பிரவேசம் –
கீழ்த் திருமொழியில் மண நீர் மஞ்சனமாட்டும் அளவும்
கனாக் கண்டதாகச் சொல்லப் பட்டு இருந்தாலும்
அதுக்கு அடுத்தபடியாக சம்ச்லேஷமும்
ஸ்வப்ன அனுபவகமாகத் தானே நடந்து ஏறியதாகக் கொள்ள வேணும்
அவ்வனுபவத்திலே கண்ணபிரான் உடைய திருவவதரத்தின் அமுதத்தைப் பருகப் பெற்ற ஆண்டாள்
கண் விழித்துக் கொண்டவாறே
அந்தோ இத்தகைய அனுபவம் கனவாகக் கழிந்ததே
மெய்யே அனுபவிக்கப் பெற்றதாக நினைத்துக் களித்து இருந்தேனே
தெய்வம் இப்படியா நம்மை வஞ்சித்தது
என வருந்தினாள் –
கண் உறக்கம் கொள்ளாமல்
போது போக்க உபாயமும் தோன்றாமல்
சிறிது நாழிகை அலை பாய்ந்தாள்
அவளவில் கண்ணபிரான் உடைய திருவாய் அமுதத்தை
நம்மைப் போல் அன்றியே
நித்ய அனுபவம் பண்ணப் பெற்றவர்கள் யாரேனும் உண்டா
அன்றி அவன் நம்மை வஞ்சித்தது போலே எல்லாரையும் வஞ்சிப்பவன் தானா –
என்று சிந்திக்கத் தொடங்கினாள்-
அப்போது இடது திருக் கையிலே நித்ய வாசம் செய்கிற
திருச் சங்கு ஆழ்வான்
அத திரு வாய் அமுதத்தை இடைவிடாது அனுபவிக்கும் பாக்யத்தை யுடையவன் என்று உணர்ந்தாள்-
ஹா ஹா அவனுடைய பாக்கியம் என்ன பாக்கியம் என்று கொண்டாடி
ஒரு பக்கத்தில் பிரீதி பிரகர்ஷமும்
மற்றொரு பக்கலிலே அஸூ யாதிசயமுமாய்
அப் பாஞ்ச ஜன்யத்தையே நெஞ்சிலே இடைவிடாதே அனுசந்தித்தாள்
அந்த பாவன பிரகர்ஷமானது
அத திரு சங்கு ஆழ்வானை கண் முன்னே தோற்றுவிக்க
ஆண்டாள் அவனை முன்னிலையாக விளித்து
ஒ பாஞ்ச ஜன்யமே கண்ணபிரானது திருப்பவளத்தின்
இன்னமுதத்தை நீ இடைவிடாது அனுபவியா நின்றாயே
அத்திருவாயின் பரிமளமும்
அவ்வமுதத்தின் ரசமும்
எப்படி இரா நின்றது -சிறிது சொல்லாய் –
காதினில் ஆவது கேட்டு மகிழ்கிறேன் -என வினவுவதும்
அச் சங்கு ஆழ்வான் உடைய பாக்ய விசேஷத்தை கொண்டாடி சொல்லுவதுமாக
செல்லுகிறது இத் திருமொழி –
பெருமாளைக் காட்டிலும் ஆண்டாள் உடைய பாக்கியம் வீறு பெற்றது என்ன வேணும்
ஏன் எனில்
பெருமாள் பிராட்டியைப் பிரிந்து நொந்து இருந்த காலத்தில்
அப் பிராட்டியைக் கண்டு வந்த ஒரு குரங்கை பார்த்து
கதம் உரூ கதம் பாஹூ-என்று அவள் உடைய துடை அழகு எப்படி இருக்கிறது
தோள் அழகு எப்படி இருக்கிறது
சொல்லிக் காண் -என்று வினவப் பெற்றார் –
இவ் வாண்டாள் அப்படி தோற்றிற்று ஒரு குரங்கைப் பார்த்து
வினவ வேண்டாதே
எம்பெருமானது திருக் கையை ஒரு நொடிப் பொழுதும் விட்டு நீங்காத
நித்ய அனுபவம் பண்ணும் பாக்கியம் உடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானை நோக்கி
கேட்கப் பெற்றது சிறந்த பாக்கியம் இறே
உசாத் துணைக்கும் உரியார் கிடைப்பது அரிது அன்றோ –
————————————————————————————————
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே –7-1-
பதவுரை
ஆழி வெண் சங்கே–கம்பீரமாய் வெளுத்திரா நின்ற ஸ்ரீபாஞ்ச ஜந்யாழ்வானே!
மருப்பு ஓசித்த மாதவன் தன்–(குவயாபீட யானையன்) கொம்பை முறித்த கண்ண பிரானுடைய
வாய்–திரு அதரத்தினுடைய
சுவையும்–ரஸத்தையும்
நாற்றமும்–பரிமளத்தையும்
விரும்புற்று–ஆசையோடே
கேட்கின்றேன்–(உன்னைக்) கேட்கிறேன்.
திருப் பவளச் செவ்வாய் தான்–(அப்பெருமானுடைய) அழகிய பவளம் போன்ற சிவந்த திருவதரமானது
கருப்பூரம்–பச்சைக் கற்பூரம் போல்
நாறுமோ?–பரிமளிக்குமோ? (அல்லது)
கமலப் பூ–தாமரைப் பூப் போலே
நாறுமோ?–பரிமளிக்குமோ?
தித்தித்திருக்குமோ–மதுரமான ரஸத்தை உடைத்தாயிருக்குமோ?
சொல்–இன்னபடி யிருக்குமென்று எனக்குச் சொல்
கம்பீரமான ஹ்ருதயத்தையும் பரம சுத்த ஸ்வபாவத்தை யுமுடைய சங்கே! உன்னை ஆசையோடு ஒருவிஷயம் கேட்கிறேன்,
சொல்லவேணும்; உனக்குத் தெரியாத அம்ஸத்தைப் பற்றி நான் கேட்கப் போகிறதாக நினைக்க வேண்டா,
கண்ண பிரானது திருவதரத்தில் ஊறுகின்ற அமுதத்தின் ரஸபரிமங்களைக் குறித்துக் கேட்கிறேனித்தனையல்லது வேறிலை;
அவ்வமுதமானது பரிமளத்திலே பச்சைக் கருட்பூரத்தை ஒத்திருக்குமோ, அல்லது தாமரைப்பூவை ஒத்திருக்குமோ?
ரஸத்தில் த்ருஷ்டாந்தமாக எடுத்துக் குறிப்பிடக்கூடிய வஸ்து யாதென்றும் எனக்கு ஸ்புரிக்கவில்லை;
விலக்ஷணமான தித்திப்பை உடையதாயிருக்குமோ? எனக்குத் தெரியச் சொல்லவேணும் என்கிறாள்.
“கருப்பூரம் நாறுமோ“, “கமலப்பூநாறுமோ“ என்ற இரண்டிடத்திலும் உபமவுருபு தொக்கிக்கிடக்கிறது;
கரும்பூரம்போல் நாறுமோ கமலப்பூப்போல் நாறுமோ என விரிக்க.
சுவையும் நாற்றமும் – வாயினுடைய பரிமளத்தையும் வாயமுதத்தினுடைய ரஸத்தையும் என்க.
ஆழிவெண்சங்கே = ஆழி என்று கடலுக்கும் பேராதலால், கடலில் நின்று தோன்றிய வெண்சங்கே! என்றுரைத்தலுமாம்.
(“வெண்சங்கே!.) கைவிடாதே அநுபவியாநிற்கச் செய்தேயும் உடம்பு வெளுக்கும்படியிறே இவனுடைய ஆற்றாமை“ என்ற
வியாக்யான ஸ்ரீஸூக்தியின் அழகு காண்மின்,
சங்குக்கு வெண்மை இயற்கைக் குணமன்று போலும்,
ஆழி வெண் சங்கே
கம்பீரமான ஹிருதயத்தையும்
பரம சுத்த ஸ்வபாவத்தையும் உடைய சங்கே
உன்னை
ஆழி வெண் சங்கே
ஆழி -என்று கடலுக்கு பேராய்
கடலில் தோன்றிய சங்கே -என்றுமாம்
வெண் சங்கே –
கை விடாதே அனுபவியா நிற்கச் செய்தேயும்
உடம்பு வெளுக்கும் படி இ றே
இவனுடைய ஆற்றாமை
சங்குக்கு வெண்மை இயற்க்கை குணம் அன்று போலும் –
விருப்புற்று கேட்கின்றேன்
ஆசையோடு ஒரு விஷயம் கேட்கிறேன்
சொல்-
சொல்ல வேணும்
உனக்குத் தெரியாத அம்சத்தைப் பற்றி நான் கேட்பதாக நினைக்க வேண்டா
மருப்பொசித்த மாதவன்-கண்ண பிரான் உடைய திரு அதரத்தில் ஊருகின்ற
அமுதத்தின் ரச பரிமளங்களைக் குறித்து கேட்கிறேன்
அத்தனை அல்லது வேறு இல்லை
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ-
அவ்வமுதமானது பரிமளத்தில் பச்சைக் கற்பூரத்தை ஒத்து இருக்குமோ
அல்லது தாமரையை ஒத்து இருக்குமோ
ரசத்தில் திருஷ்டாந்தமாக எடுத்துக் குறிப்பிடக் கூடிய வஸ்து யாதொன்றும் எனக்கு ஸ்புரிக்க வில்லை
வி லஷணமான தித்திப்பை யுடைத்தாய் இருக்குமோ
எனக்குத் தெரியச் சொல்ல வேணும் -என்கிறாள்
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ இரண்டு இடத்திலும்
உவம உருபு தொங்கிக் கிடக்கிறது
கற்பூரம் போலே நாறுமோ
கமலப் பூ போலே நாறுமோ -என்றபடி –
சுவையும் நாற்றமும்-
வாயினுடைய பரிமளத்தையும்
வாய் அமுதத்தின் உடைய ரசத்தையும்-
————————————————————————————————
கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன்
உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே – –7-2-
பதவுரை
நல் சங்கே–அழகிய சங்கே!
கடலில்–ஸமுத்திரத்திலே
பிறந்து–பிறந்து (அங்கு நின்றும்)
பஞ்சசனன் உடலில் போய் வளர்ந்து–பஞசஜனனென்ற அஸுரனுடைய சரீரத்திற் போய் வளர்ந்து,
கருதாது–(இப்படி பிறந்த விடத்தையும் வளர்ந்த விடத்தையும்) நினையாமல்
ஊழியான்–எம்பெருமானுடைய
கை தலம் திடரில்–கைத்தமாகிற உந்நத ஸ்தானத்திலே
குடி ஏறி–குடி புகுந்து
தீய அசுரர்–கொடியவர்களான அசுரர்கள்
நடலைப் பட–துன்பப்படும்படி
முழங்கும் தோற்றத்தாய்–ஒலி செய்யும்படியான மேன்மை யுடையையா யிரா நின்றாய். (உன்பெருமையே பெருமை)
சங்கே! நீ பிறந்ததெங்கே? போய்வளர்ந்ததெங்கே?, உப்புக்கடலிலே பிறந்து அசுரனுடைய உடலுக்குள்ளே போய் வளர்ந்தாய்,
இப்படி மட்டமான குலத்திலே பிறந்து வளர்ந்தவுனக்கு எம்பெருமானுடைய திருக்கைத் தலத்திலே நித்யவாஸம் பண்ணப்பெறுதலும்,
அவனுடைய திருவாயிலேயிருந்து கொண்டு அஸுரராக்ஷஸாதிகள் குடல் குழம்பும்படி கோஷம் செய்யப் பெறுதலும்
வாய்ந்தது என்ன பாக்கியம்!, உன் வைலக்ஷண்யத்தை என் சொல்வேன்? என்கிறாள்.
கருதாது என்ற எதிர்மறை வினையெச்சம், குடியேறி என்றதில் அந்வயித்து,
பிறந்த விடத்தையும் வளர்ந்த விடத்தையும் சிறிதும் ஸ்மரியாமல் அடியோடு மறந்து எப்போதும்
எம்பெருமானது திருக்கைத் தலத்திலேயே குடிவாழ்ந்து என்று பொருள் தரும்.
இனி, “கருதாது பஞ்சசன னுடலில் வளர்ந்து“ என உள்ளபடியே அந்வயித்தலுமாம்.
பஞசசன்னுடைய அஸுரத்தன்மையை (எம்பெருமானிடத்துப் பகைமை பூண்டவன் என்னுமிடத்தை) ப்பாராமல்
அவனது உடலில் வளர்ந்து என்றபடி. ஊழியான் – என்றும் அழிவின்றி நெடுங்காலம் வாழ்பவன்,
யுகம் முடிந்த காலத்தும் தான்நின்று அனைவரையும் நோக்குமவன்,
காலத்துக்கு நிர்வாஹன் – எனப் பலபொருள்களுண்டு, எம்பெருமானுக்கு வாசகம்.
“கைத்தலத்திடர்“ – திடர் – உயர்ந்த ஸ்தானம்.
நடலைப்படுதல் – துன்பமடைதலும் நடுக்கமடைதலும்,
“ஸகோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநிவ்யதாரயத்“ என்ற கீதை இங்கு நினைக்கத்தக்கது தோற்றம் – மேன்மை.
“முழங்குந்தோற்றத்தவனான நற்சங்கே! மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விரும்புற்றுக் கேட்கிறேன் சொல்“ என்று கீழ்ப்பாட்டோடே கூட்டி அந்வயித்தலுமாம்.
ஓரிடத்திற் பிறந்து ஓரிடத்தில் வளர்ந்து ஓரிடத்திற் குடியேறினதாகச் சொல்லப்பட்டுள்ள இவ்விடத்தில்
கண்ணபிரானுடைய நிலைமை நினைவுக்கு வரும். சங்கு கடலிற் பிறந்ததுபோல அவன் யதுகுலத்துப் பிறந்தான்,
சங்கு அரசனுடைய உடலில் வளர்ந்ததுபோல அவன் அசுரத்தன்மை பூண்டவனான் கம்ஸனுக்குள்ளாய்
இறையிறுத்திருக்கிற திருவாய்பாடியிலே வளர்ந்தான்,
சங்கு கைத்தலத்திடரிற் குடியேறியதுபோல அவன் காலயவந ஜராஸ்ந்தாதி களுக்காப்போய்
ஸ்ரீவத்வாரகையைப் படைவீடாகச் செய்து அங்கே குடியேறினான்.
சங்கு தீயவசுரரை நடலைப் படுத்துவது போல அவன் துர்யோதனாதிகளை மண்ணுண்ணும்படி செய்தான்.
இப்படிகளாலே திருச்சங்கானது எம்பெருமானோடு பரம ஸாம்யம் பெற்றிருக்கின்றதென்பதும் ஆண்டாளது கொண்டாட்டத்தில் உள்ளுரை.
நற் சங்கே – –
சங்கே
கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன் உடலில் வளர்ந்து
நீ பிறந்தது எங்கே
போய் வளர்ந்தது எங்கே
உப்புக் கடலிலே பிறந்து
அசுரனுடைய உடலுக்கு உள்ளே போய் வளர்ந்தாய் –
இப்படி மட்டமான குலத்திலே பிறந்து
வளர்ந்த யுனக்கு –
போய் ஊழியான் கைத்தலத் திடரில் குடியேறித் –
எம்பெருமான் உடைய திருக் கைத் தலத்திலே
நித்ய வாசம் பண்ணப் பெறுதலும்
திடர் -உச்ச ஸ்தானம் –
ஊழியான் –
என்றும் அழிவின்றி நெடும் காலம் வாழ்பவன்
யுகம் முடிந்த காலத்தும் தான் நின்று அனைத்தையும் நோக்குபவன்
காலத்துக்கு நிர்வாஹகன்
கருதாது -என்ற எதிர் மறை வினை எச்சம்
குடியேறி என்ற இடத்தில் அந்வயித்து
பிறந்த இடத்தையும்
வளர்ந்த இடத்தையும் சிறிதும் ஸ்மரியாமல் அடியோடு மறந்து
எப்போதும் எம்பெருமான் உடைய திருக் கைத்தலதிலேயே
குடி வாழ்ந்து
அன்றிக்கே
கருதாது பஞ்ச சன்யன் உடலிலே வளர்ந்து -என்று
பஞ்ச சந்யனுடைய அசூரத் தன்மையை பாராமல்
அவன் உடலில் வளர்ந்தபடி -என்றுமாம்
தீய வசுரர் நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய்
அவனுடைய திரு வாயிலே இருந்து கொண்டு
அசூர ராஷசாதிகள் குடல் குழம்பும் படி கோஷம் செய்யப் பெறுதலும் –
நடலைப் படுத்தல் –
துன்பம் அடைதலும் நடுக்கம் அடைதலும்
சகோஷா த்ருஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -ஸ்ரீ கீதை
வாய்த்தது என்ன பாக்கியம்
உன் வை லஷண்யத்தை என் சொல்வேன்
தோற்றம் -மேனகை
முழங்கு தோற்றத்தவனான நற் சங்கே
மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்
என்று கீழ்ப் பாட்டாடு அந்வயம்
ஓர் இடத்தில் பிறந்து
ஓர் இடத்தில் வளர்ந்து -இங்கு கண்ணபிரான் நிலைமையும் நினைவுக்கு வரும்
சங்கு கடலில் பிறந்தது போலே அவன் யது குலத்துக்குப் பிறந்தான்
சங்கு அசுரனின் உள்ளத்தில் வளர்ந்தது போலே
அவனும் அசுரத் தன்மை பூண்ட கம்சனுக்கு இறை இறுத்து இருக்கிற
திருவாய்ப்பாடியிலே வளர்ந்தான்
சங்கு கைத்தலத்தில் குடியேறினது போலே
அவன் காலயவன ஜராசந்தாதிகளுக்காக போய்
ஸ்ரீ த்வாரகையைப் படைவீடாகச் செய்து அங்கெ குடியேறினான்
சங்கு தீய அசுரரை நடலைப் படுத்துவது போலே அவனும் துரியோத நாதிகளை மண் உண்ணும்படி செய்தான்
இப்படிகளால் எம்பெருமான் உடன் ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வான்
பரம சாம்யம் பெற்று இருக்கின்றது என்பதும் ஆண்டாள் கொண்டாட்டத்தில் உள்ளுறை-
——————————————————————————————————-
தட வரையின் மீத சரற் கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தால் போலே நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெரும் சங்கே —7-3-
பதவுரை
கோலம் பெரு சங்கே–அழகிய பெரிய சங்கே!
சாற்காலம் சந்திரன்–சரத் கால சந்திரன்
உவா இடையில்–பௌர்ணமியினன்று
தட வரையின் மீது வந்து எழுந்தால் போல–பெரிய உதய கிரியிலே வந்து உதித்தாற்போல
நீயும்–நீயும்
வடமதுரையார் மன்னன் வாசு தேவன் கையில்–வடமதுரையிலுள்ளார்க்கு அரசானான கண்ண பிரானுடையத் திருக் கையில்
குடி ஏறி–குடி புகுந்து
வீற்றிருந்தாய்–உன் மேன்மையெல்லாம் தோற்ற இரா நின்றாய்
சரத் காலத்தில் எல்லாக் கலைகளும் நிரம்பின பூரண சந்திரன் உதய கிரியின் மேல் வந்து தோற்றினாற்போலே,
ஸ்ரீபாஞ்சஜந்யமே! நீயும் கண்ணபிரானது, திருக்கையின் மேலே அழகாக வீற்றிருந்து தோற்றா நின்றாய்,
உனது பெருமையே பெருமையென்று கொண்டாடுகிறாள்.
எம்பெருமானுடைய திருக்கை தடவரையாகவும், திருச்சங்காழ்வான் சரத்கால சந்திர மண்டலமாகவும்
உருவகப் படுத்தப்பட்டிருக்கின்றமை அறிக.
உவா என்று – அமாவாஸ்யைக்கும் பௌர்ணமிக்கும் பெயர், இங்கு பௌர்ணமி விவக்ஷிதம்,
இடை உவாவில் – உவாவிடையில் – பௌர்ணமியிலே என்கை.
இனி, உவர் என்று கடலுக்கும் பெயருண்டாதலால்,
‘கடலிலையில் நின்றும் தடவரையின்மீது எழுந்தாற்போல‘ என்றுமுரைக்கலாமாயினும் சுவை குன்றும்.
சரற்கால சந்திரன் – வடசொல்தொடர்.
வாசுதேவன் என்றது – வஸுதேவருடைய புத்திரன் என்றும் எங்கும் நிறைந்துறையுங் கடவுள் என்றும் பொருள்படும்.
தட வரையின் மீத சரற் கால சந்திரன் -இடை உவாவில் வந்து எழுந்தால் போலே
சரத் காலத்தில் எல்லா கலைகளும் நிரம்பின பூர்ண சந்தரன்
உதய கிரியின் மேல் வந்து
தோற்றினால் போலே
இடை உவா -உவா இடையில் பௌர்னமி அன்று
உவா என்று அம்மாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பெயர்
உவா -என்று கடலுக்கும் பெயர்
கடல் இடையில் நின்றும் தட வரையின் மீது எழுந்தால் போல் –என்றும் சொல்லலாம் -ஆனால் இந்த அர்த்தம் சுவை குன்றும்
நீயும் வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்று இருந்தாய் –
நீயும் கண்ணபிரானது திருக் கையின் மேலே
அழகாக வீற்று இருந்து தோற்றா நின்றாய் –
உனது பெருமையே பெருமை –
வாசுதேவன் –
வாசு தேவன் புத்திரன்
எங்கும் நிறைந்து உறைபவன்
கோலப் பெரும் சங்கே
அழகிய ஸ்ரீ பாஞ்ச ஜன்யமே
எம்பெருமான் உடைய திருக் கையை -தடவரையாகவும்
திருச் சக்கரத் தாழ்வான் -சரத் கால சந்தரன் ஆகவும்
உருவகப் படுத்தி அருளிச் செய்கிறாள் –
———————————————————————————————–
சந்தர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஓன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம் புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே–7-4-
பதவுரை
வலம்புரியே!–வலம்புரிச் சங்கே!
தமோதரன் கையில்–கண்ண பிரானது திருக்கையில்
சந்திர மண்டலம் போல்–சந்திர மண்டலம் போலே
அந்தரம் ஒன்று இன்றி ஏறி–இடைவிடாது இருந்து கொண்டு
அவன் செவியில்–அவனுடைய காதில்
மந்திரம் கொள்வாய் போலும்–ஏதோ ரஹஸ்யம் பேசுகிறாய் போலிரா நின்றாய்,
இந்திரனும்–(செல்வத்தில் மிக்கவனாகப் புகழ் பெற்ற) இந்திரனும்
செல்வத்துக்கு-ஐச்வர்ய விஷயத்தில்
உன்னோடு ஏலான்–உனக்கு இணையாக மாட்டான்
கண்ண பிரானுடைய திருக் கையிலே சந்திரமண்டலம் போலே விளங்கா நின்று கொண்டு ஒரு நொடிப் பொழுதும்
அத்திருக் கையை விட்டுப் பிரியாமல் அங்கே யிருந்து கொண்டு அவனுடைய திருச்செவியோடே அணைந்தாற்போலிருப்பதனால்
அவனது திருக் காதில் ஏதோ ரஹஸ்யம் ஓதுவான் போலே யிரா நின்றாய், சிறந்த செல்வம் பெற்றவனாகப் புகழப் படுகின்ற
இந்திரனுக்கும் உன்னளவு செல்வமில்லாமையாலே நீ ஒப்பற்ற ஐச்வர்யம் அடைந்தவனாயிரா நின்றாய் என்கிறாள்.
“அவன் செவியில் மந்திரன் கொள்வாயேபோலும்“ என்றவிடத்து வியாக்கியான் ஸ்ரீஸூக்தி –
“உம்மைப்பிரிந்து ஆற்றமாட்டாதார் பலருமுண்டு என்று திருச்செவியிலே சொல்லுகிறாய் போலிருக்கிறது
அவன் செவியிலே ரஹஸ்யத் திருச்செவியிலே சொல்லுவான் போல விருக்கை. கொள்கை – கொடுக்கை“ – என்று.
இந்திரனும் என்ற உம்மையால், இந்திரன் செல்வத்தல் சிறந்தவனென்று விளங்கும்,
அவனினும் விஞ்சிய செல்வமுடையார் பலரிருக்க க்ஷுத்ரனான அவ்விந்திரனை உம்மை கொடுத்தெடுத்தது எங்ஙனேயெனில்,
இதற்குப் பெரியவாச்சான்பிள்ளை இரண்டு வகையாக அருளிச் செய்வர்,
இந்திரன் தான் நினைத்தபோது மழை பெய்வித்தும் அல்லாதபோது தவிர்ந்தும்போருகையாலே ஐச்வர்யமுள்ளது
அவ்விந்திரனுக்கே என்றிருப்பர்கள் இடையருமிடைச்சிகளும்,
ஆனது பற்றியே யன்றோ அவர்கள் அவ்விந்திரனுக்கே ஆராதனை செய்துவந்தார்கள்.
இப்போது ஆண்டாள் இடைப்பெண் ஸமாதியில் இருக்கின்றாளாதலால்
அவ்விடைப் பெண்களின் கருத்தின்படி அருளிச்செய்கிறாள் என்பது முதல் ஸமாதாநம்.
இரண்டாவது ஸமாதாநம், – இங்கு இந்திரன் என்றது ஸாக்ஷாத் பரமாத்மாவையே சொல்லிறிறாகவுமாம்,
வேத வேதாந்ததாத்பரியங்களை நிஷ்கல்மஷமாகத் தேர்ந்துணர்ந்துள்ள பெரியாழ்வாரது திருமகளாதலால்,
இந்த்ராதி ஸப்தங்கள் பரமாத்ம வாசகங்களென்று வேதாந்த சாஸ்த்ர ஸித்தாந்மாகையாலே அதனையடியொற்றிக் கூடினபடி.
ஸ்ரீபாஷ்யத்தில் முதல் அத்யாயத்தின் முதற்பாதத்தின் முடிவு அதிகரணமாகிய இந்த்ரப்ராணாகிகரணத்தில்
இவ் விஷயம் விசதமாகக் காணத் தகும். பரமாத்மாவும் உன்னோடு செல்வத்துக்கு எலான் என்றது –
அவனுடைய ஸ்வாதந்திரியச் செல்வமானது உன்னுடைய பாரதந்திரியச் செல்வத்திற்குத் தோற்றுப் போய்விடுமென்கை.
பாரதந்திரியத்தின் எல்லை நிலத்தில் நிற்பவர்களை யன்றோ லக்ஷ்மீ ஸம்பந்நராகச் சொல்லிப்போருவது.
“அரசமர்ந்தானடி சூடுமாசை யல்லால் அரசாக வெண்ணேன் மற்றரசு தானே
சந்தர மண்டலம் போல் தாமோதரன் கையில்
கண்ணபிரான் உடைய திருக்கையிலே
சந்திர மண்டலம் போலே விளங்கா நின்று கொண்டு –
அந்தரம் ஓன்று இன்றி ஏறி-
ஒரு நொடிப் பொழுதும் அத திருக் கையை விட்டுப் பிரியாமல்
அங்கேயே இருந்து கொண்டு –
அவன் செவியில் மந்திரம் கொள்வாயே போலும் –
அவன் உடைய திருச் செவியோடு அணைந்தால் போல்
இருப்பதானால்
அபனது திருக் காதில் ஏதோ ரஹச்யம் ஒதுவான் போலே இரா நின்றாய் –
உம்மைப் பிரிந்து ஆற்ற மாற்றார் பலர் உண்டு என்று
திருச் செவியிலே ரஹச்யம் சொல்லுவான் போல் இருக்கிறாய்
கொள்கை -கொடுக்கை -என்று
வலம் புரியே இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே-
சிறந்த செல்வம் பெற்றவனாய்
வஞ்சப் புகழப் படுகின்ற இந்த்ரனுக்கும்
உன்னளவு செல்வம் இல்லாமையினாலே
நீ ஒப்பற்ற ஐஸ்வர்யம் அடைந்தவனாய் இரா நின்றாய் –
இந்த்ரனும் -உம்மை -இந்த்ரன் செல்வத்தினில் சிறந்தவன்
அவனிலும் விஞ்சிய செல்வம் யுடையார் பலர் இருக்க
ஷூத்ரனான இந்த்ரனை உம்மை தொகை கொடுத்து எடுத்தது எங்கனே என்னில் –
இந்த்ரன் தான் நினைத்த போது மழை பெய்வித்தும்
அல்லாத போது தவிர்ந்தும் போருகையாலே ஐஸ்வர்யம் உள்ளது
அவனுக்கே என்று இருப்பார்கள் இடையரும் இடைச்சிகளும்
ஆனது பற்றி அன்றோ இந்த்ரனுக்கே அவர்கள் ஆராதனை
செய்து வந்தார்கள்
ஆண்டாள் ஆய்ச்சி பாவத்தில் அருளிச் செய்வதால் -இந்த்ரனும் -என்கிறாள்
மேலும்
இந்த்ரன் சாஷாத் பரமாத்மாவையே சொல்லிற்றாகவுமாம்
வேத வேதாந்த தாத்பர்யங்களை
நிஷ் கல்மஷமாக தேர்ந்து உணர்ந்து உள்ள பெரியாழ்வார் திரு மகளார் ஆதலால்
இந்த்ராதி சப்தங்கள் பரமாத்மா வாசகங்கள் என்று வேதாந்த சாஸ்திர சித்தம் ஆகையாலே
அதனை அடி ஒற்றிக் கூறின படி
ஸ்ரீ பாஷ்யம் முதல் அத்யாயம் முதல் பாதம் முடிவு அதிகரணம் இந்திர ப்ராணாதிகரணத்தில்
இவ்விஷயம் விசதமாக அருளிச் செய்து இருக்கிறது இ றே
பரமாத்மாவும் உன்னோடு செல்வத்துக்கு ஏலான் -என்றது
அவனுடைய ஸ்வா தந்திர செல்வமானது
உன்னுடிய பார தந்த்ர்ய செல்வத்துக்கு தோற்றுப் போய் விடும் என்கை-
பாரதந்த்ர்யத்தின் எல்லை நிலத்திலே நிற்பவர்களை அன்றோ லஷ்மீ சம்பன்னராகச் சொல்லிப் போந்தது
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்றரசு தானே-
—————————————————————————————————
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே—7-5-
பதவுரை
பாஞ்சசன்னியமே!–சங்கே!
ஒரு கடலில்–ஒரே கடலில்
உன்னோடு உடனே–உன்னோடு கூடவே
வாழ்வாரை–வாழப் பிறந்தவர்களான மற்றும் பலரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்–ஒரு பதார்த்தமாகவும் மதிப்பாரில்லை காண்,
(நீ ஒருவன் மாத்திரம்)
மன் ஆகி நின்ற–ஸர்வ ஸ்வாமியா யிரா நின்ற
மதுசூதன்–கண்ணபிரானுடைய
வாய் அமுதம்–திருவாயினமுதத்தை
பல் நாளும்–பல காலமாக
உண்கின்றாய்–பருகா நின்றாய்.
(ஆகையால் நீயே பாக்யசாலி)
ஓ பாஞ்சசன்னியமே! நீ பிறந்தவிடத்தில் உன்னைப் போலப் பிறந்தவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்களன்றே,
அவர்களை யாராவது நெஞ்சிலும் நினைப்பாருண்டா? அவர்களுடைய ஸ்வரூபம் இப்படிப்பட்டது,
ஸ்வபாவம் இப்படிப் பட்டதென்று யாராவது அறிய விரும்பினாருண்டா? இல்லை, அப்படியிருக்க,
உனக்கொருத்தனுக்கு மாத்திரம் வந்த வாழ்ச்சி என்னே!,
கண்ணபிரானுடைய திருவாயிலமுதத்தை அல்லும் பகலும் அருந்துகின்றாயே!
உன்னுடைய பாக்கியமே பாக்கியம் என்று கொண்டாடுகின்றாள்.
இன்னார் இனையார் – இன்ன உருவத்தை யுடையவர்கள், இன்ன இயற்கையையுடையவர்கள்.
“இன்னாரினியாரென்று“ என்ற பாடமும் ஒருவாறு என்று பொருளாய்,
உன்னோடுடனே ஒருகடலில் வாழ்வாருடை நன்மைதீமைகளைப்பற்றிச் சிந்திப்பாராருமில்லை என்று கருத்தாகலாம்.
பாஞ்சசன்னியமே! – நான் பெரியாழ்வார்பாடே வளர்ந்தும் பயனற்றிராநின்றேன்,
நீ பஞ்சஜநாஸுரன்பாடே வளர்ந்தும் ஒப்பற்ற பயன்பெற்றிராநின்றாய்,
பிறப்பிலும் வளர்பிலும் என்ன இருக்கிறது? அத்ருஷ்டம் செவ்வனேயிருத்தல் வேண்டும்,
அஃது உனக்கு நன்கு அமைந்ததுகாண் – என்கிறாள் போலும்.
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை -இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண் –
நீ பிறந்த இடத்திலே
உன்னைப் போலே பிறந்தவர்கள்
எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள் அன்றோ
அவர்களை யாராவது நெஞ்சாலும் நினைப்பார் உண்டோ –
அவர்கள் உடைய ஸ்வரூபம் இப்படிப் பட்டது
ஸ்வ பாவம் இப்படிப் பட்டது என்று
யாராவது அறிய விரும்பினார் உண்டோ -இல்லை
அப்படி இருக்க
உனக்கு ஒருத்தனுக்கும் வந்த வாழ்ச்சி என்ன –என்னே –
இன்னார் இனையார் –
இன்ன உருவத்தை யுடையவர்கள்
இன்ன இயற்கையை யுடையவர்கள்
இன்னார் இனியார் -பாட பேதம்
அயோக்யர்கள் யோக்யர்கள் -உன்னோடு உடனே ஒரு கடலிலே
வாழ்வார் உடைய நன்மை தீமைகளைப் பற்றி சிந்திப்பார் யாரும் இல்லை
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் பன்னாளும் உண்கின்றாய் –
கண்ணபிரான் உடைய
திருவாயில் அமுதத்தை அல்லும் பகலும் அருந்துகின்றாயே
உன்னுடைய பாக்யமே பாக்கியம்
என்று கொண்டாடுகிறாள் –
பாஞ்ச சன்னியமே-
நான் பெரியாழ்வார் பாடே வளர்ந்தும்
பயன் அற்று இரா நின்றேன்
நீ பஞ்ச ஜன அசுரன் பாடே வளர்ந்தும் ஒப்பற்ற பயன் பெற்று இரா நின்றாய்
பிறப்பிலும் வளர்ப்பிலும் என்ன இருக்கிறது
அத்ருஷ்டம் செவ்வனே இருத்தல் வேண்டும்
அஃது உனக்கு நன்கு அமைந்தது காண் -என்கிறாள் போலும் –
—————————————————————————————————-
போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் வலம் புரியே —7-6-
பதவுரை
வலம் புரியே!–வலம்புரிச் சங்கே!,
போய்–வெகு தூரம் வழி நடந்து போய்
தீர்த்தம்–கங்கை முதலிய தீர்த்தங்களிலே
ஆடாதே–நீராடுகையாகிற கஷ்டங்கள் பட வேண்டாமல்
நின்ற–(நாரத சாபத்தாலே மரமாய் நின்ற)
புணர் மருதம்–இரட்டை மருத மரத்தை
சாய்த்து ஈர்த்தான்–முறித்துத் தள்ளின கண்ண பிரானுடைய
கைத்தலத்து ஏறி–திருக் கைத்தலத்தின் மீதேறி
இந்நில வுலகத்தின் புண்ய தீர்த்தங்களிற் படித்து குடைந்தாட வேணு மென்னும் விருப்பமில்லாதாரில்லை;
அங்ஙன் விருப்புற்றாரெல்லாரும் ஆயிரக்காதம் ஐங்நூறுகாதம் வழிநடந்து போய் ஒரு குளத்திலும் குட்டையிலும் முழுக்கிட்டு வருவர்கள்;
ஒரு தடவை புண்யதீர்த்தத்திற் பாய்ந்தாடுவதற்கு எல்லாரும் படாப்பாடுகள் படாநிற்க;
பாஞ்சசன்னியமே! நீ அப்படிப்பட்ட வருத்தமொன்றும் படாமல் எம்பெருமானுடைய திருக் கைத்தலத்திலேயே
எளிதாகக் குடியிருந்து கொண்டு அவனுடைய வாயமுதமாகிற லோகோத்தரமான புண்ய தீர்த்தத்திலே
ஸர்வ காலமும் அவகாஹித்திருக்கின்றாயே!, உனது அத்ருஷ்டமே அத்ருஷ்டம் – என்று கொண்டாடுகின்றாள்.
“வலம்புரியே! (நீ மற்றவர்களைப்போல்) போய் தீர்த்த மாடாதே –
செங்கண்மால் தன்னுடைய வாய்த்தீர்த்தம் பாய்ந்தாடவல்லாய்“ என்று அந்வய க்ரமம்.
சேய்த் தீர்த்தமாய் நின்ற என்ற அட்மொழி செங்கண்மாலுக்கு மாகலாம்,
செங்கண்மால் தன்னுடைய வாய்த்தீர்த்தத்துக்குமாகலாம்.
சேய்த் தீர்த்தம் என்றது – நெடுந்தூரத்திலுள்ள தீர்த்தமென்றபடியாய்,
அதனால் அருமை காட்டப்பட்டதாய், அதனால் மிக்க சிறப்பு காட்டப்பட்டதாமென்க.
போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம் -சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு –
இந் நில உலகத்தில் புண்ய தீர்த்தங்களில் படிந்து குடைந்தாட
வேணும் என்னும்
விருப்பம் இல்லாதார் இல்லை –
அங்கன் விருப்புற்றார் எல்லாரும்
ஆயிரம் காதம்
ஐநூறு காதம்
வழி நடந்து போய் குளத்திலும் குட்டையிலும் முழுக்கிட்டு வருவார்கள்
ஒரு தடவை புண்ய தீர்த்தத்தில் பாய்ந்தாடுவதற்கு
எல்லாரும் படாப் பாடுகள் படா நிற்க
பாஞ்ச சன்னியமே
நீ அப்படிப்பட்ட வருத்தம் ஒன்றுமே படாமல்
எம்பெருமான் உடைய திருக் கைத் தலத்திலேயே
எளிதாகக் குடி இருந்து கொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் வலம் புரியே –
அவனுடைய வாய் அமுதம் ஆகிற
லோகோத்தரமான புண்ய தீர்த்தத்திலே சர்வ காலமும்
அவகாஹித்து இருக்கின்றாயே
உனது அத்ருஷ்டமே அத்ருஷ்டம் -என்று கொண்டாடுகிறாள்
வலம் புரியே
நீ மற்றவர்களைப் போலே
போய்த் தீர்த்தமாடாதே
செங்கண் மால் தன்னுடைய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் -என்று அந்வய க்ரமம்
சேய்த் தீர்த்தமாய் நின்ற –
இந்த அடை மொழி செங்கண் மாலுக்கும் ஆகலாம்
செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தத்துக்கும் ஆகலாம்
சேய்த் தீர்த்தம் -என்றது
நெடும் தூரத்தில் உள்ள தீர்த்தம் என்றபடியாய்
அதனாலே அருமை காட்டப் பட்டதாய்
அதனால் மிக்க காட்டப் பட்டதாம் -என்கை-
—————————————————————————————————
செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்
செங்கண் கரு மேனி வாசுதேவன் உடைய
அங்கைத் தலமேறி அன்ன வசம் செய்யும்
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே–7-7-
பதவுரை
நாள்–அப்போதலர்ந்த
செம் கமலம் மலர் மேல்–செந்தாமரைப் பூவில் (படிந்து)
தேன்–தேனை
நுகரும்–பருகுகின்ற
அன்னம் போல்–அன்னப் பறவை போன்று
செம் கண் கருமேனி வாசு தேவனுடைய–சிவந்த திருக் கண்களையும் கறுத்த திருமேனியை யுமுடைய கண்ண பிரானது
அம் கைத்தலம் ஏறி–அழகிய கைத் தலத்தின் மீதேறி
அன்ன வசம் செய்யும்–கண் வளர்கின்ற
சங்கு அரையா!–சங்குகளிற் சிறந்த பாஞ்ச ஜந்யமே!
உன் செல்வம்–உன்னுடைய செல்வமானது
சால–மிகவும்
அழகியது–சிறந்தது காண்
அப்போதலர்ந்த செந்தாமரை மலரின் மேலே அன்னம் படிந்து மதுபாநம் பண்ணுமா போலே
கண்ணபிரானுடைய அழகிய திருக்கையின் மேலேறி மதுபாநம் பண்ணி உணவுக்கீடாக உறக்கங்கொள்ளுகிற திருச்சங்கே!
உன் போகத்தின் பெருமையை நான் என்ன சொல்வேன் என்கிறாள். வெண்மை நிறத்தில் ஸாம்யத்தைக் கொண்டு
சங்கை அன்னத்தோடு ஒப்பிட்டாள். அங்கைத்தலமானது செங்கமல நாண்மலரோடு ஒப்பிடப்பட்டது.
செங்கமல நாண்மலரில் மது உள்ளமையால் அதனை அன்னம் பருகுவதுண்டு, இங்குச் செங்கமலமலராகச் சொல்லப்பட்ட
திருக் கையில் மது இல்லையே, திருவாயில் தானே மது உண்டு. “அங்கைத்தலமேலி“ என்றிருக்கையாலே
இந்த உபமாநோபமேயபாவம் எங்ஙனேபொருந்தும்? என்று சிலர் சங்கிப்பர்கள், –
அன்னமானது செங்கமல நாண்மலரின்மேல் இருந்துகொண்டு தேனேநுகர்வது போல் – என்று
விவக்ஷிதமாகக் கொண்டால் இந்தஸிங்கைக்குப் பரிஹாரமாகும்.
செங்கமலநாண்மலரிமேல் அன்னத்தின் இருப்புக்கும் வாசுதேவனுடைய அங்கைத்தலத்தில் சங்கின் இருப்புக்கும்
உபமாநோபமேயபாவம் விவக்ஷிதமென்க.
அன்னவசஞ்செய்தல் – உண்ட உணவுக்கீடாக இடம்வலங்கொள்ளுதல், உறங்குதல்.
சங்கரையா! அரையன் – அரசன், சங்குகளிற்சிறந்தது.
ஆழ்வானருளிச்செய்த, ஸுந்தரபாஹுஸ்தவத்தில் –
“ஸ்ரீமத்வாந்ரிபதி பாணிதரலாப்ஜயுக்மம் ஆரூடயோர் விமலசங்கரதாங்கயோஸ்து –
ஏகோப்ஜமாச்ரித இவோத்தமராஜ ஹம்ஸ், பத்மப்ரியோர்க்க இவ தத்ஸ்மிதோ த்விதீய“ என்ற ஸ்லோகத்தில்
திருச் சங்கைப் பற்றி வருணித்திருப்பதில் இப்பாட்டின் கருத்து அமைக்கப்பட்டிருக்கின்றமை அறியத்தக்கது.
செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்
நாள் -அப்போது அலர்ந்த
அப்போது அலர்ந்த செந்தாமரை மலரின் மேல்
அன்னம் படிந்து மது பானம் பண்ணுமா போலே
செங்கண் கரு மேனி வாசுதேவன் உடைய -அங்கைத் தலமேறி அன்ன வசம் செய்யும் சங்கரையா-
கண்ணபிரான் உடைய அழகிய திருக் கையின் மேல் ஏறி
மது பணம் பண்ணி
உணவுக்கு ஈடாக
உறக்கம் கொள்ளுகிற திருச் சங்கே
உன் செல்வம் சால அழகியதே –
உன் போகத்தின் பெருமையை னான் என்ன சொல்வேன்
வெண்மை நிறத்தில் சாம்யம் கொண்டு சங்கை அன்னத்தோடு ஒப்பிட்டாள்
அங்கைத் தலமானது செங்கமல நாள் மலரோடு ஒப்பிடப்பட்டது –
செங்கமல நாள் மலரில் மது உள்ளமையால் அன்னம் அதனை பருகுவது உண்டு
இங்குச் செங்கமலமாகச் சொல்லப் பட்ட திருக் கையில் மது இல்லையே
திரு வாயிலே தானே மது உண்டு
அங்கைத் தலம் ஏறி -என்று இருக்கையாலே
உபமான உபமேய பாவம் எங்கனே பொருந்தும் -என்ற சங்கைக்கு
அன்னமானது செங்கமல நாள் மலரின் மேல் இருந்து கொண்டு
தேனை நுகர்வது போலே -என்று விவஷிதமாகக் கொண்டு சங்கைக்கு பிரகாரம் ஆகும்
செங்கமல நாள் மலர் மேல் அன்னத்தின் இருப்புக்கும்
அங்கைத் தலத்தில் சங்கின் இருப்புக்கும்
உபமான உபமேய பாவம் விவஷிதம்
அன்ன வசம் செய்தல்
உண்ட உணவுக்கு ஈடாக இடம் வலம் கொள்ளுதல் –உறங்குதல்
சங்கரையா -அரையன் -அரசன் -சங்கு களிலே சிறந்த -என்றபடி
கூரத் ஆழ்வான் ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -இதே கருத்தை
ஸ்ரீ மத்வ நாதரி பதி பாணி தரலாப்ஜயுக்மம் ஆரூடயோர் விமல சங்கா தாங்க யோஸ்து
ஏகோப்ஜ மாச்ரித இவோத்தமராஜ ஹம்ச பத்ம பிரியோர்க்க இவ தத்சமிதோ த்விதீய –
என்று அருளிச் செய்கிறார் –
————————————————————————————————–
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்
கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார்
பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே—7-8-
பதவுரை
பாஞ்சசன்னியமே–சங்கே!,
உண்பது சொல்லில்–நீ உண்பது என்ன வென்றால்
உலகு அளந்தான் வாய் அமுதம்–உலகங்களை அளந்தவனான் எம்பெருமானுடைய திருவாயிலுள்ள அம்ருதம்,
கண் படை கொள்ளில்–நீ படுத்துக் கொள்வது எங்கே யென்றால்
கடல் வண்ணன் கை தலத்தே–கடல் போன்ற நிறத்தை யுடையனான அவ் வெம்பெருமானுடைய திருக் கையிலே,
(இப்படி உனக்கு ஊணுமுறக்கமும் அங்கேயா யிருப்பதனால்)
பெண் படையார்–பெண்குலத்தவர்கள் அனைவரும்
உன் மேல்–உன் விஷயமாக
பெரு பூசல்–பெரிய கோஷம் போடுகிறார்கள்,
(எங்கள் ஜீவனத்தை இவனே கொள்ளை கொள்ளுகிறானென்று கூச்சலிடுகிறார்கள்)
பண்பு அல செய்கின்றாய்–(இப்படி அவர்கள் வருந்தும்படி) அநியாயமான காரியத்தைச் செய்கிறாய்.
(இஃது உனக்குத் தகுதி யல்ல என்கை.)
ஓபாஞ்சசன்னியமே! நீ செய்வது சிறிதும் நியாயமாயில்லே, பெண்ணாய்ப் பிறந்தவர்களெல்லாரும் உன்மேல்
வசைகூறும்படியான காரியம் நீ செய்கிறாய், அது என்னவென்றால், நீ கண்ணபிரானுடைய வாயமுதத்தை உண்பதும்
அவனுடைய கைத்தலத்தில் உறங்குவதுமாயிருக்கிறாய், கோவில் சோற்றைத் தின்று குளத்தில் நீரைக் குடித்துக்
கோபுர வாசலிற் கிடந்துறங்குவார்க்குப்போலே உனக்கும் பகவத் ஸம்பந்தம் ஒரு நொடிப் பொழுதும் இடையறாதிருக்கின்றது,
இப்படி எம்பெருமானோடேயே ஸதாபோது போக்கவேணுமென்று ஆசைப்பட்டிருக்கிற பல்லாயிரம் பெண்களை
வயிறெரிந்து நிற்க விட்டு நீ யொருவனே இப்படிப் போதுபோக்குவதானது நியாயமேயல்ல,
‘இப்பாவி இப்படி அநியாயம்செய்கிறானே‘ யென்று முறை யிடாதாரில்லை காண் என்கிறாள்.
கண்படை – உறக்கம், பெண்படையார் – திரள்திரளாயுள்ள பெண்கள் என்றபடி,
திருவாய்ப்பாடியிலுள்ளாரும் ஸ்ரீமதுரையிலுள்ளாரும். பூசல் – பேரொலிசெய்தல்.
பண்பல – பண்பு அல-, பண்பு – நியாயம், அல-அல்ல – அல்லாத்து, நியாயமல்லாதது அநியாயம்.
பகவத் விஷயத்தில் அவகாஹித்தவர்கள் (ஏகஃஸ்வாதுநபுஞஜீத) (இன்னிகனிதனியருந்தான்) என்றபடி
மற்றும் ருசியுடையாரையுங் கூட்டிக்கொண்டு திரளாக விருந்து அநுபவிக்கவேண்டியிருக்க, நீ ஏகாகியாய் அநுபவித்து அநீதியென்க.
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம் -கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே
ஒ பாஞ்ச சன்னியமே
நீ செய்வது சிறிதும் நியாயம் இல்லை
நீ கண்ணபிரான் உடைய வாய் அமுதத்தை உண்பதும்
அவனுடைய கைத் தளத்தில் உறங்குவதுமாய் இருகிறாய்
கோயில் சோற்றைத் தின்று
குளத்திலே நீரைக் குடித்து
கோபுர வாசலிலே கிடந்தது உறங்குவாரைப் போலே
உனக்கும் பகவத் சம்பந்தம்
ஒரு நொடிப் பொழுதும் இடையறாது இருக்கின்றது
இப்படி எம்பெருமான் உடன் சதா போது போக்க வேணும் என்று ஆசைப் பட்டு இருக்கிற
பல்லாயிரம் பெண்கள் வயிறு எரிந்து நிற்க விட்டு
நீ ஒருவனே இப்படி போது போக்குவது நியாயம் இல்லை
கண்படை -உறக்கம்
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார்
பெண்ணாய் பிறந்தவர்கள் எல்லாரும் உன் மேல் வசை கூறும்படியான கார்யம் நீ செய்கிறாய்
இப்பாவி இப்படி அநியாயம் செய்கிறானே என்று
முறை இடாதார் இல்லை காண்
பெண் படையார் -திரள் திரளாக உள்ள பெண்கள் என்றபடி
திரு வாய்ப்பாடியில் உள்ளாறும்
ஸ்ரீ மதுரையில் உள்ளாறும்
பூசல் -பேர் ஒலி செய்தல்
பண் பல செய்கின்றாய்
பண்பல பண்பு அல பண்பு அல்ல நியாயம் இல்லை
பகவத் விஷயத்தில் அவஹாகித்தவர்கள்
ஏக ஸ்வாது ந புஞ்சீத
இனி கனி தனி அருந்தான்
ருசி யுடையார் எல்லாரையும் கூட்டிக் கொண்டு அனுபவிக்காமல்
நீ ஏகாகயாய் அனுபவிப்பது அநீதி –
பாஞ்ச சன்னியமே
நீ நல்ல குடியில் பிறந்து வளர்ந்து இருப்பாயாகில்
வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மனமும் கொண்மின் -என்றும்
நீராடப் போதுவீர் போதுமினோ -என்றும்
எங்களைப் போலே பர சம்ருத்திக்கு ஆசைப்படுவாய்
உப்புக் குழியிலே பிறந்து
அசுரன் வயிற்றிலே வளர்ந்தவன் ஆகையாலே
பிறரைத் துன்பப் படுத்துவதிலேயே ருசி ய்டையராய் இரா நின்றாய் என்ற கருத்து
தோன்ற பாஞ்ச சன்னியமே என்று அருளிச் செய்கிறாள் –
————————————————————————————————-
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–7-9-
பதவுரை
பெரு செல்வம் சங்கே–பெரிய செல்வம் படைத்த சங்கமே!
பதினாறாம் ஆயிரவர் தேவிமார்–பதினாறாயிரம் தேவிமார்கள்
பார்த்து இருப்ப–கண்ண பிரானுடைய வாயமுதத்தை நாம் பருக வேணுமென விரும்பி) எதிர்பார்த்திருக்கையில்
பொது ஆக உண்பது மாதவன் தன் வாய் அமுதத்தை–பகவத் ஸம்பந்திகளெல்லாரும் பொதுவாக
உண்ண வேண்டியதான அவ்வெம்பெருமானது வாயமுதத்தை
நீ புக்கு–நீ யொருவனே ஆக்ரமித்து
மது வாயில் கொண்டால் போல் உண்டக்கால்–தேனை உண்கிறாப் போல் உண்டால்
உன்னோடு சிதையாரோ–(மற்றபேர்கள்) உன்னோடு விவாதப் பட மாட்டாரோ
பெருஞ்செல்வம் படைத்த சங்கே! நீ அல்லும்பகலும் உண்கிற கண்ணபிரான் தன் வாயமுதமானது
உனக்கொருவனுக்கே உரிமைப்பட்டதன்று, அக்கண்ணபிரானுக்கு வாழ்க்கைப்பட்ட பதினாறாயிரம் பெண்கள்
இவ்வமுதத்தைப் பருகுவதற்குப் பங்குடையவர்கள். அன்னவர் இதனை அநுபவிக்க அவஸரம் பார்த்திருக்க
நீ ஒருவனே மேல்விழுந்து புஜித்தால் அவர்கள் உன்னோடு பிணங்காதிருக்கமுடியுமோ?
அவர்களுடைய மனவருத்தத்திற்கு நீ ஆளானாயாகில் உன்னை ஸாது கோஷ்டியில் மதிப்பாருண்டோ? என்கிறாள்.
நரகாசுரன் தான் மணஞ்செய்து கொள்ளவேணுமென்று அங்கங்கிருந்து தெரிந்து பொறுக்கிக்கொண்டு வந்து
திரட்டிவைத்திருந்த கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும் கண்ணபிரான்
அவ்வசுரனைக் கொன்றொழித்துத் தானே மணஞ்செய்துகொண்டான் னென்பது அறியத்தக்கது.
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு
செல்வப் பெரும் சங்கே
பெரும் செல்வம் படைத்த சங்கே
நீ அல்லும் பகலும் உண்கிற கண்ணபிரான் வாய் அமுதமானது
உனக்கு ஒருவனுக்கே உரிமைப் பட்டது அன்று
அக்கண்ண பிரானுக்கு வாழ்க்கைப் பட்ட பதினாறாயிரம் பெண்கள்
இவ்வமுதத்தை பருகுவதற்கு பங்கு உடையவர்கள்
அன்னவர் இதனை அனுபவிக்க அவசரம் பார்த்து இருக்க
நீ ஒருவனே மேல் விழுந்து புஜித்தால்
அவர்கள் உன்னோடு பிணங்காது இருக்க முடியுமோ
அவர்கள் உடைய மநோ வர்த்தத்துக்கு நீ ஆளாயானால்
உன்னை சாது கோஷ்டியில் மதிப்பார் உண்டோ -என்கிறாள்
கண்ணபிரான் நரகாசுரனை அளித்து
அவன் கொண்டு வந்து வைத்து இருந்த பதினாறாயிரம் கன்னிகைகளையும் கண்ண பிரான் திரு மணம் செய்து அருளினானே-
——————————————————————————————————–
பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே—7-10-
பதவுரை
பாஞ்சசன்னியத்தை–சங்கை
பற்பநாபனோடும்–எம்பெருமானோடே
வாய்ந்த பெரு சுற்றம் ஆக்கிய–கிட்டின பேருறவை யுடையதாக வார்த்தை சொன்ன
வண் புதுவை–அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவவதரித்தவளும்
ஏய்ந்த புகழ்–நிறைந்த புகழை யுடையவளும்
பட்டர் பிரான் கோதை–பெரியாழ்வாருடைய ஆண்டாள் (அருளிச் செய்த)
தமிழ் ஈர் ஐந்தும்–இத் தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
ஆய்ந்து–அநுஸந்தித்து
எந்த வல்லார் அவரும்–(இது கொண்டு எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களும்
அணுக்கர்–(பாஞ்சஜந்யம் போல் அந்தரங்கராகப் பெறுவர்கள்-
இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லி முடிக்கிறாள் இதில், ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை நோக்கி
“மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்“ என்றமையால்
இச்சங்கு தான் எம்பெருமானுக்குக் கிட்டின வுறவுடையது என்று ஆண்டாளுடைய கருத்தாயிருந்தது,
அதுதோன்ற அருளிச்செய்கிறாள் – “பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனொடும் வாய்ந்தபெருஞ்சுற்றமாக்கிய“ என்று
நெருங்கின பந்துத்வ முடையதாகக் கொண்டு சொன்ன என்றபடி.
ஆக்கிய என்ற அடைமொழி கோதைக்குமாகலாம். கோதை தமிழ்க்குமாகலாம்.
“ஏய்ந்தபுகழ்“ என்ற அடைமொழி பட்டர்பிரானிடத்து அந்வயிக்கத்தகுமாயினும்
கோதையிடத்து அந்வயித்தருளினர் பெரியவாச்சான்பிள்ளை. தமிழ் – தமிழாலாகிய பாசுரங்கட்டு ஆகுபெயர்.
ஆய்ந்து ஏத்தவல்லா ரவரும் – இத்திருவாய்மொழி முழுவதும் பாஞ்சஜந்யத்தைப் பற்றிச் சொல்லிற்றேயன்றி
எம்பெருமானைப்பற்றி இதில் ஒன்றுமில்லையேயென்று கருதிவிடாமல் இதுவும் எம்பெருமானுடைய
பெருமையில் தான் சென்று முடிகின்றதென்று ஆராய்ந்து அநுஸ்திக்கவல்லவர்கள் என்றபடி.
எம்பெருமானுடைய திருவாயமுகத்தின் இனிமையும் அவனுடைய ஆச்ரித பக்ஷபாதமும் இத்திருமொழியில் விளங்கக்காண்க.
அணுக்கர் – அன்புடையார், அந்தரங்கர்
பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே
நிகமத்தில்
இத் திரு மொழி கற்றார்க்குப் பலன் சொல்லி அருளித் தலைக் கட்டுகிறார்
மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்
என்றமையால்
இச் சங்கு ஆழ்வான் தான் எம்பெருமானுக்கு கிட்டின உறவு யுடையது என்று ஆண்டாள் கருதி இருந்தாள்
அது தோன்ற –
பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய-
என்று அருளிச் செய்கிறார்
நெருங்கின பந்துத்வம் யுடையதாகக் கொண்டு அருளின படி
ஆக்கிய என்ற அடை மொழி
கோதைக்கும் ஆக்குவமுமாம்
கோதை தமிழுக்கும் -ஆக்குவமுமாம்
ஏய்ந்த புகழ் -பட்டர் பிரான் இடத்து அந்வயிக்கத் தகும் ஆயினும்
பெரிய வாச்சான் பிள்ளை கோதை இடத்து அந்வயித்து அருளிச் செய்கிறார்
தமிழ் -தமிழால் ஆகிய பாடலுக்கு ஆகு பெயர்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும்
இத் திரு மொழி முழுவதும்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைப் பற்றியே சொல்லிற்றே அன்றி
எம்பெருமானைப் பற்றி இதில் ஒன்றும் இல்லை
என்று கருதி விடாமல்
இதுவும் எம்பெருமான் உடைய பெருமையில் தான் சென்று முடிகிறது என்று
ஆராய்ந்து அனுசந்திக்க வல்லார்கள் -என்றபடி
எம்பெருமான் உடைய திருவாய் அமுதத்தின் இனிமையையும்
அவனுடைய ஆஸ்ரித பஷபாதமும்
இத் திருமொழியில் விளங்கக் காணலாம்
அணுக்கர் -அந்தரங்கர் -அன்புடையார்-
—————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply