பிரவேசம் –
கீழ்த் திரு மொழியிலே
என்னை இப்போதே கண்ணபிரான் உள்ள ஏதாவது ஒரு இடத்திலே கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கோள் என்று
உறவினரை வேண்டினாள் –
இவள் படுகிற அவஸ்தைக் கண்ணால் கண்டவர்களும் கால் நடை தந்து போகக் கூடியவர்களோ –
அவர்கள் போக மாட்டாதபடி தளர்ந்து இருந்தார்கள்
தவிரவும் -அம்மா நீ இப்படி பதற்றமாகச் சொல்லல் ஆகாது –
பெண் பிறந்தார்க்கு இத்தனை பதற்றம் தகாது -என்றால் போலே
பழம் பாட்டுக்களையும் பாடிக் கொண்டு இருந்தார்கள்
அவர்களை நோக்கிச் சொல்லுகிறாள்
நீங்கள் என்னுடைய தசைக்குத் தகாதபடி பிரயோஜனம் அற்ற வார்த்தைகளைச் சொல்ல வேண்டா
என்னை அவன் பக்கல் கொண்டு போக மாட்டீர்கள் ஆகில்
அவன் இடம் இருநதாவது ஏதாவது ஒரு பிரசாரத்தை கொணர்ந்து எனக்குத் தந்து
அவ் வழியிலாவது என்னை வாழ்விக்கப் பாருங்கோள்-
என்கிறாள் இத் திரு மொழியிலே –
————————————————————————————————
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே –13-1-
பதவுரை
கண்ணன் என்னும்–ஸ்ரீக்ருஷ்ணனென்கிற
கரு தெய்வம்–கரியதொரு பரதேவதையினுடைய
காட்சி–காட்சியிலே
பழகி கிடப்பேனே–பழகிக் கிடக்கிற என்னைக் குறித்து (ஓ! தாய்மார்களே! நீங்கள்)
புறம் நின்று–அசலாக இருந்து கொண்டு
புண்ணில் புளி பெய்தால் போல–புண்ணிலே புளி ரஸத்தைச் சொரிந்தாற்போல்
அழகுபேசாதே–பணிக்கை சொல்வதைத் தவிர்ந்து,
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில்–பெண் பிறந்தாருடைய வருத்தத்தை அறியாதவனான கண்ணபெருமானுடைய திருவரையில் சாத்திய
பீதக வண்ணம் ஆடை கொண்டு–பீதாம்பரத்தைக் கொண்டுவந்து
வாட்டம் தணிய–(என்னுடைய) விரஹ தாபம் தீரும்படி
என்னை வீசீரே–என்மேல் வீசுங்கள்.
கண்ணபிரானுடைய காட்சியிலேயே பழகிக்கிடக்கிற என்னை நோக்கி நீங்கள் ஹிதோபதேஸம் செய்வதானது
புண்ணிலே புளிரஸத்தைச் சொரியுமா போலேயிராநின்றது,
‘பெண்ணே! நீ அப்படியிருந்தால் அழகாயிருக்கும், இப்படியிருந்தால் அழகாயிருக்கும்‘ என்று நீங்கள்
எனக்குச் சொல்லுகிற வார்த்தைகள் போதும், எனக்கு நீங்கள் ஒன்றும் அழகு பேச வேண்டா, உண்மையாக
எனக்கு ஏதாவது நன்மைபெறுவிக்க வேணுமென்ற கருத்து உங்களுக்குண்டாகில், பெண்பிறந்தார் படும் பாட்டை
அறியாதவனான கண்ணபிரானுடைய திருவரையிற் பீதாம்பரத்தைக் கொணர்ந்து அத்தாலேவீசி
என்னுடைய தாபத்தைத் தணிக்கப் பாருங்கள் என்கிறாள்.
கண்ணனென்றால் எல்லார்க்கும் மிகவும் எளியவன் என்று ப்ரஸித்தமாயிருந்தது, அந்த ப்ரஸித்தியானது இப்போது மாறிப்போய்
அவன் பரதேவதையாய்விட்டான் – ஸௌல பயம்மாறிப் பரத்வம் பொலியநின்றானென்றுங் கருத்துத் தோன்றக்
கண்ணனென்னங் கருந்தெய்வம் என்கிறாள். காட்சி – தர்ஸநம்,
அது பழகிக்கிடக்கையாவது -இப்போது அவன் ஸேவைஸாதிக்காவிட்டாலும் முன்பு ஸேவைஸரத்தித்தபடியை
ஸமரித்துக்கொண்டாகிலும் தரித்திருப்போமென்றால் அதுவும் முடியாதபடி முன்புகண்டகாட்சி நினைவுக்குவாராமல் அவ்வழி புல்முடிப்போகை.
அவனைஸேவித்து நெடுநாளாயிற்றுப்போலும். ஒரு பகலாயிரமுழியாய்த் தோற்றமிறே இனி,
“கண்ணனென்னுங்கருந்தெய்வங் காட்சிபழகிக்கிடப்பேனே“ என்பதற்கு
‘கண்ணபிரானைக்காணவேணு மென்பதையே அநளரதம் உருப்போட்டுக் கொண்டிருக்கிற என்னைக்றித்து‘ என்றும் பொருள்கொள்ளலாம்.
பழகுதலாவது -அப்யாஸம்பண்ணுதல், ஒன்றையே பலகால் ஆவ்ருத்திபண்ணுதல்.
புண்ணில் புளிப்பெய்தாலொக்குந் தீமை“ என்றார் பெரியாழ்வாரும். புண்ணிலே புளிரஸத்தைச் சொரிந்தால் பாதை பொறுக்கமுடியாது.
புறநின்று – எனக்கு நீங்கள் அந்தரங்கர்களாக இருந்து வார்த்தை சொல்லவேண்டியது தவிர்த்து அசலாகநின்று
வார்த்தை சொல்லுவது என்னே! என்கிறாள். புறம் நிற்கையாவது – அசலாரென்று தோற்றும்படியாக நிற்கை.
அழகுபேசுகையாவது – பணிக்கைசொல்லுகை. எனக்கு நீங்கள் பணிக்கை சொல்லவேண்டாமென்றாள்.
“பெண்ணின் வருத்தமளியாத பெருமான்“ என்றவிடத்திலே வியாக்கியான ஸ்ரீஸூக்தி –
“முலையெழுந்தார்படி மோவாயெழுந்தார்க்குத் தெரியாதிறேஎன்று பட்டரருளிச்செய்தாராக ப்ரஸித்தமிறே“ –
(மோவாயெழுகை யாவது – மீசைமுளைக்கை.)
“அரையில் பீதகவண்ண வாடைகொண்டு – என்கிறாளே, திருவரையில் சாத்தின பீதாம்பரமாகவேயிருக்க
வேணுமென்று என்ன நிர்ப்பந்தம்? மேலிட்ட உத்தரீயமானாலாகாதோ? என்று நஞ்சீயர் பட்டரைக்கேட்க.
“ஆண்டாள் கண்ணபிரானுடைய ஸ்வேதபரிமளத்திலே மிகவும் ஆசை கொண்டவள் காணும்,
மேலிட்ட உத்தரீயத்தில் அது ஆசைதீரக்கிடைக்குமென்று ‘அரையிற் பீதகவண்ணவாடைகொண்டு‘ என்கிறாள்“ என்றருளிச்செய்தாராம்.
பீதகவண்ணவாடை – பீதமென்ற வடசொல் சுப்ரத்யயமேற்றுப் பீதகமென்றாயிற்று,
பீதகவண்ணம் – பொன்வர்ணமான, ஆடை – அதாவது பீதாம்பரம். ஆண்டாளுடைய தாபத்தின்மிகுதியைக் கண்ட
தாய்மார்கள் விசிறியைக் கொணர்ந்து அதனால் விசிறத் தொடங்க, நீங்கள் இதனால் என்னுடைய தாபத்தைத் தணிக்கமுடியாது,
அவனுடைய பீதாம்பரத்தைக் கொணர்ந்து அத்தால் விசிறினால்தான் வாட்டந்தணியுமென்கிறாள் – என்று
ஒருகால் அழகிய மணவாளச்சீயர் உபந்யஸித்தருளினபடி.
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
கண்ணபிரான் உடைய காட்சியிலே பழகிக் கிடக்கிற என்னை நோக்கி நீங்கள் –
கண்ணன் என்றால் எளியவன் -சௌலப்யம் –
அது மாறி பரத்வமே மிக்கு பொலிய நின்றான்-
கண்ணன் என்னும் கரும் தெய்வம் –
காட்சி -தர்சனம்
அது பழகிக் கிடக்கையாவது
இப்போது சேவை சாதிக்கா விட்டாலும்
முன்பு அளித்த சேவை ஸ்மரித்து கொண்டாகிலும் தரிக்கப் பார்த்தால்
அதுவும் முடியாதபடி காட்சி நினைவுக்கு வாராமல் அவ்வழி புல் மூடிப் போகை-
சேவை நெடு நாள் முன்பு போலே
ஒரு பகல் ஆயிரம் ஊழியாய் தோற்றும் இ றே-
அன்றிக்கே
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை -என்றது
காண வேணும் என்று அநவரதம் உருப் போட்டு கொண்டு இருக்கிற என்னைக் குறித்து ‘
பழகுதல் -அப்யாசம் -பலகால் ஆவ்ருத்தி பண்ணுதல்
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே –
ஹிதோபதேசம் செய்வதாவது
புண்ணிலே புளி ரசத்தை சொரியுமா போலே இரா நின்றது
பெண்ணே நீ அப்படி இருந்தால் அழகாக இருக்கும்
இப்படி இருந்தால் அழகாக இருக்கும் என்று சொல்லுகிற வார்த்தைகள் போதும்
நீங்கள் எனக்கு அழகு பேச வேண்டா –
புண்ணில் புளி பெய்தால் போலே –
ஷதேஷாரமிவ –
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை -பெரியாழ்வார் –
புற நின்று –
அந்தரங்கர்களாக நின்று வார்த்தை சொல்ல இருக்க
அசலார் என்று தோற்றும்படி நிற்கை
உண்மையாக நீங்கள் எனக்கு நன்மை பெறுவிக்க கருத்து பட்டீர்கள் ஆனால்
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே
பெண் பிறந்தார் படும் பாட்டை அறியாதவனான கண்ணபிரான்
திருவரையில் பீதாம்பரத்தைக் கொணர்ந்து
அத்தாலே வீசி
என்னுடைய தாபத்தை தணிக்கப் பாருங்கோள்
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
முலை எழுந்தார் படி
மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இ றே
என்று பட்டர் அருளிச் செய்ததாக பிரசித்தம் -இ றே
மோவாய் -மீசை –
அரையில் பீதக வண்ண வாடை கொண்டு -என்கிறாளே
திருவரையில் சாத்தின பீதாம்பரமாகவே இருக்க வேணும் என்று என்ன நிர்பந்தம்
மேலிட்ட உத்தரீயம் ஆனால் ஆகாதோ -என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க
ஆண்டாள் கண்ணபிரான் உடைய ஸ்வேத பரிமளத்தில் மிகவும் ஆசை கொண்டவள் காணும்
மேலிட்ட உத்தரீயத்தில் அது விசேஷமாகக் கிடைக்காது
திருவரையில் பீதாம்பரத்தில் தான் அது ஆசை தீரக் கிடைக்கும் என்று
அரையில் பீதக வண்ண வாடை கொண்டு -என்கிறாள் -என்று அருளிச் செய்தாராம்
பீதக வண்ணவாடை
பீதம் என்ற வடசொல் க பரத்யயம் ஏற்று –பீதகம் -என்றாயிற்று –
பொன் வர்ணமான பீதாம்பரம்
ஆண்டாள் உடைய தாபத்தைக் கண்ட தாய்மார்கள் விசிறி கொண்டு விசறத் தொடங்க
நீங்கள் இதனால் என்னுடைய தாபத்தை தணிக்க முடியாது
அவனுடைய பீதாம்பரத்தைக் கொணர்ந்து
அத்தால் வீசினால் தான் வாட்டம் தணியும் -என்கிறாள்
என்று ஒரு கால் அழகிய மணவாள சீயர் உபன்யசித்து அருளின படி –
—————————————————————————————————-
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்பம் பெய்தால் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே
கோலால் நிரை மேய்ந்தானாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே–13-2-
பதவுரை
பால் ஆலிலையில்–பால் பாயும் பருவத்தை யுடைய ஆலந்தளிரிலே
துயில் கொண்ட–கண் வளர்ந்தருளின
பரமன்–பெருமானுடைய
வலை–வலையிலே
பட்டிருந்தேனை–அகப்பட்டுக் கொண்டிருக்கிற என்னைக் குறித்து
வேலால் துன்னம் பெய்தால் போல்–வேலாயுதத்தை யிட்டுத் துளைத்தாற்போல் (கொடுமையாக)
வேண்டிற்று எல்லாம் பேசாதே–உங்களுக்குத் தோன்றின படி யெல்லாம் சொல்வதைத் தவிர்ந்து
ஆயன் ஆய்–இடைப் பிள்ளையாய்
கோலால்–(இடைச் சாதிக்கு உரிய) கோலைக் கொண்டு
நிரை மேய்த்து–பசுக் கூட்டங்களை மேய்த்தவனாய்
குடந்தை கிடந்த–திருக் குடந்தையில் திருக் கண்வளர்ந்தருளுமவனாய்
குடம் ஆடி–குடக் கூடத்தாடினவனுமான கண்ணபிரானுடைய
நீல்ஆர் தண்அம் துழாய் கொண்டு–பசுமை பொருந்திக் குளிர்ந்து அழகிய திருத் துழாயைக் கொண்டு வந்து
நெறி மென்–நெறிப்புக் கொண்டதாயும் மிருதுவாயு மிருந்துள்ள
என் குழல்மேல்–என் கூந்தலிலே
சூட்டீர்–சூட்டுங்கள்
தாய்மார்களே! நீங்கள் எனக்கு ஹிதஞ்சொல்வதாக நினைத்துப் பல பேச்சுக்களைப் பேசுகிறீர்கள்,
எப்படியாவது என்நெஞ்சைக் கண்ணபிரானிடத்தில் நின்றும் மீட்கவேணுமென்று பார்க்கிறீர்கள்,
நான் அவ்விஷயத்தில் அவகாஹிப்பதற்குமுன்பு நீங்கள் ஹிதஞ்சொல்லியிருந்தால் ஒரு கால் ப்ரயோஜநப்பட்டிருக்கலாம்,
வெள்ளம் கடந்தபின்பு அணை கட்டுவாரைப்போலே, அவ்விஷயத்திலே நான் அற்றுத் தீர்ந்தபின்பு
என்னை நீங்கள் மீட்கப்பார்த்துப் பயனென்? நானோ, “பாலகனென்று பரிபவஞ்செய்யேல் பண்டொருநாள்,
ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவனிவன்“ என்னும் படியான கண்ணபிரானாகிற வலையிலே சிக்கிக் கொண்டேன்,
அதில் தப்பநீங்க என்னாலும் முடியாது, உங்களாலும் தப்புவிக்கமுடியாது,
இப்படிப்பட்ட நிலைமையில் சொல்வதானது வெறும் பேச்சாயில்லை, வேலாயுதத்தையிட்டுத் துளைக்கிறாப்போல்
அத்தனை பாதகமாயிரா நின்றது. இப்போது எனக்கு நீங்கள் உண்மையாக ஏதாவது நன்மைசெய்ய விரும்புதிரேல்,
ஸௌஸீல்ப ஸௌலப்யாதி குணங்கள் விளங்கநின்ற அக்கண்ணபிரானுடைய ஸம்பந்தம் பெற்றதொரு திருத்துழாய்மலரைக்
கொணர்ந்து என் குழலிலே சூட்டுங்கள் அதுவே எனக்குற்ற நன்மையாகும் என்கிறாள்.
பாலாலிலே என்றது பால்பாயும் பருவமான ஆலிலே என்றபடியாய் மிகவும் இளைசான இலையைச் சொன்னபடி.
கல்பத்தின் முடிவில் உலகங்களையெல்லாம் எம்பெருமான் தன்திருவயிற்றில் வைத்து
ஓர் ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருள்வதாக நூறுகொள்கை.
“வலைப்பட்டிருந்தேனே“ என்றவிடத்து வியாக்கியான ஸ்ரீஸூக்தி “பெரியாழ்வார் மகளிறே,
பரிவரில்லாதவிடத்திலே சாய்ந்தானென்று அதிலே நெஞ்சை வைத்திருக்கையாலே கால்வாங்கிப் போகமாட்டாதே சிறைப்பட்டிருந்தாள்காணும்“
தாய்மார்களே ஹிதம் சொல்வதாக பல பேசி மீட்கப் பார்க்கிறீர்கள் அவனிடம் அற்றுத் தீர்ந்த பின்பு-
வெள்ளம் கடந்த பின்பு -அணை கட்டுவாரைப் போலே -நானோ –
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டொரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன் -என்னும்படியாகிற
கண்ணபிரான் உடைய வலையிலே சிக்கிக் கொண்டேன்
அதில் தப்பி நீங்க என்னாலும் முடியாது
உங்களாலும் தப்புவிக்க முடியாது –
வேலால் துன்பம் பெய்தால் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே –
இந்த நிலைமையிலே நீங்கள் சொல்லும் ஹிதம் வெறும் பேச்சாய் இல்லை –
வேலாயுதத்தை இட்டுத் துளைக்கிறாப் போலே அத்தனை பாதகமாய் இரா நின்றது
இப்போது நன்மை செய்ய விரும்புதீரேல் ஆனால் –
கோலால் நிரை மேய்ந்தானாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி-
சௌசீல்ய
சௌலப்யாதி
குணங்கள் -விளங்க நின்ற அக் கண்ணபிரான் உடன் சம்பந்தம் பெற்ற
நீலார் தண்ணம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே
ஒரு திருத் துழாய் மலரைக் கொணர்ந்து
என் குழலிலே சூட்டுங்கோள் –
பாலாலிலை -பால் பாயும் பருவமான ஆலிலை –
மிகவும் இளசான இலை-
கல்பத்தின் முடிவில் உலகங்களை திரு வயிற்றிலே வைத்து ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளினான் –
வலைப்பட்டு இருந்தேனை –
பெரியாழ்வார் மகள் இ றே
பரிவர் இல்லாத இடத்திலே சாய்ந்தான் என்று
அதிலே நெஞ்சை வைத்து இருக்கையாலே
கால் வாங்கிப் போக மாட்டாதே
சிறைப் பட்டு இருந்தாள்-காணும் –
——————————————————————————————————
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால்
நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே —13-3-
பதவுரை
கஞ்சை–கம்ஸனை
காய்ந்த–தொலைத்தவனாயும்
கரு வில்லி–பெரியவில் போன்ற புருவத்தை யுடைனாயு மிருக்கிற கண்ண பிரானுடைய
கடைக்கண் என்னும்–கடைக் கண்ணாகிற
சிறை கோலால்–சிறகையுடைய அம்பாலே
நெஞ்சு ஊடுருவ–நெஞ்சமுழுதும்
வேவுண்டு–வெந்து போம்படியாகப் பெற்று
நிலையும் தளர்ந்து–நிலைமை குலைந்து
நைவேனை–வருந்துகின்ற என்னை நோக்கி
அஞசேல் என்னானவன் ஒருவன்–“பயப்படாதே“ என்றொரு வார்த்தையும் சொல்லாதவனாய் விஜாதீயனான
அவன் -அப்பெருமான்
மார்வு அணிந்த–(தனது) திருமார்பில் சாத்தி யருளின
வன மாலை–வன மாலையை
வஞ்சியாதே–மோசம் பண்ணாமல்
தரும் ஆகில்–கொடுத்தருள்வனாகில்
கொணர்ந்து–(அம் மாலையைக்) கொண்டு வந்து
மார்வில்–(என்னுடைய) மார்பிலே
புரட்டீர்–(நெஞ்சினுள் வெப்பம் தீருமாறு) புரட்டுங்கள்
கம்ஸனைக் கொண்றொழித்தவனும் சார்ங்கவில்போன்ற திருப்புருவங்களையுடையனுமான கண்ணபிரானுடைய
கடாக்ஷங்களிலே நான் மிகவும் ஈடுபட்டு ஆற்றமாட்டாமல் நிலை தளரந்துபோக நின்றேன்,
இப்படிப்பட்ட நிலைமையில் வேறு உதவியொன்றுஞ் செய்யாமற்போனாலும் “நானிருக்கிறேன், பயப்படாதே“ என்றொரு
வாய்ச்சொல்லாவது சொல்லலாமே அவன், அதுவும் சொல்லக் காணோம் நீங்களாவது அவனிடஞ்சென்று
என் பரிதாப நிலைமையை விண்ணப்பஞ்செய்து அவனையே ஸகாக்ஷாத்தாக இங்கு அழைத்துவர முடியாமற் போனாலும்
அவன் திருமார்பிலே சாத்திய வனமாலையையாவது கொடுக்குமாறு கேளுங்கள்
அவனும் அதனை வஞசியாமல் கொடுத்தருளினானாகில் கொணர்ந்து நெஞ்சூடுருவ வேவுண்ட எனது நெஞ்சில்
தாபம் ஆறும்படி மார்பிலே புரட்டுங்கள் என்கிறாள்.
கஞ்சன் என்றசொல் இங்கே கஞ்சு எனச் சிதைந்து கடக்கிறது. காய்ந்த – காய்தல் – கோபித்தலாய்,
அதன்காரியமான முடித்தலைச்சொல்லுகிறது, கம்ஸனைமுடித்த -என்றதாயிற்று.
கருவில்லி “வில் போன்ற புருவத்தை யுடையவன்“ சொல்லியிருப்பது – முற்றுமை.
இதனை வடநூலார் அலங்கார ஸாஸ்தரத்தில் ரூபகாதிசயோக்தி என்பர்.
கடைக்கணென்னும் சிறைக்கோலால் –
“ஏழையராவி புண்ணும் இணைக்கூற்றாங் கொலோவறியேன், ஆழியங்கண்ணபிரான் திருக்கண்கள்கொலோ“ என்றும்,
பாவியேன்றன்னையடுகின்ற கமலக்கண்ணதோர்“ என்றுமு சொல்லுகிறபடியே
எம்பெருமானுடைய திருக்கணோக்கம் விஸ்லேஷதஸையிலே, மிகவும் துன்பப்படுத்தவற்றாதல் பற்றி
“கடைக்கணென்னுஞ் சிறைக்கோலால் நெஞ்சூடுருவ்வேவுண்டு“ என்கிறாள்.
“ஆஸ்ரிதரோடு வாசியற எல்லாரையும் கோலாலே கொல்லுவன் எம்பெருமான்“ என்று
அழகிய மணவாளச்சீயர் ரஸோக்தியாக அருளிச்செய்யும்படி. அதாவது –
“கொல்லாமாக்கோல் கொலைசெய்து பாரதப்போர் எல்லாச்சேனையும் இரு நிலத்தவித்த வெந்தாய்“ (திருவாய்மொழி ) என்கையாலே
அநாஸ்ரிதரைக் கொல்லுகைக்கு ஒரு யாலே ஆஸ்ரிதலைக் கொல்லுகைக்கும் ஒருகோல் பரிகரமாயிற்று என்க.
சிறைக்கோல் – கோல் என்று அம்புக்குப் பெயர், சிறைக்கோலென்றது – இறகுகளையுடைய அம்பு என்றபடி
அல்லது, சிறைச்சாலையில் உபயோகிக்கப்படும் அடிகோல் என்றும் பொருள்கொள்ளலாம்
ஹிம்ஸிப்பதில் வல்லமைவாய்ந்தகோல் என்பது தேர்ந்தகருத்து.
ஸாதாரணமான அம்புகளைப்போல் தோல்புரையைபட்டு நில்லாமல் நெஞசிலேபட்டு மர்மஸ்பர்ஸியாய்ப்
பெறுக்கவொண்ணாத துன்பத்தைத் தருகின்றமை தோன்ற “நெஞ்சூடுவ்வேவுண்டு“ என்கிறாள்.
அம்புபட்டால் நாலடி நடந்துசென்று பிறகு தளர்த்தியுண்டாகும்,
அவனுடைய நோக்கிற அம்புபட்டால் “நிலையுந்தளர்ந்து நைவேனே“ என்கிறாள்
நைவேனை – ஸந்திபந்தங்கள் குலைந்து ஸைதில்பத்தை படைத்த என்னை என்றபடி.
வனமாலை -(ஆபதபத்மம் யாமாலா வநமோலேதி ஸ மதா, எனபர் வடநூலார்,
வனம் என்பதற்கு பல்பொருள்களில் அழகு என்னும் பொருளையும், துளஸி என்னும் பெர்ருளையும் இங்கே விவக்ஷித்து,
அழகியமாலை, அல்லது – திருத்துழாய்மாலை என்றுபொருள் கொள்வதம் நன்றே.
வஞசியாதே தருமாகில் – நீங்கள் அப்பெருமானிடத்துச் சென்று
“ஆண்டாளுக்காக உன் மார்வணிந்த வனமாலையைக் கொடுத்தருள்“ என்று கேட்டால்“
அவன் * வஞ்சக் கள்வன் மாமாயனாகையாலே தன்னுடைய புன் முறுவலைக் காட்டி கடாக் ஷவிக்ஷண சாதுரியத்தைக் காட்டியும்
உங்களைமயக்கி நீங்கள் வந்தகாரியத்தை மறந்தொழியும்படி செய்து மோசப் பண்ணிவிட்டாலும் விடுவன்.
அப்படி வஞசனை பண்ணாமல் திருமார்வுமாலையைத் தந்தருளினானாகில்அதனைக் கொணர்ந்து
என் தலையில் சூட்டப் பாராமல் புண்பட்டவிடத்தில் பரிஹரிக்க வேண்டுமாதல்பற்றி மார்பிலே புரட்டி
* நெஞ்சூடுருவ்வேவுண்ட தாபமெல்லாம் தணியும்படி செய்யுங்கள் என்கிறாள்.
அவன்றன்னையே முடிந்தது. அணையவேணுமென்று பட்டஆசை மாலையிலே சென்று முடிந்தது.
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால்
கம்சனை கொன்று ஒழித்தவனும்
சாரங்க வில் போன்ற திருப் புருவங்களை யுடையவனுமான
கண்ணபிரான் உடைய கடாஷங்களிலே
சிறகை யுடைய அம்பால் –
நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை –
நான் மிகவும் ஈடுபட்டு
ஆற்ற மாட்டாமல்
நிலை தளர்ந்து நைந்து போகா நின்றேன் –
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
இப்படிப் பட்ட நிலையிலும்
வேறு உதவி ஒன்றும் செய்யாமல் போனாலும்
மா சுச -என்று ஒரு வாய்ச் சொல்லாவாது சொல்லலாமே –
அதுவும் சொல்லக் காணோம்
நீங்களாவது அவனிடம் சென்று
என் பரிதாப நிலைமையை விண்ணப்பம் செய்து
அவனையே சாஷாத்தாக இங்கு அழைத்து வர முடியாமல் போனாலும்
அவன் திரு மார்பிலே சாத்திய வனமாலை யாவது கொடுக்குமாறு கேளுங்கோள் –
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே –
அவனும் அதனை வஞ்சியாது கொடுத்து அருளினான் ஆகில் கொணர்ந்து
நெஞ்சுடுருவ வேவுண்ட-எனது நெஞ்சிலே தாபம் ஆறும்படி
மார்பிலே புரட்டுங்கோள் –
கஞ்சன் -சிதைந்து கஞ்சு –
காய்ந்த கோபித்தலாய் –அதன் கார்யமான -முடித்தலை சொல்லிற்று
கருவில்லி -முற்றுவமை -ரூபக அதிசய உக்தி –
கடைக் கண் என்னும் சிறைக் கோலால் –
ஏழையர் ஆவி யுண்ணும் இணைக் கூற்றம் கொலோ அறியேன் –
ஆழி யம் கண்ணபிரான் திருக் கண்கள் கொலோ -என்றும்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணதோர் -என்றும்
சொல்லுகிறபடியே எம்பெருமான் உடைய திருக் கண் நோக்கம் விஸ்லேஷ தசையில்
துன்பப் படுத்துவதால் –
கடைக் கண் என்னும் சிறைக் கோலால் -நெஞ்சூடுருவ வேவுண்டு என்கிறாள் –
ஆஸ்ரிதரோடு அநாஸ்ரிதரோடு வாசி அற எல்லாரையும் கோலாலே கொல்லுவான் எம்பெருமான்
என்று ரசோக்தியாக அருளிச் செய்வர் அழகிய மணவாள சீயர்
அதாவது
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்தவித்த எந்தாய் -திருவாய் -3-2-3-
அநாஸ்ரிதரை கொல்லுகைக்கு ஒரு கோல் பரிகரம் ஆயிற்று
இங்கே ஆஸ்ரிதரை கொல்லுகைக்கு
கடைக் கண் என்னும் சிறைக் கோலால் -என்று ஒரு கோல் பரிகரம் ஆயிற்று
கோல் -என்று அம்புக்கு பெயர்
சிறைக் கோல் -சிறகுகளை யுடைய அம்பு
அன்றிக்கே சிறைச் சாலையில் உபயோகிக்கும் அடிக்கோல்
தோல் புரையே பட்டு நில்லாமல்
மர்ம ஸ்பர்சியாய் பொறுக்க ஒண்ணாத துன்பம் என்பதால்
நெஞ்சூடுருவ வேவுண்டு என்கிறாள் –
அம்பு பட்டால் நாலடி நடந்து சென்ற பின்பு தளர்ச்சி அடைவோம்
இங்கே நின்ற நிலையிலே துடித்து விழும்படி யாகும் -என்கிறாள்
நிலையும் தளர்ந்து நைவேனை -சந்தி பந்தங்கள் குலைந்து
சைதில்யத்தை யடைந்த என்னை –
வனமாலை –
ஆபாத பத்மம் யாமாலா வனமாலேதி சா மதா
வனம் -அழகு துளசி
அழகிய மாலை –திருத் துழாய் மாலை –
வஞ்சியாதே தருமாகில்
அவன்
வஞ்சக் கள்வன் மா மாயன் ஆகையாலே
தன புன்முறுவலைக் காட்டி
கடாஷ வீஷண சாதுர்யத்தைக் காட்டி
உங்களை மயக்கி
நீங்கள் வந்த கார்யத்தையும் மறக்கப் பண்ணி மோசம் செய்ய வல்லவன்
அப்படி பண்ணாமல்
திரு மார்பு மாலையைத் தந்து அருளுவான் ஆகில்
அதனைக் கொணர்ந்து என் தலையிலே சூட்டப் பாராமல்
புண்பட்ட இடத்திலே பரிஹரிக்க வேண்டும் ஆதலால்
மார்பிலே புரட்டி நெஞ்சூடுருவ வேவுண்ட தாபம் எல்லாம்
தணியும் படி செய்யுங்கோள் –
அவன் தன்னையே நேராக மார்பிலே அனைய வேணும் என்று ஆசை
அந்தோ மாலையிலே சென்று முடிந்தது –
——————————————————————————————–
ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே–13-4-
பதவுரை
ஆயர்பாடி–திருவாய்ப்பாடி முழுவதையும்
கவர்ந்து உண்ணும்–கொள்ளை கொண்டு அநுபவிக்கிற
கார் ஏறு–ஒரு கறுத்த காளை போன்ற கண்ணன்
உழக்க–ஹிம்ஸிக்க
உழக்குண்டு–(அதனால்) துன்பப்பட்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை–பலவகையான் சைதில்யங்களை யடைந்து நொந்து கிடக்கிற என்னை
உலகத்து–இவ் வுலகத்திலே
ஆற்றுவர்–தேறுதல் சொல்லி ஆறச் செய்பவர்
ஆரே–ஆருண்டு (யாருமில்லை)
(“நாங்களிருக்கிறோமே, அம்மா! உனக்கு என்ன செய்யவேணும் என்று தாய்மார் கேட்க
இராமபிரானிடத்து ஆசைப்பட்டோமாகில் (பஹவோ! கல்யாணகுணா, புதுரஸ்ய ஸந்திதே) என்படி
அவன் குணங்கடலாகையாலே அந்க் குணங்களை நம்பியநுஸந்தாநஞ்செய்து கொண்டு ஒருவாறு தத்தத்திருங்கள்
(பிராட்டி தரித்திரதார்போல்) க்ருஷ்ணலனுடைய தீம்பில் புண் பட்டவர்கள் அப்படித் தரித்திருதாற்போல்
க்ருஷ்ணனுடைய தீம்பீலே புண்பட்டவர்கள் அப்படித் தரித்திருக்க முடியமோ?
திருவாய்ப்பாடியிலுள்ள அஞசுலக்ஷங்குடிற் பெண்களளவிலே செய்யவேண்டிய தீபுகளையெல்லாம் அவன் ஒருமடைசெய்து.
“ என்னொருத்தியளவிலே செய்யா நின்றான் நான் எப்படி பிழைக்கமுடியும்?
அம்புபட்ட புண்வாயை மருந்திட்டு ஆற்றலாம் அவனது தீம்புகட்கு விஷயமாகித் தளர்ந்தும் முறிந்துவிடக்கிடக்கின்ற என்னை
இவ்வுலகத்தில் ஆறுவாருண்டா? என்று சொல்லிக்கொண்டே இளைத்து வீழ்த்து நெடும்போது ஷம்ஜஞையிற்க்கிடந்தாள் ஆண்டாள்.
அவ்வளவிலே நிதானமறிந்த, சிலர், அம்ருதத்தையிட்டு இவளுடைய மயக்கத்தைத் தீர்க்கலாமென்றெனண்ணி
ஆராமுவது இத்யாதீகளான பசுவந்நாமங்களைச் செவிப்பட வுரைக்க அதுகேட்டவாறே தெளிந்தெழுந்து பின்னடிகளருளிச் செய்கின்றாள்.
அமுதத்திலேயுண்டான ஓரமுதத்தைக் கொணர்ந்து நான் சருகாய் உலர்ந்துபோவதற்குமுன்னே
என்னைப் பானம் பண்ணுவித்து என்னுடைய இளைப்பை நீக்கப்பாருங்களென்கிறாள்.
ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
திருவாய்ப்பாடி முழுவதையும் கொள்ளை கொண்டு அனுபவிக்கிற –
காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை –
ஒரு கறுத்த காளை போன்ற கண்ணன்
ஹிம்சிக்க
அதனால் துன்பப் பட்டு
பலவகையான சைதில்யங்களை அடைந்து
நொந்து கிடக்கிற என்னை
ஆரே யுலகத் தாற்றுவார்
இந்த உலகத்தில் தேறுதல் சொல்லி ஆரச் செய்பவர் யாரும் இல்லை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி பிறவாத
அம்ருதம் போன்ற கண்ணபிரான் உடைய
அம்ருதம் சுரக்கிற திரு வாயிலே ஊறிக் கிடக்கிற
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே
ரசத்தை யாவது
உலராமல் பசையோடு கொண்டு வந்து
அதை நான் பருகும்படி பண்ணி
எனது ஆயாசத்தை பரிஹரிக்கப் பாருங்கோள்
இராம பிரான் இடத்தில் ஆசைப் பட்டோம் ஆகில்
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரச்ய சந்திதே-என்றபடி
அவன் கல்யாண குணக் கடல் ஆகையாலே
அந்த குணங்களை நம்பி அனுசந்தானம் செய்து கொண்டு ஒருவாறு
தரித்து இருக்கலாம் -பிராட்டி தரித்து இருந்தால் போலே –
கிருஷ்ணன் உடைய தீம்பிலே புண் பட்டவர்கள் அப்படி தரித்து இருக்க முடியுமோ
திருவாய்ப் பாடியில் உள்ள அஞ்சு லஷம் பெண்கள் அளவிலே செய்ய வேண்டிய தீம்புகளை எல்லாம்
அவன் ஒரு மடை செய்து என் ஒருத்தி அளவிலே
செய்யா நின்றால் நான் எப்படி பிழைக்க முடியும் –
அம்புற்ற புண் வாயை மருந்திட்டு ஆற்றலாம்
அவனது தீம்புகட்கு விஷயமாகி
தளர்ந்தும் முறிந்தும் கிடக்கின்ற என்னை
இவ்வுலகத்தில் ஆற்றுவார் யுண்டோ -என்று சொலிக் கொண்டே
இளைத்து வீழ்ந்து நெடும் போது சம்ஞ்ஞை அற்றுக் கிடந்தாள் ஆண்டாள்
அவ்வளவிலே நிதானம் அறிந்த சிலர் அம்ருதத்தை இட்டு
இவளுடைய மயக்கத்தை தீர்க்கலாம் என்று எண்ணி
ஆராவமுது -இத்யாதிகளால் பகவத் நாமங்களை செவிப்பட யுரைக்க
அது கேட்ட வாறே தெளிந்து எழுந்து
பின்னடிகளை அருளிச் செய்கிறாள்
அமுதத்திலே யுண்டான
ஓர் அம்ருதத்தை கொணர்ந்து நான் சருகாய் உலர்ந்து போவதற்கு முன்னே
என்னைப் பானம் பண்ணுவித்து
என்னுடைய இளைப்பை நீக்கப் பாருங்கோள் -என்கிறாள் –
——————————————————————————————–
அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றுச் சுழன்று போகானால்
தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி வருகின்ற
குழலின் துளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே –13-5-
பதவுரை
அழிலும்–அழுதாலும்
தொழிலும்–தொழுதாலும்
உருக்காட்டான்–தன் வடிவைக் காட்டாதவனாயும்
அஞ்சேல் என்னானவன்–(உருவைக் காட்டாவிடினும் “அஞ்சேல்“ என்ற சொல்லும் சொல்லாதவனாயுமுன்ள
ஒருவன்–ஒரு மஹாநுபாவன் (கண்ணன்
புகுந்து–இங்கே வந்து
என்னை தழுவி முழுசி–என்னை நெருக்கி யணைத்து
சுற்றி சுழன்று–முன்னும் பின்னும் சூழ்ந்து கொண்டிருந்து
போகான்–போகாமலிருக்கான்
ஆல்!–இது உண்மையான அநுபவமல்லாமல் மாநஸாநுபவ மாத்ரமான உரு வெளிப்பாடாகையாலே துக்கம்
தழையின் பொழில் வாய்–பீலிக் குடைகளாகிற சோலையின் கீழே
நிரை பின்னே–பசுக் கூட்டங்களின் பின் புறத்திலே
நெடு மால்–வ்யாமுத்தனான கண்ண பிரான்
ஊதி வருகின்ற–ஊதிக் கொண்டு வரப் பெற்ற
குழலின் துளைவாய்–புல்லாங்குழலின் த்வாரங்களிலுண்டாகிற
நீர் கொண்டு–நீரைக் கொணர்ந்து
முகத்து–என்னுடைய முகத்திலே
குளிர தடவீர்–குளிர்த்தியாகத் தடவுங்கள்
அப்பெருமானை ஸாக்ஷாத்கரிக்க வேணுமென்றும் அவன் சோதி வாயாலே அபய ப்ரதாநம் அருளப்பெறவேணுமென்றும்
ஆசை கரைபுரண்டு அதற்காகச் சிறுபயல்கள் செய்யும் உபாயத்தையுஞ் செய்வேன், மேலையார் செய்யுமுபாயத்தையும் செய்வேன்,
(அதாவது -கண்ணீரைப் பெருகவிட்டு அழுவேன், ப்ரஹ் நேரிலே வந்து திருவுருவைக் காட்டுவதுமில்லை,
ஆகாஸ வாணிசொல்லுமாபோலே அஸரீரியாகவாகிலும் நின்று “அஞ்சேல்“ (பயப்படாதே, நானிருக்கிறேன்)
என்றொரு வார்த்தை சொல்வதுமில்லை, இப்படி ஸர்வாத்மநா உபேக்ஷைபண்ணிக் கிடக்கிற அவனை மறந்தாகிலும்
ஒருவாறு ஆறியிருப்போமென்று பார்த்தாலோ, அப்படியுமிருக்க வொண்ணாதபடி உருவெளிப்பாட்டாலே ஹிம்ஸிக்கின்றானே!,
(உருவெளிப்பாடாவது -மெய்யாகவந்து ஸம்ஸ்லே ஷம்கொடாமல் மாநஸாநுபவ மார்ரத்துக்கு விஷயமாம்படி தனது
எல்லா அவயவங்களையும் அருகே உலவச் செய்தல், இத்தகைய அநுபவம் நம்மாழ்வாருடைய திருவாய்மொழியில்,
எங்ஙனேயே வன்னைமீர்காள்!“ -“ஏழையராவியுண்ணும்“ என்ற இரண்டு திருவாய்மொழிகளில் நிகழ்ந்தமை அறியத்தக்கது.
இந்தஹிம்ஸைக்குப் பரிஹாரமுறைவுறுவன பின்னடிகள். பெரியாழ்வார் திருமொழியில்
“தழைகளுந் தொங்கலுந் ததும்பியெங்கும் தண்ணுமையெக்கம் மத்தளிதாழ்பீலிக், குழல்களுங் கீதமுமாகி யெங்குங்
கோவிந்தன் வருகின்ற கூட்டங்கண்டு“ என்றுதொடங்கிப் பத்துப்பாட்டாலும் விஸ்த்ர்ரரமாக அருளிச்செய்தபடியே)
பசுக்களின் பின்னே பரமபோக்யமாக எழுந்தருளாநின்ற கண்ணபிரான் குழலூதிக்கொண்டே வருவனே,
அக் குழலின் துளைகளிலே அவனது துசோதிவாயின் அழுதப்புனல் நிரம்பிக் கிடக்குமே அந்த நீரைக் கொண்டு வந்து,
குளிர்த்தி யுண்டாம்படி என்முகத்திலே தடவுங்களென்கிறாள்.
“குழலிருண்டு சுருண்டேறியகுஞ்சிக் கோவிந்தனுடைய கோமளவாயில், குழல் முழைஞ்சுகளினூடு குமிழ்த்துக்
கொழித்திழிந்த வமுதப்புனல் தன்னை“ விரும்புகிறாளாய்த்து வேய்ங்குழலை வாயில்வைத்து ஊதும்போது
வாயைக்கொப்பளித்தால், உமிழ்நீர் குழலின் துளைவழியாக வெளிவருமென்க.
அழிலுந்தொழிலும் என்றவிடத்து வியாக்கியானத்திலே -“பக்திப்ரபத்திகளிரண்டுக்கும் வாசியறுத்தான்“ என்றருளிச்செய்வர்.
பெரியவாச்சான் பிள்ளை. அழுகையாவது காயக்லேஸரூபமாகையாலே தாத்ருஸமானபக்தியைச் சொன்னபடி,
தொழுகையென்று ப்ரபத்தியைச் சொன்னபடி
(த்ரௌபத்யா ஸஹிதாஸ்ஸர்வே நமஸ்சக்ருர்ஜநார்த்தநம்) என்றவிடத்து நமஸ்காரமாவது ப்ரபத்தி -என்றதிறே.
அவனொருவன் என்கிறாள் – பேரையிட்டுச் சொல்லவும் வெறுப்புமிக்கது போலும்
ஹிம்ஸையின் கொடுமை தோற்றும் இதனால்.
அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் –
அவனை சாஷாத் கரிக்கவும்
அவன் சோதி வாயால் அபயப்ரதானம் அருளப் பெற வேணும் என்றும் ஆசை கரை புரண்டு
சிறு பயல்கள் செய்யும் உபாயத்தையும் செய்வேன்
மேலையார் செய்யும் உபாயத்தையும் செய்வேன்
அதாவது
கண்ணீரை பெருக விட்டு அழுதாலும்
ப்ரஹ்மாஸ்த்ர பிரயோஹம் பண்ணினால் போலே தொழுதாலும்
எது செய்தாலும்
தன் வடிவைக் காட்டாதவனாய் –
பக்தி பிரபத்தி கள் இரண்டுக்கும் வாசி அறுத்தான்
அழுகை காய கிலேச ரூபம் ஆதலால்தாத்ருசமான பக்தி
தொழுகை -பிரபத்தி
த்ரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தனம் -நமஸ்காரம் -பிரபத்தி
காட்டாவிடிலும்
அசரீரியாக மாசுச –
அஞ்சேல் என்று சொல்லும் சொல்லாதவனாய்
உள்ள ஒரு மகானுபாவன்
உபேஷை பண்ணிக் கிடக்கிற அவனை மறந்தும் ஆறி இருக்க ஒட்டாமல்
உரு வெளிப்பாட்டாலே ஹிம்சிக்கிறான் –
அவன் ஒருவன் –
பேரை இட்டுச் சொல்லவும் வெறுப்பு மிக்கது போலும்
ஹிம்சையின் கொடுமை இதனால் தோற்றும் –
தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றுச் சுழன்று போகானால்
இங்கே வந்து என்னை நெருக்கி அணைத்து
முன்னும் பின்னும் சூழ்ந்து கொண்டு இருந்தும்
போகாமல் இருக்கிறான் –
எங்கனயோ அன்னைமீர்காள்
ஏழையர் ஆவி யுண்ணும் –
திருவாய் மொழிகளில் போன்ற அனுபவம்
ஆல் –
அந்தோ இது மானச அனுபவம் மாத்ரமே
அதானாலே துக்கப் பட்டு –
தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி வருகின்ற –
பீலிக் குடைகள் ஆகிற சோலையின் கீழே
பசுக் கூட்டங்களின் பின் புறத்திலே
வ்யாமுக்தனான கண்ணபிரான்
ஊதிக் கொண்டு வரப் பெற்ற –
குழலின் துளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே
புல்லாங்குழலின்
த்வாரங்களில் உண்டான
நீரைக் கொணர்ந்து என்னுடைய முகத்திலே
குளிர்த்தியாகத் தடவுங்கோள்
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கமத்தளி தாழ் பீலிக்
குழல்களும் கீதமுமாகி எங்கும் கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு –
தொடங்கி பத்து பாட்டுக்களில் விஸ்தாரமாக பெரியாழ்வார் அருளிச் செய்தபடியே
பசுக்களின் பின்னே பரம போக்யமாக எழுந்து அருளா நின்ற கண்ணபிரான் குழலூதிக் கொண்டே வருவானே
அந்த குழலின் துளிகளிலே அவனது சோதிவாயின் அமுதப் புனல் நிரம்பிக் கிடக்குமே
அந்த நீரைக் கொணர்ந்து குளிர்த்தி யுண்டாம்படி என் முகத்திலே தடவுங்கோள்
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தன் உடைய கோமள வாயில்
குழல் முழைஞ்சு களினூடு குமிழ்த்துக் கொழித்து இழிந்த வமுதப் புனல் தன்னை –
விரும்புகிறாள் –
————————————————————————————————–
நடை யொன்றில்லா வுலகத்து நந்த கோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான் போட்கன் மிதித்த வடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா யுயிர் என்னுடம்பையே –13-6-
பதவுரை
நடை ஒன்று இல்லா உலகத்து–(ஏற்கனவே) மரியாதைகளெல்லாம் குலைந்து கிடக்கிற இவ் வுலகத்தில்
நந்தகோபன் மகன் என்னும்–ஸ்ரீநந்த கோபர் மகன் என்று ப்ரஸித்தனாய்
குளப்புக்கூறு கொளப்பட்டு–மிகவும் துன்பப் படுத்தப் பட்டு
புடை பெயரவும் கில்லேன்–அப்படி இப்படி அசைவதற்கும் அசக்தை யாயிரா நின்றேன் (ஆன பின்பு,)
போட்கன்–சுணை கேடனான அக் கண்ண பிரான்
கொடி–இரக்க மற்றவனாய்
கடிய–ஸ்வார்த்த பரனான
திருமாலால்–ச்ரிய, பதியாலே (கண்ணனாலே)
நான்–அபலையான நான்
மிதித்த அடிப்பாட்டில்–திருவடி பட்டு மிதித்த இடத்திலுண்டான
பொடி தான்–ஸ்ரீபாத தூளியை யாவது
கொணர்ந்து-கொண்டு வந்து
போகா உயிர் என் உடம்பை பூசீர்கள்–வீட்டுப் பிரியாத வுயிரை யுடைய என் உடம்பிலே பூசுங்கள்.
ஏற்கனவே உலகத்தல் மரியாதையெல்லாம் சீர்குலைந்து கிடக்கின்றன. அதுக்கு மேல் ஒன்று பத்தாய்ச் சீர்குலையும்படி
நந்த கோபன் மகனென்கிற ஒரு மஹாநுபாவன் வந்து தோன்றினான். பரமஸாதுவான நந்தகோபனுக்கு
இந்தக் கொடியவன் எங்ஙனே பிள்ளையாகப் பிறந்தானோ அறியேன், அவனால் மிகவும் துன்பப்படுத்தப்பட்ட நான்
புடைபெயரவும் ஒண்ணாதபடி துவண்டுபோனேன், இந்ததுவட்சி தீருவதற்கு மருந்துயாதெனில்,
அந்தச் சுணை கேடன் நடந்து சென்ற நிலத்திலுள்ள பொடியைக் கொணர்ந்து என்னுடம்பிலே பூசப் பாருங்கள்
அதுவே உற்ற மருந்தாகும் என்கிறாள்.
கொடியகடிய திருமால் -கொடுமையாவது பிறரை வருந்தச் செய்கையாகிற க்ரூரத்தனம்,
கடுமையாவது தன் காரியத்தை மாத்திரம் விரைந்து முடித்துக் கொள்ளுகையாகிற ஸ்வ கார்ய பரத்வம்,
(“கடியன் கொடியன் நெடியமால்“ அநுஸந்திப்பது – இக் கொடுமை கடுமைளெல்லாம் இவனால் அவளிடத்திலிருந்து
தான் கற்றுக் கொள்ளப் பட்டன வென்று அவளையும் சேர்த்து வெறுக்கின்றமையைக் கொட்டுமென்ப,
“இழவேயாய்ப் போருகிற ப்ரகரண மாகையாலே பேற்றுக்குப் பரிகரமாகச் சொல்ல்லாமவற்றை யெல்லாம்
இழவுக்குப் பரிகரமாகச் சொல்லுகிறாள்“ என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்திகாண்க.
குளப்புக்கூறுகொளப்பட்டு – அடிப்பட்ட இடத்திலே மேன்மேலும் அடிபடுதல் குளப்புக்கூறுகொள்ளுகலாம்,
(குளம்புகூறு, குளப்புக்கூறு) கால் நடைகளின் குளம்புகள் எப்போதும் அடிப்பட்டுக் கொண்டேயிருத்தலால் அதுபோல்
மேன்மேலும் அடிப்பட்டுக் கொண்டேயிருத்தலைக் குளப்புக்கூறு கொள்ளுதலாகக் கூறுவர், கூறு என்னுஞ் சொல்லுக்குள்ள
பல பொருள்களில் “தன்மை“ என்ற பொருள் இங்கே கொள்ளத்தக்கது,
“குளம்பின் தன்மையை உடையேனாகி“ என்று ஸப்தார்த்தமாய்,
“துகையுண்டவிடத்திலேயே மேன்மேலும் துகையுண்டு“ என்று தாத்பர்யாத்தமாகக் கடவது.
புடைபெயர்தல் – பக்கங்களில் அசைதல், நோவின் கனத்தினால் அசையவும் மாட்டாதிருக்கின்றே னென்கிறாள்
“படையும் பெயரகில்லேன்“ என்று அடிப்பாட்டில் பொடி – திருவடிபட்ட விடத்திலுண்டான துகள் என்றபடி அடிப்பாடு எனறு வழிக்குப்பெயர்.
அவனுடைய திருமேனியில் ஸாக்ஷாத் ஸம்பந்தம் அடிபற்ற வஸ்துவே வேணுமென்றகிற நீர்ப்பந்தமல்லை,
பரம்பரா ஸம்பந்தம் டிபற்ற வஸ்துவாயிருந்தாலும் உத்தேஸ்யமேயாம் என்று இதனால் தெரிவித்தவாறு.
போகாவுயிரென்னுடம்பு – எத்தனை விஷங்களை வாங்கித் தின்றாலும், எத்தனை கத்திகளை யெடுத்துக் குத்திக் கொண்டாலும்
இந்தப்பாழும் உயிர் என் உடம்பையிட்டுப் போகமாட்டேனென்கிறதேயென்று மிக்க வருத்தந் தோற்றங் கூறுகின்றபடி பாரீர்.
போகாவுயீர் – போகாதவுயிரையுடைய, என்று பொருள் படுதலால் அன்மொழித் தொகை வடமொழிநடை.
நடை யொன்றில்லா வுலகத்து –
ஏற்கனவே மரியாதைகள் எல்லாம் குலைந்து
கிடக்கிற இவ்வுலகத்திலே –
நந்த கோபன் மகன் என்னும் –
அதுக்கு மேலே ஓன்று பத்தாய் சீர் குலையும்படி
ஸ்ரீ நந்தகோபன் குமரன் என்று பிரசித்தனாய் -மகானுபாவன்
கொடிய கடிய திருமாலால் –
இரக்கமற்ற -கொடுமை யாவது பிறரை வருந்த செய்கிற க்ரூர தனம்
ஸ்வார்த்த பரனான-கடுமை யாவது தனது கார்யத்தை மாதரம் விரைந்து செய்கிற ஸ்வ கார்யபரத்வம்
ஸ்ரீ யபதியான
கண்ணனாலே
இக் கொடுமைகள் எல்லாம் இவனால் அவள் இடத்தில் இருந்து கற்றுக் கொள்ளப் பட்டன
அவளையும் சேர்த்து வெறுக்கின்ற இழவு பிரகரணம்
இழவேயாய் போருகிற பிரகரணம் ஆகையாலே
பேற்றுக்கு பரிகரமாக சொல்லலாம் அவற்றை எல்லாம்
இழவுக்கு பரிகரமாகச் சொல்லுகிறாள் –
குளப்புக் கூறு கொளப்பட்டு –
மிகவும் துன்பப் படுத்தப் பட்டு
அடி பட்ட இடத்திலே மேல் மேலும் அடி படுதல்
குளம்பு கூறு குளப்பு கூறு -கால்நடைகளின் குளம்புகள் எப்போதும் அடி பட்டுக் கொண்டே இருக்குமே
கூறு -தன்மை
குளம்பின் தன்மையை உடையேனாகி
துகை யுண்ட இடத்திலேயே மேன்மேலும் துகை யுண்டு –
புடையும் பெயரகில்லேன்-
அப்படி இப்படி அசையவும் அசக்தையாய் இரா நின்றேன்
நான்-
அபலையான நான் –
போட்கன்-
சுணை கேடனான அக் கண்ணபிரான்
மிதித்த வடிப்பாட்டில் –
திருவடி பட்டு மிதித்த இடத்தில் உண்டான
அடிப்பாடு -வழி
பொடித்தான் கொணர்ந்து-
ஸ்ரீ பாத தூளியை யாவது கொண்டு வந்து –
பூசீர்கள் போகா யுயிர் என்னுடம்பையே –
விட்டுப் பிரியாத உயிரை உடைய என் உடம்பிலே பூசுங்கோள் –
போகா உயிர் –
விஷம் தின்றாலும் கத்தி குத்துப் பட்டாலும்
பாலும் உயிர் உடம்பை விட்டுப் போக மாட்டாது என்று
வருத்தம் தோன்ற அருளிச் செய்கிறாள்
போகாத உயிரை உடைய -அன்மொழித் தொகை –
இதுவே உற்ற மருந்து ஆகும்
அவனுடைய திரு மேனியிலே சாஷாத் சம்பந்தம் பெற்ற வஸ்துவே வேணும் என்ற நிர்பந்தம் இல்லை
பரம்பரா சம்பந்தம் பெற்ற வஸ்துவாய் இருந்தாலும் உத்தேச்யமாம் –
————————————————————————————————
வெற்றிக் கருளக் கொடியான் தன் மீ மீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே
குற்றமற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்றமவை தீர அணைய வமுக்கிக் கட்டீரே –13-7-
பதவுரை
கருளன் வெற்றி கொடியான் தன் மீது ஆடா உலகத்து–பெரிய திருவடியை வெற்றிக் கொடியாக வுடைய
எம்பெருமானுடைய ஆணையை மீறிச் செல்லக் கடவதல்லாத இவ்வுலகத்தில்
(எம்பெருமானுடைய ஆணைக்கு உட்பட்டதான இவ்வுலகத்தில்)
பெற்ற தாய்–அவனைப் பெற்ற தாயாகிய யசோதையானவள் (தனது புத்திரனை)
வெற்ற வெறிதே–ஒருவர்க்கும் பயனின்றியே,
(பயனில்லை யென்கிற மாத்திரமேயோ?)
வேம்பு ஆகவே–வேப்பங்காய் போல் வைக்கும் படியாகவே
வளர்த்தான்–வளர்த்து வாரா நின்றான்.
குற்றம் அற்ற–(அவனைத் தவிர்த்து வேறொருவன் விரும்புகையாகிற) குற்றம் இல்லாத
முலை தன்னை–(என்னுடைய) ஸ்தநங்களை
குமரன்–யௌவனத்தோடு தோள் தீண்டியான அப் பெருமானுடைய
கோலம் பணைதோளோடு–அழகியதாயும் கற்பகக்கிளை போன்ற தாயுமுள்ள திருத் தோள்களோடே,
அற்ற குற்றம் அவை தீர–(என்னைக் கை விட்டு) அவற்றுக்கே அற்றுத் தீர்ந்த குற்றம் தீரும்படி
அணைய அமுக்கி கட்டீர்–அமுக்கி யணைத்துக் கட்டி விடுங்கள்
கீழ்ப்பாட்டில், “நந்தகோபன் மகனென்னுங் கொடிய கடிய திருமாலால்“ என்று -பெற்ற தகப்பனை, வெறுத்துக் கூறினாள்,
இப்பாட்டில் பெற்ற தாயை வெறுத்துக் கூறுகின்றாள். கண்ணபிரான் இவ்வளவு தீம்பனாயிருப்பதற்குக் காரணம் –
யசோதை அவனை வளர்த்த பொல்லாங்கு என்றிருக்கிறாள். அவள் செவ்வையாக நியமித்து பயபக்திகளுண்டாம்படி
ஸக்ஷித்து வளர்த்திருப்பளாகில் இவன் இப்படித் தீம்பனாயிருக்க மாட்டான்,
“அஞ்சவுரப்பாளசோதை ஆணாடவிட்டிட்டிருக்கும்“ என்னவேண்டும்படி அவள் இவளைத்தான் தோன்றியாக விட்டு
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததனால் இவன் தலை விரித்தாடும் தீம்பனாகப் பெற்றான் என்றிருக்கிறாள்.
“பெற்றதாய் வெற்றவேறிதேவேம் பேயாக வளர்த்தாள் என்ற அந்வயக்ரமம் ஒரு பலனை விரும்பிப் பிறர்க்கு
அநர்த்தத்தை விளைப்பாருண்டு, அங்ஙனன்றியே யஸோதை நிஷ்ப்ரயோஜநமாகவே பராநர்த்தத்தை விளைக்க
இவனை வளர்த்தாளே! என்கிறாள். வேம்பேயாக என்றவிடத்திலே வியாக்கியான ஸ்ரீஸூக்தி –
“வேம்பும் கரும்புமாக வளர்க்கை யன்றிக்கே வெறும் வேம்பேயாக வளர்த்தாள், அவன் வேம்பானது வளர்த்த
பொல்லாங்கு என்றிருக்கிறாள்“ என்பதாம். வெற்ற வேறிதே – சிறிதும் பலனில்லாதபடி என்கை.
ஒருவகைக் குறிப்பிடைச்சொல். “செக்கஞ்செகவென்று“ “கன்னங்கரேலென்று“ என்னுமா போலே
வெற்ற வேறிதே என்பதும் ஒருவகை வழக்கச்சொல் “வேம்புபோலே வளர்த்தாள்“ என்னாமல்,
“வேம்பேயாக வளர்த்தாள்“ என்றது – தீம்பின் மிகுதியாலே யுண்டான வைரஸ்யாதிஸயத்தைக் காட்டும்.
அவன் அப்படி வேம்பாயிருந்தாலும் “வேம்பின்புழு வேம்பன்றியுண்ணாது“ என்னுங்கணக்கிலே என் முலைகளானவை
அந்த வேம்பிலே பணைத்தகிளைகளோடே அணையத்தான் ஆசைப்படா நின்றன,
ஆகையாலே அவன் தோளையும் என் முலையையும் ஒன்றுசேர்த்து விலங்கிட்டு வையுங்களென்கிறாள் பின்னடிகளில்.
அவன் இத்தனை தீப்பனாய் உபக்ஷேத்திருக்கச் செய்தேயும்
“அவரைப் பிராய்ந் தொடங்கி யென்று மாதரித் தெழுந்த வென் தடமுலைகள், துவரைப் பிரானுக்கே சங்கற்பித்து“ என்றும்
“கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் கோவிந்தனுக்கல்லால் வாயில்போகா“ என்றும் அவனை யொழிய வேறொரு
முகம் நோக்காதிருக்கும் முலைகளைக் “குற்றமற்றமுலை“ என்கிறாள்.
அற்றகுற்றமவைதீர என்பதற்கு – இம்முலைகள் இதுவரையில் அவனைப் பிரிந்திருந்த குறை தீரும்படி என்று சிலர் பொருள் கூறுவரேனும்,
அது வியாக்கியான ஸ்ரீஸூக்தியோடு பொருந்தாது.
“அத்தோளோடே அற்ற தாய்த்து இம் முலைகள், இங்கே குடியிருப்பாய் அங்கே க்ருத ஸங்கேதமாயாய்த் திருக்கிறது இவை.
என்னைக் கூடாதே அங்கே அற்றகுறை தீரும்படி.“ என்றிறே பெரியவாச்சான்பிள்ளை யருளிச் செய்துள்ளது.
“இவ்வுலகத்து வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாள்“ என்று இவ்வளவே சொல்லப் போதுமாயிருக்க,
“வெற்றிக் கருளக் கொடியான்றன் மீமீதாட வுலகத்து“ என்று கருளக் கொடி யுடையனான பகவானுடைய
ஆணையை மீறிச் செல்லக் கடவதல்லாத இவ்வுலகத்திலே என்று சொல்லுகைக்குக் கருத்தென் என்னில்,
எம்பெருமான் தன் ஆஜ்ஞையாலே எல்லாரையும் கீழ்ப்படுத்தி எதுவும் எல்லை கடந்து நடவாமல் ஒரு மரியாதையாய் நடந்து
வரும்படி விஜயத்வஜமெடுத்துச் செங்கோல் செலுத்தா நின்ற வுலகத்திலே எல்லா மரியாதைகளும் கெட்டு
மனம் போன போக்கே செய்யுமவனான ஒரு பிள்ளையைப் பெற்றாள் யசோதை – என்கிறாளெனக் கொள்க.
வெற்றிக் கருளக் கொடியான்-
பெரிய திருவடியை வெற்றிக் கொடியாக யுடைய எம்பெருமான்
தன் மீ மீ தாடா வுலகத்து
உடைய ஆணையை
மீறிச் செல்ல கடவதல்லா இந்த உலகத்தில்
வெற்ற வெறிதே-
ஒருவருக்கும் பயன் இல்லாமல்
அது மாத்ரமேயோ –
செக்கச் செக -கன்னங்கரேல் போலே
பெற்றதாய் –
அவனைப் பெற்ற தாயான
யசோதை யானவள் –
கீழே நந்தகோபன் மகன் என்னும் கொடிய கடிய திருமால் -என்று
பெற்ற தமப்பனை வெறுத்துக் கூறினாள்
இதில் பெற்ற தாயை வெறுத்துக் கூறுகிறாள்
வேம்பேயாக வளர்த்தாளே-
வேப்பங்காய் போலே கைக்கும் படியாக வளர்த்து வாரா நின்றாள் –
யசோதை அவனை வளர்த்த பொல்லாங்கு -என்கிறாள்
சிஷித்து பயபக்திகள் உண்டாம்படி வளர்ந்து இருந்தால் இங்கனம் தீம்பனாய் இருக்க மாட்டான் -என்றபடி –
அஞ்ச உரைப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருப்பாள்
பெற்ற தாய் வெற்றே வெறிதே வேம்பேயாக வளர்த்தாள்-என்று அந்வயம் –
வேம்பேயாக –
வேம்பும் கரும்புமாக வளர்க்கி அன்றிக்கே
வெறும் வேம்பேயாக வளர்த்தாள்
அவன் வேம்பானது வளர்த்த பொல்லாங்கு -என்று இருக்கிறாள்
நிஷ்பிரயோஜனமாக பர அனர்த்தத்தை விளைக்க வளர்த்தாள் –
வேம்பே யாய் இருந்தாலும்
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது போலே
அந்த வேம்பிலே பணைத்த கிளைகளோடு
அணைய
என் முலைகள் ஆசைப்படா நின்றன
குற்றமற்ற முலைதன்னைக் –
அவனைத் தவிர வேறு ஒருவனை விரும்புகை யாகிற
குற்றம் இல்லாத
என்னுடைய ஸ்தனங்களை –
அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்ப்பித்து-என்றும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -என்றும் –
அவனுக்கேயாக இருக்கும் முலைகள்
குமரன் கோலப் பணைத் தோளோடு
யௌவனத்தோடு தோள் தீண்டியான அப் பெருமான் உடைய
அழகியதாயும்
கற்பகக் கிளை போன்றதாயும்
உள்ள திருத் தோள்களோடு
அற்ற குற்றமவை தீர –
என்னைக் கை விட்டு
அவற்றுக்கே அற்றுத் தீர்ந்த குற்றம் தீரும் படி –
அத்தோளோடே அற்றதாய்த்து இம்முலைகள்-
இங்கே குடி இருப்பாய்
அங்கே கருத சங்கேதமாயாய்த்து இருக்கிறது இவை
என்னை கூடாதே அங்கே அற்ற குறை தீரும்படி –
அவனைப் பிரிந்து இருந்த குறை தீரும்படி என்ற பொருள்
இத்தால் வ்யாக்யானத்துக்கு சேராது
அணைய வமுக்கிக் கட்டீரே –
அமுக்கி அணைத்து கட்டி விடுங்கோள் –
எம்பெருமான் தன் ஆஞ்ஞையாலே எல்லாரையும் கீழ்ப் படுத்தி செங்கோல் செலுத்தா நின்றுள்ள
இந்த வுலகத்திலே
எல்லா மரியாதைகளையும் கெட்டு
மனம் போன போக்கே செய்யுமவனான
ஒரு பிள்ளையைப் பெற்றால் யசோதை -என்கிறாள்-
———————————————————————————————-
உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த நனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே–13-8-
பதவுரை
உள்ளே உருகி நைவேனை–உள்ளுக்குள்ளேயே கரைந்து நைந்து போகிற என்னைப் பற்றி
உளளோ இலளோ என்னாத–“இருக்கிறாளா? செத்தாளா?“ என்றும் கேளாதவனாய்
கொள்ளை கொள்ளி–என் ஸர்வஸ்வத்தையும் அபஹரித்துக் கொண்டவனாய்
குறும்பனை–(பெண்கள் திறத்திலே) பொல்லாங்கு செய்யுமவனான
கோவர்த்தனனை–கண்ணபிரானை
கண்டக்கால்–(ஒருகால்) நான் காணப் பெற்றேனாகில்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத–(ஆட்டுக் கழுத்தல் முலை போலே) உபயோக மற்றதான்
கொங்கை தன்னை–(என்னுடைய இந்த) முலையை
கிழங்கோடும் அள்ளி பறித்திட்டு–வேர் முதலோடே பற்றிப் பிடுங்கி
அவன் மார்வில் எறிந்து–அந்த க்ருஷ்ணனுடைய மார்பிலே எறிந்து விட்டு
என் அழலை–என் துக்கத்தை
தீர்வேன்–போக்கிக் கொள்ளப் பெறுவேன்
உள்ளுக்குள்ளே உருகி நைந்துகொண்டிரா நின்ற என் விஷயத்திலே சிறிது ஆராய்ச்சியுமில்லாதவனும்,
என்னை வெறுத்தரை யாக்கினவனும், குறும்பு செய்யவதற்கென்றே பிறந்தவனுமான கோபாலக்ருஷ்ணனை
ஒருகால் நான் காணப் பெற்றேனாகில், ஆட்டின் கழுத்தில் முலை போலே என் மார்பில் வ்யர்த்தமாக முளைத்துக் கிடக்கிற
இப் பாழும் முலைகளை வேர் பறியாகப் பறித்து அவனுடைய மார்விலே விட்டெறிந்து என்துக்கம் தீரப்பெறுவேனென்கிறாள்.
உள்ளோ இலளோ என்னாத – இங்கேற வந்து முகங்காட்டாவிட்டாலும் “அவள் பிழைத்திருக்கிறாளா ஒழிந்தாளா?“ என்று
ஸாமாந்யமாகப் பிறரை விசாரிக்கலாமே, என்னைப்பற்றி அவனுக்கு எள்ளவாவது கவலையிருந்தாலன்றோ விசாரிக்கப்போகிறான்,
தன்பெருமையும் தன்போகமுமே தனக்குப் பெருஞ்செல்வமாயிருப்பதால் நானொரு சரக்கு இருப்பதாகவும் அவனுக்கு எண்ணமில்லை என்றவாறு.
கொள்ளை கொள்ளி – கொள்ளை கொள்பவன், ஸர்வ ஸ்வாபஹாரம் செய்பவன். இ-பெயர்விகுதி.
“கோவர்த்தன்னை“ என்றவிடத்து “பெண்களை வெறுந்தரையாக்கும், பசுக்களை ஒன்று நூறாயிரமாக்கும்” என்ற
வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் அழகு காண்க.
(கா-வர்த்தயதீதி கோவர்த்கந) என்ற வ்யுத் பத்தியில் நோக்கு. “கண்டக்கால்“ என்ற சொல்லாற்றலால்,
அவன் பசுக்களின் பின்னே போமவனாகையாலே அவனைக் காண்பது அருமை என்பது விளங்கும்,
வருந்தி ஒரு கால் காணப் பெற்றேனாகில் என்க.
“கொள்ளும் பயன்னென்றில்லாத“ என்றவிடத்து, –
“கன்னவிலுங் காட்ட கத்தோர் வல்லிக் கடிமலரின், நன்னறுவாசம் மற்றாரானுமெய்தாமே,
மன்னும் வநுறிலத்துவாளாங்கு உகுத்ததுபோல், என்னுடைய பெண்மையும் என்னலனு மென்முலையும்,
மன்னுமலர்மங்கை மைந்தன் – கண்புரத்துப் பொன் மாலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்,
எல்னிவைதான் வாளா எனக்கே பொறையாகி, முன்னிருந்து மூக்கின்று மூவாமைக்காப்பதோர், மன்னுமருந்தறிவீரில்லைபே“ என்ற
பெரியதிருமடல் அநுஸந்திக்கத்தக்கது.
எம்பெருமானை அணைத்து கொள்வதற்கு, உறுப்பல்லாத என்றபடி “கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு “ என்றதனால்
அளவிறந்த (ஆற்றாமை புலப்படும் சத்துருவை நோக்கி “உன்னை வேரோடு களைத்து ஒழித்து விடுகிறேன் கிடாய்“
என்பாரைப்போலே உள்ளுள்ள கோபமும் துக்கமும் தோன்றச் சொல்லுகிறபடி.
இங்குக் கிழங்கு என்றது ஆத்ம வஸ்துவை என்றருளிச்செய்வர்
“தடம்புனலசடைமுடியன் தனியொரு கூறமர்ந்துறையும் உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே.“ என்றபடி
பகவதநுபவத்துக்கு உபயுக்தமாகாத ஆத்மாத்மீயங்களெல்லாம் உபேக்ஷிக்கப்படுமிறே ஆழ்ந்த பக்தியையுடையவர்களுக்கு
(நதேஹம்நப்ராணாந்நசஸுகமசேஷாபிலஷிதம் நாசாத்மாநம நாந்யத் கிம்பி தவ சேஷத்வ விபவாத். பஹிர்பூதம் நாத!
க்ஷணமபி ஸஹே யாதுஸததா விநாஸம்தத், ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபநமிதம்.) என்ற ஆளவந்தார் ஸ்ரீஸூக்தி அறியத்தக்கது.
“கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு எறிந்து என்னழலைத் தீர்வேனே“ என்றால் போராதோ?
“அவன்மார்வில் எறிந்து“ என்பானேன்? என்னில், இம் முலைகளால் தான் படும் பாட்டை,
* பெண்ணின் வருத்த மறியாகத பெருமானான அவனும் படவேணுமென்ற கருத்தினாலென்க.
இம்முலைகள் அவன் மார்வில் ஏறி அவனைக் கும்மிக் குமைக்க வேணும் என்று நினைக்கிறாளாய்த்து.
இக் கஷ்டத்தை அவனும் பட்டானாகில் அதுவே இவள் அழல் தீர்ந்தபடிபோலே. அழல் – தாபம்.
உள்ளே உருகி நைவேனை –
உள்ளுக்கு உள்ளே
கரைந்து நைந்து போகிற என்னைப் பற்றி –
உளளோ இலளோ என்னாத –
இருக்கிறாளோ செத்தாளோ
என்றும் கேளாதவனாய்-
இங்கு ஏற வந்து முகம் காட்டா விட்டாலும்
இப்படி சாமான்யமாக விசாரிக்காமல்
தன போகமும் பெருமையுமே நினைத்து என்னை ஒரு சரக்காக எண்ணாமல்
கொள்ளை கொள்ளிக் –
என் சர்வத்தையும் அபஹரித்துக் கொண்ட வனாய்
குறும்பனை –
பெண்கள் திறத்தில் பொல்லாங்கு செய்யுமவனான –
கோவர்த்த நனைக் கண்டக்கால் –
கண்ணபிரானை ஒரு நாள் காணப் பெற்றேன் ஆகில் –
பெண்களை வெறும் தரையாக்கும்
பசுக்களை ஓன்று நூறு ஆயிரம் ஆக்கும்
வர்த்தயதீதி கோவர்த்தன -என்கிற வ்யுத்பத்தியிலே நோக்கு
கண்டக்கால்
காண்பதில் அருமை
பசுக்கள் இன்னே போகிறவன் ஆதலால்
வருந்தி ஒரு கால் பெற்றேன் ஆகில்
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் –
ஆட்டுக் கழுத்தில் உபயோகம் இல்லாமல் தொங்கும் முலைகள் போலே –
கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு –
வேர் முதலோடு பற்றிப் பிடுங்கி
அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே-
அந்த கிருஷ்ணன் உடைய
மார்பில்
எறிந்து விட்டு
என் துக்கத்தை போக்கிக் கொள்ளப் பெறுவேன் –
கொள்ளும் பயன் ஒன்றில்லாத -என்றவிடத்து
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின்
நன்னறு வாசம் மற்றாரானும் எய்தாமே மன்னும்
வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் மென்முலையும்
மன்னு மலர் மங்கை மைந்தன் கண புரத்து பொன்மலை போல்
நின்றவன்தன் பொன்னகலம் தோயாவேல் என்னிவைதான்
வாளா எனக்கே பொறையாகி முன்னிருந்து மூக்கின்று மூவாமை காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர் இல்லையே -பெரிய திருமடல் பாசுரம் அனுசந்தேயம் –
கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு -என்பதால் ஆற்றாமை தோன்றும்
சத்ருவை நோக்கி உன்னை வேரோடு அழித்து விடுவேன் -என்னுமா போலே -துக்கம் கோபம் மிக்கு –
இங்கே கிழங்கு -ஆத்மவஸ்துவை -என்று அருளிச் செய்வர் –
தடம் புனல் சடை முடியன் தனியொரு கூறு அமர்ந்து உறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே -என்றபடி
பகவத் அனுபவத்துக்கு உபயுக்தமாகாத ஆத்மாத்மீயங்கள் எல்லாம் உபேஷிக்கப் படும் இ றே ஆழ்ந்த பக்தி உடையவர்களுக்கு
ந தேஹம் ந பிராணான் நச சுகம் அசேஷாபிலஷிதம்
நாச ஆத்மாநாம் நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத் பஹிர்ப்பூதம் நாத ஷணம் அபி சஹே யாதுசததா விநாசம் தத்
சத்யம் மதுமதன விஜ்ஞ்ஞாப நமிதம் –ஆளவந்தார் ஸ்ரீ சூ க்தி
அள்ளிப் பறித்து எறிந்து என் அழலை தீர்வேனே என்று சொன்னால் மட்டும் போதாதோ
அவன் மார்வில் எறிந்து -என்றது
இம் முலைகளால் தான் பட்ட பாட்டை
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமானான அவனும் பட வேண்டும்
அவனை இவை கும்மிக் குமைக்க வேணும்
இக்கஷ்டத்தை அவனும் பட்டானாகில்
அதுவே இவள் அழல் தீர்ந்த படி போலே
அழல் -தாபம் –
———————————————————————————————
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் ஒரு நான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே–13-9-
பதவுரை
கொம்மை முலைகள்–(எனது) கிளர்ந்த பருத்த முலைகளினுடைய
இடர் தீர கோவிந்தற்கு ஓர குற்றவேல்–குமைச்சல் தீரும்படி கண்ணபிரானுக்கு அந்தரங்கமான கைங்கரியத்தை
செம்மை உடைய திருமார்விலே–(அன்பர்கள் அணைவதற்கென்றே ஏற்பட்டிருக்கையாகிற) செவ்வையை யுடைத்தான் (தனது) திருமார்பிலே
சேர்த்தானேலும்–(என்னை அவன்) சேர்த்துக் கொண்டானாகில்
நன்று–(நல்லது)
ஒரு நான்று–ஒரு நாள்
இம்மைப் பிறவி செய்யாதே இனி போய்–இந்த ஜன்மத்திலே செய்யப் பெறாமல் இந்தப் பிறவி கழிந்த பின்பு வேறொரு தேச விசேஷத்திலே போய்
செய்யும்–செய்யக் கூடியதான
தவந்தான் ஏன்?–தபஸ்ஸு ஏதுக்கு?
முகம் நோக்கி–என் முகத்தைப் பார்த்து
மெய்ம்மை சொல்லி–மெய்யே சொல்லி
விடை தான் தருமேல்–“நீ எனக்கு வேண்டாம்போ“ எனறு தள்ளி விட்டமை தோன்ற விடை கொடுப்பானாகில்
மிக நன்று–அது உத்தமோத்தமம்.
கொங்கை தன்னைக் கிழங்கோடு மள்ளிப் பறித்திடுவானேன்? விழங்கு என்றி ஆத்ம வஸ்து வுண்டாகில் அவ்வாத்ம வங்து தான்
நித்யமாகையாலே ஒரு கால விசேஷத்திலே ஒரு தேச விசேஷத்திலே போய் நித்யாநுபவம் பண்ணப் பெறலாமே,
அவ் வநுபவத்தைப் பெறுவதற்குப் பாரித்துக் கொண்டு இங்கே ஒருவாறு ஆறியிருக்கலாமே“ என்று சிலர் சொல்ல,
பெற்ற இவ்வுடம்போடே இங்கே அநுபவிக்க ஆவல் கொண்டிரா நின்ற நான் தேஹாந்தரத்திலும் தேசாந்தரத்திலும்
நேருவதொரு பேற்றைத் துப்புவேனோ வென்கிறாள்.
க்ஷாம காலத்திலே சோறு சோறு என்று கதறும் ப்ரஜைகளைப் போலே
“எமக்கு வகுத்த விஷயத்தைக் காட்டு, எமக்கு வகுத்த விஷயத்தைக் காட்டு“ என்று நெருக்குகின்ற இம் முலைகளின் பசி தீரும்படி
இந்தப் பிறவியிலே இந்த ஸரீரத்தோடே கோபால க்ருஷ்ணனுக்குக் கைங்கர்யம் பண்ணாமல் வேறொரு பர புருஷனுக்கு
பண்ணுவதொரு கைங்கரியமுண்டோ? என்கிறாள் முன்னடிகளில்.
‘அம்மா! இப்படிஞ் சொல்ல்லாமோ? கண்ணபிரானுடைய அநுபவம் உனக்கு எளிதாயிருந்ததோ?
அவன் தான் மிறுக்குப் பண்ணுகிறானே, துர்லபத்தில் ஆசைவைத்துக் தளர்வதனால் பயனென்? என்று உற்றார் சொல்ல,
அதன்மேல் தன்னுடைய அத்யவஸாயத்தின் உறுதியை உரைக்கின்றாள் பின்னடிகளில்.
கண்ணபிரான் தனது திருமார்பிலே எனது கொங்கைகளை அணைத்துக்கொள்ள வேணுமென்று விரும்பியிருக்கிற
என் விருப்பத்தின்படி அவன் அணைத்துக் கொள்வனேல் நன்று, அப்படி அணைத்து கொள்ளத் திருவுள்ளமில்லையாகில்,
உன்னைக் கைவிட்டேன், நீ போ“ என்று வாய்திறந்தொன்று சொல்லி விடட்டும், அஃது எனக்கு மிகவும் ப்ரியம் -என்கிறாள்.
அவனுடைய ஸம்ஸ்லேஷத்தையே அல்லும் பகலம் வாய் வெருவிக் கொண்டு கிடக்கின்ற விவள்
“விடைதான் திருமேல் மிகநன்றே“ என்று சொல்லுகைக்கு கருத்து யாதெனில்,
உன்னைக் கை விட்டேனெறு சொல்லுகிற வார்த்தையாவது அவன், முகம் நோக்கிச் சொல்லுவனாகில்,
அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே என்றும், கண்ணிலே தென்பட்டானாகில் பிறகு அவனை உபாயங்களால்
கவர்ந்து கொள்ளலாமென்று நினைத்துச் சொல்லுகிறபடி.
“பாவிநீயென்றொன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே“ (திருவாய்மொழி சஎந) என்றதோடு ஒக்குமிது.
எம்பெருமான் சொல்லுகிற வார்த்தை எதுவாயிருந்தாலும் அதில் நிர்ப்பந்தமில்லை, கண் முன்னே வந்து தோற்றிச் சொல்ல
வேணு மென்பதொன்றிலேயாய்த்து நிர்ப்பந்தமுள்ளது ஆழ்வார், “பாவியேன் காணவந்தே -சொல்லாய்“ என்றார்,
இவளும் “முகம்நோக்கி” என்கிறாள்.
“இப்பாட்டில் சேர்த்தானேலும் என்ற பதத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியமானமருளிச்செய்யுமிடத்து,
சேர்த்தானேலும் – அம்மார்வோடேசேர்த்து அணைக்கையாத்துப் பேறாவது, அதுசெய்திலனேயாகிலும்“ என்றருளிச்
செய்திருப்பதுகொண்டு சிலர் “சேர்க்கானேலும்“ என்று திருத்துவர்கள்,
வியாக்கியானத்தில் எதிர்மறைப்பொருள் கூறப்பட்டிருத்தலால் அது சேர்த்தானேலும் என்ற பாடத்திற்கு பொருந்தாதென்று
அவர்களுடைய கருத்துப்போலும். அத்திருத்தம் பொருத்தமுடைத்தன்று, வியாக்கியான விரோதம் யாதுமில்லை காண்மின்
“அம்மார்வோடே சேர்த்தணைக்கை யாய்த்துப் பேறாவது“ என்றவளவே சேர்த்தானேலு மென்பதற்கான தாத்பர்யாத்தம்.
“அது செய்திலனேயாகிலும்“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி மேலுக்கு அவதாரிகை போன்றதாம்.
இப்பாட்டில் பின்னடிகள் ஒரே வாக்யார்த்தம்போல் தோற்றுமாறு இருந்தாலும் இரண்டு வாக்யார்த்தமாகப் பிரித்து
வ்யக்தமாக வ்யாக்யானித்து அருளியிருக்கிறார் பெரியவாச்சான்பிள்ளை, “சேர்த்தானேல் நன்றி. விடைதான் தருமேல் மிகநன்று“ என்று
யோஜனையைக் காட்டி “தன் மார்வென்று அணையும்படி ஸம்ஸ்லேஷதிப்பித்தானாகில் அழகிது, நீ வேண்டா வென்று
முகத்தைப்பார்த்து அநுமதிபண்ணிவிடுமாகில் நன்றி.“ என்று பொருளையும் விளங்கக் காட்டியருளினர்.
மெய்மை சொல்லி விடை தருகையாவது – இவளுடைய பாவபந்தத்தைப் பரீக்ஷிப்பதற்காக வெறுமன் விடைதருகை யன்றிக்கே,
ஸத்யமாகவே இவளை கைவிடவேணுமென்று நெஞ்சார நிஷ்கர்ஷித்துக் கைவிடுதலாம்.
(முன்னடியில்) “முலைகளிடர்தீர“ என்ற சொல்நலத்தால் விளங்கும். ஸ்வாபதேஸத்தில் முலை என்பது பக்தியையிறே. தவம் – தவஸ்
கிழங்கு -என்கிற ஆத்மவஸ்து ஒரு கால விசேஷத்திலே
ஒரு தேச விசேஷத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறலாமே
அதற்குப் பாரித்து கொண்டு இங்கே ஒருவாறு ஆறி இருக்கலாமே -என்ன
பெற்ற இந்த உடம்போடு அனுபவிக்க பாரித்து இருக்கிற நான்
தேஹாந்தரத்தில் தேசாந்தரத்தில் நேரும் பேற்றை மதிப்பேனோ-
ஷாம காலத்தில் சோறு சோறு என்று கதறும் பிரஜைகளை போல
எமக்கு வகுத்த விஷயத்தைக் காட்டு -என்று நெருக்கும் இம் முலைகள் பசி தீரும்படி
இந்த சரீரத்துடன் கைங்கர்யம் பண்ணாமல்
வேறு ஒரு தேசத்தில்
வேறு ஒரு தேஹத்தை பரிஹரித்து
வேறு ஒரு பர புருஷனுக்கு
கைங்கர்யம் உண்டோ –
கொம்மை முலைகள் இடர் தீரக் –
எனது கிளர்ந்து பருத்த முலைகளின் உடைய
குமைச்சல் தீரும்படி –
கோவிந்தற்கோர் குற்றேவல் –
கண்ணபிரானுக்கு அந்தரங்கமான
கைங்கர்யத்தை
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் –
இந்த ஜன்மத்திலே செய்யப் பெறாமல்
இந்த பிறவி கழிந்த பின்பு
வேறு ஒரு தேச விசேஷத்திலே போய்
செய்யும் தவம் தான் என் –
செய்யக் கூடிய தபஸ் ஸூ தான் ஏதுக்கு-
கண்ணபிரான் அனைத்துக் கொண்டால் நன்று
உன்னைக் கை விட்டேன் என்று சொல்லினும் அது எனக்கு மிகவும் பிரியம்
செம்மையுடைய திருமார்வில் –
அன்பர்கள் அணைவதற்கு என்றே ஏற்பட்டு இருக்கை யாகிற
செவ்வையை யுடைத்தான தனது திரு மார்விலே –
சேர்த்தான் ஏலும் நன்றே-
என்னை அவன் சேர்த்துக் கொண்டான் ஆகில்
நல்லது –
சேர்த்தான் ஏலும் –
அம்மார்வோடே சேர்த்து அணைக்கை யாவது பேறு ஆவது
தன மார்வோடே அணையும் படி சம்ச்லேஷிப்பித்தான் ஆகில் அழகிது
நீ வேண்டா என்று முகத்தைப் பார்த்து அனுமதி பண்ணி விடுமாகில் மிகவும் நன்று –
ஒரு நான்று –
ஒரு நாள் –
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி –
மெய்யே சொல்லி என் முகம் பார்த்து
விடை தான் தருமேல் மிக நன்றே –
நீ எனக்குவேண்டாம் போ என்று தள்ளி விட்டமை தோன்ற
விடை கொடுப்பான் ஆகில்
அதுவே உத்தமோத்தமம் –
இந்த வார்த்தையாவது ஆண்டாள் முகம் பார்த்து சொல்லுவான் ஆகில்
அப்போதை சேவை யாவது கிடைக்குமே
அப்போது கண் பட்டான் ஆகில் வேறு உபாயங்களால் கவர்ந்து கொள்ளலாமே –
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே -திருவாய் மொழி -போல
இவளும் முகம் நோக்கி -என்கிறாள் –
மெய்ம்மை சொல்லி விடை தருகையாவது
இவளுடைய பாவ பந்தத்தை பரிஷிப்பதற்காக வெறுமனே விடை தருகை அன்றிக்கே
சத்தியமாகவே கை விட வேணும் என்று நெஞ்சார நிஷ்கர்ஷித்து கை விடுதலாம்
முலைகள் இடர் தீர குற்றேவல் என்பதால் இவள் கைவல்யம் வேண்டாம் என்கிறாள்
முலை -ஸ்வாபதேசத்தில் -பக்தி
தவம் -தபஸ்-
——————————————————————————————
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே–13-10-
பதவுரை
வில்லை துலைத்த–வில்லைத் தோற்கடித்த
புருவத்தாள்–புருவங்களை யுடையளாய்
வில்லி புதுவை நக் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை–ஸ்ரீவில்லி புத்தூர்க்குத் தலைவரான
பெரியாழ்வாருடைய மகளாய் ஆச்சர்ய குணசாலிநியான ஆண்டாள்,
அல்லல் விளைத்த பெருமானை-(திருவாய்ப் பாடி முழுதும்) தீங்கு விளைத்து அதனால் பெருமை பெற்றவனும்
ஆயர் பாடிக்கு அணி விளக்கை–திருவாய்ப் பாடிக்கு மங்கள தீபம் போன்று ப்ரகாசகனுமான கண்ண பிரானை
வேட்கை உற்று–ஆசைப் பட்டு
மிக விரும்பும் சொல்லை–மிக்க அபிநிவேசம் தோற்ற அருளிச் செய்த இப் பாசுரங்களை
துதிக்க வல்லார்கள்–புகழ்ந்து ஓத வல்லவர்கள்
துன்பம் கடலுள் -ஸம்ஸார ஸமுத்ரத்தில்
துவளார்–துவண்டு நோவு படமாட்டார்கள்.
இத்திருவாய்மொழிகற்றார்க்குப் பலன் சொல்லி முடிக்கிறாள் இதில்
* நிச்சலும் தீமைகள் செய்யும் பெருமானாகிய கண்ணபிரான் விஷயமாகப் பெரியாழ்வார் திருமகளார் அருளிச் செய்த
இச் சொன் மாலைகளைப் புகழ்ந்து பாட வல்லவர்கள் ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட மாட்டார்கள் என்கிறாள்.
(பஹவோ ந்ருப! கல்யாணகுணா புத்ரஸ்யஸந்திதே) என்னுபடியாக “குணசாலி“ என்று இராமபிரான் புகழ்பெற்றாற் போலக்
கண்ணபிரான் “அல்லல் விளைத்த பெருமான்“ என்று புகழ்பெற்றிருப்பனாய்த்து.
இவன் செய்யும் தீம்புகள் திருவாய்ப்பாடிக்கு விளக்கிடாற்போலிருக்கு மென்பது தோன்ற
“அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கணி விளக்கை“ என்கிறாள்.
“இவன் தீம்புக்கு இலக்காகாதபோது ஊராக இருண்டு கிடக்குமாய்த்து“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க.
வில்லைத் துலைத்த புருவத்தாள் – “துலைத்த“ என்னுஞ்சொல் “துலா“ எனற வடசொல்லடியாகப் பிறந்ததென்று கொண்டால்,
வில்லை ஒத்திருக்கின்ற புருவத்தையுடையவள் என்று பொருளாகும். (துலா-ஒப்பு)
பெரியவாச்சான் பிள்ளை இவ்வர்த்தத்தைத் திருவுள்ளம் பற்றவில்லை.
“தன்னோடு ஸாம்யங் கொண்டாடியிருக்கு மவற்றையெல்லாம் அழிக்கும்படியாயாய்த்து அவயவ ஸோபையிருக்கும்படி.
வில் தான் ஒப்பாகப் போராதபடியான புருவத்தை யுடையவள்“ என்றிறே வியாக்கியான ஸ்ரீஸூக்தி.
ஆகவே துலைத்த என்பதற்கு, ‘திரஸ்கரித்த‘ என்ற பொருள் கொள்ளத் தகும்.
நிகமத்தில்
இத்திருமொழி கற்றார்க்கு பலன் சொல்லித்
தலைக் கட்டுகிறாள்
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
திரு ஆய்ப்பாடி முழுவதும் நிச்சலும் தீமைகள் செய்து
அதனால் பெருமை பெற்ற கண்ணபிரான்
திருவாய்ப்பாடிக்கு மங்கள தீபம் போன்ற பிரகாசமான
கண்ணபிரான் -விஷயமாக –
பஹவோ ந்ருப கல்யாண குண புத்ரச்ய சந்திதே -குணசாலி இராம பிரான் புகழ் பெற்றால் போலே
கண்ணபிரான் அல்லல் விளைத்த பெருமான் -ஏற்ற புகழ் பெற்று விளங்கினான்
இவன் செய்யும் தீம்புகள் திரு வாய்ப்பாடிக்கு விளக்கு இட்டால் போலே இருக்க
இவன் தீம்புக்கு இலக்காகாத போது ஊராக இருண்டு கிடக்கும் ஆயத்து –
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
ஸ்ரீ வில்லி புத்தூருக்கு தலைவரான
பெரியாழ்வார் திரு மகளாராய்
ஆச்சர்யமான குணசாலியான ஆண்டாள்
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
வில்லைத் தோற்கடித்த புருவங்களை உடையாளாய
துலா -ஒப்பு
தன்னோடு சாம்யம் கொண்டாடி இருக்கும் அவற்றை எல்லாம்
அழிக்கும் படி யாய்த்து அவயவ சோபை இருக்கும் படி –
வில் தான் ஒப்பாக போராதபடியான புருவத்தை உடையவள் –
து-தொலைத்த -திரஸ்கரித்த -என்ற பொருள் வ்யாக்யானத்தோடே சேரும்
தொலைத்த -என்ற பாடமும் இத்தால் ஏற்கும்
மிக்க அபி நிவேசம் தோற்ற
அருளிச் செய்த இப்பாசுரங்களை
துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே
புகழ்ந்து ஓத வல்லவர்கள்
சம்சார ஆகிற பெரும் கடலிலே துவண்டு நோவு பட மாட்டார்கள் –
——————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .