ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஆறாம் திரு மொழி – -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள்–

பிரவேசம் –

கீழ்த் திருமொழி யிலே குயிலை நோக்கி என் காதலனை அழைத்துத் தர வேணும் என்று
பலவாறாக வேண்டியும்
அக்குயில் அங்கனம் செய்ய வில்லை
கால விளம்பம் இன்றி எம்பெருமானைக் காண வேண்டும்படியான அவஸ்தை அதிகமாய் விட்டது இவளுக்கு
ஆனால் அந்த விருப்பத்தின் படியே அவனைக் காண்கைக்கு
சௌகர்யம் ஏற்படாமல் போயிற்று

இவளுடைய ஆசையை இன்னும் பெருக்க வேணும் என்று எம்பெருமான் உடைய கருத்தாலால்
அதற்காக அவனும் விரைவாக வந்து முகம் காட்டாது ஒழிந்தான்
இவளுக்கு நாம் அடியோடு முகம் காட்டாவிடில் இவள் தரித்து இருக்க மாட்டாள் என்று கருதிய
கண்ணபிரான் கனவிலே யாவது இவட்கு நாம் காட்சி தந்து
ஒருவாறு தரிக்கும்படி செய்தல் நன்று என்று துணிந்து

விவாஹ உத்சவத்தின் சன்னாஹா சமயம் முதலாக
பாணி க்ரஹண பர்யந்தமான வ்ருத்தாந்தங்களை கனவிலே
அனுபவிப்பிக்க
அப்படியே ஆண்டாள் அனுபவித்துத்
தனது உயிர் தோழிக்குச் சொல்லுகிறதாய்ச் செல்கிறது
இத் திருமொழி —

——————————————————————————————

வாரண மாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-1-

பதவுரை

தோழீ–என் உயிர்த் தோழியே!
நம்பி–ஸகல குண பரிபூர்ணனான
நாரணன்–ஸ்ரீமந் நாராயணன்
ஆயிரம் வாரணம் சூழ–ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர
வலம் செய்து நடக்கின்றான் என்று–பிரதக்ஷிணமாக எழுந்தருளாகிற னென்று (வாத்ய கோஷதிகளால் நிச்சயித்து)
பொன் பூரண குடம் வைத்து–பொன் மயமான பூர்ண கும்பங்களை வைத்து
புரம் எங்கும்–பட்டணம் முழுதும்
தோரணம் நாட்ட–தோரண ஸ்தம்பங்கள் நாட்ட (இந்த நிலையையை)
நான் கனாக் கண்டேன்–நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்.

ஸ்ரீமந்நாராயணன் என்னை மணம் புணருவதாக நிச்சயித்து ஆயிரக்கணக்கான யானைகளைப் புறப்பட விட்டுக் கொண்டு
மிக்க ஸம்ப்ரமங்களுடன் திருவீதிப் பிரதக்ஷிணமாக எழுந்தருளுகிற செய்தியை அறிந்த நகரத்திலுள்ளார் யாவரும்
“பெரியவர்கள் எழுந்தருளும்போது பூர்ணகும்பம் வைக்க வேணும்“ என்ற சாஸ்த்ர விதிப்படியும் சிஷ்டாசார முறைப்படியும்
தங்கள் தங்கள் திருமாளிகைக்கெதிரில் பூர்ணகும் பங்களை வைத்தும் தோரணங்கள் நாட்டியும்
இப்படிப் பலவகையாக மங்களாலங்காரங்கள் செய்வதாகக் கனாக்கண்டேன் தோழீ! என்று
தோழியுடன் வருத்த கீர்த்தநம் பண்ணித் தரிக்கிறாள்.

வாரணம் – தற்சமவடசொல்.
‘ஆயிரம்யானை‘ என்று அருளிச் செய்தமைக்குக் கருத்து –
“தன்னோராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான்“ (பெரியாழ்வார் திருமொழி 3-1-1.) என்று
கண்ணபிரானுக்கு ஆயிரம் பேர்த் தோழன்மார்கள் உண்டானையாலும் அவர்களெல்லாரும் விட்டுப் பிரியாமல் கூடவே
வருவார்களாகையாலும், கண்ணபிரான் வேறுபடுத்த மாட்டானாகையாலும்,
* தம்மையேநாளும் அத்தோழன்மார்களையும் யானைமீதேற்றி உகப்பனாகையாலும் “வாரணமாயிரஞ சூழ“ எனப்பட்டதென்க.

ஆநிரை மேய்க்கப் பிறந்த கண்ணபிரானுக்கு
* வாரணமாயிரஞ் சூழவருதல் எங்ஙனே? என்னில்,
“உந்துமதகளிற்றன் ஓடாத்தோள்வலியன, நந்தகோபாலன்“ (திருப்பாவை) என்ற பாட்டின் ஆறாயிரப்படி வியாக்கியானத்தில்
“உந்து மதகளிற்றன் – மத்த கஜங்களையுடையவர் என்றுமாம், ஆனை யுண்டோ இவர்க்கென்னில்,
ஸ்ரீவஸுதேவரும் தாமும் ஒருமிடறாயிருக்கையாலே அங்குள்ளது இங்கேயாய் இங்குள்ளது
அங்கேயாய் ஒன்றாய்ப் போருகையாலும் தத்த புத்ரனுக்கு இரண்டிடத்திலும் ப்ராப்தி யுண்டாகையாலும் ஆனையுண்டாகத் தட்டில்லை,
‘வாரணமாயிரஞ் சூழ‘ என்றதிறே, திருவாய்ப்பாடியில் ஆனைகளும் பசுக்களுங் கலந்து திரியுமத்தனையிறே“ என்றருளிச்செய்துள்ளமை காண்க.

புரமெங்கும் – புரம் – வடசொல், பட்டணம் என்று பொருள், அதாவது – ஸ்ரீவில்லிபுத்தூர்.
“புறமெங்கும்“ என வல்லின றகரப்பாடங் கொவ்வாரு முளர், எல்லாவிடங்களிலுமென்றபடி. தோரணம் – வடசொல்.

வாரண மாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர் –
ஸ்ரீ மன் நாராயணன் என்னை மனம் புணருவதாக நிச்சயித்து
ஆயிரக் கணக்கான யானைகளைப் புறப்பட விட்டுக் கொண்டு
மிக்க சம்ப்ரமங்கள் உடன்
திரு வீதிப் பிரதஷிணமாக எழுந்து அருளும் போது-
தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடை இட்டு வருவான் -பெரியாழ்வார் திருமொழி -8-1-1-
கண்ணபிரானுக்கு ஆயிரம் பேர் தோழன்மார்கள் உண்டாகையாலும்
அவர்கள் எல்லாரும் விட்டுப் பிரியாமல் உடன் கூட வருவார்கள் ஆகையாலும்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்யும் –
அவர்களையும் யானை மீது ஏற்றி உகப்பான் ஆகையாலும் -வாரணம் ஆயிரம் சூழ -என்கிறாள்
ஆநிரை மேக்கப் பிறந்த கண்ணபிரானுக்கு
வாரணம் ஆயிரம் சூழ வருவது எங்கனே என்னில்
உந்து மத களிற்றன் ஓடாத தோல் வலியன் நந்த கோபாலன் –
மத்த கஜங்களை உடையவன் –
ஸ்ரீ வசூதேவரும் தாமும் ஒரு மிடறாய் இருக்கையாலே
அங்கு உள்ளது இங்கேயாய் இங்கு உள்ளது அங்கேயாய் ஒன்றாய்ப் போருகையாலும்
தகத புத்ரனுக்கு இரண்டு இடத்திலும் ப்ராப்தி யுண்டாகையாலும்
ஆனை யுண்டாகத் தட்டில்லை –
திருவாய்ப்பாடியிலே ஆனைகளும் பசுக்களும் கலந்து திரியும் அத்தனை இ றே-

பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
பூர்ண கும்பம் வைக்க வேணும்
-என்ற
சாஸ்திர விதிப்படியும்
சிஷ்டாசார முறைப்படியும்
தங்கள் தங்கள் திரு மாளிகைக்கு எதிரில்
பூர்ண கும்பங்களை வைத்தும்
தோரணங்களை நாட்டியும்
இப்படிப் பலவகையாக மங்கள அலங்காரங்கள் செய்வதாக
கனாக் கண்டேன் தோழீ -என்று
தோழியுடன் வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிக்கிறாள்-

புரம் -பட்டணம் -ஸ்ரீ வில்லிபுத்தூர்
புரமெங்கும் -எல்லா இடங்களிலும் என்றுமாம் —

——————————————————————————————-

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு
பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—6-2-

பதவுரை

நாளை–நாளைக்கு
வதுவை மணம் என்று நாள் இட்டு–விவாஹ மஹோத்ஸவ மென்று முஹூர்த்தம் நிர்ணயித்து
பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ்–பாளைகளோடு கூடின பாக்கு மரங்களாகிற அலங்காரங்களை யுடைத்தான மணப் பந்தலின் கீழே
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை–நரஸிம்ஹனென்றும் மாதவனென்றும் கோவிந்தனென்றும் திருநாமங்கள் பூண்ட ஒரு யுவாவானவன்
புகுத–பிரவேசிக்க-

“நாளையதினம் கண்ணாபிரானுக்கும் ஆண்டாளுக்கும் கல்யாண மஹோத்ஸவம்“ என்பதாக முஹூர்த்த நிர்ணயம்
பண்ணின பின்பு, விவாஹத்தின். முன்னாளிற் செய்யவேண்டுஞ சடங்குகள் செய்தற்காகக் கண்ணபிரான்
அலங்காரப் பந்தலின்கீழ் எழுந்தருளக் கனாக் கண்டேனென்கிறாள்.

‘பத்துநாள் கழிந்தபின் முஹூர்த்தம்‘ என்று நாளிட்டால் அத்தனை விளம்பம் ஹிக்க முடியாதாகையாலும்,
‘இன்றைக்கே முஹூர்த்தம்‘ என்று நாளிட்டால் அதிக ஸந்தோஷமும் தாங்க வொண்ணாமற் கேடு விளையுமாதலாலும்
* நாளை வதுவை மணமென்று நாளிட்டபடி. துக்கம் அஸஹ்மாயிருக்குமென்பது இதிஹாஸ ஸித்தம்.
வதுவை – கலியாணம், மணம் – உத்ஸவம்.

கல்யாணப்பந்தல்களில் பாளைகளோடு கூடின பாக்கு மாரங்களைக் கொண்டு வந்து நாட்டி அலங்காரம் செய்தல் முறைமையென்க.
பரிசு என்று அலங்காரத்துக்கும் பெருமைக்கும் ஸம்மானத்துக்கும் பேர்.
பாளைகள் நிறைந்த கமுகளாகிய அலங்காரம் அணிந்த பந்தலின்கீழ் என்கை.
“பந்தற்கீழ்“ என்றும் “பந்தர்க்கீழ்“ என்றும் பாடபேதங்கள். பந்தல், பந்தர் – கடைப்போலி.
கோளரி – மிடுக்கையுடைத்தான சிங்கம், “கோளரி மாதவன் கோவிந்தம்“ என்று அடுக்கி யருப்பதற்கிணங்கப்
பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்துள்ள ரஸமயமான அர்த்த விசேஷம் ரஸிகர்களின் நெஞ்சையுருக்கும்,
கோளரி – கண்ணபிரான் கல்யாணப் பந்தலுக்கு நடந்துவரும் போது நாட்டுப் புறத்துப் பையல்களைப் போலல்லாமல்
தன் பெருமையெல்லாம் தோற்ற மிடுக்கோடே நடந்தபடியைச் சொல்லுகிறது.
“அப்ரமேயம்ஹிதத்தேஜ,“ என்னும்படியான மிடுக்கு நடையிலே தோன்றுமே.
மாதவன் – பரம ரஸிகன் என்று தோன்றுமாறு நடந்து வந்தபடியைச் சொல்லுகிறது.
மா – பிராட்டிக்கு, தவன் – கொழுநன், என்றால் பரம ரஸிகன் என்று தானே பொருள்படும்.
(கோவிந்தன்) (ச்ரேயர்மஸிபஹுவிக்நாநி) என்ற படி நற்காரியங்களுக்கு இடையூறுகள் மிடை தருமாதலால்
இந்தவிவாஹ மஹோத்ஸவத்துக்கு யாரால் என்ற இடையூறு நேர்ந்துபிடுமோ என்று அஞ்சி
ஒருவரையும் விரோதித்துக்கொள்ளாமல் எல்லாரும் கையாளாய் முகங்கொடுத்துக்கொண்டு வந்தபடியைச் சொல்லுகிறது.
கோவிந்தனென்றாலும் ஸர்வஸுலபனென்றாலும் பாயாயமென்று கொண்மின்.
காளை – நல்ல இளைமைப்பருவம் வாய்ந்தவனென்கை,
காளையே எருது பாலைக்கதிபன் நல்லினையோன் பேராம“ என்பது நிகண்டு.

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு -நாளைய தினம் கண்ண பிரானுக்கும் ஆண்டாளுக்கும்
திருக் கல்யாண மகோத்சவம் என்பதாக நிர்ணயம் பண்ணின பின்பு

பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்
விவாஹத்தின் முன்னாளில் செய்ய வேண்டும் சடங்குகள் செய்வதற்காக
கண்ணபிரான் அலங்காரப் பந்தலின் கீழ்
எழுந்து அருளக் கனாக் கண்டேன் -என்கிறாள்
பத்துநாள் என்றால் -அத்தனை நாள் விளம்பம் சஹிக்க முடியாது ஆகையாலும்
இன்றைக்கே முஹூர்த்தம் என்று நாள் இட்டால் அதிக சந்தோஷம் தாங்க ஒண்ணாமல் கேடு விளையும் ஆதலாலும்
கை மேல் வருகிற பரமானந்தமும் அசஹ்யம் இதிஹாச சித்தம்
பாளைகள் உடன் கூடிய பாக்கு மரங்கள் கொண்டு வந்து நாட்டி அலங்காரம் செய்வது முறைமை
பரிசு -அலங்காரத்துக்கும் பெருமைக்கும்

கோளரி -மிடுக்கை யுதைத்தான சிங்கம்
கண்ணபிரான் கல்யாணப் பந்தலுக்கு நடந்து வரும் போது நாட்டுப் புரத்துப் பையல்களைப் போல் அல்லாமல்
தன பெருமை எல்லாம் தோற்ற மிடுக்கோடு நடந்த படியைச் சொல்கிறது
அப்ரமேயம் ஹிதத்தேஜ-என்னும் படியான மிடுக்கு நடையிலே தோன்றுமே
மாதவன் –
பரம ரசிகன் என்று தோற்றுமாறு நடந்து வந்த படியைச் சொல்கிறது
பிராட்டிக்கு கொழுநன்
கோவிந்தன்
ஸ்ரேயர்ம்சிப ஹூ விக் நாநி -என்றபடி
நல்ல கார்யங்களுக்கு இடையூறுகள் மிடை தரும் ஆதலால்
ஒருவரையும் விரோதித்திக் கொள்ளாமல் எல்லாருக்கும் கையாளாய் முகம் கொடுத்துக் கொண்டு
வந்தபடியைச் சொல்லுகிறது
கோவிந்தன் -சர்வ ஸூ லபன்
காளை -இளைமைப் பருவம் வாய்ந்தவன்-

———————————————————————————————

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து
மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-3-

பதவுரை

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்–இந்திரன் முதலான தேவ ஸமூஹங்களெல்லாம்
வந்து இருந்து–(இந்திலத்திலே) வந்திருந்து
என்னை மகள் பேசி–என்னைக் கல்யாணப் பெண்ணாக வார்த்தை சொல்லி
மந்திரித்து–அதற்குமேல் ஸம் பந்திகள் ஒருவர்க்கொருவர் செய்து கொள்ள வேண்டிய ஏற்பாடுகள்
விஷயமாக யோசித்து முடிவுசெய்து கொண்டு, (பிறகு)
அந்தரி–‘துர்க்கை‘ என்கிற நாத்தனார்
மந்திரம் கோடி உடுத்தி–கல்யாண புடைவையை எனக்கு உடுத்தி
மணம் மாலை சூட்ட–பரிமளம் மிக்க புஷ்பங்களையும் சூட்ட

இந்திரன் முதலிய வானவர்களெல்லாரும் ‘நம்முடைய பெருமானுக்கு நடக்கப் போகிற கல்யாண மஹோக்ஸவத்தை
நாமெல்லாருமாய்க் கூடியிருந்து காரியங்கள் செய்து நிறைவேற்றிவரவேணும்; என்று குதூஹலித்துத்
தலையிலே கால் பாவிவந்து ‘இக்காரியம் முடிந்தாலன்றி நாங்கள் எழுந்திருப்பதில்லை‘ என்று பிடிவாதமாயிரந்து
‘எங்கள் பெருமானுக்கு உங்கள் பெண்ணை மணவாட்டியாக்கித் தரவேணும்‘ என்று பெரிய திரளிலே பிரார்த்தித்து,
பிறகு உபவர்க்கத்தாரும் ரஹஸ்யமாகவிருந்து பூஷண பீதாம்பரங்கள் விஷயமாகவும் மற்றுமுள்ள ஸம்விதாநங்கள் விஷயமாகவும்
ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ள வேண்டியவற்றைக் காதோடு காதாகப் பேசி முடித்து, இனிக் கால விளம்பம் செய்தால்
ஏதாவது இடையூறு நேரிடக்கூடுமென்றெண்ணி அப்போதே, மணமகளுக்கு நாத்தனாரைக் கொண்டு புடவையுடுத்திகிற க்ரமத்திலே
எனக்கு நாத்தனாரான துர்க்கையைக் கொண்டு புடவை யுடுத்தி நன்மாலைகளையும் சூட்டுவித்து
இப்படிப்பட்ட சில பாணிக்ரஹண பூர்வாங்கங்கள் நடைபெறக் கனாக் கண்டேனென்கிறாள்.

சக்ரவர்த்தி திருமகன் பண்டு வனவாஸ காலத்தில் சரபங்கபகவானுடைய ஆச்ரமத்திற்று எழுந்தருளினபோது
அங்கு தேவேந்திரன் வந்திருந்தும் பெருமாளை ஸேவியாமலே தன்னுலகம் நோக்கிச் சென்றான்,
பெருமாள் தம்முடைய பரத்வத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் “ஆத்மாநம்மந்யே“ என்று ஸாமாந்யமான
மானிடத் தன்மையையே ஏறிட்டுக் கொண்டிருந்த படியால் இப்போது இவரைக் காண வேண்டா,
ராவண ஸம்ஹாரம் தலைக்கட்டின பின்பு ஸேவித்துக் கொள்வோம் என்று போய் விட்டான்,
கிருஷ்ணாவதாரம் அப்படியல்லாமல் ஈசவரத்வமும் கூடவே கலந்து பரிமாறு மவதாரமாகையாலே
இந்திரன் முதலியோர் வந்து குறுக்கும் நெடுக்கும் குலாவித்திருந்து அதிக ப்ராஜாபத்யம் பண்ணுவர்களாம்.

மகள்பேசுதல் – ‘இவளை மணமகளாகத் தாரைவார்த்துக் கொடுக்கவேணும்‘ என வேண்டிப் பேசுதல்
மந்திரித்து – (மந்தர்) என்றவடசொல்லடியாகப் பிறந்த அவ்யயம். மந்த்ரமாவது ஆலோசனை, ஆலோசித்து என்றபடி.
மகள் பேசின பிறகு ஆலோசிப்பது பூஷ்ண பீதாம்பராதி விஷயமென்க.
மந்திரக்கோடி – (மந்த்ரவாஸஸ்) என்பர் வடநூலார்.
“கோடியுடுத்து“ என்று சிலர் ஒதுவர். “உடுத்தி“ என்ற பாடமே ஏற்கும்: ‘உடுத்து‘ என்றால், தான் அணிந்து கொண்டு என்று பொருள்,
உடுத்தி என்றால் பிறர்க்குச் சாத்தி என்று பொருள், இங்குப் பிறவினைப்பொருள் படவேண்டி நிற்றலால் ‘உடுத்தி‘ என்றபாடமே ஏற்குமென்ப.

அந்தரி – ‘துர்க்கைக்குப் பெயர், இவள் கண்ணாபிரானுக்கு உடன் பிறந்தாளாதலால் ஆண்டாளுக்கு நாத்தனாரானாள்.
அந்தரத்திலே (ஆகாயத்திலே) அந்தரத்தாநமாய்ப் போனமையால் அவளுக்கு அந்தரி என்று பேராயிற்றென்க.

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
இந்திரன் முதலிய வானவர்கள் எல்லாரும்
நம்முடைய பெருமானுக்கு நடக்கப் போகிற கல்யாண மகோத்சவத்தை
நாம் எல்லாரும் கூடி நிறைவேற்றி வர வேணும்
என்று குதூஹலித்துத்

வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து
தரையிலே கால் பாவி வந்து
இந்த மகாத்ச்வம் முடிந்தால் அல்லது நாங்கள் எழுந்து இருப்பது இல்லை என்று பிடிவாதமாக இருந்து
எங்கள் பெருமானுக்கு உங்கள் பெண்ணை மணவாட்டியாகத் தர வேணும்
என்று பெரிய திரளிலே பிரார்த்தித்து

மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
உபய வர்க்கத்தாரும் ரஹச்யமாக பூஷண பீதாம்பர விஷயமாகவும்
மற்றுள்ள சம்விதானங்கள் விஷயமாகவும் காதோடு காதாக பேசி
கால விளம்பம் இல்லாமல் மண மகளுக்கு நாத்தனாரைக் கொண்டு புடவை யுடுத்தி
உடுத்து -பாடம் தப்பு –
அந்தரத்திலே ஆகாசத்திலே போனமையால் துர்க்கைக்கு அந்தரி என்ற பெயர் உடுத்தி என்பதே பிறர்க்கு உடுத்தி விடுவது
நன்மாலைகளையும் சூட்டுவித்து
இப்படிப் பட்ட பாணி க்ரஹண பூர்வாகங்கள் நடை பெறக் கனாக் கண்டேன் -என்கிறாள்

சக்கரவர்த்தி திருமகன் வனவாச காலத்தில் சரபங்க ஆஸ்ரமம் எழுந்து அருளின போது
அங்கு தேவேந்தரன் வந்திருந்தும் பெருமாளை சேவியாமலே தன்னுலகம் நோக்கிச் சென்றான்
ஆத்மா நம் மாநுஷம் மன்யே -என்று மானிடத் தன்மையை ஏறிட்டுக் கொண்டு இருந்தபடியாலே
இப்பொழுது இவரைக் காண வேண்டா
ராவண சம்ஹாரம் தலைக்கட்டின பின்பு சேவித்துக் கொள்ளலாம் -என்று போய் விட்டான் –

கிருஷ்ணாவதாரம் அப்படி இல்லாமல் ஈச்வரத்வமும் கூடவே வந்து பரிமாறும் அவதாரம் ஆகையாலே
இந்திரன் முதலானோர் வந்து குறுக்கும் நெடுக்கும் குலாவித் திரிந்து அதிக பிராஜாபத்யம் பண்ணுவார்களாம்-

—————————————————————————————————-

நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பாப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்—6-4-

பதவுரை

பாப்பனர் சிட்டாகள் பல்லார்–சிஷ்டர்களான பல ப்ராஹ்மணர்கள்
நால் திசை–நான்கு திசைகளிலுமிருந்து
தீர்த்தம்–தீர்த்தங்களை
கொணர்ந்து–கொண்டு வந்து
நனி நல்கி–நன்றாகத் தெளிந்து
எடுத்து ஏத்தி–உச்ச ஸ்வரமாக வெடுத்து மங்களா சாஸநம் பண்ணி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு–(பலவகைப்) புஷ்பங்கள் புனைந்த மாலையை
யுடையவனாய்ப் பரம பாவநனான கண்ண பிரானோடு
என்றன்னை–என்னை (இணைத்து)
காப்பு நாண் கட்ட–கங்கணங்கட்ட

சக்ரவர்த்தித் திருமகனாருடைய திருவபிஷேக மஹோத்ஸவத்திற்காக ஸ்ரீவாநர வீரர்கள் நாலு ஸமுத்ரத்திலுமுள்ள
தீர்த்தங்களையுங்கொணர்ந்தாப் போல என்னுடைய கல்யாண மஹோத்ஸவத்திற்காக வைதிக ஸார்வபௌமர்களான
பல அந்தணர்கள் நாற்றிசைகளினின்றும் நாநாவகைப் புண்ய தீர்த்தங்களைக் கொண்டு வந்து
ஆயுஸ்ஸு முதலான நன்மைகளெல்லாமுண்டாவதற்காக அந்தத் தீர்த்தங்களாலே தம்பதிகளாகிய எங்களைப் பலகாலும் ப்ரோக்ஷித்து,
(ஆயுரரசாஸ்தே, ஸுப்ரஜாஸ்த்வமாசாஸ்தே) இத்யாதி வேத வாக்கியங்களை உச்சைஸ்ஸ்வரமாக எடுத்து ஓதி ஆ
ஸீர்வாதங்கள் பண்ணிக் கண்ணாபிரானோடு என்னை இணைத்துக் கங்கண நூல் கட்டும் நிலைமையைக் கனவில் கண்டேனென்கிறாள்.

நனி – மிகுதியை உணர்த்தும் உரிச்சொல், மிகவும் என்றபடி நல்கு நல் – கொடுத்தல்,
இங்கு, ப்ரோக்ஷணம்செய்தல் ப்ராஹ்மண, என்ற வடசொல் பாப்பனன் எனத் திரிந்தது,
பாப்பனர் – சிட்டர், பாப்பனச்சிட்டர், ப்ராஹ்மணயோநியிற் பிறப்பு மாத்திரமின்றியே வேதங்களை நன்றாக ஓதி
ஆசார வ்யஹாரங்களில் ஒன்றுங்குறையாதிப்பவர்கள். “பல்லரண் டெடுத்தேத்தி“ என்பது அதுநிகர்களின் பாடம்,
வியாக்கியானத்தில் “ மங்களாசாஸநம் பண்ணி“ என்றருளிச் செய்திருப்பதைக்கண்டு பல்லாண்டு என்ற பாடத்தைக் கற்பித்தனர்போலும்,
“பல்லார் எடுத்து ஏத்தி“ என்ற பாடத்திற்கே வியாக்கியானம் நன்கு பொருந்தியிருக்குமாற்றைக் காண்மின்.

பூப்புனைகண்ணி – கல்யாணப்பெண்ணுக்கு உயர்ந்த சேலையாலும் சிறந்த பூஷ்ணங்களாலும் அலங்காரம் பண்ணினால்,
கல்யாணப் பிள்ளைக்கு அவையெல்லாம் வேண்டாதே ஒரு புஷ்ப ஸரத்தாலே அலங்காரம் அமைந்தபடி புனிதன் – பரிசுத்தன் என்றபடி,
ஸ்நாநம்பண்ணிக் கையும் பவித்திரமுமாய் வைதிக வேஷம் பூண்டு ஒருவர் மேலும் படாமல்
மிக்க ஆசாரசீலனாயிருக்கு மிருப்புத் தோற்றப் புனிதம் என்கிறாள். ஆசாரம் சிறிது குறைந்தாலும் பெரியாழ்வார்
பெண்பிள்ளையைக் கொடுக்கமாட்டார்களென்று கண்ணபிரான் மிக்க ஆசாரங்கொண்டாடுகிறபடி.
புனிதனோடு என்றன்னை – புனிதனுக்கும் எனக்கும் என்றபடி.
காப்பு நாண் – மங்களார்த்தமான கங்கண ஸூத்ரம். காப்பு நாண் கட்டுகை புரோஹிதருடைய காரியமென்ப.

நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி -பாப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
சக்கரவர்த்தி திரு மகன் உடைய திருக் கல்யாண மகோத்சவத்துக்கு
ஸ்ரீ வானர வீரர்கள் நாலு சமுத்ரத்திலும் உள்ள தீர்த்தங்களையும் கொணர்ந்தால் போல்
விதிக்க சார்வ பௌ மர்களான பல அந்தணர்கள்
-வேதங்களை ஓதி ஆச்சார வ்யவஹாரங்களில் குறை அற்று இருப்பவர்கள்
நான்கு திசைகளில் இருந்தும் நாநா வகைப் புண்ய தீர்த்தங்களையும் கொண்டு வந்து
ஆயுஸ் ஸூ முதலான நன்மைகள் எல்லாம் யுண்டாவதற்க்காக
தம்பதிகளை பரோஷித்து
ஆயுரா சாஸ்தே ஸூ ப்ரஜாஸ்த்வமா சாஸ்தே -இத்யாதி வேத வாக்கியங்களை
உச்சி ஸ்வரமாக எடுத்து ஓதி
நனி -மிகுதியை உணர்த்தும் சொல் -மிகவும் என்றபடி
நல்குதல் -கொடுத்தல் இங்கு ப்ரோஷணம் செய்தல்
பல்லாண்டு எடுத்து ஏத்தி தப்பான பாடம்
மங்களா சாசனம் பண்ணி -வியாக்யானம் பார்த்து கற்பித்த பாடம்
பல்லார் எடுத்து ஏத்தி –

பூப்புனை கண்ணிப் புனிதனோடு எனதன்னை காப்பு நாண் கட்டக் –
ஆசீர்வாதங்களைக் பண்ணிக் கண்ணபிரான் உடன் என்னை
இணைத்துக் கங்கண நூல் கட்டும் நிலைமையை
கல்யாண பெண்ணுக்கு உயர்ந்த செளையாலும்
சிறந்த பூஷணங்களாலும் அலங்காரம் பண்ணி
கல்யாண பிள்ளைக்கு ஒரு புஷ்ப சரத்தாலே அலங்காரம் -என்றபடி
புனிதன் -ஸ்நானம் பண்ணி கையும் பவித்ரமுமாய்
விதிக்க வேஷம் பூண்டு
ஒருவர் மேலும் படாமல் மிக்க ஆசார சீலனாய் இருக்கும் இருப்பு -புனிதன்
ஆசாரம் சிறிது கிரைந்து இருந்தாலும்
பெரியாழ்வார் பெண் பிள்ளையைக் கொடுக்க மாட்டார்கள் -என்று
கண்ணபிரான் மிக்க ஆசாரம் கொண்டாடுகிறபடி
காப்பு நாண்-மங்கள அர்த்தமான கங்கண ஸூ த்த்ரம் –

கனாக் கண்டேன் தோழீ நான்

———————————————————————————————–

கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—-6-5-

பதவுரை

சதிர் இள மங்கையர் தாம்–அழகிய இளம் பெண்கள்
கதிர் ஒளி தீபம்–ஸூர்யனுடைய ஒளி போன்ற ஒளியை யுடைய மங்கள தீபத்தையும்
கலசம்–பொற் கலசங்களையும்
உடன் ஏந்தி–கையில் ஏந்திக் கொண்டு
வந்து எதிர் கொள்ள–எதிர் கொண்டு வர,
மதுரையார் மன்னன்–மதுரையிலுள்ளார்க்கு அரசனான கண்ண பிரான்
அடி நிலை தொட்டு,–பாதுகைகளைச் சாத்திக் கொண்டு
எங்கும் அதிர–பூமி யெங்கும் அதிரும் படியாக.
புகுத–எழுந்தருள்

பருவத்தாலும் வடிவழகாலும் தங்களையே எல்லாரும் நோக்கிக் கொண்டிருக்கும்படி மிக்க அழகுவாய்ந்த மாதர்கள்
மங்கள ஸம்ருத்திக்காகத் தீபங்களையுமு பூர்ண கும்பங்களையும் ஏந்திக் கொண்டு எதிர் கொண்டுவர,
கண்ண பிரான் பாதுகை சாத்திக் கொண்டு பூமி அதிரும்படி ஸந்தோஷமாக நடநது வரும்படியைக் கனவில் கண்டேனென்கிறாள்.

கதிர் என்று கிரணத்திற்குப் பேராயினும் இங்கு இலக்கணையால் ஸூர்யனுக்குப்பேராகிறது.
இடையில் விளக்கு அணைந்தால் மங்களத்துக்கு குறையாமென்று ஸூர்யப்ரபை போலே மிக்கவொளியை யுடைய
விளக்குக்களைக் கொண்டுவருவர்களென்க. தீபம், கலசம் – வட சொற்கள்.

மதுரையார் மன்னர் – மற்ற திருநாமங்களிற்காட்டில் இத்திருநாமத்தில் கண்ணபிரானுக்கு உகப்பு
விஞ்சியிருக்குமென்பதற்கு ஒருஐதிஹ்யமிருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை –
ஒரு பக்தன் ஒருக்ருஸ்ண விக்ரஹத்தை ஏறியருளப்பண்ணி ‘இவர்க்கு என்ன திருநாமம்சரத்துவோம்‘ என்று சிந்தியா நிற்க,
பெருமாள் அவனுடையகனவிலே வந்து தோன்றி ‘அப்பா! எனக்கு கன்னாபின்னா வென்று சிலநாமங்களை இடாமல்
மதுரைமன்னன் என்றுபெயரிடு‘ என்று நியமித்தாராம்.

அடிநிலைதொட்டு என்பதற்கு “தன் திருவடிநிலைகளை அருகிருப்பார் கையில் கொடுத்து விட்டு“ என்பதாகச் சிலர் பொருள்வரைந்து,
பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானந்தையும் “(அடிநிலையித்யாதி) திருவடி நிலைகளைக் கொடுத்து“ என்று அச்சிடுவித்தார்கள்.
தொடுத்து என்றதைக் கொடுத்து என மயங்கி கொண்டு என்கை.
பாதுகையணிந்து நடந்தாலன்றோ பூமியதிரும். கோத்து என்றிருந்தது கொடுத்து என்றாயிற்று என்பாருமுளர்.

“எங்கும் அதிரப்புகுத“ என்றவிடத்திற்கு ஸம்வாதமாக ஒருஐதிஹ்ய மருளிச்செய்வர் –
முன்பு மஹாபலி யஜ்ஞபூமியிலே ஸ்ரீவரமநன் நடந்த போது பூமி நெளிந்த்தென்று ஒருக்ரந்தத்திலே, கிடக்கக்கண்டு
‘இதற்கு என்னபொருள்?‘ என்று சில முதலிகள் சர்ச்சைப் பண்ணுகையில்
“ஸர்வேச்வரனன்றோ அவன்நடந்தால் பூமிநெளியச் சொல்ல வேணுமா?“ என்று ஒருஸ்வாமிசொல்ல,
பட்டரருளிச் செய்யுமது கேட்கவேணுமென்று நஞ்சியர் பட்டரைக் கேட்க,
“யாசக வ்ருத்தியில் பதற்றத்தாலே அடியிட்டபடியால் பூமி நெளிந்ததுகாணும்“ என்று பட்டர் அருளிச்செய்தாராம்.
ஒரு பூமிக்காக அப்படி பதறிவந்தவன், பெரியாழ்வார் திருமகளைப் பெறுகைக்கு எங்ஙனே பதறமாட்டான்.

பருவத்தாலும் வடிவு அழகாலும் தங்களையே எல்லாரும்
நோக்கிக் கொண்டு இருக்கும் படி
மிக்க அழகு வாய்ந்த மாதர்கள் மங்கள சம்ருத்திக்காக
தீபங்களையும் பூர்ண கும்பங்களையும் ஏந்திக் கொண்டு எதிர் கொண்டு வர
கண்ணபிரான் பாதுகை சாத்திக் கொண்டு பூமி அதிரும்படி
சந்தோஷமாக நடந்து வரும்படியைக் கனவில் கண்டேன் –
கதிர் -இலக்கணையால் சூர்யன் ஸூ ரய பரப்பை போலே மிக்க ஒளியை யுடைய விளக்குகளை கொண்டு வருவார்கள்

மதுரையார்மன்னன் -கண்ணபிரான் உகப்பு விஞ்சி இருக்கும் திரு நாமம்-
ஒரு பக்தன் கிருஷ்ண விக்ரஹம் எழுந்து அருள பண்ணி
என்ன திரு நாமம் சாத்துவோம் என்று சிந்தியா நிற்க
பெருமாள் கனவிலே
கன்னா பின்னா திரு நாமங்கள் சாத்தாமல் மதுரையார் மன்னன் -என்று பெயர் இடுநியமித்த ஐதிகம்
அடிநிலை தொடுத்து -சரியான பாடம் பாதுகைகளை சாத்திக் கொண்டு
அடிநிலை கொடுத்து -அருகில் இருப்பார் இடம் கொடுத்து -தப்பான பாடம்

எங்கும் அதிரப் புக்கு -ஐதிகம்
முன்பு மகா பலி யஞ்ஞ பூமியிலே ஸ்ரீ வாமனன் நடந்த போது பூமி நெளிந்தது என்று
சில கிரந்தங்களில் இருக்க
யஸ்மின் பிரயாதே அஸூ ரபூப் ருதோத்வரம் நநாம கேதாதவ நிஸ் ஸ சாகார
ஸ்வா மனஸ் சர்வ ஜகன் மயச் சதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தையே ஹரி -ஸ்லோகம் –
சர்வேஸ்வரன் அன்றோ அவன் நடந்தால் பூமி நெளியச் சொல்ல வேணுமோ என்று ஒரு சுவாமி சொல்ல
பட்டர் அருளிச் செய்யுமது கேட்க நஞ்சீயர்
யாசக வ்ருத்தியிலே பதற்றத்தாலே அடி இட்ட படியாலே
பூமி நெளிந்தது காணும்
என்று பட்டர் அருளிச் செய்தாராம்
ஒரு பூமிக்காகா அப்படி பதறி வந்தவன்
பெரியாழ்வார் திரு மகளை பெறுகைக்கு எங்கனே பதற மாட்டான் –

—————————————————————————————————–

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-6-

பதவுரை

மத்தளம் கொட்ட–மத்தளங்கள் அடிக்கவும்
வரி சங்கம் நின்று ஊத–ரேகைகளை யுடைய சங்குகளை ஊதவும்
மைத்துனன் நம்பி மதுசூதனன்–மைத்துனமை முறையை யுடையனாய் பூர்ணனான கண்ண பிரான்
முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் வந்து–முத்துக்களை யுடைய மாலைத் திரள்கள்
தொங்க விடப் பெற்று பந்தலின் கீழே வந்து
என்னை கைத் தலம் பற்ற–என்னைப் பாணி க்ரஹணம் செய்தருள

மிருதங்கம் முதலிய பலவகைவாத்தியங்கள் அடிக்கவும் சங்குகளூதவும் இப்படி மங்களவாத்ய கோஷம் முழங்கா நிற்க,
கண்ணபிரான் முத்துப்பந்தலின் கீழே எழுந்தருளிப் பாணி க்ரஹணம் பண்ணியருளக் கனாக்கண்டேனென்கிறாள்.

“நின்றூத“ என்றவிடத்து நின்று என்றது வார்த்தைப்பாடு.
மைத்துனன் – அத்தைமைந்தன். மாமன் மகளை மணக்கும் முறையைபற்றி நப்பின்னைப் பிராட்டிக்குக் கண்ணபிரான்
மைத்துன்னாதலால் ஆண்டாளும் அந்தஸம்பந்தத்தை ஆசைப்பட்டு “மைத்துனன் நம்பி“ என்கிறாளென்ப
மதுசூதன் – மது என்ற அசுரனைக் கொன்றவன், விரோதி நிரஸநத்தில் வல்லவன் என்றபடி.
இங்கே வயாக்யாநஸ்ரீஸூக்தி – (மதுசூதன்) மற்றுமு மைத்துனமைமுறையுண்டென்று ஆரேனும் வந்து கைப் பிடிக்கப்பார்க்கில்
அவர்களையழியச்செய்து தானே ஸ்வீகரிக்கவல்லவனாய்த்து,
தன்னுடைமையைப் பிறர் ‘என்னது‘ என்னும் போது அவர்களை யழியச்செய்து கைக் கொள்ளவல்லனாய்த்து.

மிருதங்கம் முதலிய பலவகை வாத்தியங்கள் அடிக்கவும்
சங்குகள் ஊதவும்
இப்படி மங்கள வாத்திய கோஷம் முழங்கா நிற்க
கண்ணபிரான் முத்துப் பந்தலின் கீழே எழுந்து அருளப்
பாணி க்ரஹணம் பண்ணி அருளக் கனாக் கண்டேன் –
நின்றூத -நிற்ற வார்த்தைப் பாடு
மைத்துனன் -அத்தை மகன்
நப்பின்னை பிராட்டிக்கு கண்ணபிரான் மைத்துனன் முறை ஆதலால்
அந்த சம்பந்தம் இட்டு அருளிச் செய்கிறாள்
மது சூதன் -விரோதி நிரசன சீலன்
மற்றும் மைத்துனமை முறை யுண்டு என்று
ஆரேனும் வந்து கைப்பிடிகிகப் பார்க்கில்
அவர்களை அழியச் செய்து தானே
சுவீகரிக்க வல்லவன் ஆய்த்து
தன்னுடைமையை பிறர் -என்னது என்னும் போது
அவர்களை அழியச் செய்து கைக் கொள்ள வல்லவன் ஆய்த்து

———————————————————————————————

வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிது வைத்து
காய்சின வாய் களிறு அன்னன் என் கை பற்றி
தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் —6-7-

பதவுரை

வாய் நல்லார்–நன்றாக ஓதின வைதிகர்கள்
நல்ல மறை ஓதி–சிறந்த வேத வாக்கியங்களை உச்சரிக்க,
மந்திரத்தால்–(அந்தந்த க்ரியைகளுக்கு இசைந்த) மந்த்ரங்களைக் கொண்டு
பாசு இலை நாணல் படுத்து–பசுமை தங்கிய இலைகளை யுடைத்தான நாணற் புல்லைப் பரிஸ்தரணமாக அமைத்து
பரிதி வைத்து–ஸமித்துக்களை இட்டு,
காய்சின வாய் களிறு அன்னன்–மிக்க சினத்தை யுடைய மத்த கஜம் போல் செருக்கனான கண்ண பிரான்
என் கை பற்றி–என் கையைப் பிடித்துக் கொண்டு
தீ வலம் செய்ய–அக்நியைச் சுற்றி வர

வாயில் நல்வேதமோதும் வேதியர்கள் கர்மகாண்டங்களைச் சொல்லுகை யன்றிக்கே பர ப்ஹ்ம ஸ்வரூப பரங்களான
புருஷ ஸூக்தம் உபநிஷத்து முதலான வேதங்களை ஓத, அதிகம்பீரநடையை யுடையனான கண்ணபிரான்
மைந்தரகமாக அக்நி காரியங்களை நடத்தி, என்கையைப் பிடித்துக்கொண்டு ஹோமாக்நியை
ப்ரத க்ஷிணமாக்ச் சுற்றிவரக் கனாக் கண்டேனென்கிறாள்.

முதலடியில், ஓதிஎன்றது எச்சத்திரிபு, ஓத என்றபடி
வாய் நல்லார் நல்ல மறையோத, காய்சின மாகளிறன்னான் மந்திரத்தால் பாசிலை நாணற்படுத்துப் பரிதிவைத்து,
என்கைபற்றித் தீவலஞ்செய்யக் கணாக்கண்டேன்.

வேதராசியில் தேவதாந்தரப்ரசம்ஸாபரங்களான பாகங்களும் உள்ளமையால்
“நஸ்மர்த்தவ்யோ விஸேஷேண வேதமந்த்ரோப்யவைஷ்ணவ“ என்றபடி அவற்றை உபேக்ஷித்து
வைஷ்ணவங்களான வேத பாகங்களை ஓதினார்களென்கைக்காக “நல்ல மறையோதி“ என்னப்பட்டது.
வடசொல் மந்திரமெனத் திரிந்தது. பரிதி – வடசொல், நாணற்படுத்துவதும் பரிதி வைப்பதும் அக்நி காரியங்கள்.
ஆண்டாளைக் கைப்பிழக்கப் பெற்றமையாலுண்டான செருக்குக்குக் காய்சின மா களிற்றின் செருக்கு ஒக்கும்.
என்கைபற்றித் தீவலஞ்செய்ய – திருமங்கலிய தாரணத்திற்குப் பிறகு தீவலஞ்செய்தல் முறைமை யென்ப.
தம்பதிகள் தங்களுடைய அன்பை அக்நி ஸாக்ஷிகமாக்குகிறபடி. இந்தத் தீவலஞ்செய்தல் ஸப்தபதீ எனவும்படும்.

வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
கர்ம காண்டங்களை சொல்லுகை அன்றிக்கே பர ப்ரஹ்ம ஸ்வரூப பாகங்களான
புருஷ ஸூகதம் உபநிஷத் முதலான வேதங்களை ஓத –
ந ஸ்மர்த்தவ்யோ விசேஷண வேத மந்த்ரோப்ய வைஷ்ணவ -என்றபடி
அவற்றை உபேஷித்து வைஷ்ணவங்களான வேத பாகங்களை ஒதுவதால் நல்ல மறையோர்கள் –

பாசிலை நாணல் படுத்துப் பரிது வைத்து –
பரிதி வடசொல்
சமித்துக்களை இட்டு
பசுமை தங்கிய இலைகளை உடைத்தான நாணல் புல்லை
பரிஸ்தரணமாக அமைத்து –

காய்சின வாய் களிறு அன்னன் ஏன் கை பற்றி
அதி கம்பீர நடையை யுடைய கண்ணபிரான் –
ஆண்டாளைக் கை பிடிக்கையால் உண்டான செருக்கு

தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் –
சமந்தாகமாக அக்னி கார்யன்களை நடத்தில்
என் கையைப் பிடித்துக் கொண்டு
ஹோம அக்னியை பிரதஷினமாக சுற்றி வர
கனாக் கண்டேன் -என்கிறாள்
தங்கள் அன்பை அக்னி சாஷிகம் ஆக்குகிறபடி -சப்த பதீ-எனப்படும் அக்னி கார்யம் –

—————————————————————————————————-

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் —6-8-

பதவுரை

இம்மைக்கு–இப் பிறவிக்கும்
ஏழ் ஏழ் பிறவிக்கும்–மேலுள்ள பிறவிகள் எல்லாவற்றிற்கும்
பற்று ஆவான்–சரண்யனா யிருப்பவனாய்
நம்மை உடையவன்–நமக்கு சேஷியாய்
நம்பி–ஸகல கல்யாண குண பரிபூர்ணனாய்
நாராயணன்–நாராயணனான கண்ண பிரான்
செம்மை உடைய திரு கையால்–செவ்விய (தனது) திருக் கையினால்
தாள் பற்றி–(எனது) காலைப் பிடித்து
அம்மி மிதிக்க–அம்மியின் மேல் எடுத்து வைக்க

“உன்றன்னோடுற்றோமேயாவோ முனக்கே நாமாட்செய்வோம்“ என்றபடி காலத்தவமுள்ளதனையும் நம்முடைய
பணி விடைகளை ஏற்றுக்கொண்டு நம்மை நோக்குமவனான கண்ணபிரான்
தனது செந்தாமரை மலர்போன்ற திருக்கையாலே என் காலைப் பிடித்து அம்மி மிதிப்பிக்கக் கனாக்கண்டேனென்கிறாள்.
இது அச்மாரோஹணம் எனப்படும். மணவாளப்பிள்ளை மணவாட்டியின் காலைப்பிடித்துக் கொண்டு போய்
அம்மியை மிதிக்கச் செய்வது முறைமையோ?பெண் பிள்ளையின் காலை ஆண்பிள்ளை வந்து பிடிப்பது பொருந்துமோ?
இது ஸாஸ்த்ர மதியாதைக்குச் சேருமா? அப்படி ப்ரமாணந்தானுண்டோ வென்று பல பேருக்கு இதிலே விசிகித்ஸை பிறக்கும்,
திருக் கையால் தாள்பற்றுகை யென்பது அஸாஸ்த்ரீயமான காரியமென்று சிலர் க்ரந்தமும் எழுதியிருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள், பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான வைகரியின் ஸ்வாரஸ்யத்தை ஆராயப் பெற்றிலர் போலும்,
வியாக்கியமான ஸ்ரீஸூக்தி வருமாறு “(செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி) பிள்ளை யுறவு முறையார் வேண்டா வென்பர்கள்,
பெண் பிள்ளை யுறவு முறையார் வேணுமென்னாநிற்பர்கள், இப்படி இரண்டு தலையிலுள்ளாரும் வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே
தானேவந்து காலைப் பிடிக்கக் கணிசியாநிற்குமாய்த்து அதாவது
ஆச்ரிதர் கால் பிடிக்கவென்றால் இறாயாத கையாய்த்து உபதேஸ காலத்திற் போலன்றிறே பரிமாற்றத்திலிருப்பது,
உபதேசிப்பது அவன் காலைப் பிடிக்கக் கடவதாக,
பரிமாற்றத்திலிருப்பது, அவன்றான் கால் பிடிக்கும்படியாக வாய்த்திருப்பது . . .
(தோழீ! நான்) … அவன் ஸவபாவம் நீ சொல்லக் கேட்டபடியே அநுபவிக்கப் பெற்றேன்.

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான் -நம்மை யுடையவன் நாராயணன் நம்பி-
உன்தன்னோடும் உற்றோமே ஆவோம்
உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்றபடி
கால தத்வம் உள்ளது அனையும்
நம்முடைய பணி விடைகளை ஏற்றுக் கொண்டு நம்மை நோக்குமவன்

செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் –
தனது செந்தாமரை மலர் போன்ற திருக்கையாலே
என் காலைப் பிடித்து
அம்மி மிதிப்பிக்க கனாக் கண்டேன் –
அச்மாரோஹணம் –
பிள்ளை யுறவு முறையார் வேண்டாம் என்பார்கள்
பெண் பிள்ளை உறவு முறையார் வேணும் வேணும் என்னா நிற்பார்கள்
இப்படி இரண்டு தலையில் உள்ளாறும் வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே
தானே வந்து காலைப் பிடிக்க கணிசியா நிற்கும் ஆய்த்து
அதாவது -ஆஸ்ரிதர் காலைப் பிடிக்க என்றால் இறாயாத கை யாய்த்து
உபதேச காலத்தில் போலே போல் அன்று இ றே பரிமாற்றத்தில் இருப்பது
உபதேசிப்பது அவன் காலைப் பிடிக்கக் கடவதாக
பரிமாற்றத்தில் வந்தால் அவன் தான் கால் பிடிக்கும் படியாக வாய்த்து இருப்பது –

தோழீ நான் –
அவன் ஸ்வ பாவம் நீ சொல்லக் கேட்டபடியே
அனுபவிக்கப் பெற்றேன்-

—————————————————————————————-

வரிசிலை வாண் முகத்து என் ஐமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-9-

பதவுரை

வரி சிலை வான் முகம்–அழகிய வில் போன்ற புருவத்தையும் ஒளி பொருந்திய முகத்தை யுடையவர்களான
என் ஐமார் தாம்–எனது தமையன்மார்கள்
வந்திட்டு–வந்து
எரிமுகம் பாரித்து–அக்னியை நன்றாக ஜ்வலிக்கச் செய்து
முன்னே என்னை நிறுத்தி–அந்த அக்னியின் முன்னே என்னை நிறுத்தி
அரி முகன்–(ஹிரண்ய வதத்திற்காக) ஸிம்ஹ முகத்தை யுடைனாய் அவதரித்த
அச்சுதன்–கண்ண பிரானுடைய
கை மேல்–திருக் கையின் மேல்
என் கை வைத்து–என்னுடைய கையை வைத்து
பொரி–பொரிகளை
முகந்து அட்ட–அள்ளிப் பரிமாற-

அம்மிமிதித்தபிறகு ‘லாஜஹோமம்‘ செய்வது முறைமை, அதாவது பொரியையிட்டு ஆஹுதிசெய்தல்,
அது நடந்தபடியைச் சொல்லுகிறாள் இப்பாட்டில். ப்ரயோக சந்த்ரிகை என்னும் க்ரந்த்ததில் விவாஹ ப்ரகரணத்தில்
லாஜஹோம முறைவரையுமிடத்து (பத்ந்யாஸ்ஸோ தர்யோ லாஜாநாவபதீத்யேகே) அதாவது –
மணவாட்டியின் கூடப் பிறந்தவன் பொரிகளை எடுத்திடுவதாகச் சிலர் கொள்கை என்று சொல்லப் பட்டிருந்த்தலாலும்
அநுஷ்டானமும் அப்படியேயிருப்பதாலும் “என்னைமார் தாம் வந்திட்டுப் பொரி முகந்தட்ட“ என்கிறாள்.
என்னைமார் – என் ஐமார்- தமையன்மார்,
இப் பதம் திருவாய்மொழியிலும் (ஆறாம்பத்தில் இரண்டாந்திருவாய்மொழியில் ஏழாம் பாட்டில்) பிரயோகப்பட்டுள்ளமை காண்க.
“என்னைமார் தன்மபாவமென்னார் ஒருநான்று தடிபிணக்கே“

சிலைபோன்ற புருவமென்னவேண்டுமிடத்துச் சிலை என்றது – முற்றுவமை.
“தாவி வையங்கொண்ட தடந்தாமரைகட்கே“ என்றதுபோல, “கஞ்சை காய்ந்த கருவல்லி“ என்று மேலும் வரும்.
ப்ராதாக்களுடைய முகத்தை வர்ணிப்பதற்குக் கருத்துத் தோன்றப் பெரியவாச்சன்பிள்ளை வியாக்கியானிக்கிறார் –
“என்னுடைய ப்ராதாக்களானவர்களே இதுக்கெல்லாம் அபிமாநிகள் என்னுமிடம் தங்கள் முகத்திலொளியிலே காணும்படியாக
வந்து அந்நி முகத்தைப் பாரித்து, நான் வ்ரீளையாலே இறாய்க்க என்னை யெடுத்து முன்னே நிறுத்தி.“

மைத்துனமை முறையுடையார் கல்யாணப் பிள்ளையை இளிம்பு படுத்திச் சிரிக்க வேணுமென்று சில சேஷ்டைகள் செய்வது வழக்கம்.
அப்படியே கண்ணபிரான் விஷயத்தில் சிலர் செய்யப் பார்த்தபோது அவற்றை அவன் லக்ஷியஞ செய்யாமல்
அவற்றுக்கு ஏமாந்து போகாமல் பெரு மிடுக்கனாகவே யிருந்த படியைக் காட்டும்- அரிமுகன் என்ற அடைமொழி.

முகந்து அட்டுதல் – எடுத்து ப்ரக்ஷேபித்தல்.

வரிசிலை வாண் முகத்து என் ஐமார் தாம் வந்திட்டு -எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அம்மி மிதித்த பிறகு
லாஜ ஹோமம் -பொறியை ஆஹூதி செய்தல் -முறைமை –
பிரயோக சந்த்ரிகை -விவாஹ பிரகரணம்
பத்ன்யாஸ் சோதர்யோ லாஜா நாவ பதீதயேக-என்று
மணவாட்டியின் கூடப் பிறந்தவன் பொரிகளை எடுத்து இடுவதாக சொல்லி உள்ளதே
என் ஐமார் -தமையன்மார்
என்னைமார் தன்மபாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே -திருவாய்மொழி -6-2-7- இந்த பதம் போலே உண்டே –
சிலை -சிலை போன்ற புருவம் -முற்று உவமை
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே -போலே
கஞ்சைக் காய்ந்த கருவில்லி -என்று மேலும் வரும்
என்னுடைய பிரதாக்கள் ஆனவர்களே இது எல்லாம் அபிமாநிகன் என்னும் இடம்
தங்கள் முகத்தில் ஒளியாலே காணும்படியாக வந்து
அக்னி முகத்தைப் பாரித்து
நான் வ்ரீளையாலே இறாய்க்க
என்னை எடுத்து முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
மைத்துனமை முறை யுடையார்
கல்யாணப் பிள்ளையை இளிம்பு படுத்தி சிரிக்க வேணும் என்று சில சேஷ்டைகள் செய்வது வழக்கம்
அப்படியே கண்ணபிரான் விஷயத்தில் சிலர் செய்யப் பார்த்த பொழுது
அவற்றை அவன் லஷியம் செய்யாமல்
அவற்றுக்கு ஏமாந்து போகாமல்
பெரு மிடுக்கனாய் இருந்தபடியை
காட்ட -அரி முகன் -அடைமொழி
முகந்து அட்ட -எடுத்து ப்ரேஷிக்க–அள்ளிப் பரிமாற

————————————————————————————————–

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-10-

பதவுரை

குங்குமம்–குங்குமக் குழம்பை
அப்பி–உடம்பெல்லாம் பூசி
குளிர் சாந்தம்–குளிர்ந்த சந்தனத்தை
மட்டித்து–கனக்கத் தடவி
ஆனை மேல்–மத்த கஜத்தின் மேலே
அவனோடும் உடன் சென்று–அக் கண்ண பிரானோடு கூடியிருந்து
மங்கலம் வீதி–(விவாஹ நிமித்தமான) அலங்காரங்கள் விளங்குகின்ற வீதிகளிலே
வலம் செய்து–ஊர்வலம் வந்து
மணம் நீர்–வஸந்த ஜலத்தினால்
மஞ்சனம் ஆட்ட–(எங்க ளிருவரையும்) திருமஞசனம் பண்ணுவதாக

கண்ணபிரானும் தானுமாக அக்நி ஸமீபத்திலே சில நாழிகை இருக்க நேர்ந்தமையால் அப்போதுண்டான வெப்பம்
பொறுக்க முடியாததாக, அதற்குப் பரிஹாரமாகக் குளிர்ந்த குங்குமக் குழம்பையும் சந்தனச் சேற்றையும் திருமேனியெங்கும்
அப்பி இந்தத் திருவீதிவலம் வந்து, பிறகு வஸந்தஜலத்திலே மஞ்சனமாட்டப் பெற்றதாகக் கனாக்கண்டேனென்கிறாள்.
பச்சைக் கல்யாணத்தன்றிரவு நடைபெறும் வஸந்த ஸ்நாநம் இப்பாட்டிற் கூறப்பட்டதென்க.

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலம் செய்து மண நீர் –
கண்ணபிரானும் தானுமாக அக்னி சமீபத்திலே
சில நாழிகை இருக்க நேர்ந்தமையாலே
அப்போது உண்டான வெப்பம் பொறுக்க முடியாததாக
அதற்குப் பரிகாரமாக குழிந்த குங்குமக் குழம்பையும்
சந்தனச் சேற்றையும்
திரு மேனி எங்கும் அப்பி
இந்தத் திருக் கோலத்தோடு
மட்டித்து -மணக்கத் தடவி
மங்கல வீதி -திருக் கல்யாண நிமித்தமாக அலங்கரிக்கப் பட்டு விளங்கும் திரு வீதி களிலே

அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் –
இருவருமான சேர்த்தி யாய்
ஆனையின் மீது ஏறி திரு வீதி வலம் வந்து
பிறகு வசந்த ஜலத்திலே மஞ்சனமாட்டப் பெற்றதாக
கனாக் கண்டேன்
பச்சைக் கல்யாணத்தன்று இரவு நடை பெரும் வசந்த ஸ்நானம்-

————————————————————————————————-

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—6-11-

பதவுரை

வேயர் புகழ்–வேயர் குலத்தவரால் புகழப் பட்டவராய்
வில்லிபுத்தூர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய (திருமகளான)
கோதை–ஆண்டாள்
தான் ஆயனுக்கு ஆக கண்ட கனாவினை–தான் கோபால க்ருஷ்ணனுக்கு வாழ்க்கைப் பட்டதாகக் கனாக் கண்ட படியைக் குறித்து
சொல்–அருளிச் செய்த
தூய–பரிசுத்தமான
தமிழ் மாலை ஈர் ஐந்தும்–தமிழ் தொடையான இப் பத்துப் பாட்டுக்களையும்
வல்லவர்–ஓத வல்லவர்கள்
வாயும்–நற்குணகளமைந்த
நல்ல மக்களைப் பெற்று–விலக்ஷணரான புத்திரர்களைப் பெற்று
மகிழ்வர்–ஆநந்திக்கப் பெறுவர்கள்

ஆயர்புத்திரனாகிய கண்ணபிரானுக்கு வாழ்க்கைப் பட்டதாக ஆண்டாள் கனாக்கண்ட படியை வெளியிட்ட
இத்திருமொழியை ஓதவல்லவர்கள் பகவத் விஷயத்திலே ப்ராவண்யமுடைய விலக்ஷண புத்திரர்களைப் பெற்றுப்
பரமானந்தமடைவர்களென்று – இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டினபடி.

தமிழ்மாலைக்குத் தூய்மையாவது – அநுபவத்தின் பரீவாஹ ரூபமாகப் புறப்பட்டதாயிருக்கை.
கவந சாதுரியத்தைக் காட்டுவதற்கென்றே கவி பண்ணு வாரைப்போலன்றே ஆண்டாள்.

வாயும் நன்மக்களை – “மாயன் மணிவண்ணன் தாள்பணியும் மக்களைப் பெறுவர்களே“ என்றார் பெரியாழ்வாரும்.

இக்காலத்தில் கல்யாணம் நடக்குமிடத்து, பச்சைக் கல்யாண தினத்தினன்று அத்யாபகர்கள் இத் திருமொழியை ஓதிச்
சீர்பாடல் பாடும்போது, “சீர்பாடி களிமண் பாடப் போமே“ என்று நீட்டுவதைப் பெரும்பாலும் அனைவரும் கேட்டிருப்பார்கள்.
அந்தவாக்கியத்தின் உண்மையான ஆநுபூர்வி எப்பட்டதென்று பலர் விமர்சிப்பர்கள்,
“தளிர்பண்படுப்போமே“ என்றிருக்கவேணுமென்று சிலர் திருத்துவர்,
“தளுவம் பிடிப்போமே“ என்றிருக்கவேணுமென்று சிலர் திருத்துவர்கள்;
(ஒவ்வொரு சீர் பாடலுக்கும் அத்யாபகர்கள் தளுவம் பிடித்துத் தாம்பூலம் பெறுதுல் சிலவூர்களில் வழக்கமாம்.)
“சீர்பாடிக் களிமின் களிப்போமே“ என்பது தான் உண்மையான வாக்கியமென்று
அழகிய மணவாளச்சீயர் அருளிச்செய்யக் கேடடிருக்கை.
சீர்பாடல்பாடி நீங்கள் சந்தோஷியுங்கள், நாங்களும் சநதோஷிக்கிறோம் என்றபடி.
இந்த வாக்கியத்தை இசையிலே நீட்டி சொல்லும்போது “களிமின் களிப்போமே“ என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள் முன்னோர்;
நாளடைவில் ‘களிமண்பா‘ வாகவும் ‘டப்போமே‘ யாகவும் விகாரத்தைப் பெற்றொழிந்தது.

நிகமத்தில்
இத் திருமொழி அப்யசிக்க வல்லவர்களுக்கு
பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல் –
தான் கோபால கிருஷ்ணனுக்கு வாழ்க்கைப் பட்டதாக
கனாக் கண்டபடியைக் குறித்து –
வேயர் குலத்தவரால் புகழப் பட்ட வராய்
ஸ்ரீ வில்லி புத்தூருக்குத் தலைவரான பெரியாழ்வார் உடைய
திரு மகளான ஆண்டாள்
அருளிச் செய்த

தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே
பகவத் விஷயத்திலே
பிராவண்யம் உடைய
விலஷண புத்ரர்களை பெற்று
பரம ஆனந்தத்தை அடைவார்கள் –

தமிழ் மாலைக்குத் தூய்மை யாவது
அனுபவ பரிவாஹ ரூபமாய் புறப்பட்டதே இருக்கை  –
கவன சாதுர்யத்தைக் காட்டுவதற்கு என்ற கவி பண்ணு வாரைப் போலே அன்றே ஆண்டாள் –

வாயும் நன் மக்களை பெற்று மகிழ்வரே –
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே -என்றாரே பெரியாழ்வாரும் –

சீர் பாடி களி மண் பாடப் போமே-சீர்பாடல்
தளிர் மண் படுப்போமே
தளுவம் பிடிப்போமே
தளுவம் பிடித்து தாம்பூலம்  பெறுதல் -என்பர்
உண்மையில்
சீர்பாடி களிமின் களிப்போமே-என்று அழகிய மணவாள சீயர் அருளிச் செய்வர்
சீர்பாடல் பாடி நீங்கள் சந்தோஷியுங்கோள்
நாங்களும் சந்தோஷிக்கிறோம் -என்றபடி
இத்தை நீட்டிச் சொல்லும் பொழுது
களிமின் களிப்போமே என்று முன்னோர் சொல்லிக் கொண்டு வர
நாளடைவில்
களிமண்பா -வாகவும்
டப்போமே-யாகவும்
விகாரத்தைப் பெற்று ஒழிந்தது –

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர்  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading