மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -86-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஸ்வரூப ரூப குணங்களைப் பரிச்சேதிக்கப் போகாது –
உபமானத்தில் சிறிது சொல்லலாம் இத்தனை
என்கிறது –

எம்பெருமான் உடைய அழகை அனுபவிக்க முடியாது என்னிலும்
விட ஒண்ணாத படி
ஸ்ப்ருஹணீயமாய் இருக்கும்

அது காண வேணும் என்று இருப்பாருக்கு
மேகங்களே அவன் வடிவைக் காட்டும் -என்கிறார் –
சம்சாரத்தில் இருப்புக்கு ஒரு பிரயோஜனம் உண்டு –

அதாகிறது
அவன் வடிவுக்கு போலியான
பதார்த்தம் கண்டு அனுபவிக்கலாம்
என்கிறார் –

——————————————————————————

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார்வானம் காட்டும் கலந்து ——-86-

பதவுரை

எழில் கொண்ட–அழகையுடைத்தாய்
நீர்–நீர் நிறைந்ததான
மேகம் தான்–மேகமானது
எழில் கொண்ட மின் கொடி எடுத்து–அழகிய மின்னற்கொடி படரப்பெற்று
வேகம் தொழில் கொண்டு–வேகமாகத் திரிதலாகிற வியாபாரத்தைச் செய்யப்பெற்ற
முழங்கி தோன்றும்–கர்ஜித்துக்கொண்டு விளங்குதற்கிடமான
கார் வானம்–கார் காலத்து ஆகாசமானது
அன்ன நெடுமால் நிறம்போல கலந்து காட்டும்–அப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருநிறத்தை அநுகரித்திராநின்றது.

———————————————————————————–

வியாக்யானம் –

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து –
அழகை யுடைத்தான
மின்னித் த்வஜமாக எடுத்துக் கொண்டு –

வேகத் தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் –
வேகமாகிற வியாபாரத்தை யுடைத்தாய்
தான் மிக்க கோஷத்தை யுடைத்தாய்
தோற்றுகிற –

எழில் கொண்ட நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக் –
ஆகண்டமாக நீரைப் பானம் பண்ணின
காளமேகம் போலே இருந்துள்ள
சர்வேஸ்வரன் யுடைய நிறம் போலே –
நீர் மேகம் அன்ன நிறம் என்று
சாஸ்த்ரங்களிலே கேட்க்கப் பட்ட பிரசித்தியி யுடைய
நிறத்தை -என்றுமாம் –

கார்வானம் காட்டும் கலந்து –
கார் காலத்திலேயே மேகமாது கலந்து காட்டும் –

மின்னி முழங்கி
வில்லிட்டு உலாவுகிற மேகத்தை யுடைய
ஆகாசம் காட்டும் -என்றுமாம் –

கலந்து காட்டும் –
சேர்ந்து காட்டும் –
கேவலம் மேகம் காட்டுகிறதும் அன்று
கேவலம் ஆகாசம் காட்டுகிறதும் அன்று

இப்படி
மின்னி
முழங்கி
வில்லிட்டுக் கொண்டு
தோற்றுவது-சஜாதீயமாய் இருப்பதொரு
மேகம் யுன்டானால்
அப்போது அத்தை யுடைத்தான ஆகாசம்
சர்வேஸ்வரன் உடைய திருமேனிக்குத்
தகுதியாய்க் கொண்டு
தோற்றுவது -என்கிறார் –

எழில் கொண்டு மின்னுக் கொடி எடுத்து -என்று பாடமான போது
அழகை யுடைத்தாயிருக்கிற -கார்வானம் என்று
மேகத்துக்கு விசேஷணம் ஆகக் கடவது –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading