அவதாரிகை –
ஆஸ்ரித ரஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று
உகந்து அருளின நிலங்களைச்
சால விரும்பி இருக்கும்
என்கிறார் –
கேவலம் சம்சாரத்தில் வந்து நின்ற மாத்ரமோ –
பரமபதத்திருப்பும் மனிச்சுக்கவாய்
அத்தாட்சியோடே கூடி இருப்பது
உகந்து அருளின தேசத்திலே அன்றோ
என்கிறார் –
————————————————————————————-
விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-
பதவுரை
விண்ணகரம்–திருவிண்ணகரமும்
வெஃகா–திருவெஃகாவும்
விரி திரை நீர் வேங்கடம்–விரிந்து துலையெறிகிற நீர்வம் பொருந்திய திருமலையும்
மண் நகரம்–பூமிலுண்டான வைகுந்தமாநகர்போன்ற
மா மாடம் வேளுக்கை–பெரிய மாடங்களை யுடைத்தான திருவேளுக்கையும்
மண் அகத்த தென் குடந்தை–பூமியிலுண்டான அழகிய திருக்குடந்தையும்
தேன் ஆர் திரு அரங்கம்–தேன் (வெள்ளமிடுகிற சோலைகள்) பொருந்திய திருவரங்கமாநகரும்
தென் கோட்டி–தென் திருக்கோட்டியூரும்
(ஆகிய இத்திருப்பதிகள்)
தன் குடங்கை–தனது உள்ளங்கையாலே
நீர் எற்றான்–(மாவலி பக்கல்) உதக தானம் பெற்ற பெருமான்
தாழ்வு–தங்குமிடங்களாம்.
—————————————————————————————-
வியாக்யானம் –
விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம் –
திரு விண்ணகர்
திரு வெக்கா
ஜல சம்ருத்தியை யுதைத்தான திருமலை
குளிர் அருவி வேங்கடம் -நாச்சியார் திருமொழி -8-3-என்னுமா போலே
மிக்க அருவிகளை உடைய திருமலை –
திருமலை என்றால்
ஒரு விசேஷண ரஹிதமாக்ச் சொல்ல மாட்டார் –
மண்ணகரம் மா மாட வேளுக்கை –
சம்சாரத்திலேயாய் இருக்கச் செய்தே
பரம பதத்தோடு ஒக்க எண்ணலாம்
நகரமான –
பெரிய மாடங்களை உடைத்தான
திரு வேளுக்கை –
மா மாட –
ஸ்லாக்கியமான மாடங்கள் -என்றுமாம் –
மண்ணகத்த தென் குடந்தை –
பூமியிலே உண்டான திருக் குடந்தை –
திரு நாட்டிலே ஒரு கண்டம் –
தேனார் திருவரங்கம் –
நிரதிசய போக்யமான
சோலையை யுடைய
பெரிய கோயில் –
தென் கோட்டி –
தெற்குத் திக்கிலே யுண்டான
திருக் கோட்டியூர் –
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு –
தன்னுடைய சிறாங்கித்த கையிலே நீரை ஏற்றவன்
திரு உள்ளம் தாழ்ந்து கிடக்கும் இடங்கள்
தன் உடைமையை மீட்டுக் கொள்ளுகைக்கு அர்த்தி யானவன்
தன்னது மீட்டுக் கொள்ளுகைக்கு அர்த்தியாய் இருக்கிறபடி –
மகா பலி பக்கலிலே தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தி யானால் போலே
உகந்து அருளின தேசங்களிலே
அர்த்தித்வம் தொடரும்படி நின்றான் –
தாழ்வு –
அபேஷித்த சமயத்திலே ஒருக்கால் உதவிப் போகை அன்றிக்கே
எப்போதும் உதவும்படி வந்து
நிற்கப் பெற்றோமே என்று
திரு உள்ளம் மண்டி இருக்கிற இடங்கள் –
ஆஸ்ரிதர் அபேஷித்த போதாக வந்து அவதரிக்க
வேண்டாதபடி
தாழ்ந்து வர்த்திக்கிற தேசம் –
———————————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply