ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி-தனியன் -அவதாரிகை – பாசுரங்கள் 1-10- – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

ஞான தர்சன பிராப்தி -பர பக்தி பர ஞானம் பரம பக்தி -இடை கழி -உள்ளே சாதனாந்தர பரர் மிருகண்டு மஹரிஷிகள்
வெளியில் பிரயோஜனாந்தர பரர்கள்
இரண்டு விளக்கு -இருவரும் ஏற்ற -வருத்தும் புற இருள் -அஞ்ஞானம் – இறைவனைக் காண இதயத்து இருள் வாசனை ருசிகள் அனைத்தும் போக
இவர் -மன்னிய பேர் இருள் மாண்டபின் -மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பாலேய் தமிழர் -பெரும் தமிழன் நல்லேன்
அன்பு ஆர்வம் இன்பு மிக்கு -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -இறைவனைக் காண இதயம் -வி ஸூத்தமான மனஸ்
ஞான அனுதயம் -விபரீத ஞானம் -மயர்வு அற -தேஹாத்ம அபிமானம் நீங்கி -ஸ்வ தந்திர தேவதாந்த்ர தேவதாந்த்ர உபாயாந்தர ப்ரயோஜனாந்தர அல் வழக்குகள் போக்கி –
அவிவிவேக துக்க வர்ஷம் போக்கி -ஆதித்ய வத் ஞானம்
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்து உதித்து -நல் தமிழால் நாட்டை உய்வித்த பெற்றிமையோர் முதல் ஆழ்வார்கள் –

மன்னிய பேர் இருள் -வெளி -உள் -அநாதி வாசனை ருசி -மாண்ட பின் –மாயனைக் கண்டமை காட்டி அருளியவர்-

காரண கார்ய பாவம் மூவருக்கும் உண்டே
ஞானம் -மதி காரணமாய் இருக்க- பக்தி நலம் பிறக்கும் -இவை இரண்டுமே காரணமாக – விளை நீராக சாஷாத்காரம் கிட்டும்

உபய விபூதி நாதன் -அவனே நாரணன் -அவனே ஸ்ரீ யபதி -நம் திரு உடை அடிகள் -என்று சாதிக்க வழி -மூவரும் காட்டி அருளி –
ஞான பக்தி சாஷாத்காரங்கள் -ஒண் சங்கு கதை வாள் -மூவரும்
ஸ்ரீ ரெங்கத்தில் முதல் ஆழ்வார் ஸந்நிதியில் கதவில் இவை இன்றும் சேவிக்கலாம்

————–

ஸ்ரீ குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு –ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த  சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து-

(ஓரா நெஞ்சு என்னும் உத்கண்ணால் அனுசந்தித்து
சீர்மை -ஸ்ரீ யபதியை சாஷாத்கரித்த சீர்மை
உணர்ந்த நெஞ்சு உகந்து பேச வேண்டுமே -)

பரபக்தி பர ஞான பரம பக்தியை யுடையராய் -அத்தாலே பகவத் சாஷாத் காரத்தை யுடையராய் –
ஞான திருப்தஸ்ய யோகின -என்னும் படி-தத் ஏக தாரகராய் -(வாஸூ தேவனே போஷக போக்ய தாரகம் -சர்வமுமாகக் கொண்டவர் )
லோக யாத்திரையில் கண் வையாதே அலௌகிகராய் வர்த்திக்கிற முதல் ஆழ்வார்களில் –
மாட மா மயிலையில் அவதரித்து-மஹ்தாஹ்வயர்-என்னும்படி –
செம்மை +வடி -சேவடி போலே –பெருமை +ஆழ்வார் -பேயாழ்வார்
நிரதிசய ப்ரேமத்தை யுடையராய் –
அத்தாலே திருக் கண்டேன் என்று உரைத்த
பேயாழ்வார் திருவடிகளிலே நிரந்தர அனுசந்தானத்தை விதிக்கிறது இதில் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்–
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் -பெரிய திரு -2-10-8-ஆகையால்

(பார் ஏறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூது இயங்கி பார்த்தன் செல்வத்
தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான்-தன்னை-
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே–பெரிய திரு -2-10-8)

அதனுள் —
ஸ்ரீ மத்தாய் அவர்களுக்குப் பாங்காக வசிக்கும் படியான மாடங்களை யுடைத்தாய் –
அத்தாலே தத் ஏக நிரூபணீயமாய் இருக்கிற திருக் கோவலூர் என்றபடி –
கோவலன் வர்த்திகையாலே அதுவே நிரூபகமான தேசம் — வூர் -தானுகந்த வூர் –
பின்புள்ளவர்க்கும் ஆஸ்ரயணீயன் ஆகைக்காக ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்கள் எல்லாம் தோற்ற
நீயும் திரு மகளும் நின்றாயால் -இத்யாதி படியே வர்த்திக்கும் தேசம் –

நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப்
பாயும் பனிமறைத்த பண்பாளா, – வாயில்
கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்
இடைகழியே பற்றி யினி

இப்படி விலக்ஷணமான தேசத்துக்கு உள்ளே –விலக்ஷணராலே-அன்று எரித்த ஞானச் சுடர் விளக்குகளாலே
புற இருளும் இதயத்து இருளும் -போனவாறே –

காரார் கரு முகிலைக் காணப் புக்கு –
மழை முகிலே போல்வானான -அவனைப் பொலிந்து இருண்ட கார் வானில் படியே கண்டு அனுபவிக்கப் புக்கு —
புற மழைக்கு ஒதுங்கினவர்க்கு
உள்ளும் மழை முகில் போல்வான் தன்னை
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் –பெரிய திருமொழி -2-10-10– இருக்கிறபடி –

(வாரணங்கொள் இடர்க் கடிந்த மாலை நீல மரதகத்தை மழை முகிலே போல்வான் தன்னை,
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன், என்று
வாரணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார்,
காரணங்க லாலுகங் கலந்தங்க் கேத்தக் கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே-பெரிய திருமொழி -2-10-10.)

காணப் புக்கு –
அன்பு கூரும்படியான தாம் அனுபவிக்கப் புக்கு -(அன்பு கூறும் அடியவர் முதல் ஆழ்வாருக்கு கலியன் பெயர் சூட்டுக்குகிறார் )

அதனுள் காரார் கரு முகில்–
குருங்குடியுள் முகில் போலே க்ருபாவானான மேகம் இறே –
காரார் கரு முகிலை வர்ஷூக வலாஹகம் போலே மேக காந்தியாய் இருக்கை —
காள மேகம் அன்றிக்கே -வர்ஷூக வலாஹக தர்சனத்தாலே ஒரு நிவேசனத்திலே ஒதுங்கப் புக்கு
மூவரை ஒழிய மற்று ஆர் என்று ஆராயும் இடத்து –என்றுமாம் –
ஏவம் விதனானவனை -நெஞ்சு என்னும் உட் கண்ணாலே காணப் புக்கு

ஓரா –
திரு உள்ளத்திலே அவ்வனுபவம் விசதமாம் படி
ஓர்ந்து –
அனுசந்தித்து -மனனம் பண்ணி -திருக் கண்டேன் என்று உரைத்த -அவ் வனுப ஜெனித ப்ரீதி யாலே
தாம் சாஷாத் கரித்த படியை -திருக் கண்டேன் -என்று தொடங்கி- பின்புள்ளவர்க்கும் பிரசித்தமாக அருளிச் செய்த

சீரான் கழலே –
இப்படி ஸ்ரீ மானை அனுபவித்தவருடைய ஸ்ரீயை யுடையரான ஸ்ரீமானுடைய ஸ்ரீ பாதங்களே
மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் பொன்னடி -என்னைக் கடவது இறே –

உரைக் கண்டாய் நெஞ்சே உகந்து –
அவர் திருக் கண்டேன் என்று அனுசந்தித்தால் போலே நீயும் அவர் திருவடிகளை
வாக்காலே அனுசந்திக்கப் பார்–யத்தி மனஸா த்யாயதி தத் வாசா வததி இறே –

நெஞ்சே உகந்து –
இப்படி ததீய சேஷத்வத்துக்கு தகுந்த நெஞ்சே -அநுஸந்திக்கும் இடத்தில் ஹர்ஷத்துடனே அனுசந்தித்து
உகந்து பணி செய்து -என்னுமா போலே
தனி மா தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையும் கொல்-என்றார் இறே

(உற்றேன் உகந்து பணி செய்தேன் போல் இங்கும் உகந்தே ததீய வாசிக கைங்கர்யம்)

சீரான் என்று பகவத் சாஷாத்கார ஹேதுவான ஞான பக்தியாதி குணங்களை யுடையவர் என்னவுமாம் –

இத்தால் பகவத் சாஷாத் காரம் யுடையராய் -அத்தை சம்சாரிகளும் அனுபவிக்கும் படி ஸ்வ ஸூக்தி முகேன பிரகாசிப்பிக்கும்
அவர்களான ஸ்ரீ மான்கள் திருவடிகள் நித்ய அனுசந்தேயம் என்றதாய்த்து –

——————————————————————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -அவதாரிகை –

உபய விபூதி உக்தன் என்று அனுசந்தித்தார் முதல் ஆழ்வார்
அதுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் நடுவில் ஆழ்வார் –
அதுக்கு ஸ்ரீ சப்தம் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார் இவ்வாழ்வார் –

ஞானத்தைச் சொல்லுகிறது வையம் தகளி-
ஞான விபாகையான பக்தியைச் சொல்லுகிறது அன்பே தகளி –
பக்தியால் சாஷாத் கரித்த படியைச் சொல்கிறது இதில் –
( உயர்வற -என்று முதல் பத்திலும் -வண் புகழ் நாரணன் -என்று அடுத்த பத்திலும்-
திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பத்திலும் அருளிச் செய்தார் இறே நம்மாழ்வார் )

(காரண கார்ய பாவம் மூவருக்கும் உண்டே
ஞானம் -மதி காரணமாய் இருக்க- பக்தி நலம் பிறக்கும் -இவை இரண்டுமே காரணமாக – விளை நீராக சாஷாத்காரம் கிட்டும்)

—————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை உரை -அவதாரிகை-

பகவத் பிரசாத லப்தமான பர பக்தி ரூபாபன்ன ஞான விசேஷத்தாலே உபய விபூதி நாதனான எம்பெருமானுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பரி பூர்ணமாக அனுபவித்துப் பேசினார் பொய்கையார் –

(அறிந்தால் போதாதே அதுக்கும் மேல் ஆசையும் ஆர்வமும் வர வேண்டும்-ஞான விகாசமான பக்தியாலேயே அடைய முடியும் -முதிர்ந்த நிலையான ஞான விசேஷத்தாலே -பர பக்தி ரூபாபன்ன ஞான விசேஷத்தாலே-பேறு )

ஸ்ரீ பூதத்தார் எம்பெருமான் அருளாலே விளைந்த பரபக்தி –வையம் தகளி கேட்க்கையாலே
பர ஞான அவஸ்தமாம் படி பரி பக்குவமாய்
அந்த பர ஞானத்தால் அவன் படியை ஓன்று ஒழியாமல் அனுபவித்து ஹ்ருஷ்டராய் பேசினார் –

(அறிகை நிலையில் கீழ் -காண்கை இங்கு -அறிவுக்கு விஷயமாக 10 விஷயம் சொத்து -அடுத்து விஸ்வரூபம் காட்டியது போல் –
அங்கும் வெறும் ஞான விசேஷம் இல்லை -பக்தியைப் பற்றியே -அறிவைக் கொண்டு முயற்சிக்கலாம் -பக்தனுக்கே அவன் தன்னைக் காட்டுகிறான்
காட்டவே கண்டார் திருப் பாண் ஆழ்வார் –
பக்தியை வளர்க்கவே ஸ்வரூபாதிகளை அறிவித்து தன்னையும் காட்டி அருளுகிறார்
கண்ணையும் கொடுத்து காட்சியும் அருளுகிறான் அன்றோ)

அவர்கள் இருவருடையவும் பிரசாதத்தாலே- பகவத் பிரசாதம் அடியாக- தமக்குப் பிறந்த பர பக்தி பரம பக்தி பர்யந்தமாக முற்றி

(முனி மாறன் முன்பு உரை செய் முற்றின்பம் நீக்கித்
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம புத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து — -முனியே நான் முகனே -பரம பக்தி நிலை -சேர்ந்த பின்பே )

அத்தாலே கடலைக் கண்டவன் (ஆழி வண்ணனைக் கண்டவர் )-அதுக்குள் உண்டான முத்து மாணிக்காதிகளைத் தனித் தனி கண்டு உகக்குமா போலே
லஷ்மீ சங்க கௌஸ்துபாதிகளுக்கு இருப்பிடமாய் அவயவ ஸுந்தர்யாதிகள் அலை எரிகிற பெரும் புறக் கடலான
எம்பெருமானை சாஷாத் கரித்து அனுபவிக்கிறார் பேயார்-

(1-பெரும் புறக்கடலை –2- அடல் ஏற்றினை –3- பெண்ணை ஆணை –4- எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை —
4-முத்தின் திரள் கோவையைப் -5-பத்தராவியை –நித்திலத் தொத்தினை -6-அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியின் சுவை கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–பிருஹத் பஹிர் சிந்து -திருக்கண்ண மங்கை-அரு சுவை-ஆறு சுவைகள் )

உபய விபூதி உக்தன் என்றார் பொய்கையார் –
அவனுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் ஸ்ரீ பூதத்தார்
இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தையும் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார்
(மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை
காட்டும் தமிழ்த் தலைவன் அன்றோ இவர் )

(ஆசை காண்கை அனுபவிக்கை -மூன்றும் மூவர் நிலைகள் -அந்தமில் பேர் இன்பத்து கூடி இருக்கை -பரம பக்தி அறிகை காண்கை அடைகை என்றுமாம்-சஞ்சாயதே வா ஸம் த்ருஷ்யதே வா அதி கம்யதே –பராசரர்-திருவோணத்தில் ஏற்றிய விளக்கு முதல் -வெளி இருள் போக்க
உள் இருள் நீங்க அவிட்ட நக்ஷத்திரத்தில்
மன்னிய பேர் இருள் நீங்கியதால் கண்டமை பேசுகிறார் )

———————————————————————

அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே
அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –

(ஐந்து கண்டேன் -அர்த்த பஞ்சகம் போலும்–தத் த்வம் அஸி ஸ்வேத கேது ஒன்பது தடவை சொல்லி -கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் -நம்மை எல்லாம் கூட்டிக் கொண்டு -போல்-இன்று கண்டேன் இன்று உயர்ந்தேன் அமுதனார் -இன்று என்னைப் பொருளாக்கி தன்னுள் வைத்தான் -இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்று யாருக்கு காட்ட திரு உள்ளம் கொண்டானோ அன்று அவருக்குக் காட்டி அருளுகிறான் -திருவிலே உபக்ரமம் உப ஸம்ஹாரம் -தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு சார்வு என்றும் )

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

பதவுரை

இன்று–எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷம் பெற்ற இப்பொது
என் ஆழி வண்ணன் பால்–கடல் வண்ணனான எம்பெருமானிடத்திலே
திரு–பெரிய பிராட்டியாரை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்,
பொன் மேனி–அழகிய திருமேனியையும்
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
திகழும்–விளங்குகின்ற
அருக்கன்–பால ஸூர்யன் போன்று
அணி–உஜ்வலமான
நிறமும்–ப்ரகாசத்தையும்–வண்ணத்தைச் சொல்லாமல் ஒளியைச் சொன்னவாறு
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
செரு–யுத்த பூமியிலே
கிளரும்–பராக்ரமங்காட்டுகின்ற
பொன் ஆழி–அழகிய திருவாழியையும்
கை–திருக்கையில்
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
புரி சங்கம்–வலம்புரிச் சங்கையும் (மற்றொரு திருக்கையிலே)-புரிந்து பார்க்கும் -புரிதல் வளைந்து- கூனல் சங்கு
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்.

(திகழ்கின்ற திரு மார்பில் திகழ்கின்ற திரு மங்கை தன்னொடும் -செய்யாள் -ஹிரண்ய வர்ணாம் -பகைத்-தொடை -இணைத் தொடை -ஆழி வண்ணம் அனைத்தும் அவன் திருமேனியில் உண்டே -ஹிரண்ய மஸ்ரு ஹிரண்ய கேச- மதிப்பால் பொன் மேனி -)

திருக் கண்டேன்–
தர்மம் தன்னைக் கண்டேன் –

(தர்மி அவன் -இவள் ஸ்வரூப நிரூபக தர்மம் -அவன் தன்மையாகவே -இதம் இத்தஞ்ச என்று அறிவிக்கும் தர்மமே இவள் )
அஹம் நான் இவன்-அஹம் த்வம் அஹந்தா -நானாக தன்மை

பொன் மேனி கண்டேன்–
அவள் இருக்கும் ஆசனம் கண்டேன்

திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் –
இருவரும் சேர்ந்த சேர்த்தியாலே இள வெய்யில் கலந்தால் போலே இருக்கிறபடி –

(இருவர் ஒளி சேர்ந்து -தங்கத்தின் பெருமை தங்க ஒளி கலந்து -லோக விஜாதீயம்-

இது எப்படி என்று தேடிப் பார்க்க பால ஸூர்யன் ஒளி -இருளின் ஒளியும் வெளிச்சமும் சேர்ந்தால் போல் -என்று சொல்லலாம் படி
சமுதாய சோபை பொன் மேனி ஸுந்தர்யம் -நீல மேனி ஐயோ -நீலமாக ஸ்ப்ருஹணீயமாய்
மேல் அவயவ சோபை லாவண்யம்)

செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்–
அஸ்தானே பய சங்கை பண்ணி -வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்கிறபடியே திரு வாழியைக் கண்டேன் –

(இவருடைய திருப்பல்லாண்டு இருக்கிற படி)

புரிசங்கம் கைக் கண்டேன்-
ப்ராஞ்ஜலி ப்ரஹவ மாஸீனம் -என்கிறபடியே(ராமாயணத்தில் வளைந்த பணிந்த -இளைய பெருமாளை போல் )

என்னாழி வண்ணன் பால் இன்று —–
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை எனக்கு காட்டினவன் பக்கலிலே –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் –ப்ரபைக்கு ஆஸ்ரயம் கண்டேன்(திரு பிரபா -ஆஸ்ரயம் ப்ரபாவன் -பாஸ்கரேன ப்ரபா இவா -)
திகழும்-அருக்கன் அணி நிறமும் கண்டேன் —
செருக்கிளரும்–இருவரும் கலந்த கலவியாலே பிறந்த சமுதாய சோபை
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன் என்னாழி வண்ணன் பால் இன்று —-
கடலிலே இறே பிராட்டியும் மற்றும் உள்ள ரத்னங்களும் எல்லாம் பிறப்பது –
இன்று -அவன் காட்டக் கண்ட இன்று -இவர்கள் புருஷகாரமாகக் கண்ட இன்று என்றுமாம் –

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை உரை

அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே
அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –

உனக்கு ஸ்வம்மாய் கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் பக்கலிலே
ஆழ்வார்கள் இருவரும் காட்டக் கண்ட இன்று
தன்னை ஒழிந்தார் அடங்கலும் தன்னைப் பற்றி லப்த ஸ்வரூபராக வேண்டும்படி
பிரதானையான பெரிய பிராட்டியாரைக் கண்டேன்

(“ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“–ஸ்ரீ சது ஸ்லோகீ – 3வது ஸ்லோகம்

“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது.
அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது.
ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத்
தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை
ஒரு போதும் எதிர் பார்க்கப் படுவதில்லை யன்றோ)

(பரத்வாதி பஞ்ச பிரகாரங்களில் இவளே அவனுக்குத் தர்மம்
வடிவுடை மாதவன் வைகுந்தம் –பெரிய பிராட்டியாரும் நிழல் போல்வனர் இருவரும்
திரு மால் திருப்பாற்கடல் -வ்யூஹ நிலையிலும்
மைதிலி தன மணவாளா -விபவத்திலும்
அரவிந்தப்பாவையும் தானும் -மாதவன் கோயில்
திருமாலை சிந்தனையில் -அந்தர்யாமி
திருவாளன் திருப்பதி திருவரங்கம் -அலர் மேல் மங்கை உறை மார்பா – திரு மா மகள் மருவும் சிறு புலியூர் சல சாயனத்து அரு மா கடல் அமுதே –அர்ச்சாவதாரத்திலும்
அவளே ஸ்வரூப நிரூபக தர்மம்)

அவளும் தண்ணீர் தண்ணீர் என்று மேல் விழும்படி இருப்பதாய் –
பொன் போலே ஸ்ப்ருஹணீயமாய் இருக்கிற திரு மேனியைக் கண்டேன்

மரகத கிரியிலே-(பச்சை மா மலையிலே-)உதித்து ஒளி விட்டுக் கிளருகிற பால அர்க்கனைப் போலே இவருடைய ஒளியும் தன்னிலே கலசி
விளங்கா நின்றுள்ள அழகிய நிறத்தையும் கண்டேன் –

இச் சேர்த்திக்கு என் வருகிறதோ என்று அஸ்தானே பய சங்கை பண்ணி
யுத்த உன்முகமாய் கண்டார் மேலே சீறி விழா நிற்பதாய் ஸ்யாமளனான அவன் வடிவுக்குப் பகைத் தொடையாம் படி
பொன் போலே நிறத்தை யுடைத்தான திரு வாழியைக் கண்டேன் –

திரு வாழியைப் போலே சீறி விடுகை அன்றிக்கே
எங்கே எங்கே என்று சுற்றும் முற்றும் சீறிப் பார்க்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வெறும் புறத்திலே ஆலத்தி
வழிக்க வேண்டும் படி அழகிதான் திருக் கையிலே கண்டேன் –

இன்று நிர்ஹேதுகமாக-என்னவுமாம்
புரி சங்கு –கூனல் சங்கம் – என்னுமா போலே சேஷத்வத்தாலே எப்போதும்
ப்ரஹ்வீ பாவத்தை உடைத்தாய் இருக்கும் என்னவுமாம் -(நமஸ் நமு -ப்ரஹ்வீ பாவத்தை- தாது ரத்தத்தால் காட்டும் )

—————————————————————-

கைங்கர்யமே யாத்ரையாம் படி யாயிற்று -(அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் )

அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போயிற்று என்கிறார் –

(கீழ் ஆழி வண்ணன் என்றவன் திருவைக் கண்டு -ஸ்வீ கருத்து -கொண்டு திருமால் -அன்று அம்ருத மதன காலத்தில்
அவள் இருக்க இன்றே கழல் கண்டேன் -அதன் பலன் மேல் வயலாழி மணவானைப் பெற்றேன் -பெற்றதுவும் பிறவாமை பெற்றேன் -போல்இவரும்-
பேசிற்றெ பேசும் ஏக கண்டர்கள் -கீழ் அனுபவம்-அதுக்குத் தடை வரும் படி அன்றோ ப்ரக்ருதி -திருவடி பாஸ்கரன் இருக்க இருள் இருக்குமோ என்கிறார் )

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —2-

பதவுரை

பொன் தோய்–பொன் மயமான பூஷணங்கள் சேரப் பெற்றதும்
வரை–மலை போன்றதுமான
மார்பில்–திருமார்பில் (சாத்தப்பட்டிருந்த)
பூந்துழாய்–திருத்துழாயை
அன்று–கடல் கடைந்த வக்காலத்தில்
திரு–பெரிய பிராட்டியார்
கண்டு கொண்ட–அநுபவிக்கும்படியாக பெற்ற-அமுதினில் வரும் பெண்ணமுதம் கொண்டானே
திருமாலே–லக்ஷமீ நாதனே!
என் மனம்–அடியேனுடைய மனமானது
உன்னை–உன்னிடத்தே
மருக்கண்டு கொண்டு–பொருத்தப் பெற்றதனால்-மருவிக்கண்டு கொண்டு -விடாமல் பிடித்து சேவிக்கப் பெற்றேன்
யான் –அடியேன்
இன்றே–இன்று
கழல்–உனது திருவடிகளை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்,
ஏழ் பிறப்பும்–ஜந்ம ப்ரம்பரைகளை யெல்லாம்
அறுத்தேன்–(இனி மேல் தொடராதபடி) ஒழித்திட்டேன்

மருக்கண்டு கொண்டு-பொருந்தி உன்னைப் பெற்றது -மருவிக்கண்டு கொண்டு -விடாமல் பிடித்து சேவிக்கப் பெற்றேன்

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்–
பிரதிபந்தகம் போயிற்று என்று தோற்றும்படி யாயிற்று –
(பாத தர்சனம் பாப விமோசனம்-எற்றைக்கும் ஏழு ஏழு பிறப்பும்
கைங்கர்யம் செய்யப் பெறுவேன் ஆகில் பெறுவேன் -ஆண்டாள் )

பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று திருக் கண்டு கொண்ட திருமாலே —
(கீழே பஞ்ச வர்ணம் -அதில் பச்சை வர்ணம் சேர்ந்து இங்கு )
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயவ் வக்ஷஸ் தலம் ஹரே -என்று
பிராட்டி -தானே ஆசைப்பட்டு வந்து ஏறும்படியான மார்பு படைத்த -ஸ்ரீ யபதியை –

(திவ்ய மால்ய அம்பர தராம் பூஷண பூஷிதாம் பஸ்யதாம் சர்வ தேவானாம் -யயவ் வக்ஷஸ்தல ஹரவ் –

பெண்கள் கோஷ்ட்டியில் இவள் மார்பில் ஏறி அமர வெட்கப்பட வேண்டாமே-திகழ்கின்ற திரு மார்பில் திகழ்கின்ற திருமங்கை )

உன்னை-மருக்கண்டு கொண்டேன் மனம் —–
ஒரு பிரயோஜனத்தைக் கொண்டு போகை யன்றிக்கே
உன் பக்கலிலே மருவிற்று என் மனஸ் ஸூ —

(பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் ஆன பின்பு-மனஸ் மருவச் சொல்ல வேணுமோ )

————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போயிற்று என்கிறார் –

பொன் தோய்ந்த மலை போலே ஒளி பெற்று சிக்கென்று பரந்து ஸ்லாக்யமான திரு மார்பில் சாத்தின அழகிய
திருத் துழாயை யுடையனாய் -அம்ருத மதனம் பண்ணின அக் காலத்தில் –
தரித்ரன் நிதியைக் கண்டால் போலே பெரிய பிராட்டியால்
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயவ் வக்ஷஸ் தலம் ஹரே –என்னும்படி கண்டு கொள்ளப் பட்டவனாய் உன்னளவில்
அவளுக்கு உள்ள அபி நிவேசம் குளப்படி என்னும் படி பிராட்டி பக்கலிலே
கடல் போலே பெருகி வருகிற அபி நிவேசத்தை யுடையவனே

(திருவைக் கண்டு கொண்டான் இவன் என்றும் -திரு இவனைக் கண்டு கொண்டாள் என்றுமாம்

மால் -திருவுக்கு இவன் மேல் -இவனுக்கு அவள் மேல் -ஓன்று குளப்படி ஓன்று கடல்படி-க ஸ் ஸ்ரீ ஸ்ரீய -திருவுக்கும் திருவாகிய செல்வன் – )

என்னுடைய மனசானது -ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த பெருமையை நினைத்துப் பிற்காலியாதே
அவளோட்டை உறவை நினைத்துக் கூசாதே பொருந்திக் கொண்டு கிடந்து -ஆகையால் -அந்தப்புர பரிகரமான நான்
இன்று உன் திருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
அனுபவ விரோதியான ஜென்ம பரம்பரையும் ச வாசனமாகப் போக்கினேன் –

மருக் கண்டு கொண்டு -மருவிக் கண்டு கொண்டு -என்றபடி –

—————————————————————

கீழ் இவருடைய மனஸ் ஸூ அங்கே மருவினபடி சொல்லிற்று –
அவன் இவருடைய மனசை யல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் –

இப்படி தன்னுடைய மனஸ்ஸூ அவன் பக்கலிலே மருவக் கண்டவாறே அவனும் தம்முடைய மனசிலே
அபி நிவிஷுடனாய்க் கலந்த படியை அருளிச் செய்கிறார் –

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த  தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து –3–

பதவுரை

மாகடல் நீர் உள்ளான்–பெரிய திருப்பாற்கடல் நீரிலே திருக்கண் வளர்ந்தருள்பவனும்
மலராள் தனத்து உள்ளான்–பிராட்டியின் திருமுலைத்தடத்திலே அடங்கிக் கிடப்பவனும்
தண் துழாய் மார்பன்–குளிர்ந்த திருத்துழாயைத் திருமார்பிலணிந்தவனும்,
செருநர்–சத்துருக்கனானவர்கள்
உக–அழியும்படி
சினத்து–சீற்றத்தினாலே
செற்று–த்வம்ஸம்பண்ணி
உகந்த–மகிழ்ந்தவனும்
தேங்கு ஓதம் வண்ணம்–தேங்கின கடல் போன்ற வடிவை யுடையவனும்
வரு நாகம் தீர்க்கும் மருந்து–தப்பாமல் நேரக் கூடிய ஸம்ஸாரமாகிற நாகத்தைப் போக்கவல்ல மருந்து போன்றவனுமான ஸர்வேச்வான்
மனத்து உள்ளான்–என் மனத்திலே வந்து சேர்ந்து விட்டான்

(கோர மா தவம் செய்தனன் கொல் எனது மனசில் இருக்க -இருந்தான் கண்டு கொண்டே -அலாப்ய லாபம் பெற்றவனாக –
மாகடல் நீர் உள்ளான்–மலராள் தனத்து உள்ளான்-தண் துழாய் மார்பன்-அலங்கரித்து வந்தான் -ஆதாரம் பெறுக அழகனாக வந்தான்
சினத்துச் செரு நருகச் செற்று உகந்த  தேங்கோத வண்ணன்-ஆஸ்ரித விரோதம் போக்கப் பெற்றதால் உகந்து தேஜஸ் மிக்கு இருந்தான்
பெரிய பெருமாள் பதக்கம் இன்றும் பெரிய பிராட்டியார் திரு மார்பில் காணலாமே
இவை சாதனமாக வந்ததன் பயன் -வரு நரகம் தீர்க்கும் மருந்து ஆவதற்காகவே -)

சினத்து செரு நருகச் செற்று உகந்த—
சீற்றத்தினால் எதிரிகள் ஆனவர்கள் அழியும் படி அழித்து மகிழ்ந்தவன்

மனத்துள்ளான்-
என் நெஞ்சினில் வந்து பேர்க்க முடியாதபடி வாழ்கிறான் –

மா கடல் நீருள்ளான் மலராள்-தனத்துள்ளான் தண் துழாய் மார்வன்–
ஆஸ்ரித ரக்ஷணத்துக்காகத் திருப் பாற் கடலிலே கிடந்து-
அவ்வோபாதி பெரிய பிராட்டியார் திரு முலைத் தடத்தையும் ஒரு ஸ்தானமாக யுடையனாய் –
தண் துழாய் மார்பனாய் –

சினத்தினாலே செருநரானவர்கள் மங்கும்படி செற்று ஆஸ்ரித விரோதிகள் போகப் பெற்றோம் என்று உகந்து
அத்தாலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய் —
சினத்துச்-செரு நருகச் செற்று உகந்த  தேங்கோத வண்ணன்-வரு நரகம் தீர்க்கும் மருந்து —
அனுபவித்து அல்லது விடாத நரகத்தைக் கடைக்கைக்கு பேஷஜம் ஆனவன் –

மனத்துள்ளான்-என்னுடைய மனசிலே உள்ளான் –

(நிர்வாணம் பேஷஜம் பிஷக் -மோக்ஷ பலம் கொடுக்கும் மருத்துவன் –

பல ப்ரதா -பலத்துக்கு கரணம் கருவி மருந்து -உபேயமாயும் உபாகமாயும் இவனே

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே—10-8-1-)

————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி தன்னுடைய மனஸ்ஸூ அவன் பக்கலிலே மருவக் கண்டவாறே அவனும் தம்முடைய மனசிலே
அபி நிவிஷுடனாய்க் கலந்த படியை அருளிச் செய்கிறார் –

பிராட்டி மேல் விழுந்து அனுபவிக்கும் படி ஸ்ரமஹரமான திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு மார்வை யுடையனாய்-
தாமரைப் பூவை இருப்பிடமாக யுடையளான பெரிய பிராட்டியாருடைய அவயவாந்தரங்களில் அழகு குமர் இருக்கும் படி
திரு முலைத் தடத்திலே அத்யபி நிவிஷுடனாய்க் கொண்டு அடங்கி கொண்டு அடங்கி வர்த்திக்குமவனாய்-
என் மனஸ்ஸூ பாங்காகும் அளவும் அவசர ப்ரதீஷினனாய்க் கொண்டு இடமுடைத்தான திருப் பாற் கடலிலே நீரிலே
கண் வளர்ந்து அருளுமவனாய் –

(இசைவித்து உனது தாள் இணைக்கீழ் இருத்தும் அம்மான் அன்றோ –

இதன் பின்பு இளம் கோயில் கைவிடேல் என்று நாம் பிரார்த்திக்க வேண்டுமே)

சத்ரு வர்க்கம் உருத் தெரியாத படி அழிக்கத் தக்கதாய் சீறி அழித்துப் பொகட்டு –
ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் என்று உகந்து (கொண்ட சீற்றம் ஓன்று உண்டே )

அத்தாலே தேங்கின கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்-
அந்த மா கடலிலே பள்ளி கோளைப் பழக விட்டு என் மனக் கடலிலே வந்து நித்ய வாசம் பண்ணி வாழுமவனானவன் –
தப்பாமல் வரக் கடவதான சம்சாரம் ஆகிற நரகத்தை சவாசனமாகப் போக்கும் ஒவ்ஷதம்

(ஆதிசேஷனையும் பாற்கடலையும் ஓருவருக்கு ஓருவர் பழகிக் கொள்ள வைத்து அவற்றை விட்டு அன்றோ இங்கே வந்து பேரேன் என்று புகுந்தான்)

———————————————————–

சர்வ ரக்ஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகம் என்கிறார் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும்  உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி —4—

பதவுரை

திருந்திய–இவனே பரமபுருஷனென்று தெளிவாகக் கண்டு கொள்வதற்குக் காரணமான
செம் கண்–செந்தாமரை போன்ற திருக் கண்களையுடைய-திருந்திய செம் கண்
மால்–ஸர்வேஸ்வரனாயும்-திருந்திய மால்
ஆங்கே–உலகத்தைக் காத்தருள்வதாகிய அக்காரியமொன்றிலேயே
நின்று பொருந்திய–நிலை நின்று பொருந்தினவனாயும்
உலகம்–உலகங்களை
உண்டு–பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்துக் காத்தவனாயும்
அன்று–முன்பொரு காலத்தில்
நீர் ஏற்று–(மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்று
மூ அடியால் உலகம் தாயோன்–மூவடியாலே உலகங்களை யெல்லாம் தாவியளந்தவனாயுமுள்ள எம்பெருமானுடைய
அடி தானே–திருவடிகளே
மருந்தும்–மருந்து போலே ஸம்ஸார வியாதியைத் தொலைப்பனவாயும்
பொருளும்–பணம் போலே வேண்டியவற்றைப் பெறுவிப்பனவாயும்
அமுதமும்–அமிருதம் போலே போக்யமாயுமிருக்கின்றன.

மருந்தும் பொருளும் அமுதமும் தானே–
மருந்து என்று விரோதி நிரசன மாத்ரமாகக் கொண்டு –
பொருள் என்று உபாயமாக்கி –அமுதம் என்று உபேயம் என்கிறது –

மருந்து என்று உபாயம் ஆக்கி –பொருளும் அமுதமும் தானே என்று உபேயத்தில் இரண்டு அவஸ்தையைச் சொல்லுகிறது -என்றுமாம் –

(அநிஷ்ட நிவ்ருத்தியும் -இஷ்ட பிராப்தியும் -ஸ்வயம் போக்யமான ப்ராப்யமாயும் இவனே-

ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -அங்கு இஷ்ட பிராப்தி தன்னடையே வருமே ஆகவே சொல்ல வேண்டியது இல்லை )

திருந்திய செங்கண் மால் —
இவன் ஈஸ்வரன் என்று அறியலாம் படி திருந்தி சிவந்த கண்ணை யுடையனான சர்வேஸ்வரன் —

திருந்திய –
இவ்வாத்மாக்கள் திருந்தா விட்டால் -இவற்றைத் திருத்தப் பாராதே இவற்றுக்கு ஈடாகத் தன்னைத்
திருத்திக் கொண்டு இருக்கும் சர்வேஸ்வரன் -என்னவுமாம் -(திருந்திய மால்)

(செலக் காண்கிப்பார்  காணும் அளவும் -செல்லும்  கீர்த்தி -ஆர்ஜவம்)

ஆங்கே பொருந்தியும்–
நின்று உலகம் உண்டும்  உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்-அன்று உலகம் தாயோன் அடி –
ஸ்ரீயபதி வந்து நீர் ஏற்கிறான் என்று கூச வேண்டாத படி இரப்பிலே பொருந்தி நின்று -லோகத்தை நீர் ஏற்று
லோகத்தை வயிற்றிலே வைத்துக் காத்து -வெளி நாடு காண உமிழ்ந்து நேர் ஏற்ற லோகத்தை
மூவடியாலே அளந்தவனுடைய திருவடி மருந்தும் பொருளும் அமுதமும் தானே –

—————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

சர்வ ரக்ஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகம் என்கிறார் –

ஸர்வேஸ்வரன் இவன் என்னும் இடத்தை ஸ்பஷ்டமாகத் தெரிவிப்பிக்க வல்ல திருத்தத்தை யுடைத்தாய் –
ஐஸ்வர்யத்தாலே குதறிச் சிவந்த திருக் கண்களை யுடையனாய் வ்யாமுக்தனானவன்
ஜகத் ரக்ஷணம் ஆகிற அந்தச் செயலில் ப்ரதிஷ்டித்தமான திரு உள்ளத்தை யுடையனாய்க் கொண்டு -லோகத்தை
திரு வயிற்றிலே வைத்துக் காத்து -வெளிநாடு காண புறப்பட விட்டுத்- தன்னது அல்லாததைப் பெறுவாரைப் போலே
அந்நிய அபிமானம் தீர நீர் ஏற்று வாங்கி -உதக ஜலம் கையிலே விழுந்த அப்போதே மூன்று அடியாலே
லோகத்தை அளந்தவனுடைய திருவடிகள் தானே அநிஷ்டமான சம்சார வியாதியைப் போக்கும் பேஷஜமும்-
இஷ்டமான மோக்ஷ ஸூகத்தைத் தரும் பொருளும் -ஸ்வத இஷ்டமாய் இருக்கிற போக்யமான அம்ருதமும்-

திருந்திய என்கிறது –
சர்வேஸ்வரனுக்கு விசேஷணமான போது ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் தானேயாம் படி
திருந்தி இருக்குமவன் என்றும் –
இவர்கள் திருந்தாக் குறை தீரத் தான் இவர்களுக்குமாகத் திருந்தி இருக்கும் என்றும் பொருளாகக் கடவது –

நமுசி பிரப்ருதிகளை போக்குகையாலே மருந்து-
அர்த்தியாய் வருகையால் பொருள் —
தன் திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அமுதமானான் —

————————————————————-

திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்த்துதம் ஆனவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே
ஆராழி கொண்டார்க்கு அழகு —-5–

பதவுரை

அன்று உலகம் தாயோன்–முன்பு உலகங்களைத் தாவி யளந்த பெருமானுடைய
அடி வண்ணம்–திருவடிகளின் நிறம்
தாமரை–தாமரைப்போலே சிவந்திராநின்றது
படி வண்ணம்–திருமேனியின் நிறம்
பார் கடல் நீர் வண்ணம்–பூமியைச் சூழ்ந்த கடல் நீரின் வண்ணம் போல் கறுதுதுக் குளிர்திராநின்றது.
முடி வண்ணம்–கிரீடத்தினுடைய நிறம்
ஓர் ஆழி வெய்யோன்–ஒற்றைச்சக்கர முடைய தேரிலேறின ஸூர்யனுடைய நிறம் போன்றது,
ஒளியும்–(அப்பெருமானுடைய) தேஜஸ்ஸும்
அஃது அன்றே–அந்த ஸூர்ய ப்ரகாசம் போன்றதே யன்றோ
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு–அழகு பொருந்திய திருவாழியைக் கையில் கொண்டுள்ள பெருமானுடைய அழகு இப்படிப்பட்டதாயிராநின்றது.

(1-அன்றுலகம் தாயோன் ஆராழி கொண்டார்-அன்றுலகம் தாயோன்-அடி வண்ணம் தாமரை
2-அன்றுலகம் தாயோன் ஆராழி கொண்டார் -அன்றுலகம் தாயோன் படி வண்ணம் பார்க்கடல் நீர் –
பாற் கடல் என்று வெளுத்த வண்ணம் பிச்சை எடுப்பது கிடைக்குமோ இல்லையோ -என்றும் ஆழ்வாரைப் பிரிந்த கவலையால் வெளுத்தவன் என்றுமாம்

3-அன்றுலகம் தாயோன் ஆராழி கொண்டார்–அன்றுலகம் தாயோன் ஒளியும்–முடி வண்ணம்–ஓர் ஆழி வெய்யோன்–
4-அன்றுலகம் தாயோன் ஆராழி கொண்டார்–அன்றுலகம் தாயோன் ஒளியும்- தேஜஸ்ஸும் அஃது அன்றே-)

அடி வண்ணம் தாமரை–
திருவடிகளின் நிறம் தாமரை(கை வண்ணம் தாமரை அடியும் அஃதே )

அன்றுலகம் தாயோன்-படி வண்ணம் —
லோகத்தை அடங்கலும் அளந்து கொண்டவனுடைய நிறம்

பார்க்கடல் நீர் வண்ணன்-
பார் சூழ்ந்த கடலின் நிறம் -வெளுப்புப் பேசுகிற இடமாகில் திருப் பாற் கடலினுடைய நிறம் என்னவுமாம் –

முடி வண்ணம்-ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே–
திரு அபிஷேகத்தின் உடைய நிறம் ஆதித்யன்(தீவி ஸூர்ய சஹஸ்ரஸ் ஸ -கதிர் ஆயிரம் கலந்து எறிந்தால்  போல் நீள் முடியன் )

ஒளியும் அக்தே அன்றே

ஆராழி கொண்டார்க்கு அழகு —-
கையிலே திரு வாழி பிடித்தால் வேறு ஒரு ஆபரணம் சாத்த வேண்டாது(ஆர்-ஆர்ந்த பொருந்திய )
இருக்கிறவனுடைய அழகு அடி வண்ணம் தாமரை

——————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்த்துதம் ஆகையால் அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –

மஹா பலி நீர் வார்த்துக் கொடுத்த அன்று லோகத்தை அநாயாசேன அளந்து கொண்டவனுடைய திருவடிகளின்
நிறமானது தாமரை போலே சிவந்து இரா நின்றது –

(அன்று உலகு அளந்தான் அடி போற்றி -அடி -கறு நீலம் –இத்தையே அப்பொழுது சேவிக்க முடியும்
உள் திருவடி -குஞ்சித பாதம் -கன்று குணிலா எறிந்த கழல் சிவந்து இருக்கும் அன்றோ)

திரு மேனியின் நிறமானது -பூமியைச் சூழ்ந்த கடலின் ஜலம் போலே இருண்டு குளிர்ந்து இரா நின்றது-
திரு அபிஷேகத்தின் யுடைய நிறமானது -ஏக சக்ர ரதா ரூடனாய் ப்ரதாபோத்தரனான ஆதித்யன் போலே இரா நின்றது –
அவனுடைய தேஜஸ்ஸூ அந்த ஆதித்யனுடைய தேஜஸ்ஸூ போலே இரா நின்றது -அழகு பொருந்தின
திருவாழியைத் திருக் கையிலே தரித்துக் கொண்டு இருக்கிறவனுக்கு அழகு பொருந்தின திரு வாழியைத்
திருக் கையிலே தரித்துக் கொண்டு இருக்கிறவனுக்கு அழகு –பார்த்த அளவில் இப்படி இரா நின்றது என்று
அவன் அழகிலே ஆழங்கால் பாட்டு அனுபவிக்கிறார் –

———————————————————-

கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார்(திரிவிக்ரமன் அனுசந்தானம் பின் தொடர்கிறது )

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல்  —–6-

பதவுரை

ஆழியாற்கு–திருவாழியை யுடைய ஸர்வேஸ்வரனுக்கு
ஆழி நீர் வண்ணம்–கடல் நீரின் நிறம் போன்ற நிறமானது
அழகு அன்றே–மிகவுமழகிய நிறமன்றோ,
அண்டம் கடத்தல்–மேலுலகங்களை அளந்து கொண்டது
அழகு அன்றே–அழகன்றோ
அங்கை–அழகிய  உள்ளங்கையிலே
நீர் ஏற்றாற்கு–மாவலி தானம் பண்ணின நீரைப் பெற்றுக் கொண்ட பெருமானுக்கு
அலர் மேலான்–பிரமன்
கால் கழுவ–திருவடிகளை விளக்க, (அப்போது)
கங்கை நீர்–கங்கா தீர்த்தத்தை
கான்ற–வெளிப் படுத்திய
கழல்–அத் திருவடி
அழகு அன்றே–அழகன்றோ

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்–
சர்வேஸ்வரனுக்கு கடலின் நீரினுடைய நிறம் வெறும் நிறமாகுமதேயோ-அழகு அன்றோ –

அழகு அன்றோ –
இந் நிறம் யுடையவர்க்கு வேறு ஒரு ஒப்பனை வேணுமோ –

(கரியான் ஒரு காளை -கண்ணன் என்னும் கறும் தெய்வம்)

அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே-
செயலோ அழகியது அன்றோவாய் இருக்கிறது –(செயலும் )அழகு என்றவாறு

அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ கங்கை நீர் கான்ற கழல்  —
திருவடி தான் கங்கைக்கு காரணம் என்று பாவனத்வம் மாத்திரம் ஆகுமதேயோ-
அதுவும் அவனுக்கு அழகு அன்றோ -(சாணிச்சாறு மாத்திரம் அல்லவே )

——————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார்(திரிவிக்ரமன் அனுசந்தானம் பின் தொடர்கிறது )

திருக்கையிலே திருவாழியை யுடையவனுக்கு (ஆழி எழ சங்கும் வாழி எழ இத்யாதி )கடலின் நீரினுடைய நிறம் வெறும் மாத்ரமேயாய் -அழகுக்கு உடல் அன்றோ

அந்தரிஷிதகளான லோகங்களை அளந்து கொண்டது வருந்திச் செய்த செயல் மாத்ரமோ(ச பூமிம் அத்யஷ்டித தச அங்குலம் -அளந்த வேகத்தைப் போல் பத்து மடங்கு சென்றதே ரக்ஷணத்தின் பாரிப்பு -இத்தை அனுசந்திக்க அழகு தோன்றுமே )

ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தன் -என்கிறபடியே வல்லார் ஆடினால் போலே அழகுக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றோ

ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோ பன்சொல்
வாய்த்த ஆயிரத் துள்இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லைஓர் ஊனமே.-
திருவாய்மொழி–2-2-11-

கொடுத்து வளர்ந்த அழகிய கையிலே நீர் ஏற்றவனுக்கு– திரு நாபீ கமலத்தை இருப்பிடமாக யுடைய
ப்ரஹ்மா திருவடிகளை விளக்க -கங்கா ஜலத்தைப் புறப்பட விட்ட திருவடிகள் -கங்கைக்கு உத்பாதகம் என்று
பாவானத்வ மாத்ரமேயோ –

வெண் துகில் கொடி என விரிந்து -என்கிறபடியே கங்கா ஜலத்தின்
வெளுப்பும் திருவடிகளின் சிவப்புமாய் அழகுக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றோ –

இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்*  இரு நிதிக்கு இறைவனும்*
அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன்*  கொழுஞ் சுடர் சுழன்ற* 
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில்*  வெண் துகில் கொடி என விரிந்து* 
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  -பெரிய திருமொழி   -1-4-3-
ஸூ ந்தரம் வனம் அக்ஷரம் மந்த்ரங்கள் வனம் பிராட்டி திருவடி அனைத்துமே ஸூ ந்தரம் போல்

—————————————————————

அழகு இப்படி குறைவற்ற பின்பு நாமும் இப்படி அனுபவிப்போம் என்று திரு உள்ளத்தை அழைக்கிறார் –

இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து
அவன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து வாழும் படி வாராய் என்கிறார் –

(திரிவிக்ரமன் அனுபவம் பின்னாட்ட அவனுக்கு -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்ய –

ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ ப்ரகார கைங்கர்யங்களை-அவன் ஆனந்தத்துக்காகவே பண்ண வா என்று நெஞ்சை அழைக்கிறார்)

கழல் தொழுதும் வா நெஞ்சே கார்க் கடல் நீர் வேலை
பொழில் அளந்த புள்ளூர்திக் செல்வன் எழில் அளந்தங்கு
எண்ணற்கரியானை எப்பொருட்க்கும் சேயானை
நண்ணற்கரியானை நாம் –7-

பதவுரை

நெஞ்சே-ஓ மனமே!
கார் கடல் நீர்–கறுத்த கடலின் நீரோட கூடின
வேலை–கரையை யுடைத்தான
பொழில்–பூமியை
அளந்த–அளந்து கொண்டவனும்
புள் ஊர்தி–கருடனை வாஹநமாக வுடையவனும்
செல்வன்–ஐஸ்வரிய முடையவனும்
எழில் அளந்து எண்ணற்கு அரியானை–அழகை எல்லை கண்டு நினைப்பதற்கும் முடியாதவனும்
எப்பொருட்கும் சேயானை–எல்லா வஸ்துக்களுக்கும் நெடுந்தூரத்திலிருப்பவனும்
நண்ணற்கு அரியானை–(யார்க்கும் தம் முயற்சியாலே) கிட்ட முடியாதவனாயிருப்பவனுமான எம்பெருமானுடைய
கழல்–திருவடிகளை
நாம் தொழுதும்–நாம் வணங்குவோம்,
வா–நீயும் உடன் படுவாயாக.

கார்க்கடல் நீர் வேலை -பொழில் அளந்த புள்ளூர்திக் செல்வன்–
கடல் சூழ்ந்த பூமியை அளந்து -புள்ளூர்ந்து –அத்தாலே ஸ்ரீ மானாய்

எழில் அளந்தங்கு -எண்ணற்கரியானை —
எழிலை அளந்து மநோ ரதிக்க ஒண்ணாதவனை

(இயத்தா ராஹித்யன் -இன்னவன் என்று சொல்ல முடியாதே -யதோ வாஸோ நிவர்த்தந்தே )

எப்பொருட்க்கும் சேயானை -எல்லாப் பொருள்களுக்கும் தூரஸ்தனாய் உள்ளவனை –

நண்ணற்கரியானை –ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு கிட்ட அரியனானவனை

நாம் கழல் தொழுதும் வா நெஞ்சே-அவர் காட்டக் காண இருக்கிற நாம் திருவடிகளைத் தொழுவோம் போரு –

(யாரும் ஒரு நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாரும் ஒரு நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் -நாம் அவன் காட்டக் கண்ட பின்பு கைங்கர்யம் செய்வதே அடுக்கும் அன்றோ)

———————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து
அவன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து வாழும் படி வாராய் என்கிறார் –

(திரிவிக்ரமன் அனுபவம் பின்னாட்ட அவனுக்கு -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்ய –

ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ ப்ரகார கைங்கர்யங்களை-அவன் ஆனந்தத்துக்காகவே பண்ண வா என்று நெஞ்சை அழைக்கிறார்0

கறுத்த கடலின் நீரோடு கூடின கரையை யுடைத்தான பூமியை அளந்து கொண்ட கருட வாஹனான ஸ்ரீ யபதியாய்
தன்னுடைய அழகை இவ்வளவு என்று பரிச்சேதித்துச் சொல்ல ஒண்ணாத அளவன்றிக்கே மனசாலே நினைக்கைக்கும் கூட
அரியனாய் இருக்குமவனாய் எல்லா பதார்த்தங்களும் அவ்வருகு பட்டு இருக்கிற வைலக்ஷண்யத்தை யுடையனாய்
ஆர்க்கும் ஸ்வ யத்னத்தால் கிட்டுக்கைக்கு அறியனானவனை அவன் தானே காட்டக் கண்ட நாம்
அடிமை சுவடு அறியும் நெஞ்சே -திருவடிகளைக் கிட்டி அடிமை செய்வோம் போரு –

—————————————————————————————————————-

எல்லா இந்திரியங்களும் அவனை அனுசந்திக்க வேணும் என்கிறார் –

(நெஞ்சை கூப்பிட்டார் கீழ் -இதில் எல்லா இந்திரியங்களை அழைக்கிறார்-மானஸ வாசிக காயிக கைங்கர்யங்களைப் பண்ண வேணுமே )

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண்    ———8–

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!-மற்ற இந்திரியங்களை நியமிக்க வல்ல நன்மை -முந்துற்ற நெஞ்சு என்பதால் நன்மை
நாராயணா என்று பல நாமம் சொல்லி–நாராயணன் முதலாகவுள்ள பல திரு நாமங்களைச் சொல்லி-

நாராயணன் ப்ராதான்யம் -ஒன்றைச் சொன்னாலே பலவும் சொன்னதாகுமே -ஒன்றைச் சொல்லி ஆறி இருக்க இயலாதே

அம் கையால்–அழகிய கையினாலே
நாம் தொழுதும்–நாம் தொழுவோம்
மருவி வா–இதற்கு நீயும் உடன்பட்டு வா
மண் உலகம்–பூமி முதலிய லோகங்களை
உண்டு உமிழ்ந்த–ஒரு கால் உள்ளே அடக்கி வைத்துப் பிறகு வெளிப்படுத்தினவனும்
வண்டு அறையும் தண் துழாய்–வண்டுகள் படித்து ஒலி செய்யப் பெற்ற குளிர்ந்த திருத் துழாய் மாலையை யுடையவனுமான

ஆலத்தி வைக்குமா போல்-ஸாம கானம் பாடும் நித்ய ஸூரிகள் இவனை விடாமல் இங்கேயே இருந்து அனுபவிப்பார்கள் அன்றோ
கண்ணனையே–கண்ணபிரானையே
நம் கண்–நமது கண்கள்
காண்க–கண்டு களித்திடுக

நாமம் பல சொல்லி–கார்யா புத்தயா சொன்னால் ஆகில் இறே ஒன்றைச் சொல்லுவது –எல்லா திரு நாமங்களையும் சொல்லி –

(திரு நாமம் சொல்வதே இவருக்குக் கார்யம் -இத்தைச் சொல்லி வேறே பலனை எதிர்பார்க்கிறவர் இல்லையே
ஸ்வரூப ரூபம் குணம் சேஷ்டிதங்களை விளக்கும் திரு நாமங்கள் அன்றோ)

நாராயணா வென்று–அசாதாரண நாமத்தைச் சொல்லி -(ரூடியானாலும் யவ்கிகமானாலும் இவனையே குறிக்கும் அன்றோ )

நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே-எல்லா இந்திரியங்களுக்கும் அடி நீ இறே —

வா மருவி-
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண்    ——–பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி திரு வயிற்றிலே வைத்து-
வெளி நாடு காண உமிழ்ந்து -போக்ய பூதனாய் -ஸூ லபனான கிருஷ்ணனையே விரும்பிக் காண வேணும் கண் –

(ஸர்வ ரக்ஷகன் -ஸர்வ போக்ய பூதன்-வடிவு அழகன் -அவயவ சோபை- ஒப்பனை அழகன் – -ஸூலபன் -பாலைக் குடிக்கக் காலைப் பிடிப்பார் உண்டோ )

—————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

எல்லா இந்திரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் –

(நெஞ்சை கூப்பிட்டார் கீழ் -இதில் எல்லா இந்திரியங்களை அழைக்கிறார்-மானஸ வாசிக காயிக கைங்கர்யங்களைப் பண்ண வேணுமே )

என்னிலும் இவ்விஷயத்தில் முற்கோலி விழுகிற நல்ல நெஞ்சே -வாக் இந்த்ரியத்தில் நா யுறாவுதல் தீரும் படி
ஒரோ குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்கள் பலவற்றையும் சொல்லி –இவற்றுக்கு எல்லாம்
பிரதானமான ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு எல்லாம் பூர்ண வாசகமான அசாதாரணமான திரு நாமத்தைச் சொல்லி-
அங்குத்தைக்கு எடுத்துக் கை நீட்டக் கடவ அழகிய கையாலே நாம் அஞ்சலி பந்தம் பண்ணுகை முதலான
வ்ருத்தி விசேஷங்களை பண்ணுவோம் -நீ இறாயாதே பொருந்தி வாராய் —

பூமி முதலான லோகங்களை பிரளயம் வருவதற்கு முன்னே திரு வயிற்றிலே வைத்து நோக்கி -அங்கிருந்து நெருக்குண்ணாத படி புறப்பட விட்டு ரஷித்தவனாய் – ரஷியா விடிலும் விட ஒண்ணாத படியாய் -மதுபான மத்தமாய்க் கொண்டு வண்டுகள் சப்திக்கிற குளிர்ந்த திருத் துழாயாலே
அலங்க்ருதன் ஆகையால் நிரதிசய போக்ய பூதனான கிருஷ்ணனையே காண வேணும் என்று மேல் விழுகிற
நம்முடைய கண்களானவை கண்டு களித்திடுக –

————————————————————————————————————————–

காண்க நம் கண் -என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார்

கண்ணும் கமலம் கமலமே கைத் தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில்
கருமா முகில் வண்ணன் கார்க் கடல் நீர் வண்ணன்
திருமா மணி வண்ணன் தேசு ——-9-

பதவுரை

கரு மா முகில் வண்ணன்–கரிய பெரிய மேகம் போன்ற வடிவை யுடையவனும்
கார் கடல் நீர் வண்ணன்–கரிய கடல் நீரின் நிறம் போன்ற நிறமுடையவனும்
திரு மா மணி வண்ணன்–அழகிய நீல மணி போன்றவனுமான எம்பெருமானுடைய
தேசு–அழகை
எண்ணில்–ஆராய்ந்து நோக்குமளவில்,
கண்ணும்–திருக் கண்ணும்
கமலம்–தாமரைப் பூப் போன்றவை
கைத் தலமும்–திருக் கைத் தலங்களும்
கமலமே–அத் தாமரைப் பூப் போன்றவையே
மண் அளந்த பாதமும்–உலகளந்த திருவடிகளும்
அவையே–அத் தாமரைப் பூப் போன்றவையே.

(கறுமை பெருமை முகில் -கண்ணால் அளக்க முடியாதே கார் கடல் வண்ணன் -கண்ணுக்கு எட்டாதே -திரு மா மணி வண்ணன் -முந்தானையில் முடிந்து ஆளலாம் படி அன்றோ இவன்)

கருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்-திருமா மணி வண்ணன் தேசு –எண்ணில்-
ஸ்ரமஹரமாய -கண்ணுக்கு அடங்காத திரண்டு குளிர்ந்து இருந்தவனுடைய
அழகை எண்ணில்-கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே -காடும் மோடுமாய் உள்ள பூமியை அளந்ததும் பூவையைக் கொண்டே

கறுப்பும் சிகப்பும் கலந்த கலவைக் கட்டி அனுபவம்-

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும்  என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள்  என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும்கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -பெரிய திருமொழி -–8-1-5-

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட
எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண் இணையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி!
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –திரு நெடும் தாண்டகம்–21-

அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாமம் வாள்முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள
செந்தாமரை தடம் கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிகள் செம்பொன் திரு வுடம்பே –திருவாய் மொழி-2-5-1–

கரு மா முகில் தாமரைக் காடு பூத்தது போல் ராமன்-கம்பர்

கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் 73-
——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

காண்க நம் கண் -என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார்

கறுத்துப் பெருத்த மேகம் போன்ற ஸ்ரமஹரமான வடிவை யுடையவனாய் -கறுத்த கடலின் நீர் போலே கண்ணுக்கு
அடங்காமல் அபரிச்சேத்யமான திரு நிறத்தை யுடையவனாய் -அழகு மிக்குப் பெரு நிலையனான நீல ரத்னம் போலே
கண்ணாலே முகந்து அனுபவிக்க லாம் படி இருண்டு குளிர்ந்த வடிவை யுடையவனுடைய அலகால் வந்த தேஜஸ்ஸூ
குமிழ் நீர் உண்ணாதே வருந்தி அனுசந்திக்கப் புக்கில் -வவ்வலிடும்படி குளிர நோக்குகிற
திருக் கண்களும் -தாமரை போலே குளிர்ந்து மலர்ந்த சிவந்து இரா நின்றது -ஸ்பர்சத்துக்குத் தோற்று விழும்
நிலமாய் காடும் மோடுமான பூமியை அளந்து கொண்ட திருவடிகளும் அந்தக் கமலம் போலே இரா நின்றன –

————————————————————————————————————-

அங்குள்ள அழகைப் பேசிப் போம் அத்தனையோ-நமக்கும் சில பேறுகள் வேண்டாவோ -என்னில் -நாம்
அவனுடைய திரு நாமங்களைச் சொல்ல உபக்ரமிக்க -எல்லா சம்பத்துக்களும் தங்களுடைய ஸ்வரூபம்
பெறுகைக்காகத் தானே வந்து அடையும் என்கிறது –

இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது அதுக்கு ஈடான நன்மைகள் வேண்டாவோ -என்ன
மேல் விழுந்து அனுபவிக்கவே எல்லா நன்மைகளும் தன்னடையே உண்டாம் -என்கிறார் –

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப் பிறப்பும்   மற்றவையும் -பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–

பதவுரை

வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான்–வலது பக்கத்தில் சுழித்திருக்கிற சிறந்த சங்கை ஏந்தியுள்ள பெருமானுடைய
பேர் ஓத–திரு நாமங்களை அப்யஸிக்க வேணுமென்று
பேசில்–சொன்ன மாத்திரத்தில்
தேசும்–தேஜஸ்ஸும்
திறலும்–பராக்ரமமும்
திருவும்–செல்வமும்
உருவமும்–அழகிய ரூபமும்
மாசு இல் குடி பிறப்பும்–குற்றமற்ற நற்குலமும்
மற்றவையும்–மற்றுமுள்ள நன்மைகளும்
நலம் புரிந்து நன்குசென்று அடையும்–தாமே ஆசைப்பட்டு நன்றாக வந்து சேரும்.

தேசும் திறலும் திருவும் உருவமும்–
மதிப்பும் –பராபிபாவன சாமர்த்தியமும் -ஐஸ்வர்யமும் -வடிவு அழகும் –

மாசில் குடிப் பிறப்பும்   மற்றவையும் –
குற்றம் அற்ற பிறப்பும் -அநுக்தமான அவையும் -இவை எல்லாமான நன்கு

(எற்றைக்கும் ஏழு ஏழு பிறவியிலும் உனக்கே நாம் ஆட் செய்யும் படி ஆகுமே)

பேசில்-
திரு நாமம் சொன்னதுக்குப் பலம் பேசப் போகாது -பிரயோஜனத்தில் பேசில் –

வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத—-
சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தைச் சொல்ல –

நலம் புரிந்து சென்றடையும் நன்கு —
இஸ் ஸம்பத்து எல்லாம் தன் பேறாகச் சென்றடையும் –

ரதி மதி சரஸ்வதி திருத்தி ஸம்ருத்தி ஸ்திதி ஸ்ரீ -அஹர் அஹர் வந்து சேருமே-

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந் தெடுத்தளித்த
அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.–ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-32-

————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது அதுக்கு ஈடான நன்மைகள் வேண்டாவோ -என்ன
மேல் விழுந்து அனுபவிக்கவே எல்லா நன்மைகளும் தன்னடையே உண்டாம் -என்கிறார் –

வலவருகே புரிந்து இருப்பதாய் -ஸ்யாமளமான திருமேனிக்கு பரபாகமான (பகைத்தொடை )வெளுத்த நிறத்தை யுடைத்தான
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைத் திருக் கையிலே தரித்து கொண்டு இருக்கிற சர்வேஸ்வரனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு
வாசகமான திரு நாமங்களை சாதரமாகச் சொல்லி (ஓத என்பதால் ஆதரமாகச் சொல்ல என்றபடி )–தத் பலன்களை சிறிது சொல்லப் பார்க்கில் –
இருந்ததே குடியாகக் கொண்டாடும்படியான மதிப்பால் வந்த தேஜஸ்ஸூம் -பராபிபவன சாமர்த்தியமும் –
நிரவதிகமான சம்பத்தும் -அழகிய ரூப ஸ்ரீயும் -குற்றம் அற்ற பகவத் ப்ரத்யாசத்தியால் வரும் ஆபி ஜாத்யமும்–
மற்றும் சொல்லிச் சொல்லாத நன்மைகளும்- நாம் இவ்விஷயத்தைக் கிட்டி ஸ்வரூப லாபம் பெற வேணும் என்று –
ஸ்நேஹ உன்முகமாய்க் கொண்டு தன் பேறாக வந்து அடையா நிற்கும் —

வான் சங்கம் என்றது வெளுத்த சங்கம் என்றபடி –

————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குருகை காவல் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading