Archive for the ‘Madurakavi Aazlvaar’ Category

கண்ணி நுண் சிறுத் தாம்பு -3- திரி தந்தாகிலும் தேவபிரானுடை — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 26, 2016

ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –

ஆழ்வார் உகந்த விஷயம் என்று உகக்கிறார்

திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-

 

திரி தந்தாகிலும்-
ந ச புநா வர்த்ததே -என்கிறது பகவத் விஷயத்தை இ றே
அத்தை முதல் அடியாகக் கொண்டு முடிந்த நிலத்தளவே போனால்
போன வழி எல்லாம் மீள வேண்டும் படி இ றே ஆழ்வார் திருவடிகளில் தமக்கு உண்டான பாரதந்த்ர்யம் இருக்கும் படி

தேவபிரானுடைக்கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
நித்ய ஸூ ரிகளுக்குப் படி விடும் வடிவு காணும் இவர் வேண்டா என்கிற விஷயம் இருக்கும் படி
இவ்வளவும் இவர்க்கு உத்தேச்யராகப் பெற்றிலோம் ஆகிலும் உத்தேச்யருக்கு உத்தேச்யராய்ப் பெற்றோம் இ றே (என்று எம்பெருமான் திரு உள்ளம் )
பானௌ க்ருஹீத்வா விதுரம் சாத்திய கிஞ்ச மஹாயசா-ஜ்யோதீம்ஷ் யதித்யவத் ராஜன் குருன் ப்ரச்சாதயன் ஸ்ரியா -என்கிறபடியே (விதுரர் சாத்விகி கைகளை பிடித்து போனானே கண்ணன் – -அவர்களுக்கு நெஞ்சால் விரோதம்- கண்டார்கள் -)-நெஞ்சால் பொருந்தாமை அன்றிக்கே கண்ணால் காண்கையும் மிகையாய் இருக்கிற படி-
த்ருனௌ ரூப சம்பன்னௌ என்று இறே முறைப்படுவார் வார்த்தையும் -விஷயம் இருந்தபடி பேச வேணும் இறே

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு –
சர்வ நிரபேஷரான ஆழ்வாருக்கு –
ஆழ்வார் ஒருவருக்கும் இ றே ஈஸ்வரன் மயர்வற மதி நலம் அருளிற்று
இவர் ஜகத்துக்காக மயர்வற மதி நலம் அருளினார் இ றே
இவரையும் கட்டித் தருமூர் ஆகையாலே வண்மையின் மிகுதி சொல்லுகிறது
விசேஷஜ்ஞர் அடங்கத் திரண்டவூர் இ றே-( பெரிய வண்மை இரண்டு விசேஷணங்கள் )
அங்குத்தைக்கு நிர்வாஹகரான பூர்த்தியும் உண்டு இ றே இவர்க்கு –
தாம் சொல்லும் போதும் பெரிய வண் குருகூர் வண் சடகோபன் -8-1-11–என்று இ றே சொல்லுவது-இவருடைய நாராயணத்வம் இருக்கிறபடி –

ஆள்-உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே-
அடியேன் என்கையாலே இவருடைய சதுர்த்தியில் அர்த்தத்தைக் காட்டுகிறது
அதாவது சேஷி உகந்தத்தை உகக்குமது இ றே கைங்கர்யத்தின் எல்லை நிலமாகிறது

————————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம்-

தேவு மற்று அறியேன் என்றார் கீழ் –
ஆழ்வார் பற்றின விஷயம் என்று அவ்வழியாலே பற்றுகிறார்
கிடந்தானை கண்டு ஏறுமா போலே தந்தலையாலே வருமது இ றே தவிர்த்துக் கொண்டது
தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல்-என்று அத்தலையாலே வருமது தவிர்த்துக் கொண்டு இலரே –
ஸூர்ப்பணகை போலே வழி எல்லா வழியே வருமத்தை இ றே தவிர்த்தது -ஆழ்வார் தலையாலே வருமது தவிர்ந்திலரே
பவத பரமோ மத -என்று கேட்க -தர்மோதிகதாமோ மக என்று ஆச்சார்யா ருசி பரிக்ருஹீதமாய் வருமது ஏதேனும் ஆகிலும் அமையும் இவர்க்கு –

குண மலைப் பாடியுடையார் காங்கேயர் தெற்கே எடுத்து விடுகிற வளவிலே கோயிலாச்சான் இவருக்குச் சில அரிசியும் பச்சையும் வரக் காட்டினான் –
அப்போது சங்குசிதமாய் இருக்கையாலே அபேஷிதமாய் இருக்கும் இ றே
இவ்வளவிலே உபகரித்தவனுக்கு பிரத்யுபகாரம் பண்ண வேணும் என்று நினைத்து இருந்து பின்பு ஒரு நாளிலே கண்டு
எங்கள் பக்கலிலேயும் ஓர் உபகாரம் கொள்ள வேண்டும் -என்ன நான் முன்பே கொண்டேன் என்ன
என்னை அறியாமல் எங்கனே கொண்டபடி என்ன
எங்கள் ஆச்சார்யர் கோயில் அளவிலே நீர் அனுகூலித்த படியை நினைத்து அவ்வேளாளனாலே இம்மண் பெற்றோம் என்று
பலகாலும் அருளிச் செய்யக் கேட்டேன் -இனிக் கொள்ள வேண்டுவதொரு உபகாரம் இல்லை என்றான் –
திரிபுரா தேவியார் வடகீழ் மூளை தத்வத்தையும் ஆஸ்ரயணீய வஸ்து என்று நினைத்து இரஏனோ எம்பெருமானார் அங்கீ கரித்தாராகில் –
அவர் அங்கீ கரியாமை அன்றோ அவரதேவதையாக நினைத்து இருக்கிறது என்றார் –

திரி தந்தாகிலும் –
திரிகை யாவது மீளுகை -மீண்டாகிலும் –
தரவென்று அடையாளச் சொல்லாய் திரிதந்தாகிலும் என்றது போன வழி எல்லாம் மீண்டாகிலும்
அதாவது ஆழ்வார் புணர்ப்பை விட்டு -ஆழ்வார் தம்மை விட்டு -இவ்வளவும் வந்து

தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்-
இவர் தாம் நின்ற நிலை குலைந்து பகவத் விஷயத்திலே நிற்கும் போதும் நித்ய ஸூ ரிகளுடைய யாத்ரையே யாய்த்து இருப்பது
தேவ பிரான்
நித்ய ஸூ ரிகளுக்குத் தன்னை முற்றூட்டாக அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு இருக்கும் உபகாரகன் –
தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உரு-
யோகப்ரஷ்டர் ஊர்வசியினுடைய வடிவழகை வர்நிக்குமா போலே சொல்லுகிறார்
கோலமே தாமரைக் கண்ணன் ஓர் அஞ்சன நீலமே -என்று ஆழ்வார் சொல்லக் கேட்டிருக்கும் செவி ஏற்றாலே சொல்லுகிறார்
காண்பன் –
யோகப்ரஷ்டனுக்கு விஷயம் கண்ணுக்கு இலக்காமா போலே ஆழ்வாரை விட்டால் பகவத் விஷயமாய்த்து இவர் காண்பது
யான்
இப்படி சந்யசித்துப் போந்த நான்-

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு –
நான் ஒன்றைப் பற்றினேன் -ஒன்றை விட்டேன் -என்று சொல்லலாம் படியோ ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது

ஆள்உரியனாய்-
உரிய அடியனாய்-
உரிய அடியார்க்குத் தந்தாமுக்கு என்ன ஒரு பிரியாபிரியங்கள் இன்றிக்கே ஸ்வாமி பற்றினதைப் பற்றி
அவன் காற்கடைக் கொண்டதை காற்கடைக் கொள்ளும் அத்தனை யாய்த்து இருப்பது
ஒரு காலத்திலேயே எம்பெருமானார் சம்பந்தம் உடையாரை உள்ளுப்புக வேண்டா என்று தகைந்தார்களாய்-அவ்வளவிலே ஆழ்வான் அங்கே செல்ல
இவருக்கு ஒருவருடன் விரோதம் இல்லை நீர் புகலாகாதோ என்ன
ஆத்மகுணங்கள் மோஷ ஹேதுவாகவும் அநாத்ம குணங்கள் பந்த ஹேதுவாகவும் நினைத்து இருந்தோம் -ஆத்ம குணங்கள்
பந்த ஹேதுவாய்த்தே -என்று உம் பெருமானாரோட்டை சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு உள்ளுப் புக வேண்டா என்று போந்தான்

அடியேன் -ஆழ்வாருடைய நீர்மையிலே தோற்று அடியேன் என்கிறார்

பெற்ற நன்மையே
முன்பு விட்ட சப்தாதி விஷயங்களோபாதி ஆழ்வார் நன்று என்று பற்றின பகவத் விஷயத்தைத் தீது என்ன மாட்டாரே
ஆகையால் பெற்ற நன்மையே என்கிறார்
ஆழ்வார் என்னை உகவா நிற்க நான் அவர் உகந்த விஷயத்தை உகவாது ஒழிவனோ –

—————————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –

தேவு மற்று அறியேன் என்றார் கீழில் பாட்டில்
இங்கு ஈஸ்வரன் தான் இவர் பக்கலிலே மண்டினபடியைச் சொல்லுகிறார்
பகவத் விஷய ப்ரீணநமாக ஆச்சார்ய விஷயத்தில் ப்ரவணனாகக் கடவன்
ஆச்சார்ய ப்ரீணநமாக பகவத் விஷயத்தில் ப்ரவணனாகக் கடவன்
ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்தமஹம் ச ச மம ப்ரிய-என்கிறபடியே ஒருவருக்கு ஒருவர் ப்ரிய விஷயமாய் இருக்கும் இ றே
ஒருவனை ஒருவன் உகந்தானாவது அவன் உகந்தாரையும் உகக்கை யாய்த்து –
இவர் கீழ் தேவு மற்று அறியேன் என்று நம்மையும் மறந்து ஆழ்வார் பக்கல் ப்ரவணர் ஆனாரே
எல்லாம் கூட நம்மை அறிவித்தவர் என்று இ றே ஆழ்வார் பக்கல் இவர்க்கு ஆதாரம்
இப்படி நம்மை யுகந்தாருக்கு இவர் ப்ரீதராம் இடத்தில் -மம மத்பக்தபக்தேஷூ ப்ரீதிரப்யதிகா பவேத் -அன்றோ
ஆகையாலே நாம் கொடுக்கும் பாரிஸில் எது என்று பார்த்து ஆழ்வார் பக்கல் பக்தி பூரணமான இவர் திரு உள்ளத்திலே
நீர் வெள்ளத்திலே நெய்தல் பாரித்தாப் போலே தன்னுடைய வடிவைக் கொடுவந்து பாரிக்க
இதைக் கண்டு ப்ரீதரான இவர் இதுக்கு நிமித்தம் என் என்று ஆராய்ந்து பார்த்து அது பகவச் சேஷத்வ ஜ்ஞானத்தாலும் வந்தது அன்று
-பாகவத சேஷத்வ மாத்ரத்தாலும் வந்தது அல்ல -பகவத் ஆஸ்ரயணத்தாலும் வந்தது அல்ல
எல்லாம் கூட நான் ஆழ்வாருக்கு அனன்யார்ஹ சேஷ பூதனாய் பெற்ற பேறு இ றே இது என்று ஸ்வ கதமாக ப்ரீதர் ஆகிறார்
ஆச்சார்ய விஷயத்தைப் பற்றி இருப்பான் ஒருவனை பகவத் விஷயம் தானே மேல் விழும் என்னும் இடத்துக்கு உதாஹரணம் இது வி றே
பிராட்டியைப் பற்றினாலும் அவள் அவனோடு சேர்க்கையாலே அவன் கை பார்த்து இருக்க வேணும்
-இங்கு அவன் தானே மேல் விழுந்து தன்னை இவனுக்குக் கொடுக்கும் –

திரி தந்தாகிலும் –
திரியா நிற்கச் செய்தேயும் இங்கனே சஞ்சரியா நிற்கச் செய்தேயும் -மெய்ம்மையே தேவு மற்று அறியேன் என்று ப்ரத்யயம்
பண்ணலாம் படி பகவத் விஷயத்தோடு ஒட்டு அற்றுக் திரியா நிற்கச் செய்தேயும் இப்பேற்றைப் பெற்றேன்

தேவபிரானுடைக்
இவர் திரு உள்ளத்திலே ஈஸ்வரன் கொடு வந்து பாரித்துக் காட்டின வடிவு நித்ய ஸூ ரிகளுக்குப் படிவிடும் வடிவாய்த்து –
அவர்களையும் இவரையும் பார்த்தால் அவர்கள் நமக்கே நல்லவர்கள் -இவர் ஆழ்வாருக்கே நல்லவர்-இவருக்கு அன்றோ இவ்வடிவை நாம் பிரகாசிப்பது என்று இவருக்குக் கொடு வந்து அனுபவிப்பித்தான் -பக்தாநாம் த்வம் பிரகாசசே -என்கிற இடத்தில் பக்தர் ஆகிறார் இவர் ஆய்த்து-(பக்த பக்தர் என்றபடி -நம்மாழ்வார் காண வாராய் என்று கதறுகிறார் )

கரிய –
இவ்வளவு நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கிற போதும் கண்கள் சிவந்து என்று தொடங்கி அடியேன் உள்ளான் என்று
ஆழ்வார் தாம் அனுபவிக்கிற போதும் வெளிறாய் இருந்தது –
இவர் அனுபவித்தவாறே தன்னிறம் இட்டதாயிற்று-
என்னாவி சேர் அம்மானுக்கு செம்பொன் திருவுடம்பு என்று ஆழ்வார் அநுபவித்தபோதும் பொன் என்ற அளவத்தனை போக்கிக் கறுத்தது இல்லையே

கோலத்
ஆனைக்கு உதவ வந்தாப் போலே இருந்தபடியே வருகை அன்றிக்கே இங்கு அனுபாவ்யனாய்
வருகிறவன் ஆகையாலே சாத்தின திரு ஆபரணமும் தானுமாய்த்து வந்தது
அபிமத விஷயத்தின் பாடு போவார் ஆபரணம் பூண்டு இ றே போவது –

திரு உருக் –
கழற்ற ஒண்ணாது இருப்பதோர் ஆபரணத்தையும் கொண்டு வந்தார்
அவ்விருண்ட வடிவுக்கு மின் போலே ப்ரகாசிகையாய் இருக்குமவள் யாய்த்து
இவளைக் கண்டாலாய்த்து அவ்வடிவையும் காணலாவது
திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் என்கிறபடியே ஸ்வரூபத்தாலே ஸ்வரூபத்துக்கு பிரகாசிகையாய் இருக்கும்(புருஷகார பூதை-ஸ்வரூபம் -அவன் ஸ்வரூபம் உபாயம் -பிரகாசப்படுத்தும் -)
விக்ரஹத்தாலே விக்ரஹத்துக்கு பிரகாசிகையாய் இருக்கும் அவள் தான் –

காண்பன் நான்
இவ்வடிவை ஸ்ரவண மாத்ரத்திலே யாதல் -மனன மாத்ரத்தாலே யாதல் -நிதித்யாசன மாத்ரத்திலே யாதல் அன்றிக்கே-ப்ரத்யஷ சமாநாகாரமாம் படி அனுபவிக்கப் பெற்றேன் -அவை வேண்டுவது இவன் காண ஆசைப்படும் போது இ றே
இங்கு அப்படி அன்றிக்கே அவன் தானே ஆதரித்து மேல் விழுகையாலே எனக்குக் கண்ணாலே காணுமா போலே காணலாய்த்து
தேவபிரானுடைக் கரிய கோலத் திருவுருக் காண்பன்
அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நன் மேனி வண்ணன் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு
ஒழிவிலன் என்னோடுடனே என்று ஆழ்வாரை அனுபவிப்பித்தால் போலே என்னையும் அனுபவிப்பித்தான்
நான் காண்பன்-
தேவு மற்று அறியேன் என்று காணாமைக்கு கண்களைத் தெரிய வைத்த நான் கிடீர் கண்டேன்
தேவபிரானுடைக் கரிய கோலத் திருவுருக் காண்பன்
பிராட்டிக்கு நித்ய அனுபாவ்யமாய் ஸூ ரிகளுக்கு சதா தர்சநீயமுமான விக்ரஹத்தைக் கிடீர் விமுகனான நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்
தேவபிரானுடைக் கரிய கோலத் திருவுருக் காண்பன்
அவன் நேருவது எல்லாம் நேரந்தான்
நானும் ஒரு பார்வை விசேஷம் பார்ப்பாரைப் போலே பார்த்தேன் என்னவுமாம்
நவநீத சௌர்யத்தில் உட்பட நாக்கு நீட்டாதவர் பர தசையைக் கண்டால் பார்த்து விடச் சொல்ல வேண்டாவே-

திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்-கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பார்த்தேனே யாகிலும் ஆழ்வார் திரு நிறம் போலே பொன்னிறமாய் இருக்கிறது அன்றே
அது வேற்று நிறம் ஆகையாலே கண்டு விட்டேன் இத்தனை
இது போலே வகுள கந்தியாய் இராதே துளசி கந்தியாய் இருக்கையாலே வேற்று மணம் உண்டாய் இருக்குமே-(பார்த்து வைத்தேன் -ஜிகுப்பிசையால் அருளியபடி -கண்டு விட்டேன் -விட்டு விட்டேன் -மணமும் நிறமும் வேறே –தெய்வம் என்று விட்டேன் –இருவராய் வந்தார் –அவர் நாம் தேவர் என்று அஞ்சினோம் போலே -)

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே-
நான் ஆழ்வாருக்கு அனன்யார்ஹ சேஷ பூதனாய்ப் பெற்ற பேறு என் -என்கிறார் மேல்
இப்பேறு எந்நாளும் வந்தது அல்ல -பிறராலும் வந்தது அல்ல -அவன் தன்னாலும் வந்தது அல்ல –ஆழ்வார் அடியாக வந்தது என்கிறார்

ஆள் உரியனாய் –
ஆளாகப் பிராப்தனாய் –
பகவச் சேஷத்வம் தனக்கு ஆளற்று இருக்க ஆழ்வாருக்கு சேஷபூதராகை பெறாப் பேறு இறே
அன்றிக்கே
உரிய அடியனாய் -தேவு மற்று அறியேன் -என்னும்படி சர்வ சேஷி பாடும் போகாத படி ஆழ்வாருக்கு அனன்யார்ஹனாய் -என்றபடி –

நம்பிக்கு –
வேறு பகவத் விஷயம் தேடித் போக வேண்டும் படியோ ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது-
அந்த சர்வ ரஷகனானவனுக்கும் ஆளாகாத என்னையும் ரஷித்து ஆளாக்கிக் கொண்ட பூர்த்தி யன்றோ ஆழ்வாரது

நம்பிக்கு ஆள் உரியனாய்
இவருடைய குணைர்த் தாஸ்யம் உபாகத -இருக்கிறபடி

நம்பிக்கு ஆள் உரியனாய்
இவருடைய பிரணவ அர்த்த அனுசந்தானம் இருக்கிறபடி

குருகூர் நம்பி
இந்த நம்பி வாஸூ தேவோசி பூர்ண -என்கிற பரமபத நிலயன் ஆதல் -அவர் தாம் அனுசந்தித்த திருக் குறுங்குடி நம்பி யாதல் யன்றிக்கே
திரு நகரியிலே வர்த்திக்கிற நம்பி
இவருக்குப் பூர்த்திக்கு ஊற்று வாய் இத்தேச வாசம் என்று இருக்கிறார்

வண் குருகூர் –
வண்மையை யுதைத்தான திரு நகரி
ஆழ்வார் என்னைத் தந்தாப் போலே ஆழ்வார் தம்மைத் தந்த திரு நகரி -சர்வ காம துக்கான தேசம் –

பெரிய வண் குருகூர் –
பரமபதம் ஒரு சிறாங்கை என்னும்படி உபய விபூதியும் ஒதுங்கலாம் படி பெருமையை உடைத்தான வூர்
அன்றிக்கே
புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் -என்கிறபடியே-விபூதிமானையையும் விபூதியையும் தமக்குள்ளே அடக்கி இருக்கிற ஆழ்வாரைத் தனக்குள்ளே அடக்கும்படியான பெரிய தேசம்

நகர்
விலஷண வஸ்துக்கள் வந்து சேரும் தேசம்
தேவபிரானுடைக் கரிய கோலத் திருவுருக் காண்பன் நான் -என்று அக்கரையார் அடங்கலும் வந்து பாரிக்கும் படியான பட்டணம் ஆயிற்று –

நகர்
முக்தஆகாரம் பாரிக்கும் தேசம் -சொன்ன சொல் நம்புவார் பத்தி வைகுந்தம் இ றே
குரவை கோத்த குழகனை மணி வண்ணனை ஏத்துதல் மனம் வைம்மினோ
தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை பரவுமினோ என்று தேவகி புத்ர ரத்னமும் அது தன்னிலும் வில்பிடி மாணிக்கமும் விலை செல்லும் தேசம்

அடியேன் பெற்ற நன்மையே
இங்கு அடியேன் என்கிறது நான் என்றபடி
ஆள் உரியனான பின்பு நான் இருக்கும் படி இது இ றே

பெற்ற நன்மையே
ஆழ்வார் தமக்கு இன்னும் பெற வேண்டுவன நன்மை யுண்டே யாகிலும் நமக்கு இனிப் பெற வேண்டும் நன்மை ஒன்றும் இல்லை
ஆழ்வார் தாம் அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்றும்
மல்கு நீலச் சுடர் தலைப்ப -என்று தொடங்கி என் திரு மார்வனை வந்து எய்தும் ஆறு அறியேன் என்றும் மநோரதம் நடவா நிற்க-இன்று நான் இப்பேறு பெரும்படியானபடி என்

நம்பிக்கு ஆள் உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே
அவனுக்கு சேஷபூதராய் இருந்து வைத்தே அவர் அலமாரா நிற்க
நான் ஆழ்வார் தமக்கே சேஷபூதனாய் இருந்து வைத்து இன்னன்மையைப் பெறுவதே
வைஷ்ணவ சம்ஸ்ரயரானால் பராஸ்யந்தி என்று போய்ப் பெற வேண்டாதே- இருந்த இடத்திலே வந்து திருக் குதிப்பதே-
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் என்ற வார்த்தை என்னளவிலே பலித்தது என்று-ஸ்வ அனுசந்தானத்தாலே சந்துஷ்டராகிறார் –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு -2- நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 26, 2016

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-

——————————–

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

ஆழ்வாருடைய ஏற்றம் ஓர் உக்தியாலே இச் சரீரரத்தோடே அனுபவிக்கலாம் என்கிறார் –

நாவினால் நவிற்று –
மன பூர்வோ வாக் உத்தர -என்கிற அதுவும் வேண்டா இ றே இங்குத்தைக்கு
எல்லாக் கரணங்களால் ப்ரவர்த்தித்தார் பெரும் பேற்றைக் காணும் இவர் வாக்கு ஒன்றாலும் பெற்றது
பிரத்யஷே குரவஸ் ஸ்துத்யா-என்கிறபடியே பகவத் விஷயத்தில் உபாகாரகரை ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு அன்றோ நாக்கு கண்டது –

இன்பம் எய்தினேன்-
ரசத்தின் எல்லையைப் பற்றினேன்
சுழி பட்டோடும் சுடர்ச்சோதி வெள்ளம் அரை வயிறு என்னும் படி இ றே இவர் பெற்ற பேறு-

இவர் பெற்ற லாபம் என் என்னில்
மேவினேன் அவன் பொன்னடி
கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழல் -என்றும்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலேவே -என்றும் சொல்லுகிற படியே எல்லாம் இவர்க்கு இங்கே யாகிறது

மெய்ம்மையே
இது எத்தனை குளிக்கு நிற்கும் என்னில் -விஜ்ஞாபநமிதம் சத்யம் –
இமையோர் தலைவா மெய் நின்று என்றார் ஆழ்வார்
குருகூர் நம்பி பொன்னடி மேவினேன் மெய்ம்மையே -என்கிறார் இவர் –

தேவு மற்று அறியேன் –
வேண்டா என்கிறேன் அன்று
வ்யுத்பத்தி இல்லாமை
பாவோ நான்யத்ர கச்சதி -அன்யத்ர என்றால் போலே மற்று அறியேன் என்கிறார்
விட்ட விஷயத்தின் பேர் சொல்லாமைக்கு

குருகூர் நம்பி
ஆழ்வாரையும் உகந்து அவருக்கு ஆஸ்ரயணீய வஸ்துவையும் உகக்கும்படி அன்று இ றே ஆழ்வாருடைய பூர்த்தி இருக்கும் படி

பாவின் இன்னிசை –
பாவிலே பூண்ட இனிய இசை –
ஐஸ்வர் யத்தை அல்ப அஸ்தரம் என்று கழித்து
ஸ்திரமான ஆத்ம பிராப்தியை அபுருஷார்த்தம் என்று கழித்து
ஸ்திரமுமாய் பரம போக்யமுமான பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் பிரதம அவதி என்று கழித்து-அவரோடு சம்பந்தித்த விஷயத்தையும் ரசாச்ராயம் அன்று கழித்து
அத்தோடு சம்பந்தித்த இசையே எனக்கு உத்தேச்யம் என்கிறார் –
தெய்வத் தண்ணம் துழாய் த் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும்
கொண்டு வீசுமினே -இத்யாதியில் படியே பகவத் சம்பந்தம் போகப் போக நிறம் பெறுகிற படி – ( ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் -வடக்கே உத்சவங்ககள் இல்லை நின்ற மண் உத்தேச்யம் என்ற உணர்வு வேண்டுமே )

பாடித் திரிவனே –
ரசாயன சேவை பண்ணித் திரிவாரைப் போலே இது காணும் இவருக்குத் தாரகமாய் சஞ்சரிக்கப் பண்ணுகிறது –

——————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

ஆழ்வாருடைய பாசுரமே தமக்கு தேக யாத்ரையாம் படி தாரகமான படி சொல்லுகிறார் –

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும்-என்று ப்ரஸ்துதமானது தன்னையே அனுபாஷிக்கிறார்
நாவினால் நவிற்று
மனஸ் சஹகாரம் இல்லை என்கிறார் –
பிரத்யஷே குரவஸ் ஸ்துத்யா -என்கிறபடியே -பகவத் விஷயத்தில் உபகாரகரை ஸ்தோத்ரம் பண்ணக் கடவதைக் கொண்டு
அந்தக் கார்யம் கொள்ளப் பெற்றேன் என்கிறார் என்னவுமாம் –
ஈஸ்வரன் சிருஷ்டிக்கு பிரயோஜனம் கொள்ளப் பெற்றேன் நான் ஒருவனுமே என்கிறார்
இன்பம் எய்தினேன்
வீவில் இன்பம் மிக வெள்ளை நிகழ்ந்தணன் என்று ஆழ்வார் அவ்விஷயத்தில் பெற்ற பேற்றை இவ்விஷயத்தில் உக்தி மாத்ரத்தாலே பெற்றேன் என்கிறார்
ஒரு கரணத்தாலே ஒரு பாபத்தைப் பண்ணினால் ஒரு கல்பம் நரகானுபாவம் பண்ணி கல்பாந்தரமும் நரகானுபவம் பண்ண வேண்டும்படி யாய்த்து இருப்பது
அப்படிக்கு யோக்யமான கரணத்தாலே நிரதிசய ஆனந்தத்தை ப்ராபித்தேன் –

மேவினேன் அவன் பொன்னடி-
ஆழ்வாருடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளே உத்தேச்யமாகப் பொருந்தினேன் -ப்ராபித்தேன் என்கை-

எங்கனே பொருந்தினபடி என்னில்
மெய்ம்மையே-பொருந்தினேன்
இவரை உபகாரக கோடியிலே யாக்கி வேறு ஓன்று உத்தேச்யமாய்க் கிட்டினவாறே அதிலே தோள் மாறும் படி அன்றிக்கே
ஆழ்வார் திருவடிகளே உத்தேச்யமாகப் பொருந்தினேன்
இங்கு இருக்கும் நாள் அஜ்ஞாதஜ்ஞாபநத்தாலே உபகாரகராகவும் பகவத் விஷயத்துக்கு புருஷகாரமாகக் கொண்டும் அவ்வருகே சென்றால்
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்திதேவா என்கிறபடியே சாத்யவிவ்ருத்தி ரூபத்தாலே உத்தேச்யராகவும் இவர் தம்மையே பற்றினேன் –

தேவு மற்று அறியேன் –
ஆழ்வாரை ஒழிய வேறு ஒரு ஆஸ்ரயணீய வஸ்து உண்டு என்று அறியேன் –
மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொன்னார் -தேவு மற்று அறியேன் -என்கிற இடம் வ்யதிரே கத்தாலே சொல்லுகிறார்
மற்று அறியேன் என்கிறது எத்தை என்னில் -கீழ் விட்டவற்றை எல்லாம் என்கிறார்
ஐஸ்வர்யம் என்ன -ஆத்மலாபம் என்ன -அவற்றை விட்டு பகவல் லாபத்தளவிலும் நில்லாதே அதின் எல்லையான
ஆழ்வார் அளவும் போந்தவர் ஆகையாலே அவற்றை எல்லாம் நினைக்கிறார் –

குருகூர் நம்பி-
இவரையும் பற்றி வேறே ஒரு வஸ்துவையும் பற்றும் படியோ இவருடைய பூர்த்தி இருப்பது
குருகூர் நம்பி பா -என்றது கண்ணி  நுண் சிறுத் தாம்பு என்னுதல்-திருவாய்மொழி என்னுதல் –
திருவாய் மொழி தன்னில் குருகூர் சடகோபன் என்றார் இ றே
அவ்வழியாலே யாய்த்துத் திருவாய்மொழி தன்னையும் இவர் ஆதரிப்பது

பாவின் இன்னிசை பாடித் திரிவனே
இயலோடு சேரப் புணர்ப்புண்ட இன்னிசை
உம்முடைய தேக யாத்ரை நடப்பித்துப் போரும்படி என் என்னில் ப்ரீதி ப்ரேரிதனாய்க் கொண்டு
இவற்றைச் சொல்லி இதுவே தாரகமாக அத்தாலே சஞ்சரிப்பன்

பாடித் திரிவனே
நாம தமர் தலைகள் மீதே நாவலிட்டு உழி தருகின்றோம் -என்று தன்னுடைய கதி நிவ்ருத்தியைப் பண்ண வல்லார் உண்டோ -என்றுமாம் –

————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம்-

ஆழ்வார்கள் பகவத் விஷயத்திலே ஆச்சார்ய பிரதிபத்தி பண்ணிப் போந்தார்கள் –
இவர் ஆச்சார்ய விஷயத்திலே பகவத் பிரதிபத்தி பண்ணிப் போருகிறவர் ஆய்த்து-
பகவத் விஷயத்திலும் ஆழ்வாருக்கு உண்டான வாசி
யதி சக் நோஷி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித-இத்யுக்த்வாத நிஜம் கர்ம சா சகார குடும்பி நி-என்கிறபடியே இடைச்சி கட்டி
வல்லை யாகில் நான் கட்டின கட்டை அவிழ்த்துப் போய்க் காண்-உன் துறு துறுக்கைத் தனத்தாலே அறப் பட்டதீ-என்று
கையாலும் வாயாலும் கட்டி கறப்பன கடைவன குவாலாகையாலே பெரிய திரு நாளிலும் சந்த்யா வந்தனம் முட்டாமல் நடத்துவாரைப் போலே
அவள் தன்  கார்யத்திலே போந்தாள் என்று சொல்லுகையாலே ஓர் அபலை கட்ட அது அவிழ்க்க மாட்டாமல் இருந்தான் –
கட்டினவர்களே இரங்கி அவிழ்க்க வேணும் என்று இ றே அவன் நினைவு அப்படியே ஆழ்வாரும் இவனுடைய சௌசீல்ய குணத்தாலே கட்டுண்டு
எத்திறம் என்று போக மாட்டாமல் இருந்தார்
இவர் அப்படி அன்றிக்கே ஆழ்வார் ஈடுபட்ட அபதானத்தை அனுசந்தித்து இருக்கச் செய்தேயும் அதில் ஆழம் கால் படாதே
அத்தை விட்டு ஆழ்வாருடைய போக்யதையிலே நின்றவர் ஆய்த்து –
கீழ்ப்பாட்டிலே நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே -என்று ஆழ்வார் பக்கல்
ஸ்ம்ருதி சாரச்யத்தையும் சங்கீர்த்தன சாரச்யத்தையும் சொல்லக் கேட்டவர்கள்
நாட்டார் அடைய பகவத் விஷயத்தையே ஸ்மர்த்த வ்யமாகவும் சங்கீர்த்த நீயமாகவும் சொல்லா நிற்க நீர் ஆழ்வாரை இவை இரண்டுமாக
அனுசந்திப்பான் என் பகவத் விஷயத்திலேயும் அன்வயிக்கப் பார்த்தாலோ வென்ன அதுக்கு இப்பாட்டாலே உத்தரம் சொல்லுகிறார் –
தாம்தாம் பற்றின விஷயத்தை விட்டுப் புறம்பு சில போக வேண்டுவது-1- அவ்விஷயம் இஹ லோக ஸூக ஜனகம் அல்லவாயாதல்-2--பர லோக ஸூ கத்துக்கு சாதனமன்றாயாதல்–3- பற்றினவர்கள் இவ்விஷயத்தை ஒழிய வேறே ஒரு ஸ்வாமி யுண்டாக நினைத்து இருத்தல் -4-கால ஷேப விஷயம் அல்லாமையாலே யாதல் அன்றோ—-அதில் -1-எனக்கு இஹ லோக ஸூ க ஜனகரும் ஆழ்வாரே-2 -பர லோக ஸூ கத்துக்கு சாதனமும் ஆழ்வாரே-3-எனக்கு ஸ்வாமி யும் ஆழ்வாரே -4-கால ஷேப விஷயமும் ஆழ்வாரே -ஆனபின்பு பகவத் விஷயத்திலே அன்வயிக்க வேண்டுகிறது என் என்கிறார் –நான்குக்கும் நான்கு அடிகள் இந்த பாசுரம் –1-நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்-2-மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே-3-தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி-4-பாவின் இன்னிசை பாடித் திரிவனே-

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
நான் பெற்ற பேற்றைப் பார்க்க மாட்டீர்களோ –
நாவினால் நவிற்று
நவிற்றும் போது நா வேண்டி இருக்கச் செய்தே நாவினால் நவிற்று என்கைக்கு அடி மனஸ் சஹகாரம் வேண்டாத படி
அவசே நாபி யன்நாம்னி கீர்த்திதே -என்கிறபடியே வாக் மாத்ர உச்சாரணத்தாலே ஆனந்தம் சித்தித்தது என்கைக்காக –

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்-
இப்படியே அன்றிக்கே பகவத் விஷயத்தில் புறம்புள்ள இந்த்ரியங்களை மனசிலே அடக்கி மனசைக் கொண்டு போய்
ஸூபாஸ்ரயத்திலே வைத்து பின்பு அநவரத பாவனை யுண்டாய் அது தானே சமாதி பர்யந்தம் ஆனால் இ றே
ந விவேதாத்மநோ காத்ரம் தத்ஸ்ம்ருத்யாஹ்லாத சம்ஸ்தித -என்று ஆனந்தம் சித்திப்பது
ஆழ்வார் தமக்கு அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினேன் என்று இத்தனை செய்ய வேண்டிற்று –

இன்பம் எய்தினேன்
இன்னவகைப்பட்ட இன்பம் என்னாமையாலே பஹூ விதமான ஆனந்தத்தை எய்தினேன் –
எய்தப் பெற்றேன் –
எனக்கு லப்த்வா நந்தி பவதி என்ன வேண்டிற்று இல்லை
நவிற்று இன்பம் எய்தினேன் -எய்தினேன் –
பகவத் விஷயத்தைப் பற்றினார்க்கு ஆனந்தம் காலாந்தரபாவி
இங்கு அப்படி அன்றிக்கே எய்தி விட்டேன்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
அநவரத பாவனையாலும் ஆனந்தம் வேண்டிற்று இல்லை
அனுபவத்தாலும் ஆனந்தம் உண்டாக வேண்டிற்று இல்லை-

ஆனால் இப்போது அன்றோ இந்த இன்பத்தை விரும்பினீர் -சரீர விநியோக சமாந்தரம் பிறக்கும் ஆனந்த சித்திக்கு
ஒரு சாதனத்தைப் பற்ற வேணும் -அதுக்கு சாதனமாக லோக விக்ராந்த சரணங்களை ஆஸ்ரயிக்க வேண்டாவோ என்ன
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
அதுவாகில் அதுக்கும் ஆழ்வார் தம்முடைய திருவடிகளையே உபாயமாகப் பற்றினேன்
அவன் பொன்னடி
யாதொரு விஷயத்தை நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -அவனுடைய திருவடிகளை-பிராப்யம் ஆனது தானே ப்ராபகமும் ஆய்த்து
அவன் பொன்னடி
அது போலே உலகம் அளந்த பொன்னடியாய்- ஊர்ப் பொதுவாய் -எல்லார் தலையிலும் இருக்குமதன்றிக்கே
இத்திருவடிகள் த்ரைவித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணமாய் இருக்கும்
வ்ருத்த ஜனங்கள் ஆகிறார் உத்தரபாக நிஷ்டரானவர்கள்-( ப்ராப்யம் முதலிலே -ஆனந்தம் கொடுத்து -அதிலே பிராப்பகமும் அந்தர் கதம்  -நாவினால் நவிற்று ஆரம்பம் -அவன் பொன்னடி -வாசி -உலகம் அளந்தவன் பொன்னடியில் -)
பொன்னடி-
நான் தொட்டுப் பரிமாறினாலும் தோஷம் வாராத திருவடிகள்
மேவினேன்
பகவத் விஷயத்தை ஆஸ்ரயிக்கும் இடத்தில் நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் என்று
வர்த்தமான நிர்த்தேசம் பண்ண வேண்டிற்று
இங்கு அப்படி அன்றிக்கே சக்ருத் சமாஸ்ரயணம் அமைந்தது
அவன் பொன்னடி மேவினேன்
பகவத் விஷயத்தில் போலே
த்வமேவோபாய பூதோ மே பவ -த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று
அபரோஷித்து ஆஸ்ரயிக்க வேண்டாத படி எங்கேனும் இருந்து ஆஸ்ரயிக்கலாம் படியான அவனுடைய திருவடிகளை –அவன் பொன்னடி மேவினேன்-(உன் பொன்னடி -சொல்ல வில்லையே அவன் -பொன்னடி -எங்கு இருந்தாலும் சொல்லி பெறலாமே )
ஒரு புருஷகார புரச்சரமாக வன்றிக்கே தந் நிரபேஷமாக ஆஸ்ரயித்தேன்-இங்கே நஞ்சீயர் ஆஸ்ரம ச்வீகாரம் பண்ணின அனந்தரம்-அனந்தாழ்வான் -வேர்த்த போது குளித்து பசித்த போது உண்டு பட்டர் திருவடிகளே சரணம் என்று எங்கே இருந்தாலும்
ப்ராப்திக்குக் கண் அழிவு உண்டோ -ஆயிருக்க கைங்கர்யத்துக்கு விரோதியாய் இருப்பதொரு வேஷத்தைக் கொண்டு என் செய்தீரானீர் -என்று-அருளிச் செய்த வார்த்தையை அனுசந்திப்பது
மேவினேன்
அத்தோடு பொருந்தி விட்டேன்-இனி வேறு ஒரு கால் இருக்கைக்கு இடம் இல்லாத படி பொருந்தி விட்டேன்
நாவினால் நவிற்றி இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி
இத்தைப் பின் சென்று இ றே ஆளவந்தாரும் ஆச்சார்ய விஷயத்தில்
அதர பரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ சரணம் மதஈயம் என்றது –

மேவினேன் அவன் பொன்னடி என்றீர் -அந்த ஆஸ்ரயணத்தை
சா தேவேச்மின் பிரயுஜ்யதாம் -என்கிறபடியே சர்வ ஸ்வாமியான ஈஸ்வர விஷயத்தில் பிரயோகிக்க வேண்டாவோ என்ன
தேவு மற்று அறியேன்-
நான் அப்படி இருப்பதொரு ஸ்வாமி யுண்டாக வ்யுத்பத்தி பண்ணி வைக்கில் அன்றோ வேண்டுவது
தேவு மற்று அறியேன்
தேவு அறிவன் -ஆழ்வாரை ஒழிய வேறு அறியேன் -சாஸ்திரம் காட்டித் தந்தது அன்றோ தெய்வம் ஆவது -அது தானே
ஆச்சார்ய தேவோ பவ என்று விதித்ததே
தேவு மற்று அறியேன்
தேவதா வ்யுத்பத்தி யுள்ள விடத்தே யன்றோ தேவதா பிரதிபத்தி உள்ளது
ஆகையாலே நான் தேவதையாக வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வாருக்கு மேற்பட இல்லை
ஆனால் என்னப்பன் என்று கீழே பகவத் விஷயத்தை ஸ்வாமி யாக அனுசந்தித்தீரே என்ன
அது ஆழ்வார் ஆதரித்த விஷயம் என்று ஆதரித்தேன் இத்தனை போக்கி தேவதா பிரதிபத்தி பூர்வகமாகச் சொன்னேன் அன்று
அநந்ய தைவத்வமியம் சாமா ச -என்று அநந்ய தைவதத்தை யுடைய பிராட்டி பெருமாளுக்கு எடுத்துக் கை நீட்ட-பெரிய பெருமாள் பாடு புகுமா போலே இவ்வர்த்தம் நாங்கள் விச்வசிக்கும் படி என் என்ன
மெய்ம்மையே
இது சத்தியமே
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன்
ஸ்ரீ சடகோபனைத் தலையிலே கொண்டு இருந்தும் பொய் சொல்லுவார் உண்டோ

ஆனால் கால ஷேபத்துக்கு பகவத் விஷயத்தைப் பற்றிக் காலம் போக்க வேணும் காணும் என்ன
குருகூர் நம்பிபாவின் இன்னிசை பாடித் திரிவனே-
எனக்கு கால ஷேப விஷயம் உங்களைப் போலே ஓன்று இரண்டாய் இருந்ததோ -ஆயிரம் பிரகாரம் இல்லையோ
குருகூர் நம்பி
கவி பாடுகைக்கு இடம் படி
வால்மீகிர்ப் பகவான் ருஷி -என்கிறபடியே பூரணரான ஆழ்வார்
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் -என்கிறபடியே
ஸ்துதய விஷயத்துக்குப் பரத்வ சௌலப்ய பூர்த்தி-ஸ்தோத்ரு விஷயத்துக்கு ஞான பக்தி பூர்த்தி
கண்டு கொண்டேன் கண்ணிணை யாரக் களித்து இ றே -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொல்லிற்று –

இன்னிசை
பாடுகிற போதே கூடக் கிளம்பின நல்லிசையை
பாடி –பா திரிகை -சந்தஸ்ஸை கூட்டுகை போதே கூடக் கிளம்பின நல்லிசை என்றபடி
அனுபவித்துக் கொண்டு பாடி
குருகூர் நம்பி இன்னிசை பாடி
பகவத் பிரதிபாதகம் என்று அன்று இவர் திருவாய் மொழியைப் பாடிற்று -ஆழ்வார் அருளிச் செய்தது என்றாயிற்று –
உயர்வற உயர் நலம் உடையவன் -வண் புகழ் நாரணன் -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் –
என் செய்ய தாமரைக் கண் பெருமானார் -என்று பாடா நிற்கச் செய்தும் பகவத் விஷயத்தோடு உறவற்று இ றே இவர் பாடுகிறது

திரிவனே
அங்குப் போனால் அன்றோ ஏதத் சாம காயன் நாஸ்தே என்றிருக்க வேண்டுவது -இங்கு அப்படி அன்றிக்கே விஸ்ருங்கலாமாகத் திரியா நிற்பன்
திரிவேனே
இது எனக்கு கால யாத்ரை –
ஆகையால்
1-ஸூக பூதரும் -2-சாதனா பூதரும் -3-ஸ்வாமி யும் -4-காலஷேப விஷயமும் -( நான்குக்கும் நான்கு அடிகள் இந்த பாசுரம் – )ஆழ்வாரே என்று-பகவத் விஷயத்தோடு அந்வயிக்கத் தேடினவர்களுக்கு உத்தரம் சொன்னாராய் நின்றது

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு -1-கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ண — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

March 25, 2016

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1

——————————————

ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானங்கம்-

கண்ணித்தாம்பு –
அபலைகளாய் இருப்பார் கட்டிவிய்ய தாம்பாகையாலே பல பிணையலாய் இருக்கை –
புஷ்ப ஹாச ஸூ குமாரமான கையாகையாலே அவிழ்க்க மாட்டான் இ றே
இப்பிணையல் திரு மேனியிலே உறுத்தும் என்று அஞ்சுகிறார் –

நுண் தம்பு
பருத்து மேல் முதவாதே அழுந்தும் என்று அஞ்சுகிறார் –

சிறுத்தாம்பு
அளவில்லாமையாலே உறுத்தித் திருமேனி நோம் என்று அஞ்சுகிறார் –

கட்டுண்ணப் பண்ணிய
உரலிடம் காண ஒண்ணாது –
கயிற்றில் இடம் காண ஒண்ணாது
விடில் கண்ணன் ஆகையாலே ஓடிப்போம்
கட்டினோம் ஆக வல்லமோ என்ற தாயார் முகத்தில் பயிர்ப்பு தீர ஒரு சுற்றுக்குப் போராத தாம்பு இரண்டு சுற்றுக்குப் போரும்படி
திருமேனியில் இடம் கொடுத்தபடி
ஆஸ்ரிதர் கையாலே கட்டுண்ணா விடில் சீலத்துக்குப் போராது
அநாஸ்ரிதரைக் கட்டா விடில் ப்ரபாவத்துக்குப் போராது
ராஜாவானவன் எதிரிகளைக் கட்டி வைக்கவும் பும்ஸ்த்வம்
தன மகிஷியின் கையில் பூ மாலையாலே கட்டுண்டு கிடக்கையும் பும்ஸ்த்வம்

பெரு மாயன் –
இவருடைய எத்திறம் இருக்கும் படி
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்குகையும்
அவனுக்கு ஷூத்து நலிகையும்
நவ நீதத்திலே ஸ்ரத்தை யுண்டாகையும்
அத்தை இடுவார் இல்லாத போது களவு காண்கையும்
அத்தைத் தலைக் கட்ட மாட்டாதே வாயது கியதாக அகப்படுகையும்
ஸ்ருஜ்யர் கையிலே கட்டுண்கையும்
சம்சார பந்தத்தை தவிர்க்க வல்லதான இத்தை விட்டுக் கொள்ள மாட்டாது ஒழிகையும்
இது என்ன ஆச்சர்யமோ என்கிறார்
இவனுடைய மேன்மை எல்லை காணலாம் -நீர்மை தரை காண ஒண்ணாது –

என்னப்பனில் –
கீழ் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தம் ஆகையாலே ஸ்ரீ கிருஷ்ண வ்ருத்தாந்தம் சொல்லிற்று
மேல் உத்தேச்யமான விஷயத்தைச் சொல்லாதே அவனை என்னப்பன் என்பான் என் என்னில்
ஆழ்வார் அங்கீ கரிக்கைக்காக அங்கே தமக்கொரு சம்பந்தம் சொல்கிறார்
ஒன்றைக் குறித்துப் போம்போது நீரும் நிழலும் நன்றாய் இருந்தது என்று ஒதுங்கினால் உத்தேச்யம் ஆகவேணுமோ –

நண்ணி –
இப்படு குழியைத் தப்பினால் இ றே என்கிறார்
படு குழி என்பான் என் என்னில் பகவத் பிராப்திக்கு சப்தாதி விஷயங்கள் விரோதியானால் போலே
ஆழ்வாரைப் பற்றுகிற இவர்க்கு பகவத் விஷயம் விரோதி என்றபடி
அவற்றுக்கு அல்ப அஸ்த்ரத்வாதி தோஷம் உண்டாகையாலே விடலாம்
இங்கு அங்கன் அன்று —நிலை நின்ற ப்ரதிபந்தகம்-
தென் குருகூர் நம்பி
சர்வேஸ்வரன் ப்ராப்தியில் பிரதம அவதி ஆகையாலே அரை வயிறாகப் பேசி ஆழ்வார் சரம அவதி யாகையாலே பூர்ணராகப் பேசுகிறார்

என்றக்கால்
பகவத் விஷயத்தில் மநோ-வாக் -காயங்கள் -மூன்றிலும் அன்வயிக்க வேணும்
அது எல்லாம் வேண்டா
உக்தி மாத்ரமே அமையும் இங்குத்தைக்கு என்கிறார்

அண்ணிக்கும் அமுதூரும்
ரச பதார்த்தங்களில் காட்டில் இதுக்கு வ்யாவ்ருத்தி
எல்லா பதார்த்தங்களும் நாக்கில் இட்டால் இட்ட பதார்த்தம் உண்ட வாறே ரசமும் மாளும்
இது அங்கனம் அன்றிக்கே ஒருகால் இட்டால் உள்ளதனையும் அமுது ஊற்று மாறாது என்கிறார்

என் நாவுக்கே –
அவர்கள் எங்களுக்கு இங்கன் இருக்கிறது இல்லையீ என்றார்கள்
பகவத் விஷயமும் ரசித்து அதுக்கு எல்லை நிலமான பாகவத விஷயத்தவும் ரசித்த என் நாவுக்கு அல்லது
அதவா
எது ரசித்துப் போந்த நாவுக்கு எது ரசிக்கியது தான்
இத்தால் சொல்லிற்று ஆயத்து
பிரதம அவதியோடு சரம அவதியோடு வாசியற இவர் ஆழ்வாருக்கு அனன்யார்ஹர் ஆனபடி

——————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -என்றும் பிறந்தவாறும் -பையவே நிலையம் -என்றும்
அவர் உத்தேச்யமாய்ப் பற்றுகிற விஷயம் இ றே இவருக்கு இப்போது வெளிறாய்க் கழியுண்கிறது
நவநீத சௌர்ய நகர ஷோபத்தை அனுசந்தித்து அவர் மோஹித்துக் கிடக்கும் துறையில் இறே இவர் இவர் இப்போது தெளிந்து இருந்து வார்த்தை சொல்லுகிறது –
ஆழ்வார் பக்கலிலே நயச்தபரராரான படி
அவருடைய உத்தேச்ய வஸ்துவைக் கட்டின கயிற்றினுடைய உள்மானம் புரமானம் ஆராயும்படி இறே இவர் கை ஒழிந்த படி பகவத் விஷயத்திலே –

கண்ணித்தாம்பு
உடம்பிலே கட்டப்புக்கால் உறுத்தும் படி பல பிணையலை உடைத்தாய் இருக்கை –
நுண் தாம்பு
உடம்பிலே அழுந்தும்படி நேரிதாய் இருக்கை
சிறுத்தாம்பு
குறுகி இருக்கை
உரலைச் சுருக்க ஒண்ணாது
கையிற்றை நெடுக்க ஒண்ணாது
சதைக ரூப ரூபாய -என்கிற இவனுடைய உடம்பை நெருக்கி இடம் கண்டு கட்டும் இத்தனை இ றே செய்யலாவது
கண்ணியார் குறும் கையிற்றால் கட்டவெட்டு என்று இருந்தான் -என்றும்
கண்ணிக்குறும் கயிற்றால் கட்டுண்டான் காணேடி -என்றும் எல்லாரும் ஈடுபடும் துறை இ றே இது தானே –

கட்டுண்ணப் பண்ணிய
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது -என்று ஸ்வ வ்யதிரிக்தரைக் கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேதுவானவன் கிடீர்
இப்போது ஓர் அபலை கட்டின கட்டை அவிழ்த்துக் கொள்ள சக்தன் அன்றிக்கே இருக்கிறான் –
யதி சக் நோஷி கச்ச த்வ மதி சஞ்சல சேஷ்டித-என்றாள் இ றே
சார்வ பௌ மனான ராஜ குமாரன் தன மகிஷி கையிலே அகப்பட்டு ஒரு மாலையாலே கட்டுண்டு -அதுக்கு ஒரு பிரதிக்ரியை பண்ண மாட்டாதே
இருக்குமா போலே இ றே இவள் கட்டின இதுக்கு பிரதிக்ரியை பண்ண மாட்டாதே இருக்கிற இருப்பும் –
பிறருடைய கர்ம நிபந்தனமான கட்டை அவிழ்க்கும் அத்தனை அல்லது தன் அனுக்ரஹத்தால் வரும் கட்டு தன்னாலும் அவிழ்க்கப் போகாது
இனி சக்தனாகில் போய்க்கானும் -என்று அவள் சொல்லும் படி இ றே இவனுடைய அச்சக்தி
தொழுகையும்-பெருமாள் திருமொழி -7-8–என்று கொண்டு போக்கு அற்றவாறே தொழத் தொடங்கும் அத்தனை இறே
எல்லாரையும் தொழுவித்துக் கொள்ளுமவன் இறே தொழுகிறான்
போக்கற்ற தசையிலே அஞ்சலியே அபிமத சித்திக்கு சாதனம் என்று அறியும் அவன்இ றே
அதி சஞ்சல சேஷ்டித என்று துருதுருக்கையாய் ஊரைப் பூசல் விளைத்துத் திரிந்த நீ வல்லை யாகில் போய்க்காண் என்கிறாள் –
இத்யுக்த்வா -ஒரு சொல்லாலே விலங்கிட்டு வைத்து அத நிஜம் கர்ம சா சகாரா -அவள் தான் கரைப்பது கடைவதாகப் புக்காள்-
குடும்பி நீ-இவனைப் போலே நியமிக்க வேண்டுவன எத்தனை கிடக்கின்றன –

பெரு மாயன் –
நிரதிசய ஆச்சர்ய யுக்தன் -அவாப்த சமஸ்த காமனுக்கு ஒரு குறை யுண்டாய்
அது தன்னை எளியாரைப் போலே வழி எல்லா வழியே களவிலே ஒருப்பட்டு
அது தன்னையும் சர்வ சக்தியான தான் தலைக் கட்ட மாட்டாதே வாயது கியதாக அகப்பட்டுக் கட்டுண்டு
அதுக்கு ஒரு பிரதிக்ரியை பண்ண மாட்டாதே பையவே நிலையும்-திருவாய்மொழி -5-10-8-என்று உடம்பு வெளுத்துப் பேகணித்து
நின்ற நிலை அளவும் செல்ல நினைக்கிறார் –

என்னப்பனில் –
என்னாயனில் –
ஆழ்வார் உத்தேச்யமாய்ப் போகா நிற்கச் செய்தேயும்
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரியான விஷயம் ஆகையாலே அவ்வருகு போவாரையும் துவக்க வல்ல விஷயம் ஆகையாலே சொல்லுகிறார் –
பகவத் விஷயத்தில் அடியர வார்த்தை சொன்னாராகில் ஆழ்வாரோட்டை சம்பந்தத்தை அறுத்துக் கொண்டாராவர் இ றே

என்னப்பனில் நண்ணி
பகவத் விஷயத்தில் நின்றும் ஆழ்வார் பக்கலிலே கிட்டி –
விஷய பிரவணன் சப்தாதி விஷயங்களை விட்டு பகவத் விஷயத்தைக் கிட்டுகையில் உண்டான அருமை போரும் இவருக்கு பகவத் விஷயத்தை விட்டு ஆழ்வார் அளவும் வருகைக்கு
சப்தாதி விஷயங்களை விடலாம் -அவற்றின் தோஷ தர்சனத்தாலே
அங்கன் ஒரு தோஷம் காண விரகு இல்லாமையாலே அதிலும் அரிது இது
ஆனால் இத்தை விட வேண்டுவான் என் என்னில் சரம அவதியில் போவார்க்கு பிரதம அவதியில் நிர்கையும் குறை என்னும் அதினாலே –

தென் குருகூர் நம்பி
ஆழ்வார் தாம் உத்தேச்யமாகப் பற்றின விஷயத்துக்கு உள்ள குறையும் இல்லை இ றே இவர் பற்றுகிற விஷயத்துக்கு -எங்கனே என்னில்
பகவத் விஷயத்தைப் பற்றினால் அதில் எல்லையான ஆழ்வார் அளவும் வர வேண்டி இருக்கும்
ஆழ்வாரைப் பற்றினால் அவ்வருகு கந்தவ்ய பூமி இல்லை இ றே

என்றக்கால் –
வாங் மன காயங்கள் மூன்றும் வேண்டி இருக்கும் -பகவத் விஷயத்துக்கு
உக்தி மாத்ரமே அமையும் இவ்விஷயத்துக்கு

அண்ணிக்கும்
தித்திக்கும் -பகவத் விஷயத்தை அனுபவித்தால் ஆழ்வாருக்குப் பிறக்கும் ஆனந்தம் எல்லாம் இவ்விஷயத்திலே ஓர் உக்தி மாத்ரத்தாலே பெற்றேன் என்கிறார்

அமுதூறும்-
அமுது தான் உஊற்று மாறாதே செல்லா நிற்கும்
ந ஸ புனராவர்த்ததே -என்று அவ்விஷயம் நித்ய அபூர்வமாய் ஆல்வாருக்குச் செல்லுமா போலே எனக்கு இவ்விஷயம் நித்ய அபூர்வமாய்ச் செல்லப் பெற்றேன்

என் நாவுக்கே –
பின்னை எங்களுக்கு ரசிக்கிறது இல்லையீ என்னில் முதல் அடியான பகவத் விஷயமும் கூட ரசியாதே இருக்கிற உங்களுக்கு
அதினுடைய எல்லையான ஆழ்வார் அளவும் ரசிக்கும் படியான எனக்கு ரசிக்குமா போலே ரசிக்குமோ

என் நாவுக்கே
அநாதி காலம் எது ரசித்துப் போந்த நாவுக்கு எது ரசிக்கிறது என்றுமாம்
இப்பாட்டால் ஆழ்வார் என்றால் தமக்கு ரசித்து இருக்கும் படி சொன்னார்

—————————————————————————————

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –

அவதாரிகை –

ஆத்மாஸ்து காமாய சர்வம் ப்ரியம் பவதி -என்கிறபடியே தனக்கு அபிமதம் என்றாய்த்து இவன் சர்வத்தையும் ஆதரிக்கிறது –
அதில் சாத்யமாய்-அபிமதமாதல் -அதுக்கு உறுப்பாக சாதனமாய் அபிமதம் ஆதலாய் இரண்டு வகையாய்த்து இருப்பது –
அதில் பகவத் விஷயம் -ரசோவை ஸ ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தீ பவதி -என்றும் –
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனம் மேவியே -என்கிறபடியே -என்றும் சொல்லுகிறபடியே
சாஷாத் அபிமதமாய் தன்னைப் பெறுகிற இவனுக்கு புறம்பு போக்கடி இல்லாமையினாலே தானே சாதனமாய் இருக்கும்
இப்படி சரச வஸ்து வாகையாலே ஸ்மரித்தல் சங்கீர்த்தனம் பண்ணுதல் செய்யுமவர்களுக்கு –
வைகுண்ட சரணாம் போஜ ஸ்மரணாம் ருதசேவின-என்றும்
பாதேயம் புண்டரீகாஷா நாம சங்கீர்த்த நாம்ருதம் -என்றும் சொல்லுகிறபடியே ரசிக்கக் கடவதாய் இருக்கும் –
அப்படியே ஆழ்வாருடைய போக்யதையை இப்பாட்டாலே வெளியிடுகிறார்
சப்தாதி விஷயங்களின் உடைய போக்யதையும் ஆழ்வாருடைய போக்யதையும் பார்த்தவாறே விசத்ருசமாய் இருந்தது
இனி பகவத் போக்யதை இ றே கூட்டுதல் கழித்தல் செய்யலாவது -அந்த பகவத் போக்யதையிலும் விஞ்சி இருந்தது ஆழ்வாருடைய போக்யதை –
அதுக்குத் தானும் உட்பட -உருவமும் ஆர் உயிரும் உடனே யுண்டான் -9-6-5-என்னும்படி போக்ய பூதரானவர் இ றே இவர் –

இனி அந்தப் பகவத் விஷயத்துக்கு -வாஸூ தேவோ சி பூர்ண -என்கிறபடியே ஷாட் குண்ய பூர்நையாய் இருப்பதொரு பர அவஸ்தை யுண்டு –
அது ஒழிய சௌசீல்யாதி குண பூர்நையாய் இருப்பதொரு அவதார அவஸ்தை யுண்டு –
அந்த பரத்வம் பாற் கடலினுடைய ஸ்தானத்திலே யாய் அதில் அம்ருத கலசம் போலே யாய்த்து அந்த அவதார அவஸ்தை இருப்பது –
அவ்வதாரங்கள் தன்னிலும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் அந்த அவதாரங்கள் தன்னைப் பர அவஸ்தா நீயமாக்கும் படி அத்யந்த போக்யமாய் இருக்கும்
க்ருஷிர்ப் பூவாசகச் சப்தோ ணச்ச நிர்வ்ருத்தி வாசக -என்கிற வ்யுத்பத்தியாலே ஸூ கரமான வ்யக்தி இ றே
அதிலும் பக்வ கிருஷ்ணனிலும் காட்டில்
தந்தை காலில் விளங்கர வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன் சிந்தை போயிற்று -பெரிய திருமொழி -8-5-1-என்கிறபடி
முக்த கிருஷ்ண அபதானம் த்ருஷ்டி சித்த அபஹாரியாய் இருக்கும் -நவ நீத சௌர்யமும் நகர ஷோபமும் பண்ணின அபவதானம் இ றே
உறிகளில் வெண்ணெயோடு அறைகளில் பெண்களோடு வாசியற இரண்டையும் களவு கண்டு போந்த அபதானம் இ றே –
-இதுவாய்த்து அபதா நாந்தரங்களில் போக்யதமமாய் இருப்பது –

குணங்கள் உண்டு இ றே ராம விஷயத்தில் நல்குவார் நல்கிற்று
இங்கு அப்படி அன்றிக்கே -வெண்ணெய் யுண்டு உரலினிடை யாப்புண்ட தீங்கரும்பினைத் தேனை நன்பாலினை -பெரிய திருமொழி -7-3-5-என்னும் படி
தீம்பு போக்யமாம்படி யாய்த்து இவ்வ்யக்தி இருப்பது -அதாவது
அகண்ட பரிபூர்ண வஸ்து ப்ராக்ருத பதார்த்தமாய் இருப்பதொரு வெண்ணெயை யாசைப்படவும் -அத்தைக் களவு காண்கையும் –
சர்வஜ்ஞமான வஸ்து அத்தை மறைக்கவும் மாட்டாமல் வாயது கையதாக அகப்படுகையும்
சர்வ சக்தியானது ஒரிடைச்சி கையிலே கட்டுண்டு கட்டை அவிழ்க்க மாட்டாதே இருந்து அழுகையுமான இந்நிலை அத்யந்த அனுபாவ்யமாய்த்து இருப்பது
தறியார்ந்த கரும் களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை -பெரிய திருமொழி -2-10-6-என்று
இவ்வபதாநத்திலே இ றே அனுபோக்தாக்கள் ஆழம் கால் படுவது –

இவ்வபதானத்தின் போக்யதையை இவர் வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வார் தம்முடைய பாடே யாய்த்து
-முதல் திருவாய்மொழி யிலே சர்வ காரணத்வாதி லஷணமாக ஒரு வஸ்துவைச் சொல்லி
அப்படிப்பட்ட வஸ்து ஏது என்னும் அபேஷையிலே அநந்தரம் திருவாய் மொழி யிலே –
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -1-2-10-என்று நாராயண சப்த வாச்யமாகச் சொல்லி
இவ்வஸ்துவுக்கு அடையாளம் ஏது என்னும் அபேஷையிலே -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -1-3-1-என்று
திரு மார்பில் பிராட்டியை அடையாளமாகச் சொல்லி இப்படி ஸ்ரீ யபதித்வத்தால் வந்த சர்வ உத்கர்ஷத்தை யுடைய வஸ்து
அநாஸ்ரிதர்க்கு அரியதாய் ஆஸ்ரிதர்க்கு எளியதாம் இடத்தில் -மத்துறு கடை வெண்ணெயை
-நெடு நாள் மலடு நின்று பிள்ளை பெற்றவள் ஆகையாலே துர்ப்பலையாய் இவன் தான் மருங்கில் இருந்து மருங்கு தேய்ப்புண்கையாலும்
மத்தாரப் பற்றிக் கொண்டு என்னும்படி மதத்திலே உடலைச் சாய்த்து யாய்த்து கடைவது
இப்படி கடையா நிற்கச் செய்தே வெண்ணெய் படப் படக் களவு காண அவளும் இதுக்கு அடி என்
-தெய்வம் கொண்டு போகிறதா என்று விசாரித்து இவனுடைய வாயையும் கையையும் பார்க்கும் –

கண்ணன் என்னும் கரும் தெய்வம் இ றே களவு கண்டு கொண்டு போகிறது –
இவன் கள்ளன் என்று வாயது கையதாகப் பிடித்து கிடந்ததொரு கயிற்றாலே பண்டும் இவன் களவுக்கு பெரு நிலை நிற்கும்
உரலோடு அணைத்துக் கட்ட -இவனும் கட்டுண்டு இருந்து அழப் புக்கவாறே வாய் வாய் என்று
கையிலே கயிற்றைக் கொள்ள ஏறிட்ட குரலை இறக்க மாட்டாதே இருந்து அழுது ஏங்கும் யாய்த்து –
இப்பிரகாரம் ஏதாய் இருக்கிறது -இது பெருமையிலே முதலிடுமதோ-எளிமையிலே முதலிடுமதோ -என்று மோஹங்கதரானார் இறே
இத்தை அனுசந்தித்து போந்த இவரும் ஆழ்வார் ஈடுபட்டுப் போந்த அபதானம் இதுவாய் இருந்தது -என்று பார்த்து
இதிலும் காட்டில் முதலடியிலே இமையோர் தலைவா -என்று ப்ராப்யத்திலே கண் வைத்த இவரை அவா வற்று வீடு பெற்ற -என்னும் அளவும்
லோக உபகார அர்த்தமாக ஈஸ்வரன் இவர் அழுவது அலற்றுவது ஆண் பெண்ணாக மடல் எடுப்பது -தூது விடுவதாம் படி
தன் சங்கல்ப பாசத்திலே கட்ட இவரும் அதை அவிழ்க்க மாட்டாதே அறியா மா மாயத்து அடியேனை வைத்தையால் -2-3-3-என்னும் படி
கட்டுண்டு இருந்த இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிறபடியை இப்பாட்டாலே அருளிச் செய்கிறார் –
அவன் கட்டுண்ட இடத்தில் -பற்றி உரலிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ -என்று
பிறருக்கு ஏசுகைக்கு உறுப்பாய் விட்டது இவர் கட்டுண்டது இறே நாட்டாருடைய கட்டை அவிழ்கைக்கு
உறுப்பாய் பரம சாத்விக வர்க்கத்துக்கு போக்யமாய்த்து –

———————-

வியாக்யானம் —

அவன் கட்டுண்டு இருந்த அபதானத்திப் பேசி தாமும் அதில் கால் தாழ்ந்த படி சொல்லுகிறார் -கட்டின கயிற்றைக் கொண்டாடுகிறார்
-தத் சம்பந்தியான தொன்றைக் கொண்டாடுகை இவர்க்குள்ள தொன்று இ றே –

கண்ணித் தாம்பு –

பல பல இடங்களிலும் அற்றுப் பிணையுண்டு கிடப்பதொரு கயிற்றைக் இட்டாயிற்று இவனைக் கட்டிற்று-
கட்டுவது விடுவது கறப்பது கடைவதாகப் பணி போரும் இத்தனை போக்கி அத்தைத் தரம் இட்டுக் கொள்ள அவசரம் இல்லையே –
உருவுள்ளவை உண்டாகில் கன்றுகளும் பசுக்களும் கட்டப் போரும்
-ஒழிஞ்சானமுட்டாய் -ஒன்றுக்கும் உறுப்பு இன்றிக்கே இருக்கை -இருப்பதொரு கயிற்றைக் இட்டாயிற்று இவனைக் கட்டுவது
வேறு ஒருவரைக் கட்டுமதிட்டு இவனைக் கட்டப் போகாதே -பசு ப்ராயரைக் கட்டுமது ஒன்றுக்கு இவன் அகப்படானே –
பல கண்ணிகளையும் யுடைத்தாய் அனந்யமாய் இருப்பதொரு பாசத்துக்கு இ றே இவன் அகப்படுவது –
அசித் ப்ராயராய் தான் கால் வைக்கலாம் படி இருப்பாரோடு அணைதல் -அனந்யமான பாசத்துக்கு அகப்படுதல் செய்யுமவனாய்த்து
இவன் அகப்பட்டாய்த்து உரலோடு சேர்த்துக் கயிற்றை இட்டுக் கட்டிற்று
அது தான் பொத்த யுரலாய் ஸூ ஷிரமும் உண்டான பின்பாய்த்து அனந்யார்ஹம் ஆயிற்று
இப்படி அனந்யார்ஹர்க்கு இ றே அவன் உடம்பு கொடுப்பது
பொத்த யுரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி -என்கையாலே இது தான் இஷ்ட விநியோக அர்ஹமுமாயிற்றே-

நுண் தாம்பு –

நுண்ணிய தாம்பு -அது தான் அற நேரியதாய் இருப்பதொரு கயிறு ஆய்த்து-ஆகையால் இ றே இவன் மேலே அழுந்துவது –
இன்றும் அழுந்திக் கிடக்கிறது இ றே இவனைக் கட்டுகிற பாசம் சௌஷ்ம்யவத்தாய் இருக்க வேணும் இ றே

சிறுத் தாம்பு
எட்டாம் பொறாமல் இவன் திருமேனியிலே இடம் கண்டு கட்ட வேண்டும்படியான சிறுமையை யுடைய கயிறு

கட்டுண்ணப் பண்ணிய –
அனந்யமாய் ஸூ ஷ்மமாய் இருந்ததே யாகிலும் திரு மார்பில் இருக்கிற அவளையும் அவனையும் சேர ஒரு உரலோடு சேர்த்துக் கட்ட
உரலுக்கும் தனக்கும் ஒரு வைஷம்யம் அற இருந்து பின்னையும் சைதன்யம் கிடக்கையாலே விம்மல் பொருமலாய் அழுது இருந்த
இந்த சௌசீல்யம் ஏதாய் இருக்கிறது என்று அவர் சோகித்தார் யாய்த்து
இவர் அத்தை அனுசந்தித்துப் போந்தவர் ஆகையாலே இவ்வாழ்வார் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும்
அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று பிரகிருதி சம்பந்தத்தை அறுக்க வேணும் என்று
அபேஷியா நிற்கச் செய்தேயும் பகவத் சங்கல்ப பாசத்தாலே இவர் கட்டுண்டு இருந்த படியைக் கண்டு ஈடுபடுகிறார் –

அவன் இவளுடைய த்ரவ்யத்தைக் களவு காண்கையாலே கட்டுண்டான் -இவர் பிறர் பணத்தை அவர்களுக்குக் கொடுத்து
இருக்கச் செய்தேயும் கட்டுண்டவராய்த்து
அவன் தான் இவரைக் கட்டுகைக்கு அடி என் என்னில் இவரைக் கட்ட நாட்டில் உள்ளார் களவு போம் என்னும் நினைவாலே
ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலவும் அவ்வளவன்றிக்கே அறிவுக்கு அவகாசம் இல்லாத ஸ்தாவர ஜாதீயங்களையும்
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ வென்று கூவுமவராகையாலே இவரைக் கட்டி வைத்தான் –
இவருக்குத் தன் களவு வெளிப்பட்டுப் பிறர் களவு போமாய்த்து –

கண்ணி நுண் சிறுத் தாம்பு
போக்யதா காஷ்டை யுள்ளது -இவ்வபதானம் ஆகையாலே அத்தை முற்படச் சொல்லி அதில் காட்டில்
ஆழ்வார் தமக்கு போக்யரான படியை இப்பாட்டாலே வெளியிடுகிறார்
அதில் அவன் கட்டுண்ட தாம்பை முற்படக் கொண்டாடுகிறார்
கண்ணித் தாம்பாயும் நுண் தாம்பாயும் சிறுத் தாம்புமாயும் இருக்கும்
ஜ்ஞான பக்தி வைராக்யங்களைக் கொண்டாடுமா போலே இங்கு மூன்று விசேஷணங்களைச் சொல்லுகிறார்
திரு மேனிக்கு உறுத்தும் படி பல கண்ணிகளை உடைத்தாய் இருக்கும்
பிரதமத்திலே ருசி சங்கம் பக்தி பர பக்தி பர ஜ்ஞானம் பரம பக்திகள் என்று அநேக பர்வையாய் இ றே அந்த பக்தி இருப்பது
பக்தி க்ராஹ்வோ ஹாய் கேசவ -என்றும் -அபங்குர பக்தி பவ்ய -என்று பக்தி பவ்யனாய் இ றே அவன் இருப்பது –

நுண் தாம்பு –
நுண்ணிதான தாம்பு -திருமேனியிலே அழுந்தும்படி நுண்ணியதாய் இருக்கும்
அந்த பக்தி தான் ஜ்ஞான சிரஸ்கம் ஆகையாலே அந்த ஜ்ஞானம் தான் நுண்ணறி வாய்த்து இருப்பது –
பகவத் ஸ்வரூப ரூபாதிகளை யதாவாக சாஷாத் கரிக்கிறது இ றே
பக்த்யா மாமபிஜா நாதி யாவான் யச்சாச்மி தத்வத -என்கிறபடியே

சிறுத் தாம்பு –
உள்ள கயிறுகள் கன்று கட்டுகைக்கும் பசு கட்டுகைக்கும் கடை கயிருமாய்ப் போயிற்றன
இனி வேறு ஓன்று கட்டுகைக்கு உருப்பல்லாத கயிற்றாலே யாய்த்து இவனைக் கட்டுவது
அனந்யார்ஹமாய் இருப்பது ஒன்றுக்கு இ றே இவன் கட்டுண்பது
பக்த்யா த்வ நன்யயா சக்ய -என்றும் பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா -என்று அனந்யையான பக்தியாக வேணுமே
அல்லாதவற்றுக்கு விநியோகம் கன்று காலிகளைக் கட்டுகை இ றே –

கட்டுண்ணப் பண்ணிய
தாம்பு சிறுத் தாம்பு ஆகையாலே அதை நீளப் பண்ணப் போகாது –
அடுத்து கட்டுகிற உரலை இளைக்கப் பண்ணப் போகாது
இனி இடம் காணலாவது இவன் பாடே யாகையாலே
வயிற்றை எக்கச் சொல்லி இடம் கண்டு கட்டினாள் யாய்த்து
தன்னுடைய சங்கல்ப்பத்தாலே இடம் கொடுக்கை அன்றிக்கே தாயாருடைய சீற்றத்துக்கு அஞ்சி மௌக்யப் பிரயுக்தமாய் கட்டுண்ணப் பண்ணினான் ஆய்த்து –

கட்டுண்ணப் பண்ணிய
பக்தி யுண்டே யாகிலும் அவன் தானே தன்னை அமைத்துத் தர வேண்டும் படியாய் இது பின்னையும் சிறிதாய் இருக்குமாய்த்து
நாயமாத்மா -இத்யாதி
இனி இந்த பக்தி இவன் நெஞ்சில் அந்ய பரதையை அறுக்கும் இத்தனை
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி -என்கிறபடியே எட்டும் இரண்டும் பத்தாய் பக்தியைச் சொன்னபடி
எட்டு என்று திரு அஷ்டாஷரமாய் அத்தாலே யாதல் -இரண்டு என்று வாக்ய த்வயமாய் அத்தாலே யாதல் வசீகரித்து என்னவுமாம்
அல்லது எட்டும் இரண்டும் அறியாதார்க்குக் கட்டப் போகாதே-

பெரு மாயன்
அவன் நினைக்க ஒண்ணாத ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் -அதாவது
அழுகையும் அஞ்சி நோக்கும் அனநோக்கும் தொழுகையுமான இச் சேஷ்டிதங்கள்
அழுகையும்
உரலோடு கட்டி வைத்தவாறே அழ -அவள் வாய் வாய் என்றவாறே அஞ்சி பேதைத் தனம் தோற்ற அவளைப் பார்க்கும்
அந்நோக்கும்-
தொடுவே செய்த்தில வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் -என்கிறபடியே பெண்கள் அடையத் திரண்டு வருகைக்காக
களவாகிற சாதனத்தை அனுஷ்டித்து கள்ளனைக் காண்கை எல்லாருக்கும் சாதாரணம் ஆகையாலே ஒத்த பருவத்தில்
பெண்கள் எல்லாரும் வந்து திரள அவர்கள் முகத்திலே தௌர்த்த்யகர்ப்பமான கடாஷத்தைப் பண்ணா நிற்கும்
-இசையாதவர்களை இசையும் படி பார்த்தும் -இசைந்தவர்களை அறவிலை செய்து தரும்படி பார்த்தும்
தான் பண்டு செய்த மறத்தாலே மாலின்யம் யுடையவர்களை அமலங்களாக விழித்தும் இப்படி நோக்கேயாய்ச் செல்லும் –
தொழுகையும்
மக்கள் மனம் மாதர்க்குச் தெரியும் ஆகையாலே இவனுடைய தௌர்த்த்யத்தைத் தெரிந்து அவள் அச்சம் உறுத்த
தொழுகையும்
அவளைப் பார்த்து அஞ்சலி பண்ணும்
பொடிந்தவர்களுக்கு ப்ரசாதகம் ஆவது அஞ்சலியே என்று இருக்கும்
ஷிப்ரம் தேவ பிரசாதி நீ -என்றும்
அந்த ரேணாஅஞ்சலிம் பத்வா லஷ்மணச்ய பிரசாத நாத் -என்கிறபடியே
இவை கண்ட வசொதை தொல்லையின்பத்து இறுதி கண்டாளே-
ஆத்மானுபந்தியான ஸூ கத்தினுடைய எல்லையைக் கண்டாள்
நித்ய முக்தர் ஜ்ஞான சக்த்யாதிகளைக் கண்டு அனுபவித்தவர்கள்
இவள் சௌசீல்யாதிகளைக் கண்டு அனுபவித்தவள் –

என்னப்பனில்
என்னாயனில்
பெருமாயன் என்னப்பனில்
இப்போதை இவருடைய தாஸ்யம் -குணைர் தாஸ்யம் உபாகத -என்கிறபடியே அத்தலையில் குண சேஷ்டிதங்களுக்கு தோற்றாயிற்று
இவரையும் உட்பட தோற்றிக்கிறது இ றே இவ்வபதானம்
இனி ஆழ்வாரைப் போலே இள நெஞ்சு இல்லாமையாலே மீண்டார் இத்தனை

என்னப்பனில் நண்ணி
அவனில் காட்டில் ஆழ்வார் பக்கலில் நெஞ்சை வைத்து
சப்தாதி விஷயங்களின் போக்யதையை அறுத்துத் தன் பக்கலிலே யாக்கிக் கொள்ளும் பகவத் வைலஷண்யம்
பகவத் விஷய போக்யதையிலே நின்றும் மீட்டுத் தன் பக்கலிலே யாக்கிக் கொண்டது ஆழ்வார் வைலஷண்யம்

தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும்
குறுங்குடி நம்பியைக் காட்டில் குருகூர் நம்பியை வ்யாவர்த்திக்கிறது
அவனுக்குப் பூர்த்தி ஜ்ஞான சக்த்யாதிகளாலே
இவருக்குப் பூர்த்தி ஜ்ஞான பக்த்யாதிகளாலே
ஜகத்தை தனக்கு ஆக்கும் படியான குணங்கள் அவனது
அவன் தன்னைத் தனக்காக்கும் படியான குணங்கள் இவரது

நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
ஆழ்வார் பக்கலிலே நெஞ்சை வைத்து ஆழ்வார் திரு நாமத்தைச் சொன்னால்

அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே
நினைத்த நெஞ்சம் தித்தித்தது
சொன்ன நாக்கும் தித்தித்து வாரா நின்றது
சாரச்யம் சதா கால வர்த்தியாகா நின்றது
இனி பகவத் விஷயத்தை நினைக்கைக்கு நெஞ்சம் இல்லை –சொல்லுகைக்கு நாக்கும் இல்லை
இந்த சாரச்யம் எங்களுக்குப் பிறக்க காண்கிறிலோமீ என்னில்

என் நாவுக்கு
உங்களைப் போலே பகவத் விஷயமும் ரசித்து ஆழ்வாரும் ரசிக்கும் ணா வன்றே என்னது
அடியே பிடித்து ஆழ்வார் உடைய சாரச்யத்திலே பழகின நா வன்றோ

என் நாவுக்கே
இவ்வம்சத்தில் கரணியான என்னோடு கரணங்களோடு வாசி இல்லை

என் நாவுக்கே
அவர் தாம் என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்றால் போலே இவரும் என் நாவுக்கே -என்கிறார் –

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு – ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானங்கள் –அவதாரிகை —

March 25, 2016

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த வியாக்யானம்-

அவதாரிகை –

ஆத்மாவுக்கு உத்தமம் மத்யமம் அதமம் என்கிற புருஷார்த்தங்களான சித் அசித் ஈஸ்வர தத்வத்ரயங்கள் –
அவற்றில் அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களாலே பிரகிருதி தத்வம் அதம புருஷார்த்தம் –
ஜன்ம மரணாதி ஷட் பாவ விகார ரஹீதமாய் நிடதிசய ஸூ க ரூபமாய் இருந்ததே யாகிலும்
பகவத் ஏகாந்தமான கல்யாண குண வைதுர்யத்தாலே தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பமான ஆத்மானுபவம் மத்யம புருஷார்த்தம்
சர்வேஸ்வரன் புருஷார்த்தம் என்னும் இடத்தில் கரும்பு தின்பார் வேர்ப்பற்றையும் நுனுயையும் கழித்து நடுவைக் கொள்ளுமா போலே
ஸ்ரீ வைகுண்ட நாதனை ஒழிய ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே புருஷார்த்தமாகவும் -அதிலே கம்ச வதத்துக்குப் பின்பாகக் கழித்து
முன்பு வெண்ணெய் களவு கண்டு யசோதைப் பிராட்டியார் கையில் கட்டுண்டு அவளுக்கு அஞ்சி நின்ற
அவஸ்தையை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே உபாயமும் உபேயமும் விரோதி நிரசனம் பண்ணுவானும் மற்றும் எல்லாம் என்றும்
அவனுடைய சௌந்தர்ய சீலாதிகளிலே அகப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களே இவ்வாத்மாவுக்கு நாத பூதரும்
நிரதிசய புருஷார்த்த பூதரும் என்றும் ஆழ்வார் நிர்ணயித்தார்
ஸ்ரீ மதுர கவி யாழ்வார் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானைப் போலே அத்தைப் பூர்வ பஷம் ஆக்கி எம்பெருமான் பக்கலிலும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலும்
ஆழ்வார் பண்ணினது அடைய ஆழ்வார் திருவடிகளிலே யாக்கி அது ருசித்து அத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

———————————————

ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம்-

அவதாரிகை –

ஐஸ்வர்யம் முதலாக சகல புருஷார்த்தங்களையும் விதிக்கிற சாஸ்திர மர்யாதையிலே நின்றார்கள் ருசிகள் –
சாஸ்திர தாத்பர்யமாய் உத்தம புருஷார்த்த லஷணமான பகவத் பிராப்தியில் நின்றார்க்ளால் ஆழ்வார்கள் –
இப்புருஷார்த்தத்தின் எல்லை நிலமான ததீய சேஷத்வத்திலே நின்றார் ஸ்ரீ மதுர கவிகள் –
இது தான் இவருக்கு வந்த வழி என் என்னில்
ஆழ்வாரை பொய்ந்நின்ற ஞானம் துடங்கி அவாவற்று வீடு பெற்ற அளவும் செல்ல அனுவர்த்தித்த இடத்தில்
அவர் தமக்கு உத்தேச்யமாகத் திருவாய் மொழியிலே பயிலும் சர்தார் ஒலி நெடுமாற்கு அடிமையிலே புருஷார்த்த காஷ்டையாக
ததீய சேஷத்வத்தையே அறுதியிடுகையாலே அவருடைய ருசி பர்க்ருஹீதமான அர்த்தத்தையே பற்றுகிறார் இவர் –

இது தான் ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருன ஆழ்வான் பக்கலிலே காணலாம்
வேதோப ப்ரும்ஹணார்த்தாய தவாக்ராஹ்யத பிரபு -என்கிறபடியே வேத உபப்ரும்ஹணார்த்தமாகப் பிறந்த
ஸ்ரீ ராமாயணத்தில் தர்ம சம்ஸ்தாபநார்த்தமாக அவதரிக்கையாலே ஸ்ரீ இராமாயண புருஷர்கள் நால்வரும் நாலு தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டினார்கள் –
ஒருவன் சொல்லிற்று ஒருவன் செய்யக் கடவன் -என்கிற தர்மம் நேராகா அழிந்து கிடக்கையாலே
பித்ரு வசன பரிபால நாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் பெருமாள்
பிதுர் வசன நிர்த்தேசாதீ -என்றும் -அகஸ்த்யவசநாத் -என்றும் ஸூ க்ரீவ வசநாத் என்றும் சமுத்திர வசநாத்-என்று இ றே இவருடைய அனுஷ்டானங்கள்
சேஷ பூதன் சேஷியைக் குறித்து கிஞ்சித்கரிக்கக் கடவன் -என்கிற விசேஷ தர்மத்தை அநுஷ்டித்தார் இளைய பெருமாள்
குருஷ்வமாம நுசரம் -என்றும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றும் இ றே இவருடைய அனுஷ்டானம் –

ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான் –

அப்படி இருக்கிற இவனை யல்லது அறியாதே இருக்கையாலே பகவச் சேஷத்வ காஷ்டியான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான்
கச்சதா மாதுல குலம் பரதேன ததா நக சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரஸ்க்ருத
கச்சதா
கச்சதா டேன்கிற வர்த்தமான நிர்தேசத்தாலே தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயாதல் -பூர்வ ஷணத்தில் போகுகைக்கு நினைவு யுண்டாயாதல்
இன்றியே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே போனான் என்கை –
மாதுல குலம்
யுதாஜித்து அழைத்து வந்ததும் அவனை யாகையாலே போக்கிலும் உத்தேச்யம் அவனுக்கு
இவனுக்கு அவன் பின்னே போகை உத்தேச்யமாய்ப் போனான் என்கை
பரதேன –
பரத இதி ராஜ்யச்ய பரணாத் -என்கிறபடியே சக்ர வர்த்தியும் துஞ்சி பெருமாளும் ராஜ்யத்தைப் பொகட்டுப் போய்
இளைய பெருமாளும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்று போய்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானும் தன்னை அல்லது அறியேன் என்று இருக்கிற் தசையிலே ராஜ்யத்தை வஹித்துக் கொண்டு இருந்தான் -என்கை
தத-
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதமும் உண்டாய் இருந்தால் முஹூர்த்தம் இட்டுப் போகப் பிராப்தமாய் இருக்க
அவன் போனதுவே தனக்கு முஹூர்த்தமாகப் போனான் என்கை-
அநக
அநம் இல்லாதது இவனுக்கு இ றே-அல்லாதார்க்கு ராமபக்தியும் கலாசி இருக்கையாலே பாபமிச்ற ஜீவனம் என்கிறது
ராமபக்தியைப் பாப்பம் எண்ணப் போமோ வென்னில் பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி ஆகையாலே புண்யமும்
புண்ய பாபே விதூய என்று கொண்டு பாப சப்த வாச்யமாகா நின்றது -ஆகையாலே பாத அனுவ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு
விரோதி யாகையாலே ராம பக்தியும் பாபமாம் இத்தனை –
சத்ருக்ன
பிள்ளைகளை உடைய சந்நிவேசன்களைப் பார்த்து திரு நாமம் சாத்துக்கிற வசிஷ்ட பகவான் பெருமாள் கண்டாரை
அழகாலே துவக்க வல்லார் என்று தோற்றி இருக்கையாலே ராமன் என்றும்
இளைய பெருமாளுக்குக் கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே ஸ்ரீ பரதாழ்வான் என்றும் திரு நாமம் சாத்தி
இவனுடைய சந்நிவேசத்தைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கக் காண்கையாலே சத்ருக்னன் என்று திருநாமம் சாத்தினான் –
நித்ய சத்ருக்ன –
பாஹ்ய சத்ருக்களை யன்றிக்கே ஆந்தர சத்ருவான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருக்கும் என்கை –
இந்த்ரிய ஜெயத்துக்கு எல்லை எங்கனம் என்னில் பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரீணம் -என்கிற ராம சௌந்தர்யத்திலும் துவக்கு ஒண்ணாது இருக்கை-
அதாவது பெருமாளைப் பற்றும் போதும் தன உகப்பால் அன்றியே அவன் உகந்த விஷயம் என்று பற்றுகை
நீத
ராஜாக்கள் போம் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமா போலே அவன் கொண்டு போகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்ட்டமாய் இருக்கும் -அது போல் அன்றியே ஜாதி குணங்களோ பாதி போனான்
ப்ரீதி புரச்க்ருத
தமையன் பின்னே தம்பி போகக் கடவன் என்கிற முறையால் போனான் அல்லன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
இளைய பெருமாளைப் போலே எல்லா வடிமைகளும் போனவிடத்தில் செய்யலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி ப்ரேரிதனாய் போனான்
படை வீட்டில் இருந்தால் பரத அனுவ்ருத்தி ஒருவர்க்கு இட்ட சோற்றை பகிர்ந்து உண்பாரோ பாதி ஒகஹரியாய் இ றே இருப்பது
பாஷ்யகாரர் –அநக –நித்ய சத்ருக்ன -என்ற இதுக்கு ப்ரமேயமாகச் சொற்கட்டிலே
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரதழ்வானை யல்லது அறியாதபடி யானான் என்று அருளிச் செய்வர்
இதுவே பிரயோஜனமானால் சொல்லும் மிகை எல்லாம் பொறுக்கும் இ றே
அ நக -நித்ய சத்ருக்ன -என்று பாவனத்வத்தாலும் போக்யதையாலும் அவனைப் பற்றினான் என்னவுமாம்
-இப்படி இவனைப் போல் இருப்பார் ஒருவர் ஸ்ரீ மதுர கவிகள்
இனி ததீயர் உத்தேச்யர் என்னும் இடத்தில் -முதல் அடியில் அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனத்தாலே பகவத் விஷயத்திலே மூட்டியும்
இவன் பகவத் விஷயத்திலே அவகாஹித்து குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத படியானால் போத யந்த பரஸ்பரம் என்கிறபடியே
போது போக்குகைக்கு உசாத் துணையாயும்
பிராப்தி தசையில் வந்தால் யத்ர பூர்வே சாத்யாஸ் சந்நிதேவா -என்கிறபடியே சாத்திய விருத்தி ரூபத்தாலும் புருஷகார பாவத்தாலும் உத்தேச்யராவார்கள்
இப்படி சர்வ அவஸ்தையிலும் ததீயரே உத்தேச்யர் என்று அத்யவசித்து தமக்கு உபகாரகரான ஆழ்வார் தம்மையே பற்றுகிறார் –

—————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானங்கள் –

-அவதாரிகை —

சம்சாரி சேதனரில் காட்டில் பகவத் பரராய் -அந்த பகவத் வைபவத்தை அஜ்ஞாரான சம்சாரிகளும் அறியும் படி
அவ்வவ புராண முகங்களாலே உபதேசித்த பராசராதி பரம ரிஷிகளுக்கு வாசி யுண்டு –
இப்படி உபதேசியா நிற்கச் செய்தேயும் -நிரச்தாதிசய இத்யாதியாலே பரம புருஷார்த்த ரூபையான பகவத் பிராப்தியைச் சொல்லி
தத் ப்ராப்தி ஹே துர் ஜ்ஞாநஞ்ச கர்மசோக்தம்-என்று தொடங்கி ப்ராப்தி சாதனமான உபாசனத்தையும் உபதேசியா நிற்கச் செய்தேயும்
காமாதி புருஷார்த்தங்களையும் கலந்த கட்டியாக உபதேசித்த அந்த ரிஷிகளில் காட்டில் பகவத் பிரசாத ஹேதுகமான மயர்வற மதி நலங்களை யுடையருமாய்
பர உபதேச சமயத்திலும் வீடாம் தெளி தரு நிலைமை -1-3-2-என்று தொடங்கி வீடே பெறலாமே -10-5-5-என்று
பரம புருஷார்த்தையே முதல் நடு இறுதி யாகவும் உபதேசித்து
அதுக்கு சாதனமும் -வண் புகழ் நாரணன் திண் கழல் சேர -1-2-10-என்றும்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ -4-1-1-என்று அவன் திருவடிகளே என்றும் உபதேசித்து
அவ்வளவன்றிக்கே -வழுவிலா வடிமை செய்ய வண்டும் நாம் -3-3-1- என்றும் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10-என்று
அவற்றைத் தாம் அனுஷ்டித்துப் போந்த நம்மாழ்வாருக்கு நெடு வாடி யுண்டு
இப்படி பகவத் விஷயமே புருஷார்த்த சாதனங்கள் என்று பூர்ண உபதேசம் பண்ணின ஆழ்வாரைக் காட்டில்
-ஆழ்வாரே புருஷார்த்த பூதராய் அவரைப் பெறுகைக்கு சாதனமும் அவர் திருவடிகளே என்று இருக்கும் ஸ்ரீ மதுர கவிகளுக்கு நெடு வாசி யுண்டு –

என்னப்பனில் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என்நாவுக்கே-என்றும்
மேவினேன் அவன் பொன்னடி என்றும் -அனுசந்தித்தவர் இ றே இவர்
ஆழ்வார் பிரதம பர்வதத்திலே நின்றவர் -இவர் சரம பதத்திலே நின்றவர்
அவர் சங்க்ரஹத்தில் அவதாரனத்திலே நிஷ்டர் -பிரணவத்தில் உகார நிஷ்டர் என்றபடி -இவர் அதினுடைய விவரண நிஷ்டர்
அவ்வாழ்வாருக்கு அநந்ய போகத்துக்கு -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -4-5-8-என்று நாய்ச்சிமாரில் பிராட்டி நிதர்சநமாம் போலேயும்
கைங்கர்ய த்வரைக்கும் பார தந்த்ர்யத்துக்கும் இளைய பெருமாள் நிதர்சநமாம் போலேயும்
முமுஷுக்களின் துர்க்கதி கண்டு பரோபதேசம் பண்ணுகைக்கு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் நிதர்சநமாம போலேயும்
இவருக்கு ததீய பாரதந்த்ர்யத்துக்கு வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -என்ற
பெரியாழ்வார் திருமகளார் நிதர்சமநமாதல்
நித்யராய்ப் போந்தாரில் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் நிதர்சனமாதல்
முமுஷுக்களில் சர்வம் யதேவ நியமென மதன்வையா நாம் –என்று பெரிய முதலியார்-ஸ்ரீ ஆளவந்தார் – நிதர்சனமாதலாம் இத்தனை –

ஸ்ரீ சத்ருக்னன் ராம குணத்தில் கால் தாழ்ந்திலன் -இவர் கிருஷ்ண குணங்களில் கால் தாழ்ந்திலர் -இது வாசி
ஆழ்வார் பகவத் விஷயத்தைக் கவி பாடுகிற நாவாலே தம்முடைய வைபவம்
துவளில் மா மணி மாடம் போன்ற திருவாய் மொழிகள் வாயிலாக -சொன்னார் இத்தனை போக்கி அமுதூகிற இவருடைய
நாவாலே கேட்கப் பெறாத குறை தீர்க்கிறார் யாய்த்து இவர்
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே -6-5-7-என்று அவன் குணங்கள் அவ்வாழ்வார் வாயாலே
திருந்தினால் போல் யாய்த்து -ஆழ்வாருடைய குணங்களும் இவர் வாக்காலே திருந்தின படி –

அப்படியே இவர் அருளிச் செய்த பிரபந்தமும் –
த்ரை குண்ய விஷயா வேதா -என்று குணத்ரய வச்யருக்கு குண அனுகுணமான பலன்களைச் சொல்லுகிற வேதங்கள் போலேயும்
சீர்த்தொடை யாயிரம் -1-2-11- என்று பகவத் குனிக பிரத்க்ஹிபாதகமான திருவாய் மொழியும் போல் அன்றியே
ஆழ்வாருடைய திவ்ய குணங்களையே பிரதிபாதிக்கையாலும்
வேதம் போலே அனந்தமாய் இருத்தல் – திருவாய்மொழி போலே ஆயிரம் பாட்டாய் இருத்தல் செய்கை அன்றிக்கே
ஸூக்ரஹமாய் இருக்கையாலும் வாசி பட்டு இருக்கும்
திருவாய்மொழி வேத சாரமாய் -திருவாய் மொழியினுடைய சாரமாய்த்து இப்பிரபந்தம் இருப்பது –

ஒரு முமுஷுவுக்கு ஆதரணீயராய் இருப்பார் நாலு வ்யக்திகளாய் இருப்பார்கள் -சர்வேஸ்வரனும்- பிராட்டியும் -ஆசார்யனும் 0-ஸ்ரீ வைஷ்ணவர்களும் –
அதில் சர்வேஸ்வரன் அடியிலே இழந்து கிடந்த கரண களேபரங்கலைத் தன கருணையாலே கொடுத்து இவனைக் கரை மரம் சேர்க்கும்
தேவன் ஆகையாலும் இவனுக்கு ஆதார பூதனாகையாலும் -இவனுக்கு இஷ்டா நிஷ்ட ப்ராப்தி பரிகாரத்துக்கு உபாய பூதன் ஆகையாலும் அசாதாராண
ஸூஹ்ருத்தாகையாலும் ப்ராப்ய பூதன் ஆகையாலும் ஆதரணீயனாய் இருக்கும்
மாதா பிதா என்கையாலே பிரிய பரத்வ ஹித பரத்வங்களைச் சொல்லிற்று -ப்ராதா என்கையாலே அல்லாத பந்த்வந்தரங்களுக்கும் உப லஷணம்-
நிவாஸ -என்கையாலே ஆகாரத்வம் சொல்லிற்று சரணம் என்கையாலே -உபாய பாவம் சொல்லிற்று
-ஸூ ஹ்ருத் -என்கையாலே சோபனாசமசி -என்னும் இடம் சொல்லிற்று
கதி -கம்யாத இதி கதி யாய் ப்ராப்ய பாவம் சொல்லிற்று
நாராயண -என்று இவை எல்லாமாக வற்றான வஸ்து ஸ்வ பாவம் சொல்லிற்று

யேன யேன வியுஜ்யந்தே ப்ரஜாஸ் ஸ்நிக்தேன பந்து நா ச ச பாபத்ருதே தாசாம் துஷ்யந்த இதி குஷ்யதாம் -என்று
ஒரு சேதன விசேஷத்துக்கு இது உண்டாகச் சொல்லா நின்றாள் இவ்விஷயத்துக்கு சொல்ல வேண்டா வி றே
பாபாத்ருதே என்ன வேண்டாதபடி அவர்ஜ நீயமான சம்பந்தமும் இங்கே விநியோகம் கொள்ளும் படி யாய்த்து இவ்விஷயம் இருப்பது
கதிர்ப்பர்த்தா ப்ரபுஸ் சாஷி நிவாசாஸ் சரணம் ஸூ ஹ்ருத் என்று அவன் தானே சொன்னான் இ றே

பிராட்டி இவன் பக்கலிலே மாத்ருத்வ பிரயுக்தமாக நிருபாதிக வத்சலை யாகையாலும் இவன் பகவத் ஆச்ரயண சமயத்தில் தன்னுடைய பூர்வ
அபராத பீதனாய் அங்கு அணுகக் கூசினால் இவன் பூர்வ அபராதத்தை அவன் முகம் கொண்டு பொறுப்பித்துச் சேர்ப்பிக்குமவள் ஆகையாலும்
இவனுக்கு இவ்வுபாய விஷயமான வ்யவசாயத்தைக் கொடுக்குமவள் ஆகையாலும்
அவனோபாதி ஸ்வாமிநி யாகையாலும் ஒரு தேச விசேஷத்து ஏறப் போனாலும் அவனுக்கே கைங்கர்ய வர்த்தகை யாகையாலும்
தன்னைக் கிட்டும் இடத்தில் ஒரு புருஷகார நிரபேஷை யாகையாலும் ஆதரணீயமாய் இருக்கும் –

ஆச்சார்யன் இவனுக்கு பகவத் விஷயத்தையும் பிராட்டி வைபவத்தையும் கரும் தரையிலே உபதேசிக்கும் அவனாகையாலும்
தான் அனுஷ்டித்துக் காட்டி இவனை அனுஷ்டிப்பிக்கும் அவனாகையாலும் இவன் குற்றம் பார்த்த அளவிலும் கைவிடாதவனாகையாலும்
இவனோடு சஜாதீயனாகையாலும் ஸூ லபனாகையாலும் இவனுடைய க்ருதஜ்ஞதை யடியாகப் பண்ணும் கிஞ்சித்காரங்களுக்கு சரீர சம்பந்த
முகத்தாலே இங்கே பிரதி சம்பந்தி யாகையாலும் தன கார்யத்தை மறந்தாகிலும் இவனுடைய ஹிதமே பார்த்துப் போருமவனாகையாலும் ஆதரணீயனாய் இருக்கும் –

ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவனுக்கு பிரதமத்திலே ருசி ஜனகர் ஆகையாலும் ஆச்சார்யா உபதிஷ்டமான ஜ்ஞானத்துக்கு வர்த்தகராய் உசாத் துணை யாகையாலும்
ஆச்சார்யா பிரேமத்தை அபிவ்ருத்தம் ஆக்குமவர்கள் ஆகையாலும் இவனுக்கு சேஷிகள் ஆகையாலும் இவனுக்கு பிரகிருதி வச்யைதையாலே
சில ல்காலித்யங்கள் பிறந்தாலும் அத்தைத் தெளியப் பண்ணவும் வல்லர்களாய் இந்த முகத்தாலே ஆதரணீயராய்ப் போருவர்கள் –

இத்தை ஸ்ருதியும் மாத்ருதேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்யா தேவோ பவ அதிதி தேவோ பவ -என்று சொல்லி வைத்தது –
இங்கு அதிதி யாகிறான் -ஸ்ரீ வைஷ்ணவன் யாய்த்து -அதிதிகள் ஆகிறார் தாங்கள் முன்பு நின்ற நிலை குலைந்து
இவன் இருக்கிற வர்க்கத்திலே புகுமவர்கள் இ றே
இவர்களும் தந்தாமுடைய பிரகிருதி ப்ராக்ருதங்களை த்யஜித்து இவன் பற்றி நிற்கிற சரணத்திலே ஆகதரர் ஆனவர்கள் ஆய்த்து –
உபாயே க்ருஹ ரஷித்ரோ சப்த சரணம் இத்யாயம் -இத்யாதி -அப்படி வந்தவனை குல சரண கோத்ராதிகளை ஆராயாதே
சத்கரிக்க வேண்டுமோபாதிஸ்ரீ வைஷ்ணவனுடைய குலாதிகளை ஆராயாதே அதிதி சத்காரன்களைப் பண்ணக் கடவன் –
அதிதிர் யத்ர பக்நர்சேர க்ருஹாத் ப்ரதி நிவர்த்ததே ஸ தஸ்மை துஷ்க்ருதம் தத்வா புண்யமாதாய கச்சதி -என்கிறபடியே
அதிதிகளுடைய அசத்காரத்தில் பாபாகமனமும் புண்ய சாயமும் பிறக்கும் என்கையாலே இவனும் இவ்வைஷ்ணவனை ஆதரியானாகில்
பகவன் நிக்ரஹ ரூபமான பாபம் வரும் -தத் அனுக்ரஹ ரூபமான புண்யமும் இவனை விட்டுப் போகக் கடவது –

இனி இந்நால்வரில் அத்யந்த ஆதரணீயாராவார் யார் என்னில் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய வைபவ ஜ்ஞானமும்
-பிராட்டியுடைய வைபவ ஜ்ஞானமும் ஈஸ்வரனுடைய சர்வபிரகார வைபவ ஜ்ஞானமும்
இவ்வாச்சார்யா அங்கீகார அனந்தரம் ஆகையாலே
-யதா தேவே ததா குரௌ -என்கிற அளவன்றிக்கே விசேஷண ஆதரணீயன் ஆச்சார்யனே யாய்த்து

ஆகையாலே இவ்வாழ்வார் ஆகிறார் அவ்வாச்சார்யா வைபவம் அறிந்தவர் ஆகையாலும்
ஆழ்வார் திருவடிகளிலே நெடு நாள் பரிசர்யை பண்ணி அவருடைய பிரசாத பாத்ரராய்ப் போந்தவர் ஆகையாலும்
அவர் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் உண்டாக நினைத்திராதவர் ஆகையாலும்
அவரை வாயாராப் புகழ்ந்து அவருடைய உபகார அனுசந்தான ப்ரீதிக்குப்போக்கு விட வேண்டுகையாலும்
இப்பிரபந்த முகத்தாலே ஆழ்வார் வைபவத்தைப் பேசுகிறார்

ஈஸ்வரன் துராராதனாய் ஆச்சார்யன் ஸ்வாராதனாய் இருக்கும்
ஈஸ்வரனை ஆராதிக்கைக்கு திருவிருத்தம் தொடக்கமான நாலு பிரபந்தங்கள் வேண்டிற்று
ஆழ்வாரை ஆராதிக்கைக்கு இப்பத்துப் பாட்டுக்களே அமைந்தது –

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு -திவ்யார்த்த தீபிகை ..

September 22, 2014

ஸ்ரீ மன் நாத முனிகள் அருளிச் செய்த தனியன் –
அவிதித விஷயாந்தரஸ் சடாரே ரூப நிஷதாமுபகா நமாத்ர போக
அபிச குணவசாத் ததேக சேஷீ மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து

நம் ஆழ்வார் உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன்
மதுரகவி ஆழ்வாரும் தேவு  மற்று அறியாமல்
பாவின் இன்னிசையே பாடித் திரிந்து
மா முனிகளும் மதுரகவி நிலை பெற்றோம் என்று களிக்கும் படி

சடாரே
நடுநிலைத் தீபமாகக் கொண்டு கீழும் மேலும் அன்வயிக்கக் கடவது
பஞ்சமி விபக்தி -நம் ஆழ்வாரை தவிர வேறு இல்லாமை
சஷ்டி விபக்தி நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளை விட வேறு அறியாதவராய்

விஷயாந்தராஸ் –
சப்தாதி விஷயங்களை அல்ல பகவத் விஷயத்தையே
உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப் பேர் உண்டு இறே
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது
அவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே
அவர் பாசுரம் கொண்டு இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம்
ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்தி

உபநிஷதாம் பஹு வசனம்
ஆழ்வார் உடைய நான்கு பிரபந்தங்களையும் சொல்லிற்று

அபிச –
ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம்
குணவசாத் குண க்ருத தாஸ்யம்

———————————————————–

வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே அரண்

வேறு ஒன்றும் நான் அறியேன் –வாழ்வாம் -என்னும் அளவும்
மதுரகவி ஆழ்வார் அனுசந்தானத்தின் அனுவாதம்

அன்றிக்கே
வேறு ஒன்றும் நான் அறியேன் -நாத முனிகள் சொல்லாக உரைக்கக் கூடுமாயினும்
முந்திய தனியன் -அவிதித விஷயாந்தராஸ் -என்னுமதுக்கு
மொழி பெயர்ப்பாக அருளிச் செய்த இதுக்கு
முந்தின பொருளே பொருந்தும் –

வேதம் தமிழ் செய்த
ஆற்றில் பொதிந்த மணலின் தொகை அரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள்கள் எல்லாம் விழுமாக்கமலம்
சேற்றில் பொதியவிழ்க்கும் குருகூரர் செஞ்சொல் பதிக
நூற்றில் பொதிந்த பொருளொரு கூறு நுவல்கிலவே -கம்பர் சடகோபர் அந்தாதி

வடமொழி மறைகளை ஹம்ச ரூபியாக தானே வெளியிட்டு அருளினாலும்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்றவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள் -பெரிய திருமடல்
போலேயும்
உபநிஷத் ஒருவர் பெயர் இட்டு வழங்குவது போலேயும்
எம்பெருமான் திரு அருளால் உணர்ந்த ஆழ்வார்கள்
திவ்ய பிரபந்தத்தை உணர்ந்த மாத்ரத்தைக் கொண்டு
அவர்கள் அருளிச் செய்ததாக கூறுதல் உபசார வழக்காகும்

மாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
திரு நா வீறுடைய பிரான்
திருக் குருகூர் நம்பி
குருகைப் பிரான்
வழுதி நாடன்

வண் குருகூர் ஏறு
வண்மை குருகூருக்கும் குருகூர் ஏற்றில் அன்வயிக்கலாம்
அடியாருக்கு அமுத வெள்ளமாக உபகரித்து அருளிய உதார சிகாமணி

முதல் அடியில் நான் அறியேன் ஒருமையிலும்
இறுதியில் எங்கள் பன்மையிலும்
தம்முடன் சம்பந்தம்பெற்ற பிரபன்னர் அனைவரையும்

திரு விருத்தம்
இனி யாம் உறாமை பன்மை
அடியேன் செய்யும் வின்ன்பப்பம் ஒருமை போலே

அவரே சரண் -என்றும் பாடமாம்-

—————————————————————

குறு முனிவன் முத்தமிழும் என் குறளும் நங்கை
சிறு முனிவன் வாய் மொழியின் சேய்–வள்ளுவர்

ஐம் பொருளும் நாற்பொருளும் முப்பொருளில் பெய்தமைத்த
செம்பொருளை எம்மறைக்கும் சேட்பொருளை தண் குருகூர்ச்
சேய் மொழியது என்பர் சிலர் யான் இவ்வுலகின்
தாய் மொழியது என்பேன் தகைந்து –ஔவையார்

சேய் மொழியோ தாய் மொழியோ செப்பில் இரண்டும் ஓன்று அவ்
வாய் மொழியை யாரும் மறை என்பர் வாய் மொழி போல்
யாய் மொழிகள் சால வுள வெனினும் அம் மொழியின்
சாய் மொழி என்பேன் தகைந்து -இடைக்காடர்

வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாரி உண்ட
நாய்க்கும் பரம பதம் அளித்தாய் அந்த நாயோடு இந்த
பேய்க்கும் இடம் அளித்தால் பழுதோ பெருமாள் மகுடம்
சாய்க்கும் படிக்கு கவி சொல்லு ஞானத் தமிழ் கடலே

சேமம் குருகையோ செய்ய திருப் பாற் கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ -தாமம்
துளவமோ வகுளமோ தோள் இரண்டோ நான்கும்
உளவோ பெருமான் உனக்கு

ஈய் ஆடுவதோ கருடற்கு எதிரே இரவிக்கு எதிர் மின்மினி யாடுவதோ
நாய் ஆடுவதோ உறும் இப்புலி முன் நரி கேசரி முன் நடை யாடுவதோ
பேய் ஆடுவதோ அழகூர்வசி முன் பெருமான் வகுளாபரணன் அருள் கூர்ந்து
ஓவாது உரை ஆயிரம் மா மறையின் ஒரு சொல் பொருமோ உலகில் கவியே-

——————————————————————–

வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்திமமாம் பதம் போலே
சீர்த்த மதுரகவி செய்கலையை –ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல் நடுவே
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து –மா முனிகள்

இது தான் பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை தொடக்கமானவற்றின் அர்த்தத்தை பிரதிபாதிக்கையாலே
இதன் அர்த்த கௌரவத்தை விசாரித்து
நன்றாய் இருப்பதொரு ஹாரத்தை சமைத்து அது ஒளி பெறும்படி
ஸ்லாக்கியமாய் இருப்பதொரு நாயகக் கல்லை அதன் நடுவே பதித்தால் போலே
அருளிச் செயல்கள் தான் நிறம் பெறும் படி அவற்றின் நடுவே
இத்தைச் சேர்த்தார்கள்
சேர்த்த சேர்க்கையின் சாதுர்யத்தாலே இறே முத்து மாலை தொடக்கமான ஆபரணாதிகள் நிறம் பெறுவது
அது போலே யாய்த்து இது –பிள்ளை லோகம் ஜீயர்

மண்டல அந்தாதி இதுவும்

கம்பர் சடகோபர் அந்தாதி இது வழிகாட்டியாக கொண்டே அமைத்ததை தாமே
மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளலை மாறனை முன்
சென்றே மதுர கவி பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன்னடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகமதாக இசைத்தனனே -என்று வெளியிட்டு உரைக்கிறார்

——————————————————————

தேறிய மா ஞானமுடன் திருக் கோளூரில் சித்திரையில் சித்திரை நாள் வந்து தோன்றி
ஆறிய நல் அன்புடனே குருகூர் நம்பிக்கு அநவரதம் அந்தரங்க அடிமை செய்து
மாறனை யல்லால் என்றும் மறந்தும் தேவு மற்று அறியேன் என்னும் மதுர கவியே நீ முன்
கூறிய கண்ணி நுண் சிறுத் தாம்பு அதனில் பாட்டுக் குலவு பதினொன்றும் எனக்கு உதவு நீயே –தேசிகன் -பிரபந்த சாரம்

இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில் இகழாத பல்லுருவில் இராகமாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவோக்கத்தில் தத்துவத்தை யுணர்த்துதலில் தன்மையாக்கில்
அன்பர்க்கே யவதரிக்கும் மாயன் நிற்க அருமறைகள் தமிழ் செய்தான் தானே கொண்டு
துன்புற்ற மதுர கவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே—தேசிகன் -அதிகார சங்க்ரஹம்-

இன்பத்தில்–அண்ணிக்கும் அமுதூரும் -இன்பம் எய்தினேன்
இறைஞ்சுதலில்-மேவினேன் அவன் பொன்னடி
இசையும் பேற்றில் -திரிதந்தாகிலும்
இகழாத பல்லுருவில்-அன்னையாய் அத்தனாய்
இராகமாற்றில் -முன்னெலாம் நம்பினேன் -இன்று சதிர்த்தேன்
தன் பற்றில் -இன்று தொட்டும் தன் புகழ் ஏத்த அருளினான்
வினை விலக்கில்-பண்டை வல்வினை பாற்றி யருளினான்
தகவோக்கத்தில் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
தத்துவத்தை யுணர்த்துதலில்-வேதத்தின் உட்பொருளை நிற்கப் பாடி
தன்மையாக்கில் -செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்

இந்த பத்து விஷயங்களும் தோன்றக் காட்டும்

அன்பர்க்கே யவதரிக்கும் மாயன் நிற்க அருமறைகள் தமிழ் செய்தான் தானே கொண்டு
துன்புற்ற மதுர கவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே–

முமுஷுகளுக்கு உபாதேயமான மார்க்கம் மதுரகவி நிஷ்டையே
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் -என்றபடி-

————————————————————————-

ஆழ்வாருடைய ஒப்பற்ற போக்யதையையும், அந்த போக்யதையின் ரஸமறிந்தவர், தாமொருவரே என்பதையும்
இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.

கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே.

பதவுரை

கண்ணி–(உடம்பிலே உறுத்தும்படி பல) முடிகளையுடைத்தாய்
நுண்-(உடம்பிலே அழுந்தும்படி) நுட்பமாய்
சிறு–(எட்டம்போராதபடி) சிறிதாயிருக்கிற
தாம்பினால்–கயிற்றினால்
கட்டுண்ண பண்ணிய–யசோதைப்பிராட்டி தன்னைக்கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட
பெருமாயன்–விசேஷ ஆச்சரிய சக்தியுக்தனாய்
என் அப்பனில்–எனக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனைவிட்டு,
நண்ணி-(ஆழ்வாரைக்) கிட்டி ஆச்ரயித்து
தென் குருகூர் நம்பி என்றக்கால்-தெற்குத் திசையிலுள்ள (ஆழ்வார் திருநகரியென்னும்) குருகூர்க்கு
நிர்வாஹகாரன ஆழ்வார் என்று (அவரது திரு நாமத்தைச்) சொன்னால்.
அண்ணிக்கும்–பரமபோக்யமாயிருக்கும்;
என் நாவுக்கே–என் ஒருவனுடைய நாவுக்கே
அமுது ஊறும்–அம்ருதம் ஊறா நிற்கும்.

நம்மாழ்வர், மற்றுள்ள அவதாரங்களிற் காட்டில் க்ருஷ்ணாவதாரத்திலே,
அது தன்னிலும் நவநீத செளர்யம் பண்ணி ஆய்ச்சியர் தாம்பினால் உரலினிடை ஆப்புண்டிருந்த அபதாநத்தில்
‘எத்திறம்! உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே!” என்று ஆறு மாதம் மோஹித்திருந்தவராதலால்.
அந்த அபதாநத்தை முன்னிட்டுக் கண்ணபிரானைக் கூறுகின்றார்.

தேவுமற்றறியாதே ஆழ்வாரைப்பற்றின இவர் முதலடியிலே பகவத் விஷயத்தில் இறங்குவானேன்?
அதிலும் என் அப்பன் என்று பரமோத்தேச்யதை தோற்றச் சொல்லுவானேன்? என்னில்;
ஆழ்வார் ஆழங்காற்பட்ட துறை என்பது பற்றியும்,
ஆழ்வார் உகத்த விஷயத்தைப் பேசினால் அவர்க்கு முக மலர்த்தி உண்டாகுமென்பது பற்றியும் பேசுகிறார்.

மேலும் சரம பர்வ நிஷ்டர்க்கு பகவத் விஷயம் ஸர்வாத்மநா அநுத்தேஸயமுமன்று;
தாமாக ஸாக்ஷாத் பகவத் விஷயத்தைப் பற்றக்கூடாதேயொழிய,
தமது ஆசிரியர் உகந்த விஷயமென்று அவ்வழியாலே பற்றுகை விருத்தமன்று.

மேலும் இப்பாட்டில் எம்பெருமானைவிட்டு ஆழ்வாரைப்பற்றி மகிழ்ந்தவாறு கூறுகின்றதேயன்றி,
பகவத் விஷயத்தைப் பற்றுவதாகக் கூறப்படவுமில்லை.
முதலடியிலே எம்பெருமானைப் பேசியதனாலும்,
அதிலும் எம்பெருமானுக்கு இட்ட விசேஷணங்களின் வைலக்ஷண்யத்தாலும்
ஆபாதத: தோற்றக்கூடிய ஸங்கையை அநுவதித்துப் பரிஹரித்ததித்தனை.

என் அப்பனில் –
என் அப்பனை விட்டு என்றபடி.
வடநூலார் ‘ல்யப்லோபே பஞ்சமீ’ என்பர்;
“வ்ருக்ஷாத்பர்ணம் பததி” என்றவிடத்து ‘வ்ருக்ஷாத்’ என்ற பஞ்சமியானது
‘வ்ருக்ஷம் விஹாய என்ற ஸ்தாநத்திலேயாமென்று உதாஹரணமுங் காட்டுவர்;
அதுபோல் இங்குக் கொள்க.

கண்ணி
கண்ணபிரான், வெண்ணெய் களவு செய்கிற தன்னை யசோதைப் பிராட்டி அடிக்கடி தாம்பினால் கட்டி
வருத்துகின்றாளென்று வீட்டிலுள்ள கயிறுகளைத் துண்டுதுண்டாக அறுத்து வைத்திடுவான்;
அவற்றை அவள் ஒன்றோடொன்று முடிபோட்டு ஒரு கயிறு வடிவமாக்கி அது கொண்டு கண்ண பிரானைக் கட்டுவள்;
ஆனது பற்றித் தாம்புக்குக் கண்ணி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.

நுண் சிறு என்ற அடைமொழிகள்
தாம்பின் சுற்றளவிலும் நீட்டளவிலுமுள்ள சிறுமையைக் கூறும்;
மெல்லிதாய்க் குறுகிய என்றபடி.

கட்டுண்ணப் பண்ணிய-
இப்படிப்பட்ட தாம்பினால் கட்டும்போது, தன் உடம்புக்கு எட்டம் போராதபடி மிகச் சிறிதான அத் தாம்பினால்
கட்ட முடியாதபடி எளிதில் தன்னைத் தப்புவித்துக் கொள்ள வல்லவனாயினும்,
தனது ஸௌஸீல்யம் ஸௌலப்யம் ஆஸ்ரித பாரதந்திரியம் முதலிய சீலங்களை
வெளியிடுவதற்கென்றே பரத்வ நிலையைத் தவிர்ந்து
மநுஷ்ய ஸஜாதீயனாக அவதரித்திருக்கிற தான் உரலோடு கட்டுண்டிருக்கை முதலிய இவ்வகைகளால்
தான் அக் குணங்களை விளங்கச் செய்து கொள்ளவேணுமென்று கொண்டு,
ஒரு சுற்றுக்குப் போராத தாம்பு இரண்டு மூன்று சுற்றுக்குப் போரும்படி உடம்பைச் சுருக்கி அமைத்துக் கொண்ட அற்புதம்
கட்டுண்ணப் பண்ணிய என்ற சொல் நயத்தாற் போதரும்

“கட்டுண்ட” என்னாது கட்டுண்ணப்பண்ணிய என்றது –
தன்னைக் கட்டுவதற்குத் தானே இசைந்து போந்தமையை நன்கு காட்டவற்றென்க.

இங்கு நஞ்ஜீயரருளிச் செயல்-
ஆஸ்ரிதர் கையாலே கட்டுண்ணாவிடில் சீலத்துக்குப் போராது.
அநாஸ்ரிதரைக் கட்டாவிடில் ப்ரபாவத்துக்குப் போராது.
ராஜாவானவன் எதிரிகளைக் கட்டி வைக்கையும் பும்ஸ்த்வம்;
தன் மஹிஷியின் கையில் பூமாலையாலே கட்டுண்டு கிடக்கையும் பும்ஸ்தவம்.”

பெரு மாயன்
பரம்புருடன் கர்மவஹஸ நம்போலியரைப் போற் பிறந்தவாறும்,
பசியுண்டாகி நவநீதம் முதலியவற்றை விரும்பியவாறும்;
அவற்றை இடுவாரில்லாமல் களவுவழியிலே பெறுகையும்,
அவற்றைச் சடக்கென விழுங்கி விட்டு மறைத்துக் கொள்ள மாட்டாமல் வாயது கையதாக அகப்பட்டுக்கொள்கையும்
இடக்கை வலக்கை யறியாதவர்கள் கையாலே கட்டுண்கையும்,
ஸம்ஸார பந்தங்களையெல்லாம் தவிர்க்க வல்லவனான தான் இந்த பந்தகத்தைத் தவிர்த்துக் கொள்ள மாட்டாதவனாகி
ஏங்கியேங்கி அழுகையுமாகிற இவையெல்லாம் என்ன ஆச்சரியம்! என்பார் பெரு மாயன் என்கிறார்.

இவனுடைய மேன்மைக்கு எல்லை காண முடியுமாயினும்
நீர்மைக்கு எல்லைகாண முடியாதென்ப.

(என் அப்பனில்.)
நஞ்சீயருரை:-
“கீழ் ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தமாகையாலே க்ருஷ்ண வ்ருத்தாந்தம் சொல்லிற்று;
மேல் உத்தேஸ்யமான (ஆழ்வார்) விஷயத்தைச் சொல்லாதே அவனை என்னப்பனென்பானென்? என்னில்;
தம்மை ஆழ்வார் அங்கீகரிக்கைக்காக எம்பெருமானோடு தமக்கொரு ஸம்பந்தம் சொல்லிக் கொள்ளுகிறார்.
ஒரூருக்குப் போம்போது வழியிடையிலே ‘நீரும் நிழலும் நன்றாயிருந்தது’ என்று ஒதுங்கினால் உத்தேஸ்யமாக வேணுமோ?”.

என்றக்கால்
பகவத் விஷயத்தை விட்டு ஆழ்வாரைப் பற்ற வேண்டியதுமில்லை;
ஆழ்வார்! என்று ஒரு கால் வாயினாற்சொன்னாலும் போதும் என்பார் என்றக்கால் என்கிறார்.

அண்ணிக்கும் – தித்திக்கும் என்றபடி.
ஆழ்வார்க்கு நிரந்தர பகவத் விஷயாநுபவத்தாலே பிறந்த ஆநந்தாதிசயமடங்கலும்
இவர்க்கு ஆழ்வாரை ஒரு கால் சொன்ன மாத்திரத்திலே உண்டானபடி.

“அண்ணிக்கும் அமுதூறும்”
{ என்று இவர் சொன்னவுடனே,
கருவிலே திருவிலாதார் சிலர் ‘எங்களுக்கு ஆழ்வார் ரஸிக்கவில்லையே’ என்ன;

என் நாவுக்கே என்கிறார்;
முதலடியான பகவத்விஷயமுங்கூட ரஸியாதிருக்கிற உங்களுக்கு,
சரமாவதியான ஆழ்வாரளவும் ரஸிக்கும்படியான எனக்கு ரஸிக்குமாபோலே ரஸிக்குமோ? என்கை.

அன்றியே
என் நாவுக்கே என்றது-
அநாதிகாலமாக விஷயாந்தரங்கள் ரஸித்துக்கிடந்த என்னுடைய நாவுக்கே இன்று
ஆழ்வாரென்றால் ரஸித்திருக்கும்படி என்ன பாக்கியம்! என ஈடுபடுகிற படியுமாம்.

கண்ணி
ஆஸ்ரிதர் கையால் கட்டுண்ணா விடில் சீலத்துக்குப் போராது
அநாஸ்ரிதரைக் கட்டா விடில் பிரபாவத்துக்குப் போராது
ராஜாவானவன் எதிரிகளைக் கட்டி வைக்கவும் பும்ஸ்த்வம்
தன் மகிஷி யின் கையில் பூ மாலையாலே கட்டுண்டு கிடக்கையும் பும்ஸ்த்வம் –நஞ்சீயர்

பெரு மாயன்
பிறந்தவாறும்
நவநீதம் விரும்பியவாறும்
களவு வழியில் பெறுகையும்
வாயது கையதுவாக அகப்பட்டு கொள்கையும்
இடக்கை வலக்கை அறியாதவர்கள் கையால் கட்டுண்கையும்
ஏங்கி ஏங்கி அழுகையும்
நீர்மைக்கு எல்லை காண முடியாதே

என் அப்பனில்
கீழ் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தம் ஆகையாலே கிருஷ்ண வ்ருத்தாந்தம் சொல்லிற்று
மேலே உத்தேச்யமான -ஆழ்வார் -விஷயத்தை சொல்லாதே
அவனை என் அப்பன் என்பான் என் என்னில்
தம்மை ஆழ்வார் அங்கீ கரிக்கைக்காக எம்பெருமான் உடன் தமக்கு ஒரு சம்பந்தம் சொல்லிக் கொள்கிறார்
ஓர் ஊருக்கு போம்போது வலியிடையில் நீரும் நிழலும் நன்றாய் இருந்தது
என்று ஒதுங்கினால் உத்தேச்யம் ஆகவேணுமோ –நஞ்சீயர்

என்றக்கால்
ஒரு தடவை சொன்னாலே ஆழ்வாருக்கு நிரந்தர பகவத் விஷய அனுபவத்தாலே
பிறந்த ஆனந்த அதிசயம் அடங்கலும் உண்டான படி

—————

தம்முடைய மநோ வாக் காயங்களென்ற மூன்று கரணங்களும் ஆழ்வார் விஷயத்திலேயே ஏகாக்ரமாக
ஈடுபட்டபடியை அருளிச் செய்கிறார் இதில்.
நான் என்னுடைய நாக்கைக்கொண்டு அப்ராப்தமான பகவத் விஷயத்திலே செலுத்தாமல்
ப்ராப்த சேஷியான ஆழ்வாரைத் துதிப்பதிலே செலுத்திப் பரமாநந்த மடைந்தேன்;
என் தலை படைத்த ப்ரயோஜநம் பெறும்படி தலையை ஆழ்வார் திருவடிகளிலே மடுத்தேன்; இது ஸத்யம்.

நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்
மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி
பாவி னின்னிசை பாடித் திரிவனே.

பதவுரை

நாவினால்–நாக்கினால்
நவிற்றி–(ஆழ்வாரை) ஸ்தோத்திரம் பண்ணி
இன்பம் எய்தினேன்–ஆநத்தத்தைப் பெற்றேன்;
அவன்–அவ்வாழ்வாருடைய
பொன் அடி-அழகிய திருவடிகளை
மேவினேன்-ஆச்ரயிக்கப்பெற்றேன்;
மெய்ம்மையே-இது ஸத்தியமே;
மற்று தேவு அறியேன்–(ஆழ்வாரையொழிய) வேறொரு தெய்வத்தை அறியமாட்டேன்;
குருகூர் நம்பி–திருநகரிக்கு நிர்வாஹகரான அவ்வாழ்வாருடைய
பாலின்-அருளிச்செயல்களின்
இன் இசை-இனிய இசையையே
பாடி-பாடிக்கொண்டு
திரிவன்–திரியககடவேன்.

தேவுமற்றறியேன்
என்பதனால் நெஞ்சின் காரியஞ் சொல்லுகிறார்; நம்மாழ்வாரையொழிய தெய்வமாக நினைக்கமாட்டாது என் மனம்;
நம்மாழ்வாரையே பர தேவதையாகக் கொண்டேன் என்கிறார்.
முதலடியிலே சொன்ன நாவின் காரியத்தை மீண்டும் விசேஷித்துக் கூறுகிறார். குருகூர் நம்பி இத்தியாதியால்.
எப்போதும் நம்மாழ்வாருடைய திவ்ய ப்ரபந்தங்களையே இனிய இசையுடன் பாடிக்கொண்டு திரிவேனேயன்றி,
அவ்வருளிச் செயலைத் தவிர்த்து ஸந்த்யாவந்தந மந்த்ரத்தையும் இந்த நாக்கினால் உச்சரிக்க மாட்டேன் என்கிறாராகக்கொள்க.

இங்கே ஒரு சங்கை பிறக்கக்கூடும்;
அதாவது-“தேவுமற்றறியேன்;” என்று இவர் எம்பெருமானை
ஒதுக்கித் தள்ளுகிறபடியானால் அவ்வெம்பெருமானே தெய்வமென்று கொண்டாடுகிற
அருளிச்செயல் மாத்திரம் இவர்க்கு உபாதேயமாகலாமோ?
பகவத்விஷயத்தை உதறிவிட்டு ஆழ்வாரையே பற்றின விவர் அந்த ஆழ்வாருடைய பெருமையைப் பேசவல்ல
பிரபந்தத்தையே யன்றோ பாடிக்கொண்டு திரியவேணும் – என்று.

இச்சங்கைக்கு முதற்பாட்டின் உரைத்தொடக்கத்திலேயே ஸமாதாநங் கூறப்பட்டுள்ளமை காண்க.
சரமபர்வ நிஷ்டர்க்கு பகவத் விஷயம் ஸர்வாத்மநா ஹேயமன்று;
தம் ஆசிரியர் உகந்த விஷயமென்று அவ்வழியாலே பற்றுகை
ஸ்வரூபாநுரூபமென்றும் ஸ்வேச்சையாலே பற்றுகை விருத்தமென்றும் இவ்வளவேயுள்ளது.

இங்கு, “குருகூர்நம்பி பாவைப் பாடித் திரிவன்” என்னாமல், ‘பாவின் இன்னிசை பாடித் திரிவன்’ என்றதற்கு
ரஸோக்தியாக நஞ்சீயரருளிச் செய்யும் படி:-
ஐஸ்வர்யத்தை அல்பாஸ்திரமென்று கழித்து
ஸ்திரமான ஆத்ம ப்ராப்தியை அபுருஷார்த்தமென்று கழித்து,
ஸ்திரமுமாய்ப் பரம போக்யமுமான பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் ப்ரதமாவதியென்று கழித்து,
இதில் சரமாவதியான ஆழ்வாரையும் உத்தேச்யரன்றென்று கழித்து,
அவரோடு ஸம்பந்தித்த விஷயத்தையும் ரஸாச்ரயமன்றென்று கழித்து,
அத்தோடு ஸம்பந்தித்த இசையே தமக்கு உத்தேச்யமென்கிறார்.

‘தெய்வத் தண்ணந் துழாய்த்தாராயினுந் தழையாயினும் தண்கொம்பதாயினும் கீழ்வேராயினும் நின்ற
மண்ணாயினுங்கொண்டு வீசுமினே’ இத்தியாதியிற்படியே
பகவத் ஸம்பந்தம் கழியக் கழிய நிறம் பெறுகிறபடி.”

பாடித் திரிவனே என்ற சொல் நயத்தால்,
ஆழ்வாரருளிச்செயலைப் பாடவே தான் எனக்கு உடம்பில் வலிவு உண்டாகி ஸஞ்சரிக்க வல்ல சக்தி உண்டாகிறது
என்னுங்கருத்துத் தோன்றும்.
“ரஸாயநஸேவை பண்ணித்திரிவாரைப்போலே;
இது காணும் இவர்க்கு தாரகமாய் இவரை ஸஞ்சரிக்கப் பண்ணுகிறது”

“நாவாயிலுண்டே நமோ நாரணாவென்று ஒவா துரைக்கு முரையுண்டே” என்றும்,
“என்நாவிலின்கனி யானொருவர்க்குங் கொடுக்ககிலேன்” என்றும் மற்றையாழ்வார்கள்
பகவத் விஷய ஸ்துதியையே தமது நாவுக்குப் பயனாக நினைத்திருப்பர்;

“அடியையடைந் துள்ளந்தேறி, ஈறிலின் பத் திருவெள்ளம் யான் மூழ்கினன்” என்று
பகவத் விஷயாவகாஹநத்தையே -தமக்குப் பேரின்பமாக நினைத்திருப்பர்;
“கோலமாமென் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழலே” என்று
பகவத் பாத ஸேவையையே தமது தலைக்குப் பேறாக நினைத்திருப்பர்;
“கண்ணனல்லால் தெய்வமில்லை” என்று அவனையே தெய்வமாக நினைத்திருப்பர்;
இந்த ப்ரதிபத்திகளெல்லாம் மதுரகவிகளுக்கு ஆழ்வார் திறத்திலே யாமென்பதை இப்பாட்டில் உய்த்துணர்க.

நம்பிள்ளை யீடு:-
“குருகூர்நம்பிபா’ என்றது -கண்ணி நுண் சிறுத்தாம் பென்னுதல்;
திருவாய்மொழி என்னுதல்.
திருவாய்மொழி தன்னில் பலகாலும் ‘குருகூர்ச் சடகோபன்’ என்றாரிறே;
அவ்வழியாலே யாய்த்துத் திருவாய்மொழி தன்னையும் இவர் ஆதரிப்பது.”

மெய்மையே=
‘ஆழ்வார் நீச ஜாதியிற் பிறந்தவராதலால் அர்ச்சையில் அவர் ஆதரிக்கத் தக்கவரே யன்றி விபவத்தில் ஆதரிக்கத்தக்கவரல்லர்;
மாதா புத்திரனுக்கு நமஸ்கரணீயையாயினும் பஹிஷ்டையாயிருக்குங் காலத்திலே அவள் எப்படி நமஸ்கரிக்கத்தகாதவளோ
அப்படி தான் நீசஜாதீயரான ஆழ்வார்கள் விபவத்திலே அநாதரணீயர்’ என்று பிதற்றும் த்ரமிடோபநிஷக் குத்ருஷ்டிகளின்
மிடற்றைப் பிடித்தாற்போலே அருளிச் செய்கிறபடி பாரீர்.
மதுரகவிகள் ப்ராஹ்மணோத்தமராயிருந்து வைத்து, ஆழ்வாருடைய விபவ தசையிலே அவர்க்கு நான்
ஸகலவித பரிசர்யையும் செய்தேன் காண் என்று ஸத்யம்பண்ணிச் சொல்லுகின்றார் காண்மின்.

‘நவிற்றின்பம்” என்று பெரும்பாலும் ஓதப்பட்டாலும்
“நவிற்றியின்பம்” என்ற பிராசீந பாடத்தை ஆதரிப்பதே அழகு;

கலிவிருத்தத்தால் அமைந்த இப்பிரபந்தம்-
நேரசை முதலாகத் தொடங்கப்பட்ட பாட்டுகள் ஒற்றொழித்துப் பதினோரெழுத்துக் கொண்ட
அடியையுடையனவாகவும்,
நிரையசை முதலாகத் தொடங்கப்பட்ட பாட்டுக்கள் ஒற்றொழித்துப் பன்னிரண்டெழுத்துக்கள் கொண்ட
அடிமையுடையனவாகவும் அமைந்திருக்கும் முறைமைக்கிணங்க நவிற்றி என்றிருக்கவேணுமென்க.

நவிற்று என்றால் பத்தெழுத்தாய்விடுமன்றோ ‘நவிற்று’ என்ற பாடத்தில், நவில் பகுதி;
‘நவிற்றி’ என்ற பாடத்தில், நவிற்று பகுதி: பொருள் ஒன்றே.

நாவினால் நவிற்று–பாவின் இன்னிசை பாடித் திரிவேன் -வாக் இந்த்ரியம்
மேவினேன் அவன் பொன்னடி– காயிக
தேவு மற்று அறியேன் –மானஸ
பாவின் இன்னிசை பாடித் திரிவனே –

ஐஸ்வர் யத்தை அல்பம் அஸ்தரம் என்று கழித்து
ஸ்திரமான ஆத்ம பிராப்தியை அபுருஷார்த்தம் என்று கழித்து
ஸ்திரமாயும் பரம போக்யமுமான பகவத் பிராப்தியை பிராப்யத்தில் பிரதமாவதி என்று கழித்து
இதில் சரமாவதி யான ஆழ்வாரையும் உத்தேச்யர் அன்று என்று கழித்து
அவரோடு சம்பந்தித்த விஷயத்தையும் ரசாஸ்ர்யம் அன்று என்று கழித்து
அத்தோடு சம்பந்தித்த இசையே தமக்கு உத்தேச்யம் -என்கிறார்

தெய்வம் தண் அம் துழாய் தாராயினும்
தழையாயினும்
தண் கொம்பதாயினும்
கீழ் வேராயினும்
நின்ற மண்ணாயினும்
கொண்டு வீசுமினே
இத்யாதிப் படியே பகவத் சம்பந்தம் கழிய கழிய நிறம் பெறுகிற படி

பாடித் திரிவனே
பாடுவதாலேயே சஞ்சரிக்க வல்ல சக்தி பெற்றேன்
ரசாயன சேவை பண்ணித் திரிவாரைப் போலே
இது காணும் இவருக்கு தாரகமாய் இவரை சஞ்சரிக்கப் பண்ணுகிறது
நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -என்றும்
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -என்றும்
நாக்குக்கு பயன் என்பர் மற்றையர்

அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன் -என்றும்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும்
கண்ணன் அல்லால் தெய்வம் அல்ல –
இந்த பிரபத்திகள் எல்லாம் மதுர கவிகளுக்கு ஆழ்வார் திறத்தில்

குருகூர் நம்பி பா -என்றது
கண்ணி நுண் சிறுத் தாம்பு -என்னுதல்
திருவாய் மொழி -என்னுதல்
திருவாய் மொழி தன்னிலும் பலகாலும் குருகூர் சடகோபன் என்றார் இறே
அவ்வழியாலே யாய்த்து திருவாய் மொழியையும் இவர் ஆதரிப்பது

மெய்மையே
ஆழ்வார் நீச ஜாதி -அர்ச்சையில் தான் ஆதரணீயர் விபவத்தில் இல்லை -என்று
பிதற்றும் திராவிட உபநிஷத் குத்ருஷ்டிகள் மிடற்றை பிடிக்குமாறு அருளுகிறார்
சத்யம் பண்ணிச் சொல்கிறார்

———————————————————————————-

“தேவுமற்றறியேன” என்றார் கீழ்ப்பாட்டில்; இதில் தேவுமற்று அறிவேன் என்கிறார்.
ஆழ்வார் பற்றின விஷயமென்று அவ்வழியாலே பற்றலாகும் என்கிற ஸாஸ்த்ரார்த்தத்தை விளக்குகிறபடி.
“விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்றாளிறே ஆண்டாளும்.
ஆணையின்மேலே ஏற நினைப்பார். தாமாக ஏறப் புக்கால் உதைபடுவர்;
விரகறிந்த பாகன் மூலமாக ஏறினால் அது முறைமையாகும்; அப்படியே யாய்த்து பகவத் விஷயப் பற்றும்.

திரிதந் தாகிலும் தேவ பிரானுடை
கரிய கோலத் திரு வுருக் காண்பன்நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்காள்
உரியனாய் அடி யேன் பெற்ற நன்மையே.

பதவுரை

திரிதந்தாகிலும்–(பகவத் விஷயத்தோடு ஒட்டற்றுத்) திரிந்தேனாகிலும்.
தேவ பிரானுடை–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய
கரிய–(நீலமேகம்போற்) கறுத்ததாய்
கோலம்–அழகியதான
திரு உரு–பிராட்டியோடு கூடிய திவ்ய ரூபத்தை
நான் காண்பன்–நான் ஸேவிப்பேன்;
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு–பெருமையையும் ஒளதார்யமுமுடைய ஆழ்வார்க்கு
உரிய ஆள் ஆய்–அந்ந்யார்ஹ சேஷ பூதனாயிருந்து வைத்து
அடியேன் பெற்ற நன்மை–அடியேன் பெற்றபேறு இது காணீர்.

“திரிதந்தாதிலும்” என்றதைத் “திரிதந்தேனாகிலும்” என்பதன் மரூஉ மொழியாகக் கொண்டு உரைக்கப்பட்டது.
அன்றி, வினையெச்சமாகவே கொண்டு உரைத்தலுமொன்று.
திரிதருதலாவது திரும்பி வருதலாய், எம்பெருமானை விட்டு ஆழ்வாரளவும் போன நான் திரும்பி
எம்பெருமானளவிலே வந்தாகிலும் என்றாம் திருவாய் மொழிப் பாவை விட்டு இசைகளை விட்டு ஆழ்வாரையும் விட்டு
‘அவருகந்த விஷயம்’ என்று ப்ரதம பர்வத்திலே திரும்பி வந்தாகிலும் என்றபடி.

“திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக் காண்பன் நான்” என்றவாறே,
சிலர் மதுரகவிகளை நோக்கி “என்சொன்னீர்! என் சொன்னீர்? விட்டொழிந்த படுகுழியில் மீண்டும் விழுந்தீரே” என்று கூற,
பின்னடிகளால் அவர்கட்கு உத்தரம் அருளிச் செய்கிறார்.

தேவபிரானுருவை நான் காண்பதானது என்னுடைய முயற்சி மூலமாக நேர்ந்ததாகில் எனக்கு இது தீமையேயாகும்;
ஆழ்வார் திருவடிகளிலே நான் அடியனாயிருந்து வைத்து அவர் வழியாலே பெற்றதாகையால் இது நன்மையேயாம் என்றவாறு.

“தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருவைத் திரிதந்து நான் காண்பனாகிலும் (அது)
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு அடியேன் ஆளுரியனாய்ப் பெற்ற நன்மையாகுமே யன்றித் தீமையாகாது” என்றுமாம்.

——————————————————————————–

முதற்பாட்டில் எம்பெருமானை விட்டு ஆழ்வாரையே பற்றினதாகக் கூறின நீர்
‘ஆழ்வாருகந்த விஷயம்’ என்பது பற்றி பகவத் விஷயத்தை விரும்புவானேன்?
ஆழ்வார் உகந்தால் நீரும் உகக்க வேணுமோ? என்று சிலர் கேட்க;
ஸகல வைதிகர்களாலும் ‘இது அபதார்த்தம்’ என்று கைவிடப் பட்ட அடியேனை யாவரொரு ஆழ்வார்
விசேஷமாகக் கடாக்ஷித்தருளி ஸகலவித பந்துக்களும் செய்யக் கூடிய காரியத்தைத் தாமொருவராகவே
அடியேன் திறத்துச் செய்தருளிப் பொருளல்லாத வென்னைப் பொருளாக்கி யருளினாரோ அவ்வாழ்வாரன்றோ எனக்குத் தலைவர்;
அவர் உகந்த விஷயத்தை நான் உகவாதொழிந்தேனாகில் ஆழ்வார் என்னை அங்கீரித்தருள்வதற்கு முன்பு நான் நின்ற நிலைக்கும்
இப்போதைய நிலைமைக்கும் என்ன வாசி உள்ளதாம்? என்ற கருத்துத் தோன்ற அருளிச் செய்கிறார்.

நன்மை யால் மிக்க நான்மறை யாளர்கள்
புன்மை யாகக் கருதுவ ராதலின்
அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்
தன்மையான் சடகோபனென் நம்பியே.

பதவுரை

நன்மையால் மிக்க–நற்குணத்தால் மேன்மை பெற்றவர்களாய்
நால்மறை ஆளர்கள்-நான்கு வேதங்களிலும் வல்லவர்களான வைதிகர்கள்
(என்னை)-அடியேனை
புன்மை ஆக கருதுவர் ஆதலில்-ஹேயகுணங்களே ஒரு வடிவு கொண்டதென்றெண்ணி
உபேக்ஷித்திருப்பரென்பதுவே ஹேதுவாக
அன்னை ஆய்-மாதாவாயும்
அத்தன் ஆய்–பிதாவாயும்
என்னை ஆண்டிடும் தன்மையான்–அடியேனைக் கைக்கொண்டருளு மியல்வினரான
சடகோபன்-நம்மாழ்வார்
என் நம்பி–எனக்குத் தலைவர்.

(நன்மையால் மிக்க)
என்னை இகழ்ந்து கைவிட்டவர்கள் ஸாமாந்ய புருஷர்களல்ல;
நன்மையால் மிக்க நான் மறையாளர்களாய்த்துக் கைவிட்டது;
அதாவது-
ஒருவனிடத்தில் சில குணங்களும் சில தோஷங்களுங்கிடந்தால் தோஷாம்ஸங்களைத் தள்ளி விட்டுக்
குண பாகங்களையே நோக்கிக் கைக் கொள்ளுதல்,
ஸ்வல்ப குணமுமில்லாமல் தோஷங்களே கூடு பூரித்துக் கிடந்தாலும் அக் குற்றங்களையே நற்றமாகக் கொண்டு
கைக் கொள்ளுதலாகிற நன்மையிற் சிறந்தவர்களாய்,
இவ்வளவு ஆத்ம குண பூர்த்தி உண்டாவதற்கு ஈடாக நான்கு வேதங்களிலும் வ்யாஸ பதம் செலுத்த வல்லவர்களான
பெரியோர்களுக்கும் தமது நன்மையைக் கொண்டு என்னைக் கைக் கொள்ள முடியாதபடி மஹா பாபியாய்க் கிடந்தேனென்னு
மிவ்வளவையே காரணமாகக் கொண்டு ஆழ்வார் கடாக்ஷித்தருளினார் என்கை.

“நன்மையால் மிக்க நான்மறையாளர்”
என்பதற்குப் பொருந்தியவர் கூரத்தாழ்வான் ஒருவரே என்று நம் முதலிகள் அனைவரும் ஒரு மிடறாக அருளிச் செய்வர்களாம்.
கூரத்தாழ்வான் இகழ்ந்து கைவிடும்படியான ஜந்து உலகத்திலேயே கிடையாது;
அப்படிப்பட்ட கூரத்தாழ்வானும் இம் மதுரகவிகளைக் கண்டால் விலக்கித் தள்ளும்படியாக அத்தனை
ஹேய வஸ்துவாய்த் தாமிருந்ததாக நைச்யாநுஸந்தாநம் பண்ணிக் கொள்ளுகிறபடி.

(புன்மையாகக்கருதுவர்)
புன்மை என்பது பண்புப்பெயர் (தர்மம்); புல்லியன் என்பது பண்பி (தர்மி);
புல்லியன் (-க்ஷூத்ரன்) என்று என்னைக் கருதுவர் என்ன வேண்டியிருக்கப் ‘புன்மையாகக் கருதுவர்’ என்றது-
புன்மை என்று வேறொரு ஆதேய வஸ்நுவும் புல்லியன் என்று வேறொரு ஆதார வஸ்துவும் கிடையாது;
புன்மையே மதுரகவியாக ஒரு உருவை யெடுத்துக் கொண்டு வந்திருக்கின்றதென்று கருதுவர் என்ற பொருள் தோன்றுவதற்காம்.
இவ்விடத்தில் விவக்ஷிதமான புன்மை மேற்பாட்டில் விசதம்.

கருதுவர்= காலவழுவமைதி;
“விரைவினு மிகவினுந் தெளிவினுமியல்பினும், பிறழவும்பெறூஉமுக் காலமுமேற்புழி” என்பது நன்னூல்.

ஆதலில் —
அனைவருங் கைவிட்டதுதானே ஹேதுவாக என்றபடி.
‘இனி இம் மதுரகவிக்கு நாமல்லது ரக்ஷகரில்லை’ என்று தம்முடைய க்ருபா மாத்ர ப்ரஸந்நாசாயத்வத்தை
வெளியிட்டுக் கொண்டு என்னை ஆண்டாரென்கிறார்.
நான் வேறு போக்கடி யற்று ‘ஆழ்வார் திருவடிகளே சரணம்’ என்று அடைக்கலம் புகுந்த பின்பு
ஆழ்வார் என்னை ஆண்டருளினாராகில் அதற்கு நான் அவ்வளவாக உருக மாட்டேன்;
என்னுடைய இசைவு இல்லாதிருக்கவும் தாமே என்னுடைய புகலறுதியைப் பார்த்துக் கைக்கொண்டருளின
க்ருபாதிஸயம் என்னை உருக்கா நின்ற தென்கிறார்.

நெருப்புக்கு உஷ்ணம் போலவும் நீர்க்குச் சீதளம் போலவும் ஆழ்வார்க்கு இக் குணம் இயற்கையானது
என்னுங் கருத்துத் தோன்ற ‘ஆண்டிடுந் தன்மையான் என்ற சொல்லழகு நோக்குமின்.

——————————————————————————–

ஸத்துக்கள் உம்மைக் கைவிடும்படி உம்பக்கல் என்ன புன்மையிருந்ததென்ன;
அநாதி காலமாகப் பர த்ரவ்யாபஹாரமும் பர தாரபரிக்ரஹமும் பண்ணிப் போந்தேன் என்று
முன்னிரண்டடிகளாற் கூறிய பின்னர், ‘
இப்போது எப்படியிருக்கிறீர்?’ என்று கேட்க,
இப்போது ஆழ்வாருடைய அருளுக்கு இலக்காகப் பெற்றுச் சதிரனாய் விட்டேன் என்கிறார் பின்னிரண்டிகளால்.

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மட வாரையும் முன்னெல்லாம்
செம் பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்
கன்பனாய் அடி யேன் சதிர்த் தேனின்றே.

பதவுரை

அடியேன்-(இன்று ‘அடியேன்’ என்று சொல்லும்படி திருந்தின) நான்
முன் எலாம்-(ஆழ்வாருடைய விஷயீகாரம் பெறுவதற்கு) முன்பெல்லாம்
பிறர்-அயலாருடைய
நல் பொருள் தன்னையும்–நல்ல பொருள்களை
நம்பினேன்-ஆசைப் பட்டுக் கிடந்தேன்;
(பிறர்) மடவாரையும்-பிறருடைய ஸ்த்ரீகளையும்
நம்பினேன்-விரும்பிப் போந்தேன்;
இன்று-இப்போதோ வென்றால்
செம் பொன் மாடம்-செவ்விய பொன்னாற் சமைந்த மாடங்களை யுடைய
திரு குருகூர் நம்பிக்கு-திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்கு
அன்பன் ஆய்-பக்தனாகப் பெற்று
சதிர்த்தேன்-சதிரையுடையேனானேன் (சமத்தனாய் விட்டேன்.)

முதலடிக்கு- அயலாருடைய பொருள்களைக் களவு செய்தேன் என்று ஸாமாந்யமாகப் பொருளாயினும்
நன் பொருள் என்ற ஸ்வாரஸ்யத்தால் இங்கு ஆத்மாபஹாரம் பொருளாகக் கடவது.
ஈஸ்வரனுக்கு சேஷ பூதமான விலக்ஷண ஆத்ம வஸ்துவை யென்னுடையதாக அபிமாநித்திருக்கையாகிற
ஆத்மாபஹாரக்களவைச் செய்துபோந்தேன் என்கை.
யோந்யதாஸந்தமாத்மாநம ந்யதா ப்ரதிபத்யதே! கிம்தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாபஹாரிணா’ என்றதை இங்கு அநுஸந்திக்க.

உத்தம: புருஷஸ்த்வந்ய?” என்கிற ப்ரமாணச் சாயையாலே எம்பெருமானைப் பிறர் என்கிறது.
இப்படி ஆத்மாபஹாரம் பண்ணினேனாகையால் அதற்குப் பலமான விஷய ப்ராவண்யப் படு குழியிலே
விழுந்தேனென்கிறார் இரண்டாமடியில்;

பகவத் பாகவத விஷயத்திலே வைக்க வேண்டிய மஹா விஸ்வாஸத்தை
மின்னிடை மடவார் திறத்திலே வைத்தேனென்கிறார்.

நம்பிள்ளை ஈடு:-
“ரத்நாபஹாரம் பண்ண அஞ்சாதவன் விறகும் வைக்கோலும் களவு காண அஞ்சுமோ?
ஈஸ்வரன் ‘என்னுடையது’ என்று அபிமாநித்திருந்த (ஆத்ம) வஸ்துவை அபஹரித்தவன்,
ஸாமாந்யர் ‘என்னது” என்று அபிமாநித்திருக்கும் வஸ்துவை அபஹரிக்கச் சொல்ல வேணுமோ?”

நம்புதல்-விரும்புதல்; “நம்பும் மேவும் நசையாகும்மே.”

இப்படியிருந்த நீர் ஆழ்வாரைக்கிட்டினபடி எங்ஙனே? என்று கேட்க;
மடவார்களை ஆராதிப்பதற்காகப் பொருள் தேடிக் கொள்ளை யடிப்பதற்கு இடம் பார்த்துத் திரியா நிற்கையில்
அச் செம்பொன் மாடத்தைக் களவு காணப் போனேன்;
அங்கே வைத்த மா நிதியைக் கண்டு அகப்பட்டேனென்கிறார்;
இவர்க்கு வைத்தமாநிதி ஆழ்வாரேயாம்.

சதிர்த்தேன்-
க்ருதக்ருத்யனானேன் என்றபடி.
சதுர என்ற வடசொல் சதிர் எனத்திரிந்து அது அடியாகப் பிறந்த வினைமுற்று இது.

———————————————————————————

“சதிர்த்தேனின்றே” என்று பரமாநந்தமாக அருளிச்செய்த மதுரகவிகளை நோக்கி
‘நீர் சதிர்த்தபடி என்?’ என்று கேட்க,
இன்று முதலாக இனி மேலுள்ள காலமெல்லாம் ஆழ்வாருடைய திவ்ய குணங்களையே நான் பாடித் திரியும்படி
அவ்வாழ்வாரால் க்ருபை பண்ணப் பெற்றேன்;
இவ்வளவேயுமின்றி, ஒருகால் நான் ஆழ்வாரை இகழ்ந்தாலும் அவர் என்னை இகழ மாட்டாரென்னும்படி
அவ்வளவு பரம கிருபைக்குப் பாத்திரமாயினேனே! இதற்கு மேற்பட்ட சதிர் உலகத்திலுண்டோ? என்கிறார்.

இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்
நின்று தன் புகழேத்த வருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி என்று
மென்னை யிகழ்விலன் காண்மினே.

பதவுரை

இன்று தொட்டும்–இன்று முதலாக
எழுமையும்–மேலுள்ள காலமெல்லாம்
நின்று–(நான்) அத்யவஸாயம் நிலைக்கப் பெற்று
தன் புகழ்–தம்முடைய (ஆழ்வாருடைய) திருப் புகழ்களை
ஏத்த–துதிக்கும்படி
எம் பிரான் அருளினான்–எம் ஸ்வாமியான ஆழ்வார் க்ருபை பண்ணினார்;
குன்றம் மாடம்–மலை போன்ற மாடங்களை யுடைய
திருகுருகூர் நம்பி–திருநகரிக்குத் தலைவரான அவ் வாழ்வார்
என்றும்–(இனி) எக்காலத்திலும்
என்னை–என் விஷயத்தில்
இகழ்வு இவன்–அநாதரமுடையவராக இருக்க மாட்டார்;
காண்மின்–(இதனை அநுபவத்தில்) கண்டு கொள்ளுங்கள்.

பகவத் விஷயத்தை ஆஸ்ரயிப்பது ஒருகாலமும்,
பலன் கை கூடுவது வேறொரு காலமுமாயிருக்கும்;
அது போலன்றியே ஆழ்வாரை அஸ்ரயித்த இன்று முதலாகவே
எனக்குப் பலன் கை கூடிற்றுக் காண்மின் என்பார்
இன்று தொட்டும் என்கிறார்.

எழுமையும்-
ஏழு ஜந்மங்களிலும் என்றது உபலக்ஷணமாய் மேலுள்ள காலமெல்லாம் என்றபடி.

இகழ்விலன்-
இனி நான் வேறொருவரைத் தேடி ஓடும்படி என்னை
இனி எக்காலத்திலும் ஆழ்வார் கைவிடமாட்டார் என்கை.

காண்மினே-
இது ப்ரத்யக்ஷமாகக் காணக் கூடியதாயிருக்க
ஆழ்வார் பெருமையை நான் சொல்லக் கேட்கை மிகை யன்றோ?

—————————————————————————————

கீழ்ப்பாட்டில் “நன்புகழேத்தவருளினான்” என்றவிடத்துக் கூறிய
புகழேத்துகையாவது இதுதான் என்று இப்பாட்டில் வெளியிடுகிறார்:
ஆழ்வார் திருவாய்மொழி பாட வல்லவர், எம்பெருமானையும் வசப்படுத்த வல்லவர் இத்யாதியாகவுள்ள
அவருடைய புகழ்களை நான் ஏத்துகிறவனல்லன்;
பாவங்கள் கூடு பூரித்துக் கிடந்த அடியேனைப் பரம பரிசுத்தனாக்கி ஆட் கொண்ட பெருமை யாதொன்றுண்டு.
இதற்கு மேல் வேறொரு பெருமை ஆழ்வார்க்கு இருப்பதாக நான் நினைக்க வில்லை;
அந்தப் பெருமையையே நாடெங்கு மறியப் பறை யடிக்கின்றேன் என்கிறார்.

கண்டு கொண்டென்னைக் காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண்டிசையு மறிய இயம்புகேன்
ஒண்டமிழ்ச் சட கோப னருளையே.

பதவுரை

பிரான்-பரமோபகாரகராய்
காரி மாறன்–பொற் காரியார் திருக் குமாரரான நம்மாழ்வார்
என்னை–(தமது பெருமையை அறியாத) என்னை
கண்டு–கடாக்ஷித்து
கொண்டு–கைக் கொண்டு
பண்டை வல் வினை–அநாதியாய்ப் பிரபலமாயிருந்த பாவங்களை
பாற்றி அருளினான்–உரு மாய்ந்து போம் படி பறக்கடித் தருளினார்; (ஆதலால்)
ஒண் தமிழ் சடகோபன் அருளையே–அழகிய தமிழ்க் கவிகளுக்கு ஆகரமான அவ் வாழ்வாருடைய க்ருபையையே
எண் திசையும்–எட்டுத் திக்கில் உள்ளவர்களும்
அறிய–அறியும்படி
இயம்புகேன்–சொல்லக் கடவேன்.

கண்டு கொண்டு என்றவிடத்தில் கொண்டு என்பது துணை வினையன்று;
கண்டு என்றும் கொண்டு என்றும் இரண்டும் தனித்தனி வினையெச்சங்கள்.
என்னைக் கடாக்ஷித்து, என்னுடைய துர்க் கதியே பற்றாசாக என்னை அங்கீகரித்தருளி என்றபடி.
“இருந்தான் கண்டு கொண்டு எனதேழை நெஞ்சாளும்” என்று ஆழ்வார் பகவத் விஷயத்திலே
அநுஸக்தித்தவாற்றை இவர் ஆழ்வார் விஷயத்திலே அநுஸந்திக்கிறார்.

காரி மாறன் –
ஆழ்வாருடைய திருத் தகப்பனார்க்குப் பொற்காரியார் என்று திருநாமம்.
ஆழ்வார் உலக நடைக்கு மாறாயிருந்ததால் மாறன் எனத் திருநாமம் பெற்றார்.
மாறன் பிரான், மாறப்பிரான்; “சில விகாரமா முயர்திணை” (நன்னூல்).

பண்டை வல் வினையாவது-
பகவச் சேஷத்வத்துக்கு எல்லை நிலம் பாகவத ஸேஷத்வமென்று அறியப் பெறாமை.
பாகவத விஷயத்தை விலக்கிப் பகவானளவிலே பண்ணும் பக்தியைப் பாபமென்றிறே நம் ஆசாரியர்கள் அருளிச் செய்வது.
பரதேந ததாநக:” என்றவிடத்து அநக: என்பதற்கு வியாக்கியானம் ஸேவிக்க.

பாற்றி –
பாறச்செய்து; பாறுதல் உருமாய்ந்தொழிதல்:
பாறு என்ற வினைப்பகுதி யடியாப் பிறந்து பிற வினையில் வந்த வினையெச்சம்.

அறிய வியம்புகேன் –
“அறியச் சொன்ன வாயிரம்” என்று-ஆழ்வார் உலக மறியத் திருவாய்மொழி சொன்னாப் போலே
நான் உலகமறிய அவரது அருளைச் சொல்லுகிறேன் என்கிறார்.

“தமிழ்ச் சடகோபன்” என்றது
தமிழையே நிரூபகமாகவுடைய ஆழ்வார் என்றபடி.

——————————————————————-

அருள் கொண் டாடு மடியவ ரின்புற
அருளி னானவ் வருமறை யின்பொருள்
அருள் கொண் டாயிரமின் தமிழ் பாடினான்
அருள் கண் டீரிவ் வுலகினில் மிக்கதே.

பதவுரை

அருள் கொண்டாடும்–பகவத் கிருபையைக் கொண்டாடுகின்ற
அடியவர்-பக்தர்கள்
இன்புற-ஆநந்திக்கும்படி
அ அரு மறையின் பொருள்-அந்த அருமையான வேதத்தின் உட்பொருள்களை
அருளினான்-அருளிச் செய்தவராயும்
அருள் கொண்டு–பரம க்ருபையாலே
இன் தமிழ்–இனிய தமிழ்ப் பாஷையிலே அமைந்த
ஆயிரம்–திருவாய்மொழியாயிரத்தை
பாடினான்–பாடினவருமான ஆழ்வாருடைய
அருள் கண்டீர்–க்ருபை ஒன்று மாத்திர மன்றோ
இ உலகினில்–இந்த லோகத்திலே
மிக்கது–அதிசயித்திருக்கிறது.

எம்பெருமானது அருளைக் காட்டிலும் ஆழ்வாரருளே சீரியதென்கிறார்.
“கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமுஞ் சொற்பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினாலருள் செய்தான்” என்றபடி
ஸகல வேத வேதாங்க நூல்களையும் ப்ரஸாதித்தருளின எம்பெருமானுடைய க்ருபைக்கு மேற்பட்ட
உலகில் வேறொரு க்ருபையுண்டோ? என்று
அந்த பகவத் க்ருபையிலேயே ஈடுபட்டிருந்த பாகவதர்கள், ஆழ்வார் திருவாய்மொழி அருளிச் செய்த பின்னர்
‘ஹா! ஹா!! இவ்வளவு இனிமையான திவ்ய ப்ரபந்தம் போன்ற ஒரு நூலையும் இதுவரை ஈச்வரன் நமக்கு உபகரிக்கவில்லை;
இன்றளவும் ஈச்வரனுக்கு மேற்பட்ட க்ருபாளு யாருமில்லையென்று நாம் மயங்கிக் கிடந்தோம்,
*பாலேய் தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரத்தை அருளிச் செய்த ஆழ்வாருடைய திருவருளுக்கு நிகரான
அருளும் இனி உலகிலுண்டோ? என்று வியந்து மகிழ்ந்தனராம்;
அதனை யருளிச்செய்கிறார்- இங்கு முதலடியில்.

திருவாய்மொழியில்,
“எண்ணாதனகளெண்ணும் நன் முனிவரின்பந் தலைச் சிறப்பப், பண்ணார் பாடலின் கவிகள்
யானாய்த் தன்னைத்தான்பாடி” என்ற விடத்து அருளிச்செய்யும் அர்த்த விசேஷத்தை இங்கு அநுஸந்திக்க;
அதாவது –
திருவாய்மொழி அவதரிப்பதற்கு முன்பு முனிவர்களனைவரும் என்ன நினைத்திருந்தார்களென்றால்;
எம்பெருமானுக்கு அபரிச்சிந்நமான ஸ்வரூப ரூப குண விபூதிகள் இருக்கின்றன;
இவற்றையெல்லாம் உள்ளபடி வர்ணிப்பதாகத் தொடங்கின வேதங்கள் வர்ணிக்க முடியாமல்
“யதொவாவொ நிவதஹெ-யதோ வாசோ நிவர்த்தந்தே” என்னும்படி பின் வாங்கி விட்டன;

அக் குறை தீர அந்த பகவத் விபூதிகளை அதி விசதமாக வர்ணிக்க வல்ல ஒரு ப்ரபந்தம் அவதரிக்க வேணும்;
அத்தகைய பிரபந்தத்தை எம்பெருமான் எந்த மஹாநு பாவரைக் கொண்டு அவதரிப்பிக்கப் போகிறானோ’ என்று சிந்தித்திருந்தார்கள்;
திருவாய்மொழி அவதரித்தவுடனே அவர்கள் மீண்டும் நினைத்ததென்னவென்றால்
‘ஐயோ! எம்பெருமானுக்கு இன்னுஞ் சில குணங்களும், இன்னுஞ் சில விபூதிகளும்,
இன்னுஞ் சில அவதாரங்களும் இல்லாமற்போயிற்றே! என்று வருந்தினராம்.

(அருளினான் அவ்வருமறையின் பொருள்.)
வேதார்த்தங்களை ஆழ்வார் அருளிச் செய்தாரென்றால்,
‘வேதத்தை மொழி பெயர்த்தாரா? அல்லது தூக்குத் தொகையாக வேத தாத்பரியங்களை எடுத்துரைத்தாரா?’
என்று விகற்பித்துக் கொண்டு
வேதத்தில் ஒரு பஞ்சாதியினுடைய அர்த்தமும் திருவாய்மொழியின் ஒருபாட்டிலும் ஆநுபூர்வியாகக் காணப்படாமையால்
மொழிபெயர்த்தாரென்ன முடியாது;
இனி, தாற்பரியம் உரைத்தாரென்னில்; அதுவும் பொருந்தாது;
எங்ஙனேயெனில்;

வேதம் கர்மகாண்டம் என்றும் ப்ரஹமகாண்டம் என்றும் இரண்டு பாகமாக வகுக்கப்பட்டுள்ளது;
அவற்றுள் கர்ம காண்டத்தின் தாற்பரியம் ஒரு பாட்டிலும் காண முடியாது;
ப்ரஹ்ம காண்டத்தின் தாற்பரியமும் உபநிஷத்துகளிற் சொல்லுகிற பத்ததி வேறு;
திருவாய்மொழியிற் சொல்லுகிற வழி வேறு; அதற்கும் இதற்கும் யாதொரு ஸம்பந்தமும் இல்லை;
ஆதலால் வேதந் தமிழ் செய்தனரென்கை எவ்வித்திலுங் கூடாது’ என்று சில பாமரர் மறுத்துக் கூறுவர்;

இதைப்பற்றி நாம் “த்ராவிட வேத ரஹஸ்ய ஸர்வஸ்வம்” என்னும் க்ரந்தத்திலே பாக்கச் சொல்லியிருக்கிறோம்.
இங்கே சுருங்கச் சொல்லுகிறோம்.
வேதந் தமிழ் செய்தார் என்பதற்கு வேதத்தின் தாற்பரியங்களை ஐயந்திரிபற அழகாக விளக்கிக் காட்டினார் என்பது கருத்தாம்.

வேதத்தின் உண்மைய் பொருளறியாதார் பலர் –
தத்ரைவ கேபி சபலாச் சலபீபவந்தி” என்றபடி வேத வாக்கியங்களுக்கு அபார்த்தங்கள் பண்ணி,
ப்ரபஞ்சமே முழுப் பொய்’ என்பதும் ‘ஈச்வரனே கிடையாது’ என்பதும்,
‘ஈச்வரன் மாயாதி ரோஹித ஸ்வ ஸ்வரூபனாய்த் தானே ஸம்ஸரிக்கிறான்’ என்பதும்,
‘மூல ப்ரக்ருத்யாதிகளே ஜகத் காரணம்’ என்பதும்,
‘தேவ தாந்தரங்களே பர தைவம்’ என்பதும்,
‘ஸ்ரீமந் நாராயணனுக்கு குணமில்லை, விக்ரஹமில்லை, விபூதியில்லை’ என்பதுமாய்
இப்படி வேதங்களை ரஸாபாஸப்படுத்தி அலைத்து விட்டபடியால் அந்த வேதங்களின் உண்மைப் பொருளைக்
கையிலங்கு நெல்லிக் கனியாகக் காட்ட வல்ல திருவாய்மொழியும் அதற்கு அங்கோபாங்கங்களான
மற்றுமுள்ள திவ்ய ப்ரபந்தங்களும் வேத ரஹஸ்யமாகவும் வேதோபப்ரும்ஹணமாகவும் சொல்லப்படுகின்றன.

ஸ்ரீதேசிகனும்
“பொய்கை முனி….மங்கையர் கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும்,
செய்ய தமிழ்மாலைகள் நாந்தெளிய வோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்ற பாட்டால்
இக்கருத்தை விளக்கியருளினார்.

“பாஷ்யகாரர் இதுகொண்டு ஸுத்ர வாக்யங்களொருங்கவிடுவர்” என்பது ஆசார்ய ஹ்ருதயம்.

அழகிய மணவாள ஜீயர் அருளிச்செய்த ஜக கண்ட்ய க்ரந்தமும் நோக்கத்தக்கது. நிற்க.

அருளினான் என்பதும், பாடினான் என்பதும்-வினையாலனையும் பெயர்கள் ஆறாம் வேற்றுமைத் தொகையும்.

இவ்வுலகினில் என்பதை ஏழாம் வேற்றுமையாகக் கொள்வதிலும் ஐந்தாம் வேற்றுமையாகக் கொண்டு,
ஆழ்வாருடைய அருள் இந்த லோகத்திற் காட்டிலும் பெரிது என்றுரைப்பதும் ஒக்கும்.

பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் செய்த படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமால் அலை கடலிடையில் துயில்வோன்
அலைகடல் குறு முனி கையில் அடக்கம்
குறு முனியோ எனில் கலசப் பிறவியோன்
கலசமோ புவிதனில் கண்டதோர் சிறு மண்
புவியோ அரவினுக்கு ஒரு தலைப் பாரம்
அரவோ உமையவள் சிறு விரல் மோதிரம்
உமையோ சிவபிரான் பாகத்து ஒடுக்கம்
சிவனோ திருமால் திருவடி ஒடுக்கம்
திருமால் தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டருள் பெரியோர் தூய சடகோபர்
சடகோபர் அருள் சகத்தினும் பெரிதே -என்றார் பாகவத கவிவரர்

அன்றி, இவ்வுலகிலே என்று ஏழாம் வேற்றுமையாகவே கொண்டு,
“அருள் கண்டீரிவ்வுலகினில் மிக்கதே” என்ற சொல்லமைப்பு நயத்திற்கேற்ப
‘பாசுரம் மிக்கது பரமபதத்திலே, அருள் மிக்கது இவ்வுலகத்திலே’ என்றுரைப்பதும் சிறக்கும்.
அதாவது-
“கேட்டாரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்றபடி-திருவாய்மொழியை
நித்யஸுரிகள் விசேஷமாக ஆதரிப்பதனால் திருவாய்மொழியின் பெருமை பரமபதத்தில் ஓங்குகின்றது;
அத்திருவாய்மொழியை அருளிச்செய்வதற் குறுப்பான ஆழ்வாருடைய அருள் மாத்திரமே இவ்வுலகில் நிலாவுகின்றது என்றபடி.

——————————————————————————-

கருங்கல்லைத் துளைத்துக் குழியாக்கி அதிலே நீரைத் தேக்குவாரைப் போலே அதிமந்தமான என் நெஞ்சிலே
வேதாந்த விழுப்பொருள்கள் நன்கு பதியும்படி திருவாய்மொழியை அருளிச்செய்த ஆழ்வார் திறத்திலே
ஆட்செய்ய வேணுமென்று நான் ஆசைப்பட்டது அந்த க்ஷணத்திலேயே பல பர்யவஸாயியாயிற்று! என்று
தாம் பெற்ற பேற்றின் பெருமையைப் புகழ்கிறார்.

மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்
நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்குஆட்
புக்க காத லடிமைப் பயனன்றே.

பதவுரை

மிக்க வேதியர் வேதத்தின்–சிறந்த வைதிகர்களால் ஓதப்படுகின்ற வேதத்தினுடைய
உள் பொருள்–உள்ளுறை பொருளானது
நிற்க-நிலை நிற்கும்படி
பாடி–(திருவாய்மொழியைப் பாடி)
என் நெஞ்சுள்–என்னுடைய ஹ்ருதயத்திலே
நிறுத்தினான்–(அந்த வேதார்த்தங்களை அல்லது திருவாய்மொழியை) ஸூப்ரதிஷ்டிதமாக்கி யருளினார் (ஆழ்வார்);
தக்க சீர்–தகுதியான குணங்களை யுடையராய்
சடகோபன்–சடகோபனென்ற திரு நாமத்தை யுடையரான
என் நம்பிக்கு–(அந்த) ஆழ்வார் விஷயத்திலே
ஆள்புக்க–அடிமை செய்வதற்கு உறுப்பான
காதல்–ஆசையானது
அன்றே–அந்த க்ஷணத்திலேயே
அடிமைப் பயன்–(ஆழ்வார் திருவடிகளில்) கைங்கரியம் செய்வதையே பயனாகவுடைத்தாய்த்து.

ஆழ்வார் பகவத் விஷயத்திலே ஆழங்காற்பட்டு
“இனியாமுறாமை”
நெடுநாள் கழித்தே “உற்றேனுகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன்” என்றும்
“அவாவற்று வீடுபெற்ற” என்றும் சொல்லும்படி மநோரதஸித்தியில் விளம்பமாயிற்று.

இம்மதுரகவிகளுக்கோ அப்படியில்லை.
இவர் ஆழ்வார் திருவடிகளில் சேஷபூதராகப் பெற்ற க்ஷணமும்,
இவ்வாழ்வார்க்கே நித்ய கைங்கரியம் பண்ண வேணுமென்று மநோரதித்த க்ஷணமும்
அந்த மநோ ரதம் ஈடேறப் பெற்று நித்ய கைங்கரியம் வாய்த்த க்ஷணமும் ஆகிய இம்மூன்று க்ஷணமும்
ஒரேக்ஷணமாய்த்து இவர்க்கு:

இடையிற் சிறிது விளம்பமும் இல்லை என்னுமிதனால்,
பகவத் ப்ராவண்யத்திற் காட்டில் பாகவத ப்ராவண்கத்திற்குள்ள
ஏற்றம் சொல்லிற்றாயிற்று.
“கோளரியை வேறாக வேத்தி யிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம்” என்றார் திருமழிசைப்பிரானும்.

மிக்க என்ற அடைமொழி வேதத்துக்குமாகலாம், வேதியர்க்குமாகலாம்.
வேதத்துக்கு ஆகும்போது
“சுடர்மிகு சுருதியுள்” என்ற ப்ரமாணங்களில் தலை நின்ற வேதம் என்றபடி.
வேதியர்க்கு ஆகும் போது,
அல்பச்ருதரன்றிக்கே பஹூச்ருதராய் வேதத்தை வஞ்சிக்க கில்லாத பரமை காந்திகள் என்றபடி.

வேதியர் வேதம் என்றது-
வைதிகர்களால் ஒதப்பட்டு அதுவே காரணமாக சாகா பேதங்களையும்
காடகம் காண்வம் தைத்திரீயம் இத்யாதி நாம பேதங்களையும் அடைந்த வேதமென்றபடி.
வேதியர்களுடைய வேதம் என்று ஆறாம் வேற்றுமைத் தொகை:
“ஓதுவாரோத்தெல்லாம்” என்ற திருவாய்மொழிப் பாசுரத்திற் போல
‘நுட்பொருள்’ என்று பிரித்து, வேதத்தின் ஸூக்ஷ்மமான பொருள் என்றுமுரைப்ப..

“வேதத்தினுட் பொருள் நிற்கப் பாடி” என்பதற்குப் பரம ரஸமாக ஒரர்த்தமுண்டு.
அதாவது “வேதப்பொருளே! என் வேங்கடவா!!” என்றபடி வேதத்தினுட்பொருள்-ஸாக்ஷாத் ஸர்வேச்வரன்;
அவன் நிற்கப்பாடி என்றது சில குதர்க்கிகள் மறை குலையச் சாதுசனங்களடங்க நடுங்கத் தருக்கச் செருக்காலே
எம்பெருமானுடைய பரத்வத்தை இல்லை செய்தவளவிலே,
எம்பெருமான் அது கண்டு “நாஹம் நாஹம் நசாஹம்” என்றாற்போலே ‘நான் பரதத்வமல்லேன்’ என்று பிற்காலித்து ஓடப்புக,
ஆழ்வார் *ஒன்றுந் தேவாகிற மாவட்டியை யிட்டு அவ்வெம்பெருமானாகிற மத்த கஜத்தை ஓடவொட்டாதே
நிலை நிறுத்திப் பரத்வ ஸ்தாபநம் பண்ணினமையைக் கூறியவாறு.

இக்கருத்து ஆழ்வாருடைய “பராங்குசன்” என்ற திருநாமத்திலும் தோற்றும்;
பர-பரமபுருஷனுக்கு, அங்குசன்-மாவட்டி போன்றவன்.
“வலக்கையாழி யிடக்கைச் சங்கமிவையுடை மால்வண்ணனை, மலக்கு நாவுடையேற்கு” என்ற திருவாய்மொழியிலும்
இக்கருத்து உறையுமாறு காண்க.

ஆட்புக்க காதல்–
புக்க என்னும் பெயரெச்சம் காரியப்பொருளதாய்,
ஆள் புகுவதற்குக் காரணமான காதல் என்றதாம்:
‘நோய்தீர்ந்த மருந்து’ ‘நின்னைக் காணும் அவா’ என்ற விடங்களிற்போல.

அடிமைப் பயன் என்றது –
அடிமையைப் பயனாக வுடையதென்று பொருள் படுதலால் அன்மொழித்தொகை.

அன்றே என்றது – “அன்றெனக்கிளவி ஆமெனத்தகுமே” என்றபடி
ஆம் என்னும் பொருளதாக உரைத்தலுமொன்று.

ஆழ்வார் திறத்தில் சேஷத்வம் முற்படக் காதலை (கைங்கர்ய ருசியை) விளைத்து உடனே
கைங்கர்ய ரூப புருஷார்த்த ஸித்தியில் மூட்டிவிடும். என்பது நான்காமடிக்குத் தேர்ந்த பொருள்.

————————————————————————–

ஆசார்யர்கள், அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யரென்றும் க்ருபாமாத்ர ப்ரஸந் நாசார்யரென்றும் இருவகைப்படுவர்.
சிஷ்யன் பலகாலும் அநுவர்த்தித்தால் பின்பு அருள்புரிந்து அந்த ஸிஷ்யனை
அநுக்ரஹிப்பவர்கள் அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யர் எனப்படுவர்;

திருக்கோட்டியூர் நம்பி போல்வார். எம்பெருமானார், கோயிலுக்கும் திருக்கோட்டியூர்க்கும் பதினெட்டு தடவை நடந்து
வருந்தின பின்புதானே திருக்கோட்டியூர் நம்பி ப்ரஸந்நாராயருளினார்.
அங்ஙனன்றியே,
ஒருவன் அநுவர்த்தியாவிடினும் அதற்குமேல் விமுகனுமா யிருந்தாலும் முலைக்கடுப்பாலே
தரையிலே பீச்சுவாரைப்போலே அவனே அநுக்ரஹூப்பதைத் தம் பேறாக நினைத்துத் தாங்களே அவனைப் பலகாலும்
அநுவர்த்தித்துத் திருத்திப் பணிகொள்ளுமாசிரியர் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்ய ரெனப்படுவர்;
எம்பெருமானார், நம்பிள்ளை போல்வார்.

அப்படிப்பட்ட ஆசார்யத்வ பூர்த்தியை மதுரகவிகள் நம்மாழ்வார் திறத்திலே ஸ்வாநுபவத்தாற் கண்டறிந்தவராதலால்
அக்குணத்திலே ஈடுபட்டுப் பேசுகிறார்.

“தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவரடி பணிந்தவர்களுக்குமே இவையுள்ளது”
(ஆச்சர்யஹ்ருதயம்-3-வது ப்ரகரணம்;.) என்ற ஸ்ரீஸூக்தியின் பொருள் இங்கு அநுஸந்திக்கத் தக்கது.
(தாய்-ஸீதை; மகன் -ப்ரஹ்லாதன் தம்பி-விபீஷணன்; இவர்-நம்மாழ்வார்; இவரடிபணிந்தவர் -எம்பெருமானார்.)

பயனன் றாகிலும் பாங்கல ராகிலும்
செயல்நன் றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி
முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே

பதவுரை

பயன் அன்று ஆகிலும்-(பிறர் திருந்துவதால்) தமக்கொரு பயனில்லாமற் போனாலும்
பாங்கு அலர் ஆகிலும்–(அவர்கள் திருந்துகைக்குப்) பாங்காக அமையாமற் போனாலும்
செயல்–தமது அநுஷ்டாகத்தாலே
நன்றாக திருத்தி–நன்றாக சிக்ஷித்து
பணி கொள்வான்–(அவர்களை) ஆட்கொள்வதற்காக
குயில் நின்று ஆல் பொழில் சூழ் குருகூர்–குயில்களானவை நின்று ஆரவாரஞ் செய்யப் பெற்ற
சோலைகளாலே சூழப்பட்ட திருநகரியிலே (எழுந்தருளியிருக்கிற)
நம்பி!-ஆழ்வாரே!
உன் தன்–தேவரீருடைய
மொய் கழற்கு–சிறந்த திருவடிகளில்
அன்பையே–அன்பு உண்டாவதைக் குறித்தே
முயல்கின்றேன்–முயற்சி செய்கின்றேன்.

உலகத்திலே ஸமாக்யமாக ஒருவன் ஒருவனுக்கு ஓருதவி செய்வது ஒரு கைம்மாறு பெறக் கருதியேயாம்;
ஆழ்வார் தம்முடைய அநுக்ரஹத்துக்கு ஒருவனை இலக்காக்குவது அங்ஙன் ஒரு பயனைக் கருதியன்று;
கருதினாலும் அவனால் ஒரு பயனும் பெறுவிக்கவும் முடியாது.
அப்படிப்பட்ட நிஷ்பல ஜந்துவையாய்த்து ஆழ்வார் அநுக்ரஹிப்பது என்கிற அர்த்தம்
பயனன்றாகிலும் என்பதில் அடங்கியுள்ளது.

பாங்கலராகிலும் என்றது- அநதிகாரிகளாகிலும் என்ற படி.
பழுதே பலபகலும் போக்கித்திரியும் ஸம்ஸாரிகளைத் திருத்துவதற்கென்றே திருவவதரித்த ஆழ்வார்
இந்த வணங்காமுடி ஸம்ஸாரிகளோடு மாரடித்துக் கொள்ள இறாய்த்து
“ஆரானுமாதானுஞ் செய்ய, அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே?” (பெரிய திருவந்தாதி) என்று
வெறுத்துக் கை வாங்கினாலும் பின்னையும் அவர்களை விடமாட்டாதே
“சொன்னால் விரோத” மித்யாதிகளாலே பல்லாயிரமுறை உபதேசித்துத் திருத்தப் பார்த்தது
இவருடைய க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வத்தை நன்கு விளக்கவற்றன்றோ.

பணி கொள்வான் என்பதை
வான் விகுதி பெற்ற எதிர்கால வினையெச்சமாகக்கொண்டு,
‘திருத்திப் பணி கொள்வதற்காக’ என்று உரைத்தோம்.
இவ்வினை யெச்சம் எவ்வினையைக் கொண்டு முடிகின்றதென்னில்;
குருகூர் நம்பி என்றதற்குக் ‘குருகூரிலே எழுந்தருளியிருக்கிற நம்பி’ என்று பொருளாதலால்
‘எழுந்தருளியிருக்கிற’ என்று வருவிக்கப்பட்ட பெயரெச்சத்தின் பகுதியான எழுந்தருளும் வினையைக் கொண்டு முடியுமென்க.

அன்றி,
நம்பி என்னும் பெயர், நம்பு என்னும் வினையடியாப் பிறந்ததாதலால் அவ்வினையைக் கொண்டு
முடியுமென்பதும் சாலப்பொருத்தமுடைத்தாம்.
“நம்பும் மேவும் நசையாகும்மே.”
திருத்திப் பணி கொள்வதற்காகத் திருக்குருகூரை மேவியிருப்பவரென்கை.

இனி, ‘பணிகொள்வான்’ என்பதை
வினையாலணையும் பெயராகக் கொண்டு,
பணி கொள்பவனான குருகூர்நம்பி என்று இயைத்தால் குற்றமென்? என்று கேட்பீர்; கேண்மின்:
இங்கு நம்பி! என்பது அண்மை விளி; முதல் வேற்றுமை யன்று: ஆகவே முன்னிலை யாதலால்
அதற்கேற்பப் ‘பணி கொள்வாய்’ என்று இருந்தால் நன்கு பொருந்தும்;
கொள்வான் என்று படர்க்கையாயிருத்தலால் சிறிது வருத்தப்பட்டுப் பொருத்த வேணுமே.

“குயில்நின்று ஆர் பொழில் சூழ்” என்றும் ஓதுவர்.

“அன்பே முயல்கின்றேன்” =
நீர்செய்த மஹோபகாரத்துக்கு நான் அது ரூபமாகச் செய்வதொரு ப்ரத்யுபகார மில்லையாயினும்
தேவரீருடைய திருவடிகளில் பரிபூர்ணமான அன்பையாவது அமைக்கலாம்; அதுவுமில்லை;
‘ஆழ்வார் திருவடிகளில் அன்பு வைக்க வேணும் அன்பு வைக்க வேணும்’ என்கிற
யோசனையும் முயற்சியுமாயே யிருக்கிறதேயன்றி முற்றின அன்பு அமைந்திலது என்றபடி.

————————————————————————-

நம்மாழ்வார் விஷயத்திலே பரமபக்தி பரீவாஹமாக வெளிவந்த இக் கண்ணி நுண் சிறுத்தாம்பை
மஹா விச்வாஸத்துடன் ஒத வல்லவர்கள் பரம பதத்திலே போய் ஆழ்வார் திருவடி நிழலிலே வாழப் பெறுவர்
என்று பல ச்ருதியோடே பிரபந்தத்தை நிகமநஞ் செய்தருளினர்.

அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன் தென்குரு கூர்நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்னசொல்
நம்புவார்ப்பதி வைகுந்தம் காண்மினே.

பதவுரை

அன்பன் தன்னை–ஆச்ரித பக்ஷபாதியான எம்பெருமானை
அடைந்தவர்கட்கு எல்லாம்–ஆச்ரயித்தவர்களான ஸகல பாகவதர் பக்கலிலும்
அன்பன்–பக்தியை யுடையரான
தென் குருகூர் நகர் நம்பிக்கு–நம்மாழ்வர் விஷயத்திலே
அன்பன் ஆய்-பக்தனாயிருந்து கொண்டு
மதுரகவி சொன்ன சொல்-மதுரகவி அருளிச் செய்த இத் திவ்வியப் பிரபந்தத்தை
நம்புவார்-(தங்களுக்குத் தஞ்சமாகக்) விச்வஸித் திருப்பவர்களுக்கு
பதி–வாஸஸ்தாநமாவது
வைகுந்தம் காண்மின்-பரம பதமாம்.

“அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லா மன்பன்” என்னு மிவ் வடை மொழி
ஆழ்வார்க்குமாகலாம், மதுரகவிகளுக்கும் ஆகலாம்.

ஆழ்வார்க்கு ஆகும் போது –
“பயிலுந் திருவுடையார் யவரேலும் அவர் கண்டீர்” என்றபடி சாதி ஒழுக்கம் முதலியவற்றின் ஆராய்ச்சியின்றியே
பகவத் பக்தி மாத்திரத்தையே பற்றாசாகக் கொண்டு ஸகல பாகவதரிடத்தும் அன்பு மிக்க ஆழ்வார் என்றதாகிறது.

மதுரகவிகளுக்கு அந்வயித்தால்-
பாகவதர் எல்லாரளவிலும் வைத்திருந்த அன்பை ஆழ்வாரொருவரளவிலே மடுத்த மதுரகவி என்று கருத்தாகக் கடவது.

(வைகுந்தவங் காண்மினே.)
ஆழ்வாரே உத்தேச்யமாகில் ஆழ்வார் திருநகரியன்றே பதியாக வேணும்;
பரம பதத்தைப் பதியாகச் சொல்லுவானேன்? என்னில்; (நம்பிள்ளையீடு)
“திருநகரியில் ஆழ்வாராணையும் பொலிந்து நின்ற பிரானாணையும் இருபுரியா யாய்த்துச் செல்லுவது;
அங்ஙனன்றியே ஆழ்வாராணையே செல்லும் தேசம் பரமபதமேயிறே:
‘அடியார் நிலாகின்ற வைகுந்தம்’ என்றும்,
‘வானவர் நாடு’ என்றுஞ் சொல்லக்கடவதிறே –
இத்தால் ஆழ்வார் ஏகபோக ‘ஸாம்ராஜ்யமாக ஆளுகிற பரம பதமே
ஆழ்வாரடியார்கட்கு வஸ்தவ்ய தேசமாக விதிக்கத்தகு மென்றதாயிற்று.

இங்ஙனன்றியே,
வைகுந்தமென்று தனியே ஒரு தேச விசேஷத்தைச் சொன்னபடியன்று;
ஆழ்வாரெழுந்தருளி யிருக்குமிட மெதுவோ அதுதான் வைகுந்தம் என்பராம் நம்பி திருவழுதிவளநாடு தாஸர்.
“ஒராயிரத்துளிப்பத்தும் உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகுந் தம்மூரல்லாம்” (திருவாய்மொழி.) என்றதிறே.

கூரத்தாழ்வான் திருக்குமாரர் பட்டர் திருவவதரித்த பின்பு விண்ணுலகென்றும் மண்ணுலகென்றும் ஒருவாசியின்றி
இடைச்சுவர் தள்ளி இரண்டு விபூதியும் ஒரு போகியாய்த்து என்று நம்பிள்ளை கோஷ்டியில்
பலகாலும் ப்ரஸக்தமாமென்பது இங்கு அறியத்தக்கது.

(மதுரகவி)
ஆசுகவி, சித்ரகவி, விஸ்தாரகவி, மதுரகவி என்று கவிகள் நால்வகைப்படுவர்;
அவர்களுள் இவர் இனிமையாகப் பாடுபவரென்பது பற்றி மதுரகவி யென்று திருநாமம் பெற்றார்.
இவருடைய பிரபந்தம் ஆழ்வார்கள் அருளிச்செயலோடு சேர்ந்து திவ்ய ப்ரபந்தமென்ற சிறப்புப் பெயரைப் பெற்றாற் போல
இம்மதுரகவிகளும் ஆழ்வார் கோஷ்டியிற் சேர்ந்து மதுரகவியாழ்வார் என்று ஆழ்வார் பட்டம் பெற்றமை
உபதேசரத்தினமாலையில் தோன்றும்.

“ஆழ்வார் திருமகளாராண்டாள் மதுரகவியாழ்வார் எதிராசராமிவர்கள்” என்றும்,
“ பாரில் மதியாருமாண்டாள் மதுரகவியாழ்வார் எதிராசர் தோன்றிய வூரிங்கு” என்றுமுள்ள பாசுரங்களே நோக்குக.

ஆழ்வார்களிற் சிலரைக் குலசேகரப் பெருமாள், பாண் பெருமாள் என்பது போல மதுரகவிப் பெருமாள் என்றாருமுளர்;
“மனறே புகழுந் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்சென்றே மதுரகவிப் பெருமாள்” (சடகோபரந்தாதி) என்றார் கம்பநாடர்.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-7-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

September 26, 2013

ஆட்டியும் தூற்றியும் நின்றுஅன்னை
மீர்!என்னை நீர்நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத் தின்வல்லி
யோகொழுந் தோஅறியேன்
ஈட்டிய வெண்ணெய்உண் டான்திரு
மூக்குஎன தாவியுள்ளே
மாட்டிய வல்விளக் கின்சுட
ராய்நிற்கும் வாலியதே.

பொ – ரை : தாய்மார்களே1 நீங்கள், என்னை வருத்தியும் பழி மொழிகளைக் கூறியும் நின்று நலிவதனால் பயன் யாது? திரட்டிய வெண்ணெய் உண்டவனான கிருஷ்ணனது அழகிய மூக்கானது, பக்கத்தில் உயர்ந்து விளங்குகின்ற கறபகத்தின் கொடியோ? அல்லது, கொழுந்தோ? அறியேன்; அது, என்னுடைய உயிருக்குள்ளே ஏற்றிய வலிய விளக்கினது சுடராய் நிற்கும் பெருமையையுடையது.

வி – கு : ‘திருமூக்கு வல்லியோ, கொழுந்தோ அறியேன்; திருமூக்குச் சுடராய் நிற்கும் வாலியது,’ என்க.

ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘இரண்டுக்கும் நடுவே நாம் இருக்க, இவை முற்படுகையாவது என்? அத்தனையோ நம் மூக்கு வலி?’ என்று திருமூக்கில் அழகு நலிகிறபடியைச் சொல்லுகிறது.

ஆட்டியும் தூற்றியும் – ஆட்டுகையாவது, தாம் தாம் பழி சொல்லி அலைக்கை. தூற்றுகையாவது, பிறரும் அறியப் பழி சொல்லுகை நின்று – 2‘அச்சம் உறுத்தி மீட்கலாமோ?ய என்று ஒருகால் அலைக்கை இயல்பே அன்றோ? அங்ஙன் அன்றிக்கே, முன்பு செய்ததற்கு ஒரு பிரயோஜனம் காணாதிருக்கச் செய்தேயும் விடாதே நின்று. அன்னைமீர் என்னை நீர் நலிந்து என் – 3ஹிதத்திலே நடக்கும் தமப்பனைப் போலே, என் பிரியத்திலே நடக்கும் நீங்கள் என்னை நலிகிறது என்?4என் உகப்பே பேறாக நினைத்திருக்கக்கூடிய நீங்கள் நலிகிறது என்? 5அந்த உருவு வெளிப்பாட்டைத் தடைசெய்யலாம் என்றோ, என்னை மீட்கலாம் என்றோ? ஒரு பிரயோஜனம் இல்லாததிலேயும் முயற்சி செய்யக் கடவதோ?’ என்பாள், ‘நலிந்து என்’ என்கிறாள். என்றது, 1‘அவனுடைய மூக்கு வலி இருக்கிறபடியையும் அறிந்து நீங்கள் என் செய்யப்படுகிறீர்கோள்?’ என்றபடி.

2‘நாங்கள் சொல்லுகிற ஹித வசனத்துக்கு ஒரு பிரயோஜனம் இல்லையாகில், என் செய்தால் பிரயோஜனம் உண்டு?’ என்ன, மாடு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் – வல்லீர்கோளாகில் இந்தச் சந்தேகத்தை அறுத்துத் தாருங்கோள். ஒரு கடல் அருகே அக்கடல் ஊற்றே தாரகமாக வளருகிறது ஒரு கொடி போலே ஆயிற்று. திருக்கண்களுக்கு அருகே திருமூக்கு இருக்கிறபடி. மாடு – அருகு. 3‘உந்நஸம் – உயர்ந்த மூக்கையுடைய’ என்கிறபடியே‘உயர்’ என்கிறது. ‘

ஸூசி ஸ்மிதம் கோமள கண்டம் உந்நஸம்   லலாட பர்யந்த விலம்பிதாலகம்’-என்பது, தோத்திரரத்தினம், 32.

4ஒழுகு நீட்சியாலே கொடி என்னவுமாய், ஊக்கம் மாறாமையாலே கொழுந்து என்னவுமாய் இராநின்றதாதலின், ‘வல்லியோ கொழுந்தோ’ என்கிறது. ‘இன்னது’ என்று நிச்சயிக்க அரிதாக இருக்கையாலே‘அறியேன்’ என்கிறது. ‘முற்றுவமை இருக்கிறபடி, எங்களுக்கு அறியப்போமோ? இதிலே உட்புகநின்று அனுபவிக்கிற நீ பின்னைச் சொல்லாய்’ என்ன, சொல்லுகிறாள் மேல்:

ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு – 5அநுகூலர்களுடைய சம்பந்தமுடைய திரவியத்தால் அல்லது தரிக்க மாட்டதே வெண்ணெய் களவு காணப் புக்குக் கொண்டியிலே பிடி உண்டு, பின்பு அதனை இல்லை செய்கைக்காக முகத்திலே தடவிக்கொள்ளுமே;அவ்வெண்ணெயிலே முடை நாற்றமும் உருவு வெளிப்பாட்டிலே தோற்றுகிறதாயிற்று இவளுக்கு. 1அப்போதை முடைநாற்றம் தோற்றும்படியாயிற்று உருவு வெளிப்பாட்டில் மெய். ‘நீ காண்பதாகச் சொல்லுகிற இது எங்களுக்குத் தெரிகிறது இல்லையே!’ என, எனது ஆவியுள்ளே – என் மனதிற்குள்ளே. மாட்டிய – ‘சுடர்வெட்டிய’ என்னுதல்: ‘ஏற்றிய’ என்னுதல், வல் விளக்கின் சுடராய்-விரக தாபத்தாலே அவியாத விளாக்காயிற்று. 2‘‘ஏற்றிய பெருவிளக்கு’ என்று ஒருதமிழ்புலவன் இட்டு வைத்தான்’ என்று அருளிச்செய்வர். நிற்கும் வாலியதே – வலிதாய் நின்று நலியாநிற்கும்.3‘விளக்காகிறது தான் சிறிது நேரம் இருப்பதுமாய் ஓர் இடத்திலே இருப்பதுமாய் அன்றோ இருப்பது? இது அங்ஙன் அன்றிக்கே, எப்போதுமாய் எங்கும் உண்டாய் இராநின்றது: பாதகத்துவத்தில் உறைப்பை நினைத்துச் சொல்லுகிற வார்த்தை அன்றோ இது?

திரு மூக்கின் அழகில்
இரண்டுக்கும் நடுவே நாம் இருக்க
மூக்கு வலி பலம் அர்த்தம்
வாளியது கொடியது
ஹிம்சை செய்தும் வைத்தும் என்ன பயன்
மாட்டுயர்
மாடு பக்கம்
உயர்ந்த கல்ப மரத்தில் வல்லியோ கொழுந்தோ
வெண்ணெய் உண்டவன் திரு மூக்கு
தான் பழி நேராக சொல்வது ஆட்டுகை தூற்றுகை வெளியில் வைத்து -பிறர் அறிய
அச்சம் உறுத்தி மீட்க -அங்கன் இன்றிக்கே
விடாதே -நின்றும் -தொடர்ந்து வைத்து
நலிந்து என்ன பலன்
தாய் பிரியம்
தமப்பன் ஹிதம்
உகப்பே பேறாக கொள்ள வேண்டிய தாயார் நலிவதால் என்ன பயன்
அவனுடைய மூக்கு வலி அறிந்தும்
பலம் அறிந்தும்
ஹிதம் பிரயோஜனம் இல்லை
சம்சயம் அறுத்து
கற்பகத்தின் கொடியா கொழுந்தா சொல்லும்
மாடு பக்கம்
கண்ணுக்கு அருகில்
கடல் அருகில் கடல் முத்தே தாரகமாக உள்ள கொடி போலே
உன்மதம் -ஆளவந்தார் ஸ்தோத்ரம்
கோமள கண்டம் உன்மதம் எடுப்பான மூக்கு உயர்
ஒழுகு நீட்சியால் கொடி
செவ்வை மாறாமல் கொழுந்து
அறியேன்
உட் புகா நின்ற நீயே சொல்லு என்ன
ஈட்டிய வெண்ணெய்
அனுகூலர் கர ஸ்பர்சம் பட்ட வெண்ணெய் உத்தேச்யம்
ஈட்டிய திரட்டிய
கர ஸ்பர்சம் வெண்ணெய் க்கு தானே உண்டு
கையாலே தான் எடுக்க வேண்டும்
அகன்று எடுத்து நீர குறைய
சந்தனம் வச்த்ரத்தால் புழிந்து போலே வெண்ணெய் பண்ண முடியாதே
கையை ஆட்டி -ஈரப் பதம் குறைந்து
தரிக்க மாட்டாமல் களவு காண புக்கு
கையும் களவாக பிட் பட்டு
இல்லை செய்கைக்காக முகத்தில் தடவிக் கொண்டான்
முகம் தனக்கு தெரியாதே
எனக்கே தெரியாமல் காவலுக்கு தெரியுமா
வெண்ணெய் உண்டான் திரு மூக்கு
உரு வெளிப்பாட்டில் வாசனையும் பாவனா பிரகர்ஷம் முடை நாற்றம் இடை பேச்சு போலே
முடை நாற்றமும் கிடைத்தது இவளுக்கு
உரு வெளிப்பாட்டில் மெய்மை
எனது ஆவி உள்ளே -ஹிருதயதுக்கு
மாட்டிய -ஏற்றிய
விரகத்தாலும் அணையா விளக்கு திரு மூக்கு
ஏற்றிய பெரு விளக்கு மாட்டிய பெரு விளக்கு போலே
வலிதாய் நின்று நலியா நிற்கும்
தீபம் ஷணிகமாய்-பௌததன் -சுடர் புதியதாக திரி தீர சுடர் போகுமே
தொடர்ச்சியாக எரிவதால் ஒரே சுடர் ஆக தெரியும்
ப்ராதேசிகம் -ஒரே இடத்தில் இருக்கும் தீபம்
திரு மூக்கோ -எப்போதுமே எங்கும் உண்டாய் இரா நின்றது
பாதகத்தின் உறைப்பை உறுதி பட சொல்லுகிறாள்
மாட்டிய -சுடர் வெட்டிய வலிய வன்மை பெருமை சுடர் போலே இருக்கும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-4-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

September 14, 2013

நான்காந்திருவாய்மொழி – ‘ஆழி எழ’

முன்னுரை

    ஈடு : 1மேல் திருவாய்மொழியிலே, பகவத் விஷயத்திலே இவர் கவரப்பட்ட மனத்தினையுடையரானபடி சொல்லிற்று:2மேல் திருவாய்மொழியில் இவர்க்குப் பிறந்த துக்கம், ஒன்றைக் கொடுத்து மாற்றுதல், ஒருவராலே நீக்குதல் செய்யுமது ஒன்று அன்றே அன்றோ? 3‘இனி இவர்க்குச் செய்யலாவது என்?’ என்று பார்த்தருளி, ‘ஒன்று கொடுக்கலாவது இதற்குமேல்  இல்லை அன்றோ?ய என்று பார்த்துத் தன்னுடைய விஜய பரம்பரைகளைப் பத்தும் பத்தாகக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவித்து உவகை அடைகிறார். 4அவனுக்கு உறுப்பாம் அன்று தம்மையும் வேண்டி. அவனுக்கு உறுப்பு ஆகாத அன்று தம்மையும் வேண்டாத ‘வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியைப் பாடிய ஆழ்வார் அன்றோ இவர்தாம்! தம்மை அழிய மாறியும் அத்தலைக்கு நன்மை தேடுமவர் அன்றோ? இப்படி இவர் தன்மையினை அறியுமவனாகையாலே, தன்னுடைய வெற்றிச் செயல்களைக் காட்டி இவருடைய இழவு எல்லாம் தீரும்படி சமாதானம் செய்ய அனுபவித்துத் தலைக்கட்டுகிறார். 5இறந்த காலத்தில் உள்ளவை அடங்கலும் சம காலத்திற்போலே கண்கூடாகக் காணலாம்படி செய்து கொடுத்தான். 1அடியிலே இவர்தாம் எல்லாவற்றையும் கண்கூடாகக் காணவல்லராம்படி செய்து கொடுத்தான் அன்றோ? 2மயர்வற மதிநலம் அருளின பின்பும் இவ்வளவும் வர வாசனை பண்ணுவித்தானே! ஆகையாலே, இவர்க்கு ஒரு குறையும் இல்லையே!

3அன்றிக்கே, மேலே, ‘பேரெயில் சூழ்கடல் தென் இலங்கை செற்றபிரான்’ என்று இராமாவதாரத்திற்செய்த வெற்றிச்செயல் சொல்லப்பட்டமையாலே, அவ்வழியாலும் எல்லா அவதாரங்களிலும் உண்டான வெற்றிச் செயல்களை நினைந்து, இராமாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் சக்கரவர்த்தியைப் போலவும், கிருஷ்ணாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் ஸ்ரீவசுதேவரைப் போலவும் இவரும் உகந்து பேசுகிறார் என்னுதல். 4‘அஹம் புந;- ‘அஹம்புந: தேவகுமார ரூபம் அலங்க்ருதம் தம் ஸூதம் ஆவ்ரஜந்தம்
நந்தாமி பஸ்யந்நபி தர்ஸநேந பவாமி த்ருஷ்ட்வா ச புநர்யுவேவ’

என்பது, ஸ்ரீராமா. அயோத். 12 : 105. இது, கைகேகியைப் பார்த்துத் தசரத சக்கரவர்த்தி புலம்பிக் கூறுவது.

என் தன்மையை அறிந்து என் வழியே போந்த நீ, ‘பெருமாள் காடு ஏறப்போக’ என்றால் நான் உயிர் வாழ்வேன் என்று சொன்னாயே! தேவ குமார ரூபம் – 5அது கிடக்க; இவரையே நீ தான் ‘காடு ஏறப்போக’ என்கிறது? ‘இவர்க்கும் அவ்வளவேயோ?’ என்று சிறியத்தான் கேட்க, ‘கண்ணெச்சில் ஆம்’ என்று தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி இருடிகரிபூசுகிறான் என்றார். அலங்க்ருதம் – 1அதனாலும் வெறும் புறங்காண் ஒரு போலிச் சொல்லலாவது! ஒப்பித்தால் ஒக்கச் சொல்லலாவார் இல்லை. தம் ஸூதம் – 2இவனுக்கு இரண்டு படியும் உத்தேசியமாய் இருக்கிறபடி. ஆ வ்ரஜந்தம் – 3மலர் மலரும்போது எங்கும் ஒக்கப் பிறக்கும் மலர்ச்சி போலே. 4அதுவும் வண்டினை நோக்கி அன்றோ மலர்வது? இவரும் அனுபவிக்கின்றவர்களைக் குறித்தே அன்றோ? நந்தாமி பஸ்யந்நபி – 5கண்டபடியே இருக்கச் செய்தே, காணாது கண்டாரைப் போலேயாயிற்று, நாடோறும் நாடோறும் கணந்தோறும் கணந்தோறும் உகக்கும்படி. 6தர்ஸநேந – அணைத்தல், வார்த்தை சொல்லுதல் செய்ய வேண்டா; காட்சியே அமையும். 7கரை புரண்ட அனுபவம் உள்ள இடத்திற்போலேகாணும் பிரயோஜனம், 1‘ஸதாபஸ்யந்தி’ அன்றோ? பவாமி த்ருஷ்ட்வாச புந: யுவேவ-அறுபதினாயிரம் ஆண்டு வயது நிறைந்து கிழவனான சக்கரவர்த்தி, பெருமாளைக் கண்ட பின்பு, பெருமாளுக்கும் தனக்கும் வாசி தெரியாதபடியானான்.’2‘காமனைப் பயந்த காளை’ என்னுமாறு போலே 3தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலே ஆக்கி உஜ்ஜீவிப்பிக்கும் விஷயம் போலேகாணும். 4‘ஸ்ரீவசுதேவர்’ பெரிய திருவிழாவை அடைந்தாற்போலே பிள்ளைகளின் திருமுகங்களைப் பார்ப்பதை அடைந்து, தமக்கு உண்டாய் இருந்த முதுமை நீங்கி யௌவனம் உடையவரானார்’ என்னும்படி ஆனாரே அன்றோ ஸ்ரீவசுதேவரும்?

‘மஹோத்ஸவமிவ ஆஸாத்ய புத்ராநந விலோகநம்
யுவேவ வஸூதேவ: அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்’-
என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 52.


3
அன்றிக்கே, ‘மேலே, ‘கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்’ என்று கொண்டு இத்தலையில் தோல்விக்கு எதிர்த்தலையான அத்தலையில் வெற்றிச் செயல்களை அநுசந்திக்கிறார்’ என்று பிள்ளை திருநறையூர் அறையர் பணிக்கும்படி

 ஆழி எழச்சங்கும் வில்லும் எழத்திசை
வாழி எழத்தண்டும் வாளும் எழஅண்டம்
மோழை எழமுடி பாதம் எழஅப்பன்
ஊழி எழஉல கங்கொண்ட வாறே.

பொ – ரை : திருஉலகு அளந்தருள வளருகிற போது. திருவாழியாழ்வான் முன்னே தோன்றவும், பின் ஸ்ரீபாஞ்சஜன்யம் ஸ்ரீகோதண்டம் ஆகிய இவைகள் தோன்றவும், எல்லாத் திசைகளினின்றும் மங்களாசாசனம் செய்கின்ற ஒலி தோன்றவும், கதை என்ன, வாள் என்ன, ஆகிய இவைகள் தோன்றவும், அண்ட முகடு பிளந்து நீர்க்குமிழி தோன்றவும், திருமுடியும் திருவடியும் ஒருசேர எழும்படியாகவும், நல்லகாலம் தோன்றும்படி ஆயின; அதலால், என்னப்பன் உலகத்தை அளந்துகொண்ட விதம் என்னே!

வி – கு : ‘தண்டும் வாளும் எழத் திசையும் வாழி எழ’ என மாற்றுக, ஏகாரம், ஆச்சரியப்பொருளில் வந்தது.

இத்திருவாய்மொழி, கலி விருத்தம்.

ஈடு : முதற்பாட்டு. 1அவை எல்லாவற்றுக்கும் அடியாக, திருவுலகு அளந்தருளின பெரிய வெற்றிச்செயலை அருளிச்செய்கிறார்.

2‘தேவர்கள் தங்கள் தங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுகிறார்கள்; அசுரர்கள் கொல்லப்பட்டார்கள்; அச்சம் என்பது சிறிதும் இல்லை; பகவானால் இவ்வுலகமானது வெல்லப்பட்டது,’ என்கிறபடியே,‘தேவா: ஸ்வஸ்தாநம் ஆயாந்தி நிஹதா தைத்யதாநவா:
நபயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பகவதா ஜகத்’-இது, திருவுலகு அளந்தருளின போது ஜாம்பவான் மஹாராஜர்  பறையறைந்தபடியாம்.

தனக்கு ஆக்கிக்கொண்ட செயல் அன்றோ?இராவணனைப்போலே எதிரி ஆக்கிக் கொல்லாதே குணங்கள் சில உண்டாகையாலே நின்ற நிலையிலே தோற்பித்துக் கொண்டபடி. 2நாயகனுக்கு அடியார் அன்றோ வென்று கொடுப்பார்? ஆழி எழ – 3‘மூன்று உலகங்களையும் காற்கீழே இட்டுக்கொள்ள வேணும்’ என்னும் கறுவுதல் உள்ளது சர்வேஸ்வரனுக்கே அன்றோ? அந்த எண்ணம் இன்றிக்கே இருக்கச்செய்தேயும் அவனுக்கு முன்பே பரிகரம் முற்பட்டபடி. 4‘காட்டுக்குப் போம்’ என்று நியமித்தது பெருமாளையேயாயிருக்க. இளையபெருமாள் முற்பட்டாற்போலே.  ‘ப்ராகேவ து மஹாபாக: ஸௌமித்ரி: மித்ராந்தந:
பூர்வஜஸ்ய அநுயாத்ரார்த்தே த்ருமசீரை: அலங்க்ருத:’-  என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 28. இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

‘புண்ணியசீலரும் சிநேகிதர்களுக்குச் சந்தோஷத்தைச் செய்கிறவரும் சுமித்தரையின் புத்திரருமான இளையபெருமாள், தமையனாருக்குப் பின்னே செல்லும்பொருட்டு முன்னரே மரவுரியினால் தம்மை அலங்கரித்துக்கொண்டார்’ என்கிறபடியே, போக்குக்குத் தகுதியாக முற்கோலி அலங்கரித்துக்கொண்டு நின்றார் அன்றோ?ஆழி எழ – 5தோற்றத்திலே அரசு போராயிற்று; 1ஹேதி ராஜன் அன்றோ? திவ்விய ஆயுதங்களுக்கெல்லாம் பிரதானம் அன்றோ திருவாழி? 2பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேலே பாய்ந்தாற்போலே; 3‘பையல் முடியுந்தானுமாய்ப் பெருமாள் திருமுன்பே நிற்பதே! ஈர் அரசு ஆயிற்றோ?’ என்று பொறாமையாலே மேல் விழுந்தார் அன்றோ?

4‘அத ஹரிவர நாத:-அத ஹரிவரநாத: ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிஸிசரபதிம் ஆஜௌ யோஜயித்வா ஸ்ரமேண,
ககநமதிவிஸாலம் லங்கயித்வா அர்க்கஸூநு:
ஹரிவரகணமத்யே ராமபார்ஸ்வம் ஜகாம.’-  என்பது, ஸ்ரீராமா. யுத். 40:29

 5தம்மோடு ஒக்க வினை செய்ய வல்ல பேர் தனித்தனியே பலர் அன்றோ? ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம் – 6இவர்களோடு கூடிநின்று ஒத்த போர் ஆக ஒண்ணாது, தூசித் தலையில் ஓர் ஏற்றம்செய்து தரம் பெற வேணும்,’ என்று இருந்தார். பூசல் தலையிலே பெருமாளுக்கு உண்டான கீர்த்தியையும் தம்தலையிலே ஏறிட்டுக்கொண்டார். நிசிசர பதிம் – 1அத்தலையிலும் அவனோடு ஒக்க வினை செய்ய வல்லார் பலர் அன்றோ? 2‘அவன் கீழ்த் திரியுமவர்கள் தரம் போரார்’ என்று அவனோடே பொருதபடி. ஆஜௌ-அவர்களைப் போலே வழி அல்லா வழியே இளைப்பிக்கை அன்றிக்கே, செவ்வைப் பூசல் செய்து இளைப்பித்தபடி. யோஜயித்வாஸ்ர மேண-இதற்கு முன்பு கூடாதது ஒன்றோடோ கூட்டினார். ககந மதிவிசாலம் லங்கயித்வா – பரப்பையுடைத்தான ஆகாயத்தைத் திறலாலே வருத்தம் அறக் கடந்தார். அர்க்கஸூநு:- மீட்சியில் தம் வரவு தெரியாதபடி மீண்டார். 3பிறப்புக்கு ஈடாகச்செய்தார். 4தன்நிலம் அன்றோ? 6சூரியன் ஓரிடத்தினின்றும் ஓரிடத்து ஏறப்போம் போது தெரியாது அன்றோ? ஹரிவர கணமத்யே-‘இவர்களில் ஒரு வேறுபாடு தோற்ற ஒண்ணாத’ என்று இவர்கள் நடுவே நின்றார். ராம பார்ஸ்வம் ஜகாம – 6‘தூசித்தலையிலே மதிக்க ஒரு வினை செய்தாரன்றோ முன்னிற்கப்பெறுவர்?’ என்று பெருமாள் பக்கத்திலே வந்து நின்றார்.

ஆழி எழ – 7‘ஆயிரக்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூற்றுக்காதம் சிறகு அடிக்கொள்ளும்’ என்னுமாறு போலே முற்கோலி வளர்ந்தபடி. சிறகடிக்கொள்ளுகையாவது, பின்பு தூரப்பரப்பதற்குத் தகுதியாம்படி இளமையிலே பயிலுதல்.8அச்சங்கொள்ளுதற்கு இடம் அல்லாத இடத்திலும் பயப்படக்கூடியவர்கள், அஞ்சத்தக்கஇடத்தைக் கண்டால் வாளா இரார்களே அன்றோ? 1பயசங்கை இல்லாத இடத்திலும் அஞ்சும்படி செய்கிறது விஷய வைலக்ஷண்யம் அன்றோ? 2துரியோதனன் கோட்டியிலே கிருஷ்ணன் எழுந்தருளின போது அவர்கள் செய்த வஞ்சனத்தைக் கண்டு, அச்சங்கொண்டு, தம்முடைய திருமாளிகையில் படுக்கையையும் தடவிப் பார்த்தாரே அன்றோ ஸ்ரீவிதுராழ்வான்? ‘மஹாபுத்திமானான அந்த விதுரர் கண்ணனுடைய படுக்கையைத் தடவிப் பார்த்தார்,’ என்கிறபடியே, ‘ஸம்ஸ்ப்ருசந் ஆஸநம் ஸௌரே: விதுரஸ்ஸ மஹாமதி:’-  என்பது, பாரதம், உத்யோக.

கடல் கலங்குவது தன்னளவிலே அன்றோ? 3பிள்ளையுறங்காவில்லிதாசர் ‘மஹாமதி என்றது, மதிகேடர் என்றபடியோ?’ என்றார், 4பிள்ளைதாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று சொட்டையை உருவிப் பிடித்துக்கொண்டு சேவிப்பாராம். நம்முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள். 5அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?

ஆழி எழ – 1இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்தபடியைக் கண்டு, ‘தனியாக ஒண்ணாத’ என்று அஞ்சித் திருவாழியாழ்வான் ஒரு கையிலே ஏறினார்.

சங்கும் வில்லும் எழ-தூசி ஏறினவர்கள் பொரப் புக்கவாறே நின்ற 2இளவணி கலங்கி மேலே நடக்குமாறு போலே,இளவணி-காலாள். மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கைகளிலே ஏறினார்கள். அன்றிக்கே, 3‘இரை பெறாத இடத்தே இருந்து சீறுபாறு என்னக்கூடியவர்கள் இரையுள்ள இடத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடார்கள் அன்றோ?’ என்னுதல்; இனத்திலே ஒருவன் வாழ்வதனைக் கண்டவாறே உறவினர்கள் கூட்டம் வந்து மேல் விழுமாறு போலே, மற்றைத் திவ்விய ஆயுதங்களும் மேல் விழுந்தபடி என்னுதல். 4‘இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இரண்டாந். 71.-இவனுடைய வடிவழகினை நினைந்து ஸ்ரீ பாஞ்சஜன்யமானது நின்று ஆர்ப்ப. எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-அவனைப்போல் ஆர்த்துக் கொள்ளுதற்குக் காலம் அற்று நெருப்பினை உமிழ்ந்துகொண்டு நமுசி முதலானவர்களை வாய்வாய் என்றது திருவாழி. விடம் காலும் தீவாய் அரவுகிடந்த இடத்தே கிடந்து பகைவர்கள் மேலே விஷமாகிய நெருப்பினை உமிழுமத்தனை அன்றொ திருவனந்தாழ்வானாலாவது? அரவணைமேல் தோன்றல் -திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய பிரதானன். திசை அளப்பான் பூவார் அடி நிமிர்த்தபோது-ஒரு பூவினைக்கொண்டே அன்றோ காடும் ஓடையும் அளந்து.கொண்டது? 1பூவை இட்டுப் பூவை கொண்டான்காணும். 2அப்படுக்கையிலே பொருந்தும் சௌகுமார்யத்தையுடையவன் இக்காடும் ஓடையுமான உலகத்தினை அளக்கப்புக்கால், இவர்களுக்கு இப்படிப்படவேண்டாவோ? அவன் இப்படி அளவாநின்றால் இவர்கள் பேசாது இரார்கள் அன்றோ?’ 3‘மூன்று அடிகளால் முறையே மூன்று உலகங்களையும் ஒரு கணநேரத்திற்குள் ஆக்கிரமித்தவராய் விளங்குகிற திவ்விய ஆயுதங்களையுடையவராய் எந்தத் திரிவிக்கிரமனாக ஆனானோ அந்த வாமனன் உன்னை எப்போதும் காக்கக் கடவன’ என்கிறபடியே.
‘வாமநோ ரக்ஷது ஸதா பவந்தம் ய: க்ஷணாத் அபூத்
த்ரிவிக்ரம: க்ரமாக்ராந்த த்ரைலோக்ய: ஸ்புரதாயுத:’- என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 5.:17
திசை வாழி எழ – 4‘அவனுக்கு என் வருகிறதோ?’ என்று ஆயிற்றுத் திவ்விய ஆயுதங்கள் கிளர்கின்றன! ‘அவைதமக்கு என் வருகிறதோ?’ என்று ‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடராழியும் பல்லாண்டு, படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே’ என்னாநிற்பார்கள் அன்றோ? ‘நின் கையில் வேல் போற்றி!’ என்று வேல் தனக்கும் பரியவேண்டி இருக்குமன்றோ? அன்றிக்கே, 5திக்குகள்தோறும் அநுகூலருடைய’ வாழிவாழி’ என்கிற மங்களாசாசன ஒலிகள் கிளர என்னுதல். 1திவ்விய ஆயுதங்களிலும் அவனுக்குப் பாதுகாவல் இவர்களுடைய மங்களாசாசனம் என்று இருக்கிறார், திவ்விய ஆயுதங்களின் நடுவே இவற்றைச் சொல்லுகையாலே. ஏத்த ஏழ் உலகும் பொண்ட கோலக் கூத்தன் அல்லனோ? -திருவாய். 2. 2,11.-தண்டும் வாளும் எழ- ‘தூசித்தலையில் அவர்களே 2கை தொடராய்த் தரம் பெற்றுப் போக ஒண்ணாது’ என்று நின்று பேரணியும் குலைந்து மேல் விழுமாறுபோலே; ‘பிற்பட்டோம், கெட்டோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் படுகிறபடி; ஒருவர்க்கு இட்ட சோற்றைப் பலர் ஆசைப்படுமாறு போலேகாணும் இவர்கள் படுகிற பாடு. 3அநுகூலன் வந்து புகுர, ‘கொல்லத்தக்கவன்’ என்கிறவர்கள் பிரதிகூலர் உள்ள இடத்தில் பேசாது இரார்கள் அன்றோ?’ 4‘என்இது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்ட அளவாய்’- பெரியாழ்வார் திருமொழி. 1. 9 : 8.- என்று நமுசிவந்து, ‘என் தந்தை உன் வஞ்சநம் அறிந்திலன்; நீ முன்பு போலே நின்று அளக்கவேணும்’ என்று திருவடிகளைக் கட்டிக்கொண்டு கிடந்தான் அன்றோ? 5அன்றே பிறந்து அன்றே வளர்ந்தான் ஒருவனுடைய செயல் அன்றோ இவை அடைய? ஆகையாலே, பரிகைக்குக் காரணம் உண்டு என்றபடி. 6‘சீராற்பிறந்து’ என்கிறபடியே, ‘உன்கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் படுகிற பூமியை நீர் ஏற்கும் போது இப்படிப் படவேணுமோ?’ என்கிறார்.பெரிய  திருவந். 16. ‘மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த’ என்றதனைக் கடாட்சித்துப்
‘பருத்தி பட்ட பன்னிரண்டும் படுகிற பூமியை’ என்கிறார். ‘

அண்டம் மோழை எழ – 1இந்திரனுக்காக மூன்று உலகமித்தனையும் அளந்து கொடுப்பதாக அன்றோ தொடங்கியது? கணிசம் அவ்வளவு அல்லாமையாலே அண்டத்தின் இடமுள்ள அளவும் சென்று அளந்து, அண்டகடாஹத்திலே திருவடி சென்று, ‘ஒண்மிதியிற் புனல் உருவி ஒருகால் நிற்ப’ என்கிறபடியே கீழேயுள்ள அண்டகடாஹத்தை உருவி நிற்க, கீழேயுள்ள ஆவரணஜலம் மேலே எழ. 2ஆவரண ஜலத்துக்கு நடுவே ஒரு கழல்போலே மிதக்குமித்தனை அன்றோ அண்டம்? 3‘இரட்சகமான செயலே பாதகமாகிறதோ?’ என்று அஞ்ச வேண்டும்படி அன்றோ அப்போதைக் கறுவுதல்’ மோழை-குமிழி. முடி பாதம் எழ-திருமுடியளவும் திருவடிகள் கிளர. ‘முடிமேலே பாதம் எழ’ என்றும் சொல்லுவர்கள் நிருத்த லக்ஷணத்துக்காக. அப்பன் ஊழி எழ – 4மஹாபலி தகுதி இல்லாமல் அரசு நடத்துகையால் வந்த பொல்லாக் காலமானது போய், நல்லடிக் காலமாயிற்று; நல்லடிக்காலம் கிளரும்படி.யாகவும். அப்பன் உலகம் 1கொண்டவாறே – ‘மஹேபகாரகனான சர்வேஸ்வரன் உலகத்தைக் கொண்ட ஆச்சரியம் இருந்தபடி என்?’ என்னுதல்: அன்றியே, ‘உலகத்தைக் கொண்ட பிரகாரம் இருந்தபடி என்?’ என்னுதல். அப்பன் அப்பன் என்று உவகை அடைகிறாராகவுமாம். அப்பன் – ‘இந்திரனுக்கு இராயச்சித்தைக் கொடுத்த செயலாலே எனக்கு2ஆத்துமாவைத் தந்தான்’ என்கிறாராகவுமாம்.

 பகவத் விஷயத்தில் நெஞ்சை பறிகொடுத்தார்

இனி இவருக்கு -விஜய பரம்பரைகளை பத்தும் பத்தாக முழுக்க காட்டிக் கொடுத்தான்
உலகம் அளந்த
நரசிம்ஹ
ராம
கோவர்த்தன
போன்றவை
அனுபவித்து ஹிருஷ்டர் ஆனார்
உபகாரமாக இருந்தால் தாம் வேணும்
இல்லை என்றால் தாமும் வேண்டாம் உடைமையும் வேண்டாம்
எராலும் மாலுக்கு திருவாய்மொழி
நைச்சாயானுசந்தானம்
தம்மை அழிய மாறினும் பரிவாக அத்தலைக்கு நன்மை தேடுபவர்
அபதானங்கள் காட்டி வெற்றி பரம்பரை \
இழவு எல்லாம் தீரும் படி
பூத காலம் சம காலம் போலே பிரத்யஷமாக நடப்பது போலே காட்டிக் கொடுத்தான்
மயர்வற மதிநலம் அருளி -சாஷாத் கரிக்க வல்லராம் படி
மீண்டும் வாசனை -வளர்ந்து ஞானம் –
அனுபவித்து பாடுகிறார்
இரண்டாவது நிர்வாகம் –
ராமாவதாரம் பிரஸ்துதம் ஆகையால்
தென் இலங்கை செற்ற பிரான் சொல்லி
வசுதேவர் சக்கரவர்த்தி போலே இவரும் உகந்து பேசுகிறார்
வயசு குறைந்து -போலே இவருக்கும் துக்கம் தீர்ந்தது
பார்த்ததும் யவன பருவம் போலே சந்தோஷம் அடைந்தேன்
பெருமாள் காடேற போனால் நான் ஜீவிப்பேன் என்று நினைத்தாயோ
தேவ குமார ரூபம் –

ரிஷி கண் எச்சில் பூசுகிறார் இத்தால் –
சிரியாத்தான் கேட்க பட்டர் தரம் போராதாரை ஒப்பாக சொல்லி கரி பூசுகிறார் திருஷ்டி போட்டு வைப்பது போலே
அலங்க்ருதம் -ஒப்பித்தால் -ஒக்க சொல்ல முடியாதே
தம் சுத்தம் அப்படி பட்ட பிள்ளை அழகும் பிள்ளையும் உத்தேச்யம்
புஷ்பம் வண்டு நோக்கி அலருவது போலே என்னை குறித்து வருகிறான்
காணாதது கண்டது போலே உகக்கும் படி
பஷ்யன் நந்தாமி நிகழ காலத்தில் -கண்ட படியே -ஆராமுதே
அணைத்தல் வார்த்தை சொல்ல வேண்டாம் காட்சியே போதுமே
கரை புரண்ட அனுபவம்
சதா பச்யந்தி சூரய போலே
பெருமாளைக் கண்ட பின்பு அவன் போலே ஆனானாம் தசரதன்
காமனை பயந்த காளை போலே
அனுபவிப்பாரையும் தன்னைப் போலே ஆக்கி
தன்னையே ஒக்க அருள் செய்து
பரமம் சாம்யம் பவதி
வசு தேவரும் -யுவேன-மூப்பை விட்டு ஆனாரே இது போலே
கண்ணபிரானுக்கு பெண்மை தோற்றேன் -கீழே சொல்லி
விஜயங்களுக்கு தோற்று –

மூன்று வித சங்கதி -அருளிச் செய்து –
அவன் காட்ட கண்டு
ராம விருத்தாந்தம் வந்ததால்
தோற்று அந்த விஜயத்தை சொல்லுகிறார்
திரு உலகு அளந்த பெரிய விஜயத்தை முதலில் அனுபவிக்கிறார்
ஆழி சங்கு வில் எழ
திசை வாழி சப்தம் எழ
தாண்டும் வாளும் எழ
அண்டம் மோழி எழ
முடி பாதம் எழ
அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே –
ஜிதம் பாகவதா -ஜகத் -தனக்கு ஆக்கிக் கொண்ட செயல் இது –
ஒரு திருவடியே உலகை வியாபித்து
ஜாம்பவான் பிரத்யஷனம் செய்து பறை அடைக்க
தேவர்கள் தங்கள் இடம் அடைய
எதிரியாக ஆக்கி கொல்லாதே -மகாபலியை அழகாலே தோற்பித்து
நாயகனுக்கு அடியார் இ றே சென்று வெற்றி கொடுப்பார்

மகா பலியை அடக்க வேண்டி –
ஆஸ்ரிதர் சொத்தை அபகரித்து –
தேவானாம் தானவானாம் சாமான்ய அதி தெய்வதம் –
தரை லோகய ராஜ்யத்தை தன கால் கீழே கொள்ள வேண்டும் என்னும் கறுவுதல் உள்ளது ஈஸ்வரனுக்கு
அந்த அபி சந்தி இல்லாமல் இருந்தும் முன்பே பரிகரம்
முதலில் ஆழி எழ –
ஸ்ரீ ராமாயணம் -காட்டுக்கு போக பெருமாளை நியமிக்க இளைய பெருமாள் முற்பட்டாப் போலே –
பூர்வஜச்ய அனுயாத்ரை -தருமம் சீரம் மர உரி அலங்க்ருத
தோற்றத்திலே அரசு போராயிற்று

முக்கியமான யுத்தம் ஆயிற்று
ஆயுதங்கள் ராஜா ஹேதி ராஜன் -பிரதானம்
பரிகரம் நிற்க மகா ராஜர் பாய்ந்து ராவணன் முடி பரித்தாப் போலே
ராஜா பிடி தோறும் நெய் போலே நஞ்சீயர் ஸ்ரீ ராமாயணம்
உப்பரிகையில் நிற்க -கிரீடம் வேற
பெருமாள் தரையில் நிற்க –
தானே எழுந்து செய்த கார்யம் போலே –
இங்கும் தோற்றத்தில் அரசு போர்
பையல் முடியும் தானுமாக -ஈரசு ஆயிற்றோ
சர்வ லோக சரண்யன் இருக்க
மேல் விழுந்தார் இ றே சுக்ரீவர் மகா ராஜா
தம்மோடு யுத்தம் செய்வார் பலர் இருக்க வானவர் ஸ்ரேஷ்ட தலைவன் இவன் –
தூசித்தலையிலே-ஒரு மாதிரி புகழ் -ஏற்றம் செய்து பெருமை பெற
இன்றி தனியாக செய்து அருளி
பெருமாளுக்கு வந்த கீர்த்தியையும் தாமே ஏறிட்டு கொண்டு
நிசிசராள் பதி-இரவில் சஞ்சரிக்கும் அசுரர் தலைவர்
அங்கும் அவனுடன் ஒக்க பலர் உண்டே
அவன் தன்னுடன் செய்த போர்

மாரீசன் விட்டு மறைவாய் நின்று வழி அல்லா வழி ராவணன்
செவ்வை பூசல் செய்து இளைப்பித்தது
ராவணனுக்கு ஸ்ரமம் உண்டாக்கி -ஸ்ரமம் கூட்டி சப்தம் –
இதுக்கு முன்பு கூடாதது கூட்டி
முதலில் தான் ஸ்ரமம் உண்டு என்று உணர்ந்தான் –
சாத்தமுது இப்படி இருக்குமா போலே –
பரப்பை உடைய ஆகாசத்தை கடந்து –
சூர்யன் பிள்ளை சுக்ரீவர் –
பிறப்புக்கு இடமாக செய்தார்
ஆகாசம் இவருக்கு தன்னிலம்
ஆதித்யன் போவதும் வருவதும் தெரியாதபடி போவது போலே இவனும் சென்று கிரீடம் தட்டி வந்தார் –
வானர வீர நடுவில் வெட்கி நின்றார் -கண மத்யே
ராம பார்ச்வம் ஜகாம-பெரியதாக செய்ய வில்லை பின்னே போய் நின்றார் -கொன்று வராமல் கிரீடம் தட்டி வந்தோமே –
1000 காதம் பறக்கும் குட்டி 500 காதம் சிறகு அடி கொள்வது போலே
பிறக்கும் பொழுதே பாதி கார்யம் செய்யும்
ஆழி பாதி கார்யம் செய்தது -அவன் உலகம் அளக்கும் பொழுது
முர்கோலி வளர்ந்தபடி
அப்யாசமே 500 காதம் பறந்து பண்ணும்
ஆழி எழ –
மங்களா சாசனம் அஸ்தானே பய சங்கை காரணம்
அயோத்யா ந யோத்யும் சக்த்யா யுத்தம் யாரும் செய்ய முடியாத இடம்

இங்கு பிரகிருதி மண்டலம் பய ஸ்தானம் கண்டால் பேசாது இராரே
பரம பதம்
ஆங்கு ஆராவாரம் அது கேட்டு -நித்ய முக்தர் ஹாவு ஹாவு
செய்ய
ஆங்கு -அது கேட்டு அழல் உமிழும் பூம் கார அரவு -அஞ்சி உமிழ்ந்தான் -அஸ்தானே பய சங்கை –
சொல்பவர் நித்யர் சொல்வது சாம வேதம் -இடம் பரமபதம் –
பிரமம் ஏற்பட்டவர் ஞானம் இருப்பிடம் கொண்ட திரு அனந்த ஆழ்வான்-

விஷய வை லஷண்யம் படுத்தும் பாடு -மயங்கி அனைத்தையும் மறந்து –
மகா பாரதம் -திருஷ்டாந்தம் -திரு மாளிகை படுக்கையில் தடவி பார்த்தார் விதுரர்
போய் ஆசனம் இட்டான் -அது கண்டு அதி சங்கை பண்ணி
மகா மதி –

தர்ம சங்கை விலகும் ஞானம் உடையவர் -செய்த செயல்
தொட்டு பார்த்தார் –
இந்த ஸ்லோகம் மகா பாரதத்தில் இல்லை காஞ்சி சுவாமி –
பூர்வர் -காட்டியதால் ஓலை சுவடி மாறி இருக்கலாம் –
கடல் கலங்குவதும் தன அளவிலேயே –
மகா மதி அதிகம் கலங்கி
பிள்ளை உறங்கா வல்லி தாசர் மகா மதி என்றது மதி கேடர்
ஞான விபாக கார்யம் அடியாக வரும் அஞ்ஞானம் அடி களைஞ்சு பெரும் –
அவரும் மகா மதி
சலனம் இருந்தாலும் பெருமாள் எழுந்து அருளும் பொழுது
தன்னை கத்தியாலே குத்திக் கொள்ளுவாராம் -சொட்டை கத்தி உருவிபிடித்து சேவிப்பாராம்-
வம்சம் வந்தவர் போவார்
அறிவு உண்டாகையாவது பகவத் விஷயத்தில் அறிவு கலங்க

அஸ்தானே பய சங்கை -ஆழி எழ –
இவன் வளர்ந்து அருளுவதை கண்டு
தனியாக போக கூடாது என்று கணிசித்த படி -கையிலே ஏறினார்
சங்கும் வில்லும் எழ –
தூசி ஏறினவர்கள்-மற்ற ஆழ்வார் ஏற
சங்கும் வில்லும்
இறை பெறாத இடத்தில் சாறு பாறு
கிடைத்தால் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடார்
இனத்தில் ஒருவர் ஜீவிக்க புக்கவாறே –
இடங்கை வலம்புரி -நின்று ஆர்ப்ப -பாஞ்ச ஜன்யம் ஆர்ப்ப
அரவணை மேல் தோன்றல்
திசை அளப்பான் -பூவார் அடி நிமிர்ந்த போது
எரி கான்று -நெருப்பை உமிழ -சப்தத்தால் முடியாதே அக்னி உமிழ்ந்து

நமுசி பிரக்ருதிகளை வாய் வாய் ஏன்னா நின்றது இ றே -வானில் சுழற்றிய மின்னு முடியன்
விடம் காலும் திரு வனந்த ஆழ்வான் -தீ வாய் அரவணை –
இருக்கும் இடத்திலே இருந்து உமிழும்
தோன்றல் பிரதானம்
பூ கொண்டு ஆகாதே காடும் மேடும் அளந்து -பூவார் திருவடி
பூவை வீடு பூவைக் கொண்டான் பூமியை கொண்டான்
படுக்கையில் புகுந்தும் சௌகுமார்யம் உள்ளவன் –

அரவணை -துயின்றவன் -ஜகத்தை அளக்கப் புக்கால் இவர்கள் இப்படி பட வேண்டாவோ
திசை வாழி எழ -இவனுக்கு என்ன வருகிறதோ என்று மங்களா சாசனம்

ஆயுதங்களுக்கும் ஒரு கேடு வரக் கூடாதே
நின் கையில் வேல் போற்றி
வாழி வாழி தொனி கிளர –
திவ்ய ஆயுதங்களிலும் அவனுக்கு ரஷை மங்களா சாசனம் தானே –
நடுவில் இதை சொல்லுவதால்
அப்புறம் தாண்டும் வாளும் எழ சொல்லி
பட்டர் -அகளங்கன் பிள்ளை பிள்ளை ஆழ்வான் திருமாளிகை இடித்து மதிள் கட்ட -கேட்க்காமல் திரு கோஷ்டியூர்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் தான் ரஷகர் மதிள் ரஷகம் இல்லை
திசை வாழி எழ
ஏத்த ஏழு உலகம் கொண்ட கோலக் கூத்தன்
ஸ்ரீவிஷ்ணு புராணம் நந்த கோபர் வார்த்தை -பிரமாணம் காட்டி –
பிற்பட்டோம் பிற்பட்டோம் என்று நான் முந்தி -நான் முந்தி
ஒருவருக்கு இட்ட சோற்றை பலர் ஆசைப் படுவது போலே
அனுகூலம் வந்து புகுர -விபீஷணன் -பிரதி கூலர் வந்தால் சும்மா இருப்பாரா
என் இது மாயம் நமுசி திருவடி கட்டி கிடந்தான்
அன்றே பிறந்து அன்றே வளர்ந்தவன் வியாபாரம் பரிவுக்கு ஹேது உண்டே

அந்தியம் போதில் அரி உருவாகி -பந்தனை நடுக்கம் அனுக்கம் வியாக்யானம்
பந்தனை தீர பல்லாண்டு
அவதாரம் செய்த அப்பொழுதே
குழந்தை பிறந்த உடனே நடுக்கம் வருமே
வலிப்பு –
அவதார தினத்திலே நடந்த அபதானம்
இங்கும் அப்படியே பரிகைக்கு ஹேது உண்டே
சீரால் பிறந்து சிறப்பால் வளராது –இரண்டும் இல்லை வாமன
ராமன் சீரோடு பிறந்து
கிருஷ்ணன் சிறப்பாக வளர்ந்தான்
வாமனன் இரண்டும் இன்றி
ரிஷி ஆஸ்ரமம் பிறந்து
பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட பூமியை -உண்டும் உழிந்து -கடந்து இடந்து கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான்
பருத்திக்கு 12 அவஸ்தை
பூமியும் உன் கையிலே இப்படி பட
யாசகம் செய்து பெற வேண்டுமோ
அண்டம் மோளை எழ -அண்ட அவகாசம் உள்ள அளவும்
ஆசை மிக்கு -அளந்தான் –
கருமி -கஜானா தடவி பார்த்து எடுப்பது போலே –
கிடைத்த வாய்ப்பை விடாமல் 14 லோகமும் திருவடியால் தடவி –
ஒண் மிதியில் -கீழில் அண்ட கடாகத்தை உருவி நிற்க
ஆவரண ஜாலம் நடுவே மிதக்கும் அண்டம்
ரஷணம் பாதக செயலோ என்று அஞ்சும் படி கருவி-

மோளை குமுழி-பூமிக்கு ஓட்டை போட்டு ஜலம் வெளியில் வந்தது போலே ஊற்று பீறிட்டு வர –
முடி பாதம் எழ திரு அபிஷேகம்
முடி மேலே பாதம் எழ -நிருத்த லஷணம்
அப்பன் ஊழி எழ -பொல்லாங்கு போய் நல்லடி காலம்
ஊழி -நல்லடிக் காலம் கிளரும்படியாகவும்
அப்பன் உலகம் கொண்ட வாறு
மகா உபாகாரகன் –
லோகத்தை கொண்ட பிரகாரம்
அப்பன் பத்து பாட்டிலும் ஹிருஷ்டராக
இந்தரனுக்கு -தனக்கு சத்தையை கொடுக்க

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அருளிச் செயலில் அமுத விருந்து -கண்ணி நுண் சிறு தாம்பு – வியாக்யானங்களில் -அருளப்பெற்ற அமுத துளிகள் –

July 19, 2013

திரு மந்த்ரத்தின் பரம சாரார்தமான ஆசார்ய நிஷ்டை அறிவிப்பது இந்த திவ்ய ப்ரபந்தம்

வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்திமாம் பதம் போல்
சீர்த்த மதுரகவி செய் கலையை -ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல் நடுவே
சேர்வித்தார் தாற் பரியம் தேர்ந்து –

————————————————————————–
வேறு ஒன்றும் நான் அறியேன்
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லா
மற்று ஒன்றினைக் காணாவே
பாட்டுக் கேட்கும் இடமும் கூப்பீடு கேட்கும் இடமும் குதித்த இடமும் வளைத்த இடமும்
எல்லாம் வகுத்த இடமே
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே போலே
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள்

அவிதித விஷயாந்தரச் சடாரே-என்று ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் சொல்லி
அபிச குணவஸாத் ததேகசேஷீ -என்று குண க்ருத தாஸ்யம் சொல்லிற்று –
அதம புருஷார்த்தம் பிரகிருதி தத்வம் அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களால்
மத்யம புருஷார்த்தம் ஆத்ம அனுபவம்
உத்தம புருஷார்த்தம் சர்வேஸ்வரன்
அதில் கரும்பு தின்பார் வேர்பற்றையும் நுனியையும் கழித்து நடுவைக் கொள்ளுமா போலே
ஸ்ரீ வைகுண்ட நாதனை ஒழிய கிருஷ்ணாவதாரமே புருஷார்தமாகவும்
அதிலே -கம்ச வதத்துக்கு பின்பாகாக் கழித்து
முன்பு வெண்ணெய் களவு கண்டு -யசோதை பிராட்டியார் கையால் கட்டுண்டு
அவளுக்கு அஞ்சி நின்ற அவஸ்தையை உடைய கிருஷ்ணனே உபாயம் உபேயம் எல்லாம் என்றும்
என்று அவனுடைய சௌந்தர்ய சீலாதிகளிலே அகப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களே
இவ்வாத்மாவுக்கு நாதபூதரும் நிரதிசய புருஷார்த்த பூதரும் என்று ஆழ்வார் நிர்ணயித்தார்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அதை பூர்வ பஷமாக்கி
அனைத்தும் ஆழ்வார் திருவடிகளிலே ஆக்கி
அது ருசித்து-அத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

வேத மரியாதையில் நின்றார்கள் ரிஷிகள்
அவர்களைக் காட்டில் ஆழ்வார்களுக்கு நெடு வாசி உண்டு -பகவத் பிராப்தி ஏக நிஷ்டர்
இவ் விலஷண புருஷார்த்தின் உடைய காஷ்டையான ததீய சேஷத்தளவில் புகுர நின்றார் ஸ்ரீ மதுர கவிகள்
ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தமே சாத்விகருக்கு பரிக்ராஹ்யம்
ஸ்ரீ சத்ருக்நாழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி -அவனை அல்லது அறியாத
ஸ்ரீ பரத ஆழ்வானை யல்லது வேறு ஓன்று அறியாதபடி யானான் -எம்பெருமானார் ஸ்ரீ ஸூகதி-

இவரின் ததீய பார தந்த்ர்யதுக்கு
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -திருவாய்மொழி வேத சாரமாய்
திருவாய்மொழியினுடைய சாரம் இப் பிரபந்தம்
ஈஸ்வரன் துராராதனாய் ஆசார்யன் ஸ்வாராதனாய்  இருக்கும்
ஈஸ்வரனை ஆராதிகைக்காக திரு விருத்தம் துடக்கமான நாலு ப்ரபந்தம் வேண்டிற்று
ஆழ்வாரை ஆராதிகைக்கு இப்பத்து பாட்டுமே அமைந்தது –

ஆழ்வாரே சாஷாத் பகவதவதாரம் என்றும்
அவர் திருவடிகளே உபாயமாகவும்
அவர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தம் என்றும்
அவருடைய முகோல்லாசமே பரமா பிரயோஜனமாகவும்
அவர் எழுந்து அருளி இருக்கிற இடமே ப்ராப்ய பூமியாகவும்
அவருடைய விக்ரஹாதி அனுபவமே உண்ணும் சோற்றில் படியே தாரகாதிகள் ஆகவும்
பிரதிபத்தி பண்ணி விஸ்வசித்து இருக்கும் சரம அதிகாரி சேகரர் ஆய்த்து ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்-

————————————————————————–

கண்ணித்  தாம்பு-

பல கண்ணிகளை உடைத்தாய் அநந்யமாய் இருப்பதொரு பாசத்துக்கு இ றே
இவன் கட்டுப் படுவான்
பொத்தை உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி -இஷ்ட விநியோக அர்ஹம் பொத்தை உரல் தானே –
நுண் தாம்பு –

சிறு தாம்பு –

ஜ்ஞான பக்தி வைராக்யங்களை கொண்டாடும் படி போலே மூன்று விசேஷணங்கள் இங்கும் -பல பிணைகளாய் -பறுத்து -அளவில்லாமையாலே திரு மேனி யிலே உறுத்தும் என்று அஞ்சுகிறார் –

பிரதமத்தில்
ருசி -சங்கம் -பக்தி -பர பக்தி -பர ஜ்ஞானம் -பரம பக்திகள் -அநேக கண்ணிகள் பக்திக்கு
எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் மனம் தன்னைக் கட்டி –
எட்டு திருவஷ்டாஷரமாய்
இரண்டு வாக்ய த்வயமாய்
எட்டும் இரண்டும் அறியாதாருக்கு கட்டப் போகாதே
நுண் -பக்தி நுண் அறிவாக பகவத் ஸ்வரூப ரூபாதிகளை யாதாவாக சாஷாத் கரிக்க
சிறு -அநன்யார்ஹமாய் -வைராக்யம் இதர விஷயங்களில்-

ஆழ்வார் மோஹித்து கிடக்கும் துறையிலே  இ றே இவர் இப்போது தெளிந்து வார்த்தை சொல்கிறது –

கட்டின கயிற்றை -தத் சம்பந்தியான ஒன்றை கொண்டாடுகிறார்-

பரத்வம் பாற் கடல் ஸ்தானம் -அமுத கலசம் போலே அவதார அவஸ்தை-

கிருஷ்ண அவதாரம் மற்ற அவதாரங்கள் பரத்வ ஸ்தானம் ஆக்கும்படி அத்யந்த போக்யமாய் இருக்குமே-

அதிலும் பக்வ கிருஷ்ணன் காட்டில்
முக்த கிருஷ்ண அபதானம் -உறிகளில் வெண்ணெய் உடன் அறைகளில்
பெண்களோடு வாசி அற -இரண்டையும் களவு கண்டு போந்த அபதானம் போக்ய தமமாய் இருக்கும்-

தறி யார்ந்த கரும் களிறே போல் நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை –
என்று ஆழம் கால் படுவார்களே-

உரலை நேரிதாக செதுக்கப் போகாது
அப்போதகக் கயிற்றை நெடுக விடப் போகாது
இவன் தன்னை விட்டு நெடிய கயிறு தேடி எடுக்கப் புகில் பின்னை இவன் தான் எட்டான்
காற்றில் கடியனாய் ஓடும்
இனி செய்வது என் -அவள் தடுமாற படியைக் கண்டான்
கட்டுண்ணப் பண்ணிய-

சதைக ரூப ரூபாய என்கிற இவன் உடம்பை நெருக்கி இடம் கொண்டு கட்டும் இத்தனை –
கண்ணியார் குறும் கயிற்றால்  கட்டவி ட்டு என்று இருந்தான்
கண்ணிக்  குறும் கயிற்றால் கட்டுண்டான் காணேடி –
பெரு மாயன்
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்குகையும்
அவனுக்கு ஷூத்து நல்கையும்
நவ நீதத்திலே ஸ்ரத்தை உண்டாகையும்
அத்தை இடுவார் இல்லாத போது களவு காண்கையும்
அத்தை தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதுவாக அகப்படுகையும்
ஸ்ருஜ்யர் கையிலே கட்டுண்கையும்
சம்சார பந்தத்தை தவிர்க்க வல்லதான இத்தை விட்டுக் கொள்ள மாட்டாது ஒழிகையும்
இது என்ன ஆச்சர்யமோ என்கிறார்

அவாப்த சமஸ்த காமனுக்கு ஒரு குறை உண்டாய்
அது தன்னை எளியாரைப் போலே வழி அல்லா  வழியே களவிலே ஒருப்பட்டு
அது தன்னையும் சர்வ சக்தியான தான் தலைக் கட்ட மாட்டாதே
வாயது கையதாக அகப்பட்டு
கட்டுண்டு
அடியுண்டு
அதுக்கு ஒரு ப்ரதிகிரியை பண்ண மாட்டாதே
பையவே நிலையும் -என்று உடம்பு வெளுத்து பேகணித்து நின்ற நிலை

அழுகையும் –தொழுகையும் –அந் நோக்கும் -இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-

பிறர் உடைய கர்ம நிபந்தனமாக வரும் கட்டை அவிழ்க்கும் அத்தனை அல்லது
தன் அனுக்ரஹத்தால் வந்த கட்டு தன்னாலும் அவிழ்க்க போகாது என்கை-

ஆழ்வார்  அழுவது அலற்றுவது ஆண் பெண்ணாக மடல் எடுப்பது தூது விடுவதாம் படி
தனது சங்கல்ப பாசத்தாலே கட்ட –
இவரும் அத்தை அவிழ்க்க மாட்டாதே
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் -என்னும்படி
கட்டுண்ட இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிறபடியை இப்பாட்டாலே அருளிச் செய்கிறார்
அவன் கட்டுண்டது
பற்றி யுரலிடை ஆப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ -என்று பிறருக்கு-ஏசுகைக்கு உறுப்பாய் விட்டது
இவர் கட்டுண்டதோ நாட்டார் உடைய கட்டை அவிழ்க்கைக்கு உறுப்பாய்
பரம சாத்விகருக்கு போக்யமாய் ஆய்த்து

மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணாவோ என்று கூவுமவர் ஆகையாலே
இவரைக் கட்டி வைத்தான்
இவருக்கு தன் களவு வெளிப்பட்டு பிறர் களவு போம் ஆய்த்து-

நண்ணி
இப்படு குழியைத் தப்பினால் இ றே
பகவத் ப்ராப்திக்கு சப்தாதி விஷயங்கள் விரோதி யானாப் போலே
ஆழ்வாரைப் பற்றுகிற இவர்க்கு பகவத் விஷயம் விரோதி என்றபடி-
அவற்றுக்கு அல்ப அஸ்த்ரத்வாதி தோஷம் உண்டாகையாலே விடலாம்
இங்கு அங்கன் அன்றே -நிலை நின்ற ப்ரதி பந்தகம்
தென் குருகூர் நம்பி
சர்வேஸ்வரன் ப்ராப்தியில் பிரதம அவதி யாகையாலே அரை வயிறாகப் பேசி
ஆழ்வார் சரம அவதி யாகையாலே பூர்ணராகப் பேசுகிறார்-

குறுங்குடி நம்பியைக் காட்டில் குருகூர் நம்பியை வ்யாவர்த்திக்கிறது
அவனுக்கு பூர்த்தி ஞான சக்தி யாதிகளாலே
இவருக்கு பூர்த்தி ஞான பக்தி யாதிகளாலே
ஜகத்தை தனக்கு ஆம்படியான குணங்கள் அவனுக்கு
அவன் தன்னை தனக்கு ஆம்படியானகுனங்கள் இவரது-

ஆழ்வார் –உயர்வற உயர் நலம் உடையவன் -என்று அவன் குணத்தை வர்ணித்தார்
இவர் முதலடியிலே ஆழ்வாரை பற்றி –அவன் திரு மேனியிலே ஸ்பர்சித்த ஒரு தாம்பை வர்ணிக்கிறார்-அவருடைய உத்தேச்ய வஸ்து இவருக்கு வெளியதாய் கழிகிறது –

என் அப்பனில்
ஆழ்வார் இவருக்கு உத்தேச்யராய் நிற்க இங்கனே சொல்லுவான் என் என்னில்
பகவத் சம்பந்தம் அற வார்த்தை சொன்னார் ஆகில் ஆழ்வார் ஓட்டை சம்பந்தத்தை
அறுத்துக் கொண்டவர் அவர் –
அதவா
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணம் -என்கிறபடியே அவ்வருகே போவாரையும் துவக்க வல்ல-விஷயம் ஆகையாலே துவக்குண்டு சொல்லுகிறார்
என்றக்கால் –
உக்தி மாத்ரமே அமையும் இங்கு -அங்கு போலே மநோ வாக் காயங்கள் மூன்றாலும் அமைய வேண்டாம்
அண்ணிக்கும் அமுதூரும்
ரச பதார்த்தங்கள் இட்ட பதார்த்தம் மாண்ட வாறே ரசம் மாளும்
இது ஒரு கால் இட்டால் உள்ளது அளவும் அமுது ஊற்று மாறாது என்கிறார்-

அமுதூரும்
அமுது தான் ஊற்று மாறாதே செல்லும்–நசபுநர் ஆவர்ததே போலே-

நினைத்த நெஞ்சம் தித்தித்தது
சொன்ன நாக்கும் தித்தித்துவாரா நின்றது
பகவத் விஷயம் நினைக்க நெஞ்சும் இல்லை
சொல்ல நாக்கும் இல்லை
அடியே பிடித்து ஆழ்வார் உடைய சாரச்யத்திலே பழகின நா அன்றோ
என் நாவுக்கே –
இவ் வம்சத்தில் கரணியான என்னோடு கரணங்களோடு வாசி இல்லை
அவர் தாம் என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்றாப் போலே
இவரும் என் நாவுக்கே -என்கிறார்-

————————————————————————–

நாவினால் நவிற்று -ஓர் உக்தியாலே இந்த சரீரத்தோடே அனுபவிக்கலாம் என்கிறார் –

ஆழ்வார் -அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்திரு வெள்ளம் யான் மூழ்கினேன் -இத்தையும் செய்து அடைந்ததை-இவர் நாவினால் நவிற்று எய்தினார் என்கிறார் –

காலாந்தர பாவி இன்றி எய்தி விட்டேன் என்கிறார் –
தேவு மற்று -அறியேன் விட்ட விஷயத்தின் பேர் சொல்லாமைக்கு பாவோ நாந்யாத்ர கச்சதி போலே –
பாவின் இன்னிசை -பாவிலே பூண்ட இன்னிசை
ஐஸ்வர்யத்தை -அல்பம் அஸ்திரம் என்று கழித்து
ஸ்திரமான ஆத்மப்ராப்தியை அபுருஷார்தம் என்று கழித்து
ஸ்திரமுமாய் பரம போக்யமுமாய் உள்ள பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் பிரதம அவதி என்று கழித்து
இதில் சரம அவதியான ஆழ்வாரையும் உத்தேச்யர்  அன்று என்று கழித்து
அவரோடு சம்பந்தித விஷயத்தையும் ரசாஸ்ரயம் அன்று என்று கழித்து
அத்தோடு சம்பந்தித இசையே உத்தேச்யம் என்கிறார்-

தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் -தழை யாயினும் -தண் கொம்பாயினும் –
கீழ் வேராயினும் -நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினோ -இத்யாதிப் படியே
பகவத் சம்பந்தம் போகப் போக நிறம் பெறுகிற படி
ரசாயன சேவை பண்ணித் திரிவாரைப் போலே -பாடித் திரிவனே
இது காணும் இவருக்கு தாரகமாய் சஞ்சரிக்கப் பண்ணுகிறது-

குருகூர் நம்பி பாவின்னிசை
குருகூர் நம்பி பா -கண்ணி நுண் சிறு தாம்பு என்னுதல் -திரு வாய் மொழி என்னுதல் –

மேவினேன் அவன் பொன்னடி
-இங்கு இருந்த நாள் அஞ்ஞாத ஞாபநத்தாலே உபகாரகர் ஆகவும்
பகவல் லாபத்துக்கு புருஷகாரமாகவும் –
நித்ய விபூதியில் யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்கிறபடியே ப்ராப்யமாகவும் இவர் தம்மையே-பற்றினேன் -ஆளவந்தார் -அத்ர பரத்ர சாபி என்கைக்கடி இவர் இ றே-

இஹ லோக சுக ஜனகரும் -பர லோக சுகத்துக்கு சாதனமும் –
எனக்கு சுவாமியும் -கால ஷேப விஷயமும் -ஆழ்வாரே என்கிறார்-

அவன் பொன்னடி
அவனது போலே உலகம் அளந்த-ஊர் பொதுவாய் -எல்லார் தலையிலும் இருக்கும் பொன்னடி அன்று-நான் தொட்டுப் பரிமாறினாலும் தோஷம் வாராத திருவடிகள்
மேவினேன் –
வர்த்தமான நிர்த்தேசம் பண்ண வேண்டாமல் சத்ருத் சமாஸ்ரயணம் அமைந்தது
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே போலே இன்றி-எங்கேனும் இருந்து ஆஸ்ரயிக்கலாம் படி
அத்தோடு -வேறு ஒரு கால் இருக்கைக்கு இடம் இல்லாத படி -பொருந்தி விட்டேன்
மெய்மையே
சத்தியமே -ஸ்ரீ சடகோபனை தலையிலே கொண்டு இருந்தும் பொய் சொல்வார் உண்டோ-கால ஷேப விஷயம் எனக்கு ஓன்று இரண்டா ஆயிரம் பிரகாரம் அல்லையோ

குருகூர் நம்பி
ஸ்துத்ய விஷயத்துக்கு பரத்வ சௌலப்ய பூர்த்தி
ஸ்தோத்ரு விஷயத்துக்கு ஞான பக்தி பூர்த்தி

————————————————————————–

திரி தந்தாகிலும் தேவ பிரானுடை  கோலத் திரு உருக் காண்பன் நான் –
ஆழ்வார் உகந்த விஷயம் என்று உகக்கிறார் –
சேஷி உகந்ததை உகக்குமது இ றே கைங்கர்யத்தின் எல்லை நிலம்
தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் -என்று அத்தலையாலே வருமது
தவிர்த்து கொண்டு இலரே –
ஆசார்ய ருசி பரிக்ருஹீதமாய் வருமது எதேனுமாகிலும் அமையும் இவர்க்கு –
பெற்ற நன்மையே-அவர் உகந்த விஷயத்தை உகவாது ஒழிவனோ-

திரி தந்தாகிலும்
போன வழி எல்லாம் மீண்டாலும் –
இன்னிசையை விட்டு-பாவை விட்டு -ஆழ்வாரை விட்டு -அவர் உகந்த விஷயம் என்று
பிரதம அவதியிலே வந்து -பரம யோகிகள் யோகம் கை புகுந்தால் ஊர்வசியினுடைய வடிவை வர்ணிக்குமா-போலே இவர் தேவ பிரானுடை கரிய கோலத் திரு உரு -என்கிறார்
நம்பிக்கு
ஆழ்வார் உடைய பூர்த்தி -ஆழ்வாரை அனுபவிக்கும் அனுபவத்தில் பகவத் விஷயமும்
அந்தர் பூதமாய் இருக்கை-

ஈஸ்வரன் தான் இவர் பக்கலில் மண்டின படியை சொல்லுகிறார் இங்கு
ஆழ்வார் பக்கல் பக்தி பூர்ணமான இவர் திரு உள்ளத்திலே நீர் வெள்ளத்திலே
நெய்தல் பாரித்தாப் போலே தன்னுடைய வடிவைக் கொடு வந்து பாரிக்க
இவர் இதுக்கு நிமித்தம் என் என்று ஆராய்ந்து –
பகவத் சேஷத்வ ஞானத்தால் வந்தது அன்று –
பாகவத சேஷத்வ மாத்ரத்தாலும் வந்தது அன்று -பகவத் ஆஸ்ரயணத்தாலும்
வந்தது அன்று –
ஆழ்வாருக்கு அநந்யார்ஹ சேஷபூதனாய் பெற்ற பேறு  இ றே இது என்று ஸ்வகதமாக
ப்ரீதர் ஆகிறார்-ஆசார்ய விஷயத்தை பற்றினான் ஒருவனை பகவத் விஷயம் தானே மேல் விழும்-என்னும் இடத்துக்கு உதாஹரணம்
பிராட்டியைப் பற்றினால் அவன் கை பார்த்து இருக்க வேணும்
இங்கு அவன் தானே மேல் விழுந்து தன்னை இவனுக்கு கொடுக்கும்-

கரிய
கண்கள் சிவந்து -என்னாவி சேர் அம்மானுக்கு செம்பொன் திரு உடம்பு -கறுத்தது இல்லையே அங்கு-இவர் அனுபவித்தவாறே தன்னிறம் இட்டதாயிற்று

கோலம் –
ஆனைக்கு உதவ வந்தாப் போலே -இருந்தபடியே வருகை அன்றிக்கே -இங்கு அனுபாவ்யனாய்-வருகிறவனாகையாலே சாத்தின திரு ஆபரணமும் தானுமாய் ஆய்த்து வந்தது -அபிமத விஷயத்தின் பாடு போவார் ஆபரணம் பூண்டு இ றே போவது –இத்திரு உரு –
கழற்ற ஒண்ணாது இருப்பதோர் ஆபரணத்தையும் கொண்டு வந்தார்
இவ்விருண்ட வடிவுக்கு மின் போலே பிரகாசிக்கும் இவளைக் கண்டால் ஆய்த்து
அவ்வடிவையும் காணல் ஆவது –
திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்
ஸ்வரூபத்துக்கு ஸ்வரூபத்தாலும்
விக்ரஹத்துக்கு விக்ரஹத்தாலும் பிரகாசிகையாய் இருக்குமவள் –
காண்பன் –
ஸ்ரவண மாத்ரத்தால் ஆதல் -மனந மாத்ரத்தால் ஆதல் -நிதித்யாசந மாத்ரத்தாலே
ஆதல் -அன்றிகே ப்ரத்யஷ சாமாநாகாரமாம்படி அனுபவிக்கப் பெற்றேன்
காணாமைக்கு கண்களை திரிய வைத்த நான் கிடீர் -விமுகனான நான் -காணப் பெற்றேன் -பார்த்து விட்டேன் –
நவநீத சௌர்யத்தில் உட்பட நாக்கு நீட்டாதவர் பரத்வ தசையைக் கண்டால்
பார்த்து விட சொல்ல வேண்டாவே-

தேவர் அன்று அஞ்சி கடக்க நின்று கண்டேன்
ஆழ்வார் நிறம் போலே பொன்னிறம் அன்று -வகுள கந்தியாய்  இல்லை துளசீ கந்தியாய்
நம்பிக்கு -பூர்ணர்
சர்வ ரஷகனானவனுக்கும் ஆளாகாத என்னையும் ரஷித்து ஆளாக்கிக் கொண்ட பூர்த்தி
இவர் உடைய பூர்த்திக்கு ஊற்றுவாய் இத் தேச வாஸம்
பெரிய வண் குருகூர் –
பரம பதம் சிறாங்கை என்னும்படி பெருமையை உடைத்த
புவியும் இரு விசும்பும் நின்னகத்தே நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் –
ஆழ்வாரை தன்னுள்ளே அடக்கும்படியான பெரிய தேசம்
நகர் –
விலஷண வஸ்துக்கள் வந்து சேரும் -அக்கரையார் அடங்கலும் -வந்து பாரிக்கும்படி –
சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் இ றே –
தேவகீ புத்ர ரத்னமும் வில் பிடி மாணிக்கமும் விலை செல்லும் தேசம்
அடியேன் பெற்ற நன்மையே
ஆள் உரியனாய் பின் நான் இருக்கும்படி -அடியேன்
பெற்ற-ஆழ்வாருக்கு பெற வேண்டியவை உண்டே இவர்பெற்றாரே
அவருக்கு மநோ ரதம் நடவா நிற்க இப்பெறு பெறும்படியான படி என்
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –

————————————————————————–

நாலாம் பாட்டில் சடகோபன் என் நம்பியே
தன் குற்றத்தைப் போக்குமளவு அன்றியே என் குற்றத்தை போக்கும்படி நிரபேஷர்
என்னுடைய தண்மை யாகிற பாழ்ந்தாறு நிரம்பும்படியான பூர்த்தியை உடையவர் –
சத்வ நிஷ்டருக்கு பஹிஷ்டனான என்னை தாம் அங்கீகரித்தும்
அப்ரியங்களிலும் அஹிதங்களிலும் கை வளர்ந்து போந்த என்னை பிரிய ஹிதங்களில்
மூட்டியும் -அனுபகாரகனான என்னை கைங்கர்யம் கொண்டும் வந்த பூர்த்தி
தன்மையான் -இஸ் ஸ்வபாவங்களை நிரூபகமாக உடையவர் -இவனுக்கு உபகரிதோம் என்று தாம் நினைத்தல் –
இவன் தனக்கு பிரத்யுபகாரத்தில் இழிய வேண்டி இருத்தல் செய்யாது ஒழிகை –
என்னை ஆண்டிடும் தன்மையான் –
திருவாய்மொழி அருளிய பொழுது என்னை பட்டோலை எழுதச் சொல்லி அருளி -உசிதமான
கைங்கர்யத்தைக் கொண்டார் -பொலிந்து நின்ற பிரான் பக்கலிலும் ஒரு கால் போய்
வாரீர் என்று உபதேசித்து அருளினார் -நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே உறுவது
என்று ஓர் அஞ்சலி நேரும்படி பண்ணி அருளினார் -இது சஹஜ ஸ்வபாவம்
ஆழ்வார் அடியாக அடிமை கொள்ளுவதால் பகவத் விஷயத்துக்கு ஔபாதிகம் –
என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் –
என்னை ரஷித்து சடகோபன் என்கிற பட்டப் பேர் சூடினவர்-

————————————————————————–

பொருள் -த்ரவ்யம்
நன் பொருள் -ஆத்மவஸ்துவை -விலஷண த்ரவ்யம் -எண் பெருக்கு அந் நலத் ஒண் பொருள் –
மேம்பொருள் போலே இன்றி நித்தியமாய் -நிர் விகாரமாய் -அத்யந்த விலஷணமாய் –
ஸ்வயம் பிரகாசமாய் -சுகமாய் -ஸ்வபாவதோ போக்யமாய் இருக்கையாலே நன் பொருள் என்கிறார்
பிறர் நன் பொருள் -பகவத் அதீயமான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன்
பிறர் -சர்வேஸ்வரன் -அந்யர் இவருக்கு எல்லையில் அந் நலம்-
கூடி இருக்கச் செய்தேயும் அகப்படாதவன் அபஹத பாப்மா -அவையே அவை அல்லனுமாய் –
சர்வேஸ்வரன் உடைய கௌஸ்துப ஸ்தாநீயம்
த்ரவ்யதின் ஸ்லாக்யதை -உடையவனுடைய ஸ்லாக்யதை -பிராயச்சித்தம் கனக்கும் இ றே

நன் பொருள் –அசித் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது
பிறர் நன் பொருள் -ஈஸ்வர வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –
அர்த்த காமங்களிலே புருஷார்த்த புத்தி பண்ணி இருந்தேன் -இதுவே யாத்ரையாக போந்தது
வன் கள்வன் -கள்வனேன் ஆனேன் –
ஆத்ம அபிமானம் -விஷய ப்ராவண்யம் -முன்புள்ள காலம் எல்லாம் -நான்
இன்று அன்பனாய் -அடியேன் சதிர்தேன் –
இப்பொழுது அடியேன் -ஆழ்வார் அளவும் வருமவனாம்படியான சதிரை உடையவன்
விஷயங்களுக்கு அர்த்தம் தேடி -அர்த்த அபஹாரத்துக்கு இடம் பார்த்து திரியா நிற்க –
அச் செம்பொன் மாடத்தை களவு காணப் புக்கேன்
நகரி ஆகையாலே நாகரிகைகளான மடவாரையும் இம் மடங்களிலே காணலாம் என்று
உள் புக்கேன்
அங்கே வைத்த  மா நிதியைக் கண்டு அகப்பட்டேன் -இவருக்கு வைத்த மா நிதி ஆழ்வார் இ றே

அந் நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் திரு அஷ்டாஷர சம்சித்தர் ஆகையாலே
ஒரு வைஷ்ணவ சகாசத்தில் ஷத்ர பந்துவுக்கு பிறந்த அவஸ்தை போலே எனக்கும்
ஆழ்வார் சகாசத்திலே அபஹார புத்தி போய் உள்ளே ஆழ்வார் தம்மை காண வேணும் என்று-புக்கு அவருடைய பூர்த்தியைக் கண்டு நின்றாப் போலே இருக்க அவருக்கு அன்பனாய் விட்டேன்
ஆழ்வார் உடைய மதி நலம் கோளோபாதி மாடங்களும் உபாதேயமாய் இருக்கிறது ஆய்த்து-மயர்வற்ற மதி போலே இத் தேசத்திலும் இருள் அற்றே ஒளியேயாய் இருக்கும்படி –
அத தேசிகரும் ஆழ்வார் ஓட்டை ஆசக்தியாலே பொலிந்து நிற்குமவர்கள் ஆய்த்து –
பரம பத தேஜஸ் போலே பார்க்கவும் அணுகவும் ஒண்ணாதபடி
அன்றிக்கே -கண் படைதார்க்கு எல்லாம் காணலாம் படி ஸ்ப்ருஹ்நீயமான தேசம் –
அர்த்த காம ப்ரவணரையும் ஆளாக்கும் தேசம் ஆய்த்து-

நம்பிக்கு அன்பனாய்
அர்த்த காமாதிகளை நம்பிப் போந்த நான் ஆழ்வாருக்கு அன்பனாய் விட்டேன் -அவற்றின்-போக்யதையும் ஆழ்வார் பாடே காண்கையாலே –
கீழ்ப் பாட்டில் அன்னையாய் அத்தனாய் என்று மாதா பிதா என்னும் இடம் சொல்லி
இதில் யுவதய விபூதி என்னும் இடம் சொல்லுகிறார்
அடியேன் –
ஸ்வ தந்த்ரனாய் போன நான் நம்பிக்கு சேஷம் ஆனேன்
ஆழ்வார் போலே க்ரமத்திலே வருகை அன்றி அன்பு முற்பட்டு அடிமை பிற்பட்டது
ஆழ்வார் கடாஷ லஷ்யன் ஆகையாலே அம் மாத்ரத்திலே பத த்ரயத்திலும் உளனாய் விட்டேன்
ஆழ்வார் பிரபாவத்தை யிட்டு வென்றேன்
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -ஆழ்வாருக்கு அன்பனாய்
அந்ய விஷயங்களை வென்றேன்
சதிர் இள மடவார் இடம் இளிம்பு பட்ட நான் ஆழ்வாரை அண்டை கொண்டு சதிரனாய் விட்டேன்
இன்றே –
ஈஸ்வரனை அண்டை கொண்டு
ஆரப்த சரீரபாத சமயம் பார்த்து இருந்து
பின்னையும் வாசனை ருசிகள் ஆகிய மண் பற்று விடாமல் விரஜை அளவும்
போக வேண்டும்படி இருக்கை அன்றிகே -இன்றே –ச வாசனமாக விட்டேன் -அப்படியே ஆனேன் –
இதுக்கு வரவாறு ஓன்று இன்றிகே இருக்க வாழ்வு இனிதாம்படி விழுந்தது என்று
விஸ்மிதராகிறார் –
ஆழ்வார் சந்நிதி மகாத்ம்யத்தாலே இவ்வளவும் பிறந்தது என்று ப்ரீதர் ஆகிறார்-

————————————————————————–

ஆறாம் பாட்டு –
இன்று தொட்டும்
ருசி பிறந்த இன்று தொடங்கி எழுமையும் -கால விச்சேதம் இன்றி
மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் ஆழ்வாருக்கு மனுஷ்யர் வ்யாவ்ர்த்த விஷயம்
இவருக்கு எம்பெருமான் வ்யாவ்ர்த்தம் -தோள் மாறும்படி அன்றிக்கே
ஆழ்வாருடைய அனுபவத்துக்கு உள்ளே பகவத் அனுபவமாம்படி ஆழ்வார் அருளினார் –
அதனால் நின்று -என்கிறார்
பகவத் சமாஸ்ரயணத்தில் தானே ஆச்ரயிப்பது ஒரு காலம் பலிப்பது ஒரு காலம்
ஆழ்வார் பூர்த்தி எல்லை காண ஒண்ணாததுபோலே மாடங்களின் உயர்த்தியும் –
காண்மினே
ப்ரத்யஷிகலாவது -ஒன்றாய் இருக்க நான் சொல்லக் கேட்கை மிகை அன்றோ
கீழ் பாட்டில் ஆழ்வார் திருவடிகளில் தமக்கு பிறந்த ஞான பக்திகளை சொல்லி
இதில் தமக்கு பிறந்த வ்யவசாயம் சொல்லுகிறார்
எழுமையும் -தேச விசேஷம் போனாலும் ஆழ்வார் கீழே ஒதுங்குமவர் ஆய்த்து இவர் –
நித்ய சத்ருக்நர் -சர்வ  காலமும் ஆழ்வாருக்கு ஸ்வம் –
எம்பிரான்
ஸ்வாமி ஸ்வத்தைக் கண்டு இகழுமோ
குன்றனைய குற்றத்தை குணமாக கொண்டு நோக்கி -அஹங்கார அர்த்த காம நசை அறுத்து -ஆத்ம ஞானாதிகளை -உபகரித்து
-பகவத் விஷயத்தில் காட்டிக் கொடாதே -தம்மைக்
கைக்கொண்ட மஹோ உபகாரகர்
அவர் உடைய புகழை -பத்தும் பத்துமாக -நிகரில் புகழை -ஏத்தும்படி அருளிய உபகாரம் -ஆழ்வார் உடைய குணங்களை புகழ்கையே புருஷார்த்தம்
அது சித்திப்பதும் அவருடைய அருளாலே
புருஷார்த்த பூதருமாய் -சாதன பூதருமாய் -அத்யாவசாய ப்ரதரும் ஆழ்வாரே
நின்று தன புகழ் ஏத்த –
மனஸ் சைதல்யம் பிறக்காமல் நின்று -நெஞ்சை ஒருங்கப் பிடித்து நின்று ஏத்த அருளினான்
நம்பி
யாவதாத்மபாவி தம்முடைய புகழை  ஏத்தா நின்றாலும் வரை யிடாத குணா பூர்த்தி யுடையவர் -மாடங்களுக்கு சலனம் உண்டாகிலும் ஆழ்வார் திரு உள்ளம் என்னளவில் சலியாது

————————————————————————–

ஏழாம் பாட்டு –
இருந்தான் கண்டு கொண்டு -எம்பெருமான் ஆழ்வாரைக் கண்டு கொண்டு இருந்தது போலே-அலாப்ய லாபமாய் தன் பேறாய் -நிதி எடுத்தாப் போலே
கிட்ட எதிர் சூழல் புக்கு திரிந்தவர் என்று தோற்றும் படி –
பண்டை வல்வினை
அடி காண முடியாதவை -அநாதி காலம் சஞ்சிதமான இதர விஷய ப்ராவண்ய
ஹேதுவான பாபம் -வழி அல்லா வழி பற்றுகைக்கு ஈடான ருசி –
கரிய கோலத் திரு உருவைக் காண்பன் என்னுமத்தையும் தவிர்த்து

என்னை –
நாட்டாரை காட்டில் ஆழ்வார் வாசி அறியாத என்னை
தம் நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு பிரதிபத்தி பண்ணவும் கூட மாட்டாத என்னை
பாற்றி அருளினான் –
உரு மாய்ந்து போம் படி -மோஷ யிஷ்யாமி பண்ணி விடுகை அன்றிக்கே
மாம் ஏகம் சரணம் வ்ரஜ அன்றிகே -தாமே ஸ்வீகரித்து பாப பந்தத்தையும் போக்கி அருளினார்
சடகோபன் அருளையே
மயர்வற மதி நலம் அருளினதுக்கும் அகப்படாத என்னையும் அங்கீகரித்த அருள் –
திருவாய்மொழி பாடின அருளுக்கு மேலே இ றே இவரை விஷயீ கரித்த அருள்
தோஷம் பட்டவாறே காற்கடை கொள்ளாமல்
எல்லாரும் கை விட்ட என்னைக் கை  கைகொண்டார் –
விரோதிநிவ்ருதியும் பண்ணி அபிமத பிரதானமும் பண்ணி அருளினார்
தம்முடைய குண ஸ்துதியே யாத்ரையாம் படி -பண்ணி அருளினார்
காரி மாறப் பிரான்
அவனைப் போலே தான் தோன்றியான பிரான் அன்று -அபிஜாதரான ஆழ்வார்
தான பிறந்து என் பிறவியை  அறுத்தவர் –
ஜாம்பவ மகாராஜர் திரிவிக்கிரம ப்ரசம்சயை சாற்றி கொண்டு திரிந்தாப் போலே
அங்கு ஈஸ்வரன் உடைய சக்தி பிரபாவம் -இங்கு ஆழ்வார் உடைய கிருபா பிரபாவம்
அங்கு பிரயோஜனாந்த பரர் -வாழ்ந்தபடி இங்கு அநந்ய பிரயோஜனர் வாழ்ந்தபடி
அங்கு க்ருத்ரிம வியாபாரம் -இங்கு அக்ருத்ரிம வியாபாரம்
பத க்ரமத்தாலே திருத்தின படிக்கு சாம்யம் உண்டாகில் உண்டு இத்தனை-

————————————————————————–

வேத அதிகாரிகள் உஜ்ஜீவிக்க -வேத ரகஸ்யம் வெளி இட்ட சர்வேஸ்வரன் கிருபையைக் காட்டில்-அநதிகாரிகளும் க்ருதார்த்தராம்படி திருவாய்மொழி அருளிச் செய்த ஆழ்வார் கிருபை மிக்கதே –

தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள்  அருளி –
அரு மறை -பிரசித பெறுவதற்கு அரிய வேத ரகஸ்யம் -உபநிஷத் –
தத்வ த்ரயங்களையும் கபளீகரித்து இருக்கும் –
ஈஸ்வரன் கைவிட்ட ஆத்மாக்களையும் -துர்கதி கண்டு திருத்த ஒருப்பட்டார் ஆகையாலே -அதனில் பெரிய என் அவா -அபிநிவேசத்து அளவும் போருமாய்த்து என்னளவில் கிருபையும் –
இவர் கிருபையால் பகவத் கிருபை உண்டாகி பிராப்யம் சித்திக்கும்
ப்ராப்தி ஞானத்தால் -அந்த ஞான சித்தி ஆழ்வாராலே –
இவர் அருளினதும் அம் மறையும் பொருள் -ப்ரமாண  பிரசித்தம்  உண்டே
அருள் கொண்டு -மயர்வற மதி நலம் அருள் பெற்ற -என்னாகியே தப்புதல் இன்றி தனைக்கவி தான் சொல்லி –
இன்புற -சாதனத்தில் அன்வயம் இன்றி -பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கை
அருள் கொண்டாடும்-
கிருபையே கொண்டாடும் -குணாந்தரங்கள் கார்ய கரம் ஆகாதே இது இன்றி –
பக்தனின் அனுஷ்டானம் பிரபன்னனின் ஆகிஞ்சன்யம் கண்டு பிறக்கிற கிருபை
அருள் கொண்டு ஆடும் அடியவர் –
ஊன்று கோலும் -விரோதி போக்கவும் -அருளே
அருள் என்னும் தண்டு -ப்ராஹ்மாண்யம் தோற்ற
அருள் என்னும் ஒள் வாள் -ஷூத்ரம் தோற்ற
கிருபை கொண்டே பல ப்ரதன் ஆகிறான்
பாழியான் ஆழியான் அருளே –
அருளினான் அப் பொருளை
கருணை சாதனம் கைங்கர்யம் புருஷார்த்தம் என்கிற அப் பொருளை-

பாடினான் –
வேட்கையால் சொன்ன பாடல் -என்கிறபடியே தம்முடைய அனுபவ ஆநந்த
சாகரத்துக்கு பரிவாஹ சுப வசனங்களை பண்ணினார் –
ஆம் முதல்வன் இவன் என்று தற்றேற்றி என் நா முதல் வந்து புகுந்து நல் இன்கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னை சொன்ன என் வாய் முதல் -அப்பன் –
இப்படி தெரியச் சொன்ன -ஆயிரம் -ஏற்கும் பெரும் புகழ் ஆயிரம் –
பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
பாட்டும் -அன்று பாடினவரும் அன்று பாட்டுக்கு அடியான அருளும் அன்று -இவர் அருள் ஆய்த்து
வரை முறுகலான ஸ்ரீ கீதை சொன்னவனுடைய அருள் அன்று –
அவன் நெறி எல்லாம் எடுத்துப் பாடின விதத்திலும் அகப்பட்டாரம் அகப்படாதாருமாயிற்று –
இவர் அருளால் ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே
அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றப் பண்ணிற்று -ஆயிற்று
தான் தோன்றியாய் தன்னுடைய ஞானம் கொண்டு உரைத்த ஸ்ரீ கீதை போல் அன்றிக்கே
அவனுடைய அருள் கொண்டு பாடின தன்னேற்றம் உண்டே இவ்வருளுக்கு –
கேட்டாரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல் -அங்கு இவர் பாட்டு மிக்காப்  போலே
இங்கு இவர் அருள் மிக்கது -இங்கு
இங்கு அருள் மிக்கு -அங்கு போகம் மிக்கு-
கண்டீர்
அவன் அருள் சாஸ்திர கம்யம்
இவர் அருள் பிரத்யஷ சித்தம்
அருளையும் லோகத்தையும் சீர் தூக்கிப் பார்த்தல் அதிலும் விஞ்சி இருப்பது அருளே
கடல் மண் எல்லாம் விலையோ என மிளிரும்படி இ றே இவர் கண் உடைமை இருப்பது-

————————————————————————–

ஒன்பதாம் பாட்டு –
சகல வேத தாத்பர்யமான பாகவத சேஷத்வத்தை -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு -அடிமை-இரண்டு திருவாய்மொழிகளால்  அருளிச் செய்து என் நெஞ்சின் உள்ளே நிறுத்தினார்
வேதத்துக்கு பிராணனான பிரமேயம் திருவாய்மொழி
திருவாய்மொழிக்கு பிரமேயம் இந்த இரண்டும்
பரமனைப் பயிலும் திரு உடையார் எவரேலும் -எம்மை யாளும் பரமர் -என்றும்
கல்லைக் குழித்து நீரை நிருத்துவாரைப் போலே பிரதிஷ்டிப்பித்தான் –
தக்க சீர் சடகோபன்
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன்
துயர் அடி தொழுது எழு என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு
முனியே நான்முகனுக்கும் அவ்வருகே இ றே பேறாய்த்து –
இவ்விஷயத்தில் ருசி -பிறந்தால் -அத்தனை விளம்பம் -இன்றி
ஆள் புக்க -காதல் –அனந்யார்ஹ சேஷமாக்கின ருசி -ஆழ்வார் திருவடிகளிலே
இச் சரீரத்தோடே எல்லா அடிமைகளும் செய்யலாம்படி -பண்ணும் அடிமைப் பயன்
அன்றே -ஆம் –
பகவத் விஷயத்தில் சரீர விச்லேஷம் பிறந்து -அர்ச்சிராதி மார்க்கத்திலே -ஒரு
தேச விசேஷத்திலே சென்றால் பெறக் கடவத்தை -இங்கேயே இன்றே பெற்றேனே-

நாலாம் பாட்டில் ஆச்சார்ய விசுவாசம் -சொல்லி
மேல் இரண்டு பாட்டால் ஆசார்ய வைபவமும் -உபகார வைபவமும் சொல்லி –
இதில் தம் க்ருதஞதையை சொல்லுகிறார்
ஆசார்யனுக்கு கிருபையே வேஷமாய் சிஷ்யனுக்கு கிருதஞதையே வேஷமாய் இருக்கும்
மிக்க வேதியர் –
மிக்கார் வேத விமலர் -அந்தணர் -மாடு
வேதத்தின் பொருள் -வேதத்தின் பொருளே என் வேம்கடவா -வேதாந்த விழுப் பொருள் -பகவத் ஸ்வரூபாதிகள்
உட்பொருள்
ஹ்ருதயமான ததீய வைபவம் –
நெஞ்சுள் -நிற்கப்பாடி நிறுத்தினான்
பாடும் பொழுதே -தங்கும்படி அந்தரங்கமாக உபதேசித்தான் -த்ருட அத்யாவசாயமாக –
பிரமாண -வைபவத்தையும் -ப்ரமேயமான தத் வைபவத்தையும் -ப்ரமாத்ரு வைபவத்தையும் –அபிமத வைபவத்தையும் நெஞ்சிலே படும்படி பூர்ண உபதேசம் செய்து அருளிய பூர்ணர்
அவர் பூர்த்தியிலே தோற்றி என் நம்பி என்கிறார்
தக்க சீர் குறுங்குடி நம்பி என் அளவில் வராததால் இவ்வளவு பூர்ணர் இல்லையே –
முற்பட அடிமை புக்கு -அநந்தரம் ஆதாரம் நடந்து பின்புஅடிமை செய்வது –
ஆசார்ய -பவ்யதையும் ப்ரேமமும் கிஞ்சித்காரமும் சிஷ்யனுக்கு அபேஷிதம்
அவர் புறப்பொருளை விட்டு உட் பொருளைக் கொடுத்தார்-இவர் உட் பொருளான பகவத் விஷயம் தன்னை புறப்பொருள-அதிலும் உட் பொருளான ஆழ்வார் திருவடிகளில் சேஷ பூதராய்-பிரேம பூர்வகமான கைங்கர்யத்தில் இழிகிறார்

————————————————————————–

குயில் நின்றார் பொழில் சூழ்
இவரை அவஹாகித்த திர்யக்குகளும் களித்து வர்த்திக்கும்படி
ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலே –

திருவாய்மொழி பாடக் கற்று -பாடும் குயில்கள் -ஆனவை
தாம் மதுர வக்காகையாலே மதுர வாக்கான குயிலை இட்டு பொழிலை சிறப்பிக்கிறார் –
எம்பெருமானோடு நித்யரோடு முக்தரோடு வாசி அற ஹ்ருஷ்டராம்படி இ றே ஆழ்வார் உடைய பூர்த்தி-ஆசார்யர் உபகரித்தது -சர்வாதிகமாய் இருக்கும் -மிதுனம் -சர்வேஸ்வரனை என்பதால்

இன்னமும் ஒரு சர்வேஸ்வரன் உண்டாகில் இ றே பிரத்யுபகாரம் பண்ணினான் ஆகலாவது –
செயல் நன்றாகும்படி -அநுஷ்டான பர்யந்தமாக உபதேசித்து திருத்தினார்
தீர்ந்த அடியவர் -ப்ராப்யமும் பிராபகமும் அவனே என்று அத்யவசித்து இருக்கும் –
அடியவர்கள் தம்மை திருத்தி பணி கொள்ள வல்லவன் சர்வேஸ்வரன்
அவை ஒன்றும் இன்றிக்கே இருக்குமவர்களையும் திருத்திப் பணி கொள்ளுமவர் இவர்

இவர் கரும் தரையில் திருத்துமவர் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் ஆழ்வார் தடுமாறுவது போலே இவரும்
உபகாரம் அதுக்கு பிரத்யுபகாரம் தேடுகையிலே மூட்டும்
உபகார கௌரவம் பிரத்யுபகாரம் இல்லாதபடி பண்ணும்
இவன் திருத்தித் தருகையாலே பகவத் விஷயத்துக்கு ஆத்மசமர்ப்பணம் பண்ணலாம்
இவன் தானே திருந்தினவற்றை இவனுக்கு கொடுக்கை சத்ருசம் அன்றே-

செயல் நன்றாக திருத்தி
அத்யவசாய பர்யந்தமாய் –
சத் ஏக அநுஷ்டான சேஷமாய் –
இவற்றில் என்னைக் காட்டிக் கொடாதே தமது கையால் திருத்தி அருளி பணி கொள்வான்
ஸ்வரூபம் பகவத்கிஞ்சித்காரத்தில் மூட்டும்
பகவத் ப்ரீதி பாகவத கிஞ்சித்காரத்தில் மூட்டும்
பகவத ப்ரீதியும் -இவ்யக்தி த்வயத்தின் உடைய வைபவத்தை உபதேசித்த உபகார ஸ்ம்ருதியால்-வந்த இவன் தன்னுடைய ப்ரீதியும் ஆசார்ய கிஞ்சித்காரத்திலே மூட்டும் –
இதில் ஓன்று நிருபாதிக சம்பந்தம் -மற்றவை இரண்டும் சோபாதிக சம்பந்தம்
உத்தேச்யதையும் உபகாரத்வமும் -உபாதி இவற்றுக்கு-

மொய் கழல்போக்யதை இங்கே சொல்லி கீழே பொன்னடி -பாவநத்வம் சொன்னார்

மொய் கழலே ஏத்த முயல் -ஆழ்வார் அருளிச் செய்ததை கேட்டு போந்த வாசனை இவருக்கு –
வகுளாபிராமமாய் -ஸ்ரீ மத்தாய் இ றே ஆழ்வார் திருவடிகள்-போக்யதை அன்பைக் -கொடுக்க-அன்பு பிரத்யுபகாரத்தில் மூட்ட-இடம் காணாமல் அலமரா நின்றார் -இவ்வலமாப்பு யாவச் சைதந்யம் இ றே-

————————————————————————–

நிகமத்தில் பலனாக ஆழ்வார் ஆணை மட்டுமே பரிமாறும் ஸ்ரீ வைகுண்டமே தேசம் என்கிறார் –

அடியார் நிலாகின்ற வைகுந்தம் –வானவர் நாடு-
ஆழ்வார் திருநகரி பொலிந்து நின்ற பிரான் ஆணையும் ஆழ்வார் ஆணையும் கூடச் செல்லும் திவ்ய தேசம் இ றே -இரு புரியாய் யாய்த்து செல்லும்
நம்புவார் இருந்த இடமே ஸ்ரீ வைகுண்டம் என்னவுமாம் -திரு நாடு லீலா விபூதி விபாகம் இன்றி
கூரத் ஆழ்வான் மகன் பிறந்த பின்பு இடைச் சுவர் தள்ளி ஒரு போகி யாய்த்து காண் -நம்பி திருவழுதி வள நாடு தாசர் வார்த்தை
சர்வேஸ்வரன் இருந்ததே குடியாக அனைவருக்கும் அன்பன் -வாத்சல்யத்தை நிரூபகமாக உடையவன் –
தாம்தாம் சத்தையில் மற்றவர்கள் அன்பாய் இருப்பார்கள் -ஆழ்வார் -பரமனைப் பயிலும்
திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் எம்மை யாளும் பரமர் -என்று
தன்னை அடைந்தவர் கட்கு எல்லாம் அன்பன் -ஆழ்வார் அன்பு பொதுவாக இல்லையே –
பகவத் சம்பந்த -நிபந்தனம் -ஜாத்யாதி நியமம் பாராமல் தத் சம்பந்தமே ஹேதுவாக நல்லராய் இருக்குமவர் –
இங்கு நம்பி என்றது அடியார் அடியார் தம் அடியார் அடியார் என்று தத் சம்பந்திகள் அளவும்-பண்ணின பிரேமத்தாலே பூர்ணர்
மதுரகவி ஆழ்வார் -பகவத் விஷயத்தில் -அன்றிக்கே ததீயர் அளவிலும் அன்றிகே –
ஆசார்ய விஷயத்தில் சக்தராய் ஈச்வரனோடு ஸ்ரீ வைஷ்ணவர்களோடு வாசி அற எல்லார் உடைய உகப்பும் புருஷார்த்தம் என்று
ஆசார்யனைப் -பற்றி
ஸ்வரூப ஞானம் அளித்தும் -அனுஷ்டானத்தால் நல் வழி கொண்டு -போயும் -ப்ராப்ய
விஷயத்தில் சாத்திய வ்ருத்தியையும் பண்ணிக் -கொடுத்து பஹு முகத்தால் ஆசார்யனே-உத்தேச்யம் என்று இருப்பவர்

சௌஹார்த்த கார்யம் இ றே வாத்சல்யம்
சர்வ லோகைக வத்சல -நிகரில் புகழ்
உபக்ரமத்தில் சீல சௌலப்யம் -கண்ணி நுண் பெரு  மாயன் என் -அப்பன்
இங்கு வாத்சல்யத்துடன் தலைக் கட்டுகிறார்

ஆழ்வாருக்கு பகவத் ப்ரேமம் ஸ்வரூப பிரயுக்தமாய் -ஆராத காதல் குருகூர் சடகோபன் -என்று நிரூபகம்
இவருக்கும் ஆழ்வாருக்கு நல்லவர் ஆனார் என்று நிரூபகம்
அவர் பிரணவ நமஸ் ஸு க்கள் இரண்டிலும் நிஷ்டர்
இவர் மத்யம பதத்தில் நிஷ்டர்
ஆழ்வார் பகவத் விஷயம் அருளி -என்னாவில் இன் கவி என்கிறார்
இவர் ஆழ்வாரைக் கவி பாடி தம்மை மதுர கவி என்கிறார்
நம்பிக்கு அன்பனாய் மதுர கவி
நெஞ்சுக்கு பணி  ஆழ்வார் பக்கல் ஸ்நேஹம்
வாய்க்கு பணி அவருடைய குண ஸ்தோத்ரமே –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே .சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

கண்ணி நுண் சிறுத் தாம்பு -11- அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 11, 2013

நிகமத்தில் இப்ப்ரபந்தத்தையே தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு
வாசபூமி பரமபதம் -என்கிறார்

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–

அன்பன் –
வாத்சல்யத்தையே நிரூபகமாக உடையவன் ஆயிற்று ஈஸ்வரன் –
இன்னானுக்கு அன்பன் என்று விசேஷியாமையாலே
ரிபூணாமபி வத்சலா -என்கிறபடியே-சர்வ விஷயம் ஆயிற்று அவனுடைய வாத்சல்யம் இருப்பது -அதுக்கு ஹேது என் என்னில் சர்வேஷா மேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ -என்றும்–தேவா நாம் தாநவாநாஞ்ச சாமான்யமதி தைவதம் -என்றும்
ஜனகத்வ பிரயுக்தமான சம்பந்தம்-சர்வ சாதாரணமாய் இருக்கையாலே
வாத்சல்யமும் பொதுவாய் இருக்கும் –

தன்னை அடைந்தவர்கட் கெலாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பி-
ஆழ்வாருடைய அன்பு அங்கன் பொதுவாய் அன்றே இருப்பது
பரமனைப் பயிலும் திருவுடையார் எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -என்கிறபடியே
பகவத் சம்பந்த நிபந்தனமாய் இ றே இருப்பது -(கீழே அன்பு -வாத்சல்யம் -இங்கு பக்தி -என்றவாறு  )தம்மைப் போலே -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்பார் எல்லாரையும் தமக்கு நாதராக-வாயிற்று நினைத்து இருப்பது –
தென் குருகூர் நகர் நம்பி –
அடியார் அடியார் தம் அடியார் -என்று தத் சம்பந்திகள் அளவும் பண்ணின பிரேமத்தாலே
பூரணராய் இருப்பர்

நம்பிக்கு அன்பனாய் –
பகவத் விஷயத் தளவும் அன்றிக்கே -ததீயர் அளவும் அன்றிக்கே-ஆசார்ய விஷயத்திலே சக்தராய் –
தனக்கு புருஷார்த்தம் வேண்டி இருக்கில் பகவத் விஷயத்தை பற்ற -அமையும்
அங்கன் தான் உகந்தது அன்றிக்கே -ஈஸ்வரன் உகப்பே புருஷார்த்தம் -என்று இருக்கில்
பாகவதர்களைப் பற்ற அமையும் -ஜ்ஞா நீத்வாத்மைவ மே மதம் என்றும் மம ப்ராணா ஹி பாண்டவா -என்றும் பாண்டவர்களை தனக்கு தாரகராக இ றே நினைத்து இருப்பது –ஈச்வரனோடு ஸ்ரீ வைஷ்ணவர்களோடு வாசியற எல்லாருடைய உகப்பும் புருஷார்த்தம் என்று இருக்கில்-ஆச்சார்யனைப் பற்ற அடுக்கும்-ஆசார்ய வான் -என்று ஆயிற்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் உகப்பது-பிரதமத்திலே -1-ஆசார்யன் தனக்கு அஜ்ஞாத ஜ்ஞாபந முகத்தாலே-ஸ்வரூப ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து-2-பகவத் சமாஸ்ரயண வேளையிலே புருஷகார -பூதனாய்–3-தன்னுடைய அனுஷ்டாநத்தாலே இவனை நல் வழியே கொண்டு போய்-4-ப்ராப்தி தசையிலும் சாத்ய வ்ருத்தியை பண்ணிக் கொடுக்கக் -கடவனாய் இப்படி பஹூ முகத்தாலே உத்தேச்யனாய் இ றே -இருப்பது-

மதுரகவி சொன்ன -சொல்
ஆழ்வாரைத் தாம் சொன்ன பாசுரம் தமக்கு இனிதாய் இருக்கையாலே-மதுரகவி -என்கிறார் (குருகூர்  குயில் போலே  -தானாய் தன்னைப் பாடிக்கொ ண்டார் -கண்ணன் இவரை இட்டு பயாடிக் கொண்டால் போலே )
சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
இனிதாய் இருந்தில்லை யாகிலும்-(மதுரகவி சொல் போதுமே -சொன்ன – நடுவில் -சொன்னதாக வள வள பேச்சாக இருந்தாலும் என்றவாறு )-இப்பிரபந்தத்தை தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு-வஸ்தவ்ய தேசம் பரம பதம் –
ஆழ்வார் உத்தேச்யர் ஆனால் திரு நகரி அன்றோ ப்ராப்யமாவது -என்னில்
திரு நகரியில் -பொலிந்து நின்ற பிரான் ஆணையும்-ஆழ்வார் ஆணையுமாய் இரு புரியாச் செல்லும்-அங்கன் இன்றிக்கே ஆழ்வார் ஆணையே யாய்ச் செல்லும் -பரமபதம்
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ –என்றும் /வானவர் நாடு -என்றும் /சொல்லக் கடவது இ றே /நம்பி திரு வழுதி வள நாடு தாசர் –நம்புவார் பதி வைகுந்தம் -என்று
அவர்கள் இருந்த தேசம் காணும் பரமபதம் –என்று சொல்லுவர் –
உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் -எல்லாம் -என்னக் கடவது இ றே-(உள்ளுவாருக்கு உம்பர் ஊரே -அநந்த புரம் பதிகம் -உம்பர் -ஊர் திரு நாடு / திரு வனந்த  புரம்  / வசிக்கும் ஊர்  மூன்றும் -சாண்ட்லி விவகாரத்தில் கண்டோமே -இது அன்றோ  எழில் ஆலி என்னார் தாமே -போலே )
கூரத் ஆழ்வான் மகன் பிறந்த பின்பு சம்சாரமும் பரம பதமும் இடைச் சுவரைத் தள்ளி
ஒரு போகி யாயிற்று காண் -என்று பெற்றி பணித்தார் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு -10- பயனன் றாகிலும் பாங்கலராகிலும் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 10, 2013

( ஆட் புக்க காதல் அடிமைப்பயன் -சொல்லி உடனே பயன் இல்லை பாங்கு இல்லை என்கிறீரே -அவர் திருத்த திருந்தி உள்ளீர் -பாங்கும் உண்டே -என்னில் தம்மைப் பார்த்தால் இப்படி தின்றும் -அவர் செய்து அருளினை உபகாரம் அனுசந்தித்த வாறே இப்படி தோற்றும் -)ஆழ்வார் தமக்கு உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்தவாறே
தாம் இதுக்கு முன் ஆழ்வார் விஷயத்தில் நின்ற நிலை யடங்க
முதலடி இட்டிலராகித் தோற்றுகையாலே –அவர் பண்ணின உபகாரத்தைப் பேசுகிறார் –
ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையோ என்னில் –
க்ருத்ஸ்நாம் வாப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே-
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமியும் சத்ருசமம் அல்ல என்று இ றே சாஸ்திரம் -(பொன்னுலகு  ஆளீரோ புவனம் எல்லாம் ஆளீரோ – )அவன் இவனுக்கு உபகரித்தது சர்வாதிகமாய் இருப்பதொரு மிதுனைத்தை யானால்-அப்படியே இருப்பதொரு மிதுனத்தை உபகரித்தால் இ றே இவன் பிரத்யுபகாரம் பண்ணினான் ஆவது –
ஆகையால் -ஆச்சார்யர் விஷயத்தில் எல்லாம் செய்தாலும் -அவன் பண்ணின
உபகாரத்தைப் பார்த்தால் -ஒன்றும் செய்திலேன் நான் -என்று முகக் குறைவாளனாய்
போரும் இத்தனை –

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-

பயனன் றாகிலும் –
நாட்டிலே ஒருவனை -உபகரிப்பது ஒரு பிரயோஜனத்தைப் பற்றி இ றே
அங்கன் ஒரு பிரயோஜனம் இல்லாது இருக்கச் செய்தேயும் –
பாங்கலராகிலும் –
பிரயோஜனம் இல்லாவிட்டால் -சொல்லுகிறபோது ஹிதம் கேட்க்கைக்கு
பங்காய் இருக்கலாம் இ றே
அங்கன் பாங்கு இன்றிக்கே இருந்தார்களே -ஆகிலும்
இப்படி இருக்குமவர்களுக்கு ஹிதம் சொல்லுகைக்கு ஹேது என் என்னில் –
இவர்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமை இ றே
இப்படி உபதேசிப்பார் உண்டோ -என்னில் –
ராவணனுடைய துர்கதியைக் கண்டு மித்ர மௌபயிகங்கர்த்தும்-என்று-அவனுக்கு ஹிதம் சொன்னாள் இ றே பிராட்டி-(தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும்  இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் -இதில் சீதை மட்டும் காட்டி )-ஒருவன் தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்துக் கொண்டு-அகத்துக்குளே கிடக்க அகம் நெருப்பு பட்டு வேகா நின்றால் கண்டு நின்றாரவிக்கும் போது-தங்களுக்கு ஒரு பிரயோஜனத்தைப் பார்த்தல் -உள்ளே கிடந்தவன் அபேஷித்ததுக்காக-வரதல் அன்றி இ றே அவிப்பது -இப்படி யாயிற்று ஆழ்வார் படியும்-

செயல் நன்றாகத் –
தனக்கு ஒரு பிரயோஜனம் இல்லை யானாலும்-எதிர்தலை பாங்கின்றியே  ஒழிந்தால்
அவன் உஜ்ஜீவிக்கும்படி என் என்னில் –
தன்னுடைய செயலாலே எல்லாம் நன்றாம்படி பண்ணி –
இவன் செயல் தான் நன்றாம்படி –என்னவுமாம்

திருத்திப் பணி கொள்வான் –
தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்தி பணி கொள்ள வல்ல -(-3-5-)என்று-ப்ராப்யமும் ப்ராபகமும் தானே -என்று அத்யவசித்து இருக்குமவர்கள் உடைய-விரோதியைப் போக்கி அடிமை கொள்ளுமவன் என்றது இ றே சர்வேஸ்வரனை –
அங்கன் இன்றிக்கே
இவை ஒன்றும் இன்றிக்கே -இருக்குமவர்களையும் திருத்திப் பணி கொள்ளுமவர் இ றே ஆழ்வார் –பணி கொள்வான் –குருகூர் நம்பி -என்று அந்வயம்-(கொள்வான் -கொள்ளுகைக்காக -)

குயில் நின்றார் பொழில் சூழ் -என்ற இடம்-திருத்திப் பணி கொள்ளும்படிக்கு த்ருஷ்டாந்தம்-
இவர் ஒரு காலத்திலே-ஆற்றாமையாலே -காண வாராய் -என்று கூப்பிடுவதும் ஒரு பாசுரம் உண்டு
யாவர் நிகர் அகல் வானத்தே -என்று களித்துச் சொல்லும் ஒரு பாசுரம் உண்டு
இவர் பாசுரத்தைக் கேட்ட குயில்களும் செவியோத்து அத்தாலே இப்பாசுரத்தை சொல்லும்-ஆக இரண்டு பாசுரதுக்கும் குயில்கள் ஆயிற்று பயிற்றுவன –

குருகூர் நம்பி –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்று சேதனர் உடைய அளவு அன்றிக்கே
திர்யக்குகள் அளவும் ஏறும்படி யாயிற்று ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது –

முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே –
உன்னுடைய ஸ்லாக்கியமான திருவடிகளுக்கு அன்பையே முயல்கின்றேன் –
அர்த்தியா நின்றேன் –
செய்கிற அடிமையால் பர்யாப்தி பிறவாமையாலே
திருவடிகளிலே எனக்கு அபிநிவேசம் பிறக்க வேணும் -என்று அர்த்திக்கிறார் இ றே
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -என்று ஆழ்வார் தாம்
அவ்விஷயத்தில் தடு மாறினாற் போலே-
பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமையாலே தடு மாறுகிறார்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –