ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த-ஸ்ரீ தத்த்வ பதவீ

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

——————-

அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் இரண்டாவது. இது காஞ்சீபுரத்தில் அருளிச் செய்யப்பட்டது.

உபோத்காதம்- பர தத்த்வ நிரூபணம்-சேதநநிரூபணம்–அசேதந நிரூபணம் த்ரிகுண நிரூபணம்-கால நிரூபணம்-சுத்த ஸத்த்வ நிரூபணம்- தர்மபூத ஜ்ஞாந நிரூபணம் – முக்தி அடையும் ப்ரகாரம்.

ப்ரஸாதாத் தோரிகேந்த்ராணாம் பராவரவிபாகவித்
ப்ரப ந: பரமாத்மாநம் ப்ராப்கோதி பரமம் பதம் I

ஆசார்யர்களினுடைய அநுக்ரஹத்தினால் பர தத்த்வம் அவர தத்த்வம், அதாவது உயர்ந்த வஸ்து தாழ்ந்த வஸ்து, இவைகளின் பிரிவைத் தெரிந்து கொண்டவனாய் உயர்ந்த தத்த்வமாகிய சரிய:பதியினிடம் ப்ரபத்தி செய்தவன் பரமபதத்தை அடை கிறான்.

உபோத்காதம்-ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே பராவர தத்த்வ ஜ்ஞாநம் பிறந்து(தவன்) ஸர்வேஸ்வரன் திருவடிகளை உபாய உபேயங்களாகப் பற்றி உஜ்ஜீவிக்க வேண்டும்.

பர தத்த்வ நிரூபணம் -பரதத்த்வமாவது-ஸ்வ வ்யதிரிக்த வஸ்துக்கள் எல்லாவற்றுக்கும் தாரகனுமாய் நியந்தாவுமாய் சேஷியுமான ஸ்ரிய:பதி இவன் ஸ்வத:ஸர்வஜ்ஞனாய், ஸர்வக்தியாய், பரம காருணிகனாய், ஸர்வ ஸரண்யனாய், பரமோதாரனாய், மோக்ஷ ப்ரதனாய்,-முக்த ப்ராப்யனாய், பர வ்யூஹாதி பஞ்ச ப்ரகார பாஸ்ரய (திவ்ய மங்கௗ) விக்ரஹ விஷ்டனாயிருக்கும்.

இவனை ஒழிந்தவை அவர தத்த்வம். இது சேத மென்றும்,-அசேதநமென்றும் இரண்டு வகையாயிருககும்.

சேதந நிரூபணம் -சேதநமான அவர தத்த்வம் பரிச்சிநமான அஹமர்த்தம்)-இதற்கு ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போகத்ருத்வங்கள் பராயத்தங்களாயிருக்கும். இது பத்த முக்த
நித்ய ரூபத்தாலே த்ரிவிதம். பத்தராவார்-ஸம்ஸரிக்குமவர்கள்.-முக்தராவார் – ஸம்ஸாரம் கழிந்தவர்கள். நித்யராவார்-ஒரு காலத்திலும் ஸம்ஸாரமில்லாத நித்யஸூரிகள்.

அசேதந நிரூபணம் -அசேதநமாவது அறிவில்லாத வஸ்து. அசேதந த்ரவ்யம் த்ரிகுணம் என்றும், காலம் என்றும், த்தஸத்த்வம் என்றும், தர்மபூத ஜ்ஞாநம் என்றும் சதுர் விதமாயிருக்கும்.

த்ரிகுண நிரூபணம் -த்ரிகுணமாவது ஸத்த்வாதி குணத்ரயாஸ்ரயமான த்ரவ்யம். இது ப்ரக்ருதி விக்ருதி விபாகத்தாலே இருபத்து நாலு வகையாய் பகவல்லீலார்த்தமாக
க்ஷேத்ரஜ்ஞருக்குக் கார்ய கரணாதி ரூபேண பரிணமித்து பகவத் ஸ்வரூப திரோதாநாதிகளைப் பண்ணும்.

காலநிரூபணம்-காலமாவது-க்ஷணாதி விபாகத்தையுடைத்தாய் ஸர்வ கர்த்தாவான ஈஸ்வரனாலே ஸஹ காரியாக ஸ்வீக்ருதமாயிருக்கும் த்ரவ்யம்,

சுத்தஸத்த்வ நிரூபணம் –சுத்தஸத்த்வமாவது- ர ஜ ஸ் தமஸ்ஸுக்களின்றிக்கே
ஸத்த்வ குணாஸ்ரயமான த்ரவ்யம்.-இது ஈஸ்வரனுக்கும் நித்யருக்கும் முக்தருக்கும் விக்ரஹாதி ரூபேண விசித்ர (போக்ய)மாயிருக்கும்.

தர்மபூதஜ்ஞாந நிரூபணம் -தர்மபூத ஜ்ஞாநமாவது-பராவராத்மாககளுக்கு ஸ்வாத்மாவையும், ஸ்வ வ்யதிரிக்த வஸ்துக்களையும் ப்ரகாசிப்பிக்கவற்றான ஜ்ஞாநம். இந்த ஜ்ஞாநத்தாலே ஆத்மாக்களுக்கு ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போகத்ருத்வங்கள் உண்டாகின்றன.

முக்தி அடையும் ப்ரகாரம் -பத்தருக்கு நிஷித்த காம்ய கர்த்ருத்வம் ஸம்ஸார ஹேது,
தத்த்வஜ்ஞாநமூல நிவ்ருத்தி தர்ம கர்த்ருத்வம் மோக்ஷ ஹேது.
பத்தன் முன்பு பண்ணின பந்தகங்களுக்கெல்லாம் தன் அதிகாராநுகுணமாக ப்ரபத்த்யாதி
ப்ராயசித்தம் பண்ணி, மேல் அபராதம் பண்ணாதே ப்ராரப்த கர்மத்தையும் ஒரு வழியாலே கழித்து முக்தனாம்.

முத்திக்கு அருள்சூட மூன்றைத் தெளிமுன்னம்
இத்திக்கால் ஏற்கும் இதம்.

ோக்ஷத்திற்குக் காரணமாகிய பகவானுடைய க்ருபையை சிரஸா வஹிக்க முதலில் சித், அசித் , ஈச்வரன் என்கிற மூன்று தத்த்வங்களையும் அவைகளின் அஸாதாரண தர்மங்களுடன் நன்றாகத் தெரிந்துகொள், இந்த வழியாக உபாயம் அநுரூபமாக உண்டாகும்.

இப்படி கவிதார்க்கிக ஸிம்ஹமும் ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச்செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீ தத்த்வ பதவீ முற்றிற்று.

————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading