ்தாராமாகச் சொல்லப்படுவதன் பின்னணியை ஸ்ரீ சந்தோஷ் தேசாய் அவர்கள் குறிப்பிடுவதை ராமானுஜனின் வ்யாசம் தெரிவிக்கிறது. முற்காலத்திய தாயாலாந்திய சரித்ரம் யுத்தங்களால் வடிக்கப்படும் ஒரு சரித்ரம் என்பது கவனிக்கத் தக்கது. யுத்தங்களுக்கிடையே பிழைத்து வாழ்தல் என்பது அவர்களுடைய அக்கலத்திய வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது.

கதாபாத்திரங்களில் மக்களின் கவனத்தை ஈர்ப்பது ராமரை விட ஹனுமான் என்றும் தாய்லாந்திய ஹனுமான் உறுதியான ப்ரம்மசாரி இல்லையென்றும் பெண்கள் விரும்பும் மனிதன் (?) (ladies man) என்று ராமானுஜன் வ்யாசம் சொல்லுகிறது. லங்காபுரிவாசிகளின் படுக்கையறைகளுக்குச் சென்று அங்கு துயிலும் தையலார்களைக் கண்ணுறுவதை கம்பநாட்டாழ்வாரோ வால்மீகியோ காட்டும்படிக்கு அல்லாமல் ……… அதார்மிகமாக தாய்லாந்திய ஹனுமான் கருதாதவாறு…….. தாய்லாந்திய ராமாயணம் படைக்கப்பட்டுள்ளது என்று வ்யாசம் தெரிவிக்கிறது.

வ்யாசம் சித்தரிக்க முனையும் சில முரண்களைப் பார்க்கையில் தாய்லாந்திய ராமாயணம் அல்லது பல தாய்லாந்திய அரசர்கள் எழுதிய ராமாயணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் பகிரப்படுதல் நன்று என்று படுகிறது.

அவை என்னென்ன?

1. தாய்லாந்திய மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்ப்பது ராமனின் கதாபாத்திரம் அல்ல மாறாக ஹனுமனின் கதாபாத்திரம் என்று வ்யாசம் சொல்லுகிறது. தாய்லாந்திய ராமனின் பாத்திரப்படைப்பு வ்யாசத்தில் அடக்கி வாசிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அப்படிப்பட்ட ஒரு வெகுஜன மக்கள் திரளின் தலைவனாக சதாப்தங்களாக தாய்லாந்தினை ஆளும் அரசர்களின் பெயர்களில் ஏன் **ஹனுமன்** என்ற விகுதி காணப்படாது **ராம** என்ற விகுதி காணப்படுகிறது என்று சம்சயம் எழுகிறது.

2. ஒரு புறம் தாய்லாந்திய ராமகீர்த்தி மானுட, ராக்ஷஸ மற்றும் குரங்கின என்ற படிக்கு மூன்று கதாபாத்திரங்கள் தாய்லாந்திய ராமாயணத்தில் காணக்கிட்டுவதைக் கவனமாக வகை தொகை சார்ந்து வ்யாசம் பகிருகையில் ஹனுமனை பெண்கள் விரும்பும் மனிதன் (?) (ladies man) என்று வ்யாசம் சுட்ட விழைவதை கவனிக்காது போக முடியவில்லை. இங்கு மனிதன் என்று சொல்லப்படுவதற்கு அர்த்தம் கற்பிக்கலாம் அல்லது சால்ஜாப்பு சொல்லலாம் தான். பின்னிட்டும் ஒரு குரங்கினத்தவன் ladies man என்று சுட்டப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. ஆயினும் ஒரு முழுமையான சித்திரம் தாய்லாந்திய ராமாயணங்களிலிருந்து காய்த்தல் உவத்தல் இல்லாமல் பகிரப்படுவது முறையாகும்.

3. பெயர்களைக் கையாளுதல் என்ற படிக்கு கம்பராமாயணத்திலிருந்து பெரும்பாலும் கரந்துரையப்பட்டது தாய்லாந்திய ராமாயணம் என்று வ்யாசத்தில் ஒரு புறம் பகிரப்படுகையில்……….. கம்பராமாயணம் ராம பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகையில் ……… தாய்லாந்திய ராமாயணம் மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் நிகழ்வுப் பட்டியலை ஒட்டி உத்தரராமாயணத்துடன் நிறைவு பெறுவதையும் கவனிக்காது போக முடியவில்லை. வ்யாசத்தின் சித்தரிப்பினைச் சார்ந்து தாய்லாந்திய ராமாயணம் பெயர்களைக் கையாள்வதில் கம்பநாட்டாழ்வாரைக் கைக்கொள்வதை ஒரு புறம் அவதானிக்கையிலேயே மறுபுறம் நிகழ்வுப் பட்டியலைப் பார்க்கையில் ஆதிகாவ்யமான மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தையும் அடியொற்றுவது தெளிவாகத் தெரிகிறது. சித்தரிப்பு ஒருவைகயாக இருக்கையில் பகிரப்படும் முடிபுகள் வேறாகக் காணப்படுவது வ்யாசத்தின் சித்தரிப்பு காய்த்தல் உவத்தல் கொண்டதோ என்று சம்சயம் ஒரு புறம் எழுகிறது.

————–

4. கோரக்பூர் கீதாப்ரஸ் என்ற ஸ்தாபனத்தினால் பதிக்கப்பட்ட ஸ்ரீமத் வால்மீகி ராமாயணப் பதிப்பின் ஏழாவது பதிப்பின் பாற்பட்டு ஒவ்வொரு காண்டமும் அதில் காணப்படும் ஸர்க்கங்களின் (அத்யாயம்) எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது :-

1. பாலகாண்டம் ………………………77
2. அயோத்யாகாண்டம்…………….119
3.ஆரண்யகாண்டம்…………………75
4.கிஷ்கிந்தாகாண்டம்……………..67
5.ஸுந்தரகாண்டம்………………..68
6.யுத்தகாண்டம்…………………….128
7.உத்தரகாண்டம்……………………111  (பிற்சேர்க்கை என்று 2 அதிகப்படி ஸர்க்கங்கள் தனி)

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண யுத்தகாண்டத்து விவரணைகளை முழுதாக வாசிக்கையில் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் யுத்த களமும், யுக்திகளும் அதில் உபயோகிக்கப்பட்ட யுத்த தளவாடங்களும் அஸ்த்ர சஸ்த்ரங்களும் வெகு விஸ்தாரமாக ஆதிகவி வால்மீகி முனிவரால் சொல்லப்பட்டிருப்பது துலங்குகிறது. தாய்லாந்திய ராமாயணத்தின் மாறுபாடான கதையம்சமாக வ்யாசம் சுட்டப்படும் கருத்து அப்படி அந்த வாசிப்புக்கேயான ஒரு மாறுபாடான அம்சம் இல்லை என்பது இதன் மூலம் துலங்குகிறது.

இவை மேம்போக்காகத் தோன்றும் சம்சயங்கள் தான். முழுமையான சித்தரிப்பு மற்றும் முழுமையான புரிதல் தாய்லாந்திய ராமாயணத்தை முழுமையாக வாசித்து அறிவதன் மூலம் மட்டிலும் தான் கிட்டும் என்பது திண்ணம்.

தக்ஷிண பாரதத்து நாட்டார் வழக்கியலில் காணப்படும் ராமாயணக் கதைகளில் சில ஆதிகாவ்யத்தை ஒத்தும் சில அவற்றிலிருந்து முற்றிலுமாக வேறுபடுவதையும் அவதானிக்க முடிகிறது. சில கதைகளில் ஆதிகாவ்யத்துக்கு மாறாக கதாபாத்ரங்கள் தாறுமாறாக சித்தரிக்கப்படுவதும் புலனாகிறது.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ துளசி தாஸ் அருளிச் செய்த-ஸ்ரீ ராமசரிதமானஸ்

January 28, 2024

ஆந்திரம் -ரெங்கநாத ராமாயணம் -புத்த கோண ரெட்டி -900 வருஷங்கள் முன்பு
அஸ்ஸாம் மாதவ கண்டலி ராமாயணம் -800 வருஷங்கள் முன்பு கவிராஜா மாதவ கண்டலி
ஒரிசா ஜக் மோஹன் ராமாயணம் -பல ராமதாஸ் -600 வருஷங்கள் முன்பு
பெங்கால் -ஸ்ரீ ராம் பாகாலி -கிரதிபஸ் ஓஜா -600 வருஷங்கள் முன்பு
கர்நாடக -தோரவே ராமாயணம் –நரஹரி -எழுதியது 500-வருஷங்கள் முன்பு
ராம் சரித்திர மாநஸ் -துளசிதாஸ் -500 வருஷங்களுக்கு முன்பு
மஹாராஷ்ட்ரா -பாவார்த்த ராமாயணம் -ஏக் நாத் –500 வருஷங்கள் முன்பு

மலையாளத்தில் எழுத்தச்சனும்,

வடமொழி இராமாயண நூல்கள்
யோக வசிஷ்ட (அல்லது) வசிஷ்ட இராமாயணம் (பொ.ஊ. 8 அல்லது 12 ஆம் நூற்றாண்டு)
அத்யாத்ம இராமாயணம் (பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டு, இராமசர்மர் எழுதியது)[10]
அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்ட காலகட்டம்)
ஆனந்த இராமாயணம் (பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டு) வால்மீகி பெயரால் வழங்கப்படுவது.

இந்தோனேசியாவில் காகவின் ராமாயணம் என்பது இந்திய ராமாயணத்தின் தழுவலாக உள்ளது. இது 8-9 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவிற்கு வந்ததாக நம்பப்படுகிறது. இது பழைய ஜாவானீஸ் மொழியில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

ராமர், சீதை, லக்ஷ்மணன் மற்றும் அனுமன் ஆகியோரின் முக்கிய கதாபாத்திரங்களைத் தவிர, இந்தோனேசியா பதிப்பில் பல பூர்வீக தெய்வங்களும் உள்ளன. இந்தோனேசியாவின் புகழ்பெற்ற கேகாக் நடனம் ராமாயணத்தின் காட்சிகளையும் உள்ளடக்கியது.

தாய்லாந்தில் ராமாயணத்தை ராமாகியன் என கூறுகின்றனர். ராமாகியன் தாய்லாந்தின் தேசிய காவியங்களில் ஒன்றாகும். மேலும் இது ராமாயணத்தின் மற்றொரு பதிப்பு மற்றும் கொண்டாட்டமாகும். இந்த பதிப்பில் ராவணனின் பாத்திரம் தோசகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறது. இந்த கதை 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது

மியான்மரில் ராமாயணத்தை யம ஜடாவ் அல்லது யமயானம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இது வெறும் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பாக இல்லாமல், பழம்பெரும் காவியத்தின் தனித்துவமான தழுவலாக உள்ளது.

இந்தியாவின் ராம்லீலாவைப் போலவே, யமா ஜடாவும் ஒரு நாடகத் தழுவலாகும். இது பொதுவாக மத விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது. இது நாட்டுப்புறவியல் மற்றும் பௌத்தத்தின் கூறுகளையும் கொண்டுள்ளது. இதன் அசல் இந்திய பதிப்பிலிருந்து வேறுபட்டதாக உள்ளது.

ராமாயணத்தை போல உள்ள கதை கம்போடியாவில் ரீம்கர் என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய காவியத்தின் மற்றொரு பிராந்திய பதிப்பாகும். இது பௌத்த மதத்தின் சுவாரஸ்யமான பதிப்பாக அமைகிறது.

அதே சமயம் இந்திய ராமாயணத்தைப் போலவே இந்தக் கதையும் ராமர், சீதை மற்றும் ராவணனை மையமாகக் கொண்டது. முக்கிய வேறுபாடு என்னவென்றால், கதாபாத்திரங்கள் மனிதர்களாகக் கருதப்படுகின்றன. இந்திய இதிகாசங்களைப் போல கடவுள்களின் அவதாரங்களாகக் குறிப்பிடப்படவில்லை

இந்தோனேசியாவில் காகவின் ராமாயணம் என்பது இந்திய ராமாயணத்தின் தழுவலாக உள்ளது. இது 8-9 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவிற்கு வந்ததாக நம்பப்படுகிறது. இது பழைய ஜாவானீஸ் மொழியில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

ராமர், சீதை, லக்ஷ்மணன் மற்றும் அனுமன் ஆகியோரின் முக்கிய கதாபாத்திரங்களைத் தவிர, இந்தோனேசியா பதிப்பில் பல பூர்வீக தெய்வங்களும் உள்ளன. இந்தோனேசியாவின் புகழ்பெற்ற கேகாக் நடனம் ராமாயணத்தின் காட்சிகளையும் உள்ளடக்கியது.

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட ஒரு புத்தக விற்பனையாளர் ரூ.1.65 இலட்சம் மதிப்பிலான ராமாயண புத்தகத்தை கோயிலுக்குப் பரிசாக வழங்கவுள்ளார். இதுவே உலகில் உள்ள இராமாயண புத்தகங்களில் மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து அந்த புத்தக விற்பனையாளரான மனோஜ் சாத்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: “வால்மீகி எழுதிய இராமாயணப் புத்தகம், கடவுள் ராமரின் வாழ்க்கை வரலாற்றை நமக்குக் கூறும் அருமையான புத்தகமாகும்.

தற்போது உலகின் மிக விலை உயர்ந்த ராமாயணப் புத்தகத்தை நான் உருவாக்கியுள்ளேன். இதன் மதிப்பு ரூ.1.65 லட்சமாகும். 3 அழகான பெட்டிகளில் அச்சிட்டு இந்தப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் 3 அடுக்குகளாக அமைவதைக் குறிக்கும் பொருட்டு 3 பெட்டிகளில் புத்தகம் தயாராகியுள்ளது.

இந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்கான காகிதம் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காகிதம் மீது அமிலத்தை வீசினாலும் அழியாது. புத்தகத்தின் அட்டைப் பகுதியானது இறக்குமதி செய்யப்பட்ட கச்சாப் பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தை அச்சிடுவதற்கான மை, ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. புத்தகம் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் அமெரிக்காவிலுள்ள வால்நட் மரம், குங்குமப்பூ மரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் எடை 45 கிலோ கிரமாக இருக்கும். இது 400 வருடங்கள் ஆனாலும் அழியாது.

நான்கு தலைமுறைகளுக்கும் மேல் இந்தப் புத்தகத்தை படிக்க முடிக்கும். தற்போது மிகவும் அழகான அயோத்தி நகரை அடைந்துள்ளோம். மிகவும் விலை உயர்ந்த ராமாயணப் புத்தகத்தைப் போலவே, அயோத்தி நகரும் சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. எனவே அயோத்தியில் மிகவும் அழகிய ராமாயணம் இருக்கிறது என்று சொல்லலாம். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் வித்தியாசமான டிசைன்கள் இருக்கும். கோயில் நிர்வாகத்திடம் புத்தகத்தை விரைவில் வழங்கவுள்ளோம்” என மனோஜ் சாத்தி கூறினார்.

——————-

ஸ்ரீ ராமச்சரித் மனஸ்

இது இராமரின் மேல் அதீதமான பக்தி கொண்ட இந்தியாவைச் சேர்ந்த கோஸ்வாமி துளசிதாஸ் என்பவரால் 16ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. “இராமசரிதமானஸ் என்பதற்கு இராமரின் செயல்களை தொகுத்து எழுதப்பட்ட ஏரி என்று பொருள். இது ஹிந்தி இலக்கியத்தில் ஒரு மிக பெரிய நூலாக கருதப்படுகிறது. இந்த நூல் “வாழும் இந்திய கலாச்சாரத்தின் தொகுப்பு ” , “இடைக்கால அதிசய இந்திய சரித்திர தோட்டத்தின் உயரமான மரம்” , “பக்தி இலக்கியத்தின் மிகச் சிறந்த நூல்”, “இந்திய மக்களின் அசையாத நம்பிக்கைக்கு அத்தாட்சியாக விளங்கும் நூல் “என்று பெருமையாகக் கூறப்படுகிறது

இராமசரிதமானஸ் என்ற இந்த நூல் ஏழு காண்டங்களைக் (அத்தியாயங்கள் அல்லது பாகங்கள்) கொண்டது. துளசிதாசர் இந்த ஏழு காண்டங்களையும் புனிதமான மானசரோவர் ஏரிக்கு அழைத்துச் செல்லும் ஏழு படிக்கட்டுகளுக்கு ஒப்பிடுகிறார். இவை இரண்டுமே உடலையும் மனதையும் ஒரு சேர தூய்மை படுத்தும் ஆற்றல் படைத்தவை என்பதால் அவ்வாறு குறிப்பிடுகிறார்.

இராமசரிதமானஸ் நூலின் தனித்துவமான சிறப்பு என்னவென்றால், இந்த நூலின் எல்லா வரிகளிலும் ச்,ர்,த்,ம் (சீதாராம) என்ற எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன.

அத்தியாயத்தின் தொடக்கத்தில் உள்ள பிரார்த்தனைப் பகுதி–

இராமசரிதமானஸ் நூலின் ஒவ்வொரு அத்யாயமும் மங்களசரணம் அல்லது பிரார்த்தனைப் பகுதியுடன் தொடங்குகிறது. இவ்வாறு இறைப்பிரார்த்தனையுடன் நூலைத் தொடங்குவது இந்தியப் பரம்பரியமும் கூட. ஒவ்வொரு காண்டத்தின் முதல் மூன்று அல்லது நான்கு வரிகள் பிரார்த்தனைப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது.

பால காண்டம் அறிவு, ஞானம், பேச்சு மற்றும் மங்களத்திற்குரிய ஹிந்துக் கடவுளான சரஸ்வதி மற்றும் கணபதியின் புகழைப் பாடும் விதமாக எழுதப்பட்டுள்ளது.

அயோத்யா காண்டம் சிவனைப் பிரார்த்திக்கும் பாடலுடன் தொடங்குகிறது. எவருடைய மடியில் மலையரசியின் மகள் பொலிவுடன் அமர்ந்திருக்கிறாளோ, எவர் ஆகாய கங்கையைத் தனது தலையில் சுமக்கிறாரோ, எவருடைய பிறையில் அந்த பிறைச்சந்திரன் ஓய்வெடுக்கிறானோ, எவருடய தொண்டை ஆலகால விஷத்தைப் பிடித்துக் கொண்டுள்ளதோ, எவருடைய மார்பு சர்பத்திற்கு இடமளிக்கிறதோ, எவருடைய உடலைச் சாம்பல் அலங்கரிக்கிறதோ, எவர் எல்லா கடவுளுக்கும் தலைவனாக விளங்குகிறரோ, எவர் இந்த உலகத்தை அழிக்கும் வல்லமை படைத்தவரோ, அப்படிப்பட்ட எங்கும் நிறைந்த சந்திரனைப் போன்ற சிவபெருமான் என்றும் என்னைக் காக்கட்டும்

ஆரண்ய காண்டத்தின் முதல் பாடல் மீண்டும் சிவபெருமானைக் குறித்த பாடலாக அமைந்துள்ளது. இறைவன் சங்கரனை நான் வணங்குகிறேன். அவர் பிரம்மாவின் சந்ததியைச் சேர்ந்தவர், கருணையுடையவர், அன்பானவர், ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் மேல் அபிரிதமான பக்தி வைத்திருப்பவர், அறிவு எனும் கடலுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற முழுச் சந்திரனைப் போன்றவர், சாந்தம் எனும் தாமரையைத் திறக்கும் திறவுகோலான சூரியனைப் போன்றவர், அஞ்ஞானம் எனும் மேகத்தைக் கலைக்கின்ற காற்றைப் போன்றவர், பாவம் மற்றும் காமம், குரோதம், மோஹம் போன்றவற்றை அழித்து, பழியை நீக்குபவர்.

கிஷ்கிந்தா காண்டம் இவ்வாறாகத் தொடங்குகிறது. மல்லிகை மற்றும் நீலத் தாமரைப் போன்ற மலர்ச்சி உடையவர்;அளவில்லா வீரம் கொண்டவர் ;அறிவுக் களஞ்சியமாக விளங்குபவர்; கருணையுடையவர்;வில் வித்தையில்;வேதங்களால் போற்றப்படுபவர்;பசு மற்றும் பிராமணர்கள் மீது பற்று கொண்டவர்;அரச குலத்தில் ரகுவரனாக மானிடனாகப் பிறவிஎடுத்தவர்;அந்த ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியும் சீதாபிராட்டியும் நமக்கு பக்தியை வழங்கட்டும்.

சுந்தர காண்டம் இராமனைக் குறித்த துதியுடன் தொடங்குகிறது. உலகத்தின் தலைவரான ஸ்ரீராமனை வணங்குகிறேன்; அவர் அரச குலத்தின் மாணிக்கத்தைப் போன்றவர்;கருணையுடையவர்; பாவங்களை அழிக்க வல்லவர்;மானிடனாகப் பிறவி எடுத்தவர்; கடவுளுக்கும் கடவுளாக விளங்குபவர்; வேதங்கள் மற்றும் உபநிடதங்களால் அறியப்படுபவர்;படைப்புக் கடவுளான பிரம்மாவாலும், அழிக்கும் கடவுளான சிவனாலும்,ஆதிசேஷனாலும் முக்காலும் வணங்கபடுபவர்;பாவத்தை அழித்து வாழ்வில் பேரின்பத்தையும் அமைதியையும் வணங்க வல்லவர்

இலங்கா காண்டம் இந்த பாடலுடன் தொடங்குகிறது. ஸ்ரீராமனை நான் வணங்குகிறேன்;அவர் மிகவும் உன்னதமானவர்; உலகில் உள்ள எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தவர்; அன்பு மிகுந்த அழிக்கும் கடவுளான சிவனாலும் போற்றி வணங்கப் படுபவர்;மறுபிறவி பயத்தைப் போக்க வல்லவர்; மத யானை எனும் இறப்பை அடக்குகின்ற சிங்கம் போன்றவர்;ஞானத்தால் அடையக்கூடியவர் ;யோகிகளின் தலைவர்;நல்ல வழக்கங்களைக் கொண்டவர்;யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர்;பிறப்பு இறப்பு இல்லாதவர்;அதர்மத்தை அழிப்பவர் ;பிராமணர்களைக் காப்பவர்;நீர்த்திவலைகளால் மூடப்பட்ட மேகத்தைப் போன்ற அழகு உடையவர்; தாமரை போன்ற கண்களை உடையவர்; மானிடனாக அரச குலத்தில் அவதாரம் எடுத்தவர் 

உத்தர காண்டம் இந்த பாடலுடன் தொடங்குகிறது. ஸ்ரீராமனை நான் இடைவிடாது வணங்குகிறேன்;அவர் ஜனகரின் புதல்வியான சீதாபிரட்டியால் வணங்கப்படுபவர்; மயில் கழுத்து நீல நிறமுடையவர்;பிரம்மாவின் தாமரை போன்ற பாதங்களுடையவர்;கடவுளுக்கும் கடவுளாக விளங்குபவர்; மஞ்சள் நிற உடையில், தாமரை மலர் போன்ற கண்களுடன், கையில் வில் அம்புடன் புஷ்பக விமானத்தில் தம்பி இலக்குவனுடனும் வானரங்களுடனும் வலம் வருபவர் 

காண்டத்தின் முடிவு

துளசிதாசர் எல்லா காண்டத்தையும் ஒரே போலவே முடிக்கிறார்.

எல்லா காண்டங்களும் முறையாக ஆசிரியர் கோஸ்வாமி துளசிதசாரால் இயற்றப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, கிஷ்கிந்தா காண்டம் இவ்வாறாக முடிகிறது:”இதி ஸ்ரீராமசரிதமானஸ் சகல கலி கலுசவே த்வம்சேந சதுர்தஹ் சோபனஹ சமாப்தாஹ்

மொழிபெயர்ப்பு : “இவ்வாறாக ஸ்ரீஇராமசரிதமானஸின் நான்காவது காண்டம் மானசரோவர் ஏரியின் நான்காவது படியையும் ஸ்ரீராமர் கலியுகத்தின் அதர்மங்களை அழிப்பார் என்பதையும் கூறி முற்றிற்று.” இதில் சதுர்தஹ் எனும் சொல் நான்கு என்பதைக் குறிக்கும். ஒவ்வொரு அத்யாயமும் அந்த எண்ணை மட்டும் குறித்து முற்றுப் பெறுகிறது.

கதை
இராமசரிதமானஸ் என்ற இந்த நூல் மூன்று உரையாடலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
அவை சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நடந்த உரையாடல் ,
முனிவர்கள் பாரத்வாஜருக்கும் யாக்யவல்க்கியருக்கும் இடையே நடந்த உரையாடல்,
கக்புஷுன்டிக்கும் கருடனுக்கும் இடையே நடந்த உரையாடல்.
மேலும், சில கவிஞர்கள் இதனூடே துளசிதாசருக்கும் பகவான் இராமருக்கும் இடையே நடந்த உரையாடலும் இடம் பெற்று இருப்பதாகக் கூறுகிறார்கள் .-

பால காண்டம்
குழந்தை அத்யாயம்
துளசிதாசர் இந்த அத்தியாயத்தை தனது குரு மற்றும் முனிவர்கள் : தனக்கு முன் வாழ்ந்தவர்கள், பிற்காலத்தில் வாழப்போகிறவர்களை வணங்கி தொடங்குகிறார்.
இதில் வால்மீகியை இராமாயணத்தை இராம பக்தர்களுக்காக எழுதியதற்காகக் குறிப்பிட்டு வணங்குகிறார்.
அதன் பின்னர், ஒவ்வொரு கதாப் பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தி அவர்களின் பெருமையையும் எடுத்துக் கூறுகிறார்.
முதலாவதாக, ஸ்ரீராமர் பிறந்த அயோத்தி மாநகரத்தின் பெருமையைக் கூறுகிறார்.
பின்னர், இராமரின் தந்தை தசரதன் மற்றும் தசரதனின் மனைவி கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியோரின் பெருமைகளை எடுத்து கூறுகிறார்.
பின்னர், அவர், சீதையின் தந்தை ஜனகரின் பெருமைகளைக் கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து, இராமரின் சகோதரர்களான பரதன், இலக்குவன், சத்ருக்னன் மற்றும் இராமனுக்கு உதவிய வானர வீரன் அனுமன்,சுக்ரீவன்,கரடிகளின் தலைவன் ஜாம்பவானைப் பற்றி பாடுகிறார்.
பின்னர் இராமரையும் சீதையையும் அறிமுகப்படுத்துகிறார்.

இராமசரிதமானஸின் கதை பின்னரே தொடங்குகிறது. அது முனிவர்கள் யாக்யவல்க்கியர் மற்றும் பரத்வாஜர் சந்திக்கும் இடத்தில் தொடங்குகிறது.
பரத்வாஜர் யாக்யவல்க்கியரிடம் இராமரின் கதையைக் கூறுமாறு கேட்கிறார்.
யாக்யவல்க்கியர் சிவன் இந்த கதையைப் பார்வதிக்குக் கூறியதிலிருந்து தொடங்குகிறார்.
(சதியின் தற்கொலை, அவள் தந்தை தக்ஷனின் தியாகம், பார்வதியாக சதியின் மறுபிறவி, பார்வதி சிவன் திருமணக் கதை).
சிவன் இராமன் பூமியில் அவதாரம் செய்ததற்கான ஐந்து காரணங்களைக் கூறுகிறார். இதில் ஒவ்வொரு கதையும் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது.
இதில், இராமர் ஒவ்வொரு முறையும் பூமியில் அதர்மத்தை அழிப்பதற்காகவே அவதரித்ததாகக் குறிப்பிடுகிறார்.
பின்னர், இராவணன் மற்றும் அவரின் தம்பிகளின் பிறப்பைப் பற்றி விவரிக்கிறார்.
இதன் பின்னர் இந்த கதை சிவன், யாக்யவல்க்கியர், கக்புஷுந்தி மற்றும் துளசிதசரின் பார்வையிலிருந்து கூறப்படுகிறது.

கதை பிரம்மலோகத்திற்ககு நகர்கிறது. பிரம்மா மற்றும் பிற தேவர்கள் இராவணனின் கொடுமை தாளாமல்
அவனை அழிப்பதற்கு வழிகள் ஆலோசித்துக் கொண்டி
ருக்கின்றனர். வழி காண இயலாமல், சிவனைக் குறித்து இராவணனை அழிக்கக் கூடிய கடவுள் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு தவம் செய்கிறார்கள்.
சிவன் அவர்களிடம் அந்த கடவுள் எல்லாருடய இதயத்திலும் இருப்பதாக கூறுகிறார்.
பின்னர், அனைத்து தேவர்களும் பிரம்மத்தை நோக்கி தவம் இயற்றுகிறார்கள். அப்போது, பிரம்மன் மனமிரங்கி அவர்கள் முன் வானில் தோன்றி,
இராவணனை அழிக்கக் கூடிய பரம்பொருள் சூரிய குலத்தில் தோன்றுவான் எனக் கூறி மறைகிறார்.

கதை அயோத்திக்கு நகர்கிறது. ஒரு நாள், தசரதன், அயோத்தியின் மன்னன் தனக்கு வயதாகி விட்டதாலும்,
தன்னுடய அரியணைக்கு வாரிசு இல்லை என்பதாலும் கவலை கொள்கிறார்.
இதைத் தனது குடும்ப குருவான வசிஷ்டரிடம் கூறி, இதற்கு ஒரு வழி கூறுமாறு கேட்கிறார்.
அதற்கு வசிஷ்டர், தசரதனுக்கு நான்கு குழந்தைகள் பிறக்கும் என்று கூறுகிறார்.
பின்னர், ரிஷ்ய சிருங்கரை அழைத்து குழந்தை பாக்கியம் அருளும் புத்ராகம் யாகத்தைச் செய்யுமாறு கூறுகிறார்.
துளஸிதாஸர் இராமர் சித்திரை மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் பிறந்ததாகக் கூறுகிறார்.

கதையில் இப்போது இராமரும் அவரது சகோதரர்களும் இளம்பாலகனாகக் காட்டப்படுகிறார்கள்.
அப்போது விஷ்வமித்ரர் தசரதனின் அரண்மனைக்கு வருகிறார்.
அவரை தசரதன் அன்புடன் வரவேற்கிறார். முனிவர் விஷ்வமித்ரர் காட்டில் பல்வேறு யாகங்களைச் செய்து வசிக்கிறார்.
அப்பொழுது, மாரீசன் மற்றும் சுபாகு என்று இருவர் அந்த யாகங்களைக் கெடுப்பதாகவும், இராமன் அதர்மத்தை
அழிப்பதற்காகவே பூமியில் அவதரித்தார் என்பது தனக்கு தெரியும் என்றும்,
தசரதனின் மகன்களை அந்த அரக்கர்களை அழைத்துச் செல்ல வந்துள்ளதாகக் கூறுகிறார்.
தயங்கிய தசரதன், பின்னர் ஒருவாறு அனுப்புகிறார். இராமர் மாரீசனையும் இலக்குவன் சுபாகுவையும் வதம் செய்கிறார்கள்.

இராமர் சீதையை மணம் செய்ய வில் முறிப்பதை விஸ்வாமித்ரர் பார்க்கிறார்.
கதையில் பின்னர் ஆசிரியர் அகல்யையின் சாபவிமோசனத்தைப் பற்றி விவரிக்கிறார்.
அது முடிந்த பின்னர், இராமர், இலக்குவன் மற்றும் விஷ்வமித்ரார் விதேக நாட்டின் அழகான தலைநகரமான மிதிலையை அடைகிறார்கள்.
அங்கு, மிதிலை மன்னன் ஜனகர் அவர்களை அன்புடன் வரவேற்கிறார். அவருக்கு இராமரின் பிறவி காரணத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
பின்னர், சகோதரர்கள் இருவரும் அந்த அழகான நகரத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்கிறார்கள்.
அங்கு, ஜனகரின் தோட்டத்தில் இராமரும் சீதையும் முதல் முறை சந்திக்கிறார்கள்.

இதனிடயே, ஜனகர், சீதைக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்தார். இராமரை முதன்முதலாக பார்த்த உடனேயே அவர் மேல்
காதல் வயப்பட்ட சீதை கௌரி மாதாவிடம் இராமரே தனக்கு கணவனாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள்.
ஜனகரும் சுயம்வரத்திற்கு, இராமரையும் இலக்குவனையும் அழைத்தார். அங்கு, சீதையை மணக்க விரும்புபவர்
சிவனின் தனுசை முறிக்க வேண்டும் என்று நிபந்தனை அமைத்தார். பலர் முயன்றும் முடியாது போக, ஜனகர் இந்த பூமியில்
வீரம் மிக்க ஆண்மகனே இல்லையா என வியந்து கூறினார். இதனால் சினந்த இலக்குவன், சூர்ய குலத்தைச் சேர்ந்தவர்கள்
இருக்கும் கூட்டத்தில் இவ்வாறு பேசலாகாது எனக் பதில் கூறினான். அவனை சாந்தப்படுத்திய இராமர், அந்த தனுசை முறித்தார்.
அதனால் வந்த சப்தத்தில் தவம் கலைந்த பரசுராமர், சிவனின் தனுசை முறித்தது யார் என்ற கோபத்துடன் சுயம்வரம் நடக்கும் இடத்திற்கு வந்தார்.
அங்கு இலக்குவனும் பரசுராமரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சாந்தப்படுத்திய இராமர், நடந்ததை அவரிடம் எடுத்துக் கூறினார்.
இராமரின் பிறவி நோக்கத்தை அறிந்த பரசுராமர் அவரை வணங்கி விட்டு அங்கிருந்து தவம் செய்யச் சென்றார்.
சுயம்வரத்தின் முறைப்படி சீதை வெற்றி மாலையை இராமர் கழுத்தில் சூடி இராமரை மணந்தாள்.

எனினும், தந்து அன்பு மகளுக்கு விமரிசையாக திருமணம் நடத்த ஜனகர் எண்ணினார்.
எனவே, தசாதரனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் இராமர் சீதை திருமணம் குறித்து அயோத்திக்கு தூது விடுத்தார்.
அளவிடற்கரிய சீர் வரிசையுடன், இராமரின் கும்பத்தினர், நண்பர்கள், நல விரும்பிகள், மானிட ரூபத்தில்
பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவர்கள் உட்பட அனைவரும் மிதிலையை நோக்கிச் சென்றனர்.

இதுவரை இந்த உலகம் கண்டிராத அளவிற்கு திருமணம் நடந்த பின்னர், இராமரும் சீதையும் கொண்டாட்டங்களுடன் குதூகலத்துடன் அயோத்திக்குத் திரும்பினர்.

அயோத்தி காண்டம்
அயோத்தி அத்யாயம்
அயோத்தி நகரம் இராமரும் சீதையும் மிதிலையிலிருந்து திரும்பி வந்ததால் பூமியிலுள்ள சொர்க்கம் போன்று இருப்பதாகக் கூறுகிறார் துளஸிதாஸர்.
வயது முதிர்ந்த தசரதன் இராமரை மன்னராக பட்டாபிஷேகம் செய்ய எண்ணினார். இது தேவர்களை மிகுந்த வருத்தத்திற்குள்ளாக்கியது.
ஏனெனில், இராமர் அயோத்தியில் தங்கி விட்டால் இராவண வதம் நடக்காது என்று அவர்கள் எண்ணினர். ஆதலால், அவர்கள் சரஸ்வதி தேவியை வணங்கினர்.

மன்னர் தசரதனுக்கு மூன்று மனைவிகள். அதில் கோசலை தான் பிரதான இராணி. கைகேயி பரதனின் தாய்; சுமித்ரா சத்ருக்னன் மற்றும் இலக்குவனின் தாய்.
சரஸ்வதி தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, கைகேயியின் சேவகியான மந்தரையின் மனம் மாற்றினாள்.
மந்தரை கைகேயியிடம், இராமர் மன்னராவத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், பரதன் மன்னர் ஆவதே மிகச் சிறந்தது என்றும் கூறினாள்.
அப்பொழுது பரதன் கைகேயியின் நாட்டில் தனது மாமனைச் சந்திக்கச் சென்றிருந்தான். மந்தரையின் போதனையால் கைகேயியும் மனம் மாறினாள்.
மந்தரை தசரதன் கைகேயிக்கு தர வேண்டிய இரு வரங்களை நினைவு கூறினாள். கைகேயி அரசவையில் தசரதனுக்காகக் காத்திருந்தாள்.
எல்லோரும் மகிழ்ச்சியாக பட்டாபிஷேக வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும் போது, கைகேயி அரசவையில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட தசரதன் வியந்தான்.
கைகேயி கடுமையான குரலில், தசரதன் தனக்கு அளிக்க வேண்டிய இரு வரங்களை நினைவு படுத்தினாள்.
அவற்றை இப்போது கேட்பதாகவும் பரதன் நாடாள வேண்டும்; இராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்று கூறினாள்.
தசரதன் மன்றாடியும் கைகேயி கேட்காது போக, சுமந்த்ரனை அழைத்து இராமரை வரச் செய்தார்.

இராணி கைகேயி இராமரிடம் அந்த வரத்தைப் பற்றி கூறினாள். இராமர் திருமாலின் அவதாரம் எனினும், அவதாரத்தின் நோக்கத்தை
இவ்வாறே நிறைவேற்ற இயலும் என்று தன்னுடைய சித்தியின் வார்த்தையை ஏற்றுக்கொண்டார்.
மக்கள் கைகேயிக்கு எதிராக தங்களுடைய வெறுப்பைப் பதிவு செய்தார்கள். இராமர் எவ்வளவோ மறுத்தும் இலக்குவனும் சீதையும் உடன் வருவோம்
என்று கூறியதால் அவர்களையும் அழைத்துச் சென்றார். மூவரும், தசரதனை வணங்கிச் சென்றனர்.

இராமர், இலக்குவன், சீதை பிரயாக் நகரில் பரத்வாஜ முனிவரைச் சந்தித்தனர்..
அயோத்தி மக்களும் இவர்களுடன் வருவோம் என்று கூற, மூவரும், சுமந்த்ராவும் மக்களைச் சமாளித்து, நடு இரவில் காட்டிற்குச் சென்றனர்.
அங்கு, ஸ்ரீங்கவெரபுராவைத் தாண்டிச் சென்ற போது நிஷத நாட்டு மன்னன் குகனைக் கண்டனர்.
பின்னர், கங்கை, யமுனை​​ ஆறு|யமுனை], சரஸ்வதி சந்திக்கும் ப்ரயாக் நகரை அடைந்தனர்.
அங்கு இராமர் பரத்வாஜரைச் சந்தித்தார். அங்குள்ள யமுனா நதிக்கரை மக்கள் தன்மீது வைத்துள்ள அன்பால் மிகவும் பூரிப்படைந்தார்.
பின்னர், இராமாயணத்தின் ஆசிரியரான வால்மீகி மகரிஷியை அவரது ஆஷ்ரமத்தில் சந்தித்தார்.
வால்மீகி இராமரின் சுயரூபம் அறிந்து இராமரைப் பாடல்களால் துதித்து வணங்கினார். இந்த இடத்தில், சித்ரகூட நகரத்தின் அழகை மிக அழகாக துளசிதாஸர் வர்ணிக்கிறார்.

பின்னர், இராமர் சுமந்த்ராவை அயோத்திக்கு அனுப்பினார். சுமந்த்ரவிற்குத் திரும்பிச் செல்ல விருப்பமும் இல்லை,
திரும்பிச் சென்றால் மக்கள் ஏசுவர் என்று வருந்தினான். திரும்பி வந்த அவனைப் பார்த்த தசரதன், இராமரைக் குறித்து விசாரித்தார்.
இராமரைப் பிரிந்த துயர் தாளாமல், இராமரின் பெயரைக் கூறியவாறே தசரதன் இறந்தார்.

முனிவர் வசிஷ்டருக்கு இராமர் திரும்பி வரப்போவதில்லை என்று தெரிந்ததால், பரதனையும் சத்ருக்கனனையும் அழைத்து வரச் செய்தார்.
நடந்தது அனைத்தையும் அறிந்த பரதன், தான் அயோத்தியில் இல்லாது போனதே எல்லாவற்றிற்கும் காரணம் என்று கூறி, தாயின் மேல் கோபம் கொண்டான். சத்ரருக்னன்
ஆத்திரத்தால், மந்தரையைத் தாக்கினான். பின்னர்,கோசலையின் நிலை கண்டு மிகவும் மனம் வருந்தி,மன்னிப்பு கோரினார்.
கோசலை அவர்கள் இருவரையும் நாட்டை ஆளுமாறு கூறினாள். பரதன் தன்னால் ஒரு போதும் இராமரின் இடத்தில் நாடாள முடியாதென்றான்.
தசரதனின் இறுதிச் சடங்குகள் முடிந்து, பரதனும், சத்ருகனனும் நாட்டிற்கு இராமரை அழைத்து வரச் சென்றார்கள்.
அவர்களுடன், அரச குடும்பமும், நாட்டு மக்கள் பலரும் சென்றனர்.

பரதன் இராமரின் பாதுகைகளைப் பெற்றுக் கொள்கிறான்.
மக்கள் படையைக் கண்ட நிஷத நாட்டு மக்கள் இராமரைத் தாக்க வந்திருப்பார்களோ என்று சந்தேகப்பட்டனர்.
குகன் பரதனிடம் படையோடு காட்டிற்கு வந்த காரணத்தைக் கேட்டு தெரிந்து கொண்டான். பரதன் இராமரிடம் கொண்ட அன்பைக் கண்டு குகன் நெகிழ்ந்து போனான்.
பின்னர், மக்கள் சித்ரகூடத்தை நோக்கிச் சென்றார்கள். அங்கு இலக்குவனும் பரதனின் படையைக் கண்டு சந்தேகித்து பரதன் மேல் கோபம் கொண்டான்.
அங்கு வந்த இராமர், பரதனைப் புகழ்ந்து பேச, இலக்குவன் தன் எண்ணத்தை எண்ணி நாணினான்.
சகோதரர்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடினர். தந்தையின் பிரிவை எண்ணி அனைவரும் வருந்தினர்.

பரதன் எவ்வளவோ முயன்றும், இராமர் தன் தந்தை மற்றும் சித்தியின் சொல்லின் பேரில், காட்டிலேயே இருப்பதாகக் கூறினார்.
எனவே பரதன், தன்னால் நாடாள முடியாது என்று கூறி, இராமரின் பாதுகைகளை வைத்து நாடாளுவேன் என்று அவைகளை பெற்றுச் சென்றான்.
மிகுந்த மனவருத்ததுடன் அயோத்தி திரும்பிய பரதன், இனி இராமர் வரும் வரை நந்திக்ராமத்தில் இருக்கப் போவதாகக் கூறினான்.

——————–

ஆரண்ய காண்டம்
கானக அத்யாயம்
சீதையைக் கடத்திச் செல்லும் இராவணனுடன் ஜடாயு சண்டையிடும் காட்சி.
இராமர், சீதை, இலக்குவன் காட்டில் நடந்து அத்ரி என்ற ஒரு முனிவரின் குடிலை அடைகிறார்கள்.
அத்ரி அவர்களை அன்புடன் வரவேற்கிறார். அத்ரியின் மனைவி அனுஸ்யா சீதாதேவியை வரவேற்றாள்.
அனுஸ்யா மனைவியின் கடமைகளை சீதையிடம் விவரிக்கிறார்.

இராமர், சீதை, இலக்குவன் காட்டினுள் மேலும் நடந்து விராதனைச் சந்திக்கிறார்கள். விராதன் சீதையைச் சிறை பிடிக்க முயற்சித்தான்.
இராமர் அவனைக் கொன்று ஒரு பள்ளத்தில் புதைக்கிறார். பின்னர், அவர்கள் சரபங்க முனிவரின் ஆஷ்ரமத்திற்குச் செல்கிறார்கள்.
அந்த முனிவர் கூறியபடி, சுதீக்ஷ்ண முனிவரின் ஆஷ்ரமத்தில் தங்குவதற்காக செல்கிறார்கள்.
அங்கே தவம் கலைந்து எழுந்த முனிவர், இராமரின் வருகைக்காகவே அவர் காத்திருந்ததாகவும்,
அதற்காக வேற்று கிரகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு வந்தும் செல்லாது இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

பின்னர், மூவரும் அகஸ்த்ய முனிவரைச் சந்தித்து வணங்குகிறார்கள். அவர் தெய்வீகமான ஆயுதங்களை இராமருக்கு அளித்து தண்டகா வனம் செல்லும் போது தேவைப்பட்டால் உபயோகிக்குமாறு கூறினார்.
அங்கே இராமர், ஜடாயுவைச் சந்தித்தார். ஜடாயு அந்த மூவருடன் அகஸ்த்யரின் சொல்லுக்கேற்ப மிக அழகான பஞ்சவடி என்ற கிராமத்தை அடைந்தனர்.
இலக்குவனுக்கு நடந்தது அனைத்தும் நினைவுக்கு வர, கைகேயியைத் தகாத வார்த்தைகளால் பேசினான்.
அவ்வாறு பேசலாகத்து என இராமர் சமாதானம் கூறினார்.

அப்போது, அரக்கன் இராவணனின் தங்கை சூர்ப்பனகையைக் கண்டனர்.
இராமரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் மேல் காதல்வயப்பட்டாள் அவள். இராமரிடம் இனிமையாக பேசியபோது, இராமர் தான் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றார்.
இலக்குவனும் அவளை நிராகரிக்க, சீதையைத் தாக்கத் தொடங்கினாள் அவள். வெகுண்ட இலக்குவன் அவள் காது மடல்களையும் மூக்கையும் அறுத்தான்.
அவமானப்பட அவள், தன்னுடைய சகோதரர்கள் கர, துசானா, திரிசிரா இருக்கும் இடத்தைச் சென்றடைந்தாள்.
அவளின் கோலத்தைக் கண்ட அவர்கள், இராமரைக் கொல்ல முயற்சித்தனர். இராமர் அவர்கள் மூவரையும் வென்றார்.

வருந்திய சூர்ப்பனகை இலங்கையிலுள்ள இராவணனைச் சந்தித்தாள். இராவணன் தன்னுடைய பால்ய ஸ்நேகிதனான மாரீசனை அழைத்தார்.
மாரீசன் தங்க மானாக மாறினால், சீதையைக் கடத்தி விடலாமென்று சதி செய்தான். மாரீசன் இராமரின் பலத்தை அறிந்தவனாதலால், (பால காண்டம்)
பயம் கொண்டு இருப்பினும், செய்யாது போனால், இராவணன் கொன்று விடுவான் என்பதால், ஒப்புக்கொண்டான்.
இராவணனும் மாரீசனும் இராமர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர்.

மாரீசன் மாய மானாக மாறி சீதையின் கவனத்தை ஈர்த்தான். இராவணனின் எண்ணத்தை அறிந்திருந்த இராமர், சீதையின் நிழலை அவ்விடத்தில் இருக்கச் செய்து, சீதையை ஒளிந்திருக்குமாறு கூறினார்.
சீதை மீண்டும் மீண்டும் அந்த மாய மான் தனக்கு வேண்டுமென்று நச்சரித்தாள். இராமர் அந்த மானைத் தேடி ஆஷ்ரமத்திலிருந்து வெகு தூரம் சென்றார்.
இராமரின் குரலில், மாரீசன் இலக்குவனிடம் உதவி வேண்டுமென்று குரல் கொடுத்தான். சீதை அந்த குரலைக் கேட்டு, கதறி அழுதாள்;
இலக்குவனை இராமருக்கு உதவுமாறு ஆணையிட்டாள். அந்த சமயம், இராவணன் ஒரு யாசிக்கும் இசைவாணராக சீதையிடம் வந்தார்.
யாசகம் அளிக்க வந்த சீதையை இராவணன் கடத்திச் சென்றான். அதைக் கண்ட ஜடாயு இராவணனோடு போரிட்டான்.
இராவணன் மிகுந்த பலசாலி ஆதலால்,இராவணன் ஜடாயுவின் சிறகை வெட்டி வீழ்த்தினான். இராமரும் இலக்குவனும் திரும்பி வந்து சீதை இல்லாததைக் கண்டு வருந்தினர்.
சீதையைத் தேடிச் செல்லும்போது, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஜடாயுவைக் கண்டனர். ஜடாயுவின் வாயிலாக உண்மை அறிந்த அவர்கள், ஜடாயுவிற்கு மோட்சம் அளித்தனர்.
பின்னர், செல்லும் வழியில் சபரியின் ஆஷ்ரமத்தைக் கண்டனர். சபரி தன்னுடய கண்ணீரால், இராமரின் பாதங்களைக் கழுவினாள்.
பின்னர், சுவைத்துப் பார்த்து இனிக்கும் பழங்களை மட்டுமே இராமருக்குக் கொடுத்தாள். இராமர் அவளுக்கும் மோட்சம் அளித்தார்.
சகோதரர்கள் இருவரும் பாம்பாசரோவர் ஏரியை நோக்கி நடந்து சென்றனர்.

கிஷ்கிந்தா காண்டம்
கிஷ்கிந்தா அத்யாயம்
தாரா, சுக்ரீவன், அனுமனை கிஷ்கிந்தா நகரில் சந்திக்கும் இலக்குவன் ரிஷ்யமுக மலையின் உச்சியிலிருந்து, சுக்ரீவன் இராமரும், இலக்குவனும், மலையின் அடிவாரத்தில் இருப்பதைக் கண்டார்.
அனுமனிடம், தன்னுடைய சகோதரன் பாலி அனுப்பிய ஆட்களாக இருப்பரோ என வினவினார். அனுமன் பிராமணனாக வடிவம் எடுத்து அவர்களை அணுகினார்.
இராமரின் சுயரூபத்தை அறிந்த அனுமன் அவரின் புண்ணிய பாதங்களில் விழுந்து ஆசி பெற்றார். இதை சுக்ரீவனிடம் எடுத்துக் கூறிய அனுமன், அவர்களோடு சேர்ந்து சீதையைத் தேடும் பணியில் இறங்கினார்.
அப்பொழுது, சுக்ரீவன் தன்னுடைய தமையன் பாலியால் தான் ஏமாற்றப்பட்டத்தைக் கூறினார். இராமர் பாலியை வாதம் செய்து,
கிஷ்கிந்தா நாட்டின் மன்னராக சுக்ரீவனையும், இளவரசாரக பாலியின் மகன் அங்கதனையும் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.
அதோடு சீதையைக் கண்டுபிடிக்க உதவுவதாக அளித்த உறுதியை சுக்ரீவன் மறந்தான். இராமர் கடுங்கோபம் கொண்டு, இலக்குவனை சுக்ரீவனை அழைத்து வருமாறு சொன்னார்.
இலக்குவன் அரசவையில் நுழைந்து அந்த நகரைச் சாம்பலாக்குவதாக சபதமிட்டார். பயந்த சுக்ரீவன், இராமரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரினார்.
சுக்ரீவன் உடனே, கரடிப் படையையும் குரங்கு படையையும் எல்லா திசைகளிலும் தேடுமாறு ஏற்பாடு செய்தார். அனுமனால் மட்டுமே சீதையைக் கண்டுபிடிக்க இயலுமென்று இராமர் எண்ணினார்.
எனவே, இராமர் அனுமனிடம், சீதையின் பிரிவு தன்னை மிகவும் வாட்டுவதாகக் கூறி கணையாழியைக் கொடுத்தார்.
அங்கதன், நளன், கேசரி, ஜாம்பவான் மற்றும் அனுமன் தெற்குத் திசையை நோக்கிச் சென்றனர். கரையை அடைந்த அவர்கள், ஜாம்பவானும் அங்கதனும் கரையின் அருகே ஒரு குகையைக் கண்டனர்.
அந்த குகையில் ஜடாயுவின் அண்ணனான சம்பாதி வசிப்பதைக் கண்டனர். சம்பாதி வானரப் படையிடம் சீதை அசோக வனத்தில் இலங்கையில் இருப்பதாகக் கூறினார்.
அந்த தீவு 400 மைல் தொலைவில் இருப்பதாகவும், அந்த தூரத்தைக் குதித்துத் தாண்டக் கூடிய ஒருவரால் மட்டுமே அங்கே சென்றடைய முடியுமென்று கூறினார்.
அனுமனால் மட்டுமே அதைச் செய்ய முடியுமென்று ஜாம்பவான் முடிவு செய்தார்.

————-

சுந்தர காண்டம்
மகிழ்ச்சியான காண்டம்
இராமரும் வானர வீரர்களும்.
ஜாம்பவானின் கருத்தை ஏற்று அனுமன், அருகிலிருந்த மலையின் உச்சியின் மீதேறி, வானில் பறக்கலானர்.
இடையில் பாம்புகளின் தாயான சுரசையின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். சமுத்ர அரக்கி அனுமனை பறவை என்றெண்ணி பிடிக்க நினைத்தது.
அவளை வென்று அனுமன், இலங்கையின் கரையில் இறங்கினார். அங்கு மிக அழகான தோட்டங்களையும், குளங்களையும், எரிகளையும் கண்டார்.
அனுமன் இராமரை எண்ணி சிறிய உருவம் எடுத்து இலங்கையில் நுழைந்தார். அங்கு அரக்கி லங்கினியை கைககளால் தாக்கி பூமியில் விழச் செய்தார்.
அனுமன் அரண்மனைகளிலும் தோட்டங்களிலும் தேடினார். பின்னர் ஸ்ரீ ஹரியின் நாமம் கேட்கும் இடத்தை நோக்கி நடந்தார்.
அது இராவணனின் தம்பி விபீஷணனுடையது. அங்கு சென்று, இராமரின் புராணத்தை அனுமன் கூறினார். பின்னர் அசோக வனத்தில் சீதையைக் கண்டார்.
சீதை அமர்ந்திருந்த மரத்தின் கிளையில் அமர்ந்து, அடுத்து என்ன செய்வதென்று யோசித்தார்.

இராவணன் சீதையை நோக்கி வருவதையும் தன்னை ஒரு முறை பார்க்குமாறு கெஞ்சுவதையும் கண்டார். இராவணன் சீதையின் தலையை அறுப்பதாக் கூறியும் சீதை அஞ்சவில்லை.
இராவணனின் மனைவி மண்டோதரி அவனைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றாள். அனுமன், இராவணன் மீதிருந்த சினத்தை மிகுந்த பிரயாசைக்குப் பின் அடக்கிக் கொண்டார்.
பின்னர், அனுமன், இராமரின் துதிகளை மெல்லிய குரலில் பாடினார்.பின்னர் தான் யார் என்று சீதையிடம் கூறி, கணையாழியை அளித்தார்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் சீதை அனுமனை ஆசீர்வதித்து பல வரங்கள் அளித்தாள்.

அனுமன் சீதையிடம் தான் மிகுந்த பசியுடன் இருப்பதாகக் கூறி, அந்த தோட்டத்திலிருந்து பழங்கள் புசிக்க அனுமதி கேட்டார்.
பாதி பழங்கள் உண்டு, பலவற்றை அழித்தார். இராவணனுடைய மகன் அக்ஷயாவை வதம் செய்தார்.
வேண்டுமென்றே இந்த்ரஜீத்திடம் பிடிபட்டுக்கொண்டவர், இராவணனின் அரண்மனைக்குச் சென்றார். அங்கே இராவணன் அனுமனைக் கொல்லுமாறு ஆணையிட்டான்.
விபீஷணன் அனுமன் ஒரு தூதன், தூதனைக் கொல்லக் கூடாதென்று நினைவுகூர, இராவணன் அனுமனை அவமானப்படுத்த அனுமனின் வாலிற்குத் தீ வைத்தான்.
அனுமன் ராம நாமாவைக் கூறக் கூற, அனுமனின் வால் நீண்டுக்கொண்டே சென்றது. அதனைக் கொண்டு இலங்கைக்கு தீ வைத்தார்.
பின்னர், கடலில் தீயை அணைத்து, சீதை நலமாக இருக்கிறாரா என்று பார்த்துக்கொண்டார். சீதையிடம் மறுமுறை இராமருடன் சந்திப்பதாக உறுதி அழைத்தார்.
பின்னர், இராமர், அங்கதன், ஜாம்பவாநனிடம் நடந்ததைக் கூறி இலங்கை நோக்கி படையுடன் கிளம்பினார்.

இதனிடையே, இலங்கையில்,மண்டோதரியும் விபீஷணனும் சீதையைத் திருப்பி அனுப்புமாறு இராவணனை வேண்டினார்.
இராவணன் விபீஷணனை அவமானப்படுத்தித் திருப்பி அனுப்பினார். விபீஷணன் இராமருடன் சேர்ந்து கொண்டார்.
விபீஷணன் இராமரின் பாதங்களில் வீழ்ந்து ஆசிபெற்று, இராமரிடம் அடைக்கலம் கோரினார். கடலை எவ்வாறு கடக்கலாமென்று அனைவரும் ஆலோசித்தனர்.
அப்போது கடல் தேவதைகள், இராமரிடம் வானர சகோதரகள் நிலா மற்றும் நளா கடலைத் தாண்ட வரம் பெற்றிருப்பதாகக் கூறினார்.

இலங்கா காண்டம்
இலங்கா அத்யாயம்
ஸ்ரீலங்கவை இணைக்கும் ராமர் சேது கட்டப்பட்டது
ஜாம்பவான் அந்த சகோதரர்கள் நிலா மற்றும் நளாவைப் பாலம் காட்டுமாறு ஆணையிட்டடார்.
அவர்கள் அந்த மலை முழுவதையும் கொண்டும் பாலம் அமைத்தார்கள். இராமர் சிவனுக்காக இராமேஸ்வரத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டுமென்று எண்ணினார்.
பால வேலை முடிவடைந்தவுடன், இராமரின் படைகள் பாலத்தைக் கடந்து, இலங்கை அடைந்து, சுவேலா என்ற மலையின் அருகில் ஓய்வெடுத்தனர்.
இதை அறிந்த இராவணன் மேலும் கோபம் கொண்டான். மண்டோதரி இராவணனின் உயிருக்கு ஆசைப்பட்டு, சீதையைத் தீர்ப்பி அனுப்பி விடுமாறு கோரினாள்.
இராவணன் இராமரின் பலத்தை உதாசீனப்படுத்தி, மண்டோதரியைச் சாந்தமாக்கினான். பின்னர், அவன் மகன் பிரகஸ்தானும், தாயைப் போன்றே கூற, அது பலனில்லாது போனது.

இதனிடயே, இராமர் ஜாம்பவானிடம் என்ன செய்வது என்று கேட்டார். ஜாம்பவான் அங்கதனைத் தூது அனுப்பலாமென்று கூறினார்.
இராவணனின் அரசவையில் அங்கதன் சென்று, இராவணன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இதுவே தருணம் என்றும்,இல்லை எனில் போர் தொடங்கும் என்றான்.

முதல் நாள் போர் மிகவும் கொடுமையாக நடந்தது. இராவணன் தன்னுடைய படையில் பாதியை இழந்தான்.
இராவணனின் மகன் இந்த்ரஜித், இலக்குவனை சிறந்த ஆயுதத்தால் தாக்க, இலக்குவன் படுகாயமடைந்தான்.
அனுமன் சுஷேனா என்ற மருத்துவரை அழைத்து வந்தார். அவர் இலக்குவனைக் குணப்படுத்த இமாலய மலையில் கிடைக்கும் சஞ்சீவினி மூலிகையை எடுத்து வர வேண்டுமென்றார்.
அனுமன் அதனை எடுத்து வருவதாக இராமருக்கு உறுதி அளித்தார். அவரைத் தடுத்து நிறுத்த இராவணன் காலநேமி என்ற அரக்கியை அனுப்பினார்.
அவளை எளிதில் வென்ற அனுமன், மலையை கண்டு, மருந்து அதில் கண்டுபிடிக்க இயலாது போக, மலையைச் சுமந்து இலங்கை அடைந்தார்.

அனுமன் சஞ்சீவனி மூலிகையைத் தேடுகிறார்.
அனுமன் மிகுந்த வேகத்தோடு இலங்கை வந்து கொண்டிருக்கும் போது, நந்திக்ராமம் அருகில் பராதனால் தவறுதலாகத் தாக்கபட்டார்.
பின்னர், நினைவு திரும்பி, பரதன் இராமரின் தம்பி என்று அறிந்து கொண்டார். இலங்கையில் , சஞ்சீவனி மருந்தினால் சூஷேனா இலக்குவனைக் குணப்படுத்தினார்.
இராமர் மிகுந்த அன்புடன் அனுமனை ஆரத் தழுவினார். இலக்குவனின் உடல்நிலை சரி ஆனதை அறிந்த இராவணன் சினம் கொண்டு கும்பகர்ணனை எழுப்பினார்.
இராமர் ஒரே அம்பால் அவனை வீழ்த்த, இராவணன் பயந்து போனான். பல்வேறு சக்திகளை வேண்டி இந்த்ரஜித் தவம் மேற்கொண்டான். அனுமனும் அங்கதனும் அதனை முறியடித்தனர்.
இலக்குவன் இந்த்ரஜித்தை வதம் செய்தான். இராமர் எத்தனையோ அம்புகள் எய்தும் இராவணன் மரிந்து போகாது போக,
அவனை எவ்வாறு கொள்ள வேண்டும் என்று விபீஷணனிடம் வினவினான். பின்னர், அவ்வாறே இராவணனைக் கொன்றான்

இராவணனுடைய இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், விபீஷணனிற்கு இலங்கையின் அரசனாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.
அனுமன் இந்த் செய்தியை அசோக வனத்திலிருக்கும் சீதையிடம் சென்று கூறினார். முடிவில், இராமரும் சீதையும் ஒன்று கூடினர்.
அனைவரும் அயோத்திக்குத் திரும்ப எண்ணினர். இராமர், சீதை, இலக்குவன் மற்றும் சில மூத்த வானரர்கள் இராவணனின் புஷ்பக விமானத்தில் ஏறிச் சென்றனர்.[53]

உத்தர காண்டம்
இராமரின் குடும்பம்
இன்று, இராமர் அயோத்திக்குத் திரும்பி வருவதற்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. தம்பி பரதன் மிகுந்த கவலயோடு இருக்கிறான்.
அவன் 14 ஆண்டுகள் நந்திக்ராமத்தில் கண்ணீர் விட்டபடியே வாழ்ந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.அனுமன் பரதனைச் சந்தித்து அவர்கள் வந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.
பரதன் இந்த நற்செய்தியை அயோத்திக்குச் சென்று அனைவரிடமும் கூறினான். புஷ்பக விமானம் வந்து இறங்கியவுடன், மக்கள் அனைவரும் “ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கு ஜெயம்” என்று கூவினர்.
இராமரும், சீதையும் இலக்குவனும் வசிஷ்டரின் பாதம் தொட்டு ஆசி பெற்றுக்கொண்டனர். இறுதியில் , இராமர் பரதனை ஆரத் தழுவிக் கொண்டார்.
பின்னர், பட்டாபிஷேகத்தில் இராமர் மன்னராக முடி சூடிக் கொண்டார். அப்போது, சிவன் வந்து அந்த விழாவைக் கௌரவித்தார்.
பின்னர், எந்நாளும் இராமரின் பக்தனாக தான் இருக்க வேண்டுமென்று வாரம் பெற்றுக்கொண்டார். முடிவாக,
இராமருக்கு இரட்டைக் குழந்தைகள் இலவன், குசன் இருக்கிறார்கள் என்றும், மற்ற சகோதரர்களுக்கும் இரு புதல்வர்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாரத முனிவரும் சனக முனிவரும் அயோத்திக்கு வந்து அந்த அழகான நகரத்தைக் கண்டனர். பின்னர், கக்புஷுன்டியின் சுயசரிதையில், கலியுகம் எவ்வாறு இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.
இதனுடன் பார்வதியும் சிவனும், கக்புஷுன்டியும் கருடனும் உரையாடலை முடித்துக் கொண்டனர். யாக்யவல்க்கியரும் பரத்வாஜரும் உரையாடலை முடித்துக் கொண்டதாகக் கூறப்படவில்லை.
இதனுடன், துளஸிதாஸர் இந்த நூலை முடித்துக் கொள்கிறார்.

சமஸ்க்ருதத்திலுள்ள ருத்ராஷ்டகம் இந்த காண்டத்தின் ஒரு பகுதி.

இராமசந்த்ரரின் அவதாரம்
பால காண்டத்தில், சிவன் இராமரின் கதையை பார்வதி தேவியிடம் கூறுவதாக எழுதப்பட்டிருந்தது.
அப்பொழுது இராமர் பூமியில் அவதரித்ததற்கான ஐந்து காரணங்களைக் கூறுகிறார்.

படைப்புத் தொழிலின் சமன்பாடு
எப்பொழுதெல்லாம் தர்மம் குறைந்து அதர்மம் உலகில் பெருக்கத் தொடங்குகிறதோ, அப்போதெல்லாம் இறைவன் ஒரு அவதாரத்தில், பூமியைக் காப்பாற்றுவான் என்று பார்வதியிடம் சிவன் கூறுகிறார்.
அந்த அரக்கர்களை அழித்து, பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவான் இறைவன் என்கிறார். இதுவே இராமாவதாரத்தின் முதன்மையான நோக்கம்.

ஜயன் விஜயன்
சகோதரர்கள் ஜயன் விஜயன் இருவரும் பகவான் விஷ்ணுவின் வாயிற்காப்போர்கள்.
சனக முனிவர் மற்றும் அவரின் சகோதரர்களின் சாபத்தால் இருவரும் அரக்க குலத்தில் பிறக்க நேரிடுகிறது.
அவர்கள் ஹிரண்யகசிபுவும் ஹிரண்யாக்ஷனும் ஆவர். இறைவன் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனையும், நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவையும் அழித்தார்.
ஹரி தானே இவர்களை அழித்த போதும், சாபத்தின்படி இவர்கள் மூன்று பிறவி எடுக்க வேண்டுமென்பதால், இவர்கள் மோட்சம் அடையவில்லை.
எனவே அவர்கள் இராவணனாகவும் கும்பகர்ணனாகவும் மறுபிறவி எடுத்தனர். ஹரி, இவர்களை அழிக்க இராமராக மனிதப் பிறவி எடுத்தார்.

நாரத முனியின் சாபம்
நாரத முனி பகவான் விஷ்ணுவை நினைத்துக் கொண்டே இமாலய மலையில் நடந்து சென்றார். அங்கு அவர் ஆழ்ந்த தியானத்திற்குச் சென்றார்.
அவரின் தவத்தைக் கண்ட இந்திரன் எங்கே தனது இந்திரலோகப் பதவிக்கு அபாயம் ஏற்பட்டு விடுமோ என்று பயந்தான்.
இந்திரன் காமதேவனை அழைத்து, நாரதரின் தவத்தைக் கலைக்குமாறு கூறினார். அவர் நறுமணமுள்ள மலர்கள், தென்றல், தேவலோகத்துப் பெண்கள் கொண்டும் கலைக்க முயற்சித்தார்.
ஆனால், அவை எதுவும் நாரதரைக் கலைக்கவில்லை. தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, நாரதரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரினார் காமதேவன்.
இதை சிவனிடம் பெருமையாக நாரதர் கூறினார். சிவன் இக்கதையை ஹரியிடம் சொல்லக் கூடாதென்றார்.

விஷ்ணுவைச் சந்தித்த நாரதர், கர்வத்தோடு சிவனின் வார்தையையும் மீறி இக்கதையைக் கூறினார்.
விஷ்ணு மேலும் நாரதரைப் புகழ, அளவில்லா கர்வத்தோடு நாரதர் கிளம்பினார். ஹரி லக்ஷ்மி தேவியிடம் தான் ஒரு திட்டம் வகுத்திருப்பதாகக் கூறி மாயையைத் தொடங்கினார்.
விஷ்ணு ஒரு மிக அழகான நகரத்தை உருவாக்கினார். அந்த நகரத்தின் மன்னர் ஷீலாநிதி, அவரின் அழகான மகள் விஷ்வமோகினி.
நாரதர் ஆர்வத்துடன் அந்த நகரைச் சென்றடைந்தார். அங்கே அந்த மன்னனின் மகள் மீது காதல் கொண்டார்.
மன்னர் ஒரு தகுதியானவற்கே தன் மகளைத் தருவதாகக் கூறினார். நாரதர் இளவரசி தன்னைத் தேர்ந்தெடுக்க திட்டம் தீட்டினார்.

நாரதர் ஹரியிடம் அளவில்லா அழகை வரமாகக் கேட்டார். ஹரி நாரதருக்கு எது நன்மையோ அதையே செய்வதாகக் கூறினார்.
உண்மையில், இராமர், நாரதரை ஒரு குரங்கைப் போல மாற்றினார். அரசவையிலிருந்த அனைவரும் அதைக் கண்டும் ஏதும் கூறவில்லை.
கோபம் கொண்ட இளவரசி நாரதரை வெறுத்தாள். கண்ணாடியில் தன் முகம் கண்ட நாரதர், வைகுண்டத்திற்குச் சென்று ஹரியைத் தகாத வார்தைகளால் பேசினார் :
“ஒரு குரங்கைப் போல நீ என்னை மாற்றியதால் குரங்குகள் உன்னுடைய தோழர்கள் ஆவார்கள். என்னை நீ வருத்தியதால், உன் மனைவியைப் பிரிந்து வருந்துவாய்” என்றார்.
ஹரியும் அதனை ஏற்றுக் கொண்டு, மாயையைக் கலைத்தார்.

நாரதர் விஷ்வமோகினி உட்பட அனைத்தும் மாயை என்று அறிந்து கொண்டு சாபத்தை அழிக்குமாறு கூறினார்.
ஹரி அது தனது விருப்பம் என்று கூறி, எல்லா பாவங்களில் இருந்து விடுபட, ஹரி நாமாவைச் சொல்வதே சிறந்தது என்றார்.
நாரதர் தன்னுடைய இடத்திற்குச் சென்று நாமஸ்மரணை செய்யத் தொடங்கினார்

ஸ்வயம்புவா மனுவும் ஷதரூபாவும்
ஸ்வயம்புவா மனுவின் மனைவி ஷதரூபா. மனு பல ஆண்டுகள் உலகை ஆண்டு, இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றினான்.
ஹரியின் பக்தனான அவன், ராஜ்யத்தை மகனிடம் கொடுத்து விட்டு, மனைவியுடன் காட்டில் சென்று தவம் செய்ய எண்ணினான்.
இருவரும் சரயு நதிக்கரையில் அமர்ந்து பன்னிரெண்டு எழுத்து மந்திரத்தை ஜபித்தனர்.
சிலர் அந்த மந்திரம் ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்ற மும்மூர்த்திகளை அழைக்கும் மந்திரம் என்கிறார்கள்
இராமபத்ராசார்யா அந்த மந்திரம் இராமருக்கும் சீதைக்குமான மந்திரம் என்கிறார்.

இருவரும் முதலில் உணவையும், நீரையும் தியாகம் செய்தனர். பின்னர், காற்றைத் தியாகம் செய்ய எண்ணினர்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் அவர்களை அழைத்தும், முடிவில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அப்பொழுது, சொர்க்கத்திலிருந்து என்ன வரம் வேண்டுமென்று ஒரு குரல் கேட்டது.
இராமரும் சீதையும் அழகான உருவத்தில் அவர்கள் முன் தோன்ற, பெருமகிழ்ச்சி அடைந்த இருவரும் தங்களுடைய எல்லா ஆசைகளும் நிறைவேறி விட்டதாகக் கூறினர்.
இறுதியாக, தனக்கு ஒரு நெடு நாள் ஆசை இருப்பதாகவும், இறைவன் தனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்பதே அது என்றும் கூறினான் மனு.

இறைவன் அதை நிறைவேற்றுவதாகக் கூறினார். ஷதரூபாவும் அதுவே தன்னுடைய ஆவல் என்றாள்.
இறைவன் அவர்கள் இருவரையும் இந்திரனின் தலைநகரத்தில் வசிக்கச் செய்தார்.

பின்னர், இருவரும் சிறிது காலத்திற்குப் பின், அயோத்தி மன்னன் தசரதானாகவும் கோசலையாகவும் பிறப்பார்கள் என்றார் இறைவன்.
அவர்கள் இருவருக்கும் மகனாக தானே அவதரிப்பதாகவும் கூறினார்.

மன்னன் பிரதாப்பானுவின் கதை
இராமர் பிறப்பதற்கு முன், யாக்யவல்க்கியர் பரத்வஜாரிடம் பிரதாப்பானுவின் கதையைக் கூறினார். கைக்கெய் என்ற நகரத்தின் மன்னன் சத்யகேது.
அவருக்கு, பிரதாப்பானுவ, அரிமர்த்தனா என்று இரு புதல்வர்கள். அவரின் பிரதான மந்திரி தர்மருசி. சத்யகேது தனது ராஜ்யப் பொறுப்பை பிரதாப்பானுவிடம் ஒப்புவிக்க, பிரதாப்பானு உலகையே வெல்கிறார்.

ஒரு முறை அவர் கானகத்திற்குச் செல்லும் போது ஒரு கொடிய கரடியைக் கண்டார். அந்த கரடி காலகேது;அது அவரை விட்டு வெகு தூரம் செல்கிறது.
பிரதப்பானு அதனைத் துரத்திக் கொண்டு வெகு தூரம் செல்கிறார். அப்போது தாகம் எடுக்க, அருகிலிருக்கும் ஒரு போலி முனிவரின் ஆஷ்ரமத்திற்குச் செல்கிறார்.
முன் நடந்த ஒரு சம்பவத்தால் கோபம் கொண்டிருந்த முனிவர், அவரை அவமானப்படுத்த எண்ணினார்.
முனிவரை அடையாளம் காணாத மன்னர், முனிவர் வரம் கேட்டவுடன், மறைந்து போகவும், இளமையோடு இருக்கவும் வரம் கேட்டார்.
ஆனால், அவை நிறைவேற, பல பிராமணர்களை உணவளித்து மகிழ்விக்க வேண்டுமென்றார் முனிவர்.

முனிவர் மன்னரை ஓய்வெடுக்கச் சொல்லி, உணவு தயாரிக்கச் செல்வதாகக் கூறினார்.
மன்னர் மூன்று நாள் காத்திருந்தும் முனிவர் வராது போக, காலகேது ஒரு பூசாரியாக வந்து, மன்னரை அவையில் சந்தித்து, முனிவர் அவனை உணவு சமைக்க அனுப்பியிருப்பதாகக் கூறினார்.
மன்னர் எல்லா பிராமணர்களையும் அழைத்தார். அவர்கள் உண்ணும் முன், அந்த உணவு சுத்தம் இல்லாதது, அனைவரும் ஓடி விடுங்கள் என்று வானிலிருந்து ஒலி கேட்க, அனைவரும், மன்னரைச் சபித்தனர்.
அப்போது அந்த குரல், மன்னரின் மீது பிழை இல்லை என்று கூறி, சாபத்தைத் திரும்பப் பெற இயலாது என்பதால், அடுத்த பிறவியில், சாபத்தின் பலனை அவர்கள் அனுபவிக்கக் கடவது என்றது.

சினம் கொண்ட மன்னர் காலக்கேதுவைத் தேடினார். அங்கு அவனைக் காணாது வருந்திய போது, பிராமணர்கள், அடுத்த பிறவியில் இறைவனே அவனை அழிப்பார் என்றார்.
சாபத்தின் படியே, அண்டை நாட்டு படையெடுப்பில் பிரதாப்பானு, அரிமர்த்தம், தர்மருசி ஆகியோர் மாண்டனர்.

பிரதாப்பானு இராவணனாகவும், அரிமர்த்தம் கும்பகர்ணனாகவும், தர்மருசி விபீஷணனாகவும் மறுபிறவி எடுத்தனர்.
மூவரும், கடுந்தவம் செய்து பல வரங்கள் பெற்றனர்-இராவணன் மனிதப் பிறவி மற்றும் குரங்குப் பிறவிகளால் மட்டுமே தன்னைக் கொல்ல முடியும் என்றும்,
கும்பகர்ணன் ஆறு மாதம் இடை விடாத உறக்கம் வேண்டுமென்றும், விபீஷணன் ஹரியின் மேல் அளவற்ற பற்று வேண்டும் என்றும் வரங்களைப் பெற்றனர்.

எதிர்பாராத முடிவு
பல்வேறு கவிஞர்கள் இந்நூல் எதிர்பாராத இடத்தில் முடிவு பெற்றதாகக் கூறுகின்றனர்.
வால்மீகியின் உத்தர காண்டத்தில் இராமரின் ஆட்சியில் சீதை கானகம் செல்வது, அயோத்தி மக்கள் புரஞ்சொல்வது போன்றவைக் கூறப்பட்டுள்ளது.
சீதை அன்னை பூமா தேவியிடம் தன்னை அழைத்துக் கொள்ளுமாறு கூறி, இராமரை விட்டுச் செல்வதாக எழுதியுள்ளார்.
ஆனால், இந்த நூலில் எவையும் குறிப்பிடப்படவில்லை. காத கார் மொராரி பாபு, துளஸிதாஸர் நூலை சீதையின் கவலையோடு முடிக்க விரும்பாததே காரணம் என்கிறார். துளஸிதாஸர்,
சீதையை தன்னுடைய தாயாகவும் உலகின் தாயாகவும் வர்ணிக்கிறார். சீதை ஏற்கனவே தேவையான அளவிற்குத் துன்புற்றத்தால், மகிழ்ச்சியுடன் நூலை நிறைவு செய்கிறார்.
சிலர், இந்த நூலின் பாலகாண்டத்தை மட்டுமே கூறுகிறார்கள். ஏனெனில், அதில் இராமர், சீதையின் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்துள்ளது.

மானஸில் இராமரின் தெய்வீகம்
இராமரின் தெய்வீகப் பிறப்பு
சித்திரை மாதத்தின் ஒன்பதாம் நாள், சூரியன் மத்யமமாக இருக்கும்; அதிகம் வெயிலோ குளிரோ இல்லாத காலம்,
இதமான காற்று வீசும் காலம். காட்டில் பூ பூக்கும் காலம், ஆறுகள் பெருக்கெடுத்து ஓடும் காலம். பிரம்மா இராமர் பிறக்க இதுவே சரியான நேரம் என்று குறிக்கிறார்.
தேவர்கள் அனைவரும் மிக உன்னதமான இராமரின் பிறப்பைக் காண வானில் கூடுகிறார்கள். தேவர்கள் இறைவனின் துதியைப் பாட அவை வானில் எதிரொலிக்கிறது.

இங்கே இராம் ஜனம் ஸ்துதி என்ற புகழ்பெற்ற பாடல் எழுதப்பட்டுள்ளது..கோசலை நான்கு கரங்களுடன் கரிய நிரத்துடன் பிறந்த குழந்தை கண்டு குதூகலிக்கிறாள்.
பல்வேறு ஆபரணங்கள் அணிவித்து, அழகின் கடல் என்று கொஞ்சுகிறாள். கோசலை கைகளைக் குவித்துப் பாடுகிறாள்
“எல்லை அற்றவனே, உன்னை நான் எவ்வாறு துதிப்பேன். வேதங்களும் புராணங்களும் நல்லொழுக்கத்தின் ஆலயம் நீ என்று வர்ணிக்கின்றது.
லக்ஷ்மி தேவிக்கு கடவுள் நீ; அனைத்து மக்களாலும் நேசிக்கப் படுபவன் நீ;என் நன்மைக்காக்கத் தோன்றியுள்ளாய்;
உன் உடம்பின் ஒவ்வொரு துளையும் பல பிரபஞ்சங்களை அடக்கியுள்ளது;நீ என்னுடைய வயிற்றில் தங்கினாய் என்று எண்ணுகையில் நான் தடுமாறுகிறேன்”.
இராமர் சிரித்தபடியே கோசலையின் முந்தைய பிறவியைப் பற்றி கூறி தன்னை மகனாக ஏற்றுக் கொள்ளுமாறு கூறினார்.
கோசலை இராமரை ஒரு சாதாரண குழந்தையாக மாறக் கேட்டுக் கொண்டாள். பரம்பொருளான இராமர், ஒரு சிறு குழந்தையாக மாறி, அழத் தொடங்கினார்.

துளஸிதாஸர், இந்த பாடலைப் பாடும் எவரும் மனித வாழ்க்கையிலிருந்து விடுபட்டு வைகுண்டம் அடைவர் என்கிறார்.
இந்த பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல், இராமரின் பிறந்த நாள் அன்று பாடப் படுகிறது.

அகல்யையின் சாப விமோசனம்
அகல்யை கௌதம ரிஷியின் மனைவி. அவளின் அழகைக் கண்டு அவள் மேல் ஆசைப்பட்டான் இந்திரன்.
நிலாவினை சேவலாக மாற்றி, சூரியன் உதிக்கும் முன்னரே கூவச் செய்தான். விடிந்ததாக நம்பிய ரிஷியும் நீராட கங்கையைச் சென்றடைந்தார்.
அப்போது ரிஷியின் ரூபத்தில் இந்திரன் அங்கு வந்தான். சிறிது நேரத்திற்குப் பின் வந்த ரிஷி, நடந்ததை அறிந்து சினம் கொண்டு, இந்திரன், சந்திரனுக்கு சாபம் அழித்தார்.
இந்திரன் தேவலோகம் இழந்து, ஆயிரம் தாமரைகளால் பூஜித்து சாபத்தை முடித்தான். ரிஷி அகலிகையைக் கல்லால் மாறிவிடும்படி சபித்தார்.
ஒரு பாவமும் செய்யவில்லை என்று அவள் கூறிய பின், இராமர் அவளுக்கு சபாவிமோசனம் அளிப்பார் என்றார்.

இராமர், மிதிலைக்கு சீதையைக் காண செல்லும் பொது, கௌதம ரிஷியின் ஆஷ்ரமத்தை அடைந்தனர்.
விஷ்வமித்ரார், அகலிகையின் கதையைச் சொல்ல, இராமர், கல்லைத் தனது கால்களால் தொட்டு, அகலிகைக்கு விமோசனம் அளித்தார்.
அவள் இராமரின் கால்களில் விழுந்து, இராமரைத் தரிசித்தது தனது புண்ணியம் என்று கூறி கண்ணீரால் அவர் பாதங்களைக் கழுவினாள்.
பின்னர், அவளது கணவனின் வீட்டிற்குத் திரும்பினாள்.

சதியின் தற்கொலையும் பார்வதியின் அவதாரமும்
பாலகாண்டத்தில், சிவன் இராமகதையைப் பார்வதியிடம் கூறுவது கூறப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில், யாக்யவல்க்கியர் பரத்வாஜரிடம் கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

சதியின் சந்தேகம்
திரேதா யுகத்தில், சிவன் சதியுடன் அகஸ்த்ய ரிஷியைச் சந்திக்கச் சென்றார்.
சிவனின் வரவால் மகிழ்ந்த அகஸ்த்ய ரிஷி, இராமரின் கதையைக் கூறினார். சிவன் மிகுந்த மகிழ்வுடன் அதைக் கேட்டுக் கொண்டு, திரும்பிச் சென்றார்.
அதே சமயம், இராமர் பூமியில் அவதரித்து சீதை, இலக்குவனுடன் தண்டக வனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இறுதியில், சிவன், சீதையைத் தேடிக் கொண்டிருக்கும் இராமரைக் கண்டார். “உலகின் மீட்பரான இராமரை நான் வணங்குகிறேன்;அவரே சத்தியமானவர்;பேரின்பம் அளிப்பவர்;
உன்னதமானவர்”. சதி இராமரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை; சிவன் எதற்காக ஒரு மானிடரைப் போற்றுகிறார் என்று வியந்தாள்.
அனைத்தையும் அறிந்த சிவன், சதி மனதில் இருக்கும் சந்தேகத்தையும் அறிந்து, அந்த மானிடர் அகஸ்த்ய ரிஷி புகழ்ந்த இராமர் என்றும்,
சந்தேகம் இன்னும் இருந்தால், சோதித்துப் பார்க்கச் சொல்கிறார். சதி சீதையாக இராமர், இலக்குவன் முன் தோன்றுகிறாள்.
சிவன் எங்கே என்று இருவரும் அவளிடம் வினவ, அவர்களின் பெருமையை எண்ணி, தன்னை நொந்து கொள்கிறாள்.
இதை எவ்வாறு சிவனிடம் கூறுவது என்று வருந்துகிறாள்.

சிவன் சதியிடம் எவ்வாறு அவள் சோதித்தாள் என்று வினவுகிறார். சதி தான் சோதிக்கவில்லை என்றும் இராமரைப் புகழ்ந்தாள் என்றும்
அனைத்தும் அறிந்த சிவனிடம் கூறுகிறாள். சினம் கொண்ட சிவன், இனி சதிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறி,
வாழை மரத்தின் அடியில் தவ்ம் மேற்கொள்கிறார். தன் தவறை எண்ணி வருந்திய சதி, சிவனின் கால்களில் வீழ்ந்து அழ,
விஷ்ணுவின் லீலைகளை சிவன் கூறத் தொடங்கினார்.

தக்ஷனின் தியாகம்
சிவன் விஷ்ணுவின் கதைகளைக் கூறிக் கொண்டிருக்கையில், வானில் கொண்டாட்டங்கள் தெரிகிறது.
அது என்னவென்று சதி கேட்க, அது அவளுடைய தந்தை தக்ஷன் ஏற்பாடு செய்த யாகம் என்று சிவன் கூறுகிறார்.
கடவுள் மீது தக்ஷன் வெறுப்பு கொண்டதால் பிரம்மா, விஷ்ணு, சிவனை அவன் அழைக்கவில்லை என்கிறார்.
தான் சென்று வர அனுமதி கேட்டாள் சதி. அழைப்பு இல்லாததால் செல்ல வேண்டாம் என்றார் சிவன். சொல் கேளாமல், சதி சென்றாள்.
துளஸிதாஸர் ஒரு பெண்ணுக்கும் அவள் தந்தைக்குமான தொடர்பு மிக உறுதியானது என்கிறார்.

சதியை அவளது அன்னை தவிர யாரும் வரவேற்கவில்லை. தக்ஷன் கண்டுகொள்ளவும் இல்லை. சதி சிவனுக்கு மரியாதை செய்யாததைக் கண்டு வெகுண்டாள்.
சிவனே இந்த உலகின் தந்தை; அனைவரையும் படைத்தவர் அவரை அவமதிக்கலாகாது என்று கூறி நெருப்பில் வீழ்ந்து மாண்டாள்.
இதை அறிந்த சிவன் வீரபத்ரனை அங்கே அனுப்பினார். அவர் யாகத்தையும் தக்ஷனையும் அழித்தார்.
சதி சாகும் தருவாயில் விஷ்ணுவிடம் தான் மீண்டும் சிவனுக்கு மனைவியாக வேண்டுமென்று வேண்டிக்கொண்டாள்.
இமாசலுக்கும் மேனாவிற்கும் மகளாக பார்வதியாக பிறந்தாள்.

பார்வதி மற்றும் நாரதரின் தீர்க்கதரிசனம்
பார்வதி பிறந்து பல வருடங்களுக்குப் பின்னர், நாரத முனி அவளின் பெற்றோர் இமாச்சல் மற்றும் மேனாவைச் சந்தித்தார்.
இமாச்சல் தன்னுடைய புதல்வியின் வருங்காலம் என்னவென்று கேட்டார். நாரதர், பார்வதி பல கலைகள் கற்று, மிகுந்த அன்பு கொண்ட ஒருவனை மணப்பாள் என்றார்.
அவனுடன் பல காலம் மகிழ்ச்சியுடன் வாழ்வாள் என்றார். ஆனால், அவளை மனம் முடிப்பவன், சடாமுடி தரித்த உடைகள் அணியாத ஒரு முனிவராக இருப்பார் என்றார். இதைக் கேட்டு பெற்றோர்கள் வருந்தினாலும், பார்வதி விஷ்ணுவின் வாக்கு மெய்யாவதால் மகிழ்ந்தாள்.
நாரதர் அப்படிபட்ட ஒருவர் சிவன் தான் என்று கூறி, பார்வதியைத் திருமாலைத் தியானிக்குமாறு கூறினார்.
பார்வதி சிவனை அடைய கடுந்தவம் இயற்றினாள். உடல் மெலிந்து மிகவும் மோசமான நிலையில் இருந்த அவளைக் கண்ட பிரம்மா
இது வரை உலகில் இவ்வாறு யாரும் தவம் செய்தது இல்லை என்று மெச்சி தவத்தை நிறுத்தி, தந்தையுடன் செல்லுமாறு கூறினார்.

சதி மரித்த பின், சிவன் ஹரியின் நமதைக் கூறிக் கொண்டே தவம் செய்தார். அப்போது இராமர்,சிவனிடம் பார்வதியை மணக்குமாறு கூறினார்.
இதை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், சிவன் மறுக்க முடியாமல் தவத்தைத் தொடர்ந்தார். அப்போது, தாரகன் என்ற அரக்கன் மக்களைத் துன்புறுத்தி வந்தான்.
சிவனின் புதல்வனால் மட்டுமே அவனை அழிக்க முடியுமென்று அறிந்த பிரம்மா சிவனைப் பார்வதியை மணக்குமாறு கூறினார்.
சிவனின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினார்கள். அவன் பூவினால் ஆன ஐந்து அம்புகளை சிவனின் மார்புகளின் மீது வீசினான்.
தவம் கலைந்து வெகுண்டு எழுந்த சிவன், மன்மதனை எரித்துச் சாம்பலாக்கினார். இதைக் கேட்ட மன்மதனின் மனைவி ரதி, மயங்கி விழுந்தாள்.
அதைக் கண்டு மனமிறங்கிய சிவன், உடலில்லாமல் அவன் அனைவரையும் ஆளுவான் என்று வரம் அளித்தார். கிருஷ்ணாவதாரத்தின் போது, அவன் பிரத்யும்னா என்று மீண்டும் பிறப்பான் என்றார்.
பின்னர், பிரம்மாவும் மற்ற கடவுளும் தன்னுடைய கண்களால் சிவனின் திருமணத்தைப் பார்க்கும் வரம் கேட்டனர்.
விஷ்ணுவின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவன் பார்வதியை மணக்க ஒப்புக்கொண்டார். பிரம்மா சிவனின் திருமணத்தை ஏற்பாடு செய்தார்.

சிவன் பார்வதி திருமணம்
சிவனுக்கென்று குடும்பம் இல்லை; எனவே அவருடைய சேவகர்கள் திருமணத்தை ஏற்பாடு செய்தனர்.
பாம்பினாலான கிரீடமும், தோடும், காப்பும், கொண்டு தலையையும் கழுத்தையும் அலங்கரித்துக் கொண்டார்.
தான் உடல் முழுவதும் சாம்பலைப்பூசிக் கொண்டு, சிங்கத்தின் தோலால் போர்த்திக் கொண்டார். இவ்வாறாக அவர் திருமண மண்டபம் நோக்கி நடந்து செல்ல, பிரம்மா, விஷ்ணு, கந்தர்வர்கள், தேவர்கள் தொடர்ந்து வந்தனர்.
திருமணம் முடிந்து, அவர்களுக்கு கார்த்திகேயன் என்ற மகன் பிறந்து தாரகனை வதம் செய்தார்.

ஒவ்வொரு காண்டத்தில் இருந்து சில ஸ்லோகங்களைப் பார்ப்போம்

1.1

चौपाई
பஂதஉ குரு பத பதும பராகா. ஸுருசி ஸுபாஸ ஸரஸ அநுராகா..
அமிய மூரிமய சூரந சாரூ. ஸமந ஸகல பவ ருஜ பரிவாரூ..
ஸுகரிதி ஸஂபு தந பிமல பிபூதீ. மஂஜுல மஂகல மோத ப்ரஸூதீ..
ஜந மந மஂஜு முகுர மல ஹரநீ. கிஏதிலக குந கந பஸ கரநீ..
ஷ்ரீகுர பத நக மநி கந ஜோதீ. ஸுமிரத திப்ய த்ரரிஷ்டி ஹியஹோதீ..
தலந மோஹ தம ஸோ ஸப்ரகாஸூ. பட஀ே பாக உர ஆவஇ ஜாஸூ..
உகரஹிஂ பிமல பிலோசந ஹீ கே. மிடஹிஂ தோஷ துக பவ ரஜநீ கே..
ஸூ஀ஹிஂ ராம சரித மநி மாநிக. குபுத ப்ரகட ஜஹஜோ ஜேஹி காநிக..

दोहा/सोरठा
ஜதா ஸுஅஂஜந அஂஜி தரிக ஸாதக ஸித்த ஸுஜாந.
கௌதுக தேகத ஸைல பந பூதல பூரி நிதாந..1..

1.2

चौपाई
குரு பத ரஜ மரிது மஂஜுல அஂஜந. நயந அமிஅ தரிக தோஷ பிபஂஜந..
தேஹிஂ கரி பிமல பிபேக பிலோசந. பரநஉராம சரித பவ மோசந..
பஂதஉப்ரதம மஹீஸுர சரநா. மோஹ ஜநித ஸஂஸய ஸப ஹரநா..
ஸுஜந ஸமாஜ ஸகல குந காநீ. கரஉப்ரநாம ஸப்ரேம ஸுபாநீ..
ஸாது சரித ஸுப சரித கபாஸூ. நிரஸ பிஸத குநமய பல ஜாஸூ..
ஜோ ஸஹி துக பரசித்ர துராவா. பஂதநீய ஜேஹிஂ ஜக ஜஸ பாவா..
முத மஂகலமய ஸஂத ஸமாஜூ. ஜோ ஜக ஜஂகம தீரதராஜூ..
ராம பக்தி ஜஹஸுரஸரி தாரா. ஸரஸஇ ப்ரஹ்ம பிசார ப்ரசாரா..
பிதி நிஷேதமய கலி மல ஹரநீ. கரம கதா ரபிநஂதநி பரநீ..
ஹரி ஹர கதா பிராஜதி பேநீ. ஸுநத ஸகல முத மஂகல தேநீ..
படு பிஸ்வாஸ அசல நிஜ தரமா. தீரதராஜ ஸமாஜ ஸுகரமா..
ஸபஹிஂ ஸுலப ஸப திந ஸப தேஸா. ஸேவத ஸாதர ஸமந கலேஸா..
அகத அலௌகிக தீரதராஊ. தேஇ ஸத்ய பல ப்ரகட ப்ரபாஊ..

दोहा/सोरठा
ஸுநி ஸமு஀ஹிஂ ஜந முதித மந மஜ்ஜஹிஂ அதி அநுராக.
லஹஹிஂ சாரி பல அசத தநு ஸாது ஸமாஜ ப்ரயாக..2..

1.3

चौपाई
மஜ்ஜந பல பேகிஅ ததகாலா. காக ஹோஹிஂ பிக பகஉ மராலா..
ஸுநி ஆசரஜ கரை ஜநி கோஈ. ஸதஸஂகதி மஹிமா நஹிஂ கோஈ..
பாலமீக நாரத கடஜோநீ. நிஜ நிஜ முகநி கஹீ நிஜ ஹோநீ..
ஜலசர தலசர நபசர நாநா. ஜே ஜட஀ சேதந ஜீவ ஜஹாநா..
மதி கீரதி கதி பூதி பலாஈ. ஜப ஜேஹிஂ ஜதந ஜஹாஜேஹிஂ பாஈ..
ஸோ ஜாநப ஸதஸஂக ப்ரபாஊ. லோகஹுபேத ந ஆந உபாஊ..
பிநு ஸதஸஂக பிபேக ந ஹோஈ. ராம கரிபா பிநு ஸுலப ந ஸோஈ..
ஸதஸஂகத முத மஂகல மூலா. ஸோஇ பல ஸிதி ஸப ஸாதந பூலா..
ஸட ஸுதரஹிஂ ஸதஸஂகதி பாஈ. பாரஸ பரஸ குதாத ஸுஹாஈ..
பிதி பஸ ஸுஜந குஸஂகத பரஹீஂ. பநி மநி ஸம நிஜ குந அநுஸரஹீஂ..
பிதி ஹரி ஹர கபி கோபித பாநீ. கஹத ஸாது மஹிமா ஸகுசாநீ..
ஸோ மோ ஸந கஹி ஜாத ந கைஸேஂ. ஸாக பநிக மநி குந கந ஜைஸேஂ..

दोहा/सोरठा
பஂதஉஸஂத ஸமாந சித ஹித அநஹித நஹிஂ கோஇ.
அஂஜலி கத ஸுப ஸுமந ஜிமி ஸம ஸுகஂத கர தோஇ..3க..
ஸஂத ஸரல சித ஜகத ஹித ஜாநி ஸுபாஉ ஸநேஹு.
பாலபிநய ஸுநி கரி கரிபா ராம சரந ரதி தேஹு..3க..

1.4

चौपाई
பர அகாஜு லகி தநு பரிஹரஹீஂ. ஜிமி ஹிம உபல கரிஷீ தலி கரஹீஂ..
பஂதஉகல ஜஸ ஸேஷ ஸரோஷா. ஸஹஸ பதந பரநஇ பர தோஷா..
புநி ப்ரநவஉபரிதுராஜ ஸமாநா. பர அக ஸுநஇ ஸஹஸ தஸ காநா..
பஹுரி ஸக்ர ஸம பிநவஉதேஹீ. ஸஂதத ஸுராநீக ஹித ஜேஹீ..
பசந பஜ்ர ஜேஹி ஸதா பிஆரா. ஸஹஸ நயந பர தோஷ நிஹாரா..
பஹுரி பஂதி கல கந ஸதிபாஏ ஜே பிநு காஜ தாஹிநேஹு பாஏ.
பர ஹித ஹாநி லாப ஜிந்ஹ கேரேஂ. உஜரேஂ ஹரஷ பிஷாத பஸேரேஂ..
ஹரி ஹர ஜஸ ராகேஸ ராஹு ஸே. பர அகாஜ பட ஸஹஸபாஹு ஸே..
ஜே பர தோஷ லகஹிஂ ஸஹஸாகீ. பர ஹித கரித ஜிந்ஹ கே மந மாகீ..
தேஜ கரிஸாநு ரோஷ மஹிஷேஸா. அக அவகுந தந தநீ தநேஸா..
உதய கேத ஸம ஹித ஸபஹீ கே. குஂபகரந ஸம ஸோவத நீகே..

दोहा/सोरठा
உதாஸீந அரி மீத ஹித ஸுநத ஜரஹிஂ கல ரீதி.
ஜாநி பாநி ஜுக ஜோரி ஜந பிநதீ கரஇ ஸப்ரீதி..4..

1.5

चौपाई
மைஂ அபநீ திஸி கீந்ஹ நிஹோரா. திந்ஹ நிஜ ஓர ந லாஉப போரா..
பாயஸ பலிஅஹிஂ அதி அநுராகா. ஹோஹிஂ நிராமிஷ கபஹுகி காகா..
பஂதஉஸஂத அஸஜ்ஜந சரநா. துகப்ரத உபய பீச கசு பரநா..
பிசுரத ஏக ப்ராந ஹரி லேஹீஂ. மிலத ஏக துக தாருந தேஹீஂ..
உபஜஹிஂ ஏக ஸஂக ஜக மாஹீஂ. ஜலஜ ஜோஂக ஜிமி குந பிலகாஹீஂ..
ஸுதா ஸுரா ஸம ஸாதூ அஸாதூ. ஜநக ஏக ஜக ஜலதி அகாதூ..
பல அநபல நிஜ நிஜ கரதூதீ. லஹத ஸுஜஸ அபலோக பிபூதீ..
ஸுதா ஸுதாகர ஸுரஸரி ஸாதூ. கரல அநல கலிமல ஸரி ப்யாதூ..
குந அவகுந ஜாநத ஸப கோஈ. ஜோ ஜேஹி பாவ நீக தேஹி ஸோஈ..

दोहा/सोरठा
பலோ பலாஇஹி பை லஹஇ லஹஇ நிசாஇஹி நீசு.
ஸுதா ஸராஹிஅ அமரதாகரல ஸராஹிஅ மீசு..5..

1.6

चौपाई
கல அக அகுந ஸாதூ குந காஹா. உபய அபார உததி அவகாஹா..
தேஹி தேஂ கசு குந தோஷ பகாநே. ஸஂக்ரஹ த்யாக ந பிநு பஹிசாநே..
பலேஉ போச ஸப பிதி உபஜாஏ. கநி குந தோஷ பேத பிலகாஏ..
கஹஹிஂ பேத இதிஹாஸ புராநா. பிதி ப்ரபஂசு குந அவகுந ஸாநா..
துக ஸுக பாப புந்ய திந ராதீ. ஸாது அஸாது ஸுஜாதி குஜாதீ..
தாநவ தேவ ஊ அரு நீசூ. அமிஅ ஸுஜீவநு மாஹுரு மீசூ..
மாயா ப்ரஹ்ம ஜீவ ஜகதீஸா. லச்சி அலச்சி ரஂக அவநீஸா..
காஸீ மக ஸுரஸரி க்ரமநாஸா. மரு மாரவ மஹிதேவ கவாஸா..
ஸரக நரக அநுராக பிராகா. நிகமாகம குந தோஷ பிபாகா..

दोहा/सोरठा
ஜட஀ சேதந குந தோஷமய பிஸ்வ கீந்ஹ கரதார.
ஸஂத ஹஂஸ குந கஹஹிஂ பய பரிஹரி பாரி பிகார..6..

1.7

चौपाई
அஸ பிபேக ஜப தேஇ பிதாதா. தப தஜி தோஷ குநஹிஂ மநு ராதா..
கால ஸுபாஉ கரம பரிஆஈ. பலேஉ ப்ரகரிதி பஸ சுகஇ பலாஈ..
ஸோ ஸுதாரி ஹரிஜந ஜிமி லேஹீஂ. தலி துக தோஷ பிமல ஜஸு தேஹீஂ..
கலஉ கரஹிஂ பல பாஇ ஸுஸஂகூ. மிடஇ ந மலிந ஸுபாஉ அபஂகூ..
லகி ஸுபேஷ ஜக பஂசக ஜேஊ. பேஷ ப்ரதாப பூஜிஅஹிஂ தேஊ..
உதரஹிஂ அஂத ந ஹோஇ நிபாஹூ. காலநேமி ஜிமி ராவந ராஹூ..
கிஏஹுகுபேஷ ஸாது ஸநமாநூ. ஜிமி ஜக ஜாமவஂத ஹநுமாநூ..
ஹாநி குஸஂக ஸுஸஂகதி லாஹூ. லோகஹுபேத பிதித ஸப காஹூ..
ககந சட஀இ ரஜ பவந ப்ரஸஂகா. கீசஹிஂ மிலஇ நீச ஜல ஸஂகா..
ஸாது அஸாது ஸதந ஸுக ஸாரீஂ. ஸுமிரஹிஂ ராம தேஹிஂ கநி காரீ..
தூம குஸஂகதி காரிக ஹோஈ. லிகிஅ புராந மஂஜு மஸி ஸோஈ..
ஸோஇ ஜல அநல அநில ஸஂகாதா. ஹோஇ ஜலத ஜக ஜீவந தாதா..

दोहा/सोरठा
க்ரஹ பேஷஜ ஜல பவந பட பாஇ குஜோக ஸுஜோக.
ஹோஹி குபஸ்து ஸுபஸ்து ஜக லகஹிஂ ஸுலச்சந லோக..7க..
ஸம ப்ரகாஸ தம பாக துஹுநாம பேத பிதி கீந்ஹ.
ஸஸி ஸோஷக போஷக ஸமு஀ி ஜக ஜஸ அபஜஸ தீந்ஹ..7க..
ஜட஀ சேதந ஜக ஜீவ ஜத ஸகல ராமமய ஜாநி.
பஂதஉஸப கே பத கமல ஸதா ஜோரி ஜுக பாநி..7க..
தேவ தநுஜ நர நாக கக ப்ரேத பிதர கஂதர்ப.
பஂதஉகிஂநர ரஜநிசர கரிபா கரஹு அப ஸர்ப..7க..

1.8

चौपाई
ஆகர சாரி லாக சௌராஸீ. ஜாதி ஜீவ ஜல தல நப பாஸீ..
ஸீய ராமமய ஸப ஜக ஜாநீ. கரஉப்ரநாம ஜோரி ஜுக பாநீ..
ஜாநி கரிபாகர கிஂகர மோஹூ. ஸப மிலி கரஹு சாட஀ி சல சோஹூ..
நிஜ புதி பல பரோஸ மோஹி நாஹீஂ. தாதேஂ பிநய கரஉஸப பாஹீ..
கரந சஹஉரகுபதி குந காஹா. லகு மதி மோரி சரித அவகாஹா..
ஸூ஀ ந ஏகஉ அஂக உபாஊ. மந மதி ரஂக மநோரத ராஊ..
மதி அதி நீச ஊி ருசி ஆசீ. சஹிஅ அமிஅ ஜக ஜுரஇ ந சாசீ..
சமிஹஹிஂ ஸஜ்ஜந மோரி டிடாஈ. ஸுநிஹஹிஂ பாலபசந மந லாஈ..
ஜௌ பாலக கஹ தோதரி பாதா. ஸுநஹிஂ முதித மந பிது அரு மாதா..
ஹிஹஹி கூர குடில குபிசாரீ. ஜே பர தூஷந பூஷநதாரீ..
நிஜ கவித கேஹி லாக ந நீகா. ஸரஸ ஹோஉ அதவா அதி பீகா..
ஜே பர பநிதி ஸுநத ஹரஷாஹீ. தே பர புருஷ பஹுத ஜக நாஹீஂ..
ஜக பஹு நர ஸர ஸரி ஸம பாஈ. ஜே நிஜ பாட஀ி பட஀ஹிஂ ஜல பாஈ..
ஸஜ்ஜந ஸகரித ஸிஂது ஸம கோஈ. தேகி பூர பிது பாட஀இ ஜோஈ..

दोहा/सोरठा
பாக சோட அபிலாஷு பட஀ கரஉஏக பிஸ்வாஸ.
பைஹஹிஂ ஸுக ஸுநி ஸுஜந ஸப கல கரஹஹிஂ உபஹாஸ..8..

1.9

चौपाई
கல பரிஹாஸ ஹோஇ ஹித மோரா. காக கஹஹிஂ கலகஂட கடோரா..
ஹஂஸஹி பக தாதுர சாதகஹீ. ஹஹிஂ மலிந கல பிமல பதகஹீ..
கபித ரஸிக ந ராம பத நேஹூ. திந்ஹ கஹஸுகத ஹாஸ ரஸ ஏஹூ..
பாஷா பநிதி போரி மதி மோரீ. ஹிபே ஜோக ஹேஂ நஹிஂ கோரீ..
ப்ரபு பத ப்ரீதி ந ஸாமு஀ி நீகீ. திந்ஹஹி கதா ஸுநி லாகஹி பீகீ..
ஹரி ஹர பத ரதி மதி ந குதரகீ. திந்ஹ கஹுமதுர கதா ரகுவர கீ..
ராம பகதி பூஷித ஜியஜாநீ. ஸுநிஹஹிஂ ஸுஜந ஸராஹி ஸுபாநீ..
கபி ந ஹோஉநஹிஂ பசந ப்ரபீநூ. ஸகல கலா ஸப பித்யா ஹீநூ..
ஆகர அரத அலஂகரிதி நாநா. சஂத ப்ரபஂத அநேக பிதாநா..
பாவ பேத ரஸ பேத அபாரா. கபித தோஷ குந பிபித ப்ரகாரா..
கபித பிபேக ஏக நஹிஂ மோரேஂ. ஸத்ய கஹஉலிகி காகத கோரே..

दोहा/सोरठा
பநிதி மோரி ஸப குந ரஹித பிஸ்வ பிதித குந ஏக.
ஸோ பிசாரி ஸுநிஹஹிஂ ஸுமதி ஜிந்ஹ கேஂ பிமல பிவேக..9..

1.10

चौपाई
ஏஹி மஹரகுபதி நாம உதாரா. அதி பாவந புராந ஷ்ருதி ஸாரா..
மஂகல பவந அமஂகல ஹாரீ. உமா ஸஹித ஜேஹி ஜபத புராரீ..
பநிதி பிசித்ர ஸுகபி கரித ஜோஊ. ராம நாம பிநு ஸோஹ ந ஸோஊ..
பிதுபதநீ ஸப பாி ஸாரீ. ஸோந ந பஸந பிநா பர நாரீ..
ஸப குந ரஹித குகபி கரித பாநீ. ராம நாம ஜஸ அஂகித ஜாநீ..
ஸாதர கஹஹிஂ ஸுநஹிஂ புத தாஹீ. மதுகர ஸரிஸ ஸஂத குநக்ராஹீ..
ஜதபி கபித ரஸ ஏகஉ நாஹீ. ராம ப்ரதாப ப்ரகட ஏஹி மாஹீஂ..
ஸோஇ பரோஸ மோரேஂ மந ஆவா. கேஹிஂ ந ஸுஸஂக படப்பநு பாவா..
தூமஉ தஜஇ ஸஹஜ கருஆஈ. அகரு ப்ரஸஂக ஸுகஂத பஸாஈ..
பநிதி பதேஸ பஸ்து பலி பரநீ. ராம கதா ஜக மஂகல கரநீ..

छंद
மஂகல கரநி கலி மல ஹரநி துலஸீ கதா ரகுநாத கீ..
கதி கூர கபிதா ஸரித கீ ஜ்யோஂ ஸரித பாவந பாத கீ..
ப்ரபு ஸுஜஸ ஸஂகதி பநிதி பலி ஹோஇஹி ஸுஜந மந பாவநீ..
பவ அஂக பூதி மஸாந கீ ஸுமிரத ஸுஹாவநி பாவநீ..

दोहा/सोरठा
ப்ரிய லாகிஹி அதி ஸபஹி மம பநிதி ராம ஜஸ ஸஂக.
தாரு பிசாரு கி கரஇ கோஉ பஂதிஅ மலய ப்ரஸஂக..10க..
ஸ்யாம ஸுரபி பய பிஸத அதி குநத கரஹிஂ ஸப பாந.
கிரா க்ராம்ய ஸிய ராம ஜஸ காவஹிஂ ஸுநஹிஂ ஸுஜாந..10க..

——–

2.1

चौपाई
ஜப தேஂ ராமு ப்யாஹி கர ஆஏ. நித நவ மஂகல மோத பதாஏ..
புவந சாரிதஸ பூதர பாரீ. ஸுகரித மேக பரஷஹி ஸுக பாரீ..
ரிதி ஸிதி ஸஂபதி நதீஂ ஸுஹாஈ. உமகி அவத அஂபுதி கஹுஆஈ..
மநிகந புர நர நாரி ஸுஜாதீ. ஸுசி அமோல ஸுஂதர ஸப பாீ..
கஹி ந ஜாஇ கசு நகர பிபூதீ. ஜநு ஏதநிஅ பிரஂசி கரதூதீ..
ஸப பிதி ஸப புர லோக ஸுகாரீ. ராமசஂத முக சஂது நிஹாரீ..
முதித மாது ஸப ஸகீஂ ஸஹேலீ. பலித பிலோகி மநோரத பேலீ..
ராம ரூபு குநஸீலு ஸுபாஊ. ப்ரமுதித ஹோஇ தேகி ஸுநி ராஊ..

दोहा/सोरठा
ஸப கேஂ உர அபிலாஷு அஸ கஹஹிஂ மநாஇ மஹேஸு.
ஆப அசத ஜுபராஜ பத ராமஹி தேஉ நரேஸு..1..

——-

3.1

चौपाई
புர நர பரத ப்ரீதி மைஂ காஈ. மதி அநுரூப அநூப ஸுஹாஈ..
அப ப்ரபு சரித ஸுநஹு அதி பாவந. கரத ஜே பந ஸுர நர முநி பாவந..
ஏக பார சுநி குஸும ஸுஹாஏ. நிஜ கர பூஷந ராம பநாஏ..
ஸீதஹி பஹிராஏ ப்ரபு ஸாதர. பைடே படிக ஸிலா பர ஸுஂதர..
ஸுரபதி ஸுத தரி பாயஸ பேஷா. ஸட சாஹத ரகுபதி பல தேகா..
ஜிமி பிபீலிகா ஸாகர தாஹா. மஹா மஂதமதி பாவந சாஹா..
ஸீதா சரந சௌஂச ஹதி பாகா. மூட஀ மஂதமதி காரந காகா..
சலா ருதிர ரகுநாயக ஜாநா. ஸீஂக தநுஷ ஸாயக ஸஂதாநா..

दोहा/सोरठा
அதி கரிபால ரகுநாயக ஸதா தீந பர நேஹ.
தா ஸந ஆஇ கீந்ஹ சலு மூரக அவகுந கேஹ..1..

———-

4.1

चौपाई
ஆகேஂ சலே பஹுரி ரகுராயா. ரிஷ்யமூக பரவத நிஅராயா..
தஹரஹ ஸசிவ ஸஹித ஸுக்ரீவா. ஆவத தேகி அதுல பல ஸீஂவா..
அதி ஸபீத கஹ ஸுநு ஹநுமாநா. புருஷ ஜுகல பல ரூப நிதாநா..
தரி படு ரூப தேகு தைஂ ஜாஈ. கஹேஸு ஜாநி ஜியஸயந பு஀ாஈ..
படஏ பாலி ஹோஹிஂ மந மைலா. பாகௌஂ துரத தஜௌஂ யஹ ஸைலா..
பிப்ர ரூப தரி கபி தஹகயஊ. மாத நாஇ பூசத அஸ பயஊ..
கோ தும்ஹ ஸ்யாமல கௌர ஸரீரா. சத்ரீ ரூப பிரஹு பந பீரா..
கடிந பூமி கோமல பத காமீ. கவந ஹேது பிசரஹு பந ஸ்வாமீ..
மரிதுல மநோஹர ஸுஂதர காதா. ஸஹத துஸஹ பந ஆதப பாதா..
கீ தும்ஹ தீநி தேவ மஹகோஊ. நர நாராயந கீ தும்ஹ தோஊ..

दोहा/सोरठा
ஜக காரந தாரந பவ பஂஜந தரநீ பார.
கீ தும்ஹ அகில புவந பதி லீந்ஹ மநுஜ அவதார..1..

———-

5.1

चौपाई
ஜாமவஂத கே பசந ஸுஹாஏ. ஸுநி ஹநுமஂத ஹரிதய அதி பாஏ..
தப லகி மோஹி பரிகேஹு தும்ஹ பாஈ. ஸஹி துக கஂத மூல பல காஈ..
ஜப லகி ஆவௌஂ ஸீதஹி தேகீ. ஹோஇஹி காஜு மோஹி ஹரஷ பிஸேஷீ..
யஹ கஹி நாஇ ஸபந்ஹி கஹுமாதா. சலேஉ ஹரஷி ஹியதரி ரகுநாதா..
ஸிஂது தீர ஏக பூதர ஸுஂதர. கௌதுக கூதி சட஀ேஉ தா ஊபர..
பார பார ரகுபீர ஸாரீ. தரகேஉ பவநதநய பல பாரீ..
ஜேஹிஂ கிரி சரந தேஇ ஹநுமஂதா. சலேஉ ஸோ கா பாதால துரஂதா..
ஜிமி அமோக ரகுபதி கர பாநா. ஏஹீ பாி சலேஉ ஹநுமாநா..
ஜலநிதி ரகுபதி தூத பிசாரீ. தைஂ மைநாக ஹோஹி ஷ்ரமஹாரீ..

दोहा/सोरठा
ஹநூமாந தேஹி பரஸா கர புநி கீந்ஹ ப்ரநாம.
ராம காஜு கீந்ஹேஂ பிநு மோஹி கஹாபிஷ்ராம..1..

———-

6.1

चौपाई
யஹ லகு ஜலதி தரத கதி பாரா. அஸ ஸுநி புநி கஹ பவநகுமாரா..
ப்ரபு ப்ரதாப பட஀வாநல பாரீ. ஸோஷேஉ ப்ரதம பயோநிதி பாரீ..
தப ரிபு நாரீ ருதந ஜல தாரா. பரேஉ பஹோரி பயஉ தேஹிஂ காரா..
ஸுநி அதி உகுதி பவநஸுத கேரீ. ஹரஷே கபி ரகுபதி தந ஹேரீ..
ஜாமவஂத போலே தோஉ பாஈ. நல நீலஹி ஸப கதா ஸுநாஈ..
ராம ப்ரதாப ஸுமிரி மந மாஹீஂ. கரஹு ஸேது ப்ரயாஸ கசு நாஹீஂ..
போலி லிஏ கபி நிகர பஹோரீ. ஸகல ஸுநஹு பிநதீ கசு மோரீ..
ராம சரந பஂகஜ உர தரஹூ. கௌதுக ஏக பாலு கபி கரஹூ..
தாவஹு மர்கட பிகட பரூதா. ஆநஹு பிடப கிரிந்ஹ கே ஜூதா..
ஸுநி கபி பாலு சலே கரி ஹூஹா. ஜய ரகுபீர ப்ரதாப ஸமூஹா..

दोहा/सोरठा
அதி உதஂக கிரி பாதப லீலஹிஂ லேஹிஂ உடாஇ.
ஆநி தேஹிஂ நல நீலஹி ரசஹிஂ தே ஸேது பநாஇ..1..

———–

7.1

चौपाई
ரஹேஉ ஏக திந அவதி அதாரா. ஸமு஀த மந துக பயஉ அபாரா..
காரந கவந நாத நஹிஂ ஆயஉ. ஜாநி குடில கிதௌஂ மோஹி பிஸராயஉ..
அஹஹ தந்ய லசிமந பட஀பாகீ. ராம பதாரபிஂது அநுராகீ..
கபடீ குடில மோஹி ப்ரபு சீந்ஹா. தாதே நாத ஸஂக நஹிஂ லீந்ஹா..
ஜௌஂ கரநீ ஸமு஀ை ப்ரபு மோரீ. நஹிஂ நிஸ்தார கலப ஸத கோரீ..
ஜந அவகுந ப்ரபு மாந ந காஊ. தீந பஂது அதி மரிதுல ஸுபாஊ..
மோரி ஜியபரோஸ தரிட஀ ஸோஈ. மிலிஹஹிஂ ராம ஸகுந ஸுப ஹோஈ..
பீதேஂ அவதி ரஹஹி ஜௌஂ ப்ராநா. அதம கவந ஜக மோஹி ஸமாநா..

दोहा/सोरठा
ராம பிரஹ ஸாகர மஹபரத மகந மந ஹோத.
பிப்ர ரூப தரி பவந ஸுத ஆஇ கயஉ ஜநு போத..1க..
பைடி தேகி குஸாஸந ஜடா முகுட கரிஸ காத.
ராம ராம ரகுபதி ஜபத ஸ்த்ரவத நயந ஜலஜாத..1க..

சத் –ஆத்மா –ப்ரஹ்மம் போன்ற பொதுச்சொற்கள் போல் அன்றி புருஷோத்தமன் -பத பிரயோகம் வியக்தமாக நாராயணனையே காட்டும்
கீழ் -13 -ஆத்மா உடல் வேறுபாடுகளைத் தெளிவாக அருளிச் செய்து
அடுத்த -14-அத்யாயத்தில் ஆத்ம விசோதனம் பண்ணி அருளி – முக்குணங்களையும் தாண்டுவது பற்றியும் அருளிச் செய்து
இதில் – அசேதன சேதன விலக்ஷணமாய் -பிரேரிதனாய் -நியாமகனாய்-ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணனான -இருக்கும் புருஷோத்தமனாப் பற்றி விரித்த்து அருளிச் செய்கிறான்

அபுருஷன் -புருஷன் -புருஷ தரன் -புருஷ தமன் -புருஷ உத்தமன் –
அசேதனம் -சேதனன்(அசின் மிஸ்ராத்) -முக்தன் (விஸூத்த)-நித்யன் -அமரர்கள் அதிபதி
ஐந்து விரல்கள் -கட்டை விரல் இயங்கினால் தான் மற்றவை இயங்கும் –

மூன்று ஹேதுக்கள் -எங்கும் அனைத்தையும் வியாபித்து இருப்பதாலும் -பரணாத் -தாங்குவதாலும் -ஸ்வாம்யாத்–யானே நீ என்னுடைமையும் நீயே –

அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-

அசின் மிஸ்ராத் சேதநாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பிராகிருத சரீரத்துடன் கூடிய -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித்-பிராகிருத சரீர- நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம -புருஷோத்தமனான நாராயணன்
வ்யாபநாத்–அவைகளை -வியாபிக்கிற படியால்
பரணாத்–அவைகளை -தரிக்கிற படியால்
ஸ்வாம்யாத்–அவைகளை -நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –

ஆகாசம் -வியாபகம் மட்டும் -பூ தேனை தரிக்கும் -ராஜா சிலரை நியமிக்கலாம் -இவனோ சர்வரையும் சர்வத்தையும் -வியாபித்துத் தரித்து நியமிக்கும்

—————

தன்னை பற்றி -ஸூ யாதாம்யாம் -7-அத்யாயம்
ஸூ மாஹாத்ம்யம் -9-அத்யாயம் – இவற்றின் விளக்கம் இது -பூர்வ சேஷம் –

புருஷன் புரி நாடியில் இருந்து -எல்லா ஆத்மாக்களும் புருஷன் –
பத்தன் முக்தன் நித்யன் -மூவர் புருஷோத்தமன் -இம்மூவரிலும் வாசி -இந்த கோஷ்ட்டியில் இல்லையே
அபுருஷன் -அசித் -வர்க்கம்-
புருஷோத்தம வித்யை அறிந்தால் அந்த ஜென்மத்தில் மோக்ஷம் -அவதார ரஹஸ்ய ஞானம் போலே
நடுவில் நாம சங்கீர்த்தனமும் இதே கிட்டும் பார்த்தோம் –
பிரபத்தி நிஷ்டர்களுக்கு -சர்வ தர்மான் பரித்யஜ்ய -இவை எல்லாம் கைங்கர்யம் -சாதனம் இல்லை –

————————————————————

ஸம்ஸார விருக்ஷம் 1-2 –
மரத்தை வெட்டி மோக்ஷத்தை நாடு 3-4 –
எத்தகையவர் மோக்ஷமடைகின்றனர் 5 –
பரமபதம் மேலும் விளக்கப்படுகிறது 6 –
ஜீவ தத்துவ விளக்கம் 7-9 –
ஞானக் கண் 10-11 –
பரமாத்மனது சொரூபம் 12-15 –
ஜீவன், ஈசுவரன், பிரம்மம் 16-20.

—————————–

அவதாரிகை
க்ஷேத்ர அத்யாய -13 அத்யாயத்துக்கு பெயர் சூட்டுகிறான் இங்கு
க்ஷேத்ர ஷேத்ரஞ்ஞன் பூத பிரகிருதி புருஷன் ஸ்வரூபம் விதோய -நன்கு சோதித்து
விஸூத்தஸ்ய அபரிச்சின்ன ஞான ஏகாரஸ்ய புருஷஸ்ய பிரக்ருத குண சங்கம் பிரவாஹ நிமித்த
தேவாதி ஆகார பரிணாமய ப்ரக்ருதி சம்பந்தம்
அநாதி இது யுக்தம்
அநந்தரஸ்ய அத்யாயம் -14
கார்ய காரண உபய அவஸ்தை களிலும் குண சங்க மூல-
பகவத் ஏக க்ருத கர்மாதீனமாக இது யுக்தம்
குண பந்த விளக்கம் அருளிச் செய்து குண சங்க நிவ்ருத்தி பூர்வக ஆத்ம யாதாத்ம்ய அவாப்தி -கைவல்ய மோக்ஷம் அடைய
பகவத் பக்தி மூலம் இத் யுக்தம் மத் ஆராதனம் மூலமே என்று அருளிச் செய்து
இதானே
பகவத புருஷோத்தமன் வக்தும் ஆரம்ப
பஜனம் சொல்லி -பஜநீத்வ அவனைச் சொல்ல வந்து -இத்தைச் சொல்லும் முகத்தாலேயே தன்னிடம் ஈர்த்துக் கொள்ளப் பார்க்கிறான் –
ஷரம் அக்ஷரம் -இங்கு அழியக்கூடிய சரீரத்துடன் கூடிய பத்தாத்மா -இல்லாத முக்தாத்மா -விபூதி பூதாத் -புருஷர்கள் இருவரையும் சொல்லி
இவர்களைக் காட்டிலும் நிகில ஹேயபிரத்ய நீக -கல்யாண குண ஏக தானதயா
அத்யந்த உத்கர்ஷேண -அங்குஷ்ட மாத்ர புருஷ -அசித் பத்த முக்த நித்ய விலக்ஷணன் –
வி ஸஜாதீயத்ய -பகவத புருஷோத்தமஸ் யஞ்ச தன்மை சொல்ல வந்து
தத்ர தாவது -இப்பொழுது
அசங்க ரூப பற்றின்மை வடிவாக சத்ர சின்ன கோடரியால் வெட்டி வீழ்த்தப்படும் பந்தாம் அக்ஷரஸ்ய விபூதிம் வக்தும் -சொல்லத் தொடங்கி
சேத்ய ரூப பந்த ஆகாரேண விததம் அசித் பரிணாமம் விசேஷ அஸ்வத் வ்ருஷம் கல்பித்து எங்கும் பரந்து விரிந்து -அரச மரமாக சம்சாரம் உருவகம் –

உபநிஷத் சொல்லிய திருஷ்டாந்தமே இது

———————-

ஸ்ரீ பகவாநுவாச–
ஊர்த்வ மூல மத ஸாகம் அஸ்வத்தம் ப்ராஹுரவ்யயம்–
சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ் தம் வேத ஸ வேதவித்–৷৷15.1৷৷

ஸ்ரீ பகவாநுவாச = ஸ்ரீ பகவான் -கண்ணன்-கூறுகிறான்
(யம்) அஶ்வத்த₂ம் – யாதொரு ஸம்ஸாரமாகிற அரச மரத்தை
ஊர்த்₄வமூலம் – மேலே வேர் உடையதாகவும்
அத₄:ஶாக₂ம் – கீழே பரவியுள்ள கிளைகளை யுடையதாகவும்
அவ்யயம் – (ப்ரவாஹ ரூபமாயிருக்கையால்) அழியாததாகவும்
யஸ்ய ச₂ந்தா₃ம்ஸி பர்ணாநி-வேத வாக்கியங்களை இலைகளாக யுடையதாகவும்
ப்ராஹு: – (வேத₃ங்கள்) கூறுகின்றனவோ
தம் – அந்த அரச மரத்தை
ய: வேத₃: – எவன் அறிகிறானோ
ஸ வேத₃வித் – அவனே வேதத்தை அறிந்தவனாவான்.

ஸ்ரீ பகவான் கூறுகிறான் -யாதொரு சம்சாரமாகிற அரச மரத்தை- மேலே வேர் உடையதாகவும் –
கீழே பரவியுள்ள கிளைகளை உடையதாகவும் -ப்ரவாஹ ரூபமாக அழியாததாகவும் -வேத வாக்கியங்கள் இலைகளாகவும்-
வேதங்கள் கூறுகின்றனவோ -அந்த அரச மரத்தை எவன் அறிகிறானோ
அவனே வேதத்தை அறிந்தவனாவான்

அஸ்வத்தம் நாளை இருக்காது -அவ்வளவு அநித்தியம் -இருந்தாலும் பிரவாஹமாக நித்யம் இந்த ஸ்லோகம் நைமித்திக ஸ்ருஷ்டியைப் பற்றியது-நான்முகன் வேர் என்பதால் அவன் செய்யும் நைமித்திக ஸ்ருஷ்ட்டி –பிரகிருதி நித்யம் ஆகவே வெட்டுவதாகச் சொல்ல முடியாது -அதன் கார்யமான சம்சாரத்தை சொன்னவாறு -பூர்வ பாகம் சம்சாரத்தை வளர்க்கும் அன்றோ -ஆதலால் வேதங்களை இலைகளாகச் சொல்லிற்று

காம்ய கர்மங்கள் சம்சாரத்தை வளர்ப்பதால் இந்த மரம் வெட்டத்தக்கதே தென்று காற்றால் மறைப்பதால் இலைகளே வேத வாக்கியங்கள்

ஓங்காரம் மரம் –ஏகாயான சாகை -மரம் சொல்ல வேண்டும் என்று ஆக்ஷேபங்கள் -அறிந்தவன் ஓங்கார பிரபாவோ வேதா -வேதம் அறிந்தவன் ஆகிறான் ஆனால் வெட்டி சம்சாரம் கடப்பது என்றது ஒவ்வாதே

வேதாந்தம் தானே சம்சாரம் கடக்க உபாயம் சொல்லும்-எதை வெட்டணும் மரம் காட்டும் -எப்படி வெட்டணும் வேதாந்தம் சொல்லும் –

பெரியதாய் -அழிவதாய் -வெட்டப்படுவதாய் -இருப்பதால் ஸம்ஸாரத்தை அஸ்வத்த மரமாக வேதமே சொல்லுமே-இருந்தாலும் அவ்யயம் -ப்ரவாஹ ரூபமாக நித்யம்

அஸ்வத்த மரம் -அரச மரம் -த்ருஷ்டாந்தம் -தலை கீழே -கடோ உபநிஷத் —
ப்ரஹ்மம் ஸ்ருஷ்டிக்க -வேராக கொண்டு -கர்மம் அடியாக -கீழே விழுந்த விதை
இந்த கர்மம் அடியாக பிறப்பது -மேலே வேற மரம் அருகில் -சம்சாரம் ஆகிய பெரிய மரம் வேர் சத்ய லோகம்
கீழே தேவாதி கிளைகள்

அஸ்வத்தம் -ஸ்வ ந ஸ்தாத்ததி –நாளை இருக்காது -அதனால் அஸ்வத்தம் -மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் –
சதத பரிணாமம் -ஷட் பாவ விகாரங்கள் உண்டே –
அவ்யயம் பிரவாஹ ரூபமாக அழியாமல் -சந்தஸ் வேத வாக்கியங்கள் இலைகள் என்கிறான் –

வேத வாக்கியங்கள் –சந்தாம்ஸி காம்ய கர்மங்களையும் சொல்லும் -பற்று அற்ற தன்மையுடன் பகவத் ஆராதன ரூபமாகச் செய்தால் இத்தைத் தாண்டலாம் என்றும் சொல்லும்

சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி–மரத்துக்கு இலை தானே ஸூர்ய ஒளி மூலம் பிராணன் -அதே போலே யாகங்கள் இவை வேத வாக்கியங்கள் கொண்டே –
மறை புரிய வைக்காமல் மயக்கும் – பூர்வ காண்டம் -த்யானம் உபாசனம் – உபநிஷத் வேதாந்தம் -ப்ரஹ்ம பாவம்
சந்தஸ் -மறைக்கும் -வேதம் மட்டும் பிடித்து கொண்டு ஸ்வர்க்காதி அல்ப -முக்குணத்தவர்களுக்கு
சம்சாரம் மரத்தை அறிந்தவனே அதிகாரி -சொல்லி அடுத்து

——————

கீழே நைமித்திக ஸ்ருஷ்ட்டி -பிரமனே மூலம் படைக்கப்பட்டு -இதில் நித்தியமாக பிறந்தும் இறந்தும் உள்ளவை பற்றி-நித்ய ஸ்ருஷ்ட்டி பற்றி  -இந்த ஸ்லோகத்தால்
தஸ்ய (அந்த அரச மரத்தினுடைய வேறே சில கிளைகள் ) மநுஷ்யாதி ஷாகஸ்ய வரிக்ஷஸ்ய தத்தத் கர்ம கரிதா அபராஃ ச அதஃ ஷாகாஃ புநரபி மநுஷ்ய பஷ்வாதி ரூபேண ப்ரஸரிதாஃ பவந்தி? (கீழ் கிளைகள் மனுஷ்யாதி )ஊர்த்வஂ ச கந்தர்வ யஷ தேவாதி ரூபேண ப்ரஸரிதா பவந்தி(மேல் கிளைகள் தேவாதி ரூபம் ). தாஃ ச குண ப்ரவரித்தாஃ குணைஃ ஸத்த்வாதிபிஃ ப்ரவரித்தாஃ? (முக்குணங்களால் வளர்க்கப்பட்ட )விஷய ப்ரவாலாஃ ஷப்தாதி விஷய பல்லவாஃ.(தளிர்கள் )கதம் இதி அத்ர ஆஹ —

அதஸ்சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ் தஸ்ய ஸாகா–குண ப்ரவ்ருத்தா விஷய ப்ரவாலா–
அதஸ்ச மூலாந் யநு ஸந்ததாநி–கர்மாநுபந்தீநி மநுஷ்ய லோகே–৷৷15.2৷৷

தஸ்ய – அந்த அரச மரத்தினுடைய
ஶாகா₂: – (மேலும் சில) கிளைகள்–(தேவ – மனித – விலங்கு முதலிய பிறவி உருவாகிய கிளைகள்,)
கு₃ண ப்ரவ்ருத்₃தா₄— ஸத்வம் முதலான கு₃ணங்களால் வளர்கின்றவையாய்
விஷய ப்ரவாளா : – ஶப்₃த₃ம் முதலான விஷயங்களைத் தளிர்களாக யுடையவையாய்
அத₄ஶ்ச ஊர்த்₄வம் ச ப்ரஸ்ருதா: – கீழும் மேலும் பரவியுள்ளன (ஸம்ஸாரமாகிற அந்த அரச மரத்துக்கு)
அத₄: மநுஷ்ய  லோகே ச- கீழுள்ள மனிதிர்களின் உலகிலும்
கர்மாநுப₃ந்தீ₄நி – கர்மக் கட்டுக்களாகிற
மூலாநி – வேர்கள்(அகந்தை, மமதை, வாசனை உருவான வேர்களும்,)
அநுஸந்ததாநி – (எல்லா உலகங்களிலும்) பரவியுள்ளன .

சப்தம் முதலான விஷயங்களைத் தளிர்களாக உடையவையாய் -கீழும் மேலும் பரவி யுள்ளன –
அந்த மரத்துக்கு கீழுள்ள மனிதர்களின் உலகிலும் கர்மக் கட்டுக்கள் ஆகிற வேர்கள் பரவி யுள்ளன –
மேலும் கீழும் பரவி உள்ள கிளைகள் கர்மா -உயர்ந்த தாழ்ந்த யோனிக்கு இரண்டுக்கும் -இதுவே காரணம் –
முக்குணங்கள் வளர்க்கப் பட்ட மரம்

நீரும் உரமும் இவையே -கர்மம் வளர -விழுது விழுந்து மேலும் கீழும் -மரம் சூழல்- பிரவாஹா ரூபம் –
தளிர்கள் பஞ்ச பூத ஸூ ஷ்மங்கள் உடைய சம்சாரம்
சப்தாதிகளை தளிர்கள் -முதலில் நைமித்திக ஸ்ருஷ்ட்டி – அடுத்து நித்ய ஸ்ருஷ்ட்டி -பிராட்டி புருவ நெறிப்பே
பெரிய பெருமாளுக்கு வேதம் -மேலே உயர்த்தினால் உயர்ந்த யோனி -பிரமாணம் இதுவே இவனுக்கு –
கர்மம் என்னும் கட்டுக்கள் -மனுஷ்ய லோகத்திலும் -சேரும் –

————–

ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே–நாந்தோ ந சாதிர் ந ச ஸம் ப்ரதிஷ்டா–
அஸ்வத்தமேநம் ஸு விரூட மூல-மஸங்க ஸஸ்த்ரேண த்ருடேந சித்த்வா–৷৷15.3৷৷

அஸ்ய ரூபம் –இந்த அரச மரத்துக்கு உருவம்
இஹ –இந்த மனுஷ்ய லோகத்தில் ஸம்ஸாரிகளாலே
ந ததோபலப்யதே–ததா ந உப லப்யதே -முன் சொல்லப்பட்ட படி அறியப் படுவது இல்லை
நாந்தோ ச -அந்த ச ந -அந்த மரத்தின் அழிவும் குணம் கடந்த நிலையால் விளைவது என்று அறியப் படுவது இல்லை
ந சாதிர் ச -ஆதி ச ந -இந்த மரத்தின் காரணமும் குணங்களில் பற்றே என்றும் அறியப் படுவது இல்லை
ஸம் ப்ரதிஷ்டா ச ந -இந்த அரசமரம் நிலை நிற்கும் ஆதாரமும் -அநாத்மனி ஆத்ம அபிமானம் போன்ற-அஞ்ஞானமே என்றும் அறியப் படுவது இல்லை
ஏநம் ஸுவிரூடமூலம் -முன் கூறப்பட்டதாய் நன்கு பலவிதமாக ஊன்றி நிற்கும் வேரை யுடையதான-ஸு வி ரூட மூலம்–ஸு-கெட்டியாக -வி-பலவிதமாக விவிதமாக –வாஸனை ருசி போன்றவை -பதிவுகள் கெட்டியாக ஊன்றி இருக்குமே -மாறி மாறி பல பிறவிகளில் பெற்ற பதிவுகள் -போக்குவது கஷ்டம் என்று அறிவிக்கவே இங்கு இத்தை அருளிச் செய்கிறான் 
அஸ்வத்தம் -ஸம்ஸாரமாகிற அரச மரத்தை
த்ருடேந-நல்ல அறிவைக் காரணமாக் கொண்டு இருக்கையாலே உறுதியாய் இருப்பதான
அஸங்க ஸஸ்த்ரேண -குண மய போகங்களில் பற்றின்மையாகிய ஆயுதத்தால்-அஸ்திரம் அம்பு போல்வன -சஸ்திரம் வாள் போல்வன –
சித்த்வா–வெட்டி

அஸ்ய ரூபம் ததா-இந்த மரத்தின் உருவத்தைப் போல,
இஹ ந உபலப்யதே-இவ்வுலகத்தில் காணப்படுவதில்லை,
ந அந்த: ந ஆதி ச ந ஸம்ப்ரதிஷ்டா-முடிவும், ஆதியும், நிலைக் களனும் புலப்படுவதில்லை,
ஸு விரூட மூலம் ஏநம் அஸ்வத்தம்-அஹங்காரம், மமகாரம், முற் பிறவி வாசனை என்ற உறுதியான வேர்கள் கொண்ட இந்த அரச மரத்தை,
த்ருடேந அஸங்க ஸஸ்த்ரேண சித்த்வா-பற்றின்மை யென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்து விட்டு.-

விவேக ஞானத்தால் வந்த பற்றின்மை திடமாக இருக்க வேண்டும் -நோய் அடியாக வைக்கும் பற்றின்மையானால் நோய் போனால் மீளுமே

தத பதம் தத் பரிமார்கிதவ்ய–யஸ்மிந் கதா ந நிவர்தந்தி பூய–
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே–யத ப்ரவ்ருத்தி ப்ரஸ்ருதா புராணீ--৷৷15.4৷৷

தத: – அந்தப் பற்றின்மைக் காரணமாக
யஸ்மிந் க₃தா : –மறுபடியும் சம்சாரத்துக்குத் திரும்பி
பூ₄ய : ந நிவர்தந்தி தத் பத₃ம்- மறுபடியும் ஸம்ஸாரத்துக்குத் திரும்பி வருதல் இல்லாத அந்தப் ப்ராப்யம்
பரமார்கி₃தவ்யம் – தேடத் தக்கது
ஆத்₃ய ம் – அனைத்துக்கும் ஆதி₃யாய்
யதஸ் : புராணீ ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா – எவனிடமிருந்து அநாதி₃காலமாக கு₃ண மய விஷயங்களில் ஈடுபாடு (ஜீவர்களுக்குத்) தொடர்கின்றதோ
தம் புருஷம் ஏவ – அத் தகையவனான பரம புருஷனையே
ப்ரபத்₃யேத் – அஜ்ஞாநம் முதலோனவை நீங்குவதற்காக) ஶரணமடையக் கடவன்

தத: யஸ்மிந் கதா பூய: ந நிவர்தந்தி-அதன் பிறகு எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ,
தத் பதம் பரிமார்கிதவ்யம்-அந்த பரம பதம் நன்கு தேடப் பட வேண்டும்,
ச யத: புராணீ-மேலும் எதனிடமிருந்து பழமையான,
ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா-சம்சார மரத்தின் தொடர்ச்சி விரிவு அடைந்துள்ளதோ,
தம் ஏவ ஆத்யம் புருஷம்-அந்த ஆதி புருஷனையே,
ப்ரபத்யே-சரணம் அடைகிறேன்.

புராணீ-இதற்கு -பிரபத்யேத் -சரணம் அடையக் கடவன் என்றும் -அவனையே சரணம் அடைய வேண்டும் என்பதற்குப் பிரமாணம் முன்னோர் செயல்பாடே பிரமாணம் காட்டுகிறான் என்றும் கொள்ள வேண்டும்
இவனைப் பற்றியே மோக்ஷம் அடைய முமுஷுக்களால் செய்யப்பட்டவை –

இந்த அரச மரத்திற்கு முன் கூறப்பட்ட உருவம் இந்த மனுஷ்ய உலகத்தில் முன் கூறியபடி அறியப் படுவது இல்லை –
அதன் அழிவும் முன் கூறியபடி குணம் கடந்த நிலையால் விளைவது என்று அறியப்படுவது இல்லை
இந்த மரத்தின் காரணமும் அறியப்படுவது இல்லை -இது நிலை நிற்கும் ஆதாரமும் அறியப்படுவது இல்லை-முன் ஸ்லோகம் சொன்னபடி அறிகிறார்கள் அல்ல -குடும்ப மரம் -பிறந்தது அறிகிறோம் வெட்ட வேண்டும் என்றும் வெட்ட வழி இது என்றும் அறியாமல் -சம்சார உத்பத்தி வளர்க்கவே அறிந்து உள்ளார்கள் –
முன் கூறப்பட்டதாய் நன்கு பலவிதமாக ஊன்றி நிற்கும் வேரை யுடையதான சம்சாரமாகிற அரச மரத்தை
உறுதியாக இருப்பதான பற்றின்மையான ஆயுதத்தால் வெட்டி அந்தப் பற்றின்மை காரணமாக
மறுபடியும் சம்சாரத்துக்கு திரும்பி வருதல் இல்லாத அந்த ப்ராப்யம் தேடத் தக்கது
அனைத்துக்கும் ஆதியாய் -எவனிடம் இருந்து அநாதிகாலமாக குண மய விஷயங்களில் ஈடுபாடு
ஜீவர்களுக்குத் தொடர்கிறதோ அத்தகைய பரம புருஷனையே சரணம் அடையக் கடவன் –

தேஹாத்ம அபிமானம் மண் உரம் கொண்டு நிலையாக வளர்ந்து உள்ளதே -இத்தையும் அறிய வில்லை -அஞ்ஞானமே பிரதிஷ்டை -குண சங்கம் ஆதி பற்றின்மை வழி அறிய வேண்டுமே

இந்த சம்சாரி இந்த விஷயம் அறியாமல் -முடிவையும் தெரிந்து கொள்ளாமல் -முடிவு முக்குணங்களை
தாண்டினால் தானே -நீர் கொட்டாமல் இருந்தால் -தண்ணீர் அற்று பட்டு போகுமே –
ஆதியும் -அறியாமல் -ஆதி குண சங்கம் -வேர் இது தானே -சம்சார மரம் -அஞ்ஞானம் என்னும் ஆதாரம் -என்றும் அறியாமல்
தேஹாத்ம பிரமம் தானே -அதுவும் அறியாமல் – விவேக ஞானம் என்னும் கோடரியால் வெட்ட வேண்டுமே –
குடும்ப மரம் வம்ச வருஷம் மட்டுமே அறிந்து சம்சாரத்தில் உழல்கின்றான் —
இந்த அரச மரத்தை -நன்றாக பதிந்த மரம் -ஸூ= நன்கு நின்று -வி= விசித்திர விவித -ஸூ விருட மூலம் -இரண்டையும் சொல்லி
சுலபமாக கண்டு கொள்ள முடியாத மரம் -கோடரி -அசங்கம் -பற்று அற்ற -முக்குணங்களில் பற்று வைக்காத தன்மை
திடமாக இருக்க வேண்டும் –எப்பொழுதும் இருக்க வேண்டும் -ஞானத்தின் அடிப்படையில் அசங்கம் வேண்டும் –

பற்றின்மையையே கொண்டு ப்ராப்யம் தேடத்தக்கது-கதம் அநாதி கால ப்ரவரித்தோ குண மய போக ஸங்கஃ தந்மூலஂ ச விபரீத ஜ்ஞாநஂ நிவர்ததே இதி அத்ர ஆஹ –,அஜ்ஞாநாதி நிவரித்தயே –விபரீத ஞானம் அடியாக வந்த குண மய போக சங்கத்தை இரண்டையும் போக்க வேணுமே

அதனால் -ஆத்ம பிராப்தியை -உயர்ந்த -தேடத் தக்கத்தை -தேடுவாய் –திடமான பற்று அற்ற தன்மையால் –
இதற்கு உபாயம் என்ன என்னில்-திருவடிகள் தானே –மூல புருஷனான எம்பெருமானை பற்று –
அந்த -படர்க்கையில் சொல்கிறான் -அஹம்-சொல்லாமல் -தமேவ –
பிரபத்யே -பற்றுகிறேன் -யத–பற்றி அதனால் அஞ்ஞானம் தொலைத்து –
புருஷோத்தமன் -அரையன் சிறையன் இருவரும் சிறை சாலையில் -சிறை கதவை திறந்து விடுவேன் –
வைப்பான் என் திறப்பான் என் -கர்மாதீனம் —யதாக எவன் இடம் இருந்து -பிரவ்ருத்தி முக்குணங்கள் சேர்க்கை கிடைத்ததோ
அவன் திருவடிகளை பற்றி –
தம் -இல்லை தமேவ -அவனையே -மறந்தும் புறம் தொழா மாந்தர் -நாராயணனே நமக்கே பறை தருவான் -ஏக காரணன்

குணப் பற்றுதல் எவன் இடம் இருந்து உருவாக்கி வெகு காலமான வந்ததோ அவனைப் பற்று
எவனைப் பற்றி அஞ்ஞானாதி செயல்கள் வருமோ அவனைப் பற்று என்றுமாம்

மோக்ஷம் அடைய செய்ய வேண்டிய முயற்சியை அடுத்த ஸ்லோகத்தால் விளக்குகிறான்

————-

நிர்மாந மோஹா ஜித ஸங்க தோஷா–அத்யாத்ம நித்யா விநிவ்ருத்தகாமா–
த்வந்த்வைர் விமுக்தா ஸுக துக்க ஸம்ஜ்ஞைர் கச்சந்த்ய மூடா பதமவ்யயம் தத்–৷৷15.5৷৷

நிர்மாந மோஹா – தேஹ ஆத்ம அபிமானமாகிற மயக்கம் நீங்கப் பெற்றவர்களாய்
ஜித ஸங்க₃தோ₃ஷோ: – கு₃ண மயப் பொருள்களில் பற்றாகிற தோஷத்தை வென்றவர்களாய்
அத்₄யாத்ம நித்யா – ஆத்ம ஜ்ஞாநத்தில் எப்போதும் ஈடுபட்டவர்களாய்
வி நிவ்ருத்த காமா : – மற்ற விஷயங்களில் விருப்பம் நீங்கப் பெற்றவர்களாய்
ஸுக₂ து₃:க₂ஸஞ்ஜ்ஞைர்: த்₃வந்த்₃வை – இன்ப துன்பங்களாகிய இரட்டை களிலிருந்து
விமுக்தோ: – விடுபட்டவர்களாய்
அமூடோ₄: – (தேஹ ₃ஆத்மாக்களைப் பற்றிய ) அனைத்து
மயக்கங்களும் நீங்கப் பெற்றவர்களாய்
அவ்யயம் – ஜ்ஞாநத்தில் ஏற்றத் தாழ்வற்ற
தத் பத₃ம் – ஸ்வரூப ஆவிர்பா₄வம் பெற்ற ப்ரோப்ய
வஸ்துவான ஆத்மாவை
க₃ச்ச₂ந்தி – அடைகிறார்கள்

நிர்மாநமோஹா-செருக்கும் மயக்கமும் அகன்றவர்கள்,
ஜிதஸங்கதோஷா-பற்று என்னும் குறைபாட்டை வென்றவர்கள்,
அத்யாத்மநித்யா-ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர்,
விநிவ்ருத்தகாமா:-விருப்பங்களினின்றும் நீங்கியோர்,
ஸுகது:கஸம்ஜ்ஞை: த்வந்த்வை: விமுக்தா:= சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர்,
அமூடா:-மடமையற்றோர், தத் அவ்யயம் பதம் கச்சந்தி-அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.

உடலே ஆத்மா என்ற மயக்கம் அற்றவர்களாயும் விஷயப்பற்று என்ற தோஷத்தை வென்றவர்களாயும் –
ஆத்ம ஞானத்திலேயே நிலை பெற்று இருப்பவர்களாயும் -ஆத்மா தவிர மற்றைய விஷயங்களில்
ஆசை அற்று இருப்பவர்களாயும்
ஸூகம் துக்கம் முதலிய இரட்டைகளில் இருந்து விடுபட்டவர்களாயும் -அனைத்து மயக்கங்களும்
நீங்கப் பெற்றவர்களாயும் -ஞானத்தில் ஏற்றது தாழ்வு அற்ற ஆத்மாவை அடைகிறார்கள் –

முமுஷுக்கள் முயற்சி செய்ய வேண்டிய படிக்கட்டுகள்
1-அபிமானம் -மயக்கம் நீக்கி -மானம் என்கிற மோஹம் –
2-இதனால் ஜெயிக்கப்பட்ட குணமய தோஷங்கள் உடையவர்களாகி
3-இதனால் ஆத்ம ஞானத்தில் நிலை பெற்ற ஈடு படி உடையவர்களாய்
4-இதனால் முழுவதாக ப்ரயோஜனாந்தர ப்ராவண்யம் அற்றவர்களாய் -காம்பற தலை சிரைத்து -பற்று வேறே காமம் வேறே
5-இரட்டைகளில் இருந்து விடுபட்டவர்களாய்
6-தேஹ ஆத்ம பிரமம் போல் அனைத்து மயக்கங்களும் நீங்கப் பெற்றவர்களாய் -முழுவதும் ஆத்ம ஞானம் பெற்றதால் முக்குண மயக்கங்களில் இருந்து நீங்கப்பெற்றவர்களாய்
அந்த ஞான ஆவிர்பாவம் -ஞான சங்கோசமே இல்லாமல் -உயர்ந்த முக்த ஸ்வரூபம் அடைகிறார்கள்

பற்றினால் கிட்டும் பலன்கள் — -ஆத்ம பிராப்தி அடைகிறார்கள் -அசங்கம் கோடரி கிட்டும் -பிறவி நீங்கி –
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி
தேஹாத்ம மயக்கம் இல்லை -முக்குணம் பற்று அற்று -ஆத்ம சிந்தனையில் ஈடுபடுவான் -ஆத்மாவில் நிலை பெற்று அத்தை தவிர இதர காமங்களை விட்டு
வேறு எதிலும் ஆசை இல்லை -இரட்டையில் இருந்து விடுபடுவார்-மயக்கம் இல்லாமல் உயர்ந்த பிராப்தி பெறுகிறான் -ஆத்ம ப்ராப்தியையே இங்கு சொல்கிறான் -பிரசித்தம் இல்லையே இத்தை தேடுகிறான்

———-

ந தத் பாஸயதே ஸூர்யோ ந ஸஸாங்கோ ந பாவக–
யத் கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம--৷৷15.6৷৷

யத்₃ க₃த்வா – எதை அடைந்தபின்பு
ந நிவர்தந்தே – (அதை அடைந்தவர்கள் ஸம்ஸாரத்துகுத்) திரும்புவது இல்லையோ
தத் – அந்த ஜீவாத்ம ஜ்யோதியை
ஸூர்ய: ந பா₄ஸயதே — ஸூர்யன் ப்ரகாஶிக்கச் செய்வதில்லை
ஶஶாங்க : ந (பா₄ஸயதே ) – சந்திரனும் பிரகாசிக்க ச் செய்வதில்லை
பாவக : ந (பா₄ஸயதே ) – அக்₃நியும் பிரகாசிக்கச் செய்வதில்லை
தத் – அந்த
பரமம் தா₄ம – மேலான ஜ்யோதி
மம – என்னுடைமை யாகும். .

எதை அடைந்த பிறகு சம்சாரத்திற்குத் திரும்புவது இல்லையோ -அந்த ஜீவாத்மா ஜோதியை
ஸூர்யனும் சந்திரனும் பிரகாசிக்கச் செய்வது இல்லை -அக்னியும் பிரகாசிக்கச் செய்வது இல்லை –
அந்த மேலான ஜோதி என்னுடைமை யாகும் –

பரிசுத்தமான ஆத்மா -ஆத்ம சாஷாத்காரம் பெற்று -ஞானம் தேஜஸ் -மிக்கு –
ஸூரியன் கொண்டு ஒளி பெற வேண்டாம் சந்திரன் அக்னி -இல்லாமல் தானே விளங்கும்
எத்தை அடைந்த பின் திரும்பி வர வேண்டாமோ -தாமம் தேஜஸ் -இந்த சொத்து மம -சேர்த்தே சொல்லுவான்
எதனால் விளங்குகிறான் -யோகத்தால் -ஞான சஷூஸ்-கர்மா விலகியதும் யோகம் வளரும் –
திருவடி பற்றி பற்று அறுக்க பிரார்த்திக்க வேண்டுமே –

என்னுடைய சரீர ரூபமான செல்வம் அப்ருதக் சித்த பரதந்தர்யமான ஆத்மா என்றவாறு

(ஜீவாத்மா என்னுடைய அம்சம் –அம்சாதிகாரணம் -நா நா வியாபாதேசாத் -வேறு பட்டதே என்றதை விட வேறு பட்டது -அம்சமே -பகுதியே –
நூல்கள் வேஷ்ட்டி -அம்சம் -விட்டுப் பிரியாத விசேஷணங்கள் -சேர்ந்த விஸிஷ்ட வஸ்து –
சித் -விஸிஷ்ட ப்ரஹ்மத்துக்கு அம்சம் –
பூர்வ பக்ஷிகள் பலர் சேர்ந்து அம்சமாக மாட்டார் –
பேத சுருதிகள் இல்லை சொல்லவே அபேத சுருதிகள் அத்வைதி -இருக்கு சொல்லி நிஷேதிக்க –
த்வைதி -அவனும் இவனும் வேறே வேறே சர்வாத்மானா பேதம் –
நாம் விஸிஷ்ட அத்வைதி -கூடி இருந்த ஒன்றே -அம்சமே -சரீர ரூபமான அம்சம் என்றால் இரண்டுக்கும் சேரும் –
ப்ரஹ்ம ஸ்வரூபத்துக்கு குற்றங்கள் சேராது –
அம்சம் -அவயவமே இல்லாத -ஜீவாத்மா அவயவங்கள் கொண்ட சரீரம் போல் -ப்ரஹ்மமும் -அவயவங்கள் தேவை இல்லையே
வேறே வேறே அறிந்து சரீரம் தொலைத்து மோக்ஷம் அடையவே -)

—————–

மேலான முக்தாத்மா என்னுடைய அம்சமே என்றதும் பக்தாத்மா எவ்வாறு என்ன அதற்குப் பதில்

மமை வாம்ஸோ ஜீவ லோகே ஜீவ பூத ஸநாதந–
மந ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதி ஸ்தாநி கர்ஷதி৷৷15.7৷৷

ஸநாதந: – அநாதி₃ காலமாய் இருப்பவனாய்
மம அம்ஶ: ஏவ(ஸந்) – என் அம்ஶமாகவே இருக்கும் ஜீவர்களில் ஒருவன்
ஜீவபூ₄த: – ( கர்மங்களால் சூழப்பட்ட) ப₃த்₃த₄ ஜீவனாயிருந்து கொண்டு
ஜீவலோகே – ப₃த்₃த₄ ஜீவர்கள் வாழும்லீலா
விபூ₄தியிலிருப்பவனாய்
ப்ரக்ருதிஸ்தா₂நி – ப்ரக்ருதியின் பரிணாமமான ஶரீரத்திலிருக்கும்
மந:ஷஷ்டா₂நி இந்த்₃ரியாணி- மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து ஜ்ஞாந இந்த்₃ரியங்களையும் (இவற்தை நியமிக்கும் ஆறாவது இந்திரியமான மநஸ்ஸையும்)
கர்ஷதி – ( கர்மாநுகு₃ணமாகச்) செயல் புரியச் செய்கிறான்

அநாதி காலமாய் இருப்பவனாய் என் அம்சமாகவே இருக்கும் ஜீவர்களில் ஒருவன் பத்த ஜீவனாக இருந்து கொண்டு
லீலா விபூதியில் இருப்பவனாய் -உடலில் இருக்கும் ஐந்து இந்த்ரியங்களையும்
ஆறாவது இந்த்ரியமான மனசையும் செயல் புரியச் செய்கிறான்

கீழே முக்தாத்மா தன்னுடைய உடைமை -இதில் பத்தாத்மாவும் என்னுடைய உடைமை –
என்னுடைய அம்சமே -மிகவும் பழையவன்
பிரகிருதி பரிணாமம் சரீரம் -வியாபாரம் செய்து -இந்திரியங்கள் செயல்பாட்டை செய்து கொண்டு இருக்கிறான் –

——————

ஸரீரம் யத வாப்நோதி யச்சாப் யுத் க்ராமதீஸ்வர–
க்ருஹீத்வைதாநி ஸம் யாதி வாயுர் கந்தா நிவாஸயாத்–৷৷15.8৷৷

ஈஶ்வர: – – இந்த்₃ரியங்களை நியமிப்பவனான ப₃த்₃த₄ஜீவன்
யத் ஶரீரம் அவாப்நோதி- (முன் ஶரீரத்தை விட்டபின்)யாதொரு ஶரீரத்தை அடைகிறானோ (அந்த ஶரீரத்திற்கு)
யச்ச அபி உத்க்ராமதி – எந்த ஶரீரத்திலிருந்து கிளம்புகிறானோ (அந்த ஶரீரத்திலிருந்து)
வாயு: – காற்றானது
ஆஶயாத் – (மலர் முதலான மணமுடைய) பொருள் களிலிருந்து
க₃ந்தா₄ந் – மணம்மிக் சிறு துகள்களை
இவ – (எடுத்துச்செல்வது) போல்
ஏதாநி – இந்த இந்த்₃ரியங்களை
க்₃ருஹீத்வா – (கிளம்பும் ஶரீரத்திலிருந்து) எடுத்துக் கொண்டு
ஸம்யாதி – (அடையும் ஶரீரத்துக்குச்) செல்கிறான்

வாயு: ஆஸயாத் கந்தாந் இவ-காற்று மணமுள்ள இடத்திலிருந்து பலவித மணங்களை (இழுத்துச் செல்வது) போல,
ஈஸ்வர: அபி-உடலை ஆளும் ஜீவாத்மாவும்,
யத் உத்க்ராமதி – எந்த உடலை விட்டு கிளம்புகிறானோ,
ஏதாநி ச க்ருஹித்வா-மனதோடு கூடிய புலன்களையும் எடுத்துக் கொண்டு,
யத் ஸரீரம் அவாப்நோதி ஸம்யாதி-எந்த உடலை அடைகிறானோ அதில் வந்து சேர்கிறான்.

இந்திரியங்களை நியமிப்பவன் -பத்த ஜீவன் முன் உடலை விட்ட பிறகு யாதொரு உடலை அடைகிறானோ –
அந்த உடலிற்கு -எந்த உடலில் இருந்து புறப்படுகிறானோ அந்த உடலில் இருந்து காற்றானது
மலர் முதலிய மணமுடைய பொருள்களில் இருந்து மணம் மிக்க சிறு துகள்களை எடுத்துச் செல்வது போலே
இந்த இந்திரியங்களை எடுத்துச் செல்கிறான் –

அடுத்த சரீரம் போகும் பொழுது பூத ஸூ ஷ்மங்களை எடுத்து கொண்டே –
காற்று மணம் -வண்டு தேன்களை கிரஹிக்குமா போலே
ருசி வாசனைகள் உடனே -இந்திரியங்களையும் சப்தாதி விஷயங்களையும் -கொண்டே புகுகிறான்

————–

காநி புநஃ தாநி இந்த்ரியாணி இத்யாஹ

ஸ்ரோத்ரம் சக்ஷுஸ் ஸ்பர்ஸ்நம் ச ரஸநம் க்ராணமேவ ச–
அதிஷ்டாய மநஸ்சாயம் விஷயாநுப ஸேவதே--৷৷15.9৷৷

அயம் – இந்த ஜீவன்
ஶ்தோத்ரம் – செவி
சக்ஷுஸ் : – கண்
ஸ்பர்ஶநம் ச –மெய்
ரஸநம் – நா
க்₄ராணம் ஏவ ச – மூக்கு என்னும் இந்த ஐந்து
இந்த்₃ரியங்களையும்
மநஸ் : ச – (இவற்தை நியமிக்கும்) மனத்தையும்
அதி₄ஷ்டா₂ய – தத்தமக்குரிய ஶப்₃த₃ம் முதைான
விஷயங்களில் மேய வல்லவையாக ஆக்கி
விஷயாந் – அந்தந்த விஷயங்களை
உப ஸேவதே – அநுப₄விக்கிறேன்

அயம் ஸ்ரோத்ரம் சக்ஷ: ச-கேட்டல், காண்டல்,
ஸ்பர்ஸநம் ரஸநம் க்ராணம் மந: ச-தீண்டுதல், சுவை, மோப்பு, மனம்,
அதிஷ்டாய ஏவ-இவற்றில் நிலைகொண்டு,
விஷயாந் உபஸேவதே-ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்.

இந்த ஜீவன் -காது கண் மெய் நாக்கு மனஸ் என்ற ஆறு இந்த்ரியங்களையும் -இவற்றை நியமிக்கும்
மனத்தையும் தம் தமக்கு உரிய சப்தம் முதலிய விஷயங்களில் மேய வல்லவையாக ஆக்கி
அந்த அந்த விஷயங்களை அனுபவிக்கிறான்
விஷம் தோய்ந்த தேனை பருகுகிறான் -காது கண் –இத்யாதி மனஸ் -சப்தாதிகளிலே மேய விட்டு –
அறியாமல் அனுபவிக்கிறான்

———————–

உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம்.
விமூடா நாநுபஸ்யந்தி பஸ்யந்தி ஜ்ஞாந சக்ஷுஸ–৷৷15.10৷৷

உத்க்ராமந்தம் = வெளியே வெளியே செல்லும் போது
ஸ்திதம் =நிலை பெற்றவன்
வ = அல்லது
அபி = அது அன்றியும்
புஞ்ஜாநம் = அனுபவிப்பவன்
வ = அல்லது
குணாந்விதம் = குணங்களை கொண்டவன் , குணங்களை ஆள்பவன்
விமூடா = மூடர்கள்
ந = இல்லை
அநுபஸ்யந்தி = காண்பது
பஸ்யந்தி = காண்கிறார்கள்
ஜ்ஞாந = ஞான
சக்ஷுஷ= திருஷ்டி உள்ளவர்கள் |

உத்க்ராமந்தம் வா-அவன் புறப்படுகையிலும்,
ஸ்திதம் வா-நிற்கையிலும்,
புஞ்ஜாநம் வா – உண்ணுகையிலும்,
குணாந்விதம் அபி-முக்குணங்களைக் கூடி இருக்கும் போதும்,
விமூடா ந அநுபஸ்யந்தி-அவனை மூடர் காண்பதில்லை,
ஜ்ஞாநசக்ஷúஷ: பஸ்யந்தி-ஞான விழியுடையோர் காண்கின்றனர்.

முன் கூறியபடி குண மயமான சரீரத்தோடு சேர்ந்து இருப்பவனாய் -ஒரு சரீரத்தில் இருந்து புறப்படுபவனாய் –
அல்லது வேறு ஒரு சரீரத்தில் இருப்பவனாய் -அல்லது குண மய விஷயங்களை அனுபவிப்பவனாய்
இருக்கும் ஜீவனை -தேகமே ஆத்மா என்று மயங்கியவர்கள் தேஹத்தைக் காட்டிலும்
வேறுபட்டவனாகக் காண்பது இல்லை –
அறிவுக் கண்களை யுடையவர்களே தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்டவனாகக் காண்கிறார்கள்

ஆத்ம அபகாரம் திருட்டை பற்றி சொல்கிறான் இதில் -சரீரத்தில் புறப்படும் பொழுதும் இருக்கும் பொழுதும் புகும் பொழுதும்
ஆத்மாவை பிரித்து பார்க்க தெரியாமல் மூடர்களாக –
ஞானம் அறிய ஞான கண் கொண்டே பார்க்க முடியும் -சூழலிலே சிக்கி உழல்கின்றான்

——————–

யதந்தோ யோகி நஸ்சைநம் பஸ்யந்த் யாத்மந்ய வஸ்திதம்–
யதந்தோப்ய க்ருதாத்மாநோ நைநம் பஸ்யந்த்ய சேதஸ–৷৷15.11৷৷

யதந்தோ = முயற்சிப்பவர்கள்
யோகிந = யோகிகள்
ச = மேலும்
எனம் = அவர்கள்
பஸ்யந்த்தி = காண்கிறார்கள்
ஆத்மானி = தங்களுக்குள்
அவஸ்திதம் = இருக்கும் , நிலை பெற்று இருக்கும்
யதந்தோ = முயற்சி செய்பவர்கள்
அக்ருதாத்மாநோ = தயாராக இல்லாதவர்கள் ,
ந = இல்லை
எனம் = அவனை
பஸ்யந்த் = காண்பது
அசேதஸ: = நினைவு இல்லாதவர்கள், ஸ்மரணை இல்லாதவர்கள்,

யதந்த: யோகிந:-முயற்சியுடைய யோகிகள்,
ஆத்மநி அவஸ்திதம் ஏநம் பஸ்யந்தி-இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர்,
ச யதந்த: அபி அக்ருதாத்மாந:-முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் தூய்மைப் படுத்தாதவர்கள்,
அசேதஸ:-அஞ்ஞானிகள், ஏநம் ந பஸ்யந்தி-இவனைக் காண்கிலர்.

என்னைச் சரணம் அடைவதை முன்னிட்டுக் கொண்டு கர்மயோகம் முதலான முயற்சிகளைச் செய்யும்
யோகிகள் தம் உடலில் இருக்கும் இந்த ஜீவாத்மாவை யோகம் ஆகிய கண்களால் பார்க்கிறார்கள் –
என்னைச் சரணம் அடையாமல் முயற்சி செய்த போதிலும் மனத்தில் பரிசுத்தி விளையாதவர்களாய் –
அது காரணமாகவே ஆத்மாவைக் காணவல்ல நெஞ்சு இல்லாதவர்கள்
ஆத்மாவை உள்ளபடி காண்பது இல்லை –

என்னை சரண் அடைந்து -கர்மங்களில் இருந்து முயன்றால் -உண்மை நிலையை அறிந்தவனாக -ஆகிறான் –
பற்றாமல் முயல்வாருக்கு மனஸ் சுத்தி ஏற்படாமல் -இழக்கிறார்கள் —
கைங்கர்யம் திருவடி சரண் அடைந்தே -செய்ய வேண்டும் –
சம்பந்தம் புரிந்தே முயல வேண்டும் -ஆத்மாவை தெரிந்து கொள்ள -மனஸ் சுத்தி வேண்டுமே

——————

மூன்று ஸ்லோகங்களால் பிராகிருத பதார்த்தங்களாகும் என்னதே -அனைத்தையும் புகுந்து நியமித்து வியாபித்து தாங்கி -எனது சொத்துக்கள் தான் ஆகையாலே நானே புருஷோத்தமன் என்று சொல்வதற்கு பீடிகை
ஏவஂ ரவி சந்த்ர அக்நீநாம் இந்த்ரிய ஸந் நிகர்ஷ விரோதி ஸஂதமஸ நிரஸந முகேந இந்த்ரிய அநு க்ராஹக தயா ப்ரகாஷகாநாஂ ஜ்யோதிஷ்மதாம் அபி ப்ரகாஷகஂ ஜ்ஞாந ஜ்யோதிஃ ஆத்மா முக்தாவஸ்தோ ஜீவாவஸ்தஃ ச பகவத் விபூதிஃ இதி உக்தம் -‘தத்தாம பரமஂ மம.’ (கீதா 15.6)’மமைவாஂஷோ ஜீவ லோகே ஜீவ பூதஃ ஸநாதநஃ৷৷’ (கீதா 15.7) இதி.–இதாநீம் அசித் பரிணாம விஷேஷ பூதம் ஆதித்யாதீநாஂ ஜ்யோதிஷ்மதாஂ ஜ்யோதிஃ அபி பகவத் விபூதிஃ இத்யாஹ —

யதாதித்ய கதம்- தேஜோ ஜகத் பாஸயதேகிலம்–
யச் சந்த்ரமஸி யச் சாக்நௌ தத் தேஜோ வித்தி மாமகம்–৷৷15.12৷৷

யதா = எது
ஆதித்யகதம் = சூரியனில் இருந்து
தேஜோ = ஒளிர்கிறதோ
ஜகத் = உலகம் அனைத்தும்
பாஸயதே = ஒளிரச் செய்கிறதோ
அகிலம் = உலகம் அனைத்தையும்
யத் = எது
சந்த்ரமஸி = சந்திரனின் ஒளியில்
யத் = எது
ச = மேலும்
அக்நௌ = அக்கினியில்
தத் = அது
தேஜோ = தேஜோ மயமாக
வித்தி = அறிந்து கொள்
மாம் அகம் = என்னுடையது என்று

ஆதித்ய கதம் தேஜ:-சூரியனிடமிருந்து ஒளி,
அகிலம் ஜகத் பாஸயதே-அனைத்து உலகத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ,
ச யத் சந்த்ரமஸி-சந்திரனிடத்துள்ளதும்,
யத் அக்நௌ ச – தீயிலுள்ளதும்,
தத் தேஜ: மாமகம் வித்தி-அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.

ஆதித்யன் இடம் இருக்கும் யாதொரு தேஜஸ்ஸூ சந்திரனிடம் உள்ள எந்த தேஜஸ்ஸூம் –
அக்னியில் உள்ள எந்த தேஜஸ்ஸூம் உலகு அனைத்தையும் ஒளி விடச் செய்கிறதோ –
அந்த தேஜஸ்ஸை என்னுடையதாக அறிவாயாக

இங்கு அனைத்தும் தன்னதே -கீழே முக்தாத்மா பத்தாத்மா சொல்லி -பிராசங்கிக்கமாக மூன்று ஸ்லோகங்கள் –
ஆதித்யன் -இடம் உள்ள தேஜஸ் -உலகம் அகிலம் ஒளி பெற -சந்திரன் -அக்னி தேஜஸ் –
இந்த தேஜஸ் எல்லாம் என்னுடையதே என்று அறிந்து கொள் –

ஒரு பொருளின் தன்மை மற்ற பொருளில் இருந்தால் இரண்டுமே ஓன்று அத்வைதி -ஸ்ருஷ்டிக்கப்படும் ஆதித்யனும் ஸ்ருஷ்டித்த ப்ரஹ்மமும் ஒன்றாகாதே

என்னை ஆராதித்து -திருப்தி அடைந்த நான் ஒளி கொடுத்துள்ளேன் -எனது திரு மேனியில் ஒரு பகுதி என்றவாறு-ப்ரதாதா பிரதாத்ரு பாவம்

வேத நான்காய் -ப்ரதிபாத்ய ப்ரதிபாத்யம் பாவம் என்றும் ப்ரதாதா பிரதாத்ரு பாவம் என்றும்

—————

ச பூத தாரிண்யா தாரகத்வ ஷக்திஃ மதீயா இத்யாஹ —

காமாவிஸ்ய ச பூதாநி தாரயாம் யஹ மோஜஸா–
புஷ்ணாமி சௌஷதீ ஸர்வா ஸோமோ பூத்வா ரஸாத்மக–৷৷15.13৷৷

கம் = பூமியில்
அவிஸ்ய = நுழைந்து
ச = மேலும்
பூதாநி = உயிர்களைத்
தாரயாமி = தாங்குகிறேன்
அஹம் = நான்
ஒஜஸா = சக்தியால்
புஷ்ணாமி = பலப் படுத்துகிறேன்
ச = மேலும்
ஔஷதீ: = மருந்தாக
ஸர்வா: = அனைத்து
ஸோமோ = சாறாக, அமிர்தமாக
பூத்வா = ஆனபின்
ரஸாத்மக: = அவற்றின் இயற்கையாக இருக்கிறேன்

ச அஹம் காம் ஆவிஸ்ய-நான் பூமியுட் புகுந்து,
ஒஜஸா பூதாநி தாரயாமி-உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்,
ரஸாத்மக: ஸோம: ச பூத்வா-மேலும் நான் நிலவாகி,
ஸர்வா: ஒஷதீ: புஷ்ணாமி-அனைத்து பயிர்பச்சைகளையும் போஷிக்கிறேன்.

நான் பூமியினுள் புகுந்து என்னுடைய தடங்கல் அற்ற சக்தியினால் எல்லாப் பொருள்களையும் தரிக்கிறேன்
அமுத ரஸ வடிவமான சந்த்ரனாக ஆகி எல்லாப் பயிர்களையும் போஷிக்கிறேன்
பூமியை அடைந்து -தரித்து -திறல்- அம்ருத ரசம் சந்திரனாக இருந்து போஷிக்கிறேன்
அனைத்து சக்திகளும் என்னது –

ஆகாசத்தையும் த்ருடமாக தரிக்கிறேன்-ஸங்கல்ப சக்தியாலேயே தடங்கல் அற்ற தரிக்கும் தன்மை யுண்டே –வேதம் ஸ்வத ப்ரமாணிகத்வம் உண்டு போல் ப்ரஹ்மம் தனது மஹிமையாலே தானே தனக்கு தாரகம் -பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரம்

———————-

அஹம் வைஸ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஸ்ரித–
ப்ராணாபாந ஸமாயுக்த பசாம் யந்நம் சதுர்விதம்–৷৷15.14৷৷

அஹம் =நான்
வைஸ்வாநரோ = அனைத்து உயிர்களிலும்
பூத்வா = சேர்ந்து
ப்ராணிநாம் = உயிர் வாழ்வனவற்றில்
தேஹம் = உடல்
அஸ்ரித: = அடைந்த பின்
ப்ராணா = பிராண
அபாந = அபான
ஸமாயுக்த: = சமமாக சேர்த்தபின்
பசாம் = சமைக்கிறேன்
அன்னம் = உணவை
சதுர் விதம் = நான்கு விதமாக

அஹம் ப்ராணிநாம் தேஹம் ஆஸ்ரித:-உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்,
ப்ராணாபாநஸமாயுக்த :-பிராண-அபான வாயுக்களுடன் கூடி,
வைஸ்வாநர: பூவா – வைசுவாநரன் என்கிற அக்னியாகி,
சதுர்விதம் அந்நம் பசாமி-நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.

நான் வைச்வானரன் என்ற அக்னியாக ஆகி எல்லா ஜீவர்களின் உடலில் இருப்பவனாய் –
கடித்தும் உறிஞ்சியும் நக்கியும் குடித்தும் உண்ணப்படும் நான்கு வகைப்பட்ட உணவுகளை
பிராணன் அபானன் என்ற காற்றுக்களுடன் சேர்ந்து ஜீரணிக்கச் செய்கிறேன்
ஜாடராக்னியாகவும்-இருந்து -பிராணிகள் தேகம் அடைந்து -பிராண வாயு அபான வாயு –
நான்கு வித அன்னம் -கடித்து நக்கி உறிஞ்சி குடிக்கும் நான்கு விதம்
நானே தளிகை பண்ணுகிறேன் -ஜீரணம் என்றவாறு -ஸமஸ்த வஸ்துக்களும் அவன் உடைமை என்றவாறு –
அன்னம் -பிராமணனுக்கு -சொல்லி வஸ்திரம் கொடுத்ததாக வஸ்திர தானம் -ஐந்து வாயுக்களும் சரியான நிலையில்
சமான வாயு உடன் பிராண அபான வாயு சேர்ந்து –சாப்பிடட பதார்த்தங்கள் சக்தி பிரிந்து இந்திரியங்களுக்கு போக வேண்டுமே –

ப்ரஹ்ம ஸூத்ரம் 2-4 பஞ்ச வ்ருத்த மனஸ் ஐந்து -சித்தம் -இத்யாதி ஐந்து நிலைகள் உண்டே
பிரகர்ஷேண பாஹுர் ஆயுத பிராண -வெளி விடும் காற்று
அதோ நய அபான -கீழ் விடும் காற்று -ஸர்வத்ர ஆநயததி சமானம் நடுப்பகுதி நாபி மண்டலம்
ஊர்த்தம் கமநம் உதாந கண்டத்தில் -விநயதி விசேஷண பிரஜ்ஜை இருப்பதைக்காட்ட – வ்யான

—————

அத்ர பரம புருஷ விபூதி பூதௌ ஸோம வைஷ்வாநரௌ அஹஂ ஸோமோ பூத்வா வைஷ்வாநரோ பூத்வா இதி தத் ஸாமாநாதி கரண்யேந நிர்திஷ்டௌ.– தயோஃ ச ஸர்வஸ்ய பூத ஜாதஸ்ய ச பரம புருஷ ஸாமாநாதி கரண்ய நிர்தேஷே ஹேதும் ஆஹ –காரணத்தை இதில் விளக்குகிறார் –

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷

ஸர்வஸ்ய = அனைத்திலும்
ச = மேலும்
அஹம் = நான்
ஹ்ருதி = இதயமாக
ஸந்நிவிஷ்டோ = அமர்ந்து இருக்கிறேன்
மத்த: = என்னில் இருந்து
ஸ்ம்ருதிர் = வேதங்கள்
ஜ்ஞாநம் = ஞானம்
அபோஹநம் = எடுத்துச் செல்வது, மறப்பது
ச = மேலும்
வேதை³ஸ் = வேதங்களும்
ச = மேலும்
ஸர்வை = அனைத்திலும்
அஹம் = நான்
ஏவ = நிச்சயமாக
வேத்யோ = அறிந்து கொள்ள , புரிந்து கொள்ள
வேதாந்த க்ருத் = வேதாந்தங்களை செய்பவன்
வேத விதே = வேதாந்தங்களை அறிந்து கொள்பவன்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
அஹம் = நான்

ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான்,
ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன,
ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ – எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் நான்,
வேதாந்தக்ருத் வேதவித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

நான் எல்லா ஜீவர்களுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன்
அனைவருடைய நினைவும் வஸ்து நிர்ணயமும் மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன
எல்லா வேதங்களாலும் நானே அறியப் படுகிறேன் –
வேத விதிகளின் பலனை அளிப்பவனும் வேதத்தை அறிந்தவனுக்கு நானே

ஆச்சர்யமான ஸ்லோகம் -நிறைய இடங்களில் காட்டி வியாக்யானம் உண்டே —
கீழே சாமானாதிகரண்யம்-அனைத்தும் இவனே
அந்தராத்மாவாக இருந்து -சரீராத்மா நிபந்தனம்-பின்ன பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஏகஸ்மின் -விசேஷணங்கள் ஒன்றுக்கே –
விலை பெற்ற நீல வாயும் வயிறுமான மண் குடம் போலே -வேறு வேறு பிரயோஜனத்துக்காக
வேறே வேறே விசேஷணங்கள் -பிரதம விபக்தி -முதல் வேற்றுமையில் படிக்கலாம் –
ஹிருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன் அனைத்துக்குள்ளும் -அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா நியாந்தா
ஸ்ம்ருதியும் – ஞானம் மறதி எல்லாம் என் ஆதீனம் –
வேதங்கள் -சொல்லப் படுகிறேன் -நானே -ஏவ காரம் மூன்று இடங்களிலும் -வேதங்களினால் நானே -அறியப் படுகிறேன்
வேதங்களினாலே சொல்லப் படுகிறேன் -வேறே ஒன்றும் சொல்லாதே -வேதம் என்னை சொல்லி அல்லால் நில்லாது
வேதம் எத்தை சொல்லப் போனாலும் -இவனது சரீரமே
வேதங்களின் படி செய்யும் கர்மங்களுக்கும் பலம் கொடுப்பவனும் நானே

ஏவ -சர்வை வேத ஏவ -வேதத்தாலேயே சொல்லப்படுகிறேன் -ப்ரத்யக்ஷம் அனுமானம் காட்டாது
அஹம் ஏவ -என்னையே சொல்லும்
வேதைர் ஏவ சொல்லியே தீரும் மூன்றாவது
வேதைர் ஏவ அஹம் ஏவ –தேவாதாந்த்ரங்களைச் சொல்வதும் என்னையே -ஸர்வ தேவ நமஸ்காரம் கேசவம் அதி கச்சதி-பரன் திறம் அன்றி தெய்வம் மற்று இல்லையே -சுடர் மிகு ஸ்ருதியுள் உளன் -திட ப்ராமண சித்தன் -ஊற்றம் யுடையாய் –

ப்ரஹ்மம் வேதம் அறிந்தவனே -அயோக விவச்சேதம் -ராமன் வில்லாளியே -ப்ரஹ்மம் ஜகாத் காரணமே
ராமனே வில்லாளி -அந்நிய யோக விவச்சேதம் -ப்ரஹ்மமே ஜகத் காரணம் -ப்ரஹ்மமே இவனே வேதம் அறிந்தவன் -முன் ஓதிய பட்டன் –

உள்ளத்தே உறையும் மால்-அடியேன் உள்ளான் -அவையுள் தனி முதல் –

ப்ரத்யபிஜ்ஜை வேறே -ப்ரத்யக்ஷம் சேர வேண்டும் -அதே வஸ்து இங்கு இருக்க அனுபவிப்பது -இங்கு அனுபவ மாத்திரம் -ஸ்ம்ருதி வேறே இத்தை விளக்குகிறார்

அபோஹம் -ஊஹம் -பிரமாணம் செயல்பாட்டுக்கு சக்தி -ஸாமக்ரியால் பிறக்கும் -பிரமாணம் ஸ்தாபிக்க உதவும் மூன்றும்
கண்ணால் தூணை க்ரஹிக்கும் சக்தி உடையது என்னும் ஞானம் ஊஹம் -தூண் 12 ஆதி உயரம் வர்ணம் இத்துடன் சேர்ந்தா இல்லையா –
வெளிச்சம் இருந்தால் தான் க்ரஹிக்கும் -ஸாமக்ரியை
முதலில் தூண் மட்டுமா தன்மைகளையும் சேர்த்தா -தன்மைகளை விட்டுப் பிரியாத தூணை கிரஹிப்பதால் சேர்த்தே க்ரஹிக்கும் -மூன்றும்
இந்த ஊகம் ஞானமும் நானே என்றுமாம்

சர்வ தேவதா அந்தர்யாமி -சர்வ ஆராதானமும் எனக்கு -பலம் தருமவனும் நானே -வேதாந்தம் -வேத பலன் என்றே இங்கு-செய்ய கமலக்கண்ணன் -செய்கைப் பயன் உண்பேனும் யானே அனைத்தும் தானே

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை*  விழுமிய முனிவரர் விழுங்கும்* 

கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை*  குவலயத்தோர் தொழுதுஏத்தும்* 

ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை*  ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*

மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)

—————–

அதஃ மத்த ஏவ ஸர்வ வேதாநாஂ ஸார பூதம் அர்தஂ ஷ்ரரிணு —

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச–
க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்தோக்ஷர உச்யதே–৷৷15.16৷৷

த்வ = இரண்டு
இமௌ = அவைகள்
புருஷௌ = புர்ஷர்கள்
லோகே = உலகில்-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
க்ஷரஸ் = அழியக் கூடியது
ச = மேலும்
அக்ஷர = அழியாதது-முக்த ஜீவாத்மா
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
க்ஷர: = அழியக் கூடியது-பக்த ஜீவாத்மா
ஸர்வாணி = அனைத்தும்
பூதாநி = உயிர்களிலும்
கூடஸ்தோ = விடுதலை அடைந்தவன்
அக்ஷர = அழிவற்றது
உச்யதே = சொல்லப் படுகிறது

லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச-உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என,
இமௌ த்வௌ புருஷௌ-இரண்டு வகைப் புருஷருளர்,-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
ஸர்வாணி பூதாநி க்ஷர:-க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும்,
கூடஸ்த: அக்ஷர உச்யதே-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

சாஸ்திரங்களில் -அழியும் இயல்வுள்ள அசேதனமான உடலோடு கூடி இருக்கையாலே
ஷர புருஷன் எனப்படும் பத்த ஜீவனும் -அழியும் இயல்வு இல்லாமையால் அஷரன் எனப்படும் முக்த ஜீவனும்
ஆகிற இரண்டு வகையான இப்புருஷர்களே பிரசித்தி பெற்றவர்கள் –

ஷர புருஷன் எல்லா பத்த ஜீவனுமாவான் -அக்ஷர புருஷன் அசித் சம்பந்தம் அற்ற முக்தாத்மா எனப்படுகிறான் –
லோகே வேதத்தில் சொல்லப் பட்ட படி -ஷரன் அழிவுக்கு உட்பட்ட சரீரம் உடன் உள்ள பத்தாத்மா -அஷரன் -முக்தாத்மா –
பூத ராசிகள் எல்லாம் ஷரன் -உயர்ந்த முக்தாத்மா அஷரன் -இருவரும் வேதத்தில் சொல்லப்பட்டன

கூடஸ்தர் -பத யோகத்தால் அர்த்தம்-யவ்கிக அர்த்தம் மூலம் முக்தாத்மாவைச் சொல்லி – -ரூடி அர்த்தம் ப்ரஸித்த அர்த்தம் இல்லை -விகாரம் இல்லா கொல்லம்பட்டரை இரும்பு-இங்கு பல பிரிவுகளுக்கு பொதுவாக இருப்பவன் -முக்தாத்மா-அசித் சம்சர்க்கம் இல்லாமை ஏக வசனம் ஒருமையில் கூடஸ்தர்

—————–

உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷

உத்தம: = உயர்ந்த, சிறந்த
புருஷஸ் = புருஷன்
து = மேலும், ஆனால்
அந்ய: = வேறான, மற்ற
பரமாத்மா = பரமாத்மா
இதி = இதுவே
உதாஹ்ருத: = சொல்லப்படுகிறது, பிரகட்டணப் படுத்தப்பட்ட
யோ = அவன்
லோக = உலகங்களில்
த்ரய = மூன்று
அவிஸ்ய = நுழைந்தபின் , சேர்ந்தவுடன்
பிபர்த்தி = எவன் தாங்குகின்றானோ
அவ்யய = மாறாத, மாற்றம் இல்லாத
ஈஸ்வர: = ஈஸ்வரன்

ய: லோகத்ரயம் ஆவிஸ்ய-எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து,
பிபர்தி-தாங்கி போஷிக்கிறாரோ,
அவ்யய: ஈஸ்வர: பரமாத்மா இதி-அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும்,
உதாஹ்ருத:-அழைக்கப் படுகிறாரோ,
உத்தம: புருஷ: து-அந்த புரு÷ஷாத்தமன்,
அந்ய:-இவரில் வேறுபட்டோன்.

உத்தமமான புருஷன் -புருஷோத்தமன் -புருஷன் ஆகிய உத்தமன் -தத் புருஷ ஸமாஸம் -புருஷர்களுக்குள் உத்தமன் -என்றே கொள்ள வேண்டும்

வேதத்தில் பிரசித்தமாக சொல்லப்பட்ட அசித் பத்த முக்தன்-இவர்களில் வேறுபட்டவன் -என்று நிர்தேசம்  ப்ராதான்யம் -புருஷோத்தமன் -பரமாத்மா என்று நிர்தேசம் -உத்தமத்வம் மட்டும் ஸ்தாபிக்காமல் அந்நிய மானவன் என்றே ஸ்தாபிக்க வந்தது

எவன் ஒருவன் அசித் பக்த ஜீவன் முக்தாத்மா என்னும் மூன்று பொருள்களையும் வியாபித்து –
அவற்றைத் தாங்குகிறானோ -அவன் அழிவற்றவனாய் -அனைத்தையும் நியமிப்பவனாய் –
பரமாத்மா என்று சாஸ்திரங்களில் சொல்லப்படுபவனாய் –
இக்காரணங்களால் மிக மிக மேலான புருஷனாய் இருப்பவன் -முற்கூறிய
ஷர அக்ஷர புருஷர்களைக் காட்டிலும் வேறுபட்டவன்
இவர்களை காட்டிலும் வேறு பட்ட புருஷோத்தமன் -பாரமான ஆத்மா -லோக த்ரயம் –
சித் அசித் ஈஸ்வரன் தத்வ த்ரயங்கள் -சூழ்ந்து தங்குகிறான்
ஸ்வாமி -நியமனம்-ஈசான சீலன் நியமன சாமர்த்தியம் – -வியாபிக்கிறான் -தரிக்கிறான் -தங்குகிறான் –
மற்றவை வியாபிக்கப்படும் – தாங்கப்படும்- நியமிக்கப் படும்

ஆவிஷ்ய-உள்ளும் புறமும் வியாபித்து – பிபர்த்தி -தாங்கும்
அவ்யயம் -அழிவற்ற -ஈஸ்வரன் -நியமிப்பவன் -நான்கும் சொல்லி
தத்வ த்ரயமும் அழிவற்றவையே தான் -ஸ்வரூப ஸ்வ பாவ விகாரம் இல்லாதவன் -என்றவாறு –

முக்தாத்மா-முன்னால் இருந்த அசித் சம்பந்தம் -இருந்ததே இவை வ்யயம் –நித்யர் போல் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தர் அவ்யயம்

பதி சேஷி ஸ்வாமி வியாபகம் நியாந்தா -ஸ்வாமித்வம் முக்யம் -த்வயம் பூர்வ உத்தர வாக்கியசத்தில் இது உண்டே -கைங்கர்யம் ஏற்றுக்கொள்ள –
இவை எல்லாம் தனது பொருட்டாகவே செய்கிறான் -அமலன் நிமலன் விமலன் நின்மலன்-படர்க்கையாகவே சொல்லிக் கொள்கிறான்-ஸர்வஸ்வ ஸ அஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட -போல் பல இடங்களிலும் சொல்லிக் கொண்டானே -நாராயணனே-சங்கரரும் பாஷ்யத்தில்

————-

யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம—৷৷15.18৷৷

யஸ்மாத் = அதனால்
க்ஷரம் = அழியக்கூடிய, மாறக் கூடிய
அ தீத = அதை தாண்டியவன், மீறியவன், கடந்தவன்
அஹம் = நான்
அக்ஷராத = அழியாத
அபி = இப்போது
ச =மேலும்
உத்தம:= சிறந்த , உயர்ந்த
அதோ = அதிலிருந்து
அஸ்மி = நான்
லோகே = உலகில்
வேதே = வேதங்களில்
ச = மேலும்
ப்ரதி²த: = அறியப்பட்ட, சிறப்பித்து கூறப் பட்ட
புருஷோத்தம: = புருஷோத்தமன்

யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச-எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும்,
அக்ஷராத் அபி உத்தம:-அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ,
அத: லோகே வேதே ச-அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும்,
புருஷோத்தம: ப்ரதித: அஸ்மி-புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.

இங்கு வேதம் லோகம் இரண்டும் இருப்பதால் லோகம் என்பது வேதம் விளக்கிய ஸ்ம்ருதிகள் -கலக்கம் இல்லா நல் தவ முனிவர் -நால் வேதம் கண்ட ரிஷிகள்-மந்த்ர த்ரஷ்டா முனிகள் -மனன சீலர் கவி கிராந்தி தர்சீ

புருஷோத்தமன் இவர்களைக் காட்டிலும் உத்தமன் -இவர்களில் உத்தமன் -இவர்களுக்கு உத்தமன்-பஞ்சமி -சஷ்ட்டி சப்தமி உருபு கொண்டு-யவ்கிகமாயும் ரூடியாகவும் இவனையே சொல்லும்

நான் யாதொரு காரணத்தால் -ஷர புருஷனைக் கடந்து நிற்கிறேனோ -அக்ஷர புருஷனான
முக்தனைக் காட்டிலும் மேலானவனாயும் இருக்கிறேனோ -அக்காரணத்தினாலேயே
ஸ்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றவனாய் இருக்கிறேன்
எதன் இடத்தில் இருந்து ஷரம் பத்தாத்மா –அஹம் சப்தம் இங்கு -தாண்டி அதீத வாசனை கூட இல்லை முகத்தாத்மா தாண்டி
ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் இல்லாமல் வேதங்கள் ஸ்ம்ருதிகள் என்னை புகழும்-

—————–

யோ மாமேவ ஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம்–
ஸ ஸர்வவித் பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத–৷৷15.19৷৷

யோ = எவன் ஒருவன்
மாம் = என்னை
ஏவம்மே = அப்படியாக
அஸம்மூடோ = குழப்பம் இன்றி, தடுமாற்றம் இன்றி
ஜாநாதி = அறிகிறானோ
புருஷோத்தமம் = புருஷோத்தமன் என்று
ஸ = மேலும்
ஸர்வவித் = அனைத்தும் அறிந்தவன்
பஜதி = வணங்குகிறான்
மாம் = என்னை
ஸர்வ = அனைத்து
பாவேந =நிலைகளிலும்
பாரத = பாரத வம்சத்தில் பிறந்தவனே

பாரத:-பாரதா!
ய: அஸம்மூட: மாம்-எந்த ஞானி என்னை,
ஏவம் புருஷோத்தமம் ஜாநாதி – இவ்வாறு புருஷோத்தமன் என்று அறிகிறானோ,
ஸர்வவித் ஸ: ஸர்வபாவேந-எல்லாமறிந்த அவன் எல்லா விதமாகவும்,
மாம் பஜதி-என்னை வழிபடுகிறான்.

பரத குலத்தில் பிறந்தவனே -எவன் ஒருவன் இம்மாதிரியாக-ஷர அக்ஷர புருஷர்களைக் காட்டிலும்
பல காரணங்களால் சிறப்புற்றவனாக -என்னை கலக்கமில்லாமல் அறிகிறானோ –
அவன் என்னை அடைவதற்கு உரிய வழி அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான் —
என்னை -என்னை அடையும் வழியான-பக்தி பிரகாரங்கள் அனைத்தாலும் பக்தி செய்தவன் ஆகிறான்
யார் -என்னையே -சந்தேகம் இடம் இல்லாமல் -மயக்கம் இல்லாமல் -புருஷோத்தமன் என்று –
அம்சமா அங்கமா அவயவமா ஐக்கியமா -சங்கை இல்லாமல்
அந்த ஆத்ம ஞானி -புருஷோத்தம வித்யை கை வந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான் —
அவனை அடையும் உபாயங்கள் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான்
என்னை பக்தி செய்யும் எல்லா முறைகளாலும் பக்தி பண்ணுகிறான் -கண்ணன் அபிப்பிராயம் இது –
இவற்றால் எனக்கு ஏற்படும் ஆனந்தம்
புருஷோத்தம வித்யை அறிந்தவன் -தெரிவதால்- அடைகிறேன் என்றபடி

ஸர்வ பாவம் என்றது சர்வ கிரியைகளாலும் – ஸர்வம் வாஸூ தேவம் இருப்பவர் வேறே -இங்கு உபாசன பிரகாரம் -அஹங்கார மிஸ்ரம்

———-

இதி ஏதத் புருஷோத்தமத்வ வேதநஂ பூஜயதி.-இந்த ஞானத்தை புகழ்கிறான்

இதி குஹ்ய தமம் ஸாஸ்த்ர மிதமுக்தம் மயாநக–
ஏதத் புத்த்வா புத்திமாந் ஸ்யாத் க்ருத க்ருத்யஸ்ச பாரத–৷৷15.20৷৷

இதி = இதுவே-இவளை போல் இங்கு இதம்
குஹ்யதமம் = இரகசிய ஞானம். மறை பொருள்
ஸாஸ்த்ரம் = சாஸ்திரம்
இதம் = இது
யுக்தம்மு = சொல்லப்பட்டது
மயா = என்னால்
அநக = பாவம் இல்லாதவனே
ஏதத் = இதுவே
புத்த்வா = அறிந்தவன்
புத்திமான் = அறிவுள்ளவன்
ஸியாத் = அவனால்
க்ருத க்ரித்யஸ் = அவனால் செய்யத் தக்கது செய்வோன்
ச = மேலும்
பாரத = பாரத குலத்தவனே

அநக:-குற்றமற்றோய்,
இதி இதம் குஹ்யதமம் ஸாஸ்த்ரம்-இங்ஙனம் இந்த-இவளை போல் இங்கு இதம் -மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை,
மயா உக்தம்-என்னால் கூறப் பட்டது,
ஏதத் புத்த்வா புத்திமாந் க்ருதக்ருத்ய: ச-இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். செய்யத்தக்கது செய்பவன்
ஸ்யாத்-ஆகிறான்.-செய்த வேள்வியர் ஆவாய் –

குற்றம் அற்றவனே -பரத குலத்தில் உதித்தவனே -இவ்வண்ணமாக இப்புருஷோத்தம வித்யையாகிற
பரம ரஹஸ்யமான சாஸ்திரம் என்னால் உனக்கு உபதேசிக்கப்பட்டது –
இத்தை அறிந்தவன் என்னை அடைவதற்கு வேண்டிய அறிவு அனைத்தையும் பெற்றவன் ஆகிறான் –
அதற்குச் செய்ய வேண்டியவை அனைத்தையும் செய்தவன் ஆகிறான்-செய்த வேள்வியர் ஆவாய் –
புருஷோத்தம வித்யை அறிந்தவன் அனைத்தையும் அனுஷ்டித்தவன் ஆகிறான் -புனர் யுக்தி தோஷம் இல்லை –
இதில் தான் அறிந்து அனுஷ்ட்டித்து அடைந்து –செய்த வேள்வியர் –
பூவை –யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் -வியாக்யானம் போலே -பேர் வைத்து ஆனந்தம் இல்லை
திருநாமங்கள் சொல்லி பெற்ற ஆனந்தம் உலக குழந்தைகள் இவை கொண்டு விளையாடும் ஆனந்தம் பராங்குச நாயகி பெற்றாள்-
அதே போலே இங்கும் முந்திய ஸ்லோகங்களும் அர்த்தம் -குஹ்ய தமமான சாஸ்திரம் —
ரஹஸ்யமாக வைத்துக் கொள் -குற்றம் அற்ற அர்ஜுனன்-

————————————————————–

முதலில் -அஸ்வத மரம்
அடுத்து -கீழ் மேல் கிளைகள்
மரக்கிளை வெட்ட பற்றின்மை-கோடரி – -முக்குணம் கடக்க வேண்டும் –
அஞ்ஞானம் நிவ்ருத்திக்கு சரணம் அடைந்து
அப்படி சரணம் அடைந்தவர் பெருமை
முக்தாத்மாவின் பெருமை
ஏழாவது -அனைத்து தேஜஸ் எல்லாம் என்னதே
எட்டாவது -சரீரம் போகும் பொழுது புலன்கள் பூத ஸூஷ்மங்களைக் கொண்டே செல்கிறான்
விஷம் கலந்த தேன்போல் இந்திரிய சுகம்
ஆத்ம அபஹாரி பெரிய கள்வன் -வேறுபட்ட ஆத்மா அறியாமல்
முயல்வார் -சரண் அடைந்தே பலம்
12-15- ஆதித்ய தேஜஸ் -பூமி தரிப்பதும் சந்திரன் அம்ருதமும் நானே -நானே அக்னி -புகுந்து நியமிக்கிறேன்
16-20-புருஷோத்த வித்யை விளக்கி மஹாத்ம்யம் சொல்லி நிகமிக்கிறான்

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சங்ஷேப ராமாயணம் —ஸ்ரீ ராமசந்த்ரனின்16 கல்யாண குணங்கள்–

November 24, 2023

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மாண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

வீர ஆசனத்தில் ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ வாயு குமாரர் ஸ்ரீ ராமாயணம் சாதித்து அருள –
ஸ்ரீ பெருமாள் வியாக்யானம் சாதித்து அருளி -இதுவே நம் பூர்வர்கள் ஸ்ரீ குரு பரம்பரை மூலம் பெற்ற நிதி

ஸ்ரீ மத் கிருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாக்ஷைக லஷ்யணாம் ஸூலபஸ் ஸ்ரீ தரஸ் ஸதா

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியாதாக்கும் வேரி யங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேதன நீறு பட்டுழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கு

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற இரண்டு எழுத்தினால்

ஆபதாம் அபஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

———–

ஸ்ரீ கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

ஸ்ரீ வால்மீகேர் முனிஸிம்ஹஸ்ய கவிதா வனசாரிண:
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராங்கதிம்

ய: பிபன் ஸததம் ராம சரிதாம்ருத ஸாகரம்
அத்ருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸ மகல்மஷம்

கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம்
ஸ்ரீ ராமாயண மஹாமாலா ரத்னம் வந்தே(அ) நிலாத்மஜம்

அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீசோக நாசனம்
கபீச மக்ஷஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்8

ஆஞ்ஜனேய மதிபாடலாலனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

க்யாத: ஸ்ரீராமதூத: பவனதனுபவ: பிங்கலாக்ஷ: சிகாவான்
ஸீதா சோகாபஹாரீ தசமுக விஜயீ லக்ஷ்மண: ப்ராணதாதா
ஆநேதா பேஷஜாத்ரேர் லவணஜலநிதேர் லங்கனே தீக்ஷிதோ ய:
வீர: ஸ்ரீமான் ஹனூமான் மம மனஸி வஸன் கார்யஸித்திம் தநோது

தூவரிக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி:
தாரித தசமுக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:

ஸ்ரீ வால்மீகி கிரிஸம்பூதா ராமஸாகர காமினீ
புனாது புவனம் புண்யா ராமாயண மஹாநதீ

ஸ்ரீ வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ரசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா

வைதேஹீ ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்த்யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முனிப்ப்ய: பரம்
வ்யாக்க்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்

நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை
நமோ(அ)ஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ப்யோ
நமோ(அ)ஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ப்ய:

————

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||

————

வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஸரதாத்மஜே |
வேத3 : ப்ராசேதஸா தா3ஸீத்3 ஸாக்ஷாத்3 ராமயணாத்மநா ||

வேதத்தினால் சூட்டப்படும் பரம்பொருள் பூமியிலே ஸ்ரீ ராமனாக அவதாரம் பண்ண உடனே,
வேதம், ஸ்ரீ வால்மீகி முனிவர் வழியாக ஸ்ரீ ராமாயணமாக வெளிவந்துவிட்டது

———

ஸ்ரீ ராமம் ரகு குல திலகம்
சிவ தனு சாக்ரிஹத ஸீதா ஹஸ்த கரம்
அங்குல்யா பரண ஸோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய ஆஸ்ரயம்
வைதேஹி மநோ ஹரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கள கார்ய அநுகூலம்
ஸததம் ஸ்ரீ ராமசந்த்ர பாலயமாம்

—————-

தபஸ் ஸ்வாத்யாயனிரதம் தபஸ்வீ வாக் விதாம் வரம் |
நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முனி புங்கவம் || 1 ||

தாத்பர்யம்
உயர்ந்த தவமுடைய வால்மீகி பகவான்
கர்ம யோகாதி அனுஷ்டானம்
வேத அத்யயன ஜபாதி நிஷ்டை முதலியவைகளை யுடையவராய்
வேதார்த்த வித்துக்களில் உயர்ந்தவராய்
ஸகல வித்யைகளை அறிந்தவர்களில் சிறந்தவராய்
ஸரஸ்வதி புத்ரர்களாகிய அத்தி மரீசீ முதலியவர்களின் மேன்மை யுடையவராய்
முனி ஸ்ரேஷ்டராய் இருக்கிற நாரத மஹா முனியைக் கேட்டு
ப்ரஸ்னம் பண்ணினார் -கேள்வி கேட்டார்

—————-

விசேஷ அர்த்தம்

தபோ நிரதம்’, ‘ஸ்வாத்யாய நிரதம்’, ‘வாக் விதாம்வரம்’ ‘முனிபுங்கவம்’, என்று
ஸ்ரீ நாரத மகரிஷிக்கு நாலு அடைமொழி கொடுத்து, இந்த ஸ்ரீ நாரத மகரிஷியிடம்,
ஸ்ரீ வால்மீகி பகவான் ஒரு விஷயத்தை கேட்கிறார் என்று ஆரம்பிக்கிறது.

தபோ நிரதம்’ – தபஸில் ஈடுபட்டவராய் இருக்க வேண்டும்.
‘ஸ்வாத்யாய நிரதம்’ – தனது படிப்பில் திரும்பத் திரும்ப மனசை செலுத்துவதில் விருப்பம் உள்ளவரை இருக்க வேண்டும்.
வாக் விதாம் வரம்’ – வாக்கிற்கு என்ன பிரயோஜனம்? பகவானை பற்றி பேசிக் கொண்டிருப்பது. அதைச் செய்து கொண்டிருப்பவர்.
‘முனி புங்கவம்’ – மௌனமாய் இருக்ககூடிய முனி புங்கவருக்குள் ஸ்ரேஷ்ட்டர்.

“த‌ப‌சு, வேத‌வேதாந்த‌ங்க‌ள் இவைக‌ளைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ரும், உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ரும்,
முனி ஶ்ரேஷ்ட‌ருமான‌ நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, த‌வ‌த்தோடுகூடிய‌ வான்மீகி முனிவ‌ர் தெண்ட‌ம் ச‌ம‌ர்ப்பித்து வினாவினார்.”

இது இராமாய‌ண‌த்தின் முத‌ல் சுலோக‌ம். இத‌னால் குரு சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகிற‌து.

1) த‌போநிர‌த‌ம் :– த‌வ‌த்தைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ர் என்ற‌தினால் அவ‌ர் ச‌ர்வ‌ச‌க்தி வாய்ந்த‌வ‌ர் என்ப‌து ஸூச‌க‌ம்.
“ய‌த்துஸ்த‌ர‌ம் ய‌த்துராப‌ம் ய‌த்துர்க‌ம் ய‌ச்ச‌துஷ்க‌ர‌ம்|
தத் ஸ‌ர்வ‌ம் த‌ப‌ஸாஸாத்ய‌ம் த‌போஹி துர‌திக்ர‌மம் ||”
“எது க‌ட‌க்க‌முடியாததோ, எது பெற‌ முடியாததோ, எது செய்ய‌முடியாததோ அதெல்லாம் த‌வ‌த்தால் சாதிக்க‌முடியும்.
ஆகையால் த‌வ‌த்தை வெல்வ‌த‌ரிது.”
“வேண்டிய‌ வேண்டியாங் கெய்த‌லாற்செய்த‌வ‌ மீண்டு முய‌ல‌ப் ப‌டும்.
கூற்ற‌ங் குதித்த‌லும் கைகூடு நோற்ற‌லி னாற்ற‌ ற‌லைப்ப‌ட் ட‌வ‌ர்க்கு” (திருக்குற‌ள்) என்ற‌ ஆதார‌ங்க‌ள் நோக்க‌த்த‌க்க‌ன‌.

2) ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம்:– வேத‌வேதாந்த‌ங்க‌ளைப் பூர்ண‌மாக‌ அடைந்த‌வ‌ர், என்ற‌தினால்
நார‌த‌ர் சொல்வ‌தெல்லாம் த‌ரும‌த்தோடு பொருந்திய‌ வ‌ச‌ன‌ம் என்ப‌து ஸூச‌க‌ம்.

3) வாக்விதாம்வ‌ர‌ம் :– உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ர், என்ற‌தினால் சிற‌ந்த‌ போத‌னாச‌க்தி வாய்ந்த‌வ‌ரெனவும்,
வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ச‌க‌ல‌ சாஸ்திர‌ங்க‌ளையும் ந‌ன்றாக‌ அறிந்த‌வ‌ரென‌வும் பொருள்ப‌டும்.

4) முனி புங்க‌வ‌ம்:– முனிஶ்ரேஷ்ட‌ர் என்ற‌தினால் இந்திரிய‌ நிக்கிர‌க‌முள்ள‌வ‌ர் என்ப‌தும்,
ப‌க‌வ‌த்யான‌த்தோடு கூடிய‌வ‌ரென்ப‌தும், திரிகால‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிய‌க்கூடிய‌வ‌ரென்ப‌தும் , ஸ‌தா ஜ‌பப‌ரரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

5)நார‌த‌ம்:– நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, என்ற‌தினால், நார‌ம் – ஜ்ஞான‌ம், அதைக் கொடுக்கக் கூடிய‌வ‌ர் என்ப‌தும்,
நார‌ம் – அஜ்ஞான‌ம், அதை நிவ‌ர்த்தி செய்ய‌க்கூடிய‌வ‌ ரென்ப‌தும், த்ரிலோக‌ ஸ‌ஞ்சாரியான‌ப‌டியால்,
மூன்று லோக‌த்திலுள்ள‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிப‌வ‌ரென்ப‌தும், பிர‌ம்ம‌ புத்திரரான‌ப‌டியால் உத்த‌ம‌ குல‌த்தைச் சேர்ந்த‌வ‌ரென்ப‌தும் ஸூசக‌ம்.

ஆக‌வே, இந்த‌ ஐந்து ப‌த‌ங்க‌ளினால், ஆசார்ய‌ன் பூர்ண‌மான‌ த‌ப‌ஸை யுடைய‌வ‌ராக‌வும்,
வேத‌வேதாந்த‌ங்க‌ளையும் வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ஸ‌க‌ல‌ ஶாஸ்திர‌ங்க‌ளையும் உண‌ர்ந்த‌வ‌ராக‌வும்,
ப‌க‌வ‌த் ப‌க்தியுட‌ன் அந‌வ‌ர‌த‌ ஜ‌பப‌ரராக‌வும் சிஷ்ய‌னுடைய‌ அஜ்ஞான‌த்தைப் போக்கி, ஜ்ஞான‌த்தைக் கொடுத்துப்
ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்தை உப‌தேசிக்க‌வ‌ல்ல‌வ‌ராக‌வும், ஜிதேந்திரிய‌ராக‌வும், உத்த‌ம‌ குல‌த்த‌வ‌ராக‌வுமிருக்க‌வேணும்
எனறு ஆசார்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

“குஶ‌ப்த‌ஸ் த்வ‌ந்த‌கார‌ஸ்யாத் ருகார‌ஸ்த‌ந் நிவ‌ர்த‌க‌:|
அந்த‌கார‌ நிரோதித்வாத் குருரித்ய‌பி தீய‌தே||”

“கு என்ப‌து அஜ்ஞான‌த்தையும், ரு என்ப‌து அத‌ன் நிவ‌ர்த்தியையும் சொல்லுகிற‌ ப‌டியால்
ம‌ன‌தின் க‌ண்ணுள்ள‌ அஜ்ஞான‌மாகிற‌ இருளை நீக்கி மெய்ஞ்ஞான‌மாகிற‌ பிர‌காச‌த்தைத் த‌ருவ‌தால் குரு வென‌ச் சாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

குல‌ன‌ருள் தெய்வ‌ங்கொள்கை மேன்மை
க‌லைப‌யில் தெளிவு க‌ட்டுரை வ‌ண்மை
நில‌ம‌லை நிறைகோல் ம‌ல‌ர் நிக‌ர் மாட்சியும்
உல‌கிய‌ல‌றிவோ டுய‌ர்குண‌ மினைய‌வும்
அமைப‌வ‌ன் நூலுரையாசிரிய‌ன்னே.” என்ற‌ ந‌ன்னூல் இங்கு நோக்க‌த் த‌க்க‌து.

தப -என்று
பாபத்தைப் போக்கி ஊணை வாட்டி இந்திரியங்களை வசமாக்கிக் கொடுக்க வல்ல க்ருச்ரம் சந்த்ராயணம் முதலிய கர்மத்துக்கும்
யம நியம ஆஸன பிராணாயாம ப்ரத்யாஹார தாரண தியானங்களை அங்கங்களாக யுடைய ஸமாதி என்கிற யோகத்திற்கும்
வேதத்துக்கும்
பர ப்ரஹ்மத்திற்கும்
தபோ விசேஷமான ந்யாஸத்திற்கும் பெயர்

ஸ்வாத்யாயம் -என்று
வேதத்திற்கும் ஜெபத்திற்கும் பெயர்

வாக் என்று
வியாகரணம் சிஷை சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறு அங்கங்களும்
வித்யா சாமான்யத்திற்கும்
அந்த வந்த சமயத்துக்கு வேண்டும் அர்த்தங்களை போதிக்க வல்ல சப்தத்துக்கும்
ஸரஸ்வதிக்கும் பெயர்

முனி என்று
மனனம்-அதாவது த்யானம் பண்ணுகிறவர்களுக்குப் பெயர்

நார என்று
ப்ரஹ்மத்தையும்
அஞ்ஞானத்தையும் சொல்லும்

ஆக
தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம் நாரதம் — முனி புங்கவம்-என்கிற பதங்களினால்
ஆச்சார்யன்
கர்மயோக ஞானயோக பக்தி யோகங்களிலும் ப்ரபத்தியிலும் ஊற்றம் யுடையவனாய்
வேத வேதாங்களையும் அங்கங்களையும் நியாய மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ரங்களையும் சம்ஸயம் விபர்யயம் அற உணர்ந்தவனாய்
அனவ்ரத ஜெப பரனாய்
ஸிஷ்யனுடைய சம்சயம் அறும் படி உபதேசிக்க வல்லனாய்
ப்ரஹ்ம வித் அக்ரேரராய்
அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்க வல்லனாய்
ஜிதேந்த்ரியனாய்
ஸத் குல ப்ரஸூதனாய்
ஸ்ரவண மனன நிதித்யாஸன தத் பரனாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறது –

——–

சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம்

1) த‌ப‌ஸ்வீ: – என்ற‌தினால் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌த்தை அறிய‌ ஆவ‌ல்கொண்டவ‌ரென்ப‌தும்,
ப‌ல‌ விர‌த‌ங்க‌ளை அனுஷ்டித்த‌வ‌ரென்ப‌தும், ஶ‌ம‌த‌மாதி ஸ‌ம்ப‌ந்த‌ங்க‌ளை அடைந்த‌வ‌ரென்ப‌தும்,
ஜீவ‌காருண்ய‌முடைய‌வ‌ரென்ப‌தும், க‌ள‌ங்க‌ம‌ற்ற‌ இருத‌ய‌முடைய‌வ‌ரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

“உற்ற‌நோய் நோன்ற‌லுயிர்க்குறுக‌ண் செய்யாமை
ய‌ற்றே த‌வ‌த்திற்குரு” (திருக்குற‌ள்)

2) ப‌ரிபப்ர‌ச்ச‌ – என்ற‌தினால் விதிவ‌துப‌ஸ‌ந்ந‌: என்ப‌து பொருள். அதாவ‌து,
உப‌தேச‌ம் பெற்றுக் கொள்ள‌, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதி ப்ர‌கார‌ம் கேட்க‌வேண்டுமென்ப‌து

தத்வித்தி ப்ர‌ணிபாதேந‌ ப‌ரிப்ர‌ஶ்நேந‌ ஸேவ‌யா|
உப‌தேக்ஷ்ய‌ந்தி தே ஜ்ஞான‌ம் ஜ்ஞாநிந‌ஸ் தத்வ‌த‌ர்ஶிந‌: ||

“அந்த‌ ஆத்ம‌ ஜ்ஞான‌த்தை, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதிப்ர‌கார‌மான‌ கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ள‌க் க‌ட‌வாய். தத்வ‌ம‌றிந்த‌ ப‌ண்டித‌ர்க‌ள் உன‌க்கு ஜ்ஞான‌த்தை போதிப்பார்க‌ள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த‌ ஸ்ரீகிருஷ்ண‌ ப‌க‌வானுடைய‌ வ‌ச‌ன‌ம் இங்கு க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து.

ஆக‌வே, த‌ப‌ஸ்வீ, ப‌ரிப்ர‌ச்ச‌ என்ற‌ ப‌த‌ங்க‌ளினால் சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஸ‌த்புத்திஸ் ஸாது ஸேவீ ஸ‌முசித‌ ச‌ரித‌ஸ் தத்வ‌ போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ் த்ய‌க்த‌மாந‌: ப்ர‌ணி ப‌த‌ந‌ ப‌ர‌: ப்ர‌ஶ்ந‌ கால‌ ப்ர‌தீக்ஷ‌:||
ஶாந்தோ தாந்தோ ந‌ஸூயுஸ் ஸ‌ர‌ண‌முப‌க‌த‌ஸ் ஶாஸ்த்ர‌ விஶ்வாஸ‌ஶாலி|
ஶிஷ்ய‌:ப்ராப்த‌: ப‌ரீக்ஷாங் க்ருத‌வி த‌பிம‌த‌ம் தத்வ‌த‌ஸ் ஸிக்ஷ‌ணீய‌:

“ந‌ற்புத்தியுட‌ன் ஸாது ஸேவை உடைய‌வ‌னாகி, ந‌ன்ன‌ட‌த்தை உடைய‌வ‌னும், உண்மை ஞான‌த்தை அறிவ‌தில்
அபிலாஷை உடைய‌வ‌னும், ப‌ணிவிடைக்கார‌னும், மானாவ‌மான‌ மென்ப‌த‌ற்ற‌வ‌னும், ப்ர‌ஶ்ந‌ கால‌த்தை எதிர்பார்ப்ப‌வ‌னும்,
சாந்த‌னும், அஸூயை இல்லாத‌வ‌னும், ச‌ர‌ணாக‌தி ய‌டைந்த‌வ‌னும், சாஸ்திர‌ விஶ்வாச‌முடைய‌வ‌னுமே
சிஷ்ய‌னாக‌ அங்கீக‌ரிக்க‌த் த‌குந்த‌வ‌ன்” என்ப‌து நோக்க‌த் த‌க்க‌து.

தபஸ்வீ-என்று சிஷ்ய லக்ஷணம் சொல்கிறது
அதாவது
பரமாத்ம ஞான சாதனமான உயர்ந்த தபஸ்ஸையும்
வேதத்தில் கர்ம காண்டங்களை பரிசீலித்து ஸ்வர்க்காதி ஷூத்ர பலன்களில் வைராக்யம் யுடையவனாய்
மோக்ஷத்தில் அபிருசி யுடையவனாய்
ஜிதேந்த்ரியனாய்
சாந்தனாய் –இருக்க வேண்டும் என்று சொல்கிறது
இதனால் ஆச்சார்யாத் தைவ வித்யா விதி தாஸாதிஷ்டம் ப்ரபாத் –என்று
சதாச்சார்யன் இடத்தில் நின்றும் நியம பூர்வகமாகக் கற்ற வித்யையே மோக்ஷ உபயோகியாம் என்னுமது வெளியிடப்பட்டது-
ஆச்சார்யன் உபதேசம் அவரது ஆச்சார்யருக்கு ப்ரீதிக்கு உறுப்பாக என்று மேல் மேல் ஸ்ரீ லஷ்மீ நாதன் பர்யந்தம் போகுமே

வால்மீகி ப‌க‌வான் ப்ருகு வ‌ம்ச‌த்தில் அவ‌த‌ரித்த‌வ‌ர். இவ‌ர் (வ‌ல்மீக‌ம் = புற்று) புற்றிலிருந்து வெளி வ‌ந்ததினால்
வால்மீகி என்று பெய‌ர். இவ‌ர்க்கு “ப்ராசேத‌ஸ‌ர்” (அதாவ‌து வ‌ருண‌னுடைய‌ புத்திரர்) என்னும் பெய‌ருண்டு.

இவர் ஓர் இடத்தில் சரியாமல் உடகார்ந்து மெய் மறந்து தபஸ்ஸு பண்ணிக் கொண்டு இருக்கையில் இவர் மேல் புற்று மூடிப் போய் விட்டது
வருண தேவன் மழை பொழிந்து அப் புற்றைக் கரைத்து விட அங்கு நின்றும் புறப்பட்டார்
ஆகவே வால்மீகி புற்றில் நின்றும் வெளிப்பட வருணன் காரணமானதால் ப்ராசேதனர் -வருண புத்ரன் என்றும் செல்லப்படுகிறார்

நாரதோ அஹம் மந ப்ராப்த -த்வத் தர்சன குதூஹலாத் பிரபவோ பகவத் பக்தா மாத்ருஸாம் ஸததம் த்விஜ
நாரதர் என்று சொல்லப்படும் அடியேன் உம்மைக் காணும் ஆசையினால் வந்தடைந்தேன்
ப்ராஹ்மண உத்தம -என்னைப்போல் உள்ளவர்களுக்கு பகவத் பக்தர்கள் எப்பொழுதும் பிரபுக்கள்

தும்புரு நாரதர் புகுந்தனர்

பகவத் பாகவத ஸந்தர்சன ப்ரணாம ஸல்லாபமே தபஸ்

தத் வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா

தபஸ்வாத்யாய நிரதம் –என்று காயிக ஸூத்தியையும்
வாக்விதாம் வரம் என்று வாக் ஸூத்தியையும்
முனி புங்கவம் என்று மனஸ் ஸூத்தியையும் சொல்லிற்று

——–————————————————————————————

கோऽன்வஸ்மின் ஸாம்ப்ரதம் லோகே குணவான் கஶ்ச வீர்யவான் |
தர்மஜ்ஞஶ்ச க்ருதஜ்ஞஶ்ச ஸத்ய வாக்யோ த்ருட வ்ரத꞉ || 2 ||

கோநு –ஹேம அரவிந்தம் போல் ஆஸ்ரய வைலக்ஷண்யத்தினால் நிஸ் ஸமாப்யதிகையைச் சொல்வதற்காக பிரதமம் தர்மி நிர்தேசம் செய்கிறார்
அஸ்மின் -இந்த லோகத்தில் -இத்தால் பரமபத நிலையனில் வியாவ்ருத்தி

அஸ்மின் லோகே – இந்த உலகத்தில்
சாம்ப்ரதம் லோகே – தற்காலத்தில்
தர்மக்ஞஸ்ச’ – தர்மங்களை அறிந்தவர்.
‘க்ருதக்ஞஸ்ச’ – செய்த நன்றியைப் பாராட்டுபவர்.
ஸத்யவாக்ய:’ – பொய்யே பேசாதவர். எப்பொழுதும் மனோ, வாக், காயத்துனால உண்மையே பேசுபவர்.

ஓ நாரத பகவானே லோகாந்தரத்தில் ஸ்ரீ மன் நாராயணனும் காலாந்தரத்தில் நரஸிம்ஹாதிகளும்
நான் இனிக் கேட்கப் போகிற குணங்களை உடையவர்கள் உண்டு என்பது அறிவேன்
இவ் வுலகில் இக் காலத்தில் இவ் விதமான புருஷன் யாராவது உண்டோ -அதை அறிந்து சொல்லும்
அதாவது ஸுசீல்யமுடைய புருஷன் யார் -ஸுசீல்யமாவது உயர்ந்தவன் தன் உயர்வை மதித்து இறுமாறாதே தாழ்ந்தவருடன் அடர்ந்து புணருகையாவது
வீர்யத்தை யுடையவன் யார் -வீர்யமாவது -தான் வருத்தம் அற்றவனாய் மற்ற ஒருவனை வருத்தமுறச் செய்தலாம்
வருந்துகைக்குக் காரணங்கள் உண்டாயினும் வருந்தாது ஒழிகையாகவுமாம்
அவஸ்யம் செய்யத்தக்க தர்மத்தை அறிந்தவன் யார் -தர்மமாவது பிதாவின் சொல் வழி நடக்கை –
சரணம் அடைந்தவனை ரஷிக்கை முதலானவை
செய்யத் தகாத அதர்மங்களை அறிந்தவன் யார் –அதர்மமாவது ஸாஸ்த்ரத்தில் செய்யத் தகாது என்று நிஷேதித்த ஸூரா பானம் அஹம்பாவ மனம் முதலானவை
சிறிது உபகாரம் செய்யினும் அதை எப்போதும் மாறவாமல் பெரியதாக நினைப்பவன் யார்
ஒருவன் அபகாரம் செய்தால் அதை ஒருக்காலும் நினையாமல் மறந்து விடுகிறவன் யார்
ஸங்கல்பித்ததைத் தவறாமல் நடத்த வல்லவன் யார்-ப்ரதிஜ்ஞாதமான ஆர்த்த ரக்ஷணத்தை ஆபத்திலும் விடாத ஸங்கல்பத்தை யுடையவன்

————–

சாரித்ரேண ச கோ யுக்த꞉ ஸர்வ பூதேஷு கோ ஹித꞉ |
வித்வான் க꞉ கஸ் ஸமர்தஶ்ச கஶ்சைக ப்ரிய தர்ஶன꞉ || 3 ||

தங்கள் பெரியோர்கள் ஆசரித்த குல ஆசாரத்தை ஒரு வகையிலும் விடாமல் ஆசரிப்பவன் யார்
ஸத்ரு மித்ர பேதம் இன்றி ப்ராணி மாத்ரத்துக்கு நன்மை செய்கிறவன் யார்
ஸகல ஸாஸ்த்ரங்களையும் அறிந்தவன் யார்
நினைத்த காரியத்தை முடிக்க வல்லமை உள்ளவன் யார்
எல்லோருக்கும் எப்போதும் பார்க்கப் பார்க்க ஆனந்த ஜநகனாய் இருப்பவன் யார்

சாரித்ரேண ச கோ யுக்த-தொடங்கி ஆத்ம குண பரமான ப்ரஸ்னம்
மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் –ஸ்ரீ ராம ஸித்தாந்தம் அன்றோ –
ஸர்வோத்தரமாய் ஸத்துக்களுக்கு அபிமதமாய் இருக்கும் அன்றோ –

———-

ஆத்மவான் கோ ஜித க்ரோதோ த்யுதிமான் கோऽனஸூயக꞉ |
கஸ்ய பிப்யதி தேவாஶ்ச ஜாதரோஷஸ்ய ஸம்யுகே || 4 ||

சலியாத தைர்யம் உடையவன் யார்
கோபத்தை அடக்கியவன் யார்
ஸகல பிராணிகளும் ஆவலுற்றுப் பார்க்கத் தகுந்த அழகுடையவன் யார்
அஸூயை இல்லாதவன் யார் -அஸூயை யாவது பிறர் இடத்தில் இல்லாத குற்றங்களை ஏறிட்டுச் சொல்லுதல்
போர்க்களத்தில் எவனுக்கு கோபமுற்றால் தேவர்களும் அசுரர்களும் பயப்படுவார்கள்
அதாவது மாற்றார் மேல் கோபமுற்றால் அன்பரும் அஞ்சும்படியாகப் பெரும் கோபம் யுடையவன் யார்
தன்னடியார் திறத்தில் ஒருவன் அபராதம் செய்தால் அப்போது அவனை வென்று அடியார்களைக் காப்பாற்றுவதற்காக
தனக்கு ஸ்வ பாவம் இல்லாத கோபத்தை ஏறிட்டுக் கொள்பவன் யார் என்பது தாத்பர்யம்

——————-

ஏததிச்சாம் யஹம் ஶ்ரோதும் பரம் கௌதூஹலம் ஹி மே |
மஹர்ஷே த்வம் ஸமர்தோऽஸி ஜ்ஞாதுமேவம்விதம் நரம் || 5 ||

ஓ மஹ ரிஷியே நீர் எல்லாம் அறிந்தவர் -ஆகையால் இவ்விதமான புருஷனை அறிந்து சொல்ல உமக்கு சாமர்த்தியம் உண்டு
இக் குணங்கள் ஓர் இடத்தில் சேர்ந்து இருப்பது அரிதாகையாலே இவை எல்லாவற்றையும் உடையவன் ஒருவன்
உளன் என்று கேட்பதில் எனக்கு மிகவும் உத்ஸாஹமாய் இருக்கிறது
இது வரையில் என்னுடைய இக் கேள்விக்குத் தக்க உத்தரம் சொல்ல வல்லவர் ஒருவரும் அகப்படவில்லை
இப்போது உம்மைக் கண்டு உம்மிடத்தில் கேட்க வேண்டும் என்று ஆவலுற்றவனாக இருக்கின்றேன்
இதை எனக்கு தெரிய உரைக்க வேண்டும்
இதனால் வேதார்த்தங்களை ஒரு ஆச்சார்யர் இடம் கேட்டே அறிய வேண்டும் என்பது தெளிவாகிறது

மஹர்ஷே த்வம்–அலௌகிகார்த்த த்ருஷ்டாக்கள் நீர் -மஹ ரிஷியானபடியால் எங்களைக் காட்டிலும்
வேதாந்த ரஹஸ்ய ஞானம் உடையவர் அன்றோ நீர்
ஆகையால் இப்படிப்பட்ட குணங்களை யுடைய பரம புருஷனைச் சொல்ல வேண்டும் என்கிறாள்

—————-

ஶ்ருத்வா சைதத் த்ரிலோகஜ்ஞோ வால்மீகேர்னாரதோ வச꞉ |
ஶ்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்ய மப்ரவீத் || 6 ||

ச்ருத்வா ஏதத் வால்மீகேர் வச:’ – இந்த வால்மீகியுடைய வார்தையைக் கேட்டு,
‘த்ரிலோகக்ஞ: நாரத:’ – மூவுலகையும் அறிந்த, எல்லாம் அறிந்த நாரத பகவான் சொல்ல
ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத்’ – அவரும் ரொம்ப சந்தோஷமா சொல்ல ஆரம்பிக்கிறார்.

ஸமஸ்த லோகங்களிலும் உள்ள ஸகல பிராணிகளுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறிந்த நாரத பகவான்
வால்மீகி மொழிந்த இவ் வசனத்தைக் கேட்டும் தம்முடைய புத்தியால் ஊஹித்தும்
இவர் மனதில் உள்ள அபிப்ராயங்களைத் தெரிந்து கொண்டு இம்மஹா அர்த்தத்தைத் தாம் சொல்லக்
கேட்க்கைக்கு அதிகாரிகள் அகப்பட்டாரே என்று சந்தோஷம் அடைந்தவராய்
ஓ வால்மீகி மஹ ரிஷியே சொல்லுகிறேன் கேளும் என்று தம் மொழியில் அவர் மனதை இசையச் செய்து சொல்லத் தொடங்கினார்

—————-

பஹவோ துர்லபாஶ்சைவ யே த்வயா கீர்திதா குணா꞉ |
முனே வக்ஷ்யாம் யஹம் புத்த்வா தைர்யுக்த꞉ ஶ்ரூயதாம் நர꞉ || 7 ||

ஓ வால்மீகி மஹ ரிஷியே நீர் கேட்ட இக் குணங்கள் ஒவ்வொன்றும் அநேக குணங்களை விளைக்கத் தக்கவை
இவை ஸாதாரண ஜீவர்களிடம் சேர மாட்டா
நான் இப்போது ஸ்ரீ ராம குணங்களை அனுபவித்துக் கொண்டு பரவசனாய் இருக்கிறேன்
சற்று நிதானியும் -இக் குணங்களுடைய புருஷனை யோசித்து அறிந்து சொல்கிறேன்

பஹவோ -ப்ரஸ்னம் பண்ணப்பட்ட குணங்கள் 16 ஆக இருந்தாலும் ஒவ்வொன்றையும் தனித்தனியே
விஸ்தரித்துப் பார்த்தால் அநேக குண ராசீ கரணமாய் இருக்குமே
துர்லபாஶ்–ராமனை விட்டு பர வாஸூதேவன் இடமும் அவதாராந்தரங்களிலும் கான முடியாதவை அன்றோ
வாயினால் சொல்லவும் அரிது என்னவுமாம்
இப்படி ப்ரஸ்னம் வேறே ஒருவராலும் செய்ய முடியாதே என்றுமாம்
முனே -நீர் மனன சீலர் ப்ரேம சாலீ யாகையாலே இவ்வாறு ப்ரஸ்னம் பண்ணினீர்

இவன் குணம் ப்ரஸ்னம் விலக்ஷண பிரேமசாலிகள் பண்ணும் பகவத் குண கீர்த்தனங்கள் போல் போக்யமாக
செவிக்கு இனிய செஞ்சொல்லாய்-உருகுமால் நெஞ்சம் என்னும்படி இருப்பதால் கீர்த்திதா -என்கிறான்

முனே வக்ஷ்யாம் யஹம் புத்த்வா–நான் ஆனவாறே சொல்கிறேன்
வேரா விதிர் விதிரா மெய் சிலிரா –மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப –
அந்நிய பரனான நான் தெளிந்து ப்ரக்ருதிஸ்தனனான வாறே சொல்கிறேன் என்கிறான்

————-

இக்ஷ்வாகு வம்ஶ ப்ரபவோ ராமோ நாம ஜனை꞉ ஶ்ருத꞉ |
நியதாத்மா மஹா வீர்யோ த்யுதிமான் த்ருதிமான் வஶீ || 8 ||

இக்ஷ்வாகு வம்ஸ பிரபாவ:’ – இக்ஷ்வாகு வம்சத்தில ஒளியோடு விளங்குபவன்
த்யுதிமான்’ – ஒளி மிகுந்தவன்–தேஜஸோட இருப்பான்.
‘த்ருதிமாந்’ – தைர்யசாலி.
‘வசீ’ – இந்திரியங்களைத் தன் வசத்தில் வைத்திருப்பவன்.

இஷ்வாகு வம்சத்தில் ஸ்ரீ ராமர் என்று ப்ரஸித்தராய் ஒருவர் அவதரித்து இருக்கிறார் -நீரும் அவரை இதுவரை கேட்டு இருப்பீர்
அவருடைய பெரும் தொழிலைக் கண்டு ஜனங்கள் அவரை பராத்பரரான ஸ்ரீ மன் நாராயணன் என்று நிச்சயிக்கிறார்கள்
அவர் கர்மாதீனமாய் அதி ஹேயமான ஜனன மரணாதி விகாரங்கள் அற்றவர்
பெரிய சாமர்த்தியம் யுடையவர் -ஸ்வயம் ப்ரகாஸமானவர்
உயர்ந்த ஆனந்தத்தை யுடையவர் -ஸகல ஜகத்தையும் தனது வசமாக்கிக் கொண்டவர்

பிதரம் ரோச யாமாஸ –சக்ரவர்த்தியைப் பிதாவாகக் கொள்ள ஆசைப்பட்டான் அன்றோ
இஷ்வாகூணாம் மியம் பூமி ஸ ஸைல வன காநந–என்றார் அன்றோ பெருமாள்
இக் குணங்கள் எல்லாம் இக் குடிப் பிறப்பாலே வந்தது போலே காணும் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
தம்முடைய தவத்தின் பலனாக ஸ்ரீ ரெங்கநாதனைப் பெற்ற மஹா புருஷன் அன்றோ
ப்ரபவோ –உத்பத்தி ஸ்தானம் –
ராமோ நாம ஜனை꞉ ஶ்ருத꞉ |–குணத்து அளவும் செல்ல வேண்டாம் ராமன் என்கிற திரு நாமமே செவிக்கு இனிய செஞ்சொல்லாய் ஸர்வ ஜனங்களுக்கும் இருக்கும் அன்றோ –
ஸ்ரோதவ்யம் ஏதன் நியமேன ஸத்பிர் –மஹானுபாவம் சரிதம் –சத்துக்களால் நியமத்துடன் ஸ்ரீ ராமாயணம் கேட்கத்தக்கது என்றாரே வால்மீகியும்
ராம ராம -ரமயதி இதி ராம –ரமந்தே யோகிந அஸ்மின் இதி ராம
ராமம் ஸத்ய பராக்ரமம் -அவதார வை லக்ஷண்யம்
ஜனைஸ் ஸ்ருத -லௌகிக ப்ரஸித்தி
நியதாத்மா -அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டன்
மஹா வீர்ய -வீரியத்துக்கு மஹத்வமாவது தோஷ ரஹிதம் -ஸ்வ பாவிகம் -எல்லையற்ற ஒப்பு இல்லாத வீர்யம்

——

புத்திமான் நீதிமான் வாக்மீ ஸ்ரீ மான் ஸத்ரு நிபர்ஹண
விபுலாம் ஸோ மஹா பாஹோ கம்பு க்ரீவோ மஹா ஹநு 
꞉ || 9 ||

வாக்மீ’ – நல்ல வாக்கு. பேச்சு ‘மதுராபாஷி
விபுலாம்ஸ:’ – பரந்த தோள்கள்.
கம்புக்ரீவ:’ – கழுத்து சங்கு போல இருக்கும்.
‘மஹாஹநு:’ – ‘ஹநுமான்’னு கூட சொல்லுவோம் இல்லையா ‘ஹநு’ன்னா தாடை. பெரிய தாடை.

எல்லாம் அறிந்தவர் -அந்தவந்த ஜாதிகளுக்கு உள்ள நடவடிக்கைகளை புரளாமல் அப்படியே நடப்பிக்க வல்லவர்
சிறந்த வாக்கை யுடையவர் -அகண்ட ஐஸ்வர்யம் யுடையவர்
அதற்கு நேரிடும் விரோதியைப் போக்க வல்லவர் -பருத்து உருண்ட திருக் கைகளை யுடையவர்
உயர்ந்த திருத் தோள்களை யுடையவர் -சங்கு போல் மூன்று ரேகைகளை யுடைய கண்டம் யுடையவர்
நீண்டு பருத்த கபோலங்களை யுடையவர் –

————–

மஹோரஸ்கோ மஹேஷ்வாஸோ கூடஜத்ருரரிந்தம꞉ |
ஆஜானு பாஹு꞉ ஸுஶிரா꞉ ஸுல லாட꞉ ஸுவிக்ரம꞉ || 10 |

‘மஹோரஸ்க:’ – ‘விபுலாம்ஸ:’ன்னா பரந்த தோள்கள். ‘மஹோரஸ்க:’ பெரிய மார்பு.
‘மஹேஷ்வாஸ:’ – பெரிய வில்லை வெச்சிண்டிருக்கறவன்
கூடஜத்ரு:’ – நல்ல சதைப்பற்றுள்ள collar bones தோள்களெல்லாம் இருக்கிறவர்
அரிந்தம:’ – எதிரிகளை தபிக்கப் பண்ணுபவர்.
ஆஜாநுபாஹு:’ – ‘ஜாநு’ன்னா முட்டி. முட்டி வரைக்கும் நீண்ட கைகள்.
‘ஸு சிரா:’ – அழகான தலை.
‘ஸுலலாட:’ – பெரிய பரந்த நெற்றி.
‘ஸுவிக்ரம:’ – மிகுந்த பராக்ரமம் கொண்டவர்.

பரந்த மார்பை யுடையவர் -பெரும் வில்லைப் பிடிக்க வல்ல விக்ரஹத்தை யுடையவர்
மறைந்த கழுத்து எலும்புகளை யுடையவர் -சத்ருக்களை போக்குபவர்
முழந்தாள் அளவும் நீண்ட கரங்களை யுடையவர் -பருத்து வட்டமாயுள்ள சிரஸ்ஸை யுடையவர்
அர்த்த சந்திரன் போன்ற நெற்றியை யுடையவர் -அழகிய நடையை யுடையவர்

————–

ஸம꞉ ஸமவிபக்தாங்க꞉ ஸ்னிக்த வர்ண꞉ ப்ரதாபவான் |
பீனவக்ஷா விஶாலாக்ஷோ லக்ஷ்மீவான் ஶுப லக்ஷண꞉ || 11 ||

ஸம:’ரொம்ப குள்ளமும் கிடையாது, ரொம்ப உயரமும் கிடையாது, சமமான உயரம்!
‘ஸமவிப4க்தாங்க3:’ – ! சமமா ‘விப4க்தம்’ – சமமா பிரிக்கப்பட்ட அங்கங்கள்.
‘ஸ்நிக்3த4வர்ண:’ – ரொம்ப குளுமையான ஒரு வர்ணம். கருப்பு அப்படீன்னாக் கூட, ஒரு attractiveவான ஒரு கருப்பு!
‘பிரதாபவாந்’ – ரொம்ப powerful, ரொம்ப சக்திமான்!
‘பீநவக்ஷா:’ – அழகான மார்பு. நல்ல பரந்து விரிந்த, நன்னா அமைந்த ஒரு மார்பு ‘வக்ஷஸ்’.
‘விஶாலாக்ஷ:’ – விசாலமான கண்கள், தாமரை போன்ற கண்கள். பெரிய கண்.
‘லக்ஷ்மீவாந்’ – அவருடைய உறுப்புகள் எல்லாமே மங்களகரமா இருந்தது! .
‘ஶுப4லக்ஷண:’ – லக்ஷ்மீகரமா இருந்ததோட, இந்த ஸாமுத்ரிகா லக்ஷண -சக்கரவர்த்திக்குரிய எல்லா லக்ஷணங்களும் இருந்தது!

அதிக நீட்சியும் அதிக தாழ்ச்சியும் அற்று சமானமான திரு மேனியை யுடையவர்
குறுமை நெடுமை அற்று ஒன்றோடு ஓன்று சேராமல் பிரிந்து காண்கிற அவயவங்களை யுடையவர்
காண ஆவலுறுத்தும் நிறமுடையவர் -உஜ்வலமான விக்ரஹ காந்தியை யுடையவர் –
பருத்த மார்பை யுடையவர் -பரந்த நேத்ரங்களை யுடையவர்
அவயவ சவுந்தர்யம் யுடையவர் -மற்றும் அநேக லக்ஷணங்களை யுடையவர்

————–

தர்மஜ்ஞ꞉ ஸத்ய ஸந்தஶ்ச ப்ரஜானாம் ச ஹிதே ரத꞉ |
யஶஸ்வீ ஜ்ஞான ஸம்பன்ன꞉ ஶுசிர்வஶ்ய꞉ ஸமாதிமான் || 12 ||

தர்மம் அறிந்தவர் -சொன்ன சொல் தவறாதவர் -பிராணிகளுக்கு நன்மை செய்ய ஆவல் உள்ளவர்
சிறந்த கீர்த்தியை யுடையவர் -ஊஹா போஹம் முதலிய விசித்திர ஞான பரி பூர்ணர்
பரி ஸூத்தர் -அடியாருக்கு வசப்பட்டவர் -அவருடைய ஷேமத்தைச் சிந்தை செய்தவர்

‘த4ர்மஜ்ஞ:’ – எல்லா தர்மங்களும் அறிந்தவர்!
‘ஸத்ய ஸந்த4ஶ்ச’ – சத்தியத்தை காப்பாற்றுபவர்!
‘ப்ரஜாநாம் ச ஹிதே ரத:’ – ‘ரஞ்சயதே இதி ராஜ’ –
யஶஸ்வீ ‘ – ரொம்ப புகழ் படைத்தவர்
ஜ்ஞான ஸம்பந்ந:’ – ஞானம் படைத்தவன்.
‘ஶுசி:’ – தூய்மையானவன்.
‘வஶ்ய:’-குணத்துனால வசியம் பண்ணி-அவன் எல்லாருக்கும் வசப்பட்டு-
‘ஸமாதி4மாந்’-தீர்க்க யோஜனை பண்றது

கௌசல்யா தேவியும் காட்டுக்கு கிளம்பும்போது,
யம் பாலயஸி தர்மம் த்வம் த்ருத்யா ச நியமேன ச |
ஸவை ராகவ ஸார்துல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||

—————

ப்ரஜாபதி ஸமஶ் ஶ்ரீமான் தாதா ரிபுனிஷூதன꞉ |
ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய தர்மஸ்ய பரி ரக்ஷிதா || 13 ||

ப்ரஜாபதி ஸம: ஸ்ரீமாந்’ – மங்களங்களை கொண்டவர்களுக்குள் பிரஜாபதியைப் போல இருப்பவர்!
‘தா4தா’ – எல்லா உலகத்தையும் எல்லாருக்கும் கொடுப்பவர், எல்லாரையும் காப்பாற்றுபவர்.
‘ரிபுநிஷூத3ந:’ – எதிரிகளை கண்டிப்பவர், தண்டிப்பவர்.
‘ரக்ஷிதா ஜீவலோகஸ்ய’ – உயிர்குலங்களை எல்லாம் காப்பாற்றுபவர்.
‘த4ர்மஸ்ய பரிரக்ஷிதா

ப்ரஹ்மாவைப் போன்றவர் -அதாவது ப்ரஹ்மாவைப் போலே த்ரி மூர்த்திகளிலே ஒருவராக திரு அவதரித்தவர்
ஸ்ரீ யபதி -அடியாருக்குப் போஷகர் -விரோதியைப் போக்குபவர் –
சத்ரு மித்ரர் பேதமற எல்லாரையும் ரக்ஷிப்பவர் -அனைவரையும் அவர் அவர் தர்மங்களில் திருத்துபவர் –

——————

ரக்ஷிதா ஸ்வஸ்ய தர்மஸ்ய ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா |
வேத வேதாங்க தத்த்வஜ்ஞோ தனுர் வேதே ச நிஷ்டித꞉ || 14 ||

‘ரக்ஷிதா ஸ்வஸ்ய த4ர்மஸ்ய’ – தன்னுடைய தர்மங்களை எல்லாம் காப்பாத்தறார்.
‘ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா’ – தன்னுடைய ஜனங்களையும் காப்பாற்றுபவர்.
“அபராத3 சஹஸ்ர பா4ஜனம் பதிதம் பீ4ம ப4வார்ணவோத4ரே
அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு”
‘அபராத3 சஹஸ்ர பா4ஜனம்’ – நூத்துக் கணக்கான, ஆயிரக் கணக்கான தப்புகள் பண்ணி,
‘பதிதம் பீ4ம ப4வார்ணவோத4ரே’ – இந்த பயங்கரமான பவக் கடல்ல விழுந்திருக்கேன்!
‘அக3திம்‘ – எனக்கு வேற கதி தெரியலை!
‘சரணாக3தம்’ – உன்னை வந்து சரணாகதி பண்றேன்!
‘அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு’ – கிருபையினால உன்னை சேர்ந்தவனா என்னை நினைச்சுக்கோன்னு சொல்றவாளை,
‘ஸ்வஜந:’ – தன் ஜனங்களா நினைச்சு எல்லா விதத்திலேயும் காப்பாற்றுபவர்! – ‘ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா’
‘வேத3வேதா3ங்கதத்த்வஜ்ஞ:’ – வேதம், வேதாந்தங்கள் -அதன் உட்பொருளையும் உணர்ந்தவர்!
‘த4நுர்வேதே3 ச நிஷ்டித:’ – ‘தான் க்ஷத்ரியன்’ங்கிறதுனால அந்த தனுர் வேதத்துல ரொம்ப உறுதியோட இருக்கார்.

தமக்குரிய தர்மங்களை விடாமல் அனுஷ்டிப்பவர் -தம்முடைய ஞாதிகளையும் அஸூயை இன்றி ரக்ஷிப்பவர்
ருக் யஜுஸ் ஸாமம் அதர்வணம் என்கிற நான்கு வேதங்களையும் வியாகரணம் சிஷை சந்தஸ்ஸூ நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்கிற ஆறு
அங்கங்களையும் அறிந்தவர் தனுர் வேதத்தில் பொருந்தி இருப்பவர்

தானும் தர்மத்தை அனுஷ்ட்டித்து பிரர்களையும் தர்மங்களை அனுஷ்ட்டிக்கச் செய்து தர்மங்களை ரக்ஷிப்பவன்
தர்ம ஸம்ஸ்தானம் பண்ணவே திருவவதாரம்
ரக்ஷிதா ஸ்வஸ்ய தர்மஸ்யஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதிச யாசதே அபாயம் ஸர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம -என்றது அன்றோ ஸ்வ தர்மம்
இவற்றால் மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல்லரக்கர் உயிர் உண்டமை -யும்
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் உயிராய்த் தோன்றி விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் அன்றோ
சீதைக்காக சின விடையொன் சிலை இறுத்து
திருமணம் புரிந்து மழு வாள் ஏந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு மெல்லியல் தோள் நயந்த
இவ்வாறு பால காண்ட ஸாரத்தைச் சொல்லிற்று ஆயிற்று-

————

ஸர்வ ஶாஸ்த்ரார்த தத்த்வஜ்ஞோ ஸ்ம்ருதிமான் ப்ரதிபானவான் |
ஸர்வ லோக ப்ரிய꞉ ஸாதுரதீனாத்மா விசக்ஷண꞉ || 15 ||

‘ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ:’ – சாஸ்திரங்களுடைய உண்மை பொருளை, தர்ம சூக்ஷ்மங்களை அறிந்தவர்!
‘ஸ்ம்ருதிமாந்’ – நல்ல ஞாபக சக்தி!
‘பிரதிபா4நவாந்’-சரியான நேரத்துல சரியான விஷயம் ஞாபகம்
‘ஸர்வலோகப்ரிய:’ – எல்லா உலகத்துக்கும் பிரியமானவர்!
ஸாது4-ஸாது குணங்கள் நிறைந்தவர்!

நியாய மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ரங்களுடைய உண்மையை அறிந்தவர் அறிந்தத்தை ஒன்றும் மறவாதவர்
அந்தவந்த காலங்களுக்குத் தக்க ஸம் பூர்த்தி என்னும் ஞானத்தை யுடையவர்
ஸகல பிராணிகளுக்கும் பிரியமானவர் -அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுமவர்
தீன ஸ்வ பாவம் இல்லாதவர் -வாக் சாதுர்யம் யுடையவர்

—————

ஸர்வதாபிகத꞉ ஸத்பி꞉ ஸமுத்ர இவ ஸிந்துபி꞉ |
ஆர்ய꞉ ஸர்வ ஸமஶ்சைவ ஸதைக ப்ரிய தர்ஶன꞉ || 16 ||

‘ஸர்வதா3பி4 க3த: ஸத்3பி4: ஸமுத்3ர இவ ஸிந்து4பி4:’ – சமுத்திரத்தை நோக்கி எப்படி நதிகள் போகுமோ
அந்த மாதிரி சாதுக்கள் எப்பவும் ராமர் கிட்ட வருவர்
ஆர்ய:-பிறப்புலேயும் அவரோட நடத்தைலேயும் எல்லாத்துலயுமே ராமர் noble
ஸர்வஸமஶ்சைவ’ – எல்லார் கிட்டயும் சமமா இருப்பார்
ஸதை3கப்ரியத3ர்ஶந:’ – எப்பவும் பார்க்கறத்துக்கு ப்ரியமா இருப்பார்.

வாலி – ‘ப்ரதித: ப்ரியத3ர்ஶந:’‘ரஞ்சனீயஸ்ய விக்ரமை:’ ‘ராம கமலபத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மனோகர:’.

ஆறுகள் தங்களுக்குப் போக்கற்று சமுத்ரத்தைச் சேர்வது போல் எக்காலமும் ஸஜ் ஜனங்களால் சூழப் பட்டவர் -பூஜ்யர் –
ஜாதி முதலிய பேதம் இன்றியே எல்லாராலும் அடையத் தக்கவர்
எக் காலும் பார்த்தாலும் அந்தவந்த காலங்களுக்குப் புதியவராய்த் தோற்றுமவர்

ஆர்ய -அபி கந்தவ்ய -ஸுலப்யாதி குணங்களால் பூஜிக்கத் தக்கவன் -அடையத் தக்கவன் –
எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு இருந்தாலும் பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் -என்னும்படி இருப்பவன்
ஸமுத்ர இவ ஸிந்துபி꞉-நிரதிசய தேஜிஷ்டத்வ-
இத்தால் சத்துக்களை கத்யந்தரம் இல்லாமையும்-பெருமாளுடைய ஸுலப்யமும் சொன்னவாறு ம் காட்டுகிறது

—————-

ஸ ச ஸர்வ குணோபேத꞉ கௌஸல்யானந்த வர்தன꞉ |
ஸமுத்ர இவ காம்பீர்யே தைர்யேண ஹிம வானிவ || 17 ||

ஸ ச ஸர்வகு3ணோபேத:’ – எல்லா குணங்களையும் பொருந்திய அந்த ராமன்,
‘கௌஸல்யா நந்த3வர்த4ந:’ – கௌசல்யையுடைய ஆனந்தத்தை மேலும் மேலும் வளர்ப்பவன்.
‘ஸமுத்3ர இவ கா3ம்பீ4ர்ய’ – கம்பீரத்துல சமுத்திரம் போன்றவன்-சுகதுக்கத்துனால மாற்றம் அடையாம இருக்கறதுக்கு கம்பீரம்னு பேர்.
‘தை4ர்யேண ஹிமவானிவ’ – ஹிமவானைப் போல தைர்யம்!

கௌசல்யையின் திருக் குமாரரான அவர் இப்படி ஸகல ஸத் குண ஸம் பன்னர்
ஸமுத்ரம் தன்னுள்ளே அடங்கின மணி முதலியவைகளைப் பிறருக்குத் தெரியாமல் மறைப்பது போல்
இவர் பிறர் அறியாத மநோ பாவம் உடையவர்
இமய மலை மழைக்கு அசையாமல் இருக்குமா போல் எவ்வித துன்பங்கள் நேரிடினும் சலியர்

ஸ ச கௌஸல்யானந்த வர்தன꞉ |–சகாரம் ஏவகார அர்த்தமாய் அந்நிய யோக வியச்சேதகம் -அதாவது
கௌசல்யா தேவிக்குப் புத்திரனாக அவதரித்த விஷ்ணுவே வேதாந்தங்களில் சொல்லப்பட்ட ஸமஸ்த கல்யாண குணாத்மகன்
தசரத நந்தன என்னாதது புத்ர லாபம் இவளுக்கே –
கௌசல்யா லோக ப்ரத்தாரம் ஸூஷு வேயம் மனஸ்விநீ
தைர்யேண ஹிம வானிவ–தைர்யமாவது சோகத்துக்கு காரணங்கள் இருந்தாலும் சோகியாது இருத்தல்

—————

விஷ்ணுநா ஸத்ருஶோ வீர்யே ஸோமவத் ப்ரிய தர்ஶன꞉ |
காலாக்னி ஸத்ருஶ꞉ க்ரோதே க்ஷமயா ப்ருதிவீ ஸம꞉ || 18 ||

விஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே’ – வீரத்துல விஷ்ணுவைப் போன்றவர்.
‘ஸோமவத்ப்ரிய த3ர்ஶந:’ – பாக்கறதுக்கு சந்திரனைப் போல குளுமையானவன்!
‘காலாக்3நி ஸத்3ருஶ: க்ரோதே4‘-ஆனா கோபம் வந்தா காலாக்னிப் போல கோபம்!
‘க்ஷமயா ப்ருதி2வீ ஸம:’ – பொறுமையில பூமியைப் போன்றவன்-

இவர் விஷ்ணுவின் அர்த்தாம்சம் ஆயினும் விஷ்ணுவைப் போன்ற பராக்ரமம் யுடையவர்
சந்திரனைப் போல் ஸந்தோஷ கரமானவர்
பிரளய காலத்து அக்னியைப் போன்று கோபமுடையவர்
பொறை -பொறுமையில் பூமியை ஒத்தவர்

ராமஸ் ஸஸ்த்ர ப்ருதஸ் அஹம் -ஸ்ரீகீதை

ஸோமவத் ப்ரிய தர்ஶன-த்ருஷ்ட ஏவ ஹி ந சோகம் –-கண்ட போதே சோகம் போவதுடன் சந்த்ர தர்சனம் போல் போக்யமானவன்

காலாக்னி ஸத்ருஶ–ததவஸ்தம் சமிபஸ்த லஷ்மணம் ப்ரேஷ்ய ராகவா பபூவ ஸம் ரப்ததரோ யுகாந்த இவ பாவக -பெருமாள் பிரளய கால அக்னி போல் ஆனார்

———-

தனதேன ஸமஸ்த்யாகே ஸத்யே தர்ம இவாபர꞉ |

‘த4நதே3ந ஸமஸ்த்யாகே3 ‘ – த்யாகத்துல குபேரனைப் போல.
‘ஸத்யே த4ர்ம இவாபர:’ – ஸத்யத்ல அவன் தர்ம ராஜாவைப் போல இருக்கான்.
கொடையிலே குபேரனோடு ஒத்தவர்
ஸத்ய வசனத்தில் -பேசுவதில் -தர்ம தேவதை போன்றவர்

ஸத்யே தர்ம இவாபர꞉–ஸத்ய வசனத்தில் தனக்கு ஒப்பார் மிக்கார் இல்லாத தர்ம தேவதையுடன் ஒப்பாவார்
ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஞ்ஞா –ஆஞ்ஞா ரூபமான தர்மமே யதார்த்த உக்தியில் தனக்கு உபமானமாய் இருக்கை
தர்ம சப்தம் தபஸ்ஸைச் சொல்லி –வேதஸ் தத்வம் தபோ ப்ரஹ்ம -என்றும் வேதத்தையே சொன்னவாறு
வேதோ அகில தர்ம மூலம் அன்றோ

——-

தமேவங்குண ஸம்பன்னம் ராமம் ஸத்ய பராக்ரமம் || 19 ||

‘தம் ஏவம் குண ஸம்பந்ந:’ – இப்பேற்பட்ட எல்லா குணங்களும் நிரம்பினவனான தர்ம ஜ்யேஷ்டனான ராமனை,
‘ஸத்ய பராக்ரமம்’ –வீண் போகாத பராக்கிரமம் கொண்டவன்.

ஜ்யேஷ்டம் ஶ்ரேஷ்ட குணைர் யுக்தம் ப்ரியம் தஶரத꞉ ஸுதம் |
ப்ரக்ருதீனாம் ஹிதைர் யுக்தம் ப்ரக்ருதி ப்ரிய காம்யயா || 20 ||

ஜ்யேஷ்ட2ம்’ – மூத்த பிள்ளை
‘ஶ்ரேஷ்ட2கு3ணைர்யுக்தம்’ – எல்லா ஶ்ரேஷ்ட குணங்களும் நிரம்பின ,
‘ப்ரியம்’ – தனக்கு ரொம்ப ப்ரியமான,
‘ஸுதம்’ – பிள்ளையை,
‘த3ஶரத2:’ – தசரத மஹாராஜா ,
‘ப்ரக்ருதீநாம் ஹிதைர் யுக்தம்’ – ஜனங்களுடைய ஹிதத்தில் எப்பவும் நாட்டமாக இருப்பவனுமான அந்த ராமனை ,
‘ப்ரக்ருதி ப்ரிய காம்யயா’ – அந்த ஜனங்களும் இவன் ராஜா ஆகணும்னு ரொம்ப காத்துண்டு இருக்கா! அப்பேற்பட்ட ராமனை,

யௌவ ராஜ்யேன ஸம்யோக்துமைச் சத் ப்ரீத்யா மஹீபதி꞉ |

இப்படி ஸகல குண ஸம் பன்னராய் அரசாள வல்ல சக்தியை யுடையவராய் நீதி ஸாஸ்த்ரத்தில் சொல்லிய
சிறந்த குணங்களை யுடையவராய்
தனக்குப் பிரியராய் -ஜனங்களின் நன்மைகளில் முயற்சியை யுடையவராய்
ஜ்யேஷ்ட குமாரராகிய ஸ்ரீ ராமனை சக்ரவர்த்தி மஹா ராஜன் மந்திரி புரோகிதர் முதலியவர்களுக்குப்
பிரியத்தை விளைவிக்கைக்காக இளைய வரசனாக்க இச்சயித்தார்

——-
தஸ்யாபிஷேக ஸம்பாரான் த்ருஷ்ட்வா பார்யாऽத கைகயீ || 21 ||

பூர்வம் தத்தவரா தேவீ வரமேனமயாசத |
விவாஸனம் ச ராமஸ்ய பரதஸ் யாபிஷேசனம் || 22 ||

ராமனை இளவரசில் முடி சூட்டுகைக்குச் சேர்ந்த ஸாமக் கிரியைகளை சக்ரவர்த்தி மஹா ராஜன்
இளைய மனைவியான கைகேசி பார்த்துப் பொறை அற்றவளாய் முன் சம்பாசூர யுத்தத்தில்
ராஜன் புகழ்ந்து உனக்கு வேண்டும் போது வேண்டிய இரண்டு வரங்களையும் முடி சூடக் கோடித்த
அக்காலத்தில் தசரதரைக் குறித்துக் கேட்டாள் -அதாவது
ஸ்ரீ ராமன் இம்முடியைத் தவிர்த்துக் காட்டுக்குப் போக வேண்டும்
இம்முடியை என் மகனான பரதனுக்குச் சூட்ட வேண்டும் என்று கேட்டாள்

————

ஸ ஸத்ய வசனாத் ராஜா தர்ம பாஶேன ஸம்யத꞉ |
விவாஸயாமாஸ ஸுதம் ராமம் தஶரத꞉ ப்ரியம் || 23 ||

தசரதன் தர்மமாகிய கயிற்றினால் கட்டுண்டு கைகேயிக்குச் சொன்ன தர்ம வசனம்
தவறாமைக்காகத் தனக்கு பிரியமான ஸ்ரீ ராமனைக் காட்டுக்கு அனுப்பி விட்டார்

ராஜா -ப்ரக்ருதி ரஞ்சகனாய் இருக்குமவன்

ராமோ விக்ரஹவான் தர்ம -ஸாஷாத் தர்மம் பார்க்காமல் –தர்ம பாஶேன ஸம்யத-சாதாரண தர்மம் கைக்கொண்டு -ஸங்கேத்யம் பாரி ஹாஸ்யம்

————-

ஸ ஜகாம வனம் வீர꞉ ப்ரதிஜ்ஞாமனு பாலயன் |
பிதுர் வசன நிர்தேஶாத் கைகேய்யா꞉ ப்ரிய காரணாத் || 24 ||

அந்த ஸ்ரீ ராமன் அரசாள வல்லவராயினும் கைகேயியின் ப்ரீதிக்காகத் தசரதன் இட்ட கட்டளையால்
அவர்கள் முன் தாம் காட்டுக்குப் போவதாகச் சொன்ன சொல் தவறாமல் காட்டுக்குச் சென்றார்

————–

தம் வ்ரஜந்தம் ப்ரியோ ப்ராதா லக்ஷ்மணோ ऽனுஜகாம ஹ |
ஸ்னேஹாத் வினய ஸம்பன்ன꞉ ஸுமித்ரானந்த வர்தன꞉ || 25 ||

ப்ராதரம் தயிதோ ப்ராது꞉ ஸௌப்ராத்ரமனு தர்ஶயன் |

அந்த ஸ்ரீ ராமன் காட்டுக்குப் போகும் போது அவருக்கு இளையவரான லஷ்மணன் விநயத்தோடு கூடியனவராய்
தன் தாயான ஸூ மித்ரையின் சொற்படி நடந்து அவளுக்குப் பிரியத்தை விளைத்தவராய்
ஸ்ரீ ராமனிடம் மிக்க பிரியத்தை உடையவராய் அவரை விட்டு ஒரு நொடியும் பிரிந்து
இருக்க மாட்டாதவராய் அவருடன் கூடவே காட்டுக்குச் சென்றார்

தம் வ்ரஜந்தம்-பரத்வ ஸுலப்யங்களுக்கு அனுகுணமான ஸர்வ சமாஸ்ரயணம்
அன்றிக்கே ஸித்த சாதன நிஷ்டர்கள் இளைய பெருமாளை போல் கைங்கர்யம் செய்ய வேண்டியதை ஸூ சிப்பிக்கிறது
ப்ராதா ஸ்வ மூர்த்திர் ஆத்மநா -சரீர பூதன்
விநயம் -கைங்கர்ய ரூப ஆசாரம் -சேஷத்வ ஞானம்
ஸூ மித்ர ஆனந்த வர்த்தநா -ஸ்ருஷ்டத்வம் வன வாஸாயா
ராமம் தசரதன் வித்தி மாம் வித்தி ஜநகாத்மஜம்
ந ச அஹம் அபி ராகவ
ந ச தேந விநா நித்ரம்
பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூ ஸ் நிக்த
சென்றால் குடையாம்
யேந யேந தாத்தா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி

————–
ராமஸ்ய தயிதா பார்யா நித்யம் ப்ராண ஸமாஹிதா || 26 ||

ஜனகஸ்ய குலே ஜாதா தேவ மாயேவ நிர்மிதா |
ஸர்வ லக்ஷண ஸம்பன்னா நாரீணாமுத்தமா வதூ꞉ || 27 ||

ஸீதாऽப்யனுகதா ராமம் ஶஶினம் ரோஹிணீ யதா |

ஸ்ரீ ராமனுக்குப் பிரியமான பார்யையாய் அவருக்குப் பிராணன் போன்றவளாய் ஸகலமான
உத்தம ஸ்த்ரீ லக்ஷணங்களோடே கூடினவளாய் -பெண்களில் சிறந்தவளாய்
ஜனங்களின் நன்மையில் முயன்றவளாய் பரிசுத்தமான ஜனக குலத்தில் விஷ்ணு சக்தியைப் போல்
அதி விசித்திர ரூப லாவண்யங்களை யுடையவளாய் திரு அவதரித்தவளான ஸீதா தேவியும்
சந்திரனைப் பின் தொடர்ந்த ரோஹிணியைப் போலே ஸ்ரீ ராமனைப் பின் தொடர்ந்து காட்டுக்குச் சென்றாள் –

சாதன தசையில் புருஷகாரமாகவும்
பல தசையில் பிராபியை யாகவும் கைங்கர்ய வர்த்தகையாகவும்
இருக்கும் நித்ய யோகத்தை இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்

ந ஜீவேயம் க்ஷணம் அபி —
மித்ர ஓவ்பயிகம் கர்த்தும் -ஹித பரையாயும்
ஜனகஸ்ய குலே ஜாதா–ஆசார ப்ரதான குலப்பிறப்பு
தேவ மாயேவ நிர்மிதா-மோஹிக்க நிர்மிக்கப்பட்ட விஷ்ணு மாயை போல்வாள் -விஷ்ணுவின் ஆச்சர்ய சக்தியானவள்
ஸீதா -அயோனித்வம் -பரமபதம் போல் பூர்ணை -ஆத்ம குண பூர்த்தி
ஶஶினம் ரோஹிணீ யதா-அழகு இல்லாமல் குரூபியாய் இருந்தாலும் விட மாட்டாத பாதிவிரதம் -அநஸூயை முன் ஸ்வரூப க்ருத தாஸ்யை என்றாளே
புருஷோத்தமான பெருமாளுக்கு ஆன்ரு சம்சயாதி குண பூர்த்தி போல்
இவளுக்கும் ராமஸ்ய தயிதா பார்யா-இத்யாதிஷட் குண பூர்த்தி
ஸீதாபி ராமம் அநு கதா
யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்க நிரயோ யஸ் த்வயா விநா
மன்னன் ராமன் பின் வைதேவி என்று உரைக்கும் அண்ணா நடை வணங்கு நடந்திலளே
தனு மத்யமா -ஸூ மத்யமா -மின்னின் நுண் இடை மடக்கொடி
அஸீதே க்ஷிணா
திவளும் வெண் மதி போல் திருமுகம் –குவளை யம் கண்ணி

—————–
பௌரைரனுகதோ தூரம் பித்ரா தஶரதேன ச || 28 ||

ஶ்ருங்கி பேர புரே ஸூதம் கங்கா கூலே வ்யஸர்ஜயத் |
குஹமாஸாத்ய தர்மாத்மா நிஷாதாதிபதிம் ப்ரியம் || 29 ||

தசரதரும் பட்டணத்தில் உள்ள ஜனங்களும் ஸ்ரீ ராமனைச் சிறிது தூரம் பின் தொடர்ந்து சென்றார்கள்
ஸ்ரீ ராகவன் ஸ்ருங்கி பேரம் என்கிற ஊரைக் கிட்டி அவ்வூர் அருகில் உள்ள கங்கைக் கரையில்
அது வரையில் தன்னைத் தேர் மேல் ஏற்றிக் கொண்டு வந்த ஸூமந்த்ரனையும் விட்டு விட்டார்
அந்தக் கங்கைக் கரையில் ஸ்ரீ ராகவன் வேட ஜாதிக்கு அரசனாய் தன்னிடத்தில் நேசம் உள்ளவனான குகன் என்பவனோடு நேசித்தார்

இவ்விடத்தில் தர்ம ஸப்தம் சீல பரமாகக் கடவது

————-

குஹேன ஸஹிதோ ராம꞉ லக்ஷ்மணேன ச ஸீதயா |

ஸ்ரீ ராகவன் ஸீதையோடும் லஷ்மணனோடும் பொருந்தி இருப்பது போலே நீச ஜாதியாய் அறிவற்றவனாய்
வஞ்சனை ஸ்வ பாவம் உள்ளவனா யினும் தன் பக்தன் என்று குகனை அபிமானித்து அவனுடன் பொருந்தி இருந்தார்

பக்தி யுடைக் குகன்-ராமஸ்ய ஆத்ம சஹா -இளைய பெருமாளையும் அதிசங்கை பண்ணும்படி பொங்கும் பரிவு கொண்டவன்

———–

தே வனேன வனம் கத்வா நதீஸ்தீர்த்வா பஹூதகா꞉ || 30 ||

சித்ரகூட மனுப்ராப்ய பரத்வாஜஸ்ய ஶாஸனாத் |

பிறகு சிறிது தூரம் சென்று குகனையும் விட்டுவிட்டு அம்மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு
காட்டு வழியிலே அதிக ஜலமுள்ள அநேக ஆறுகளைத் தாண்டிச் சென்று பரத்வாஜ மஹா முனிவருடைய
நியமனப்படியே சித்ர கூடம் என்னும் மலையை அடைந்தார்கள் –

————
ரம்யமா வஸதம் க்ருத்வா ரமமாணா வனே த்ரய꞉ || 31 ||

தேவ கந்தர்வ ஸங்காஶாஸ் தத்ர தே ந்யவஸன் ஸுகம் |

தேவர்களோடும் கந்தர்வர்களோடும் ஒத்த அம்மூவரும் அந்தச் சித்ர கூட மலையில் அழகிய
ஓர் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு ப்ரீதியோடு கூடினவர்களாய் அங்கு ஸூ கமாக வாஸம் செய்தார்கள்

————
சித்ரகூடம் கதே ராமே புத்ர ஶோகா துரஸ் ததா || 32 ||

ராஜா தஶரத꞉ ஸ்வர்கம் ஜகாம விலபன் ஸுதம் |

ஸ்ரீ ராகவன் சித்ர கூடம் சேர்ந்த அளவில் தசரத மஹா ராஜர் புத்ர சோகத்தினால் வருத்த முற்றவனாய்
பிள்ளையை நினைந்து அழுது கொண்டே சுவர்க்கத்தை அடைந்தார்

—————
ம்ருதே து தஸ்மின் பரதோ வஸிஷ்ட ப்ரமுகைர் த்விஜை꞉ || 33 ||

நியுஜ்ய மானோ ராஜ்யாய நைச்சத் ராஜ்யம் மஹா பல꞉ |

தசரத மஹா ராஜன் ஸ்வர்க்க லோகத்தை அடைந்த பின் அவனுக்கு மற்ற ஒரு பிள்ளையாகிய பரதன்
வசிஷ்டர் முதலிய பெரியோர்கள் இராச்சியத்தில் பட்டாபிஷேகம் பண்ணிக் கொள்ளும்படி நியமித்தாலும்
தாம் இராச்சியத்தை ஆள ஸமர்த்தராய் இருந்தும் அவர் அந்த ராஜ்யத்தை விரும்பவில்லை

————-

ஸ ஜகாம வனம் வீரோ ராம பாத ப்ரஸாதக

அந்த பரதன் பூஜ்யராகிய ஸ்ரீ ராகவனைப் ப்ரஸன்னராக்கி மீட்டுக் கொண்டு வருகைக்காக
சதுரங்க சேனையுடன் கூட அவன் இருக்கும் காட்டைக் குறித்துச் சென்றார்

——–

கத்வா து ஸ மஹாத்மானம் ராமம் ஸத்ய பராக்ரமம் |
அயாசத் ப்ராதரம் ராமம் ஆர்ய பாவ புரஸ்க்ருத꞉ || 35 ||

பரதன் காட்டுக்குச் சென்று எல்லாரும் கொண்டாடும் படியான நல் ஒழுக்கம் யுடையராய்
வன வாஸத்தினால் மனத்தில் கலக்கம் அற்றவராய் சொன்ன சொல் தவறாதவராய்
தன்னுடைய தமையனான ஸ்ரீ ராகவனிடம் தனக்கு இஷ்டமானதைப் பிரார்த்தித்தார்

————

த்வமேவ ராஜா தர்மஜ்ஞ இதி ராமம் வசோ ऽப்ரவீத் |

அதாவது ஸ்ரீ ராகவனே நீர் தசரத மஹா ராஜனுக்கு மூத்த பிள்ளை யாகையாலே
நீரே இவ் ராஜ்யத்தை ஆள வேண்டும் என்று சொன்னார்

——–

ராமோऽபி பரமோதார꞉ ஸுமுகஸ் ஸுமஹாயஶா꞉ || 36 ||

ஸ்ரீ ராகவன் அடியார்கள் இரந்ததை எல்லாம் கொடுக்க வல்ல ஸ்வ பாவம் யுடையவராயினும்
அடியார்கள் இரப்பைக் கண்டு உகக்குமவராயினும்

———–

நசைச் சத் பிதுரா தேஶாத் ராஜ்யம் ராமோ மஹாபல꞉ |

பாதுகே சாஸ்ய ராஜ்யாய ந்யாஸம் தத்த்வா புன꞉ புன꞉ || 37 ||

நிவர்தயாமாஸ ததோ பரதம் பரதாக்ரஜ꞉ |

ஸ்ரீ ராகவன் ராஜ்யத்தில் தனக்குப் பதிலாகத் தன்னுடைய பாதுகைகளை வைத்துக் கொள்ளச் சொல்லிக் கொடுத்து
தன்னை விட்டுப் போக மாட்டாமல் அங்கே நிற்கிற பரதனை அநேக சமாதானங்களைச் சொல்லி அயோத்யைக்கு அனுப்பி விட்டார்

———–
ஸ காம மனவாப் யைவ ராமபாதா வுபஸ் ப்ருஶன் || 38 ||

நந்திக்ராமே ऽகரோத் ராஜ்யம் ராமாகமனகாங்க்ஷயா |

அந்த பரதன் தன் கோரிக்கையை அடையாமல் ஸ்ரீ ராமனுடைய பாதுகைகளை ப்ரதிதினம் சேவித்துக் கொண்டு
ஸ்ரீ ராகவன் வரும் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு அயோத்யைக்கு அருகில் இருக்கிற
நந்திக் கிராமத்தில் இருந்து ராஜ்யத்தை நடத்தி வந்தார்

————-
கதே து பரதே ஶ்ரீமான் ஸத்ய ஸந்தோ ஜிதேந்த்ரிய꞉ || 39 ||

ராமஸ்து புனராலக்ஷ்ய நாகரஸ்ய ஜனஸ்ய ச |
தத்ராகமனமேகாக்ரோ தண்டகான் ப்ரவிவேஶ ஹ || 40 ||

பரதன் அயோத்யைக்குப் போன பின்பு பரதன் இவ்வளவு பிரார்த்தித்தும் தான் செய்த ப்ரதிஜ்ஜையை விடாமலும்
ராஜ்ய ஸூ கத்தில் மனம் சலியாமல் இருக்கிற பெரும் புகழை யுடையரான ஸ்ரீ ராகவன்
இந்த சித்ர கூடத்தில் பட்டணத்தில் உள்ள ஜனங்கள் வந்தார்கள்
ஆகையால் இனி இங்கு இருக்கக் கூடாது என்று ஆலோசித்து பிதாவின் சொல்லைப் பரிபாலனம்
செய்வதற்காக தண்டகாவனத்தில் பிரவேசித்தார்

————-

ப்ரவிஶ்ய து மஹாரண்யம் ராமோ ராஜீவலோசன꞉ |
விராதம் ராக்ஷஸம் ஹத்வா ஶரபங்கம் ததர்ஶ ஹ || 41 ||

ஸுதீக்ஷ்ணம் சாப்யகஸ்த்யம் ச அகஸ்த்ய ப்ராதரம் ததா |

செந் தாமரைக் கண்ணனான ஸ்ரீ ராகவன் அப் பெரும் காட்டில் புகுந்து அங்குள்ள விநோதங்களைப் பார்த்துக் களித்தவராய்
போகும் வழியில் வந்த விராதனன் என்னும் அசூரனைக் கொன்று அப்புறம் போய் சரபங்க மஹா முனியையும்
ஸூ தீஷணரையும் அகஸ்திய மஹா முனிவரையும் அவர் தம்பியாகிய ஸூ தர்சனரையும் பார்த்தார் –

———————
அகஸ்த்ய வசனாச்சைவ ஜக்ராஹைந்த்ரம் ஶராஸனம் || 42 ||

கட்கம் ச பரம ப்ரீதஸ்தூணீ சாக்ஷயஸாயகௌ |

அகஸ்தியருடைய நியமனத்தின் படி அவருடைய ஆஸ்ரமத்தில் வைத்து இருந்த இந்த்ர தனுஸ்ஸையும்
கத்தியையும் பாணங்களின் ஓய்வற்று எப்போதும் நிறைந்து இருக்கும் இரண்டு
அம்புறாத் துணிகளையும் ப்ரீதியுடன் எடுத்துக் கொண்டார்

————–
வஸதஸ் தஸ்ய ராமஸ்ய வனே வனசரை꞉ ஸஹ || 43 ||

ருஷயோ ऽப்யாகமன் ஸர்வே வதாயாஸுர ரக்ஷஸாம் |

ஸ்ரீ ராகவன் அந்த சரபங்க ஆஸ்ரமத்தில் இருக்கும் போது ருஷிகள் அசூர ராக்ஷஸர்களை
வதம் செய்ய வேண்டும் என்று இவரிடம் பிராத்திக்கைக்காக அங்கு வந்தார்கள்

—————

ஸ தேஷாம் ப்ரதி ஸூஸ்ராவ ராஜஸா நாம் ததா வனே

ஸ்ரீ ராகவன் அவர்கள் பிரார்த்தித்த படியே அரக்கற்களைக் கொல்லுகிறேன் என்று ப்ரதிஜ்ஜை செய்தார்

————

ப்ரதிஜ்ஞாதஶ்ச ராமேண வதஸ் ஸம்யதி ரக்ஷஸாம் |
ருஷீணாமக்னி கல்பானாம் தண்ட காரண்ய வாஸினாம் || 45 ||

அதாவது அக்னியோடு ஒத்த தேஜஸ்ஸை யுடையவராய் தண்டகவனத்தில் வாஸம் செய்கிற
ருஷிகளைக் குறித்து நான் யுத்தத்தில் ராக்ஷஸர்களைக் கொல்லுகிறேன் என்றார்

————-

தேன தத்ரைவ வஸதா ஜனஸ்தானனி வாஸினீ |
விரூபிதா ஶூர்பணகா ராக்ஷஸீ காம ரூபிணீ || 46 ||

ஸ்ரீ ராகவன் அவ் வனத்தில் வாஸம் செய்து கொண்டு இருக்கும் போது இஷ்டம் உள்ள வடிவை எடுக்க வல்லளாய்
ஜனஸ்தானத்தில் வாஸம் செய்கிற சூர்ப்பணகை என்கிற ராக்ஷஸியின் மூக்கை அறுத்து விட்டார்

————-

தத꞉ ஶூர்பணகா வாக்யாத் உத்யுக்தான் ஸர்வ ராக்ஷஸான் |
கரம் த்ரிஶிரஸம் சைவ தூஷணம் சைவ ராக்ஷஸம் || 47 ||

நிஜகான ரணே ராமஸ் தேஷாம் சைவ பதானுகான் |

பிறகு சூர்ப்பணகையின் சொல்லைக் கேட்டு சண்டைக்கு வந்த அரக்கர்களையும் அவர்களுக்குத் தலைவர்களான
கரன் தூஷணன் த்ரி சிரஸ்ஸூ என்பவர்களையும் அவர்களுடைய சேனையையும் ஸ்ரீ ராமன் யுத்தத்தில் கொன்றார்

——————-
வனே தஸ்மின்னிவஸதா ஜனஸ்தான நிவாஸினாம் || 48 ||

ரக்ஷஸாம் நிஹதான்யாஸன் ஸஹஸ்ராணி சதுர்தஶ |

அவ் வனத்தில் வாஸம் செய்கிற ஸ்ரீ ராமன் அந்த யுத்தத்தில் ஜனஸ்தானத்தில் இருக்கிற
பதினாறாயிரம் ராக்ஷஸர்களைக் கொன்றார்

————–
ததோ ஜ்ஞாதி வதம் ஶ்ருத்வா ராவண꞉ க்ரோத மூர்சித꞉ || 49 ||

ஸஹாயம் வரயாமாஸ மாரீசம் நாம ராக்ஷஸம் |

பின்பு ராவணன் கர தூஷணர்கள் மாண்டு போனதை சூர்ப்பணகை அறிவிக்கக் கேட்டு
வெகு சினம் உற்றவனாய் ஸ்ரீ ராமனுக்குத் தீங்கு விளைக்கக்காக மாரீசன் என்பவனைத்
தனக்குத் துணையாக வேண்டிக் கொண்டான்

—————–
வார்யமாண꞉ ஸுபஹுஶோ மாரீசேன ஸ ராவண꞉ || 50 ||

ந விரோதோ பலவதா க்ஷமோ ராவண தேன தே |

அந்த மாரீசன் ஓ இராவணா அந்த ஸ்ரீ ராமனுடைய பராக்கிரமத்தை ஜனஸ்தான யுத்தத்தில் கேட்டாய் அன்றோ
இனி அப்பெரும் மிடுக்கரோடு எதிர்ப்பது உனக்கு உரியது அன்று என்று சொல்லி
ராவணனைப் பலவிதமாகத் தடுத்தான்

—————
அனாத்ருத்ய து தத் வாக்யம் ராவண꞉ கால சோதித꞉ || 51 ||

ஜகாம ஸஹ மாரீச꞉ தஸ் யாஶ்ரம பதம் ததா |

இயமனாலே உண்ட ராவணன் அம்மாரீச வசனத்தை சட்டை செய்யாமலே ஸ்ரீ ராகவன் வீற்று இருக்கும்
ஆஸ்ரமத்துக்கு மாரீசனைக் கூட்டிக் கொண்டு போனான்

—————-
தேன மாயாவினா தூரமபவாஹ்ய ந்ருபாத்மஜௌ || 52 ||

ஜஹார பார்யாம் ராமஸ்ய க்ருத்ரம் ஹத்வா ஜடாயுஷம் |

அங்கு அந்த மாரீசன் விசித்திரமான பொன் மான் உருவம் கொண்ட தன்னிடத்தில் ஆவலுற்றுப் பிடிக்க முயன்ற
ஸ்ரீ ராகவனையும் லஷ்மணனையும் கைக்கு அகப்படாமல் வெகு தூரம் இழுத்துக் கொண்டு போனான்
அந்த ராஜ குமாரர்கள் இல்லாத காலத்தில் இராவணன் புகுந்து ஸீதா தேவியை எடுத்துக் கொண்டு போகையில்
அவனிடத்தில் பரிந்து வந்த ஜடாயுவையும் மடித்து விட்டு அவளைத் தன்னிலங்கைக்கு எடுத்துக் கொண்டு போனான்

——————–
க்ருத்ரம் ச நிஹதம் த்ருஷ்ட்வா ஹ்ருதாம் ஶ்ருத்வா ச மைதிலீம் || 53 ||

ராகவ꞉ ஶோக ஸந்தப்தோ விலலாபாகுலேந்த்ரிய꞉ |

பிறகு இராகவன் வந்து சீதையைக் காணாமல் தேடிக் கொண்டு போகையில் குற்றுயிராய்
அடிபட்டு விழுந்து இருக்கிற ஜடாயுவைப் பார்த்து சீதையை ராவணன் எடுத்துக் கொண்டு போனதாக அவர்
சொல்லக் கேட்டு மிக்க வருத்த முற்றவராய்த் தயங்கி பிரலாபித்தார்

—————-
ததஸ்தேனைவ ஶோகேன க்ருத்ரம் தக்த்வா ஜடாயுஷம் || 54 ||

மார்கமாணோ வனே ஸீதாம் ராக்ஷஸம் ஸந்ததர்ஶ ஹ |
கபந்தம் நாம ரூபேண விக்ருதம் கோரதர்ஶனம் || 55 ||

பிறகு ஜடாயுவுக்கு நேர்ந்த ஆபத்தை நினைத்துப் பெரும் துன்பமுற்ற இராகவன் ஜடாயுவைத் தஹனம் செய்துவிட்டு
சீதையைத் தேடிக்கொண்டு போகையில் வழியில் பயங்கரமான உருவம் கொண்ட கபந்தன் என்ற அரக்கனைப் பார்த்தார்

சத்யேன லோகான் ஜயதி

———————

தம் நிஹத்ய மஹா பாஹு꞉ ததாஹ ஸ்வர்கதஶ்ச ஸ꞉ |
ஸ சாஸ்ய கதயாமாஸ ஶபரீம் தர்ம சாரிணீம் || 56 ||

ஶ்ரமணீம் தர்மனிபுணாமபிகச்சேதி ராகவ |

ஸோऽப்ய கச்சன் மஹாதேஜா꞉ ஶபரீம் ஶத்ரு ஸூதன꞉ || 57 ||

ஶபர்யா பூஜித꞉ ஸம்யக் ராமோ தஶரதாத்மஜ꞉ |

இராகவன் அந்தக் கபந்தனைக் கொன்று தஹனம் செய்தார் அவன் ஸ்வர்க்கம் சென்றான்

அந்த கபந்தன் ஸ்வர்க்கத்துக்குப் போகும் போது -ஓ ராகவன் இவ்வழியே சென்றால் அங்கு நல் ஒழுக்கம்
உடையவளாய் ஸந்யாஸ ஆஸ்ரமம் உள்ள ஒரு வேட்டுவ ஸ்த்ரீ இருக்கிறாள்
அவள் இருக்கும் இடத்துக்கு நீர் செல்லும் என்று சொன்னான்

————

பம்பா தீரே ஹநுமதா ஸங்கதோ வானரேண ஹ

இராகவன் அங்கு இருந்து சென்று பம்பை என்னும் ஸரஸ்ஸின் கரையில் திருவடியுடன் சேர்ந்தார்

ஹநுமதா என்ற பதத்தால் நமக்குத் புகலிடம் எது என்று வருந்தா நின்ற நிலையில்
விஜய ஸூசக வ்ரணத்தால் அடையாகமிட்ட திருமுகம் யுடையவன் சேர்க்கை யதேர்ச்சையாக ஏற்பட்டதே
தளர்ந்து ஆவாரார் துணை என்று இருக்க வெற்றித் தழும்பு சுமந்த ஆண் பிள்ளையுடன் சேர்க்கை கிட்டுவதே
செவ்வியான் ஒருவனுடன் கூடப்பெறுவதே
விக்ராந்தஸ் த்வம் சமர்த்தஸ் தவம் ப்ராஞ்ஞஸ் தவம் வானர உத்தம -என்று பிராட்டியும் கொண்டாடும்படியானவன்
பம்பா தீரே ஹநுமதா ஸங்கதோ வானரேண ஹ-வழி பறியுண்ட இடத்தில் தாய் முகம் காணப்பெறுவதே

————–

ஹனுமத் வசனாச்சைவ ஸுக்ரீவேண ஸமாகத꞉ஹ|

அந்த திருவடி சொற்படி ராகவன் ஸூ க்ரீவனுடன் நேசித்தார்

இவர் வார்த்தை கேட்ட அநந்தரமே இவர் அபீஷ்டம் ஸித்தித்த படி
ஸஹாய சம்பத் உண்டாகப் பெற்றதே – -ஹ்ருஷ்டராகிறார் ருஷி

———–
ஸுக்ரீவாய ச தத் ஸர்வம் ஶம்ஸத் ராமோ மஹா பல꞉ || 59 ||

ஆதிதஸ் தத்யதா வ்ருத்தம் ஸீதயாஶ்ச விஶேஷத꞉ |

பலசாலியாகிய ராகவன் தான் பிறந்தது முதல் நடந்தவற்றை ஸூ க்ரீவனுக்குச் சொல்லி
ஸீதா தேவியின் விஷயமாக நடந்தவற்றை பரக்கச் சொன்னார்

————–
ஸுக்ரீவஶ் சாபி தத் ஸர்வம் ஶ்ருத்வா ராமஸ்ய வானர꞉ || 60 ||

சகார ஸக்யம் ராமேண ப்ரீதஶ் சைவாக்னி ஸாக்ஷிகம் |

ஸூக்ரீவனும் ஸ்ரீ ராமனுடைய வ்ருத்தாந்தங்களை எல்லாம் கேட்டு மகிழ்ச்சி உற்றவனாக
அக்னி முன்பாக அவருடன் ஸ்நேஹம் செய்தான்

ஸுக்ரீவஶ்–ராமேண ப்ரீதஶ்–ஏக கண்டராய் வ்ருத்த கீர்தநம் செய்தனர்

—————–
ததோ வானர ராஜேன வைரானு கதனம் ப்ரதி || 61 ||

ராமாயா வேதிதம் ஸர்வம் ப்ரணயாத்து꞉கிதேன ச |

பிறகு வானர ராஜனான ஸூக்ரீவன் வாலிக்கும் தனக்கும் நேர்ந்த விரோதத்தை வ்ருத்தாந்தம் கேட்ட ஸ்ரீ ராகவனுக்கு
விஸ்வாஸத்தால் கண்ணீர் விட்டுக் கொண்டே நடந்தவற்றைச் சொன்னான்

—————
ப்ரதிஜ்ஞாதம் ச ராமேண ததா வாலி வதம் ப்ரதி || 62 ||

வாலினஶ்ச பலம் தத்ர கதயாமாஸ வானர꞉ |

அப்போது ஸ்ரீ ராகவன் தான் வாலியைக் கொல்வதாக ப்ரதிஜ்ஜை பண்ணினார்
அவருக்கு ஸூக்ரீவன் வாலியினுடைய பலத்தை எல்லாம் அறிவித்தான்

—————–
ஸுக்ரீவ꞉ ஶங்கிதஶ் சாஸீன்னித்யம் வீர்யேண ராகவே || 63 ||

இந்த இராகவன் வாலியோடு ஒத்த பலம் உள்ளவரா அன்றோ என்று ஸூக்ரீவன் ஸம்சயித்தான்

————–

ராகவ꞉ ப்ரத்யயார்தம் து துந்துபே꞉ காயமுத்தமம் |
தர்ஶயாமாஸ ஸுக்ரீவோ மஹா பர்வத ஸன்னிபம் || 64 ||

இராகவனுடைய பலத்தை அறிகைக்காக ஸூ க்ரீவன் அங்கு பெரு மலை போல் விழுந்து இருந்த
துந்துபி யினுடைய வலிய சரீரத்தைக் காட்டி இதை வாலி தனது காலின் பெரு விரலினால்
தூக்கி எறிவான் என்றான் -வலிய என்றது ஜீவன் அற்ற எலும்புக் கூடு

—————–

உத்ஸ்மயித்வா மஹா பாஹு꞉ ப்ரேக்ஷ்ய சாஸ்தி மஹா பல꞉ |
பாதாங்குஷ்டேன சிக்ஷேப ஸம்பூர்ணம் தஶ யோஜனம் || 65 ||

மஹா பலசாலியான இராகவன் அவ்வெலும்பைப் பார்த்து இது எவ்வளவு என்று அலஷ்யமாகக்
காலின் பெரு விரலினால் எடுத்துப் பத்து யோஜனைக்கு அப்புரம் போய் விழும்படி எறிந்தார்

வாலி காலால் எறிந்தான்
பெருமாள் பாத அங்குஷ்டத்தால் எறிந்தார்
வாலி 200 வில் தூரம் எற்றினான்
பெருமாள் 10 யோஜனை தூரம் எற்றினார்

————-

பிபேத ச புன꞉ ஸாலான் ஸப்த ஏகேன மஹேஷுணா |
கிரிம் ரஸா தலம் சைவ ஜனயன் ப்ரத்யயம் ததா || 66 ||

வெகு நாளாய் உலர்ந்து கிடக்கிற அவ்வரக்கனுடைய காயத்தைத் தூக்கி எறிந்த மாத்திரத்தில்
இவர் வாலியைக் கொல்ல வல்லவரோ என்று ஸூக்ரீவன் மனத்தில் சங்கித்தபடியை அறிந்து
இன்னும் அவனுக்கு நம்பிக்கை உண்டாக்குகைக்காக ஒரு பெரிய பாணத்தினால் ஏழு மராமரங்களை எய்தார்
அந்தப் பாணம் அந்த மரங்களையும் அருகில் இருந்த மலையையும் பிளந்து பூமியுள்ளே சென்று
கீழ் லோகங்களில் ஆறாவது ஆகிற ரஸா தலம் என்கிற லோகத்தையும் பிளந்து விட்டது –

ஏகேன மஹேஷுணா–கைக்கு எட்டிய தோர் அம்பாலே

—————

தத ப்ரீத மநாஸ் தேந விஸ்வஸ் தஸ் ஸ மஹா கபி
கிஷ்கிந்தாம் ராம ஸஹிதோ ஜகாம ச குஹாம் ததா  
|| 67 ||

அதைக் கண்ட ஸூக்ரீவன் இவர் வாலியைக் கொல்ல வல்ல பலசாலி தான் என்று நம்பிக் களிப்புற்றவனாய்
அப்பொழுது இராகவனைக் கூட்டிக் கொண்டு வாலியைக் கொல்லுகைக்காக
மலைக்குள் இருக்கிற கிஷ்கிந்தைக்குப் போனான்

————

ததோऽகர்ஜத்தரிவர꞉ ஸுக்ரீவோ ஹேம பிங்கள꞉ |
தேன நாதேன மஹதா நிர்ஜகாம ஹரீஶ்வர꞉ || 68 ||

பிறகு ஸூ க்ரீவன் ஸந்தோஷத்தினால் புகழ் பெற்று இனி நாம் வானர அதிபதி யாவோம்
என்று நிச்சயித்துக் கொண்டு பெரும் கூச்சல் இட்டான்
அக் கூக் குரலைக் கேட்டு வாலி கிஷ்கிந்தையில் நின்றும் வெளிக் கிளம்பினான்

————-

அனுமான்ய ததா தாராம் ஸுக்ரீவேண ஸமாகத꞉ |
நிஜகான ச தத்ரைனம் ஶரேணைகேன ராகவ꞉ || 69 ||

இப்பொழுது நீர் யுத்தத்திற்கு போவது உசிதம் அன்று என்று தகைந்த தனது மனைவியான தாரையை
நல் வார்த்தை சொல்லிச் சமாதானப் படுத்தித் தான் வந்து ஸூ க்ரீவனுடன் யுத்தம் செய்தான்
அப்போர் களத்தில் ஸ்ரீ ராகவன் ஓர் அம்பினால் வாலியை முடித்து விட்டார்

—————-

தத꞉ ஸுக்ரீவ வசனாத் ஹத்வா வாலினமாஹவே |
ஸுக்ரீவமேவ தத் ராஜ்யே ராகவ꞉ ப்ரத்யபாதயத் || 70 ||

ஸூ க்ரீவன் கேட்டுக் கொண்ட படியே ஸ்ரீ ராகவன் வாலியை யுத்தத்தில் முடித்து
அந்த ராஜ்யத்தையும் கொடுத்து ஸூ க்ரீவனுக்கு முடி சூட்டினார்

—————

ஸ ச ஸர்வான் ஸமானீய வானரான் வானரர்ஷப꞉ |
திஶ꞉ ப்ரஸ்தாப யாமாஸ தித்ருக்ஷுர் ஜனகாத்மஜாம் || 71 ||

வானர அதிபதியாகிய அந்த ஸூ க்ரீவன் எல்லா வானரர்களையும் திரட்டிக் கொண்டு வந்து
ஸ்ரீ சீதா தேவியைத் தேடிப்பிடிக்கைக்காக எல்லாத் திக்குகளிலும் அனுப்பினான்

—————–

ததோ க்ருத்ரஸ்ய வசனாத் ஸம்பாதேர் ஹனுமான் பலீ |
ஶதயோஜன விஸ்தீர்ணம் புப்லுவே லவணார்ணவம் || 72 ||

பின்பு தென் திக்கை நோக்கிச் சென்ற திருவடி ஸ்ரீ சீதாப் பிராட்டி இலங்கையில் இருப்பதை ஸம்பாதி சொல்லக் கேட்டு
அங்கு போகக் கருதி வழியில் நூறு காதம் பரந்து இருந்த கடலைத் தாண்டினார்

————-

தத்ர லங்காம் ஸமாஸாத்ய புரீம் ராவண பாலிதாம் |
ததர்ஶ ஸீதாம் த்யாயந்தீம் அஶோக வனிகாம் கதாம் || 73 ||

அக் கரையில் ராவணன் பரிபாலித்து வருகிற இலங்கா புரியை அடைந்து அங்கு
அசோகா வனத்தில் எப்போதும் ஸ்ரீ ராமனையே த்யானித்துக் கொண்டு இருக்கிற
ஸ்ரீ ஸீதா தேவியைப் பார்த்தார்

—————-

நிவேதயித்வாऽபிஜ்ஞானம் ப்ரவ்ருத்திம் ச நிவேத்ய ச |
ஸமாஶ்வாஸ்ய ச வைதேஹீம் மர்தயாமாஸ தோரணம் || 74 ||

ஸ்ரீ சீதா தேவிக்கு ஸ்ரீ ராம நாமாங்கிதமான கணையாழியைக் கொடுத்து
ஸ்ரீ ராகவன் சீதாதேவியைப் பெறுகைக்கு செய்யும் முயற்சியையும் அறிவித்து
சமாதானம் சொல்லி பிறகு இலங்கையின் கோட்டை வாசலை இடித்தான்

————-

பஞ்ச ஸேனாக்ரகான் ஹத்வா ஸப்த மந்த்ரி ஸுதானபி |
ஶூரமக்ஷம் ச நிஷ்பிஷ்ய க்ரஹணம் ஸமுபாகமத் || 75 ||

அதைக் கேட்ட ராவணனா; ஏவுண்டு வந்த பஞ்ச சேனாதிபர்களையும் ஏழு மந்திரி குமாரர்களை
அக்ஷனையும் கொன்று விட்டு பிறகு இந்திரஜித் பிரயோகித்த ப்ரஹ்மாஸ்திரத்தினால் கட்டுண்ட

————–

அஸ்த்ரேணோன் முக்தமாத்மானம் ஜ்ஞாத்வா பைதாமஹாத் வராத் |
மர்ஷயன் ராக்ஷஸான் வீரோ யந்த்ரிணஸ் தான்ய த்ருச்சயா || 76 ||

ஒரு முயற்சி இன்றியே பிரம தேவனுடைய வரத்தினால் தான் கட்டுண்ட அந்த அஸ்திரத்தின்
கட்டு விடுபட்டுப் போனதை அறிந்த திருவடி தன்னைக் கட்டி இழுக்கிற
அரக்கர்களுடைய அபராதங்களைப் பொறுத்துக் கொண்டார்

——————

ததோ தக்த்வா புரீம் லங்காம் ருதே ஸீதாம் ச மைதிலீம் |
ராமாய ப்ரியமாக்யாதும் புனராயான் மஹாகபி꞉ || 77 ||

பிறகு ஸீதை இருக்கும் இடம் தவிர மற்ற இலங்கையை முழுதும் கொளுத்தி விட்டு
ஸ்ரீ ராமனுக்கு ஸ்ரீ சீதாப் பிராட்டியாரைக் கண்ட செய்தியை அறிவிக்கத் திரும்பி வந்தார்

——————–

ஸ்ரீ ஸங்க்ஷேப ஸுந்தர காண்டம்

ததோ ராவணநீதாயா: ஸீதாயா: சத்ரு கர்சன:
இயேஷ பதமன் வேஷ்டும் சாரணாசரிதே பதி –1.1 / 19

யதா ராகவ நிர்முக்த: சர: ச்வஸனவிக்ரம
கச்சேத்தத்வத் கமிஷ்யாமி லங்காம் ராவணபாலிதாம் –1.39 / 20

ப்ரவிச்ய நகரீம் லங்காம் கபிராஜ ஹிதங்கர:
சக்ரே(அ)த பாதம் ஸவ்யஞ்ச சத்ரூணாம் ஸ து மூர்த்தனி – 4.3 / 21

ப்ரவிசந் நிஷ்பதம்ச்சாபி ப்ரபதந்நுத் பதந்நபி
ஸர்வமப்யவகாசம் ஸ விச்சார மஹாகபி: — 12.1 / 22

த்ருஷ்டமந்த: புரம் ஸர்வம் த்ருஷ்டா ராவண யோஷித:
ந ஸீதா த்ருச்யதே ஸாத்த்வீ வ்ருதா ஜாதோ மம ச்ரம: –12.6 / 23

அசோகவநிகா சேயம் த்ருச்யதே யா மஹாத்ருமா
இமாமகமிஷ்யாமி ந ஹீயம் விசிதா மயா — 13.55 / 24

அசோகவநிகாயாம் து தஸ்யாம் வானரபுங்கவ:
ததோ மலினஸம்வீதாம் ராக்ஷஸீபி: ஸமாவ்ருதாம் — 15.18 / 25

உபவாஸக்ருசாம் தீனாம் நி:ச்வஸந்தீம் புன: புன:
ததர்ச சுக்லபக்ஷாதௌ சந்த்ரரேகாமிவாமலாம் — 15.19 / 26

தாம் ஸமீக்ஷ்ய விசாலாக்ஷீ மதிகம் க்ருசாம் தர்க்கயாமாஸ ஸீதேதி காரணை ருபபாதிபி: –15.26 / 27

அஸ்யா தேவ்யா மனஸ்தஸ்மிம் ஸ்தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்ட்டிதம்
தேநேயம் ஸ ச தர்மாத்மா முஹூர்த்தமபி ஜீவதி– 15.51 / 28

ஏவம் ஸீதாம் ததா த்ருஷ்ட்வா ஹ்ருஷ்ட: பவனஸம்பவ:
ஜகாம மனஸா ராமம் ப்ரசசம்ஸ ச தம் ப்ரபும் — 15.54 / 29

ராஜா தசரதோ நாம ரத்குஞ்ஜர வாஜிமான்
தஸ்ய புத்ர: ப்ரியோ ஜ்யேஷ்ட ஸ்தாராதிப நிபானன — 31.2-6 / 30

ராமோ நாம விசேஷஜ்ஞ: ச்ரேஷ்ட: ஸர்வ தனுஷ்மதாம்
தஸ்ய ஸத்யாபிஸந்தஸ்ய வ்ருத்தஸ்ய வசனாத் பிது:
ஸபார்ய: ஸஹ ச ப்ராத்ரா வீர: ப்ரவ்ராஜிதோ வனம் –31.6-8 / 31

ததஸ்த்வமர்ஷாபஹ்ருதா ஜானகீ ராவணேன து
ஸ மார்க்கமாணஸ் தாம் தேவீம் ராம: ஸீதா மநிந்திதாம்
ஆஸஸாத வனே மித்ரம் ஸுக்ரீவம் நாம வாரணம் — 31.10-11 / 32

ஸுக்ரீவேணாபி ஸந்திஷ்டா ஹரய: காமரூபிண:
திக்ஷு ஸர்வாஸு தாம் தேவீம் விசின்வந்தி ஸஹஸ்ரச:– 31.13 / 33

அஸ்யா ஹேதோர் விசாலாக்ஷ்யா: ஸாகரம் வேகவான் ப்லுத:
யதா ரூபாம் யதா வர்ணாம் யதா லக்ஷ்மீஞ்ச நிச்சிதாம்
அச்ரௌஷம் ராகவஸ்யாஹம் ஸேயமாஸாதிதா மயா — 31.14-15 / 34

ஜானகீ சாபி தச்ச்ருத்வா விஸ்மயம் பரமம் கதா –31.16
ஸா ததர்ச கபிம் தத்ர ப்ரச்ரயம் ப்ரியவாதினம் –32.2 / 35

தாமப்ரவீன் மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜ: — 33.2
அஹம் ராமஸ்ய ஸந்தேசாத் தேவி தூதஸ்தவாகத: — 34.2 / 36

வைதேஹி குசலீ ராமஸ்த்வாம் ச கௌசலமப்ரவீத்
லக்ஷ்மணச்ச மஹாதேஜா பர்த்துஸ்தே(அ)னுசர: ப்ரிய: — 34.4 / 37

ஸா தபோ குசலம் தேவீ நிசம்ய நரஸிஹ்மயோ
ப்ரீதி ஸம்ருஷ்ட ஸர்வாங்கீ ஹனுமந்த மதாப்ரவீத் — 34.5 / 38

கல்யாணீ பத காதேயம் லௌகிகீ ப்ரதிபாதி மா
ஏதி ஜீவந்த மானந்தோ நரம் வைஷ சதாதபி — 34.6 / 39

பூய ஏவ மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜ:
அப்ரவீத் ப்ரச்ரிதம் வாக்யம் ஸீதாப்ரத்யய காரணாத்
ராம நாமாங்கிதஞ்சேதம் பச்ய தேவ்யங்குலீயகம்
ப்ரத்ய யார்த்தம் தவாநீதம் தேந தத்தம் மஹாத்மனா — 36.1-3 / 40

க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர்த்து: கரவிபூஷணம்
பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜானகீ முதிதா (அ)பவத் –36.4 / 41

ததோ வஸ்த்ரகதம் முக்த்வா திவ்யம் சூடாமணிம் சுபம்
ப்ரதேயோ ராகவாயேதி ஸீதா ஹனுமதே ததௌ –38.6-7 / 42

ததஸ்து ஹனுமான் வீரோ பபஞ்ஜ ப்ரமதாவனம்
தாஸோ(அ)ஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மண:
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
அர்த்தயித்வா புரீம் லங்கா மபிவாத்ய ச மைதிலீம்
ஸம்ருத்தார்த்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் — 43.9-11 / 43

வேஷ்டயந்தி ஸ்ம லாங்கூலம் ஜீர்ணை: கார்ப்பாஸகை: படை:
தைலேன சாபிஷிச்யாத தே(அ)க்னிம் தத்ராப்யபாதயத் — 53.7 / 44

தீப்யமானே ததஸ்தஸ்ய லாங்கூலாக்ரே ஹனூமத:
ராக்ஷஸ்யஸ்தா விரூபாக்ஷ்ய: சம்ஸுர் தேவ்யாஸ்ததப்ரியம் — 53.23 / 45

மங்கலாபிமுகீ தஸ்ய ஸா ததாஸீன்மஹாகபே:
உபதஸ்தே விசாலாக்ஷீ ப்ரயதா ஹவ்யவாஹனம்
யத்யஸ்தி பதி சுச்ரூஷா யத்யஸ்தி சரிதம் தப:
யதி வாப்யேகபத்னீத்வம் சீதோ பவ ஹனூமத: — 53.26-27 / 46

ஹனூமதா வேகவதா வானரேண மஹாத்மனா
லங்காபுரம் ப்ரதக்தம் தத் ருத்ரேண த்ரிபுரம் யதா– 54.32 / 47

ஏவமாச்வாஸ்ய வைதேஹீம் ஹனுமான் மாருதாத்மஜ:
கமனாய மதிம் க்ருத்வா வைதேஹீமப்ப்யவாதயத்
தத: ஸ கபிசார்த்தூல: ஸ்வாமி ஸந்தர்சனோத்ஸுக:
ஆருரோஹ கிரிச்ரேஷ்ட மரிஷ்ட மரிமர்த்தன –56.25 / 48

நிபபாத மஹேந்த்ரஸ்ய சிகரே பாதபாகுலே –57.29
த்ருஷ்டா ஸீதேதி விக்ராந்த: ஸம்க்ஷேபேண ந்யவேதயத் — 57.35 / 49

ப்ரீதிமந்தஸ்ததஸ்ஸர்வே வாயு புத்ர புரஸ்ஸரா:
மஹேந்த்ராத்ரிம் பரித்யஜ்ய புப்லுவு: ப்லவகர்ஷபா: — 61.2 / 50

நிபேதுர் ஹரிராஜஸ்ய ஸமீபே ராகவஸ்ய ச — 64.38

ஹனுமாம்ச்ச மஹாபாஹு: ப்ரணம்ய சிரஸா தத:
நியதா மக்ஷதாம் தேவீம் ராகவாய ந்யவேதயத் — 64.39 / 51

தௌ ஜாதாச்வாஸௌ ராஜபுத்ரௌ விதித்வா தச்சாபிஜ்ஞானம் ராகவாய ப்ரதாய
தேவ்யா சாக்க்யாதம் ஸர்வ மேவானுபூர்வ்யாத் வாசா ஸம்பூர்ணம் வாயுபுத்ர: சசம்ச:–65.26 / 52

—————–

ஸோऽபிகம்ய மஹாத்மானம் க்ருத்வா ராமம் ப்ரதக்ஷிணம் |
ந்யவேத யதமேயாத்மா த்ருஷ்டா ஸீதேதி தத்த்வத꞉ || 78 ||

புத்திமானான அந்த திருவடி ஸ்ரீ ராமனிடம் வந்து அவரை ப்ரதக்ஷிணம் செய்து
கண்டேன் ஸீதையை என்று சொல்லி அங்கே நடந்தவற்றைச் சொன்னார்

————-

தத꞉ ஸுக்ரீவ ஸஹிதோ கத்வா தீரம் மஹோததே꞉ |
ஸமுத்ரம் க்ஷோப யாமாஸ ஶரைராதித்ய ஸன்னிபை꞉ || 79 ||

பின்பு ஸ்ரீ ராமன் ஸூக்ரீவனுடன் கடற்கரையை அடைந்து அங்கு அணை செய்யக் கருதி வருணனை வேண்டிக் கொள்ள
அவன் வாராமையாலே சினமுற்று அக் கடலை பாணங்களினால் வியாகுலம் செய்து விட்டார்

ஶரைராதித்ய ஸன்னிபை--தேஜஸ் பதார்த்தங்களில் தலையான ஆதித்யனைச் சொன்னதால் தீப்த பாவக சங்காஸை -என்கிறபடி மற்றவர்களையும் அதிசயித்த படி

ஹனுமார் திரும்ப வந்து சீதாதேவியுடைய நிலைமையை சொல்லும்போது, சீதாதேவி வார்த்தைகளையே சொல்றார்.

இமம்ʼ ச தீவ்ரம்ʼ மம ஶோக வேக³ம்ʼ ரக்ஷோபி⁴ரேபி⁴꞉ பரிப⁴ர்த்ஸனம்ʼ ச.
ப்³ரூயாஸ்து ராமஸ்ய க³த꞉ ஸமீபம்ʼ ஶிவஶ்ச தே(அ)த்⁴வாஸ்து ஹரி ப்ரவீர||

ஹே ஹனுமான், என்னுடைய தீவிரமான சோகத்தையும், ராக்ஷசிகள், ராவணன் எனக்கு பண்ணும் கொடுமைகளையும் ராமரிடத்தில் சொல்லு. என்னை இந்த கஷ்டத்தில் இருந்து சீக்கிரமா வந்து மீட்க சொல்லு.உனக்கு மங்களம் உண்டாகட்டும், அப்டின்னு அந்த வார்தைகளையே சொல்லி

ஸர்வதா² ஸாக³ரஜலே ஸந்தார: ப்ரவிதீ⁴யதாம்ʼ |
எப்படி கடலை தாண்டறதுன்னு உடனடியா ஒரு வழி பார்க்கணும். உடனே போகணும்னு ஹனுமார், ராமரை அந்த கார்யத்துல தள்ளறார்.
சுக்ரீவன் சொல்றான்.ஹே ராமா, எவ்ளோ மஹாமதி நீ, எவ்ளோ பெரிய புத்திமான். இப்போ போய் நீங்க தளரலாமா?எங்க சீதை இருக்கான்னு தெரியாம இருந்த போது தளர்ச்சியா இருந்தோம். இப்போ சீதை இருக்கற இடம் தெரிஞ்சாச்சு எப்படியாவது மீட்டுடலாம். நீங்க கிளம்பரத்துக்கு உத்தரவு கொடுங்கோ

ஸக்ருʼதே³வ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே .
அப⁴யம்ʼ ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யேதத்³ வ்ரதம்ʼ மம ||
அப்டின்னு ராமர் வாக்கு குடுக்கறார். அந்த வாக்கு அன்னிக்கு விபீஷணனுக்கு மட்டுமில்ல. இன்னிக்கும் , என்னிக்கும் நமக்கும் இருக்கு. ராமா காப்பாத்துனு சொன்னா போறும். நமஸ்காரம் பண்ணா போறும்.

ஆபதா³ம் அப ஹர்தா²ரம்ʼ தா³தாரம்ʼ ஸர்வ ஸம்பதா³ம்ʼ |
லோகாபி⁴ராமம்ʼ ஶ்ரீராமம்ʼ பூ⁴யோ பூ⁴யோ நமாம்யஹம் ||
அப்டின்னு ராமரை நமஸ்காரம் பண்ணா, எல்லா ஆபத்துகளையும் விலக்கி, எல்லா சம்பத்துக்களையும் கொடுப்பார். விபீஷணனுக்கு அங்கேயே சமுத்திர ஜலத்தை வெச்சு லங்கைக்கு ராஜாவா பட்டாபிஷேகம் பண்ணிடறார்.

———————

தர்ஶயாமாஸ சாத்மானம் ஸமுத்ர꞉ ஸரிதாம் பதி꞉ |
ஸமுத்ர வசனாச் சைவ நலம் ஸேதுமகாரயத் || 80 ||

பின்பு சமுத்திர ராஜன் தனது மனைவிகளுடன் ஸ்ரீ ராமனிடம் வந்தான்
அந்த சமுத்திர ராஜனின் உத்தரவுப்படி நலன் என்பவனைக் கொண்டு கடலில் அணை கட்டினார்

ஐந்து நாள்ல 100 யோஜனை நீளம் 10 யோஜனை அகலம் அப்படிங்கற ஆஸ்ச்சர்யமான, கடல் மேல பாலம்ங்கற, இனிக்கும் scienceல கூட பண்ணல, அந்த மாதிரி ஆஸ்ச்சர்யமான காரியத்தை ராமர் பண்ணறார். முதல் நாள் 14 யோஜனை, அப்புறம் 20, அப்புறம் 21, அப்புறம் 22, அப்புறம் 23 யோஜனை இப்டி அஞ்சு நாள்ல பாலத்தை கட்டி லங்கைக்கு போய் சேரறா.

தேன க³த்வா புரீம்ʼ லங்காம்ʼ ” – அந்த 100 யோஜனை பாலத்துல ராமர் வானரப்படையோடு லங்கைக்கு போய் சேர்ந்தார். இந்த சங்க்ஷேப ராமாயணத்துல, ” ஹத்வா ராவணமாஹவே “, யுத்தத்தில் ராவணனை வதம் பண்ணார் அப்டின்னு 20 வது சர்கதுலேந்து 111வது சர்க்கம் யுத்த காண்டத்துக்கு ஒரு jump.

இந்திரஜித் கோபத்துல மறைஞ்சிருந்து ராம லக்ஷ்மணா மேல நாக பாசத்தை போடறான். எல்லா படையையும் மறைஞ்சிருந்து அடிக்கிறான். எல்லாரும் தவிக்கறா. நாக பாசத்துல ராம லக்ஷ்மணாள் விழுந்து இருக்கறத பாத்து எல்லாருமே ரொம்ப சோர்வடையறா. புஷ்பக விமானத்துல சீதையை கொண்டு வந்து காமிக்க சொல்றான் ராவணன். சீதையும் பாத்து புலம்பி அழறா. ராமர் ஒரு நிமிஷம் மூர்ச்சை தெளிஞ்சு எழுந்து, லக்ஷ்மணன் விழுந்து கிடக்கறத பாத்து அழறார். ரொம்ப வருத்தப்படும்போது கருட பகவான் வரார். கருட பகவான் வந்த ஒடனே அந்த நாகங்கள் எல்லாம் போய்டறது. அவர் வந்து அவாளை தடவி குடுத்தவுடனே, அவா மின்ன விட ரெண்டு மடங்கு சக்தியும் , தேஜஸும் , பலமும் ஆயிடறா. கருட பகவான் சொல்றார்.

ஶூராணாம் ஶுத்³த⁴ பா⁴வானாம் ப⁴வதாம் ஆர்ஜவம் ப³லம் ||
ராக்ஷஸர்கள் சூழ்ச்சி பண்ணுவார்கள், ஆனால் உங்களுடைய சத்தியமும், நேர்மையும் தான் உங்களுக்கு பலம்.
கவலைப்படாதே, நீங்கள் யுத்தத்தில் வெற்றி பெறுவீர்கள் . சீதையை மீண்டும் அடைவீர்கள்

த⁴ர்மாத்மா ஸத்யஸந்த⁴ஶ்ச ராமோ தா³ஶரதி²ர்யதி³ ||
பௌருஷே சாப்ரதித்³வந்த்³வஸ்ததே³னம்ʼ ஜஹி ராவணிம் |
என்னுடைய அண்ணா தசரத குமாரர் ராமர், சத்திய சந்தர் தர்மாத்மா என்பது உண்மையானால், இந்த அம்பு ராவணனுடைய பிள்ளை இந்திரஜித்தை கொல்லட்டும்னு போடறான், இந்திரஜித் தலை கீழ விழறது. அப்படி அந்த ராம நாமத்துக்கு அவ்ளோ மஹிமை. சத்தியமும் , தர்மமும் ஜெயிக்கும் அப்படிங்கறது ராமாயாணத்துடய முக்கியமான message, முக்கியமான செய்தி.

———————

தேன கத்வா புரீம் லங்காம் ஹத்வா ராவணமாஹவே |
ராமஸ் ஸீதாமனு ப்ராப்ய பராம் வ்ரீடா முபாகமத் || 81 ||

அவ் வணையின் வழியே இலங்கையில் சென்று போர் களத்தில் ராவணனைக் கொன்று சீதையை அடைந்து
அநந்தரம் தான் பிறர் அகத்தில் இருந்த இவளை எப்படி அங்கீ கரிப்போம் என்று வெட்கித்து இருந்தார்

மரணாந்தாணி வைராணி ” – வைரமெல்லாம் மரணம் வரைக்கும் தான்-மண்டோதரி வந்து, நான் உன்னோட எவ்ளோ சந்தோசமா ஆடை ஆபரணம் எல்லாம் அணிந்து புஷ்பக விமானத்துல சுத்தி இருக்கோம், அதெல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்லாம போயிடுத்தே. நான் எவ்ளோ சொன்னேன் , விபீஷணன் எவ்ளோ சொன்னான்.

ஶுப⁴க்ருʼச்சு²ப⁴மாப்னோதி பாபக்ருʼத்பாபமஶ்னுதே |
விபீ⁴ஷண꞉ ஸுக²ம்ʼ ப்ராப்தஸ்த்வம்ʼ ப்ராப்த꞉ பாபமீத்³ருʼஶம் ||
நல்லது பண்றவன் நல்லதை அடைவான். கெட்டது பண்ணா கெட்டதுதான் விளையும். விபீஷணன் க்ஷேமத்தை அடைந்தான் , நீ இந்த மாதிரி கோரமான வதத்தை அடைஞ்சியே அப்டின்னு பொலம்பறா .

இவனுக்கு நான் ஸம்ஸ்காரம் பண்ணா ஜனங்கள் என்னை வெறுப்பாளோ அப்டின்னு. அதனால நான் இவனுக்கு ஸம்ஸ்காரம் பண்ண விரும்பலை அப்டின்னு சொல்றான். அப்போ ராமர் நீ பண்ணலேன்னா நான் பண்ணுவேன் ” மரணாந்தாணி வைராணி… த்வம் யஷோ பாக் பவிஷ்யதி” — உனக்கு புகழ் ஏற்படும். நீ ஸம்ஸ்காரம் பண்ணு அப்டின்னு சொல்றார்.
அப்புறம் ப்ராஹ்மணர்களுக்கு என்ன வேத மந்த்ராம் எல்லாம் உண்டோ அதுப்படி விபீஷணன், ராவணனுக்கு ஸம்ஸ்காரம் பண்ணறான்.

பாபானாம்ʼ வா ஶுபா⁴னாம்ʼ வா வதா⁴ர்ஹாணாம்ʼ ப்லவங்க³ம ||
கார்யம்ʼ காருண்யமார்யேண ந கஶ்சின்னாபராத்⁴யதி |

பாவம் பண்ணவாளா இருந்தாலும் சரி, வதத்துக்கு உரியவாளா இருந்தாலும் சரி.
கார்யம் கருணம் ஆர்யேன ” – பெரியவாளா இருக்கறவா மன்னிக்கணும். அவா இராவணன் பேச்சை கேட்டுண்டு பண்ணா. இப்போ ராவணன் இல்ல. இனிமே இந்த மாதிரி நடந்துக்க மாட்டா, மன்னிச்சுடுனு சொல்றா. அப்புறம் சரிம்மான்னு சொல்லிடறார் ஹனுமார்.

—————

தாமுவாச ததோ ராம꞉ பருஷம் ஜனஸம்ஸதி |
அம்ருஷ்யமாணா ஸா ஸீதா விவேஶ ஜ்வலனம் ஸதீ || 82 ||

அநந்தரம் எல்லோரும் சீதாப்பிராட்டியாரை பதி விரதை என்று நம்புவதற்காக ஜனக்கூட்டத்தின் நடுவில்
இராகவன் சீதையைப் பார்த்து நீ அக்னி பிரவேசம் பண்ண வேண்டும் என்று கொடூரமாக மொழிந்தார்
ஸீதா தேவியார் அச் சொல்லைப் பொறுக்க மாட்டாதவளாய் அக்னியில் குதித்தாள்

————–

ததோऽக்னிவசனாத்ஸீதாம் ஜ்ஞாத்வா விகதகல்மஷாம் |
பபௌ ராமஸ் ஸம் ப்ரஹ்ருஷ்ட꞉ பூஜிதஸ் ஸர்வதைவதை꞉ || 83 ||

பிறகு இவள் மஹா பதி விரதை என்று அக்னி தேவன் சொல்லக் கேட்டு ஸீதா தேவியை எவ்விதத்திலும்
தோஷம் அற்றவளாக அறிந்து மிகவும் ஸந்தோஷித்தார்
அப்பொழுது தேவர்கள் இவரைக் கொண்டாடினர்

கண்டேன் சீதையை என்று கேட்டு ஹ்ருஷ்டரானார்
பையலைக் கொன்று விபீஷண ஆழ்வானுக்கு முடி சூட்டி ப்ரஹ்ருஷ்டரானார்
இப்போது ஸம் ப்ரஹ்ருஷ்டரானார்-வடிவிலே தொடை கொள்ளலாம் படி திருமேனி மிகவும் புகரிட்டு –திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் ஆனார்

எல்லா தேவர்களும் பிரம்மா , அக்னி , இந்திரன் , பரமேஸ்வரன் எல்லாரும் காட்சி கொடுத்து, ஹே ராமா நீ யாருன்னு உணரவில்லையா, நீ ஸாக்ஷாத் விஷ்ணு பகவான், சீதாதேவி லக்ஷ்மிதேவி அப்டின்னவுடனே ராமர் சொல்றார்,

ஆத்மானம்ʼ மானுஷம்ʼ மன்யே ராமம்ʼ த³ஶரதா²த்மஜம்
நான் என்னை தசரத குமாரனான ராமராக அறிகிறேன் அப்படின்னு சொன்னபோது,இல்ல ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் பண்ணக்கூடிய ஜகத் பரிபாலனம் பண்ணக்கூடிய விஷ்ணு பகவானே நீதான் அப்படின்னு ப்ரஹ்மா ஸ்தோத்ரம் பண்ணறார். அந்த ப்ரஹ்ம ஸ்துதியோட முடிவுல

அமோகம் தர்ஷனம் ராமா நச மோக தவஸ்தவ: |
அமோகாஸ்தே பவிஷ்யந்தி பக்திமந்தஸ்ச ஏ நரா: ||”

அப்படின்னு உன்னுடைய தரிசனமோ, உன்கிட்ட பண்ணற ஸ்தோத்திரமோ, உன்கிட்ட பண்ணற பக்தி வீண் போகாது அப்படின்னு சொல்றார். அப்புறம் அக்னி பகவான் வந்து இந்த சீதையை ஏற்றுக்கொள் அப்படின்னு சொன்னவுடனே ராமர் எனக்கு அவளோட மனசும் தெரியும், அவளோட தூய்மையும் தெரியும். ஜனங்களுக்காக இப்படி ஒண்ணு பண்ணேன்னு சீதாதேவியை ஏத்துண்டு,அப்போ தான் அவர் “பபௌ ராம: ஸம்ப்ரஹ்ருஷ்ட:” – சந்தோஷத்தை அடைந்தார். “பூஜித: சர்வதெய்வதை:” – எல்லா தெய்வங்களும் அவரை கொண்டாடினார்கள்.

—————-

கர்மணா தேன மஹதா த்ரை லோக்யம் ஸசராசரம் |
ஸதேவர்ஷி கணம் துஷ்டம் ராகவஸ்ய மஹாத்மன꞉ || 84 ||

ஸ்ரீ ராகவன் செய்த ராவண வதமாகிற அப்பெரும் தொழிலினால் தேவர்களும் ரிஷிகளும்
மற்றும் மூன்று உலகினில் உள்ள பிராணிகளும் மரம் முதலானவைகளும் களித்தனர்

————–

அப்யஷிஞ்சத்ஸ லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம் |
க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர꞉ ப்ரமுமோத ஹ || 85 ||

விபீஷணனை ராக்ஷஸ ராஜனாக இலங்கையில் முடி சூட்டித் தான் கடற்கரையில் இராவணனை முடித்து
உனக்கு ராஜ்யத்தைத் தருகிறேன் என்று சொன்னபடி செய்து மனத்தில் உள்ள தாபம் தீர்ந்து
இராகவன் ப்ரீதியை அடைந்தார்

விஜ்வர -இவ் வரசு வேண்டேன் என்று சொல்லாமல் இருந்ததால் அந்தரங்க ஸந்தாபம் ஒழிந்தது
வி பஷியாய் அதன் விஷயமான ஜுரம் -ஜடாயு மஹாராஜர் இழவால் நேர்ந்த ஜுரம் இப்பொழுது தான் நீங்கப் பெற்றார்
தாம் செய்த ப்ரதிஜ்ஜை நிறைவேறப் பெற்றதால் ஜுரம் நீங்கப் பெற்றார்

—————-

தேவதாப்யோ வரம் ப்ராப்ய ஸமுத்தாப்ய ச வானரான் |
அயோத்யாம் ப்ரஸ்திதோ ராம꞉ புஷ்பகேண ஸுஹ்ருத்வ்ருத꞉ || 86 ||

ஸ்ரீ ராகவன் தேவர்களின் வரத்தினால் யுத்தத்தில் இறந்து போன வானரங்களை எழுப்பிக் கொண்டு
அவர்களுடன் கூட புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்யைக்குச் செல்லப் புறப்பட்டார்

—————

பரத்வாஜாஶ்ரமம் கத்வா ராமஸ் ஸத்ய பராக்ரம꞉ |
பரதஸ்யாந்திகம் ராமோ ஹனூமந்தம் வ்யஸர்ஜயத் || 87 ||

பரத்வாஜ மஹா முனிவருடைய ஆஸ்ரமத்தை அடைந்து அங்கு நின்றும் இராகவன்
தான் வருவதாக பரதனுக்கு அறிவிக்க அவரிடம் ஹநுமானை அனுப்பினார்

—————-

புனராக்யாயிகாம் ஜல்பன் ஸுக்ரீவ ஸஹிதஶ்ச ஸ꞉ |
புஷ்பகம் தத் ஸமாருஹ்ய நந்தி க்ராமம் யயௌ ததா || 88 ||

ஸ்ரீ ராமன் முன் நடந்த கதைகளை ஸூ க்ரீவனுடன் சொல்லிக் கொண்டு புஷ்பகத்தின் மேல் ஏறி
பரதன் இருக்கிற நந்திக் கிராமம் என்கிற ஊருக்குச் சென்றார்

———–

நந்தி க்ராமே ஜடாம் ஹித்வா ப்ராத்ருபி꞉ ஸஹிதோऽனக꞉ |
ராம꞉ ஸீதாமனுப்ராப்ய ராஜ்யம் புனரவாப்தவான் || 89 ||

அந்த நந்திக் கிராமத்தில் ஸ்ரீ ராகவன் தம்பிகளுடன் கூட இந்நாள் தரித்த சடையை வாங்கி நீராடி
சீதா தேவியுடன் சிம்ஹாசனத்தில் உட்கார்ந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டு ராஜ்யத்தை அடைந்தான்

ராம꞉ ஸீதாமனுப்ராப்ய ராஜ்யம்ʼ புனரவாப்தவான் ||89||
அப்படின்னு, ராமர் சீதையையும் ராஜ்ஜியத்தையும் மீண்டும் அடைந்தார்னு, ராம பட்டாபிஷேக சர்க்கத்தை குறிப்பிட்டிருக்கா. ராம பட்டாபிஷேக மஹோத்சவத்தை வால்மீகி வார்த்தை வெச்சிண்டு படிச்சா தான் ஆனந்தமா இருக்கும். அதனால ராம பட்டாபிஷேக சர்கம் 131வது சர்கம், யுத்த காண்டத்துலேந்து எடுத்து கொண்டாடுவோம்.

ஶிரஸ்யஞ்ஜலிமாதா³ய கைகேயானந்த³வர்த⁴ன꞉ |
ப³பா⁴ஷே ப⁴ரதோ ஜ்யேஷ்ட²ன் ராமம்ʼ ஸத்யபராக்ரமம் || 1||–ராம பட்டாபிஷேக சர்க்கத்துல முதல் ஸ்லோகம்,

ராமர் வந்து சேர்ந்தவுடனே பரதன் நமஸ்காரம் பண்ணறான். அப்புறம் இதை சொல்றான், “ஶிரஸ்யஞ்ஜலிமாதா³ய” – கைகள் தலை மேல கூப்பிண்டு, ஏன்னா அவனுக்கு ராமரோட இந்த எண்ணம் தெரியும். கைகேயி சந்தோஷத்துக்காக பரதா நீயே ராஜ்ஜியத்தை திரும்பவும் வெச்சுக்கோன்னு சொல்லிடப்போறார்னு சொல்லி, “சத்ய பராக்ரமம் ராமம் பரத: பபாஷே” – பரதன் இந்த வார்த்தைகளை சொன்னான் . இந்த இடத்துல பரதனுக்கு “கைகேயானந்த வர்தன:” அப்படின்னு ஒரு பதம் போட்டுருக்கார், கைகேயியின் ஆனந்தை வளர்ப்பவர்னு.
ராமர் அங்கேருந்து பரதனை பாதுகை குடுத்து திருப்பி அனுப்பும்போது ஒரு ப்ரதிஞை பண்ண சொல்றார். என் மேலயும் சீதை மேலயும் ஆணை, நீ கைகேயியை கடிந்து எதுவுமே பேச கூடாதுன்னு, பரதனும் ஆஹா னு சொல்றான்.

யாவதா³வர்ததே சக்ரம் யாவதீ ச வஸுந்த⁴ரா |
தாவத்த்வமிஹ ஸர்வஸ்ய ஸ்வாமித்வம்அனுவர்தய ||
“யாவதா³வர்ததே சக்ரம்“ – எது வரைக்கும் கால சக்கரம் சுழல்கிறதோ,
“யாவதீ ச வஸுந்த⁴ரா“ – எது வரைக்கும் மலைகளும், நதிகளோடும் இந்த பூமி இருக்கிறதோ
“தாவத்”– அது வரைக்கும்
த்வம் இஹ ஸர்வஸ்ய” – நீங்கள் இங்க எங்கள் எல்லாருக்கும்
“ஸ்வாமித்வம்அனுவர்தய” – ஸ்வாமியா இருக்கனும் , அப்டின்னு சொல்றான்.

அதுக்கு முந்தின ஸ்லோகத்துல

தூர்யஸங்கா⁴தநிர்கோ⁴ஷை꞉ காஞ்சீநூபுரநிஸ்வனை꞉ |
மது⁴ரைர்கீ³தஶப்³தை³ஶ்ச ப்ரதிபு³த்⁴யஸ்வ ராக⁴வ ||
ராஜாவா இருந்தா எல்லாரைக்காட்டிலும் அவருக்குதான் பொறுப்பு அதிகம்,எல்லாரைக் காட்டிலும் அவருக்கு தான் போகங்களும் அதிகம் . பரதன் சொல்லும்போது, தன்னால ராஜ போகங்களெல்லாம் இழந்து காட்டுல கல்லுலேயும், முள்ளுலேயும் கஷ்டப்பட்டு நடந்து , தரைல படுத்துண்டு கஷ்டப்படறாரே, அப்டின்னு அது அவன் மனச ரொம்ப பாதிச்சிடுத்து . அதனால, நீங்க ராஜ பட்டாபிஷேகம் பண்ணிக்கணும், எங்களுக்கு நீங்க ராஜாவா இருக்கறதுனால நாங்கள்ளாம் சந்தோஷமா இருப்போம்ங்கறது மட்டுமில்ல, நீங்களும் சந்தோஷமா இருக்கனும்.
“தூர்யஸங்கா⁴தநிர்கோ⁴ஷை꞉ “ – நல்ல நாதஸ்வரம் , வீணா நாதம், ம்ருதங்கம் , “காஞ்சீநூபுரநிஸ்வனை꞉” – பெண்களுடைய ஆபரண சப்தங்கள் எல்லாம் கேட்டுண்டு ,
மது⁴ரைர்கீ³தஶப்³தை³ஶ்ச “- இனிமையான கீதங்கள் கேட்டுண்டு , வந்திகள் எல்லாம் உங்களை ஸ்தோத்ரம் பண்ற மாதிரி ,
ப்ரதிபு³த்⁴யஸ்வ ராக⁴வ” – ஒவ்வொரு நாளும் நீங்க எழுந்துக்கணும். ராஜ போகங்களையும் நீங்க அனுபவிக்கனும் , எங்களையும் ராஜாவாக இருந்து வழிநடத்தணும் அப்டின்னு பரதன் வேண்டிக்கறான்.

ப⁴ரதஸ்ய வச꞉ ஶ்ருத்வா ராம꞉ பரபுரஞ்ஜய꞉ |
ததே²தி ப்ரதிஜக்³ராஹ நிஷஸாதா³ஸனே ஶுபே⁴ ||
ராமரும் அப்டியே ஆகட்டும்னு சொல்றார்.
ஸ்வாமிகள் சொல்வார், பரதன் கேட்டபோது காலச்சக்கரம் இருக்கற வரைக்கும் ராமா நீ எங்களுக்கு ராஜாவா இருக்கணும்னு கேட்டதுக்கு, ராமர் அப்படியே அகட்டும்னு சொல்லிருக்கார். ராமர் சத்தியமும் தர்மமும் வடிவானவர். அதனால இன்னிக்கும் நமக்கெல்லாம் ராமர் தான் ராஜா.  நமக்கெல்லாம் நாடளுநாயகன் ராமர்தான்

அப்புறம் ராமர், லக்ஷ்மணன் , பரதன், சத்ருக்னன் நாலுபேரும் ஜடையெல்லாம் எடுத்துட்டு
“ஸுக²ஹஸ்தா꞉ ஸுஶீக்⁴ரா: ஶ்மஶ்ருவர்த⁴கா꞉” – நாவிதர்கள் பத்தி சொல்லும்போது அவா கைப்படறதே தெரியாது, சீக்கிரமாவும் செய்வான்னு ரெண்டு அடைமொழி போட்ருக்கா. அவாளைக்கொண்டு ஜடையெல்லாம் எடுத்துட்டு, ரொம்ப அழகா அலங்காரம் பண்ணிண்டு, இந்த எல்லா பரிஜனங்களோட ராமர் நட்சத்திரங்களுக்கு மத்தியில் சந்திரனை போல ஜொலிக்கிறார். அப்புறம் ராமரை சூரியனை போல ஜொலிக்கற ஒரு தேர்ல ஒக்காற வைத்து, பரதனே ஒட்டிண்டு நந்தி க்ராமத்துலேந்து எல்லாரோடும் அயோத்திக்கு ராமர் போறார்.

ருʼஷிஸங்கை⁴ர்ததா³காஶே தே³வைஶ்ச ஸமருத்³க³ணை꞉ |
ஸ்தூயமானஸ்ய ராமஸ்ய ஶுஶ்ருவே மது⁴ரத்⁴வனி꞉ ||
ராமர் நந்திக்ராமத்துலேந்து அயோத்தி தேர்ல போறத பாத்து, ஆகாசத்துல தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்ரம் பண்ற மதுரமான ஒலி எல்லார்க்கும் கேட்டது அப்படின்னு ஒரு ஸ்லோகம்.
அக்ஷதன் ஜாதரூபம்ʼ ச கா³வ꞉ கந்யாஸ்ததா² த்³விஜா꞉ |
நரா மோத³கஹஸ்தாஶ்ச ராமஸ்ய புரதோ யயு꞉ ||
முன்னாடி ஜனங்களெல்லாம் சீர் வரிசை எல்லாம் எடுத்துண்டு போறா. அதுல தங்கம் போல ஜ்வலிக்க கூடிய அக்ஷதை , அவ்ளோ அழகா இருக்காம். கன்யா பெண்கள் பசுமாடுகள் , ப்ராஹ்மணர்கள், “நரா: மோத³கஹஸ்தாஶ்ச “ – ஜனங்கள் கைல தட்டுல மோதகம் எல்லாம் எடுத்துண்டு, “ராமஸ்ய புரதோ யயு꞉ “ – ராமர் முன்னாடி போறார்கள்னு வரது.

இந்த ராமாயணத்தை திரும்ப திரும்ப படிச்சு அந்த தர்ம பலம், சத்ய பலம் அது தான் தேசத்துக்கு ரொம்ப முக்கியம். மத்தது எல்லாம் தானா நடக்கும் அப்படி ராமர் அயோத்திகுள்ள நுழையும்போது

ஹ்ருʼஷ்டபுஷ்டஜனாகீர்ணாமயோத்⁴யாம்ʼ ப்ரவிவேஶ ஹ |
ஜனங்கள்லாம் சந்தோஷத்துல ஒரு சுத்து பெருத்துட்டாளாம். ரொம்ப ஆனந்தமா கொடிகளெல்லாம் கட்டி, நாதஸ்வரம் மேல தாளத்தோட ராமரை அயோத்தியில் வரவேற்றார்கள். ராமர் தசரதருடைய அரண்மனைக்கு போய் சேரரார்.அங்க தான் அமர்ந்தவுடன் பரதனை கூப்பிட்டு இந்த சுக்ரீவனுக்கு என்னுடைய மாளிகைகளில் மிகச்சிறந்ததை ஒழித்து குடு அப்டிங்கறார்.

யச்ச மத்³ப⁴வனன் ஶ்ரேஷ்ட²ம்ʼ ஸாஶோகவனிகம்ʼ மஹத் ||
முக்தாவைதூ³ர்ய ஸங்கீர்ணன் ஸுக்³ரீவஸ்ய நிவேத³ய |
சுக்ரீவனை பார்த்தவுடனே எங்க நாலுபேரோட சேந்து நீயும் ஒரு சகோதரன் ஆயிட்ட அப்டிங்கறார்.
.அந்த மாளிகைல சுக்ரீவன் போய் ஒக்காந்த உடனே, சத்ருக்னன் சொல்றான், நாளை பட்டாபிஷேகத்துக்கு நாலு சமுத்திரத்திலேந்து ஜலம் எடுத்துண்டு வரணும் அப்டின்னவுடனே சுக்ரீவன், ரத்னமயமான நாலு தங்க குடத்தை நாலு பேர்கிட்ட குடுத்து

யதா² ப்ரத்யூஷஸமயே சதுர்ணான் ஸாக³ராம்ப⁴ஸாம் ||
பூர்ணைர்க⁴டை꞉ ப்ரதீக்ஷத்⁴வம் ததா² குருத வானரா꞉ |
நீங்க நாலு பேரும், நாலு சமுத்திரத்திலேந்து ஜலம் எடுத்துண்டு வரணும், “ப்ரத்யூஷ சமயே” – உஷத் காலம் னா, விடியற பொழுது . அதுக்கு ரொம்ப முன்னாடியே நீங்க வந்து காத்துண்டு இருக்கணும். எங்க வந்தாளான்னு நாங்க வாசல்ல வந்து காத்துண்டு இருக்கற மாதிரி வெக்க கூடாது , அப்படி பண்ணுங்கோ “ததா² குருத வானரா꞉ “ அப்டின்னு சொன்னவுடனே அவா போய் எடுத்துண்டு வந்துடறா. இன்னும் ஒரு 500 புண்ய தீர்த்தம் வந்துடுத்து அப்டின்னு சொல்றா. ஸ்வாமிகள் சொல்வார், மத்த வானராலெல்லாம் எங்களுக்கு ராம கைங்கர்யம் கிடைக்காதா னு queueல நின்னுட்டாளாம். அப்புறம் நீ போய் காவேரிலேந்து ஜலம் எடுத்துண்டு வா, நீ கங்கையிலேந்து ஜலம் எடுத்துண்டு வான்னு சுக்ரீவன் சொன்னான். 500 புண்ய தீர்த்தங்கள் வந்துடுத்து. பொழுது விடிந்தது.. அப்ப சத்ருக்னன் வசிஷ்டர்கிட்ட ராமருக்கு பட்டாபிஷேகம் பண்ணி வைங்கோ அப்டின்னு வேண்டிக்கறான்.

தத꞉ ஸ ப்ரயதோ வ்ருʼத்³தோ⁴ வஸிஷ்டோ² ப்³ராஹ்மணை꞉ ஸஹ ||
ராமன் ரத்னமயோ பீடே² ஸஹஸீதம்ʼ ந்யவேஶயத் |
வஸிஷ்டோ² வாமதே³வஶ்ச ஜாபா³லிரத² காஶ்யப꞉ ||
காத்யாயன꞉ ஸுயஜ்ஞஶ்ச கௌ³தமோ விஜயஸ்ததா² |
அப்⁴யஷிஞ்சன்னரவ்யாக்⁴ரம்ʼ ப்ரஸன்னேன ஸுக³ந்தி⁴னா ||
ஸலிலேன ஸஹஸ்ராக்ஷன் வஸவோ வாஸவம்ʼ யதா² |

அப்போ சீதாதேவியை ராமரோடு ரத்னமயமான சிம்ஹாசனத்தில் அமர்த்தி எட்டு ரிஷிகளும், வசுக்கள் எப்படி இந்திரனுக்கு அபிஷேகம் பண்ணி வச்சாளோ அந்த மாதிரி ராமரை சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் பண்ணி வைத்தார்கள்.

ச²த்ரம்ʼ தஸ்ய ச ஜக்³ராஹ ஶத்ருக்⁴ன꞉ பாண்டு³ரன் ஶுப⁴ம் ||
ஶ்வேதன் ச வாலவ்யஜனன் ஸுக்³ரீவோ வானரேஶ்வர꞉ |
அபரன் சந்த்³ரஸங்காஶன் ராக்ஷஸேந்த்³ரோ விபீ⁴ஷண꞉ ||

சத்ருக்னன் சந்த்ரனை போல ஒரு குடையை புடிக்கறான். இந்த பக்கமும் அந்த பக்கமும் சுக்ரீவனும் விபீஷணனும் நின்னுண்டு ராமருக்கு கவரி வீசறா.
அன்னிக்கு ராமர் காட்டுக்கு போன போது கௌசல்யை புலம்பி அழறா, பிச்சை எடுத்துண்டாவது என் கண்ணுமுன்னால இருக்க கூடாதான்னு. ஒரு தப்பும் பண்ணாத என் கொழந்தயை காட்டுக்கு அனுப்பனுமானு சொல்றா. அப்போ சுமித்திரை சமாதானம் சொல்றா. என்ன குறை ராமனுக்குன்னு நீ இப்படி வருத்தப்படற,

த⁴ர்மஸத்யவ்ரதத⁴ன꞉ கிம்ʼ ந ப்ராப்தஸ்தவாத்மஜ꞉ |
சத்தியத்தையும், தர்மத்தையும் வ்ரதமாகவும், தனமாகவும் கொண்ட உன் பிள்ளை என்னத்த இழந்துட்டான், அப்பா பேச்சை கேட்டு காட்டுக்கு போறான் அவ்ளோதானே. அவன் கூட லட்சுமிதேவி மாதிரி சீதை போறா, லக்ஷ்மணன் போறான். அவனுக்கு ஒரு குறையும் கிடையாது. அவன் எங்க போனாலும் இந்திரனுக்கு இந்திரன், வாயுக்கு வாயு, அந்த மாதிரி தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம். காட்டுல அவனை மரங்கள் , அருவிகள் , ஆறுகள் எல்லாமே அவனை வரவேற்று பூஜை பண்ணும். சூரியன் அவனை தஹிக்காது. சந்திரன் போர்வை மாதிரி, அப்பா மாதிரி அவனை அன்பு பாராட்டும். இப்படி அவன் இருக்கப்போறான். அவனை பத்தி கவலைப்படாத அப்படினு சொன்னா. எல்லாரும் அழும்போது சுமித்திரை ஏன் அப்டி சொன்னன்னா அவ ஞானி. அவளுக்கு 14 வருஷம் கழிச்சு, ஒரு வானர ராஜாவும் , ராக்ஷச ராஜாவும் கவரி வீச ராமன் சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் பண்ணிப்பான்னு தெரிஞ்சுது. அதனால தான் அப்படி சொன்னா. அந்த வார்த்தை கௌசல்யைக்கு ஆறுதலா இருந்தது. அப்படி இந்த பட்டாபிஷேக வைபவம். ராமருக்கு பட்டாபிஷேகம் பண்ணா, நம்ப ஒவொருத்தருக்கும் தலைல மகுடம் சூட்டின மாதிரி தான்.தர்மத்துக்கு என்றும் ஜெயம், அப்படிங்கற message . அதனால அடிக்கடி ராமாயணம் படிச்சு, ராம பட்டாபிஷேகம் பண்ணி முடிக்கணும்.
அப்புறம் ராமர் எல்லாருக்கும் பரிசுகள் குடுக்கறார்.சீதாதேவி தன் கழுத்துலேந்து ஒரு முத்து மாலையை, எடுத்து அனுமாருக்கு கொடுக்க விரும்பி எல்லாரையும் பார்க்கறா.ராமரை பார்க்கறா.

தாமிங்கி³தஜ்ஞ꞉ ஸம்ப்ரேக்ஷ்ய ப³பா⁴ஷே ஜனகாத்மஜாம் |
ப்ரதே³ஹி ஸுப⁴கே³ ஹாரன் யஸ்ய துஷ்டாஸி பா⁴மினி ||
பௌருஷம் விக்ரமோ பு³த்³தி⁴ர்யஸ்மின்னேதானி நித்யதா³ |
ஹே சீதே, ஸுபகே. யார்கிட்ட உனக்கு த்ருப்தியோ, யார்கிட்ட பௌருஷம், விக்ரமம், புத்தி எல்லாம் எப்பவும் நெறஞ்சு இருக்கோ அவாளுக்கு கொடு அப்டின்னு சொல்றார். பௌருஷம்ங்கறது – உடல் பலம், விக்ரமம்ங்கறது – தைர்யம், மனோபலம் , புத்தினா – புத்தி.
சீதாதேவி கைல “ராம நாம அன்கிதம் ச ராம நாம அன்கிதம் ச இத³ம் பஶ்ய தே³வி அன்கு³லீயகம் ||” – ராம நாமம் பொறித்த இந்த அங்குலீயத்தை பார் அப்டின்னு கைய நீட்டி காமிச்சார். சீதை அத வாங்கிண்டு கண்ல ஒத்திண்டா.

ராம நாம அன்கிதம் ச இத³ம்  ||
அந்த நிமிஷத்துல சீதைக்கு ஏற்பட்ட சந்தோஷத்துல அவ சொன்னது என்ன,

விக்ராந்த꞉ த்வம் ஸமர்த²꞉ த்வம் ப்ராஜ்ஞ꞉ த்வம் வானர உத்தம |
யேன இத³ம் ராக்ஷஸ பத³ம் த்வயா ஏகேன ப்ரத⁴ர்ஷிதம் ||
ஹே ஹனுமான், விக்ரந்த: த்வம் , சமர்த்த: த்வம், ப்ராக்ஞ: தவம் – நீ தான் உடல் பலமும், மனோபலமும் , புத்தி பலமும் பொருந்தினவன். உன் ஒருத்தனால தான் இந்த காரியத்தை பண்ண முடியும் அப்டின்னு கொண்டாடினா. அப்போ அங்க ராமர் இல்ல. ஆனா அவா ஆதர்ஷ தம்பதிகள் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்க வேண்டாம். அதே வார்த்தைகளை இங்க திருப்பறார் ராமர். அந்த ஹநுமானுக்கு கொடுன்னு சொல்லாம சொல்றார். உடனே சீதை அத ஹனுமானுக்கு கொடுக்கறா . ஹனுமான் அதை போட்டுண்டு மலைமேல் மேகம் போல அந்த முத்து மாலையோட பிரகாசிச்சார் அப்டின்னு ஒரு அழகான ஸ்லோகம்.
இப்படி ராம பட்டாபிஷேகம் முடிஞ்சுது. வந்தவா எல்லாரும் சந்தோசமா ராமர்கிட்ட உத்தரவு வாங்கிண்டு அவா அவா கிஷ்கிந்தைக்கு வனரா எல்லாம் போய் சேந்தா. லங்கைக்கு விபீஷணன் தன் மந்திரிகளோடு போய் சேர்ந்தான். ராமர் அஸ்வமேதாதி யாகங்கள் எல்லாம் பண்ணி 11000 வருஷங்கள் ராஜ்யபரிபாலனம் பண்ணி தர்மத்தை நிலைநாட்டினார்.

ஆஜானுலம்பி³பா³ஹு: மஹாஸ்கந்த⁴꞉ ப்ரதாபவான் |
லக்ஷ்மணானுசரோ ராம꞉ ப்ருʼதி²வீமன்வபாலயத் ||
” ஆஜானுலம்பி³பா³ஹு: ” – முட்டி வரைக்கும் நீண்ட கைகளோடு அந்த அம்பு வில்லை வெச்சுண்டு லக்ஷமணனோடு கூட ராமர் ராஜ்யபரிபாலனம் பண்ணார், அப்டின்னு இதுவரைக்கும் ராம காவியம். அடுத்த 10-15 ஸ்லோகங்கள் ராம ராஜ்யத்தோட பெருமை இந்த சர்க்கத்துல . அப்புறம் ஒரு 10 ஸ்லோகங்கள், ராம சரிதத்தை படிக்கறதோட புண்யம் அதுல வரது.
இந்த ராம ராஜ்யம் எப்படி இருந்ததுன்னா

ஸர்வம்ʼ முதி³தமேவாஸீத்ஸர்வோ த⁴ர்மபரோஅப⁴வத் |
எல்லாரும் சந்தோசமா இருந்தா, ஏன்னா எல்லாரும் தர்ம பராளா இருந்தா.

ராமமேவானுபஶ்யந்த: நாப்⁴யஹின்ஸன்பரஸ்பரம் ||
ராமனையே பார்த்துண்டு ஒருத்தரை ஒருத்தர் ஹிம்சை பண்ணாம இருந்தார்னு வராது.
இந்த எடத்துல அயோத்யா காண்டத்துல

கத²ஞ்சிது³பகாரேண க்ருʼதேனைகேன துஷ்யதி |
ந ஸ்மரத்யபகாராணாம்ʼ ஶதமப்யாத்மவத்தயா ||
ராமன் ஒரே ஒரு உபகாரம் பண்ணா, அதுலயே ரொம்ப சந்தோஷம் ஆய்டுவான் . அவன்கிட்ட 100 அபகாரம் பண்ணாகூட அவன்கிட்ட பொறுமையும், மனவடக்கமும் இருக்கறதால அதெல்லாம் பொருட்படுத்த மாட்டான் , ஏதோ அவாளுக்கு தெரிஞ்சுது அப்டினு விட்ருவான்.
அந்த குணத்தை, எல்லாரும் பாத்துண்டு யாராவது தப்புபண்ணா சரி போனு விட்டுண்டு இருந்தாளாம். அதனால ஒருத்தரை ஒருத்தர் ஹிம்சை பண்ணாம எல்லாரும் சந்தோஷமா இருந்தா.

ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமப⁴வன் கதா²꞉ |
ராமபூ⁴தம்ʼ ஜகா³பூ⁴த்³ராமே ராஜ்யம்ʼ ப்ரஶாஸதி ||
ராமா, ராமா , ராமானு ராமனுடைய கதைகளையே பேசிண்டு உலகம் ராமமயமாக, ஆனந்தமயமாக ஆகிவிட்டது. அந்த தசரதருடைய ராஜ்யத்தை விவரிக்கும் போது பால காண்டத்துல ஆரம்பிக்கும்போது இதுவே இவ்ளோ நன்னா இருக்கே இதுக்கு மேல என்ன ராம ராஜ்யம் இருக்கப்போறதுனு தோணும். ஆனா தசரதர் காலத்துல இல்லாத ஒரு பெருமை ராம ராஜ்ஜியத்துல என்னன்னா ராமன் கதையை அப்போ தானே பேச முடியும். எல்லாரும் ராம கதையை பேசிண்டு, ராம சரித்திரத்தை பேசிண்டு ராமா ராமானு ஆனந்தமயமாக இருந்தார்கள். இன்னிக்கும் ராமருடைய கதையை படிக்கறவாளுக்கு வாழ்வே ஆனந்தம்தான்.
அந்த ராமாயணத்தை படிக்கறதோட பலன், 1-2 ஸ்லோகங்கள் பாக்கலாம்

ப்ரார்தி²தான் ச வரான் ஸர்வான் ப்ராப்னுயாத் இஹ ராக⁴வாத் |
ராமரிடத்தில், இந்த ராமாயணம் படித்து அதன் மூலமா சந்தோஷமா இருக்கற ராமரிடத்தில் பிரார்த்தனை பண்ண வரங்கள் எல்லாம் கொடுப்பார்.

குடும்ப³வ்ருʼத்³தி⁴ம்ʼ த⁴னதா⁴ன்யவ்ருʼத்³தி⁴ம்ʼ ஸ்த்ரியஶ்ச முக்²யாஹ் ஸுக²முத்தமம்ʼ ச |
ஶ்ருத்வா ஶுப⁴ம்ʼ காவ்யமித³ம்ʼ மஹார்த²ம்ʼ ப்ராப்னோதி ஸர்வாம்ʼ பு⁴வி சார்த²ஸித்³தி⁴ம் ||

ஆயுஷ்யமாரோக்³யகரம்ʼ யஶஸ்யம்ʼ ஸௌப்⁴ராத்ருʼகம்ʼ பு³த்³தி⁴கரம்ʼ ஶுப⁴ம்ʼ ச |
ஶ்ரோதவ்யமேதந்நியமேன ஸத்³பி⁴ க்²யாநமோஜஸ்கரம்ருʼத்³தி⁴காமை꞉ ||

ச்ரேயஸை விரும்புகிறவர்கள் “ருʼத்³தி⁴காமை꞉” , “ஶ்ரோதவ்யம்” இதை அடிக்கடி கேக்கணும்.

தே³வாஶ்ச ஸர்வே துஷ்யந்தி க்³ரஹணாச்ச்²ரவணாத்ததா² ||
ராமாயணஸ்ய ஶ்ரவணே துஷ்யந்தி பிதர꞉ ஸதா³ |
ராமாயணத்தை படிக்கறதாலும் , கேட்பதாலும் “தேவா : சர்வே துஷ்யந்தி” – எல்லா தெய்வங்களும். “தேவா:” நா plural , “ஸர்வே தேவா :” – குடும்ப தெய்வம் , இஷ்ட தெய்வம் , கிராம தெய்வம், உங்களுக்கு யாரோ அந்த தெய்வத்துக்கு பண்ணல அப்டின்னா ராமாயணத்தை எடுத்து படிங்கோ அப்டிம்பார் ஸ்வாமிகள். அந்த மாதிரி ராமாயணம் படிச்சா எல்லா தெய்வங்களும் த்ருப்தி அடைவார்கள். “துஷ்யந்தி பிதர: ததா” – பித்ருக்களும் த்ருப்தி ஆவார்கள்.
“விநாயகாஸ்ச ஸாம்யந்தி” – ராமாயணம் இருக்கற எடத்துல எல்லா கஷ்டங்களும் விலகும் அப்படிங்கற ஒரு ஸ்லோகத்துக்கு மஹாபெரியவா,
|
ந புத்ரமரணம்ʼ கிஞ்சித்³த்³ரக்ஷ்யந்தி புருஷா꞉ க்வசித் |
ராம ராஜ்யம் எப்படி இருந்ததுன்னா, எவன் ஒருவனும் தன் புத்திர மரணத்தை பார்க்க வேண்டி வரவில்லை.
நார்யஶ்ச அவித⁴வா நித்யம்ʼ ப⁴விஷ்யந்தி பதிவ்ரதா꞉ ||

பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக, பதிவ்ரதைகளாக இருந்தார்கள்.
“ந அக்³நிஜம்ʼ ப⁴யம்ʼ கிஞ்சித்” – அக்னினால யாருக்கும் ஒரு கேடும், accident உம் வரவில்லை.
“ந அப்ஸு மஜ்ஜந்தி ஜந்தவ꞉” – ஜலத்துல யாரும் முழுகவில்லை
“ந வாதஜம்ʼ ப⁴யம்ʼ கிஞ்சித்” – வாயுனால ஒரு hurricane ஓ , cyclone ஓ ஏதாவது வந்து யாரும் கஷ்டப்பட்டா அப்படிங்கறது கிடையாது
“ந அபி ஜ்வரக்ருʼதம்ʼ ததா²” – திடீர் திடீர்னு புது புது பேர்ல வ்யாதி வந்து, ஜ்வரம் வந்து ஜனங்கள் கஷ்ட படறா. அந்த மாதிரி ராம ராஜ்ஜியத்துல இருக்கலை.
அதாவது ராஜ்யத்தை ராஜ தர்மமாக ஆட்சி பண்ணினா, இந்த மாதிரி கஷ்டங்களெல்லாம் வராது அப்டினு தெரியறது.
“ந சாபி க்ஷுத்³ப⁴யம்ʼ தத்ர” – பஞ்சம் பட்டினி அப்டிங்கறதே இல்ல.
“ந தஸ்கரப⁴யம்ʼ ததா²” – திருட்டு பயம் இல்ல. யாரும் வீட்டை பூட்டவே மாட்டார்கள். ஏன்னா பிறர் பொருள் மேல ஆசைப்படறவா யாருமே கிடையாது.

நக³ராணி ச ராஷ்ட்ராணி த⁴னதா⁴ன்யயுதானி ச ||
எல்லா தேசங்களும் , நகரங்களும் தன தான்யத்தில் நிரம்பி இருந்தது.

நித்யம்ʼ ப்ரமுதி³தா꞉ ஸர்வே யதா² க்ருʼதயுகே³ ததா² |
க்ருத யுகத்தில் இருந்தது போல எல்லாரும் ராம ராஜ்யத்தில் சந்தோசமாக இருந்தார்கள்.

அஶ்வமேத⁴ஶதைரிஷ்ட்வா ததா² ப³ஹுஸுவர்ணகை꞉ ||
க³வாம்ʼ கோட்யயுதம்ʼ த³த்த்வா வித்³வத்³ப்⁴யோ விதி⁴பூர்வகம் | |
நிறைய தங்கத்தை தக்ஷிணையாக குடுத்து 100 அஸ்வமேத யாகங்களை ராமர் பண்ணார்.கோடிக்கணக்கான பசுக்களை விதி பூர்வமாக வித்வான்களுக்கு ராமர் தானம் பண்ணார். இந்த கோதானம் பண்ணும்போது கண்ணுகுட்டியோட தரணும். அந்த மாடு கறவை நின்னவுடனே இன்னொரு கறவை மாட்டை தரணும். அந்த மாதிரி விதி பூர்வமாக பண்ணார்

அஸங்க்²யேயம்ʼ த⁴னம்ʼ த³த்த்வா ப்³ராஹ்மணேப்⁴யோ மஹாயஶா꞉ ||
ப்ராஹ்மணர்களுக்கு கணக்கற்ற செல்வத்தை கொடுத்தார்.

ராஜவம்ʼஶான் ஶதகு³ணான் ஸ்தா²பயிஷ்யதி ராக⁴வ꞉ |
சாதுர்வர்ண்யம்ʼ ச லோகே(அ)ஸ்மின் ஸ்வே ஸ்வே த⁴ர்மே நியோக்ஷ்யதி ||
ராஜ வம்சத்தை நிலைநிறுத்தினார். அந்த மாதிரி ஒரு சக்ரவர்த்தி stableஆ இருந்தா, சிற்றரசர்களும் நல்லபடியா இருப்பார்கள்.

சாதுர்வர்ண்யம்ʼ ச லோகே(அ)ஸ்மின் ஸ்வே ஸ்வே த⁴ர்மே நியோக்ஷ்யதி ||

ப்³ராஹ்மணா꞉ க்ஷத்ரியா வைஶ்யா꞉ ஶூத்³ரா லோப⁴விவர்ஜிதா꞉ |
ஸ்வகர்மஸு ப்ரவர்தந்தே துஷ்டா²꞉ ஸ்வைரேவ கர்மபி⁴꞉ ||
தான் பண்ற கார்யத்துல பெருமையோட , பேராசையில்லாம நாலு வர்ணத்தவர்களும் அவரவருடைய கார்யங்களை ரொம்ப ஸ்ரத்தையா பண்ணிண்டு இருந்தா.
அப்படி ஒரு 20 தலைமுறை 30 தலைமுறை ஒவ்வொரு fieldலேயும் excel பண்ணிண்டே வந்தா அது என்னம்மா இருக்கும்ங்கரதை நம்ப கோவில்ல இருக்கற சிற்பங்களிலும் காவ்யங்களிலும் தெரிகிறது.
அந்த மாதிரி ராமர் எல்லாரையும் அவரவர் காரியங்களில் நிலை நிறுத்தினார்.

த³ஶவர்ஷஸஹஸ்ராணி த³ஶவர்ஷஶதானி ச |
ராமோ ராஜ்யமுபாஸித்வா ப்³ரஹ்மலோகம்ʼ ப்ரயாஸ்யதி ||
“த³ஶவர்ஷஸஹஸ்ராணி” – பத்து ஆயிரம் வருடங்கள்,
“த³ஶவர்ஷஶதானி ச” – பத்து நூறு வருடங்கள்
இங்க நாரதர் வால்மீகி மகரிஷிக்கு கதை சொல்லிண்டு இருக்கார். அப்போ ராமர் தானே ஆட்சி பண்ணிண்டு இருக்கார். வால்மீகி லவ குஷால்க்கு சொல்லி, ராமர் அவாகிட்டேந்தே நேரா கேக்க போறார். அதனால “ப்ரயாஸ்யதி” – ப்ரஹ்ம லோகத்திற்கு போவார் அப்டினு future tense ல சொல்றார்.

இத³ம்ʼ பவித்ரம்ʼ பாபக்⁴னம்ʼ புண்யம்ʼ வேதை³ஶ்ச ஸம்மிதம் |
ய꞉ படே²த்³ராமசரிதம்ʼ ஸர்வபாபை꞉ ப்ரமுச்யதே ||
இந்த பவித்திரமான ராம கதை பாபத்தை போக்க கூடியது, புண்யத்தை கொடுக்க கூடியது “வேதை³ஶ்ச ஸம்மிதம்” – சாஷாத் வேத துல்யமானது. எவன் இந்த ராம சரிதத்தை படிக்கிறானோ அவன் எல்லா பாபங்களிலிருந்து விடுபடுவான்.

ஏததா³க்²யானமாயுஷ்யம்ʼ பட²ன் ராமாயணம்ʼ நர꞉ |
ஸபுத்ரபௌத்ர꞉ ஸக³ண꞉ ப்ரேத்ய ஸ்வர்கே³ மஹீயதே ||
யார் இந்த ராமாயணத்தை படிக்கிறார்களோ, அவன் இவ்வுலகில் தீர்காயுசோடு இருந்து, புத்ரர்களோடும், “सपुत्रपौत्रः” – புத்ரனுடைய பேரன், அதாவது கொள்ளுப்பேரன் வரை , “सगणः” – பந்துக்களோடும் ஸ்வர்கம் போவான்

பட²ன் த்³விஜோ வாக்³ருʼஷப⁴த்வமீயாத் |
ஸ்யாத் க்ஷத்ரியோ பூ⁴மிபதித்வமீயாத் ||
வணிக்³ஜன꞉ பண்யப²லத்வமீயாத் |
ஜனஶ்ச ஶூத்³ரோ(அ)பி மஹத்த்வமீயாத் ||
இதை படிக்கின்ற ப்ராஹ்மணன் “வாக்³ருʼஷப⁴த்வமீயாத் ” – நல்ல வாக்கு வன்மையை அடைவான். நல்ல பண்டிதனாக ஆயிடுவான்
“க்ஷத்ரியோ பூ⁴மிபதித்வமீயாத் ” – க்ஷத்ரியன் பூமிக்கு தலைவன் ஆவான். அதாவது ராஜாவாக ஆவான்
“வணிக்³ஜன꞉ பண்யப²லத்வமீயாத் ” – வைஸ்யர்கள், “பண்யம்” னா – வியாபாரம் . வியாபாரத்தில் நல்ல பலன் அடைவார்கள்
“ஜனஶ்ச ஶூத்³ரோ(அ)பி மஹத்த்வமீயாத் ” – இதை படிக்கும் சூத்திரர்கள் மஹத்வத்தை அடைவார்கள், அவர்களுக்குள் ஒரு தலைவராக இருப்பார்கள் .

அப்படி இந்த சங்க்ஷேப ராமாயணம் 100 ஸ்லோகம், இதுவே ராம கதை ,
“பட²ன் த்³விஜோ வாக்³ருʼஷப⁴த்வமீயாத்” –  ராமாயணம் படிக்கறதுக்கு மேல வாழ்க்கைல வேற பெரிய சந்தோஷம் கிடைக்காது. நம்ப படிக்கறது நம்ப குழந்தைகளுக்கு சொல்றது ரொம்ப ஸ்ரேயஸை கொடுக்கும். விஸ்தாரமா முழு ராமாயணத்தை படிக்கணும் முடிஞ்ச வரைக்கும் படிக்கணும்.

————————————————————————————————

ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோகஸ் துஷ்ட꞉ புஷ்ட꞉ ஸுதார்மிக꞉ |
நிராயமோ ஹ்யரோகஶ்ச துர்பிக்ஷ பய வர்ஜித꞉ || 90 ||

அக் காலத்தில் ஜனங்கள் உடம்பில் மயிர் எழுந்து மனக் களிப்புற்றுத் தாம் விரும்பின விருப்பத்தை எல்லாம் அடைந்து
சந்தோஷத்துடனே உடல் பருத்து தர்மமான நடவடிக்கைகளை நடத்திக் கொண்டு
மன வருத்தமும் சரீரத்தில் ரோகமும் அற்றவராய் ஏழ்மைத் தனத்தினால் உண்டான பயமும் அற்றவர்களாக ஆவர்கள்

ப்ரஹ்ருஷ்ட –பெருமாள் பட்டாபிஷேகத்தால் அனைவருக்கும் ப்ரீதி அதிசயத்தைச் சொல்லி
ஸுதார்மிக꞉ |–கைங்கர்ய ப்ராப்தியைச் சொல்லி
நிராயமோ ஹ்யரோகஶ்ச -கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியைச் சொல்லி
துர்பிக்ஷ பய வர்ஜித–கைங்கர்யத்துக்கு அனுகூலமான ஸம்பத் ஸம்ருத்தியை வர்ணித்தார் ஆயிற்று
————-

ந புத்ர மரணம் கிஞ்சித் த்ரக்ஷ்யந்தி புருஷா꞉ க்வ சித் |
நார்யஶ் சாவிதவா நித்யம் பவிஷ்யந்தி பதி வ்ரதா꞉ || 91 ||

அக் காலத்தில் ஜனங்கள் தங்கள் புத்ர மரணத்தைப் பார்க்கப் போவது இல்லை
பெண்கள் தங்கள் பர்த்தாவின் மரணத்தைப் பாரார்கள்
அவர்கள் இடம் அன்புற்றவராய் இருப்பார்கள்

———-

ந சாக்னிஜம் பயம் கிஞ்சித் நாப்ஸு மஜ்ஜந்தி ஜந்தவ꞉ |
ந வாதஜம் பயம் கிஞ்சித் நாபி ஜ்வர க்ருதம் ததா || 92 ||

ந சாபி க்ஷுத்பயம் தத்ர ந தஸ்கர பயம் ததா |

அக்னியினாலாவது ஜலத்தினிலாவது காற்றினாலாவது ஜ்வரத்தினாலாவது பசியினிலாவது
திருடர்களினாலாவது காற்றினிலாவது எவர்க்கும் எவ்விதமான உபாதையும் உண்டாகாது

————
நகராணி ச ராஷ்ட்ராணி தன தான்ய யுதானி ச || 93 ||

நித்யம் ப்ரமுதிதாஸ் ஸர்வே யதா க்ருத யுகே ததா |

பட்டணங்களில் செல்வமும் -தேசங்களில் தானியமும் -ஸம் பூர்ணமாக உண்டாகப் போகிறது
ஜனங்கள் கிருத யுகத்தில் போலே இந்த த்ரேதா யுகத்திலும் ஸந்தோஷத்தை அடைவார்கள்

————
அஶ்வமேத ஶதைரிஷ்ட்வா ததா பஹு ஸுவர்ணகை꞉ || 94 ||

கவாம் கோட்யயுதம் தத்வா ப்ரஹ்ம லோகம் ப்ரயாஸ்யதி |
அஸங்க்யேயம் தனம் தத்வா ப்ராஹ்மணேப்யோ மஹா யஶா꞉ || 95 ||

ஸ்ரீ ராகவன் அநேக அஸ்வமேத -பஹு ஸ்வர்ணம் போன்ற யாகங்களையும் செய்து
பதினாராயிரம் கோடி கோ தானமும் செய்து பிராமணர்களுக்கு அளவற்ற த்ரவ்யங்களையும் கொடுத்து
பிறகு பர ப்ரஹ்ம ஸ்வரூபமான தன்னுடைச் சோதியை அடையப் போகிறான் –

————

ராஜ வம்ஶான் ஶத குணான் ஸ்தாபயிஷ்யதி ராகவ꞉ |
சாதுர் வர்ண்யம் ச லோகேऽஸ்மின் ஸ்வே ஸ்வே தர்மே நியோக்ஷ்யதி || 96 ||

ஸ்ரீ ராகவன் அநேகம் ஷத்ரியர்களுக்கு இராஜ்யத்தைக் கொடுத்து பரிபாலனம் செய்வார்
நால் வகை வர்ணத்தில் உள்ளாரை அந்த வந்த வர்ணத்துக்கு உரிய தர்மங்களில் நடத்தி வைப்பர்

———–

தஶ வர்ஷ ஸஹஸ்ராணி தஶ வர்ஷ ஶதானி ச |
ராமோ ராஜ்ய முபாஸித்வா ப்ரஹ்ம லோகம் கமிஷ்யதி || 97 ||

பதினோராயிரம் வருஷம் இவ்விதம் ஜனங்களை பரி பாலனம் செய்த பிறகு ஸ்ரீ வைகுண்டத்தை அடையப் போகிறார்

————-

பல ஶ்ருதிகள் :

இதம் பவித்ரம் பாபக்னம் புண்யம் வேதைஶ்ச ஸம்மிதம் |
ய꞉ படேத் ராம சரிதம் ஸர்வ பாபை꞉ ப்ரமுச்யதே || 98 ||

இந்த சங்க்ஷேப ராமாயணமாவது வேதம் போல் தன்னை நியமத்துடன் ஓதுமவர்களுக்குப் புண்ணியத்தை விளைக்கும்
பாபத்தைத் தொலைக்கும் பரி ஸூத்தியை யுண்டாக்கும்
இதை நியமத்துடன் ஓதுகின்றவன் ஸர்வ பாபங்களில் நின்றும் விடுபடுவார்

————–

ஏத தாக்யாநம் ஆயுஷ்யம் படேத் ராமாயணம் நர
ஸ புத்ர பவுத்ரஸ் ஸ கண ப்ரேத்ய ஸ்வர்க்கம் மஹீயதே –99-

ஆயஸ்ஸை வளர்க்கக் கடவதாய் ஸ்ரீ ராமனுடைய முற் கதைகளை உறைகின்ற இந்த பால ராமாயணத்தை நியமமாக ஓதுகிறவன்
புத்ர பவ்தர்களுடனும் பந்து மித்ரர்களுடனும் கூடி இங்கு இருக்கும் நாள் ஐஹிக போகங்களைப் புஜித்துப்
பின்பு ப்ரக்ருதி சம்பந்தத்தை விட்டு வைகுண்ட மா நரனுக்குச் சென்று அங்குள்ளவர்களாலும் பூஜிக்கப் படுவார்கள்

——————-

படன் த்விஜோ வாக்ருஷபத்வமீயாத்
ஸ்யாத் க்ஷத்ரியோ பூமிபதித்வமீயாத் |
வணிக்ஜன꞉ பண்யபலத்வமீயாத்
ஜனஶ்ச ஶூத்ரோऽபி மஹத்த்வமீயாத் || 100 ||

பிராமணன் இந்த சங்க்ஷேப ராமாயணத்தைப் பாடம் செய்தானாகில் ஸகல வேதார்த்தங்களையும் அறிய வல்லனாவான்
ஷத்ரியன் பெரிய ராஜ்யத்தை ஆள வல்ல சக்ரவர்த்தி ஆவான்
வைஸ்யன் வியாபாரத்தில் பெரிய லாபத்தை அடைவான்
நான்காம் வர்ணத்தவன் இத்தைக் கேட்டால் பெரும் தன்மையை அடைந்து புகழப் படுவான்

இத்யார்ஷே ஶ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே பாலகாண்டே ஶ்ரீராமாயண கதா ஸங்க்ஷேபோ நாம ப்ரதமஸ் ஸர்க꞉ ||

———–

ஸ்ரீ ராமபட்டாபிஷேகம்

வஸிஷ்டோ வாமதேவச்ச ஜாபாலிரத காச்யப:
காத்யாயனோ கௌதமச்ச ஸுயஜ்ஞோ விஜயஸ்ததா
அப்யஷிஞ்சந் நரவ்யாக்க்ரம் ப்ரஸன்னேன ஸுகந்தினா
ஸலிலேன ஸஹஸ்ராக்ஷம் வஸவோ வாஸவம் யதா –53

ஆயுஷ்ய மாரோக்யகரம் யசஸ்யம் ஸௌப்ராத்ருகம் புத்திகரம் சுபம் ச
ச்ரோதவ்ய மேதந்நியமேன ஸத்பிராக்க்யான மோஜஸ்கரம் ருத்திகாமை:54

பாராயண ஸமர்ப்பணம்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ப்ய: பரிபாலயந்தாம் ந்யாய்யேன மார்க்கேண மஹீம் மஹீசா:
கோப்ராஹ்மணேப்ப்ய: சுபமஸ்து நித்யம் லோகா: சமஸ்தா: ஸுகினோ பவந்து –55

ஸ்ரீ ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: –56

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி –57

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம் வத
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ –58-

———–

ஸ்ரீ எனும் திருநாமம் ஶ்ருணாதி என்பதைக் காட்டும்.
இங்கே ஹிம்ஸை என்ற சொல் போக்குதல் அல்லது அழித்தல் என்ற அர்த்தத்தில் வந்துள்ளது.
அதனால், ஶ்ருணாதி என்பது அழிக்கிறாள் – அதாவது எல்லா குற்றங்களையும் போக்குகிறாள் என்பதைக் காட்டுகிறது.
ஶ்ரூ-விஸ்தாரே என்பது மிகுதிப்படுத்துகிறாள் என்பதைச் சொல்லுகிறது.
இதிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ எனும் திருநாமம் ஶ்ரூணாதி என்பதைக் காட்டும்.
ஶ்ரூணாதி என்பது விஸ்தரிக்கிறாள் – அதாவது நல்ல குணங்களை அதிகரிக்கச் செய்கிறாள் என்பதை காட்டுகிறது.

பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே |

அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஶ்ச தே ||

——–

மார்க்கா லதா கண்டக ஸம்பூர்ணா: – அதாவது,
காடென்பது செடிகளும் முட்களும் நிறைந்த பாதையைக் கொண்டது.
அங்கிருப்பது துக்கமுடைத்து (அத: வநம் துக்கம்), என்று சொல்லி அவளைத் தடை செய்யும் போது,
பிராட்டியின் வார்த்தை:
“ஓ! இராமனே! நான் வனத்தில் உன் முன்னே நடந்து செல்வேன் – தே கமிஷ்யாமி அக்ரத:.”
அது மட்டுமல்ல. அப்படிச் செல்லும் போது அந்தப் பாதைகளில் உள்ள புற்களையும் முட்களையும்
தலைமிதி யுண்ணும்படி செய்து (குஶ கண்டகாந் ம்ருதந்தி) உன் திருவடிகளுக்கு நான் வழி வகுப்பேன் என்றாள்.

அவள் சொன்ன பாதையும் சாதாரண காட்டு வழியன்று.
அவள் பாதையென்று கூறியது தர்மத்தின் வழி.
அதில் இராமனுக்கு அவள் என்றும் துணையாய் இருப்பாள் என்பதை ஸஹ தர்மசரீ தவ என்றானிறே ஜனகனும்.
இராமாயணத்தில் தொட்டவிடமெங்கும் எம்பெருமான் காட்டும் தர்மம் சரணாகதி தர்மம் என்று
ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
ஆக பிராட்டி அவனுடன் காட்டுக்குச் சென்றது அந்தச் சரணாகதி தர்மத்தைக் காப்பாற்றவே.

அதைக் கொண்டு நோக்கும் போது, முன்னே சென்று அதைக் கடைப்பிடிப்பேன் என்றதையே
செய்திருக்கிறாள் என்பது தெளிபு.
தனிச்சிறையில் விளப்புற்ற கிளிமொழியாள் என்றார் ஆழ்வார்.
சிறை இருந்தவள் என்றார் பிள்ளை உலகாரியனும்.
அதற்காக, இராமனுக்கும் முன்னாக இலங்கைக்குச் சென்றதையே அவள் உமக்கு முன் நான் நடப்பேன் என்றது.
அப்படி அவள் எம்பெருமானுடைய தர்ம மார்க்கத்தில் போகும் போது, இடையில் இருக்கும்
முள்ளும், புல்லும் அவன் திருவடிக்கு – அதாவது அவன் திருவடியில் செய்யும் சரணாகதிக்கு
தடையாம்படி இருக்கும் என்றும், அதை தலை மடியச் செய்வதே தன் கார்யம் என்றும் சொன்னாள்.

இங்கே புல்லும், முள்ளுமாய் இருப்பது என்று அவள் சொன்னது அந்த ராவணப் பயலையன்றோ.
ராவணன் இவ்வுலகிற்கு ஒரு முள்ளாய் இருந்தான் என்று வேண்டித் தேவர் இரக்கவும், அவனும் விரும்பிப் பிறந்ததுவும்.
அவன் புல்லாயும் இருக்கிறான் என்பதாலேயே பிராட்டி த்ருணம் அந்தரத: என்று அவனுக்கும் தனக்கும் இடையே ஒரு புல்லை இட்டுப் பேசியது.
த்ருணமந்தர: க்ருத்வா என்று அஜ்ஞனாயிருக்கிற உன்னை, த்ருணமிவ லகு மேநே என்று
இத்ருணத்தோ பாதியாக நினைத்திருப்பது என்று பொகட்டாளாகவுமாம் என்றார் பெரியவாச்சான் பிள்ளை.

இப்படி புல்லாயும், முள்ளாயும் இருக்கும் அவனையும் அவன் அஹங்காரத்தையும் தலை மடியச் செய்து
அவனை இராமனின் திருவடியில் சேர்ப்பித்து, அத்திருவடிகளுக்கு ஒரு நோவும் வாராதபடி,
அதாவது நிறம் பெறச் செய்வேன் என்று பிராட்டி எம்பெருமானுக்கு உரைத்தாள்.
அப்படியே சிறை இருந்தும், மித்ரம் ஔபயிகம் கர்த்தும் என்றும்
தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி என்றும் உபதேசித்தும் தலைக்கட்டினாள்.
ஆனால் அவன் திருந்தாதொழிந்தது அவனுடைய பாபப்ராசுர்யமிறே என்றார் பிள்ளை லோகாசார்யர்.

இப்படி இலங்கைக்கு முன்னே நடந்து சென்றது மட்டுமன்று.
பெருமாள் “நாம் அதிகரித்த கார்யத்துக்கு ஸஹகாரியாக வேணுமே” என்ன,
அதிலும் அநுஷ்டானத்திலும் முற்பாடை என்கிறான் (ஜனகன்) என்றார் பெரியவாச்சான் பிள்ளை.
அவனுடைய தர்மத்துக்கு அவள் ஸஹகரிக்கையாவது, சரணாகத ரக்ஷணத்வத்தில்
அவனைக் காட்டிலும் முன்னிற்பவளாய் இருப்பாள் என்றது.

மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந என்றவனைக் காட்டிலும்,
முன்னின்று
பாபாநாம் வா ஶுபாநாம் வா என்று சரணம் அடையாத ராக்ஷஸிகளையும் ரக்ஷித்தவள் பிராட்டி.
இதை ஸ்ரீகுணரத்நகோசத்தில், பட்டரும்
மாதர் மைதிலி என்ற ஶ்லோகத்தில் அபராதம் செய்த கை உலராமலிருந்த ராக்ஷஸிகளை ரக்ஷித்த
உன்னால் சரணம் என்று சொன்ன பின் ரக்ஷித்த ராம கோஶ்டி சிறிதாக்கப்பட்டது என்றார்.

இதுவே அவள் காட்டிலே எம்பெருமானுக்கு முன்னே நடந்த நடையும், நடந்து கொண்டமையுமாம்.

————————————————————————————

ஸ்ரீ ராமசந்த்ரனின் 16 கல்யாண குணங்கள்

ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்ரீ நாரத மகரிஷி இடம் -கோநு அஸ்மின் சாம்ப்ரதம் லோகே –குணவான் -வீர்யவான் –16 கல்யாண குணங்கள்
ஸ்ரீ ராம சந்தரன் -குணா பரிவாஹாத்ம நாம் ஜன்ம நாம் –

கோனு அஸ்மின் சாம் ப்ரதம் லோகே குணவான் வீர்யவான் |
தர்மக்ஞ்ச: க்ரிதஞ்ச: சத்யவாக்ய: த்ரிடவிரத: ||–2-

அஸ்மின் லோகே – இந்த உலகத்தில்
சாம்ப்ரதம் லோகே – தற்காலத்தில்
தர்மக்ஞஸ்ச’ – தர்மங்களை அறிந்தவர்.
‘க்ருதக்ஞஸ்ச’ – செய்த நன்றியைப் பாராட்டுபவர்.
ஸத்யவாக்ய:’ – பொய்யே பேசாதவர். எப்பொழுதும் மனோ, வாக், காயத்துனால உண்மையே பேசுபவர்.

சாரித்ரேண ச கோ யுக்த: சர்வ புதேஷு கோ ஹித: |
வித்வான் க: க: சமர்தஸ்ச: ஏக பிரிய தர்சன: ||–3-

——–

ஆத்மவான் ஜிதக்ரோத: த்துதிமானு அன் அசூயக: |
கஸ்ய பிப்யதி தேவா: ச ரோஷஸ்ய சங்க்யுகே ||–4-

கஸ்ய பிப்யதி தேவா: ச ரோஷஸ்ய சங்க்யுகே–யுத்தத்தில் எவர் கோபம் கொண்டால் தேவர்கள் கூட
பயப்படுவாளோ அப்பேற்பட்ட பராக்கிரமம் – சமுத்திர ராஜனே பயந்தான் அன்றோ !

—————

1- க குணவான் –

வசீ வதான்ய குணவான் ருஜூ சுசி –சமஸ்த கல்யாண குணாம் ருதோததி–ஸ்தோத்ர ரத்னம் -18-
குணவான் -சீலவான் என்றபடி –
சீல க ஏஷ தவ ஹந்த –அத்ர அவதீர்ய ந நு லோசந கோசர பூ -அதிமாநுஷ ஸ்தவம் -10-
பிறந்தவாறும் -உருகும் படி திருவவதரித்த சீல குணம் -ஏழை எதலன் கீழ் மகன் என்னாது இரங்கி –சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –
தத்ர ராஜா குஹோ நாம் ராமஸ்ய ஆத்ம சமஸ் சகா –தம் ஆர்த்தஸ் சம் பரிஷ்வஜ்ய குஹோ ராகவம் அப்ரவீத் –
குகனொடும் ஓர் ஐவரானோம் முன்பு பின் குன்று சூழ்வான் -மகனொடும் ஓர் அறுவரானோம்
எம்முழை யன்பின் வந்த அகனமர் காதலையந நின்னோடும் எழுவரானோம் புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் தந்தை -கம்பர்
நிஷாதா நாம் நே தா கபி குலபதி காபி சபரீ-பெருமாள் ஸ்ரீ சபரி கையாலே அமுது செய்து அருளினார்
ரகுகுல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் -சபர்யா பூஜிதஸ் சமயக் ராமோ தசரதாத்மஜா —என்னும்படி
வேடுவிச்சியாய் வைத்தே குரு சுசுருஷையிலே பழுத்து ஜ்ஞாநாதிகையாய்-தன நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம்
இங்குத்தைக்கு என்று சஞ்சயித்துக் கொண்டு வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி தன ஆதார அனுகுணமாக
தன கையாலே அமுது செய்யப் பண்ண அதி சந்துஷ்டராய் அமுது செய்தார் –
நஹி வர்த்தே ப்ரதிக்ரஹே-என்று குகன் இடம் மறுத்த பெருமாள் -இங்கே அர்ச்சி தோஹம் த்வயா பக்த்யா -உகந்து இவள் சமர்ப்பனையை ஏற்றுக் கொண்டார்
கபந்தன் பெருமாள் இடம் -ஸ்ரமணீ சபரீ காகுத்ஸத சிரஞ்சீவிநீ த்வாம் து தர்மே ஸ்திதா நித்யம் –என்றும்
ஸ்ரமணீம் தர்ம நிபுணாம் அபி கச்ச –தர்மம் என்றது குரு சுஸ்ருஷ்யையே
பெருமாளும் சபரி இடம் -கச்சித் தேகுரு சுஸ்ருஷா சபலா சாருபாஷிணி-இந்த தர்மம் இருந்ததால் தான் சபரி இடம் அமுது கொண்டு அருளினார் பெருமாள்
பகவதி பரத்வாஜே புக்திஸ் ததா சபரி க்ருஹே -தேசிகன் –
கோயம் குண கதரகோடிகத கியான் வா கஸ்ய ஸ்துதே பதம் அஹோ பத கஸ்ய பூமி -அதி மானுஷ ஸ்தவம் -27
-திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் -பஞ்சு எனச் சிவக்கும் மென்கால் பாவையை பிரித்த பாவி வஞ்சன்
-ராவணனை இன்று போய் நாளை வா -என்ற குணமும் சீலம்
-கச்சா நுஜா நாமி ரணார் திதஸ் தவம் பிரவிச்ய ராத் ரிஞ்சிர ராஜ லங்காம் ஆச்வாச்ய நிர்யாஹி –
சீலவத்தை யாகிறது அபிஷேக விக்னம் பிறந்தது என்று வெறுப்பு இன்றியே -வன வாஸோ மஹோ தய -என்று காடு ஏறப் புறப்பட்டுப் போவது
-ஆவாசம் த்வஹமிச்சாமி -என்று ரிஷிகள் பக்கலிலே தாழ நிற்பது
-கிங்கரௌ சமுபஸ்திதௌ-எனபது-ஜன்ம வருத்தங்களில் குறைய நிற்கிறவர்களை -உகந்த தோழன் எனபது
-இப்படிகளாலே சீலவதியை மூதலித்தது-அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா –

———-

2-க வீர்யவான்

வீர்யம் சௌர்யம் பராக்கிரமம் -சௌலப்யத்தை அனுசந்தித்து உருகி ஈடும் எடுப்பும் இல்லாத மேன்மையை அனுசந்தித்து தரிக்க அடுத்த குணம் இது
-ஜய ஜய மஹா வீர -வீர ராகவன் –
அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
சத்ரோ ப்ரக்க்யாத வீர் யஸ்ய ரஜ்ஞ நீயச்ய விக்ரமை -யுத்த -106-6-ராவணன் வார்த்தை
சின்னம் பின்னம் –ராம சஹஸ்ராணி –காகுத்ச்தம் ஏகமேவ
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கறந்து உள்ளும் தோறும் தித்திப்பான் – –உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே –
வேகம் மிக்கவாறே இந்த்ரிய சம்யோகத்துக்கு இடம் இல்லாத படி யாகையால் ரூப க்ரஹணம் அரிதாகி உருக்கெட வாளி பொழிந்த ஒருவன் என்று அன்வயம்
வ்யாபரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்கு பிடி படாது ஒழிகை –
கிள்ளிக் களைந்தானை –தலை பத்து உதிர ஒட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் –
வாலீ வானர புங்கவ –சர ஏணை கேந வானர -அசஹாய சூரன் -சதுர்தச சகஸ்ராணி — ஏகச்ச ராமோ தர்மாத்மா கதம் யுத்தம் பவிஷ்யதி
மரணாந்தானி வைராணி நிர்வ்ருத்தம் -ந பிரயோஜனம் -க்ரியதாம் அஸ்ய சம்ச்காரோ மமாப்யேஷ யதா தவ
-விபீஷணோ வா ஸூக்ரீவ யதி வா-இவன் விலக்காது ஒழிவான் என்பதே நாம்பார்த்த பிரயோஜனம்
ரஷ்யா அபேஷம் ப்ரதீஷதே –
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்கிரமம் -தான் விகாரம் அடையாமல் அனைவரைகளையும் விகாரம் அடையச் செய்பவன் வீர்யவான் –

———-

3-க தர்மஜ்ஞ
தர்மம் அறியா குறும்பன்
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருத –கருணா காகுத்ச்த
காருண்யம் கருணா க்ருணா க்ருபா தயா அநு கம்பா ஸ்யாத் அனுக்ரோசோபி-ஏழு பதங்கள் பர்யாயம்
துக்கத்தில் நடுங்குபவனை கண்டு தானும் நடுங்குதல் அனுகம்பா -அழுபவனைக் கண்டால் அழுபவன் அனுக்ரோசம்
வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித உத்சவேஷூ ச சர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி -அயோத்யா -2-40-
விகர்த்தா -சகஸ்ர நாமம் –
பிராணா தார்த்தி ஹரன் -கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசினாம் ருணம் ப்ரவ்ருத்த மிவ மே ஹ்ருதயாத் நாப சர்ப்பதி —
இத்யேவ மார்த் தஸ்ய ரகுப்ரவீர ச்ருத்வா வாஸோ வால்யநுஜஸ்ய தஸ்ய -சஞ்ஜாத பாஷ்ப பரவீர ஹந்தா ராமோ முஹூர்த்தம் விமாநா பபூவ
–ஸூ க்ரீவன் அழுகை ஓய்ந்தபின்பும் பெருமாள் கண்ணீர் பொழிந்தார்-மதி எல்லாம் உள் கலங்கி நின்றார்
இயம் ஸீதா சஹ தர்ம சரீ தவ –நமது கல்யாணத்தில் இமாம் கன்யாம் தர்ம பிரஜார்த்தம் வ்ருணீ மஹே-
விதி தஸ் ச ஹி தர்மஜ்ஞஸ் சரணாகத வத்சல-சம் ரஷைணைக வ்ரதி தரமோ விக்ரஹவான் –
ஆவியைச் சனகன் பெற்ற வன்னத்தை அமிழ்தின்வந்த தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும் செய்கை –
வதார்ஹம் அபி காகுத்ச்த க்ருபயா பர்யபாலயத் –கிருபா -பிராட்டிக்கு வாசகம் -லஷ்ம்யா சஹ ஹ்ருஷிகேசோ தேவ்யா காருண்யரூபயா
-அனுக்ரஹமயீம் வந்தே நித்யம் அஜ்ஞாத நிக்ரஹம் -இவள் சந்நிதியாலே காகம் தலைப் பெற்றது -அது இல்லாமையாலே ராவணன் முடிந்தான் –

———-

4-க க்ருதஜ்ஞ-
கருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு –
நின்று தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்
வெறிதே அருள் செய்பவர் -மனிதனாக வந்த இடத்தில் உண்ட குணம் அன்றோ
ஸூ க்ரீவன் அனுப்பியே திருவடி
பம்பா தீரே ஹ நு மதோ சங்கதோ வாநரேண ஹ -இந்த செயலுக்கு நன்றி பாராட்டியே லோக நாத புரா பூத்வா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி
-ஸூக்ரீவம் சரணம் கத –
விபீஷணனை ராவணன் குல பாம்சனம் என்றான் பெருமாள் இஷ்வாகு வம்சராக நினைத்து வார்த்தை அருளிச் செய்தார் –
ஆக்க்யாஹி மம தத்வேன ராஷசா நாம் பலாபலம்-செல்வா விபீடணற்கு வேறாக பல்லானை
க்ருதம் ஜா நாதி இதி க்ருதஜ்ஞ-சாஸ்திரமும் விதியாதே நாமும் அறியாதே இருக்கிற வித்தை ஸூ க்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் என்னில்
நாம் அன்று ஈஸ்வரன் என்று கேட்டு இருக்கையாய் இருக்கும் –யாத்ருச்சிக்க -ஆநு ஷங்கிக-ப்ரா சங்கிக

————-

5-க சத்ய வாக்ய

ஷமா சத்யம் தமச் சம –சத்யம் பூதஹிதம் ப்ரோக்தம் -சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ன் ப்ரூயாத் சத்யம் அப்ரியம்
வீதஹவ்யன் -ப்ருகு மகரிஷி இடம் ஒழிந்த கதை -நே ஹா அஸ்தி ஷத்ரிய கச்சித் சர்வே ஹீமே த்விஜாதய
தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம் -ஸூ ஷ்ம பரம துர்ஜ்ஞேயஸ் சதாம் தர்ம பிலவங்கம
தத் ப்ருஹி வசனம் தேவி ராஜ்ஞோ யதபி காங்ஷிதம் -கரிஷ்யே பிரதிஜாநேச ராமோ த்விர் நாபி பாஷதே –கைகேயி இடம் பெருமாள் வார்த்தை
அந்ருதம் நோக்த பூர்வம் மே நச வஷ்யதே கதாசன -ஏதத் தே பிரதிஜா நாமி சத்யே நைவச தே சபே -கிஷ்-7-22- ஸூக்ரீவன் இடம் /மீண்டும் கிஷ்-14-14
–முன்பே வரப்ரதானத்தைப் பண்ணி வைத்து இப்போதாக மறுக்க ஒண்ணாது என்று ஆபாசமான சத்ய தர்மத்தைப் பற்றி நின்று
-ராமோ விக்ரஹவான் தர்ம –என்கிற பெருமாளோடு கூடி வாழ இருந்த பேற்றை இழந்த தசரத சக்கரவர்த்தியை போலே
இங்கே இல்லை என்ற தாதி பாண்டன் தனது தயிர் தாழி உடன் மோஷம் பெற்றான்
சத்யேன லோகன் ஜயதி தீ நான் தா நேன ராகவ குரூன் சுச்ரூஷயா தீரோ தாநுஷோ யுதி சாத்ரவான் -சத்ய வாக்காலே சகல லோகங்களையும்
தானிட்ட வழக்காக கொண்டார் பெருமாள் இதனாலே மயா த்வம் சமநுஜ்ஞாதோ கச்ச லோகன் அனுத்தமான் –
மா ச லஷ்மண சந்தாபம் கார்ஷீர் லஷ்ம்யா விபர்யயே-ராஜ்யம் வா வனவாசோ வா -வனவாசோ மஹோதய –அயோத்யா -22-29-
-வனவாசமே உகந்தது என்றபடி
ராஜ்யாத் பரம்சோ வநே வாஸோ நஷ்டா ஸீதா ஹதோ த்விஜ-யீத்ருசீயம் மமா லஷ்மீ நிர்தஹேதபி பாவகம் -ஆரண்ய -67-25-என்று
புலம்புவது எவ்வாறு பொருந்தும் பிராட்டி பிரிந்து மகாராஜர் இழந்த துக்கத்தால் அன்றோ இந்த வார்த்தை –

———-

6- க த்ருட வ்ரத–திடமான வரதம் கொண்டவன்
சரணாகத வத்சல்யன் –
நிஷ் கிஞ்சன ஜன ஸ்வயம் ரஷா தீஷா சமாதிக சமிந்தானயசசே -சர்வ அவஸ்த ச்க்ருத் பிரபன்ன ஜநநா சம்ரஷணை கவ்ரதீ
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம்வா சீதே ச லஷ்மணாம் ந து பிரதிஜ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத -ஆரண்ய -10-19-
சத்ரு சஞ்சா நுரூபஞ்ச கு லஸ்ய தவ சாத்மன-ச தர்ம சாரிணீ
மே த்வம் பிராணே ப்யோபி கரீயசீ -10-22-
கபோத உபாக்யானம் -வ்யாக்ரவா நர சம்வாதம்
மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேவத கர்ஹிதம்
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வரதம் மம –

————-

7–சாரித்ரேண ச கோ யுகத –
சாரித்ரம் -நல் நடத்தை -சரித்ரம் நீண்டு சாரித்ரம்
ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதமஜாம்
இமௌ ஸ்ம முனிசார்தூல -கிங்க ரௌ சமுபஸ்தி தௌ ஆஜ்ஞா பய யதேஷ்டம் வை சாஸ நம் கரவாவ கிம்
ந மே ஸ்நானம் பஹூ மதம் வஸ்த்ராணி ஆபரணாநி ச -தம் வி நா கைகயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணம்
பரத்வாஜச்ய சாசநாத் –
பித்ருவசன நிர்தேசாத் –
விச்வாமித்ரஸ்ய வசனாத் –
அகஸ்த்ய வசனாத் -சைவ –
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே யாள நீ போய்த் தாழிரும் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற் கொண்டு
பூழி வெங்கான நண்ணிப் புண்ணியப் புனல்களாடி ஏழ் இரண்டு ஆண்டின் வா வென்று
இத்தை மீறி நடக்க உபதேசித்த ஜாபாலி முனிவர் வசனம் கேட்காத பெருமாள்
மாத்ரு தேவோபவ பித்ரு தேவோ பவ –
ந தேம்பா மத்ய மாதாத கர்ஹி தவ்யா கதஞ்சன -தாமேவ இஷ்வாகு நாதஸ்ய பர தஸ்ய கதாம் குரு –
கௌசல்யா ஸூ ப்ரஜாராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே -உத்திஷ்ட நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவமாஹ் நிகம் -நித்ய கர்மானுஷ்டங்களில் நிஷ்டன்
ஆச்வாசிதோ லஷ்மணேன ராமஸ் சந்த்யாம் உபாசத ஸ்மரன் கமலா பத்ராஷீம் சீதாம் சோகாகு லீக்ருத -பிராட்டியை பிரிந்த காலத்திலும்
அக்னிம் சம்சமயது ஆர்ய -ஹோம புகை கண்டு பரதன் அடையாளம் காணாமல் இருக்க அக்னியை அனைத்து விடும்படி சொல்லுகிறார் பெருமாள்-
வேல் வெட்டிப் பிள்ளைக்கு பிள்ளை யருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-
சாரித்ரம் தெய்வ பக்தி -சஹ பத்ன்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -அயோத்யா -6-1-
த்யாயன் நாராயணம் தேவம் –மேலேயும் உண்டு
லப்த்வா குலதனம் ராஜா லங்காம் ப்ராயாத் விபீஷண-யுத்த -131-85-
ஸ்ரீ ரெங்கே ந்தோ பதகி சலயே–ஹேமாம் போஜைர் நிபிட நிகடே ராம சீதோ ப நீதை-பெருமாள் அர்ச்சனை செய்த புஷ்பங்கள் இன்றும்
பெரிய பெருமாள் திருவடிகளில் காணலாம் பட்டர்
சர்க்காப்யாச விசாலாய நிஜதியா -ஸ்லோஹத்தில் ப்ரஹ்மாவால் ஆராதிக்கப் பட்டவன் -அதற்கு மேலே
ம நு குல மஹீ பால –மைதிலீ ரமணவபுஷா ஸ்வேன ச்வார்ஹாணி ஆராத நானி அஸி லம்பித்த -ஸ்ரீ ஸீதா பெருமாள் ஆராதித்து பின்பு
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு கிடைத்ததை மேலே பட்டர் உத்தர சதகத்தில் அருளுகிறார்
சாரித்ரம் ஒரே தாரம் கொண்டவன் என்றுமாம்

——-

8-சர்வ பூதேஷு கோ ஹித

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளான் பால் –
சிலரை ஸூ கிகலாகவும் சிலரை துக்கி களாகவும் ஸ்ருஷ்டித்தால் ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராதோ என்னில்
-கர்மம் அடியாகச் செய்கையாலும் மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறியிட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே ஹித பரநாகச் செய்கையாலும் வாராது
பெறலரும் திருப் பெற்று உதவி உதவிப் பெரும் திறன் நினைந்திலன் சீர்மையினன் தீர்ந்தனன் –
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம் மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான் -ஸூ க்ரீவனுக்கு ஹிதம் செய்யவே இளைய பெருமாளை அனுப்பினான்
ஹரிர் துக்கானி பக்தேப்யோ ஹித புத்த்யா கரோதி வை —சாஸ்திர வாக்யம் அன்றோ –

———-

9-க வித்வான் –

வேத வேதாங்க தத் வஜ்ஞ தனுர் வேதேச நிஷ்டித சர்வ சாஸ்த்ரார்த்த தத்ளஜஞ ச்ம்ருதிமான் பிரதிபானவான் -என்கிறார் நாரதர்
வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்த யுன் பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ ஓதங்கள் கடல் அன்றி
ஒன்றினோடு ஓன்று ஒவ்வாப் பூதங்கள் தோறும் உறைந்தால்
அவை யுன்னைப் பொறுக்குமோ –விராதன் ஸ்தோத்ரம்
ஆதிப் பிரமனும் நீ ஆதிப் பரமனும் நீ ஓதி யுறு பொருளுக்கு அப்பால் உண்டாயினு நீ சோதிச் சுடர்ப் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற
வேத முரை செய்தால் வெள்காரோ வேறுள்ளார்-கவந்தன் ஸ்தோத்ரம்
வேத வேத்யே பர் பும்சி ஜாதே தசரதாத்மஜே
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்கிரமம் வசிஷ்டோபி மஹா தேஜா யேசேமே தபசி ஸ்திதா –
வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம்
இருந்தாலும் ஆத்மானம் மானுஷம் மத்யே ராமம் தசரதாத்மஜம்
வித்வான் -சர்வஜ்ஞன் -என்றபடி -உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி -கருதரிய யுயிர்க்கு யுயிராய் கரந்து எங்கும் பரந்து
உறையும் ஒரு தனி நாயகம் என்றால் உன் பெருமைக்கு அளவாகுமோ
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாம் எதத கர்ஹிதம் -குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் -என்பதாலும் வித்வான் இவனே என்றதாயிற்று

———

10-க சமர்த்தா

தீன பந்து தீன தயாளு -என்பதாலே ஸூ க்ரீவன் உடன் நட்பு கொண்ட சமர்த்தன் -இளையவர்கட்கு அருளுடையாய் இராகவனே
–தம்பிகள் மட்டும் அல்ல -இளைத்தவர்கள் என்றுமாம்
சிலையும் கணையும் துணையாக சென்றான் வென்றிச் செருக்களத்து
-அங்குல் யகரேண தான் ஹன்யாம் இச்சன் ஹரி கணேஸ்வர
அசமர்த்தம் விஜா நாதி மா மாயம் மகராலய -தனது திரு வாக்காலே அசமர்த்த புருஷனாக கட அரசன் கருதினான் என்று சொல்லும் படி
சரணாகதியை விளக்கி அருளவே சமுத்திர அரசன் இடம் சரண் அடைந்தார் அன்று ஈன்ற கன்றான விபீஷண ஆழ்வான் சொல் படியே பண்ணி அருளிய சமர்த்தன்

———–

11- ஏக ப்ரிய தர்சன க —

எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமே
ரமயதி ராமன் -சந்த்ரகாந்தாநநாம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம் ரூபா ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்
ந ததர்ப்ப சமாயாந்தம் பச்யமாதோ நராதிப -அயோத்யா -3-28-
சந்த்ரனை விட காந்தி உள்ளவன் -பும்ஸாம் -தண்டா பூபிகா நியாயம் -அனைவருக்கும்
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் -கம்பர்
வாராக வாமனனே அரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக வாதரம் செய்வன் -திருவரங்கத்தந்தாதி
பெண்டிரும் ஆண்மை வெக்கிப் பேதுரு முலையினாள்–சீவக சிந்தாமணி
கௌசல்யா ஸூ பிரஜாராமா -முனிவன் உண்ணப் புக்கு வாயை மறப்பாரைப் போலே தான் அதிகரித்த காரியத்தை மறந்து பெற்ற வயிற்ருக்குப் பட்டம்
கட்டுகிறவனாய் ஒரு திருவாட்டி பிள்ளை பெற்ற படி என்னே -என்று ஸ்ரீ கௌசல்யாரைக் கொண்டாடுகிறான் -வடிவு அழகு படுத்தும் பாடு
தோள் கண்டார் தோளே கண்டார் தோடு கழல் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அக்தே வாள் கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார் ஊழ் கண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார் –
வா போகு வா வின்னம் வந்து ஒரு கால் கண்டு போ –
ரூப சம்ஹ நனம் லஷ்மீம் சௌகுமார்யம் ஸூ வேஷதாம் தத்ருசுர் விச்மிதாகாரா ராமஸ்ய வனசாரிண-வன வாசின –
தருனௌ ரூபா சம்பன்னௌ ஸூ குமாரௌ மஹா பலௌ புண்டரீக விசாலாஷௌ சீர கிருஷ்ணா ஜி நாம்பரௌ
கந்தர்வ ராஜ ப்ரதிமௌ பார்த்திவவ் யஜ்ஞா நான்விதௌ-சூர்பனகை
ஓவியத் எழுத ஒண்ணா உருவத்தாய் -வாலி
ஆயதாச்ச ஸூ வ்ருதாச்ச பாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா -திருவடி
மஞ்செனத் திரண்ட கோலமேனிய மகளிக்கு எல்லாம் நஞ்செனத் தகையவாகித் நளிரிரும் பனிக்கு தேம்பாக்க கஞ்ச மொத்த லர்ந்த கண்ண -கம்பர்
தம் பத்ம தள பத்ராஷம் சிம்ஹ விக்ராந்த காமி நம் தன்யா பச்யந்தி மே நாதம் க்ருதஜ்ஞம் ப்ரியவாதி நம் –வால்மீகி
பத்ம தளம் பத்ம பத்ரம் இரண்டும்
செங்கமலத் தலர் போலும் கண் கை கால் செங்கனிவாய் அக்கமலத்திலை போலும் திருமேனி யடிகளுக்கே
அஷம் இந்த்ரிய காயயோ-கண்ணுக்கும் வடிவுக்கும்
சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் -ஆண்டாள்
திரு உள்ளத்து அழகைக் காட்டி திருத்தவே அணை கட்டி இலங்கைக்கு வந்தார் பெருமாள் -தன பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் அன்றோ
ஏக ப்ரிய தர்சனன் -இனிமையாக கண்டு கொண்டு இருக்கத் தக்கவன்
யச்ச ராமம் ந பச்யேத் து யஞ்ச ராமோ ந பச்யதி நிந்தி தஸ் ஸ வஸே லோகே ஸ்வாத் மாப்யே நம் விகர்ஹதே –
சபரி -சஷூஷா தவ சௌம்யேன பூ தாஸ்மி ரகு நந்தன –
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய் –
விரும்பிக் காணத் தக்க அழகன் என்றும் அன்பர்களை விரும்பிக் காண்பவன் என்றுமாம் –

———–

12- ஆத்மவான் க –

ஆத்மா ஜீவே -த்ருதௌ தேஹே சவ பாவே பரமாத்மநி –நிகண்டு -ஜீவாத்மா -தைரியம் -உடல் -இயல்பு பரமாத்மா
பிதரம் ரோசா யாமாச -சகல ஆத்மாக்களுக்கும் சேஷி என்றுமாம்
இமௌ ஸ்ம முனிசார்தூல கிங்கரௌ சமுபஸ்திதௌ -ஆஜ்ஞா பய யதேஷ்டம் வை சாஸ நம் கரவாவ கிம் –
கிங்கரன்-என் செய்வேன் என் செய்வேன் -என்னுபவன்-என் செய்தான் என் செய்தான் -என்னப் படுபவன்
பிசாசான் தாநவான் யஷான் ப்ருதிவ் யாஞ்சைவ ராஷசான் -அங்குல் யக்ரேண தான் ஹன்யாம் இச்சன் ஹரி கணேஸ்வர
பரதச்ய வச குர்வன் யாசமா நஸய ராகவ -ஆத்மானம் நாதி வர்த்தே தாஸ் சத்ய தர்ம பராக்கிரம -தேவும் தன்னையும் -திருவாய் மொழி
தேவி -ஐஸ்வர்யம் -தன்னையும்-ஆஸ்ரித பாரதந்த்ர்யம்
ஆத்மா பூதம் பரதம் நாதி வர்த்ததே -பூர்வர் -பட்டர் நீரான தன்மை யாகிறது ஆஸ்ரித பாரதந்த்ராகை
-உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான தன்மையை இழவாதே கொள்ளும் என்கிறான் என்று -இத்தால் பக்த பராதீனன் என்கிறது
பரமாத்மாவின் தன்மையையும் காட்டிய அவதாரம் அன்றோ
ஸ ஹி தேவை ருதீர்ணஸய ராவணஸ்ய வதார்த்திபி -அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்க்னே விஷ்ணுஸ் சநாதன
மயா த்வம் சம நு ஜ்ஞாதோ கச்ச லோகா ந நுத்தமான் –

———

14- க த்யுதிமான்

13-கோ ஜிதக்ரோத —16-கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோ ஷஸ்ய சம்யுகே -சேர்த்து பின்னர் பார்ப்போம்
த்யுதி -ஒளி-ராம திவாகரா -ராம ரத்னம் -மணியே மாணிக்கமே -அனந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா –
அனந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண பிரபா யதா —
நித்ய அநபாயினி-கிருஷ்ணா ஜிநேந சம்வ்ருண் வன் ச்ரியம் வஷஸ்தலஸ்திதாம் -மான் தோலினால் மறைத்துக் கொண்டானே
இவளோடு கூடியே வஸ்துவினுடைய உண்மை -அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் -திருவில்லாத் தேவரை தேறேல் மின் தேவு
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிது ரசியத்பாத சிஹ்நைஸ்
தரந்தி –பூர்ணம் தேஜ ச்புரதி பவதீ பாதலா ஷார சாங்கம் –
ஒளி -பிராட்டி என்றும் திருக் கல்யாண குணங்கள் என்றும் கொள்ளலாம் -புருஷகார பலத்தாலே ஸ்வா தந்த்ர்யம் தலை சாய்ந்தால்
தலை எடுக்கும் கல்யாண குணங்கள் – அன்றோ
பால்யாத் ப்ரப்ருத்தி ஸூஸ்நிக்த-தொட்டில் பருவத்தில் உள்ள சிசுக்களையும் ஈடுபடுத்த வல்ல அழகும் குணங்களும் உண்டே

———–

15-க அ ந ஸூ யக —
வாத்சல்யமும் அ ந ஸூ யையும் பர்யாய சப்தங்கள் -நற்றங்களை குற்றங்களாக கொள்வதே அ ஸூ யை
செய்தாரேல் நன்றே செய்தார் என்பர் போலும் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யேஜேயம் கதஞ்சன –தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம் –
துஷ்டனாக–தேசிகன்-தோஷ தஸ்ய ஸ்யாத் –
பிறர் பெருமையை பொறுக்கும் தன்மை இல்லாமை அ ஸூ யை என்றும் கொள்ளலாம்
உத்சவேஷூ ஸ சர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி -அயோத்யா மக்கள் பெருமாளை தந்தையாகக் கொள்ளுவார்கள்
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கை -மற்றை எல்லாக் குணங்களும் உண்டானாலும்
உண்டாக அரிதாய் இருப்பது ஓன்று அன்றோ இது
ப்ரவஷ்யாமி அ ந ஸூ யவே -ஸ்ரீ கீதை -9-1–சாஸ்திர உக்தங்களான விஷயங்களைக் கேட்டால் இது பொருந்தாது என்று
குதர்க்கம் செய்பவன் அ ஸூ யை உடையவன் பொருந்தும் என்று உகந்து இருப்பவன் அ ஸூ யை இல்லாதவன்
ஜாபாலி சொல்வதை சஹிக்க மாட்டாமல் பெருமாள் சீறி வெறுத்தார்-

———–

13/16- கோ ஜிதக்ரோத –கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோஷஸ்ய சம்யுகே

கோபத்தை வென்றவர் –ஸ்வ அதீனமாக கொண்டவர் -அம்கண் மா ஞாலம் அஞ்ச -முளைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச -உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற –
இஷ்வாகு சம்ச ப்ரபவோ ராமோ நாம ஜ நைஸ் ஸ்ருத —சதைவ ப்ரிய தர்சன –சோமவத் ப்ரிய தர்சன –காலாக்னி சத்ருச க்ரோத-
-கோபச்ய வசமேயிவான் -பாகவத அபாசரம் பொறாமையால் அன்றோ இவன் அவதரித்து செய்து அருளிய ஆனைத் தொழில்கள் –

———————————————————————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ காயத்ரி ராமாயணம்–ஸ்ரீ இராமாயண ரஹஸ்யங்கள்–

November 24, 2023

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மாண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

வீர ஆசனத்தில் ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ வாயு குமாரர் ஸ்ரீ ராமாயணம் சாதித்து அருள –
ஸ்ரீ பெருமாள் வியாக்யானம் சாதித்து அருளி -இதுவே நம் பூர்வர்கள் ஸ்ரீ குரு பரம்பரை மூலம் பெற்ற நிதி

———–

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியாதாக்கும் வேரி யங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேதன நீறு பட்டுழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கு

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற இரண்டு எழுத்தினால்

ஆபதாம் அபஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

———–

ஸ்ரீ கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

ஸ்ரீ வால்மீகேர் முனிஸிம்ஹஸ்ய கவிதா வனசாரிண:
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராங்கதிம்

ய: பிபன் ஸததம் ராம சரிதாம்ருத ஸாகரம்
அத்ருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸ மகல்மஷம்

கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம்
ஸ்ரீ ராமாயண மஹாமாலா ரத்னம் வந்தே(அ) நிலாத்மஜம்

அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீசோக நாசனம்
கபீச மக்ஷஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்8

ஆஞ்ஜனேய மதிபாடலாலனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

க்யாத: ஸ்ரீராமதூத: பவனதனுபவ: பிங்கலாக்ஷ: சிகாவான்
ஸீதா சோகாபஹாரீ தசமுக விஜயீ லக்ஷ்மண: ப்ராணதாதா
ஆநேதா பேஷஜாத்ரேர் லவணஜலநிதேர் லங்கனே தீக்ஷிதோ ய:
வீர: ஸ்ரீமான் ஹனூமான் மம மனஸி வஸன் கார்யஸித்திம் தநோது

தூவரிக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி:
தாரித தசமுக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:

ஸ்ரீ வால்மீகி கிரிஸம்பூதா ராமஸாகர காமினீ
புனாது புவனம் புண்யா ராமாயண மஹாநதீ

ஸ்ரீ வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ரசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா

வைதேஹீ ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்த்யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முனிப்ப்ய: பரம்
வ்யாக்க்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்

நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை
நமோ(அ)ஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ப்யோ
நமோ(அ)ஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ப்ய:

————

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||

————

வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஸரதாத்மஜே |
வேத3 : ப்ராசேதஸா தா3ஸீத்3 ஸாக்ஷாத்3 ராமயணாத்மநா ||

வேதத்தினால் சூட்டப்படும் பரம்பொருள் பூமியிலே ஸ்ரீ ராமனாக அவதாரம் பண்ண உடனே,
வேதம், ஸ்ரீ வால்மீகி முனிவர் வழியாக ஸ்ரீ ராமாயணமாக வெளிவந்துவிட்டது

———

ஸ்ரீ ராமம் ரகு குல திலகம்
சிவ தனு சாக்ரிஹத ஸீதா ஹஸ்த கரம்
அங்குல்யா பரண ஸோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய ஆஸ்ரயம்
வைதேஹி மநோ ஹரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கள கார்ய அநுகூலம்
ஸததம் ஸ்ரீ ராமசந்த்ர பாலயமாம்

—————-

ஸ்ரீ காயத்ரி ராமாயணம்

ஸ்ரீ காயத்ரி -சந்தஸாம் மாதா -இதிஹாச ஸ்ரேஷிடம் ஸ்ரீ ராமாயணம் –

ஒவ்வொரு ஆயிரமாகப் பிரித்து முதல் ஸ்லோகமாக எடுத்து வந்த ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ காயத்ரி ராமாயணம்

இந்த ஸ்ரீ காயத்ரி ராமாயணத்தை படிப்பதால் ஸ்ரீ காயத்ரி ஜபம் செய்த புண்யமும்
ஸ்ரீ ராமாயணம் முழுவதும் படித்த பலனையும் பெறலாம்

——-

தபஸ்ஸ்வாத்யாயநிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்
நாரதம் ப்ரிபப்ரச்ச வால்மீகிர் முநிபுங்கவம் –-1-

வேத வேதாங்காதி ஸகல வித்யா பாராங்கதராய்
விரத நியம ஜபாதி அநுஷ்டான ஸம்பன்னராய்
வேதார்த்த வித்துக்களில் சிறந்தவராய்
முனி ஸ்ரேஷ்டரான நாரதரைக் குறித்து
உயர்ந்த தவமுடைய வால்மீகி மஹரிஷி ப்ரஸ்னம் பண்ணினார்

நாரதோ அஹம் மந ப்ராப்த -த்வத் தர்சன குதூஹலாத் பிரபவோ பகவத் பக்தா மாத்ருஸாம் ஸததம் த்விஜ
நாரதர் என்று சொல்லப்படும் அடியேன் உம்மைக் காணும் ஆசையினால் வந்தடைந்தேன்
ப்ராஹ்மண உத்தம -என்னைப்போல் உள்ளவர்களுக்கு பகவத் பக்தர்கள் எப்பொழுதும் பிரபுக்கள்

தும்புரு நாரதர் புகுந்தனர்

பகவத் பாகவத ஸந்தர்சன ப்ரணாம ஸல்லாபமே தபஸ்

தத் வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா

தபஸ்வாத்யாய நிரதம் –என்று காயிக ஸூத்தியையும்
வாக்விதாம் வரம் என்று வாக் ஸூத்தியையும்
முனி புங்கவம் என்று மனஸ் ஸூத்தியையும் சொல்லிற்று

தபோ நிரதம்’ – தபஸில் ஈடுபட்டவராய் இருக்க வேண்டும்.
‘ஸ்வாத்யாய நிரதம்’ – தனது படிப்பில் திரும்பத் திரும்ப மனசை செலுத்துவதில் விருப்பம் உள்ளவரை இருக்க வேண்டும்.
வாக் விதாம் வரம்’ – வாக்கிற்கு என்ன பிரயோஜனம்? பகவானை பற்றி பேசிக் கொண்டிருப்பது. அதைச் செய்து கொண்டிருப்பவர்.
‘முனி புங்கவம்’ – மௌனமாய் இருக்ககூடிய முனி புங்கவருக்குள் ஸ்ரேஷ்ட்டர்.

“த‌ப‌சு, வேத‌வேதாந்த‌ங்க‌ள் இவைக‌ளைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ரும், உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ரும்,
முனி ஶ்ரேஷ்ட‌ருமான‌ நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, த‌வ‌த்தோடுகூடிய‌ வான்மீகி முனிவ‌ர் தெண்ட‌ம் ச‌ம‌ர்ப்பித்து வினாவினார்.”

1) த‌போநிர‌த‌ம் :– த‌வ‌த்தைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ர் என்ற‌தினால் அவ‌ர் ச‌ர்வ‌ச‌க்தி வாய்ந்த‌வ‌ர் என்ப‌து ஸூச‌க‌ம்.
“ய‌த்துஸ்த‌ர‌ம் ய‌த்துராப‌ம் ய‌த்துர்க‌ம் ய‌ச்ச‌துஷ்க‌ர‌ம்|
தத் ஸ‌ர்வ‌ம் த‌ப‌ஸாஸாத்ய‌ம் த‌போஹி துர‌திக்ர‌மம் ||”
“எது க‌ட‌க்க‌முடியாததோ, எது பெற‌ முடியாததோ, எது செய்ய‌முடியாததோ அதெல்லாம் த‌வ‌த்தால் சாதிக்க‌முடியும்.
ஆகையால் த‌வ‌த்தை வெல்வ‌த‌ரிது.”
“வேண்டிய‌ வேண்டியாங் கெய்த‌லாற்செய்த‌வ‌ மீண்டு முய‌ல‌ப் ப‌டும்.
கூற்ற‌ங் குதித்த‌லும் கைகூடு நோற்ற‌லி னாற்ற‌ ற‌லைப்ப‌ட் ட‌வ‌ர்க்கு” (திருக்குற‌ள்) என்ற‌ ஆதார‌ங்க‌ள் நோக்க‌த்த‌க்க‌ன‌.

2) ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம்:– வேத‌வேதாந்த‌ங்க‌ளைப் பூர்ண‌மாக‌ அடைந்த‌வ‌ர், என்ற‌தினால்
நார‌த‌ர் சொல்வ‌தெல்லாம் த‌ரும‌த்தோடு பொருந்திய‌ வ‌ச‌ன‌ம் என்ப‌து ஸூச‌க‌ம்.

3) வாக்விதாம்வ‌ர‌ம் :– உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ர், என்ற‌தினால் சிற‌ந்த‌ போத‌னாச‌க்தி வாய்ந்த‌வ‌ரெனவும்,
வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ச‌க‌ல‌ சாஸ்திர‌ங்க‌ளையும் ந‌ன்றாக‌ அறிந்த‌வ‌ரென‌வும் பொருள்ப‌டும்.

4) முனி புங்க‌வ‌ம்:– முனிஶ்ரேஷ்ட‌ர் என்ற‌தினால் இந்திரிய‌ நிக்கிர‌க‌முள்ள‌வ‌ர் என்ப‌தும்,
ப‌க‌வ‌த்யான‌த்தோடு கூடிய‌வ‌ரென்ப‌தும், திரிகால‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிய‌க்கூடிய‌வ‌ரென்ப‌தும் , ஸ‌தா ஜ‌பப‌ரரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

5)நார‌த‌ம்:– நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, என்ற‌தினால், நார‌ம் – ஜ்ஞான‌ம், அதைக் கொடுக்கக் கூடிய‌வ‌ர் என்ப‌தும்,
நார‌ம் – அஜ்ஞான‌ம், அதை நிவ‌ர்த்தி செய்ய‌க்கூடிய‌வ‌ ரென்ப‌தும், த்ரிலோக‌ ஸ‌ஞ்சாரியான‌ப‌டியால்,
மூன்று லோக‌த்திலுள்ள‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிப‌வ‌ரென்ப‌தும், பிர‌ம்ம‌ புத்திரரான‌ப‌டியால் உத்த‌ம‌ குல‌த்தைச் சேர்ந்த‌வ‌ரென்ப‌தும் ஸூசக‌ம்.

ஆக‌வே, இந்த‌ ஐந்து ப‌த‌ங்க‌ளினால், ஆசார்ய‌ன் பூர்ண‌மான‌ த‌ப‌ஸை யுடைய‌வ‌ராக‌வும்,
வேத‌வேதாந்த‌ங்க‌ளையும் வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ஸ‌க‌ல‌ ஶாஸ்திர‌ங்க‌ளையும் உண‌ர்ந்த‌வ‌ராக‌வும்,
ப‌க‌வ‌த் ப‌க்தியுட‌ன் அந‌வ‌ர‌த‌ ஜ‌பப‌ரராக‌வும் சிஷ்ய‌னுடைய‌ அஜ்ஞான‌த்தைப் போக்கி, ஜ்ஞான‌த்தைக் கொடுத்துப்
ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்தை உப‌தேசிக்க‌வ‌ல்ல‌வ‌ராக‌வும், ஜிதேந்திரிய‌ராக‌வும், உத்த‌ம‌ குல‌த்த‌வ‌ராக‌வுமிருக்க‌வேணும்
எனறு ஆசார்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

“குஶ‌ப்த‌ஸ் த்வ‌ந்த‌கார‌ஸ்யாத் ருகார‌ஸ்த‌ந் நிவ‌ர்த‌க‌:|
அந்த‌கார‌ நிரோதித்வாத் குருரித்ய‌பி தீய‌தே||”

“கு என்ப‌து அஜ்ஞான‌த்தையும், ரு என்ப‌து அத‌ன் நிவ‌ர்த்தியையும் சொல்லுகிற‌ ப‌டியால்
ம‌ன‌தின் க‌ண்ணுள்ள‌ அஜ்ஞான‌மாகிற‌ இருளை நீக்கி மெய்ஞ்ஞான‌மாகிற‌ பிர‌காச‌த்தைத் த‌ருவ‌தால் குரு வென‌ச் சாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

குல‌ன‌ருள் தெய்வ‌ங்கொள்கை மேன்மை
க‌லைப‌யில் தெளிவு க‌ட்டுரை வ‌ண்மை
நில‌ம‌லை நிறைகோல் ம‌ல‌ர் நிக‌ர் மாட்சியும்
உல‌கிய‌ல‌றிவோ டுய‌ர்குண‌ மினைய‌வும்
அமைப‌வ‌ன் நூலுரையாசிரிய‌ன்னே.” என்ற‌ ந‌ன்னூல் இங்கு நோக்க‌த் த‌க்க‌து.

தப -என்று
பாபத்தைப் போக்கி ஊணை வாட்டி இந்திரியங்களை வசமாக்கிக் கொடுக்க வல்ல க்ருச்ரம் சந்த்ராயணம் முதலிய கர்மத்துக்கும்
யம நியம ஆஸன பிராணாயாம ப்ரத்யாஹார தாரண தியானங்களை அங்கங்களாக யுடைய ஸமாதி என்கிற யோகத்திற்கும்
வேதத்துக்கும்
பர ப்ரஹ்மத்திற்கும்
தபோ விசேஷமான ந்யாஸத்திற்கும் பெயர்

ஸ்வாத்யாயம் -என்று
வேதத்திற்கும் ஜெபத்திற்கும் பெயர்

வாக் என்று
வியாகரணம் சிஷை சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறு அங்கங்களும்
வித்யா சாமான்யத்திற்கும்
அந்த வந்த சமயத்துக்கு வேண்டும் அர்த்தங்களை போதிக்க வல்ல சப்தத்துக்கும்
ஸரஸ்வதிக்கும் பெயர்

முனி என்று
மனனம்-அதாவது த்யானம் பண்ணுகிறவர்களுக்குப் பெயர்

நார என்று
ப்ரஹ்மத்தையும்
அஞ்ஞானத்தையும் சொல்லும்

ஆக
தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம் நாரதம் — முனி புங்கவம்-என்கிற பதங்களினால்
ஆச்சார்யன்
கர்மயோக ஞானயோக பக்தி யோகங்களிலும் ப்ரபத்தியிலும் ஊற்றம் யுடையவனாய்
வேத வேதாங்களையும் அங்கங்களையும் நியாய மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ரங்களையும் சம்ஸயம் விபர்யயம் அற உணர்ந்தவனாய்
அனவ்ரத ஜெப பரனாய்
ஸிஷ்யனுடைய சம்சயம் அறும் படி உபதேசிக்க வல்லனாய்
ப்ரஹ்ம வித் அக்ரேரராய்
அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்க வல்லனாய்
ஜிதேந்த்ரியனாய்
ஸத் குல ப்ரஸூதனாய்
ஸ்ரவண மனன நிதித்யாஸன தத் பரனாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறது –

நாரதோ அஹம் மந ப்ராப்த -த்வத் தர்சன குதூஹலாத் பிரபவோ பகவத் பக்தா மாத்ருஸாம் ஸததம் த்விஜ
நாரதர் என்று சொல்லப்படும் அடியேன் உம்மைக் காணும் ஆசையினால் வந்தடைந்தேன்
ப்ராஹ்மண உத்தம -என்னைப்போல் உள்ளவர்களுக்கு பகவத் பக்தர்கள் எப்பொழுதும் பிரபுக்கள்

தும்புரு நாரதர் புகுந்தனர்

பகவத் பாகவத ஸந்தர்சன ப்ரணாம ஸல்லாபமே தபஸ்

தத் வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா

தபஸ்வாத்யாய நிரதம் –என்று காயிக ஸூத்தியையும்
வாக்விதாம் வரம் என்று வாக் ஸூத்தியையும்
முனி புங்கவம் என்று மனஸ் ஸூத்தியையும் சொல்லிற்று

——–

சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம்

1) த‌ப‌ஸ்வீ: – என்ற‌தினால் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌த்தை அறிய‌ ஆவ‌ல்கொண்டவ‌ரென்ப‌தும்,
ப‌ல‌ விர‌த‌ங்க‌ளை அனுஷ்டித்த‌வ‌ரென்ப‌தும், ஶ‌ம‌த‌மாதி ஸ‌ம்ப‌ந்த‌ங்க‌ளை அடைந்த‌வ‌ரென்ப‌தும்,
ஜீவ‌காருண்ய‌முடைய‌வ‌ரென்ப‌தும், க‌ள‌ங்க‌ம‌ற்ற‌ இருத‌ய‌முடைய‌வ‌ரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

“உற்ற‌நோய் நோன்ற‌லுயிர்க்குறுக‌ண் செய்யாமை
ய‌ற்றே த‌வ‌த்திற்குரு” (திருக்குற‌ள்)

2) ப‌ரிபப்ர‌ச்ச‌ – என்ற‌தினால் விதிவ‌துப‌ஸ‌ந்ந‌: என்ப‌து பொருள். அதாவ‌து,
உப‌தேச‌ம் பெற்றுக் கொள்ள‌, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதி ப்ர‌கார‌ம் கேட்க‌வேண்டுமென்ப‌து

தத்வித்தி ப்ர‌ணிபாதேந‌ ப‌ரிப்ர‌ஶ்நேந‌ ஸேவ‌யா|
உப‌தேக்ஷ்ய‌ந்தி தே ஜ்ஞான‌ம் ஜ்ஞாநிந‌ஸ் தத்வ‌த‌ர்ஶிந‌: ||

“அந்த‌ ஆத்ம‌ ஜ்ஞான‌த்தை, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதிப்ர‌கார‌மான‌ கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ள‌க் க‌ட‌வாய். தத்வ‌ம‌றிந்த‌ ப‌ண்டித‌ர்க‌ள் உன‌க்கு ஜ்ஞான‌த்தை போதிப்பார்க‌ள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த‌ ஸ்ரீகிருஷ்ண‌ ப‌க‌வானுடைய‌ வ‌ச‌ன‌ம் இங்கு க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து.

ஆக‌வே, த‌ப‌ஸ்வீ, ப‌ரிப்ர‌ச்ச‌ என்ற‌ ப‌த‌ங்க‌ளினால் சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஸ‌த்புத்திஸ் ஸாது ஸேவீ ஸ‌முசித‌ ச‌ரித‌ஸ் தத்வ‌ போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ் த்ய‌க்த‌மாந‌: ப்ர‌ணி ப‌த‌ந‌ ப‌ர‌: ப்ர‌ஶ்ந‌ கால‌ ப்ர‌தீக்ஷ‌:||
ஶாந்தோ தாந்தோ ந‌ஸூயுஸ் ஸ‌ர‌ண‌முப‌க‌த‌ஸ் ஶாஸ்த்ர‌ விஶ்வாஸ‌ஶாலி|
ஶிஷ்ய‌:ப்ராப்த‌: ப‌ரீக்ஷாங் க்ருத‌வி த‌பிம‌த‌ம் தத்வ‌த‌ஸ் ஸிக்ஷ‌ணீய‌:

“ந‌ற்புத்தியுட‌ன் ஸாது ஸேவை உடைய‌வ‌னாகி, ந‌ன்ன‌ட‌த்தை உடைய‌வ‌னும், உண்மை ஞான‌த்தை அறிவ‌தில்
அபிலாஷை உடைய‌வ‌னும், ப‌ணிவிடைக்கார‌னும், மானாவ‌மான‌ மென்ப‌த‌ற்ற‌வ‌னும், ப்ர‌ஶ்ந‌ கால‌த்தை எதிர்பார்ப்ப‌வ‌னும்,
சாந்த‌னும், அஸூயை இல்லாத‌வ‌னும், ச‌ர‌ணாக‌தி ய‌டைந்த‌வ‌னும், சாஸ்திர‌ விஶ்வாச‌முடைய‌வ‌னுமே
சிஷ்ய‌னாக‌ அங்கீக‌ரிக்க‌த் த‌குந்த‌வ‌ன்” என்ப‌து நோக்க‌த் த‌க்க‌து.

தபஸ்வீ-என்று சிஷ்ய லக்ஷணம் சொல்கிறது
அதாவது
பரமாத்ம ஞான சாதனமான உயர்ந்த தபஸ்ஸையும்
வேதத்தில் கர்ம காண்டங்களை பரிசீலித்து ஸ்வர்க்காதி ஷூத்ர பலன்களில் வைராக்யம் யுடையவனாய்
மோக்ஷத்தில் அபிருசி யுடையவனாய்
ஜிதேந்த்ரியனாய்
சாந்தனாய் –இருக்க வேண்டும் என்று சொல்கிறது
இதனால் ஆச்சார்யாத் தைவ வித்யா விதி தாஸாதிஷ்டம் ப்ரபாத் –என்று
சதாச்சார்யன் இடத்தில் நின்றும் நியம பூர்வகமாகக் கற்ற வித்யையே மோக்ஷ உபயோகியாம் என்னுமது வெளியிடப்பட்டது-
ஆச்சார்யன் உபதேசம் அவரது ஆச்சார்யருக்கு ப்ரீதிக்கு உறுப்பாக என்று மேல் மேல் ஸ்ரீ லஷ்மீ நாதன் பர்யந்தம் போகுமே

வால்மீகி ப‌க‌வான் ப்ருகு வ‌ம்ச‌த்தில் அவ‌த‌ரித்த‌வ‌ர். இவ‌ர் (வ‌ல்மீக‌ம் = புற்று) புற்றிலிருந்து வெளி வ‌ந்ததினால்–வால்மீகி என்று பெய‌ர். இவ‌ர்க்கு “ப்ராசேத‌ஸ‌ர்” (அதாவ‌து வ‌ருண‌னுடைய‌ புத்திரர்) என்னும் பெய‌ருண்டு.

இவர் ஓர் இடத்தில் சரியாமல் உடகார்ந்து மெய் மறந்து தபஸ்ஸு பண்ணிக் கொண்டு இருக்கையில் இவர் மேல் புற்று மூடிப் போய் விட்டது
வருண தேவன் மழை பொழிந்து அப் புற்றைக் கரைத்து விட அங்கு நின்றும் புறப்பட்டார்
ஆகவே வால்மீகி புற்றில் நின்றும் வெளிப்பட வருணன் காரணமானதால் ப்ராசேதனர் -வருண புத்ரன் என்றும் செல்லப்படுகிறார்

——-

ஸ ஹத்வா ராக்ஷஸாந் ஸர்வான் யக்ஞக்நான் ரகு நந்தன:
ரிஷிபி: பூஜித: ஸம்யக் யதேந்த்ரோ விஜயீ புரா –2-

முன்பு தேவாஸூர யுத்தத்தில் அஸூரர்களை வெல்லும் போது இந்திரன் அஸூரர்களைக் கொன்றது போலே
அந்த சித்தாஸ்ரமத்தில் விச்வாமித்ரருடைய யாகத்தை அழிக்க வந்த அரக்கர்கள் அனைவரையும்
ஸ்ரீ ராகவன் கொன்று ருஷிகளினால் பூஜிக்கப் பட்டார்

———

விஸ்வாமித்ரஸ்து தர்மாத்மா ஸ்ருத்வா ஜனகபாஷித:
வத்ஸராம் தனு: பஸ்ய இதி ராகவம் ப்ரவீத் –3-

இந்த வில்லை ஒருவராலும் நாண் ஏற்ற முடியாது என்று ஜனக மஹாராஜர் மொழிந்தத்தைக் கேட்டு
தர்மாத்வாகிய விச்வாமித்ரர் இராகவனைப் பார்த்து குழந்தாய் ஸ்ரீ ராகவ அந்த வில்லை நீர் பாரும் என்று பணித்தார் –

——-

துஷ்டாவாஸ்ய ததா வம்ஸம் ப்ரவிஸ்ய ஸ விஸாம்புதே
ஸயநீயம் நரேந்த்ரஸ்ய ததாசாத்ய வ்யதிஷ்டத —4-

ஸூ மந்த்ரர் என்பவர் தசரத மஹா ராஜருடைய அரண்மனையில் நுழைந்து சயன க்ருஹத்தை அடைந்து நின்று
அப்பொழுது அந்த தசரத மஹாராஜருடைய வம்ஸா வழியைச் சொல்லி ஸ்துதித்தார்

———–

வனவாசம் ஹி ஸங்க்யாய வாஸாம்ஸ்யாபரணானி ச
பர்தார மனுகச் சந்த்யை சீதாயை ஸ்வ ஸுரோ ததௌ –-5-

இராகவனுடன் கூட வனவாஸம் போக நிச்சயித்துத் தன் பார்த்தாவைப் பின் சென்று போகிற சீதாப் பிராட்டியாருக்கு
மாமனாராகிய தசரத மஹா ராஜர் வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் கொடுத்தார்

——–

ராஜா ஸத்யம் ச தர்ம்ஸ்ச ராஜா குலவதாம் குலம்
ராஜா மாதா பிதா சைவ ராஜா ஹிதகரோ ந்ருணாம் –6-

உலகத்தில் சத்தியத்தையும் தர்மத்தையும் நடப்பிக்க வைப்பவன் அரசன்
நற் குலத்தில் பிறந்தவர்களுடைய குலாச்சாரத்தையும் நடப்பிக்க வல்லவன் அரசன்
ஜனங்களுக்குத் தாயும் தந்தையும் ஹிதம் செய்பவன் அரசனே என்று பரதன் சொல்லுகிறான்

—————-

நிரீக்ஷ்ய ஸ முஹூர்த்தம் து ததர்ஸ பரதோ குரும்
உடஜே ராமமாசீனம் ஜடா மண்டல தாரிணம் –7-

பரதன் சித்ர கூடத்தில் பர்ண சாலையில் ஜடையைச் சக்ராதாரமாகக் கட்டிக் கொண்டு வீற்று இருக்கும் ஸ்ரீ ராமனைப் பார்த்து
ஜடாதாரியாகிற இம் மஹாநுபாவன் யாராய் இருக்கலாம் -என்று சிறிது நேரம் நிதானித்துப் பார்த்துப் பின்பு
இவர் நம் குருவாகிய ராகவன் என்று அறிந்தார்

———

யதி: புத்தி: த்ருஷ்டும் அகஸ்த்யம் தம் மஹாமுனிம்
அத்யைவக மனே புத்திம் ரோசயஸ்வ மஹாயஸ: –8-

பெரும் புகழ் படைத்த ஸ்ரீ ராகவனே நீர் முனி ஸ்ரேஷ்டராகிய அகஸ்திய மஹ ரிஷியைப் பார்க்க விரும்பினீராகில்
இப்பொழுதே அவருடைய ஆஸ்ரமத்தைக் குறித்துச் செல்ல மனம் வையும் என்று ஸூ தீஷ்ணர் சொன்னார்

————-

பரதஸ் யார்யபுத்ரஸ்ய ஸ்வஸ்ரூணாம் மம ச ப்ரபோ
ம்ருக ரூபமிதம் வ்யக்தம் விஸ்மயம் ஜனயிஷ்யதி –-9-

ஓ ஸ்வாமீ அதி விசித்ரமாகிய இந்த மானான் உமக்கும் பரதனுக்கும் என் மாமிமார்களுக்கும் எனக்கும்
வெகு ஆச்சர்யத்தை உண்டு பண்ணுமாகையாலே இதைப் பிடித்துத் தாரும் என சீதாப்பிராட்டியார் வேண்டுகிறார்

————

கச்ச ஸீக்ரமிதோ ராம ஸுக்ரீவ.ந்தம் மஹா பலம்
வ்யஸ்ய.ந்தம் குரு க்ஷிப்ரம் இதோ கத்வாத்ய ராகவ:–10-

ரகுகுல நாதனாகிய ஓ இராமனே நீர் இங்கு நின்றும் சீக்கிரம் புறப்பட்டுப் போய் மஹா பலசாலியாகிய
ஸூக்ரீவன் என்கிற வானர அதிபதியான அக்னி ஸாக்ஷிகமாக ஸ்நேஹன் ஆக்கிக் கொள்ளும் என்று கபந்தன் சொன்னான்

——

தேஸகாலௌ ப்ரதீக்ஷஸ்வ சமமாண: ப்ரியாப்ரியே
ஸுகது:க்கஸஹ: காலே ஸுக்ரீவ வஸகோ பவ: –11-பஜஸ் வாத்ய –-பாட பேதம்

அப்பா அங்கதனே இனி நீ தேச காலங்களை ஆலோசித்து –இந்த தேசத்தில் இந்தக் காலத்தில் இம் மாதிரி இருக்க வேண்டும்
மற்றப் பொழுது மற்றப் படியாக இருக்க வேண்டும் என்று விசாரித்து அநிஷ்டம் நேர்ந்ததாகில் அதை இஷ்டம் போலவும்
துக்கம் நேர்ந்தால் அதை ஸூகம் போலவும் பாவித்துப் பொறை -பொறுமை அடக்கம் யுற்றவனாய்க் கொண்டு
ஸூ க்ரீவனுக்கு அதீனமாக இருக்கக் கடவாய் என்று வாலி சொன்னான் –

———–

வந்த்யாஸ்தே து தபஸ் ஸித்தாஸ் தாபஸா வீத கல்மஷா:
ப்ரஷ்டவ்யா சாபி சீதயா: ப்ரவ்ருத்திர் வினையான் விதை:–12-

ஓ வானர வீரர்களே தபஸ்ஸினால் பாபம் அற்றவர்களாய் அதனால் அணிமாதி ஸித்தியை அடைந்து இருக்கிற
அந்த மஹரிஷிகளை நீங்கள் பணிந்து விநயத்துடனே சீதா தேவி இருக்கும் இடத்தை
அவர்களைக் கேளுங்கோள் என்று ஸூக்ரீவன் சொன்னான்

———

ஸ நிர்ஜித்ய புரீம் ஸ்ரேஷ்டாம் லங்காம் தாம் காம்ரூபிணீம்
விக்ரமேண மஹா: தேஜா: ஹநுமான் மாருதாத்மஜ: –13-

வாயு புத்ரராய் மிக்க தேஜஸ்ஸை யுடையவைராக்கிய அந்த ஹனுமான் வேண்டும் உருவம் கொள்ள வல்லவனாய்
சிறந்த அந்த லங்கா புரிக்கு தேவதையாகிய இலங்கியை பராக்ரமத்தினால் வென்றார்

———

தன்யா தேவா: ஸகந்தர்வா: ஸ்த்தாஸ்ச பரமர்ஷய:
மம பஸ்யந்தி யே நாதம் ராமம் ராஜீவ லோசனம் –-14-

என்னைப் பிரிந்த சோகத்தினால் தேவ லோகத்தை அடைந்த என்னுடைய பர்த்தாவாகிய செந்தாமரைப் பூ போன்ற
கண்களை உடைய இராகவனை அங்குள்ள எந்த தேவர்களும் கந்தர்வர்களும் சித்தர்களும் மஹ ரிஷிகளும் பார்க்கிறார்களோ
அவர்கள் மஹா பாக்யம் செய்தவர்கள் என்று ஸீதா தேவி சொல்கிறார்

————

மங்களாபிமுகே தஸ்ய ஸா ததாஸீன்மஹாகபே
உபதஸ்தே விஸாலாக்ஷீ ப்ரயதா ஹவ்யவாஹனம் –15-

அப்பொழுது பரந்த கண்களை யுடைய அந்த ஸீதா தேவி வாநரோத்தமனாகிற அந்த ஹநுமானுக்கு
வாலில் நெருப்புச் சுடாமல் இருக்க வேண்டும் என்ற ஸ்ருதி பரிசுத்தையாய்க் கொண்டு அக்னியைக் கிட்டிப் பிரார்த்தித்தாள்

———

ஹிதம் மஹார்த்தம் ம்ருது பூர்வ ஸமிதம் வ்யதீத காலாயதி ஸம் ப்ரதிக்ஷமம்
நிஸம்ய தத் வாக்ய முபஸ்தித ஜ்வர ப்ரஸங்க வானுத்தர மேதத ப்ரவீத் –16-ம்ருது ஹேது –பாட பேதம்

பிற் காலத்தில் நன்மையை விளைக்குமதாய் அக்கணமே ஸூக ஜனகமாய் யுக்தி யுக்தமாய் பூத பவிஷ்யத் வர்த்த மாநங்கள்
என்கிற மூன்று காலங்களுக்கும் உரியதாய் நல் வார்த்தையாய்ச் சொன்ன விபீஷணன் சொல்லைக் கேட்டு
தன் கோரிக்கையில் பிடிவாதம் உடைய இராவணன் சினம் உள்ளவனாய்க் கொண்டு
இதை மேற் கூறியபடி உத்தரம் பதில் சொன்னான்

————-

தர்மாத்மா ரக்ஷஸாம் ஸ்ரேஷ்ட: ஸம் ப்ராப்தோsயம் விபீஷண:
லங்கைஸ்வர்யம் த்ருவம் ஸ்ரீமா நயம் ப்ராப்நோத்ய கண்டகம் –17-

தர்ம சிந்தை யுடையவனாய் ராக்ஷஸ ஸ்ரேஷ்டனான இந்த விபீஷணன் என்னை அடைந்தான்
ஆகையால் இவ்வளவு அனுகூல்யமுடைய இந்த விபீஷணன் இப்பொழுதே தடையின்றி இலங்கையினுடைய ஐஸ்வர்யத்தை
அடையப் போகிறேன் என்று இராகவன் பணித்தார்

——–

யோ வஜ்ர பாதாஸனி ஸன்னிபாதாத் ந சுக்ஷூபே நாபி ச்சால ராஜா
ஸ ராம பாணார்பிஹதோ ப்ருஸார்த்த: சசால சாபம் ச முமோச வீர: –18-

எந்த இராவணன் முன்பு இந்திரனுடைய வஜ்ர ஆயுதத்தினாலும் அடி உண்டவனாய்க் கொண்டு
ஆனால் ஒரு வருத்தத்தையும் யடைய வில்லையோ சலிக்கவும் கூட வில்லையோ
அந்த ராவணன் இராகவனுடைய பாணத்தினால் அடிக்கப் பட்டவனாய்க் கொண்டு அதனால் மிக வருத்தம் உள்ளவனாய் நடுங்கினான்
கையிலிருந்து வில்லையும் நழுவ விட்டான்

——-

யஸ்ய விக்ரமமாஸாத்ய ராக்ஷஸா நிதனம் கதா:
தம் மந்யே ராகவம் வீரம் நாராயணம்னாமயம் –-19-

எந்த இராகவனுடைய பராக்ரமத்திற்கு முன்னே நின்று அரக்கர்கள் மாண்டு விட்டார்களோ அந்த வீரனாகிய
இராகவனை நான் ஒரு பத்திரமற்ற நாராயணனாக எண்ணுகிறேன் என்று இராவணன் சொன்னான்

——–

ந தே தத்ருஸிரே ராமம் தஹந்தமரிவாஹினீம்
மோஹிதா: பரமாஸ்த்ரேன காந்தர்வேண மஹாதமனா –20-

இராகவன் பிரயோகித்த பெரும் தன்மையை யுடைய சிறந்த அந்த காந்தர்வம் என்கிற அஸ்திரத்தினால்
அரக்கர்கள் மோஹம் அடைந்தவர்களாய் சத்ரு ஸைன்யத்தை பாணத்தினால் கொளுத்துகிற இராகவனை காணாதவர்கள் ஆனார்கள்

————

ப்ரணம்ய தேவதாப்யஸ்ச்ச ப்ராஹ்மணே ப்யஸ்ச மைத்லீ
பத்தாஞ்ஜலி புடா சேதமுவாசாக்.நிஸமீபத: —21-

மிதிலேசனுடைய பெண்ணான ஸீதா தேவி அக்னி ப்ரவேஸ காலத்தில் தேவர்களையும் ப்ராஹ்மணர்களையும்
நமஸ்கரித்து கையைக் கூப்பிக் கொண்டு நெருப்பின் அருகில் நின்று இதை மேற் கூறியபடி மொழிந்தாள்

———

சலநாத் பர்வதேந்த்ரஸ்ய கணா தேவாஸ்ச கம்பிதா:
சசால பார்வதீ சாபி ததாஸ்லிஷ்டா மஹேஸ்வரம் –22

இராவணன் கைலாஸ மலையை அசைக்கும் போது அங்குள்ள மஹா தேவனுடைய பரிவார கணங்கள்
எல்லாம் நடுங்கிப் போயின -பார்வதியும் நடுக்கம் உற்றவளாய் அப்பொழுது
தன் பதியாகிய மஹா தேவனைத் தழுவிக் கொண்டனள்

———-

தாரா: புத்ரா: புரம் ராஷ்ற்றம் போகாச்சாதனபாஜனம்
ஸர்வமேவாவிபக்.நம் நோ பவிஷ்யதி ஹரீஸ்வர: –-23-

ஓ வானர உத்தமனாகிற வாலியே இது முதல் உனக்கும் உனக்கும் பெண்டாட்டிகள் பிள்ளைகள் நகரம் இராச்சியம்
கந்த கு ஸூ மாதிகள் ஊண் உடை ஆகிய இவைகளில் ப்ரீதி பேதம் இன்றி நடக்க வேண்டும்
இதில் சம்சயம் இல்லை என்று இராவணன் சொன்னான்

——–

யாமேவ ராத்ரிம் ஸத்ருக்ன: பர்ணஸாலாம் ஸமாவிஸத்
தாமேவ ராத்ரிம் சீதாபுஇ ப்ரஸூதா தாரகத்வயம் –24-

லவணாசுரனுடைய வாதார்த்தமாகப் போம் போது எந்த ராத்திரியில் சத்ருக்கனன் வால்மீகி மஹ ரிஷியினுடைய
ஆஸ்ரமத்தின் பர்ண சாலையைப் பிரவேசித்தாரோ
அந்த ராத்திரியிலே ஸீதா தேவியும் இரண்டு குழந்தைகளைப் பெற்றனள்

———-

இதம் ராமாயணம் க்ருத்ஸ்னம் காயத்ரீ பீஜ ஸம்யுதம்
த்ரிஸந்த்யம் ய: படே.ந் நித்யம் ஸர்வ பாபை: ப்ரமுச்யதே 

காயத்ரியின் பீஜ அக்ஷரங்களோடு கூடிய இந்த காயத்ரி ராமாயணத்தை முழுதும் யாவன் ஒருவன்
மூன்று ஸந்த்யா காலங்களிலும் தினம் தோறும் பாடம் செய்கிறானோ
அவன் எல்லாப் பாபங்களிலும் இருந்தும் விடப்பட்டவன் ஆவான் –

ஸ்ரீ காயத்ரீ ராமாயணம் ஸம்பூர்ணம்

————-

‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி.’தன்னை ஓதுபவரைக் காப்பது காயத்ரி.

ஓம் பூர்புவஸ் ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத் |–இது தான் காயத்ரி மந்திரம்.

ஓம்
பூர், புவ, ஸுவ: – உடல், ஆன்மீக, தெய்வீக வாழ்வுக்குரிய
ஸவிதுர் – உலகங்களுக்கு மூலாதாரமாக உள்ள
வரேண்யம், தேவஸ்ய – போற்றுதலுக்குரிய , யாவரிலும் மேலான, தெய்வீக மெய்ம்மையின்
பர்கோ – தெய்வீகப் பேரொளி மீது
தீ மஹி – நாம் தியானிக்கின்றோம்
தத் – நாம் மேலான உண்மையை உணரும்படி அந்த மேலான தெய்வம்
நஹ – நம்
தியோ – அறிவுக்கு
ப்ரசோதயாத் – ஒளி ஊட்டட்டும்

அறிவைத் தரும் ஆற்றலினைத் தருகிறது காயத்ரி. அத்தோடு காயத்ரி மந்திரம் சர்வ ரோக நிவாரணி.
எல்லா நோய்களையும் போக்க வல்லது. சர்வ துக்க பரிவாரிணி காயத்ரி!
அது அனைத்து துன்பங்களையும் கவலைகளையும் போக்குகிறது. சர்வ வாஞ்சா பலஸ்ரீ காயத்ரி.
அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவது காயத்ரி.

——–

அக்ஷரங்களின் பயன்!

ஒவ்வொரு அக்ஷரமும் ஒவ்வொரு பயனைத் தரும்.
தத் என்பது ப்ரஹ்ம ஞானத்தையும்
‘ஸ’ என்பது சக்தியை நல்வழியில் பயன்படுத்தலையும்,
‘வி’ என்பது நல்ல வழியில் செல்வத்தைப் பயன்படுத்தலையும்,
‘து’ என்பது தைரியத்தையும்,
‘வ’ என்பது பெண்மையின் சிறப்பையும்,
’ரே’ என்பது வீட்டிற்கு வரப் போகும் இல்லத்தரசியையும் அவள் குடும்பத்திற்கு கொண்டு வரும் நலனையும்,
‘ண்யம்’ என்பது இயற்கையை வழிபடுதலையும்,
‘பர்’ என்பது நிலையான மனத்தின் கட்டுப்பாட்டையும்,
‘கோ’என்பது ஒத்துழைப்பு மற்றும் பொறுமையையும்,
தே என்பது எல்லாப் புலன்களும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதையும்,
‘வ’ என்பது தூய்மையான வாழ்க்கையையும்,
‘ஸ்ய’ என்பது மனிதன் இறைவனுடன் ஒன்றுபடுவதையும்,
‘தீ’ என்பது எல்லாத் துறைகளிலும் எல்லாவித வெற்றி பெறுதலையும்,
‘ம’ என்பது இறைவனது நீதி மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும்
‘ஹி’ என்பது நுண்ணறிவையும்,
‘தி’ என்பது வாழ்க்கை மற்றும் மரணத்தையும்,
‘யோ’ என்பது தர்ம நெறிப்படியான வாழ்க்கையைப் பின்பற்றுவதையும்,
‘யோ’ என்பது வாழ்க்கை சேமிப்பையும்
‘நஹ’ என்பது எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பையும்,
’ப்ர’ என்பது நடக்கப்போவதை அறிவது மற்றும் நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதையும்,
‘சோ’ என்பது அறநெறி நூல்களைப் படிப்பதையும் மகான்களின் தொடர்பு ஏற்படுதலையும்
‘த’ என்பது ஆன்மாவை அறிதல் மற்றும் ஆத்மானந்தத்தையும்
‘யா’ என்பது சத் மக்கட்பேற்றையும்
‘த்’ என்பது வாழ்க்கையில் உள்ள ஒழுக்கக்கட்டுப்பாட்டையும் ஒத்துழைப்பையும் குறிக்கிறது.

காயத்ரி மந்திர தேவதைகள்!

ஆக்னேயம், பிரஜாபத்தியம், ஸௌம்யம், ஸமானம், சாவித்திரம், ஆதித்யம், பார்ஹஸ்பத்யம்,
மைத்ராவருணம், பகதெய்வதம், ஆர்யமைஸ்வரம், கணேசம், துவாஷ்ட் ரம், பௌஷ்ணம், ஐந்திராக்னம்,
வாயவ்யம், வாமதேவ்யம், மைத்ராவருணி, வைஸ்வதேவம், மாத்ருகம், வைஷ்ணவம், வததெய்வம்ஸும்,
ருத்ரதெய்வதம், கௌபேரம், ஆஸ்வினம் ஆகியவை காயத்ரி மந்திரத்திற்குள்ள 24 தேவதைகள்.

தேவி பாகவதத்தில் பன்னிரெண்டாம் ஸ்கந்தத்தில் முதல் அத்தியாயத்தில் தரப்படும் அபூர்வமான விவரங்களாகும்.

———–

காயத்ரி மந்திரம் கீழ்க்கண்ட சொற்களைக் கொண்டது:

­­­­“ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்

பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.”

இதன் பொருள்:

மண்ணுலகம், விண்ணுலகம், சொர்க்கம் ஆகிய மூன்றையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை, நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர, அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

காயத்திரி மந்திரத்தின் பொருளைப் மகாகவி பாரதியார் தான் பாடிய பாஞ்சாலி சபதத்தில் பின்வருமாறு பாடியுள்ளார்.

செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்

அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக”

 நல்லனவெல்லாம் எத்திசையிலிருந்து வந்தாலும், எம்மொழியிலிருந்து வந்தாலும் அவற்றை ஏற்று நாம் பயன் பெறுவோமாக

ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்

இதுவே காயத்ரீ மந்திரம். இந்த காயத்ரீ மந்திரத்தில் முதல் வரியான ஓம் பூர்ப்புவஸ்ஸீவ-இதில் ஓம் என்பது பிரணவம் ஆகும். பூர்ப்புவஸ்ஸீவ என்பது பூலோகம், புவர்லோகம், சொர்க்கலோகம் ஆகும். தத் எனும் இரண்டாவது வரியிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.

தத் – என்ற சொல் தபினி என்ற அம்பிகையைக் குறிக்கிறது. வெற்றியைத் தருபவள்.

ச – என்ற எழுத்து சாமுண்டியை குறிக்கும். இவள் வீரத்தையும், வலிமையையும் அளிப்பாள்.

வி – என்ற எழுத்து விஸ்வா என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் நல்ல பலன்களைத் தருவாள்.

துர் – என்ற சொல் துஷ்டி என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு தருவாள்.

வ – என்ற எழுத்து வரதாம்பிகையைக் குறிக்கும். இவள் யோகத்தினைக் கொடுப்பாள்.

ரே – என்ற எழுத்து ரேவதியைக் குறிக்கிறது. இவள் திருமணம் நடத்தி வைக்கவும், தம்பதியருக்குள் அன்பை உருவாக்கும் தேவியாவாள்.

ணி – எழுத்து சூக்ஷ்மா என்ற அம்பிகை ஆவாள். செல்வம் வழங்குவாள்

யம் – ஞானாம்பிகையைக் குறிக்கும். அழகை அளிப்பாள்.

பர் – கார்கவியைக் குறிக்கும். இவள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாள்.

கோ – கோமதி ஆவாள். இவள் நல்ல அறிவையும், ஞானத்தையும் தருவாள்.

தே – தேவிகாவைக் குறிக்கும். இவள் தீய சக்திகளை அழிப்பாள்

வ – வராகியைக் குறிக்கும். தவயோகம் தருவாள்.

ஸ்ய – சின்ஹனியைக் குறிக்கும். இருப்பதை காக்கும் சக்தி படைத்தவள்.

தீ – தியானாம்பிகையைக் குறிக்கும். இவள் நீண்ட ஆயுளைக் கொடுப்பவள்.

ம – மர்யாதா என்ற அம்பிகை ஆவாள். இவள் புலனடக்கம் அளிப்பாள்.

ஹி – ஸ்புட நாயகியைக் குறிக்கிறது. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டவள்.

தி – மேதா அம்பிகையைக் குறிக்கிறது. இவள் வருங்காலத்தை உணர்த்துவாள்

யோ – யோகமாயா ஆவாள். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவாள்.

யோன – யோனியைக் குறிக்கும். உணவு உற்பத்தியையும், விவசாய விருத்தியையும் கவனிப்பாள்.

நஹ் – தாரணியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு அளிப்பாள்.

ப்ர் – ப்ரபவா என்ற அம்பிகை ஆவாள். குறிக்கோளை அடைய உதவுவாள்.

சோ – ஊஷ்மா தேவியைக் குறிக்கும். இவள் அச்சத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பாள்.

த் – த்ரஷ்யா என்ற அம்பிகை ஆவாள். இவள் நல்லறிவு, விவேகம் தருவாள்.

யாத் – நிரஞ்சனா தேவியைக் குறிக்கும். இவள் தொண்டு செய்யும் மனதை தருவாள்.

இந்த மகத்தான மந்திரத்தை ஜபித்து அனைவரும் பலன் பெறலாம்.

————

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி | தியோ யோ ந: ப்ரசோதயாத் ||

ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.

இது பிரம்ம காயத்ரீ அல்லது சூரிய காயத்ரீ. இதுவே நம் தேசியப் பிரார்த்தனை. இதுவே நம் தேசிய மந்திரம். பல்லாயிரம் ஆண்டுகளாகக் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இது கையாளப் பட்டு வந்துள்ளது.

ஓம் அல்லது ஓங்காரம் ஓசைகள் அனைத்துக்கும் முதல் காரணம். இது நாதப் பிரம்மம் என்று இயம்பப் பெறுகிறது. பரவஸ்து ஓசை வடிவத்தில் இலங்குகிறது. அகிலாண்டத்தின் இயக்கம் ஓசையை உண்டுபண்ணுகிறது. அந்த ஓசையே ஓங்காரம். ஓங்கார ஓசை இயற்கை முழுவதிலும் ஓவாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ஓவாத சத்தத்து ஒலியே போற்றி” என்று இது போற்றப் படுகிறது. ஓம் என்பது பீஜ மந்திரம். இதன் திரிவுகளாக ஏனைய மந்திரங்கள் வந்துள்ளன. ஓங்காரத்தை உச்சரிப்பதற்கு ஏற்ப மனிதன் மேன்மையுறுகிறான். இயற்கை முழுதுக்கும் பொதுவாக அண்டமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இம்மந்திரத்தை யாரோ சிலர் தான் உச்சரிக்க வேண்டும் என்னும் கட்டுப்பாடு எதற்காக? சுவாசிக்கும் காற்று எல்லார்க்கும் பொதுவாக இருப்பது போன்று இந்த ஓசையும் பொது.

ஓங்காரத்தை உச்சரித்த பிறகே ஏனைய மந்திரங்களை உச்சரிப்பது ஐதிகம். ஏனென்றால் மந்திரங்கள் அனைத்திற்கும் மூலமந்திரமாக அல்லது பீஜமந்திரமாக இருப்பது ஓங்காரம்.

பூ: , புவ:, ஸுவ: ஆகிய மூன்று சொற்கள் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்க்கம் எனப் பொருள்படுகின்றன. இம்மூவுலகங்கள் அகத்திலும் இருக்கின்றன, புறத்திலும் இருக்கின்றன. பண்பாடு அடையாதவர்களுக்கு அம் மூவுலகும் புறத்தில் உள என்னும் கொள்கை ஏற்புடையதாகிறது. அகத்திலேயே அம்மூன்றும் அமைந்துள்ளன என்னும் கொள்கை சிறிது பரிபாகம் அடைந்தவர்களுக்கே விளங்குகிறது.

நம்மிடையே இம்மூவுலகங்களும் எப்படி அமைந்திருக்கின்றன என்று பார்ப்போம். ஜாக்ரதாவஸ்தை, சொப்பனாவஸ்தை, சுஷுப்தி அவஸ்தை ஆகிய மூன்று அவஸ்தைகளும் (நிலைகள்) நம்மிடத்து மாறி மாறி அமைகின்றன. மக்கள் மட்டும் அல்லர்; பறவைகளும், விலங்குகளும் இந்த மூன்று நிலைகளை அனுபவிக்கின்றன.

நனவு அல்லது விழித்திருந்து புறவுலகோடு இணக்கம் வைப்பது ஜாக்ரதாவஸ்தை. நனவு நிலையில் உடல், உள்ளம் ஆகிய இரண்டும் வேலை செய்கின்றன. கனவு என்பது சொப்பனாவஸ்தை. கனவு நிலையில் புறவுலகோடு தொடர்பு வைப்பதில்லை. ஸ்தூல சரீரத்துக்கும் அங்கு வேலையில்லை. அகக் கரணமாகிய மனதே கற்பனையில் ஸ்தூல சரீரத்தையும், புறவுலகத்தையும், அதிலுள்ள உயிர்வகைகளையும் கற்பனை பண்ணிக் கொண்டு வியவகாரம் பண்ணுகிறது. அந்நிலையில் இருக்கின்ற பொழுது அது யாண்டும் ஜாக்ரதாவஸ்தைக்கு நிகராகத் தோன்றுகின்றது. கனவற்ற உறக்கம் சுஷுப்தி அவஸ்தை எனப்படுகிறது. அந்த அவஸ்தையில் அகவுலகம் இல்லை; புறவுலகம் இல்லை. மனதும் செயலற்றுக் கிடக்கிறது. பிரக்ஞை மட்டும் தமோகுணத்தால் [மூவகைக் குணங்களில் ஒன்றான இருள் இயல்பு] மூடப்பட்டிருப்பது போன்று தன்மயமாய் எஞ்சியிருக்கிறது.

இம்மூன்று அவஸ்தைகளிலும் நாம் மாறிமாறி இருக்கின்றோம். இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் இந்த மூன்று உலகங்களிலும் சற்று ஏறத்தாழ வசித்து வருகிறோம். இந்த மூன்று அவஸ்தைகளே பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் என்று இயம்பப் பெறுகின்றன. நாம் எந்த அவஸ்தையில் இருந்தாலும் சரி, அதாவது எந்த லோகத்தில் இருந்தாலும் சரி, இந்த காயத்ரி மந்திரத்தினுடைய கருத்தையுணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொண்டு வருகிற அளவு ஆன்மிகத் துறையில் முன்னேற்றமடைகிறோம்.

விழித்திருக்கின்ற பொழுது நாம் சுவாசிக்கின்றோம்; கனவு காண்கின்ற பொழுதும் சுவாசிக்கின்றோம்; கனவற்ற உறக்கத்திலும் சுவாசிக்கின்றோம். சுவாசிப்பதை நிறுத்துவதில்லை. நிறுத்தினால் ஒழிந்துபட்டுப் போவோம். நிர்விகல்ப சமாதியில் (அனைத்து உணர்வுகளும் ஒடுங்கும் ஒருமை நிலை) இருப்பவர்கள் மட்டும் சுவாசிக்காதும், அழிந்துபட்டுப் போகாமலும் இருக்கின்றனர். மூன்று அவஸ்தைகளிலும் நிறுத்தாது நாம் சுவாசித்து வருவது போன்று மூன்று அவஸ்தைகளிலும் காயத்ரியில் அடங்கியிருக்கிற கருத்துக்கேற்ப நம்முடைய மனத்தைப் பெரிய நிலையில் வைப்போமானால் அதற்கேற்றவாறு ஆத்ம பரிபாகம் நமக்கு வாய்க்கிறது.

சுஷுப்தி அவஸ்தையில் தமோகுணம் ஆதிக்கம் செய்கிறது. தமோகுணத்தில் மூன்று நிலைகள் உண்டு – தமஸில் தமஸ், தமஸில் ரஜஸ், தமஸில் சத்துவம் என அம்மூன்று நிலைகள் விளக்கப் படுகின்றன. ஆத்ம பரிபாகம் அடைந்தவர்கள் தமஸில் சத்துவத்துக்கு மேலோங்க முடியும். அது அறிதுயில் அல்லது யோகநித்திரை எனப்படுகிறது. அந்நிலையை எட்டுகிறவர்கள் காயத்ரீ தத்துவத்தைக் கையாண்டவர்கள் ஆகின்றனர். அந்நிலையை எட்டுவதே குறிக்கோள்.

இனி, ஜாக்ரதாவஸ்தையிலேயே பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் நமக்கு நாம் அமைத்துக் கொள்ள முடியும். உடல் வாழ்க்கையை ஒழுங்காக நடத்துவது பூலோக வாழ்க்கையாகிறது. உள்ளத்தை மேலான எண்ணங்களில் செலுத்துவது புவர்லோகமாகிறது. எண்ணத்தைக் கடவுள் பால் செலுத்துவது ஸ்வர்க்கலோகமாகிறது. அதிகாலையில் எழுந்திருந்து இரவு படுக்கப் போகும் வரையில் வாழ்வாங்கு வாழ்கிற மனிதன் மூவுலகிலும் முறையாக வாழ்ந்தவன் ஆகின்றான்.

இந்த மூன்று லோகங்களிலும் அல்லது மூன்று அவஸ்தைகளிலும் பாரமார்த்திகப் பெருநிலையிலேயே இருந்து பழகுபவன் இரண்டாவது பிறப்பெடுத்தவன் ஆகின்றான்.  இருபிறப்பாளன் அல்லது துவிஜன் யாண்டும் போற்றுதலுக்குரியவன் ஆகின்றான்.

செய்யுள் மயமாக அமைந்துள்ள காயத்ரியில் உள்ள பதங்களை இப்பொழுது உரைநடைக்குரிய பதங்களாகப் பிரித்து அமைப்போம் –

ஓம் தத் ஸவிது: வரேண்யம் பர்க: தேவஸ்ய தீமஹி |திய: ய: ந: ப்ரசோதயாத் ||

य: ய: – யார், न: ந: – நம்முடைய, धिय: திய: அறிவை, प्रचोदयात् ப்ரசோதயாத் – தூண்டுகிறாரோ, तत् தத் – அந்த, देवस्य தேவஸ்ய – சுடருடைய, सवितु: ஸவிது: கடவுளின், वरेण्यम् வரேண்யம் – மேலான, भर्ग: பர்க: – ஒளியை, धीमहि தீமஹி – தியானிப்போமாக.

ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.

சரியாக அமைந்துள்ள காயத்ரி மந்திரத்தில் பரம்பொருளின் சொரூபத்தை விளக்குவதற்கான பதங்கள் மூன்று அமைந்திருக்கும். ஜீவப் பிரயத்தனத்தையும், தெய்வத்தின் அருளையும் விளக்குவதற்கென்று அமைந்துள்ள வினைச்சொற்கள் மூன்று இருக்கும். இப்பேரியல்புகள் காயத்ரீ மந்திரங்கள் அனைத்துக்குமே பொதுவானவைகள்.

இம்மந்திரத்தில் பரம்பொருளுக்கு விளக்கமாக அமைந்துள்ள மூன்று சொற்களை எடுத்துக் கொள்வோம். ஸவிது: என்னும் சொல் ஸவித்ரு என்னும் சொல்லின் ஆறாம் வேற்றுமையாகும். ஸவித்ரு என்னும் சொல் உயிர்தருகிற, உற்சாகம் ஊட்டுகிற, வாழ்வைச் செப்பனிடுகிற பொருள் என்று சொல்லப் படுகிறது. உலக நடைமுறையில் சூரியன் இச்சொல்லுக்கு இலக்காகிறது. பரதத்துவத்தில் பரமாத்மாவுக்குப் பொருந்தியதாக இப்பதம் அமைகிறது. ஸவித்ரு என்னும் சொல்லைப் பெண்பால் ஆக்குகின்ற பொழுது, அது ஸாவித்ரீ என்று சொல்லப் படுகிறது. காயத்ரீ, ஸாவித்ரீ ஆகிய இரண்டு பெயர்களும் சக்தி தெய்வத்துக்கு உரியவைகள் ஆகின்றன. இந்த இரண்டு பெயர்களுள் ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றை மொழியுமிடத்து அது இழுக்கு ஆகாது.

வழிபடுகின்றவர்களுடைய வசதிக்காக ஒரு தெய்வம் ஆண்பாலாகவோ, பெண்பாலாகவோ கருதப் படுகிறது. சிவ என்பது ஆண்பால்; சிவா என்பது பெண்பால். ஸவித்ரு என்பது ஆண்பால்; ஸாவித்ரீ என்பது பெண்பால். ஆணாகவோ, பெண்ணாகவோ, அலியாகவோ எப்படி வைத்துக் கொண்டாலும், அது உயிர்க்கு உயிராய் இருக்கின்ற பரம்பொருள் ஆகிறது

பிரபஞ்சத்துக்கும், ஜீவகோடிகளுக்கும் ஆதாரமாகவும், மூலப் பொருளாகவும், முதல் காரணமாகவும் இருப்பது பரம்பொருள். பரம்பொருளுக்குப் புறம்பாக ஜீவர்களுடைய ஜீவ வியக்தி இல்லை. ஜகத்துக்குத் தோற்றம் என்பது இல்லை. கடலில் தோன்றி, கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது போன்று ஜகத்தும் ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலைபெற்றிருக்கின்றன. (: தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல், தன்னுளே திரைத்தெழுந்தடங்குகின்ற தன்மை போல் – நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும், நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே : திருமழிசையாழ்வார், நாலாயிர திவ்யப் பிரபந்தம்).

ஆக, ஜகத்துக்கும் ஜீவனுக்கும் தூண்டுதல் அளிக்கும் பாங்கில் இருக்கிற பரவஸ்து (பரம்பொருள்) ஸவித்ரு என்று சொல்லப் படுகிறது. கட்புலனாகிற சூரியன் இச்செயலைப் பிரபஞ்ச நிலையில் செய்து வருவதால் சூரிய நாராயணனும் ஸவித்ரு என்று சொல்லப் படுகிறார். ஆனால் இதன் லட்சியார்த்தம் (குறியீட்டுப் பொருள்) பரமாத்மாவையே குறிக்கிறது.

பரம்பொருளை விளக்குவதற்கு அமைந்துள்ள இரண்டாவது சொல் தேவ: என்பதாகும். தேவஸ்ய என்பது இதன் ஆறாம் வேற்றுமை. தேவ: என்னும் சொல் திவ்யமானவன், பிரகாசமானவன், மேலாம் நிலையில் இருப்பவன் என்றெல்லாம் பொருள் படுகிறது. பிரகாசத்தோடு கூடியிருப்பது மூலநிலை, யதார்த்த நிலை. பிரகாசத்தை இழந்த நிலை கீழ்மைக்கு வந்துள்ள நிலையாகும். ஜகத்தில் ஜடமாய் இருப்பதெல்லாம் மூலநிலையை விட்டு வழுவிக் கீழ்நிலைக்கு வந்தவைகளாம்.

சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். சூரியன் சுயப்பிரகாசம் வாய்ந்தவன். சூரியனிடமிருந்து சிதறி வந்துள்ள பூமியும், சந்திரனும் சுயப்பிரகாசத்தை இழந்தைவைகள். இந்த இரண்டு கோளங்களையும் எடுத்து மீண்டும் சூரியனுள் போட்டால் முன்னிருந்தபடி இவைகளுக்குச் சுயப்பிரகாசம் வந்துவிடும். ஜகத் (பருப்பொருள் உலகம்) ஜடமயமாக இருக்கிறது. ஜீவர்களோ ஜடம், சேதனம் (உணர்வு) ஆகிய இரண்டும் கலந்தவைகளாக இருக்கின்றன. பின்பு பரமனோ தனது சுயப் பிரகாசத்தை இழந்துவிடாது யாண்டும் பூரணமாகவே இருப்பவன். தேவ: என்னும் சொல் இப்பேருண்மையை விளக்குகிறது. பரம்பொருள் யாண்டும் சுயம்ஜோதி என்பது இதன் பொருள்.

இனி, பரவஸ்துவைக் குறிக்கின்ற மூன்றாவது பதம் பர்க: என்பதாகிறது. பர்க: என்பது ருத்ரனுக்கும், சிவனுக்கும் அமைந்த மற்றொரு பெயர். ருத்ரனாகக் கருதுமிடத்து அழுகையின் வாயிலாக அழுக்கைப் போக்கக் கூடியவன் என்று பொருள்படுகிறது. சிவனாகக் கருதுமிடத்து ஞானப் பிரகாசத்தின் வாயிலாக அக்ஞான இருளைப் போக்குபவன் என்று பொருள்படுகிறது. பரம்பொருளின் சொரூபத்தை ஜீவர்கள் கிரகித்துக் கொள்வதற்கே இந்த அடைமொழி வந்துள்ளது. ஸ்தூல உலகில் சூரியன் தான் இருக்குமிடத்தைத் தானே விளக்குகின்றான். தன் வெளிச்சத்தைக் கொண்டு ஏனைய பொருள்களையும் விளக்குகின்றான். அங்ஙனம் ஞான சொரூபியாகிய பரமாத்மா தன்னைத் தானே விளக்குகின்றான். அவனுடைய சன்னிதானத்தின் விசேஷத்தால் ஜகத்தும், ஜீவர்களும் ஞானக்காட்சிக்கு இலக்காகின்றன.

இங்ஙனம் ஸவித்ரு, தேவ:, பர்க: ஆகிய மூன்று சொற்களையும் நாம் உச்சரிக்கின்ற பொழுது, அச்சொற்களுக்கு இலக்காக இருக்கிற பரமாத்மாவையே பாவனை பண்ண வேண்டும். . பரமனைப் பற்றிய பதங்களைப் பேசுகின்ற பொழுது, அப்பதங்களின் அடிப்படைக் கருத்து உள்ளத்தில் உதயமாக வேண்டும். அப்பொழுது தான் உச்சரிக்கின்ற மந்திரத்துக்கு வலிவு வருகிறது.

காயத்ரீக்கு இன்றியமையாத மூன்று வினைச்சொற்களை இனி ஆராய்வோம். வரேண்யம் என்பது வர்ணித்தல் எனும் வினையின் விகாரமாம். வரேண்யன் என்னும் சொல் போற்றுதற்குரியது என்றும், வர்ணிப்பதற்குரியது என்றும், விளக்குதற்குரியது என்றும் பொருள்படுகிறது. தங்கம், வெள்ளி முதலிய தாதுக்களை விளக்க விளக்க அவைகள் சுடர்விடுகின்றன. பரமனை விளக்குவதற்கு ஏற்ப ஜீவாத்மனிடம் ஞானச் சுடர் வளருகிறது. பரமனை விளக்குதலே ஆராதனையாகிறது. பரமனைப் பற்றிய விளக்கத்தைப் “பொருள்சேர் புகழ்” என்று பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர் போற்றுகிறார். நரஸ்துதி பொருள் சேராத புகழ். பரம்பொருளைப் பற்றிய ஸ்துதி பொருள் சேர்ந்த புகழ். ஆயிரம் ஆயிரமாக சொற்களை வாரிக் கொட்டிப் புகழ்ந்து கொண்டு போனாலும் அதனுடைய புகழுக்கு முடிவில்லை. பரமனை இடையறாது புகழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்னும் கோட்பாட்டை வரேண்யம் என்னும் பதம் விளக்குகிறது.

வினைச்சொல் தீமஹி. தியானிப்போமாக என்பது இதன் பொருள். ஆத்ம சாதனங்களுள் இது தலை சிறந்தது. அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது அங்கமாக இருப்பது தியானம். இது முதிர்ந்தால் சமாதியாகப் பூர்த்தியாகிறது. காயத்ரி மந்திரத்தைப் பயன்படுத்துகிற பொழுது சிறிது நேரம் தியானம் பண்ணுவது அவசியமாகிறது.

தியானத்துக்காக நிமிர்ந்து உட்காரவேண்டும். சிரசு, கழுத்து, நெஞ்சு ஆகியவை நேராக இருக்கவேண்டும். உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயம் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது. இங்ஙனம் ஐந்து நிமிஷத்துக்குக் குறையாமல் அரைமணி நேரம் வரையில் தியானத்தில் அமர்ந்திருக்க வேண்டும். தியானம் நமது தேசியப் பண்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக பரதகண்டத்துப் பெருமக்கள் காலையிலும், மாலையிலும் சந்தியா நேரங்களில் ஆழ்ந்து தியானத்திலிருந்து பழகி வந்திருக்கிறார்கள். இந்தப் பண்பில் ஊறியிருப்பதற்கேற்ப ஆன்மிகம் மக்களிடத்து ஓங்குகிறது.

ஈண்டு இயம்பியுள்ள இரண்டு நல்வினைகளுள் ஒன்று நாவால் போற்றுவது; மற்றது மனத்தால் எண்ணுவது. ஜீவாத்மன் செய்கின்ற செயல்களுள் இவையிரண்டும் பாரமார்த்திகப் பண்பாட்டுக்கு உரியவைகள். ஆத்ம சாதகன் இவ்விரண்டையும் ஊக்கத்தோடு அனுஷ்டுக்கக் கடமைப் பட்டிருக்கிறான்.

ப்ரசோதயாத் என்னும் வினைச்சொல் மூன்றாவதாக வந்தமைகிறது. தூண்டுகிற என்பது இதன் பொருள். இச்செயல் ஜீவாத்மனுடையதன்று. உள்ளத்தினுள்ளே வீற்றிருக்கின்ற பரமாத்மனுடைய செயல் ஆகின்றது இது. ஜீவாத்மனுடைய செயலுக்குத் துவக்கமும், முடிவும் உண்டு. ஆனால் பரமாத்மனுடைய செயலுக்கோ ஆதி அந்தம் இல்லை. இச்செயலைத் தான் ஆன்றோர்கள் அருள் என்று அழைக்கின்றனர். அருளின் பாங்கு சர்வகாலமும் உள்ளத்தினுள்ளே நிலைபெற்றிருக்கிறது. ஆத்ம போதத்தில் விழிப்படைந்து வருகிறவர்களுக்கு அது விளங்குகிறது. அருளின் பாங்கை உள்ளத்தினுள்ளே உணர்பவனைத் தான் இருபிறப்பாளன் என்று சொல்லவேண்டும். வெறும் உபநயனச் சடங்கால் இந்த உணர்வு உருவெடுக்காது. பரிபாகத்தின் விளைவாகவே இது உருவெடுக்கிறது.

இந்தக் காயத்ரீ மந்திரத்தில் இறைவனுடைய அருளும், ஜீவப் பிரயத்தனமும் இடம் பெற்றிருக்கின்றன. இவ்விரண்டையும் ஒன்று படுத்துவது தான் யோகம். ஆக, பாரமார்த்திகப் பெருவாழ்வுக்குத் தகுதியுடையவர்களே காயத்ரீ மந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வல்லவர்கள் ஆகின்றார்கள்.

காயத்ரீ மந்திரத்தில் மெய்யெழுத்தை நீக்கிவிட்டு உயிரெழுத்தும், உயிர்மெய் எழுத்தும் சேர்ந்து இருபத்து நான்கு அக்ஷரங்கள் இருக்கும். இவை மூன்று வரிகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு வரியிலும் எட்டு எழுத்துக்கள் அமையப் பெற்றிருக்கும். இதுவே காயத்ரீ அமைப்பின் முறைமையாகும். இம்முறைமை வேதங்களில் முக்கிய இடம் பெறுகிறது.

வேதங்களின் உட்கருத்துக்களெல்லாம் காயத்ரீயில் அடங்கியிருக்கின்றன என்பது ஐதிகம். காயத்ரீயில் அடங்கியிருக்கிற கருத்து யாது என்று ஆராய்ந்து பார்க்குமிடத்து, பரம்பொருளுக்கும், ஜீவாத்மனுக்கும் இடையில் உள்ள இணக்கத்தை அது ஞாபகமூட்டுகிறது. ஜீவாத்மனைப் பரமாத்மன் மயமாகப் பண்படுத்துதற்கு அது வழிகாட்டித் தருகிறது. ஆக, ஜீவாத்மன் பரிணமித்து மேலோங்கி வந்து பரமாத்மனைச் சேர்வது குறிக்கோள். இது வேதங்களின் திட்டம். மானுட வாழ்க்கையின் முடிந்த நோக்கம் இதுவேயாம். இந்த நோக்கத்தைச் சுருக்கமாக காயத்ரீ மந்திரம் தெளிவுபடுத்துகிறது. ஆதலால் தான் காயத்ரீ மந்திரத்தை வேதங்களின் சாரம் என்று சான்றோர் சாட்டியிருக்கின்றனர்.

———

ஸ்ரீராம காயத்ரி–ஓம் தாசரதாய வித்மஹே  சீதா வல்லபாய தீமஹி தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி–ஓம் ஜனக புத்ரியை வித்மஹே ராம ப்ரியாய தீமஹி தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ஸ்ரீராம பாத காயத்ரி–ஓம் ராம பாதாய வித்மஹே ஸ்ரீராமபாதாய தீமஹி தந்நோ ராம பாதப் ப்ரச்சோதயாத்

விபீஷண காயத்ரி மந்திரம்.. “ஓம் ராம பக்தாய வித்மஹே சர்வாஸ்ரயாய தீமஹி தந்நோ விபீஷண ப்ரசோதயாத்”

—————-

அனாயேனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யா அபயம் மம:
விபீஷனோவா சுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் ||– வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம்

சிவனும் அம்புய மலரில் அயனும் இந்திரை கொழுநன்
அவனும் வந்திட உதவும் அரி எனும் பிரமம் அது
துவளும் அஞ்சன உருவு தொடரு செங் கமல மலர்
உவமை கொண்டு இதில் ஒருவன் உலகில் வந்ததுகொல~ கம்பராமாயணம், அனுமபடலம்

————–

ஆயுர்வேத, சித்த மருந்துகள் மட்டும் அல்லாது ஆங்கில மருந்துகளை ஏற்போரும் மருந்துகளை விழுங்கும் முன்னால்,
ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் பாஹிமாம்
ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ரக்ஷமாம் —என்று ஓதி மருந்துகளை,
மாத்திரைகளை, டானிக்குகளை உட்கொள்வதால் அந்த மருந்துகளின் முழுப் பலனையும் பெற்று உடனடி நிவாரணம் பெறலாம்.

————-

காயத்ரி வேதஜனனி காயத்ரி பாபநாசினி
காயத்ர்யாஸ்து பரம்  நாஸ்தி திவி சேஹ ச பாவநம்- –யோகரிஷி யஞ்யவல்க்யர்
காயத்ரி தேவி  வேதத்தின் தாய். இந்த மாதா பாவங்களை அழிப்பவள். பூலோகத்திலும்  தேவலோகத்திலும்,  காயத்ரி மாதாவிற்கு ஈடு இல்லை.

கூர்ம புராணம், காயத்ரி தேவியை போற்றும் பொழுது,  இதையே சொல்கிறது

காயத்ரி வேதஜனனி  காயத்ரி லோகபாவனி
வேதத்தின் தாய், உலகை  புனிதமாக்குபவள்
ந காயத்ர்யா:  பரம் ஜப்யம் ஏதத்  விந்ஞானமுச்யதே மந்திரத்தை விட   உயர்ந்த மந்திரம் இல்லை

—————-

ஸ்ரீ இராமாயண ரஹஸ்யங்கள்–

ஸ்ரீ நாரதர் மோகித்து குணவான் இத்யாதிக்கு பதில் சொல்லும் முன்பு –
காமன் உடல் கொண்ட தவத்தார்க்கு உண்மை உணர்த்த –ஆனந்த கண்ணீர் பெருகி –
ஸ்ரீ வால்மீகியும் அதே நிலையிலே -தெரிந்து கேட்ட கேள்வி அன்றோ –
ஸ்ரீ ராமன் சரித்திரம் இன்னும் ஒருவர் சொல்லிக் கேட்க ஆசையால் கேட்க்கிறார்

சித்ர கூடம் எழுந்து அருளும் பொழுது முதலிலே வால்மீகி ஆஸ்ரமம் தானே –
ஸ்ரீ பரத்வாஜர் சொல்லி ஸ்ரீ பெருமாள் போனார் -ஸ்ரீ வால்மீகீம் அபிவாதயே அயோத்யா -56-மகரிஷி
பிரமுதிக-ஸ்ரீ ராகவன் ப்ரீதி சம்யுக்தம் வசனம் -அருளியது உண்டே
காட்டுக்கு வந்த விஷயம் அறிவேன் என்றாரே –
ஸ்ரீ வால்மீகி ஆஸ்ரமத்துக்கு தமஸா தீரத்தில் உள்ளது -அங்கே கொண்டு போக ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ லஷ்மணனுக்கு சொல்லி அனுப்பினார்
நம் தமப்பனாருக்கு ஆத்ம சஹா என்றும் சொல்கிறார் அந்தக் கட்டத்தில்

சோகமே ஸ்லோகம் -ஸ்ரீ ராம சரித்திரம் –ராமனை வாழ்த்துவதாக மா நிஷாதா -முதல் ஸ்லோகம் -ஆதி காவ்யம் தானே இது

ஸ்ரீ கம்பர் -அண்ணலும் நோக்கினான் –
சீதை பிராட்டியை குடிலோடே கூட்டி போனதாக சொன்னவை வால்மீகி சொல்ல வில்லை -வால்மீகி சொன்னதே பிரமாணம்
ஸ்ரீ கம்பன் -கம்பத்தில் வந்தது -இவர் பரம ஸ்ரீ வைஷ்ணவர் -ஹிரண்ய வதைப்படலம் -230-
ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ வால்மீகி சொல்லாததை சொல்வதும் பிரமாணம் –
அங்குல்யா அக்ர தாம் ஹன்யா –ஸ்ரீ பெருமாள் சொன்னதை விவரித்து -ஸ்ரீ கம்பர் -தம் குல தைவம் சரித்திரம்
லஷ்மண ரேகா -எந்த ராமாயணத்திலும் இல்லை — கர்ணபரம்பரை
அணில் கைங்கர்யம் ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களில் மட்டும் உண்டே

யவ்வனம் தன சம்பத் பிரபுத்வம் அவி விவேகம் -சர்வ நாசகாரம் சதுஷ்ட்யம்
தேவர்கள் அர்த்திக்க ராமம் மானுஜம் ஜெகநா -ராவண சம்ஹாரம்
பவித்ராணாம் சாதூனாம் விநாசாய துஷ் க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்த மூன்றும் தானே சொல்லி
மழுங்காத –தொழும் காதல் –
முதலை முதலை என்று கதறினாலும் முதலே தன்னை கூப்பிட்டது போலே வந்தான் –
அ என்று கதறினான் -அகாரார்த்தம் தன்னை என்று வந்தான்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவன்-
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக வருவான் -26-பொருளே தெரியாமல் சொன்னாலும் பலன் கிட்டும் –
அர்த்தம் நமக்கு தெரியாது இருந்தாலும் பலன் -வணக்கம் பிரதம மந்திரி சொல்ல கேட்ட நாம் மகிழ்வது போலே
அகாரார்த்தம் தெரியாமல் அ என்றாலும் வந்தானே
நாராயணன் நாகணை மிசை நம்பிரான் மணி வண்ணன் இவ்வளவு அகாரத்துக்கும் உண்டே

ஹூங்காரம் -மாட்டுவண்டிக் காரன் ஹாவ் ஹாவ் சொல்லுவது போலே – ஹஸ்தத்தால் -அடித்து -அக்ரி -காலால் உதைத்து –
இவ்வளவும் கருடனுக்கு பண்ணி த்வரைக்கு நமஸ்தே
துதிக்கை ஸ்துதிக்க கை -தொழும் காதல் அன்றோ –
கரஸ்த கமலாநி -தானே கையாலே பறித்த புஷ்பத்தை தனது கையாலே சமர்ப்பிக்க ஆசை கொண்டதே
சாது பரித்ராணம் -சாது லக்ஷணம் க்ஷண கால விஸ்லேஷம் கல்ப கோடியாக நினைப்பவர்
கம்பர் -கரா–அரவணைத்த துயில்வோய் என்று அழைத்த அந்த மெய்ப்பொருளை ராமன் பெயர் -காட்டிக் கொடுத்து
அவதாரம் -அவ தரத்தி கீழே இறங்கி பரமபதத்தில் இருந்தும் என்றும் -தாழ எளிமையாக என்றும் இரக்கம் கொண்டு இறங்குதல் –
க்ருத்ஸ்னம் சீதாயாக சரித்திரம் மஹத் -முழுவதுமாக -பெருமையானது -நாடு நயமாக சொல்லி
பவ்லஸ்ய வதம் என்றும் – இராம சரித்திரம் –
திருவினை பிரித்ததால் பவ் லஸ்ய வதமும் இவளுக்காக
ராமாயணம் ராமஸ்ய அயனம் -ரமா
என்பதை ராமாயாக அயனம் -சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது

பால காண்டம் -5-சர்க்கம் கதை – -18 சர்க்கம் அவதாரம்-அவதாரம் -9-ஸ்லோகம் –
அதிலே சில ஸ்லோகங்கள் பின்பு விசுவாமித்திரர் வந்தது
700-சர்க்கம் ராமாயணம்
ரிஷ்ய சிங்கர் -உனக்கு கொம்பு முளைத்து இருக்கா வசனம் இதனால்
புனர்வசு -புஷ்யம் -ஆயில்யம்

இயம் சீதா மம ஸூதா ஸஹ தர்ம சாரீதவ–ப்ரதீச்ச ச ஏனாம் பத்ரம் தே பாணிம் க்ரீஹணீஸ்வ பாணினா–1-73-26-

சக்ரவர்த்தி கலப்பை உழுவது எதனால் -கர்ம யோக நிஷ்டர் அன்றோ -யாக பூமியை சுத்தி யஜமானனே செய்ய வேண்டுமே
இவனே தர்மம் -இதை நிலை நாட்டவே அவதாரம் -தர்மஞ்ஞா- சரணாகத வத்சலன் இதி விதித

முன் சென்று கல்லையும் முள்ளையும் அகற்றுவேன் –
கல் நெஞ்சு உள்ளாரையும் முள் போன்ற கருத்து உள்ளாரையும் திருத்தவே சுக்ரீவாதிகளை ஆபரணம் மூலம் திருத்தி
அதனால் தான் ஆண் உடை உடுத்திய பெண் போன்ற வார்த்தைகளை சொல்லி
ராமா மகா ஸஹ கச்சா-நீ பின் வா உறுதியாக
ஸஹ தர்ம சரிதா பவ -ராமனும் சொல்லி கூட்டிச் சென்றான்
இவள் சந்நிதியும் அசந்நிதியும் பெருமாள் ரஷிக்கவும்-வதம் செய்யவும் –
ஆவியை -ஜனகன் பெற்ற அன்னத்தை -அமுதினிலும் வந்த தேவியை பிரிந்து திகைத்தனையே -வாலி

———-

கச்ச மாதுல குலம் பரதேந ததா அநக -சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீத ப்ரீதி புரஸ் க்ருத –2-1-1-அயோத்யா காண்டம்
சத்ருக்ந ஆழ்வான் படி பாகவத சேஷத்வம்
அநக – அயோத்யையில் பாபம் இல்லாதவன் இவன் ஒருவன் இறே -உத்தேச்ய விரோதியே பாபம் –
ராம பக்தியான பாபம் -இஷ்ட பிராப்திக்குத் தடையானது தானே பாபம்

ராவணன் பண்ணிய பாபமே தசரதனுக்கு முடியில் நரை -அது கண்டு ராமனை பட்டாபிஷேகம்-இத்யாதி
ராவணன் செய்த தீமை தான் இந்த நரை -கம்பர்
பேதமைத்தாய் வரும்-இராமனுக்கு இராத மன்னனாக்கி பரதனுக்கு ராஜ்ஜியம் நல்கி பிறப்பை நீத்துவான் –
புத்ர சோகம் -வானத்தை நண்ணுவேன் -வான பிரவேசம் சொல்ல வந்ததாகவும்
பெருமாள் காட்டுக்கு போவதையும் வைத்து கம்பர்
பூ பழம் இரண்டையும் பார்க்க பூவை மறந்து பழத்தைக் கொள்ளுவாராய் போலே
ராமனைக் கொண்டு தசரதரனை மறந்தார் அயோத்யா வாசிகள் -துளசிதாசர் ராமாயணம்

பரதன் இல்லாத சமயம் இதுவே ப்ராப்த காலம் உனக்கு பட்டாபிஷேகம் –
மனஸ் ஒரு நிலையில் இருக்காதே -தசரதன் வார்த்தை -வால்மீகி
கைகேயி தமப்பனார் இடம் தசரதர் முன்பே அவள் பிள்ளைக்கு ராஜ்ஜியம் தருவதாக சொல்லி இருப்பதை நினைத்து
இந்த விஷயத்தை ராமனே சித்ரகூடத்தில் பரதனுக்கு சொல்லி –
சத்யம் காக்க வந்த தசரதர் -இப்படி செய்யலாமோ
ராமரும் அன்று எதற்கு இத்தை சொல்ல வில்லை என்றும் கேள்வியும் வருமே
கல்யாண காலத்தில் பண்ணும் சத்ய வாக்கியம் -மனைவியுடன் கூடிய காலம் -தர்மத்துக்காக –
உயிரைக் காப்பாற்ற -அடியவர்க்காக பொய் சொல்லலாம் icu-dr பார்க்கலாம் நான் dr பார்க்க முடியுமோ
நன்மை பயந்தால் பொய்மையும் -சரியே வள்ளுவர்
கைகேயி கல்யாணம் பொழுது பிள்ளையே இல்லையே
தர்ம சாஸ்திரம் மூத்த பிள்ளைக்கே -இவனுக்கு தர இவருக்கு அதிகாரம் இல்லையே
இந்த மாதிரி பேசி சமாதானம் பண்ண வேண்டி இருக்குமே அதனால் தசரதன் சொன்னார்

ராமர் சொல்லாத காரணம்
சொல்லி இருந்தால் வனவாசம் நின்று இருக்குமே –
பெரிய பெருமாளுக்கும் ராமருக்கும் சம்வாதம் -பட்டாபிஷேகம் நின்று போக கூனியை அனுப்பி
திரும்பி வந்த பின் ராமருக்கு ராஜ்ஜியம் திரும்ப தருவதாக சொல்ல வில்லையே -பரதனுக்கு அரசு இல்லையே நியாயமா –
சித்ர கூடம்-மூத்தவன் இருக்க இளையவள் ஆண்டால் நரகம் -சாஸ்திரம் -என் ராஜ்ஜியம் தானே –
என் உடைமையை நான் என்ன வேண்டுமானாலும் பண்ணலாமே -உமக்கு சமர்ப்பிக்கிறேன் –
தர்மம் ஏற்று கொள்ளாமல் இருக்க கூடாதே -வனவாசம் முடித்து வந்தபின்பு கொள்கிறேன் -பிரதி நிதியாக பாதுகையை வைத்து –
இயம்பினன் அரசன் என்றாள் -நும் பணி மறுப்பனோ -பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ –
இதுதான் பரதனுக்கு நீ வாங்கிக்கொடுத்துள்ளாய் –
மன்னவன் பணி அன்று -ஆகிலும் நும் பணி மறுப்பனோ

யாதோ ஜாதா -எங்கேயோ பிறந்தவள் கூனி -அயோத்யையில் பிறந்தவளாக இருந்தால் கெடுக்க மாட்டாள்
ராவணன் தீமையே கூன் வடிவில் கம்பர்
எதனால் கூனி செய்தால் என்பது வால்மீகி ராமாயணத்தில் இல்லை

பாதுகை முன்பு எங்கு இருந்தது
தகப்பனார் பட்டாபிஷேகத்துக்காக சேகரித்த சர்வமும் கொண்டு காண வந்தான் –
சித்ர கூடத்தில் பண்ணப் போகிறேன் -ஸ்லோகம் உண்டே
ராஜாவாகவே அழைத்து வர எண்ணி போனான் –
அதில் முக்கியமானவை செங்கோல் கிரீடம் தங்க கவசம் போட்ட பாதுகை -உண்டே
ராஜ்யத்தை அங்கீ கரிக்கவே பாதுகையில் ஏறி அருளினார் பெருமாள்
ஆரூரோஹ ரதம் ஹ்ருஷ்டா மகிழ்ந்து திரும்பினான் -மரவாடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய்

ஆழ்வார் பாசுரத்தில் உண்டே -அதனால் கம்பரும் காட்டுகிறார்
கூனி சிதைய உண்டை வில் –கோவிந்தா -கொண்ட கொண்ட அரங்க ஒட்டி -போன்றவை உண்டே
வால்மீகி –சொல்லாதது -சீதையா சரித்திரம் சொல்ல வந்ததே
12-வயசில் திருக் கல்யாணம் -24-வயசில் தண்டகாரண்யம் செல்ல
இவற்றை விவரிக்க வில்லையே வால்மீகி
14-வருஷம் பார்க்காமல் இருந்தால் செத்ததுக்கு சமம் -13-வருஷம் த்ரேதா யுகம் -12-வருஷம் கலியுகம் இன்றும் உண்டே

இப்போது எம்மனாரால் இயம்புவதற்கு எளிதோ -என்று கம்பர் எழுதாமல் மயங்கி விழ
ராமர் திரு முகம் காட்டி அருள –அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றது
முள் கிரீடம் முன்பு -ஏறு போன்று மகிழ்ந்தான்
ஸுசீல்ய சாகரம் -ராமனை தேசிகன் கொண்டாடி -சீர் அணிந்த குகனோடு தோழமை கொண்ட அடையாளம்
அதிக நியதம் பிரபாவாத் பாதுகா சஹஸ்ரம்

தன் ஜோதியில் விரி ஜோதியில் மறைய பொய்யோ என இடையாளொடும் இளையானொடும் போனான்
மரகதமோ –மையோ -மரகதமோ மரி கடலோ மழை முகிலோ-ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான்
திருக்கண்ணபுரம் பாசுரம் அடி ஒற்றி கம்பர்

12-வருஷங்கள் தண்டகாரண்யம் இருந்தவற்றையும் விவரமாக வால்மீகி சொல்லவில்லை
பிரிவை க்ஷணமும் சஹியாத பெருமாள் என்று -12-வருஷங்கள் இருந்து உணர்ந்த பிராட்டி –
வந்த கார்யம் செய்ய இப்படி வார்த்தை -எதுக்கு வீண் வம்பு ஸ்தூணா நிகன நியாயம்
ப்ரதிஜ்ஜை -உயிரை விட்டாலும் உன்னை விட்டாலும் இளைய பெருமாளை விட்டாலும்
ரக்ஷண தர்மத்தை விட மாட்டேன் -பெருமாளை சொல்ல வைக்க –
தன் அடியார் -சேர்க்கும் முன்பு அவள் மன்றாட பின்பு அவன் மன்றாட -இப்படி அன்றோ நாம்
ஆச்சார்ய -பாபம் இல்லாதவனே கங்கையில் இறங்கி ரஷிக்க முடியும் ஒருவனே செய்ய –
கங்கையில் முழிக்கினால் பாபம் போகும் நீர் சொன்னீரே அத்தை மனசில் வைத்து ரஷித்தேன் -கதை
அங்கீ கரித்த பின்பு பாபம் இல்லை -உன் அடியார் இருக்க பாபம் இருந்தாலும் என் அடியாராக பின்பு பாபம் இல்லையே

யாதிருச்சியா வந்தவர் கூனியும் சூர்பனகையும் -இருவராலும் காண்டங்கள் மாற
அழகான வடிவாக வந்ததாக ஆழ்வார் -அதை அடி ஒட்டியே -கம்பர் -கலை வணக்கு நோக்கு அரக்கி -ஆழ்வார் மான் போன்ற கண்
நடக்கிற அழகு பாட்டில் -கம்பர் -வஞ்சி என நஞ்சம் என வந்தாள்
ஹாஸ்ய ரசம் -இவ்விடத்தில் வால்மீகி
சூர்பனகையை வதம் பண்ணாமல் விட்டது -தாரையை வதம் பண்ண அங்கு விசுவாமித்திரர் –
அடுத்து பிராட்டி அருகில் இருக்க வதம் பண்ண முடியாதே
ஆத்மாய ஜமாந
தருணவ் ரூப சம்பன்னவ் -போலே கம்பரும் கர தூஷணாதிகள் –
மூக்கை அறுக்காமல் நாக்கை அறுத்து இருக்க வேண்டும் என்றார்களாம்

பெருமாளே பிராட்டியை பிரித்து கர தூஷணாதிகளை முடித்தார்
புஸ்தகம் எழுதினர்-dedicated to wife -இல்லாத படியால் எழுத முடிந்தது கதை போலே

மாரீசன் முதல் உபதேசம் பலிக்க சூர்ப்பனகை வந்து காமத்தை கிளப்ப மீண்டும் மாரீசன் இடம் சென்று –
சொன்னபடி செய்யா விட்டால் கொல்லுவேன் என்ன

அருந்தி விரும்பி வைத்தேன் -சபரி -அருந்தின கனிகளைக் கொடுக்க விரும்பி பெருமாள் கொண்டான்
கம்பர் நாதமுனிகள் காலம் -பட்டர் காலம் -கூட்டம் கூட்டமாக திருவாய் மொழி அனுபவம் சடகோப அபந்தாதியில் இருப்பதால்
பட்டர் காலமே என்பர் காஞ்சி ஸ்வாமிகள்
திருவடி -சப்த பிரயோகமும் கம்பர்
ஆஸ்ரித வாத்சல்யத்தால் ஸ்ரீ திரு மழிசை பிரான் அமுது செய்த பிரசாதம் ஸ்ரீ ஆராவமுத ஆழ்வார்
அமுது செய்தார் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
சூடிக் கொடுத்த மாலையை சூடுவானே
ரகுகுல திலகர் ஆச்சார்ய பிரதரான பெருமாள் -வேடுவச்சி -குரு ஸூஸ்ருஷையால் –
நாவுக்கு இனிதான பல மூலாதிகளை –தன் கையால் அமுது செய்யப் பண்ண விரும்பி அமுது செய்தார்
வண்டு கடித்த பழம் இனிமையாக இருக்குமே
வேதக்கடலே –சொல்லின் செல்வன் -கம்பர் /சொல்லில் செல்வோம் இப்பொழுது
விரிஞ்சனோ விடை ஏறியோ -விஷ்ணு தான் இல்லையே –

தரணி ஸூத சுக்ரீவன் சூர்யன் பிள்ளை இடம் சரணாகதி -ஸ்வாதந்தர்யத்தால் பரதந்தர்யத்தை
ஏறிட்டுக் கொண்டு நாதம் இச்சாமி
சுக்ரீவன் இடம் தான் பிராட்டி கடாக்ஷம் வாலி இடம் இல்லையே அதனால் தான்
முனிவர்கள் நியமனமும் சுக்ரீவனை இடம் செல்ல உபதேசம்
தம்பி மனைவி கொண்டதால் அதர்மம் –
அக்னி சாக்ஷியால் வாலி இராவணன் நட்பு உத்தர காண்டம்
துந்துபி சரீரம் வாலி எறிய மதங்க முனிவர் ஆஸ்ரமம் ரத்தம் விழா சாபம் -அதனால் நுழைய முடியவில்லை வாலியால்
நித்யம் பாதாதி வந்தனம் -லஷ்மணன் நூபுரம் ஒன்றே அறிவேன்
இப்படிப்பட்டவனை அந்த வார்த்தை சொன்னது -ஸ்த்ரீயம் புருஷ விக்ரஹம் பெருமாள் இடம் சொன்னது போலே
ராவணன் வரும் பொழுது பெருமாள் இளைய பெருமாள் இருக்கக் கூடாதே
மாரீசன் கூச்சல் பண்ணினது ராவணை முடிக்கவே
ராவணன் சீதையை கொண்டு போனதை அறிந்தும் நாலு திக்குகளிலும் அனுப்பியது
மூன்று லோகங்களையும் வென்றவன் எங்கு வைத்து இருப்பான் தெரியாதே

துஷ்கரம் க்ருதவான் ராகவா ஜீவாதி தாராயத்தி ஆத்மனோ தேகம் –
இது ஏதேனும் இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்க -ஸ்ரீ நம்பிள்ளை
நம் உடம்பு எம்பெருமானுக்கு சரீரம் நம் ஆத்மாவை போலே
மதுராம் வார்த்தை-தேவ பாஷையால் பேசாமல் மதுர பாஷையால் -தமிழில் திருவடி -இனிமையும் நீர்மையும் தமிழ் நிகண்டு
தமிழ் தமிழ் திரும்ப சொல்ல -அமிழ்து-ஸ்ரீ வால்மீகிக்கும் தமிழ் தெரியும்
புறநானூறு வால்மீகியார் என்பவர் உண்டே-திருவினை விட்டார் அனைத்தையும் விட்டார் –
இவள் சந்நிதியால் காகம் தலைப்பெற்றது -என்பதையே இவ்வாறு அருளிச் செய்கிறார்-
வால்மீகி தமிழிலும் ஆதி கவி
சிரத்தினால் தாங்கி மெலிந்தாள் -குளிர்ந்தாள்-கணையாழி பெற்ற நிலை கம்பர்

சரணாகதி சாஸ்திரம் -காண்டங்கள் தோறும் சரணாகதி உண்டே
சுக்ரீவம் சரணாகதி நாதம் இச்சாமி பலிக்க வில்லை -பயமூட்டி கார்யம் நான்கு மாதங்கள் கழித்து உதவினான் –
இது கிஷ்கிந்தா காண்ட சரணாகதி
சுந்தர காண்டத்தில் தான் காகாசூரன் சரணாகதி காட்டுகிறார் -வால்மீகி -அயோத்யா காண்டத்தில் நடந்ததை
விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித்த சூர்ப்பணகை ஷேப யுக்தியாக -வசவாக -சொல்லக் கேட்டு
என்று பார்ப்போம் என்று பாரித்து இருந்தார் பெருமாள் -மறக்குடி அறம் செய்யக் கெடும் –
இட்டு வா என்றால் சுட்டு வரணும் -மோதிரம் இட்டு வந்தவர் இலங்கையை எரித்து விட்டு வந்தார்
மீண்டும் ஒரு தூது -அங்கதன் -அவன் பேசின பேச்சு வால்மீகி ராமாயணத்தில் இல்லை
வாலில் நெருப்பு வைத்து அனுப்பிய குரங்கா -அத்தை துரத்தி விட்டோம்
வால் தானே குரங்குக்கு பிரதான அங்கம் என்றதுமே கதி கலங்கினான் ராவணன்
தீயிடை –குதித்த -அவள் வாய் சொல் வேகவதி வார்த்தை -பெண்ணால் அழிவு உனக்கு-
அவ் வணங்கை விட்டு விடு விபீஷணன்-அறிவில் மிக்கான் – சுட்டிக் காண்கிறான்

மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் -பழ மொழி ஸ்ரீ கூரத்தாழ்வான் பொன் வட்டில் எறிந்த பின்பே –
பெரும் செல்வம் நெருப்பாக -ஆழ்வார் -நெருப்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை –
உலகு வாழ்வுக்கு கொஞ்சம் செல்வம் வேண்டுமே -பெரும் செல்வராய் திருமால் அடியாரைப் பூசிக்க நோற்றார்கள்
நெருப்பும் செல்வமும் அளவோடு இருக்க வேண்டும் திருக்குறளும் உண்டே
உடையார் -சக்கரவர்த்தி / பெரிய உடையார் -ஜடாயு -/மங்களா சாசனம் செய்ததாலும் பெரிய -ஸ்ரீ பெரியாழ்வார் போலே
இவர் ஆயுஷ்மான் என்று வாழ்த்தினதால் தான் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ சீதா பிராட்டியை விட்டு உயிருடன் இருந்தார் என்பர்
ஆச்சார பிரதானர் -சமுத்திரம் கடலைத் தாண்டக் கூடாது -ஸாஸ்த்ர விதி -ஆகையால் சேது

அபராத பிராயச்சித்தார்த்தமாக சுக்ரீவனையே இட்டு ஸ்ரீ விபீஷணனை அழைத்து வரச் சொல்லி
என் மீது வைத்த காதலால் சொன்னாய் ஆகிலும்
குகனோடும் ஐவரானோம் –நின்னோடும் எழுவரானோம் —
புகல் யரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் உந்தை -உம்பி எம்பி ஆழ்வார் பாசுரம் படியே

இங்கேயே ஸ்ரீ விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் என்றால் ராவணன் திருந்தி வந்தால்
பிரதிசிஷ்யே மஹோ தயயே -வால்மீகி கருணை என்னும் கடல் கிடந்தனன் கரும் கடல் நோக்கி -கம்பர் –
ஸ்ரீ நஞ்சீயர் இத்தை மேற்கோள் காட்டி அருளுகிறார்
அதிகாரம் சம்பாதிக்க வேண்டாம் நின்ற நிலையிலே -சர்வாதிகாரம் -ஸ்ரீ வேல் வெட்டிப்பிள்ளைக்கு-
பட்டுப்புடவை தோய்க்கக் கெடும்–நூல் புடவை தோயாமல் கெடும் மடி-சுத்தம் –
த்ருஷ்டாந்தம் இதுக்கு வார்த்தாமாலையில் காட்டி –
கூரப்புடவை நனைக்காமல் -பிள்ளைக்கு நூல் புடவை நினைத்தே கல்யாணத்தில்
புறம் தூய்மை நீரால் அமையும் அகம் தூய்மை வாய்மையால் அமையும் -வள்ளுவர்

சரணா கதி பண்ணினதால் வரவில்லை -சமுத்திர ராஜன்
மொட்டைத்தலையன் இதிகாசம் ஸ்தோத்ரம் பண்ண மனுஷ்யனே மயங்கும் பொழுது பரமாத்மாவுக்கு சொல்ல வேண்டுமோ
அபராதம் மறந்து விரோதிகள் இடம் அம்பை விட்டு
மனுஷ்ய பாவனை ஏறிட்டுக் கொண்டு -ஸ்ரீ பெருமாள் -அதனால் தான் ஸ்ரீ சுக்ரீவன் இடமும் சமுத்திர ராஜனிடமும்
மிரட்டி தான் கார்யம் -ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் இல்லாமல் பலிக்காதே
அணிலம் போல கைங்கர்யம் ஆழ்வார் மட்டும் -குரங்குகள் மலையை நோக்க -உபாத்தியாயர் ஊசி போலே
குளிக்க குளிக்க சமுத்திரம் குறையும் -என்பது அன்றோ அணில்கள் பாரிப்பு
மணலை ஒட்டி ஒட்டி அணை கட்டும் -என்பது அன்றோ அணில்கள் பாரிப்பு
ஓடி -ஓடினால் நிறைய மணல் ஒட்டிக்கும்
கைங்கர்ய பாரிப்பு
தரங்க நீர் -அலை உள்ள கடல் –
தோள்களின் மேல் மேல் பெருமாளை தூக்கி யுத்தம் என்பதால் திருவடி பெயர்

உனக்கு இவன் எப்படியோ அப்படியே என்பக்கம் நாம் கார்யம் செய்கிறேன்
எனக்கு நீ அப்படியே அப்படியே அவனும் என்னாமல் -அடியவன் என்னாமல் –
ஸ்ரீ பரதன் இடம் செய்தி சொல்லி திரும்பி வந்து ஸஹ போஜனம் வால்மீகி ராமாயணத்தில் இல்லை –
ஆகவே காய்கறிகள் இத்யாதி அந்தப்பக்கம் அன்னம் பருப்பு இந்தப்பக்கம் இன்றும் சாதிக்கிறோம்

அஞ்சிலே ஓன்று பெற்றான் -பஞ்ச சம்ஸ்காரம் திருமந்திரம் உபதேசம் அருளி
அஞ்சிலே ஒன்றைத் தாண்டி விரோதி ஸ்வரூபம் தாண்டி
அஞ்சிலே ஓன்று ஆறு ஆக -உபாயம்
அணங்கு-பிராட்டி புருஷகாரம்
பூ லோக வைகுண்டம் காட்டிக் கொடுக்கிறார் இத்தால்
அவன் நம்மை அளித்துக் காப்பான் –ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்

ரஹஸ்யமாக ராவணன் சரணம் -அனைத்தையும் தொலைத்து தன்னையே சமர்ப்பித்து
ஆகாசம் சாகரம் ராவண யுத்தம் -பூமியில் விழுந்த விதியில் ஏற்றுக் கொண்டான் – லீலை தானே –
இது த்வார பாலகர்களில் ஒருவன் தானே -விபீஷணன் வெளிப்படையாக காட்டி இவன் அந்தரங்கமாக காட்டி -என்பர்-

————————————-————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள் / ஸ்ரீ ராம மங்களம்–

November 24, 2023

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள்

ஸ்ரீ ஆதித்ய ஹிருதய ஸ்தோத்ரம் ஸ்ரீ ஸூர்ய மண்டலா வர்த்தியான ஸ்ரீ மன் நாராயணனுடைய அருளைப் பெறுத்தும்
என்பதாலேயே ஸ்ரீ கோவிந்த ராஜர் இதற்கும் வியாக்யானம் செய்து அருளி உள்ளார்

ஆதித்ய ஹ்ருதய சர்க்கத்தின் முதல் 2 ஸ்லோகங்கள் அகத்தியர் இராமபிரானை அணுகுதல்.
மூன்றாவது ஸ்லோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஆதித்ய ஹ்ருதய மந்திரம் 4வது ஸ்லோகம் முதல் 26 வரை வெளிப்படுத்த பட்டுள்ளது.
ஸ்லோகங்கள் 4,5 ஆதித்யஹ்ருதயத்தின் பெருமைகள்.
ஸ்லோகங்கள் 6-15 சூரியனின் பெருமைகள், ஆத்ம போதம், உள்ளிருப்பதும் வெளியிலிருப்பதும் ஒன்றே என நிறுவுதல்
ஸ்லோகங்கள் 16-20 மந்திர ஜபம்
ஸ்லோகங்கள் 21-24 சூரிய போற்றிகள்
ஸ்லோகங்கள் 25, 26 பலன்கள், ஜபிக்கும் முறை
27-30 ஸ்லோகங்கள் ராமர் ஜபித்த முறையை கூறுகிறது.
முப்பத்தி ஒன்றாம் ஸ்லோகம் இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

———

ஓம் அஸ்யஸ்ரீ, ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய,
அகஸ்த்யோ பகவான் ரிஷிஹி, அனுஷ்டுப் சந்தஹ:
ஸ்ரீ ஆதி ஆத்மா சூர்ய நாராயணோ தேவதா, நிரஸ்தா சேஷ விக்நதயா
பிரம்ம வித்யாதி ஸித்யர்த்தே, ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோகஹ

—————-

ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமித பாப க்லேஷ துக்கஸ்ய நாஷம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||–பூர்வாங்க ஸ்தோத்ரம் / தியானம்

வெற்றி வெற்றி (தரும்) கர்ம வீரமே (ஸூர்யம்), ஏழு உலகங்களின் தீபமே
ஒளிக்கதிர்களால் பாபங்களையும், கவலைகளையும் (உடல்வலி பற்றிய எண்ணங்களையும்), துக்கங்களையும் போக்குபவனே.
கிரணங்களால் ஆட் கொள்பவனே. ஆதி முதல்வனே. பரமாத்மனே
ஸகல உலகங்களாலும் வணங்க படுபவனே. ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

ஏழு உலகங்கள்- பூலோகம், புவர், ஸ்வர், மஹர, ஜனர், தபோ, ஸத்ய லோகம்

———

ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம் |
ராவணம்ச-அக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் || 1

போர்க்களத்தில் போரினால் களைப்படைந்து,போர் குறித்த ஆழ்ந்த சிந்தனைகளுடன் இராமன் நின்றார்
இராவணன் தயாராகி களத்தில் முன்னிலையில் நின்று பலமுடையவனாக தோன்றினான்.

———–

தெய்வ-தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |
உபாகம்ய-அப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ர்ஷி(ஹி): || 2

தேவர்கள் அணைவரும் ஒன்று கூடி போரைப் பார்க்க இருந்தனர்
தேவர்களுடன் இருந்த அகஸ்த்ய பகவான்,போருக்கு முயன்று நிற்கும் ராமரை அருகில் அணுகி சொன்னார்.

———

ராமராம மஹாபாஹோ ஷ்ருனு குஹ்யம் ஸனாதனம் |
யேன-சர்வான்-நரீன், வத்ஸ, ஸமரே விஜயி-ஷ்யஸி || 3

இராமா, இராமா! பெரும் தோள் வலிமை கொண்டவனே! கேள் இரகசியத்தை,(அது) காலம் காலமாக என்றுமுள்ளது
எல்லா மக்களும் விரும்பி பயன்படுத்துவது. குழந்தாய், அது போரில் வெற்றி தருவது

————

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம் |
ஜயா-வஹம் ஜபே-ந்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்|| 4

ஸர்வ மங்கல மாங்கல்யம், ஸர்வ-பாப-ப்ரணாசனம் |
சிந்தா-சோக-ப்ரசமனம் ஆயுsர்-வர்தனம் உத்தமம் || 5

ஆதித்யஹ்ருதயம் புண்யம்- ஆதிபரமனின் ஹிருதயம் – மந்திரம் நல்வினைகளைத் தருவது
ஸர்வசத்ரு விநாசனம் – உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் நசிக்க-அழிக்க வல்லது
ஜயாவஹம்-வெற்றி தருவது
ஜபே ந்நித்யம் – எப்போதும் ஜபிக்க கூடியது
அக்ஷய்யம்- பொங்கி பெருகி கொண்டே இருப்பது (அழிவற்றது)
பரமம் – மிகப் பெருமை கொண்டது
சிவம் – மங்களம் தருவது. விடுதலையை தருவது
ஸர்வ மங்கள மாங்கல்யம் – அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது. நிலையான பேரின்பம் தருவது
ஸர்வ பாப ப்ரணாஸனம் – அனைத்து பாவங்களையும் போக்குவது
சிந்தா சோக ப்ரஸமனம் – மனக் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது
ஆயுர்வர்த்தனம் – நீண்ட ஆயுளைத் தர வல்லது
உத்தமம் – சிறந்தது

———–

ஆதித்யரின் தன்மைகள் – பெருமைகள்

ரஷ்மி-மந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம் |
பூஜையஸ்வ-விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் || 6 ||

ரஷ்மி-மந்தம் (இதமான) பொன்னிறக் கதிர்களை பிரதிபலிப்பவர்.
ஸமுத்யந்தம் – பிரபஞசத்தின் எல்லையாக விளங்குபவர்
தேவாசுர நமஸ்க்ருதம்- தேவர்களாலும், அசுரர்களாலும், (நன்மை, தீமை செய்பவர்கள்) வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-வணங்கத் தகுந்தவர்.
விவஸ்வந்தம் – பரமசிவம்
பாஸ்கரம் – எல்லா ஞானத்தையும்- ஒளியையும் (மதி, அக்னி உள்பட) உருவாக்குவது.
புவனேஸ்வரம் – புவனத்தின் தலைமை.

இரகசியம்-3 ஒளி-சுயம்/ஆத்மன்/பிரமம், இருட்டு-மாயை/சுய அறிவின்மை.
கட உபநிசத் (II.ii.15) சூரியனோ சந்திரனோ, நட்சத்திரங்களோ ஒளிர்பவையல்ல.
பராமத்மனே அந்தர்யாமியாய் அணைத்திலும் ஒளிர்கிறான்.
எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவர்.
(அதனால்) தேவர்களாலும் அசுரர்களாலும், எல்லோராலும் வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-கடமைக்கு நேரடி எடுத்துக்காட்டாக இருப்பதால் வணங்கத் தகுந்தவர்.

ஸகல லோகங்களுக்கும் ஸ்வாமியான அந்த ஸூர்ய மண்டல அந்தரவர்த்தியான ஸ்ரீ மன் நாராயணி நீர் பூஜியும்

————–

ஸர்வ தேவாத்மகோஹி ஏஷ ஹ: தேஜஸ்வீ ரஸ்மி பாவனஹ: |
ஏஷ தேவாசுர கணான் லோகான் பாதி-கபஸ்திபி ஹி:|| 7

எல்லா தேவர்களின் வடிவம்
ப்ரகாசங்க்களிலும் ப்ரகாசமானது. அதே நேரத்தில் இதமானப் பொன்னிறக் கதிர்களை வெளிப்படுத்துவது.
இவரே தேவர்களும் அசுரர்களும் எல்லா உலகங்களையும் கதிர் கரங்களால் காப்பாற்றுபவர்.

எல்லா வஸ்துக்களையும் பிரகாசிக்க வல்ல கிரணங்களை யுடையவன்
தனது கிரணங்களாலே தேவாதி ஸர்வ பூதங்களையும் ரக்ஷித்து அருளுகிறான்
ஆகையாலே ரஸ்மி பாவந -என்னும் திரு நாமம் உடையவன்

—————-

ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணு ச சிவ-ஸ்கந்த: ப்ரஜாபதிஹி:|
மஹேந்த்ரோ-தனத: காலோ யம-ஸோமோஹ் அபாம்பதி ஹி:||8

ஸூர்ய பகவானே பிரும்மா(ஆக்குபவர்- ப்ரஹம என்றால் பெரிதிலும் பெரிதானவனும்),
விஷ்ணு(காப்பவர் விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தது ),
சிவன் (அழிப்பவர் சிவ என்றால் மங்கலம்),
ஸ்கந்தன் (ஸ்கந்த என்றால் இணைப்பு & ஊற்று=, அன்பிற்கும் அறிவிற்கும் அணைத்திற்கும் ஊற்றாக இருப்பவனும்),
ப்ரஜாபதி-ஜீவ ராசிகளின் தலைவர்,
இந்திரன் (புலங்களின் அதிபதி),
தனத – குபேரன் (செல்வத்தின் அதிபதி),
காலோ – காலத்தை (நேரத்தை) உண்டாக்குவன்,
யமன்(இறப்பின் அதிபதி, தண்டிப்பவன், நல்வழிபடுத்துபவன்),
ஸோமோ -சந்திரன்(ஊட்டத்தின் அதிபதி),
அபாம் பதிஹி – தண்ணீருக்கு அதிபதி (வருணன்).

அனைவரும் இவனே -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –

————-

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ அஷ்வினௌ மருதோ மனுஹு: |
வாயு அஹ்னி: ப்ரஜா ப்ராணஹ: ருதுகர்த்தா ப்ரபாகரஹ: || 9-ருது கர்த்ர ப்ரபாகரஹ–பாட பேதம்

பிதரோ -மூதாதை(முன்னோர்கள், வம்சம், குலம்),
வஸவ-எல்லா செல்வங்களும் ஆன அஷ்டவசுக்கள்,
சாத்யர்கள்-கருமவசப்படாத நித்யர்களும்,
அச்வினி தேவர்கள் (தேவலோக வைத்தியர்கள்),
மருத்துக்கள் (காற்றின் துணைவர்களான மருத் தேவர்களும்- தென்றல், புயல்),
மனு (மனிதர்களின் தந்தை),
வாயு-காற்று, அக்னி-நெருப்பு,
ப்ரஜா ப்ராணன்-மக்களின் உயிர்க் காற்று,
ருதுகர்த்தா- பருவங்களை (மாற்றங்களை) உண்டாக்குபவர்.
ப்ரபாகர: – உதயத்தை ஏற்படுத்துகிரார்; புகழைத் தருபவர்

எட்டு வசுக்கள் – அபன், துருவன், சோமன், தரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாசா
சாத்யா – அனந்தன், கருடன், விஸ்வக்சேனன், பாஞ்சஜன்யன், சுதர்சனன் போன்றவர்கள்
ஆறு பருவங்கள், கோடை, மழை, முன்பனி, கடும்பனி, இலையுதிர், வசந்தம்

ஸாஷாத் விஷ்ணுவே பாலந கர்த்தாவாக இந்த ஸமஸ்த தேவதைகளுக்கு எல்லாம் அந்தர்யாமியாய் இருந்து அருளுகிறவன்

—————-

இப்படி ஸ்வரூபத்தை அருளிச் செய்து ஸ்தோத்ரம் அருளிச் செய்கிறார்

ஆதித்ய ஸவிதா ஸூர்யஹ: கக: பூஷா கபஸ்திமான் |
ஸூவர்ண ஸத்ர்சோ பானு: ஹிரண்யரெதா திவாகரஹ:|| 10–ஸூ வர்ண ஸ்தபநோ பாநு –-பாட பேதம்

ஆதித்ய–, மூலப் பரம் பொருள்
ஸவிதா – உயிரை உருவாக்குபவர்
ஸூர்ய-செயல் வீரர் செயலாற்றத் தூண்டுபவனும்
கக-வானத்துப் பறவை வானவெளியில் நடமாடுபவனும்
பூஷா -வளர்ப்பவனும்-மழையால் வளர்ச்சி தருபவர் அனைவருக்கும் உணவளித்து வளர்ப்பவனும்
கபஸ்திமான் -ஒளிக் கதிரோன்
ஸ¤வர்ண ஸத்ருசோ- பொன்னிறத்தோன்
பானு- ஒளிக் காந்தியுள்ளவன்
ஹிரண்யரேதோ – அனைத்தையும் படைக்கும் திறன் கொண்டவனும்
திவாகர – பிரகாசமான பகலொளியை தோற்றுவிப்பவர்

————–

ஹரித்-அஸ்வ ஸஹஸ்ரார்சிஹி: ஸப்த ஸப்திர் மரீசிமான் |
திமிரோன்மதன: ஷம்பு த்வஷ்டா மார்தாண்ட அம்ஷுமான்|| 11-

ஹரித் அஸ்வ – வெற்றியை வாகனமாக உடையவர்–பச்சைக் குதிரையுடையவர் (பச்சை வெற்றியின் சின்னம்).-பச்சைப்பயிர்களை வளர்ப்பவன்
ஸஹ்ஸ்ரார்ச்சி – ஆயிரம் கரங்களால் எல்லா செயல்களையும் செய்பவர்-
ஆயிரம் கிரணங்களை (தீ நாக்குகள்) கொண்டு இந்த உலகத்தின் அனைத்துச் செயல்களையும் நடத்துகிறான்
ஸப்த ஸப்தி-ஏழு குதிரைகள் / உலகங்கள் / நிறங்கள் / நாட்கள் உடையவர்
மரீசிமான் -ஓளிக்கிரணங்கள் கொண்டவர்.உலக இயக்கங்களுக்கெல்லாம் மூலகாரணம் இவனது கதிர்கள் தானே.
திமிரோன் மதன – இருளை / அறியாமையையை போக்குவர்
ஷம்பு -மங்களம் அளிப்பவர்.அனைத்தையும் குறைப்பவன்.
ஸ்த்வஷ்ட துரத்ரிஷ்டத்தை விரட்டுகிறவர்–இறந்த உடல்களையும் தாவரங்களையும் மங்கச் செய்வதன் மூலம் அடுத்த சுழற்சிக்கு வழி வகுக்கிறான்.
மார்தாண்ட – மிகுந்த வலிமை உடையவன். உலகத்தில் எல்லா பொருட்களும் உயிர்களும் இவனிடமிருந்தே வலிமையைப் பெறுகின்றன.
அம்சுமான் -மேகம் மறைத்து நிற்கும் போதும் தன் உருவத்தை உயிர்கள் பார்க்க இயலாத போதும்
தன் கதிர்களால் எங்கும் பரவி உலக இயக்கத்தை நடத்துபவன்.

———–

ஹிரண்யகர்ப்ப ஷிஷிர தபனோ, பாஸ்கரோ ரவி(ஹி): |
அக்னிகர்ப்பா அதிதிபுத்ர-(ஹ): ஷன்க ஷிஷிர நாஷன (ஹ): || 12

ஹிரண்ய கர்ப்ப-சூக்ஷ்ம ஸரீரமுள்ளவர் ஞானத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமானவர்.-பொன்மயமான கருப்பையை உடையவன்.
உலகத் தோற்றம் ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாக சொல்வது மரபு.
ஷிஷிர- கடுங்குளிரை உருவாக்குபவர். கதிர்கள் குறைவாக இருக்கும் நிலையே குளிர் நிலை.
அதனால் இவனே குளிரைத் தருபவனாகவும் இருக்கிறான்.
ஸ்தாபனோ-சூடாகவும், நெருப்பாய் எரிபவர்.
பாஸ்கரோ -ஒளியானவர்/ஞானமானவர். உலகத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஒளிர்வது இவனது கதிர்களால் தான்.
ரவி- எல்லாவற்றையும் உருவாக்குபவன். எல்லோராலும் புகழ்ப்படுபவர்.
அக்னி கர்ப்போ தீயை தன்னுடலாகக் கொண்டவன்.
அதிதே: புத்ர அதிதியின் புதல்வர்
ஷன்க- ஆனந்த மயமானவன் மறையும் போது குளிர்ச்சியாக தோற்றமளிப்பவர்
ஷிஷிர நாஷன- குளிரை விலக்குபவர்

————–

வ்யோம நாத ஸ் தமோ பேதீ, ருக் யஜு ஸ்ஸாம பாரக ஹ: |
கனவ்ரிஷ்டிர் அபாம் மித்ரோ: விந்த்ய வீதீ ப்லவங்கமஹ: || 13-விந்த்ய பீதீ ப்லவங்கமஹ–பாட பேதம்

ஸூர்ய பகவான் ஸூர்ய பகவான் அண்ட வெளியின் தலைவன்.
அஞ்ஞான இருளை அகற்றி தீமைகளையும் மரண பயத்தையும் போக்குகிறார். வேதங்களை கரை கண்டவர்.
கதிர்கள் ஏற்படுத்தும் வெப்ப நிலை மாற்றங்களால் பெரும் மழையை பொழிவிக்கிறார்.
அபாம் மித்ர – நீர் நிலைகளை நேசிக்கிறார்.
விந்த்ய வீதி ப்லவங்கம- விந்த்ய மலைகளை தெய்வீகமாக – விரைவாக கடக்கிறார்.-தஷிணாயத்தில் விந்த்யத்தின் வழியாகப் போகிறவன்

(ருக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் கண்டு உலகிற்குச் சொன்னவன்.
வேதங்கள் யாராலும் உருவாக்கப்படவில்லை; அதனால் அதனை அபௌருஷேயம் என்று சொல்வார்கள்.
அவை என்றும் இருப்பவை. ரிஷிகள் அவற்றைக் கண்டு சொன்னார்கள்.
அதனால் அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா (மந்திரத்தைக் கண்டவர்கள்) என்று பெயர்.)

—————

ஆதபீ மண்டலீ ம்ருத்யு ஹு: பிங்கல: ஸர்வ தாபன ஹ: |
கவிர் விஷ்வா மஹாதேஜா ஹ: ரக்த: ஸர்வ-பவோத்பவ ஹ: || 14

அவரே வெப்பத்தை கொடுக்கிறார். உயிர்களின் முதலும் முடிவும் அவரே. அவரே அகிலத்தை இயக்குகிறார்.
எங்கும் நிறைந்து இருக்கிறார். அவரது செங்கதிர்கள் உலகத்தை உயிரினங்களை வாழ வைக்கின்றன.

ஆதபீ -வெப்பத்தை உருவாக்குபவர் கொளுத்துபவன்
மண்டலீ – வட்ட வடிவானவர்
ம்ருத்யு- மரணவடிவானவன்
பிங்கல-பொன் நிறத்தோன்
ஸர்வதாபன- எல்லாவற்றையும் எரிப்பவர்
கவி அனைத்தையும் அறிந்தவன்.
விஷ்வோ- அண்ட வடிவானவன்.
மஹா தேஜா- மிகப்பெரும் ஒளிவடிவானவன்.-சிவந்த வண்ணம் கொண்டவன்.
ரக்த-எல்லோரிடத்தும் அன்பானவர்
ஸர்வபவோத்பவ- எல்லா உயிர்களும் பொருட்களும் தோன்றுமிடமானவன்.

———

ஆதித்யருக்கு நமஸ்காரங்கள் / சூரிய துதி

நக்ஷத்ர-க்ரஹ தாராணாம் அதிபோ விஷ்வ பாவன ஹ: |
தேஜஸாம் அபிதேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோஸ்து தே || 15

வானில் ஒளிவீசும் பொருட்களுக்கெல்லாம் பால்வெளிக்கும் தலைவர். அவரே அண்டத்தின் வடிவம்.
ஒளி வீசுபவர்களுக்கெல்லாம் ஒளியானவன் பன்னிரெண்டு உருவில் ஒளி மயமானவரே நமஸ்காரம்.

ஒரு மாதத்திற்கு ஒன்றாக  பன்னிரண்டு மூர்த்திகளின் பெயர்கள்
இந்திரன், தாதா , பகன், பூஷா, மித்ரன், வருணண் அர்யமான், அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, சவிதா – விஷ்ணு.

————–

நம: பூர்வாய கிரயே பச்சி-மா-த்ரயே நம ஹ: |
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம ஹ: || 16-

வணங்குகிறேன் உதிப்பவரே உதயத்தை தருபவரே மறைபவரே நிறைவை தருபவரே வணக்கம்.
ஓளிர் தன்மை படைத்தவர்களுக்கு அதிபதியே
ஒவ்வொரு நாளின் அதிபதியே வணக்கம்.
வணங்குகிறேன் கிழக்கு மலையில் உதிப்பவரே மேற்கு திசையில் மறைபவரே வணக்கம்.

———–

ஜயாய ஜயபத்ராய ஹர்யஷ்வாய நமோ நம ஹ: |
நமோ நம-ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம ஹ: || 17

வெற்றி வடிவானவருக்கு, வெற்றியின் மங்களங்களை தருபவருக்கு நமஸ்காரம்.
பச்சை குதிரையை -வெற்றியை – வளத்தை உடையவருக்கு மீண்டும் மீண்டும் வணக்கங்கள்
ஆயிரம் கதிர்களினால் அணைப்பவருக்கு எல்லையில்லா அம்சமுள்ளவர் நமஸ்காரம் நமஸ்காரம்.
ஆதி முதல்வனுக்கு நமஸ்காரம் நமஸ்காரம்-அதிதியின் பிள்ளையான உனக்கு நமஸ்காரங்கள்

————-

நம உக்ராய வீராய சாரங்காய நமோ நம ஹ: |
நம-பத்ம-ப்ரபோதாய மார்த்தண்டாய நமோ நம ஹ: || 18-

கடுமையானவருக்கு (உக்ரம்) வீரருக்கு வணக்கம். சீரானவர்க்கும் தடைகளற்றவனுக்கு நமஸ்காரம்
பல வண்ண கதிர்கள் ஏவும் வில்லை உடையவருக்கு வணக்கம்.
தாமரைகளை மலரச் செய்பவனுக்கு நமஸ்காரம்
மிக்க வலிமை பொருந்தியவருக்கு – அழிக்கவும் பின் அவற்றை உருவாக்கவும் வல்லமை கொண்ட ஸூர்யனுக்கு நமஸ்காரம்.

————

ப்ரஹ்ம்-ஈஷான்-அச்யுத்-ஈஷாய ஸூர்யாய ஆதித்ய வர்சஸே |
பாஸ்வதே ஸ்ர்வ பக்ஷாய ரௌத்ராய-வபுஷெ நம ஹ: || 19 ||

ப்ரம்மா, ஷிவன், விஷ்ணு மூவருக்கும் தலைவரே
செயல் வீரனே, ஆதி முதல்வனே எங்கும் வியாபித்து இருக்கும் பேரெழிலானவருக்கு நமஸ்காரம்.
மிகுந்த ஒளி – காந்தி படைத்தவனுக்கு,
எல்லாவாற்றையும் விழுங்குபவனுக்கு – கால உருவானவருக்கு,
ருத்ரனின் உருவங்கொண்டவனுக்கு நமஸ்காரம்.

—————

தமோக்னாய ஹிமக்னாய ஷத்ருக்னாய அமிதாத்மனே |
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம்-பதயே நம ஹ: || 20-

இருளை (அறியாமை) அழிப்பவருக்கு
குளிரை அழிப்பவருக்கு, எதிரிகளை அழிப்பவருக்கு, எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவாய் இருப்பவருக்கு
செய்நன்றி மறந்தவர்களை அழிப்பவருக்கு
ஒளி வீசுபவரே
பிரபஞ்சத்தின் மூலம் – ஒளிகளுக்கெல்லாம் தலைவருக்கு நமஸ்காரம்

————-

தப்த சாமி கராபாய வஹ்னயே விஷ்வகர்மனே |
நம(ஸ்) தமோ-(அ)பினிக்னாய ருசயே லோக ஸாக்ஷினே || 21 ||

உருக்கப்பட்ட தங்கம் போல் ஒளிப்பிழம்பானவர்க்கு,
தீ வடிவானவருக்கு -அணைத்தையும் எரிப்பவர்,
உலகத்தை படைத்தவருக்கு- அதன் அணைத்து செயல்களுக்கும் காரகர்,
இருளை நீக்குபவருக்கு,-ஜனங்களுடைய புண்ய பாப ரூப கர்மங்களுக்கு சாஷியானவரே உமக்கு நமஸ்காரங்கள்
உலகத்தில் ஒளியை எல்லாம் உடையவருக்கு, உலக சாட்சியானவருக்கு நமஸ்காரம்.

————-

இப்படி ஸ்தோத்திரங்களை அருளிச் செய்து
மேலும் அவனது ஸ்வரூபத்தைப் பற்றி அருளிச் செய்கிறார்

நாச-யத்யேஷ வை-பூதம் ததேவ-ஸ்ருஜதி ப்ரபு ஹு: |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி ஹி: || 22

உயிர்களை எல்லாம் அழிக்க வல்லவரும் அவரே. அவருக்கு நமஸ்காரம்.
அவரது அவற்றை இவனே பிறப்பிக்கிறான் இறைவன் இவனே
இவனே காக்கிறான்
தன்னுடைய ஒளி பொருந்திய கதிர்களால் இவனே வெயிலாக காய்கிறான். மழையாகப் பொழிகிறான்

————-

ஏஷ-ஸுப்தேஷு ஜாகர்த்தி பூதேஷு பரிநிஷ்தித ஹ: |
ஏஷ-ஷேவாக்னி-ஹோத்ரம் ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம் || 23-

ஸூர்ய பகவான் உலகத்து எல்லா உயிர்களின் இருதயத்தில்-ஜீவனாக இருந்து விழிப்பாக நிலை நிற்கிறான்.
இவர் தான் வேள்வித் தீ. தீ வழிபாட்டின் வடிவம் – வேள்வியின் நிவேதனமும் பலனும் அவரே.

———-

வேதாஸ்-ச க்ரத-வஷ்சைவ க்ர்தூனாம் பலம்-ஏவ ச |
யானி-க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு ஹு: || 24

வேதங்களின் சாரத்தில் இருக்கிறார்.
தத்தம் கடமைகளாகவும் – சடங்குகளாகவும்
உண்மையுடன் செய்பவர்களுக்கு,சடங்குகளின் கடமையின் பலனாக இருக்கிறார்.
என்ன என்ன செயல்கள் செய்யப்படுகின்றனவோ இவ்வுலகத்தில்
அவை எல்லாமும் ஒளி படைத்தவன் அவரே இறைவன்-தலைவன்

——————-

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரத்தின் பெருமைகள்: பலஸ்ருதி

ஏனம் ஆபத்ஸு க்ருச்ரேஷு கான்தாரேஷு பயேஷு ச |
கீர்த்தயன் புருஷ: கச்சிந்-நாவ-ஸீததி ராகவ || 25-

ராகவா ரவி, எல்லாவித ஆபத்து நேரங்களிலும்(உடல், மன, ஆன்மீக காரணிகளால்), அவமானத்திலோ,
பயமுறுத்தும் நேரங்களிலும், துன்பங்களிலும் வழிபடுவோரை எப்போதும் கைவிடமாட்டான்.
இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து மீண்டு வருவார்கள்.

————–

பூஜ-யஸ்-வைனம் ஏகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம் |
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயி ஷ்யஸி || 26-

ஒருமிக்க மனதுடன் வணங்குவாய்
தேவர்களுக்கும் தெய்வமானவனை உலகத்தின் நாதரை
இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை மும்முறை ஜபித்து
போரில் கண்டிப்பாக வெற்றி அடைவாய்.

——————–

இராமர் மந்திரம் ஓதி மனத்தெளிவு பெறுதல்

அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி|
ஏவம் உக்த்வா ததா அகஸ்த்யோ ஜகாம-ச-யதா-கதம் || 27

இந்த நொடியிலேயே, வலிமையான தோள்கள் உள்ளவனே,
இராவணனை நீ வதைப்பாய்
என்று கூறி அங்கிருந்த அக்ஸ்த்ய முனிவர்
எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்

————–

ஏதஸ் ஸ்ருத்வா மஹா தேஜா நஷ்ட சோகோ-பவத்-ததா |
தாரயாமாஸ-ஸுப்ரிதோ ராகவ: ப்ரய-தாத்மவான்(உ) || 28-

அருள் மொழிகளைக் கேட்ட, மிகுந்த தேஜஸ்வி ராகவன்
அப்போதே கவலைகள் எல்லாம் நீங்கியவன் ஆனான்
நோக்கத்தில் உறுதியுள்ளவனும், மிகவும் மகிழ்ந்தவனும் ஆனான் முயற்சிகளில் சிறந்தவன் ஆன இராகவன்

—————

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷ-மவாப்தவான் (உ) |
த்ரிர்-ஆசம்ய ஷுசிர்பூத்வா தனுராதயாய வீர்யவான் (உ) || 29-

ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே (ஸ்தோத்ரத்தை) ஜபித்து
மிகவும் மேலான மகிழ்ச்சியை அடைந்தான்
மும்முறை ஆசமனீயம் செய்து உடலை பரிசுத்தம் செய்துகொண்டு, வில்லை ஏந்தினான் வீரத்தில் சிறந்தவன்

————-

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்தாத்மா யுத்தாய ஸமுபா-கமத் (உ) |
ஸர்வ யத்னேன-மஹதா வதே-தஸ்ய த்ர்தோ-பவது || 30

இராவணன் போர் செய்யும் நோக்கத்துடன் வருவதை பார்த்து
மேலான எல்லா முயற்சிகளுடனும்
அவனை (இராவணனை) வதைப்பதற்கான உறுதியைக் கொண்டான் (இராகவன்).

—————–

சூரியன் ஆசி வழங்குதல்

அத-ரவி: ரவதத் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமான ஹ: |
நிசி-சரபதி ஸம்க்ஷயம் அன்கி-விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ்த்-வ்ரேதி || 31

அப்போது ரவி ‘விரைவில் நடத்துவாய் இராமா’ என்று மிகவும் மகிழ்ந்த மனத்துடன்,
மிக உயர்ந்த திருப்தியை அடைந்தவனாக, இருட்டில் உழல்பவர்களின் முதல்வனின்
அழிவு நேரம் நெருங்கியதை அறிந்து, தேவர்களின் மையத்திலிருந்து அருளினார்.

———-

முடிவு துதி

பானோ பாஸ்கர மார்தாண்ட ச்சண்ட ரஸ்மை திவாகர
ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் வித்யாம் தேஹி நமஸ்துதே

ராமாயணத்தில் சர்க்க முடிவு

இத்யார்ஷே ஸ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே யுத்த காண்டே
ஆதித்ய ஹ்ருதயம் நாம சப்தோத்தரசததம: சர்க்க: ||

இவ்வாறு வால்மீகியின் ஆதிகாவியம் ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில்
ஆதித்ய ஹிருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம் நிறைவடைந்தது.

———

மகிமைகள்
ஆதித்ய ஹ்ருதயம் எவ்வளவு மகிமை பொருந்தியது என்பதை இராமாயணத்தில் காணலாம்.
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் – அது நல்வினைப்பயன்களைத் தருவது
ஸர்வ சத்ரு விநாசனம் (உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் அழிக்க வல்லது)
ஜயாவஹம் (வெற்றி தருவது)
ஜபேத் நித்யம் – நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
அக்ஷயம் – அழிவற்றது பொங்கி பெருக கூடியது.
பரமம் – மிகப்பெருமை கொண்டது
சிவம் – மங்களம் தருவது
ஸர்வ மங்கள மாங்கல்யம் (அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது)
ஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)
சிந்தா சோக ப்ரஸமனம் (மனக்கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது)
ஆயுர்வர்த்தனம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது)
உத்தமம் – சிறந்தது

———–

வத்ரு வைலக்ஷண்யம் ,ஸ்தல வைலக்ஷண்யத்துடன் கூடிய அவதாரிகையுடன் – முன்னுரையுடன்
ஆதித்ய மண்டலத்தில் மத்யமத்தில் எழுந்தருளியிருக்கும் சூரியநாராயணன் பீடு கொண்டு அத்புதமாய் உதயமானார் .
ஆதித்ய ஹ்ருதயத்தை அருளிய அகஸ்தியர் மஹரிஷி நாமம் மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் பிறந்த கதை – விவரணம் அருமை .
ஆரோக்கியத்திற்கு – பாஸ்கரரையும் ,
ஞானத்திற்கு – ஈஸ்வரனையும்
தனத்திற்கு – அக்னிபகவானையும் மற்றும் மோக்ஷத்தை கொடுக்கும் வல்லமை படைத்த ஜனார்தனனான
நாராயணனையும் மோக்ஷபலத்திற்கு ஸ்துதிக்க வேண்டும் .தன்யோஸ்மின் .

சுந்தர காண்டத்தில் குறிப்பிட்டது போல் ஹனுமன் சீதாப்பிராட்டியுடன் உரையாட அருமையான
பொன்மொழியாகிற செந்தமிழை தேர்ந்தெடுத்து பேச தீர்மானித்ததின் மூலம் செம்மொழியாகிற
செந்தமிழ் – தீந்தமிழின் ஏற்றம் உலகுக்கு புலப்படும் .
ஸ்ரீ ராமாயணத்தில் ராவணனுடன் ராமன் போர் புரியும்போது சற்று சோர்வு அடைந்த தருணத்தில்
அகஸ்தியர் மகரிஷியால் ராமருக்கு புத்துணர்ச்சி ஊட்ட உத்திராயண புண்ய காலத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசிக்கபட்டது
ஆதித்ய ஹ்ருதயத்தில் முதல் இரு ஸ்லோகத்தின் அர்த்தவிசேஷங்கள் அருமை .
உலகமெங்கும் சூரியனாருக்கென்று ப்ரத்யோகமாய் பல கோவில்கள் எழுப்பப்பட்டுள்ள – அரிய பெரிய தகவல்கள்
விவரம் மற்றும் சூரியபகவானை ஆராதனை தெய்வகமாக கருதி வணங்கும் சௌராஷ்டிர வகுப்பினர் செய்தி அத்புதம் .

ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட’ சூரிய ஸுக்தம் ‘ ,ஸ்ரீ இராமாயணத்தில் அகஸ்திய மகரிஷியால் வழஙகப்பட்ட ஆதித்ய ஹ்ருதயம் ,
மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களும் ,த்ரௌபதியும் கூறிய சூரிய அஷ்டோத்தர சத நாமாவளி மற்றும்
மஹநீயர் அப்பய்ய தீக்ஷிதராரால் இயற்றப்பட்ட சூரிய சதகம் – இவைகள் சூரியநாயனாரின் பெருமைகளை உணர்த்தவல்லது .

ஆதித்யஹ்ருதயத்திற்கு கோவிந்த ராஜ்ஜிய பூஷணம் என்ற பெயரில் தனி வ்யாக்யானம் மற்றும்
மஹேஸ்வர தீர்த்தர் அருளிய ‘தத்துவ தீபிகா ‘ போன்ற பெரிய வ்யாக்யாத்தாக்களால் போற்றப்பட்ட
ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் என்பதின் மூலம் இந்த ஸ்லோகத்தின் ப்ராதான்யத்தை ஆஸ்த்ரிகர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது .

சூரியனை சஞ்சாரிக்கும் பாதை ஒரு எல்லைக்குள் உட்படாத நீண்ட பாதையாக இருப்பதாலும் ,
சூர்ய ரதத்திற்கு ஏக சக்ரம் அதை சாரத்யம் செய்யும் கருடனின் தமையனார் அங்க ஹீனம் கொண்ட அருணன் ,
அதில் பூட்டப்பட்ட 7 குதிரைகளுக்கு ஓரே ஒருசக்ரம் என பொருத்தமில்லாமல் சூரிய ரதத்தை செலுத்தும் பிரபாவம்
நமக்கு எந்த கடினமான சூழ்நிலையையும் எளிதில் வென்று விடலாம் என்ற உத்வேகத்தை கொடுக்க வல்லது
சூரியநாயனாரின் பிண்ணனி என்பது வெட்ட வெளிச்சம் .ஆதித்ய ஹ்ருதயத்திற்கு குரு அகஸ்திய மகரிஷி .
இது போன்ற பலபல அரிய பெருமைகளை அறிய வைக்கும் ஆதித்ய ஹ்ருதயம்

கும்பகோணத்தைச் சுற்றி சோழர்கள் கால நவக்ரஹ ஸ்தலங்களைப்போலவே சென்னையச் சுற்றி
பல்லவர் கால நவக்ரஹ ஸ்தலங்கள் ௨ள்ளன.கொளப்பாக்கத்தில் சூரிய ஸ்தலம். ௮கஸ்த்தீஸ்வரர் ஆலயம்.
நல்ல வேலை கிடைக்க இப்போதும் இளைஞர் கூட்டம் ௮லைமோதும்.

வந்தவாசியில் உள்ள இஞ்சிமேடு பெரிய மலை சிவன் கோவில் திருமணிச்சேறையில் அகஸ்திய முனிவர் குகை உள்ளது.
அவர் தெற்கு நோக்கி வந்த போது அந்த மலையில் கால் பதித்து தெற்கை தாழச்செய்து சமப்படுத்தியதாக கூறப்படுகிறது

ஆதித்ய ஸ்தோத்ர ரத்னம் -அப்பயா தீக்ஷிதர்
வால்மீகி பெயராலே திருவான்மியூர்
திரு நீர் மலை எழுந்து அருளு உள்ளார்
பூஷணம் கோவிந்தராஜர் -ஸ்ரீ ராமாயண வியாக்யானம்

ப்ரணவத்துடன் சேர்த்து ஸ்மரிக்கும் இம்மந்திரம் காம க்ரோத மத மாத்ஸயலயாதிகள் உட்பட
எல்லா விரோதிகளையும் போக்க வல்லது .
இந்த ஸ்லோகத்தை ஜபிப்போருக்கு அழிவு இல்லாத பலத்தையும் பரம மங்களத்தையும் கொடுக்கும் .
இதை கேட்பவருக்கு கவலை ,துக்கம் ஒழிந்து, பக்தி ரூபாவண்ண ஞானம் பிறந்து ,
நல்ல ஆரோக்யத்துடன் கூடிய தீர்காயுசை பெற்றுத்தரும் .
இந்த ஸ்லோகத்தை சொன்னவர் – அகஸ்திய மகரிஷி கேட்டவர் – ராமர் ,
இதை தொகுத்தவர் தபஸ்வி வாலமீகி.ஜ்வாஜலயமாய் – அதீத பிரகாசத்துடன் ஸ்வர்ணத்தை ஒத்த எண்ணற்ற
சூர்ய கிரணங்கள் பஞ்ச இந்திரியங்கள் வழியாய் – சரீரத்திற்குள் ஊடூரூவி சைதன்யமான- ஞானத்தை பிறப்பிக்கிறது .
அக்னி ,இந்திரன் ,வருணாதிகள் போன்ற தேவர்களுக்கு மிஸ்ர ஸத்வத்தையும் அசுரர்களை ரஜஸ் தமஸ் போன்ற குணங்களையும் கொடுத்து
தேவர்கள் ,இந்திரர்களால் ஏக ஸ்துதியாய் போற்றப்படுபவனாகவும் ஆதித்யன் திகழ்கிறான் .
இங்கனம் அவனை துதிப்போருக்கு நல்ஞானத்தை கொடுக்க வல்ல சூரிய பகவானை நமஸ்கரிக்கிறேன் .

தேவாஸுர நமஸ்க்ருத்தாய நமஹ வைவஸ்தே நமஹ ,பாஸ்கராய நமஹ ,புவனேஸ்வராய நமஹ ,தேஜஸ்வியே நமஹ ,
ரஷ்மி பாவ்னாயே நமஹ ,ப்ரஹ்மணே நமஹ ,ப்ரஜாபதியே நமஹ மஹேந்திராய நமஹா –
இந்த ஆதித்யனாய் விளங்கும் சூரிய நாராயணனை குறிக்கும் நவ நாமாவளிகளின் அணிவரிசை –
அவைகளின் அர்த்த விசேஷங்கள் அத்புதம் .தன்யோஸ்மின் .

எவன் ஒருவன் – யஞயத்திற்கு ப்ரஜாபதியாய் இருப்பதாலும் (ப்ரஜாபதியே நமஹ ),இந்திரனின் ஐராவத மஸ்தகத்தில்
சூர்யகிரணங்கள் பட்டு தெறித்து அக்கற்றைகள் தாமரைத்தடாகம் வரை பரவி அதையும் பிரகாசிக்க வைப்பதால் –
மஹேந்திராய நமஹ என போற்றப்படுவதாய் , ஸ்வாமி திலகர் வ்யாக்யானத்தின் படி தனம் என்ற ஞானத்தை பெற்று தந்து ,
பின் தனதான்யத்தையும் குபேரன் போல் கொடுப்பதால் தநதாந்யய் நமஹ எனவும் ,

செவந்தகமணி ப்ரபாவத்தை எடுத்துரைத்து – அதற்கு உடையவனான சத்யஜித் அதனுடன் நடந்தது வரும் தோற்றம் –
சூரியன் ஆகாசத்திலிருந்து இறங்கி பூமியில் பவனி வரும் தோற்றத்தை ஒத்து இருந்தது என அதன் பெருமைகளையும் கூறி ,
காலனாயும் சூரியன் இருப்பதால் கால மண்டல ஸ்பந்தனாய நமஹ எனவும் போற்றப்பட்டு ,
பின் ம்ருத்யுக்கும் ம்ருத்யுவையை சூர்யநாராயணனாய் திகழ்வதால் எமனாய நமஹ எனவும் ,
சோமனாகிய சந்திரனும் சூரியனிடத்திலிருந்து ஒளிக் கற்றைகளை பெற்று தான் பிரகாசிப்பதாலும் ,
சிவனார் தன் உடலின் பாதி பாகத்தை உமையவளைக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரர் என பெயர் பெற்று
தன் சக்தியை வெளிப்படுத்திய- சக்தியுடன் கூடிய ஆதித்யனாய் கருதுவதாலும் -சோமாய நமஹ என ஸ்துதிக்க படுகிறார் ஆதித்யன் .

இங்கனம் அக்னியாய ,திவாகராய பித்ருதேவதாய மருதமூர்த்தாய ,வசுமூர்த்திய சத்ய மூர்த்தியே ,வாயுவே ,ப்ராணாய ,
ருது கர்த்தயே ,பிரபாகராய , ஆதித்யாய சவித்ரே ,ஸ்வர்ணசத்ருயை பானுவே பூஷனோ ,கபஸ்திதே ,பானுவேஷாய ,
திவகராய சாயாதிபதே – போன்ற பற்பல ப்ரபாவத்தை உள்ளடக்கியதால் பல்வேறு பெருமைகள் வாய்ந்த
திரு நாமங்களால் சூர்ய நாராயணனை அந்தர்யாமியாகக் கொண்ட ஆதித்யன் போற்றப்படுகிறார் என்பதை அழகாய் ஸ்வாமி வருணித்தார் .

As per Rig Veda (8:72:16) says :
Adhukshat pipyushimisham urjam saptapadimarih Suryasya sapta rashmibhih
It means, 7 different colors of rays emitting from Sun, will give 7 different energies.
Sun temples built in Konark etc places in india are seen with 7 colored horses chariot.

ஆரோக்கியத்திற்கு பாஸ்கரனையும் ,தனதான்ய வ்ருத்திக்கு அக்னி பகவானையும் ,ஞானத்திற்கு சிவபெருமானையும் பிரார்தித்தாலும்
இவர்கள் அனைத்துள்ளும் அந்தர்யாமியாக ஸ்ரீமன் நாராயணன் உறைந்து அவரவர் தம்தம் தொழில்களை புரிய வைக்கிறார் என்றும்
மோக்ஷத்தை பெற்றுத்தர ஜனார்தனனான ஸ்ரீமந் நாராயணன் அனுகிரஹிக்கிறார்

ஸ்வாமி மயூர கவி அருளிய சூரிய சதகம் சதஸ் – ஸ்வாமி வேதாந்த தேசிகரின் கருட பஞ்சாசத்த்தை
ஓத்து இருப்பதை கோடிட்டு .கூர்நாராயணஜீயர் சாதித்த சுதர்ஷன் சதகமும் ஆதித்யனின் பெருமைகளை குறிப்பிட்டிருக்கிறது என்றார் .
மேலும் அகஞானம் என்கின்ற இருளை போக்குவதால் திமிரோன் மதனாய நமஹ என ஆதித்யன் போற்றப்படுகிறார்.
மற்றும் ,ரக்ஷிமிப்பதயே நமஹ,ஹரிதஸ் வஹாய நமஹ ,த்வவுட்ரே நமஹ மார்த்தாண்டாய நமஹ ,ஹயன சந்தயே நமஹ
அம்சுபதயே நமஹ ,ஹிரண்ய கர்ப்பாய

ஹரண்யகர்ப்பாயை ,சிசிராய ,தபாநாய யஸ்கரோ ரவிகி or பாஸ்கரோ ரவிகி ,ரவயே ,அக்னிகர்ப்ப ,அதிதே புத்ராய ,
சங்காய ,சிசிரநாசன ,வ்யோமநாதாய ,
தபோபேதியை ,ரிக் யஜுர் சாம பாரகாயை ,கண்வருஷ்டயே ,அபா மித்ராயே ,விந்த்யவீதி ப் ல வங்க மாணாய ,
ஆத்மீனே ,மண்டலினே ,ம்ருத்யவே ,பிங்களாய ,ஸர்வதாபனாயே ,
கவயே , விஸ்வஸ்மை, மஹாதேஜஸே சர்வேஷ்வரேலூ ரக்தக ,ரக்தாய ,ஸர்வ ப்யோத்பலாயே ,சூரியனாவே ,விஸ்வபாலனாக –
போன்ற இந்த நாமக்களுடன் ‘நமஸ் ‘ சப்தத்தை கூட்டி நாமாவளியாக நாராயணனை அந்தர்யாமியாக கொண்ட
சூரியபாகவனை ஸ்துதி செய்யக்கடவோம் என்றார் .

இந்த விஸ்வத்தில் ப்ரத்யக்ஷமாய் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு ஸ்வரூப ரூபமாக ஒளிவிட்டு காப்பதால்
விஸ்வபாலனாயே நமஹா என போற்றப் படுகிறார் .
மஹா தேஜஸ்வியாய் ஒளியை கொடுக்கும் ஸ்ரீமன் நாராயணனை அந்தர்யாமியாய் கொண்ட தேஜஸ்வியான
சூரியபகவான் என்றபடியால் தேஜஸாமபி தேஜஸ்வி என அழைக்கப்படுகிறார் .
இதுபோல் துவாதச மாதங்களுக்கும் சுடர் விடும் பெரும் ஜ்யோதியாய் – நாயகனாய் திகழ்வதால் த்வதசாத்மனே என ஸ்துதிக்கப்படுகிறார் .

நம பூர்வாய நமஹ – தொண்டரடிபொடி ஆழவார் திருமாலை என்ற திவ்யப்ரபந்தத்தில் சாதித்தபடி
குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி என்றாற்போல் திருவரங்கப்பெருமான் –
குணதிசையாக போற்றப்படும் கிழக்கு திசையில் தன் திருவடிதாமரைகளை நீட்டிக்கொண்டு அடியார்களுக்கு திருவடி சேவை சாதிப்பதாலும் ,
மேலும் எம்பெருமானின் கால்களை தொழ ஹேதுவாய் சூரியன் காலையில் கிழக்குத்திசையில் உதித்தும் ,
பின் மாலை வேளையில் மால் ஆன திருமாலின் கடாக்ஷம் பெற்று மேற்கு திசையில் அஸ்தமிக்கிறார் என்கிற வேங்கடகவியின் கூற்றை .

இந்த வகையான காரணங்களால் சூரியன் முறையே – பூர்வாயாகிரனே நமஹ என்றும் ,பஸ் சிமாத்ரயே நமஹ எனவும்
அழைக்கிக்கப்படுகிறார் .வாரத்தின் எழு நாட்களுக்கும் அதிபதியாய் விளங்குவதில் தினாதிபதியே என வணங்கப்படுகிறார்.
மேலும் ஜெயமூர்த்தயே ,ஜெயபத்ராய ,ஹர்யஸ்வாய ,ஸ்யமாஸ் வாய வாய, சஹஸ்ராக்ஷீ ,ஆதித்யாய,உக்ராய ,வீராய சாரங்காய ,பத்மபிரதாய
பிரசாண்டாய ,ப்ரஹ்மாவிஷ்ணு சிவாத் மிகாயை ,- ஏஷ நாராயனாக – ப்ரஹ்மாச்சுத்தாயே ,பாஸ்வதே ,சர்வபக்ஷயாயே ,ரௌத்ரவடிவே ,தமோக் நாய ,ஹிமக் நாய சத்ருக்கினாயே என அந்தந்த நாமாவளிக்கு ஏற்ப அர்த்தங்களை தாங்கிக்கொண்டு ஜ்வாஜால்யமாய் பிரகாசிக்கிறார்

ஆதித்யா கிருதய நாமாவளியை நிறைவாய் வரிசைப்படுத்தியத்திலிருந்து –
சத்ருக்னாயே ,அமிதாத்மினே ,க்ருதகனனாகி ,தேவாய ,ஜ்யோதிஷயாம் பதயே ,தப்தகாமிக்கரா பாய ,
ஹரவே விஸ்வகர்மனே ,தபோயீ நிர்ணாயே ,ருசயே ,லோகஸாக்ஷினே ,பூதநாஸாயே ,பூத சிரஷ்டரே ,ப்ரபவே பாத யே ,
தபதே ,வர்ஷதே சுக் தேவி ஜாக்ரதே ,அந்தர்யாமிஸ்திதாயே ,அக்னிஹோத்ராயா ,அக்னிஹோத்ரபலப்ரதா யே
பதுமஸ்ம்ருத்தாயே பகவதே ப்ரஹ்மணே ,ருதேஹு விஜயஸ் யசு நிசந்தேகமாயே – போன்ற இந்த நாமாக்களை
‘நமஸ் ‘ சப்தத்தைக்கூட்டி 125-நாமாவளியாக்கி ஸ்வாமி ராமவர்மா என்ற திலகர் ,ஸ்வாமி சுதாகர் போன்றோரின் வ்யாக்யானத்த –

மேலும் அகஸ்திய மகரிஷி அருளிய இந்த ஸ்லோகம் ஸ்ரீராமாயணத்தில் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெறுகிறது.
மஹாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் சூரியநாராயணனை அந்தர்யாமியாகக் கொண்ட சூரியபகவானை ப்ரார்தித்து
அக்ஷய பாத்திரத்தை பெற்றதாலும் சூரியசதகத்தில் இதன் ப்ராதான்யத்தைக் குறிப்பிட்டதாலும் –
இதிகாசங்கள் புராணங்களில் இதன் முக்கிய பங்கு அனைவரும் அறியும் வண்ணம் புலப்படுகிறது .
இத்தகைய பெருமைகள் வாய்ந்த ஆதித்ய ஹ்ருதயத்தின் ச்லோகர்த்தங்களை எளிமைப்படுத்தி
ஆஸ்த்ரிகர்கள் அனைவரும் ஆச்ரயிக்கும் வண்ணம் அத்புதமாய் இதன் முக்கியத்துவத்தையும் பலாப லனையும் உணர வேண்டும்

——

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

“ஸ்ரீ ராம்” என்று ஒரு முறை சொல்லப்படும் நாமம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு நிகரானது.
எனவே ஒவ்வொரு நாளும் “ஸ்ரீ ராம்” என்று நாம் பாராயாணம் செய்யும் போது
அது முழு விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் பாராயாணம் செய்வதற்கு நிகரானது.

————–

9 வரிகளை கொண்ட ஶ்ரீ ராமாயணம் ஸ்லோகம்

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோ கரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச் சந்திர பாலயமாம்

———————

ஏக ஸ்லோக ஶ்ரீ ராமாயணம்

ஆதெள ராம தபோ வனாதிகமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷனம்
வாலீநிர்தலனம் சமுத்ர தரணம் லங்காபுரீ தாஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்தி ராமாயணம்

—————–

*ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்*

ஓம் அஸ்ய ஶ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமம்த்ரஸ்ய புதகௌஶிக றுஷிஃ
ஶ்ரீ ஸீதாராம சம்த்ரோதேவதா
அனுஷ்டுப் சம்தஃ
ஸீதா ஶக்திஃ
ஶ்ரீமான் ஹனுமான் கீலகம்
ஶ்ரீராமசம்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே வினியோகஃ

த்யானம்
த்யாயேதாஜானுபாஹும் த்றுதஶர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்
பீதம் வாஸோவஸானம் னவகமல தளஸ்பர்தி னேத்ரம் ப்ரஸன்னம்
வாமாம்காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் னீரதாபம்
னானாலம்கார தீப்தம் தததமுரு ஜடாமம்டலம் ராமசம்த்ரம்

ஸ்தோத்ரம்
சரிதம் ரகுனாதஸ்ய ஶதகோடி ப்ரவிஸ்தரம்
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக னாஶனம்

த்யாத்வா னீலோத்பல ஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம்
ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மம்டிதம்

ஸாஸிதூண தனுர்பாண பாணிம் னக்தம் சராம்தகம்
ஸ்வலீலயா ஜகத்ராது மாவிர்பூதமஜம் விபும்

ராமரக்ஷாம் படேத்ப்ராஜ்ஞஃ பாபக்னீம் ஸர்வகாமதாம்
ஶிரோ மே ராகவஃ பாதுபாலம் தஶரதாத்மஜஃ

கௌஸல்யேயோ த்றுஶௌபாது விஶ்வாமித்ர ப்ரியஃ ஶ்றுதீ
க்ராணம் பாது மகத்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸலஃ

ஜிஹ்வாம் வித்யானிதிஃ பாது கம்டம் பரத வம்திதஃ
ஸ்கம்தௌ திவ்யாயுதஃ பாது புஜௌ பக்னேஶகார்முகஃ

கரௌ ஸீதாபதிஃ பாது ஹ்றுதயம் ஜாமதக்ன்யஜித்
மத்யம் பாது கரத்வம்ஸீ னாபிம் ஜாம்பவதாஶ்ரயஃ

ஸுக்ரீவேஶஃ கடீபாது ஸக்தினீ ஹனுமத்-ப்ரபுஃ
ஊரூ ரகூத்தமஃ பாது ரக்ஷகுல வினாஶக்றுத்

ஜானுனீ ஸேதுக்றுத் பாது ஜம்கே தஶமுகாம்தகஃ
பாதௌவிபீஷண ஶ்ரீதஃபாது ராமோ‌உகிலம் வபுஃ

ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம் யஃ ஸுக்றுதீ படேத்
ஸசிராயுஃ ஸுகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்

பாதாள பூதல வ்யோம சாரிணஶ்-சத்ம சாரிணஃ
ன த்ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபிஃ

ராமேதி ராமபத்ரேதி ராமசம்த்ரேதி வாஸ்மரன்
னரோ னலிப்யதே பாபைர்புக்திம் முக்திம் ச விம்ததி

ஜகஜ்ஜைத்ரைக மம்த்ரேண ராமனாம்னாபி ரக்ஷிதம்
யஃ கம்டே தாரயேத்தஸ்ய கரஸ்தாஃ ஸர்வ ஸித்தயஃ

வஜ்ரபம்ஜர னாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்
அவ்யாஹதாஜ்ஞஃ ஸர்வத்ர லபதே ஜய மம்களம்

ஆதிஷ்டவான் யதாஸ்வப்னே ராம ரக்ஷா மிமாம் ஹரஃ
ததா லிகிதவான் ப்ராதஃ ப்ரபுத்தௌ புதகௌஶிகஃ

ஆராமஃ கல்பவ்றுக்ஷாணாம் விராமஃ ஸகலாபதாம்
அபிராம ஸ்த்ரிலோகானாம் ராமஃ ஶ்ரீமான்ஸனஃ ப்ரபுஃ

தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாபலௌ
பும்டரீக விஶாலாக்ஷௌ சீரக்றுஷ்ணா ஜினாம்பரௌ

பலமூலாஸினௌ தாம்தௌ தாபஸௌ ப்ரஹ்மசாரிணௌ
புத்ரௌ தஶரதஸ்யைதௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணௌ

ஶரண்யௌ ஸர்வஸத்வானாம் ஶ்ரேஷ்டா ஸர்வ தனுஷ்மதாம்
ரக்ஷஃகுல னிஹம்தாரௌ த்ராயேதாம் னோ ரகூத்தமௌ

ஆத்த ஸஜ்ய தனுஷா விஷுஸ்ப்றுஶா வக்ஷயாஶுக னிஷம்க ஸம்கினௌ
ரக்ஷணாய மம ராமலக்ஷணாவக்ரதஃ பதிஸதைவ கச்சதாம்

ஸன்னத்தஃ கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா
கச்சன் மனோரதான்னஶ்ச ராமஃ பாது ஸ லக்ஷ்மணஃ

ராமோ தாஶரதி ஶ்ஶூரோ லக்ஷ்மணானுசரோ பலீ
காகுத்ஸஃ புருஷஃ பூர்ணஃ கௌஸல்யேயோ ரகூத்தமஃ

வேதாம்த வேத்யோ யஜ்ஞேஶஃ புராண புருஷோத்தமஃ
ஜானகீவல்லபஃ ஶ்ரீமானப்ரமேய பராக்ரமஃ

இத்யேதானி ஜபேன்னித்யம் மத்பக்தஃ ஶ்ரத்தயான்விதஃ
அஶ்வமேதாதிகம் புண்யம் ஸம்ப்ராப்னோதி னஸம்ஶயஃ

ராமம் தூர்வாதள ஶ்யாமம் பத்மாக்ஷம் பீதாவாஸஸம்
ஸ்துவம்தி னாபிர்-திவ்யைர்-னதே ஸம்ஸாரிணோ னராஃ

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் ஸும்தரம்
காகுத்ஸம் கருணார்ணவம் குணனிதிம் விப்ரப்ரியம் தார்மிகம்

ராஜேம்த்ரம் ஸத்யஸம்தம் தஶரததனயம் ஶ்யாமலம் ஶாம்தமூர்திம்
வம்தேலோகாபிராமம் ரகுகுல திலகம் ராகவம் ராவணாரிம்

ராமாய ராமபத்ராய ராமசம்த்ராய வேதஸே
ரகுனாதாய னாதாய ஸீதாயாஃ பதயே னமஃ

ஶ்ரீராம ராம ரகுனம்தன ராம ராம
ஶ்ரீராம ராம பரதாக்ரஜ ராம ராம
ஶ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஶ்ரீராம ராம ஶரணம் பவ ராம ராம

ஶ்ரீராம சம்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ வசஸா க்றுஹ்ணாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶிரஸா னமாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶரணம் ப்ரபத்யே

மாதாராமோ மத்-பிதா ராமசம்த்ரஃ
ஸ்வாமீ ராமோ மத்-ஸகா ராமசம்த்ரஃ
ஸர்வஸ்வம் மே ராமசம்த்ரோ தயாளுஃ
னான்யம் ஜானே னைவ ன ஜானே

தக்ஷிணேலக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜனகாத்மஜா
புரதோமாருதிர்-யஸ்ய தம் வம்தே ரகுவம்தனம்

லோகாபிராமம் ரணரம்கதீரம்
ராஜீவனேத்ரம் ரகுவம்ஶனாதம்
காருண்யரூபம் கருணாகரம் தம்
ஶ்ரீராமசம்த்ரம் ஶரண்யம் ப்ரபத்யே

மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேம்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஶ்ரீராமதூதம் ஶரணம் ப்ரபத்யே

கூஜம்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்யகவிதா ஶாகாம் வம்தே வால்மீகி கோகிலம்

ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஶ்ரீராமம் பூயோபூயோ னமாம்யஹம்

பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்
தர்ஜனம் யமதூதானாம் ராம ராமேதி கர்ஜனம்

ராமோ ராஜமணிஃ ஸதா விஜயதே ராமம் ரமேஶம் பஜே
ராமேணாபிஹதா னிஶாசரசமூ ராமாய தஸ்மை னமஃ
ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோஸ்ம்யஹம்
ராமே சித்தலயஃ ஸதா பவது மே போ ராம மாமுத்தர

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே

இதி ஶ்ரீபுதகௌஶிகமுனி விரசிதம் ஶ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

———-

*ஶ்ரீ ராமாயண ஜெய மந்திரம்*

ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாபலஃ
ராஜா ஜயதி ஸுக்ரீவோ ராகவேணாபிபாலிதஃ |

தாஸோஹம் கோஸலேம்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மணஃ
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் னிஹம்தா மாருதாத்மஜஃ ||

ன ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
ஶிலாபிஸ்து ப்ரஹரதஃ பாதபைஶ்ச ஸஹஸ்ரஶஃ |
அர்தயித்வா புரீம் லம்காமபிவாத்ய ச மைதிலீம்
ஸம்றுத்தார்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||

———

ஸ்ரீ ராம மங்களம்

ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப்தயே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

வேதவேதாந்தவேத்யாய மேகஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம்

விஸ்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்

பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம்

த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம்

ஸௌமித்ரிணா ச ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம்

தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர ஶத்ரவே
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்(அ)ஸ்து மங்களம்

ஸாதரம் ஸபரீதத்த பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம்

ஹநூமத் ஸமவேதாய ஹரீஶாபீஷ்டதாயிநே
வாலிப்ரமதநாயா (அ)ஸ்து மஹாதீராய மங்களம்

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூலங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம்

ஆஸாத்ய நகரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்

மங்களாஶாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அகஸ்திய மகரிஷி திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதாப் பிராட்டி லஷ்மண பரத சத்ருக்ந திருவடி சமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.