கண்ணி நுண் சிறுத் தாம்பு -4- நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

நாலாம் பாட்டில் –
என் அப்பனில் -என்று காற் கடைக் கொண்ட விஷயத்தை -ஆழ்வார் உகந்தார் -என்று
விரும்புகைக்கு அடி என் என்னில் –
என் தண்மையைப் பாராதே -என்னை விஷயீ கரித்த நீர்மையை அனுசந்தித்தால் –
அவர் உகந்த விஷயத்தை உகவாது ஒழிவேனோ -என்ன –
உம்முடைய தண்மை யேது -அது பாராதே அவர் விஷயீ கரித்த படி என் -என்ன -அத்தைப் பேசுகிறார் –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4

நன்மையால் இத்யாதி –
ஆத்ம குணங்களால் ப்ரசுரராய் -சம்சாரிகளுக்கு சுபாஸ்ரய பூதராய் இருப்பாரில் –
ஆழ்வாரை ஒழிந்தார் அடைய -இவன் அவஸ்து -என்று கை விடும்படி யன்றோ என்னுடைய-ஸ்திதி இருக்கும்படி –
ஒருத்தனுக்கு –நன்மையாவது
தோஷ குணங்களே ஆஸ்ரய ஸ்தலங்களாய் இருந்தால் தோஷத்தைவிட்டு குணாம்ஸத்தை-ச்வீகரிக்கை –
அதில் மிகுதி யாவது –
குணம் என்று பேரிடல் ஆவது ஓன்று இன்றிக்கே தோஷமேயாய் இருந்தால்
அது தானே பற்றாசாக கைக் கொள்ளுகை-

நான்மறையாளர்கள் –
அதுக்கடியாக ஹித அனுசானம் பண்ணக் கடவ வேதங்களிலே அவகாஹித்து இருக்குமவர்கள்
நாலு வகைப்பட்ட வேதங்களுக்கும் வ்யாசபதம் செலுத்த வல்லவர்கள்
அவர்கள் ஆகிறார் –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளார் -ஆதல்
கூரத் ஆழ்வான் -ஆதல்
இத்தால் -சொல்லிற்று ஆயிற்று -வேதார்த்த தாத்பர்யம் கைப் படுகை
அதாவது-ஆன்ரு சம்சய ப்ரதானர் ஆகை -என்றபடி-

புன்மையாகக் கருதுவர் –
புன்மை என்று ஒரு -தர்மமும் அதுக்கு ஆஸ்ரயமான தர்மியுமாய் இருக்கை அன்றிக்கே
புன்மை தான் ஒரு வடிவு கொண்டது -என்று இருப்பர்கள்
புன்மை யாவது -துக்கம் ஆதல் -பொல்லாங்கு ஆதல் -விஷயாந்திர ப்ராவண்யம் ஆதல் -துர்மானம் -ஆதல் -இது தான் மேலில் பாட்டில் ப்ரசக்தமாகக் -கடவது-

ஆதாலில் அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் –
அப் புன்மையே ஹேதுவாக -இவ்வளவில் நாம் அல்லது ரஷகர் இல்லை -என்று எனக்கு
சர்வ வித பந்துவுமானவர்
ச பித்ரா ச பரித்யக்தாஸ் ஸூரைச்ச ச மகார்ஷிபி –தரீன் லோகன் சம்பரிக்ரம்யா தமேவ சரணங்கத-என்று-காகத்தோபாதி இவனுக்கும் புறம்பு ஒரு பற்றாசில் இல்லை என்றதே ஹேதுவாக-சர்வ வித ரஷகர் ஆனவர் –
பிரியமே செய்யக் கடவ மாதா செய்யுமதுவும் –
ஹிதமே செய்யக்கடவ பிதா செய்யுமதுவும் –
ஸ்வரூப அனுரூபமான அடிமை கொள்ளும் நாயகன்  செய்யுமதுவும் -செய்யுமவர்-

தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில்
ஆழ்வார் சொல்லுவது எல்லாம் ஆழ்வார் விஷயத்தில் சொல்லுகிறார் இவர் –

தன்மையான் –
அக்நிக்கு ஔஷண்யம் போலேயும் –
ஜலத்துக்கு சைத்யம் போலேயும் –
இஸ் ஸ்வபாவாங்களை நிரூபகமாக உடையவர் –
அதாகிறது -இவனுக்கு உபகரித்தோம் -என்று தான் நினைத்தல்
இவன் தனக்கு பிரத்யுபகாரத்தில் இழிய வேண்டி இருத்தல் -செய்யாது ஒழிகை-

–சடகோபன்
என் பக்கல் சாட்யத்தை போக்கினவர் –
கீழ் மூன்று -பாட்டிலும் தென் குருகூர் நம்பி -நம்பி என்று சொன்னவர்
இப் பாட்டிலே சடகோபன் என்றார் இ றே  –ஸ்வ தோஷத்தை போக்கின படியாலே
என் நம்பி
தாய் செய்வது தகப்பன் செய்ய மாட்டான்
அவன் செய்வது இவள் செய்ய மாட்டாள்
ஆச்சார்யன் செய்யுமது இருவரும் செய்ய மாட்டார்கள்
நாயகன் செய்யுமது அடியான் செய்ய மாட்டான்
எல்லார் செய்வதும் செய்ய வல்ல பூர்த்தியை உடையவர் –
என் நம்பியே –
என்னுடைய தண்மை யாகிற பாழ்ந்த ஆறு நிரம்பும்படியான பூர்த்தியை உடையவர் என்னும் இத்தனை-
இவருக்கு கீழ்ச் சொன்ன த்ர்ஷடாந்தங்கள் சர்வதா சாம்யம் அல்ல
கர்ம ஔபாதிகமாக வந்த சம்பந்தம் ஆகையாலும்
பூர்ண ஸ்தலம் ஆகையாலும் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading