விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளின திருமலை வ்ருத்தாந்தத்தை
அனுபவித்து இனியர் ஆகிறார் –
(தேஹ யாத்திரையே ஸமாஸ்ரயணமாகக் கொல்லுமவன் என்றார் கீழ்
அதற்கு வரும் பிரதிபந்தங்களையும் போக்கி அருளுபவனும் இந்த திருமலை என்கிறார்
சமன் கொள் வீடு தரும் சமன் குன்றம்-இங்கு யானைக்கு பிரமிப்பு –
கீழ் கடுவனுக்கு பார்த்தோம் -)
களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-
பதவுரை
களிறு–யானையானது
கை எடுத்து ஓடி–தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி
முகில்–(மத யானை போலெழுந்து) மேகங்களை-மத யானை போல் எழுந்த மா முகில்கள்
குத்த–(எதிரி யானை யென்று நினைத்துக்) குத்த
யாளி–(இதைக் கண்ட) யாளியானது
ஒளிறு மருப்பு–(அந்த யானை யினுடைய) விளங்குகின்ற கொம்பை
ஓசி–முறிக்கிற
கை–கையை யுடைத்தாய்க் கொண்டு
பிளிறி விழ கொன்று–(அந்த யானை) வாய் விட்டலறிக் கொண்டு விழும்படி (அதனைக்) கொன்று
நின்று அதிரும்–அங்கேயே நின்று கொண்டு பெரு முழக்கம் செய்யப் பெற்ற
வேங்கடமே–திருவேங்கடமே
மேல் நாள்–முன்பொரு காலத்தில்
குழ கன்று கொண்டு–இளங்கன்றை (எறி குணிலாகக்) கொண்டு
எறிந்தான்–(விளங்கனிமீது) எறிந்த பிரானுடைய
குன்று–திருமலையாம்.
களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி–
கையை எடுத்துக் கொண்டு ஓடிக் களிறானது முகிலைக் குத்த –
ஒளிறு மருப்பொசிகை யாளி –வெண் மருப்பை முறியா நின்ற யாளி —
கை எடுத்தோடி என்று யாளிக்காகாச் சொல்லவுமாம் –
பிளிறி-விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே–
யானையானது பிளிறிக் கொண்டு விழும் படிக்கு ஈடாகக் கொன்று
சினத்தாலே நின்று அதிரா நின்ற திருமலை –
மேனாள்-குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–
சஹஜ சத்ருக்களை முடித்து விரோதி போகப் பெற்றது என்று உகந்து நிற்கும் அவனுடைய திருமலை இறே –
திருமலையில் பின்னை ஒன்றுக்கு ஓன்று பாதகம் ஆகுமோ என்னில்
அக்நீஷோமீய ஹிம்சையோ பாதி இறே அவற்றுக்கும் –
(திவ்ய தேசங்களில் அனைத்துமே உத்தேச்யம்
போது அரிந்து வானவர்கள் -திவ்ய தேச முதலைகள் விரோதம் அல்லவே
இங்கு ஆகுமோ என்னில்
பலி கொடுக்கும் ஆட்டுக்கும் ஸ்வர்க்கம் கிட்டுமே
அறுவை சிகிச்சை -இப்பொழுது துன்பம் நீண்ட நாளுக்கு இன்பம் போல் ப்ரஸவ வலி ஹிம்ஸை அல்லவே
கட்டடம் கட்ட ஒத்தாசை பண்ணியவர்களுக்கு காவேரியில் தள்ளி மோக்ஷம் அருளிய கலியன்)
—————————————————————-
விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளின திருமலை வ்ருத்தாந்தத்தை
அனுபவித்து இனியர் ஆகிறார் –
ஆனையானது தன் துதிக்கையை எடுத்துக் கொண்டு பெரிய வேகத்தோடு சென்று மத யானை போலே எழுந்த
மா முகிலை (8-9)(1-2)பிரதி கஜம் என்று புத்தி பண்ணி குத்த –
இத்தைக் கண்ட யாளியானது -அந்த யானையினுடைய வெளுத்த நிறத்தை யுடைத்தான கொம்பை
அநாயாசேன முறியா நின்ற கையை யுடைத்தாய்க் கொண்டு
அது வாய் விட்டு அலறிக் கொண்டு முறிந்து விழும்படி கொன்று பொகட்டு
பின்னையும் சீற்றம் மாறாத படியால்
இவ்விடம் தன்னிலே நின்று ஷூத்ர மிருகங்கள் மண் உண்ணும் படி கர்ஜியா நிற்கும் வேங்கடமே
முன்பு ஒரு நாளிலே குழக் கன்றைக் கொண்டு விளங்கனி எறிந்தவனுடைய திருமலை –
மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-
வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று
ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள்
ஆலி மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-1-
(வண்டினம் முரலும் சோலை* மயிலினம் ஆலும் சோலை,*
—————————————————————————————————-
(மேலை இளங்குமரர் -உயரத்தில் – மேல் தன்மையில் மேலானவர் -யத்ர பூர்வ ஸாத்யா சந்தி தேவர்)
(நான்கு வியாக்கியானங்கள் இப்பாட்டுக்கு-வேங்கடத்தைப் பதியாக வாழ்வதால் வந்த ஏற்றங்கள்
திருமலையின் உயரம் -கையில் சக்தி -அடர்ந்த மூங்கில் -வளையலின் ஒளி சிறப்பு -நான்கையும் சொன்னவாறு
விளையாடுகிற கழலானது-அம்மானை ஆட -அது மேல் சென்று ராகுவை விடுவித்தது என்றும்
மூங்கில் சென்றும் என்றும் )
குன்று ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளையாடும் தீங்கழை போய் -வென்று
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் —–72-(தீங்கழை-தீம் கழல் பாட பேதம் )
பதவுரை
குன்று ஒன்றினாய–அத் திருமலை யொன்று தவிர வேறொரிடமும் அறியாதிருக்கிற
குற மகளிர்–குறத்திகள்
கோல் வளை கை–அழகிய வளைகளணிந்த கைகளினாலே
சென்று–மலை மேலேறி
விளையாடும்–விளையாடா நிற்கப் பெற
தீம் கழை–அழகிய மூங்கில்கள்
போய்–சந்திர மண்டலத்தளவும் போய்
வென்று–ராஹுவைத் தகர்த்து,
விளங்கு மதி கோள் விடுக்கும்–விளங்கா நின்ற சந்திரனுடைய கிரஹணத்தை விடுவிக்கப் பெற்ற
வேங்கடமே–திருமலையே
மேலே–மேலுலகத்திலுள்ள
இளங் குமரர் கோமான்–நித்ய யுவாக்களான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான பெருமானுடைய
இடம்–திவ்ய தேசமாம்.
குன்று ஒன்றினாய குற மகளிர் —
திருமலைக்கு கீழ் இழியில் குடிப் பழியாம் குறவருடைய பெண்கள் –
கோல் வளைக் கை-சென்று விளையாடும் திங்கழை போய் –
குறவருடைய பெண்கள் கோல் வளையை யுடைத்தான கையாலே-சென்று விளையாடுகிற கழலானது போய் –
வென்று விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் —-
உஜ்ஜவலமான சந்திரனை ராஹு வானது க்ரஹிக்க ஒண்ணாது என்று
வென்று சந்திரனுக்கு அந்த வியசனத்தைப் போக்கும் திருமலை பரம பதத்தில் தன்னோடு ஓக்க
(த்வி) த்வாதஸ வார்ஷிகரான நித்ய ஸூ ரிகளுக்கு சேஷியானவன் இடம் -(பஞ்ச விம்சதி வார்ஷிகர் உபநிஷத் )
தீங்கிழை -என்று
இவர்கள் ஊஞ்சல் ஆடுகைக்குப் பிடித்து விளையாடும் மூங்கில் ஆகவுமாம் –
(சிகரம் உயர ஏற்றம்-பெண்களின் கையின் திண்மை -இரண்டையும் சொன்னவாறு )
————————————————————
திருப்பதியினின்று இழிகை குடிப் பழி என்று நினைத்துத் திருமலை ஒன்றையுமே உடையராய்க் கொண்டு
வேங்கடத்தைப் பதியாக வாழக் கடவராய் -ஸ்வ இச்சையால் சென்று விளையாடும் குறப் பெண்களுடைய
தர்ச நீயமான வளையை உடைத்தான கையானது –
பசுமையாலும் சுற்று உடைமையாலும் ஒழுகு நீட்சியாலும் அழகிய மூங்கில்களை வென்று
(வேய் போலும் எழில் தோளி -அழகு சொல்லக் கடவது
இங்கு குறப் பெண்களுடைய கை வென்றதை இங்கு சொல்லி மேல் ராகுவை வென்றதைச் சொல்லி)
அதுக்கு மேலே
உஜ்ஜவலனான சந்திரனை க்ரஸிக்க ஒருப்படுகிற ராஹுவாலே வந்த அவன் வியசனத்தைப் போக்கும் திருமலையே —
சர்வ உத்தமராய் -நிரந்தர அனுபவத்தால் நித்ய யவ்வன ஸ்வ பாவரான நித்ய ஸூ ரிகளுக்கு ஸ்வாமி யானவன்
விரும்பி வர்த்திக்கும் ஸ்தானம் –
விளையாடும் குற மகளிர் கோல் வளைக் கையானது சென்று நல்ல மூங்கில் செறிவை நீக்கிக் கிரணங்களை யுடைய
சந்திரன் இங்குப் புகுரப் பெறாமையால் உண்டான இடரை நீக்கும் என்றுமாம்
அன்றிக்கே –
அவர்கள் வளையின் ஒளி சந்திரன் ஒளி புகுரப் பெறாத மூங்கில் இருளை அறுத்து வெளி யாக்கிச்
சந்திரன் மறுவையும் போக்கும் -என்றுமாம் –
அங்கனும் இன்றிக்கே –
குற மகளிர் கோல் வளைக் கையாலே ஊஞ்சல் ஆடுகைக்காக வளைத்து விட்ட மூங்கிலானது
போய் விளங்கு மதி கோள் விடுக்கும் என்றுமாம் –
——————————————————————————————————————–
திருமலையில் நின்று அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனானவன் திருவடிகளை
ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –
இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வட முக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள நலம் ——73-
பதவுரை
ஏழ் பூண்ட–ஏழு குதிரைகளைப் பூண்ட-ஏழு சந்தஸ்ஸுக்கள்
இரவி தேர்–ஸூர்யனுடைய தேரை
இடம் வலம்–(மேருவுக்கு) இடப்பக்கமாகவும் வலப் பக்கமாகவும்
ஒட்டி–(அந்தர்யாமியா யிருந்து கொண்டு) நடத்துகிறவனும்
வட முகம் வேங்கடத்து மன்னும்–வட திசையின் கண்ணுள்ள திருவேங்கடத்தில் நித்ய வாஸம் பண்ணுமவனும்
குடம் நயந்த கூத்தன் ஆய் நின்றான்–ஆசையோடு குடக் கூத்தாடின கண்ணபிரான் போன்று நிற்பவனுமான பெருமானுடைய
குரை கழல் கூறுவதே–ஆபரண வொலி பொருந்திய திருவடிகளே ஏத்துவதே
நா தன்னால் உள்ள நலம்–நாவினால் கொள்ளக் கூடிய பிரயோஜனம்.
இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி-
இடத்திலும் வலத்திலுமாக ஏழு குதிரை பூண்ட ஆதித்யனுடைய தேரை ஒட்டி
ஏழு பூண்ட ஆதித்ய ரதத்தை மஹா மேருவுக்கு வலமே இடமாக -மார்க்கமாக ஒட்டி என்றுமாம்
இரவியினுடைய தேரை பாரத சமரத்திலே நடத்தி -என்றுமாம் –
(துவாதச ஆதித்யர்கள் -காயத்ரி சந்தஸ்ஸுக்கள் -(6-12-அஷரம் பாதம் -காயத்ரி முக்காலி மூன்று -ஒவ்வொன்றும் 8 அக்ஷரம் )
(காயத்ரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, த்ரிஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி என்ற ஏழு சந்தஸ்ஸுக்கள் ஏழு குதிரைகளாகும்.)
வடமுக வேங்கடத்து மன்னும் –
வடக்கில் திக்கில் உண்டான திருமலையிலே நித்ய வாசம் பண்ணுகிற –
குட நயந்த-கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள நலம் ——
குடமாடி நின்றவனுடைய ஆபரண ஒலியை யுடைத்தான திருவடிகளைக் கூறுகை
நாவால் படைக்கும் சம்பத்து –
குடக் கூத்து ஆடின இளைப்பு ஆறத் திருமலையிலே வந்து நின்றான் போலே –
———————————————————————-
திருமலையில் நின்று அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனானவன் திருவடிகளை
ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –
மேருவுக்கு இடமாயும் வலமாயும் சஞ்சரிக்கக் கடவதாய் –
ஏழு நாமத்தை யுடைத்தாய் இருப்பதாய் –
ஏழு குதிரை பூண்ட ஆதித்ய ரதத்தை தத் அந்தர்யாமியாய்க் கொண்டு ஒட்டி
வடக்குத் திக்கில் பிரதானமாய் இருந்துள்ள திருமலையிலே நித்ய வாசம் பண்ணா நின்றானுமாய்
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு குடம் எடுத்து ஆடுகிற மநோ ஹாரி சேஷ்டிதத்தை உடையவனாய்
நின்றவனுடைய ஆபரணத் த்வனியை உடைத்தான திருவடிகளை ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் –
(பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க –
சீரார் குடம் இரண்டு -ஏந்தி -செழும் தெருவே –
ஆராரெனச் சொல்லி -ஆடுமது கண்டு
எராரிள முலையார் என்னையரும் எல்லாரும் –
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல் வினையால் –
காரார் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் –)
(மன்றம் அமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் )
(ஜிஹ்வே கீர்தய கேசவம் -முகுந்த மாலை)
——————————————————————————————————-
அவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –
நலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ -சலமே தான்
வெங்கொங்கை யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——–74-
பதவுரை
சலமே–கபடமாகவே
நஞ்சு–விஷத்தை
ஊட்டு–உண்பிக்க வந்த
வன் பேய்–கொடிய பூதனை யானவள்
நிலமே–பூமியிலே
புரண்டு போய் வீழ–(பிணமாய்) மறிந்து போய் விழும்படியாகக்
தான் சலமே–தானும் கபடமாகவே
வெம் கொங்கை–(அவளது) வெவ்விய முலையை
உண்டானை–அமுது செய்த கண்ண பிரானை-தாய் முலை இருக்க பேய் முலை வாய் வைத்த பித்தன்
ஆய்ச்சி–யசோதை யானவள்
மீட்டு–(அப் பூதனை பக்கலில் நின்றும்) மீட்டு
ஊட்டுவன்–(தனது முலைப் பாலை) உண்பிப்பதற்காக
சார்ந்து–அணுகிச் சென்று
தன் கொங்கை–தனது முலையை
வாய் வைத்தான்–அவனது வாயிலே உண்ணக் கொடுத்தாள்,
நலமே வலிதுகொல்–இந்த ப்ரேமம் எவ்வளவு கனத்தது!
நலமே வலிது கொல் —
ஸ்த்ரீத்வ பிரயுக்தமான அச்சத்தில் காட்டில் ஸ்நேஹமே வலிதாகாதே–
சலமே தான்- நஞ்சூட்டுவன் பேய்–
தாய் வேஷத்தைக் கொண்டு நஞ்சூட்டுவதாக வந்த வலிய பேயானது –
(தாய் வடிவில் வந்த பேய் -கைகேயியை பரதன் குகன் இடம்-குகன் பெருமாள் திரு உள்ளம் புண் படும் -)
(பொய்யர்க்கே பொய்யனாகும் -இவள் சல புத்தி யுடன் போக அவன் சலமே தான் வெங்கொங்கை யுண்டான் )
நிலமே புரண்டு போய் வீழ –
நிலத்திலே புரண்டு விழும் படிக்கு ஈடாக(பாலுடன் பிராணனும் வரும்படி இழுத்து உண்டான் )
வெங்கொங்கை யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான் தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——
விஷ முலை யுண்டத்துக்குப் நலமே வலிது கொல்-
அச்சமும் ஸ்நேஹமும் கூடினால் -ஸ்நேஹமே வலிதாகாதே —
முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை
வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே –1-3-1-
———————————————————
அவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –
பேய் வடிவை மறைத்துத் தாய் வடிவு கொண்டு வருகை யாகிற க்ருத்ரிமத்தாலே
விஷத்தைப் புஜிப்பதாக ஒருப்பட்ட கடின சித்தையான பூதனையானவள் பூமியிலே பிணமாய் மறிந்து போய்
விழும்படியாக வெவ்விய முலையை அமுது செய்தவனை முலையை அமுது செய்தவனை
அவள் பக்கலில் நின்றும் மீட்டு யசோதை பிராட்டி யானவள்
விஷத்துக்கு ப்ரத்ய ஒளஷதமான அம்ருதத்தை புஜிப்பதாக கேட்ட இடத்திலே மோஹித்து விழாதே அவ்வளவும்
கால் நடை தந்து சென்று கிட்டித் தன்னுடைய முலையை அவன் திருப் பவளத்திலே கொடுத்தாள் –
ஆன பின்பு நம்மை இழக்க வரில் செய்வது என் என்று பயப்பட்டு மீளுகைக்கு உடலான அறிவில் காட்டிலும்
தன்னைப் பேணாதே அவனைப் பேணுகைக்கு உறுப்பான பிரேமமே வலிதாகாதே –
ஒருத்தி யுடைய ஸ்நேஹம் இருக்கும் படியே -என்று வித்தாராகிறார் –
என்னொருவர் மெய்யென்பர் ஏழு உலகு உண்டு ஆலிலையில்
முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறே —முதல் திருவந்தாதி —-34–
—————————————————————————————————–
இப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற
திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –
(மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை போல் ஒக்கம்-திருமலையில் எல்லாமே உத்தேச்யம் தானே -)
சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-
பதவுரை
தடாவிய–பரப்பை யுடைத்தான
கோடு-சிகரங்களினுடைய
உச்சி வாய்–உச்சயிலே
அகடு தேய்ப்ப–கீழ் வயிறு உராயும்படியாக
சார்ந்து–கிட்டி
ஊர்ந்து இயங்கும்–மெல்ல ஸஞ்சரிக்கின்ற
வண் மதியின்–அழகிய சந்திரனிடத்துள்ள
ஒண் முயலை–அழகிய முயலை,
சினம் வேங்கை–கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது-வேங்கை மரத்துக்கும் ஒருவகைப் புலிக்கும் பெயர்
சேர்ந்து–கிட்டி
பார்க்கும்–(அதைப் பிடித்துக் கொள்ளவும் விட்டுப் போகவும் மாட்டாமல்) எப்போதும் பார்த்தபடியே நிற்கப் பெற்ற
ஆயன்–கண்ணபிரானுடையதாய்
புனம் வேங்கை நாறும்–தன்னிலத்தில் வளர்ந்து செழிப்புற்ற வேங்கை மரங்கள் கமழப் பெற்றதான
பொருப்பு–மலை
சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்–
பரந்த கொடு முடியில் கிட்டிக் கீழ் வயிறு தெப்ப-
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை –
போக்யதையாலே மெள்ள சஞ்சரியா நின்ற சிகரத்தில் தேய்க்கையாலே
ஒளியை யுடைத்தான சந்திரன் பக்கல் முயலை –
(பாலகன் என்று பரிபவம் செய்யேல் -நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ -பெரியாழ்வார்)
(தேய்க்கையாலே செயற்கை அழுக்கு போக -இயற்கை கரும்திட்டு -முயல் – போகாமல் விளங்குமே)
சேர்ந்து-சின வேங்கை பார்க்கும் திருமலையே —
கிட்டிச் சினத்தாலே புலி படப் பார்க்கும் திருமலை -(முயல் பட்டுப்போகும் படி தீ விழி )
ஆயன்-புன வேங்கை நாறும் பொருப்பு —–
இடையர்க்கு காட்டில் மரங்களுடைய நாற்றம் சால பிரியம் இறே –
(காடு வாழ் சாதியையும் ஆகப் பெற்றான் -காட்டுப் பூவும் இவன் இருக்கவே கமழும் அன்றோ)
——————————————————————
இப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற
திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –
பரப்பை யுடைத்தான சிகரங்களினுடைய உச்சி இடத்திலே கீழ் வயிறு தேயும் படியாகக் கிட்டி
அங்குத்தை போக்யத்தையிலே கால் தாழ்ந்து மெள்ள சஞ்சரிக்கக் கடவனாய் –
கொடு முடியில் தேய்க்கையாலே சாணையிலே இட்டால் போலே ஒளியை யுடையனாய்
இருக்கிற சந்திரன் பக்கல் யுண்டான அழகிய முயலை –
கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது கிட்டித் தனக்கு ஆமிஷமான முயலாகக் கருதி –
பிடித்துக் கொள்ளுதல் -விட்டுப் போதல் செய்ய மாட்டாதே
எப்போதும் பார்த்த படியே நிற்கும் திருமலையே
ஸ்ரீ கிருஷ்ணன் என்னது என்று அபிமானித்த ஸ்தலமாய்
ஜாதி உசிதமான தன்னிலத்திலே வேங்கைகள் நிரந்தரமாகப் பரிமளிக்கும் பர்வதம் –
————————————————————————————————-
(ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-)
(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-)
(ஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு காணப் போகாது –என்கிறது –
சரணம் சொல்லி நிரந்தரம் கைங்கர்யம் செய்தாலே போகுமே
கோர மா தவம் செய்தான் அவன் அன்றோ நம்மைப்பெற
இங்கும் நீர் தவம் செய்ய வேண்டா)
(அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–)
(வெறிதே யருள் செய்வர் –நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே
தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு)
(சும்மெனாதே கை விட்டு ஓடிப்போகுமே
நாம் ஆராய்ந்து கை தொழுதால் என்றும்
தீ வினைகள் ஆய்ந்து விலகிப்போகுமே)
சர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான்
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் –
உடம்பை ஒறுத்து -துஷ்கரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா —
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும்
தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76-
பதவுரை
(ஒ உலகத்தவர்களே)
நீர்–நீங்கள்
பொருப்பு இடையே–மலைகளின் நடுவே
நின்றும்–நின்று கொண்டும்
புனல்–நீர் நிலைகளிலே
குளித்தும்–முழுகிக் கொண்டும்
ஐந்து நெருப்பு இடையே–பஞ்ச அக்நி மத்யத்திலே
நிற்கவும்–நின்று கொண்டும் தவஞ்செய்ய
வேண்டா–வேண்டியதில்லை,
விருப்பு உடைய–(எல்லாராலும்) விரும்பத் தக்கதா யிருக்கின்ற
வெஃகா–திரு வெஃகாவில்
சேர்ந்தானை–வந்து கண் வளர்த்தருளும் பெருமானை
மெய்–மெய்யாக (அநந்நய ப்ரயோஜநமாக)
மலர் தூய் கை தொழுதால்–புஷ்பங்களைப் பணிமாறி வணங்கப் பெற்றால்
தீ வினைகள்–துஷ் கருமங்களெல்லாம்
ஆய்ந்து–(நமக்கு இவ்விடம் வாஸயோக்யமன்று என்று) நிரூபித்தறிந்து
அஃகாவே–சுருங்கிப் போக மாட்டாவோ? (அகன்றோடிப் போய்விடுமென்கை)
(தொழுதால்-ஆல் –அநந்யார்ஹமாக கை தொழுவது துர்லபம் -என்பதைக் காட்டியவாறு)
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்–
பனி நாள் மலைகளில் (நின்றும் பனி நாளில் )பொய்கைளிலே புக்குக் குளித்து
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா–
கோடை நாள் பஞ்சாக்கினி மத்யஸ்தனாய் நிற்கவும் வேண்டா –
(வேண்டா என்று முன்னிலையாகச் சொல்வதே போதுமே
நீர் வேண்டா என்று குறிப்பிட்டுச் சொல்வான் என்னில்
நம்மைப் பெறவே அவன் கோர மா தவம் செய்கின்றான் என்பதை காட்டவே -)
(தஸ்மாத் நியாஸமே உத்க்ருஷ்ட தபஸ் ஸூ)
(மூன்று தத்வங்கள் மூன்று காலங்கள் அப்பிள்ளை
இங்கு இரண்டு
பொருப்பிடை ஐந்து நெருப்பிடை கோடைக்காலம் ஆச்சார்ய ஹ்ருதயம்)
விருப்புடைய-வெக்காவே சேர்ந்தானை–
விரும்பப் படுவதான திரு வெஃகாவிலே சேர்ந்தவனை –
(அனைவருக்கும் விருப்பு -உகந்து அவனுக்கும் -ஆழ்வாராதிகளுக்கும் -ஆச்சார்யர்களுக்கும் -நமக்கும்)
(புருஷகாரத்துக்கு திவ்ய தேசம் இருக்கும் என்றவாறு)
மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்-அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-
அநந்ய பிரயோஜனனாய் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆய்ந்து அனுசந்தித்து கை தொழுதால் –
அசேதனமான கொடிய பாபங்கள் தானே தன்னை ஆஸ்ரயிக்க நிற்க வற்றோ –
தீ வினைகள் தானே ஆராய்ந்து நமக்கு நிலம் அன்று என்று போகாவோ என்றுமாம் –
வ்ருஷ்டி பிரதீஷாஸ் சாலய-என்னும் நியாயத்தாலே
சும்மானாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே –
(மழைக்கு பயிர்கள் காத்து இருக்க ஞானம் உண்டோ-அதே போல் தீ வினைகளுக்கு ஞானம் இல்லை
சேதன சமாதியில் சொல்கிறார்)
எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3 –
——————————————————————–
உடம்பை ஒறுத்து -துஷ்கரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா —
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும்
தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –
பனி காலத்தில் மலைகளில் நடுவே நின்றும் –
குளிர் காலத்திலே பொய்கைகளிலே புக்கு நீரிலே முழுக்கிக் கிடந்தும்
உஷ்ண காலத்தில் பஞ்சாக்கினி நடுவே நின்று வெந்து விழுந்தும் –
இப்படி குரூரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து நீங்கள் துக்கப்பட வேண்டா –
(மாற்றி செய்தால் உகந்தே செய்வோமே)
அவனோடு அல்லாதாரோடு வாசியற சர்வரும் ஒரு மிடறாக விரும்பும் படியான திரு வெஃகாவில்
தன்னைப் பேணாதே நம்மை ரஷிக்கைக்காக வந்து கண் வளர்ந்து அருளினவனை
பிரயோஜனாந்தர பரதையாகிற பொய் கலசாதே
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பூக்களை அக்ரமமாகப் பணிமாறி
கையாலே அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்ததால்
துஷ் கர்மங்கள் அடங்கலும் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் அன்று என்று அனுசந்தித்துத் தானே விட்டுப் போகாவோ
சும்மெனாதே கை விட்டோடி என்னுமா போலே
சேதன சமாதியாலே சொல்லுகிறது —
அன்றியே
மெய்ம்மலர் தூவி -ஆய்ந்து -அவன் குணங்களை அனுசந்தித்து -கை தொழுதால்
தீ வினைகள் அக்காவே என்னவுமாம்
மென்மலர் என்ற பாடமாகில்
மிருதுவான மலரை -என்றதாகிறது –
(புண்யம் பாபம் -அவனுக்கு பிரியமும் சீற்றமுமே தானே
அஞ்சலி பரமாம் முத்திரை -அம் ஜலதி -அஞ்சலி)
(கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-)
(தூயோமாய் வந்து -அநந்ய ப்ரயோஜனராய் -மடி தடவாத சோறுக்கு விதுரரையும்,
சுறு நாறாத பூவுக்கு ஸ்ரீ மாலாகாரரையும்,
சுண்ணாம்பு படாத சாந்திற்குக் கூனியையும் பிள்ளைலோகாச்சார்யார் உதாரணமாகக் கூறுகிறார்.)
பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-
பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-
———————————————————————————————————
கீழ் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-
இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –
பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –
(காமம் ஆஸ்ரய துஷ்பூரம் நடைவேற முடியாத தப்பான காரியத்துக்காக தவம் செய்வார் ராவண ஹிரண்யாதிகள்
விளையப் போகும் அநர்த்தம் அறியாமல் வரங்களை தேவர்கள் அளிப்பார்கள்-இன்புறும் இவ் விளையாட்டுடையவன் -)
(சமுத்திர ராஜன் -மீறக்கூடாது என்று நீரே ஸ்ருஷ்ட்டி செய்தபின் எவ்வாறு வழி விடுவேன்
நளன் தபஸ் பண்ணி வரம் நொண்டி சாக்கு வைத்து அணை கட்டி
அனைத்துக்கும் ஸம் ஐயம் செய்து அன்றோ நீர் நிர்வஹிக்கிறீர்)
(கோலம் போல் ராமாயணம் பாரதம் -புள்ளி வைத்து கோலம் -கோலம் முடிந்ததும் புள்ளிகள் தெரியாதே
அனைத்துக்கும் தாத்பர்யங்கள் ஆச்சார்யர்கள் காட்டி அருளுகிறார்
உன்னுடைய விக்ரமம் ஒழியாமல் எல்லாம் நீயே காட்டிக் கொடுக்கிறாய் ஆழ்வாராதிகளுக்கு)
(ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..
வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||–ஶ்லோகம் 13 –
ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?)
(ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-)
(கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் அந்தாதி -44-)
ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —–77-
பதவுரை
ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித் தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.
ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் —
சர்வேஸ்வரனாலே ஓதுவிக்கப் பட்டு வேதார்த்த நிரூபணம் பண்ண வல்ல ப்ரஹ்மாவினுடைய குறங்கிலே–
(யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை )
ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமை யாலே புதுக் கும்பிடைக் கண்டு இறுமாந்து
தாங்கள் அநர்த்தம் அறியாதே ராவணனுக்குத் தேடிற்று எல்லாம் கொடுக்கப் புக –
இவனால் நோவு பட்டாலும் நம்முடைய பாடே இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து –
வாய்ந்த குழவியாய்–
அழகிய பிள்ளையாய்
வாளரக்கன்-
சாயுதனான ராக்ஷஸன் யுடைய
ஏய்ந்த-முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த-அடிப்போது நங்கட்கு அரண் —
ராக்ஷஸனுடைய தலைகளை முஃயத்தாலே-மூன்று ஏழு என்று எண்ணினவனுடைய
அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் போக்யமான திருவடிகள் நமக்கு ரக்ஷை –
(ஆச்சார்யர்கள் திருவடி ஸ்தானம் -உபதேஸிக்கப் பண்ணுகிறான் நம்மையும் திருத்திப் பணி கொள்ளவே
அவர்கள் ஆதி பணிந்து உஜ்ஜீவனம் அடையலாம்-திருவடிகளே அவனுக்கும் ரக்ஷகம் )
——————————————————————-
பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –
அர்த்த ஸஹிதமாக ஆராய்ந்து அதிகரிக்கப் பட்ட பெறுதற்கு அரிய வேதத்தைத் தனக்கு நிரூபகமாக யுடையனான
சதுர்முகனுடைய அழகிய மடியிலே நேர் பட்ட முக்த சிஸூவாய்க் கொண்டு சாயுதனான ராவணனுடைய
அறுப்புண்கைக்குத் தகுதியான மாலை கட்டின தலைகளைத் தன் முஃத்யம் தோற்ற மூன்றும் ஏழும் என்று
அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய
போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் ஆகிற செவ்விப் பூக்கள் –அகிஞ்சனராய் அநந்ய பிரயோஜனரான நமக்கு ரக்ஷை –
—————————————————————————————————
(நரகாந்தகன் -நரகத்தையே முடித்தவன் -உன்னை மறக்காமல் இருக்க அருள் -முகுந்த மாலை
வாழ் ஆட்ட பட்டு நின்று வல்லீரேல்-வாஸூ தேவம் சர்வம் பயின்று இருப்பார் -ஸூ துர்லபம் )
(திக்குற்ற கீர்த்தி இராமானுசனை,* என் செய்வினையாம்-
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை* மேவும்நல்லோர்-
எக்குற்ற வாளர் எதுபிறப்பேது இயல்வாக நின்றோர்*
அக்குற்றம் அப்பிறப்பு* அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே )
(அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ -எதிராசா
நீ இரங்க வேண்டுவது நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம் —14-)
அவன் சர்வ ரக்ஷகன் ஆகிலும் -நம்முடைய ஞான வ்ருத்த ஜென்மங்கள் யுடைய
கொற்றை -கொத்தை -பார்க்க வேண்டாவோ என்ன -வேண்டா என்கிறது –
அவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து
உபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆன பின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார்
(நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன் துணிய -வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு-80 பாசுரம் நெஞ்சமே -அத்தை இங்கே கூட்டிக் கொண்டு நெஞ்சுக்கு உபதேசம் இதிலும்)
அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே ஓர்த்து———-78-(மாயவனை -ஆச்சார்ய பூதன் -மாதவன் ஸ்ரீ யபதி -பாட பேதங்கள் )
பதவுரை
ஆழி–திருவாழி யாழ்வானை
வலவன்–வலத் திருக் கையிலுடையவனும்
முரன்–முராஸுரனுடைய
நாள்–ஆயுளையும்
வலம்–வலிமையையும்
சுழித்த–போக்கின
மொய்ம்பன்–மிடுக்கை யுடையவனுமான பெருமான்
சரண் ஆம் ஏல்–ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில்
கதி ஏது நிலை எது பிறப்பு எது என்னாதே–(நம்முடைய) ஞானமென்ன!, ஆசார மென்ன! ஜன்ம மென்ன! என்று
(இவற்றின் தாழ்வுகளைப் பார்த்து உபேக்ஷியாமல்
நமக்கு என்றும் அரண் ஆம்–நமக்கு எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே யிருப்பன், (ஓ நெஞ்சமே)
ஓர்த்து–இதை நன்றாக அறிந்து கொண்டு
மாயனையே–ஆச்சரியமான குண சேஷ்டிதங்களை யுடையனான அப்பெருமானையே
கதி–உபாயமாக
ஓது–அநுஸந்தித்துக் கொண்டிரு.
அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்–
சர்வ சக்தி நமக்கு ரக்ஷையாம் –
வலவருகே திரு வாழி பிடிக்குமவன் போலே காணும் ரக்ஷகனாவான் –
தன்னைப் புரஸ்கரித்து (சுட்டிக்காட்டி )இறே -மாஸூச -என்றது –இவனுடைய அஹம் புத்தி சோக நிமித்தம்
அவனுடைய அஹம் புத்தி சோக நிவர்த்தகம் –
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் –
விரோதியைப் போக்கி ரக்ஷிக்க வல்லன் என்னும் இடத்தை உபபாதிக்கிறது
முரனுடைய ஆயுஸூ ஆகிற மிடுக்கை முடிக்க வல்ல மிடுக்கன் –
(நரகாந்தகன்-நரனை அளித்தவன் -நரகம் அளித்தவன் – முராரி -முரனை அளித்தவன்)
சரணாமேல்-ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே ஆழி வலவன்-அரணாம்–
ஆஸ்ரயணீயன் ஆகும் –
சமோஹம் சர்வ பூதேஷூ நமே த்வேஷயோ அஸ்தி ந ப்ரிய-(9-20-) யோ அபி ஸ் யு பாபயோ நய–
எத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் –
ஒது கதி மாயனையே ஓர்த்து–சரண்யனாய் ஆச்சர்ய பூதனானவனை அனுசந்தித்து
அவன் திரு நாமங்களை சொல்லு –
(ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய–
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் —৷৷9.29৷৷
நான் பலவகைப் பட்டு இருக்கும் ஜீவ ராசிகள் விஷயத்திலும் -என்னை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில் சமமாய் இருப்பவன்
எனக்குத் தாழ்ந்தவன் என்னும் காரணத்தால் ஆஸ்ரயிக்கத் தகாதவன் எவனும் இல்லை
எவர்களோயெனில் -என்னிடம் பக்தியையே பலனாகக் கொண்டு அன்பு செய்கிறார்களோ
என்னிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் –
அவர்கள் இடத்தில் நானும் வாழ்கிறேன் -என் னிலும் உயர்ந்தவர்கள் இடத்தில் போல் பரிமாறுகிறேன்
தேவ மனுஷ திரியக் ஜங்கமங்கள் சர்வருக்கும் சமம் -யாரையும் த்வேஷிக்காதவன் –)
————————————————————————
அவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து
உபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆன பின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார்
ரக்ஷண பரிகரமான திரு வாழியை வலவருகே யுடையனாய் முராஸூரனுடைய ஆயுசாலே வந்த பலத்தைப் போக்கின
மிடுக்கை யுடையனானவன் ரஷகனாகும் இடத்தில் -(துர்லபம் ஆல் )
ஏது ஞானம் -ஏது வ்ருத்தி ஏது ஜென்மம் என்று வித்யா வ்ருத்த ஜென்மங்கள் யுடைய நிகர்ஷம் பார்த்து உபேக்ஷியாதே –
ஆபன்னராய்-ரக்ஷக அபேக்ஷை யுடையரான நமக்கு சர்வ காலத்திலும் ரக்ஷகனாம் –
(வித்யா விருத்த ஜென்மம் -பிறப்பு யோக்யதை அல்ல -ஆசை அபேக்ஷையே வேண்டியது
ஆசை யுடையார்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார்)
ஆன பின்பு நம்முடைய குற்றத்தைப் பார்த்து பிற்காலியாதே சரணத்வ ஏகாந்தமான
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனானவனையே உபாயமாக அத்யவசித்து –
அவன் திரு நாமங்களை இடைவிடாமல் நெஞ்சே சொல்லு –
நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு -என்று மேலே(80) சொல்லுகிற நெஞ்சு இங்கும் முன்னிலைக்கு விஷயம் –
அன்றிக்கே
நிலை வரம்பில பல பிறப்பாய் -என்கிறபடியே
முரன் நாள் வலம் சூழ்ந்த மொய்ம்பன் சரணாம் இடத்தில் தனக்கு என்ன ஒரு நியதி இன்றிக்கே
ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு உறுப்பான ஏதேனும் ஒரு ஜென்ம வித்யா வ்ருத்தங்களைத் தான் உடையனாய்க் கொண்டு
நமக்கு என்றும் காரணாம் என்றுமாம்
(எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-
(தனக்கும் ஒரு வரம்பு இன்றி-என்நின்ற யோனியாம் பிறப்பில் -மாசு உடம்பில் -மானமிலா பன்றியாய் )
ஒது கதி மாதவனையே ஓர்த்து -என்ற பாடமாகில் –
ஸ்ரீ யபதியை உபாயமாகப் புத்தி பண்ணி
அவன் திரு நாமங்களை ஏத்து -என்று பொருளாகக் கடவது –
(மாயவனை -ஆச்சார்ய பூதன் -மாதவன் ஸ்ரீ யபதி -பாட பேதங்கள்)
—————————————————————————————————-
(ரிஷிகள் ஸ்வரூப த்யானம் -மனம் அடக்கினால் தான் ஸாத்யம்
ஆழ்வார்கள் ரூபத்தில் இழிந்து மேல் மேல் பலவும் உண்டாகும்
புலன்களை அடக்கி -சம்சாரம் தண்மை உணர்த்தி -தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனமே தந்து அருளுவான்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகன்-ஆதாரம் பெறுக வைத்த அழகன் -அன்றோ
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னர்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே–15-
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே–16-
மால் பால் மனம் வைக்க -ஓர்த்த மனத்தர் ஆய்–அநுஸந்திக்கின்ற மனமுடையாய்–மேலே மேலே
ஐந்து அடக்கி–பஞ்சேந்திரியங்களையும் வென்று-புலன் அடங்கிய பின்பே சம்சாரம் தண்மை அறிய முடியும் –
ஆராய்ந்து–ஸம்ஸாரத்தின் கெடுதல்களை ஆராய்ந்து
பேர்த்தால்–ஸம்ஸாரத்தில் நின்றும் நெஞ்சைத் திருப்பிக் கொண்டால்
பிறப்பு ஏழும்–ஒன்றின் பின் ஒன்றாக நேரக்கூடிய ஜன்ம பரம்பரைகளை
போக்கலாம்–தொலைத்து விடலாம்.-யத்ர நான்யத்ர கச்சதி பூமா இதுவே -வேறு ஒன்றில் போக முடியாதே )
(ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.
தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஶ்லோகம் 27 –
அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?)
அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்
அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறது –
(ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹம் -பாலே மருந்தும் விருந்துமாம் போல்
அநந்த கால பிரதிபந்தங்கள் சடக்கென போகுமே )
(விரையார் நறுந்துழாய்-மணம் செவ்வி இரண்டையும் என்றும்
திருமேனி சர்வ ரசம் சர்வ கந்தம் -அவனுக்கும் திருத்துழாய் மாலைக்கும் மணம் என்றுமாம்)
ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் -கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று ——79-
பதவுரை
கார்த்த–பசுமையான நிறமுள்ளதாய்
விரை ஆர்–பரிமளம் நிரம்பியதான
நறு துழாய்–செவ்வித் திருத்துழாய் மாலையை யுடையவனும்
வீங்கு ஓதம் மேனி-பொங்குங்கடல் போன்ற திருமேனியை யுடையவனும்-அடியார்களைக் கண்டு பொங்கும் கடல் வண்ணன்
நிரை ஆரம் மார்வனையே–ஒழுங்கான ஹாரங்களணிந்த திரு மார்பை யுடையவனுமான பெருமானையே
நின்று–நெஞ்சு நிலைத்து நின்று
ஓர்த்த மனத்தர் ஆய்–அநுஸந்திக்கின்ற மனமுடையாய்
ஐந்து அடக்கி–பஞ்சேந்திரியங்களையும் வென்று
ஆராய்ந்து–ஸம்ஸாரத்தின் கெடுதல்களை ஆராய்ந்து
பேர்த்தால்–ஸம்ஸாரத்தில் நின்றும் நெஞ்சைத் திருப்பிக் கொண்டால்
பிறப்பு ஏழும்–ஒன்றின் பின் ஒன்றாக நேரக்கூடிய ஜன்ம பரம்பரைகளை
போக்கலாம்–தொலைத்து விடலாம்.
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி-நிரையார மார்வனையே —–
அழகிய திருத் துழாய் மாலையை யுடையவனுமாய்
தேங்கின கடல் போலே இருக்கும் திரு மேனியை யுடையவனாய்
சப் தாதிகளை நாக்கு வளைக்கலாம் படி ஆபரண அழகை யுடையவனை –
நின்று ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம்-
நின்று அனுசந்தித்த மனசை யுடையராய் இந்திரியங்களை விஷயங்களில் போகாத படி அடக்கி
அவை பொல்லாது என்று ஆராய்ந்து -சம்சாரத்தைப் போக்கப் புக்கால் போக்கலாம்
ஏழு பிறப்பு என்றது உப லக்ஷணம் –
ஜென்மம் அடங்கப் போக்கலாம் என்ற படி –
—————————
அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்
அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறார் –
பசுத்த நிறத்தை யுடைத்தாய் பரிமள பிரசுரமான செவ்வித் திருத் துழாயாலே அலங்க்ருதனாய் –
தேங்கின கடல் போலே இருண்டு குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய் –
ஒழுங்கு பட்டு இருக்கிற திரு ஆரத்தாலே அலங்க்ருதமான திரு மார்வை யுடையவனையே ஒருபடப் பட
நின்று -நிரந்தரமாக அனுசந்திக்கிற மனஸை யுடையராய்
ஸ்ரோத்ராதிகளான ஐந்து இந்த்ரியங்களையும் விஷயங்களில் போகாத படி நியமித்து –
சம்சார தோஷத்தை அனுசந்தித்து –அதில் நின்றும் ஹிருதயத்தை மீள விட்டால் ஒன்றின் பின் ஒன்றாக
வரக் கடவ ஜென்ம பரம்பரைகளை அநாயாசேன பேர்க்கலாம்-
அவனுடைய ஸ்வாபாவிகமான வடிவு அழகையும் ஒப்பனை அழகையும் அனுசந்தித்தால்
சப்தாதி விஷயங்களை நாக்கு வளைத்து உபேக்ஷிக்கலாம் என்று கருத்து –
————————————————————————————————————
(முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப் புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே—1-7-9-
நெஞ்ச மே! நல்லை நல்லை உன் னைப்பெற்றால்
என் செய் யோம் இனி என்ன குறைவினம்
மைந்த னைமல ராள்மண வாளனைத்
துஞ்சும் போதும்வி டாது தொடர்கண்டாய்.-1-10-4- -கொண்டாடும் படி அன்றோ ஆழ்வார்கள் திரு உள்ளம்)
(நேர் செறிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் செறிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் செறிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட வன்றே –7-4-8-)
நம்மால் இந்திரிய ஜெயம் பண்ணி அவனை அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அறுக்கப் போகாது –
அவன் பிரதிபந்தகங்களைப் போக்க அவனை அனுசந்திக்க ஆசைப்படா நின்றது நெஞ்சு என்கிறார் –
பிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம்
அவ்விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன் துணிய -வென்றிலங்கும்
ஆர் படு வான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு —80-
பதவுரை
நின்று–(கூசாமல்) முன்னே வந்து நின்று
எதிர் ஆய–எதிரியாய்ப் போர் செய்ய வந்தவனும்
நிரை மணி தேர்–ஒழுங்காக அழுத்தின மணிகளை யுடைய தேரின் மேலேறி யுள்ளவனுமான
வாணன்–பாணாஸுரனுடைய
ஒன்றிய ஈர் ஐந்நூறு தோள்–அடியுரமுள்ள ஆயிரந்தோள்களும்
உடன் – ஏக காலத்தில்–
துணிய–அறுப்புண்டு விழும்படியாகக் காரியஞ் செய்து
வென்று–வெற்றி பெற்று
இலங்கும்–விளங்குகின்ற
ஆர்படு–கூர்மையை யுடைய
வான்–திவ்யமான-வலிய –
நேமி–திருவாழியாழ்வானை யுடையவனாய்
அரவு அணையான்–சேஷசாயியான எம்பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளிலே-நேர் படுவான்-சேஷ பூதனுக்கு அநு ரூபமான தாஸ்யத்துக்கு
நெஞ்சு தான்–(எனது) நெஞ்சு தானே
முயலும்–உத்ஸாஹப் படுகின்றது.
நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள் ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன் துணிய –
தாமஸ தேவதையை ஆஸ்ரயிக்கையாலே சர்வேஸ்வரன் என்று அறியாதே
எதிரிட்டு தேரை யுடையனான பாணன் யுடைய தோளோடு தோள் ஒன்றிய அல்லாத
ஆயிரம் தோளும் துணியும் படிக்கு ஈடாக வென்று –
வென்றிலங்கும்-ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே-
ஒளியையும் கூர்மையையும் யுடைய திரு வாழியை யுடைய
அநந்த சாயியுடைய திருவடிகளிலே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —
அணைய நெஞ்சானது தானே ப்ரவர்த்தியா நின்றது –
தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொரு படை வாணனை ஆயிரந் தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
சுழற்றிய –
திரு வாழியை விட வேண்டி இற்றில்லை -சுழற்றின இத்தனை –
அவன் ஒருக்கால் திரு ஆழியைச் சுழற்ற வாணனுடைய தோள்கள் ஆயிரமும் ஒருக்காலே
மலைக் கொடு முடிகள் போலே முறிந்து விழுந்தன –
வாணனுடைய தலையை அறாது ஒழிந்தது குற்றம் போறாமை யன்று
உஷை பித்ர் ஹீநை யாகாமைக்காகவும் –
தேவதாந்தர பஜனம் பண்ணுவாருக்கு பலம் இது என்னும் இடத்துக்கு மச்சமாகவும் –
அதாவது –
பரிவின்றி வாணனைக் காத்தும் 3-10என்று பிரதிக்ஜை பண்ணி
யுத்தத்திலே இவனைக் காட்டிக் கொடுத்து -ஸ பரிகரனாய் கொண்டு முதுகு
காட்டிப் போனான் ரஷகன் -ரஷ்ய பூதன் தோள் துணி உண்டான் -உன்னை ரஷிக்கப்
புக்கு நான் பட்டதோ -என்றும் -உன்னை ஆஸ்ரயித்து நான் பட்டதோ -என்றும்
இருவரும் கூடக் கட்டிக் கொண்டு கதறுகை இறே பலமாய் விட்டது –
பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-9-4-
கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –
————————————————————————-
பிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம்
அவ் விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
ருத்ரனை அண்டை கொண்ட பலத்தால் சர்வேஸ்வரன் என்று அறியாதே கூசாமல்
முன்னே வந்து நின்று எதிராய் நின்றவனாய்
ஒழுங்கு பட அழுத்தின மணிகளோடே கூடின தேரிலே எறி வந்த பாணாஸூ ரனுடைய
அடி ஒன்றாய் பணைத்து இருந்துள்ள ஆயிரம் தோளும் ஏக உத் யோகேந அறுப்புண்டு விழும்படியாக ஜெயித்து –
அத்தாலே ஒளி விடா நிற்பதாய் –
கூர்மையை யுடைத்தாய் அதி பிரபலமான திரு வாழியை யுடையனான அநந்த சாயினுடைய
சிவந்த திருவடிகளிலே நெஞ்சானது எனக்கு முன்னே கிட்டுவதாகத் தானே உத்சஹியா நின்றது-
ஆர் படுகை–கூர்மையை யுடைத்தாகை–
அரங்களை யுடைத்தாகை -என்றுமாம் – -(ஸஹஸ்ர ஆரங்கள் கொண்ட ஆழி )
வான் -வலி-
(கற்பக வருஷம் வாஹனம் சேவிக்கும் பொழுது நினைக்க வேண்டியது
என்னை ஆக்கி -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -மூன்று ஏற்றம் கற்பக வ்ருக்ஷத்தை விட
முதலில் என்னையும் ஆக்கி -அர்த்திகளை உருவாக்கி -விரோதி நிரஸனமும் செய்து அருளி
தன்னையே தந்து –
பாரிஜாத மரம் வ்ருத்தாந்தம் அறிவோமே
மறப்பேன் என்று நேரில் புகுந்து -பேரேன் என்று நெஞ்சு நிறையப் புகுந்து
எனக்கே -அனைவருக்கும் தனக்கு மட்டுமே என்று சொல்லிக் கொள்ளும்படி பூர்ண அனுபவம் )
(இப்படி அவன் படியாய் இருக்க நெஞ்சு முற்பட கேட்க வேணுமோ)
(கச்ச ராம மயா ஸஹ -சீதாபிராட்டி முன்னே சென்று கல்லும் முள்ளும் அகற்றி
சேதனர்களைத் திருத்திப் பணி கொண்டு பெருமாள் இடம் சேர்த்தாளே அன்றோ)
————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –