ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
————–
அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் ஐந்தாவது.-இது திருவேங்கடத்தில் அருளிச் செய்யப்பட்டது.
திருமந்த்ரத்தில் ஸ்வரூப ஸமர்ப்பணம், பர ஸமர்ப்பணம், பல ஸமர்ப்பணம் என மூவர்த்தங்களும், த்வயத்தில்-உபாய விசேஷம் புருஷார்த்த விசேஷம், விரோதி நிவ்ருத்தி விசேஷம் என மூவர்த்தங்களும், சரம ச்லோகத்தில் அதிகாரி க்ருத்யம் சரண்ய க்ருத்யம்,
கருதக்ருத்யனுடைய உத்தர க்ருத்யம் என மூவர்த்தங்களுமாக ஒன்பது அர்த்தங்கள்.
உத்தி திகழும் உரை, மூன்றில் மும்மூன்றும்*
சித்த முணரத் தெளிவித்தார்* முத்திதரும்
மூல மறையின் முடிசேர் முகில்வண்ணர்
சீலம் அறிவார் சிலர்.–நேரிசை வெண்பா.-
ஸகல சாஸ்த்ரங்களுக்கும், அன்றிக்கே ஸகல புருஷார்த்தங்களுக்கும், முதற்காரணமான வேதத்தின் சிரோபாகமான வேதாந்தங்களில் ப்ரதிபாத்யனாய்ச் சேர்ந்திருக்கிற மோக்ஷத்தைக் கொடுக்கிற மேகம் போன்ற வர்ணத்தையுடைய பகவானுடைய ஸ்வபாவத்தை,-அதாவது அவனுடையஸௌசீல்ய குணத்தை, அறிந்த ஆசார்யர்கள்
சப்தங்களுக்குள் ச்லாக்யமான மூன்று ரஹஸ்யங்களில் ஒவ்வொன்றிலும் மூன்று அர்த்தங்களாக ஒன்பது அர்த்தங்களை மனது நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி ப்ரகாசம் செய்தார்கள்.
ஸகல வேத ஸாரமான திருமந்த்ரத்தில் மூன்று வாக்யங்களில் அடைவே ஸ்வரூப ஸமர்ப்பணமும் பரஸமர்ப்பணமும் பல ஸமர்ப்பணமும் அநுஸந்தேயம்.
இங்கு ஸ்வரூப ஸமர்ப்பணமாவது–ஸர்வோபாதி விநிர்முக்தம் க்ஷேத்ரஜ்ஞம் ப்ரஹ்மணி ந்யஸேத்-தக்ஷ ஸ்ம்ருதி.(சரீரம், இந்த்ரியங்கள், ஸூக்ஷ்ம ப்ரக்ருதி அவித்யை முதலிய) எல்லா உபாதிகளினாலும் விடப்பட்ட ஜீவாத்ம ஸவரூபத்தைபபரமாத்மாவிடத்தில் ஸமர்ப்பிக்கவேண்டும்.)என்கிறபடியே வபுராதிகளில் வேறுபட்டு ஜ்ஞாநாநந்த ஸ்வரூபனாய் ஜ்ஞாநாநந்த குணகனாய் ஸ்வயம் பராகாரனாய் ஸ்வஸ்மை பாஸமாநனாய் அணுவான நான், ஸர்வ ஐகதேக காரண பூதனாய், ஸர்வ ரக்ஷகனாய், ஸர்வ சேஷியான ஸ்ரிய:பதியைப்பற்ற-நானும் உனக்குப் பழவடியேன்-பெரியாழ்வார் திருமொழி 1-1-11.-—கண்ணபுரம் ஒன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனே–பெரிய திரு-8-9-3-என்கிறபடியே நித்ய நிருபாதிக சேஷபூதன் என்று அநுஸந்திக்கை. இஸ் ஸம்பந்தா நுஸந்தாநம் அர்த்த பஞ்சகா நுஸந்தாநத்திற்கு அஞ்சுருவாணியாய் நிற்கும்.
பர ஸமர்ப்பணமாவது-ஆத்மாத்மீய பரந்யாஸோ ஹ்யாத்ம நிஷேப உச்யதே-லக்ஷ்மீ தந்த்ரம்-17-79. தன்னுடையவும், தன்னைச் சேர்ந்த (புத்ரன், ப்ரேஷ்யன் முதலிய)வர்களுடையவும் பரத்தை ஸமர்ப்பிப்பது ஆத்ம நிஷேபம் என்று சொல்லப்படுகிறது.)என்கிறபடியே நித்ய சேஷ பூதனுமாய் நித்ய பரதந்த்ரனுமாய் அபிமத ஸித்திக்குப் புகல் ஒன்றில்லா அடியேனை இனி ஒரு கர்த்தவ்யத்திலே மூட்டாதே அடைக்கலமாகக் கொண்டு ரக்ஷித்தருள வேண்டும் என்கை.
பல ஸமர்ப்பணமாவது-தேந ஸம்ரஷ்யமாணஸ்ய பலே ஸ்வாம்ய வியுக்ததா-.லக்ஷ்மீ தந்த்ரம்-17-73 அந்தப் பகவானால் ரக்ஷிக்கப்படுகிற தனக்கு ரக்ஷிக்கப்படுவதினால் உண்டாகிய ப்ரயோஜநத்தில் யஜமாநனயிருக்கும் தன்மை இல்லாமல் இருப்பதும். ‘கேசவார்ப்பண பாயந்தா ஹ்யாத்ம நிக்ஷேப உச்யதே ‘ என்று மேல். ‘பகவானிடத்தில் அந்த யஜமாநனாயிருக்கும் தன்மையை ஸமர்ப்பிப்பது வரையில் தனக்கு யஜமாநனாயிருக்கும் தன்மை இல்லாமையே ஆத்மநிஷேபம் என்று சொல்லப்படுகிறது என்று அர்த்தம்.-இத்யாதிகளிற்படியே களையற்ற ஸூரிதுல்ய கைங்கர்யத்திற்கு ஸ்வரூப யோக்யனான ஆரா அன்பில் அடியேனுக்கு உபாதி அடியாக வந்த அயோக்யதைகளை யெல்லாம் கழித்து வழுவிலா அடிமைகொண்டு வாழ்வித்தருள வேண்டும் என்கை.
இப்படி-சேஷ சேஷி பாவத்தாலே இருவரையும் உறவாக்கி, சேஷசேஷி க்ருத்யத்தாலே இருவரையும் வணக்கி, சேஷ சேஷி பலத்தாலே இருவரையும் ஏக ரஸமாக்குகிறது திருமந்த்ரம்.
இதிலே ஸாரீரக க்ரமத்தாலே தோற்றின பர தத்த்வத்தையும், பரம ஹிதத்தையும், பரம புருஷார்த்தத்தையும் ஸ்வரூபாநுரூப விசேஷண விஸிஷ்டமாக வெளியிடுகிற ஸரணாகதி மந்த்ரத்தில் மூன்று வாக்யங்களில் அடைவே உபாய விசேஷமும் புருஷார்த்த விசேஷமும், விரோதி நிவ்ருத்தி விசேஷமும் ஸித்த ஸாத்ய ரூபத்தாலே இரு வகையாகச் சேர்ந்து நிற்கும்படி அநுஸந்தேயம். எங்ஙனே என்னில்:- ஸ்ரீமானான நாராயணன் அபிமத ஸித்திக்கு வ்யாஜ மாத்ர ஸாபேக்ஷமுமாய் தத் ப்ரவர்த்தகமுமாய் வ்யவதாந மற்று ப்ரதாநமுமான ஸித்தோபாயம்.
அநந்ய ஸாத்யே–பரதமுனி வாக்யம். ஸ்வாபீஷ்டே மஹா விச்வாஸபூர்வகம் ததேகோபாயதா யாசநா ப்ரபத்தி : சரணாகதி : ‘ என்று மேல். (தன்னுடைய இஷ்ட பலமானது) வேறொரு உபாயத்தினாலும் ஸாதிக்க முடியாமல் இருக்கும்பொழுது (மஹா விச்வாஸத்தை முன்னிட்டுக்கொண்டு அவன் ஒருவனே உபாயமாகவேண்டும் என்று யாசிப்பது
ப்ரபத்தி, அது தான் சரணாகதி).-அகலகில்லேன் ‘-திருவாய்-6-10-10-இத்யாதிகளிற் சொல்லுகிற ரணாகதி அவனுடைய வஸீகரணமான ஸாத்யோபாயம்.
புருஷார்த்த விசேஷமாவது–.தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’-திருவாய்-2-9-4-என்கிறபடியே தன்னோடும் தான் பண்ணுகிற கைங்கர்யத்தோடும் துவக்கற்று,-கண்டுகேட்டு உற்று,-திருவாய்-4-9-10-இத்யாதிகளிற்படியே நிரதிஸய போக்யமான நித்ய ஸித்த ப்ராப்யமும் அதனுடைய பரிபூர்ணாநுபவ பரீவாஹமாய்க் கொண்டு ஸாத்யமான சேஷி யுகந்த கைங்கர்யமும்.
விரோதி நிவ்ருத்தி விஷமாவது–தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ என்கிறபடியே (தன்னோடும் தான் பண்ணுகிற கைங்கர்யத்தோடும் துவக்கற்று]ஸர்வ அவித்யா நிவ்ருத்தி பிறக்கை. இப்படிப்பட்ட ஸித்த ஸாத்யங்களான புருஷார்த்த ஹேதுக்களையும், ஸித்த
ஸாத்யங்களான புருஷார்த்தங்களையும் சேர்த்து ஸாத்ய புருஷார்த்தத்தில் இருவகையான களையற்ற படியையும் காட்டு கிறது த்வயம்.
இதில் பூர்வோத்தர கண்டங்களுக்கு-(ஸ ப்ராதுஸ் சரணௌ காடம் )-அயோ . . 31-21. ‘நிபீட்ய ரகுநந்தந:, ஸீதாம் உவாசாதியசா: ராகவம்சமஹா ரதம்(ரகுவம்சத்திற்கு ஆநந்தத்தைக் கொடுக்கும் இளையபெருமாள் ஜ்யேஷ்ட ப்ராதாவாகிய ராமனுடைய திருவடிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஸீதையையும் ராமனையும் குறித்து சொன்னார்). அதாவது பெருமாளும் பிராட்டியும் சேர்ந்திருந்த ஸமயத்தில் ப்ரார்த்தித்தார் என்பதினால் ஸ்ரீமத் என்னும் பதத்தின் அர்த்தமும், ராகவம்ச மஹா வ்ரதம் ‘ என்று சரணாகதர்களைக் காப்பாற்றுகிற பெரிய வ்ரதத்தை யுடையவன் என்பதினால் நாராயண சப்தத்தின் அர்த்தமும், சரணெள என்று சரண சப்தமும் இருப்பதினாலே இந்த சுலோகம் த்வயத்தின் பூர்வ கண்டத்துடன் சேர்த்தி யாகிறது என்று கருத்து.
(பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா-அயோ-31 -27. தேவரீர் ஸீதையோடு கூட, கிரிஸாநஷூ ரம்ஸ்யதே அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதச் ச தே ‘ என்று மேல். மலையின் தாழ்வரைகளில் விளையாடப் போகிறீர் விழித்துக் கொண்டும் தூங்கிக் கொண்டும் இருக்கிற போது தேவரீருக்கு எல்லா விதக் கைங்கர்யத்தையும் நான் செய்யப் போகிறேன், அதாவது செய்யவேண்டும் என்று கருத்து. ஸஹ வைதேஹ்யா ‘ என்பதினால் ஸ்ரீமதே’ என்பதின் அர்த்தமும், ‘ஜாக்ரத: இத்யாதியினால் ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வவித கைங்கர்யங்கள் கூறப்படுகிற படியினால் சதுர்த்தியின் அர்த்தமும், பவாம்ஸ்து’ என்று நாராயண சப்தத்தின் அர்த்தமும் விவரிக்கப் பட்டபடியினால் இந்த சுலோகம் த்வயத்தின் உத்தர கண்டத்துக்குச் சேர்த்தியாகிறது என்று கருத்து.)
இவற்றில் தோற்றின பரம ஹிதத்தினுடைய அதிகார நைரபேக்ஷ்ய ஸ்வரூப ப்ரபாவங்களையும் வெளியிட்டுக் கொண்டு உப ப்ரும்ஹணமான சரம லோகத்தில் மூன்று வாக்யங்களில் அடைவே அதிகாரி க்ருத்யமும், ஸரண்யக்ருத்யமும், க்ருத க்ருத்யனுடைய உத்தர க்ருத்யமும் அநுஸந்தேயம்.
அதிகாரி க்ருத்யமாவது--மேம்பொருள் ‘-(திருமாலை-38. போகவிட்டு மெய்ம்மையை மிகஉணர்ந்து ‘ என்று மேல். வெளியிலே இருக்கும்படியான வஸ்துக்கள், அன்றிக்கே போக்யமாக அநுபவிக்கப்படும் வஸ்துக்கள், இவைகளை அஸ்த்திரத்வம் முதலிய தோஷங்களுடன் கூடியவை என்று பரித்யஜித்து மெய்யான ஜீவாத்மாவின் ஸ்வபாவத்தை உயர்ந்த வஸ்துவாக உணர்ந்து என்று அர்த்தம்.)இத்யாதிகளிற்படியே விவேகாதி யுக்தனாய்க் கொண்டு,-விடைக்குலங்கள்’-(திருச்சந்த-92. ஏழடர்த்து வென்றி வேற்கண் மாதரார் கடிக் கலந்த தோள் புணர்ந்த காலி ஆய! வேலை நீர்ப் படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்து நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்னவேண்டுமே’ என்றுமேல். வ்ருஷபங்கள் ஏழைச் செருக்கடக்கி ஜயம் பொருந்திய வேல்போல் இருக்கிற கண்களையுடைய லக்ஷ்மீ, நப்பின்னைப்பிராட்டி முதலிய பத்நிகளுடைய வாஸனையோடுகூடிய தோள்களை ஸம்ச்லேஷித்து பசுக்களை மேய்க்கும் இடையனாய் அவதரித்த ஸ்ரீ க்ருஷ்ணனே ! தேவரீருக்கு அடைக்கலம்
ப்ரார்த்தித்தபடி’ புகுந்த என்னை பயப்படாதே என்ன வேண்டும் என்று பிராட்டியை புருஷகாரமாகக் கொண்டும் பகவானுடைய ஸௌலப்யாதி குணங்களை முன்னிட்டுக் கொண்டும் சரணம் அடைய வேண்டும என்று கருத்து)என்கிற பாட்டின்படியே ஸநாதந தர்மமான ஸர்வலோக ஸரண்யனுக்கு விண்ணப்பம் செய்கை.
ஸரண்ய க்ருத்யமாவது– தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சது
மூர்த்தி’-என்கிறபடியே ஸரணாகதி விரோதிகளை யெல்லாம் கழிக்கைக்கு ஸர்வ சேஷியான தன்னைத் தட்டுமாற்றித் தாழ நின்று, ஏற்றின சுமையெல்லாம் ஏறிட்டுக் கொண்டு இவனைத் தன்னளவாக உயர எடுக்கை.
உத்தர க்ருத்யமாவது–‘அத்தனாகி அன்னையாகி என்கிற பாட்டின்படியே ( திருச்சந்த-115. ஆளும் எம்பிரானுமாய் ஒத்தொவ்வாத பல்பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க் கடல் கிடத்தி
ஏழை நெஞ்சமே’ என்று மேல் பாட்டு. அவனுடைய ஆர்த்தியையும், குணங்களையும், நம்மை ரக்ஷிப்பதற்காக முன்னதாகப் பாரித்து ஒருப் பட்டபடியையும் ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தியானபடியையும் சிந்தித்து மனத்தை நிர்ப்பயமாக்கிக்கொள்ள வேண்டும் என்று இப்பாட்டின் கருத்து.)மநஸ்ஸைத் தேற்றி,- ‘சிற்றம் சிறுகாலே’ என்கிற பாட்டின்படியே (திருப்பாவை-29) நானெனக்கு சேஷபூதன்,என்னை ரக்ஷிக்க வேண்டிய பரம் என்னுடையது
, அத்தால் வரும் ப்ரயோஜனம் என்னுடையது என நினைக்காமல்)ஸர்வ ப்ரகாரத்தாலும் அநந்யனாய் ஸ்வயம் ப்ரயோஜந பாஸ்த்ரீய கைங்கர்ய பரனாகை.
இப்படியால் ஓர் அதிகாரியை சரண்யன் ஹித தமத்திலே மூட்டும்படியையும், இவனுக்கு ப்ரிய தமத்தைப் பண்ணும்படியையும், சரணாகதன் வீத சோகனாய் ஸர்வ சேஷிக்கு ப்ரிய தமங்களான ஸர்வ சேஷ வ்ருத்திகளையும் பண்ணும் ப்ரகாரத்தையும் கணிசிக்கிறது சரம ஸ்லோகம்.
இதில் சொன்ன சரண்யனுக்கும் சரணாகதிக்கும் பலத்திற்கும் தேச காலாதி பரிச்சேதமில்லை.ப்ரபத்த்யத் யாயாதிகளெல்லாம் இதின் விஸ்தரம்.
எனக்கு உரியேன் எனது பரம் என் பேறு என்னாது
இவை அனைத்தும் இறை யில்லா இறைக்கடைத்தோம்
தனக்கு இணை ஒன்றில்லாத திருமால் பாதம்
சாதனமும் பயனுமெனச் சலங்கள் தீர்ந்[த்]தோம் *
உனக்கு இதம் என்று ஒரு பாகன் உரைத்தது உற்றோம்
உத்தமனாம் அவன் உதவி எல்லாம் கண்டோம்-எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
நானெனக்கு சேஷபூதன்,என்னை ரக்ஷிக்க வேண்டிய பரம் என்னுடையது அத்தால் வரும் ப்ரயோஜனம் என்னுடையது என நினைக்காமல்-கீழ்க் கூறப்பட்ட இவைகளெல்லாவற்றையும் தனக்கு மேற்பட்ட யஜ மானனில்லாத ஸ்வாமியான ச்ரிய:பதிக்கு ஸமர்ப்பித்தோம், தனக்கு ஸத்ருசமான வஸ்து இல்லாத பகவானுடைய பாதங்களே உபாயமும் பலனும் என அநுஸந்தித்து, ஸ்வாதீனம் என நினைக்கும் தோஷங்களை நிவ்ருத்தி செய்தோம், அத்விதீய ஸாரதியான ஸ்ரீக்ருஷ்ணன் அகிஞ்சனான
உனக்கு இது ஹிதம் என உரைத்த ப்ரபத்தியை அநுஷ்ட்டித்தோம்,-உயர்ந்தவனான அவனுடைய உபகாரங்களை யெல்லாம் அறிந்தோம்,-இதற்கு மேல் அடைய வேண்டிய ப்ரீத்யாதிகள் கவர, துக்கத்தை இகழ்ந்தோம், இனி நாம் இவ்வுலகத்தில் இருக்கும் நாள்களில் ஸூரி களுடன் ஸமம்.
குருபஜந நேத்ரபாஜா மதிதரஹஸ்யேந வேங்கடே சேந|
நவநீதமிவ க்ருஹீதம் இதம் நவகம் நித்யம் ஆஸ்வாத்யம்
ஆசார்ய உபாஸனமாகிற, அன்றிக்கே குருபக்தியாகிற, தயிர் கடையும் கயிற்றை யுடையவராகிய, அன்றிக்கே ஜ்ஞாநக் கண்ணை யுடையவராகிய, கடையப்பட்ட ரஹஸ்யங்களை யுடைத்தாயிருக்கிற வேங்கடேசன் என்கிற ஆசார்யனால் எடுக்கப்பட்ட வெண்ணெயைப் போலே இருக்கிற இந்த ஒன்பது அர்த்தங்களும் எப்பொழுதும் அநுஸந்தானம் செய்யத்தக்கவ.
ப்ரபமிதகலிதோஷாம் ப்ராஜ்ய போகா நுபந்தாம்.
ஸமுதிதகுணஜாதாம் ஸம்யகாசாரயுக்தாம் |
பரிதஜந பஹுமாந்யாம் ஸ்ரேயஸீம் வேங்கடாத்ரௌ
பரியமுபசி நு நித்யம் ஸ்ரீநிவாஸ த்வமேவ |
ஓ! ஸ்ரீநிவாஸனே! தேவரீர்த்தாமே திருவேங்கடமாமலையில்,போக் கடிக்கப்பட்ட கலிகாலத்தினால் உண்டான தோஷத்தையுடையதாயும், அதிகமான போகத்தினுடைய ஸம்பந்தத்தையுடையதாகவும், அதாவது உம்முடைய கைங்கர்ய ரூபமாகையால் உமக்கும், உம்முடைய தாஸர்களான ப்ரபன்னர்களுக்கும் போகத்தை வருத்தி செய்கிறதாயும் என்றபடி, சேர்ந்திருக்கிற குணங்களின் ஸமூஹத்தையுடைத்தானதாயும், நல்ல அநுஷ்டானத்துடன் சேர்ந்ததாயும், உம்முடைய ஆச்ரிதர்களினால் கொண்டாடக்கூடியதாயும், உத்தமமாயுமிருக்கிற (கைங்கர்யமாகிற) ஸம்பத்தை எப்பொழுதும் வ்ருத்தி செய்யும்.
இப்படி கவிதார்க்கிகஸிம்ஹமும் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச்செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீ ரஹஸ்ய நவநீதம் முற்றிற்று.
———————–
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
——————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply