Archive for the ‘Peyaazlvaar’ Category

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -91-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 14, 2014

அவதாரிகை –

எம்பெருமானுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை
அருளிச் செய்கிறார்
அவனுடைய அபரிச்சேத்யதைக்கு ஓர் அவதி
காண ஒண்ணாதா போலே கிடீர்
அவன் சரித்ரம் தானும் ஒருவரால்
ஓர் அவதி  காண ஒண்ணாத படி
என்கிறார் –

——————————————————————————

மண்ணுண்டும் பேய்ச்சி  முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடு ஆற்றா மகன் ———91-

பதவுரை

வயிற்றினோடு ஆற்ற மகன்–வயிற்றைக் கொண்டு ஆறியிருக்க மாட்டாத (கண்ணனாகிற) பிள்ளையானவன்
மண் உண்டும்–(பிரளயத்தில்) உலகங்களை யெல்லாம் அமுது செய்தும்)
பேய்ச்சி–பூதனையினது
முலை–(நஞ்சு தீற்றின) முலையை
உண்டும்–அமுது செய்தும்
ஆற்றதாய்–த்ருப்தி பெறாதவனாய்
வெண்ணெய்–வெண்ணெயை
விழுங்க–(களவு செய்து) விழுங்கின வளவிலே
ஆய்ச்சி–யசோதைப்பிராட்டி
வெகுண்டு–கோபங்கொண்டு
கண்ணி கயிற்றினால்–பல முடிச்சுகளை யுடைய தாம்பினால்
கட்ட–உரைக்கக்கட்டிப் போட,
தான்–ஸர்வசந்தனான தான்
கட்டுண்டு இருந்தான்–(அதற்கொரு பரிஹாரம் செய்து கொள்ளமாட்டாமல்) கட்டுண்டிருந்தான்

————————————————————————————

வியாக்யானம் –

சாமான்யேன ஜகத்தையும்
பிரதிகூலருடைய பிராணங்களையும்
உண்டும் –
அனுகூலர் ஸ்பரசித்த த்ரவ்யத்தை யுண்டு அல்லது
பர்யாப்தம் ஆய்த்து இல்லை –

மண்ணுண்டும் பேய்ச்சி  முலையுண்டும் ஆற்றாதாய் –
பிரளயம் கொள்ளப் புக்க
பூமி யடங்கலும் வயிற்றிலே வைத்து –

அதுக்கு மேலே –
பூதநா ஸ்த்ன பானத்தாலே -அவளுடைய பிராணனை உண்டும் –
இவை இரண்டாலும் பர்யாப்தன் ஆகாதே

கீழ்ச் சொன்ன இரண்டாலும்
ஜகத்துக்கு அனுகூல பிரதி கூலங்கள் இல்லாமையாலும்
அத்ருப்தனாய் –

வெண்ணெய் விழுங்க-
குறை எல்லாம் தீரும்படிக்கு ஈடாக
வந்து –
வெண்ணெய் விழுங்கினான் ஆய்த்து –

வெகுண்டு ஆய்ச்சி –
ஆய்ச்சி வெகுண்டு
வெண்ணெய் களவு போய்த்து என்ற மாத்ரத்திலே
இவன் முகத்தில் பையாப்புக்கு
யசோதை பிராட்டியானவள் சீறினாள் ஆய்த்து –
ஸ்நேஹத்தோ பாதியும் போரும் கோபம் –
வெண்ணெய் களவு காண்கையில் உள்ள ச்நேஹம் போரும் இறே -அவளுக்கு ரஷிக்கையிலும் –

வெண்ணெய் விழுங்க –
கீழ்-மண் உண்டது முதல்வன – இவற்றின் ஆற்றாமை பரிஹரித்த படி –
இங்கு தன ஆற்றாமை பரிஹரித்த படி –
ஜகத்துக்கு தன வயிறு போலே
தனக்கு வெண்ணெய் –

கண்ணிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் –
பல பிணைகளை யுடைத்தான
தாம்பாலே பந்திக்க
அதுக்கு பரிஹாரம் இன்றிக்கே
கட்டுண்டு இருந்தான் –

கட்டுண்டு –
சர்வ நியந்தா வானவன் –
சம்சார சம்பந்த ஸ்திதி மோஷ ஹேது வானவன்
ஒரு அபலை கையாலே கட்டுண்டு
போக மாட்டாதே இருந்தான் –

ஸ்வ சங்கல்பத்தாலே ஸ்வ வ்யதிரிக்தரை யடங்கலும் கட்டி விடக் கடவ
தான் கட்டுண்டு இருந்தான் –
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து-பெரிய திருமொழி -8-3-5-
நெய்யுண் வார்த்தையுள்  அன்னை கோல் கொள்ள
நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் -திருவாய் மொழி-5-3-5-
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டுண்ணும் முகிழ் இளம் சிறுத் தாமரைக் கையும் – பெருமாள் திருமொழி -7-8-

வயிற்றினோடு ஆற்றா மகன் –
வயிற்றைக் கொண்டு புகும் இடம் அறியாத பிள்ளை –
பருவம் நிரம்பினால் இறே பசி பொறுக்க வல்ல ஆற்றல் உண்டாவது –

இவ்விடத்தை இயலைக் கேட்டு
ஹர்ஷத்தாலே
பிள்ளை உறங்கா வில்லி  தாசர்
வயிற்றை  அறுத்து வண்ணானுக்கு
இட மாட்டானோ –
என்று பணித்தார் –
வயிறா வண்ணான் சாலா -இன்றும் சொல்லக் கேட்போமே –

————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -90-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 14, 2014

அவதாரிகை –

திருமலையில் மூங்கில்கள் அகப்பட
உத்தேச்யமான விடத்தில்
அதிலே நின்றவன்
உத்தேச்யனாகச் சொல்ல வேண்டா விறே –

திருமலையிலே நின்று அருளினவன்
ஆஸ்ரித ரஷணம் பண்ணும் படியை அருளிச் செய்கிறார் –
இவன் பண்ணினானான அதுக்கோர் அவகாசம்
காண்கிறிலீ கோளீ
என்கிறார் –

———————————————————————————-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த  மண் ————90-

பதவுரை

சிலம்பும்–(திருவடிகளில் சாத்தின) நூபுரங்களும்
செறி கழலும்–செறிவாக அணிந்த வீரத்தண்டைகளும்
சென்று இசைப்ப–எங்கும் ஒலிக்க
விண் ஆறு–ஆகாச கங்கையிலே
அலம்பிய–விளக்கப்பட்ட
கே அடி–திருவடிகளானவை
அண்டம் போய்–அண்டபித்தியளவும் நீண்டு போனபோது,
புலம்பிய–(அனைவராலும்) துதிக்கத் தக்க
தோள்–திருத்தோள்கள்
எண் திசையும் சூழ–எட்டுத் திசைகளையும் வியாபிக்க
இடம் போதாது–இடம் போராவில்லை,
வண் துழாய் மால்–அழகிய திருத்துழாய் மாலையணிந்த எம்பெருமான்
அளந்த–அளந்துகொண்ட
மண்–பூமியானது
என் கொல்–(சிறியதே போலும்)

——————————————————————————————

வியாக்யானம் –

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப –
திருச் சிலம்பும் –
செறிந்த வீரக் கழலும்
ஒக்கப் போய் த்வனிக்கும் படி –

விண்ணார் அலம்பிய சேவடி போய் –
ஆகாச கங்கையிலே விளக்கப் பட்ட
திருவடிகளானது போய் –
ஆகாச கங்கையிலே ஸ்பர்சிக்கப் பட்ட –
என்றுமாம் –

சேவடி போய் அண்டம் – சென்றிசைப்ப –
அண்ட பித்தி யளவும்
சென்று கிட்டி –

புலம்பிய தோள் எண்டிசையும் சூழ –
சகல லோகங்களும்
இத்தோள் இருக்கிறபடியே என்று
கூப்பிடும்படியான
அழகிய திருத் தோள்கள் ஆனவை
எட்டு திக்கிலும் வியாபிக்க –

சங்கைஸ் ஸூ ராணாம் திவி பூதலஸ் தைஸ் ததா மனுஷ்யர்
கக நே ச கே சரை சத்துத க்ரமான்  ய பிரசகார  சர்வதா
மமாஸ்து மாங்கள்ய வ்ருத்தயே ஹரி -ஸ்ரீ விஷ்ணு ஸ்தோத்ரம் மாங்கள்ய ஸ்தோத்ரம் –
என்று தேவர்களாலே திரள் திரளாக நின்று ஏத்தப் பட்ட
என்றபடி –

வண்டுழாய் மாலளந்த  மண் -இடம் போதாது என் கொலோ –
திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதனான
சர்வேஸ்வரன் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையை யுடையவன்

அளந்த பூமி –
இப்படி அளக்கைக்கு இடம் போராத படியாய் இருக்க
இவன் அளந்து கொண்டானபடி எங்கனயோ
என்று
ஆச்சர்யப் படுகிறார் –

நின்று அளக்கைக்கு இடம் போராது-என்ன ஆச்சர்யமோ –
அளக்குமவன் அளக்கப்படுமத்தை உண்டாக்கிக் கொண்டு
அன்றோ அளப்பது –

————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -89-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 14, 2014

அவதாரிகை

இப்படி சர்வ சமாஸ்ரயநீயன் ஆனவனைக் கண்டு
அனுபவிக்கலாவது
திருமலையிலே கிடீர் -என்கிறார் –

திருமலையில்
குறவரோடு
மூங்கிலோடு
திருவேங்கடமுடையானோடு
வாசியற
எல்லாம் உத்தேச்யமாய்   இருக்கிறபடி –

————————————————————————————–

முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-

பதவுரை

முடிந்த பொழுதில் சூற வாணர்–மரணமடையும் நிலைமையிலுள்ள கிழவர்களான குறவர்கள்
ஏனம் படிந்து உழு சால்–காட்டுப்பன்றிகள் (தங்கள் செருக்காலே மூங்கில்கள் வேர்பறிந்து விழும்படி) படிந்து உழுதசால்களிலே
பை தினைகள் வித்த–புதிய தினைவிதைகளை விதைக்க
தடிந்து–அறுத்துப்போட்ட பின்பும்
எழுந்த–(நிலவளத்தினால்) ஓங்கிவளர்ந்த
வேய்ங்கழை–மூங்கில் தடிகளானவை
போய்–மேலேசென்று
விண் திறக்கும்–ஆகாசத்தை யளாவப்பெற்ற
வேங்கடம்–திருவேங்கடம்
மேல் ஒருநாள்–முன்பொருநாள்
தீம் குழல்–மதுரமான புல்லாங்குழலை
வாய் வைத்தான்–திருப்பவளத்தில் வைத்து ஊதின கண்ணபிரானுடைய
சிலம்பு–திருமலையாம்.

—————————————————————————————-

வியாக்யானம் –

முடிந்த பொழுதில் குறவாணர் –
சரம அவஸ்தையிலே
வர்த்திக்கிற குறவருக்கு நிர்வாஹகர் ஆனவர்கள் –
அப்போது முடிந்தார்கள் இப்போது முடிந்தார்கள்
என்னும்படியான தசையை உடைய குற விருத்தர்கள் –

ஏனம் படிந்துழு சால் பைந்தினைகள் வித்த –
தாங்களே பிடித்து உழுகைக்கு ஷமர் அல்லாமையாலே
வராஹங்கள் ஆனவை
தான் செருக்காலே படிந்து உழுத சால்களிலே
பசுந்தினைகள் உண்டு -அழகிய தினைகள்-
அவற்றைக் கொண்டு போய் வித்திப் -விதைத்துப் -போருவர்கள்  –
ஷமர் அல்லர் என்னா ஜாத்யுசித வ்ருத்தியைக் கை வாங்கி இரார்களே –

தடிந்து எழுந்த வேய்ங்கழை போய் விண் திறக்கும் –
இவர்கள் முன்னாள் நாயிறு பாடு போய்த் தினைகளை வித்திப்
பிற்றை நாள் விடிவோறே போய்க் காட்டை வெட்டிப் பொகட-
மூங்கில்கள் ஆனவை கிளைத்துப் போய்
ஆகாசத்தை ஊடுருவ வளர்ந்து நிற்கும் –

வேய்ங்கழை போய் விண் திறக்கும் -வேங்கடமே –
இவர்கள் ஏதேனும் ஒன்றை-தினையை -வித்திப் போக
ஏதேனும் ஓன்று -மூங்கில்கள் –
விளைந்து கிடக்குமாய்த்து –

மேலோருநாள் தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு —
பண்டு ஒரு நாளில்
இனிய குழலைத் திருப் பவளத்திலே வைத்தூதி
திருவாய்ப்பாடியிலுள்ள சகலப் பிராணிகளையும்
தனக்காம் படி ஸ்வீகரித்துக் கொண்டவன் –

அப்படியே –
திருமலையிலே நின்று
சம்சாரிகளை வசீகரிக்கிரவன் உடைய திருமலை –

அன்றிக்கே –
முடிந்த பொழுதில் தீங்குழல் வாய் வைத்தான் -என்னவுமாம் –
சந்த்யா சமயத்திலே இறே குழல் ஊதுவது  –
அவனுடைய மௌக்த்யத்துக்கு சேர்ந்த திருமலை –

———————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -88-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 14, 2014

அவதாரிகை –

இப்படி இருக்கிற
சர்வேஸ்வரனை விட்டு
இதர விஷயங்களில் உண்டான உள்மானம் புறமானத்தை
ஆராய்ந்து சம்சயியாதே
சர்வ சமாஸ்ரயநீயனான சர்வேஸ்வரன்
திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய சமஸ்த துக்கங்களும் போம்
என்கிறார் –

——————————————————————————

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண்  துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

பதவுரை

அது நன்று இது தீது என்று ஐயம் படாதே–‘அது நல்லதோ? இது கெட்டதோ?‘ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டிராமல்
மது நின்ற தன் துழாய் மார்வன்–தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய
பொது நின்ற–ஸர்வஜந ஸாதாரணமான
பொன் அம்கழலே–விரும்பத்தக்க அழகிய திருவடிகளையே
தொழுமின்–தொழுங்கோள், (அப்படி தொழுதால்)
முன்னம்–முந்துறவே
முழு வினைகள்–ஸம்ஸ்த பாபங்களும்
முடிந்து–உருமாய்ந்து
கழலும்–விட்டு நீங்கும்.

——————————————————————————-

வியாக்யானம் –

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே –
பகவத் ப்ராவண்யம் நன்று
விஷயப் ப்ராவண்யம் பொல்லாதது
என்று சம்சயப் படாதே –
பகவத் வ்யதிரிக்த விஷயங்கள் தீதொடு ஒக்க
நல்லத்தை சம்சயாஸ் பதமாகப் பண்ணும்
அவற்றின் உடைய நன்மை தீமை ஆராயப் புக்கால்
பின்னையும்
ஐயத்தோடு தலைக் கட்டும் இத்தனை –
அதாகிறது
தான் தீதாய் இருக்கச் செய்தே நன்று போலே தோற்றிலும் தோற்றும்
இப்படி நன்றாய்த் தோற்றுகிற தீமையோடு தலைக் கட்டி நிற்கிலும் நிற்கும் –

மது நின்ற தண்  துழாய் மார்வன் –
சம்சயம் இல்லாத விஷயம்
மது மாறாதே இருப்பதுமாய்
ஆதி ராஜ்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை யுடைத்தான
மார்வை யுடையவன் –

பொது நின்ற பொன்னங்கழலே தொழுமின்-
என் தான் –
இவன் தொழுவான் என்னக் கடவர் அல்லாத திருவடிகள் –
தேவானாம் தானவானாம் ச -ஜிதந்தே -என்னக் கடவது இறே-
சர்வ லோக சரண்யாய ராகவாய -யுத்தம் -17-15-என்றான் இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-

யாவன் ஒருவன் சம்பந்தம் கொண்டு நீங்கள் என்னை
இவன் ஆகாது என்கிறிகோள்   –
அப்படிப் பட்டவன் தனக்கு வரலாம் படி அன்றோ
அவர் ஸ்வரூபம் இருக்கிற படி -என்றான் இறே
அவரும் அப்படியே
யதி வா ராவண ஸ்வயம் -யுத்தம் -18-19-என்றார் இறே
சர்வாத்மாக்களுக்கும் சம்பந்தம் ஒத்து இருப்பதாய்
ஸ்ப்ருஹணீயமாய்
அழகிதான
திருவடிகளை தொழப் பாருங்கோள் –

முழுவினைகள் முன்னம் கழலும் முடிந்து –
தொழுகைக்கு விரோதியான
அநாதி கால சஞ்சிதமான பாபங்கள்
நீங்கள் தொழுவதாக் ஸ்மரிப்பதற்கு   முன்பே
நசிந்து ஓடிப் போம் –

முன்னம் கழலும் –
பிரணாமாத் பூர்வ காலீநாத்யவசாயத்திலே கழலும்

முடிந்து –
வ்யக்த்யந்தரத்துக்கு ஆகாதபடி நசிக்கும் –

அன்றிக்கே
அது நன்று
இது தீது
என்று ஐயப்படாதே என்று
அனுபூதமான விஷயம் நல்லது
இப்போது அனுபவிக்கிற விஷயம் பொல்லாதது என்று
இதர விஷயங்களில் உள்மானம் புறமானங்களைப் பார்த்து
சம்சயியாதே -என்னவுமாம் –

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -87-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 14, 2014

அவதாரிகை –

பின்னையும் வடிவு அழகு தன்னை
உபமான முகத்தாலே இழிந்து
அனுபவிக்கிறார் –
எம்பெருமானுடைய ஸ்வா பாவிகமான வடிவு அழகை
மரகத மணி காட்டும் –
ஒப்பனையால் வந்த வடிவு அழகை
சந்த்யா காலத்திலேயே மேகம் காட்டும்
என்கிறார் –

———————————————————————————

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க்  கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87-

பதவுரை

மணி கலந்து–ஸ்ரீகௌஸ்துப மணியோடுகூடி
இமைக்கும்–விளங்காநின்ற
கண்ணா–கண்ணபிரானே!
மரதகம்–மரதகரத்னமானது
மலர்ந்து–ஒளிப்பரப்பை யுடைத்தாய்க் கொண்டு
நின் மேனி காட்டும்–உனது திருமேனியை ஒத்திராநின்றது,
நலம் திகழும்–அழகாக விளங்குகின்ற
கொந்தின் வாய்–கொத்துகளிலே
வண்டு அறையும்–வண்டுகள் ரீங்காரம் செய்யப்பெற்ற
தண் துழாய்–திருத்துழாய் மாலையணிந்த
கோமானை–ஸர்வேச்வரனாகிய உன்னை
அந்தி வரன் அது காட்டும்–ஸந்தியாகாலத்து ஆகாசமானது ஒத்திராநின்றது.

———————————————————————————-

வியாக்யானம் –

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்மேனிமலர்ந்து மரகதமே காட்டும் –
கண்ணனே –
கலந்து மணி இமைக்கும் நின் மேனியை
மரகதமே மலர்ந்து காட்டா நின்றது –

கிருஷ்ணனே –
ஸ்ரீ கௌஸ்துபத்தின் உடைய சிவந்த தேஜஸ்ஸூம்
ஸ்ரீ வத்ஸத்தின் உடைய கருத்த தேஜஸ்ஸூம்
ஸ்யாமமான திரு நிறத்திலே விரவினவாறே –
ஸ்யாமமான திரு நிறத்தைக் கொண்டு பிரகாசிக்கிற
உன்னுடைய திரு மேனியை
ஸ்ரமஹரமான மரகதத்தின் உடைய
பிரபை விஸ்த்ருதமாய்க் கொண்டு ஸ்பஷ்டமாகக் காட்டா நின்றது –

நலந்திகழும் கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க்  கோமானை-
அழகு விலங்கா நின்றுள்ள
கொத்திலே
மது பானம் பண்ணின வண்டுகள் சப்தியா நின்றுள்ள
தட்ப்பத்தை யுடைத்தான
திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரன் ஆன உன்னை –

அந்தி வான் காட்டுமது-
சந்த்யாராகத்தை யுடைத்தான திருமேனியைக் காட்டும்
இத்தால் அவயவியைச் சொல்லிற்று ஆகிறது
அன்றிக்கே
அது போலி காட்டும் என்னவுமாம் –

—————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -86-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 14, 2014

அவதாரிகை –

ஸ்வரூப ரூப குணங்களைப் பரிச்சேதிக்கப் போகாது –
உபமானத்தில் சிறிது சொல்லலாம் இத்தனை
என்கிறது –

எம்பெருமான் உடைய அழகை அனுபவிக்க முடியாது என்னிலும்
விட ஒண்ணாத படி
ஸ்ப்ருஹணீயமாய் இருக்கும்

அது காண வேணும் என்று இருப்பாருக்கு
மேகங்களே அவன் வடிவைக் காட்டும் -என்கிறார் –
சம்சாரத்தில் இருப்புக்கு ஒரு பிரயோஜனம் உண்டு –

அதாகிறது
அவன் வடிவுக்கு போலியான
பதார்த்தம் கண்டு அனுபவிக்கலாம்
என்கிறார் –

——————————————————————————

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார்வானம் காட்டும் கலந்து ——-86-

பதவுரை

எழில் கொண்ட–அழகையுடைத்தாய்
நீர்–நீர் நிறைந்ததான
மேகம் தான்–மேகமானது
எழில் கொண்ட மின் கொடி எடுத்து–அழகிய மின்னற்கொடி படரப்பெற்று
வேகம் தொழில் கொண்டு–வேகமாகத் திரிதலாகிற வியாபாரத்தைச் செய்யப்பெற்ற
முழங்கி தோன்றும்–கர்ஜித்துக்கொண்டு விளங்குதற்கிடமான
கார் வானம்–கார் காலத்து ஆகாசமானது
அன்ன நெடுமால் நிறம்போல கலந்து காட்டும்–அப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருநிறத்தை அநுகரித்திராநின்றது.

———————————————————————————–

வியாக்யானம் –

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து –
அழகை யுடைத்தான
மின்னித் த்வஜமாக எடுத்துக் கொண்டு –

வேகத் தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் –
வேகமாகிற வியாபாரத்தை யுடைத்தாய்
தான் மிக்க கோஷத்தை யுடைத்தாய்
தோற்றுகிற –

எழில் கொண்ட நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக் –
ஆகண்டமாக நீரைப் பானம் பண்ணின
காளமேகம் போலே இருந்துள்ள
சர்வேஸ்வரன் யுடைய நிறம் போலே –
நீர் மேகம் அன்ன நிறம் என்று
சாஸ்த்ரங்களிலே கேட்க்கப் பட்ட பிரசித்தியி யுடைய
நிறத்தை -என்றுமாம் –

கார்வானம் காட்டும் கலந்து –
கார் காலத்திலேயே மேகமாது கலந்து காட்டும் –

மின்னி முழங்கி
வில்லிட்டு உலாவுகிற மேகத்தை யுடைய
ஆகாசம் காட்டும் -என்றுமாம் –

கலந்து காட்டும் –
சேர்ந்து காட்டும் –
கேவலம் மேகம் காட்டுகிறதும் அன்று
கேவலம் ஆகாசம் காட்டுகிறதும் அன்று

இப்படி
மின்னி
முழங்கி
வில்லிட்டுக் கொண்டு
தோற்றுவது-சஜாதீயமாய் இருப்பதொரு
மேகம் யுன்டானால்
அப்போது அத்தை யுடைத்தான ஆகாசம்
சர்வேஸ்வரன் உடைய திருமேனிக்குத்
தகுதியாய்க் கொண்டு
தோற்றுவது -என்கிறார் –

எழில் கொண்டு மின்னுக் கொடி எடுத்து -என்று பாடமான போது
அழகை யுடைத்தாயிருக்கிற -கார்வானம் என்று
மேகத்துக்கு விசேஷணம் ஆகக் கடவது –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -85-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 14, 2014

அவதாரிகை –

ஒருத்தரால் அறியப் போகாதாகில்
வாழ்த்துவார் பலராக –திருவாய் மொழி -3-1-7-என்னும்படியே
பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினால்
அறியப் போமோ-என்னில்
எல்லாரும் அடையத் திரண்டு
தந்தாமுடைய கரண சக்திகளைக் கொண்டு
அவனை ஸ்தோத்ரம் பண்ண வென்று புக்கால்
பின்னையும் அவர்கள்
நின்ற நிலைக்கு இவ்வருகாய் அன்றோ
அவ்விஷயம் இருப்பது
என்கிறார் –

————————————————————————————–

கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக
ஏற்று யிரை யட்டான் எழில் —–85-

பதவுரை

கவியினார்–தோத்திரங்கவிகளைச் சொல்லு பவராய்க் கொண்டு
கை புனைந்து–அஜ்ஞலிபண்ணி
கண்–தமது கண்கள்
ஆர் கழல் போய்–(அவனது) விலக்ஷணமான திருவடிகளிலே சென்று சோப்பெற்று
செவியின் ஆர் கேள்வியர் ஆய்–காது நிறைந்த கேள்விகளை யுடையராய்க் கொண்டு
சேர்ந்தார்–வந்து பணிந்தவர்களான
புவியினார்–பூமியிலுள்ளா ரெல்லாரும்
போற்றி உரைக்க–(ஒன்று கூடிப்) போற்றி யுரைத்தாலும்,
பின்னைக்காய் ஏறு உயிரை அட்டான் எழில் பொலியுமே–நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களினுயிரை மாய்ந்த
பெருமானுடைய அழகு சிறப்புறச் சொல்லப்பட்ட தாகுமோ?

——————————————————————————————-

வியாக்யானம் –

கவியினார் கை புனைந்து –
வாயாலே நல்ல கவிகளைச் சொல்லி
கையைக் கூப்பி
ஸ்தோத்ரத்தாலே-அபிமான சூன்யராய்த்
தொழுது  —
வாயாலே கவியைச் சொல்லி
கையாலே அஞ்சலியைப் பண்ண –

கண்ணார் கழல் போய்ச் –
கண்களானவை –
ஆர் கழல் -அழகு நிறைந்துள்ள –
விலஷணமான திருவடிகளை அடைந்து
நிரதிசய போக்யமான
திருவடிகள் அளவும் சென்று கிட்டி –

செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார் –
செவி நிறைந்த அவனுடைய
கல்யாண குணங்களிலே
கேள்வியை யுடையராய்
சேர்ந்தாரான பூமியில் யுள்ளார் எல்லாரும்
ஸ்ரவணத்தை யுடையராய் –
இப்படிக் கிட்டினாரான பூமியில் உள்ளார் –

போற்றி யுரைக்கப் பொலியுமே –
எல்லாரும் கூடி மங்கள வாசகங்களான
சப்தங்களைக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணினால் தான்
எல்லை காணப் போமோ –

தம்தாமுடைய ஜ்ஞான சக்திகளையும்
அவன் கொடுத்த ஜ்ஞான சக்திகளையும் கொண்டு
சகல லோகங்களும் ஒரு மிடறாய் ஏத்தப் புக்கால் தான்
சிறிது குறைந்து காட்டுமோ –
விஞ்சிக் காட்டும் அத்தனை -என்கை –

பொலியுமே –
அங்குத்தைக்கு ஏதேனும் அதிசயத்தைப்
பண்ணப் பெற்றோமே -என்றுமாம்
வர்ஷாயுதைர் யஸ்ய குணா ந சக்யா வக்தும் சமேதைரபி சர்வ லோகை-

இப்படி ஏத்த ஒண்ணாது ஒழிகிறது தான் அவன்
படிகள் எல்லாம் கூடத்  திரண்டத்தையோ –
என்னில்  –

பின்னைக்காக  ஏற்று யிரை யட்டான் எழில் –
அவனுடைய ஒரு அபதானம்
எல்லை காணப் போகாது -என்கிறது –
நப்பின்னை பிராட்டி பக்கல்
கலவிக்கு பிரதிபந்தகமான
ருஷபங்களின் உடைய பிராணனை முடித்தவன்
உடைய சமுதாய சோபையை-

புவியினார் போற்றி யுரைக்கப் பொலியுமே –
அவனுடைய மணக் கோலத்தையும்
ருஷபங்களை யடர்த்த ஒரு செயலையும்
வடிவு அழகையும்
சொல்லப் போமோ –

———————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -84-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

வேதைக சமதி கம்யனாய்
உள்ளவனை ஒருவரால் கண்டதாய்த்
தலை கட்ட ஒண்ணாது  –
கண்டாராகச் சொல்லுகிறவர்கள் அடைய
கவிகளைக் கொண்டாடினார்கள் அத்தனை
அல்லது
ஒருவரும் கண்டார் இல்லை
என்கிறார் –

———————————————————————-

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண்  மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி ———–84-

பதவுரை

நால் மறையின்–நான்கு வேதங்களினுடைய
உள் பொருள்–உள்ளுறை பொருளாக
உளனாயவனை–இருக்கின்ற எம்பெருமானை
தேர்ந்து–(ஜ்ஞாந யோகத்தாலே) ஆராய்ந்து
உள்ளத்து உளன் ஆக–நெஞ்சிலே பொருந்தி யிருப்பவனாக
உணர்வர் ஏலும்–(சில ஞானிகள்) அறிய வல்லாரென்றாலும்,
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப்போன்ற
நெடு கண்–நீண்ட தீருக் கண்களை யுடைய
மாயவன்–ஆச்சர்யபூதனாக
உளனாபவனை–இருக்கின்ற அப்பெருமானை
கண்டார் யாவரே–கண்டு அநுபவிக்கப்பெற்றார் யாவர்? (ஒருவருமில்லை)
கவி உகப்பர்–தோத்திரக் கவிகளை உகந்து வாயாற் சொல்லிக் கொண்டு போது போக்குவர்களத்தனை.

————————————————————————–

வியாக்யானம் –

உளனாய நான் மறையினுள் பொருளை –
வேதாந்த ரஹச்யமாய்க் கொண்டு
என்றும் ஒக்க உளனானவனை-
நான் மறையின் உட்பொருளாய்க் கொண்டாய்த்து   இவன் உளனாவது –
நிர்தோஷ பிரமாண சித்தன் ஆகையாலே
தான் உளனாய்
வேதத்தாலே பிரதி பாதிக்கப் பட்டவனை –

உள்ளத்து உளனாகத் தேர்ந்து உணர்வரேலும்-
இப்படி பிரமாணங்களிலே என்றும் ஒக்க
கேட்டுப் போகக் கடவ
அவனை ஹிருதயத்திலே சந்நிஹிதனாக அனுசந்தித்து
பரிச்சேதித்தார்களே யாகிலும்
கர்ம யோகத்தாலே ஞான யோகம் கை வந்து
ஞான யோகத்தாலே கண்டார்களே யாகிலும் –

உளனாய வண்டாமரை நெடுங்கண்  மாயவனை-
ஆஸ்ரிதர்க்கு அனுபவ யோக்யமான
விக்ரஹத்தை யுடைய
ஆச்சர்ய சக்தி யுக்தனை
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று
சுருதி பிரசித்தமான கண் அழகை யுடையவனை
தமக்குக் காட்டின  வடிவு –

யாவரே கண்டார்-
ஆர் தான் காணப் பெற்றார்களோ  –

கண்டாராகச் சொல்லுகிறவர்கள் ஒன்றும் அன்றோ என்னில் –
உகப்பர் கவி –
அவர்களும் கவியை உகந்தார் இத்தனை போக்கி
காணப் பெற்றார்களோ
அவனுடைய ஸ்தோத்ரத்தை உகந்த அத்தனை -என்றுமாம் –

பகவத் விஷயத்திலே
கிஞ்சித் கரித்தோம் ஆக வேணும் என்று
தங்கள் ஆசையை கவி என்று ஒரு முகத்தாலே
வெளி இட்டார்கள் அன்றோ –

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -83-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

அவன்  ஒருக்காலும்
காணவும்
நினைக்கவும்
ஒண்ணாதான் ஒருவனே ஆகிலும்
அவன் இருந்தபடி இருக்க –
இப்போது முந்துற முன்னம் ஹ்ருதயத்திலே புகுந்து
சந்நிதி பண்ணா நின்றான்
என்கிறார் –

——————————————————————————

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

பதவுரை

இனி–இப்போது
அவன்–‘அந்தஸர்வேச்வரன்
மாயன்–மாயக்காரன்‘
என–என்று
உரைப்பர் ஏலும்–சொல்லுவார்களே யாகிலும்,
இனி–இப்போது
அவன்–அப்பெருமான்
காண்பு அரியன் ஏலும்–கண்டு அநுபவிக்கக் கூடாதவனே யாகிலும்
கள்ளத்தால்–க்ருத்ரிம வேஷத்தினால் (மாவலி பக்கலிலே சென்று)
மண் கொண்டு–பூமிதானம் வாங்கி
விண் கடந்த பை கழலான் அவன்–ஆகாசம் முதலிய மேலுலகங்களையும் ஆக்ரமித்துக் கொண்ட
பரந்த திருவடிகளை யுடையனான அப்பெருமான்
இனி–இப்போது
உள்ளத்தின் உள்ளே உள்ள–எனது ஹ்ருதயித்தினுள்ளே (வேறிடமறியாமே) நிலைத்து நிற்கின்றான்
(இந்த பரமலாபமே போது மென்கை)

———————————————————————————

வியாக்யானம் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்-
பிரமாணங்கள் ஸூ லபன் என்று
சொல்லுகிற அவனை
நாட்டார் அரியன் என்று சொன்னார்களே யாகிலும் –
இப்போது அவன் ஆச்சர்ய பூதன் என்று சொல்லுவார்களே யாகிலும் –
வர்த்தமான தசையில் பிரகிருதி சம்பந்தித்து
மம மாயா துரத்யயா-கீதை -7-13-என்னும்படி
காண வரியன் ஆகிலும்  –

இனியவன் காண்பரியனேலும் –
நிரதிசய போக்யனாய் யுள்ளவன்
தான் கிட்டிக் காண அரியனாய் இருந்தானே யாகிலும்
இப்போது அவன் காண முடியாதான் ஒருவன் ஆகிலும்
அன்றிக்கே
சரீர சம நந்தரத்திலும் காண வரியன் யாகலும்-

இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு-
சர்வேஸ்வரனான தான் செய்தான் என்று
தோன்றாதபடி
பூமியை அபஹரித்து
நெஞ்சுக்கு இனியனாய்
தன்னுடைமையை மகா பலி பக்கலிலே அளந்து கொண்டவன் –

விண் கடந்த பைங்கழலான் –
ஆகாசத்துக்கு அவ்வருகாம்படி வளர்ந்து
சகல லோகங்களையும்
தன் கீழே இட்டுக் கொண்ட
பரந்த திருவடிகளை யுடையவன் –
அன்றிக்கே
அழகிய திருவடிகளை யுடையவன் -என்னவுமாம் –

இனி உள்ளத்தின் உள்ளே உளன் –
இப்போது என் ஹ்ருதயத்தின் உள்ளே சந்நிஹிதன் ஆனான்
புக்க ஆயுச்சுக்கு மரணம் இல்லை இ றே
மேல் செய்த படி செய்கிறான்
பெற்ற வம்சத்தை ஒருவரால் இல்லை செய்ய ஒண்ணாது இ றே
இப்படி
சந்நிஹிதன் என்றதே யாகிலும்
கீழ்ச்   சொன்ன  அபரிச்சேத்யதையே பலித்து விடுகிறது –

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -82-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

இது தன்னை நாம் இன்னாதாகிறது என் –
அவன் தான் சிலரால் அறிய ஒண்ணாத படியாய் இருப்பான் ஒருவனுமாய்
நிரதிசய போக்யனுமான பின்பு
இனியவனை நாம் கிட்டிக் கண்டோமாய்த்
தலை கட்ட விரகு உண்டோ
என்கிறார் –

————————————————————————————

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-

பதவுரை

உணரில்–(அப்பெருமானை நாமாக) அறியப் பார்த்தாலும்
உணர்வு அரியன்–(அவன்) அறியக் கூடாதவன் (அவன்தானே)
உள்ளம் புகுந்து புணரிலும்–நெஞ்சிலே வந்து புகுந்து சேர்ந்தாலும்
உண்மை காண்பு அரியன்–உள்ளபடி அறியக் கூடாதவன்
இனி–இப்படியான பின்பு
இணர் அணைய–பூங்கொத்துகள் தாழும்படியாக
கொங்கு–தேனிலே
வண்டு–வண்டுகள்
அணைந்து–வந்துகிட்டி (மதுவைப்பருகி)
அறையும்–ரீங்காரம் செய்யப்பெற்ற
தண்–குளிர்ந்த
துழாய்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனான
கோமானை–அப்பெருமானை
எங்கு–எவ்விடத்தில்
அணைந்து–கிட்டி
காண்டும்–காணக் கடவோம்.

————————————————————————————–

வியாக்யானம் –

உணரில் உணர்வரியன் –
முதல் தன்னிலே இதில் இழியாதாது நன்று –
அதாகிறது
அறிவதாக இழிந்து
அறியாது ஒழிவதில் காட்டில் முதல் தன்னிலே
அறிவதாக இழியாதது நன்று இறே –

ஆரேனும் ஒருத்தருக்கும் ஸ்வ யத்னத்தாலே அறிவோம் என்னும் அன்று
அறிய அரியனாய் இருப்பான் ஒருவன் –
தன்னாலும் அறியப் போகாது –
இவனாலும் அறியப் போகாது
தனக்கும் தன் தன்மை அறிவரியான் -திருவாய்மொழி -8-4-6-

உள்ளம் புகுந்து புணரிலும் காண்பரியன் உண்மை –
அவ்வருமை தீர அவன் தான் ஹ்ருதயத்திலே சந்நிதி
பண்ணி கலக்கும் அன்று
ஒரு குறை இல்லையே என்னில் –
அப்போதும் அவனை உள்ளபடி யறிந்து பரிச்சேதிக்கப் போகாது –
அவனுடைய உண்மை யறியப் போகாது –

காண்பரியன் உண்மை –
என் எனபது –
வை லஷண்யத்தை பரிச்சேதிக்கப் போகாது
என்கிறது –

இணரணையக் கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை –
ஏதேனும் அறிய ஒண்ணாத விஷயம் என்று
கை வாங்கப் போகாது -என்கிறது
இவன் தான் காணும் அன்று காண வரிதாய்
அவன் தானே காட்டும் அன்றும் காண வரிதானாலும்
இழந்து ஆறி இருக்க ஒண்ணாது
போக்யதையும் ஸ்வாமித்வமும் –

இணரணையக் கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை –
பூங்கொத்துக்கள் ஆனவை தாழும்படிக்கு ஈடாகத்
தேனிலே வண்டுகள் வந்து கிட்டி
அத்தை புஜித்து மது பானத்தாலே வந்த ஹர்ஷத்தாலே
சப்தியா நின்றுள்ள குளிர்ந்த
திருத் துழாயை உடைய சர்வேஸ்வரனை –

எங்கணைந்து காண்டும் இனி –
இனி நான் எங்கே கிட்டிக் காணக் கடவேனோ
லௌகிகர் படியிலும் காண விரகற்று
அவன் தானே காட்டும் வைதிகர் படியாலும்
காண விரகற்ற பின்பு
இனி நான் காண்கை என்று ஒரு பொருள் உண்டோ
கிட்டாது ஒழிய மாட்டேன்
கிட்ட மாட்டேன் –

———————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –