ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த-ஸ்ரீ ரகஸ்ய பதவி–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் மூன்றாவது.-[காஞ்சீபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது.)

ரகஸ்ய த்ரயங்கள் தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிவாக காட்டி அளிக்கும் –

மூன்றில் ஒரு மூன்றும் மூவிரண்டும் முன் நான்கும் -தோன்றாத் தொலையும் துயர் –

தோன்றி தான் சூரியோதயம் இருளைத் தொலைக்கும் -இம் மூன்றும் தோன்றாமல் சம்சார துரிதங்களை போக்கி அருளும் என்றவாறு –

இதி தத்வ த்ரயஸ்ய ஏஷா ரகஸ்ய த்ரயஸ்ய ச பதவீ வேங்கடேசே
ந ப்ரத்யக் ப்ராச்சீ பிரதர்சிதா–ப்ரத்யக் ப்ராச்சீ-ஆத்ம ஸ்வரூப ஞானம்

ரகஸ்ய த்ரயர்த்தங்கள்
ஸ்ரீ யபதித்தவம் / ஜகத் காரணத்வம் / ஜகத் ரக்ஷகத்வம் / ஸ்வ பாவிக சேஷித்வம் /
ஜீவன் – அநந்யார்ஹ சேஷ பூதன் / ஜீவன் பாகவத -ததீய சேஷ பூதன்/
ஸமஸ்த ஜகத் பாலனத்வம் / ஞானாதி ஸுலப்யாதி குண விசிஷ்டன் / ஜீவன் அணு -பரமாத்மா விபு / ஜீவன் தேக இந்திரியாதி வி லக்ஷணம் /
அவன் சங்கல்பம் அடியாகவே ஜீவனுக்கு ஸ்வ தந்த்ர லேசம்/ ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் பிரபன்னனுக்கு /
ரகஸ்ய த்ரய ஞானமே உஜ்ஜீவன ஹேது

உபோத்காதம் -ப்ரணவ சப்தார்த்தம்- நம: சப்தார்த்தம்- நாராயண சப்தார்த்தம் -த்வயத்தில் பூர்வ கண்டார்த்தம் -த்வயத்தில் உத் த ர கண்டார்த்தம் -த்வயத்தின் திரண்டபொருள்-சரமச்லோகத்தில் பூர் வார்த்தவிவரணம்-சரம ச்லோகத்தில் உத்தரார்த்த விவரணம்- நிக மநம் ]

உபோத்காதம் அநாதிகாலம் ஸம்ஸரித்துப் போந்த ஜீவாத்மாக்களுடைய உஜ்ஜீவநார்த்தமாக அத்யாத்ம ஸாஸ்த்ரங்கள் தத்த்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரதிபாதிக்கும். அவற்றை ஸங்க்ரஹேண ரஹஸ்யத்ரயம் ப்ரகாமிப்பிக்கும்.

ப்ரணவ சப்தார்த்தம் -இவற்றில் திருமந்த்ரம், ஸர்வ ஸங்க்ரஹம். இது தான் மூன்று பதமாய் எட்டுத் திருவக்ஷ ரமாயிருக்கும். இதில் ப்ரதம பதமான ப்ரணவம் ஸாரதம ஸங்க்ர ஹம். இது மூன்று பதமாய் மூன்று அக்ஷரமாயிருக்கும். இதில் ப்ரதமாக்ஷரம் ஸர்வ காரண பூதனாய், ஸர்வ ரக்ஷகனாய் நித்ய நிருபாதிக சேஷத்வ ப்ரதி ஸம்பந்தியான ஸ்ரிய:பதியைச் சொல்லுகிறது. இதில் சதுர்த்தீ- சேஷத்வமாகிற ஸம்பந்
தத்தைக் காட்டுகிறது. மத்யமாகூரம் இஸ்ஸம்பந்தத்தை மற்றவரோடு துவக்கற நியமிக்கிறது. த்ருதீயாக்ஷரம் இஸ் ஸம்பந்தத்திற்கு ஆஸ்ரயனாய் ரக்ஷணீயனாய் ஜ்ஞாநாநந்த ஸ்வரூப குணனாய் அணுவாய் தேஹாதி விலக்ஷணனான ஜீவாத்மாவைச்
சொல்லுகிறது. ஆக இப் ப்ரணவத்தால்-கண்ணபுரமொன்று உடையானுக்கு அடியேன் + ஒருவர்க்குரியேனோ* * -(பெரிய திருமொழி-8-9-3)என்கிறபடியே இஜ்ஜீவாத்மா பகவதநந்யார்ஹ க்ஷேஷபூதன் என்றதாயிற்று.

நம : சப்தார்த்தம் -மத்யமபதமான நமஸ்ஸு இரண்டு அக்ஷரமாய் இரண்டு பதமாய் நான் எனக்கு உரியன் அல்லேன்,என் கார்யத்திற்கு நான் நிரபேக்ஷ ஸ்வதந்த்ரனும் அல்லேன் என்கிறது. இங்கே பாகவத சேஷத்வம் பலிதம். இந்நமஸ்ஸுக்கு
ஸரணாகதியிலும் தாத்பர்யம். அநிஷ்ட நிவ்ருத்தியை ப்ரார்த்திக்கிறதாகவுமாம். இப்படி நமஸ்ஸு தன்னிலே தத்த்வ ஹித| புருஷார்த்த ப்ரகாநமுண்டு.

நாராயண சப்தார்த்தம் -நாராயண ப்தம் நாரங்களுக்கு அயநம் என்றும், நாரங்களை அயநமாகவுடையவன் என்றும், ஸர்வாதாரத்வாதி விஸிஷ்டனான ஸ்ரிய:பதியைச்
சொல்லுகிறது. இதில் சதுர்த்தீ தாதர்த்த்யத்தை முன்னிட்டுக் கொண்டு, அதன் பலமான கைங்கர்யத்தைக் காட்டுகிறது. இத்தால்-ஒழிவில்காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் –
திருவாய்-3-3-1-என்றதாயிற்று.-அகாரார்த்தாயைவ) என்கிற லோகத்தை இங்கே அநுஸந்திப்பது.

த்வயத்தில் பூர்வகண்டார்த்தம்-இப்படித் திருமந்த்ரத்தில் ஸங்க்ருஹீதங்களான தத்த்வ ஹித புருஷார்த்தங்களை விஸதமாக்குகிறது த்வயம். இதில் பூர்வ கண்டம் ஒரு வாக்யமாய் உபாயபரம். உத்தர கண்டம் இரண்டு வாக்யமாய் உபேயபரம், இவை ஓரொன்றும் மூன்று பதமாயிருக்கும். ப்ரதம கண்டத் தில் ப்ரதம பதம் மூன்று பதம் கூட ஸமஸ்த பதமாயிருக்கும்.

இதில் ஸ்ரீமத் ஸப்தம் ஸர்வருக்கும் ஆஸ்ரயணீயையாய் அகலகில்லேன்-(திருவாய்-6-10-10)
என்கிறபடியே தன்னை ஆஸ்ரயித்திருக்கிற பெரிய பிராட்டியா ரோடு பிரிவற்றவன் என்கிறது. நாராயண ஸப்தம்-நிகரில் புகழாய்-இத்யாதிகளிற் சொன்ன வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸௌஸ்ரீல்ய ஸௌலப்யாதிகளை யுடையவனான ஸர்வேஸ்வரனைச் சொல்லுகிறது. ஸரண ஸப்தம் ஸ்ரண்ய விஷயத்தில் க்ருபோத்தம்பநாதி களுக்காக தாஸ பூதன் பற்றும் துறையான திருவடிகளைக் காட்டுகிறது. ‘ ஸரணம்’ என்கிற பதம் திருவடிகளுடைய உபாய பாவத்தைச் சொல்லுகிறது. ‘ப்ரபத்யே’ என்கிற பதம் அகிஞ்சநாதிகாரி மஹா விஸ்வாஸாதி விஸிஷ்ட ஸரண்யன் திருவடிகளை உபாயமாகக கொண்டு பரந்யாஸம் பண்ணுகிறபடியை ப்ரகாஸிப்பிக்கிறது.

த்வயத்தில் உத்தரகண்டார்த்தம் -‘ஸ்ரீமதே’ என்கிற பதம் ப்ராபகனான நாராயணன் ப்ராப்யனாய்க் கைங்கர்ய ப்ரதி ஸம்பந்தியாம் போது பத்நீ விஸிஷ்டனா யிருக்கும்படியைக் காட்டுகிறது. இங்குற்ற நாராயண பதம் ஸர்வ ப்ரகார விஷ்டனாய்க் கொண்டு நிரதிய போக்யனான ஸர்வ சேஷியை ப்ரதிபாதிக்கிறது. இதின் சதுர்த்தியிலும் திருமந்த்ரத்திற் போலே கைங்கர்ய ப்ரார்த்தனையைக் கண்டு கொள்ளுவது. இக்கைங்கர்யம் ஸர்வவிரோதி ரஹிதமான படியை இந் நமஸ்ஸு கணிசிக்கிறது.

த்வயத்தின் திரண்ட பொருள் -ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளில் களையற்ற நித்ய
கைங்கர்யம் பெறுகைக்கு ஸ்ரீமானான நாராயணன் திருவடிகள் இரண்டையும் ஸரணமாகப் பற்றுகிறேன் என்று இதில் திரண்ட பொருள்.

சரம ச்லோக பூர்வார்த்தவிளக்கம் -இப்படித் திருமந்த்ரத்திலும் த்வயத்திலும் ப்ரகாஸித்த உபாயத்துக்கு அகிஞ்சநாதிகாரித்வ நிரபேக்ஷத்வாதிகளைக் காட்டிக் கொண்டு விதி முகத்தாலே உப ப்ரும்ஹணம் பண்ணுகிறது சரம ஸ்லோகம். இது தான் மூன்று வாக்யமாய்ப் பன்னிரண்டு பதமாயிருக்கும். இப்படி ரஹஸ்ய த்ரயம் உத்தரோத்தரம் பதங்கள் இரட்டிப்பாய் விஸதீகரண மாயிருக்கும். இஸ் ஸ்லோகத்தில் ப்ரதம வாக்யம் உபாய விதாயகம்.மத்யம வாக்யம் பல ப்ரதி பாதகம். உத்தர வாக்யம் கருதக்ருத்யத்வாதி தத் பரம்.

ஸர்வ தர்மங்களையும் விட்டு‘ என்கிற இரண்டு பதங்களாலே ‘நின்னிலங்கு பாதமன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே (திருச்சந்த-90)என்கிறபடியே அபிமத ஸித்திக்கு உபாயாந்தரம் அற்று இருக்கிற அதிகாரி விசேஷத்தையாதல், ப்ர பத்தியினுடைய தர்மாந்தர நைரபேஷ்யாதிகளையாதல் சொல்லுகிறது. என்னை ஒருவனை ‘ என்கிற இரண்டு பதங்களாலே ஸௌலப்யாதி குண விஸிஷ்டமாய் ப்ரதாநோபாயத்வ நிரபேக்ஷத்வ ஸர்வ பல ப்ரதத்வாதி விஸிஷ்டமுமான ஸநாதந தர்மத்தைக் காட்டுகிறது.’ ஸரணமாகப் பற்று’ என்கிற இரண்டு பதங்களாலே மஹாவிஸ்வாஸாதி விஸிஷ்ட பர ந்யாஸத்தை விதிக்கிறது.

சரமச்லோக உத்தரார்த்தவிளக்கம்நான் உன்னை ‘ என்கிற இரண்டு பதங்களாலே பர ஸ்வீகாரம் பண்ணின ஸர்வ ஸக்தியையும், நயஸ்த பரனான சாதக வ்ருத்தியையும் சொல்லுகிறது. ‘எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கக் கடவேன் ‘ என்கிற இரண்டு பதங்களாலே கைங்கர்ய விரோதிகளை நிஸ்பே ஷமாகக் கழிக்கும்படியைச் சொல்லுகிறது. ஸோகிக்க வேண்டாம்’ என்கிற இரண்டு பதங்களாலே புகலற்றுத் தளும்பின பூர்வ தஸையை விலக்கி,-நிஸ் ஸம்யஸ் ஸுகமாஸ்ஸ்வ-(சரணாகதி கத்யம். ஸம்சயம் ஒன்றுமில்லாமல் ஸுகமாயிரு.)என்று அருளிச்செய்த உத்தர தசையை உபலக்ஷிக்கிறது.

த்வயத்தில் பூர்வோத்தர கண்டங்களுக்கு இதில் பூர்வோத் தரார்த்தங்கள் சேர்த்தி யாகின்றன.

மூன்றில் ஒரு மூன்றும் மூவிரண்டும் முந்நான்கும்
தோன்றத் தொலையும் துயர்.
–குறள் வெண்பா.

ரஹஸ்யத்ரயத்தில் அத்விதீயமான மூன்று பதங்கள் அடங்கிய திருமந்த்ரமும், அன்றிக்கே ஒரு அர்த்தத்தை ப்ரதிபாதிக்கிற மூன்று பதங்களையுடைய திருமந்த்ரமும், ஆறு பதங்களையுடைய த்வயமும், பன்னிரண்டு பதங்களையுடைய சரம ச்லோகமும் அர்த்தத்துடன் மனதில் ப்ரகாசிக்கத் துக்கங்கள் நசித்துவிடும்.

இதி தத்த்வத்ரயஸ்யைஷா ரஹஸ்யத்ரிதயஸ்ய ச |
பதவீ வேங்கடேசே ப்ரத்யக் ப்ராசீந ப்ர தர்ஸிலிதா |

இந்த சித், அசித், ஈசுவரன் என்கிற மூன்று தத்த்வங்களினுடையவும், திருமந்த்ரம், த்வயம், சரம ச்லோகம், என்கிற மூன்று ரஹஸ்யங்களினுடையவும் கிழக்கு மேற்காக இருக்கிற,அதாவது ப்ரத்யக் என்று சொல்லப்படும் ஜீவாத்மாவை அடைவதற்குக் காரணமாயி ருக்கிற ப்ரா சீந மார்க்கமானது வேங்கடேசன் என்கிற திருநாமமுடைய ஆசார்யனால் இந்த ப்ரகாரம் காட்டப்பட்டது. இங்கு வேங்கடேசே என்னும் பதம் இந்த க்ரந்தத்திற்கு வக்தா தாமல்லர், ப்ரதமாசார்யனான பகவானே என்கிற அர்த்தமும் த்வனிக்கிறது. ஒரு ஊரிலிருந்து பல இடங்களுக்குச் செல்லும் வழியைச் சுட்டிக் காட்டுகிறாப்போல இங்கும் திங் மாத்திரம் காட்டப்பட்டது என்று கருத்து. ப்ருதக்ப்ராசீ ‘ என்று பாடாந்தரம். அப்பொழுது ப்ராசீநமான இந்தவழி தனித்தனியே காட்டப்பட்டது என்று அர்த்தம்;

ஸ்ரீரங்க த்விரத வ் ருஷாத்ரி பூர்வகேஷு
ஸ்த்தாநேஷ ஸ்த்திரவிபவா பவத் ஸபர்யா
ஆகல்பம் வரத விதூத வைரிபக்ஷா
பூயஸ்யா பவதநுகம்பயைவ பூயாத்!

பக்தர்களுக்கு அபீஷ்டங்களைக் கொடுக்கும் பகவானே ! ஸ்ரீரங்கம், ஹஸ்திகிரி, வேங்கடாசலம் இவை முதலான உகந்தருளின திவ்யதேசங்களில் உம்முடைய திருவாராதனம் அதிகமான உம்முடையதான க்ருபையினால் கல்ப காலம் வரையிலும் போக்கடிக்கப்பட்ட சத்ருக்களினுடைய பக்ஷத்தை யுடையதாகவும் அழிவில்லாத ஐச்வர்யத்துடன் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

இப்படி கவிதார்க்கிகஸிம்ஹமும் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீ ரஹஸ்ய பதவீ முற்றிற்று.

—————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading