(திரு விண்ணகர் -திவ்யதேசம் பெரியவாச்சான் பிள்ளை –ஸ்ரீ வைகுண்டம் -அப்புள்ளார் -இருவரும் மாற்றி
திரு உள்ளம் வந்த பின்பு -எங்கு இருந்து வந்தார் ஆலோசிக்க
அர்ச்சையில் இருந்து வந்து -அதற்கு
பாற்கடலில் இருந்து வந்து -அதற்கு
வைகுந்தத்தில் இருந்து
என்று க்ரமமாக
அடுத்த இரண்டுமே திவ்ய தேச பாசுரங்கள்
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம்:
ஆவரண் ஜலம் போலே பரத்வம்:
பாற்கடல் போலே வியூகம்;
பெருக்காறு போலே விபவம்
அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்:
இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என்கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில்ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! 1நுனபாதம் சேர்ந்தேனே.-2-3-5- )
பிரதிபந்தகங்களைப் போக்கும் அளவேயோ -பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் –
சம்சாரத்திலே உகந்து அருளின திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளுகிறது
ஆஸ்ரித அர்த்தமாக வன்றோ -என்கிறார் –
பிரதிபந்தகங்களைப் போக்குகின்ற அளவு அன்றிக்கே -பரமபதத்தை கலவிருக்கையாக யுடையவன் இங்கே
ஆஸ்ரித அர்த்தமாக வந்து திருப்பதிகளில் சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-
பதவுரை
வைகுந்தம்–பரமபதத்தை
கொண்டு–இருப்பிடமாகக் கொண்டு
அங்கு–அவ்விடத்திலே
உறைவாற்கு–வாஸம் பண்ணு மெம்பெருமானுக்கு
பால் கடல்–திருப்பாற்கடலும்
வேங்கடம்–திருமலையும்
வண்டு வளம் கிளரும் நீள் சோலை–வண்டுகளின் திரள் மிக்கிருக்கிற பரந்த சோலைகளை யுடைத்தாய்
வண்–அழகியதாய்
பூ–போக்யமான
கடிகை–திருக் கடிகைக் குன்றும்
இள குமரன் தன் விண்ணகர்—யுவா குமாரா -நித்ய யுவாவான அவனுடைய தன்னதான திருவிண்ணகரும்
(ஆகிய இத்திருப்பதிகளெல்லாம்)
பண்டு எல்லாம்–என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பெல்லாம்
கோயில் போல்–கோயில்களாக இருந்தன போலும்.
(இப்போதோவென்னில், என்னெஞ்ச மொன்றே அவனுக்குக் கோயிலாயிருக்கிறது என்பது உள்ளுறை).
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்-கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல்–
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே -என்று பரம பதத்தோ பாதியாகத் திருமலையைச் சொல்கிறது
வைகுந்தம் கோயிலாகக் கொண்டு அங்கு உறைவார்க்கு -வேங்கடம் பாற் கடல் –
வண்டு-வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —-
விண்ணகரான இவை இளங்குமரனான தனக்கு இப்போது கோயில் போலே
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-
—————————————————————————
பிரதிபந்தகங்களைப் போக்குகின்ற அளவு அன்றிக்கே -பரமபதத்தை கலவிருக்கையாக யுடையவன் இங்கே
ஆஸ்ரித அர்த்தமாக வந்து திருப்பதிகளில் சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –
ஸ்ரீ வைகுண்டத்தைத் தனக்கு அபிமத வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு –
அங்கே ஆதரித்து நித்ய வாசம் பண்ணுகிற வைபவத்தை உடையவர்க்கு –
திருப் பாற் கடலும் -திருமலையும் -வண்டுகளினுடைய திரள் மிக்கு வாரா நின்றுள்ள
பரப்பை யுடைத்தாய் அழகியதாய் போக்யமான திருக் கடிகையும்-
நித்ய யுவ ஸ்வ பாவனானவன் தன்னது என்று
ஆதரித்து வர்த்திக்கிற -இவ்வவ திவ்ய தேசங்கள் என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பு
எல்லாம் உகப்புடன் எழுந்து அருளி இருக்கிற கோயில்கள் போலே இருந்தன –
என்னை அங்கீ கரித்த பின்பு அவ்வவ தேசங்களைக் காட்டிலும்
என்னுடைய ஹிருதயமே அவனுக்கு வாசஸ் ஸ்தானமாய் விட்டது என்று கருத்து-
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -5- 4-9 –
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–64-
நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–65-
இடமாவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட் செய்யேன் வலம்–66-
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-
———————————————————————————————————————–
(இதில் வாமனன் சீலம் தாழ்வு-ஸுசீல்யம் ஸுலப்யம் -இங்கு எல்லாம் கண்டேன் -ஏழு திவ்ய தேசங்களில் காட்டி அருளக் கண்டேன்
கீழ் வைகுந்தம் பாற் கடல் பரத்வம்
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – ––வாமனன் சீலன்-சீரை -பாட பேதம்
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63–சங்கர நாராயணன் -திருமேனியில் இடம் கொடுத்த ஸுசீல்யம் -திரு வேங்கடத்தில் காணலாம் என்கிறார்
இங்கு எல்லாம் வாமனன் சீல குணம் போல் அங்கும் -உருவத்தை அல்ல)
கேவலம் சம்சாரத்தில் நின்ற மாத்ரமேயோ –
பரமபதத்தில் இருப்பு மனிச்சுக்காய்-தாழ்ச்சியோடே கூட
இருப்பது உகந்து அருளின தேசங்களில் அன்றோ என்கிறார் –
ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று
உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் -என்கிறார் –
விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-
பதவுரை
விண்ணகரம்–திருவிண்ணகரமும்
வெஃகா–திருவெஃகாவும்
விரி திரை நீர் வேங்கடம்–விரிந்து அலை யெறிகிற நீர் பொருந்திய திருமலையும்
மண் நகரம்–பூமிலுண்டான வைகுந்தமாநகர் போன்ற
மா மாடம் வேளுக்கை–பெரிய மாடங்களை யுடைத்தான திருவேளுக்கையும்
மண் அகத்த தென் குடந்தை–பூமியிலுண்டான அழகிய திருக்குடந்தையும்
தேன் ஆர் திரு அரங்கம்–தேன் (வெள்ளமிடுகிற சோலைகள்) பொருந்திய திருவரங்க மாநகரும்
தென் கோட்டி–தென் திருக்கோட்டியூரும்
(ஆகிய இத் திருப்பதிகள்)
தன் குடங்கை–தனது உள்ளங்கையாலே
நீர் எற்றான்–(மாவலி பக்கல்) உதக தானம் பெற்ற பெருமான்
தாழ்வு–தங்குமிடங்களாம்.
விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்–திரு விண்ணகரம் -வெக்கா –
விரிதிரை நீர் வேங்கடம்–திருமலையை ஒரு விசேஷண ரஹிதமாகச் சொல்ல மாட்டார் இறே
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி-போக்யதை குறைவற்ற கோயில்
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு —-
மஹா பலி பக்கலிலே தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தித்தவம் தோற்றும்படி
அர்த்தியாய் நின்றால் போலே –
உகந்து அருளின தேசங்களில் தாழ்வு தோற்றும் படி நின்றான் —
(இங்கு எல்லாம் உடமைகளான நம்மைப் பெறவே வாமனுடைய சீல குணம் காட்டி தாழ்ந்து நின்று சேவை சாதிக்கிறான்)
—————————————————————————–
ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று
உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் -என்கிறார் –
திரு விண்ணகரமும் திரு வெக்காவும் விஸ்தீர்ணமாய் அலை எறிகிற ஜல ஸம்ருத்தியை யுடைத்தான திருமலையும்
பூமியிலே யுண்டாய் வைகுண்ட மா நகர் போலே அவனுக்கு போக ஸ்தானமான திவ்ய நகராய்
பெரிய மாடங்களை யுடைத்தான திரு வேளுக்கையும் -பூமியிலே யுண்டான அழகிய திருக் குடந்தையும்
தேன் வெள்ளம் இடுகிற திருச் சோலையை யுடைத்தான திருவரங்கப் பெரு நகரும்
தெற்குத் திக்கில் யுண்டான திருக் கோட்டியூரும் ஆகிற இவ்விவ திருப்பதிகள் –
தன்னுடைய சிறாங்கித்த திருக் கையிலே(கோட்டங்கை வாமனனாய் )
நீர் ஏற்றுத் தன் உடமை பெறுகைக்கு அர்த்தியானவன்-இந்த ஆத்மாக்களை பெறுகைக்கு அர்த்தியாய்க் கொண்டு
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே எப்போதும் உதவும்படி கால் தாழ்ந்து வர்த்திக்கிற தேசங்களாய் இருக்கும் –
(ஆவரண ஜலம் போல் விண்ணாடு –பூ கத ஜலம் போல் அந்தர்யாமி –
திரு பாற் கடலுள் பையத் துயின்ற பரமன்–வியூகம் –பெருக்காறு போலே விபவங்கள்–
ஆற்றில் தேங்கிய மடுக்கள் போல் அர்ச்சை-பின்னானார் வணங்கும் ஜோதி )
————————————————————————————————————
(வில்வ மலரால் அர்ச்சனை -நாகாபரணம் சாத்தி -சங்கு சக்கரம் தொண்டைமானுக்கு அருளி
சைவர் இவன் திருமால் அல்லன்-வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தான் –
பிரமாணம் காட்டி -அவனே தன்னைக் காட்டி பரத்வ ஸ்தாபனம் முன்பு –
வேதம் புராணங்கள் இவனே திருமால் -பிரமாணம் விஸ்வசிக்காதவர்களுக்கு –
யோக சக்தியால் ப்ரத்யக்ஷமாகக் காட்டி அருளினார் பாஷ்யகாரர்
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே-இன்றும் ஞான முத்திரையுடன் சேவை திருமலையில்
கீழ் குடங்கை நீர் ஏற்றான் -சீலவத்தை -ஸுசீல்யம் இங்கும் காட்டி அருளுகிறார்-
ஸம்ஸாரி மக்நராக போகாமல் இருக்கவே ஸாஸ்த்ர பாணியாக தானே அவதரித்துத் தன்னைக் காட்டிக் கொடுக்கிறான் )
(உருவத்தை அல்ல என்றே கொள்ள வேண்டும்
சக்கரமும் -என்பதால் வலது பக்கம் -இருப்பது பிரபலம்
அர்த்த நாரீஸ்வரர் தான் வலப்புறம் பார்வதி இடப்புறம்
வலப் புறம் இருப்பதால் பிரபலம் அங்கும்
அதே போல் இங்கும் சிவபிரான் இடப்பக்கம்
நரஸிம்ஹம் -நரமா ஸிம்ஹமா பெரியது போட்டி அல்லவே
அதே போல் இங்கும் கொள்ள வேண்டும்
த்வந்த ஸமாஸம் -உத்தர பூர்வ ஸப்தம் -இரண்டுக்கும் சமானம்
பீதாம்பர தாரி -தரிக்கும் அவனுக்கு தானே பிரதானம்
அதே போல் சங்கர நாராயணன் -இறைவருக்கும் கொள்ளாமல் இந்த உருவம் கொண்ட அவனுக்கே பிரதானம்
ஏறுஆளும் இறையோனும், திசைமுகனும், திருமகளும்,
கூறுஆளும் தனிஉடம்பன், குலம்குலமா அசுரர்களை
நீறுஆகும் படியாக நிருமித்து, படைதொட்ட
மாறாளன் கவராத மணிமாமை 1குறைஇலமே.–கண்ட காபாலி கந்தர் பெற்றுப் போகிற உடம்பு அன்றோ எனக்கு அரிது ஆகிறது?’ என்கிறாள்
கூறாளும் – -ஒரு கூறு -ஏக தேசம் கொடுத்து -பொதுவான உருவம் -ஜகத்தே அவனுக்கு சரீரம்
இங்கு சங்கர நாராயணன் உருவம்-இப்படிச் சீலமுடையவனாய் இருக்கின்றவனை அன்றோ நான் இழந்திருக்கிறது?’ என்கிறாள்.
மந்திபாய் –வானவர் சந்தி செய்ய -ஸுசீல்யம் திருவேங்கடத்தில்
மண்ணோர் விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழு உலகுக்கு உயிர் பாசம் வைத்த
நிகரில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம்-ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் சூரணை -160-
வரத்தை மீறாமல் இருக்க நரஸிம்ஹ இரட்டை
ஸாதன வேஷ ஸித்த வேஷங்கள் இங்கு இரட்டை-ஒவ்வொன்றுக்கும் மூன்று அடையாளங்கள் இதில் -1-3-5 சிவனுக்கும் 2-4-6 நாராயணனுக்கு
நர நாராயணன் -தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாக இரட்டை
ஷத்ரிய ராஜர் ஆகாச ராஜன் மாமனார் கொடுத்த ஆபரணம்
சூடாமணி கொடுத்த சீதை -ஜனகர் தான் தசரதன் நினைவுக்கு வரக்கொடுத்தாள்
நமாமி வில்வ நிலையாம் -மஹா லஷ்மி திருமாலுக்கும் உகந்த
தொண்டைமான் சக்ரவர்த்தி -ஆழ்வார் தீர்த்தம் பின் வழியாக தனியாக செல்லும் வழி உண்டே
அம்பரீஷன் -துர்வாசர் -சக்கரம் கொடுத்தது போல்
குமரா தீர்த்தம் இங்கு உண்டு -புராணம் இங்கு இருந்து தபஸ்ஸு பண்ணினான்
வேங்கடாசல இதிஹாச மாலை -பூம் கொத்து போல் 10 -பாகங்கள் கொண்டது -)
ஸித்தமான வேஷத்தையும்-சாதகமான வேஷத்தையும் -ஓக்க தரிப்பதே –
இது ஒரு சீலவத்தையே -என்கிறார் –
இத் தேசங்களில் வந்து சந்நிஹிதன் ஆனவன் சீலாதிகனாய் இருக்குமவன் கிடீர் -என்கிறார் –
தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன் றாய் இசைந்து —-63-
பதவுரை
தாழ் சடையும்–தாழக் கட்டின ஜடையும்
நீள் முடியும்–நீண்ட திருவபிஷேகமும்
ஒண் மழுவும்–அழகிய மழுவென்னுமாயுதமும்
சக்கரமும்–திருவாழியாழ்வானும்
சூழ் அரவும்–சுற்றிலும் அணிந்துள்ள நாகாபரணமும்
பொன் நாணும்–பொன் னரை நாணுமாய்க் கொண்டு
இரண்டு உருவும்–ஒன்றுக்கொன்று சேராச் சேர்த்தியாயிருக்கிற இரண்டு வடிவும்
சூழும் திரண்டு அருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு–நாற்புறமும் திரள் திரளாக அருவிகள்
பெருகப் பெற்ற திருமலை மேலுள்ள அப்பனுக்கு
ஒன்று ஆய் இசைந்து தோன்றும்–ஒரு வடிவமாய் அமைந்து விளங்கா நின்றது
ஆல்–ஆச்சரியம்!
தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்-சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் -சூழும்-திரண்டருவி பாயும்
திருமலை மேல் எந்தைக்கு–
சூழத் திரண்டு அருவி பாயா நின்ற திருமலை மேலே-நிற்கிற என்னுடைய ஸ்வாமிக்கு –
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —
ஓன்று சாதகமாய் ஓன்று சித்தமானால் சேராச் சேர்த்தியாய் இருக்குமோ என்னில்
இரண்டு உருவும் இசைந்து ஒன்றாய் இருக்கும் பொருந்தி இருக்கும் –
ஆல் -இது என்ன பொருத்தம் என்றவாறு(ஹந்த -என்ன ஆச்சர்யம் )
(அருவி சோர் வேம்கடம் நீர் மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருகின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ ? 8-2-3-
ஒழிவுஇல் காலம்எல்லாம் உடனாய் மன்னி
வழுஇலா அடிமை செய்ய வேண்டும்நாம்
தெழிகுரல் அருவித் திருவேங் கடத்து
எழில்கொள் சோதி-எந்தைதந்தை தந்தைக்கே.-நீங்கள் இங்கே வந்து ஆஸ்ரயியுங்கோள் என்று கூப்பிடுமே
அலரெடுத்த வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை ——-97-
நெஞ்சால் நினைக்கவும் முடியாதே -ஸாம்யம் சொல்ல முடியாதே
அரியும் சிவனும் ஓன்று என்பது -ஸ்வரூபத்தால் அல்ல -சரீர பூதர் தானே -பிரகாரி பிரகார பாவம் சொன்னவாறு
பரன் திறம் அன்றி மற்ற தெய்வம் அல்லவே
நாராயணனே பரம் ஜோதி -நாராயணன் நான்முகனைப் படைத்தான்
வேதம் பிரமாணம் கர்மம் சரணாகதி -ஆச்சார்யர் சிஷ்யர் உபதேசம் -ஸம்ஸாரம் கழிந்து முக்தி –
ஸநாதன தர்ம சித்தம் சைவருக்கும் உண்டே )
(ஒரு பால் உலகளந்த மாயவனாம் மற்ற ஒரு பால் உமை யவளாம் -காரைக்கால் அம்மையார்
உலகு அளந்த ப்ராபல்யம் சொல்லி
அர்த்தம் ஹரஸ்ய -இரண்டும் இருவரால் -தானவர் வைரி -ஹிமாச்சல புத்ரி -அர்த்த நாரீஸ்வர கோலம்
அபர்ணா இலை கூட உண்ணாமல் தவம் இருக்க உ மா பண்ணாதே தாயார் சொல்ல உமா
பர்வத ராஜன் குமாரி பார்வதி)
——————————————————————–
இத் தேசங்களில் வந்து சந்நிஹிதன் ஆனவன் சீலாதிகனாய் இருக்குமவன் கிடீர் -என்கிறார் –
சாதகத்வ ஸூசகமாம் படி -தாழக் கட்டின ஜடையும் –
ஆதி ராஜ்ய ஸூ சகமான ஒக்கத்தை யுடைத்தான திரு அபிஷேகமும்
கொலைக்குப் பரிகரமான அழகிய மழுவும் –
ரக்ஷணத்துக்கு பரிகரமான அருளார் திருச் சக்கரமும்
பயாவஹமாம் படி இடையிலே சூழப் பட்ட சர்ப்பமும்-
ஐஸ்வர்ய ஸூசகமாம் படி திருவரையிலே சாத்தின பொன்னரை நூலுமாகக் கொண்டு
ஒன்றுக்கு ஓன்று சேராச் சேர்த்தியாய் இருக்கும் இரண்டு வடிவும்
நாலு பாடும் சூழ்ந்து கொண்டு திரண்டு அருவிகள் வந்து குதியா நிற்கிற திருமலை மேலே
நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள என் ஸ்வாமி யானவனுக்குத்
தன் திரு மேனிக்கு இதுக்கும் ஒரு வாசி தோற்றாத படி பொருந்தி ஒரு கோவையாய்க் கொண்டு தோற்றா நின்றது –
கெட்டேன் -(ஆல் -இது என்ன பொருத்தம் என்றவாறு )
இது ஒரு சீலாதிசயம் இருக்கிற படியே -என்று ஆச்சர்யப் படுகிறார் –
———————————————————————————————————
(கச்சி வெக்காவில் கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – –
கச்சி வெஃகாவில் கிடந்து
கச்சி திருப்பாடகத்தில் இருந்து
கச்சி திரு ஊரகத்தில் நின்று
பிரயோஜனாந்தர பரர்க்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்
இசைந்த வரவும் வெற்பும் கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப -அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–64-
பதவுரை
இசைந்த–கடை கயிறாகக் கொள்வதற்குத் தகுதியான
அரவமும்–வாஸுகி நாகமும்
(இசைந்த)
மத்தாக நாட்டுவதற்குத் தகுதியான
வெற்பும்–மந்தர பர்வதமும்
(இசைந்த)
தாழியாக்குவதற்குத் தகுதியான
கடலும்–கடலும்
(ஆகிய இம்மூன்றையும்)
பசைந்து–ஒன்றோடொன்று ஸம்பந்தப் படுத்தி
அங்கு–அந்தக் கடலிலே
அமுது–அம்ருதமானது
படுப்ப–உண்டாம்படி
அசைந்து–அலைச்சல் பட்டு
கடைந்த வருத்தமோ–கடைந்ததனாலுண்டான ஆயாஸத்தினாலோ
கச்சி–காஞ்சீபுரத்திலுள்ள
வெஃகாவில்–திருவெஃகாவில்
கிடந்து–சயனித்துக் கொண்டும்
அங்கு–அக் காஞ்சீபுரத்தில் (திருப் பாடகத்தில்)
இருந்து–வீற்றிருந்தும் (திரு வூரகத்தில்)
நின்றதுவும்–நின்று கொண்டும் இருப்பது?
(இசைந்த அரவும்
இசைந்த வெற்பு
இசைந்த கடல் -பொருத்தமாக மூன்றும்)
இசைந்த வரவும் வெற்பும் கடலும்–கடலிலே ஒரு மலையை நட்டு -ஒரு பாம்பைக் சுற்றிக் கடையா நின்றால்
சேராச் சேர்த்தியாய் இருக்குமோ என்றால் -இசைந்த -தன்னில் பொருந்தி இருந்தபடி –
(கீழ் சாதனா சாதக சேர்த்தியும் சேராச் சேர்த்தி
நரஸிம்ஹர் போல்
யானை குதிரை விஷம் மஹா லஷ்மி பாரிஜாதம் இத்யாதி வந்ததும் சேராச் சேர்த்தி
இவன் ஸங்கல்ப மகிமையால் பொருந்தியவை)
பசைந்தங்கு அமுது படுப்ப —-அதிலே அமிருதம் வரும்படிக்கு ஈடாகப் பசை கொடுத்து –
அசைந்து-கடைந்த வருத்தமோ-உலாவிக் கடைந்த வருத்தமோ
கச்சி வெக்காவில்-கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–திருக் கச்சியிலும் திரு வெஃகாவிலும்
கிடப்பது இருப்பது நிற்பது ஆகிறது தனியே கடலைக் கடைந்ததாலே திரு மேனியில் பிறந்த ஆயாசமோ –
(தனியே -இவனே செய்த செயல்
ப்ரயோஜனாந்தர பரர் சம்பந்தம் கூடாதே
தேவர்கள் அசுரர்கள் மந்தரம் வாசுகி அனைத்துக்கும் அந்தர்யாமி
ஒல்லை நானும் கடைவன் அங்கு மட்டும் அவள் ஸ்பர்சம் உத்தேஸ்யம்
புலவர் நெருக்கு உகக்கும் பெருமான்)
————————————————————————–
பிரயோஜனாந்தர பரர்க்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்
கடை கயிறாகக் கொள்ளுகைக்கு தகுதியான வாஸூகியும் –
மத்தாக நாட்டுகைக்குத் தகுதியான மந்த்ர பர்வதமும்
தாழி யாக்குகைக்குத் தகுதியான கடலுமான இம் மூன்றையும் கொண்டு -நீர் கோதாம் படி கலக்கி
அந்தக் கடலிலே அமிர்தம் உண்டாக்குகைக்காக அலைச்சல் பட்டுக் கடைந்த ஆயாசமோ –
திருக் கச்சியிலே திரு வெஃகாவிலே கண் வளர்ந்து -அந்த திருக் கச்சி தன்னிலே திருப் பாடகத்திலே எழுந்து அருளி இருந்து
திரு ஊரகத்திலே எழுந்து அருளி நின்றதுவும் –கடல் கடைந்த இளைப்பாலே நிற்பது இருப்பது கிடப்பதாகக் கொண்டு
இங்கனே நோவு படுகிறான் ஆகாதே -என்று வயிறு எறிகிறார் –
(சொன்ன வண்ணம் செய்த பிரான் யாதோத்தகாரி -வேகா சேது
பிரமன் சொன்ன வண்ணமும் திருமழிசைப்பிரானும் சொன்ன வண்ணம் செய்த பெருமாள்)
உத்சவம்-ஆயாஸம் தீர – விடாய் ஆற்ற -அதுக்கும் கூட்டம் உண்டே -அதே போல் இங்கும் அவனுக்கு ஆயாசம் -வயிறு பிடிக்கிறார்
கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வசவோ அன்றே விப்
படிதான் நீண்டு தாவிய வசவோ பணியாயே –8-3-5-
புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்ன யாள்வாய் எனக்கருளி
நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே !!
அஜிதன் -பாற் கடல் கடைந்த பெருமாள்
ஹரி -கஜேந்திர மோக்ஷம் அளித்தவன்
—————————————————————————————————–
அம்ருத மதனம் பண்ணின ஆயாசம் மாத்திரம் அன்றிக்கே அல்லாத அவதாரங்களிலும் அலைச்சலுக்கு
அடியான அவன் செயல்களை அனுசந்திக்கிறார் –
(அங்கற்கு-பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு-அங்கஜ -கடைக்குறை அங்க -அங்கு மகற்கு -அங்கனுக்கு -அங்கருக்கு என்றுமாம்
ப்ரஹ்மதுக்கு அங்கம் -ஆழ்வார் பிள்ளையாக ஸ்வீ காரம்-பள்ளியில் ஒதி வந்த தன் சிறுவன்
தன் மகனைக் காய்ந்து -போல் இங்கும் ஆழ்வாருக்கு அங்கன்-அங்கு மகற்கு -கடைக்குறை என்றுமாம் )
அங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து
மங்க விரணியன தாகத்தை -பொங்கி
அரியுருவமாய்ப் பிளந்த அம்மானவனே
கரி யுருவம் கொம்பொசித்தான் காய்ந்து ——65–(கார் உருவம் பாட பேதம் )
பதவுரை
அங்கற்கு–பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு-அங்கஜன் -கடைக்குறை அங்க
இடர் இன்றி–ஒரு துன்பமும் வராதபடி
அந்தி பொழுதத்து–ஸாயங்காலத்தில்
இரணியனது–ஹரண்யனுடைய
ஆகத்தை–மார்வை-சிந்தையினால் இகழ்ந்தான் அன்றோ
மங்க–அழிந்து போம்படியாக
அரி உருவம் ஆய் பொங்கி–நரஸிம்ஹ ருபியாய்க் கிளர்ந்து
பிறந்த–கிழித்தொழிந்த
அம்மான் அவனே-அப் பெருமானே
காய்ந்து–சீறி
கரி உருவம்–கறுத்த வுருவத்தை யுடைத்தாயிருந்த குவலயா பீடத்தினுடைய
கொம்பு–தந்தத்தை
ஒசித்தான்–முறித்துப் போட்டான்-கோட்டுக்கால் கட்டில் நப்பின்னைக்கு
அங்கற்கு இடரின்றி — -பிள்ளை யுடைய விடாய் தீர —
அங்குக்கு இடர் இன்றி -என்ற பாடமாகில் -அவ் விடத்தில் விடாய் தீர –
அந்திப் பொழுதத்து-அஸூரர்க்கு பலம் வர்த்திக்கும் காலத்திலே
மங்க விரணியன தாகத்தை–ஹிரண்யனுடைய ஹிருதயமானது மங்கும் படிக்கு ஈடாக
பொங்கி-அரியுருவமாய்ப் பிளந்த அம்மான் -பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை -என்னும் படி –
அவனே கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து —அவனே குவலயா பீடத்தினுடைய கொம்பை ஓசித்தான் –
காய்ந்து –சீற்றம் இல்லாதவன் சீறி —
(பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண்ணார்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி
எண்ணானை எண்ணிறந்த புகழினானை இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-8-)
ஈஸ்வரன் செய்து அருளும் ஆனைத் தொழிலகள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் -நஞ்சீயர்
—————————————————————————-
அம்ருத மதனம் பண்ணின ஆயாசம் மாத்திரம் அன்றிக்கே அல்லாத அவதாரங்களிலும் அலைச்சலுக்கு
அடியான அவன் செயல்களை அனுசந்திக்கிறார் –
சிறு பிள்ளையான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு துக்கம் வாராத படி -அஸூரர்க்கு பலம் வர்த்திக்கும் படியான
சந்த்யா காலத்திலே ஆஸூர பிரக்ருதியான ஹிரண்யனுடைய வர பலாதிகளாலே பூண் கட்டின மார்வை
உருத் தெரியாத படி அழிந்து போம்படி யாக பெரும் கிளர்த்தியை யுடையனாய்க் கொண்டு
நரசிம்ஹ ரூபியாய் இடந்து பொகட்ட சர்வேஸ்வரனான அவனே –
சீறிக் கொண்டு குவலயா பீடத்தின் யுடைய கொம்பை அநாயாசேன முறித்துப் பொகட்டவன்
அங்கர் என்றது அங்கன் என்ற படியாய் பிள்ளை என்றபடி –
அன்றிக்கே —
சர்வகத்வாத் அநந்தஸ்ய ச ஏவாஹ(சர்வகத்வாத் அநந்தஸ்ய ஸ ஏவ அஹம் அவஸ்தித:”என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 19 : 85.)
அங்கு -அவ்விடத்து -என்று பிரித்து –
மகற்கு என்கிறதை தலைக் குறைத்தலாய்க் கிடக்கிறது என்னவுமாம்
ஹிரண்யனுடைய மகனுக்கு இடர் இல்லாத படி -என்று பொருளாகக் கடவது –
அங்கற்க் கிடர் -என்ற பாடமான போது
அவ்விடத்து இடர் இல்லாத படி என்று பொருளாகக் கடவது –
————————————————————————————————————-
உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணினது ஓர் ஏற்றமோ -அவதானம் இன்றிக்கே
இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் -(பையத் துயின்ற பரமன் அன்றோ )
தான் ஒரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்கிற இது ஓர் ஏற்றமோ –
கண் வளர்ந்து அருளுகிற இடத்தே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –
(மது ஸூ தனன் கைடபாரி திரு நாமங்கள் அவனுக்கு -கொழுப்பு இவர்கள் உருவம் -தொடையில் வைத்து முடித்தான்)
(திரு மெய்யம் -அகன்ற கர்ப்ப க்ருஹம் -ஆதி சேஷன் மூச்சு-ஜ்வாலை யுடன் ஓடுவதையும் சேவிக்கலாம்
மது ஸூதனன் கைடபாரி இவருக்கு திருநாமம்
ஆதிசேஷன் இவர் அங்கம் தானே -மூக்கு அரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் போல் இங்கும்
மாணிக்கம் ஒளி மூச்சு ஒலி-ஸ்பர்சம் -ஒளி பட்டு விஞ்சி இருக்கும்-தேஜஸே மேல் கட்டி விதானம் )
(அனுகூல புத்தியால் கிட்டினால் வாழலாம் -பிரதிகூல புத்தியால் கிட்டினால் வீழ்ந்தே போவார்கள்)
காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த
மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்
அதுகேடவர்கு இறுதி யாங்கு ——-66-
பதவுரை
காய்ந்து–சீறி
இருளை மாற்றி–இருளைப் போக்கி
கதிர் இலகு–ஒளிவிடா நின்றுள்ள
மா மணிகள்–சிறந்த ரத்னங்கள்
ஏய்ந்த–பொருத்தி யிருக்கிற
பணம்–(தன்னுடைய) படங்களினுடைய
கதிர் மேல்–ஒளிக்கு மேலே (திருவனந்தாழ்வான்)
வெவ் வுயிர்ப்ப–பெரு மூச்சு விட,
வாய்ந்த–கிட்டின
மது கைடபரும்–மதுகைடபர்கள்
வயிறு உருகி மாண்டார்–குடலழுகி முடிந்து போனார்கள்
அவர்க்கு–அந்த மதுகைடபர்களைப் போலே பிரதிகூலராய் வருமவர்களுக்கு
ஆங்கு–அவ் வண்ணாமாகவே
அது இறுதி கேடு–அப்படிப்பட்ட ப்ராண விநாசமான கேடே (பலிக்கும்)
காய்ந்திருளை மாற்றிக் சீறி இருளைப் போக்கி –கதிரிலகு மா மணிகள்-ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-
ஒளி விடா நின்றுள்ள மணிகள் சேர்ந்த பணத்தில் யுண்டான தேஜஸ்ஸின் மேலே நெடு மூச்சு விட
வாய்ந்த-மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்–
கிட்டின மது கைடபர்கள் வயிறு உருகி முடிந் தார்கள்
அது கேடவர்கு இறுதி யாங்கு —-என்றும்
என் பிள்ளைக்குத் தீமை செய்வார்கள் அங்கனம் ஆவர்களே-3-3-7
(அங்கு அது கேடு இங்கு -அங்கனம் ஆவார்கள் -அங்கு -எனக்கு நிம்மதி பெரு மூச்சு வந்தது என்கிறார்)
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற் கடல் வண்ணா உன் மேல்
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த கள்ள வசுரர் தம்மை
சென்று பிடித்து சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -பெரியாழ்வார் -3- 3-7 –
——————————————————————–
தான் ஒரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்கிற இது ஓர் ஏற்றமோ –
கண் வளர்ந்து அருளுகிற இடத்தே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –
சஹாவஸ்தானம் இல்லாத மாத்திரம் இன்றிக்கே சீறிக் கொண்டு இருளைப் போக்கிக் கிரணங்கள் ஒளி விடா நின்றுள்ள
பெரு விலையனான ரத்தினங்கள் சேர்ந்து இருக்கிற தன்னுடைய பணங்களின் ஒளிக்கு மேலே திருவனந்த ஆழ்வான்
அனுபவ ஜெனித ஹர்ஷ பிரகர்ஷத்துக்குப் போக்கு விட்டு வெவ்விதாக உச்சவாச நிசுவாசங்களைப் பண்ண-
இவ்வளவிலே விரோதித்து வந்து கிட்டின மது கைடபர்களும் குடல் அழுகி முடிந்து விட்டார்கள் –
அனுகூலர்க்கு வாழவும் ஜீவிக்குமான அந்தக் கண் வளர்ந்து அருளுகிற ஸ்தலத்திலே பிரதிகூலித்து வந்து
கிட்டினவர்களுக்கு அந்தக் கிட்டினதுவே வாழ்வுக்கு பிரதி கோடியான கேடும்-
சத்தையோடு ஜீவிக்கைக்கு ப்ரதி கோடியுமான விநாசமுமாய் விட்டது –
(சத்தை-சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூப லாபம்-வாழ்வு -சத்தை -இதுக்கு பிரதி கோடி- இறுதி கேடு )
(கிடந்ததோர் கிடக்கை -அரவின் அணை மிசை மேய மாயனார் -ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்)
(சுந்தர பாஹு ஸ்தவம் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -இரண்டிலும் மது கைடப நிரசன விருத்தாந்தம் உண்டே)
—————————————————————————————————————
ஹிரண்யனும் மது கைடபர்களும் முடிந்த பின்பு கண் வளரும் போதை அழகை அனுபவிக்கிறார் -(கீழ் இரண்டு பாசுரங்களுக்கும் இதுக்கும் சங்கதி )
அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான
சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –
(கவி -நிகழ்வுகளை ஏற்றிச் சொல்வது போல் இங்கும்-தற் குறிப்பு ஏற்று அணி —
பெருமாள் -மிதிலா தேசம் நுழையும் போது ஒல்லை வா என அழைத்தனவே
கோவலன் நுழைய வராதே கொடிகள் அங்கு -இளங்கோ அடிகள் )
(உந்தித் தாமாரை பரத்வம் ஜகத் காரணத்வம் பொதுவாக சொல்வர்
இங்கு அழகு சவுந்தர்யம்)
ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து ——67-
பதவுரை
மால்–ஸர்வேச்வரனுடைய
உந்தி வாய்–திரு நாபியிலே
ஓங்கு–உயர வளர்ந்த
ஒண் கமலத்தின் போது–அழகிய தாமரைப் பூவானது
கை–அவனுடைய வலத் திருக் கையில்
ஆம்–உண்டான
திகிரி–திருவாழியை
சுடர் என்றும்–ஸூர்யனென்றும்
(ஆங்கை-கை ஆம்)
இடத் திருக் கையிலுள்ள
வெண் சங்கம்–வெளுத்த சங்கை
வானில் பகரும் மதி என்றும்–ஆகாசத்தில் விளங்குகிற சந்திரனென்றும்
பார்த்து–நினைத்துக் கொண்டு
ஆங்கு–எக் காலத்திலே
மலரும் குவியும்–மலர்வதும் மூடிக் கொள்வதுமா யிரா நின்றது.-குவியும் ஆல் -ஆச்சர்யம் என்றுமாம்
(சம்பு காவியம் -வெங்கடாத்ரி கவி
ரமா ஹஸ்த–இத்யாதி
திரிசானு -தப்பு கண்ணில் படும்
விஷ்வாயுசு நல்லதே கண்ணில் படும்
நாபியில் கமலம் -பிராட்டியார் திருக்கையில் லீலா பத்மம்
தேன் சொட்டும் பிள்ளைக்கு-த்யுக முக சிசு -இரண்டு இரட்டை நான் முகன்)
மாலுந்தி வாய்-ஓங்கு கமலத்தின் ஓண் போது —திரு நாபீ கமலத்தில் ஓங்கி இருந்துள்ள அழகியதான தாமரைப் பூ
ஆங்கைத்-திகிரி சுடர் என்றும் –கையில் திரு வாழியை ஆதித்யன் என்றும்
வெண் சங்கம் வானில்-பகருமதி என்றும் பார்த்து–
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஆகாசத்தில் விளங்கா நின்றுள்ள சந்திரன் என்றும் பார்த்து-அனுசந்தித்து –
ஆங்கு மலரும் குவியும்-ஆல்–
இரண்டு காலத்திலே பிறக்கக் கடவ அவ்விரண்டு அவஸ்தையானது யுகபத் உண்டாகா நின்றது –
(வெள்ளை சரி சங்கோடு –சங்கோடு சக்கரம் பங்கயக் கண் -கண் தாமரை மலர்வதும் குவிவதும் சொல்வர்)
——————————————————————
அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான
சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –
திரு நாபீ கமலத்தில் உண்டாய் -உயர வளர்ந்த தாமரையினுடைய செவ்வி குன்றாத அழகிய பூவானது அவனுடைய
வலத் திருக் கையிலே உண்டான திரு வாழியை ஆதித்யன் என்றும் –
மற்றைத் திருக் கையிலே ஏந்தின வெளுத்த நிறத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
ஆகாசத்தில் வர்த்திக்கிற ஒளியையுடைய சந்திரன் என்றும்
உத் ப்ரேஷித்துக் கொண்டு -அக்காலத்திலே அலர்வது மொட்டிப்பதாக நிற்கும் –
இது ஓர் ஆச்சர்யம் இருக்கிற படியே என்று அனுபவிக்கிறார்
மாலுந்தி வாய் -என்ற போது
சர்வேஸ்வரனுடைய திரு நாபியில் என்றாகக் கடவது –
அங்கு -அந்தப் பொழுதில் -ஏக காலத்திலே என்றபடி –
வானிலே வர்த்திக்கிற ப்ரசித்தனான சந்திரன் -என்னவுமாம் –
(பகரும் மதி -ஒளி விடுபவன் என்றும் ப்ரஸித்தமாகப் பேசப்படும் என்றும்)
(பன்னக ஸார்வ பவ்மன் ந அஹம் -எனக்கும் தெரியாது-ரிஷிகளுக்கும் தெரியாது -குழந்தை ஜன்னி போல் உழன்று
ஸ்ரீ பத்ம நாபன் ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறான் -தேசிகன்
இங்கு நாபி கமலம் மட்டுமே -இன்னும் பிரமன் உத்பத்தி இல்லை-திரு வாட்டாறு போல்)
———————————————————————————————————
இப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா –
திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார்
(இங்குள்ள திர்யக்க்கின் தேஹ யாத்திரையும் உத்தேச்யம்-கீழ் மதியை கண்ணாடியாக கேட்டதையும் பார்த்தோம் )
பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
களங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-
பதவுரை
சுனை நீர்–திருமலைச் சுனையின் நீரிலே
பார்த்த–கவிந்து பார்த்த
கடுவன்–குரங்கானது
நிழல் கண்டு–நீரினுள்ளே பிரதி பலிக்கிற தன்னிழலைக் கண்டு
பேர்த்து ஓர் கடுவன் என–(தனக்கு எதிரியான) வேறொரு குரங்கு இருப்பதாக ப்ரமித்து
பேர்ந்து–அவ்விடம் விட்டு நீங்கி (மறுபடியும் சாபல்யத்தாலே)
கார்த்த களங்கனிக்கு கை நீட்டும்–கரிய களாப் பழத்தைப் பறித்துத் தா வென்று கை நீட்டப் பெற்ற
வேங்கடமே–திருவேங்கடம் தான்
மேல் நாள்–முன்பொரு காலத்தில்
விள கனிக்கு–(அஸுராவேசங்கொண்ட) விளாம் பழங்கள் உதிர்வதற்காக
கன்று எறிந்தான்–வத்ஸாஸுரனை (எறி குணிலாகக் கொண்டு) வீசி யெறிந்த பெருமானுடைய
வெற்பு–திருமலை.
பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு–சுனை நீரிலே கடுவானானது தன்னுடைய நிழலைக் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -வேறே தனக்கு எதிரியான கடுவன் எனப் பேர்ந்து
கார்த்த–களங்கனிக்கிக் கை நீட்டும் -பின்னையும் தன்னுடைய சாபலத்தாலே அருகில்-களாப் பழத்தை அறுத்துத் தா என்றும் கை நீட்டா நிற்கும் -வேங்கடமே -திருமலை -(இது பண்டு கன்றைக் கொண்டு விளங்கனிக்கு எறிந்த கண்ணன் சேஷ்டிதத்துக்கு ஸ்மாரகம் )
மேனாள்-விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-பண்டு கன்றைக் கொண்டு விளங்கனிக்கு எறிந்தவனுடைய திருமலை –
(ஸூ ந்த்தர பாஹு ஸ்தவம்
பிரதி பார்த்து நரஸிம்ஹம் கொண்ட சீற்றம்
பக்த ப்ரகலாதனைக் கண்ட மயக்கம்)
(திருமலையில் கர்ப்ப க்ருஹம் -சீதா ராமர்
நர்த்தன கண்ணன் -சேவை உண்டே)
——————————————————————
இப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா –
திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார்(உருவகம் அழகு அங்கும் இங்கும் )
கரையிலே களாவிலே நின்று சுனையின் நீரைப் பார்த்த கடுவானானது –
நீருக்கு உள்ளே தன்னுடைய நிழலைக் கண்டு
இது நம்முடைய நிழல் என்று புத்தி பண்ண மாட்டாதே –
தனக்கு எதிரியான வேறு ஒரு கடுவன் என்று பிரதி பத்தி பண்ணி
தன் கையின் சிவப்புக்குப் பகைத் தொடையான கறுத்த நிறத்தை யுடைத்தான காளாவின் பழத்துக்கு
தான் நிற்கிற களாவின் நிழல் என்று அறியாதே
வேறு ஒன்றாகக் கருதி அதின் பழமும் பெற வேணும் என்னும்
சாபலத்தாலே அத்தை அறுத்துத் தா என்று கை நீட்டா நிற்கும் –
வேங்கடமே -பண்டு ஒரு நாளில் விளாம்பழத்துக்கு கன்று எறிந்தவன் வர்த்திக்கிற திருமலை –
இதினுடைய முஃத்யம் (அறிவின்மை பிள்ளைத்தனம் )போலே யாய்த்து அவனுடைய முஃத்யம் இருக்கும் படி –
(கடுவன் ஆண் குரங்கு மந்தி பெண் குரங்கு)
(பகைத் தொடை-மாற்று நிறம் -இணைத் தொடை ஒரே நிறம்)
———————————————————————————————————-
ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து
அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –
இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து
தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் –
அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –
(முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60–பிரஸ்தாபம் வந்தாலே -திருவேங்கடம் என்று கற்கும் வாசகம் )
(முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கண புரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-)
(பாடும் -சூடும் -நீராடுவான்- புகும் -மூன்று வினைச் சொற்கள்
திருத் துழாய் சூடிக் கொள்ள பாசுரம் –
குலசேகரப் பெருமாள் குஹ்யதே -திருவரங்கம் போல் இவள் திருவேங்கடம் தினம் தினம்-பூண்ட நாள் எல்லாம் புகும்)
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-
பதவுரை
வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்ல நினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,-
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத் துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்-
லோக யாத்திரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயே
திருமலையை ஒழிய வேறு ஒரு மலையையும் அறியாள்-
(நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-)
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் —
காட்டுப் பூ சூடாள்-
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்-என்கிறபடியே
விஸ்மயமான திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்–
(திருத் துழாய் ஒன்றே இவனைக் காட்டும் பூ)
(வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நன்றோயிது தெய்வத் தண்ணந்துழாய்
தாராயினும், தழையாயினும் தன் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-திரு விருத்தம் )
கற்பு என்று பாதி வ்ரத்யம் –
(அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-)
மற்பொன்ற-நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் —
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோளை யுடையனாய் –
வியாமுக்தனானவன் கிடந்த நீள் கடலிலே
விடிந்த நாள் எல்லாம் புகா நின்றாள்-
திருப் பாற் கடல் ஒழிய வேறு ஒன்றில் குளித்தால் விடாய் கெடாது என்று இருக்கிறாள்
இப் பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும்
இப்படிக் கொள்ளுகிறது என் என்றும் நிர்வஹிப்பர்கள்-
(சூடும் பாடும் நீராடும் -வினை முற்றுச் சொற்கள்-நம்மைப் பார்த்து சொல்வதாக -தாமான தன்மை)
அம்மலை இம்மலை என்று ஒன்றைச் சொல்லக் கடவி கோள் இறே –
ஆன பின்பு திருமலையைப் பாடுங்கோள்-
ஒரு பூவைச் சூடக் கடவி கோள் இறே –
ஆன பின்பு வகுத்தவன் உகக்கும் திருத் துழாயைச் சூடுங்கோள்
பிராதஸ் ஸ்நானம் பண்ணக் கடவி கோள் இறே –
ஆன பின்பு விரோதி நிரசன சீலனானவன் கிடந்த திருப் பாற் கடலிலே முழுகுங்கோள்–
(மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -எங்கு சயனித்து இருந்தாலும் பாற் கடல் போலவே கொள்ளலாம்)
பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே —ஸ்ரீ பெரிய திருமொழி-11-3-8-
———————————————————————-
இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து
தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் –
அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –
(கடல் ஞானம் செய்தேனும் யானே என்னும் போல் அனுவதித்திக் கொண்டு பேசுகிறா)
ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்காள் ஆகில்
திருமலையையே ப்ரீதி பிரேரிதையாய்ப் பேசா நிற்கும்
ஏதேனும் ஒரு பூவைச் சூட நினைத்தாள் ஆகில்
விஸ்மயமான திருத் துழாய் குல மரியாதைக்கு சேருவது ஓன்று என்று
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் -என்கிறபடியே
இருண்ட குழலின் மேலே சாதரமாகச் சூடா நிற்கும் –
மல்ல வர்க்கம் பொடி படும் படி வளர்ந்த திருத் தோள்களை யுடைய சர்வேஸ்வரன் கண் வளர்ந்து அருளின
பரந்த திருப் பாற் கடலிலே நீராடுகைக்காக விடிந்த விடிவுகள் தோறும் புகா நிற்கும்
வேறு ஒரு மலையில் பேர் சொல்லுதல் –
நாறு பூச் சூடுதல் –
வேறு ஒரு நீர் நிலைகளில் குளித்தல் செய்யாள்
பாடுகை சூடுகை முதலான லோக யாத்திரை அடங்கலும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கிற படி
(உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே –
வாஸூ தேவ ஸர்வம் -என்று இருக்கும் மஹாத்மா)
மால் கிடந்த -வியாமுக்தனானவன் பள்ளி கொண்டு அருளின என்னவுமாம் -(சர்வேஸ்வரனை என்றும் வ்யாமுக்தன் என்றும் மால்)
இங்கண் இன்றிக்கே கீழும் மேலும்
அந்யாபதேசம் அற்று இருக்க இது ஒன்றும் இப்படி கொள்கிறது என் என்று
பர உபதேசமாக நிர்வஹிப்பார்கள்
அப்போது அம்மலை இம்மலை என்று ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் பார்த்தீர்கள் ஆகில்
திரு மலையைப் பாடுங்கோள்
ஏதேனும் ஒரு பூச் சூட நினைத்தீர்கள் ஆகில் திருத் துழாயைச் சூடுங்கோள்
ஏதேனும் ஒரு நீர் நிலைகளில் புக்கு பிராதஸ் ஸ்நானம் பண்ணப் பார்த்தீர்கள் ஆகில்
அவன் சாய்ந்து அருளின கடலிலே நாள் தோறும் அவகாஹிக்கப் பாருங்கோள் என்று பொருளாகக் கடவது –
கற்பு என்று பாதி வ்ரத தர்மம் என்றுமாம் -(குல வரம்பு என்றும் )
——————————————————————————————————-
(இதிலும் திருமலையில் உள்ள களிறு செய்யும் கைங்கர்யம்
அர்க்யம் பாத்யம் ஆசமன்யம் செய்து புஷ்பம் சமர்ப்பித்து-
ஸ்ரீ கஜேந்திரன் போல் தொழும் காதல் களிறு இங்கு உள்ளவை எல்லாமே
இங்கு முதலை நீர் புழுக்களே இருக்காதே )
அனுகூலருடைய தேஹ யாத்திரையே எல்லாம் தனது ஸமாஸ்ரயணத்துக்கு உடலாகக் கொள்ளும்
அவன் எழுந்து அருளி இருக்கும் திருமலை
ஞான பக்திகள் எல்லாம் வேண்டாம் – இவையே யாகம் தவம் என்று கொள்ளும் அத்யந்த ஸுலப்யம்
ஸ்ரீ வைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே, ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்.-
உகந்து அருளி நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
ஆகில் அவனை ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை சம்பாதிக்க வேண்டாவோ -என்ன
அது வேண்டா
திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் என்கிறார் –
புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-
பதவுரை
களிறு–(திருமலையிலுள்ள) யானையானது
புகு மதத்தால் வாய் பூசி–மண்டையில் நின்றும் கபோலங்களில் நின்றும் வாயிலே புகுகின்ற
மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து ஆகமனம் பண்ணி
கீழ் தாழ்ந்து அருவி உகு மதத்தால்–மேலிருந்து கீழ் வரையில் அருவி போலே வந்து பெருகுகிற மத ஜலத்தாலே
கால் கழுவி–கால்களை சுத்தி செய்து கொண்டு
கையால்–துதிக்கையால்
மிகு மதம் தேன்–மிகுந்த மதத்தை யுண்டு பண்ணக் கூடிய தேனை யுடையதும்
விண்ட–மலர்ந்ததுமான
மலர் கொண்டு–புஷ்பத்தைக் கொண்டு
விறல் வேங்கடவனையே–பெரு மிடுக்கனான திருமலை யப்பனையே
கண்டு வணங்கும்–ஸேவித்து வணங்குகின்றது.
புகு மதத்தால் வாய் பூசிக் —
வாயிலே புகுந்த மத ஜலத்தால் வாய் கழுவி
கீழ்த் தாழ்ந்து அருவி-உகு மதத்தால் கால் கழுவிக் —
கீழே தாழ்ந்த அருவி போலே உகா நின்ற மத ஜலத்தாலே கால் கழுவி
கையால் -மிகு மதத்தேன்-விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கையாலே மிக்க மதத்தை யுடைத்தாய் -அலரா நின்ற பூவைக் கொண்டு களிறு ஆனது
விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு —
விறல் வேங்கடவனையே-என்று திருமலையிலே திர்யக்குகளும் தன்னை வணங்கும்படி
ஞானத்தை கொடுக்க வல்ல சக்தியை யுடையவன் என்கிறது -(ததாமி புத்தி யோகம் )
ஞான கார்யமான ஸமாஸ்ரயணத்தை தேச வாசத்தாலே பண்ணி வைக்கும் –
(தேசோயம் ஸர்வ காம துக் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே-அவனே இது மூலம் அருளுகிறான் )
(ஊரிலேன் காணி இலேன் -பாரிலேன் பற்றிலேன் -திவ்ய தேச வாஸம் இல்லா விடில் பற்று சமாஸ்ரயணம் பண்ண மாட்டோமே)
(அளித்த யானை கஜேந்திரன் -அழித்த யானை குவலயா பீடம்
நாகம் –பிரணார்த்தம் -ந அஹம் -இந்த உடலை ரக்ஷிக்க நான் உன்னை அழைக்க வில்லை
கரஸ்த கமலான் -ஸமர்ப்பிக்கவே கூப்பிட்டேன் -தொழும் காதல் களிறு அளிப்பான் தோன்றினையே)
(அசேஷ ஜககதித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி
அத்யர்த்தப்பிரிய -தத் பிராப்தி பல-ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்
(அசேஷ ஜககதித்த அநு சாசன -தத்வம் சித்தம் -ஹிதம் புருஷார்த்தம் ஸாத்யம் -சாஸனமே பிரதானம்
ஸ்ருதி நிகர -சமுதாயம் -ஸிரஸி -வேதாந்தம்
ஸமதிகதோ யமர்த்த -நன்கு அறியப்படும்
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக -ஸர்வ காரணம் ஸமஸ்த இதர விலக்ஷணன் இத்யாதி –
ஞான ஸ்வரூபன் சேஷ பூதன்- அணு -இத்யாதி -இவை முன்னுட்டு
வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக–இவற்றை அங்கமாக -த்ரிவித த்யாகத்துடன் ஆராதன ரூபமாக செய்து-இதி கர்தவ்யதா -அங்கமாக –
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி-பக்தி யோக உபாசனத்துக்கு இவையே அங்கங்கள் -மத யாஜி மாம் நமஸ்க்ரு
அத்யர்த்தப் பிரிய -அளவு கடந்த வாக்குக்கு அப்பால் பட்ட பிரியம்
தத் பிராப்தி பல-பகவத் பிராப்தி)
——————————————————————
ஆகில் அவனை ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை சம்பாதிக்க வேண்டாவோ -என்ன
அது வேண்டா
திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் என்கிறார் –
மஸ்தக ஸ்தலம் கண்ட ஸ்தலம் இவற்றின் நின்றும் பாய்ந்து வாயிலே புகுகிற மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து
ஆசமனம் பண்ணி கீழே தாழ்ந்து அருவிகள் போலே வந்து விழுகிற மத ஜலத்தாலே காலைக் கழுவி துதிக்கையாலே
மிக்க மதத்தைப் பண்ணிக் கடவ தேனை யுடைத்தாய்
அப்போது அலர்ந்த செவ்விப் பூக்களை பொய்க்கைகளிலே புக்குப் பறித்துக் கொண்டு
சாஸ்திர வஸ்யம் அல்லாத திர்யக்குகளும் ஸ்வ விஷயத்தில் ஞான ப்ரேமங்களை விளைக்க வல்ல
பெரு மிடுக்கனான திருவேங்கடம் மேய எந்தையைக் கண்டு தலையார வணங்கி ஆஸ்ரியியா நிற்கும்
அங்குண்டான ஆனையானது –
மதம் என்று கந்தமாய் மிக்க கந்தத்தையும் தேனையும் யுடைய செவ்விப் பூக்களைக் கொண்டு என்னவுமாம் –
——————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply