(ஸர்வ ரக்ஷகன்
ஆஸ்ரித பக்ஷபாதி
என்று அருளிச் செய்து ரக்ஷணமே இயல்பு ஊண் என்றும்
ரக்ஷணம் செய்த பின்பு நீல வண்ணன் ஆனான் முன்பு பார்த்தோம்)
இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர்
நமக்கு எல்லாம் (உபய ) உபாய பூதன் ஆவான் -என்கிறார்
(மூன்று முறையும் அவனே -ஸஹ கார்யம் நிரபேஷன் –
ஆபத் நிரசனத்துக்கும்-ப்ராபகத்துக்கும் -ஸம்பத் அருளி ப்ராப்யனாகவும் அவனே)
(ஸஹ காரி நைரபேஷ்யம் -மாம் ஏகம் -அர்த்தம் எதிர்பார்க்காமலும் பொறுக்காமலும் இரண்டுமே உண்டே —
அஸஹத்வம் -விரும்புவதும் இல்லை ஏற்பதுவும் இல்லை –
சணப்பனார் கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போல் பிரதிபந்தகமே ஆகும்
இலங்கா புரம் எரித்தான் எய்து -இங்கும் அவனே என்றால்
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து -அம்புகள் கூட வேண்டாம்
வில்லெடுத்த ஒரு செயலால்
உலகங்கள் உய்ய செருவிலே செற்ற சேவகனார்
சங்கை இல்லா மூன்றுடன் சேர்த்து இத்தையும் அருளிச் செய்கிறார் )
(உபாயம்-சர்வேஸ்வரனான ஸித்த உபாயம் தன்னைப் பொறுக்கும்
உபாயாந்தரம் பக்தி இரண்டையும் பொறுக்கும்
இது சரணாகதி இரண்டையும் பொறாதே -நாம் பற்றும் அதுவும் உபாயம் இல்லையே)
(அங்கம் தன்னை ஒழிந்தவற்றை பொறாது ஒழிகை –
சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –ஸ்ரீ வசன பூஷணம் -சூரணை -56-
உபாயம் தன்னை பொறுக்கும்-சூரணை -57-
உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –
இரண்டையும் -என்றது -தன்னையும் மற்றத்தையும் உபாயம் என்னப் பொறுக்கும் –
அங்கம் என்றாலும் அங்கி என்றாலும் பொறுக்கும் –சூரணை -58-
இது இரண்டையும் பொறாது-சூரணை -59-
நிவ்ருத்தி ரூபமாய் இருக்க அங்கம் என்றால் பிரவ்ருத்தம் ஆகுமே அதனால் பொறுக்காது –
இது நிரபேஷ சித்தம் -சாதிக்க வேறே ஒன்றும் வேண்டாமே –
முன்னால் இதர த்யாஜ்யம் இருக்கிறதே என்னில் -அவை ஹேது வாகாதே –
ஆநுக்கூலஸ்யாதிகளும் அங்கங்கள் இல்லை சம்பாவிதங்கள் தானே இவை -உபாயமாக விதித்ததும் ஞான பாக அனுகுணமாக
சித்த உபாயத்தை பற்ற வழி படிக்கட்டு போலே
சரணாகதி -பண்ணி – ருசி வளர்ந்தவனுக்கு பிராப்தி சித்தம் –பிரியதமனாக விஷயாந்தர வெறுப்புக்கள் வேண்டுமே –)
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே-11
அவனே அரு வரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——51-
பதவுரை
அரு வரையால்–ஒருவரால் அசைக்கவும் முடியாததான கோவர்த்தன மலையினால்(இப்பொழுது 84 அடி உயரம் தான் )
ஆநிரைகள்–பசுக் கூட்டங்கள்
காத்தான்–ரக்ஷித்தருளினவன்
அவனே கண்டீர்–அப்பெருமானை யாவன்,
அணி மருதம்–அழகாக நின்று கொண்டிருந்த இரட்டை மருத மரங்களை
சாய்த்தான்–முறித்துத் தள்ளினவனும்
அவனே கண்டீர்–அப் பெருமானே யாவன்,
எய்து–அம்புகளைப் பிரயோகித்து
இலங்காபுரம்–லங்கா பட்டணத்தை
எரித்தான்–எரிய விட்டவனான
அவனே–அப்பெருமானே
கலங்கா பெருநகரம்–ஒரு வகைக் கலக்கமுமில்லாத பரம பதத்தை
காட்டுவான்–காட்டித் தருவான்.
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்–
வர்ஷத்தாலே நோவு பட்ட பசுக்கள் தம்முடைய ரக்ஷணத்துக்குத் தாம் ப்ரவர்த்தித்தது யுண்டோ –
அவனே யன்றோ -என்று
சஹ ஹாரி நைரபேஷயத்தைச் சொல்கிறது(அத்வேஷம் ஒன்றே வேணும் )
அவனே அணி மருதம் சாய்த்தான் —
நிரபேஷமாக மருதத்தைச் சாய்த்தானும் அவனே
அவனே-கலங்கா பெரு நகரம் காட்டுவான் –
பரம பதம் அவனே காட்டக் காணும் அத்தனை –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்குக் காணப் போகாது –
(நாயமாத்மா ஸ்ருதி ஸித்தம்
நாயமாத்மா ப்ரவசனேன லப்⁴யோ ந மேத⁴யா ந ப³ஹுனா ஶ்ருதேன ।
யமேவைஷ வ்ருணுதே தேன லப்⁴ய- ஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் ॥ 3॥)
கண்டீர்-இலங்கா புரம் எரித்தான் எய்து ——
லங்கையை அழித்து பிராட்டியைப் பெறுகைக்கு யத்னம் பண்ணினானும் தானே –
(தத் தஸ்ய ஸத்ருசம் பவத் –பிராட்டியே அருளிச் செய்தாள் அன்றோ)
(எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன், அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்’)
———————————————————–
ஒருவராலும் சலிப்பிக்க அரிதான கோவர்த்தன பர்வதத்தாலே -(கல் எடுத்து கல் மாரி காத்தான் அன்றோ )
கல் வர்ஷத்திலே அகப்பட்டு அழியப் புக்க பசுக்களை ஒரு நோவு வாராமல் குறைவற ரக்ஷித்து அருளி
தான் சஹாயாந்தர நிரபேஷமாக ரக்ஷிக்க வல்ல சக்திமானாவான் அவனே கிடீர்
தன்னிலே இடை வெளி யறச் சேர்ந்து நின்ற யமளார்ஜுனங்களை யசோதாதிகள் சஹகாரியாது
இருக்க தள்ளி விழ விட்டான் அவனே தானே கிடீர்
பிராட்டியைப் பெறுகைக்காக திருச் சரங்களை ப்ரேரித்து விட்டு ப்ரஹ்மாதிகளுக்கும் கணிசிக்க ஒண்ணாத
லங்கா புரத்தை அவர்கள் ஏக தேசமும் சஹகரியாது இருக்க
தக்தமாக்கி விழ விட்டான் அவன் தானே கிடீர்
அப்படியே ஒருவர் கூறை எழுவர் உடுக்கிற சம்சாரத்தில் உள்ள கலக்கம் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற
பெரிய ராஜ தானியான பரம பதத்தை நீ கண்டு கொள் (3-9-9)என்கிறபடியே
அகிஞ்சனரான நமக்கு காட்டித் தருவானும் நிரபேஷ உபாய பூதனான அவனே கிடீர்
(கலங்கா பெரு நகரம் அது -இதுவோ கலக்கும் வென் நரகம்)
(வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-)
(அபூர்வம் போல் அல்ல -நமக்கு சகஜமான-வானவர் நாட்டையும்
நீ- நித்யர்களைப் போல்- அத்தை அனுபவிக்கப் பிறந்தவன் அன்றோ)
அறிவில்லாத பசுக்களோடு
அறிவில் தலை நின்ற பிராட்டியோடு ஒரு வாசி இல்லை
அறிவுக்கு பிரயோஜனம்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கை
அறியாமைக்கு பிரயோஜனம் –
பண்ணுகிற ரக்ஷணத்தை விலக்காமை என்றபடி –
——————————————————————————————————–
கீழ் ப்ரஸ்துதமான ராம வ்ருத்தாந்தம் தன்னிலே தெரியவும்
ஆழம் கால் பட்டு அத்தைப் பேசுகிறார் –
(புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.
ராமனைச் சொல்லி கண்ணனை நம்மாழ்வார் -இவர் கண்ணனைச் சொல்லி பின்பு ராமனைச் சொல்கிறார்)
(ஏழு மராமரம் எய்தவனையும் ஏழு உலகையும் ஓங்கி வளர்ந்தவனையும் சேர்த்து அருளிச் செய்கிறார் இவர் இங்கு)
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று ——-52-
பதவுரை
இராமன் ஆய்–ஸ்ரீராமனாகத் திருவவதரித்து
மராமரம் ஏழும்–ஸப்த ஸால வ்ருஷங்களையும்
எய்தான்–அம்பு செலுத்தித் துளைத்தான்,
ஏந்து இழைக்கு ஆய்–தரிக்கப்பட்ட ஆபரணங்களை யுடைய பிராட்டிக்காக
அ மான் மறிய–அப்படிப்பட்ட மாரீச மாயா மிருகக் குட்டியை-புரண்டு விழும் படி என்றும்
எய்தான்–பின் சென்றான்,
எய்த்துவும்–அம்புகளைச் செலுத்தினதும்
தென் இலங்கை கோன் வீழ–தென்னிலங்கைக்கு அரசனான இராவணன் முடியும் படியாகவாம்,
முன்–முன்பொரு காலத்திலே
குறள் உரு ஆய்–வாமன ரூபியாய்
சென்று–மாவலியிடத்திற் சென்று
முயன்று–(வடிவழகு காட்டுதல், மழலைச் சொற்களைச் சொல்லுதல் முதலிய) முயற்சிகளைச் செய்து
நிலம் கைக் கொண்டான்–பூமியைக் கைப்பற்றினான்.
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்-
இராமனாய் ஆஸ்ரிதர்க்காக மராமரம் ஏழையும் எய்தான் –
எய்தான் அம்மான் மறிய ஏந்திழைக்காய் –
மான் குட்டி என்று பாராதே பிராட்டி சொன்னாள் என்று எய்தான் -(நின் அன்பின் வழி நின்றே -பெரியாழ்வார் )
எய்ததுவும்-தென்னிலங்கைக் கோன் வீழச் –
எய்ததும் ராவணனைக் கொல்லுகைக்காக
சென்று குறளுருவாய்-முன்னிலம் கைக் கொண்டான் முயன்று —
குறளுருவாய் சென்று மூன்று லோகத்தையும் அடங்கலும் கைக் கொண்டான் –
—————
கீழ் ப்ரஸ்துதமான ராம வ்ருத்தாந்தம் தன்னிலே தெரியவும்
ஆழம் கால் பட்டு அத்தைப் பேசுகிறார் –
சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்து அருளி
மஹா ராஜரை வீஸ்வசிப்பைக்காக மராமரங்கள் ஏழையும் பட்டுருவ எய்து விட்டான்
தரிக்கப்பட்ட ஆபரணங்களை யுடைய பிராட்டிக்காக —
அவ் வாபரண சேர்த்தி அழகிலே ஆழம் கால் பட்டு மேல் விளைவது அறியாமல்
அந்த மாயா மிருகம் புரண்டு விழும்படியாக எய்து பொகட்டான்-
அவள் சிறை இருப்பு மாற்றுகைக்காக தெற்குத் திக்கில் யுண்டான
லங்கைக்கு நிர்வாஹகனான ராவணன் குட்டிச் சுவர் போலே உருண்டு விழும்படியாக எய்ததும் -(கிள்ளிக் களைந்தான் அன்றோ )
முன்பு ஒரு காலத்திலே ஸ்ரீ வாமனனாயக் கொண்டு மஹா பலி பக்கலிலே சென்று வடிவு அழகைக் காட்டுவது-
முக்த ஜலப்பிதங்களைப் பண்ணுவதாய்க் கொண்டு மிகவும் உத்யோகித்து பூமியை வாங்கிக் கொண்டான்
இது ஒரு செயல்கள் இருக்கும் படியே என்று வித்தகராய் அனுபவிக்கிறார்
அம் மான் மறியை என்ற பாடமான போது-
அந்த மான் குட்டியை எய்தான் -என்றாகக் கடவது –
———————————————————————————————————
ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான வட தள சாயியை
ஆஸ்ரயி என்று தம் உள்ளத்தைத் தூண்டுகிறார் –
(திருக்கமல பாதம் வந்த பின்பு
வந்தாய் என் மனம் புகுந்தாய்
நாமும் கொஞ்சம் அத்வேஷம் காட்டாமல் இருக்க வேண்டுமே)
முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண் அலங்கல் மாலையான் தாள் —–53-
பதவுரை
மூரி நீர் வேலை–பழையதான நீரை யுடைத்தான ஸமுத்தரத்திலே
இயன்ற — ஸ்ரீபொருந்தியுள்ள
ஆல மரத்து இலையின் மேலால்–ஆல மரத்தின் இலை மீது
பயின்று–நெடுங்காலம் சாய்ந்திருந்தது
அங்கு–அங்கே
மண்–பூமியினுடைய
நலம்–நன்மையை
கொள்–அபஹரித்த
வெள்ளத்து–பிரளய வெள்ளத்திலே
ஓர் மாயம் குழவி ஆய்–ஆச்சரியமான ஒரு குழந்தையாய்
தண் அலங்கல் மாலையான்–குளிர்ந்து அசைகின்ற மாலையை யுடையவனான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
நெஞ்சே–நெஞ்சமே!
முயன்று தொழு–உத்ஸாஹங்கொண்டு வணங்கு.
முயன்று
துர்கடங்களை கடிப்பிக்க சேர்ப்பிக்க வல்லவன்
முயன்று தொழு நெஞ்சே-
யத்னம் பண்ணி ஆஸ்ரயிக்கப் பார் –
மூரி நீர் வேலை-இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று –
உலவா நின்ற நீரை யுடைத்தான கடலிலே யுண்டான மரத்தினுடைய பல்லவமான இருபத்தொரு
ஆலிலை மேலே பயின்று
அங்கோர்-மண்ணலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்-
சேதனர்க்கு போக உபகரண -போக ஸ்தான போக்யமான பூமியை
அழியா நின்ற வெள்ளத்திலே ஆச்சர்யமான பிள்ளை யானவன்
தண் அலங்கல் மாலையான் தாள் —–
ஆலின் இலை மேலே கண் வளர்ந்து அருளுகிற போது பொகட்ட மாலையும் தானுமாய்க் கிடந்த படி –
அவனுடைய திருவடிகளை முயன்று தொழு நெஞ்சே –
————————————————————————–
ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான வட தள சாயியை
ஆஸ்ரயி என்று தம் உள்ளத்தைத் தூண்டுகிறார் –
சஞ்சரியா நின்றுள்ள நீரை யுடைத்தான சமுத்ரத்திலே பொருந்தி இருக்கிற
ஆல மரத்தின் யுடைய பவனாய் இருபத்தொரு ஆலின் இலை மேலே சிர காலம் சாய்ந்து அருளி –
அங்கே பூமியினுடைய –சேதனர்க்கு போக்யாதிகளாய் விநியோகிக்கப் படுகிற சாராம்சத்தை க்ரஸியா நின்றுள்ள
பிரளயத்தில் அக்கடிகடனா சாமர்த்தியம் ஆகிற ஆச்சர்ய சேஷ்டிதத்தை யுடைய
முக்த சிஸூ வானவன் ஸ்ரமஹரமாய அசைந்து வாரா நின்றுள்ள திருமாலையாலே
அலங்க்ருதனானவன் திருவடிகளை -நெஞ்சே –
(போக்யாதிகளாய்-போக்யம் போக உபகரணம் போக ஸ்தானங்கள்)
வரில் பொகடேன்-கெடில் தேடேன் -என்று இருக்கை அன்றிக்கே
உத்ஸாஹித்துக் கொண்டு ஆஸ்ரயிக்கப் பார் –
அலங்கல் -அசைவு –
————————————————————————————————————–
வட தள சாயி விருத்தாந்தத்தோடு ஒக்கச் சொல்லலாம் படியான
கிருஷ்ண விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –
(இவளுக்கு அவன் இடம் காதல் -அவனுக்கு இவள் இடம் பெரிய காதல்
வாரிக் கொண்டு விழுங்குவன் என்று போக –முற்றப் பருகுமவன் அன்றோ)
தாளால் சகட்முதைத்துப் பகடுந்தி
கீளா மருதிடை போய்க் கேழலாய் -மீளாது
மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்
பெண்ணகலம் காதல் பெரிது —–54-
பதவுரை
சகடம்–சகடாஸுரனை
தாளால்–திருவடியாலே
உதைத்து–உதைத் தொழித்தவனாயும்
பகடு–(குவலயாபீட மென்கிற) யானையை
உந்தி–உதைத்துத் தள்ளினவனாயும்
மருது இடை போய்–மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்று
கீளா–(அம் மரங்களை) முறிந்து விழச் செய்தவனாயும்
கேழல் ஆய்–வராஹ ரூபியாய்க் கொண்டு
மீளாது–காரியம் தலைக் கட்டாமல் திரும்பி வருவதில்லை யென்று ஸங்கல்பித்துக் கொண்டு சென்று
அகலம் மண் கீண்ட–அகன்ற பூமியை (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்தவனாயும்
ஓர் மாது உகந்த மார்வற்கு—நாரீணாம் உத்தம வது -ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை விரும்பி யிருக்கின்ற திரு மார்பை யுடையவனாயுமுள்ள எம்பெருமானுக்கு
பெண் அகலம்–பூமிப் பிராட்டியினுடைய திருமேனியில்
காதல்–ஆசையானது
பெரிது–கரை புரண்டிருப்பது.
தாளால் சகடமுதைத்துப்–
திருவடிகளாலே சகடாசூர நிரசனம் பண்ணி
பகடுந்தி–
குவலயா பீடத்தைத் தள்ளி
கீளா மருதிடை போய்க்-
இரண்டாய் அருகே நின்ற மருதூடே போய் –
கீளா –
பிளவா மருதிடை போய் என்றுமாம் –
கேழலாய் -மீளாது-மண்ணகலம் கீண்டு –அங்கோர் மாதுகந்த மார்வற்குப்-
ஸ்ரீ வராஹ ரூபியாய் மீளாத படிக்கு ஈடாக பூமியைக் கீண்டு ஸ்ரீ பூமிப் பிராட்டியை உகந்த மார்பர்க்கு
பெண்ணகலம் காதல் பெரிது —–
பிராட்டி பக்கலிலே ஸ்நேஹம் பெரிது –
—————————————————————–
வட தள சாயி விருத்தாந்தத்தோடு ஒக்கச் சொல்லலாம் படியான
கிருஷ்ண விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –
அஸூரா விஷ்டமாய் மேல் விழுகிற சகடத்தை முலை வரவு தாழ்த்துச் சீறி நிமிர்த்த திருவடிகளாலே
உதைத்து விழ விட்டு
புகுவாய் நின்ற போதகம் என்னும் படி
வழியிலே நின்று நலிய புக்க குவலயா பீடத்தைத் திருக் கையாலே உருண்டு விழும் படி தள்ளிப் பொகட்டு
(பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்
நெகுவாய் நெய்தல் பூ மது மாந்திக் கமலத்தின்
நகுவாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே –6-5-6-பகுவாய் -பெரிய வாய்-)
இடை வெளி யறப் பொருந்தி நின்ற மருதுகளின் நடுவே
அவை அடி அற்று விழும் படி தவழ்ந்து கொண்டு போய்
ஸ்ரீ யபதியான தன் பெருமை பாராதே வராஹ வேஷத்தை யுடையனாய்க் கொண்டு
வடிவை அழிய மாறின அளவிலே மீளுகை இன்றிக்கே
அந்த பிரளயத்தில் முழுகி அண்ட பித்தியிலே ஒட்டிக் கிடக்கிற அத்விதீயமான
பரப்பை யுடைத்தான பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி-
நாரீணாம் உத்தமையான பெரிய பிராட்டியார் இறையும் அகலகில்லேன் என்று விரும்பும் படியான
திரு மார்வை யுடையவனுக்கு
ஸ்ரீ பூமிப் பிராட்டியுடைய அபரிச்சின்ன்ன போக்யமான திரு மேனியில் பிரேமம் கரை புரண்டு இருந்தது
பகடு -யானை –
கீளா மருதிடைபோய் –கிழித்துக் கொண்டு மருதுகளின் நடுவே போய் என்னவுமாம் –
காதல் பெரிது -அவள் பக்கல் பிரேமத்தின் கனத்தாலே இறே
அவள் அபிமானித்த பூமியை எடுத்தது என்கை
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும்; தன்னுள் கரக்கும்; உமிழும்;
தடம் பெருந்தோள் ஆரத் தழுவும்;பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண் பாரே?–2-8-7-
ஊர்த்தம் மாஸம்-உகப்பு அவளுக்கு
ந ஜீவேயம் க்ஷணம் அபி விநாஸாம் அஸி தீக்ஷிணை -பெரிய காதல் அவள் மேல் இவனுக்கு
———————————————————————————————————
இப்படி ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் பெரும் பிச்சானாவான் அழகை அனுபவிக்கிறார் –
பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-
பதவுரை
பெரிய வரை மார்வில்–பெரிய மலை போன்ற திருமார்பிலே
பேர் ஆரம் பூண்டு–பெரிய ஹாரத்தை அணிந்து கொண்டு
திரியுங்கால்–உலாவினால்
கரிய முகிலிடை மின் போல–காள மேகத்திலே மின்னல் மின்னினாற் போன்றிருக்கும்!
மற்று–அன்றியும்,
அவன் தன்–அப்பெருமானுடைய
நீள் நெடு கண்–நீண்டு பரந்த திருக் கண்களினுடைய
நிறம்–நிறத்தை (ராமக ரக்தாந்த ராஜீவ லோசன )
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே காட்டும்–பாட்டென்று பேர் பெற்றவை யெல்லாம் ஒடுங்கும் படியாக
(அதி மதுரமாக) வண்டுகள் இருந்து பாடப் பெற்ற தாமரைப் பூவே காட்டித் தரும்.
திருக் கண்கள் நிறம்-தாமரை -வண்டு அறையும் தாமரை -அவற்றின் ரீங்காரம் பாண் ஒடுங்கும் படி -இப்படி அன்வயம்
பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு–
ஆராத்தால் -ஹாரத்தால் -பரிச்சேதிக்கப் போகாத மார்பிலே —
பேராரம் பூண்டு-
மடித்துப் பூண வேண்டும் பெரிய ஹாரத்தைப் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் –
மார்புக்கும் ஹாரத்துக்கும் த்ருஷ்டாந்தம் –
மேகத்திலே மின்னினால் போலே
ஸ்யாமமான திரு மார்பிலே ஹாரம் கிடந்த படி
திரியுங்கால்–தெரியுங்கால் -பாட பேதம் –
அநுஸந்திக்கும் போது என்றும் -சஞ்சரிக்கும் காலத்தில் என்றுமாம் –
(அடியார்களை ஈர்க்கவே சஞ்சரிக்கிறான் என்று அனுசந்திக்க)
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன் நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ——-
பாண் சாதியாக ஒடுங்கும் படி பாடா நின்ற வண்மை யுடைத்தான பங்கயமே
அவனுடைய பரிச்சதிக்கப் போகாத கண்ணினுடைய நிறத்தைக் காட்டா நின்றது –
(புல்லாங்குழல் கேட்டு ஆடல் பாடல் மறந்து வெட்க்கினார் போல்)
(கம்பீராம்ப ஸமுத் பூத ஸ்ம்ருஷ்ட நாள ரவிகர விகசித புண்டரீக தல அமலாய தீக்ஷண-நீண் நெடுங்கண்-நீண்டும் நெடியதாயும் -பரந்து -)
————————————————————————-
இப்படி ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் பெரும் பிச்சானாவான் அழகை அனுபவிக்கிறார் –
ஹாரத்தால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி பெரிய மலை போலே பரந்து இருக்கிற திரு மார்பிலே
இரு மடி இட்டுச் சாத்த வேண்டும் படி பெருத்து இருக்கிற திரு வாரத்தைச் சாத்தி
மநோ ஹராமாம் படி சஞ்சரிக்கப் புக்கால்
காள மேகத்திலே மின் கொடி பரந்தால் போல் அத்தியாநுபாவ்யமாய் –
அதுக்கு மேலே அவனுடைய மிக்க அழகை யுடைத்தான திருக் கண்களுடைய நிறத்தை
பாட்டு என்று பேர் பெற்றவை அடக்கலும் லஜ்ஜித்து ஒடுக்கும் படிக்கு ஈடாக
வண்டுகளானவை சப்தியா நின்றுள்ள தாமரைப் பூவே காட்டா நிற்கும்
தெரியுங்கால் -என்று பாடமாகில் –
அவ் வழகை அநுஸந்திக்கும் போது -என்று பொருளாகக் கடவது –
——————————————————————————————————
என்னுடைய ஸ்வாமியினுடைய ரூபத்தை இன்னபடி இருக்கும் என்று சொல்லப் போகாது –
பிரயோஜகத்தை சொல்லும் அத்தனை என்கிறார் –
(நிறம் -பாசுரம் -நிறம் கொண்ட வடிவைச் சொன்னபடி-ஸ்வாமியினுடைய ரூபத்தை
பச்சை வண்ணன்
பவள வண்ணன்)
இவனுடைய அழகை அனுபவித்துக் குமிழ் நீர் உண்ணும் அத்தனை ஒழிய
நம்மால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –
சொல்லாமலும் இருக்க முடியாதே-ஸாஷாத் மன்மத மன்மதன் அன்றோ –
நா படைத்த பயனுக்காகவும் காது படைத்த பயனுக்காகவும்
கடலின் கரையில் இருந்து திவலையை அனுபவிப்பது போல்)
(நான்கு யுகங்களிலும்
க்ருத யுகம் ஸத்வ குணம் மிக்கு -வெளுப்பாக
த்ரேதா ரஜோ -சிகப்பாக
த்வாபர -ரஜோ தமோ கலந்து மாந்தளிர் பச்சை
கலி யுகம் பிரார்த்திக்காமல் இருக்க ஸ்வா பாவிக கறுமை
நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறை யுருவம் யாம் அறியோம் எண்ணில் -நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-
பதவுரை
இறை–ஸர்வேச்வரனுடைய
உருவம்–திவ்ய மங்கள விக்ரஹமானது
நிறம்–நிறத்தால் வெளுத்திருக்குமோ (அல்லது)
செய்து–சிவந்திருக்குமோ, (அல்லது)
பசிது–பச்சென்றிருக்குமோ, (அல்லது)
கரிது–கறுத்திருக்குமோ,
என்று–எவ் வண்ணமா யிருக்குமென்று
எண்ணில்–ஆராயுமிடத்தில்
யாம் அறியோம்–நாம் அறிய மாட்டோம் (இது நிற்க)
நிறைவு உடைய–ஜ்ஞான சக்திகளில் பூர்த்தியை உடையவளான
நா மங்கை தானும்–ஸரஸ்வதீ தேவியும்
பூ மங்கை கேள்வன்–பூவிற்பிறந்த பெரிய பிராட்டிக்குக் கணவனான எம்பெருமானுடைய
பொலிவு–பூர்த்தியை
நலம் புகழ வல்லளே–அழகையும் குணங்களையும் நன்றாகப் புகழ சக்தி யுடையவளோ
(அல்லள்)
நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று-இறையுருவம் —யாம் அறியோம் எண்ணில் —
இறையினுடைய வடிவானது
வெளுப்பு சிவப்பு பசுமை கருமை என்று எண்ணில் நாம் அறியோம் –
நிறைவுடைய-நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
நாமே மாட்டாதோமானால் மதிப்புடையளான சரஸ்வதி அங்குத்தைக்குத் தரமாகப் புகழ வல்லளோ-
பூ மங்கை கேள்வன் பொலிவு –
புகழப் போகாமை என் என்னில்
ஸ்ரீ யப்பதியுடைய ஸம்ருத்தியை சிலவரால் பேசப் போமோ –
(நீல தோயத மத்யஸ்தா வித்யுத் தைத்ரியம்
ஆதித்ய வர்ணம் தாமச பரம்
மஹா ராஜனும் வாசா –யதா இந்திரா கோப –யதா அக்னி –யதா புண்டரீகம் -யதா வித்யுத் -ப்ருஹதாரண்யம்
இப்படி ஸ்ருதிகள் இருக்க விக்ரஹம் இல்லை குணம் இல்லை என்று சொல்லுவார் மிடற்றைப் பிடிக்கும் படி
துயர் அறு சுடர் அடி
மதி நலம் -உயர்வற உயர் நலம் -குணவான்
உபய விபூதி நாதன்
யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் மாரீசன் புத்திக்கே எட்டாதே)
—————————————————————————–
இவனுடைய அழகை அனுபவித்துக் குமிழ் நீர் உண்ணும் அத்தனை ஒழிய
நம்மால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –
சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரனுடைய திவ்ய மங்கள விக்ரஹமானது –
நிறத்தால் வெளுத்து இருக்கும் சிவந்திருக்கும்
பச்சென்று இருக்கும் கறுத்து இருக்கும் என்று ஆராயும் இடத்தில் ஏக தேசமும் அறிய மாட்டுகிறிலோம் –
இது கிடக்க எல்லாரும் அவனைப் பேசும் இடத்தில் தன்னைப் பற்ற வேணும் படியுமாய் –
தான் உள்ளபடி அறிந்து பேசுகைக்கு ஈடான
ஞான சக்த்யாதி பூர்த்தியை யுடையளான சரஸ்வதி யானவளும்
புஷ்ப நிவாசியான பெரிய பிராட்டியார்க்கு வல்லபனானவனுடைய
ஸ்வரூப ரூப குணாதிகளால் யுண்டான ஸம்ருத்தியை
அங்குத்தைக்குத் தகுதியாம் படி நன்றாகக் புகழ வல்லளோ-
ஸ்ரீ யப்பதியினுடைய ஸம்ருத்தியைச் சிலரால் சொல்லாய் இருந்ததோ என்றபடி –
(பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்றும் உணரலாகாது
பேசினார் பிறவி நீத்தார்
செலக் காண்பிப்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியார்)
——————————————————————————————————————
கருட வாஹனனுடைய திருவடிகளை ஆஸ்ரயி என்கிறது –
(முயன்று தொழு நெஞ்சே (53-பாட்டில்) இருந்து நெஞ்சே வருவித்திக் கொண்டு நெஞ்சே தெளி -என்கிறார் இங்கு)
(கீழ் திரு மார்பில் ஹாரம் -இங்கு திரு-கார் வானில் மின்னே போல் தோன்றி மலிந்து திரு)
ஏவம் விதமான வைபவத்தை யுடையவனை அநுஸந்திக்குமதுவே நமக்கும் உத்கர்ஷ ஹேது என்கிறார் –
பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் -பொலிந்த
கருடன் மேல் கண்ட கரியான் கழலே
தெருடன் மேல் கண்டாய் தெளி ——–57-
பதவுரை
திரு–பிராட்டியானவள்,
பொலிந்து இருண்ட கார்–செறிந்து இருளை யுடைத்தான கார் காலத்திலுண்டான
வானில்–மேகத்தில்
மின்னே போல் தோன்றி–மின்னல் போல் பிரகாசித்து
மலிந்து திரு இருந்த மார்வன்–பொருந்தி யிருக்கப் பெற்ற திரு மார்பை யுடையனாய்
பொலிந்த கருடன் மேல் கொண்ட–விளங்குகின்ற கருடனால் ஏற்றக் கொள்ளப் பட்டவனான(மேல் இருந்து நடத்தா நிற்கும் -பொறு சிறைப்புள் உவந்து ஏறும் )
கரியான்–கருநிறப் பெருமானுடைய
கழலே–திருவடிகளே
தெருள் தன் மேல்-ஜ்ஞாநத்திற்கு மேற்பட்டதான பக்திக்கு விஷயமென்று-பக்தி ஞான விசேஷம் –
தெளி கண்டாய்–(நெஞ்சே!) தெளிந்திரு
(பக்தியே கழல் தெளி கண்டாய் -விஷய விஷயீ பாவ சாமானாதிகரண்யம்-பக்திக்கு விஷயமான கழல்
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் போல் இங்கும் )
பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி–மலிந்து திரு விருந்த மார்வன்–
சம்ருத்தமாய் இருண்ட கார் காலத்தில்
மேகத்தில் மின் போலே தோற்றித் தண்ணீர் தண்ணீர் என்று ஆசைப்படா நின்ற
(இறையும் அகலகில்லேன் என்று )பெரிய பிராட்டியார் உகந்த திரு மார்வை யுடையவன் –
பொலிந்த-கருடன் மேல் கண்ட கரியான் கழலே
மஹா மேருவில் ஒரு அஞ்சன கிரி (மைப்படி மேனியான் )இருந்தால் போலே சம்ருத்தனான பெரிய திருவடி மேலே
இருந்தவனுடைய திருவடிகளில் யுண்டான –
தெருடன் மேல் கண்டாய் தெளி -(தெருள் தன் மேல் கண்டாய் தெளி)
ஞான விபாகையான பக்தியை எல்லா வற்றுக்கும் மேலாகக் கொண்டு அநுஸந்தி
ஓலக்க வார்த்தை என்று இராதே கொள்–
(ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம் 41 –
இதில், ஆளவந்தார் எம்பெருமான் பெரிய திருவடியுடன் (கருடாழ்வார்) கூடியிருப்பதை அனுபவிக்கிறார்.
பெரியதிருவடி, எம்பெருமானுக்குக் கொடியாகவும், மற்றும் எல்லாமாகவும் பழுத்த கனியைப் போன்று
எம்பெருமானுக்கு விரும்பத்தக்கவராக இருக்கிறார்.
தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||
வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —)
(நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் –ஸ்ரீ திருவிருத்தம் 29-)
————————————————————————-
ஏவம் விதமான வைபவத்தை யுடையவனை அநுஸந்திக்குமதுவே நமக்கும் உத்கர்ஷ ஹேது என்கிறார் –
செறிந்து இருளை யுடைத்தான கார் காலத்தில் மேகத்தில் யுண்டான
மின் போலே பிரகாசித்துப் பெரிய பிராட்டியார் ஆனவள்
ஸ்வரூப ரூப குணாதிகளாலே வந்த வைபவத்தை யுடையளாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கிற திரு மார்வை யுடையனாய்
(அவன் உள்ள இடங்களில் எல்லாம் இவள் விபு -ஆத்மாக்கள் அனைத்திலும் விலக்ஷணம்
போக்யத்தில் அவனில் விலக்ஷணம்
நாச்சியார் கண் அழகு விழிக்க ஒண்ணாதே
பாபானாம் வா -லுகுதாரா ராமஸ்ய கோஷ்டி)
அதுக்கு மேலே மிக்க வைபவத்தை யுடையனாய்க் கொண்டு –
மஹா மேருவில் ஒரு அஞ்சன கிரி இருந்தால் போலே பொற்க்கென்று இருக்கிற நிறத்தை யுடைத்தாய் –
பெரிய திருவடி மேல் கொண்டு நடத்தா நின்றுள்ள கறுத்த நிறத்தை யுடைய சர்வேஸ்வரனுடைய திருவடிகளே கிடாய்
உத்கர்ஷ ஹேதுவாக அனுசந்திக்கப்படும் ஸ்வ பாவம் எல்லா வற்றிலும் மேலான உத்கர்ஷம்-
நெஞ்சே நீ இத்தை நன்றாக புத்தி பண்ணு –
சேஷ பூதனுக்கு ஸ்வரூப அனுகுணமான உத்கர்ஷம் சேஷி திருவடிகளை அறிகை இறே
(அடியானுக்கு திருவடிகளை அறிந்து உணர்ந்து நித்தியமாக நினைப்பதே ஸ்வரூபம்)
பொலிந்த கருடன் என்ற பாடமான போது –
சம்ருத்தமான திருவடி என்ற பொருளாகக் கடவது
தெருடன் மேல் கண்டாய் —
தெருடல் தெருடப்படுமது-
அனுசந்திக்கப் படுமவற்றில் இதுவே கிடாய் மேலானது என்றபடி
அன்றிக்கே
தெருள் -என்று ஞானமாய்
ஞானத்தில் மேலாய் இருக்கிற பக்தியைச் சொல்லுகிறதாய் –
ஞான விபாக ரூபையான பக்தியால் கரியான் கழலைக் கண்டு அனுபவிக்கப் பெற்றாயே என்றுமாம் –
(வேத ஸ்வரூபம் மேல் அவன் -ஞானத்துக்கு மேல் பக்தி பண்ண வேண்டிய அவன் தானே உத் கர்ஷம்)
முயன்று தொழு நெஞ்சே என்கிற பாட்டில்(53)
சொன்ன நெஞ்சே இங்கும் முன்னிலை –
——————————————————————————————————————-
(பரத்வத்திலும் அதுக்கு பிரதி நிதியான திரிவிக்ரம விபவ அவதாரத்தில் அதுக்கு பிரதிநிதியான
திருவேங்கடத்திலும் முதல் ஆழ்வார்கள் ஊன்றி இருப்பார்கள் அன்றோ)
(யத் துங்க ச்ருங்க விநிஷங்கி ஸூராங்கநா நாம்
ந்யஸ்த ஊர்த்தவ புண்ட்ர முக மண்டன மண்டிதா நாம்
தர்ப்பண்ய பூத் த்ருதம் அபாங்க ச சாங்க ப்ருஷ்டம்
தத் தாம ஸூந்தர புஜஸ்ய மஹாந் வநாத்ரி –6-
ந்யஸ்த ஊர்த்தவ புண்ட்ர முக மண்டன மண்டிதா நாம் –அணியப்பட்ட ஊர்த்தவ புண்ட்ரம் ஆகிற
முக அலங்காரத்தாலே அலங்கரிக்கப் பட்டவர்கள்
யத் துங்க ச்ருங்க விநிஷங்கி ஸூராங்கநா நாம் –யாது ஒரு திருமலையினுடைய உன்னதமான சிகரத்தில்
வந்து சேர்ந்த தேவ மாதர்களுக்கு
த்ருதம பாங்க ச சாங்க ப்ருஷ்டம்-தர்ப்பண்ய பூத்–அ களங்க சந்த்ர மண்டல மானது கையிலே எந்தப்பட்ட கண்ணாடி ஆயிற்று
அபாங்கம் என்றது அபகதமான அங்கத்தை -களங்கம் அற்ற
நிஷ் களங்கனாக-தேவதாந்த்ர ஸ்பரிசத்தால் வந்த களங்கத்தை இத் திருமலையை சேவித்து தீர்த்துக் கொண்டமையை
அடுத்த ஸ்லோகம் விவரிக்கும்
தத் தாம ஸூந்தர புஜஸ்ய மஹாந் வநாத்ரி –அந்த ஸ்தானம் ஸூந்தர தோளுடையானது திருமாலிருஞ்சோலையாம் –
மலமறு மதி சேர் மாலிருஞ்சோலை அன்றோ –
அதிசய யுக்தி அலங்காரத்தால் இங்கும் திருமலையின் வளர்த்தி அனுபவம்
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர் சிலம்பாறு பாயும் திருமாலிருஞ்சோலையே
அவர்கள் நிர்மலமான சந்திரனையே கண்ணாடியாகக் கொண்டு ஊர்த்வ புண்ட்ர அலங்காரம் செய்து கொள்கிறார்கள்)
(மதி என்று ஞானம் -இத்தால் ஜீவன்-களங்கம் அற்ற மதி முக்தாத்மா
பிராட்டி புருஷகாரமாய் ஜீவாத்மாக்களை மேல் தூக்கி விட பிரார்த்திக்க
அவன் அருளுவதைச் சொன்னவாறு)
அஸ்மின் மயா சார்த்தம் -என்று
பிராட்டி செய்த செயலைத் திருமலையில் திர்யக்குகளும் அனுவர்த்தியா நின்றது என்கிறார் –
(கோதாவரி நதிக்கரையில் பாறையில் பிராட்டி உடன் இருந்த விருத்தாந்தம் பற்றி பெருமாள் இளைய பெருமாள் இடம் சொன்னது போல்)
இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை யுடையவன் கண்ணாலே காணலாம் படி
திருமலையிலே வந்து நின்றான் என்கிறார் –
தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோரு நாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-
பதவுரை
தெளிந்த–ஸ்வச்சமாயிருக்கிற
சிலா தலத்தின் மேல் இருந்த மந்தி–கற்பாறையின் மீது இருக்கும் பெண் குரங்கானது.
அளிந்த கடுவனை நோக்கி–ஸ்நேஹமுள்ள ஆண் குரங்கை நோக்கி
விளங்கிய வெண் மதியம் தா என்னும் வேங்கடம்–‘விளங்குகின்ற வெளுத்த சந்திரன் (ப்பிடித்துக்) கொடு‘
என்ற சொல்லும்படி இருக்கிற திருவேங்கடம்
மேல் ஒருநாள்–பண்டொரு காலத்தில்
மண்–பூமியை
மதியின்–தனது புத்தி சாதுரியத்தினால்-மதியினால் குறள் மாணாய்
கொண்டு–(மாவலி யிடத்தில் பெற்றுக் கொண்டு)
உகந்தான்–திருவுள்ள முவந்த ஸர்வேச்வான்
வாழ்வு–வாழுமிடம்
தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி-
ஸ்படிகப் பாறையில் இருந்த பெண் குரங்கு
அளிந்த கடுவனையே நோக்கி –
தன் பக்கல் ஸ்நேஹித்த ஆண் குரங்கை நோக்கி –
விளங்கிய வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே —
ஊடினால் ஒரு கடகர் பொருந்த விட வேண்டாதே தானே
சந்திரனுடைய மேல் புறம் ஆகையால் களங்கம் அற்று உஜ்ஜவலமாய் இருந்துள்ள சந்த்ர மண்டலத்தை தா என்னா நின்றது
இழிந்து (குனிந்து )வாங்க வேண்டும் காண் திருமலையினுடைய உயர்த்தி –
(நாம் சந்திரனுக்கு கீழ் -களங்கம் உள்ள பாதியைத் தான் பார்க்கிறோம்
இங்கே மேல் பகுதி என்பதால் ஒரே பிரகாசம்-விளங்கிய வெண் மதியம்)
மேலோரு நாள்-மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-
பண்டு ஒரு நாள் பூமியை மதியால் கொண்டு
அலாப்யா லாபம் பெற்றானாய் உகந்தவனுடைய ஐஸ்வர்யம் –
——————————————————————-
இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை யுடையவன் கண்ணாலே காணலாம் படி
திருமலையிலே வந்து நின்றான் என்கிறார் -(சகல மனுஷ நயன விஷய தாங்கனாக )
ஸ்படிகமான சிலா தலத்திலே தன் வேண்டல் பாடு தோற்ற இருந்த பெண் குரங்கானது –
நம்மை ஏவிக் கார்யம் கொள்வது எப்போதோ என்று அவசர பிரதீஷமாய்-
ஸ்நேஹமே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற ஆண் குரங்கை ப்ரணய ரோஷம்
மாறி சாதரமாகப் குளிரப் பார்த்து பார்க்கைக்குக் கண்ணாடி கொண்டு வந்து தா என்பாரைப் போலே
மேல் புறம் ஆகையால் களங்கம் அற்று ஒளி விடுகிற பூர்ண சந்த்ர மண்டலத்தைத் தா என்று
சொல்லும் படி இருக்கிற திருவேங்கடமே
பண்டு ஒரு காலத்திலே பூமியைத் தன் புத்தி யோகத்தாலே
மஹா பலி இருப்புக்குப் பொருந்தும்படி அர்த்தித்து வாங்கிக் கொண்டு அலாப்ய லாபம் பெற்றால் போலே
உகந்த சர்வேஸ்வரன் தனக்கு சர்வ சம்பத்துமாக நினைத்து இருக்கும் தேசம் –
—————————————————————————————————————
(வாமனன் ஸுலப்யம் ஸுசீல்யம்
திரிவிக்ரமன் -பரத்வம் பொலியும்
பரத்வம் -திரிவிக்ரமன் -திருவேங்கடம் -இவற்றிலே மண்டி இருப்பர் முதல் ஆழ்வார்கள் என்றாலும்
ஸுலப்யமும் வாத்சல்யமும் -அனைவரையும் தீண்டியதால் தோன்றுமே)
சர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு வகுத்த சம்பத் என்று வ்யுத்புத்தி பண்ணினேன் -(எங்கள் மால் என்று அறிந்து கொண்டேன் )
(ப்ரஹ்மம் ஜகத் காரணம் -வியாபித்து -பொதுவான லக்ஷணங்கள்
தாமரைக் கண்ணன்- கறுமை திவ்ய மேனி -செங்கண் மால் -ஸ்ரீயப்பதி -எங்கள் மால்
வாத்சல்யம் சவுந்தர்யம் லாவண்யம் மிக்கு புருஷகாரமும் இருந்தால் தானே நாம் அணுகி அனுபவித்து வாழலாம்)
கரியான் கழலே தெருடன் மேல் கண்டாய் -என்று
திரு உள்ளத்தைக் குறித்து அனுபவிக்கச் சொல்லி-
திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவித்த படியை அருளிச் செய்கிறார் –
வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று ——59-
பதவுரை
மை போல் நெடு வரை வாய்–மை போன்று இருண்டு பெரிதான மலையிடத்திலே
தாழும்–இரு பக்கமும் தாழ விழிந்து பாய்கின்ற
அருவி போல்–அருவி போலே
தார் கிடப்ப–மாலை சாத்தப் பட்டிருக்க, (அதிலே யீடுபட்டு)
சூழும்–ஒருக்ஷணமும் விட்டுப் பிரியாமல் வளைத்துக் கொண்டிருக்கிற
திரு–பிராட்டியை யுடையவனும்
மா மணி வண்ணன்–நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
செம் கண்மால்–செந்தாமரை போன்ற திருக் கண்களை யுடைய பெரியோனுமான
எங்கள் பெருமான்–எம்பெருமானுடைய
அடி–திருவடிகளை
சேர பெற்று–அருகப் பெற்றதனால்
வாழும் வகை அறிந்தேன்–உஜ்ஜீவிக்கும் வழி தெரிந்தவனானேன்.
(அழகும் சம்பந்தமும் பிராப்தியும் புருஷகாரமும் இருக்க இங்கேயே வாழ்ச்சி உண்டே-
திருவேங்கடத்தானையும் திரிவிக்ரமனையும் சொன்னவாறு –
மீனுக்கு உடம்பு எங்கும் போல் திரு இவனுக்கு -சூழும் பத பிரயோகம் -இதனாலேயே —
பச்சை மா மலை -நீல மணி -கறுத்து பளபளத்து இருப்பதையே சொன்னவாறு – )
வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்–தாழும் அருவி போல் தார் கிடப்ப–
அஞ்சன கிரியில் பாயா நின்ற அருவி போலே திரு மார்பிலே சாத்தின தோள் மாலை கிடப்ப
சூழும்-திரு- மா மணி வண்ணன் —
அதிலே ஆசைப்படா நின்ற பெரிய பிராட்டியாரை யுடையனாய் –
ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –
செங்கண் மால்–
ஈஸ்வரத்வத்தை ஸூசிப்பியா நின்ற திருக் கண்களை யுடையவன் -( தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக ஏவம் அக்ஷிணீ )
எங்கள்-பெருமான் அடி சேரப் பெற்று —–
போக்ய பூதனாய் -என்னை யுடையவனாய் -வகுத்தவனுடைய திருவடிகளைக் கிட்டப் பெற்று
புத்தி நாஸாத் பிரணஸ்யதி-என்று சப்தாதிகளைப் பற்றாதே வாழும் பிரகாரம் அறிந்தேன் -(தாழும் வகை தவிர்ந்து வாழும் வகை அறிந்தேன்)
(த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷
சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு
அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம்
முதிர்ந்த பழுத்த ஆசையே காமம்
இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன்
காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது
இதிலும் அடுத்ததிலும் -படிக்கட்டு -அவரோகணம் –தலை குப்புற விழ –
(க்ரோதாத் பவதி ஸம்மோஹ ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம—
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்திநாஸோ புத்திநாஸாத் ப்ரணஸ்யதி—৷৷2.63৷৷
கோபத்தினால் பகுத்து அறிவின்மை உண்டாகிறது –
பகுத்து அறிவின்மையால் நினைவின் அழிவு ஏற்படுகிறது –
நினைவின் அழிவினால் அறிவின் அழிவு உண்டாகிறது –
அறிவின் அழிவினால் சம்சாரத்தில் மூழ்கி அழிகிறான்–இப்படி படிக்கட்டு -கீழே விழ –
விஷயாந்தர ப்ராவண்யம் தொடங்கி -சங்கம் காமம் க்ரோதம் -அவி விவேகம்-சம்சாரத்தில் மூழ்கி அழிகிறான் -படிக்கட்டுக்கள்)
(மாதலி கவிதை வர்ணனை நீல மேக ஸ்யாமள கண்ணன் அணிந்த மாலைகளை பற்றி
நீல ஆகாசம் -முத்து மாலைகள் ஸாத்தினால் போல் ஆகாச கங்கை அருவிகள் )
——————————————————————-
(தெருடன் மேல் தெருள் ஞானம் அதன் மேல் அவன் பக்தி -கீழே பார்த்தோம் )
கரியான் கழலே தெருடன் மேல் கண்டாய் -என்று
திரு உள்ளத்தைக் குறித்து அனுபவிக்கச் சொல்லி-
திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவித்த படியை அருளிச் செய்கிறார் –
அஞ்சனம் போலே இருண்ட நிறத்தை யுடைத்தான பெரிய மலையிடத்திலே இரண்டு அருகும்
தாழ விழுந்து பாயா நின்ற அருவி போலே திருத் தோள்களில் சாத்தின திருமாலையானது
அனுபாவ்யமாய்க் கிடந்தது பிரகாசியா நிற்க-
இவ் ஓப்பனை அழகைக் கண்டு -இறையும் அகலகில்லேன் (நித்ய அநபாயினி நிரவத்யாம் )-என்று
சூழ்ந்து போந்து அங்கே நித்ய வாசம் பண்ணுகிற பெரிய பிராட்டியாரை யுடையனாய் –
பெரு விலையனான நீல ரத்னம் போலே ஸ்ரமஹரமான திருமேனியை யுடையனுமாய்-
இவ் வைஸ்வர்ய ஸூ சகமான சிவந்த திருக் கண்களை யுடையனாய் –
சர்வாதிகனாய் –
ஆஸ்ரிதரான எங்களுக்கு வகுத்த சேஷியுமான சர்வேஸ்வரனுடைய திருவடிகளைக் கிட்டப் பெற்று
(சேஷத்வ பாரதந்த்ர )ஸ்வரூப அனுரூபமாக வாழும் பிரகாரத்தை அறிந்தேன் –
————————————————————————————————————
பிரதிபந்தகங்கள் போனால் அன்றோ வாழும் படி யாவது என்னில் –
அவன் தானே பிரதிபந்தகங்களைப் போக்கும் என்கிறது –
உமக்கு வாழ்விலே அந்வயமாகில் அதுக்கு பிரதிபந்தகமானவை செய்தது என் என்ன-
அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது -என்கிறார் –
(பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து
பெற்றம் முற்றக் காத்து
பிணை மருதமூடு போய்
பேய் முலை உண்டு
மாச் சகடம் உதைத்து
நிரல் நிறை
அரவம் இத்யாதியில் – 10 சேஷ்டிதங்கள் உண்டே
அரவம் அடல் வேழம் ஆன்குருந்தம் புள்வாய்
குரவை குட முலை மற் குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் ———–54–)
பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து -கற்றுக் குணிலை
விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —–60-
பதவுரை
பெற்றம்–பசுக்களை
முற்ற காத்து–ஒன்று தப்பாமல் ரக்ஷித்தவனாயும்(காப்பான் -சாலப் பல நாள் உயிர்கள் உகந்து காப்பான் )
பிணை மருதம் ஊடு போய்–இரட்டை மருத மாங்களிடையே சென்றவனாயும்
பேய் முலை உண்டு–பூதனையின் முலையை உண்டவனாயும்
மா சகடம் உதைத்து–பெரிய சகடத்தை உதைத் தொழித்தவனாயும்
கன்று குணிலை கொண்டு- கன்றாகிய எறி தடியைக் கொண்டு
விளங்கனிக்கு எறிந்தான்–விளாம்பழத்தின் மீது எறிந்தவனாயுமுள்ள எம்பெருமான்
பண்டு–முன்பொரு காலத்தில்
வெற்றி பணிலம்–ஜய சீலமான சங்கை(வெற்றியை இயல்பாக உடைய சங்கு )
வாய் வைத்து–வாயிலே வைத்து ஊதி
உகந்தான்–மகிழ்ந்தான்
பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து —இது நிரல் நிறை–
பெற்றம் முற்றாக காத்து
பிணை மருதமூடு போய்
பேய் முலை யுண்டு
மாச்சகடம் உதைத்து -என்றபடி –
கற்றுக் குணிலை-விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான்
கன்றாகிய எறி கருவியைக் கொண்டு விளங்கனிக்கு கொண்டு எறிந்தவன் –
வெற்றிப்-பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —
வெற்றியை விளைப்பதான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்து உகந்தவன் –
பண்டு உண்டான பிரதிபந்தகங்களை எல்லாம் போக்கும் –
(சங்கர ஐயா உன் செல்வம் சால அழகியதே)
(அஷ்ட மஹிஷிகள் உரிமை உண்டு
16108-க்ருஹஸ்த தர்மம் -ஒவ்வொருவருக்கும் க்ருஹம் -அனைவருக்கும் ஒரு திவ்ய மங்கள விக்ரஹம்
கோபிகள் -ஐந்து லக்ஷம் -அனைவருக்கும் ஆனந்தம்
தர்ம பரிபாலனம் -விரோதி நிரஸனம் -போக்யம் அனைத்தையும் காட்டி அருளி-அனைத்துமே ஆழ்வாராதிகளுக்கு)
———————————————————————
உமக்கு வாழ்விலே அந்வயமாகில் அதுக்கு பிரதிபந்தகமானவை செய்தது என் என்ன-
அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது -என்கிறார் –
பசுக்களை ஓன்று ஒழியாமல் ரக்ஷித்து —
ஒன்றோடு ஓன்று பிணைந்து நிர் விவரமாய் நின்ற மருதுகளை ஊடறுத்துக் கொண்டு போய் விழ விட்டு —
பூதனையுடைய முலையை அவள் பிணமாக விழும் படி உண்டு –
பயாவஹமான பெரிய சகடத்தை முறிந்து விழும் படி உதைத்துப் பொகட்டு –
கன்றாகிய எறி கருவியைக் கொண்டு விளவினுடைய பழத்துக்கு எறிந்து இரண்டையும் முடித்துப் பொகட்டவன்-
முன்பு ஒரு நாளிலே விஜயத்தை யுண்டாக்குமதான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
பிரதி பக்ஷம் நசிக்கும் படி திருப் பவளத்திலே மடுத்தூதி –
விரோதி போகப் பெற்றோம் என்று உகந்து அருளினவன் கிடீர் –
(புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில்
வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-இங்கும் பேய் முலை நஞ்சுண்டு கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி-அடுத்து அடுத்து)
——————————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply