Archive for the ‘பாசுரப்படி ஸ்ரீ ராமாயணம்’ Category

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –11– -பால சேஷ்டிதங்கள– வெண்ணெய் உண்டு கட்டுண்ணப் பண்ணிய பெரு மாய — அருளிச் செயல்கள்

August 2, 2015

உழந்தாள் நறு நெய் ஓரோர் தடா வுண்ண இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழின்மத்தின் பழம் தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான்
பெருமா வுரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு இருமா மருதம் இறுத்த இப்பிள்ளை
தாழியில் வெண்ணெய் தடங்கை யார விழுங்கிய பேழை வாயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான் –
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயுமுண் பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி பற்ப நாபா கொட்டாய் சப்பாணி
பொத்த வுரலைக் கவிழ்த்து அதன் மேலேறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறார
விழுங்கிய அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆழியான் என்னைப் புறம் புல்குவான்
திருடி நெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைத் தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று ஆப்புண்டான் அப்பூச்சி காட்டுகின்றான்
யாம் வைத்த துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வாடி தயிரும் நறு வெண்ணெய் யும் இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்து கரை யுரலோடு என்னைக் காணவே கட்டிற்று இலையே
வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
கறந்த நல பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாகப் பெற்று அறியேன் எம்பிரானே
திண்ணக் கலத்தில் திரையுறி மேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடையிட்டு அதனோசை கேட்கும் கண்ணா பிரான் கற்ற கல்வி தன்னைக் காக்ககில்லோம்
உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான்
பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல்வளையால் என் மகள் இருப்ப மேலை யகத்தே நெருப்பு வேண்டிச்
சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன் சாளக்ராமமுடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறு நெய் பாலால் பன்னிரண்டு திருவோணம் அட்டேன்
பண்டும் இப்பிள்ளை பரிசு அறிவன் இன்னமுகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுந்கிட்டுப் போந்து நின்றான்
அகம் புக்குக் குறியை நோக்கிப் பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்உன் மகன்
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு வேய்த் தடம் தோளினார்
வெண்ணெய் கொள்மாட்டாது அங்கு ஆப்புண்டு இருந்தான்
பொன்னேய் நெய்யோடு பாலமுதுண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி –இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ
முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி கப்பாலாயர்கள் காவிற் கொணர்ந்த
கலத்தொடு சாய்த்துப் பருகி மெய்ப்பாலுண்டு அழு பிள்ளைகள் போலே நீ விம்மி விம்மி அழுகின்ற அப்பா –
மிடறு மெழு மெழுத்தோட வெண்ணெய் விழுங்கிப் போய் படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே
கடிறு பலதிரி கானதரிடைக் கன்றின் பின் இடற வென் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே –

ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் கார் ஏறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சிகண்டு ஆர்த்த தோளுடை எம்பிரான் என்னரங்கன்
ஒல்லை நானும் கடையவன் என்று கள்ள விழியை விழித்துப் புக்கு –தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய்யறிவன் நானே
முழுதும் வெண்ணெய் அழைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரைக் கையும் எழில் கொள் தாம்பு கொண்டு
அடிப்பதற்கு எள்கு நிலையம் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும் அணி கொள்
செஞ்சிறு வாய் நெளிப்பதுவும் தொழுகையும் இவை கண்ட வசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே

ஆய்ச்சி பாலையுண்டு மண்ணையுண்டு வெண்ணெய் யுண்டு பேய்ச்சி பாலையுண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா —

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் அணி யரங்கன் என் அம்தினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பன்

—————————————

உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக கொண்டாய்
ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை
உறியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று ஆங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தரியார்ந்த கரும் களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான்
வேல் நெடும் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து இவ்வுலகாண்ட காளை
உகந்து இனிது நாள் தோறும் மருவி யுறை கோயில் –நாங்கூர் வைகுண்ட விண்ணகரம் –
வாய்த்த தயிருண்டு வெண்ணெய் அமுதுண்டு வலிமிக்க கஞ்சனுயிரது உண்டு இவ்வுலகுண்ட காளை கருதுமிடம் –நாங்கூர் அரிமேய விண்ணகரம்
படலடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும் அடலடர்த்த வேறகணார் தோக்கை பற்றி
அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர் –நாங்கூர்த் திருத் தெற்றி யம்பலத்து என் செங்கண் மாலே
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் யுண்டு ஒருகால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான் –கோயில் –திரு வெள்ளியங்குடி யதுவே
மையார் தடம் கண் கரும் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயனிடம் –புள்ளம் பூதங்குடி தானே –
பிள்ளை யுருவாய்த் தயிருண்டு அடியேன் உள்ளம் புகுந்த ஒருவரூர் –கூடலூரே
கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய் பருகு நந்தன் பெற்ற ஆனாயன்
வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி யோச்சி கண்ணியார் குறும் கையிற்றால் கட்டவெட்டு
என்று இருந்தான் –தென் திருப் பேருள் வேலை வண்ணனார் –
உருக்குறு நறு நெய் கொண்டு –விண்ணகர் மேயவனே
உறியார் வெண்ணெய் யுண்டு உரலோடும் கட்டுண்டு -வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றானூர் –நறையூரே
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி யழுதான் –நறையூர் நின்ற நம்பியே –
தோயாவின் தயிர் நெய் யமுதுண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற தாயால் ஆப்புண்டு இருந்து
அழுது ஏங்கும் தாடாளா—அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே
வம்பவிழும் மலர்க் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்–அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய் மாந்தழுந்தையில் கண்டு மகிழ்ந்து
வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
பூங் கோதை யாய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண ஆங்கவள் ஆர்த்துப் புடைக்க புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் ஒங்கோத வண்ணனே சப்பாணி ஒளி மணி வண்ணனே சப்பாணி
தாயார் மனங்கள் தடிப்பத் தயிர் நெய்யுண்டே எம்பிராக்கள் இரு நிலத்து எங்கள் தம் ஆயர் அழகா அடிகள் அரவிந்த வாயவனே
தாமோருருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டு தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால் தாமோதரக் கையால் ஆர்க்கத் தழும்பிருந்த தாமோதரா
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்ரை நிறைப்பான் உறிப்பால் தயிர் நெய் அன்று ஆய்ச்சியர் வெண்ணெய்
விழுங்கி உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான்
காலை எழுந்து கடைந்த இம்மோர் விற்கப் போகுன்றேன் கண்டே போனேன் மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலையகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்று இருந்த பாலும் பதின்குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ
தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த வெள்ளி மலையிருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு பிள்ளை பரமன்று இவ் வேழ் உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஓரோர் குடம் துற்றிடும் என்று ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை நங்காய் சோத்தம்பிரான்
இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்ப கில்லேன் பேய்ச்சி முலையுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே
ஆழ்கடல் சூழ் வையகத்தார் ஏசப்போய் ஆய்ப்பாடித் தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ –
தாழ் குழலார் வைத்த தயிருண்ட பொன் வயிறு இவ் வேழ் உலகுமுண்டும் இடமுடைத்தால் சாழலே –
அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உறியார் நறு வெண்ணெய் உண்டுகந்தான் காணேடீ
உறியார் நறு வெண்ணெய் உண்டுகந்த பொன் வயிற்ருக்கு எறி நீருலகனைத்தும் எய்தால் சாழலே
வண்ணக் கரும் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே

வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த உறியார் நறு வெண்ணெய் தானுகந்துண்ட சிறியானை
செங்கண் நெடியானைச் சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே

———————————————-

உறி வெண்ணெய் தோன்ற வுண்டான் –மண்ணளந்த மால்
வெறி கமழும் காம்பே மென்தோளி கடை வெண்ணெய் யுண்டாயை தாமே கொண்டார்த்த தழும்பு
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி உரலோடு உறப் பிணித்த நான்று குரலோவாது ஏங்கி நினைந்து
அயலார் காண விருந்திலையே ஒங்கோத வண்ணா உரை
வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய் தேனாகிப் பாலாம் திரு மாலே ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே
முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு

மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றா தாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி
கண்ணிக் கயிற்றினால் கட்டத் தன கட்டுண்டு இருந்தான் வயிற்றினோடு ஆற்றா மகன்

சுருங்குறி வெண்ணெய் தொடு யுண்ட கள்வனை வையம் முற்றும் ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை
மாவலி மாட்டு இரும் குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே

ஆழி நீர் ஆரால் கடைந்து இடப்பட்டது அவன் காண்மின் ஊரா நிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டு உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்
ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி சீரார் கலை யல்குல் சீரடிச் செந்துவர் வாய் வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு
எராரிடை நோவ எத்தனையோர் போதுமாய்
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை வேறார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்ததனை
போரார் வேற்கண்ட மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம் ஒராதவன் போல் உறங்கி யறிவுற்று தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி -அருகிருந்த மோரார் குடமுருட்டி முன் கிடந்த தானத்தே ஒராதவன் போல் கிடந்தானைக் கண்டவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறடித்து இங்கு ஆரார புகுதுவார் ஐயர் இவர் அல்லால் நீராமிது செய்தீர் என்றோர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண விரலோடு தீரா வெகுளியாய்ச் சிக்கென வார்த்தடிப்ப ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்

தான் முன நாள் மின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண் துன்னு பாடல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் தன் வயிறார விழுங்க
கொழும் கயல் கண் மன்னு மடவோர்கள் பற்றி யோர் வான் கயிற்றால் பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்

———————————————————————–

பத்துடை யடிவவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அறிய வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை கழ வேழ் வெண்ணெய் தொடு வுண்ட கலவா என்பன்
உண்டாய் உலகு ஏழ முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும்பீர் சிறிதும் அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே ஆயர் கொழுந்தாய்
அவரால் புடையுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே
தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்க்கு என்றே தொழும் அவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசைமுகற்கும் ஆமோ தரம் அறிய எம்மானை என்னாழி வண்ணனையே
வேயகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆனாயர் தாயவனே என்று தடவும் என் கைகளே
ஆய்ச்சியர் வெண்ணெய் காணில் அவனுண்ட வெண்ணெய் ஈது என்னும் –என் பெண் கொடி ஏறிய பித்தே
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க பையவே நிலையும் வந்து என்நெஞ்சை உருக்குங்களே
ஆய்ச்சி யாகிய வன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்டு அழு கூத்தவப்பன்
நோவ வாய்ச்சி யுரலோடு ஆர்க்க இரங்கிற்றும் –தேவக் கோலப்பிரான் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள்
கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே –
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் –

—————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –10– -பால சேஷ்டிதங்கள– குரவை கூத்து -குடமாட்டம் —- அருளிச் செயல்கள்

August 2, 2015

மூத்தவை காண முது மணல் குன்றேறி கூத்து வந்தாடிக் குழலால் இசை பாடி
சுரி குழலாரோடு நீ போய் கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடுவனோ நம்பீ
குடங்கள் எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல எங்கோவே
குடமாடு கூத்தா வேதப் பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே

கோலக் குரவை கோத்ததும் குடமாட்டும் –முதலா வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என்னுள்ளம் உள்குளிர
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி யுண்டு எனில் அருளே

———————————————————-

கோத்து அங்கு ஆயர்தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன்
குரவை முன்னே கோத்தானை குடமாடு கூத்தன் தன்னை –எம்மானை
குடமாடு கூத்தன் குலவும் இடம் –நாங்கூர் அரிமேய விண்ணகரம்
குடம் கலந்து ஆடிக் குரவை முன் கோத்த கூத்த எம் அடிகள் தம் கோயில்
கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் –தேவ தேவ பிரான் திருக் கோட்டியூரானே
ஆடி யசைந்து ஆய்மடவாரோடு நீ போய் கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
கொட்டாய் பள்ளிக்குட்டி குடமாடி உலகளந்த மாட்டார் பூங்குழல் மாதவனை வர கொட்டாய் பள்ளிக் குட்டி
இளையாரோடும் மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்
கன்றப் பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் காணேடீ
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் ஆகிலும் என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்

————————————————————————————————-

அரவ மடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் குரவை குட முலை மற்குன்றம் கரவின்றி
விட்டு இருத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு எடுத்த செங்கண் அவன்
நீரார் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன் பாரோர்கள் எல்லாம் மகிழப் பறை கறங்க
சீரார் குடம் இரண்டும் ஏந்தி செழும் தெருவே ஆரார எனச் சொல்லி ஆடுமது கண்டு ஏரார் இள
முலையார் என்னையரும் எல்லாரும் வாராயோஎன்றார்க்குச் சென்றேன் என் வல் வினையால்
காரார் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் கலிப்பா கொன்னவிலும் கூத்தனாய்ப் பெயர்த்தும் குடமாடி என்னிவன் என்னப்படுகிற்ற ஈடறவும்

————————————————————–

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
குரவை கோத்த குழகனை மணி வண்ணனைக் குடக் கூத்தனை –இரவு நன்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ –
எனது ஆருயிர் கெழுமிய கதிர்ச் சோதியை மணி வண்ணனைக் குடக் கூத்தனை –தொழுமின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே
கோவலனார் குடக் கூத்தனார் தாளிணை மேலணி தண்ணம் துழாய் என்று நாளு நாள் நைகின்றதால் என்தன் மாதரே
கூத்தர் குடமெடுத்தாடில் கோவிந்தனாம் எனா ஓடும்
மதுவைவார் குழலார் குரவை பிணைந்த அழகும் அது விது வுது வென்னலாவன வல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் முதுவைய முதல்வா –
குரவை யாய்ச்சியரோடு கோத்ததும் –மாய வினைகளையே அலற்றி இரவும் நன்பகலும் தவிர்கிலம் என்ன குறை வெனக்கே
கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா என் அண்ட வானா என்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்– தொண்டடேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே
கோயில் கொண்டான் தன திருக் கடித் தானைத்தை கோயில் கொண்டான் அதனோடு என்னேஞ்சகம்
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே
கூத்தன் கோவலன்
ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு கூத்தனை குருகூர் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த ஆயிரத்துள் இவை
வண் திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே –

—————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –9- -பால சேஷ்டிதங்கள–வேய்ங் குழலூதல் —- அருளிச் செயல்கள் —

August 1, 2015

மூத்தவை காண முது மணல் குன்றேறி கூத்து வந்தாடிக் குழலால் இசை பாடி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் குழலூதி கன்றுகள் மேய்த்துத் தன தோழரோடு கலந்து உடன் வருவான்
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழலூதியிசை பாடிக் குனித்து ஆயரோடு ஆலித்து வருகின்ற வாயப்பிள்ளை அழகு
குழல் தாழ விட்டு தீங்குழல் வாய் மடுத்தூதி யூதி அலங்காரத்தால் வரு மாயப் பிள்ளைஅழகு
நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்கா- ள் இதோர் அற்புதம் கேளீர் -தூ வலம்புரியுடைய திருமால் தூய வாயில்
குழலோசை வழியே கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப வுடலுளவிழ்ந்து எங்கும் காவலும் கடந்து
கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே
கோவிந்தன் குழல் கொடு ஊதின போது மட மயில்களோடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தலவிழ
உடை நெகிழ வோர் கையால் துகில் பற்றி ஒல்கி யோட அரிக்கணோட நின்றனரே –
கோவிந்தன் குழல் கொடு ஊதின போது வாநிலம்படியர் வந்து வந்தீண்டி மனமுருகி மலர்க்கண்கள் பனிப்ப தேனளவு செறி
கூந்தலவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே –
கரும் சிறுக்கன் குழலூதின போது மேனகையோடு திலோத்தமை யரம்பை உருப்பசி யரவர் வெள்கி மயங்கி
வானகம்படியில் வாய் திறப்பின்றி ஆடல்பாடலவை மாறினார் தாமே
மதுசூதனன் வாயில் குழலினோசை செவியைப் பற்றி வாங்க நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தந்தம்
வீணை மறந்து கின்னர மிதுனங்களும் தந்தம் கின்னரம் தொடுகிலோம் என்றனரே
நம்பராமன் இந்நாள் குழலூதக் கேட்டவர்கள் இடருட்டன கேளீர் அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத
வலையால் சுருக்குண்டு நம் பரமன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே
நாகத்தணையான் குழலூத அமர லோகத்தளவும் சென்று இசைப்ப அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்பாடி நிறையப் புகுந்தீண்டி
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே –
சிறு விரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்ப குறு வெயர்ப்புருவம் கூடலிப்பக் கோவிந்தன் குழலூதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்கிச் செவியாட்டகில்லாவே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழலோசை வழியே மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர இரண்டுபாடும் துலுங்காப் புடை பெயரா எழுது சித்திரங்கள் போலே நின்றனவே
ஆயர்பெருமான் அவன் ஒருவன் குழலூதின போது மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும்
வளர் கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தனுடைய கோமள வாயில் குழல்
முழைஞ்சு ளினூடு குமிழ்த்து கொழித்து இழிந்த வமுதப் புனல் தன்னை
அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏற்றினைப் பாடிப்பற -ஆ நிரை மேய்த்தானைப் பாடிப்பற

என்னரங்கத்தின் இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் எழு கமலப் பூ வழகர் எம்மானார்
நெடுமாலூதி வருகின்ற குழலின் தொளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே –

கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழலினி தூதி வந்தாய் எங்களுக்கே யொரு நாள் வந்தூத உன் குழலின் இன்னிசை போதராதே –

—————————————————————–

இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர்

——————————————-

கேயத் தீங்குழ லூதிற்றும் நிறை மேய்த்ததும் –
-மாயக் கோலப் பிரான் தன செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே
ஊதும் அத்தீங்குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடையிடை தன செய் கோல தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழியிசைகள் கொண்டு ஓன்று நோக்கி பேதுறு முகம் செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சற வறப்பாடும் பாட்டை

————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –8–கோவர்த்தன உத்தாரண லீலை –பால சேஷ்டிதங்கள—– அருளிச் செயல்கள் —

July 31, 2015

மலையை எடுத்து மகிழ்ந்து கன்மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
தடம் பெரும் தோளினால் வானவர்கோன் விட வந்த மழை தடுத்து ஆநிரை காத்தானால்
குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்
கோவலர் இந்திரற்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் –வாட்டமிலாப் புகழ் வாசுதேவா –
மாரிப் புகை புணர்த்த பொறு மா கடல் வண்ணன் பொறுத்த மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட மழை வந்து எழு நாள் பெய்து மாத தடுப்ப
மதுசூதனன் எடுத்து மறித்த மலை–கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
அம்மைத் தடம் கண் மட வாய்ச்சியரும் ஆனாயரும் ஆணிரையும் அலறி எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப
இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
அடிவாயுறக் கையிட்டு எழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
ஏனத்துருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
செப்பாடுடைய திருமாலவன் தன செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தடவரை–கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
நாராயணன் முன் முகம் காத்த மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
தாமோதரன் தாங்கு தடவரை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
கொடியேறு செந்தாமரைக் கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில வடிவேறு திருவுகிர் நொந்துமில
மணி வண்ணன் மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
மேகம் சல சல பொழிந்திடக் கண்டு மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன்
குன்று எடுத்து ஆநிரை காத்த வாயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே –
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே -மது சூதா -கண்ணனே –

குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி –
கோவர்த்தனனைக் கண்டக்கால் கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப்- பறித்திட்டவன் மார்வில் எறிந்து என்னழலைத் தீர்வேனே

குன்றினால் குடை கவித்ததும் –
-வென்று சேர் பிள்ளை நல்வினையாட்டம் அனைத்திலும் அங்கு என்னுள்ளம் குளிர –காணுமாறு இனி உண்டு எனில் அருளே –

வெற்பு எடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே —
அன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து –

———————————————————

கன்றி மாரி பொழிந்திடக் கடிந்து ஆநிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன்
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய் மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து
ஆயர் எந்தம்மோடு இனவா நிறை தளராமல் எம்பெருமான் அருள் என்ன அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திரு வல்லிக் கேணி கண்டேனே
மஞ்சுயர் மணிக் குன்றம் ஏந்தி மா மழை காத்து
அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் —-திரு வயிந்திர புரமே
மழை மா முது குன்று எடுத்து ஆயர் தங்கள் கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன் –திருச் சித்ர கூடம்
ஆயர் ஆ நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான் –சித்ர கூடத்து உள்ளானே
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன் குலவும் இடம் –நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே
மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடுமழை காத்த எந்தை –திரு மணிக் கூடத்தானே
குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே –
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமாள்
குன்று குடையா எடுத்த அடிகளுடைய திரு நாமம் நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன் நமோ நாராயணமே
கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன்
நெடும் காற் குன்றம் குடை யொன்று ஏந்தி நிறையைச் சிரமத்தால் நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே —
குன்றால் மாரி தடுத்தவனை —
விறல் வரைத் தோள் புடை பெயர வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே
குன்றால் மாரி பழுதாக்கி
புயலுறு வரை மழை பொழிதர மணி நிரை மயலுற வரை குடை எடுவிய நெடியவர்
ஆ நிரைக்கு அழிவென்று மா மழை நின்று காத்து
உகந்தான் நில மா மகட்கு இனியான் –திருக் கோட்டியூரானே
ஆயர் அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை கொலோ –முன்கை வளை கவர்ந்தாயே
குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை அன்று காத்த அம்மான்
குன்றம் எடுத்து மழை தடுத்து –மால் என்னை மால் செய்தான் –
குன்றம் எடுத்து ஆ நிரை காய்ந்தவன் தன்னை
கல் எடுத்துக் கல் மாரி காத்தாய் என்றும் –
குன்று எடுத்த தோளினானை –அடி நாயேன் நினைந்திட்டேனே —

———————————

மலையால் குடை கவித்து –கார்க்கோடு பற்றியான் கை
வரை குடை தோள் காம்பாக ஆ நிரை காத்து ஆயர் நிரை விடை யேழ் செற்றவாறு என்னே –
குன்று எடுத்துப் பாயும் பனி மறைத்த பண்பாளா –
குன்றம் குடையாக ஆ காத்த கோ –
அவனே அருவரையால் ஆ நிரைகள் காத்தான்
குன்றம் ஒன்றால் புயல்வாயின நிரை காத்த புள்ளூர்த்தி
மால் வரியைக் கிளர்ந்து மரிதரக் கீண்டு எடுத்தான்
குன்று குடையாக ஆ காத்த கோவலனார்
ஆராலே கன்மாரி காத்தது தான்

—————————————————-

வெற்பை ஓன்று எடுத்து ஒற்கம் இன்றியே நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே
பெரு மலை எடுத்தான் பீடுறை கோயில் –மாலிரும் சோலை திருமலை
குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் –பரன் சென்று சேர் திரு வேங்கடமா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே –
மலையை எடுத்துக் கல் மாரி காத்துப் பசு நிரை தன்னை தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச் சொல்லி –
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே –
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இனவா நிரை காத்தேனும் யானே என்னும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும் –எண்ணும் தோறும் என்னெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றதே
குன்றம் ஓன்று ஏந்தியதும் –மாய வினைகளையே அலற்றி இரவும் நன்பகலும் தவிர்கிலம் என்ன குறை வெனக்கே
குன்று ஏந்திக் கோ நிரை காத்தவன் என்னும் –திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திரு மகட்கே –
மேய் நிரை கீழ் புக மா புரள சுனை வாய் நிறை நீர் பிளிரச் சொரிய இன ஆ நிரை பாடி அங்கே யொடுங்க அப்பன் தீ மழை காத்துக் குன்றம் எடுத்தானே –
குன்றம் எடுத்த பிரான் அடியரொடும் ஒன்றி நின்ற சடகோபன்
காத்த எங்கூத்தாவோ மலை ஏந்திக் கல்மாரி தன்னை பூத் த்ண் துழாய் முடியாய் –உன்னை எனக்குத் தலைப் பெய்வனே
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
பாழியம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் –

————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –7—பால சேஷ்டிதங்கள—ஆயர் புத்திரன் -ஆநிரை மேய்த்தவன்- அருளிச் செயல்கள் —

July 27, 2015

ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் –
அரவணையாய் ஆயர் ஏறே
நந்தகோபன் அணி சிறுவா
ஆயர்பாடிக்கு அணி விளக்கே
திரு வாயர் பாடிப் பிரானே தலைநிலாப் போதே யுன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே
ஆநிரை மேய்க்க நீ போதி -அருமருந்தாவது அறியாய் -கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திரு மேனி வாட —தேனில் இனிய பிரான்
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் உடையும் கடியான ஊன்று வெம் பரற்களுடை கடிய வென்காநிடைக்
காலடி நோவக் கன்றின் பின் கொடியனேன் பிள்ளையைப் போக்கினேன் எல்லா பாவமே
என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய
சீலைக் குதம்பை யோருகாது ஒரு காத்து செந்நிற மேல் தோன்றிப்பூ கோலப் பனைக் கச்சும் கூறையுடையும் குளிர்முத்தின் கோடாலமும் காளிப்பின்னே வருகின்ற கடல் வண்ணன்
தென்னரங்கம் மன்னிய சீர் மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வுகந்து உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறு காலே
யூட்டி ஒருப்படுத்தேன் என்னில் மனம் வலியாள் ஒரு பெண்ணில்லை என் குட்டனே முத்தந்தா –
காடுகளோடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு
நீ யுகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே கடிய வெங்கா னிடை கன்றின் பின்
போன சிறுக் குட்டச் செங்கமல வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்
என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்துடன் வந்தாய் –
சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன மார் கொண்டோட ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்றி
ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம் வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன்
யசோதை நல் ஆய்ச்சி தன புத்திரன் கோவிந்தனை கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து –தென் புதுவை விட்டு சித்தன் சொல் கற்றிவை பாட வல்லார் கடல் வண்ணன் கண்ணன் கழல் இணை காண்பர்களே
சுற்றி நின்று ஆயர் தலைகள் இடச் சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து பற்றி நின்று ஆயர் கடைத் தலையே பாடவும் ஆடக் கண்டேன்
ஆயரோடு ஆலித்து வருகின்ற வாயப்பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்கின்றதே
இந்த்ரன் போல் வரும் ஆய்ப்பிள்ளை
ஆயர்பாடியில் வீதியூடே கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம்
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து –ஆயர்கள் எற்றினைப் பாடிப்பற -ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற

கோ நிரை மேய்த்தவனே எம்மானே அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன் –
ஆயர்கள் ஏற்றினை யச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
பெற்றம் மேய்த்து உண்ணும் குளத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –
கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக்கு அணி விளக்கை
பட்டி மேய்ந்ததோர் காரேறு பல தேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –
ஆவினை யன்று உய்யக் கொண்ட வாயர் ஏற்றை அமரரர்கள் தம் தலைவனை யம் தமிழ் இன்பப் பாவினை அவ்விட மொழியை
ஆதியாயன் அரங்கன் அம்தாமரை பேதை மணாளன் தன் பித்தனே
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே –
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் மாய மாய மாயை கொல்
ஆயர் தம் கொழுந்தே
கற்றினம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமின் நீரே
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கொண் அணி அரங்கன் என் அமுது
ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன் -வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவார் நீதி வானத்து அஞ்சுடர் போன்று இவர் ஆர் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும் ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும் காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ –

————————————————————————————————————

ஆநிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் –வண் புருடோத்தமமே —
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே –
ஆநிரை மேய்த்து அன்று அலைகடல் அடைந்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டி கார் நிரை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில் –திரு வெள்ளி யாங்குடி யதுவே
கற்றா மறித்து –பொற்றாமரையாள் கேள்வன்
ஆ மருவி நிரை மேய்த்த அணி யரங்கத்து அம்மானை
ஆயர் கோவாய் நின்றான்
தண் தாமரைக் கண்ணா ஆயா அலை நீருலகு ஏழும் முன்னுண்ட வாயா
தாய் நினைந்த கன்றே யோக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை
அன்று இவ்வையகம்உண்டு உமிழ்ந்திட்ட வாயனை மதிள் கோவலிடைக் கழி யாயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே
கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய் மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
உங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண அந்தியம் போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் –
கற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
இரு நிலத்து எங்கள் தம் ஆயர் அழக அடிகள் அரவிந்தவாயவனே
மற்றாரும் அஞ்சப்போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே
வன் பேய் முலை வாங்கி யுண்ட அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய் எங்கு வேய்ங்குழல் என்னோடாடும் இளமையே
அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உரியார் நறு வெண்ணெய் உண்டுகந்தான்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
ஆ மருவி நிரை மேய்த்த வமரர் கோமான் –

—————————————————————————————————————————–

தள வேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
மனைசேர் ஆயர் குலமுதலே மா மாயனே மாதவா
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுன்னும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை தூய வமுதைப் பருகி பருகி என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே
அயர்வில் அமரரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ
அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
ஆனான் ஆயன் மீனோடு ஏனமும் தானான் என்னில் தானாய சங்கே
ஏபாவம் ஏழுலகும் ஈபாவம் செய்து அருளால் அளிப்பாரார் மா பாவம் விட அரற்குப் பிச்சை பேய் கோபால கோளரி எறன்றியே
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன் நாள் மலராம் அடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே –
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் போர் சக்கரத்து தரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே
இனவான் கன்று மேய்த்தேனும் யானே என்னும் -இனவா நிரை காத்தேனும் யானே என்னும் -இன வாயர் தலைவனும் யானே என்னும்
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே
இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே –
நிரை மேய்த்ததும் –மற்றும் பல மாயக் கோலப் பிரான் தன செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே
அங்கு ஓர் ஆய்க்கூலம் புக்கதும் –ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன விகல் உளதே
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்ணீர் மல்க நிற்குமே
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றி –ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க வரியே
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து ஆயன் அமரர்க்கு அரியேறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் தேசம் திகழும் தன திருவருள் செய்தே
ஆயர்கள் ஏறே அரியே எம்மாயோன்
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ யாமுடை யாயன் தன் மனம் கல்லாலோ
கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து எம்மையிட்டவை மேய்க்கப் போதி
நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே –
ஆ மகிழ்ந்து அங்கவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து

——————————————————————————————————————

நமன் தமரால் ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர்
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் –
அவனே –ஆநிரைகள் காத்தான் –அவனே கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
சேயன் அணியன் சிரியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்றோதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராம் மெய்ஜ்ஞானமில்
ஊரா நிரை மேய்த்து ஊலகெல்லாம் உண்டு உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்

——————————————————————————————————-
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் –
அரவணையாய் ஆயர் ஏறே
நந்தகோபன் அணி சிறுவா
ஆயர்பாடிக்கு அணி விளக்கே
திரு வாயர் பாடிப் பிரானே தலைநிலாப் போதே யுன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை
சீலைக் குதம்பை யோருகாது ஒரு காத்து செந்நிற மேல் தோன்றிப்பூ கோலப் பனைக் கச்சும் கூறையுடையும் குளிர்முத்தின் கோடாலமும் காளிப்பின்னே வருகின்ற கடல் வண்ணன்
-காடுகளோடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு
என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்துடன் வந்தாய் –
சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன மார் கொண்டோட ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்றி
ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம் வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன்
யசோதை நல் ஆய்ச்சி தன புத்திரன் கோவிந்தனை கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து –
சுற்றி நின்று ஆயர் தலைகள் இடச் சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து பற்றி நின்று ஆயர் கடைத் தலையே பாடவும் ஆடக் கண்டேன்
ஆயரோடு ஆலித்து வருகின்ற வாயப்பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்கின்றதே
இந்த்ரன் போல் வரும் ஆய்ப்பிள்ளை
ஆயர்பாடியில் வீதியூடே கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம்
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து –ஆயர்கள் எற்றினைப் பாடிப்பற -ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற

ஆநிரை மேய்க்க நீ போதி -அருமருந்தாவது அறியாய் -கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திரு மேனி வாட —தேனில் இனிய பிரான்
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் உடையும் கடியான ஊன்று வெம் பரற்களுடை கடிய வென்காநிடைக்
காலடி நோவக் கன்றின் பின் கொடியனேன் பிள்ளையைப் போக்கினேன் எல்லா பாவமே
என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய
தென்னரங்கம் மன்னிய சீர் மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வுகந்து உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறு காலே
யூட்டி ஒருப்படுத்தேன் என்னில் மனம் வலியாள் ஒரு பெண்ணில்லை என் குட்டனே முத்தந்தா
நீ யுகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே கடிய வெங்கா னிடை கன்றின் பின்
போன சிறுக் குட்டச் செங்கமல வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்
கோ நிரை மேய்த்தவனே எம்மானே அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன் –
ஆயர்கள் ஏற்றினை யச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
பெற்றம் மேய்த்து உண்ணும் குளத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –
கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக்கு அணி விளக்கை
பட்டி மேய்ந்ததோர் காரேறு பல தேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –
ஆவினை யன்று உய்யக் கொண்ட வாயர் ஏற்றை அமரரர்கள் தம் தலைவனை யம் தமிழ் இன்பப் பாவினை அவ்விட மொழியை
ஆதியாயன் அரங்கன் அம்தாமரை பேதை மணாளன் தன் பித்தனே
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே –
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் மாய மாய மாயை கொல்
ஆயர் தம் கொழுந்தே
கற்றினம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமின் நீரே
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கொண் அணி அரங்கன் என் அமுது
ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன் -வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவார் நீதி வானத்து அஞ்சுடர் போன்று இவர் ஆர் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும் ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும் காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ –
ஆநிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் –வண் புருடோத்தமமே —
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே –
ஆநிரை மேய்த்து அன்று அலைகடல் அடைந்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டி கார் நிரை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில் –திரு வெள்ளி யாங்குடி யதுவே
கற்றா மறித்து –பொற்றாமரையாள் கேள்வன்
ஆ மருவி நிரை மேய்த்த அணி யரங்கத்து அம்மானை
ஆயர் கோவாய் நின்றான்
தண் தாமரைக் கண்ணா ஆயா அலை நீருலகு ஏழும் முன்னுண்ட வாயா
தாய் நினைந்த கன்றே யோக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை
அன்று இவ்வையகம்உண்டு உமிழ்ந்திட்ட வாயனை மதிள் கோவலிடைக் கழி யாயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே
கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய் மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
உங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண அந்தியம் போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் –
கற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
இரு நிலத்து எங்கள் தம் ஆயர் அழக அடிகள் அரவிந்தவாயவனே
மற்றாரும் அஞ்சப்போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே
வன் பேய் முலை வாங்கி யுண்ட அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய் எங்கு வேய்ங்குழல் என்னோடாடும் இளமையே
அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உரியார் நறு வெண்ணெய் உண்டுகந்தான்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
ஆ மருவி நிரை மேய்த்த வமரர் கோமான் –
தள வேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
மனைசேர் ஆயர் குலமுதலே மா மாயனே மாதவா
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுன்னும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை தூய வமுதைப் பருகி பருகி என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே
அயர்வில் அமரரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ
அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
ஆனான் ஆயன் மீனோடு ஏனமும் தானான் என்னில் தானாய சங்கே
ஏபாவம் ஏழுலகும் ஈபாவம் செய்து அருளால் அளிப்பாரார் மா பாவம் விட அரற்குப் பிச்சை பேய் கோபால கோளரி எறன்றியே
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன் நாள் மலராம் அடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே –
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் போர் சக்கரத்து தரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே
இனவான் கன்று மேய்த்தேனும் யானே என்னும் -இனவா நிரை காத்தேனும் யானே என்னும் -இன வாயர் தலைவனும் யானே என்னும்
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே
இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே –
நிரை மேய்த்ததும் –மற்றும் பல மாயக் கோலப் பிரான் தன செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே
அங்கு ஓர் ஆய்க்கூலம் புக்கதும் –ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன விகல் உளதே
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்ணீர் மல்க நிற்குமே
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றி –ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க வரியே
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து ஆயன் அமரர்க்கு அரியேறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் தேசம் திகழும் தன திருவருள் செய்தே
ஆயர்கள் ஏறே அரியே எம்மாயோன்
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ யாமுடை யாயன் தன் மனம் கல்லாலோ
கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து எம்மையிட்டவை மேய்க்கப் போதி
நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே –
ஆ மகிழ்ந்து அங்கவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து
நமன் தமரால் ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர்
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் –
அவனே –ஆநிரைகள் காத்தான் –அவனே கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
சேயன் அணியன் சிரியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்றோதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராம் மெய்ஜ்ஞானமில்
ஊரா நிரை மேய்த்து ஊலகெல்லாம் உண்டு உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்

——————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –6—பால சேஷ்டிதங்கள—கன்று கொண்டு விளங்கனி எறிந்த சேஷ்டிதம் — அருளிச் செயல்கள் —

July 25, 2015

கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறியும் கரு நிற வென் கன்றே –
கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி எறிந்த பரமன்
பாற்கடல் வண்ணா யுன் மேல் கன்றின் உருவாகி மேய்ப்புலத்தே வந்த கள்ளவசுரர் தம்மை சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே
விளங்காய் எறிந்தாய் போலும் என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே
கரும்பார் நீள் வயல் காய் கதிர்ச் செந்நெலைக் கற்றாநிரை மண்டித்தின்ன விரும்பாக் கன்று ஓன்று கொண்டு விளங்கனி வீழ வெறிந்த பிரானே –
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
உலங்குண்ட விளங்கனி போலே உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு
கன்றினால் விள வெறிந்ததும்–ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி யுண்டு எனில் அருளே

———————————————————————————————————————————————-

விளங்கனி முனிந்தாய் வஞ்சனேன் அடியேன் –வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்
விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து –யுலகுண்ட காளை உகந்து இனிது நாடொறும் மருவி யுறை கோயில் –நாங்கூர் வைகுண்ட விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –
கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன்
அம்புருவ வரி நெடும் கண் அலர்மகளை வரையகலத்து அமர்ந்து மல்லல் கொம்புருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர்

————————————————————————————————————————————————————————————–

கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்

——————————————————————————————————————————

குழக்கன்று தீ விழாவின் காய்க்கு எறிந்த –திருமாலே –
தாழ்ந்த விளங்கனிக்குக் கன்று எறிந்து வேற்று உருவாய் ஞாலம் அளந்து அடிக் கீழ்க் கொண்டவன்
கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப் பணிலம் வாய் வைத்துகன்ற்ஹான் பண்டு-

———————————————————————————————————————————————————————————————

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி எறிந்த பரமன்
கரும்பார் நீள் வயல் காய் கதிர்ச் செந்நெலைக் கற்றாநிரை மண்டித்தின்ன விரும்பாக் கன்று ஓன்று கொண்டு விளங்கனி வீழ வெறிந்த பிரானே –
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
உலங்குண்ட விளங்கனி போலே உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு
குழக்கன்று தீ விழாவின் காய்க்கு எறிந்த –திருமாலே –
தாழ்ந்த விளங்கனிக்குக் கன்று எறிந்து வேற்று உருவாய் ஞாலம் அளந்து அடிக் கீழ்க் கொண்டவன்
கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப் பணிலம் வாய் வைத்துகன்ற்ஹான் பண்டு

கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன்
அம்புருவ வரி நெடும் கண் அலர்மகளை வரையகலத்து அமர்ந்து மல்லல் கொம்புருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர்

விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து –யுலகுண்ட காளை உகந்து இனிது நாடொறும் மருவி யுறை கோயில் –நாங்கூர் வைகுண்ட விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –

கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறியும் கரு நிற வென் கன்றே –
கன்றினால் விள வெறிந்ததும்–ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி யுண்டு எனில் அருளே

பாற்கடல் வண்ணா யுன் மேல் கன்றின் உருவாகி மேய்ப்புலத்தே வந்த கள்ளவசுரர் தம்மை சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே
விளங்காய் எறிந்தாய் போலும் என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே

கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
விளங்கனி முனிந்தாய் வஞ்சனேன் அடியேன் –வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்

———————————————————————————————————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –5—பால சேஷ்டிதங்கள—கடம்பை ஏறிக் காளிய நர்த்தன விருத்தாந்தம் – அருளிச் செயல்கள் —

July 24, 2015

கானக மா மடுவில் காளியின் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர வென் சிறுவா
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படம்படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு
உடம்பை யசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்
காய நீர் புக்குக் கடம்பேறி காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி–வித்தகனாய் நின்ற ஆயன்
காளியன் என்னும் தீப் பப்பூடுகள் அடங்க வுழக்கி கானகம் படியுலாவிக் கரும் சிறுக்கன்
அஞ்சுடர் ஆழி யுன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்து இருந்தேன் –
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன் –தூ மணி வண்ணன் –
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன்
குருந்தம் ஓன்று ஒசித்தானொடும் சென்று கூடியாடி விழாச் செய்து
பொல்லாங்கு ஈதென்று கருதாய் பூங்குருந்தம் ஏறி இருத்தி –
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து வாய்த்த காளியன் மேல் நடமாடிய கூத்தனார்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிறுத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் –
காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும்
அங்கு என்னுள்ளம் உள் குளிர ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி யுண்டெனில் அருளே
பொய்கைவாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய் ஆடரவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே –

——————————————————————————————————————————————————————-

வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப தளைத்த தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த வெயிற்று அழல் நாகத்த்கு உச்சியில் நின்றதுவாட திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடத்து உள்ளானே –
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்துத் தடம் தாமரைப் பொய்கை புக்கான் இடம் தான் நாங்கூர் –மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே
தலைக்கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் இளைக்கத் திளைத்திட்டு
அதன் உச்சி தன மேல் அடி வைத்த அம்மான் இடம் –நாங்கூர் –மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே
பல்லவம் திகழ் பூம் கடம்பேறி அக்காளியன் பண வரங்கில் ஒல்லை வந்துறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர் கோன் உறை கோயில் –வண் புருடோத்தமமே
பூம் குருந்து ஒசித்து –எந்தை நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
படவர வுச்சி தன் மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து –நான்கை மேய கடவுளே காவளம் தண் பாடியாய்-
கடு விடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன்னலக் கழித்து அவன் தன் படமிறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில் –திரு வெள்ளி யம் குடியதுவே
பாய்ந்தான் காளியன் மேல் -நறையூர் நின்ற நம்பியே
பூம் குருந்து ஒசித்து –அடியேனை யாளுகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான் –திருக் கோட்டியூரானே-
பூம் குருந்தம் சாய்த்து துள்ளி விளையாடி
அச்சம் தினைத்தினை இல்லை இப்பிள்ளைக்கு -ஆண்மையும் சேவகமும் உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான்
இன்று போய் பச்சிலைப் பூம் கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிரவாய் நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –
பூம் குருந்து ஒசித்து -இவ்வாயன் வாய் ஏங்கு வேய்ங்குழல் என்னோடாடும் இளமையே –

———————————————————————————————————————————————————————————

உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததுவும் உட்பட மற்றும் பல அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி இரவு நன் பகலும் தவிர்கிலம் என்ன குறை நமக்கே
உயர்கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல அகல் கொள் வையம் அளந்த மாயன் என்னப்பன்
தன் மாயங்களே பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப்பரிப்பே
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே

——————————————————————————————————————————————————————-

பூம் குருந்தம் சாய்த்தனவும் காற்கொடு பற்றியான் கை –
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் குரவை குட முலை மற்குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு எடுத்த செங்கண் அவன் –
பூம் குருந்தம் சாய்த்து –சூழ் அரவப் பொங்கணையான் தோள்
அரவாட்டி –கோ பின்னுமானான் குறிப்பு
ஓராயிரம் பண வெங்கோ வியல் நாகத்தை வாராய் எனக்கு என்று மற்றதன் மத்தகத்து சீரார் திருவடியால் பாய்ந்தான் –

—————————————————————————————————————————————————————————-

குருந்தம் ஓன்று ஒசித்தானொடும் சென்று கூடியாடி விழாச் செய்து
பொல்லாங்கு ஈதென்று கருதாய் பூங்குருந்தம் ஏறி இருத்தி –
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படம்படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு உடம்பை யசைத்தானால்
கானக மா மடுவில் காளியின் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர வென் சிறுவா
காய நீர் புக்குக் கடம்பேறி காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி–வித்தகனாய் நின்ற ஆயன்
காளியன் என்னும் தீப் பப்பூடுகள் அடங்க வுழக்கி கானகம் படியுலாவிக் கரும் சிறுக்கன்
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன் –தூ மணி வண்ணன் –
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன்
குருந்தம் ஓன்று ஒசித்தானொடும் சென்று கூடியாடி விழாச் செய்து
பொய்கைவாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய் ஆடரவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே –

வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப தளைத்த தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த வெயிற்று அழல் நாகத்த்கு உச்சியில் நின்றதுவாட திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடத்து உள்ளானே –
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்துத் தடம் தாமரைப் பொய்கை புக்கான் இடம் தான் நாங்கூர் –மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே
தலைக்கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் இளைக்கத் திளைத்திட்டு
அதன் உச்சி தன மேல் அடி வைத்த அம்மான் இடம் –நாங்கூர் –மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே
பல்லவம் திகழ் பூம் கடம்பேறி அக்காளியன் பண வரங்கில் ஒல்லை வந்துறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர் கோன் உறை கோயில் –வண் புருடோத்தமமே
பூம் குருந்து ஒசித்து –எந்தை நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
படவர வுச்சி தன் மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து –நான்கை மேய கடவுளே காவளம் தண் பாடியாய்-
கடு விடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன்னலக் கழித்து அவன் தன் படமிறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில் –திரு வெள்ளி யம் குடியதுவே
பாய்ந்தான் காளியன் மேல் -நறையூர் நின்ற நம்பியே
பூம் குருந்து ஒசித்து –அடியேனை யாளுகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான் –திருக் கோட்டியூரானே-
பூம் குருந்தம் சாய்த்து துள்ளி விளையாடி

பூம் குருந்தம் சாய்த்தனவும் காற்கொடு பற்றியான் கை –
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் குரவை குட முலை மற்குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு எடுத்த செங்கண் அவன் –
பூம் குருந்தம் சாய்த்து –சூழ் அரவப் பொங்கணையான் தோள்
அரவாட்டி –கோ பின்னுமானான் குறிப்பு
ஓராயிரம் பண வெங்கோ வியல் நாகத்தை வாராய் எனக்கு என்று மற்றதன் மத்தகத்து சீரார் திருவடியால் பாய்ந்தான் –

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து வாய்த்த காளியன் மேல் நடமாடிய கூத்தனார்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிறுத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் –
அஞ்சுடர் ஆழி யுன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்து இருந்தேன் –
அச்சம் தினைத்தினை இல்லை இப்பிள்ளைக்கு -ஆண்மையும் சேவகமும் உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான்
இன்று போய் பச்சிலைப் பூம் கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிரவாய் நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –
பூம் குருந்து ஒசித்து -இவ்வாயன் வாய் ஏங்கு வேய்ங்குழல் என்னோடாடும் இளமையே –

உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததுவும் உட்பட மற்றும் பல அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி இரவு நன் பகலும் தவிர்கிலம் என்ன குறை நமக்கே
உயர்கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல அகல் கொள் வையம் அளந்த மாயன் என்னப்பன்
தன் மாயங்களே பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப்பரிப்பே
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே

காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும்
அங்கு என்னுள்ளம் உள் குளிர ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி யுண்டெனில் அருளே

————————————————————————————————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –4—பால சேஷ்டிதங்கள—– மா மருதம் இறுத்த விருத்தாந்தம் அருளிச் செயல்கள் —

July 23, 2015

பெருமா வுரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு இரு மா மருதம் இறுத்த விப்பிள்ளை குருமா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்வு இருந்தவா காணீரே –
ஒருங்கு ஒத்த விணை மருதம் உன்னிய வந்தவரை
மாய மருதும் இறுத்தவன் -காயா மலர் வண்ணன்
கள்ளச் சகடு மருதும் கலக்கழிய வுதை செய்த பிள்ளை யரசே
பொய்ம்மாய மருதாண வசுரரைப் பொன்று வித்தின்று நீ வந்தாய் -இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் அம்மா வுன்னை யறிந்து கொண்டேன் –
மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து –வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏற்று –
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன்
கருளுடைய பொழில் மருதும் கதக் களிறும் பிளம்பனையும் கடிய மாவும் உருளுடைய சகடரையும் மல்லரையும் வுடைய விட்டோசை கேட்டான்
அற்றவன் மருதம் முறிய நடை கற்றவன் –மதுரைப்பதி கொற்றவன்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் கொன்றவன்
மருப்பு ஒசித்த மாதவன் தன வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே
போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம் சாய்த்தீர்த்தான் கைத் தலத்தே ஏறிக் குடி கொண்டு

————————————————————————————————————————————————————

எண்டிசை யோரும் வணங்க இணை மருதூடு நடந்திட்டு அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடு திண் திரல் பாட வருவான்
மருதிற நடந்து —
இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில்
மருதம் சாய்த்த மாலதிடம் —புள்ளம் பூதம் குடி தானே
இணை மலி மருதினொடு எருதிற இகல் செய்து —
மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய் வித்தகனே –
மாயமான் மாயச் செற்று மருதிற நடந்து –

——————————————————————————————————————————————————————-

பொருந்திய மா மருதினிடை போய எம் பெரும்தகாய் உன் கழல் காணிய பேதுற்று வருந்தி நான்
வாசகமாலை கொண்டு உன்னையே இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே –
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே -தேனே -இன்னமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல
மருதிடை போய் முதல் சாய்த்து –தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரான்
மருதிடை போயினாய்–என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -மருதிடை போய் –கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் –

——————————————————————————————————————————————————

புணர் மருதினூடு போய்ப் –சூழ் அரவப் பொங்கணையான் தோள்
நீ யன்றே மா மருதினூடு போய் தேவாசுரம் பொருதாய் செற்று –
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் இலங்கா புரம் எரித்தான் எய்து –
பகடுந்தி கீளா மருதிடை போய் –மாதுகந்த மார்வ ர்
பெற்றம் –பிணை மருதம் –ஊடு போய்–உகந்தான் பண்டு –

———————————————————————————————————————————————–

ஒருங்கு ஒத்த விணை மருதம் உன்னிய விப்பிள்ளை குருமா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்வு இருந்தவா காணீரே
மாய மருதும் இறுத்தவன் -காயா மலர் வண்ணன் –வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏறு –
கள்ளச் சகடு மருதும் கலக்கழிய வுதை செய்த பிள்ளை யரசே
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன் -இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில்
கருளுடைய பொழில் மருதும் கதக் களிறும் பிளம்பனையும் கடிய மாவும் உருளுடைய சகடரையும் மல்லரையும் வுடைய விட்டோசை கேட்டான்
அற்றவன் மருதம் முறிய நடை கற்றவன் –மதுரைப்பதி கொற்றவன்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் கொன்றவன்
-மாயமான் மாயச் செற்று மருதிற நடந்து -மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய் வித்தகனே
புணர் மருதினூடு போய்ப் –சூழ் அரவப் பொங்கணையான் தோள்
நீ யன்றே மா மருதினூடு போய் தேவாசுரம் பொருதாய் செற்று –
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் இலங்கா புரம் எரித்தான் எய்து –
பகடுந்தி கீளா மருதிடை போய் –மாதுகந்த மார்வ ர்
பெற்றம் –பிணை மருதம் –ஊடு போய்–உகந்தான் பண்டு –

மருதிடை போய் முதல் சாய்த்து –தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரான்
மருதிடை போயினாய்–என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -மருதிடை போய் –கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் –

பொய்ம்மாய மருதாண வசுரரைப் பொன்று வித்தின்று நீ வந்தாய் -இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் அம்மா வுன்னை யறிந்து கொண்டேன் –
பொருந்திய மா மருதினிடை போய எம் பெரும்தகாய் உன் கழல் காணிய பேதுற்று வருந்தி நான்
வாசகமாலை கொண்டு உன்னையே இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே –
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே -தேனே -இன்னமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல
போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம் சாய்த்தீர்த்தான் கைத் தலத்தே ஏறிக் குடி கொண்டு வெண் சங்கே
மருப்பு ஒசித்த மாதவன் தன வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி –

—————————————————————————————————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –3—பால சேஷ்டிதங்கள—-சகடா ஸூர சாடியருளிய வைபவம் – அருளிச் செயல்கள் —

July 21, 2015

நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்
சேப்பூண்ட சாடு சிதறி
கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கழிய பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று அஞ்சினேன் காண் அமரர் கோவே
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து –
பேயின் முலையுண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர்க்கண்ணன் கண்ணன்
கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய வுதை செய்த பிள்ளை யரசே -நீ பேயைப் பிடித்து முலை யுண்ட பின்னை -உள்ளவாறு ஒன்றும் அறியேன் –
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
சாடு சாடு பாதனே

——————————————————————————————————————

பாய்ந்தானைத் திரி சகடம் பாரி வீழப் பாலகனாய் ஆலிலையில் பள்ளியின்ப மேய்ந்தானை –
நற்சகடம் இறுத்து அருளும் தேவனவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
உருள் -சகடும் உடையச் செற்ற –நெடியோன்
திரிகால் சகடம் சினம் அழித்—தானூர் கண்ணபுரம்
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை உரப்பபுவது அஞ்சுவனே –
கருளக் கொடி யொன்றுடையீர் தனிப்பாகீர் உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர் –இதுவென் இதுவென்

———————————————————————————————————————-
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான் –என்னை நிறை கொண்டான்
சகடம் பாய்ந்து –தொண்டை வாய்ப்பிரானை எந்நாள் கொலோ யாமுருகின்றது தோழீ
பேர்ந்து ஓர் சாடு இறச் செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் –என் நெஞ்சை உருக்கும் –
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே
=தளர்ந்தும் முறிந்தும் சகட வசுரருடல் வேறா பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே
———————————————————————————————————————
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி ..வீங்கோத வண்ணர் விரல் —
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் –காவலனே
வலி சகடம் செற்றாய் –
தாளால் சகடம் உதைத்து —அங்கோர் மாதுகந்த மார்வற்கு பெண்ணகலம் காதல் பெரிது
அடிச் சகடம் சாடி –கோப் பின்னுமானான் குறிப்பு –

————————————————————————————————————————————

நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்-கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கழிய
கடிய சகடம் உதைத்து –சேப்பூண்ட சாடு சிதறி -சாடு சாடு பாதனே
நற்சகடம் இறுத்து அருளும் தேவனவன்-உருள் -சகடும் உடையச் செற்ற –நெடியோன்
திரிகால் சகடம் சினம் அழித்தானூர் கண்ணபுரம்-கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலை-
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி ..வீங்கோத வண்ணர் விரல் –
அடிச் சகடம் சாடி –கோப் பின்னுமானான் குறிப்பு
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் –காவலனே வலி சகடம் செற்றாய்
=தளர்ந்தும் முறிந்தும் சகட வசுரருடல் வேறா பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே

கருளக் கொடி யொன்றுடையீர் தனிப்பாகீர் உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர் –இதுவென் இதுவென்
பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று அஞ்சினேன் காண் அமரர் கோவே
சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை உரப்பபுவது அஞ்சுவனே –

பேயின் முலையுண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர்க்கண்ணன் கண்ணன்
பிள்ளை யரசே -நீ பேயைப் பிடித்து முலை யுண்ட பின்னை -உள்ளவாறு ஒன்றும் அறியேன் –
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான் –என்னை நிறை கொண்டான்
சகடம் பாய்ந்து –தொண்டை வாய்ப்பிரானை எந்நாள் கொலோ யாமுருகின்றது தோழீ
பேர்ந்து ஓர் சாடு இறச் செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் –என் நெஞ்சை உருக்கும் –
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே
தாளால் சகடம் உதைத்து —அங்கோர் மாதுகந்த மார்வற்கு பெண்ணகலம் காதல் பெரிது

———————————————————————————————————————————————————————————-
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –2—பால சேஷ்டிதங்கள—-பூதனா சம்ஹாரம் – அருளிச் செயல்கள் —

July 19, 2015

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த விப்பிள்ளை
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட அஞ்சன வண்ணனை
வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள வஞ்ச முலைப் பேயின் நஞ்சமுது உண்டவனே
பேய் முலை உண்டானே சப்பாணி
பேய்ப்பால்முலையுண்ட பித்தனே -கேசவ நம்பீ
பேய்ச்சி முலை யுண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என்நெஞ்சம் ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் –
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே –
பேயின் முலை யுண்ட பிள்ளையிவன் முன்னம்
பிள்ளை அரசே நீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன்
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர் துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்
வன் பேய் முலை யுண்டதோர் வாயுடையன் –
பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க வல்லானை
பேய் முலை நஞ்சுண்டு
தாய் முலைப் பாலிலமுதிருக்கத் தவழ்ந்து தளர் நடையிட்டுச் சென்று பேய் முலை வாய் வைத்து நஞ்சை யுண்டு பித்தன் என்றே பிறர் எச நின்றாய்
வஞ்சமேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வறண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க நஞ்சமார் தரு சுழி முலை யந்தோ சுவைத்து நீ யருள் செய்து வளர்ந்தாய்
கள்ளதாய பேய்மகள் வீட வைத்த வெய்ய கொங்கை ஐயபாலமுது செய்து ஆடகக் கை மாதர்வாய் அமுதுண்டது என் கொலோ –
ஆய்ச்சி பாலையுண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் யுண்டு பின் பேய்ச்சி பாலை யுண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய் அஞ்சனத்த வண்ணனாய ஆதி தேவன் அல்லையே
————————————————————————————————————————————————————–
பேயிடைக்கிருந்து வந்த மற்றவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற தாயிடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்
தாயாய் வந்த பேயுயிரும் தயிரும் விழுதும் உடனுண்ட வாயான் –
வன் பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரானவன் பெருகுமிடம்
வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேய் அலறி மண் சேர நஞ்சமர் முலையோடு உயிர் செக வுண்ட நாதனைத் தானவர் கூற்றை
அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனைக்
பேய்த்தாயை முலை யுண்ட பிள்ளை தன்னைப்
பஞ்சிச் சிறு கூழைஉருவாகிய மருவாத வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல்
பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசிதுவென்றால்
இழையாடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு
பண்ணேர் மொழி யாய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க் கழுதுக்கு இரங்காது அவள் தன் உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தானிடம் –
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவு கொடு மாள வுயிருண்டு
வஞ்சனையால் வந்தவள் தனுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெய் அமுதுண்டு –
பொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி பெற்றெடுத்த தாய் போலே மடுப்ப ஆரும் பேணா நஞ்சுண்டுகந்த பிள்ளை கண்டீர் –
வஞ்ச மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும்
பேய்ச்சி முலையுண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன்
கலையுடுத்த வகல்குல் வன் பேய் மகள் தாயென முலை கொடுத்தாள் உயிருண்டவன் வாழிடம் என்பாரால்-
பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயனாய் -மாலாய்
பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆருயிருண்டு –
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சாப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப்பின்னே இலைத்தடத்த குழலூதி
மண் சேர முலை யுண்ட மா முதலாய் வானவர் தம் கோவே என்று –
வஞ்சனைப் பேய் முலையோடு உயிர் வாய் மடுத்த்துண்டானை
மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள யுயிர் வவ்விய வெம்மாயோன் காண்மின்
பேய்முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையை தெள்ளியார் வணங்கப்படும் தேவனை -மாயனை –
பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்ததுண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை அமுதத்தினை நாதனை -நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை
நஞ்சு தோய் கொங்கை மேல் அங்கை வாய் வைத்து அவள் நாளை யுண்ட மஞ்சனார் –
தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க வன் மகனாயவளாவி வாங்கி முலையுண்ட நம்பீ
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே
பேய்ச்சி முலை யுண்ட பிள்ளாய்
யாயும் பிறரும் அறியாத யாமத்து மாய வலவைப் பெண் வந்து முலை தர பேய் என்று அவளைப் பிடித்து உயிரை யுண்ட வாயவனே
நள்ளிருள் வந்த பூதனை மாள –
அங்கோர் தாயுருவாகி வந்தவள் கொங்கை நஞ்சுண்ட கோயின்மை கொலோ
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
—————————————————-

மாயோம் தீய வலவலைப் பெரு மா வஞ்சப் பேய் வீய தூய குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் வானோர் தனித்தலைவன்
ஒக்கலை வைத்து முலைப்பால் உன் என்று தந்திட வாங்கி செக்கஞ்செக வன்றவள் பால் உயிர் செக வுண்ட பெருமான் –
மட நெஞ்சால் குறைவில்லா மகள் தாய் செய்தொரு பேய்ச்சி விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பேய்முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான் –
பேய் முலையுண்டு –தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரானை எந்நாள் கொலோ யாமுருகின்றது தோழீ-
வஞ்சப் பெண்ணை சாவப் பாலுண்டதும் –தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே
பேய் முலை நஞ்சு ஊணாக வுண்டான் -உருவோடு பேரல்லால் காணா கண் கேளா செவி
முகில் வண்ணா நின்னுருகிப் பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண் ஆய்த்தாய் முலை தந்தவாறு –
முலை உண்ட செங்கண் அவன்
உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை அகம் குளிர உன் என்று அளாவி உகந்து முலை யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும் அலையோ பண்பால் ஆனமையால் அன்று –
அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி யுனக்கு இரங்கி -நின்று முலை தந்த இந்நீர்மைக்கு அன்று வரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து
——————————————————————————————–

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய் தெருளா மொழியான்
பேய் முலை யுண்டு யுகந்தான் பண்டு
நலமே வலித்து கொல் நஞ்சூட்டு வன் பேய் நிலமே புரண்டு போய் வீழ சலமே தான் வெம் கொங்கை யுண்டான் மீட்டு ஆய்ச்சி யூட்டுவான் தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு –
பேய் முலை நஞ்சுண்டு–கோப் பின்னுமானான்
தீப்பால பேய்த்தாய் உயிர் காலாய்ப் பாலுண்டு அவளுயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி –

——————————————————————————————————————————————————————————————

வஞ்சனையால் வந்த-பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த விப்பிள்ளை
அஞ்சன வண்ணன் – கொங்கை நஞ்சுண்ட கோயின்மை
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரான்
வானவர் தாம் மகிழ வஞ்ச முலைப் பேயின் நஞ்சமுது உண்டவன்
பேய்ப்பால்முலையுண்ட பித்தன் -கேசவ நம்பீ-மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயன்
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர் துள்ளச் சுவைத்தான் -வன் பேய் முலை யுண்டதோர் வாயுடையன் –
பிள்ளை அரசே நீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன்
பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க வல்லான்
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய் அஞ்சனத்த வண்ணனாய ஆதி தேவன் அல்லையே
தாயாய் வந்த பேயுயிரும் தயிரும் விழுதும் உடனுண்ட வாயான் –
பேய்ச்சி முலையுண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன்
நஞ்சு தோய் கொங்கை மேல் அங்கை வாய் வைத்து அவள் நாளை யுண்ட மஞ்சனார் –
யாயும் பிறரும் அறியாத யாமத்து மாய வலவைப் பெண் வந்து முலை தர பேய் என்று அவளைப் பிடித்து உயிரை யுண்ட வாயவனே
வன் பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான்-தீப்பால பேய்த்தாய் உயிர் காலாய்ப் பாலுண்டு அவளுயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி –
வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேய் அலறி மண் சேர நஞ்சமர் முலையோடு உயிர் செக வுண்ட நாதன் -தானவர் கூற்று -பேய் முலை நஞ்சுண்டு–கோப் பின்னுமானான்
உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை அகம் குளிர உன் என்று அளாவி உகந்து முலை யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும் அலையோ பண்பால் ஆனமையால் அன்று
மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள யுயிர் வவ்விய வெம்மாயோன் காண்மின்
பேய்முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையை தெள்ளியார் வணங்கப்படும் தேவனை -மாயனை –
பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்ததுண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை அமுதத்தினை நாதனை -நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பி
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சாப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப்பின்னே இலைத்தடத்த குழலூதி
கலையுடுத்த வகல்குல் வன் பேய் மகள் தாயென முலை கொடுத்தாள் உயிருண்டவன் –
பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயனாய் -மாலாய்
பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆருயிருண்டு –
பொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி பெற்றெடுத்த தாய் போலே மடுப்ப ஆரும் பேணா நஞ்சுண்டுகந்த பிள்ளை
பண்ணேர் மொழி யாய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க் கழுதுக்கு இரங்காது அவள் தன் உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான்
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவு கொடு மாள வுயிருண்டு

கள்ளதாய பேய்மகள் வீட வைத்த வெய்ய கொங்கை ஐயபாலமுது செய்து ஆடகக் கை மாதர்வாய் அமுதுண்டது என் கொலோ
பேயிடைக்கிருந்து வந்த மற்றவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற தாயிடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்

முகில் வண்ணா நின்னுருகிப் பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண் ஆய்த்தாய் முலை தந்தவாறு –
நலமே வலித்து கொல் நஞ்சூட்டு வன் பேய் நிலமே புரண்டு போய் வீழ சலமே தான் வெம் கொங்கை யுண்டான் மீட்டு ஆய்ச்சி யூட்டுவான் தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து
தாய் முலைப் பாலிலமுதிருக்கத் தவழ்ந்து தளர் நடையிட்டுச் சென்று பேய் முலை வாய் வைத்து நஞ்சை யுண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
பேய்ச்சி முலை யுண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என்நெஞ்சம் ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் –
பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய் தெருளா மொழியான்

அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி யுனக்கு இரங்கி -நின்று முலை தந்த இந்நீர்மைக்கு அன்று வரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து

உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
ஆய்ச்சி பாலையுண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் யுண்டு பின் பேய்ச்சி பாலை யுண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு –
வஞ்சனையால் வந்தவள் தனுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெய் அமுதுண்டு –

பேய்முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான் –
பேய் முலையுண்டு –தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரானை எந்நாள் கொலோ யாமுருகின்றது தோழீ-
பேய் முலை நஞ்சு ஊணாக வுண்டான் -உருவோடு பேரல்லால் காணா கண் கேளா செவி
வஞ்சப் பெண்ணை சாவப் பாலுண்டதும் –தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே –

——————————————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –