Archive for the ‘நான் முகன் திரு அந்தாதி’ Category

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -1-12–

February 1, 2015

ஸ்ரீ சர்வேஸ்வரன் –
லோக த்ருஷ்டியாலும் –
வேத த்ருஷ்டியாலும் –
பக்தி த்ருஷ்டியாலும்
தானே காட்டவும் –
மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –

திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து
தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்
வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே –
ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு
க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹச்யத்தை உபதேசித்து அருளுகிறார் –

சதுர் முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத்வங்களாலும்
அசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான எம்பெருமானுடைய பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்-
ஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன்
இத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று
பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

———————————————–

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

பதவுரை

நாராயணன்–பரம புருஷனானவன்
நான்முகனை–பிரமனை
படைத்தான்–ஸ்ருஷ்டித்தான்
நான்முகனும்–அந்தப் பரமனும்
தான்–தானே
முகம் ஆய்–முக்கியனாயிருந்து
சங்கரனை–சிவனை
படைத்தான்–ஸ்ருஷ்டித்தான்
ஆழ் பொருளை–(ஆகவே, முழு முதற் கடவுள் ஸ்ரீமந் நாராயணனே யென்கிற) ஆழ்ந்த அர்த்தத்தை
யான்–அடியேன்
முகம் ஆய்–முக்கியமாக
அந்தாதி மேல் இட்டு–இத் திருவந்தாதி மூலமாக
அறிவித்தேன்–உங்கட்கு அறிவிக்கத் தொடங்குகின்றேன்
ஸம்ஸாரம் வர்த்தகம் அவர்களது -அதனால் நான்முகன் முக்யர்
நிவர்த்தகம் இவரது -இதனால் இவர் முக்யர்
நீர்–நீங்கள்
தேர்ந்து–ஆராய்ந்து
சிந்தாமல் கொள்மின்–(இவ்வர்த்தத்தைக் குறையற நெஞ்சில் தேக்கிக் கொள்ளுங்கள்.

நான் முகனை நாராயணன் படைத்தான் -இத்யாதி
ப்ரஹ்மாவை சர்வேஸ்வரன் சிருஷ்டித்தான் –
ஈஸ்வரனும் அறிய வேண்டாதே ப்ரஹ்மா தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –

அப்படி நானும் சொல்ல வல்லேனாய் அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –

ஆழ்  பொருள்
மங்கிப் போகிற பொருள் -என்றுமாம் –

சிந்தாமல் -இத்யாதி
நீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-

————————————————————————–

ஸ்ருதி பிரக்ரியையால்  நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன்
ப்ரஹ்மாதிகள்  கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் –

இதில் –இதிஹாச பிரக்ரியையால்
சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு

ப்ரஹ்மாதி களுக்கு   சிருஷ்டிக்கு அப்பால் உள்ள நன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் -என்கிறார்

தத்தவம் ஜிஜ்ஞா சமாநாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை தத்த்வமேகோ மஹா யோகீ
ஹரிர் நாராயண ஸ்ம்ருத-பார சாந்தி -357-88-என்கிற
ஸ்லோகத்திற் படியே ஈஸ்வரத்வம் சொல்லுகிறதாகவுமாம்-

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2-

பதவுரை

தேருங்கால்–“ஆராயுமிடத்து.
தேவன் ஒருவனே என்று–பர தெய்வமாக வுள்ளவன் ஸ்ரீமந் நாராயணனொருவனே“ என்று
உரைப்பர்–(வியாஸர் முதலிய மஹர்ஷிகள்) சொல்லுவர்,
அவன் பெருமை–அந்த ஸ்ரீமந் நாராயணனுடைய பெருமையை
ஆரும் அறியார்–ஒருவரும் அறியமாட்டார்
ஒரும் பொருள் முடிவும் இத்தனையே–(வேத வேதாங்கங்களில்) ஆராயப்படும் பொருளின் நிர்ணயமும் இவ்வளவேயாம்
எத் தவம் செய்தார்க்கும் –(எப்படிப்பட்ட ஸாதநாநுஷ்டா நாங்களைப் பண்ணினவர்கட்கும்
முடிவது–முடிவில் பலனையளிப்பது
ஆழியான் பால் அருள்–எம்பெருமானிடத்து உண்டாகும் கிருபையேயாம்.

தேரும் இத்யாதி –
நிரூபித்தால் ஈஸ்வரன் ஒருவனே என்று சொல்லா நிற்பார்கள் –
எத்தனையேனும் அளவுடையாரும் அவன் பெருமையை யுள்ளபடி அறியார்கள் –
ஆராயப் புக்கால் அர்த்தத்தின் உடைய நிர்ணயமும் இதுவே –
ஏழு ஏழு  படி இங்கனே தபஸ் ஸூ பண்ணினாருக்கும்
எம்பெருமான் பிரசாதத்தால் அல்லது பல பர்யந்தமாய் முடியாது-

————————————————————————–

ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக அவன் கண் வளர்ந்து அருளின இடங்களிலும்
முட்டக் காண வல்லார் இல்லை –
நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் -என்கிறார்-

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3-

பதவுரை

(எம்பெருமான்)
பாலில்–திருப்பாற் கடலில்
கிடந்ததுவும்–சயனித்தருளு மழகையும்
அரங்கம்–திருவரங்கம் பெரிய கோயிலில்
மேயதுவும்–பொருந்தி வாழ்வதையும்
பண்டு–முன்பொருகால்
ஆலில்–ஆலந்தளிரில்
துயின்றதுவும்–பள்ளி கொண்ட விதத்தையும்
ஆர் அறிவார்–யார் அறிய வல்லார்?
ஞாலத்து ஒரு பொருளை–இப் பூமியில் வந்தவதரித்த விலக்ஷண புருஷனாயும்
வானவர் தம் மெய் பொருளை–நித்ய ஸூரிகளுக்குப் பிரத்யக்ஷமாக அநுபவிக்கத் தகுந்த வஸ்து வாயும்
அப்பில் அரு பொருளை– (ஸலகலத்துக்கும் காரணமாக முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட) ஜலதத்வத்தினுள்
கண் வளரும் அரும் பொருளாயுமிருக்கின்ற எம்பெருமானை
யான் அறிந்த ஆறு–அடியேன் அறிந்த விதம் என்ன!

பாலில் இத்யாதி –
ப்ரஹ்மாதிகளுக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
பண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-

சம்சாரிகளுக்கு ஸூலபனாய் லோயிலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-

ஜகத்தை பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்துக் கொண்டு
வட தளத்திலே கண் வளர்ந்து அருளின படியையும்-அறிய வல்லார் -இல்லை –

சம்சாரத்திலே திருவவதாரம் பண்ணிக் கோயில்களிலே யுகந்தருளி இருப்பதும் செய்து
ஏகார்ணவத்தில் கண் வளர்ந்து  அருளின பரம காரணனை நான் அறிந்த படி –

ஞாலத்தொரு பொருளை -என்றது
கார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும்
ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே
அத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை -என்றுமாம் –

————————————————————————–

சர்வேஸ்வரனோடு ஒக்க  வேறு சிலரை ஈஸ்வரர்களாகச் சொல்லுவதே என்று
ருத்ராதிகள் யுடைய ப்ரஸ்துதமான அநீஸ்வரத்தை அருளிச் செய்கிறார் –

பிரமாண உபபத்தி களாலே நிர்ணயித்து
என்னை யடிமை கொண்ட எம்பெருமானைத் திரளச் சொன்னேன்
-என்கிறார் என்றுமாம் –

ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே -வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4-

பதவுரை

ஆறு–கங்கா நதியை
சடை–தனது ஜடா மண்டலத்திலே
கரந்தான்–மறையச் செய்து தாங்கிக் கொண்டிருக்கின்ற ருத்ரன்
அண்டர் கோன் தன்னோடும்–தேவாதி தேவனான ஸர்வேஸ் வரனோடு
கூறு உடையன் என்பதுவும்–ஸாம்யமுடையவன் என்று (பாமரர்) சொல்லுஞ் சொல்
கொள்கைத்தே–அங்கீகரிக்கத் தகுந்த்தோ? (அல்ல)
வேறு ஒருவர் இல்லாமை நின்றானை–வேறொரு தெய்வமும் தனக்கு ஒப்பாக இல்லாமல் வீறு பெற்றிருப்பவனும்
எப்பொருட்கும் சொல்லானை–எந்தப் பொருளைச் சொல்லுகிற சப்தமும் தனக்கு வாசகமாம்படி (ஸர்வ ஸப்த வாச்யனாய்) உள்ளவனுமான
எம்மானை–எம்பெருமானை
தொகுத்து சொன்னேன்–சுருங்கப் பேசினேனித்தனை.

ஆறு- இத்யாதி
திருவடிகளை விளக்கின கங்கா ஜலத்தைத் தலையிலே தரித்து
சாதகனான ருத்ரன் ப்ரஹ்மா சர்வேஸ்வரன் உடன் ஒக்க ஈஸ்வரர்கள் என்னும்
இதுவும் கொள்ளப் படுவதோ –

அன்றிக்கே
ஜகத் ஐஸ்வர் யத்தை  கூறுடையர் என்னும் இவ்வர்த்தம் கொள்ள முடியுமோ என்றுமாம்

வேறு -இத்யாதி
ஆதித்ய சன்னிதியில்  நஷத்ரங்கள் யுண்டாய்-வைத்தே
இல்லாதார் கணக்கானாப் போலே தன்னுடைய உயர்த்திக்கு ஈடாக சகல பதார்த்தங்களும் யுண்டாய்
வைத்தே இல்லாதார் கணக்காம் படி நிற்பதும் செய்து 
தனக்கு பிரகாரமான சகல பதார்த்தங்களையும் வஹிக்கிற வாசக சப்தங்களுக்கும் வாச்யனாம் படி
இருக்கிற படியைக் காட்டி என்னை யடிமை கொண்டவனைத்  திரளச் சொன்னேன்

எப்பொருட்கும் சொல்லானை –
அவதரித்து எல்லார்க்கும் ஸ்துதி சீலனாய் நின்றவனை -என்றுமாம்

————————————————————————–

நானே ஈஸ்வரன் என்னும் இடம் நீர் அறிந்தபடி எங்கனே என்று எம்பெருமான் அருளிச் செய்ய-
இத்தை யுபசம்ஹரித்த நீ இங்கே வந்து திருவவதாரம் பண்ணி
ரஷகன் ஆகையாலே
-என்கிறார் –

எனக்கு சர்வமும் பிரகாரம் ஆகில் இறே நீர் சொல்லுகிறபடி கூடுவது என்று
எம்பெருமான் அருளிச் செய்ய-

ஜகத்து அவனுக்கு   பிரகாரம் என்னும் இடத்துக்கு உறுப்பாக-
உன்னுடைய ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களாலே-
சகல ஆத்மாக்களுக்கும் உபாதான காரணம் ஆகையாலே
சர்வமும் உனக்குப் பிரகாரம் என்கிறா
ர் -என்றுமாம் –

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5-

பதவுரை

தொகுத்த வரத்தன் ஆய்–(தவஞ்செய்து) ஸம்பாதிக்கப் பட்ட வரங்களை யுடையனாய்
தோலாதான்–ஒருவரிடத்திலும் தோல்வி யடையாதவனாயிருந்த இரணியனுடைய
மார்வம்–மார்பை
வகிர்த்த–இரு பிளவாகப் பிளந்தொழித்த
வளை உகிர்–வளைந்த நகங்களைக் கொண்ட
தோள்–திருக் கைகளை யுடைய
மாலே-ஸர்வேஸ்வரனே!,
நீ–நீ,
உகத்தில்–பிரளய காலத்தில்
உள் வாங்கி–(உலகங்களை யெல்லாம்) உப ஸம்ஹரித்து உள்ளே யிட்டு வைத்து
ஒரு நான்று–(மீண்டும் ஸ்ருஷ்டி காலமாகிற) ஒரு மையத்தில்
உயர்த்தி–(அவ்வுலகங்களை யெல்லாம்) வெளியிட்டு வளரச் செய்து
நீயே–இப்படிப்பட்ட நீயே
நான்கும்–(தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான நால் வகைப் பொருள்களிலும்
அரு ஆனாய்–அந்தராத்மாவானாய்
அறி–இதனை அறிவாயாக.

தொகுத்த -இத்யாதி –
திரட்டின வரபலத்தை உடையனாய்-வரப்ரதாக்களான ப்ரஹ்மாதி களுக்கு
தோலாது இருக்கிற ஹிரண்யன் யுடைய உடலை இரு  கூறு செய்து
வளைந்த திரு வுகிரோடு கூடின திருத் தோள்களை யுடையையாய்
ஆஸ்ரிதர் பக்கல் பெரும் பிச்சானவனே-

இதுக்கு கருத்து –
அவதாராதி களாலே பிரதிகூலரை நிரசித்து-ஜகத் ரஷகனானாய் –
இனி அந்த ரஷ்ய ஜந்துக்களிலே ஒருவன் ஈஸ்வரன் ஆக மாட்டான் -என்று

உகத்தில் -இத்யாதி –
ஒருக்கால் வந்து யுகம் தோறும் திருவவதாரம் பண்ணுதி –

சிருஷ்டி என்றுமாம் –

சிருஷ்டி காலத்திலே கார்யரூப ஜகத் பரிணதனான நீ என்றுமாம் –

உள் வாங்கி நீயே –
சம்ஹரிக்கிறாய் நீயே –

தன்னுடைச் சோதி ஏற எழுந்து அருளுகிற படி யாகவுமாம்

அரு நான்கும் ஆனாயறி-
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராத் மகமான ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனானவனே-

இத்தை புத்தி பண்ணு

தோலா தான் மார்வம் -என்றது
பகவத் பரத்வம் பொறாதார் வத்யர் என்றும் படியைக் காட்டினார் –

———————————————————–

இப்படி எம்பெருமான் யுடைய ஈஸ்வரத்வத்தை இசையாத
பாஹ்யரையும் குத்ருஷ்டிகளையும் இகழுகிறார் –

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப் பட்டார் செப்பில் -வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று –6-

பதவுரை

சமணர்–ஜைநர்கள்
அறியார்–உண்மையை அறிய மாட்டார்கள்
பவுத்தர்–பௌத்தர்கள்
அயர்த்தார்–பிரமித்தார்கள்
சிவப்பட்டார்–சைவ மதஸ்தர்கள்
சிறியார்–மிகவும் நீசராகி யொழிந்தனர்
செப்பில்–இவர்களுடைய தன்மைகளைச் சொல்லப் புகுந்தால்,
வெறி ஆய–பரிமளமே வடி வெடுத்தது போன்றுள்ளவனும்
மாயவனை–ஆச்சரியமான குண சேஷ்டிதங்ளை யுடையவனும்
மால் அவனை–(அடியார் திறத்தில்) வியாமோஹ முள்ளவனும்
மாதவனை–திருமகள் கொழுநனுமான எம்பெருமானை
ஏத்தாதார்–(இவர்கள்) ஸ்துதிக்க மாட்டாதவர்களா யிரா நின்றார்கள்,
ஆதலால்–ஆகையினாலே
இன்று–இப்போது
ஈனவரே–(இவர்கள்) நீசர்களே யாவர்.

அறியார் -இத்யாதி –
சமணர் என்றும் அறியார்

பௌத்தரும் மதி கெட்டார்-

சொல்லப் புகில் எம்பெருமானுடைய ஈஸ்வரத்வம் அறிய அளவில்லாதார்
அவனுடைய விபூதி பூதனான சிவ சம்பந்தி களானார்கள்

வெறி -இத்யாதி –
சர்வ கந்த -என்னும்படி நிரதிசய போக்யனாய்-
குண சேஷ்டிதங்களால் ஆச்சர்ய பூதனாய் –
அதுக்கு அளவன்றிக்கே -ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமுக்தனாய்
அதுக்கடியாக ஸ்ரீ ய பதியானவனை –

ஏத்தாதார்  ஹேயரே –
ஈனவரே
   –

ஆதலால் இப்போது-

————————————————————————–

அவர்கள இகழ நீர் நிரபேஷர் ஆகிறீரோ-என்று எம்பெருமான் கேட்க-
நீ யல்லது எனக்கு கதி இல்லாதாப் போலே
உன் கிருபைக்கு நான் அல்லது பாத்ரம் இல்லை -என்கிறார் –

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-

பதவுரை

நாரணனே–நாராயணனே!,
இன்று ஆக–இன்றைக்காகவுமாம்
நாளையே ஆக–நாளைக்காகவுமாம்
இனி சிறிது நின்று ஆக–இன்னம் சிறிது காலம் கழிந்தாகவுமாம் (என்றைக்கானாலும்)
நின் அருள்–உன்னுடைய கிருபை
என் பாலதே–என்னையே விஷயமாக வுடையதாகும்
நன்று ஆக–நிச்சயமாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்–நான் உன்னை யொழியப் புகலில்லாதவன் காண்
நீ–நீயும்
என்னை அன்றி இலை–என்னை யொழிய வேறொரு ரஷ்யனை உடையை யல்லை காண்.

இன்றாக -இத்யாதி –
இன்றாதல் நாளையாதல் சில காலம் கழிந்தாதல் உன்னுடைய கிருபை என் பக்கலிலே –

நன்றாக -இத்யாதி –
அகதியான எனக்கு நீ போக்கி கதி இல்லை
அப்படியே சர்வ பிரகார பரி பூர்ணனான உன்னுடைய க்ருபைக்கு
வேறு சிலரை விஷயமாக உடையை எல்லை –

என்றும் ஒக்க இவ்வாத்மா உன் அருளுக்கே விஷயமாய்
உன் கடாஷம் ஒழியில் என் சத்தை இல்லையானபடி-மெய்யாய் இருக்கிறபடி கண்டாயே

அப்படியே
நீயும் என்னாலே உளையாய் என்னை ஒழிய இல்லை யாகிறாய்

நான் உன்னை அன்றி இலேன் -நீ என்னை அன்றி இலை-
இப்படி இருப்பது ஓன்று உண்டோ என்று வேணுமாகில் பார்த்துக் கொள்ளாய் என்று
நடுவே
பிரமாணத்தைப்-நாரணனே -என்று  பேர்த்திடுகிறார்-

இங்கனே இருக்கை எனக்கு ஸ்வரூபம் -என்றுமாம் –

————————————————————————–

நிருபாயராகை யன்றோ நெடுங்காலம் நாம் இழந்தது-
உபாய அனுஷ்டானத்தைப் பண்ணினாலோ வென்று திரு உள்ளம் கேட்க
உபாய அனுஷ்டான சக்தர் அல்லாத நமக்கு-
தசரதாத்மஜன் அல்லது துணையில்லை -என்கிறார் –

இலை துணை மற்று என்நெஞ்சே ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா -கொலை கொண்ட
ஈரந் தலையான் இலங்கையை ஈடழித்த
கூரம்பன் அல்லால் குறை–8-

பதவுரை

என் நெஞ்சே-எனது மனமே!
ஈசனை வென்ற–ருத்ரனை ஜயித்த
சிலை கொண்ட–வில்லை (பரசுராமனிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
செம் கண் மால்–புண்டரீ காக்ஷனாகிய தன்னை
சேரா–பணிந்து உய்வு பெற மாட்டா தொழிந்த
குலை கொண்ட ஈரைந் தலையான்–கொத்துப் போலே நெருங்கிக் கிடந்த பத்துத் தலைகளை யுடையவனான இராவணனுடைய
இலங்கையை–லங்கா புரியை
ஈடு அழித்த–சீர் கெடுத்த
கூர் அம்பன் அல்லால்–கூர்மை தாங்கிய அம்புகளை யுடையவனான இராம பிரானைத் தவிர்த்து
குறை–விரும்பத் தகுந்த
மற்ற துணை–வேறொரு துணைவன்
இலை–நமக்கு இல்லை.

இலை துணை -இத்யாதி –
பகவத் விஷயத்திலே அபிமுகமான நெஞ்சே

பண்டு ருத்ரனைத் தான் வென்ற வில்லை
ஸ்ரீ பரஸூராமாழ்வான் கையில் நின்றும் வாங்கின சர்வேஸ்வரன் –

செங்கண்-
தேவர்களுக்கு  வந்த  விரோதிகள் பக்கல் சீற்றத்தாலே சிவந்த திருக கண்களை யுடையனாகை-

சோர வித்யாதி –
ஒன்றுக்கு ஓன்று சேராதே கொத்தான பத்துத் தலையை யுடைய ராவணனதான
அப்ரவிஷ்டமான லங்கையைக் கிட்டி யழித்த கூரிய அம்பை யுடையவன் துணை யல்லது
நம்முடைய குறையில் நமக்கு சாபேஷை இல்லை –

————————————————————————–

அவனைத் துணையாக வேண்டுவான் என்-ப்ரஹ்ம ருத்ராதிகளாலே ஒருவர் ஆனாலோ என்னில்
அவர்களும் ஸ்வ தந்த்ரரமாக ரஷகராக  மாட்டார் –
எம்பெருமானுக்கு சேஷ பூதர் என்கிறார் –

நாமே யன்றிக்கே ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்களுடைய ஆகிஞ்சன்யம் பற்றாசாக வாய்த்து
எம்பெருமானை ஆஸ்ரயிப்பது என்கிறார் -என்றுமாம் –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு–9-

பதவுரை

பிரமதேவன்
குறை கொண்டு–நைச்யாநுஸந்தானம் செய்து கொண்டு
குண்டிகை நீர்–கமண்டல தீர்த்தத்தை
பெய்து–வார்த்து
மறை கொண்ட–வேதங்களிலுள்ள
மந்திரத்தால்–புருஷ ஸூக்தம் முதலிய மந்த்ரங்களினால்
வாழ்த்தி–மங்களாசாஸநம் பண்ணி
ஆங்கு–(எம்பெருமான் உலகளந்தருளின) அக் காலத்தில்
அண்டத்தான் சே அடியை–அந்த ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளை
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏற–விஷ கண்டனான ருத்ரனுடைய தலையில் (ஸ்ரீபாத தீர்த்தம்) விழும்டியாக
கழுவினான்–விளக்கினான்.

குறை  இத்யாதி –
தன்னுடைய ஆகிஞ்சன்யத்தை தெரிவித்து
சதுர் முகன் தன்னுடைய குண்டிகையில் தருவித்த தர்ம தேவதையான நீரை வார்த்து
வேதத்தில் ஸ்ரீபுருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு ஸ்துதித்து

விஷ பாநத்தால் வந்த பாதகம் வாராது ஒழிய வேணும் என்று
பாதகியான ருத்ரன் சிரஸ்ஸிலே ஏறும்படி கழுவினான்

சர்வேஸ்வரன் திருவடிகளை லோகத்தை அளந்து கொண்ட தசையிலே

அண்டத்தான் சேவடியை –
அண்டம் விம்ம வளர்ந்தவனுடைய திருவடிகளை –
ப்ரஹ்மன்  கழுவினான் –

————————————————————————–

எம்பெருமானை ஆகிஞ்சன்யம் மிகவுடைய நம் போல்வாருக்குக் காணலாம்
ஸ்வ யத்னத்தால் அறியப் புகும் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று -என்கிறார்-

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து–10-

பதவுரை

ஆங்கு–பரமபதத்திலே
ஆரவாரம் அது கேட்டு–(நித்ய முக்தர்களுடைய) ஸாம கான கோஷத்தைக் கேட்டு
(அஸுரர்கள் இங்கும் வந்து ஆரவாரம் செய்வதாக ப்ரமித்து)
அழல் உமிழும்–விஷாக்நியைக் கக்குகின்ற
காண–ஸேவிப்பதற்கு
வல்லம் அல்லமே–ஸாமர்த்திய முடையோ மல்லோமோ?
(நாம் ஸமர்த்தரேயாவோம்)
மா மலரான்–சிறந்த பூவிற் பிறந்த பிரமனும்
பூகார் அரவு அணையான்–அழகிய சீற்றத்தை யுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய எம்பெருமானது
பொன் மேனி–அழகிய திருமேனியை
யாம்–அநந்ய பக்தரான நாம்
வார் சடையான்–நீண்ட ஜடையை யுடைய ருத்ரனும்
வாழ்த்து–(எம்பெருமானை) வாழ்த்துவதில்
வல்லர் அல்லரே–அஸமர்த்தர்களே.

ஆங்கு ஆரவாரம் -இத்யாதி
லோகத்தை யளக்கிற தசையில் ஆரவாரத்தைக் கேட்டுத் தன் பரிவாலே
பிரதி பஷத்தின் மேலே அழலை யுமிழ்வதும் செய்து
மேகம் போலே அழகிய சீலத்தை யுடையனான திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையவனுடைய
ஸ்ப்ருகஹணீயமான திரு மேனியை நாம் காண வல்லோம் அல்லோமோ –

மா மலரான் -இத்யாதி –
தாமரைப் பூவைப் பிறந்தகமாக யுடைய ப்ரஹ்மாவும்
சாதகனான ருத்ரனும் வாழ்த்த மாட்டார்கள்

அன்றிகே
பூங்காரரவு –
தன் பரிவாலே பிரதிகூலரான நமுசி ப்ரப்ருதிகள் மேலே விஷ அக்னியை உமிழா நிற்பானாய்-
பரிவின் கார்யம் ஆகையாலே
அடிக் கழஞ்சு பெறும் படியாய்   இருக்கிற
அழகிய சீற்றத்தை யுடைய திரு வநந்த ஆழ்வான் -என்றுமாம் –

————————————————————————–

ஆன பின்பு எம்பெருமானை
சர்வ கரணங்களாலும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–11-

பதவுரை

சூழ்ந்த–நிறையச் சாத்திக் கொள்ளப்பட்ட
துழாய்–திருத்துழாய் மாலை
மன்னு–பொருந்தி யிருக்கப் பெற்ற
நீள் முடி–நீண்ட திரு வபிஷேகத்தை யுடையனும்
என் தொல்லை மால் தன்னை–என்னிடத்தில் நெடு நாளாக வியா மோஹ முடையவனுமான ஸர்வேஸ்வரனை
வழா–ஒரு நொடிப் பொழுதும் விடாமல்
வண் கை கூப்பி மதித்து–அழகிய கைகளைக் கூப்பி த்யானம் பண்ணி
மகுடம் தாழ்த்தி–தலையை வணக்கி
தண் மலரால்–குளிர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
வணங்கு மின்கள்–ஆஸ்ரயியுங்கள்,
வாய்–(உங்களுடைய) வாய்
வாழ்த்துக–(அவனைத்) துதிக்கட்டும்,
கண்–கண்கள்
காண்க–(அவனையே) ஸேவிக்கட்டும்
செவி–காதுகள்
கேட்க–(அவனது சரிதங்களையே) கேட்கட்டும்.

வாழ்த்துக -இத்யாதி
வாயாலே வாழ்த்துங்கோள் –
கண்ணாலே காணுங்கோள் –
செவியாலே கேளுங்கோள்-
அபிமானத்தின் மிகுதியாலே முடி சூடினாப் போலே இருக்கிற தலையைத் தாழ்த்து
அழகிய புஷ்பாதிகளைக் கொண்டு வணங்குங்கள்

சூழ்த்த -இத்யாதி
சூழப் பட்ட திருத் துழாய் மன்னா நிற்பதும் செய்து
ஐஸ்வர்ய ஸூசகமான திரு வபிஷேகத்தையும் யுடையனாய்
இவ் வழகாலே என்னை அடிமை கொண்ட சர்வேஸ்வரனை நினைத்து
நிரந்தரமாகத் தொழுகைக்கு-பாங்கான கைகளைக் கூப்பி

வழா –
வழுவாதே
நழுவாதே -என்றபடி

————————————————————————–

எம்பெருமான் -என்னை ஆஸ்ரயிங்கோள் என்று சொல்லுகிறது என்-என்ன
நீ யுன்னை ஆஸ்ரயியாதாரைக் கெடுத்து-
ஆஸ்ரயித்தாரை வாழ்விக்கையாலே-என்கிறார் –

மதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் -மதித்தாய்
மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி
விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12-

பதவுரை

மதியார்–உன்னைச் சிந்தியாதவர்கள்
நான்கில்–நால் வகைப்பட்ட யோனிகளில்
போய் போய் வீழ–சென்று சென்று பலகாலும் விழும்படியாக
மதித்தாய்–ஸங்கல்பித்தாய்,
மதி–சந்திரனுடைய
கோள்–துன்பத்தை
விடுத்தாய்–போக்கி யருளினாய்
மடு–ஒரு மடுவிலே
கிடந்த–(சாபத்தினால்) வந்து சேர்ந்திருந்த
மா முதலை–பெரிய முதலையினாலுண்டான
கோள்–(கஜேந்திராழ்வானது) துயரத்தை
விடுப்பான்–நீக்குவதற்காக
ஆழி–திருவாழியை
விடற்கு–(அந்த முதலையின் மேல்) பிரயோகிப்பதற்கு
மதித்தாய்–நினைத்தருளினாய்
இரண்டும்–முதலையும் கஜேந்திராழ்வானு மாகிற இரண்டும்
போய்–ஒன்றை யொன்று விட்டுப் போய்
இரண்டின்–அவ்விரண்டு ஜந்துக்களுக்கும்
வீடு-சாப மோக்ஷமும் மோக்ஷஸாம் ராஜ்யமும் உண்டாம்படி
மதித்தாய்–ஸங்கல்பித்தாய்.

மதித்தாய் -இத்யாதி
உன்னை நினையாதார் தேவாது சதுர்வித யோநிகளிலே போய் விழும்படி சங்கல்ப்பித்தாய் –

வேதத்தில் சொல்லுகிறபடியே உன்னை அறியாதார் நசிக்கும்படி மதித்தாய் -என்றுமாம் –

அக்கோடியிலே உள்ளான் ஒருவனான சந்த்ரனை
அல்ப அநு கூல்யத்தைக் கொண்டு ஷயத்தைப் போக்க வேணும் என்று கருதிப் போனாய் –

மடுவிலே பெரிய முதலையினுடைய வாயிலே அகப்பட்ட யானையை விடுவிக்கைக்காக
திருவாழியை விடுக்கைக்கும்
இரண்டு இரண்டு சரீரத்தையும் விட்டு இரண்டும் முக்தமாம் படியும் நினைத்தாய் –

இரண்டும்  போய் இரண்டின் வீடு
இரண்டும் ஒன்றை ஓன்று விட்டுப் போய்
ஸூகிகளாம்படி -என்றுமாம்-

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -85-96–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -/ஸ்ரீ அப்பிள்ளை உரை —

September 23, 2013

எதிரிகள் சதுரங்கம் பொரப் பொருவீரோ என்று அழைக்க
இவர் சொல்லும்படி -எனக்கு தொழில் புராணனான சர்வேஸ்வரனை ஏத்துவதே-

அப்பிள்ளை உரை அவதாரிகை
நாளும் தொழக் காதல் பூண்ட -நித்தியமாக இருந்தாலும்
எங்களைப் போலே ஒரு போது -பகவத் விஷயமும் இல்லாத போது –
லௌகிக வியாபாரமுமாய் இருக்கப் பார்த்தாலோ என்ன
என் நெஞ்சிலே நிரந்தர வாசம் பண்ணும் சக்ரவர்த்தி திருமகன் உடைய வீர சரிதம் அனுசந்திக்கைக்கு
காலம் போதும் அத்தனை போக்கி லோக விருத்தாந்தம் அனுசந்திக்கக் கால -அவசரமே இல்லை என்கிறார் –

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் –85–

பதவுரை

கழி சினத்த–மிகக் கோபத்தை யுடையவனும்
வல்லாளன்–மிக்க வலிமை யுடையவனும்
வானார் கோன்–குரங்குகட்கு அரசனுமாகிய
வாலி–வாலியினுடைய
மதன்–மதத்தை (கொழுப்பை
அழித்த–தொலைத்த
வில் ஆளன்–சார்ங்க வில்லை ஆள்பவனான இராமபிரான்
நெஞ்சத்து–எனது நெஞ்சிடத்து
உளன்–எழுந்தருளி யிருக்கின்றான்
எனக்கு–(அந்த இராம பிரானுடைய திருக் குணங்களில் அகப்பட்ட) எனக்கு
தொழில்–நித்ய கருமம்
தொல்லை மால் தன் நாமம் ஏத்த–புராணனான அந்த ஸர்வேஸ்வரனுடைய திருநாமங்களை வாயாரப் புகழ்வதாம்
எனக்கு–(உலகத்தாரில் வேறு பட்டவனான) எனக்கு
மற்றதுவே–கீழ்ச் சொன்ன ஸ்ரீராமநாம ஸங்கீர்த்தனத்தினாலேயே
பொழுது போதும்–போது போகும்.

அதிக கோபத்தை யுடையனாய் -பலிஷ்டனாய் -வானர ராஜாவான வாலியினுடைய
கர்வத்தைப் போக்கின தநுர்த் தரனான சக்ரவர்த்தி திருமகன்
என் ஹ்ருதயத்திலே வாஸம் பண்ணுகிறான்
எனக்கு வியாபாரம் அநாதியான ஸர்வேஸ்வரனுடைய திரு நாமங்களை ஸ்தோத்ரம் செய்கை
எனக்கு எல்லாக் காலமும் அதுக்கே போதுமாய் இருக்கிறது –

பொழுது இத்யாதி
நாங்களும் எல்லா கார்யம் செய்து-
பகவத் நாம சங்கீர்தனமும் பண்ணுகிறிலோமே-என்ன-
எனக்கு ராம வ்ருத்தாந்தம் கிடக்க வேறு ஒன்றுக்கு-போது போராது

கழி சினத்த -இத்யாதி –
மிக்க நித்ய சினத்தை உடையவனாய்-வானர ராஜாவான வாலி உடைய
செருக்கை வாட்டின-சக்கரவர்த்தி திருமகன் என் நெஞ்சிலே சந்நிஹிதன் –

மதன் -மதம் -செருக்கு -என்றபடி-

(கழி சினத்த
காலில் விழுந்த தம்பியை நிக்ரஹித்த செயலில் பெரும் சினத்தைக் காணலாம்
வல்லாளன்
ராவணனைப் பூச்சி போல் பிடித்த செயலில் பெரும் பலத்தைக் காணலாம்
வானவர் கோன்
பலத்தாலும் சினத்தாலும் அடக்கி ஆண்டு ராஜா வானவன்
இச்சா மோ ஹி மஹா பாஹும் -போல் அவர்களே தாமாகவே விரும்புவது போல் இல்லையே இவன் இடம்
கழி சினத்தை வாலி மதம் அழித்த வில்லாளன்
வல்லாளன் மதம் அழித்த வில்லாளன்
வானவர் கோன் மதம் அழித்த வில்லாளன் அன்றோ இவன் –
சரணாகத வத்சலன் -தம் பலத்தை தீயோரை அழித்து ஆஸ்ரித ரக்ஷணத்துக்குப் பயன் படுத்த
வாலி தனது வலிமையை சரணாகதனான ஸூக்ரீவனை சிஷிக்க பயன் படுத்திய வில்லாளன்)

அப்பிள்ளை உரை
மிக்க சீற்றத்தை யுடையவனாய் பெரும் மிடுக்கனாய் வானர ஜாதிக்கு ராஜாவான வாலியை
கர்வத்தை தலை அழித்துப் பொகட்ட
ஸ்ரீ சார்ங்க திரு வில்லை யுடைய வீரனான சக்ரவர்த்தி திருமகன்
நின்ற திருக்கோலம் சேவித்த தாரை புகழ்ந்தாள்-அப்ரமேயஸ்ய
வைய வந்த வாயால் வாழ்த்திப் போனாளே அன்றோ
அந்ய பரதை அறும்படிக்கு இடம் யறும் படி ஹ்ருதயத்தில் சன்னிஹிதராய் இரா நின்றார்
ஆகையாலே மிருத சஞ்சீவனமான ராம குணங்களிலே அகப்பட்ட எனக்கு நித்ய க்ருத்யம்
பழையவனாய் சர்வாதிகனான சக்ரவர்த்தி திருமகனுடைய திரு நாமங்களை அபிநிவேச பர வசனாய்க் கொண்டு
வாயாரப் பாடுகை ஏத்துகை
லௌகிகரான உங்களில் வியாவ்ருத்தமான எனக்கு மற்று உள்ள காலங்கள் எல்லாம் அதுக்கே நேரம் போதும்
எங்கள் தம் யுடையவர் திருக்கை அருளை ராமருடைய அருளைப் பெற இரக்கும் எங்களுக்கு
அந்நிய பரதை பண்ணுவது எங்கனே என்கிறார்-
என்று பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் படி
ஜீயர் மூலமாக அப்பிள்ளை அருளிச் செய்தபடி
அருளைப் பிக்ஷை எடுக்கவும் அருளே வேண்டும்
அருளைப் பெற தயார் நிலையாக இருக்க வேண்டும் அன்றோ –

————————————————————–

அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன்
நீயும் இவ் வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

(சஞ்சலம் அற்ற மனசுக்கு எதற்கு உபதேசம்
அவனது ஸத்பாவம் உபதேசிக்க வில்லை
எந்த நிலையிலும் சர்வ ரக்ஷகம் அவன் மட்டுமே என்கிறார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
இப்படி சர்வேஸ்வரன் உளன் என்று சர்வருக்கும் -உபபாதித்தவர்
தம் திரு உள்ளத்தைக் குறித்து எம்பெருமான் நிர்வாஹகன் என்னும் இடத்தை
நீயும் உணர் என்கிறார்

உளன் கண்டாய் நல்  நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை-86-

பதவுரை

நல் நெஞ்சை–எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமான்-(அதமன் -மத்யமன் -உத்தமன் -புருஷோத்தமன் )
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்
தன் ஒப்பான்–(தனக்குப் பிறரொருவரும் ஒப்பில்லாமையாலே) தனக்குத் தானே ஒத்திருப்பவனான அந்த எம்பெருமான்
தமியேற்கு–ஒரு கைம்முதலுமற்றவனான எனக்கும்
என்றும் உளன் கண்டாய்–எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்க.
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய்–நித்ய வாஸம் பண்ணுமவன் காண்
என் ஒப்பார்க்கு–என்னைப் போலே உபாய ஸூந்யராயிருப்பவர்கட்கும்
தான் ஈசன் ஆய் உளன் காண்–தானே நிர்வாகனாயிருக்கிறான் காண்
இமை–இதனை அறி.

அனுகூலமான ஹ்ருதயமே -புருஷோத்தமன் நமக்கு சத்தா ஹேதுவாக இருக்கிறான் கிடாய்
பிரளயாதி ஸர்வ காலங்களிலும் இருக்கிறான் கிடாய்
த்யான பரர்களுடைய ஹிருதயத்தில் நித்ய வாஸம் பண்ணுகிறான் கிடாய்
எனக்கும் என் போல்வாருக்கும்
தனக்குத் தானே சமானனான ஸர்வேஸ்வரன்
ரக்ஷகனாக இருப்பன் என்று நிச்சயித்து இரு –

உளன் கண்டாய் –
பரிஹரிக்க ஒண்ணாத ஆபத்து வந்தாலும்-பரிஹரிக்க வல்லவன் உண்டு –

நல்  நெஞ்சே-
சர்வேஸ்வரன் உளன் என்று-உபபாதிக்கப் பாங்கான நெஞ்சே –

உத்தமன் என்றும் உளன் கண்டாய் –
இதுக்கு (மோக்ஷம் போவதுக்கு ) முன்பு நிர்ஹேதுகமாக ரஷித்தவன்-
ப்ராப்தி தசையிலும் ரஷிக்கும் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –
அவன் ரஷிக்க-இத்தலையால் செய்ய வேண்டுவது –
ஆணை இடாமை –

தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு என்னொப்பார்க்கு ஈசன்-
அகிஞ்சனான எனக்கும்-
என்னைப் போலே உபாய ஸூன்யர் ஆனவர்களுக்கும்
தனக்கு உபமானம் இன்றிக்கே உளனான ஈஸ்வரன்
உளன் –

இமை –
புத்தி பண்ணு -என்றபடி-

(நன்னெஞ்சே
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் -திருவாய் –1-10-4-
உள்ளுவார் உள்ளத்து உளன்
கூடும் மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ
போதுவீர் போதுமினோ
இவனுக்கு ரக்ஷகத்வமே ஸ்வரூப நிரூபக தர்மம்
இமை -இவ் வர்த்தத்தை அறிவாயாக )

அப்பிள்ளை உரை
சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதிக்க பாங்கான நெஞ்சே
இத் தலையில் ஒரு ஹேதுவை அபேஷியாமல்
தனது பேறாக ரக்ஷிக்கும் புருஷோத்தமன்
பரிஹரிக்க ஒண்ணாத ஆபத்து வந்தால்
தானாக வந்து பரிஹரித்து –
ரஷிக்கவே நெஞ்சிலே சர்வ காலமும் இருக்க
தானே வந்து ரக்ஷிக்க வரும் பொழுது
ஆணை இட்டு விலக்காமல் பொருந்தி அனுசந்திப்பாருடைய ஹ்ருதயத்தில்
சன்னிஹிதனாயக் கொண்டு ரக்ஷிக்குமவன்
அகிஞ்சனான எனக்கும்
என்னைப் போல் கை முதல் இல்லாத அனைவருக்கும்
தனக்குத்தானே உபமானமாய் வேறே ஒரு உபமானம் இல்லாதவனாய் இருப்பவன் –
சர்வேஸ்வரனாய்க் கொண்டு உளனாய்
உத்தமன் என்னும் உளன் கண்டாய் -இப்பதச் சேர்க்கை
ஆழ்வார்களுக்கு அபிமதமாய் மூன்று பாசுரங்களில் இருக்குமே –

———————————————————————

தம்மை ஒக்கும் அகிஞ்சனவர்க்கு
இவன் நிர்வாஹகன் ஆன படியைக் காட்டுகிறார்-

அப்பிள்ளை உரை அவதாரிகை
தம்மை ஓக்கும் அகிஞ்சனருக்கு அவன் நிர்வாஹகனான படியை
மூதலிக்கிறார்

இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்துண்டார் காப்பான் -சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்க் கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்-87-

பதவுரை

இமயம் பெரு மலை போல்-பெரிய இமய மலை போன்றிருக்கும்படி
இந்திரனார்க்கு இட்ட–இந்திரனுக்காகச் சமைத்து வைத்த
சமயம் விருந்து–வழக்கமான ஆராதனையை
உண்டு–உட் கொண்ட போது (நேர்ந்த கல் மழையாலாகிய ஆபத்தில் நின்றும்)
கார்க் கண்டன் நான்முகனோடு காப்பான் ஆர்–சிவனையும் பிரமனையும் (பெரிய ஆபத்துக்களில் நின்றும்) ரக்ஷிப்பவன் யார்?
ஆர் காப்பார்–காப்பாற்றினது யார்?
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதிகளைப் போக்கி ரஷித்தவனும் இவனே
சமயங்கள்–வைதிக மதங்களை
கண்டான்–பிரவர்த்திப்பித்தவன்
ஆர்–யார்?
கதி த்ரவ்யத்வ மூலம் -அனைத்துக்கும் பலம் தருபவன் இவனே
மெதுவாக கொடுத்து கொடுத்து தன்னையே கேட்க்கும்படி ருசி விளைவிப்பானும் இவனே
அவை காப்பான்–அவற்றை (நிலை குலையாதபடி) ரக்ஷிப்பவன்
ஆர்–யார்?
உலகோடு உயிர் உண்டான் ஆர்–
உலகங்களையும் (உலகங்களிலுள்ள ஜீவ ராசிகளையும் (பிரளயத்தில்) உண்டு ரக்ஷித்தவன் யார்? (எல்லாம் எம்பெருமானே யன்றோ)

ஹிம வத பர்வதம் போலே —
இந்திரனுக்கு -மழை பெய்கைக்காக வருஷத்தில் ஒருகால் இட வேணும் என்கிற
சங்கேதத்தினால் குவித்திட்ட அன்னத்தை அமுது செய்து
கோ கோபர்களை ரக்ஷிப்பவர் யார்
ஸித்தாந்தங்களைப் ப்ரவர்த்திப்பதவனும்
அவைகளை ரஷித்தவனும்
நீல கண்டனோடும் சதுர் முகனோடும் லோகங்களோடும்
பிராணிகளைத் தன் உதரத்திலே வைத்து ரஷித்தவன் யார் –

சமய விருந்து
சமயம் பண்ணின விருந்து

ஆர் காப்பார் –
இந்த்ரன் பாதகனே வர்ஷிக்கிற போது-எம்பெருமான் அன்றோ காத்தார்-
இடையரோ –

சமய இத்யாதி –
வைதிக சமயத்தைக் கண்டானும்-
அவற்றை ரஷிப்பானும்-
நீல கண்டன் சதுர்முகன் முதலானவர்கள் துரிதங்களைப் போக்குமவனும்-
இவ் வாத்மாக்களையும் வயிற்றிலே வைத்துப் பரிகரித்தவனும்
எம்பெருமானை ஒழிய மற்று யார்-

உலகோடு உயிர் உண்ட எம்பெருமானை ஒழிய மற்று உண்டோ –
வேறே காப்பார் இல்லை என்றபடி –

(மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி -வைதிக மதத்தை சாஷாத்கரித்து இங்கே பரவச் செய்தவன் இவனே
அகிஞ்சனருக்கு அபகரிக்கும் பிரகாரணம் என்பதால் சமயங்களில் புற சமயங்கள் சேரா
அறமுயல் ஞானச் சமயிகள் -திரு விருத்தம்
வித்யா பேதத்தால் பலவகைப்பட்ட பக்தி யோக நிஷ்டர்களையே சொல்லும்
எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாம் உளரே -பெரிய திருமொழி -11-6-2-
இப் பாசுரத்தை ஒட்டியே ஆளவந்தார்
கஸ்ய உதரே ஹர விரிஞ்சி முக பிரபஞ்ச
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத் யாபத் விமோசன மஹிஷ்ட பல பிரதாநை
கோன்ய ப்ரஜா பசுபதீ பரி பாதி
மாலியம் -ஸ்ரீ வைஷ்ணவம் என்பதற்கு பிரசித்தமான பெயர் பல தேசங்களிலும் உண்டே
சநாதன சமயம் -ஆதி வேத ப்ரதிபாத்யன் )

அப்பிள்ளை உரை
ஹிமவான் ஆகிற பெரிய பர்வதம் போல் வத்ஸரம் தோறும் இந்திரனுக்கு
நியமேன விருந்து இடுவாரைப் போல் சாதரமாக இட்ட சோற்றை ஓன்று ஒழியாமல் தானே அமுது செய்து
அஹம் கோவர்த்தனோஸ்மி என்றானே
முக பங்க குபிதனாய்-( மூக்கு உடைத்தல் போல் )
இந்திரனால் வந்த வர்ஷ ஆபத்தைப் பரிஹரிப்பார் வேறே யார்
வைதிக சமயங்களை பிரவர்த்திப்பானும்
அவற்றை உபதேச பரம்பரையால் குறைவற ரஷித்தவனும்
நீல கண்டன் சதுர்முகனோடு இவர்களோடு அவர்கள் இருப்பிடமான லோகங்கள் -மற்றும்
ஸமஸ்த லோகங்களையும் லோக வர்த்திகளான சேதன அசேதனங்களையும் பிரளயத்தில் அழியாத படி
திரு வயிற்றிலே வைத்து ரஷித்தவனும் வேறே யார்
வர்ஷ ஆபத்தோடு பிரளய ஆபத்தோடே ஸம்ஸார ஆபத்தோடு வாசி அற –
மழைக்கடல் -நீர்க் கடல் -சம்சாரக்கடல் -அனைத்திலும் இருந்து ரஷித்தவன் இவனே அன்றோ
ரஷித்தவன் சர்வேஸ்வரன் இத்தனை போக்கி
இடையரோ ப்ரஹ்மாதிகளோ ரக்ஷித்தார் என்று பேச்சே இல்லை
சமயங்கள் கண்டான் அவை காப்பான் இவனே என்பதால்
வைதிக சமயங்களைப் பிரவர்த்திப்பித்து -ரஷித்தவனும் இவனே என்பதால்
சம்சாரக் கடலைப் ஆபத்தைப் பரிஹரிப்பவனும் இவனே வேறே ஒருவர் உண்டோ
மற்று யாரும் இல்லை என்றவாறு –

————————————————————

இப் பாட்டிலும் அவ் வர்த்தத்தையே விஸ்தரிக்கிறார் –

(அகிஞ்சனரான அடியார்களுக்கு அவன் செய்து அருளும் உபகாரங்களை
மேலும் அருளிச் செய்கிறார்
குரு பரம்பரை மூலம் ஸம்ஸார கடலில் இருந்து ரக்ஷித்தமையை கீழே சொல்லி
அத்தை இதில் விவரிக்கிறார்
மாலியம் -ஸ்ரீ வைஷ்ணவம் என்பதற்கு பிரசித்தமான பெயர் பல தேசங்களிலும் உண்டே
சநாதன சமயம் -ஆதி வேத ப்ரதிபாத்யன் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஆஸ்ரிதற்கு சரீர விஸ்லேஷ சமயத்தில் வரக் கடவ
எம பஸ்யாதி துரித பரம்பரையை தானே முற்கோலி பரிகரித்து
கீழே -சமயங்கள் கண்டான் அவை காப்பான் -என்ற இடத்தில்
கர்ப்பிதமான ஸம்ஸார ஆபத் ரக்ஷகத்வத்தை விவரிக்கிறார் –
(குரு பரம்பரை ஸ்தாபித்தார் என்று மட்டும் கீழே –
ஆ ர்த்தமாக இத்தால் சம்சார ரக்ஷணம் பலிதமானதே )

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி
அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது-88-

பதவுரை

உடல் ஒழிய–சரீரத்தைப் போட்டு விட்டு
உயிர் கொண்டு–ஆத்மாவைப் பிடித்துக் கொண்டு
ஓடும்போது–(யமபடர்கள்) ஓடும்போது
ஓடி–(எம்பெருமானாகிய தானே) ஓடிச் சென்று
செயல் தீர–பேற்றுக்காக நாம் செய்ய வேண்டிய செயல் (ப்ரவ்ருத்தி) ஒன்றுமில்லை யென்று
சிந்தித்து–ஸ்வரூபத்தை யுணர்ந்து
வாழ்வாரே–வாழ நினைப்பவர்களே
வாழ்வார்–வாழ்ச்சி பெறுவர்
அயர்வு என்ற–கஷ்ட மென்று சொல்லப் படுகிற எல்லாவற்றையும்-அறிவு கேடு என்று சொல்லப்பட்டவை முதலான
தீர்ப்பான்–தீர்க்குமவனான எம்பெருமானுடைய
தானே வந்து தனது அழகைக் காட்டி ரக்ஷித்து -ஆதரம் பெருகவும் ஐயப்பாடு அறுக்கவும் -தான் மாம் தானே மாம் ஏகம்
பேர்–திருநாமங்களை
பாடி–வாய்விட்டுப் பாடி
சிறு சமயம் பந்தனையார்–அற்பங்களாய் பல நியமங்களோடு கூடினவையாய் ஸம்ஸார பந்தத்திற்கே
காரணமாக வுள்ளவையான உபாயங்களைப் பற்றினவர்களுடைய
பந்தனையார் -பந்தக ஹேதுவான கர்மாதி உபாயாந்தரங்கள்
வாழ்வு ஏல்–வாழ்ச்சியோ வென்றால்
பழுது–உபயோகமற்றது.

சரீரத்தைப் பொகட்டு விட்டு பிராணனை எடுத்துக்கொண்டு எமபடர்கள் ஓடும் போது
அவர்களுடனே ஓடி துக்கம் என்று பேர் உள்ளவை எல்லாவற்றையும் போக்க வல்ல
ஸர்வேஸ்வரனுடைய திரு நாமங்களைக் கானம் செய்து
இதர வியாபாரங்களை விட்டு தியானித்து ஸூகமாக இருக்கிறவர்கள் ஸூகப் படுவார்கள்
அற்பமாய் -இந்தக் கரமத்துக்கு இதுவே பலம் என்று வியவஸ்த் திதமாய்
பந்த ஹேதுவான கர்ம பரவசர்களுடைய வாழ்க்கை நிரரர்தகம் –

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது
இவ் வாத்மா சரீரத்தைப் பொகட்டு-
பிராணனைக் கொண்டு
எம படராலே ப்ரேரிதமாகப் போம் போது

ஓடி அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்
ஆஸ்ரிதர் ஆனவர்களை-ஆள் இட்டு அந்தி தொழாதே
தானே ஓடி-
அவர்கள்( யம தூதர்கள் )தர்சனத்தால் வந்த அறிவு கேடு முதலான-துரிதங்களை எல்லாம் போக்குமவன்
திருநாமத்தை பிரியமுடன் சொல்லி -இவ் வாத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை
எம்பெருமானே நிர்வாஹகன் என்று இருக்குமவர்கள் வாழ்வார்-

(இத்தால்
சரம காலத்தில் திரு நாமத்தைச் சொன்னாலும்
அவர்களையும் எமபடர் கையிலே காட்டிக் கொடான் -என்றபடி )

சிறு சமயப் பந்தனையார் வாழ்வேல் பழுது-
துக்க ஹேதுவான-அஹங்கார கர்ப்பம் ஆகையாலே
பந்தகமாய்-
ஷூத்ரமான கர்மாத் யுபாய பேதங்களைப் பற்றினார்க்கு
ஒரு பிரயோஜனமும் இல்லை –

(பகவதஸ் த்வராய நம -இவனுடைய ஓட்டத்தில் ஈடுபட்டு அருளிச் செய்தார் அன்றோ
கடைத் தலையில் இருந்து வாழும் சோம்பருக்கு அவன் செய்யும் உபகாரங்கள் வாசோ மகோசரம் அன்றோ
சமயப் பந்தனை
நெறி காட்டி நீக்குதியோ
செயல் தேர்ந்து சிந்தித்து வாழாத உபாசகர்கள்
சிறு சமயப் பந்தனையார் வாழ்வேல் பழுது
அந்வய வியதிரேகங்களால் இவற்றுக்கு உபாயத்வம் முதலிலே இல்லை என்று உள்ளபடி உணர்ந்து இருக்கும்
ஞானி நாம க்ரேரசர் ஆகையாலே பந்தனையார் வாழ்வேல் பழுது என்று
அவற்றில் ஒரு சரக்கு அற அருளிச் செய்கிறார் -அப்புள்ளார் உரை
பகவத் ப்ரீதியே பலத்துக்கு உபாயம்
கண்டாகர்ணன் க்ஷத்ர பந்து பக்கலிலே பார்த்தோமே )

அப்பிள்ளை உரை
சரீரத்தைப் பொகட்டு பிராணனைக் கொண்டு யம படராலே ப்ரேரிதனாகப் போம் போது
ஆஸ்ரிதரை ஆள் இட்டு அந்தி தொழாதே தானே விரைந்து சென்று கை தொட்டு
யம படர்கள் தரிசனத்தால் வரும் அறிவுகேடு முதலிய துரிதம் என்று பேர் பெற்ற
எல்லா வற்றையும் போக்கும் ஸ்வ பாவன் பேர் பாடி
குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களைப் ப்ரீதி பரவசராய்ப் பாடி
இவன் ஸ்வ ரக்ஷணத்துக்கு உடலாக
நம்மால் செய்யலாவது ஒன்றுமே இல்லை என்று
ஸ்வரூப பாரதந்தர்யத்தை அனுசந்தித்து
(இத்தை அறிந்தால் அகிஞ்சனன் ஆவான் அவனே -உஜ்ஜீவிப்பான் )
இப்படி எம்பெருமானே நிர்வாஹகன் என்று அவன் தலையிலே சர்வ பாரங்களையும் பொகட்டு
தத் குண அனுபவம் பண்ணி வாழும் அவர்களே பழுதற்ற வாழ்வு வாழ்வார்கள் ஆவார்கள்
அந்ய சா பேஷமாகையாலே -பக்தி யோகம்-தனக்கு அங்கமாக கீழே கர்ம யோகம் ஞான யோகங்களை எதிர் பார்க்கும்
மேலே மோக்ஷம் தர அவனை எதிர்பார்க்கும்
ஆகவே அதி ஷூத்ரமாய் பிரதி புருஷன் தத் தத் ருசிக்கு அனுகுணமாய் வியவஸ்திமாய்- வகை அறுக்கப்பட்டதாய்
துக்க ஹேதுவாய் அகங்கார மமகார கர்ப்பமாய் சம்சாரத்தில் தழைப் படுத்தும்
பந்தகமாக கர்மாதி உபாயங்களைப் பற்றி வாழும் வாழ்வு நிஷ் பிரயோஜனம்
அன்வய வியதிரேகங்களால் இவற்றுக்கு உபாயத்வம் முதலிலே இல்லை என்று உணர்த்த
ஞானாதிரேகர் ஆகையால்
(கர்ம யோகம் பண்ணினாலும் அவன் இல்லாமல் மோக்ஷம் இல்லை
இவை இல்லா விட்டாலும் அவன் ப்ரீதியால் மோக்ஷம்
இத்தை அறிந்த உள்ளபடி உணர்ந்த ஞானிகளில் முதன்மை )
ஆகையால் பந்தனையார் வாழ்வேல் பழுது என்று
ஒரு சரக்கு அற அருளிச் செய்கிறார் –

————————————————————————–

(பகவத் ஸமாஸ்ரயணமும் பாகவத ஸமாஸ்ரயணமும் பழுதாகாதா உபாயங்கள்
இவற்றுள் பாகவத ஸமாஸ்ரயணம் ஸ்ரேஷ்டம் என்கிறார்
அதிலும் ஸ்ரேஷ்டம் பாகவதர்கள் அபிமானத்தின் கீழ் ஒதுங்குவது
அத்தை அடுத்த பாசுரத்தில் அருளிச் செய்கிறார்
பகவத் ஸமாஸ்ரயணம் -90
பாகவத் ஸமாஸ்ரயணம் -89
பாகவத அபிமானம் -90–மூன்று வழிகள்-பழுதாகாதவை -உத்தர உத்தர ஸ்ரேஷ்டம் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
இப்படி கர்மாதி உபாயங்களைப் போல் பழுதாகாமல்
பழுதாகாதா ஒன்றை அறிந்தேன்
பழுதற்ற உபாயம் தான் எது என்னில்
பகவத் ஸமாஸ்ரயனமும் பாகவத ஸமாஸ்ரயணமும்
(ஒவ்வொன்றிலும் ஸ்வ கத பர கத என்று இரண்டு வகைகள் உண்டே-
ஸ்ரீ வசன பூஷணத்தில் நான்கும் உண்டே )
அவை இரண்டிலும் பாகவத ஸமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் என்கிறார் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண் திறந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பதவுரை

பழுது ஆகாது ஒன்று–பழுதுபடாத (சிறந்த) ஒரு உபாயத்தை
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன் (அது என்ன வென்றால் கேண்மின்)
பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
வாழுவா வகை நினைத்து–தப்பாதபடி அநுஸந்தித்து
வைகல் தொழுவாரை–எப்போதும் வணங்குமவர்களை
கண்டு இறைஞ்சி–கண்டு வணங்கி
வாழ்வார்–வாழ்பவர்கள் (பாகவத பக்தர்கள்)
கலந்த வினை கெடுத்து–ஆத்மாவோடு சேர்ந்த தீவினைகளைத் தொலைத்து
விண் திறந்து–பரமபத வாசலைத் திறந்து
மிக்கு–சிறப்புடனே
வீற்றிருப்பார்–எழுந்தருளி யிருக்கப் பெறுவர்

வியர்த்தமாகாத ஒரு உபாயத்தை அறிந்தேன்
அதாவது
ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை அஸ்க்கலித மார்க்கத்தினால் அனுசந்தித்து
ப்ரதி தினம் ஆஸ்ரயித்தவர்களை ஸேவித்து ந மமரராய் ஸூகிப்பவர்கள்
ஆத்மாவோடு சேர்ந்து இருந்த பாபங்களைப் போக்கிக் கொண்டு
பரமபத வாசலைத் திறந்து அங்கு
பெரிய மஹிமையுடன் இருப்பார்கள் –

பழுதாகது ஓன்று அறிந்தேன்
பழுதாகாத உபாயங்களில்-உத்க்ருஷ்டமான உபாயம்

பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை கண்டு இறைஞ்சி வாழ்வார்-
பாகவத சமாஸ்ரயணம் என்று இருந்தேன் –

கலந்த வினை கெடுத்து விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –
ஆத்மாவோடு அவிநாபூதமான பாபத்தைப் போக்கி-
ஸ்ரீ வைகுண்டத்தில் வாசல் திறந்து

விண் திறந்து –
அங்கே அதி சம்ருத்தமான ஜ்ஞான பக்திகளை உடையராய்-
பகவத் கைங்கர்யத்தில் தலைவரான-நித்ய ஸூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார்கள்

இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-
அங்கே நித்ய ஸூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறது-

(சூரணை -459-
பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டை –
பூர்வோபாயத்துக்கு -(ஸ்வகத ஸ்வீ காரத்துக்கு ) பிரமாணமாக அநு சந்திப்பது —
ஆசார்யனை தான் பற்றும் பற்று -என்றும் –
ஆசார்ய அபிமானமே உத்தாரகம்- என்றும் அருளிச் செய்த ஆசார்ய விஷயத்தில் –
ஸ்வகத பரகத ஸ்வீகார ரூப உபாய த்வத்துக்கும்-
பிரமாண தர்சனம் பண்ணுவிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி –
ப்ரதமம் -ஸ்வகத ஸ்வீகார உபாயத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –

பழுது ஆகாது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல்-தொழுவாரைக் கண்டு
இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து விண் திறத்து
வீற்று இருப்பார் மிக்கு –
அதாவது –
அமோகமாய் இருப்பதோர் உபாயம் அறிந்தேன்-
ஆஸ்ரயிப்பார்க்கு சமாஸ்ரணீயனாய் கொண்டு-திரு பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற அவனுடைய திருவடிகளை
தப்பாத பிரகாரத்தை நினைத்து -நாள் தோறும் அநு கூல விருத்தியை பண்ணிக் கொண்டு போரும் ஞானாதிகரைக் கண்டு
தங்களுக்கு தாரகமாக ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கும் அவர்கள் –
ஆத்மாவோடே அவிநா பூதமான பாபத்தைப் போக்கி -ஸ்ரீ வைகுண்டத்தில் திரு வாசல் திறந்து -அங்கே
சம்ருத்தமான ஞானாதிகளை உடையராய் -ததீய கைங்கர்ய நிரதராய் கொண்டு – வ்யாவிருத்தராய் இருப்பர் என்று –

பரம ஆப்தரான – திருமழிசைப் பிரான் அருளிச் செய்த -பழுது ஆகாது ஓன்று அறிந்தேன் -என்கிற
பாட்டை ஆசார்ய விஷயத்தில் முற்பட சொன்ன
ஸ்வகத ஸ்வீகார மாகிற உபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது -என்கை-

இத்தால் –
ஸ்வகத ஸ்வீகாரம் அஹங்கார கர்ப்பதயா அவத்யகரமாய் இருந்ததே ஆகிலும் –
பல சித்தியில் வந்தால் -பழுது போகாது என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –
குருணா யோபி மன்யேத குரும் வா யோ அபிமந்யதே தாவு பௌ பரமாம் சித்திம் நியமா துபக கச்சத -என்று
பர கத ஸ்வீகாரோத்தோபாதி-ஸ்வகத ஸ்வீகாரத்துக்கும் பலம் தப்பாது என்னும் இடம் –
பாரத்வாஜ சம்ஹிதையிலும் -சொல்லப் பட்டது -இறே-

சூரணை -460-
1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –

இனிமேல் பரகத ஸ்வீ காரம் ஆகிற பரம உபாயத்துக்கு பிரமாணங்கள் பலவற்றையும் –
தர்சிப்பித்து அருளுகிறார் –)

அப்பிள்ளை உரை
பழுது போகாத உபாயங்களில் அத்விதீயமானது பாகவத ஸமாச்ரயணம்
அது எங்கனே என்னில்
போக பூமியான பரம பதத்தை விட்டு –
ஆஸ்ரயிப்பாருக்கு ஸமாஸ்ரயணீயனாகக் கொண்டு பாற்கடலில் கண் வளர்ந்து அருளுமவனது திருவடிகளை –
(வ்யூஹ ஸுஹார்த்தம் அன்றோ – நாம் ஸமாச்ரயணம் பண்ணவே )
ப்ராப்யமும் ப்ராபகமும் அவன் திருவடிகளே என்று தப்பாத பிரகாரங்களில் அனுசந்தித்து
நாள் தோறும் ஆஸ்ரயித்துக் கொண்டு போருமவர்களை
(கடமைக்காக அல்லவே -ராக பிராப்தம் அன்றோ )
கண்ணாரக் கண்டு
தலையாலே வணங்கி (இறைஞ்சி )
ஸூ கோத்தராக ஆஸ்ரயித்துக் கொண்டு போகுமவர்கள்
ஆத்மாவுடன் பொருந்திக் கிடந்த கர்மங்களை நிஸ் சேஷமாகப் போக்கி -(அவிநாபூதமாய் கிடக்கும் இவை அன்றோ )
ஸ்ரீ வைகுண்டத்தில் திரு வாசல் நீக்கி ஞான ப்ரேமங்களால் பரிபூர்ணராய்
ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த வியாவ்ருத்தம் தோற்ற எழுந்து அருளி இருப்பார்கள்
நான் ப்ரஹ்மத்தை அறிகிறேன்-அதை விட -ப்ரஹ்மம் என்னை அபிமானித்து இருக்கிறார் என்பதே உத்க்ருஷ்டம்

————————————————————————–

(குருணா யோபி மன்யேத குரும் வா யோ அபிமந்யதே தாவு பௌ பரமாம் சித்திம் நியமா துபக கச்சத -என்று
பர கத ஸ்வீகாரோத்தோபாதி-ஸ்வகத ஸ்வீகாரத்துக்கும் பலம் தப்பாது –
பரம புருஷார்த்த்தைத் தப்பாமல் அளிக்கும் என்னும் இடம்
பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி
ஸ்வரூப விரோதியும் துஷ் கரத்வமும் இதுக்கு உண்டே
அதில் அசக்தனுக்கு ஆச்சார்ய அபிமானம்
விஸ்வாச மாந்த்யம் -ஈஸ்வர ஸ்வா தந்தர்யம் இரண்டாலும்
ஸ்வ ஸ்வாதந்தர்யத்தால் பக்தி நழுவிற்று
ஈஸ்வர ஸ்வா தந்தர்யத்தால் பிரபத்தி நழுவிற்று )

அப்பிள்ளை உரை -அவதாரிகை
பாகவதராலே அங்கீ க்ருதரானவர்களே எல்லாரிலும் மேம்பட்டவர் என்கிறார் –

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்த
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-90-

பதவுரை

விண்–பரமபதத்தில்
வீற்றிருந்து–பெருமை பொலிய இருந்து
ஆள வேண்டுவார்–ஆட்சி செய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள்
வேங்கடத்தான் பால்–திருவேங்கட முடையான் பக்கலில்
பல் மலர்கள்–பலவகைப்பட்ட மலர்களை
திருந்த–நன்றாக
வைத்தாரே–ஸமர்ப்பித்தவர்களே யாவர் (பகவானை ஆராதித்தவர்களே விண் ஆள்வர் என்கை)
வரும் மதி பார்த்து–(எம்பெருமானுடைய திருவுள்ளத்தில்) ஓடுகின்ற கருத்தை யறிந்து
அன்பினர் ஆய்–பக்தியை யுடையவர்களாய்
மற்றவற்கே–அந்த எம்பெருமானுக்கே
தாழ்வு ஆய் இருப்பார்–அடிமைப்பட்டிருப்பவர்களுக்கு
தமர்–அடிமைப்பட்டவர்கள்
மேல் திருந்த வாழ்வார்–முன்னடிகளிற் சொல்லப்பட்டவர்களிற் காட்டிலும் விலக்ஷணராக வாழ்பவராம்.

திருவேங்கடமுடையான் விஷயமாக அநேக புஷ்பங்களைச் சோதித்து ஸமர்ப்பித்தவர்களே
அத்யாதிக மஹிமையுடன் இருந்து பரமபதத்தைப் பரி பாலநம் செய்ய வேண்டுவார்கள் ஆவார்
ஸர்வேஸ்வரன் திரு உள்ளத்தில் இருப்பதைச் செவ்வையாய் அறிந்து ப்ரீதி யுக்தராய்
அந்த ஸர்வேஸ்வரனுக்கே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தாஸரான
பாகவதர்கள் இன்னம் அதிகமாக ஸூ கிப்பார்கள் —

விலஷணமான பகவத் கைங்கர்யத்தில் அதிகரித்து-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளார்க்கும் அப்படியே வர்த்திக்க வேண்டி இருக்கப் பெற்றவர்கள்-
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே நிரந்தரமாக ஆஸ்ரயித்தவர்கள்-

அதிலும் விலஷணமான பாகவத பிராப்தி காமராய்-
அது பெற்றவர்கள்
பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்

எம்பெருமான் திரு உள்ளத்தில் செல்லுவன அறிந்து-
அதுக்கு ஈடான அடிமைகளில் ஸ்நேஹித்து-
அவன் பக்கலில் பிரவணர் ஆனவர்களாலே-
விஷயீ க்ருதர் ஆனவர்கள் –

(யே ந யே ந தாதா கச்சதி தே ந தே ந ஸஹ கச்சதி –
சர்வேஸ்வரன் திரு உள்ளம் படியே இவன் நினைக்கிறான் )

யதோ உபாசனம் பலம் -என்கிறபடியே
பகவத் ஸமாஸ்ரயணத்தாலே பகவானைப் பெறுவார்
பாகவத் ஸமாஸ்ரயணத்தாலே பாகவதர்களைப் பெறுவார்
என்கிறது இப் பாட்டு

விண்ணாள
அங்கு உள்ளாருக்கும் பூஜ்யராய்
அவர்களும் அப்படியே வர்த்திக்க
தங்கள் இடத்திலே கைங்கர்யத்திலே அதிகரித்து வர்த்திக்க

மேல் -திருந்து -என்கிற பதத்துக்கும் அர்த்தமாய்
மேலுக்கு அவதாரிகை அருளிச் செய்கிறார் -அதிலும் -இத்யாதி –

மற்று அவருக்கே -ஈஸ்வரனுக்கே
தாழ்ந்த பாகவதர்களுக்கும் உத்தமர் அவர்களை ஆஸ்ரயித்தவர்கள் -என்றபடி —

அப்பிள்ளை உரை
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்தால் மூர்த்தா அபி ஷிக்தர் ஆகையாலே
வந்த வேறுபாடு தோற்ற இருந்து
பரமபதத்தில் நித்ய கைங்கர்ய நியதரான
நித்ய ஸூரிகளை ஸ்வ அதீனமாக நிர்வஹிக்கை யாகிய இப் புருஷார்த்தத்தைப் பெற வேண்டும் என்று
மநோ ரதித்து-யதா மநோ ரதத்தின் படியே அடைந்து
திருமலையில் வந்து ஸூலபனான திருவேங்கடமுடையான்
திருவடிகளில் பஹு விதமான புஷ்பங்களை சாஸ்த்ர யுக்த க்ரமம் படியே அழகியதாக ஆஸ்ரயித்து
சேஷியான சர்வேஸ்வரன் திரு உள்ளத்தில் கோலி வருமவற்றை யதாவத் தர்சித்து
(வருமதி பார்த்து அன்பினராய் )-
அதுக்கு அனுரூபமான கைங்கர்யங்களில் நிரவதிக ப்ரேமத்தை யுடையவராய்
அதுக்கும் மேல்
அந்த சேஷியான சர்வேஸ்வரன் பக்கலிலே ஸூவ சேஷத்வ அனுகுணமாக
ப்ரவணரான ஸ்ரீ வைஷ்ணவர்களால் அங்கீ கரிக்கப்பட்டு
(நல்ல என் தோழி -ஆண்டாள் பாசுரம்-பெரியாழ்வார் திருவயிற்றிலே பிறப்பு பழுதாகாதே
தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டுமே )
விஷயீ கரிக்கப்பட்ட மஹா புருஷர்கள்
பகவத் கைங்கர்யத்திலும் உத்க்ருஷ்டமாய் ததீய கைங்கர்யம்
பகவத் ஸ்வரூப உசிதம் கட்டளைப்பட்டு பாகவத கைங்கர்யம் செய்யப் பெற்று ஸூகோத்தரராய் வர்த்திக்கிறவர்
(நீக்கமில்லா அடியார் -சயமே அடியார்- கோதில் அடியார் )
தத் ஸமாஸ்ரயணம் பண்ணினவர்கள் தத் கைங்கர்யம் பெறுவார்கள்
ததீய ஸமாஸ்ரயணம் பண்ணினவர்கள் ததீய கைங்கர்யம் பெறுவார்கள்
யதோ உபாசனம் ததோ பலம் எல்லாருக்கும் ஒக்குமே

————————————————————————–

(பகவத் ஸமாஸ்ரயணம் செய்தவர்கள்–ஸ்வ கத -பர கத – பாகவத சமாஸ்ரயணம் –
மூவருக்கும் பகவத் பக்தி பொதுவானது என்றும்
இவர்கள் உபய விபூதியில் உள்ளவர்களில் சிறந்தவர்கள் என்றும்
இப் பாசுரத்தில் அருளிச் செய்கிறார் -)

அப்பிள்ளை உரை அவதாரிகை
எம்பெருமான் திருவடிகளே ப்ராப்யமும் பிராபகமும்-உபாயமும் உபேயமும்- என்று
அறுதி இட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
உபய விபூதியில் உள்ளாருக்கும் நிர்வாஹகர் ஆவார் ஆகும்படியான பெருமையை யுடையவர் ஆவார்

தமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்
அமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று-91-

பதவுரை

மால் வண்ணன்–கரிய மேனியனான எம்பெருமானுடைய
தாள் தாமரை–திருவடித் தாமரைகளில்
மலர்கள் இட்டு–புஷ்பங்களை ஸமர்ப்பித்து-காயிக-
இறைஞ்சி–வணங்கி-வாசிக
தாள் தாமரை அடைவோம் என்று–அத் திருவடித் தாமரைகளை யடைவோமென்று-மானஸ-
(வாசிக காயிக மானஸ மூன்றும் சொல்லி )
தமர் ஆவார்–பக்தராயிருக்குமவர்கள்
தாமரை மேலாற்கும்–திருநாபிக் கமலத்திற் பிறந்த பிரமனுக்கும்
ஆடு அரவு ஆர்த்தாற்கும்–ஆடுகின்ற ஸர்ப்பங்களை (ஆபரணமாக உடம்பிலே) கட்டிக் கொண்டிருக்கும் சிவனுக்கும்
அமரர்க்கும்–நித்ய ஸூரிகளுக்கும்
யாவர்க்கும்–மற்றுமெல்லார்க்கும்
அமரர்கள்–மேற்பட்டவராவர்-

ஸ்யாம வர்ணனான ஸர்வேஸ்வரனுடைய திருவடித் தாமரைகளிலே புஷ்பங்களை ஸமர்ப்பித்து நம்ரராய்
அத் திருவடித் தாமரைகளை அடைவோம் என்று நிர்ப்பரராய் இருக்கும் பாகவதர்கள்
கமல ஆஸநனான ப்ரஹ்மாவுக்கும்
ஆடுகிற சர்ப்பத்தை ஹாரமாக யுடைய ருத்ரனுக்கும்
மற்ற தேவர்களுக்கும்
எல்லாருக்கும் பூஜ்யமான தேவதைகள் ஆவார்கள் –

தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி –
மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று தமராவர்
யாவர்க்கும்
தாமரை மேலார்க்கும்-
அமரர்க்கும்
ஆடு அரவத் தார்க்கும் –
அமரர்கள்-
என்று அந்வயம்

மால் வண்ணன் –
கிருஷ்ணன்

தாள் தாமரை –
தாளை உடைய தாமரை

ஆடு அரவத்தார்க்கும் –
ஆடுகிற பாம்பை ஆபரணமாக உடைய ருத்ரனுக்கும்

அமரர்கள் –
நித்ய ஸூரிகளோபாதி இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும்
ப்ரஹ்மாதிகளுக்கு பூஜ்யர் -என்றபடி-

(மலர்கள் இட்டு -காயிக வியாபாரம்
இறைஞ்சி –வாசிக வியாபாரம்
அடைவோம் என்று தமராவார் –மாநசமான வியாபாரம்
முக் கரணங்களால் அடிமைப் பட்டவர்கள்-
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே -திருவிருத்தம் –79-
தேவர் வைகல் தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே –திருவாய் 7-10-11-)

அப்பிள்ளை உரை
மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று அருளிச் செய்த
கறுத்த நிறத்தை யுடையவனான கிருஷ்ணன் -(மால் வண்ணன் )-
உடைய திருவடித் தாமரைகளில்
செவ்விப் பூக்களைப் பரிமாறி
தங்கள் தலைச் சுமையை அங்கே வைத்து ஆஸ்ரயித்து
அவனுடைய திருவடிகளைக் கிட்டி அனுபவிப்போம் என்று
அத்யவசித்து இருக்கும் ஆஸ்ரிதர் ஆனவர்கள்
திரு நாபி கமலத்தை இருப்பிடமாகக் கொண்ட நான்முகனுக்கும்
ஆடுகிற பாம்பை ஆபரணமாகப் பூண்டு இருக்கும் ருத்ரனுக்கும்
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்யருக்கும்
மற்றும் எல்லாருக்கும்
நிர்வாஹகரான தேவர்கள்- பூஜ்யர் ஆவார் -பெருமையை யுடையவர் ஆவார் –

————————————————————————–

(நானும் அவன் தமர்களிலே ஒருவன் என்கிறார்
கர்ப்பத்தில் இருந்த நாள் முதல் ஸர்வேஸ்வரன் என்னை ரஷித்துக் கொண்டு போருகையாலே
எல்லாக் காலத்திலும் நான் அவனை மறந்து அறியேன் என்கிறார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை –
கர்ப்ப அவஸ்தையே தொடங்கி ஸர்வேஸ்வரன் என்னை ரஷித்துக் கொண்டு போருகையாலே
சர்வ காலத்திலும் நான் அவனை மறந்து அறியேன் என்கிறார்

என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

பதவுரை

கரு இருந்த நாள் முதலா–(நான்) கர்ப்பத்திலிருந்த நாள் தொடங்கி
காப்பு–(எம்பெருமானாலே) ரக்ஷை பெற்றவனாகையாலே
திரு என்றும் இருந்த மார்வன் சிரீதரனுக்கு–பிராட்டி நித்ய வாஸம் பண்ணப் பெற்ற திருமார்வை யுடைய அந்தத் திருமாலுக்கு
சொல்லும் பொருளும் சேர்ந்தமை இரண்டு சொற்களாலும் -நித்ய ஸ்ரீ நித்ய மங்களம் -என்றும் திரு விருந்த ஸ்ரீ தரன்
ஆள் ஆய்–ஆட்பட்டவனாய்
சேஷத்வம் புரிந்து கைங்கர்யம் பண்ணி ஆள் ஆனேன்
நெடு மாலை–(அந்த) ஸர்வேச்வரனை
என் நெஞ்சத்து–என்னுடைய ஹ்ருதயத்திலே
வைத்து–ஸ்தாபித்து
நின்றும் இருந்தும் என்றும்–நிற்றல் இருத்தல் முதலிய எல்லா நிலைமைகளிலும்
மறந்தறியேன்–மறவாமல் (அவனையே) சிந்திப்பவனா யிருக்கின்றேன்.
அவன் நின்றும் இருந்தும் அவஸ்தைகளிலும் நான் நின்றும் இருந்தும் அவஸ்தைகளிலும் மறந்து அறியேன்

பெரிய பிராட்டி எப்போதும் வாஸம் பண்ணுகிற திருமார்பை யுடைய ஸ்ரீ தரனுக்கு தாஸனான நான்
கர்ப்பத்தில் இருந்த நாள் முதல் ரஷிக்கையாலே
ஸ்ரீ யபதியை என் ஹ்ருதயத்திலே ஸ்தாபித்து
நின்ற போதும்
இருந்த போதும்
எப்போதும் மறந்து அறிய மாட்டேன் –

கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-
எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே-
என்றும்
திரு இருந்த மார்பன் சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று
வ்யாமுக்தனானவனை-என் நெஞ்சிலே வைத்து-
என்றும் ஒக்க
நின்ற போதொடு இருந்த போதொடு வாசி அன்றிக்கே-
மறந்து அறியேன் –
என்கிறார்-
ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே –

கருவிருந்த நாள் முதலாக் காப்பு
அவனாகையாலே
என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
நெடுமாலை
என் நெஞ்சத்தே வைத்து
என்றும்
நின்றும் இருந்தும்
மறந்தறியேன்
என்கிறார் -என்ற அந்வயத்திலே அர்த்தம்
ஜாயமான கடாக்ஷம் பெற்றதாலேயே இது எல்லாம் பெற்றேன் என்கிறார் –

(என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றுப் பருகினான் -(திருவாய் –9-6-10-)
அதனில் என் பெரிய அவா அறச் சூழ்ந்தாயே –(திருவாய் –10-10-10-)
ஆஸீ நா வா சயா நா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா
நமோ நாராயணா யேதி மந்த்ர ஏக சரணா வயம் –நாரதீயம்
திருமாலே நானும் உனக்குப் பழ யடியேன் -ஸ்ரீ தரனுக்கு ஆளாய்
ஜாய மாநம் ஹி புருஷம் யம் பஸ்யேந் மது ஸூதந
ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேய ஸ வை மோஷார்த்த சிந்தக –மோக்ஷ தர்மம்

கரு வரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் –(பொய்கையார் -6)
ஓன்று மறந்து அறியேன் ஓதம் நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ வேழைகாள் -அன்று
கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை –6-

கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் -(பூதத்தாழ்வார் –87 )
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

அப்பிள்ளை உரை
அறிகைக்கு யோக்யம் அல்லாத கர்ப்பத்தில் இருந்த நாள் தொடக்கமாக
அவன் என்னை குறைவற ரஷித்துக் கொண்டு போருகையாலே
பெரிய பிராட்டியார் சர்வ காலத்திலும் இறையும் அகலகில்லேன் என்று
எழுந்து அருளி இருக்கும் திரு மார்பை உடையவனாய்
(பிறந்த இடமான ஷீராப்தி ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் -இறங்காமலே சொல்லும் வார்த்தை )
அத்தாலே ஸ்ரீ தரன் திருநாமம் சார்த்தம் -அர்த்தமாக உடையவனான -திரு நாமம் படியே உள்ளதாக ஆனதே
(மாம்பழம் உண்ணி மைசூர் பாகு போல் இல்லையே )
ஸர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷ பூதனாய்
ஆஸ்ரித விஷயத்தில் நிரதிசய வ்யாமுக்தனானவனை (நெடு மால் )
என்னுடைய ஹ்ருதயத்தில் வைத்து நின்ற போதொடு இருந்த போதோடு வாசியற மறந்து அறியேன் -என்றார்
(குருஷ்மா மாம் அனுசரம் -கிரியதாம் இதி மாம் வத போல் )
நாரதீயம் -நமோ நாராயண மந்த்ரத்தை இருக்கும் பொழுதும் நின்ற போதும் கிடந்த போதும் –
எங்கே இருந்தாலும் சரணமாக பற்றினேன் போல் இங்கு இவரும்

————————————————————————–

(மறந்து அறியேன் -இறந்த கால பிரயோகம் கீழ்
இனி வரும் காலத்தில் மறப்பீரோ என்று ஸர்வேஸ்வரன் திரு உள்ளமாக
பிரானே நீ செய்து அருளிய ரக்ஷையையும்
உனது ஸ்வ பாவத்தையும் உள்ளபடி அறிந்தவர்கள்
உன்னை விடவும் முடியுமோ என்கிறார் இதில்
உலகில் சாதனாந்தரம் ஸாத்யாந்தரம் இரண்டில் செய்வது அனைத்தும் ஆகுமே
இவை இரண்டுமே கண்ணனே என்று இருப்பார் எவ்வாறு அவனை மறுப்பார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
சர்வ சேஷியாய் குணாதிகனான உன்னை
யதாவாக அறிந்தவர்கள்
உன்னை விட்டு இருக்க மாட்டார்கள்

காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப் பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்-93-

பதவுரை

அங்கு–அந்தப் பிரளய காலத்தில்
பல் உயிர்க்கும்–எல்லா ஆத்மாக்களுக்கும்
ஆப்பு ஒழியவும்–சரீரங்கள் அழிந்து போயிருந்தாலும் (மறுபடியும்)
ஆப்பு -சரீர இந்திரிய கட்டு -அநிஷ்டம்
ஆக்கை கொடுத்து–சரீரங்களைக் கொடுத்து
அளித்த–அருள் செய்த
கோனே–ஸ்வாமிந்!
காப்பு–(நீ செய்தருளும்) ரக்ஷைணை
மறந்தறியேன்–ஒரு நாளும் மறக்க மாட்டேன்
கண்ணனே என்று இருப்பன்–எல்லாம் கண்ணனே என்று உறுதி கொண்டிருப்பேன்
ப்ராப்யமாயும் ப்ராபகமாயும் -என்று இருப்பன்
குணம்–திருக் குணங்களினால்
பரனே–சிறந்த பெருமானே!
மெய் தெளிந்தார் தாம்–உள்ளபடி (ஸ்வரூபத்தைத்) தெளிவாக அறிந்தவர்கள்
உன்னை விட துணியார்–உன்னை விட மாட்டார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணனே ரக்ஷகன் என்று இருப்பன்
இதை மறக்க மாட்டேன்
பிரளய காலத்தில் சரீரங்கள் போனாலும்
ஸ்ருஷ்டி காலத்தில் ஸகல பிராணிகளுக்கும் சரீரங்களைக் கொடுத்து
ரஷித்த ஸ்வாமி யான குணாதிகனே
யதார்த்தம் அறிந்தவர்கள் உன்னை விடுகைக்கு ஸஹாஸம் செய்யார்கள் –

எம்பெருமானுடைய ரஷையை மறந்தறியேன்-
கிருஷ்ணனே பிராப்ய ப்ராபகங்கள் என்று இருப்பன்
சர்வ ஆத்மாக்களும் கரண களேபரங்கள் இழந்தால்-அத்தை மீளவும் கொடுத்து
ரஷிக்கைக்கு உறுப்பான-ஸ்வாபாவிகமான சேஷி சேஷ பாவமான
சம்பந்தத்தை யுடையவனே
இஸ் சம்பந்தத்தை மெய்யாக அறிந்தவர்-
உன்னை விடத் துணியார் -என்கிறார்

ஆப்பு -பந்தமாய்
அத்தால் கரண களேபரங்களை சொல்லுகிறது-

குணப் பரனே -குணாதிகனே -என்றபடி

(ஆப்பு -சம்சாரத்தில் அகப்பட்டுக் கட்டுண்ணப் பண்ணும் உபகரணம் -சரீர இந்திரியங்களைச் சொல்லுகிறது
நீ அடியிலே செய்த உதவியைக் கண்ட பின்பும் உன்னை விட்டும் அகல முடியுமோ
உன் சேஷித்வம் கண்ட பின்பும் அகல முடியுமோ
குண பரனே -உன் குணங்களைக் கண்ட பின்பும் அகல முடியுமோ
ரக்ஷகன் என்று விடுவதோ
உபகாரகன் அன்று என்று விடுவதோ
குண ஹீனன் என்று விடுவதோ
வகுத்தவன் அன்று என்று விடுவதோ
எத்தைச் சொல்லி விடுவது – )

(நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம் பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பனோ–1-10-9-
எத்தைச் சொல்லி மறப்பேன்?
1-அபூர்ணன் என்று மறக்கவோ?
2-தூரத்திலே உள்ளவன் என்று மறக்கவோ?
3-வடிவழகு இல்லை என்று மறக்கவோ?
4-மேன்மை இல்லை என்று மறக்கவோ?
5-எனக்கு உபகாரகன் அல்லன் என்று மறக்கவோ?
எத்தைச் சொல்லி மறப்பேன்? என்றபடி. )

அப்பிள்ளை உரை
நீ இவ் வாத்மாவுக்கு பண்ணும் ரக்ஷையை மறந்து அறிந்தேன்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஆஸ்ரிதற்கு ஸூலபனான நீயே
ப்ராப்யமாயும் ப்ராபகமாயும் என்று அத்யவசித்து இருப்பேன்
(மேன்மை விஸ்வரூபம் எளியவன் கையாளாய்-மாம் -அஹம் )
பிரளய தசையில் சரீரங்கள் அழிந்து போகவும் சர்வ ஆத்மாக்களுக்கும் உன்னை ஆஸ்ரயிக்க உறுப்பாக –
சரீரங்களையும் – கரண களேபரங்களையும் கொடுத்து அருளி (ஒருவனுக்கே பல சரீரங்கள் உண்டே )
தயாமானவாய்க் கொடுத்து -(பட்டர் ஸ்ரீ ஸூக்திகள் -நாயனாரும் எடுத்துக் காட்டி அருளினார் அன்றோ )
அதுக்கும் மேலே
குளிர ஈரக் கையாலே தடவி ரஷித்தவனாய்
இப்படி ரஷிக்கைக்கு அடியான ஸ்வாபாவிகமான சேஷித்வ பிராப்தியை யுடையவனாய்
ரக்ஷண அனுகுணமாக கல்யாண குண பூர்த்தியையும் யுடையவனாய் -குணங்களால் சர்வ உத்தமனாய்
( யாக்கை கொடுத்து அருளி -கோனே -குணப் பரனே-மூன்றுமே உண்டே )

உன்னோட்டை உறவையும்
உறவு அடியாக நீ பண்ணும் ரக்ஷணங்களையும்
ரக்ஷண அனுகுணமான குண வை லக்ஷண்யத்தையும்
உள்ளபடி அறிந்தவர்கள் உன்னை விட அத்யவசியர்கள்

சேஷ சேஷி பாவம் என்று விடவோ
ரக்ஷணங்கள் பண்ணி அருள வில்லை என்று விடவோ
உபகாரகன் அல்லன் என்று விடவோ
குண பரன் ஆலன் என்று விடவோ
பிராப்தி இல்லை என்று விடவோ

——————————————————–

(நீர் விடா விடிலும் உம் தோஷம் கண்டு நாம் விட்டால் என் செய்வீர் என்ன
எம்பிரானே உன் ஸ்வரூபத்தை மறந்து பேசுகிறீர்
சரணாகத ரக்ஷணமே அன்றோ உன் ஸ்வரூபம்
பாண்டவர்களை ரஷித்த செயலில் உம்முடைய ஆஸ்ரித பக்ஷபாதம் கண்டேனே
தோஷமே வடிவெடுத்த என்னை இதுவரை ரஷித்து மேலும் கால தத்வம் உள்ளதனையும் நீ ரஷிப்பதும் செய்வாய்
ஆரோக்ய ஹேது என்று அறிந்தால் வேம்பின் இலையும் கறியாகுமே
அப்படியே என்னையும் திரு உள்ளம் பற்ற வேணும் என்கிறார் -)

அத்யந்த ஹேயன் ஆகிலும்-என்னை விஷயீ கரித்து அருள வேணும்
என்னிலும் தண்ணி யரையும்-
யதி வா ராவணஸ்வயம்-என்னும்படியே
வஸ்து ஸ்த்திதி அழகியதாக அறியுமவர்கள் என்றும் விஷயீ கரிக்கப் படுமவர் என்கிறார்-

அப்பிள்ளை உரை -அவதாரிகை
அத்யந்த ஹேயன் யாகிலும் என்னை விஷயீ கரித்து அருள வேண்டும்
(அகிஞ்சனனாய் குண ஹீனனைத் தேடி அன்றோ நீர் உள்ளீர் )
வஸ்து ஸ்த்திதி அழகியதாக உண்மையாக யாதாவாக அறியுமவர்கள்
எத்தனையேனும் தோஷம் இருந்தாலும்
தோஷம் கண்டு இகழாமல்
தோஷமே பச்சையாக (உபகாரகமாக )மேல் விழுந்து
என்றும் விஷயீ கரிப்பார்கள் அன்றோ என்கிறார்-

மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானார் நீறாக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து -பை தெளித்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று-94-

பதவுரை

வேறு ஆனார்–வேறுபட்டவர்களான (பகைவர்களான) துரியோதநாதிகள்
நீறு ஆக–சாம்பலாய் ஒழிந்து போம்படியாக
தெளிந்து–(ஆஸ்ரித விரோதிகளைக் கொல்லுதல் தருமமே என்று) தேறி
தெளிந்த பை பாம்பு இன்அணையாய்–விளங்குகின்ற படங்களை யுடைய ஆதிசேஷனாகிற இனிமையான படுக்கையைச் சென்று சேர்ந்த பிரானே!
அடியேற்கு–அடியேனுக்கு
அருளாய்–அருள் புரிய வேணும்
என்று–வேணுமென்று விரும்பினால்
கை காட்டி–(பாண்டவர்களுக்கு) வேண்டிய உதவிகளைச் செய்து
கை தெளிந்து காட்டி–தெளிந்து கை காட்டி
களம் படுத்து–(அந்த எதிரிகளைப் போர் களத்தில் கொன்றொழித்து) (இவ் வகையாலே மண்ணின் பாரம் நீக்கி)
வேம்பும் கறி ஆகும்–வேப்பிலையும் கறியாகச் சமைத்துக் கொள்ளக் கூடியதே
மெய் தெளிந்தார்–உள்ளதை உள்ளபடி யறியுமவர்கள்
என் செய்யார்–எது தான் செய்ய முடியாதவர்கள் (எது நினைத்தாலும் செய்யக் கூடியவர்களே)

ஸத்ருக்களான துரியோதனாதிகள் பஸ்மாமாம் படி ஸங்கல்பித்துப் படை வகுத்து யுத்த அரங்கத்திலே விழச் செய்து
நிர்மலமாய் பரந்த பணங்களை யுடைய திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கை மேலே கண் வளர்ந்து அருளுகிறவனே
அடியேன் விஷயமாகக் கிருபை பண்ணி அருளாய்
இஷ்டம் இருந்தால் வேம்பின் இலையும் கறி யமுதாகும்
தத்வம் அறிந்தவர்கள் என் செய்ய மாட்டார்கள் —

ஒன்றாய் வாழாதே வேறான துர் யோநாதிகள் பஸ்மாமாம்படி-
பர ஹிம்சை என்று கலங்காதே-
ஆஸ்ரித விரோதிகள் ஆகையாலே-திரு உள்ளம் தெளிந்து
அணி வகுத்து
யுத்த களத்திலே கொண்டு விழ விட்டு-
பின்னும் படுக்கையிலே சாய்ந்தவனே

பை தெளிந்த
எம்பெருமானோட்டை ஸ்பர்சத்தாலே குளிர்ந்த பணங்கள்-

அவர்கள் தக்க வைவர்
(நீர் தகாத ஒருவர் என்று அவன் திரு உள்ளதாக )

நீ ஹேயரையும் ஏறிட்டுக் கொண்டால் ரஷிக்கலாம்
(வேம்பையும் கறியாகக் கொள்ள வல்ல சமர்த்தன் அன்றோ
நீர் திரு உள்ளம் பற்றினால் குண ஹீனரையும் ரஷிக்கலாமே )

கறியாகக் கொள்ளுவோம் என்று அபிமானிக்க-வேம்பு கறியாகுமா போலே
வஸ்து ஸ்திதி அறிவார் எவ்வளவு செய்யார்கள் –

கிமத்ர சித்ரந் தர்மஜ்ஞ-இதிவத்
சரணாகதி தர்மம் அறிந்தவர்கள்
தோஷவானையும்-கைக் கொள்ளுவார்கள் -என்றபடி-

(கிமத்ர சித்ரம் தர்மஜ்ஞ லோக நாத ஸூகாவஹ
யத் த்வமார்யம் ப்ரபா ஷேதா ஸத்வவான் ஸத்பதே ஸ்திதே -யுத்த –18-36-என்று
தர்மம் அறிந்தவனே லோக நாதனே ஸூகம் அளிப்பவனே ஸத்வ குணம் உடையவனாய்
நல் வழியில் நிற்கும் நீ
இந்த நல் வார்த்தை நவின்றதில் என்ன ஆச்சர்யம் உள்ளது – )

அப்பிள்ளை உரை
ஒன்றாய்க் கூடி வாழ அறியாதே ஏறிட்டுக் கொண்ட துரியோதனாதிகள்
ஒரு பிடி சாம்பலாகப் போம் படியாக
பர ஹிம்ஸை என்று கலங்காதே
ஆஸ்ரித விரோதிகள் என்று திரு உள்ளம் தெளிந்து கையும் அணியும் வகுத்து
எதிரிகளின் மர்மங்களைக் காட்டி யுத்த பூமியிலே கொன்று விழ விட்டு
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்து கை ஒழிகையாலே (விஸ்ராந்ததுக்காக )
ஸ்வ ஸ்பர்சத்தாலே குளிர்ந்த படங்களை யுடைய படுக்கையிலே திரு அனந்தாழ்வான் ஆகிய படுக்கையிலே
கரைசல் அற்று கண் வளர்ந்து அருளுகிறவனே
அத்யந்த ஹேயனான-புகலற்ற குண ஹீனனான -அகதி அகிஞ்சனான அடியேனை
கிருபை பண்ணி அருள வேணும்
அவர்கள் தக்கவர்கள் நீ ஹேயன் என்றால்
ஹேயனையும் ஏறிட்டுக் கொண்டால் ரஷிக்கலாமே
கறியாகக் கொள்ளலாம் என்று ஏறிட்டுக் கொள்ளும் அளவில்
விரசமான வேம்பும் கறி யாகுமே
வஸ்து ஸ்திதியை பழையதாக உள்ளபடி அறிந்து
தோஷம் பார்த்து இகழாமல் மாத்திரம் அன்றிக்கே
(யதிவா ராவணாஸ்யாம் போல் )அதுவே பச்சையாகக் கொண்டு
கை விடுகைக்கு உறுப்பான குற்றங்களைச் சொல்லி மறுதலைத்த அவர்களே
வாய் விட்டு புகழும் படி மேல் விழுந்து விஷயீ கரித்தார்கள் அன்றோ
(அஸ்மாத் துல்யம் என்றார்கள் அன்றோ )
பை தெளிந்த என்ற இடத்தில் தெளிவால் குளிர்த்தியைச் சொல்லுகிறது

————————————————————————–

(அருளாய் அடியேற்கு என்றபடியே
எம்பெருமான் அருள
தாம் இஷ்ட பிராப்திகளையும் அநிஷ்ட நிவ்ருத்திகளையும்
பெற்ற படியைப் பேசுகிறார் –
கடன் நாடு ஸ்வர்க்கம் விட்டேன் -அனுபவித்தே அற வேண்டிய நாடு தானே
மண்ணாடு விட்டேன் -சம்சாரம் போனதே
இட நாடு பெற்றேன்
அடிமை ஏன்றேன் -கைங்கர்யம் பெற்றேன் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
எம்பெருமான் பக்கலிலே தமக்கு பரம பக்தி பிறந்தமையை அருளிச் செய்கிறார்

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

பதவுரை

அடிமை–அடிமையை
என்றேன்–ஏற்றுக் கொண்டேன்
பிறப்பு இடும்பை–ஸம்ஸார துக்கங்களில் நின்றும்
இழிந்தேன்–நீங்கினேன்
அமரர்க்கு–பிரமன் முதலிய தேவர்களுக்கும்
அமராமை–என் அருகு நாடா வெண்ணாதபடி
ஆன்றேன்–(ஞானம் பக்தி முதலிய வற்றால்) நிரம்பினேன்
கடன் நாடும்–ஸ்வர்க்கம் முதலிய லோகங்களையும்
மண் நாடும்–இப் பூலோகத்தையும்
கை விட்டு–உபேக்ஷித்து
மேலே–எல்லாவற்றுக்கும் மேற்பட்டுள்ளதாய்
இடம்–(அடியார்கள் குழாங்களுக்குத் தகுதியாக) இட முடைத்தான்
நாடு–திருநாட்டை
காண–கண்டு அநுபவிக்கலாம்படி
இனி–இப்போது
ஆன்றேன்–(பரம பக்தி) நிரம்பப் பெற்றேன்

தாஸ்யத்தை ஏற்றுக் கொண்டேன்
ஜென்ம துக்கங்களில் நின்றும் இறங்கினேன்
ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் கிட்ட ஒண்ணாத படி ஞானாதிகன் ஆனேன்
கடன் போல் அவஸ்யம் அனுபவிக்கத் தக்க ஸ்வர்க்கத்தையும் பூ லோகத்தையும் விட்டு விட்டு
ஸர்வ உத்க்ருஷ்டமாய் விசாலமான திரு நாட்டை ஸேவிக்க
இப்போது பாக்யம் உடையேன் ஆனேன் —

ஏன்றேன் அடிமை –
அடிமை என்றால் மருந்து போலே இராதே-
அதிலே பொருந்தினேன்

இழிந்தேன் பிறப்பு இடும்பை –
அடிமைக்கு விரோதியாய்
சாம்சாரிகமான-அஹங்காரம் மமகாரம் ஆகிற
பர்வதத்தில் நின்றும் இழிந்தேன்

ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன் கடனாடும் மண்ணாடும்
கை விட்டு மேலை இடநாடு காண வினி –
ப்ரஹ்மாதிகளுக்கு என்னைக் கண்டால் கூச வேண்டும் படி-
ஜ்ஞான பக்திகளாலே பூரணன் ஆனேன்-
அதுக்கு மேலே
புண்ய பலம் புஜிக்கும்-ஸ்வர்க்காதி லோகங்களையும்-
புண்யார்ஜனம் பண்ணும் பூமியையும் உபேஷித்து
அவற்றில் விலஷணமாய் இடமுடைத்தான-ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி
இப்போது பரம பக்தி யுக்தனானேன் என்கிறார்-

(கடன் நாடு -அனுபவித்தே தீர்க்க வேண்டிய புண்யம் புஜிக்கும் நாடான ஸ்வர்க்கம்
இட நாடு -சர்வாத்ம சாதாரண நாத கோஷ்ட்டி பூரேபி துஷ்பூர மஹா ஆகாசம் -ஸ்ரீ ரெங்கராஜ பூர்வ சதகம்
அடியார் குழாங்கள் திரளும் இடமான பரம பதம் )

அப்பிள்ளை உரை
அடிமை என்றால் மருந்து போலே முகம் சுளிக்கும் படி விரசமாய் இராதே –
(சேவை நாய்த் தொழில் மனு -பண்ண வேண்டாத இடத்தில் அது இங்கு ப்ராப்த விஷயம் )
அதிலே பொருந்தினேன
அஹம் சர்வம் கரிஷ்யாமி -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சகல வித கைங்கர்யங்களிலும்
அத்யபிநிவிஷ்டனாய்க் கொண்டு பொருந்தினேன்
அடிமைக்கு விரோதியான ஜென்ம சம்பந்த ப்ரயுக்தமான அஹங்கார மமகார சர்வ துக்க ரூப பர்வதங்களில் இருந்து இறங்கினேன்
ப்ரஹ்மாதிகளுக்கும் என்னைக் கண்டால் வந்து கிட்ட ஒண்ணாத படி கூசி அகன்று போகும்படி -மதி நலம் –
ஞானம் கனிந்த நலம் ப்ரேமங்களாலே பரிபூர்ணன் ஆனேன்
பண்ணிய புண்ணியத்துக்கு கடன் போல் அவஸ்ய அனுபாவ்யங்களான வரக் கடவ ஸ்வர்க்காதி லோகங்களையும்
புண்ய ஆர்ஜனம் பண்ணும் பூ லோகத்தையும் உபேக்ஷித்து
மிக உயர்ந்த -விஸ்வத பிரஷ்டேது -என்னும்படி -சர்வ விலக்ஷணமாய் -அநந்த ஆயாம விஸ்தீரணம் –
இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் மா நாட்டைக் கண்டு அனுபவிக்கலாம் படி இப்போது பரம பக்தி உக்தனானேன்
(கண்ணே உன்னைக் காணாக் கருதி- மாக வைகுந்தம் காண என் மனம் ஏகம் எண்ணும் )
இத்தால்
1-பரம பிராப்தமான கைங்கர்யத்துக்கு தமக்கு அளவிறந்த சாரஸ்யம் விளைந்தபடியையும்
2-அதுக்கு விரோதியான அகங்கார மமகார ரூபா துக்க சம்பந்தம் விட்டு நீங்கிய படியையும்
3-அடிமைக்கு அடைவு இல்லாத சம்சாரத்தில் தனக்கு உள்ள விரக்தியையும்
4-அடிமைக்கு ஏகாந்தமான பரம பதத்தில் புக்கு அல்லது தரிக்க அரிதாம்படி தமக்கு பரம பக்தி பிறந்த படியையும்
5-இப்படி உள்ள அதிகார பூர்த்தியைக் கண்டு ப்ரஹ்மாதிகள் தலை நடுங்கி தன் கண் வட்டத்தில் வந்து கிட்ட மாட்டாமல்
கடக்கப் போம் படி தம்முடைய வேண்டற்பாட்டையும்
அருளிச் செய்தார் ஆயிற்று

————————————————————————–

(முக்தி தசையில் இவன் பெறும் பெருமைகளுக்கு எல்லாம்
மூல காரணம் ஞான விகாஸம் அன்றோ
தாம் அதைப் பெற்றத்தைப் பேசி
இப் பிரபந்தத்தைத் தலைக் கட்டி அருளுகிறார்
அனுகூல ஞானமே ஆனந்தம் -ஆனந்தத்துடனே நிகமிக்கிறார் –
உபக்ரமம் படியே உப சம்ஹாரம் பண்ணி அருளுகிறார்
ஸ்வரூப ஆவிர்பாவம் -ஞான விகாசம் -தானே ஆனந்தம் )

அப்பிள்ளை உரை -அவதாரிகை
(ஏகோ ஹை நாராயணா ஆஸீத் -மஹா நாராயண )
மஹா உபநிஷத் ப்ரக்ரியையால் பிரம்மா ருத்ர பிரமுகமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே
ஸர்வ ஸ்மாத் பரன் என்று உபக்ரமித்து -பிரதமத்திலே ப்ரதிஜ்ஜை பண்ணி
ஸ்ருதி ஸ்ம்ருதி உப ப்ராஹ்மணங்களாலும்
அநந்யசாத் ஸித்தமான ஸ்ரீயபதித்வாதி சிஹ்னங்களாலும்
நெடுக உப பாதித்துக் கொண்டு போந்து
அடியில் ப்ரதிஜ்ஜை அனுகுணமாக அவனுடைய பரத்வத்தை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற் கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

பதவுரை

எம்பெருமான்–எம்பெருமானே!
உன்னை–உன்னை
ஈசற்கும்–ருத்ரனுக்கும்
நான் முகற்கும்–பிரமனுக்கும்
தெய்வம்–தெய்வமாக
இனி அறிந்தேன் இனி அறிந்தேன்–இப்போது திடமாகத் தெரிந்து கொண்டேன்
காரணன் நீ–ஸகல ஜகத்துக்கும் காரண பூதன் நீ
கற்றவை நீ–இதற்கு முன்பு அறியப்பட்ட பொருள்களெல்லாம் நீ
கற்பவை நீ–இனிமேலறியப்படும் பொருள்களும் நீ (என்கிற இதனையும்)
நல் கிரிசை–நிர்ஹேதுக ரக்ஷண மாகிற நல்ல வ்யாபாரத்தை யுடையனான
நாரணன் நீ–நாராயணன் நீ
நான் நன்கு அறிந்தேன்–நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன்

ஸர்வ ஸ்வாமியான உன்னை
ருத்ரனும் ப்ரஹ்மாவுக்கும் தேவதை என்று இப்போது அறிந்தேன்
நீ ஜகத் காரண பூதன் என்று இப்போது அறிந்தேன்
இது வரையில் அறிந்த பதார்த்தங்களும் நீயே
மேல் அறியத் தக்க பதார்த்தங்களும் நீயே என்று இப்போது அறிந்தேன்
நிர்ஹேதுக ரக்ஷணம் ஆகிற நல்ல வியாபாரத்தை யுடைய நீ
சர்வ சேஷியான நாராயணனே என்று நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன் —

இப்போது ஈசனுக்கும் நான்முகனுக்கும் தெய்வம்  என்று எனக்கு
கை வந்தது –
இப்போது நீ யானபடியே உன்னை அறிந்து இருந்தேன்
சர்வத்துக்கும் காரணன் நீ
இதுக்கு முன்பு அறிந்தனவும்
இனி மேல் அறியக் கடவ பதார்த்தங்களும் எல்லாம்
நீ இட்ட வழக்கு
(நிர்வாக நிர்வாஹ்ய நிபந்தமான சாமா நாதி கரண்யம் )

நற் கிரிசை –
நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்-
அதுக்கடியான சேஷியான நாராயணன் நீ
(கிரிசை -நற்கிரிசை -நிர்ஹேதுகம்
நல்கித்தான் காத்து அளிக்கும் நாரணனைக் கண்டக்கால் போல் இங்கும் )

நன்கு அறிந்தேன் நான்
இப் பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்-

(அறிந்தேன் -நன்கு அறிந்தேன் -ப்ரத்யக்ஷமாக அழகியதாக அறிந்தேன்
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகமாய்ச் சங்கரனைப் படைத்தான்
உபக்ரமத்தில் அருளிய அர்த்தத்தையே உபசம்ஹரித்து நிகமிக்கிறார்
கற்றவை நீ கற்பவை நீ
ஸர்வம் கல் விதம் ப்ரஹ்மம் )

அப்பிள்ளை உரை
எனக்கு நாயகனான சர்வாதிகனாக இருக்கும் உன்னை
பசு பிராயராகவும் மஸகப் பிராயராக (ஈ கொசு போல் )
ஈஸ்வர தயா சங்கதரான ருத்ரனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் ஆஸ்ரயணீயனாய் இருக்கும் இருப்பை நீயே ஒருவன்
உனது ப்ரஸாதத்தாலே யதாவாக அறிந்தேன்
சர்வத்துக்கும் காரண பூதன் நீ என்று அறிந்தேன்
(சதேவ சோம்ய ஏகம் இதம் அக்ர ஆஸீத் ஏவ அத்விதீயம்
பஹு ஸ்யாம் ப்ரஜாயேய
த்ரிவித காரணமும் அபின்ன நிமித்த காரணம் அலௌகிகம் அன்றோ )
இதுக்கு முன்பு அறியப்பட்ட பதார்த்தங்களும் மேல் அறியப் போகும் பதார்த்தங்களும்
நீ என்னும் இடம் விசத தமமாக அறிந்தேன்
நீ இட்ட வழக்கு தானே
நிர்ஹேதுக ரக்ஷணமாகிய நல்ல கிரிசை
அதுக்கு அடியாக -நாராயணத்வ ப்ரயுக்தமான சர்வ சேஷியான
சம்பந்த விசேஷம் யுடையதாக இருக்கும் என்பதையும் அழகிதாக அறிந்தேன்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -73-84–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -/ஸ்ரீ அப்பிள்ளை உரை —

September 23, 2013

இப் பாட்டையும் பட்டர் அருளிச் செய்தார்-

(சரம ஸ்லோக அர்த்தம் அருளிச் செய்தார் கீழ்
சரம ஸ்லோக நிஷ்டருக்குப் ப்ராப்யனான அவனது பெருமையையும்
அந்த ஸ்தானத்தின் பெருமையையும் சம்சாரிகள் மட்டும் இல்லாமல் ஞானாதிகர்களான
ப்ரஹ்மாதிகள் அறியவே மாட்டார் என்கிறார் இதில்

உபாய பாவம் வாழும் ஸ்தானம் பண்டைப் பதி சரம ஸ்லோகம் -இதன் பெருமை யார் அறிவார்
ஸ்ரீ வைகுண்ட பெருமை யார் அறிவார் என்றுமாம்
ஸ்ரீ வைகுண்டபத்தியின் பெருமையையும் யார் அறிவார் என்றுமாம்
சக்தி மிக்கும் ஞானம் மிக்கும் இருப்பதாக ஈஸ்வரோஹம் அபிமானம் மிக்க ப்ரஹ்மாதிகள் அறிவார்களா

அர்த்தம் அறிய அரியதான முன் பாசுரத்துக்கும் இப் பாசுரத்துக்கும்
பட்டர் அருளிச செய்ய நான் கேட்டேன் என்று
நம்பிள்ளை அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று பரம்பரையாக
பெரியவாச்சான் பிள்ளையும் நான் கேட்டேன் என்கிறார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
சரம ஸ்லோகம் ப்ரஹ்மாதிகள் அறியாதார்
(உபாயாந்தரங்கள் பற்றி அன்றோ இவர்கள் தங்கள் பதவி பெற்றார்கள் )
ஆன பின்பு இவ்வருகு உள்ளார் ஒருகாலும் ஒருவரும் (கிம் புநர் கைமுதிக நியாயம் )-அறியாதவர்களே
அவனது நிரபேஷ உபாய பாவத்தின் உறுதி விஸ்வாசம் துர்லபம் என்றவாறு

ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73—

பதவுரை

அனைத்து உலகும்–எல்லா வுலகங்களையும்
உண்டு உமிழ்ந்த–(பிரளயத்தில்) உண்பதும் (பிறகு) உமிழ்வதும் செய்தவனும்
பேர் ஆழியான் தன்–பெருமை தங்கிய திருவாழி யாழ்வானைத் திருக் கையிலுயைவனுமான எம்பெருமானுடைய
பேர் ஆழியான் கடல் போல் அப்ரமேயன் என்றுமாம்
பெருமையை–மஹிமையை
அறிவார் ஆரே–அறியக் கூடியவர் யார்? (ஒருவருமில்லை)
அவன் வைத்த–அப்பெருமான் (முன்பே) ஸாதித்து வைத்த
பண்டைத் தானத்தின் பதி–பரமபத மார்க்க மென்னத் தகுந்த சரம ச்லோகத்தை
கார் செறிந்த கண்டத்தான்–நீலகண்டனான சிவனும்
எண் கண்ணான்–நான் முகனும்
காணான்–அறியமாட்டார்கள்.
(அவர்களே அறிய மாட்டாத போது மற்ற பேர்கள் அறிய மாட்டார்களென்பது சொல்ல வேணுமோ?)

ஸகல லோகங்களையும் அமுது செய்து வெளிப் புறப்பட விட்டானாய்
பெரிய திருச் சக்கரத்தை யுடையனாய் ஸ்ரீ கிருஷ்ணனுடைய மஹிமையை அறியத் தக்கவர் யார்
ஒருவரும் அறியார்
அந்தக் கிருஷ்ணன் சாதித்து வைத்த அநாதியாய்
பரமபதத்துக்கு உபாயமான சரம ஸ்லோகத்தை
நிபிடமான கறுப்பைக் கண்டத்திலுடைய நீல கண்டனும் அறியான்
எட்டு நேத்ரங்களை யுடைய ப்ரஹ்மாவும் அறியான் –

ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த பேராழியான் தன் பெருமையை –
சகல லோகத்தையும் வயிற்றிலே வைத்து-வெளிநாடு காண உமிழ்ந்த
பெரியவனுடைய
நைரபேஷ்யத்தை யார் அறிவர் –

இவனுடைய பெருமையை பரிச்சேதிக்க
வல்லார் யார் என்றுமாம் –

கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி
அவன் என்றும் உண்டாக்கி வைத்த பரம பதத்தை-
நீல கண்டன்-
அஷ்ட நேத்திரன் ஆன ப்ரஹ்மா-
என்கிறவர்களால் காணப் போகாது

க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-
உபாய பாவம் இவர்களால் அறியப் போகாது என்றுமாம்-

(உபாய பாவம் சொல்லும் சரம ஸ்லோகம்
உபாய பாவம் இருக்கும் அவன் பெருமை –
ஸ்ரீ வைகுண்டம் –
பிராமண வைபவம் ப்ராப்ய ப்ராபக வைபவம் மூன்றுமே அறியார்கள் என்றபடி )

(பண்டைத் தானத்தின் பதி
என்றும் உண்டாய் இருக்கிற பரமபதம் ஆதல்
பதியாய் -பந்தா என்றாய்
வழி உபாயமாகையாலே சாதன உபாயம் என்னுதல் )

(அப்ரமேய கடல் போல் என்றும் -இது பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகம்
ரக்ஷண பரிகரமான திருவாழியைத் திருக்கையில் உடையவன் என்றும் -இது அப்பிள்ளையார் நிர்வாகம்
ஆழி -கடலும் சக்கரமும்

திவ்யம் ஸ்தானம் ச அப்ரமேயம் துர் விஜ்ஜேயம் ச ஆகமைர் கம்யம் ஆத்யம்
கச்ச பிரபு ரக்ஷ சாஸ்மான் ப்ரபந்நான் கல்பே கல்பே ஜாயமான ஸ்வ மூர்த்தியா -பாரதம்
ஒவ்வொரு கல்பத்திலும் திவ்ய மங்கள விக்ரஹத்தோடே அவதரித்து சரணாகதர்களை ரக்ஷித்து
பழைமையான ஸ்தானத்தை அடைவிக்கிறான் –
இதுவே பண்டைத் தனத்தின் பதியின் பெருமை )

(கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-)

(கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –
ராமோ விக்ரஹவான் தர்ம –
பழையதான நிரபேஷ உபாயமான சரம ஸ்லோகம் அறிவார் யார்
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்
வீடாம் தெளி தரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன் -திருவாய் -1-3-2-
அந்த கிருஷ்ணன் நிதி வைக்குமா போலே முன்பே சேமித்து வைத்த சர்வருக்கும் விஸ்ரம ஸ்தானமான
தந் நிரபேஷ உபாய பாவத்துக்கு இருப்பிடமான சரம ஸ்லோகத்தைத் தரிசிக்க மாட்டார்கள் -அப்பிள்ளை உரை
பதி -ஸப்த விகாரமாகக் கொண்டு பரம பத மார்க்கம் என்னத் தகுந்த சரம ஸ்லோகம் என்றும் பொருள் சொல்வார்கள் -)

அப்பிள்ளை உரை
சர்வ லோகங்களையும் பிரளயத்தில் அழியாதபடி திரு வயிற்றிலே வைத்து ரக்ஷித்து நோக்கி பின்பு
வெளிநாடு காண புறப்பட விட்டு
ரக்ஷண பரிகரமாக பெரிய திருவாழியை சுதர்சனம் பற்றிய ஸ்ரீ கிருஷ்ணனுடைய
(பேர் ஆழியான் கடல் போன்ற பெரிய திருமேனி பார்த்தோம் )
நிரபேஷ உபாய பாவத்தை அறிவார் யார்
இவர்கள் அறியார்கள் சொல்ல வேண்டுமோ
கறுத்து -(விஷம் உண்ட கர்வம்) -கழுத்து உள்ள ருத்ரனும்
அஷ்ட கண்கள் நேத்ரனான பிரமனும் –
ஸ்வ ஸ்வ சக்திகளை கண்டு ஸ்வாதந்தர்யம் மிக்கு உள்ள இவர்கள் அறிவார்களா காண்பார்களோ
ஆத்யம் ஸ்தானம் பாரத ஸ்லோகம் பண்டைத் தானம் இதில்
நிதி வைக்குமா போல் முன்பே சேமித்து அவன் வைத்த பண்டத் தானம் –
சர்வருக்கும் விஸ்ரம ஸ்தானமான பரமபதமும் -சரம ஸ்லோகமும்
நித்ய சங்கல்பத்தால் நித்ய விபூதி
ஆத்ம ஞானம் தொடங்கி கொஞ்சமாக கூட்டி-நிதி வைப்பது போல் சேமித்து வைத்த பின்பு
அருளிச் செய்த சரம ஸ்லோகம் என்றுமாம்
ஸ்த்ரீ புருஷ விபாகம் இல்லாமல் வர்ண விபாகம் அற சர்வருக்கும் ஒய்வு எடுக்கும் ஸ்தானம்
தனது நிரபேஷ உபாய பாவத்துக்கு இருப்பிடமான
சரம ஸ்லோகத்தைத் தரிசிக்க மாட்டார்கள்
உண்டானை உலகேழுமோர் மூவடி கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-ஆழ்வார்
காண வல்லார் அல்லர் இவர்கள்
அன்றிக்கே
தன்னை உபாயமாகப் பற்றினாருக்கு என்று
அந்த கிருஷ்ணன்
நித்ய சித்தமாக உண்டாக்கி வைத்த ப்ராப்ய பூமியான பரம பதத்தை
இவர்கள் தரிசிக்க மாட்டார்கள் என்றுமாம்

—————————————————————-

(சரம ஸ்லோக வைபவம் சொன்னார் கீழே
சரணாகத ரக்ஷணத்தை எவ் வகையிலும் செய்து முடிப்பவன் ஸர்வேஸ்வரன்
என்பதைக் காட்டி அருளுகிறார் இதில் –
திருவடி இடம் அபசாரம் பண்ணி காலைக் கட்டின ஸூ முகனை ரஷித்தது –
திருவடி மூலமாகவே ரஷித்ததால் விரோதம் இல்லாமல் செய்து அருளி )

ந ஷமாமி கதாசன-
ந நத்யஜேயம் கதஞ்சன –
ஆஸ்ரிதர் பக்கலில் அபகாரம் பண்ணினாரை ஒரு நாளும்-பொறேன் என்ற வார்த்தைக்கும் –
மித்ர பாவம் உடையாரை மகாராஜர் தொடக்கமானவர்-
விடவரிலும் விடேன் என்ற வார்த்தைக்கும்-
அவிருத்தமாக செய்து அருளின படி –

ஸூ முகன் என்கிற சர்ப்பத்தை ஆமிஷமாக திருவடி பாதாளத்தில் தேடிச் செல்லுகிற படியை அறிந்து –
அதுவும் -கண் வளர்ந்து அருளுகிற திருப் பள்ளிக் கட்டிலை கட்டிக் கொண்டு கிடக்க-
திருவடியும்
ஸ்ரீ பாதம் தாங்குவார் சொல்லும் வார்த்தைகளைச் சொல்ல –
இச் சர்ப்பத்தை திருவடி கையிலே காட்டிக் கொடுத்து
திருவடியை இட்டுப் பொறுப்பித்தது –
இவனை அவன் கைக் கொள்ள பெருகையாலே இரண்டு அர்த்தமும் ஜீவித்தது-

(கால் கட்டை விரலாலே இத்தை எடுத்து அவனுக்குக் கொடுத்து
பாரத வ்ருத்தாந்தம் சுருக்கமாக அருளிச் செய்கிறார்
விநதா ஸூதன் -கத்ரு -அம்ருதம் கொண்டு
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செரும் ஐம்புலன்
பெருமாள் சீதாப் பிராட்டியைத் தொலைத்து அழுதது போல்
இந்த சரித்திரங்கள் நமக்கு பாடம் சொல்லவே
அங்கு திருவடி
வைநதேயன் இத்யாதி திரு நாமங்கள் லீலா விபூதியில் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
சரம ஸ்லோகத்தில் அருளிச் செய்த படியே சரணாகதி பரித்ராணத்தை
தான் அனுஷ்டித்துக் காட்டிய படியை அருளிச் செய்கிறார் இதில்

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-

பதவுரை

பதி பகைஞற்கு ஆற்றாது–ஸஹஜ சத்ருவான பெரிய திருவடிக்கு அஞ்சி,
பத் -பாதை வழி-பாதேயம் போல் -வழி வழியாக பிறவியில் இருந்தே ஸஹஜ சத்ரு
சத் பத் -சத்தான பாண்டவர்கள் சுவர்க்கம் சென்ற பாதை போல்
பாய் திரை நீர்பாழி–பரம்பின அலைகளோடே கூடின நீரை யுடைத்தான கடல் போலே குளிர்ந்த திருப் படுக்கையை
மதித்து–புகலிடமாக நம்பி
அடைந்த–வந்து பற்றின
வாள் அரவம் தன்னை–ஒளி பொருந்திய ஸர்ப்பமாகிய ஸுமுகனை
மதித்து–ஆதரித்து
அவன் தன்–அந்த (சத்ருவான) கருடனுடைய
வல் ஆகத்து ஏற்றிய–வலிமை தங்கிய சரீரத்திலே ஏற விட்டவனும்
மா மேனி மாயவனை அல்லாது–சிறந்த திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமான ஸர்வேஸ்வரனை யன்றி
ஒன்று வேறொன்றை-வேறு ஒருவரை என்று கூட சொல்ல மாட்டாத அநாதரம்
என் நா–எனது நாவானது
ஏத்தாது–தோத்திரம் செய்யாது.

ஸஹஜ ஸத்ருவான பெரிய திருவடிக்கு எதிர் நிற்கையையும் ஸஹியாமல்
பரந்த அலைகளை யுடைய நீர் நிறைந்த சமுத்திரம் போலே குளிர்ந்த தனது படுக்கையை ரக்ஷகமாக நினைத்து
ஆஸ்ரயித்த தேஜஸ்ஸை யுடைய ஸூ முகன் என்கிற ஸர்ப்பத்தை ஆதரித்து
அப்பெரிய திருவடியினுடைய பலிஷ்டமான திருமேனியில் ஏறிட்டு ரஷித்தவனாய்
பெரிய திருமேனியை யுடையனாய் ஆச்சர்ய பூதனான ஸர்வேஸ்வரனை அல்லது
வேறே ஒரு தேவதையை என் நாக்கு ஸ்தோத்ரம் செய்யாது —

(பாரதம் -உத்யோக பர்வம்
இந்திரன் சாரதி மாதலி தனது புத்ரியான குணகேசிக்கு ஸூமுகன் -நாக குமரன் -ஆர்யகன் இவன் தந்தை
அல்ப ஆயுஸ்ஸூ இவனுக்கு என்று சொல்ல
ஆயூஸூ வரம் கொடுத்து இந்திரன் -நான் கொடுத்த வரத்தை நீயே காத்துத் தர வேண்டும்
மணம் புரிய உபேந்த்ரன் அருளிச் செய்த உபகாரம் )

பதிப்பகைஞற்கு ஆற்றாது –
சஹஜ சத்ருவான திருவடிக்கு அஞ்சி-அவர் பலம் பொறுக்க மாட்டாது

(பதிப்பகை -வழி வழியாக வருகிற சாத்ரவம்
பரபலம் போலே திருவடிக்கு விஹிதமான ஹிம்ஸை )

பாய் திரை நீர்ப் பாழி –
பரந்த திரையை உடைத்தான கடல் போலே-திருப் பள்ளிக் கட்டில் –
ஒரோ யுகத்தில் ஒரு இடங்களில் எல்லாம் பிறக்கக்-கூடுகையாலே
திருப் பாற் கடல் தன்னிலே ஆகவுமாம் –

மதித்தடைந்த-
சரணாகதர் ஒரு தலையானால்-
பிராட்டி திருவடி திரு அநந்த ஆழ்வான் ஆன அசாதாராண-பரிகரத்தை விட்டும்-
ரஷிப்பான் ஒருவன் என்றும் நிச்சயித்து அடைந்த

வாளரவம் -தன்னை –
சரண்யன் அங்கீ கரிப்பதுக்கு முன்னே-
அவனுடைய சீல வத்தையாலே தன் கார்யம் தலைக் கட்டிற்று-பிறந்த ஒளி – என்று-
அந்தரிஷிகதஸ் ஸ்ரீ மான் -என்னும் படியே

மதித்து –
நெஞ்சில் கொண்டு (ஸ்ரீ பெரிய திருமொழி–5-8-4-))என்னும்படியாக-
சரணாகதனாக நினைத்து

அவன் தன் வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை அல்லாது ஓன்று ஏத்தாது என் நா –
திருவடி தானே பிரசன்னனாய்-தன் தோளில் தரிக்கும்படி பண்ணி-
அத்தாலே நிறம் பெற்று க்ருத க்ருத்யனாய்-
ஆச்சர்ய யுக்தனான ஈஸ்வரனை ஒழிய-

வேறு ஒன்றை ஏத்தாது என் நா-
வேறு ஓன்று -என்றது –
தேவதாந்தரங்கள் பக்கல் அநாதரம்-

(த்ருணீ க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதய –
தேவதாந்த்ரங்களை ஒரு பொருளாக நினையாதவர் ஆகையால் ஓன்று என்கிறார் )

(இதே விருத்தாந்தம்

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்றோடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத் தரவை
வல்லாளன் கை கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாது மாவரோ ஆள் -ஸ்ரீ முதல் திருவந்தாதி–80-

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -ஸ்ரீ பெரிய திருமொழி–5-8-4-)

(மத்பக்தம் ஸ்வ பசம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா
பத்ம கோடி ஸதே நாபி ந ஷமாமி கதாசன –ஸ்ரீ வராஹ புராணம்
நாய் மாமிசம் தின்னும் சண்டாளனே ஆகிலும் என்னுடைய பக்தனுக்கு அபசாரம் செய்கிறவர்களை
நூறு கோடி பத்ம காலம் ஆனாலும் ஒருக்காலும் பொறுக்க மாட்டேன் – )

அப்பிள்ளை உரை
ஒக்கப் பிறந்த சத்ருவான பெரிய திருவடிக்கு எதிர் நிற்க மாட்டாமல் பயப்பட்டு பறந்து திரையை யுடைய
கடல் போல் படுக்கையைப்
விஸ்வசித்துப் பற்றினவனாய்
அவனை அண்டை கொள்ளுகையால் ஒளி விடுகிற வடிவை யுடைய ஸூ முகனாகிய பாம்பை
பாகவத விரோதம் பண்ணிவரை – ந க்ஷமாமி -என்கிற உக்திக்கும்
சரணம் புக்கவர்களை வருந்தி ஆகிலும் கை விடேன் -நத்யஜேயம்- என்கிற உக்திக்கும் விரோதம் வாராத படி
கடித்த வாயாலே துடைத்து திருவடியைக் கொண்டே பரிகரிக்கக் கடவோம் என்று அத்யவசித்து
(அடித்த கையாலே அணைக்கும் படி போல் )
சத்ருவானாலும் சரணம் என்றால் கணையத்துக்குள்ளே வர்த்திப்பாரைப் போல்
9எங்கும் ரஷிக்கை தான் நாம் உணர்ந்து ஒத்துக் கொள்ள வேண்டுமே )
ரஷிக்கை வட்டத்துக்குள்ளே இருக்க அபயம் -பயப்பட வேண்டாத படி
பிரபலமான திருவடி திரு மேனியில் ஏறி
அவன் தானே ஏறிட்டுக் கொள்ளும் படி
இப்படி ரக்ஷிக்கப் பெற்றதால் பூரித்து மா மேனி -திரு உடம்பு உடையவனாய் (முன்பு மேனி -இப்பொழுது மா மேனி )
இப்படி விரகு அறிந்து ஆஸ்ரித ரக்ஷணம் பண்ண வல்ல மாயன் இவனை ஒழிய
ஆபத்து வந்த போது ஆஸ்ரிதர்களுக்கு ஆபத்து வந்த திசையிலும்-(பாணாசூர வ்ருத்தாந்தம் )
கை கழிய விட்டுக் கடக்க நிற்கக் கடவ ஷூத்ர ருத்ராதிகளை –
வேறே ஒரு ஷூத்ர தேவதைகளை-என் நா ஒருகாலும் புகழாது

—————————————————————-

(ப்ரஹ்மாதிகளையே ஸ்துதிக்க மாட்டாத நான்
ஷூத்ர மநுஷ்யர்களைப் பாடுவேனோ என்கிறார்)

அப்பிள்ளை உரை அவதாரிகை
எம்பெருமானை ஏத்தக் கடவ நாவைக் கொண்டு
ஷூத்ரரான மநுஷ்யர்களை பாட மாட்டேன்
(நாவைக் கொடுத்ததே வகுத்த அவனை ஸ்துதிக்கவே தானே )

நாக் கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக் கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

பதவுரை

தீக் கொண்ட செம் சடையான்–நெருப்புப் போலே சிவந்த சடையை யுடையனான ருத்ரன்
நலம் ஆக–தகுதியாக
என்றும்–எந்நாளும்
பூ கொண்டு–புஷ்பங்களைக் கையிற்கொண்டு
பின் சென்று–அநுஸித்து
வல்ல ஆறு–தன் சக்தியுள்ள வளவும்
ஏத்த–துதிக்க
மகிழாத–(இதைத் தனக்கொரு பெருமையாக நினைத்து) மேனாணிப்புக் கொள்ளாத
வைகுந்தம் செல்வனார்–ஸ்ரீவைகுண்ட நாதனுடைய
சே அடி மேல் பாட்டு–திருவடிகளுக்கு உரிய பாசுரங்களை (ச் சொல்ல வல்ல)
நாக் கொண்டு–நாவினால்
மானிடம்–மனிதர்களை
பாடேன்–பாட மாட்டேன்

நெருப்புப் போலே சிவந்த ஜடையை யுடைய ருத்ரன்
தன் யோக்யதா அனுகுணமாகப் புஷ்பங்களை சம்பாதித்திக் கொண்டு போய்
எப்போதும் தன் சக்திக்குப் படி ஸ்தோத்ரம் செய்ய
அதைத் தனக்கு ஒரு அதிசயமாக நினைத்து சந்தோஷியாத
ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய அழகிய திருவடிகளின் மேல் பாசுரங்களைச்
சொல்லத் தக்க நாவினால் மனுஷ்யனைப் பாட மாட்டேன் –

நாக் கொண்டு மானிடம் பாடேன்
அவனைப் பாடக் கடவ நாவைக் கொண்டு
ஷூத்ர மனுஷ்யரைப் பாடேன்

நலமாகத் தீக் கொண்ட செஞ்சடையான்
அக்னி போலே சிவந்த ஜடையை யுடையவன்
அன்றிக்கே
அனற்கு அங்கை ஏற்றான் –என்கிறபடியே
அக்னியையும் தரித்து
சிவந்த ஜடையையும் யுடையவன் என்றுமாம்

(பிடி சேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் -ஸ்ரீ முதல் திருவந்தாதி–97–)

பின் சென்று -என்றும் பூக் கொண்டு வல்லவாறு ஏத்த
தானே சென்று
புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு
காலம் எல்லாம் ஸத்ருசமாகத் தன் சக்தி உள்ள அளவும் ஸ்துதிக்க

மகிழாத வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் பாட்டு
பரம பதத்தில் ஐஸ்வர்யத்தை யுடையனாகையாலே
ஷூத்ரரான இவர்கள் ஏத்த
அவிக்ருத்தனாய் இருக்கிறவனுடைய திருவடிகளில் பாட்டைக் கொண்டு
மனுஷ்யரைப் பாடேன் —

(அவாக்ய அநாதர
வ்ருஷ இவ ஸ்தப்த்தோ திவி திஷ்டத்யேக –தைத்ரியம்
மரம் போலே மாறுபாடு அற்றவனாய் ஒப்பற்றவனாய் பரம புருஷன் நிற்கிறான் )

(வர்ஷாயுதைர் யஸ்ய குணா ந சக வக்தும் சைமேதைரபி ஸர்வ லோகை -பாரதம் கர்ணன் பர்வம் -83-65-

யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10-

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7-

அப்பிள்ளை உரை
ஏறிட்டுப் பார்க்க ஒண்ணாதே நெருப்பு போல் ஜ்வலிக்கிற ஜடையை யுடைய ருத்ரனே
துர் மானத்தைப் பொகட்டு
தானே பெருமாள் எழுந்து அருளி உள்ள இடத்துக்குச் சென்று
அங்குத்தை ஸுகுமார்யத்துக்கு அனுரூபமான அவனுக்கு ஏற்ற செவ்விப் பூக்களை
சர்வ காலத்திலும்
தன்னுடைய (வல்லவா) – ஞான சக்திகளை எல்லாவற்றையும் கொண்டு இயன்ற வரை ஏத்த
அங்குத்தை வைபவத்துக்கு அவனுக்கு சத்ருசமாக ஸ்துதிக்க இத்தால்
திரு உள்ளத்தில் ஒரு உகப்பு இன்றிக்கே -மதியாதே
கலங்காப் பெரு நகரில் அயர்வறும் அமரர்கள் அதிபதி
(பரத்வத்திலே நோக்கு இவருக்கு -விகாரம் இல்லாத தேசமாயும் நித்ய முக்தரும்
எளியவன் என்றால் அவஜாநந்தி மாம் மூடர் )
பிரேம பரவசராய் புகழ –
(விகாரம் இல்லா திவ்ய தேசம் -அயர்வில்லா நித்யர் முக்தர்களின் அதிபதி )
அத்தை உகந்து கேட்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் ஐஸ்வர்யம் யுடையவருடைய -(செல்வனார் )
சிவந்த திருவடிகளை பாடக் கடவ நாக் கொண்டு
ஷூத்ர மனுஷர்களைப் பாடேன் –

————————————————————————–

(வேறே ஒருவரையும் கவி பாடேன் என்று சொல்ல என்ன காரணம் என்ன
உலகில் சொற்களோடு பொருள்களோடு வாசியற அவனுடைய சங்கல்பத்தாலே அன்றோ உண்டானவை
அவனே கவி பாடத் தக்க பெருமை யுடையவன் என்கிறார் –
எந்தச் சொல்லும் இவனையே சொன்னதாகுமே –
எல்லா சொற்களுக்கும் பொருளே இவனே தானே
படு கதையும் கேட்ட மனுவும் நாயனார் இப் பாசுரம் கொண்டே )

அப்பிள்ளை உரை அவதாரிகை
லோகத்தில் வாஸ்ய வாசக ஜாதம் அடங்கலும் அவனுடைய திவ்ய சங்கல்பத்தாலே உண்டானவை –
மாயவனுடைய மாயை -என்பதே திவ்ய ஸத்ய சங்கல்பம்
இத்தால் அவனையே கவி பாட வேண்டிய அவனுடைய வேண்டற்பாடு சொல்லிற்று

பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தன மாயையில் பட்ட தற்பு-76—

பதவுரை

பாட்டும் முறையும்–இயலும் இசையும்
படு கதையும்–பழைய சரிதங்களைக் கூற வந்த இதிஹாஸங்களும்
பல் பொருளும்–பல அர்த்தங்களை யறிவிக்கிற புராணங்களும்
ஈட்டிய தீயும்–(பஞ்சீகரணத்தாலே-ஐந்து பூதங்களும் – பல குணங்களும் தன்னிலே அமையும்படி) சேர்க்கப்பட்ட அக்நியும்
இரு விசும்பும்–பரந்த ஆகாசமும் (முதலான பஞ்ச பூதங்களும்-உப லக்ஷணம் )
கேட்ட மனுவும்–வேதத்திலும் ஓதப்பட்ட மநு மஹர்ஷியின் தர்ம சாஸ்த்ரமும்(மநு ஸ்ம்ருதி பேஷஜம் என்று ஸ்ருதி புகழும் )
ஸ்ருதி–அநாதியாக உச்சாரண அநூச்சாரண ஸ்ரமத்தாலே ஓதப்பட்டு வருகிற
மறை நான்கும்–நான்கு வேதங்களும் (ஆகிய இவை யெல்லாம்)
(எட்டு விஷயங்கள் வாசகமும் வாஸ்யமும் சொல்லும் பொருளும்
தீயும் இரு விசும்பும் இரண்டும் சொல்லுக்குப் பொருள் –
மற்ற ஆறும் வாசகம் )
மாயன் தன்–ஆச்சர்ய சக்தி யுத்தனான எம்பெருமானுடைய
மாயையில் பட்ட–ஸங்கல்பத்தினாலுண்டான
தற்பு–தத்துவங்களாம்.

பாசுரங்களும் ஸ்ரீ ராமாயணமும் முன் நடந்த இதிஹாசங்களைப் ப்ரதிபாதிக்கிற மஹா பாரதமும்
அவற்றிலே சொல்லப்பட்ட அநேக அர்த்தங்களும்
செறிந்த அக்னியும் விசாலமான ஆகாசமும்
ஆப்த தமம் என்று கேட்கப்பட்ட மனு ஸ்ம்ருதியும்
எழுதாமல் குரு முகமாகக் கேட்கப்பட்ட நான்கு வேதங்களும்
ஆச்சர்ய பூதனான ஸர்வேஸ்வரனுடைய ஸங்கல்பத்தினால் உண்டான தத்வங்கள் –

(பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும் )
இப்படி புராணங்களில் பரக்கச் சொல்லப்பட்ட அர்த்தங்கள்
(சர்க்கம் ப்ரதிஸர்க்கம் வம்ச கிளை கதைகள் பூ லோக வர்ணம் புராணங்களில் உண்டே )

காரணமான அக்நி -வியாபகமான ஆகாசம்-

யத்வை கிஞ்ச மநுரவதத் தத் பேஷஜம் -என்று
ஸ்ருத்யாதிகளில் ஆப்த தமமாகக் கேட்ட-மனுவும்

என்றும் ஒதுவித்துப் போகிற நாலு வேதமும்-

இவை எல்லாம்
ஆச்சர்ய பூதன் சங்கல்ப்பத்தால் உண்டான உண்மை உடைய –

பாட்டு -அருளிச் செயல்
முறை -ஸ்ரீ மத் ராமாயணம்
படு கதை -மகா பாரதாதி புராணங்கள்
பல் பொருள்கள் -இவற்றால் பிரதிபாதிக்கிற அர்த்த விசேஷங்கள்
தற்பு-சத்தையாய் -உண்மையை உடைத்தது என்றபடி –

(யத்வை கிஞ்ச மனுரவதத் தத் பேஷஜம்-மனு சொன்னது எல்லாம் மருந்தாகும்
தற்பு -தத்வம் உ ண்மை )

(சர்க்கச்ச ப்ரதி சர்க்கச்ச வம்ச மன்வந்தராணி ச
வம்ஸ அநு சரிதம் க்ருத்ஸ்னம் மயாத்ர தவ கீர்த்திதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-8-13-
இவையே பாட்டும் படு கதையும் முறையும்
மேலே பல் பொருளும் -பூகோள நிர்ணயம் வர்ணாஸ்ரம ஆசாரங்கள் போல்வன
அத்ர தேவாஸ் ததா தைத்யா கந்தர்வ நாக ராக்ஷஸா
யஷ வித்யாதராஸ் ஸித்தா கத்யந்தே அப்சரஸ் ததா
முனயோ பாவிதாத்மந கத்யந்தே தபஸான் விதா
சாதுர் வர்ண்யம் ததா பும்ஸாம் விஸிஷ்ட சரிதாந ச
புண்யா ப்ரதேஸா மேதிந்யா புண்யா நத்யோ அத ஸாகரா
பர்வதாச்ச மஹா புண்யாச் சரிதாநி ச தீமாம்
வர்ண தர்மா தயோ தர்மா வேத சாஸ்த்ராணி க்ருத்ஸ்ன
யேஷாம் ஸம் ஸ்மரணாத் ஸத்யஸ் ஸர்வ பாபை ப்ரமுச்யதே –ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-8-14/15/16/17
இதில் சொல்லப்பட்டவற்றை (இப்படி பல் பொருளில் ஒன்றை ) நினைத்த மாத்திரத்திலே
மனிதன் எல்லாப் பாபங்கள் நின்றும் விடுபடுறான் -)

(அப்பிள்ளை நிர்வாகம்
பாட்டும் முறையும் -இயலும் இயலைப் பாடும் முறையான இசையும்
படு கதையும் -பழைய வ்ருத்தாந்தங்களை இப்படி இப்படி என்று கூறும் இதிகாசங்களும்
பல் பொருளும் -சர்க்கச்ச ப்ரதி ஸர்க்கச்ச என்று தொடங்கிச் சொல்லப்படும்
பல பொருள்களை சொல்லும் புராணங்களும் புராணங்களும்
அப்பிள்ளை நிர்வாகத்தில்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் என்பது மட்டும் வாஸ்ய பரம்
முன்னும் பின்னும் வாசக பரம்
பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகத்தில் பின்பே வாசக பரம் )

அப்பிள்ளை உரை
இயலும் இசையும்
புரா வ்ருத்த ப்ரதிபாதகமான இதிஹாசங்களும் -(படுகதை )
நாநாவான அர்த்தங்களைச் சொல்லும் புராணங்கள்
ஒன்றிலேயே எல்லாம் உண்டாம்படி பஞ்சீ கரணத்தால் சேர்க்கப்பட்ட அக்னியும்
பரப்பை யுடைத்தான ஆகாசம் முதலான காரணமான பூத பஞ்சகமும்
தத் உப லஷிதமான தேவாதி -கார்ய வஸ்துக்களும்
ஆப்த தமமாக ஜகத் எல்லாம் ஸ்ருதியில் கேட்டுப் போகும் மன்வாதி தர்ம சாஸ்திரங்களும்
ஆச்சார்ய உச்சாரண அனு உச்சாரண கிரமத்திலே நிகமேன ஓதப்படும் ரிக்காதி சதுர் வேதங்களும் ஆகிற
இந்த வாஸ்ய வாசக வர்க்கம் அடங்கலும்
(அக்னி ஆகாசம் மட்டும் வாஸ்யம் -முன்பு பின்பு உள்ளவை வாசகம் )
ஆச்சர்ய சக்தி யுக்தனான -மாயவன்- தன் திவ்ய சங்கல்பத்தால் உண்டான தத்துவத்தை-உண்மையை- உடைத்தவை
இன்ன சப்தம் இன்ன பொருளைக் குறிக்கக் கடவ -வாஸ்ய வாசக சம்பந்த போதனா சக்தி -அவனது ஸங்கல்பத்தாலே –
(நையாயிகன் தார்க்கிகன் மீமாம்சகர் வாதம் இதில் -இந்த சக்தி நாம் ஊட்டணுமா அவற்றுக்கே சக்தி உண்டா-
அபூர்வ வாதம் உண்டே அவர்கள் இடம் )
வாசக சம்பந்தம் நியமம் -அவனுடைய திவ்ய சங்கல்ப ஆயத்தம்
தற்பு –தத்வம் -உண்மை -என்றபடி
ஆத்ம மாயையா ஸம்பவாமி -அவனே சொல்வான் அன்றோ

————————————————————————–

(வாஸ்ய வாசகங்கள் எல்லாம் அவனது சங்கல்பம் அடியாக என்பது ஒருபுறம் இருக்கட்டும்
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் –நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–90-
தோஷமே வடிவெடுத்த என் பக்கல் விசேஷ கடாக்ஷம் பண்ணின படியைக் கண்டால்
நான் நாக் கொண்டு மானிடம் பாடுவேனோ என்கிறார்-)

அப்பிள்ளை உரை -அவதாரிகை
என் தோஷ பூயசத்தை பார்த்து தோஷமே உருவாக்க கொண்ட இகழாமல்
(பக்தர்களின் பாபங்களைப் பார்க்காத தாமரைக் கண்ணன்
அன்று அதனை ஈன்று உகந்த ஆ -வழு காதலிப்பது போல் )
என்னுடைய ஸமஸ்த கர்மங்களும் உரு மாயும் படி பக்கம் நோக்கு அறியாத
(பைந் தாமரைக் கண்ணன் )தன் திரு உள்ளத்தை என்னிடத்தில் வைத்து அருளினான் என்கிறார் –

தற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்
கற் கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட
வெவ் வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்
எவ் வினையும் மாயுமால் கண்டு-77-

பதவுரை

தட கடலை–பரந்த தெற்கு சமுத்ரத்தை
கல் கொண்டு–மலைகளினால்
தூர்த்த–அணை செய்து அடைத்தவனும்
கடல் வண்ணன் தான்–கடல் போன்ற கருநிற முடையனுமான எம்பெருமான்
என்னை–(தோஷமே வடிவெடுத்தவனான) என்னை-இதுவே ஸ்வரூப நிரூபக தர்மம் எனக்கு
தற்பு–உள்ளபடியே
அறியான் ஏலும்–அறிந்திலனாயினும்,
எற் கொண்ட–என்னைக் கொள்ளை கொண்டிருக்கிற
வெம் வினையும்–கொடிய பாவங்கள் யாவும்
நீங்க–என்னை விட்டு நீங்கும்படியாக
கண்டு–அழகிய திருக் கண்களாலே குளிரக் கடாக்ஷித்து
மனம்–தனது திருவுள்ளத்தை
விலங்கா -வேறு எங்கும் விலகிப் போகாதபடி
வைத்தான்–(என் மீதே ஒரு மடைப் படுத்தி) வைத்தருளினன் (ஆகையாலே)
எங்கும் பக்க நோக்கசும் அறியான் என் பைந் தாமரைக் கண்ணன்
எவ் வினையும்–பாபமென்று பேர் பெற்றவை யடங்கலும்
மாயும்–உரு வழிந்து போம்-
ஆல் -ஆச்சர்யம்

விசாலமான ஸமுத்ரத்தைக் கற்களினால் அடைத்த சமுத்திரம் போன்ற திருமேனியை யுடைய
ஸர்வேஸ்வரனான தான் என்னை யதார்த்தமாக அறியானாகிலும்
என்னை கிரஹித்துக் கொண்ட ஸகல பாபங்களும் தொலையும்படி கடாக்ஷித்து
என் மனஸ்ஸை விஷயாந்தரங்களில் செல்லாத படி செய்து
என்னிடத்தில் திரு உள்ளத்தை வைத்தான்
ஆகையால் ஸகல பாபங்களும் நசிக்கும் —

ஆழக் கடவ கல்லைக் கொண்டு-நீரிலே அணை கட்டினவன் –
எற் கொண்ட வெவ் வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான் எவ் வினையும் மாய்மால் கண்டு –
நான் உரு மாயும்படி என்னை க்ரசித்த மகா பாபமும்-நசிக்கும்படி –
வேறு ஒரு இடத்திலும் போகாதபடி –
திரு உள்ளத்தாலே கொண்டு-என் பக்கலிலே மனஸை வைத்தான் –
ஆதலால் பாபம் என்று சொல்லப் படுகிறவை அடைய மாயும் –

தற்பு -உண்மை
என்னை -ஆபி முக்யாதிகளும் இன்றிக்கே தோஷ பூயிஷ்டனான என்னை
அறியனேலும் -அறியாதே இப்படி ஸர்வஞ்ஞனாய் இருக்கச் செய்தேயும் தோஷம் பாராமல் விஷயீ கரிப்பதே
இது என்ன அகடிகடநா சாமர்த்தியம் என்கிறார்

தடம் கடலை இத்யாதி –
என் கொண்ட -என்னை க்ரஸித்துக் கொண்ட
எவ்வினையும் நீங்கக் கண்டு விலங்கா மனம் வைத்தான்
ஆல் –ஆகையால்
எவ்வினையும் மாயும் என்றபடி –

(ஸஹஸ்ராம்ஸூ -பக்தர்களுடைய குணங்களை ஆயிரம் மடங்காக அறிபவன்
அவிஞ்ஞாதா ஹி பக்தாநாம் ஆகஸ்ஸூ கமலேக்ஷண –
பக்தர்களுடைய பாபங்கள் விஷயத்தில் தாமரைக் கண்ணன் அறியாதவனாக இருக்கிறான் )

அப்பிள்ளை உரை
சர்வஞ்ஞனான தான் தோஷமே வேஷமான என்னை உண்மையாக அறியானே யாகிலும்
(சர்வஞ்ஞன் சர்வவித் தான் -தோஷத்தை அறியாமல் இல்லாமல் என்னை அறியாமல்)
இடமுடைத்தான கடலைக் கல்லால் அடைத்த-நீரில் அழுந்தும் கல்லைக் கொண்டு அடைத்த –
கடல் வண்ணன்-கடல் போல் இருண்ட குளிர்ந்த வடிவு அன்றோ
(குரங்குகள் அணில்கள் கைங்கர்யங்களைப் பார்த்து பார்த்து கடல் வண்ணன் ஆனான் )
நான் உரு மாய்ந்து போகும் படியான ஸமஸ்த பாபங்களும்
(வெவ்வினை -மஹா பாபங்கள்
எவ்வினை அனைத்து பாபங்கள் )
போகும் படி
தனது அழகிய திருக் கண்களால் குளிரக் கடாக்ஷித்து
திரு உள்ளத்தை வேறே ஒரு விஷயத்தில் புகுந்து போகாதபடி ஒருமடைப்பட என்னிடம் வைத்தான் –
ஆகவே பாபங்கள் என்று பேர் பெற்ற அனைத்துமே மாய்ந்து போனதே

————————————————————————–

கண்டு இத்யாதி –
அபிமத விஷயத்தில் ப்ராவண்யத்தை விளைத்தவனை-அநங்கன் ஆக்கினவன் –
நெஞ்சும் கூட-ஸ்ரவண மாத்ரத்திலே பரவசமான படியைக் கண்டால் –
இவ் வஸ்துவை சாஷாத் கரித்து ப்ரணாமாதிகளைப்-பண்ணினார்க்கு
எத்தனை நன்மை பிறவாது -என்கிறார்

(முதல் பதத்துக்கு–அபிமத விஷய இத்யாதி – அர்த்தமாக்கி அவதாரிகை அருளிச் செய்கிறார்
ஹிமவத் பார்ஸ்வத்திலே ருத்ரன் தபஸ்ஸூ பண்ண பார்வதி பரிசர்யை பண்ணுகிற அளவிலே மன்மதன் வந்து
இருவருக்கும் சங்கத்தைப் பிறப்பிக்க -அவ்வளவில் தபஸ்ஸூ குலைகையாலே
நெற்றியிலே கண்ணைத் திறந்து தஹிக்க அப்போது அநங்கன் ஆனான் என்றபடி –
காம்ய வானம் காமா அயோத்தியை பக்கம் காமனை சாம்பல் ஆக்கின இடம் –
பிருந்தாவனம் உள்ள காம்ய வானம் வேறே
ராஜஸ தாமஸர் கேட்டதுக்கே இதுவானால் சாத்விகர் கண்டால் என்ன ஆகும் )

(அத்ருஷ்ட பலமான பாப நிவர்த்தகம் நிற்க
கண்டு வணங்கினவர்கள் த்ருஷ்டத்திலே அனுபவிக்கும் ஆனந்தம் தான் எத்தகையது என்கிறார் இதில் )

அப்பிள்ளை உரை -அவதாரிகை
யாதிருச்சிக்க பகவத் நாம ஸ்ரவணத்தாலே
தமஸ் ப்ரக்ருதியாய்
க்ரோத சீலனான ருத்ரனுக்கு உட்பட விக்ருதனாம் படி கண்டால்
நேர் நேர் கொடு நேர் சாஷாத்கரித்த வர்களுக்கு என்ன விக்ருதி ஆகுமோ என்கிறார் –

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78-

பதவுரை

காமன்–மன்மதனுடைய
உடல்–சரீரத்தை
கொண்ட–நீறாக்கின
தவத்தாற்கு–தபஸ்வியான பரம சிவனுக்கு
உமை–(மனைவியான) பார்வதி யானவள்
உணர்த்த–தெரிவிக்க,
அங்கு–அப்போதே
ஆர் அலங்கல் ஆனமை–மிகவும் அசைந்து போனமையை-தன்னிலை இழந்து பரவசமானமை –
ஆய்ந்தால்–ஆராய்ந்து பார்க்கில்,
வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள் முடியான தன் பெயர் கேட்டிருந்தே–வண்டுகள் ஒலிக்கப் பெற்ற பூமாலயை
நீண்ட திருவபிஷேகத்திலுடையனான எம்பெருமானுடைய திருநாமங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே
பார்வதி தேவி சொல்ல ருத்ரன் கேட்டு -தவத்தாருக்கு சிஷ்யை உணர்த்தினால் போல்
கண்டு வணங்கினார்க்கு–நேரே கண்டு வணங்குமவர்கட்கு
என் ஆம் கொல்–எப்படிப்பட்ட விகாரமுண்டாகுமோ (என்பது சொல்ல முடியாது)

மன்மதனுடைய உடலை நீறாக்கின தபஸ்ஸை யுடைய ருத்ரனுக்குப் பார்வதி
உபதேசிக்க –ஞாபநம் பண்ண
வண்டுகள் ஸஞ்சரிக்கிற திருத்துழாய்க் கதிர்களினால் கட்டப்பட்ட மாலையினால் அலங்க்ருதமான
நீண்ட திரு அபிஷேகத்தை யுடைய ஸர்வேஸ்வரனுடைய திரு நாமங்களைக் கேட்டு
அதில் மக்நனாய் இருந்து அப்போது வாடின மாலை போலே பரவசனானன் ஆகையாலே விசாரித்து
ஸர்வேஸ்வரனை ஸேவித்து ஆஸ்ரயித்தவர்களுக்கு என்னவுமாம் —

தவத்தாற்கு –
தபச்சுக்கு பலம் ஒருத்தனுடைய ஹிம்சை யாம்படி-
நெஞ்சு திண்ணியன் ஆனவனுக்கு

உமை உணர்த்த –
ப்ராசங்கிகமாக பகவத் குணங்களைக் கேட்டு-
சிஷ்யாசார்ய க்ரமம் மாறாடி
அவள் வாயாலே தான் கேட்டு

(உணர்த்த
ருத்ரன் த்யான பரனாய் இருக்க அப்போது பார்வதி -நீர் எல்லாருக்கும் உபாஸ்யரராய் இருக்க
உமக்கு தியானத்துக்கு விஷயம் உண்டோ -என்று கேட்க
அவன் பகவத் குணங்களை அவளுக்குச் சொல்ல
நமக்கும் உண்டு காண் -என்று ஈடுபட்டான்
அவன் சொன்னான் ஆகிலும் இவள் உணர்த்தக் கேட்டு
நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு ஆர் அலங்கல் ஆனமையால்
கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல்
என்று அந்வயம் )

வண்டு இத்யாதி –
மது வெள்ளத்தில் வண்டுகள் அலையா நின்ற-திருத் துழாய் மாலையையும்
ஆதி ராஜ்ய ஸூசகமான முடியையும் உடைய-சர்வேஸ்வரன் திரு நாமங்களையே கேட்டு
நெஞ்சாலே அனுசந்தித்துக் கொண்டு இருந்து
(திருத்துழாய் -பூ தேன் ஊருவதால்-பத்ரம் புஷ்பம் இலையாக இருக்கும் போதே புஷ்பம் -அலங்கல்)

ஆர் அலங்கல் ஆனமையால் –
அலங்கல் என்று அசைவாய்-
பாரவச்யதையைச் சொன்ன படி

(கம் த்வம் அர்ச்சயஸே தேவ கிம் தைவதம் அதிகம் தவ
ஜப ஹோம நமஸ்காரை தம் வதஸ்த மஹேஸ்வர -என்று தொடங்கி ப்ரஸ்னம் பண்ண
பார்வதியை மேலும் பகத் நாமங்களை சொல்லக் கேட்டு மேனி மிகத் தளர்ந்து போனான் ருத்ரன்
ப்ராசங்கிக்கமாக குரு சிஷ்ய க்ரமம் மாறாடிக் கேட்டதற்கே இவ்வாறு ஆனான்
வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள் முடியான்
சுடர் முடி மேலும் புனைந்த தண்ணம் துழாயுடை எம்மான் -(1-9-7)
ஆதி ராஜ்யம் அதிகம் புவநாநாம் ஈஸ தே பிசு நயன் கில மௌலி -ஆழ்வான்
ஆர் அலங்கல் ஆனமை
அலங்கல் -அசைவு
மிகவும் அசைந்து போனமை
அன்றிக்கே
வாடின மாலை போல் துவண்டு விழுந்தான்
ஆய்ந்து -ஆராய்ந்து -கண்டு வணங்கினாருக்கு என்னாகும் கொல் )

அப்பிள்ளை உரை
அபிமத விஷயத்தை கடிப்பிக்க காமனுடைய சரீரத்தை தக்தமாக்கிய பஸ்மமாக்கிய தபஸ் க்ரூரரான ருத்ரனுக்கு
மஹிஷியான உமையானவள் முறை மாறாடி அஞ்ஞான ஞாபனம் பண்ண
வண்டுகள் ஆனவை தேன் வெள்ளத்திலே கிடந்து அலையும்படி இருக்கும் படியான திருத்துழாயால் அலங்க்ருதமான
ஆதிராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகம் உடைய
சர்வேஸ்வரனுடைய ஒப்பனை அழகு
அழகு முதலான ஸ்வ பாவத்துக்கு வாசகமான திரு நாமங்களை யாதிருச்சிகமாகக் கேட்டு
சொல் என்ன சொன்னாளே
நெஞ்சால் நாமங்களுக்கு உள்ளீடான குணங்களை நெஞ்சால் அனுசந்தித்து அந்த தசையில் முடிந்து
வாடின பூ மாமலை போல் பரவசனாயத் துவண்டு விகாரம் அடைந்து
விழுந்தபடி கண்டால்
உள் எலாம் உருகி உடம்பு எல்லாம் கண்ண நீர் சோர –
கேட்ட அளவன்றிக்கே பத்தும் பத்தாக இவ் வஸ்துவை சாஷாத்கரித்து நிர் மமராய்
திருவடியில் விழுந்தவருக்கு என்னாகுமோ 0எந்த விக்ருதி பிறக்குமோ –

————————————————————————–

(நேரே கண்டு வணங்கினவர்கள் ஆனந்தம் மிகப் பெரிது என்றார் கீழே
சரீரத்தில் ஈடுபாடு இதற்கு தடையாகாதோ என்ன
பகவத் அனுபவ த்வரை உள்ளவர்கள் -சரீரம் வ்ரணவத் பஸ்யேத் -புண்ணாகவே சரீரத்தைப் பார்க்கார்கள்
எனவே பகவத் அனுபவ ஜெனித ஆனந்தத்துக்கு சரீர ப்ராவண்யம் இடையூறாக நில்லாது என்கிறார் –
ப்ரஹ்மம் ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமே
ஆழ்வார் திருப்புளிய மரத்தில் இருந்து ப்ரஹ்மத்தை அறிய
உலக இயல்புகளையும் அறிந்து அருளிச் செய்கிறார் அன்றோ
அதே போல் இவரும் அருளிச் செய்கிறார் )

ஆய்ந்து -இத்யாதி
பகவத் விஷயத்தில் ருசி உடையவர்கள்-
அவனை ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசம் பரமபதம்-என்று ஆசைப்பட்டு
அதுக்கு காற்கட்டாய் ஆயிற்று என்று-சொல்லலாம்படி அபிமானித்த சரீரத்தை –
சரீரம் வ்ரணவத் பஸ்யேத் -என்னும்படியாக
நோயாக விரும்புவர்கள் -என்கிறார்-

(புண்ணேர் ஆக்கை -உடம்பே நோய் என்று எண்ணுவார்கள்
சரீரமும் நாமும் ஓன்று அல்ல என்ற எண்ணம் வந்தால் கால் கட்டு ஆகாதே
பக்தி சரணாகதி பண்ண இது வேண்டுமே
ஸ்ரீ வை குந்தத்தில் ஆசை வை -சம்சாரம் குந்தம் என்று அறியலாம் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
பகவத் விஷயத்தில் ருசி உடையவர்கள் எம்பெருமானை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான
பரமபதத்தை அடைய-பிராபிக்க வேணும்-என்னும் த்வரை மிக்கு -அதிசயத்தாலே
தத் விரோதியான சரீரத்தையே நோயாகவே விரும்புவார்கள் -நினைப்பர்

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்திருத்த வல்லார்கள் -ஏய்ந்த தம்
மெய் குந்த மாக விரும்புவரே தாமுந்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து-79-

பதவுரை

ஆதி–ஜகத் காரண பூதனான
பெருமானை–ஸர்வேச்வரனை
அன்பினால்–ப்ரேமத்துடன்
ஆய்ந்து கொண்டு–அநுஸந்தித்துக் கொண்டு
ஞானம் கனிந்த நலம் கொண்டு நைந்து
வாய்ந்த மனத்து–(தமது) பாங்கான நெஞ்சிலே
இருத்த வல்லார்கள் தாமும்–நிலை நிறுத்திக் கொள்ள சக்தரானவர்கள்
தம் வைகுந்தம்–தங்களுக்கென்று ஏற்பட்டுள்ள பரம பதத்தை
விரைந்து–சீக்கிரமாக
காண்பார்–காண விருப்பமுடையராய்
ப்ரஹ்மத்தை உள்ளத்தே இருத்தச் சொன்னால் மாட்டேன் என்று வைமுக்யம் இல்லாததே போதுமே
ஏய்ந்த–ஆத்மாவோடு செறிந்த
தம் மெய்–தங்களுடைய உடம்பை
குந்தம் ஆக–வியாதியாக
விரும்புவர்-எண்ணுவர்

ஜகத் காரணனான ஸர்வேஸ்வரனை ப்ரீதியுடன் அனுசந்தித்துக் கொண்டு தகுந்த
மனஸ்ஸில் ஸ்தாபிக்க வல்லவர்களான தங்கள் ஸ்ரீ வைகுண்டத்தை த்வரையாக சேவிப்பார்கள்
தம்முடன் சேர்ந்து இருக்கிற சரீரத்தை வியாதி போல் பரிஹரிக்கத் தக்கதாக ஆசைப்படுவார்கள் –

ஆய்ந்த இத்யாதி –
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரனை பிரேமத்தாலே அனுசந்தித்திக் கொண்டு
இருத்துகைக்கு யோக்யமான நெஞ்சிலே வைக்க வல்லவர்கள்

(நில்லவா நில்லா நெஞ்சு- சஞ்சலமான மனஸ்ஸூ
தாழ்ந்த இதிலே உயர்ந்த ப்ராப்ய விஷயத்தை உள்ளத்திலே வைக்கும் தன்மை ஆற்றல் யுடையவர்கள் )

ஏய்ந்த தம் மெய் –
ஸ்தூலோஹம் க்ருசோஹம் என்று-
தானாக சொல்லலாம் படியான சரீரத்தை
குந்தமாக -நோயாக-நினைப்பார்கள்

(ஏய்ந்த -ஏய்கை -பொருந்துகையாய் –
பிரித்துக் காணப் போகாதே தானே என்னலாம் படி பொருந்தி இருக்கை )

(மனத்திருத்த வல்லார்கள்
தாம் தம் வைகுந்தம் -தமக்கு ஏகாந்த போக யோக்யமான பரம பதத்தை
விரைந்து காண்பாராக
மெய் குந்தமாக விரும்புவர்
என்று அந்வயம் )

(காரணந்து த்யேய
வாய்ந்த மனம்
முந்துற்ற நெஞ்சு
என்னை நெகிழ்க்கிலும் என்னுடைய நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி -1-7-8-
முழு ஏழு உலகம் உண்டான் உவந்து வந்து அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி –2-6-7-
ஏய்ந்த தம் மெய்
ஸ்தூலோஹம் என்று தானாகவே வ்யவஹரிக்கலாம் படி பொருந்தி ஒன்றி நிற்கும் சரீரம்
குந்தமாகவே எண்ணுவர்
ஸூகத்துக்கோ ஸூக துக்க மிஸ்ரத்துக்கோ ஹேதுவாக இல்லாமல் துக்க ஹேதுவாகவே எண்ணுவார் -)

அப்பிள்ளை உரை
ஜகத் கரண பூதனான சர்வேஸ்வரனை பிரேமத்தாலே அனுசந்தித்துக் கொண்டு அவன் எழுந்து அருள பாங்கான நெஞ்சிலே
(இருப்பேன் என்று பேராமல் இருக்க அவன் வந்து இருக்கும் நேனு அன்றோ )
ஸூ ப்ரதிஷ்டித்தமாக வைக்க வல்லவர்கள்
ப்ராப்ய ருசி பரிபூர்ணராய் இருக்கும் தாங்களும்
ஆஸ்ரிதரான தங்களுக்காக என்று கூறப்பட்டு உள்ள ஸ்ரீ வைகுந்தத்தை
பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இருக்கை அன்றிக்கே
சத் த்வரராய் -(விரைந்து )
கெடுத்தவன் நிதி கண்டால் போல் -கண்டு கொண்டு அனுபவிப்பது போல்
அதுக்கு கால் கட்டாய் தேவோஹம் என்று சொல்லும்படி ஆத்மாவோடு -தங்களோடு -பொருந்தி உள்ள
சரீரத்தையே வியாதி போல் துக்காஹவம் என்று கருதி
(ஸ்ரீ வைகுந்தம் ஆசை உள்ளவன் தான் ஸூகத்தையும் துக்கமாகக் கொள்ளுவான்-
இங்கு உள்ள ஸூகங்கள் அல்பமாயும் அஸ்திரமாயும் இருக்கும் என்று உணர்ந்தவர்கள் –
அப்ராக்ருத திருமேனி அங்கே பெற்றால் தானே அளவில்லா பேர் இன்பம் நிலையாகப் பெறுவோம் )
இது விட்டு நீங்குவது எப்போதோ என்று மநோ ரதித்து இருப்பார்கள்
குந்தம் என்று வியாதி- தடங்கல்

———————————————————–

முன்பு பிரளயம் வருகிறது என்று லோகத்தைத் திரு வயிற்றிலே வைத்து
பிரளயம் தேடி வந்தாலும் அத்தனை போதும் தெரியாதபடி மறைத்துக் கொண்டு காத்து ரஷித்த
(ஆபத் சகனான )கிருஷ்ணனை விரைந்து அடையுங்கோள்-

(ஆக ஞானிகளுக்கு மட்டும் அல்ல
ரஷித்து அருளுவாய் என்று அபேக்ஷிக்கவும் அறியாத சம்சாரிகளுக்கும் அவனே ரக்ஷகன்
கண்ணன் உலகம் ஆடின -கதவை விரைந்து அடைமின் -யம கிங்கரர்களைப் பார்த்து
கண்ணனை விரைந்து அடைமின் -நம்மைப் பார்த்தும் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
சர்வ ஆபத் சகனான கிருஷ்ணனை
ஸம்ஸார ஆபத்தை யுடைய நீங்கள்
தந் நிவ்ருத்தி அர்த்தமாக ஈண்டென ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

விரைந்து அடைமின் மேலொரு நாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-

பதவுரை

உலகம்–சிறந்த பாகவதர்கள்
பரந்து–எங்குத் திரிந்து
பாடின–பாடின பாடல்களையும்
ஆடின–ஆடின ஆட்டங்களையும்
கேட்டு–கேட்டதனால்
படு நரகம் வாசல்–க்ரூரமான நரகங்களின் வாசல்களிலிருந்த
கதவு–கதவுகள்
வீடின–விட்டொழிந்தன (நரக வாசல்கள் பாழாய்ப் போயின)
மாதவன் பூதங்கள் மண் மேல் ஆடின நம்மாழ்வார் போல் இங்கும் பரந்து உலகம் பாடின வாடின
நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே ஸ்வர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி
மேல் ஒரு நாள்–முன்னொரு காலத்தில்
வெள்ளம் பரக்க–பிரளய வெள்ளம் பரவின போது
உலகம்–உலகங்களை யெல்லாம்
கரந்து–(திருவயிற்றில்) மறைத்து வைத்து
காத்து அளித்த-துன்பங்களைப் போக்கி ரக்ஷித்த
கண்ணன்–கண்ண பிரானை
விரைந்து அடைமின்–சீக்கிரமாகச் சென்று பணியுங்கோள்

ஸஞ்சரித்து உத்க்ருஷ்டராய் சந்தோஷத்தினால் ந்ருத்யம் செய்தவர்கள் கானம் பண்ணின திரு நாமங்களைக் கேட்டு
சகலரும் உஜ்ஜீவித்தார்கள் ஆகையாலே
பாழான நரகத்தின் வாசலில் கதவு பிடுங்கிப் பொகட்டப் பட்டது –
முற்காலத்தில் பிரளய ஆர்ணவம் வியாபிக்க லோகங்களைத் தன் கர்ப்பத்தில் மறைத்து வைத்து
வியஸனங்களைப் போக்கி ரஷித்த
ஸ்ரீ கிருஷ்ணனை சீக்கிரமாக ஆஸ்ரயியுங்கோள்

உலகம் -என்று உத்க்ருஷ்டரைச் சொல்லுகிறது
(உலகம் உயர்ந்தோர் மாட்டே )

பரந்து உலகம் பாடின வாடின கேட்டு படு நரகம் வீடின வாசற் கதவு –
பரந்து உத்க்ருஷ்டராய் ஆடினவர்கள் பாடின-திரு நாமங்களைக் கேட்ட
நரகத்து வாசல்களில் கதவு வாங்கிப் பொகட்டன-

அன்றிக்கே
நரகத்து வாசல்களிலே பிடிங்கிப் பொகட்ட கதவுகளை நாட்டி –
முனியாது மூரித்தாள் கோமின் (ஸ்ரீ முதல் திருவந்தாதி—87)-என்னும்படி-
விரைந்து அடையுங்கோள் -என்றுமாம்

கண்ணன் -என்றது
கண்ணனை -என்றபடி

கண்ணனை விரைந்து அடைமின்
படு நரக வாசல் கதவு வீடின என்று பின்ன கிரியை யாதல்
கண்ணனைப் பாடின ஆடின கேட்டு நன்றாக வாசலில் வீடின கதவுகளை விரைந்து அடைமின் –
என்று ஏக கிரியை யாதல்

இத்தால்
நரகம் பாழ்த்தது என்னுதல்
போக்கு வரத்து இல்லாதபடி வாசலை அடையுங்கோள் என்னுதல்
இரண்டு தாத்பர்யம் –

(பரந்து ஆடின உலகம் பாடின கேட்டு
இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

நமனும் முற் கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே ஸ்வர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி

யம தூதர்களை நோக்கி ஆழ்வார் பேசுவது என்றுமாம்

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித் தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு –ஸ்ரீ முதல் திருவந்தாதி—87–)

அப்பிள்ளை உரை
எங்கும் தீர்த்தகரராய் திரிந்தி என்னும்படி
(பரந்த உலகம் பாடி ஆடி முதல் ஆழ்வார்கள் )
சர்வ பிரதேசத்திலும் ச ரச சஞ்சாரம் பண்ணா நிற்பாராய் -சுவையாக -அருளிச் செய்து பாடி ஆடி -ஆனந்த நிர்ப்பரராய்
பகவத் அனுபவத்தால் வந்த உயர்த்தி யுடையவராய் -(உலகம் உயர்ந்தோர் மாட்டே இதுவே உயர்த்தி )
(பேயாழ்வாரால் திருத்தப்பட்டவர் தானே இவரும் )
அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரஹர்ஷத்தால் -ப்ரக்ருஷ்டமான ஆனந்தம் -மிகுதியான ஆனந்தம் -ப்ரக்ருஷ்டமான ஹர்ஷம் –
ச சப்ரம நர்த்தனம் பண்ணா நிற்கும் -ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ப்ரீதிக்கு போக்கு விட்டு அருளிச் செயல்களை-பாடின திருநாமங்களைக்
கேட்ட படியாலே நரக பிரவேசம் பண்ணுவார் ஒருவரும் இல்லாமல் நரகம் புகும் வாசல் கதவுகள் வீழ்ந்தன
ஆன பின்பு
முன்பு ஒரு காலத்தில் ப்ரளயமானது எங்கும் ஓக்க ஆக்ரமித்துக் கொண்டு வர
லோகத்தில் பிரளயம் வந்தாலும் தெரியாத படி திரு வயிற்றிலே வைத்து
அத்தாலே வந்த வியசனத்தைப் போக்கி பரிகரித்து யதா பூர்வம் ரஷித்த கிருஷ்ணனை ஆஸ்ரயியுங்கோள்
அன்றிக்கே
கண்ணனை யுடையவர்களாய் உத்க்ருஷ்டராய் – -(கண்ணன் உலகம் பரந்து ஆடி ) –
(கண்ணன் பிரதம விபக்தி பாசுரத்தில் இருந்தாலும் கண்ணனை நம்மைப் பார்த்து கண்ணனுடைய யமபடர்களைப் பார்த்து )
ஸ்ரீ வைஷ்ணவர்கள் – பாடி ஆடித் திரிவதால் திரு நாமங்களைக் கேட்டு
நாடாகக் கேட்டு க்ருதார்த்தராய் ஆனார்கள்
(உபதேசம் கேட்டு திருந்தி வந்தவர்களுக்கு பொலிக )
நரகத் துவாரத்தில் பிடிங்கிப் பொகட்ட கதவுகளை நாட்டி
விரைந்து அடைமின் என்கிறார்

————————————————————————–

(கீழே தீர்த்தகரராய் திரிந்தவர் வைபவம் சொல்லி
இதில் பேயாழ்வாரால் திருத்தப்பட்ட இவரைக் கண்டு கரிய கோலத் திரு வுருவுடன் அவன் வந்து கிட்டுவானே
மதுரகவி ஆழ்வார் நிஷ்டை அன்றோ
விரைந்து அடைமின் என்றவுடன் உலகம் எல்லாம் பகவத் பிரவணர் ஆனார்கள்
ஆழ்வாரது அரும் செயலைக் கண்டு திரு உள்ளம் உகந்த எம்பெருமான் –
ஆழ்வீர் உமக்கு செய்வதாவது என் என்ன
இதற்கு எல்லாம் அடியாக என் உள்ளத்தைத் திருத்திப் பயிர் செய்தவன் நீயேயாய் இருக்கும் போது
எனக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது -என்கிறார் – )

அப்பிள்ளை உரை -அவதாரிகை
நீ என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்டு அருளிய செயலாலேயே –
அதனாலேயே உன்னைக் காண முடியுமோ முடியாதோ என்னும் ஹிருதய தடுமாற்றத்தைப் போக்கிக் கொண்டேன்
நெஞ்சு என்னும் உள் கண்ணால் காணப் பெற்றேன்

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –81–

நீ–(ஞானம் சக்தி முதலியவற்றால் குறைவற்றவனான) நீ
கற்ற மொழி ஆகி–நான் கற்ற சொற்களுக்குப் பொருளாக இருந்து கொண்டு
கலந்து–என்னோடு ஒரு நீராகக் கலந்து
நல் தமிழை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய இப் பிரபந்தத்தை
விதை ஆக வித்தி–(பக்தியாகிற பயிர்க்கு) விதையாக விதைத்து
என் உள்ளத்தை–எனது ஹ்ருதயத்தை
விளைத்தாய்–விளையும்படி க்ருஷி பண்ணினாய்
மனம்–மனமானது
கதவு என்றும்–எம்பெருமானை யடைவதற்குப் பிரதிபந்தகம் என்று (சில சமயங்களில்) நினைத்தும்
(மனம்) காணல் ஆம் என்றும்–(மன மானது) எம்பெருமானைக் காண்பதற்கு உறுப்பாகும் என்று (சில சமயங்களில்) நினைத்தும்
குதையும் வினை ஆவி தீர்ந்தேன்–(ஆக விப்படி ஒரு நிலை நில்லாமல் மாறி மாறி) பிரமிப்பதையே
தொழிலாக வுடைத்தான நெஞ்சைத் தவிர்த்தேன்.
மனம் ஏவ மனுஷ்யானாம் பந்த மோக்ஷ ஏக ஹேது
ஆவி ப்ராணனுக்கு ஸ்தானமான நெஞ்சு -சஞ்சலம் ஹி மனஸ் -நிலை பெற்ற நெஞ்சம் பெற்றேன்

மனஸ்ஸூ பகவத் சாஷாத்கார பிரதிபந்தகம் என்றும் சாஷாத்கார ஹேது என்றும் அறிந்து
அலையப் பண்ணும் துஷ் கர்மங்களைத் தவிர்த்தேன்
நீ நான் அப்யஸித்த கவிக்கு வாஸ்யனாய் இருந்து என் உள்ளத்தில் கலந்து
ஸ்லாக்யமான தமிழை விதையாக விதைத்து என்னுடைய மனஸ்ஸைப் பலிக்கச் செய்தாய் –

கதவு இத்யாதி
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்னும்படி
பகவத் விஷயம் கிட்டாமைக்கு கதவு மனஸ் என்றுமாம் –
காண்கைக்கும் பரிகரம் மனஸ் என்றுமாம் –

குதை இத்யாதி
(குதை அசைவு )தடுமாற்றமான தொழில்  தவிர்ந்தேன்

விதை இத்யாதி
தடுமாற்றம் தீருகைக்கு சொல்லுகிறது

(பத்தி உழவன் நீ செய்த காரியத்தால் அன்றோ இந்த நிலை பெற்ற நெஞ்சு ஆனது )

(ஆத்மாவின் தடுமாற்றத்தைப் பண்ணக் கடவ கர்மங்களைத் தவிர்ந்தேன்
குதை -அசைவாய் -தடுமாற்றப் பண்ணுகிற வினை என்றபடி
கற்ற மொழியாகிக் கலந்து
விதையாக நல் தமிழை வித்தி
என் உள்ளத்தை நீ விளைத்தாய்
இது பாபம் போகைக்கு ஹேது
நீ தான் கவி ரூபமாய் நெஞ்சிலே கலந்து தமிழை விரைத்து உள்ளத்தை சபலமாக்கினாய் )

(மந ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ
பந்தாய விஷயா சங்கி முக்த்யை நிர் விஷயம் மந -ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-7-28-
ஆத்மைவ ஹ்யாத் மநோ பந்துர் ஆத்மைவ ரிபு ராத்மந –ஸ்ரீ கீதை –6-5-
ஊனில் வாழ் உயிரே -2-3-1- -இத்யாதிகளில்
ஆத்மா உயிர் என்று நெஞ்சையே சொல்வது போல் இங்கும் ஆவி என்று நெஞ்சையே சொன்னவாறு -)

அப்பிள்ளை உரை
நினைப்பது தலைக்கட்ட வல்ல ஞான சக்திகளால் குறைவற்ற நீ
(அயோக்யனான எனது உள்ளத்தை -செவ்வையான நெஞ்சை ஆக்கி அருளினாய் -நெஞ்சப் பெரும் செய் )
பிறந்த வன்று தொடங்கி நான் அப்யஸித்துப் போந்த தமிழ் பாஷைக்கு வாஸ்யனாய்-பொருளாய்- வந்து புகுந்து
லஷ்ய லக்ஷணங்களில் பழுது இல்லாமல்
அழகிய தமிழை நெஞ்சம் என்னும் விளை நிலத்தில் விதைத்து குறைவற விளையும்படி நீயே கை தொட்டு கிருஷி பண்ணினாய்
அத்தாலே மனா ஏவ ஹி காரணம் மோக்ஷ பந்த ஹேது என்ற மனம் தவிர்ந்தேன்
விஷயாந்தர ப்ரவணமான போது அதுவே கதவாய் தடங்கலாய் இருக்கும்
அந்த விஷய சங்கம் அற்ற போது இதுவே உபகரணமாக பரிகரமாக உன்னைக் கண்டு அனுபவிக்கலாம்
ஒரு நிலை இல்லாமல் உத்தர உத்தரம் பிரமமே தொழில் ஆக இருந்த நெஞ்சை தவிர்ந்தேன்
என்றும் என்றது
என்னும் என்றபடி
மனம் என்னும் கதவு-மனமாகிய கதவு தவிர்ந்தேன்
குதைவு அசைவு
வினை தொழில்
ஆவி பிராண வாயு-லக்ஷணத்தால் ஆஸ்ரயமான நெஞ்சை சொன்னபடி

————————————————————————–

(மிகப் பெரியனான தான் மிகத் தாழ்ந்ததான எனது நெஞ்சிலே
கலந்துக்கு ஒப்பான நன்மை உலகில் உண்டோ
என்று உலகம் எல்லாம் அறியப் பறை சாற்றுகிறார் -)

அப்பிள்ளை உரை அவதாரிகை
அதி லோகமான அழகையும்
ப்ரஹ்மாதிகளுக்கும் கிட்டப் பெறாத மேம்பாட்டையும் உடைய அவன்
என் ஹிருதயத்திலே தானே வந்து ஒரு நீராகக் கலந்தான்
இத்தோடு ஒக்கும் புருஷார்த்தம் உண்டோ என்கிறார்

கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை
நலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள்
இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து –82–

பதவுரை

காம வேள் தாதை–மன்மதனுக்குத் தந்தையானவனும்-சாஷாத் மன்மத மன்மதன் அன்றோ -ப்ரத்யும்னன் மன்மதன் அம்சம்
அலர்ந்த அலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும்–மலர்ந்த பூக்களை ஸமர்ப்பித்துத் துதி செய்கின்ற சிவபிரானென்ன
நான்முகனும்–பிரமனென்ன
என்ற இவர்கள்–என்கிற (சிறந்த) தேவர்களும்
விட்டு ஏத்த மாட்டாத–நன்றாய்த் துதித்து முடிக்க முடியாதவனுமான-வாய் விட்டு ஸ்தோத்ரம் பண்ணி முடிக்க முடியாத
வேந்து–தேவாதி தேவன்
என் உள்ளத்து–எனது நெஞ்சிலே
கலந்தான்–சேர்ந்து கொண்டான்
ஈது ஒப்பது நலம் தானும் உண்டேர்–இந்த நன்மையோ டொத்த நன்மை வேறுண்டோ? (இல்லை)
இந்த பரம புருஷார்த்தம் பெற்றேனே

ஸூந்தரனான மன்மதனுக்குப் பிதாவாய் விகசித்த புஷ்பங்களை சமர்ப்பித்து ஸ்தோத்ரம்
பண்ணுகிற ருத்ரன் ப்ரஹ்மா என்று பிரசித்தரான இவர்கள் வாய் விட்டு ஸ்தோத்ரம் செய்யக்கூடாத மஹிமையை யுடைய
சர்வேஸ்வரனான ஸ்ரீ மன் நாராயணன் என் ஹ்ருதயத்தில் பிரவேசித்தான்
இதுக்கு சமானமான நன்மை வேறே ஓன்று உண்டோ -கிடையாது –

கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை நலந்தானும் –
எல்லாரும் தன்னை ஆசைப் பட இருக்குமவன்-
என்னை ஆசைப் பட்டு ஹிருதயத்திலே கலந்தான்-
அழகாலே எல்லாரையும் அகப்படுத்தும் காமனுக்கும்-உத்பாதகன் ஆனான் –

ஈது ஒப்பது உண்டே –
அவன் தான் காட்டக் கண்ட இதுக்கு-
கதிர் பொறுக்கிக் கண்ட நலன்கள் சத்ருசமோ –
(உபாசனம் பண்ணி அன்றோ இவர்கள் பதவி பெற்றார்கள் )

அலர்ந்து அலர்கள் இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்றுஇவர்கள் விட்டு ஏத்த மாட்டாத வேந்து –
செவ்விப் பூக்களை கொண்டு (சாதன புத்தியோடு செய்யும் )ஏத்துகிற ருத்ரனும் சதுர்முகனும்-
வாய் விட்டு ஏத்த மாட்டாத சர்வாதிகன்
என் உள்ளத்தைக் கலந்தான் –
அவ் வழகையும் மேன்மையும் உடையவன் என்கை-

(அழகு காமனுக்கு தாதை
மேன்மை வெந்து
அம்தாமத்து அன்பு ஆவி சேர் அம்மான் -ஆழ்வார் )
சாதன புத்தியோடு செய்யும் அவர்கள் அனுபவங்கள்
என்னுள் தானே மேல் விழுந்து காட்டக் கண்ட அனுபவித்த அனுபவத்துக்கு ஈடாகுமா )

அப்பிள்ளை உரை
அழகால் நாட்டை பிச்சேற்றக் கடவ காமனுக்கும் உத்பாதகன் ஆகையால் –
அவனுக்கும் தந்தையாய் -(அவனும் மடல் எடுக்கும் படி -அழகன் )
செவ்விப் பூக்களைக் கையாரப் பறித்திட்டு
ஈஸ்வர அபிமானியான ருத்ரனும்
சதுர்முகனும்
லோக ப்ரசித்தரான இவர்கள்
முழு மிடறு செய்து பரி பூர்ணமாக வாய் விட்டுப் புகழ மாட்டாத
ராஜாவான கிருஷ்ணன்
அந்த அழகுடனும் பெருமையுடனும் கூட என்னுள்ளத்தில் தானே புகுந்தான்
இந்தப் பேற்றோடே ஒத்த சத்ருசமான புருஷார்த்தம் உண்டோ
நிர்ஹேதுக விஷயீ காரம் பெற்று அவனால் அனுபவிக்கப் பெற்றேனே

———————————————————————–

(நலம் தான் இது ஓப்பது உண்டோ என்றவர்
இது ஒன்றோ அவன் அடியாருக்குச் செய்யும் நன்மை
அடியார்கள் இங்கே இருக்கும் நாள் இன்னது என்ற வரம்பு இல்லாமல் ஸர்வவித ரஷைகளும் பண்ணி
சரீரம் விட்டால் ஸ்வர்க்கம் முதலான இன்பங்களையும்
அதுக்கும் மேலே விலக்ஷணமான பரமபத இன்பத்தையும் கொடுத்து
இவ்வளவும் செய்தாலும்
இவன் செய்ததுக்குத் தக்க ஒன்றுமே செய்யப் பெற்றிலோமே என்று நெஞ்சாறல் பட்டு இருப்பவன் அன்றோ என்று
கீழ் சொன்ன பாசுரார்த்தத்தை விவரித்து அருளிச் செய்கிறார் இதில் -)

(நலந்தானும் ஈது ஒப்பது உண்டே)
இத்தோடு ஒக்கும் அழகு உண்டோ என்று-அத்தை உபபாதித்துக் காட்டுகிறார் –

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஆஸ்ரித விஷயத்தில் இங்கு இருக்கும் நாள் சர்வ ரக்ஷணமும் பண்ணி
சரீரம் விட்டால் -(பின்னையும் )
பேச்சுக்கு நிலம் அல்லாத பேற்றையும் – (பிதிர்)- ஸ்ரீ வைகுண்டத்தையும் பண்ணிக் கொடுத்து
பின்னையும் ஒன்றும் செய்யாதானாய் நெஞ்சில் அறவோடே -(திருப்தி இல்லாமல் )-இருக்கும்
(நலந்தானும் ஈது ஒப்பது உண்டே) கீழ் சொன்னதை உபபாதிக்கிறார்

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் -சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்–83–

பதவுரை

நேமியான்–திருவாழி யாழ்வானை யுடையவனும்
மால் வண்ணன்–வியாமோஹமே வடிவெடுத்தவனுமான எம்பெருமான்
சார்ந்தவர்க்கு–தன்னை யடைந்தவர்கள் விஷயத்தில்
வேந்தர் ஆய்–அரசர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய்
விண்ணவர் ஆய்–தேவர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய்
மாது ஆய்–தாய் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்-அழகாய் என்றுமாம்
மற்று எல்லாம் ஆய்–மற்றுமுள்ள எல்லா வகை நன்மைகளையும் செய்பவனாய் (எவ்வளவு நன்மைகள் செய்தாலும்)
ஆற்றான்–ஆறுதல் இல்லாதவனாய்க் கொண்டு (திருப்தி பெறாதவனாய்)
விண் ஆகி–ஸ்வர்க்க போகத்தைக் கொடுக்குமவனாய்
தண்ணளி ஆய்–அருள் செய்பவனாய்
மாந்தர் ஆய்–மனிசர்களான உறவினர் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்- -எல்லாவித அழகாயும் அவனே
பின்னால்–இவ்வளவுக்கு மேலும்
தன் கொடுக்கும்–தன்னை (முற்றூட்டாகக் கொடுத்தருள்வன்
தான் செய்யும் பிதிர்–(இவை) எம்பெருமான் செய்யும் அதிசயங்களாம்
பிதிர்–சேஷம் -மீதம் -உள்ள பரம பதத்தையும் கொடுத்து

சக்ர தரனாய் ஆஸ்ரித வ்யாமோஹமே வடிவு எடுத்து வந்தால் போலே இருக்கிற ஸர்வேஸ்வரன்
தன்னை ஆஸ்ரயித்த வர்க்கு ரக்ஷகனான ராஜாவாய்
பல பிரதமான தேவதையாய்
போக ஸ்தானமான ஸ்வர்க்கமாய்
அங்கு தேவர்கள் பண்ணும் கிருபையாய்
பந்துக்களாய்
தாயாய்
மற்றும் எல்லாமுமாயும் இருந்து
ஐஹிக ஆமுஷ்மிக ஸூகங்களைக் கொடுக்கும்
இவ்வளவிலும் தான் திருப்தி இல்லாதவனாய்
மறுபடியும் தான் மிகுந்த மோக்ஷத்தையும் கொடுக்கும் —

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய் மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் –
சிறியது பெரியது தின்னாதபடி நோக்கும் ராஜாக்களாய்
பூமியில் உள்ளாருக்கு வர்ஷத்தால் உபகரிக்கும் தேவர்களாய்
பூமியில் உள்ளார் பண்ணின பலம் அனுபவிக்கும் ஸ்வர்க்கமாய்
அங்கு இவர்களுக்கு பண்ணும் தண்ணளியாய்
இவர்களுக்கு சஜாதீயரான மனுஷ்யராய்
அழகாய் -என்னவுமாம்
சஹஸ்ரம் ஹி பிதுர் மாதா -என்னவுமாம்
அனுக்தமான எல்லாவுமாய்
(போக்ய போக்ய உபகரணமாய் போக்ய ஸ்தானமாய் போக்ய பிரதானனுமாய் -ஸ்ரீ மத்தாய் )

சார்ந்தவர்க்குத் –
இப்படி எல்லாம் ஆவது-தன் பக்கல் ந்யஸ்த பரர் ஆனவர்களுக்கு

தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் –
எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யானாகக் கொடுக்கும்

பின்னால் தான் செய்யும் பிதிர்
பின்னைச் செய்யுமது வ்யாவ்ருத்தம்
அவன் குமிழ் நீர் உண்டிட-இவன் குமிழ் நீர் உண்ண
காணும் அத்தனை

ஆற்றான் -த்ருப்தன் ஆகான்

பிதிர் -அதிசயம் -மிச்சம் என்றபடி-

(குமிழ் நீர் உண்ணுதல் ஆழ்ந்து அனுபவித்தல்
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத காம் அந்நாத
பின்னைச் செய்யுமது வ்யாவ்ருத்தம்
சேஷமான மோக்ஷம் கொடுக்குமது -தனியாக சொல்வது இது ஒரு தட்டு -கீழ் சொன்னவை ஒரு தட்டு
பின்னால் -இவன் விலக்காமல் இருக்கும் அன்று
கீழ் கொடுத்தவைகளில் வெறுப்பு வந்த பின்பு –
மிட்டாய் கொடுத்து பிள்ளையை மெதுவாகத் திருத்துவது போல்
ஜடாயுவுக்கு கச்ச லோகான் அனுக்த்தமான் -எல்லா லோகங்களும் -லோகான் -பன்மை
சத்யான் லோகான் ஜயதி )

(ஸூ ஹ்ருத் கதிர் நாராயணா
ஸஹஸ்ரம் ஹி பிதுர் மாதா
பெற்ற தாய் நீ பிறப்பித்த தந்தை நீ
மாதா பிதா நாராயணா
ஸகல பல பிரதன் அன்றோ
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸி நம்
ருணம் ப்ரவ்ருத்த மிவ மே ஹருதயான் நாப சர்ப்பதி -பாரதம்
யா கதிர் யஜ்ஜ ஸீலா நாம் ஆஹிதாக் நேச்ச யா கதி
அபரா வர்த்தி நாம் யா ச யா ச பூமிப்ரதாயி நாம்
மயா த்வம் சமநுஜ் ஞாதோ கச்ச லோகான் அநுத்தமான் –ஆரண்ய –68-30-)

அப்பிள்ளை உரை
ரக்ஷண பரிகரமாக திருவாழியை உடையவனாய்
ஆஸ்ரிதர் விஷயத்தில் இன்னது செய்தது இன்னது செய்ய வில்லை என்று விபாகம் பண்ண மாட்டாதே
விவேகிக்க மாட்டாமல் (பாத்திரம் அறிந்து பிச்சை போடத மால் வண்ணன் -பிச்சு)
பிச்சு தான் ஒரு வடிவு கொண்டால் போல் இருக்கக் கடவ சர்வேஸ்வரன்
(மால்-பிச்சு- சர்வேஸ்வரன் -இரண்டும் அர்த்தம் உண்டே )
ஆஸ்ரிதர்களுக்கு -(விலக்காமை மட்டுமே உள்ளாருக்கு )
சிறியது பெரியது தின்னாதபடி நோக்கும் ராஜாக்களாய்
பூமியில் உள்ளாருக்கு வர்ஷத்தால் உபகரிக்கும் தேவர்களாய்
பூமியில் உள்ளார் பண்ணின பலம் அனுபவிக்கும் ஸ்வர்க்கமாய்
அங்கு பல அனுபவம் பண்ணும் அளவும் இவர்களுக்கு பண்ணும் தண்ணளியாய்
இவர்களுக்கு சஜாதீயரான பந்துக்களான மனுஷ்யராய்
வத்ஸலையான தாயாய்
அநுக்தமான சர்வமுமாய் அனைத்துமாய்
பின்னையும் ஒன்றும் செய்திலாம் என்று தான் தரிக்க மாட்டாதானாய்
இங்கு இருக்கும் நாள் -இந்த பஹு விதமான போகத்தைக் கொடா நிற்கும்
சரீர விஸ்லேஷத்துக்குப் பிறகு
யுக்த ஸமஸ்த போக வியாவ்வ்ருத்தமாய்
அனுபவித்து குமிழ் நீர் உண்ணும் போமது ஒழிய
(விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர் )
பேசிற்றுத் தலைக் கட்ட ஒண்ணாத படி இருக்கிற ஸூவ அனுபவ ரூபமான போகத்தை
வ்யாமுக்தனான தான் கால தத்வம் உள்ளதனையும் செய்து கொடா – கொடுத்துக் கொண்டே இருக்கும்
(பேர் அன்பு- மால் வண்ணன்- வ்யாமோஹம் )
இத்தால் ஆஸ்ரித விஷயத்தில் இஹ லோக போகம்
பர லோகம் ஸ்வர்க்காதி போகமும்
தத் உபய விலக்ஷணமான பரம பத போகத்தையும் இவர்களுக்குள் கொடுத்து
ஒன்றும் செய்யாதானாக நெஞ்சாறல் பட்டு இருக்கும்
ஸ்ரீ சீதா கார்ய நிமித்தமாக தன்னை அழிய மாறிய பெரிய உடையாருக்கு செய்வது அறியாமல் –
பித்தாகி -மாலாகி பதறி –
அர்வாஹீனமான -தாழ்ந்த இவ்வுலக -போகத்தோடே
பரம போகத்தோடே -தம்மிடம் உள்ள
சர்வத்தையும் கொடுத்தார் இறே பெருமாள்
கச்ச லோகான் அநுக்தமா –

——————————————————————

அப்பிள்ளை உரை அதிகாரிகை
சர்வாதிகனான கிருஷ்ணன் திருவடிகளை ஆஸ்ரயித்து
அனுபவிக்கையே நித்ய யாத்திரையாக இருக்கும் எனக்கு
ஞானாதிகனான பிரசித்தமான ருத்ரனும் ஒப்பாக மாட்டார்

அவனோபாதி(சர்வேஸ்வரன் ) நானும் வ்யாவ்ருத்தன் என்கிறார் —

(அவன் உபகரிப்பதில் அதி விலக்ஷணனாய் இருப்பது போல்
எம்பெருமானுக்கு அன்பு செய்வதிலே நானும் ஒப்பற்றவன் என்கிறார்
பக்தி சாரார் இவர் தானே
இந்த பட்டம் பெற்ற வ்ருத்தாந்தம் இப் பாசுர அர்த்தம்
நாளும் தொழும் காதல் எனக்கு -காதாசித்கமாக அவனுக்கு
அத்யந்த மம ப்ரீதி -தான் அதிக ப்ரீதி காட்டினாலும்
இவர்கள் ப்ரீதி அளவு என்னது இல்லையே என்று சொல்லிக் கொள்ளுமவன் )

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

பதவுரை

அதிரும் கழல் கால–ஒலிக்கின்ற வீரக் கழலைத் திருவடிகளிலே அணிந்துள்ள
மன்னனை–ராஜாதிராஜனான
கண்ணனையே–கண்ண பிரானையே
நாளும்–எந்நாளும்
தொழ–தொழும் படியாக
காதல்–ஆசைப் படுவதையே
தொழில்–நித்ய கருமமாக
பூண்டேன்–ஏற்றுக் கொண்டிருக்கிற நான்
பிதிரும் மனம் இலேன்–(விஷயாந்தரங்களிற் புகுந்து) விகாரப்படும் நெஞ்சுடையேனல்லேன்
சஞ்சலம் இல்லா மனஸ் பெற்றேன் -கீழே சொன்ன அர்த்த விவரணம்
பிஞ்ஞகன் தன்னோடு எதிரவன்–(ஞானத்தில்) பரம சிவனோடு ஒத்திருப்பேன் (என்னலாமாயினும்)
அவன் எனக்கு நேரான்–அந்த ருத்ரன் (நித்ய தாஸனான) என்னோடு ஒவ்வான்.

சப்திக்கிற வீரத் தண்டையினால் அலங்க்ருதமான திருவடிகளை யுடைய ராஜாவான ஸ்ரீ கிருஷ்ணனையே
ப்ரதி தினம் ஆஸ்ரயிக்கை யாகிற வியாபாரத்திலே ஆசை யுடையேன் ஆனேன்
விஷயாந்தர ஸக்தமான மனஸ்ஸை யுடையேனாகாத நான் ருத்ரனோடு சமானம் ஆவேன்
ரஜஸ்ஸூ தமஸ்ஸூ ப்ரதானனான அந்த ருத்ரன் என்னோடே சமானம் ஆகமாட்டான் –

பிதிரும் மனம் இலேன்-
ஏக ரூபம் இன்றிக்கே இருக்கிற மனஸை உடையேன் அல்லேன்

பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன் –
ஈஸ்வராத் ஜ்ஞானமன்விச்சேத்-(மத்ஸ்ய புராணம் -)என்கிற தேவனோடு ஒப்பான் –

அவன் எனக்கு நேரான்
சத்வம் தலை எடுத்த போது எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிறவன்
எனக்கு ஒப்போ-

அதிரும் கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும் தொழும் காதல்  பூண்டேன் தொழில் –
த்வனியா நின்ற வீரக் கழலை திருவடிகளிலே உடைய சர்வாதிகனான கிருஷ்ணனை தொழுகையே-
தொழிலாக காதல் பூண்ட எனக்கு 
ரஜஸ் தமஸ் தலை எடுத்த போது –
ஈஸ்வரோஹம் -என்று இருக்குமவன் ஒப்பு அன்று –
(ஸர்வதா ஸாம்யம் இல்லையே )

(சத்வம் தலை எடுத்த போது
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்ம ந பரமாத்ம ந
அதோ அஹம் அபி தே தாஸ இதி மத்வா நமாம் யஹம் –ஈஸ்வர ஸம்ஹிதை என்றும்
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமன் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-33-41-
கண்ணனுக்கு நித்ய கைங்கர்யம் செய்யப் பாரிக்கும் எனக்கு பாணாசூர யுத்தத்தில் எதிர் அம்பு கோத்தவன் ஈடாகுமோ
அவனையே பக்தி ப்ரபாவத்தால் வென்று பக்திசாரர் என்ற பட்டம் பெற்றவர் அன்றோ —
சொல்லிக் கொண்டாலும் அநித்ய தாஸ பூதன் தானே -ஈஸ்வரோஹம் என்று பாணாசூர இத்யாதிகளில் உண்டே )

அப்பிள்ளை உரை
ஆஸ்ரித விரோதி நிரசன அர்த்தமாக இடப்பட்டதாய்
பிரதிகூலர் குடல் குளம்பும்படி படி முழங்கா நின்றுள்ள ஒலிக்கும்
வீரக் கழல் உடன் கூடிய திருவடிகள் -(அதிரும் கழல் -தீக்ஷை போல் )
இச் செயலால் ஆஸ்ரிதர்களுக்கு எல்லாம் ராஜாவான கிருஷ்ணனை
சர்வ காலமும் அனுபவிக்கைக்கு ஈடான அபிநிவேசமே நித்ய க்ருத்யமாக ஏறிட்டுக் கொண்டவனாய்
அத்தாலே ஒரு க்ஷணம் காலமும் விஷயாந்தரங்களில் புகுந்து போகும் மனம் உடையேன் அல்லேன்
பேர் அறிவாளனான ப்ரஸித்தமான ருத்ரன் –
சத்வம் தலை எடுத்த போது எம்பெருமான் ரக்ஷகன் என்றும்
ரஜஸ் தலை எடுக்கும் போது ஈஸ்வரோஹம் என்னுமவன்
சர்வ காலமும் பகவத் ஏக பரனாய் இருக்கும் என்னோடு ஒப்பாக மாட்டான்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -61-72–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -/ஸ்ரீ அப்பிள்ளை உரை —

September 23, 2013

(ஆழ்வார் பிரார்த்தனை கேட்டதும்
மறப்பேன் என்று செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் -திருவாய் 1-10-10-
நீரும் உம் மனமும் மறந்தாலும் நான் விடேன் என்று நெஞ்சிலே நிலை நின்றான்
மேல் விழுந்து ஸ்தாவர பிரதிஷ்டையாக இருப்பதைக் கண்டு ஆழ்வார்
இச் செல்வம் வேறே யாருக்கும் இல்லை என்று இனியர் ஆகிறார்
தானே ஒன்றி நின்ற திரு -நிர்ஹேதுக விஷயீ காரமான திரு -பெற்றேன் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
சர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக வந்து விஷயீ க்ருத சம்பத்து
எனக்கே இப்பொழுது தான் உள்ளது

மனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில் -எனக்கே தான்
இன்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு -61–

பதவுரை

மதுசூதன் தன்னை–மதுவென்னும் அசுரனைக் கொன்றொழித்த பெருமானை
மனம் கேதம்–மன வருத்தங்கள்
சாரா–வந்து சேராவாம்
ஒன்றி நின்று–பொருந்தி நின்று
ஏழ் உலகை–ஸப்த லோகங்களிலும்
ஆணை ஒட்டினான்–(தன்னுடைய) செங்கோலைச் செலுத்துமவனான) எம்பெருமான்
இன்று–இப்போது
தனக்கே தஞ்சம் ஆ தான் கொள்ளில்–தனக்கே ரக்ஷகனென்று-கதி என்று – ஒருவன் கொண்டால்
சென்று–(நிர்ஹேதுகமாக என்னிடம்) வந்து
ஒன்றி நின்ற திரு–(என்னிடத்தில்) பொருந்தி நிற்பதாகிய செல்வமானது
எனக்கே தான்–என்னொருவனுக்கொழிய வேறொருவற்குமில்லை.

கேதம் துக்கம்
ஏதம் பொல்லாங்கு -அஞ்ஞானாதிகள்
தஞ்சமாகக் கொள்ளில் மனக்கேதம் சாரா
மனசுக்கு ஏதம் சாரா என்றுமாம்

தஞ்சமான செயலை செய்யுமவனை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில்
சமஸ்த லோகத்தையும் விடாதே நின்று
தன் ஆஞ்ஞை செல்லும்படி நடத்தினவன்
தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது –
அது தானும் இன்று-

(ஏழு உலகை ஒன்றி நின்றி ஆணை ஓட்டினான் தான்
சென்று ஒன்றி நின்ற திரு எனக்கு இன்று
என்று அன்வயித்து அர்த்தம் அருளிச் செய்கிறார் )

(அவனே இல்லை முதல் நிலை
அவன் தஞ்சமான செயல்களை செய்யும் உபகாரகன் என்று உணர்தல் அடுத்து
செய்தாலும் எனக்கு என்ன மூன்றாம் நிலை
இப்படி உள்ளவனை நான் பற்றினேன் -நான்காம் நிலை -ஸூவ கத ஸ்வீ காரம் –
இப்படி செய்பவன் தானே என்னைப் பற்றி திருவடிகளில் சேர்த்துக் கொள்ளுவான் ஐந்தாம் நிலை -பர கத ஸ்வீ காரம் )

(முதல் இரண்டு அடிகளால் ஸ்வ கத நிஷ்டர் விஷயத்தில் எம்பருமான் இருக்கும் படியும்
மேல் இரண்டு அடிகளால் பர கத நிஷ்டரான தம் விஷயத்தில் அவன்
ஏக சக்ராதிபதியாய் இருந்து வைத்து வலிய வந்து
தம்முடைய மனத்திலே பொருந்தி இருக்கப் பெற்ற பெரும் செல்வம்
ஆயர்கள் -ஆய்ச்சிகள் -செல்வச் சிறுமீர்கள் -பசுக்கள் -கன்றுகள் -உத்தர உத்தரோத்ரம்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
கன்று மேய்த்து இனிது உகந்த
காலி மேய்க்க வல்லான்
கன்று மேய்த்து விளையாட வல்லான்
ஆக இப்பாட்டால்
ப்ரஜாபதிஸ் த்வம் வேத -ப்ரஜாபதிம் த்வோ வேத -யம் ப்ரஜாபதிர் வேத ஸ புண்யோ பவதி –என்று
பரம புருஷன் ஒருவனைத் தானே அறிகிறான்
பரம புருஷனை ஒருவன் தானே சென்று அறிகிறான்
இவர்கள் இருவரில் எவனைப் பரம புருஷன் அறிகிறானோ அவனே சிறந்தவன் என்னும்
வேதாந்த அர்த்தம் வெளியிடப்பட்ட தாயிற்று -)

அப்பிள்ளை உரை
அங்கீகார விரோதிகளை
மது கைடபர்களைப் போக்கினால் போல் நிரசித்து
நிர்ஹேதுகமாக தானே வந்து விஷயீ கரிக்கும் சர்வேஸ்வரனை
பொதுவாக இல்லாமல்
அசாதாரணமாக -தனக்கே -மட்டும் -என்று உணர்ந்து
அவன் அபி நிவிஷ்டனாய் இருக்க
விசேஷணமான ரக்ஷகன் என்று இசைந்து கைக் கொண்டால்
அவனுக்கு ஒரு நாளும் மனசில் துக்கமே வராதே
இப்படி ஸ்வகத நிஷ்ட நிலை இருக்க
ஏகாக்ர சித்தனாய்
ஸமஸ்த லோகத்தையும் திவ்ய ஸாஸனம் -அப்ரதிஹதமாக -விடாதே நின்று தன் ஆணை செல்லும் படி நடத்தியவன்
தானே நிர்ஹேதுகமாக ஸாதரமாக வலிய வந்து பொருந்தி நின்று விஷயீ கரித்த இந்த சம்பத்தானது
இதுக்கு முன்பு இன்றிக்கே
இன்று எனக்கு ஒருவனுக்குமேயாய் உள்ளது
ஒன்றி நின்ற திரு எனக்கே தான் உள்ளது –

—————————————————————————————–

(தன் பெருமையைப் பார்த்து இன்புற்ற ஆழ்வார்
தேவதாந்த்ர பஜநம் பண்ணி சம்சாரிகள் இத்தை இழந்து போகிறார்களே என்று
வருந்தி அருளிச் செய்கிறார்
பிறர் துன்பம் கண்டு பொறுக்க மாட்டாமை அன்றோ ஸ்ரீ வைஷ்ணவத்வ லக்ஷணம் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஸ்ரீ யபதியை சர்வேஸ்வரன் என்று அறியாதே
தங்களை ஒத்த சம்சாரிகளை ஈஸ்வரனாக அறிவு கேடருக்கு உபதேசிக்கிறார்களே –

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் -திரு விருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடித் தரித்து–62–

பதவுரை

திரு இருந்த மார்வன்–பெரிய பிராட்டியார் எழுந்தருளி யிருக்கப் பெற்ற திருமார்வை யுடையனாய் (அதனாலே)
சிரீதரன் தன்–‘ஸ்ரீதரன்‘ என்று திருநாமம் பெற்றவானான எம்பெருமானுடைய
வண்டு உலவு தண் துழாய் தார் தன்னை–வண்டுகளுலாவப் பெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை
சூடி–தலைக்கு அலங்காரமாக அணிந்து
தரித்து–அதனால் ஸத்தை பெற்று,
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்–‘பிராட்டி பொருந்தி யிருக்கப் பெற்ற வலப் பக்கத்தை யுடைய
வஸ்துவே பர தத்துவம்!‘ என்று துணிந்தறிய மாட்டாதவர்கள்.
கரு நின்ற–(தங்களைப் போலே) கர்ப்ப வாஸம் பண்ணிப் பிறக்கின்ற ப்ரஹ்மாதிகளில் சிலரை
கல்லாக்கு உரைப்பர்–(பர தெய்வமாக) மூடர்களுக்கு உபதேசிப்பர்கள்.

திரு மார்பில் ஸ்ரீ தேவி நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ தரனுடைய வண்டுகள் மோதுகிற
குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சுற்றிக் கொண்டு தரித்து
ஸ்ரீ தேவி வாஸம் செய்கிற வலது பக்கத்தை யுடைய ஸ்ரீ மன் நாராயணனே
அப்ரகம்யமான பரதத்வம் என்று அறியாதவர்கள்
கர்ப்ப வாஸம் பண்ணுகிற ஷூத்ர தேவதைகளை பரதேவதை என்று
வித்யையை அறியாத மூடர்களுக்கு உபதேசிப்பார்கள் –

திரு நின்ற பக்கம்-
அபாங்கா பூயாம் சோ யதுபரி-என்னும்படியே
இன்ன வஸ்து என்ன வேண்டா –
ஏதேனும் ஒரு வஸ்துவிலே அவளுடைய கடாஷம் உண்டாகில்
அது சர்வேஸ்வர தத்வம் ஆகிறது –

திறவிது என்று ஓரார்
திறவிதாவது
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தமும் தன் அதீனமாய்
வேறு ஒன்றால் அறியாதது –
ஒரு சேதனர் ஆகில் அறியலாம் என்கை –

கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர்-
தங்களோடு ஒக்க கர்ப்ப வஸ்யராய்
கர்ப்ப வாஸம் பண்ணுகிறவர்களை
ஆஸ்ரயணீயராக தங்களோடு ஒத்த
அறிவு கேடருக்கு உபதேசிப்பார்கள் –

திருவிருந்த மார்பில் சிரீதரன் தண் வண்டுலவு தண்டுழாய் தார் தன்னைச் சூடித் தரித்து –
மாம்பழம் உண்ணி ந்யாயத்தாலே
ஸ்ரீ சம்பந்தம் இல்லாதாரை ஸ்ரீ மான்களாகச்
சொல்லும்படி அன்றிக்கே
பெரிய பிராட்டியார் திரு மார்பில் எழுந்தருளி இருக்கையாலே
ஸ்ரீ தரன் என்று திரு நாமத்தை உடையவன் ஆனவனுடைய
மது வெள்ளத்தாலே வண்டுகள் திரியா நின்றுள்ள
செவ்வியை உடைய திருத் துழாயை
சூடிக் களைந்தன சூடும் -என்னும்படியே
தலையால் தரித்து

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
ஞானத்துக்கு விஷயம் ஸ்ரீய பதி தானே-

(ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ் னுதே –
அபாங்கா பூயாம்ஸோ யதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத்-
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத ஸிஹ்னைஸ் தரந்தி –
ஸ்ரீ மான் என்று பிறரைச் சொல்வது உபசார வார்த்தை யாகுமே
ஸ்ரீ தரனான இவனுக்கு உரித்தான அசாதாரணம் )

(1-ஸ்ரீ வத்ஸ வஷா –திரு மறு மார்பன்
2-ஸ்ரீ வாஸா –திருவுக்கு இருப்பிடம்
3-ஸ்ரீ பதி -திருவின் நாயகன்
4-ஸ்ரீ மதாம் வர -திருவாளர் தலைவன்
5-ஸ்ரீ த -திருவை அளிப்பவன்
6-ஸ்ரீ ஸ -திருவுக்கும் திருவாக இருப்பவன் ஸ்ரீக்கும் ஈசன்
7-ஸ்ரீ நிவாஸ -திருமகள் கொழுநன்
8-ஸ்ரீ நிதி -திருவின் பெட்டகம் -திருவுக்கும் திரு
9-ஸ்ரீ விபாவந–திருப் புகழாளன்
10-ஸ்ரீ தர -திருவைத் தரிப்போன்
11-ஸ்ரீ கர –திருவுடன் பிறப்போன்
12-ஸ்ரேய ஸ்ரீ மான் –திருவை உடையோன்
என்று 608–619-திரு நாமங்களை ஸ்ரீ வியாசர் வெளியிட்டார் )

அப்பிள்ளை உரை
பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கிற திரு மார்பை யுடையவனாய்
அத்தாலே ஸ்ரீ தரன் என்ற திரு நாமம் யுடையவனாய்
ஸர்வேஸ்வரனுடைய
மது ஸம்ருத்தியாலே வண்டுகள் -இதஸ் ததஸ்- இங்கும் அங்கும் சஞ்சரியா நின்றுள்ள
குளிர்ந்த திருத் துழாய் மாலையை
தொடுத்த –சூடிக் களைந்தன சூடும் அடியார்களான –
தலைக்கு அலங்காரமாகத் தரித்து
அத்தாலே லப்த சத்தாகரராய் -சத்தா லாபம் பெற்று -தரித்து
இறையும் அகலகில்லேன் என்று பெரிய பிராட்டியார் நிரந்தர வாஸம் பண்ணும் –
வலது பக்கம் பிராட்டி -பிரதானம் இதுவே -(ருத்ரனுக்கு இடப்பக்கம் -அப்ரதானம் அது )
வசன ஆபாச யுக்தி ஆபாசங்களால் சலிப்பிக்க ஒண்ணாத பர வஸ்து என்று யுக்தி யுக்தமாக அறுதி இட மாட்டாதே
தங்களோடு ஓக்க கர்ம வஸ்யராய் கர்ப்ப வாசம் பண்ணி பிறப்பது இறப்பதுமாகிய
ஸூத்ர தேவதைகளை சாஸ்த்ர அப்யாஸத்தில் புதியது உண்டு அறியாத தங்களோடு ஒத்த-
அறிவு கேடருக்கு கல்லாதவர்களுக்கு -உபதேசியா நிற்பார்கள் –

————————————————————————————

கீழிற் பாட்டில் இப்படி செய்திலர் என்று வெறுத்தார் லோகத்தை –
இதில் தமக்குள்ள ஏற்றம் சொல்லுகிறது –

(ஆரானும் யாதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -பெரிய திருவந்தாதி –25-என்று
நெஞ்சை மீட்டு தாம் பெற்ற நன்மையைப் பேசுகிறார் -)

அப்பிள்ளை உரை அவதாரிகை
கல்லாருக்கு உரைப்பர் என்று முதலில் அறிவில் புதியது உண்டு அறியாத
நாட்டாரை கர்ஹித்து சொல்லா நின்றீர்
அவர்களில் காட்டில் உமக்கு ஏற்றம் தான் என்
இது அன்றோ நான் சத்தை பெறும்படி தரிக்கைக்காக போது போக்கின படி-என்கிறார் –

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63–

பதவுரை

தாரா கணம்–நக்ஷத்ர கணங்களினுடைய
போர்–(ஸூபாஸூப நிமித்தமான) ஸஞசாரத்தை
விரித்து உரைத்த–(ஜ்யோதிச் சாஸ்தர முகத்தாலே) விஸ்தாரமாக வெளியிட்டவனும்
வெம் நாகத்து உன்னை–(பிரதிகூலர்க்குத் தீக்ஷ்ணனுமான திருவனந் தாழ்வாரனுக்கு அந்தராத்மாவாகிய உன்னை
பதஞ்சலி ஆதிசேஷ அவதாரம் யோக சாஸ்திரம் உபதேசித்ததும் உண்டே
தெரித்து–அநுஸந்தித்தும்
தெரிவித்து இருக்க முடியாதே முதல் நிலையிலேயே -தெரிந்து மருவி தெரித்து
எழுதி–எழுதியும்
வாசித்தும்–(எழுதினவற்றைப் படித்தும்)-வாசித்தும் வாசிப்பித்தும் ‘
கேட்டும்–(ஆங் காங்கு) ஸ்ரவணம் பண்ணியும்-கேட்டும் கேட்பித்தும்
வணங்கி–நமஸ்காரம் பண்ணியும்
வழி பட்டும்–உபசாரங்களைச் செய்தும்
இரண்டு சப்தங்கள் -த்ருட விரத -பக்த்யா நமஸ்த்யந்த -கீதை போல் இங்கும் –
பூசித்தும்–பூஜித்தும்
போது போக்கினேன்–காலத்தைக் கழத்துக் கொண்டிருக்கிறேன் (இப்படி செய்வது எதுக்காக வென்னில்)
தரித்திருந்தேன் ஆகவே–ஸத்தை பெறுவதற்காக.
சத்த பெற நீங்களும் அப்படியே செய்யுங்கோள்

நக்ஷத்ர மண்டலங்களை யுடைய ஸஞ்சாரத்தை விசதமாகச் சொன்ன
(சாமா நாதி கரண்யத்தால் ஆத்மாவாக இருந்துள்ள உன்னை என்றபடி )
சத்ருக்களுக்குப் பயங்கரமான திருவனந்த ஆழ்வானைத் திரு மேனியாக யுடைய
உன்னை அனுசந்தித்தும்
எழுதியும்
வாசித்தும்
கேட்டும்
வணங்கியும்
அதுவே யாத்ரையாய் இருந்தும்
அர்ச்சித்தும்
போது போக்கினேனாகவே தரித்து இருந்தேன் –

தாரா கணப் போர் விரித்துரைத்த வென்னாகத் துன்னை தெரித்து-
நஷத்ர கணங்கள் உடைய சஞ்சாரத்தை
விஸ்த்ருதமாகச் சொன்ன
திரு வனந்த ஆழ்வானுக்கு
ஆத்மாவாய் இருந்துள்ள உன்னை அனுசந்தித்தும்

எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது
லிகித்தும் வாசித்தும் ஸ்ரவணம் பண்ணியும்
நிர்மமனாய் வணங்கி
அது தானே யாத்ரையாய் ஆராதித்தும் காலம் போக்கினேன்

தரித்து இருந்தேனாகவே —
ஆகவே தரித்து இருந்தேன் –

தரித்து இருந்தேனாகவே –
தரித்து இருந்தேன் ஆகைக்காக
பூசித்துக் காலத்தைப் போக்கினேன் என்றுமாம்-

ஏவகாரம் அவ்யயம் -எல்லா வற்றாலும் தரித்து இருந்தேன் என்றவாறு
சத்தை உண்டாகைக்காக இப்படிக்கு காலத்தைப் போக்கினேன் என்று கிரியை யாதல் என்றுமாம்

(தெரித்தும் எழுதியும் வாசித்தும் கேட்டும் -தெரிவித்து என்று கொள்ளலாம் ஆகிலும்
முதலில் மனசால் அனுசந்தித்து என்பதே க்ரமத்துக்குச் சேரும்
கேட்டும் -முதல் ஆழ்வார்கள் அருளிச் செயல்களையும் உபதேச வசனங்களையும் கேட்டு
வணங்கி மமகாராம் அற்று அதுவும் அவனது இன்னருளே என்று திருவடிகளிலே வணங்கி
வழிபட்டும் பூசித்தும்
மநோ வாக் காயங்களால் ஆராதனம் செய்து
வழிபட்டும் பூசித்தும் -இரண்டு பத பிரயோகம் ஆராதனம் பொழுது போக்கு என்று காட்டவே
சத்தைக்காவே இவற்றைப் போது போக்காகக் கொண்டேன் என்றவாறு –

காலை மாலை கமல மலரிட்டு நீர் -மாலை நண்ணித் தொழுது எழுமினோ -9-10-1-
கள்ளவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்-9-10-2-
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -9-10-3-–என்று
கால ஷேப அர்த்தமாகவும் –
ஸ்வயம் போக்யமாகவும் –
பகவத் கைங்கர்யம் பண்ணும் குடியிலே பிறந்த அருளிச் செயல்கள் இதே போல் )

அப்பிள்ளை உரை –
நக்ஷத்ர கணங்களுடைய ஸூபாஸூப நிமித்தமான பரஸ்பர சஞ்சாரத்தை
லோக ரக்ஷண அர்த்தமாக ஜ்யோதிஸ் சாஸ்த்ர முகமாக பரக்க அருளிச் செய்த
பிரதிகூலருக்கு அணுக ஒண்ணாத வெம்மையை யுடைய
திரு அனந்தாழ்வானுக்கு அந்தர்யாத்மாவாய் நின்ற உன்னை
(இவனே அந்தராத்மாவாய் உபதேசித்தான் என்றுமாம் -வேதங்கள் அங்கங்கள் கொடுத்தவன் இவனே )
விசத தமமாக அனுசந்தித்து
அனுசந்தித்த பிரகாரத்தாலே எழுதியும்
நாத்தழும்பு எழும் படி பலகாலம் அத்தைப் படித்தும்
அதன் அர்த்தத்தை அறிந்தவர் -வேறே சிலர் இடம் கேட்டும்
(பெருமாள் ரிஷிகள் இடம் தாமே கேட்டுக் காட்டி அருளினார்)
பின்னையும்
சததம் கீர்த்யந்த –நமஸ்தந்த –ஸ்ரீ கீதை -என்கிறபடியே
நிர் மமனாய் -திருவடிகளில் அநவரதம் பிராணாமம் பண்ணியும்
மத் யாஜீ பவ –
(பக்தியையும் பக்தி யோகனையும் கொண்டாடி கடைசி ஸ்லோகத்தில்

மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:–34

மந்மநா: பவ-மனத்தை எனக்காக்கி விடு,
மத்பக்த:-பக்தியை எனக்காக்கு,
மத்யாஜீ-என்னைத் தொழு,
மாம் நமஸ்குரு-என்னை வணங்கு,
ஏவம் ஆத்மாநம் யுக்த்வா-இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி,
மாம் ஏவ ஏஷ்யஸி-என்னையே அடைவாயாக.

மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள்.
இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.

மன்மனா பவ மத பக்த மத் யாஜீ மாம் நமஸ்க்ரு மாம் ஏவைஷிதி –மத் மத் -மீண்டும் மீண்டும் அருளி
மனதை செலுத்து -கையால் தொழுது-வாயால் ஸ்தோத்ரம் பண்ணி -கையால் தொழுது -உள்ளத்தால் நினைத்து –
வணங்கி -பக்தி பண்ணி ஒவ்வொரு தடவையும் என் விஷயத்தில் என்று காட்டி
கிருஷ்ண விஷயத்திலே பக்தி இருக்க வேண்டுமே )
தத் தத் காலங்கள் தோறும் சமாராதனம் பண்ணி
இப்படி கால ஷேபம் பண்ணினானாய் அன்றோ நான் தரித்து இருந்தேன்
தரித்து இருக்க இப்படி கால ஷேபம் பண்ணினேன் என்றுமாம்
(சம்சாரம் மறு காந்தாரம் -பாலை வனத்தில் சோலை வனம் போல் இருக்க )

————————————————————————

(தமது கால ஷேபத்தை அருளிச் செய்தவர்
பிறருக்கு கால ஷேப பிரகாரத்தை உபதேசிக்கிறார் இதில் -)

அப்பிள்ளை உரை அவதாரிகை
என் நிலை இதுவான பின்பு நீங்களும் என்னைப் போல்
ஆகர்ஷகமான அழகை யுடையவனாய் சர்வாதிகனான ஸர்வேஸ்வரனை
புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து ஏத்துங்கோள்

போதான இட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

பதவுரை

பொன் மகரம் காதானை–அழகிய மகர குண்டலங்களைத் திருக்காதுகளில் அணிந்துள்ளவனும்
ஆதி–ஜகத் காரண பூதனும்
பெருமானை–பெருமை பொருந்தியவனும்
நாதனை–(அனைவர்க்கும்) நாதனாயிருப்பனும்
நல்லானை–(ஆஸ்ரிதர் பக்கல்) வாத்ஸல்ய முடையவனும்
நாரணனை–நாராயணனென்று ப்ரஸித்தி பெற்றவனும்
நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை–நம்முடைய ஜன்ம பரம்பரைகளை அறுக்க வல்ல
திருநாமங்களை யுடையவனுமான ஸர்வேஸ்வரனைக் குறித்து
போது ஆன இட்டு இறைஞ்சி ஏத்துமின்–புஷ்பமென்று பேர் பெற்றவற்றை ஸமர்ப்பித்து வணங்கித் துதி செய்யுங்கள்
மநோ வாக் காயங்கள் வியாபாரங்கள்
சொல்லுவதே–(அவனுடைய திருநாமங்களை வாயாரச்) சொல்லித் துதிப்பதே
சூது–நல்ல வாய்ப்பு

ஸ்வர்ண மயமான மகர குண்டலங்களை அணிந்த திருச் செவிகளை யுடையவனாய்
ஜகத் காரணனாய்
சர்வாதிகனாய்
ஸர்வ சேஷியாய்
நல்லவனாய்
ஸர்வ அந்தர்யாமியாய்
நமக்கு மேல் வரும் ஜென்மங்களைப் போக்கும் திரு நாமங்களை யுடையனான
ஸர்வேஸ்வரனை அனுசந்திப்பதே நல்ல உபாயம்
ஆகையால் புஷ்பங்கள் என்றவைகளை ஸமர்ப்பித்து வணங்கி ஸ்தோத்ரம் பண்ணுங்கோள் –

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ
இன்ன புஷ்பம் என்ற நியதி இல்லை –
பூவானதை எல்லாவற்றையும் கொண்டு
திருவடிகளிலே சமர்ப்பித்து வணங்கி
ஸ்தோத்ரம் பண்ணுங்கோள்

பொன் மகரக் காதானை –
கை கூலிக் கொடுத்தும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்படி
ஸ்ப்ருஹணீ யனானவனை –

ஆதிப் பெருமானை –நாதானை நல்லானை நாரணனை-
நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது
அழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே
நமக்கு உத்பாதகனானவன் –
ஸ்வாமி யாய் வத்சலன் ஆகையாலே
நாராயண சப்த வாச்யனாய்
நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும்
திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே
இவ் வாத்மாவுக்கு உறுவது –

(பத்ரம் புஷ்பம் பஃத்யுபஹ்ருதம் அஸ்நாமி
புரிவதுவும் புகை பூவே
பூசும் சாந்து என் நெஞ்சமே -புனைந்த கண்ணி –அணிகனும் என் கை கூப்பிச் செய்கையே
கள்ளார் துழாயும் கண்வலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் புள்ளாய்
ஓர் ஏனமுமாய் புக்கு இடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே

இட்டு இறைஞ்சி யேத்துமினோ
இட்டு -காயிக கைங்கர்யம்
இறைஞ்சி -வாசிக கைங்கர்யம்
ஏத்துமினோ -மானஸ கைங்கர்யம்

ஆதிப் பெருமானை நாரணனை
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே –திருவாய் –4-3-6-

நாதனை நாரணனை
நாதன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -திருவாய் -2-7-2-

நல்லானை நாரணனை
நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -பெரிய திருமொழி –6-10-4-

நாரணனை நம் ஏழு -எழு -பிறப்பு அறுக்கும் சொல்லானை
ஸங்கீர்த்த நாராயண ஸப்த மாத்ரம் விமுக்த துக்கோர் ஸூநீநோ பவந்தி
அடியார் படு துயராயின எல்லாம் நிலம் தரம் செய்யும் நாராயணா என்னும் நாமம் –பெரிய திருமொழி –1-1-9-

பிறப்பு அறுக்கும் சொல்லானை என்று
பொதுவான திரு நாம சங்கீர்த்தனம் என்றும் கொள்ளலாம்
யந் நாம சங்கீர்த்தநதோ விமுச்யதே
யந் நாம சங்கீர்த்தநதோ மஹா பயாத் விமோஷம் ஆப்நோதி )

அப்பிள்ளை உரை
ஸ்ப்ருஹணீயமான திரு மகர குண்டலங்களாலே அலங்க்ருதமான திருக் காதுகளை யுடையவனாய்
அழகு கண்டு மேல் விழுகை அன்றிக்கே
அழிந்து கிடக்கிற காலத்திலேயே இவற்றை உண்டாக்கின சர்வாதிகனாய்
சர்வருக்கும் நிருபாதிக சேஷியாய்
ஆஸ்ரித விஷயத்தில் அதி மாத்ரா வத்சலனாய்
பிரிவில் (தான்) தரியாமல் உள்ளே பதி கிடந்தது சத்தையை நோக்கிக் கொண்டு
(அப்ருஹாத்மக தத்வம் இல்லை உண்மை இங்கே அவன் சத்தைக்காக என்கிறார் )
நம்முடைய ஒன்றன் பின் ஒன்றாக ஓழுக்கு ஆறாமல் வரும் ஜென்ம பரம்பரைகளை
வேர் பற்றோடு அறுத்து விட வல்ல திரு நாமங்களை யுடையவனை
கைக்கு எட்டிய எல்லாப் பூக்களையும் பரிமாறி (ஏறிப் பறிக்க வேண்டாம்)
நிர்மமராய் -நிர்மலராய் திருவடிகளில் விழுந்து
(ப்ராப்யாந்த்ர ப்ரயோஜனாந்த பரராய் இல்லாமல் )
சொன்ன குணங்களுக்கு உண்டான திரு நாமங்களை சொல்வதே நல்ல வாய்ப்பு

———————————————————————–

(கீழே சொல்லுவதே சூது என்று
பிறருக்கு உபதேசித்த படியே தாம் அனுஷ்டித்த படியையும்
அதனால் பெற இருக்கும் பயனையும் பேசுகிறார் இதில் -)

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஸ்மர்த்தவ்யனான எம்பெருமானுடைய நீர்மையாலே
பரம பதத்துக்கு ஸ்மரணத்துக்கு மேல் அவ்வருகு உண்டோ என்கிறார்

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன் மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-

பதவுரை

மாது ஆய–அழகு தான் ஒரு வடிவு கொண்டாற்போலே யிருப்பனும்
மாலவனை–(ஆஸ்ரிதர் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான
மாதவனை–திருமாலைக் குறித்து
சொல் மாலை–இச் சொல் தொடைகளை (சொல்லி)
யாதானும் வல்ல ஆ சிந்தித்து இருப்பேற்கு–ஏதோ சக்தியுள்ள வளவு அநுஸந்தித்திருக்கிற எனக்கு
வைகுந்தத்து இடம் இல்லையோ சொல்லீர்–ஸ்ரீவைகுண்டத்தில் இடம் இல்லையோ?
சொல்லீர்–சொல்லுங்கள்
சூது ஆவது–இதுவே நமக்கு நல்ல வாய்ப்பு என்று
என் நெஞ்சத்து எண்ணினேன்–என் மனத்தில் உறுதி கொண்டேன்.

ஸூந்தரனாய் ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ யபதியைப் பிரதிபாதிக்கிற பிரபந்தங்கள் எதை யாகிலும்
வந்தபடி அனுசந்தித்துக் கொண்டு இருக்கிற எனக்கு
ஸ்ரீ வைகுண்டத்தில் இடம் இல்லையா சொல்லுங்கோள்
இதுவே நல்ல உபாயம் என்று என் மனஸ்ஸில் எண்ணினேன் —

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன்
உறுவதாவது என்னெஞ்சிலே மநோ ரதித்தேன்

சொன்மாலை -இத்யாதி
அழகு தான் வடிவு கொண்டாற் போலேயாய்
வ்யாமுக்தனாய் இருந்துள்ள
ஸ்ரீ ய பதியைச் சொல்லப்பட்ட பிரபந்தத்தை ஏதேனும் ஒருபடி
அனுசந்திக்கிற எனக்கு பரம பதத்தில்
இடம் இல்லையோ –

ஸ்ம்ருதி மாத்ரம் உடையாருக்கும்
பரம பதம் சித்தியாதோ என்கை –

ஸ்ம்ருதோ யச்சதி சோபனம் -என்கிறபடியே
பரம பத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே
ஸ்மரண மாதரத்துக்கு அவ் வருகு வேண்டா என்று தாத்பர்யம்

மாதாய -அழகாய
மாது -அழகு-

(நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று அளிக்கும் வான் –பெரிய திருவந்தாதி –58-
ஆயாஸ ஸ்மரணே கோஸ்ய ஸ்ம்ருதே யச்சதி ஸோபநம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-17-78–என்று
இவனை நினைக்க என்ன ஸ்ரமம் உள்ளது
நினைத்த மாத்திரத்திலே எல்லா நன்மைகளும் அளிப்பவன் அன்றோ
நினைவுக்கு மேல் வேறே ஓன்று வேண்டுமோ -)

அப்பிள்ளை உரை
அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போல் இருக்கிறவனாய் ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ யபதியை
சொன்ன ஸப்த சந்தர்ப்ப ரூபமாகிய
இந்தத் திரு வந்தாதி பிரபந்தத்தை
ஏதேனும் நல்லதொரு வல்லதொரு பிரகாரத்தால் பாடும் எனக்கு
(ஸ்ரீ மத் பாகவதாதிகள் என்று கீழே பார்த்தோம் )
பகவத் குண அனுபவத்துக்கு ஏகாந்தமான பரம பதத்தில் இடம் இல்லையோ சொல்லுங்கோள்
இங்கேயே பண்ணும் படி அருளின பின்பு
இதுவே நமக்கு நல்ல வாய்ப்பு என்று என் மனசில் அத்யவசித்தேன்
மாது அழகு
மாதாயா -அழகே அவன் –
அழகு என்றும் அழகுக்கு ஆஸ்ரயன் அழகன் என்றும் வேறே வேறே இரண்டு இல்லை
அழகே ஒரு வடிவு கொண்டவன்
அன்றிக்கே
மாதாயா
தாய் போல் பரிபவன் என்றுமாம்
மாயவனை பாட பேதம்
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடையவன் என்றவாறு

—————————————————————————————-

(என் நெஞ்சத்து எண்ணினேன் என்றார் கீழ்
எண்ணியவுடன் அவன் பட்ட பாட்டையும்
அதைக் கண்டு தாம் ஈடுபட்ட படியையும்
அருளிச் செய்கிறார் இப் பாட்டில் –
இடமாவது இன்றும் எல்லாம் மேல் உள்ள காலம் எல்லாம் என் நெஞ்சம் -சாத்யம்
இடமாவது பண்டு இடமாவது பட நாகணை -சாதனம் நெடுமாற்கு )

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஸ்ரீ வைகுண்டத்தில் இடம் இல்லையோ என்று நான் மநோ ரதித்தவாறே
எம்பெருமான் வந்து என் நெஞ்சிலே புகுந்து அருளினான் என்று பிரீதர் ஆகிறார் –
(அத்தை விட உமது திரு உள்ளம் மிகவும் உத்தேச்யம் அன்றோ –
நெஞ்சமே நீள் நகராகக் கொண்ட தஞ்சன் )

இடமாவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட் செய்யேன் வலம்–66-

பதவுரை

பண்டு–என்னைத் திருத்திப் பணி கொள்வதற்கு முன்பு
படம் நாக அணை நெடிய மாற்கு–படங்களை யுடைய சேஷ சயனத்தில் பள்ளி கொண்டருள்பவனாயிருந்த ஸர்வேஸ்வரனுக்கு
இன்று–இப்போது முதலாக
எல்லாம்–மேலுள்ள காலமெல்லாம்
இடம் ஆவது–வாஸ ஸ்தானமாவது
என் நெஞ்சம்–எனது நெஞ்சமாகும்
மதி சூடி தன்னோடு–பிறைச் சந்திரனத் தலையிலே சூடியிருக்கிற ருத்ரனையும்-சந்த்ர சேகரனையும்
அயனை–பிரமனையும்
ந ஜாயதே இதி அஜன் பிறப்பிலி நரஸிம்ஹ திரு நாமங்களில் இதுவும் ஓன்று
கர்ம வஸ்யன் நான்முகன் கர்ப்பத்தில் பிறவாமல் இருந்தாலும்
திடம் ஆக–பரம் பொருளாக
வையேன்–மனத்திற்கொள்ள மாட்டேன்
வையேன் நான்–(தத்துவமின்னதென்று கண்டறியத்தக்க) ஸூக்ஷ்ம புத்தியுடையேனான நான்
ஆள் செய்யேன்–(அந்த தேவதாந்தரங்களுக்குத்) தொண்டு செய்யவும் மாட்டேன்
(இப்படி நான் சொல்லுவதற்குக் காரணமென்னவெனில்)
வலம்–(திருமாலின் பரிக்ஹமாயிருக்கப் பெற்ற) மிடுக்கேயாம்.

முற்காலத்தில் விரிந்த படங்களை யுடைய திருவனந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளின ஸர்வேஸ்வரனுக்கு
இப்போது எல்லாம் வாசஸ் ஸ்தானம் என்னுடைய ஹிருதயமாய் இருக்கும்
சந்த்ரனைத் தரித்த ருத்ரனோடே கூட ப்ரஹ்மாவை
தத்வ யாதாத்ம்ய ஞானமுடைய நான் ப்ராப்யமாக எண்ணேண்
அவர்களை ப்ரதக்ஷிணமும் செய்ய மாட்டேன் –

இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு பட நாகணை நெடிய மாற்கு
சர்வாதிகனான சர்வேஸ்வரனுக்கு வாசஸ் ஸ்தானம்
என்னோடு சம்ஸ்லேஷிப்பதுக்கு முன்பு எல்லாம்
தன்னோடு சம்ஸ்லேஷத்தாலே விஸ்த்ருமான பணத்தை உடைய திரு வநந்த ஆழ்வான் –
இப்போது எல்லாம் என்னுடைய ஹிருதயம் –

திடமாக வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான் –
சந்த்ரனை தரித்தானாய் இருக்கிற ருத்ரனையும் –
திரு நாபீ கமலத்திலே உத்பன்னன் ஆகையாலே
அஜன் என்று இருக்கிற ப்ரஹ்மாவையும்
திருட பதார்த்தங்களாக நினையேன் –

வையேன் ஆட்செய்யேன் வலம் –
அதுக்கடி கூரியேனாய்(வை கூர்மை -வையேன்- கூரிய புத்தியை யுடைய நான் )
சார அசார விவேகஞ்ஞனாய் ஆகை
பிரதிபுத்தா ந சே வந்தே -என்று
கூரியர் ஆனவர்கள் தேவதாந்தர பஜனம்
பண்ணார்கள் இறே-என்கை-

வலம் –
இதுக்கு எல்லாவற்றுக்கும் அடி
பகவத் பரிக்ரகமான பலம்

வலம் செய்யேன்-
தேவதாந்த்ரங்கள் பக்கல்
ப்ரதக்ஷிணாதிகளைச் செய்யேன் என்றுமாம்

வையேன் –
மனசிலே வையேன் -நினையேன் என்றும்
வையேனான நான் -கூரியனான நான்-என்றும்
இரண்டு நிர்வாஹம் –
கூர்மை -ஜ்ஞானக் கூர்மை-

(ப்ராஹ்மாணம் ஸிதி கண்டஞ்ச யாச் சாந்யா தேவதா ஸ்ம்ருதா
பிரதிபுத்தா ந சேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -மோக்ஷ தர்மம் –
அல்ப பலமே கொடுப்பதால் புத்தி கூர்மை உள்ளார் ப்ரஹ்மாதிகளை ஆராதிக்க மாட்டார்கள் – )

(இடமாவது என் நெடிய மாற்கு

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -5- 4-9 –

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–64-

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–65-

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

அப்பிள்ளை உரை
என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பு
ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை யுடைய திருவனந்தாழ்வான் மேல்
பள்ளி கொண்டு அருளும் சர்வேஸ்வரனுக்கு
இப்போது தொடங்கி மேல் உள்ள காலம் எல்லாம்
(முன் எலாம் திருச்சந்த விருத்தம் -இங்கு பண்டு
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே )
உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் வாசஸ் ஸ்தானம் என்னுடைய மனசாயிருக்கும்
கலா மாத்ர சந்திரனை தலையிலே தரித்து இருக்கிற ருத்ரனோடு தன்னோடே கூட
இதர விஜாதீயமான திரு நாபி கமலத்தில் பிறப்பாலே -அஜன் –
(மற்றவர் போல் கர்ப்ப வாஸம் இல்லாதவன் -சர்வேஸ்வரன் போல் பிறப்பு இல்லாதவன் அல்லவே )-
அத்தாலேயே அபிமானித்து இருக்கும் ப்ரஹ்மாவை
திட வஸ்துகளாக -பர வஸ்துவாக நினையேன்
பர அபர வஸ்துக்களை அலகு அலகாகக் காண வல்ல -(கூர்மை புத்தி உள்ள வை யேனான நான் )
அவர்கள் விஷயமாக பிரதக்ஷணம் நமஸ்காரம் ஆள் செய்தல் அனுவர்த்தனம் பண்ண மாட்டேன்
இவை அனைத்துக்கும் மூலம்
சர்வாதிகனான எம்பெருமானை அண்டை கொண்ட ராஜ குலத்தால் வந்த மிடுக்கு -பலம் -வலம்
சார அசார விவேகஞ்ஞர் தேவதாந்த்ர பஜனம் பண்ண மாட்டார்கள் என்றதே பாரதத்தில்
வையேன் -நான்
புரிந்து குறிக்க மாட்டேன்
அவர்களை வலத்திலே வையேன்
அல்லாத அடிமைத் தொழில்களும் செய்யேன்

—————————————————————————–

(நெஞ்சத்து எண்ணினேன் என்றும்
திடமாக வையேன் மதிசூடி தன்னோடு யயனை -என்றும் சொன்னீர்
நண்ணாதார் முறுவலிப்பதுவும் நல்லுற்றார் கரைந்து ஏங்குவதுவும் உலகு இயற்கை
துன்பம் வந்த போதும் உமக்கு இந்த உறுதி தளராது இருக்குமோ என்ன
இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் எம்பிரானை ஸ்துதிப்பதில் ஒரு குறையும் இராது என்று
தன் அத்யாவசாயத்தை அருளிச் செய்கிறார் இதில் –
என் நிலை மாறாது -துன்பம் வந்தாலும் விடேன்
அதுக்கும் மேலே அவன் நிலையும் மாறாதே -துன்பம் எவ்வாறு வரும்
பாடுகையே பிரயோஜனமாக கொண்ட அடியேன் -நா பதி
குலம் தரும் வலம் தரும் -கலியன் -தந்ததும் தராவிட்டாலும்
இந்த பிரயோஜனம் பெற்ற நான் எதுக்கு கலங்குவேன் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
நன்மை யாகிலுமாம் தீமை யாகிலுமாம் இவற்றில் எனக்கு ஒரு தாத்பர்யம் இல்லை
பஹு குணனான -எம்பெருமான் அவனை ஏத்துகையே உத்தேச்யம் என்கிறார்

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச்
சீரணனை ஏத்தும் திறம்-67-(நம் பதியை பாட பேதம் )

பதவுரை

நாரணைனை–ஸ்ரீமந் நாராயணனாய்-எல்லாருக்கும் ஸ்வாமியாய்
நா பதியை–(என்னுடைய) நாவுக்கு ப்ரவர்த்தகனாய்
ஞானம் பெருமானை–அறிவிற்பெயரியவனாய்
வைகல் நலம் ஆக ஏத்தும் திறம்–எப்போதும் நன்றாகத் துதி செய்கையாகிற இந்த
வலம் ஆக–நன்மை தருவதாகிலுமாகுக
சீர்அணனை-சீர்மை அணனை -நற் குணங்களை பொருந்தி யிருக்கப் பெற்றவனான ஸர்வேஸ்வரனை
சீர்மை பொருந்தி -ஸ்ரீ தரன் என்றுமாம்
மாட்டாமை தான் ஆக–நன்மை தர மாட்டாதாகிலுமாகுக,
குலம் ஆக–நற் குலத்தைத் தருவதாகிலுமாகுக
குற்றம் தான் ஆக–கெடுதலை யுண்டாக்குவதாகிலுமாகுக
(ஏத்துவதை நான் தவிர மாட்டேன்-இதுவே புருஷார்த்தம் என்று இருப்பேன் )

சர்வ சேஷியாய் -எனக்கு ஸ்வாமியாய் -ஞானாதிகனாய்
மற்ற கல்யாண குணங்களையும் யுடையனான ஸர்வேஸ்வரனை ஸ்தோத்ரம் செய்கிற விதம்
ஞான சக்த்யாதி பலனைக் கொடுக்கினும் நலமே -கொடுக்கா விடினும் நலமே
ஸத் குலத்தைக் கொடுக்கிலும் நலமே -அதில் தோஷத்தை விளைக்கிலும் நலமே
எப்போதும் அவனை ஸ்தோத்ரம் செய்வதே எனக்கு உத்தேச்யம் –

நலமாக நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச சீரணனை ஏத்தும் திறம் –
நன்றாக சர்வ ஸ்வாமியாய்(நலமாக நாரணனை-ஸர்வ வியாபியாய் இருந்தும் வியாப்த கத தோஷம் தட்டாமல் )
என் நாவுக்கு நிர்வாஹனாய்(நா பதியை)
ஜ்ஞான குணங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்(ஞானப் பெருமானை- சீரணனை)
(சீருக்குள் ஞானமும் சேருமே என்னில் ஞானம் ஒரு தட்டுமாக மற்றவை எல்லாம் ஒரு தட்டாக
யஸ் சர்வஞ்ஞ சர்வ வித் -உன் அடியாருக்கு என் செய்வன் என்று இருக்கும்
அஞ்ஞனனையே ஞானப் பெருமான் )
இருக்கிறவனை நன்றாக ஏத்தும் பிரகாரம் –

வலமாக மாட்டாமை தானாக வைகல் குலமாக குற்றம் தானாக
பலமாகவுமாம் –
ஆபிஜாத்யத்தை உண்டாக்கவுமாம் –
அதிலே தோஷத்தை உண்டாக்கவுமாம் –
இவை அன்று உத்தேச்யம்
அவனை ஏத்துகையே உத்தேச்யம்

சீரணன் -குணங்களை உடையவன்
இதனாலும் ஞானப் பெருமான் என்பதாலும்
ஞானம் குணங்கள் எல்லாவற்றுக்கும் ஆஸ்ரயம் என்கிறது

ரஷிக்கும் ஞானம் உடையவன்
ரஷிக்கும் போது பிராட்டி சம்பந்தம் உண்டாக வேணுமே
ஸ்ரீ தரன் என்றுமாம்

(கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத் தோழி! அன்னை என் செய்யுமே!–-ஸ்ரீ திருவாய் மொழி-5-3-5-
என்ற நம்மாழ்வாரின் உறுதியும் இங்கே நினைக்கத் தக்கது -)

அப்பிள்ளை உரை
நார சப்த வாச்யனான சர்வாத்மாக்களுக்கும்
நிருபாதிக ஸ்வாமி
அவர்கள் ஒரு தட்டுமாய் நாம் ஒரு தட்டுமாய் என்னும் படி
(நம் பதி-அரங்கம் ஆளி என்னாளி -அகில ஜகத் ஸ்வாமி அஸ்மத் ஸ்வாமி போல் இங்கும் -விசேஷ ப்ரீதி )
நமக்கு ஸ்வாமியாய்
உனக்கு என் செய்கேன் என்று கரைந்து இருக்கும் அறிவால் -(ஞானப் பெருமானை ) – மிகப் பெரியவனாய்
அல்லாத ஸமஸ்த கல்யாண குணங்களுக்கும் ஆஸ்ரயமாய் இருக்குமவனை (சீரணனை )
எல்லாக் காலத்திலும் ( வைகல் ) அழகியதாய ஏத்தும் இந்த -திறன்-ஸ்வபாவம்
பலம் ஆகிலும் ஆகட்டும் பல ஹானியாகியும் ஆகட்டும்
பகவத் பரிக்ரஹ ரூபமான ஆபி ஜாதியத்துக்கு உடலாக ஆனாலும் ஆகட்டும் – அதற்கு குற்றமாகிலும் ஆகட்டும்
இவை அன்றே உத்தேஸ்யம்
இங்கனே சொல்லிற்று
நன்மையையே தரும் என்னும் கருத்தால்
அன்றிக்கே
நாரணன் -என்று -சர்வேஸ்வரன்
நா பதியை – நாவுக்கு ப்ரவர்த்தகனாய்
என்னை ரஷிகைக்கு உறுப்பான அறிவு கொண்டவனாய் – ஞானப் பிரான்
ஸ்ரீ தரனை என்றுமாம் –

——————————————————————————-

பகவத் பரிகரமே பலம் என்னும் இத்தை
ஸ்வ புருஷமபி வீஷ்ய–என்கிற ஸ்லோகத்தின்
படியே விவரிக்கிறார்-(அஜாமள உபாக்யானம் ஸ்ரீ மத் பாகவதம்
திருநாம பலத்தால் -விஷ்ணு தூதர்கள் -சாது சமாஹம் ஏற்பட்டு
அதனால் பச்சாதாபமும் பிறந்து
மாயா -ஹரித்வாராவில் தொண்டு செய்து மோக்ஷம் பெற்றான் )

(பகவத் பஜனமும் தேவதாந்த்ர வைமுக்யமும் துன்பம் தருவதாகிலும் உத்தேச்யமே என்றார் கீழே
உண்மையில் பகவத் சம்பந்தமே பலம் தரும் என்பதை ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் யம கிங்கர சம்வாதத்தில் -3-7-14-
ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாஸ ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மது ஸூதந ப்ரபந்நான் பிரபுர் அஹம் அந்ய ந்ரூணாம் ந வைஷ்ணவா நாம்
இந்த ஸ்லோக மொழி பெயர்ப்பாகவும் வியாக்யானமாகவும் இப் பாசுரம் –
ஸ்தோத்ரம் செய்தால் பலம் தருமா தராதா அதி சங்கை கீழே பட்டீர்களே
திருநாம சங்கீர்தன பலம் அறியீர்களாய் இருந்தீர்கள் என்கிறார் இதில் )

(ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாஸ ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மது ஸூதந ப்ரபந்நான் பிரபுர் அஹம் அந்ய ந்ரூணாம் ந வைஷ்ணவா நாம்
ஸ்வ புருஷம் -தன்னுடைய தொண்டர்களை
அபி வீஷ்ய -கண்ணாலே பார்த்தான் -பயம் தெரியும் படி -உங்கள் நன்மையில் ஹிதம் சொல்லும் பார்வை
பாஸ ஹஸ்தம் –கையிலே பாசக்கயிறு கொண்ட தனது தூதர்களுக்கு
வததி யம கில தஸ்ய கர்ண மூலே -கொடுமையில் பிரசித்தமான யமன் அவர்கள் காதிலே சொன்னான்
பரிஹர மது ஸூதந ப்ரபந்நான் பிரபுர் அஹம் அந்ய ந்ரூணாம் ந வைஷ்ணவா நாம் -அறிய பொருள் உரைத்தான் –
பாகவதர் பெருமை அன்றோ உரைத்தான்-மற்றவர்களுக்குத் தான் நான் பிரபு -இவர்களே எனக்கு பிரபு
மதுசூதன பிரபன்னான்–திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் என்பது இதன் ஆழ்ந்த பொருள் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
பகவத் பரிக்ரஹமே பலம் என்பதை-
ஸ்வ புருஷமபி வீஷ்ய– ஸ்லோக கட்டளைப் படியே நிரூபிக்கிறார்

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68–

பதவுரை

நமனும்–யமனும்
தன் தூதுவரை–தனது சேவகர்களை
கூவி–அழைத்து
செவிக்கு–(அவர்களுடைய) காதில் (என்ன சொன்னானென்றால்)
திருவடி தன்–ஸர்வேச்வரனுடைய
நாமம்–திருநாமத்தை
மறந்தும்–மறந்தொழிந்தாலும்
புறம் தொழா மாந்தர்–தேவதாந்தர பஜநம் பண்ணாத மனிசர்களைக் (கண்டால்)
திறம்பேல் மின் கண்டீர்–(ஓ சேவகர்களே!) (இப்போது நான் உங்களுக்கு இடும் ஆணையைத்) தவற வேண்டா
இறைஞ்சி–வணங்கி
சாதுவர் ஆய் போதுமின்கள் என்றான்–(கொடுமை தவிர்ந்து) ஸாதுக்களாய் வர்த்திக்க கடவீர்கள் என்று சொன்னான்.

யமன் தன் தூதர்களை அழைத்து அவர்கள் காதில்
ஸர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை மறந்து இருந்தாலும்
தேவதாந்த்ரங்களை ஆஸ்ரயியாத மநுஷ்யர்களை வணங்கி அனுகூலராய்ப் போவீர்கள்
இத்தைத் தவிர வேண்டாம் என்றான் –

திறம்பேல்மின் கண்டீர் –
திறம்பாதே கொள்ளுங்கோள் என்னும் போது
நாலுபத்தோலை மறுக்கவுமாம் –

(திரும்புதல் சலிக்கையாய்
அத்தால்
அவன் வார்த்தையை மறுக்கையைச் சொல்லுகிறது
நாலு பத்து ஓலை நீங்கள் மறுக்கவுமாம்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆஜ்ஜைகளை அவர்கள் மறுக்கவுமாம் )

திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா –
பரிஹர மதுசூதன பிரபன்னான் -என்கிறபடியே
ஸ்வாமி யினுடைய திரு நாமத்தை மறக்கவுமாம் –
தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிகை
இவன் பிரபன்னன் ஆகையாவது –
பர்த்தாவின் பக்கல் அனுகூல்யம் கிரமத்தாலே பிறக்கவுமாம் –
பர்தரந்தர பரிக்ரகம் இறே அவனுக்கு ஆகாமைக்கு அடி

மாந்தரை –
மனுஷ்யரை –

இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு –
அவர்களை நலிந்திலோம் என்று இருக்க ஒண்ணாது
பாச ஹஸ்தம் -என்கிற
க்ரூர வேஷத்தைத் தவிர்ந்து
விநீத வேஷராய்
அஞ்சலி ப்ரணாமாதிகளை பண்ணிப் போரும் கோள்-என்கிறார் –

நமனும் –
சம இதி லோக ஹித (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்று சொல்லப் படுகிறவனும்-
ப்ரஹ்மாதிகள் உடன் சமமாக சொல்லப்படுமவன் –

தன் தூதுவரை
ஸ்வ புருஷம் -என்றபடி

செவிக்கு
கர்ண மூலே -என்றபடி

அந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே
பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று
நெஞ்சு பறை கொட்டுகிறது-
(பறை கொட்டுகை -திடுக்கு திடுக்கு என்கை )

(அவன் தமர் எவ் வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——ஸ்ரீ முதல் திருவந்தாதி-55-)

(மது ஸூதந ப்ரபந்நான் என்றதை அவ்யாப்தி முதலான தோஷங்கள் வாராத படி
திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர்-என்று விவரிக்கிறார் –
மாந்தர் -மனுஷ்யரை -சாமான்யர்களாக இருந்தாலும் )

(ஸ்வ புருஷம் -தன் தூதுவரை
கர்ணமூலே -காதினுள் -ரஹஸ்யமாக -மூன்று காரணங்கள் விஷ்ணு சித்தீயர்
பிரபுபிர் ஸ்வ ப்ரபாவ பங்க ஸ்தானம் ந பிரகாஸ்யம் இதி நீத்யா விஷ்ணு நாம ஸூச்சைருச்சாரி தேஷு
நாரகினோ அபி தச் ஸ்ரவணாதி நா நரகாந் முஸ்யேரந் தேந ஸ்வாதிகார ஹாநிரிதி பீத்யா
ச கர்ண மூலே கத நம் ராஜ தாரான் மா கா இதி வசனவத் ரஹஸி கதநீயத் வாச்சா -என்று
1-எஜமானர்கள் தங்கள் பெருமைக்கு குறை ஏற்படுவதற்குக் காரணமாயிருக்கும் விஷயத்தை
உரக்க வெளிப்படுத்தலாகாது என்னும் நியாயத்தாலும்
2-விஷ்ணு நாமத்தை உரக்கச் சொன்னால் அதைக் கேட்பது நினைப்பது சொல்லுவது ஆகிய செயல்களால்
முக்தி அடைவார்கள் அதனால் தனது பதவிக்கு அழிவு ஏற்படும் என்ற பயத்தாலும்
3-ராஜ மஹிஷியை அனுபவியாதே-வாக்கியம் போல் ரஹஸ்யமாகச் சொல்ல வேண்டிய விஷயம் என்பதாலும்
காதினுள் சொல்கிறான் -)

அப்பிள்ளை உரை
சேதனர் பண்ணும் பாபங்களை ஏற்றத் தாழ்வு பாராமல் நிரூபித்து சமமாக பார்க்கும் யமன்
தத் அனுக்தமாக சர்வேஸ்வரனாலே தூண்டி விடப்பட்ட யமனும் பத்து எட்டு ஓலை மறுத்து
தரம் பெற்று இருக்கும் அந்தரங்கமான தன் தூதுவரை
கார்ய கௌரவம் தோற்ற வாய் விட்டு அழைத்து (கூவி )
பிறர் கேட்க்கில் என்னாகப் போகிறதோ என்று பயப்பட்டு
அசல் அறியாதபடி செவியில் -ரஹஸ்யார்த்தம் –
நான் உங்களுக்கு ராஜ தர்பார் ஓலக்கத்தில் சொன்ன வார்த்தை போல் என்னாமல் தவிர விடாதே கிடிகோள்
(ராஜ ஓலக்கத்தில் சொன்னதாகில் ஒன்றை யாகிலும் விடலாம்
இது ரஹஸ்ய ஆணை விடாமல் முழுவதாகக் கொள்ள வேண்டுமே )
சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை
ஒரு கால் கற்று பின்னை மறந்தார்களாகிலும்
தத் வியத்ரிக்தரான தேவதாந்தரங்களை ஆஸ்ரயியாத
மஹா ப்ரபாவ சாலிகளான ஸ்ரீ வைஷ்ணவர்களை
போகாமல் இருந்து நிக்ரஹம் தவிர்த்து மாத்திரம் இல்லாமல்
அனுக்ரஹம் பெற அவர்கள் திருவடிகளில் தலையைத் தாழ்த்தி அனுவர்த்தித்து
கையும் சூலமும் பாசக் கயிறுமான க்ரூர வேஷம் விட்டு
விநீத வேஷராய் அனுகூலராய்க் கொண்டு போருங்கோள்
தன் தூதுவரை -என்று ஸூவ புருஷன்
கூவி என்று யபி வீஷ்ய பார்வையின் கருத்து வியக்தமாக்கிய படி
செவிக்கு என்று கர்ணமூல
பரிகர-இறைஞ்சியும் வியக்தமாக்கி
புறம் தொழா மாந்தர் என்று -மது ஸூதன ப்ரபன்னர் பதார்த்தம்
தேவதாந்த்ர பஜனம் பண்ணாமல் இருப்பதே பிரபன்னனாவது
பர்த்தாவின் பக்கல் அனுகூல்யம் கிரமத்தாலே பிறக்கவுமாம் –
பர்த்ராந்தர பரிக்ரகம் அற்று இருப்பதே பதி விரதத்துக்கு வேண்டுவது
இது இறே அவர்களுக்கு ஆகாமைக்கு அடி

————————————————————————————————-

(யம வஸ்யத்தையைத் தவிர்க்கும் பெருமை மாத்திரம் அன்று
செவிக்கு இன்பமாயும்
பூமிக்கு புகலிடமாயும்
கவிகளுக்கு நிறை பொருளாகவும்
மறையின் முழுப் பொருளாகவும் அன்றோ பகவத் விஷயம் இருப்பது என்கிறார் இதில் –
நாம வைபவம் முதல் இரண்டு வரிகள்
நாமி வைபவம் அடுத்த இரண்டு வரிகள்
ரக்ஷகத்வம் பாவனத்வம் முதலில் திருமாலையில்
போக்யத்வம் அடுத்து போல்
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
உம்மைத் தொகையால் கீழே பாவனத்வம்
இங்கும் அடுத்து அடுத்த பாசுரங்களில் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
யம வஸ்யத்தையைத் தவிர்த்து பாவானத்வ மாத்ரமாய் அன்றிக்கே
அனுபவிப்பார்க்கு அத்யந்த போக்யமாய் இருக்கும் என்று
தனது ஆத்ம அனுபவத்தால் -ஸூய அனுபவத்தால் –
திரு நாமத்தினுடைய போக்யதையை அருளிச் செய்கிறார் –

செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் -69–

பதவுரை

செவிக்கு இன்பம் ஆவதுவும்–கர்ணாமிருதமாயிருப்பதும்
செம் கண்மால் நாமம்–புண்டரீகாக்ஷனான எம்பெருமானுடைய திருநாமமே
புவிக்கு–பூமியிலுள்ள ரெல்லார்க்கும்
புவியும் அதுவே–(நிழல் பெற ஒதுங்குவதற்கு) இடமாவதும் அத் திருநாமமே
நிவாஸ வ்ருஷ ஸாது நாம் -ஸ்ரீ இராமாயண ஸ்லோகம்
கவிக்கு நிறை பொருள் ஆய் நின்றானே–பாசுரத்திற்கு நிறைந்த பொருளாயிருக்குமெம் பெருமானை
நேர் பட்டேன்–தெய்வாதீனமாக அடையப் பெற்றேன்,
பார்க்கில்–ஆராய்ந்து பார்த்தால்
மறை பொருளும் அத்தனையே தான்–வேதங்களில் தேர்ந்த பொருளும் அவ்வளவே.

செவிக்கும் பிரியமாய் இருப்பதும் சிவந்த திருக் கண்களை யுடைய ஸர்வேஸ்வரன் உடைய திரு நாமமே
லோகத்தாருக்கும் ஸூகமான ஸ்தானமும் அத் திரு நாமமே
கவி பாடுகைக்கும் பூரண விஷயமாய் இருக்கும் ஸ்ரீ யபதியை அடைந்தேன்
விசாரித்துப் பார்த்த இடத்தில் வேதாந்த அர்த்தமும் அதுவே –
பார்க்கில்-மறைப் பொருளும் அத்தனையே தான் –

செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம் –
யம வஸ்யதையை தவிர்க்கும் அளவு அன்று
செவிக்கு இனியதுவும் புண்டரீகாஷனுடைய திருநாமம்

புவிக்கும் புவி யதுவே கண்டீர் –
எனக்கு ஒருத்தனுக்குமேயோ
பூமியில் உள்ளாருக்கு எல்லாம் ஸ்தானம் திருநாமம்

கவிக்கும் நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன்-
ஸ்துத்யனுக்கு ஒரு பூர்த்தி இன்றிக்கே
ஸ்தோதா நிரப்ப வேண்டும்படி யன்றிக்கே
கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால்
குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக
லபித்தேன் –

பார்க்கில் மறைப் பொருளும் அத்தனையே தான் –
யாத்ருச்சிகமாக அன்றிக்கே
ஆராய்ந்து பார்க்கில் வேதாந்த ரகசியமும்
அத்தனையே –

(திருநாமத்தை பெருமையையும்
அது உடையவரின் பெருமையையும்
ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா கோரேஷு ச வியாதி ஷோ வர்த்தமாநா
சங்கீர்த்த நாராயண ஸப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் ஸூகி நோ பவந்தி
அந்ய தீயான் குணான் அந்யத்ர த்வஸோ அதி ரோப்ய பணி தி -ஸ்ரீ ஸ்தவம் –8-என்று
மற்ற ஒருவனுடைய குணத்தை அது இல்லாத வேறே ஒருவன் இடம் ஏறிட்டுப் பாடுவதே ஸ்துதி –
இவனுக்கோ சொன்னவை அல்பமாய் சொல்லாதவை அசங்க்யேதமாய் இருப்பதால் கவிக்கு நிறை பொருளாய் நிற்கிறான்
நேர் பட்டேன் -யாதிருச்சிகமாக அடையப் பெற்றேன் -நிர்ஹேதுக கிருபையால் அடையப் பெற்றேன்
விதி வாய்க்கின்று காப்பார் யார் –5-1-1-
ஆழியான் அருள் தருவான் அமைகின்றன அது நமது விதி வகையே –10-6-1-
விதி நிர்மிதமேதத் அந்வயம் -ஸ்தோத்ர ரத்னம் –51-
ஆராய்ந்து பார்க்கில் வேதாந்த விழுப்பொருளும் அதுவேயாய் இருந்தது
இடறி விழுந்த போது விலை மதிப்பற்ற மாணிக்கமே நம் கைப்பட்டது என்று உணர்ந்தேன் -)

அப்பிள்ளை உரை –
கேட்கிற எனக்கு செவிக்கு தென்றலும்-சிறு பனித் துளியும் பட்டால் போல்
நிரதிசய போக்யமாய் இருப்பதுவும்
வாத்சல்யத்தாலே -(செவ்வரியோடிய நீண்ட அப் பெரியவாய) -குதறிச் சிவந்த திருக்கண்களை யுடையவனாய்
ஆஸ்ரித வ்யாமுக்தனுடைய ஸர்வேஸ்வரனுடைய திரு நாமமாய் இருக்கும்
எனக்கு ஒருத்தனுக்கும் அன்றிக்கே பூமியில் உள்ளாருக்கு ஒதுங்கி வாழும் வாசஸ் ஸ்தானம்
ஸ்துத்யனுக்கு வஸ்துதா
ஒரு பூர்த்தி அன்றிக்கே இருக்க
ஸ்ரோதாவானவன் அங்கும் இங்கும் கதிர் பொருக்கி நிரப்ப வேண்டி இருக்கும் நாட்டார் படி இல்லாமல்
அந்தத் திருநாமம் கவி பாடுபவனுக்கு வேண்டிய ஸ்வரூபாதிகள்-(ரூப குண சேஷ்டியாதிகள் ) பரிபூர்ணமாய்
நிறை பொருள் -நிறைவைச் சொல்ல சொற்கள் இல்லை
பரிபூர்ணமான வாஸ்யனாக நின்றவனை யாதிருச்சிகமாகப் லபித்தேன்
நேர் பட்டேன்-விதி வாய்க்கின்றது காப்பார் யார் – பகவத் கிருபையால் லபிக்கப் பெற்றேன்
யாதிருச்சிகமாக அளவு அன்றிக்கே
ஆராய்ந்து பார்க்க
வேதாந்த பொருளின் ஸித்தமான அர்த்தமும் அதுவேயாய் இருந்ததே –

——————————————————————————

வேதாந்த ரகசியம் இது என்று இருந்தபடி
எங்கனே என்னில்
நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ
பிரசித்தம் அன்றோ -என்கிறார் –

அப்பிள்ளை உரை அவதாரிகை
வேத ஸித்தமான அர்த்தம் இங்கனே என்று நீர் அறிந்த படி எங்கனே என்ன
நான் ஒருவனுமா இன்றாக அறிந்தேன்
சர்வ லோக பிரசித்தம்
(லோகம் -வேதம் என்றும் உலகோர் என்றும் )

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-

பதவுரை

தான் ஒருவன் ஆகி–(விஷ்ணுவாகிய) தான் ஒப்பற்ற ஸர்வேஸ்வரனாயிருந்து
வாமனனாய் அழகிலும் வராஹமாய் அளவிலும் இரண்டிலும் குண ங்களிலும் பெருமையால் அத்விதீயம்
சென்று–(மஹாபலியி னிடத்தில் யாசகனாய்ச்) சென்று
ஆங்கு–அந்த மாவலியின் யாக பூமியிலே
இரு நிலத்தை–விசாலமான இந்நிலத்தை
அடிப் படுத்த–திருவடியினளவாக ஆக்கிக் கொண்ட (அளந்து கொண்ட)
சேய்–சிறு பிள்ளையானவன்
ஏன் ஒருவன் ஆய்–விலக்ஷண வராஹ ரூபியாய்
தரணி–பூமியை
இடந்து அடுத்து–(அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித்தெடுத்து
எயிற்றில்–(தனது) கோரைப் பல்லின்மீது
தாங்கியது–தரித்தமையை
யான் ஒருவன்–நானொருவன் மாத்திரம்
இன்றா–இன்றாக-இன்று முடிவாக வரை
அறிகின்றேன் அல்லேன்–அறிகிறேனில்லை. (நெடுநாளாகவே அனைவருமறிவர்)
லோக பிரசித்தம் அன்றோ –

வாமநனான தான் தனியே சென்று பரந்த பூமியை பரிக்ரஹித்த காலத்தில்
திருவடிகளின் கீழ் அகப்படுத்தினத்தையும்
அத்விதீய வராஹமாய் பூமியைக் குத்தி எடுத்துக் கோரைப் பல்லிலே தரித்ததையும்
நான் ஒருவனுமே இப்போதாக அறியாது இருக்கிறேன் அன்று –

தான் ஒருவனாகித் –
வாமனனாய்
இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த சேய் –
வாமனனாய்
(ஒருவன் என்றும் வாமனன் என்றும் பர்யாய சொற்கள் போலும் )
பரப்பான பூமியை
வியாபித்து தன் திருவடிக்குள்ளே அடங்கும்படி
இட்டுக் கொண்டு
அச் செயலாலே அத்விதீயனாய் –

தரணி இடந்து எடுத்து ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும்
பிரளயம் கொண்ட பூமியை
அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடும்படி
இடந்து எடுத்து
மகா வராக ரூபியாய் பெரிய பூமியை
திரு எயிற்றில் ஏக தேசத்திலே தரித்ததும்

யானொருவன் இன்றா வறிகின்றேன் அல்லேன்
நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ –

(அறிகின்றேன் அல்லேன்
முழுச் சொல்லாய்
அறியாது இருக்கிறவன் இன்றாக நான் ஒருவனும் அல்லேன்
என்றும்
எல்லாரும் அறிகிறார்கள் )
(ஒருவனாகி -வாமணனுக்கு பர்யாயம் போல் -வாத்சல்ய ஸுசீல்ய ஸுலப்ய ஸீமா –
ஒரு மாணிக் குறளாகி -திருவாய் -1-10-1
இரு நிலத்தை சென்று அங்கு அடிப்படுத்த சேய் -என்ற கடை அடியோடு தான் ஒருவனாகி கூட்டிப் பொருள் கொள்ளலாம்
மாசு உடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாய் -இதுவும் அத்விதீயம்
பல அறிவாளிகளும் இவற்றை அறிவார்களே
இதம் விஷ்ணோர் விசக்ரமே
த்ரீணி பதா விசக்ரமே
விசக்ரமே பிருத்வீ மேஷா ஏதாம் ஷேத்ராய விஷ்ணு
த்ரிர் தேவ ப்ருதிவீ மிதி ப்ரவிஷ்ணு
விஷ்ணோர் நுகம் –விசக்ரமாணஸ் த்ரே தாருகாய
உபே தே வித்ம ரஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ தேவ த்வம் பரமஸ்ய வித்ஸே
ஸம் நோ விஷ்ணு ருருக்ரம
விஷ்ணு க்ராந்தே வஸூ ந்தரே
உத்த்ருதா அஸி வராஹேண கிருஷ்ணேந
என்ற வேத கோஷங்கள் உண்டே )

அப்பிள்ளை உரை
தான் அத்விதீயனாய் சர்வாதிகனாய் இருந்து மஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று நீர் ஏற்று
பரப்பை யுடைத்தான பூமியை அத்தசையிலேயே
தன் திருவடிகளின் கீழ் அடங்கும்படி
ஸகல பலப்ரதன் – ஸ்ரீயப்பதியாய் இருந்தும் – கையேந்தி -ஆகவே ஒருவன்
இட்டுக்கொண்ட சிறு பிள்ளையாய்
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாதே பின் வையாதே அத்விதீயமான அழகை யுடைய
உப மானம் அபிமானம் இல்லாத மானமிலா பன்றியாய்
அளவில்லாத பரிமாணம் இல்லாத -அழகில் அத்விதீயன்
பிரளயத்தில் மூழ்கி அண்ட பித்தியிலே ஒட்டிக்கிடந்த பூமியை எடுத்து
திரு எயிற்றிலே ஏக தேசத்தில்
நான் ஒருவனே இன்றாக அறிகிறேன் அல்லேன்
இது சர்வ லோக பிரசித்தமாய் இருந்தவை அன்றோ –

———————————————————————————

பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது
அறியாது இருந்த அளவேயோ –
சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க
அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான்
அறியப் போமோ -என்கிறார்-

(சேயன் மிகப் பெரியன் துவரைக் கோனாய் நின்றவன் -அஹமின் அர்த்தம்
ஆயனாய் நின்றவன் அணியன் சிறியன்-மாமின் அர்த்தம்
இரு அவஸ்தையிலும் நின்ற மாயன்
இப்படி ஏழு பதங்களுக்கும் அர்த்தம் கூட்டிக் கொள்ள வேண்டும்
திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர்
அரங்கன் ஆயன் கொண்டல் வண்ணன் கோவலன்
பத்துடை அடியார்களுக்கு எளியவன்
பிறருக்கு அறிய வித்தகன்)

அப்பிள்ளை உரை -அவதாரிகை
பிரளயம் கொண்ட பூமியை இடந்து எடுத்து ரஷித்ததை அறியாத அளவேயோ
சம்சாரப் பிரளயத்தில் நின்றும் எடுக்கைக்காக அவன் அருளிச் செய்த வார்த்தையை தான்
அறியப் பெற்றதோ என்கிறார்

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71–

பதவுரை

சிறியன்–(ஸ்ரீகிருஷ்ணனென்கிற) சிறு பிள்ளையாய்க் கொண்டு
அணியன்–ஸுலபனாயும்
மிக பெரியன்–(அந் நிலையிலேயே) மிகவும் பெரியவனாய்க் கொண்டு
சேயன்–எட்டாதவனாயும் (இவ்விரண்டு படிகளுக்கும் உதாரணமாக)
ஆயன் ஆய் நின்ற–இடைப் பிள்ளையாய்ப் பிறந்த சிறுமையை யுடையனாயும்
துவரை கோன் ஆய் நின்ற–த்வாரகா புரிக்குத் தலைவனாய் நின்ற பெரு மேன்மையை யுடையவனாயு மிருந்த
மாயன்–எம்பெருமான்
அன்று–(பாரத யுத்தம் நடந்த) அக் காலத்தில்
ஓதிய–(திருத் தேர்த் தட்டில் அர்ஜுநனைக் குறித்து) அருளிச் செய்த
வாக்கு அதனை–(சரம ஸ்லோகமாகிய) அந்தத் திரு வாக்கை
கல்லார்–அதிகரிக்கப் பெறாதவர்கள்
மெய் ஞானம் இல்–தத்துவ வுணர்ச்சி யற்ற
ஏதிலர் ஆம்–பகவத் விரோதிகளாவர்.

தூரஸ்தனாயும் சமீபஸ்தனாயும்
மிக்க மேன்மையை யுடையனாயும் அத்யந்த ஸூலபனாயும்
ஆச்சர்ய சேஷ்டிதனாயும் துவாரகா நாதனாயும்
எழுந்து அருளி இருக்கிற கோபாலன் பாரத யுத்தத்தில் அருளிச் செய்த சரம ஸ்லோகத்தை
லோகத்தில் யதார்த்த ஞானம் இல்லாதவர்களாய்
சத்ருக்களாய்
அப்யஸியாத வர்கள் ஆவார்கள் –

சேயன் மிகப் பெரியன் –
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று
வாக் மனஸ் ஸூகளுக்கு நிலமில்லாத படியாலே
ப்ரஹ்மாதிகளுக்கும் தூரஸ்தனாய் இருக்கும்

அணியன் சிறியன்-
சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் பிறந்து
அனுகூலர்க்கு அண்ணி யனாய் இருக்கும்

ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன்
அண்ணி யனானமைக்கு உதாஹரணம்
இடையனாய்
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
ஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல -ஆச்சர்ய குணத்தை உடையவன் –
(மாயம் இதுவே என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு உள்ளம்
கிருஷ்ண சேஷ்டிதங்களில் தொட்ட தொட்ட இடங்களிலும் மாயம் உண்டே )

அன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்
தேர் தட்டிலே நின்று
உன்னுடைய சகலத்துக்கும் (சகல தூருக்கும் பொறுப்புக்கும் ) நானே கடவன்
நீ சோகிக்க வேண்டா –
என்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக
நினைத்து இருக்கைக்கு அடியான
தத்வ ஞானம் இன்றிக்கே
ஈஸ்வரன்
தா நஹம் த்விஷத க்ரூரான் (16-19)-என்று
நினைக்கும்படி சத்ருக்களாய்
தாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்

(உலகத்து மெய்ஞ்ஞானமில் ஏதிலராய்க் கல்லார் என்றபடி
அவனைப் பகைக்கவே ஏதும் இல்லாதவர் ஆவார் )

(சேயன்
ந த்வாம் கேசந ஜாநதே
ய ந் ந தேவா ந முனயோ ந ச அஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமே சஸ்ய தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-9-55-
ந ஸ ஸக்யஸ் த்வயா த்ரஷ்டும் மயாந்யைர் வாபி சத்தம
ஸர்வேஷாம் ஸாக்ஷி பூதோ அசவ் ந க்ராஹ்ய கேநசித் க்வசித் –பாரதம் -மோக்ஷ தர்மம்
அத்யாபி மாம் ந ஜாநந்தி ருத்ரேந்தாஸ் ஸ பிதா மஹா –ஸ்ரீ வராஹ புராணம்
நா அஹம் ப்ரகாஸ ஸர்வஸ்ய –ஸ்ரீ கீதை
ந யஸ்ய ரூபம் ந பல ப்ரபாவவ் ந ச ஸ்வ பாவ பரமஸ்ய பும்ஸ
விஞ்ஞாய தே ஸர்வ பிதா மஹாத்யைஸ் தம் வாஸூ தேவம் ப்ரணமாம் ய சிந்த்யம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்
ந தே விஷ்ணோ ஜாய மாநோ ந ஜாதோ தேவ மஹிம்ந பரமந்தமாப –

மிகப்பெரியவன்
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –தைத்ரியம்

சேயன்-அணியன் -மிகப் பெரியன் -சிறியன்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் –திருவாய் –1-3-4-

பத்துடை அடியார்களுக்கு எளியவன்
பிறருக்கு அறிய வித்தகன்

நமோ நமோ வாங் மனஸாதி பூமயே நமோ நமோ வாங் மனசைக பூமயே
நமோ நமோ அநந்த மஹா வீபூதயே நமோ நமோ அநந்த தயைக சிந்தவே -என்று
சேயன் அணியன் மிகப் பெரியன் சிறியன் -நான்கு திரு நாமங்களையும் அடி ஒற்றினார்
சிறியன் -அவதாரத்துக்கு காரணம் கருணையே -அநந்த தயைக சிந்தவே -என்கிறார்

ஆயன் -அணியன் சிறியன்
துவரைக் கோனாய் நின்ற மாயன் -சேயன் பெரியன் –
இடையனாய்ப் பிறந்த நீர்மையும்
ஸ்ரீ மத் துவாரகைக்கு நிர்வாஹகானாய் நிற்கும் பெருமையும் உடையனாய்
பதினாறாயிரம் ஸ்திரீகளுக்குப் பல வடிவு எடுத்துக் கொண்டு
ஏக காலத்திலே ஆடல் கொடுக்க வல்ல ஆச்சர்ய பூதனான கிருஷ்ணன் -அப்பிள்ளையார் உரை

சரம ஸ்லோகம் கல்லாமைக்குக் காரணம் -தத்வம் ஹிதம் புருஷார்த்தம் பற்றிய மெய் ஞானம் இல்லாமல்
ஏதிலராம் -பகவத் த்வேஷிகளாய் இருக்கையை காரணம்
ஏதிலர்-பகைவர்
தாநஹம் த்விஷத க்ரூரான் சம்ஸாரேஷூ நராதமான்
ஷிபாம் யஜஸ்ரம ஸூப அஸூரீஷ் வேவ யோநிஷூ –கீதை –16-19-
ஆஜ்ஜாஸ் சேதீ மம த்வேஷீ
சத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய
தண்ணளி மிக்க ஈஸ்வரனும் தனது திரு உள்ளத்திலே எதிரிகளாய் நினைக்கும் படி இருப்பவர்கள் -)

அப்பிள்ளை உரை
அனுகூலரான யசோதாதிகளுக்குக் கையிலே கோலைக் கொடுத்து
பசு மேய்த்து வா என்று நியமிக்கலாம் படி சிறு பிள்ளையாய்க் கொண்டு மிகவும் ஆசன்னனாய் –
வர்த்திக்கும் நீர்மையை யுடையவனாய் -(சிறியனாய் அணியனாய் )
அந்நிலை தன்னிலே
அநாஸ்ரிதரான
துரியோதனாதிகளுக்கு எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியவனாய்க் கொண்டு
தூரஸ்தானாய் (பெரியன் சேயன் )இருக்குமவனாய்
இவை இரண்டுக்கும் உதாஹரணம் என்னலாம் படி
இடையனாய் பிறந்த நீர்மையும்
துவாரகைக்கு நிர்வாஹனாய நிற்கும் பெருமையும் யுடையவனாய்
(மாமின் அஹமின் இரண்டின் அர்த்தம்
ஆஸ்ரய சவுகர்யண ஆபாதக -ஆஸ்ரித கார்ய ஆபாதக கல்யாண குணங்களை யுடையவன் )
பதினாறாயிரம் ஸ்த்ரீகளும் பல வடிவு எடுத்துக் கொண்டு ஏக காலத்திலேயே ஆடல் கொடுத்து நிற்கும் மாயம்
(ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் -அவதாரத்தில் மூன்று குணங்களும் )
பாரத சமரம் அன்று
திருத் தேர் தட்டிலே -சரம ஸ்லோகம் -அர்ஜுனனைக் குறித்து அருளிச் செய்த
மெய்ம்மைப் பெரு வார்த்தையை அறியாதார் -அதிகாரியாதவர்கள் யதா ஞானத்தில் அந்வயிக்காமல்
நிக்ரஹத்துக்கு ஆளாகும் சத்ருக்களாய் இருப்பார்கள் என்கிறார்

———————————————————————–

நீர் ஓதினீர் ஆகில் இதுக்குப் பொருள் சொல்லும்
என்னச் சொல்லுகிறார் –

(ஸ்ரீ மஹா பாரதத்துக்கு ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் போலவும்
ஸ்ரீ ராமாயணத்துக்கு ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் போலவும்
ஸ்ரீ திருமலைக்கு மேம்பொருள் பாசுரம் போலவும்
இப் பிரபந்தத்துக்கு இப் பாசுரம்
அன்று ஓதிய வாக்கு -ஸ்ரீ கீதா சாரம்
தத்வ விவேகம் தொடங்கி –பல விஷயங்கள் உண்டே
சரம ஸ்லோகம் ஒன்றே ஸாரம்
அத்தையே மற்றவை சொல் அல்ல -அறம் அல்ல
இவனே உபாயம் -அறம் என்கிறார் இதில் )

(கர்ம யோகம் ஞான யோகம் பக்தி யோகம் -உபாயம் என்னும் சொற்கள் பிரமாணங்கள் அல்ல –
இவை உபாயாந்தரங்கள் -அசேதன க்ரியா களேபரங்கள் -இவை அவனே உபாயம்
அவனே உபாயம் என்னும் சொல் ஒன்றே பிரமாணம் -கண்ணனே உபாயம் -ப்ரமேயத்தில் நோக்கு
விஷயம் ஒன்றே
விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம்
சொல் அல்ல பிரமாணம் ஆகாது -பிராமண பரம்
அறம் அல்ல -உபாயம் அல்ல– ப்ரமேய பரம்
கீழே மாமின் அஹமின் அர்த்தம்
இதில் ஸர்வ தர்மான் பரித்யஜ -வின் அர்த்தம்
நாரணனே -ஏகம் சரணம் வ்ரஜ -வின் அர்த்தம் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
மாயன் அன்று ஓதிய வாக்கு அதனைக் –கல்லார் ஏதிலர் என்று நாட்டாரை கர்ஹிக்கறது என்
கற்ற நீர் தான் பொருள் சொல்லிக் காட்டும் என்ன
இப் பாட்டில் சரம ஸ்லோக அர்த்தத்தை அருளிச்

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

பதவுரை

(முக்தி மார்க்கம் தெரியாமல் ஸம்ஸாரத்தில் உழல்கின்ற ஆத்மாக்களுக்கு)
இல்லறம் இல் என்னும் சொல்லும்–க்ருஹஸ்த தர்மமாக சாஸ்த்ரஜித்தமான கர்ம யோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
இல்லேல்–அங்ஙனன்றிக்கே,-கர்ம யோகம் உபாயம் அல்ல என்றாகிலும்
இல்-உபாயம் சரணம் வீடு தஞ்சம் –
துறவறம் இல் என்னும் சொல்லும்–ஜ்ஞாந யோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
இல்லேல்–அங்ஙனுமன்றிக்கே
அல்லன அறம் இல் என்னும் சொல்–(பக்தி யோகம் தேச வாஸம் திருநாம ஸங்கீர்த்தனம் முதலான) மற்ற உபாயங்கள்
தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
நல் அறம் ஆவனவும்–நல்ல தருமங்களாகிய திரு நாம ஸங்கீர்த்தநாதிகளும்
நால் வேதம் மா தவமும்–நான்கு வேதங்களிலும் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்களுமெல்லாம்
நாரணனே ஆவது–ஸ்ரீமந் நாராயணனுடைய அநுக்ரஹத்தாலே பயனளிப்பனவாகின்றன.
ஈது–இவ் வுண்மையை
அன்று என்பார் ஆர்–அது மறுப்பாருண்டோ? (இவ்வுலகம் அனைராலும் அங்கீகரிக்கத்தக்கது)

வேதத்தில் உபாயங்களாகச் சொல்லப்பட்ட கிருஹஸ்த தர்மமும்
அல்லாத நிவ்ருத்தி தர்மமும்
இதிஹாஸ புராணங்களில் ப்ரதிபாதிக்கப்பட்ட அல்லாத தர்மமும் ஒரு சொல் அன்று
உபாயங்கள் ஆக மாட்டா
விலக்ஷணங்களான கர்ம ஞானாதிகளும்
நாலு வேதங்களில் ப்ரதிபாதிக்கப்பட்ட ஸ்லாக்யமான தபஸ்ஸூம்
நாராயணனுடைய ப்ரஸாதத்தாலே பல பிரதங்கள் ஆகும்
இப்படி அன்று என்று சொல்லுவார் யார் -ஒருவரும் சொல்லார்கள் —

இல்லறம் இல்லேல்-
கர்ம யோகம் (உபாயம் )அன்றாகில்
பிரவ்ருத்தி தர்மம் அன்றாகில் -என்னவுமாம்

துறவறம் இல் என்னும் சொல் –
நிவ்ருத்தி தர்மம் ஸ்தானம்  பிரமாணம் அன்று –
ஜ்ஞான யோகம் என்னவுமாம்

அறம் அல்லனவும் சொல்லல்ல –
அல்லாத தர்மங்களை விதிக்கிறவை
பிரமாணங்களும் அன்று

அல்லாத தர்மங்கள் என்கிறதும்
கர்த்ருத்வ பலாபிசந்தி
ரஹிதமாக அனுஷ்டிக்கும் கர்மங்கள்
அன்றிக்கே
இதிஹாச புராணங்களில் சொல்லுகிற
திருநாம சங்கீர்தநாதிகள் ஆகவுமாம்

சொல்லறம் அல்லன -என்று
பதச் சேதமான போது பிரமேய பரம்
இல் என்னும் சொல் (சொல் அல்ல ) -என்ற போது பிரமாண பரம் –

நல்லறம் ஆவனவும் -நாரணனே ஆவது
பலாபிசந்தி ரஹிதமான கர்மங்கள்
இதிஹாச புராணங்களில் சொல்லுகிற
திருநாம சங்கீர்தனங்கள்

நால் வேத மாத்தவமும் –
பூர்வ பாகத்தில் சொன்ன கர்ம யோகம்
இவை எல்லாம் நாராயணன் பிரசாதம் அடியாக –

இதர தர்மங்களைச் சொல்லுகிறது பிரமாணங்கள் அன்று என்று நீர்
சொல்லுகிறது எத்தாலே என்னில்
அவை பல பிரதங்கள் ஆம் போது பகவத் பிரசாதம் வேணும் –
பகவான் உபாயம் ஆகும் இடத்தில் அவை சஹ கரிக்க வேண்டா
என்னும் பிரமாண பலத்தால் சொல்லுகிறேன்

ஈதன்று என்பார் ஆர் –
அல்லாதவை போல் அன்றிக்கே
உபாயமாக வற்றான இத்தை அன்று என்ன வல்லார் உண்டோ-

கிருஹஸ்தன் பண்ணுகிற தர்மம் -கர்மாதிகள் –
மோக்ஷ உபாயமான கர்மாதிகளைப் பிரதிபாதிக்கும் பிரமாணங்களும்
தத் ப்ரமேயமான கார்ஹஸ்த்யாதி தர்மங்களுமான இவை
பிரமாணங்களும் அன்று –
ப்ரமேயங்களும் அன்று

இனி பிரமாணம் சரம ஸ்லோகமே
தத் ப்ரமேயமும் ஸித்தோ உபாயமான ஈஸ்வரனே என்று பாட்டுக்குத் தாத்பர்யம் –

(இல் என்னும் இல்லறம் அறம் அல்ல -ப்ரமேய பரம்
இல்லறம் இல் என்னும் சொல் சொல் அல்ல -பிராமண பரம்
இதே போல் துறவறம் அல்லவறம்
இவை உபாயமாகும் பொழுது அவன் ஸஹ காரி ஆகவேனும்
அவன் உபாயம் ஆகும் போது மற்ற ஒன்றும் ஸஹ காரியம் வேண்டாமே
ஆகவே இவன் உபாயம் அல்ல என்று சொல்ல வல்லார் யார் -இதுவே பாசுர சுருக்க அர்த்தம் )

(இல்லறம்
கர்ம யோகத்தை சொல்லும் -யஜ்ஜம் தானம் தவம் போல்வன க்ருஹஸ்தனுக்கே தானே
இல் -உபாயே க்ருஹே ரஷித்ரோ ஸப்த சரணம் இத்யயம் வர்த்ததே
சரண சப்தமும் க்ருஹ சப்தமும் பர்யாயம்
ஆக இங்கு இல் என்று உபாயம
தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:–கீதை -3-19-

தஸ்மாத் ஸததம் அஸக்த:-ஆதலால், எப்போதும் பற்று நீக்கி,
கார்யம் கர்ம-செய்யத்தக்க தொழிலை,
ஸமாசர-செய்து கொண்டிரு,
ஹி அஸக்த:-ஏனெனில் பற்றில்லாமல்,
கர்ம ஆசரந் பூருஷ:-தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன்,
பரம் ஆப்நோதி-பரம்பொருளை எய்துகிறான்.–

ஆதலால், எப்போதும் பற்று நீக்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு.
பற்றில்லாமல் தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான்.

கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய:
லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந்கர்துமர்ஹஸி–கீதை -3-20-

ஜநகாதய: ஹி-ஜனகன் முதலியோரும்,
கர்மணா ஏவ-செய்கையாலேயே,
ஸம்ஸித்திம் ஆஸ்திதா-சித்தி (சிறந்த பேற்றை) பெற்றார்கள்,
லோகஸங்க்ரஹம் ஸம்பஸ்யந்-உலக நன்மையைக் கருதியும்,
அபி கர்தும் ஏவ அர்ஹஸி-நீ தொழில் புரிதல் தகும்.

ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும்
நீ தொழில் புரிதல் தகும்.

யத: ப்ரவ்ருத்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ:–கீதை -18-46

யத: பூதாநாம் ப்ரவ்ருத்தி-எதிலிருந்து உயிர்கள் உண்டாயினவோ,
யேந இதம் ஸர்வம் ததம் – எதனால் அனைத்தும் வியாபிக்கப் பட்டிருக்கிறதோ,
தம்-அந்த பரமாத்மாவை,
ஸ்வகர்மணா அப்யர்ச்ய-தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும்,
மாநவ: விந்ததி-மனிதன் ஈடேறுகிறான்.

உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய
கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.

இவை பிரமாணம் அல்ல

துறவறம் இல் என்னும் சொல்லும் சொல் அல்ல
ஞான யோகம் ஞான விசேஷ பக்தியும் உபாயம் என்பவையும் சொல் அல்ல
இல்லறம் ப்ரவ்ருத்தி தர்மம்
துறவறம் -நிவ்ருத்தி தர்மம்
அல்லன அறம்-பக்தி யோகம் என்பர் அப்பிள்ளார்

பலன் தருவது நாராயணனே
ஸர்வே வேதாஸ் ஸர்வ வேத்யா ஸ ஸாஸ்த்ரா ஸர்வே யஜ்ஜாஸ் ஸர்வ இஜ்யாச்ச கிருஷ்ண
விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்த்வதோ யே தேஷாம் ராஜன் ஸர்வ யஜ்ஜாஸ் ஸமாப்த்தா -என்றும்
யே ச வேத விதோ விப்ரா யே சாத்யாத்ம விதோ ஜநா
தே விதந்தி மஹாத்மாநம் கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம் -வன பர்வம் -71-123-
பரம புருஷனே உபாயம்
நாராயணம் பராயணம்
முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே
லோகாநாம் தவம் பரோ தர்ம
ராமோ விக்ரஹவான் தர்ம
பாவநஸ் ஸர்வ லோகாநாம் த்வம் ஏவ
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரம் உச்யதே
புண்யா நாம் அபி புண்யோ அசவ் மங்களாநாஞ்ச மங்களம் என்று ரிஷிகள் உத்கோஷித்தார்கள்

அவனும்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
தமேவம் சரணம் கச்ச
தமேவ சாத்யம் புருஷன் ப்ரபத்ய
சரணம் மாம் ப்ரபத்யஸ்வ -என்றான்

அறம் தானாய் திரிவாய்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு
நெறி வாசல் தானேயாய் நின்றானை
நாராயணனே நமக்கே பறை தருவான்
களை கண் நீயே -என்றனர் மற்றும் உள்ள ஆழ்வார்களும்
இப்படிப்பட்ட அரும் பொருளை இல்லை செய்வாரும் உண்டோ

இப் பாசுரம் சரம ஸ்லோகார்த்தம் ஆவது
இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும் சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -என்றது
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய
நாரணன் என்று மாம் அஹம் அர்த்தம்
நாரணனே -ஏவகாரம் -ஏவம் அர்த்தம்
நல்லறம் ஆவனவும் நால் வேத மாத்தவமும் ஆவது -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி யின் அர்த்தம்
ஈதன்று என்பார் ஆர்-மா ஸூச வின் அர்த்தம் )

(செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீ வர மங்கல நகர்
கை தொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5-
செய்த வேள்வியர் –
சித்தோபாய நிஷ்டர்கள். விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்த்வதோ யே தேஷாம் ராஜன் சர்வ யஞ்ஞாஸ் ஸமாப்தா –
அரசனே! எந்தப் பிராஹ்மணர்கள், கிருஷ்ணனை உள்ளபடி அறிகின்றார்களோ அந்தப் பிராஹ்மணர்களுக்கு
எல்லா யாகங்களும் முடிந்தவைகள் ஆகின்றன” என்றாரே அன்றோ.
ஸர்வே வேதா: ஸர்வ வித்யா: ஸசாஸ்த்ரா: ஸர்வே யஜ்ஞா: ஸர்வ இஜ்யஸ்ச கிருஷ்ண:
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணா: தத்த்வத: யே தேஷாம் ராஜன் ஸர்வயஜ்ஞா: ஸமாப்தர்:”- பாரதம்
வேறு ஒன்று செய்யுமவனுக்குக் குறை கிடப்பதும் ஓர் அம்சம் உண்டே அன்றோ.
சித்தோபாய நிஷ்டர்கள் செய்ய வேண்டுமவற்றை க்ருதக்ருத்யர் -எல்லாம் செய்து முடித்தவர்கள் அலரோ.)

அப்பிள்ளை உரை
செய்த வேள்வியர் எல்லா விதங்களிலும் என்னையே பற்றினவர்கள் ஆவார்கள் –
சர்வ யஜ்ஜா ஸமாப்தர் -ஈட்டில் காட்டிய அர்த்தம்
ஏதிலர் ஆக மாட்டோம் -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
கிருஷ்ணம் தர்மம் சநாதநம்
ராமோ விக்ரஹவான் தர்ம
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
நெறி வாசல் தானேயாய் நின்றான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
மோக்ஷ சாதனம் அறியாதே சம்சாரத்தில் பரிப்ரமிக்கிற உழன்று இருக்கும் ஆத்மாக்களுக்கு
இல்லறம் -பிரவிருத்தி தர்மம் -கர்ம யோகம் புகல் என்று சொல்லும் பிரமாணங்களும்
ஞான அம்ருதம் -கர்ம நிரபேஷ ஞான யோகம் புகல் என்று சொல்லும் பிரமாணங்களும்
தத் உபய ஸாத்யமான பக்தி யோகம் நாம சங்கீர்த்தனம் திவ்ய தேச வாசம் முதலான
அல்லாத உபாயங்கள் புகல் என்று சொல்லும் பிரமாணங்களும்
பிரமாணங்கள் அல்லவை ஆகும்

விலக்ஷண தர்மமான ஞான பக்தி யோகங்களும்
கர்ம யோகம் தபஸ்ஸாதிகள்
நிரபேஷ உபாய பூதனான நாராயணனுடைய பிரசாதத்தாலே பல பிரதங்கள் ஆகும்

ஸித்த உபாயமோ
ஸூசகம்
ஸ்வரூபத்துக்கு ஏற்றதாயும் -அனுரூபமாயும்
ஸ்வா தந்திரமே கலசாமல்
இதர உபாய நிரபேஷமான ஸித்த உபாயத்தை
இத்தை உபாயம் அல்ல என்று சொல்ல வல்லார் யார்

வேத வித்துக்களும் அன்று என்று சொல்ல மாட்டார்
அத்யாத்ம வித்துக்களும் அன்று என்று சொல்ல மாட்டார்கள்
பூர்வ பாக நிஷ்டரும் சொல்ல மாட்டார்

இல்லறம் தொடங்கி –அறம் அல்லவும் சொல் அல்ல -அம்சத்தாலே —
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய பதங்களின் அர்த்தம் சொல்லப்பட்டது

நாரணன் மாமின் அர்த்தம்
அவதாரணத்தால் ஏக பத அர்த்தம்

ஆவது இது அன்று -உபாயாந்தரங்களுக்கு எதிர்த் தட்டான இது அன்று -என்று
யாராலும் சொல்லுவார்களோ என்பதால் ஸித்த உபாயத்தின் ஏற்றம் சொன்னபடி

வேத புருஷனும் வேத்யனான ஈஸ்வரனும் வைதிகரான ரிஷிகளும் அல்லாத ஆழ்வார்களும்
வாசியற ஏக கண்டராக இத்தையே சொல்லுவார்கள்
ந்யாஸ இதி ப்ரஹ்ம ந்யாஸமே ப்ரஹ்மம் வேதம் சொல்லுமே
பாவநஸ் தர்ம லோகா நாம் த்மேவ ராகு நந்தன -இப்புடைகளில் வைதிகரான ரிஷிகள்

சரண்யன் வார்த்தையும் –
மாம் ஏக மேவ சரணம்
சரண்யம் மாம் ப்ரபத்யஸ்வ

அறம் தானாய் திரிவாய்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
களை கண் நீயே சகோதரிகளான ஆழ்வாராதிகள் வார்த்தை–ஆழ்ந்த நம்மை ஆளும் குலம்
ப்ராப்ய ப்ராபக ஐக்கியம் சொல்லும் குலம்

இல்லில் இருந்து செய்யும் தர்மம் இல்லறம் கர்ம யோகம் என்றபடி

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -49-60–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -/ஸ்ரீ அப்பிள்ளை உரை —

September 23, 2013

(மலை மேல் நின்று முகம் கொடுக்கும் நீர்மை கீழே
மலையின் கீழே கிடந்து தாங்கிய நீர்மையைப் பேசி மகிழ்கிறார் இதில் -)

அப்பிள்ளை -உரை -அவதாரிகை
உடம்பு நோவக் கடல் கடைந்து –
(அழகு கண் பட்டு பிரேமத்தால் ஆழ்வார்கள் ஸர்வசக்தன் என்று பாரார்கள் அன்றோ )
ஆஸ்ரிதர் அபேக்ஷித ஸம் விதானம் பண்ணி அருளிய
நீர்மையின் ஏற்றத்தை அருளிச் செய்கிறார்

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலையாமை தானொரு கை பற்றி -அலையாமல்
பீறக்கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று —49-

பதவுரை

மலை–மந்தர பர்வதத்தை
ஆமை மேல் வைத்து–கூர்ம ரூபியான தன் மேல் வைத்து
வாசுகியை–வாஸுகி நாகத்தை
சுற்றி–(கடை கயிறாகச்) சுற்றி
அலையாமல்–நீர் வெளியில் புரளாமல்
பீற–(அமுதம்) புறப்படும்படியாக
கடைந்த–(கடலைக்) கடைந்தருளின
பெருமான்–எம்பெருமானுடைய
ஆமை தான்–கூர்ம ரூபியாகத் திருவவதரித்த தானே
ஒரு கை பற்றி–(மலையினுச்சியை) ஒருகையாலே பிடித்தமுக்கி
திருநாமம்–திருநாமங்களை
கூறுவதே–வாய் விட்டுச் சொல்லுவதே
யாவர்க்கும்–அனைவர்க்கும்
கூற்று–வாய்ப் பேச்சாகக் கடவது-பேசுவதே பிராப்தி

மந்த்ர பர்வதத்தைக் கூர்மத்தின் மேல் வைத்து வாஸூகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றி
ஆமையான தான் மலையின் உச்சியை ஒரு கையால் பிடித்து அமுக்கி நீர் வெளியில் புரளாமல்
அம்ருதம் பிறக்கும்படி கடைந்த ஸர்வேஸ்வரனுடைய திருநாமங்களை
அனுசந்திப்பதே எல்லாருக்கும் உசிதமானது –

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
கூர்ம ரூபியான தன் மேலே-மலையை வைத்து-
வாசுகியைச் சுற்றி

தலையாமை தானொரு கை பற்றி –
ஆமையான தான்
மேலே-கொந்தளியாத படிக்கு ஈடாக-
மலையின் உச்சியை ஒரு கையாலே அமுக்கி –

அலையாமல் பீறக்கடைந்த பெருமான் திரு நாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று –
நிரம்பின நீர் புறம் பொசியாமலும்-
அமிர்தம் படும்படி உள்ளுடையவும் கடைந்த
சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை சொல்லுவதே-
எல்லார்க்கும் அடுப்பது-

(அஜிதன் என்றே இவன் திரு நாமம்
இந்த செயலால் தேவ ஜாதி முழுவதையும் எழுதிக் கொண்டவன்
தானே தேவாதிதேவன் என்று விளங்க நின்றவன்
ப்ரயோஜனாந்தர பரர்களுக்கும் தன்னை அழிய மாறி ரக்ஷிக்கும் அவன்
திரு நாமத்தைச் சொல்லுவதே அனைவருக்கும் தகுந்தது -)

அப்பிள்ளை உரை
மந்த்ர பர்வதத்தை கீழே ஆழ விடாமல் ஆதார கூர்மம்
(அண்டக் கடாகம் இங்கும் ஆதார கூர்மம் உண்டே
கூர்மாசனம் இன்றும் உண்டே )
தன் மேல் வைத்து
வாஸூகி யாகிற பாம்பைக் கடை கயிறாகச் சுற்றி
(மத்ஸ்ய அவதாரத்தில் மீனின் ஒற்றைக் கொம்பையும் படகையும் கட்டி – அங்கும் கைங்கர்யம் உண்டே )
மேல் கொந்தழியாத படி ப்ருஹத் கூர்ம ரூபியாய் அதனுடைய உச்சியை ஒரு கையாலே பிடித்து
அம்ருதம் உண்டாகும் படி நீரானது புறம்பு பொசிந்து வெளியே போகாதபடியும் –
(பொருளின் அளவு தண்ணீர் வெளியிலே போகுமே அது போகாதபடி )
அறைப்பட்ட பால் மீண்டும் மீண்டும் அறைப்படும் படி
ஒரு கையாலே அமுக்கி
கடலைக் கடைந்த சர்வேஸ்வரனுடைய உதார குணம் -போன்ற பல குணங்களுக்கு திரு நாமம் –
(வண்மைக்கு இந்த உதார நாமம் -அழகுக்கு ஸூந்தரன் -ஸீலத்துக்கு ஸுசீல்யன் -வாத்சல்யத்துக்கு -ஆஸ்ரித வத்சலன் )
இது போன்ற திரு நாமங்களை சொல்லுவதே -ஆஸ்ரிதர் அனைவருக்கும் அடுப்பது
கூற்று -கூறு பட்டது –தகுதியானது

————————————————————————–

(கீழே திருநாமம் சொல்ல பர உபதேசம்
இதில் திருநாமத்தை நெஞ்சில் கொண்ட எனக்கு ஒரு தீங்கும் இல்லை என்று
அனுசந்தித்து நிர்ப்பரர் ஆகிறார் –
ஆற்றங் கரைக் கிடக்கும் கண்ணன் -ஸுலப்யம் -மாம் என்று தொட்டுரைத்ததே பரத்வம் என்னலாம் படி
அன்றோ கபிஸ்தலத்தில் தீர்த்தம் ப்ரசாதியாதே சேவை –
ஆஸ்ரயர் வருவார் உண்டோ என்று ஆற்றங்கரை கிடக்கிறானே –
கடல் கிடக்கும் மாயன்-பரத்வம் -அஹம் -திருப்பாற் கடலில் கூப்பீடு கேட்க்கும் இடம் –
மாயனை (மன்னு வடமதுரை மைந்தனை)– தாமோதரனை –பரத்வம் ஸுலப்யம் அங்கும் உண்டே
ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதக கல்யாண குணங்கள்
ஆஸ்ரய கார்ய ஆபாதக கல்யாண குணங்கள்
ஆழ் பொருளை அருளிய ஆழ்வார் மூலம் பெற்ற அர்த்தத்தால் -ஓராண் வழியாக வந்த அர்த்தம்
இது கபிஸ்தலத்துக்கு என்று பெரியவாச்சான் பிள்ளை பட்டோலை எழுதி அருளிச் செய்தார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஸ்ரீ கிருஷ்ணன் அருளிச் செய்த செய்த சரம ஸ்லோகார்த்தம் என் உள்ளத்திலே இருக்க
ஸமஸ்த விரோதிகளும் போக குறை இல்லை என்கிறார்

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

பதவுரை

கடல்–திருப்பாற் கடலிலே
கிடக்கும்–(பிரமன் முதலியோர்க்கு ஆச்ரயணீயனாய்க் கொண்டு) திருக்கண் வளர்ந்தருள்கிற
மாயன்–ஆச்சரிய பூதனாய்
ஆறு கரை–திருக் காவேரிக் கரையான கபிஸ்தலத்திலே
கிடக்கும்–திருக் கண் வளர்ந்தருள்கிற
கண்ணன்–எம்பெருமானுடைய
உரை–ஸ்ரீஸூக்தியாகிய சரமச்லோகம்
எனக்கு–என்னுடைய
உள்ளத்து–நெஞ்சிலே
கிடக்கும்–பதிந்திருக்கின்றது
(ஆன பின்பு)
கூற்றமும் சாரா–மிருத்யு பயம் அணுகாமலும்
கொடு வினையும் சாரா–கொடிய பாவங்கள் அணுகாமலும்
தீ மாற்றமும் சாரா வகை–கெட்ட விஷயங்களொன்றும் அணுகாமலுமிருக்கத் தக்க உபாயத்தை
அறிந்தேன்–அறிந்தவனானேன்.

தீ மாற்றங்கள்
1-தேஹாத்ம அபிமானம்
2-ஸ்வ தந்த்ர ஆத்ம அபிமானம்
3-விஷயாந்தர பரத்வம்
4-தேவதாந்த்ர சம்பந்தம்
5-உபாயாந்தர பரத்வம்
6-ப்ரயோஜனாந்தர பரத்வம்
7-ஸூ வ கர்த்ருத்வ
8–ஸூவ போக்த்ருத்வ போல்வன

திருப்பாற் கடலிலே பள்ளி கொண்ட ஆச்சர்ய பூதனாய்
திருக் காவேரிக் கரையிலே சயனித்தவனான கண்ணபிரானுடைய
ஸ்ரீ ஸூ க்தியான சரம ஸ்லோகம் என்னுடைய ஹிருதயத்தில் இருக்கிறது
மிருத்யு கிட்டாமைக்கும் க்ரூர பாபங்கள் நெருங்காமைக்கும்
கெட்ட விஷயங்கள் ஒன்றும் சேராமைக்கும் உபாயம் அறிந்தேன் –

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை யறிந்தேன் –
1-ம்ருத்யு அணையாமைக்கும் –
2-ம்ருத்யு அணைகைக்கு ஹேதுவான மகா பாபம் அணையாமைக்கும்-
3-அபவாதம் சேராமைக்கும்-
உபாயம் அறிந்தேன் – –

ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து ஆச்சர்ய பூதனை-
அனந்தரம்
திருக் கபிஸ்தலத்திலே கண் வளர்ந்து அருளுகிற கிருஷ்ணன் –
உன்னுடைய ரஷணததுக்கு நானே கடவன் -நீ சோகிக்க வேண்டா -என்று
அருளிச்  செய்த சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே கிடக்கும்

கூற்றம் -வர்ணாஸ்ரம தர்ம நிஷ்டரில் வ்யாவ்ருத்தி
(ஆத்ம ஸ்வரூபம் பகவத் ஸ்வரூபம் உணர்ந்து அதன் படி நிஷ்டை
உபாயாந்தரங்கள் இல்லாமல் இருப்பது )
கொடு வினை -த்ருஷ்ட அத்ருஷ்ட காம்ய பரரில் வ்யாவ்ருத்தி –
(ப்ராப்யாந்தரங்கள் இல்லாமல் இருப்பது )
இவை இரண்டும் பிரபன்னனுக்கு இல்லை -என்றபடி

ஆயன் இத்யாதி –
அவனுடைய திருநாமங்கள் ஹிருதயத்தில்-கிடக்கும் எனக்கு
அதாவது –
தத் விஷய ஜ்ஞானம்-
அவன் வார்த்தை -(மாம் -அஹம் )
அவன் விஷயமான திரு நாமம் -இரண்டு அர்த்தங்களும் உண்டே-

(ஆற்றம் கரைக் கிடக்கும் கண்ணன் -மாமின் அர்த்தம்
கடல் கிடக்கும் மாயன் -அஹமின் அர்த்தம் )

(ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –3-7-14-

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–-நான்முகன் திருவந்தாதி-68-

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே—திருவாய் மொழி–10-2-1-

காவலில் புலனை வைத்து கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகர் உளானே –திரு மாலை–1-

வெள்ளை நீர் வெள்ளத்து அளைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே—-ஸ்ரீ பெரிய திருமொழி–8-10-7-

அப்பிள்ளை உரை
திருப்பாற் கடலிலே ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயனாகக் கொண்டு
ஆச்சர்ய குண யுக்தனாய் கண் வளர்ந்து அருளும்
அவ்வளவு போக முடியாத- பின்பு உள்ளவருக்காக
திருக் காவேரிக் கரையிலே கபிஸ்தலத்தில் கண் வளர்ந்து அருளும் அனுக்ரஹ சீலனான கண்ணன்
திருத்தேர் தட்டிலே
அர்ஜுனனை வியாஜீ கரித்து
மாம் ஏகம் –அஹம்-நீ பற்றுவதும் உபாயம் இல்லை –சரம ஸ்லோகார்த்தம்
நிரந்தர அனுசந்தான விஷயமாகக் கொண்டு என் உள்ளத்தில் இருக்க
எனக்கு மிருத்யு வந்து கிட்டாமைக்கும்
அதுக்கு அடியாக கொடிய பாபங்கள் வந்து கிட்டாமைக்கும்
அநந்தரம்
அநர்த்தம் என்று பேர் பெற்றவை வாராமைக்கும்
அபவாதங்கள் வந்து கிட்டாமைக்கும் -உபாயம் அறிந்தேன்
தீ வினைகள் அனைத்தும் வாராமைக்கு உபாயம் அறிந்தேன் -என்றுமாம்

————————————————————————–

(எனக்கு ஒரு தீங்கும் இல்லை என்றார் கீழே
எனக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை என்கிறார் இதில்
எனக்கு ஒரு ரக்ஷகர் இல்லை என்று சொல்லிக் கொள்ளும் சர்வேஸ்வரனும் ஒப்பு இல்லை )

அப்பிள்ளை உரை அவதாரிகை
சரம ஸ்லோகத்தில் தேவரீர் அருளிச் செய்த படி
உபாயாந்தரங்களை பற்றற விட்டு (ஓட்டை ஓடமும் ஒழுகல் ஓடமுமாகவே இருக்குமே இவை )
தேவரீரையே நிரபேஷ உபாயமாகப் பற்றி நிர் பரராய் இருக்கும் எனக்கு
உபய விபூதியிலும் ஒப்பார் உண்டோ

(நித்யர் ப்ராப்யம் கை புகுந்தவர் தானே
உம்மை உபாயமாக பற்றாதார் எனக்கு ஒப்பாக மாட்டார்களே
எம்பெருமான் ரக்ஷகர் என்று இருக்கும் -உபாய அத்யாவசியம் உள்ள எனக்கு யார் ஒப்பு ஆவார்
இங்கு உள்ளாருக்கு திட அத்யவசாயம் இல்லை
அங்கு உள்ளாருக்கு அது தேவை இல்லை
மற்றைய ஆழ்வார்கள் அவனே ரக்ஷகன் என்று அந்வய மாகவே மிக்கு அருளிச் செய்ய
நானே உன்னை ஒழிந்த ரக்ஷகர் அல்லர் என்று வியதிரேக மாகவே மிகவும் அருளிச் செய்துள்ளேன்
ஆகவே அவர்களும் எனக்கு ஒப்பு இல்லை
உறையில் இடாத ஆழ்வார் இவர் ஒருவரே – )

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

பதவுரை

புனம்–தன்னிலத்திலே வளர்கிற
காயா–காயாம்பூவினுடைய
வண்ணனே–நிறம் போன்ற நிறமுடைய பெருமானே!
எனக்கு–(உன்னுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்ர பூதனான) எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே–ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்? (எவருமில்லை)
எம்பெருமான்–ஸர்வேச்வரனாகிய நீயும்
தானே தனக்கு ஆவான் அல்லால்–தனக்குத் தானே ஒப்பாயிருப்பவனே யன்றி
மற்று–எனக்கு ஒப்பாக வல்லையோ?
உன்னை பிறர் அறியார்–நான் தவிர வேறொருவரும் உன்னை யறிய மாட்டார்கள்,
என் மதிக்கு–(உன்னை நன்றாக அறிந்திருக்கிற) என்னுடைய புத்திக்கு
விண் எல்லாம் விலை உண்டோ–மேலுலக மெல்லாம் கூடினாலும் ஒப்பாகப் போருமோ?

எனக்கு ஒப்பார் ஒருவர் யார் உண்டு
மேலும் ஸர்வேஸ்வரனும் தான் தனக்கு ஒப்பாமது ஒழிய எனக்கு ஓப்பான் அல்லன்
என் புத்திக்கு பரமபதம் எல்லாம் கூடத் தான் விலை யாகுமோ
தன்னிலத்தில் நின்ற காயாம்பூ போன்ற திருமேனியை யுடையவன்
உன்னை வேறே ஒருவர் அறியார் –

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே-
எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற எனக்கு-ஒருத்தர் எதிர் உண்டோ –

எம்பெருமான் தனக்காவான் தானே மற்று அல்லால் –
ஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே
அவனும் எனக்கு ஒப்பு அன்று –

புனக் காயா வண்ணனே யுன்னைப் பிறர் அறியார்
ஸ்ரமஹரமான வடிவை உடைய நீ-ரஷகன் அல்லை யாகிலும் விரும்பப்படும் உன்னை
அசலார் அறியார் –

என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ விலை –
சம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-
விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –

(ரக்ஷகத்வத்திலே உனக்கு ஒப்பார் இல்லையோ பாதி
ரஷ்யத்வத்தில் எனக்கு ஒப்பார் இல்லை
ரக்ஷகன் அல்லாமல் ஹிம்சிப்பாய் ஆகிலும் வடிவு அழகு அறிந்து அகல மாட்டாத என்னை ஒழிய
இவ்வுலகில் வேறே ஒருவரும் உன்னை அறியார்
இருள் தரும் மா ஞாலத்தில் இருந்து இப்படி உன்னை அறிந்த எனக்கு நித்ய முக்தர்களும் ஒப்பார் ஆவாரோ
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே–திரு விருத்தம் –79-
இனி யாவர் நிகர் அகல் வானத்தே –திருவாய் –4-5-8-
நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே –திருவாய் –6-4-7-
எனக்கு இவ்வுலகம் நிகரே –திருவாய் –6-4-2-
ஒருவர் நம் போல் வருங்கேழ்பவர் உளரே -திரு விருத்தம் —-44-
பகவத் சம்பந்தம் அடியாக வரும் அஹங்காரம் உபாதயமே -)

அப்பிள்ளை உரை
உன்னாலே உன்னைப் பெருமது ஒழிய
யதா பூத ஞானத்தை பரிபூர்ணமாக உடைய எனக்கு
சத்ருசமாய் இருப்பார் உபய விபூதியிலும் உண்டோ
விபூதிமானான ஸர்வேஸ்வரன் ரக்ஷகனான தன் பெருமைக்குத் தானே ஒப்பாவான் ஒழிய
நான் -ஒருவரையே ரக்ஷகனாக உடைய ரஷ்யன் -என்று சொல்லிக் கொள்ளும் -எனக்கு ஒப்பாக மாட்டான்
தன்னிலத்திலே காயாம்பூ போல் இருண்டு குளிர்ந்த நிறமும் வடிவும் கொண்ட உன்னை
வேறே ஒருவரும் அறிய மாட்டார்கள் (ப்ராப்யமும் பிராப்பகமும் நீயே என்று அறியாதவர்கள் )
தம் பேற்றுக்கு தம் கச்சம் கட்டி யத்னம் பண்ணும் சம்சாரிகள் அறிவிலிகள்
(தனக்குத் தானே செய்யும் நன்மையையும் தீமையே போல் விலக்காகுமே )
நீயே ரக்ஷகன் என்று நாடொறும் நாகணை மிசை நம்பிரானே சரண் என்று ஏக சிந்தனையாய்
இருக்கும் எனது ஞானத்துக்கு விரோதி பிரசங்கமே இல்லாத அங்குள்ளார் ஒப்பு இல்லையே
எல்லார் பக்கலிலும் எனக்கு நிகராக – ஸத்ருச மூல்யமாக-விலை மதிப்புள்ள -சொல்லத் தக்க உள்ள வஸ்து உண்டோ
ப்ராப்ய ஏக பரராய் இருக்கும் அவர்கள் இடம் ப்ராபக-உபாய – பாவம் விலை செல்லப் பெறாமல்
குமரி இருந்து போம் அத்தனையே –
விண்ணுளாரிலும் சீரியர் இத்யாதிகள்

———————————————————–

என்னோடு ஒப்பார் உண்டோ என்று சொல்லுவான் என் என்னில்-
இது அன்றோ நாடு அனர்த்தப் படுகிறபடி என்கிறார்-

அப்பிள்ளை உரை அவதாரிகை
என்னோடு ஒப்பார் உண்டோ என்று சொல்லுவான் என் என்னில்
இது வன்றோ நாடு அநர்த்தப் படுகிறபடி -என்கிறார்

விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்காட் பலி திரிவர் தக்கோர் -முலைக் கால்
விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
கடமுண்டார் கல்லாதவர்–52-

பதவுரை

தக்கோர்–அறிவு முதலியவற்றால் பெருமை பெருந்தியவராகத் தங்களை அபிமானித்திருக்கும் நீசர்கள்-ஷேப யுக்தி –
விலைக்கு ஆள் படுவர்–ஜீவனத்திற்காகப் பிறர்க்கு அடிமைப் பட்டிருப்பர்கள்
விசாதி ஏற்று உண்பர்–(மிருத்யு தானங்கள் வாங்கும் முகத்தால் பிறருடைய) வியாதிகளைத் தாம் வாங்கி அநுபவிப்பர்கள்
தலைக்கு ஆள் பலி திரிவர்–ஒருவன் தலைக்காகத் தம் தலைமை அறுப்பதாகச் சொல்லி நர பலியாகத் திரிவர்கள்
முலைக்கால் விடம் உண்ட வேந்தனையே–(பூதனையின்) முலையிடத் துண்டான விஷத்தை உட்கொண்ட பெருமானையே
வேறுஆ எத்தாதார்–விலக்ஷணமாகத் துதிக்க மாட்டாதவர்களாய்
கல்லாதவர்–அறிவு கெட்டவர்களாய்க் கொண்டு
கடம் உண்டார்–பாபங்களை யநுபவிப்பவர்களாயிரா நின்றார்கள்.

புத்திமான்களாக அபிமானித்த துர் மானிகள் கிரயத்துக்கு அடிமைப்பட்டு இருப்பார்கள்
கால தானாதிகளை வாங்கி வியாதிகளை அனுபவிப்பார்கள்
ஒருவன் தலைக்காக –தலை அறுக்கிறேன் என்று -நரபலியாய்த் திரிவார்கள்
வித்ய அத்யயனம் பண்ணாத மூடர்கள்
ஸ்தனத்தில் இருந்த விஷத்தை அமுது செய்த ராஜாவாகிய ஸ்ரீ கிருஷ்ணனை
விலக்ஷணமாக ஸ்தோத்ரம் செய்யாதவர்களாய் பாப பலத்தையே அனுபவிப்பார்கள் –

விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர் தலைக்காட் பலி திரிவர் தக்கோர் –
1-ஈஸ்வர சேஷமாய்-அனன்யார்ஹமான வஸ்துவை வேறு சிலர்க்கு சேஷம் ஆக்கியும்
(வாழாட் படாமல் கூழாட் பட்டு உழன்றும் )
2-ஜீவனத்துக்காக பிறர் உடைய வியாதிகளை-நீர் வார்ப்பித்துக் கொண்டு
3-ஒருத்தன் பிழைத்தால் தலை யரிகிறேன் என்று-பிரார்த்தித்து பலி த்ரவ்யமாய்
திரிந்தும் அன்றோ படுகிறது

தக்கோர் -என்று ஷேபோக்தி

முலைக் கால் விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
இவர்கள் குறித்துச் செய்வது
ஸ்வ விரோதியைப் போக்குமவனை ஏத்தாமை
(அவனை ஸ்தோத்ரம் செய்வது மட்டும் குறிப்பாக விட்டு
இவனால் ரக்ஷிக்கப்படும் அவர்களையே ஸ்தோத்ரம் செய்து )

கடமுண்டார் கல்லாதவர் –
தேத் வகம் புஞ்சதே பாபா -கீதை -3-13-
என்னும்படியே பாபத்தை புஜிக்கிறார்கள் –

அன்றிக்கே
கொடுக்க உடல் இன்றிக்கே இருக்க-
தனிசு வாங்கி ஜீவிக்குமவர்கள் என்னவுமாம் –

கடமுண்டார்–
கடன் பாபமாய் -அத்தை அனுபவித்தல்-

(ந மாம் துஷ்க்ருதிநோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா:
மாய யாபஹ்ருத ஜ்ஞாநா ஆஸுரம் பாவமாஸ்ரிதா:-கீதை -7-15-

மாயயா அபஹ்ருத ஜ்ஞாநா-மாயையினால் ஞானம் அழிந்தோர்,
ஆஸுரம் பாவம் ஆஸ்ரிதா:-அசுரத் தன்மையை பற்றி நிற்போர்,
நராதமா: துஷ்க்ருதிந: மூடா:-மனிதரில் தாழ்ந்தவர்களும் இழிவான செயல்களை புரிகின்றவர்களுமான அறிவிலிகள்,
மாம் ந ப்ரபத்யந்தே-என்னைச் சரண் புகார்.

தீமை செய்யும் மூடர், மனிதரில் கடைப்பட்டார், மாயையால் ஞான மழிந்தோர்,
அசுரத் தன்மையைப் பற்றி நிற்போர்,(இனையோர்) என்னைச் சரண் புகார்.)

அப்பிள்ளை உரை
அறிவுடைமைக்குத் தங்களைப் போல் தகுதியானவர் இல்லை என்று அபிமானம் மிக்கு ஹேயரானவர்கள்
எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷ பூதரான தங்களை
ஊதியங்களுக்கு சிலருக்கு எழுதிக் கொடுத்து அடிமைப்படுவார்கள்
பிறருடைய வியாதிகளை கால தான ப்ரதிஹ்ருத முகத்தாலே -நீர் வார்த்திக் கொண்டு வயிறு வளரா நிற்பார்கள்
ஒருவன் பிழைத்தால் தலை அறுத்துக் கொடுக்கக் கடவராய் தேவதாந்தரங்களுக்கு பலியாக
இப்படி தத்வ ஸ்தியை சாஸ்த்ர முகத்தால் கற்று அறிய மாட்டாத அவிசேஷஞ்ஞராய்
விடப்பால் கொடுத்த பூதனா சம்ஹாரம் செய்து அருளி -விரோதி நிரசன சாமர்த்தியம் உள்ள
ஜகத்துக்கு ராஜாதி ராஜனான தன்னை நோக்கித் தந்த உபகாரத்துக்காக -அவனையே
யாவ்ருத்தமாக -வேறாக- குறிப்பிட்டு -ஏத்த மாட்டாமல்
அவன் தன்னை வழி படக் கொடுத்த கரண களேபரங்களைக் கொண்டு அந்நிய பரராய் இருக்க
கொடுக்க முதல் அற்று இருக்க தனுசு -கடன்- வாங்கி ஜீவித்து இருப்பவர்களோடே ஒப்பார்கள் ஆவார்
கடன் உண்டார் என்றது
தேத் வகம் புஞ்சதே பாபா -கீதை -3-13-என்கிறபடியே
பாபத்தை புஜிப்பவர்கள் ஆவார்

————————————————————————–

(எனக்கு யார் நிகர் ஒருவர் என்னும் நிலையில் உள்ள நீர்
விலைக்கு ஆள் படும் சம்சாரிகளான நாங்களும் உஜ்ஜீவிக்க உபாயம் அருளிச் செய்ய வேண்டும்
என்று பிரார்த்திக்க
தேவதாந்த்ர சம்பந்தம் இல்லாமையே என் பெருமைக்கு ஹேது –
அதுவே உங்கள் சிறுமைக்கும் ஹேது –
அதை அறுத்துக் கொள்ளுங்கோள் என்று உபதேசிக்கிறார் இதில் -)

அப்பிள்ளை உரை -அவதாரிகை
ப்ரபந்ந ஜன ரக்ஷணம் ஆகிற மஹா தீக்ஷை -நித்ய தீஷிதனாக இருக்கும்
சக்ரவர்த்தி திருமகனை ஒழிய வேறே சிலரை ஆஸ்ரயணீயராக கொள்ளேன்
நீங்களும் சூத்ர தேவதையை சமாஸ்ரயணீயராக கொள்ளாமல்
உஜ்ஜீவித்து போருங்கோள் என்கிறார் –

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த
னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத
தேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு-53–

பதவுரை

கல்லாதவர் இலங்கை–அறிவு கெட்ட ராக்ஷஸருடையதான இலங்கா புரியை
கட்டு அழித்த–அரணழித்த
காகுத்தன் அல்லால்–இராமபிரானை யல்லது
(சரணாகத ரக்ஷண தீஷிதம் பிரதி ஸம்பன்னம் -ஏதத் விரதம் மம )
ஒரு தெய்வம்–வேறொரு தெய்வத்தை
யான் இலேன்–நான் தெய்வமாகக் கொள்வேனல்லேன்
பொல்லாத தேவரை–கண் கொண்டு காணக் கூடாத தேவதைகளையும்
தேவர் அல்லாரை–(உண்மையில்) தெய்வத் தன்மை யற்றவர்களாயும்
திரு இல்லா தேவரை–பிராட்டியின் ஸம்பந்த மல்லாமலே தேவரென்று பேர் சுமப்பவர்களாயும் வுள்ள சிலரை
தேவு–தெய்வங்களாக
தேறேல்மின்–நீங்கள் நினைக்க வேண்டா.

அஞ்ஞானிகளான ராக்ஷஸர் களுடைய இலங்கையை வரம்பு அழித்த சக்ரவர்த்தி திருமகனை ஒழிய
நான் வேறே ஒரு தேவதையை யுடையேன் அல்லேன்
க்ரூரர்களாய்த் தபஸ்ஸினால் தேவதைகளாயினும் ஸ்வதஸ் ஸித்தமான தேவத்வம் இல்லாதவர்களாய்
ஸ்ரீ லஷ்மீ சம்பந்தம் இல்லாதவர்களான ருத்ராதிகளைப் ப்ராப்யராக நினைக்க வேண்டாம் –

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –
கற்றான் ஒருத்தன் உளனாக-அவனைப் புறப்பட விட்ட ஜ்ஞான ஹீநருடையதான இலங்கையை
அரண் அழித்த சக்கரவர்த்தி திருமகனை ஒழிய
வேறு ஓன்று-சமாஸ்ரயணீயமாக நினைத்து இரேன் –
பாவோ நான்யத்ர கச்சதி -என்கிற திருவடியைப் போலே இவரும்

பொல்லாத தேவரைத்
ஸூபாஸ்ரயமாக விருபாஷன் தொடக்கமானவரை-
ஆஸ்ரயிக்கப் போமோ

தேவர் அல்லாரைத் –
அத்தை பொறுத்து ஆஸ்ரயித்தாலும்
கட்டக் குடியன் –
அப்ராப்த ஸ்தலம் –

திரு இல்லாத் தேவரைத்
மோஷ பிரதானவன் ஸ்ரீ ய பதியன்றோ –

தேறேல்மின் தேவு –
ப்ராப்த ஸ்தலம் அல்லாமையே யன்று-
ஆஸ்ரயித்தால் பிரயோஜனம் இல்லை என்கை –

தேறேல்மின் தேவு —
முகப்பிலே புத்திர பஸ்வாதிகளை தருமத்தைக் கண்டு-
ஆஸ்ரயணீயராக புத்தி பண்ணாதே கொள்ளுங்கோள்

(கட்டக் குடியன் -ஆபாத தயா குடி போலே-தோற்றி வரி இறுக்க மாட்டாதவன்
எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லை-
கட்டம்–கஷ்டமாய் தரித்திரன் என்றபடி
குடி போலே இருக்கையாலே எடுக்கவுமாம்
தரித்திரன் ஆகையாலே கழிக்கவுமாய் இருக்கும் அங்கு
இங்கு அபராதம் ஆகையாலே எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லை
தேவு -அல்ப அஸ்த்ர பல பரதன் என்றபடி)

(கல்லாதார் இலங்கை
இஹ சந்தோ ந வா சந்தி -என்று பிராட்டியும் இங்கு கற்றவர்கள் இல்லையோ என்று
அதிசங்கை பண்ணும் படியான தேசம்
இங்கு கல்வியாவது
சா வித்யா யா விமுக்தயே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-41- என்று மோக்ஷத்துக்கு உபயோகப்படுவதே கல்வி யாகும்
அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி வீட்டைப்பண்ணி விளையாடும் விமலன்
அவனுக்கு விளையாட்டுக்கு உபகாரணமாய் இருப்பார் தேவர் ஆவாரோ –திவு கிரீடா
திவு விஜிகிஷா -புறமுதுகு ஓடியும் ஹூங்காரத்தாலே ஸ்தம்பித்தும் உள்ளாரோ தேவர்
திவு -வியவஹார -கிளிப்பிள்ளை போல் அவன் ஒது விக்க உச்சரிப்பவரோ தேவர்
திவு -த்யுதி -தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி -ஒளியை இரவல் வாங்கி மினுங்கும் அவர்களோ தேவர்
திவு -ஸ்துதி -ஸ்துதிக்க தகாத ரூப குண சேஷ்டிதங்கள் உள்ளாரோ தேவர்
திவு மோத -பிண்டியார் மண்டை ஏந்தி துன்புற்றவரோ தேவர்
திவு மத -பாணாஸுர வருத்தன்காந்தத்தில் கர்வம் ஒடுங்க ஓடினவரோ தேவர் –
திவு காந்தி -உரு பொலாத வரோ தேவர்
திவு கதி -அசுரர்களால் அலைப்புண்டு கதி தேடி ஓடுபவரோ தேவர்
ஸ்ரத்தாயா தேவோ தேவத்வம் அஸ்நுதே
ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ன்யவ்
கள்ளி வ்ருக்ஷத்தை மஹா வ்ருக்ஷம் என்னுமா போலே மஹா தேவன் -என்று பெயர் சுமந்து திரிகின்றாரே
இவர்கள் அளிக்கும் அல்ப பலன்களும் மயைவ விஹிதான் ஹிதான் -என்கிறபடியே
அவற்றையும் சர்வேஸ்வரன் மூலமாகவே தருகிறார்கள் – )

அப்பிள்ளை உரை
முதலிலே கல்வியில் புதியது உண்டு அறியாத அறிவு கேடர் அடங்கலும்
குளவிக் கூடு போல் திரண்டு வர்த்திக்கும் இலங்கையை அரண் அழித்துப் பொகட்ட காகுத்த
ஆண் பிள்ளையைத் தவிர ஆஸ்ரயணீயராக கொள்ளேன்
ஆன பின்பு நீங்களும்
காணிலும் உருப்பிலா செவிக்கிலாத கீர்த்தியார்
தந்தை தலையைக் கிள்ளி
பத்மாசூரனை கண்டு புறமுதுகிட்டு
பாணாசூர யுத்தம் புறமுதுகு ஓடி
பத்ரம் புஷபம் தோயம் இவன்
ஸூபாஸ்ரயமும் இல்லை
ஏறிட்டு பார்க்க ஒண்ணாத படி
கட்டின தலையும் பூசின சாம்பலும் நெற்றிலே கண்ணும் உடையனாய்
தானே தலையை ஆஹுதி பண்ணி பெற்ற பதவி பெற்றவன்
ஸ்வா பாவிக தெய்வத்வம் ஒருவனுக்கு மட்டுமே
ஸ்ரத்தயா தேவத்வம் அஸ்னுதே -என்கிறபடியே
ஸ்வ சம்பந்தத்தால் தேவத்வம் பூண் கட்டிக் கடவ ஸ்ரீ சம்பந்தம் இன்றிக்கே இருக்கும்
இவர்களை கொள்ளாமல் உஜ்ஜீவியுங்கோள்
திரு இல்லாத் தேவர் பொல்லாத தேவராயுமாயும் தேவர் அல்லாதாராயுமே இருப்பார்கள் –

————————————————————————–

(பொல்லாத தேவர் கோஷ்ட்டியிலே அன்றோ உபேந்திரனும் விஷ்ணுவும் –
இவர்கள் உடன் ஸஹ படிப்பார்கள் என்ன
பிரகார பிரகாரி பாவம் அப்ருஹத் ஸித்த விசேஷணம் -பூ மணம் -ரத்னம் ஒளி போல்
ஸர்வ அந்தர்யாமியான நாராயணனே என்று அறியாத
நீங்கள் படித்த சாஸ்திரங்கள் எல்லாம் வீணாயின என்று அவர்களை நிந்திக்கிறார் இதில் )

அப்பிள்ளை உரை-அவதாரிகை
பிரம்மா ருத்ராதி ஸ்தாவர அந்தமாக ஸமஸ்த வஸ்துக்களும்
எம்பெருமானுக்கு பிரகார தயா சேஷம் என்று அறியாதவர்கள்
கற்றது அடங்கலும் காட்டுக் கத்தல் (கூச்சல்)போலே ஆகுமே-

தேவராய் நிற்கும் அத்தேவும் அத்தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-

பதவுரை

தேவர் ஆய் நிற்கும் அத்தேவும்–(அக்நி இந்திரன் முதலிய) தேவதைகளாய்க் கொண்டு நிற்கிற தெய்வமும்,
முது புணர்ப்பும்–அநாதியான நிலைமையும்
யாவர் ஆய் நிற்கின்றது எல்லாம்– மற்றும் மனிதர் முதலியன வாய்க்கொண்டு நிற்கிற ஸகல பதார்த்தங்களும்
(ஆகிய எல்லா சேதன அசேதனங்களும் )
அத் தேவரில்–அந்த தேவர்களுக்குள்ளே
மூவர் ஆய் நிற்கும்–த்ரிமூர்த்தியாய் நிற்பதாகிற
நெடுமால் என்று ஓராதார்–ஸர்வேச்வர ப்ரகாரமே என்று ஆராய்ந் துணர மாட்டாதவர்கள்
கற்கின்றது எல்லாம் கடை–கற்ற கல்வி மிகவும் தாழ்ந்ததாகப் போகும் பேசும் பேச்செல்லாம் உபயோகமற்றது.

இந்திராதி தேவர்கள் நடுவே நிற்கும் அம் மேன்மையையும்
அந்த தேவர்களில் பிரதானரரான பிரம்மா விஷ்ணு ருத்ரர் என்ற மூவரில் நடுவே நின்ற பிரதம அவதாரமான விஷ்ணு ஸ்திதியையும்
ஸமஸ்த வஸ்துக்களும் நிர்வாஹகானாய் இருக்கும் தன்மை எல்லாவற்றையும்
ஸர்வேஸ்வரன் என்று அறியாதவர்கள் அப்யஸிக்கிற வித்யைகள் எல்லாம் வியர்த்தம் —

ஆதித்ய இந்த்ராதிகளுக்கு நடுவே நிற்கிற நிலையும்-
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நடுவே
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதம அவதார -என்கிற-பிரதம அவதாரத்தையும்
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களிலும்-சேதன த்வாரா ப்ரவேசித்து
அவற்றுக்கு வஸ்துத்வ நாம பாக்த்வம்-உண்டாம்படி நிற்கிற நிலையும்
சர்வாதிகனான ஈஸ்வரன் என்று அறியாதவர்கள்-
பரக்க கற்கிறது எல்லாம் சம்சார ப்ரவர்தகர் ஆகைக்கு –

(உபேந்திரா வாமன அமோக பிராம்ஸூ ஊர்ஜித அதீந்திரா -ஏழு திரு நாமங்கள் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் உண்டே
இந்த்ரனுக்குள் நடுவே இருந்தாலும் -இந்திரனையும் தாண்டி அதீந்திரா
ஸ்ருஷ்டி ஸ்திதி அந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத் மிகாம்
ஸ ஸம் ஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்தன-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-66-
புணர்பு -சங்கல்பம் -இங்கு சங்கல்பம் அடியான அவதாரங்களை சொல்லுகிறது
த்ரிபாத் தூர்தவ உதைத் புருஷ பாதோ அஸ்யே ஹாபாவாத் புந -சங்கல்பித்து அநிருத்தன் விஷ்ணுவாக அவதாரம்
சம்பவாம் ஆத்ம மாயயா
விரிஞ்சு கிரிஞ்ச மத்யே -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -ஒற்றுமையைக் காட்டி உனது ஸ்வரூபத்தை மறைத்து
அதே அவதாரத்தில் ஸத்வ குண வளர்த்து -திரிவிக்ரமனாக மேம்பட்டவனாக -தத்வ ப்ரவர்த்தகன் கிருபா பரிபாலனார்த்தே
அநிருத்தன் விஷ்ணுவாக அவதாரம் ஸ்ருதி
ஏக ஏவ ஜனார்த்தனன் படைக்க ப்ரஹ்மாவாகவும் -இப்படி அந்தர்யாமித்வம் -)

அப்பிள்ளை உரை
முப்பத்து மூவரான அக்னி இந்திராதி தேவர்களாய்க் கொண்டு ஆராத்யராய் நிற்கிற அந்த முதன்மையும்
அந்த தேவர்களில் வைத்துக் கொண்டு
பிரம்மா ருத்ரராக நிற்கிற அந்தராத்மதயா பழையதாக ஸ்ருஷ்டியாதிகளும்
மற்றும் மனுஷ்யாதிகளான சகல பதார்த்தங்களுக்கும் அந்தராத்மா தயா நிற்கும்
சர்வாதிகனான சர்வேஸ்வரனுக்கு பிரகாரமாக சேஷப்பட்டு இருப்பார்கள் என்று
அநுஸந்தியாதார்கள் பரக்க கற்ற வித்யைகள் எல்லாமே
சம்சாரத்தை வளர்க்கவே உறுப்பாகும் என்பதால் சாலத் தண்ணியதாக இருக்கும்
பகவத் விஷயம் தவிர மற்ற வித்யைகள் செருப்புக் குத்த கற்றவோபாதி பிரயோஜனம் இல்லாத கல்வியே யாகும்
(அனைத்திலும் என்னாலே வியாபிக்கப்பட்டுள்ளது -ஆத்ம தத்வம் அவிநாசி அழிவில்லாது -ஆத்மாவும் எனக்கு பிரகாரம் -கீதை
வாஸூ தேவனை இவ்வாறு பிரகாரம் என்ற உண்மை அறியாமல்
சதுர் வேதம் கற்ற விப்ரரும் குங்குமப்பூ சுமந்த கழுதை போலே ஆகும் )

————————————————————————–

(பர உபதேசம் செய்தும் திருத்துவார் இல்லாமையால் அவன் இடமே முறை இடுகின்றார்
விலைக்கு ஆள் படுவார் என்று சம்சாரிகளைக் கண்டு துன்புற்றார்
இதில் யாகாதிகளைப் பண்ணி ஸ்வர்க்காதி அல்ப பலன்களுக்காக
தேவதாந்த்ர பஜனம் பண்ணுவார்களைக் கண்டு துன்புறுகிறார் )

அப்பிள்ளை உரை -அவதாரிகை
சூத்ர தேவதா பஜனம் பண்ணி சூத்ர பலத்தைப் பெற்றுப் போவார் உண்டு
இத்தனை போக்கி
சர்வாதிகனான உன்னை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஒருவரும் இல்லையே என்கிறார் –

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் -55-

பதவுரை

அமரர் கடை நின்று–(இவ் வுலகத்தவர்கள்) தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று
நாளும்-நெடுங்காலம் வரையில்
கழல் தொழுது–(அவர்களுடைய) காலில் விழுந்து (பரம புருஷார்த்தம் பெற மாட்டாமல்)
இடை நின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (ஸ்வர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்
குடை நின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ் வுலகத்தைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியை யுடைய ஸர்வேஸ்வரனே!
நின் அடியை–உனது திருவடிகளை
ஓத வல்லாரவர் ஆர்–அநுஸந்திக்க வல்லார் ஆரேனுமுண்டோ? (யாருமில்லையே!)

தேவதாந்த்ரங்களின் வாசலில் நின்று பிரதி தினமும் அவர்கள் பாதங்களை ஆஸ்ரயித்து
மோக்ஷத்துக்கும் சம்சாரத்துக்கும் நடுவில் உள்ள ஸ்வர்க்காதி ஸூகமுடையவர்கள்
பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கிற ஜலத்தை யுடைய சமுத்திரம் போன்ற திருமேனியை யுடைய சர்வாதிகனே
உன் திருவடிகளை அறிந்து ஸ்தோத்ரம் பண்ணத் தகுந்தவர்கள் யார்

தேவதாந்தரங்கள் வாசலிலே நின்று
சர்வேஸ்வரன் பக்கல் பண்ணும் ப்ரணாமாதிகளை
(ஆதி ப்ரதக்ஷிணம் நமஸ்காரம் திரு நாம சங்கீர்த்தனம் போல்வன)
யவர்கள் பக்கலிலே பண்ணும்
சம்சார சுகமும் இன்றிக்கே-
நிரதிசயமான மோஷ சுகமும் இன்றிக்கே இருக்க-
ஸ்வர்க்க சுகத்தை உடையர் ஆனவர் –
ஒரு பிரயோஜனம் பெறா விடிலும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் படி
ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-
திருவடிகளை ஏத்த வல்லார் ஆர் -(ஒருவரும் இல்லையே என்கிறார்)

ப்ரயோஜனாந்தரங்களைக் கொண்டு ஒழிகை ஒழிய
நின்னடியை ஏத்த வல்லார் ஒருவரும் இல்லை என்றபடி –

(இஷ்வாகு வம்ஸ திரிசங்கு வ்ருத்தாந்தம் அறிவோம் -மார்வில் இட்ட பூணல் வாராயே விட்டதே )

(புடை நின்ற நீரோத மேனி நெடுமாலே
அர்ச்சாவதார பர்யந்தமாக நின்று அருளி கடல் போல் சகல தாப ஹரமாய்
அத்யந்த ஸூகம் அளிக்கும் உனது திரு மேனியை
விலைக்கு ஆள் பட்டவர்களும்
இடை நின்ற இன்பத்தாரும் ஸ்துதிக்க வல்லார்களோ )

அப்பிள்ளை உரை
பிரம்மா ருத்ராதிகள் லோக வாசலிலே
அவர்கள் ஸந்துஷ்டராய் முகம் பார்க்கும் அளவும் நின்று துவண்டு
(இவனைப் போல் ஸூ ஆராதர் அல்லவே )
அவர்கள் கால் கீழே தலையை மடுத்து நாள் தோறும் ஆஸ்ரயித்து
ஷீனே புண்யே மனுஷ்ய லோகம் அடைய வேண்டும்
(இதுவே இடைப்பட்ட ஸ்வர்க்க ஸூ கம்
நடுவிலே சிக்கி
நெடுமாலே -விளிச் சொல் )
சுற்றி எங்கும் சூழ்ந்து இருக்கும் ஜலத்தை யுடைத்தான கடல் போல்
ஸ்ரமஹரமான வடிவை யுடைய சர்வாதிகனானவனே
(தாபத் த்ரயம் போக்கி அருளும் -மாலே அதிகன் -நெடுமால் -சர்வாதிகன் )
ரஜஸ் தமஸ் ப்ரக்ருதி மயமான அதிகாரிகள் பின்ன ருசி யுடையவர்களாகக் கொண்டு
ஸூத்த ஸத்வ மயமான சர்வாதிகனான உன்னுடைய திருவடிகளை
கீர்த்தனம் ஸ்தோத்ரம் பண்ணி ஆஸ்ரயிப்பார் யார் –
(வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் மணி வண்ணன் இவன் ஒருவனே )

————————————————————————–

(ஸர்வேஸ்வரனோடு ஒத்தவர் யாரும் இல்லை என்று
ருத்ரனை ஆஸ்ரயிப்பார்களைப் பார்த்து உபதேசிக்கிறார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
சூத்ர பல ப்ரதரரான ருத்ராதிகள் தங்களை பற்றினாருக்கு ஆபத்து வந்தால்
கை கழிய விட்டு கடக்க நிற்பார்கள் என்னும் இடத்தை
பாணாசூர யுத்த முகத்தால் உபபாதிக்கிறார் தெளிய வைக்கிறார்

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு-56-

பதவுரை

அவர் இவர் என்று இல்லை–பெரியார் சிறியார் என்று ஒருவாசி யில்லை
(அவர் இவர்-தூரமான தேவர்களும் கிட்ட உள்ள சம்சாரிகளும்
அறிவாளிகள் அறிவற்றவர் -புத்திக்கு எட்டாதவர் எட்டுபவர் என்றுமாம் )
அனங்க வேள் தாதைக்கு–(ப்ரத்யுமனுக்கு )காமனுக்குத் தந்தையான் கண்ண பிரானுக்கு
(ஸாஷாத் மன்மத மன்மதன் இவனே )
எவரும்–ஒருவரும்
எதிர் இல்லை கண்டீர்–எதிர் நிற்க வல்லாரில்லை காண்மின்
உவரிக் கடல் நஞ்சம் உண்டான்–கடலில் தோன்றின விஷத்தை உட் கொண்டவனான சிவன்
(உவரிக் கடல் என்றது –இவனைப் பார்க்க அம்ருதமும் உப்புச் சாறே தான் அன்றோ )
வாணற்கு–பாணாஸுரனுக்கு
கடன் என்று–‘உன்னை ரக்ஷிக்க நான் கடமைப் பட்டவன்‘ என்று சொல்லி
உடன் நின்று–அவனோடு கூடவே யிருந்து
ஒருங்கு தோற்றான்– குடும்பத்தோடே தோற்று ஓடிப் போனான்.

அவர் இவர் என்கிற பேதம் இல்லை
ஸூந்தரனான மன்மதனுக்குத் தகப்பனாரான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஒருவரும் சமானம் இல்லை
சமுத்திரத்தில் பிறந்த விஷத்தை விழுங்கின ருத்ரனும் பாணாசூரனுக்கு ரக்ஷகன் ஆவேன் என்று
ப்ரதிஜ்ஜை பண்ணி -கூடவே இருந்து -பாணாசூரனைப் போலவே தோற்றான் –

அவரிவர் இத்யாதி –
காமனுக்கு உத்பாதகனுக்கு ஒருத்தரும் உபமானம் இல்லாமைக்கு
விசேஷஞ்ஞரோடு
அவிசேஷஞ்ஞரோடு வாசி இல்லாமை கண்டிகோளே

உவரி -இத்யாதி
ஒருத்தரும் இல்லை என்கிறது என் -ஒரு தேவர் இல்லையோ என்னில் –
அவரும் செய்தபடி இது அன்றோ என்கிறார் –
அம்ருத மதன காலத்தில் உண்டான விஷத்தை-கண்டத்திலே தரித்தானான ருத்ரனும்
தன்னை ஆஸ்ரயித்த வாணனுக்கு ஒலக்கத்தில்-ரஷிக்கிறேன் என்று
பிரதிஞ்ஞை பண்ணி-அவன் தானே சாஷியாகத் தோற்றான் –

ஒருங்கு –
ஒருப்படிப்பட வாணனோடு தன்னோடு வாசி யற-

கடன் என்று
கடவன் நிர்வாஹகன் -என்று

மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே –ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–53-

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே -71-

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–ஸ்ரீ திருவாய் மொழி–3-10-4-

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே –ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி – 22- –

அப்பிள்ளை உரை
பெரியார் சிறியோர் என்று ஒரு வாசி இல்லை
அழகாலே நாட்டை வெறுத்துச் செய்யும் காமனுக்கும் உத்பாதகனான கண்ணனுக்கு யாரும் எதிர் இல்லை
எங்கனே என்னில்
அம்ருத மதன சமயத்தில் ஷீராப்பதியில் பிறந்த ஆலகால விஷத்தை உண்ட ருத்ரன்
தன்னை ஆஸ்ரயித்த பாணாசூரனை பூ வாடாமல் ரஷிக்கக் கடவன் என்று ஒலக்கத்திலே ப்ரதிஜ்ஜை பண்ணி
தன் கண்ணாலே தான் கண்டு ஸாக்ஷியாகத் தோற்றான்
கூட நின்று ஒருப் படிப்பட பசலும் குட்டியுமாய் நின்று
நேர் நிற்க மாட்டாதே முதுகு காட்டிப் போனான்
ஆகையால் அணங்க வேள் தாதைக்கு யாரும் எதிர் இல்லை
ஒருங்கு -ஒருப் படப்பட
கும்பிட்டவனோடும் கும்பீடு கொண்டவனோடு வாசி இல்லை
திருப்பாற் கடலை உவரிக் கடல் என்றது
சமுத்திர சாம்யத்தைப் பற்ற
(இவனைப் பார்க்க அம்ருதமும் உப்புச் சாறே தான் அன்றோ –

————————————————————————–

(கீழே தேவதாந்த்ர ஸாம்ய நிரஸனம்
இதில் தேவதாந்த்ர ஐக்ய நிரஸனம்
கடவுள் கல் -நாஸ்திகர்
கல்லும் கடவுளே நம் சம்ப்ரதாயம்
சரீர ஆத்ம பாவம் -பிரகாரி பிரகார பாவம் –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -)

(ப்ரஹ்மா நாராயணா சிவச்ச நாராயணா சேந்த்ர சக்ரச்ச நாராயணா காலச்ச நாராயணா
திசைச்ச நாராயணா விதிசச்ச நாராயணா ஊர்த்த்வஞ்ச நாராயணா அதச்ச நாராயணா
அந்தர் பஹிச்ச நாராயணா நாராயண ஏவேதம்
சர்வம் யத் பூதம் எச்ச பவ்யம் என்று அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே -என்றும்
ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி ஏஷ ஏவ அஸாது கர்ம காரயதி -என்றும்
ததே வா அக்னிஸ் தத் வாயுஸ் தத் ஸூர்யஸ் தது சந்த்ரமா -என்றும்
நாராயண ஏவேதம் ஸர்வம் -என்றும்
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாந் -என்றும்

ஆத்ம ஐக்யமும்
தேவதா ஐக்யமும்
த்ரிமூர்த்தி ஐக்யமும் -ஒருக்காலும் சித்தியாது என்கிற என்ற
ஸ்ருதி அர்த்தம் இதில் அருளிச் செய்கிறார் -)

அப்பிள்ளை உரை -அவதாரிகை
புண்ய பாப பிரமுகமான சகல பதார்த்தங்களும் அவனுக்கு பிரகாரமாயே இருக்கும்
தத் பிரகாரம் இன்றிக்கே இருக்கும் வஸ்து முதலிலே இல்லையே

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

பதவுரை

பேசில்–உண்மை பேசப் புகுந்தால்
பெரு குருந்தம் சாய்த்தவனே–பெரிய குருந்தமரத்தை வேர் பறியத் தள்ளி முறித்த கண்ணபிரானே
ஒருங்கு இருந்த நல் நினையும் தீ வினையும் ஆவான்–உடன் நிற்கும் புண்ய பாபங்களுக்கு நிர்வாஹகன்,
மருங்கு இருந்த–ஸமீபத்திலுள்ள (அந்தரங்கரான)
வானவர் தாம்–தேவர்களும்
தானவர் தாம்–அசுரர்களும்
தாரகை தான்–இப் பூமியும் (தரிப்பதால் தாரகை என்று பூமியைச் சொன்னவாறு )
(ஆகிய இவை யெல்லாம்)
என் நெஞ்சம் ஆனவர் தாம்–என் நெஞ்சினுள் உறைகின்ற ஸர்வேஸ்வரனேயாம்
(மனஸ் ஸ நாராயணா -ஸ்ருதி -உள்ளே உறைந்து இருப்பதால் பூஜ்ய யுக்தி )
அல்லாத்து என்–அந்த ஸர்வேச்வரனல்லாத வஸ்து என்ன இருக்கிறது

பெரிய குருக்கத்தி மரத்தை விழத் தள்ளினவனே
உடன் நின்ற புண்ணியத்துக்கும் பாபத்துக்கும் நிர்வாஹகன்
வர்ணிக்கப் புகில்
அருகு இருக்கிற தேவர்களும் அஸூரர்களும் பூமியும் என் மனஸ்ஸூம் தானேயாய் இருக்கும்
அவனாகாத வஸ்து எது

அவஸ்யம் அனுபோக்யத்வம் -என்கிற-
புண்ய பாபங்களுக்கு நிர்வாஹகனானவனே –
(ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி அஸாது கர்ம காரயதி )
குருந்தை அனாயாசேன ஒசித்தாற் போலே-
நம்முடைய வலிய பிரதிபந்தங்களைப் போக்குவான்-
ஆசன்னரான தேவ-
அசுர –
பூமி –
என் நெஞ்சகம் எல்லாம் அவனே –
ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே –

அப்பிள்ளை உரை
ஆத்மாவுக்கு உடன் வந்தியாய்க் கொண்டு அருகு விட்டு பேராதே (சார்ந்த இரு வல் வினைகள் )
ஸத் கர்மங்களும் அஸத் கர்மங்களும் ஆவான்
அவராலே நிர்வகிக்கப்படுகின்றன
பெரிய குருந்தத்தை வேர் புரியும்படி அநாயாசேன தள்ளிப் பொகட்ட கிருஷ்ணனே
இவ்வளவு அன்றிக்கே
தன்மை வர்த்திகளோடே பரிகணிக்கும் படி ப்ரசித்தரான தேவர்களும் அசுரர்களும் அவனே
தரணீ தானும் அவனே
தத் விஷயத்தில் ப்ரவணமான நெஞ்சமும் அவனே
பகவத் ப்ரஸாஸத்தியாலே -கௌரவம் இதனாலே தான் -நெஞ்சமானவர் –
தத் ஆதீனம் இன்றிக்கே இருக்கிற வஸ்து தான் எது
சொன்ன அர்த்தத்துக்கு பொருந்தாதார் குருந்து பட்டது படுவார் என்கிறார்

(ஆத்ய ப்ரவ்ருத்தி -முதல் முயற்சி ஜீவன்
பிரேரகத்வம் அவனது
புண்யம் செய்ய ஊக்குவித்து -பாபம் வழியில் செல்லும் பொழுது உதாசீனம் காட்டும் என்றும்
அதுக்கும் ஊக்குவிக்கிறான் என்றும்
ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி அஸாது கர்ம காரயதி-பிரமாணம் –
ஆகவே நல்வினையும் தீ வினையும் ஆவான் என்கிறார்
இவற்றுக்குப் பலன் அளிப்பவனும் அவனே -நிர்வாஹகன் என்றுமாம் – )

—————————————————————–

(முன் பாட்டுடன் பர உபதேசங்கள் முடிந்தன
தனக்கு உபகரித்து அருளிய ஸர்வேஸ்வரனை அனுசந்தித்து ஆனந்திக்கிறார்
மேல் எல்லாம் ஸ்வ அனுபவமாகவும் –
இருக்கும் நாள் பிரவணராய் குண அனுபவமே போது போக்காகக் கொண்டு –
உபதேசத்தால் திருந்தினவர்களுக்கு கால ஷேப அர்த்தமாக உபதேசித்தும்
திருந்தாமல் இவ் வனுபவத்தை இழப்பதே என்று வெறுத்தும்
அருளிச் செய்கிறார்
நின் கண் வேட்க்கை எழுவிப்பேன் போல் அன்பு ஆக்கினேன் என்கிறார்
மண்ணளந்தான் -என்னெஞ்சு மேயான் -பெரியாழ்வாருக்கு அரவத்தமிளி போலும்
நம்மாழ்வாருக்கு புள்ளைக் கடாவுமாறும் போல்
இவருக்கு த்ரிவிக்ரமன் திருக்கோலம்
நெஞ்சமே நீள் நகராகக் கொண்ட தஞ்சன் அன்றோ –
திருவிக்ரமனைக் கொள்ளும்படியான நெஞ்சம் ஆயிற்றே )

அப்பிள்ளை உரை அவதாரிகை
நெஞ்சில் இருளை அறுத்துக் கொண்டு
அங்கேயே நிரந்தர வாசம் பண்ணி அருளிய ஆபத் சகன்-ரக்ஷகன் பக்கலிலே
தமக்கு ப்ரேமம் விளைந்த படியை அருளிச் செய்கிறார்
(அன்பு ஆக்கினேன்-தனக்கு ஆக்கினமையும் -என்றும்
உலகோருக்கு அவன் பக்கலிலே அன்பு ஆக்கினேன் என்றுமாம் )

என் நெஞ்ச மேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -என்னெஞ்சு
மேயானை இல்லா விடையேற்றான் வெவ் வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு –58 –

பதவுரை

என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே நித்ய வாஸம் செய்பவனும்
இருள் நீக்கி எம்பிரான்–(நெஞ்சிலுள்ள) அஜ்ஞான விருளைப் போக்குமவனான உபகாரகனும்
முன் ஒருநாள்–முன்பொரு காலத்தில்
மன் அஞ்ச–மஹாபலி சக்ரவர்த்தி பயப்படும் படியாக
மண் அளந்தான்–பூமியை அளந்து கொண்டவனும்
என் நெஞ்சம் மேயானை–(அந்த திருக் கோலத்துடனே) என்னெஞ்சை விடாமலிருப்பவனுமான எம்பெருமானை
இல்லா–நெஞ்சில் உடையனாகாத
விடை ஏற்றான்–ரிஷப வாஹநனான ருத்ரனுடைய
வெம் வினை–மஹா பாதகத்தை
தீர்த்து–தொலைத்து
ஆயானுக்கு–(அதனால்) ஸத்தை பெற்றவனான பெருமானுக்கு
அன்பு ஆக்கினேன்–என் அன்பைச் செலுத்தினேன்.

என் மனஸ்ஸில் நித்ய வாஸம் பண்ணுகிறவனும்
அஞ்ஞானத்தைப் போக்கி எனக்கு ஸ்வாமி யானவனும்
பலி சக்ரவர்த்தி பயப்படும் படி முன்பு ஒரு காலத்தில் பூமியை அளந்தவனும்
என் ஹ்ருதயத்தில் மிக விருப்பத்தைப் பண்ணுமவனுமான ஸர்வேஸ்வரன்
ஹ்ருதயத்தில் இல்லாத வ்ருஷப வாஹனனுடைய மஹா பாபத்தைப் போக்கி
சர்வாதிகனான ஸர்வேஸ்வரன் விஷயத்தில் ப்ரீதியை யுண்டாக்கினேன் –

(இருள் நீக்கி -எம்பிரான் -என் நெஞ்சம் மேயான் -அவனே உபாயமாகக் கொண்டு இதில்
மண்ணளந்தான் -என் நெஞ்சம் மேயான் -அவனே உபேயமாகக் கொண்டு இதில் )

என்னுடைய ஹிருதயத்தை இருப்பிடமாகக் கொண்டு-
அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கி-
அத்தாலே எனக்கு உபகாரகனாய்-
ஷத்ரிய ஜாதி எல்லாம் அஞ்சும்படிக்கு ஈடாக
பண்டு பூமியை அடைய தன் கால் கீழே இட்டுக் கொள்ளுவதும்-செய்து –
பின்னையும்
என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் இருக்கிறவனை
தன் நெஞ்சிலே கொள்ளாத ருஷப வாகனனுடைய-மகா பாபத்தைப் போக்கி
அத்தாலே
தான் உளனான வனுக்கு-ஸ்நேஹத்தை உண்டாக்கினேன்-

(மஹா பலி -அசுரன் -ஷத்ரியன் இவன் என்றும்
இவனைக் கண்டு மனுஷ்ய ஷத்ரியர்கள் பயப்படும் படியாகவும் என்றுமாம்
இருள் நீக்கி
ஆழ்வார் திரு உள்ளத்தில் ஸ்தாவர பிரதிஷடையாய் இருந்து
இருள் நீக்கி -ஆழ்வார் உடைய அஞ்ஞானாதிகளையும்
ஆழ்வார் மூலம் உலகோராது அஞ்ஞானாதிகளையும் போக்கி அருளவே
நின் கண் வேட்கை எழுவிப்பேனே -திரு விருத்தம் -96-என்றார் போல்
இங்கு அவர் ஆக்கினேன் அன்பு என்கிறார்
இருள் நீக்கி -என்ற பட்டப் பெயர் பெறுவதற்காகவே
மண் அளந்தான் என் நெஞ்சம் மேயானை –
உலகு எல்லாம் ஒரு தட்டு ஆழ்வார் திரு உள்ளம் ஒரு தட்டு )

அப்பிள்ளை உரை
என்னுடைய ஹ்ருதயத்தில் நிரந்தர வாசம் பண்ணா நிற்பவனாய்
என் நெஞ்சில் பற்றி இருக்கும் அஞ்ஞானம் ஆகிற வல் இருளை
ஸூ சந்நிவேசத்தாலேயே -விசேஷத்தாலே -ஸ வாசனமாகப் போக்கி
அவ் வழியாலே ஸூவ ஸ்வரூபாதிகளை வெளிச் சிறப்பித்து அருளிய உபகாரகனாய்
(பகவத் ஸ்வரூப திரோதான கரி -பிரகிருதி -இருளை போக்கியவாறே – தானே இவை விளங்கும் அன்றோ )
அசுர ராஜனான மஹாபலி போல்வார் அஞ்சும் படிக்கு ஈடாக
பண்டு ஒரு நாளிலே -க்ருத யுகத்தில் பூமியை அநாயாசேந அளந்து கொண்டவனாய்
பின்னையும்
என் நெஞ்சிலே அத்யபி நிவிஷ்டானாய்க் கொண்டு அந்தத் திருக்கோலத்துடனே என் உள்ளத்தில் எழுந்து அருள
அப்படி பொருந்தி இருப்பவனை
ஈஸ்வரோஹம் என்று துர்மானத்தாலே (இல்லாத -நெஞ்சில் கொள்ளாத )தனது நெஞ்சிலே கொள்ளாத
ரிஷப வாஹனான ருத்ரனுடைய பிரம்மா சாபத்தைப் போக்கி
அத்தாலே தான் சத்தை பெற்றவனாய் உள்ள
சர்வேஸ்வரனுக்கு
எனக்கும் உலகோருக்கும் பிரேமத்தை பண்ணி வளர்த்தேன்

————————————————————————–

(ஆக்கினேன் அன்பு என்ற ஆழ்வாரைக் கண்டு அச்சுதன் –
இவர் காலைப் பிடித்து போல் தாழ பரிமாறத் தொடங்க
அவனுக்கு முறை உணர்த்துகிறார் இதில்
ஆள் கொள்வான் ஒத்து உயிர் உண்ட மாயன் -திருக்காட்கரை அப்பனுக்கு
நம் ஆழ்வார் முறை உரைத்தால் போல் இங்கும் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
பிராட்டிக்கு உகப்பாக எனக்கு ஸ்நிக்தனாய் -(அன்பாவாய் )
தன்னுடைய போய்க்யதையை அனுபவிப்பித்து -(ஆரமுதமாவாய் )
அனுபவ ஜனித ஆனந்தத்தையும் தந்து அருளி -(இன்பாவாய் )
அநர்த்த கந்தம் இல்லாமல் -தட்டாத படி (கேடின்றி ஆள்வாய்) ஆண்டு கொண்டு போகிற உனக்கு
நித்ய கிங்கரன் ஆனேன் என்கிறார்
நித்ய கைங்கர்யம்

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

பதவுரை

அன்பு ஆவாய்–(என் பக்கல்) ப்ரீதியே வடிவெடுத்தவன் போலிருப்பவனே!
அன்பன் ஆவாய் -மற்றவர்கள் இடம் -கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ போல் இங்கும்
ஆர் அமுதம் ஆவாய்–பரம போக்யனாயிருப்பவனே!
அடியேனுக்கு இன்பு ஆவாய்–(உன்னுடைய அநுபவமாகிய) ஸுகத்தை அடியேனுக்கு உண்டாக்கினவனே!
பின்பு ப்ரஹ்மானந்தம்
என் கேசவனே–எம்பெருமானே!
கேடு இன்றி–ஒரு குறையுமில்லாமல்
ஆள்வாய்க்கு–ரக்ஷிக்க வல்லவுனுக்கு-அடிமை கொள்ளும் உனக்கு
எல்லாமும் நீ ஆவாய்–மற்றுமுள்ள ஸுகங்களு மெல்லாம் எனக்கு நீயே யாயிருப்பவனே!
தாரக போஷக போக்யங்கள் எல்லாமே நீயே யானாய்
பொன் பாவை கேள்வா–திருமகள் நாதனே!
கிளர் ஒளி–(அத் திருமகளின் சேர்த்தியினால்) கொழுந்து விட்டு வளர்கின்ற காந்தியை யுடைய
நான் அடியேன்–நான் அடிமைப் பட்டவனா யிருக்கிறேன்
ஆள்–(அடியேனைக் காத்தருள்)
அடியேனானாள் -அடியேனான நான் ஆள் என்றபடி
அடியேன் சேஷத்வ ஸ்வரூபம்
ஆள் -ஸ்வரூபம் அறிந்த பின்பு கைங்கர்யம் செய்து ஸித்தி பெற்றமை

என்னிடத்திலே ப்ரீதியை யுடையவனாய்
பரிபூர்ண அம்ருதம் போல் போக்ய பூதனாய் அடியேனுக்கு உன் அனுபவ ஸூகத்தைக் கொடுத்தவனாய்
மற்ற ஸூகங்களையும் கொடுக்குமவனாய்
ஸ்வர்ண வர்ணையான ஸ்ரீ தேவிக்கு வல்லபனாய்
விருத்தி அடைகிற தேஜஸ்ஸை யுடையனான
என் கேசவனே அழிவில்லா அடிமை கொண்ட உனக்கு அடியேனான நான் சேஷ பூதனானேன் –

(கீழ் பாசுரத்தில் ஆக்கினேன் அன்பு
இதில் அன்பாவாய்
இரண்டுக்கும் வாசி உண்டே
என்னை இலக்காக்கி உமது ப்ரேமம் கொடுத்தாய் -நான் முக்கியம்
இங்கு அன்பு முக்கியம்
கீழே எல்லாம் பரத்வம்
இதில் அன்பு அழகு வடிவு
மாலே -26 பாசுரம் ஆஸ்ரித வ்யாமோஹம் என்னே போல் இங்கும் )

என் பக்கல் பிரேமத்தை உண்டாக்கி-
நிரதிசய போக்யனுமாய்-
எனக்கு ஸ்வ அனுபவத்தையும் தந்து-
அனுக்த்தமான போக்யங்களையும் தந்து
இவை எல்லாம் செய்கைக்கு அடியான பிராட்டிக்கு வல்லபனாய்
இவளோட்டை சம்ஸ்லேஷத்தால்-நிரதிசய ஔஜ்வல்யனாய்
பிரசஸ்த கேசனாய்-
கைங்கர்ய அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே
என்னை அடிமை கொள்ளுகிற உனக்கு
நான் அடிமை –
சர்வஞ்ஞன் ஆனவனுக்கு நான் உனக்கு ஆள் என்று-சொல்ல வேண்டாது இருக்க
ஆள் என்று சொல்லிற்று-
அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-
முறை அறிந்து பரிமாற வேண்டும் என்று –
முறை உணர்த்த வேண்டுகிறது-அவன் விரும்பின படியை கொண்டு-

(அன்பாவாய் -பொன் பாவை கேள்வா ஆனபடியால்
இல்லாவிடில் ஷிபாமி ந க்ஷமாமி -இப்போது ததாமி
ஆரமுதமாவாய் -பொன் பாவை கேள்வா ஆனபடியால்
அமுதில் வரும் பெண்ணமுது கொண்டதால் ஆராவமுதமானான்
அடியேனுக்கு இன்பவாயாய் -பொன் பாவை கேள்வா ஆனபடியால்
அனுபவ வர்த்தகை இவளே தானே -தரும் அவ்வரும் பயனாய –
எல்லாமும் நீ ஆவாய் –பொன் பாவை கேள்வா ஆனபடியால்
நமக்கும் பூவின் மிசை மங்கைக்கும் இன்பா
எனக்கு என்றும் தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகிய திருமால் திரு நாமங்கள்
பொன் பாவை கேள்வா ஆனபடியாலே கிளர் ஒளி
அப்ரமேய ஜனகாத்மஜா
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் -திரு இருப்பதால் )

(ந சாஸ்திரம் நைவ க்ரம -நீதி வானவர் கோமான் அநீதி பண்ணப் போவான்
குற்றேவல் எங்கள் மேல் கொள்ளாமல் போகாது -தடுத்தும் வளைத்தும்
கொண்டதுக்கு கூலி கொடுத்து -தான் கைங்கர்யம் பண்ணும் கோஷ்ட்டி அன்றோ -)

(நாராயணனே நமக்கே பறை தருவான் தொடங்கியவர்கள் அவனை அணுகி மாலே என்று அழைத்தது போல்
இவர் அன்பாவாய் -அன்பே வடிவாக -உள்ளாய் என்கிறார்
ஆக்கினேன் அன்பு என்றவர்
என்னுடைய அன்பாகவும் நீயே அன்றோ என்கிறார்

என் பக்கலில் பிரேமத்தை உண்டாக்கி -என்று பெரியவாச்சான் பிள்ளை
என் விஷயத்தில் உன் அன்பை உண்டாக்கி என்றும்
என்னிடம் உன் விஷயமான அன்பை உண்டாக்கி -என்றும்
பொருள் கொள்ளும் படி வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள்

எல்லாமும் நீ ஆவாய்
வாஸூ தேவஸ் சர்வம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்
அடியேனுக்கு இன்பாவாய் பொன் பாவை கேள்வா
தரும் அவ்வரும் பயனாய் திரு மகளார் தனிக்கேள்வன் –திருவாய் -1-6-9-
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதமுமாகிய திருமால் -பெரிய திருமொழி -6-10-6-
ஸ்ரத்தயா தேவோ தேவம் அஸ்னுதே
அதீவ ராம ஸூ ஸூ பே அதி காமயா விபு ஸ்ரீ யா விஷ்ணு

அடியேன் நான் ஆள் –
அவனுக்கு உணர்த்துகிறார்
அடியேன் -என்று சேஷத்வ ஸ்வரூபம் சொல்லி
ஆள் அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி -கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயமாய் இருப்பவன்
ஆகவே புனர் யுக்தி இல்லை
அன்பே உருவான அவன் கலங்கி தாழ பரிமாற்ற உபக்ரமிக்க முறை உணர்த்துகிறார் சர்வஞ்ஞனுக்கும் )

அப்பிள்ளை உரை –
உன் பக்கல் எனக்கு உண்டான ப்ரேமம் அஸத் சமமாம் படி
என் பக்கல் நிரவதிகமான ப்ரேமத்தை பண்ணுபவனாய் -(அன்பாவாய் -)
நிரதிசய போக்ய பூதனாய் -(ஆராவமுதுமாய் )
சேஷ பூதனான எனக்கு (அடியேனுக்கு )
உன் அனுபவ ஸூகத்தை விளைப்பவனாய் (இன்பாவாய்)
எல்லாமுமாக அனுக்தமான -நீயே உண்டாக்குபவனே
இந்த பேற்றை எல்லாம் எனக்கு நீ செய்யும் படி உன்னைப் பிரேரிக்கும்
பொற்கென்ற – பொன்னே வடிவான -ஹிரண்ய வர்ணாம்
நாரீணாம் உத்தமையான பிராட்டிக்கு வல்லபனாய்
அவ்ளோட்டை கலவியாலே யுத்தர உத்தர கிளரும் -(கிளர்ந்து கொண்டே இருக்கும்) வடிவின் ஒளியை உடையவன்
என்னால் அனுபவிக்கத் தக்க அழகிய கேச பாசங்கள் உடையவனே
கைங்கர்ய விச்சேதம் இல்லாத -அநர்த்த சங்கை-கேடு இல்லாத படி
ஆள்வாய் -அடிமை கொள்ளும் உனக்கு
அடியேன் ஸ்வரூபம் அறிந்த சேஷபூதன்
சர்வஞ்ஞனான உனக்கு நான் ஆள் -சேஷபூதன் என்று சொல்ல வேண்டாது இருக்க –
அவன் தாழ நின்று பரிமாற உத்யோகிக்கிறதைக் கண்டு
முறை அறிந்து பரிமாற்ற வேண்டும் என்று முறை உணர்த்துகிறார்
அகிஞ்சித் கரத்வ சேஷத்வ அநுபபத்தி -கைங்கர்யம் செய்யா விடில் சேஷ பூதனின் இருப்பே போகுமே
அடியேன் ஆள் -இருமுறை அருளிச் செய்கிறார் –

————————————————————————–

(கிருஷி பண்ணி ஆள் பிடிக்கிறான் -யுகம் தோறும் -தேடிக் கொண்டே இருக்கிறான்
இப்படி உனக்கே ஆள் பட்டு அடிமை செய்து கொண்டே இருக்க
என்றுமே ஆகும்படி அருள வேணும் என்கிறார் இதில் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
என்னுடைய மனஸ்ஸானது உன்னுடைய குணங்களிலே ஈடுபட்டது
இனி இத்தைத் திரு உள்ளம் பற்றி பார்த்து அருள வேணும் என்கிறார் –

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-

பதவுரை

கேட்பார்க்கு–ஸ்வ யத்நத்தாலே கேட்டறிய விரும்புவர்களுக்கு
அரு பொருள் ஆய் நின்றி அரங்கனே–அறிய வொண்ணாத பரம் பொருளான அரங்க நாதனே!
ஆள் பார்த்து உழி தருவாய்–நமக்கு ஆட்படுமவன் யாரேனும் கிடைக்கக் கூடுமோ என்று தேடித் திரிகிறவனே!
நின் தாள் பார்த்து உழி தருவேன்–உனது திருவடிகளின் ஸேவைக்காக அலைந்து திரிகின்ற என்னுடைய
தன்மையை–இந்த ஸ்வபாவத்தை
என்றும்–என்றைக்கும் நிலைத்திருக்கும் படியாகக் கடாக்ஷித் தருள வேணும்
உன்னை விரும்புவதே–நான் உன்னையே ஆசைப்பட்டிருக்குந் தன்மையை
மனம்–நெஞ்சில்
விள்ளேன்–தவிராதவனா யிருக்கின்றேன்.

ஸ்வ யத்னத்தாலே கேட்க யத்நித்தவர்களுக்கு துர்லபனான ஸ்ரீ ரெங்கநாதனே
நமக்கு தாஸ பூதராராவது உண்டா என்று தேடித் திரிகிறவனே
உன் திருவடியை சேவிக்க வேண்டும் என்று திரிகிற என்னுடைய ஸ்வ பாவத்தை
எப்போதும் நடக்கும்படி கடாக்ஷித்து அருள வேணும்
உன்னை ஆசைப்படுவதே ஸ்வ பாவமான மனஸ்ஸை விட மாட்டேன் —

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின் தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை –
தேவர் திருவடிகளை காண்கையே ஸ்வ பாவமான என்னை-
ஆரோ நமக்கு அகப்படுவார் என்று பார்க்கும் அதுவே-
ஸ்வ பாவமாக இருக்கிற நீ-
காலம் எல்லாம் இப்படியேயாகப் பார்த்து அருள வேணும் –

கேட்பார்க்கு அரும் பொருளாய் நின்ற வரங்கனே-
நாயமாத்மா ப்ரவசநே நலப்ய நமேதே யான பஹூ நா ஸ்ருதேன் (கட உபநிஷத் )-என்னும்படியே
உன் பிரசாதம் ஒழிய ஸ்வ யத்னத்தாலே-
ஸ்ரவணாதிகள் பண்ணுவார்க்கு அரியையாய்
நீயே காணக் காட்டக் காண்பார்க்கு எளியை யாகைக்காக-
கோயிலிலே கண் வளருகிறவனே

உன்னை விரும்புவதே விள்ளேன் மனம் –
என்னுடைய மனசானது உன்னை விரும்புகைக்கு- –தவிராததாய் இருந்தது –
விரும்புகையை விடாது ஒழிகையை பார்த்து அருள வேணும் என்றுமாம் –

விள்ளேல் –
என் மனஸ் விடுகிறது இல்லை என்னுதல்
நீ விள்ளாத படி பண்ண வேணும் என்னுதல்

(கேட்ப்பாருக்கு–
ஸ்ரவணம் சொல்லி ஆதிகள் -மனனம் நிதித்யாஸனம் தியானம் —
இவற்றுக்கும் உப லக்ஷணம் )

அப்பிள்ளை உரை
ஸூவ யத்னத்தால் ஸ்ரவணாதிகளால்
அறிய அரிய வஸ்துவாய்க் கொண்டு நின்றவனாய்
நீயே காட்டக் காண்பாருக்கு
எளியவானாகைக்காக கோயிலிலே கண் வளர்ந்து அருளுபவனாய்
(ஆள் பார்த்து )ஸ்ருஷ்ட்டி அவதாராதிகளாலே உத்தரம் உத்தரம் கிருஷி பண்ணிக் கொண்டு திரிகிறவனே
(இதுக்கும் மேல் ஆழ்வார்களை -ஆச்சார்யர்களை பிறப்பித்து -சரணாகதி மார்க்கம்
தானே உபதேசித்தும் இவர்களையும் விவரித்துக் காட்டப் பண்ணியும் )
இப்படி உள்ள உன் திருவடிகளை எப்பொழுதும் சேவித்துக் கைங்கர்யம் பண்ணி அனுபவித்து வாழ வேணும்
என்ற மேல் மேல் என மநோ ரதம் கொண்டு இருக்கும் என்னுடைய ஸ்வபாவத்தை
சர்வ காலமும் -குலையாதே உருவச் செல்லும் படி கடாக்ஷித்து அருள வேணும்
இப்படி குணாதிகனான உன்னை நிரந்தரம் இடைவெளி இல்லாமல் ஆதரித்து மேல் விழுகையே
யாத்ரையாகும் படி அடியேன் மனஸ்ஸை உன் பக்கலில் நீக்காமல் இருக்கும் படி அருள வேண்டும் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -37-48–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -/ஸ்ரீ அப்பிள்ளை உரை —

September 22, 2013

ஆதி நெடுமாலை விவரிக்கிறது –

அப்பிள்ளை உரை அவதாரிகை
இப்படி ஆஸ்ரித நெஞ்சில் புகுவதற்கு அவசர பிரதீஷானாய் இருப்பது விஸ்மயநீயம் ஆகுமோ
முதலிலே சகல பதார்த்தங்களையும் சங்கல்பத்தினாலே ஸ்ருஷ்டித்தவனுக்கு –
(நெடுமையான ஆதி -நெடுமையான மால்
தெள்ளிய மாலுக்கு )

வானுலாவு தீவளி மா கடல் மா பொருப்பு
தானுலவு வெங்கதிரும் தண் மதியும் -மேனிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு –37

பதவுரை

வான்–ஆகாசமும்
தீ–அக்நியும்
உலவு வளி–உலாவுகின்ற வாயுவும்
மா கடல்–பெரிய கடலும்
மா பொருப்பு–பெரிய குல பர்வதங்களும்
உலவு–திரிகின்ற
வெம் கதிர்தானும்–உஷ்ண கிரணனான ஸூர்யனும்
தண்மதியும்–குளிர்ந்த சந்திரனும்
மேல் நிலவு–மேலே நிலாவுகின்ற
கொண்டல்–மேகங்களும்
பெயரும்–சேதந வர்க்கமும்-உபலஷிக்கிறது
திசை எட்டும்–எட்டுத் திசைகளும்
சூழ்ச்சியும்–ஆவரணங்களும்
அண்டம்–ஆகிய இவை யெல்லாவற்றோடுங் கூடின அண்டமும்
திருமால்–ஸர்வேஸ்வரனுடைய
அகைப்பு–ஸங்கல்பத்தினாலாயது.

ஆகாசமும் சலிக்கிற அக்னியும் காற்றும் பெரிய சமுத்திரமும் பெரிய மலைகளும் ஸஞ்சரிக்கிற
உஷ்ண கிரணங்களை யுடைய ஸூர்யனும்
சீத கிரணங்களை யுடைய சந்திரனும்
மேலே சஞ்சரிக்கிற மேகங்களும்
சேதனர்களும்
எட்டுத் திக்குகளும்
ஆவரணமும்
ப்ரஹ்மாண்டமும்
ஸ்ரீ யபதியினுடைய சங்கல்பத்தினால் உண்டானவை –

சூழ்ச்சியும் ஆவரணமும்
இவை எல்லாம் திருமால் அகைப்பு –
எழுச்சி
ஸ்ரீயபதியினுடைய பிரயத்னம் – சங்கல்பம் -என்கை

(திருமால் அகைப்பு என்றதால்
சர்வேஸ்வரன் ஜகத் ஸ்ருஷ்ட்டி செய்வது பிராட்டியின் முக்கோலாசத்திற்காகவே என்பதுவும்
ஜகத் ஸ்ருஷ்டியில் ப்ரேரகத்வ ரூபமான அப்ரதான அந்வய மே பிராட்டிக்கு உள்ளது என்பதும் உணர்த்தப்பட்டன–)

அப்பிள்ளை உரை –
ஆகாசமும்
அதிலே உலாவுகிற அக்னியும்
பெரிய காற்றும்
பெரிய கடலும்
பெரிய குல பர்வதங்களும்
அதிலே தங்கள் சஞ்சரிக்கக்கடவ உஷ்ண கிரணனான ஆதித்யனும் குளிர்ந்த சந்திரனும்
மேலே வர்த்திக்கக் கடவ மேகம் என்று பேர் பெற்றவையும்
(மேகங்களும் சேதன வர்க்கங்களும் என்று பதவுரையில் பார்த்தோம் )
திக்குகள் எட்டும்
ஆவரணங்களும் (சூழ்ச்சி- சூழ்ந்து இருப்பதால் )
இவை எல்லாம் சேர்ந்த அண்டம்
இவை போன்ற பல கோடி அண்டங்கள் எல்லாம் ஸ்ரீயப்பதியான சர்வேஸ்வரன் திரு உள்ளத்தில்
உத்யோக ரூபமான -முயற்சி தானே – சங்கல்பத்தால்
அகைப்பு –எழுச்சி யாய் -சங்கல்ப ஞான ஏக தேசத்தாலே –
(வித்து விட வேணும் கொலோ பாசுரம் தொடங்கி பல முயற்சிகளைப் பார்த்து வருகிறோம் )

————————————————————————-

(அவனே ஆதி யாவான் -என்றார் கீழ்
ப்ரஹ்மாதிகள் செய்யுமவையும் இவன் அந்தர்யாத்மதயா செய்விப்பவையே என்கிறார் இதில்
ஆவாஹயாமி என்றும் ஸ்வாஹா என்றும் சொல்லும் பொழுது அஹம் ஈஸ்வரோஹம் என்று
இவர்கள் வருவதும் இவன் அந்தர்யாமியாக இருப்பதால் தானே
நீர் வண்ணன் –ஒரு காலும் உதாஸீனம் பண்ண மாட்டான்
அகைப்பு -சங்கல்பம் கீழ் பார்த்தோம் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
சேதனருக்கு கர்ம அனுகுணமாக பாஹ்ய சமயங்களில் ருசியைப் பிறப்பித்து
மதி கெடுக்கக் கடவ ஸர்வேஸ்வரன்
அல்பம் உபேக்ஷிக்குமாகில் -உதாசீனத் தன்மை
(உள்ளே இருப்பது சத்தைக்காக மட்டும் )
இவை எல்லாம் அதரோத்தரம் -(கீழ் மேல் -தலை கீழாகப் )போகும் –

அகைப்பில் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் -உகைக்குமே
எத் தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு-38–

பதவுரை

அகைப்பு இல் மனிசரை–உஜ்ஜீவிக்க மாட்டாத-ஞான செறிப்பு இல்லாத – மனிசர்களை
ஆறு சமயம்–(நீசங்களான) ஆறு மதங்களில்(சாக்கியம் கற்றோம்– பாக்யத்தால் செங்கண் மால் சேர்ந்தோம் என்றவரே )
புகைத்தான்–புகும்படி செய்தவனும்
பொரு கடல் நீர் வண்ணன்–அலை யெறிகின்ற கடல் நீர் போன்ற திரு நிறத்தை யுடையவனுமான ஸர்வேஸ்வரன்
உகைக்கும் ஏல்–உதாஸீநனா யிருந்து விடும் பக்ஷத்தில்
அப்போது–அப்போதே
எத் தேவர் வாலாட்டும்–எந்த தேவர்களுடையவும் அஹங்காரமும்
எவ்வாறு செய்கையும்–எவ்விதமான (யஜ்ஞம் முதலிய) காரியங்களும்
அழைப்பு–(தேவதைகளின்) ஆஹ்வாநமும்
ஒழியும்–ஒழிந்து போய்விடும்

மதிப்பில்லாத மநுஷ்யர்களை ஆறு விதமான நாஸ்திக மாதங்களிலே பிரவேசிப்பித்தவனும்
அலை யடிக்கிற சமுத்திரத்தின் ஜாலம் போன்ற காந்தியை யுடையவனுமான
சர்வேஸ்வரன் உபேக்ஷித்தால்
ஸமஸ்த தேவதைகள் வாலாட்டுகிறதும்
ஸகல விதமான யாகாதி கிரியைகளும்
அத்தேவதைகளின் ஆஹ்வானமும்
அப்போது நடக்க மாட்டாது –

அகைப்பில் மனிசரை –
எழுச்சி (ஞானம்) இல்லாத மனிசரை –
அளவில்லாதவர்களை -என்கை

ஆறு சமயம் புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன்
சூத்திர பதார்த்தங்களை அகப் படுத்த புகைக்குமா போலே
பாஹ்ய சமயங்களைக் காட்டி-அகப்படுத்தினான் சர்வேஸ்வரன் –

(புத்த வைசேஷிக நையாயிக அக்ஷபாதர் நியாய ஜைனர் கபில சாங்க்ய பதஞ்சலி யோக மதங்கள்
சாருவாக பாசுபத மதங்கள் என்றுமாம் )

உகைக்குமேல் எத் தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போது ஒழியும் அழைப்பு –
நெகிழ நிற்குமாகில் தேவதாந்தரங்கள்-
ஈஸ்வரோஹம் -என்று சூத்திர ஜந்துக்கள் வாலாட்டுமா போலே
பண்ணும் அபிமானமும்
அத் தேவதைகளை ஆஸ்ரயிக்கைக்காப் பண்ணும்-வ்யாபாரமாகிற (ஆஹாவனமும் யாகமும் முகம்) காட்டழைபபும்
அவன் நெகிழ்ந்த போது ஒழியும் -முடியும் –

(அழைப்பு -முகம் காட்டுகைக்காக
ஆஹ்வானம் பண்ணி அழைக்கிற மந்த்ரங்கள் என்றபடி )

(புகைத்தான் –
காட்டில் வேடர்கள் பிராணிகளை பிடிக்க கூளங்களை இட்டுப் புகை மூட்டி பிடிப்பது போல்
சம்சார வலையில் சிக்க வைத்தான்
புகையில் அகப்பட்டாருக்கு வழி தெரிய வழி உண்டோ
ஆகவே தேவதாந்தர சங்கத்தராய் இருந்து மாள்கிறீர்கள்
பொரு கடல் நீர் வண்ணன் உகைக்குமேல்
உபேக்ஷிக்க ப்ரஸக்தி இல்லையே
ஒருகால் நீர் நெருப்பானால்
எத்தேவர் வாலாட்டும் –
ஈஸ்வரோஹம்-அபிமானத்தை வாலாட்டும் என்கிறார்
அவர்கள் அபிமானமும்
திரிபுர தகநாதி காரியங்களும்
அவர்களை ஆஸ்ரயிக்க உங்கள் அழைப்பு போன்ற காரியங்களும்
அவர்கள் சத்தையோடு உங்கள் சத்தையோடு வாசியற அழியும்
காலாந்தரத்தில் இல்லாமல் அப்போதே அழியும்
ந ததஸ்தி விநா யத் ஸ்யான் மயா பூதம் -என்று கீதையில்
அப்ரஹ்மாத்மகமான சேதன அசேதனங்கள் இல்லை என்றானே -)

அப்பிள்ளை உரை
அளவில்லாத ஞானம் குறைவான மனுஷ்யரை கர்ம அனுகுணமாக
சாருவாக -(கண்டதே காட்சி கொண்டதே கோலம் சாரு வாக்கு அழகிய பேச்சு
பூ பூத்தால் போல் இருக்குமே ஒழிய காயோ கனியோ இல்லாமல் )
ஆர்த்த புத்த சாங்க்ய -இரண்டு தத்வங்கள்
வைசேஷிக பாசுபத -நையாயிக யோக பதில் இந்த இரண்டும்
பாஹ்ய ஷட் சமயங்களில் மூட்டி
திரை பொறா நின்ற கடலில்
ஸ்ரமஹராமான வடிவை யுடைய ஸர்வேஸ்வரன் உபேக்ஷித்து
எழ வாங்கி நிற்குமாகில் -பயப்படுத்த
எத்தனையேனும் தங்களை ப் போர பொலிய நினைக்கும் ப்ரஹ்மாதிகள்
முசு முசுத்தால் போல் -குவால் எடுத்தால் போல் உண்டான கர்வமும்
அவர்களைக் குறித்து இங்குள்ளார் பஹு விதமான யாகாதி சாதனங்களும்
(நான் தான் கொடுக்கவும் வைக்கிறேன் அர்ஜுனா என்றானே மிட்டாய் கொடுப்பது போல் கொஞ்சமாக கூட்டி வர )
அவ்வவ கர்மங்களை அனுஷ்ட்டிக்கும் பொழுது ப்ரஹ்மாணம் ஆவாஹயாமி என்றால் போல் உண்டான அழைப்புகளும்
(தத் தத் தேவதை அவ்வவ கர்மங்கள்-இரண்டு சப்தங்கள் சமஸ்க்ருதம் தமிழ் மூலம் நமக்கு தெரிவிக்கவே )
தத் தத் தேவதை ஆஹ்வானங்களும் அவன் எழ வாங்கின அந்த க்ஷணத்தில் இன்றிக்கே போய்விடும்
அகைப்பில் மனிதரை என்றது –
எழுச்சி இல்லா -அளவில்லா மனிதர்கள் -என்றபடி

————————————————————————–

(மீண்டும் பர உபதேசத்தில் இருந்தும் கை வாங்கி
திருவேங்கட மலையையும் அப்பனையும் அனுபவிக்கிறார் இது முதல் அடுத்த பத்து பாசுரங்களில்
இப்படி பர உபதேசமும் ஸ்வ அனுபவமும் மாறி மாறிச் செல்லுமே -)

அப்பிள்ளை உரை அவதாரிகை
லௌகிகர் பட்டது படட்டும்
நான் முந்துற முன்னம் திருவேங்கடத்தானைக் கண்டு அனுபவிக்க வேண்டும் என்றும்
திருமலை ஆழ்வாரைக் கிட்டிச் சென்று திருவடி தொழா நிற்க வேண்டும் என்றும்
ஆசைப் படா நின்றேன் என்கிறார்

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப் பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –39–

பதவுரை

திருவேங்கடத்தானை–திருவேங்கடமுடையானை
காண–கண்ணால் ஸேவிக்க
அழைப்பன்–வாய் விட்டுக் கூப்பிடா நின்றேன்-(உள்ளம் நினைவு இன்றிக்கே வெறும் வாயாலே சொன்னேன் )
வரண்டி வந்து இழிய–திரட்டிக் கொண்டு வந்து இழிய
(அந்த ரத்னங்களின் ஒளியைக் கண்டு அக்நி ஜ்வாலைகளாக ப்ரமித்து)
யானை–யானைகளானவை
வெருவி–பயப்பட்டு நிற்கவும்
அரவு–மலைப் பாம்புகளானவை
மழை–மழை போல் சொரிகின்ற
பேர் அருவி–பெரிய அருவிகளானவை
மணி–(அங்குமிங்குங் கிடக்கிற) ரத்னங்களை
ஒடுங்கும்–(அந்த ரத்னங்களை மின்னலாக மயங்கி) புற்றிலே சென்று மறையவும் பெற்ற
வெற்பு–திருமலையை
கூட–சென்று கூடவேணு மென்று
திருக் கூடல் இழைப்பன்–கூடலிழைக்கின்றேன்
(யானை வெறுவவும் -அரவு ஒடுங்கவும் -என்று தனித் தனியாகவும்
அன்றிக்கே யானை வெறுவி அரவிக்குள்ளே ஒடுங்கும்
இப்படி இரண்டு நிர்வாகங்கள் )

திருவேங்கடமுடையானை சேவிக்கக் கூப்பிடா நின்றேன்
அதிக மழையினால் பிரவஹிக்கிற மலை யருவிகள் ரத்னங்களைத் திரட்டிக் கொண்டு வந்து கீழே விழும் போது
யானை பயந்து பெரும் பாம்பின் வாயில் விழுகிற திருமலையை
அடைய வேணும் என்று திருக்கூடல் இழையா நின்றேன்
மணல்களிலே சத்ரா காரமாக எழுதிப் பாரா நின்றேன் –

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
போக மோஷத்துக்கோ என்னில் –
காண –

(அழைப்பது சாதனம் என்று கொண்டால்
காணுதல் சாத்தியமா திருவேங்கடத்தான் சாத்தியமா என்னில்
உபாயந்தர சம்பந்தம் இல்லையே
அவனே சாதனம் ஸாத்யம் –
போகத்துக்கும் கூப்பிட வில்லை
மோக்ஷத்துக்கும் கூப்பிட வில்லை
இந்த தேசத்தில் இந்த தேகத்தோடே இந்தக் காலத்தில் காணவே )

இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர் அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு
மலையிலே பெரிய அருவிகள்
ரத்னங்களைக் கொண்டு வந்து இழிய-
ரத்ன தீப்தியை
ஆனை அக்நி என்றும்
சர்ப்பம் மின் என்றும் பயப்பட்டு
ஒதுங்கும் திருமலை–

அன்றிக்கே
நெருப்புக்கு பயப்பட்டு
யானை-
மலைப் பாம்பின் வாயிலே புக்கு ஒடுங்கும் -என்றுமாம் –
(அரவு சர்ப்பம் என்றும் மலைப் பாம்பு என்றும் கொண்டு இரண்டு நிர்வாகங்கள் )

இப்படிக்கு ஒத்த திருமலையைக் கூட-இழைப்பன் திருக் கூடல்
என்று அந்வயம்

(இங்கும் திருவேங்கடத்தானை என்னாமல் திருமலையையே என்கிறார்
திவ்ய தேசமே உபாயமும் உபேயமும் என்றவாறு
அழைப்பது திருவேங்கடத்தானை -என்று அவனை சாதனம் என்றும்
திருமலையை கூட -இதுவே சாத்தியம்
அவனது அனுக்ரஹத்தாலேயே திவ்ய தேச பிராப்தி என்றவாறு )

(கோவிந்தற்கு ஓர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யலாமே இனிப்போய்ச் செய்யும் தவம் தான் என்
மோக்ஷமே அபேக்ஷை இன்றி இப்பாட்டு என்றால் போகத்துக்கு இடம் ஏது
யானைகள் மலைப்பாம்பின் வாயிலை மலைக்குகையாக எண்ணி விழுமாம்
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிடக்
களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி -பெரிய திருமொழி -1-3-10-போலவே இங்கும் – )

(நாச்சியார் திருமொழி -கூடல் இளைக்க-(4-4)-அரும் பதத்தில்
இரட்டைப் படை வந்தால் கூடுவோம் என்றும் ஒற்றைப் படை வந்தால் கூட மாட்டோம்
இங்கும் ஆழ்வாருக்கு நாயகா பாவமோ
முதல் நான்கு ஆழ்வார்களுக்கும் நாயகி பாவம் இல்லை என்பதே பெரியவாச்சான் பிள்ளைக்கு திரு உள்ளம்
முன்னும் பின்னும் இல்லை -பிரகரண விருத்தம்-ஆகுமே – )

அப்பிள்ளை உரை
நமக்கு முகம் தருவதற்காகவே திரு வேங்கடத்தான் வந்து ஸூலபனாய் நித்ய வாசம் செய்யும் திருமலையில் –
போக மோக்ஷங்கள் ப்ரயோஜனங்கள் தவிர்ந்து -அன்றிக்கே
கண்டு அனுபவிக்க ஆற்றாமையோடே கூப்பிடா நின்றேன்
நிரந்தர வர்ஷத்தால் வெள்ளம் இட்டுப் பெருகிற திரு அருவிகள் பெரிய வேகத்தோடு குதிக்க
அங்கும் இங்கும் உள்ள ரத்னங்களைத் திரட்டி விழ
ஒழுக்கு அறாமல் அந்த ரத்ன ஒளியை
நெருப்பு என்று யானை பிரமித்தும்
மின்னல் என்று பாம்பு பிரமித்தும்
அது (நெருப்பு என்றும் அரவம் என்றும் )தன்னைக் கதுவத் தேடுகிறதோ என்று
போக்கிடம் இல்லாமல் நின்று தடுமாறி யானை வெறுவவும்
தனக்கு இருப்பிடமான புற்றிலே பாம்பு ஒதுங்கும் படி
இப்படி உள்ள திருமலையில் சென்று சேர கூடல் இழையா நிற்பேன்
அன்றிக்கே
நெருப்புக்குப் பயந்து மலைப் பாம்பின் வாயில் யானை ஒடுங்கும் என்றுமாம்

————————————————————————–

செய்த கார்யமோ மிகச் சிறியது
பெற்ற பலனோ மிகப் பெரியது என்கிறார் இதில்

(திருமாலிருஞ்சோலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
சாஸ்திரமும் அறியாதே பிறரும் அறியாதே நாமும் அறியாமல் ஈஸ்வர சங்கல்பம் –
ஸூஹ்ருத தேவர் -வேறே யாரும் இல்லையே
திருமலை கூட சொல்லாமல் வெறும் வெற்பு மட்டுமே சொன்னேன்
மலை என்றாலே திருமலையைத் தான் குறிக்கும்
வரவாறு ஓன்றும் இல்லை- வாழ்வு இனிதால் -விதி வாய்க்கின்றது காப்பார் யார்
நூல் வலையும் கால் வலையும் -பிரசித்த உபன்யாச தலைப்பு )

அப்பிள்ளை உரை -அவதாரிகை –
திருமலையை யாதிருச்சிகமாக சொன்ன மாத்திரத்தாலே க்ருதக்ருத்யனாய் விட்டது
ஸ்ரீயபதியின் திருவடிகளில் மற்ற ஒன்றுக்கு ஆளாகாதபடி அகப்பட்டேன்
என் நெஞ்சே நீயும் அவனை அனுபவி
(காண் -என்றதன் அர்த்தம் இதில் ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் -)

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண்-40–

பதவுரை

வெற்பு என்று–பல மலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
காண் – முன்னிலையசை

மலை என்று சொல்லும் போது திருமலையைப் பாடா நின்றேன்
அதனால் மோக்ஷத்தை யுண்டாக்கிக் கொண்டு இரா நின்றேன்
ஸ்திரமாக இருந்து பலம் பெற்ற படியை தியானியா நின்றேன்
அத்யயனம் செய்யப்பட ஸாஸ்த்ரம் ஆகிற வலையில் -அகப்பட்ட -ப்ரதிபாதிக்கப் பட்ட –
ஸ்ரீ தேவியின் வல்லபனான ஸர்வேஸ்வரனுடைய திருவடிகள் ஆகிற வலையில் அகப்பட்டுக் கொண்டேன் பாருங்கோள் –

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் –
விசேஷித்து ஓன்று செய்தது இல்லை –
அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி
இத்தைச் சொல்ல -திருமலை -ஆயிற்று –

வீடாக்கி நிற்கின்றேன் –
அநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-
இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு
நின்று ஒழிந்தேன்

நின்று நினைக்கின்றேன் –
எது சொல்லிற்று
எது பற்றிற்று என்று-
விசாரியா நின்றேன்

கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண்
ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிக்கப் படுகிற-
பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன்
திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்

(யாதிருச்சிகமாக கொல்லி மலை குடமலை இமயமலை போலே
மலைத் தொடர்கள் பேர்களை சொல்லுமா போல்
என்னை அறியாமல் திருவேங்கட மலை என்றும் சொல்லி வைத்தேன்
பெற்ற பலமோ பரம புருஷார்த்தமாக இருந்ததே -)

(மாதவன் பேர் சொல்லுவதே வேதத்தின் சுருக்கு
யந் ந தேவா ந முனயோ ந ச அஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமே சஸ்யே தத் விஷ்ணோ பரமம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந
ஸ்வயைவ ப்ரபயா டாஜன் துஷ் ப்ரேஷம் தேவதா ந வைவ –பாரதம்
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் -பெரிய திருவந்தாதி –59-
இந்த ஆச்சர்யம் நினைத்து ஸ்தப்த்தனானேன் -நிலை நின்றேன்
நூல் வலை -வேத ஸாஸ்த்ர வலை -அதில் சிக்கிய எம்பெருமானும் பிராட்டியும்
வேதைஸ் ச ஸர்வைர அஹம் ஏவ வேத்ய –15-15-வேத ப்ரதிபாத்யன்
அவனைச் சொன்ன இடங்கள் எல்லாம் பிராட்டியையும் சொல்லிற்று ஆகவுமாம் அன்றோ –
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிரிதில்லை
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய்
நான் முந்தி நான் முந்தி என்று ரக்ஷிக்கும் மிதுனம் அன்றோ –
அந்தரங்க விசேஷணம் ஸ்வரூப நிரூபக தர்மம்
எங்கு அவனைச் சொன்னாலும் அஹம் ஏவ வேத்ய -என்றாலும் -அப்ருத்க் ஸித்த -அவளையும் குறிக்கும்
அஹந்தாவே அவள்
ஸ்ரீ யபதி -விஷ்ணு பத்னி -இருவருக்கும் ஒவ்வொருவரை வைத்து திரு நாமங்கள் –
சாதனமாக இருந்தால் சிக்க மாட்டேன்
சிக்கி வைத்தவனும் அவனே -)

அப்பிள்ளை உரை
அல்லாத மலைகளை சொல்லுகிறோ பாதி
சாமான்யேன பொதுவாக -பிரபாவம் அறியாமல் -இதுவும் ஒரு மலை என்று
கோல் விழுக்காட்டாலே
வெற்பு -சொன்னாலும் -பாட்டாக ஆக்கிக் கொண்டான்
மோக்ஷமே தருமவன்
ப்ரீதிக்குப் போக்கு வீடாக -பாடினேன் -ஆகக் கொண்டான் அவன்
என்னளவு அன்றிக்கே -என்னுடன் சேர்ந்தார்க்கும் பெரு வருத்தத்துடன் பெறக் கடவ
மோக்ஷத்தை உண்டாக்கிக் கொண்டு -நிச்சயமாக -உறுதியாக க்ருதக்ருத்யனாகா நின்றேன்
வீடாக்கி நிற்கின்றேன் -வீடாக்கினேன் என்று சொல்லாமல்
எது சொல்லிற்று எது பற்றிற்று
சாதன லாகவத்தையும்
சாத்ய கௌரவம்
ஒரு படிப் பட அனுசந்தித்து -சிந்தித்து
வித்தனாகா நின்றேன்
(சஞ்சலம் ஹி மனஸ்ஸூ -இருக்க இதுவும் ஒரு ஆச்சர்யம் தானே )
ச கிரமமாக ஓதப்படுகிற -கற்கின்ற வேத சாஸ்த்ரத்தால்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவி சால்யமாக
கல் வெட்டு போல்
விஷ்ணு பத்னி என்கிற அலர்மேல் மங்கைக்கு வல்லபனான
திரு வேங்கடமுடையான் அடிக்கீழ் அமர்ந்து புகுந்து –அடியார் வாழ்மின் -திருவடியில் வாழ்ச்சி –
என்று அருள் கொடுக்கும்
திருவடிகளாகிற வலையில் அகப்பட்டு -மற்ற ஒன்றுக்கு உரித்தாக்காமல்
நல் தரிக்கப் பெற்றேன் —
நெஞ்சே நீயும் அவனைக் கண்டு அனுபவிக்கப் பார் -என்கிறார்
முடிப்பான் சொன்ன ஆயிரம்
கிடைக்கும் உறுதி அறிந்தால் போதுமே
விஷ்ணு பத்னிக்கு பார்த்தா என்றே அடையாளம்
அஸ்ய ஈஸா நா ஜகத் விஷ்ணு பத்னி
ஒவ்வொருவரும் மற்ற ஒருவருக்கு நிரூபகம்

————————————————————————–

(அந்தர்யாமியாய் இருக்கும் நிலையை விட திருமலையில் இருக்கும் இருப்பு அதி விலக்ஷணமாய் இருப்பதால்
அங்கு சென்று காண ஆசைப்படுகிறார்
திரு உள்ளம் பாபங்கள் உத்பத்தி ஸ்தானம்
வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் -அன்றோ
அஸூ யா ப்ரஸவபூ -நெஞ்சு
இரும்பு போல் வலிய நெஞ்சம்
அங்கு கல்லும் உருகி முத்து உதிர்க்கும்
பூகத ஜலமும் போல் அந்தர்யாமி
அதிலே தேங்கின மடி அது
வாத்சல்ய குணம் மட்டும் இங்கு
பரத்வ ஸுசீல்ய ஸுலப்ய ஸ்வாமித்வ ஸமஸ்த கல்யாண குணங்களும் பிரகாசிப்பது அங்கு
வேடும் வானரமும் வானோர் வானவர் கோனுடன் வந்து ஆஸ்ரயிக்கும் தேசம் அன்றோ
தன்னை அயோக்கியன் என்று இவர் அனுசந்திக்கையாலே அங்கே காண விரும்புகிறார் –
அவன் அவற்றை விட்டு இவர் திரு உள்ளத்தில் இருக்கும் இருப்பை ஆசைப்படுவதை போல –
சேதன லாபம் ஈஸ்வரனாலே ஈஸ்வரனுக்கு –
உடையவன் உடைமையை தன் கிருபையால் தானே உபாயமாக தனக்கே லாபமாகக் கொள்கிறான் -)

அப்பிள்ளை உரை அவதாரிகை
நெஞ்சே நீயும் கண்டு அனுபவிக்கப் பார் என்றவாறே
திருவேங்கடமுடையானும் தான் முற்பாடானாய் வந்து புகுந்தான்
நான் திருமலையைக் காண ஆசைப்படா நிக்க
என் மநோ ரதத்துக்கு விக்நம் பண்ண நின்றாய் என்கிறார்
(அவனை விக்நம் பண்ணுகிறாயே என்று சொல்லாமல் நெஞ்சையே நீ விக்நம் பண்ணுகிறாய் என்கிறார் )

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41–

பதவுரை

கல் அருவி–ஒலிக்கின்ற அருவிகளின் மூலமாக-மலையில் அருவி என்றுமாம்
முத்து உதிர–முத்துக்கள் உதிரப் பெற்றதாய்,-கீழே ரத்னம் இங்கு முத்துக்கள்
ஒணம் விழவில்–திருவோணத் திருநாளில்
ஒலி அதிர–(திருப் பல்லாண்டு பாடுகை வேத பாராயணம் செய்கை ஆடுகை பாடுகை முதலானவற்றாலுண்டான) த்வநி அதிரப் பெற்றதாய்
பேணி வரு–(பக்தர்கள்) விரும்பி வந்து சேரப் பெற்றதான
வேங்கடவா–திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடையவனே!
என் உள்ளம் புகுந்தாய்–நீ என் நெஞ்சிலே புகுந்து விட்டாய் (நீ திருமலையை விட்டு என்னுள்ளத்திலே வந்து விட்டாலும்)
திருவேங்கடம் அதனை சென்று காணல் உறுகின்றேன்–நான் அத்திருமலையிற் சென்று ஸேவிக்க விருப்பங்கொண்டிருக்கிறேன்.

இரைச்சலை யுடைய மலை யருவி முத்துக்களை உதிர்க்க
திருவோணம் நக்ஷத்ரம் ஆகிற மஹா உத்ஸவத்திலே
மங்களா ஸாஸன த்வனி அதிரும்படி ஆதரித்து வந்து ஆஸ்ரயிக்கிற திருமலையிலே எழுந்து அருளி இருக்கிறவனே
நீ என் ஹிருதயத்தில் ப்ரவேசித்தாய்
நான் திருமலைக்குப் போய் உன்னை ஸேவிக்க ஆசைப்படா நின்றேன் –

ஒலியை உடைய அருவிகளாலே முத்து உதிர –
திருவோண நஷத்ரம் ஆகிற மகா திவசத்திலே
அனுகூலர் உடைய மங்களா சாசனத்தாலே வந்த த்வனி மிக
பிராப்தயா வந்து ஆஸ்ரயிக்க படும் திருமலையை உடைய
நீ என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாய் –
நான் திருமலையை அடைந்து காணல் உறுகின்றேன்

(மக்களுக்கு திருமலையை அடைவைத்து ஸாத்யம்
நீயோ அத்தை சாதனமாகக் கொண்டு எனது உள்ளத்தை சாத்யமாகக் கொள்கிறாயே )

(திருமலையில் கல் என்று சப்திக்கும் ஒலியும் இவருக்கு உத்தேச்யம்
ஒண விழாவில் ஒலி -பல்லாண்டு -கல் அருவி முத்து உதிர -கல்லையும் உருக்கி
கண்ணீரை வரவழைப்பது போல் இருப்பதால்
பேணி -பரம பிராப்யம் என்று உகந்து எழுந்து அருளுகிறார் –)

அப்பிள்ளை உரை
கல்லும் கனை கடலும் விட்டு விட்டு அன்றோ இங்கு வந்தீர்
திரு அருவிகள் உடன் சேர்ந்து வரும் ரத்ன பாஷாணமும்-ரத்னங்களும் -(கீழ்ப்பாசுரத்தில் -உண்டே)
முத்துக்களும் பார்த்த இடம் எங்கும் சிதறி விழ
திருவோணம் ஆகிற திவ்ய உத்சவத்தில்
திருப் பல்லாண்டு பாடுவார்
வேத பாராயணம் பண்ணுவார்
பாடுவார் ஆடுவார்
த்வனி கடல் இரைத்தால் போல் கண்ட இடங்கள் எங்கும் முழங்க
இந்த நிரவதிக சம்பத்து கிடக்க- -என்னை ஆசைப்பட்டடு நான் இருந்த இடம் தேடி
வருகிற அப்பனே
என்னுடைய ஹ்ருதயத்தில் பெறாப் பேறு பெற்றதாக வந்து புகுந்தாய்
நான் அந்த நிரவதிக சம்பத்தை யுடையதான திருமலையைச் சென்று கிட்டி கண்டு அனுபவிக்க வேணும்
என்று ஆசைப்படா நின்றேன்
பேணி வரும் வேங்கடவா என்று
அனுகூலர் அடங்கலும் யாவரும் பரம ப்ராப்யமாக பேணி-ஆதரித்து – வரும் திருவேங்கடம் யுடைய நீர் என்றும்
தேவரீர் அடியேன் உள்ளத்தைப் பேணி வரும் என்றுமாம்
கல் அருவி வேங்கடம் முத்து அதிர என்று ஒலியை ஒளியை -இரண்டும் யுடைத்தான
திரு அருவிகளில் முத்துக்கள் சிதற விழ–என்றுமாம்
கல்லே உருகி தண்ணீர் முத்துக்கள் என்றுமாம்
உள்ளமோ இரும்பு போல் வலிய நெஞ்சம்
அத்தை மாற்றி திருவேங்கடம் புகவே ஆசைப்படா நிற்கிறேன் என்கிறார்

————————————————————————–

(இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் மலை ஏறி அப்பனை சேவிக்க வேண்டியது இல்லை
அருகே சென்று திருமலையை வணங்கினாலே போதுமே )

அப்பிள்ளை உரை அவதாரிகை
ப்ரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகளும் தங்கள் பிரயோஜனம் பெறுவதற்காக சென்று ஆஸ்ரயிக்கும் திருமலையை
நீங்களும் உங்கள் அபேக்ஷிதங்கள் பெறுவதற்காகவாது -சித்தி அர்த்தமாக ஆஸ்ரியுங்கள்
(அநந்ய ப்ரயோஜனராக ஆஸ்ரயித்தால் சாலவும் நன்று அன்றோ )

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மை யால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42

பதவுரை

சேண் உயர் வேங்கடத்தை–மிகவும் ஓங்கின அளவிலும் பெருமையிலும் (சிகரத்தையுடைய) திருமலையை
சென்று வணங்குமின்–சென்று வணங்குங்கோள் (அத் திருமலை யானது)
நீர்மையால்–தன் ஸுலப்யமாகிற ஸ்வபாவத்தினால்
நின்று வினை கெடுக்கும்–பாவங்களைப் போக்குவதில் நிலை நின்றிருக்கும்
அங்கு–அத் திருமலையில்,
கடி கமலம் நான்முகனும்–பரிமளம் மிக்க தாமரையிற் பிறந்தவனான பிரமனும்
கண் மூன்றத்தானும்–முக் கண்ணனான சிவபிரானும்
என்றும்–எக் காலத்தும்
அடி–(எம்பெருமானது) திருவடிகளிலே
கமலம்–தாமரைப் புஷ்பங்களை
இட்டு–ஸமர்ப்பித்து
ஏத்தும்–ஸ்துதித்துக் கொண்டிருப்பார்கள்.

பரிமளம் கமழ்கிற திரு நாபி கமலத்தில் பிறந்த ப்ரஹ்மாவும்
முக்கண்ணனும்
திருவடிகளில் தாமரைப்பூவை ஸமர்ப்பித்து
எப்போதும் ஸ்தோத்ரம் செய்கிற அத்திருமலைக்குப் போய் நிலையாய் நின்று
ஸ்வ பாவத்தினால் பாபங்களைப் போக்குகிற
மிக உயர்ந்த திருமலையை ஆஸ்ரயியுங்கோள் –

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை-
சென்னி யோங்கு தண் திரு வேங்கடம் -என்னும்படியே-
புறப்பட்டவாறே கண்டு கிலேசம் தீரும் படியாக ஆகாச அவகாசம் அடங்க விழுங்கும்படி
உயர்ந்த சிகரங்களை உடைய திருமலையை சென்று வணங்குங்கோள்

நீர்மையால் நின்று வினை கெடுக்கும்–
விரோதியான பாபத்தை திருமலை-தன் ஸ்வபாவத்தாலே நசிப்பிக்கும்

கடிக் கமல நான்முகனும் கண் மூன்றத்தானும் அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு
பிரயோஜனாந்த பரரும் தங்கள் அதிகாரம் பெறுவது-
இத் திருமலையிலே அவனை ஆஸ்ரயித்து-
திரு நாபி கமலத்திலே அவயவ தானேன பிறந்த சதுர் முகனும்
லலாட நேத்ரனும்-
அவன் திருவடிகளை
புஷ்ப்யாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்தது-

அப்பிள்ளை உரை
அபேக்ஷித சித்யர்த்தமாக சர்வ காலமும் பரிமள பிரசுரமான
திரு நாபி கமலத்திலே பிறப்பிடமாக யுடைய சதுர்முகனும்
(சர்வ கந்த சர்வ ரஸா )
த்ரி நேத்ரனான ருத்ரனும்
திருவடிகளில் செவ்வித் தாமரைப் பூக்கள் பணிமாறி
துர்மானத்தைத் துறந்து
(அபிமான பங்கமாய் )
வாய் விட்டு ஸ்தோத்ரம் பண்ணி -(வெட்கப்படாமல் -அப்பா தாத்தா பேரைச் சொல்ல என்ன வெட்கம் -)
ஆஸ்ரயிக்கும் அந்தத் திருமலையில் சென்று
பரபரப்பு அற்று -நின்று -(திவ்ய தேசத்தில் அனைத்தும் உத்தேச்யம் )
பிரதிஷ்டராய் இருந்து
தன் ஸ்வபாவத்தால் ஆஸ்ரிதருடைய சகல ஸமஸ்த பாபங்களையும் நசிப்பிக்குமதாய்
(வேங்கடம் அன்றோ )
புறப்பட்டு வழிப்பட்ட போதே கண்டு வாழலாம் படி சிகரங்களை யுடைய
மிக்க ஓக்கத்தை யுடைய திருமலையை நீங்களும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

————————————————————-

சதுர்  முகனும்-லலாட நேத்ரனும்-திருமலையில் ஒரு கால் ஆஸ்ரயித்து போம் அளவு அன்று –
சமாராதான காலங்கள் தோறும் (தோமாலை சேவையே இங்கு பிரதானம் )
சமாராதான-உபகரணங்களைக் கொண்டு வந்து ஆஸ்ரயிப்பார்-என்கிறது –

(ப்ரஹ்மாதிகள் ஒரு கால் ஆஸ்ரயித்து போகார்கள்
திரு ஆராதன காலங்கள் தோறும் உபகரணங்களைத் தரித்துக் கொண்டு
வந்து வணங்குவார்கள் -என்கிறார் -)

அப்பிள்ளை உரை -அவதாரிகை
ப்ரஹ்மாதிகள் ஒரு கால் ஆஸ்ரயித்துப் போம் அளவு அன்றிக்கே
சமாரதன காலம் தோறும்
ஆராதன உபகரணங்களைக் கொண்டு வந்து ஆஸ்ரயிக்கிறார்கள் என்கிறார்

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43-

பதவுரை

மங்குல் தோய் சென்னி–மேக மண்டலத்தளவுஞ் சென்று கிட்டியிருக்கிற சிகரத்தை யுடைத்தான
வடவேங் கடத்தானை–வட திருவேங்கடமலையில் எழுந்தருளி யிருக்கும் பெருமானுக்கு
காப்பு அணிவான்–திருவந்திக் காப்பிடுவதற்காக
திங்கள் சடை ஏற வைத்தானும்–சந்திரனைச் சடையிலே ஏற வைத்துக் கொண்டுள்ள சிவனும்-சந்திரசேகரன்
தாமரை மேலானும்–தாமரைப் பூவிற் பிறந்த பிரமனும்
தாம்–ஆகிய இவர்கள்
குடை ஏற குவித்துக் கொண்டு–திரு முத்துக் குடை முதலான உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு
தாங்குவித்துக் கொண்டு என்றுமாம்
கங்குல்–ஸந்த்யா காலந்தோறும்
புகுந்தார்கள்–திருமலைக்குச் செல்லுவர்கள்

சந்த்ரனைத் தலையில் தரித்த ருத்ரனும்
கமலப்பூ மேல் வஸிக்கிற ப்ரஹ்மாவும்
தாங்கள் குடை முதலிய உபகரணங்களைப் பூர்ணமாக சம்பாதித்திக் கொண்டு
மேக மண்டலத்தை அடைந்து இருக்கிற சிகரங்களை யுடைய
திருமலையில் எழுந்து அருளி இருக்கிறவனுக்குத்
திரு வந்திக்காப்பு ஸமர்ப்பிக்கைக்காக ஸந்த்யா காலத்தில் பிரவேசித்தார்கள் –

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை-
மேக பதத்திலே செல்ல உயர்ந்த சிகரங்களை-உடைய திருமலையை உடையவனை –

காப்பணிவான் கங்குல் புகுந்தார்கள்–
திருவந்திக் காப்பெடுப்பான்-சமாராதான காலம் தோறும் புகுந்தார்கள் –

திங்கள் சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும் குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு –
சந்த்ரனை சடையிலே தரித்த ருத்ரனும்-
தாமரைப் பூவை ஜென்மமாக உடைய ப்ரஹ்மாவும்-(கர்ம வஸ்யன் )
திரு முத்துக் கொடை முதலானவற்றைத் தரித்துக் கொண்டு(சாமரம் போல்வனவும் ) கங்குல் புகுந்தார்கள் –

(நிலத்தில் கால் பாயவும் பெறாத தேவர்களுக்கு என்றே சென்னி ஓங்கி திருவேங்கடம் இருப்பது –
சந்திரனை தலையிலே ஏற வைத்தவனோடு தாமரையில் ஏறி இருப்பவனோடு வாசியற இவனைத் தொழப் புகுவர்
தாமே சேகரித்துக் கொண்டு புகுவர்
புகுந்தார்கள் இறந்த காலமாக சொல்லப்பட்டு இருந்தாலும்
நித்யமாகவே புகுந்து கொண்டே இருக்கிறார்கள் என்றவாறு -)

அப்பிள்ளை உரை –
சந்திரனை (யும் கங்கையும் )ஜடையில் எப்போதும் தரித்துக் கொண்டு இருக்கும் ருத்ரனும்
திரு நாபி கமலத்தை ஜென்ம பூமியாகக் கொண்ட ப்ரஹ்மாவும்
பிரேம பரவசராய்க் கொண்டு திருவாராதனம் கண்டு அருளுவதற்கு உபகாரணாதிகள் –
திரு முத்தின் குடை -போல்வன -(திரு முத்துக் குடை என்று சொல்ல மாட்டார்கள் )
பின்னே தாங்களும் கண்டு களிக்கும் படிக்கு ஈடாக
உயர எடுத்துக் கொண்டு
மேக பதத்தில் கிட்டும் படி உயர்ந்த சிகரம் கொண்ட
வட திக்கில் உள்ள திருமலையில்
திருவந்திக்காப்பு எடுத்து சேவிக்கைக்காக
(பூத காலச் சொல் -புகுந்தார்கள் பாசுரத்தில்
அர்த்த பலம் கொண்டு நிகழ் காலம் )எப்பொழுதும் புகுகிறார்கள்
(விரைவினும் மிகுவினும் தெளிவினும் சொல்ல இப் பொருள் நன்னூல் )
தர்ம வீர் யேன யதாவத் ஸம்ப்ரவஸ்யதி -என்று ப்ரஹ்மாவின் அனுக்ரஹத்தால் வால்மீகி அருளிச் செய்தது போல்
இவர் மயர்வற மதி நலம் அருளப் பெற்றதால்
சத்ராதிகளைக் கொண்டு வருவதும் பின்னே நின்று கண்டு அனுபவிப்பதையும்
கூட நின்று கண்டால் போல் சாஷாத் கரித்து அருளிச் செய்கிறார்
சந்திரன் போல் குளிர்ந்த ஞானம் அவன் அனுக்ரஹத்தால் இவருக்கு

—————————————————————-

(குமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே –
கால் நடை ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்-)

அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-
ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற திருமலையிலே-
படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

(குமரர் உள்ளீர் பாசுரம் -அப்பொழுது தான் கரணங்கள் நன்றாக இருக்கும்
சீமாலிகன் -மல்லிகை மா மலர் கொண்டு ஆர்த்ததும் -இதுவும் –
போகத்தில் வழுவாத ஆழ்வார்கள் மட்டும் கண்டு அருளிச் செய்தவை
புராணங்களில் இல்லை )

அப்பிள்ளை உரை அவதாரிகை
அறிவுடையாரும் மேல் வரும் அநர்த்தம் அறிந்து பரிகரிக்க மாட்டாமல் கலங்கி
(தபஸ்ஸூ பண்ணினான் என்று வரம் கொடுத்து )
அநர்த்தம் வந்து கலங்கிய அப்படிப்பட்ட தசையிலும் ஹிதைஷியாய் ரஷிக்கும் சர்வேஸ்வரன் –
திரு வேங்கடத்தானை -கரணங்கள் நல்ல தசையில் இருக்கும் போதே
சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்து போம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்-
புரிந்து — ஆஸ்ரயித்து
(விஷய ஞானம் உள்ளாரை வரச் சொல்வார் )

ப்ரஹ்மாவினால் எடுத்துக் கொண்டு மடியில் வைத்துக் கொள்ளப் பட்ட சிறு பிள்ளையாய்
தண்ட்யனான ராவணாசூரனுடைய தலைகளை முன்பு
திருவடிகளால் எண்ணி
அந்தர் தானமான நித்ய யுவாவான ஸர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கிற
தோப்புக்களை யுடைய திருமலையை நல்ல வயஸ்ஸை யுடையவர்களே ஆஸ்ரயித்துப் போருங்கோள் –

எடுத்து மடியில் வைக்கும் பிள்ளையாய்-
தண்ட்யனான ராஷசன் தலை பத்தும் அறுக்கப்படும் என்று-
திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த் தானம் பண்ணின முக்தன் நிற்கும்-திருமலைக்கே
கால்நடை யாடும் போதே
ஆஸ்ரயித்துப் போருங்கோள்-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —–ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி –77-

(குமரர் உள்ளீர்
பால்யேந திஷ்டா சேத் -ப்ரஹ்ம ஞானி குழந்தையைப் போல் இருக்கக் கடவன்
பரமாத்ம ஞானி குழந்தை யுள்ளம் படைத்தராய் இருப்பார் )

அப்பிள்ளை உரை
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்கும் தசையில்
(மா மதலைப்பெருமாள் திருச்சேறை )
எடுத்து மடியில் வைத்துக் கொள்ளும்படி முக்த சிசுவாக வடிவைக் கொண்டு
அநீதியை செய்து போகும்-கை வளருகையாலே –
சித்ரவதம் பண்ணி தண்டிக்க யோக்யனான ராவணன்
இவை அறுபடப் போகும் தலைகளை ஒரு நாளிலே
அவனுக்கும் தெரியாதபடி திருவடிகளால் கீறி எண்ணிக் காட்டி
ஆஸ்ரித விஷயத்தில் ஹித காமனான முக்தன்
(திருமலை அப்பனுக்கு பிள்ளைத்தனம்
குழந்தையாக சேவித்துக் காட்டி அருளி-தப்பே தெரியாத படி அனுக்ரஹம் –
ஸர்வஞ்ஞனுக்கு ஒன்றும் தெரியாமல் இருக்க குழந்தை தானே )
அவன் வர்த்திக்கும் திருச் சோலைகள் நிறைந்த திருமலைக்கே
படு கரணராய் -மனமும் ஒன்றி- இளமை குன்றாத நிலையிலேயே
அபிமுகராய்க் கொண்டு சடக்கென வந்து ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

——————————————————-

வெறும் சம்சாரிகளுக்கே அன்று –
நித்ய ஸூரிகளுக்கும் பிராப்யம் திருமலை -என்கிறார் –

அப்பிள்ளை உரை அவதாரிகை
உபய விபூதியில் உள்ளாருக்கும் திருமலையே ப்ராப்யம்
(இரட்டைக் குழந்தை பெற்ற தாய் இரண்டு முலையாலே பாலூட்டுமா போல்
பாலே போல் சீர் கொண்ட அப்பன் )

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-45-

பதவுரை

புண்டரீகம் பாதம்–திருவடித் தாமரைகளில்
புரிந்து–அன்பு பூண்டு
மலர் இட்டு–புஷ்பங்களைப் பணிமாறி
பரிந்து–மங்களாசாஸநம் பண்ணி
படுகாடு நிற்ப–வெட்டி வீழ்த்த மரங்கள் போலே கால் பேராமல் நிற்கும் படியாக வணங்கி நிற்கும்படியாக
எங்கும்–ஸகல ப்ரதேசங்களிலும்
தெரிந்து–விளங்கி(கீழேயே புறப்பட்ட போதே வழியிலே சேவை சாதிப்பார் பார்த்தோம்
பலருக்கும் பல வித குணங்களைக் காட்டி விளங்குகிறான் அன்றோ
நமக்கு பரத்வமும் அவர்களுக்கு ஸுலப்யமும் )
தான் ஓங்கி நிற்கின்றான்–குணங்களால் பெருமை பெற்று எழுந்தருளி யிருக்கும் பெருமானுடையதாய்
தண் அருவி வேங்கடமே–குளிர்ந்த அருவிகளை யுடைத்தான திருமலையே
வானோர்க்கும்–நித்ய ஸூரிகளுக்கும்
மண்ணோர்க்கும்–நிலத் தேவரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும்
வைப்பு–நிதியாயிருக்கும்.

ஆஸ்ரயண உன்முகர்களாய் ஸ்ரீ பாத பத்மத்தில் புஷ்பங்களை சமர்ப்பித்து ஆசையுடன் அங்கே
நித்ய வாஸம் பண்ணும் படி ஸர்வ தேசத்திலும் பிரகாசித்தது தான் சர்வாதிகனாய்
எழுந்து அருளி இருக்கிற ஸர்வேஸ்வரனுடைய குளிர்ந்த அருவிகள் பெருகுகிற
திருமலையே தேவர்களுக்கும் மநுஷ்யர்களுக்கும் நிதியாய் இருக்கும் —

நிரதிசய போக்யமான திருவடிகளிலே-ஆதரித்து புஷ்பாதிகளை இட்டு
ஸ்நேஹித்து படுகாடு கிடக்கும் படியாக-
(ஸ்தப்தோஸி -மரம் போல் நாமும் -அதைக் கண்டு அப்பனும் -இவைற்றைக் கண்டு நித்யரும் )
விசத தமமாக எங்கும் குறைவற்றவனுடைய
ஸ்ரமஹரமான திரு மலையே-
உபய விபூதிக்கும் பிராப்யம்-

(புண்டரீகப்பாதம்
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-மதுத் தாரகைகள் ஒழுகா நிற்கும்
தேனே மலரும் திருப்பாதம் –திருவாய் –1-5-8-
தெரிந்து எங்கும் தான் ஓங்கி நிற்கின்றான்
கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான் தன்னை –திருவாய் -4-5-10-
வ்ருஷ இவ ஸ்தப்த –வணங்காத மரம் போல் பரம புருஷன் நிற்கிறான் -ஸ்ருதி -)

அப்பிள்ளை உரை
சாதரமாக ஆஸ்ரயண உந்முகராய்க் கொண்டு
தாமரைப் பூ போல் நிரவதிக போக்யமான
(அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ )
பிரேம யுக்தராய் கொண்டு பர வச காத்ரராய்
கால் வாங்க மாட்டாதே மங்களா ஸாஸனம் பண்ணி
சர்வருக்கும் ஆஸ்ரயித்து நிற்கும் படியாக விசத தமமாக சர்வ பிரதேசங்களிலும் பிரகாசித்து
சீலாதி குணோத்தரராய்
(நிகரில் புகழாய் இத்யாதி –நான்கு குணங்கள் -ஸுசீல்யம் ஸ்வாமித்வம் ஸுலப்யம் வாத்சல்யம் )
சர்வேஸ்வரனுடைய குளிர்ந்த திருவடிகளை யுடைத்தான திருமலையே
பரமபத வாசிகளான நித்ய ஸூரிகளுக்கும் முக்தருக்கும்
பூ ஸூரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் பரம ப்ராப்யம்

————————————————————————–

(அறிவற்ற விலங்குகளும்
அறிவில் குறைந்த குறவர்களும்
பகவத் பாகவதர்களுக்குப் பணி செய்யும்
பெருமை பெற்ற திருமலையை
நாடு எல்லாம் ஆஸ்ரயிக்க வேண்டாவோ என்கிறார் -)

அப்பிள்ளை உரை அவதாரிகை
திர்யக்குகளும் கிட்டி அடிமை செய்ய ஆசைப்படும் திருமலையை
நாட்டார் ப்ரதக்ஷிணம் முதலானவைகளைப் பண்ணி
(ப்ரதக்ஷிணம் ஸ்ரவணம் நமஸ்காரம் திரு நாம சங்கீர்த்தனம் போன்ற )-
அனுகூல வ்ருத்திகளைப் பண்ணி ஆஸ்ரயிப்பார்கள் ஆகில் மிகவும் நல்லது –

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -46-

பதவுரை

மா மதியை–‘சிறந்த (இந்த) சந்திரனை
மணி விளக்கு ஆ–மங்கள தீபமாக
வைப்பன் என்று–(திரு முன்பே) வைக்கக் கடவேன் என்றெண்ணி
(அந்த சந்திரனைப் பிடிப்பதற்காக)
கை நீட்டும்–உயரத் தூக்கின கை தூக்கின படியே யிருக்கிற
யானையை–ஒரு யானையை (பிடிப்பதற்காக)
எப் பாடும்–நாற் புறமும்-புறம்புள்ள வேடர்கள்
வேடு வளைக்க–வேடர் சூழ்ந்து கொள்ள
(எல்லா திசையில் இருந்து வந்த வேடர்கள்
திவ்ய தேச வேடர்களுக்கு இந்த எண்ணம் வராதே
வளைக்க என்று இருப்பதால் நான்கு புறமும் அர்த்தம் சித்தம்
எப்பாடும் -புறம்புள்ள வேடர்கள் என்றவாறு )
குறவர்–(அங்குள்ள) குறவர்கள்
வில் எடுக்கும்–(அவ் யானையின் மேல் பிரயோகிக்க) வில்லை எடுத்துக் கொண்டு போகுமிடமான
வேங்கடமே–திருமலையையே
நாடு–நாட்டிலுள்ளாரனைவரும்
வளைத்து–பிரதக்ஷிணம் பண்ணி
(திருமலையை வளைத்து உள்ள நாட்டார் எல்லாரும் என்றுமாம் )
ஆடுதும் ஏல்–(மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாக) நர்த்தனம் பண்ணப் பெற்றால்
நன்று–நல்லது

ஸ்லாக்யமான சந்திரனை ஸர்வேஸ்வரனுக்கு மங்கள தீபமாக வைப்பேன் என்று
எப்போதும் தும்பிக்கையை நீட்டிக் கொண்டு இருக்கிற யானையை
வேடர் எங்கும் போக ஒட்டாமல் சுற்றிக் கொள்ள
அத்தைக் கண்டு குறவர் வில்லை எடுக்கிற திருமலையையே
நாட்டார் எல்லாம் ப்ரதக்ஷிணம் பண்ணிக் கூத்தாடினால் நலமாய் இருக்கும் —

சந்தரன் அணியனாய் இருக்கையாலே-
சர்வேஸ்வரனுக்கு திரு நந்தா விளக்காக வைப்பன்-என்று
ஒரு கால் நீட்டிக் கிடைக்காது ஒழிந்தால் மீள அறியாதே –
எப்போதும் கை நீட்டின படியே-அந்ய பரமாய் நிற்கிற யானையை
புறம்புள்ள வேடர் சூழ-
திருமலையில் வர்த்திக்கும் குறவர்-வில் எடுத்தபடி எதிர்க்கும் திருமலையே
அறிவில்லாதாரோடு அறிவுடையாரோடு வாசியற-
எல்லாரும் ஆஸ்ரயிகப் பெறில்
அதுவே நன்று-

(ஆனை பிடிக்க வேடர்கள் பார்ஸ்வத்திலே சூழ
அங்கே வர்த்திக்கிற குறவர் இத்தைக் கண்டு வில்லுகளை எடுக்க -என்றபடி )

(எப்பாடும் வேடு –குரூரம் உள்ளவர்
குறவர் –விசேஷணம் இல்லாமல் திருமலை வாஸத்தால் வந்த நன்மை உள்ளவர் –
தங்கள் குரூரத்தை பாகவத விரோதிகளான வேடர்கள் இடம் காட்டுபவர் –
வேடு வளைக்க –குறவர் வில் எடுக்கும் வேங்கடம்
வன விலங்குக்கே ரக்ஷை உள்ள தேசம் )

(விலங்குகளே கைங்கர்யம் செய்யா நிற்க உலகோர்கள் செய்ய வேண்டும் கை முதிக நியாயம் )

அப்பிள்ளை உரை
ஸ்லாக்யமான பூர்ண சந்திரனை- மா மதி அன்றோ
ஆஸ்ரித வ்யாமுக்தனான திருவேங்கடமுடையானுக்கு
அழகிய திரு நந்தா விளக்காக வைப்பன் என்று கொண்டு
பிடிக்க சர்வ காலமும் துதிக்கையை நீட்டி கைங்கர்யத்தில் நோக்காய்
(அந்ய பரராய் வேடர் வருவதை அறியாமல் இதிலே நோக்காய் உள்ள யானைகள் )
எல்லா திக்குகளிலும் இருந்து வந்த வேடர் ஜாதிகள் பிறர்க்கு இடம் இல்லாமல் வளைத்துக் கொண்டு இருக்க
அங்கு வர்த்திக்கும் குறவர்கள் அவர்களை நலிவதற்க்காக கையில் வில்லை வாங்கிக் கொண்டு போவதாக ஒருப்படும்
(பகவத் தாஸர்களை ரக்ஷிப்பதே இவர்கள் நோக்கு )
அப்படிப்பட்ட ஞான அஞ்ஞான விபாகம் அற நாட்டில் உள்ள பிராணிகள் எல்லாம்
பிரதக்ஷிணம் பண்ணி
ப்ரீதி ப்ரகர்ஷத்தால் ச ச ப்ரம ந்ருத்யம் பண்ணி ஆஸ்ரயிக்குமாகில்
சால அழகியதாம்

————————————————————————–

(கீழே திருமலையில் உள்ள யானையின் பெருமை
இதில் அறிவு குறைந்த பல பொருள்கள்
நித்ய ஸூரிகளைப் போல் பகவத் கைங்கர்யம் செய்வதை அனுபவிக்கிறார் –
எம்பெருமான் மலை மேல் ஏதேனும் ஆவேனே
நித்ய ஸூரிகள் இவர்கள் என்றும்
இங்கு உள்ள திர்யக்குகளும் அவர்களுக்கு உண்டான ஸ்ரத்தை ஈடுபாடு உண்டு என்றுமாம் -)

அப்பிள்ளை உரை அவதாரிகை
சர்வேஸ்வரன் ப்ராப்யனானோ பாதி
அவன் உகந்து அருளி நித்ய வாஸம் செய்து அருளும் திவ்ய தேசமான திருமலையில் உள்ள
சேதன அசேதனாத்மகமான-சகல பதார்த்தங்களும் நமக்கு உத்தேஸ்யமாகையாலே
துறுப்புக் கூடாக – முழுமையாக -திருமலையை மண்டி அனுபவிக்கிறார்

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-

பதவுரை

ஆளியும்–யாளிகளும்
கோள் அரியும்–வலிமை தங்கிய சிங்கங்களும்
பொன்–பொன்களும்
மணியும்–மாணிக்கங்களும்
முத்தமும்–முத்துக்களும்
பூ மரமும்–பூத்த மரங்களும்
பல மணி நீரோடு பொருது உருளும் கானமும்–பலவகைப்பட்ட ரத்னங்கள் அருவிகளோடே
கலந்து உருண்டு விழப் பெற்ற காடுகளும்
வானரமும்–குரங்குகளும்
வேடும்–வேடச் சாதியுமாகிற
இவற்றை
உடை–உடையதான
வேங்கடம்–திருமலையானது
நல் மணி வண்ணன் ஊர்–நல்ல நீல ரத்னம் போன்ற வடிவை யுடையனான அப்பனுடைய வாஸஸ் ஸ்தானமாம்
வண்ணம் என்றது ஸ்வபாவம் என்றுமாம்

யாளிகளையும் -பலமுடைய ஸிம்ஹங்களையும் -ஸ்வர்ணங்களும் -ரத்னங்களும் –
முத்துக்களும் பூ மரங்களும் அநேக மணிகளும்
ப்ரவாஹத்தோடே கூட புரண்டு விழுகிற காடுகளையும் வானரங்களையும் வேடர்களையும் யுடைய திருமலை
நீல மாணிக்கம் போன்ற ஸ்லாக்யமான திருமேனியை யுடைய ஸர்வேஸ்வரனுடைய திவ்ய தேசம் —

ஸ்ரமஹரமான வடிவை உடையவனுக்கு-
ரஷணத்துக்கு உறுப்பாகையாலே
திருமலையை
ஊர் என்கிறது –

(மலை வனம் காடு தாழ்வரை இத்யாதிகள் சொல்லாமல் ஊர் என்கிறார் அன்றோ
ரக்ஷணத்துக்கு உறுப்பான இடத்தை ஊராக விரும்புவதற்கு பிரமாணம்
ஸூமித்ரையார் வார்த்தை
இதுக்கு இரண்டு நிர்வாகங்கள் அருளிச் செய்கிறார் )

ரஷணத்துக்கு உறுப்பாகையாலே திரு அயோத்யையிலும்-காட்டை விரும்பினார் இறே பெருமாள் –
அவர் விரும்பின காட்டை விரும்பிப் போகிற இளைய பெருமாள்-
அக்காட்டோபாதி இப்படை வீட்டையும் நினையும் கிடீர்-என்றார் இறே திருத் தாயார் –
ராமம் தசரதம் வித்தி-
வத்யதாம் பத்யதாம் -என்று அறுவராதே-
உங்கள் தமையனாரோபாதியாக உங்களையரையும் நினையும் கிடீர் –
(தசரதனை கொல்ல நினைக்காமல் அவரையும் ராமனாகவே எண்ணு என்கிறாள் )
மாம் வித்தி ஜனகாத்மஜம் -உங்கள் தமையனார் உகந்த பிராட்டியோபாதி என்னையும்
நினையும் கிடீர் என்கிறார் –

ஆளியும் இத்யாதி –
திருமலையில் வர்த்திக்கும் நித்ய ஸூரிகளைச் சொல்லுகிறது-

(இனி மேல் ஆத்மா நிரூபக சேஷத்வ அனுகூல ஜென்மமே உத்க்ருஷ்ட ஜென்மம்
என்னும் அத்தை அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரும் -முமுஷுக்களுமான மகாத்மாக்கள்
ஆதார முகேன பிரகாசிப்பிக்கிறார் ..
அணைய ஊர புனைய
அடியும் பொடியும் பட
பர்வத பவனங்களில்
ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற
திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
பெருமக்களும் பெரியோரும்
பரிக்ரஹித்து பிரார்த்திப்பர்கள்-சூரணை -87-)

(ரக்ஷணத்துக்கு உறுப்பாகும் இடமே ஊர் என்று காட்ட ஸ்ரீ இராமாயண ஸ்லோகம்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனுமாக வேணும் என்று பிரார்த்திப்பார்கள் அன்றோ
நித்ய ஸூரிகளும் ஸுலப்யம் அனுபவிக்க பொன் மணி வடிவு கொள்வார்களே )

(நித்யர் முக்தர் முமுஷுக்கள் அனைவரும் மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம பிறவி ஏற்று
இங்கே கைங்கர்யம் செய்கிறார்கள்
அவர்களுக்கு நமஸ்காரங்கள்-

அஹ்ருத சஹஜ தாஸ்யா ஸூரயா ஸ்ரஸ்த பந்தா
விமல சரம தேஹா இதி அமீ ரங்க தாம
மஹித மனுஜ திர்யக் ஸ்த்தா வரத்வா சந்த
ஸூ நியதம் இதிஹ ஸ்ம ப்ராஹு ஏப்ய நமஸ்தாத் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்––33-

அஹ்ருத சஹஜ தாஸ்யா –இயற்கையான சேஷத்வம் -கைங்கர்யம் -குன்றாத
ஸூரயா-நித்ய ஸூரிகளும்
ஸ்ரஸ்த பந்தா-சம்சார பந்தம் கழலப் பெற்ற முக்தரும்
விமல சரம தேஹா –பாபங்கள் எல்லாம் தொலைந்து இனி மேல் அடுத்த தேஹ பரிக்ரகம் இல்லை என்று
உறுதியாக இருக்கும் முமுஷுக்களும்
இதி அமீ–ஆகிய இவர்கள்
மஹித மனுஜ திர்யக் ஸ்த்தாவரத் வா சந்த–மானிடப் பிறவியையும் பசு பக்ஷி ஜங்கமப் பிறவியையும் ஸ்தாவரப் பிறவியையும்
விரும்பியவர்களாய்க் கொண்டு
ரங்க தாம–ஸ்ரீ திருவரங்கத்தை
ஸூ நியதம் ஸ் ரயந்தே –எப்போதும் பற்றி இருக்கிறார்கள்
இதிஹ ஸ்ம ப்ராஹு –என்று பவ்ராணிகர்கள் சொல்லி வைத்தார்கள்
ஏப்ய நம ஸ்தாத் –இப்படிப்பட்ட மனுஷ்ய ஜங்கம ஸ்தாவரங்களின் பொருட்டு நமஸ்காரம் ஆகுக –
இப்படி சொன்ன அவர்களுக்கு நமஸ்காரம் என்றுமாம் –
இதிஹ–ஐதிக்யம் என்ற சொல் இதனாலே பிறந்தது –)

அப்பிள்ளை உரை
யாளியும்
மிடுக்கை யுடைய ஸிம்ஹமும்
பொன்னும்
மாணிக்கங்களும்
முத்தும்
அருவிகளும்
கண்ட இடம் எங்கும் உருண்டு வந்து விழும் காடுகளும்
நீரைக் கண்டால் வெறுவி மரம் ஏறும் குரங்குகளும்
வேட ஜாதியும் ஆகிற
நிரதிசய ஐஸ்வர்யம் உடைத்தான திருமலையே
அங்குத்தை நிலமிதியாலே பழுப்பற்ற நீல ரத்னம் போல்
(அங்கு இருப்பதால் தான் திருவேங்கடமுடையான் ஆகிறான்-க்ஷேத்ர மஹாத்ம்யம் )
ரஷிக்க படுபவர்களை குறைவற ரஷிக்க பாங்கான தேசம் என்று
விரும்பி வர்த்திக்கும் திவ்ய தேசமாகும் –

————————————————————————–

(திருமலை மங்களா ஸாஸனம் -இத்துடன் சேர்ந்து 10 பாசுரங்கள்
பதிகம் போலவே வரிசையாக அருளிச் செய்கிறார்
நித்யருக்கும் அவனுக்கும் இதுவே ப்ராப்யம்
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் ப்ராபகமும் இதுவே)

அப்பிள்ளை உரை அவதாரிகை
நித்ய ஸூரிகளோடே
ஸர்வேஸ்வரனோடு வாசியற
சர்வருக்கும் திருமலையே ப்ராப்யம் என்கிறார்

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-48–

பதவுரை

விண்ணோர்–நித்ய ஸூரிகளால்
மெய்ம்மையால்–உண்மையான பக்தியுடனே
தொழுவதுவும்—ஆஸ்ரயிக்கப்படுவதும்
வேங்கடமே–திருமலையே
(ப்ராப்ய பிராபகங்கள் திருமலையே என்று தொழுவதே மெய்ம்மை )
வினை–பாவங்களையும்
மெய் நோய்–உடம்பைப் பற்றின நோய்களையும்
(மெய்யான வினை -அனுபவித்தே தீர்க்க வேண்டிய வினைகள்
பாபங்களும் சரீரங்களும் சூழல் -மேலும் பாபங்கள் உண்டாகும் )
தீர்ப்பதுவும்–போக்கடிக்க வல்லதும்
வேங்கடமே–திருமலையே
தானவர் வீழ–அசுரர்கள் மாளும்படி
தன் ஆழி படை தொட்டு–தனது சக்ராயுதத்தைப் பிடித்து
வானவரை–தேவர்களை
காப்பான்–காத்தருளுமெம் பெருமானுடைய
மலை–திருமலை
வேங்கடமே–திருவேங்கடமேயாம்

நித்ய ஸூரிகள் ப்ராப்யமாக ஆஸ்ரயிக்கிறதும் திருமலையே
சரீரம் அடியாக வந்த பாபங்களையும் வியாதிகளையும் போக்குவதும் திருமலையே
ராக்ஷஸர்கள் படும்படி தன்னுடைய திருவாழி யாகிற ஆயுதத்தைத் தரித்துத்
தேவர்களை ரஷித்தவன் வஸிக்கிற மலையும் திருமலையே

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
திருமலை பிராபகமாக-
வேறு ஓன்று பிராப்யமாகை அன்றிக்கே
இது தானே ப்ராப்யமாக ஆஸ்ரயிப்பார்கள்
நித்ய ஸூரிகள்

(திருமலையும் ஸ்ரீ வைகுண்டமும் ப்ராப்யம் என்று இருந்தால்
பொய்மையாகத் தொழுமவர்கள் ஆவார்களே
திருவேங்கடமுடையான் ப்ராப்யம் என்று தொழுதாலும் பொய்மையே தொழுமவர்கள் ஆவார்கள்
திருமலையே ப்ராப்யம் என்று இருப்பதே மெய்மையாகத் தொழுமவர்கள் )

வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் –
அவஸ்யம் அனு போக்யத்வம் -என்கிற-
பாபத்தைப் போக்குமதுவும் திருமலையே –

வேங்கடமே தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு வானவரைக் காப்பான் மலை –
அஸூர ஜாதி தரைப் படும்படிக்கு ஈடாக-
திரு ஆழியைப் பிடித்து
தேவ ஜாதிக்கு குடி இருப்பு கொடுத்தவனுக்கு ஊரும்
திருமலையே-

(தொழுவதில் மெய்ம்மை -நித்யர்
பொய்மை -ஈஸ்வரோஹம் என்று இருக்கும் தேவர்கள்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும் அடிக்கமலம் இட்டு ஏத்துவது தங்கள் பதவிக்காக
மெய் வினை -அனுபவித்தே போக்க வேண்டியவை
அவஸ்யம் அநு போக்தவ்யம் க்ருதம் கர்ம ஸூப அஸூபம்
நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி –நூறு கோடி கல்பமானாலும் அனுபவியாமல் கழியாதே
மெய் வினை நோய் என்று சரீர சம்பந்தம் அடியாக வரும் பாபங்களும் வியாதியும் என்றுமாம்
வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் -நம்மாழ்வார் )

அப்பிள்ளை உரை
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தர்களான நித்ய ஸூரிகள்
சீலாதி குண அனுபவத்துக்கு ஏகாந்தமாகையால்
திருமலையையே மெய்யான ப்ராப்யமாக நினைத்து எப்பொழுதும் ஆஸ்ரயிப்பதும்
திருமலையே
சம்சாரிகளுக்கு அனுபவ ஏக விநாஸ்யமான- மெய்யான ப்ராபல்யமான வினை களையும் –
மெய்யான கர்மம் -சரீரம் பற்றி வரும் கர்மங்களையும் –
தத் கார்யமான வியாதிகளையும்
ச வாசனமாகப் போக்குவதும்
திருமலையே
பிரதிகூலரான அசுரர்கள் தரைப்படவும் தேவர்கள் வாழவும்
தனக்கு அசாதாரணமான திரு ஆழி –தன் ஆழி -தரித்து
அனுகூலரான தேவர்களை ரக்ஷிக்கும்
சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கும்
திருமலையும் இதுவே –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -25-36–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை உரை —

September 22, 2013

ஆஸ்ரித அர்த்தமான செயல் ஒழிய தனக்கு என்ன  ஒரு செயல் இல்லை என்கிறார்-

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக ப்ரவ்ருத்தி ஒழிய உனக்கு என்று
ஒரு ப்ரவ்ருத்தி உண்டோ என்கிறார் இதில்

வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஓன்று உண்டே -வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று —25-

பதவுரை

மதியாது–உன் மேன்மையைச் சிறிதும் நினையாமல்
வகையால்–நல்ல உபாயங்களாலே
மண் கொண்டாய்–(மாவலியிடத்தில் இரந்து) பூமியை ஸ்வாதீனப் படுத்திக் கொண்டாய்
மற்றும்-அதற்கு மேலும்,
வயிரம்–வயிரமாகிற ரத்னத்தை
வகையால்–ஔஷதாதி உபாயங்களாலே
குழைத்து–இளகச் செய்து
உண்ணும்–உண்பவனும்
தான் என்னும்–தனக்கு மேற்பட்ட பலிஷ்டர் ஆருமில்லை யென்று அஹங்காரங் கொண்டிருப்பவனுமான
மாவலி–மஹாபலியினுடைய
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி -இந்திரனோடு வைரத்தை யுண்டாக்கி லோகத்தைப் புஜிக்கிற மஹா பலி
தான் என்னும் -என்கையாலே அபிமானம் தோற்றுகிறது –
வயிரம் வழக்கு–சத்ருத்வ முறையை
ஒழித்தாய்–போக்கினாய்
வகையால்–இப்படிப்பட்ட உனது காரியங்களினால்
வருவது ஒன்று உண்டே–உனக்கு ஸித்திப்பதொரு பலன் உண்டோ? (எல்லாம் ஆஸ்ரிதர்க்காகச் செய்கிறாயித்தனை.

மஹா பலியை லஷ்யம் செய்யாமல் உபாயத்தினால் பூமியை வாங்கிக் கொண்டாய்
அதற்கு மேல் உபாயத்தினால் வச்சிரத்தை யுரைத்து புஜித்து துரபிமானியான
மஹாபலியோடே சாத்ரவ முறையைப் போக்கினாய்
இவ்வுபாயங்களினால் உனக்கு வருவது ஆஸ்ரித ரக்ஷணம் ஒழிய வேறே ஒரு பிரயோஜனம் உண்டோ –

வகையால் மதியாது மண் கொண்டாய்
மகா பலி உகக்கும் பிரகாரத்தாலே பூமியை அநாயாசேன கொண்டாய்-
(உவந்த உள்ளத்தனாய் -மஹாபலி இந்திரன் பகவான் ரிஷிகள் ஆழ்வார் அனைவருக்கும் உண்டே )

வகையால் வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும் வயிர வழக்கு ஒழித்தாய் மற்று –
ஒரு உபாயத்தாலே வைரத்தை புஜித்து
அத்தாலே மிடுக்கனாக அபிமானித்து இருக்கிற மகா பலி உடைய சாத்ரவ முறையைத் தவிர்த்து-
மகாபலி பக்கலில் நின்றும் ராஜ்ஜியம் மீட்டுக் கொடுத்து உபகரித்தாய்

(வயிரம் வைரம் -சத்ருத் தன்மை –
வயிர வழக்கு -எதிரியாய் இருக்கும் முறை
அஹங்காரமான தன்மை )

மற்றும் வகையால் வருவது ஓன்று உண்டே –
இவற்றால் உனக்கு பிரயோஜனம் ஆவது ஓன்று உண்டோ
(அவாப்த ஸமஸ்த காமன்
ந தே ரூபம் பக்தானாம்)

அப்பிள்ளை உரை
ஸ்ரீ யபதியான நமக்கு இரப்பிலே அதிகரிக்கப போருமோ
அநாயாசேன –
ஆஸூர பிரகிருதி உகந்து தரும் படியான வடிவு அழகு -இதுவே -வகையால்
முக்த ஜல்பிதம் முதலான பிரகாரங்களால்
ஆஸ்ரிதனான இந்திரனுக்காக அநாயாசேந பூமியை அளந்து கொண்டாய்
இப்படி இழந்த ராஜ்யத்தை கொடுத்ததோடு இல்லாமல் மேலே
இளக ஒண்ணாதபடி அதி கடினமான வயிரமான ரத்னத்தை
ஒஷதாதிகள் கொண்டு குழைத்து புஜித்துக் கொண்டு போய் அத்தாலே மிடுக்கனான ப்ரசித்தனான மஹா பலியுடைய
அவனது சாத்ருத்வம் போக்கி
இப்படி ஆஸ்ரித கார்யம் செய்தாய் ஒழிய இந்த உபாயங்களால் உனக்கு என்று ஏதாவது பிரயோஜனம் உண்டோ
மதியாது
ஒரு சரக்கு என்று எண்ணாமல் முடித்தாய்

————————————————————————–

(யானே இரந்து போக நீரும் தேவதாந்த்ரங்கள் பக்கம் வேறே பிரயோஜனம் கருதி
இரந்து போவீரோ என்ன
போக மாட்டேன் என்பதுக்கு ருத்ரனே சாக்ஷி
தமது வாழ்க்கையில் நடந்ததே -குரு பரம்பரையில் -இவருக்கு
பக்தி சாரர் பட்டம் ருத்ரன் கொடுத்தது உண்டே )

நான் தேவதாந்த்ர ஸமாச்ரயணம் பண்ண மாட்டேன் என்பதற்குத்
தன்னையே சமாஸ்ரயணம் பண்ண ஆள் பிடித்து திரியும் ருத்ரனே சாக்ஷி

அப்பிள்ளை உரை அவதாரிகை
உன் அழகிலே அகப்பட்ட நான் சர்வ காலத்திலும் உம்மையே அனுபவிக்கும் படி
பார்த்து அருள வேணும்
சதா பஸ்யந்தி ஸூரய போல் ஆக அருள வேண்டும்

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை
கற்றைச் சடையான் கரிக் கண்டாய் -எற்றைக்கும்
கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா யான் உன்னை
கண்டு கொள் கிற்குமாறு–26

பதவுரை

கடல் வண்ணா-கடல் போன்ற திருநிறமுடைய பெருமானை!
யான் தொழுவார் மற்று ஒருவரையும் இன்மை–அடியேனால் ஆஸ்ரயிக்கப்படும் தெய்வம்
(நீ தவிர) வேறு எதுவுமில்லை யென்னும் விஷயத்தில்
கற்றை சடையான்–சேர்த்துக் கட்டின ஜடையை யுடையனான ருத்ரன்
கரி கண்டாய்–ஸாக்ஷி காண்
யான்–இப்படி அநந்ய பக்தனை அடியேன்
உன்னை–உன்னை
எற்றைக்கும்–எந் நாளும்
கண்டு கொள்கிற்கும் ஆறு–ஸேவித்துக் கொண்டேயிருக்க வல்லேனாம்படி
கண்டு கொள்–கடாக்ஷித்தருள வேணும்.

நான் உன்னை ஒழிய வேறே ஒருவரையும் ஆஸ்ரயணீயராக உடையேன் அல்லேன்
இதற்கு நெருங்கின ஜடையையுடைய ருத்ரன் ஸாக்ஷி
சமுத்திரம் போன்ற திரு மேனியை யுடையவன்
நான் உன்னை எப்போதும் சேவிக்கும் படி கடாக்ஷித்து அருளாய் –

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை கற்றைச் சடையான் கரிக் கண்டாய் –
நான் தேவதாந்திர சமாஸ்ரயணம் பண்ணேன்-என்னும் இடத்துக்கு
ஆள் பிடித்துத் தொழுவித்துக் கொள்ளும் ருத்ரன் சாஷி –

எற்றைக்கும் கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை கண்டு கொள் கிற்குமாறு –
ஸ்ரமஹரமான வடிவை உடைய நீயே-
மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும் –

(எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் மறந்தும் புறம் தொழா பக்தி இருக்குமாறு நீயே அருள வேண்டும்
துர்க்கதா வபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத
யதி நாஸம் ந விந்தேத தாவதாஸ்மி க்ருதீ ஸதா –என்று இந்த
மநோ ரதம் அழியாமல் இருந்தாலே அடியேன் க்ருதக்ருத்யன் ஆவேன்
ஸதா பஸ்யந்தி பேறு இங்கேயே கிட்டில் அங்கே போகும் நிர்பந்தம் இல்லையே )

அப்பிள்ளை உரை
உன்னை ஒழிய வேறு ஆஸ்ரயிக்கப்படுவார் ஒரு ஷூத்ரரான ருத்ராதிகளை நான் உடையேன் அல்லேன்
அறிவு கேடரைக் கும்பீடு கொள்ளக் கடவனாய் அறிவுடையரானார் ஈஸ்வரன் என்று கை விடும்படி
அதுக்கு அடையாளமாக
சாதகன் என்பதைக் காட்டும் ஜடையும் தானுமாய் சாதன அனுஷ்டானம் பண்ணிப் போகும் ருத்ரனே சாக்ஷி
கடல் போல் குளிர்ந்த -கடல் வண்ணா -விளிச்சொல்
(அடியேன் தேவரீரையே கண்டு கொள்ளும் படி கண்டு கொள் கடாக்ஷிப்பாய் )
ஸ்ரமஹரமான இருண்டு குளிர்ந்த அதி லோகமான அழகு படைத்த தேவரீரை
அடியேன் இவ் வழகில் ஆழங்கால் பட்ட நான்
எப்பொழுதும் சேவித்துக் கொண்டே இருக்கும் படி -கண்ணாலே கண்டு அனுபவிக்கும் படி
சக்தனாம் படி கடாக்ஷித்து அருள வேண்டும்

(கட்டை விரலில் திருக்கண் இன்றும் சேவிக்கிறோமே திரு மழிசையில் பக்தி சாரார் பட்டம் பெற்றார்
ஜிதந்தே ஸ்தோத்ரம் இதே விஷயம்
மநோ ரதம் -துர்கதி வந்தாலும் மாறாமல் இருக்க வேண்டும்
க்ருதார்த்தன் ஆவேன்
ந காம கலுஷம் சித்தம் — காமயே வைஷ்ணவத்வம் -இப்பொழுது உம்மிடம் காமம் கொண்டது –
நிலை பெற்றது -வேறே காமம் கிட்டாது )

———————————————————

பார்த்து அருள வேணும் என்று-அபேஷித்தபடியே
அவன் பார்க்கப் பெற்ற படியைப் பேசுகிறார் –

(மோக்ஷம் -வேண்டாவோ என்ன
மோஷத்தில் சென்று அடையும் அவனே ஸ்ரீ வைகுண்ட விரக்தி அடைந்து அடியேன் நெஞ்சிலே புகுந்து இருக்க
இந்த நெஞ்சைக் காட்டிலும் வேறே ஒன்றை அபேக்ஷிக்க ப்ரசக்தி இல்லையே –
நெஞ்சிலே உள்ள இத் திருவடியை ஒழிய வேறே ஒன்றைப் பலனாக எண்ண மாட்டேன் என்றுமாம்

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–-ஸ்ரீ பெரிய திருவந்தாதி -53-

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–5 -4-10 )

அப்பிள்ளை உரை அவதாரிகை
பார்த்து அருள வேண்டும் என்று இவர்
அபேக்ஷித்த படியே அவன் பார்த்து அருள –
தான் பெற்ற பிரகாரத்தைப் பேசுகிறார்
(கண்டு கொண்டே இருக்க வைஷ்ணவத்வமே போதுமோ என்ன
அறிவு கேடர்காள்
மாலை சாத்தின திருவடியுடன் இவர் திரு உள்ளத்திலே புகுந்தானே
இதுவே மிகப்பெரிய பேறு என்கிறார் )
அவனே தானாகவே வந்து புகுந்த நெஞ்சை யுடைய நான்
வேறே ஒன்றை புருஷார்த்தமாக நினைப்பேனோ என்கிறார்

மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாகக்  கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது-27-

பதவுரை

பேதை காள்–மூடர்களை!,
மால்–எம்பெருமான்
தான் புகுந்த–தானே மேல் விழுந்து வந்து புகுந்திருக்கப் பெற்ற
மட நெஞ்சம்–(எனது) விதேயமான நெஞ்சிலே
மற்றதுவும்–வேறொன்றை
பேறு ஆக–புருஷார்த்தமாக
கொள்வனோ–நான் கொள்வனோ? (கொள்ள மாட்டேன்)
நீறாடி தான்–நீறு பூசின உடம்பை யுடையனான ருத்ரனும்
காண மாட்டாத–ஸேவிக்க முடியாததும்
தார்–புஷ்பங்களினால் அர்ச்சிக்கப் பட்டதும்
அகலம்–போக்யதையில் அளவிறந்ததுமான
சே அடியை–திருவடியை
யான் காண வல்லேற்கு–ஸேவிக்கும் படியான பாக்கியம் பெற்ற எனக்கு
இது–இப்படிப்பட்ட அத்யவஸாய முண்டாயிற்று.

ஓ புத்தி சூன்யர்களே -பஸ்மோத் தூளிதனான ருத்ரனுக்கும் காண அரிதாய் -மாலையினால் அலங்கரிக்கப் பட்டதாய்
போக்யதை யினால் அபரிச்சின்னமாய் சிவந்து இருக்கிற அந்தத் திருவடிகளை சேவிக்கத் தக்க பாக்யமுடைய எனக்கு ஸர்வேஸ்வரன்
தானே வந்து ப்ரவேசித்த விதேயமான இந்த மனஸ்ஸை யுடையேனான நான்
அத்திருவடி ஒழிய வேறே ஒன்றைப் புருஷார்த்தமாகக் கொள்வேனோ –

மாறான் புகுந்த மட நெஞ்சம்-
ஈஸ்வரன் வ்யாமுக்தனாய் –
மால் தான் -மாறான்-
புகுரும்படி ருசியை உடைய நெஞ்சே –
(நெஞ்சம் -நெஞ்சம் யுடையனான )

நீறாடி-தான் காண மாட்டாத தாரகல சேவடியை –
ருத்ரன் காண மாட்டாத-தாரையும் அகலத்தையும் உடைத்தான-திருவடிகளை

(திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே—ஸ்ரீ திருவாய் மொழி -8-3-9-)

மற்றதுவும் பேறாகக்  கொள்வேனோ பேதைகாள் யான் காண வல்லேற்கு இது-
காண வல்லேனான எனக்கு-
இது ஒழிய வேறு ஒன்றை பேறாக கொள்வேனோ –
வேறு ஒன்றைப் பேறாக நினைத்து இருக்கும்-அறிவு கேடர்காள்
(உம்முடைய நிர்ஹேதுக கடாக்ஷத்தால் -மால் தானே புகுந்த மட நெஞ்சம் இது
அவன் திருவடிகளை விட வேறே ஒன்றை மதிப்பேனோ )

அப்பிள்ளை உரை
ஆஸ்ரித வியாமுக்தனான ஸர்வேஸ்வரன் தானே மேல் விழுந்து அதி அபி நிவிஷ்டனாய் புகுந்து
பவ்யமான நெஞ்சை யுடையவனாய்
(முக்தர் அவன் இடம் லயம் -அறிவு ஒன்றாலே -பக்தியால் -தடாகம் போல் ப்ரஹ்மம் சேர்ந்து ஆழ்ந்து நீராட
இங்கு நேரே மாறி ஆழ்வார் உள்ளத்தில் அவன் )
(என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றைக் காண்பேனோ
அச்சுவை பெறினும் வேண்டேன்
பாவோ நான் யத்ர கச்சதி
தெள்ளியோர் குறிப்பே -திருவாசிரியம்
வைகும் தன் சிந்தையிலும் மற்று இனிதோ நீ கொடுக்கும் வான்
என் பால் இடவகை கொண்டனையே )
பேதைகாள் -வந்து அருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்து
அக்காரக்கனி -மற்று எக்காலத்திலும் யாது ஒன்றும் வேண்டேன்
நீறாடி தான் -காண மாட்டாத
ப்ரஹ்ம ருத்ர சம்வாதம் நீயும் நானும் பார்க்க முடியாதே -ஸ்வ யத்னத்தால்
அகலமான மாலையால் அலங்க்ருதமான போக்யதை மிக்க
தாளிணை மேலும் தண்ணம் துழாய் உடை அம்மான் அன்றோ
நிர்ஹேதுக கிருபைக்கு நானே நேரே கொள்கலன்
வருத்தம் அற பெற்றேன்
வேறே ஒன்றை பேறாக கைக் கொள்ளுவேனோ
நினைத்து இருப்பேனோ மற்ற வற்றை பேறாக நினைத்து இருக்கும் அறிவு கேடர்களே
நெஞ்சம் என்றது நெஞ்சு -உடையேன் என்றபடி
இத்தை விட்டு -என்று அவன் புகுந்த நெஞ்சைச் சொன்னபடி
அது என்று திருவடி
அவனே தானாகவே வந்து புகுந்த நெஞ்சை யுடைய நான்
வேறே ஒன்றை புருஷார்த்தமாக நினைப்பேனோ என்கிறார்

————————————————————————–

(அவன் திருவடியை மட்டுமா கண்டேன்
அவன் லீலா வியாபாரங்களை எல்லாம் இங்கேயே இப்பொழுதே
மால் தான் புகுந்த மட நெஞ்சிலே காண்கிறேன் என்கிறார் -)

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஆஸ்ரித அர்த்தமாக பிரவிருத்திகளை தான் இவன் உகப்பது -என்கிறார்

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28–

பதவுரை

இலங்கை–லங்காபுரியானது
ஈடு அழிய–சீர் குலையும் படியாக
கட்டிய–(வானர சேனையைத் துணை கொண்டு) கட்டின
சேது–திரு வணை
இது–இது காண்மின்,
விலங்கு–திர்யக் யோநியிற் பிறந்தவனான
வாலியை–வாலியை
வீழ்த்தது–முடித்தது
எய்தான்–அம்புகளைச் செலுத்தின இராம பிரானுடைய
இது–இப்போது நடந்த செயல் காண்மின்,
இலங்கை தான்–லங்கா புரியானது
ஒடுங்க–அழியும் படியாகவும்
வில் நுடங்க–சார்ங்கலில் வளையும் படியாகவும்,
தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க–(அலங்காரமாகக்) குளிர்ந்த பூமாலை யணிந்து கொண்டிருந்த
இராவணனுடைய உடல் ஒழியும் படியாகவும்
உகப்பு–விலையான வியாபாரம்
இது–இது காண்மின்

லங்காபுரியை அழிக்கைக்காகக் கட்டின இந்த சேதுவும்
ம்ருகமான வாலியை அழியச் செய்த இதுவும்
இந்த லங்காபுரி நசிக்கும் படியாகவும்
சாரங்கம் வளையும்படியாகவும்
குளிர்ந்த மாலையை யுடைய ராவணாஸூரனுடைய ப்ராணன் நசிக்கும்படி யாகவும்
அடித்தவனுடைய ஸந்தோஷ வியாபாரங்கள் –

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது-
இலங்கைக்கு மூலையடியே வழி போம்படியாக-கட்டிய திரு வணை இது –
கடல் அடைபட்ட போதே-இலங்கை அழிந்தது என்று-நினைக்கும்படியாக –
(அடியைக் கண்டேன் என்றார்
அடி பட்ட அணையையும் கண்டேன் என்கிறார் )

இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும்
திர்யக்கான வாலியை முடித்ததுவும்
(மறைந்து கொன்றது குற்றம் இல்லை திர்யக் என்பதால்
வாலியே நிரசிக்கப்பட்டான் என்றதும் ராவணன் எம் மாத்திரம் )

விலங்கை தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை ஊன் ஒடுங்க எய்தான்
இலங்கை நெருக்குண்ணவும்-
ஸ்ரீ சார்ங்கம் வளையவும்-
மதிப்பனான ராவணன் முதுகு கூனவும்
(தண் தார்-மாலை யுடையவன் என்கையாலே மதிப்பன் என்கிறது )

எய்தான் -இது அவன் உகப்பு –
அவன் லீலை-
வாலியைக் கொன்ற ஜயமும்-
ராவண வதமும்
புத்திஸ்தமான படியிலே இது என்கிறார் –

ஒரு முஷ்டியிலே நின்று எய்ய-
நெஞ்சு அழியும்படியாய் இறே இருப்பது

இது என்று
பிரத்யஷமாதல் –
ஈடுபாடு ஆதல்
(வெகு காலத்துக்கு முன் நடந்தவைகள் எல்லாம் நெஞ்சிலே இப்போது ஓடுகிறதே )
வில் பிடித்த படியில் -ஈடுபட்டு அருளுகிறார்-

அப்பிள்ளை உரை
இந்த்ராதிகள் கேட்கவே மண் உண்ணும் படியான இலங்கை கட்டுக் குலைந்து சிதிலம் ஆகும்படி
மலைகளைக் கொண்டு கடலை அடைத்த சேது
(பாவனார்த்தம் திருவடி பட்ட இடம் நமக்காகவே )
திர்யக் யோனியில் வாலியைக் கொன்று விழ விட்டு அருளிய இந்த ப்ரவ்ருத்தியும்
இலங்கை நெருக்கு உண்ணவும் (தேவர்களுக்காக )
ஸ்ரீ சாரங்க திரு வில்லும் வளையவும்
குளிர்ந்த மாலை அணிந்த ராவணன் -தப்பான கார்யம் செய்ய சங்கல்பம் -அக்ருத்யம் செய்யவே இட்ட மாலை
பெரு மதிப்பனான ராவணன்
மாம்ச அதிகமான சரீரம்
ந நமேயம் -வணங்கல் இல் அரக்கன் -நிலை குலைந்து
வளையும் படியாக
எல்லா ப்ரவ்ருத்திகளும் -(கீழ் பாட்டில் வாமன வ்ருத்தாந்ததும் ஆஸ்ரிதர்க்காகவே போல் )
ஆஸ்ரித விஷயம் செய்தோம் -உகப்புக்கு போக்கு வீடாகச் செய்தவை அனைத்துமே –

————————————————————————–

(அப்படியாகில் சர்வேஸ்வரன் திருமேனியை முற்றும் உணர்ந்தவரோ நீர் என்ன
ஒருவராலும் முற்றும் உணர முடியாதபடியான திருமேனியை யுடையவன் அன்றோ அவன் என்கிறார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஆஸ்ரித விரோதியான கும்பகர்ணனை அழியச் செய்த சக்ரவர்த்தி திருமகனுடைய
சர்வ அபிமதமாய் தேஜோ ரூபமாய் அத்யாச்சர்யமான
(உகப்பு ஒளி மகப்புருவம் )
திவ்ய மங்கள விகிரஹத்தை அனுபவித்து வித்தாராகிறார்

உகப் புருவம் தானே யொளி யுருவம் தானே
மகப் புருவம் தானே மதிக்கில் –மிகப் புருவம்
ஒன்றுக்கு ஒன்றோ ஒசணையான் வீழ ஒரு கணையால்
அன்றிக் கொண்டு எய்தான் அவன் –29-

பதவுரை

மிக–மிகவும்
புருவம் ஒன்றுக் கொன்று ஒசணையான்–ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் காத வழி நீளமிருக்கப் பெற்ற கும்ப கர்ணன்
வீழ–ஒழியும்படியாக
மகப்புருவம்–பெரிய வடிவு
அன்றிக் கொண்டு–சீறிக் கொண்டு
ஒரு கணையால்–ஒரு பாணத்தினால்
எய்தானவன்–அடித்து முடித்தவனான இராம பிரானை
மதிக்கில்–சிந்தித்தால்-பரிச்சேதிக்கப் பார்த்தால் –
ஏதாத்ருசம் ஆகையாலே பரிச்சேதிக்கப் போகாது என்றபடி
உகப்பு உருவன் தானே–மநோ ஹரமான திருமேனியை யுடையவன் அவனே
ஒளி உருவன் தானே–தேஜோ மயமான திருமேனியை யுடையவனும் அவனே,
மகப்பு உருவன் தானே–மிகவும் ஆச்சரியமான வடிவை யுடையவனும் அவனே.

மிகவும் ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் யோஜனை நீளமுடைய கும்பகர்ணன் விழும்படி சீறிக் கொண்டு
ஒரு பாணத்தினால் அடித்த சக்ரவர்த்தித் திருமகனை தியானித்தால்
அவனே மநோ ஹரமான திருமேனியை யுடையனாய் இருப்பன்
அவனே உஜ்வலமான திருமேனியை யுடையனாய் இருப்பன்
அவனே ஆச்சர்ய கரமான திருமேனியை யுடையனாய் இருப்பன்

இச்சாக்ருஹீ தாபிமத -என்னும்படி-
ஸ்வ வ்யதிரிக்தர்க்கும் பிராப்யமாய்
தனக்கும் அபிமதமாய் –
ரஜஸ் தமஸ் மிஸ்ரம் இன்றிக்கே
நிஷ் க்ருஷ்ட சத்வம் ஆகையாலே-நிரவதிக தேஜோ ரூபமாய்
ரூபம் அந்யத் ஹரேர் மஹத்-என்னும்படியான
ஆச்சர்யமான வடிவை உடையவனுமான-சக்கரவர்த்தி திருமகன் தானே

ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் யோசனை நீளம் உடைய-கும்பகர்ணன் பட்டு விழும்படி
சங்கல்பத்தால் அன்றிக்கே
திருச் சரத்தாலே-தேவ கார்யம் செய்தானாகை அன்றிக்கே
தனக்கே வந்ததாக சீற்றத்தை ஏறிட்டுக் கொண்டு-எய்தான் –

(சங்கல்பத்தால் கொன்றான் ஆகில் நற் கொலையாய் இருக்குமே
ஷமையா பிருத்வி சமயா -அவஸ்தை மாறி
க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் -கோப வஸ்யமாகி–தேவர் கார்யம் செய்தானாகை இன்றிக்கே
தனது காரியமாக -ஏறிட்டுக் கொண்டு செய்த செயல் –
வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் அன்றோ -)

மதிக்கில் இவனுடைய திரு மேனியை-
ஒன்றால் பரிச்சேதிக்கப் போகாது என்கை –
(மதிக்கில்–பரிச்சேதிக்கப் பார்த்தால் –
ஏதாத்ருசம் ஆகையாலே பரிச்சேதிக்கப் போகாது என்றபடி )

(உகப்பு உருவம் தானே
ஸமஸ்த கல்யாண குணாத் மஹோ அசவ் ஸ்வ ஸக்தி லேச உத்ருத பூத சர்க்க
இச்சா க்ருஹீத அபிமதோரு தேஹஸ் ஸம் ஸாதித அசேஷ ஜகத்தி ஹிதோ அசவ்–ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-5-84–
சாந்தா நந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரே
மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத் ப்ரிய தரம் ரூபம் யதத் யத்புதம் –ஆளவந்தார் –அவனுக்கும் பிரியம் அன்றோ
அடியார்கள் உகப்பு கண்டு தானும் உகந்து இருக்குமே
ஸ்வரூபமும் விக்ரஹமும் ஒரே த்ரவ்யம் என்னலாம் படி இருக்குமே
பரஞ்சோதி
நாராயண பரஞ்சோதி
ஆதித்ய வர்ணம்
வித்யுத் புருஷாத்
தேஜஸாம் ராஸி மூர்ஜிதாம்
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி –நம்மாழ்வார்

மஹத் -மகப்பு
ஸமஸ்தா சக்தயச்சைதா ந்ரூப யத்ர பிரதிஷ்டதா
தத் விஸ்வ ரூப வைரூப்யம் ரூபமந்யத் ஹரேர் மஹத் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-7-70-

ஆத்மாநம் மானுஷம் மன்யே –மனிதனாக அவதரித்து
வெந்நரகாம் சேரா சிலை குனித்தான்
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம் )

அப்பிள்ளை உரை
மிகவும் நீளமான ஒரு யோஜனை இடைவெளி கொண்ட புருவங்கள் விக்ருதமான கும்பகர்ணன்
மலை முறிந்தால் போல் – விழுந்தால் போல் பட்டு விழும்படி
சங்கல்பத்தால் இன்றிக்கே -கைக்கு எட்டின அம்பைக் கொண்டே
ஆஸ்ரித விரோதிகளை தனது விரோதியாக நினைத்து
இவனுக்கு என்று ஒரு கார்யம் இல்லையே
சீறிக் கொண்டு வந்த சக்ரவர்த்தி திருமகனின் திரு விக்ரஹம் சிந்தித்துப் பார்க்கில்
அதீவை பிரிய தர்சனம் சந்த்ரகாந்தநம் ராமம்
ஸ்வ பர விபாகம் அற அனைவருக்கும் உகப்பாயும்
தன்னுடைய தேஜஸ்ஸாலே தனக்கு ஒளி விட்டுக் கொண்டு
ஆதித்ய வர்ணம் -மின்னலை விஞ்சும் -தேஜஸாம் ராஸி மூர்ஜிதம் -ஒளிக் கற்றை குவியல்
பரஞ்சோதி நீ பரமாய் -ஆழ்வார்
நிரவதிக தேஜோ ரூபமாய் வடிவு யுடையவனாய் இருக்கும்
மகத்தான ரூபம்
சந்நி வேச வை லக்ஷண்யத்தாலே மிகவும் ஆச்சர்யமான உருவம்
அவ்வழகில் தான் ஆழங்கால் பட்டு அனுபவிக்கிறார்
ஒரே கணையால் எய்தான் அவன் உகப்பு உருவம் தானே
ஆத்மாநாம் மானுஷம் மன்யே என்று சொல்லிக் கொண்ட
இனி ராமன் உருவம் மூன்றும் உண்டே என்பதுக்கு பிரமாணங்கள்
உதிக்கும் சந்திரன் போல் அன்றோ என்று -ரிஷிகள் மகிழ
ஞான சூன்யமான ஸ்தாவரங்கள் அபி வ்ருஷா இத்யாதி -அகால பலீனோ வ்ருஷ -ஈடுபாடு இவற்றுக்கும் கூட உண்டே
அனைவருக்கும் உகப்பு
ஒளி உருவம் -ஸோபாயான் -தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா- -பார்த்தே ரிஷிகள் பெருமாள் வந்ததை அறிந்தார்கள்
மஹத் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபகாரம் ஆடவரும் பெண் நிலை அவாவும் படி அன்றோ –

————————————————————————–

(உகப்பு உருவனாகவும் ஒளி உருவனாகவும் மஹப்பு உருவனாகவும் இருப்பவனாகில்
அவனை நீர் கண்டது எப்படி என்ன
திருப்பாற் கடலையும் இகழ்ந்து என்னை ரஷிப்பதற்காக என் நெஞ்சிலே
கோயில் கொண்டு இருக்கும் போது அவனை காண்பதில் அருமை என் என்கிறார்

த்ரேதா யுக ராமனை அனுபவிக்காதவர்களுக்காக
பின்னானார் வணங்கும் ஜோதி
ஆதாரம் பெறுக வைக்கவும் ஐயப்பாடு அறுக்கவும்
இங்கேயே வந்து படுகாடு கிடந்தது
காட்டவே கண்டு அனுபவிக்கலாம் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
அப் பேர் அழகோடு-(உகப்பு ஒளி மகப்பு உருவதுடன் ) கோயிலிலே வந்து
என்னை அடிமை கொண்டு சம்சாரத்தில் புகாதபடி என்னை ரக்ஷித்து
அவ்வளவு அன்றிக்கே
திருப்பாற் கடலை உபேக்ஷித்து
அத்யந்த அது அபிநிவேசத்துடன் நிற்பது இருப்பது கிடப்பதாக கிடப்பதாக
அலாப்ய லாபம் பெற்றவனாக உள்ளான் –

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-

பதவுரை

என்னை ஆளி–என்னை ஆட்கொண்டருள்பவனான
அரங்கத்து அவன்–ஸ்ரீரங்கநாதன்
என்னை–என்னை
அரங்கில்–ஸம்ஸாரமாகிற நாடக சாலையில்
எய்தாமல்–பிரவேசிக்க வொட்டாமல்
காப்பான்–காத்தருள்வன்,
அவன்–அப்பெருமான்
என்னது–என்னுடைய
உள்ளத்து–நெஞ்சிலே
நின்றான் இருந்தான்–நிற்பதும் இருப்பதும் செய்கிறான்,
(ஆன பின்பு இனி)
அவன்–அப்பெருமான்
வெள்ளத்து–திருப்பாற் கடலில்
அரவு–அப் பெருமான்
வெள்ளத்து–திருப்பாற் கடலில்
அரவு அணையின் மேல்–சேக்ஷ சயனத்திலே
கிடக்குமே–பொருந்துவனோ? (பொருந்த மாட்டான்.)
ஷீராப்தி பானு மண்டலம் ரிஷிகள் உள்ளம் விட்டு அரங்கத்தில் வந்தான் பிரமாணம் உண்டே

கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறவன் என்னை ரக்ஷிக்கிறவன்
அவன் என்னை ஸம்ஸாரம் ஆகிற நாடக சாலையிலே பிரவேசியாதபடி ரஷிப்பன்
என் ஹ்ருதயத்தில் நின்றவனும்
வீற்று இருந்தவனுமான அவன்
ஷீராப்தியில் சேஷ சயனத்தில் கண் வளருமோ –

அரங்கத்தவன் என்னை ஆளி –
பிறவி மா மாயக் கூத்து (8-4-11)-என்று-
சம்சாரம் ஆகிய நாடக சாலையில் என்னை ப்ரவேசியாமல்-காப்பார் ஆர் -பெருமாளே –
என் ஹிருதயத்தில் புகுருகைக்கு-
அவசர ப்ரதீஷனாய்
கோயிலிலே கண் வளர்ந்து அருளி-
அவகாசம் பெற்று-
என் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு
திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ –

(சம்சாரமாகிய நாடக சாலையிலே என்னை அடையாமல் காப்பவன் அவனே –
பிறவி மாயக்கூத்து -திருவாய்–8-4-11-
ரஷ்ய அபேக்ஷதாம் பிரதீ ஷதே -என்று படுகாடு கிடந்தது
கிடைத்த வுடன் பெறாப் பேறு பெற்றவனாய்
நின்று இருந்து கிடந்து செய்த பின்பு
ஸாத்யம் கை வந்த பின்பு சாதன அனுஷ்டானம் செய்வார் உண்டோ )

(தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-சம்சாரமே அரங்கம்-நாடகம் – கூத்து என்பதற்குப் பிரமாணம்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து வேறே வேறே வேஷங்கள் உண்டே )

(நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-65-)

(கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-ஸ்ரீ பெரிய திருவந்தாதி–ஸ்ரீ பெரிய திருவந்தாதி–68-)

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-5- 4-9 –

(வெள்ளத்து இளங்கோயில் கை விடேல் -இரண்டாம் திரு –54–
சேதனன் நெஞ்சில் இருப்பு விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் –
நெஞ்சமே நீள் நகராக -திருவாய் -3-8-2-
இது ஸாத்ய பிராப்தி தசை அன்றோ )

அப்பிள்ளை உரை –
அந்த சக்கரவர்த்தி திருமகன் என்று ப்ரத்யபிஜ்ஜா பண்ணலாம் படி
கோயிலிலே பேர் அழகுடனே பள்ளி கொண்டு அருளும் பெரிய பெருமாள்
(ராமன் நம்பெருமாள் -கண்ணன் பெரிய பெருமாள் என்று சொன்னாலும்
இங்கு ராமனின் அழகை பெரிய பெருமாள் இடம் கண்டார் போலும்
படி எடுத்துக் காட்டும் படி அன்றே அவன் படிவம் – )
என்னை அடிமை கொண்டு அருளிய என் ஸ்வாமி
அந்தப் பெரிய பெருமாள் தாமே சம்சாரம் ஆகிய நாடக சாலையில்
பிரவேசியாத வண்ணம் என்னை ரக்ஷித்து அருளினான்
அவ்வளவு அன்றிக்கே
அவர் தாமே என்னுடைய ஹ்ருதயத்திலே அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
(பரந்த விரிந்த கால் பாவி தரித்து நின்றார் -உளர் ஆனார் )
அவ்வளவிலும் அபிநிவேசம் அகஞ்சுரிப் படாமையாலே
ஸ்தாவரப் பிரதிஷ்டையாய் இருந்தார்
அப்படி என் பக்கல் அத்யபி நிஷ்டனனான பின்பு
திருப்பாற் கடலில் திருவானந்தாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுவாரோ
சம்பாவனையே இல்லையே
திருப்பாற் கடல் உப லக்ஷணமாய் எல்லா இடங்களிலும் அவனது உபேக்ஷை உண்டே –

———————————————————-

அப்பிள்ளை உரை அவதாரிகை
நீங்கள் ஆஸ்ரயணீயாராக நினைத்தவர்களுக்கும்
இடர் வந்த இடத்தில்
அவ்விடரைப் பரிகரிக்கும்-
அவனை அன்றோ பற்ற அடுப்பது -என்கிறார் –

(எனக்கு மட்டுமா துக்க நிவர்த்தகன்
நீங்கள் ஆஸ்ரயணீயராக நினைத்து இருக்கும் ப்ரஹ்மாதிகளுக்கும் அவனே துக்க நிவர்த்தகன்
ஆன பின்பு நீங்களும் அவனையே பற்றுங்கோள் -என்கிறார் இதில் –
பேய்த் தனம் -இருக்க வேண்டிய முறை மாறி கண்டவற்றை பற்றுவது )

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-

பதவுரை

மேல்–முன்பொரு கால்(திரிபுர சம்ஹாரம் பண்ணி கர்வம் அடைந்து )
நான்முகன்–பிரமன்
அரனை–ருத்ரனைக் குறித்து
இட்ட–கொடுத்த
விடு சாபம்–சாபத்தை
தாரகையுள்–இந் நிலவுலகத்தில் (உள்ளாரெல்லாரு மறிய)
தாரகை என்றது தரணி என்றபடி -தரதீதி இதி – தாரகை- தாங்குவதால் இங்கு பூமியைச் சொன்னபடி
நாராயணன் தான்–எம்பெருமானே
ஒழித்தான்–போக்கி யருளினன், (அப்படிப்பட்ட)
வானோர் பெருமானை–நித்ய ஸூரி நாதனான ஸ்ரீமந் நாராயணனை
ஏத்தாத–வாய் கொண்டு வாழ்த்த மாட்டாத
பேய்காள்–அறிவு கேடர்களே!
பிறக்கும் கரு–பிறப்பதற்கு அடியான கர்ப்ப ஸ்தானத்தில் (நீங்கள் அநுபவிக்கக் கூடிய)
மாயம்–ஆச்சரியமான துக்கங்களை
பேசில்–சொல்லப் புகுந்தால்
கதை–ஒரு மஹா பாரதம் போலே பரந்திருக்கும்.

முற்காலத்தில் சதுர்முகன் ருத்ரனுக்குக் கொடுத்த -விடக்கூடிய சாபத்தை
நாராயணன் தானே பூ லோகத்திலே போக்கினான்
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனான அந்த ஸ்ரீ மன் நாராயணனை ஸ்தோத்ரம் செய்யாத பிசாசங்களே
பிறக்கும் பொது கர்ப்பத்தில் படுகிற ஆச்சர்யமான துக்கத்தைச் சொல்லப் புகில் கதையாய் இருக்கும்

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம் தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் –
பண்டு சதுர்முகன் ருத்ரனை-கபாலீத்வம் பவிஷ்யசி -என்று சபித்த சாபத்தை
தரணியிலே எல்லாரும் அறிய சர்வேஸ்வரன் போக்கினான் –

வானோர் பெருமானை ஏத்தாத பேய்காள்-
ஒருத்தன் தலை அறுத்துப் பாதகியாக-
ஒருத்தன் சோச்யனாக-
இருவருடைய வியசனத்தையும் போக்குவதும் செய்து –
நித்ய ஸூரிகளுக்கு பிராப்யன் ஆனவனை ஏத்தாத
அறிவு கேடர்காள் –

பிறக்கும் கரு மாயம் பேசில் கதை –
இவ் வறிவு கேடு கிடக்கப் பிறவிக்கு-அடியான
கர்ப்ப ஸ்தானத்தில் உள்ள
ஆச்சர்யம் (துக்கம் )சொல்லப் புகில்-
மகா பாரதம்

(தேவீம் ப்ரதி ருத்ர
தத க்ரோத பரீதேந ஸம் ரக்த நயநேந ச
வாமாங்குஷ்ட நகாக்ரேண சின்னம் தஸ்ய ஸிரோ மயா
ப்ரஹ்மா
யஸ்மாதநபரா தஸ்ய ஸிரச்சின்னம் த்வயா மம
தஸ்மாச் சாப ஸமா விஷ்ட கபாலீத்வம் பவிஷ்யஸி
ருத்ர —
ப்ரஹ்மஹா குலிதோ பூத்வா சரன் தீர்த்தாநி பூதலே
ததோ அஹம் கதவான் தேவீ ஹிமவந்தம் சிலோச்சயம்
தத்ர நாராயண ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித
ததஸ் தேந ஸ்வகம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம்
மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தஸ்ய நிஸ்ஸ்ருதா
விஷ்ணு ப்ரஸாதாத் ஸூஸ்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா
ஸ்புடிதம் பஹுதா யாதம் ஸ்வப்ன லப்தம் தனம் யதா –ஸ்ரீ மாத்ஸ்ய புராண வசனம் –

கபாலி பிஷாண்டர் ஹர சாப ஹரன் –லோக பிரசித்தம்
அதிகம் மே நிரே விஷ்ணும் தேவா –இவனே சர்வாதிகன் என்று அறுதியிட்டார்கள் -)

(ஸூகுமார தநுர் கர்ப்பே ஜந்தர் பஹு மவா வ்ருதே
உல்ப ஸம் வேஷ்டிதோ புக்ந ப்ருஷ்ட க்ரீ வாஸ்தி ஸம் ஹதி
அத்யம்ல கடு தீஷ்னோஷ்ண லவணைர் மாத்ரு போஜநை
அத்யந்த தாபை ரத்யர்த்தம் வர்த்தமாநாதி வேதன
பிரசாரணா குஞ்சு நாதவ் நாங்கா நாம் பிரபுராத்மந
ஸக்ருன் மூத்ர மஹா பங்க ஸாயீ ஸர்வத்ர பீடித
நிருச் ஸ்வாஸா ச சைதன்ய ஸ்மரன் ஜன்ம சதான்யத
ஆஸ்தே கர்ப்பே அதி துக்கேந நிஜ கர்ம நிபந்தந
ஜாயமாந புரீஷாஸ்ருங் மூத்ர ஸூக்லா விலாநந
ப்ரஜா பத்யேந வாதேந பீட்யமா நாஸ்தி பந்தந
அதோ முகோ வை க்ரியதே ப்ரபலைஸ் ஸூதி மாரூதை
கிலேசாந் நிஷ் க்ராந்தி மாப்நோதி ஜடராந் மாதுராதுர –ஸ்ரீ விஷ்ணு புராணம்

கரு மாயங்களைச் -கர்ப்ப க்லேசங்களைச் சொல்லும் -)

(பெடை யடர்த்த மட வன்னம் பிரியாது மலர்க்கமலம்
மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர்
முடை யடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர் கெடுத்த திருவாளன் இணை யடியே யடை நெஞ்சே -ஸ்ரீ பெரிய திருமொழி —6-9-1-
திருவாளன் இங்கே ஸ்ரீ மான் ஸ்லோகத்தில் )

அப்பிள்ளை உரை-
முன்பே ப்ரமாவானவன் லோக குருவாயும் பிதாவுமான தன்னைத் தலை அறுத்த ருத்ரனை ​
கையும் கபாலமும் வலிய ஏறிட்ட சாபமானது
தரணியில் எல்லாரும் அறியும் படி சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரன் போக்கினான்
ப்ரஹ்மாதிகளுக்கும் துக்க நிவர்த்தகன் தானே
நித்ய ஸூரிகளுக்கு ப்ராப்ய பூதனாய் சேஷியாய் இருப்பவனை
வாய் விட்டு ஸ்தோத்ரம் பண்ணாமல்
அறிவு கேடர்காள்
பிறக்கைக்கு ஈடான கர்ப்ப ஸ்தானத்தில் நீங்கள் படும் துக்க பரம்பரைகளைச் சொல்லப் புகில் மஹா பாரதம் ஆகுமே

————————————————————————–

(ஸத்வ ப்ரசுரரான நீர் பேய் என்றும் நாய் என்றும் நிஹீன வார்த்தைகளால் பர நிந்தை செய்யலாமோ –
பர பரிவாதத்தை பரிகரிக்க அன்றோ செய்ய வேண்டுவது என்ன
பர நிந்தையில் ருசியால் பேசினேன் அல்லேன்
வஸ்து ஸ்திதி இருந்தபடி சொன்னேன் அத்தனை
உண்மையில் பகவத் குணங்களில் ஈடுபடாதவர்கள் தங்களையும் அழித்துக்கொண்டு
பிறர் ஸ்வரூபத்தையும் அழிக்கும் பேய்கள் என்று உள்ளத்தைச் சொன்னால் வயிறு எரிய வேண்டுமோ
இவர்களே பின்பு அனுகூலரானால் இவர்களும் எனக்கு உத்தேச்யர் ஆவார் என்கிறார் –
யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்த்யதே
ஸா ஹானிஸ் தன் மஹச் சித்ரம் ஸா ப்ராந்திஸ் ஸா ச விக்ரியா –
அவனை நினைக்காமல் இருப்பதே விகாரம் மயக்கம் தாழ்வு -)

அப்பிள்ளை உரை அவதாரிகை
அவன் குணங்களில் அவகாஹியாதார்கள்
இதர விஷயங்களில் மண்டி நசித்துப் போவார்கள்
ஆன பின்பு ஸமஸ்த கல்யாண குணாத்மகனான அவன் திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்
என்று உபதேசித்து அருளுகிறார் இதில்

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி-32-

பதவுரை

கதை பொருள் தான்–(உலகத்தில்) உபஹரிக்கப் படுகின்ற பொருள்கள் யாவும்
உதைப்பு அளவு போது போக்கு இன்றி–ஒரு நிமிஷ காலமும் ஓயாமல் (எப்போதும்)
கண்ணன்–எம்பெருமானுடைய
திரு வயிற்றின் உள்ள–ஸங்கல்பத்தில் ஸத்தை பெற்றிருக்கின்றன,
ஸ்ம்ருதி இதிகாசம் -திருவயிறு -திரு உள்ளம் -சங்கல்பம் படி இருக்கும் என்றவாறு
(அப்படிப்பட்ட எம்பெருமானுடைய)
வாய்ந்த குணத்து–திருக்கல்யாண குணங்களில்
படாதது–ஈடுபடாத வஸ்து
வதை பொருள் தான்–அபதார்த்தமே யாகும்,
இவனால் அனைவருக்கும் ஹிம்சை தானே ஏற்படும்
பகவத் சிந்தனமே நிம்மதி சாந்திக்குக் காரணம்
ஈடுபட்டவன் ஆனந்தம் அனைவருக்கும் உண்டாவது போல்
இவர்களால் அனைவருக்கும் துக்கமே பலிக்குமே
(ஆகையாலே)
ஆய்ந்த குணத்தான்–சிறந்த திருக் குணங்களை யுடையவனான அப்பெருமானுடைய
அடி–திருவடிகளை
அடைமின்–ஆஸ்ரயியுங்கோள்

இதிஹாச புராணாதிகள் ஸ்ரீ கிருஷ்ணனுடைய சங்கல்பத்தினால் நிலை பெற்றன
ஒரு க்ஷணமும் வியர்த்தமாகப் போக்காமல் திருக் கல்யாண குணங்களில் அந்வயியாது நசிக்கிற வஸ்துவே
அதனால்
அகில ஹேய ப்ரத்ய நீகமான கல்யாண குணங்களை யுடையவனுடைய திருவடிகளைப் பற்றுங்கோள் –

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள்-
சர்வேஸ்வரனுடைய சங்கல்பத்தில் உள்ளன –

உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான் வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஒரு நொடி மாத்ரம் போது போக்கு இன்றி-
ஆச்சர்ய குணத்தில் (ஸத் குணத்தில் ) அகப்படாதது
பர ஹிம்சை விட்டு
அவனை ஆஸ்ரயிங்கோள்

(போக்கு இன்றி-போக்காமல் -சீக்கிரமாக
பர ஹிம்ஸை -ஆத்ம அபஹாரம் ஆகவுமாம் -)

ஆய்ந்த குணத்தான் அடி அடைமினோ
ஹேய ப்ரத்ய நீகமான குணத்தை உடையவன் திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்

(வாய்ந்த குணம் சிறப்பான குணம் என்றும்
ஆய்ந்த குணம் குற்றம் அற்ற குணம் என்றும் )

(பேய்களே பின்பு அனுகூல்யம் உடையவர்கள் ஆனால்
கௌரவம் காட்ட வேண்டியவர்கள் என்பதையே அடைமினோ -பத பிரயோகம் காட்டும்)

(கதைப் பொருள்
கதையை முக்யமாகக் கொண்ட இதிஹாச புராணாதிகள்
பொருள் -தத்துவங்களை முக்யமாகக் கொண்ட ஸ்ம்ருதிகள்
திரு வயிற்றின் உள்ளே -என்பது -லக்ஷணையால் மனசைச் சொல்லி சங்கல்பத்தைச் சொல்லும்
அப்ராக்ருதமான -அரவிந்த லோசன மன காந்தா -மனத்துக்கு இனியவன் –
அஸ்ய தேவ்யா மனஸ் தஸ்மிந் தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் )

அப்பிள்ளை உரை
பகவத் குண சேஷ்டிதங்களைப் பரக்கச் சொல்லுகிற இதிஹாச புராணங்கள் ஸ்ம்ருதிகள்
அதனால் பிரதிபாதிக்கும் தேவாதி ஆத்ம வஸ்துக்கள் – ஸமஸ்த சேதனர்கள்
சர்வ காலத்திலும் சர்வேஸ்வரன் திரு உள்ளத்தில் திவ்ய சங்கல்பத்தால்
தானே ஒரு வினாடி கூட மிச்சம் இல்லாமல்
சத்தை பெற்று வர்த்திக்கின்றன
இப்படி இருக்க
இதர விஷய ப்ராவண்யத்தால் நசித்துப் போகும் ஆத்ம வஸ்துக்கள் தான்
அசந்நே வா ஸ்வரூப நாசம் உண்டாகும்
அவனது அழகியதான குணங்களில் அவகாஹியாதவையாய் இருக்கும்
ஆன பின்பு நீங்கள் அப்படி மண்டி நசித்துப் போகாமல்
ஹேய பிரதிபடமான கல்யாண குணங்களை யுடையவனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்
உதைப்பளவு – க்ஷணம் பொழுதில்
வதைப்பொருள் -நசித்துப் போகும் வஸ்துக்கள்
அரவிந்த லோசனை மனக் காந்த ப்ரஸாததாத் ஆளவந்தார்
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும்
அஸ்யா மனஸ் ப்ரதிஷ்டிதம் ஸ்ரீ ராமாயணம்
அப்ராக்ருதமான திரு உள்ளத்துக்கு பிரமாணங்கள் இவை
மனம் கிடையாது பார்க்கிறார் கண்ணே இல்லை இதுவும் உண்டு
பிராக்ருதமானவை இல்லை என்றும்
கண்ணால் தான் பார்க்க வேண்டும் நிர்பந்தமும் இல்லை என்றுமாம்

————————————————————–

அசாதாரணையான நப்பின்னைப் பிராட்டிக்கும்-
அல்லாதாருக்கும்
ஒக்க விரோதியைப் போக்குமவன் என்கிறார் –

(அடைமினோ என்று சொல்லவே விரோதிகள் அடைய ஒட்டுமோ -என்ன
நப்பின்னைப் பிராட்டிக்கும் மாற்று உள்ளவருக்கும் விரோதிகளை நிரசித்துத் தரும் தன்மையன் அன்றோ
ஆகவே விரோதிகளுக்கு அஞ்ச வேண்டாம் என்கிறார் –
திருவடி -திருக்கை –திருப்பவளம் -திருமேனி–நான்காலும் நான்கு ரக்ஷணம்-
விரோதி நிரஸனம் – பண்ணி அருளியவற்றை அருளிச் செய்கிறார் )

அப்பிள்ளை உரை -அவதாரிகை
ஆஸ்ரித ரக்ஷிக்க வேணும் என்னும் திரு உள்ளக் கருத்தாலே
சகடாசூர நிரசனம் முதலான திவ்ய சேஷ்டிதங்களைப் பண்ணி
ஸ்வ ஸித்தமான தன்னுடைய சேஷித்வத்தை உதறிப்படுத்தினான் –
வெளிப்படுத்தி அருளினான் என்றவாறு –

அடிச் சகடம் சாடி அரவாட்டி ஆனை
பிடுத்து ஒசித்துப் பேய் முலை நஞ்சுண்டு -வடிப் பவள
வாய்பின்னைத் தோளிக்கா வல்லேற்று எருத்து இருத்து
கோப்பின்னும் ஆனான் குறிப்பு-33-

பதவுரை

(எம்பெருமான்)
குறிப்பு–(அடியாரைக் காத்தருள வேணுமென்கிற) திருவுள்ளத்தினால்
அடி–திருவடியாலே
சகடம்–சகடாஸுரனை
சாடி–ஒழித்தும்
அரவு-காளிய நாகத்தை
ஆட்டி–வாலைப் பிடித்து ஆட்டிக் கொழுப்படக்கியும்
யானை–குவலயாபீட மென்னும் யானையை
பிடித்து–பற்றிக் கொண்டு
பின்னைக்கா–நப்பின்னைப் பிராட்டிக்காக
வல் ஏறு–கொடிய ரிஷபங்களினுடைய
எருத்து–முசுப்பை
ஒசித்து–கொம்பை முறித்தொழித்தும்
பேய்–பூதனை யென்னும் பேய்ச்சியினுடைய
முலை–முலையில் தடவி யிருந்த
நஞ்சு–விஷத்தை
உண்டு–அமுது செய்து அவளாயிரை மாய்த்தும்
வடி பவளம் வாய் தோளி–அழகிய பவளம் போன்ற வாயையும் தோளையும் வுடையளான
இறுத்து–முறித்தொழித்தும்
பின்னும் கோ ஆனான்–தன்னுடைய ஸ்வாபாவிகமான சேக்ஷித்வத்தை நிலை நிறுத்திக் கொண்டான்.

திருவடிகளினால் சகடாசூரனை உதைத்துக்
காளியனை வாலைப் பிடித்து ஆட்டி
குவலயாபீடத்தைப் பிடித்து அதன் கொம்பை முறித்து
பூதனையின் முலையில் விஷத்தை அமுது செய்து
அழகிய பவளம் போன்ற அதரத்தையும் தோள்களையும் யுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
பலிஷ்டமான விருஷபங்களின் முசிப்பை முறித்துப்
பின்னையும் ரஷிப்பதனால் ஸர்வ ஸ்வாமி யானான் –

திருவடிகளிலே சகடத்தை அழித்து-
காளியனைத் துரத்தி
குவலயா பீடத்தை பிடித்து அதன் கொம்பை அனாயேசேன முறித்து
பூதனையை முடித்து
அழகிய பவளம் போன்று இருக்கிற அதரத்தையும்
அழகிய தோளையும் உடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
தன்னை யொக்க வலிய-வ்ருஷபங்களின் உடைய ககுத்தைப் போக்கி
ஸ்வாபாவிகமான சேஷித்வத்தை
பின்னையும் உதறிப் படுத்தான் திரு உள்ளத்தாலே

(அந்தக் கரணத்தால் திரு உள்ளத்தால் விரோதி நிரசன பூர்வக ரக்ஷண
சிந்தனை பண்ணிக் கொண்டே சயனம் -கள்ள நித்திரை கொள்கிற மார்க்கம்
உறங்குவான் போல் யோகு செய்கிறான் )

(அரவோட்டி -பாட பேதம்
இங்கும் அடி என்பதைக் கூட்டிக் கொள்ள வேண்டும்
அடிச்சகடம் சாடி அரவோட்டி -திரு வடியால் செய்த விரோதி நிரசனங்கள்
ஆனை பிடித்து ஓசித்து –திருக் கையால் செய்த விரோதி நிரஸனம்
பேய் முலை நஞ்சுண்டு -திருப் பவளத்தால் செய்த விரோதி நிரஸனம்
வல் ஏற்று எருது இருத்து-திரு மேனி முழுவதால் செய்த நிரஸனம் -பிராட்டிக்கு என்பதால் –
பெறப்போகும் வஸ்து வின் வைலக்ஷண்யத்துக்கு ஏற்ற சாதன அனுஷ்டானம்
சாதனத்துக்கு கையேடு காலோடு வாயோடு வாசியற எதுவும் அமையும்
பின்பு குறிப்பு கோவானான் -அவதாரம் முடிந்தபின்பும் பாஹ்ய இந்த்ரியங்களால் அன்றி
அந்தர் இந்த்ரியமான திரு உள்ளத்தால் விரோதி நிரஸனம்
திருப்பாற் கடலிலே உறங்குவான் போல் யோகு செய்வானே
எல்லா அவஸ்தையிலும் ஸ்வாமித்வம் உண்டே -விரோதி நிரசனமே தொழிலாகக் கொண்டவன் என்றபடி –

அப்பிள்ளை உரை
ஆஸ்ரிதரை குறைவற நோக்க வேணும் என்னும் மநோ ரதத்தால்
தன்னை நலிவதாக வந்த சகடத்தை முலை வரவு தாழ்ந்தது என்று சீறி திருவடியால் உதைத்து
காளியனது பாம்பை தலை நொறுங்க வாலைப் பிடித்து ஆட்டி
குவலயா பீடம் அநாயாசேன பிடித்து அதன் கொம்பை பிடுங்கி எறிந்து
பூதனையினுடைய முலிகையில் விஷம் கலந்த பாலை பிராணனோடு பசையற உண்டு
அழகிய பவளம் போன்ற அதரத்தையும் தோள் அழகை யும் யுடைய
நப்பின்னைப் பிராட்டிக்காக பிரபலமான ஏழு ரிஷபங்கள்
கர்வ ஹேதுவாக ககுத்துக்களை முறித்து -திமிலில் தான் அதுக்கு திமிர்
இப்படி களை பிடுங்கி ஆஸ்ரிதர்களை ரக்ஷித்து அருளி இச் செயல்களால்
மீளவும் நிலை நின்ற சேஷித்வத்தை யுடையவன் ஆனான் –
சேஷித்வ அதிசங்கை அறுத்தான்
இப்படி அவன் அறுதியிட்டுக் கொண்டு அவன் இருக்க
நிர்பரோ நிர்பயமாக இருக்க அன்றோ அடுத்து
நெஞ்சே கவலைப் படாதே என்கிறார் –

—————————————————————–

(ப்ராப்திக்கு வேண்டுவது ஆத்ம ஞானமும் அப்ரதி ஷேதமும்
ஆத்ம ஞானம் -தன்னைப் பார்க்க விலக்காமை குறிப்பு வேண்டுமே
அவனைப் பார்க்க ஸ்தோத்ரம் பண்ண குறிப்பு
கர்மமும் கிருபையும் சம்சார மோக்ஷ ஹேதுக்கள்
ஆசைப் பட்டவன் இடம் தான் அவன் நன்மை பலிக்கும்
மெய் வினை நோய் -சரீரம்-அதனால் வரும் கர்மம்-சுழல் -அதனால் வரும் துக்கம் –
வெவ் வினை நோய்– பாட பேதம் )

உகந்து அருளின தேசங்களிலே எனக்காக அவன் வர்த்திக்க
வரில் பொகடேன்
கெடில் தேடேன் – என்று இருக்கவோ என்கிறார் –
(லௌகிக விஷயத்தில் போல் அல்லவே பகவத் விஷயத்தில் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
எனக்காகவே திருப்பதிகளில் வந்து ஸூ லபனானவன்
திருவடிகளை விட்டு இருக்க வல்லேனோ -என்கிறார் –

குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்-34-

பதவுரை

கோட்டியூர் மேயானை–திருக்கோட்டியூரில் நித்ய வாஸம் பண்ணுமவனும்
வேங்கடத்து மேயானை–திருமலையில் நித்ய வாஸம் பண்ணுமவனுமான பெருமானை
ஏத்த–ஸ்துதிப்பதற்கு
எனக்கு குறிப்பு–எனக்கு ஆசை
நன்மை பயக்க–(எம்பெருமானை இடை விடாது அநுபவிப்பதனாலுண்டாகும்) பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்கு
எனக்கு குறிப்பு–எனக்கு குதூஹலம்,
மெய் வினை–சரீர ஸம்பந்தத்துக்கு அடியான கருமங்களும்
நோய்–வியாதிகளும்
எய்தாமல்–வந்து சேராதபடி
தான் கடத்தும் தன்மையான்–தானே அவற்றைப் போக்கி யருளும் ஸ்வபாவத்தை யுடையனான அப்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
வெறுப்பனோ–மறந்திருப்பனோ.

திருக்கோட்டியூரில் நித்ய வாஸம் பண்ணு மவனையும்
திருமலையில் எழுந்து அருளி இருக்கிறவனையும்
ஸ்தோத்ரம் பண்ண எனக்கு அபிப்பிராயம்
நல்ல கார்யங்களை விருத்தி பண்ண எனக்கு அபிப்ராயம்
சரீர சம்பந்தங்களான கர்மங்களையும் வியாதிகளையும் அடையாமல் படி தானே நடத்தி வைக்கும்
ஸ்வ பாவத்தை யுடைய ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளை உபேக்ஷிப்பேனோ –

திருக் கோட்டியூரிலே எனக்காக சந்நிஹிதன் ஆனவனை
ஏத்தக் கருத்து-
சம்ஸ்லேஷத்தால் வந்த உத்கர்ஷம் பிறக்கக் கருத்து –
வந்த சம்பந்தத்தை வேண்டாம் என்று தள்ளுவேனோ
சரீரம் அடியாக வந்த வியாதியும்-
வ்யாதிக்கு ஹேதுமான கர்மமும்-
கிட்டாமல் மாற்றுமவன் திருவடிகளை மறப்பேனோ –
(மறப்பனோ அத்யாஹாரம் )

(மேவி யுறை கோயில் -என்றார் நம்மாழ்வாரும்
குறிப்பு எனக்கு நன்மை பயக்க –
ஸ்வ உஜ்ஜீவன இச்சா யதி தே ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச ஸதா ஸ்மர–
இருப்புக்கும் உஜ்ஜீவனத்துக்கும் ஆசை இருக்குமானால் சேஷி சேஷ பாவம் உணர வேண்டுமே
வந்த சம்பந்தம் -இது நித்யம் அன்றோ -நினைவு மறந்து இருக்கிறோம் -உணர்த்தவே அவனே
ஸ்ரீ வைகுண்டத்தில் நேராக இறங்கி வந்த சம்பந்தம்
வெறுப்பனோ வேங்கடத்து மேயானை
எனக்காக அவன் இங்கு வந்து இருக்க தான் வரும் ஸ்ரீ தேவியைக் காலால் உதைப்பார் உண்டோ
வேங்கடவன் திரு நாமமே மெய் வினைகளை போக்கி அருளும் )

(வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத்து உறைவாருக்கு நம என்னலாம்
கடைமை அது சுமந்தார்கட்கே -போல்
எனக்கு நன்மை பயக்க என்று – தங்கட்கு நல்லனவே செய்வார் -என்பதையே
மெய்வினை நோய் எய்தாமல் தான் கடத்தும் என்று – மெய் மேல் வினை முற்றவும் வேங்கடங்கள் -என்பதையே
வேம் கடங்கள்
கடன்கள் எரிக்கப்படும் -பாபங்கள் போக்கப்படும்
வெந்து போகும் கடன்கள் –
தமிழிலும் சமஸ்க்ருதத்தில் ஒரே அர்த்தம் )

அப்பிள்ளை உரை
என்னை அங்கீ கரித்து அடிமை கொள்ளவே
திருக் கோட்டியூரில் நித்ய வாஸம் செய்து அருளி
அப்படியே திருமலையில் நின்று நித்ய வாசம் செய்து அருளும்
(திருவேங்கடம் வந்து வடக்கு வாசல் வழியாக கோயிலே வந்தான் என்பர்
இங்கு திருக்கோட்டியூர் முதலில் இருப்பதால் இவ்வாறு வியாக்யானம் )
ஸ்வ பாவனானவன் குண சேஷ்டிதங்களை சொல்லி ஸ்துதிக்க
நிறைந்த அனுபவத்தால் வந்த உத்கர்ஷம் உத்தரோத்தரம் வளர வேண்டும்
சரீர சம்பந்தத்துக்கு அடியான கர்மங்களும்
தத் கார்யமான துக்கங்களும் -கிட்டாத படியாக -தானே கை தொடனாய்
அவற்றைக் கடத்தும் ஸ்வ பாவனான வனுடைய
(இது தன்மை வந்தேறி இல்லையே )
திருவடிகளை வரில் பொகடேன் கேடில் தேடேன் என்று உபேஷிப்பேனோ -வெறுப்பனோ
(வெறுத்தல் -உபேஷித்தல் -வந்தால் வா இல்லையால் தேடமாட்டேன் என்று இருப்பதே
கிடைத்தே ஆக த்வரை படுவது-பேர் ஆதரவு இயற்க்கை –
அது உயர்வு ப்ரபாவமே இல்லை என்பதே நம் ஆச்சார்யர்கள் திரு உள்ளம் )
வெவ் வினை நோய் பாட பேதம்
வெவ்விய குரூரமான பாபங்களும் தத் பலமான நோய்களும் கிட்டாத படி -என்றவாறு –

——————————————————————

லௌகிகர் படியைக் கண்டு வெறுப்பனோ -என்கிறார்-

(பேய்காள் (31)-என்றார்
மேல் யுக்தி பிரதி யுக்திகள்
வதைப் பொருள்- உதைப்பளவு அடியை அடைய உபதேசிக்க
விரோதிகளை அவனே போக்குவானாய் இருக்க
நான் அடியை அடையும்படி தானே என் மனம் புகுந்தான் என்றார்
இதில் அவனது ஸாஹஸச் செயல்களுக்கு பரிவதே போது போக்காய் இருக்கும் எனக்கு
பிறர் தன்மையைக் கண்டு வெறுப்பது ஆவது என் -என்கிறார் –

ஸ்தோத்ரம் பண்ணவும் நன்மை பயக்கவும் இரண்டு குறிப்புகள் கீழே
ஐந்தலை ஐந்து வாய் இதற்காகவே -தலைகளால் ரக்ஷித்து வாய்களால் ஸ்தோத்ரம் பண்ணவே –
என்னை ஆளுடை அப்பன்- மந் நாதப் பெருமாளுக்கு மங்களா ஸாஸனம்
ஸ்வ அனுபவம் -பர உபதேச கர்ப்பம்
மா நகர பெருமை மயிலைக்கு
மா அல்லிக்கேணி க்ஷேத்ர பெருமை

வாயும் பேசவில்லை அசையும் இல்லை
இங்கு ஒரே கேள்வி
திருக் குடந்தையில் இவரே இரண்டு கேள்விகள் ஞானமாய் இடந்த அசைவையும் சேர்த்து
மாற்றமும் தராமல் வாசலும் திறவாமல் -வாசலை செம்பளித்தால் வாயையும் செம்பளிக்க வேண்டுமோ -)

அப்பிள்ளை உரை அவதாரிகை
திரு வல்லிக்கேணியிலே வாய் திறவாதே ஏக ரூபமாய்
கண் வளரக் கண்டு
திரு உலகு அளந்த ஆயாசமோ என்று அஸ்தாநே பய சங்கை பண்ணுகிறார் –

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

பதவுரை

நீளோதம்–பெரிய அலைகள்
வந்து அலைக்கும்–கரையிலே வந்து வீசப் பெற்ற
மா மயிலை–மயிலாபுரிக்கு அடுத்த
மா வல்லிக் கேணியான்–திருவல்லிக்கேணியில் நித்யவாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரன்
ஐ தலை வாய் நாகத்து அணை–ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும் யுடையனான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
வாளா–வெறுமனே
கிடந்தருளும்–சயனித்திரா நின்றான்
வாய் திறவான்–வாய் திறந்து ஒன்று மருளிச் செய்வதில்லை
(இப்படியிருப்பதற்குக் காரணம்)
தாளால்–திருவடியாலே
உலகம் அளந்த அசவே கொல்–உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ?

பெரிய அலைகள் வந்து அடிக்கிற ஸ்லாக்யமான மயிலாப்பூருக்கு அடுத்த ஸ்லாக்யமான
திருவல்லிக்கேணியில் எழுந்து அருளி இருக்கிறவன்
ஐந்து சிரஸ்ஸூக்களையும் முகங்களையுமுடைய திரு வனந்த ஆழ்வான்
ஆகிற படுக்கை மேல் சலியாமல் கண் வளர்ந்து அருளுகிறான்
ஒரு வார்த்தையும் சொல்லான்
இது திருவடிகளினால் லோகங்களை அளந்த ஆயாசத்தினாலேயாய் இருக்கலாமோ –

தாளால் உலகம் அளந்த அசைவே  கொல்-
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று 
பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளைக் கொண்டு-
காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
(அசைவு -தளர்த்தி )

இல்லாததை உண்டாக்கும் சங்கல்பம் போராதோ –
உண்டானதை உஜ்ஜீவிப்பிக்க-

வாளா கிடந்தருளும்  வாய் திறவான்-
ஏக ரூபமாய் கிடப்பதும் செய்து 
வார்த்தையும் பேசுகிறிலன்-

(வாளா -வெறுமனே
ஓரு படியாய் -ஏக ரூபமாய் -என்றபடி )

(கள்வப் பணி மொழி கேட்க பார்க்கிறார்
மாஸூ ச
தாதாமி ஏதத் விரதம்
அஹம் ஸ்மாரமி நயாமி பரமாம் கதி
போன்ற இடங்கள் உண்டே
விரோதி நிரசனம் -தாதாமி புத்தி யோகம் -அஹம் வோ பாந்தவ ஜாத -இஷ்ட பிராப்தி
க்ஷமாமி என்றும் வாய் திறந்ததும் உண்டே
சீறியாவது அருளலாமே
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
அஸ்துதே -சொன்ன இடமும் உண்டே )

நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத்தணை-
நீர்க் கரையைப் பற்றி கண் வளருகிறதும் 
ஸ்ரமத்தின் மிகுதி என்று இருக்கிறார்-

(பரியும் அத்தனை அன்றோ என்கிறார் இதில் -என்றபடி
முந்துற வந்து கைக்கொள்ளும் உன்னை அன்றோ இது வந்து அலைக்கிறதே )

(வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி கொண்டு
சம்பந்தம் மட்டும் பார்த்து தடவிக்கொடுத்து உஜ்ஜீவிக்கவும் பார்க்க வேண்டுமோ
பஹஸ்யாம் சங்கல்பம் மட்டுமே போதாதோ
அயர்வறும் அமரர்கள் அதிபதியான இவனுக்கும் அயர்வு உண்டு என்று பரிகிறார் -பொங்கும் பரிவாலே
அஸ்தானே பய சங்கை
கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–திருவாய் –8-3-5-அடி யொற்றி இப் பாசுரம் )

அப்பிள்ளை உரை
பெரிய திரைகளானவை வந்து தொடை குத்த உறங்குவாரைப்போலே
தனது குளிர்ந்த திரைகளாலே சிஸீரோ உபசாரம் பண்ண
போக பிரதானருக்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரில்
ஸ்லாக்யமான திருவல்லிக்கேணியில் நித்ய வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரன்
காற்றும் வெய்யிலும் தாக்காத படி தனது வளைவான ஐந்து தலைகளாலும்
சைத்திய மார்த்தவ ஸூரபி கொள் கலமான
வாயாற் யீரைநூறு பரிவுடன் ஏத்துகைக்கு பரிவுடன் ஐந்து திருப்பவளாம் உடைய
இடம் வலம் கொள்ளாமல் பாடோட கண் வளர்ந்து
இளைப்பின் கனத்தால் திருப்பவளாம் தோன்ற அருளிச் செய்யவும் மாட்டுகிறிலன்
இதுக்கு அடி
மலர் மகள் முதலான பிராட்டிமார்கள் -கூசிப் பிடிக்கும் மெல்லடி – தாளால் அசைவு –
பலம் பொருந்தியதாய் இருந்தாலும் மென்மை
(ஸூ குமாரவ் மஹா பலவ்
உலகம் அளந்த -பலம்
தாளால் -ஸூ குமாரம் )
காடும் மோடையுமான லோகத்தை அளந்த அசைவோ

————————————————————

பல இடத்தில் கண் வளர்ந்து அருளுகிறதும்-ஆயாசத்தால் என்று இருக்கிறார் –

(கீழில் பாட்டுக்கு அனுகுணமாக அவதாரிகையில் அர்த்தம்
அவஸர பிரதீஷானாகை -பாட்டுக்குத் தாத்பர்யம்
ஆதி நெடு மால் -பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு –
நெடுமை ஆதி நெடுமை மால் – உபாதான நிமித்த சஹகாரி
உலகத் தாய் இல்லையே ஆகவே நெடு
சாதன பூமிகள் பலவும் சொல்லி -உள்ளத்தில் சேர -அதுவே சாத்தியம்
சொன்ன வண்ணம் செய்த இருவரையும் முதலில் அருளிச் செய்கிறார்
கிஷ்கிந்தா காண்டத்தில் யாததோத்தகாரி சப்த பிரயோகம் உண்டு
இவ்வளவு முயற்சி பண்ணியும் உள்ளத்தில் கொள்ளாமல் இருப்பதே ஆயாசம் இங்கு
நெஞ்சு கதவைத் திறக்காமல் உள்ளார்களே )

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஓர் இடம் மாத்ரம் அன்றிக்கே
திருக் குடந்தை தொடக்கமான பல திருப்பதிகளிலும் திருவானந்தாழ்வான் மேல் பள்ளி கொண்டு அருளுகிறது
(கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை அன்றோ
லோக வத்து லீலா கைவல்யம் -நீ விட்டாலும் நான் கை விடேன் )
ஆஸ்ரித ஹ்ருதயம் திருந்த
அதில் புகுந்து அருளுகைக்காக -அவசர ப்ரதீஷனாய்-கிடக்கிறான் என்கிறார் –
(சோழ தேசம் தொண்டை நாடு இரண்டையும் இங்கு அருளிச் செய்தது
சேர பாண்டிய நாடு சயன திருப்பதிகளுக்கும் உப லக்ஷணம் )

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

பதவுரை

நாகத்து அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
குடந்தை–திருக் குடந்தையிலும்
வெஃகா–திரு வெஃகாவிலும்
திரு எவ்வுள்–திரு வெவ்வுளுரிலும்
(அப்படியே)
நாகத்து அணை–சேஷ சயனத்தின் மீது
பால் கடல்–திருப்பாற் கடலிலும்
ஆதி நெடுமால்–ஜகத் காரண பூதனான ஸர்வேஸ்வரன்
நாகத்து அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல்
அரங்கம்–திருவரங்கத்திலும்
பேர்–திருப்பேர் நகரிலும்
அன்பில்–அன்பில் என்னுந் திருப்பதியிலும்
கிடக்கும்–பள்ளி கொண்டிருக்கின்றான்
(எதுக்காக வென்னில்)
அணைப்பார் கருத்தன் ஆவான்–அன்பருடைய நெஞ்சில் புகுந்தவனாக ஆவதற்காக.

ஜகத் காரணனான ஸர்வேஸ்வரன் பக்த ஜனங்களுடைய ஹிருதயத்தில் ப்ரவேசிக்கைக்காக
திருவநந்தாழ்வான் ஆகிற படுக்கையின் மேலே
திருக் குடந்தையிலும்
திரு வெஃகாவிலும்
திரு எவ்வுள்ளூரிலும்
திருவநந்தாழ்வான் ஆகிற படுக்கையின் மேலே
கோயிலிலும்
திருப் பேரிலும்
திரு அன்பிலிலும்
திருவநந்தாழ்வான் ஆகிற படுக்கையின் மேலே
திருப் பாற் கடலிலும் சயனித்துக் கொண்டு இருக்கிறான் –

திருக் குடந்தையிலே திரு அநந்த ஆழ்வான் மேல்
கண் வளர்ந்து அருளுகிறதும்
கோயில் தொடக்கமான எல்லாத் திருப்பதிகளிலும்
திருப் பாற் கடலிலும்
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரன்
தோள் தீண்டியாக (அருகிலே சந்நிஹிதனாக )
கண் வளர்ந்து அருளுகிறதும்
தான் புகுரப் புக்கால் ஆணை இடாதார் (த்வேஷிக்காமல் )ஹிருதயத்தில் புகுருகைகாக

இப்படி அவசர ப்ரதீஷனாக வேண்டுவான்- என் என்னில் –
தாய் ஆகையாலே-
(அவஸர பிரதீஷானாகை -பாட்டுக்குத் தாத்பர்யம்
காரணத்வமும் அன்பும் சொல்லப்பட்டது இந்த தாய் -சப்தத்தாலே )

(நெஞ்சிலே அணைப்போம் என்ற ஆசா லேசமுள்ளார் நெஞ்சிலே புகவே இப்படி படுகாடு கிடக்கிறான்
ஆதி நெடுமால்
உயிர்க்கு எல்லாம் தாய் -காரண பூதன் -திருவயிற்றிலே வைத்து ரக்ஷிப்பவன்
தாயைப் போலவே வாத்சல்யம் பேர் அன்பு கொண்டவன் )

அப்பிள்ளை உரை
திருவானந்தாழ்வான் ஆகிற படுக்கையின் மேலே
திருக் குடந்தையிலும்
திரு வெஃகாவிலும்
திரு எவ்வுள்ளிலும்
அதே போல்
திரு அரவணை மேலே
திருக்கோயிலும்
திருப் பேரிலும்
திரு அன்பிலிலும்
அப்படியே திருவந்தாழ்வான் படுக்கையின் மேலே
திருப்பாற் கடலிலும்
ஜகத் காரண பூதனான ஸர்வேஸ்வரன்
புகும் இடங்களில் விலக்காமல் புக்கிடுவானுக்கு என்று இருக்கும் ஆஸ்ரிதர்
திரு உள்ளம் புக அவசர பிரதீஷனயாய் கொண்டு கண் வளர்ந்து அருளா நிற்கும்
(ஆகவே விலக்காமல் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று தாத்பர்யம் )

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -13-24–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -/ஸ்ரீ அப்பிள்ளை உரை —

September 22, 2013

உபாசகரரைக் குறித்து உங்கள் உபாசனத்திலே பிரயோஜனம் இல்லை
அவனே உபாயம் என்கிறார்

(அவனை மதித்தார் பேறு பெறுகிறார்கள் என்று ஆழ்வார் அருளிச் செய்ய
யஜ்ஜேந தாநேந தபஸா அநாஸகேந ப்ராஹ்மணா விவிதி சக்தி –என்று ஸ்ருதி
அவனை அடைவது சிரம ஸாத்யமாய் இருக்க – நீர் எளிது போல் சொல்லலாமோ என்று கேட்க
அதற்குப்பதில் இப்பாசுரம் )

(அர்த்தம் சொல்லி நாராயண திரு நாமம் இதில்
முன்பும் பின்பும் ஆழ்வார் அருளிச் செயல்களில் உண்டே
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன்
நாராயணன் நமக்கே பறை தருவான்
நான் உன்னை அன்றி இலேன் நாராயணா நீ என்னை அன்றி இல்லையே நடுவிலும் உண்டே )

அப்பிள்ளை உரை அவதாரிகை
மோக்ஷ சாதனத்தில் இழியாதே
சரீரத்தை பசையற உலர்த்தி தட்டித் திரிகிற நீங்கள்
ஸர்வேஸ்வரனே ப்ராப்யமும் பிராப்பகமும் என்று அனுசந்தித்து (உணர்ந்து) ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

வீடாக்கும் பெற்றி யறியாது மெய் வருத்திக்
கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர் -வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதல் பொருள் தான் விண்ண
வர்க்கும் நற்பொருள் தான் நாராயணன்-13-

பதவுரை

வீடு ஆக்கும் பெற்றி அறியாது–மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழியைத் தெரிந்து கொள்ளாமல்
மெய்–சரீரத்தை
வருத்தி–(உபவாஸாதிகளாலே) க்லேசப்படுத்தி
கூடு ஆக்கி–எலும்பே மிகுந்த கூடாக அஸாரமாக்கி
கூடாக்கி -சரீரத்தை வற்றப் பண்ணி
நின்று–இப்படி நெடுங்காலம் தவம் புரிந்தும்
உண்டு கொண்டு–(தேஹம் தரிக்க வேண்டுமளவு ஸ்வல்மாக) புஜித்தும்
உழல்வீர்–திரிகின்றவர்களே!
புருஷாந்தரங்களுக்கு வருந்தி ஸ்வல்பம் அனுபவித்து உழன்று என்றுமாம்
வீடு ஆக்கும்–மோக்ஷத்தைத் தரக்கூடிய
மெய் பொருள்தான்–மெய்யான உபாயமானயிருப்பவனும்
வேதம் முதல் பொருள் தான்–வேதங்களினால் முழு முதற் கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும்
விண்ணவர்க்கு–நித்ய ஸூரிகளுக்கு
நல் பொருள் தான்–போக்யமான வஸ்துவாயிருப்பவனும்
நாராயணன்–ஸ்ரீமந்நாராயணனே யாவன்.

மோக்ஷத்தை உண்டாக்கும் ஸாதனத்தை அறியாமல் சரீரத்தை
உபவாசாதிகளால் வருந்தப் பண்ணி குழையாக -அஸாரமாகச் செய்து
பட்டினியாய் இருந்து இதன் பலத்தை புஜிப்போம் என்று அத்யவசித்துத் திரிகிறவர்களே
வேதத்திலே பிரதானமாகச் சொல்லப்பட்ட வஸ்துவும்
நித்ய ஸூரிகளுக்கு விலக்ஷணமான புருஷார்த்தமும்
மோக்ஷத்தைத் தரும் பரம உபாயமும் ஸ்ரீ மன் நாராயணனாயே யாய் இருக்கும்-

வீடாக்கும் பெற்றி யறியாது–
மோஷத்தைப் தருவிக்கும் பிரகாரம் அறியாது

மெய் வருத்திக் கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர்-
சிரகாலம் உண்ணாதே நின்று–
பின்பு ஜீவித்து-
இப்படி அனுஷ்டிப்போம் என்று நெஞ்சிலே-கொண்டு உழல்வீர் –

கொன்று உழல்வீர் -என்னில்
உங்களை ஹிம்சித்து உழல்வீர் என்றுமாம் –

வீடாக்கும் மெய்ப்பொருள் தான் –
மோஷத்தை உண்டாக்கும் அவயவஹீத சாதனம் –
(குறுக்கீடு இல்லாமல் நேராக
பக்தி யோகத்துக்கு சர்வேஸ்வரனை எதிர்பார்த்து இருக்க வேண்டுமே )

வேத முதல் பொருள் தான்-
மோஷ ப்ரதன் என்று வேதத்திலே பிரதிபாதிக்கப் படுமவன் –

(நாராயணம் –பாராயணம் –மேலான உபாயம் இவனே
உதாம்ருதத்வஸ்யா ஈஸாந -மோக்ஷத்துக்கு பிரபுவாய் இருப்பவன் இவனே
அம்ருதஸ்யைஷ சேது -இவனே மோக்ஷத்துக்குச் செல்லும் அணை
நார ஜீவ ஸமூஹம்
அயனம் உபாயமும் ப்ராப்யமும்
அடைவது அடைவிப்பது
அடைவது இதை
பாடவைத்து இதனால்
கதி -ஆலம்பனம் -)

விண்ணவர்க்கும் நற்பொருள் தான் –
நித்ய ஸூரிகளுக்கு பிராப்யன் ஆனவன் –

(தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -அவன் ஸ்வரூபத்தை எப்போதும் காண்கிறார்கள்
யோ தேவேப்ய ஆதபதி யோ தேவாநாம் புரோஹித -அநாதி காலமாக விண்ணவர்க்கு நற் பொருள் இவனே
அம்ருதத்ய ஏக சேது )

நாராயணன் –
சர்வேஸ்வரன் –

(எண் பெருக்கு அந்நலத்து ஒண் ஈறில வண் புகழ் நாரணன்
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன்
காராயின காள நன் மேனியினன் நாராயணன்
நாராயணனே நமக்கே பறை தருவான்
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இல்லை
என்றே ஆழ்வார்கள் நாராயண சப்தார்த்தம் அருளிச் செய்வர் -)

அப்பிள்ளை உரை
மோக்ஷத்தை உண்டாக்கிக் தரும் சாதன பிரகாரத்தை உள்ளபடி அறிய மாட்டாதே
சரீரத்தை ஊண் வாட உண்ணாது -உபவாசாதிகளால்
ரத்தம் மாமிசம் இல்லாமல்
எலும்பு மட்டுமே பீர்க்கங்காய் போல்
உயிர் காவில் இட்டு பிராணன் இருக்க ஸ்வல்பம் உண்டு என்றபடி
உபாயாந்தரங்களை அனுஷ்டிப்போம் என்று நெஞ்சிலே கொண்டு
உங்களுக்கு மோக்ஷத்தை உண்டாக்கிக் தரும் வியவதான விளம்பம் இல்லாமல் நேராக பரமார்த்த உபாய பூதனாய்
ந்யாஸ இதி ப்ரஹ்மம்- வேதத்தால் ஸித்த உபாயம்
சர்வ உபாய ஸ்ரேஷிடம் ப்ரதிபாதிக்கப்பட்டு இருப்பவனாய்
ந்யாஸம் அதிரிக்தம் -என்று அவனே உயர்ந்த உபாயம் சொல்லி
மேலே ப்ராப்யம்
ஸதா பஸ்யந்தி ஸூர்ய –என்கிறபடியே பரமபத வாசிகளான ஸூரிகளுக்கு விலக்ஷண புருஷார்த்த பூதனாய்
நாராயண சப்த வாஸ்யமாய் இருக்கும்

இத்தால் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -ஸூபால உபநிஷத் அர்த்தம்
ஸ்ருத்யர்த்தம் சொல்லிற்று

நற்பொருள் ப்ராப்யம்
மெய்ப்பொருள் பிராப்பகம்
பெற்றி பிரகாரம்

————————————————————————–

(வீடாகும் மெய்ப்பொருள் தான் நாராயணன் என்று
இஷ்ட பிராப்தி கீழில் பாட்டில்
இதில் நாராயணன் என்னை ஆளி ஸம்ஸாரம் ஆகிற வெந்நரகம் சேராமல் காக்கும் திருமால்
என்று அநிஷ்ட நிவ்ருத்தி )

அப்பிள்ளை உரை அவதாரிகை
நாராயணனே ப்ராப்யம் பிராப்பகம் என்னில் உலகோர் பாக்ய ஹீனர்களாக
நீர் சொன்னவர்கள் நாட்டில் உளரோ
இருந்ததே குடியாக உபாயாந்தர பரராயும் தேவதாந்த்ர பரராயுமே அன்றோ
நாடு அடங்க கிடக்கிறார்கள் என்கிறார்

(கீழ் பாட்டில் அர்த்தம் சொல்லி நாராயணன்
இதில் நாராயணன் தொடங்கி அர்த்தம் )

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14-

பதவுரை

நாராயணன்–நாராயணனென்றுந் திருநாம முடையவனும்
என்னை ஆளி–(விசேஷித்து) அடியேனை ஆட் கொள்பவனும்
நரகத்து சேராமல் காக்கும்–(அடியார்களை) நரகம் போக வொட்டாமல் காத்தருள்பவனுமான
திருமால் தன்–திருமாலினது
பேர் ஆன–திருநாமங்களாயுள்ளவற்றை
பேச பெறாத–ஸங்கீர்த்தநம் பண்ணும் பாக்கிய மற்றவர்களான
பிணம்–ஜீவச் சவமென்னலாம் படியுள்ள பாஹ்ய குத்தருஷ்டி மதஸ்தர்கள்
பேச–(அபார்த்தங்களைப்) பிதற்ற
கேட்டு-அவற்றைக் கேட்டு
பலர்–பல பேர்கள்
ஆசைப் பட்டு–தாங்களும் அப்படியே பாஹ்ய குத்ருஷ்டிகளாயொழிய விரும்பி
ஆழ்வார்–அகோ கதியை யடைந்தொழிவர்

ஸர்வ சேஷியாய்
என்னைப் பரி பாலநம் செய்பவனாய்
நரகத்தில் சேராத படி ரக்ஷிக்குமவனான ஸ்ரீ யபதி தன் திரு நாமங்களானவற்றை
அனுசந்திக்க பாக்யம் அல்லாத
பிணம் போன்ற மதத்தை யுடையவர்கள் சொல்லும் விபரீத அர்த்தங்களைக் கேட்டு
அதை ஆசைப்பட்டு அநேகர் முழுகிப் போவார்கள் –

நாராயணன் என்னை யாளி-
அகில ஜகத் ஸ்வாமின் அஸ்மின் ஸ்வாமின்

நரகத்துச் சேராமல் காக்கும் திருமால்
பிராட்டிக்கு பிரியமாக ஆஸ்ரிதரை சம்சாரத்தில்-ப்ரவேசியாமல் காக்குமவன்-

தன் பேரான பேசப் பெறாத
பிணச் சமையர் பேசக் கேட்டு  ஆசைப்பட்டு ஆழ்வார் பலர் –

இப்படி சர்வ ரக்ஷகனானவனுடைய  திரு நாமங்களைப் பேசப் பெறாதே –
ஜீவியா நிற்கச் செய்தே –
ம்ருதப் ப்ராயராய் இருக்கும் பாஹ்ய குத்ருஷ்டிகள்
வேறே ஓர் அர்த்தம் உண்டு என்று சூழக் கேட்டு-
(கர்மாதீனமாகப் பிறந்தோம் கிருபாதீனமாக உஜ்ஜீவிப்போம் என்பதை விட்டு
ப்ரயோஜனாந்தரங்களை நச்சி )
அனர்த்தப் படுவார் சிலர் உண்டு என்றும்-
பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார்

(தேவோ நாம ஸஹஸ்ரவான்
பேர் ஆயிரம் கொண்டதோர் பீடு உடையன் நாராயணன்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல யுடைய எம்பெருமான் -என்று சொல்லப்படும்
திரு நாமங்களைப் பேசப் பெறாதே )

(யா வேத பாஹ்யா ஸ்ம்ருதயோ யாஸ் ச காஸ் ச குத்ருஷ்டய
ஸர்வாஸ்தா நிஷ் பலா ப்ரேத்ய தமோ நிஷ்டா ஹி தாஸ் ஸ்ம்ருதா –மநு –12-95–)

(ஆசைப் பட்டு –அவர்கள் சொன்னதைக் கேட்டு –
அவர்கள் உபாஸிக்கிற விஷயத்தை ஆசைப்பட்டு
ஆழ்வார் -அதிபதிப்பர் என்றபடி )

அப்பிள்ளை உரை
அனைத்து உலகும் உடையான் என்கிறபடியே
நார ஸப்த வாஸ்யரான ஸகல சேதனர்களுக்கும்
நிருபாதிக ஸ்வாமி யானவன்
என்னை யாளுடையான் என்கிறபடி
இவர்கள் எல்லாரும் ஒரு தட்டும் இவர் ஒரு தட்டும் என்னும்படி
விசேஷ கடாக்ஷம் பண்ணி
என்னை ஆண்டு கொண்டு போகும் ஸ்வாமியானவன்
ஆஸ்ரிதரான என் போல்வாரை ஸம்ஸார நிவ்ருத்தி பண்ணி அருளுவான்
ஆஸ்ரிதர் அல்லாதவர் கீழே தள்ளும் கீழே பார்த்தோம்
ஆஸ்ரித சம்ரக்ஷணம் பண்ணப் பெற்றால் உகக்கக் கடவ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனானவன்
தன்னுடைய ஸ்ரீ யபதித்தவம் முதலான ஸ்வ பாவங்களை அறிவிக்கும் வாசகமான
திரு நாமங்களை பேசப் பெறாத பாஹ்ய ஹீனராய்
வியபகத -இழந்த -பிராணராய்- சவம் போல் இருந்து விபரீத சமய நிஷ்டர் -புற சமயிகள்
ஸூ கபோல கல்பிதங்களாக கத்துகிற வேத விருத்தமான அர்த்தங்களை
சாதரமாக செவி மடுத்துக் கேட்டு
(கலையறக் கற்ற மாந்தர் காண்பாரோ கேட்பரோ தாம்
கூரத்தாழ்வார் ஆழ்வானுக்கு சொன்னது உண்டே )
அவ்வர்த்தம் நமக்குக் கை வர வேண்டும் என்று ஆசைப்பட்டு அதிபதித்துப் போவார்
சம்சாரத்தில் ஆழ்ந்து போவார் பலரும் உளர் -ஆழ்வார்கள்
அவற்றைக் கேட்டு கால் ஆளும் நெஞ்சு அழியும் என்று பகவத் விஷயத்தில்
ஈடுபாடுவார்கள் போல் இவற்றில் இவர்கள் ஈடுபடுவார்கள் -ஆழ்ந்து போவார்கள் -என்றுமாம்

————————————————————————–

வேறே ஆஸ்ரயணீயர் இல்லை என்று தோற்றி நின்றவன் திருவடிகளிலே
வேறே ஆஸ்ரயணீயராக நினைத்தவர்கள் செய்கிற தொழிலை
அவ்யஹிதமாகத்
தாங்கள் செய்ய வல்லார் சிலர் என்கிறார் –

(ஆரோக்யம் பாஸ்கரன் ஐஸ்வர்யம் அக்னி தேவன் -ஞானம் ருத்ரன் -மோக்ஷம் ஜனார்த்தனன்
ஸ்ரீ மன் நாராயணனே மோக்ஷ ப்ரதன் என்னும் ஞானம் கொடுப்பான் என்பதைக் கண்டார் மார்க்கண்டேயர்
உலகு அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன்
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் -நம்மாழ்வார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஈஸ ஈஸிதவ்ய விபாகம் இல்லாமல் வாசியற எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து
தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை காட்டின சர்வேஸ்வரன் திருவடிகளை
நீங்கள் பற்றி இருக்கும் தேவதைகள் ஆஸ்ரயிக்கும் பிரகாரம் போல்
நீங்களும் ஆஸ்ரயணீயராக வல்லீர்கள் ஆகில்
தேவர் வழியாக மார்க்கண்டேயன் பெற்ற பேறு உங்களுக்கு
அவ்யவதானே தடங்கல் இல்லாமல் வந்து கிட்டும் என்கிறார்

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்
மலர் ஏற விட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை-15-

பதவுரை

பல தேவர்–பல தேவர்கள்
ஏத்த–துதிக்கும்படியாக
படி–பூமியை
கடந்தான்–அளந்தவனான ஸர்வேச்வரனுடைய
பாதம்–திருவடிகளிலே
மலர்–புஷ்பங்களை
ஏற விட்டு–ஸமர்ப்பித்து
இறைஞ்சி–வணங்கி
வாழ்த்த வலர் ஆகில்–மங்களாசாஸநம் பண்ண வல்லவர்களானால்,
நீர் கண்டன் கண்ட நிலை–நீலகண்டனாகிய ருத்ரனிடத்தில் காணத் தக்க நிலைமை
மார்க்கண்டன் கண்ட வகையே–மார்க்கண்டேயன் ப்ரத்யக்ஷமாகக் கண்ட விதமாகவே
வரும் கண்டீர்–ஸித்திக்குங்கிடீர்

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்
என்கையாலே ஆஸ்ரயணீய வஸ்து இவன் என்று அறுதியிட்டு

(சங்கைஸ் ஸூராணாம் திவி பூதலஸ்தைஸ் ததா மனுஷ்யைர் ககநே ச கேஸரை
ஸ்துத க்ரமான் ய ப்ரஸகார ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி —
ஸ்ரீ விஷ்ணு தர்மம் மங்கள்ய ஸ்தவம் கோஷிக்குமே
குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி
என்னும் போது பல தேவர் ஏத்தச் சொல்ல வேணுமோ
ஈஸ்வரோஹம் என்பவர்களும் ஸ்வரூபத்தை உணர்ந்து ஸ்துதிக்கிறார்கள் திருவடி ஸ்பர்சத்தாலே
அன்று இவ்வுலகு அளந்தான் அடி போற்றி )

மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்
என்கையாலே தாங்கள் ஆஸ்ரயணீயராக நினைத்தவர்கள் செய்கிற செயலைத்
தாங்களும் செய்ய வல்லராகில்

மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீர்க் கண்டன் கண்ட நிலை–
மார்க்கண்டேயன் தேவனை மோஷார்த்தமாக சென்று ஆஸ்ரயிக்க
மோக்ஷ ப்ரதன் ஈஸ்வரனே என்று ருத்ரன் காட்டக் கண்டு
இதுவே இவனுக்கு உள்ளது என்று மார்க்கண்டேயன் கண்ட வகையே அநுஸந்திக்கும்
அவ்யஹிதமாக ஸர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்க வல்லவர் ஆகில்
மார்க்கண்டேயன் கண்ட வகையே ஸித்திக்கும் –

(ஸ்ரீ மத் பாகவதம் 12 ஸ்கந்தத்திலும் -ஆராதயன் ஹ்ருஷீகேசம் ஜிஹ்யே ம்ருத்யும் ஸூ துர் ஜெயம் –

ஸ்ரீ மஹா பாரதம் ஆரண்ய பர்வதத்திலும்

புக்க அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனும்
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே -திருவாய் -4-10-8-

மார்கண்டேயனும் கரிய –திருவாய் -5-2-7-

கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள்
இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7-

மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய் தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப்
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –ஸ்ரீ பெரிய திருமொழியில் –5-8-6-)

அப்பிள்ளை உரை
ப்ரஹ்மாதிகள் எல்லாரும் வாய் விட்டு புகழும்படி
பூம் யாதி லோகங்களை அநாயாசேன அளந்து கொண்ட சர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே
செவ்விப்பூக்களை சமர்ப்பித்து கைகளால் பரிமாறி
தலையால் வணங்கி
வாயாலே மங்களா சாசனம் பண்ணி
ஸ்துதிக்க வல்லார் ஆகில்
(இங்கு சிலரே கிட்டுவார்கள் -கீழே ஆழ்வார் பலர் -இது துர்லபம் தானே
வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் போல் இங்கும்-கூழாட் பட்டு நின்றார் பலர் உண்டே அங்கும் )
விஷ ஜலத்தை கண்டத்தில் உடைய ருத்ரன் சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து
தன்னிஷ்டனாய் நின்ற நிலையை
அவன் புருஷகாரமாக கண்டு
தத் ஸமாச்ரயணம் பண்ணிப் பெற்ற பிரகாரத்தில்
உங்களையும் அவ்யவதாநேன நேராக வந்து கிட்டும் கிடீர்

இத்தால்
தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்தாலும் அவர்கள்
அவன் கையிலே காட்டிக் கொடுத்து ரஷிப்பது ஒழிய தாங்களாக ரஷிக்க வல்லார்களால் அல்லர்
ஆன பின்பு அவர்களை விட்டு அவ்யவதாநேன நேராகப் பற்றிப் பிழைத்துப் போகலாம் என்கிறார்

———

(கீழே தன்னை ஆஸ்ரயித்த ருத்ரன் அவன் இடம் காட்டிக் கொடுத்தது
இதில் தன்னை ஆஸ்ரயித்தாரை தானே அழிய மாறியும் ரஷிப்பான் என்கிறார் )

ஸர்வேஸ்வரனை ஆஸ்ரித அர்த்தமாகக் கண்டது என்று அறிந்த படியால்
பறக்கிறது ஒன்றிலே பாரம் வைத்தால் போலே
சஞ்சலம் ஹி மனஸ் கிருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம்– கீதை -6-34-என்று
சொல்லப்படுகிற நெஞ்சம் நிலை பெற்றது
பிராப்தி தசையிலே பிறக்குமது இங்கே இருக்கவே பிறந்தது

அப்பிள்ளை உரை அவதாரிகை
உமக்கு தரிப்பு எத்தாலே என்ன
அவனுடைய ஆஸ்ரித பக்ஷ பாதத்தையே நினைத்துத் தரித்தேன் என்கிறார்

நிலை மன்னும் என் நெஞ்சம் அந் நான்று தேவர்
தலை மன்னர் தாமே மாற்றாக -பல மன்னர்
போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய
தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-

பதவுரை

அந்நான்று–பாரத யுத்தம் நடந்த அக்காலத்து
தேவர் தலை மன்னர் தாமே–தேவாதி தேவனான தானே
மாற்று ஆக–எதிரியாயிருந்து கொண்டு
தானே நடத்து விஜயன் பெயர் அவர்களுக்கு கொடுத்தான் அன்றோ
பல மன்னர்–பல அரசர்கள்
போர்–யுத்தக் களத்தில்
மாள–மடிந்து
வெம் கதிரோன்–ஸூர்யன்
மாய–(அக் காலத்தில்) அஸ்தமிக்கும்படி யாகவும்
பொழில் மறைய–பூ மண்டலம் முழுதும் இருள் மூடும்படியாகவும்
பொழில் பூமி –
பொழில் மறைய-பூமி அடைய ஆதித்ய கிரணம் மறையவும்-என்றபடி
இங்கு இரவு அங்கு பகல் என்றும் சொல்ல முடியாமல் முழுவதுமே இருட்டாகும் படி
தேர் ஆழியால்–சக்கராயுதத்தினால்
மறைத்தாரால் (ஸூர்யனை) மறைத்த பெருமானாலே
என் நெஞ்சம்–எனது (சஞ்சலமான) மனமானது
நிலை மன்னும்–சலிப்பற்று நிலை நிற்கப் பெற்றது.

பாண்டவ சத்ருக்கள் தனக்கு சத்ருக்களாகவும்-பல மன்னர் முடியும்படி யாகவும்
பீஷோ தேதி சூர்யா -என்று தன் ஆஞ்ஞையாலே
ஒரு முகூர்த்தம் தப்பாமல் உதிப்பது அஸ்தமிப்பது-ஆகிற ஆதித்யன் மறையவும் –
எதிரிகளுக்கு இவ்விடத்தல் அஸ்தமித்தது இல்லை என்று
குறை சொல்லப் போகாதபடி பூமி அடைய மறையவும் –
ஆதித்யனை பிரகாசமான திரு ஆழியாலே மறைத்தார்-ஆனவராலே என்நெஞ்சம் ஸ்திதித்தது

நிலை மன்னும் என் நெஞ்சம்
ஸர்வேஸ்வரனை ஆஸ்ரித அர்த்தமாகக் கண்டது என்று அறிந்த படியால்
பறக்கிறது ஒன்றிலே பாரம் வைத்தால் போலே
சஞ்சலம் ஹி மனஸ் கிருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம் –கீதை -6-34-என்று
சொல்லப்படுகிற நெஞ்சம் நிலை பெற்றது
பிராப்தி தசையிலே பிறக்குமது இங்கே இருக்கவே பிறந்தது
நான் ஹ்ருஷீகேசன் இந்திரியங்களை என்னிடம் வைத்து நிலை நிற்கப் பார் என்றானே

(ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் தவம் ப்ரகாஸசே -என்று
இப்படி பக்தப் பராதீனனாய் இருந்தும் பரம புருஷனாக பிரகாசிக்கிறாய்

பரிஜன பரி பர்ஹா பூஷணாநி ஆயுதாநி ப்ரவர குண கணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே
பரமபதம் அத அண்டானி ஆத்ம தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -–63-

ஹே வரத
பரிஜன-சேஷ சேஷாசநாதி பரிஜனங்களும்
பரி பர்ஹா -சத்ர சாமராதி பரிச் சதங்களும்
பூஷணாநி –கிரீட குண்டலாதி பூஷணங்களும்
ஆயுதாநி –திரு ஆழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்களும்
ஞான சக்த்யாதயஸ் தே ப்ரவர குண கணாச்ச –ஞான சக்தி முதலிய ப்ரசித்தங்களான
சிறந்த குண கணங்களும்
பரமபதம் –பரமபதமும்
அத அண்டானி -அண்டங்களும்
ஆத்ம தேஹஸ் -ஸ்வ அசாதாரண விக்ரஹமும்
ததாத்மா –திவ்ய ஆத்ம ஸ்வரூபமும்
சகலமேதத் –ஆகிய இவை எல்லாவற்றையும்
சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த –ஆஸ்ரிதர்களுக்கு ஆக்கினாய்

அந் நான்று
பாரத ஸமரத்திலே

தேவர் தலை மன்னர்
ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் என்று சொல்லப்படுகிற
அயர்வறும் அமரர்கள் அதிபதி

(தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம் பரமஞ்ச தைவதம் -ஸ்வேதா –6-7-
ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் விஷ்ணுர் ப்ரஹ்ம மயோ மஹான்
ஈஸ்வரம் தம் விஜா நீமஸ் ஸ பிதா ஸ ப்ரஜாபதி –மஹா பாரதம் )

தாமே மாற்றாக இத்யாதி
த்விஷத் அன்னம் இத்யாதிப்படியே
(த்விஷத் அன்னம் ந போக்த்வயம் த்விஷந்தம் நைவ போஜயேத்
பாண்டவான் த்விஷ ஸே ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவ )
பாண்டவ சத்ருக்கள் தனக்கு சத்ருக்களாகவும்
மன்னர்கள் முடியும்படியாகவும்

பீஷோ தேதி ஸூர்ய–(தைத்ரியம் )என்று தன் ஆஜ்ஜையாலே
ஒரு முஹூர்த்தம் தப்பாமல் உதிப்பது அஸ்தமிப்பது ஆகிற ஆதித்யம் மறையவும்
எதிரிகளுக்கு இவ்விடத்திலே அஸ்தமித்தது இல்லை என்று குறை சொல்லப் போகாத படி பூமி யடைய மறையவும்
ஆதித்யனை பிரகாசகமான திருவாழியாலே மறைத்தவரானவராலே என் நெஞ்சம் ஸ்தித்தது
(ஸ்திதோஸ்மை கரிஷ்யே வசனம் தவ கடைசியில் அர்ஜுனனுக்கு )

நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகாய்-
சத்ய காமஸ் சத்ய சங்கல்ப (சாந்தோக்யம் அஷ்ட குணங்களை சொல்லுமே ) என்று ஒதப்படுகிற தாமே
தமக்குத் தகாதபடியான பொய்யாய்ச் செய்கையாலே-என் நெஞ்சு ஸ்திதித்தது-

ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆன பின்பு
நம்முடைய  சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என் என்கை

(புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருப்பேனே
பெருமாள் ஸத்ய வாக்கியமும் கண்ணபிரான் பொய்யும் நமக்குத் தஞ்சம் )

ந்யாசோ நாம பகவதி -(ந்யாஸமே ப்ரஹ்மம் ) -இஸ் ஸ்லோகத்தில் நினைத்த உரம்
இப் பாட்டால் சொல்லுகிறது-

அப் பிள்ளை உரை
பாரத சமரம் ப்ரவர்த்தமான அந்த நாளிலே
பக்தானாம் த்வம் பிரகாசதே
கூரத்தாழ்வான் -அடியார்களுக்காகவே சகலமும் சம் ஸ்ரிரார்த்தம்
நித்ய ஸூரிகளுக்குத் தலைவரான ராஜாதி ராஜாவான
த்வஷ் அன்னம் இத்யாதி
ஆஸ்ரித பாண்டவர் சத்ருக்களான துரியோதனாதிகள் நசிக்கும்படியாகவும்
பகவத் ஆஜ்ஜையாலே முப்பது வட்டத்தில் உதிப்பது அஸ்தமிக்கக் கடவ
உஷ்ண கிரண விசிஷ்டமான ஆதித்யன் அஸ்தமிக்கும் படி
இவ் விடத்தில் அஸ்தமிக்க வில்லை என்று குறை வராதபடி பூமி அடங்கலும் -பொழில் –
ஆதித்யனை விட தேஜஸ்ஸூ மிக்க திருவாழியாலே இரவாக்கி
ஆயுதம் எடேன் என்று சொல்லியும் எடுத்து
ஆஸ்ரித பஷபாதம் அறிந்து
நெஞ்சானது பரபரப்பு இல்லாமல் குளிர்ந்து தரித்து நிலை பெற்றது

———————————————————

ஞானாதிகனான ருத்ரனும் தன்னை-ஆஸ்ரயித்தவர்களுக்கு
இவ்வர்த்தத்தை இறே சொல்லிற்று-என்கிறார்

அப்பிள்ளை உரை அவதாரிகை
நானே அன்றிக்கே
ஞானாதிகனான ருத்ரனும் தன்னை ஆஸ்ரயித்து ஆப்தரான சிஷ்யர்களுக்கு
(சிஷ்யர்களுக்கு -ஆஸ்ரயித்தவர் -மேலும் ஆப்தர் -மூன்றும் இவர்களுக்கு-உண்மையான உபதேசம் )
இவ்வர்த்தத்தை இறே சொல்லிற்று என்கிறார் –

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன் -ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல்
வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-

பதவுரை

மெய் தவத்தோன்–மெய்யான தவ நெறியை யுடையனான ருத்ரன்,
ஞாலம் அளந்தானை–உலகளந்தவனும்
ஆழிக் கிடந்தானை–க்ஷீராப்தி சாயியும்
ஆல் மேல் வளர்ந்தானை–ஆலிலே மேல் கண் வளர்ந்தவனை
தான் வணங்கும் ஆறு–தான் வழிபடும் மார்க்கமாகிய
அறம் நெறியை–நல் வழியை
மேலை யுகத்து–முன் யுகத்திலே
ஆல நிழல்கீழ்–ஓர் ஆல மரத்தின் நிழலிலே
நால்வர்க்கு–நான்கு மஹர்ஷிகளுக்கு
உரைத்தான் உபதேசித்தான்.

ஸத்யமான தபஸ்ஸை யுடைய ருத்ரன்
பூமியை அளந்தவனாய்
திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டவனாய்
ஆலந்தளிரிலே கண் வளர்ந்தவனான ஸர்வேஸ்வரனைத் தான் ஆஸ்ரயித்த விதமான
தர்ம மார்க்கத்தை முன் யுகத்திலே வட வ்ருக்ஷத்தின் சாயையிலே
அகஸ்த்ய புலஸ்த்ய தக்ஷ மார்க்கண்டேயர் களான நால்வருக்கும் உபதேசித்தான் –
(மார்க்கண்டேயர் இங்கு இல்லாமல் -கஸ்யபர் என்றும் சொல்வார் )

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன்-
பகவத் பஜனத்தில் அனுஷ்டிதமான
அனுஷ்டானத்தை உடைய ருத்ரன்-
ஆல நிழலிலே அகஸ்த்யாதிகளுக்கு
தர்ம மார்க்கத்தைப் பண்டு சொன்னான் –

சொன்ன படி எங்கனே என்னில் –
-ஞாலம் அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல் வளர்ந்தானைத
தான் வணங்குமாறு
(அர்த்த க்ரமத்தால் பாடக் க்ரமத்தை மாற்றி ஆழிக் கிடந்தானை -முதலில் கொண்டு வியாக்யானம் )
அவதாரத்துக்கு அடியாக திருப் பாற் கடலிலே வந்து-கண் வளர்ந்து
சிறியார் பெரியார் என்ற வாசி வையாதே
எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வரையாதே வைத்து
வரையாதே எல்லாரையும் தன் வயிற்றிலே வைத்து-
பவனாய்  இருப்பதொரு ஆலிலையிலே கண் வளர்ந்து
ரஷிக்குமவனை-
தான் வணங்கும் பிரகாரத்தைச் சொன்னான்-

(ஈஸ்வராத் ஞானம் அநந் விச்சேன் மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தநாத் -என்னும்
அர்த்தத்தை இம் மூன்று பாசுரங்களாலும் அனுபவித்தார் ஆயிற்று )

அப்பிள்ளை உரை
ரஜஸ் தமஸ் காலுஷ்யம் அற்று
ஸத்வ குணம் வளர்ந்து இருக்கும் அவஸ்தையில் -ஸத்வ சம்பன்னனாய்க் கொண்டு
பகவத் தத்வ யாதாத்மா ஞானம் சித்திக்க
அனுஷ்டித்த தபஸ்ஸூ -இதுவே மெய் தவம்
தபஸ் பலமாகப் பெற்ற யதார்த்த ஞானம் அடியாக
அவதாரத்துக்கு அடியாக திருப்பாற் கடலில் கண் வளர்ந்து
யோக்யம் அயோக்யம் வாசி இல்லாமல் வரையாதே திருவடிகளை வைத்து உலகு அளந்து
மேலும்
வரையாதே எல்லாவற்றையும் திரு வயிற்றிலே வைத்து
பாவனாய் இருக்கும் ஆலிலை தளிர் மேல் கண் வளர்ந்து இருக்கும் சர்வாதிகன்-ஸர்வேஸ்வரன் -ரக்ஷகனை
தான் ஆஸ்யித்த பிரகாரம் – உபாசன தர்ம மார்க்கத்தை
நான்கு சிஷ்யர்களுக்கு -அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் –
ஆகம பிரசித்தமான வட வ்ருஷ சாயையிலே ஆல மர நிழலிலே இருந்து பூர்வ யுகத்தில் உபதேசித்தான்

—————————————————————

(ஆல் மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு –உரைத்தான் என்றதும்
எம்பெருமானை ஆஸ்ரயிப்பது தான் மேலான உபாயமோ என்று சிலர் கேட்க
அவன் அடியார்களைப் பற்றி இருப்பது அதிலும் சாலச் சிறந்தது என்கிறார் இதில் -)

குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-
ததீயரைப் (புருஷகாரமாகக் கொண்டு)
பற்றுகை சீரீயது என்கிறார்

(இப் பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப் பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப் பாட்டுக்குச் சீவன்.)–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஆஸ்ரித வத்சலனான எம்பெருமானை ஆஸ்ரயிப்பதிலும்
அவனை ஆஸ்ரயித்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆஸ்ரயிப்பதே சாலச் சீரியது
ததீயரைப் பற்றுவதே சீரியது -என்கிறார் –

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

பதவுரை

மாறு ஆய–எதிரிட்டு நின்ற
தானவனை–ஹிரண்யாஸுரனுடைய
மார்வு–மார்வை
வள் உகிரால்–கூர்மையான நகங்களினால்
இரண்டு கூறு ஆக கீறிய–இரு பிளவாகப் பிளந்த
கோள் அரியை–பெரு மிடுக்கனான நரசிங்க மூர்த்தியை
வேறு ஆக–விலக்ஷணமாக
ஏத்தி இருப்பாரை–துதித்து பகவத் விஷயத்தில் ஆழ்ந்திருக்குமவர்களை,
மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் வெல்லுமே–அந்த ஸ்ரீவைஷ்ணவர்களை ஆஸ்ரயித்திருக்கும்
சரம அதிகாரிகளின் நிஷ்டைவென்று விடும்

ஸத்ருவான ஹிரண்யாசூரனுடைய மார்பைக் கூரிய நகங்களினால்
இரண்டு பிளவாகப் பிளந்த பலத்தை யுடைய நரஸிம்ஹனை
விலக்ஷணமாக ஸ்தோத்ரம் பண்ணி இருப்பவர்களை
அப்படி ஸ்தோத்ரம் பண்ணுகிற விலக்ஷனரான ஸ்ரீ வைஷ்ணவர்களை
ஸ்தோத்ரம் பண்ணுகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் தபஸ்ஸூ ஜெயிக்கும் –

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு கூறாகக் கீறிய கோளரியை
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-
கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை

(ஸர்வேஸ்வரனான தனக்கும் எதிரியாய் தன்னையே சர்வேஸ்வரனாக நினைத்து வந்தவனை
கடைசி வரையில் எதிரியாகவே நினை நிற்ற ஹிரண்யாசூரனை
கைக் கொள்ள ஒரு கரணம் போதும்
கொல்ல முக்கரண வெறுப்பு உள்ளதா என்று பார்ப்பான்
கச்ச அநு ஜாமி -இன்று போய் நாளை வா -என்று முயன்று பார்த்து
கடைசி வரையிலே எதிரியாகவே நிலை நின்றவர்களைத் தானே இவன் நிரசிப்பது –
மநோ வாக் காயங்கள் மூன்றினாலும் நிலை நின்றவர்களை மட்டுமே இவன் நிரசிப்பது

உன்னைத் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்பம் கீண்ட என் முன்னைக் கோளரியே –திருவாய் –2-8-6-
கைக்கொள்ளும் போது யுக்தி மாத்ரமே போதும்
கை விடும் போது நெஞ்சாலே த்வேஷித்தால் அல்லது விடான்

ஞானீ த்வாத்வை மே மதம் —மம ப்ராணா ஹி பாண்டவ -தன் உயிர் நிலையில் நலிந்த அசுரனை
தன் மேல் அம்பு பட்ட போது க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் -கோபத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டி இருக்க
திருவடியின் மேல் அம்பு பட்ட போது
அத ராமோ மஹா தேஜோ ராவணேந க்ருத வ்ரணம்
த்ருஷ்ட்வா ப்லகசார்தூலம் கோபஸ்ய வஸமே யிவான் –யுத்த –59-136–கோப வசப்பட்டாரே பெருமாள்
இவன் நெஞ்சிலாவது சிறிது ஆனுகூல்யம் உள்ளதோ என்று அன்றோ
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்பகலம் பிளந்திட்டான் )

வேறாக ஏத்தி இருப்பாரை –
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப் பல்லாண்டு -என்று-
ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார் போல்வார்

வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம்
சாத்தி இருப்பார் ஆகிறார் –
வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-
பெரியாழ்வார் பக்கலிலே ந்யஸ்த்த பரராய் இருக்கும்
ஆண்டாள் போல்வார்

தவம் -ஸூஹ்ருதம்-

(கையைப் பற்றி அபேக்ஷித்தால் மறுக்கலாம்
காலைப் பற்றி அபேக்ஷிக்க மறுக்க முடியாது அன்றோ
அடியார்கள் திருவடி ஸ்தானம் அன்றோ
சித்திர் பவதி வா நேதி சம்சயோ அச்யுத சேவிதாம்
ந சம்சயோ அஸ்தி தத் பக்த பரிசர்யார தாத்ம நாம் –பரமார்த்தம் இப் பாசுர தாத்பர்யம் )

அப்பிள்ளை உரை
சர்வேஸ்வரன் என்று பாராதே
ஆஸ்ரித எதிரியான
வர பலத்தால் பூண் கட்டி இருக்கும் ஹிரண்யனை தனக்கும் எதிரியாகவே கொண்டு
கூரிய நகத்தால் உலர்ந்த வாடின கோரைப்புல்லை கிழிக்குமா போலே மார்பகலம் பிளந்த நரஸிம்ஹ மூர்த்தியை
அந்தியம் போதில் அரியுருவாய் –பல்லாண்டு -என்று
பெரியாழ்வார் போல் மங்களா சாசன பரராய் -வேறாக வியாவ்ருத்தமாய் அநந்ய ப்ரயோஜனராய் ஏத்தி இருப்பாரை
வல்ல பரிசு தருவிப்பரேல் –என்ற
ஆழ்வார் திருமகளார் போல்
ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆபாஸ்ரயமாகப் பற்றும் – ந்யஸ்த பரராய் -சரம அதிகாரிகளுடைய தபஸ்ஸூ வெல்லும் –
சாத்தி இருப்பார் என்றது ந்யஸ்த பரராய் இருப்பவர்கள்-சரம அதிகாரிகள் -என்றபடி
இந்த பாகவத அபிமான நிஷ்டைக்கு அடியான
பகவத் விஷயீ காரமான தபஸ்ஸூ -ஸூஹ்ருதம் –

(பரகத ஸ்வீ காரம் ஆகிற பரம உபாயத்துக்கு பிரமாணங்கள் பலவற்றையும் –
தர்சிப்பித்து அருளுகிறார் –

1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –ஸ்ரீ வசன பூஷணம்–சூரணை -460-)
( பர கத ஸ்வீகார ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் என்ற இதுக்கு )

(பிரேம பிரகர்ஷத்துக்கு அடியான -ஆத்ம யாதாத்ம்ய ஞானத்தை உடையராய் –
வித்தையாலும் -ஜன்மத்தாலும் -அடியேனுக்கு பிதா மகராய் இருக்கிற -நாத முனிகளைப் பார்த்து –
அடியேனுடைய விருத்தத்தைப் பாராதே -பிரசன்னராய் அருள வேணும் -என்று
பரம ஆசார்யான ஆளவந்தார் அருளிச் செய்த –
வேதாந்த தாத்பர்யமான -ஸ்தோத்ர ரத்னத்தில் -சரமமான ஸ்லோகத்தையும் )

(ததீய அபிமானமே உத்தாரகம் –
என்னும் இடத்தை ஸூஸ்பஷ்டமாக சொல்லுகிற -பசுர் மனுஷ்ய பஷீ வா ஏச வைஷ்ணவ சம்ஸ்ரயா
தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்கிற பௌராணிக ஸ்லோகத்தையும் )

பெரியாழ்வார் -ஆண்டாள்
நம்மாழ்வார் -மதுரகவி ஆழ்வார்
ராமானுஜர் -வடுக நம்பி
உண்ட போது வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை -பேசுவாரை சிரித்து இருப்பாரே இவர்கள்

——————————————————————

பிரதானவர்களுக்கும் அறிவு கெடும் இடத்தில்-ரஷிக்கும் நீயே எனக்கு
எல்லா வித அபிமத சித்தியும் செய்வாய் -என்கிறார்-

(எனக்குப் பக்தர்களாய் ப்ரஹ்மாதிகளும் உத்தேச்யர் ஆகலாமே என்று
எம்பெருமான் இவரை சோதிப்பதாக கேட்க
ஈஸ்வரோஹம் -என்று அபிமானித்து ஹிரண்ய ராவணாதிகளுக்கு வரங்களைக் கொடுத்து
அவதி படுபவர்கள் உத்தேச்யர் ஆகாரே
அவர்களையும் ரக்ஷித்து அருளும் தேவரீரே ஸர்வவித ரக்ஷகர் என்கிறார்

இப் பாட்டு முதல் இருபத்தாறாம் பாட்டு வரை
ஈஸ்வர ஆழ்வார் சம்வாதற்காகவே சென்று
பகவத் ரூப குண அனுபவமாகவுமாகவே செல்கிறது )

அப்பிள்ளை உரை அவதாரிகை
அளவுடையாரான ப்ரஹ்மாதிகளும் அறிவு கெடும் இடத்தில் அவர்களையும் ரஷிக்கக் கடவ நீ
என்னுடைய எல்லா அபேக்ஷித்ங்களையும் கொடுத்து அருள்வாய் என்கிறார் –

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த வாழியான் அன்றே -உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த
மீப்பாயும் எவ் உயிர்க்கும் நீயே-19-

பதவுரை

தவம் செய்து–தபஸ்ஸை அநுஷ்டித்து
நான்முகனால்–பிரமனிடத்து
பெற்ற–(ஹிரண்யன் முதலானவர்கள்) பெற்றுக் கொண்ட
வரத்தை–வரங்களை
அவம் செய்த–பழுதாக்கின
ஆழியாய்–திருவாழிக் கையனான பெருமானே!
எம்மை–அடியோங்களை
உவந்து–திருவுள்ளமுகந்து
காப்பாய் நீ அன்றே–காத்தருள்பவன் நீயே யன்றோ,
காப்பதனை ஆவாய் நீ அன்றே–காக்க வேணு மென்கிற ஸங்கல்ப முடையவனும் நீ யன்றோ,
எவ் உயிர்க்கும்–(உன்னை ஆச்ரயித்த) ஸகலாத்மாக்களுக்கும்
வைகுந்தம்–பரம பதத்தை
ஈப்பாயும்–அளிப்பவனும்
நீ அன்றே–நீ யன்றோ.

ஹிரண்யன் தபஸ்ஸூ பண்ணி ப்ரஹ்மாவின் இடத்தில் இருந்து சம்பாதித்த வரத்தை அழியச் செய்த
திருவாழியை யுடையவன் அன்றோ ஸந்தோஷத்துடனே எங்களை ரக்ஷிக்கிறவனும் நீயே
ரக்ஷிக்க வேணும் என்கிற ஸங்கல்பத்தை யுடையவனும் நீயே
ஸகல பிராணிகளுக்கும் பரமபதம் அளிப்பவனும் நீயே –

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த வாழியான் அன்றே –
தபசைப் பண்ணி ப்ரஹ்மாவின் பக்கலிலே ஹிரண்யாதிகள்-பெற்ற வரத்தை அழித்து
வரம் கொடுத்தவர்களுக்கும் குடி இருப்புக் கொடுத்த நீயே

(ராவணாதிகளுக்கு வரம் கொடுத்து அவதி பட்டதாகவும் கொள்ளலாம்
அபி ஷிஸ்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்திரம் விபீஷணம்
க்ருதக்ருத்யஸ் ததா நாமோ விஜ்வர பிரமுமோத ஹா )

உவந்து எம்மை காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்தமீப்பாயும் எவ் உயிர்க்கும் நீ
உன் பேறாக ரஷிப்பாய் நீ-
ரஷணம் தான் நீ-
புனராவ்ருத்தி இல்லாத மோஷத்தை
எவ் உயிர்க்கும் ஈப்பாய் நீ-

( ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே
லபதே ச தத: காமாந் மயைவ விஹிதாந் ஹிதாந்-ஸ்ரீ பகவத்கீதை-7-22-

ஸ தயா ஸ்ரத்தயா யுக்த:-அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து,
தஸ்ய ஆராதநம் ஈஹதே-அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான்,
ச தத: காமாந் லபதே-மேலும் அதனின்றும் விரும்பியனவற்றை எய்துகிறான்,
ஹி தாந் விஹிதாந் மயா ஏவ-எனினும் அவை என்னாலேயே வகுத்துக் கொடுக்கப் பட்டது.)

(ந ஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்தித்வ ஸ்திதம் மஹா பாக பவத் யன்யாஸ்ய கச்சித் –ஸ்ரீ விஷ்ணு உரணம் -1-22-23-
உதாம்ருதத் வஸ்ய ஈஸாநா –மோக்ஷத்துக்கும் பிரபு பரம புருஷனே
தமேவம் வித்வா நம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே
அம்ருதஸ் யைஷ சேது
மோக்ஷம் இச்சேத் ஜநார்த்தனா -என்று சாஸ்திரங்கள் கோஷிக்குமே – )

அப்பிள்ளை உரை
ஹிரண்யன் நெடும் காலம் தபஸ்ஸூ பண்ணி சதுர்முகன் இடம் பெற்ற எல்லா வரங்களையும்
நிஷ் பிரயோஜனமாம் படி பண்ணின
ஆஸ்ரித பக்ஷபாதி உன்னைப் பற்றுவேனோ
வரம் கொடுத்து அவதி பட்ட அவர்களை பற்றுவேனோ
வரம் கொடுத்த ப்ரஹ்மாதிகளை ரக்ஷிக்க பரிகரமாக திருவாழி யுடையவன் அல்லவோ
ஆன பின்பு ஆஸ்ரிதரான எங்களை உனது பேறாக உகந்து ரக்ஷிக்கிறாய்
சம்சார துரிதம் தட்டாத படி ரக்ஷித்து அருள வேணும்
ரக்ஷிக்க வேண்டும் அபிசந்தியை சங்கல்பம் உடையவனும் நீயே
காப்பு என்கிற ரக்ஷணமும் நீயே
உன்னை ஆஸ்ரயித்த சகல ஆத்மாக்களுக்கு
சதா பஸ்ய பண்ணி அனுபவிக்க ஏகாந்தமான ஸ்ரீ வைகுண்டம் கொடுத்து அருளுவானும் நீயே
பாலன சாமர்த்தியம் உன்னைத் தவிர வேறே யார் இடமும் இல்லையே -ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம்

————————————————————————–

(ஆழ்வார் அருளிச் செயல்களைக் கேட்டு மிகவும் உகந்து
கிம் ம்ருஷ்டும் ஸூத வசனம்
குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்
இளைய புன் கவிதையேலும் எம்பிரார்க்கு இனியவாறே
மேலே பாசுரம் பாடி அருள்வீர் என்ன
ஸர்வேஸ்வரனுடைய ஸர்வாத்ம பாவத்தை தேன் போன்ற தம் சொற்களிலே குழைத்து அருளிச் செய்கிறார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஆஸ்ரிதரை ரஷிக்கும் அளவு அன்றிக்கே
ஆஸ்ரித அநாஸ்ரித விபாகம் அற ஸமஸ்த சத்தாதிகள்
சத்தை ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் எல்லாம்
நீ இட்ட வழக்காம் படி நோக்குமவன் நீயே அன்றோ

நீயே யுலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத் தேவ தேவனும் -நீயே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை –20-

பதவுரை

உலகு எல்லாம் நீயே–உலகங்கட்கெல்லாம் நிர்வாஹகன் நீயே,
நிற்பனவும்–உலகங்கள் ஸத்தை பெற்று நிற்பதும்
நின் அருளே–உனது கிருபையினாலேயாம்,
தவம் தேர் தேவனும் நீயே–தவத்தினால் தேவர்களான பிரமன் முதலியோருக்குத் தலைவனும் நீயே,
எரி சுடரும்–ஜ்வலிக்கின்ற அக்நியும்
மால் வரையும்–பெரிய குல பர்வதங்களும்
எண் திசையும்–எட்டுத் திசைகளிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும்
அண்டத்து–ஆகாசத்திலுள்ள
இரு சுடரும்–சந்த்ர ஸூர்யர்களும்
ஆய இவை–ஆகிய இவை யெல்லாம்
நீயே–நீயே காண்.

லோகங்களுக்கு எல்லாம் காரணமானவன் நீயே
அவ்வஸ்துக்கள் இருப்பதும் உன்னுடைய கிருபையினாலேயே
தபஸ்ஸூ பண்ணி தேவர்களான ப்ரஹ்மாதி களுக்கும் தேவன் நீயே
ஜ்வலிக்கிற அக்னியும் -பெரிய பர்வதங்களும் -எட்டுத் திக்குகளும்
அண்டத்துக்குள் இருக்கிற இரண்டு தேஜஸ்ஸூக்களான சந்த்ர ஸூர்யர்களும்
ஆகிய இவை எல்லா வற்றுக்கும் அந்தர்யாமி யானவன் நீயே –

நீயே யுலகெல்லாம்
உன்னை ஒழிய ஜகத்துக்கு-ப்ருதுக் ஸ்திதியும்
ப்ருதுக் உபலம்பமும் இல்லை
(தனித்து இருப்பும் -வேறே பற்றுக் கொம்பும் இல்லை
விட்டுப் பிரிந்தும் இல்லை அவனை சார்ந்து இல்லாமலும் இருக்காதே )

(சர்வாத்ம பாவத்தை அருளிச் செய்கிறார்
விஸ்வம் நாராயணம் ஹரி -சர்வம் சவாப்நோதி -எங்கும் வியாபித்து அனைத்தும் நீயே
சர்வம் கலு ப்ரஹ்மம்
அனைத்துக்கும் அந்தர்யாமி -சரீர சரிரீ பிரகாரம் பிரகாரி பாவம் –
ஏக ஏவ -ஸ்வரூபத்தால் வேறே வேறே இருந்தாலும் )

(நான் மனிதன் என்பதுக்கும் ப்ரஹ்மமே ஜகத் இரண்டுக்கும் நெடு வாசி உண்டு
கர்மாதீனம் இது– ஸ்வா பாவிகம் அது
அவர் விஷயத்தில் தேஹாத்ம பிரமித்தது போல் இல்லையே )

(விஸ்வம் நாராயணம் ஹரிம்
ஸர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி ஸர்வ -கீதை
தத்ஸ் தத்வாதநு பஸ்யந்தி ஹ்யேக ஏவேதி ஸாதவ-பாரதம்
அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸ்ந –ப்ரஹ்ம ஸூத்ரம் )

நின்னருளே நிற்பனவும் –
உன் பிரசாதம் அடியாக-பெரும் பேறு நிலை நிற்பது –
(ஆத்மா நித்யம் என்று சொல்லவில்லை –
நிலை நின்ற பரம புருஷார்த்தத்தைச் சொன்னவாறு
நிற்பன என்று பரமபத அனுபவங்கள் பல என்பதால் பன்மை )

நீயே தவத் தேவ தேவனும் –
சாதன அனுஷ்டானம் பண்ணி-அதிகாரம் பெற்றவர்களுக்கும்
உன்னை ஒழிய ஸ்திதி இல்லை –

நீயே எரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து இரு சுடரும் ஆய இவை –
பிரித்து சொல்லுகிறது என்-
அக்நியும்
குல பர்வதங்களும்
எட்டுத் திக்கும்
அண்டாந்தர வர்த்திகளான சந்திர ஆதித்யர்களுமான-
இப் பதார்த்தங்களும் எல்லாம் உன் ஆதீனம்-

(தம் தேவதா நாம் பரமஞ்ச தைவதம் -ஸ்வேதாஸ்வர
யுக கோடி ஸஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்ம பூ
புனஸ் த்ரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்த வாநிதி ஸூஸ் ரும –சபா பர்வம்
ப்ரஹ்மாதயஸ் ஸூ ரஸ் ஸர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா
ஸ்வம் ஸ்வம் பதம் அநு ப்ராப்தா கேசவஸ்ய ப்ரஸாதத -ஸ்ரீ நரஸிம்ஹ புராணம்
மஹா தேவஸ் ஸர்வமேத மஹாத்மா ஹூத்வா ஆத்மாநம் தேவ தேவோ பபூவ -பாரதம்
ஜ்யோதீம்ஷி விஷ்ணுர் புவநாநி விஷ்ணுர் வநாநி விஷ்ணுர் கிராயோ திஸஸ் ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-38-)

அப்பிள்ளை உரை –
நீ என்கிற சொல்லுக்குள்ளே பிரகாரமாய் அந்வயிக்கும்
(ஸூஷ்ம சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம்
உலகு எல்லாம் -நாம ரூப விபாகம் வரும் காரியம் நீ காரணம் தத் த்வம் அஸி
பஹுஸ்யாம் -சங்கல்பிப்பான்
ஸ்தூல சேதன அசேதன விசிஷ்டா ப்ரஹ்மம் ஆவேன் –
உபாதான காரணமாக் கொண்டு )
பூமி யாதி லோகங்கள் அனைத்தையும் உண்டாக்கினாய் நீயே-ஸூஷ்ம சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மமான நீயே
இப்படி ஸ்ருஷ்டமான வஸ்துக்கள் எல்லாம் குறைவற ரக்ஷிக்கப் பட்டதும் உன்னாலே தானே
தபஸ்ஸை நெடும் காலம் குறைவற நின்று அனுஷ்ட்டித்து
பிரஜாபதி பசு பதி ப்ரஹ்மாதி தேவர்களுக்கு
அதிகாரமும் கொடுத்து அந்தர்யாமியாய் நிர்வகித்து அவர்களும் ஆஸ்ரயிக்கும் படி இருப்பவனும் நீயே
இப்படி பிரித்து சொல்வது என்
மேல் நோக்கி எரியும் அக்னியும்
பூமிக்கு ஆதாரமான குல பர்வதங்களும்
எட்டுத் திக்கிலும் உள்ள ஸமஸ்த வஸ்துக்களும்
அண்டாந்தர வர்த்திகளான ஸூர்ய சந்த்ராதிகளும்
ஆகிய இந்த ஸமஸ்த வஸ்துக்களும் அந்தர்யாமியாக இருந்து
அனைத்துக்கும் சத்தை ஸ்திதி பிரவிருத்தி நிவ்ருத்தி எல்லாம் உனது அதீனமே
யுக கோடி காலம் ஆராத்தித்து பிரம்மா பட்டம் பெற்றான்
கேசவன் பிரசாதத்தால் விஷ்ணுவை ஆராதித்து தேவர்கள் தங்கள் பதம் பெற்றார்கள்
சர்வமேதம் யோகத்தால் தன்னையே ஆஹுதியாக கொடுத்து ருத்ரன் பதவி பெற்றான்
புவநாநி விஷ்ணு வநாநி விஷ்ணுவே ஸ்ரீ விஷ்ணு புராணமும் சொல்லுமே

———————————————————

இப்படி பூரணன் ஆனவனுக்கு (நீயே உலகு எல்லாம் கீழே பார்த்தோமே அதனால் பூர்ணன் )
ஆஸ்ரித அர்த்தமாக வரும் சீற்றத்தைச் சொல்லுகிறது –
நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் –

(வால்மீகி பகவான் நான்முகன் அருளால் பவிஷ்ய காலத்தில் நடக்கப் போவதையும் கண்டு அனுபவித்து பாடினார்
இங்கு ஆழ்வார் இவன் ப்ரஸாதத்தால் கண்டு அனுபவித்து பாட என்ன குறை )

(ஆழ்வாரது செவிக்கு இனிய செஞ்சொற்களைக் கேட்டு
அவிகாராய தத்வம் விகாரம் அடைந்து
திருக் கண்களும் திரு மேனியும் விகஸிகிக்கக் கண்டு விஸ்மதீயராய்
இதே போல் முன்பு அடியானான ப்ரஹ்லாத ஆழ்வானை ஹிரண்யன் நலிந்த உடன்
விகாரம் அடைந்த திருக் கண்களும் திரு வாயும் திரு மேனியும் ஸ்ம்ருதிக்கு விஷயமாக
ஸ்ரீ நரஸிம்ஹ திரு உருவத்தை ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
கண்கள் சிவந்து பெரியவாய வாயும் கனிந்து –இத்யாதி நம்மாழ்வார்
ஆனந்தத்தால் கோபத்தால் விகாரம் அடைவான் )

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–21-

பதவுரை

திறந்து–விரிந்து
எரி கான்ற–நெருப்பை உமிழ்ந்த
பிலம் வாய்–பாழி போன்ற பெரியவாய்
இவையா–இதுவோ!
எரி வட்டம்–கொள்ளி வட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற
கண்கள்–திருக் கண்கள்
இவையா–இவையோ!
எரி–அக்நி போலே
பொங்கி–கிளர்ந்து
காட்டும்–தோன்றின திருமேனியை யுடையனாய்
இமையோர் பெருமான்–நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனான ஸர்வேஸ்வரன்
அரி–நரசிங்க மூர்த்தியாய்
பொங்கி–கிளர்ந்து
காட்டும்–காட்டின
அழகு-அழகு
இவையா–என்ன விஷயம்!

பிலம் போன்ற திருப்பவளத்தைத் திறந்து அதிலே எரிகிற இந்த அக்னிகள் ஆச்சர்யங்களாகக் காண்கின்றன
கொள்ளி வட்டம் போன்ற இந்தத் திருக் கண்கள் ஆச்சர்யமாகக் காண்கின்றன
அக்னி போல் கிளர்ந்து தோன்றுபவனாய்
நித்ய ஸூரிகளுக்கு அதிபதியானவன்
நரஸிம்ஹமாய் கிளர்ந்து தோற்றும் இவ்வழகுகள் ஆச்சர்யங்கள் –

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
அவாக்ய அநாதர -என்று தத்வம் இருக்கிற படி –
(அவாக்ய அநாதர-சாந்தோக்யம் -3-6-
வ்ருஷ இவோ ஸ்தப்தோ திவி திஷ்டதி -முண்டக -1-1-7-)
பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து-
அக்நியை உமிழா நின்ற இவை –
அக்னியை உமிழா நின்று-பிலம் போலே இருக்கிற வாய் இவை –

(மாயனார் செய்ய வாய் அந்தோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே -அமலனாதி -7-)

(வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினை கொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-)

இவையா வெரி வட்டக் கண்கள் –
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -என்கிற கண்கள் –
கொள்ளி வட்டம் போலே இருக்கிற கண்கள் ஆயினவே

(சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற
தண் தாமரைக் கண்ணா –பெரிய திருமொழி –7-1-9-)

(சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர்–7-7- )

(கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்கள்
என்னைப் பேதமை செய்தனவே –அமலன் –8- )

இவையா வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்-
அக்நி போலே உஜ்வலமான திருமேனியை உடையனாய்-
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹன் ஆனவன்

(ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோ அயம் அக்னி –முண்டக -2-2-11-)

அன்றிக்கே
அக்நி கொடுக்கும் ஹவிஸ்சை உடைய இந்த்ராதிகளுக்கு நிர்வாஹகன் –

அரி பொங்கிக் காட்டும் அழகு –
நித்ய ஸூரிகள் பரிய இருக்குமவன்-
ஆஸ்ரித அர்த்தமாக நரசிம்ஹமாய்ச்
சீறிக் காட்டின அழகு-

(பரமபத நாதனாய் இருந்த இருப்பிலும் நரஸிம்ஹமாய் சீறி அருளும் இடத்தில்
அழகு விஞ்சி இருந்ததை அனுபவித்தார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஆஸ்ரிதனான ப்ரஹ்லாத ஆழ்வானை தண்ணளி அற்று நலிந்த ஹிரண்யனை அழியச் செய்த
நரசிம்ஹருடைய அழகை அனுபவிக்கிறார்
சிறுக்கனை நலிந்தது பொறுக்க மாட்டாமல் கிளர்ந்த சீற்றத்தாலே
பிலத் த்வாரம் போல் இருக்கிற பெரிய திருப் பவளத்தைத் திறந்து
கொள்ளி வட்டம் போல் உருண்டு சிவந்து இடைவிடாமல்
ஜ்வலிக்கிற அக்னி போல் கிளர்ந்து தோற்றுகிற திருக்கண்கள் அழகு என் தான்
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்து ஆஸ்ரித அர்த்தமாக நரஸிம்ஹமாய்க் கொண்டு சீறிக் காட்டி அருளிய
அழகுகள் இருக்கும் படி என் தான் என்று வித்தராய் அனுபவிக்கிறார்
இதற்கு என்று ஒரு திருமொழி நேரே வேண்டும் படி அன்றோ நரஸிம்ஹத்தினுடைய அழகு இருக்கும் படி -1-7 –
அஹோபிலம் பிலத் துவாராம் அஹோ பலம்
இமையோர் தலைவன்
ஹோம காலத்தில் வைதிகர்கள் கொடுத்த
ஹவிஸ்ஸை அக்னி ஸ்வீகரித்து தேவர்களுக்கு கிளர்த்தி யுடன் அக்னி சமர்ப்பிக்கும் -எரி பொங்கிக் காட்டும்
கர்ம ஆதித்யரான இந்த்ராதிகள் -இவர்களுக்கு நிர்வாஹகன் என்றுமாம் –

———————————————————–

ஸ்ரீ  நரசிம்ஹ வ்ருத்தம் ப்ரஸ்துதமானது-பின்னாட்டுகிறது –

(அரி பொங்கிக் காட்டும் அழகை அனுபவித்தவர் -இத்தை சிலர் இழப்பதே என்று நினைத்து
இந்த ஸுந்தர்ய மூர்த்தியை அடி பணிந்து உய்யுங்கோள் என்று பிறரை நோக்கி உபதேசிக்கிறார்
தாள் பணிய பல ஹேதுக்களை அருளிச் செய்கிறார்
1-அழகியான் தானே
2-அரி உருவன் தானே
3-பழகியான்
4-ஏழு உலகுக்கும் தன்மைக்கும் தன்மையன்
5-உயிர் அளிக்கும் வித்து )

அப்பிள்ளை உரை அவதாரிகை
அடியிலே ஜகத்தை தானே காரணமாக ஸ்ருஷ்டித்து (வேர் முதல் வித்து )
ஸ்ருஷ்டமான ஜகத்தை அவாந்தர பிரளயத்திலும் –(1000-சதுர்யுகம் )- மன்வந்த்ர பிரளயத்திலும் –(71 சதுர்யுகம் )
வடதளி சாயியாயும் மத்ஸ்ய ரூபியாயும் அழியாத படி ரக்ஷித்து
ப்ரஹ்லாதனை ரஷிக்கைக்காக தூணிலே ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தியாயத் தோன்றி
தத் விரோதியான ஹிரண்யனை கிழித்துப் பொகட்டு
இப்படி
சகல ஆத்மாக்களையும் சர்வ அவஸ்தையிலும் தத் தத் அவஸ்தா அனுரூபமாக பழையதாக ரக்ஷிக்கும்
(ஆபத் சகனாயும் அழகனாகவும் )
இவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் -குழவியாய்த்
தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிர் அளிக்கும் வித்து-22-

பதவுரை

தான் ஏழ் உலகுக்கும் வித்து–தானே ஏழுலகங்களுக்கும் உபாதாந காரணமாய்
தன்மையவன்–ஆச்சரய பூதனாய்
மஹான் அஹங்காரம் பூதங்கள் தன்மாத்திரைகள் இத்யாதி ஏழும் என்றும்
ஏழு உலகுக்கு அங்கு வாழும் மக்கள் தன்மைகள் என்றுமாம்
குழவி ஆய்–(பிரளய காலத்தில்) சிறு குழந்தையாய்க் கொண்டும்
மீன் ஆய்–(பின்பொருகால்) மத்ஸ்ய ரூபியாய்க் கொண்டும்
அவாந்தர பிரளயம் –1000 சதுர்யுகங்களுக்கு ஒரு தடவை
மன்வந்த்ர பிரளயம் –71 சதுர்யுகங்களுக்கு ஒரு தடவை இப்பொழுது தான் மத்ஸ்ய அவதாரம்
உயிர் அளிக்கும்–ஆத்மாக்களை ரக்ஷிக்கின்றவனான
தானே–எம்பெருமான் தானே
தன்மைக்கும்–(ரூபம் ரஸம் கந்தம் முதலிய) குணங்களுக்கும்
அரி உருவன்–நரசிங்க வுருக் கொண்டவன்
தானே அழகியான்–அழகுக்கு எல்லை நிலமாயிருப்பவனும் அவன்றானே
பழகியான்–புராண புருஷனாகிய அப் பெருமானுடைய
தாளே–திருவடிகளையே
பணிமின்–ஆஸ்ரயியுங்கோள்
அழகியான் தானே அரி உருவன் தானே
ஆபத் சகனானவனே அழகியான் –
பழகியான் தாளே பணிமின் –

தான் பிரளய காலத்தில் முக்த சிசுவாய் இருந்து
ஏழு உலகங்களுக்கும் காரணமாய்
மத்ஸ்ய அவதாரம் எடுத்து பிராணிகளை ரக்ஷிக்குமவனாய்
நரஸிம்ஹ ரூபியாய்க் கொண்டு தானே ஸூந்தரனாய்
தானே சிரகால ஸஹ வாஸத்தினால் பழகி இருக்கிறவனான ஸர்வேஸ்வரனுடைய
திருவடிகளை ஆஸ்ரியியுங்கோள்

ஆபத் சகனானவனே அழகியானாய் உள்ளான்
த்யஜிக்கிற சரீரத்திலும்-வர்த்திக்கிற சரீரத்திலும்-புதுயிகோளாய் இருந்துள்ள நீங்கள் –
உங்கள் கையில் உங்களைக் காட்டிக் கொடாதே-
கால த்ரயத்திலும் சரீரங்களில் பிரவேசிகைக்கு நிதானத்தையும்-
(கர்மம் தானே நிதானம் காரணம் )
அதுக்கு பரிகாரத்தையும் அறியுமவனை
ஆஸ்ரயிக்க பாருங்கோள்-

பிரகிருதி வாசி அறிந்து பழையனாய் பரிகரிக்கும் வைத்தியனை
வ்யாதி க்ரஸ்தர் பற்றுமா போலே

(அழகை யுடையவன் இவன் ஒருவனே
பரமபதத்தில் அழகு பகல் விளக்கு போன்றது
தன்னை ஒத்த சர்வஞ்ஞர்க்குக் காட்டும் அழகு அது
அஞ்ஞருக்குக் காட்டும் அழகு இது
அது கேட்டே கிடைக்கும் அழகு
இரணியன் ஆகம் பிளந்த அரியாய் உதிரம் அளைந்த கையோடு இருந்தவனை
உள்ளவா கண்டார் உளர் -பெரியாழ்வார் -4-1-1- நேரே கண்டவர்கள் உண்டே
நாரஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான்
வெறும் அழகியோ -ஆண்மை உள்ள அரி யுருவன்
ஆபத் சகனும் இவனே
வைத்யோ நாராயணோ ஹரி
எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமால் இரும் சோலை எந்தாய் 5-3- 6-)

குழவியாய்த் தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
கார்ய ஆகாரமான ஜகத்துக்கும்-
தன் மாத்ரையான ஜகத்துக்கும்
தானே ஏழு உலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
(தன்மை என்றது -தன் வயிற்றிலே வைக்கும் ஸ்வ பாவத்தை யுடைய குழவி -என்றவாறு
ஏழு உலகு என்றது காரியப் பொருள்களான மஹான் அஹங்காரம் பஞ்ச பூதங்கள் என்றுமாம் )

எல்லா சேதன அசேதனங்களுக்கும்-இவற்றின் குணத்துக்கும் குணி
(பிரகார பிரகாரி சம்பந்தம் என்றுமாம் )

தன்மைக்கும்-
தன் பக்கலிலே வைக்கும்-
ச தேவ -என்று சொல்லப் படுகிறவனே
(தன் வைக்கும் பாட பேதம்
தன்மைக்கும் குணத்துக்கும் )

தன்னை அழிய மாறி சேதனரை ரஷிக்கும் த்ரிவித காரணமும் –

மீனாய் உயிர் அளிக்கும் வித்து-

அப்பிள்ளை உரை
சர்வாதிகனான தான்
பூமி முதலான ஸமஸ்த லோகங்களுக்கும் உபாதான காரணமாய்
அது மாத்திரம் அன்றிக்கே
தத் ஸ்வரூபமான பூத தன்மாத்திரைகள் இத்யாதி
கார்ய ஜாதத்துக்கும் -மஹான் அஹங்காரம் பஞ்சபூதங்கள் தன்மாத்திரை அனைத்துக்கும்
தத் ஆகார விசிஷ்டமாய்க் கொண்டு
உபாதான காரணமானவனாய்
அவாந்தர பிரளயத்தில் இவற்றை திரு வயிற்றிலே வைத்து
ஆலந்தளிரிலே கண் வளர்ந்த முக்த சிசுவாய்
மன்வந்தர பிரளயத்தில் மீனாய்
சராசராத் ஆத்மகமான ஆத்ம வர்க்கத்தையும்
தன் நிர்வாஹகனான மனுவையும்
மரக் கலத்தில் வைத்து ரக்ஷித்து
இப்படி சாமான்யேன ரக்ஷணம் மாத்ரம் அன்றிக்கே
விசேஷமாக
ஆஸ்ரித ப்ரஹ்லாதன் ப்ரதிஜ்ஜை சமயத்திலே அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றி
தத் விரோதியான ஹிரண்யனை பிளந்து
இப்படி பரஸ்பர விருத்தமான’சேராதவற்றை சேர்த்து வைரூபம் தோற்றாமல்
சேர்ப்பாலும் கண்ட சக்கரை போல் அத்யந்த ரஸாவஹமாய்க் கொண்டு
இப்படி சர்வ காலத்திலும் சர்வ அவஸ்தைகளிலும் சர்வாத்மாக்களோடும் பழகி –
தத் தத் சரீர ப்ரவேச நிதானத்தையும் அறிந்து ரஷித்துக் கொண்டு போகும்
சர்வேஸ்வரனுடைய திருவடிகளையே
வியாதியையும் தத் நிதானமும் பரிகாரமும் அறியும் வைத்தியரைப் பற்றும் வியாதி க்ரஸ்தர் போல்
சம்சார வியாதி க்ரஸ்தர் (சம்சாரமே பெரிய வியாதி தானே )
நீங்களும் ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

—————————————————————

அறிந்த தசையிலும் அறியாத தசையிலும்-சர்வேஸ்வரனே ரஷகனாக அறுதி இட்ட பின்பு-
தன் அபிமத சித்திக்கு இவன் செய்ய வேண்டும்-ஸூஹ்ருதம் உண்டோ –
சத்தா பிரயுக்தையான இச்சை இவனுக்கு உண்டாகில்-
மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்-
இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் –

(ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் இவன் ஆன பின்பு
இச்சைக்கு மேற்பட்ட வேண்டியது இல்லையே
உம்மிடம் கைம் முதல் ஒன்றும் வேண்டாம் அவன் கால் முதல் இருக்க
ருசி ஒன்றே வேண்டுவது
போலி கண்டு அவனுக்கு உள்ள நிறம் வண்ணம் காட்டும் கார் கண்டு
தரித்து இருக்கலாம் கால ஷேபத்துக்கு
வித்து என்று ருசி-இத்தையும் அவனே விளைக்கும்
வித்து -புண்யம் ஸூ ஹ்ருதம் – ருசி இரண்டும் )

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார் மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-

பதவுரை

விடை அடர்த்த–(நப்பின்னைப் பிராட்டிக்கா) ரிஷபங்களை வலி யடக்கினவனும்(இதை வித்தே வித்திட்டார் நமக்காக )
பத்தி உழவன்–(தன் விஷயத்தில் சேதநர்கட்கு) பக்தி யுண்டாவதற்குத் தானே முயற்சி செய்பவனுமான எம்பெருமானுடைய
பழம் புனத்து–(ஸம்ஸாரமென்கிற) அநாதியான ஷேத்ரத்திலே
வித்தும் இட வேண்டும் கொலோ–(ஸ்வ ப்ரயத்நமாகிற) விதையை நாம் விதைக்க வேண்டுமோ? (வேண்டா)
(நம் முயற்சியின்றியே தானே பகவத் விஷயத்தில் ருசி விளைந்தால் திரு நாட்டுக்குச் செல்லுமளவும் நாம் எப்படி தரித்திருப்ப தென்றால்)
மொய்த்து எழுந்த–திரண்டு கிளர்ந்த
கார் மேகம் அன்ன–காள மேகம் போன்ற
கரு மால்–கரிய திருமாலினது
திரு மேனி–திருமேனியை
நீர் வானம்–நீர் கொண்டெழுந்த மேகமானது
நிகழ்ந்து–எதிரே நின்று நிகழ்ந்து -வர்த்தியா நின்று கொண்டு
காட்டும்–காண்பிக்கும்
(போலி கண்டு நாம் தரித்திருக்கலாமென்றபடி.
போலி கண்டு ஏமாறாதீர் போல் அல்ல இது நினைவூட்டும் மேகம் )
காட்டும் -பிரகாசித்துக் காட்டவுமாம்

ஏழு வ்ருஷபங்களைக் கொன்றவனாய்
பக்திக்கு கிருஷி பண்ணினவனான ஸர்வேஸ்வரனுடைய அநாதியான ஸம்ஸாரம் ஆகிற பூமியிலே
ஸூஹ்ருதமாகிற விதையும் விதைக்க வேணுமோ
திரண்டு கிளர்ந்த கரு மேகம் போன்ற நீல வர்ணனான
சர்வேஸ்வரனுடைய திரு மேனியை நீர் கொண்ட மேகம் எதிரே நின்று காட்டா நின்றது –

(ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் மடுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரும் செய்யுள்
பேரமர் ளாதல் கடல் புரைய விளைவித்த
காரமார் மேனி நம் கண்ணன் )

வித்தும் இட வேண்டும் கொலோ –
வித்து என்று சொல்லுகிறது ஸூஹ்ருதத்தை –
(பரமாத்மாவுடன் விவாதம் இல்லையாகில் கங்காதி புண்ய தீர்த்தங்களுக்கும்
குருஷேத்ராதி திவ்ய ஷேத்ரங்களுக்கும் யாத்திரை செல்ல வேண்டாம் -மனு
சாதனா புத்தியுடன் செய்ய வேண்டாம் )

விடை யடர்த்த பத்தி யுழவன்
நப்பின்னை பிராட்டிக்கு உதவிற்று என்ற வ்யாஜமாய்-
ஆஸ்ரிதர் உடைய பக்திக்கு கர்ஷகன் ஆனவனுடைய

பழம் புனத்து
பழம் புனங்களில் விதைக்க வேண்டாதே-உதறி முளைக்குமா போலே
யாத்ருச்சிக ஸூஹ்ருதங்கள் தன்னடையே பிறக்கும் படி இறே
ஈஸ்வரன் ஜகத் சிருஷ்டியைப் பண்ணுவது –

(பழையதாக உழுவது -நடுவது -விளைவதாய்- போரும் ஷேத்ரத்திலே –
உதிரி முளைத்து -பல பர்யந்தமாம் போலே –
இவை தான் தன்னடையே விளையும் படியாயிற்று –ஸ்ரீ வசன பூஷணம் ––சூரணை -389-

பக்தி உழவன் பழம் புனத்தை சிருஷ்டித்த கட்டளை –
ஈஸ்வர ஸ்ருஷ்டியால் இவனுக்கு விளையும் அங்கீகார பற்றாசைகள்-யாத்ருச்சிகதிகள் -மாத்ரமே அன்று -இன்னம் சில உண்டு என்று –
தர்சிப்பிக்கைகாக வாதல் -கீழ் சொன்ன இவைதான் உண்டாம் பிரகாரத்தை உபபாதிக்கைக்காக வாதல் -அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
புதியதாக தரிசு திருத்தினது அன்றிக்கே பழையதாக உழுவது -நடுவது -விளைவதாய்க் கொண்டு –
செய்காலாய்ப் போரும் ஷேத்ரத்திலே -கர்ஷகன் அதுக்கு என்று ஒரு க்ருஷியும் பண்ணாது இருக்க –
உதிரியானது முளைத்து விளைந்து தலைக் கட்டுமா போலே –
மேல் சொல்லப் படுகிற நிரூபண விசேஷங்கள் ஆதல் – கீழ் சொன்ன யாத்ருச்சிகாதிகள் ஆதல் –
இதுக்கு என்ன ஒரு கிருஷி செய்ய வேண்டாதே -இச் சேதனர் பக்கல்
தன்னடையே விளையும் படி ஆயிற்று -பக்திக்கு கர்ஷகனான ஈஸ்வரன்
பிரவாஹ ரூபேண நடக்கிற சம்சாரம் ஆகிற பழம் புனத்தை சிருஷ்டித்து திருத்தும் -என்றபடி –

உதிரி போலே அஞ்ஞான ஸூ ஹ்ருதங்கள் –உண்டாக்க வல்ல சர்வ சக்தன் அன்றோ -அனுக்ரஹம் காடு மேடும் பாயும் -தாதாமி புத்தி யோகம் —
பழையதாக உழுவது -உதிரி விளையும் யோக்கியதையும் இல்லாமல் கூடாதே – நடுவது -சாவி போகாமல் விளைவது -விளைச்சல் பூமி –
அநாதி அவிச்சின்னம் -ஸூ க்ஷேத்ரம் -வியாபாரம் இல்லாமல் இருந்தால் ஜலம் ஒன்றே இருந்தால் -சர்வ அங்குரித்த சஹகாரி தண்ணீர் அன்றோ –
தன்னடையே முளை விட்டு பிரவாஹ ரூபேண -சம்சாரி சேதனன் -அநாதி பகவத் சங்கல்ப வைச்சித்ர சக்தி மாத்திரம் கொண்டே -தண்ணீர் போலே –
பற்றாசாகக் கொண்டு -மற்று ஒரு ஹேது வேண்டாத படி -பலம்-பகவத் அங்கீ காரம் வரை -பழம் புனம்- அநாதி கால சம்சாரம் –
நியமமாய் வரும் கட்டளை -ஆக யாதிருச்சாதிகளும் அவன் சங்கல்பம் அடியாகவே என்றதாயிற்று)

மொய்த்து எழுந்த கார்மேகம் அன்ன கருமால் திருமேனி நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –
ருசி பிறந்த பின்பு பிராப்தி அளவும் நாம் தரிக்கைக்கு-
அவன் திருமேனிக்கு போலி உண்டு -என்கை

செறிந்து எழுந்த கார் காலத்தில் மேகம் போலே ஸ்யாமமான-திருமேனியை உடைய
சர்வேஸ்வரனுடைய நிறத்தை-
நீர் கொண்டு எழுந்த கார் மேகம் காட்டும் –

(நீர் வானம் ஒப்பான பல பொருள்களுக்கும் உப லக்ஷணம்

கொண்டல் தான் மால் வரை தான் ம கடல் தான் கூர் இருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத் தான் கண்ட நாள்
கார் உருவம் காண் தோறும் நெஞ்சு ஓம் கண்ணனார்
பேருரு என்று எம்மைப் பிரிந்து

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று )

அப்பிள்ளை உரை அவதாரிகை
(உதறி அங்கு உதிரி இங்கு )
யாதிருச்சிகாதி ஸூஹ்ருதங்களையும் கல்பித்து
(வித்து என்று ருசி-இத்தையும் அவனே விளைக்கும்
வளர்ப்பதும் மேகம் அவனே )
ஸ்ருஷ்ட்டி அவதாரிகளாலே சர்வேஸ்வரன் தான் கை தொட்டு கிருஷி பண்ணி போரா நிற்க
அபிமத சித்திக்கு ஒன்றுமே செய்ய வேண்டாமே
நப்பின்னை பிராட்டி ஸம்ஸ்லேஷத்துக்கு -பிரதிபந்தங்கங்களை தானே போக்கி அருளியது போல்
கை தொட்டு பக்திக்கு கிருஷி பண்ணிப் போரும் கிருஷ்ணனுடையதாய்
ப்ரவாஹ ரூபமாக அனாதையான விளை நலம்
எப்போதும் விதைப்பது உழுவது அறுவது போய்க்கொண்டு இருக்கும் புவனத்திலே
தன்னடையே உதிரி முளைக்குமா போலே
தன்னடையே விளையக் கடவ யாதிருச்சிகம் ப்ராசங்கிகம் ஆனு ஷங்கதம் – இத்யாதி இருக்க
ஏற்படும்படியாகவே ஸ்ருஷ்டிக்கிறான்
இவன் விதைக்க வேண்டாமே
யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதம் தளமாக அவன் கிருஷி பலமாக ருசி பிறந்த பின்பு
ஸ்ரீ வசன பூஷணம் -389 சூர்ணிகை -இப்பாசுரம் கொண்டே வந்தது –
மா முனிகளும் வியாக்யானத்தில் உதிரி தானே முளைத்து தலைக் கட்டுமா போல்
உதிரி முளைக்குமா போலே பாடமே மிகப் பொருந்தும்
திரண்டு கிளர்ந்த காளமேகம் போல் நீர் கொண்டு எழுந்த காளமேகம் முன்னே நின்று காட்டா நிற்கும்
அவன் வடிவுக்கு போலி யான தன் வடிவைக் காட்டி ருசியை வளர்த்து பிராப்தி அளவும் தரித்து நிற்க உதவும்
ஸ்ரீ பாத தீர்த்தம் நம்புவார்களும் நம்பாதவர்களும் குளிக்க வேண்டாம்
பரமாத்மா இடம் விரோதம் இல்லாமல் தானே சாதனம் ஆவான் மனு ஸ்ம்ருதி சொல்லுமே
ஸூ ஹ்ருதம் வரும்படியே ஸ்ருஷ்டிக்கிறான்
உண்மையை அறிந்தாலே போதும் உஜ்ஜீவிப்போம்
அன்றிக்கே
கீழ் விதை -ஸூ ஹ்ருதம்
விதை என்று கொண்டு ருசி
சம்சாரம் பழம் புனத்தில் ஈர நெல் வித்தி இடவும் வேண்டுமோ –
அவன் வடிவைக் காட்டும் மேகமே ருசியை விளையா நிற்குமே
அவன் வடிவுக்கு போலியாகக் காட்டி நினைவு படுத்தும் அன்றோ –
பெரிய திருவந்தாதி பாசுரம் கார் உரு காட்டும்
பூவையும் –காணும் தோறும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்ற பாசுரங்கள் உண்டே –

————————————————————————–

(பக்தி உழவன் படும் பாடுகளை இப் பாட்டிலும் அடுத்த பாட்டிலும் அருளிச் செய்கிறார்
அதில் இப் பாட்டில் அடியார்களுக்காக தன்னை அழிய மாறியும் உதவுவதைக் கண்டு உருகுகிறார்
பக்தியை விளைத்து வளர்ப்பது திருமேனியே யாகையாலே அதன் இயற்கை நிறத்தையும்
இவர்களுக்காக மாற்றி அமைக்கும் மஹா குணத்திலே ஈடுபடுகிறார் -)

அப்பிள்ளை உரை அவதாரிகை
நீர் சொன்னபடியே பக்தியைப் பிறப்பித்து நாம் ரஷியா நின்றோமோ
பகவத் அபிப்ராயமாக -ஆழ்வார் சொல்லக் கேட்டு உகப்பானே
யுகம் தோறும் சத்வாதி குண யுக்தராக இருப்பதால்
சேதனருடைய ருசிக்கு அனுரூபமான விக்ரஹத்தைப் பரிக்ரஹித்து
அவர்களுக்கு உன் விஷயத்தில் ருசி வரும்படி செய்தாய் அன்றோ –
பக்தி விளையும் படி கிருஷி பண்ணி ரக்ஷித்தாய் அன்றோ –

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீயப் புகழ்ந்தாய்
சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை-24-

பொருளின் வண்ணம் சொல்லாமல் பொருளையே அருளிச் செய்கிறார் பால் இத்யாதியால்
பால் -வெளுப்பு மட்டும் அல்ல ரஸம் –ரஸோ வை ஸஹ
பொன் சிகப்பு மட்டும் அல்ல ஸ்ப்ருஹனீயம் –
பாசி -மாந்தளிர் பச்சை மட்டும் அல்ல பார்த்தாலே குளிர்ச்சி –
கார் வண்ணம் -கறுப்பு மட்டும் அல்ல வண்மை -இயற்கை வர்ணம்
இருவரையும் மது கைடபரையும் -கௌரவ பாண்டவர் என்றுமாம்
ஸ்வேதன் -வெள்ளை புரவி தேர் ஆடை உள்ளம் -ஸ்வேத வாஹனன்
சினப்போர் -சீறிக்கொண்டு இருக்கும் அர்ஜுனன்
சேனாபதி -விஸ்வபதி லோகபதி லோக பர்த்தா -இவனால் போர் என்பதால் இங்கு சேனாபதி -இவனே ரக்ஷகன்
நிகழ்ந்தாய் -நான்கு யுகங்களிலும் பிரகாசித்தாய்
பிரகாச முகப்பின் கார்யம் ஆகையால் உகந்தாய் என்கிறது
புகழ்ந்தாய் -அர்ஜுனனைக் கொண்டாடினாய்
மனப்போர்– மநோ ரதம் படி திரௌபதி குழல் முடிக்கவே எல்லாம்

வெண்மை சிவப்பு பச்சை கறுப்பு ஆகிற நான்கு வர்ணங்களை யுடையனாய் நாலு யுகங்களிலும் அவதரித்தாய்
பாண்டவ கௌரவர்கள் இருவருடைய சைனிகர்களையும் நசிக்கும்படி உபேக்ஷித்தாய்
ஸேனாபதியாய்க் கொண்டு தான் ஸங்கல்பித்த யுத்தத்தைத் தலைக் கட்டும்படி சீறிக் கொண்டு
யுத்தத்தில் அர்ஜுனனைக் கொண்டாடினாய் –

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
அவ்வோ யுகங்களில் சேதனர்க்கு பிரியமான-
வெண்மை தொடக்கமான நிறங்களை உகந்தாய் –

(வளை உருவாயத் திகழ்ந்தான் என்றும் சங்கம் வண்ணம் அன்ன மேனி என்று சொல்லாமல் பால் போல் என்பதால்
வெளுத்ததோடு அல்லாமல் ரஸ்யத்தையிலும் உயர்ந்தவன்
க்ருதமிவ பயசி நிகூடம் -பாலினுள் நிறைந்து இருக்கும் நெய் போன்றவன் என்றும்
ஸர்வ ரஸ
ரஸோ வை ஸ
தேனே பாலே கன்னலே அமுதே
கனியைக் கரும்பின் சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை
கறந்த பாலுள் நெய்யே போல் -என்றும் உண்டே
வண்ணம் -ஸ்வ பாவம் தன்மையையும் சொல்லும் )

(பொன் போலே விலை உயர்ந்தவன்
ஹிரண்மய புருஷ
ருக்மாபம்
ஹேம ஸமான வர்ணம்
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி )

(பசுப்பு -பாசியின் பசும் புறம் -கண்டார் கண்களைக் குளிரச் செய்யும் திருமேனி –
புருஷம் கிருஷ்ண பிங்களம்-பச்சை மா மலை போல் மேனி அன்றோ )

(முழுதும் நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் -பெரிய திருமொழி -4-9-8 –
நீல மேக ஸ்யாமளன் அன்றோ
கார் வண்ணம் -ப்ரயோஜன நிரபேஷமாயும் -வரையாமலும் -கொடுத்தோம் என்னும் நினைவு இல்லாமையாலும்
நீல தோயதா மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
மேக ஸ்யாமம் )

இகழ்ந்தாய் இருவரையும் வீயப் -மது கைடபர்கள் முடிய
அன்றிக்கே
எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த -என்னுமா போலே-
பஷ த்வ்யத்தையும் முடித்த என்றுமாம் –
(அஸ்வத்தாமா
கிருபாச்சார்யர்
க்ருதவர்மா
பஞ்ச பாண்டவர் ஆகிய எண்மர் மட்டுமே இருந்தனர் என்பர் )

புகழ்ந்தாய் சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய் மனப் போர் முடிக்கும் வகை –
சினப் போரை உடைய ஸ்வேத வாஹனான-அர்ஜுனன் சேனைக்கு நிர்வாஹகனாய்-
தர்ம புத்திரன் முடி சூடவும்-
த்ரௌபதி குழல் முடிக்கவும்-
துர்யோனாதிகள் முடியும்படியும்-
நினைத்த போரை முடிக்க வல்லனாய்ப்-புகழ்ந்தாய்-

(வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று -பெரியாழ்வார்
ஆகவே ஸ்வேதன் -ஸ்வேத வாஹநன் -என்றவாறு )

நிகழ்ந்தாய் -பிரகாசித்தாய்
பிரகாசம் உகப்பின் கார்யம் ஆகையால் உகந்தாய் என்கிறது
புகழ்ந்தாய் -அர்ஜுனனைக் கொண்டாடினாய்-

அப்பிள்ளை உரை
கிருதாதி யுகங்களில் சேதனருடைய ஸத்வாதி குணங்களுக்கு அனுகுணமாக
காதல் கடல் புரைய விளைவித்த கார் முகில் -கறுப்பு நிறம் கொண்டே காதலை வளர்க்கிறான்
பால் வண்ணம் -வளை உருவாய் -சங்க வண்ணம் -சர்வ ரஸ
தேனை பாலை கன்னலே அமுதை
அச்சுவை அமுதன் தன்மை
நிகழ்ந்தாய் பொன் வண்ணம்
பொன் போல் சிவந்து ரஜோ குணம் உடன் கலந்த சத்வ குணம்
பொன் போல் விலை உயர்ந்து -ஹிரண்மயன் -ருக்மாபம் ஸ்வப்ன தீ கம்யம் -ஹேமா ஸமான வர்ணம்
சுட்டு உரைத்த நன் பொன் –ஒவ்வாதெ
நிகழ்ந்தாய் பாசியின் பசும் புறம் போல் மாந்தளிர் பச்சை
ரஜோ குணம் தமோ குணம் சத்வ குணம் கலந்து
பச்சை மா மலை போல் மேனி அன்றோ
மேகம் போல் கறுத்தும்
முழுதும் நிலை நின்ற கொண்டல் வண்ணம் -தன்நிறம் –
அபேக்ஷிக்காமல் பொழியும் -வண்மை -கார் மேனி
இப்படி வந்து அவதரித்தீர்
எல்லா சேனையும் இரு நிலத்து வைத்தாய்
இரண்டு பக்கமும் உள்ள அசுர ப்ரக்ருதிகளை உபேக்ஷித்தாய்
அர்ஜுனன் சேனைக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
அடி யார்கள் கார்யம் முடித்து
ஹே அநக பாண்டவ கௌந்தேய பரந்தப இவன் அவனைக் கொண்டாடி
ஸ்த்வயன் ஸ்த்வ பிரியன் இவன் அவனைக் கொண்டாடுகிறார்
வெள்ளைக் குதிரை தேர் மிசை முன் நின்று
நாம ஏக தேச கிரஹணம் -ரெங்கநாதமுனி சத்யபாமா போல் இங்கும்
கிருஷ்ணாச்ரய -இவனே பலம் தலைவன் சேனாபதி -தத்ர ஸ்ரீ விஜயோ –
தர்மபுத்ரன் தலையில் முடியை வைத்து
திரௌபதி குழல் முடித்து
சங்கல்பம் படி போர் நடக்க புகழ்ந்தாய்
ருணம் ப்ரவ்ருத்த –கடன் பெற்றார் உள்ளம் போல் கலங்கி அன்றோ போனான்
திரு உள்ளம் மநோ ரதித்த படி
யுத்தம் என்று பிற்காலித்த
சீறிக் கொண்டு வரும் படி ஆண் பிள்ளை
மதுகைடபர் அழித்தாய் என்றுமாம் –
இவ்வாறு பக்தியை வளர்க்க என்ன வெல்லாம் செய்தாய் என்கிறார் –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -1-12–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் /ஸ்ரீ அப்பிள்ளை உரை —

September 21, 2013

திரு மழிசை ஆழ்வார் திரு அவதாரம்
விபவ சம்வச்தரம்
தை மாசம்
கிருஷ்ண பஷம் தசமி
குரு வாரம்
மக நஷத்ரம் துலா லக்னம்
பார்க்கவ மகரிஷிக்கு திரு அவதாரம்
கனகாங்கி அப்சரச ஸ்திரீ தாயார்

வளர்த்தவர் ஹரி தாசர் -பத்ம வல்லி -பிறம்பு அறுத்து ஜீவிக்கும் குறவ ஜாதி
ஸ்ரீ ஸூதர்சன அம்ச பூதர்
ஸ்ரீ பக்தி சாரர் -மகிஷா சார புரதீசர் -பார்க்கவாத்மஜர் –திரு மழிசைப் பிரான் –

திரு ஆராதன பெருமாள் -சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
சிஷ்யர் கணி கண்டன் -த்ருட வ்ரதர்
ஆசார்யர் பேயாழ்வார்

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை முதிர்ந்த திரு நக்ஷத்திரத்தில் அருளிய வியாக்யானம்
ஆகவே சுருக்கமாகவே உள்ளது
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் அதனாலே ஒரு வியாக்யான உரை அருளிச் செய்துள்ளார்

பட்டர் பிரான் போல் இவரும் திருமழிசைப் பிரான் –
இருவரும் உபகாரகர்
பர தத்வ ஸ்தாபனம்
வாத சதஸ்ஸில் அவர் பரதத்வ ஸ்தாபனம்
அனுபவ பரமான பிரபந்தம் பெரியாழ்வாரது
உள்ளத்தில் அனுபவம் நெடும் காலம்
பரிவாஹ ரூபமாக இப் பிரபந்தம்

அந்தர்யாமித்வத்தில் நோக்கு இவருக்கு
அவர் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ஆழங்கால் பட்டவர்
அவர் ஸ்ரீ பெரிய திருவடி அம்சம் -வேதாந்த விழுப்பொருளின் மேல் இருந்த விளக்கை விஷ்ணு சித்தன் விரித்தார்
இவர் ஸ்ரீ ஸூ தர்சன அம்சம்
விரோதிகளைத் தொலைக்க-தேவதாந்த்ர விஷயாந்தர சம்பந்தம் தொலைத்து ததீய பர்யந்தம்
உறையில் இடாதவர் –திரு நாமம் இவருக்கு -நாவு தான் இவருக்கு வாள் –
பிரமாணத்துக்கு விரோதிகளை நிரஸித்து அருளியவர் –

நம் கண்ணன் கண் அல்லது இல்லை யோர் கண்ணே -இரண்டையும் சேர்த்தது
முதல் ஆழ்வார்கள் திருமழிசைப்பிரான் அருளியவற்றை சேர்த்து நம்மாழ்வார்

நாலாம் திருவந்தாதி என்றும் சொல்வர்
நான்முகன் திருவந்தாதி திரு நாமமே பிரசித்தம்
அமலனாதி பிரான் -கண்ணி நுண் சிறுத்தாம்பு போல் பாசுர முதல் பதம் கொண்டே இதுவும்

மங்களாசாசன திவ்ய தேசங்கள்–18-
கோயில் –திருமலை- பெருமாள் கோயில் –
யத்தோதகாரி -திருக் குடைந்தை -திருப்பேர் –
அன்பில் -கபிஸ்தலம் -திரு ஊரகம்
திருப் பாடகம் -திருக் குறுங்குடி -திரு வல்லிக் கேணி
திருக் கோட்டியூர்- திரு எவ்வுள்ளூர்- திருத் த்வாரகை
திருக் கூடல் -திருப் பாற் கடல் -ஸ்ரீ வைகுண்டம்

பிராஞ்ஞன் என்னும் சத் ஸூத்தரர் தனது பார்யை உடன் இவர் அமுத செய்த மிகுந்த பாலை
ஸ்வீகரித்து கிழத்தனம் விட்டு கணிகண்டனை -பாகவதோததமரை பெற்று எடுத்தார்கள்

க்ருஷ்ணானாம் வ்ரீஹீனாம் நகநிர் பிண்ணம் கிருஷ்ணா கூடாதஷிணா-
வேத வாக்கியம் எடுத்துக் கொடுத்த விருத்தாந்தம் –

—————–

தனியன் –
மகாயாம் மகரே மாசி சக்ராம்சம் பார்க்க வோத்பவம்
மகீசார புராதீசம் பக்தி சாரம் அஹம் பஜே

பார்க்கவர் -ப்ராஹ்மண பிருகு குலம் அவதாரம்
இரண்டு குலம் இவருக்கும்
க்ஷத்ரியர் வைசியர் -ஒரு பிறவியில் இரண்டு குலம் –
ருக்மிணி பிராட்டிக்கு நப்பின்னைப்பிராட்டிக்கும் -மணவாளன்
திருவாளர் பங்கயச் செல்வி வளர்க்கப்பட்டு -பிரம்பு அறுத்து வாழும் குலம்

சக்தி பஞ்சமய விக்ரஹாத்மனே சுக்தி ஹார ஜித சித்த ஹாரிணே
முக்தி தாயக முராரி பாதயோர் பக்திசார முனையே நமோ நம-

அன்புடன் அந்தாதி தொண்ணூற்றாறு உரைத்தான் வாழியே
அழகாரும் திரு மழிசை அமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையின் மகத்து இங்கு உதித்தான் வாழியே
எழில் சந்த விருத்தம் நூற்று இருபது ஈந்தான் வாழியே
முன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே
முழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லான் வாழியே
நன் புவியில் நாலாயிரத்து முநநூற்றான் வாழியே
நங்கள் பக்தி சாரர் இரு நல பதங்கள் வாழியே

————————————————————————–

ஸ்ரீ ராமபிள்ளை அருளிச் செய்த தனியன் –
இவரே ஸ்ரீ வேத வியாச பட்டர் -ஸ்ரீ கூரத்தாழ்வான் திருக்குமாரர்

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்

அவதாரிகை –
சர்வேஸ்வரனுடைய ஸர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்த
ஸ்ரீ பக்தி சாரர் உடைய ஸ்ரீ ஸூக்தியான திவ்ய பிரபந்தத்தை
அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி –
மனசே

(ஸ்ரீ பக்தி சாரர்) மஹீஷார ஷேத்ராதிபதி யானவர் ஸ்ரீ பாதங்களையே
ஸ்தோத்ரம் பண்ணு என்கிறது –

நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் -சீரார் மொழி
செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பரன் அடியே வாழ்த்து –

பத உரை

நாராயணன் படைத்தான் நான்முகனை — ஸ்ரீ மன் நாராயணன் நான்கு முகம் கொண்ட ப்ரஹ்மாவை ஸ்ருஷ்ட்டித்தான்
இப்போது இது சொல்கிறது காரண வஸ்துவை தியானிக்க வேண்டுமே -காரணந்து த்யேய
நான்முகனுக்கு-அந்த ப்ரஹ்மாவுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் -சாதன அனுஷ்டானத்தால் வந்த சீர்மை -சடைமுடி உண்டே -ருத்ரனார் பிறந்தார்
என்னும் சொல் -சீரார் மொழி–என்று இந்த கம்பீரமான அர்த்தத்தை சொல்லும் பெருமை மிக்க
கல்யாண குணங்களால் நிறைந்த இப் பிரபந்தம்
செப்பி வாழலாம் -சொல்லியே-அனுசந்தான மாத்ரத்தாலே – உஜ்ஜீவிக்கலாம்
நெஞ்சமே
மொய்பூ மழிசைப் பரன் அடியே வாழ்த்து -பூக்கள் ஆர்த்த திரு மழிசைப்பிரான்
திருவடிகளையே வாழ்த்து -மங்களா சாசனம் பண்ணு

வியாக்யானம் –

நாராயணன் படைத்தான் நான்முகனை –
ஏகோ ஹைவ நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாநா (மஹா உபநிஷத் )-என்றும்
நாராயணா பரஞ்சோதி (தைத்ரியம் நாராயண ஸ்ரீ ஸூக்தம் )-என்றும் –
(பரஞ்சோதி பரமாத்மா பர ப்ரஹ்மம் பர தத்வம் அனைத்தும் நாராயணனே )
நாரயணே ப்ரலீயந்தே (ருக்வேதம் நாராயண உபநிஷத் )-என்றும்
ஏக ஸ்திஷ்டதி விஸ்வாத்மா ச ச நாராயண பிரபு (பாரதம் அநு ஸ்ம்ருதி )-என்றும் –
சிருஷ்டி ஸ்திதி யந்தகரணீம் பிரம்மா விஷ்ணு சிவாத்மிகம் -என்று தொடங்கி –
ஏக ஏவ ஜனார்த்தன (பிறப்பை அறுக்கும் -ஜனார்த்தன-வர்கலா திவ்ய தேசம் சேவை )-என்றும்
ஏக ஏவ ஜகத் ஸ்வாமீ சக்திமாந் அச்யுத பிரபு (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-17)-என்றும்
அவரவர்கள் சர்வேஸ்வரனாலே சம்ஹார்யர் என்றும்

என் நாபி பத்மாத் அபவன் மகாத்மா பிரஜாபதி (மஹா உபநிஷத் )-என்றும்
நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாரயணாத் ருத்ரோ ஜாயதே
விருபாஷாய ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய (ருக்வேதம் நாராயண உபநிஷத் )-என்றும்
(சில கல்பங்களில் நாராயணன் இடம் நேராக ருத்ரன் பிறந்தான் என்றும்
வேறே கல்பங்களில் நான் முகன் மூலம் பிறந்ததாகவும் சொல்லும் )
யத் தத் பத்ம மபூத் பூர்வம் தத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே
ப்ரஹ்மணஸ் சாபிசம் பூதச் சிவ இத்ய வதார்யதாம் (சாம வேதம் சாந்தோக்யம் )-என்றும்
அவரவர்கள் எம்பெருமானாலே ஸ்ருஜ்யர் என்றும் சொல்லப்படும்

வேதார்த்தங்களை சர்வாதிகாரமாம் படி

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான் முகமாய் சங்கரனைத் தான் படைத்தான்
யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன்
ஆழ் பொருளைச் சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -என்று
உபக்ரமித்து

இனி அறிந்தேன் (96 )-என்று தலைக் கட்டி
நற் கிரிசை நாரணன் நீ-(96 )-என்று இறே அருளிச் செய்தது –

அத்தை ஆயிற்று-
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல்–என்கிறது –
என்னும் வேதாந்த பிரசித்தி தோற்ற சொல்லுகிறது

சொல் சீரார் மொழி யாவது –
தமிழுக்கு அவயவமாக சொல்லுகிற சொல் சீர்களாலே
ஆர்ந்த மொழி என்னுதல்-

சீர் கலந்த சொல்
கல்யாண குண பிரசுரமான மொழி என்னுதல்

மொழி செப்பி
ஏவம் விதமான நான்முகன் திருவந்தாதி பிரபந்தத்தை
அனுசந்தித்து

வாழலாம்
உஜ்ஜீவிக்கலாம்

நெஞ்சே
மனசே நீ சஹ கரிக்க வேணும்

மொய் பூ மழிசைப் பரன் அடியே வாழ்த்து –
பிரபந்த வக்தாவான திரு மழிசை ஆழ்வார்
திருவடிகளையே ஸ்தோத்ரம் பண்ணு

இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப் போத (12 ) -என்னும்படி
நிரதிசய போக்யமாய் இருக்கிற இத்தையே விரும்பிப் போரு

மொய் பூ –
செறிந்த பூ –
அழகிய பூ –

பூ என்றும்
அழகு என்று கொண்டு
மிக்க அழகு என்னவுமாம்

மொய் பூ –
திரு மழிசைக்கும் திரு வடிகளுக்கும் விசேஷணம்

படிக்கும் அடிக்கும் விசேஷணம்

இப்படி விலக்ஷணமான இவர் திருவடிகளையே மங்களா சாசனம் பண்ணு

அவர்
வாழி கேசனே
என்றும்
மாலை வாழ்த்தி வாழுமினோ -என்றும்
பகவத் விஷய மங்களா சாசனம் பிரசம்சை பண்ணினாலும்

நீ
ஆழ்வார் அடி விடாமல் மங்களா சாசனம் பண்ணு -என்கிறது-

அவர்
ஈசருக்கும் நான்முகற்கும் தெய்வம் என்றும்
குண பரனே என்றும்
எம்பெருமானையே பரத்வம் ஸாதித்தார்

நீ
ஆழ்வாரையே பரத்வமாகப் புத்தி பண்ணு –

————————————————————————–

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யமுநா ஸூநவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா
சேங்கணூர் -திரு வெள்ளியங்குடி அருகில் அவதாரம் -ஆவணி திருவோணம் –
பரம காருணிகர்
வியாக்கியான சக்ரவர்த்தி

அவதாரிகை –

முதல் ஆழ்வார்கள் (எங்கும் தீர்த்தகரராய் திரிந்து )
அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க

அதுக்குக் களை பிடுங்குகிறார் –
(இவர் -உறையில் இடாதவர் )

ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி –
அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு
ஈஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதித்து
அவர்களை அநீஸ்வரர் என்கிறார் –

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை –

அவதாரிகை
முதல் ஆழ்வார்கள் மூவரும் பகவத் நிருபாதிக கடாக்ஷ விசேஷ லப்தமான
பக்தி ரூபா பன்ன ஞானத்தால்
அவன் படிகளைக் கட்டடங்க -எல்லை இல்லா -ஸ்வரூபாதிகளைக் கண்டு அனுபவித்து
அவ் வனுபவ பரிவாஹ ரூபமான நடை விளங்கு தமிழாலே
ஸ்ரீ மானே நாராயணனே ஸர்வ ஸ்மாத் பரன் -அனுபாவ்யமான பர வஸ்துவாக என்று
நிஷ்கர்ஷித்தார்கள் முதல் மூன்று திருவந்தாதிகளாலே

நால்வரும் த்வாபர யுகத்தில் அவதாரம்

இவரும் அவர்களைப் போலவே
மயர்வற மதிநலம் குறைவற உடையவராய்
அவரது திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தையும்
ஸ்வரூப ஆஸ்ரிதங்களான குணங்களையும்
தத் உபய ப்ரகாசகமான திவ்ய விக்ரஹத்தையும்
தலை நீர்ப் பாட்டில் இவற்றை அனுபவிக்கக்கடவ திவ்ய மஹிஷிகளையும்
அச் சேர்த்தியிலே கிஞ்சித் கரிக்கும் ஸூரிகளையும்
நித்ய கைங்கர்யத்துக்கு ஏகாந்தமான பரம பதத்தையும்
லீலா விபூதி யோகத்தையும்
அவன் காட்டக் கண்டு -யதா வஸ்தாக சாஷாத்கரித்து –

மார்க்கண்டேயர் போல் சிர காலம் -இருந்தும் 4800-காலம் சென்றதும் அறியாமல்
நாட்டில் சேதனர்கள் ரஜஸ் தமஸ் ஸூக்களால் பிறந்த அந்யதா விபரீத ஞானத்தால்
ஷேத்ரஞ்ஞராக சம் பிரதிபன்னரான ப்ரஹ்மாதிகளை
வசன ஆபாசங்களாலும் யுக்தி ஆபாசங்களாலும் -போலி வாதங்களாலும்
ஈஸ்வராக உபபாதித்து
வைதிக மார்க்கம் -ஓடி அறுத்து -தப்பி
குத்ருஷ்ட்டி மார்க்கம் பூண் கட்டி
மந்த மதிகளான சேதனரை பிரமிப்பித்து
ஸம்ஸார பந்தகராய் போருகையாலே

சேதனர் பகவத் விமுகராய் அநர்த்தப்படுவதைக் கண்டு
பர அநர்த்தம் பொறுக்க மாட்டாத பரம கிருபையால்
நிர்தோஷ பிரமாணங்களாலும்
ஸம்யக் நியாயங்களாலும்
தேவதாந்த்ர பரத்வத்தை நிராகரித்து
ஸ்ரீ வைதிக மார்க்கத்தை-பகவத் பரத்வத்தை – ஸ்தாபித்து
சேதனரை பகவத் பரராம் படி உபதேசித்து திருத்தி அருளுகிறார்

—————-

ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க
பிரதானர் ஆனார் போலே–

தந் நிவ்ருத்திக்கு
ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –

அப்பிள்ளை உரை
அவதாரிகை
மஹா உபநிஷத் இத்யாதி பிரசித்தமான நாராயணனே
ப்ரஹ்மாதிகள் சகல ஜகத்துக்கும் காரண பூதன்
ப்ரஹ்மாதிகள் அடங்கலும் கார்ய கோடி கடிதர்
அப்ரதிஹதமாக வேதாந்த அர்த்தம் தடங்கல் இல்லாமல் சொன்னேன்
இத்தைத் தப்ப விடாமல் கொள்ளுங்கோள் என்று
பர உபதேச ப்ரவர்த்தகர் ஆகிறார்

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான் முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1

பதவுரை

நாராயணன்–பரம புருஷனானவன்
நான்முகனை–பிரமனை
படைத்தான்–ஸ்ருஷ்டித்தான்
நான்முகனும்–அந்தப் பிரமனும்
தான்–தானே
முகம் ஆய்–முக்கியனாயிருந்து
சங்கரனை–சிவனை
படைத்தான்–ஸ்ருஷ்டித்தான்
ஆழ் பொருளை–(ஆகவே, முழு முதற் கடவுள் ஸ்ரீமந் நாராயணனே யென்கிற) ஆழ்ந்த அர்த்தத்தை
யான்–அடியேன்
முகம் ஆய்–முக்கியமாக
அந்தாதி மேல் இட்டு–இத் திருவந்தாதி மூலமாக
அறிவித்தேன்–உங்கட்கு அறிவிக்கத் தொடங்குகின்றேன்
ஸம்ஸாரம் வர்த்தகம் அவரது -அதனால் நான்முகன் முக்யர்
ஸம்ஸாரம் நிவர்த்தகம் இவரது -இதனால் இவர் முக்யர்
நீர்–நீங்கள்
தேர்ந்து–ஆராய்ந்து
சிந்தாமல் கொள்மின்–(இவ் வர்த்தத்தைக் குறையற நெஞ்சில் தேக்கிக் கொள்ளுங்கள்.

நான்முகனை நாராயணன் படைத்தான் –
சர்வேஸ்வரன் சிருஷ்டிக்கு உபகரணமாக
நாலு முகத்தை உடைய பிரம்மாவை சிருஷ்டித்தான்

(நான்கு வேதங்களை சொல்ல நான்கு முகங்கள்
இந்த்ரீய அதீன வியாபாரம் உடையவர் என்றவாறு
அங்கு சங்கல்ப ஏக தேசத்தால் அவன் ஸ்ருஷ்டிப்பான்
வியஷ்டி ஸ்ருஷ்ட்டி மாத்திரம் -அதுவும் இவன் அந்தராத்மாவாக இருப்பதால்
சமஷ்டி வியஷ்டி ஸ்ருஷ்ட்டி -அத்வாரக சத்வாரக ஸ்ருஷ்ட்டி என்றும்- சொல்வர்
நாராயணன் -அசாதாரண திரு நாமம்
அவனே சர்வ வியாபி
ஸர்வ நியாந்தா
மோக்ஷ ப்ராப்யன் )

(நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே -என்று நாராயண உபநிஷத்திலும்
தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயதே -என்று ஸூபால உபநிஷத்திலும்
யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் -என்று நாராயண வல்லியிலும்
ப்ரஹ்மா தேவா நாம் பிரதமஸ் சம்ப பூவ -என்று முண்டக உபநிஷத்திலும்
யந் நாபி பத்மாத பவந் மஹாத்மா பிரஜாபதி -என்று மஹா உபநிஷத்தில்
ஸ பிரஜாபதி ரேக புஷ்கர பர்ணே சமபவத் –என்று ஸ்ருதி யாந்தரங்களிலும்
ஸூ பிரசித்தமான பிரமன் பிறப்பை அருளிச் செய்ததே )

நான்முகனும் தான் முகமாய் சங்கரனைத தான் படைத்தான்-
பின்பு பிரம்மாவும் தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –

(விரூ பாஷாய ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாயா -என்றும்
த்ர்யஷ ஸூல பாணி புருஷோ அஜாயதே -என்றும்
ஸம்வத்சரே குமாரோ அஜாயதே -என்றும்
நாராயநாத் ருத்ரோ ஜாயதே -என்றும்
லலாடாத் க்ரோதஜோ ருத்ர -என்றும்
நேராகவோ அந்தராத்மாவாகக் கொண்டோ கல்பாந்தரங்களில் ருத்ரன் பிறந்தத்தை சொல்லும் )

யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை-
இப்படி துர்வகாஹமான பொருளை நானே அனுபவித்துப் போகில்-
சம்சாரிகள் அனர்த்தப் பட்டு போவார்கள் என்று
செம்பிலும் கல்லிலும் வெட்டுமா போலே பிரபந்தத்தில் இட்டு
இதுக்கு பிரதானனாய் அறிவித்தேன்

ஆழ் பொருளை -என்று
அறிய முடியாத ஆழ்ந்த பொருள் என்றும்
ஆழ்ந்து நசிக்கிற பொருளை -என்றுமாம் –

சம்சாரத்தின் உடைய தண்மையையும்
நான் சொன்ன அர்த்தத்தின் அருமையையும்
உணர்ந்து இவ்வர்த்தம் மங்காமல் புத்தி பண்ணுங்கோள்

(அரும்பத விளக்கம்
சம்சாரத்தை உண்டாக்கிக்
தத் அநு குணமான ப்ரயோஜனங்களையும் கொடுத்து
ஸம்ஸாரத்தைப் ப்ரவர்த்திகையாலே பிரதானர் என்கிறது
பரத்வ நிர்ணயம் பண்ணி மோக்ஷ உபாயத்தை உபதேஸிக்கையாலே
நிவ்ருத்தி பிரதான என்கிறது
ப்ரஹ்மாதிகளைப் பரத்வ சங்கை பண்ணிப் பற்றுகை நசிக்கிற பொருள் )

அப்பிள்ளை உரை

ஏகோ ஹை நாராயண ஆஸீத்
கார்ய ரூபமான சகல பதார்த்தங்களும் நாம ரூப விபாக அநர்ஹமாம் படி
தன் பக்கலிலே லயித்து
காரண ப்ரஹ்மம் ஸூஷ்ம சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம்
கார்ய ப்ரஹ்மம் ஸ்தூல சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம்
பஹுஸ்யாம் ப்ரஜாயேய -சத்ய சங்கல்பத்தால் –

மஹதாதி -அண்ட பர்யந்தமான ஸமஸ்த பதார்த்தங்களை ஸ்ருஷ்டித்து -சமஷ்டி ஸ்ருஷ்டி-இதுவே
மஹான் -அஹங்காரம் –மனம் வரை
இவ்வருகு உண்டான வியஷ்ட்டி பதார்த்தங்களை சதுர்முகனைக் கொண்டு ஸ்ருஷ்டிக்க
ப்ரஹ்மாவைப் படைத்தான்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –இத்யாதி
பிரதமம் ப்ரஹ்மாவை ஸ்ருஷ்ட்டித்தான்
பூவில் நான்முகனைப் படைத்தான்
அனைத்து வேதங்களையும் அவனுக்கு உபதேசித்து அருளி

பிரளயத்தில் வேத சப்தங்கள் அநு பூர்வி அழியாமல் வைத்து அருளி
இந்தச் சொல்லுக்கு அடுத்து இது வரிசைக் கிரமம் அழியாது
தேவர்கள் முதலான அனைத்தும்
ஸ்ருஜ்ய பதார்த்தங்களின் -நாம ரூப கிருத்யங்கள் -பெயர் வடிவம் செயல் -இம் மூன்றையும்
வைதிக லௌகிக சொற்கள் -சொல்லுமே
இவற்றை ப்ரதிபாதிக்கும் -பழ ஒழுக்கு -நான்கு வேதங்களையும்
யுக பத் ஏக காலத்தில் உச்சரிக்க நான்கு முகங்கள் –

எம்பெருமான் இடம் மீண்டும் கேட்க வேண்டாதபடி தானே பிரதானமாக
ருத்ரனை ஸ்ருஷ்ட்டித்தான்
நாராயணா ருத்ரோ ஜாயதே இந்திர ஜாயதே
கருவியாக நான்முகனைக் கொண்டும்
கல்பாந்தரங்களில் நேராகவும் உண்டே
ஸ்ருதி சாஹரம் பலவும் இவற்றைச் சொல்லுமே
ப்ரஹ்மாவை கருவியாகக் கொண்டு இந்த ஸ்ருஷ்ட்டி

நான் பகவத் அருளால் தத்வ ஞானம் பெற்றேன்
பர தத்வ யாதாத்ம்ய ஞானத்தை
அந்தாதி ரூபமாக அடைவு மாறாமல் கல்லிலும் செப்பிலும் வெட்டுமா போலே
உங்கள் அனர்த்தம் கண்டு சகிக்க மாட்டாமல்
அர்த்தித்வ நிரபேஷமாக சொன்னேன்

அறிய யோக்யதை உண்டே உங்களுக்கு
ஸம்ஸார பொல்லாங்கையும்
நான் சொல்லும் அர்த்த அருமை பெருமைகளையும்
யுக்தி யுக்தமாக விசாரித்து
அநவதநாதிகளால் கவனக் குறைவு இத்யாதி இல்லாமல்
நெஞ்சில் இருந்தும் நழுவாமல் திடமாக கொள்ளுங்கோள்
நான் தானம் செய்த ரத்னத்தை நழுவ விடாமல் கொள்ளுங்கோள்
சொல்லா விட்டால் தரிக்க மாட்டாமல்
இத்தனையும் செய்ய வேண்டும் என்று காலைக் கட்டி இரக்கிறார்
பாலைக் குடிக்க காலைப் பிடிக்கிறார்

ஆழ் பொருள் நசிக்கும் பொருள் என்றுமாம்

————————————————————————–

கீழே வேதாந்த பிரகிரியையால் பரத்வ நிர்ணயம்
இதிஹாச ப்ரக்ரியையால் இதில்

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத் தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2

பதவுரை

தேருங்கால்–“ஆராயுமிடத்து.
தேவன் ஒருவனே என்று–பர தெய்வமாக வுள்ளவன் ஸ்ரீமந் நாராயணனொருவனே“ என்று
உரைப்பர்–(வியாஸர் முதலிய மஹர்ஷிகள்) சொல்லுவர்,
அவன் பெருமை–அந்த ஸ்ரீமந் நாராயணனுடைய பெருமையை
ஆரும் அறியார்–ஒருவரும் அறிய மாட்டார்
ஒரும் பொருள் முடிவும் இத்தனையே–ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் (வேத வேதாங்கங்களில்) ஆராயப்படும் பொருளின் நிர்ணயமும் இவ்வளவேயாம்
எத் தவம் செய்தார்க்கும் –(எப்படிப்பட்ட ஸாதந அநுஷ்டாநங்களைப் பண்ணினவர்கட்கும்
முடிவது–முடிவில் பலனை யளிப்பது
ஆழியான் பால் அருள்–எம்பெருமானிடத்து உண்டாகும் கிருபையேயாம்.

விசாரித்தால் தேவன் என்பவன் ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே என்று வியாஸாதிகள் சொல்லுவார்கள்
அந்த நாராயணனுடைய மஹிமையை ஒருவரும் அறியார்கள்
ஸ்ருதி ஸ்ம்ருத்யாதிகளில் ப்ரதிபாதிக்கப்பட்ட பரதத்வ வஸ்துவின் பர்யவசானமும் அவ்வளவே
எவ்விதமான தபஸ்ஸூக்களை அனுஷ்டித்தவர்களுக்கும்
சக்ர தரன் பக்கலிலே உண்டான கிருபையினாலே தான்
அந்த தபஸ்ஸூக்களின் பலம் பெறும் படி முடியும்

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர் –
தத்வம் ஜிஞ்ஞாச மாநாநாம் ஹேது பிஸ் சர்வதோ முகை
தத்வ மேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண ஸ்ம்ருத-என்னும்படியே
விசாரிக்கும் போது
சர்வேஸ்வரன் ஒருத்தனே என்று சொல்வார்கள் –

(திவ்ய தேவ ஏகோ நாராயண
ஈஸதே தேவ ஏக
ஏகோ தேவஸ் ஸர்வ பூதேஷு கூட
ஏக ஸ்வதந்த்ரோ ஜகதோ பபூவ
பூதஸ்ய ஜாத பதிர் ஏக ஆஸீத்
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் –போன்ற ஆயிரக் கணக்கான ஸ்ருதி வாக்கியங்களும்
ஏக ஸாஸ்தா ந த்விதீயோ அஸ்தி கஸ்ஸித்
ஏக ஏவ ஜகத் ஸ்வாமீ சக்திமான் அச்யுத பிரபு
ஏகஸ் திஷ்டதி விஸ்வாத்ம ச ச நாராயணா
ஏக ஏவ ஜநார்த்தனா –ஆயிரக்கணக்கான ஸ்ம்ருதி வாக்கியங்களும் உண்டே )

ஆரும் அறியார் அவன் பெருமை-
ஒருத்தனும் அவனுடைய பெருமையை பரிச்சேதிக்க அறியார்கள் –
(பரிச்சேதிக்க அறியார்கள் -கொஞ்சம் சில அம்சங்கள் அறியலாம் –
அளவு படுத்த முடியாதே )

(க இத்தா வேத் யத்ர ஸ
ஸோ அங்க வேத யதி வா ந வேத
யஸ்யா மதம் தஸ்ய மதம்
யாதோ வாஸோ நிவர்த்தந்தே
ந தே விஷ்ணோ ஜாயமாநோ ந ஜாதோ தேவ ம்ஹிம்ந பரமந்த மாத பஹ்வ்ருசம் விஷ்ணவே
ஏதாவா நஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாம்ஸ் ச பூருஷ –என்று வேதங்களிலும்

த்வம் ஹி லோக கதிர் தேவ ந த்வாம் கேசந ஜாநதே -என்று ஸ்ரீ ராமாயணத்திலும்

ப்ரஜா பதிஞ்சு ருத்ரஞ்சாப் யஹமேவ ஸ்ருஜாமி வை
தவ் ஸ மாம் ந விஜாநீதோ மம மாயா ப்ரமோஹிதவ் -என்றும்
ந ஸ ஸக்யஸ் த்வயா த்ரஷ்டும் மயாந்யைர் வாபி சத்தம
ஸர்வேஷாம் ஸாக்ஷி பூதோ அசவ் ந க்ராஹ்ய கேநசித் க்வசித் -என்றும் பாரத மோக்ஷ தர்மத்திலும்

ந யஸ்ய ரூபம் ந பல ப்ரபாவவ் ந ச ஸ்வபாவ பரமஸ்ய பும்ஸ
விஞ்ஞாயதே ஸர்வபிதா மஹாத்யைஸ் தம் வாஸூ தேவம் ப்ரணமாம்ய சிந்த்யம் –என்று ஸ்ரீ விஷ்ணு தர்மத்திலும்

யந்நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி பரமம் பதம்
தந்நதா ஸ்ம ஜகத்தாம தவ ஸர்வ கத அச்யுத -என்றும்
யந் ந தேவ ந முனயோ ந ச அஹம் ந சங்கர
ஜா நந்தி பரமேசஸ்ய தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்

அத்யாபி மாம் ஜா நந்தி ருத்ர இந்த்ராஸ் ஸ பிதா மஹ –என்று ஸ்ரீ வராஹ புராணத்திலும்

ந அஹம் ப்ரகாஸஸ் ஸர்வஸ்ய யோக மாயா ஸமா வ்ருதா
மூடோயயம் நாபி ஜா நாதி லோகோ மாம் அஜம் அவ்யயம் -என்றும்
மா து வேத ந கஸ்ஸன-என்றும் ஸ்ரீ கீதையிலும் )

ஒரும்  பொருள் முடிவும் இத்தனையே
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் எங்கும் ஆராயும் அர்த்தத்தின் உடைய
நிர்ணயமும் இவ்வளவே –

எத் தவம் செய்தார்க்கும்  அருள் முடிவது ஆழியான் பால் –
எல்லா சாதன அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்
அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-

(பலத்தைக் கொடுக்கை அருளின் கார்யம் ஆகையால்
அருள் முடிவு என்று பலத்தைச் சொல்கிறது
தேவதைகள் அழிவார்கள் -ஆகவே இவனே பல ப்ரதன் )

————-

அப்பிள்ளை உரை
ஸ்ருதி ப்ரக்ரியையால் கீழே நாராயணனே நிகில ஜகத் காரண பூதன்
ப்ரஹ்மாதிகள் கார்ய கோடி என்பதை ஸாதித்து அருளினார்
இதில் இதிஹாச பிரகிரியையால்
சர்வேஸ்வர பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு
ஸ்ருஷ்டிக்கு இப்பால் உள்ள நன்மைகள் எல்லாம் இவன் பிரஸாதத்தாலே என்கிறார்

தர்ம வீர்ய ஞானத்தால் தெளிந்து -ஸூவ அனுஷ்டித்த தபஸ் மூலம் பெற்ற ஞான விசேஷம் கொண்டு ஆராய்ந்தால்
தேவதா பாரமார்த்தம் -சிறப்பான உண்மைப் பொருள் -வித்துக்கள் வியாஸ பராசராதிகள்
(பரமார்த்த பாரமார்த்தம் -ரஹஸ்ய த்ரய சாரத்தில் தேசிகன் )
திவ்ய தேவ ஏக நாராயணன்
தேவ ஸப்த வாச்யன் நாராயணனே
ஈஸா தேவ ஏக
மறைந்து நிற்கும்
ஏக ஸ்வ தந்த்ர ஜகதோ
பூத ஏக பதி
ஏஷ ஸாஸ்தா ந த்விதீய
சக்திமான் பிரபு அச்யுத
ஏகமேவ ஜனார்த்தன
ஆயிரக்கணக்கான ஸ்ருதி ஸ்ம்ருதி வாக்யங்களால்
ஒருவனே என்று சொல்லப்பட்டதே

இத்தகையன் என்று யாரால் சொல்ல முடியும்
தனக்கும் தன் தன்மை அறியான்
யதோ வாசோ –நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ
எத்தனையேலும் ஞான அதிசரராக இருந்தாலும்
அவனது பெருமையை பரிச்சேதிக்க வல்லார்கள் அன்றே
யுக கோடி ஸஹஸ்ரம் -விஷ்ணு ஆராத்யாம் சலிக்காமல் செய்து
ஸூவ அனுஷ்டித பலம் அவனே அருளுகிறார்
பல சித்தி ரக்ஷண பரிகரமாக திருவாழியைக் திருக் கையில் கொண்ட -கிருபையாலேயே

லோகத்துக்கு ஒரே கதி இவனே
அஹம் ஏவ ஸ்ருஜாயாம்
மம மாயா ப்ரமோதிதவ்
மோக்ஷ தர்மம் -உன்னால் பார்க்க முடியாது என்னாலும் மற்ற எவராலும் முடியாது
ஸர்வேஷாம் சாக்ஷி பூதன் அவன் ஒருவனே–நான்முகன் ருத்ரனுக்கு
விஷ்ணு தர்மமும் -அசிந்த்யம் -ஸ்வரூபம் ரூபம் பலம் ஸ்வபாவம் யாராலும் தெரிந்து கொள்ள முடியாதே

ஜகத் ஏக தாரகன்
பிறப்பற்றவன் அழிவற்றவன்
சரீரமாக இருக்கும் தேவதைகளை ஸ்ரத்தை உடன் பூஜிக்க -அத்தை நானே வளர்த்து விடுகிறேன் –
அதுக்குப் பலம் கொடுப்பதும் நானே –
மயா ஸ்ருஷ்ட புரா ப்ரஹ்மா -யுக கோடி ஸஹஸ்ரம் தபஸ்ஸூ செய்து பிரம்மா பதவி பெற்றார்
மஹா தேவ -ருத்ரன் தன்னையே ஆஹுதியாக கொடுத்து பலம் பெற்றார் -மஹா பாரதம் சொல்லும்

ராமோ விக்ரஹவான் தர்ம
கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் –

————————————————————————–

(மூன்றாம் பாசுரத்திலேயே திவ்ய தேச ப்ரஸ்தாபம்
ஆழ்வார்கள் இதில் ஈடுபடமால் இரார்கள் அன்றோ )

வேறே ஒருவர் அறிவார் இல்லை
நானே என்றது -நான் அவன் காட்டக் கண்டேன் ஆகையாலே -என்கிறார்
(காட்டவே கண்ட பாத கமலம் -இத்யாதி )

(அவன் பெருமைகளின் ஒரு சில திவலைகளை அறிந்தார் உண்டு
அவனே காட்டாக கண்டா எங்கள் போல்வார் தான்
அவனது ஸுலப்யாதி மஹா குணங்களைக் காண முடியும் )

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3

பதவுரை

(எம்பெருமான்)
பாலில்–திருப்பாற் கடலில்
கிடந்ததுவும்–சயனித்தருளு மழகையும்
அரங்கம்–திருவரங்கம் பெரிய கோயிலில்
மேயதுவும்–பொருந்தி வாழ்வதையும்
பண்டு–முன்பொரு கால்
ஆலில்–ஆலந்தளிரில்
துயின்றதுவும்–பள்ளி கொண்ட விதத்தையும்
ஆர் அறிவார்–யார் அறிய வல்லார்?
ஞாலத்து ஒரு பொருளை–இப் பூமியில் வந்தவதரித்த விலக்ஷண புருஷனாயும்
ஒரே காரணப் பொருள் காரியப் பொருள்கள் மற்றை எல்லாம்
வானவர் தம் மெய் பொருளை–நித்ய ஸூரிகளுக்குப் பிரத்யக்ஷமாக அநுபவிக்கத் தகுந்த வஸ்து வாயும்
அப்பில் அரு பொருளை– (ஸகலத்துக்கும் காரணமாக முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட) ஜல தத்வத்தினுள்
கண் வளரும் அரும் பொருளாயுமிருக்கின்ற எம்பெருமானை
பெரிய நீர் படைத்து -அத்தை கடைந்து-அடைத்து -உடைத்து – கிடந்து
யான் அறிந்த ஆறு–அடியேன் அறிந்த விதம் என்ன!

லீலா விபூதிக்கு அத்விதீயமான காரண வஸ்துவும்
நித்ய ஸூரிகளுக்கு யதார்த்தமாக ப்ரத்யக்ஷமாக அனுபவிக்கத் தகுந்த வஸ்துவும்
பிரளய ஆர்ணவத்தில் சயனித்து இருந்த நிருபமான வஸ்துவுமான ஸர்வேஸ்வரனையும்
அவன் முன்பு
திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டு இருந்ததையும்
ஸ்ரீ ரெங்கத்தில் பள்ளி கொண்டதையும்
ஆலந்தளரிலே கண் வளர்ந்ததையும்
நான் அறிந்த விதமாக
வேறே யார் அறிவார்கள் –

பாலில் கிடந்ததுவும்
அவதாரத்துக்கு உறுப்பாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்ததுவும் –

பண்டு அரங்கம் மேயதுவும் –
அபேஷிப்பார் இன்றிக்கே இருக்க
கோயிலிலே கண் வளர்ந்து அருளிற்றும் –

(அரங்கம் எய்ததுவும் -எய்தியதும் -பாட பேதங்கள் )

(ச ஏகாகி ந ரமேத அங்கு
ஷீராப்திகளை விட்டு ஆசையுடன் இங்கே பொருந்தி
என்னில் முன்னம் பாரித்து -விழுங்க -பண்டு இங்கே )

(அவாக்ய அநாதர
பரமபதத்தில் சம்சாரிகள் நம்மை அடையாமல் என் படுகின்றனவோ என்று
வெறுப்புடன் அன்றோ எழுந்து அருளி இருப்பது
ஆனந்த பரிபூர்ணன் வெறுப்புடன் இருந்தான் என்பது உசிதமோ என்று ஒருவன் கேட்க பட்டர்
வ்யஸனேஷூ மனுஷ்யானாம் ப்ருசம் பவதி துக்கித என்றது
குண பிரகரணமா தோஷாப் பிரகரணமா என்று கேட்க மாட்டிற்றிலரோ
இது குணமாகில் குணம் என்று பேர் பெற்றவற்றில் அங்கு இல்லாதது ஓன்று உண்டோ என்பர்
தன் இச்சை ஒழிய கர்ம நிபந்தனமாக வருமவை இல்லை என்னுமத்தனை போக்கி
அனுக்ரஹ காரியமாய் வருமவை இல்லை என்னில் முதலில் சேதனன் இன்றிக்கே ஒழியும் இறே
நித்ய விபூதியும் குணங்களும் உண்டாய் இருக்கச் செய்தே அன்றோ
ச ஏகாகீ ந ரமேத என்றது -நம்பிள்ளை -4-10-2- ஈட்டில் -)

ஆலில் துயின்றதவும் ஆர் அறிவார் ஞாலப் பொருளை –
கார்ய ஆகாரம் எல்லாம் அழிந்து –
ச தேவ -என்று நிற்கிறவனை –
(சத்தாகவே ஒன்றாகவே வேறே ஓன்று இல்லாமல்
சதேவ சோம்ய ஏக மேவ அத்வதீயம் அக்ர ஆஸீத்
ஸ்வேதகேது மகனுக்கு உத்தாலகர் )

(மூன்றும் அறிவார் அறியார்
பரத்வம் மட்டும் அல்ல
ஸுலப்யம் மிக்கவை
ஆலில் துயின்றதும் ஒரு நாளும் பிரியாமல்
மூன்றும் அவன் முயற்சி கிருஷி -சொத்தைப் பெற )

(பாலாழி நீ கிடக்கும் பண்பை நாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –என்கிறபடியே
நாங்கள் அறியும் அத்தனை ஒழிய சாத்தனாந்தரர் அறிவாரோ
கருவரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்கமேயான் திசை -எங்களை ஒழிய
ப்ரதி மாஸ்வ ப்ரபுத்தா நாம் -அஞ்ஞானிகளுக்கு சர்ச்சை என்று இருப்பார் அறிவாரோ
ஆலன்று வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு -என்று
அகடிகட நா சாமர்த்யத்தில் ஈடுபட்ட நாங்கள் அறிவோமே ஒழிய பிறர் அறிவாரோ )

வானவர் தம் மெய்ப் பொருளை –
நித்ய ஸூரிகளுக்கு பிராப்யனாய் உள்ளவனை

அப்பில் அரு பொருளை –
அப ஏவ ஸ ஸ்ருஜா தௌ–(மனு ஸ்ம்ருதி )என்று
ஜல சிருஷ்டியைப் பண்ணி
அதிலே கண் வளர்ந்து அருளுகிறவனை
(நரன்-பரமாத்மா இடத்தில் பிறந்த நாரம்-ஜலம் அவனுக்கு இருப்பிடம் நாராயணன் )

யான் அறிந்தவாறு –
அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது

(தேவதாந்த்ரம் பற்றியவர் இவனது பரத்வம் அறியார்
சாதனாந்தரம் பற்றுவார் அவனது நீர்மை அறியார்
பிராப்யாந்தரம் பற்றுவார் இவனது போக்யதை அறியார் )

அப்பிள்ளை உரை

உம்மை அல்லாதார் அறியார் என்று சொன்னீரே
நீர் அறிந்தபடி என்
அவன் பிரசாதத்தால் அவன் புக்க இடம் எங்கும் புக்கு நான் கண்டது போல் யார் தான் அறிவார்
என்னைப் போல் கண்டவர் நித்யர்கள் மட்டுமே
ஸதா பஸ்யந்தி ஸூரயா -நித்ய ஸூரிகளுக்கு பத்தும் பத்தாக பரம புருஷார்த்தம் -அனுபவ விஷயமாகி
கார்ய ரூபமான எல்லாம் அழிந்து லயம் அடைய
ஏக மேவ அத்விதீய காரண வஸ்துவாய்

குழந்தைகளை விட்டு பிரியாத தாய் போல்
காரண ஜலத்தை ஸ்ருஷ்டித்து
மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான்–எங்கும் உள்ளான்
ஸ்ருஷ்ட்டி உன்முகனாயக் கொண்டு அதிலே கண் வளர்ந்து அருளி
இணை இல்லாத காரண -அகில அத்புத காரண வஸ்து
ப்ரஹ்மாதிகள் ஸமாஸ்ரயணம் பண்ண ஷீராப்தியில் கண் வளர்ந்து அருளி

இவ்வருகு உள்ள சம்சாரிகளை தண்ணளி பண்ணி கோயிலிலே கண் வளர்ந்து
பிரளய சாகரத்தில் அழியாமல் தனது திரு வயிற்றிலே வைத்து ரக்ஷித்து
இவற்றை யான் அறிந்தவாறு யார் அறிவார்
ஸூ யத்ன பரராய் இருப்பார் யார் தான் அறிவார்

ஞாலத்து ஒரு பொருள்
பூமில் விலக்ஷணமான திரு அவதாரங்கள் திவ்ய தேசங்கள் என்றுமாம்
பாலாழி நீ கிடக்கும் பண்பை நான் கேட்டேயும் -காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் —
பக்தியால் இருப்பதால் அலமாந்து போய் –
கருவரங்கத்தில் உள் கிடந்தே திருவரங்கம் கை தொழுதேன்
ஆலை நீர் உள்ளதோ –சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு
என்னைப் போல் காண்பார் அறிவார் யார் –

————————————————————————–

தாம் அறிந்தபடியை உபபாதிக்கிறார் –

(ஏகோ ஹி ருத்ரோ ந த்விதீயா யாத் அஸ்து
யோ தேவாநாம் ப்ரபவஸ் சோத் பவஸச விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷி
ஹிரண்ய கர்ப்பம் ஜநயாமாஸ பூர்வம் ஸ நோ புத்த்ய சுபயா ஸம்யு நந்து –
தஸ்மாத் ஸர்வ கத சிவ
ஸர்வஸ்ய ப்ரபும் ஈஸாநாம்
மாயிநம் து மஹேஸ்வரம்
ஞாத்வா சிவம் சாந்தி மத்யந்த மேதி
சிவம் ஸர்வ பூதேஷு கூடம்
சிவ ஏவ கேவல
ஈஸஸ் ஸர்வ அதிபத்யம் குருதே
பாவ அபாவ கரம் சிவம்
தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம்
சிவ ஏகோ த்யேய
அஹம் ஏக பிரதமம் ஆஸம் வார்த்தாமி ச பவிஷ்யாமி ச அநந்ய கஸ்சிந் மத்தோ வ்யதிரிக்த –இத்யாதி
சுருதி வாக்யங்களால் –
ருத்ரன் ப்ரஹ்மாவைப் படைத்தான்
அவனே ஜகத் காரணன்
ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் இவனே என்றும்
சர்வ ஈசன் நியாந்தா மகேஸ்வரன் சர்வ அதிபதி என்றும் சிவனையே சொல்லிற்றே என்ன

இதில் ஸர்வ ஸப்த வாஸ்யன் இவனே
அதுக்கு பதில்

ஸர்வ ஸாஹா நியாயம்
சொல்லப்பட்ட சிவன் ருத்ர சப்தம் பத சேர்க்கையால்
ஈஸ்வரன் சிவன் சம்பு ஸ்தாணு — இவை அந்தராத்மாவான திருமாலையே குறிக்கும் என்கிறார்
எப்பொருளும் சொல்லானை -என்கிறார்
சிவன் மங்களம் )

ஆறு சடைக் கரந்தான் அண்டர் கோன் தன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே -வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப் பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4

பதவுரை

ஆறு–கங்கா நதியை
சடை–தனது ஜடா மண்டலத்திலே
கரந்தான்–மறையச் செய்து தாங்கிக் கொண்டிருக்கின்ற ருத்ரன்
அண்டர் கோன் தன்னோடும்–தேவாதி தேவனான ஸர்வேஸ்வரனோடு
கூறு உடையன் என்பதுவும்–ஸாம்யமுடையவன் என்று (பாமரர்) சொல்லுஞ் சொல்
கொள்கைத்தே-கொள்கையை உடைத்ததோ?–அங்கீகரிக்கத் தகுந்ததோ? (அல்ல)
வேறு ஒருவர் இல்லாமை நின்றானை–வேறொரு தெய்வமும் தனக்கு ஒப்பாக இல்லாமல் வீறு பெற்றிருப்பவனும்
எப்பொருட்கும் சொல்லானை–எந்தப் பொருளைச் சொல்லுகிற சப்தமும் தனக்கு வாசகமாம்படி (ஸர்வ சப்த வாஸ்யனாய்) உள்ளவனுமான
எல்லாப் பதார்த்தங்களுக்கும் தன்னைச் சொல்லும்படி
எம்மானை–எம்பெருமானை
தொகுத்து சொன்னேன்–சுருங்கப் பேசினேனித்தனை.

கங்கா நதியைத் தன் தலையில் மறையச் செய்த ருத்ரனும்
அண்டாதிபதியான ஸர்வேஸ்வரனோடும் பாகம் உடையவன் ஸமமான ஐஸ்வர்யம் உடையவன்
என்னும் சொல்லை நம்பலாமா
வேறே ஒருவர் தனக்கு ஒப்பு இல்லாமல் எழுந்து அருளி இருக்கிறவனுமாய்
ஸமஸ்த வஸ்துக்களுக்கும் வாசகங்களான ஸகல ஸப்தங்களுக்கும் அர்த்தமாக ப்ரதிபாதிக்கப் பட்டவனுமான
என் ஸ்வாமியை ஸங்க்ரஹமாகச் சொன்னேன் –

ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும் கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே
ஜடையிலே கங்கையை தரித்து
சாதகனான ருத்ரன்
சர்வ சேஷி யானவனோடு ஒக்க
சேஷித்வத்திலே கூறு உடையன் என்று
இதுவும் சேதனருக்கு புத்தி பண்ணப் படுமோ
(சடைமுடி சாதகர்
பொன்முடி கொண்டவன் அருளுபவர் சர்வ சேஷி
சர்வ வியாபி விபு முமுஷுக்களுக்கு உபாஸ்யன் இவன் ஒருவனே )

-வேறொருவர் இல்லாமை நின்றானை-
அஹம் சர்வஸ்ய ஜகத பிரபவ
பிரளயஸ்த தா -மத்த பரதரம் நாந்யத் கிஞ்சித ஸ்த்தி தனஞ்சய
என்னும்படி நின்றவனை

எம்மானை-
எனக்கு ஸ்வாமி யானவனை
(நிஹீனனான என்னையும் விடாமல் கைக்கொண்ட ஸ்வாமி )

எப் பொருட்கும் சொல்லானை
சர்வ சப்த வாஸ்யன் ஆனவனை
எல்லா பொருளுக்கும் சொல்ல வேண்டும்படி நின்றவனை -என்றுமாம்

சொன்னேன் தொகுத்து
தொகுத்துச் சொன்னேன் –

(பொது சொற்கள் -ஆத்மா -ஆகாசம் -ஜகத் காரணம் சொல்லும்
அக்ரம் நியதி அக்னி இதுவும் நாராயணனையே சொல்லும்
நீக்கமற வியாபிப்பதால் ஆகாசம்
சம்சாரக் கடலை உறிஞ்சுபவன் சூர்யன் என்றும் சொல்லலாம்
பர்யவசான விருத்தி என்றும்
அந்தராத்மாவா என்றும் கொள்ளலாம்
அதே போல் சிவ சப்தங்களும் இவனையே சொல்லும் -மங்களம் தருவதால்
இந்திர லோகம் ஆளும் அதுவும் வேண்டேன் -இதுவும் ஸ்ரீ வைகுண்டம்
இதே போல் நாராயணன் சொல்லுக்கு சிவன் அர்த்தம் கொள்ள முடியாதே
பாணினி ஸூத்ரம் தடுக்குமே
இது விசேஷண -அசாதாரண ஸப்தம் )

(சாஸ்வதம் சிவம் அச்யுதம்
ய பரஸ்ய மஹேஸ்வர
ஆதி தேவோ மஹா தேவோ
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பல சொல்லும் )

அப்பிள்ளை உரை

சர்வேஸ்வரனோடே ஓக்க வேறே சிலரை ஈஸ்வராக சொல்லலாமோ
ருத்ராதிகள் அனீஸ்வரர்
என்னை அடிமை கொண்ட அவனே ஸர்வேஸ்வரன்
பிராமண உபபத்திகளாலே
அறிந்தபடியே உப பாதிக்கிறார்

த்ரவீ பூதா த்ரவீ பூதா –ஹரி பக்தியால் உருக —ஹரி பக்தியால் உருக –
தர்ம தேவதை உருக ப்ரஹ்மாவின் கமண்டல தீர்த்தம் திருவடியை விளக்க
சிரஸால் தாங்கி -பாவநார்த்தம் ஜடா மத்யே
சிவத்வம் பெற -மங்களமாக ஆக -ஈஸ்வர சம்ஹிதை சொல்லும்

பதிம் விஸ்வஸ்ய -நிருபாதிக சேஷி
இவனுடன் ருத்ரன் கூறு கொண்டவன் -அறியாமை பேச்சு
பரீஷிகர்களால் கைக்கொள்ள முடியுமோ
திருவடி நீட்டியவன் ஒருவன் -நீராட்டுபவன் ஒருவன் -தலையில் தாங்கி மங்களம் பெறுபவன் ஒருவன்
ப்ரத்யக்ஷத்தாலே அறிவோமே
அரன் அதிகன் உலகு அளந்த ஹரி அதிகன் என்று பேசும் அறிவிலிகள் -கம்பர்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
ஆதித்ய சந்நிதியில் நக்ஷத்திரங்கள்-மின்மினி போல் -இவர்கள் இல்லாதார் கணக்காம் படி

வாசகமான சப்தங்கள் சரீரீயாய் -பிரகாரியான – தன் பக்கலில் பர்யவசிக்கும் படி
சரீரீ பிரகாரி
ஷரன் அஷரன் -அனைவரை விட உயர்ந்த
புருஷோத்தமன்
ந பரம் புண்டரீகாக்ஷன்
ந தைவம் கேஸவாத் பரம் -கேசவனே பரம புருஷன்
வேதமே ஸாஸ்த்ரம் போல்

தன்னுடைய ஸ்வபாவம் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் -ஸ்வாமி –
பிரதிபத்தி விஷயமாம் படி பிராமண உபபத்திகளாலே
நிஷ்கரிஷித்து சுருங்கச் சொன்னேன்
எல்லார் தலையிலும் திருவடிகள்
ஸமாப்யதிக தரித்ரன் -அவன் இடம் உள்ள வறுமை இது அன்றோ –
என்று ஷேபிக்கிறார்

————————————————————————–

அப்பிள்ளை உரை
அவதாரிகை
நாம் ஸர்வ ஸப்த வாச்யனாம் போது அனைத்தும் எனக்கு பிரகாரமாக வேணுமே
அது கூடுவது உண்டோ என்ன
நீயே எல்லா வற்றுக்கும் உபாதான காரணமாக இருப்பதால்
ஸமஸ்த வஸ்துக்களும் உனக்கு பிரகாரம் தானே –
அனைத்தையும் விழுங்கி உமிழ்ந்து ரஷித்தாயே -என்கிறார் –

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5

பதவுரை

தொகுத்த வரத்தன் ஆய்–(தவஞ்செய்து) ஸம்பாதிக்கப் பட்ட வரங்களை யுடையனாய்
தோலாதான்–ஒருவரிடத்திலும் தோல்வி யடையாதவனாயிருந்த இரணியனுடைய
மார்வம்–மார்பை
வகிர்த்த–இரு பிளவாகப் பிளந்தொழித்த
வளை உகிர்–வளைந்த நகங்களைக் கொண்ட
தோள்–திருக் கைகளை யுடைய
மாலே-ஸர்வேஸ்வரனே!,
நீ–நீ,
உகத்தில்–பிரளய காலத்தில்
உள் வாங்கி–(உலகங்களை யெல்லாம்) உபஸம்ஹரித்து உள்ளே யிட்டு வைத்து
ஒரு நான்று–(மீண்டும் ஸ்ருஷ்டி காலமாகிற) ஒரு சமயத்தில்
உயர்த்தி–(அவ் வுலகங்களை யெல்லாம்) வெளியிட்டு வளரச் செய்து
நீயே–இப்படிப்பட்ட நீயே
நான்கும்–(தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான நால் வகைப் பொருள்களிலும்
அரு ஆனாய்–அந்தராத்மாவானாய்
அறி–இதனை அறிவாயாக.

தபஸ்ஸூ பண்ணி ஸம்பாதித்த வரத்தை யுடையனாய்
தோலாமல் இருக்கிற ஹிரண்ய கசிபு வினுடைய மார்பைப் பிளந்தும்
வளைந்தும் இருக்கிற நகங்களையும் புஜங்களையும் யுடையனாய்
ப்ரஹ்லாதனிடத்தில் வியாமோஹத்தைப் பண்ணினவனே
ஸ்ருஷ்டி காலத்தில் ஒரு நாள் ஸம்ஹரித்த நீயே ஸ்ருஷ்டித்து
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான நாலுக்கும் அந்தர்யாமியானவனே
இதை நீயே அறிந்து அருள வேணும் –

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம் வகிர்த்த
திரட்டின வரத்தை உடையவன் ஆகையாலே
வரம் கொடுத்தவர்களுக்கும் தோலாத
ஹிரண்யன் உடைய மார்பை பிளந்து –

வளை உகிர் தோள்
வளைந்த உகிரையும்
தோளையும் உடையையாய்

மாலே –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே வ்யாமுக்தன் ஆனவனே

(சீற்றத்தோடு அருள் பெற்றவன் அன்றோ
பெண் ஸிம்ஹம் யானை உடன் சீற்றம் பிள்ளைக்கு பாலை ஊட்டுமே
இங்கே புருஷோத்தமன் -ஹிரண்யன் இடம் சீற்றம் ப்ரஹ்லாதன் இடம் வ்யாமோஹம் –
வரம் கொடுத்து துன்பம் பட்டவன் அவன்
போக்கி அருளினவன் இவன் )

-யுள் வாங்கி நீயே உகத்தில் ஒரு நான்று நீ உயர்த்தி-
ஜகத் அடைய சம்ஹரித்த நீயே
சிருஷ்டி காலத்தில் ஆதபகதம் -என்னும்படி நிற்கிற
ஆதபதகதம் வெய்யிலானது எங்கும் ஒக்க வ்யாபிக்குமா போலே–
அந்தராத்மாவாக  எங்கும் வ்யாபித்தான் -என்றபடி –
(இவன் கிரணங்கள் போல் மற்ற தேவதைகள் )

(உகக்கை -ஸ்ருஷ்டியாய் -ஸ்ருஷ்டி காலத்திலேயே உயர்த்தி )

உயர்த்தி –என்று
அவதரித்து என்னவுமாம்
(ஸுலப்யம் உயர்ந்து காட்டுவது அவதாரங்களில் தானே

பரத்வத்துடன் சேர்ந்த எளிமையே உத்தேச்யம்
மாம் அஹம் இரண்டுமே வேண்டுமே
தீரர் தான் உள்ளபடி இவனை அறிகிறார்கள் )

நான்கிலும் அருவாய் நின்றாய் –
அரு நான்கும் ஆனாய்
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராதிகளிலே
அந்தராத்மதயா பிரகாசித்து நின்ற

(அரூபியான ஜீவனாயும் ஆனாய் ஷேத்ரஜ்ஜன் சா அபி
அந்தராத்மா தயா பிரவேசித்து -பிரகாசியா நிற்கிறார்
பொருளுக்குள் ஆத்மா -அதில் அந்தராத்மா -பொருளுக்குள்ளும் அவன் உண்டே )

நீயே அறி –
இவ் வர்த்தம் வேறு ஒருவர் அறிவார் இல்லை –
தேவரே அறிந்து அருள வேணும் என்கை-

அப்பிள்ளை உரை

நெடும் காலம் தபஸ்ஸூ இருந்து
அதுக்குப் பலமாக
ப்ரஹ்மாதிகள் பக்கல் பெற்ற வர பலங்களை கொண்ட
ஹிரண்யன்
சிறுக்கன் பக்கல் அபசாரம்
மதகு திறந்து பாயும் வியாமோஹம்

இவை அதி பிரவ்ருத்தமான அன்று சகல ஜகத்தையும் உம் பக்கலிலே உப சம்ஹரித்து
மீளவும் ஸ்ருஷ்ட்டி காலத்தில்
பஹுஸ்யாம் ப்ரயாஜாயேய
உபாதான காரணமும் நிமித்த காரணமுமாய்
கொண்டு கார்ய ரூபமான ஜகத்தாய் பரிணமித்து

அநந்தரம்
தேவாதி பதார்த்தங்கள் நீ என்னும் சொல்லுக்குள்ளே பிரகாரமாய்
நீ பிரகாரியாய்
அவை தான் என்று சொல்லும்படி
இவ்வர்த்தம் ஸ்வத சர்வஞ்ஞன் நீயே அறிய வேணும்
இப்படி சர்வமும் பிரகாரமாய் ஆன பின்பு சர்வ ஸப்த வாஸ்யமும் நீயே தான் அன்றோ

யுகத்தில் –உயர்த்தி
யுகம் தோறும் -ருசிக்கு அனுகுணமாக விக்ரஹங்களைப் பரிகரித்துக் கொண்டு
வந்து அவதரியா நின்றீர் என்னவுமாம்

உன் பரத்வத்தைப் பொறாதவர்கள் உன் கையிலே ஹிரண்யன் பட்டது படுவார் என்று காட்டவே
இந்த சரித்திரம் இங்கு அருளிச் செய்கிறார் –

—————————————————————-

வேறு ஒருத்தர் அறிவார் இல்லையோ என்ன –
பாஹ்ய குத்ருஷ்டிகளால்-அறியப் போமோ -என்கிறார்

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப் பட்டார் செப்பில் -வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று –6-

பதவுரை

சமணர்–ஜைநர்கள்
அறியார்–உண்மையை அறிய மாட்டார்கள்
பவுத்தர்–பௌத்தர்கள்
அயர்த்தார்–பிரமித்தார்கள்
சிவப்பட்டார்–சைவ மதஸ்தர்கள்
சிறியார்–மிகவும் நீசராகி யொழிந்தனர்
செப்பில்–இவர்களுடைய தன்மைகளைச் சொல்லப் புகுந்தால்,
வெறி ஆய–பரிமளமே வடி வெடுத்தது போன்றுள்ளவனும்
மாயவனை–ஆச்சரியமான குண சேஷ்டிதங்ளை யுடையவனும்
மால் அவனை–(அடியார் திறத்தில்) வியாமோஹ முள்ளவனும்
மாதவனை–திருமகள் கொழுநனுமான எம்பெருமானை
ஏத்தாதார்–(இவர்கள்) துதிக்க மாட்டாதவர்களா யிரா நின்றார்கள்,
ஆதலால்–ஆகையினாலே
இன்று–இப்போது
ஈனவரே–(இவர்கள்) நீசர்களே யாவர்.

ஜைனர் உண்மையை அறியவில்லை
பவ்த்தர் யதார்த்தம் அறியாமல் பிரமித்தார்கள்
சைவர் அறியத்தக்க வஸ்துவை அறியாமல் அல்பர் ஆனார்கள்
இவர்களை சொல்லில்
ஸர்வ கந்தனாய்
ஆச்சர்ய சேஷ்டிதனாய்
ஆஸ்ர்ய வ்யாமுக்தனாய் இருக்கிற
ஸ்ரீ யபதியை இவர்கள் ஸ்தோத்ரம் செய்யார்கள்
ஆகையால்
இவர்கள் இப்போது ஹீநர்களே

அறியார் சமணர் –
ஸ்யாத் அஸ்த்தி ஸ்யான் நாஸ்தி (ஸ்ரீ பாஷ்யம் பூர்வ பக்ஷ உபன்யாசம் )-என்று-
அநேகாந்தமாகக் கொள்கையாலே
ஆர்ஹதர் தத்வம் உள்ளபடி அறியார் –

(அநேக அந்தமாக -எப்படி -ஏகாந்தம் எதிர்மறை -ஒருபடிப்பட என்று கொள்ளாமல்
ஸப்த பந்தி வாதம்
1-ஸ்யாத் அஸ்தி
2-ஸ்யாந் நாஸ்தி
3-ஸ்யாத் அஸ்தி ச நாஸ்தி ச
4-ஸ்யாத் அஸ்தீதி வக்தவ்யம்
5-ஸ்யாந் நாஸ்தீதி வக்தவ்யம்
6-ஸ்யாத் அஸ்தி ச நாஸ்தி ச இதி வக்தவ்யம்
7-ஸர்வதா வக்தவ்யம் ச
1-இருக்கலாம் -2-இல்லாமல் இருக்கலாம் -3-இருப்பதாகவும் இல்லாததாகவும் இருக்கலாம் –
4-இருப்பதாக சொல்லலாம் -5-இல்லாததாக சொல்லலாம் -6-இருப்பதாகவும் இல்லாததாகவும் சொல்லலாம்
7-எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்
என் தாய் மலடி போல் சொல்லுவார்கள் )

(அங்கீ க்ருத்ய து சப்த பங்கி குஸ்ருதம் ஸ்யாத் அஸ்தி நாஸ்தி ஆத்மிகாம்
விஸ்வம் த்வத் விபவம் ஜகத் ஜிநமதே நைகாந்தம் ஆசஷதே
பின்னா பின்னம் இதம் ததா ஜகதுஷே வந்த்யா மம அம்பா இதிவத்
நூத்ந ப்ரஹ்ம விதே ரஹ பரம் இதம் ரெங்கேந்திர தே சஷதாம் –-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–உத்தர சதகம்–12-

ஹே ரெங்கேந்திர
ஸ்யாத் அஸ்தி நாஸ்தி ஆத்மிகாம்-ஸ்யாத் அஸ்தி ஸ்யாந் நாஸ்தி -இத்யாதி ரூபமான
சப்த பங்கி குஸ்ருதம் அங்கீ க்ருத்ய -சப்த பங்கி என்னும் துர்மார்க்கத்தை அங்கீ கரித்து
ஸ்யாத் அஸ்தி -ஸ்யாந் நாஸ்தி-ஸ்யாத் அஸ்தி ச நாஸ்தி ச -ஸ்யாத் வக்தவ்யம் -ஸ்யாத் அஸ்தி ச வக்தவ்யம் –
ஸ்யாந் நாஸ்தி ச வக்தவ்யம் -ஸ்யாத் அஸ்தி ஸ்யாந் நாஸ்தி ச வக்தவ்யம் –
த்வத் விபவம் -தேவருடைய விபூதியான
விஸ்வம் ஜகத்–சர்வ ஜகத்தையும்
ஜிநமதே–ஜைன மதத்திலே
நைகாந்தம் ஆசஷதே–அநேக அந்தமாக சொல்லுகின்றனர் –
தே ததா -அந்த ஜைனர்கள் அப்படியே
வந்த்யா மம அம்பா இதிவத்–என் தாய் மலடி என்பது போலே வ்யாஹதமாக
இதம் பின்னா பின்னம் ஜகதுஷே இவ் வுலகத்தை ப்ரஹ்மத்தோடே பின்னமாகவும் அ பின்னமாகவும் சொன்ன
நூத்ந ப்ரஹ்ம விதே –நூதன ப்ரஹ்ம வித்தான ம்ருஷா வாதி ஏக தேசியின் பொருட்டு
அபூர்வ ப்ரஹ்ம ஞானி என்று பரிஹஸித்த படி
ரஹஸ்யா பரம் இதம் சஷதாம்-இந்த சிறந்த பரம ரஹஸ்யார்த்தத்தை உபதேசிக்கட்டும்
நம்மிடம் சொல்வதும் நாம் மறு மாற்றம் சொல்வதும் ஊமையரோடு செவிடன் வார்த்தை யாகுமே
அவர்களே பரஸ்பரம் பேசிக் கொள்ளட்டும் என்றபடி –

ஜைன வாத நிரசனம்
சப்த பங்கி வாதம் -தங்களைப் போலே -என்னுடைய மாதா வந்த்யை என்னுமா போலே
இந்த ஜகத்து ப்ரஹ்மத்தோடு பின்னமாயும் அபின்னமாயும் இருக்கும் என்று சொல்லுகிற
நூதன ப்ரஹ்ம வித்துப் பொருட்டு இந்த வசதஸ்யமான விருத்த பாஷணத்தை சொல்லக் கடவர்கள் என்கிறார் –)

அயர்த்தார் பவுத்தர்
பிரதி சந்தானம் பண்ணுகைக்கு ஓர் அனுபவிதாவைக் கொள்ளாமையாலும்-
ஜ்ஞானத்தை ஷணிகமாகக் கொள்ளுகையாலும்
பௌத்தரும் தத்வ ஞானத்தில் அறிவு கெட்டு இருப்பர்கள்

(பிரதி சந்தானம் -ப்ரத்யபிஜ்ஜை
க்ஷணிகம் ஆகையால் ப்ரத்யபிஜ்ஜை பண்ணப் போகாது என்றபடி -பிழை
அறிய அறிவாளி வேணுமே
ஞானத்தையும் ஞாதாவையும் கொள்ளாமல் அறிவையும் க்ஷணிகம் என்பர் )

சிவப் பட்டார் சிறியார்-
பிரமாணத்தை ஒருபடிக் கொண்டு-
ப்ரமேயத்தை உள்ளபடி கொள்ளாமையாலே
ருத்ர சம்பந்திகள் ஆனவர்களும் எளியார் –
(மோஹ சாஸ்திரம் ஆகமம் கொண்டு மயங்கி இருப்பவர்கள்
நிமித்த மாத்திரம் என்றும்
அதுவும் சிவனே என்பர் இவர்கள் )

செப்பில் –
இவர்களைப் பேசில் –

வெறியாய மாயவனை மாலவனை மாதவனை
நிரதிசய போக்யனான
ஆச்சர்ய பூதனாய்
வ்யாமுக்தனாய்
ஸ்ரீ ய பதியான சர்வேஸ்வரனை –

ஏத்தாதார் ஈனவரே யாதலால் இன்று –
அவர்கள் ஏத்தாமையாலே தண்ணியரே
ஹீநர் என்றும் அஹீநர் என்றும்
நான் பிரதிபாதிக்க வேணுமோ என்கிறார்-

அப்பிள்ளை உரை

நீயே அறி என்கைக்கு
நம்மை ஒழிய வேறே அறிவார் இல்லையோ என்னில்
நிர்தோஷ பிராமண மான வேதத்தை இல்லை செய்தும்
வேத வேத்யரான உன்னையும் இல்லை செய்வாராம் அறியப் போமோ
ஸப்த பங்கி வாதம் அங்கீ கரித்துக் கொண்டு
த்ரவ்ய பர்யாய ரூபமான பதார்த்தம் சத்தாயும் அசத்தாயும் நித்யம் அநித்தியம் ஏகம் அநேகம் –
ஸமஸ்த ஜகத்தும் அநேக அந்தமாக இருக்கும்
தோற்றிற்று சொல்வார் ஆர்ஹதர் அறிவாரோ

ஞாத்ரு -ஜேயங்கள் அறிவாளி அறியப்படுபவை – க்ஷணிகம் என்றும்
ஸ்திரமான ஆத்மா இல்லை
மாறும் ஞானமே ஆத்மா
சத்தம் போட்டு சொல்லும் புத்த மதஸ்தர் அறிவாரோ
நேற்று கண்டத்தை இன்று நான் காணா நிற்கிறான் என்பார்
அபாதித–தடுக்கப்படாத –ப்ரதிபிஜ்ஜா ப்ரத்யக்ஷ பிரமாணம் ஸ்திரமாகத் தோற்றினாலும்
ஞானமும் க்ஷணிகம் தத் விஷயமாக ஜகத்தும் பொய் என்பர்
அன்று உணர்ந்த இன்றும் உணர்ந்தாலும் இல்லை
ஜகத் சர்வ சூன்யம்

வேதம் பிரமாணம் அங்கீ கரித்தும்
நிரீஸ்வரன் படைக்கப்பட்ட ருத்ரனை பர தத்வம் என்பார்

இப்படி பிரித்து சொல்லாமல்
சேர்த்து திரளச் சொல்ல
பரிமளமே வடிவாக கொண்ட அத்யந்த போக்யனாய்
குண சேஷ்டிதங்களால் ஆச்சர்ய பூதனாய்
அடியார்கள் இடம் வ்யாமுக்தனாய்
இவற்றுக்கு அடியான ஸ்ரீ யபதியை
ஸ்துதிக்க
பாக்யம் இல்லாமல்
ஹேயர்-இன்று
காலாந்தரத்தில் இவர்களும் உஜ்ஜீவிக்கலாம் –

———————————————————

நம்மால் வந்த ஏற்றம் இல்லை
அவனால் வந்த ஏற்றம் உண்டு என்கிறார் இதில்

இப்பாசுரம் ஒட்டியே அமுதனார்
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-48 —

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஹீனர் என்று இவர்களை நிகர்ஷித்து வார்த்தை சொல்லா நின்றீர்
உமக்குத் தான் ஏற்றம் என் என்ன

ஒருவரை ஒழிய ஒருவருக்குச் செல்லாமை இருவருக்கும் உள்ள சம்பந்தம்
பிதா ச –நவ வித சம்பந்தம் ஒழிக்க ஒழியாத சம்பந்தம்
சர்வ காலமும் உமது கிருபைக்கு பரிபூர்ண கிருபைக்குப் பாத்திரமான பின்பு
என் ஏற்றம் உமக்குத் தெரியாதோ
என்ன குறை என்கிறார் –

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-

பதவுரை

நாரணனே–நாராயணனே!,
இன்று ஆக–இன்றைக்காகவுமாம்
நாளையே ஆக–நாளைக்காகவுமாம்
இனி சிறிது நின்று ஆக–இன்னம் சிறிது காலம் கழிந்தாகவுமாம் (என்றைக்கானாலும்)
நின் அருள்–உன்னுடைய கிருபை
என் பாலதே–என்னையே விஷயமாக வுடையதாகும்
நன்று ஆக–நிச்சயமாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்–நான் உன்னை யொழியப் புகலில்லாதவன் காண்
நீ–நீயும்
என்னை அன்றி இலை–என்னை யொழிய வேறொரு ரஷ்யனை உடையை யல்லை காண்.

இன்றாகவுமாம் நாளை ஆகவுமாம் இன்னம் சிறிது காலம் கழித்ததாகவுமாம்
உன் கிருபை என்னிடத்தில் பூர்ணமாக இரா நின்றது
ஸ்ரீ மன் நாராயணா அழகியதாக நான் உன்னை விட்டு வேறே ஒருவரை ரக்ஷகரை யுடையேன் அல்லேன்
நீ என்னைத் தவிர்த்துப் பரி பூர்ணன் ஆக மாட்டாய்
இத்தைப் பார்த்து அருள வேணும் –

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்- 
இன்றாகவுமாம்-நாளை ஆகவுமாம்-சிறிது காலம் கழித்தது ஆகவுமாம்-
கால விளம்பமே
உன்னுடைய பிரசாதம் என் பக்கலிலே

-நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் –
கால விளம்பம் என்று என் பக்கலில் என்றும்-சொல்லிற்று எத்தாலே என்னில்
அகிஞ்சநனாக சம் ப்ரதிபன்னனான-எனக்கு
உன்னை ஒழிய வேறு ஒரு அபாஸ்ரயம் இல்லை –

நாரணனே நீ என்னை அன்றி இலை –
பூர்ணனான உனக்கு
அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை –
(ஏழை ஏதலன் கீழ் மகன் இருப்பாரே அன்றோ நீர் தேடுவது
இத்தனை நாளும் நான் உன்னை விட்டு சம்பந்தம் அறியாமல் உழன்றேன்
அப்பொழுதும் நீர் என்னையே கைக்கொள்ள அவகாசம் பார்த்து இருந்தீரே )

உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-
என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும்
விடப் போகாது –
(நான் விட முடியாது என்பதிலும் இரண்டாலும் நீர் விட முடியாதே என்பதே நிச்சயம் )

அப்பிள்ளை உரை

இன்றாகவுமாம் நாளை ஆகவுமாம் நீரே உபாயம்-
நாரணனே பிரதானமான திரு நாமம்
நாரங்களுக்கு நீர் ஒருவனே அயனம்
நீரே ப்ராப்யம் ப்ராபகம்
நார சப்தம் ஜீவானாம் சமூகம் -கதிர் ஆலம்பனம் -உபாயம் உபேயம் -இதனாலே நாரணன் திரு நாமம்

நார சப்தேந ஜீவா நாம் ஸமூஹ ப்ரோஸ்யதே புதை கதிர் ஆலம்பனம் தஸ்ய தேந நாராயண ஸ்ம்ருத

வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித
நான் சந்தோஷிக்கும் முன் நீ சந்தோஷித்து துக்கம் படுவதன் முன் நீயே துக்கம் பட்டு
எப்போது ஆகிலும் வகுத்த சேஷி
உன்னுடைய கிருபை சேஷ பூதன் என்னிடம் தானே பாயும் -ஊற்று மாறாமல்
ஒருபடிப்பட்டு புரையற்று உண்டாயாயாய் இருந்ததே
என்னிடமே நின் அருள்
அழகியதாக சேஷ பூதன் பரிபூர்ணனான சேஷி உன்னை ஒழிய சத்தை இன்றி இருப்பேனே
நீயும் என்னை விட்டு உளன் அல்லவே
இப்படி இருக்க விட்டு இருக்க இயலுமோ
உன்னை ஒழிந்த ஸமஸ்த வஸ்துக்களும் பிரகாரி -பிரகார சம்பந்தம் உண்டே
விட்டுப் பிரியாமல் சார்ந்தே இருப்பதே இது
தத் புருஷ சமாசம் நாரங்களுக்கு அயனம் நான் உன்னை அன்றி இலன்
பஹு வரீஹி சமாசம் நீ என்னை இன்றி இலையே

என்னதாவி மேலதாய்–உன்னது என்னதாவியும் -என்னது உன்னதாவியும் -நம்மாழ்வார்
மம பிராணா பாண்டவ
நண்ணித் தொழுவார் சிந்தை பிரியாத நாராயணன் அன்றோ

ஆத்மாவின் ஸ்வரூபம் பகவான் இட்ட வழக்கு அறிவோம்
அவன் ஸ்வரூபம் நாம் இட்ட வழக்கு பொருந்துமோ -ஆளவந்தார் கோஷ்ட்டியில் விசாரம்
அவன் ஸ்வ தந்த்ரன் -ஸத்ய வாக்யன் -அவன் சேதனனுக்கு ஆதீனமாக இருக்கட்டும் சங்கல்பித்தால் மாறாதே
நம்மது -கர்ம வச்யமாகையாலே எத்தனை குளிக்கு நிற்க்கும் -இது தான் நியாயம் –
அத்தனை உறுதியாக இருக்க வேண்டும்

ஞானிகளுக்கு பெருமான் ஆத்மா உபநிஷத்
கிருஷ்ண சித்தாந்தம் அவனுக்கே நாம் ஆத்மா
இன்றாகவோ நாளையாகவோ என்றாகவோ பரம பதம் கொடுத்து நித்ய கைங்கர்யம் கொண்டு மகிழ்வாய்
கட்டிலே வைத்தால் என்ன காட்டிலே வைத்தால் என்ன
அந்தராத்மாவாக உள்ளேயே பதி கிடந்தது உள்ளாய் -நினைவு மட்டுமே அல்ல
திருமேனி உடன் உள்ளே இருந்து
தய நீயவான் -விதி கருணை -சத்ய சங்கல்பம் இந்த உறவை ஏற்படுத்திய பின்பு
அத்தை பாலனம் பண்ணிக்க கொள்ள வேண்டுமே -ஆளவந்தார் –

ததஹம் த்வத்ருதே ந நாதவான் மத்ருதே தவம் தயனீயவான் ந ச
விதி நிர்மித மேததந்வயம் பகவன் பாலய மா ஸ்ம ஜீஹப –
ஆகையால் நான் உன்னை ஒழிய நாதன் உடையேன் அல்லேன்
நீயும் என்னை ஒழிய வேறே தயா பாத்திரம் உடையான் அல்லன்
இந்த சம்பந்தம் கேவல கிருபையால் நான் அறிந்தேன்
ஸர்வஞ்ஞனே இத்தை நான் மறவாமல் இருக்க அருள்வாய்

—————————————————-

புகையில் உண்பன் என்று கொண்டு சொல்லி-
உன்னை ஒழிய வேறு ஓன்று அறியேன் என்கிறது
என் என்னில்–

வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே
என்கிறார் –

(புகையில் -வீட்டில் புகை இருந்தால் -தான் உண்பன்
மற்றவர் ரக்ஷகர் அல்லர் மட்டும் அல்ல -ரஷிப்பதையும் தடுப்பார்கள் அன்றோ )

அப்பிள்ளை உரை அவதாரிகை –

அவனை ஒழிய வேறே ஒரு ஆஸ்ரயர் இல்லை என்பது என்
வேறே ஒருவரைப் பற்றலாகாதோ
திரு உள்ளத்துக்கு கருத்தாக
தசரதாத்மஜன் ஒழிய வேறே துணை அல்லவே
தசரதன் பெற்ற மரகத தடாகம்
ராமோ விக்ரஹவான் தர்ம
உண்டாகில் கழுத்துக்கு கட்டியாவார் ஒழிய துணை ஆக மாட்டார்கள்
ஈஸ்வர சேஷத்வத்தை விட அந்நிய சேஷத்வம் ஒழிவதே பிரதானம் –
மற்றவர் துணை ஆக மாட்டார்களே –

இலை துணை மற்று என்நெஞ்சே ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா -கொலை கொண்ட
ஈரந் தலையான் இலங்கையை ஈடழித்த
கூரம்பன் அல்லால் குறை–8-

பதவுரை

என் நெஞ்சே-எனது மனமே!
ஈசனை வென்ற–ருத்ரனை ஜயித்த
சிலை கொண்ட–வில்லை (பரசுராமனிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
செம் கண் மால்–புண்டரீ காக்ஷனாகிய தன்னை
சேரா–பணிந்து உய்வு பெற மாட்டா தொழிந்த
குலை கொண்ட ஈரைந் தலையான்–கொத்துப் போலே நெருங்கிக் கிடந்த பத்துத் தலைகளை யுடையவனான இராவணனுடைய
இலங்கையை–லங்கா புரியை-லங்காம் ராவண பாலிதாம் -திருவடி மதித்த ஐஸ்வரின் அன்றோ
ஈடு அழித்த–சீர் கெடுத்த
கூர் அம்பன் அல்லால்–கூர்மை தாங்கிய அம்புகளை யுடையவனான இராம பிரானைத் தவிர்த்து
குறை–விரும்பத் தகுந்த
மற்ற துணை–வேறொரு துணைவன்
இலை–நமக்கு இல்லை.

என் ஹிருதயமே
ருத்ரனை ஜெயித்த தனுசைப் பிடித்த சிவந்த திருக்கண்களை யுடைய ஸர்வேஸ்வரனோடு பொருந்தாமல்
மரணம் அடைந்த தசக்ரீவனுடைய இலங்கையை அழியச் செய்த கூர்மையான வில்லையுடைய
சக்கரவர்த்தி திரு மகனை விட குறையைத் தீர்க்கும் படியான சகாயம் வேறே ஓன்று இல்லை

ஆனாலும் புகையில் உண்பன்-
நீ இத்தனை பொகட்டால் உண்பன்
இல்லாவிட்டால் பட்டினி -என்னுமா போலே-
இலை துணை
மற்று
சர்வேஸ்வரன் துணை என்கை அன்று சாத்யம் –
மற்று உள்ளார் துணை அன்று என்கை –

என்நெஞ்சே –
இவ்வர்த்தம் சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –

ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேரா -கொலை கொண்ட ஈரந் தலையான்-
இலங்கையை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை –

வேறு ஒருத்தர் துணை அல்ல என்றது-
வேறு ஒருவர் பூர்ணர் இல்லாமையால் என்கிறது –

(ஈசனை வெல்லுகை –ஸ்ரீ ராமாயணத்தில் இதன் விவரணம் உண்டே
பாலகாண்டத்தில் பரசுராமன் சொல்வதாக உள்ளது
தேவர்கள கூடி பரத்வம் நிர்ணயம் பண்ண விஸ்வ கர்மாவால் இரண்டு வில்களை உண்டாக்கி
இருவர் கையிலும் கொடுக்க
விஷ்ணு வில்லை எடுத்து எய்ய உத்யோகித்த உடனே -ஹூங்காரம் பண்ணிய உடனே
ருத்ரன் வில்லும் கையுமாக நடுங்கி விழுகையாலே என்றது என்கிறது
அந்த சிவ தனுஸ் ஜனக குலத்துக்கு வர
வில்லிறுத்து மேல் இயலாள் தோள் தோய்ந்தான் )

(இமே த்வே தநுஷீ ஷ்ரேஷ்டே திவ்யே லோகாபிவிஷ்ருதே.
தரிடே பலவதீ முக்யே ஸுகரிதே விஷ்வகர்மணா৷৷1.75.11৷৷

இமே these, த்வே two, தநுஷீ bows, ஷ்ரேஷ்டே excellent, திவ்யே celestial, லோகாபிவிஷ்ருதே well-known in the worlds,
தரிடே stout, பலவதீ powerful, முக்யே best of all, விஷ்வகர்மணா by Visvakarma, ஸுகரிதே are well made.

“These two excellent celestial bows are well-known throughout the worlds. They are stout and strong.
They are the best of all, well-made by Visvakarma.

அதிஸரிஷ்டஂ ஸுரைரேகஂ த்ர்யம்பகாய யுயுத்ஸவே.
த்ரிபுரக்நஂ நரஷ்ரேஷ்ட! பக்நஂ காகுத்ஸ்த! யத்த்வயா৷৷1.75.12৷৷

நரஷ்ரேஷ்ட! O! Best among men, காகுத்ஸ்த Rama, யத் which, த்த்வயா by you, பக்நஂ was broken, யுயுத்ஸவே wishing to fight,
த்ர்யம்பகாய for three-eyed Siva, ஸுரை: by devatas, அதிஸரிஷ்டஂ was given,
த்ரிபுரக்நம் destroyer of Tripuras, ஏகம் one (of the two).

O Best among men! O Descendant of Kakustha! one of these broken by you, was given by the gods
to the three-eyed Siva, who, wishing to fight the demon Tripura with this bow, destroyed him.
——————
இதஂ த்விதீயஂ துர்தர்ஷஂ விஷ்ணோர்தத்தஂ ஸுரோத்தமை:.

ததிதஂ வைஷ்ணவஂ ராம! தநு: பரமபாஸ்வரம்.
ஸமாநஸாரஂ காகுத்ஸ்த! ரௌத்ரேண தநுஷா த்விதம்৷৷1.75.13৷৷

துர்தர்ஷம் unassailable, இதம் this, த்விதீயம் second bow, ஸுரோத்தமை: chiefs of celestials, விஷ்ணோ: for Visnu,
தத்தம் given, காகுத்ஸ்த born in the race of Kakutsthsa, ராம! Rama, பரமபாஸ்வரம் highly radiant, தத் that,
இதம் this, வைஷ்ணவம் pertaining to Visnu, தநு: bow, ரௌத்ரேண தநுஷா with the bow of Rudra, ஸமாநஸாரம் equal to its energy.

This second bow which is unassailable was given by chief of the celestials to Visnu.
O Rama! born in the race of Kakutstha! this highly radiant bow of Visnu is as strong as the bow of Siva.
——————-
ததா து தேவதாஸ்ஸர்வா: பரிச்சந்தி ஸ்ம பிதாமஹம்.
ஷிதிகண்டஸ்ய விஷ்ணோஷ்ச பலாபலநிரீக்ஷயா৷৷1.75.14৷৷

ததா then, ஸர்வா: all, தேவதா: devatas, ஷிதிகண்டஸ்ய blue-throated, Siva’s, விஷ்ணோ: Visnu’s,
பலாபலநிரீக்ஷயா to ascertain the strengths and weaknesses, பிதாமஹம் grand-sire, Brahma, பரிச்சந்தி ஸ்ம enquired.

Then all the gods in order to ascertain the strength and weakness of Siva and Visnu enquired of the Grandsire, Brahma:

அபிப்ராயஂ து விஜ்ஞாய தேவதாநாஂ பிதாமஹ:.
விரோதஂ ஜநயாமாஸ தயோ ஸ்ஸத்யவதாஂ வர:৷৷1.75.15৷৷

ஸத்யவதாம் among truth speaking ones, வர: foremost, பிதாமஹ: grand-sire, Brahma, தேவதாநாம் devatas’,
அபிப்ராயம் intention, விஜ்ஞாய having come to know, தயோ: for both of them, விரோதம் quarrel, ஜநயாமாஸ instigated.

Foremost among the truthful, Grandsire Brahma come to know the intention of the
gods and triggered a conflict between the gods.
————–
விரோதே ச மஹத்யுத்தமபவத்ரோமஹர்ஷணம் .
ஷிதிகண்டஸ்ய விஷ்ணோஷ்ச பரஸ்பரஜிகீஷுணோ:৷৷1.75.16৷৷

விரோதே in that fight, பரஸ்பரஜிகீஷிணோ: each desirous of victory over the other, ஷிதிகண்டஸ்ய Siva’s,
விஷ்ணோஷ்ச Visnu’s, ரோமஹர்ஷணம் causing one’s hair to stand on its end, மஹத் great, யுத்தம் battle, அபவத் took place.

In that thrilling fight between Siva and Visnu, each desirous of victory over the other,
a ferocious battle took place causing one’s hair to stand on end.
—————–
ததா து ஜரிம்பிதஂ ஷைவஂ தநுர்பீமபராக்ரமம்.
ஹுங்காரேண மஹாதேவ ஸ்தம்பிதோத த்ரிலோசந:৷৷1.75.17৷৷

ததா then, ஹுங்காரேண with ‘Humkara’ by Visnu, பீமபராக்ரமம் dreadful prowess, ஷைவஂ தநு: Siva’s bow,
ஜரிம்பிதஂ yawned (stretched), அத thereafter, த்ரிலோசந: three-eyed, மஹாதேவ: Mahadeva, ஸ்தம்பித: was made motionless.

Then, with the ‘Humkara’ produced by Visnu, Siva’s bow of dreadful prowess was stretched,
which struck the three-eyed Mahadeva motionless.

தேவைஸ்ததா ஸமாகம்ய ஸர்ஷிஸகை ஸ்ஸசாரணை:.
யாசிதௌ ப்ரஷமஂ தத்ர ஜக்மதுஸ்தௌ ஸுரோத்தமௌ৷৷1.75.18৷৷

ததா then, ஸர்ஷிஸஂகை: hosts of sages, ஸசாரணை: with charanas, தேவை: devatas, தத்ர there,
ஸமாகம்ய having assembled, யாசிதௌ beseeched, தௌ those two, ஸுரோத்தமௌ foremost of devatas,
ப்ரஷமம் peace, ஜக்மது: obtained.

Then hosts of sages, charanas and the gods assembled there and beseeched both of them,
the pre-eminent among the gods to keep peace.
—————–
ஜரிம்பிதஂ தத்தநுர்த்ரரிஷ்ட்வா ஷைவஂ விஷ்ணுபராக்ரமை:.
அதிகஂ மேநிரே விஷ்ணுஂ தேவா ஸ்ஸர்ஷிகணாஸ்ததா ৷৷1.75.19৷৷

விஷ்ணுபராக்ரமை: with the prowess of Visnu, ஜரிம்பிதம் made inert, தத் that, ஷைவம் relating to Siva,
தநு: bow, தரிஷ்ட்வா haivng seen, ததா then, ஸர்ஷிகணா: hosts of sages, தேவா: devatas,
விஷ்ணும் Visnu, அதிகம் as superior, மேநிரே thought over.

Now that the bow of Siva was made inert by Visnu’s prowess, hosts of sages and gods acknowlged Visnu as superior.)

ருத்ரனை வென்ற தனுஸ்ஸைப் பிடித்த-புண்டரீகாஷனான சர்வேஸ்வரன்
(ராமன் ராஜீவ லோசனை -கமல பத்ராஜன் )
வந்து அவதரித்த இடத்திலும் –
ந நமேயம் (யுத்த காண்டம் )என்று -(வணங்கலில் அரக்கன் அன்றோ )
கொத்துத் தலைவன் குடி கெடத் தோன்றிய (பெரியாழ்வார் -1-10-3-)-என்னும்படி
பத்து தலையை உடைய ராவணனுடைய இலங்கையை மூலை அடியே-வழி போக்கின
அம்பின் கூர்மையை உடைய-சக்கரவர்த்தி திருமகனை ஒழிய-
தம்முடைய குறையில் வேறு ஒருவர் துணை இல்லை –

(த்விதா பஜ்யேய மப்யேவம் ந நமே யந்து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹஜோ தோஷ ஸ்வ பாவோ துரதிக்ரம –யுத்த –36-11
இரண்டாக்கப் பிளக்கப்பட்டாலும் படுவேனே ஒழிய வணங்க மாட்டேன் –
இது என்னுடன் பிறந்ததான தோஷம்-ஸ்வ பாவம் மீற முடியாதது அன்றோ )

உபாசகர்கள் அசேதனமான க்ரியாகலாபத்தின் உடைய கூர்மையை-விஸ்வசிதது இருப்பர்கள் –
எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள்-
அசேதனமான க்ரியாகலாபத்தின் உடைய கூர்மையை-விஸ்வசிதது இரார்கள்
இவர்கள் சக்கரவர்த்தி திருமகன் உடைய அம்பின் கூர்மையை-
தஞ்சமாக நினைத்து இருப்பர்கள் –

அப்பிள்ளை உரை

பண்டு ருத்ரனை தான் வென்ற வில்லை இது ஜனக குலத்துக்குப் போக
ஸ்ரீ பரசுராம ஆழ்வார் கையில் நின்றும் -வைஷ்ணவ சாபம் -தபஸ்ஸூ சக்தி யுடன் வாங்கிக் கொண்ட சக்ரவர்த்தி திருமகன்
தேவ விரோதிகள் ராவணாதிகள் இடம் -கோபத்தால் சிவந்த திருக் கண்கள் உடைய சர்வேஸ்வரன் உடன்
புண்டரீகாக்ஷன் -அழகாலும் கோபத்தால் வாத்சல்யத்தாலும் ஐஸ்வர்யத்தாலும்
ஸ்வா தந்த்ர உறைப்பால் ந நமேயம் தன்னுடன் சேராதவனாய்
திரண்ட பத்துத் தலைகள் கொண்ட ராவணன் உணர்ந்து நோக்கும் -திக் பாலர்களும் நெஞ்சு உழுக்கும் படி -நுழைய முடியாதே
லங்கையை மூலை யடியே ஒடுக்கிய -மிடுக்கை உடைய சக்ரவர்த்தி திருமகன்
நம்முடைய குறை தீர்க்க வேறே யாரும் இல்லை
ஒரு வில்லால் –சேவகனார் –
உபாசகர் அசேதன கிரியா கலாபத்தை -கர்மாதி கூர்மையை விஸ்வஸித்து இருக்க
பிரபன்னர் சக்ரவர்த்தி திருமகன் அம்பின் கூர்மையையே நினைத்து இருப்பர்

————————————————————————-

வேறு ஒருத்தர் துணை இல்லை என்றது-
பூர்ணராக சம்ப்ரதிபன்னர் ஆனவர்களுக்கு
தம் தாம் குறையை இவனுக்கு அறிவித்து-
தங்கள் அபேஷிதம் பெருகையாலே -என்கிறார் –

அப்பிள்ளை உரை அவதாரிகை
வேறு ஒருத்தர் துணை இல்லை என்றது-
நாட்டார் துணையாகப் பற்றும் ப்ரஹ்மாதிகளும்
தங்கள் வெறுமையை முன்னிட்டு இவனையே
ஆஸ்ரயித்து
தம் தாம் அபேக்ஷிதங்களைப் பெற்றுப் போகிறார்கள் -என்கிறார் –
(வெறுமையை-தாழ்ச்சியை -அபேக்ஷிதங்களை குறைகளை )

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு–9

பதவுரை

பிரமதேவன்
குறை கொண்டு–நைச்யாநுஸந்தானம் செய்து கொண்டு
குண்டிகை நீர்–கமண்டல தீர்த்தத்தை
பெய்து–வார்த்து-உண்டாக்கி-
மறை கொண்ட–வேதங்களிலுள்ள
மந்திரத்தால்–புருஷ ஸூக்தம் முதலிய மந்த்ரங்களினால்
வாழ்த்தி–மங்களாசாஸநம் பண்ணி
ஆங்கு–(எம்பெருமான் உலகளந்தருளின) அக் காலத்தில்
அண்டத்தான் சே அடியை–அந்த ஸர்வேச்வானுடைய திருவடிகளை
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏற–விஷ கண்டனான ருத்ரனுடைய தலையில் (ஸ்ரீபாத தீர்த்தம்) விழும்டியாக
கழுவினான்–விளக்கினான்.
சதுமுகன் கையில் சதுர் புஜன் தாளில் சங்கரன் தலையிலே தங்கி ஓடி வரும் கங்கை -பெரியாழ்வார்

ப்ரஹ்மாவானவன் தன் நைச்யத்தை முன்னிட்டுக் கொண்டு கமண்டல தீர்த்தத்தை வார்த்து
வேதங்களிலே ஸாரமாகச் சொல்லப்பட்ட புருஷ ஸூக்தாதி மந்த்ரங்களினால் மங்களா ஸாஸனம் பண்ணி
அந்த த்ரிவிக்ரம அவதார காலத்தில் அண்டாதிபதியான ஸர்வேஸ்வரனுடைய அழகிய திருவடிகளை
நீல கண்டன் சிரஸ்ஸிலே விழும்படி திரு மஞ்சனம் செய்தான் –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
ஆகிஞ்சன்யாதிகளை முன்னிட்டு
சதுர்முகனான தான் குண்டிகையிலே-
தர்மத்தை ஜலமாக உண்டாக்கி

மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி –
ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளாலே-மங்களா சாசனம் பண்ணி

அண்டத்தான் சேவடியை ஆங்கு கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
திரு உலகு அளந்து அருளின சர்வேஸ்வரன் திருவடிகளை-
அக்காலத்திலே
நீல கண்டனுடைய சிரஸ்ஸிலே படும்படியாகக் கழுவினான் –

சாஹசிகரான பிரஜைகள்-வழியே போய்
வழியே வர வேணும் என்று
தீர்த்தத்தை மேலே தெளிப்பாரைப் போலே –
(பாவ நார்த்தம் ஜடா மத்யே -தத் அம்பு பதிதம் -ஈஸ்வர சம்ஹிதை )

(குறை -அபேக்ஷிதம் என்றும் நைச்யம்-ஆகிஞ்சன்யம் என்றும் கொண்டு

த்ரவீ பூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹா முநே
க்ருஹீத்வா தர்மபா நீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரயா பக்த்யா பாத்ய யர்க்யாதி பிரர்ச்சிதம்
ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவ நார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீத்ய வதாரணாத்
வர்ஷா தாந்யதா பஹுந் ந முமோச ததா ஹர –ஈஸ்வர சம்ஹிதை )

அப்பிள்ளை உரை

நினைவு அற திருவடிகள் தலையிலே வந்து இருக்கக் கண்ட ப்ரீதியாலே
செய்வது அறியாமையால்
தன்னுடைய வெறுமையையே பச்சையாக
ப்ரஹ்மாவானவன்
பக்தியால் உருகி தர்ம தேவதை தனது கமண்டலத்தில் பரிமாறி
சகல வேதங்களாலும் பிரமானமாகக் கொண்ட
புருஷ ஸூக்திகளாலே
நான்கு முகங்களும் ச ப்ரயோஜனமாம் படி ஸ்துதித்துக் கொண்டு

அக் காலத்தில்
காள கண்டனான ருத்ரன் தலையில் சென்று விழும்படியாக
அண்ட அவகாசம் எங்கும் விம்மி வளர்ந்த
சிவந்த திருவடிகளை விளக்கி
அவிநீய -பணியாத- பிள்ளைக்கு ஸ்ரீ பாத தீர்த்தம் தெளிப்பாரைப் போலே
விஷ பாத்ரமான ருத்ரன் தலையில் பிதாவானவன்
ஸ்நேஹம் தோற்ற திரிவிக்ரம ஸ்ரீ பாத தீர்த்தம் தெளித்தான் –

————————————————————————–

நீரும் குறைவாளர்
தேவர்களும் குறைவாளர்
ஆக என்ன வாசி என்ற கேள்விக்கு பதில் இதில்

திரிவிக்ரம அவதாரம் கீழே
ஜாம்பவான் பிரக்ருதிகள் ஜெய கோஷம் -ஆழி எழ இத்யாதி கேட்டு
அதி சங்கை பண்ணி
திருவானந்தாழ்வான் அழல் உமிழ
இப் பாசுரம்

அப்பிள்ளை உரை அவதாரிகை
அஹங்காரம் உள்ள தேவர்கள் போல் அன்றியே
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற நமக்கு தான் காட்டவே கண்டேன் என்கிறார்

அகிஞ்சனராக நமக்கு ஸூலபன்
துர்மானிகளுக்கு கிட்ட அரியவன்
என்கிறார் இதில் –

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து–10

பதவுரை

ஆங்கு–பரம பதத்திலே
ஆரவாரம் அது கேட்டு–(நித்ய முக்தர்களுடைய) ஸாம கான கோஷத்தைக் கேட்டு
(அஸுரர்கள் இங்கும் வந்து ஆரவாரம் செய்வதாக ப்ரமித்து)
அழல் உமிழும்–விஷாக்நியைக் கக்குகின்ற
காண–ஸேவிப்பதற்கு
வல்லம் அல்லமே–ஸாமர்த்திய முடையோ மல்லோமோ?
(நாம் ஸமர்த்தரே யாவோம்)
மா மலரான்–சிறந்த பூவிற் பிறந்த பிரமனும்
பூகார் அரவு அணையான்–அழகிய சீற்றத்தை யுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய எம்பெருமானது
பொன் மேனி–அழகிய திருமேனியை
யாம்–அநந்ய பக்தரான நாம்
வார் சடையான்–நீண்ட ஜடையை யுடைய ருத்ரனும்
வாழ்த்து–(எம்பெருமானை) வாழ்த்துவதில்
வல்லர் அல்லரே–அஸமர்த்தர்களே.

அக் காலத்தில் உண்டான மங்களா ஸாஸன த்வனியைக் கேட்டு
சத்ருக்கள் கோஷிக்கிறார்கள் என்று
நெருப்பைக் கக்கா நின்ற அழகிய சீற்றத்தை யுடைய திருவனந்த ஆழ்வானைப்
படுக்கையாக யுடைய ஸர்வேஸ்வரனுடைய அழகிய திரு மேனியை நாம் சேவிக்க ஸமர்த்தர் அல்லோமோ
அழகிய திரு நாபி கமலத்தில் பிறந்த ப்ரஹ்மாவும்
தொங்குகிற சடையை யுடைய ருத்ரனும்
அவனை ஸ்தோத்ரம் செயகைக்குத் தக்க சக்தியை யுடையவர்களாக ஆகார்களே –

ஆங்கு ஆரவாரமது கேட்டு-
திசை வாழி எழ (திருவாய் -7-4-1 )-என்னும்படி
திரு உலகு அளந்து அருளின போது உண்டான-வார்த்தை கேட்டு –

அழல் உமிழும் –
விடங்காலும் தீ வாய் அரவணை (இரண்டாம் திருவந்தாதி -71)-என்னும்படியே –

பூங்கார் அரவணையான் –
அழகிய சீற்றத்தை உடைய-திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக உடையவனுடைய –
சேஷி பக்கல் பரிவாலே வந்த சீற்றம் ஆகையாலே-
ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கிறபடி
(கார் -கறுப்பாய் -சீற்றம் )

பொன் மேனி யாம் காண வல்லமே யல்லமே –
அவனுடைய ஸ்ப்ருஹ ணீயமான திரு மேனி-
ஸ்வரூபதுக்கே மேல் ஓன்று இல்லை என்று இருக்கிற-நமக்குக் காண குறை உண்டோ
(ஸ்வரூபம் -விக்ரஹம் -பிரிய தமம் ரூபம் அத் அத்புதம் –
வல்லமே யல்லமே -அல்ல வல்லோமே -மாட்டுவோம் என்றபடி
இவர்களது அகங்கார ஹேது விசேஷணங்களால் காட்டி அருளுகிறார் )

மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து
திரு நாபி கமலத்திலே அவ்யவதாநேந பிறந்தேன் என்றும்-
ஜடை தரையிலே தாழும்படி சாதன அனுஷ்டானம் பண்ணினேன்-என்றும்
ஸ்வ சக்தியில் குறைய நினையாத-
ப்ரஹ்ம ருத்ராதிகள் வாழ்த்த மாட்டரே
(வல்லரே அல்லரே-வல்லார் அல்லரே -மாட்டார் -என்றபடி )

(சங்கைஸ் ஸூ ராணாம் ததா மனுஷியை —அனைவராலும் -ஸ்தோத்ரம் பண்ணப்பட்ட
ஆரவாரம் ஹரி மங்களம் வளர்க்கட்டும் )

அப்பிள்ளை உரை

திரு உலகு அளந்து அருளின அத் தசையிலே
திசை வாழி எழ என்கிறபடியே
அனுகூல வர்க்கம் அடங்கலும் என்னாகப் போகிறதோ வயிறு எரிந்து
திக்குகள் தோறும் நின்று மங்களா சாசனம் பண்ணிய ஆரவாரம் -பெரிய கோஷம் கேட்டு
தனது பரிவாலே
பிரதிகூலரான நமுசி பிரக்ருதிகள் மேலே அக்னியை உமிழா நிற்பானாய்
பரிவின் கார்யம் ஆகையால் அடிக் கழஞ்சு பெற்று கொள்ளும் படி
அழகிய சீற்றம் கொண்ட திருவானந்தாழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளும் ஸர்வேஸ்வரன்

அன்றிக்கே
பரம பதத்தில் நித்யர் முக்தர் ஹாவு ஹாவு சாம கானம் கேட்டு என்றுமாம்

பொன் போன்ற ஸ்லாக்யமான திருமேனியை
அகிஞ்சனரான நாம் கண்ணால் கண்டு அனுபவிக்க வல்லோம் அல்லோமோ

ஸ்லாக்யமான திரு நாபி கமலத்தில் உதித்தோம் என்று அபிமானித்து இருக்கும் நான்முகனும்
சடை கட்டி சாதன அனுஷ்டானம் ருத்ரனும்
வாழ்த்த சக்தர் அல்லரே –

————————————————————————-

அப்பிள்ளை உரை -அவதாரிகை –
இப்படி அகிஞ்சனருக்கு ஸூலபனான -எளியவனான பின்பு
நிரதிசய போக்யனான எம்பெருமானை சர்வ கரணங்களாலும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–11

பதவுரை

சூழ்ந்த–நிறையச் சாத்திக் கொள்ளப்பட்ட
துழாய்–திருத்துழாய் மாலை
மன்னு–பொருந்தி யிருக்கப் பெற்ற
நீள் முடி–நீண்ட திருவபிஷேகத்தை யுடையனும்
என் தொல்லை மால் தன்னை–என்னிடத்தில் நெடு நாளாக வியா மோஹ முடையவனுமான ஸர்வேச்வரனை
வழா–ஒரு நொடிப் பொழுதும் விடாமல்-வழுவுதல் இன்றி -மாறாமல்
வண் கை கூப்பி மதித்து–அழகிய கைகளைக் கூப்பி த்யானம் பண்ணி
மதித்து-நினைத்து
மகுடம் தாழ்த்தி–தலையை வணக்கி
தண் மலரால்–குளிர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
வணங்கு மின்கள்–ஆஸ் ரயியுங்கள்,
வாய்–(உங்களுடைய) வாய்
வாழ்த்துக–(அவனை) ஸ்துதிக்கட்டும்,(திரு நாமம் -அத்யாஹார்யம் )
கண்–கண்கள்
காண்க–(அவனையே) ஸேவிக்கட்டும்
செவி–காதுகள்
கேட்க–(அவனது சரிதங்களையே) கேட்கட்டும்.

சுற்றப்பட்ட திருத்துழாய் மாலை பொருந்தி இருக்கிற நீண்ட திரு அபிஷேகத்தை யுடையனாய்
என்னிடத்திலே அநாதியாக வியாமோஹத்தை யுடையனான ஸர்வேஸ்வரனை
க்ஷண மாத்ரமும் விடாமல் அழகிய கைகளைக் கூப்பி த்யானம் பண்ணி த் தலைகளை வணக்கி
சீதலமான புஷபங்களைக் கொண்டு ஆஸ்ரயியுங்கோள்
உங்கள் வாய் அவனை மங்களா ஸாஸனம் செய்யட்டும்
கண் சேவிக்கட்டும்
காது அவன் குணங்களைக் கேட்கக் கடவதாக —

வாழ்த்துக வாய் -இத்யாதி –
சர்வேஸ்வரனை
வாழ்த்தக் கண்ட வாயும் –
காணக் கண்ட கண்ணும் –
அவனுடைய குணங்களைக் கேட்க கேட்கும் செவியும் –
தம்தாமுக்கு வகுத்த தொழிலைச் செய்கை –

(சா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்தவ்தி -எது ஹரியை ஸ்துபிப்பதோ அதுவே நாக்காகும்
கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் கண்டக்கால்
புள்ளாய் ஒரு ஏனமாய் –பொன்னடிக்கு என்று உள்ளார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே
அவனுக்கு என்று எண்ணித் திருவடிகளிலே இடுகையை வேண்டுவது
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா பிரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஸ்நாமி ப்ரயதாத்மந -என்று ஸ்ரீ கீதையிலும்
புரிவதும் புகை பூவே -என்று ஆழ்வாரும் )

மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால்
அவன் திருவடிகளிலே வணங்கக் கண்ட தலையை ஆங்கே தாழ்த்தி-
புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு
அவன் திருவடிகளிலே-உங்கள் தலையை தாழ்த்தி வணங்குங்கோள்-

சூழ்த்த இத்யாதி
வணங்குவித்துக் கொள்ளுகைக்கு லஷணம் சொல்லுகிறது –

(ஆதி ராஜ்யம் அதிகம் புவநாநம் -ஈஸ தே பிஸூ நயன் கில மௌலி –ஸ்ரீ கூரத்தாழ்வான் )

சூழப் பட்ட திருத் துழாய் வர்த்தியா நின்று-
ஆதி ராஜ்ய ஸூசகமான முடியை உடைய சர்வேஸ்வரன் உடைய-
திரு நாமத்தை மாறாமல் நினைத்து-
உதாரமான கையைக் கூப்பி
மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள்

(தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும்
புனைந்த தண்ணம் துழாய் முடி அம்மான் -அன்றோ
உதாராஸ் ஸர்வ ஏவைத –மே மதம் -அவன் நினைவு அன்றோ )

தண் மலரால் -புஷ்பயாதி உபகரணங்களைக் கொண்டு அவன் திருவடிகளிலே-
உங்கள் தலையை தாழ்த்தி வணங்குங்கோள்-

(சர்வேஸ்வரன் உடைய- திருநாமத்தை மாறாமல் நினைத்து–என்னும் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகளால்
தொல்லை மால் நாமம் -என்று பாட பேதம்
விசித்ரா தேஹ சம்பந்திர் ஈஸ்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா பிரம்மன் ஹஸ்த பாதாதி ஸம் யுதா -என்றும்
வாய் அவனை அல்லாது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை யல்லது தாம் தொழா -பேய் முலை நஞ்சு
ஊணாக உண்டான் உருவொடு பேர் அல்லால்
காணாக் கண் கேளாச் செவி –என்ற
முதல் ஆழ்வாரும் அருளிச் செய்த அர்த்தத்தை அனுஷ்ட்டித்து உய்யுங்கோள் -என்கிறார்
இத்தை செய் என்றும் வேறே எதுவும் செய்யாதே என்றும் உபதேசம் )

அப்பிள்ளை உரை –
வளையமாக வைக்கப்பட்ட திருத்துழாய் பொருந்தி வர்த்தியா நிற்பதாய் ஆதி ராஜ்ய ஸூ சகமான
நீண்ட திரு அபிஷேகத்தை யுடையவனாய்
கண்டவாற்றால் இவனே தேவாதி தேவன்-ஸமஸ்த லோக ஸர்வேஸ்வரேஸ்வரன் – என்று இருக்குமே
ஆஸ்ரிதரான எங்கள் பக்கலிலே பழையதாக அநாதி காலமாக வ்யாமுக்தனானவனை மனசால் அனுசந்தித்து
க்ஷணம் காலமும் நழுவாமல் உதாரமாய் இருக்கும் கைகளைக் கொண்டு
அஞ்சலி பந்தத்தைப் பண்ணி
அபிமான கனத்தாலே முடி சூடினால் போலே இறுமாந்து இருக்கும் தலையைத் தாழ்த்தி –
குளிர்ந்த புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு (பவ்யமாய்) பக்ந அபிமானராய் –அபிமான பங்கமாய் என்கிறபடி –
உங்களுடைய சஷூஸ் வாக்கு இந்திரியம் அவன் வடிவு அழகைக் கண்டு ஸ்துதிப்பதாகவும்
அவனுடைய திவ்ய குண சேஷ்டிதங்களைக் கேட்டு ஸ்ரோத்ர இந்திரியம் க்ருதார்த்தராக
(படைக்கப்பட்ட பயன் பெற்றதாக )ஆவதாகவும்
வழா வழுவாதே -ஒரு ஷணமும் விடாமல் என்றபடி

————————————————————————–

அப்பிள்ளை உரை அவதாரிகை
என்னை ஆஸ்ரயிக்குங்கோள் என்று சொல்லுகிறது என் என்ன
நீ உன்னை ஆஸ்ரயியாதாரைக் கெடுத்து
ஆஸ்ரயித்தாரை வாழ்விக்கையாலே என்கிறார்
பெருமானை மதியார் படும் பாடு சொல்லப்பட்டது
மதிப்பார் பெரும் பேறும் சொல்லப்பட்டது

(அவனை மதியாதார் படும் பாட்டையும்
ச து நாகவர ஸ்ரீ மான் மனஸா சிந்தயத் ஹரிம் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் மனத்தால் எண்ணியதால்
பெற்ற நன்மையையும் அறிந்தால் ஆகாதோ
இது அவனை நோக்கி அருளிச் செய்யப் பட்டதாகிலும்
முன்னும் பின்னும் போலே பர உபதேசத்தில் நோக்கு )

மதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் -மதித்தாய்
மடுக் கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி
விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12

பதவுரை

மதியார்–உன்னைச் சிந்தியாதவர்கள்
நான்கில்–நால் வகைப்பட்ட யோனிகளில்
போய் போய் வீழ–சென்று சென்று பலகாலும் விழும்படியாக
மதித்தாய்–ஸங்கல்பித்தாய்,
நான்கு வேதம் சாஸ்திரம் ஆராய்ந்தும் அறியாமல் என்றுமாம்
நான்கு வேதங்களில் போய் மதியார் நான்கில்-நான்கு யோனிகளில் போய் கீழ் வீழ மதித்தாய்
மதி–சந்திரனுடைய
கோள்–துன்பத்தை
விடுத்தாய்–போக்கி யருளினாய்
மடு–ஒரு மடுவிலே
கிடந்த–(சாபத்தினால்) வந்து சேர்ந்திருந்த
மா முதலை–பெரிய முதலையினாலுண்டான
கோள்–(கஜேந்திராழ்வானது) துயரத்தை
விடுப்பான்–நீக்குவதற்காக
ஆழி–திருவாழியை
விடற்கு–(அந்த முதலையின் மேல்) பிரயோகிப்பதற்கு
மதித்தாய்–நினைத்தருளினாய்
இரண்டும்–முதலையும் கஜேந்திராழ்வானு மாகிற இரண்டும்
போய்–ஒன்றையொன்று விட்டுப் போய்
இரண்டின்–அவ் விரண்டு ஜந்துக்களுக்கும்
வீடு-சாப மோக்ஷமும் மோக்ஷ ஸாம் ராஜ்யமும் உண்டாம்படி
மதித்தாய்–ஸங்கல்பித்தாய்.

ஆஸ்ரயி யாதவர்கள் தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவரங்கள் ஆகிய நான்கு யோனிகளிலும்
போய் விழும்படி ஸங்கல்பித்தாய்
ஸந்த்ரனுடைய வியசனத்தைப் போக்கினாய்
மடுவில் இருந்த பெரிய முதலையின் பலத்தை அழிக்கைக்காக அங்கே எழுந்து அருளி
திருவாழியைப் ப்ரயோகிக்க ஸங்கல்பித்தாய்
ஆனையும் முதலையும் போய் இரண்டினுடைய ஸ்தானத்தை
முதலை கந்தர்வ பதவியையும்
யானை தன் திருவடிகளையும் அடையும்படி ஸங்கல்பித்தாய் –
இப்படி மூன்று சங்கல்பமே மூன்று மதித்தாய் பத அர்த்தம்

மதித்தாய் போய்-
நான்கின் மதியார் போய் வீழ மதித்தாய் –

வேதத்தாலும் எங்கும் புக்கு-உன்னை உணராதவர்கள் அதபதிக்கும்படியாக மதித்தாய் –
(நான்கில்
நாலு வேதம் ஆதல்
நான்கு யோனிகள் -தேவாதிகள் ஆதல்
மதித்தாய் போய் -மிகவும் நினைத்தாய் )

மதியார் நான்கில் போய் வீழ மதித்தாய் –
உன்னை மதியாதவர்களை
ஷிபாமி யஜஸ்ரம் அஸூபாந அஸூரீஷ்வே வை யோநிஷூ -என்னும்படியே
சதுர்வித யோநிகளிலும் போய்-விழும்படிக்கு ஈடாக நினைத்தாய்

(சதுர்வேத தரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி
வேத பார பராக்ராந்தஸ் ச வை ப்ராஹ்மண கர்த்தப -என்று
நான்கு வேதங்களையும் அறிந்து வாஸூ தேவனை அறியாமல் இருக்கும் விப்ரன்
குங்குமம் சுமந்த கழுதை போல் ஆவான் )

(தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாமி யஜஸ்ரமஸுபா நாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷
முன் கூறியபடி என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும்
பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் –
என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை
மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்)

மதி கோள் விடுத்தாய் –
சந்த்ரனுக்கு வ்யசனத்தைப் போக்கினவனே

மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற்கு
பொய்கையிலே கிடந்த பயாவஹமான முதலை-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைப் பற்றின பற்று-
விடும்படிக்கு ஈடாக
சங்கல்பம் இன்றிக்கே-
திரு ஆழியை விடுகைக்கு நினைத்தாய் –

இரண்டும் போய் இரண்டின் வீடு மதித்தாய் –
பூர்வ ஆகாரங்களை விட்டு-முதலை -கந்தர்வனாய்-
ஆனை திருவடிகளைப் பெறும்படிக்கு ஈடாகவும்-
நினைத்தாய்-

(முதலைக்கு சாப விடுதலை சாப மோக்ஷமும்
கஜேந்த்ரனுக்கு ஸாஷாத் மோக்ஷமும் அருள சங்கல்பித்தாயே )

(துஷ்ட நிக்ரஹம் ஸங்கல்பத்தால் செய்யலாம் -இஷ்ட பரிபாலனமும் திருவாழி கொண்டு செய்யலாம்
திவ்ய மங்கள விக்ரஹமும் திவ்ய ஆயுத திவ்ய பூஷணங்களும் காண ஆசைப்பட்ட பக்தர்களுக்காக அன்றோ
ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம் –பக்தாநாம் ப்ரஸாசாததே -ஜிதந்தே
மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-)

அப்பிள்ளை உரை —
சர்வாதிகான உன்னை நிறைந்த அனுபவம் பண்ணி ஆஸ்ரியாதவர்கள் உன்னை அகன்று
தேவாதி சதுர்வித யோனிகளில் கர்ம அணுகுமாகப் போய்
கிருபை இல்லாமல் பிறவிச் சூழலில் சிக்கும் படி
சங்கல்பித்து அருளினாய்
நான்கு யோனிகளில் -தேவ யோனியில் உள்ளான் ஒருவன் -சந்திரன் –
ஷய ரோகத்தால் வந்த வியசனத்தை போக்கி அருளினாய்
உத்க்ருஷ்ட யோனியில் உள்ளார்க்கு மட்டும் அல்லாமல்
திர்யக் யோனியில் பிறந்த கஜேந்த்ரனுக்கும் மடுவிலே
பாகவத திருவடி பிடிக்க -அவசர பிரதீஷானாய் கிடந்து நலிந்த முதலையை விடுவிக்க
சங்கல்பம் இல்லாமல் திருவாழி விட நினைப்பிட்டு அருளினாய்
பக்தனுக்காக அன்றோ அவன் திருமேனிகள் திரு ஆயுதங்கள் எல்லாம் -நேராக வந்தால் தானே சேவை சாதிக்க முடியும்
முதலையும் யானையும் ஆகிய இரண்டும் ஒன்றை ஓன்று விட்டுப் போய்
இரண்டுக்கும் சாப மோக்ஷமும் சாஷாத் மோக்ஷமும் உண்டாகும் படி
அருளாலே திரு உள்ளம் பற்றி அருளினாய்
நான்கின் மதியார் போய் வீழ என்றது
நான்கு வேதங்களில் உள்புகுந்து உன்னை உணராதவர்கள் அதபதிக்கும் படி நினைத்தாய் –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளி செயல் அரங்கம் -நான்முகன் திரு அந்தாதி- சாரம் ..

December 10, 2011
நான் முகனை நாராயணன் படைத்தான்-
படைக்கும் தொழில் -அவனே -அறுதி இட்டு-
புருஷ சூக்தம்-விவரிக்குமே –
ஒன்றும் தேவும் –மற்றும் யாதும் இல்லா அன்று –vaccum
முதலில் அறிவித்த ஆழ்வார்கள்-
பரத்வ நிர்ணயம்- வாளை உறையில் இடாதவர் ..
-பொருள் இல்லாத -ஆழ்வார் சொல்லாம்
நாம் சொல்ல முடியாது -அவர்களையும் அருளி செயலையும் ஆச்சர்யர்களையும் பெற்றதால் –
அவதாரங்கள் கணக்கிலடங்காதவை –
பூர்ண ஸ்ரீ ராம கிருஷ்ணா அவதாரம்- ஸ்ரீ அயோதியை/ஸ்ரீ வட மதுரை –
ஆழ்வார்கள் -இங்கே அவதரித்து -அவனை காட்டி கொடுக்க
ஆச்சார்யர்கள் ஆழ்வார்களை காட்டி கொடுக்க
ஒன்பது அங்கம் 12 உப அங்கம்-108
அது போல் திவ்ய தேசங்கள்-பாதாதி கேச பர்யந்தம் இவை ..
திரு பாத கமலங்கள்-வான மா மலை/ திருக் குறுங்குடி  இரண்டும்
அடியேன் தொழ  வந்து அருளே -வானமா மலை பெருமாள் ஓடி வருவான்
திரு வயிறு -திரு குடந்தை
திரு மார்பு-திரு வேம்கடம்/திரு மால் இரும் சோலை -தென்னன் உயர் பொறுப்பும்
புஜம்-ஆழ்வார் திரு நகரி திரு ஆழி திருநகரி
கழுத்து பகுதி -தொண்டை மண்டலம்
ஹிருதயம்-ஸ்ரீ ரெங்கம்
திரு முக மண்டலம்-ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆழ் பொருள்-ஜகத் ஸ்ருஷ்ட்டி -சிந்தாமல் கொள்மின் –
நம் பூர்விக சொத்து -நித்ய விபூதி –
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து -ஸ்ருஷ்ட்டி ஆரம்பிக்க
விளையாட்டு-அலகிலா விளையாட்டு –
அம் மலர் மேல் மன்னும் திசை முகனை தான் படைத்து -வாசுதேவ மந்த்ரம் உபதேசித்து –
சங்கு சக்கரம்-சூசகம்-
வலது இடது -ஸ்ரீ தேவி/பூமி தேவி
பிரத்யட்ஷமாக பூமி தேவி அருகில்- முதலில் சங்கு சேவை -காட்டி கொடுத்ததால்
ஆச்சார்யர்-ஆழ்வார்-பெருமாள்- படி –
பிரதம ஜீவாத்மா -நான் முகன்–அவனுக்குள் அந்தர்யாமியாக இருந்து –
ஒன்பது கலசம் -பிரணவாகார விமானம்- ஸ்ரீரெங்கம் -காட்ஷி தர-நான்முகன்-
பெரிய பெருமாளை பிரதம தர்சனம் செய்தவன் நான் முகன்- என்பதால் முதலில் சொல்லி ஆரம்பித்தார்
விஸ்வரூபம்-அனுகூலர் பிரதி கூலர் இருவருக்கும் காட்ட -திரு அடியில் யாரும் விழவில்லை-

அவையுள் ஆசனத்தை அஞ்சிடாமல் இட –

அவன் வளர சிம்காசனமும் வளர -மண்டமும் வளர –
சர்வ சக்தன் புரியாமல்-
சக்தனாக  பார்த்தாலும் திரு அடி கேட்க வில்லை –
வனமாலி கதி-
ஐந்து ஆயுதங்களும் ஆழ்வார்
சுதர்சன ஆழ்வார் மகம்-மகிசார புரி -திரு மழிசை ஆழ்வார்
சரீர  சுத்தியும் பிரம ஞானம் கொடுக்க
சொன்ன வண்ணம் செய்யும் பெருமாள்- திரு குடந்தை- திரு அரசு -இவருக்கு ..
குலசேகர ஆழ்வார் -திரு மன்னார் கோவிலில் திரு அரசு
தாளால்  உலகம் அசைந்த அசைவோ கொல் –வாய் திறவா –-சயனம் பெருமாள் மேல் ஈடுபாடு ..
நடந்த அசைவா -திரு விக்ரமன்-பெருமாள்-கிருஷ்ணன்-அர்ச்சை நடந்தார்களே
நடந்த கால்கள் நொந்தவோ –25 காரணம் திரு விக்ரமன் அவதாரம் –
என்னுடைய பாதத்தால் நானே அளந்து கொள்ளும் படி கேட்டானே –
திரு அடி தொட்டு அவனை கொடுக்க வைத்தால் உய்ந்து போவானே
தன் உருவம் அறியாமல்-
என்னுடைய பாதத்தால் நான் அளப்ப மூவடி —
இடந்த மெய் குலுங்கவோ-
தேவர் பிராட்டி மனுஷ்யர் மாடுகளுக்காக நடந்த நான்கு அவதாரங்கள்
எழுது இருந்து பேசி-வாழி கேசனே
பிரான் ஆனார் -அவன் ஆரா அமுத ஆழ்வான் ஆனான்
மன்னாத பெருமான்-ஆதி பெருமாள்
சத்ய வராக பெருமாள் திரு மெய்யம் ஆதி பெருமாள்
திரு அரங்கத்தில் வாசு தேவ பெருமாள் ஆதி –
முனியே நான்முகனே-அந்தர்யாமி-
அடித்து சொல்வார் திரு மங்கை -96 பாசுரங்கள்-பரத்வ நிர்ணயம்
திரு சந்த விருத்தம்-பூகோள சாஸ்திரம்
இனி அறிந்தேன் ஈசர்க்கும் நான்முகனுக்கும் ..தெய்வம்-
முக்தி நாராயண -சாள கிராம பெருமாள்-ஹிமா பர்வத ராஜன்-
பெண்ணை கொடுத்து உபகாரம் சிவன் இடம் கேட்டானாம் –
ஜீவன்முக்திக்கு வழி கேட்டான்- முதல் ஸ்ரீ வைஷ்ணவன் –சிவன்-பரம பாகதோத்தமன்.
ஆனந்த வனம்-காசிக்கு பெயர் –பார்வதி தேவி கட்டதும் ஸ்ரீ ராம திரு நாமம்-சொல்ல சொல்ல அருளினான் ..
திரு கங்கை தொட்டு கொண்டு -பேசி –நூபுர கங்கை-
பிரமன் இந்த ஒளி கேட்டு- திருஅடியில் திரு மஞ்சனம்
சதுர முகன் கையில் -சங்கரன் சடையில் தங்கி –கேசவ பாத தீர்த்தம்-பெற்று பரம பாகவதன் ஆனேன் –
கங்கை கங்கை என்னும் வாசகத்தாலே –
கலி யுகத்தில்-ஆழ்வார்கள் ஆச்சார்யர் அவதரித்து உய்ய வைப்பார்கள்
சங்கு சக்கர லாஞ்சனை கொண்டு உய்வார்கள்- வாரனாசி மகாத்ம்யத்தில் இது உண்டு ..
முக்தி நாத் -உயர்ந்த திவ்ய தேசம்-12  தேவ வருஷம் தவம் இருந்து கைங்கர்யம் பெற்றான் அரசன்
மாசி பௌர்ணமி சேவை சாதித்தார் முக்திநாதன்-
திரு அடி பக்கமிருந்து கைங்கர்யம் பெற ஆசை பட்டான்-
திரு மால் இரும் சோலை காட்டி கொடுத்தானாம்
கிருத மாலா நதி கரையில்- சப்த பர்வதம் மேல்
மலையத்வஜன் அவதாரம்- கைங்கர்யம் செய்தானாம் .
திரு குடந்தையில் அது போல் திரு மழிசை ஆழ்வார் கைங்கர்யம் –
இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான் முகற்க்கும் தெய்வம்-
ராவணன் ஆக்ஜை படி -நவ கரகம் தேவதைகள் செய்த பாவம் போதக பெருமாள் இடம் -கேட்க
பாகவத அபசாரம் போக்க சக்தன் இல்லை
பாத தூளி
ஆதி வாசுதேவ புரம்- படிக்கீழ் இருந்து பிராய சித்தம்-
பெரிய கோவில்
ஆர்யா பட்டாள் வாசல் கீழ் இன்றும் உண்டாம் அங்கும் ..
சிவனும் கேட்க -பக்தன் இராவணன் செய்த பாவத்தில் பங்கு உண்டே எனக்கும் –
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ பாத தீர்த்தம்-
ஈசான மூலையில்- இருக்க சொல்ல
காவேரி நதி அனைத்தும் ஸ்ரீ வைஷ்ணவ
கங்கையில் புனிதமாய காவேரி
திரு ஆனை கோவில் ஜல கண்டேச்வரர் –
இனி அறிந்தேன் காரணம் நீ -நற் கிரிசை நாரணன் நீ .
——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்