ஸ்ரீ ப்ரஹ்ம தேசம் -மன்னார் கோயிலில் 1242-ஆனி -ஸ்வாதி -நக்ஷத்திரத்தில் திருவவதரித்தார் -இயல் பெயர் வரதராஜர் -ஸூந்தர ஜாமாத்ரு முனி -அழகிய மணவாள ஜீயர் -விருது பெற்றவர் -சொட்டை மணவாள முனி என்ற விருதும் பெற்றதாக ஸ்ரீ கீதை வெண்பா இறுதிப் பாசுரம் மூலமும் அறிகிறோம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் இறுதிக் காலத்தில் அவதரித்து -அவரை ஆஸ்ரயித்து -அவரது திருக் குமாரரான நாயனார் ஆச்சார்யன் பிள்ளையிடம் ஸம்ப்ரதாய சாஸ்திரங்கள் கற்றவர் –
கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரத்து எம்பெருமான்களே -அழகிய மணவாளன் நாயனாராகவும் -திருமலையப்பன் தேசிகராகவும் வரதராஜ பிள்ளை லோகாச்சார்யராகவும் -திருநாராயணத்த்து எம்பெருமான் அழகிய மணவாள ஜீயராகவும் திருவவதாரம் என்பர்
பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திருவடிகளைப் பற்றுவது என்றும் பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்ததையே இவர் அருளிச் செய்த தத்வ தீப கிரந்தத்தில் ஸ்ரீ மத் சரணவ் -சேர்த்து திருவோடு கூடிய நாராயணன் திருவடிகளை -என்றபொருள் அருளிச் செய்துள்ளார் –நாராயணனுடைய ஸ்ரீ சம்பந்தமுடைய திருவடிகளை உபாயமாகப் பற்ற -என்று இவர் நிர்வாகம் -ஸ்ரீ மந்தவ் ஹரி சரணவ் –இரண்டிலும் பன்மை பிரயோகம் –
இவரது 32 வயதில் பெரியவாச்சான் கைக் கொண்டு முதலில் உபதேசம் -உலக்கைக் கொழுந்து துளிர்க்காதது போல் உனக்கும் ஞானம் வராது என்ற கேலிப்பேச்சு –
முசல கில சயம் -உலக்கை துளிர்க்குமோ -கேலி செய்ய -பெரிய ஆச்சார்யன் கிருபையால் அனைத்து ஸம்ப்ரதாய அர்த்தங்களையும் கற்று அதே பெயரில் கிரந்தமும் சாதித்து அருளி உள்ளார் –
அபய ப்ரதநாமாநாம் அஸ்மத் குரும் அஹம் பஜே|
யத் கடாக்ஷாதயம் ஜந்து: அபுநர் ஜந்மதாம் கத: ||–ஆச்சார்ய வந்தனம்
ஒன்றும் அறியாத விலங்கு போல் இருந்த அடியேன், எவருடைய கடாக்ஷத்தால் பிறவாமை பெற்றேனோ, அத்தகைய பெருமை பெற்ற அபய ப்ரதர் என்னும் திருநாமமுடைய நம் ஆசார்யரை அடியேன் வணங்குகிறேன்.
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுன ஸுனவே
யத் கடாஷை லக்ஷ்யானாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா–பெரியவாச்சான் பிள்ளையின் தனியன்
யாமுனரின் திருக்குமாரரும், யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .
இவர் அருளிச் செய்தவை
தத்வ தீபம்
தத்வ நிரூபணம்
தத்வ ஸங்க்ரஹம்
தத்வ பூஷணம்
ஞான ஆர்ணவம்
சாரீரிகக் கண்டியம்
அத்யாத்ம சிந்தை
சதுஸ்லோகீ
கீதா சாரம்
தீப பிரகாசிகை
நரஸிம்ஹ அஷ்டகம்
திரு விருத்த ஸ்வாபதேச வியாக்யானம்
பன்னீராயிரப்படி
இருபத்து நாலாயிரப்படி பிரமாணத் திரட்டு
ரஹஸ்ய த்ரய விவரணம்
ரஹஸ்ய மணி மாலை
தமிழ்க் கனி பிரபந்தம்
பகவத் கீதை வெண்பா
இவர் 108 திரு நக்ஷத்திரங்கள் இங்கு இருந்தது 1350 திரு நாட்டை அலங்கரித்தார்
அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காகத்
தம் பெரிய போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம்
———–
தனியன் ஸ்லோகங்கள் -2-
அவதாரிகை ஸ்லோகங்கள் -6-
தத்வ ஞான விளக்கம் -ஸ்லோகங்கள் -1-24-
ரஹஸ்ய த்ரய விவரணம் -அஷ்டாக்ஷரீ -விவரணத் தொடக்கம் -ஸ்லோகம் -25-
பிரணவ ஸப்தார்த்தம் -ஸ்லோகம் -26-
மகாரார்த்தம் -ஸ்லோகம் -27-
நமஸ் பதார்த்தம் -ஸ்லோகம் -28-29-
நாராயண ஸப்தார்த்தம்-ஸ்லோகம் -30-34-
த்வய -ரத்ன மந்த்ரம் -விவரணம்-ஸ்லோகம் -35-46-
கீதா சரம ஸ்லோக விவரணம் -ஸ்லோகம் -47-56-
பகவான் உகந்த உபாயம் ஸரணாகதியே -ஸ்லோகம் -57-66-
ப்ராக்ருத சரீரத்தில் இருந்து விடுபட பிரார்த்தனை -ஸ்லோகம் -67-69-
அர்ச்சிராதி மார்க்கம் நிரூபணம் -ஸ்லோகம் -70-72-
ஸூஷ்ம சரீரம் விடுபட அருள வேண்டுதல் -ஸ்லோகம் -73-74-
ஸ்வரூப ஆவிர்பாவம் பெற வேண்டுதல் -ஸ்லோகம் -75-
அப்ராக்ருத பஞ்ச உபநிஷத் ரூப திருமேனி பெற பிரார்த்தனை -ஸ்லோகம் -76-81-
ஸ்ரீ வைகுண்டம் -அயோத்யா-வர்ணனம் -ஸ்லோகம் -82-122
——————
அஸ்மத் வித பரித்ராண ப்ரேம ப்ரத்ராண மாநஸம்
வாதி கேஸரிணம் வந்தே சவும்ய ஜாமாதரம் முநிம்
நம்மைப் போன்ற அஞ்ஞர்களைக் காத்து அருளவே ஸ்நேக பாவ திரு உள்ளம் கொண்ட வாதி கேஸரி என்ற விருது பெற்ற ஸூந்தர ஜாமாத்ரு முனியை வணங்குகின்றேன்
ஸிம்ஹம் பூவைப்பூ வண்ணா -ஆண் ஸிம்ஹம் பெண் ஸிம்ஹம் குழந்தை -பாதுகா தேவி பரதனைக் கூட்டிப் போனது-இவரும் நரஸிம்ஹம் போல் ஸ்வாதி திருநக்ஷத்ரத்தில் திருவவதாரம் –
ஸூந்தர ஜாமாத்ர முநே ப்ரபத்யே சரணாம்புஜம்
ஸம்ஸார ஆர்ணவ ஸம் மக்நஸ் ஜந்து ஸம்ஸார போதகம்
பிறவிக் கடலில் நன்கு அழுந்தி இருக்கும் சேதனர்களை அக்கரைப் படுத்தும் ஓட்டமாக இருக்கும் வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயரை வணங்குகின்றேன்
ஸ்வாதி ஜாதம் கிருஷ்ண பதாஸ்ரிதம் வாதி கேஸரிம் வந்தே சவும்ய ஜாமாத்ரு யோகிநம்
அத்யாத்ம சிந்தா-ஸ்லோக ரூப-மூல கிரந்தம்
அத்யாத்ம சிந்தாமணி -அதற்கு தாமே அருளிச் செய்த வியாக்யானம்
அத்யாத்ம சிந்தா-சப்த -ஏழாம் வேற்றுமை -ஆத்மா விஷயமான விசாரம் -இதுவே அதி -பத பிரயோகம் –ஆத்மாவை விஷயமாகக் கொண்டவற்றைப் பற்றிய விசாரம் -என்றபடி -ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் குறிக்கும் -அத்யாத்ம சிந்தாமணி வியாக்யானம் இவரே சாதித்து அருளி உள்ளார்
———-
நமோ அஸ்த் வஸ்மத் குருப்யஸ் ஸ்யாத் தத் குருப்யஸ் ததா நம
பரமேப்யோ குருப்யச்ச நிகிலேப்யோ நமோ நம-1-
அடியேனுடைய ஆச்சார்யர் பொருட்டு ப்ரணாமங்கள் ஆகுக -அவ்வாறே அவர் தம் ஆச்சார்யர்கள் பொருட்டு ப்ரணாமங்கள்-பரம ஆச்சார்யர்களான அனைவருக்கும் மறுபடியும் மறுபடியும் ப்ரணாமங்கள்-ஸ்வாமி ராமானுஜர் அருளிச் செய்த நித்ய கிரந்தப்படியே –குரு பரம்பரயா பரம குரும் பக வந்தம் ப்ரணம்ய -படியே -நிகிலேப்ய -என்று அனைவருக்கும் தனித் தனியே நமஸ்காரம் சொன்னபடி யாயிற்று -நம நம –பக்தியின் மிகுதியைத் தெரிவித்தபடி
(நித்யம் விததாமி -அத்யாத்ம சிந்தாமணி -ப்ரகாசப்படுத்த-ஆத்ம தத்வ ப்ரகாசகம் -முதல் பிரயோஜனம் -யாதாத்ம்ய தத்வம் அறிந்து மகிழ்வோம் -ஹ்ருதய அபீஷ்டம் -இரண்டாவது பிரயோஜனம் -பாவ பிரதம் -ஆத்ம பர்த்தா ஸ்வரூப ஆகாங்க்ஷை -அழகிய மணவாளப் பெருமானுடைய ஸ்வரூப பிரகாசப் படுத்துவது மூன்றாம் விஷயம் -)
(மந்த்ரத்திலும் மந்த்ரத்தில் உள்ளீடான வஸ்துவிலும் மந்த்ர ப்ரதானரான ஆச்சார்யர் பக்கலிலும் ப்ரேமம் கனக்க இருக்க வேண்டுமே -ஆகையால் அஸ்மத் குருப்யோ தொடங்கி ஸ்ரீ லஷ்மீ நாதன் வரையிலும் அனுசந்தானம் -மேல் –)
(அசவ் அசவ் –போந்தார் போந்து எண்ணிக் கொள் -ஒவ்வொருவரையும் அனுசந்திக்க இயலாமையால் பொதுவான முதலில் அருளிச் செய்து -மேல் பிரசித்தரான அனைவருக்கும் நமஸ்காரங்கள்)
நமோ ராமானுஜா யேதம் பூர்ணாய மஹதே நம
யாமுநாய முநீந்த்ராய நமஸ் ஸர்வார்த்த வேதிநே —2-
ஸ்வாமி ராமானுஜருக்கு -பெரிய நம்பிகளுக்கும் -ஸர்வஞ்ஞரான யதிகட்க்கு இறைவனான யாமுனாச்சார்யருக்கும் நமஸ்காரங்கள்(மனனம் -சம்பிரதாயத்துக்கு ராமானுஜரை கொண்டு வரவும் ஸ்ரீ பாஷ்யம் பிரகாசப் படுத்தவும் மனனம் செய்த முனி
நமோ அஸ்து ராம மிஸ்ராய புண்டரீக த்ருசே நம
நாதாய முநயே நித்யம் நம பரம யோகிநீ –3-
ராமமிஸ்ரர் -புண்டரீகாக்ஷர் -நல்ல யோக ஞானமுடைய ஸ்ரீ மந் நாதமுனிகளுக்கு நித்யம் நமஸ்காரங்கள்(மணக்கால் நம்பி ராம மிஸ்ரர் -நான்காவது ராமர் -உய்யக்கொண்டார் -புண்டரீகாக்ஷர் -ரங்க நாத முனி -நாதமுனி -நம்மாழ்வாரை யோகத்தாலேயே சாஷாத்கரித்தவர் -)
ஆத்யாய குல நாதாய நமோ அஸ்து சட வைரிணே
நம சேநாதி பதயே ஞான யாதாம்ய வேதிநே —4-
ப்ரபந்ந ஜன கூடஸ்தரான நம்மாழ்வாருக்கு அவருக்கு தத்வ யதாத்ம்ய ஞான உபதேசம் செய்து அருளிய விஷ்வக் சேனருக்கும் நமஸ்காரங்கள்(சட வாயு -பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்த ஆழ்வார் -வைரி -விரோதி -பராங்குசர் -புறம்பாய் உள்ளவரை ஹிம்ஸித்து -அங்குசம் இட்டு தடுத்த பராங்குசர் -பாதத்தின் முன் செல்ல மாட்டான் பரன் கூட -)(ஸூத்ரவதி சமேதராய் திரு மாலிருஞ் சோலையில் விஷ்வக் சேனர் சேவை உண்டு )
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||-4-அடி ஒட்டி அருளிச் செய்த ஸ்லோகம்
ஸ்ரீயை ஸ்ரீச அநபாயிந்யை ஜகன் மாத்ரே நமோ நம
ஸ்ரீ தராயாதி குரவே நமோ பூயோ நமோ நம –5-
(ஸ்ரீயை நமோ நம
ஸ்ரீச அநபாயிந்யை நமோ நம
ஜகன் மாத்ரே நமோ நம
கட்டிலையையும் தொட்டிலையும் விடாமல்)
அகில ஜெகன் மாதரம் அஸ்மின் மாதரம் -உலகுக்கு எல்லாமே தாயார் நாராயண க்ஷண காலமும் பிரியாமல் -அகலகில்லேன் இறையும் -என்று இருக்கும் பெரிய பிராட்டியாருக்கும் முதல் ஆச்சார்யரான பெரிய பெருமாளுக்கும் மறு படியும் மறுபடியும் பலமுறை நமஸ்காரங்கள்-வாத்சல்யம் -தோஷ தர்சித்வம் என்றும் தோஷ போக்யத்வம் என்றும் உண்டே – இதுவரை ஐந்து ஸ்லோகங்கள் –அஸ்மத் குருப்யோ நம -என்று ஆரம்பித்து ஆரோஹண கிரமத்தில் குரு பரம்பரை அனுசந்தானமாயிற்று –முதல் ஸ்லோகத்தில் –ஆ பகவத்த –-பகவான் வரை என்றும் பகவான் முதற்கொண்டும் என்றும் கொள்ளலாம்
இத்தம் ஸம் சிந்த்ய மநசா ஸூபாம் குரு பரம்பராம்
அத் யாத்ம விஷயாம் சிந்தாம் கரோம் யாத்ம விஸூத்தயே –6-
இவ்விதமான பவித்ரமான ஆச்சார்ய பரம் பரையை மனத்தில் நினைத்துக் கொண்டு ஆத்ம ஸ்வரூபத்தை நிச்சயித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதற்காக ஆத்ம ஸ்வரூபத்தை குறித்து விமர்சனம் செய்து அத்யாத்ம சிந்தா என்ற இந்த க்ரந்தத்தைப் பணிக்கிறேன்
ஆஸீர் நமஸ் க்ரியா வஸ்து நிர்தேசோ வாபி தந் முகம் -என்றபடி இங்கு ஸூபாம் அடைமொழி-விஸூத்தயே-என்றதால் தேஹ இந்திரிய பிராண விலஷண ஆத்மா –சேஷத்வ -ஞாத்ருத்வ -அணுத்துவ முதலான தர்மங்களைக் வெளிப்படுத்தும் கிரந்தம் என்பதை ஸூசிப்பித்து அருளியவாறு –
(ரஹஸ்ய த்ரய தத்வ த்ரய ஞானம் அளித்ததால் ஸூபாம்)
(இத் யதி தைவம் அத ஆத்மா-இதுவரை தெய்வம் பற்றியது -மேல் ஆத்மாவைப் பற்றியது – உபநிஷத் சொல்லும் -அதே போல் இங்கும் ஆத்மாவைப் பற்றிய விசாரம் என்றும் ஆத்ம ஸ்வரூபன் சொல்லும் ரஹஸ்ய த்ரய விவரணம் என்றும் கொள்ளலாம் -)
———-
தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||
ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.
ஆத்ம ஸ்வரூபம்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
1-தேக
இந்த்ரிய
மன
பிராண
புத்தி
விலஷணமாய்
2-அஜடமாய்
3-ஆனந்த ரூபமாய்
4-நித்யமாய்
5-அணுவாய்
6-அவ்யக்தமாய்
7-அசிந்த்யமாய்
8-நிரவயவமாய்
9-நிர்விகாரமாய்
10-ஜ்ஞாநாஸ்ரயமாய்
11-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய்
12-தார்யமாய்
13-சேஷமாய்
இருக்கும்-
தேஹாதிகள் -என்னுடைய தேஹாதிகள் -என்று-ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
-இதம் -என்று தோற்றுகையாலும்—ஆத்மா -நான் என்று தோற்றுகையாலும்
-இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்–ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும்
-இவை பலவாகையாலும்-ஆத்மா ஒருவன் ஆகையாலும்
ஆத்மா இவற்றில் விலஷணன் என்று-கொள்ள வேணும்-
நனு-ஸ்தூலோஹம் க்ருசோஹம்-என்று தேஹத்திலே அஹம் புத்தி வ்யவஹாரம் காண்கையாலே
அஹம் அர்த்த பூதனான ஆத்மா தேஹம் தானாம் அத்தனை –
இந்த அஹம் புத்தி வ்யவஹாரங்களுக்கு தேஹாதிரிக்தன் விஷயம் என்ன ஒண்ணாது –
அவனுக்கு ஸ்தௌல்யாதிகள் கூடாமையாலே –
கட படாதிகளைப் போலே பார்த்திவமான சரீரத்துக்குச் சைதன்யம் கூடாதே என்னில் மத சக்தி போலே
பரிணாம விசேஷத்தாலே கூடும் இறே-ஸ்ரீ தத்வ சேகரம் -ஜீவ ஸ்வரூப நிர்ணய பிரகரணம் –
தத் கண்டனம் –
அது அனுபபன்னம் —
தேஹம் அநேக அவயவ சங்காத் மகம் என்னும் இடம் சித்தம் -அதில் எல்லா அவயவங்களுக்கும் சைதன்யம் உண்டாகில்-அநேக சேதனோ பலபதி பிரசங்கிக்கும் -அவயவங்களுக்கு அந்யோந்யம் அவிவாத நியமமும் –அவற்றில் மமதா புத்தியும் மமதா வ்யவஹாரமும் -கூடாது –ஒரு அவயவத்துக்கே சைதன்யம் கொள்ளில் அது விச்சின்னம் ஆனால் அவயவாந்தரம் அது அனுபவித்ததை அவயாந்தரத்திலே ஸ்மரிக்கக் கூடாது –பின்பு அஹம் புத்தி வ்யவஹாரங்களும் மமதா புத்தி வ்யவஹாரப்ங்களும் தவிர வேணும் –சர்வ சரீர வியாபியான ஸூக துக்க அனுபவமும் கூடாது –
அவயவ சங்காதாத்மகம் அன்று சரீரம் -அயவவி அதிலே சைதன்யம் என்னவும் ஒண்ணாது –உபலம்ப அனுபபத்திகள் இல்லாமையாலே அவயவ ச்வீகாரம் அனுபபன்னம் ஆகையாலே –கிஞ்ச -பாலதே ஹோ அஹம் மந்த ஜ்ஞான –யுவதே ஹோ அஹம் பஹூ ஜ்ஞான மம சரீரம் –என்று சரீர அஹம் அர்த்தங்களில் பிறக்கிற பேத பிரதிபத்தியும் பேத வ்யவஹாரமும் கூடாது – மமாயமாத்மா -என்கிற இடத்தில் போலே அமுக்கியம் என்ன ஒண்ணாது -முக்யே பாதகம் இல்லாமையாலே – அன்றிக்கே அஹம் புத்திக்கு சரீரமே விஷயம் என்று கொண்டாலும் ஸ்ருதியாலும் ஸ்ருத் யர்த்தா பத்தி களாலும் தேஹாதிரிக்தனாய் தேஹாந்தர பரிக்ரஹ யோக்யனான ஆத்மா சித்தன் –பாஹ்யேந்த்ரியங்களும் ஆத்மாவாக மாட்டாது -ஒருவனே சர்வ இந்த்ரிய விஷயங்களையும் அறிகையாலே — இப்படி கொள்ளாத போது யாவன் ஒருவன் நான் இவ்வர்த்தத்தைக் கண்டேன் – அந்த நானே ஸ்பர்சியா நின்றேன் என்கிற பிரதிசந்தானமும் கூடாது – சஷூஸ்ஸே ஆத்மாவாகில் அந்தன் ரூபத்தை ஸ்மரியாது ஒழிய வேணும் – ஸ்ரோத்ரமே ஆத்மாவாகில் பத்திரன் சப்தத்தை ஸ்மரியாது ஒழிய வேணும்-இப்படி மற்ற இந்த்ரியங்களிலும் கண்டு கொள்வது –
அந்த கரணமும் ஆத்மாவாக மாட்டாது — ஸ்மர்த்தாவினுடைய ஸ்மாரணாதி கார்யங்களுக்கு கரணமாகக் கல்பிதங்கள் ஆகையாலே –இது தானே ஸ்மரிக்கிறது என்ன ஒண்ணாது -ஸ்மரணத்துக்கு கரணம் இல்லாமையாலே –கரணமும் தானே என்ன ஒண்ணாது -விருத்தமாகையாலே –வேறே ஓன்று கரணம் என்னில் அது பாஹ்ய கரணம் ஆகில் அது இல்லாதவனுக்கு ஸ்ம்ருதி கூடாது-ஆந்தர கரணம் ஆகில் ஆத்மாவுக்கு மனஸ் என்று பேர் இட்டாதாய் விடும் –ஆந்தர கரணம் அநபேஷிதம் ஆகில் இந்த்ரியார்த்த சம்பந்தம் உண்டான போது எல்லாம் ஜ்ஞானம் பிறக்க வேணும் –ஆகையால் மனஸ்ஸூம் ஆத்மாவாக மாட்டாது –பிராணங்களும் ஆத்மாவாக மாட்டாது –சங்காத ரூபங்கள் ஆகையாலே தேஹம் ஆத்மா என்கிற பஷத்துக்குச் சொன்ன தூஷணங்கள் இங்கும் துல்யம் –
ஜ்ஞானமும் ஆத்மாவாக மாட்டாது -எனக்கு ஜ்ஞானம் பிறந்தது -நசித்தது -என்று ஷணிகமுமாய்- ஆத்ம தர்மமுமாய்த் தோற்றுகையாலே- ஸ்திரனாய் இருப்பான் ஒரு ஆத்மா யுண்டு என்னும் இடம் நேற்றுக் கண்ட நானே இன்றும் காணா நின்றேன் – என்கிற பிரத்யபிஜ்ஞையாலே சித்தம்
ஞானம் இருப்பதாலும் பரிமாணம் விகாரம் இருப்பதாலும் இரண்டுமே வெவ்வேறு தத்வங்கள் என்றும் கொண்டால் தானே பொருந்தும்
ஆச்சார்யனால் தத்வ த்ரய ஞானம் அறிதல்
ஆத்மா ந தேவோ ந நரோ ந திர்யக் ஸ்தாவரோ ந ச
ந தேஹோ ந இந்த்ரியைவ மந ப்ராணோ ந நாபி தீ –-1-
ஆத்மா தேவஜாதிக்குச் சேர்ந்தவன் இல்லை -மானுட ஜாதிக்குச் சேர்ந்தவன் இல்லை -பசு பறவை முதலான திர்யக் ஜாதிக்கும் சேர்ந்தவன் இல்லை -சரீரமும் ஆத்மா இல்லை -பிராணனும் கூட ஆத்மா இல்லை -ஞானமும் கூட ஆத்மா இல்லை –
சரீரம் எடுத்துக் கொண்டே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு-ஆத்மா -பிறப்பிலி- நித்யம் சாஸ்த்வத புராணம்- -இருந்தாலும் தேஹ சம்பந்தம் கொண்டு ப்ரவ்ருத்தி -முக்குண மயமான தேஹத்தால் -தூண்டப்பட்டு செயல்பட்டு -கர்மங்களைத் தொலைத்து –ஸூஷ்ம சரீரம் கொண்டே அர்ச்சிராதி கதியில் சென்று விரஜையில் நீராடி அனைத்தையுமே கழித்து-ஸூத்த ஆத்மா -முக்தனாகிறான்
தேஹமே ஆத்மா சாருவாக -லோகாயுத மதம் -கண்டதே காட்சி -கொண்டதே கோலம் –நேஹ நாநா அஸ்தி –ஆண் அல்லன் -ஸ்ருதியும் ஆழ்வாரும் -இல்லை என்பதை சொல்லியவாறு
ந ஜடோ ந விகாரீ ச ஜ்ஞான மாத்ராத்மகோ ந ச
ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாஸ ஸ்யாதேக ரூப ஸ்வரூப்பாக் –-2-
ஆத்மா ஜட ஸ்வரூபம் -செயலற்ற தன்மை -இல்லை -மாறுபாடுகளை அடைவதும் இல்லை -ஞானம் ஒன்றையே ஸ்வரூபமாக உடையவன் இல்லை -தனக்குத் தானே சுயமாகப் பிரகாசிப்பவன் -எப்போதும் ஒரே விதமான ஸ்வரூபன் உடையவனாய் இருப்பவன் –
விஞ்ஞானம் -ஞானம் முழுவதாக இருப்பதால் ஆத்மாவை ஞானம் என்றும்
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -கிருஷ்ண பக்தியே வடிவெடுத்துள்ளார் என்பது போல் -விஞ்ஞாதா என்றும் சொல்லுவோம் –
ஞாதாவுமாகக் கூட இருக்கும் ஆத்மா என்றபடி -தனக்குப் பிரகாசப்பட்டும் -மற்ற ஒன்றின் உதவின இல்லாமல் தானே ஒளி விட்டுக்கொண்டு பிரகாசிப்பார் -அஜடம் -ஸ்வயம் பிரகாசம்-பராக் அர்த்தம்-பிறருக்குத் தோற்றுவித்து -அசேதனப் பொருள்கள் -ப்ரத்யக் அர்த்தம் -தங்களுக்குத் தோற்றுவது -ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இவ்வாறு – ஷட் பாவ விகாரம் -அஸ்தி ஜாயதே இத்யாதி பரிணாமங்கள் மாறுதல் – கருவில் இருத்தல், பிறத்தல், வளர்தல், மாற்றம் அடைதல், தளர்ச்சி அடைதல், மரணம் என ஆறு நிலைகளுக்கு உட்பட்டது என்பதை குறிக்கும் அசேதனங்களுக்கே உண்டு
தர்மி ஞானம் -அஹம் சப்த கோசரம் -எங்கும் உப்பாகவே உப்புக்கட்டிப் போல் எங்கும் ஞான மயம்-கட்டடங்க ஞான ஆனந்த மயம் -இது மாறாது – -தர்ம ஞானம் இதம் என்று பொருள்களை அறிந்து கொள்வது -இது கர்மம் அடியாக மாறும்
விளக்கு ஒளி ஜ்வாலை ஒளி போல் இரண்டுமே உண்டே -ஓன்று ஒன்றை ஆஸ்ரயிக்கும் – -த்ரவ்யம் -குணம் -ஜாதி -க்ரியா -மூன்றும் சேர்ந்து இருக்கும் -கிரியாவான் குணவான்-என்கிறோம் அன்றோ – குணம் த்ரவ்யத்தை ஆஸ்ரயிக்கலாம் -த்ரவ்யம் த்ரவ்யத்தை ஆஸ்ரயிக்கலாம் –குணத்தை குணம் ஆஸ்ரயிக்காதே -த்ரவ்யம் போக்குவரத்து -கமனக்கிரியா -இருக்கும் ஆஸ்ரயிக்கும் படியாயும் இருக்கும் -ஆத்மா த்ரவ்யம் தான் -ஞான மயமாக இருப்பதால் குணம் என்றும் சொல்வதால் -ஞானம் இதை ஆஸ்ரயித்ததும் இருக்கலாம் –
அஜடமாகை யாவது ஞானத்தை ஒழியவும் தானே தோற்றுகை –சூர்ணிகை -8
ஆனந்த ரூபமாகை யாவது ஸூ கரூபமாய் இருக்கை –9- உணர்ந்தவன் ஸூகமாக உறங்கினேன் என்கையாலே ஸூக ரூபமாகக் கடவது –10- நித்யமாகை யாவது எப்போதும் யுண்டாகை –11- எப்போதும் யுண்டாகில் ஜன்ம மரணங்கள் யுண்டாகிற படி என் என்னில் ஜன்மமாவது தேக சம்பந்தம் மரணமாவது தேக வியோகம் –12-அணுவான படி என் என்னில் – ஹிருதயப் பிரதேசத்தில் நின்றும் உத்க்ரமித்துப் போவது வருவதாம் என்று சாஸ்திரம் சொல்லுகையாலே ஆத்மா அணுவாகக் கடவது –14- அணுவாய் ஹ்ருதயத்து அளவில் நிற்குமாகில் ஸூக துக்கங்களை புஜிக்கிற படி என் என்னில் –15-
மணி த்யுமணி தீபாதிகள் ஓர் இடத்திலே இருக்க பிரபை எங்கும் ஒக்க வ்யாபிக்கையாலே அவற்றைப் பூஜிக்கத் தட்டில்லை –16-ஏக சரீர மாதரத்துக்கு இப்படி கொண்டாலும்
ஒருவன் ஏக காலத்திலே அநேக சரீரங்களை பரிக்ரஹிக்கிறது ஸ்வரூப வயாபதியாலே யாக வேண்டாவோ -என்கிறசங்கையிலே அருளிச் செய்கிறார் –17- அவ்யக்தம் ஆகையாவது கட படாதிகளை க்ரஹிக்கிற சஷூராதிகளாலே தோற்றாது இருக்கை —அவ்யக்தம் அச்சித்தயா அவிகாராய -ஸ்ரீ கீதை-2–25- -சோகம் வர ப்ரமேயம் இல்லை-வியக்தம் புலன்களுக்கு புலப்படும் –18-
அசிந்த்யமாகை யாவது-அசித்தோடு சஜாதீயம் என்று நினைக்க ஒண்ணாது
இருக்கை – சிந்தித்து பழகியவை அசித் -ஆத்ம த்யானம் கைகூடுவது எப்படி –பிரத்யக்ஷம் பார்த்து சிந்திக்க முடியாதே–19-
நிர்வவவமாகை யாவது அவயவ சமுதாயம் அன்றிக்கே இருக்கை – அதாவது –
விஞ்ஞான மய-என்றும் விஞ்ஞான கன-என்றும்சொல்லுகிறபடியே ஞான ஏகாகாரம் ஆகையாலே அசித் வஸ்துகளைப் போலே அவயவ சங்காதாத் மகம் அன்றிக்கே இருக்கை – சரீரத்துக்கு தானே அவயவ சமுதாயம் உண்டு -ஞான வடிவாகவே இருப்பார் -எங்கு பார்த்தாலும் விஞ்ஞானம் –20-
நிர்விகாரம் ஆகையாவது அசித்துப் போல விகரிக்கை அன்றிக்கே ஒருபடிப் பட்டு இருக்கை–21-
இப்படி இருக்கையாலே சஸ்த்ரம் அக்னி ஜலம் வாதம் ஆதபம் தொடக்க மானவற்றால் சேதித்தல்–சேத்தா/ சேதனம் கிரியை /சேத்யம் வெட்டப்படும் பொருள் – தஹித்தல் நனைத்தல் சோஷிப்பித்தல் செய்கைக்கு அயோக்யமாய் இருக்கும் -22-ஆர்ஹதர் ஆத்மாவை தேக பரிமாணன் என்றார்கள் –23-அது ஸ்ருதி விருத்தம் –-24-அநேக தேகங்களை பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு சைதில்யமும் வரும் –25-
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது-ஞானத்துக்கு இருப்பிடமாய் இருக்கை – ஏக தத்வ வாதம் நிரசனம் –26-
ஆத்மா ஜ்ஞானத்துக்கு இருப்பிடம் அன்றிக்கே ஜ்ஞானம் மாத்ரம் ஆகில் –27-
நான் அறிவு என்று சொல்ல வேணும் நான் அறியா நின்றேன் என்னக் கூடாது –28-
ஜ்ஞாதா என்ற போதே கர்த்தா போக்தா என்னுமிடம் சொல்லிற்று ஆய்த்து-29-
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜ்ஞான அவஸ்தா விசேஷங்கள் ஆகையாலே
அறிவின் நிலைப்பாடுகள் -இவை -தாய் மகள் தோழி அவஸ்தைகள் ஆழ்வாருக்கு போலே-30-சிலர் குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது
ஆத்மாவுக்கு இல்லை-31-ஸ்ரீ கீதையில் சர்வேஸ்வரன் தானே நா நாயம குனேபயே காததாரம ஹேது பிரகிருதி ருசயதே
புருஷச ஸூ கது காநாமபோக்த்ருத்வே ஹேது ருசயதே –13-14-அத்யாய ஸ்லோகங்கள்-என்று சொல்லுகையாலும்
இப்படி அத்யாத்ம சாஸ்த்ரங்களிலே
ஆத்மாவுக்கு அகர்த்ருத்வத்தையும்
குணங்களுக்கே கர்த்ருத்வத்தையும் சொல்லுகையாலே கர்த்ருத்வம் உள்ளது பிரக்ருதிக்கே ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லை போக்த்ருத்வம் மாத்ரமே உள்ளது என்று ஆயத்து அவர்கள் சொல்லுவது –
அப்போது இவனுக்கு சாஸ்திர வச்யதையும்
போக்த்ருத்வமும் குலையும்-32-
சாம்சாரிக பிரவ்ருதிகளில் கர்த்ருதம் ஸ்வரூப பிரயுக்தம் அன்று –33
குண க்ருதம்-34-
சமசர்க்க கர்த்ருத்வம் தான் ஈஸ்வர அதீநம்-35-
ஞான ஆச்ரயமாகில் சாஸ்த்ரங்களில் இவனை ஞானவான் என்று சொல்லுவான் என் என்னில்-36-
ஜ்ஞானத்தை ஒழியவும் தன்னை அறிகையாலும் ஜ்ஞானம் சாரபூத குணமாய் நிரூபக தர்மமாய் இருக்கையாலும் -சொல்லிற்று-37-
நியாமகமாகை ஆவது ஈஸ்வர புத்திய அதீனமாக எல்லா வியாபாரங்களும் யுண்டாம்படி இருக்கை —38-
தார்யம் ஆகையாவது அவனுடைய ஸ்வரூப சங்கல்பங்களை ஒழிந்த போது தன் சத்தை இல்லையாம்படி இருக்கை –39
சேஷமாகை யாவது சந்தன குஸூம-புஷ்பம் தாம்பூலாதிகளைப் போலே அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹயமாய் இருக்கை- 40-
சேதநோப் யாப்தி சீலச் ச சித் ஆனந்தாத் மகஸ் ததா
அஹமர்த்த ப்ரதி க்ஷேத்ரம் பிந்நோ அணுர் நித்ய நிர்மல–3-
ஆத்மா சைதன்யம் என்கிற ஞானம் குணத்தை உடையவன் -அந்த ஞானம் பரவுதல் மூலமாக உடல் முழுவதும் பரந்து இருக்கும் தன்மை உடையவன் -மேலும் ஞானம் ஆனந்தம் ஆகியவற்றை ஸ்வரூபமாக உடையவன் -நான் என்ற சொல்லாலே அறியப் படுபவன் -ஒவ்வொரு சரீரத்திலும் இயங்கும் ஆத்மா வேறுபட்டவன் -அணு அளவு உடையவன் -எப்போதும் குற்றமற்று இருப்பவன் –
(சேதனம் -ஞானமுடையவன் -சித் -ஞானமயத்வம் -இரண்டையும் சொன்னவாறு-அனுகூல ஞானமே ஆனந்தமாகும்-வ்யாப்தி சீலம் -தேகம் எங்கும் பரந்து–தர்ம பூத ஞானத்தால் ஸ்வ பாவத்தால் சரீரம் முழுவதும் வியாப்தி-அநந்த கோடி சரீரத்துக்குள்ளே பிறவி தோறும் கர்மத்தால் வியாப்தி உண்டு ஆத்மாவுக்கு -ஸ்வரூப வியாப்தி ப்ரஹ்மத்துக்கு-ஏகாத்ம வாதம் நிரஸனம் -ப்ரதிஷேத்ர பின்னம் -இதம் சரீரம் கௌந்தேய –க்ஷேத்ரம் -ஷேத்ரஞ்ஞ-இதி ஞானாதி -13 அத்யாயம் -சரீர ஆத்ம பேதம்-ஆத்மாக்களுக்குள் பரஸ்பர பேதம் -ஜீவ ஈஸ்வர பேதம் -மூன்றுமே உண்டே-நித்யோ நித்யாநாம் சேதனாஸ் சேதனாம் ஏகோ பஹூனாம் யோ விததாதி காமன் [ஸ்வேது 6.13] )
ததா ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வ நிஜ தர்மக
பரமாத்ம ஏக சேஷத்வ ஸ்பாவஸ் ஸர்வதா (ஸ்வ) ஸ்வத–4-
மேலும் அறியும் தன்மை -ஜ்ஞாத்ருத்வம் -செயல்படுத்தம் தன்மை – கர்த்ருத்வம்-அனுபவிக்கும் தன்மை -போக்த்ருத்வம் -என்ற இயல்பான – நிஜ தர்மக -தர்மங்கள் உடையவன் -இயல்பாக உறுதியாய் இருப்பவனான பரமாத்மாவுக்கே அடியவனாம் தன்மை -பரமாத்ம ஏக சேஷத்வ ஸ்பாவஸ் ஸர்வதா ஸ்வ ஸ்வத-என்ற தர்மமும் உடையவன் –
(அநந்யார்ஹ சேஷத்வம் -கோவிந்தா உனக்கே நாம் ஆட்ச் செய்வோம்-பரகத அதிசய ஆதேயத்வம்- தனியாக -நிலை நின்ற ஆந்தர ஸ்வ பாவம்-உள் இதழ் -கீழ் மூன்றும் வெளி இதழ்–இது சத்தா ப்ரயுக்தம் -ஒழிக்க ஒழியாத தன்மை சேஷத்வம்-ஸர்வதா ஸ்வத இயற்கையாகவே இருக்கும் தன்மை -திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -அதுவும் அவனது இன்னருளே —-மற்ற மூன்றும் பராயத்வம் -அவன் அதீனம் –சேஷத்வ ஞானமே அறிவாளி -கைங்கர்யங்களே கர்த்ருத்வம் -அவன் நன்மை அனுபவிக்க -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் -)
(ஆத்மா தான் கர்த்தா -ஸாஸ்த்ர அர்த்தவத்வாத் -பொருள் உள்ளவாக வேண்டுமே -ப்ரக்ருதி தூண்டப்பட்டு செயல்படுகிறான் -அஹங்கார விமூடாத்மா -அழுக்கு இருப்பதால் தானே சரீரம் என்றும் நினைப்பவன் -அவனால் நியமிக்கப்பட்டு முக்குண வஸ்யதையால் -உபாதியால் கர்த்தா-கர்மமும் கைங்கர்யத்தில் புகும் அன்றோ- -நிரீஸ்வர சாங்க்யன் -ஞாத்ருத்வம் கர்த்ருத்வம் -நொண்டி குருடன் சேர்ந்து நடக்கலாம் -)
ஏவம் ஸாமாந்யதஸ் ஸித்தி நிஜா கார்யுதோ அப்யஹம்
அநாதேர் குண மாயாயா பலேநைவ திரோஹித –5–
இப்படி எல்லா ஜீவர்களுக்கும் இயல்பாக தர்மங்களைக் தன்மைகளாக முக்குணம் உள்ளடங்கப் பெற்ற மூல ப்ரக்ருதியின் ப்ரபாவத்தால் சூழப்பட்ட தன்மைகளைக் உடையவனானேன்
(கடி மா மலர்ப்பாவையோடு ஸாம்யம் -ஷட் குணங்களில் -சாமான்யதஸ் -பொதுவாக -ஸூத்த ஆத்மா -மாயா -பிரக்ருதியால் -முக்குண -பாதிப்பால் -கர்மங்கள் அடிப்படையில் சரீரம் ஏற்றுக் கொண்டு உழல்கிறோம் அன்றோ -)
அப்ரகாச நிஜாகாரோ நித்ய மாந்த்ய முபேயிவாந்
அபதே கர்ம பாசேந க்ருஷ்யமாணோ நிராசய-6–
வெளியில் தெரியாத என்னுடைய இயல்பாக தர்மம் உடையவனாய் செயலாற்ற தன்மையை எப்போதும் உடையவனாய் புண்ய பாபம் வடிவில் உள்ள கர்மம் என்ற கயிற்றினால் கட்டப்பட்டு வழி யல்ல வழியிலே இழுக்கப்பட்டவனாய் வேறு ஆதாரம் அற்றவனாய் இருக்கிறேன் –
(அவித்யா- கர்மா- வாசனா- ஜென்ம-சுழல் -மறந்தேன் உன்னை முன்னமே- -பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -ஆத்மாவை வெய்யிலே வைத்து தேகத்தை நிழலிலே வைக்க -மந்த்ர உபதேசம் பெற்று திருமங்கை ஆழ்வார் ஆனார் அன்றோ -யானே என்னை அறியகிலாதே – யானே என் தனதே என்று இருந்தேன் -யானே நீ என்னுடைமையும் நீயே –அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழன்றேன் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன்-)
அஜாநந் நநு கூலஞ்ச ப்ரதிகூலம் ததாத்மந
அந்யதா தத்துவாரோப்ய ராக த்வேஷவ் ப்ரவர்த்தயன் –7-
அப்படியே தனக்குத் தகுந்தவையும் தகாதவையும் எவையோ என்ற பாகுபாடு தெரியாதவனாய் பயன் அளிக்குமவையைப் பயனற்றதாகவும் பயனற்றவையை பயனளிக்க நல்லதாகவும் எண்ணி அவ்வவற்றின் மேல் விருப்பும் வெறுப்பும் வளர்த்துக் கொண்டவனானேன் –
(அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியாகுலம்
பார்த்தம்ப்ரபந்நமுத்திஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம்
அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும், உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே,
ஆகுலம் – கலங்கி நிற்பவனாய், ப்ரபந்நம் – சரணமடைந்தவனான, பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து, ஶாஸ்த்ராவதரணம்க்ருதம் – கீதாசாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.)
(அவிவேக கநாந்த திங்முகே பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத: ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||-ஶ்லோகம் 49 –
ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே! திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும் இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.)
அக்ருத்ய கரணாதாவப் யத்யாந்தோத் பட வ்ருத்திக
மத்த ப்ரமத்தோந் மத்தாநாம் வர்த்தே ஸத்ருச சேஷ்டித–8-
செய்யத் தகாத வேலைகளைச் செய்வது முதலான பாபங்களும் கூட முழுமையாக தடங்கலற்று இழியுமவனாய் மதம் பிடித்தவன் அசட்டையாக இருப்பவன் -பைத்தியம் பிடித்தவன் என்ற இந்த மூன்று வகைப்பட்ட வர்களின் நடவடிக்கை போலே நடப்பவனாய் இருக்கிறேன் –
(மத்தன்-துஷ்ட ஆகாரத்தால் -பிரமத்தன் -வாதம் பித்தம் கபம் இவற்றால் -உன்மத்தன் -பைத்தியம் -மூவரும் போல் தேஹாத்ம அபிமானத்தால் நானே செய்கிறேன் -நர வபு -பசு பிராயர் -வாநரம் போல் -அவித்யா கர்மா -காரணம் -வாசனை ருசி கார்யம் -பலம் ஜென்மம் -ஆத்மா படும் பாடு –)
கர்ப்ப ஜன்மாத்ய வஸ்தாஸூ துக்க மத்யதுஸ் ஸஹம்
ந கிஞ்சித் கணயந் நித்ய சராம் இந்திரிய கோசர –9-
கர்ப்பத்தில் இருப்பு -அதிலிருந்து வெளி வருதல் முதலான நிலைமைகளிலே மிக்க தாங்க இயலாத கஷ்டத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் எப்போதும் இந்த்ரியங்களுக்கு வசப்பட்டவனாகத் திரிகிறேன்
(கர்ப்பம் ஜென்மம் -சைஸவம் பால்யம் யவ்வனம்-பேதை பாலகன் அதாகும் பிணி பசி -மூப்பு -துன்பம் -அவஸ்தைகள்-வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதை பா லகன தாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.)
ஏவம் விஷய த்ருஷ்ணாயா வசகஸ்ய ஜரா மம
தத் போகே கரணாநாம் ச ஸுவ் தில்யம் குருதே ப்ருசம் –10-
இவ்வாறு பொருள்களின் மீது உண்டான ஆசைக்கு அடிமையான என் கீழத்தனம் அந்த சுகங்களை அனுபவிப்பதில் இந்திரியங்களுக்கு மேலோங்கிய இயலாமையைக் கொடுக்கிறது –
(கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே –6-4-1-)
ததா து த்ருஷ்ணா மஹாத்ம்யாத் கரணா நாம பாடவாத்
போகாலாப ஸமுத் பூத சோகோ அபி பவதி துவம் –11-
அந்தக் கிழத்தன்மையில் போகத்தின் மேல் ஆசை பெருகுவதாலும் இந்த்ரியங்களில் சக்தி குறைவதாலும் ஆசைப்பட்ட அனுபவம் கிடையாமையாலே பொங்கி வரும் துக்கமும் தவறாமல் ஏற்படும் –
ததா புத்ர களத்ராதி பந்து வர்க்காவ மாநஜம்
துக்கம் துஸ் ஸஹ மேவாபி ஸஹந்நஸ்த்ரா ப்ரதிக்ரிய–12-
அந்த சமயத்தில் பிள்ளைகள் மனைவி முதலானவர்கள் தேஹ ஸம்பந்தம் உடையவர்களால் அவமதிக்கப் பட்டதனால் உண்டான தாங்கமுடியாத மிகுந்த கஷ்டம் இருப்பினும் அதற்க்காகப் பழி தீர்த்துக் கொள்ள முடியாத அவமானமாகிற துக்கத்தைத் தாங்கிக் கொண்டு இருந்தேன் –
ஆதித்யாதி பிரத்யர்த்தம் பீடிதோ மூட சேதன
அர்த்தாதிஷு ததாநீ மப்யபி வ்ருத்த ஸ்ப்ருஹோ அபவம் –13-
மன வருத்தத்தினாலும் சரீரத்தில் வந்த நோய்கள் காரணமாகவும் மிகவும் கஷ்டப் பட்டவனாய் இருந்த சமயத்திலும் செல்வம் முதலான சம்பத்துக்களின் மீது மிகுதியான ஆசை உடையவனாய் இருந்தேன்
(ஆதி -மனப்பீடை -வியாதி -சரீரகத பீடை
சுகுமார் தனுர் கர்ப்ப வாஸத்தில் இருக்கும் பொழுது -பஹு மல-அவள் உடலில் -சூழப்பட்டு -நீர்க்குடத்தால் மூடப்பட்டு துன்பப்படுகிறான் -அவள் உண்ணும் உணவில் சூடு குளிர் -இவற்றால் சுகுமார் உடல் கஷ்டப்படும் அன்றோ -முன் ஜென்மத்தில் பட்ட துன்பங்கள் எல்லாமே கர்ப்பத்தில் இருக்கும் பொழுது நினைவில் வருமாம்-கர்ப்ப காலத்திலும் சரணாகதி செய்து பேறு அடையலாம் -கால தேச நியதி இல்லையே -ஆனால் துர்லபம் -வாய்ப்பு குறைவு தானே -சட வாயு -தூதி மாருதி வீசும் -கர்ப்ப ஸ்ரீ மான்கள் வெகு சிலரே —)
தாபத்ரயங்கள் –ஆத்யாதிகம் இரண்டு வகை -சரீர கதம் -மானஸம் –ஆத்யாத்மீகம் -காமம் க்ரோதம் பயம் கோபம் அசூயை அவமானம் மாத்சர்யம் பொறாமை-போல்வன -முக் குண வசத்தில் இவை விருப்பு வெறுப்பு – ஆதி தெய்விகம் -வெப்பம் குளிர் பூகம்பம் போல்வன -கர்மபலன்களை அனுபவித்தே தீர வேண்டும் -தொலைக்க அவன் காத்துக் கொண்டுள்ளான் -புரியாமல் தவிக்கிறோம் -பலன்களைக் கொடுத்து கர்மங்களைத் தொலைத்து பேறு –மூடன் -இவை சரீர சம்பந்தத்தால் வந்தவை என்றும் அறியாமல் உழல்கிறோம்
தாத்ரும் பந்த்து வியோகேஷு தாத்ருந மஹதா வ்ருத
கால சேஷம் நயாம் யத்ர கர்ம பந்த வசாநுக –14-
அந்த உறவினர்களில் யாராவது இறந்த போது மிகவும் கஷ்டத்தோடு கூடியவனாய் இந்த உலகில் கர்ம ஸம்பந்தத்துக்கு வசப்பட்டு எஞ்சிய வாழ்க்கையைக் கடக்கின்றேன் –
(வாழ்வு எல்லாமே கால சேஷம் -கர்ப்ப வாசமே பிரதானம் -சடகோபர் போல் சடவாயுவை கோபித்துக் கொண்டு பேறு அடையாலாம் அன்றோ)
அத தேஹா வஸாநே ச துக்க முத்க்ராந்தி ஸம்பவம்
க்ரூச்ச்ரேண தேஹாந் நிஸ்க்ராந்தி யம கிங்கர தர்சனம் –15-
பிறகு இந்த சரீர ஸம்பந்தம் அறுத்துக் கொண்டு இதிலிருந்து வெளிக் கிளம்புகையால் உண்டான துன்பத்தைப் மிகப் பெரிய துன்பமாக சரீரத்தில் இருந்து வெளியேறுதல் யம தூதர்களைக் காணுதல் ஆகிய இவற்றை நினைத்து வருந்துகிறேன்
(ஜீவாத்மாவுக்கு சதுர் கதி –கர்மங்களைத் தொலைத்தது -பகவத் ப்ராப்தி-புண்யம் தொலைக்க -ஸ்வர்க்கம் -பாபம் தொலைக்க -நரகம் -மீண்டும் புண்ய பாப மிஸ்ரம் தொலைக்க -ஸம்ஸாரம் -)
(ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-)
(சரம சமயத்திலே (ஆகிலும் )பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகை ஸ்ரேஷ்டம்
ஆகையால் -சம்சாரிகளை பார்த்து ஹிதோ உபதேசம் பண்ணி அருளுகிறார்-
இத் திரு மொழியில்-)
(வாயோரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர் குழிக் கண்கள் மிழற்ற
தாயொரு பக்கம் தந்தை யொரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலத்த
தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலோடும் சிக்கென சுற்ற
மாயொருபக்க நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே -4- 5-9 –)
யாதநா தேஹ ஸம்பந்தம் யாம்யபாசைச் ச கர்ஷணம்
உக்ர மார்க்க கதி கிலேசம் யமஸ்ய புரதஸ் ஸ்திதிம் —16-
தந் நியோக ஸமாயாதா யாதநாச் ச ஸஹஸ ச
ஸ்ருத்வா ஸ்ம்ருத்வா ச தூயே அஹம் தத் பிரவேச பயாகுல –17-
நரக வேதனைகளை அனுபவிப்பதன் பொருட்டு ப்ராப்தமாயுள்ள நுண்ணிய சரீர ஸம்பந்தத்தை யம தூதர்கள் கட்டி இழுத்துச் செல்லுகையையும் பயங்கரமான வழியில் செல்லும்போது உண்டாகும் துன்பத்தையும் யமனை எதிரிலே நிற்பவனாகக் காண்கையையும் -அவன் தன் கட்டளையால் நிகழக் கூடிய ஆயிரக் கணக்கான தண்டனைகளைக் கேட்டும் நினைத்தும் அப்படிப்பட்ட நரகத்தில் புகக்கூடும் என்ற பயத்தைப் அடைந்தவனாய் அடியேன் துன்பமடைகிறேன் –
(ஜரா -மூப்பினால் தளர்ந்து -ஜர்ஜரம் -தேகம் சிதிலம் அடைந்து -தூர ப்ரநஷ்ட்ட நயனம் -கரணங்கள் மரண உன்முக -புத்ர தார-அவமானங்கள் ஸ்ம்ருதிக்கு வர -ஆகாரம் இறங்காமல் -எண்ண அலைகளால் துன்பம் -)
(கேசவ-கிலேச நாஸன
காவலிற் புலனை வைத்து கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழிதருகின்றோம் நமன்-தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகருளானே-1-)
புநச் ச கர்ப்ப ஜென்மாதி பிரவேசம் கர்ம நிர்மிதம்
முஹுர் வி சிந்த்ய மச்சித்தம் கம்பதே ஜல சந்த்ரவத் –18-
மேலும் பழ வினைகளின் பயனால் அடுத்த பிறவிக்காக மற்றொரு கருவறையில் புகுகை எனப்படும் மறு ஜென்மத்தை திரும்பத் திரும்ப நினைத்து என் மனம் நீரில் தெரியும் சந்திர பிம்பத்தின் அசைவுக்கு ஒப்பான நடுக்கம் கொள்கிறது –
ஏவம் மாம் பவ சக்ரே அஸ்மந் பிரமந்தம் பாஹு துக்கிதம்
க்ருபயா கேவலம் ஸ்ரீ மந் ரக்ஷ நாத கடாஷித–19-
லஷ்மீ பதியான ஓ ஸ்வாமியே இந்த மாதிரி இந்த ஸம்ஸார மாகிற சக்ரத்தில் சளைக்காமல் திரிந்து பல துக்கங்களைப் பெறுகின்ற என்னை ஒரு காரணமின்றி இயற்கையான க்ருபையோடு உனது கடைக்கண் பாவையாலே காக்க வேணும் –
(நம்மிடம் ஒன்றுமே எதிர்பார்க்காமல் -எனது உணர்வில் நிறுத்தினேன் -அதுவும் அவனது இன்னருளே)
அஹ முத்பத்தி வேளாயாம் த்வத் கடாஷாதி வீக்ஷித
சத்த் வோத்ரே கேண ஸம்பந்ந ஸத் கத்யா காங்க்ஷ யாந்வித–20-
நான் பிறக்கும் சமயத்தில் உம்முடைய சீரான கடாஷித்தால் பார்க்கப் பட்டவனாய்-ஸத்வ குணம் வளர்ந்தவனாய் -மோக்ஷம் என்று சொல்லப்படும் உத்தம கதியைப் பெற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவன் ஆனேன் –
(ஜாயமானந்தி புருஷம் இத்யாதி -மாக வைகுந்தம் நண்ண எனது மனம் ஏகம் எண்ண வேண்டும் -)
பாஹ்யேஷு விமுகோ நித்யம் வைதிகே அபிமுகஸ் ததா
ஸத்பிஸ் ஸஹைவ நிவஸந் ஸத் கதா ஸ்ரவணே ரதஸ் –21-
எம்பெருமானைத் தவிர மற்ற விஷயங்களில் மற்ற மதத்தில் முழுமையாக ஆர்வம் அற்று -அவ்வாறே வேதத்தினால் அறிவிக்கப் பட்ட எம்பெருமான் திறத்து ஆர்வமுற்ற தத்வ ஞானம் பெற்ற ஸத் புருஷர்களோடு கூடியிருப்பவனாய் பகவத் பாகவதர்களுடைய சரித்ரங்களைக் கேட்பதில் ஊக்கம் கொண்டவன் ஆனேன் –
சதாசார்ய உபசத்தவ் ச ஸாபிலாஷஸ் த்வாத்மகம்
தத்துவ ஞான நிதிம் தத்வ நிஷ்டம் ஸத் குண சாகரம் –22-
உத்தமமான ஆசார்யனை அடைவதில் விருப்பமுடைய நான் பகவத் ஸ்வரூபமாய் பரதத்வ ஞானத்துக்கு இருப்பிடமாய் அந்தப் பரமனிடத்தில் ஆழ்ந்து அபிநிவேசத்தை யுடையராய் நற்குணக் கடலாகத் திகழ்கின்ற ஆசார்யனை வணங்குகிறேன்
ஸதாம் கதிம் காருணிகம் தமாசார்யம் யதா விதி
ப்ரணிபாதந நமஸ்கார ப்ரிய வாக் பிச்ச தோஷயன் –23-
உத்தம சிஷ்யர்களுக்குப் புகலிடமாகவும் கருணை பொருந்தி இருக்கிற அந்தப் ஆசார்யரை ஸாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட முறையில் விநயத்துடன் கூடியவனாய் ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுமவனாய் மென்மையான பேச்சால் சந்தோஷப்படுமவராக -(ஆக்கினேன் நான் 21- ஸ்லோகத்தில் உள்ள அஹம் சொல்லுடன் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும் -)
த்வத் ப்ரஸாத வஸேநைவ தத் அங்கீகார லாபவான்
ததுக்த தத்வ யதாத்ம்ய ஞான அம்ருத ஸூ ஸம்புத–24-
உனது அனுக்ரஹ விசேஷத்தினாலேயே ஆசார்யர்கள் என்னையே அங்கீ கரித்தல் என்னும் பயனைப் பெற்றவனாய் அந்த ஆச்சார்யர்கள் தெரிவித்த சித்து அசித்து ஈஸ்வரன் என்ற மூன்று தத்துவங்களின் உண்மைப் பொருளை அறியம்படியான அமுதத்தைப் பெற்று முழுமை பெற்றவன் ஆனேன் –
(மந்த்ரத்திலும் மந்த்ரத்துக்கு. உள்ளீடான வஸ்துவிலும். மந்த்ரப்ரதனான ஆசார்யன் பக்கலிலும் ப்ரேமம் கனக்க உண்டானால். கார்யகரமாவது.)
(ஆச்சார்யர் சர ரூபி –உலாவும் பெருமாள் -அனைவரும் சேர்ந்து குருவையும் புத்திரனையும் பத்நிகளை வணங்க வேண்டும் -ஸ்வ தந்திரனைப் பற்றினாள் சங்கை வரும் -மனித சரீரம் எடுத்து மேலே தூக்க அவதாரம் -ஸாஸ்த்ர பாணியாக –குருவே பராம் கதி ப்ரஹ்ம தானம் ஸ்தானம் பாராயணம் -அறிய வேண்டுமவரும் அவரே -அமுதூறும் என்னாவுக்கே -பசுர் பக்ஷி மனுஷ்ய வா -வைஷ்ணவ ஸம்ஸ்ரயா –அசுரர்களும் தங்கள் குருவான சுக்ராச்சாயரைப் பற்றி பல பேறு பெற்றார்கள் அன்றோ –கு அந்த காரம் -ரு தந் நிரோகத-ஆச்சார்யர் வேத சம்பன்னன் விஷ்ணு பக்தர் -மந்த்ரஞ்ஞா -அறிந்து ஞானம் பெற்று -மேல் பக்தி பக்தஸ்ய-மேல் கைங்கர்யம் – ஸதா மந்தாரஸ்ய -ஆஸ்ரயித்து உறுதியுடன் இருப்பவர் -ஸித்தம் ஸத் ஸம்ப்ரதாயம் -ஸ்திர நெஞ்சம் கொண்டவர் -ப்ரஹ்ம நிஷ்டம் -அந்தக்காலத்துக்குத் தக்க சாஸ்த்ர உபதேசம் -க்ருத யுகம் வேறே கலியுகம் வேறே -டம்பம் அஸூயை இல்லாதவர் -ஆத்ம குணங்கள் நிறைந்தவர் -விஷயாந்தர வைராக்யம் கொண்டு –தீர்க்க கால பந்து -அத்ர பரத்ர ஸாயி )-
(ஆச்சார்யருடைய திரு மேனி த்யானம் ஒன்றே போதும் –பின்பழகராம் பெருமாள் ஜீயர்-பெரும் திவத்திலும் அன்பு அற்று – -ஆன வடிமை -ஒவ்ஷதை சேவை -நம்பிள்ளை திருமுதுகு சேவிக்கவே -ஆலவட்டம் அருளி நடப்பதே புருஷார்த்தம்)
——-
ரஹஸ்ய மந்த்ர த்ரய ஸாரம் -திரு மந்த்ரம் -அஷ்டாக்ஷரீ -விவரணம்
அர்த்த ரஹஸ்ய த்ரிய தய கோசரம் லப்த வாநஹம்
கேவலம் க்ருபயா மாம் து நயதஸ்தே ப்ரஸாதத--25-
இயற்க்கை இன்னருளால் மட்டுமே என்னையே உய்விக்க வேண்டும் என்று எண்ணி உன்னுடைய அனுக்ரஹத்தினால் அஷ்டாக்ஷரீ த்வய சரம ஸ்லோகம் என்னும் படியான மந்த்ரங்களினால் தெரிவிக்கப் படுகிற பொருளை அடியேன் பெற்றேன்
(பயனன் றாகிலும் பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-)
(ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||)
(உணர்வில் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே)
(த்ரிதயம் – மந்த்ர ரஹஸ்யம்-திருமந்திரம் ப்ராப்ய ப்ரதானம் -ஸாஸ்த்ர ருசி பரிக்ருஹீதம் -ஆத்மாவாலே பேறு -விதி ரஹஸ்யம் -சரம ஸ்லோகம் -ப்ராபக பிரதானம் –ஈஸ்வர ருசி பரிக்ருஹீதம் -ஈஸ்வரனாலேயே பேறு அனுஷ்டான பிரதானம் -அனுசந்தான ரஹஸ்யம் –மந்த்ர ரத்னம் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம்-பிராட்டியாராலே பேறு -)
பிரணவ ஸப்தார்த்தம்
காரணம் ரக்ஷகம் ஸ்ரீசம் சேஷிணம் த்வாம் விசிந்தயன்
த்வ தர்தமித ரேஷாம் ச சேஷிணாம் விநிவர்த்த நாத் –26-
உன்னையே எல்லாமே உலகுக்கும் காரணமாக காப்பவனாக திருமகள் நாயகனாக உணர்வது உன் பொருட்டே எஞ்சிய அதிகாரிகள் எனப்படுமவர்களையும் எனக்குத் தலைவர்கள் அல்ல என்று தள்ளி வைப்பதனால் உன்னையே தலைவனாக எண்ணி உள்ளேன் –
(ஸர்வார்த்தம் -ஸர்வ பல பிரதத்வம் –குலம் தரும் இத்யாதி -ஸாயுஜ்யம் -பிரகர்ஷமாக ஸ்தோத்ரம் -பிரணவம் –அகாரம் சகல வாசக காரணம் -உபாதான நிமித்த சஹகாரி காரணம் அவனே -ஆதி பகவன் முதற்றே உலகு -காரணமான அவனே ரக்ஷகன் -நயி பலான ஸாமர்த்யம் –காக்கும் இயல்பினன் கண்ணன் -அவள் மார்பில் நின்று பிரியாதாப் போல் -ஸ்ரீபதி –இதனால் சேஷியாக அறிவோம் -தாதர்த சதுர்த்தி -அநந்யார்ஹ சேஷி –காரணந்து த்யேய–ததர்த்த உன் பொருட்டு ஆன பின்பு -இதரர்கள் சேஷிகள் அல்ல என்று தள்ளியும் விட வேண்டும் அன்றோ –
ஒன்றென, பலவென, அறிய அரும் வடிவினுள் நின்ற,
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் எனும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து, உள்ளி நும் இரு பசையறுத்து,
நன்று என நலம் செய்வது, அவனிடை நண்ணினம் நாமே!)
மகாரார்த்தம்
அநந்யார்ஹம் ஸ்வதோ நித்யம் ப்ரக்ருதியாதி விலக்ஷணம்
பஞ்ச விம்சம் சிதா நந்த ஸ்வரூப குண ஸம்யுதம் –27-
இயல்பாகவே மற்றை எவர்க்கும் அடியவனாக இருக்க இயலாதவனாய் எல்லாக் காலத்திலும் இருப்பவனாய் ப்ரக்ருதி தொடக்கமான இருபத்து நான்கு தத்வங்களைக் காட்டிலும் வேறுபட்டவனாய்-இருபத்து ஐந்தாம் தத்வமாய்த் திகழ்கின்றவனாய் -ஞான ஆனந்தங்களைத் தம் ஸ்வரூப குணங்களாகக் கொண்டவனாய் உள்ளேன் (இவ்வர்த்தங்களை மேல் உள்ள ஸ்லோக அர்த்தங்களுடன் கூட்டுக -)
(மதி ஹர்ஷ மன ஞாநே மந அவ போதனே மூன்று தாதுக்களும் ஞான ஆனந்த ஸ்வரூபம் -தர்ம தர்மி ஞானங்கள் இரண்டையும் காட்டும்)
நமஸ் ஸப்தார்த்தம்
அஹமர்த்த மணும் நித்யம் ஆத்ம வர்க்கம் நிரூப்ய ச
தஞ்ச ஸ்வ அநர்ஹதா ஸித்தே அஹம்தா மமதா உஞ்சிதம் –-28-
நான் என்ற பதத்தால் அறியப் படுமவனாய் மிகச் சிறியதான –அணு -பரிமாணம் உடையவனாய்- எல்லாக் காலத்திலும் இருப்பவனாய் -ஜீவாத்ம வர்க்கத்தைக் குறித்து விவரமாக அறிந்து கொண்டு -இயல்பாக ஸ்வா தந்தர்யம் அற்றவனாய் இருக்கும் காரணத்தினால் -அந்த ஆத்மாவை (-அஹம்தா மமதா உஞ்சிதம் –) -நான் -என்ற ஸ்வா தந்த்ர பாவனையும் எனது என்ற மமகார பாவனையும் அற்றவன் என்று அறிந்து கொண்டேன் -(இவ் வர்த்தங்களை இனி வரும் ஸ்லோக அர்த்தங்களுடன் கூட்டுக-)
(பக்தாஞ்சலி -வணக்கம் -நம -என்றும் -அகண்ட நமஸ் -சகண்ட நமஸ் -பிரித்த நமஸ் -நான் எனக்கு அல்லேன் -நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து –அஹந்தா – கீழ் உகாரம் பிறருக்குத் அல்லேன் -இங்கு நான் எனக்கும் அல்லேன்)
ஸ்வ ரக்ஷணேப் யஸ்வ தந்த்ரம் த்வத் ரக்ஷ யத்வ நிரூபிதும்
விஜ்ஞாயா த்வதுபாயத்வாத் அநந்ய சரணஸ் ததா –29-
தன்னைத் தான் காப்பாற்றிக் கொள்வதிலும் ஸ்வா தந்தர்யம் அற்றவனாய் உன்னால் காக்கப்பட வேண்டியவனாய்த் திகழ்கின்றேன் என்பதை அறிந்து நீயே உபாயமாதலால் மற்றவர்க்கும் அடிமையாகாமை எவ்வாறோ அவ்வாறே மற்றவரைச் சரணமாகவும் அடையாதவன் ஆனேன் –
(பெருமாளுக்கு ஊணைப் பரிப்பது போல் நானே நம்மை ரக்ஷிப்பது -கழுத்துக் கட்டி போல் -விலைப்பாலைப் போல் -அவன் ரக்ஷணம் முலைப் பாலைப் போல் -கடற்கரையில் பெருமாள் வில்லும் கையுமாய் முதலிகளை ரஷித்து அருளிய விருத்தாந்தம் -அகாரத்தால் அவன் ரக்ஷகன் என்பது நிரூபகம் -நமஸ்ஸில் நாம் ரஷ்ய வர்க்கம் என்று நிரூபகம்-)
(சம்பந்த உபாய உணர்த்தி -தாய் தோழி தலைமகள்-பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையும் -பேற்றுக்குத் த்வரிக்கையும் உண்டே – -உபாயம் க்ருஹம் ரக்ஷணம் -ஸாதனம் மார்க்கம் -ஆறு எனக்கு நீயே என்று தந்து ஒழிந்தாய் -ஸித்த உபாயம் –களை கண் மற்றிலேன் -என் நான் செய்கேன் -யாரே களை கண் -என்னை என் செய்கின்றாய் -ஆத்ம ரக்ஷணம் -மோக்ஷ பிரதம் -உஜ்ஜீவனம் இதுவே)
நாராயண ஸப்தார்த்தம்
நித்ய நிஸ் ஸீம நிஸ் ஸங்க்ய விபூதிநாம் உபாஸ்ரயம்
தத் அந்தர்யாமிணம் தேவம் நாதம் நாராயணம் ப்ரதி –30-
நித்தியமாய் -எல்லையற்றதாய் -கணக்கற்றதாய் -விளங்கும் எல்லாமே பதார்த்தங்களுக்கும் ஆதாரமானவனாய் -அவ்வவ் பதார்த்தங்களுக்குள் புகுந்து நியமிப்பவனாய் அப்பதார்த்தங்களின் தோஷங்கள் தனக்குத் ததாதி பிரகாசிப்பவனாய் நாயகனுமாய் நாராயணனைக் குறித்து –(கைங்கர்யம் செய்ய எண்ணுகிறேன் -யென்பதை 31 ஸ்லோகத்தோடு கொண்டு கூட்டுக )
(தன்னுள் அனைத்துலகும் நிற்க -ஆதாரம் நெறிமையால் தான் அவற்றுள் நிற்க -அந்தர்யாமி வாத்சல்யம் நியமனம்-தேவம் -விளையாட்டாக பிரகாசமாய் உள்ளவன் –அழுக்கு உடம்புக்குள் இருந்தாலும் -பரஞ்சுடர் உடம்பாய் அழுக்கு உடம்பாய் -விருத்த விபூதிகத்வம் -நாரணன் -முழு ஏழு உலகுக்கும் நாதன் -வேத மயன் -வண் புகழ் நாரணன் -வாழ் புகழ் நாரணன்-)
(ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் -தாங்குவது ஸங்கல்ப ஏக தேசத்திலே –நான் எல்லாப் பொருள்களுக்கும் இருந்தாலும் நானே ஆதாரம் -பஸ்ய மே யோக ஐஸ்வர்யம் -கீதையில் -)
(பஹிர் வியாப்தி -ஆதாரம் -அந்தர் வியாப்தி -நியமனம் -சரீராத்மா பாவம் -அகடிகடநா ஸாமர்த்யம்)
நித்யம் ஸர்வத்ர நிகிலா வஸ்தம் நிரவசேஷதஸ்
ப்ரீதி காரித கைங்கர்யம் நிரதம் சிந்தயாம் யஹம் –31-
எல்லாக் காலத்திலும் கைக் கொள்ளத் தக்கதாய் இடப்பாகு பாடின்றி எல்லா இடங்களிலும் செய்யத் தக்கதாய் எல்லாமே நிலையிலும் செய்யத் தக்கதாய் ஒன்றுமே விடாமல் அனைத்தும் விதமுமாய் -மகிழ்ச்சி மேலீட்டால் செய்யும் கைங்கர்யத்தை இடைவிடாமல் அடியேன் செய்ய வேண்டி சிந்திக்கிறேன் –
(ஆய -பிரார்த்த நாயாம் சதுர்த்தி -ஒழிவில் காலம் எல்லாமே உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -பொரு சிறைப்புள் உகந்து ஏறி -ப்ரகர்ஷயிஷ்யாமி -)
(நிரதம்-நித்ய பிரார்த்தனை -இங்கு -உனது தாமரைக் கண்களால் நோக்காய் -அங்கும் அண்டர் -பிரியாமலேயே இருந்தாலும் தண்ணீர் தண்ணீர் என்று சொல்லும்படியான விலக்ஷணம் உண்டே இவனிடம் – பிரார்த்தனை -சிந்தனை -மாநாஸம் –அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -கைங்கர்யத்தில் நேராக –வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம்-3-3–அவரிடம் பிரார்த்தனை இதில் இல்லை -அது 6-10-10-கைங்கர்ய பிரார்த்தனை -ப்ராப்ய நிஷ்கர்ஷம்-எம் மா வீட்டில் – அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -இதில் இருந்தாலும் பிரார்த்தனை -3-3-எம்மா வீட்டில் எம்மா வீடு -2-9-4-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே -ஞப்தி ஞானம் –முக்தி பிரார்த்தனை -அப்புறம் விருத்தி -கைங்கர்யம் செய்வது-)
இத்தம் சேதன சாமான்ய ரூப அந்தர் பாவத ஸ்வத
ஸ்வாத்ம நேப் யநு சந்தானம் ததைவ விததாம் யஹம் –32-
இவ்விதமாகத் தெரிவிக்கப் பட்டுள்ள எல்லாமே ஜீவன் ராசிகளுடைய ஸ்வரூபத்தில் அடியேனும் அடங்கி யுள்ளமையால் சுயமாகவே அதே பிரகாரத்தில் அடியேன் செய்ய வேண்டிய மந்த்ரார்த்த அனுசந்தானத்தையும் செய்து வருகிறேன் –
அகாரார்த்தோ அர்த்த பூதோ அஹம் அநந்யார்ஹோசித பர
ஸ்வார்த்ததா ரஹிதோ நித்யம் அநந்ய சரணஸ் ததா —33-
அகாரார்த்த வாஸ்யனான விஷ்ணுவுக்கு உரியதான கைங்கர்யம் செய்யும் அடியேன் மற்றவர்களுக்கு அல்லாது அவனுக்கே ஆட் செய்பவனாய் -ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறு பட்டவனாய் -தன்னலம் அற்றவனாய் -எப்போதும் அவ்வாறு வேறு காப்பாளர்கள் அற்றவனாய் -நாராயணனுக்கே அடியவன் ஆவேன் -(இவ்வர்த்தம் கீழ் ஸ்லோகார்த்தத்துடன் கொண்டு கூட்ட வேண்டும் )
நாராயணாய நாதாய கிங்கரஸ் ஸ்யாம் நிரந்தரம்
இதி மந்த்ரம் ஸ்வ யாதாத்ம்ய பரமே வ அநுஸந்ததே –34-
தலைவனான நாராயணனே எப்பொழுதும் அடிமையாய் இருப்பன் என்னும்படியான இப்பொருள் அஷ்டாக்ஷரீ மந்த்ரத்தை ஜீவாத்ம ஸ்வரூப நிர்ணயம் செய்வதாக எண்ணுகிறேன் –
(தேரோட்டி-அவன் முன்பே இருந்தாலும் – -ஓங்காரம்-அகாரம் முன் இருந்தாலும் -உபதேசம் மகாரத்துக்கு -ஆத்ம பரமான உபதேசம் தானே –ஸ்யாம் –இருக்கக் கடவேன்-)
(அநந்யார்ஹ சேஷத்வமும் அநந்ய போக்யத்வமும் -அநந்ய உபாயத்வமம் காட்டி அருளியவாறு -உபேயத்வமுமே பிரதானம் -கருமுகை மாலையை சும்மாட்டு ஆக்குகிறோம் -உபாயமாகக் கொள்ளும் பொழுது -அங்கும் த்ரிவித பக்திகளும் பிரார்த்தித்துப் பெற வேண்டும் -கத்யத்தில் பார்க்கிறோம் -பக்தி யாரம்ப விரோதி போய் பக்தி செய்து -மேலே மேலே வளர்த்துக் கொள்கிறோம் -எல்லாமே அவனது இன்னருளாலேயே -அங்கும் சேர்ந்து இருந்தால் தான் ஸூகம் -இல்லையேல் துக்கம் -பிரியாமல் இருக்கக் கூடாதே என்ற படபடத்த எண்ணமே பர பக்தி -அகலகில்லேன் இறையும் என்று அவளுமே இருக்க நாம் இருப்பதைச் சொல்ல வேண்டாமே -கர்மாதீனம் அல்ல -விஷய வைலக்ஷண்யம் -தர்சனம் கிட்டிய பின்பும் சாமானாகாரம் -ராமனாகவும் நரஸிம்மனாகவும் அங்கும் மாநஸமாக ஸேவிக்கலாமே -)
த்வய மந்த்ர -மந்த்ர ரத்ன விவரணம்
ஸ்ரீ மந் நாராயண சரணவ் சரணம் ப்ரபத்யே -ஸ்ரீ மதே நாராயணாய நம
சித்தம் பிரகாசித ஸ்வாத்ம யதாத்ம்ய ஸ்வ உசிதம் அஹம்
வ்ருத்திம் ப்ரவ்ருத்திம் நிச்சிதய த்வயேந விததாமி தாம் –35-
இவ்வாறாகத் தெரிவிக்கப்பட்ட ஆத்மாவின் உண்மை ஸ்வரூபமுடைய நான் என்னுடைய ஆத்ம ஸ்வரூபத்துக்குத் தகுந்ததான அனுஷ்டானத்தையும் வாழ்வாதாரத்தையும் த்வய மந்திரத்தால் நிர்ணயித்து அந்தப் சரணாகதியைப் பின்பற்றுவேன் –
(ந வேதாந்தாத் ஸாஸ்த்ரம் –த்வய மந்த்ரம் ரத்னம் -ஆரோக்கியத்துக்கு ஸத்வ குணம் –இதம் பூர்ணம் இத்யாதி வாக்கியம் நடுவிலே –அர்ச்சையில் சரணாகதி -குண பூர்ணம் இங்கு தானே –என்பதும் இதனாலேயே –சர்வம் பூர்ணம் ஸஹோம் -குணங்கள் உடைய ஸ்ரீ மன் நாராயணனைப் பற்றி குணங்களுடைய மிதுனத்தில் கைங்கர்யம்-திருமந்த்ரத்தால் ஸ்வரூபம் அறிந்த பின்பு -ஆத்ம யாத்ரைக்கும் தேஹ யாத்ரைக்கும் –வ்ருத்திம் ப்ரவ்ருத்தம் -கற்க கசடற -ஞானம் -கற்ற பின்பு நிற்க அதற்குத் தக -வ்ருத்திம் ப்ரவ்ருத்தம் -உசிதமான வற்றையே கடைப் பிடிக்கிறேன் என்றபடி –)
(அநந்யார்ஹ சேஷத்வம் -ஞானம் -பிரணவம் -பெற்ற பின்பு -அநந்ய உபாயத்வம் -அவனைப் பற்றி -நமஸ் –அநந்ய போக்யத்வம் -அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் -நாராயணாய நமஸ் வ்ருத்தி பூர்வ வாக்கியம் -நாராயணாய வ்ருத்தி -உத்தர வாக்கியம் -)
த்வாம் ஸ்ரிதா நிகிலைஸ் ஸேவ்யா ஸ்ரிய கடக பாவத
ஸமாஸ்ரித்ய தயா நித்ய யுக்தம் வாத்சல்ய சாகரம் —36-
(எம்பெருமானே -எப்போதும் உன்னையே ஆஸ்ரயித்து இருப்பவளாய் –
அனைவராலும் ஆஸ்ரயிக்கத் தகுந்தவளான ஸ்ரீ மஹா லஹமியை புருஷகார ரூபமாகப் பற்றி –
அவளுடன் நித்யம் கலந்து இருப்பவனாய் –
வாத்சல்ய குணக்கடலாய் -தோஷ போக்யத்வம் -)
ஸ்வாமிநம் சீல ஜலதிம் ஸூலபம் ஸூகமம் ததா
ஸர்வஞ்ஞம் ஸக்தி ஸம்பந்தம் ஆப்த காமஞ்ச சேஷிணம் –37-
உலகுக்கு நாயகனாய் ஸ்வாமித்வம் –
சீல குண பூர்ணனாய் -ஸுசீல்யம் –
எளிதாக-துன்பப்படாமல் –
அறியக் கூடியவனாய் -ஸுலப்யம் –
எளிதாகப் பற்றக் கூடியவனாய் -ஸூக மத்வம் –
அவ்வாறே எல்லாமே அறிந்தவனாய் -ஸர்வஞ்ஞத்வம் –
பலவிதமான சக்திகள் உடையவனாய் -ஸர்வ சக்தித்வம் –
விரும்பும் பயன்களை அனைத்தையுமே பெறத் தக்கவனாய் -ஆப்த காமத்வம் –
அடியவர்களின் கைங்கர்யங்களை ஏற்றுக் கொள்பவனாய் -ஸர்வ சேஷித்வம் -)
(1-நிகரில் புகழாய் என்று வாத்சல்யத்தைச் சொன்னபடி; (2). உலகம் மூன்று உடையாய் என்று ஸ்வாமித்துவத்தைச் சொன்னபடி: (3) என்னை யாள்வானே என்று சௌசீல்யத்தைச் சொன்னபடி; (4) நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே என்று சௌலப்பியத்தைச் சொன்னபடி.ஆக இந்த நான்கு குணங்களும் ஆச்ரயண சௌகர்யாபாதகங்களாகையாலே இவை இங்கு வரிசையாக அநுசந்திக்கப் படுகின்றன.)
காரணம் கருணா பூர்ணம் அசேஷ பல தாயகம்
த்வாம் விநிச்சித்ய நிர்தோஷ நித்ய மங்கள ரூபிணம் –38-
(அனைத்துக்கும் காரணமாய் -ஸர்வ காரணத்வம்
நிரம்பிய கருணை என்னும் குணத்தால் அனைத்தும் பயன்களையும் கொடுப்பவனான -பல தாயகத்வம்
நிரம்பிய உன்னை
தோஷங்கள் தட்டாது அனைவருக்கும் புகலிடமாக இருப்பவனாக நிச்சயித்து
(-நிர்த்தோஷ நித்ய மங்கள-கல்யாண குணங்களைச் சொல்லி -உபய லிங்க-அகில ஹேய ப்ரத்யநீக கல்யாண ஏக குண )
சரணவ் தவ ஸர்வாத்ம ஸாதாரண ஸூபாஸ்ரயவ்
அநிஷ்ட விநிவ்ருத்யர்த்தம் இஷ்ட ப்ராப்யர்த்த மேவ ச –39-
எல்லாமும் ஆத்மாக்களுக்கும் பொதுவான மங்களகரமான உன் திருவடிகளை(பொது நின்ற பொன்னம் கழல்கள் அன்றோ ) எல்லாத் துன்பங்களும் விளக்குவதன் பொருட்டு -அநிஷ்ட நிவ்ருத்தி –
விரும்பிய மோக்ஷம் அடைவதற்காக -இஷ்ட ப்ராப்தி-
உன்னையே உபாயமாக என்னவனாய்)
உபாய பாவாத் சரணம் ப்ரபத்யே அத்யாவசாயவான்
இயம் ப்ரபத்திர் விஸ்வாஸ பூர்வக ப்ரார்த்தநா மதி –40-
(உன்னையே உபாயமாக என்ன்னவனாய்
த்ருடமான விஸ்வாஸத்தை உடையவனாய்
சரணமாகப் பற்றுகிறேன்
நிலையான விஸ்வாஸத்தோடு விரும்பியதைப் பெறும்படியான அறிவே இந்த சரணாகதி யாகும்)
தஸ்மான் மமாபி முக்யார்த்தம் ப்ரபத்திரிய மித்யத
த்வமே வோபாய பூதஸ் ஸந் பாஹி மாம் கருணாகர –41-
ஓ ஸ்வாமி இவ்வாறு செய்யப்பட்ட சரணாகதி அடியேன் உனக்கும் முகம் கோணாமல் நடப்பவன் என்பதைத் தெரிவிப்பதற்கே -ஆகையால் இவ்வாறு கூறப்பட்டதையே கொண்டு நீயே ஸாஷாத் ரக்ஷகனாய் கருணைக் கடலாய் என்னைக் காத்து அருள்வாய் –
(ஷேம க்ருஷிகன் -ஒட்டி வந்து தனி நெஞ்சை வஞ்சித்து இருக்க- -இசைவித்து அடியேனை அத்வேஷம் மாற்றி ஆபிமுக்யம் பண்ண வைத்து அருளியதால் -இத்தை அறிவிப்பதே சரணாகதி -)
ஸர்வ அதிசயத் ஆகார ஸ்வரூப குண ஸம்பதா
ஸ்ரியா நித்யம் ஸஹ ஸீநம் தேவ தேவம் ஜகத் பதிம் –42-
எல்லாரைக் காட்டிலும் மேன்மையான ஞானம் ஆனந்தம் முதலானவற்றால் நிரம்பிய ஸ்வரூபம் மற்றும் சவுந்தர்யம் காருண்யம் வாத்சல்யம் முதலான குணங்கள் நிரம்பிய பிராட்டியாருடன் வீற்று இருந்து -தேவர்களுக்கும் தேவர் போலே ஜகத்துக்கு நாயகனான
(உத்தர வாக்யார்த்தம்-ஸ்ரீ மதே நாராயணாய நம -அஹம் ஸர்வம் கரிஷ்யாமி-ஸஹ சீதயா -மிதுனத்தில் கைங்கர்யம் -ப்ராப்யம் மிதுனம் -ஸ்வாமித்வம் இங்கும் உண்டு -கீழே ஸ்வாமித்வம் -கைவிடமாட்டார் -உபாயமாக்கப் பற்றலாம்-ஸ்வாமி சொத்து -இங்கு -இங்கு ஸ்வாமித்வம் -கைங்கர்யம் உகந்து கொள்ளும் ஸ்வாமி-ஸ்வாமி -தாஸ்யம் இங்கு-மனிசர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவனான தேவாதி தேவன் )
பவந்த மநு பூயாஹம் ஆஹ்லாத பரி ப்ரும்ஹித
நித்யம் ஸர்வா த்ரிகம் ஸர்வ அவஸ்த்தம் ஸர்வ விதம் ததா –43-
தேவர்களுக்கும் தேவர் போலே ஜகத்துக்கு நாயகனான உன்னைக் கண்டு அனுபவித்து அடியேன் ஆனந்தம் அடைந்தவனாய் -எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எல்லா நிலைமையிலும்
ஐஸ்வர்ய கைவல் யோத் தீர்ணம் த்வத் ஆனந்தாத் விலக்ஷணம்
லஷ்மீ போகாத் விஸிஷ்டம் ச கைங்கர்ய ஸூகமாப் நுயாம் –44-
எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எல்லா நிலைமையிலும் பலதரப்பட்ட ஐஸ்வர்ய கைவல்ய அனுபவங்களை விஞ்சியதாய் உனக்குக் கிட்டும் மகிழ்ச்சியைக் காட்டிலும் வேறானதாய் திருமகளுக்குக் கிட்டும் ஆனந்தத்தைக் காட்டிலும் சிறந்ததாய் இருக்கும் கைங்கர்ய ஸூகத்தை அடைவேனாக –
பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம் -இப்பால் கைவளையும் மேகலையும் காணேன் -ஐஸ்வர்யம் கைவல்ய த்யாஜ்யம் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை -விலக்ஷணம் -இது தானே -அத்திரு அவனைப் பற்றும் -இத்திரு இருவரைப் பற்றும்-அத்திரு திருமார்பினைப் பற்றும் இத்திரு திருவடியையே பற்றும் –
தத்ர ஸ்வார்த்தத்வ ஸம் பூதம் அஹம் தாமம தோஜ்ஜிதம்
ப்ரதி பந்தம் அஸேஷேண விநிவர்த்தய மாதவ –-45-
ஓ மாதவ ஸ்வார்த்த புத்தியுடன் கூடிய அஹங்காரம் மமகாரங்களின் ஸம்பந்தம் அற்றதான உன் கைங்கர்யத்துக்குத் தடையான கெட்ட நோக்கை முழுவதுமாக நீக்குக –
(கைங்கர்யத்தில் களை அறுக்கிறது -பிரபல தர விரோதியும் போக வேண்டுமே -மற்றை நம் காமங்கள் மாற்று -படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே –தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே)
இத்தம் த்வயார்த்தம் ஸம் சித்ய பூர்ண பிரபதநாத் மகம்
தத்ர த்வதாராவ்ல் பண்யம் ஜாநே ஸ்லோக விதாநத–46-
இவ்வாறாக முழுமையாக சரணாகதியைத் தெரிவிப்பதான த்வய மந்திரத்தின் பொருளைப் பாவித்து அந்த சரணாகதி விஷயத்திலேயே உனக்கும் மிகுந்த ஆதரபுத்தி உள்ளது என்று நீயே சரம ஸ்லோகத்தில் அறுதியிடுவதைத் தெரிந்து கொண்டேன் –
——-
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச —
ஸ்ரீ கீதா சரம ஸ்லோக விவரணம்
(தியாகத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் ஸ்வீகாரம் செய்வது நம் கர்தவ்யம் -மேல் அவன் கர்தவ்யம் -பாபங்கள் தன்னடையே போம் -சோகப்படாதே -இதுவும் விதி -)
(மன்னு மணவாள அண்ணலொடு
சேமமுடன் வைகுந்தம் சென்றக்கால்
மாம் என்று தொட்டுரைத்த சொல்லும்
துயம் தன்னினாழ்பொருளும் எட்டெழுத்தும் இங்குரைப்பாரார்
நாயனார் இவ்வுலகைவிட்டு பரமபதத்தை அடைந்தபின் ரஹஸ்யத்ரயத்தின் (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) சரமஸ்லோகத்தில் எம்பெருமான் தன் ஹ்ருதயத்தைத் தொட்டு “மாம்” (நானே காப்பவன்) என்று சொன்ன ஆழ்ந்த பொருளை இனி எடுத்துரைக்கவல்லார் யார் உளர் ? என்று சோகிக்கிறார். பிள்ளை லோகாசார்யரே இப்படி சோகத்தில் ஆழும்படியானது நாயனாரின் மகிமையாகும்.)
அபீஷ்ட உபாய ரூபேண ஸாத்யாநாம் சிர காலத
ஸ்வ கர்ம ஞான பக்தீ நாம் ஸ்வரூப பரி சோதநாத் –47-
விரும்பிய மோக்ஷ உபாயத்துக்கு சாதனமாக பண்டைக் காலத்தில் இருந்து கைக் கொள்ளப் பட்ட கர்ம ஞானம் பக்தி யோகங்களின் இயல்பைத் பரிசீலித்த போது –
ஸ்வ விளம்ப அஷமத்வேன ஸ்வாகிஞ்சன்ய விரோதத
ஸ்வ அனுபாயத்வ நிஷ்கர்ஷாத் ஸர்வ ஸம்த்யஜ்ய தூரத –-48-
தான் -ஒரு ஜீவாத்மா -கால தாமதத்தைப் பொறுக்க மாட்டாமையாலும் -தன்னால் அவற்றைக் கடைப் பிடிக்க ஆற்றல் இல்லாமையாலும் பரதந்த்ரனான தனக்கும் இவைகள் உபாயம் அல்ல என்று நிச்சயித்துக் கொண்டதாலும் மேற்கூறிய உபாயங்கள் அனைத்தையுமே அடைய ஒதுக்கி
த்யாகம் ஸ்வீகார வித்யங்கம் விநிசிசத்ய ச மாம் தத
தட் ஸாரத்யே ஸ்தி தத்வேன ஸூ சீலம் பக்த வத்சலம் –-49-
மேற்கூறிய உபாயங்கள் அனைத்தையுமே அடைய ஒதுக்கி இவ்வாறு உபாயாந்தரங்கள் விடுவதை சரணாகதியைப் பற்றுவதற்குப் பூர்வ அங்கமாக -தகுதி உடையதாக -எண்ணி பின்பு -உனக்குத் தேரோட்டியாய் இந்ததனால் சீலமும் வாத்சல்யம் உள்ளவன் என்றும்
(நிவ்ருத்தி ரூபமாய் இருப்பதால் எதிர்பார்ப்பு இல்லாதது-அனைத்தையுமே விட்டே ஸாஷாத் தர்மமாகப் பற்ற வேண்டும்-ஸ்நாத்வா புஞ்சீத போல் இது -புக்த்வா -விளக்கு அணைந்த பின்பும் ஒருவேளை சாப்பிட்டால் சாந்த்ராயண பிராயச்சித்தம் செய்ய வேண்டும் -என்பது போல் அல்ல )
அநந்ய அபேக்ஷ ரூபத்வாத் அத்விதீயம் அநுத்தமம்
அநிஷ்ட த்வம்ஸ நேதஷம் உபாயம் பரிசிந்தயன் -50-
மற்றுமோர் எவருடைய உதவியையும் எதிர்பாராத ஒரே சாதனமாக என்றும் ஓத்தார் மிக்கார் இல்லாதவன் என்றும் பாபங்களைப் போக்குவதில் ஸமர்த்தன் என்றும் திகழ்கிற என்னை
(அபின்ன நிமித்த காரணம் பர ப்ரஹ்மம் ஒருவனே -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –சத் ஏவ-ஸோம்ய ஏக மேவ அத்விதீயம்-வேதாந்தத்தில் இவ்வாறு அத்விதீயம் -உபாய உபேயமும் அவனே ரஹஸ்ய த்ரயத்தில் -)
மநோ வாக் காய சம்பன்ன கதித்ரய கோசரம்
வ்ரஜநம் ஸர்வ பாவேந குரு விஸ்வாஸ பூர்வகம் –51-
என்னை ஸாஷாத் ஸாதனமாகப் பற்றி சிந்தை சொல் செயல்களால் கிடைக்கப் பெற்ற மூன்று விதமான பற்றுதல்களை குறிக்கும் சரணாகதியை ஆழ்ந்த நம்பிக்கையுடன் முழுமையாக கடைப் பிடிப்பாயாக –
(ஸர்வ பாவேந -உபாய ப்ராப்ய ப்ராபக பாவனைகள்-தாரக போஷக போக்யம் எல்லாமே அவனே-ப்ரார்த்தனா மதி சரணாகதி -புத்தி பூர்வகமாக செய்ய வேண்டுமே-கத்யர்த்தா புத்த்யர்த்தம் -அவன் கொடுத்த மூன்றாலும் மனம் மொழி மெய் -மூன்றாலும் செய்வது நல்லது )
அஹம் ஸ்வாதீந ஸர்வாத்ம பந்த மோக்ஷ விதிக்ரம
ஸார்வஞ்ஞ ஸர்வ சக்தித்வ பூர்த்தி ப்ராப்தி தயோததி —52-
என் வசத்தில் இருக்கும் எல்லாமே ஜீவராசிகளுடைய கருமத்துக்கு வசப்படுதல் விடுவித்தல் என்ற தொழிலை யுடையவனாய் ஸர்வஞ்ஞத்வம் ஸர்வசக்தித்வம் உடையவனாய் குறைவற்றவனாய் எல்லோருடனும் நித்ய சம்பந்தம் உடையவனாய் கருணை யுடையவனாய்
(கர்மாதீனமாக பந்தம் அளிப்பதும் ரூபாதீனமாக மோக்ஷம் அளிப்பதும் அவனே)
மயி நிஷிப்ய கர்தவ்யம் தத்ர நிர்பர முஜ்ஜ்வலம்
த்வாம் ப்ரபத்தி க்ரியா முத்ரா முத்ரிதம் மத் பராயணம் –-53-
இது போன்ற கல்யாணக் குணக்கடலான என்னை –
காப்பாற்றும் பொறுப்பை என்னிடத்தில் வைத்துக் இனி அவ் விஷயத்தில் சிந்தை அற்றவனாய் -ஐயம் தீர்ந்து சந்தோஷத்துடன் சரணாகதியைக் குறிப்பிடும் அஞ்சலி முத்திரையுடன் என்னையே பரம ப்ராப்யமான எண்ணின நீ
(பகவானுக்கு அபய முத்ரா முத்ரிதம் -நமக்கு அஞ்சலி முத்ரா முத்ரிதம்-ஸக்ருதேவ -தவாஸ்மி -உனக்கு உரியேனான என்னை-கைவிடாமல் அடியார்க்கு ஆட்க்கொண்டு அருளுவதே பாராயணம் )
பூர்வ உத்தர ஆராப்தா கௌக விபாகேன விசேஷிதாத்
நிரஸ்த சங்க்யாத் துர் மோசாத் நிகிலாத் பாப சஞ்சயாத் -54-
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்னுமா போலே செய்த பிழைகளும் இனிச் செய்யப் போகுமவையும் -தற்போது பயனை அனுபவிக்குமவையுமாக வகை செய்யப்பட்ட எண்ணில் அடங்காதவையாய் தன்னால் விடுவித்துக் கொள்ள இயலாததான எல்லா பாபங்களின் கூட்டத்தில் இருந்து
(அக ஒக-பாபக் கூட்டங்கள் –ஸர்வ பாபேப்யோ-பூர்வ -ப்ராரப்தம் -ஆரப்தம் அநாரப்தம் இரண்டு வகைகள் –வர்த்தமான சரீர ஆரப்தம் -சரீராந்தர ஆரப்தம் -இவை பூர்வாகங்கள்–ஆர்த்த ப்ரபன்னனுக்கு மட்டுமே இந்த சரீர ஆராப்த கர்மங்களையும் போக்கி உடனே பேற்றை அளித்து அருளுகிறவன் -ப்ராப்தி ரோதகம்-பேற்றுக்குத் தடைகள் -உபாயாந்தர நிஷ்டனுக்கு பல பல சரீரங்கள் கழித்தே போக்கி -திருப்த ப்ரபன்னனுக்கு வர்த்தமான சரீராவஸானத்தில் பேற்றை அளித்து அருளுகிறான் –பிரகிருதி சம்பந்தம் வாசாநா ருசிகளால் உத்தராகங்கள்-ஒன்றுமே செய்யாதவன் உத்தமன் -பண்ணி பச்சாதாபம் செய்து பிராய்சசித்தம் செய்பவன் மத்யமான் -அதமன் இவை இல்லாதவன் -லகுதண்டம் இவனுக்கு உண்டாம் -சரணாகதி செய்யாதவனுக்கு குரு தண்டனை உண்டாம் -)
முக்தமேவ கரிஷ்யாமி ஸங்கல்பா தேவ மாமகாத்
கதம் லபேதா வஸ்தானம் தமஸ் சமுதிதே ரவவ் –55–
எண்ணில் அடங்காதவையாய் தன்னால் விடுவித்துக் கொள்ள இயலாததான எல்லா பாபங்களின் கூட்டத்தில் இருந்து வீண் போகாத என் சங்கபத்தனால் விடுவித்து அருளுவேன் -கதிரவன் குண திசைச் சிகரம் வந்தடைந்த பின்பு இருள் எப்படிப் நிலைத்திருக்கும் –
(புண்ய பாப ஈஸ்வர ப்ரீதி கோப-இவை அத்ருஷ்டம் -நாம் அறியாமல் -சங்கல்ப லேசத்தாலேயே போக்கி அருளுகிறான் -ஏவ -நீயும் வேண்டாமே நான்முகன் வேண்டாமே -தன்னடையே போகுமே)
தஸ்மாத் உபாய சாத்யத்வ துஷ் கரத்வ விசேஷத
பல ஸித்தேர் விலம்பாச் ச ந சோகம் கர்த்தும் அர்ஹஸி –56–
ஆகையால் கர்ம ஞானனாய் முதலான உபாயங்களைப் பற்றுமதால் மட்டுமே மோக்ஷம் என்றோ அவைகளை முழுமையாக நான் கடைப்பிடிக்க முடியவில்லையே என்றோ பயனாகிய மோக்ஷம் காலதாமதமாக எப்போது கிடைக்குமோ என்றோ நீ வருந்தத் தக்கது அன்று-
(ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆகத் தந்தொழிந்தாய் உனக்கு ஓர்கைம்
மாறு நான் ஒன்று இலேன் எனது ஆவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை
நாறு பூந் தண் துழாய் முடியாய் தெய்வ நாயகனே)
பகவான் விரும்பிய உபாயம் சரணாகதியே
இத்தம் பார்த்தம் சமுத்திஸ்ய விதாநாத் சரம உதிதாத்
பவதோ பஹு மந்தவ்யாம் ப்ரபத்திம் அநு சந்ததே —57-
இவ்வாறாக அர்ஜுனனைக் குறித்து சரம ஸ்லோகத்தில் அறுதியிடப்பட்ட பிரபத்தி எனப்படும் சரணாகதியை நீயே விதித்தமையால் உனக்கும் அதுவே அபிமதமான விஷயம் என்று எண்ணி இருக்கிறேன் –
(மந்த்ர ரஹஸ்யம் வேத-ஸாஸ்த்ர ருசி- பரிக்ருஹீதம் -ஞானத்தில் பேறு -மந்த்ர ரத்னம் த்வயம் பிராட்டியாலே பேறு -ஆச்சார்ய ருசி- ரிக்ருஹீதம் -சரம ஸ்லோகம் -அவனாலே பேறு -ஈஸ்வர ருசி-பரிக்ருஹீதம்-அங்க பிரபத்தி -கீதையில் -பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க -ஸ்வ தந்த்ர பிரபத்தி ரஹஸ்ய த்ரயார்த்தம் -)
(ஸர்வோபனிஷதோ காவோ, தோக்தா கோபால நந்தன: |
பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் ||-4-
உபநிஷத்துக்களே பசுக்களாக இருக்க கோபால நந்தனன் கறப்போனாக , அர்ஜுனனே கன்றாக, உலகில் உள்ள நல்லோர் பருகுவதற்காக கீதை என்கிற அம்ருதம் கறக்கப்பட்டது.
ஓம் பார்த்தாயா ப்ரதி போதிதாம் பகவதா நாராயணேந ஸ்வயம்
வ்யாஸேந க்ரதிதாம் புராண முநிநா மத்யே மஹா பாரதம்
அத்வைத அம்ருத வர்ஷிணீம் பகவதீம் அஷ்ட தச அத்யாயிநீம் அம்ப
த்வாம் அநு சந்ததாமி பகவத் கீதே பவத் வேஷிணீம்-
புராண முனிவராகிய வியாசரால் மஹாபாரதத்தின் நடுவில் வைக்கப்பட்டவளும், அர்ஜுனனுக்காக பகவான் நாராயணனாலேயே உபதேசிக்கப்பட்டவளும், அத்வைதமாகிய அமுதத்தை வர்ஷிப்பவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவளும், சம்சார சாகரத்தின் எதிரியும் ஆன பகவத் கீதா என்ற அன்னையை நமஸ்கரிக்கிறேன்.)
ஏதா வந்தம் ஸதா த்யானம் இத்தம் மாம் க்ருபயா நயன்
சேஷாத்வலேச நயனம் க்ருபயா குரு மாதவ -58-
இவ்வாறு சம்சாரம் என்னும் கொடிய காட்டில் வழி திகைத்துத் தவிர்த்து உனது கருணைக்கடல் நல் வழி அடையச் செய்த ஓ திரு மா மகள் கேள்வனே -எஞ்சிய தூரமும் அந்த நல்ல வழியிலேயே நடக்குமாறு அருளாய்
(எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-)
த்வத் ஸ்வரூப குணாகார விபூதியில் விஷயாம் மதிம்
விஸதீ க்ருத்ய தாமேவ பக்தி ரூபாம் குருஷ்வ மே –59-
ஞான ஆனந்தங்களுடன் கூடிய உன் ஆத்ம ஸ்வரூபன் -அவ்வாத்மாவுக்கே உரித்தான ஞான பல ஐஸ்வர்யம் தயா வாத்சல்யம் முதலான குணங்கள் திருமேனிக்கு உண்டான சவுந்தர்யம் முதலான குணங்கள் திவ்ய மங்கள விக்ரஹம் அத்திருமேனியாய் விளங்குகிற நித்ய லீலா விபூதிகள்-இவை அனைத்தையுமே குறிக்கும் ஞானமும் தெளிவாகப் பெற்று அன்புடன் கூடிய கைங்கர்ய ரூபமான அந்த ஞானத்தையே அடியேனுக்கு த்ருடமாக அளித்தருள வேணும்
(விஸதீ க்ருத்ய-ஞானம் -விஞ்ஞானம் -அறிந்து அறிந்து தேறித் தேறி -யாதாத்ம்ய -)
பரபக்திம் பரஞ்ஞானம் பரமாம் பக்தி ஸம் பதம்
ஆவிஷ்குரு மமாத்யர்த்தம் ஆத்ம தர்மத்வ யோகத–60-
பரபக்தி பரஞ்ஞானம் மேலான பரமபக்தி ஆகிய இவை எனது ஆத்மாவுக்கு உரித்தான தர்மங்களாகையாலே அஞ்ஞானத்தாலே மறைக்கப்பட்டு இருக்கும் அவைகளை எனக்கு வெளிப்படையாக சாஷாத்காரித்து அருள வேணும் –
(சேஷத்வமாகவும் பாரதந்தர்யமும்-உள்ளிதழ் -வெளிப்பட்டு அவன் ஆனந்தத்துக்காகக் கைங்கர்யம் -பரபக்தி பரஞானம் பரமபக்தி அடியாகவே -அனுபவ ஜெனித ப்ரீதிகாரிக கைங்கர்யம் -)
பூர்வாகம் உத்தராகம் ச சமாராப்த மகம் ததா
த்வத் ப்ராப்திரோதகம் க்ருத்ஸ்னம் நிச்சேஷம் பரிஹாரய–61-
முன்பு செய்யப்பட்டு இனிமேல் பயன் அனுபவிக்கும்படியான பாபங்கள் -இப் பிறவியில் இனி மேல் வரும் பாபங்கள் அவ்வாறே தற்போது பயன்களை அனுபவிக்கத் தொடங்கியதாக பாபங்கள் -உன்னை அடைவதற்குத் தடையான இருக்கும் இது போன்று எல்லாமே பாபங்களில் கூட்டங்களை அவற்றின் ருசி வாசனைகள் இல்லாததாய் நீக்கி அருள வேணும் –
(த்வத் ப்ராப்தி ரோதகம் -அடைய தசைகள் -அதிகாரிகள் தோறும் மாறுபடும் அன்றோ -ஆர்த்த ப்ரபன்னனுக்கு அனைத்துமே போக்கி உடனே தன்னுடன் சேர்த்துக் கொண்டு அருளுகிறான் -திருப்த ப்ரபன்னனுக்கு வர்த்தமான சரீர அவசானத்தில் பேறு –உபாசகனனுக்கு சரீராந்தர அவசானத்தில் பேறு -)
சரீரே தார புத்ராதவ் தந ஷேத்ராதிகே ததா
சங்கம் துர் மோசமதிகம் ஸஹ ஸைவ விநாசய –62-
பாபச் செயல்களுக்குப் புகலிடமான இந்த ஸரீரத்திலும் மனைவி மக்களிடத்திலும் அவ்வாறே செல்வம் வீடு முதலானவற்றிலும் விடுவித்துக் கொள்ள முடியாததான த்ருடமான மமகார ரூபமான பாசத்தை தாமதமின்றி அகற்றி அருள வேணும் –
(ஸக்ருத் ஏவ-சடக்கென -கூரத்தாழ்வான் நிர்வாகம்)
த்வத் குண அனுபாவாஸ்வாத ரஸிகேஷு மஹாத்மஸூ
த்வதீயேஷு பரம் ப்ரேம த்வமேவ பரிவர்த்தய –63-
உனது கல்யாண குணங்களை அனுபவிப்பதாக அமுத பானத்தை ரசித்து ருசித்தவர்களான உன் பக்தர்களான பெரியோர்கள் இடத்தில் மிகுந்த அநுராகத்தை அடியேனுக்கு வளரும்படி அருள வேணும் –
த்வயார்த்த கத வாக் சித்தம் தாயைஸ் த்ரிபிரநா குலம்
யாவச் சரீர பாதம் மாம் குருஷ்வ த்வம் த்வதந்திகே –64-
த்வய மந்திரப் பொருளில் எனது மனமும் வாக்கும் ஊன்றி இருப்பதால் ஆத்யாத்மிகம் ஆதிபவ்திகம் ஆதி தெய்விகம் என்கிற மூன்று வகைப்பட்ட துன்பங்களால் தாக்கப் படாதவனாக என்னையே இந்தச் சரீரம் போமளவும் உனக்குக் கிட்டி இருக்குமாறு அருள வேணும்
ஆத்யாத்மிகம்-உடலைப் பற்றி வருகிற கர்ப்பவாசம் போல்வன
ஆதி பவ்திகம் -பஞ்ச பூதங்களால் உண்டாகும் குளிர்ச்சி வெப்பம் முதலியன
ஆதிதைவிகம் -தேவதையாகிய யமனால் வரும் நரகயாதனை போல்வன
யோ அசவ் த்வயைவ தத்தோமே வ்யவஸாயோ மஹோதய
குருஷ்வ நிச்சல மமும் யாவது ப்ராப்த்யனு வர்தினம் –65-
எம்பெருமானே ரக்ஷகன் என்னும்படியான நன்மை பயக்கக் கூடிய விஸ்வாஸமானது உன்னாலேயே எனக்கு அருளப்பட்டது -அந்த திருட விஸ்வாஸம் நிலை யற்றுப் போகாமல் உன்னை அடையும் வரை தொடரும் படியாக செய்தருள வேணும் –
ததோ தேஹா வஸாநே ச த்யக்த ஸர்வேதர ஸ்ப்ருஹ
த்வாமேவ ப்ரதிபுத்தஸ் ஸந் பஸ்யேயம் பகவந் நஹம் –66-
ஸ்வாமி மேல் ஸ்லோகத்தில் குறிப்பிட்ட அந்த திருட விஸ்வாஸத்துடன் இந்த சரீரம் நீங்கும் தருணத்தில் அனைத்தும் ஆசைகளும் துறந்தவனாய் நான் தத்வ ஞானத்தைத் தெளிவாகப் பெற்றவனாய் உன்னையே காணப் பெறலாவேன்
(கத்ய த்ரயத்தில் இவற்றையே ஸ்வாமிகள் படிப் படியாக வேண்டிக் கொண்டு அருளுகிறார்-பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -மூன்றும் -ஆழ்வார் -இங்கும் கத்யத்ரயத்திலும் பொல்லா ஒழுக்கும் பொய் நின்ற ஞானமும் அழுக்கு உடம்பும் -என்ற வரிசைகள்-உபதேச அனுஷ்டான க்ரமங்கள் மாறி இருக்குமே )
(தேஹ இந்திரிய ஸூஷ்ம ரூப இந்திரிய ரூபமான ப்ரக்ருதி போக்கி அருள மேல் பிரார்த்தனை -)
பிராகிருத சரீரத்திருந்து என்னை வெளியேற்றுமாறு பிரார்த்தனை –
அவ்யக்த புத்த்யஹங்கார ஞான கர்ம அக்ஷ மாநஸை
ஸதந் மாத்ர மஹா பூதை பரிகல்பித மாதித–67-
மூலப்ப்ரக்ருதி மஹத் தத்வம் ஸாத்விக ராஜஸ தாமஸ அஹங்காரங்கள் ஞான கர்ம இந்திரியங்கள் மனஸ் தன்மாத்திரைகள் எனப்படும் பூத ஸூஷ்மங்கள் கூடியதான பஞ்ச பூதங்களைக் கொண்டு முதலில் படைக்கப்பட்ட
(அத்யாவசாய ஜனகம் மஹத் தத்வம் புத்தி உறுதி எடுக்கும் -சாத்விக அஹங்காரத்தில் இருந்தது 11 இந்திரியங்கள் -தாமச அகங்காரத்தை பூதாதி என்பர் -இவற்றில் இருந்து தன்மாத்ரை -அது மாத்ரம் -குணங்கல் மட்டுமே -பூதங்களாக விரிவடையாமல் இருக்கும் -ராஜஸ அஹங்காரம் இரண்டுக்கும் உதவும் -பிறவிகள் தோறும் ஸூஷ்ம இந்திரியங்கள் பதிவுடன் இருக்குமே -)
சர்மாஸ் ருங்மாம்ஸமே தோஸ்தி மஜ்ஜா சுக்லாதி ஸம் யுக்தம்
ததா மூத்ர புருஷாதி பூர்ணம் நித்ய ஜூகுப் ஸிதம் –68-
பஞ்ச பூதங்களைக் கொண்டு முதலில் படைக்கப்பட்ட தோல் ரத்தம் சதை தசை எலும்பு எலும்புகளில் உள்ளிருக்கும் மஜ்ஜை வீர்யம் ஆகியவற்றோடு கூடினதாய் மற்றும் மல மூத்ரங்களான அழுக்குகளைக் கொண்டதாய் எப்போதும் சகிக்க முடியாததான
இதம் சரீரம் துக்கைக நிதானம் பரிஹார்ய ச
நாட்யா சதாதிசாயிந்யா மாம் நிர் கமய தேஹத–69-
அனைத்து இன்னல்களுக்கும் காரணமான இச்சரீரத்தில் இருந்து எனக்கு விடுதலை அழித்து 101 வது நாடி -மூர்த்தந்ய நாடி -மூலமாக இச் சரீரத்தில் இருந்து என்னை வெளியேறச் செய்து அருள வேண்டுகிறேன் –
சரீர தோஷங்கள் அறிந்தால் தானே ஆத்ம பரமாத்ம வைலக்ஷண்யம் உணர்ந்து -சரீரம் இருக்கவே கர்மங்களைச் சேர்க்கிறோம் – பகவத் திருமேனியை உணர்ந்து இவற்றில் ஆசையை விட்டு அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யங்களை ஏவிப்பணி கொள்ளப் பிரார்த்தித்து பெற்று அவனை ஆனந்திப்பித்து நாமம் ஆனந்தம் பெறுவோம்(மோக்ஷ மார்க்கம் -ஸ்வர்க்க நரக மீண்டும் ஸம்ஸார -ஆகிய நாலுக்கும் தேகத்தில் இருந்து வெளியே புறப்படும் ஆத்மா -சம்சார சாகரத்தில் துக்கப்பட்டு -சுகத்துடன் தொடங்கினாலும் துக்கத்துடன் முடியும் -பரப்ரஹ்ம அனுபவம் ஒன்றே தான் துக்கமே கலசாத இன்பம் -அவற்றை முன்னோட்டமாக இங்கேயே காட்டி அருளி -அதில் பிராவண்யம் அடைய வைக்க அருளி -அபவர்க்க ரசம் அறிந்து இருந்தாலும் ஸம்ஸார துக்கம் பட்டே உணர்கிறோம் -வாக் மனஸ் -எல்லா இந்த்ரியங்களுடன் கூடிய பிராணன் -தேஜஸ் -ஐந்துக்கும் உபலக்ஷணம் -ஆத்மாவுடன் ஸூஷ்மமாகவே சேரும் -ஏவமேவம் -பரமாத்மாவுடன் சேர்கிறான் -ஸூஷ்ம சரீரத்துடன் சென்று விரஜையில் குளித்து -ருசி வாசனைகள் கழித்து – பேறு — இந்த பேரின்பம் ஆசை யுடையவன் இருக்கும் இடமே திவ்ய க்ஷேத்ரம் -ஞானிகள் அத்யந்த ப்ரிய தமர் -அவனும் ஆசைப்படுவான் -வராஹ சரம ஸ்லோகம் -அஹம் ஸ்மராமி மத் பக்தம் -நயாமி பரமாம் கதிம் -ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -)
சரம ஸ்லோக விவரணம் முற்றிற்று
———
அர்ச்சிராதி மார்க்க நிரூபணம்
வஹ்ந்யஹச் சுக்ல பஷோ தகய நாப்தாநிலாஸ்ரயாத்
மார்க்காத் தவ்ஸ் ஸத் க்ருதோ கத்வா பித்வா ஸூர் யஸ்ய மண்டலம் —70-
வஹ்நி எனப்படும் அர்ச்சிர் லோகம் பகல் சுக்ல பக்ஷம் உத்தராயணம் ஸம்வத்ஸரம் வாயு ஆகிய பிரதேசங்களை உடையதான அர்ச்சிராதி மார்க்கத்தில் அந்தந்த பிரதேசங்களின் அதிபதிகளால் பூஜிக்கப் படுமவனாய் -அவ்வழியாக ஸூர்ய மண்டலத்தை அடைந்து
சந்திர வித்யுஜ்ஜலே சேந்த்ர ப்ரஜாபதி ஸூபூஜிதா
அண்ட மாவ்ருதி பேதாம்ச் ச வ்யதிவத்ர்ய தசோத் தராந் –71-
சந்திரன் வித்யுல்லோக அதிபதியான வருணன் இந்திரன் நான்முகன் இவர்களால் அவ்வவ் உலகங்களில் பூஜிக்கப்படுமவனாய் ப்ரஹ்மாண்டத்தைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக பல்வேறு ஆவரணங்களைக் கடந்து
(ஆதி வாஹிகர் -கூட்டிப்போய் -அமானவன் -வித்யுல்லோக அபிமானியே இவன் என்பர் -ஸமஸ்த கார்ய காரணங்களைக் கடந்து -அபுனராவ்ருத்தி மோக்ஷம் அடைகிறான் -)
அத ஸம்க்யா விஹீநம் தத் அவ்யக்த மதி வர்த்தயன்
விரஜா மம்ருதா காராம் மாம் ப்ராப்ய மஹா நதீம் —72-
கீழே எண்ணற்ற பரிமாணங்களை யுடைய அந்த மூல ப்ரக்ருதி முழுவதையும் கடந்தவனாய் அழிவற்ற ஸ்வரூபத்தை யுடையதான அல்லது இனிமையான நீரையுடைய விரஜை என்னும் மஹா நதி அருகில் என்னை அடையும்படியாகச் செய்து அருள வேணும் –
(அவாந்தர பிரளயம் -கீழ் ஏழு லோகங்களும் மேல் மூன்றும் அழியும் -அர்ச்சிராதி -12 லோகங்களைத் தாண்டி -சில உபநிஷத்துக்கள் சிலவற்றை விட்டுச் சொல்லும் -அனைத்துக்கும் ஒருங்க விட்டு -சர்வ வேதாந்த சாகை நியாயம் – சத்ய லோகம் தாண்டி -ஆமோத பிரமோத சம்மோத ஸாந்தானிக லோகங்களைத் தாண்டி -விரஜை நீராடி -பேற்றை அடைகிறோம் -தெளி விசும்பு திரு மாடு -மாக வைகுந்தம் -அபராஜிதா -அயோத்யா -பர்யாயம்-தமஸ பரமோ தாதா -ஸாஸ்வத -த்ருவ -அயர்வரும் அம்பரங்கள் அதிபதி-நிறை கதிரோன் கீண்டு புக்கு -ஆராவமுதம் அங்கு எய்தி -)
(முக்தாத்மா ஸ்வரூப ஆவிர்பாவம் -இதுவே இயற்கை –சமத்துவம் -இங்கே பரமாத்மாவின் சரீரம் என்றும் உணர்வது -கர்மங்கள் கழிந்து -மாணிக்கத்தின் சேற்றைக் கழுவி இயற்கையான ஒளி பிரகாசிப்பது போல் -கிணறு வெட்ட வெட்ட கீழ் உள்ள நீர் போல் -ஹேய குண த்வம்சமான பின்பு இருக்கும் கல்யாண குணங்கள் பிராகாசிக்கும் -)
—–
ஸூஷ்ம சரீரம் விடுபட அருள வேணும் என்னும் பிரார்த்தனை
க்ருத்வா ஸூஷ்ம சரீரஸ்ய சிர சக்தஸ்ய தூநநம்
தஸ்மாத்ராஹு விநிர் முக்த சந்திர ஸந்நிப முஜ்ஜ்வலம் –73-
அநாதியாக தன்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பஞ்ச பூதங்களால் வடிவு கொண்ட ஸூஷ்ம சரீரத்தின் தொடர்பு அறுக்கப்பட்ட காரணத்தைக் கிரஹண சமயத்தில் ராஹுவால் விடுவிக்கப்பட்ட சந்திரனுக்கு ஒப்பான காந்தியை யுடையனாய்
தாம் நதீம் மநஸா தீத்ய வைத்யுதே நாநு கச்சதா
அமாந வேந ஸஹிதம் மாம் விபூதிம் பராந்நய–74-
அந்தப் விரஜா நதியை ஸங்கல்ப மாத்ரத்தால் கடந்து பின்தொடர்ந்து வருகிற வித்யுன் மண்டல அபிமானியான திவ்ய புருஷனுடன்-அமானவன் -இருக்கும் என்னை ஸ்ரீ வைகுண்டம் எனப்படும் திவ்ய தாமத்தில் சேர்க்க வேண்டுகிறேன் –
(மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை -உன்னிச்
சிரத்தாலே தீண்டின் அமானவனும் நம்மைக்
கரத்தாலே தீண்டல் கடன் )
(இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி –விரசை தனில் குளித்து அங்கு அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று -என்றபடி)
(ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள்-சதுர்த³ஶபு⁴வநாத்மகமண்ட³ம் * த³ஶகு³ணிதோத்தரம் ச ஆவரணஸப்தகம் * ஸமஸ்தம் கார்ய காரண ஜாதமதீத்ய வர்த்தமாநே-பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே
ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே * ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே *ஸநகவிதி⁴ஶிவாதி³பி⁴ரபி * அசிந்த்யஸ்வபா⁴வைஶ்வர்யை: * நித்யஸித்³தை⁴:-அநந்தை: ப⁴க³வதா³நுகூல்யைக போ⁴கை:³ * தி³வ்யபுருஷை: மஹாத்மபி⁴: ஆபூரிதே-தேஷாமபி இயத்பரிமாணமியதை³ஶ்வர்யம் * ஈத்³ருʼஶஸ்வபா⁴வமிதி * பரிச்சே²த்து மயோக்³யேதி³வ்யாவரணஶதஸஹஸ்ராவ்ருʼதே * தி³வ்யகல்பகதரூபஶோபி⁴தே * தி³வ்யோத்³யாந,ஶதஸஹஸ்ரகோடிபி⁴ராவ்ருʼதே * அதிப்ரமாணே தி³வ்யாயதநே *)
——
ஸ்வரூப ஆவிர்பாவம் -இயல்பான குணங்கள் -தோன்றும்படி அருளிச் செய்ய பிரார்த்தனை
தத்ர ஸ்வாபாவிக ஆகாராந் அவ போதிகாந் குணாந்
அநந்தாந பரிச்சின்னாந் அசங்க்யாந்மே ப்ரகாசய –75-
அந்தப் பரம பதத்தில் எனக்கு இயல்பாக இருக்கக் கூடியதாய் அழிவில்லாதவையாய் அளவுபட்டு இல்லாததாய் கணக்கற்றவையான ஞானம் முதலான கல்யாண குணங்கள் தோன்றுமாறு செய்து அருள வேண்டுகிறேன்(அத்ர -இவ்வுலக இருப்பு தாண்டி தத்ர-அங்கு) –
(சாமீப்யம் சாலோக்யம் சாரூப்யம் சாயுஜ்யம் ஸாம்யாபத்தி)
—–
பஞ்ச உபநிஷத் மயமான உருவத்தை அருள பிரார்த்தனை
ததஸ்த்வ ப்ராக்ருதம் திவ்யம் ஸூத்த ஸத்வ ப்ரகாசகம்
பஞ்ச உபநிஷத் ஆகார விக்ரஹம் ஸூ மநோ ஹரம் —76-
இனி ஸத்வ ரஜஸ் தமோ குணங்களுக்கு இருப்பிடமாய் ப்ரக்ருதிக்குச் சேர்ந்ததாய் நித்யம் பிரகாசிப்பதாய் -ஸத்வ குணத்தை மட்டுமே வளர்ப்பிக்கவல்ல -மிகவும் அழகுடன் திகழ்வதான பஞ்ச உபநிஷத் எனப்படும் பஞ்ச சக்தி மயமான திவ்யமான திருமேனியை எனக்குக் கொடுத்தருளி உனது உத்தமமான பரிமளம் வீசும் ஒளியை பிரவேசிப்பித்து
ப்ராப்பய திவ்யா மோதந்தே பரம் தேஜ ப்ரவேஸ்ய ச
ஸ்வ ஸ்வரூபாதி நிஷ்பத்த்யா லப்த ஸாம்யம் ச மாம் குரு –-77-
எனக்கு இயல்பாக எட்டு குணங்களை மறுபடியும் தோற்றுவித்து என்னை உன்னுடன் முழுமையாக ஒத்திருக்கும் தன்மையை உடையனாய்ச் செய்து அருள வேண்டும்
அஷ்ட குணங்கள் அபஹத பாப்மாதி -கர்மங்களுக்கு வசப்படாமை-விஜரக -மூப்பின்மை -வருத்தமின்மை -பசியின்மை -தாக்கமின்மை -ஸத்ய காம -பொய்த்து உரிய அழிவற்ற வஸ்துக்களை யுடைமை -ஸத்ய ஸங்கல்ப-நினைத்ததை முடிக்க வல்லமை -பாபமற்றவன் (அபஹத பாப்மா) கிழத்தன்மை இல்லாதவன் (விஜரக) இறப்பில்லாதவன் (விமிருத்யுகு) சோகமில்லாதவன் (விசோகக) (விஜிகத்சக) பசி தாகமற்றவன் (அபிபாசக) நித்திய பொருள்களின் மேல் ஆசை கொண்டவன் (சத்ய காமக) (சத்ய சங்கல்பக) முதலிய எட்டு
ததச் சைரம் மதீ யாக்யே தடா கேச்வத்த மூலத
திவ்ய அப்சரோ கணை பஞ்ச சதா சங்க்யா ஸமன்விதை –78-
மாலா சூர்ண அஞ்சன ஷவ்ம பூஷா ஹஸ்தை ரூபஸ் திதம்
ப்ரஹ்ம அலங்கார ரூபேண சாதரம் சமலங்க்ருதம் –79-
பிறகு ஜரம்மதஹ்ரத-என்னும் பொய்கைக் கரையில் அமைந்துள்ள அஸ்வத் மரத்தின் நிழலிலே (நாளை என்பதே இல்லை -அனைத்தும் ஒன்றே -அஸ்வத் மரம் -)நூற்றுக்கணக்கான பூ மாலைகள் நறுமணம் கமழும் சூர்ணங்கள் சந்தனம் முதலான த்ரவ்யங்கள் பட்டாடைகள் மற்றுமோர் பல்வேறு ரத்ன ஆபரணங்களை கையிலே ஏந்தியவர்களாய் (பரவரா குருக்கள் பூட்டும் ஆத்ம பூஷணங்கள் )ஒளி மிக சவுந்தர்யத்தை யுடைய அப்ஸரஸ்ஸுக்களின் திரளால் சேவை செய்யப்படடவனாய்
(அரசமரத்தடியில் பரகாலனுக்கு திருமந்திர உபதேசம் -மகிழ மரத்தடியில் தீர்க்க சரணாகதி த்வயார்த்தம் பராங்குசருக்கு அருளியது போல்)
அப்யுத்தா நார்த்த மாயதை திவ்ய ஜாநபதைஸ் ஸூரை
சங்க சஸ் ஸம வேதைச் ச ஸத் க்ருதம் ஸம்பமாகுலை –80-
ஸம்ஸார நிரயாதேவம் உத்தாப்ய கருணா நிதே
த்வம் மாம் கமய தேவேச தத் விஷ்ணோ பரமம் பதம் –81-
எதிர் கோட் வரவேற்பதற்காக திரள் திரளாக பரமபதத்திலுள்ள பல்வேறு இடங்களில் இருந்து வந்து சேர்ந்த நித்ய ஸூரிகளால் ஆச்சார்ய பாவித்துடன் சத்கரிக்கப் படுமவனான என்னையே -ஸம்ஸாரம் என்னும் நரகத்திலிருந்து இவ்வாறு கரையேற்றிய ஓ கருணைக்கடலே தேவர்களுக்கும் தேவனே -ஓ நாராயணா அந்த பரமபதத்தில் நீயே சேர்த்து அருள வேணும் –
(திருவல்லவாழ் கோனாரை அடியேன் அடி சூடுவது எந்நாளே –த்வாம் மாம் –ஸ்ரீ வைகுண்டே பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் பக்தைஸ் பாகவத ஸஹ -மேல் வர்ணனை-அயோத்யா அபராஜிதா ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ விஷ்ணோ பரமபதம் -பர்யாயம் )
—–
ஸ்ரீ வைகுண்ட புரம் -ஸ்ரீ அயோத்யா நகர வர்ணனை
ததஸ் ஸூரி ஜநைஸ் ஸர்வை வைகுண்ட புர வாஸிபிர்
ராஜ மார்க்க கதம் லாஜ புஷ்ப வ்ருஷ்ட்யாதி தோஷிதம் –82-
பிறகு வைகுண்ட வாசிகளான அனைத்து நித்ய ஸூரிகளால் தான்யங்கள் புஷ்பங்கள் தூவப்பட்டு மகிழ்விக்கப் பட்டவனாய் ப்ரதானமான ராஜவீதியிலே நுழைந்தவனாய்
(வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-)
த்ருஷ்ட்வா ப்ரணம்ய சோத்தாய வைகுண்ட த்வார கோபுரம்
அந்த ப்ரவிஷ்டம் பஸ் யந்தம் தாம திவ்ய மிதஸ் தத–83-
வைகுண்ட நகரத்தின் சிறந்த முகத்வார கோபுரங்களைக் கண்டு தொழுது எழுந்து நகரத்துள் நுழைந்தவனாய் -ஜ்வலிக்கின்ற மாளிகைகளை அங்குமிங்கும் கண்டவனாய் -உனது சேஷபூதனான என்னை-
அத மண்டப ரத்னம் தத் ஆனந்த பரிபூரிதம்
மஹா வகாசம் மாணிக்ய ஸ்தம்ப ஸாஹஸ்ர சோபிதம் –84-
அதற்கு மேல் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் மிக்க விசாலமானதாய் ஆயிரக் கணக்கான மாணிக்கக் கம்பங்கள் பொருந்தி பிரகாசிக்கிறதாய் அந்த உத்தமமான மண்டலத்தில்
ஆரோப்ய ஸூரி பரிஷதந்தர்பாவ மஹா தயம்
கமய த்வம் த்வதீயம் மாம் க்ருத்த க்ருத்யஸ் ஸூகீ பவந் –85-
அந்த உத்தமமான மண்டலத்தில் ஏற்றி வைத்துக் செய்ய வேண்டியத்தைச் செய்து முடித்தவன் போல் மகிழும் நீ நித்ய ஸூரிகளின் திரளில் சேரும் சிறந்த அதிஷ்டத்தை அடியேனுக்கு அளித்தருள வேண்டும் –
(அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை பாரித்தது கிட்டியதே-அடியார் மூலமும் அவனைப் பற்றி அவன் மூலம் அடியார் குழாங்களுடன் சேர்ந்து அனுபவிப்போம் -ஆதியும் அந்தமும் ஒன்றே -செய்த வேள்வியர் -க்ருதக்ருத்யர்-ததா ராம விஜ்வர பிரமோத ஹா-தேவரீர் கிருஷி அடியேனிடம் பலிக்க வேண்டும்-)
தத்ர சாதார சக்த்யாதி க்ரமேண பரிகல்பிதே
தர்மாத்யை ஸூரிபிஸ் தத் தத் பாத காத்ர மயாத்மகை –86-
அந்த மணி மயமான மண்டபத்தில் ஆதார சக்தி சித் சக்தி சதாசிவ சக்தி என்னும் முறையில் மூன்று சக்திகளுடன் கூடிய அந்தந்த பீடங்களின் -ஆசனங்களின் -கால்களாகவும் மற்றும் வேறு பாகங்களாகவும் பரிணமித்த
(கூர்ம பீடம் -கூர்மாசனம் -அதுக்கு மேல் தர்மாதி பீடம் -தர்ம ஞானம் வைராக்யம் ஐஸ்வர்யம் -பாதங்கள் -உடலாக அதர்மம் அஞ்ஞானம் அவைராக்யம் -அனஸ்வர்யம் -வ்ருத்த விபூதிமான்)
நிர்மிதே நிர்மலே பீடே நாநா ரத்ன சமன்விதே
ஸூபாஸ் தரண ஸம் யுக்தே ஸூந்தரே அதி மநோ ஹரே –-87-
தர்ம ஞான முதலான பேர் கொண்ட எண்மரான -தர்ம -ஞான -வைராக்ய -ஐஸ்வர்ய-அதர்ம -அஞ்ஞான -அவைராக்ய -அனைஸ்வர்யம்-அதிஷ்டான தேவதைகளால் நிர்மிக்கப்பட்ட நிர்மலமான பல ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தின் மேல் பவித்ரமான கம்பளத்துடன் கூடியதாய் அழகாயத் தோற்றுவதாய் மனம் கவருவதாய்
விகசத்தன ஸாஹஸ புண்டரீ காஸ்த்ரு தோத்தரே
தத் கர்ணி கோபரி தலே தப்த சாமீ கரோஜ்வலே —88-
அநந்த போகி பர்யங்கே விமலே விஸ்த்ரு தோச்ர்ச்சிதே
பணா ஸஹஸ்ர மாணிக்ய ப்ரபா சித்ர விதாநகே –-89-
ஆயிரம் இதழ்கள் கொண்ட வெண் தாமரை மலர்வது போல் சுட்டுரைத்த நன் பொன் போல் பிரகாசித்துக் கொண்டிருக்கிற அந்த தாமரையின் நடுவிலே இருந்து கர்ணிகா எனப்படும் பசுமையான மஞ்சள் நிறத்தில் மிளிரும் மலரின் மொட்டுக்களை யுடைய அப்பழுக்கு அற்றதாய் பரந்து விரிந்ததாய் -மேன்மையான ஆயிரம் பணங்களில் உள்ள ஒளி வீச்சை விதானமாக வுடைய ஆதி சேஷன் என்னும் படுக்கையின் மேலே
(இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-)
ஆஸீநம் அகிலஸ் யாஸ்ய ஸ்வாமிந்யா ஜகதஸ் ஸ்வயம்
தேவ்யா த்வதந பாயிந்யா ஸ்ரியா பூம்யா ச நீளயா –-90-
ஆதி சேஷன் என்னும் படுக்கையின் மேலே இவ்வுலகம் அனைத்துக்கும் பட்ட மஹிஷியாய் உன்னை ஒரு க்ஷணமும் விட்டுப் பிரியாதே இருக்கும்படியான பூஜிக்கத்தக்க திருமகளோடே வீற்று இருப்பவனாய் -பூமி நீளா தேவிமார்களுடன் உடன் இருப்பவனாய் —
ஸமேதம் ஸச்சிதாநந்தம் சாந்தோதித தசாத்மகம்
ஸந் மங்கள குணா வாஸம் ஸதைகாகார விக்ரஹம் –91-
சாந்தோதிதம் என்கிற அலையற்ற கடல் போன்ற ஸ்வரூபம் உடையவனாய் -ஞான ஆனந்தம் முதலான அனைத்தும் நல்ல குணங்களுக்கு இருப்பிடமானவனாய் -எப்பொழுதும் ஒரே விதமான -வளர்வது தேய்வது முதலான பரிணாமங்கள் இல்லாத -திவ்ய திருமேனியை உடையவனாய் –
(நித்யோதித ஸ்வரூப த்யானம் -சாந்தோதித குண த்யானம்)
லாவண்ய காந்தி மதிம யவ்வநாதி குணோ ததிம்
விஸ்வாதி ராஜ்ய பிசுந கிரீட சிகரோ மகுடோ ச்ச்ரிதம் —92-
லாவண்யம் எனப்படும் சமுதாய சோபையும் மென்மை மற்றும் இளமை முதலான குணங்களுக்குக் கடல் போன்றவனாய் -அனைத்து உலகங்களுக்கும் இவனே ஸார்வ பவ்மன் என்பதைக் குறிக்கும் கிரீடத்தின் முன் பகுதியை உடையவனாய்
ஸூஸ் நிக்த நீல குடிலை ரலகைர் லலிதாளிகம்
ஸூகி பக்த லலாடாப்திம் ஊர்த்வ புண்ட்ரேண ஸேதுநா –93-
நிகுநிகுவான தோற்றத்துடன் கறுத்து சுருண்டு வளைந்து நெளிந்து அசைந்தாடும் முடியுடன் கூடி ஒரு நீண்ட பாலம் போன்ற ஊர்த்வ புண்ட்ரத்தால் இரண்டு பாகங்களாய்ப் பிரிக்கப்பட்ட கடல் போன்ற விசாலமான நெற்றியை உடையவனாய்
(கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.–7-7-9-)
ஆகர்ண பாக விஸ்ராம்த புண்டரீ காருணேஷணம்
ருஜு நாஸா முகாதாத நிஜாஸ் யாமோத ஸம்பதம் –94–
காதுகள் வரை நீண்ட செந்தாமரை போன்ற அப்பெரியவாய திருக்கண்களை உடையவனாய் -வளைவு சுழி வற்று நீண்ட மூக்கின் நுனியால் தாமரையாய் அலர்ந்த திருமுக மண்டலத்தின் நறுமணத்தை நுகர்பவனாய்
(ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2-)
அம்ஸா வலம்பி ரத்நாட்ய கர்ணிகா மகரச்சவிம்
நிரஸ்த நிஸ்த ஸ்து லாபிக்ய தந்த மந்த ஸ்மித உஜ்ஜ்வலம் –95-
தோள் அளவும் நீண்டு மகர குண்டலங்களால் அலங்கரிக்கப் பட்ட கர்ண பாசங்களை உடையவனாய் -முத்துக்களின் ஒளியை விஞ்சிய பல் வரிசையிலிருந்து வெளியேறும் குளிர்ச்சி மிகு வெண்மையான புன்னகையை உடையவனாய்
(கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து,உள்ளே
வெண்பல் இலகு சுடரிலகுவிலகு மகர குண்டலத்தன்,
கொண்டல் வண்ணன் சுடர்முடியன் நான்கு தோளன் குனிசார்ங்கன்,
ஒண்சங் கதைவா ளாழியானஒருவன் அடியே னுள்ளானே.)
ஸூகந்தி கோமல ஸ்வாது ப்ரவால சத்ருசாதரம்
பிரபுல்ல கண்ட பலகம் கர்ண பூர்வ பரிஷ்க்ருதம் –-96-
நறுமணத்துடன் திகழ்வதாய் மென்மை இனிமைகளைக் கொண்டதாய் பவளம் போன்ற சிவந்து அதரங்களை உடையவனாய் -மலர்ந்த புஷ்பங்கள் போன்ற விசாலமான கன்னங்களை உடையவனாய் -கர்ண ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டவனாய்
(வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-)
பத்ம சந்த்ர அம்ருத சர ப்ரஸ்பர்த்தி முக மண்டலம்
ப்ரூஷோபா லோகிதாலாபை புவனாஹ்லாத காரிணம் –97-
தாமரை சந்த்ரன் அமுதப்பொய்கை ஆகியவற்றைப் போல் அழகு மிக்கதாக திருமுக மண்டலத்தை உடையவனாய் -திருக்கண்களின் சைகைகளாலும் பார்வைகளாலும் பேச்சாலும் பார்க்குமவர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவனாய்
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-)
க்ரைவேய பூஷா விலஸத் கம்பு க்ரீவா விராஜிதம்
உன்னதாம் சமுதாரோர ஸ்புரச்ச்ரீ வத்ஸ கௌஸ்துபம் —98-
சங்கு போன்ற கழுத்தில் மணிமாலையால் அலங்கரிக்கப் பட்டவனாய் -உயர்ந்த தோள்களை உடையவனாய் -விசால வக்ஷஸ்தலத்தில் பிரகாசிக்கின்ற ஸ்ரீ வத்ஸம் எனப்படுவம் திரு மறுவும் கௌஸ்துப மணியும் யுடையவனாய்
(மல்லாண்ட திருத்தோள்கள் -ஸூந்தர தோளுடையான் -மந்த்ர கடைந்தால் -பிராட்டி ஆலிங்கணத்தால் -அலங்காரத்தால் -விகாசமாகி தோன்றும் – -திருமறு மார்பன் -மண்டோதரி ஸ்ரீ வத்ஸ -நித்ய ஸ்ரீ இரண்டையும் -பிராட்டிக்கு அந்தப்புரமாக திருமறு -புருடன் மணிவரமாக இத்யாதி -)
உதார பீவரோ தக்ர தீர்க்க பாஹு சதுஷ்ட்யம்
ஹார கேயூர கடகைர் அங்குளீ யைச்ச சோபிதம் —99-
பருத்து விரிந்து நீண்ட நான்கு தோள்களை உடையவனாய் -தங்கத்தாலான ஆபரணங்களாலும் தோள் வளைகளாலும் கரங்களில் அணியும் கங்கணங்களாலும் விரல்களில் அணியும் மோதிரங்களாலும் ஒளி வீசுமவனாய்
(ஆபரணங்களுக்கும் அழகூட்டும் பெருமாள் -சர்வ பூஷண பூஷிதாயா -திருவடி -ஐயப்பாடு அறுக்கவும் ஆதரவு பெருக்கவும் அழகு -)
புஜத்வய த்ருதோதக்ர சங்க சக்ர விபாஸிநம்
ஜாநு ப்ரசாரித புஜம் பர்யங்க ந்யஸ்த பாஹுகம் –100-
திண் தோள் மணி வண்ணா என்னும்படியான இரண்டு தோள்களில் சங்கு சக்கரங்களுடன் திகழ்பவனாய் -ஒரு புஜத்தைப் படுக்கையின் மேல் வைத்துக் கொண்டு முழங்கால் அளவும் நீண்ட புஜங்கள் உடையவனாய்
தநு மத்யம் ஜகத்ரஷா நிபத்வ உதர பந்தனம்
நதநாபி ஹ்ருதோத் பூத விதி ஸூதி க்ருஹ அம்புஜம் –101-
மெல்லிய இடையை உடையவனாய் -உலகுக்கு அரணாக இருக்கும் பொருட்டு கட்டப்பட்ட அரை நாண் உடையவனாய் –சதுர் முகனான பிரமனுக்குப் பிறந்த அகம் எனக் குறிப்பிடலாம் படியான ஆழ்ந்த நாபீ கமலத்தை உடையவனாய்
(ரக்ஷண தீக்ஷை -கங்கணமும் -அரை நாண் கயிறும் உதரபந்தமும் -உபநயனத்திலும் கல்யாணத்திலும் தர்ம அனுஷ்டானத்துக்கு கங்கணமும் வயிற்றில் கட்டும் உண்டே நமக்கும்-மௌஞ்சி தாரணம் இடுப்பில் கட்டுவர்)
கடீ நிபத்வ காம்சீகம் கனக உஜ்ஜ்வல வாஸஸம்
ரம்பேப ஹஸ்த கரப காந்தி ஸுவ்ர்யக்ஷ மோருகம் –102-
தங்கம் போல் மிளிர்கிற பீதாம்பரத்தை உடையவனாய் -வாழை மரத்தினுடையதும் யானையின் துதிக்கையினுடையதும் உள்ளங்கையின் வெளிப் பாகத்தினுடையதும் சன்னிவேச சோபையை விஞ்சி அழகாயத் திகழும் தொடைகளை உடையவனாய்
ககுத்மத் ககுதாகார ஜாநு த்விதய சோபிதம்
மநோஜ்ஞ ஜங்காத் விதயம் மஹார்ஹ மணி நூபுரம் –103-
எருதைப் போன்றதான –முழங்கால்களை உடையவனாய் –அழகான இரு கணைக் கால்களை உடையவனாய் -விலை மதிப்பற்றதான உயர்ந்த ரத்நங்கள் பதித்த சிலம்புகளை உடையவனாய்
சாரதாம்போஜ சத்ருச சரண த்வந்த்வ ஸூந்தரம்
சரண்யம் ஸர்வ பூதானாம் சதுர்வர்க்க பலப்ரதம் –104-
இளவேனில் காலத்தில் மலர்ந்த தாமரையை போன்ற இரு பாதங்களை உடையவனாய் -(இவ்வாறு திவ்ய மங்கள விக்ரஹ வர்ணனை -91 ஸ்லோகம் தொடங்கி -இது வரை -பற்றிலார் பற்ற நின்றான் -அசரண்ய சரண்யன்-இதுவரை திவ்ய மங்கள விக்ரஹ வர்ணனை -மேல் கல்யாண குண வர்ணனை)-எல்லாப் பிராணிகளையும் காக்கும் தொழிலை யுடையனாய் -தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை அளிப்பவனாய்
அபவ்ருஷேய வாசஸாம் அபூமிம் பக்த வத்சலம்
துஷ்ப்ராபம் விதி ருத்ராதயை ஸூப்ரபாம் பக்தி சாலிபிர் –105-
வேத வாக்யங்களுக்கு எட்டாத சீர்மை யுடையவனாய் -பக்த வத்சலனாய் -பிரமன் சிவன் ஆகியோரால் கிட்ட முடியாதவனாய் -களங்கமற்ற பக்தி பாவம் கொண்ட பக்தர்களால் எளிதில் கிட்டுமவனாய்
(பத்துடை அடியவர்க்கு எளியவனாய் பிறருக்குத் அரிய வித்தகனாய்)
சங்க சக்ர கதா கட்க ஸார்ங்காத்யைர் ஆயுதோத்தமை
பரிதம் புருஷகாரரஸ்தான த்ராண தத்பரை–106-
ஆபத்துக்கு இடமில்லாத போதிலும் எம்பெருமானைக் காப்பதில் ஊக்கமுடையவர்களான வீர புருஷர்களாய்த் தோன்றும் கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள் -என்ற திவ்ய ஆயுதங்களால் எல்லாப் பக்கங்களிலும் கைங்கர்யங்கள் செய்யப் பட்டவனாய்
(ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவம் -ப்ரஹ்மத்தை ஒன்றாகி லயம் என்னும் அல்லல் எல்லாமே ஒழித்தான் -ப்ரஹ்மணா ஸஹ -கூடச் சேர்ந்து கல்யாண குண அனுபவம் -ப்ரஹ்மம் ஏவம் அல்ல ப்ரஹ்மம் இஹ பவதி)
(பல அத்யாயம் -நான்காவது அத்யாயம் -முதல் இரண்டு பாதங்களால்-வித்யா பலமான பாப அஸ்லேஷ விநாசமும்
உத் க்ரணமும்-கூறப் படுகின்றன
பின் இரண்டு பாதங்களால்-உத் க்ராந்தனான ஜீவனுக்கு அர்ச்சிராதி மார்க்க கமனமும் ப்ரஹ்ம பிராப்தியும்
முறையே பேசப்படுகின்றன –
சஞ்சித கர்மம் அநாரப்தம் -சேமிக்கப்பட்டதில் பலன் கொடுக்க ஆரம்பிக்காமல் -இவை தொலைக்கப்பட்டு -பிராரப்த கர்மங்கள் உபாசநா – வித்யா மஹாத்ம்யத்தால் தொலைத்துக் கொள்ள வேண்டும் –
492-அநாரப்த கார்யே ஏவது பூர்வே ததவதே –4-1-15-
இதுவரை பலன் அளிக்கத் தொடங்கா புண்ய பாவங்கள் மட்டுமே அழிகின்றன –
சர்வ பாப்மாந பிரயந்துதே –
அனைத்து பாவங்களும் அழியும் என்றால் சரீரம் மட்டும் எவ்விதம் இருக்கும்
சாந்தோக்யம் -6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்ய -என்று
பலன் அளிக்கத் தொடங்கப் பட்ட கர்மங்கள் முடியும் வரையில் சரீரத்தின் தொடர்பு உள்ளது என்றது-
து ஸப்தம் பக்ஷத்தை விலக்குவது
பூர்வே -அநாரப்த கார்யே ஏவ-வித்ய உத்பத்திக்கு முந்திய ப்ராரப்தம் அல்லாத கர்மங்களே நசிக்கின்றன
ஏன் எனில்
ததவதே-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்ய-என்று வித்யை பூர்த்தியானவனுக்கு உடலை விடும் வரை விளம்பம் உண்டு என்று வேதம் கூறுவதால்
சர்வ கர்மங்களும் அழிந்திட்டால் சரீர ஸ்திதியே ஸம்பவிக்காதே
ஆதலின் சரீரத்தைத் தரிப்பதற்குக் காரணமான பிராரப்த கர்மம் தவிர
மற்ற அபிராரப்த கர்மங்களுக்கே நாசம் என்று தேறிற்று –
அவதார ரஹஸ்யம் அறிந்த உபாசகனுக்கும் அந்தப் பிறவியிலே மோக்ஷம் -அந்திம ஸ்ம்ருதி இவனுக்கும் வேண்டும் – ஜன்மாந்தர கர்மங்கள் தேக மன வியாதிகள் மூலமும் கழிக்கிறான் -)
(லயம் -காரணப்பொருள்கள் காரியப்பொருள்களில் சேர்வது -இந்திரியங்கள் மனசிலும் -மனஸ் ப்ராணனிலும் ஸம்ஸ்லேஷம் இவையும் லயம் -அ விபாக ரூபம் -பிராகிருத லயம் போல் அல்லவே இவை -ஜீவாத்மா பரமாதவிடம் சேர்வது ஐக்யம் அல்லவே -ஸ்வாமி தாஸ்ய பாவனை எப்பொழுதும் இருக்குமே -பிரிந்து தனித்து இருக்கத் தகுதி இல்லை என்று உணர்கிறான் அங்கு தானே -இங்கும் அப்படியே இருந்தாலும் பிரக்ருதியால் மறைக்கப்பட்டு மயங்குகிறான் –நியத பிரகாரம் -சரீரம் அவனாலே தாங்கப்பட்டு அவனுக்காகாவே இருக்கும் – கர்மாதீனமாக தேஹ சம்ச்லேஷமும் விஸ்லேஷமும் செய்வதால் ஜீவனுக்கும் காரணம் பரமாத்மாவே -மம சாதரம்யம் -ஞான ஆனந்தங்களில் சாம்யம் -கூடி அனுபவம் -ஸஹ ஸ்ருதி -ப்ரஹ்மத்தை அறிபவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் -ப்ரஹ்ம ஏவ அல்ல இஹ -அவனைப்போல் ஆகிறான் -சாதரம்ய ஸாம்ய ஸஹ ஸ்ருதிகளை பார்த்து அர்த்தம் கொள்ள வேண்டும் –
511-அவிபாகோ வசநாத் —4-2-15-
பிரித்துக் கூற இயலாதபடி சேர்க்கை மட்டுமே -இப்படியே கூறப்பட்டது –
பூர்வ பஷி லயிப்பது போன்றே என்பர்
உபாதான காரணமாக பர ப்ரஹ்ம் என்பதால்
இது தவறு
லயம் என்றால் அழிவு
சம்பத்யதே -பிரிக்க இயலாதபடி சேர்க்கை என்றே கொள்ள வேண்டும் –
அவசனாத் -என்று இங்கு மறுபடி ஸ்ருஷ்டி பற்றிய வசனம் இல்லாமையால்
விட்டுப் பிரியாமையே ஸம்பத்தி என்று தாத்பர்யம் –
யானே நீ என்னுடைமையும் நீயே -அறிந்த ஆழ்வாருக்கு சூழ் விசும்பில் அந்தப் பேற்றையும் காட்டி அருளி உபதேசிக்க அருளினான் அன்றோ –
அநந்த விஹகாதீச ஸேநேசாத்யைச் ச ஸேவிதம்
கஜாநநாத்யைச் சண்டாத்யை குமுதாத்யைஸ் த்தைவ ச –107-
அனந்த கருட விஷ்வக் சேனர் முதலானோர்களாலும் கைங்கர்யங்கள் செய்யப் பெற்றவனாய் -வேழ முகத்துச் சேவகர்களாலும் அவ்வாறு சண்ட ப்ரசண்ட குமுதாஷர் முதலானோர்களாலும்
(தெற்கு வாசல் –பத்ரன் -ஸூபத்ரன்
வடக்கு வாசல் -தாத்ரு –விதாத்ரு –
மேற்கு வாசல் -ஜெயன் விஜயன்
கிழக்கு வாசல் -சண்டன் -ப்ர சண்டன்-)
அந்யை பரிஜனைர் நித்யை முக்தைர் போக பராயணை
பரங்குசாத்யைர் பக்தைரப்யா சார்யைஸ் ஸமுபஸ்திதம் –108-
பகவத் கைங்கர்யமே பிரதானமாக யுடைய முக்த புருஷர்களாலும் -நம்மாழ்வார் தொடக்கமான அனைத்து ஆழ்வார்களாலும் ராமாநுஜர் முதலான ஆச்சார்யர்களாலும் மிகுந்த ஆதார அதிசயத்தாலே ஆராதிக்கப் படுமவனாய்
அவாப்த காமம் லோகாநாம் அகிலா நாம தீஸ்வரம்
ஆத்ம அனுபவ ஜாநந்தம் அவாகீ நமநாதரம் –109-
எண்ணிய அனைத்து போகங்களையும் அனுபவிக்கச் செய்பவனாய் -எல்லா உலகங்களுக்கும் நாயகனாய் -தனது சீர்மையை எண்ணி தானே களிப்படைபவனாய் -தன் மிடுக்கின் காரணமாய் எவருக்கும் அடங்காதவனாய் -எவரோடும் உரையாடாதவனாய் –
(ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள்-ப⁴க³வந்தம் உபேத்ய –எம்பெருமானைக் கிட்டி
தூ³ராதே³வ ப⁴க³வந்தம் *
ஶேஷபோ⁴கே³ ஶ்ரியா ஸஹாஸீநம் * வைநதேயாதி³பி:⁴ ஸேவ்யமாநம் * “ஸமஸ்தபரிவாராய ஶ்ரீமதே நாராயணாய நம” இதி *–திருவநந்தாழ்வான் திருமுடியில் பெரிய பிராட்டியாரோடே கூட இருப்பவனாய்
பெரிய திருவடி முதலான நித்ய ஸூரிகளாலே ஸேவிதனாய் இருக்கிற அப் பெருமாளை
ஸமஸ்த பரிவார ஸமேதனான ஸ்ரீ மன் நாராயணனுக்கு நம -என்று சொல்லி
நெடும் தூரத்தில் நின்றுமே தெண்டனிட்டு
ப்ரணம்ய உத்தா²ய உத்தா²ய * புந: புந: ப்ரணம்ய அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயா வநதோ பூ⁴த்வா * ப⁴க³வத் பாரிஷத³ க³ணநாயகை: *
த்³வாரபாலை: * க்ருʼபயா ஸ்நேஹ க³ர்ப⁴யா த்³ருʼஶாঽவலோகித: * ஸம்யக³பி⁴வந்தி³தை: * தைரேவாநுமதோ ப⁴க³வந்தமுபேத்ய *
ஶ்ரீமதா மூலமந்த்ரேண “பகவந்! மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்³ருʼஹ்ணீஷ்வ”
இதி யாசமாந: * ப்ரணம்ய ஆத்மாநம் ப⁴க³வதே நிவேத³யேத் ॥ 3 ॥
ப்ரணம்ய உத்தா²ய உத்தா²ய * புந: புந: –காலால் நடந்து செல்லுகை அன்றியே
ப்ரணாம பரம்பரைகளினாலேயே சென்று
ப்ரணம்ய அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயா வநதோ பூ⁴த்வா –மிகவும் கூச்சத்தோடும் விநயத்தோடும் வணங்கி நின்று
ப⁴க³வத் பாரிஷத³ க³ணநாயகை: *
த்³வாரபாலை: * க்ருʼபயா ஸ்நேஹ க³ர்ப⁴யா த்³ருʼஶாঽவலோகித: –எம்பெருமானது திரு ஓலக்கத்தவர்கள் -கணாநதர்கள் –திருவாசல் காப்பார் -ஆகிய இவர்களாலே கிருபையோடே அன்பு ததும்பக் கடாக்ஷிக்கப் பெற்றவனாய்
ஸம்யக³பி⁴வந்தி³தை: * தைரேவாநுமதோ –நன்கு தண்டன் இடப்பட்ட அவ்வவர்களாலே அநுமதி பண்ணப் பெற்றவனாய்
ப⁴க³வந்தமுபேத்ய *
ஶ்ரீமதா மூலமந்த்ரேண –ஸ்ரீ வைகுண்ட நாதனை அணுகி
திரு அஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தைக் கொண்டு
பகவந்! மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்³ருʼஹ்ணீஷ்வ”
இதி யாசமாந: * ப்ரணம்ய –அடியேனை அநந்ய நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் என்று
யாசிப்பவனாய்த் தெண்டனிட்டு
ஆத்மாநம் ப⁴க³வதே நிவேத³யேத்-தன்னை அப்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கக் கடவன்
ஆத்ம ஸமர்ப்பணத்திற்குப் பின்:
ததோ ப⁴க³வதா ஸ்வயமேவ * ஆத்மஸஞ்ஜீவநேந * அமர்யாதா³ ஶீலவதா * அதி ப்ரேமாந்விதேந *
அவலோகநேநா அவலோக்ய * ஸர்வதே³ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ²சித * அத்யந்த ஶேஷபா⁴வாய *
ஸ்வீக்ருʼத: அநுஜ்ஞாதஶ்ச * அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயாவநத: * கிங்குர்வாண: க்ருʼதாஞ்ஜலிபுட: * ப⁴க³வந்தம் உபாஸீத ॥ 4 ॥
ததோ –ஆத்ம சமர்ப்பண அநந்தரம்
ப⁴க³வதா ஸ்வயமேவ -எம்பெருமான் தானாகவே
ஆத்மஸஞ்ஜீவநேந * அமர்யாதா³ ஶீலவதா * அதி ப்ரேமாந்விதேந *
அவலோகநேநா அவலோக்ய -ஆத்ம ஸம் உஜ்ஜீவன ஹேதுவாய்
அளவுகடந்த சீல குணத்தைக் காட்டுமதாய்
மிக அன்போடு கூடியதான கடாக்ஷத்தினால் நோக்கி
ஸர்வதே³ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ²சித * அத்யந்த ஶேஷபா⁴வாய *ஸ்வீக்ருʼத: –ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்யுமாறு
ஸ்வீ கரிக்க
அப்பேறு பெற்றவனாகி
அநுஜ்ஞாதஶ்ச –ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் -என்கிறபடி ஏவவும் பெற்றவனாகி
அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயாவநத: * கிங்குர்வாண: க்ருʼதாஞ்ஜலிபுட: * ப⁴க³வந்தம் உபாஸீத -மிகவும் அச்சத்தாலும் ஒடுக்கத்தாலும்
தலை சாய்த்துப் பணிவிடைக்காரனாய் இருந்து கொண்டு
கூப்பிய கையனாய்
அப்பெருமானை அநு வர்த்தித்து இருப்பன் ததஶ்ச அநுபூ⁴யமாந பா⁴வவிஶேஷ: * நிரதிஶய ப்ரீத்யா அந்யத் கிஞ்சித் கர்த்தும் த்³ரஷ்டும் ஸ்மர்த்தும் அஶக்த: *
புநரபி ஶேஷபா⁴வமேவ யாசமாந: * ப⁴க³வந்தமேவ * அவிச்சி²ந்ந ஸ்ரோதோரூபேண * அவலோகநேந * அவலோகயந் ஆஸீத ॥ 5 ॥
பின்னையும் எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வ பாதிகளை அநு பவியா நின்று கொண்டு
அளவு கடந்த அன்பினால் வேறு ஒன்றைப் பண்ணுதல் பார்த்தல் நினைத்தால் செய்ய மாட்டாதானாய் –
சேஷத்வம் பெற்று இருக்கச் செய்தேயும் -அதின் இனிமையாலே -இது நிலை நிற்கப் போகிறதோ என்கிற அதி சங்கை கொண்டு –
பின்னையும் இப்படிப்பட்ட சேஷ விருத்தி குலையாதே நிலை நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நாதனையே இடைவிடாத தாரா ரூபமான பார்வையாலே பார்த்துக் கொண்டு இருக்கக் கடவன் –
ததோ ப⁴க³வதா ஸ்வயமேவ * ஆத்மஸஞ்ஜீவநேந * அவலோகநேந அவலோக்ய * ஸஸ்மிதமாஹூய *
ஸமஸ்தக்லேஶாபஹம் * நிரதிஶய ஸுகா²வஹம் * ஆத்மீயம் * ஶ்ரீமத்பாதா³ரவிந்த³யுக³ளம் *
ஶிரஸி க்ருʼதம் த்⁴யாத்வா * அம்ருʼதஸாக³ர அந்தர்நிமக்³ந: * ஸர்வாவயவ: ஸுக²மாஸீத ॥ 6 ॥
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார் -என்று ஸ்வரூபத்தை நினைத்து அகலா நிற்க
அப்பெருமான் தானே அழகிய திருக்கண் நோக்கத்தாலே குளிரக் கடாக்ஷித்துப் புன் முறுவல் செய்து
இங்கனே வாராய் என்று திருச் சோதி வாய் திறந்து அழைத்து
ஸகல கிலேசங்களையும் போக்கக் கடவதாய்
இனி இதுக்கு இவ்வருகு இல்லை என்னலாம் படியான ஆனந்தத்தைப் பண்ணக் கடவதான
தனது திருவடித் தாமரை இணையைத் தன் தலையிலே வைத்து அருளினதாகத் த்யானம் பண்ணி
அறிவை என்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க் கொண்டதே -என்கிறபடியே ஆனந்த அமுதக் கடலினுள்ளே ஸர்வ அவயவங்களும் மூழ்கப் பெற்றவனாய்க் கொண்டு இந்து இருப்பன்
லக்ஷ்மீபதேர்யதிபதேஶ்ச த³யைகதா⁴ம்நோ:
யோঽஸௌபுரா ஸமஜநிஷ்ட ஜகத்³தி⁴தார்த²ம் |
ப்ராச்யம் ப்ரகாஶயது நঃ பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத³ ஏஷ ஶரணாக³தி மந்த்ரஸார: ||
॥ இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜமுநிவிரசிதே ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ஸமாப்தம் ॥)
பவந்தம் தத்ர த்ரஷ்ட்வா ச ப்ரணம்ய பவதா ஸ்வயம்
அங்கம் ஆரோபித ப்ரேம்ணா புஜைர் ஆலிங்கிதஸ் ததா –110–
இவ்வாறு குறிப்பிட்ட ஏற்றங்களை யுடைய உன்னை -அந்த பரமபதத்தில் கண்டு -தொழுது -உன்னாலேயே சுயமாய் அன்புடன் உன் தொடை மேல் உட்கார வைக்கப்பட்டவனாய் -அவ்வாறே தோள்களை ஆரத்தழுவப் பட்டவனாய்
(கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன் -இன்னும் என் செய்வன் என்று ஒருத்தி -மறப்பனோ என் மணியை -மறப்பேன் என்றும் செந்தாமரைக் கண்ணுடன் மறப்பற என்னுள் மன்னினான் தன்னை -மறப்பனோ -)
ஆக்ராதோ மூர்த்திநஸ் ஸ்நேஹம் ஆர்த்ரா லோகாபி வீக்ஷித
ஸ்ருணுயாம் ஸாந்த்வ வாக்யாநி ஸ்ரோத்ரு கர்ண அம்ருதாநி தே –111-
ஸ்நேஹ பாவத்தால் உச்சி நுகரப்பட்டவனாய் குளிர்ந்த கடாக்ஷத்துக்கு இலக்கானவனாய் -கேட்க்குமவர் செவிகளுக்கு அம்ருதம் ஊற்றினால் போல் நீ சொல்லும் தோற்றரவு வார்த்தைகளை எப்பொழுது கேட்கப் பெறுவேனோ அல்லவா-
(கோஸி -கேட்டு -அறிவித்து அருளிய நீ -அஹம் ப்ரஹ்மாஸ்மி -அப்ருதக் ஸித்த பிரகாரம்-கீழ் மா ஸூச இப்பொழுது குருஷ்வ -ஏவிப்பணி கொண்டு அருள வேண்டும் -)
தத ப்ரணம்ய புரத பார்ஸ்வ யோஸ்த்வாம் து ப்ருஷ்டத
பக்தி ரூப ப்ரபோதேன பஸ்யந் ஸஹ விபூதிபி –112-
ஸர்வத்ர ப்ரஸ்ருதாஹ்லாத ஹடாத் காரேண காரித சோதித
த்வரமாணஸ் ஸதா குர்யாம் கைங்கர்யாண் யகிலாந் யஹம் –113-
இனி மேல் உன்னை நேரிலும் இரு பக்கங்களிலும் பின்புறமும் ப்ரதக்ஷிணமாக வந்து தொழுது பக்தியான திவ்ய ஞான ப்ரபாவத்தினால் அனைத்தும் செல்வங்களுடன் கண்டு கொண்டு எங்கும் பொங்கி வரும் களிப்பின் தாக்கத்தினால் தூண்டப் பட்டவனாய் எப்போதும் த்வரை உடையவனாய் அனைத்து விதமான கைங்கர்யங்களையும் அடியேன் செய்யப் பெறுவேன்
பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே.)
(பக்தி ரூபாபன்ன ஞானம் -அனைத்து செல்வங்களுடன் கூடிய அவனைப் பார்த்து சேவிக்கப் பெற்றவனாய்முன்னிலும் பின் அழகு பெருமாள் -)
ஏகதா தசதா சைவ சததாத ஸஹஸ்ரதா
அநந்ததா ஸ்வ சங்கல்பாத் ஆத்ம கிங்கர விக்ரஹ–114-
ஒரே வடிவுடனும் -பத்து நூறு ஆயிரம் எண்ணற்ற வடிவங்களுடனும் எனக்குத் தோன்றின எண்ணங்களைக் குறித்து அந்தந்த கைங்கர்யங்களுக்கு ஏற்றதான வடிவங்களைப் பெற்றவனாய்
(மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லப் பெற்றேன் -உற்றேன் -உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் -திருவடிகளே சாதனமும் பிராப்பியமும் -ஈதே இன்னும் வேண்டுவது எந்தாய் -)
(தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன் விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-8-சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –
சங்கல்பத்தால் மட்டுமே -என்கிறது
சாந்தோக்யம் -8-2-1-
ச யதி பித்ரு லோகே காமோ பவதி சங்கல்பாதேவ பிதர -அஸ்ய சமுத்திஷ்டந்தி -என்று
முக்தன் பித்ருக்களை காண வேண்டும் என்று விரும்பினால்
அவனது சங்கல்பத்தால் பித்ருக்கள் காட்சி அளிப்பார்கள் என்றது
சங்கல்பாத் ஏவ -சங்கல்பத்தினால் மட்டுமே என்றபடி –
4-4-17-ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அசந்நிஹிதத்வாத் ச —
நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி -முண்டகம் -3-1-3- என்றதாலும்
சத்ய சங்கல்பத்வம் உள்ளவன் என்றதாலும்
சர்வேஸ்வரத்வம் முக்தனுக்கும் உண்டு
என்பர் பூர்வ பஷி
எனவே உலகை படைத்தல் என்னும் ஐஸ்வர் யமும் உண்டு என்பர்-
அப்படி அல்ல
தைத்ரியம்–3-1–யதோ வா இமானி ஜீவந்தி யத் பிரயந்த்யபி சம்விசசந்தி தத் விஜிஜாஞஸஸ்வ தத் ப்ரஹ்ம -என்று
ப்ரஹ்மத்துக்கே உரிய சர்வேஸ்வரத்வ லஷணம் பொருந்த வேண்டுமே)
யதா திவ்யேஷு லோகேஷு ததா த்வத் தயயா ஸ்ருத
இமாந் லோகாந் காம போக காம ரூப்ய நுஸஞ்சரன் –115-
உன்னுடைய தயைக்கு இலக்கானவனாய் -ஸ்ரீ வைகுண்டத்தில் அந்தந்த அவாந்தர உலகங்களைப் போன்று வேண்டிய வடிவங்களைப் பெற்று -வேண்டின போகங்களை அனுபவித்து -லீலா விபூதியான இவ்வுலகத்திலும் கூட உன்னுடன் வழி நடப்பவனாய்
இமாந் லோகாந் காமாந் நீ காம ரூப்ய அநு சஞ்சரன்
ஸோஸ்னுதே சேர்வான் காமாந் ஸஹ
ஸர்வதா தூர வித்வஸ்த துக்க லேஸல வாம்சக
குண அனுபவஜ ப்ரீத்யா குர்யாம் தாஸ்யமசேஷத–116-
ஒரே வடிவுடனும் -பத்து நூறு ஆயிரம் எண்ணற்ற வடிவங்களுடனும் எனக்குத் தோன்றின எண்ணங்களைக் குறித்து அந்தந்த கைங்கர்யங்களுக்கு ஏற்றதான வடிவங்களைப் பெற்றவனாய் -உன்னுடைய தயைக்கு இலக்கானவனாய் -ஸ்ரீ வைகுண்டத்தில் அந்தந்த அவாந்தர உலகங்களைப் போன்று வேண்டிய வடிவங்களைப் பெற்று -வேண்டின போகங்களை அனுபவித்து -லீலா விபூதியான இவ்வுலகத்திலும் கூட உன்னுடன் வழி நடப்பவனாய் -அணு மாத்திரமும் துன்பம் அற்றவனாய் -எப்போதும் உன் ஒவ்வொரு குணத்தையும் ப்ரத்யக்ஷமாய் அனுபவித்ததனால் உண்டாகும் இன்பத்தின் மிகுதியால் பல்வேறு கைங்கர்யங்களைச் செய்யக் கடவேன்
யதா சேஷம் ச கருடம் ஸூமித்ரா தநயம் ததா
குருஷ்வ மாம் அநு சரம் தயயைவ தயா நிதே –117-
கருணைக் கடலே ஆதிசேஷனான திருவனந்த ஆழ்வானையும் வைநதேயனான பெரிய திருவடியையும் ஸூமித்ரையின் புதல்வனான லஷ்மணனையும் எவ்விதமாக ஆட்க்கொண்டு அடிமை கொண்டாயோ அவ்விதமே பின்பற்றும் அடியேனையும் உனது கருணையால் ஆட்க்கொண்டு அடிமை கொள்ள வேண்டும் -(ஸூமித்ரா தனய-கைங்கர்யத்துக்காகவே பெற்றவள் பெயர் உத்தேச்யம் அன்றோ-முகப்பே கூவிப் பணி கொள்வாய் -கூவுதல் வருதல் செய்து -குருஷ்வ மாம் அநு சரம் – -)
ஆத்ம அந்தராத்ம ரூபேண ஸ்திதம் ச அனுபவன் ஸதா
பவந்தம் அநுவரத்தேய ஸ்வச் சந்த அனுகதாத்மக –118-
எவனிடமிருந்து பிரிக்க ஒண்ணாத என் அந்தராத்மாவாய் நிலை பெற்று இருக்கும் உன்னைக் தர்சித்துக் கொண்டு ஸங்கல்ப அனுசாரமாய் விரும்பிய சரீரங்களைப் பெற்றவனாய் உன்னைப் பின் பற்றினவனாய் அடியேன் இருக்க வேண்டும் –
(பேரேன் என்றும் என்னெஞ்சு நிறையப் புகுந்தான் திருப்பேர் நகரான்)
பஸ்யந் நமந் ஸமுத்திஷ்டன் ப்ரவ்ருத்த ப்ரணயோ பவந்
ஸ்துவந் ந்ருத்யந் ப்ரமோதேந பவேயம் பவதந்திகே –119-
உன்னையே தர்சித்துக் கொண்டும் தொழுது எழுந்தவனாய் உன் மேல் அன்பின் மிகுதியை வளர்த்துக் கொண்டும் ஸ்துதித்துக் கொண்டும் மகிழ்ச்சியுடன் கும்பீடு நாட்டமிட்டாடிக் கொண்டும் உனது சந்நிதியிலேயே இருப்பேனாக –
யாவதாத்ம மஹம் ஹர்ஷாத் ஸாம காயன் ஸஹாமரை
ஆஸிஷீய ஸ்ரீயா ஸார்த்தம் பவந்தம் அபி நிர் விசந் –120-
இவ்வாத்மா உள்ளத்தையும் அடியேன் மகிழ்ச்சியுடன் அமரர்களான நித்ய ஸூரிகளுடன் சேர்ந்து ஸாமகாநம் பண்ணிக் கொண்டு திருமகளோடு இனிது அமர்ந்து இருக்கும் உன்னை ஸேவித்துக் கொண்டே இருப்பேனாக –
(இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-)
(தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-)
இத்தம் த்வத் சந்நிதவ் வாசமுக்தாம் மம தயா நிதே
ஸத்யாம் குருஷ்வ தயயா ததா தத் ப்ரதிபாதநாத் –121-
கருணைக் கடலே இவ்வளவிலே இந்த கிரந்தத்தில் முழுமையாக வெளியிடப்பட்டு உனது திருவடித் தாமரைகளில் அடியேன் விண்ணப்பித்தத்தை உனது கருணையால் அறுதியிடப்பட்ட பயன்களை அருளி மெய்ப்பிக்க வேணும் –
(எங்கனே சொல்லிலிலும் இன்பம் பயக்கும் அன்றோ -இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே)
சவும்ய ஜாமாத்ரு முநிநா ஸம்யக் த்ருஷ்டாமி மாம் ஸதா
சிந்தாமத் யாத்ம விஷயாம் பரிசின்வந் பவேத் ஸூகீ –122-
அழகிய மணவாளச் சீயர் என்ற பெயருடைய இந்த கிரந்த கர்த்தாவினா செம்மையாக ஸாஸ்திரங்களில் கூறப்பட்டு ரீதியில் தெளிவாக உள்வாங்கிக் கொண்ட தன்னுடைய ஆத்மாவின் விசாரங்கள் அனைத்தையுமே எப்பொழுதும் அநுஸந்திக்குமவன் எல்லையில்லா ஆனந்தம் பெருகவானாக –
————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply