ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் நாலாவது. இது காஞ்சீபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது.
[போக்த்ராதி விபாகம்-போக்த்ரு நிரூபணம்-போக்ய நிரூபணம் -த்ரிகுண நிரூபணம்-கால நிரூபணம்-சுத்த ஸத்த்வ நிரூபணம் -ப்ரேரித்ருநிரூபணம்-ப்ரஹ்ம த்ரைவித்ய நிரூபணம்.
உயிரும் உடலும் உடலாக ஓங்கித்
தயிர் வெண்ணெய் தாரணியோடுண்டான்*-பயிரில்
களைபோல் அசுரரைக் காய்ந்தான்தன் கையில்
வளைபோல் * எம் ஆசிரியர் வாக்கு.
நம் பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்தி,ஜீவாத்மாக்களும் அவை களின் சரீரங்களும் தனக்குச் சரீரமாயிருக்கும்படி தான் சேஷியாய் ஸர்வோத்க்ருஷ்டனாய் நின்று, திருவாய்ப்பாடியில் தயிர் வெண்ணெய் முதலியவைகளை இந்தப் பூமியுடன், (இது மற்ற எல்லா லோகங்களுக்கும் உபலக்ஷணம்), அமுதுசெய்தவனாய், பயிரில் களையைப் போலே அஸுரர்களைக் கொன்றவனாகிய பகவானுடைய திருக்கையில் கடகத் (சங்கத்)தைப் போலே (அவற்றைத் தரிப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் த்ருப்தியை உண்டு பண்ணுகிறாப் போலே இருக்கிறது,
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -ஹஸ்த ஆபரணம் போல் அன்றோ நம் ஆச்சார்யர் ஸ்ரீ ஸூக்திகள்
போக்த்ராதிவிபாகம் –ஸம்ஸ்க்ருத த்ராவிடருதி ஸ்மருதி இதிஹாஸ புராணங்களில் சொல்லுகிற தத்த்வ ஜ்ஞாந பூர்வகமாக மோக்ஷோபாயாநுஷ்ட்டாநம் வேண்டு(மா)கை
யாலே, முமுக்ஷவுக்கு விசேஷித்தறிய வேண்டும் சித் அசித் ஈஸ்வர தத்த்வங்களை போக்தா என்றும், போக்யம் என்றும், ப்ரேரிதா என்றும் உபநிஷத்துச் சொல்லிற்று.
போக்தாவா கையாவது-போகத்தையுடையனாகை. இது-ஸர்வேஸ்வரனுக்கும் பொதுவாயிருக்க, அவனை ப்ரேரிதா என்று பிரியச் சொல்லுகையாலே ஸர்வ ப்ரேரகத்வ மின்றிக்கே பராதீந போகனான ஜீவனை இங்கு போக்தா என்கிறது.
தேகாத்மா பிரமமும் ஸ்வ ஸ்வா தந்த்ர பிரமமும்-அந்நிய சேஷத்வ பிரமமும் – போக்க வேண்டுமே-ஜீவனுடைய போக்த்ருத்வம் -பரி பூர்ண நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் சங்கல்பம் அடியாகவே –ஆகவே நியாந்தா ப்ரேரிதா -சர்வேஸ்வரன்
(அதிஷ்ட்டாநம் ததா கர்த்தா -கீதை -18-14 கரணம் ச ப்ருதக் விதம் | விவிதா ச ப்ருதக் சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் ‘ என்று மேல் . (மனிதன் சரீரம் வாக்கு மனது இவைகளினால் எந்தக் கர்மத்தைச் செய்கிறானோ,அந்தக் கர்மத்திற்கு) சரீரம்,அப்படியே ஜீவாத்மா (வெவ்வேறாக இருக்கிற இந்த்ரியங்கள், அநேக விதமாயிருக்கிற வேறான வ்யாபாரத்தை யுடைய ப்ராண வாயு, இந்த விஷயத்தில் ஐந்தாவதாகிய பரமாத்மா,இவை ஐந்தும் காரணங்கள்.) என்கிற இடத்தில் கர்த்ரு பதம் பராதீந கர்த்தாவைச் சொல்லுகிறது. சித் அசித் ஈஸ்வரர்கள் என்னும் போது சித் சப்தமும் பராதீந சேதந விஷயம்.
( இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த ஸத்தா -வைகுண்ட ஸ்தவம்-36. நித்யம் ப்ரியாஸ்தவ து கேசந தேஹி நித்யா: ‘ என்று மேல். உம்முடைய ஸங்கல்பத்தினாலேயே எல்லா
வஸ்துக்களினுடைய ஸ்வரூபம் உண்டாகிறது. ( எவை சில உமக்கு எப்பொழுதும் இஷ்டங்களோ அவை நித்யங்கள் என்னப்படுகின்றன.)இத்யாதிகளிற் படியே ஜீவனுடைய ஜ்ஞாநாநந்த ஸ்வரூபாதிகளும் பராதீநங்களாயிறே இருப்பது. இஜ்ஜீவ வர்க்கத்தில் பீஜாங்குர க்ரமத்தாலே அநாதியான அபராத ப்ரவாஹமடியாக முடிவில் பெரும் பாழான சிறைக்கூடத்திலே முப்பிரியான ஸத்வாதி குணங்களாலே கட்டுண்டு கழல விரகற்றுக் கிடக்கிறவர்கள் பத்தர்கள். இவர்களிலே மோக்ஷ ஸாஸ்த்ரங்களிற் சொல்லுகிறதொரு விரகாலே-(மோக்ஷயிஷ்யாமி) என்னும்படி முனிவு தீர்ந்து நித்யரோடொக்க முகப்பே கூவிப் பணி கொள்ளப் பெற்றவர்கள் முக்தர்கள். நித்ய பகவதனுபவத்தாலே நித்ய கைங்கர்ய பரரான சேஷ சேஷாஸநாதிகள் நித்யர்கள்.
போக்யநிரூபணம் –போக்யம் என்பது அநுபாவ்யம் என்றபடி. இது ஜீவேஸ்வரர்களுக்கும் பொதுவாகையாலே பூர்வாபரபதங்களிற் சொன்ன போக்த்ருத்வமும் நியந்த்ருத்வமும்
இல்லாத விஷயத்தை இங்கு’போக்யம் என்கிறது. இத்தை அசித்து என்றது ஜ்ஞாந ரஹிதம் என்றபடி. அசேதநத்வம் கேவல குணங்களுக்கும் தர்மபூத ஜ்ஞாநத்திற்கும் பொதுவாகிலும் இங்கு த்ரிவித அசேதனம் என்று பூர்வர்கள் நிரூபித்தவை த்ரிகுணமும் காலமும் ஸூத்த ஸத்த்வமும் என்கிற த்ரவ்ய விசேஷங்கள்.
த்ரிகுண நிரூபணம் -த்ரிகுணமாவது-பரிமித ஸுகத்திற்கும் துக்கத்திற்கும் மோஹத்திற்கும் விசேஷ காரணங்களான ஸத்த்வ ரஜஸ் தமஸ்ஸுக்களாகிற குணங்களுக்கு ஆஸ்ரயமான த்ரவ்யம். இது கேவல ப்ரக்ருதி என்றும், ப்ரக்ருதி விக்ருதி | என்றும், கேவல விக்ருதி என்றும் மூன்று வகையாய் இருபத்து நாலு தத்த்வ ரூபமாயிருக்கும். இவற்றில் ஸ்வபாவத்தாலும் பஞ்சீகரணாதிகளாலும் தேஸ கால பேதத்தாலே உண்டாம் விக்ருதிகளுக்கு எல்லை யில்லை.-மகான் அஹங்காரம் தன்மாத்திரைகள் -ஆகிய ஏழும் பிரகிருதி விக்ருதிகள்
பஞ்ச பூதங்களும் கர்ம ஞான பஞ்ச இந்திரியங்களும் மனஸ் ஆகிய இவை -16-கேவல விக்ருதிகள்-இவற்றில் ஸ்வ பாவத்தாலும் பஞ்சீ கரணாதிகளாலும் தேச கால பேதத்தாலே யுண்டாம் விக்ருதிகளுக்கு எல்லையில்லை –
கால நிரூபணம்–காலமாவது ஜடத்வ விபுத்வங்களை யுடைத்தாய் பால வ்ருத்தாதி வ்யவஸ்த்தைகளுக்கு விசேஷ காரணமான த்ரவ்யம். இது எப்போதும் அவ்வோ வஸ்துக்களுடைய பூத பவிஷ்யத் வர்த்தமாந வ்யபதேங்களுக்கும் தன் அவச்சேதங்களாலே நியாமகமாயிருக்கும். இதற்கு ஸத்த்வாதி குண த்ரயமின்றிக்கே இருக்க உபாதி விஸேஷங்களாலே ஸீத காலம் உஷ்ண காலம் என்னுமா போலே ஸாத்த்விக ராஜஸ தாஸாதி கால விபாகம் உண்டாகிறது. ப்ரஹ்ம திவஸம் முதலாக மனுஷ்ய திவஸ பர்யந்தமாக எங்கும் இது கண்டு கொள்வது. ஸூத்த ஸத்த்வத்தில் இப்படிப்பட்ட கால விபாகமின்றிக்கே பூர்வாபராதி விபாக மாத்ரமே யாயிருக்கும்.
சுத்தஸத்த்வ நிரூபணம்-சுத்த சத்வமாவது -ரஜஸ் தமஸ்ஸூக்கள் இன்றிக்கே -பிராகிருத சத்வ -விலக்ஷண சத்வத்துக்கு ஆஸ்ரயமான த்ரவ்யம்-இது ச பரிகாரனான ஸ்ரீ யபதிக்கு போக்ய-போக உபகரண -போக ஸ்தான ரூபமாய்க் கொண்டு அனந்த ஆச்சர்யமாய் ஹிரண்ய கர்ப்பாதி ஸ்தலங்கள் எல்லாம் நரகமாய்த் தோற்றும்படியான
ஆனுகூல்ய ப்ரகர்ஷத்தாலே பரமபத சப்த வாஸ்யமாய் இருக்கும்
ப்ரேரித்ருநிரூபணம்--இப்படி மூன்று வகையான சேதநாசேதநங்களுடைய ஸ்வரூப ஸ்த்திதி ப்ரவருத்திகள் மூன்றும் தானிட்ட வழக்காம்படி நிற்கிற ஸ்ரிய:பதியை ப்ரேரிதா என்கிறது. இவன் மூன்று ஸம்பந்த நியமத்தாலே ஸர்வ ஸரீரியாய்,மூன்று வ்யாபார விஸேஷங்களாலே ஸர்வ கார்யங்களுக்கும் ஸர்வ காரணமாய், மூன்று காலத்திலும் ஏகரூப ஸ்வரூப ரூபங்களை யுடையவனாய், மூன்று ஸ்த்தாநத்திலே நித்ய வாஸத்தை யுடையவனாய், மூன்று வகையான அர்ச்சாவதாரத்தை யுடையவனாய், மூன்று யுகத்திலே விஸேஷித்து ப்ரகாலிக்குமவனாய்,மூன்று குண யுகத்தாலும் த்ரியுகனாய், மூன்று வ்யூஹங்களாலே மூவிரண்டு ப்ரகாரங்களைப் பண்ணுமவனாய், மூன்று புருஷார்த்தங்களுக்கும் மூலமாய், மூன்று ப்ரமாணங்களாலும் ப்ரதி ஷேதமில்லாதவனாய், மூன்று மாத்திரையான ஒற்றை எழுத்திற்கு முக்க்யார்த்தமாய், மூன்று ரஹஸ்யங்களில் ஸிக்ஷையாலே விஸேஷித்தறியப்படும்.
ப்ரஹ்ம த்ரைவித்ய நிரூபணம் –-ப்ரஹ்மத்தற்கு உபநிஷத்துக்களிற் சொன்ன த்ரைவித்யம் போகத்ரு(த்வ) விஸிஷ்ட ரூபத்தாலும், போக்ய(த்) விஸிஷ்ட ரூபத்தாலும், ப்ரோகத்வ விஸிஷ்ட ரூபத்தாலும் உபபந்நம். தன்னையும் ப்ரேரிதாவையும் பிரிய-அறிந்து பற்றினவனுக்கு அவன் ப்ரஸாதத்தாலே மோக்ஷம் என்று இங்கே ஓதுகிறது. இப்படியே பஞ்சதஸாத் யாயாதிகளிற்படியே பராவர தத்த்வ விவேகம் பிறந்தால் (த்யேயோ நாராயணஸ் ஸதா- நரஸிம்ஹ புராணம்-18-34 நாராயணன் எப்பொழுதும் த்யானிக்கத் தக்கவன்,) என்றும்,ஸ்மர்த்தவ்ய:ஸததம் விஷ்ணு:- பாரதம்- விஷ்ணு எப்பொழுதும் ஸ்மரிக்கத் தக்கவன். )என்றும்,துஞ்சும்போதும் விடாது தொடர்-திருவாய்-1-10-4-என்றும் சொல்லுகிற ஸதா நுஸந்தாநம் கருத்ய பேஷமுடையவனுக்கு உபாயோபகார விதி(தை)யாலேவந்த போகம். க்ருதக்ருத்யனுக்கும் கைங்கர்யோபகார விதி(தையாலே வந்த போகம்] போக்யனாய் நித்ய ஸ்ரீயான ஸேஷி ஸமாதிக தரித்ரனானாற்போலே
போகமும் நிஸ் ஸமாப்யதிகமாம்.
அலையற்ற ஆரமுதக் கடல் அக்கடலுண்ட முகில் *
விலையற்ற நன்மணி வெற்பு வெயில் நிலவோங்குபகல்*
துலையொத்தன என்பர் தூய்மறைசூடும் துழாய்முடியாற்கு
இலையொத்தன அவன் பாதம் பணிந்தவர்க்கு எண்ணுதற்கே.
அலையில்லாத பூர்ணமான அம்ருதத்தையுடைய ஸமுத்திரம், அந்த அம்ருத ஸமுத்திரத்தை முழுதும் குடித்த மேகம், விலையில்லாததான உத்தம ரத்நமயமான மலை, வெயிலினாலும் நிலவினாலும் ப்ரகாசிக்கும் மத்தியான்னம் இவைகள் பரிசுத்தமான வேதங்களினாலே சிரஸ்ஸினால் சூடப்படுகிற துழாய் மாலையைக் கிரீடத்தில் தரித்துக் கொண்டிருக்கிற பகவானுக்கு ஸமமாயிருந்தன, அன்றிக்கே தூக்கிப் பார்ப்பதில் அதாவது நிறையில் ஸத்ருச்யமாயிருந்தன என்று ( பூர்வாசார்யர்கள்) சொல்லுவர்கள், அவனுடைய திருவடிகளை ஆச்ரயித்த பாகவதர்களுக்கு இவைகள் ஸமானம் என எண்ணுதற்கே ஸத்ருசமான வஸ்துக்கள் இல்லை
ஸத் ஸம்ப்ரதாய தத்நஸ் ஸமுத்த்ருதம் வேங்கடேரே ந |
தத்த்வநவநீதமேதத் தநுதே நவநீதநர்த்தகப்ரீதிம் |11
ஸத்ஸம்ப்ரதாயத்தில் உபதேச க்ரமமாக வந்த அர்த்தங்களாகிற தயிரிலிருந்து வேங்கடேசன் என்கிற திருநாமத்தை யுடைய ஆசார்யனால் எடுக்கப்பட்ட இந்தத் தத்த்வ நவநீதம் என்கிற க்ரந்தமானது நவநீதத்திற்காக (க்கோபர்களுடைய க்ருஹங்களில்) நர்த்தநம் பண்ணின பகவானுக்கு ப்ரீதியைச் செய்கிறது.
வரத விரசய த்வம் வாரிதாபேபஷதோஷாம்
புநருபசித புண்யாம் பூஷிதாம் புண்யகோட்யா |
ஸிதமுதித மநோபி: தாவகை: நித்ய ஸேவ்யாம்
ஹதரிபு ஜநயோகாம் ஹஸ்திதாம்நஸ் ஸம்ருத்திம் [1
ஸத்யவ்ரத க்ஷேத்ரத்தில் அர்ச்சாரூபம் கொண்டிருக்கும் வரதனே! போக்கடிக்கப்பட்ட எல்லாத் தோஷங்களையுடையதாயும், மேன்மேலும் வருத்திசெய்யப்பட்ட புண்யத்தையுடையதாயும், புண்யகோடி விமானத்தினால் அலங்கரிக்கப்பட்ட தாயும், பரிசுத்தமாயும், ஸந்தோஷத்தோடு கூடியதாயுமிருக்கிறமனத்தையுடைய உம்முடைய பக்தர்களினால் எப்பொழுதும் ஸேவிக்கத் தகுந்ததாயுமிருக்கிற ஹஸ்திகிரியினுடைய ஸம்பத்தைப் போக்கடிக்கப்பட்ட சத்ரு ஜனங்களுடைய ஸம்பந்தத்தையுடையதாக நீர் செய்துகொள்ளும்,
இப்படி கவிதார்க்கிக ஸிம்ஹமும் ஸர்வதந்த்ரஸ்வதந்திரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச்செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீதத்த்வநவநீதம் முற்றிற்று.
—————————-
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
———————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply