ஸ்ரீ நாச்சியார் திரு மொழி -நான்காம் திரு மொழி – -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள்–

பிரவேசம் –

கீழ்த் திருமொழி யிலே
தங்களுடைய பரியட்டங்களை எல்லாம் வாரிக் கொண்டு போய்க் குறுந்த மரத்தின் மேலேறிக்
குறும்பு செய்யா நின்ற கண்ணபிரானை நோக்கி
ஆயர்மாதர் பலவகையான வார்த்தைகளைச் சொல்லி
கூறை தாராய்
துகிலைப் பணித்து அருளாய் -என்று
ஒரு காலுக்கு ஒன்பதின் காலாகப் பிரார்த்தித்துக்

கடைசியாக
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற இக் கன்னியரோமை -என்று சாலவும்
நெஞ்சு நொந்து சொன்னவாறே

ஆபன் நார்த்தி ப்ரசம நவி தௌபத்த தீஷச்ய விஷ்ணோ -என்றபடி
அடியவர் துயரை அறுக்குமவனான கண்ணபிரான் திரு உள்ளம் இரங்கி
திருப் பரியட்டங்களைத் தந்து அருள
இவர்களும் அவற்றைப் பெற்றார்களாய் சம்ச்லேஷமும் நடந்தேறியதாக கொள்க –

சம்ச்லேஷம் நடைபெற்றாலும்
சம்யோகரா விப்ரயோகாந்தா -கலவி உண்டானால் அது
மீண்டும் பிரிவோடு தலைக் கட்டி அல்லது நில்லாது
எனபது முறைமை யாகையாலே
உடனே விச்லேஷம் உண்டாக

மீண்டும் கூடுவதற்காக
கூடல் இழைத்தல்-என்று ஒரு சகுன நிரீஷண பிரவ்ருத்தியை
அவ்வயார் மாதர் செய்த படியை அருளிச் செய்வதாய்த்து
இத் திருமொழி-

கூடல் இழைத்தல் ஆவது
வட்டமாகக் கோடு கீறி அதற்குள்ளே
சுழி சுழியாக சுற்றும் சுழித்து
இரண்டு இரண்டு சுழியாக கூட்டிப் பார்க்கும் போது
இரட்டைக் கணக்காக முடிவு பெற்றால் கூடுகை
ஒற்றைக் கணக்காக முடிவு பெற்றால் கூடாமை
என்று ஒரு சங்கேதம் ஏற்படுத்திக் கொண்டு
குறி பார்க்கை

இந்த சகுன அவலோகனம்-கூடல் -கூடல் இழைத்தல்- கூடல் வளைத்தல்- கூடல் குறி
இத்யாதி நாமங்களால் வழங்கப் பெரும்

திரு மழிசைப் பிரான் நான் முகன் திருவந்தாதியில்
அழைப்பன் திரு வேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -என்று அருளிச் செய்து இருப்பதும் காண்க

பகவத் சம்ச்லேஷத்தில் ஆவல் உள்ளபடியைக் கூறும் முறைகளிலே
இதுவும் ஒரு வித முறை என்னும் இவ்வளவே இங்கு உணரத் தக்கது-

———————————————————————————–

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-

பதவுரை

கூடலே–கூடல் தெய்வமே!
தெள்ளியார் பலர்–தெளிவுடைய பக்தர்கள் பலர்
கை தொழும்–கைகளார வணங்கப் பெற்ற
தேவனார்–ஸ்வாமியாய்
வள்ளல்–பரமோதாரனாய்
மாலிருஞ்சோலை மணாளனார்–திருமாலிருஞ் சோலையிலே எழுந்தருளி யிருக்கிற மணவாளப் பிள்ளையாகிய பரம புருஷன்
பள்ளி கொள்ளும் இடத்து-பள்ளி கொண்டருளுமிடத்திலே
அடி கொட்டிட–(அவனுடைய) திருவடிகளை நான் பிடிக்கும்படியாக
கொள்ளும் ஆகில்–(அவன்) திருவுள்ளம் பற்றுவனாகில்
நீ கூடிடு–நீ கூட வேணும்

க்ஷணகாலமும் பிரியமாட்டாமல் நிக்தியாநுபவம் பண்ணிக் கொண்டு
மங்களாசரஸநபரராயிருக்கும் பலபல நித்யஸூரிகள் கைதொழப் பெற்றவனாய்,
அந்த நித்யஸூரிகள் அநுபவிக்கும் அந்த அநுபவத்தை ஸம்ஸாரிகட்கும் அருள்புரியத் திருவுள்ளம் பற்றித்
திருமாலிருஞ்சோலைமலையிலே வந்து ஸந்நிஹிகனாய் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான்

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கித்
துயிலுமிடமாகிய திருவரங்கம் பெரிய கோயிலிலே சென்று புக்கு
அப் பெருமானுக்குத் திருவடி வருடும் படியான பாக்கியம் இன்று நமக்கு வாய்க்குமாகில்,
கூடல் தெய்வமே! நீ கூடங்கடவை என்கிறாள்.

எம்பெருமானுடைய ஸந்நிதியிலே போய் அத்தாணிச் சேவகம் பண்ணும்படியாக விதி வாய்க்க வேணுமென்கிற
ப்ரார்த்தனையைக் கூடிடு கூடலே!” என்னும் வாய்ப் பாட்டினால் அருளிச் செய்வதாகக் கொள்க.
“கூடிடு கூடலே!” என்றவிடத்துக்குச் சொல்லவேண்டுமவற்றை அவதாரிகையிலே சொன்னோமாகையாலே அங்குக் காண்க.

(தெள்ளியார் பலர்) தெள்ளியாரென்றது – தெளிவுள்ளவர்களென்றபடி
தெளிவாவது ‘உபாயோபேயங்களிரண்டும் அப்பெருமானே’ என்ற அத்யவஸாயம்,
அஃது உடையவர்கள் “கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர், துளக்கமில்லா வானவர்” என்றபடி
ஆத்ம ஸ்வரூபம் கை வந்திருக்கும் ஸநகாதி மஹர்ஷிகளும், முக்தரும், நித்யஸூரிகளும்.

(தேவனார்.) தேவ: என்கிற வடசொல் (திவு) என்னும் தாதுவினடியாகப் பிறந்ததாதலால்
அந்தத் தாதுவுக்குள்ள பத்துப் பொருள்களும் தேவ பதத்திற்கு உண்டு. இங்கு ‘உஜ்வலன்’ என்ற பொருள் கொள்ளத்தகும்.
நித்ய முக்தர்கள் தாங்கள் எம்பெருமானைத் தொழுது தங்கள் ஸ்வரூபத்தை நிறம் பெறுவித்துக் கொள்ள
எம்பெருமான் அவர்களைத் தொழுவித்துக் கொண்டு உஜ்வலனாகிறான் என்க.

வள்ளல் :- மிக்க ஔதார்யகுணமுள்ளவன்.
“வள்ளல்” என்றவுடனே ‘மாலிருஞ்சோலைமணாளனார்’ என்கையாலே,
நித்திய விபூதியிலே நித்தியானுபவம் பண்ணுவார் அநந்த கோடி நித்யஸூரிகள் உண்டாயிருக்கச் செய்தேயும்
அவர்களுடன் கூடி வாழ்ந்திருக்குமிருப்பு உண்டதுருக்காட்டாதே இங்குள்ள ஸம்ஸாரிகளின் இழவை அநுஸந்தித்து
உடம்பு வெளுத்து, அங்குள்ள நித்யாநுபவத்தை இங்குள்ளார்க்கும் தந்தருளவேணுமென்னும் நசையாலே
திருமாலிருஞ்சோலை மலையளவும் வந்து கன்னை அநுபவிப்பிக்கைக்கு ஸமயம் எதிர்பார்த்துக் கொண்டு
நிற்கும்படியைச் சொல்லிற்றாகிறது.
“வள்ளல்” என்ற உதா ரகுணத்தைத் திருமாலிருஞ்சோலை மலையிலே விளங்கக் காட்டுகிறபடி.

மணாளனார் :- ‘மணவாளனார்’ என்பது மருவிற்று.
மணாளன் – மணக்கோலத்தோடு வந்து நிற்பவன்.
ஆச்ரிதர்களை அடிமை கொள்வதற்குக் குதூரிஹலமாக நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.
அப்படிப்பட்ட எம்பெருமான் பள்ளிகொள்ளுமிடத்திலே யென்றது – திருவரங்கம் பெரியகோயிலிலே யென்றபடி,
“பள்ளிகொள்ளுமிடமாகிறது – கோயில்” என்று பட்டரருளிச் செய்ய நான் கேட்டேன் என்று
பிள்ளை யழகிய மணவாள வரையர் பணிப்பர்- என்ற வயாகயாந ஸ்ரீஸூக்தியை அநுஸந்திக்க.

அடிகொட்டிடக் கொள்ளுமாகில்:-
“அன்றிவ்வுலகமளந்த வசவேகொல்” என்றும்,
“நடந்தகால்கள், நொந்தவோ” என்றும்,
“அடியாரல்லல் தவிர்த்த அசவோ அன்றேலிப்படிதான் நீண்டு தாவியவசவோ” என்றுமித்யாதி பாசுரங்களைப்
பகர்ந்து கொண்டு திருவடி பிடிக்கும் படியாக அவ்வெம்பெருமான் என்னைத் திருவுள்ளம் பற்றுவானாகில் என்கை.

ஆண்டாள், பெண்பிள்ளையான வாசிக்கு “முலையாலணைக்கப்பெறுவேனாகில்” என்று சொல்லவேண்டுமிடத்தும்
“அடிகொட்டிடக்கொள்ளுமாகில்” என்கையாலே ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தியிலே அந்வயிக்க ஆசைப்பட்டமைதோற்றும்.
கைங்கர்யமேயிற்றே ப்ராப்திபலம்.

கொள்ளுமாகில் என்று
அவ்வெம்பெருமானுடைய திருவருளை எதிர்பார்க்கின்றனை தோற்ற அருளிச் செய்கையாலே
“ப்ராப்திக்கு உபாயம் அவன் நினைவு” என்ற ஸத்ஸம்ப்ரதாயார்த்தம் விளங்கும்.
நாம் எத்தனை ப்ரவ்ருத்திகள் செய்த போதிலும் அவை சைதந்ய கார்ய மாத்ரமேயாய்
“உன்மனத்தால் என்னினைந்திருந்தாய்” என்றபடி அவனுடைய நினைவே உபாயமென்று திண்ணிதாகக் கொள்க.

கூடிடுகூடலே:- “அவனாலே பேறு’ என்றிருக்கச் செய்தேயும் அசேதகமான கூடலின் காலிலே விழும்படியிருக்கிறதிறே
ப்ராப்பக்வரை” என்ற வ்யாக்யாந ஸ்ரீஸூக்தி காண்க.

ஸ்ரீவசநபூஷணம் முதல் ப்ரகரணத்தில் -“அப்ராப்த விஷயங்களிலே ஸக்தனானவன் அது லபிக்கவேணுமென்றிரா நின்றால்
ப்ராப்த விஷயங்களிலே ஸக்தனானவன் அது லபிக்க வேணுமென்றிரா நின்றால்
ப்ராப்த விஷய ப்ரவணனுக்குச் சொல்லவேண்டாவிறே,
அநுஷ்டாநமும் அநநுஷ்டாநமும் உபாயகோடியில் அந்வயியாது.
அநந்யோபாயத்வமும் அநந்யோபே யத்வமும் அந்நயதைவத்வமும் குலையும்படியான ப்ரவ்ருத்திகாணா நின்றோமிறே.
ஜஞாந் விபாத்காரியமான அஜஞாநக்காலே வருமவையெல்லாம் அடிக்கழஞ்சு பெறும்.
உபாயபலமாய் உபேயாந்தர்ப்பூதமாயிருக்குமது உபாயப்ரதிபந்தக மாகாது. என்றருளிச் செய்க ஸ்ரீஸூக்திகளும்
அவற்றின் வியாக்கியான ஸ்ரீஸூக்திகளும் இங்கே நோக்கக் தகும்.

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
ஷண காலமும் பிரிய மாட்டாமல் நித்ய அனுபவம் பண்ணிக் கொண்டு
மங்களா சாசன பரராய் இருக்கும் பல பல நித்ய சூரிகள்
கை தொழப் பெற்றவனாய் –

வள்ளல் மாலிரும் சோலை மணாளனார் –
அந்த நித்ய சூரிகள் அனுபவிக்கும் அந்த அனுபவத்தை
சம்சாரிகட்கும் அருள் புரிய திரு உள்ளம் பற்றி
திரு மால் இரும் சோலையிலே வந்து சந்நிஹிதனாய் எழுந்து அருளி இருக்கிற
எம்பெருமான் –

பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட –
குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கித்
துயிலிடமாகிய திருவரங்கம் பெரிய கோயிலிலே சென்று புக்கு
அப்பெருமானுக்குத்
திருவடி வருடும்படியான பாக்கியம்-

கொள்ளுமாகில் கூடிடு கூடிலே –
இன்று வாய்க்கும் ஆகில்
கூடல் தெய்வமே -நீ கூடக் கடவை -என்கிறாள்

எம்பெருமான் உடைய சந்நிதியிலே போய் அத்தாணிச் சேவகம்
பண்ணும்படியாக விதி வாய்க்க வேணும் என்கிற பிரார்த்தனை யைக் கூடிடு கூடலே
என்னும் வாய்ப்பாட்டினால் அருளிச் செய்வதாக கொள்க-

தெள்ளியார் பலர் –
தெள்ளியார் என்றது -தெளிவுற்றவர்கள் என்றபடி
தெளிவாவது உபாய உபேயங்கள் இரண்டும் அப் பெருமானே என்ற அத்யாவசாயம் -அது உடையவர்கள்
கலக்கமில்லா நல்தவ முனிவர்
கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் -என்றபடி
ஆத்மஸ்வரூபம் கை வந்து இருக்கும்
சனகாதி முனிவர்களும்
முக்தரும்
நித்ய சூரிகளும்

தேவனார் –
தேவ -திவு தாது -பத்துப் பொருளும் உண்டு
அதில் உஜ்வலன் என்ற பொருள் கொள்ளத் தகும் இங்கு
நித்ய முக்தர்கள் தாங்கள் எம்பெருமானைத் தொழுது
தங்கள் ஸ்வரூபத்தை நிறம் பெருவித்துக் கொள்ள
எம்பெருமான் அவர்களைத் தொழுவித்துக் கொண்டு உஜ்வலன் ஆகிறான் -என்க

வள்ளல்
மிக்க ஔ தார்யம் குணம் உள்ளவன்
வள்ளல் என்ற உடனே மால் இரும் சோலை மணாளனார் என்கையாலே
நித்ய விபூதியிலே நித்ய அனுபவம் பண்ணுவார்
அநந்த கோடி நித்ய சூரிகள் உண்டாய் இருக்கச் செய்தேயும்
அவர்களுடன் கூடி வாழ்ந்து இருக்கும் இருப்பு
உண்டது உருக்காட்டாதே இங்கு உள்ள சம்சாரிகளின் இழவை அனுசந்தித்து
உடம்பு வெளுத்து
அங்கு உள்ள நித்ய அனுபவத்தை இங்கு உள்ளார்க்கும் தந்து அருள வேணும் என்னும் நசையாலே
திருமால் இரும் சோலை மலை அளவும் வந்து
தன்னை அனுபவிப்பிக்கைக்கு சமயம் பார்த்துக் கொண்டு
நிற்கும்படியைச் சொல்லிற்று ஆகிறது –
வள்ளல் -என்கிற உதார திருக் கல்யாண குணத்தை
திரு மால் இரும் சோலை மலையிலே விளங்கக் காட்டுகிற படி-

மணாளனார் –
மணவாளனார்-எனபது மருவிற்று
மணாளன் -மணக் கோலத்தோடு வந்து நிற்பவன்
ஆஸ்ரிதர்களை அடிமை கொள்ளுவதற்காக
குதூஹலமாக நிற்கும் நிலையைச் சொல்லுகிறது
அப்படிப் பட்ட எம்பெருமான் பள்ளி கொள்ளும் இடத்திலே என்றது
திருவரங்கம் பெரிய கோயிலிலே -என்றபடி
பள்ளி கொள்ளும் இடம் ஆகிறது கோயில் என்று பட்டர் அருளிச் செய்யக் கேட்டேன்
என்று பிள்ளை அழகிய மணவாள அரையர் பணிப்பர்-
கொட்டிடக் கொள்ளுமாகில்
அன்று இவ்வுலகம் அளந்த அசவே கொல்-என்றும்
நடந்த கால்கள் நொந்தவோ என்றும்
அடியார் அல்லல் தீர்த்த அசைவோ அன்றேல் இப்படிதான் நீண்டு தாவிய அசைவோ -என்றும்
இத்யாதி பாசுரங்களைப் பகர்ந்து கொண்டு
திருவடி பிடிக்கும் படியாக அவ்வெம்பெருமான் என்னைத் திரு உள்ளம் பற்றுவான் ஆகில் -என்கை –
ஆண்டாள் பெண் பிள்ளையான வாசிக்கு
முலையாள் அணைக்கப் பெறு வேனாகில் -என்று சொல்ல வேண்டும் இடத்து
அடி கொட்டிடக் கொள்ளுமாகில் -என்கையாலே
ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியிலே அன்வயிக்க ஆசைப் பட்டமை தோற்றும்
கைங்கர்யம் இ றே பிராப்தி பலம்
கொள்ளுமாகில் என்று அவ்வெம்பெருமான் உடைய திருவருளை எதிர் பார்க்கின்றமை தோற்ற அருளிச் செய்கையாலே
பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு என்ற சத் சம்ப்ரதாயார்த்தம் விளங்கும்
நாம் எத்தனை பிரவருத்ததிகள் செய்த போதிலும்
அவை சைதன்ய கார்யம் மாத்ரமே யாய்
உன் மனத்தால் என்நினைந்து இருந்தாய் -என்றபடி
அவனுடைய நினைவே உபாயம் என்று திண்ணிதாகக் கொள்க-

கூடிடு கூடலே
அவனாலே பேறு -என்று இருக்கச் செய்தேயும்
அசேதனமான கூடலின் காலிலே விழும்படி இருக்கிறது இ றே ப்ராப்யத் த்வரை-
ஸ்ரீ வசன பூஷணம் முதல் பிரகரணத்தில்
அப்ராப்த விஷயங்களில் சக்தனானவன் அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்
ப்ராப்த விஷய பிரவணனுக்கு சொல்ல வேண்டா இ றே
அனுஷ்டானமும் அனனுஷ்டானமும் உபாய கோடியிலே அன்வயியாது
அநந்ய உபாயத்வமும் அநந்ய உபேயத்வமும் அநந்ய தைவத்மமும்
குலையும்படி யான பிரவ்ருத்தி காணா நின்றோம் இ றே
ஞான விபாக கார்யமான அஞானத்தாலே வருமவை எல்லாம் அடிக் கழஞ்சு பெரும்
உபாய பலமாய் உபேய அந்தர்பூதமாய் இருக்குமது உபாய பிரதிபந்தகம் ஆகாது -என்று
அருளிச் செய்த ஸ்ரீ ஸூ கதிகளும்
அவற்றின் வியாக்யான ஸ்ரீ ஸூ கதிகளும் நோக்குக –

——————————————————————————————

காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே—4-2-

பதவுரை

கூடலே!-’-
காட்டில் வேங்கடம்–காட்டிலுள்ள திருவேங்கடமலையில
நகர் கண்ணபுரம்– நகரமாகிய திருக்கண்ண புரத்திலும்
வாட்டம் இன்றி–மனக் குறை யில்லாமல்
மகிழ்ந்து–திருவுள்ளமுகந்து
உறை–நித்ய வாஸம் செய்தருளுகிற
வாமனன்–வாமநாவதாரம் செய்தருளிய எம்பெருமான்
ஒட்டரா வந்து–ஓடி வந்து
என் கை பற்றி–என்னுடைய கையைப் பிடித்து
தன்னொடும்–தன்னொடு
கூட்டும் ஆகில்–அணைத்துக் கொள்வனாகில்
நீ கூடிடு–நீ கூடவேணும்

எம்பெருமான் என்னோட ஸம்ச்லேஷிக்க வேணுமென்று
திருவேங்கடமலை, திருக்கண்ணபுரம் முதலிய திருப்பதிகளிலே வந்துநிற்கிறான்’
எனக்கு இசைவு உண்டோ இல்லையாவென்று சங்கித்துத் தாமஸித்து நிற்கின்றான்போலும்’
அப்பெருமான் என்னுடைய ஆதுரதையை நன்கறிந்து சடக்கென ஓடி வந்து
என்னைத் தன்னோட அணைத்துக் கொள்ளுமாறு விதி வாய்க்கவேணுமென்று மநோரதிக்கிறாள்.

காட்டில் வேங்கடம் :- ஸ்ரீதண்டகாரண்யத்தில் ரிஷிகளோடே கூடியிருந்து வந வாஸ ரஸம்
அநுபவித்தபடிக்கு ஒப்பாகும்-திருமலையில் வாழ்ச்சி.

கண்ணப்புரநகர்-பிரகு திருவயோத்தியிலே அனைவருடனுங் கூடியிருந்து நகர வாஸ ரஸம்
அநுபவித்தபடிக்கு ஒப்பாகும்-
திருக்கண்ணபுரத்தில் வாழ்ச்சி. திருமலையை விருந்தாவனத்தோ டொத்தாகவும்
திருக்கண்ண புரத்தைத் திருவாய்ப் பாடியோடொத்ததாகவும் நிர்வஹிக்கவுமாம்.
நகர வாஸத்தோடு வந வாஸத்தோடு வாசியற இரண்டையும் இனிதாகக் கொள்ளும் மன மாண்பு
விபவாவதாரத்தில் இருந்தது போலவே அர்ச்சாவதாரத்திலும் உள்ளபடியை இத்தால காட்டிற்றாகிறது.

வாட்டமின்றி மகிழ்ந்துஉறை:- ‘குழுமித்தேவர் குழாங்கள் கைதொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு” என்னும்படி
நித்திய ஸூரிகளுடைய பாரிஷத்தின் நடுவே அத்யுஜ்வலனாய் எழுந்தருளியிருக்குப்பு தவிர்ந்து
மநுஷ்ய நாற்றம் நாறுகிற இந்த ஸம்ஸார நிலத்திலே வந்து கானமும் வானரமும் வேடுமானவற்றுக்கு
முகங்கொடுத்துக் கொண்டு நிற்கவேண்டிற்றே! என்று திருவுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்,
இருட்டறையில் விளக்குப் போலே நம்முடைய கல்யாண குணங்களெல்லாம் நன்கு விளங்குமாறு
இங்கு வரப்பெற்றோமே! என்ற அளவற்ற மகிழ்ச்சியோடே எழுந்தருளியிருக்கிறபடி,

உறை- ராம க்ருஷ்ணாத் யவதாரங்கள் ஒருகாலத்தளவிலேயாய்ப் பின்னானார் வணங்குஞ்சோதி யாகாமல்,
தீர்த்தம்ப்ரஸாதித்துவிட்டுத் தன்னுடையச் சோதிக்கெழுந்தருளினாப் போலன்றிக்கே
நித்திய வாஸம் செய்தருளுகிறவிடமாய்த்து அர்ச்சாவதாரத் திருப்பதிகள்.

எம்பெருமாளை அடி பணிந்து வேறுபெற வேண்டிய தன்மை சேதார்களுடையதாகையாலே
அவ் வெம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு செல்ல வேண்டியவர்கள் சேதநர்களாயிருக்க’
இவர்களிடத்தை நோக்கி அவ் வெம்பெருமான் புறப்பட்டு வரும்படியான ஸந்தர்ப்பமென்? என்று
சங்கை பிறக்கக்கூடுமாதலால் அந்த சங்கைக்குப் பாரிஹரமாக வாமனன் என்கிறாள்’
தன் உடைமையைப் பெறுகைக்குத் தான் இரப்பாளனாய் அவதரித்தபடியிறே வாமநாவதாரம்.
இதனால் சேதநலாபம் ஈச்வரனுக்குப் புருஷார்த்தமேயன்றி
ஈச்வர லாபம் சேதனனுக்குப் புருஷார்த்தமன்று என்னும் ஸத்ஸம்ப்ர தாயார்த்ம் விளங்கும்.

ஓட்டராவந்து:- ஓடிவந்து என்றபடி. ‘ஓட்டம் தரா’ என்ற விரண்டு பதங்கள் ‘ஒட்டரா’ எனச் சிதைந்து புணர்ந்தன.

“வாமனன் ஒட்டரா வந்து” என்று வாக்ய ஸந்தர்ப்ப ஸ்வாரஸ்யத்தால்
பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார் காண்மின் –
“ஓரடி மண்ணுக்குப் பதறுமவன் இவளைப் பெறும் போதைக்கு ஆறியிரானிறே’
ஆஸுர ப்ரக்ருதியான மஹாபவி முன்னே கழஞ்சு மண்ணுக்குப் பதறி நடக்குமவன்,
இவனொரு தலையானால் ஆறியிரானிறே! காற்றில் முன்னங்கடுகி ஓடிவரக்கடவனிறே.”

“ஒட்டரா வந்து என்கை பற்றுவானாகில்” என்றாவது,
“ஒட்டரா வந்து என்னைத் தன்னொடுங் கூட்டுமாகில்” என்றதற்குக் கருத்து:-
“அங்கண்ணனுண்ட வென்னாருயிர்க் கோதிது” என்னுமாபோலே
பிடித்த பிடியிலே (அநந்யார்ஹை யாம்படி பிடிக்கவேணும்’ அந்த ஹஸ்த ஸ்பர்சத்தாலே)
நான் துவண்டுபோய் ஸ்தப்தையாய் நிற்கையில் என்னை இழுத்தணைத்துத் தன் திருமார்பிலே ஏறிட்டுக் கொள்ளவேணும் என்கை.

கூட்டுமாகில் நீகூடிடு கூடலே!” என்றது-
“அவன் எழுந்தருளி என்னைக் கூட்டிக் கொள்ளும் படியாக நீ அநுகூலிக்கவேணும்” என்றபடி

எம்பெருமான் என்னுடன் சம்ச்லேஷிக்க வேண்டும் என்று
திருவேங்கடமலை திருக்கண்ணபுரம் முதலிய திருப்பதிகளிலே வந்து நிற்கிறான்
எனக்கு இசைவு உண்டோ இல்லையோ என்று சங்கித்து
தாமசித்து நிற்கின்றான் போலும்
அப்பெருமான் என்னுடைய ஆனுரதையை நன்கு அறிந்து
சடக்கென ஓடி வந்து
என்னைத் தன்னோடு அனைத்துக் கொள்ளுமாறு
விதி வாய்க்க வேணும் என்று
மநோ ரதிக்கிறாள் –

காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்-
ஸ்ரீ தண்டகாரண்யத்தில் ரிஷிகள் உடன் கூட இருந்து
வனவாச ரசம் அனுபவித்ததற்கு ஒப்பாகும்
திருமலையில் வாழ்ச்சி –

கண்ணபுரநகர் –
பிறகு திரு அயோத்தியில் அனைவருடன் கூடி இருந்து
நகரவாச ரசம் அனுபவித்ததற்கு ஒப்பாகும்
திருக் கண்ணபுரத்தில் வாழ்ச்சி

திருமலையை விருந்தாவனத்தோடு ஒத்ததாகவும்
திருக்கண்ணபுரத்தை திருவாய்ப்பாடியோடு ஒத்ததாகவும்
நிர்வஹிகிக்கவுமாம் –
நகர வாசத்தோடு
வனவாசத்தோடு வாசி அற
இரண்டையும் இனிதாகக் கொள்ளும் மனமாண்பு
விபவ அவதாரத்தில் இருந்தது போலே
அர்ச்சாவதாரத்திலும் இருந்தபடியை இத்தால் காட்டிற்று ஆயிற்று-
வாட்டமின்றி மகிழ்ந்துறை –
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு -என்னும்படி
நித்ய சூரிகளின் பரிஷத்தின் நடுவே அத்யுஜ்வலனாய் எழுந்து அருளி இருக்கும்
இருப்பு தவிர்ந்து மனுஷ்ய நாற்றம் நாறுகிற
இந்த சம்சாரத்திலே வந்து
கானமும் வானரமும் வேடும் ஆனவற்றுக்கு முகம் கொடுத்துக் கொண்டு நிற்க வேண்டிற்று இ றே
என்று திரு உள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்
இருட்டறையிலே விளக்கு போலே
நம்முடைய கல்யாண குணங்கள் எல்லாம் நன்கு விளங்குமாறு இங்கு வரப் பெற்றோமே
என்ற அளவற்ற மகிழ்ச்சியோடு
எழுந்து அருளி இருக்கிறபடி –

உறை-
ராம கிருஷ்ணாதி அவதாரங்கள் ஒரு காலத்திலேயாய்
பின்னானார் வணங்கும் சோதி ஆகாமல்
தீர்த்தம் பிரசாதித்து விட்டு
தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளினால் போல் அன்றிக்கே
நித்ய வாசம் சாய்த்து அருளுகிற இடமாய்த்து அர்ச்சாவதார திருப்பதிகள் =

வாமனன் –
எம்பெருமானை அடி பணிந்து
பேறு பெற வேண்டிய தன்மை
சேதனர்கள் உடையது ஆகையாலே
அவ வெம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு
செல்ல வேண்டியவர்கள் சேதனர்களாய் இருக்க
இவர்கள் இடத்தை நோக்கி அவ்வெம்பெருமான்
புறப்பட்டு வரும்படியான சந்தர்ப்பம் என்
என்கிற சங்கை பிறக்கக் கூடும் ஆதலால்
வாமனன் –
என்கிறாள் –
தன உடைமையைப் பெறுகைக்கு தான் இரப்பாளனாய் அவதரித்த படி இ றே வாமனாவதாரம் –
இதனால் சேதன லாபம் ஈஸ்வரனுக்குப் புருஷார்த்தமே அன்றி
ஈஸ்வர லாபம் சேதனனுக்கு புருஷார்த்தம் அன்று என்னும் சத் சம்ப்ரதாய அர்த்தம் விளங்கும்

ஓட்டரா வந்து –
ஓடி வந்து -என்றபடி
ஓட்டம் தரா -என்ற இரண்டு பதங்கள் – ஓட்டரா என சிதைந்து புணர்ந்தன –

வாமனன் ஓட்டரா வந்து –
என்ற வாக்ய சந்தர்ப்ப ஸ்வாரச்யதையால்
ஓரடி மண்ணுக்கு பதறுமவன்
இவனைப் பெறும் போதைக்கு ஆறி இரான் இ றே
ஆசூர பிரக்ருதையான மகா முன்னே கழஞ்சு மண்ணுக்கு
பதறி நடக்குமவன்
இவள் ஒரு தலையானால் ஆறி இரான் இ றே
காற்றிலே முன்னம் கடுகி ஓடி வரக் கடவன் இ றே –

ஓட்டரா வந்து என் கைப்பற்றி பற்றுவான் ஆகில்
என்னாது
ஓட்டரா வந்து என்னைத் தன்னொடும் கூட்டுமாகில்
என்றாவது அருளிச் செய்யாதே
என் கைப் பற்றி தன்னொடும் கூட்டுமாகில் -என்றது
அம கண்ணன் உண்ட என்னுய்ர் கோது இது -என்னுமா போலே
பிடித்த பிடியிலே
அனன்யார்ஹை ஆகும்படி பிடிக்க வேணும்
அந்த ஹஸ்த ஸ்பர்சத்தாலே
நான் துவண்டு போய் ச்ப்தையாய் நிற்கையில்
என்னை இழுத்து அணைத்து தன திரு மார்பிலே எரித்துக் கொள்ள வேணும் என்கை-

கூட்டுமாகில்- நீ கூடிடு கூடலே -என்றது
அவன் எழுந்து அருளி என்னைக் கூட்டிக் கொள்ளும்படியாக
நீ அனுகூலிக்க வேணும் -என்றபடி –

——————————————————————————————

பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன் மிகு  சீர் வசுதேவர் தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே–4-3-

பதவுரை

பூ மகன்–பூலிற் பிறந்த பிரமனும்
வானவர்–நித்யஸூரிகளும்
புகழ் போற்றுதற்கு–கீர்த்தியைப் பாடித் துதிப்பதற்கு
ஆம்–தகுந்த
மகன்–புருஷோத்தமனாய்,
அணி வாள் நுதல் தேவகி–மிகவும் அழகிய நெற்றியையுடைய தேவகியினுடைய
மா மகன்–சிறந்த புத்திரனாய்,
மிகு சீர் வசுதேவர் தம்–மிகுந்த, நற் குணங்களை யுடையரான வசுதேவருடைய
கோ மகன்–மாட்சிமை தங்கிய புத்திரனான கண்ணபிரான்
வரில்–(என்னை அணைக்க) வருவானாகில்
கூடலே! கூடிடு-

நான்முகனும் நித்ய ஸூரிகளும் போற்றும்படியாக அங்கே எழுந்தருளியிருந்து,
பின்பு தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி மண்ணின் பாரம் நீக்குவதற்கே வட மதுரையிலே வந்து
தேவகிக்கும் வஸுதேவர்க்கும் புதல்வனாய்த் திருவவதரித்தருளின எம்பெருமான்
இன்று என் துயர் தீர இங்கே எழுந்தருளக் கூடுமா என்று மநோரத்திக்கிறாள்.

“பூமகன் வானவர் (இவர்களெல்லாரும்) புகழ்போற்றுதற்கு ஆம் மகன்” என இயைத்து உரைக்கப்பட்டது.
அன்றியே, புகழ் என்பதை வானவர்க்கு விசேஷணமாக்கி,
‘(தத் விப்ராஸோ விபந்பவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே’) என்றும்,
(‘யத்ரர்ஷய: ப்ரதமஜா யே புராணா:’) என்று மித்யாதி ச்ருதி வாக்யங்களாலே புகழப்பட்ட வானவர்கள் – என்று பொருள் கொள்ளுமாம்:

பூமகன் என்றது உபலக்ஷணமாகி இந்தவிபூதியைச் சொல்லிற்றாய்,
வானவர் என்றது அந்த விபூதியைச் சொல்லிற்றாய்க் கொண்டு, ஓர் ஆற்றின் நடுவே போகிற வோடத்தை
இருகரையிலுள்ளாரும் அழைக்குமா போலே இரண்டு விபூதியி லுள்ளாராலும் போற்றப் பட்டவன் என்க.
(‘நாவேவ யாந்தமுபயே ஹவந்தே’) என்ற வேதவாக்கியம் இங்கே ஸ்மரிக்கத்தகும்.
“போற்றதற்கா மவன்” என்று ப்ராசீநபாடமென்பர். ஆமவன்-தகுதியானவன் என்கை.
இவ்விடத்தில் வியாக்யானத்தால் பாட் நிர்த்தாரணம அசக்யம்’
அரும்பதவுரைகாரர் மாத்திரம் “ஆம் மகன்” என்று கொண்டு விவரிக்கிறார் ஆயினும்
“ஆமவன்” என்ற பாடமே சிறக்குமென்று அஸ்மதாசார்யர் அருளிச் செய்யும்படி. இப்பாடத்தில் எதுகைநயமும் குன்றாது.

அணிவாள் நுதல் தேவகி-ஸாக்ஷாத் பரமபுருஷன் வந்து பிள்ளையாகப் பிறந்தமையாலுண்டான
ஸந்தோஷமிகுதியால் தேவகியின் முகம் மிக்கவொளி பெற்று விளங்கியவாறு.
“தேவகிமகன்” என்னாதே “தேவகி மா மகன்” என்கையாலே- கண்ணபிரானுடைய திருவளர்த்தியைக் கண்டவர்கள்
‘இவன் தேவகியின் புத்திரனல்லன், உடன் பிறந்தவனாக இருக்கக்கூடும்’ என்று சங்கிக்கும் படி யிருந்தமையால்
அப்படிப்பட்ட திருவளர்த்தியுண்டாகும்படி அவளால் வளர்க்கப்பெற்றவன் என்ற கருத்துத் தோற்று மென்ப.

மிகுசீர் வசுதேவர்தம் கோமகன்- இங்கேவ்யாக்யாநஸ்ரீஸூக்தி:- (
“கோமகன்) கோவான் மகன்’ சக்ரவர்த்திக்குப் போலே நியாம்யனல்லன்’ இவர் தம்மையும் நியமிக்கும் மகன்.
ஆவரை நியமிக்கையாவது-கம்ஸபயத்தாலே ‘இவனுக்கு என்வருகிறதோ’ என்று அவர் வயிறுபிடித்தால்
‘அப்பரே! நீர் ஏன் பயப்படுகிறீர்? அஞ்சாதே நான் சொல்வதைக்கேட்டு ஸுகமேயிரும்’ என்றாப்போலே
நியமிக்கை.” கோ-ஸ்வாமி’ நியாமகன்.

கோமகன் வரில் கூடிடு கூடலே!- அப்படிப்பட்ட கண்ணபிரான் என்னிடம் வரும்படியான பாக்கியம்
வாய்க்கவேணுமென்ற மநோத தம் உள்ளுறைவால் என்கையாலே வரும்போதை நடையழகு காண்கையிலே
அபிநிவேச முற்றதென்ப. (“கூடிடு கூடலே!.) நீ கூடி என்னையுமவனைங்கூட்டு” என்பது வ்யாக்யாநஸ்ரீஸூக்தி

நான்முகனும்
நித்ய சூரிகளும் போற்றும்படியாக அங்கே எழுந்து அருளி இருந்து
பின்பு தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி
மண்ணின் பாரம் நீங்குதற்கே
வடமதுரையிலே வந்து வசுதேவற்கும் தேவகிக்கும் புதல்வனாய்
திருவவதரித்து அருளின எம்பெருமான்
இன்று என் துயர் தீர
இங்கே எழுந்து அருளக் கூடுமோ -என்று மநோ ரதிக்கிறாள்-

பூ மகன் வானவர்-இவர்கள் எல்லாம் புகழ் போற்றுதற்கு ஆமகன் -என்று இயைத்து உரைக்கப் பட்டது
அன்றியே
புகழ் என்றதை வானவர்க்கு விசேஷணம் ஆக்கி
தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே -என்றும்
யத்ரர்ஷய பிரதமஜா யே புராணா -என்றும் இத்யாதி
சுருதி வாக்யங்களாலே புகழப் பட்ட வானவர்கள்

பூ மகன் என்றது உப லஷணம் ஆக்கி இந்த விபூதியையும்
வானவர் -அந்த விபூதியையும் சொல்வதாகக் கொண்டு
ஒரு ஆற்றின் நடுவே போகிற ஓடத்தை இரு கரையில் உள்ளாறும் அழைக்குமா போலே
இரண்டு விபூதியில் உள்ளாராலும் போற்றப்படுமவன் -என்கை –
நாவேவ யாந்தமுபயே ஹவந்தே -என்ற வேத வாக்கியம் போலே –
போற்றுதர்கா மவன் -பிராசீன பாடம் ஆமவன் -தகுதியானவன்
அரும்பத உரைக்காரர் ஆம் மகன் -என்று விவரித்தாலும் பொருந்தாது
எதுகை நயமும் குன்றாது

அணி வாணுதல் தேவகி -மாமகன்
சாஷாத் பரம புருஷன் வந்து பிள்ளையாய் வந்து பிறந்தமையால் உண்டான
சந்தோஷ மிகுதியால் தேவகியின் முகம் மிக்க ஒளி பெற்று விளங்கிய வாறு –

தேவகி மகன் -என்னாது
தேவகி மா மகன் -என்கையாலே
கண்ணபிரான் உடைய திரு வளர்த்தியைக் கண்டவர்கள்
இவன் தேவகியின் புத்திரன் அல்லன்
உடன் பிறந்தவனாக இருக்கக் கூடும் என்று சங்கிக்கும்படி இருந்தமையால்
அப்படிப் பட்ட திரு வளர்த்தியை
யுண்டாகும்படி அவளால் வளர்க்கப் பட்டவன் என்னும் கருத்து தோன்ற

மிகு சீர் வசுதேவர் தம் கோமகன் –
கோமகன்
கோவாகிய மகன்
சக்கரவர்த்திக்குப் போலே நியாம்யன் அல்லன்
இவர் தம்மையும் நியமிக்கும் மகன்
அவரை நியமிக்கை யாவது
கம்ச பயத்தாலே இவனுக்கு என் வருகிறதோ என்று அவர் வயிறு பிடித்தால்
அப்பரே நீர் என் பயப்படுகிறீர்
அஞ்சாதே நான் சொன்னதைக் கேட்டு சுகமே இரும் என்றால் போலே நியமிக்கை
கோ ஸ்வாமி-நியாமகன்

கோமகன் வரில் கூடிடு கூடலே –
அப்படிப் பட்ட கண்ணபிரான்
என்னிடம் வரும்படியான பாக்கியம்
வாய்க்க வேணும் என்கிற மநோ ரதம் உள்ளுறை –

வரில்
என்கையாலே
வரும் போதை நடை அழகு காண்கையிலே அபி நிவேசம் உற்றது என்ப
கூடிடு கூடலே
கீ கூடி
என்னையும் அவனோடு கூட்டு –

————————————————————————————————–

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே–4-4-

பதவுரை

ஆய்ச்சிமார்களும்–இடைச்சிகளும்
ஆயரும்–இடையரும்
அஞ்சிட–பயப்படும்படியாக,
பூத்த நீள் கடம்பு ஏறி–புஷ்பித்ததாய் உயர்ந்திருந்த கடப்ப மரத்தின் மேல் ஏறி
புக பாய்ந்து–(அங்கு நின்றும் எழும்பிக் குதித்து)
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய–நர்த்தனஞ் செய்த
கூத்தனார் வரில் கண்ணபிரான் வரக்கூடுமாகில்–பாக்கியசாலியான காளியநாகத்தின் மேல் நாட்ய சாஸ்த்ர நிபுணனான
கூடலே! கூடிடு-

காளியநாகத்தின் கொழுப்பையடக்கின அபதாநத்திலே ஈடுபட்டுப் பேசுகிறாள்.
ஒரு நாள் க்ருஷ்ணன் கன்றுகளை ஒட்டிக்கொண்டு ஒருவரும் ஸஞ்சாரியாக வழியே போகத்தொடங்க,
மற்ற இடைப் பிள்ளைகள் அழைத்து ‘க்ருஷ்ணா! அவ்வழி நோக்க வேண்டா’ அவ்வழியிற் சென்றால்
யமுநா நதியில் ஒர் மடுவில் இருந்து கொண்டு அம்மடு முழுவதையும் தன் விஷாக்நியினாற் கொதிப்படைந்த
நீருள்ள காய்ப் பாநத்துக்கு அநர்ஹமாம்படி செய்த காளிய னென்னும் கொடிய ஐந்தலை நாகம் குடும்பத்தோடு
வாஸஞ்செய்து கொண்டு அணுகினவர்களனைவரையும் பிணமாக்கிவிடுவதால் நாங்கள் அஞ்சுகின்றோம்’ என்ன’
அதைக்கேட்ட கண்ணபிரான் உடனே அக்காளிநாகத்தைத் தண்டிக்கவேண்டுமென்ற திருவுள்ளங் கொண்டு
அம்மடுவிற்குச் சமீபத்திலுள்ளதொரு கடம்பமரத்தின் மேலேறி அம்மடுவிற் குதித்து,
அந்நாகத்தின் படங்களின் மேல் ஏறித் துவைத்து நாக்கநஞ் செய்து நசுக்கி வலியடக்குகையில்,
மாங்கலிய பிக்ஷையிட்டருள வேண்டுமென்று தன்னை வணங்கிப் பிரார்த்தித்த நாக கன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி
அந்தக் காளியனை உயிரோடு கடலிற்சென்று வாழும்படி விட்டருளினன் என்ற வரலாறு இங்கு அறியத்தக்கது.

“ஆய்ச்சிமார்களு மாயருமஞ்சிட நடமாடிய” என இயையும்.
“அஞ்சிடக் கடம்பேறிப்புகப்பாய்ந்து” என்று இயைக்கவுமாம்.
வாய்த்தவகாளியன் ஸ்ரீ கண்ணபிரான் தன்முலையிலே நடமாட வேணுமென்று இவள் விரும்புமதை
அக்காளியன் தலையிலே பெற்றமைக்கு உகந்து, வாய்த்த என்கிறாள்’
பெண்ணாய்ப் பிறவாதே காளியனாய்ப் பிறந்தேனாகில் இந்த பாக்கியம் பெறலாமே’
அம்ருதம் பொதிந்த முலைகள் பெறாத பாக்கியத்தை விஷம் பொதிந்தவன் தலை பெற்றதே!
இதென்ன பாக்கியம்! என்று உள்குழைகின்றமை “வாய்த்த” என்ற சொல் நயத்திலே தெரியும்.
‘காளியஸ்ய பணமாம் சிரஸ்து மே ஸத்கதம்ப கிகாத்வ மேவவா-வஷ்டி ஜுஷ்ட வநசைல ஸுந்தா’.
த்வத் பதாப்ஜயுக மர்ப்பிதம் யயோ:’ என்று ஸுந்தரபாஹு ஸ்தவத்திலே ஆழ்வா னருளிச் செய்த ச்லோகம் இங்கே ஸ்மரிக்கத்தக்கது. (
கண்ணபிரானுடைய திருவடியின் ஸ்பர்சம் பெறும்படியான பாக்கியம் பெற்ற காளியன் தலையாகாது,
கடம்பமரத்தின் உச்சியாகவாவது என்தலை ஜந்மமெடுக்க விரும்புகின்ற தென்பது
இந்த ச்லோகத்தின் தாத்பர்ய ஸங்க்ரஹம்.) நடம்-நடநம் என்ற வடசொல்லின் கடைக்குறை.

கூத்தனார் வரில் ஸ்ரீ அக்காளியன் தலையிலே நடமாடின ச்ரமத்தோடே தன் பக்கல்
வந்தணைய வேணுமென்று விருப்பம் போலும் .

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட நடமாடிய
என்று இயையும்
அஞ்சிடபூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து –
என்றும் இயையும்

வாய்த்த காளியன்-
கண்ணபிரான் தன முலையிலே நடமாட வேணும்
என்று இவள் விரும்புவதை
அக்காளியன் தலையிலே
பெற்றமைக்கு உகந்து
வாய்த்த என்கிறாள் –
பெண்ணாய் பிறவாதே
காளியனாய் பிறந்தேன் ஆகில்
இந்த பாக்கியம் பெறலாமே
அமிர்தம் பொதிந்த முலைகள் பெறாத பாக்யத்தை
விஷம் பொதிந்தவன் தலை பெற்றதே –
இது என்ன பாக்கியம் -என்று
உள்ளம் குழைந்து-வாய்த்த -என்று அருளிச் செய்கிறாள்
காளியச்த பணதாம் சிரச்துமே சத்கம்ப சிகரத்வ மேவவா
வஷ்டி ஜூஷ்ட வனசைல சுந்தர த்வத் பதாப்ஜயுக மர்ப்பிதம் யதோ-கூரத் ஆழ்வான்
காளியன் தலையாகவாவது
கதம்ப மர உச்சியாகவாவது
இல்லாமல் போனதே –

கூத்தனார் வரில் –
அக்காளியன் தலையில் நடமாடிய ஸ்ரமத்தோடே
தன பக்கல் வந்து அணைய வேணும்
என்று மநோ ரதிக்கிறாள்
கூடிடு கூடலே-

——————————————————————————————–

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே—4-5

பதவுரை

ஓடை–நெற்றிப் பட்டத்தை யுடைத்தாய்
மா மதம்–மிக்க மதத்தை யுடைத்தான
யானை–(குவலயா பீடமென்னும்) யானையை
உதைத்தவன்–உதைத்து முடித்த கண்ண பிரான்
மாடம் மாளிகை சூழ் மதுரை பதி–மாடங்களுடைய மாளிகைகளாலே சூழப்பட்ட மதுரை மாநகரிலே
நாடி–(நம் வீட்டைத்) தேடிக் கொண்டு
நம் தெருவின் நடுவே வந்திட்டு–நம்முடைய வீதியின் நடுவிலே வந்து
கூடும் ஆகில் -(நம்மோடு) கட்டுவானாகில்
கூடலே! நீ கூடிடு

குவாலயாபீடமென்னும் மதயானையை முடித்தருளின அபதாநத்திலே ஈடுபட்டுப் பேசுகிறாள்.-
வில்விழாவென்ற வ்யாஜம் வைத்துக் கம்ஸனால் வரவழைக்கப்பட்டு ஸ்ரீக்ருஷ்ய பலராமர்கள் கம்ஸனுடைய
அரண்மனையை நோக்கிச் செல்லுகையில், அவ்வரண்மனைவாசல் வழியில் தம்மைக் கொல்லும்படி
அவனால் ஏவி நிறுத்தப்பட்ட குவலயாபீட மென்னும் மதயானை கோபித்துவர, அவ்யாதவ வீரர் அதனை எதிர்த்து
அதன் தந்தங்களிடையும் சேற்றிலிருந்து கொடியை யெடுப்பதுபோல எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக் கொண்டு
அடித்து அவ்யானையை உயிர் தொலைத்து விட்டு உள்ளே போயினர் என்ற வரலாறு இங்குணரத்தக்கது.

இரண்டாமடியின் இறுதியிலுள்ள வந்திட்டு என்ற வினையெச்சம்-உதைத்தவன் என்பதிலே அந்வயிப்பதல்ல’
கூடுமாகில் என்பதிலே அந்வயிக்கக்கடவது.
இப்போது, கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் இருப்பதாகவும்,
இவ்வாண்டாள் தான். வடமதுரையிலே யிருப்பதாகவும் பாவநப்ரகர்ஷம் செல்லுகிறபடி.
மதுரைப்பதிக்கு “மாடமாளிகைசூழ்” என்று விசேஷணமிட்ட ஸ்வாரஸ்யத்தைக் கண்டறிந்த பெரியவாச்சான்பிள்ளை
ரஸோக்தியாக அருளிச் செய்கிற ஸ்ரீஸூக்திகளைக் காணீர்-
“அவன் வில்விழவுக்கென்று கோடித்தான்’ இவள் இவன் வரவுக்கென்றிருக்கிறாள்”.

“மதுரைப் பதியிலே நந்தெருவின் நடுவே வந்திட்டு” என்னுமளவே போதுமாயிருக்க,
நாடி என்று விசேஷித்து அருளிச்செய்கையாலே, கண்ணபிரான் நேரேவந்து என் வீட்டில் புகுரலாகாது
’ நாச்சியார் திருமாளிகை எது? நாச்சியார் திருமாளிகை எது?” என்று ஊரெங்கும் விசாரித்துக்கொண்டு
தேடி வரவேணுமென்னும் ஆவல் தோற்றும்.

“நம் தெருவின் நடுவே” என்றவிடத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார்-
“திருவாய்ப்பாடியடையத் தன்னதானாப்போலே இங்கும் ஒருதிருமாளிகை யுண்டு’
உகந்தருளின் விடமெங்கும் ‘தேவத்வே தேவதேஹேயம் மநுஷ்யத்வேச மாநுஷீ என்கிறபடியே
ஒரோ திருமாளிகை யுண்டு” என்று,- மதுரைப் பதியிலே ஆண்டாளுக்கென்று ஒரு தெருவும் திருமாளிகையுமுண்டோ?
என்று பிறக்கும் சங்கைக்குப் பதிஹரமாக இஃது அருளிச்செய்தபடி,
ஆனால், பலச்ருதி சொல்லும் ஈற்றுப்பாட்டில் “ஆய்ச்சியர் கூடலைக் குழற்கோதை முன்கூறிய”
என்றருளிச்செய்திருத்தலால் இத்திருமொழி முழுதும் ஆய்ச்சியர் பாசுரமேயொழிய ஆண்டாள் பாசுரமன்றென்றும்,
அநுகாரமாத்ரமே என்றும், ஆகவே நம்தெரு என்றவிடத்து நம் என்றது ஆய்ச்சியரையே யன்றி
ஆண்டாளை யன்று என்றும் கொள்ளவேண்டுகையாலே
பெரியவாச்சான் பிள்ளை அங்ஙனே அருளிச்செய்கைக்கு ப்ரஸக்தி? என்று சிலர் சங்கீக்கக்கூடும்’
வஸ்துத: ஆய்ச்சியர் கூடலைக் குழற்கோதை அநுகரித்துக் கூறினளாயினும்’
கோதையாயிருக்குந் தன்மையும் கூடவே அநுஸந்தேயம்.
அப்படியில்லாவிடில் ஆண்டாளுக்குக் கவனசாதுரியம் மாத்திரம் ஏற்பட்டதாகுமே யொழிய
பாவவ்ருத்தியில் பாரிபாகமென்பது சிறிதும் ஏற்படாமற்போகும்.
பாவநாப்ரகர்ஷத்தாலே அநுகாரம் முற்றிற்றென்னா தானான தன்மைலோபிக்க மாட்டாதென்க.
இனி நம் என்பதற்கு ஆய்ச்சியரையே பொருளாகக்கொண்டாலும் அவர்கட்குத்தான் மதுரைப் பதியில் வீதியுண்டோவென்று ஆராய்க.

ஓடை என்று யானையின் நெற்றிப்பட்டத்துக்குப் பெயர்

ஓடை மா மதயானை யுதைத்தவன்
ஓடை என்று யானையின் நெற்றிப் பட்டத்துக்கு பெயர் –
நெற்றிப் பட்டத்தை உடைத்தாய்
மிக்க மதத்தை உடைத்தான
குவலயா பீடம் என்னும் யானையை எதிர்த்து
அந்தந தந்தங்கள் இரண்டையும் சேற்றில் இருந்து கொடியைப் எடுப்பது போலே
எளிதில் பறித்து
அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அடித்து
அவ யானையை முடித்த –

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
வந்திட்டு எனபது உதைத்தவன் என்பதில் அந்வயம் இல்லை
கூடுமாகில் -என்பதிலே அந்வயம்
இப்போது கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் இருப்பதாகவும் இவ்வாண்டாள்
தான் வடமதுரையில் இருப்பதாகவும்
பாவனா பிரகர்ஷம்

மாட மாளிகை சூழ் -விசேஷணம்
அவன் வில் விழாவுக்கு என்று கோடித்தான்
இவள் இவன் வரவுக்கு என்று இருக்கிறாள்

மதுரைப் பதியிலே நந்தெருவில் நடுவே வந்திட்டு என்னும் அளவே போதுமே இருக்க
நாடி -என்று விசேஷித்து அருளிச் செய்கையாலே
கண்ணபிரான் நேரே வந்து என் வீட்டில் புகுரலாகாது
நாச்சியார் திரு மாளிகை எது
நாச்சியார் திரு மாளிகை எது
என்று ஊர் எங்கும் விசாரித்துக் கொண்டு
தேடி வர வேணும் என்னும் மநோ ரதத்தால் அருளிச் செய்கிறாள்-

நம் தெருவின் நடுவே –
திருவாய்ப்பாடி அடையத் தன்னதானாப் போலே
இங்கும் ஒரு திரு மாளிகை உண்டு
உகந்து அருளின இடம் எங்கும்
தேவத்வே தேவதே ஹேயம் மனுஷ்யத்வேச மானுஷீ -என்கிறபடியே ஒரோ திரு மாளிகை உண்டு -என்று
மதுரைப் பதியிலே ஆண்டாளுக்கு ஒரு தெருவும் திரு மாளிகையும் உண்டோ -என்று பிறக்கும் சங்கைக்கு பரிஹாரம்
ஆனால்
பல சுருதி சொல்லும் ஈ ற்றுப் பாட்டில்
ஆய்ச்சியர் கூடலைக் குழல் கோதை முன் கூறிய -என்று அருளிச் செய்து இருத்தலால்
இத்திரு மொழி முழுவதும் ஆய்ச்சியர் பாசுரமே ஒழிய ஆண்டாள் பாசுரம் அன்று என்றும்
அணுகார மாத்ரமே என்றும்
ஆகவே நம் தெரு -என்ற இடத்து நம் -என்று ஆய்ச்சியரையே அன்றி
ஆண்டாளை அன்று என்று கொள்ள வேண்டுமே -என்ற சங்கைக்கு
வஸ்துத ஆய்ச்சியர் கூடலைக் குழல் கோதை அனுகரித்துக் கூறினாள் ஆயினும்
கோதையாய் இருக்கும் தன்மையும் கூடவே அனுசந்தேயம்
அப்படி இல்லாவிடில்
ஆண்டாளுக்கு கவன சாதுர்யம் மாத்ரமே எற்பட்டதாகுமே ஒழிய
பாவ வ்ருத்தியில் பரிபாகம் எனபது சிறிதும் ஏற்படாமல் போகும்
பாவன பிரகர்ஷத்தாலே அநுகாரம் முற்றிற்று என்னா
தானான தன்மை லோபிக்க மாட்டாது என்க
இனி நம் என்பதற்கு ஆய்ச்சியரையே பொருளாகக் கொண்டாலும்
அவர்கட்குத் தான் மதுரைப் பதியில் வீதி உண்டோ என்று ஆராயக-

—————————————————————————————————

அற்றவன் மருத முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே–4-6-

பதவுரை

அற்றவன்–(ஏற்கனவே எனக்கு) அற்றத் தீர்ந்தவனாய்
மருதம் முறிய–யமளார்ஜுந மென்னும்) மருத மாங்களானவை முறிந்து விழும்படியாக
நடை கற்றவன்–தவழ் நடை நடக்கக் கற்றவனாய்
கஞ்சனை–கம்சனை
வஞ்சனையில்–வஞ்சனையிலே
செற்றவன்–கொன்று முடித்தவனாய்
திகழும் மதுரை பதி கொற்றவன்–விளங்குகின்ற மதுதைமா நகர்க்கு அரசனான கண்ணபிரான்
வரில்–வந்திடுவானாகில்
கூடலே! கூடிடு-.-

கண்ண பிரான் இரட்டை மருதமரங்களிடையே தவழ்ந்து சென்றதோர் அபதாநத்தையும்
கஞ்சனைக் கொன்றவாற்றையும் நினைத்து அவற்றிலே ஈடுபட்டுப் பேசுகிறாள்.

மருத முறிய நடைகற்ற வரலாறு வருமாறு-
கண்ணன் குழந்தையாயிருக்குங்காலத்தில் துன்பப்படுகின்ற பல விலையாடல்களைச் செய்யக்கண்டு
கோபித்த யசோதை க்ருஷ்ணனைத் திருவயிற்றிற் கயிற்றினாற்கட்டி ஒருரலிலே பிணித்துவிட,
கண்ணன் அவ்வுரலை யிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருத மரத்தின் நடுவே
எழுந்தருளிய பொழுது அவ்வுரல் குறுக்காய் நின்று இழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவில்
முன் நாரதர் சாபத்தால் அம்மரங்களாய் கிடந்த நளகூபரன் மணிக்ரிவன் என்னும் குபேரபுத்திரர் இருவரும் சாபந்தீர்ந்து சென்றனர்.
இந்த குபேர புத்திரர்கள் முன்பு ஒரு காலத்தில் பல அப்ஸரஸ் ஸ்த்ரிகளுடனே ஆடையில்லாமல் ஜலக்ரிடை செய்து
கொண்டிருக்கையில் நாரதமா முனிவர் அங்கு எழுந்தருள மங்கையர் அனைவரும் நாணங்கொண்டு ஆடையெடுத்து உடுத்து நீங்க,.
இந்த மைந்தர் மாத்திரம் மதுபாநமயக்கத்தினால் வஸ்த்ரமில்லாமலேயிருக்க நாரதர் கண்டுகோபங்கொண்டு
‘மரங்கள் போலிருக்கிற நீங்கள் மரங்களாவீர்’ என்று சபிக்க உடனே அவர்கள் வேண்டிக்கொண்டதற்கு இரங்கி
‘நெடுங்காலஞ்சென்றபின்பு திருமால் உங்களருகே நெருங்குஞ் சமயத்தில் இவ்வடிவமொழிந்து முன்னையவடிவம் பெற்றுமீள்வர்’
என்று சாப விடை கூறிப்போயினார். இப்படி சாபத்தினால் மரங்களான இவற்றில், கம்ஸனால் ஏவப்பட்ட
இரண்டு அஸுரர்களும் ஆவேசித்துக் கிடந்தனர் என்று கொள்ளல் வேண்டும்’
“ஒருங்கொத்தவிணை மருதம் உன்னியவந்தவரை” என்றும்
“பொய்ம்மாயமருதான வசுரரை” என்றும் பெரியாழ்வார் அருளிச் செய்திருத்தலால்.

அற்றவன் – ஏற்கனவே “ஆண்டாளுக்கானவன் இவன்” என்னும்படி அற்றுத் தீர்ந்தவன்.
“பாரித்ராணாய ஸாதூரிநாம்-ஸம்பவாமியுகே” என்றிறே திருமுகப்பாசுரம்.

“அற்ற வல் மருதம் முறிய”- தன்னைக் கொல்லுவதாக நிக்சயித்து வந்த வலிய மருதமரங்கள் முறியும்படியாக
என்று பொருள் கொள்ளக்கூடுமாயினும் ஸ்வரஸமன்று’ வியாக்கியமானத்திலுமில்லை.

கஞ்சனை வஞ்சனையிற் செற்ற வரலாறு-
தன்னைக் கொல்லப்பிறந்த தேவகி புத்திரன் யசோதையிடம் ஒளித்து வளர்தல் முதலிய வரலாறுகளை
நாரதர் சொல்லக் கேட்டுக் கம்ஸன் அதிக கோபங்கொண்டு க்ருஷ்ணனைக் கொல்ல நிச்சயித்து
வில்விழாவென்கிற வியாஜவைத்துக் கண்ணனை மதுரைக்கு வரவழைத்துப் பலவகையில் வதைக்க வழி தேடுகையில்
கம்ஸ ஸபையிலே கண்ணபிரான் வேகமாக எழும்பிக் கஞ்சனது மஞ்சத்தின் மேலேறி அவனது கிரிடம் கழன்று கீழேவிழும்படி
அவனைத் தலைமயிர் பிடித்துத் தரையில் தள்ளி அவன் மேல் தான் விழுந்து அவனைக் கொன்றிட்டனன் என்பதாம்.

வஞ்சனையில் என்ற விடத்துக்குப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார்-
“தர்மயுத்தமே வேணுமென்று பெருமாளைப் போலே யிருந்தானாகில் அவன் வஞ்சநமே தலைக்கட்டுமே’
அவன் நினைத்த வஞ்சநத்தை அவன்றன்னோட போக்கின்படி.”

கண்ணபிரான் கம்ஸனைக் கொன்றபின்பு, மகனிழந்தவனும் தன் மாதாமஹனுமாகிய உக்ரஸேந மஹாராஜனைத்
தளையினின்றும் விடுவித்து வடமதுரையிற் பட்டாபிஷேகம் செய்துவைத்தானாகையாலே திகழும்
மதுரைப்பதிங் கொற்றவன் உக்ரஸேநனேயாகிலும் கண்ணபிரானே ராஜா என்பது ஆண்டாளுடைய பக்ஷமாம்.
“நஹி பாலந ஸாமா;த்ய மருதே ஸர்வேச்வரம் ஹாரிம்) என்றிறே ப்ரமாண ப்ரஸித்தியும்.
“வாசுதேவன் மதுரை மன்னன்” என்றார் பெரியாழ்வாரும்

நாரதர் சாபத்தால்
நளகூபுரன் மணிக்ரீவன் -இரண்டு குபேர புத்ரர் மருத மரங்கள் ஆக
கண்ணன் திருவடியால் சாபம் தீர்ந்து சென்றனர்
ஒருங்கொத்த இணை மருதம் உன்னிய வந்தவரை -என்றும்
பொய்ம்மாய மருதான வசுரரை-என்றும்
பெரியாழ்வார் அருளிச் செய்தபடி
கம்சனால் ஏவப் பட்ட அசுரர்கள் இந்த மரங்களில் ஆவேசித்து கிடந்தனர் –
அற்றவன் -ஏற்கனவே ஆண்டாளுக்கு ஆனவன் இவன் -என்னும் படி அற்றுத் தீர்ந்தவன்
பரித்ராணாயா சாது நாம் –சம்பவாமி யுகே யுகே -என்று இ றே திருமுகப் பாசுரம்

அற்ற வல் மருதம் முறிய –
தன்னைக் கொள்ளுவதாக நிச்சயைத்டு வந்த வழிய மருத மரங்கள்
முறியும்படி -பொருள்
கொள்ளலாம் -ஆயினும் ஸ்வரசம் அன்று -வ்யாக்யானத்திலும் இல்லை

வஞ்சனையில்
தர்ம யுத்தமே வேணும் என்று
பெருமாளைப் போலே இருந்தான் ஆகில்
அவன் வஞ்சமே தலைக் கட்டுமே
அவன் நினைத்த வஞ்சகத்தை அவன் தன்னோடு போக்கின்படி –

தனது மாதாமஹனான உக்ரசேனனைதலையினின்று விடுவித்து வடமதுரையில்
பட்டாபிஷேகம் செய்து வைத்து
திகழும் மதுரைப் பதிக கொற்றவன் உக்ரசேனனேஆகிலும்
கண்ணபிரானே ராஜா எனபது ஆண்டாள் உடைய பஷமாம் –
நஹி பாலான சாமர்த்திய மருதே சர்வேச்வரம் ஹரிம் -என்று இ றே பரமான பிரசித்து
வாசுதேவன் மதுரை மன்னன் -என்றார் பெரியாழ்வாரும்-

————————————————————————————————-

அன்று இன்னாதான செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே–4-7

பதவுரை

அன்று–முற் காலத்தில்
இன்னாதன செய் சிசுபாலனும்–வெறுக்கக் கூடிய கெட்ட காரியங்களையே செய்து வந்த சிசுபாலனும்
நின்ற நீள் மருதும்–வழியிடையே நின்ற பெரிய இரட்டை மருத மரங்களும்
எருதும்–ஏழு ரிஷபங்களும்
புள்ளும்–பகாஸுரனும்
வென்றி வேல் விறல் கஞ்சனும்–வெற்றியை விளைவிக்க வல்ல வேலாயுத மென்ன
(அதைப் பிடிக்கத்தக்க) மிடுக்ககென்ன இவற்றை யுடையவனான் கம்சனும்
வீழ–முடிந்து விழும்படியாக
முன்–எல்லார் கண்ணெதிரிலும்
கொன்றவன்–கொன்றொழித்த கண்ண பிரான்
வரில்–வரக்கூடுமாகில்
கூடலே! கூடிடு;

சிசுபாலவதம் முதலிய ஐந்தாறு சாரித்திரங்களிலே ஈடுபட்டுப் பேசுகிறாள். சிசுபாலன் வரலாறு :-
விகர்ப்பததேசத்தில் குண்டினமென்கிற பட்டணத்தில் பீஷ்மகனென்கிற அரசனுக்கு
ருக்மி என்கிற பிள்ளையும் ருக்மணி என்கிற பெண்ணுமிருந்தனர்.
அந்த ருக்மிணியானவள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷிமியின் அவதாரம்.
அவளுக்கு யுக்தவயது வந்தவுடன் க்ருஷ்ணன் சென்று இப்பெண்ணை எனக்கு விவாஹம்செய்து கொடுக்கவேணுமென்று கேட்க,
ருக்மி என்பவன் அவளைச் சோதிதேசத்ரசனான சிசுபாலனுக்குக் கொடுக்க விரும்பிய வனாதலால்
க்ருஷ்ணனுடைய விருப்பத்திற்கு உடன்படாதொழிந்தான்.

சில நாள் கழித்தபின் அந்த ருக்மிணியின் கல்யாணத்துக்காக ஸ்வயம்வரம் கோடித்து
ஸகல தேசத்து அரசர்களையும் ருக்மி வரவழைத்தான்.
அவர்கள் வந்து சேர்ந்தவுடனே க்ருஷ்ணனும் பல ராமாதிகளைக் கூட்டிக்கொண்டு அப்பட்டணத்துக்குப் போய்
கல்யாணத்துக்கு முதல்நாள் அந்த ருக்மிணியை மாயமாய் அபஹரித்துக்கொண்டு வந்துவிட்டான்.
பின்பு அங்குள்ள தந்தவக்த்ரன் முதலிய பல அரசர்கள் போர் செய்ய எதிர்த்துவர,
அவர்களைப் பலராமனும் கண்ணபிரானும் முதுகுகாட்டி ஓடும்படி செய்துவிட்டனர்.
பிறகு ருக்மிணிப் பிராட்டியின் தமையனான ருக்மியானவன் ‘இப்படி செய்கையாவது ஏன்?’ என்று
எதிர் பொருது மீட்பதாக நினைத்துவந்து கண்ணனைத் தகைய, அப்போது ஸ்ரீ க்ருஷ்ணன்
‘இவனைக் கொன்றால் ருக்மிணி மனம் வருந்துவாள்’ என்று அவனைப் பிடித்துத் தனது தேர்க்காலிலே கட்டி
அப்பாலே அவனது தலையைச் சிரைத்திட்டு மாநபங்கஞ் செய்துவிட்டுப் பின்பு
ருக்மிணியை விதி பூர்வகமாகக் கல்யாணஞ் செய்துகொண்டான். இஃது இப்படி நிற்க:-

சிசுபாலன் பிறந்தபொழுது, நான்கு கைகளையும் மூன்று கண்களையு முடையனாயிருந்தான்.
அப்பொழுது அனைவரும் இது என்னவென்று வியக்கும்போது ஆகாயவாணியார் இவனைத் தொடுகையில்
இவனது கைகளிரண்டும் மூன்றாம் விழியும் மறையுமோ, அவனால் இவனுக்கு மரணம் என்று கூறிற்று:
அவ்வாறே பலரும் தொடுகையில் மறைபடாத கைகளும் கண்ணும் கண்ணபிரான் தொட்டவளவிலே மறைபட்டன,
அதனால் ‘இவனைக்கொல்பவன் கண்ணனே’ என்றறிந்த சிசு பாலன்தாய் யாதுசெய்யினும் என்மகனைக் கொல்லலாகாது’
என்று கண்ணனை வேண்ட, அந்த அத்தையின் நன்மொழிக்கு ஒருசார் இணங்கிய கண்ணன்
‘இவன் எனக்கு நூறுபிழைசெய்யுமளவும் இவன் பிழையை நான் பொறுப்பேன் என்று கூறியருளினன்.
பின்பு சிசுபாலன், தனக்குக் கண்ணன் சத்ருவென்பதை இளமையிலேயே அறிந்து அதனாலும்
பூர்வஜந்ம வாஸனையாலும் வளர்ந்த மிக்க பகைமையைப் பாராட்டி, எப்பொழும் அப்பெருமானுடைய
குணங்களையும் திவ்யசேஷ்டிதங்களையும் நிந்திப்பதே தொழிலாக இருந்தான்.
இவனுக்கு மணஞ்செய்து கொடுப்பதென்று நிச்சயித்துவைத்திருந்த ருக்மிணியைக் கண்ணன் வலியக் கவர்ந்து
மணஞ்செய்துகொண்டதுமுதல் இவன் கண்ணனிடத்து மிக்க வைரங்கொண்டனன்.
பின்பு இந்த்ரப்ரஸ்த நகரத்தில் நடந்த ராஜஸூயயாகத்தில் தர்மபுத்ரனாற் கண்ணபிரானுக்கு அக்ர பூஜை செய்யப்பட்டதைக் கண்டு
அளவிறந்த வசைச்சொற்களைப் பிதற்றி அதுபற்றிக் கண்ணபிரானுடைய திருவாழியினால் தலை துணிக்கப்பட்டு இறந்து
தேஜோமயமான திவ்யசாரிரம் பெற்று எம்பெருமானது திருவடியை அடைந்தனன்.

இன்னாதன்-இனியவையல்லாதவை’ அனைவராலும் இகழத்தக்கவை என்றபடி.
“பலபலநாழஞ் சொல்லிப் பழித்த சிசுபாலன்” என்றும்,
“கேட்பார் செவிசுடு கீழ்மைவசவுகளே வையும், சேட்பால் பழம்பகைவன் சிசுபாலன்” என்றும் அருளிச் செய்துள்ளமை காண்க.

எருதும் என்றது
ஸ்ரீ கும்பனென்னும் இடையர் தலைவனது மகளாயும் நீளாதேவியின் அம்சமாகப் பிறந்ததனால்
நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக
அவளது தந்தை கந்யாசுலைகமாகக் குறித்தபடி. யாவர்க்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகளையும்
கண்ணபிரான் ஏழுதிருவுருக் கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்ட வரலாறு அறிக.

அன்றியே,
இங்கு எருதும் என்றது அரிஷ்டாஸுரனைச் சொல்லிற்றாகவுமாம்,
கம்ஸனாலேவப்பட்ட அசுரர்களில் அரிஷ்டணென்பவன் எருதுவடிவங்கொண்டு பசுக்களை யெல்லாம் முட்டி
இடைச் சேரியைப் பயப்படுத்திக் கொண்டு ஸ்ரீக்ருஷ்ணனது திருவயிற்றின் மேல் கண் வைத்துக் கொம்புகளிற் பிடித்து
அசைய வொட்டாமற் செய்து தன் காலினால் அவன் வயிற்றில் ஓரிடி இடித்து அவன் கழுத்தைப் பிடித்துக் கசக்கி
அவனுடைய கொம்புகளில் ஒன்றைப் பறித்து அதனாலேயே அவனை யடித்துக் கொன்றனன் என்ற கதை அறியத் தக்கது.

புள்ளும் ஸ்ரீ பகன் என்னும் ஓரஸுரன் கொக்குவடிவங்கொண்டு கண்ண பிரானைக் கொல்வதாக நெருங்கி வர,
அப்பொழுது கண்ணன் அப்பறவையின் வாயலகுகளை இரு கையாலும் பிடித்துக் கிழித்து அதனை அழித்தனன் என்றுணர்க.

அன்று இன்னாதான செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே
நான்கு கைகள் மூன்று கண்கள் உடன் பிறந்தானாம் சிசுபாலன்
தன அத்தையின் வேண்டு கோளுக்கு இணங்க எத்தனை பிழை செய்தாலும் பொறுத்து தேஜோ மயமான
திவ்ய சரீரம் கொடுத்து தன திருவடி சேர்த்து அருளினான் – கண்ணபிரான்

இன்னாதான –
இனியவை அல்லாதவை -இகழத் தக்கவை
பலபல நாழம் சொல்லிப் பலித்த சிசுபாலன் -என்றும்
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும் சேட்பால் பலம் பகைவன் சிசுபாலன் -என்றும் அருளினார்கள் இ றே

எருதும்
கும்பன் -நீளா -நப்பின்னை -ஏழு எருதுகளை அடிக்கி
அன்றியே அரிஷ்டாசுரன்-எருது வடிவம் கொண்டு -அவனை நிரசித்தவன்-

புள்ளும் –
பகாசுரன் கொக்கு வாய் அலகுகளை பிடித்து இழித்து அழித்த வ்ருத்தாந்தம்

——————————————————————————————————-

ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்துவிளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே–2-8-

பதவுரை

ஆவல் அன்பு உடையார் தம்–ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய
மனத்து அன்றி மேவலன்–நெஞ்சு தவிர மற்றோரிடத்திலும் பொருந்தாதவனும்
விரை சூழ் துவராபதி காவலன்–நல்ல வாஸனை சூழ்ந்த த்வாரகாபுரிக்கு நிர்வாஹகனும்
கன்று மேய்த்து விளையாடும் கோவலன்–கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனுமாகிய கண்ண பிரான்
வரில் – வரக் கூடுமாகில்
கூடலே! கூடிடு.

ஆவல் அன்புடையயார் தம்
ஆவல் என்றாலும் அன்பு என்றாலும் பொதுப்படையாக ப்ரேமத்தைச் சொல்லுமாகிலும்,
கோபம் ரோஷம் இத்தியாதிபதங்களின் அர்த்தத்திலே நுட்பமான பேசும் இருக்கிறாப்போலே இங்கும் சிறிது பேதம் உண்டு’
‘எம்பெருமானே உபாயோபேயங்கள்’ என்கிற ‘அத்யவஸாயம் கிடக்கச் செய்தேயும்
நோன்பு நோற்பது, காமன் காலிலே விழுவது, சிற்றிவிழைப்பது பனிநீராடுவது, கூடலிழைப்பது
இவை போல்வன அதி ப்ரவருத்திகளில் துணிவைப் பிறப்பிக்கும் ப்ரேமம் ஆவலெனப்படும்.

“மல்லாண்ட திண்டோள் மணி வண்ணா!” என்று எம்பெருமானுடைய மிடுக்கின் மிகுதியை அறிந்திருக்கச் செய்தேயும்
அவனை ரக்ஷ்யனாகவும் தன்னை ரக்ஷகனாகவும் நினைத்துப் பல்லாண்டு பாடுகையிலே ஒருப்படுத்தும்
ப்ரேமம் அன்பு எனப்படும் என்று கொள்க.
ஆவல்- ஆண்டாளுடையபடி;
அன்பு-இவளுடைய திருத்தகப்பனாரான பெரியாழ்வாருடையபடி,
ஆக இவ்விரண்டையும் சொன்னவித்தால் தங்கள் குடியிலுள்ளார் மனத்தோடல்லது
வேறொருவர் மனத்தோடு பொருந்த மாட்டான் எம்பெருமான் என்றாளாய்த்து.
மேவலன் -விரும்பாதவன் என்றபடி “நம்பும் மேவும் நசையாகுமே.” என்பது தொல்காப்பியம்.

துவராபதிக்காவலன் ‘காலயவநன்’ என்பானொருவன் செருக்கித் திரிந்து கொண்டிருக்கையில்
ஒருநாள் நாரதரைப் பார்த்து ‘இவ்வுலகினில் சூரரானவர் யாராவது உண்டோ? என்று கேட்க;
மதுரையில் யாதவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மிக்க பராக்ரமசாலிகள்’ என்று நாரதர் சொல்ல,
அதைக் கேட்டவுடனே அவன் அங்கிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து யாதவர்களுடன் போர் செய்யத் தொடங்க,
அப்பொழுது கண்ணபிரான் இதையறிந்து மேற்கடலுக்குச் சென்று அங்கு ஸமுத்ரராஜனை யாசித்துப்
பன்னிரண்டு யோஜனை விஸ்தீர்ணமுள்ள இடத்தை வாங்கி அங்கு அழைத்துக் கொண்டு போய் வைத்துக்
காலயவநனுடைய பயத்தில் நின்றும் விடுவித்த வரலாறு அறிக.

துவராவதிஸ்ரீ (த்வாரவதி) என்ற வடசொல் திரிபு. விரைசூழ் என்று த்வாரகைக்கு விசேஷணமிட்டது-
“மட்டேறுகற்பகத்தை மாதர்க்காய் வண்துவரை நட்டானை” என்ற அருளிச் செயலில்
அமைந்த கதையைத் திருவுள்ளம்பற்றி என்னலாம்.
கண்ண பிரான் ஸத்யபாமையினுடைய வேண்டுகோளுக் கிணங்கி இந்திரன் காவினிலிருந்த பாரிஜாத தருவை
த்வாரகையிலே கொணர்ந்து நாட்டினனாதலலால் விரை சூழப் பெற்றதென்க.

(காவலன் கோவலன்) பரத்வம் ஒருபக்கத்திலே, ஸௌலப்யம் ஒருபக்கத்திலே,
(‘ஸர்வஸ்யஜகத: பாலௌ வத்ஸபரலௌ பபூவது:’) என்ற ரிஷியைப் போலே அதிசயப்படுகிறாளாய்த்து.

ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
ஆவல் என்றாலும்
அன்பு என்றாலும்
பொதுப்படையாக பிரேமத்தைச் சொல்லும் ஆகிலும்
நுட்பமான பேதம் -கோபம் ரோஷம் இத்யாதி போலே
எம்பெருமானே உபாய உபேயங்கள்-என்கிற அத்யாவசாயம் கிடக்கச் செய்தேயும்
நோன்பு நோற்பது
காமன் காலிலே விழுவது
சிற்றில் இளைப்பது
பனி நீராடுவது
கூடல் இளைப்பது
இவை போல்வன அதி பிரவ்ருத்திகளில்
துணிவைப் பிறப்பிக்கும் ப்ரேமம் மணி வண்ணா -என்று எம்பெருமான் உடைய மிடுக்கின் மிகுதியை
அறிந்து இருக்கச் செய்தேயும்
அவனை ரஷ்யனாகவும் தன்னை ரஷகனாகவும் நினைத்து
பல்லாண்டு பாடுகையிலே ஒருப்படுத்தும் ப்ரேமம் அன்பு -எனப்படும்

ஆவல் -ஆண்டாள் உடைய படி
அன்பு—-இவள் திருத் தகப்பனார் பெரியாழ்வார் உடைய படி

ஆக இவ்விரண்டையும் சொன்னதால்
தங்கள் குடியில் உள்ளார் மனத்தோடு அல்லாது
வேறு ஒருவர் மனத்தோடு பொருந்த மாட்டான் எம்பெருமான் -என்றாள் ஆய்த்து-

மேவலன் -விரும்பாதவன் -என்றபடி
நம்பும் மேவும் நசை யாகுமே -தொல்காப்பியம்
விரை சூழ் துவராபதிக் காவலன்-
பன்னிரண்டு யோஜனை விஸ்தீரணம் உள்ள
த்வாரகை பட்டணம் அமைத்து
யாதவர்களை காலயவன் உடைய பயத்தில் நின்றும் விடுவித்து அருளினானே-

விரை சூழ் -த்வாரகைக்கு விசேஷணம்
மாட்டேறு கற்பகத்தை மாதர்க்கே வண் துவரை நட்டானை-என்றபடி
சத்யபாமைக்காக பாரிஜாத தருவை நாட்டினான் ஆதலால்
விரை சூழப் பெற்றது

காவலன் கோவலன் வரில் கூடிடு கூடலே
பரத்வம் ஒரு பக்கத்திலே இருக்க
சௌலப்யம் ஒரு பக்கத்தில் இருக்க
சர்வச்ய ஜகத பாலௌவத்ச பாலௌ பபூவது -என்ற
ரிஷியைப் போலே அதிசயப் படுகிறாள் ஆய்த்து-

—————————————————————————————————

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
பண்டு மா வலி தன் -பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி யொன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே–4-9-

பண்டு–முற் காலத்திலே
கோலம் கொண்ட குறள் உரு ஆய்–(முப்புரி நூலும் க்ருஷ்ணாஜிநமும் முஞ்ஜியும் பவித்ரமும் தண்டுமான)
கோலம் பூண்ட வாமந ரூபியாய்
மாவலி தன்–பெரு வேள்வியில் சென்று
அண்டமும்–மேலுலகங்களையும்
நிலனும்–கீழுலகங்களையும்
அடி ஒன்றினால்–ஒவ்வோரடியாலே
கொண்டவன்–அளந்து கொண்ட த்ரிவிக்ரமன்
வரில்–வருவானாகில்
கூடலே!–கூடிடு

வாமநாவதாரத்திலும் த்ரிவிக்ரமாவதாரத்திலும் ஈடுபட்டுப் பேசுகிறாள்.
இவ்வவதார சாரித்திரம் ப்ரஸித்தம்.
இயற்கையான அழகுக்கு மேலே யஜ்ஞோபவீத’ க்ருஷ்ணாஜிந, பவித்ர, கண்ட, மௌஞ்ஜீ
முதலியவற்றை யணிந்து கொண்டதனாலே யுண்டான செயற்கை யழகு வீறு பெற்றிருந்தமையினால்
கொண்ட கோலம் எனப்பட்டது.

(பெரு வேள்வியில்.) எம்பெருமானைக் காண்பதற்கு நான் இப்பாடுபடுகிறேன்’
பகவத் விபூதிதஸ்கரர்களில் தலைவனான மஹாபலி ஒரு ச்ரமமுமில்லாமல் அப்பெருமானை
யஜ்ஞவாடத்திலே கையிலங்கு நெல்லிக் கனியாகக் காணப் பெற்றானே!, அவ் வேள்வியின் பெருமை என்னோ!
என்று கொண்டாடுகின்றமை தோன்ற “வேள்வியில்” என்னாதே “பெரு வேள்வியில்” என்கிறாள்.

“அடி யொன்றினால்” என்றது “அடி ஒவ் வொன்றினால்” என்றபடி

இயற்கையான அழகுக்கு மேலே
யஜ்ஞ்ஞோ பவீத
க்ருஷ்ணாஜின
பவித்ர
தண்ட
மௌஞ்ஜீ
முதலியவற்றை அணிந்து கொண்டதனாலே உண்டான
அழகு வீறு பெற்று இருந்தமையினால்
கொண்ட கோலம் -என்கிறாள்

-பெரு வேள்வியில்
எம்பெருமானைக் காண்பதற்கு நான் இப்பாடு படுகிறேன்
பகவத் விபூதி தச்கரர்களில் தலைவனான மகாபலி
ஒரு ஸ்ரமமும் இல்லாமல்
அப்பெருமானை யஜ்ஞ் வாடத்திலே கை இலங்கு நெல்லிக் கனியாகக்
காணப் பெற்றானே
அவ்வேள்வியின் பெருமை என்னோ -என்று கொண்டாடுகிறாள்
இதனால் வேள்வியில் என்னாமல்-பெரு வேள்வியில் -என்று அருளிச் செய்கிறாள்

அடி ஒன்றினால் -என்றது
அடி ஒவ் ஒன்றினால் -என்றபடி-

————————————————————————————————-

பழகு நான் மறையின் பொருளாய் மத
மொழுகு வாரணம் உய்ய வளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே –4-10-

பதவுரை

பழகு நால்மறையின் பொருள் ஆய–அநாதியான சதுர் வேதங்களின் உட்பொருளாயிருக்கு மவனாய்
மதம் ஒழுகுவாரணம் உய்ய அளித்த–மத ஜலம் பெருகா நின்ற கஜேந்த்ராழ்வான் (துயர் நீங்கி) வாழும்படி க்ருபை செய்தருளினவனாய்
எம் அழகனார்–எம்மை ஈடுபடுத்த வல்ல அழகை யுடையனாய்
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார்–அழகிய கோபிமார்களின் நெஞ்சினுள்ளே குழைந்திருக்கு மவனான கண்ண பிரான்
வரில்–வரக் கூடுமாகில்
கூடலே! கூடலே

முதலை கோள்விடுத்து கஜேந்திராழ்வானைக் காத்தருளிய அபதாநத்திலே’ ஈடுபட்டுப் பேசுகின்றாள்.
(வேதைச்ச ஸர்வை ரஹமேவ வேத்ய:) இத்யாதி ப்ரமாணங்களையுட்கொண்டு
“பழகு நான் மறையின் பொருளாய்” என்றன்.
அக்நி, இந்திரன், வாயு முதலிய தேவதைகளைப் பற்றியும் வேதங்களில் கர்ம காண்டங்களிலே
பரக்கப் புகழ்ந்து பேசப்பட்டிருப்பினும் ‘(அங்காந்யந்யா தேவதா:’) என்று அந்த வேதந்தானே
அந்த தேவதைகளை எம்பெருமானுக்கு அவயவபூதங்களாகச் சொல்லிக் கிடக்கையாலே
அவயங்களைப் புகழ்ந்து சொல்வதும் அவயவிக்கே அதிசயமாக முடிகையாலே
தேவதாந்தர ப்ரசம்ஸாபரமான கர்மகாண்டமும் பகவத்பரமேயாகத் தட்டில்லை யென்க.

வாரணம்-தற்சமவடசொல். “வாரணமுய்ய வளித்த வெம்மழகனார்” என்ற சேர்க்கையின்பம் நோக்கி ஒரு கருத்துக் கூறலாம்’
அதாவது-கஜேந்த்ராழ்வானுடைய கூக்குரலைக் கேட்டவுடனே எம்பெருமான் அரைகுலையத் தலைகுலைய விரைந்தோடுங்கால்
(ஸ்ரக்பூஷாம் பரமயதாயதம் ததாந:- ஸ்ரீரங்கராஜஸ் தவம் உத்தரசதகம்) என்றபடி
ஆடையாபரணம் அலங்கல் முதலியவற்றை ஜல்லாரிபில்லாரியாக அணிந்து கொண்டு புறப்பட்ட அழகு
ஆண்டாள் நெஞ்சிலே ஊற்றிருந்து ஈடுபடுத்துகிறபடி.

அணியாய்ச்சியர் சிந்தையுள் குழகனார்-“கொங்கைமேற் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒருநாள் தங்குமேல் என்னாவிதங்கும்”
என்னும்படியான காதல் கிளர்ந்துள்ளவர்களுக்கு இவன் அப்போதே சென்று முகங்காட்டாவிடில் அவர்கள் மிகவும் மனம் நொந்து
ப்ரணயரோஷம் தலை யெடுக்கப் பெற்று “அந்த க்ருஷ்ணன் இனி என்றைக்கும் நம்மருகே வாராமலேயா போகப் போகிறான்!
என்றைக்காவது ஒருநாள் அநந்யகதியாய் வந்து நிற்பனன்றோ’ அப்போது நாம் அவனுக்கு முகங்கொடுக்கக் கடவோமல்லோம்” என்று
திண்ணிதாக ஸங்கல்பம் செய்து கொண்டவர்களுங்கூட மறம் தீர்ந்து மேல்விழுந் தணையும்படி
அவர்களைப் பிச்சேற்றவல்ல நல்விரகுகள் அறியுமவன் கண்ணபிரான் என்க.

வரில் கூடிடு கூடலே;- ‘அடியேன நுனியேன்’ என்றாற்போலே தாழ்வுகளுஞ் சொல்லி
அவர்களை ஊடல் தீர்த்து அவர்களோடே ஒருநீராகக் கலந்து அவர்களுடைய மனநோயைத் தீர்ப்பதுபோல
எனது மனநோயையும் தீர்க்க என்னோடும் ஒருநாள் வந்து கூடவேண்டாவா?.

பழகு நான் மறையின் பொருளாய்
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -இத்யாதி
பிரமாணங்களைக் உட் கொண்டு
பழகு நான் மறையின் பொருளாய் -என்கிறாள்
அக்னி இந்த்ரன் வாயு முதலிய தேவதைகளைப் பற்றியும்
வேதங்களில் கர்ம காண்டங்களில் பரக்கப் புகழ்ந்து பேசப் பட்டு இருப்பினும்
அங்கான் யன்யா தேவதா -என்று
அந்த வேதம் தானே அந்த தேவதைகளை எம்பெருமானுக்கு அவயவ பூதங்களாகச் சொல்லிக் கிடக்கையாலே
அவயவங்களைப் புகழ்ந்து சொல்வதும்
அவயவிக்கே அதிசயமாக முடிகையாலே
தேவதாந்திர பிரசம்சா பரமான கர்மகாண்டமும் பகவத் ப்ரமேயாகத் தட்டில்லை –
வேத தாத்பர்ய சர்வஸ்வம் —

மத மொழுகு வாரணம் உய்ய வளித்த எம் அழகனார் –
கஜேந்திர ஆழ்வான் உடைய கூக்குரலைக் கேட்டவுடனே
எம்பெருமான் அரை குலையத் தலை குலைய விரைந்து ஒடுங்கால்
ஸ்ரக்பூஷாம் பரம யதாயதம் ததான -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் உத்தர சதகம் -என்றபடி
ஆடை ஆபரணம் அலங்கல் முதலியவற்றை ஜல்லாரி பில்லாரியாக அணிந்து கொண்டு
புறப்பட்ட அழகு ஆண்டாள் நெஞ்சிலே ஊற்றிருந்து ஈடுபடுகிறாள்-
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார்-
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து
ஒரு நாள் தனக்குமேல் என்னாவி தங்கும் -என்னும்படியான
காதல் கிளர்ந்து உள்ளவர்களுக்கு
இவன் அப்போதே சென்று முகம் காட்டா விடில்
அவர்கள் மனம் நொந்து
ப்ரணய ரோஷம் தலை எடுக்கப் பெற்று
அவன் என்றாவது ஒரு நாள் அநந்ய கதியாய் நம்மிடம் வருவான்
அப்போது முகம் காட்டக் கடவோம் அல்லோம் -சான்று
திண்ணியதாக சங்கல்பம் செய்து கொண்டவர்களும் கூட
மறம் தீர்ந்து
மேல் விழுந்து அணையும் படி
பிச்சேற்ற வல்ல நல்ல விரகு அறியுமவன் கண்ணபிரான்

குழகன் வரில் கூடிடு கூடலே
அடியேன் துணியேன் என்றால்போலே தாழ்வுகளும் சொல்லி
ஊடல் தீர்த்து
அவர்கள் உடன் ஒரு நீராகக் கலந்து
அவர்கள் உடைய மன நோயைத் தீர்ப்பது போலே
எனது மன நோயையும் தீர்க்க என்னோடும் ஒரு நாள் வந்து கூட வேண்டாவோ

————————————————————————————————–

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–4-11-

பதவுரை

ஊடல் கூடல்–ஊடலோடே கூடியிருக்கை யென்ன, (அதாவது ப்ரணய ரோஷஸஹிதைகளா யிருக்கை யென்ன)
உணர்தல்–குறைகளை உணர்த்துகை யென்ன
புணர்தல்–(பிறகு) ஸம்ச்லேஷிக்கை யென்ன (இப்படிப் பட்ட காரியங்களிலே)
முன்–அநாதி காலமாக
நீடு நின்ற–நீடித்துப் பொருந்தி நின்ற
நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலை–நிறைந்த புகழையுடைய ஆய்ப் பெண்கள் (இழைத்த) கூடலைப் பற்றி
குழல் கோதை–அழகிய மயிர் முடியை யுடையனான ஆண்டாள்
கூறிய–அருளிச் செய்த
பாடல் பத்தும்–பத்துப் பாட்டுக்களையும்
வல்லார்க்கு –ஓத வல்லவர்களுக்கு
பாவம் இல்லை-(எம்பெருமானைப் பிரிந்து துக்கிக்கும்படியான) பாவம் இல்லையாம்

இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லி முடிக்கிறது இப்பாட்டு.
“ஊடல்கூடல்” என்றது-ஊடலென்ன கூடலென்ன என்று இரண்டாகச் சொல்வதல்ல’
ஊடலோடு கூடுகை யென்றாய் ஊடுகையை மாத்திரம் சொல்லிற்றாகக்கொள்க.
ஊடலாவது ப்ரணய கலஹம்’ ஊடல்கூடலாவது அதை உடைத்தாயிருக்கை’
ப்ரணயரோஷவிசிஷ்டத்வம்.
“போதுமறித்துப் புறமே வந்து நின்றீர், ஏதுக்கிதுவென இதுவென்இது வென்னா?” என்றும்
“என்னுக்கு அவளை விட்டிங்குவந்தாய் இன்ன மங்கே நட நம்பி! நீயே” என்றும்,
“உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென், என்னுடைய பந்துங்கழலும் தந்து போகு நம்பீ!” என்றும்
இப்புடைகளிலே சொல்லி எம்பெருமானைக் கிட்டவர வொட்டாமல் கதவடைத்துத் தள்ளுகை ஊடல் எனப்படும்.

உணர்தல் “உணர்த்தல்” என்று பிறவினையாயிருக்க வேண்டுவது ஓசையின்பம் நோக்கி
‘உணர்தல்’ என்று பிரயோகிக்கப் பட்டிருக்கிறதென்று ஒருபெருங்கல்வியாளர் சொல்லுவர்.
ஸம்ச்லேஷம் பெறாமல் தாங்கள் துடிக்கிறபடியை எம்பெருமானுக்கு நேரிலும் தூதுவர் மூலமாகவும் தெரிவித்தல்.
உணர்தல் என்றதற்கு இங்கு இதுவே பொருள் என்பர்.

இனி, புணர்தலாவது இவர்களுடைய துடிப்பை எம்பெருமான் நன்கு அறிந்து
“உங்களை விட்டால் எனக்கு வேறு புகலுண்டா? என்னை வேறாநினைக்கலாமா? அடியேனல்லேனோ? தாஸனல் லேனோ?”
என்றாற்போலே ஆற்றாமை மீதூரிர்ந்தமை தோற்றப் பலபாசுரங்களைச் சொல்லிக் கொண்டு
சுவரார் கதவின் புறமே வந்து நிற்பது முற்றம் புகுந்து முறுவல் செய்து நிற்பதாய் நெருங்கினவாறே
இவர்களும் பரவசைகளாய் அவனோடு கலந்து பாரிமாறுகை.

ஆக, ப்ரண்ய ரோஷந் தோற்றப் பேசுகையென்ன,
தங்கள் வருத்தம் அவன் திருவுள்ளத்திலே படும்படி உணர்த்துவதென்ன,
பின்பு இஷ்டப்படி ஸம்ச்லேஷிக்கையென்ன ஆகிய
இப்படிப்பட்ட காரியங்களே யாத்திரையாயிருப்பவர்கள் ஆய்ச்சிகள் என்றவாறு.

இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் “உணர்தல் புணர்தலே” என்றவிடத்திற்கு
“இவன்றன் குறைகளை அவர்கள் உணர்த்தும் படியும்
அவன் பின்பு ‘க்ஷாமணம் பண்ணிப் புணரும்” என்ற வாக்கியம் அச்சுப் பிரதிகள் எல்லாவற்றிலுங் காணப்படுகிறது.
இது அநந்வித வாக்யம்’ (அச்சுப்பிழை.) தாளகோசங்களில் சுத்தப்பாடம் காணத்தக்கது.

திருவாய்மொழியில் “உணர்த்தலூட லுணர்ந்து” என்ற பாட்டின் ஈட்டிலே’
போக ப்ரகாரந்தான் மூன்று வகைப்பட்டறாயிற்றிருப்பது’
அவையாவன:- ‘ஊடலுணர்தல் புணர்தலிவை மூன்றும் – காமத்தாற் பெற்றபயன்’ (திருவள்ளுவர் குறள்.)
என்று மூன்றையும் ப்ரயோஜநமாகச் சொன்னார்கள் தமிழா;
’ இதிலே ஊடலாவது – எதிர்த்தலையோடே கூடினால் அஹேதுகமாக விளைவதென்று:
அதுதான் -‘என்னையொழியக் குளித்தாய், என்னையொழியப் பூவைப்பார்த்தாய்,
உன் உடம்பு பூநாறிற்று’ என்றாற்போலே வருமவை.
உணர்த்தலாவது – ‘உனக்கென்று குளித்தேன்’ என்கையும் உனக்கு ஆம்’ என்று பார்த்தேனென்கையும்,
‘உனக்கென்று குளித்தேன்’ என்கையும் உனக்கு ஆம் என்று பார்த்தே னென்கையும்,
‘உன்வரவுக்கு ஒப்பித்தேன்’ என்றாற்போலே சொல்லுமிவை’
இவையிரண்டின் அநந்தரத்தே வருவது கலவி.” என்றருளிச் செய்யப்பட்டிருப்பது நோக்கத்தக்கது.
மேல் உதாஹரிக்கப்பட்ட குறளின் உரையும் காணத்தக்கது.
“ஊடலுணர்தல் புணர்தலிவை காமங் கூடியார் பெற்ற பயன்” என்று குறளின் பாடங் காண்கிறது.
(புணர்ச்சிமகிழ்தல் என்ற அதிகாரத்தில் ஒன்பதாவது குறள் இது.)
உணர்தல் என்பதற்கு -‘தலைமகன் தன்னுடைய தவறில்லாமையைச் சொல்லி
நாயகியினுடைய ஊடலை நீக்குதல் என்று பொருளுரைக்கப் பட்டிருக்கின்றது.

“புணர்தலை” என்ற விடத்துள்ள ஐகாரம் சாரியை. நீடுநின்ற கண்ணபிரானோடே
சில காலம் ப்ரணயகலஹமாய்ப் போதுபோக்குவதும், சிலகாலம் ஸம்ச்லேஷ ரஸமாய்ப் போது போக்குவதுமாகிய
இக் காரியங்களையே அநாதி காலமாய்த் தொழிலாகக் கொண்டவர்கள் ஆய்ச்சிகள் என்க.

நிறை புகழ் ஆய்ச்சியர் – நம்மைப் போலே உண்டியே உடையே உகந்தோடித் திரிந்து பழுதே பல பகலும் போக்காமல்
முச்சந்தியும் பகவத்விஷய சிந்தனையேயாய்ப் போது போக்குகிறார்கள் ஆய்ச்சிகள் என்ற காரணத்தினால்
அவர்கட்குப் புகழ் நிறைந்திருக்குமென்று ஸாமாந்யமாகச் சிலர் அர்த்தம் கொள்ளக்கூடும்.
இவ்விடத்திற்கு எம்பார் ஒரு விஷோர்தம் அருளிச் செய்வராம்’ (அதாவது)
“ஆய்ச்சியர்க்கு நிறைபுகழாவது க்ருஷ்ணனை இன்னாள் நாலுபட்டினி கொண்டாள்
இன்னாள் பத்துப்பட்டினி கொண்டாள் என்னும் புகழ்காணும்” என்பராம்.

இதன் கருத்தென்னென்னில்’ “கூர்மழைபோல் பனிக்கூதலெய்திக் கூசிநடுங்கி யமுனையாற்றில்,
வார்மணற்குன்றில் புலா நின்றேன் வாசுதேவா! உன்வரவுபார்த்தே” இத்யாதிப்படியே
கண்ணபிரானுடைய வரவை எதிர்பார்த்திருப்பவர்கள் பல மாதர்’
இவன் இப்படி பலபேர்களை எதிர்பார்த்திருக்கும்படி செய்துவிட்டுத்
தன் மனத்துக்கியாளான் ஒருத்தியோடே கலந்திருந்து போதுபோக்கும்’
அப்போது, எதிர்பார்த்திருந்த மாதர்கள் “இன்னமென் கையகத்து ஈங்கொருநாள் வருதியேல் என்சினம் தீர்வன்நானே” என்ற படி
“இனி அந்தக் கண்ணபிரான் இங்கேற வருவானாகில் முகங்கொடுத்து ஒரு வார்த்தையும் சொல்லக் கடவோமல்லோம்” என்று
ஸங்கல்பம் செய்து கொண்டு அளவற்ற ரோஷத்துடனிருப்பர்கள், பிறகு தனக்கு ஒழிந்தபோது ஒருநாள்
கண்ணபிரான் அளவிறந்த அன்பு பூண்டவன் போல ஆடிப்பாடிக்கொண்டு அவர்கள் முன்னே வந்துநிற்பன்’
அப்போது அவர்கள் தாங்கள் முன்பு செய்து கொண்ட ஸங்கல்பத்தின்படியே முகங்கொடாமலே யிருப்பார்கள்.
அப்போது இவன் கண்ணீர்விட்டழுவதும் காலில் கும்பிடுவதுமாய் ஊணுமுறக்கமுமில்லாமல் பல நாட்களளவும்
அவர்கள் வீட்டைவிட்டுப் பேராதே இடைசுழித் திண்ணையிலே கிடந்துபடுவன்.
இப்படி நாலுநாள் பட்டினிகிடந்தபிறகு ஒருத்தி மனமிரங்கி முகங்கொடுப்பள்’
மற்றொருத்தி அவ்வளவிலும் மறம்மாறாதே இவன் எட்டுநாள் பட்டினி கிடந்தபின்பு முகங்கொடுப்பள்,
மற்றுமொருத்தி அவ்வளவிலும் ஊடல்தீராதே இவன் பத்துநாள் பட்டினி கிடந்தபின்பு முகங்கொடுப்பள்.
இப்படி பலபலநாள் பட்டினிகிடந்தாகிலும் அவ்வாய்ச்சிகள் பக்கலிலே இவன் முகம்பெற நினைப்பது
அவர்களிடத்துள்ள தேஹகுணம் ஆத்மகுணம் முதலியவற்றாலான வைலக்ஷ்ண்யத்தைப் பற்றியிறே.
இதனால் அவர்களுடைய புகழ்வீறுபெறு மாய்த்து.

“கோதை கூறிய” என்னாதே “குழற் கோதை கூறிய” என்கையாலே
‘இவள் தன் மயிர் முடியாலே அவனைக் கூடலிழைப்பிக்க வலலன்” என்று ரஸோக்தியாக
அருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை.

இப்பத்துப் பாட்டையும் ஓதவல்லவர்களுக்குப் பாவம் இல்லை என்றது பகவத் ஸம்ச்லேஷத்துக்காகக் கூடலிழைத்து
வருந்த வேண்டும்படியான பாவமில்லை யென்றபடி.
இவ்வருளிச் செயலை ஓதவே அநாயாஸமாக பகவத் ஸம்ச்லேஷம் வாய்க்கு மென்று கருத்து.

நிகமத்தில் பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்
ஊடல் கூடல் என்றது
ஊடல் என்ன
கூடல் என்ன
என்று இரண்டாக சொல்லுவது அல்ல
ஊடலோடு கூடுகை என்றாய் ஊடுகையே மாதரம் சொல்லிற்றாய் கொள்க
ஊடல் -ப்ரணய கலஹம்
ஊடல் கூடல் ஆவது -அத்தை உடைத்தாய் இருக்கை –
ப்ரணய ரோஷ விசிஷ்டத்வம்
போது மறித்துப் புறமே வந்து நின்றீர் ஏதுக்கு இது என் இது என் இது என்னோ -என்றும்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னம் அங்கே நட நம்பீ நீயே -என்றும்
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி யது கொண்டு செய்வது என்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ-என்றும்
இப்புடைகளிலே சொல்லி கதவு அடைத்து தள்ளுகை-ஊடல்-

உணர்தல்
உணர்த்தல் -ஓசை இன்பம் நோக்கி உணர்தல் பிரயோகம்
சம்ச்லேஷம் பெறாமல் தாங்கள் துடிக்கிறபடியே
எம்பெருமானுக்கு நேரிலும்
தூது மூலமாகவும் தெரிவித்தல் உணர்தல்

புணர்தல் –
இவர்கள் துடிப்பை நன்கு அறிந்து
எம்பெருமான்
உங்களை விட்டால் எனக்கு வேறு ஒரு புகல் உண்டோ
என்னை வேறாக நினைக்கலாமா
அடியேன் அல்லேனோ
தாசன் அல்லனோ
என்றால் போலே ஆற்றாமை மீதூர்ந்து பல பாசுரங்களைச் சொல்லி கொண்டு
சுவரார் கதவின் புறமே வந்து நிற்பது
முற்றம் புகுந்து முறுவல் செய்து நிற்பதாய்
நெருங்கின வாறே இவர்களும் பரவசைகளாய் அவனோடு கலந்து பரிமாறுகை-

ஆக
பிரணய ரோஷம் தோற்றப் பேசுகை என்ன
தங்கள் வருத்தம் அவன் திரு உள்ளத்தில் படும்படி உணர்த்துவது என்ன
பின்பு இஷ்டப்படி சம்ச்லேஷிக்கை என்ன
ஆகிய இப்படிப் பட்ட கார்யங்களே யாத்ரையாய் இருப்பவர்கள் ஆய்ச்சிகள் –

இப்பாட்டின் பெரிய வாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்
உணர்தல் புணர்தலை -என்ற இடத்துக்கு
இவன் தன் குறைகளை அவன் உணர்த்தும்படியும்
அவன் பின்பு ஷாமணம் பண்ணிப் புணரும் -என்ற வாக்கியம் அச்சுப் பிரதிகளில் காணப் படுகிறது
இது அனந்வித வாக்கியம் -அச்சுப்பிழை
சுத்த பாடம் தாள கோசங்ளிலே காணத் தக்கது
திருவாய்மொழி –6-1-5- உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் அன்னங்காள் -ஈட்டில்
போக பிரகாரம் தான் மூன்று வகைப் பட்டாயிற்று இருப்பது
அவை யாவன
ஊடல் உணர்தல் புணர்தல் இவை மூன்றும் காமத்தால் பெற்ற பயன் -திருக் குறள்
ஊடல் ஆவது -எதிர்த்தலையோடு கூடினால் அஹேதுகமாக விளைவது ஓன்று
அது தான் என்னை ஒளியக் குளித்தாய்
என்னை ஒழிய பூவைப் பார்த்தாய்
உன் உடம்பு பூ நாறிற்று -என்றால் போலே வருமவை
உணர்த்தல் ஆவது
உனக்கு என்று குளித்தேன் யென்கையும்
உனக்கு ஆம் என்று பார்த்தேன் யென்கையும்
உன் வரவுக்கு ஒப்புவித்தேன் -என்றால் போலே சொல்லுமவை
இவை இரண்டின் அனந்தரத்தே வருவது கலவி
என்று அருளிச் செய்யப் பட்டுள்ளது
உணர்தல் -தலைமகன் தன்னுடைய தவறு இல்லாமையைச் சொல்லி
நாயகனுடைய ஊடலை நீக்குதல்-

நீடு நின்ற
கண்ணபிரானோடு சிலகாலம் ப்ரணய கலஹமாய் போது போக்குவதும்
சிலகாலம் சம்ச்லேஷ ரசமாய் போது போக்குவதும்
ஆகிய இக்காரியங்களையே
அநாதி காலமாய் தொழிலாகக் கொண்டவர்கள் –

நிறை புகழ் ஆய்ச்சியர்
நம்மைப் போலே உண்டியே உடையே உகந்தோடித் திரிந்து
பழுதே பலகாலம் போக்காமல்
முச்சந்தியும் பகவத் விஷய சிந்தனையாய் -இது சாமான்ய அர்த்தம்
எம்பார் -விசேஷ அர்த்தம் அருளிச் செய்வாராம்
ஆய்ச்சியருக்கு நிறை புகழாவது
கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்
இன்னாள் பத்து பட்டினி கொண்டாள் -என்னும் புகல் காணும் -என்பாராம்
இதன் கருத்து எது என்னில்
கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக் கூசி நடுங்கி யமுனை யாற்றில்
வார் மணல் குன்றில் புலர நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே -இத்யாதிப் படியே
கண்ணபிரான் உடைய வரவை எதிர் பார்த்து இருப்பவர்கள் பல மாதர்
இவன் தன் மனத்துக்கு இனியாள் உடன் பொழுது போக்கும்
அப்பொழுது எதிர் பார்த்து இருந்த மாதர்கள் –
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே -என்றபடி
இனி வருவான் ஆகில் முகம் கொடுத்து ஒரு வார்த்தையும்
சொல்லக் கடவோம் அல்லோம் -என்று சங்கல்பம் செய்து கொண்டு
அளவற்ற ரோஷத்துடன் இருப்பார்கள்
பிறகு தனக்கு ஒழிந்த போது
அன்பு பூண்டவன் போலே ஆடிப் பாடிக் கொண்டு அவர்கள் முன்னே வந்து நிற்பன்
சங்கல்பத்தின் படியே முகம் கொடாது இருப்பார்கள்
இவன் கண்ணநீர் விட்டு அழுவதும்
காலில் விழுவதும்
ஊண் உறக்கம் இல்லாமல் பல நாள்கள் வீட்டை விட்டு பேராதே
இடைகழித் திண்ணையிலேயே கிடந்தது படுவன்
இப்படி நாலு நாள் பட்டினி கிடந்த வாறே ஒருத்தி மனம் இரங்கி முகம் கொடுப்பாள்
மற்று ஒருத்து அவ்வளவிலும் மனம் மாறாதே எட்டு நாள் பட்டினி கிடந்த பின்பு முகம் கொடுப்பாள்
இப்படி பல பல நாள் பட்டினி கிடந்தாலும்
அவ வாய்ச்சிகள் பக்கலிலே இவன் முகம் பெற நினைப்பது
அவர்கள் உடைய தேக குணம் ஆத்மகுணம் முதலிய
வை லஷண்யம் பற்றியே —

கோதை கூறிய என்னாதே
குழல் கோதை கூறிய -என்கையாலே
இவள் தன் மயிர் முடியாலே
அவனைக் கூடல் இழைப்பிக்க வல்லவள் –

பத்துப் பாட்டையும் ஓத வல்லவர்களுக்கு பாவம் இல்லை -என்றது
பகவத் சம்ச்லேஷத்துக்காக
கூடல் இழைத்து வருந்த வேண்டும்படியான
பாவம் இல்லை -என்றபடி
இந்த அருளிச் செயலை ஓதவே
அநாயாசாமாக பகவத் சம்ச்லேஷம் வாய்க்கும்-

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர்  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading