நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-
முதல் -பாட்டில் ஆழ்வார் -என்றால் தமக்கு ரசிக்கிற படியை சொன்னார் –
-இப்பாட்டில் அவருடைய பாசுரமே தேக யாத்ரையாம் படி-தாரகமான படியை சொல்லுகிறார் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்-
என்றக்கால் அண்ணிக்கும் -என்று ப்ரஸ்துதமானத்தை யனுபாஷிக்கிறார் -அதில்
உண்டான ஆதார அதிசயத்தாலே –
மனஸ் -சஹ காரம் இல்லாத வுக்தி மாத்ரம் அடியாக -நிரதிசய சுகம் பிரயோஜனம்
ஆனால் பின்னாட்டுகை தவிராது இ றே-
நாவினால் நவிற்று –
-மனஸ் சஹ காரம் இல்லை என்கிறார் –
-பகவத் விஷயத்தில் உபகாரகரை ஸ்தோத்ரம் பண்ணக் கடவ நாவைக் கொண்டு
அந்த கார்யதைக் கொள்ளப் பெற்றேன் -என்னவுமாம்
ஈஸ்வர ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் கொள்ளப் பெற்றேன் -நான் ஒருவனே என்கிறார்-
இன்பம் எய்தினேன் –
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவி -என்று ஆழ்வார் அவ் விஷயத்தில் பெற்ற
பேற்றை -இவ் விஷயத்திலே பெற்றேன் என்கிறார் –
சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் -என்று கரண த்ரயத்தாலும் அவ்
விஷயத்தை ஆஸ்ரயித்தவர் பெற்ற பேற்றை உக்தி மாத்ரத்திலே பெற்றேன் –
அநாதி காலம் நரகத்திலே ஸ்ருஷ்டியும் -நரகத்திலே சம்ஹாரமும் ஆம்படி பண்ணின பாபத்தை-பண்ணிப் போந்த நாவால் -நிரதிசய ஆநந்தத்தை ப்ராபித்தேன் -என்னவுமாம் – (வையத்து வாழ்ச்சி போலே நாக்காலே இன்பம் -என்றபடி )-
மேவினேன் அவன் பொன்னடி –
ஆழ்வாருடைய ஸ்ப்ருஹணீ யமான திருவடிகளை உத்தேச்யமாக பொருந்தினேன் –
ஷிபாமி -என்று ஈஸ்வரனும் கூட உபேஷித்த தசையிலே விஷயீ கரித்த ஆழ்வாருடைய
விலஷணமான திருவடிகளோடே பொருந்தப் பெற்றேன் – (பரம காருணீகர் ஆகையால் ஷிபாமி -என்று-அச்சம் உறுத்தினான் -உபேக்ஷித்தான் என்கிறார்-அஹருத்ய யுக்தி என்றபடி- )
நீர் செய்தது -இதுவாகில் பேற்றில் அறுதிபாடு இருந்த படி என் -என்ன –
மெய்ம்மையே மேவினேன் –
1-உபகார விஷயத்திலே நிற்கிற அளவிலே வேறு ஒரு விஷயம் உத்தேச்யமாய்
அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றிக்கே -ஐஹிக ஆமுஷ்மிகங்கள் இரண்டும் ஆழ்வார் திருவடிகளாகப் பொருந்தினேன் –
2-இங்கு இருந்த நாள் அஜ்ஞா தஜ்ஞாபநத்தாலே வுபகாரராகவும் –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்திதேவா என்கிறபடியே-பகவத் லாபத்துக்கு புருஷகாரமாகவும்-நித்ய விபூதியில் ப்ராப்யமாகவும் இவர் தம்மையே பற்றினேன் –
ஆளவந்தார் அத்ரபத்ர -என்கைக்கு அடி இவர் இ றே- (3-மனஸ் ஸஹ காரம் இல்லாமல் நாவினால் நவின்றாலும் -மெய்ம்மையே மேவினேன் -உண்மையாகவே பேற்றைப் பெற்றேன் -)
தேவு மற்று அறியேன் –
ப்ராப்யமும் ப்ராபகமாக வேறு ஒரு வஸ்து உண்டு என்று இரேன்
மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொல்லுகிறார் -தேவு மற்று அறியேன் என்று-வ்யதிரேகத்தாலே சொல்லுகிறார் இ றே தம்முடைய அத்யாவசியம் தோற்றுக்கைக்காக -மற்று அறியேன் -என்று-
புருஷார்தங்களோபாதி பகவத் விஷயத்தையும் கழிக்கிறார் இ றே
அதின் எல்லையான ஆழ்வார் திருவடிகள் அளவும் வந்தவர் ஆகையாலே
சாஸ்திர வாசனையாலே யாதல் –
ஆச்சார்ய உபதேசத்தால் ஆதல் -சொல்லுகிறார் அல்லர் –
உபகாரகரான ஆழ்வார் திருவடிகளில் பாவ பந்தத்தாலே சொல்லுகிறார் –
குருகூர் நம்பி-
இவரையும் பற்றி வேறு ஒரு விஷயத்தையும் பற்ற வேண்டும்படியோ இவருடைய
பூர்த்தி இருப்பது-(அரை வயிறு இல்லையே அந்த நம்பி போலே )
குருகூர் நம்பி பா -என்கிறது -ஆழ்வார் திருவாயாலே அருளிச் செய்தது என்றது ஆயிற்று
திருவாய்மொழி தன்னையும் ஆதரிப்பது –அதிலே குருகூர் சடகோபன் -என்று அருளிச் செய்தார் இ றே -அவ்வழியால் யாயிற்று திருவாய் மொழியில் ஆதாரம் – (என் முன் சொல்லும் -யானே தன்னைத் தான் பாடி -அவன் சொல் அன்றோ -என்னில் -)
ஆழ்வார் ப்ரதிபாத்யர் ஆகையாலே –குருகூர் நம்பி பா -என்றது கண்ணி நுண் சிறுத் தாம்பை -சொல்லுகிறது என்னவுமாம் –
பாவின் இன்னிசை –
பாவோடே கூடப் புணர்ப்புண்ட இனிய இசை –
பாடித் திரிவனே-
உம்முடைய தேக யாத்ரை நடத்திப் போரும்படி என் என்ன –
ப்ரீதி ப்ரேரிரதனாய்க் கொண்டு சொல்லி இதுவே தாரகமாக சஞ்சரிப்பன் –
உண்டு திரிவன் -என்னுமா போலே –பாடித் திரிவன் -என்கிறார்-
நமன் தமர் தலைகள் மீதே -நாவலிட்டு உழி தருகின்றோம் -என்னுமா போலே இதுவே
யாத்ரையாய் இருக்கிற என்னுடைய கதி நிவ்ருத்தியை பண்ண வல்லார் உண்டோ-என்றுமாம் –
ப்ராக்ருத கர்ம பலத்தை யநுபவிக்கும் யமன் -கதி பங்கம் பண்ணவோ
அதுக்கடியான விஷயாந்தரங்கள் கதி பங்கம் பண்ணவோ –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply