ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —
ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மாண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்
வீர ஆசனத்தில் ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ வாயு குமாரர் ஸ்ரீ ராமாயணம் சாதித்து அருள –
ஸ்ரீ பெருமாள் வியாக்யானம் சாதித்து அருளி -இதுவே நம் பூர்வர்கள் ஸ்ரீ குரு பரம்பரை மூலம் பெற்ற நிதி
ஸ்ரீ மத் கிருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாக்ஷைக லஷ்யணாம் ஸூலபஸ் ஸ்ரீ தரஸ் ஸதா
நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியாதாக்கும் வேரி யங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேதன நீறு பட்டுழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கு
நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற இரண்டு எழுத்தினால்
ஆபதாம் அபஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
———–
ஸ்ரீ கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்
ஸ்ரீ வால்மீகேர் முனிஸிம்ஹஸ்ய கவிதா வனசாரிண:
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராங்கதிம்
ய: பிபன் ஸததம் ராம சரிதாம்ருத ஸாகரம்
அத்ருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸ மகல்மஷம்
கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம்
ஸ்ரீ ராமாயண மஹாமாலா ரத்னம் வந்தே(அ) நிலாத்மஜம்
அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீசோக நாசனம்
கபீச மக்ஷஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்
உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்8
ஆஞ்ஜனேய மதிபாடலாலனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி
புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
க்யாத: ஸ்ரீராமதூத: பவனதனுபவ: பிங்கலாக்ஷ: சிகாவான்
ஸீதா சோகாபஹாரீ தசமுக விஜயீ லக்ஷ்மண: ப்ராணதாதா
ஆநேதா பேஷஜாத்ரேர் லவணஜலநிதேர் லங்கனே தீக்ஷிதோ ய:
வீர: ஸ்ரீமான் ஹனூமான் மம மனஸி வஸன் கார்யஸித்திம் தநோது
தூவரிக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி:
தாரித தசமுக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:
ஸ்ரீ வால்மீகி கிரிஸம்பூதா ராமஸாகர காமினீ
புனாது புவனம் புண்யா ராமாயண மஹாநதீ
ஸ்ரீ வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ரசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா
வைதேஹீ ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்த்யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முனிப்ப்ய: பரம்
வ்யாக்க்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்
நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை
நமோ(அ)ஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ப்யோ
நமோ(அ)ஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ப்ய:
ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||
————
வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஸரதாத்மஜே |
வேத3 : ப்ராசேதஸா தா3ஸீத்3 ஸாக்ஷாத்3 ராமயணாத்மநா ||
வேதத்தினால் சூட்டப்படும் பரம்பொருள் பூமியிலே ஸ்ரீ ராமனாக அவதாரம் பண்ண உடனே,
வேதம், ஸ்ரீ வால்மீகி முனிவர் வழியாக ஸ்ரீ ராமாயணமாக வெளிவந்துவிட்டது
———
ஸ்ரீ ராமம் ரகு குல திலகம்
சிவ தனு சாக்ரிஹத ஸீதா ஹஸ்த கரம்
அங்குல்யா பரண ஸோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய ஆஸ்ரயம்
வைதேஹி மநோ ஹரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கள கார்ய அநுகூலம்
ஸததம் ஸ்ரீ ராமசந்த்ர பாலயமாம்
—————-
தபஸ் ஸ்வாத்யாயனிரதம் தபஸ்வீ வாக் விதாம் வரம் |
நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முனி புங்கவம் || 1 ||
தாத்பர்யம்
உயர்ந்த தவமுடைய வால்மீகி பகவான்
கர்ம யோகாதி அனுஷ்டானம்
வேத அத்யயன ஜபாதி நிஷ்டை முதலியவைகளை யுடையவராய்
வேதார்த்த வித்துக்களில் உயர்ந்தவராய்
ஸகல வித்யைகளை அறிந்தவர்களில் சிறந்தவராய்
ஸரஸ்வதி புத்ரர்களாகிய அத்தி மரீசீ முதலியவர்களின் மேன்மை யுடையவராய்
முனி ஸ்ரேஷ்டராய் இருக்கிற நாரத மஹா முனியைக் கேட்டு
ப்ரஸ்னம் பண்ணினார் -கேள்வி கேட்டார்
—————-
விசேஷ அர்த்தம்
தபோ நிரதம்’, ‘ஸ்வாத்யாய நிரதம்’, ‘வாக் விதாம்வரம்’ ‘முனிபுங்கவம்’, என்று
ஸ்ரீ நாரத மகரிஷிக்கு நாலு அடைமொழி கொடுத்து, இந்த ஸ்ரீ நாரத மகரிஷியிடம்,
ஸ்ரீ வால்மீகி பகவான் ஒரு விஷயத்தை கேட்கிறார் என்று ஆரம்பிக்கிறது.
தபோ நிரதம்’ – தபஸில் ஈடுபட்டவராய் இருக்க வேண்டும்.
‘ஸ்வாத்யாய நிரதம்’ – தனது படிப்பில் திரும்பத் திரும்ப மனசை செலுத்துவதில் விருப்பம் உள்ளவரை இருக்க வேண்டும்.
‘வாக் விதாம் வரம்’ – வாக்கிற்கு என்ன பிரயோஜனம்? பகவானை பற்றி பேசிக் கொண்டிருப்பது. அதைச் செய்து கொண்டிருப்பவர்.
‘முனி புங்கவம்’ – மௌனமாய் இருக்ககூடிய முனி புங்கவருக்குள் ஸ்ரேஷ்ட்டர்.
“தபசு, வேதவேதாந்தங்கள் இவைகளைப் பூரணமாக அடைந்தவரும், உபதேசிப்பவர்களுக்குள் மேலானவரும்,
முனி ஶ்ரேஷ்டருமான நாரத மஹரிஷியை, தவத்தோடுகூடிய வான்மீகி முனிவர் தெண்டம் சமர்ப்பித்து வினாவினார்.”
1) தபோநிரதம் :– தவத்தைப் பூரணமாக அடைந்தவர் என்றதினால் அவர் சர்வசக்தி வாய்ந்தவர் என்பது ஸூசகம்.
“யத்துஸ்தரம் யத்துராபம் யத்துர்கம் யச்சதுஷ்கரம்|
தத் ஸர்வம் தபஸாஸாத்யம் தபோஹி துரதிக்ரமம் ||”
“எது கடக்கமுடியாததோ, எது பெற முடியாததோ, எது செய்யமுடியாததோ அதெல்லாம் தவத்தால் சாதிக்கமுடியும்.
ஆகையால் தவத்தை வெல்வதரிது.”
“வேண்டிய வேண்டியாங் கெய்தலாற்செய்தவ மீண்டு முயலப் படும்.
கூற்றங் குதித்தலும் கைகூடு நோற்றலி னாற்ற றலைப்பட் டவர்க்கு” (திருக்குறள்) என்ற ஆதாரங்கள் நோக்கத்தக்கன.
2) ஸ்வாத்யாய நிரதம்:– வேதவேதாந்தங்களைப் பூர்ணமாக அடைந்தவர், என்றதினால்
நாரதர் சொல்வதெல்லாம் தருமத்தோடு பொருந்திய வசனம் என்பது ஸூசகம்.
3) வாக்விதாம்வரம் :– உபதேசிப்பவர்களுக்குள் மேலானவர், என்றதினால் சிறந்த போதனாசக்தி வாய்ந்தவரெனவும்,
வ்யாகரணம் முதலான சகல சாஸ்திரங்களையும் நன்றாக அறிந்தவரெனவும் பொருள்படும்.
4) முனி புங்கவம்:– முனிஶ்ரேஷ்டர் என்றதினால் இந்திரிய நிக்கிரகமுள்ளவர் என்பதும்,
பகவத்யானத்தோடு கூடியவரென்பதும், திரிகால வர்த்தமானங்களை அறியக்கூடியவரென்பதும் , ஸதா ஜபபரரென்பதும் ஸூசகம்.
5)நாரதம்:– நாரத மஹரிஷியை, என்றதினால், நாரம் – ஜ்ஞானம், அதைக் கொடுக்கக் கூடியவர் என்பதும்,
நாரம் – அஜ்ஞானம், அதை நிவர்த்தி செய்யக்கூடியவ ரென்பதும், த்ரிலோக ஸஞ்சாரியானபடியால்,
மூன்று லோகத்திலுள்ள வர்த்தமானங்களை அறிபவரென்பதும், பிரம்ம புத்திரரானபடியால் உத்தம குலத்தைச் சேர்ந்தவரென்பதும் ஸூசகம்.
ஆகவே, இந்த ஐந்து பதங்களினால், ஆசார்யன் பூர்ணமான தபஸை யுடையவராகவும்,
வேதவேதாந்தங்களையும் வ்யாகரணம் முதலான ஸகல ஶாஸ்திரங்களையும் உணர்ந்தவராகவும்,
பகவத் பக்தியுடன் அநவரத ஜபபரராகவும் சிஷ்யனுடைய அஜ்ஞானத்தைப் போக்கி, ஜ்ஞானத்தைக் கொடுத்துப்
பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்கவல்லவராகவும், ஜிதேந்திரியராகவும், உத்தம குலத்தவராகவுமிருக்கவேணும்
எனறு ஆசார்ய லக்ஷணம் சொல்லப்பட்டதாயிற்று.
“குஶப்தஸ் த்வந்தகாரஸ்யாத் ருகாரஸ்தந் நிவர்தக:|
அந்தகார நிரோதித்வாத் குருரித்யபி தீயதே||”
“கு என்பது அஜ்ஞானத்தையும், ரு என்பது அதன் நிவர்த்தியையும் சொல்லுகிற படியால்
மனதின் கண்ணுள்ள அஜ்ஞானமாகிற இருளை நீக்கி மெய்ஞ்ஞானமாகிற பிரகாசத்தைத் தருவதால் குரு வெனச் சாற்றப்படுகின்றனர்.
குலனருள் தெய்வங்கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வண்மை
நிலமலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும்
உலகியலறிவோ டுயர்குண மினையவும்
அமைபவன் நூலுரையாசிரியன்னே.” என்ற நன்னூல் இங்கு நோக்கத் தக்கது.
தப -என்று
பாபத்தைப் போக்கி ஊணை வாட்டி இந்திரியங்களை வசமாக்கிக் கொடுக்க வல்ல க்ருச்ரம் சந்த்ராயணம் முதலிய கர்மத்துக்கும்
யம நியம ஆஸன பிராணாயாம ப்ரத்யாஹார தாரண தியானங்களை அங்கங்களாக யுடைய ஸமாதி என்கிற யோகத்திற்கும்
வேதத்துக்கும்
பர ப்ரஹ்மத்திற்கும்
தபோ விசேஷமான ந்யாஸத்திற்கும் பெயர்
ஸ்வாத்யாயம் -என்று
வேதத்திற்கும் ஜெபத்திற்கும் பெயர்
வாக் என்று
வியாகரணம் சிஷை சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறு அங்கங்களும்
வித்யா சாமான்யத்திற்கும்
அந்த வந்த சமயத்துக்கு வேண்டும் அர்த்தங்களை போதிக்க வல்ல சப்தத்துக்கும்
ஸரஸ்வதிக்கும் பெயர்
முனி என்று
மனனம்-அதாவது த்யானம் பண்ணுகிறவர்களுக்குப் பெயர்
நார என்று
ப்ரஹ்மத்தையும்
அஞ்ஞானத்தையும் சொல்லும்
ஆக
தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம் நாரதம் — முனி புங்கவம்-என்கிற பதங்களினால்
ஆச்சார்யன்
கர்மயோக ஞானயோக பக்தி யோகங்களிலும் ப்ரபத்தியிலும் ஊற்றம் யுடையவனாய்
வேத வேதாங்களையும் அங்கங்களையும் நியாய மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ரங்களையும் சம்ஸயம் விபர்யயம் அற உணர்ந்தவனாய்
அனவ்ரத ஜெப பரனாய்
ஸிஷ்யனுடைய சம்சயம் அறும் படி உபதேசிக்க வல்லனாய்
ப்ரஹ்ம வித் அக்ரேரராய்
அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்க வல்லனாய்
ஜிதேந்த்ரியனாய்
ஸத் குல ப்ரஸூதனாய்
ஸ்ரவண மனன நிதித்யாஸன தத் பரனாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறது –
——–
சிஷ்ய லக்ஷணம்
1) தபஸ்வீ: – என்றதினால் பகவத் ஸ்வரூபத்தை அறிய ஆவல்கொண்டவரென்பதும்,
பல விரதங்களை அனுஷ்டித்தவரென்பதும், ஶமதமாதி ஸம்பந்தங்களை அடைந்தவரென்பதும்,
ஜீவகாருண்யமுடையவரென்பதும், களங்கமற்ற இருதயமுடையவரென்பதும் ஸூசகம்.
“உற்றநோய் நோன்றலுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற்குரு” (திருக்குறள்)
2) பரிபப்ரச்ச – என்றதினால் விதிவதுபஸந்ந: என்பது பொருள். அதாவது,
உபதேசம் பெற்றுக் கொள்ள, குருவைத் தேடிப்போய், தண்டம் ஸமர்ப்பித்து, விதி ப்ரகாரம் கேட்கவேண்டுமென்பது
தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா|
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்ஶிந: ||
“அந்த ஆத்ம ஜ்ஞானத்தை, குருவைத் தேடிப்போய், தண்டம் ஸமர்ப்பித்து, விதிப்ரகாரமான கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ளக் கடவாய். தத்வமறிந்த பண்டிதர்கள் உனக்கு ஜ்ஞானத்தை போதிப்பார்கள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய வசனம் இங்கு கவனிக்கத் தக்கது.
ஆகவே, தபஸ்வீ, பரிப்ரச்ச என்ற பதங்களினால் சிஷ்ய லக்ஷணம் சொல்லப்பட்டதாயிற்று.
ஸத்புத்திஸ் ஸாது ஸேவீ ஸமுசித சரிதஸ் தத்வ போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ் த்யக்தமாந: ப்ரணி பதந பர: ப்ரஶ்ந கால ப்ரதீக்ஷ:||
ஶாந்தோ தாந்தோ நஸூயுஸ் ஸரணமுபகதஸ் ஶாஸ்த்ர விஶ்வாஸஶாலி|
ஶிஷ்ய:ப்ராப்த: பரீக்ஷாங் க்ருதவி தபிமதம் தத்வதஸ் ஸிக்ஷணீய:
“நற்புத்தியுடன் ஸாது ஸேவை உடையவனாகி, நன்னடத்தை உடையவனும், உண்மை ஞானத்தை அறிவதில்
அபிலாஷை உடையவனும், பணிவிடைக்காரனும், மானாவமான மென்பதற்றவனும், ப்ரஶ்ந காலத்தை எதிர்பார்ப்பவனும்,
சாந்தனும், அஸூயை இல்லாதவனும், சரணாகதி யடைந்தவனும், சாஸ்திர விஶ்வாசமுடையவனுமே
சிஷ்யனாக அங்கீகரிக்கத் தகுந்தவன்” என்பது நோக்கத் தக்கது.
தபஸ்வீ-என்று சிஷ்ய லக்ஷணம் சொல்கிறது
அதாவது
பரமாத்ம ஞான சாதனமான உயர்ந்த தபஸ்ஸையும்
வேதத்தில் கர்ம காண்டங்களை பரிசீலித்து ஸ்வர்க்காதி ஷூத்ர பலன்களில் வைராக்யம் யுடையவனாய்
மோக்ஷத்தில் அபிருசி யுடையவனாய்
ஜிதேந்த்ரியனாய்
சாந்தனாய் –இருக்க வேண்டும் என்று சொல்கிறது
இதனால் ஆச்சார்யாத் தைவ வித்யா விதி தாஸாதிஷ்டம் ப்ரபாத் –என்று
சதாச்சார்யன் இடத்தில் நின்றும் நியம பூர்வகமாகக் கற்ற வித்யையே மோக்ஷ உபயோகியாம் என்னுமது வெளியிடப்பட்டது-
ஆச்சார்யன் உபதேசம் அவரது ஆச்சார்யருக்கு ப்ரீதிக்கு உறுப்பாக என்று மேல் மேல் ஸ்ரீ லஷ்மீ நாதன் பர்யந்தம் போகுமே
வால்மீகி பகவான் ப்ருகு வம்சத்தில் அவதரித்தவர். இவர் (வல்மீகம் = புற்று) புற்றிலிருந்து வெளி வந்ததினால்
வால்மீகி என்று பெயர். இவர்க்கு “ப்ராசேதஸர்” (அதாவது வருணனுடைய புத்திரர்) என்னும் பெயருண்டு.
இவர் ஓர் இடத்தில் சரியாமல் உடகார்ந்து மெய் மறந்து தபஸ்ஸு பண்ணிக் கொண்டு இருக்கையில் இவர் மேல் புற்று மூடிப் போய் விட்டது
வருண தேவன் மழை பொழிந்து அப் புற்றைக் கரைத்து விட அங்கு நின்றும் புறப்பட்டார்
ஆகவே வால்மீகி புற்றில் நின்றும் வெளிப்பட வருணன் காரணமானதால் ப்ராசேதனர் -வருண புத்ரன் என்றும் செல்லப்படுகிறார்
நாரதோ அஹம் மந ப்ராப்த -த்வத் தர்சன குதூஹலாத் பிரபவோ பகவத் பக்தா மாத்ருஸாம் ஸததம் த்விஜ
நாரதர் என்று சொல்லப்படும் அடியேன் உம்மைக் காணும் ஆசையினால் வந்தடைந்தேன்
ப்ராஹ்மண உத்தம -என்னைப்போல் உள்ளவர்களுக்கு பகவத் பக்தர்கள் எப்பொழுதும் பிரபுக்கள்
தும்புரு நாரதர் புகுந்தனர்
பகவத் பாகவத ஸந்தர்சன ப்ரணாம ஸல்லாபமே தபஸ்
தத் வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா
தபஸ்வாத்யாய நிரதம் –என்று காயிக ஸூத்தியையும்
வாக்விதாம் வரம் என்று வாக் ஸூத்தியையும்
முனி புங்கவம் என்று மனஸ் ஸூத்தியையும் சொல்லிற்று
கோऽன்வஸ்மின் ஸாம்ப்ரதம் லோகே குணவான் கஶ்ச வீர்யவான் |
தர்மஜ்ஞஶ்ச க்ருதஜ்ஞஶ்ச ஸத்ய வாக்யோ த்ருட வ்ரத꞉ || 2 ||
கோநு –ஹேம அரவிந்தம் போல் ஆஸ்ரய வைலக்ஷண்யத்தினால் நிஸ் ஸமாப்யதிகையைச் சொல்வதற்காக பிரதமம் தர்மி நிர்தேசம் செய்கிறார்
அஸ்மின் -இந்த லோகத்தில் -இத்தால் பரமபத நிலையனில் வியாவ்ருத்தி
அஸ்மின் லோகே – இந்த உலகத்தில்
சாம்ப்ரதம் லோகே – தற்காலத்தில்
தர்மக்ஞஸ்ச’ – தர்மங்களை அறிந்தவர்.
‘க்ருதக்ஞஸ்ச’ – செய்த நன்றியைப் பாராட்டுபவர்.
ஸத்யவாக்ய:’ – பொய்யே பேசாதவர். எப்பொழுதும் மனோ, வாக், காயத்துனால உண்மையே பேசுபவர்.
ஓ நாரத பகவானே லோகாந்தரத்தில் ஸ்ரீ மன் நாராயணனும் காலாந்தரத்தில் நரஸிம்ஹாதிகளும்
நான் இனிக் கேட்கப் போகிற குணங்களை உடையவர்கள் உண்டு என்பது அறிவேன்
இவ் வுலகில் இக் காலத்தில் இவ் விதமான புருஷன் யாராவது உண்டோ -அதை அறிந்து சொல்லும்
அதாவது ஸுசீல்யமுடைய புருஷன் யார் -ஸுசீல்யமாவது உயர்ந்தவன் தன் உயர்வை மதித்து இறுமாறாதே தாழ்ந்தவருடன் அடர்ந்து புணருகையாவது
வீர்யத்தை யுடையவன் யார் -வீர்யமாவது -தான் வருத்தம் அற்றவனாய் மற்ற ஒருவனை வருத்தமுறச் செய்தலாம்
வருந்துகைக்குக் காரணங்கள் உண்டாயினும் வருந்தாது ஒழிகையாகவுமாம்
அவஸ்யம் செய்யத்தக்க தர்மத்தை அறிந்தவன் யார் -தர்மமாவது பிதாவின் சொல் வழி நடக்கை –
சரணம் அடைந்தவனை ரஷிக்கை முதலானவை
செய்யத் தகாத அதர்மங்களை அறிந்தவன் யார் –அதர்மமாவது ஸாஸ்த்ரத்தில் செய்யத் தகாது என்று நிஷேதித்த ஸூரா பானம் அஹம்பாவ மனம் முதலானவை
சிறிது உபகாரம் செய்யினும் அதை எப்போதும் மாறவாமல் பெரியதாக நினைப்பவன் யார்
ஒருவன் அபகாரம் செய்தால் அதை ஒருக்காலும் நினையாமல் மறந்து விடுகிறவன் யார்
ஸங்கல்பித்ததைத் தவறாமல் நடத்த வல்லவன் யார்-ப்ரதிஜ்ஞாதமான ஆர்த்த ரக்ஷணத்தை ஆபத்திலும் விடாத ஸங்கல்பத்தை யுடையவன்
————–
சாரித்ரேண ச கோ யுக்த꞉ ஸர்வ பூதேஷு கோ ஹித꞉ |
வித்வான் க꞉ கஸ் ஸமர்தஶ்ச கஶ்சைக ப்ரிய தர்ஶன꞉ || 3 ||
தங்கள் பெரியோர்கள் ஆசரித்த குல ஆசாரத்தை ஒரு வகையிலும் விடாமல் ஆசரிப்பவன் யார்
ஸத்ரு மித்ர பேதம் இன்றி ப்ராணி மாத்ரத்துக்கு நன்மை செய்கிறவன் யார்
ஸகல ஸாஸ்த்ரங்களையும் அறிந்தவன் யார்
நினைத்த காரியத்தை முடிக்க வல்லமை உள்ளவன் யார்
எல்லோருக்கும் எப்போதும் பார்க்கப் பார்க்க ஆனந்த ஜநகனாய் இருப்பவன் யார்
சாரித்ரேண ச கோ யுக்த-தொடங்கி ஆத்ம குண பரமான ப்ரஸ்னம்
மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் –ஸ்ரீ ராம ஸித்தாந்தம் அன்றோ –
ஸர்வோத்தரமாய் ஸத்துக்களுக்கு அபிமதமாய் இருக்கும் அன்றோ –
———-
ஆத்மவான் கோ ஜித க்ரோதோ த்யுதிமான் கோऽனஸூயக꞉ |
கஸ்ய பிப்யதி தேவாஶ்ச ஜாதரோஷஸ்ய ஸம்யுகே || 4 ||
சலியாத தைர்யம் உடையவன் யார்
கோபத்தை அடக்கியவன் யார்
ஸகல பிராணிகளும் ஆவலுற்றுப் பார்க்கத் தகுந்த அழகுடையவன் யார்
அஸூயை இல்லாதவன் யார் -அஸூயை யாவது பிறர் இடத்தில் இல்லாத குற்றங்களை ஏறிட்டுச் சொல்லுதல்
போர்க்களத்தில் எவனுக்கு கோபமுற்றால் தேவர்களும் அசுரர்களும் பயப்படுவார்கள்
அதாவது மாற்றார் மேல் கோபமுற்றால் அன்பரும் அஞ்சும்படியாகப் பெரும் கோபம் யுடையவன் யார்
தன்னடியார் திறத்தில் ஒருவன் அபராதம் செய்தால் அப்போது அவனை வென்று அடியார்களைக் காப்பாற்றுவதற்காக
தனக்கு ஸ்வ பாவம் இல்லாத கோபத்தை ஏறிட்டுக் கொள்பவன் யார் என்பது தாத்பர்யம்
——————-
ஏததிச்சாம் யஹம் ஶ்ரோதும் பரம் கௌதூஹலம் ஹி மே |
மஹர்ஷே த்வம் ஸமர்தோऽஸி ஜ்ஞாதுமேவம்விதம் நரம் || 5 ||
ஓ மஹ ரிஷியே நீர் எல்லாம் அறிந்தவர் -ஆகையால் இவ்விதமான புருஷனை அறிந்து சொல்ல உமக்கு சாமர்த்தியம் உண்டு
இக் குணங்கள் ஓர் இடத்தில் சேர்ந்து இருப்பது அரிதாகையாலே இவை எல்லாவற்றையும் உடையவன் ஒருவன்
உளன் என்று கேட்பதில் எனக்கு மிகவும் உத்ஸாஹமாய் இருக்கிறது
இது வரையில் என்னுடைய இக் கேள்விக்குத் தக்க உத்தரம் சொல்ல வல்லவர் ஒருவரும் அகப்படவில்லை
இப்போது உம்மைக் கண்டு உம்மிடத்தில் கேட்க வேண்டும் என்று ஆவலுற்றவனாக இருக்கின்றேன்
இதை எனக்கு தெரிய உரைக்க வேண்டும்
இதனால் வேதார்த்தங்களை ஒரு ஆச்சார்யர் இடம் கேட்டே அறிய வேண்டும் என்பது தெளிவாகிறது
மஹர்ஷே த்வம்–அலௌகிகார்த்த த்ருஷ்டாக்கள் நீர் -மஹ ரிஷியானபடியால் எங்களைக் காட்டிலும்
வேதாந்த ரஹஸ்ய ஞானம் உடையவர் அன்றோ நீர்
ஆகையால் இப்படிப்பட்ட குணங்களை யுடைய பரம புருஷனைச் சொல்ல வேண்டும் என்கிறாள்
—————-
ஶ்ருத்வா சைதத் த்ரிலோகஜ்ஞோ வால்மீகேர்னாரதோ வச꞉ |
ஶ்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்ய மப்ரவீத் || 6 ||
ச்ருத்வா ஏதத் வால்மீகேர் வச:’ – இந்த வால்மீகியுடைய வார்தையைக் கேட்டு,
‘த்ரிலோகக்ஞ: நாரத:’ – மூவுலகையும் அறிந்த, எல்லாம் அறிந்த நாரத பகவான் சொல்ல
ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத்’ – அவரும் ரொம்ப சந்தோஷமா சொல்ல ஆரம்பிக்கிறார்.
ஸமஸ்த லோகங்களிலும் உள்ள ஸகல பிராணிகளுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறிந்த நாரத பகவான்
வால்மீகி மொழிந்த இவ் வசனத்தைக் கேட்டும் தம்முடைய புத்தியால் ஊஹித்தும்
இவர் மனதில் உள்ள அபிப்ராயங்களைத் தெரிந்து கொண்டு இம்மஹா அர்த்தத்தைத் தாம் சொல்லக்
கேட்க்கைக்கு அதிகாரிகள் அகப்பட்டாரே என்று சந்தோஷம் அடைந்தவராய்
ஓ வால்மீகி மஹ ரிஷியே சொல்லுகிறேன் கேளும் என்று தம் மொழியில் அவர் மனதை இசையச் செய்து சொல்லத் தொடங்கினார்
—————-
பஹவோ துர்லபாஶ்சைவ யே த்வயா கீர்திதா குணா꞉ |
முனே வக்ஷ்யாம் யஹம் புத்த்வா தைர்யுக்த꞉ ஶ்ரூயதாம் நர꞉ || 7 ||
ஓ வால்மீகி மஹ ரிஷியே நீர் கேட்ட இக் குணங்கள் ஒவ்வொன்றும் அநேக குணங்களை விளைக்கத் தக்கவை
இவை ஸாதாரண ஜீவர்களிடம் சேர மாட்டா
நான் இப்போது ஸ்ரீ ராம குணங்களை அனுபவித்துக் கொண்டு பரவசனாய் இருக்கிறேன்
சற்று நிதானியும் -இக் குணங்களுடைய புருஷனை யோசித்து அறிந்து சொல்கிறேன்
பஹவோ -ப்ரஸ்னம் பண்ணப்பட்ட குணங்கள் 16 ஆக இருந்தாலும் ஒவ்வொன்றையும் தனித்தனியே
விஸ்தரித்துப் பார்த்தால் அநேக குண ராசீ கரணமாய் இருக்குமே
துர்லபாஶ்–ராமனை விட்டு பர வாஸூதேவன் இடமும் அவதாராந்தரங்களிலும் கான முடியாதவை அன்றோ
வாயினால் சொல்லவும் அரிது என்னவுமாம்
இப்படி ப்ரஸ்னம் வேறே ஒருவராலும் செய்ய முடியாதே என்றுமாம்
முனே -நீர் மனன சீலர் ப்ரேம சாலீ யாகையாலே இவ்வாறு ப்ரஸ்னம் பண்ணினீர்
இவன் குணம் ப்ரஸ்னம் விலக்ஷண பிரேமசாலிகள் பண்ணும் பகவத் குண கீர்த்தனங்கள் போல் போக்யமாக
செவிக்கு இனிய செஞ்சொல்லாய்-உருகுமால் நெஞ்சம் என்னும்படி இருப்பதால் கீர்த்திதா -என்கிறான்
முனே வக்ஷ்யாம் யஹம் புத்த்வா–நான் ஆனவாறே சொல்கிறேன்
வேரா விதிர் விதிரா மெய் சிலிரா –மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப –
அந்நிய பரனான நான் தெளிந்து ப்ரக்ருதிஸ்தனனான வாறே சொல்கிறேன் என்கிறான்
————-
இக்ஷ்வாகு வம்ஶ ப்ரபவோ ராமோ நாம ஜனை꞉ ஶ்ருத꞉ |
நியதாத்மா மஹா வீர்யோ த்யுதிமான் த்ருதிமான் வஶீ || 8 ||
இக்ஷ்வாகு வம்ஸ பிரபாவ:’ – இக்ஷ்வாகு வம்சத்தில ஒளியோடு விளங்குபவன்
த்யுதிமான்’ – ஒளி மிகுந்தவன்–தேஜஸோட இருப்பான்.
‘த்ருதிமாந்’ – தைர்யசாலி.
‘வசீ’ – இந்திரியங்களைத் தன் வசத்தில் வைத்திருப்பவன்.
இஷ்வாகு வம்சத்தில் ஸ்ரீ ராமர் என்று ப்ரஸித்தராய் ஒருவர் அவதரித்து இருக்கிறார் -நீரும் அவரை இதுவரை கேட்டு இருப்பீர்
அவருடைய பெரும் தொழிலைக் கண்டு ஜனங்கள் அவரை பராத்பரரான ஸ்ரீ மன் நாராயணன் என்று நிச்சயிக்கிறார்கள்
அவர் கர்மாதீனமாய் அதி ஹேயமான ஜனன மரணாதி விகாரங்கள் அற்றவர்
பெரிய சாமர்த்தியம் யுடையவர் -ஸ்வயம் ப்ரகாஸமானவர்
உயர்ந்த ஆனந்தத்தை யுடையவர் -ஸகல ஜகத்தையும் தனது வசமாக்கிக் கொண்டவர்
பிதரம் ரோச யாமாஸ –சக்ரவர்த்தியைப் பிதாவாகக் கொள்ள ஆசைப்பட்டான் அன்றோ
இஷ்வாகூணாம் மியம் பூமி ஸ ஸைல வன காநந–என்றார் அன்றோ பெருமாள்
இக் குணங்கள் எல்லாம் இக் குடிப் பிறப்பாலே வந்தது போலே காணும் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
தம்முடைய தவத்தின் பலனாக ஸ்ரீ ரெங்கநாதனைப் பெற்ற மஹா புருஷன் அன்றோ
ப்ரபவோ –உத்பத்தி ஸ்தானம் –
ராமோ நாம ஜனை꞉ ஶ்ருத꞉ |–குணத்து அளவும் செல்ல வேண்டாம் ராமன் என்கிற திரு நாமமே செவிக்கு இனிய செஞ்சொல்லாய் ஸர்வ ஜனங்களுக்கும் இருக்கும் அன்றோ –
ஸ்ரோதவ்யம் ஏதன் நியமேன ஸத்பிர் –மஹானுபாவம் சரிதம் –சத்துக்களால் நியமத்துடன் ஸ்ரீ ராமாயணம் கேட்கத்தக்கது என்றாரே வால்மீகியும்
ராம ராம -ரமயதி இதி ராம –ரமந்தே யோகிந அஸ்மின் இதி ராம
ராமம் ஸத்ய பராக்ரமம் -அவதார வை லக்ஷண்யம்
ஜனைஸ் ஸ்ருத -லௌகிக ப்ரஸித்தி
நியதாத்மா -அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டன்
மஹா வீர்ய -வீரியத்துக்கு மஹத்வமாவது தோஷ ரஹிதம் -ஸ்வ பாவிகம் -எல்லையற்ற ஒப்பு இல்லாத வீர்யம்
——
புத்திமான் நீதிமான் வாக்மீ ஸ்ரீ மான் ஸத்ரு நிபர்ஹண
விபுலாம் ஸோ மஹா பாஹோ கம்பு க்ரீவோ மஹா ஹநு ꞉ || 9 ||
வாக்மீ’ – நல்ல வாக்கு. பேச்சு ‘மதுராபாஷி
விபுலாம்ஸ:’ – பரந்த தோள்கள்.
கம்புக்ரீவ:’ – கழுத்து சங்கு போல இருக்கும்.
‘மஹாஹநு:’ – ‘ஹநுமான்’னு கூட சொல்லுவோம் இல்லையா ‘ஹநு’ன்னா தாடை. பெரிய தாடை.
எல்லாம் அறிந்தவர் -அந்தவந்த ஜாதிகளுக்கு உள்ள நடவடிக்கைகளை புரளாமல் அப்படியே நடப்பிக்க வல்லவர்
சிறந்த வாக்கை யுடையவர் -அகண்ட ஐஸ்வர்யம் யுடையவர்
அதற்கு நேரிடும் விரோதியைப் போக்க வல்லவர் -பருத்து உருண்ட திருக் கைகளை யுடையவர்
உயர்ந்த திருத் தோள்களை யுடையவர் -சங்கு போல் மூன்று ரேகைகளை யுடைய கண்டம் யுடையவர்
நீண்டு பருத்த கபோலங்களை யுடையவர் –
————–
மஹோரஸ்கோ மஹேஷ்வாஸோ கூடஜத்ருரரிந்தம꞉ |
ஆஜானு பாஹு꞉ ஸுஶிரா꞉ ஸுல லாட꞉ ஸுவிக்ரம꞉ || 10 |
‘மஹோரஸ்க:’ – ‘விபுலாம்ஸ:’ன்னா பரந்த தோள்கள். ‘மஹோரஸ்க:’ பெரிய மார்பு.
‘மஹேஷ்வாஸ:’ – பெரிய வில்லை வெச்சிண்டிருக்கறவன்
கூடஜத்ரு:’ – நல்ல சதைப்பற்றுள்ள collar bones தோள்களெல்லாம் இருக்கிறவர்
அரிந்தம:’ – எதிரிகளை தபிக்கப் பண்ணுபவர்.
ஆஜாநுபாஹு:’ – ‘ஜாநு’ன்னா முட்டி. முட்டி வரைக்கும் நீண்ட கைகள்.
‘ஸு சிரா:’ – அழகான தலை.
‘ஸுலலாட:’ – பெரிய பரந்த நெற்றி.
‘ஸுவிக்ரம:’ – மிகுந்த பராக்ரமம் கொண்டவர்.
பரந்த மார்பை யுடையவர் -பெரும் வில்லைப் பிடிக்க வல்ல விக்ரஹத்தை யுடையவர்
மறைந்த கழுத்து எலும்புகளை யுடையவர் -சத்ருக்களை போக்குபவர்
முழந்தாள் அளவும் நீண்ட கரங்களை யுடையவர் -பருத்து வட்டமாயுள்ள சிரஸ்ஸை யுடையவர்
அர்த்த சந்திரன் போன்ற நெற்றியை யுடையவர் -அழகிய நடையை யுடையவர்
————–
ஸம꞉ ஸமவிபக்தாங்க꞉ ஸ்னிக்த வர்ண꞉ ப்ரதாபவான் |
பீனவக்ஷா விஶாலாக்ஷோ லக்ஷ்மீவான் ஶுப லக்ஷண꞉ || 11 ||
ஸம:’ரொம்ப குள்ளமும் கிடையாது, ரொம்ப உயரமும் கிடையாது, சமமான உயரம்!
‘ஸமவிப4க்தாங்க3:’ – ! சமமா ‘விப4க்தம்’ – சமமா பிரிக்கப்பட்ட அங்கங்கள்.
‘ஸ்நிக்3த4வர்ண:’ – ரொம்ப குளுமையான ஒரு வர்ணம். கருப்பு அப்படீன்னாக் கூட, ஒரு attractiveவான ஒரு கருப்பு!
‘பிரதாபவாந்’ – ரொம்ப powerful, ரொம்ப சக்திமான்!
‘பீநவக்ஷா:’ – அழகான மார்பு. நல்ல பரந்து விரிந்த, நன்னா அமைந்த ஒரு மார்பு ‘வக்ஷஸ்’.
‘விஶாலாக்ஷ:’ – விசாலமான கண்கள், தாமரை போன்ற கண்கள். பெரிய கண்.
‘லக்ஷ்மீவாந்’ – அவருடைய உறுப்புகள் எல்லாமே மங்களகரமா இருந்தது! .
‘ஶுப4லக்ஷண:’ – லக்ஷ்மீகரமா இருந்ததோட, இந்த ஸாமுத்ரிகா லக்ஷண -சக்கரவர்த்திக்குரிய எல்லா லக்ஷணங்களும் இருந்தது!
அதிக நீட்சியும் அதிக தாழ்ச்சியும் அற்று சமானமான திரு மேனியை யுடையவர்
குறுமை நெடுமை அற்று ஒன்றோடு ஓன்று சேராமல் பிரிந்து காண்கிற அவயவங்களை யுடையவர்
காண ஆவலுறுத்தும் நிறமுடையவர் -உஜ்வலமான விக்ரஹ காந்தியை யுடையவர் –
பருத்த மார்பை யுடையவர் -பரந்த நேத்ரங்களை யுடையவர்
அவயவ சவுந்தர்யம் யுடையவர் -மற்றும் அநேக லக்ஷணங்களை யுடையவர்
————–
தர்மஜ்ஞ꞉ ஸத்ய ஸந்தஶ்ச ப்ரஜானாம் ச ஹிதே ரத꞉ |
யஶஸ்வீ ஜ்ஞான ஸம்பன்ன꞉ ஶுசிர்வஶ்ய꞉ ஸமாதிமான் || 12 ||
தர்மம் அறிந்தவர் -சொன்ன சொல் தவறாதவர் -பிராணிகளுக்கு நன்மை செய்ய ஆவல் உள்ளவர்
சிறந்த கீர்த்தியை யுடையவர் -ஊஹா போஹம் முதலிய விசித்திர ஞான பரி பூர்ணர்
பரி ஸூத்தர் -அடியாருக்கு வசப்பட்டவர் -அவருடைய ஷேமத்தைச் சிந்தை செய்தவர்
‘த4ர்மஜ்ஞ:’ – எல்லா தர்மங்களும் அறிந்தவர்!
‘ஸத்ய ஸந்த4ஶ்ச’ – சத்தியத்தை காப்பாற்றுபவர்!
‘ப்ரஜாநாம் ச ஹிதே ரத:’ – ‘ரஞ்சயதே இதி ராஜ’ –
யஶஸ்வீ ‘ – ரொம்ப புகழ் படைத்தவர்
ஜ்ஞான ஸம்பந்ந:’ – ஞானம் படைத்தவன்.
‘ஶுசி:’ – தூய்மையானவன்.
‘வஶ்ய:’-குணத்துனால வசியம் பண்ணி-அவன் எல்லாருக்கும் வசப்பட்டு-
‘ஸமாதி4மாந்’-தீர்க்க யோஜனை பண்றது
கௌசல்யா தேவியும் காட்டுக்கு கிளம்பும்போது,
யம் பாலயஸி தர்மம் த்வம் த்ருத்யா ச நியமேன ச |
ஸவை ராகவ ஸார்துல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||
—————
ப்ரஜாபதி ஸமஶ் ஶ்ரீமான் தாதா ரிபுனிஷூதன꞉ |
ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய தர்மஸ்ய பரி ரக்ஷிதா || 13 ||
ப்ரஜாபதி ஸம: ஸ்ரீமாந்’ – மங்களங்களை கொண்டவர்களுக்குள் பிரஜாபதியைப் போல இருப்பவர்!
‘தா4தா’ – எல்லா உலகத்தையும் எல்லாருக்கும் கொடுப்பவர், எல்லாரையும் காப்பாற்றுபவர்.
‘ரிபுநிஷூத3ந:’ – எதிரிகளை கண்டிப்பவர், தண்டிப்பவர்.
‘ரக்ஷிதா ஜீவலோகஸ்ய’ – உயிர்குலங்களை எல்லாம் காப்பாற்றுபவர்.
‘த4ர்மஸ்ய பரிரக்ஷிதா
ப்ரஹ்மாவைப் போன்றவர் -அதாவது ப்ரஹ்மாவைப் போலே த்ரி மூர்த்திகளிலே ஒருவராக திரு அவதரித்தவர்
ஸ்ரீ யபதி -அடியாருக்குப் போஷகர் -விரோதியைப் போக்குபவர் –
சத்ரு மித்ரர் பேதமற எல்லாரையும் ரக்ஷிப்பவர் -அனைவரையும் அவர் அவர் தர்மங்களில் திருத்துபவர் –
——————
ரக்ஷிதா ஸ்வஸ்ய தர்மஸ்ய ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா |
வேத வேதாங்க தத்த்வஜ்ஞோ தனுர் வேதே ச நிஷ்டித꞉ || 14 ||
‘ரக்ஷிதா ஸ்வஸ்ய த4ர்மஸ்ய’ – தன்னுடைய தர்மங்களை எல்லாம் காப்பாத்தறார்.
‘ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா’ – தன்னுடைய ஜனங்களையும் காப்பாற்றுபவர்.
“அபராத3 சஹஸ்ர பா4ஜனம் பதிதம் பீ4ம ப4வார்ணவோத4ரே
அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு”
‘அபராத3 சஹஸ்ர பா4ஜனம்’ – நூத்துக் கணக்கான, ஆயிரக் கணக்கான தப்புகள் பண்ணி,
‘பதிதம் பீ4ம ப4வார்ணவோத4ரே’ – இந்த பயங்கரமான பவக் கடல்ல விழுந்திருக்கேன்!
‘அக3திம்‘ – எனக்கு வேற கதி தெரியலை!
‘சரணாக3தம்’ – உன்னை வந்து சரணாகதி பண்றேன்!
‘அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு’ – கிருபையினால உன்னை சேர்ந்தவனா என்னை நினைச்சுக்கோன்னு சொல்றவாளை,
‘ஸ்வஜந:’ – தன் ஜனங்களா நினைச்சு எல்லா விதத்திலேயும் காப்பாற்றுபவர்! – ‘ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா’
‘வேத3வேதா3ங்கதத்த்வஜ்ஞ:’ – வேதம், வேதாந்தங்கள் -அதன் உட்பொருளையும் உணர்ந்தவர்!
‘த4நுர்வேதே3 ச நிஷ்டித:’ – ‘தான் க்ஷத்ரியன்’ங்கிறதுனால அந்த தனுர் வேதத்துல ரொம்ப உறுதியோட இருக்கார்.
தமக்குரிய தர்மங்களை விடாமல் அனுஷ்டிப்பவர் -தம்முடைய ஞாதிகளையும் அஸூயை இன்றி ரக்ஷிப்பவர்
ருக் யஜுஸ் ஸாமம் அதர்வணம் என்கிற நான்கு வேதங்களையும் வியாகரணம் சிஷை சந்தஸ்ஸூ நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்கிற ஆறு
அங்கங்களையும் அறிந்தவர் தனுர் வேதத்தில் பொருந்தி இருப்பவர்
தானும் தர்மத்தை அனுஷ்ட்டித்து பிரர்களையும் தர்மங்களை அனுஷ்ட்டிக்கச் செய்து தர்மங்களை ரக்ஷிப்பவன்
தர்ம ஸம்ஸ்தானம் பண்ணவே திருவவதாரம்
ரக்ஷிதா ஸ்வஸ்ய தர்மஸ்ய–ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதிச யாசதே அபாயம் ஸர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம -என்றது அன்றோ ஸ்வ தர்மம்
இவற்றால் மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல்லரக்கர் உயிர் உண்டமை -யும்
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் உயிராய்த் தோன்றி விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் அன்றோ
சீதைக்காக சின விடையொன் சிலை இறுத்து
திருமணம் புரிந்து மழு வாள் ஏந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு மெல்லியல் தோள் நயந்த
இவ்வாறு பால காண்ட ஸாரத்தைச் சொல்லிற்று ஆயிற்று-
————
ஸர்வ ஶாஸ்த்ரார்த தத்த்வஜ்ஞோ ஸ்ம்ருதிமான் ப்ரதிபானவான் |
ஸர்வ லோக ப்ரிய꞉ ஸாதுரதீனாத்மா விசக்ஷண꞉ || 15 ||
‘ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ:’ – சாஸ்திரங்களுடைய உண்மை பொருளை, தர்ம சூக்ஷ்மங்களை அறிந்தவர்!
‘ஸ்ம்ருதிமாந்’ – நல்ல ஞாபக சக்தி!
‘பிரதிபா4நவாந்’-சரியான நேரத்துல சரியான விஷயம் ஞாபகம்
‘ஸர்வலோகப்ரிய:’ – எல்லா உலகத்துக்கும் பிரியமானவர்!
ஸாது4-ஸாது குணங்கள் நிறைந்தவர்!
நியாய மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ரங்களுடைய உண்மையை அறிந்தவர் அறிந்தத்தை ஒன்றும் மறவாதவர்
அந்தவந்த காலங்களுக்குத் தக்க ஸம் பூர்த்தி என்னும் ஞானத்தை யுடையவர்
ஸகல பிராணிகளுக்கும் பிரியமானவர் -அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுமவர்
தீன ஸ்வ பாவம் இல்லாதவர் -வாக் சாதுர்யம் யுடையவர்
—————
ஸர்வதாபிகத꞉ ஸத்பி꞉ ஸமுத்ர இவ ஸிந்துபி꞉ |
ஆர்ய꞉ ஸர்வ ஸமஶ்சைவ ஸதைக ப்ரிய தர்ஶன꞉ || 16 ||
‘ஸர்வதா3பி4 க3த: ஸத்3பி4: ஸமுத்3ர இவ ஸிந்து4பி4:’ – சமுத்திரத்தை நோக்கி எப்படி நதிகள் போகுமோ
அந்த மாதிரி சாதுக்கள் எப்பவும் ராமர் கிட்ட வருவர்
ஆர்ய:-பிறப்புலேயும் அவரோட நடத்தைலேயும் எல்லாத்துலயுமே ராமர் noble
ஸர்வஸமஶ்சைவ’ – எல்லார் கிட்டயும் சமமா இருப்பார்
ஸதை3கப்ரியத3ர்ஶந:’ – எப்பவும் பார்க்கறத்துக்கு ப்ரியமா இருப்பார்.
வாலி – ‘ப்ரதித: ப்ரியத3ர்ஶந:’‘ரஞ்சனீயஸ்ய விக்ரமை:’ ‘ராம கமலபத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மனோகர:’.
ஆறுகள் தங்களுக்குப் போக்கற்று சமுத்ரத்தைச் சேர்வது போல் எக்காலமும் ஸஜ் ஜனங்களால் சூழப் பட்டவர் -பூஜ்யர் –
ஜாதி முதலிய பேதம் இன்றியே எல்லாராலும் அடையத் தக்கவர்
எக் காலும் பார்த்தாலும் அந்தவந்த காலங்களுக்குப் புதியவராய்த் தோற்றுமவர்
ஆர்ய -அபி கந்தவ்ய -ஸுலப்யாதி குணங்களால் பூஜிக்கத் தக்கவன் -அடையத் தக்கவன் –
எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு இருந்தாலும் பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் -என்னும்படி இருப்பவன்
ஸமுத்ர இவ ஸிந்துபி꞉-நிரதிசய தேஜிஷ்டத்வ-
இத்தால் சத்துக்களை கத்யந்தரம் இல்லாமையும்-பெருமாளுடைய ஸுலப்யமும் சொன்னவாறு ம் காட்டுகிறது
—————-
ஸ ச ஸர்வ குணோபேத꞉ கௌஸல்யானந்த வர்தன꞉ |
ஸமுத்ர இவ காம்பீர்யே தைர்யேண ஹிம வானிவ || 17 ||
ஸ ச ஸர்வகு3ணோபேத:’ – எல்லா குணங்களையும் பொருந்திய அந்த ராமன்,
‘கௌஸல்யா நந்த3வர்த4ந:’ – கௌசல்யையுடைய ஆனந்தத்தை மேலும் மேலும் வளர்ப்பவன்.
‘ஸமுத்3ர இவ கா3ம்பீ4ர்ய’ – கம்பீரத்துல சமுத்திரம் போன்றவன்-சுகதுக்கத்துனால மாற்றம் அடையாம இருக்கறதுக்கு கம்பீரம்னு பேர்.
‘தை4ர்யேண ஹிமவானிவ’ – ஹிமவானைப் போல தைர்யம்!
கௌசல்யையின் திருக் குமாரரான அவர் இப்படி ஸகல ஸத் குண ஸம் பன்னர்
ஸமுத்ரம் தன்னுள்ளே அடங்கின மணி முதலியவைகளைப் பிறருக்குத் தெரியாமல் மறைப்பது போல்
இவர் பிறர் அறியாத மநோ பாவம் உடையவர்
இமய மலை மழைக்கு அசையாமல் இருக்குமா போல் எவ்வித துன்பங்கள் நேரிடினும் சலியர்
ஸ ச கௌஸல்யானந்த வர்தன꞉ |–சகாரம் ஏவகார அர்த்தமாய் அந்நிய யோக வியச்சேதகம் -அதாவது
கௌசல்யா தேவிக்குப் புத்திரனாக அவதரித்த விஷ்ணுவே வேதாந்தங்களில் சொல்லப்பட்ட ஸமஸ்த கல்யாண குணாத்மகன்
தசரத நந்தன என்னாதது புத்ர லாபம் இவளுக்கே –
கௌசல்யா லோக ப்ரத்தாரம் ஸூஷு வேயம் மனஸ்விநீ
தைர்யேண ஹிம வானிவ–தைர்யமாவது சோகத்துக்கு காரணங்கள் இருந்தாலும் சோகியாது இருத்தல்
—————
விஷ்ணுநா ஸத்ருஶோ வீர்யே ஸோமவத் ப்ரிய தர்ஶன꞉ |
காலாக்னி ஸத்ருஶ꞉ க்ரோதே க்ஷமயா ப்ருதிவீ ஸம꞉ || 18 ||
விஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே’ – வீரத்துல விஷ்ணுவைப் போன்றவர்.
‘ஸோமவத்ப்ரிய த3ர்ஶந:’ – பாக்கறதுக்கு சந்திரனைப் போல குளுமையானவன்!
‘காலாக்3நி ஸத்3ருஶ: க்ரோதே4‘-ஆனா கோபம் வந்தா காலாக்னிப் போல கோபம்!
‘க்ஷமயா ப்ருதி2வீ ஸம:’ – பொறுமையில பூமியைப் போன்றவன்-
இவர் விஷ்ணுவின் அர்த்தாம்சம் ஆயினும் விஷ்ணுவைப் போன்ற பராக்ரமம் யுடையவர்
சந்திரனைப் போல் ஸந்தோஷ கரமானவர்
பிரளய காலத்து அக்னியைப் போன்று கோபமுடையவர்
பொறை -பொறுமையில் பூமியை ஒத்தவர்
ராமஸ் ஸஸ்த்ர ப்ருதஸ் அஹம் -ஸ்ரீகீதை
ஸோமவத் ப்ரிய தர்ஶன-த்ருஷ்ட ஏவ ஹி ந சோகம் –-கண்ட போதே சோகம் போவதுடன் சந்த்ர தர்சனம் போல் போக்யமானவன்
காலாக்னி ஸத்ருஶ–ததவஸ்தம் சமிபஸ்த லஷ்மணம் ப்ரேஷ்ய ராகவா பபூவ ஸம் ரப்ததரோ யுகாந்த இவ பாவக -பெருமாள் பிரளய கால அக்னி போல் ஆனார்
———-
தனதேன ஸமஸ்த்யாகே ஸத்யே தர்ம இவாபர꞉ |
‘த4நதே3ந ஸமஸ்த்யாகே3 ‘ – த்யாகத்துல குபேரனைப் போல.
‘ஸத்யே த4ர்ம இவாபர:’ – ஸத்யத்ல அவன் தர்ம ராஜாவைப் போல இருக்கான்.
கொடையிலே குபேரனோடு ஒத்தவர்
ஸத்ய வசனத்தில் -பேசுவதில் -தர்ம தேவதை போன்றவர்
ஸத்யே தர்ம இவாபர꞉–ஸத்ய வசனத்தில் தனக்கு ஒப்பார் மிக்கார் இல்லாத தர்ம தேவதையுடன் ஒப்பாவார்
ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஞ்ஞா –ஆஞ்ஞா ரூபமான தர்மமே யதார்த்த உக்தியில் தனக்கு உபமானமாய் இருக்கை
தர்ம சப்தம் தபஸ்ஸைச் சொல்லி –வேதஸ் தத்வம் தபோ ப்ரஹ்ம -என்றும் வேதத்தையே சொன்னவாறு
வேதோ அகில தர்ம மூலம் அன்றோ
——-
தமேவங்குண ஸம்பன்னம் ராமம் ஸத்ய பராக்ரமம் || 19 ||
‘தம் ஏவம் குண ஸம்பந்ந:’ – இப்பேற்பட்ட எல்லா குணங்களும் நிரம்பினவனான தர்ம ஜ்யேஷ்டனான ராமனை,
‘ஸத்ய பராக்ரமம்’ –வீண் போகாத பராக்கிரமம் கொண்டவன்.
ஜ்யேஷ்டம் ஶ்ரேஷ்ட குணைர் யுக்தம் ப்ரியம் தஶரத꞉ ஸுதம் |
ப்ரக்ருதீனாம் ஹிதைர் யுக்தம் ப்ரக்ருதி ப்ரிய காம்யயா || 20 ||
ஜ்யேஷ்ட2ம்’ – மூத்த பிள்ளை
‘ஶ்ரேஷ்ட2கு3ணைர்யுக்தம்’ – எல்லா ஶ்ரேஷ்ட குணங்களும் நிரம்பின ,
‘ப்ரியம்’ – தனக்கு ரொம்ப ப்ரியமான,
‘ஸுதம்’ – பிள்ளையை,
‘த3ஶரத2:’ – தசரத மஹாராஜா ,
‘ப்ரக்ருதீநாம் ஹிதைர் யுக்தம்’ – ஜனங்களுடைய ஹிதத்தில் எப்பவும் நாட்டமாக இருப்பவனுமான அந்த ராமனை ,
‘ப்ரக்ருதி ப்ரிய காம்யயா’ – அந்த ஜனங்களும் இவன் ராஜா ஆகணும்னு ரொம்ப காத்துண்டு இருக்கா! அப்பேற்பட்ட ராமனை,
யௌவ ராஜ்யேன ஸம்யோக்துமைச் சத் ப்ரீத்யா மஹீபதி꞉ |
இப்படி ஸகல குண ஸம் பன்னராய் அரசாள வல்ல சக்தியை யுடையவராய் நீதி ஸாஸ்த்ரத்தில் சொல்லிய
சிறந்த குணங்களை யுடையவராய்
தனக்குப் பிரியராய் -ஜனங்களின் நன்மைகளில் முயற்சியை யுடையவராய்
ஜ்யேஷ்ட குமாரராகிய ஸ்ரீ ராமனை சக்ரவர்த்தி மஹா ராஜன் மந்திரி புரோகிதர் முதலியவர்களுக்குப்
பிரியத்தை விளைவிக்கைக்காக இளைய வரசனாக்க இச்சயித்தார்
——-
தஸ்யாபிஷேக ஸம்பாரான் த்ருஷ்ட்வா பார்யாऽத கைகயீ || 21 ||
பூர்வம் தத்தவரா தேவீ வரமேனமயாசத |
விவாஸனம் ச ராமஸ்ய பரதஸ் யாபிஷேசனம் || 22 ||
ராமனை இளவரசில் முடி சூட்டுகைக்குச் சேர்ந்த ஸாமக் கிரியைகளை சக்ரவர்த்தி மஹா ராஜன்
இளைய மனைவியான கைகேசி பார்த்துப் பொறை அற்றவளாய் முன் சம்பாசூர யுத்தத்தில்
ராஜன் புகழ்ந்து உனக்கு வேண்டும் போது வேண்டிய இரண்டு வரங்களையும் முடி சூடக் கோடித்த
அக்காலத்தில் தசரதரைக் குறித்துக் கேட்டாள் -அதாவது
ஸ்ரீ ராமன் இம்முடியைத் தவிர்த்துக் காட்டுக்குப் போக வேண்டும்
இம்முடியை என் மகனான பரதனுக்குச் சூட்ட வேண்டும் என்று கேட்டாள்
————
ஸ ஸத்ய வசனாத் ராஜா தர்ம பாஶேன ஸம்யத꞉ |
விவாஸயாமாஸ ஸுதம் ராமம் தஶரத꞉ ப்ரியம் || 23 ||
தசரதன் தர்மமாகிய கயிற்றினால் கட்டுண்டு கைகேயிக்குச் சொன்ன தர்ம வசனம்
தவறாமைக்காகத் தனக்கு பிரியமான ஸ்ரீ ராமனைக் காட்டுக்கு அனுப்பி விட்டார்
ராஜா -ப்ரக்ருதி ரஞ்சகனாய் இருக்குமவன்
ராமோ விக்ரஹவான் தர்ம -ஸாஷாத் தர்மம் பார்க்காமல் –தர்ம பாஶேன ஸம்யத-சாதாரண தர்மம் கைக்கொண்டு -ஸங்கேத்யம் பாரி ஹாஸ்யம்
————-
ஸ ஜகாம வனம் வீர꞉ ப்ரதிஜ்ஞாமனு பாலயன் |
பிதுர் வசன நிர்தேஶாத் கைகேய்யா꞉ ப்ரிய காரணாத் || 24 ||
அந்த ஸ்ரீ ராமன் அரசாள வல்லவராயினும் கைகேயியின் ப்ரீதிக்காகத் தசரதன் இட்ட கட்டளையால்
அவர்கள் முன் தாம் காட்டுக்குப் போவதாகச் சொன்ன சொல் தவறாமல் காட்டுக்குச் சென்றார்
————–
தம் வ்ரஜந்தம் ப்ரியோ ப்ராதா லக்ஷ்மணோ ऽனுஜகாம ஹ |
ஸ்னேஹாத் வினய ஸம்பன்ன꞉ ஸுமித்ரானந்த வர்தன꞉ || 25 ||
ப்ராதரம் தயிதோ ப்ராது꞉ ஸௌப்ராத்ரமனு தர்ஶயன் |
அந்த ஸ்ரீ ராமன் காட்டுக்குப் போகும் போது அவருக்கு இளையவரான லஷ்மணன் விநயத்தோடு கூடியனவராய்
தன் தாயான ஸூ மித்ரையின் சொற்படி நடந்து அவளுக்குப் பிரியத்தை விளைத்தவராய்
ஸ்ரீ ராமனிடம் மிக்க பிரியத்தை உடையவராய் அவரை விட்டு ஒரு நொடியும் பிரிந்து
இருக்க மாட்டாதவராய் அவருடன் கூடவே காட்டுக்குச் சென்றார்
தம் வ்ரஜந்தம்-பரத்வ ஸுலப்யங்களுக்கு அனுகுணமான ஸர்வ சமாஸ்ரயணம்
அன்றிக்கே ஸித்த சாதன நிஷ்டர்கள் இளைய பெருமாளை போல் கைங்கர்யம் செய்ய வேண்டியதை ஸூ சிப்பிக்கிறது
ப்ராதா ஸ்வ மூர்த்திர் ஆத்மநா -சரீர பூதன்
விநயம் -கைங்கர்ய ரூப ஆசாரம் -சேஷத்வ ஞானம்
ஸூ மித்ர ஆனந்த வர்த்தநா -ஸ்ருஷ்டத்வம் வன வாஸாயா
ராமம் தசரதன் வித்தி மாம் வித்தி ஜநகாத்மஜம்
ந ச அஹம் அபி ராகவ
ந ச தேந விநா நித்ரம்
பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூ ஸ் நிக்த
சென்றால் குடையாம்
யேந யேந தாத்தா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி
————–
ராமஸ்ய தயிதா பார்யா நித்யம் ப்ராண ஸமாஹிதா || 26 ||
ஜனகஸ்ய குலே ஜாதா தேவ மாயேவ நிர்மிதா |
ஸர்வ லக்ஷண ஸம்பன்னா நாரீணாமுத்தமா வதூ꞉ || 27 ||
ஸீதாऽப்யனுகதா ராமம் ஶஶினம் ரோஹிணீ யதா |
ஸ்ரீ ராமனுக்குப் பிரியமான பார்யையாய் அவருக்குப் பிராணன் போன்றவளாய் ஸகலமான
உத்தம ஸ்த்ரீ லக்ஷணங்களோடே கூடினவளாய் -பெண்களில் சிறந்தவளாய்
ஜனங்களின் நன்மையில் முயன்றவளாய் பரிசுத்தமான ஜனக குலத்தில் விஷ்ணு சக்தியைப் போல்
அதி விசித்திர ரூப லாவண்யங்களை யுடையவளாய் திரு அவதரித்தவளான ஸீதா தேவியும்
சந்திரனைப் பின் தொடர்ந்த ரோஹிணியைப் போலே ஸ்ரீ ராமனைப் பின் தொடர்ந்து காட்டுக்குச் சென்றாள் –
சாதன தசையில் புருஷகாரமாகவும்
பல தசையில் பிராபியை யாகவும் கைங்கர்ய வர்த்தகையாகவும்
இருக்கும் நித்ய யோகத்தை இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்
ந ஜீவேயம் க்ஷணம் அபி —
மித்ர ஓவ்பயிகம் கர்த்தும் -ஹித பரையாயும்
ஜனகஸ்ய குலே ஜாதா–ஆசார ப்ரதான குலப்பிறப்பு
தேவ மாயேவ நிர்மிதா-மோஹிக்க நிர்மிக்கப்பட்ட விஷ்ணு மாயை போல்வாள் -விஷ்ணுவின் ஆச்சர்ய சக்தியானவள்
ஸீதா -அயோனித்வம் -பரமபதம் போல் பூர்ணை -ஆத்ம குண பூர்த்தி
ஶஶினம் ரோஹிணீ யதா-அழகு இல்லாமல் குரூபியாய் இருந்தாலும் விட மாட்டாத பாதிவிரதம் -அநஸூயை முன் ஸ்வரூப க்ருத தாஸ்யை என்றாளே
புருஷோத்தமான பெருமாளுக்கு ஆன்ரு சம்சயாதி குண பூர்த்தி போல்
இவளுக்கும் ராமஸ்ய தயிதா பார்யா-இத்யாதிஷட் குண பூர்த்தி
ஸீதாபி ராமம் அநு கதா
யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்க நிரயோ யஸ் த்வயா விநா
மன்னன் ராமன் பின் வைதேவி என்று உரைக்கும் அண்ணா நடை வணங்கு நடந்திலளே
தனு மத்யமா -ஸூ மத்யமா -மின்னின் நுண் இடை மடக்கொடி
அஸீதே க்ஷிணா
திவளும் வெண் மதி போல் திருமுகம் –குவளை யம் கண்ணி
—————–
பௌரைரனுகதோ தூரம் பித்ரா தஶரதேன ச || 28 ||
ஶ்ருங்கி பேர புரே ஸூதம் கங்கா கூலே வ்யஸர்ஜயத் |
குஹமாஸாத்ய தர்மாத்மா நிஷாதாதிபதிம் ப்ரியம் || 29 ||
தசரதரும் பட்டணத்தில் உள்ள ஜனங்களும் ஸ்ரீ ராமனைச் சிறிது தூரம் பின் தொடர்ந்து சென்றார்கள்
ஸ்ரீ ராகவன் ஸ்ருங்கி பேரம் என்கிற ஊரைக் கிட்டி அவ்வூர் அருகில் உள்ள கங்கைக் கரையில்
அது வரையில் தன்னைத் தேர் மேல் ஏற்றிக் கொண்டு வந்த ஸூமந்த்ரனையும் விட்டு விட்டார்
அந்தக் கங்கைக் கரையில் ஸ்ரீ ராகவன் வேட ஜாதிக்கு அரசனாய் தன்னிடத்தில் நேசம் உள்ளவனான குகன் என்பவனோடு நேசித்தார்
இவ்விடத்தில் தர்ம ஸப்தம் சீல பரமாகக் கடவது
————-
குஹேன ஸஹிதோ ராம꞉ லக்ஷ்மணேன ச ஸீதயா |
ஸ்ரீ ராகவன் ஸீதையோடும் லஷ்மணனோடும் பொருந்தி இருப்பது போலே நீச ஜாதியாய் அறிவற்றவனாய்
வஞ்சனை ஸ்வ பாவம் உள்ளவனா யினும் தன் பக்தன் என்று குகனை அபிமானித்து அவனுடன் பொருந்தி இருந்தார்
பக்தி யுடைக் குகன்-ராமஸ்ய ஆத்ம சஹா -இளைய பெருமாளையும் அதிசங்கை பண்ணும்படி பொங்கும் பரிவு கொண்டவன்
———–
தே வனேன வனம் கத்வா நதீஸ்தீர்த்வா பஹூதகா꞉ || 30 ||
சித்ரகூட மனுப்ராப்ய பரத்வாஜஸ்ய ஶாஸனாத் |
பிறகு சிறிது தூரம் சென்று குகனையும் விட்டுவிட்டு அம்மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு
காட்டு வழியிலே அதிக ஜலமுள்ள அநேக ஆறுகளைத் தாண்டிச் சென்று பரத்வாஜ மஹா முனிவருடைய
நியமனப்படியே சித்ர கூடம் என்னும் மலையை அடைந்தார்கள் –
————
ரம்யமா வஸதம் க்ருத்வா ரமமாணா வனே த்ரய꞉ || 31 ||
தேவ கந்தர்வ ஸங்காஶாஸ் தத்ர தே ந்யவஸன் ஸுகம் |
தேவர்களோடும் கந்தர்வர்களோடும் ஒத்த அம்மூவரும் அந்தச் சித்ர கூட மலையில் அழகிய
ஓர் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு ப்ரீதியோடு கூடினவர்களாய் அங்கு ஸூ கமாக வாஸம் செய்தார்கள்
————
சித்ரகூடம் கதே ராமே புத்ர ஶோகா துரஸ் ததா || 32 ||
ராஜா தஶரத꞉ ஸ்வர்கம் ஜகாம விலபன் ஸுதம் |
ஸ்ரீ ராகவன் சித்ர கூடம் சேர்ந்த அளவில் தசரத மஹா ராஜர் புத்ர சோகத்தினால் வருத்த முற்றவனாய்
பிள்ளையை நினைந்து அழுது கொண்டே சுவர்க்கத்தை அடைந்தார்
—————
ம்ருதே து தஸ்மின் பரதோ வஸிஷ்ட ப்ரமுகைர் த்விஜை꞉ || 33 ||
நியுஜ்ய மானோ ராஜ்யாய நைச்சத் ராஜ்யம் மஹா பல꞉ |
தசரத மஹா ராஜன் ஸ்வர்க்க லோகத்தை அடைந்த பின் அவனுக்கு மற்ற ஒரு பிள்ளையாகிய பரதன்
வசிஷ்டர் முதலிய பெரியோர்கள் இராச்சியத்தில் பட்டாபிஷேகம் பண்ணிக் கொள்ளும்படி நியமித்தாலும்
தாம் இராச்சியத்தை ஆள ஸமர்த்தராய் இருந்தும் அவர் அந்த ராஜ்யத்தை விரும்பவில்லை
————-
ஸ ஜகாம வனம் வீரோ ராம பாத ப்ரஸாதக
அந்த பரதன் பூஜ்யராகிய ஸ்ரீ ராகவனைப் ப்ரஸன்னராக்கி மீட்டுக் கொண்டு வருகைக்காக
சதுரங்க சேனையுடன் கூட அவன் இருக்கும் காட்டைக் குறித்துச் சென்றார்
——–
கத்வா து ஸ மஹாத்மானம் ராமம் ஸத்ய பராக்ரமம் |
அயாசத் ப்ராதரம் ராமம் ஆர்ய பாவ புரஸ்க்ருத꞉ || 35 ||
பரதன் காட்டுக்குச் சென்று எல்லாரும் கொண்டாடும் படியான நல் ஒழுக்கம் யுடையராய்
வன வாஸத்தினால் மனத்தில் கலக்கம் அற்றவராய் சொன்ன சொல் தவறாதவராய்
தன்னுடைய தமையனான ஸ்ரீ ராகவனிடம் தனக்கு இஷ்டமானதைப் பிரார்த்தித்தார்
————
த்வமேவ ராஜா தர்மஜ்ஞ இதி ராமம் வசோ ऽப்ரவீத் |
அதாவது ஸ்ரீ ராகவனே நீர் தசரத மஹா ராஜனுக்கு மூத்த பிள்ளை யாகையாலே
நீரே இவ் ராஜ்யத்தை ஆள வேண்டும் என்று சொன்னார்
——–
ராமோऽபி பரமோதார꞉ ஸுமுகஸ் ஸுமஹாயஶா꞉ || 36 ||
ஸ்ரீ ராகவன் அடியார்கள் இரந்ததை எல்லாம் கொடுக்க வல்ல ஸ்வ பாவம் யுடையவராயினும்
அடியார்கள் இரப்பைக் கண்டு உகக்குமவராயினும்
———–
நசைச் சத் பிதுரா தேஶாத் ராஜ்யம் ராமோ மஹாபல꞉ |
பாதுகே சாஸ்ய ராஜ்யாய ந்யாஸம் தத்த்வா புன꞉ புன꞉ || 37 ||
நிவர்தயாமாஸ ததோ பரதம் பரதாக்ரஜ꞉ |
ஸ்ரீ ராகவன் ராஜ்யத்தில் தனக்குப் பதிலாகத் தன்னுடைய பாதுகைகளை வைத்துக் கொள்ளச் சொல்லிக் கொடுத்து
தன்னை விட்டுப் போக மாட்டாமல் அங்கே நிற்கிற பரதனை அநேக சமாதானங்களைச் சொல்லி அயோத்யைக்கு அனுப்பி விட்டார்
———–
ஸ காம மனவாப் யைவ ராமபாதா வுபஸ் ப்ருஶன் || 38 ||
நந்திக்ராமே ऽகரோத் ராஜ்யம் ராமாகமனகாங்க்ஷயா |
அந்த பரதன் தன் கோரிக்கையை அடையாமல் ஸ்ரீ ராமனுடைய பாதுகைகளை ப்ரதிதினம் சேவித்துக் கொண்டு
ஸ்ரீ ராகவன் வரும் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு அயோத்யைக்கு அருகில் இருக்கிற
நந்திக் கிராமத்தில் இருந்து ராஜ்யத்தை நடத்தி வந்தார்
————-
கதே து பரதே ஶ்ரீமான் ஸத்ய ஸந்தோ ஜிதேந்த்ரிய꞉ || 39 ||
ராமஸ்து புனராலக்ஷ்ய நாகரஸ்ய ஜனஸ்ய ச |
தத்ராகமனமேகாக்ரோ தண்டகான் ப்ரவிவேஶ ஹ || 40 ||
பரதன் அயோத்யைக்குப் போன பின்பு பரதன் இவ்வளவு பிரார்த்தித்தும் தான் செய்த ப்ரதிஜ்ஜையை விடாமலும்
ராஜ்ய ஸூ கத்தில் மனம் சலியாமல் இருக்கிற பெரும் புகழை யுடையரான ஸ்ரீ ராகவன்
இந்த சித்ர கூடத்தில் பட்டணத்தில் உள்ள ஜனங்கள் வந்தார்கள்
ஆகையால் இனி இங்கு இருக்கக் கூடாது என்று ஆலோசித்து பிதாவின் சொல்லைப் பரிபாலனம்
செய்வதற்காக தண்டகாவனத்தில் பிரவேசித்தார்
————-
ப்ரவிஶ்ய து மஹாரண்யம் ராமோ ராஜீவலோசன꞉ |
விராதம் ராக்ஷஸம் ஹத்வா ஶரபங்கம் ததர்ஶ ஹ || 41 ||
ஸுதீக்ஷ்ணம் சாப்யகஸ்த்யம் ச அகஸ்த்ய ப்ராதரம் ததா |
செந் தாமரைக் கண்ணனான ஸ்ரீ ராகவன் அப் பெரும் காட்டில் புகுந்து அங்குள்ள விநோதங்களைப் பார்த்துக் களித்தவராய்
போகும் வழியில் வந்த விராதனன் என்னும் அசூரனைக் கொன்று அப்புறம் போய் சரபங்க மஹா முனியையும்
ஸூ தீஷணரையும் அகஸ்திய மஹா முனிவரையும் அவர் தம்பியாகிய ஸூ தர்சனரையும் பார்த்தார் –
———————
அகஸ்த்ய வசனாச்சைவ ஜக்ராஹைந்த்ரம் ஶராஸனம் || 42 ||
கட்கம் ச பரம ப்ரீதஸ்தூணீ சாக்ஷயஸாயகௌ |
அகஸ்தியருடைய நியமனத்தின் படி அவருடைய ஆஸ்ரமத்தில் வைத்து இருந்த இந்த்ர தனுஸ்ஸையும்
கத்தியையும் பாணங்களின் ஓய்வற்று எப்போதும் நிறைந்து இருக்கும் இரண்டு
அம்புறாத் துணிகளையும் ப்ரீதியுடன் எடுத்துக் கொண்டார்
————–
வஸதஸ் தஸ்ய ராமஸ்ய வனே வனசரை꞉ ஸஹ || 43 ||
ருஷயோ ऽப்யாகமன் ஸர்வே வதாயாஸுர ரக்ஷஸாம் |
ஸ்ரீ ராகவன் அந்த சரபங்க ஆஸ்ரமத்தில் இருக்கும் போது ருஷிகள் அசூர ராக்ஷஸர்களை
வதம் செய்ய வேண்டும் என்று இவரிடம் பிராத்திக்கைக்காக அங்கு வந்தார்கள்
—————
ஸ தேஷாம் ப்ரதி ஸூஸ்ராவ ராஜஸா நாம் ததா வனே
ஸ்ரீ ராகவன் அவர்கள் பிரார்த்தித்த படியே அரக்கற்களைக் கொல்லுகிறேன் என்று ப்ரதிஜ்ஜை செய்தார்
————
ப்ரதிஜ்ஞாதஶ்ச ராமேண வதஸ் ஸம்யதி ரக்ஷஸாம் |
ருஷீணாமக்னி கல்பானாம் தண்ட காரண்ய வாஸினாம் || 45 ||
அதாவது அக்னியோடு ஒத்த தேஜஸ்ஸை யுடையவராய் தண்டகவனத்தில் வாஸம் செய்கிற
ருஷிகளைக் குறித்து நான் யுத்தத்தில் ராக்ஷஸர்களைக் கொல்லுகிறேன் என்றார்
————-
தேன தத்ரைவ வஸதா ஜனஸ்தானனி வாஸினீ |
விரூபிதா ஶூர்பணகா ராக்ஷஸீ காம ரூபிணீ || 46 ||
ஸ்ரீ ராகவன் அவ் வனத்தில் வாஸம் செய்து கொண்டு இருக்கும் போது இஷ்டம் உள்ள வடிவை எடுக்க வல்லளாய்
ஜனஸ்தானத்தில் வாஸம் செய்கிற சூர்ப்பணகை என்கிற ராக்ஷஸியின் மூக்கை அறுத்து விட்டார்
————-
தத꞉ ஶூர்பணகா வாக்யாத் உத்யுக்தான் ஸர்வ ராக்ஷஸான் |
கரம் த்ரிஶிரஸம் சைவ தூஷணம் சைவ ராக்ஷஸம் || 47 ||
நிஜகான ரணே ராமஸ் தேஷாம் சைவ பதானுகான் |
பிறகு சூர்ப்பணகையின் சொல்லைக் கேட்டு சண்டைக்கு வந்த அரக்கர்களையும் அவர்களுக்குத் தலைவர்களான
கரன் தூஷணன் த்ரி சிரஸ்ஸூ என்பவர்களையும் அவர்களுடைய சேனையையும் ஸ்ரீ ராமன் யுத்தத்தில் கொன்றார்
——————-
வனே தஸ்மின்னிவஸதா ஜனஸ்தான நிவாஸினாம் || 48 ||
ரக்ஷஸாம் நிஹதான்யாஸன் ஸஹஸ்ராணி சதுர்தஶ |
அவ் வனத்தில் வாஸம் செய்கிற ஸ்ரீ ராமன் அந்த யுத்தத்தில் ஜனஸ்தானத்தில் இருக்கிற
பதினாறாயிரம் ராக்ஷஸர்களைக் கொன்றார்
————–
ததோ ஜ்ஞாதி வதம் ஶ்ருத்வா ராவண꞉ க்ரோத மூர்சித꞉ || 49 ||
ஸஹாயம் வரயாமாஸ மாரீசம் நாம ராக்ஷஸம் |
பின்பு ராவணன் கர தூஷணர்கள் மாண்டு போனதை சூர்ப்பணகை அறிவிக்கக் கேட்டு
வெகு சினம் உற்றவனாய் ஸ்ரீ ராமனுக்குத் தீங்கு விளைக்கக்காக மாரீசன் என்பவனைத்
தனக்குத் துணையாக வேண்டிக் கொண்டான்
—————–
வார்யமாண꞉ ஸுபஹுஶோ மாரீசேன ஸ ராவண꞉ || 50 ||
ந விரோதோ பலவதா க்ஷமோ ராவண தேன தே |
அந்த மாரீசன் ஓ இராவணா அந்த ஸ்ரீ ராமனுடைய பராக்கிரமத்தை ஜனஸ்தான யுத்தத்தில் கேட்டாய் அன்றோ
இனி அப்பெரும் மிடுக்கரோடு எதிர்ப்பது உனக்கு உரியது அன்று என்று சொல்லி
ராவணனைப் பலவிதமாகத் தடுத்தான்
—————
அனாத்ருத்ய து தத் வாக்யம் ராவண꞉ கால சோதித꞉ || 51 ||
ஜகாம ஸஹ மாரீச꞉ தஸ் யாஶ்ரம பதம் ததா |
இயமனாலே உண்ட ராவணன் அம்மாரீச வசனத்தை சட்டை செய்யாமலே ஸ்ரீ ராகவன் வீற்று இருக்கும்
ஆஸ்ரமத்துக்கு மாரீசனைக் கூட்டிக் கொண்டு போனான்
—————-
தேன மாயாவினா தூரமபவாஹ்ய ந்ருபாத்மஜௌ || 52 ||
ஜஹார பார்யாம் ராமஸ்ய க்ருத்ரம் ஹத்வா ஜடாயுஷம் |
அங்கு அந்த மாரீசன் விசித்திரமான பொன் மான் உருவம் கொண்ட தன்னிடத்தில் ஆவலுற்றுப் பிடிக்க முயன்ற
ஸ்ரீ ராகவனையும் லஷ்மணனையும் கைக்கு அகப்படாமல் வெகு தூரம் இழுத்துக் கொண்டு போனான்
அந்த ராஜ குமாரர்கள் இல்லாத காலத்தில் இராவணன் புகுந்து ஸீதா தேவியை எடுத்துக் கொண்டு போகையில்
அவனிடத்தில் பரிந்து வந்த ஜடாயுவையும் மடித்து விட்டு அவளைத் தன்னிலங்கைக்கு எடுத்துக் கொண்டு போனான்
——————–
க்ருத்ரம் ச நிஹதம் த்ருஷ்ட்வா ஹ்ருதாம் ஶ்ருத்வா ச மைதிலீம் || 53 ||
ராகவ꞉ ஶோக ஸந்தப்தோ விலலாபாகுலேந்த்ரிய꞉ |
பிறகு இராகவன் வந்து சீதையைக் காணாமல் தேடிக் கொண்டு போகையில் குற்றுயிராய்
அடிபட்டு விழுந்து இருக்கிற ஜடாயுவைப் பார்த்து சீதையை ராவணன் எடுத்துக் கொண்டு போனதாக அவர்
சொல்லக் கேட்டு மிக்க வருத்த முற்றவராய்த் தயங்கி பிரலாபித்தார்
—————-
ததஸ்தேனைவ ஶோகேன க்ருத்ரம் தக்த்வா ஜடாயுஷம் || 54 ||
மார்கமாணோ வனே ஸீதாம் ராக்ஷஸம் ஸந்ததர்ஶ ஹ |
கபந்தம் நாம ரூபேண விக்ருதம் கோரதர்ஶனம் || 55 ||
பிறகு ஜடாயுவுக்கு நேர்ந்த ஆபத்தை நினைத்துப் பெரும் துன்பமுற்ற இராகவன் ஜடாயுவைத் தஹனம் செய்துவிட்டு
சீதையைத் தேடிக்கொண்டு போகையில் வழியில் பயங்கரமான உருவம் கொண்ட கபந்தன் என்ற அரக்கனைப் பார்த்தார்
சத்யேன லோகான் ஜயதி —
———————
தம் நிஹத்ய மஹா பாஹு꞉ ததாஹ ஸ்வர்கதஶ்ச ஸ꞉ |
ஸ சாஸ்ய கதயாமாஸ ஶபரீம் தர்ம சாரிணீம் || 56 ||
ஶ்ரமணீம் தர்மனிபுணாமபிகச்சேதி ராகவ |
ஸோऽப்ய கச்சன் மஹாதேஜா꞉ ஶபரீம் ஶத்ரு ஸூதன꞉ || 57 ||
ஶபர்யா பூஜித꞉ ஸம்யக் ராமோ தஶரதாத்மஜ꞉ |
இராகவன் அந்தக் கபந்தனைக் கொன்று தஹனம் செய்தார் அவன் ஸ்வர்க்கம் சென்றான்
அந்த கபந்தன் ஸ்வர்க்கத்துக்குப் போகும் போது -ஓ ராகவன் இவ்வழியே சென்றால் அங்கு நல் ஒழுக்கம்
உடையவளாய் ஸந்யாஸ ஆஸ்ரமம் உள்ள ஒரு வேட்டுவ ஸ்த்ரீ இருக்கிறாள்
அவள் இருக்கும் இடத்துக்கு நீர் செல்லும் என்று சொன்னான்
————
பம்பா தீரே ஹநுமதா ஸங்கதோ வானரேண ஹ
இராகவன் அங்கு இருந்து சென்று பம்பை என்னும் ஸரஸ்ஸின் கரையில் திருவடியுடன் சேர்ந்தார்
ஹநுமதா என்ற பதத்தால் நமக்குத் புகலிடம் எது என்று வருந்தா நின்ற நிலையில்
விஜய ஸூசக வ்ரணத்தால் அடையாகமிட்ட திருமுகம் யுடையவன் சேர்க்கை யதேர்ச்சையாக ஏற்பட்டதே
தளர்ந்து ஆவாரார் துணை என்று இருக்க வெற்றித் தழும்பு சுமந்த ஆண் பிள்ளையுடன் சேர்க்கை கிட்டுவதே
செவ்வியான் ஒருவனுடன் கூடப்பெறுவதே
விக்ராந்தஸ் த்வம் சமர்த்தஸ் தவம் ப்ராஞ்ஞஸ் தவம் வானர உத்தம -என்று பிராட்டியும் கொண்டாடும்படியானவன்
பம்பா தீரே ஹநுமதா ஸங்கதோ வானரேண ஹ-வழி பறியுண்ட இடத்தில் தாய் முகம் காணப்பெறுவதே
————–
ஹனுமத் வசனாச்சைவ ஸுக்ரீவேண ஸமாகத꞉ஹ|
அந்த திருவடி சொற்படி ராகவன் ஸூ க்ரீவனுடன் நேசித்தார்
இவர் வார்த்தை கேட்ட அநந்தரமே இவர் அபீஷ்டம் ஸித்தித்த படி
ஸஹாய சம்பத் உண்டாகப் பெற்றதே –ஹ -ஹ்ருஷ்டராகிறார் ருஷி
———–
ஸுக்ரீவாய ச தத் ஸர்வம் ஶம்ஸத் ராமோ மஹா பல꞉ || 59 ||
ஆதிதஸ் தத்யதா வ்ருத்தம் ஸீதயாஶ்ச விஶேஷத꞉ |
பலசாலியாகிய ராகவன் தான் பிறந்தது முதல் நடந்தவற்றை ஸூ க்ரீவனுக்குச் சொல்லி
ஸீதா தேவியின் விஷயமாக நடந்தவற்றை பரக்கச் சொன்னார்
————–
ஸுக்ரீவஶ் சாபி தத் ஸர்வம் ஶ்ருத்வா ராமஸ்ய வானர꞉ || 60 ||
சகார ஸக்யம் ராமேண ப்ரீதஶ் சைவாக்னி ஸாக்ஷிகம் |
ஸூக்ரீவனும் ஸ்ரீ ராமனுடைய வ்ருத்தாந்தங்களை எல்லாம் கேட்டு மகிழ்ச்சி உற்றவனாக
அக்னி முன்பாக அவருடன் ஸ்நேஹம் செய்தான்
ஸுக்ரீவஶ்–ராமேண ப்ரீதஶ்–ஏக கண்டராய் வ்ருத்த கீர்தநம் செய்தனர்
—————–
ததோ வானர ராஜேன வைரானு கதனம் ப்ரதி || 61 ||
ராமாயா வேதிதம் ஸர்வம் ப்ரணயாத்து꞉கிதேன ச |
பிறகு வானர ராஜனான ஸூக்ரீவன் வாலிக்கும் தனக்கும் நேர்ந்த விரோதத்தை வ்ருத்தாந்தம் கேட்ட ஸ்ரீ ராகவனுக்கு
விஸ்வாஸத்தால் கண்ணீர் விட்டுக் கொண்டே நடந்தவற்றைச் சொன்னான்
—————
ப்ரதிஜ்ஞாதம் ச ராமேண ததா வாலி வதம் ப்ரதி || 62 ||
வாலினஶ்ச பலம் தத்ர கதயாமாஸ வானர꞉ |
அப்போது ஸ்ரீ ராகவன் தான் வாலியைக் கொல்வதாக ப்ரதிஜ்ஜை பண்ணினார்
அவருக்கு ஸூக்ரீவன் வாலியினுடைய பலத்தை எல்லாம் அறிவித்தான்
—————–
ஸுக்ரீவ꞉ ஶங்கிதஶ் சாஸீன்னித்யம் வீர்யேண ராகவே || 63 ||
இந்த இராகவன் வாலியோடு ஒத்த பலம் உள்ளவரா அன்றோ என்று ஸூக்ரீவன் ஸம்சயித்தான்
————–
ராகவ꞉ ப்ரத்யயார்தம் து துந்துபே꞉ காயமுத்தமம் |
தர்ஶயாமாஸ ஸுக்ரீவோ மஹா பர்வத ஸன்னிபம் || 64 ||
இராகவனுடைய பலத்தை அறிகைக்காக ஸூ க்ரீவன் அங்கு பெரு மலை போல் விழுந்து இருந்த
துந்துபி யினுடைய வலிய சரீரத்தைக் காட்டி இதை வாலி தனது காலின் பெரு விரலினால்
தூக்கி எறிவான் என்றான் -வலிய என்றது ஜீவன் அற்ற எலும்புக் கூடு
—————–
உத்ஸ்மயித்வா மஹா பாஹு꞉ ப்ரேக்ஷ்ய சாஸ்தி மஹா பல꞉ |
பாதாங்குஷ்டேன சிக்ஷேப ஸம்பூர்ணம் தஶ யோஜனம் || 65 ||
மஹா பலசாலியான இராகவன் அவ்வெலும்பைப் பார்த்து இது எவ்வளவு என்று அலஷ்யமாகக்
காலின் பெரு விரலினால் எடுத்துப் பத்து யோஜனைக்கு அப்புரம் போய் விழும்படி எறிந்தார்
வாலி காலால் எறிந்தான்
பெருமாள் பாத அங்குஷ்டத்தால் எறிந்தார்
வாலி 200 வில் தூரம் எற்றினான்
பெருமாள் 10 யோஜனை தூரம் எற்றினார்
————-
பிபேத ச புன꞉ ஸாலான் ஸப்த ஏகேன மஹேஷுணா |
கிரிம் ரஸா தலம் சைவ ஜனயன் ப்ரத்யயம் ததா || 66 ||
வெகு நாளாய் உலர்ந்து கிடக்கிற அவ்வரக்கனுடைய காயத்தைத் தூக்கி எறிந்த மாத்திரத்தில்
இவர் வாலியைக் கொல்ல வல்லவரோ என்று ஸூக்ரீவன் மனத்தில் சங்கித்தபடியை அறிந்து
இன்னும் அவனுக்கு நம்பிக்கை உண்டாக்குகைக்காக ஒரு பெரிய பாணத்தினால் ஏழு மராமரங்களை எய்தார்
அந்தப் பாணம் அந்த மரங்களையும் அருகில் இருந்த மலையையும் பிளந்து பூமியுள்ளே சென்று
கீழ் லோகங்களில் ஆறாவது ஆகிற ரஸா தலம் என்கிற லோகத்தையும் பிளந்து விட்டது –
ஏகேன மஹேஷுணா–கைக்கு எட்டிய தோர் அம்பாலே
—————
தத ப்ரீத மநாஸ் தேந விஸ்வஸ் தஸ் ஸ மஹா கபி
கிஷ்கிந்தாம் ராம ஸஹிதோ ஜகாம ச குஹாம் ததா || 67 ||
அதைக் கண்ட ஸூக்ரீவன் இவர் வாலியைக் கொல்ல வல்ல பலசாலி தான் என்று நம்பிக் களிப்புற்றவனாய்
அப்பொழுது இராகவனைக் கூட்டிக் கொண்டு வாலியைக் கொல்லுகைக்காக
மலைக்குள் இருக்கிற கிஷ்கிந்தைக்குப் போனான்
————
ததோऽகர்ஜத்தரிவர꞉ ஸுக்ரீவோ ஹேம பிங்கள꞉ |
தேன நாதேன மஹதா நிர்ஜகாம ஹரீஶ்வர꞉ || 68 ||
பிறகு ஸூ க்ரீவன் ஸந்தோஷத்தினால் புகழ் பெற்று இனி நாம் வானர அதிபதி யாவோம்
என்று நிச்சயித்துக் கொண்டு பெரும் கூச்சல் இட்டான்
அக் கூக் குரலைக் கேட்டு வாலி கிஷ்கிந்தையில் நின்றும் வெளிக் கிளம்பினான்
————-
அனுமான்ய ததா தாராம் ஸுக்ரீவேண ஸமாகத꞉ |
நிஜகான ச தத்ரைனம் ஶரேணைகேன ராகவ꞉ || 69 ||
இப்பொழுது நீர் யுத்தத்திற்கு போவது உசிதம் அன்று என்று தகைந்த தனது மனைவியான தாரையை
நல் வார்த்தை சொல்லிச் சமாதானப் படுத்தித் தான் வந்து ஸூ க்ரீவனுடன் யுத்தம் செய்தான்
அப்போர் களத்தில் ஸ்ரீ ராகவன் ஓர் அம்பினால் வாலியை முடித்து விட்டார்
—————-
தத꞉ ஸுக்ரீவ வசனாத் ஹத்வா வாலினமாஹவே |
ஸுக்ரீவமேவ தத் ராஜ்யே ராகவ꞉ ப்ரத்யபாதயத் || 70 ||
ஸூ க்ரீவன் கேட்டுக் கொண்ட படியே ஸ்ரீ ராகவன் வாலியை யுத்தத்தில் முடித்து
அந்த ராஜ்யத்தையும் கொடுத்து ஸூ க்ரீவனுக்கு முடி சூட்டினார்
—————
ஸ ச ஸர்வான் ஸமானீய வானரான் வானரர்ஷப꞉ |
திஶ꞉ ப்ரஸ்தாப யாமாஸ தித்ருக்ஷுர் ஜனகாத்மஜாம் || 71 ||
வானர அதிபதியாகிய அந்த ஸூ க்ரீவன் எல்லா வானரர்களையும் திரட்டிக் கொண்டு வந்து
ஸ்ரீ சீதா தேவியைத் தேடிப்பிடிக்கைக்காக எல்லாத் திக்குகளிலும் அனுப்பினான்
—————–
ததோ க்ருத்ரஸ்ய வசனாத் ஸம்பாதேர் ஹனுமான் பலீ |
ஶதயோஜன விஸ்தீர்ணம் புப்லுவே லவணார்ணவம் || 72 ||
பின்பு தென் திக்கை நோக்கிச் சென்ற திருவடி ஸ்ரீ சீதாப் பிராட்டி இலங்கையில் இருப்பதை ஸம்பாதி சொல்லக் கேட்டு
அங்கு போகக் கருதி வழியில் நூறு காதம் பரந்து இருந்த கடலைத் தாண்டினார்
————-
தத்ர லங்காம் ஸமாஸாத்ய புரீம் ராவண பாலிதாம் |
ததர்ஶ ஸீதாம் த்யாயந்தீம் அஶோக வனிகாம் கதாம் || 73 ||
அக் கரையில் ராவணன் பரிபாலித்து வருகிற இலங்கா புரியை அடைந்து அங்கு
அசோகா வனத்தில் எப்போதும் ஸ்ரீ ராமனையே த்யானித்துக் கொண்டு இருக்கிற
ஸ்ரீ ஸீதா தேவியைப் பார்த்தார்
—————-
நிவேதயித்வாऽபிஜ்ஞானம் ப்ரவ்ருத்திம் ச நிவேத்ய ச |
ஸமாஶ்வாஸ்ய ச வைதேஹீம் மர்தயாமாஸ தோரணம் || 74 ||
ஸ்ரீ சீதா தேவிக்கு ஸ்ரீ ராம நாமாங்கிதமான கணையாழியைக் கொடுத்து
ஸ்ரீ ராகவன் சீதாதேவியைப் பெறுகைக்கு செய்யும் முயற்சியையும் அறிவித்து
சமாதானம் சொல்லி பிறகு இலங்கையின் கோட்டை வாசலை இடித்தான்
————-
பஞ்ச ஸேனாக்ரகான் ஹத்வா ஸப்த மந்த்ரி ஸுதானபி |
ஶூரமக்ஷம் ச நிஷ்பிஷ்ய க்ரஹணம் ஸமுபாகமத் || 75 ||
அதைக் கேட்ட ராவணனா; ஏவுண்டு வந்த பஞ்ச சேனாதிபர்களையும் ஏழு மந்திரி குமாரர்களை
அக்ஷனையும் கொன்று விட்டு பிறகு இந்திரஜித் பிரயோகித்த ப்ரஹ்மாஸ்திரத்தினால் கட்டுண்ட
————–
அஸ்த்ரேணோன் முக்தமாத்மானம் ஜ்ஞாத்வா பைதாமஹாத் வராத் |
மர்ஷயன் ராக்ஷஸான் வீரோ யந்த்ரிணஸ் தான்ய த்ருச்சயா || 76 ||
ஒரு முயற்சி இன்றியே பிரம தேவனுடைய வரத்தினால் தான் கட்டுண்ட அந்த அஸ்திரத்தின்
கட்டு விடுபட்டுப் போனதை அறிந்த திருவடி தன்னைக் கட்டி இழுக்கிற
அரக்கர்களுடைய அபராதங்களைப் பொறுத்துக் கொண்டார்
——————
ததோ தக்த்வா புரீம் லங்காம் ருதே ஸீதாம் ச மைதிலீம் |
ராமாய ப்ரியமாக்யாதும் புனராயான் மஹாகபி꞉ || 77 ||
பிறகு ஸீதை இருக்கும் இடம் தவிர மற்ற இலங்கையை முழுதும் கொளுத்தி விட்டு
ஸ்ரீ ராமனுக்கு ஸ்ரீ சீதாப் பிராட்டியாரைக் கண்ட செய்தியை அறிவிக்கத் திரும்பி வந்தார்
——————–
ஸ்ரீ ஸங்க்ஷேப ஸுந்தர காண்டம்
ததோ ராவணநீதாயா: ஸீதாயா: சத்ரு கர்சன:
இயேஷ பதமன் வேஷ்டும் சாரணாசரிதே பதி –1.1 / 19
யதா ராகவ நிர்முக்த: சர: ச்வஸனவிக்ரம
கச்சேத்தத்வத் கமிஷ்யாமி லங்காம் ராவணபாலிதாம் –1.39 / 20
ப்ரவிச்ய நகரீம் லங்காம் கபிராஜ ஹிதங்கர:
சக்ரே(அ)த பாதம் ஸவ்யஞ்ச சத்ரூணாம் ஸ து மூர்த்தனி – 4.3 / 21
ப்ரவிசந் நிஷ்பதம்ச்சாபி ப்ரபதந்நுத் பதந்நபி
ஸர்வமப்யவகாசம் ஸ விச்சார மஹாகபி: — 12.1 / 22
த்ருஷ்டமந்த: புரம் ஸர்வம் த்ருஷ்டா ராவண யோஷித:
ந ஸீதா த்ருச்யதே ஸாத்த்வீ வ்ருதா ஜாதோ மம ச்ரம: –12.6 / 23
அசோகவநிகா சேயம் த்ருச்யதே யா மஹாத்ருமா
இமாமகமிஷ்யாமி ந ஹீயம் விசிதா மயா — 13.55 / 24
அசோகவநிகாயாம் து தஸ்யாம் வானரபுங்கவ:
ததோ மலினஸம்வீதாம் ராக்ஷஸீபி: ஸமாவ்ருதாம் — 15.18 / 25
உபவாஸக்ருசாம் தீனாம் நி:ச்வஸந்தீம் புன: புன:
ததர்ச சுக்லபக்ஷாதௌ சந்த்ரரேகாமிவாமலாம் — 15.19 / 26
அஸ்யா தேவ்யா மனஸ்தஸ்மிம் ஸ்தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்ட்டிதம்
தேநேயம் ஸ ச தர்மாத்மா முஹூர்த்தமபி ஜீவதி– 15.51 / 28
ஏவம் ஸீதாம் ததா த்ருஷ்ட்வா ஹ்ருஷ்ட: பவனஸம்பவ:
ஜகாம மனஸா ராமம் ப்ரசசம்ஸ ச தம் ப்ரபும் — 15.54 / 29
ராஜா தசரதோ நாம ரத்குஞ்ஜர வாஜிமான்
தஸ்ய புத்ர: ப்ரியோ ஜ்யேஷ்ட ஸ்தாராதிப நிபானன — 31.2-6 / 30
ராமோ நாம விசேஷஜ்ஞ: ச்ரேஷ்ட: ஸர்வ தனுஷ்மதாம்
தஸ்ய ஸத்யாபிஸந்தஸ்ய வ்ருத்தஸ்ய வசனாத் பிது:
ஸபார்ய: ஸஹ ச ப்ராத்ரா வீர: ப்ரவ்ராஜிதோ வனம் –31.6-8 / 31
ததஸ்த்வமர்ஷாபஹ்ருதா ஜானகீ ராவணேன து
ஸ மார்க்கமாணஸ் தாம் தேவீம் ராம: ஸீதா மநிந்திதாம்
ஆஸஸாத வனே மித்ரம் ஸுக்ரீவம் நாம வாரணம் — 31.10-11 / 32
ஸுக்ரீவேணாபி ஸந்திஷ்டா ஹரய: காமரூபிண:
திக்ஷு ஸர்வாஸு தாம் தேவீம் விசின்வந்தி ஸஹஸ்ரச:– 31.13 / 33
அஸ்யா ஹேதோர் விசாலாக்ஷ்யா: ஸாகரம் வேகவான் ப்லுத:
யதா ரூபாம் யதா வர்ணாம் யதா லக்ஷ்மீஞ்ச நிச்சிதாம்
அச்ரௌஷம் ராகவஸ்யாஹம் ஸேயமாஸாதிதா மயா — 31.14-15 / 34
ஜானகீ சாபி தச்ச்ருத்வா விஸ்மயம் பரமம் கதா –31.16
ஸா ததர்ச கபிம் தத்ர ப்ரச்ரயம் ப்ரியவாதினம் –32.2 / 35
தாமப்ரவீன் மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜ: — 33.2
அஹம் ராமஸ்ய ஸந்தேசாத் தேவி தூதஸ்தவாகத: — 34.2 / 36
வைதேஹி குசலீ ராமஸ்த்வாம் ச கௌசலமப்ரவீத்
லக்ஷ்மணச்ச மஹாதேஜா பர்த்துஸ்தே(அ)னுசர: ப்ரிய: — 34.4 / 37
ஸா தபோ குசலம் தேவீ நிசம்ய நரஸிஹ்மயோ
ப்ரீதி ஸம்ருஷ்ட ஸர்வாங்கீ ஹனுமந்த மதாப்ரவீத் — 34.5 / 38
கல்யாணீ பத காதேயம் லௌகிகீ ப்ரதிபாதி மா
ஏதி ஜீவந்த மானந்தோ நரம் வைஷ சதாதபி — 34.6 / 39
பூய ஏவ மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜ:
அப்ரவீத் ப்ரச்ரிதம் வாக்யம் ஸீதாப்ரத்யய காரணாத்
ராம நாமாங்கிதஞ்சேதம் பச்ய தேவ்யங்குலீயகம்
ப்ரத்ய யார்த்தம் தவாநீதம் தேந தத்தம் மஹாத்மனா — 36.1-3 / 40
க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர்த்து: கரவிபூஷணம்
பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜானகீ முதிதா (அ)பவத் –36.4 / 41
ததோ வஸ்த்ரகதம் முக்த்வா திவ்யம் சூடாமணிம் சுபம்
ப்ரதேயோ ராகவாயேதி ஸீதா ஹனுமதே ததௌ –38.6-7 / 42
ததஸ்து ஹனுமான் வீரோ பபஞ்ஜ ப்ரமதாவனம்
தாஸோ(அ)ஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மண:
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
அர்த்தயித்வா புரீம் லங்கா மபிவாத்ய ச மைதிலீம்
ஸம்ருத்தார்த்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் — 43.9-11 / 43
வேஷ்டயந்தி ஸ்ம லாங்கூலம் ஜீர்ணை: கார்ப்பாஸகை: படை:
தைலேன சாபிஷிச்யாத தே(அ)க்னிம் தத்ராப்யபாதயத் — 53.7 / 44
தீப்யமானே ததஸ்தஸ்ய லாங்கூலாக்ரே ஹனூமத:
ராக்ஷஸ்யஸ்தா விரூபாக்ஷ்ய: சம்ஸுர் தேவ்யாஸ்ததப்ரியம் — 53.23 / 45
மங்கலாபிமுகீ தஸ்ய ஸா ததாஸீன்மஹாகபே:
உபதஸ்தே விசாலாக்ஷீ ப்ரயதா ஹவ்யவாஹனம்
யத்யஸ்தி பதி சுச்ரூஷா யத்யஸ்தி சரிதம் தப:
யதி வாப்யேகபத்னீத்வம் சீதோ பவ ஹனூமத: — 53.26-27 / 46
ஹனூமதா வேகவதா வானரேண மஹாத்மனா
லங்காபுரம் ப்ரதக்தம் தத் ருத்ரேண த்ரிபுரம் யதா– 54.32 / 47
ஏவமாச்வாஸ்ய வைதேஹீம் ஹனுமான் மாருதாத்மஜ:
கமனாய மதிம் க்ருத்வா வைதேஹீமப்ப்யவாதயத்
தத: ஸ கபிசார்த்தூல: ஸ்வாமி ஸந்தர்சனோத்ஸுக:
ஆருரோஹ கிரிச்ரேஷ்ட மரிஷ்ட மரிமர்த்தன –56.25 / 48
நிபபாத மஹேந்த்ரஸ்ய சிகரே பாதபாகுலே –57.29
த்ருஷ்டா ஸீதேதி விக்ராந்த: ஸம்க்ஷேபேண ந்யவேதயத் — 57.35 / 49
ப்ரீதிமந்தஸ்ததஸ்ஸர்வே வாயு புத்ர புரஸ்ஸரா:
மஹேந்த்ராத்ரிம் பரித்யஜ்ய புப்லுவு: ப்லவகர்ஷபா: — 61.2 / 50
நிபேதுர் ஹரிராஜஸ்ய ஸமீபே ராகவஸ்ய ச — 64.38
ஹனுமாம்ச்ச மஹாபாஹு: ப்ரணம்ய சிரஸா தத:
நியதா மக்ஷதாம் தேவீம் ராகவாய ந்யவேதயத் — 64.39 / 51
தௌ ஜாதாச்வாஸௌ ராஜபுத்ரௌ விதித்வா தச்சாபிஜ்ஞானம் ராகவாய ப்ரதாய
தேவ்யா சாக்க்யாதம் ஸர்வ மேவானுபூர்வ்யாத் வாசா ஸம்பூர்ணம் வாயுபுத்ர: சசம்ச:–65.26 / 52
—————–
ஸோऽபிகம்ய மஹாத்மானம் க்ருத்வா ராமம் ப்ரதக்ஷிணம் |
ந்யவேத யதமேயாத்மா த்ருஷ்டா ஸீதேதி தத்த்வத꞉ || 78 ||
புத்திமானான அந்த திருவடி ஸ்ரீ ராமனிடம் வந்து அவரை ப்ரதக்ஷிணம் செய்து
கண்டேன் ஸீதையை என்று சொல்லி அங்கே நடந்தவற்றைச் சொன்னார்
————-
தத꞉ ஸுக்ரீவ ஸஹிதோ கத்வா தீரம் மஹோததே꞉ |
ஸமுத்ரம் க்ஷோப யாமாஸ ஶரைராதித்ய ஸன்னிபை꞉ || 79 ||
பின்பு ஸ்ரீ ராமன் ஸூக்ரீவனுடன் கடற்கரையை அடைந்து அங்கு அணை செய்யக் கருதி வருணனை வேண்டிக் கொள்ள
அவன் வாராமையாலே சினமுற்று அக் கடலை பாணங்களினால் வியாகுலம் செய்து விட்டார்
ஶரைராதித்ய ஸன்னிபை--தேஜஸ் பதார்த்தங்களில் தலையான ஆதித்யனைச் சொன்னதால் தீப்த பாவக சங்காஸை -என்கிறபடி மற்றவர்களையும் அதிசயித்த படி
ஹனுமார் திரும்ப வந்து சீதாதேவியுடைய நிலைமையை சொல்லும்போது, சீதாதேவி வார்த்தைகளையே சொல்றார்.
இமம்ʼ ச தீவ்ரம்ʼ மம ஶோக வேக³ம்ʼ ரக்ஷோபி⁴ரேபி⁴꞉ பரிப⁴ர்த்ஸனம்ʼ ச.
ப்³ரூயாஸ்து ராமஸ்ய க³த꞉ ஸமீபம்ʼ ஶிவஶ்ச தே(அ)த்⁴வாஸ்து ஹரி ப்ரவீர||
ஹே ஹனுமான், என்னுடைய தீவிரமான சோகத்தையும், ராக்ஷசிகள், ராவணன் எனக்கு பண்ணும் கொடுமைகளையும் ராமரிடத்தில் சொல்லு. என்னை இந்த கஷ்டத்தில் இருந்து சீக்கிரமா வந்து மீட்க சொல்லு.உனக்கு மங்களம் உண்டாகட்டும், அப்டின்னு அந்த வார்தைகளையே சொல்லி
ஸர்வதா² ஸாக³ரஜலே ஸந்தார: ப்ரவிதீ⁴யதாம்ʼ |
எப்படி கடலை தாண்டறதுன்னு உடனடியா ஒரு வழி பார்க்கணும். உடனே போகணும்னு ஹனுமார், ராமரை அந்த கார்யத்துல தள்ளறார்.
சுக்ரீவன் சொல்றான்.ஹே ராமா, எவ்ளோ மஹாமதி நீ, எவ்ளோ பெரிய புத்திமான். இப்போ போய் நீங்க தளரலாமா?எங்க சீதை இருக்கான்னு தெரியாம இருந்த போது தளர்ச்சியா இருந்தோம். இப்போ சீதை இருக்கற இடம் தெரிஞ்சாச்சு எப்படியாவது மீட்டுடலாம். நீங்க கிளம்பரத்துக்கு உத்தரவு கொடுங்கோ
ஸக்ருʼதே³வ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே .
அப⁴யம்ʼ ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யேதத்³ வ்ரதம்ʼ மம ||
அப்டின்னு ராமர் வாக்கு குடுக்கறார். அந்த வாக்கு அன்னிக்கு விபீஷணனுக்கு மட்டுமில்ல. இன்னிக்கும் , என்னிக்கும் நமக்கும் இருக்கு. ராமா காப்பாத்துனு சொன்னா போறும். நமஸ்காரம் பண்ணா போறும்.
ஆபதா³ம் அப ஹர்தா²ரம்ʼ தா³தாரம்ʼ ஸர்வ ஸம்பதா³ம்ʼ |
லோகாபி⁴ராமம்ʼ ஶ்ரீராமம்ʼ பூ⁴யோ பூ⁴யோ நமாம்யஹம் ||
அப்டின்னு ராமரை நமஸ்காரம் பண்ணா, எல்லா ஆபத்துகளையும் விலக்கி, எல்லா சம்பத்துக்களையும் கொடுப்பார். விபீஷணனுக்கு அங்கேயே சமுத்திர ஜலத்தை வெச்சு லங்கைக்கு ராஜாவா பட்டாபிஷேகம் பண்ணிடறார்.
———————
தர்ஶயாமாஸ சாத்மானம் ஸமுத்ர꞉ ஸரிதாம் பதி꞉ |
ஸமுத்ர வசனாச் சைவ நலம் ஸேதுமகாரயத் || 80 ||
பின்பு சமுத்திர ராஜன் தனது மனைவிகளுடன் ஸ்ரீ ராமனிடம் வந்தான்
அந்த சமுத்திர ராஜனின் உத்தரவுப்படி நலன் என்பவனைக் கொண்டு கடலில் அணை கட்டினார்
ஐந்து நாள்ல 100 யோஜனை நீளம் 10 யோஜனை அகலம் அப்படிங்கற ஆஸ்ச்சர்யமான, கடல் மேல பாலம்ங்கற, இனிக்கும் scienceல கூட பண்ணல, அந்த மாதிரி ஆஸ்ச்சர்யமான காரியத்தை ராமர் பண்ணறார். முதல் நாள் 14 யோஜனை, அப்புறம் 20, அப்புறம் 21, அப்புறம் 22, அப்புறம் 23 யோஜனை இப்டி அஞ்சு நாள்ல பாலத்தை கட்டி லங்கைக்கு போய் சேரறா.
” தேன க³த்வா புரீம்ʼ லங்காம்ʼ ” – அந்த 100 யோஜனை பாலத்துல ராமர் வானரப்படையோடு லங்கைக்கு போய் சேர்ந்தார். இந்த சங்க்ஷேப ராமாயணத்துல, ” ஹத்வா ராவணமாஹவே “, யுத்தத்தில் ராவணனை வதம் பண்ணார் அப்டின்னு 20 வது சர்கதுலேந்து 111வது சர்க்கம் யுத்த காண்டத்துக்கு ஒரு jump.
இந்திரஜித் கோபத்துல மறைஞ்சிருந்து ராம லக்ஷ்மணா மேல நாக பாசத்தை போடறான். எல்லா படையையும் மறைஞ்சிருந்து அடிக்கிறான். எல்லாரும் தவிக்கறா. நாக பாசத்துல ராம லக்ஷ்மணாள் விழுந்து இருக்கறத பாத்து எல்லாருமே ரொம்ப சோர்வடையறா. புஷ்பக விமானத்துல சீதையை கொண்டு வந்து காமிக்க சொல்றான் ராவணன். சீதையும் பாத்து புலம்பி அழறா. ராமர் ஒரு நிமிஷம் மூர்ச்சை தெளிஞ்சு எழுந்து, லக்ஷ்மணன் விழுந்து கிடக்கறத பாத்து அழறார். ரொம்ப வருத்தப்படும்போது கருட பகவான் வரார். கருட பகவான் வந்த ஒடனே அந்த நாகங்கள் எல்லாம் போய்டறது. அவர் வந்து அவாளை தடவி குடுத்தவுடனே, அவா மின்ன விட ரெண்டு மடங்கு சக்தியும் , தேஜஸும் , பலமும் ஆயிடறா. கருட பகவான் சொல்றார்.
ஶூராணாம் ஶுத்³த⁴ பா⁴வானாம் ப⁴வதாம் ஆர்ஜவம் ப³லம் ||
ராக்ஷஸர்கள் சூழ்ச்சி பண்ணுவார்கள், ஆனால் உங்களுடைய சத்தியமும், நேர்மையும் தான் உங்களுக்கு பலம்.
கவலைப்படாதே, நீங்கள் யுத்தத்தில் வெற்றி பெறுவீர்கள் . சீதையை மீண்டும் அடைவீர்கள்
த⁴ர்மாத்மா ஸத்யஸந்த⁴ஶ்ச ராமோ தா³ஶரதி²ர்யதி³ ||
பௌருஷே சாப்ரதித்³வந்த்³வஸ்ததே³னம்ʼ ஜஹி ராவணிம் |
என்னுடைய அண்ணா தசரத குமாரர் ராமர், சத்திய சந்தர் தர்மாத்மா என்பது உண்மையானால், இந்த அம்பு ராவணனுடைய பிள்ளை இந்திரஜித்தை கொல்லட்டும்னு போடறான், இந்திரஜித் தலை கீழ விழறது. அப்படி அந்த ராம நாமத்துக்கு அவ்ளோ மஹிமை. சத்தியமும் , தர்மமும் ஜெயிக்கும் அப்படிங்கறது ராமாயாணத்துடய முக்கியமான message, முக்கியமான செய்தி.
———————
தேன கத்வா புரீம் லங்காம் ஹத்வா ராவணமாஹவே |
ராமஸ் ஸீதாமனு ப்ராப்ய பராம் வ்ரீடா முபாகமத் || 81 ||
அவ் வணையின் வழியே இலங்கையில் சென்று போர் களத்தில் ராவணனைக் கொன்று சீதையை அடைந்து
அநந்தரம் தான் பிறர் அகத்தில் இருந்த இவளை எப்படி அங்கீ கரிப்போம் என்று வெட்கித்து இருந்தார்
“மரணாந்தாணி வைராணி ” – வைரமெல்லாம் மரணம் வரைக்கும் தான்-மண்டோதரி வந்து, நான் உன்னோட எவ்ளோ சந்தோசமா ஆடை ஆபரணம் எல்லாம் அணிந்து புஷ்பக விமானத்துல சுத்தி இருக்கோம், அதெல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்லாம போயிடுத்தே. நான் எவ்ளோ சொன்னேன் , விபீஷணன் எவ்ளோ சொன்னான்.
ஶுப⁴க்ருʼச்சு²ப⁴மாப்னோதி பாபக்ருʼத்பாபமஶ்னுதே |
விபீ⁴ஷண꞉ ஸுக²ம்ʼ ப்ராப்தஸ்த்வம்ʼ ப்ராப்த꞉ பாபமீத்³ருʼஶம் ||
நல்லது பண்றவன் நல்லதை அடைவான். கெட்டது பண்ணா கெட்டதுதான் விளையும். விபீஷணன் க்ஷேமத்தை அடைந்தான் , நீ இந்த மாதிரி கோரமான வதத்தை அடைஞ்சியே அப்டின்னு பொலம்பறா .
இவனுக்கு நான் ஸம்ஸ்காரம் பண்ணா ஜனங்கள் என்னை வெறுப்பாளோ அப்டின்னு. அதனால நான் இவனுக்கு ஸம்ஸ்காரம் பண்ண விரும்பலை அப்டின்னு சொல்றான். அப்போ ராமர் நீ பண்ணலேன்னா நான் பண்ணுவேன் ” மரணாந்தாணி வைராணி… த்வம் யஷோ பாக் பவிஷ்யதி” — உனக்கு புகழ் ஏற்படும். நீ ஸம்ஸ்காரம் பண்ணு அப்டின்னு சொல்றார்.
அப்புறம் ப்ராஹ்மணர்களுக்கு என்ன வேத மந்த்ராம் எல்லாம் உண்டோ அதுப்படி விபீஷணன், ராவணனுக்கு ஸம்ஸ்காரம் பண்ணறான்.
பாபானாம்ʼ வா ஶுபா⁴னாம்ʼ வா வதா⁴ர்ஹாணாம்ʼ ப்லவங்க³ம ||
கார்யம்ʼ காருண்யமார்யேண ந கஶ்சின்னாபராத்⁴யதி |
பாவம் பண்ணவாளா இருந்தாலும் சரி, வதத்துக்கு உரியவாளா இருந்தாலும் சரி.
“கார்யம் கருணம் ஆர்யேன ” – பெரியவாளா இருக்கறவா மன்னிக்கணும். அவா இராவணன் பேச்சை கேட்டுண்டு பண்ணா. இப்போ ராவணன் இல்ல. இனிமே இந்த மாதிரி நடந்துக்க மாட்டா, மன்னிச்சுடுனு சொல்றா. அப்புறம் சரிம்மான்னு சொல்லிடறார் ஹனுமார்.
—————
தாமுவாச ததோ ராம꞉ பருஷம் ஜனஸம்ஸதி |
அம்ருஷ்யமாணா ஸா ஸீதா விவேஶ ஜ்வலனம் ஸதீ || 82 ||
அநந்தரம் எல்லோரும் சீதாப்பிராட்டியாரை பதி விரதை என்று நம்புவதற்காக ஜனக்கூட்டத்தின் நடுவில்
இராகவன் சீதையைப் பார்த்து நீ அக்னி பிரவேசம் பண்ண வேண்டும் என்று கொடூரமாக மொழிந்தார்
ஸீதா தேவியார் அச் சொல்லைப் பொறுக்க மாட்டாதவளாய் அக்னியில் குதித்தாள்
————–
ததோऽக்னிவசனாத்ஸீதாம் ஜ்ஞாத்வா விகதகல்மஷாம் |
பபௌ ராமஸ் ஸம் ப்ரஹ்ருஷ்ட꞉ பூஜிதஸ் ஸர்வதைவதை꞉ || 83 ||
பிறகு இவள் மஹா பதி விரதை என்று அக்னி தேவன் சொல்லக் கேட்டு ஸீதா தேவியை எவ்விதத்திலும்
தோஷம் அற்றவளாக அறிந்து மிகவும் ஸந்தோஷித்தார்
அப்பொழுது தேவர்கள் இவரைக் கொண்டாடினர்
கண்டேன் சீதையை என்று கேட்டு ஹ்ருஷ்டரானார்
பையலைக் கொன்று விபீஷண ஆழ்வானுக்கு முடி சூட்டி ப்ரஹ்ருஷ்டரானார்
இப்போது ஸம் ப்ரஹ்ருஷ்டரானார்-வடிவிலே தொடை கொள்ளலாம் படி திருமேனி மிகவும் புகரிட்டு –திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் ஆனார்
எல்லா தேவர்களும் பிரம்மா , அக்னி , இந்திரன் , பரமேஸ்வரன் எல்லாரும் காட்சி கொடுத்து, ஹே ராமா நீ யாருன்னு உணரவில்லையா, நீ ஸாக்ஷாத் விஷ்ணு பகவான், சீதாதேவி லக்ஷ்மிதேவி அப்டின்னவுடனே ராமர் சொல்றார்,
ஆத்மானம்ʼ மானுஷம்ʼ மன்யே ராமம்ʼ த³ஶரதா²த்மஜம்
நான் என்னை தசரத குமாரனான ராமராக அறிகிறேன் அப்படின்னு சொன்னபோது,இல்ல ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் பண்ணக்கூடிய ஜகத் பரிபாலனம் பண்ணக்கூடிய விஷ்ணு பகவானே நீதான் அப்படின்னு ப்ரஹ்மா ஸ்தோத்ரம் பண்ணறார். அந்த ப்ரஹ்ம ஸ்துதியோட முடிவுல
“அமோகம் தர்ஷனம் ராமா நச மோக தவஸ்தவ: |
அமோகாஸ்தே பவிஷ்யந்தி பக்திமந்தஸ்ச ஏ நரா: ||”
அப்படின்னு உன்னுடைய தரிசனமோ, உன்கிட்ட பண்ணற ஸ்தோத்திரமோ, உன்கிட்ட பண்ணற பக்தி வீண் போகாது அப்படின்னு சொல்றார். அப்புறம் அக்னி பகவான் வந்து இந்த சீதையை ஏற்றுக்கொள் அப்படின்னு சொன்னவுடனே ராமர் எனக்கு அவளோட மனசும் தெரியும், அவளோட தூய்மையும் தெரியும். ஜனங்களுக்காக இப்படி ஒண்ணு பண்ணேன்னு சீதாதேவியை ஏத்துண்டு,அப்போ தான் அவர் “பபௌ ராம: ஸம்ப்ரஹ்ருஷ்ட:” – சந்தோஷத்தை அடைந்தார். “பூஜித: சர்வதெய்வதை:” – எல்லா தெய்வங்களும் அவரை கொண்டாடினார்கள்.
—————-
கர்மணா தேன மஹதா த்ரை லோக்யம் ஸசராசரம் |
ஸதேவர்ஷி கணம் துஷ்டம் ராகவஸ்ய மஹாத்மன꞉ || 84 ||
ஸ்ரீ ராகவன் செய்த ராவண வதமாகிற அப்பெரும் தொழிலினால் தேவர்களும் ரிஷிகளும்
மற்றும் மூன்று உலகினில் உள்ள பிராணிகளும் மரம் முதலானவைகளும் களித்தனர்
————–
அப்யஷிஞ்சத்ஸ லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம் |
க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர꞉ ப்ரமுமோத ஹ || 85 ||
விபீஷணனை ராக்ஷஸ ராஜனாக இலங்கையில் முடி சூட்டித் தான் கடற்கரையில் இராவணனை முடித்து
உனக்கு ராஜ்யத்தைத் தருகிறேன் என்று சொன்னபடி செய்து மனத்தில் உள்ள தாபம் தீர்ந்து
இராகவன் ப்ரீதியை அடைந்தார்
விஜ்வர -இவ் வரசு வேண்டேன் என்று சொல்லாமல் இருந்ததால் அந்தரங்க ஸந்தாபம் ஒழிந்தது
வி பஷியாய் அதன் விஷயமான ஜுரம் -ஜடாயு மஹாராஜர் இழவால் நேர்ந்த ஜுரம் இப்பொழுது தான் நீங்கப் பெற்றார்
தாம் செய்த ப்ரதிஜ்ஜை நிறைவேறப் பெற்றதால் ஜுரம் நீங்கப் பெற்றார்
—————-
தேவதாப்யோ வரம் ப்ராப்ய ஸமுத்தாப்ய ச வானரான் |
அயோத்யாம் ப்ரஸ்திதோ ராம꞉ புஷ்பகேண ஸுஹ்ருத்வ்ருத꞉ || 86 ||
ஸ்ரீ ராகவன் தேவர்களின் வரத்தினால் யுத்தத்தில் இறந்து போன வானரங்களை எழுப்பிக் கொண்டு
அவர்களுடன் கூட புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்யைக்குச் செல்லப் புறப்பட்டார்
—————
பரத்வாஜாஶ்ரமம் கத்வா ராமஸ் ஸத்ய பராக்ரம꞉ |
பரதஸ்யாந்திகம் ராமோ ஹனூமந்தம் வ்யஸர்ஜயத் || 87 ||
பரத்வாஜ மஹா முனிவருடைய ஆஸ்ரமத்தை அடைந்து அங்கு நின்றும் இராகவன்
தான் வருவதாக பரதனுக்கு அறிவிக்க அவரிடம் ஹநுமானை அனுப்பினார்
—————-
புனராக்யாயிகாம் ஜல்பன் ஸுக்ரீவ ஸஹிதஶ்ச ஸ꞉ |
புஷ்பகம் தத் ஸமாருஹ்ய நந்தி க்ராமம் யயௌ ததா || 88 ||
ஸ்ரீ ராமன் முன் நடந்த கதைகளை ஸூ க்ரீவனுடன் சொல்லிக் கொண்டு புஷ்பகத்தின் மேல் ஏறி
பரதன் இருக்கிற நந்திக் கிராமம் என்கிற ஊருக்குச் சென்றார்
———–
நந்தி க்ராமே ஜடாம் ஹித்வா ப்ராத்ருபி꞉ ஸஹிதோऽனக꞉ |
ராம꞉ ஸீதாமனுப்ராப்ய ராஜ்யம் புனரவாப்தவான் || 89 ||
அந்த நந்திக் கிராமத்தில் ஸ்ரீ ராகவன் தம்பிகளுடன் கூட இந்நாள் தரித்த சடையை வாங்கி நீராடி
சீதா தேவியுடன் சிம்ஹாசனத்தில் உட்கார்ந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டு ராஜ்யத்தை அடைந்தான்
ராம꞉ ஸீதாமனுப்ராப்ய ராஜ்யம்ʼ புனரவாப்தவான் ||89||
அப்படின்னு, ராமர் சீதையையும் ராஜ்ஜியத்தையும் மீண்டும் அடைந்தார்னு, ராம பட்டாபிஷேக சர்க்கத்தை குறிப்பிட்டிருக்கா. ராம பட்டாபிஷேக மஹோத்சவத்தை வால்மீகி வார்த்தை வெச்சிண்டு படிச்சா தான் ஆனந்தமா இருக்கும். அதனால ராம பட்டாபிஷேக சர்கம் 131வது சர்கம், யுத்த காண்டத்துலேந்து எடுத்து கொண்டாடுவோம்.
ஶிரஸ்யஞ்ஜலிமாதா³ய கைகேயானந்த³வர்த⁴ன꞉ |
ப³பா⁴ஷே ப⁴ரதோ ஜ்யேஷ்ட²ன் ராமம்ʼ ஸத்யபராக்ரமம் || 1||–ராம பட்டாபிஷேக சர்க்கத்துல முதல் ஸ்லோகம்,
ராமர் வந்து சேர்ந்தவுடனே பரதன் நமஸ்காரம் பண்ணறான். அப்புறம் இதை சொல்றான், “ஶிரஸ்யஞ்ஜலிமாதா³ய” – கைகள் தலை மேல கூப்பிண்டு, ஏன்னா அவனுக்கு ராமரோட இந்த எண்ணம் தெரியும். கைகேயி சந்தோஷத்துக்காக பரதா நீயே ராஜ்ஜியத்தை திரும்பவும் வெச்சுக்கோன்னு சொல்லிடப்போறார்னு சொல்லி, “சத்ய பராக்ரமம் ராமம் பரத: பபாஷே” – பரதன் இந்த வார்த்தைகளை சொன்னான் . இந்த இடத்துல பரதனுக்கு “கைகேயானந்த வர்தன:” அப்படின்னு ஒரு பதம் போட்டுருக்கார், கைகேயியின் ஆனந்தை வளர்ப்பவர்னு.
ராமர் அங்கேருந்து பரதனை பாதுகை குடுத்து திருப்பி அனுப்பும்போது ஒரு ப்ரதிஞை பண்ண சொல்றார். என் மேலயும் சீதை மேலயும் ஆணை, நீ கைகேயியை கடிந்து எதுவுமே பேச கூடாதுன்னு, பரதனும் ஆஹா னு சொல்றான்.
யாவதா³வர்ததே சக்ரம் யாவதீ ச வஸுந்த⁴ரா |
தாவத்த்வமிஹ ஸர்வஸ்ய ஸ்வாமித்வம்அனுவர்தய ||
“யாவதா³வர்ததே சக்ரம்“ – எது வரைக்கும் கால சக்கரம் சுழல்கிறதோ,
“யாவதீ ச வஸுந்த⁴ரா“ – எது வரைக்கும் மலைகளும், நதிகளோடும் இந்த பூமி இருக்கிறதோ
“தாவத்”– அது வரைக்கும்
“த்வம் இஹ ஸர்வஸ்ய” – நீங்கள் இங்க எங்கள் எல்லாருக்கும்
“ஸ்வாமித்வம்அனுவர்தய” – ஸ்வாமியா இருக்கனும் , அப்டின்னு சொல்றான்.
அதுக்கு முந்தின ஸ்லோகத்துல
தூர்யஸங்கா⁴தநிர்கோ⁴ஷை꞉ காஞ்சீநூபுரநிஸ்வனை꞉ |
மது⁴ரைர்கீ³தஶப்³தை³ஶ்ச ப்ரதிபு³த்⁴யஸ்வ ராக⁴வ ||
ராஜாவா இருந்தா எல்லாரைக்காட்டிலும் அவருக்குதான் பொறுப்பு அதிகம்,எல்லாரைக் காட்டிலும் அவருக்கு தான் போகங்களும் அதிகம் . பரதன் சொல்லும்போது, தன்னால ராஜ போகங்களெல்லாம் இழந்து காட்டுல கல்லுலேயும், முள்ளுலேயும் கஷ்டப்பட்டு நடந்து , தரைல படுத்துண்டு கஷ்டப்படறாரே, அப்டின்னு அது அவன் மனச ரொம்ப பாதிச்சிடுத்து . அதனால, நீங்க ராஜ பட்டாபிஷேகம் பண்ணிக்கணும், எங்களுக்கு நீங்க ராஜாவா இருக்கறதுனால நாங்கள்ளாம் சந்தோஷமா இருப்போம்ங்கறது மட்டுமில்ல, நீங்களும் சந்தோஷமா இருக்கனும்.
“தூர்யஸங்கா⁴தநிர்கோ⁴ஷை꞉ “ – நல்ல நாதஸ்வரம் , வீணா நாதம், ம்ருதங்கம் , “காஞ்சீநூபுரநிஸ்வனை꞉” – பெண்களுடைய ஆபரண சப்தங்கள் எல்லாம் கேட்டுண்டு ,
“மது⁴ரைர்கீ³தஶப்³தை³ஶ்ச “- இனிமையான கீதங்கள் கேட்டுண்டு , வந்திகள் எல்லாம் உங்களை ஸ்தோத்ரம் பண்ற மாதிரி ,
“ப்ரதிபு³த்⁴யஸ்வ ராக⁴வ” – ஒவ்வொரு நாளும் நீங்க எழுந்துக்கணும். ராஜ போகங்களையும் நீங்க அனுபவிக்கனும் , எங்களையும் ராஜாவாக இருந்து வழிநடத்தணும் அப்டின்னு பரதன் வேண்டிக்கறான்.
ப⁴ரதஸ்ய வச꞉ ஶ்ருத்வா ராம꞉ பரபுரஞ்ஜய꞉ |
ததே²தி ப்ரதிஜக்³ராஹ நிஷஸாதா³ஸனே ஶுபே⁴ ||
ராமரும் அப்டியே ஆகட்டும்னு சொல்றார்.
ஸ்வாமிகள் சொல்வார், பரதன் கேட்டபோது காலச்சக்கரம் இருக்கற வரைக்கும் ராமா நீ எங்களுக்கு ராஜாவா இருக்கணும்னு கேட்டதுக்கு, ராமர் அப்படியே அகட்டும்னு சொல்லிருக்கார். ராமர் சத்தியமும் தர்மமும் வடிவானவர். அதனால இன்னிக்கும் நமக்கெல்லாம் ராமர் தான் ராஜா. நமக்கெல்லாம் நாடளுநாயகன் ராமர்தான்
அப்புறம் ராமர், லக்ஷ்மணன் , பரதன், சத்ருக்னன் நாலுபேரும் ஜடையெல்லாம் எடுத்துட்டு
“ஸுக²ஹஸ்தா꞉ ஸுஶீக்⁴ரா: ஶ்மஶ்ருவர்த⁴கா꞉” – நாவிதர்கள் பத்தி சொல்லும்போது அவா கைப்படறதே தெரியாது, சீக்கிரமாவும் செய்வான்னு ரெண்டு அடைமொழி போட்ருக்கா. அவாளைக்கொண்டு ஜடையெல்லாம் எடுத்துட்டு, ரொம்ப அழகா அலங்காரம் பண்ணிண்டு, இந்த எல்லா பரிஜனங்களோட ராமர் நட்சத்திரங்களுக்கு மத்தியில் சந்திரனை போல ஜொலிக்கிறார். அப்புறம் ராமரை சூரியனை போல ஜொலிக்கற ஒரு தேர்ல ஒக்காற வைத்து, பரதனே ஒட்டிண்டு நந்தி க்ராமத்துலேந்து எல்லாரோடும் அயோத்திக்கு ராமர் போறார்.
ருʼஷிஸங்கை⁴ர்ததா³காஶே தே³வைஶ்ச ஸமருத்³க³ணை꞉ |
ஸ்தூயமானஸ்ய ராமஸ்ய ஶுஶ்ருவே மது⁴ரத்⁴வனி꞉ ||
ராமர் நந்திக்ராமத்துலேந்து அயோத்தி தேர்ல போறத பாத்து, ஆகாசத்துல தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்ரம் பண்ற மதுரமான ஒலி எல்லார்க்கும் கேட்டது அப்படின்னு ஒரு ஸ்லோகம்.
அக்ஷதன் ஜாதரூபம்ʼ ச கா³வ꞉ கந்யாஸ்ததா² த்³விஜா꞉ |
நரா மோத³கஹஸ்தாஶ்ச ராமஸ்ய புரதோ யயு꞉ ||
முன்னாடி ஜனங்களெல்லாம் சீர் வரிசை எல்லாம் எடுத்துண்டு போறா. அதுல தங்கம் போல ஜ்வலிக்க கூடிய அக்ஷதை , அவ்ளோ அழகா இருக்காம். கன்யா பெண்கள் பசுமாடுகள் , ப்ராஹ்மணர்கள், “நரா: மோத³கஹஸ்தாஶ்ச “ – ஜனங்கள் கைல தட்டுல மோதகம் எல்லாம் எடுத்துண்டு, “ராமஸ்ய புரதோ யயு꞉ “ – ராமர் முன்னாடி போறார்கள்னு வரது.
இந்த ராமாயணத்தை திரும்ப திரும்ப படிச்சு அந்த தர்ம பலம், சத்ய பலம் அது தான் தேசத்துக்கு ரொம்ப முக்கியம். மத்தது எல்லாம் தானா நடக்கும் அப்படி ராமர் அயோத்திகுள்ள நுழையும்போது
ஹ்ருʼஷ்டபுஷ்டஜனாகீர்ணாமயோத்⁴யாம்ʼ ப்ரவிவேஶ ஹ |
ஜனங்கள்லாம் சந்தோஷத்துல ஒரு சுத்து பெருத்துட்டாளாம். ரொம்ப ஆனந்தமா கொடிகளெல்லாம் கட்டி, நாதஸ்வரம் மேல தாளத்தோட ராமரை அயோத்தியில் வரவேற்றார்கள். ராமர் தசரதருடைய அரண்மனைக்கு போய் சேரரார்.அங்க தான் அமர்ந்தவுடன் பரதனை கூப்பிட்டு இந்த சுக்ரீவனுக்கு என்னுடைய மாளிகைகளில் மிகச்சிறந்ததை ஒழித்து குடு அப்டிங்கறார்.
யச்ச மத்³ப⁴வனன் ஶ்ரேஷ்ட²ம்ʼ ஸாஶோகவனிகம்ʼ மஹத் ||
முக்தாவைதூ³ர்ய ஸங்கீர்ணன் ஸுக்³ரீவஸ்ய நிவேத³ய |
சுக்ரீவனை பார்த்தவுடனே எங்க நாலுபேரோட சேந்து நீயும் ஒரு சகோதரன் ஆயிட்ட அப்டிங்கறார்.
.அந்த மாளிகைல சுக்ரீவன் போய் ஒக்காந்த உடனே, சத்ருக்னன் சொல்றான், நாளை பட்டாபிஷேகத்துக்கு நாலு சமுத்திரத்திலேந்து ஜலம் எடுத்துண்டு வரணும் அப்டின்னவுடனே சுக்ரீவன், ரத்னமயமான நாலு தங்க குடத்தை நாலு பேர்கிட்ட குடுத்து
யதா² ப்ரத்யூஷஸமயே சதுர்ணான் ஸாக³ராம்ப⁴ஸாம் ||
பூர்ணைர்க⁴டை꞉ ப்ரதீக்ஷத்⁴வம் ததா² குருத வானரா꞉ |
நீங்க நாலு பேரும், நாலு சமுத்திரத்திலேந்து ஜலம் எடுத்துண்டு வரணும், “ப்ரத்யூஷ சமயே” – உஷத் காலம் னா, விடியற பொழுது . அதுக்கு ரொம்ப முன்னாடியே நீங்க வந்து காத்துண்டு இருக்கணும். எங்க வந்தாளான்னு நாங்க வாசல்ல வந்து காத்துண்டு இருக்கற மாதிரி வெக்க கூடாது , அப்படி பண்ணுங்கோ “ததா² குருத வானரா꞉ “ அப்டின்னு சொன்னவுடனே அவா போய் எடுத்துண்டு வந்துடறா. இன்னும் ஒரு 500 புண்ய தீர்த்தம் வந்துடுத்து அப்டின்னு சொல்றா. ஸ்வாமிகள் சொல்வார், மத்த வானராலெல்லாம் எங்களுக்கு ராம கைங்கர்யம் கிடைக்காதா னு queueல நின்னுட்டாளாம். அப்புறம் நீ போய் காவேரிலேந்து ஜலம் எடுத்துண்டு வா, நீ கங்கையிலேந்து ஜலம் எடுத்துண்டு வான்னு சுக்ரீவன் சொன்னான். 500 புண்ய தீர்த்தங்கள் வந்துடுத்து. பொழுது விடிந்தது.. அப்ப சத்ருக்னன் வசிஷ்டர்கிட்ட ராமருக்கு பட்டாபிஷேகம் பண்ணி வைங்கோ அப்டின்னு வேண்டிக்கறான்.
தத꞉ ஸ ப்ரயதோ வ்ருʼத்³தோ⁴ வஸிஷ்டோ² ப்³ராஹ்மணை꞉ ஸஹ ||
ராமன் ரத்னமயோ பீடே² ஸஹஸீதம்ʼ ந்யவேஶயத் |
வஸிஷ்டோ² வாமதே³வஶ்ச ஜாபா³லிரத² காஶ்யப꞉ ||
காத்யாயன꞉ ஸுயஜ்ஞஶ்ச கௌ³தமோ விஜயஸ்ததா² |
அப்⁴யஷிஞ்சன்னரவ்யாக்⁴ரம்ʼ ப்ரஸன்னேன ஸுக³ந்தி⁴னா ||
ஸலிலேன ஸஹஸ்ராக்ஷன் வஸவோ வாஸவம்ʼ யதா² |
அப்போ சீதாதேவியை ராமரோடு ரத்னமயமான சிம்ஹாசனத்தில் அமர்த்தி எட்டு ரிஷிகளும், வசுக்கள் எப்படி இந்திரனுக்கு அபிஷேகம் பண்ணி வச்சாளோ அந்த மாதிரி ராமரை சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் பண்ணி வைத்தார்கள்.
ச²த்ரம்ʼ தஸ்ய ச ஜக்³ராஹ ஶத்ருக்⁴ன꞉ பாண்டு³ரன் ஶுப⁴ம் ||
ஶ்வேதன் ச வாலவ்யஜனன் ஸுக்³ரீவோ வானரேஶ்வர꞉ |
அபரன் சந்த்³ரஸங்காஶன் ராக்ஷஸேந்த்³ரோ விபீ⁴ஷண꞉ ||
சத்ருக்னன் சந்த்ரனை போல ஒரு குடையை புடிக்கறான். இந்த பக்கமும் அந்த பக்கமும் சுக்ரீவனும் விபீஷணனும் நின்னுண்டு ராமருக்கு கவரி வீசறா.
அன்னிக்கு ராமர் காட்டுக்கு போன போது கௌசல்யை புலம்பி அழறா, பிச்சை எடுத்துண்டாவது என் கண்ணுமுன்னால இருக்க கூடாதான்னு. ஒரு தப்பும் பண்ணாத என் கொழந்தயை காட்டுக்கு அனுப்பனுமானு சொல்றா. அப்போ சுமித்திரை சமாதானம் சொல்றா. என்ன குறை ராமனுக்குன்னு நீ இப்படி வருத்தப்படற,
த⁴ர்மஸத்யவ்ரதத⁴ன꞉ கிம்ʼ ந ப்ராப்தஸ்தவாத்மஜ꞉ |
சத்தியத்தையும், தர்மத்தையும் வ்ரதமாகவும், தனமாகவும் கொண்ட உன் பிள்ளை என்னத்த இழந்துட்டான், அப்பா பேச்சை கேட்டு காட்டுக்கு போறான் அவ்ளோதானே. அவன் கூட லட்சுமிதேவி மாதிரி சீதை போறா, லக்ஷ்மணன் போறான். அவனுக்கு ஒரு குறையும் கிடையாது. அவன் எங்க போனாலும் இந்திரனுக்கு இந்திரன், வாயுக்கு வாயு, அந்த மாதிரி தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம். காட்டுல அவனை மரங்கள் , அருவிகள் , ஆறுகள் எல்லாமே அவனை வரவேற்று பூஜை பண்ணும். சூரியன் அவனை தஹிக்காது. சந்திரன் போர்வை மாதிரி, அப்பா மாதிரி அவனை அன்பு பாராட்டும். இப்படி அவன் இருக்கப்போறான். அவனை பத்தி கவலைப்படாத அப்படினு சொன்னா. எல்லாரும் அழும்போது சுமித்திரை ஏன் அப்டி சொன்னன்னா அவ ஞானி. அவளுக்கு 14 வருஷம் கழிச்சு, ஒரு வானர ராஜாவும் , ராக்ஷச ராஜாவும் கவரி வீச ராமன் சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் பண்ணிப்பான்னு தெரிஞ்சுது. அதனால தான் அப்படி சொன்னா. அந்த வார்த்தை கௌசல்யைக்கு ஆறுதலா இருந்தது. அப்படி இந்த பட்டாபிஷேக வைபவம். ராமருக்கு பட்டாபிஷேகம் பண்ணா, நம்ப ஒவொருத்தருக்கும் தலைல மகுடம் சூட்டின மாதிரி தான்.தர்மத்துக்கு என்றும் ஜெயம், அப்படிங்கற message . அதனால அடிக்கடி ராமாயணம் படிச்சு, ராம பட்டாபிஷேகம் பண்ணி முடிக்கணும்.
அப்புறம் ராமர் எல்லாருக்கும் பரிசுகள் குடுக்கறார்.சீதாதேவி தன் கழுத்துலேந்து ஒரு முத்து மாலையை, எடுத்து அனுமாருக்கு கொடுக்க விரும்பி எல்லாரையும் பார்க்கறா.ராமரை பார்க்கறா.
தாமிங்கி³தஜ்ஞ꞉ ஸம்ப்ரேக்ஷ்ய ப³பா⁴ஷே ஜனகாத்மஜாம் |
ப்ரதே³ஹி ஸுப⁴கே³ ஹாரன் யஸ்ய துஷ்டாஸி பா⁴மினி ||
பௌருஷம் விக்ரமோ பு³த்³தி⁴ர்யஸ்மின்னேதானி நித்யதா³ |
ஹே சீதே, ஸுபகே. யார்கிட்ட உனக்கு த்ருப்தியோ, யார்கிட்ட பௌருஷம், விக்ரமம், புத்தி எல்லாம் எப்பவும் நெறஞ்சு இருக்கோ அவாளுக்கு கொடு அப்டின்னு சொல்றார். பௌருஷம்ங்கறது – உடல் பலம், விக்ரமம்ங்கறது – தைர்யம், மனோபலம் , புத்தினா – புத்தி.
சீதாதேவி கைல “ராம நாம அன்கிதம் ச ராம நாம அன்கிதம் ச இத³ம் பஶ்ய தே³வி அன்கு³லீயகம் ||” – ராம நாமம் பொறித்த இந்த அங்குலீயத்தை பார் அப்டின்னு கைய நீட்டி காமிச்சார். சீதை அத வாங்கிண்டு கண்ல ஒத்திண்டா.
ராம நாம அன்கிதம் ச இத³ம் ||
அந்த நிமிஷத்துல சீதைக்கு ஏற்பட்ட சந்தோஷத்துல அவ சொன்னது என்ன,
விக்ராந்த꞉ த்வம் ஸமர்த²꞉ த்வம் ப்ராஜ்ஞ꞉ த்வம் வானர உத்தம |
யேன இத³ம் ராக்ஷஸ பத³ம் த்வயா ஏகேன ப்ரத⁴ர்ஷிதம் ||
ஹே ஹனுமான், விக்ரந்த: த்வம் , சமர்த்த: த்வம், ப்ராக்ஞ: தவம் – நீ தான் உடல் பலமும், மனோபலமும் , புத்தி பலமும் பொருந்தினவன். உன் ஒருத்தனால தான் இந்த காரியத்தை பண்ண முடியும் அப்டின்னு கொண்டாடினா. அப்போ அங்க ராமர் இல்ல. ஆனா அவா ஆதர்ஷ தம்பதிகள் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்க வேண்டாம். அதே வார்த்தைகளை இங்க திருப்பறார் ராமர். அந்த ஹநுமானுக்கு கொடுன்னு சொல்லாம சொல்றார். உடனே சீதை அத ஹனுமானுக்கு கொடுக்கறா . ஹனுமான் அதை போட்டுண்டு மலைமேல் மேகம் போல அந்த முத்து மாலையோட பிரகாசிச்சார் அப்டின்னு ஒரு அழகான ஸ்லோகம்.
இப்படி ராம பட்டாபிஷேகம் முடிஞ்சுது. வந்தவா எல்லாரும் சந்தோசமா ராமர்கிட்ட உத்தரவு வாங்கிண்டு அவா அவா கிஷ்கிந்தைக்கு வனரா எல்லாம் போய் சேந்தா. லங்கைக்கு விபீஷணன் தன் மந்திரிகளோடு போய் சேர்ந்தான். ராமர் அஸ்வமேதாதி யாகங்கள் எல்லாம் பண்ணி 11000 வருஷங்கள் ராஜ்யபரிபாலனம் பண்ணி தர்மத்தை நிலைநாட்டினார்.
ஆஜானுலம்பி³பா³ஹு: மஹாஸ்கந்த⁴꞉ ப்ரதாபவான் |
லக்ஷ்மணானுசரோ ராம꞉ ப்ருʼதி²வீமன்வபாலயத் ||
” ஆஜானுலம்பி³பா³ஹு: ” – முட்டி வரைக்கும் நீண்ட கைகளோடு அந்த அம்பு வில்லை வெச்சுண்டு லக்ஷமணனோடு கூட ராமர் ராஜ்யபரிபாலனம் பண்ணார், அப்டின்னு இதுவரைக்கும் ராம காவியம். அடுத்த 10-15 ஸ்லோகங்கள் ராம ராஜ்யத்தோட பெருமை இந்த சர்க்கத்துல . அப்புறம் ஒரு 10 ஸ்லோகங்கள், ராம சரிதத்தை படிக்கறதோட புண்யம் அதுல வரது.
இந்த ராம ராஜ்யம் எப்படி இருந்ததுன்னா
ஸர்வம்ʼ முதி³தமேவாஸீத்ஸர்வோ த⁴ர்மபரோஅப⁴வத் |
எல்லாரும் சந்தோசமா இருந்தா, ஏன்னா எல்லாரும் தர்ம பராளா இருந்தா.
ராமமேவானுபஶ்யந்த: நாப்⁴யஹின்ஸன்பரஸ்பரம் ||
ராமனையே பார்த்துண்டு ஒருத்தரை ஒருத்தர் ஹிம்சை பண்ணாம இருந்தார்னு வராது.
இந்த எடத்துல அயோத்யா காண்டத்துல
கத²ஞ்சிது³பகாரேண க்ருʼதேனைகேன துஷ்யதி |
ந ஸ்மரத்யபகாராணாம்ʼ ஶதமப்யாத்மவத்தயா ||
ராமன் ஒரே ஒரு உபகாரம் பண்ணா, அதுலயே ரொம்ப சந்தோஷம் ஆய்டுவான் . அவன்கிட்ட 100 அபகாரம் பண்ணாகூட அவன்கிட்ட பொறுமையும், மனவடக்கமும் இருக்கறதால அதெல்லாம் பொருட்படுத்த மாட்டான் , ஏதோ அவாளுக்கு தெரிஞ்சுது அப்டினு விட்ருவான்.
அந்த குணத்தை, எல்லாரும் பாத்துண்டு யாராவது தப்புபண்ணா சரி போனு விட்டுண்டு இருந்தாளாம். அதனால ஒருத்தரை ஒருத்தர் ஹிம்சை பண்ணாம எல்லாரும் சந்தோஷமா இருந்தா.
ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமப⁴வன் கதா²꞉ |
ராமபூ⁴தம்ʼ ஜகா³பூ⁴த்³ராமே ராஜ்யம்ʼ ப்ரஶாஸதி ||
ராமா, ராமா , ராமானு ராமனுடைய கதைகளையே பேசிண்டு உலகம் ராமமயமாக, ஆனந்தமயமாக ஆகிவிட்டது. அந்த தசரதருடைய ராஜ்யத்தை விவரிக்கும் போது பால காண்டத்துல ஆரம்பிக்கும்போது இதுவே இவ்ளோ நன்னா இருக்கே இதுக்கு மேல என்ன ராம ராஜ்யம் இருக்கப்போறதுனு தோணும். ஆனா தசரதர் காலத்துல இல்லாத ஒரு பெருமை ராம ராஜ்ஜியத்துல என்னன்னா ராமன் கதையை அப்போ தானே பேச முடியும். எல்லாரும் ராம கதையை பேசிண்டு, ராம சரித்திரத்தை பேசிண்டு ராமா ராமானு ஆனந்தமயமாக இருந்தார்கள். இன்னிக்கும் ராமருடைய கதையை படிக்கறவாளுக்கு வாழ்வே ஆனந்தம்தான்.
அந்த ராமாயணத்தை படிக்கறதோட பலன், 1-2 ஸ்லோகங்கள் பாக்கலாம்
ப்ரார்தி²தான் ச வரான் ஸர்வான் ப்ராப்னுயாத் இஹ ராக⁴வாத் |
ராமரிடத்தில், இந்த ராமாயணம் படித்து அதன் மூலமா சந்தோஷமா இருக்கற ராமரிடத்தில் பிரார்த்தனை பண்ண வரங்கள் எல்லாம் கொடுப்பார்.
குடும்ப³வ்ருʼத்³தி⁴ம்ʼ த⁴னதா⁴ன்யவ்ருʼத்³தி⁴ம்ʼ ஸ்த்ரியஶ்ச முக்²யாஹ் ஸுக²முத்தமம்ʼ ச |
ஶ்ருத்வா ஶுப⁴ம்ʼ காவ்யமித³ம்ʼ மஹார்த²ம்ʼ ப்ராப்னோதி ஸர்வாம்ʼ பு⁴வி சார்த²ஸித்³தி⁴ம் ||
ஆயுஷ்யமாரோக்³யகரம்ʼ யஶஸ்யம்ʼ ஸௌப்⁴ராத்ருʼகம்ʼ பு³த்³தி⁴கரம்ʼ ஶுப⁴ம்ʼ ச |
ஶ்ரோதவ்யமேதந்நியமேன ஸத்³பி⁴ க்²யாநமோஜஸ்கரம்ருʼத்³தி⁴காமை꞉ ||
ச்ரேயஸை விரும்புகிறவர்கள் “ருʼத்³தி⁴காமை꞉” , “ஶ்ரோதவ்யம்” இதை அடிக்கடி கேக்கணும்.
தே³வாஶ்ச ஸர்வே துஷ்யந்தி க்³ரஹணாச்ச்²ரவணாத்ததா² ||
ராமாயணஸ்ய ஶ்ரவணே துஷ்யந்தி பிதர꞉ ஸதா³ |
ராமாயணத்தை படிக்கறதாலும் , கேட்பதாலும் “தேவா : சர்வே துஷ்யந்தி” – எல்லா தெய்வங்களும். “தேவா:” நா plural , “ஸர்வே தேவா :” – குடும்ப தெய்வம் , இஷ்ட தெய்வம் , கிராம தெய்வம், உங்களுக்கு யாரோ அந்த தெய்வத்துக்கு பண்ணல அப்டின்னா ராமாயணத்தை எடுத்து படிங்கோ அப்டிம்பார் ஸ்வாமிகள். அந்த மாதிரி ராமாயணம் படிச்சா எல்லா தெய்வங்களும் த்ருப்தி அடைவார்கள். “துஷ்யந்தி பிதர: ததா” – பித்ருக்களும் த்ருப்தி ஆவார்கள்.
“விநாயகாஸ்ச ஸாம்யந்தி” – ராமாயணம் இருக்கற எடத்துல எல்லா கஷ்டங்களும் விலகும் அப்படிங்கற ஒரு ஸ்லோகத்துக்கு மஹாபெரியவா,
|
ந புத்ரமரணம்ʼ கிஞ்சித்³த்³ரக்ஷ்யந்தி புருஷா꞉ க்வசித் |
ராம ராஜ்யம் எப்படி இருந்ததுன்னா, எவன் ஒருவனும் தன் புத்திர மரணத்தை பார்க்க வேண்டி வரவில்லை.
நார்யஶ்ச அவித⁴வா நித்யம்ʼ ப⁴விஷ்யந்தி பதிவ்ரதா꞉ ||
பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக, பதிவ்ரதைகளாக இருந்தார்கள்.
“ந அக்³நிஜம்ʼ ப⁴யம்ʼ கிஞ்சித்” – அக்னினால யாருக்கும் ஒரு கேடும், accident உம் வரவில்லை.
“ந அப்ஸு மஜ்ஜந்தி ஜந்தவ꞉” – ஜலத்துல யாரும் முழுகவில்லை
“ந வாதஜம்ʼ ப⁴யம்ʼ கிஞ்சித்” – வாயுனால ஒரு hurricane ஓ , cyclone ஓ ஏதாவது வந்து யாரும் கஷ்டப்பட்டா அப்படிங்கறது கிடையாது
“ந அபி ஜ்வரக்ருʼதம்ʼ ததா²” – திடீர் திடீர்னு புது புது பேர்ல வ்யாதி வந்து, ஜ்வரம் வந்து ஜனங்கள் கஷ்ட படறா. அந்த மாதிரி ராம ராஜ்ஜியத்துல இருக்கலை.
அதாவது ராஜ்யத்தை ராஜ தர்மமாக ஆட்சி பண்ணினா, இந்த மாதிரி கஷ்டங்களெல்லாம் வராது அப்டினு தெரியறது.
“ந சாபி க்ஷுத்³ப⁴யம்ʼ தத்ர” – பஞ்சம் பட்டினி அப்டிங்கறதே இல்ல.
“ந தஸ்கரப⁴யம்ʼ ததா²” – திருட்டு பயம் இல்ல. யாரும் வீட்டை பூட்டவே மாட்டார்கள். ஏன்னா பிறர் பொருள் மேல ஆசைப்படறவா யாருமே கிடையாது.
நக³ராணி ச ராஷ்ட்ராணி த⁴னதா⁴ன்யயுதானி ச ||
எல்லா தேசங்களும் , நகரங்களும் தன தான்யத்தில் நிரம்பி இருந்தது.
நித்யம்ʼ ப்ரமுதி³தா꞉ ஸர்வே யதா² க்ருʼதயுகே³ ததா² |
க்ருத யுகத்தில் இருந்தது போல எல்லாரும் ராம ராஜ்யத்தில் சந்தோசமாக இருந்தார்கள்.
அஶ்வமேத⁴ஶதைரிஷ்ட்வா ததா² ப³ஹுஸுவர்ணகை꞉ ||
க³வாம்ʼ கோட்யயுதம்ʼ த³த்த்வா வித்³வத்³ப்⁴யோ விதி⁴பூர்வகம் | |
நிறைய தங்கத்தை தக்ஷிணையாக குடுத்து 100 அஸ்வமேத யாகங்களை ராமர் பண்ணார்.கோடிக்கணக்கான பசுக்களை விதி பூர்வமாக வித்வான்களுக்கு ராமர் தானம் பண்ணார். இந்த கோதானம் பண்ணும்போது கண்ணுகுட்டியோட தரணும். அந்த மாடு கறவை நின்னவுடனே இன்னொரு கறவை மாட்டை தரணும். அந்த மாதிரி விதி பூர்வமாக பண்ணார்
அஸங்க்²யேயம்ʼ த⁴னம்ʼ த³த்த்வா ப்³ராஹ்மணேப்⁴யோ மஹாயஶா꞉ ||
ப்ராஹ்மணர்களுக்கு கணக்கற்ற செல்வத்தை கொடுத்தார்.
ராஜவம்ʼஶான் ஶதகு³ணான் ஸ்தா²பயிஷ்யதி ராக⁴வ꞉ |
சாதுர்வர்ண்யம்ʼ ச லோகே(அ)ஸ்மின் ஸ்வே ஸ்வே த⁴ர்மே நியோக்ஷ்யதி ||
ராஜ வம்சத்தை நிலைநிறுத்தினார். அந்த மாதிரி ஒரு சக்ரவர்த்தி stableஆ இருந்தா, சிற்றரசர்களும் நல்லபடியா இருப்பார்கள்.
சாதுர்வர்ண்யம்ʼ ச லோகே(அ)ஸ்மின் ஸ்வே ஸ்வே த⁴ர்மே நியோக்ஷ்யதி ||
ப்³ராஹ்மணா꞉ க்ஷத்ரியா வைஶ்யா꞉ ஶூத்³ரா லோப⁴விவர்ஜிதா꞉ |
ஸ்வகர்மஸு ப்ரவர்தந்தே துஷ்டா²꞉ ஸ்வைரேவ கர்மபி⁴꞉ ||
தான் பண்ற கார்யத்துல பெருமையோட , பேராசையில்லாம நாலு வர்ணத்தவர்களும் அவரவருடைய கார்யங்களை ரொம்ப ஸ்ரத்தையா பண்ணிண்டு இருந்தா.
அப்படி ஒரு 20 தலைமுறை 30 தலைமுறை ஒவ்வொரு fieldலேயும் excel பண்ணிண்டே வந்தா அது என்னம்மா இருக்கும்ங்கரதை நம்ப கோவில்ல இருக்கற சிற்பங்களிலும் காவ்யங்களிலும் தெரிகிறது.
அந்த மாதிரி ராமர் எல்லாரையும் அவரவர் காரியங்களில் நிலை நிறுத்தினார்.
த³ஶவர்ஷஸஹஸ்ராணி த³ஶவர்ஷஶதானி ச |
ராமோ ராஜ்யமுபாஸித்வா ப்³ரஹ்மலோகம்ʼ ப்ரயாஸ்யதி ||
“த³ஶவர்ஷஸஹஸ்ராணி” – பத்து ஆயிரம் வருடங்கள்,
“த³ஶவர்ஷஶதானி ச” – பத்து நூறு வருடங்கள்
இங்க நாரதர் வால்மீகி மகரிஷிக்கு கதை சொல்லிண்டு இருக்கார். அப்போ ராமர் தானே ஆட்சி பண்ணிண்டு இருக்கார். வால்மீகி லவ குஷால்க்கு சொல்லி, ராமர் அவாகிட்டேந்தே நேரா கேக்க போறார். அதனால “ப்ரயாஸ்யதி” – ப்ரஹ்ம லோகத்திற்கு போவார் அப்டினு future tense ல சொல்றார்.
இத³ம்ʼ பவித்ரம்ʼ பாபக்⁴னம்ʼ புண்யம்ʼ வேதை³ஶ்ச ஸம்மிதம் |
ய꞉ படே²த்³ராமசரிதம்ʼ ஸர்வபாபை꞉ ப்ரமுச்யதே ||
இந்த பவித்திரமான ராம கதை பாபத்தை போக்க கூடியது, புண்யத்தை கொடுக்க கூடியது “வேதை³ஶ்ச ஸம்மிதம்” – சாஷாத் வேத துல்யமானது. எவன் இந்த ராம சரிதத்தை படிக்கிறானோ அவன் எல்லா பாபங்களிலிருந்து விடுபடுவான்.
ஏததா³க்²யானமாயுஷ்யம்ʼ பட²ன் ராமாயணம்ʼ நர꞉ |
ஸபுத்ரபௌத்ர꞉ ஸக³ண꞉ ப்ரேத்ய ஸ்வர்கே³ மஹீயதே ||
யார் இந்த ராமாயணத்தை படிக்கிறார்களோ, அவன் இவ்வுலகில் தீர்காயுசோடு இருந்து, புத்ரர்களோடும், “सपुत्रपौत्रः” – புத்ரனுடைய பேரன், அதாவது கொள்ளுப்பேரன் வரை , “सगणः” – பந்துக்களோடும் ஸ்வர்கம் போவான்
பட²ன் த்³விஜோ வாக்³ருʼஷப⁴த்வமீயாத் |
ஸ்யாத் க்ஷத்ரியோ பூ⁴மிபதித்வமீயாத் ||
வணிக்³ஜன꞉ பண்யப²லத்வமீயாத் |
ஜனஶ்ச ஶூத்³ரோ(அ)பி மஹத்த்வமீயாத் ||
இதை படிக்கின்ற ப்ராஹ்மணன் “வாக்³ருʼஷப⁴த்வமீயாத் ” – நல்ல வாக்கு வன்மையை அடைவான். நல்ல பண்டிதனாக ஆயிடுவான்
“க்ஷத்ரியோ பூ⁴மிபதித்வமீயாத் ” – க்ஷத்ரியன் பூமிக்கு தலைவன் ஆவான். அதாவது ராஜாவாக ஆவான்
“வணிக்³ஜன꞉ பண்யப²லத்வமீயாத் ” – வைஸ்யர்கள், “பண்யம்” னா – வியாபாரம் . வியாபாரத்தில் நல்ல பலன் அடைவார்கள்
“ஜனஶ்ச ஶூத்³ரோ(அ)பி மஹத்த்வமீயாத் ” – இதை படிக்கும் சூத்திரர்கள் மஹத்வத்தை அடைவார்கள், அவர்களுக்குள் ஒரு தலைவராக இருப்பார்கள் .
அப்படி இந்த சங்க்ஷேப ராமாயணம் 100 ஸ்லோகம், இதுவே ராம கதை ,
“பட²ன் த்³விஜோ வாக்³ருʼஷப⁴த்வமீயாத்” – ராமாயணம் படிக்கறதுக்கு மேல வாழ்க்கைல வேற பெரிய சந்தோஷம் கிடைக்காது. நம்ப படிக்கறது நம்ப குழந்தைகளுக்கு சொல்றது ரொம்ப ஸ்ரேயஸை கொடுக்கும். விஸ்தாரமா முழு ராமாயணத்தை படிக்கணும் முடிஞ்ச வரைக்கும் படிக்கணும்.
————————————————————————————————
ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோகஸ் துஷ்ட꞉ புஷ்ட꞉ ஸுதார்மிக꞉ |
நிராயமோ ஹ்யரோகஶ்ச துர்பிக்ஷ பய வர்ஜித꞉ || 90 ||
அக் காலத்தில் ஜனங்கள் உடம்பில் மயிர் எழுந்து மனக் களிப்புற்றுத் தாம் விரும்பின விருப்பத்தை எல்லாம் அடைந்து
சந்தோஷத்துடனே உடல் பருத்து தர்மமான நடவடிக்கைகளை நடத்திக் கொண்டு
மன வருத்தமும் சரீரத்தில் ரோகமும் அற்றவராய் ஏழ்மைத் தனத்தினால் உண்டான பயமும் அற்றவர்களாக ஆவர்கள்
ப்ரஹ்ருஷ்ட –பெருமாள் பட்டாபிஷேகத்தால் அனைவருக்கும் ப்ரீதி அதிசயத்தைச் சொல்லி
ஸுதார்மிக꞉ |–கைங்கர்ய ப்ராப்தியைச் சொல்லி
நிராயமோ ஹ்யரோகஶ்ச -கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியைச் சொல்லி
துர்பிக்ஷ பய வர்ஜித–கைங்கர்யத்துக்கு அனுகூலமான ஸம்பத் ஸம்ருத்தியை வர்ணித்தார் ஆயிற்று
————-
ந புத்ர மரணம் கிஞ்சித் த்ரக்ஷ்யந்தி புருஷா꞉ க்வ சித் |
நார்யஶ் சாவிதவா நித்யம் பவிஷ்யந்தி பதி வ்ரதா꞉ || 91 ||
அக் காலத்தில் ஜனங்கள் தங்கள் புத்ர மரணத்தைப் பார்க்கப் போவது இல்லை
பெண்கள் தங்கள் பர்த்தாவின் மரணத்தைப் பாரார்கள்
அவர்கள் இடம் அன்புற்றவராய் இருப்பார்கள்
———-
ந சாக்னிஜம் பயம் கிஞ்சித் நாப்ஸு மஜ்ஜந்தி ஜந்தவ꞉ |
ந வாதஜம் பயம் கிஞ்சித் நாபி ஜ்வர க்ருதம் ததா || 92 ||
ந சாபி க்ஷுத்பயம் தத்ர ந தஸ்கர பயம் ததா |
அக்னியினாலாவது ஜலத்தினிலாவது காற்றினாலாவது ஜ்வரத்தினாலாவது பசியினிலாவது
திருடர்களினாலாவது காற்றினிலாவது எவர்க்கும் எவ்விதமான உபாதையும் உண்டாகாது
————
நகராணி ச ராஷ்ட்ராணி தன தான்ய யுதானி ச || 93 ||
நித்யம் ப்ரமுதிதாஸ் ஸர்வே யதா க்ருத யுகே ததா |
பட்டணங்களில் செல்வமும் -தேசங்களில் தானியமும் -ஸம் பூர்ணமாக உண்டாகப் போகிறது
ஜனங்கள் கிருத யுகத்தில் போலே இந்த த்ரேதா யுகத்திலும் ஸந்தோஷத்தை அடைவார்கள்
————
அஶ்வமேத ஶதைரிஷ்ட்வா ததா பஹு ஸுவர்ணகை꞉ || 94 ||
கவாம் கோட்யயுதம் தத்வா ப்ரஹ்ம லோகம் ப்ரயாஸ்யதி |
அஸங்க்யேயம் தனம் தத்வா ப்ராஹ்மணேப்யோ மஹா யஶா꞉ || 95 ||
ஸ்ரீ ராகவன் அநேக அஸ்வமேத -பஹு ஸ்வர்ணம் போன்ற யாகங்களையும் செய்து
பதினாராயிரம் கோடி கோ தானமும் செய்து பிராமணர்களுக்கு அளவற்ற த்ரவ்யங்களையும் கொடுத்து
பிறகு பர ப்ரஹ்ம ஸ்வரூபமான தன்னுடைச் சோதியை அடையப் போகிறான் –
————
ராஜ வம்ஶான் ஶத குணான் ஸ்தாபயிஷ்யதி ராகவ꞉ |
சாதுர் வர்ண்யம் ச லோகேऽஸ்மின் ஸ்வே ஸ்வே தர்மே நியோக்ஷ்யதி || 96 ||
ஸ்ரீ ராகவன் அநேகம் ஷத்ரியர்களுக்கு இராஜ்யத்தைக் கொடுத்து பரிபாலனம் செய்வார்
நால் வகை வர்ணத்தில் உள்ளாரை அந்த வந்த வர்ணத்துக்கு உரிய தர்மங்களில் நடத்தி வைப்பர்
———–
தஶ வர்ஷ ஸஹஸ்ராணி தஶ வர்ஷ ஶதானி ச |
ராமோ ராஜ்ய முபாஸித்வா ப்ரஹ்ம லோகம் கமிஷ்யதி || 97 ||
பதினோராயிரம் வருஷம் இவ்விதம் ஜனங்களை பரி பாலனம் செய்த பிறகு ஸ்ரீ வைகுண்டத்தை அடையப் போகிறார்
————-
பல ஶ்ருதிகள் :
இதம் பவித்ரம் பாபக்னம் புண்யம் வேதைஶ்ச ஸம்மிதம் |
ய꞉ படேத் ராம சரிதம் ஸர்வ பாபை꞉ ப்ரமுச்யதே || 98 ||
இந்த சங்க்ஷேப ராமாயணமாவது வேதம் போல் தன்னை நியமத்துடன் ஓதுமவர்களுக்குப் புண்ணியத்தை விளைக்கும்
பாபத்தைத் தொலைக்கும் பரி ஸூத்தியை யுண்டாக்கும்
இதை நியமத்துடன் ஓதுகின்றவன் ஸர்வ பாபங்களில் நின்றும் விடுபடுவார்
————–
ஏத தாக்யாநம் ஆயுஷ்யம் படேத் ராமாயணம் நர
ஸ புத்ர பவுத்ரஸ் ஸ கண ப்ரேத்ய ஸ்வர்க்கம் மஹீயதே –99-
ஆயஸ்ஸை வளர்க்கக் கடவதாய் ஸ்ரீ ராமனுடைய முற் கதைகளை உறைகின்ற இந்த பால ராமாயணத்தை நியமமாக ஓதுகிறவன்
புத்ர பவ்தர்களுடனும் பந்து மித்ரர்களுடனும் கூடி இங்கு இருக்கும் நாள் ஐஹிக போகங்களைப் புஜித்துப்
பின்பு ப்ரக்ருதி சம்பந்தத்தை விட்டு வைகுண்ட மா நரனுக்குச் சென்று அங்குள்ளவர்களாலும் பூஜிக்கப் படுவார்கள்
——————-
படன் த்விஜோ வாக்ருஷபத்வமீயாத்
ஸ்யாத் க்ஷத்ரியோ பூமிபதித்வமீயாத் |
வணிக்ஜன꞉ பண்யபலத்வமீயாத்
ஜனஶ்ச ஶூத்ரோऽபி மஹத்த்வமீயாத் || 100 ||
பிராமணன் இந்த சங்க்ஷேப ராமாயணத்தைப் பாடம் செய்தானாகில் ஸகல வேதார்த்தங்களையும் அறிய வல்லனாவான்
ஷத்ரியன் பெரிய ராஜ்யத்தை ஆள வல்ல சக்ரவர்த்தி ஆவான்
வைஸ்யன் வியாபாரத்தில் பெரிய லாபத்தை அடைவான்
நான்காம் வர்ணத்தவன் இத்தைக் கேட்டால் பெரும் தன்மையை அடைந்து புகழப் படுவான்
இத்யார்ஷே ஶ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே பாலகாண்டே ஶ்ரீராமாயண கதா ஸங்க்ஷேபோ நாம ப்ரதமஸ் ஸர்க꞉ ||
———–
ஸ்ரீ ராமபட்டாபிஷேகம்
வஸிஷ்டோ வாமதேவச்ச ஜாபாலிரத காச்யப:
காத்யாயனோ கௌதமச்ச ஸுயஜ்ஞோ விஜயஸ்ததா
அப்யஷிஞ்சந் நரவ்யாக்க்ரம் ப்ரஸன்னேன ஸுகந்தினா
ஸலிலேன ஸஹஸ்ராக்ஷம் வஸவோ வாஸவம் யதா –53
ஆயுஷ்ய மாரோக்யகரம் யசஸ்யம் ஸௌப்ராத்ருகம் புத்திகரம் சுபம் ச
ச்ரோதவ்ய மேதந்நியமேன ஸத்பிராக்க்யான மோஜஸ்கரம் ருத்திகாமை:54
பாராயண ஸமர்ப்பணம்
ஸ்வஸ்தி ப்ரஜாப்ப்ய: பரிபாலயந்தாம் ந்யாய்யேன மார்க்கேண மஹீம் மஹீசா:
கோப்ராஹ்மணேப்ப்ய: சுபமஸ்து நித்யம் லோகா: சமஸ்தா: ஸுகினோ பவந்து –55
ஸ்ரீ ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: –56
காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி –57
அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம் வத
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ –58-
———–
ஸ்ரீ எனும் திருநாமம் ஶ்ருணாதி என்பதைக் காட்டும்.
இங்கே ஹிம்ஸை என்ற சொல் போக்குதல் அல்லது அழித்தல் என்ற அர்த்தத்தில் வந்துள்ளது.
அதனால், ஶ்ருணாதி என்பது அழிக்கிறாள் – அதாவது எல்லா குற்றங்களையும் போக்குகிறாள் என்பதைக் காட்டுகிறது.
ஶ்ரூ-விஸ்தாரே என்பது மிகுதிப்படுத்துகிறாள் என்பதைச் சொல்லுகிறது.
இதிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ எனும் திருநாமம் ஶ்ரூணாதி என்பதைக் காட்டும்.
ஶ்ரூணாதி என்பது விஸ்தரிக்கிறாள் – அதாவது நல்ல குணங்களை அதிகரிக்கச் செய்கிறாள் என்பதை காட்டுகிறது.
பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே |
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஶ்ச தே ||
——–
மார்க்கா லதா கண்டக ஸம்பூர்ணா: – அதாவது,
காடென்பது செடிகளும் முட்களும் நிறைந்த பாதையைக் கொண்டது.
அங்கிருப்பது துக்கமுடைத்து (அத: வநம் துக்கம்), என்று சொல்லி அவளைத் தடை செய்யும் போது,
பிராட்டியின் வார்த்தை:
“ஓ! இராமனே! நான் வனத்தில் உன் முன்னே நடந்து செல்வேன் – தே கமிஷ்யாமி அக்ரத:.”
அது மட்டுமல்ல. அப்படிச் செல்லும் போது அந்தப் பாதைகளில் உள்ள புற்களையும் முட்களையும்
தலைமிதி யுண்ணும்படி செய்து (குஶ கண்டகாந் ம்ருதந்தி) உன் திருவடிகளுக்கு நான் வழி வகுப்பேன் என்றாள்.
அவள் சொன்ன பாதையும் சாதாரண காட்டு வழியன்று.
அவள் பாதையென்று கூறியது தர்மத்தின் வழி.
அதில் இராமனுக்கு அவள் என்றும் துணையாய் இருப்பாள் என்பதை ஸஹ தர்மசரீ தவ என்றானிறே ஜனகனும்.
இராமாயணத்தில் தொட்டவிடமெங்கும் எம்பெருமான் காட்டும் தர்மம் சரணாகதி தர்மம் என்று
ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
ஆக பிராட்டி அவனுடன் காட்டுக்குச் சென்றது அந்தச் சரணாகதி தர்மத்தைக் காப்பாற்றவே.
அதைக் கொண்டு நோக்கும் போது, முன்னே சென்று அதைக் கடைப்பிடிப்பேன் என்றதையே
செய்திருக்கிறாள் என்பது தெளிபு.
தனிச்சிறையில் விளப்புற்ற கிளிமொழியாள் என்றார் ஆழ்வார்.
சிறை இருந்தவள் என்றார் பிள்ளை உலகாரியனும்.
அதற்காக, இராமனுக்கும் முன்னாக இலங்கைக்குச் சென்றதையே அவள் உமக்கு முன் நான் நடப்பேன் என்றது.
அப்படி அவள் எம்பெருமானுடைய தர்ம மார்க்கத்தில் போகும் போது, இடையில் இருக்கும்
முள்ளும், புல்லும் அவன் திருவடிக்கு – அதாவது அவன் திருவடியில் செய்யும் சரணாகதிக்கு
தடையாம்படி இருக்கும் என்றும், அதை தலை மடியச் செய்வதே தன் கார்யம் என்றும் சொன்னாள்.
இங்கே புல்லும், முள்ளுமாய் இருப்பது என்று அவள் சொன்னது அந்த ராவணப் பயலையன்றோ.
ராவணன் இவ்வுலகிற்கு ஒரு முள்ளாய் இருந்தான் என்று வேண்டித் தேவர் இரக்கவும், அவனும் விரும்பிப் பிறந்ததுவும்.
அவன் புல்லாயும் இருக்கிறான் என்பதாலேயே பிராட்டி த்ருணம் அந்தரத: என்று அவனுக்கும் தனக்கும் இடையே ஒரு புல்லை இட்டுப் பேசியது.
த்ருணமந்தர: க்ருத்வா என்று அஜ்ஞனாயிருக்கிற உன்னை, த்ருணமிவ லகு மேநே என்று
இத்ருணத்தோ பாதியாக நினைத்திருப்பது என்று பொகட்டாளாகவுமாம் என்றார் பெரியவாச்சான் பிள்ளை.
இப்படி புல்லாயும், முள்ளாயும் இருக்கும் அவனையும் அவன் அஹங்காரத்தையும் தலை மடியச் செய்து
அவனை இராமனின் திருவடியில் சேர்ப்பித்து, அத்திருவடிகளுக்கு ஒரு நோவும் வாராதபடி,
அதாவது நிறம் பெறச் செய்வேன் என்று பிராட்டி எம்பெருமானுக்கு உரைத்தாள்.
அப்படியே சிறை இருந்தும், மித்ரம் ஔபயிகம் கர்த்தும் என்றும்
தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி என்றும் உபதேசித்தும் தலைக்கட்டினாள்.
ஆனால் அவன் திருந்தாதொழிந்தது அவனுடைய பாபப்ராசுர்யமிறே என்றார் பிள்ளை லோகாசார்யர்.
இப்படி இலங்கைக்கு முன்னே நடந்து சென்றது மட்டுமன்று.
பெருமாள் “நாம் அதிகரித்த கார்யத்துக்கு ஸஹகாரியாக வேணுமே” என்ன,
அதிலும் அநுஷ்டானத்திலும் முற்பாடை என்கிறான் (ஜனகன்) என்றார் பெரியவாச்சான் பிள்ளை.
அவனுடைய தர்மத்துக்கு அவள் ஸஹகரிக்கையாவது, சரணாகத ரக்ஷணத்வத்தில்
அவனைக் காட்டிலும் முன்னிற்பவளாய் இருப்பாள் என்றது.
மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந என்றவனைக் காட்டிலும்,
முன்னின்று
பாபாநாம் வா ஶுபாநாம் வா என்று சரணம் அடையாத ராக்ஷஸிகளையும் ரக்ஷித்தவள் பிராட்டி.
இதை ஸ்ரீகுணரத்நகோசத்தில், பட்டரும்
மாதர் மைதிலி என்ற ஶ்லோகத்தில் அபராதம் செய்த கை உலராமலிருந்த ராக்ஷஸிகளை ரக்ஷித்த
உன்னால் சரணம் என்று சொன்ன பின் ரக்ஷித்த ராம கோஶ்டி சிறிதாக்கப்பட்டது என்றார்.
இதுவே அவள் காட்டிலே எம்பெருமானுக்கு முன்னே நடந்த நடையும், நடந்து கொண்டமையுமாம்.
————————————————————————————
ஸ்ரீ ராமசந்த்ரனின் 16 கல்யாண குணங்கள்
ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்ரீ நாரத மகரிஷி இடம் -கோநு அஸ்மின் சாம்ப்ரதம் லோகே –குணவான் -வீர்யவான் –16 கல்யாண குணங்கள்
ஸ்ரீ ராம சந்தரன் -குணா பரிவாஹாத்ம நாம் ஜன்ம நாம் –
கோனு அஸ்மின் சாம் ப்ரதம் லோகே குணவான் வீர்யவான் |
தர்மக்ஞ்ச: க்ரிதஞ்ச: சத்யவாக்ய: த்ரிடவிரத: ||–2-
அஸ்மின் லோகே – இந்த உலகத்தில்
சாம்ப்ரதம் லோகே – தற்காலத்தில்
தர்மக்ஞஸ்ச’ – தர்மங்களை அறிந்தவர்.
‘க்ருதக்ஞஸ்ச’ – செய்த நன்றியைப் பாராட்டுபவர்.
ஸத்யவாக்ய:’ – பொய்யே பேசாதவர். எப்பொழுதும் மனோ, வாக், காயத்துனால உண்மையே பேசுபவர்.
சாரித்ரேண ச கோ யுக்த: சர்வ புதேஷு கோ ஹித: |
வித்வான் க: க: சமர்தஸ்ச: ஏக பிரிய தர்சன: ||–3-
——–
ஆத்மவான் ஜிதக்ரோத: த்துதிமானு அன் அசூயக: |
கஸ்ய பிப்யதி தேவா: ச ரோஷஸ்ய சங்க்யுகே ||–4-
கஸ்ய பிப்யதி தேவா: ச ரோஷஸ்ய சங்க்யுகே–யுத்தத்தில் எவர் கோபம் கொண்டால் தேவர்கள் கூட
பயப்படுவாளோ அப்பேற்பட்ட பராக்கிரமம் – சமுத்திர ராஜனே பயந்தான் அன்றோ !
—————
1- க குணவான் –
வசீ வதான்ய குணவான் ருஜூ சுசி –சமஸ்த கல்யாண குணாம் ருதோததி–ஸ்தோத்ர ரத்னம் -18-
குணவான் -சீலவான் என்றபடி –
சீல க ஏஷ தவ ஹந்த –அத்ர அவதீர்ய ந நு லோசந கோசர பூ -அதிமாநுஷ ஸ்தவம் -10-
பிறந்தவாறும் -உருகும் படி திருவவதரித்த சீல குணம் -ஏழை எதலன் கீழ் மகன் என்னாது இரங்கி –சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –
தத்ர ராஜா குஹோ நாம் ராமஸ்ய ஆத்ம சமஸ் சகா –தம் ஆர்த்தஸ் சம் பரிஷ்வஜ்ய குஹோ ராகவம் அப்ரவீத் –
குகனொடும் ஓர் ஐவரானோம் முன்பு பின் குன்று சூழ்வான் -மகனொடும் ஓர் அறுவரானோம்
எம்முழை யன்பின் வந்த அகனமர் காதலையந நின்னோடும் எழுவரானோம் புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் தந்தை -கம்பர்
நிஷாதா நாம் நே தா கபி குலபதி காபி சபரீ-பெருமாள் ஸ்ரீ சபரி கையாலே அமுது செய்து அருளினார்
ரகுகுல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் -சபர்யா பூஜிதஸ் சமயக் ராமோ தசரதாத்மஜா —என்னும்படி
வேடுவிச்சியாய் வைத்தே குரு சுசுருஷையிலே பழுத்து ஜ்ஞாநாதிகையாய்-தன நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம்
இங்குத்தைக்கு என்று சஞ்சயித்துக் கொண்டு வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி தன ஆதார அனுகுணமாக
தன கையாலே அமுது செய்யப் பண்ண அதி சந்துஷ்டராய் அமுது செய்தார் –
நஹி வர்த்தே ப்ரதிக்ரஹே-என்று குகன் இடம் மறுத்த பெருமாள் -இங்கே அர்ச்சி தோஹம் த்வயா பக்த்யா -உகந்து இவள் சமர்ப்பனையை ஏற்றுக் கொண்டார்
கபந்தன் பெருமாள் இடம் -ஸ்ரமணீ சபரீ காகுத்ஸத சிரஞ்சீவிநீ த்வாம் து தர்மே ஸ்திதா நித்யம் –என்றும்
ஸ்ரமணீம் தர்ம நிபுணாம் அபி கச்ச –தர்மம் என்றது குரு சுஸ்ருஷ்யையே
பெருமாளும் சபரி இடம் -கச்சித் தேகுரு சுஸ்ருஷா சபலா சாருபாஷிணி-இந்த தர்மம் இருந்ததால் தான் சபரி இடம் அமுது கொண்டு அருளினார் பெருமாள்
பகவதி பரத்வாஜே புக்திஸ் ததா சபரி க்ருஹே -தேசிகன் –
கோயம் குண கதரகோடிகத கியான் வா கஸ்ய ஸ்துதே பதம் அஹோ பத கஸ்ய பூமி -அதி மானுஷ ஸ்தவம் -27
-திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் -பஞ்சு எனச் சிவக்கும் மென்கால் பாவையை பிரித்த பாவி வஞ்சன்
-ராவணனை இன்று போய் நாளை வா -என்ற குணமும் சீலம்
-கச்சா நுஜா நாமி ரணார் திதஸ் தவம் பிரவிச்ய ராத் ரிஞ்சிர ராஜ லங்காம் ஆச்வாச்ய நிர்யாஹி –
சீலவத்தை யாகிறது அபிஷேக விக்னம் பிறந்தது என்று வெறுப்பு இன்றியே -வன வாஸோ மஹோ தய -என்று காடு ஏறப் புறப்பட்டுப் போவது
-ஆவாசம் த்வஹமிச்சாமி -என்று ரிஷிகள் பக்கலிலே தாழ நிற்பது
-கிங்கரௌ சமுபஸ்திதௌ-எனபது-ஜன்ம வருத்தங்களில் குறைய நிற்கிறவர்களை -உகந்த தோழன் எனபது
-இப்படிகளாலே சீலவதியை மூதலித்தது-அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா –
———-
2-க வீர்யவான்
வீர்யம் சௌர்யம் பராக்கிரமம் -சௌலப்யத்தை அனுசந்தித்து உருகி ஈடும் எடுப்பும் இல்லாத மேன்மையை அனுசந்தித்து தரிக்க அடுத்த குணம் இது
-ஜய ஜய மஹா வீர -வீர ராகவன் –
அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
சத்ரோ ப்ரக்க்யாத வீர் யஸ்ய ரஜ்ஞ நீயச்ய விக்ரமை -யுத்த -106-6-ராவணன் வார்த்தை
சின்னம் பின்னம் –ராம சஹஸ்ராணி –காகுத்ச்தம் ஏகமேவ
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கறந்து உள்ளும் தோறும் தித்திப்பான் – –உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே –
வேகம் மிக்கவாறே இந்த்ரிய சம்யோகத்துக்கு இடம் இல்லாத படி யாகையால் ரூப க்ரஹணம் அரிதாகி உருக்கெட வாளி பொழிந்த ஒருவன் என்று அன்வயம்
வ்யாபரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்கு பிடி படாது ஒழிகை –
கிள்ளிக் களைந்தானை –தலை பத்து உதிர ஒட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் –
வாலீ வானர புங்கவ –சர ஏணை கேந வானர -அசஹாய சூரன் -சதுர்தச சகஸ்ராணி — ஏகச்ச ராமோ தர்மாத்மா கதம் யுத்தம் பவிஷ்யதி
மரணாந்தானி வைராணி நிர்வ்ருத்தம் -ந பிரயோஜனம் -க்ரியதாம் அஸ்ய சம்ச்காரோ மமாப்யேஷ யதா தவ
-விபீஷணோ வா ஸூக்ரீவ யதி வா-இவன் விலக்காது ஒழிவான் என்பதே நாம்பார்த்த பிரயோஜனம்
ரஷ்யா அபேஷம் ப்ரதீஷதே –
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்கிரமம் -தான் விகாரம் அடையாமல் அனைவரைகளையும் விகாரம் அடையச் செய்பவன் வீர்யவான் –
———-
3-க தர்மஜ்ஞ
தர்மம் அறியா குறும்பன்
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருத –கருணா காகுத்ச்த
காருண்யம் கருணா க்ருணா க்ருபா தயா அநு கம்பா ஸ்யாத் அனுக்ரோசோபி-ஏழு பதங்கள் பர்யாயம்
துக்கத்தில் நடுங்குபவனை கண்டு தானும் நடுங்குதல் அனுகம்பா -அழுபவனைக் கண்டால் அழுபவன் அனுக்ரோசம்
வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித உத்சவேஷூ ச சர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி -அயோத்யா -2-40-
விகர்த்தா -சகஸ்ர நாமம் –
பிராணா தார்த்தி ஹரன் -கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசினாம் ருணம் ப்ரவ்ருத்த மிவ மே ஹ்ருதயாத் நாப சர்ப்பதி —
இத்யேவ மார்த் தஸ்ய ரகுப்ரவீர ச்ருத்வா வாஸோ வால்யநுஜஸ்ய தஸ்ய -சஞ்ஜாத பாஷ்ப பரவீர ஹந்தா ராமோ முஹூர்த்தம் விமாநா பபூவ
–ஸூ க்ரீவன் அழுகை ஓய்ந்தபின்பும் பெருமாள் கண்ணீர் பொழிந்தார்-மதி எல்லாம் உள் கலங்கி நின்றார்
இயம் ஸீதா சஹ தர்ம சரீ தவ –நமது கல்யாணத்தில் இமாம் கன்யாம் தர்ம பிரஜார்த்தம் வ்ருணீ மஹே-
விதி தஸ் ச ஹி தர்மஜ்ஞஸ் சரணாகத வத்சல-சம் ரஷைணைக வ்ரதி தரமோ விக்ரஹவான் –
ஆவியைச் சனகன் பெற்ற வன்னத்தை அமிழ்தின்வந்த தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும் செய்கை –
வதார்ஹம் அபி காகுத்ச்த க்ருபயா பர்யபாலயத் –கிருபா -பிராட்டிக்கு வாசகம் -லஷ்ம்யா சஹ ஹ்ருஷிகேசோ தேவ்யா காருண்யரூபயா
-அனுக்ரஹமயீம் வந்தே நித்யம் அஜ்ஞாத நிக்ரஹம் -இவள் சந்நிதியாலே காகம் தலைப் பெற்றது -அது இல்லாமையாலே ராவணன் முடிந்தான் –
———-
4-க க்ருதஜ்ஞ-
கருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு –
நின்று தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்
வெறிதே அருள் செய்பவர் -மனிதனாக வந்த இடத்தில் உண்ட குணம் அன்றோ
ஸூ க்ரீவன் அனுப்பியே திருவடி
பம்பா தீரே ஹ நு மதோ சங்கதோ வாநரேண ஹ -இந்த செயலுக்கு நன்றி பாராட்டியே லோக நாத புரா பூத்வா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி
-ஸூக்ரீவம் சரணம் கத –
விபீஷணனை ராவணன் குல பாம்சனம் என்றான் பெருமாள் இஷ்வாகு வம்சராக நினைத்து வார்த்தை அருளிச் செய்தார் –
ஆக்க்யாஹி மம தத்வேன ராஷசா நாம் பலாபலம்-செல்வா விபீடணற்கு வேறாக பல்லானை
க்ருதம் ஜா நாதி இதி க்ருதஜ்ஞ-சாஸ்திரமும் விதியாதே நாமும் அறியாதே இருக்கிற வித்தை ஸூ க்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் என்னில்
நாம் அன்று ஈஸ்வரன் என்று கேட்டு இருக்கையாய் இருக்கும் –யாத்ருச்சிக்க -ஆநு ஷங்கிக-ப்ரா சங்கிக
————-
5-க சத்ய வாக்ய
ஷமா சத்யம் தமச் சம –சத்யம் பூதஹிதம் ப்ரோக்தம் -சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ன் ப்ரூயாத் சத்யம் அப்ரியம்
வீதஹவ்யன் -ப்ருகு மகரிஷி இடம் ஒழிந்த கதை -நே ஹா அஸ்தி ஷத்ரிய கச்சித் சர்வே ஹீமே த்விஜாதய
தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம் -ஸூ ஷ்ம பரம துர்ஜ்ஞேயஸ் சதாம் தர்ம பிலவங்கம
தத் ப்ருஹி வசனம் தேவி ராஜ்ஞோ யதபி காங்ஷிதம் -கரிஷ்யே பிரதிஜாநேச ராமோ த்விர் நாபி பாஷதே –கைகேயி இடம் பெருமாள் வார்த்தை
அந்ருதம் நோக்த பூர்வம் மே நச வஷ்யதே கதாசன -ஏதத் தே பிரதிஜா நாமி சத்யே நைவச தே சபே -கிஷ்-7-22- ஸூக்ரீவன் இடம் /மீண்டும் கிஷ்-14-14
–முன்பே வரப்ரதானத்தைப் பண்ணி வைத்து இப்போதாக மறுக்க ஒண்ணாது என்று ஆபாசமான சத்ய தர்மத்தைப் பற்றி நின்று
-ராமோ விக்ரஹவான் தர்ம –என்கிற பெருமாளோடு கூடி வாழ இருந்த பேற்றை இழந்த தசரத சக்கரவர்த்தியை போலே
இங்கே இல்லை என்ற தாதி பாண்டன் தனது தயிர் தாழி உடன் மோஷம் பெற்றான்
சத்யேன லோகன் ஜயதி தீ நான் தா நேன ராகவ குரூன் சுச்ரூஷயா தீரோ தாநுஷோ யுதி சாத்ரவான் -சத்ய வாக்காலே சகல லோகங்களையும்
தானிட்ட வழக்காக கொண்டார் பெருமாள் இதனாலே மயா த்வம் சமநுஜ்ஞாதோ கச்ச லோகன் அனுத்தமான் –
மா ச லஷ்மண சந்தாபம் கார்ஷீர் லஷ்ம்யா விபர்யயே-ராஜ்யம் வா வனவாசோ வா -வனவாசோ மஹோதய –அயோத்யா -22-29-
-வனவாசமே உகந்தது என்றபடி
ராஜ்யாத் பரம்சோ வநே வாஸோ நஷ்டா ஸீதா ஹதோ த்விஜ-யீத்ருசீயம் மமா லஷ்மீ நிர்தஹேதபி பாவகம் -ஆரண்ய -67-25-என்று
புலம்புவது எவ்வாறு பொருந்தும் பிராட்டி பிரிந்து மகாராஜர் இழந்த துக்கத்தால் அன்றோ இந்த வார்த்தை –
———-
6- க த்ருட வ்ரத–திடமான வரதம் கொண்டவன்
சரணாகத வத்சல்யன் –
நிஷ் கிஞ்சன ஜன ஸ்வயம் ரஷா தீஷா சமாதிக சமிந்தானயசசே -சர்வ அவஸ்த ச்க்ருத் பிரபன்ன ஜநநா சம்ரஷணை கவ்ரதீ
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம்வா சீதே ச லஷ்மணாம் ந து பிரதிஜ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத -ஆரண்ய -10-19-
சத்ரு சஞ்சா நுரூபஞ்ச கு லஸ்ய தவ சாத்மன-ச தர்ம சாரிணீ
மே த்வம் பிராணே ப்யோபி கரீயசீ -10-22-
கபோத உபாக்யானம் -வ்யாக்ரவா நர சம்வாதம்
மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேவத கர்ஹிதம்
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வரதம் மம –
————-
7–சாரித்ரேண ச கோ யுகத –
சாரித்ரம் -நல் நடத்தை -சரித்ரம் நீண்டு சாரித்ரம்
ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதமஜாம்
இமௌ ஸ்ம முனிசார்தூல -கிங்க ரௌ சமுபஸ்தி தௌ ஆஜ்ஞா பய யதேஷ்டம் வை சாஸ நம் கரவாவ கிம்
ந மே ஸ்நானம் பஹூ மதம் வஸ்த்ராணி ஆபரணாநி ச -தம் வி நா கைகயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணம்
பரத்வாஜச்ய சாசநாத் –
பித்ருவசன நிர்தேசாத் –
விச்வாமித்ரஸ்ய வசனாத் –
அகஸ்த்ய வசனாத் -சைவ –
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே யாள நீ போய்த் தாழிரும் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற் கொண்டு
பூழி வெங்கான நண்ணிப் புண்ணியப் புனல்களாடி ஏழ் இரண்டு ஆண்டின் வா வென்று
இத்தை மீறி நடக்க உபதேசித்த ஜாபாலி முனிவர் வசனம் கேட்காத பெருமாள்
மாத்ரு தேவோபவ பித்ரு தேவோ பவ –
ந தேம்பா மத்ய மாதாத கர்ஹி தவ்யா கதஞ்சன -தாமேவ இஷ்வாகு நாதஸ்ய பர தஸ்ய கதாம் குரு –
கௌசல்யா ஸூ ப்ரஜாராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே -உத்திஷ்ட நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவமாஹ் நிகம் -நித்ய கர்மானுஷ்டங்களில் நிஷ்டன்
ஆச்வாசிதோ லஷ்மணேன ராமஸ் சந்த்யாம் உபாசத ஸ்மரன் கமலா பத்ராஷீம் சீதாம் சோகாகு லீக்ருத -பிராட்டியை பிரிந்த காலத்திலும்
அக்னிம் சம்சமயது ஆர்ய -ஹோம புகை கண்டு பரதன் அடையாளம் காணாமல் இருக்க அக்னியை அனைத்து விடும்படி சொல்லுகிறார் பெருமாள்-
வேல் வெட்டிப் பிள்ளைக்கு பிள்ளை யருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-
சாரித்ரம் தெய்வ பக்தி -சஹ பத்ன்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -அயோத்யா -6-1-
த்யாயன் நாராயணம் தேவம் –மேலேயும் உண்டு
லப்த்வா குலதனம் ராஜா லங்காம் ப்ராயாத் விபீஷண-யுத்த -131-85-
ஸ்ரீ ரெங்கே ந்தோ பதகி சலயே–ஹேமாம் போஜைர் நிபிட நிகடே ராம சீதோ ப நீதை-பெருமாள் அர்ச்சனை செய்த புஷ்பங்கள் இன்றும்
பெரிய பெருமாள் திருவடிகளில் காணலாம் பட்டர்
சர்க்காப்யாச விசாலாய நிஜதியா -ஸ்லோஹத்தில் ப்ரஹ்மாவால் ஆராதிக்கப் பட்டவன் -அதற்கு மேலே
ம நு குல மஹீ பால –மைதிலீ ரமணவபுஷா ஸ்வேன ச்வார்ஹாணி ஆராத நானி அஸி லம்பித்த -ஸ்ரீ ஸீதா பெருமாள் ஆராதித்து பின்பு
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு கிடைத்ததை மேலே பட்டர் உத்தர சதகத்தில் அருளுகிறார்
சாரித்ரம் ஒரே தாரம் கொண்டவன் என்றுமாம்
——-
8-சர்வ பூதேஷு கோ ஹித
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளான் பால் –
சிலரை ஸூ கிகலாகவும் சிலரை துக்கி களாகவும் ஸ்ருஷ்டித்தால் ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராதோ என்னில்
-கர்மம் அடியாகச் செய்கையாலும் மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறியிட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே ஹித பரநாகச் செய்கையாலும் வாராது
பெறலரும் திருப் பெற்று உதவி உதவிப் பெரும் திறன் நினைந்திலன் சீர்மையினன் தீர்ந்தனன் –
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம் மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான் -ஸூ க்ரீவனுக்கு ஹிதம் செய்யவே இளைய பெருமாளை அனுப்பினான்
ஹரிர் துக்கானி பக்தேப்யோ ஹித புத்த்யா கரோதி வை —சாஸ்திர வாக்யம் அன்றோ –
———-
9-க வித்வான் –
வேத வேதாங்க தத் வஜ்ஞ தனுர் வேதேச நிஷ்டித சர்வ சாஸ்த்ரார்த்த தத்ளஜஞ ச்ம்ருதிமான் பிரதிபானவான் -என்கிறார் நாரதர்
வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்த யுன் பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ ஓதங்கள் கடல் அன்றி
ஒன்றினோடு ஓன்று ஒவ்வாப் பூதங்கள் தோறும் உறைந்தால்
அவை யுன்னைப் பொறுக்குமோ –விராதன் ஸ்தோத்ரம்
ஆதிப் பிரமனும் நீ ஆதிப் பரமனும் நீ ஓதி யுறு பொருளுக்கு அப்பால் உண்டாயினு நீ சோதிச் சுடர்ப் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற
வேத முரை செய்தால் வெள்காரோ வேறுள்ளார்-கவந்தன் ஸ்தோத்ரம்
வேத வேத்யே பர் பும்சி ஜாதே தசரதாத்மஜே
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்கிரமம் வசிஷ்டோபி மஹா தேஜா யேசேமே தபசி ஸ்திதா –
வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம்
இருந்தாலும் ஆத்மானம் மானுஷம் மத்யே ராமம் தசரதாத்மஜம்
வித்வான் -சர்வஜ்ஞன் -என்றபடி -உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி -கருதரிய யுயிர்க்கு யுயிராய் கரந்து எங்கும் பரந்து
உறையும் ஒரு தனி நாயகம் என்றால் உன் பெருமைக்கு அளவாகுமோ
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாம் எதத கர்ஹிதம் -குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் -என்பதாலும் வித்வான் இவனே என்றதாயிற்று
———
10-க சமர்த்தா
தீன பந்து தீன தயாளு -என்பதாலே ஸூ க்ரீவன் உடன் நட்பு கொண்ட சமர்த்தன் -இளையவர்கட்கு அருளுடையாய் இராகவனே
–தம்பிகள் மட்டும் அல்ல -இளைத்தவர்கள் என்றுமாம்
சிலையும் கணையும் துணையாக சென்றான் வென்றிச் செருக்களத்து
-அங்குல் யகரேண தான் ஹன்யாம் இச்சன் ஹரி கணேஸ்வர
அசமர்த்தம் விஜா நாதி மா மாயம் மகராலய -தனது திரு வாக்காலே அசமர்த்த புருஷனாக கட அரசன் கருதினான் என்று சொல்லும் படி
சரணாகதியை விளக்கி அருளவே சமுத்திர அரசன் இடம் சரண் அடைந்தார் அன்று ஈன்ற கன்றான விபீஷண ஆழ்வான் சொல் படியே பண்ணி அருளிய சமர்த்தன்
11- ஏக ப்ரிய தர்சன க —
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமே
ரமயதி ராமன் -சந்த்ரகாந்தாநநாம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம் ரூபா ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்
ந ததர்ப்ப சமாயாந்தம் பச்யமாதோ நராதிப -அயோத்யா -3-28-
சந்த்ரனை விட காந்தி உள்ளவன் -பும்ஸாம் -தண்டா பூபிகா நியாயம் -அனைவருக்கும்
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் -கம்பர்
வாராக வாமனனே அரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக வாதரம் செய்வன் -திருவரங்கத்தந்தாதி
பெண்டிரும் ஆண்மை வெக்கிப் பேதுரு முலையினாள்–சீவக சிந்தாமணி
கௌசல்யா ஸூ பிரஜாராமா -முனிவன் உண்ணப் புக்கு வாயை மறப்பாரைப் போலே தான் அதிகரித்த காரியத்தை மறந்து பெற்ற வயிற்ருக்குப் பட்டம்
கட்டுகிறவனாய் ஒரு திருவாட்டி பிள்ளை பெற்ற படி என்னே -என்று ஸ்ரீ கௌசல்யாரைக் கொண்டாடுகிறான் -வடிவு அழகு படுத்தும் பாடு
தோள் கண்டார் தோளே கண்டார் தோடு கழல் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அக்தே வாள் கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார் ஊழ் கண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார் –
வா போகு வா வின்னம் வந்து ஒரு கால் கண்டு போ –
ரூப சம்ஹ நனம் லஷ்மீம் சௌகுமார்யம் ஸூ வேஷதாம் தத்ருசுர் விச்மிதாகாரா ராமஸ்ய வனசாரிண-வன வாசின –
தருனௌ ரூபா சம்பன்னௌ ஸூ குமாரௌ மஹா பலௌ புண்டரீக விசாலாஷௌ சீர கிருஷ்ணா ஜி நாம்பரௌ
கந்தர்வ ராஜ ப்ரதிமௌ பார்த்திவவ் யஜ்ஞா நான்விதௌ-சூர்பனகை
ஓவியத் எழுத ஒண்ணா உருவத்தாய் -வாலி
ஆயதாச்ச ஸூ வ்ருதாச்ச பாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா -திருவடி
மஞ்செனத் திரண்ட கோலமேனிய மகளிக்கு எல்லாம் நஞ்செனத் தகையவாகித் நளிரிரும் பனிக்கு தேம்பாக்க கஞ்ச மொத்த லர்ந்த கண்ண -கம்பர்
தம் பத்ம தள பத்ராஷம் சிம்ஹ விக்ராந்த காமி நம் தன்யா பச்யந்தி மே நாதம் க்ருதஜ்ஞம் ப்ரியவாதி நம் –வால்மீகி
பத்ம தளம் பத்ம பத்ரம் இரண்டும்
செங்கமலத் தலர் போலும் கண் கை கால் செங்கனிவாய் அக்கமலத்திலை போலும் திருமேனி யடிகளுக்கே
அஷம் இந்த்ரிய காயயோ-கண்ணுக்கும் வடிவுக்கும்
சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் -ஆண்டாள்
திரு உள்ளத்து அழகைக் காட்டி திருத்தவே அணை கட்டி இலங்கைக்கு வந்தார் பெருமாள் -தன பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் அன்றோ
ஏக ப்ரிய தர்சனன் -இனிமையாக கண்டு கொண்டு இருக்கத் தக்கவன்
யச்ச ராமம் ந பச்யேத் து யஞ்ச ராமோ ந பச்யதி நிந்தி தஸ் ஸ வஸே லோகே ஸ்வாத் மாப்யே நம் விகர்ஹதே –
சபரி -சஷூஷா தவ சௌம்யேன பூ தாஸ்மி ரகு நந்தன –
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய் –
விரும்பிக் காணத் தக்க அழகன் என்றும் அன்பர்களை விரும்பிக் காண்பவன் என்றுமாம் –
12- ஆத்மவான் க –
ஆத்மா ஜீவே -த்ருதௌ தேஹே சவ பாவே பரமாத்மநி –நிகண்டு -ஜீவாத்மா -தைரியம் -உடல் -இயல்பு பரமாத்மா
பிதரம் ரோசா யாமாச -சகல ஆத்மாக்களுக்கும் சேஷி என்றுமாம்
இமௌ ஸ்ம முனிசார்தூல கிங்கரௌ சமுபஸ்திதௌ -ஆஜ்ஞா பய யதேஷ்டம் வை சாஸ நம் கரவாவ கிம் –
கிங்கரன்-என் செய்வேன் என் செய்வேன் -என்னுபவன்-என் செய்தான் என் செய்தான் -என்னப் படுபவன்
பிசாசான் தாநவான் யஷான் ப்ருதிவ் யாஞ்சைவ ராஷசான் -அங்குல் யக்ரேண தான் ஹன்யாம் இச்சன் ஹரி கணேஸ்வர
பரதச்ய வச குர்வன் யாசமா நஸய ராகவ -ஆத்மானம் நாதி வர்த்தே தாஸ் சத்ய தர்ம பராக்கிரம -தேவும் தன்னையும் -திருவாய் மொழி
தேவி -ஐஸ்வர்யம் -தன்னையும்-ஆஸ்ரித பாரதந்த்ர்யம்
ஆத்மா பூதம் பரதம் நாதி வர்த்ததே -பூர்வர் -பட்டர் நீரான தன்மை யாகிறது ஆஸ்ரித பாரதந்த்ராகை
-உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான தன்மையை இழவாதே கொள்ளும் என்கிறான் என்று -இத்தால் பக்த பராதீனன் என்கிறது
பரமாத்மாவின் தன்மையையும் காட்டிய அவதாரம் அன்றோ
ஸ ஹி தேவை ருதீர்ணஸய ராவணஸ்ய வதார்த்திபி -அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்க்னே விஷ்ணுஸ் சநாதன
மயா த்வம் சம நு ஜ்ஞாதோ கச்ச லோகா ந நுத்தமான் –
———
14- க த்யுதிமான்
13-கோ ஜிதக்ரோத —16-கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோ ஷஸ்ய சம்யுகே -சேர்த்து பின்னர் பார்ப்போம்
த்யுதி -ஒளி-ராம திவாகரா -ராம ரத்னம் -மணியே மாணிக்கமே -அனந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா –
அனந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண பிரபா யதா —
நித்ய அநபாயினி-கிருஷ்ணா ஜிநேந சம்வ்ருண் வன் ச்ரியம் வஷஸ்தலஸ்திதாம் -மான் தோலினால் மறைத்துக் கொண்டானே
இவளோடு கூடியே வஸ்துவினுடைய உண்மை -அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் -திருவில்லாத் தேவரை தேறேல் மின் தேவு
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிது ரசியத்பாத சிஹ்நைஸ்
தரந்தி –பூர்ணம் தேஜ ச்புரதி பவதீ பாதலா ஷார சாங்கம் –
ஒளி -பிராட்டி என்றும் திருக் கல்யாண குணங்கள் என்றும் கொள்ளலாம் -புருஷகார பலத்தாலே ஸ்வா தந்த்ர்யம் தலை சாய்ந்தால்
தலை எடுக்கும் கல்யாண குணங்கள் – அன்றோ
பால்யாத் ப்ரப்ருத்தி ஸூஸ்நிக்த-தொட்டில் பருவத்தில் உள்ள சிசுக்களையும் ஈடுபடுத்த வல்ல அழகும் குணங்களும் உண்டே
———–
15-க அ ந ஸூ யக —
வாத்சல்யமும் அ ந ஸூ யையும் பர்யாய சப்தங்கள் -நற்றங்களை குற்றங்களாக கொள்வதே அ ஸூ யை
செய்தாரேல் நன்றே செய்தார் என்பர் போலும் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யேஜேயம் கதஞ்சன –தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம் –
துஷ்டனாக–தேசிகன்-தோஷ தஸ்ய ஸ்யாத் –
பிறர் பெருமையை பொறுக்கும் தன்மை இல்லாமை அ ஸூ யை என்றும் கொள்ளலாம்
உத்சவேஷூ ஸ சர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி -அயோத்யா மக்கள் பெருமாளை தந்தையாகக் கொள்ளுவார்கள்
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கை -மற்றை எல்லாக் குணங்களும் உண்டானாலும்
உண்டாக அரிதாய் இருப்பது ஓன்று அன்றோ இது
ப்ரவஷ்யாமி அ ந ஸூ யவே -ஸ்ரீ கீதை -9-1–சாஸ்திர உக்தங்களான விஷயங்களைக் கேட்டால் இது பொருந்தாது என்று
குதர்க்கம் செய்பவன் அ ஸூ யை உடையவன் பொருந்தும் என்று உகந்து இருப்பவன் அ ஸூ யை இல்லாதவன்
ஜாபாலி சொல்வதை சஹிக்க மாட்டாமல் பெருமாள் சீறி வெறுத்தார்-
———–
13/16- கோ ஜிதக்ரோத –கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோஷஸ்ய சம்யுகே
கோபத்தை வென்றவர் –ஸ்வ அதீனமாக கொண்டவர் -அம்கண் மா ஞாலம் அஞ்ச -முளைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச -உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற –
இஷ்வாகு சம்ச ப்ரபவோ ராமோ நாம ஜ நைஸ் ஸ்ருத —சதைவ ப்ரிய தர்சன –சோமவத் ப்ரிய தர்சன –காலாக்னி சத்ருச க்ரோத-
-கோபச்ய வசமேயிவான் -பாகவத அபாசரம் பொறாமையால் அன்றோ இவன் அவதரித்து செய்து அருளிய ஆனைத் தொழில்கள் –
———————————————————————————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply